மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » பிறமதங்கள், புத்தக விமர்சனம்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில்  வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர் ஒருவர் எழுதினார்  - “ நேற்றுதான் `Dogma’  எனும் படம் பார்த்தேன். அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம்  என்று காண்கிறேன். ஒரு சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும்.  இல்லை இழுபட்டு அழியும். இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது  `தத்துவங்களை` அடிப்படையாகக் கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை  வைத்து, தேவாலயம் எனும் மையம் செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக  நடக்கிறது. அங்கு `சிந்தி` என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய் `மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது…  ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது, கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே  கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை.  அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்…  இந்த நிலையை சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது. .. இந்தியா போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே? என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தோல்வியுறும்”.

அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் - ”ஆமாம், நீங்கள் கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது.  அதை ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே  அங்கு நினைப்பதில்லை.  ஆனால், இந்தியாவில், தமிழகத்தில்  இந்த விமர்சனங்களின் துளிகள் கூட வந்து  சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்?  இங்கு  ஊடகங்கள், அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது.  ஒருபக்கம் அவை  இந்த தேசத்தின் கலாசாரத்தின்  மீதும், அதன் சமயங்கள், தத்துவங்கள் மீதும்  அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன. இன்னொரு  புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி,  அவற்றின் மீது கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. ..  கிறிஸ்தவ பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது.  ஆனால் கிறிஸ்தவத்தைப்  பற்றிய நேர்மையான விமர்சனம்,  ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே தங்குதடையின்றி  பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட  இந்தியாவில் கிட்டுவதில்லையே??”

சொல்லப் போனால், கிறிஸ்தவம்  காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த  சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர்.  நம் தரப்பில் அவற்றைப் பதிவு செய்யாததால்,  காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின் கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை  பாதிரியாரால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.  துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்”  என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை,  மறைந்தே விட்டது.  20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால்  சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும்  இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது..   நண்பருக்கு எழுதிய பதிலில்,  ”இதைப் பேசப் போனால்,  உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து  இந்து மனதில் உள்ளது.    இதை, இதையே  தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப்  பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே  பரவலாக உள்ளது…  அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.

expressions_bookஇந்தச் சூழலில்,  “Expressions of Christianity, with a Focus on India” என்ற தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.   பிரசார நெடி சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல்  எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.

கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும்,  மேற்குலகில் கிறிஸ்தவத்தின்  முகங்கள்,  இந்தியாவிலும்  பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள்,  கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்,  மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு  ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ்  சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.

”கிறிஸ்தவம்  தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம் கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும், நம்பிக்கைகளையும்  அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க கலாசாரத்திலிருந்தும் (Hellenistic - cosmopolitan culture),  கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய மதங்களிடமிருந்துமே  பெற்றது. .. குறிப்பாக,    உபநிஷத- பௌத்த சிந்தனைகள் கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு,  மறுபிறவி மற்றும் பிறவிச் சுழல் பற்றி ஏதும் அறியாத  யூத பின்னணியில் நுழைந்து,   ஒரு இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின்  கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு.   பண்டைக் காலத்திய பலதெய்வ வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான்  கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது..”

- ”Christianity, a Man made Religion indebted to India” என்ற தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய கட்டுரையிலிருந்து

இந்த அரிய கட்டுரையில்,  எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள், பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட விளக்குகிறார்.  தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus in India”  என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான சித்திரமும் இதில் உள்ளது.

கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில் வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு முத்து.   பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம்,  செயிண்ட் பாலின் பெண்மை பற்றிய வசனங்கள்,  கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால் ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த  “சூனியக்காரி வேட்டைகள்” (Witch hunting),  கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும்  பெண்மை மீதான அச்சம்  ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.

ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும்,  “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல,  அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக  ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா??  மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள்  இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.  கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.

பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார்.  சுத்தியால்  உடைத்தார்.  பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற  ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார்.  சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று  அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள்.   ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி  நடத்திக் காட்டியிருக்கிறாள்;   பழங்காலத்தில்  கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில்  ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.

சீதாராம் கோயல் (1921-2003)

சீதாராம் கோயல் (1921-2003)

பிறகு வர்லாம்  (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்),  தன்னையும் மகாத்மா  என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில்,  அவர்கள் முன்னிலையில்,  பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால்  சிவலிங்கத்தை எட்டி உதைத்தான்.  பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான்.  பிறகு சீமாட்டியைப்  பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால்  எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது…  அவர்களுக்கு  இதனால் என்ன விளையுமோ எனக்குத்  தெரியாது.. ஆனால் தமிழர்கள்  பிரளயமே வந்து விட்டது என்று எண்ணினார்கள்.  பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும்,  கவர்னரும், அவரது மனைவியும்  அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது  போல சந்தோஷமடைந்தார்கள் …  “

-   சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.

ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்  பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று  தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.  பாதிரி, மிஷநரி, பிஷப் எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்”  என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாவும்  இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம்  செய்யப் படுகிறது.  எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும்,  பயங்கரவாதத்தையும்  பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய, சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் கருதுகின்றன.

சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே  காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப்  படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான  கட்டுரையும் இந்த நூலில் உள்ளது.   இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி  பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி  அதன் அதிகாரத்தைக்  கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது.   (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில் திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).

கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி,  அங்கு இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள்  பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள்  இந்த நூலில் உள்ளன.  ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”.  ராதா ராஜன்  எழுதிய  ”Antecedents of the Goa Inquisition”.

”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில் தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும்,  பரந்த வாசிப்பும், கூரிய பார்வையும் காணக் கிடைக்கிறது.  ராபர்ட் இங்கர்சால் (Heretics and Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல்  (Why I am not a Christian) ஆகிய சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை சேர்த்திருப்பது நல்ல ரசனை.  கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை அளித்திருப்பது  அருமை.

கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும்  என்று யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம்  இருக்கிறது.  ஏனென்றால்  அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில்  விசுவாசிகளாக இல்லாதவர்கள்   நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப்  பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே  வந்து விடுகிறார்கள்!  இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல் வேறென்ன? (.. and this is a damnable doctrine).

- சார்லஸ் டார்வின்

கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த நிலப் பரப்பில்  உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள்.  மாறாக அங்கங்கு சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய மதங்கள்.    இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின் உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ?  பாரத மதங்கள் பன்முகப் பட்ட தன்மையும்,  இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக இருக்க, செமித்திய மதங்கள்  ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும் முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில் தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற சுவாரஸ்யமான கட்டுரை  மதங்களின் உருவாக்கத்தில்  இயற்கை மற்றும் பூகோள அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி  ஆராய்கிறது.

இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன் நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும்  பற்றிய முதல் தொகுப்பு,   இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion: with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும்  வெளிவரப் போகிறது என்று முன்னுரை கூறுகிறது.  அதையும் உடனடியாக அவர்கள் வெளியிடவேண்டும்.  இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

——————

Expressions of Christianity With a focus on India
Paperback - 600 Pages (Year: 2007)
Vivekananda Kendra Prakashan Trust /Suruchi ~ ISBN: 8189248847

இணையம் மூலம் இங்கே (வெளிநாடு) மற்றும் இங்கே (இந்தியா) வாங்கலாம்.

சென்னையில் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
தொலைபேசி: 44-2844-0042
மின் அஞ்சல்: vkpt@vkendra.org
இணையதளம்: http://www.vkendra.org

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , ,

297 மறுமொழிகள் »

  1. இணைய தளத்தை விட இந்துக்குகளுக்கு என்று ஒரு தினப்பத்திரிகையோ அல்லது வாரஇதழோ இருந்தால் நல்லது. எத்தனையோ பக்தி இதழ்கள் இருந்தும் அவை ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன் கிறித்துவத்தின் குள்ளநரித்தனத்தை பிரசுரிப்பதில்லை

  2. ஈஷ்வர் ஷ‌ரன் எழுதிய தி மித் ஆஃப் செயின்ட் தாமஸ் என்ற புத்தகத்தின் திரு.பி.எம்.சுந்தரம் அவர்களின் தமிழாக்கம்

    http://hamsa.org/Myth.of.St.Thomas.Tamil.version.pdf

    hamsa.org has many other books read and get acquainted

  3. Mr Jataayu, you doing a great service by letting us know various kind of books that we didn’t know. Do keep reviewing such books and let us know. We don’t mind buying this books. I have already ordered the book from indiaclub. Thank you.

  4. Thanks a lot Jatayu.
    Barring few typos, the article is a must read !

  5. நன்றி ஜடாயு. நேற்று நீங்கள் வாசீகப்ப்ரிந்துரைத்த புத்தகத்துக்கு ஆர்டர் பண்ணியுள்ளேன். நீங்கள் படித்துள்ள இது போன்ற புத்தகங்கள் பற்றி அவ்வப்பொழுது எழுத வேண்டுகின்றேன். உங்கள் வாசிப்பின் பரப்பை எண்ணி வியக்கின்றேன்.

  6. நன்றி கிருஷ்ணா. நன்றி முத்துக்குமாரசுவாமி ஐயா.

    // ராஜா. ஆர். எஸ் August 9th, 2009 11:21 am
    Thanks a lot Jatayu.
    Barring few typos, the article is a must read ! //

    ராஜா, பிழைகளைத் திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  7. Dear All,
    Join hands with us to renovate lakhs of dilapidated heritage temples in India.
    read
    http://templesrevival.blogspot.com and
    http://reachhistoryblogspot.com
    and
    http://www.conserveheritage.org

    Great job is being done by Jatayu.

  8. எழுதித்தள்ளிக் கொண்டிருக்காமல் உருப்படியா ஏதாவது செய்யப்பாருங்கள்

  9. dear jatayu,
    your article is worth its weight in gold. pl move over to the nearest copying machine and put yourself into it. we need many more like you.
    pl tell me about the tamil books available in this catagory.
    subbu

  10. //ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்//

    கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

    இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதுவும் நல்ல மதம்தான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

    இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

    என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

    நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

    உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

    இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

    சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

    அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

    நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

    அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

    அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

    ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

    “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

    ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

    எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

    இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து. இப்போதும் வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து.

    இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

    இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!

    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது.

    நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

    இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

    முர‌ட்டுத் த‌ன‌மும், மூட‌த் த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்.

  11. very great jadayu i am proud to be a hindu keep up your service

  12. its really a great daring outburst.how long we call ourselves as”majority people” and behave like inferior people?

  13. “ஏசு மத நிராகரணம்” சைவதூஷண பரிகாரம்” indha books ippothu kidaikkuma enbathi thayavuseithu kooravum. nandri

  14. // baskar
    18 August 2009 at 10:35 pm
    “ஏசு மத நிராகரணம்” சைவதூஷண பரிகாரம்” indha books ippothu kidaikkuma enbathi thayavuseithu kooravum. nandri //

    அன்புள்ள பாஸ்கர்,

    சைவதூஷண பரிகாரம் இணையத்திலேயே கிடைக்கிறது. இங்கே -
    http://noolaham.net/project/19/1814/1814.pdf

    ஏசுமத நிராகரணம் தமிழில் அச்சிலேயே வரவில்லை என்று நினைக்கிறேன்.

  15. // இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
    ….
    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. //

    திருச்சி, பயங்கரமாகக் காமெடி பண்ணுகிறீர்கள். கான்ஸ்டாண்டைன் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு அது நிறுவனப் படுத்தப் படுகிறது, அப்போதே அதன் அதிகார வெறியும், பாகன் (pagan) மதங்களின் மீதான வெறுப்பும் ஆரம்பித்து விட்டது. ஆவணப் படுத்தப் பட்ட கிறிஸ்தவ வரலாறு முழுவதுமே அங்கு தான் ஆரம்பிக்கிறது. சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை - அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை.

    எனவே நீங்கள் செய்யப் போவதாக சொல்வது self-defeating circular logic. Good luck!

    பைதி வே, இந்த நூலில் சுவாமி தேவானந்த சரஸ்வதி (கனடாவில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து பிறகு இந்து தர்மத்தில் இணைந்தவர்) அவர்களின் அருமையான நேர்காணல் உள்ளது - ‘Christianity, a disaster in human history’. கண்டிப்பாக நீங்கள் அதைப் படித்துப் பார்க்க வேண்டும்.

  16. Came across this in Rediff today. ‘palaivana solai’ enbathu ithuthano?? :)

    Americans slowly turning towards Hinduism, says report

    http://news.rediff.com/report/2009/aug/18/americans-we-are-all-hindus-now.htm

  17. ஜ‌டாயுஜி,

    கிருத்துவ‌ ம‌த‌ம் என்று “நிறுவ‌ப்” ப‌ட்டு, “ப‌ர‌ப்ப”‌ ப‌ட்டு, “செய‌ல்” ப‌ட்டு வ‌ரும் ம‌த‌த்தால், உல‌கிற்க்கு கிடைத்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள் , அழிவுக‌ள் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ம‌ல்ல‌!

    ஆனால் யேசு கிரிஸ்து நிறுவ‌ நினைத்த‌ ம‌த‌ம் அதுவ‌ல்ல‌.

    ராம‌கிரிஷ்ண விஜ‌ய‌ம் இத‌ழைப் ப‌டியுங்க‌ள். நான்கு மாத‌ இத‌ழ்க‌ள பார்க்க‌வும். ஏதாவ‌து ஒரு இட‌த்தில் யேசு கிரிஸ்துவைக் Quote செய்து இருப்பார்க‌ள்!

    “யேசுவின் அன்பு முர‌சு” என்று புத்த‌க‌மே வெளியிட்டுள்ள‌து ராம‌கிரிஷ்ண ம‌ட‌ம்.

    I already wrote that,

    We, Hinduism, have motherly consideration towards all the religions. We want all the paths leading to God to be preserved. We dont want any religion to be obliterated or ostrasiced. We want to preserve and develop all the religions!

    // இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
    ….
    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. //

    உல‌கின் எல்லா ம‌த‌ங்க‌ளையும் செம்மைப் ப‌டுத்தி, நாக‌ரீக‌முடைய‌தாக்கி ச‌ரி செய்யும் அள‌வுக்கு, உண்மையும், முழுமையும், க‌ருத்துக்க‌ளும் உள்ள‌ ம‌த‌ம், இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே என்ப‌தே என் க‌ருத்து!

    தேளும் பாம்பும் வீட்டின் மூலையில் அலையும் போது, அவை அங்கேயிருந்து போகாது எனும் நிலையில் அவை வெறும‌னே அலைவைதை விட‌ அவ‌ற்றின் விஷ‌ப் கொடுக்கும், ப‌ல்லும் அக‌ற்ற்ப் ப‌ட்ட‌ நிலையில் அலைவ‌து தானே ந‌ல்ல‌து!

    I think this is a very serious matter. If we dont make clarifications, the warring followers of Abrahamic religions would- may god forbid- convert the entire earth into a mere cemetry.

    This is serious matter, is’nt it?

    But you have all the liberty to call my writings as comedy, because I give that liberty to my friends,and so for you also!

  18. ஜ‌டாயு அவர்களே,

    //சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை - அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை//

    இயேசு கிறிஸ்து என்பவர் உண்மையில் இந்த உலகில் இருந்தாரா, அவர் கன்னிக்குப் பிறந்தாரா, குருடர்களைப் பார்க்க வைத்தாரா, முடவர்களை நடக்க வைத்தாரா - என்பதை எல்லாம் நான் அறுதியிட்டுக் கூறவில்லை- சாட்சி குடுக்கவில்லை!

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இந்த உலகிலே பிறக்காமலே கூட இருந்திருக்கலாம். எனக்கு அவர் செய்த அதிசயங்கள் பற்றி அக்கறையில்லை!

    ஆனால் அவர் கூறியதாக சொல்லப் படும் கருத்துக்களில் நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- அதாவது அவரின் மதத்தைப் பின்பற்றுவதாக கூறி காட்டுமிராண்டித் தனம் செய்பவரை திருத்தும் அளவுக்காவது நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- என்பது தான் என் அக்கறை.

    “உன்னை ஒரு மைல் தூரம் வரக் கட்டாயப் படுத்தினால், அவனுடன் இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியதாகக சொல்லப் படும் ஒருவரின் பெயரை வைத்து, உலகின் பிற எல்லா தெய்வங்களையும் இகழும்படி என்னைக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

    “ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறி, சிலுவையில் இறந்ததாகக்” கூறப் படும் ஒருவரின் பெயரை வைத்து பல கோடிக் கணக்கான உயிர்களை, (பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட) கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டார்கள்.

    அவர்களை திருத்த வேண்டாமா? அதற்க்கு என்ன செய்ய முடியும்?

    நாமும் வாளை உருவியா சொல்லித் தர முடியும்?

    இயேசுவின் பெயரை வைத்து பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழக்கையை Tragedy ஆக்கி விட்டார்கள்.

    இது காமெடியா?

    இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் இருப்பவர்கள் இந்த வேலையை செய்வார்களா? சீனர்கள் இந்த வேலையை செய்வார்களா?

    இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    இது காமெடியா?

  19. // இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    இது காமெடியா? //

    அன்புள்ள திருச்சிக்காரன், உங்கள் நல்ல உள்ளத்தையும், உலக அமைதி மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையையும் புரிந்து கொள்கிறேன்.

    நான் காமெடி என்று சொன்னது ”கிறிஸ்தவர்களூக்கு உண்மையான கிறிஸ்துவைப் பற்றி நான் (நாம், அதாவது இந்துக்கள்) சொல்லித்தர வேண்டும்” என்று நீங்கள் குறிப்பிட்டதைத் தான்.

    நாம் ஏதாவது சொல்லித்தர முடியும் என்று எண்ணினால், நம் இந்து தருமத்தைப் பற்றி சொல்லித் தரலாம், அதில் நமக்கு புரிதலும், அனுபவமும், பயிற்சியும் உள்ளது. நாம் கிறிஸ்தவத்தை விமர்சிக்க முடியும், அதன் பிரசாரகர்களே அதைப் பற்றி சொல்வதை வைத்தும், அதன் மதநூல்களை வைத்தும், உலகெங்கும் வெளிப்படையாகத் தெரியும் அதன் track record ஐ வைத்தும், நம் நாட்டில் நம் சமூகத்தில் அது என்ன செய்கிறது என்பதை வைத்தும். அது அறிவியல்பூர்வமானது. அதற்கு மேல் போய், நீ உண்மையான *கிறிஸ்தவன்* அல்ல, கிறிஸ்து சொன்னதை நீ கடைப்பிடிப்பதில்லை என்று கிறிஸ்தவனைப் பார்த்து சொல்ல நமக்கு என்ன உரிமை உள்ளது?அதற்கு அவசியம் என்ன உள்ளது?(அப்படிச் சொல்லும்போது “உண்மையான கிறிஸ்தவன்” என்ற இலக்கணத்துக்கு நமது இந்துப் பார்வையையும், இந்து நெறிகளையுமே நாம் பயன்படுத்துவோம். அதில் அடிப்படையிலேயே முரண் உள்ளது).

    ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஏசுவை *பல தெய்வ அவதாரங்களில் ஒருவராக* ஏற்றுக் கொண்டு அவரது கருத்துக்களைப் பிரசுரிக்கிறார்கள். அது மிகத்தெளிவான இந்துப் பார்வை. ஆனால் “ஏசு ஒருவரே உலக ரட்சகர்” என்ற கிறிஸ்துவப் பார்வைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது. எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ண மடத்தின் கருத்தை எந்த practicing கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்வதில்லை. மிஷனரிகளைப் பற்றீ சொல்லவே வேண்டாம் - “விவேகானந்தர் கண்ட ஏசு” என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் அடிக்கிறார்கள். ஏசுவைப் பற்றி சுவாமிஜி கூறியதில் ஒரு பாதியை மட்டுமே போட்டு, இப்பேர்ப்பட்ட ஏசுவின் பின்னால் மனம் திருந்தி வாருங்கள் என்று பிரசாரம்!

    கிறிஸ்வத்தின் இந்த உத்தியை ரா.கி மடம் இப்போது புரிந்து கொண்டு விட்டது என்பதையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

    ஒப்பீட்டில் தலாய் லாமாவைப் பற்றிச் சொல்லவேண்டும்.. ஒரு BBC பேட்டியில் அகிம்சை, சமாதானம், திபெத் பற்றி எல்லாம் கேட்டுவிட்டு, “ஏசு கிறிஸ்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற தூண்டில் போடும் கேள்வியை பேட்டியாளர் கேட்டார். தலாய் லாமா “ஒன்றும் நினைக்கவில்லை” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். கேட்டவருக்கு ஷாக். ஒன்றுமே நினைக்கவில்லையா என்று பன்னிப் பன்னி இரண்டு மூன்று முறை கேட்டார், லாமா பிடிகொடுக்கவில்லை. அவரது வாயிலிருந்து ஏதாவது “நற்செய்தியை” பிடுங்க முயற்சித்த மேற்கத்திய கிறிஸ்தவ பேட்டியாளரின் முயற்சி படுதோல்வி அடைந்தது.

    அங்கு ஒரு சராசரி இந்து ஆன்மிகத் தலைவர் என்ன சொல்லியிருப்பார் போன்ற ஊகங்களை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.

  20. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.

    “பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
    அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
    பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
    இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்” என்று ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்தநூல் கூறுகின்றது. உயர்ந்த பண்பாவது யாது? நித்தியமான ஆன்ம வர்க்கத்துக்கு ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதான ரூப வடிவழகும் பெறுதற்கரிய சுவர்க்க போகமும், தம்மைக் காட்டிலும் மிகப்பெருக உண்டாக வேண்டும் என்னும் எண்ணுதற்கு அரிய பெருங்குணம் ஆகிய இதுவே உயர்ந்த பண்பு. இந்தக் குனத்தின் பெருமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எல்லை கடந்த பெருமையை உடையதாக இருத்தலினால், இதனை ஞானாமிர்த ஆசிரியர் ‘எண்ணரும் பெருங்குணம்’ என்றார். போட்டிகள் மிக்க இன்றைய உலகில் எல்லாரும் எல்லாவற்றிலும் என்னைக் காட்டிலும் உயர்ந்து விளங்க வேண்டும் என விரும்பும் உள்ளம் தெய்வீக உள்ளமாகத்தானே இருக்கமுடியும்?

    அடித்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டு என்று பொறுத்தலை மட்டும் இயேசு கூறினார்.
    நம் சாத்திர நுல்கள் ஒருவன் ஒரு தீங்கிழைத்தானேயாயின், அத்தீங்கினைப் பொறுத்துக் கொள்வதோடு, இவன் நமக்கு இந்தத் தீங்கினச் செய்த காரணத்தினால் இனி இறைதண்டனைக்கு உட்பட்டுப் பெருந்துன்பம் அடைவானே என்று அவனுக்காகப் பரிவதும் சான்றோர் கடன் எனப் போதிக்கின்றன. ‘வாளிட்டு நோவன செய்யினும், மேவன ஆங்கு இழைத்தல்’ அதாவது, வாளால் அறுத்து நோய் தருவனவற்றைச் செய்தராயினும் சுகமாய் இருப்பனவற்றை அவர்க்கு அப்பொழுதே விரும்பிச் செய்தல், இது தான் நல்ல மனிதனின் பண்பு என்கிறது ஞானாமிர்தம்.

    பிற சமய நூல்களையும் அவற்றில் காணப்படும் அறங்களையும் நாம் படித்து ஒப்புமை காணலாம்.ஆனால் நம்முடைய நூல்களில் சொல்லப்பட்டனவற்றையே நாம் வலியுறுத்தி வெளியில் பேசுதல் வேண்டும். இல்லாவிட்டால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் அறவுணர்வுகளுக்கும் உரிய நன்றியைக் கிறித்துவ போதகர்களுக்குத் தாரை வார்த்துவிடும் கட்டாயம் ஏற்பட்டு விடும்

  21. ஏசுமத நிராகரணம் என்னும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் செய்யப்பட்டது. வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால், அவர் எழுதிய, சாந்தலிங்க சுவாமிகளின் நூலான, ‘கொலைமறுத்தல்’ உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது.

  22. // வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. //

    அன்புள்ள முத்துக்குமாரசுவாமி ஐயா, இதற்கு ஆதாரம் உள்ளதா - வேறு நூல்களில், பதிவுகளில், ஆவணங்களில்?

