வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி
ஆசிரியர் குழு
21 Nov 2008 |
அச்சிட
தமிழ் திரையுலகில் வில்லனாக எம்.ஜி.ஆர் காலத்திலும் பின்னர் குணசித்திர நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகில் 62 ஆண்டுகள் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த திரையுலகின் குருசாமி எம்.என். நம்பியார் காலமானார். அவருக்கு வயது 91.
திரைப்படத்தில் வில்லனாகவே எல்லோரும் அடையாளம் காணும் நம்பியார் தனிவாழ்வில் நல்லவராகவே வாழ்ந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லாத திரையுலக நபர்களே கிடையாது என் சொல்லலாம்.
சபரிமலைவாசன் அவரது ஆன்மாவை அமைதியில் ஆழ்த்தட்டும்.
புகழுடம்பெய்திய பழம்பெரும் நடிகர் நம்பியார் அவர்கள் டிசம்பர் 1984 இல் விஜயபாரதம் இதழுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே: [வெளியிட அனுமதி வழங்கிய விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன் அவர்களுக்கு நன்றி.]
விஜயபாரதம் நிருபர்: நீங்க எத்தனை வருடமா மலைக்குப் போறீங்க?
நம்பியார்: எத்தனை தடவையா போறீங்கன்னு கேட்டுடாதீங்க. வருடத்திற்கு மூன்று அல்லது நாலு தடவை. கணக்கு கிடையாது. 1942 இலிருந்து மலைக்குப் போய் வருகிறேன்.
நிருபர்: எல்லா தடவையும் முறையா விரதம் இருந்துதான் போவீங்களா இல்ல…
நம்பியார்: நிச்சயம். எல்லா முறையும் முறைப்படி விரதம் இருந்து வேலைக்கும் இடைஞ்சல் இல்லாத படிதான் மலைக்குப் போவேன். விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
நிருபர்: வருடாவருடம் எத்தனை பேரை அழைத்துக் கொண்டு போவீங்க?
நம்பியார்: நான் அழைச்சுகிட்டு போறது கிடையாது அவர்களோடு நான் போவேன் அவ்வளவுதான். எல்லோரையும் அழைச்சுகிட்டுப் போறாப்ல அவ்வளவு பெரிய தகுதி நமக்கு கிடையாது.
நிருபர்: விரதகாலத்தில் ஐயப்பன்மார்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளை வருடம் முழுவதும் கடைப்பிடிக்கும்படி கட்டாயப்படுத்தினால் என்ன?
நம்பியார்: அது எப்படிங்க முடியும்? அந்த 41 நாள் விரத காலத்தில் நான் சொல்லலாம். விரதம் இல்லாத காலங்களில் சொல்லலாம் எப்படி? சிகரெட் குடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு குடிங்கன்னு சொல்லுவேன். தண்ணி அடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு அடியுங்கன்னு சொல்லலாம். நீங்க குடிக்கவே கூடாது அப்படீன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதுல்ல.
நிருபர்: குருசாமி ஆவதற்கான தகுதி என்ன?
நம்பியார்: இத்தனை வருடங்கள் போனவங்கதான் குருசாமி ஆகலாம் அப்படீன்னு தகுதி இருக்கு. எதுக்கு? நம்ம காமன்சென்ஸை யூஸ் பண்ணித்தான் யோசன பண்ணலாமே. மலைக்குப் போகும் போது எப்படி போனா சௌகரியம் எந்த பாதை நல்லா இருக்கும் எங்க தங்கலாம்? இதெல்லாம் பலவருடம் போனவங்களுக்குத்தான் அனுபவபூர்வமாக தெரிந்திருக்கும். அதுக்குத்தான் பலதடவை போன அனுபவம் உள்ளவங்க குருசாமியா ஆறாங்க.
நிருபர்: சென்ற வருடம் நிலக்கல் விஷயமாக நடந்தவைகள் அங்கு அத்து மீறி சர்ச் எழுப்பப்பட்டு அகற்றப்பட்ட விதம் இதெல்லாம் கேள்விப்பட்டீங்களா?
