மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » அரசியல், தொடர், பொது

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 2 (ஆங்கில மோகம்)

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)

(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

periyar_marubakkamதமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.

அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-

-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!

- தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , ,

19 மறுமொழிகள் »

  1. இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
    (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

    இதுதாண்டா பெரியாரின் உண்மையான நோக்கம், தமிழில் குப்பைகளை, புராண புழுகுகளை சுமந்து கொண்டு திரிந்தால், தமிழ் எதற்கு வேண்டும்.

    அறிவு வளர்க்க பயன்படாத மொழி, தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல எந்த சமூகத்திற்கும் தேவையற்றது.

    சும்மா மொழி காவலர்கள்போல் ஆள்பிடிக்கிற வேலையை கைவிடுங்க தோழர்களே திருந்துங்க

  2. ”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
    (குடியரசு 20.01.1920)

    இந்தியாங்கிற நாடு செயற்கையாக கட்டியமைக்கப்பட்ட பொழுது, தமிழன் வடவனுக்கு அடிமைப்பட்டு விடக்கூடாது, ஆகையால் ஆங்கிலமா? இந்தியா?என்று வரும்பொழுது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியே!

    இன்றைய சூழலிலும், வடவர்களின் சூழ்ச்சியாலும், தமிழகத்தில் காட்டிக் கொடுத்த, பெரியாரிய பாரம்பரியத்தை கெடுக்க வந்த கருணாநிதிக்களாலும், வடவருக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்யும் ஆரிய, ஆரிய அடிவருடிக் கூட்டங்களாலும், இன்று நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமோ?

    இதே நிலை, மொழியாலும் நமக்கு வந்துவிடக்கூடாதும், சிந்தனையில் மேலும் வடவருக்கு அடிமையாகிவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு சரியானதே.

  3. Mr மகிழ்நன், for your infoimation E V Ramasamy is saying all this against tamil language. He should have said this against his kannada language. Did he do that?
    Why bother so much when his mother tongue is not even tamil?
    He is a sadist.
    Tamil is a language to communicate. A Karnatak like Mr EV should preach about his beliefs in his Kannada state.
    Not in Tamil Nadu.

  4. மதிப்பிற்குரிய மகிழ்நன்,

    நீங்கள் சிந்திக்க சில கேள்விகள்…

    01. ஆங்கிலத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரியாரின் தொலைநோக்கு. சரி. ஆனால், ஹிந்தியை எதிர்க்க, ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர், தமிழைக் கொச்சைப் படுத்துவது ஏன்?

    02. புராணக் குப்பைகள் ஆங்கிலத்தில் இல்லையா? தொலைநோக்குப் பார்வையில் கிட்டப்பார்வை குறை என்று இதைச் சொல்லலாமா? ஆங்கிலம் புராணக் குப்பைகளைத் தண்ணி தெளித்துவிட்ட மொழியா?

    03. புராணக் குப்பைகள் என்பது யார் பார்வையில்? யார் எதைக் குப்பை என்று சொல்வது? புராணம் என்பது ஒரு மொழியின் சொத்து. தன் பாட்டன் பேசியதைக் குப்பை என்று சொல்லி, அதற்குக் காரணம் மொழிதான் என்று கண்டறிவதுதான் பகுத்தறிவா?

    04. ஒரு மொழியில் கருத்துகள் தவறாக இருக்குமானால், அது மொழியின் குற்றமா அல்லது அம்மொழியில் சிந்திப்பவர்களின் குற்றமா? மொழி என்கிற அருவத்தைச் சாடும் ஒருவரை எப்படி பகுத்தறிவாளர் என்று சொல்லமுடியும்?