    வீரமாமுனிவர் என்கிற ஜோசப் பெஸ்கி ஒரு உயர்ந்த தமிழ் அன்பர்,புலவர் என்று பயங்கர பிரசாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

  23. அன்புள்ள ஜடாயு அவர்களே, நான் வீரமாமுனிவர் பற்றிச் சொன்ன இந்தச் செய்திக்கு வலுவான ஆதாரம் இல்லைதான். ஆனால்,துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளோடு தொடர்புடைய அன்பர்களின் வழிவந்தவர்கள் கூறக் கேட்ட செவிவழிச் செய்திதான். இது அவர்களுக்கு எதிராக வைக்கத்தக்க ஆதாரம் இல்லைதான்.

  24. Jesus did NOT contemplate to found any religion. According to the gospels, he himself declared that he had NOT come to destroy any existing system. He projected himself as a reformer only. In fact, Christianity is a misnomer. The correct term is Paulism after Saul alias Paul who was NOT a Jew!
    The Jewish belief is coming of another messiah amongst them and those who believed Jesus was the messiah, as reffered in their scriptures, acepted him so, within Judaism, the faith of Jews. There is a blank in the life of Jesus and that was the most important phase in his life. There is no record on this formative period of Jesus. There is a school of thought that he wandered in Hindustan and Tibet and learned Hindu thoughts during that period and returned home at the age of thirty. He lived just three more years on his soil to preach as a reformer, contradicting many of the commandments of Moses. He duly under went baptism according to Jewish custom and did NOT rebel.

    The proselyitisers might argue saying if Jesus had learnt from Hindu thoughts, then why should there be any objection to Hindus getting converted to Christianity. For this, our answer should be since Jesus learnt from Hindus, there is no need for any Hindu to become as Christian but any Chritian is welcome to become a Hindu.

    About a year ago, A Hindu boy was about to fall into the trap of proselytisers and become a Christian, and his worried sister brought him to me for advice. He came along with a Hindu turned evangelist named Sadhu Chellappa. Smt Radha Rajan is a witness to what had happend at my residence because she was also present on the occasion. Soon, that boy got over from the spell of Sadhu Chellappa and he is now perfectly alright! I had to put very embarassing questions to Sadhu Chellappaa at the conclusion, made him to refute his own words by quoting form the New Testament. When he started bluffing, I immediately threw my copy of the Bible before him and asked him to substantiate his claims. He never expected this and remained dumbfounded! Since Radha Rajan could not be patient to hear his nonsense, she had left earlier despite my request to stay. I have no patience to hear such ridiculous arguments, she said and excused. I patiently allowed Sadhu Chellappaa to empty what all he had and then started my questioning. I made him to admit that he receives money for his services of converting Hindus in front of that boy! My question regardiong this was indirect and that fake Sadhu, admitted wihtout his knowledge that he is being paid hefty for his proselytisation job! There were some more people present to enjoy the drama in the tiny room of mine, where Maryada Purushottam Sri Ramachandra Chandra Moorthi, Sri Anjaneya Prabhu, Bhagwan Sri Kridshna, Sri Shivji and Amba were also present. I do NOT want to disclose the names of the boy and his sister in public but people who know me also know that it was not the first time a boy or a girl saved from the traps of proselytisers when they were brought to my residence. Sri Anantha Narayana, a young industrialist who is a staunch Hindu known to Smt Radha Rajan was also present on that day till last. And he also knows that boy has been brought to his senses later on and the self styled Sadhu proselytiser had to retreat in haste on that occasion!

    I told Fake Sadhu Chellappa to come again and he agreed but I am still waiting for his second visit!

    MALARMANNAN

  25. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.
    “பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
    அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
    பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
    இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்”

    ரொம்பவும் எளிமையான ஒரு உதாரணம் , அதுவும் உலகறிந்தது
    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்– இதை விடவா ஒரு தத்துவம், பணிவு ஒழுக்கம் அன்பின் இலக்கணம் தேவை. நன்றி ஜடாயு அவர்களே தங்களின் தயவால்
    எனக்கு ஒரு புதையல் கிடைத்தது ( சைவ தூஷண பரிகாரம் ) மீண்டும் நன்றிகள். மேலும் தங்களின் இடுகைகள் மிகவும் அற்புதம்

  26. Please don’t make a propaganda that all christians in India have converted only because of money, I can show you a number of christians who stick on to their faith till they die, if you know anyone who got converted by getting money then there is no problem you can reconvert him by giving more money. He is well in your pocket.
    People like Elst are a disillusioned lot who have an aversion to christianity. European and American white christians are agnostic and atheistic because they do not want any accountability to their actions, do you think that a wayward drunkard, and a drug addict will be enlightened in his inner soul and that was why he left christianity,Comedy of all sorts
    If they think that they don’t believe in fables then does hinduism is any way inferior in having fables. Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism.
    In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time and it continues to guide us till now and it will continue to do so.

  27. //….Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism….//

    Only “A reasoning mind” can accept Hinduism and reject christianity. The fables of christianity has only sowed violence whereas the fables of Hinduism has brought amity and freedom.

    //…..In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time…//

    If it is true, then I can only respect church and christianity. Jesus is the first person in any theology to start the idea of “eternal hell” that has started all these violence and aggression, and brought down the humanity lower than animals.

    //….and it continues to guide us till now and it will continue to do so….//

    The goal of christians on the earth is to prepare for armageddon. As a christian you will prepare the earth for such one.

  28. என்னங்க கணமிகு கணபதி அவர்களே
    எமதர்ம ராஜன், வைகரணீ கரை, நரக லோகம் இதெல்லாம் இந்து மதத்தில் தானே இருக்கு, வசதியா அதை மறந்துட்டீங்களே.
    பைபிளில் உள்ள கதைகள் பிரிவினைகளை விதைத்தது என்கிறீர்கள், இதிகாசங்களில் பலமுறை நல்லவர்கள் எல்லாம் தேவர்கள், தீயவர்கள் எல்லாம் அசுரர்கள் என சதா இவர்களது சண்டையையே மேன்மைப்படுத்தி வந்துள்ளதை மறந்து விட்டீர்களா.
    ஏங்க அப்போ மதத்தை வைத்து குஜராத்தில் நடந்தது அர்மெகதோன் தானே. அதை ஜஸ்வந்த் சிங் தானே இப்போது புட்டு புட்டு வைக்கப்போகிறார், இந்த அக்கிரமங்களுக்காக தானே வாஜ்பாய் கண்ணீர் வடித்தார்.

  29. திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் இணைந்தார் பாஸ்கர் அவர்களே. திருக்குறள் இந்து மறை கிடையாது. அது உலகப்பொதுமறை என்று தங்களுக்கு தெரியாதா. மதங்களை குறிப்பிடாத ஒரே மறை திருக்குறள். பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  30. Dear Joseph,

    My emphasize is on “eternal” and not on “hell”.

    It is true that some of the Hindu scriptures talk about hell. But, the hell or heaven of Hinduism is not a “permanent” hell or heaven; they are not eternal.

    Jesus is the firs person who sowed this idea that there is an “eternal hell” and “eternal heaven” and caused the eternal misery called Christianity.

  31. நித்திய நியாயத்தீர்ப்பு என்ற காரியமும் அதனால் அடையும் மோட்சம் அல்லது நரகம் என்பதை தெளிவாக இயேசு கூறினார், அதை எப்படி நித்திய துன்பத்தை தோற்றுவித்தார் என்கிறீர்கள், அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். தங்களது செய்கைகள் ஒவ்வொன்றிற்கும் வேதாகமம் செக்மேட் வைத்திருப்பதால் தான் கிறிஸ்தவ ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் கிறிஸ்தவ வேதத்தை விரும்புவதில்லை. தங்களது ஆத்துமா நித்திய அக்கினியில் அல்லல் உறும் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, மாறாக இந்து மதத்தில் உள்ள மறுபிறவி போன்ற காரியங்கள் அவர்களை வசீகரிக்கின்றன.
    அதுபோக நித்திய நரகம் இல்லை என்கிறீர்கள் அப்படியானால் ஒரு ஆத்துமா நரகத்திற்கு போய்விட்டு வந்துவிடலாமா, அவரவர் கர்மாவிற்கு ஏற்றபடிதான் மறுபிறவி அமைகிறது என்றால் இடையில் நரகம் எங்கிருந்து வந்தது.

  32. வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள், இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள். கடைசியில் பணத்துக்காக தான் மதம் மாறினார்கள் என்ற அதே மாவை அரைப்பது.

  33. //வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள், இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள். கடைசியில் பணத்துக்காக தான் மதம் மாறினார்கள் என்ற அதே மாவை அரைப்பது.//

    ஒன்றே கேட்டீரே… நன்றே சொன்னீரே…

    இது நமக்கு நாமே திட்டாத்தின் கீழே வந்தது… கேள்வி கேட்டு சரியான பதிளும் சொல்வார் ஜோசப் அண்ணாத்தை.

  34. Dear Mr. Joseph,

    //”நித்திய நியாயத்தீர்ப்பு என்ற காரியமும் அதனால் அடையும் மோட்சம் அல்லது நரகம் என்பதை தெளிவாக இயேசு கூறினார்”//

    Can you please calarify as what do you mean by “நித்திய”?

    Because you know that in tamil the word “நித்தியம்” also used to mention “everyday’”!

    So please clarify whether by writing “நித்திய”?

    Do you mean “permanent and eternal”

    Do you mean “Once for all” or

    Do you mean “everyday”

    or do you mean anything else?

    Also where did Jesus Christ tell this. Can you quote?

  35. //ஒன்றே கேட்டீரே… நன்றே சொன்னீரே…

    இது நமக்கு நாமே திட்டாத்தின் கீழே வந்தது… கேள்வி கேட்டு சரியான பதிளும் சொல்வார் ஜோசப் அண்ணாத்தை//.

    என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ன்னே தெரிய‌லையே க‌ர‌ப்பான் பூச்சி அண்ணாத்தே

  36. நியாயத்தீர்ப்பை பற்றி பைபிளில் தெளிவாகத்தான் போட்டிருக்கிறது, இயேசு என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்கனுமின்னா நான் கு சுவிஷேஷங்களையும் படித்து பாருங்கள். நியாயத்தீர்ப்பு ஒருமுறைதான் நிகழும்.

  37. Dear Mr. Joseph,

    Can you give your answers clearly?

    Can you quote the concerned verse from “”நான்கு சுவிஷேஷங்கள்’”

  38. Dear Brother Joseph,
    Thanks for your comments also i thank tamil hindu for publishing joseph comments. I also said earlier the same if anybody converted by force, money, or wordly things e.g job, treatment, studies there will be no place for them in heaven as jesus said. Please don’t tempt our indian brothers by using sensitive words in the name of religion. please visit any of our christian website that vomitting bitter words or irrespect word about other religious leaders or priests. Vande Matharam. velga thamizh. JESUS LOVES YOU

  39. //வெள்ளைக்காரர்கள் காவி உடை உடுத்திக்கொள்ளும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் போது புளகாங்கிதம் அடைபவர்கள்//

    இந்து மதத்தைப் பின்பற்ற வரும் வெள்ளைக் காரர்களிடம் நாங்கள்,

    ” இந்து மதத்தில் வணங்கப் படும் கடவுள்கள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள்கள், பிற கடவுள்கள் பொய்யான கடவுள்கள் ” என்று கூற வில்லையே!

    பிற மதங்கள் முற்றிலும் தவறானவை என்று கண்டிக்கவில்லையே.

    பிற மதங்களில் உள்ள நல்ல பழக்கங்களை பின் பற்றுவதில் தவறு இல்லை என்றுதானே கூறுகிறோம்.

    காவி உடை உடுத்திக்கொள்ளும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் வெள்ளைக் காரர் இந்து வான பின் மீண்டும் இயேசு கிறிஸ்துவை வழி பட விரும்பினால் அதற்க்கு தடை எதுவம் இல்லையே! நாங்களும் (நானும் என்னுடன் இருக்கும் இந்து நண்பர்களும்) அவருடன் சேர்ந்து மனப் பூர்வமாக இயேசு கிறிஸ்துவை வழிபடுவோமே!

    //இந்தியர்கள் கிறித்தவத்தையோ இஸ்லாமையோ தழுவும் போது ஏன் கொந்தளிக்கிறார்கள்//

    ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால், அவர் சர்ச்க்கோ, கோவிலுக்கோ சினகாகுக்கோ (synagouge) செல்ல முடியாது. அப்படி சென்றால் ஷரியா சட்டப்படி தண்டனைக்கு ஆளாக வேண்டும்

    இப்போது பரப்படும் ‘கிறிஸ்துவ” மதத்தில் இணைந்தால் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா மக்களையும் கிருஸ்தவர் ஆக்க வேண்டும் என்ற “அருட்செய்தி” மனதில் ஏற்றப் படும்.

    இந்துக்கள் எந்த அளவுக்கு இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த உலகில் சமரசம் நிலவும்.

    இந்தியாவில் இந்து மதம் அழிந்து இஸ்லாமும் கிருஸ்துவமும் அதிகமாக இருந்தால் இந்தியா முழுவதும் பாலஸ்தீன் போல ஆகி விடும் என்ற கவலையினாலே கொந்தளிக்கிறார்கள்!

  40. ஐயா
    எந்த ஏசு?
    மத்தேயு சுவ்யில் புனைந்த ஏசு யூதேயாவில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகன், ஏரோது இறப்பதற்கு முன் பிறந்தவர்.

    லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.

    மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.
    லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.

    யோவானசுவியின்படி ஏசு கடைசி 8 மாதங்கள் குடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை மற்றும் வெள்ளாடு கொலை செய்யும் பஸ்கா பண்டிகை என முழுமையாக ஜெருசலேமிலேயே இருந்தார், மாற்கு சுவியோ முழுமையாக கலிலியாவிலேயே, கடைசி வாரம் செவ்வாய் வந்து வெள்ளி அன்று கொல்லப் பட்டு துக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டு இறந்தார்.

    எது உண்மை எது பொய்.

    மத்தேயு சுவிப்படு ஏசுவிற்கு மரண தண்டனைக்கு முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்ததான லஞ்சப் பணத்தை யூதப் பாதிரிகள் எடுத் நிலம் வான்கினர்.

    லுக்கா சுவிப்படி, ஏசு இரWதபின் அந்த லஞ்சப் பணம் கொண்டு யூதாசே நிலம் வாங்கி நந்த நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தார்.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.

    சுவிசேஷங்கள் பற்றிய என் ஆய்வுக் கட்டுரைகள் இங்கே

    http://tamil.net/blog/8975

  41. Hinduism cater to the needs of different categories in the society according to their mindset and maturity to grasp things. That is why it does NOT hold one book. Depending on your mind set and understanding and preference and priority, you can choose the book. While one prefers Vedas and Upansishads, other finds comfort in Geeta or devtional songs and Bhajans. Some like mythology, that is Puranam. While some prefer ritualistic pooja, some sit on meditation only. So it is naive to question about some contentions in mythology, making it common consumption for the entire segments in Hindu society. While the contention of Garuda Purana will impress a mindset to tread on the right path, Geeta will serve the purpose to the other for the same objective. Hindus do NOT have to depend on one book like Bible or Koran to attain salvation. WHEN I AM ENLIGHTENED BY READING GEETA, MY BROTHER GETS THE SAME REALISATION BY READING BHAGAVATAM. THE SCOPE FOR SALVATION IS VERY RICH AND ELABORATE IN HINDU FAITH. IT IS NOT LIMITED TO A SMALL SQUARE OR CIRCLE! You don’t have to rdie a horse inside a small pot (Gundu Chattikkul Kutirai Otta Vendiyatillai)!

    While our friend Sri Joseph has to depend on one and only Bible, I am lucky to have many options being a Hindu! I CAN CHOOSE ANY ONE OF THE BOOKS ACCORDING TO MY UNDERSTANDING AND TEMPERAMENT. I wish Sri Joseph return to his parent faith soon to regain this freedom of choice. In my life , I have made many Christians and Mohmedans to return to their parent faith applying the same logic.

    MALARMANNAN

  42. NOW, THE QUESTION OF CONVERSION BY TEMPTATION. IT IS NOT NECESSARY THAT MONEY OR ANY OTHER MATERIALISTIC BENWEFITS PLAYING IN THE GAME OF CONVERSION. IF YOU SAY SALAVTION IS POSSIBLE ONLY BY ACCEPTING JESUS CHRIST/MOHMED, THAT ALSO AMOUNTS TO TEMPTATION. YOU ARE TRYING TO TEMPT A PERSON BY SHOWING A ROSY PICTURE OF HEAVEN AND THREATEN HELL FIRE IN THE SAME DEGREE.

    TO SUM UP, CONVERSION FROM ONE FAITH TO ANOTHER IS TOTALLY WRONG. FAITH IS A MATTER OF SPIRITUAL EXPERIENCE AND THERE IS NO NEED OF ANY KIND OF CONVERSION PHYSICALLY. ITS INTENTION IS ONLY TO INCREASE THE NUMBER.

    MALARMANNAN

  43. மதுரைக்காரனையோ,திருநெல்வேலிக்காரனையோ நம்பலாம்; கன்னியாகுமரிக்காரனைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்;
    “ரெண்டுக்கெட்டான்” திருச்சிக்காரனை நம்பவே முடியாது;
    அதனால் தான் திருச்சியைக் கண்டு எம்ஜிஆர் முதலாக பயந்தார்கள்;
    aமெட்ராஸ்காரனைவிட மோசமப்பா..!

  44. //மதுரைக்காரனையோ,திருநெல்வேலிக்காரனையோ நம்பலாம்; கன்னியாகுமரிக்காரனைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்;
    “ரெண்டுக்கெட்டான்” திருச்சிக்காரனை நம்பவே முடியாது;
    அதனால் தான் திருச்சியைக் கண்டு எம்ஜிஆர் முதலாக பயந்தார்கள்;
    aமெட்ராஸ்காரனைவிட மோசமப்பா..!//

    நான் அப்படி என்ன நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டேன் நண்பர் கிளாடி அவர்களே?

    நான் எழுதியதில் பொய்யோ, தவறோ இருந்தால் அதைக் குறிப்பிட்டு எழுதலாம் அல்லவா?

  45. ///RAMGOBAL
    10 September 2009 at 1:08 pm
    திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் இணைந்தார் பாஸ்கர் அவர்களே. திருக்குறள் இந்து மறை கிடையாது. அது உலகப்பொதுமறை என்று தங்களுக்கு தெரியாதா. மதங்களை குறிப்பிடாத ஒரே மறை திருக்குறள். பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.///

    திருக்குறளில் வருண பகவானையும் இந்திரனையும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளாரே படிக்கவில்லையா. இந்துவாக இல்லாமல் இந்து வழிபடும் தெய்வங்கள் அல்லது தேவர்களை ஏன் குறிப்பிட்டு எழுத வேண்டும்? திருவள்ளுவர் இந்துவே. அவருக்குப் பழைய படங்களில் பூணூல் இடப்பட்டிருக்கும். அவர் பார்ப்பனர் என்பதாகத் தெரிவது பலபேரின் வயிறு வாய் எல்லாம் எரிந்து புண்ணானது. எனவே அவரது தோளைச் சுற்றி பூணூலுக்கு பதிலாக துணியைப்போட்டார்கள். இப்போது அதுவும் மாறி வள்ளுவர் என்பவர் இந்துவே இல்லை என்றும் மாற்றப்பார்கிறார்கள். எல்லாம் திராவிட சதி.

  46. தங்களின் புதிய நண்பன் D.J. யுவராஜ் அறிமுகமாகிறேன்

  47. நண்பர் தேவிபிரியா சாலொமொன் அவர்களே
    தாங்கள் கிறிஸ்தவத்தின் மேல் எந்த விதமான நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் சில காரியங்களை நான் கூற முடியும், எத்தனையோ விளக்க உரைகளும், வரலாற்றியலாளர் பலர் இது குறித்து எழுதியுள்ளனர். சந்தேகங்கள் இருப்பின் Lee Strobel எழுதிய A case for christ என்ற புத்தகத்தை படியுங்கள் (Zondervan publishers)

  48. திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர், சாதியை சார்ந்தவர் என்பதை விவாதம் செய்து கொண்டிருப்பதை விட அவரது ஒப்பற்ற படைப்பான திருக்குறளை பாராட்டி அதில் கூறியுள்ள நல்ல விஷயங்களை பின்பற்றிவிட்டு போவோம்

  49. People who are disillusioned with Elst’s writing, please take time to read a book written by Lee Strobel on “The case for christ”. People like Elst cannot overshadow christianity, I can challenge

  50. Joseph
    11 September 2009 at 3:37 pm
    நண்பர் தேவிபிரியா சாலொமொன் அவர்களே
    தாங்கள் கிறிஸ்தவத்தின் மேல் எந்த விதமான நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் சில காரியங்களை நான் கூற முடியும், எத்தனையோ விளக்க உரைகளும், வரலாற்றியலாளர் பலர் இது குறித்து எழுதியுள்ளனர். சந்தேகங்கள் இருப்பின் Lee Strobel எழுதிய A case for christ என்ற புத்தகத்தை படியுங்கள் (Zondervan publishers)

    Dear Friend,

    I have not only read Lee Strobel, also other meaningless Apolegetics, which were wrtten to keep their innocent flocks growing and their Purses getting more richer.

    I have read Josh Mcdowell, also ww.tektonics.org/ etc., and are really shocked by their Naked Frauds with innocent Christians.

    I want every one should read Bible and look totally from Historical perspectives, and do not say foolish words of I HAVE Expericenced..

    I GIVE AN Example Jesus had many Brothers and Sisters as per Gospel Myths.

    Althese Apologies would say the world Brother and sister need not be by blood by cousins etc., and I quote

    6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

    The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.

    New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America

  51. I prefer to read the Originals and I also look for Which Bible Translations use which codex text and where they fraud over previous editions, I have more than 40 editions of Bible and in many verses I see more than 35 variations.

    I then go back to Hebrew, Greek and Latin and see how the Pious Fraud is done.

    Why dont we discuss at my blog or you suggest a Christian forum who would discuss Historical Jesus both in Tamil and English and let us do that

  52. // நண்பர் தேவிபிரியா சாலொமொன் அவர்களே
    தாங்கள் கிறிஸ்தவத்தின் மேல் எந்த விதமான நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள்..? //

    ஜோசப் அவர்களுக்கு நேரடியான பதில் என்ன‌..?
    புரியவில்லையே..!

    வரலாற்றுரீதியாக “இயேசு” இல்லை என்பதை பைபிளுக்கு வெளியிலிருந்து மட்டும் சொன்னால் நலம்;
    காகிதமும் அச்சு இயந்திரமும் வந்தபிறகு வந்ததையெல்லாம் விட்டுவிட்டு

    பைபிளின் சமகாலத்து ஆதாரங்களை மட்டும் முன்வைக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்;

    தங்கள் பாக்கெட்டை நிரப்ப இருதரப்புமே நிறைய எழுதியிருக்கின்றன‌;
    முரண்பாடானதை (பெரும்பான்மைக்கு எதிராக‌..!) எழுதினால்தான் “பாக்கெட்” வேகமாக நிரம்பும் என்பதை முந்தி அறிக‌.

  53. Mr Devipriya
    The prime duty of atheists anywhere in the world is to write against theistic beliefs, being in the west the atheists tend to attack christianity, just as the same thing being done by the atheists here. “only a fool say in his heart that there is no God”
    These ppl from the west can write about any religion by imagining stories and discrete informations here and there, provided that their pockets are ensured full.

  54. சுமார் 4000 ஆண்டுகளாக எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளையே தவறு என்கிறீர்கள் (யூதர்கள் தங்களது வரலாற்றையும் வம்சாவழியையும் தெளிவாக எழுதி வைப்பதில் பேர் போனவர்கள்) ஏறத்தாழ அதே காலகட்டத்திலிருந்து செவி வழியாக சொல்லப்பட்டு வந்த இதிகாசங்களையும்,புராணங்களையும் நம்புவோம் என்கிறீர்கள், பரவாயில்லை உங்கள் மதப்பற்றை பாராட்டுகிறேன்.

