இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

.. ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள்…. இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.

View More இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

ஓடிப் போனானா பாரதி? – 09

எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’

View More ஓடிப் போனானா பாரதி? – 09

இந்து நேபாளம் – ஒரு பார்வை

இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.

View More இந்து நேபாளம் – ஒரு பார்வை

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.

View More ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்