    05. ஆங்கிலம் தேவை என்பதைக் கண்டுகொண்டுவிட்ட பெரியாரின் தொலைநோக்கு கூட மேம்போக்கானதாக இருக்கிறது. வெள்ளைக்காரன் பேசும் மொழி என்கிற ஒருவித மயகக்த்திலும், ஆராதனை மனப்பான்மையிலும் அவர் இதைச் சொன்னதாகத் தெரிகிறது. ஏனென்றால், ’தமிழில் என்ன இருக்கிறது, ஆங்கிலத்தில் என்ன இல்லை’ என்பதை, இதைப்போன்ற மனநிலை உடைய ஒருவரே சொல்லமுடியும். உண்மையில் மொழி என்பது வெறும் மொழியல்ல. ஒரு கலாச்சாரத்தின், அக்கலாச்சாரத்தில் வாழ்ந்த மக்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் இருந்துகொண்டு யோசித்தால் தமிழ் மொழியின் போதாமையும், தமிழ் மொழியில் இருந்துகொண்டு யோசித்தால் ஆங்கிலத்தின் போதாமையும் தெரியும். இது எந்த ஒரு மொழிக்கும் பொருந்திவரும் என்பதே உண்மை. அதைவிட்டுவிட்டு, ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்பது குழந்தைத்தனமானது.

    06. கட்டுடைத்தல் என்பதைப் பெரியார் மேலோட்டமாகப் புரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது. தடலாடிக் கருத்துகளின் ஒட்டுமொத்த உருவமாகப் பெரியார் தெரிகிறது. பெரியாருக்கு வரலாற்றுப் புரிந்துணர்வும், ஆழமான சமூகக் கண்ணோட்டங்களும் சுத்தமாக இல்லையோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது, பெரியார் தமிழ் குறித்துச் சொல்லும் கருத்துகளைக் காணும்போது.

    இந்தத் தொடர் தொடரும்போது பார்க்கலாம், பெரியார் இன்னும் என்ன என்ன மொழி குறித்துச் சொல்லியிருக்கிறார் என்று.

    உங்கள் கருத்துக்களையும் எனது கேள்விகளையும் குறித்துச் சிந்தியுங்கள். முரன்பாட்டின் மொத்த உருவமாய் வாழ்ந்துவிட்டுபோன ஒருவர் எப்படி பெரியாராகவும், தந்தையாகவும் கொண்டாடப் படுகிறார் என விளங்கவில்லை.

  5. பாரதபுத்திரன், அருமையான கேள்விகளை எழுப்பி மகிழ்நனது மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டீரே ஐயா !

    // கட்டுடைத்தல் என்பதைப் பெரியார் மேலோட்டமாகப் புரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது.//

    “மேலோட்டமாக” என்பது ரொம்ப மென்மையான வார்த்தை. பெரியார் உருவாக்கியது மகா அபாயகரமான வெறுப்பியல் களம்.. முற்றான சமூக, கலாசாரச் சீரழிவே அதன் நோக்கம்.

    இதனை ”அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை” என்ற அருமையான கட்டுரையில் ஜெயமோகன் விளக்குகிறார். முன்பு திண்ணையில் வெளிவந்தது:

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203102&format=html

  6. பாரதபுத்திரனுக்கு நன்றி.

    நாயக்கர் ஜாதியினர்தான் அதிகமாக இப்பொதும் தலித்களை அடக்கவும், கொல்லவும் , கோவிலில் விடாமல் விலக்கவும் செய்திருக்கின்றனர். பெரியார் இவர்களின் ஜாதியைச் செர்ந்தவரா? யாரேனும் கூறுங்களேன்.

    மகிழ்நன் கருத்தைப் படிக்கும் போது, ‘வடவர் வராமல் செய்ய தமிழை ஒழிக்க வென்டும்’ என்ற அர்த்தம் உருவாகிறதே? பாவம், தனக்கு எல்லாம் தெரியும், “பெரியார்தான் நமக்கு பதிலாகச் சிந்தித்துவிட்டாரே, நாம்வேறு எதற்கு அநாவஸ்யமாய்?” என்று இருக்கிறார் போலத் தெரிகிறது.