  55. Dear DevaPriya Solomon,
    I really don’t understand that why your thought process is so narrow on Christians. Not everyone will go behind money. You are talking in a way that everyone who preaches Jesus Christ is just concerned about grabbing money from the innocent Christians or getting money from USA, and everyone who accepts Christ is also for money from USA.
    Can you tell me the earthly benefit that anyone can get by converting someone as Christian?
    What could be the benefit in increasing the Christian population?
    Why any Christian missionary guy has to risk his life among you guys, or getting into the darker part of Africa for the sake of Gospel, or to get into Middle East Countries, where his life itself at stake?
    Why do people from USA has to come to underdeveloped countries, leaving all their luxuries and suffer for the Gospel and sometimes die?
    Surely, they will not be taking such riks to fill their wallets.
    I know, you would be interested in discussing things in your blog. I also thought of doing that. But, I got shocked after opening your blog. I never expected such pictures in your blog. I didn’t even want to read whatever there in your blog. In my free times in office I am blogging, I dont want to get embarassed by others while seeing your blog. Tamilhindu is very nice and decent in such terms, even though they dont publish my words at times.
    I love to discuss and answer your questions in this blog.
    I have seen many people who are writing against Christianity and Jesus for Money, Fame, to earn degrees and doctorates, to get more response for their blogs, etc.,
    Bible is tested by time. Till date, no one is able to disprove the divinity of Jesus Christ. To answer you, even though I am new to Christ and Bible, I think that I am sufficient. The Holy Spirit will guide me to answer you.
    //இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.//
    What are you trying to say by this? Yes, Jesus could have had Brothers. So what? How does that is going to affect his divinity?

    Waiting for your replies with Love,
    Ashok

  56. பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?

    http://devapriyaji.wordpress.com/

    இஸ்ரேல் நாடு அரேபிய பாலைவனத்தின் ஒரு சிறிய பகுதி. ஆனால் இந்நாட்டு புராணக்கதைகளை ஐரோப்பிய நாட்டினர் தங்கள் அரசியல் லாபத்திற்காக- கட்டுக்கதையான இயேசு என்பவர் உயிர்த்தார் என்ற மூடநம்பிக்கையின்படி எழுந்த குழுக்களை ரோம் ஆட்சி வளர்த்து போலே உலகின் பல பகுதிகளிலும் பரப்பியது.

    பைபிளை ஆய்வு நடுநிலைக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்கள், அனைவரும் பைபிள் மறுப்பாளர்கள் அல்லர்.

    உண்மையான வரலாற்று இயேசு யார்? வரலாற்று இயேசு உண்மையில் சொன்னது என்ன? என்ற நோக்கில் ஆய்வுகள் தொட்ங்கின.

    பழைய ஏற்பாடு என்னும் எபிரேய பைபிளில் பழமையானது எது? எப்போது யாரால் புனையப்பட்டது? கட்டுக்கதையாக மோசே எழுதியது என்பவை உடைய- நடுநிலையாளர்கள் ஆய்வு- பழைய ஏற்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் வெறும் பொய்யான கட்டுக்கதைகள் என்பதை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் அனைவரும் ஏற்கின்றனர்.

    ஆனால் 50-75 ஆண்டுகட்கு முன்பான தவறான மேம்போக்கான முடிவுகளை இன்றூம் மழுப்பலாளர்கள் பலர் எழுதிகின்றனர்,

    அவர்கள் பாவம். பொருந்தாத வெற்று மழுப்பல்களை- தெளிவாக தவறு என மறுக்கப்பட்ட விபரங்களைத் தொகுத்து இன்றும் சமாதானங்கள் என புனைவது- அப்பாவிகளின் அறியாமையை காசாக்கும் தொழில் தான்.

    நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

    நீங்கள் உங்கள் இருதயத்தில் புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கையை கைவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்.

    இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தி மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

    இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.

    ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”

    இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து - பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.

    இன்னுமொரு நூல் –
    Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
    How was Hebrews living during OT times.
    The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
    Page-77
    எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.

    With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
    Pages- 87,88
    ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

    Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
    Page-77
    The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
    The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
    It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
    Pages 86-87.
    வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
    பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
    இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
    பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.

    இன்னுமொரு நூல் – ஆரம்பத்தில் பார்த்தது.

    • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
    இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.

    இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.

    1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
    2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
    3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
    4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
    5. தாவீது- சாலமோன் - ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
    6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
    7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

    இந்த புத்தகம் பற்றிய தனி பதிவு விரைவில்.

    மேலும் வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
    Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
    The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.
    Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
    ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் - சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் - மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
    சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

    இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.

  57. இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம்,

    COMEDY OF ALL TIMES

  58. ஏன் தேவிபிரியாஜி,
    இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் படுகொலை செய்யப்படவில்லை அது ஒரு கட்டுக்கதை என ஒரு இஸ்லாமிய நாட்டின் அதிபர் புலம்பி வருகிறார். 20ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சியையே ஒருவர் மறுக்கும் போது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை உங்களை போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகின்றனர். அம்மம் அது என்ன யூதர்கள் என்றால் உங்களுக்கு அப்படி ஒரு வெறுப்பு.

  59. //ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் - சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் - மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
    சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.//
    ஏதோ விரக்தியில் புலம்புவது மாதிரி இருக்கு,
    நீங்கள் கிறிஸ்தவத்தையும் யூதரையும் பற்றி தங்களது கற்பனை கதைகளை எழுதி காசு பார்க்கும் மேதாவிகள் எழுதும் புத்தகங்களை தான் விரும்பி படிப்பீர்கள் போல‌.

    (Comment edited)

  60. நீங்கள் சொல்லியுள்ள புத்தகங்களை எழுதியவர்கள் எதை ஆதாரமாக வைத்து இது மாதிரி எழுதியுள்ளார்கள்???

  61. வணக்கம்,

    ///இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம்,////

    இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

    ///இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் படுகொலை செய்யப்படவில்லை அது ஒரு கட்டுக்கதை என ஒரு இஸ்லாமிய நாட்டின் அதிபர் புலம்பி வருகிறார். 20ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சியையே ஒருவர் மறுக்கும் போது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை உங்களை போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகின்றனர்////

    ஆனால் அவர் ஒருவர் மட்டும் புலம்புகிறார். சரித்திரம் அதை கட்டுக்கதைகள் என்று சொல்லவில்லையே?

  62. யூதர்களை மோசமானவர்கள், காட்டுமிராண்டிக்கூட்டம் என சொல்வதன் மூலம் நீங்கள் எதை வலியுறுத்த விரும்புகிறீர்கள். அவர்கள் அப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு மட்டும் என்ன ஆதாரம் இருக்கிறது. எருசலேம் நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ரோம படையெடுப்பில் ஏறத்தாழ முழுவதும் அழிக்கப்பட்டது, எனவே எருசலேம் கால்பந்து மைதானம் அளவுக்கு தான் இருந்தது, அவர்களுக்கு வீடு கட்ட தெரியவில்லை என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுவது சிதிலமடைந்த எருசலேம் யூதேயா பகுதியை அடிப்படையாக வைத்தே.

  63. இஸ்ரேலியர் கடல் வாணிபம் செய்யவில்லையாம்!!!
    Zebulun will live by the seashore
    and become a haven for ships;
    his border will extend toward Sidon

    இது பைபிளில் தான் (அஃதாவது யூதர்களின் நூல் எனும் பழைய ஏற்பாட்டில்)

  64. The Question the analysis of OT, if you read very clearly the quotes that ports are there, but OT does not talk about their Participating in Foriegn trade.

    We have more than a Million Sq.KM. in Archeology proving that Civilization grew in India and its origin goes to 7000BCE.You donot want to trust Your Fore father’s writings, but want to believe only those who preach based on meaningless myths.

    Why don’t you read Genesis and analyse that Jacob went with a family of 70 People and with in Two Generations returned back, but the Gang had more than 6 Lakh Soldiers and with women and children the total goes above 20 Lakh.

    Do you want to trust this?

    All the learned scholars have got it from Bible and Reseaches around Israel.

  65. Historical Jesus -was there One?

    How was Jesus story written-Analysing Gospels, Dead Sea Scrolls and Josephus in depth you can get about this book

    Joseph Atwill: Caesar’s Messiah, the Roman Origin of Christianity.

    http://www.esnips.com/doc/b67761f4-ecd2-423a-93a0-0ff2b9eb6149/Joseph-Atwill—Caesars-Messiah—The-Roman-Conspiracy-to-Invent-Jesus

    You can hear the Interview with Author with this link.

    http://www.esnips.com/doc/179d4284-b13b-4fcf-9948-691e9f5b0fb4/Interview

    You can read about this book in the website of author

    http://www.caesarsmessiah.com/summary.html

    Author runs Forums for questions.

  66. This is “Tamil Hindu” site. Please stop discussing deeply the contents of Bible and its authenticity here. Let your comments be in tune with the topic of the essay keeping in mind the objective for which it is written.

  67. இன‌வாத‌, இன‌வெறி, இன‌ அழிப்பு கொள்கைக‌ளை ப‌ரப்பும் நூல்க‌ள் த‌டை செய்ய‌ப் ப‌ட்டே ஆக‌ வேண்டும். ந‌ம் நாட்டில் த‌டை செய்ய மாட்டார்க‌ள்! ஐரொப்பிய‌ரிட‌ம், அமேரிக்க‌ரிட‌ம் கூற‌ வேண்டும். குறிப்பாக‌ ஐரொப்பிய‌ர் இன‌வெறிக்கு எதிரான‌வ‌ர்க‌ள்.

    “உல‌க‌ அமைதி”க்கு க‌ர்த்த‌ரின் ப‌ங்கு இதோ

    மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளை முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து.

    இன‌ அழிப்புத் தூண்டுத‌லுக்கான‌ குற்ற‌ச் சாட்டு அந்த‌க் “கர்த்தர்” மேல் வைக்க‌ப்
    ப‌ட்டே ஆக‌ வேண்டும். அவ‌ர் ஹிட்ல‌ர், ராஜ‌ப‌க்ஷே இவ‌ர்க‌ளுக்கு முன்னொடி போல‌ செய‌ல் ப‌ட்டு, இன‌ அழிப்பையே த‌ன் கொள்கையாக‌ வைத்து இருந்த‌வ‌ர் என்ப‌தை வ‌ருத்த‌த்துட‌ன் தெரிந்து கொள்கிரோம்.

    Atleast we should appeal and acheive to ban the books which supports, authenticate and probagate Genocide!

    இன‌வாத‌, இன‌வெறி, இன‌ அழிப்பு கொள்கைக‌ளை ப‌ரப்பும் நூல்க‌ள் த‌டை செய்ய‌ப் ப‌ட்டே ஆக‌ வேண்டும். ந‌ம் நாட்டில் த‌டை செய்ய மாட்டார்க‌ள்! ஐரொப்பிய‌ரிட‌ம், அமேரிக்க‌ரிட‌ம் கூற‌ வேண்டும். குறிப்பாக‌ ஐரொப்பிய‌ர் இன‌வெறிக்கு எதிரான‌வ‌ர்க‌ள்.

  68. நான் எல்லோரையும் சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆன்மீக விசயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் எதையும் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஒத்துக் கொள்வது கிடையாது. நமக்கு ஆன்மீகமும் ஒரு அறிவியலே!

    ஆன்மீக ஆராய்ச்சிகளை பல்லாயிரம் வருடங்கள் செய்த நாடு நம் நாடு.

    நம்மிடம் வந்து ஒரு நூலைக் குடுத்து அதில் உள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    அதுவும் அந்த நூலில் முக்கியமாகக் கூறப் பட்டுள்ள விடயம் என்ன என்றால், அது யூதர்களின் வரலாறு தான்.

    யூதர்கள் எங்கே போய் அடிமையாக இருந்தார்கள்?

    யூதர்கள் எப்படித் தப்பி வேறு இடம் சேர்ந்தார்கள்?

    யூதர்கள் யார் யாருடன் சண்டை போட்டார்கள்?

    இவர்களுக்கு ராஜாவாக இருந்தது யார்-

    இதைப் போன்ற தகவல்களைத் தரும் நூலை வரலாற்று நூல் என்ற வகையில் வைக்க வேண்டிய நூலை, இந்த வரலாற்றோடு, சகிப்புத் தன்மையை அழிக்கும் காட்டு மிராண்டிக் கருத்துக்களும் அதிக அளவில் உள்ள நூலை, ஆன்மீக நூல் என்று நம் தலையில் கட்டப் பார்த்தால், நாம் அதை எதிர்க்காமல் இருக்க முடியுமா?
    இந்த நூலை ஆன்மீக நூல் என்றால் - அதை ஒத்துக் கொள்ளும் அளவுக்கா நாம் வெகுளியாக இருக்கிறோம்?

    இவர்களின் காட்டு மிராண்டிக் கருத்துக்களை மட்டுறுத்தல் செய்யத்தான் யூதர்களின் நடுவிலே, யூதராகவே இயேசு கிறிஸ்து அவதரித்து, தன்னால் முடிந்த அளவுக்கு யூதர்களை நாகரீகமுள்ள சமுதாயமாக மாற்ற முயன்றார்.

    ஆனால் அவரை சிலுவையில் யூதர்கள் அறிந்து விட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய‌ப் ப‌ட்ட‌து ந‌மக்கும் வ‌ருத்த‌த்தை அளிக்கும் ஒரு நிக‌ழ்வுதான். ஆனால் நாம் அத‌ற்க்காக‌ யூதர்கள் ப‌ழி வாங்க‌ப் ப‌ட‌க் கூடாது என்றே க‌ருதுகிரோம்.

    இது எல்லாம் யூத‌ரின் வ‌ர‌லாற்று நிக‌ழ்வுக‌ள்.

    இயெசுவின் க‌ருத்துக்க‌ள் எல்லாம், மனித‌ன் அன்றாட‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌தைக் குறித்த‌ அறிவுரைக‌ள். ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளியில் முத‌ல் வ‌குப்பில் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஆசிரியை, “ப‌க்க‌த்தில் இருக்கும் மாண‌வ‌னைக் கிள்ள‌க் கூடாது, தின‌மும் காலையில் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌தும் ஆசிரிய‌ருக்கு வ‌ண்க்க‌ம் செலுத்த‌ வேண்டும்” என்ப‌து போன்ற‌ அறிவுரைக‌ள்!

    பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்தும் த‌குதியும், திற‌மையும் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த‌து என்றாலும், அத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை.

    ஆனாலும் இயேசு கிரிஸ்து ஒரு அருமையான‌வ‌ர், அற்புத‌மான‌வ‌ர், அவ‌ரைக் க‌ட‌வுள் என்று வ‌ழிப‌ட‌ எம‌க்கு த‌ய‌க்க‌ம் இல்லை.

    யூத‌ருக்கு அடைப்ப‌டை நாக‌ரீக‌ம் அளித்து காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளில் இருந்து அவ‌ர்‌க‌ளை விடுவிக்க‌வே இயேசு கிரிஸ்து முய‌ன்றார்.அதற்க்கே அவ‌ருக்கு நேர‌ம் ச‌ரியாக‌ இருந்த‌து. ஆனால் அவரையே சிலுவையில் யூதர்கள் அறிந்து விட்டனர்.

    இதிலே முஹ‌ம்ம‌து ந‌பியான‌வ‌ர், மெக்காவிலிருந்து த‌ப்பி யூத‌ர்க‌ளை அடைந்து அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை அறிந்து, அவ‌ர்க‌ளுக்கும் அரேபிய‌ர்க‌ளுக்கும் ஒப்பும் வ‌கையிலே, யூத‌ரின் நூலை அடைப்ப‌டையாக‌ வைத்தே பெய‌ரை எல்லாம் அர‌பிய‌ மொழியிலெ மாற்ற‌ம் செய்து, ஆபிர‌காமை- இப்ர‌ஹிம் என்றும், மோச‌சை- மூசா என்றும் வைத்து “புதிய‌” மார்க்க‌த்தை துவ‌ங்கினார்.

    இப்ப‌டி செய்வதால் யூத‌ரும் த‌ன்னோடு இருப்பார்க‌ள், அரேபிய‌ரின் ப‌ழ‌க்க‌த்துக்கு ஏற்ப பல‌ ம‌னைவிக‌ள் திரும‌ண‌ம் செய்ய அனும‌தி என்று எல்லாம் புரொவிச‌ன் வைத்தார். ஆனால் ந‌பியோடு சேர‌ யூதர்கள் விரும்ப‌வில்லை!

    கிருஸ்தவ ம‌த‌ம் என்ற‌ பெய‌ரில் இயெசு கிருஸ்துவுக்கு பெய‌ர‌ளவில் இட‌ம் கொடுத்த‌ ஐரொப்பிய‌ரும், முஹ‌ம‌திய‌ ம‌தத்தைப் பின்ப‌ற்றிய‌ அரேபிய‌ரும்‍- ஒரே க‌ட‌வுள் தான் ‍- அது யார் க‌ட‌வுள் என்று பார்த்து விடுவொம்- என்று வாளை உருவி, கொடும் போர்க‌ளில் இற‌ங்கின‌ர்.

    ஆனால் இந்த‌ பாலைவ‌ன‌ ம‌த‌ங்க‌ள் உருவாவ‌த‌ற்க்குப் ப‌ல்லாயிர‌ம்‌ வ‌ருட‌ங்கள் முன்பே ஆன்மீக‌ ஆராய்ச்சியில் சிற‌ந்து விள‌ங்கிய ந‌ம்மிட‌ம் வ‌ந்து, இப்படிக் காட்டுமிராண்டித் த‌ன‌மும், பைத்திய‌க்கார‌த் த‌ன‌மும் நிறைந்த‌ க‌ல‌க்க‌ல் ச‌ர‌க்கை
    இவ‌ர்க‌ள் ந‌ம்மிட‌ம் அழுத்தி திணிப்ப‌து ஏன்?

  69. சுவி சேசம் என்ற பெயரில் பரப்பப் படுவது எல்லாம் வெறுப்புக் கருத்துக்கள் தான், பிற மதங்களை எல்லாம் அழித்து விட்டு தன் மார்க்கத்தை மட்டுமே நிலை நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் தான்.

    எதையாவது செய்து எப்படியாவது பெயரையும் மதத்தையும் மாற்றி டார்கெட்ஐ அச்சீவ் செய்து இன்சென்டிவ் பெரும் செயல்கள் தான்.

    ஆனால் இந்து மதம் பிற மதங்களை எல்லாம் ஒரு தாயின் பார்வையோடு அணுகுகிறது.

    ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால், அவர் சர்ச்க்கோ, கோவிலுக்கோ சினகாகுக்கோ (synagouge) செல்ல முடியாது. அப்படி சென்றால் ஷரியா சட்டப்படி தண்டனைக்கு ஆளாக வேண்டும் (இதை எழுதுவதால் ராம கோபால், தமிழ் அரசன் தவறாக என்ன மாட்டர்கள், நான் எழுதுவது சரிதான் என்று அவர்களுக்குத் தெரியும்).

    கிரிஸ்துவர்கள கோவிலுக்கோ சினகாகுக்கோ (synagouge) செல்ல முடியாது.

    ஆனால் இந்துவாக இருந்தால் கோவிலுக்கு சென்று மனாமார வழி படலாம்.

    அதே நேரம் எப்போதாவது சர்ச், மசூதி சென்றாலும் யாரும் தடை செய்ய மாட்டார்கள்.

    எனவே இந்துக்கள் எந்த அளவுக்கு இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த உலகில் சமரசம் நிலவும்.

    இந்தியாவில் இந்து மதம் அழிந்து இஸ்லாமும் கிருஸ்துவமும் அதிகமாக இருந்தால் இந்தியா முழுவதும் பாலஸ்தீன் போல ஆகி விடும் என்ற என்னுடைய உண்மையான கவலையினாலே நான் இதை எழுதுகிறேன்!

    அதே நேரம் இந்துக்களில் சிலர் வெறுப்புக் கருத்துக்களுக்கு சிலநேரம் மனதில் இடம் தரக் கூடும். ஆனால் அவை எல்லாம் ஆபிரகாமிய மதங்களின் ஆணவ, அராஜகக் கருத்துக்களின் விளைவாக உருவாகும் நிகழ்ச்சி (அதாவது உடலில் நோய் வந்தால் வெள்ளணுக்கள் அதிகமாக ஆவது போல)!

    ஆனால் நாம் அவர்களை விரைவாக எளிதில் சரியான பாதைக்கு கொண்டு வர முடியும். ஏனெனில் இந்து மதத்தின் அடிப்படை அஹிம்சையும், உண்மையும், சகிப்புத் தன்மையும், கருணையும் ஆகும்!

  70. நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது?

    ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் உங்க‌ள் மார்க்கம் பெருவாரியாக பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. கிரிஸ்து இவ‌ர்க‌ளை எல்லாம் சொர்க‌த்தில் சேர்ப்பாரா?

    நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது!

    2000 வருட‌ங்க‌ளாக‌ நீங்க‌ள் மார்க்க‌ப் பிரச்சார‌ம் செய்த‌ அழ‌கில்தான் அவ‌ர்க‌ள் இந்த மானாவாரி ம‌ன‌ம் போல‌ உற‌வு என்று, வில‌ங்குக‌ளே ப‌ர‌வாயில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு சீர் கெட்டு உள்ள‌ன‌ர்.

    ஐரோப்பியர் அமெரிக்கர், மார்க்கத்தில் இருந்து (அந்த மார்க்கத்தால் அவர்கள் சமுதாயமே கெட்ட போதும்) பட்டது போதும், இப்போதாவது தப்பிப்போம் என்று விடு பட்ட நிலையிலே உள்ளனர்.

    இப்போது இங்கே ஒழுங்காக‌ குடும்ப‌ம் குட்டி என்று வாழ்க்கை ந‌ட‌த்தும் எங்க‌ள‌யும் கெடுக்க‌ பார்க்கிறீர்க‌ள்!

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    உங்க‌ள் வழியில் போனால் நாங்க‌ள் நிச்ச‌ய‌ம் ந‌ர‌க‌த்துக்குத்தான் போக‌ முடியும்!

  71. கிளாடி ஜோஸப்பு போன்ற நண்பர்கள் மனமாச்சரியங்களின்றி,
    http://www.jesusneverexisted.com என்ற இணையதளத்தை படிப்பது நல்லது.

    இயேசுவுக்கோ அல்லது அவர்களது சீடர்கள் இருந்ததற்கோ எந்த வித ஆதாரங்களும் இல்லை.

    இயேசு ஒரு கற்பனை. இயேசு என்பது மார்க் எழுதிய நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். அது உண்மை என்று கருதி அதனை வழிபடத்தொடங்கி ஆளுக்காள் அதனை மாற்றி ஏராளமான விளக்க உரை கொடுத்து மதமாக மாற்றிவிட்டார்கள்.

  72. வணக்கம்,
    ///இயேசு ஒரு கற்பனை. இயேசு என்பது மார்க் எழுதிய நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். அது உண்மை என்று கருதி அதனை வழிபடத்தொடங்கி ஆளுக்காள் அதனை மாற்றி ஏராளமான விளக்க உரை கொடுத்து மதமாக மாற்றிவிட்டார்கள்.///

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறான செய்தி நண்பர் அன்பரசு. மக்களை க்ரிஸ்துவத்திர்க்கு விற்றுவிட்டார்கள் என்பதுவே உண்மையான செய்தி.

  73. யூத‌ர்க‌ளுக்கு எதிராக‌ இந்துக்க‌ள் எழுதுவாக‌ நினைக்கிரார்க‌ள். அப்ப‌டி இல்லை ஐயா. அவ‌ர்க‌ள் நன்றாக‌ வாழ‌ட்டும்.

    ஆனால் இங்கே வ‌ந்து யூத‌ர் புராண‌த்தை எத‌ற்க்கு அள‌க்க‌ வேண்டும்?

    யூத‌ர்களுக்கும் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ எங்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம‌ப‌ந்த‌ம்?

    யூத‌ர்கள் எங்களுக்கு மாம‌னா ம‌ச்சானா?

    ஒரு யூதர‌டிப்பொடியார் த‌மிழ‌ர்க‌ள் ஆபிர‌காமின் மூன்றாவ‌து ம‌னைவியின் ம‌க‌ன்க‌ள் என்கிறார்.

    இன்னும் கூட‌ சொல்லியிருப்பார்.

    க‌ற்ப‌னைக்கு எல்லை ஏது?

    இதையெல்லாம் கேட்க‌ த‌மிழ‌ன் மான‌ங்கெட்ட‌வ‌னா?

  74. இயேசு போற்றத்தக்கவரா?

    http://devapriyaji.wordpress.com/

    மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

    மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.
    லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.

    As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
    Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)

    லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.

  75. //அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.//

    Yes. This is true. Jesus Christ is sent only to make all the israleites as a civilised community. But a Hindu first sees the good things in others. Whatever the good thing told by Jesus, we appreciate.

