பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்
ஜடாயு
20 Jan 2009 |
அச்சிட
பொங்கல் பண்டிகை தொடர்பாக இரண்டு நிகழ்வுகள்.
செய்தி - 1:
கலிஃபோர்னியா மாகாணம், அமெரிக்கா:
பொங்கலும் தேங்க்ஸ்கிவிங்கும் ஒன்றுதான்
இங்குள்ள வளைகுடாப் பகுதியில் (Bay Area) வசிக்கும் தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , செயிண்ட் ஜோசப் சர்ச் வளாகத்தில், ஜனவரி 14 அன்று பொங்கல் என்ற “இந்திய நன்றி தெரிவிக்கும் நாள்” (Indian Thanksgiving) விழாவைக் கொண்டாடினர். இப்பகுதி தமிழ் கிறிஸ்தவத் தலைவரான சுந்தர் வின்சென்ட் பொங்கல் பற்றிக் கூறுகையில் “Pongal is a harvest festival, the Tamil equivalent of Thanksgiving” என்று குறிப்பிட்டார். விசேஷ சுவிசேஷ பிரார்த்தனை மற்றும் “விசேஷ இந்திய விளக்கு” ஏற்றுதல் மற்றும் இரவு உணவுடன் விழா முடிவடைந்தது. இதுபற்றி அவர் அமெரிக்கப் பத்திரிகைகளிடம் மேலும் கூறுகையில், “உலகெங்கும் பல தேசங்களில் 90 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அப்போஸ்தலர் புனித தாமஸ்தான் தமிழ் பேசும் இந்தியர்களுக்கு கடவுள் பற்றிய நற்செய்தியை முதன்முதலில் சொன்னார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அவர் கொல்லப் பட்டார்” என்றார்.
“சென்னையில் உள்ள புனித தாமஸின் கல்லறைக்கு ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தமிழ்ப் பொங்கல் (Tamil Pongal) புதிய நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும்” என்றார் அவர். இவ்விழாவில் Bishop Patrick J. McGrath, Father William Rosario, Father Oscar D. Tabujara, Father Robert B. Moran ஆகிய உள்ளூர் (அமெரிக்க) கிறிஸ்தவப் பங்குத் தந்தைகள் மற்றும் பல கிறிஸ்தவத் தலைவர்களும் பங்கு கொண்டனர்.
(நன்றி: http://www.dsj.org)
செய்தி 2:
பிள்ளையார்புரம், கன்னியாகுமரி மாவட்டம், இந்தியா.
வீட்டு முன்பு பொங்கல் வைக்க போலீஸ் அனுமதி மறுப்பு
நாகர்கோவில், ஜன 16: வீட்டு முன்பு பொங்கல் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் பிள்ளையார்புரத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர்.

(நன்றி: தமிழ்முரசு)
தடை போட்டதற்கு காரணம? அங்கு ஏன் “மீண்டும்” பதற்றம்? பின்னணி இதோ -
சென்னை, ஜன.2: கன்னியாகுமரியில் நீதிமன்ற உத்தரவை மீறி முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்திருப்பதைக் கண்டித்து வரும் 5ந் தேதி பிஜேபி சார்பில் நாகர்கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து பிஜேபி மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், மதுசூதனபுரம் பகுதி, ஆத்திகாட்டு விளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் எனும் சிறிய ஊரில் சுமார் 150 வீடுகள் உள்ளன. அதில் 8 வீடுகள் மட்டும் கிறிஸ்தவர்கள். இங்கு காலம்காலமாக முத்தாரம்மன் கோயில் கொடைவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் புதியதாக பெரிய வாகனம் ஒன்று செய்யப்பட்டு வாகன பவனிக்கு ஏற்பாடாகியது. ஆனால் ஊர்வலப்பாதையில் சர்ச் இருப்பதாக கூறி, கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கோயில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்து 250 அடிக்கு கிழக்கில்தான் சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்சிற்கு முன் நாம் கொண்டுசெல்லும் வாகனம் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தெருவை சர்ச்சுக்கு சொந்தமான தெரு என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த தெருவிற்கு பூமி கொடுத்தவர்கள் இந்துக்கள்தான். இந்த வருடம் திருவிழாவின்போது வாகனம் எடுக்க அரசு தடை விதித்தது. அதையும் மீறி வாகன பவனி அந்த தெரு வழியாக எடுக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி ரோட்டிற்கு வாகனம் கொண்டு வந்த பிறகு போலீஸ் தடியடி நடத்தி வழக்குத் தொடர்ந்தார்கள். அதன்பிறகு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது பொதுவழி என்றும் வாகன பவனி கொண்டு செல்ல அனுமதியும் பெறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி அது
பொதுப்பாதை என்று அறிவிக்கப்பட்டது.