  7. ‘னை , லை, ணா’ போன்ற எழுத்துக்களின்உண்மையான வடிவம் இங்கு உள்ளது http://upload.wikimedia.org/wikibooks/ta/9/9f/Tamil_vwl2.gif அதை விடுத்து தமிழ் மொழி வெறுப்பாளரான பெரியார் பரிந்துரைத்த எழுத்துக்களை நாம் பெருமைப்பட எழுதிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ் மொழி எழுத ஆங்கிலத்தையே உபயோகிக்கலாம் ‍ ‘ ஈ.வே.ராமசாமியின் உளரல் முத்துக்களை பொன்னேட்டில்தான் எழுதவேண்டும்

    ராம‌குமரன்

  8. ///01. ஆங்கிலத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரியாரின் தொலைநோக்கு. சரி. ஆனால், ஹிந்தியை எதிர்க்க, ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர், தமிழைக் கொச்சைப் படுத்துவது ஏன்?

    02. புராணக் குப்பைகள் ஆங்கிலத்தில் இல்லையா? தொலைநோக்குப் பார்வையில் கிட்டப்பார்வை குறை என்று இதைச் சொல்லலாமா? ஆங்கிலம் புராணக் குப்பைகளைத் தண்ணி தெளித்துவிட்ட மொழியா?///

    பெரியார் ஒன்றும் கற்றறிந்த ஆய்வாளர் அல்ல, மாறாக சுயசிந்தனையாளர், தன்னுடைய கருத்துக்களை பட்டறிவால் ஆய்வு செய்து தவறென்று பட்டதை திருத்திக் கொள்ள தயங்காதவர்.

    பெரியார் ஆங்கிலத்தில் புலமை பெற்றவரில்லை, ஆங்கில அறிவு தமிழர்களின் உலகத்தொடர்புக்கு தேவையாயிருந்ததால் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டதாகவே எடுத்துக் கொண்டாலும், அதில் அவருக்கு ஏதும் சொந்த உள்நோக்கம் கிடையாது.

    பெரியாரின் கொள்கைவழி பிள்ளைகள் நாங்கள், ஆங்கிலத்தில் புராண குப்பைகளும் பெருவாரியாக இருந்தன, இருக்கின்றன, ஒப்புக் கொள்கிறோம். அம்மொழியை பேசிய மக்களிடைய மட வழக்கங்களும் இருந்தன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் மேலைநாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, பொதுவுடமை புரட்சி முதலானவற்றின் தாக்கங்களால், மதத்தின் ஆணிவேர் நடுங்கியதை யாரும் மறுக்க முடியாது. மதத்தின் பார்பட்டு சிந்திக்க தொடங்கிய அறிஞர்களால்தான் அந்நாடுகளில் முன்னேற்றம் இவ்வளவு ஏற்பட்டிருக்கிறது,என்பதை உலகிலுள்ள தேவையற்ற நெறிகளில் ஒன்றான பார்ப்பன நெறிக்கு வக்காலத்து வாங்குவோர் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்

    பெரியாரே சொன்னதுபோல்,

    “ நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டாம், சுய அறிவு கொண்டு சிந்தித்து, சரியென்று படுவதை பயன்படுத்தி, தவறென்று படுவதை ஒதுக்கி விடுங்கள்.”

    ஆக, தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் என்று பெரியார் கருதியது கிடையாது.

    நாங்கள் தூய தமிழில் பேச,எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வட, ஆங்கில, பிற மொழி கலப்பிலிருந்து தமிழை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால், மேலை நாட்டு புராண குப்பைகளை பற்றி கேள்வி எழுப்பும் மேதைகள், இந்நாட்டில் உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பன பண்டாரங்களில் புழுகுகளை ஏனோ கண்டிப்பதில்லை.

    03. புராணக் குப்பைகள் என்பது யார் பார்வையில்? யார் எதைக் குப்பை என்று சொல்வது? புராணம் என்பது ஒரு மொழியின் சொத்து. தன் பாட்டன் பேசியதைக் குப்பை என்று சொல்லி, அதற்குக் காரணம் மொழிதான் என்று கண்டறிவதுதான் பகுத்தறிவா?