    But others try to find fault with all other religions and finally call it as false and claim their only religion as true religion!

  76. Dear Devapriya Solomon,
    //இயேசு போற்றத்தக்கவரா?//
    Jesus is very much to be appriciated. One of the very important thing that Jesus was teaching is humbleness. And here Jesus knew that woman is humble. And just to show the humbleness of the woman to the world, Jesus has asked such a question. See how happy Jesus was when her humbleness is proved.
    //.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.//
    //As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.//
    Did these people met Luke anytime? Just because some scholar (in your eyes) writes some crap, you need not beleive that.
    May GOD Bless you,
    Ashok

  77. Brother Trichykkaaran,
    //எதையாவது செய்து எப்படியாவது பெயரையும் மதத்தையும் மாற்றி டார்கெட்ஐ அச்சீவ் செய்து இன்சென்டிவ் பெரும் செயல்கள் தான்.//
    Can you please tell me, who is giving such incentives? I hope you will not ignore this question of mine.

    Thank you Brother,
    Ashok

  78. Dear Devapriya,
    //ஐயா
    எந்த ஏசு?
    மத்தேயு சுவ்யில் புனைந்த ஏசு யூதேயாவில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகன், ஏரோது இறப்பதற்கு முன் பிறந்தவர். //
    There is no mention in Bible that Joseph (son of Jacob) was living in Judea. There is no mention about where he lived in Matthew’s Gospel.

    //லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.//
    Please refer http://www.biblehistory.net/newsletter/quirinius.htm

    //மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
    That is his paternal generation.

    //லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
    This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.

    //யோவானசுவியின்படி ஏசு கடைசி 8 மாதங்கள் குடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை மற்றும் வெள்ளாடு கொலை செய்யும் பஸ்கா பண்டிகை என முழுமையாக ஜெருசலேமிலேயே இருந்தார், மாற்கு சுவியோ முழுமையாக கலிலியாவிலேயே, கடைசி வாரம் செவ்வாய் வந்து வெள்ளி அன்று கொல்லப் பட்டு துக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டு இறந்தார்.//
    Please dont think that people will beleive all your lies. In John’s Gospel, did Jesus spent his entire life in Jerusalem?

    //எது உண்மை எது பொய்.//
    Bible is truth.

    //மத்தேயு சுவிப்படு ஏசுவிற்கு மரண தண்டனைக்கு முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்ததான லஞ்சப் பணத்தை யூதப் பாதிரிகள் எடுத் நிலம் வான்கினர்.

    லுக்கா சுவிப்படி, ஏசு இரWதபின் அந்த லஞ்சப் பணம் கொண்டு யூதாசே நிலம் வாங்கி நந்த நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தார்.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.//
    Pls refer http://www.israelect.com/reference/WillieMartin/Judas.htm

    With Love,
    Ashok

  79. I have to see how Indian Christian church works

    Updates about sister Abhaya murder case. The murder took place in a convent in Kerala about 18 years ago, and church did everything to cover that up with full support of political parties.

    The video tapes of narco analysis on the three prime accused- Father Thomas Kottur, Father Jose Puthrikayil and sister Sephi were telecast in Malayalam TVs couple of days back. They are now available in Youtube.

    http://www.youtube.com/watch?v=E_GRV0wg4uI
    http://www.youtube.com/watch?v=lm0SznkecA8
    http://www.youtube.com/watch?v=qdPMtWec5ew

    It is obvious that the video has been edited. The nun admits that she hit sister Abhaya with an axe. The nun also admits illicit relationship she had with other two male priests.

  80. //Ashok kumar Ganesan
    20 September 2009 at 2:26 pm
    Dear Devapriya,
    //ஐயா
    எந்த ஏசு?
    மத்தேயு சுவ்யில் புனைந்த ஏசு யூதேயாவில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகன், ஏரோது இறப்பதற்கு முன் பிறந்தவர். //
    There is no mention in Bible that Joseph (son of Jacob) was living in Judea. There is no mention about where he lived in Matthew’s Gospel.//

    நண்பரே,

    வருக.

    என் ஆசை எல்லாக் கிறிஸ்துவர்களும் பைபிளைப் படிக்க வேண்டும், அதனை புனைந்த்விதம், முக்கியமான பைபிள் விஷயங்களுக்கு எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று அனைவரும் புரிந்து கொள்ள வெண்டும் என்பது.

    மத்தேயு புனைந்ததான சுவி கதையில் வெளிநாட்டு ஜோசியர்கள் விசாரணைக்குப்பின் யூதேயாவிலுள்ள பெத்லகெமிற்கு செல்லச் சொல்ல நட்சத்திரமும் வழிகாட்டியதாகக் கதை. யூதேயாவிலுள்ள பெத்லகெம் வீட்டிற்கு ஜோசியர்கள் பிறந்த யூதர்களின் அரசியல் ராஜ வாரிசுக்கு பரிசுகள் தந்து சென்றதாகக் கதை செல்கிறது. தயவு செய்து நடுநிலை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு படியுங்கள்.

    Birth of Jesus became the Killing Reason of the children of Bethlehem as per this story, though Historically Herod Killing Children is rejected as untrustable.

  81. /மத்தேயு சுவிப்படு ஏசுவிற்கு மரண தண்டனைக்கு முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்ததான லஞ்சப் பணத்தை யூதப் பாதிரிகள் எடுத் நிலம் வான்கினர்.

    லுக்கா சுவிப்படி, ஏசு இரWதபின் அந்த லஞ்சப் பணம் கொண்டு யூதாசே நிலம் வாங்கி நந்த நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தார்.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.//
    Pls refer http://www.israelect.com/reference/WillieMartin/Judas.htm

    With Love,
    Ashok//

    தயவு செய்து நடுநிலை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு படியுங்கள்.

    நான முன்பே சொன்னேன் பயனற்ற வெற்று போலி மழுப்பல் சமாதானங்கள் வீண் வேலை. சுவியில் இல்லததை எல்லாம் தானாக கற்பித்துக் கொண்டு மழுப்புவது உங்களுக்கும் போதுமாக இருக்கலாம். நடுநிலை பைபிளியல் அறிஞர்களுக்கே ஏற்பில்லை.

    யூதா மரணம் பற்றி - கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ் எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி - பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.

    பக்கம்49-50இல் யூதாஸ் மரணம் பற்றிய கேள்விக்கு பதில்
    //மத்தேயு நற்செய்தியாளர் யூதாசை தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுகிறார்(மத். 27:3-10) …
    தி.ப. 1:18-9இல் யூதாஸ் வயிறு வெடித்துக் குடல் எல்லாம் சிதறி இறந்த்தாகக் கூறப்படிகிறது, ஆகவே, யூதாஸ் இறந்தது உண்மை. எப்படி என்பது கேள்விக்குறியே”//

    உங்கள் நம்மிபிக்கையை நான் மதிக்கிறேன்,

    என் பார்வை முழுமையும் வரலாற்று உண்மைகளெ, நான் இதற்காக மூல எபிரேயம் கிரேக்க சொற்கள்சித் தேடுபவன், தாராளமாக என்னை விமர்சியுங்கள், ஆனால் என் வலைப்பூவில் செய்யுங்களேன், இங்கு நேரடியாக தலைப்பில் நிற்போம்.

  82. ////லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.//
    Please refer http://www.biblehistory.net/newsletter/quirinius.htm

    //மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
    That is his paternal generation.

    //லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
    This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.//

    முதலில் ஏன் இந்தக் கதைகள் நுழைந்தது. ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வாசகம் எடுத்துக் கொண்டு- இது தீர்க்கம்; இது நிறைவேர வேண்டும் என, பெத்லகேமில் பிறப்பு எனக் காட்டல் வேண்டும், பின் ஏசு நசரேயன் என தூக்குமரத்தில் நிருபிக்கப் பட்ட குற்றத்தை தன் கையால் ரோமன் கவர்னர் பிலாத்து எழுதியது இருக்க இரண்டு சுவி கதாசிரியர்களும் குழம்பி தன்னிச்சையாகப் புனைந்தனர். மத்தேயு யாக்கோபு மகன் ஜோசப் பெத்லகேமிலே வாழ்ந்தவர், அவருக்கு இயேசு குடும்பத்தை பெத்லகேமிற்கு அனுப்ப நட்சத்திரக் கதைகள், ஏரேது ஏசுவிற்காக பலப்பல அப்பாவி குழந்தைகாக கொன்றாராம்.
    லுக்கா ஏலி மகன் ஜோசப்பை நசரேத் வாழ்பவராகப் புனைய அவருக்கு பிறப்பிற்கு ஏலி மகன் ஜோசப்பை பெத்லகீம் கொண்டு வர சென்சஸ் கதை தேவைப்பட்டது.

    வரலாற்றில் ஒரே ஒரு சென்சஸ் தான், அதன் போது கலிலேயர் யூதாஸ் பெரும் மரியல் செய்தார், என்பதையும் லுக்கா சுவி புனைந்தவரின் இரண்டாவது நூலான அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம்.

    சுவிசேஷஙளைக் கொண்டு எவ்வளவு தூரம் உண்மையான வரலாற்று இயேசுவைத் தேட முடியாது, எங்களுக்கு வரலாற்று இயேசு அல்ல பரப்பப்பட்ட கதை நாயகர் இயேசு தான் வேண்டும் Bultman என்றனர். இதை சுட்டிக் காட்டி பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.

    See what this Learned Scholar says :

    “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

    Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

    As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-

    “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.
    Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.

    மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

    சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு வசனம் எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்கம் என்றுப் புனைந்து அதற்காக இருவரும் இருவிதமாகப் புனைந்ததை பற்றி மேலும் விரிவாகப் பேச என் வலைப்பூவிற்கு வாருங்களேன்.

    தயவு செய்து சுவிக் கதைகளைப் படியுங்களேன். மத்தேயு லுக்கா இருவரும் இது தந்தைவழி பட்டியல் எனத் தெளிவாகக் கூறி உள்ளனரே? நீங்கள் இல்லாததைக் கற்பனை செய்கின்றீர்கள்?

    பட்டியலில் உள்ள பெயர்கள் அதில் தன்னிச்சையாய் மத்தேயு சில பெயர்கள் விட்டுள்ளதையும் இன் இவ்வலையில் காணாலாம்.
    லுக்கா பட்டியலில் தாவிது சாலமன் வரிசை இல்லாமல் -தாவீது வேறொரு வைப்பாஅட்டி மூலமான் நாத்தன் வரிசை என்கிறார். ஆனால் நடுவில் பாபிலோனிய வெளியேற்றத்தின் போதான சாலமன் வரிசைப் பெயர்களைப் புகுத்துவார்.
    http://tamil.net/node/5646
    http://tamil.net/node/5647

    http://tamilarpage.blogspot.com/2007/08/blog-post.html
    எல்ல பெயர்களிலும் இன்னார் மகன் இன்னார் என்று தான் உள்ளது; நீன்கள் ஏன் இல்லாததை எல்லாம் கற்பனை செய்யச் சொல்லுகிறிர்கள்.

    மேலும் கிரிஸ்மஸிற்கு சர்ச் வாசல்களில் மாட்டுத் தொழுவ செட்டிங் போட்டு பல உருவம் வழிபாட்டிற்கு வைத்தல் லுக்கா சுவியின்படி நடக்கும். ஆனால் மத்தேயு சுவியோ பெத்லகேம் தான் யாக்கோபு மகன் ஜோசப் தன் வீட்டில் வாழ்ந்தார் என வாத்திகன் 2007 கிரிஸ்மஸிற்கு மாட்டுத் தொழுவ செட்டிங்கை விட்டு சாதாரண வீடு என மாற்றியது. இணைப்புக்கள் கீழே
    http://www.foxnews.com/story/0,2933,317150,00.html

    http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

  83. Dear Devapriya Solomon,
    I appreciate you for replying with much respect and decency. Few were not like this in this blog. Now coming to the point:
    //யூதா மரணம் பற்றி - கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ் எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி - பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.//
    First thing, I suspect that you are believing that pope and his catholic officials are the authorities of the Bible.
    And I am not agreeing with Pope and cathesm.

    பக்கம்49-50இல் யூதாஸ் மரணம் பற்றிய கேள்விக்கு பதில்
    //மத்தேயு நற்செய்தியாளர் யூதாசை தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுகிறார்(மத். 27:3-10) …
    தி.ப. 1:18-9இல் யூதாஸ் வயிறு வெடித்துக் குடல் எல்லாம் சிதறி இறந்த்தாகக் கூறப்படிகிறது, ஆகவே, யூதாஸ் இறந்தது உண்மை. எப்படி என்பது கேள்விக்குறியே”//

    உங்கள் நம்மிபிக்கையை நான் மதிக்கிறேன்//

    Matthew says that how judas died. He hung himself.
    Acts says that how the body of judas was there lying down on the ground. Just check out what will happen to a dead body in a desert due to heat, You will get the answer.

    I still stand by what I said about in a way Judas did buy the field even though he did not physically give the money to anyone. I believe that you have to look at how and what was said. This is where I really believe common sense comes in. (Forgive me if it sounds like I am accusing you of not having common sense, I don’t mean it that way.)

    I just don’t see a problem with saying someone bought something if their money was used for it like Judas’ was. For a modern day example, you have two teens drag racing and the prize is $1000. The kid that wins loses control and kills himself. He has no family and so they use his prize winnings to buy a cemetery plot. It would not be uncommon for someone to say, “He bought his own cemetery plot.” This is because his death also had something to do with the money. I see the same thing with Judas’ death and his money that was used to buy the field. I say he did buy it, even though he did not personally give the money to the seller.

    I do believe that the Scriptures are inspired by the Holy Spirit. But I don’t believe that He wrote them, although I believe He could have if He wanted to. Anyway, part of my point is let’s say that the Bible is not inspired by the Holy Spirit, but instead men just made them up. Would you not think that these men would have read each others writings and made sure that they agreed in every instance?

    The Words are inspired by God and these men are writing in their style and perspective, but the message is the same. If these men were just writing for their own sake to fool us, every word, nuances, and writing style would be identical. I believe the only “discrepancies” people find in the Bible is the fact that these men are writing from their own experiences and what they see through their eyes, not a third person.

    With Love,
    Ashok

  84. //ஆனால் இங்கே வ‌ந்து யூத‌ர் புராண‌த்தை எத‌ற்க்கு அள‌க்க‌ வேண்டும்?

    யூத‌ர்களுக்கும் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ எங்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம‌ப‌ந்த‌ம்?

    யூத‌ர்கள் எங்களுக்கு மாம‌னா ம‌ச்சானா? //

    வாசுதேவ குடும்பகம் (உலகம் அனைத்தும் ஒரே குலம்) என நீங்க தானே சாமி சொல்றீங்க.

    நீங்க எப்போ பாத்தாலும் கிறிஸ்த்வத்தை வெள்ளைக்கார மேலை நாடுகளுடன் முடிச்சு போடுவதால் தான் இப்படி பதிலளிக்க நேர்கிறது

  85. தள நண்பர்களே
    தேவிபிரியா சாலொமொன் நாத்திகரா அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளரான இந்து மத பற்றாளரா. ஏனெனில் நாத்திகராக இருப்பின் அவர் அனைத்து சமய நம்பிக்கைகளையும் எதிர்ப்பவராக இருப்பார். கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் நோக்கம் மாதிரியே இந்து மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் குறித்து குதர்க்க வாதங்களையும் எடுத்து கூற அவரால் நிச்சயம் முடியும்.
    கிறிஸ்தவ நம்பிக்கைகளை தவறாக பேசும் ஒருவருடைய கருத்துக்களை தொடர்ந்து ஒருவர் இங்கு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தால் அது மத துவேஷத்தை தான் விதைக்குமே தவிர பரஸ்பர மரியாதையை ஏற்படுத்த முடியாது. நியாயமாக இருக்கவேண்டும் என நினைத்தால் இந்து மத நம்பிக்கைகள் குறித்து கேள்வி கேட்டாலே அப்பதிவை நீக்கும் தள நிர்வாகம் தேவிபிரியா சாலொமொனின் பதிவுகளையும் நீக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவர் தனது தளத்தில் எதையாவது உளறிவிட்டு போகட்டும்.
    எனது இப்பதிவை நிச்சயம் நீங்கள் தங்க விட மாட்டீர்கள் ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை நீங்கள் எடுத்தால் அது அனைவரையும் சமமாக நடத்துவதன் உங்கள் நோக்கத்தை குலைக்கும் செயலாகவே அது அமையும்
    மற்றபடி கிறிஸ்த்வர்கள் மேல் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள் அதை தவறு என சொல்லவில்லை ஆனால் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை கேவலமாக பேசுபவர்களின் தளமாக இது மாறிவிடவேண்டாம்.

  86. //வாசுதேவ குடும்பகம் (உலகம் அனைத்தும் ஒரே குலம்) என நீங்க தானே சாமி சொல்றீங்க. //

    You are correct Joseph Daniel. We do say that and practice that.

    But, the meaning of that adage is not ignoring and hiding your own roots, but to accept and treat other roots equal to ours.

    By becoming and being a christian, the first thing you do is to cover up and be ashamed of your ancestry.

    But, the Hindu scripture says, “வசுதேவ குடும்பகம்”, which means “all are equal” and not to be hidden.

    Only criminals change and hide their details.

  87. All I see in solomon’s posts are outright hatred towards christianity, please cheack whether this man is an atheist who will also have similar views on Hinduism.

  88. what happens to a body in a desert? it dehydrates and then it begins to dry and there is no way the entrails would burst open.
    Common sense ma Common sense or at least high school physics. :)
    I do not know what happens to dead bodies in deserts according to creation science of course…

    By the way any archeologist worth his dig from Israeli archeological department will tell you how much of Bible -particularly theologically relevant exegesis- is fantasy and how much is fact. It was Carl Sagan well known scientist and a Jew by birth said that Bible is half barbaric history and half fairy tale. The same Sagan also stood in awe of Hindu cosmology and that is a different matter,

    கார்ல் சாகனுக்கு கற்பூரவாசனை தெரிந்திருந்தது.

  89. This half barbaric history and fairy tales sustained us all these years and will do so in the future. Carl Sagan said but how did he come to this conclusion???? And finally there the mole comes out. Here alas you say that carl sagan stood in awe of Hindu Cosmology….
    Athuthana parthaen.

  90. josephdaniel
    //மற்றபடி கிறிஸ்த்வர்கள் மேல் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள் அதை தவறு என சொல்லவில்லை ஆனால் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை கேவலமாக பேசுபவர்களின் தளமாக இது மாறிவிடவேண்டாம்.//

    கிறிஸ்துவர் திருடினாலோ கொலை செய்தாலோ அது அரசாங்கமோ போலீஸோ கவனிக்க வேண்டியது. அது எதற்கு தமிழ் இந்து தளத்துக்கு?

    தமிழ் இந்து தளம் இங்கே இந்து மதத்தின் மீதும் தமிழின் மீது அவதூறும் அசிங்கமும் பரப்பும் கிறிஸ்துவ கும்பலை எதிர்த்தே நடத்தப்படுகிறது. அதில் கிறிஸ்துவத்தின் மீது அவதூறு அல்ல,விமர்சனமே வைக்கப்படுகிறது. விமர்சனமே உங்களுக்கு அவதூறு எனறு கருதப்படுமா?

    இதுவரை தமிழ் ஊடகங்களில் கிறிஸ்துவம் விமர்சனத்துக்கு ஆட்பட்டதே இல்லை. அதுதான் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

  91. Brother Josephdaniel,
    Let Devapriya Solomon write whatever he wants to. He/She is talking out of ignorance. And we can educate them. Yeah, I might take some time and effort, but they will learn the truth.
    //கிறிஸ்துவர் திருடினாலோ கொலை செய்தாலோ அது அரசாங்கமோ போலீஸோ கவனிக்க வேண்டியது. அது எதற்கு தமிழ் இந்து தளத்துக்கு?//
    Brother Anbarasan is correct. We are not here to discuss about people here. Atleast I am here to talk only about Christ and love and sacrifice for this mankind.

    Brother களிமிகு கணபதி,
    //But, the Hindu scripture says, “வசுதேவ குடும்பகம்”, which means “all are equal” and not to be hidden.

    Only criminals change and hide their details.//
    You are perfectly correct. We Christians considers ourselves as Criminals only. We Christians wants to hide Crimes in the BLOOD OF JESUS.
    But, I want you to understand us clearly. We are never ashamed to tell ourselves as Indians or Tamilians. I am a happy to be a Indian and Tamilian. We never claimed ourselves to be a European or a American or a Jew. We (True Christians) were sinners forgiven by Jesus Christ.

    With Love,
    Ashok

  92. பரிதாபமான அசோக்குக்கு,

    நீங்கள் பெரிய கிரிமினல், ரொம்ப பாவங்களை தொடர்ந்து செய்பவர் என்று தெரிகிறது. ஆனால் உங்களுக்கு இயேசு உபயோகப்படமாட்டார்.

    இயேசு உங்களுக்காகவோ உங்களது பாவங்களுக்காகவோ வரவில்லை. பைபிளை சற்றே படித்துப்பாருங்கள்.

    144000 யூதர்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்கள் எல்லோரும் நரகத்துக்குத்தான் போவார்களாம்..

    ரட்சிப்பின் லட்சணம் இதுதான்.

    7:4 And I heard the number of them which were sealed: and there were sealed an hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.

    அதென்ன பைபிள் முழுவது யூதர்கள்தான் கடவுளின் மக்கள் மற்றவர்களெல்லாம் நாய்கள் என்று ஒரே கும்மி?

  93. //glady -15 September 2009 at 10:53 am
    வரலாற்றுரீதியாக “இயேசு” இல்லை என்பதை பைபிளுக்கு வெளியிலிருந்து மட்டும் சொன்னால் நலம்;
    காகிதமும் அச்சு இயந்திரமும் வந்தபிறகு வந்ததையெல்லாம் விட்டுவிட்டு
    பைபிளின் சமகாலத்து ஆதாரங்களை மட்டும் முன்வைக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்;//

    நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் - ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன்.

    யூத புராணக் கதைகள் பற்றிய அகழ்வாய்வு உண்மைகளை தொகுத்துக் கொடுக்கிறேன்.
    //josephdaniel -22 September 2009 at 12:17 pm
    தள நண்பர்களே
    தேவிபிரியா சாலொமொன் நாத்திகரா அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளரான இந்து மத பற்றாளரா. ஏனெனில் நாத்திகராக இருப்பின் அவர் அனைத்து சமய நம்பிக்கைகளையும் எதிர்ப்பவராக இருப்பார். கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் நோக்கம் மாதிரியே இந்து மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் குறித்து குதர்க்க வாதங்களையும் எடுத்து கூற அவரால் நிச்சயம் முடியும்.//

    சகோதரரே இந்த போஸ்டிங்கிற்கு பதிலாய், சுவிசெஷங்களில் ஒரு இயேசு அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட இயேசுக்கள் உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்ட, எழுந்த கேள்விகட்கு கொடுக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஏனோ உங்களை சுடுகிறது.

    //joseph -10 September 2009 at 4:18 pm
    நியாயத்தீர்ப்பை பற்றி பைபிளில் தெளிவாகத்தான் போட்டிருக்கிறது, இயேசு என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்கனுமின்னா நான்கு சுவிஷேஷங்களையும் படித்து பாருங்கள். நியாயத்தீர்ப்பு ஒருமுறைதான் நிகழும்//

    நான் கூறிய கருத்துக்கள் ஆதாரங்களோடு தவறு என்னுங்கள், நான் ஏற்கிறேன், அல்லது என் ஆய்வின் நீளத்தை இன்னும் நீட்ட வேண்டும் என்பதை அறிவேன்.

    நான் ஒரு முனைவர் பட்ட மாணவன், இஸ்ரேல் பற்றிய ஆய்வு என் களம்.

    என் மத நம்பிக்கை- நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் உள்ளது, ஆனால் நம் செயல்களின் வினைகளின்படி தான் நடக்கும், மேலுள்ள இறைவன் நம் வினைக்கும் ஏற்ப மீண்டும் மீண்டும் பிறக்க வைத்து புவியை அனுபவிக்க வைக்கிறார்.[Agnostic]
    எல்லா மதப் புராணங்களும் ஆய்வுக்கு உரியவையே, என்னை பைபிளை ஆராயச் செய்ததும் எழுத் வைப்பதும் அவ்விறைவனே.

