Payday loans Cialis online

Monthly Archives: March 2009

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 02

ஓடிப் போனானா பாரதி? – 02

பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து 'கவிராஜன் கதை'யில் எழுதியிருக்கிறார். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு... [மேலும்..»]

இலக்கியம்

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-3

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை இன்றைய தமிழ் நாவல் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வு. இப்பெண்ணியக் கவிஞர்களின் ஆணாதிக்கச் சீற்றம் உண்மைதானா அல்லது வெறும் பாவனையா, என்று சந்தேகப்படும் காரணங்கள் முன்னெழுகின்றன, இவர்கள் பிராபல்யம் நாடி, பதவி நாடி, அரசியல் கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளுவதைப் பார்த்தால்... [மேலும்..»]

வரலாறு

போகப் போகத் தெரியும் – 18

March 28, 2009
-
போகப் போகத் தெரியும் – 18

”இந்தப் பகட்டான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து காட்சி தரும் மகாராஜாக்களையும் பணக்காரப் பிரபுக்களையும் வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் இந்த மகாராஜாக்களுக்கும் பணக்காரப் பிரபுக்களுக்கும் கூறிக் கொள்வேன். நீங்கள் இந்த தங்க வைர ஆடை ஆபரணங்களையும் மக்கள் நல்வாழ்விற்காக எடுத்துக் கொடுத்து மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்தாலொழிய – இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படுவதற்கு வேறு வழியே கிடையாது....” காந்திஜி பேசிக் கொண்டே போனபோது அன்னி பெசன்ட் குறுக்கிட்டார். மேடையிலிருந்த அரசர்கள் வெளியேறினர்... [மேலும்..»]

சமூகசேவை

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

பேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைக் கரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம். "...நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்" என்றார்... [மேலும்..»]

வீடியோ

கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு

கன்யாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் தென்மாவட்டங்களில் ஒன்று. அங்கேயுள்ள பெருமாள்புரம் கிராமத்தில் ஒரு 20 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள் ஆனதும் அவர்கள் நேற்றுவரை சகோதரர்களாக இருந்த இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் வன்முறையை ஏவி விடத் தொடங்கிவிட்டனர். அப்பாவி இந்துக்கள் வருந்திச் சொல்வதைக் கேளுங்கள்: http://www.youtube.com/watch?v=i0gkD16-_GY மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

கலைகள்

கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

வயலின் மேதை கன்னியாகுமரியின் சிஷ்யரான இவர், சம்பரதாயமான கர்நாடக இசைக்கச்சேரிகளையும் நிறைய செய்திருக்கிறார்... பேச்சு பிரசன்னா இசையமைத்த 'Smile Pinki' டாகுமெண்டரியைக் குறித்துத் திரும்பியது. "எனக்கு பணத்தை விட ஆத்ம திருப்தி முக்கியமானதாகப் படுகிறது." என்று 'Smile Pinki'-க்காக இசையமைத்ததைக் குறித்துக் குறிப்பிட்டார் பிரசன்னா. [மேலும்..»]

பொருளாதாரம்

நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்

March 25, 2009
-
நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்

... இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை.... இந்தியா, சீனாவுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது. இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. [மேலும்..»]

வழிகாட்டிகள், வீடியோ

காவடி ஆட்டம் – ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்

ரிச்மாண்டிலுள்ள தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது குழந்தைகள் நிகழ்த்திய காவடிச் சிந்து. http://www.youtube.com/watch?v=ZDWcLfKHw9k மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]

வரலாறு

போகப் போகத் தெரியும்-17

March 24, 2009
-
போகப் போகத் தெரியும்-17

‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்... இந்தச் சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள். இவர்களெல்லாம் விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள். [மேலும்..»]

சமூகம்

காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

வக்கீல்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பலமும், அரசியல் கட்சிகளின் பக்கபலமும் இருக்க, காவலர்களுக்குச் சங்கங்கள் இல்லாமையும், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையும் பெரும் பலவீனமாக உள்ளன. அவர்களை ஆளும் கட்சியினரும் காப்பதில்லை, எதிர்க் கட்சியினரும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சாதாரணப் போக்குவரத்து விதி மீறல் முதல் கிட்டத்தட்ட கொலைக்குற்றம் வரை, வக்கீல்கள் மீது வெறும் ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) மட்டுமே போலீசாரால் பதிவு செய்ய முடிந்துள்ளது... சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது... [மேலும்..»]