    பாட்டன் வெட்டிய கேணியாக இருந்தாலும், நஞ்சு கலந்த நீரை யாரும் அருந்த மாட்டார்கள். என் பாட்டன் விட்டுச் சென்ற நிலம் தரிசாக இருக்கிறது, என்பதற்காக அதை விளைநிலமாக மாற்றும் முயற்சி தவறென்றால் அந்த தவறை தவறாமல் தொடர்ந்து செய்வோம்.

  9. வடவர் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று பெரியார் கூறினார். பெண் விடுதலைக்கு வித்திட்ட playboy, penthouse போன்ற இலக்கிய தரமான பத்திரிக்கைகள் இந்த காட்டு மிராண்டி பாஷையில் உண்டா? ( சரோஜா தேவி எல்லாம் அவர் காலத்தில் இல்லை)

  10. /////04. ஒரு மொழியில் கருத்துகள் தவறாக இருக்குமானால், அது மொழியின் குற்றமா அல்லது அம்மொழியில் சிந்திப்பவர்களின் குற்றமா? மொழி என்கிற அருவத்தைச் சாடும் ஒருவரை எப்படி பகுத்தறிவாளர் என்று சொல்லமுடியும்?/.///

    சிந்தித்தவர்களை சாட வில்லையா?…பெரியார்.
    கம்பன் முதல் வள்ளுவர்வரை யாரையும் நேர்மையான விமர்சனத்தோடு ஏற்றுக் கொள்வதுதான் பெரியாரியல்.
    ஏன், பெரியாரை முன்னிருத்தும் கவிஞர் அறிவுமதி, வாய்ப்புக்கு பகுத்தறிவு பேசும் வைரமுத்துவரை கருத்தியல் ரீதியாக சமூக அக்கறையோடு விமர்சித்தவர்கள்தான் பெரியாரியல்வாதிகள். அதுதான் பெரியாரியத்தின் உட்கூறு.

    யாரையும் தனிநபர் துதிபாடும் எண்ணம் பெரியாரியலுக்கு.

    அது பெரியாராக இருந்தாலும் சரி

  11. ஆன்மீக நுணுக்கங்களை விளக்க தென்னிந்தியாவில் நடந்த முயற்சிகளின் விளைவே தமிழ் மொழி. பண்டைத் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்துமே ஹிந்து ஞான பொக்கிசங்கள். தமிழ் அழிந்தால் இந்த ஞானச் செல்வமும் அழிந்துவிடும். அதனால்தான் தமிழ் மொழியை அழிக்க எவாஞ்சலிக்கர்கள் பாடுபடுகிறார்கள்.

    ஒரு நாட்டு மக்களையும், அந்த நாட்டு வளங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே கிருத்துவ எவாஞ்சலிக்கர்களின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்திற்கு மொழியோ, கலாச்சாரமோ எதிராக இருக்குமாயின் அவற்றை அழித்தோ அல்லது தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ செய்கிறார்கள்.

    இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.
    நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத் தங்களது மொழியின் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதே இப்போது தெரியாது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைத் தவிர வேறு எது இந்த இழிநிலைக்குக் காரணமாக இருக்க முடியும்?

    தங்களது மாநிலத்தை கிருத்துவர்களின் மாநிலம் என்றே பெருமையாக அந்த மாநிலத்தின் ஒரு முதல்வர் சொல்லிவந்தார். நாகர்களாக மஹாபாரதத்தில் வர்ணிக்கப்படும் அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது. வயதான பெண்களையும், தனிமையில் வாழும் பெண்களையும் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தி சூனிய வேட்டை நடத்திவருகின்றது. அவர்களில் பலர் செல்வந்தர்களாக இருப்பதால், அவர்களுடைய சொத்துக்கள் நேரடியாக சர்ச்சிற்குச் சென்றுவிடுகிறது. இது மிகவும் லாபம் தரும் தொழில்.

