மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » கேள்வி-பதில்

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

Non-vegமனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.)

திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள் கொல்லாமையை வற்புறுத்துகிறார்கள். ‘அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு’ என்பது வள்ளுவர் வாக்கு. எல்லாவற்றிலும் உயர்ந்த அறம் கொல்லாமை (அஹிம்ஸா பரமோ தர்ம:) என்று முன்னோர் தெளிவுறக் கூறியுள்ளனர். திருவள்ளுவரும் ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தைத் துறவற இயலில் வைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இப்போது சமுதாயம் மாறிவிட்ட நிலையில் நாம் மனித சமத்துவத்துக்கு எதிரானதாகிவிட்ட வர்ணம் என்பதைக் களைய வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆசிரமம் என்பது வாழ்க்கையின் படிநிலை. பிரம்மசரியம் (மாணாக்க நிலை); கிரஹஸ்தம் (கல்விமுடிந்து சம்பாதிக்கிற காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை ஏற்படுத்தும் நிலை), வானப்பிரஸ்தம் (குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட பின்னர் பந்தங்களைத் துறந்து காட்டுக்குப் போகும் நிலை); சன்யாசம் (உலகியல் பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து இறைவனை அடையும் பொருட்டுத் தவம் மேற்கொள்ளும் நிலை) ஆகிய நிலைகள் அதே பெயரிலும் வடிவிலும் இல்லாவிட்டால் செயல்முறைப் படிநிலைகளாக இருக்கத்தான் செய்கின்றன. கல்வி, திருமணம், வயது முதிர்ச்சி ஆகியவை ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நாம் நமது மதம் விதித்த அறவழியில் செல்லாமல், இறுதிவரை பொருள்தேடுவதிலேயே கவனமாக இருப்பதால் மாணவன், குடும்பஸ்தன் என்ற நிலைகளைத் தாண்டுவதே இல்லை.

அப்படி அல்லாமல் ஒருவருக்கு மாணவப் பருவத்திலேயும் இறைநாட்டம் வந்துவிடலாம். ஆக, எந்த நிலையில் இருந்தாலும், தன்னில் இருக்கும் இறைத்தன்மையை வளர்ப்பது என்னும் ஆன்மீகப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அவருக்குத் தாவர உணவே சாதகமாக இருக்கும் என்பது இந்து சமயத்தின் பரிந்துரை.

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , ,

6 மறுமொழிகள் »

  1. Yes, perhaps even Thiruvalluavar thought vegitarianism is a pre-condition for Sanyasam - maybe because it is Satvik food - and kept the Chapter in Thuravaram.

    But I am also tempted to feel that vegitarianism is what God expects ALL human beings to follow, irrespective of the Ashram he follows; the very reason he gave us a brain to ‘discover’ agriculture was, in my opinion, to wean us away from the jungle and eat Satvik food, so that we find it easy tolead a Dharmic life.

  2. Sir,

    I find the articles very informative. Please upload Othuvar songs in your site. We want the younger generation to keep alive our culture.

  3. ஓர் உயிரை கொல்வதை சரி என்று எந்த மதம் சொன்னாளும் ஏற்றுகொள்ள முடியாது.

  4. //திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள்//

    அது எப்படி திருவள்ளுவர் இந்து ஆன்மீகப் பரியோர் ஆனார்? அவர் சார்ந்த சமயம் பெளத்தம் அல்லவே?

    மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க தெரிந்து அதனால் விவசாயத்தை கற்றான். விலங்குகளுக்கு விவசாயம் செய்ய தெரியாது. மனிதனால் மட்டுமே சைவம் உட்கொள்ள முடியும். ஆனால், அசைவம் உண்கிறான். இது தவறு. நம்மால் முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வது நலம்,

    இதனை பற்றின என் பழைய பதிவு.

    http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html

  5. தேவாரமே கிறித்தவ இலக்கியம்தான் என்று நிறுவப் பெரு முயற்சி நடக்கும் இந்தக் காலத்தில், திருவள்ளுவரை பவுத்தராக்கியதில் பெரிய ஆச்சரியமில்லைதான். மொத்தத்தில், தமிழின் முக்கிய நூல் எதையுமே இந்துக்களில் யாரும் எழுதவில்லை என்று சொல்லிச் சொல்லி, இந்துக்களை மூளைச்சலவை செய்ய ஒரு பெரிய அறிஞர் கும்பலே செயல்படுகிறது. ஏன், திருவள்ளுவர் ஒரு சமணர் என்றுதான் ஏகப்பட்ட நூல்கள் கூறுகின்றன! அதை நீங்கள் தட்டிக் கேட்கவே இல்லையே.

    புனித தோமையர் வந்து காட்டுமிராண்டித் தமிழனுக்குச் சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தார், அதன் விளைவாகத்தான் திருக்குறள் பிறந்தது என்பது தற்போதைய பொய்ப்பிரசாரம். ஐயா, இந்த மண்ணில் எண்ணமுடியாத காலம் தொட்டு இந்துச் சிந்தனைகள்தாம் தழைத்து வருகின்றன. அவற்றைத்தாம் திருக்குறள் போன்ற நூல்கள் செம்மையாக நமக்குப் பிழிந்து தந்திருக்கின்றன.

