வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பாரதி விழா’

வானவில் பண்பாட்டு மையம்
சென்னை

பாரதி விழா

Bharatiநாள்: 11 டிசம்பர் 2008, காலை 8.00 மணி
இடம்: அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் முன்புறம்

அவ்வமயம்

கவிஞர் திரு. வாலி அவர்களுக்கு ‘பாரதி விருது’ வழங்கப்படும்
கவிஞர் ‘எதிரொலி’ விசுவநாதன் அவர்களுக்குப் பொற்கிழி வழங்கப்படும்

வழங்குபவர்
திருமதி சகுந்தலா பாரதி அவர்கள்

பாரதியின் திருவுருவப் படத்துக்கு ஜதி பல்லக்கும் ஊர்வலமும் உண்டு

அனைவரும் வருக

இவண்
வானவில் பண்பாட்டு மைய நிர்வாகிகள்

17 Replies to “வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பாரதி விழா’”

  1. கடவுளே பாரதியை இப்படியெல்லாம் அவமானப்படுத்த வேண்டுமா? எப்படி வாழ்ந்த மகாகவி பாரதி! அந்த புனித நெருப்பின் பெயரில் விருதினை வாலி போல கூலிக்கு ஆபாச கவிதை எழுதிப்பிழைக்கும் ஒருவனுக்கு அளிப்பதா?

  2. பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் திருவிழா எடுப்பது நல்ல விஷயம் தான். ஜதிபல்லக்கு வேண்டும் என்று எட்டயபுரம் மகாராஜாவுக்கு சீட்டுக் கவியில் கேட்ட கவியரசரின் சின்ன ஆசையை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சி அமைத்திருப்பதும் மிக நன்று.

    ஆனால், வாலிக்கு விருது என்கிற சமாசாரம் அனைத்தையும் பாழடித்து விட்டதே. அரவிந்தன் நீலகண்டன் கூறுவதுடன் முற்றிலும் ஒப்புகிறேன்.

    பாரதி விருது வழங்க ஆட்களா இல்லை? இதோ, இதே தமிழ்ஹிந்து.காம் தளத்தில் எழுதும் இலக்கிய அறிஞர், பாரதி பற்றி ஆழ்ந்த விஷயஞானமும், பாரதி மீது பேரன்பும் கொண்ட பெரியவர் ஹரிகிருஷ்ணன் இருக்கிறார். இவர்களெல்லாம் கண்ணில் படவில்லையா?

  3. பாரதி விழாவில் வாலிக்கு விருது வழங்கப்படுகிறதா?

    வாலிக்கு விருது வழங்குவதற்காகப் பாரதிக்கு விழா எடுக்கப்படுகிறதா?

  4. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, மற்றும் அ.நம்பி ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களது கருத்தை மறுக்கிறேன்.

    வாலி அவர்களுக்கு என்ன குறை? வாலியையும், குஷ்புவையும் தெரியாத தமிழர் உண்டா?

    வாலிக்கு பரிசு கொடுப்பதால் பாரதி விழா நடக்கும் இடத்திற்கு நல்ல கூட்டம் வரும். பெரிய பெரிய வி ஐ பிக்கள் வருவார்கள். பத்திரிக்கைகளுக்கு கவரேஜ் செய்ய காரணம் கிடைக்கும். மேலும், வாலியைக் கண்டு, வந்திருக்கும் விருந்தினர்கள் மகிழ்வர். மேடையில் வாலியின் அருமை பெருமைகள் பேசப்படும்.

    ஆனால், தமிழ் வலையுலகின்மூலம் நான் அறிந்த ஹரிகிருஷணன் அவர்களிருக்கும் இடத்திற்கு மிஞ்சிப்போனால் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பத்து பன்னிரெண்டு பேர் மட்டும்தான் போய் மகிழ்வார்கள்.

    தமிழன்னை, கலைமகள், சுப்பிரமணிய பாரதி, வ.வே.சு., உவேசா, ரவீந்தரநாத் தாகூர், கம்பன், திருவள்ளுவன், சங்கப் புலவர்கள், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வில்லிபுத்தூரான், ஒளவையார்.

    அவ்வளவுதான். அவருக்குப் போய் என்ன விருது கொடுத்துவிட முடியும்?

  5. இந்த நிகழ்ச்சி பற்றி தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தித் தொகுப்பு:-

    வானவில் பண்பாட்டு மையம் சார்பில் கவிஞர் வாலிக்கு பாரதியார் விருது :: பாரதியாரின் பேத்தி வழங்கினார்

    சென்னை, டிச.12-2008

    கவிஞர் வாலிக்கு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் விருது வழங்கப்பட்டது.