    இஸ்ரேல் நாட்டு அகழ்வாய்வுகளைவிட பாரத்தில் கண்டுள்ள அகழ்வாய்வு பல 1000 ஆண்டு முன்பே நாகரீக மேம்பாடு; என்னை உங்களை போல் நம் மூதாதயர் பல ஆயிரம் ஆண்டுகளாய் போற்றி காத்து வந்துள்ளதை ஒதுக்காமல் மதிக்கவே செய்ய வைக்கிறது.

    நீங்கள் கற்பனையாக இஸ்ரேல் பற்றி புராண அடிப்படையில் நம்பிய ஊகங்களை (மூடநம்பிக்கைகளை} பற்றிய பல பைபிள் அறிஞர்கள் கூறியவையே தரப் பட்டுள்ளது. நீங்களே பல கேள்வி எழுப்பினீர்; நான் பாதிக்குத்தான் பதில் தந்துள்ளேன். மீதி அடுத்த சில நாட்களில். என் பார்வை வரலாற்று நோக்கு மட்டுமே.

    இதுவரை தமிழ் ஊடகங்களில் கிறிஸ்துவ மததின் வரலாற்று ஆய்வு பின்னணியை விமர்சனத்துக்கு ஆட்பட்டதே இல்லை. அதுதான் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    நான் எல்லோரையும் சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  94. //Ashok kumar Ganesan - 20 September 2009 at 12:32 pm
    Dear Devapriya Solomon,
    //இயேசு போற்றத்தக்கவரா?//
    Jesus is very much to be appriciated. One of the very important thing that Jesus was teaching is humbleness. And here Jesus knew that woman is humble. And just to show the humbleness of the woman to the world, Jesus has asked such a question. See how happy Jesus was when her humbleness is proved.
    //.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.//
    //As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.//
    Did these people met Luke anytime? Just because some scholar (in your eyes) writes some crap, you need not beleive that.//

    மேலே சாப்பிடும் பொழுது வாயிலிருந்தும் கையிலிருந்தும் விழும் எச்சையாக சாப்பிடுகிறேன் என அப்பெண் தாழ்வு காட்டுகிறார் அன்றி இயேசுவிடம் அருவெறுக்கத்தக்க இனவெறி தான் காணகிறது.

    உலகில் பிறந்த ஒவ்வொருமனிதனும் கடவுளால் படைக்கப் பட்ட கடவுளின் மகன்கள். அதில் தன் மதமில்லாதவர் நாய் என்பவர் - பணிந்தாரா? என்ன சொல்கீறீர்கள்.

    இன்றும் யூதர்கள் ஏசு உட்பட தினமும் சொல்லும் தினசரி ஜெபம்.
    I quote from little Sedur (Jewish prayer book).
    The exact prayer is this:
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
    Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”

    This prayer is said every morning by millions of Jews around the world.

    இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.

    இந்த ஒரு இன வெறிக்கு ஆதாரமில்லத கற்பனை கதைகளான் தேர்ந்தெடுக்கப் பட்டவர் -எகிபிதிலிருந்து யாத்திரை என்ற வரலாற்று பொய்களை என்றும் பைபிள் கொண்டுள்ளதால் தான்.

  95. Brother Anbarasan,
    //பரிதாபமான அசோக்குக்கு,//
    You need not pity me. I am no more a sinner. I am forgiven. But, I dont know about your situation.

    //நீங்கள் பெரிய கிரிமினல், ரொம்ப பாவங்களை தொடர்ந்து செய்பவர் என்று தெரிகிறது. ஆனால் உங்களுக்கு இயேசு உபயோகப்படமாட்டார்.//
    Kindly check your English. There is something called pastence. At present I am not a criminal. And My Jesus is sufficient for me.

    //இயேசு உங்களுக்காகவோ உங்களது பாவங்களுக்காகவோ வரவில்லை. பைபிளை சற்றே படித்துப்பாருங்கள்.

    144000 யூதர்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்கள் எல்லோரும் நரகத்துக்குத்தான் போவார்களாம்..//
    There is no where it is mentioned that they are Jews.
    There is no where it is mentioned that only 144000 will go to heaven.
    Those 144000 are the most pure people among the countless others in the Heaven.

    //அதென்ன பைபிள் முழுவது யூதர்கள்தான் கடவுளின் மக்கள் மற்றவர்களெல்லாம் நாய்கள் என்று ஒரே கும்மி?//
    When you really dont want to know the truth, I cannot help you. Read the Bible properly, you will GOD for same for everyone. And you will know how much GOD loves you personally. Really, JESUS loves you Anbarasan.
    Your Brother,
    Ashok

  96. // நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் - ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன் //

    இதுதான் எனது வேண்டுகோளுக்கான பதிலா?
    ஏமாற்றம்..!
    நான் கேட்டது,புரியவில்லையா?
    ஆராய்ச்சி செய்பவரின் வயது,நோக்கம்,சூழ்நிலை இவையே நான் கோரியது;

    பைபிள் அதனை நம்புப‌வருக்காகக் கொடுக்கப்பட்டது;
    யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல‌;

    உதாரணமாக எனது முப்பாட்டனார் எழுதியதாகச் சொல்லி ஒரு அருமையானதொரு வாழ்வியல் தத்துவக் கோட்பாட்டை அவருடைய முப்பாட்டனார் வரலாற்றுடன் கூடிய ஒரு படைப்பை எனது தகப்பனார் என்னிடம் கொடுத்தால் அதில் என்ன சூழ்ச்சியும் உள்நோக்கமும் இருக்கமுடியும்?

    அது நேர்மையுடன்- அன்புடன் குடும்ப சொத்தாக என்னிடம் வந்து சேர்ந்தது; அதனைப் பாதுகாத்து எனது கொள்ளுப் பேரன் கடைபிடிக்கச் செய்ய‌வேண்டியது என்னுடைய கடமையல்லவா?

    இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு “பொறம்போக்கு” வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்?

    உங்களுக்கும் இதுவே எனது பதில்..!

    இதற்காகவே இறைவனும் இறைமகனுமான இயேசுகிறிஸ்து சொல்லிச் சென்றார்,
    “மனிதன் உலக முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன இலாபம் என்ன?” என்று.

    நீங்கள் இதுகூட கார்ல் மார்க்ஸ் சொன்னதாக ஒரு அறிஞர் ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார் என்பீர்கள்; வரவர “ஜூனியர் விகடன்”
    கழுகார் போலிருக்கிறது உங்கள் கருத்துக்கள்..!

    நீங்கள் மாணவரல்ல,முந்திரிகொட்டை..!
    காரணம் மாணவர் இங்கே எழுதமாட்டார்; அவருக்கு ஆராய்ச்சிக்கும் படிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும் என்பது எனது யூகம்;

    ஜோதிடத்தை நம்பும் மனிதன் வேதத்தை நம்பக்கூடாதா?
    பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின்
    வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!

  97. Dear Devapriya Solomon,
    //உலகில் பிறந்த ஒவ்வொருமனிதனும் கடவுளால் படைக்கப் பட்ட கடவுளின் மகன்கள். அதில் தன் மதமில்லாதவர் நாய் என்பவர் - பணிந்தாரா? என்ன சொல்கீறீர்கள்.//
    In Thiruvilaiyaadal, just to show good charecter of Nakeeran, Shiva went to the extend of burning him alive. You guys are accepting this.
    Here, Just to show the humbleness of that women, Jesus spoke in that way. If he is that bad, he wouldn’t have healed her daughter. If you read the following verses, he was appreciating that woman’s humbleness.

    //இன்றும் யூதர்கள் ஏசு உட்பட தினமும் சொல்லும் தினசரி ஜெபம்.
    I quote from little Sedur (Jewish prayer book).
    The exact prayer is this:
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
    Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”

    This prayer is said every morning by millions of Jews around the world.

    இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.

    இந்த ஒரு இன வெறிக்கு ஆதாரமில்லத கற்பனை கதைகளான் தேர்ந்தெடுக்கப் பட்டவர் -எகிபிதிலிருந்து யாத்திரை என்ற வரலாற்று பொய்களை என்றும் பைபிள் கொண்டுள்ளதால் தான்.//
    This is no where in Old testament also.
    This question you have to ask some Jew not a Christian (if at all Jews practice this)?
    When you say that there is no JESUS, how do you say that Jesus said this prayer?
    You are contradicting your own words.
    I couldn’t see such a confused person as a research scholar. Atleast for your degree sake, be single minded friend. The only thing that I could see that your intention is bashing Jesus.
    God Bless you,
    Ashok

  98. Dear aravindan neelakandan,
    //what happens to a body in a desert? it dehydrates and then it begins to dry and there is no way the entrails would burst open.
    Common sense ma Common sense or at least high school physics.
    I do not know what happens to dead bodies in deserts according to creation science of course… //
    I do not criticize people, if they don’t know something. Rather I will try helping them out.
    There are many types of bacteria that live inside the body. These bacteria are the first to begin the process of decomposition after an organism dies. Saprobic bacteria invade every inch of the dead body, and begin decomposing and digesting the organic tissue. (Saprobic bacteria are heterotrophs that live on decaying material, like a dead body.) As they decompose organic material to produce energy, these microorganisms help recycle nutrients such as nitrogen and carbon back into the environment. In accomplishing this, the bacteria produce significant quantities of gaseous by-products. If a body had been dead for several days, the gases present would begin to exert considerable pressure on the abdomen, causing the midsection to burst open easily upon hitting the hard ground.

    With Love,
    Ashok

  99. josephdaniel 19 September 2009 at 2:23 pm
    இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், COMEDY OF ALL TIMES

    பைபிளை சர்ச்ச் சிறையிலிருந்து மொழி பெயர்த்துத் தந்த திண்டேல் சர்ச்சினால் உயிரோடு சிலுவையில் கொல்லப் பட்டு பின் கொழுத்தப் பட்டார்.
    விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.
    No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
    Page-266 The Religious World.

    josephdaniel September 2009 at 3:02 pm
    நீங்கள் சொல்லியுள்ள புத்தகங்களை எழுதியவர்கள் எதை ஆதாரமாக வைத்து இது மாதிரி எழுதியுள்ளார்கள்???

    பைபிளை ஆதாரமாக வைத்து எழுதியுள்ளார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டில் பக்கத்து நாட்டுடன் வாணிபம் பற்றியோ கடல் வாணிபம் பற்றியோ இல்லை. உலகின் பல முக்கிய வாணிபப் பொருட்களுக்கு உள்ள பெயர்களில் தமிழ் - வடமொழி என்று பார்க்கலாம். எந்த ஒரு நாட்டு பழைய இலக்கிய மொழியிலும் எபிரேயத் தாக்கம் இல்லவே இல்லை.

  100. Dear Devapriya Solomon,
    //விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.//
    Can you please quote the respective bible verses?
    You sound very funny to me. Once you are claiming that the entire Ancient Isreal was in the size of a football stadium. And Now you are saying that the God Isreal was 400 and 1600 goats as sacrifice (that too every minute). Then, do you know how of space is needed for these goats alone? If this statement of yours is true, only a huge empire only will be able to do such a thing. Just try to be consistent with ur words. Else you might not get your Ph.d.
    I dont think that anyone can eat 88 doves everyday.

    //இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் //
    This shows your grudge on the Lord of Isreal.

    God Bless you,
    Ashok

  101. Dear Devapriya Solomon,
    Are you really into research? I seriously doubt that, because of your sites. it is hard to accept that you are research scholar.

    Your Brother,
    Ashok

    (Comment edited & published)

  102. Dear Devapriya,

    From where you quote all these references, most of the words which you quoting are not in the Holy Bible.

    I understand you undergone a scholar. Please concentrate your studies and at least try to fulfill ur parents dream.

    God bless you.

    Ravi Timothy

  103. மார்க்க நம்பிக்கை என்பது குதிரைக்கு கடிவாளம் போலும் சவுக்கைப் போலும் இருந்தால் அது மனிதனை நல்வழிப்படுத்தவும் ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்கவும் உதவும்;

    இதுவே அனைத்து மார்க்கத்தின் ஆதார நோக்கமாக இருந்திருக்க வேண்டும்; இருக்கவும் வேண்டும்; இந்த எல்லை மீறப்படுமானால் மார்க்கத் தளைகளை உடைத்து மனிதம் பேசும் மார்க்கம் மேம்பட வேண்டும்;

    மனிதம் பேசும் ஒரு மார்க்கம் இருக்குமானால் அது நிச்சயமாக இந்து மதமே..! அதில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும் ஆரோக்ய சுக வாழ்வினை மையமாகக் கொண்டது;

    எந்த மார்க்கமானாலும் இந்தியாவுடன் ஒன்றித்துச் சென்றால் வேற்றுமை இராது; உதாரணமாக இந்து மார்க்கத்துடன் கிறிஸ்தவத்தை இணைத்து பேசலாமே தவிர கிறிஸ்தவத்துடன் இந்து மார்க்கத்தை இணைத்துப் பேசக் கூடாது;

    இதை விட்டு வீணான பயனற்ற வாதங்களை நோக்கி “தேவப்பிரியா” போன்றோர் திசை திருப்புகின்றனர்; “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற வகையில் கூட இவரை ஊக்குவிக்க வேண்டாம் என நிர்வாகத்தினரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்;

    ஏனென்றால் கருப் பொருளான தலைப்பை மீண்டும் மீண்டும் படித்து அதை மையமாகக் கொண்டே பின்னூட்டங்கள் அமைந்திட வேண்டும்;
    நான் அதனை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்;

    ” இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும் ”

    இதன் கீழ் இந்தியாவில் கிறிஸ்தவம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டால் அநேகர் விழிப்படைய ஏதுவாக இருக்கும்;

    மீண்டும் மீண்டும் பொத்தாம்பொதுவில் “மத மாற்றக்” குற்றச்சாட்டை வைக்காமல் கலாச்சார ரீதியிலான பாதிப்புகளை முன்வைத்தால் நல்லது;

    உணவு மற்றும் சுகாதாரம் சம்பந்தமான பழக்கவழக்கங்கள் எப்படி இந்தியாவை பாதித்தது போன்றவற்றை நான் அதிகம் யோசிப்பதுண்டு;

    உதாரணமாக எனது குடும்பத்தில் முன்னோர் சுத்த சைவம்;
    ஆனால் தற்கால தலைமுறையினரோ…?

  104. Ashok kumar Ganesan - 23 September 2009 at 11:10 am
    You sound very funny to me. Once you are claiming that the entire Ancient Isreal was in the size of a football stadium.

    And Now you are saying that the God Isreal was 400 and 1600 goats as sacrifice (that too every minute). Then, do you know how of space is needed for these goats alone? If this statement of yours is true, only a huge empire only will be able to do such a thing. Just try to be consistent with ur words. Else you might not get your Ph.d.
    I dont think that anyone can eat 88 doves everyday.

    //இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் //
    This shows your grudge on the Lord of Isreal.

    I am not funny dear, it is the Bible Researchers who give details out of Bible. This Contradiction comes from Bible and not from me.
    When David- Solomon could just have been Village heads, now go to Chronicles and see how many Animal Killing is mentioned.

    //grudge on the Lord of Isreal.//
    that is it. LORD is only lord of Israel- not for Egypt or Babylon where he could have given place for Hebrews.

    “The idea of a Universal Deity does not exist for most of the Biblical period; and every religion including YAWHism alest implicitly acnowledged the existance of other Gods (who however, tended to be impotent outside the boundaries of their own realms. Under these circumstances it was inevitable that a covenant of Israel enterend in to which Yahweh would focus on possession of the Land, the “promissed Land andthat this possession would ratify the exclusiveness of the relationship with their Diety in a very material way. The Biblical picture of a promissed Land is a strangly idealised one(for Eg.inthe allocation of Palestine to the different tribes, or the fixation as up on “Mount Zopm” a PLACE THAT OWE MORE TO THE IMAGINATION OF THE PROPHETS THAN TO THE TOPOGRAPHY OF JERUSALEM-
    ” Bible as Literature” , Oxford University Press

    And what Scholars says

    “Though most of this material is familiar to Scholars and specialists in the Fields, it is seldom made available to the wider Public and even when it does find its way into the books on the early Christian movement, it does not play a Major role in shaping our view of Christianity.”
    Page – xi-xii, Professor L.Wiken, Professor of History of Christianity –Notre dame University; Published by Yale University Press.

    “In contrast to the “Keep them Ignorant” policy, Protestantism has often, though not always, empasised literacy so that people could read the bible. The result was an enormous splintering of Protestantism. As people read, they also interpreted and often their interpretation was different from their Superiors, their denomination etd., So they started their Own Denomination.
    There are over 20,280 Christian Denominations in the world most of them Protestant, many of them based on some Variant interpretation of Bible”
    Pate 13,14. “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson- Practising Pastor & visiting Professor of Jordan University.

    “Surely God almighty could have found a less Blood thirst way of getting the Hebrews out of Egypt than murdering the Egyptian First Born (I am a First Born son, and I have a first born child) and killing the pursuing Forces of Pharaoh – a little sand storm would have stopped them with dry feet on the western shore. The vast Majority of those Egyptian mothers and fathers had nothing and to do with keeping the Hebrews in Egypt. Why should innocent Children be murdered and Parents suffer such loss when God himself hastened Pharaoh’s heart to keep the Hebrew there”

    P-42 “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson

    //Ravi Timothy - 23 September 2009 at 12:16 pm
    From where you quote all these references, most of the words which you quoting are not in the Holy Bible.

    I understand you undergone a scholar. Please concentrate your studies and at least try to fulfill ur parents dream.

    God bless you.//Ravi Timothy

    Thank you Timothy- if you are talking about the above quote referred- it is the compilation of Numbers and Chronicles, which needs to analyse totally mathematcially.
    Otherwise please be specific about which of my view Please.
    Thanks for your kind suggestions.
    You can Email me - devapriyasolomon@gmail.com

  105. அசோக் கணேசன்,

    இது நான் quote செய்த verse

    7:4 And I heard the number of them which were sealed: and there were sealed an hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.

    144000 யூதர்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்கள் எல்லோரும் நரகத்துக்குத்தான் போவார்களாம்..//

    நீங்கள் சொல்கிறீர்கள்.

    There is no where it is mentioned that they are Jews.
    There is no where it is mentioned that only 144000 will go to heaven.
    Those 144000 are the most pure people among the countless others in the Heaven.
    //
    அங்கே tribes of israel என்று எழுதியிருக்கிறது. ஆனால் அவர்கள் யூதர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்.

    இந்திய கிறிஸ்துவர்கள் இஸ்ரேலின் எந்த tribeஐ சேர்ந்தவர்கள்?

    சொல்லபோனால் அவர்கள் அனைவரும் ஆண்கள், உடலுறவே கொள்ளாத ஆண்கள்!
    14:3 And they sung as it were a new song before the throne, and before the four beasts, and the elders: and no man could learn that song but the hundred and forty and four thousand, which were redeemed from the earth.
    14:4 These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.

    அதுவும் பெண்களோடு உடலுறவு கொள்ளாதவர்கள்தான் சொர்க்கத்துக்கு போவார்கள். இந்திய கிறிஸ்துவர்களில் யூதர்களாகவும் பெண்களோடு உடலுறவு கொள்ளாத ஆண்களாகவும் எத்தனை பேர் தேறுவார்கள்?

    பைபிளை படிக்கவேண்டியது ஏமாளி இந்திய கிறிஸ்துவர்கள்தான்.

  106. Rev 22:15 For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.

    இங்கே திரும்பவும் dogs நாய்கள் என்ற பதம் வருகிறது. இவர்களெல்லாம் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள். dogs என்பது யூதர்களல்லாதவர்களை குறிக்க பைபிளில் உபயோகிக்கப்படும் பதம். swine என்பது யூதர்களாக இருந்தும் பன்றிக்கறியை தின்பவர்களை குறிக்க உபயோகப்படுத்தப்படும் பதம்.

    பைபிளை எப்படி மிஷ-நரிகள் சொல்லித்தருகிறார்களோ அதனை மட்டுமே படித்தால் போதாது கணேசன்.

  107. Dear Anbarasan,
    Please the verse, Revelations 1:9, it says:
    After these things I looked, and behold, a great multitude which no one could number, of all nations, tribes, peoples, and tongues, standing before the throne and before the Lamb, clothed with white robes, with palm branches in their hands.

    Those 144000 were the saints of Israel that is meant in the Bible. More over the Revelation is written in mostly symbolic language. The Isreal mentioned here is need to be the actuall Jews.
    Israel - which we get from the Greek, is originally in the Hebrew, “Yisrael”.
    Yisrael means, quite literally, “He has striven with God,” or “He has been saved by God,” based on which translation of “sra” was meant to be used.
    SO, ANY PERSON WHO IS SAVED BY THE LORD JESUS CHRIST IS ISREAL AND THAT IS WHAT BIBLE IS SAYING.

    Your Brother,
    Ashok

  108. Dear Anbarasan,
    //Rev 22:15 For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie. //
    Please see the following verse. If a person leaves his sin and if he goes back to his sin, then that person is a dog. And the above verse is talking about such a dog.
    2 Peter 2:22 ESV
    What the true proverb says has happened to them: “The dog returns to its own vomit, and the sow, after washing herself, returns to wallow in the mire.”
    Proverbs 26:11 ESV
    Like a dog that returns to his vomit is a fool who repeats his folly.
    Brother, missionaries are teaching the Bibles properly only. If the Bible is that much Israel centric, Christianity wouldn’t have spreaded this much. And for your information, Jews are the one who are against New Testament and Christians.

    Thanks,
    Ashok

  109. hmm….Tamil Hindu site is becoming a Christian Hindu site :)

    I didnt go through all the discussions, becuase I have enough to learn in my dharma rather than knowing about christianity. So I am least bothered what is told in the bible.

    But, this really caught my attention.

    “பைபிள் அதனை நம்புப‌வருக்காகக் கொடுக்கப்பட்டது;
    யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல‌”

    Mr.Glady…kekaravan kenaya iruntha, ethu vena solluveenga pola….

    In India, Bible is edited every few year…may be even every year to suit the current situations. Then, why the heck there were bible version released last year with references to ‘Vedas’ and why people say that Vedas refer to Christ and bible etc. If Bible is a true godly book with all the good things, why you people take Hindu Vedas to support your bible?
    This clearly shows that Bible by its own cannot stand the test of Spirituality and hence you seek other means and edit and create a Bibel of your choice to fool innocent (Hindu) people.

    nalla comedy pannareenga sir.

  110. இறை இரத்த குடி வழிபாடு, விபச்சாரம், கொலை ஆகியவற்றை செய்யும் நாய்கள் பொய்யை விரும்புபவர்கள் என மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன். எவன் மீட்பரின் இரத்தத்தால் இரட்சிக்கப்படுவதாக எண்ணுகிறானோ அவன் பாவம் செய்தவன் ஆகிறான். அத்தகைய பாவம் செய்பவனும் வேசித்தனம் செய்பவனுமாக இராதீர்கள். காதிருப்பவன் கேட்கக்கடவன். இரத்தத்தால் இரட்சிப்பு என எண்ணுபவனும் இரத்ததில் விபச்சாரம் செய்பவனும் அய்யோ என போவான்.

    இந்த ரீதியில் ஒரு புனித நூல் பேசியதென்றால் அது வெறி பிடித்த வெறுப்பியல் அல்லவா? இதையேதானே விக்கிர ஆராதனையை விபச்சாரத்துடன் இணைத்துப் பேசும் போது பைபிள் செய்கிறது. சரி பண்பாடற்ற முந்தைய நூற்றாண்டுகளில் இத்தகைய மதவாத அக்கப்போர்களை புரிந்து கொள்ளலாம் (ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும்) ஆனால் இன்று “கடவுள் உலகைப் படைத்தார்” என்பது போன்ற அடிப்படை விஷயங்களே காலவதியாகிவிட்ட பிறகு இத்தகைய குப்பைத்தொட்டி வெறுப்பியலை ஏன் இந்தியாவில் பரப்ப வேண்டும். பாரதத்தின் ஞான மரபின் முன் கால்தூசு பெற முடியாத இந்த “என் இரத்தம் குடித்தால்தான் உன் பாவத்திலிருந்து மீட்பு” என்கிற கதையை ஏன் சர்வ நிச்சயமாக மனநோய் போல நம்ப வேண்டும்?

  111. // இந்த “என் இரத்தம் குடித்தால்தான் உன் பாவத்திலிருந்து மீட்பு” என்கிற கதையை ஏன் சர்வ நிச்சயமாக மனநோய் போல நம்ப வேண்டும்?//
    No one is forcing you sir. We were just sharing our beliefe. காதிருப்பவன் கேட்கக்கடவன். If you doesn’t want to believe, you can leave it. Its your choice. I do not have any right on that.