நம்பியார்: ஓ கேள்விப்பட்டேனே. காரில் போனால் அந்த வழியாகத்தான் மலைக்குப் போயாகணும். ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஆபரண பெட்டி நிலக்கல்லில் இருந்து முன்பு நட்ந்தே கொண்டு வருவாங்க. இப்ப பம்பா நதி வரை காரில் வந்துவிடுகிறது. நிலக்கல் பிரச்சனை வர்றதுக்கு காரணம் என்னங்கறீங்க.ஆளும்கட்சி அரசாங்க அதிகாரம் வேணுமா நியாயம் வேணுமா என்று பார்க்குது. அரசாங்கமும் அதிகாரமும் வேணும் என்று அரசியல் கட்சிகள் நினைப்பதால் நியாயத்திற்கு அங்கு இடமில்லாமல் போயிடுது. இதெல்லாம் நம்ம மனநிலையை பொறுத்து இருக்கு. நாம எல்லாரும் இந்தியன் என்று நினைத்தால் இந்த பிரச்சனைகளே எழாது. இந்தியனுக்கு ஒரு பொது சட்டம்தான் இருக்கணும். அதை எல்லா இந்தியனும் ஒத்துக்கணும். மதத்திற்குத் தனிச் சட்டம் இருக்கக் கூடாது. அதாவது நான் என்ன சொல்றேன்னா மைனாரிடிகளுக்கு உள்ள உரிமைகளை மெஜாரிட்டிக்கு கொடுக்கணும். அதை மறுக்கக் கூடாது. நம் நாட்டில் மைனாரிட்டி சமுதாயத்தினருக்கு ஏகப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் தராங்க. அதைப் போல மெஜாரிட்டி சமுதாயத்தினரையும் கவனிக்க வேண்டாமா?
நேற்று எங்க தொகுதி வேட்பாளர் ஒருவர் எங்க வீட்டுக்கு வந்தாரு; நல்லா ஜெயிக்கக் கூடிய வாய்ப்புள்ளவரு. நான் அவரிடம் ‘ஒரே ஒரு கோரிக்கை’ என்றேன். என்னான்னாறு. நீங்க ஜெயிச்சு வந்தா மெஜாரிட்டி சமுதாயத்துக்கு துரோகம் செய்யாம இருப்பீங்களான்னு கேட்டேன். அவரு என்னை கேட்டாரு, ”மெஜாரிட்டின்னா ஆரை சொல்றீங்க”ன்னு. நிலைமை எப்படி இருக்கு பாருங்க.
நிருபர்: குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளைக் கூட மைனாரிட்டியைக் காட்டியும் தங்கள் மதநூலைக் காட்டியும் தட்டிக் கழிக்கிறார்களே?
நம்பியார்: எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசைதான் காரணம். அதற்காக எதையும் செய்யுறாங்க. எதுக்கும் இடம் தர்றாங்க,. குடும்பக்கட்டுப்பாடுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. இது விஷயமா யுனெஸ்கோ அமைப்பே பாராட்டி உதவி செய்யுற அளவுக்கு ஐயப்பன்மார் செயல்படுறாங்க. சிலபேர் விரத காலத்தில் அப்படி இப்படி இருக்கலாம். ஆனா இந்த பிரம்மச்சரிய
விரதத்துல மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. 41 நாட்கள் இது போல இருக்கும் போது எவ்வளவு குழந்தைகள் பிறப்பு கட்டுப்படுத்தப்படுது. இது உலகத்துக்கே மாபெரும் உதவியில்லையா? அவுங்களே தெரியாம இது போல ஒரு உதவியும் செய்யுறாங்க அய்யப்பன்மார்.
…இப்ப ஆர்.எஸ்.எஸ் வந்தப்புறம் தான் இந்துக்களுக்கு ஒரு ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வந்திருக்கு. இந்துக்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலைமை வந்திருக்கு இது மறுக்க முடியாத உண்மை. இறுதியா நான் சொல்ல விரும்புறது டிஸிபிளின் பத்திதான். கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா நாம எதையும் சாதிக்க முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக்கிட்டா நமது மனசு நம்மளை சும்மா விடாது. கொஞ்சபேரு ஆயுதங்களோடு அணி வகுத்து நிக்கிறாங்கன்னு வச்சுக்குங்க ஆயிரம் பேரு கூட்டமா வந்தாங்கன்னா அந்த கொஞ்சப்பேரைக் கண்டு அந்த கூட்டமே நடுங்கும். ஏன்னா அந்த கொஞ்சம் பேருக்கு எபடி செயல்பட வேண்டும் எந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்கிற பயிற்சியும் கட்டுப்பாடும் இருக்கும். அந்த டிஸிபிளின் நம்ம சமுதாயத்துக்கு முழுக்க வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: nambiar, tamil cinema, அரசியல், இந்து, எம்.என்.நம்பியார், ஐயப்பன், கடவுள், சபரிமலை, சாதி, தமிழ், தமிழ் சினிமா
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
21 November 2008 at 9:12 am
Thank you
very touching and May His Soul rest in Peace.
God Bless.
Thanks again for your Team, that has thought of sharing this with us.
Good wishes and Greetings,
anbudan,
srinivasan.