மீண்டும் திருவிழா நடத்த முயன்றபோது காவல் துறை துணை கண்காணிப்பாளர் அது குறுகிய பாதை எனக் காரணம் கூறி மீண்டும் காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது. எனவே பிள்ளையார்புரம் மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மீறி காவல்துறை தடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகவே மீண்டும் அந்த வழியாக திருவிழா வாகனம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் கண்டன ஆரப்பாட்டம் ஜனவரி 5 பிற்பகல் நடைபெறும். அதில் நானும் கலந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
(நன்றி:மாலைச்சுடர்)
- பிள்ளையார்புரம், ஜூன் 2008:இந்துப் பெண்கள் மீது போலீஸ் தடியடி
- அமர்நாத்தும், பிள்ளையார்புரமும்
இந்தச் செய்திகள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் தன் வீட்டின் முன் பொங்கலிடப் பொங்கல் அன்று தமிழ் இந்துவுக்குத் தடை. காரணம் கிறிஸ்தவர்கள். என்னதான் பொங்கல் கொண்டாடுவதாகக் கிறிஸ்தவ மதமாற்றிகள் மாய்மாலம் போட்டாலும் அந்தப் பழம்பெரும் இந்துப் பண்டிகை மீதுதான் எவ்வளவு வெறுப்பு! எவ்வளவு வன்மம்! எத்தனை எதிர்ப்பு!
நமது பாரம்பரியப் பண்டிகைக்கு அரசியல், இனவாதச் சாயம் பூசி அதன் புனிதத்தையும், கலாசாரப் பின்னணியையும் சீர்குலைத்து வரும் தற்போதைய தமிழக அரசும், அதன் காவல்துறையும் இதன்மூலம் பொங்கல் இந்துக்களின் பண்டிகையே என்று சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறது.
ஒரு புறம் இந்துக்களின் தனிப் பெரும் பாரம்பரியத் திருநாளின் அழகிய சமய, கலாசார, தத்துவ, வரலாற்றுப் பின்னணி அனைத்தையும் அமைதியாகக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அது தாமஸ் உருவாக்கிய ஒரு கிறிஸ்தவப் பண்டிகை, அமெரிக்க “தேங்க்ஸ்கிவிங்” திருநாளின் மோசமான காப்பி என்று “ஞானஸ்நானம்” செய்வித்து “கொண்டாடும்” அமைதிக் கிறிஸ்தவம்.
இன்னொரு புறம், இந்துக்களின் மண்ணில் நமது மனித உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும், அம்மன் கோவில் விழாவைக் குலைக்கும், வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதைக் கூட எதிர்த்துத் தடை உத்தரவு கேட்கும் அன்புக் கிறிஸ்தவம்.
இவற்றுக்கு மத்தியிலும், உலகில் உண்மையான அன்பும், அமைதியும் தழைத்தோங்க இறையருள் துணை செய்யட்டும்.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
20 January 2009 at 2:20 pm
நன்றி ஜடாயு,
பிள்ளையார்புரம், ஒட்டகத்தின் கதையை நினைவுபடுத்துகிறது, கூடாரத்தில் முதலில் தலைமட்டும் வைக்க அனுமதிபெற்ற ஒட்டகம் சிறிது சிறிதாக உடல் முழுவதையும் உள்ளே நுழைத்து, முதலாளியை வெளியே தள்ளியது. அதுதான் பிள்ளையார்புரமும். இங்கு மட்டுமல்ல, சில அடிகளே நடந்து சென்றால் ஆத்திக்காட்டுவிளை என்ற ஊர் உள்ளது, அங்கும் இதே நிலைதான் ஒட்டகம் அங்கே முழுவதுமாக நுளைந்து விட்டது. ஆத்திக்காட்டுவிளை இப்போது சியோன்புரமாகி விட்டது. ஆத்திக்காடு ஊரை சேர்ந்த பல இந்து குடும்பங்கள் இன்று ~~~வேதக்காரர்கள்!!!!?? ஆகிவிட்டனர், ஆகிகொண்டிருக்கின்றனர். என்னும் பத்தடி கீழே சென்றால் மேலகிருஷ்ணன் புதூர், அங்கிருந்த அரசு அனுமதி பெறாத தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட சிறுவர் பால்வாடிக்கு அவர்களே தீ வைத்து விட்டார்கள். அரசும் காவல்துறையும் துணையுடன் இனிதே ஒரு சர்ச் வெற்றிக்கரமாக அமைக்கப்பட்டு விட்டது. இத்தனைக்கும் காரணம் இந்து மதத்திலிருக்கும் சில ஜாதிவெறி பிடித்த வெள்ளாடுகள்.
இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் பலவிதங்களில் இந்துத்தன்மையை இழந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமேரி மாவட்டமாக்க நடந்த முயற்ச்சிகள் பற்றி யாராவது ஒரு கட்டுரை போட்டால் என்ன?