    பாரதியார் விருது

    ஆண்டு தோறும் பாரதியார் விழாவும், ஜதிபல்லக்கு ஊர்வல நிகழ்ச்சியும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடைபெறும். ஆனால், பாரதியார் வீடு தற்போது பழுதடைந்திருப்பதால் இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் நடைபெற்றன.

    பாரதியாரின் பிறந்த நாளன்று வானவில் பண்பாட்டு மையம் சார்பாக, கடந்த 11 ஆண்டுகளாக பாரதியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. டி.கே.பட்டம்மாள், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சிலர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு விருது கவிஞர் வாலிக்கு வழங்கப்பட்டது. விருதை பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வழங்கினார்.

    ஜதிபல்லக்கு

    பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ஜதிபல்லக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த பல்லக்கில் இருந்த பாரதியாரின் மார்பு அளவு சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த ஜதிபல்லக்கு பார்த்தசாரதி கோவில் வாசலில் இருந்து பாரதியார் வீடுவரை சுமந்து செல்லப்பட்டது.

    இந்த ஊர்வலத்தை எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் உள்பட பலர் இந்த பல்லக்கை சுமந்து சென்றனர். எம்.பி.சீனிவாசன் இசை குழுவினரால் பாரதியார் பாடல்கள் பாடப்பட்டன. எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் கோலாட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் க.ரவி, தலைவர் வவேசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சிறைத்துறை டி.ஜி.பி நடராஜ், கிரேஸி மோகன், சுகிசிவம், நடிகை சொர்ணமால்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  6. if these people had bothered to find details about vanavil cultural centre the allegations will find no basis. it is the height of stupidity to claim that the whole exercise was meant to boost the image of vaali. it is absurd to claim that this organization was started eleven years back with the sinister motive of pleasing vali today.
    vanavil is run by a team of selfless people who are known for their intellectual ability, integrity and nationalistic spirit.they spend their time energy and money for a good cause.even a casual enquiry with the people in chennai would have brought out the truth. it is surprising that these allegations arise from hindu platform. think twice before suggesting something about the other mans motive.

  7. vanavil people are doing a selfless service to propagate bharathis ideals. if you cant lend a hand please step aside.some of the comments from your readers are acidic.

  8. i attended the bharathi vizha yesterday.it is one of the best things happening in chennai for more than a decade.it is very difficult to do some agood work.what is easy is to pick holes.uppenrum cheenienrum ulnattu selai enrum seppiththirivaradi kiliye, seyvathariyaradi.
    if you have a differnt openion about vali, that is understandable. but one should know the difference between the baby and the bathwater.
    yours
    venu

  9. வானவில் பண்பாட்டு மையத்துடன் எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பு உண்டு. அந்த மையத்தை அதன் அங்கத்தினர்கள் தங்கள் சொந்த செலவில் எந்தவித சுயநல நோக்கின்றி, எந்தவித பாரபட்சமும் இன்றி நடத்தி வருகின்றார்கள்.

    வானவில்லின் செயல்பாட்டை மறுக்கும் முன் அதன் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
    பாரதிக்காக பரிந்துரைக்கும் இவர்கள் பாரதிக்காக என்ன செய்து கிழித்தார்கள் என்று தெரியவில்லை.

    உண்மையை உணராமல், எதிர்மறையான எண்ணங்களை
    எழுதியே பெயர் வாங்குவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
    அதற்கு இந்த மேடை இவர்களுக்கு வசதியாக இருக்கின்றது.

    -சக்திப்ரியன்

  10. The credentials of the organisatiob [Vaanavil …] are indeed high. That IS the very reason of the shock at the choice of Vali. After the number of movie songs that have been regarded popular. what he has been passing off as ‘pudhukkavithai’ is mostly so pedestrian, so sansculottish, so clay-footed – not far removed from widely mimicked ‘Rajender rhyming’.

