Monthly Archives: February 2009

வீடியோ

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

புருஷோத்தமன் கண்ணன் புகழைப் பாட நம்மை அழைக்கும் இந்த இனிமையான பாடல், கவியரசு கண்ணதாசன் எழுத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கலக் குரலில் நம்மை அடைகிறது. மீண்டுமொருமுறை கேட்டு மகிழுங்கள். http://www.youtube.com/watch?v=yAN5bNPzOdY

மேலும் »

வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில்-10: ஸ்ரீ அன்னை

மகான்கள் வாழ்வில்-10: ஸ்ரீ அன்னை

God Grants you What you Deserve And Not What You Desire ’கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். வளர வளர இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டவர், பின்...

மேலும் »

வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில்-9: திருப்புகழ் சுவாமிகள்

மகான்கள் வாழ்வில்-9: திருப்புகழ் சுவாமிகள்

அர்த்தநாரியின் நண்பர் ஒருவர் பழனி முருகனைச் சென்று தரிசிக்குமாறும், அவன் அபிஷேக தீர்த்தம் உண்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்றும் ஆலோசனை கூறினார். அதன்படி மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு பழனியம்பதியைச் சென்றடைந்தார் அர்த்தநாரி...

மேலும் »

வரலாறு

போகப் போகத் தெரியும்-11

February 17, 2009
-
போகப் போகத் தெரியும்-11

சனாதன இந்து என்பதில் பெருமைப்படுவது, தீண்டாமையை நிராகரிப்பது, பிராமணர்களின் பங்கை அங்கீகரிப்பது, பிராமணரல்லலதார் சார்பில் கூறப்படும் குறைபாடுகளும் சில நியாயமானவை என்று உணர்வது ஆகியவை காந்தியச் சிந்தனையின் அடித்தளமாக இருந்தன... வைக்கம் போராட்டத்தை காந்திஜி ஆதரித்தார், காங்கிரஸ் ஆதரித்தது, முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் ஆதரித்தனர்...

மேலும் »

சினிமா

நான் கடவுள்: பட விமர்சனம்

நான் கடவுள்: பட விமர்சனம்

இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்... தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை...

மேலும் »

வீடியோ

Dhyanalinga Yogic Temple – தியான லிங்கம்

http://www.youtube.com/watch?v=NfL31MDuq3I

மேலும் »

வரலாறு

போகப் போகத் தெரியும்-10

February 15, 2009
-
போகப் போகத் தெரியும்-10

தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் போராடியதில் ஈ.வேராவுக்கு தலைமைப் பீடம் உண்டா? 1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க. விற்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது...

மேலும் »

பயங்கரவாதம்

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்

பெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள். 11 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பினால் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன்...

மேலும் »

கலைகள்

ரீதிகெளளை

ரீதிகெளளை

ரீதிகெளளை ‘கண்கள் இரண்டால்’ பாடலாக ஊரெங்கும் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கேட்டு ரசிக்கும் பெரும்பாலானோருக்கு அது ரீதிகெளளை ராகத்தில் அமைந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பாடலை ரசிக்க அந்த விஷயம் தெரிந்திருக்கத் தேவையுமில்லை என்பது உண்மை!

மேலும் »

சமூகம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை 'மலையிலிருந்து வந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்... கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

மேலும் »