    ஏன், சொல்லப்போனால், சமணமும் பௌத்தமும் இந்து மதத்திலிருந்து பிழிபட்டவைதாமே? துறவறத்தையும், தவத்தையும் அவர்கள்தாம் புதிதாகக் கண்டுபிடித்தார்களா? வேத மறுப்பு, வேள்வி மறுப்பு, ஜாதிப்பிரிவு மறுப்பு என்று இந்த அம்சங்கள் மட்டுமே அவர்கள் வலியுறுத்துவது. ஆனால் இவற்றையும் இந்துமதத்துக்குள்ளிருந்தே செய்தவர்கள், செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதேபோல அஹிம்சையையும் அவர்கள் உருவாக்கவில்லை. நமது வேதங்களே ‘அஹிம்சா பரமோ தர்மஹ’ என்றுதானே கூறுகின்றன.

    ‘இரக்கம், கருணை’ ஆகியவை எங்கள் ஏகபோகச் சொத்து என்று கிறிஸ்தவர்கள் பிரசாரம் செய்வதுபோலத்தான் இதுவும். நாம் அவற்றை விளம்பரமில்லாமல், மதமாற்ற நோக்கமில்லாமல் செய்கிறோம், அவ்வளவுதான்.

  6. ஒரு உயிரை கொன்று உண்பது தவறு என்பதும் பாவமான செயல் என்பதும் பலரின் கருத்து இல்லையா..! ஆனால் எந்த ஒரு உயிரினமும் பிற உயிர்களை கொல்லாமல் வாழவும் வழியில்லை அது முடியவே முடியாது. நாம் உண்ணும் அனைத்து பொருள்களும் ஏதேனும் உயிரை கொன்றோ அல்லது துன்புறுத்தியோ தான் கொண்டுவரப்படுகிறது. நெல், கோதுமை போன்ற தானியவகைகள், ஆடு, மாடு, மீன் போன்ற மாமிச உயிரிகள் இதை போன்ற அனைதயும் கொன்றே மனிதன் வாழ வேண்டியுள்ளது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் பூரணமாக நிருபணமாகிவிட்டது. ஆனால் சில குதர்க்கவாதிகள் கூறுகிறார்கள், ” தாவரங்களுக்கு உயிர் இருந்தாலும் அவற்றால் எதையும் உணர முடியாது என்று ”. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், “தாவரங்களும் வலியை உணர்கிறது, அதற்கு தொடுயுணர்வும் உண்டு என்று“. இதன் பிறகும் சில குதர்க்கவாதிகள் கூறுகிறார்கள், “ தாவரங்களுக்கு மூன்று அறிவுதான் அதனால் அதை கொன்று திண்றால் ஒன்றும் பாவமாகிவிடாது என்று”.

    மனிதனுக்கு ஆறு அறிவும், விலங்குகளுக்கு ஐந்து அறிவும், தாவரங்களுக்கு மூன்று அறிவும் இருக்கின்றன். தாவரங்களுக்கு மூன்று அறிவு என்பதால் அதை கொள்வது பாவம் இல்லை என்று வைத்துக்கொண்டால், ஒரு மனிதன் செவிடனாகவும், ஊமையாகவும், குருடனாகவும் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் இப்போது அம்மனிதன் மூன்றறிவு உடையவனாக கருதப்படுகிறான் இதன்பிறகு இது போன்றவர்களை கொள்வது பாவமில்லை என்று தானே அர்த்தம். ஆனால் இதனை எவரும், எம்மதத்தவர்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

    பொதுவாக மனிதன் அனைத்து தாவர வகைகளையும், அனைத்து மிருக வகைகளையும் உண்ணச் செய்வதில்லை. மிருகங்களில் தாவரங்களை உண்ணும் மிருங்களையே நாம் உண்ணுகிறோம் இதனை அவற்றின் பற்களை கொண்டே அறியலாம். அதாவது தட்டைபற்களை உடைய (ஆடு ,மாடு, மான்) போன்ற மிருகங்களையே உண்ணுகிறோம். கூரிய பற்களுடைய மாமிச உட்கொள்ளும் மிருகங்களையே பட்சிகளையோ நாம் உண்ணுவதில்லை. ஆடு, மாடு போன்ற மிருகங்களுக்கு மாமிசத்தை உட்கொண்டு அதை செரிக்கும் தன்மை அதன் குடல் அமைப்பிற்கு கிடையாது. அதை போல் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு தாவரத்தை உட்கொள்ளும் தன்மை கிடையாது. ஆனால் மனிதனின் பற்கள் இதற்கு இடைபட்டதாக இருக்கிறது. தாவரம், மாமிசம் இவை இரண்டையும் செரிக்க கூடிய தன்மை மனித உடலமைபுக்கு உண்டு.

    தாவரங்களில் உள்ள சில சத்து பொருள்கள் மாமிசங்களில் இல்லை. அது போல் மாசிசங்களில் உள்ளவை தாவரங்களில் இல்லை. அதுமட்டுமில்லாமல் மீன் போன்ற அசைவங்களில் பல அத்தியாவசிய சத்துப்பொருள்கள் உள்ளதாக அறிவியல் நிருபித்துள்ளது. மேலும் மாமிச உணவு இல்லையென்றால் காய்கறி உணவுகளில் பற்றாக்குறை ஏற்படும், அதன் விலை தங்கத்தை போன்று உயரும்.

    மனிதன் மாமிசங்களை உண்பதால் மிருக குணம் ஏற்படும் என்ற கருத்தும் உண்டு ஆனால் மனிதன் உண்ணும் மிருகவகைகள் அனைத்தும் சாதுவான குணத்தைக்கொண்டது என்பதால் அதன் பாதிப்பு மனிதனை தாக்காது என்பதும் உண்மை. எவரும் இக்கருத்தை மறுப்பவருண்டா….?

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>