    balu

  11. ராதா மற்றும் பாஸ்கர்,

    வானவில் பண்பாட்டு மையத்தை இங்கு யாரும் தாக்கவில்லை. அவர்கள் தன்னலமின்றி சேவை செய்கிறார்கள் என்பது குறித்து ஐயமும் எழுப்பவில்லை. அவர்கள் செய்யும் சேவைகள் குறித்து மேலும் கூறினால் மகிழ்வேன். இங்கு கேள்வியெல்லாம் பாரதி போல தனது நிலைப்பாட்டுக்காக தனது ஆதர்சத்துக்காக வாழ்க்கையை வறுமையில் கழித்து தமிழுக்கு புகழ் சேர்த்த ஒருவரது பெயரில் விருதினை வாலி போல இந்து விரோத அரசியல்வியாதிகளை அண்டிப்பாடி பிழைத்தும் ஆபாச பாடல்களை எழுதி செல்வம் சேர்த்தும் வாழும் ஒரு மனிதருக்கு அளிப்பது சரியா என்பதுதான். இல்லை வாலி உண்மையிலேயே பாரதி பரிசுக்கு தகுதியானவர்தான் என நீங்கள் நம்பினால் அது உங்கள் இஷ்டம். இனியாவது வானவில் பண்பாட்டு மையம் போன்ற அமைப்பு பாரதியின் பெயரில் அளிக்கும் விருதினை உண்மையான இலக்கியவாதிகளுக்கு, அரசியல்வியாதிகளுக்கு அடிபணியாமல் இந்த தேசத்தை இந்த தேசத்தின் பண்பாட்டை பாரதி போல நேசிக்கும் இலக்கியவாதிகளுக்கு, இந்த தேசத்தின் சமுதாய அவலங்களை பாரதி போல எவ்வித சமரசமுமின்றி கண்டிக்கும் இலக்கியவாதிகளுக்கு அளிக்க வேணும். வாலிக்கு பாரதி விருது அளித்து பாரதி ஜென்ம தினத்தன்று பாரதியை அவமானப்படுத்தியமைக்கு கழுவாய் தேட வேண்டும். இறுதியாக ஒரு விஷயம். பாரதி ஒரு தேசிய கவி. தமிழ்நாட்டுக்கு ஒரு சாபம் நேர்ந்திருக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கர், காமராஜர், பசும் பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சிதம்பரம் பிள்ளை என எல்லா தேசிய தலைவர்களையும் சாதி அடையாளமிட்டு சாதி சிறைக்குள் அடைத்து மகிழும் வியாதி. தயவு செய்து பாரதியையும் அப்படி சாதி சிறையில் அடைக்கும் கீழ்மையை வானவில் பண்பாட்டு மையம் என்கிற தன்னலமற்ற தொண்டு நிறுவனம் அரங்கேற்றிவிடாது என நம்புகிறேன்.

    அரவிந்தன் நீலகண்டன்

  12. வானவில் பண்பாட்டு மையத்தினரின் நற்பணி இங்கு விமரிசிக்கப்படவில்லை. பாரதிப் புலவனுக்கு யார் விழா எடுத்தாலும் அது பாராட்டுக்குரியது; அந்த வகையில் வானவில் பண்பாட்டு மையத்தினர் பாராட்டுக்கு உரியவர்களே.

    ஆயினும் பாரதியின் பெயரில் வழங்கப்பெறும் விருதுகளைப் பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். விருதுகளைப் பெறுபவர்களின் தரத்தால் அவ்விருதும் பாரதியும் கீழிறங்குமாறு அமைதல் கூடாது.

    வாலியின் தரம் எல்லாருக்கும் தெரியும்.

  13. What is the caste of abdul kalaam, sonal mansingh, ganapathi sthapathi , jayakanthan gopi krishna kottur, d.k.pattammal and la.sa.ramamirutham? these people were the recipients of bharathi virudhu (vaanavil). i think it is an unhindu act to make unfounded allegation. if aravindan neelakandan is sincere he should have checked the caste factor of the recipients before writing about the caste factor. if it is his intention to be the police, prosecutor, witness, jury and the judge to hang vaanavil let him try his might. as a hindu i believe that it is not the rhetoric but righteousness that will win.
    with regards
    sri

  14. இதனை எத்தனை முறை தெளிவு படுத்துவது என்பது தெரியவில்லை. வானவில் பண்பாட்டு மையத்தை இங்கே எங்கும் சாதீய அமைப்பு என்று சொன்னதாக தெரியவில்லை. ஆனால் எஸ்.வி.சேகர், இல.கணேசன், கிரேஸி மோகன், சொர்ணமால்யா என அடிக்கிக்கொண்டு போனால் சாதாரண தமிழனுக்கு என்ன உரைக்கும் என பாருங்கள். ஜெயகாந்தன் அப்துல்கலாம் என்கிற வரிசையில் வாலியை கொண்டு வருவதே ஒரு வீழ்ச்சி என்பதில் நான் தெளிவாக உள்ளேன். இன்றைக்கு ஒரு விஷகும்பல் தமிழ்நாட்டில் இயங்குகிறது. பாரதியை சாதி முத்திரை குத்தப்பார்க்கும் ஒரு கும்பல். மிஷிநரி ஆதரவுடன் இயங்கும் மார்க்சிய லெனினிய கும்பல் அது. வானவில் பண்பாட்டு கழகத்தின் இந்த வருடத்திய செயல்பாடு நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ மிஷிநரி கும்பலுக்கு ஆதரவாக முடிந்திருக்கிறது. சூழலில் நிலவும் விஷக்காற்றை மனதில் கொண்டு காணவிடாமல் தடுக்கும் திரையை கிழித்தெறியுங்கள். இன்றைக்கு சாதியத்தால் ரணகளமாகியிருக்கும் தமிழகத்துக்கு பாரதியை ஒரு ஆதர்சமாக தமிழகம் முழுவதற்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. அதனை செய்யுங்கள். செய்வோம். நிச்சயமாக அசட்டு காமெடி நடிகர்களையும் நடிகைகளையும் அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு ஒரு ஆபாசப்பாட்டெழுதி சம்பாதிக்கும் இந்து விரோத அரசியல்வியாதிக்கு அடிவருடும் கூலிப்பாட்டெழுதி ஒருவருக்கு பாரதி விருதை கொடுப்பது அதற்கான வழிமுறையல்ல. இதனை சொல்வது எனது கருத்துரிமை. இதனை மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அது உங்கள் இஷ்டம்.

