பல்லவி
இந்து நானென்று சொல்லடா! – நீ
நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!
அநுபல்லவி
செந்தமிழில் ஒளிர் சிந்தனையால் – இந்த
ஜெகத்தினை மேன்மை செய்யடா (இந்து நானென்று…)
சரணங்கள்
உலகின் முதன்முதல் சமயமடா – அதில்
உதித்ததில் நமக்குப் பெருமையடா
நலங்கள் பலப்பல விளையுமடா – ஒன்றாய்
நாம் இணைந்தால் துயர் குலையுமடா. (இந்து நானென்று…)
வேதரிஷிகளின் விழுதுகள் நாம் – போர்
வித்தை பயின்ற வித்தகர் நாம்
கீதம் பரதம் கவின்கலைகள் – மிக
கீர்த்தியுடன் செய்வோம் நேர்த்தியுடன்! (இந்து நானென்று…)
கல்வியினால் செல்வம் ஈட்டிடுவோம் – பெரும்
கருணையினால் துயர் வீட்டிடுவோம்
பல்விதத் தொழில்கள் நாட்டிடுவோம் – அன்னை
பாரத்தின் புகழ் மீட்டிடுவோம்! (இந்து நானென்று…)
