    Your Brother,
    Ashok

  112. Dear Indian,
    //In India, Bible is edited every few year…may be even every year to suit the current situations. Then, why the heck there were bible version released last year with references to ‘Vedas’ and why people say that Vedas refer to Christ and bible etc. If Bible is a true godly book with all the good things, why you people take Hindu Vedas to support your bible?//
    The versions of Bibles might have only explanations for the existing verses. Not even single verse is added or removed from the Holy Bible. It has been tested by time and lots of scholars. I know that you are least bothered about anything in the Bible and your Hindu scriptures are sufficient for you. But, kindly check your knowledge before you comment on anything.

    Your Brother,
    Ashok

  113. அசோக் கணேசன் ஜோக் மேல‌ ஜோக் சொல்றாரு.

    //The Isreal mentioned here is need to be the actuall Jews.
    Israel - which we get from the Greek, is originally in the Hebrew, “Yisrael”.
    Yisrael means, quite literally, “He has striven with God,” or “He has been saved by God,” based on which translation of “sra” was meant to be used.

    //

    As Ashok seems not to understand tamil, let me continue in English

    Israel is always written as Yisrael in Hebrew and Greek. So “Yisrael Beiteinu” is a political party in Israel.

    The twisted meaning of “He has striven with God” is usual twisted logic of Christians to justify their folly.

    // hundred and forty and four thousand of all the tribes of the children of Israel. //

    let us replace his translation into the above text

    // hundred and forty and four thousand of all the tribes of the children of he has striven with god. //

    Does this make sense?

    So whoever is tribe of the children of the people who have striven for god will go into heaven?

    What a nonsense!

    //These are they which were not defiled with women; for they are virgins//

    If they are virgins, how can they have children who will go to the heaven?

    So the only meaning is “hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.” and israel denotes only Israel, and no such replacement as dreamed by the missionary ganesan is allowed. Poor guy!

    //After these things I looked, and behold, a great multitude which no one could number, of all nations, tribes, peoples, and tongues, standing before the throne and before the Lamb, clothed with white robes, with palm branches in their hands.//

    multitude is nothing but the dispersed jews who were dispersed by the war into various nations of that world. Jews Who speak greek and many different languages.

    Same case with the “dogs” connotation to the Syrophenician woman in Mark. Mark writes a heroic fiction where the Jewish hero (jesus) is killed. That becomes a religion later. Then the Luke and others rewrite the Mark to be palatable to the non jews.

    See this even the christian preachers know that.

    http://johnharmstrong.typepad.com/john_h_armstrong_/2009/01/pearls-swine-and-forced-character-formation.html

    //Dogs and swine were Jewish terms of contempt used for Gentiles.//

    But they somehow try to reinterpret the jewish words into something that would look good for this jebus jew fellow.

    When Jesus said these words in the historic novel, the writer and the character should have been fully aware of the implications of these words in that context. But these missionaries who write in Ganesan name want to display a decent meaning to these words. Crazy people.

    No doubt that Indians are suckers.

  114. ganesan says
    //. Not even single verse is added or removed from the Holy Bible. It has been tested by time and lots of scholars.//

    http://www.amazon.com/gp/product/0060859512

    Go and check the above book.

    Misquoting Jesus: The Story Behind Who Changed the Bible and Why

    It is written by the top most New testament scholor in America.

    Top 10 Verses that were not Originally in the New Testament

    1 John 5:7 - There are three that bear witness in heaven, the Father, the Word, and the Holy Spirit, and these three are one.

    One of the more famous stories in the Bible is the “Let he who is without sin cast the first stone…” incident. The next two verses that Ehrman lists are from the same encounter (from which I quote at length in the block quote).

    John 8:7 – Let the one who is without sin among you be the first to cast a stone at her.

    John 8:11 – Neither do I condemn you. Go and sin no more.

    John 8:1-11 (NRSV)

    while Jesus went to the Mount of Olives. Early in the morning he came again to the temple. All the people came to him and he sat down and began to teach them. The scribes and the Pharisees brought a woman who had been caught in adultery; and making her stand before all of them, they said to him, ‘Teacher, this woman was caught in the very act of committing adultery. Now in the law Moses commanded us to stone such women. Now what do you say?’ They said this to test him, so that they might have some charge to bring against him. Jesus bent down and wrote with his finger on the ground. When they kept on questioning him, he straightened up and said to them, ‘Let anyone among you who is without sin be the first to throw a stone at her.’ And once again he bent down and wrote on the ground. When they heard it, they went away, one by one, beginning with the elders; and Jesus was left alone with the woman standing before him. Jesus straightened up and said to her, ‘Woman, where are they? Has no one condemned you?’ She said, ‘No one, sir.’ And Jesus said, ‘Neither do I condemn you. Go your way, and from now on do not sin again.’

    I was expecting as a result of my brief article: “Jesus: Unoriginal Moral Thinker” for someone to have mentioned this story from the Gospel of John. So far, I haven’t had it claimed as a response to the implicit challenge that Jesus never really taught anything original — and the things that were original were immoral (for example, a thought-crime is equivalent to the actual crime).

    If someone had mentioned the “cast the first stone” as an original moral, I would pointed out two problems. First, this story, which only appears in the Gospel of John, is a later addition. Not only does Ehrman make this point, but so does the Harper Collins Study Bible:

    “The most ancient authorities lack 7.53—8.11; other authorities add the passage here or after 7.36 or after 21.25 or after Luke 21.38, with variations of text; some mark the passage as doubtful. Scholars generally agree that this story was not originally part of the Gospel of John.“ (My emphasis added) – p 1830 Harper Collins Study Bible (which I recommend if you are serious about having a scholarly Bible for reference).

    The second problem is that it’s pretty hard to get a moral principle out of the story that is useful: don’t punish people unless you have never done anything wrong, ever?

    Seriously though, think of how pervasive the story of ‘casting the first stone’ is in society — it is one of the most popular stories of the entire Bible — and it was not in the original Gospel account!

    Luke 22:44 – In his anguish Jesus began to pray more earnestly, and his sweat became like great drops of blood falling to the ground.

    Luke 22:20 – And in the same way after supper Jesus took the cup and said, “This cup that is poured out for you is the new covenant in my blood.”

    The following two verses form the basis of my essay: Ridiculous Ending to the Gospel of Mark. This essay gives an explicit example of how I would steer the conversation if the person I was arguing with did not believe that the ending to the Gospel of Mark was a later addition.

    Mark 16:17 – These signs will accompany those who believe: in my name they will cast out demons and they will speak with new tongues.

    Mark 16:18 – And they will take up snakes in their hands, and if they drink any poison it will not harm them, and they will lay their hands on the sick and they will become well.

    The last three verses round out the top ten:

    John 5:4 – For an angel of the Lord went down at certain times into the pool and disturbed the waters; and whoever was the first to step in when the water was disturbed was healed of whatever disease he had.

    Luke 24:12 – But Peter rose up and ran to the tomb, and stooping down to look in, he saw the linen clothes by themselves. And he went away to his own home, marveling at what had happened.

    Luke 24:51 – And when Jesus blessed them he departed from them and he was taken up into heaven.

    It’s worthwhile to go through each of these verses and think about the implications of each verse that was added. Being well-versed in the history of the Bible is very useful knowledge to have if you want to engage people.

    Study up and get out

  115. Mark’s Novel ends 16.8

    The last twelve verses, 16:9–20, are not present in the fourth century manuscripts Sinaiticus and Vaticanus, the earliest complete manuscripts of Mark.

    These are later additions.

    But let us see how the Mark 16:8 ends.

    16:8 And they went out quickly, and fled from the sepulchre; for they trembled and were amazed: neither said they any thing to any man; for they were afraid.

    That is it. The women who saw the empty tomb told no one. This is a heroic fiction. It ends like that. That is all.

    Then once it becomes a religion, the people who make money out of this, the churchman, want to add additions to this so that the information is told lot of people and the Jesus appears to the people. The jesus appearing to people is NOT in the original historic novel.

    Get it?

  116. Christianlty was thrust on Hindus by force in earlier times. Then their startegy changed. Christianity spread in the coastal areas of Kanya Kumari and southern distircts of Tamilnadu among fisherfolks on bargain to safeguard their interests from the pirates, which is also a kind of force, taking advantage of helplessnes of a community. Now it is offered by stage managed miracle shows and many other clever ways. If you believe my words, in nineteen seventies, I was offered the post of editor by one very leading Christian publishing house on a monthly salary of Rs 30,000/- (just imagine, it was 1970s and guess its money power in those days)with perks. I simply refused to accept the offer. Sri Rama Gopaln is aware of this fact and his reaction was, “nobody can buy you.” I state this to stress that kind of allurement is also another way of force only, tempting people with attractive offers. Why, telling people everlasting peace and paradise are possible only by accepting Jesus is also a kind of force. Sri Aravindan may fall into the trap but there are many gullible to be carrried away by this kind of mild and indirect threat, which can be defined as force.
    MALARMANNAN

  117. //ஆனால் இங்கே வ‌ந்து யூத‌ர் புராண‌த்தை எத‌ற்க்கு அள‌க்க‌ வேண்டும்?

    யூத‌ர்களுக்கும் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ எங்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம‌ப‌ந்த‌ம்?

    யூத‌ர்கள் எங்களுக்கு மாம‌னா ம‌ச்சானா? //

    வாசுதேவ குடும்பகம் (உலகம் அனைத்தும் ஒரே குலம்) என நீங்க தானே சாமி சொல்றீங்க.

    நீங்க எப்போ பாத்தாலும் கிறிஸ்த்வத்தை வெள்ளைக்கார மேலை நாடுகளுடன் முடிச்சு போடுவதால் தான் இப்படி பதிலளிக்க நேர்கிறது//

    கிருஸ்தவம் என்ற பெயரால் இயேசு கிறுஸ்துவைப் போர்வையாகக் கொண்டு பரப்பப்பட்ட காட்டு மிராண்டிக் கருத்துக்கள் சமூகத்தை அலங்கோலம் செய்த முதல் இடம் ஐரோப்பாதான்.

    ஐரோப்பியருக்கு பெரிய வரலாறும் இல்லை. பழைமையான நாகரீகமும் இல்லை. ஆன்மீகமும் இல்லை. எனவே சுவிசேசக் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டு சிக்கி சீரழிந்தனர்.

    அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள அதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    யூதர்கள் பஞ்சம் பிழைக்கப் போன எகிப்தின் வரலாறை விட பழமை யான வரலாறு இந்திய வரலாறு, தமிழக வரலாறு.
    இங்கெ வந்து தமிழர்கள் ஆபிரகாமின் மூணாவது மனைவிக்கு பிறந்தவர்கள், முப்பதாவது மனைவிக்கு பிறந்தவர்கள் என்று சரடு விடுவதைக் கேட்க தமிழன் மானங் கெட்டவனா?

  118. நண்பர் aravindan neelakandan அவர்களே,
    // “கடவுள் உலகைப் படைத்தார்” என்பது போன்ற அடிப்படை விஷயங்களே காலவதியாகிவிட்ட பிறகு…” //

    இந்த கருத்தை இந்து மார்க்க ஞானத்துடன் தான் பதிக்கிறீர்களா?

    வெளியே அனைத்தும் மாறலாம்;
    உள்ளே எதுவும் மாறவில்லை;
    அதுவே உயிரின் இரகசியம்;

    சிருஷ்டி கர்த்தாவைப் பழித்து எந்த கிரகத்தில் சென்று குடியேறப்போகிறோம்;
    உத்தரமண்டலத்தினை அந்தரத்தில் தொங்கவிட்டது யாரென்று எண்ணுகிறீர்கள்..?

    நண்பர் Indian :
    // In India, Bible is edited every few year…may be even every year to suit the current situations. Then, why the heck there were bible version released last year with references to ‘Vedas’ and why people say that Vedas refer to Christ and bible etc. If Bible is a true godly book with all the good things, why you people take Hindu Vedas to support your bible?
    This clearly shows that Bible by its own cannot stand the test of Spirituality and hence you seek other means and edit and create a Bible of your choice to fool innocent (Hindu) people.//

    உங்களுக்கு ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்;
    கர்நாடக இசைக் கலைஞர்கள் சொல்வதுண்டு, “கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு; இசை எனும் சமுத்திரத்தில் நான் பாடியது ஒரு துளி” என‌!
    அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; நாம் வேதம் என்று வைத்திருப்பதைக் காட்டிலும்- புரிந்துக்கொண்டதைக் காட்டிலும் வேதம் மிகப் பெரியது; மிகப் பழமையானது;

    வேதம் என்பதுவே “ஓதுதல்’ எனப்படும்;
    “குரான்” என்பதும் ஓதுதல் என்ற பொருளில் தான்;
    நமது இந்து மார்க்கத்திலும் கூட “காயத்ரி மந்த்ரம்” உட்பட அனைத்தும் ஓதுதல் வகை சார்ந்ததே; அதாவது பாராயணம் செய்து ஒப்பித்தல்;

    அதனைக் குறிப்பிட்ட சூழ்நிலையில்- குறிப்பிட்ட நேரத்தில் ஓதும் போது அதற்குரிய நன்மையினைப் பெறுவோம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்; இது அனைத்து மொழி சார்ந்த வேதங்களுக்கும் பொதுவானதாகும்;

    பாராயணம் செய்து ஓதுவதும்- கேட்பதும் பாராயணம் செய்வதுமாக இருந்த வேத மந்த்ரங்கள் வரி வடிவம் பெற்று மண் கட்டிகளாகவும் தோற்சுருளாகவும் சமைக்கப்பட்டது; இங்கே ஓலைச் சுவடிகளில் இலக்கியங்கள் வடிக்கப்பட்டதைப் போல‌; அச்சுமுறை வந்தபிறகு இன்னும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம்;

    ஆனால் இந்து மார்க்கமோ வழிபாட்டுக்கும், தவ வாழ்க்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் வேதம் என்பது பிரபலமாகவில்லை;
    செவிவழி செய்தியாக இருந்த வேத மந்த்ரங்கள் அதற்குப் பின் வந்த அச்சேற்றப்பட்ட வேதங்களுடன் ஒத்திருப்பது இயல்பே;

    முன்னொரு காலத்தில் உலகமே ஒரே கண்டமாக இருந்தது என்கிறார்களே; அப்படியானால் வேதமும் ஒன்றாகத் தானே இருந்திருக்கும்;

    நீங்கள் சமஸ்கிருத வழியே பார்க்கும் வேதத்தை அடுத்தவர் எபிரேய, கிரேக்க, இலத்தீன், அரபி மொழிகளின் வழியே பார்க்கமுடியும்;
    அது அவரவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை காரணமாக அல்லவா?

    கடந்த சட்டமன்ற‌த் தேர்தலின்போது ப.சி சொன்னதுபோல, (அவர்கள் தருவேன் என்று சொல்லுகிறார்கள்;நீங்கள் வேண்டுமானால் தரமுடியாது என்று சொல்லுங்கள்”) வேதங்கள் கிறிஸ்துவையே பறைசாற்றுகின்றன என்று அவர்கள் சொன்னால் நீங்கள் மறுப்பதுடன் அந்த வேத மந்த்ரங்கள் யாரைக் குறிக்கிறது என்று சொல்லலாமே..!

    அதே போல பைபிளில் முருகனைக் குறித்தும் பிள்ளையாரைக் குறித்தும் கண்ணனைக் குறித்தும் தேவரின மக்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது என்று நான் சொல்லுகிறேன்; நீங்கள் அதையும் முடிந்தால் மறுக்கலாமே..!

  119. Brother Trichykkaaran,
    //எதையாவது செய்து எப்படியாவது பெயரையும் மதத்தையும் மாற்றி டார்கெட்ஐ அச்சீவ் செய்து இன்சென்டிவ் பெரும் செயல்கள் தான்.//
    Can you please tell me, who is giving such incentives? I hope you will not ignore this question of mine.

    Thank you Brother,
    Ashok

    நல்லது, இன்சென்டிவ் யார் தருகிறார்கள் என்று கேட்கிறீர்களா? மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்களே. அல்லது அப்பாவி போலக் கேட்கிறீர்கள்!

    பத்து வருடங்களுக்கு முன் ஐ.சி. எப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நபர் நான் அது வரை பார்த்து இராத பணத்தை கையில் வைத்துக் கொண்டு அவற்றை பையினுள் வைத்துக் கொண்டு இருந்தார்.

    அவை பணமா அல்லது போஸ்டல் ஆர்டர்களாக என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவற்றில் இங்கிலாந்து மகாராணியின் படம் பெரிய அளவில் இருந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவரிடம் கேட்டேன். அவர் மிகக் கோவத்துடன் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார்.

    அவர் ஏன் கோவப் படுகிறார், நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன் என்று தெரியாமல் வியப்பில் ஆழ்ந்தேன்.

    அதே நபரை சில நாட்கள் கழித்து ஐ.சி.எப் மருத்துவமனை வாசலில் சுவிசேஷ துண்டு பிரசாரங்களை விநியோகிப்பதை பார்த்தேன்.

    நீங்கள் இந்த விஷயத்தை புதிது போலக் கேட்பது இப்போது எனக்கு வியப்பை அளிக்கவில்லை.ஏன் எனில் நான் பல அனுபவங்களை சந்த்தித்து விட்டேன்.

  120. திருச்சிக்காரர் கொஞ்சமாய் சொல்கிறார்.. இதெல்லாம் ஜுஜுபி.. அனாதைக்குழந்தைகளை வளர்த்து கிறிஸ்தவ அடியாட்கள் கும்பலாக மாற்றுவதில்தான் அவர்களது லாபமெல்லாம்.. அந்தக் குழந்தைகளுக்கு இந்துக்கோவில் சிலைகளை பேய், பூதம், சாத்தான் எனச் சொல்லிக்கொடுத்து அந்தச் சிலைகளை அவர்களது கையாலேயே உடைக்க வைப்பதும் இவர்களது அனாதைக் குழந்தை ஆதரவு திட்டத்தில் அடக்கம்..மதமாற்றம் செய்யமுடியாது எனில் ஏன் சேவாஸ்ரமம் நடத்த வேண்டும் எனக்கேட்டவர் “அன்னை” (?) தெரசா…எவ்வளவு பனம் புழங்கும் வியாபாரம் இது..இதெல்லாம் தெரியாதுன்னு அண்ணன் அ”சோக்கு” சொல்றாருன்னா அண்ணனுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப ஜாஸ்தின்னு அர்த்தம்..

  121. Brother Trichykkaaran,
    Nice reply. I have no words.
    Brothers,
    I know many of you are intellectuals. From the beginning I know for sure, I cannot make any difference by argueing. You all need some might intervention of GOD in your life.

    God bless You,
    Ashok

  122. Dear Mr.Glady,

    //நீங்கள் சமஸ்கிருத வழியே பார்க்கும் வேதத்தை அடுத்தவர் எபிரேய, கிரேக்க, இலத்தீன், அரபி மொழிகளின் வழியே பார்க்கமுடியும்;
    அது அவரவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை காரணமாக அல்லவா?//

    hmm…if everyone thinks like this, there will no reason to fight in the name of religion. But, can you please explain, why then the missionaries are talking ill about Hinduism and Hindu gods? Do you know why there was a religious riot in Karnataka last year? Why dont you go and tell these to your own people rather than writing here? If you really think that all religion teach the same thing, you should first teach this to your christian community and not to us Hindus…because 1000 and 1000’s of years before even christ came to this world, our vedas said ‘ekam sat vipra bahuta vadanthi’…the truth is one and the wise call it with different names.

    //நல்லது, இன்சென்டிவ் யார் தருகிறார்கள் என்று கேட்கிறீர்களா? மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்களே. அல்லது அப்பாவி போலக் கேட்கிறீர்கள்! //

    Nice Mr.Tiruchikaran.

    A couple of years ago, it was a sudden shock to hear that, in our office, one of our colleauge, who has a very good Hindu name (like our beloved Ashok Kumar Ganesan) got converted to Christianity. And that year, he went to Europe for a vacation with his entire family.

    1 + 1 = 2 nu naan rendam classla padichathu innamum nyabagam irukku…

  123. அய்யா அசோக் குமார் கணேசன்

    //. Not even single verse is added or removed from the Holy Bible. It has been tested by time and lots of scholars.//

    ரைட் ராயலாக நீங்கள் சொன்னது பொய் என்றும் இந்த கதையே ஒரு சரித்திர நாவலாக மார்க்கால் எழுதப்பட்டதுதான் என்றும் அன்பரசன் அய்யா நிரூபித்துவிட்டார். நீங்களோ இப்படி நழுவுகிறீர்களே..

    (Comment Edited.)

  124. கணேசன் அய்யா,

    அன்பரசன் அய்யா நன்றாக உங்கள் இஸ்ரேலியர்கள் என்றால் கடவுளின் வழியில் முயல்பவர்கள் (ஜிகாதிகள் மாதிரியா?) என்று நீங்கள் திருகுதாளம் பண்ணுவதை போட்டு உடைத்துவிட்டாரே? அதற்கும் பதில் இல்லையா?

    உங்களது வெள்ளைக்கார கிறிஸ்துவ பிரச்சாரகர்களே நாயும் பன்றியும் யூதரல்லாவதர்களைத்தான் குறிக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே. உங்களுக்கு இன்னமும் வெட்கம் வரவில்லையா?

    (Comment Edited.)

  125. Brothers,
    I came to share the good news of Jesus Christ to you. I didn’t come here for any personal benefit. I know that you guys will make fun of these statments also. You guys are keen about winning the argument than knowing the truth. You can consider that I lost the argument with you, or I am trying to escape. It is upto you.
    I am still with my faith only. Jesus Christ is my Lord always.
    GOD Bless you,
    Ashok

  126. //இத்தகைய குப்பைத்தொட்டி வெறுப்பியலை ஏன் இந்தியாவில் பரப்ப வேண்டும். பாரதத்தின் ஞான மரபின் முன் கால்தூசு பெற முடியாத இந்த “என் இரத்தம் குடித்தால்தான் உன் பாவத்திலிருந்து மீட்பு” என்கிற கதையை ஏன் சர்வ நிச்சயமாக மனநோய் போல நம்ப வேண்டும்?//

    சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது

  127. //கிருஸ்தவம் என்ற பெயரால் இயேசு கிறுஸ்துவைப் போர்வையாகக் கொண்டு பரப்பப்பட்ட காட்டு மிராண்டிக் கருத்துக்கள் சமூகத்தை அலங்கோலம் செய்த முதல் இடம் ஐரோப்பாதான்//.

    அட ரொம்ப புதுசா இருக்கே, கிறிஸ்தவம் ஐரோப்பாவிற்கு போயிருக்காவிட்டால் இன்னைக்கும் ஆங்லோ சாக்ஸன வெள்ளை இனத்தவர் குகைகளில் கத்தி கபடாவுடன் அலைந்து கொண்டிருப்பர். திருச்சிகாரரே, என்னவோ நான் கிறிஸ்துவையும் கும்பிடுவேன் அல்லாவையும் கும்பிட என்னால் முடியும்ன்னு வேஷம் போட்டுக்கிட்டு கிறிஸ்துவத்தினால் தான் ஐரோப்பா இப்படி ஆயிட்டுன்னு புழுதி வாறி தூறறுகிறீரே நீங்க பாட்டுக்கு அளந்து விட்டு கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.
    வெள்ளையன் அல்லாத கிறிஸ்தவர் பலர் இன்றைக்கும் சீர்கெடாமல் வாழும்போது கெட்டுப்போன வெள்ளையனை வைத்து ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களையும் நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள், எனவே நீங்கள் இனி வேஷம் போடாமல் தாராளமாகவே அப்படி செய்துகொள்ளலாம்.
    நீங்க சொல்வது இந்திய கிறிஸ்தவருக்கும் பொருந்தும் என்றால் sorry you are short sighted and you are misunderstanding . இங்கு ஓரினச்சேர்க்கயாளராக கிறிஸ்துவர் மட்டுமா இருக்கிறான், குழந்தைகளை வடமானிலத்தில் ஒருவன் கொன்று தின்றான் அவன் கிறிஸ்தவனா, எந்த வீட்டில் வேலை செய்தானோ அந்த வீட்டு சிறு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தானே வங்காளத்தில் ஒருவன் அவன் கிறிஸ்தவனா இல்லை கள்ளக்காதலனோடு சேர்ந்து புருஷனை கொலை செய்யும் எல்லா பெண்களுமே கிறிஸ்தவர்களா??. அப்போ இது மாதிரியான சீர்கேடுகளுக்கு நீங்கள் இந்து மதத்தையா குறை சொல்வீர்கள். ஏன்னா ஐரோப்பாவுக்கு பொருந்துவது இங்கும் பொருந்தும் தானே.