  15. “தயவு செய்து பாரதியையும் அப்படி சாதி சிறையில் அடைக்கும் கீழ்மையை வானவில் பண்பாட்டு மையம் என்கிற தன்னலமற்ற தொண்டு நிறுவனம் அரங்கேற்றிவிடாது என நம்புகிறேன்.”
    -அரவிந்தன் நீலகண்டன்

    இந்த வார்த்தைகளுக்கான அவசியம் என்னவென்று தெரியவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக நோக்கிலும் சாதி உணர்வுக்கு இடம் தராமல் வாழ விரும்புகிறவன் நான். வானவில்லும் அப்படித்தான். உண்மை என்னவென்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் சிலர் கேட்பதாக இல்லை. பாரதி விருது யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, அதற்கு சாதி பின்னணி இருக்கிறதா என்பதை அருகிலுள்ள தினத்தந்தி செய்தியை படித்தாலே விளங்கி விடும்.

    ஆகவே, காரணமில்லாமல் அவதூறு செய்வதற்கு இந்த மேடை பயன்படுகிறது. எனவே நமக்கு உறவு தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் எழுதி வந்த போகப் போகத் தெரியும் என்ற தொடரை நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை நடந்த நல்லதற்கு நன்றி

    அன்புடன்
    -சுப்பு

  16. மதிப்பிற்குரிய சுப்பு அவர்களுக்கு,

    தங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியமைக்கு என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    1. வானவில் பண்பாட்டு மையம் ஒரு சாதிய அமைப்பு என்றோ அல்லது சாதியத்துடன் நடக்கிறது என்றோ நான் கூறவில்லை. அப்படி ஒரு பழி வந்துவிடக்கூடாது என்பதுதான் என் எண்ணம். ஆனால் அதனை சொல்வது அந்த அமைப்பினை சாதிய அமைப்பாக காட்டியிருக்கும் விதத்தில் வார்த்தைகள் வந்திருப்பின் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
    2. வாலியைப் பொறுத்தவரையில் நான் கூறிய வார்த்தைகளில் எள்ளளவும் மாற்றுவதற்கில்லை. அவருக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் பாரதி அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் பாரதியை நேசிக்கும் பலருடைய மனதுகளும் வேதனைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் என் கருத்து.
    3. மீண்டும் சொல்கிறேன். தனிமனித வெறுப்பையோ அல்லது சாதிய காழ்ப்புணர்ச்சியையோ நான் காட்டவில்லை. எனக்கு எந்த சாதி அடையாளமும் கிடையாது. எனது ஒரே அடையாளம் நான் ஹிந்து என்பதே. என்ற போதிலும் எனது வார்த்தைகளால் இதில் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் மேலும் தங்கள் அமைப்புக்கு அமைப்பு ரீதியாகவும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அறியும் போது வேதனையடைகிறேன். மேலும் நான் தமிழ் இந்து கமெண்ட்கள் பகுதியில் வெளியிட்டு உங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்திய கருத்துக்கள் என்னுடையவையே அன்றி தமிழ் ஹிந்து இணையதளத்தினுடையவை அல்ல என்பதனையும் கருத்தில் கொண்டு இத்தகைய மனவேதனைகளை பொருட்படுத்தாமல் மன்னித்து சமுதாய நலனை கருத்தில் கொண்டு தமிழ் ஹிந்துவுக்கு தொடர்ந்து தங்கள் எழுத்துப்பணியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அரவிந்தன் நீலகண்டன்

  17. திரு. சுப்பு அவர்கள் இட்டிருந்த கருத்து:

    “this matter can be treated as closed. let us move ahead.

    subbu”

    திரு. சுப்பு அவர்கள் தொடர்ந்து தமிழ் இந்துவில் தன் படைப்புக்களை அளிக்க இருக்கிறார்.

    இந்த இழையில் விவாதம் இத்துடன் முடிவுற்றது.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *