ஹிந்து எழுச்சிப் பாடல்
முரளி
26 May 2008 |
அச்சிட
பல்லவி
இந்து நானென்று சொல்லடா! - நீ
நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!
அநுபல்லவி
செந்தமிழில் ஒளிர் சிந்தனையால் - இந்த
ஜெகத்தினை மேன்மை செய்யடா (இந்து நானென்று…)
சரணங்கள்
உலகின் முதன்முதல் சமயமடா - அதில்
உதித்ததில் நமக்குப் பெருமையடா
நலங்கள் பலப்பல விளையுமடா - ஒன்றாய்
நாம் இணைந்தால் துயர் குலையுமடா. (இந்து நானென்று…)
வேதரிஷிகளின் விழுதுகள் நாம் - போர்
வித்தை பயின்ற வித்தகர் நாம்
கீதம் பரதம் கவின்கலைகள் - மிக
கீர்த்தியுடன் செய்வோம் நேர்த்தியுடன்! (இந்து நானென்று…)
கல்வியினால் செல்வம் ஈட்டிடுவோம் - பெரும்
கருணையினால் துயர் வீட்டிடுவோம்
பல்விதத் தொழில்கள் நாட்டிடுவோம் - அன்னை
பாரத்தின் புகழ் மீட்டிடுவோம்! (இந்து நானென்று…)
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...