    (Comment edited and published)

  128. எது ஐயா காட்டுமிராண்டித்தனம்
    1) பரலோகம் எனும் தேவ ராஜ்ஜியத்தை தேடு
    2) இயேசுவின் மலை பிரசங்கங்கள்
    3) தொண்டு செய்வதற்கு இயேசு கூறிய முன்மாதிரிகள்
    4) இச்சையை விடு

    இது போன்ற‌ க‌ருத்துக்க‌ள் காட்டுமிராண்டித்த‌ன‌ம் என்றால் எப்ப‌டி காட்டுமிராண்டித்த‌ன‌ம் என‌ விள‌க்க‌முடியுமா??

  129. Daniel,

    //அட ரொம்ப புதுசா இருக்கே, கிறிஸ்தவம் ஐரோப்பாவிற்கு போயிருக்காவிட்டால் இன்னைக்கும் ஆங்லோ சாக்ஸன வெள்ளை இனத்தவர் குகைகளில் கத்தி கபடாவுடன் அலைந்து கொண்டிருப்பர்.//

    Please provide the reliable historical evidences that prove that before christianity anglo-saxon were cave dwellers.

  130. ஏங்க திருச்சிக்காரர் தானே ஆங்கிலோ சாக்ஸன் இனமான வெள்ளைக்காரன் கலாச்சாரம் இல்லாமல் இருந்தார்கள் என்கிறார். நீங்க என்னடான்னா ஆதாரம் காட்டு நிரூபி என்கிறீர்கள்.

  131. ஐரோப்பாவில் இருந்த பண்டைய ரோமானிய கலாச்சாரம் காட்டுமிராண்டி கலாச்சாரமா? கிரேக்க நாகரீகம் எப்படி, அதில் தான் அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ் போன்றோர் தோன்றினரே. இவர்களும் காட்டுமிராண்டிகளோ, திருச்சிக்காரரே ஏதோ ஒரு உற்சாகத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பியனும் காட்டுமிராண்டிகள் என சொல்லவேண்டாம்.
    கணபதி, நான் சொல்ல வந்தது ஆங்கிலோ சாக்ஸன் இனத்தை மட்டுமே

  132. ///வெள்ளையன் அல்லாத கிறிஸ்தவர் பலர் இன்றைக்கும் சீர்கெடாமல் வாழும்போது கெட்டுப்போன வெள்ளையனை வைத்து ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களையும் நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள்///

    கெட்டுப்போன வெள்ளையன் கெட்டுப் போகாத வெள்ளையன் அப்படீன்ன என்ன?

  133. இந்த விளக்கத்தை என்னைவிட திருச்சிக்காரர் ரொம்ப சரியாக கொடுப்பார். ஏன்னா அவருதான் ஐரோப்பாவில வெள்ளைக்காரன் கெட்டுப்போயிட்டானே, எல்லாம் இந்த கிறிஸ்தவ மதத்தால் வந்த வினை என ரொம்ப கவலைப்படுறார்.

  134. Hai Mr.Daniel,

    You told,

    “ஏங்க திருச்சிக்காரர் தானே ஆங்கிலோ சாக்ஸன் இனமான வெள்ளைக்காரன் கலாச்சாரம் இல்லாமல் இருந்தார்கள் என்கிறார். நீங்க என்னடான்னா ஆதாரம் காட்டு நிரூபி என்கிறீர்கள்”.

    Do you think presently they have culture?
    Yeh they have the culture which is free sex,Gay sex,Lesbian sex,Child sex,Incest sex and animals sex. And also they have another culture in which they wants to export all this to other countries in the name of JESUS.

  135. டேனியல் அவர்களே! எனக்கு ஒரு சந்தேகம்..அமெரிக்கா கிறுஸ்துவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு, அமெரிக்காவின் அரசாங்க மதமே கிறிஸ்தவம் தானே! எதிரி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் அன்புடன் அவனுக்குக் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் நாடு, ஜப்பானில் போட்ட அனுகுண்டு முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று மாறி மாறி லட்சோப லட்சம் மக்களை கொன்று குவிக்கிறதே! அங்கே கிறிஸ்தவம் தோற்றது என்று தானே அர்த்தம்?

  136. //இந்த கருத்தை இந்து மார்க்க ஞானத்துடன் தான் பதிக்கிறீர்களா?

    வெளியே அனைத்தும் மாறலாம்;
    உள்ளே எதுவும் மாறவில்லை;
    அதுவே உயிரின் இரகசியம்;

    சிருஷ்டி கர்த்தாவைப் பழித்து எந்த கிரகத்தில் சென்று குடியேறப்போகிறோம்;
    உத்தரமண்டலத்தினை அந்தரத்தில் தொங்கவிட்டது யாரென்று எண்ணுகிறீர்கள்..?//
    சிருஷ்டி கர்த்தா என்று ஒருவன் இருந்தால்தானே அய்யா பழிப்பதற்கு … இந்த கருத்தை ஹிந்து மார்க்க ஞானத்துடன்தான் பதிகிறேனா என்கிறீர்கள்…சாங்கியம் படைப்புக்கடவுளை மறுக்கிற தத்துவ அமைவு என்பதையும், யோகத்தில் ஈஸ்வரன் என்பது ஒரு principleதானே ஒழிய சிருஷ்டி கர்த்தர் இல்லை என்பதையும், சிருஷ்டிக்கர்த்தர் என்பது ஒரு தொடக்கநிலை pedagogic கருவியாக மட்டுமே ஹிந்து ஞான மரபில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பிரக்ஞையே அனைத்துமாக காட்டப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு தெரியாதிருப்பதில் அதிசயமில்லை. சரி அதுதான் போகட்டும் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கும் நாஸதீய ஸூக்தம் எனும் இந்த சிருஷ்டி கர்த்தர் என்கிற கருத்தாக்கத்தை எப்படி சிறுகுழந்தை தன் மரப்பாச்சி பொம்மையை வயதாகும் போது தூக்கிப் போட்டுவிட்டு செல்வது போல எளிதாகவும் அழகாகவும் கடந்து செல்கிறது என்று பாருங்கள். டார்வினின் பரிணாம அறிவியல் “நானே கர்த்தர் உன்னைப் படைத்தவன்” என மார் தட்டும் சிருஷ்டி தெய்வத்துக்கு தலையில் கொடுத்த குட்டு உண்மையில் ஹிந்து தொன்மங்களில் முருகன் :”நானே சிருஷ்டி கர்த்தன்” என பிதற்றிய பிரம்மனுக்கு கொடுத்த குட்டின் எதிரொலி அல்லவா… பாவம் யஹீவாவும் அவரது ஒரே சீமந்த புத்திரனும் இன்னும் அந்த குட்டில் பொறி கலங்கி தள்ளாடுகிறார்கள். நான் சொல்வதெல்லாம்…தள்ளாட்டத்தை எங்கள் மண்ணில் செய்யாதீர்கள்….மேற்கிலேயே வைத்துக்கொள்ளுங்கள்…கர்த்தராம் படைத்தாராம்…இரத்தத்தால் பாவத்தை துடைத்தாராம்…அட போங்கப்பா போய் வேலையை பாருங்கள். பைபிளையும் மதவெறியையும் பரப்புவதைக் காட்டிலும் கிராமம் கிராமமாக போய் பசு மூத்திரத்தையும் பசுசாணத்தையும் பாலையும் மோரையும் விட்டு பஞ்ச கவ்யம் தயாரிக்க விவசாயிகளுக்கு சொல்லி கொடுங்க…விஷமில்லாத சோறையாவது சாப்பிடலாம்.

  137. //I came to share the good news of Jesus Christ to you. I didn’t come here for any personal benefit. I know that you guys will make fun of these statments also. You guys are keen about winning the argument than knowing the truth.//

    Dear Ganesan

    I have no interest in winning an argument. I tried to show the truth to you. I always beleive Satyameva Jayate. Truth Alone triumps.

    Come to light from darkness
    Thamasoma Jythirgamaya

    I am showing the light. Inspite of the light, if you choose to call darkness as light and calling us to that, I have nothing to say.

  138. அட ரொம்ப புதுசா இருக்கே, கிறிஸ்தவம் ஐரோப்பாவிற்கு போயிருக்காவிட்டால் இன்னைக்கும் ஆங்லோ சாக்ஸன வெள்ளை இனத்தவர் குகைகளில் கத்தி கபடாவுடன் அலைந்து கொண்டிருப்பர்.//

    Dear Daniel,

    Please read history. The anglosaxons were well advances in culture and language even before the Christianity came there. After christianity came, all the science books were burned and culture was stopped and the music were delegitimized. It took 1000 years for the Christianity to face the defeat in the Crusade wars and then due to the masscre of the chrsitian children who chanted “God is with us” by the Muslims, the renaissance opened up the Europe. All the wealth of the west are due to the rennaissance … Not because of christianity.

    But of course, the wealth of the europe is used to propagate christianity in india and other third world countries so that we would forever be slaves of the west.

    Get a life.

  139. Brother Danial,
    //சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது//
    This is a wonderful verse for this blog. Most of them in the blog might not understand this till their death.

    With Love,
    Ashok

  140. //கணபதி, நான் சொல்ல வந்தது ஆங்கிலோ சாக்ஸன் இனத்தை மட்டுமே//

    Daniel, I also asked about anglo-saxons only. Please provide proper evidences to show that anglo-saxons are cave dwellers before they became christians.

  141. Brother Nathan,
    //அன்பரசன் அய்யா நன்றாக உங்கள் இஸ்ரேலியர்கள் என்றால் கடவுளின் வழியில் முயல்பவர்கள் (ஜிகாதிகள் மாதிரியா?) என்று நீங்கள் திருகுதாளம் பண்ணுவதை போட்டு உடைத்துவிட்டாரே? அதற்கும் பதில் இல்லையா?//
    Just because I am not answering him, it doesn’t mean that there is no answer for this. I didn’t feel like answering this.
    Now I can understand that how your Malarmannan ayya also claims that he cornered Sadhu Chellappa. Sadhu Chellappa didn’t answered Malarmannan ayya’s questions, because he would have thought that Malarmannan ayya needs to grow up more to understand Sadhu’s answers. And the same applies here too.

    With Love,
    Ashok

  142. ரோமர்களும் கிரேக்கர்களும் படை எடுத்து பெரிய வெற்றிகளைக் குவித்து இருக்கலாம். ஆனால் அவர்களின் கலாச்சாரம் என்ன? அடுத்தவனை ஆக்கிரமிக்கும், அடித்துப் பிடுங்கி சொத்து சேர்க்கும் கலாச்சாரம் தானே அவர்களின் கலாச்சாரம்?
    ராமரைப் போல, அரிச்சந்திரன் போல, சிபிச் சோழனைப் போல, தியாகக் கலாச்சாரம் அவர்களிடம் இருந்ததா?

    அசோகரைப் போல மனம் திருந்தி சாலைகளைக் கட்டி, குளங்களை வெட்டி, பிற நாடுகளுக்கு படையை அனுப்பாமல் ஆன்மீகத்தை அனுப்பியது போன்ற சிந்தனைகளை, நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ரோமர்களும் கிரேக்கர்களும்.

    அவர்களிடம் மிச்ச சொச்சம் இருந்த நல்லெண்ணத்தையும் அழித்துப் போடப் பாய்ந்தது கர்த்தரின் சுவிசேசக் கலாச்சாரம்.

    “உல‌க‌ அமைதி”க்கு க‌ர்த்த‌ரின் சுவிசேசக் கலாச்சாரம் இதோ,

    மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இவர்கள் சாக்ரடீஸ் பற்றி பேசுகிறார்கள். சாக்ரடீசின் கருத்து என்ன?

    மெட்டீரியல் கருத்துக்கு விடை கொடுத்து, அறிவுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும் , அறிவைத் தேடு என்ற இந்திய சிந்தனையைத் தான் பிரதிபலித்தார் பளித்தார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.

    அவருடைய அறிவுக் கொள்கை , கிரேக்கரின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக இருந்ததால் அவரை விஷம் கொடுத்து கொன்று விட்டனர், கிரேக்க கலாச்சார வாதிகள்.

    “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் , உன் கண் இரக்கம் காட்ட வேண்டாம்” என்ற கர்த்தரின் சுவிசேஷக் கொள்கையை விட்டு விடுங்கள், என்று இயேசு மன்றாடியும் இயேசுவை சிலுவையில் அறைந்தனர்.

    இந்த வெறிக் கருத்துக்களை ரோமுக்கு அனுப்பி, ஐரோப்பா முழுதும்- இயேசு திருத்த நினைத்த காட்டு மிராண்டிக் கொள்கைகளை, இயேசுவின் பெயராலேயே பிரச்சாரம் செய்து - அவர்களைக் கெடுத்தனர்.

    இப்போது பாக்கி இருப்பது இந்தியாதான்.

    ஜெருசலேமே, சுவிசேசமே, டேனியல்களே, இன்னும் எத்தனை சிந்தனையாளர்கள் உங்களிடம் சிக்கப் போகின்றார்களோ?

  143. வணக்கம்முங்க,
    அடடா, இப்படி ஒரு கூத்து நடக்குதுன்னு முன்னாடியே தெரியாம போச்சே. ஒரே காமெடியா இருக்குப்பா.
    கிலேடி, அசோக்கு, டேனியல் நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்க. அண்ணன் அசோக்கு, கேட்டு கேட்டு வாங்கறார். எனக்கே பாவமா இருக்கு, எதுக்கு சார் இதெல்லாம்? பொய் வேலைய பாருங்க. இல்லை… நானும் உள்ளே வருவேன்.
    பரிவுடன்,
    சந்தோஷ்

  144. வணக்கம்,

    ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு

    நாம் எவ்வளவுதான் புரிய வைத்தாலும் இவர்களுக்கு புரிய போவதில்லை என்றே எண்ணுகிறேன், இவர்கள் தங்களது நிலையே என்னவென்று சரியாக உணராதவர்கள் எனவே இந்து தர்மத்தின் அடிப்படை தாத்பரியம் என்பது அவர்களின் கலாசாரம் போன்றே இருக்கும் என்ற எண்ணத்தில் பேசுகிறார்கள்.

    மேலும் இறைவனின் படைப்பு என்பதை இவர்கள் சிருஷ்டி என்ற கோணத்திலே பார்க்கிறார்கள். இவர்களை பொருத்த வரை பைபிள் என்ற ஒருநூலே உலகாமயிருக்கிறது

    எதை சொன்னாலும் பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது. அது தேவனின் வாக்கு என்ற வார்த்தைகளை தவிர இவர்களின் பார்வை வேறு எங்கும் திரும்புவதில்லை. நாம் எதை சொன்னாலும் அதை இவர்கள் ஏற்றுக்கொள்ள போவதுமில்லை.

    மத மாற்றக் குற்றச்சாட்டை விட்டு விட்டு கலாசாரம் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்கிறார் நண்பர் கிலாடி, ஆனால் கலாச்சாரத்தின் அடிப்படையே மதம் என்பதை எப்படி அறியாமல் போனார்?

    கிறிஸ்துவம் இந்தியாவிற்கு வருமுன்னர் இந்தியா என்ன சுகாதாரம் இன்றி கிடந்ததா?
    இஸ்லாமியப்படை எடுப்பு என்ற ஒன்று நிகழும் முன்பு வரை இந்தியாவில் சித்தர்கள் கண்டுபிடிக்காத மருந்துகளே இல்லை எனலாம், மேலும் விரதங்கள் என்ற பெயரில் நமது உடல் ரீதியான சுத்தத்தையும் நலனையும் நன்றாகவே பேணிக்காத்தனர் நமது முன்னோர்கள். நமது தேசத்தின் சீதோஷ்ண நிலை அறிந்தே அவர்கள் மதத்தின் , கடவுளின் பெயரால் பல விரதங்களை வடிவமைத்தார்கள். இவர்களின் அரைகுறை ஞான அறிவுறுத்தலால் பலவிஷயங்கள் மங்கிப்போய் இன்று மக்களின் சுகாதாரம் கெட்டுப்போய் கிடக்கிறது.

    /சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது//

    சிலுவை இங்கே வருமுன்னர் யாவரும் நன்றாகவே இருந்திருக்கிறார்கள். கெட்டுப்போய் பைத்தியம் ஆனதெல்லாம் அதற்க்கு பின்னாலேதான்.

  145. மலர்மன்னன் ஐயா,
    எனக்கு சில கேள்விகள் உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். இப்போது படித்து போராடி அமெரிக்காவில் பணம் சேர்துக்கொண்டிருக்கேறேன் (என் தங்கை திருமணத்துக்காக). என் தம்பி என் சமூக மக்களுக்காய் சேவை செய்துவருகிறான்.
    அடிப்படையில் எனக்கு பல கோவங்கள், கேள்விகள் உள்ளது. சாது செல்லப்பாவின் சொற்கள் என்னை குழப்புகிறது. எனக்கு சமஸ்க்ரிதம் மற்றும் வேதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் கடவுளை நம்புபவன். வழிதப்பி போய்விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். நீங்கள், எனக்கு உதவ முடியுமா. சாதுவின் குழப்பவார்த்தைகளுக்கு நீங்கள் எனக்கு விளக்கம் கொடுத்தால் அது என் சமூக மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி.
    நன்றி,
    சந்தோஷ்.

  146. அன்புள்ள அசோக் குமார் கணேசன்,

    //Just because I am not answering him, it doesn’t mean that there is no answer for this. I didn’t feel like answering this.
    //

    அப்போ நீங்கள் இங்கே பதில் சொல்லவே வந்திருக்கக்கூடாது. இல்லையா?

    இப்போது நீங்கள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல்,
    “உங்களுக்கு பதில் இருக்கிறது. ஆனால் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏன் என்றால் உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று நான் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

    கற்பனை கதாபாத்திரத்தை உயிருள்ள மனிதன் என்று நீங்கள் நம்பலாம். ஷெர்லாக் ஹோம்ஸ் கூட உயிருடன் இருந்த மனிதர் என்று இப்போதும் பலர் நம்புகிறார்கள்.

    மாமல்லபுரத்துக்கு போனபோது அங்கிருந்த கைட், இதுதான் ஆயனர் உட்கார்ந்திருந்த இடம் என்று சொன்னார். ஆயனர், சிவகாமி, வந்தியத்தேவன் எல்லாம் கதாபாத்திரங்கள் என்று தெரியும். ஆனால், நம்ப ஆரம்பித்தால் பிறகென்ன?

    இயேசு கிறிஸ்து ஒரு கற்பனை கதாபாத்திரம். அவர் உயிருடன் இருந்த மனிதர் அல்ல. அவரது கதையையும் ஹெர்குலிஸ் கதையையும் சேர்த்துதான் கிறிஸ்துவம் உருவானது.

    ஜீயஸ் என்ற கிரேக்க கர்த்தர் தெய்வம், அலெக்மன் என்ற மானுடப்பெண்ணுடன் கூடி ஹெர்குலிஸை பெறுகிறாள். இருந்தாலும் அலெக்மன் கன்னியாகவே இருக்கிறாள். ஹெரோட் இயேசுவை கொல்ல முயன்றதுபோல, ஹேரா என்பவள் ஹெர்குலிஸை கொல்ல முயல்கிறாள். ஹெர்குலிஸை போலவே இயேசுவும் நடந்து திரிந்து பல அற்புதச்செயல்களை செய்கிறார். இயேசு இறந்து உயிர்த்தெழுந்தது போலவே, ஹெர்குலிஸும் இறந்து பிறகு உயிர்த்தெழுந்து கடவுளாக ஆகிறார். அந்த காலத்தில் ஹெர்குலிஸ் உயிருடன் இருந்த மனிதர் என்று நம்பினார்கள். அவரை வழிப்ட்டார்கள். அவருக்காக கோவில்களை கட்டினார்கள். அந்த கோவில்கள் இன்றும் ஐரோப்பாவில் இருக்கின்றன. அவற்றில் பல சர்ச்சுகளாக ஆகிவிட்டன.

    இயேசு இருந்ததற்கு எப்படிஆதாரங்கள் காட்டுகிறார்களோ அதனை விட ஆதாரப்பூர்வமாக ஹெர்குலிஸ் இருந்தார் என்று காட்டலாம். ஹெஸியாட் பிளாட்டோ ஆகியோர்கள் ஹெர்குலிஸை பற்றி தங்களது புத்தகங்கலில் குறித்திருக்கிறார்கள். ஹோமரின் காவியங்களில் ஹெர்குலிஸ் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

    மத்திய கிழக்கு ஹீரோவான இயேசுவை வணங்குபவர்கள், அவரை விட சிறப்பான (குறைந்தது தமிழர்களை நாய்கள் என்று சொல்லாத) ஹெர்குலிஸை வணங்கலாம்.

  147. நண்பர் B.பாஸ்கர் அவர்களே,
    பழம் பெருமை பேசியிருத்தல் போதும்,ஐயா;
    இன்றைக்கு அந்த நல்ல மருந்துகளை விட்டு ஏனையா ஆங்கில மருந்துக்கு தாவினிர்கள்?

    எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை;
    முக்தியடைய நலமார்க்கத்தையே தேடுகிறேன்;

    நண்பர் சந்தோஷ் (Santhosh )அவர்களே,
    சாது செல்லப்பாவும் ஒரு காலத்தில் இந்துதான்;
    அவர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லாததாலேயே எல்லோருக்கும் பைத்தியம பிடிக்க வைக்கிறார்;
    அவர் கேட்கும் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்லமுடியாது;
    எனவே நீங்கள் அவரை தாராளமாக நம்பலாம்;

    நண்பர் அன்பரசன் அவர்களே,
    இராமனையும் கற்பனை என்று சொல்லிவிடாதிருங்கள்;
    அவரை நம்பித தான் இந்தியாவில் அநேகருடைய வாழ்க்கை ஓடுகிறது..!

  148. //. Not even single verse is added or removed from the Holy Bible. It has been tested by time and lots of scholars.// Ashok
    What does KJV Verse says
    2Chr.22: 2 Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. His mother’s name also was Athaliah the daughter of Omri.
    Tamil Bible

    2நாளாகமம்22:2 . அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசவேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்

    why this Fraud, because the same story of same king is said like this in another place.

    [II (Kings) இராஜாக்கள் 8:26 தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.

    Who gave permission to change Verses and fraud Tamil People, when both are Published by same Publisher?

    No body to my knowledge writes here to win or fight Arguments, Please understand the Truth. Bible is a Political Fiction to unite Hebrews and fight wars, saying that they were chosen for that Place.

    If you read Mark Gospel written nearly 40-60 years (79-90CE) after the death of Jesus, No where does Jesus claimed himself Divine. Rather he clarified Jesus himself is like each one of us, in the following instance.

  149. //சாது செல்லப்பாவும் ஒரு காலத்தில் இந்துதான்;
    அவர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லாததாலேயே எல்லோருக்கும் பைத்தியம பிடிக்க வைக்கிறார்;
    அவர் கேட்கும் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்லமுடியாது;
    எனவே நீங்கள் அவரை தாராளமாக நம்பலாம்; //

    அப்படி என்ன கேட்டார்?

  150. Dear Sri Santosh,
    I’ve just seen your message. Kindly excuse me for NOT writing in Tamil. Your anger is genuine and I respect your anger. I appreciate your brother for his social service for the community. I do NOT know about the questions being raised by Sadhu Chellappa thta are confusing you.. It is NOT necessary that you should know Samscrutam and Veda to be a Hindu. It depends on individual preference.
    It is NOT like Christianity OR Mohmedanism that an individual has to obey the scrioptures for his/her social obligations and also to declare faith in God . Fatih in God is purely a personal matter. If you have faith in God, it gives you enormous strength during trying times. In NEED NOT be the GOD as prescribed by Bible OR Koran OR even Geeta!

    NOW this Sadhu Chellappa. Once a young Hindu youngman was brought by his sister to my residence for counselling and along with him came Sadhu Chellappa! My intention was to clear the confusion in the mind of the HIndu young boy and therefore, I made him to realise that persons like Sadhu Chellappa are adequately compensated for confusing Hindus and make them believers in Jesus. Therefroe, by putting some questions indirectly, I made Sadhu Chellappa to admit that he is being rewarded for his work and that was enough for the Hindu boy to get over from the influence of Chellappa. I made Chellappa to admit that the Christian faith makes everyone a born sinner which is impossible. And creates inferiority complex in every mind, which is very harmful for a healthy mind.
    If you want me to clear any confusion created by Chellappa, I shall be happy to try to be of any use to you. What is that confusing you by the words of an ordinary paid evangelist like Chellappa?

