அன்னை காளி - கவிதை

மூலம்: சுவாமி விவேகானந்தர் Kali, The Mother
மொழியாக்கம்: ஜடாயு  

Kali

 விண்மீன்கள் தெறித்து விழும்
மேகங்களை மேகங்கள் மூடும்
சூறைக்காற்று சுழன்றடித்து உறுமும்
வீரியம் ததும்பி வழியும் காரிருள்

சில நொடி முன் சிறை தகர்த்து
பித்துப் பிடித்தலையும் லட்சலட்சம் ஆன்மாக்கள்
பெருமரங்களை வேரோடு பிடுங்கி எறியும்
வழியில் தெரிபவை எல்லாம் வாரித்துடைத்தெறியும்

மலை மலையாய் அலையெறிந்து
ஆர்ப்பரிக்கும் வானம் தொடத் துடிக்கும்
ஆழ்கடலும் இந்த ஆட்டத்தில்.
திசையெங்கும் செந்தீ உமிழும் மின்னல்கள்.
சந்தோஷக் கூத்தாடும் சாவின் ஆயிரம் ஆயிரம் கருநிழல்கள்
நோய்களையும் துயரங்களையும் இறைத்து விளையாடும்

வருக தாயே வருக
பயங்கரி உன் பெயர்
உன் மூச்சுக்காற்றில் மரணத்தின் சுவாசம்
அண்டங்கள் நொறுங்கும் உன் ஒவ்வொரு அசைவிலும்
காண்பவை அத்தனையும் கபளீகரம் செய்யும் காலம் உன் காலடி
வருக தாயே வருக

நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.



5 Responses to “அன்னை காளி - கவிதை”

  1. Great. Simply great!

  2. கை கொடுங்கள்… விவேகம் இருந்தால் இயற்கை அன்னையின் சீற்றத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் காணமுடியும் என்பதற்கு விவேகானந்தரின் வாழ்க்கையே சான்று…

    இதோ உங்கள் கவிதைக் கரங்களை வருட இரு சிறு குறள் வெண்பாக்கள்:

    விடாமல் அடிக்கட்டும் பாட்டும் புயலும்
    ஜடாயு (வி)வேகத் திலே.

    தாய்மொழிப் பாட்டில் விவேகா நந்தரை
    தாய்வழி தந்தீர் அருமை.

  3. மனோ, Ranjanniranjana - தங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

  4. Fantastic poem, I am unable to write in Tamil
    Best wishes, more power to you, we need millions of people like you to drive out the evil Dk/DMK , we need to claim back HInduisim from these mob and get back to our glorious past!
    God bless you/ Om Nava Shivaya
    Rama

  5. Rama அவர்களே, மிக்க நன்றி. ஓம் நமசிவாய!

Leave a Reply

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>