    எனவே, தமிழ் மொழியையும் ஆங்கில மொழியின் அடிப்படையில் மாற்றவேண்டும் என்ற குரல்களை அவர்கள் எழுப்பியது புதியதல்ல. அந்தக் கிருத்துவ எவாஞ்சலிக்கர்களால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் ஈவேரா. அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் திராவிடர் கழகமும், அதன் முந்தைய வேடங்களும்.

    அது நாள்வரை நேரடியாக இந்துத் தெய்வங்களையும், தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசிவந்த எவாஞ்சலிக்கர்களுக்கு அந்த வேலைகளைச் செய்ய கிடைத்த வேலையாட்களாக இந்த திராவிடர் கழகக் கும்பல்களும், தமிழ் தேசியக் கும்பல்களும் உழைத்துப் பிழைப்பை நடத்துகின்றனர்.

    கிருத்துவ எவாஞ்சலிக்கர்களை மறைத்து நின்று, அவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு வரும் இவர்கள் தமிழ்மொழி காட்டுமிராண்டி பாசை என்றும், தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று சொல்லுவதும் ஆச்சரியமளிக்கத் தேவையில்லை.

    தமிழில் முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பட்டது. தங்களது மதத்திற்கு ஏற்றவாறு தமிழை அழிக்க விரும்பிய பெஸ்கி உள்ளிட்ட எவாஞ்சலிக்கர்கள், சங்கப் பாடல்களும், மற்ற பண்டை இலக்கியங்களும் இருக்கும்வரை தெய்வீகமொழியே தமிழ் என்பதை மறுத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள். (சங்கப் பாடல்களை மீட்டு தமிழினத்திற்குக் கொடுத்த உவேசா உள்ளிட்ட சான்றோர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.)

    தெய்வீகத் தமிழை எப்படி அழிப்பது, தமிழர்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதைப் பற்றிச் சிந்தித்து எவாஞ்சலிக்கர்கள் அக்காலத்திலேயே ஒரு நெடுங்காலத் திட்டத்தைத் தீட்டினர். ஆரிய-திராவிட இனவாதத்தைக் கால்ட்வெல் பாதிரி மூலமும், மாக்ஸ் ம்யூலர் மூலமும் உருவாக்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிக்க முடிவு செய்துள்ளனர். தமிழர்கள் எல்லாரும் தோமா கிருத்துவர்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பது இந்த நீண்ட காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.

    நவீன தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தவர்களும் இவர்களே. எனவே, இந்த புதிய வடிவைக் கொடுக்க ஆரம்பித்தவர் ஈவேரா என்று தவறாக எண்ண வேண்டாம். எவாஞ்சலிக்கர்கள் இட்ட கட்டளையைச் செயல்படுத்தினார் ஈவேரா. அவர்களின் அல்லக்கையாக இருந்து சொத்து சேர்ப்பதைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எதையும் அவரால் சாதிக்க இயலவில்லை என்பது வருந்தத் தக்க உண்மை.

    இந்து எனும் குடையின்கீழ் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வின்றி, ஒற்றுமையாக இருக்க வேண்டிய தமிழர்கள் சாதிவெறி பிடித்துத் தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதற்கும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பிய ஈவேராவே காரணம்.

  12. யாரையும் தனிநபர் துதிபாடும் எண்ணம் பெரியாரியலுக்கு இல்லை

    அது பெரியாராக இருந்தாலும் சரி

  13. .// ‘னை , லை, ணா’ போன்ற எழுத்துக்களின்உண்மையான வடிவம் இங்கு உள்ளது http://upload.wikimedia.org/wikibooks/ta/9/9f/Tamil_vwl2.gif அதை விடுத்து தமிழ் மொழி வெறுப்பாளரான பெரியார் பரிந்துரைத்த எழுத்துக்களை நாம் பெருமைப்பட எழுதிக்கொண்டிருக்கிறோம்.//

    நம்முடைய பாரம்பரிய எழுத்துக்களில் யூனிகோடு தமிழை படிக்க விரும்பினால், கீழ்க்கண்ட ஃபான்டை பயன்படுத்தவும்

    http://noolaham.net/Grantha/e-Grantamil.ttf

    அல்லது e-TamilOTC என்ற ஃபான்ட்டை http://www.uni-hamburg.de/Wiss/FB/10/IndienS/Kniprath/INDOLIPI/Indolipi.htm இல் இருந்து - ஃபான்ட் பாக்கேஜை டவுன்லோடு செய்து. அதிலிருந்து பெறலாம்.

    நான் பலகாலமாக இதைப்பயன்படுத்திதான் வலையுலகத்தமிழை வாசித்து வருகிறேன் :)

    // ‘தமிழ் மொழி எழுத ஆங்கிலத்தையே உபயோகிக்கலாம் ‍ ‘ ஈ.வே.ராமசாமியின் உளரல் முத்துக்களை பொன்னேட்டில்தான் எழுதவேண்டும் //

    idha ippadi ezudhunaa eppadi !. neenga adha idhu maadhiri illa ezhuthi irukkanum !!

    Vengaayam !!! Vengaayam !!!

    :))))))))))))))))))))))))))

  14. //இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.
    நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத்
    [...]
    அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது.//

    நாகர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை இழந்தது முற்றிலும் கொடுமையிலும் கொடுமை !! நாடாண்ட நாகர்களிடம் தம்முடைய முன்னோர் கலாச்சாரம் காட்டுமிராண்டி கலாச்சாராம் என்ற நச்சை அவர்கள் மனதில் எடுக்க இயலாது அளவுக்கு கிறிஸ்தவ விஷநரிகள் (ஆம்.. மிஷனரிகள் அல்ல) கலந்துவிட்டார்கள். அவர்கள் தாய்மொழியும் ஆங்கிலம் என்றாகிவிட, தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கண்ணெதிரில் நம்முடைய பாரம்பரியம் வடகிழக்கில் அழிந்து கொண்டிருக்க, நாம் மௌனிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை !!

  15. correction to the earlier comment it is:

    http://noolaham.org/Grantha/e-Grantamil.ttf

    thanks

  16. களிமிகு கணபதி

    உளரல் திலகம்…

    ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
    என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.

    அதோடு, தமிழில் இருக்கும் வடமொழி கலப்பு எந்த நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை ஏன் விளக்கவில்லை.

  17. //களிமிகு கணபதி

    உளரல் திலகம்…//

    உங்களைவிடவா மகிழ்நன்? முதலில் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், மொக்கை போடுவதே உங்கள் வழக்கமாக இருக்கிறது. எப்படி பதில் தர முடியும், உங்கள்பக்கம் நியாயம் இருந்தால்தானே?

  18. வணக்கம்,

    //ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
    என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.//

    கண்ணை மூடிக்கொண்டு கட்டுரை படித்தால் இப்படித்தான் நடக்கும்.
    ஈ. வே. ரா வின் ஆங்கில மோகத்தையும், தமிழ் மீதுள்ள அக்கறையும் பற்றி கட்டுரையின் ஆரம்பத்திலேயே வெளிச்சமாக்கிய பின்னரும் ஆங்கில மோக எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளுகிரார்களே? தலைவனின் வழி நடக்காத இவர்கள் உண்மையான தொண்டர்களா?

  19. நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டாம், சுய அறிவு கொண்டு சிந்தித்து, சரியென்று படுவதை பயன்படுத்தி, தவறென்று படுவதை ஒதுக்கி விடுங்கள்.”

    It was the same EVR who said that he would like to be surrounded by fools who would listen to whatever he says.

    Whren asked why he said this, he said ” For the task I have underataken, I require people who would obey my orders unquestioningly”.

    That was EVR - a bundle of contradictions.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>