    If you have faith in God, well, it helps. You need NOT seek God through Bible OR Koran OR YES, even Geeta.

    Finally, I appreciate you for coming up in life against all odds. Kindly avoid mentioning yourself as “Thaazhttappattavar.” In fact, all others who treated a section of their own family as Thaazhthppattavar are really “Thaazhntavarrakal.” You are ‘Anaivarilum Mempattavar.’

    Affectionately,
    MALARMANNAN

  151. //நண்பர் B.பாஸ்கர் அவர்களே, பழம் பெருமை பேசியிருத்தல் போதும்,ஐயா; இன்றைக்கு அந்த நல்ல மருந்துகளை விட்டு ஏனையா ஆங்கில மருந்துக்கு தாவினிர்கள்?//

    மிக நல்ல கேள்வி கிளாடி. ஒருவிதத்தில் இது உங்களது வேறு இரண்டு பொய்களையும் வெளிப்படுத்துகிறது. அது உங்களுக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை உண்மையை மட்டுமே தேடுகிறவர் என்கிற பொய். மற்றொன்று கிறிஸ்தவத்துக்கும் ஐரோப்பிய பண்பாட்டுக்குமான முடிச்சை நாங்கள் போடுகிறோமென்பது. இல்லை. எப்போது கிறிஸ்தவ மதச்சார்பு வருகிறதோ அப்போதே தன்னியல்பாக காலனிய உலகப்பார்வை வந்துவிடுகிறது. ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி என்னும் படைப்பில் வெள்ளைக்காரன் போல் வேடமணிந்த ஒரு எவாஞ்சலிஸ்ட் வருவான். வேரிழந்த முகமிழந்த இரவல் உடையும் சிந்தனையும் தரித்த பரிதாபத்துக்குரிய பிராணி அவன். அவனைப் பார்க்கும் போது கழிவிரக்கம் வரும். உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும் போதும் அதுதான் ஏற்படுகிறது. ஏதோ வரலாற்றுக்காரணங்களால் அல்லது மனநிலை பிறழ்ச்சியால் அல்லது ஆசை காட்டலால். இந்த மேற்கத்திய போதையான மீட்பர்-இரத்தம் cult க்குள் போய் விட்டீர்கள். பரவாயில்லை இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. திரும்ப வாருங்கள். வந்து பாரத ஹிந்து ஞான மரபு தரும் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஒருவேளை இந்த எவாஞ்சலிக்கல் பிஸினஸ்தான் உங்களுக்கு சோறு போடுகிறதென்றால் பரவாயில்லை….இப்படியே இருங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஏதோ வயிற்றுப்பிழைப்புக்காக செய்கிறீர்கள் என்று. ஆனால் அப்படியென்றால் நீங்கள் ஏன் விவசாயம் செய்து பிழைக்கக் கூடாது என்பது என்னுடைய கேள்வியாக இருக்கும்? விவிலியத்தின் மூடநம்பிக்கைகளை பணத்தின் உதவியால் எய்ட்ஸைப் பரப்புவது போல பரப்புவதைக் காட்டிலும் பஞ்சகவ்யத்தின் பலன்களை விவசாயிகளிடம் எடுத்துச்செல்வது அல்லது சாண எரிவாயு குறித்த ஞானத்தை எடுத்து செல்வது உபயோகமான விஷயமாக இருக்கும்.)

    சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஐரோப்பாவின் மருத்துவ மறுமலர்ச்சியே அவர்கள் தங்கள் பாகனிய வேர்களை மீண்டும் கண்டடைந்த அறிவெழுச்சி காலத்திலேயே நடந்தேறியதே அன்றி கிறிஸ்தவம் கோலோச்சிய இருண்ட காலங்களில் அல்ல. இன்றைய மேற்கத்திய மருத்துவ உலகின் பல முக்கியமான மருந்துகள் பாகனிய ஷமானிய பண்பாடுகளில் கண்டடையப்பட்ட அறிவுதான். மலேரியா முதல் மஞ்சள் காமாலை வரை பல மருந்துகள் பல தெய்வ வழிபாட்டாளர்களின் ஆன்மிக இயற்கை உணர்வினால் கண்டடையப்பட்ட மருந்துகள்தாம். அவ்வளவு ஏன்? அம்மை நோய் தடுப்பூசி முறை ஹிந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு முறை. 18 ஆம் நூற்றாண்டில் அந்த முறையை ஐரோப்பிய அரசாங்கம் முழுமையாக அழித்தொழித்தது. பிறகு அவர்களே கண்டுபிடித்தது போல தடுப்பூசி முறையை மேற்கிலிருந்து புகுத்தியது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அடிப்படை வாத கிறிஸ்தவர்கள் தடுப்பூசி முறையே கிறிஸ்துவுக்கு எதிரான ஹிந்து பாகனிய முறை என்று அதனை இன்றைக்கும் எதிர்ப்பதுதான். எனவே ஐரோப்பாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கிறிஸ்தவத்துக்கும் முடிச்சு போடுவதென்பது வேதத்துக்கும் கிறிஸ்துவுக்கும் முடிச்சு போடுவதைப் போலவே முட்டாள்தனமானது.

  152. Dear Sri Ashok,
    I’ve just seen your comment, wherein you have dragged my name. Even without knowing the details, you have come to the conclusion that Chellappa had NOT answered me because he might have thought that I am not grown to understand his answers.

    What is your problem? Do yoiu think God can be realised by this kind of futile chats? And do you think you can establish that God can be realised through Bible only? Do you think GOd is such a weak personality that he could be realised by just one and only book?

    First of all I do NOT discuss about God, as it is very pearsonal. And I do NOT try to drag others to my belief of God.

    People like Chellappa are richly compensated to harvest “souls” from Hindus. I put him very simple questions only.
    1. What is his source of income.
    2. How come he is able to frequently tour abroad.
    3. Howcome anybody is born a sinner and sex is a sin.
    4. If you say anybody a sinner by birth or even before being in the process of being born that is during intercourse by his/her would be father and mother, will it not amonut to create inferiority complex in the mind right from a tender age.
    5. What is the fun in creating everybody a sinner and then redeeming everyone through Bible, which is creation of human beings. Has God nothing else that he should waste his time in such meanigless game?
    Why Chellappa, you can also answer these questions except the first two ones, as it is not difficult for anyone to understand by your answers.

    First of all, God cannot be realised by this kind of quarrels. My concern is Hindu society and the moment the HIndu society dwindles, there will be end to free thinking and individual preference. In every human activity, religion will poke its nose.
    MALARMANNAN

  153. //டேனியல் அவர்களே! எனக்கு ஒரு சந்தேகம்..அமெரிக்கா கிறுஸ்துவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு, அமெரிக்காவின் அரசாங்க மதமே கிறிஸ்தவம் தானே! எதிரி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தையும் அன்புடன் அவனுக்குக் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் நாடு, ஜப்பானில் போட்ட அனுகுண்டு முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று மாறி மாறி லட்சோப லட்சம் மக்களை கொன்று குவிக்கிறதே! அங்கே கிறிஸ்தவம் தோற்றது என்று தானே அர்த்தம்?//

    A believing christian will agree that America had plentiful of sins and they are committing even now. America is sinning because of their unchristianness rather than being christians.
    Hinduism speaks about universal brotherhood as many say. What happened in Gujarat, Is it a failure of Hinduism?

  154. //இயேசு கிறிஸ்து ஒரு கற்பனை கதாபாத்திரம். அவர் உயிருடன் இருந்த மனிதர் அல்ல. அவரது கதையையும் ஹெர்குலிஸ் கதையையும் சேர்த்துதான் கிறிஸ்துவம் உருவானது. //

    Yes for this Mythical concept only many had laid down their lives in their past, What would happen if I say that Ram or Krishna are mythical concepts, already many are saying this, for me Jesus was my saviour and God and I can tell with open conviction. I can challenge anyone regarding this. He was the same yesterday today and tomorrow, I have felt and seen what he has done for me. There are many proving facts about Jesus which you people out of Hatred won’t agree.
    Just because you say that Jesus isn’t true doesn’t mean that he is false. There were many who believed Jesus and the salvation inspite of losing everything, many many are there. Sad that you won’t understand.

  155. // “First of all, God cannot be realised by this kind of quarrels. My concern is Hindu society and the moment the Hindu society dwindles, there will be end to free thinking and individual preference. In every human activity, religion will poke its nose.” //
    >MALARMANNAN

    அப்படியானால் மக்கள் சுதந்தரமாக சிந்திக்க ஏதுவாக அவரவர் தங்கள் தங்கள் மார்க்க கருத்துக்களை மற்றவர் மனம் புண்படாமல் பிரச்சாரம் செய்யட்டுமே; மதமாற்ற குற்றச்சாட்டுக்கும் ஒரு முடிவு வரட்டும்;
    கேள்விப்படாவிட்டால் எப்படி விசுவாசிப்பார்கள்..?

    டிவியில் எத்தனையோ விளம்பரங்கள் வருகிறது;
    எல்லா பொருளுமே வியாபாரம் ஆகிறது;

    ஆதி சங்கரர் முதலாக புனிதப பயணம் சென்று பிரச்சாரம் செய்தே மார்க்கத்தை வளர்த்தனர்; எனவே திரு.மலர்மன்னன் அவர்கள் கருத்தை நான் மனதார வரவேற்கிறேன்..! ஸ்ரீ ராம அ(பயம்)..?

  156. People like Chellappa are richly compensated to harvest “souls” from Hindus.
    I put him very simple questions only.
    1. What is his source of income.
    2. How come he is able to frequently tour abroad.
    3. Howcome anybody is born a sinner and sex is a sin.
    4. If you say anybody a sinner by birth or even before being in the process of being born that is during intercourse by his/her would be father and mother, will it not amonut to create inferiority complex in the mind right from a tender age.
    5. What is the fun in creating everybody a sinner and then redeeming everyone through Bible, which is creation of human beings. Has God nothing else that he should waste his time in such meanigless game?
    Why Chellappa, you can also answer these questions except the first two ones, as it is not difficult for anyone to understand by your answers.

    ஆம், இந்துக்களல்ல அவர்களின் ஆன்மாவே விலையேறப்பெற்றது;
    அதை ஆதாயம் செய்ய எவ்வளவு கொடுத்தாலும் தகும்;
    ஏனெனில் அவர்களே மெய்யான பக்தியுள்ள ஜனம்;

    மற்ற கேள்விகளுக்கு பன்றி காய்ச்சலே உதாரணம்..!

  157. வணக்கம் மலர்மன்னன் ஐயா,
    உங்கள் வார்த்தைகள் இதமாக உள்ளது. தாழ்த்தப்பட்டவன் என்ற எண்ணம் எனக்குள் இருக்கட்டும், அதுதான் என்னை முன்னேற உந்தி தள்ளுகிறது. என்னுடன் படித்த மாணவர்கள் ஒருவர் கூட என் வீட்டுக்கு வந்ததில்லை, நான் சேரிவாசி என்பதால். இங்கே அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட, சாதியை கேட்கிறார்கள். என்ன செய்வது?
    நேற்றுத்தான், சாதுவின் பேட்டியை பார்த்தேன்.
    சாது சொல்லும் பிரஜாபதி ஏசுவா?
    அவரை வணங்காவிட்டால் எனக்கு நரகமா?
    வேத மந்திரங்கள் இயேசுவை பற்றி சொல்கிறதா?
    ராமாயணமும், பாரதமும் வெறும் கதைகளா?
    நீங்கள் சாது செல்லப்பாவை சந்தித்தவர். அவரை ஓட விட்டவர் என்று தெரியும். உங்களுக்கு தெரிந்ததை எனக்கு சொன்னால், சில குழப்பங்களை தவிர்த்து, புதுந்து விளையாடுவேன்.
    நன்றி,
    சந்தோஷ்.

  158. கிலேடி,
    //டிவியில் எத்தனையோ விளம்பரங்கள் வருகிறது;
    எல்லா பொருளுமே வியாபாரம் ஆகிறது; //
    எல்லாரும் அவங்க பொருளை விளம்பரபடுதினார்கள், அடுத்தவர் பொருட்களை பற்றி அவதூறு கூறவில்லை. நீங்க இயேசுவை பற்றி எவ்வளவு உயர்வா பேசமுடியுமோ அவ்வளவு உயர்வா பேசுங்க. ஆனா, இந்துக்களோட நம்பிக்கையை ஏன் அசிங்க படுத்தறீங்க?
    எந்த தைரியத்துல எங்களை “பாவி”ன்னு சொல்லறீங்க?
    எதற்கு சொர்க்கம் நரகம்ன்னு மிரட்டல்?
    பரிவுடன்,
    சந்தோஷ்.

  159. What Sri Sankara did was unifying shan mada (six branches) of Hindu fold. He did NOT engage in proselytising. In case of Christian and Mohmedan activities, in the guise of propagating their religion, they target Hindus to proselytise.
    Religion is NOT a comodity to market with a target and publicity campaigns. Observing festivals and discourses is OK provided the intention is NOT casting the net to trap, like selling a product
    MALARMANNAN

    .

  160. Thank you, Sri Santosh. If anybody asks your jati, tell them that you are a Hindu by faith. Also, do NOT hesitate to declare your jati according to the classification of Hindu society, but NOT NOT by Hindu religion. Tell them also that you belong to the jati that is strong in its faith and commitment to stay in HIndu fold than any other caste despite being subjected to many humiliations. And all other casstes should ever remain grateful to your jati and learn steadfastness from you.
    If you have time, read my Ethir Vinai in Kalachuvadu.com of Sep 2009 issue about Varnasrama and Jati system. It is deep down in the home page of kalachuvadu.com of Sep 2009 issue . I hope you are familiar with Kalachuvadu. It is a magazine in print, also available on the net for FREE.

    NOW the answer for your questions:
    1. The Prajapati is only a concept of premordial element visualised as a human form responsible for all creations. It has nothing to do with Jesus or any other person who trod on earth in blood and flesh.

    2. There is no such thing as heaven or hell outside human mind. You can make your own heaven or hell by yoiur own way of functioning. Theethum Nanrum Pirar TaraVaaraa.

    3. You will NOT NOT go to either heaven OR hell after death but experience them here itself in physical body. It is also a concept only. There is no deleverer responsible to take you to heaven or throw you into hell.

    4. Vedic lines can be interpreted according to one’s own grasping intellect. For instance, Mahishi is a she buffalo, as well as queen. In Ashvamedah Yagna, it is NOT horse that has to be sacrificed. Ashvam has several meanings. The so called hingh castes of HIndu society took advantage of this possiblity and exploited others by giiving its own interpretation. Likewise, Christians and other proselytisers are also giving their own interpretations to exploit others and fool around. IF posible, read Satyarth Prakash by Swami Dayananda Saraswati avilable on the net. Its English translation is titled Light of Truth.

    5. Finally, faith in God is purely for spiritual advancement, NOT for material gains. But strrangely, if you have faith in God spiritually, it helps for material benefits also indirectly. It gives you inner strength and enables you to succeed in material world also.

    Malarmannan

  161. Sri Santosh,
    You’ve asked about our epics Srimad Ramayanam and Mahabharatam. Maryada Purushottam Sri Ramachandra and my Master Sri Krushna once trod on our Hindustan but the epics were written after many centuries. You know poets have liberty to add according to their imagination, which is called poetic judgement. We have started unearthing objects to prove Sri Krushna’s existence and likewise, in future, we will also be able to prove Sri Rama’s existence.

    Our epics Ramayanam and Bharatam are very ancient, many thousands of years old and that they are liable to subject to many interpolations. We have to consider all these facts before discussing about this.

    Sri Theagaraja, in ecstacy, has described many incidents related to Sri Rama and Sri Sita in his devotional songs. We have to enjoy them. We need not think those incidents really happened in thier life!
    Sri Krushna of Bharatam is true but we can’t say with that much certainity as for Srimad Bhagavatam.
    MALARMANNAN

  162. ///What happened in Gujarat, Is it a failure of Hinduism?/// குஜராத்தில் அரசாங்கத்தால் உள்மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையே போர் என்று அறிவித்து சட்டப்பூர்வமாக நடத்தப் படவில்லை. அவ்வாறு நடந்ததாக இந்துக்களை அழிக்க நினைக்கும் மீடியாக்களும் உங்களைப் போன்றவர்களுமே அதிகம் பிரசாரம் செய்கிறீர்கள். அதனால் அமெரிக்காவையும் குஜராத்தையும் ஒப்பிடுவது முறையல்ல. மேலும் இந்து தர்மத்தில் தர்மத்தைக் காக்க போரிடுவதும் தர்மத்திலேயே அடங்கும் என்பது போதிக்கப்பட்டுள்ளது. அப்படி self defencing ஆக போரிடுவதும் இந்து தர்மத்தின் படி தவறில்லை. அவை தர்மத்தைக் காக்கும் பொருட்டே நடைபெற வேண்டும் என்பது கண்டீஷன். ஆனால் உங்கள் கர்த்தர் என்ன சொன்னார். உன்னை அடிப்பவனுக்கும் அன்பு காட்டு திருப்பி அடிக்காதே என்று தானே அதை உங்களைப் போன்றவர்கள் பின் பற்றுவதே இல்லையே? அதற்கு நிதர்சன சான்று தான் அமெரிக்கா! சரி உங்களை ஒரு கும்பல் குமுறினால் நீங்கள் இன்னும் அன்போடு நாளைக்கு ரூம் போட்டு தருகிறேன், ரெஸ்ட் எடுத்து விட்டு வந்து இன்னும் குமுறுங்கள் என்று சொல்வீர்களா? தோற்றுப்போன கிறிஸ்தவம் இப்போது வெறும் மல்டி லெவல் மார்க்கெட்டூங்காக மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.

  163. //////////////Santhosh
    24 September 2009 at 11:24 pm
    மலர்மன்னன் ஐயா,
    எனக்கு சில கேள்விகள் உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். இப்போது படித்து போராடி அமெரிக்காவில் பணம் சேர்துக்கொண்டிருக்கேறேன் (என் தங்கை திருமணத்துக்காக). என் தம்பி என் சமூக மக்களுக்காய் சேவை செய்துவருகிறான்.
    அடிப்படையில் எனக்கு பல கோவங்கள், கேள்விகள் உள்ளது. சாது செல்லப்பாவின் சொற்கள் என்னை குழப்புகிறது. எனக்கு சமஸ்க்ரிதம் மற்றும் வேதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் கடவுளை நம்புபவன். வழிதப்பி போய்விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். நீங்கள், எனக்கு உதவ முடியுமா. சாதுவின் குழப்பவார்த்தைகளுக்கு நீங்கள் எனக்கு விளக்கம் கொடுத்தால் அது என் சமூக மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி.
    நன்றி,
    சந்தோஷ்.//////////

    திரு சந்தோஷ் அவர்களே! பகவத் கீதையின் தமிழ் உரை வாங்கி முழுவதும் அமைதியாக படித்துப் பாருங்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று மனதில் அசை போடுங்கள். ஓரிரு முறை வாரியாரின் சொற்பொழுவுகளை சி டியில் போட்டு கேளுங்கள். பின்னர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை கேட்டுப் பாருங்கள், இதற்குப் பிறகுதான் உங்களுக்கும் உண்மையாகவே தெளிவு பெறவேண்டும் என்ற நிஜ சந்தேகங்கள் வரத்துவங்கும். அந்த சந்தேகங்கள் ஆத்ம விசாரத்தைக் கொடுக்கும். அப்படி எழும் சந்தேகங்களை விளக்கமாகக் கேளுங்கள். உங்களுக்கு உதவ மலர்மண்ணன் ஐயாவுடன் சேர்ந்து பலரும் காத்திருக்கிறார்கள்.
    அன்புடன்
    ராம்

  164. ////நீங்க இயேசுவை பற்றி எவ்வளவு உயர்வா பேசமுடியுமோ அவ்வளவு உயர்வா பேசுங்க. ஆனா, இந்துக்களோட நம்பிக்கையை ஏன் அசிங்க படுத்தறீங்க?
    எந்த தைரியத்துல எங்களை “பாவி”ன்னு சொல்லறீங்க?////
    நியாயமான கேள்வி சந்தோஷ் அவர்களே!! எல்லா இந்துக்களும் அதையே தான் கேட்கிறார்கள்???

  165. //நண்பர் அன்பரசன் அவர்களே,
    இராமனையும் கற்பனை என்று சொல்லிவிடாதிருங்கள்;
    அவரை நம்பித தான் இந்தியாவில் அநேகருடைய வாழ்க்கை ஓடுகிறது..!//

    கிளாடி அய்யா

    ராமனை கற்பனை என்று சொன்னாலும் இந்துமதம் நிற்கும்.
    இயேசுவை கற்பனை என்றால், கிறிஸ்துவம் நிற்குமா?

  166. ///ராமனை கற்பனை என்று சொன்னாலும் இந்துமதம் நிற்கும்.
    இயேசுவை கற்பனை என்றால், கிறிஸ்துவம் நிற்குமா?///

    நிற்காது. மல்டி லெவல் மார்கெட்டிங் புஸினெஸ் படுத்துக்கும். எங்கே ஏசு என்றொருவர் கிடையாதென்று சொல்லி வியாபாரத்தை பரப்பச் சொல்லுங்கள் பார்க்கலாம். டாப் எகிறிடும்ல!

  167. நாதன் அவர்களே வாழ்க!

    //ராமனை கற்பனை என்று சொன்னாலும் இந்துமதம் நிற்கும்.
    இயேசுவை கற்பனை என்றால், கிறிஸ்துவம் நிற்குமா?//

    உங்கள் வாக்கியம் 24 காரட் தங்கத்தை விட சிறந்தது. . போஜராஜன் நீங்கள் கூறியதைக் கேட்டிருந்தால், வார்த்தைக்கு லட்சம் பொன் குடுத்திருப்பான்.

  168. வணக்கம்;

    அருமையான விளக்கம் தந்தீர்கள் நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களே, நன்றி, ஒரு சந்தேகம் நீங்கள் பெரும்பாலும் புத்தகத்திற்குள்தான் வாழ்கிறீர்கள் என்று நினைக்கிறேன், சரியா.

    புதிய நண்பர் சந்தோஷிற்கு, ஸ்ரீ மலர்மன்னன் அய்யாவிடம் சில கேள்விகளை வைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ஏனெனில் குழப்பங்களை தவிர்க்க கேட்டு அறிந்து கொள்வது அருமையான செயல்.

    ஸ்ரீ மலர் மன்னன் அய்யாவை விட நான் ஒன்றும் பெரிதாய் உங்களுக்கு சொல்லி விட போவது இல்லை. நண்பரே நான் ஏற்கனவே ஒருமுறை எழுதியதுதான் மீண்டும் உங்களுக்காக இதை சொல்கிறேன் வேதங்கள் பற்றிய ஞானம் என்பது இருந்தால்தான் நாம் இந்துக்கள் என்று அடையாளம் கிடையாது,

    வேண்டுமானால் வேத அறிவை தேடி வளர்த்துக்கொள்ளலாம். மற்றைய மதங்கள் போல பைபிள், குரான், என்ற ஒரு குறுகிய வட்டம் இல்லை நமது சனாதன தர்மம், எந்தத்திக்கிலும் இறைவனை அடைய வழி உள்ளது. அது லவ்கீகமானாலும் அல்லது துறவு ஆனாலும் அங்கே இறைவனை அடைய பாதை நிச்சயம் உண்டு.
    வேதங்கள் என்பது நமக்கு அடித்தளமல்ல தூண்கள் என்பதை தெரிந்து கொள்க.

    மேலும் செல்லப்பாவின் கருத்துக்கள் தங்களை குழப்புகின்றது என்பது தங்களின் எண்ணம். ஒன்றை எண்ணிப்பாருங்கள் உங்களுக்கு தெரிந்தும் தெரியாத ஒன்றை வைத்து உங்களை யாராலும் குழப்ப முடியும். வேதங்கள் இருப்பது உங்களுக்கு தெரியும் ஆனால் அதை பற்றி உங்களுக்கு தெரியாது, காரணம் நீங்கள் வேதம் படித்தது இல்லை, ஆனால் வேதம் என்பது இந்து மதத்தின் ஆணிவேர் என்பது உங்களின் எண்ணம். பல பேருடைய எண்ணமும் அதுதான், அதில் உள்ள வாசகங்கள் ஏசுவை குறிக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்பத்தான் போகிறீர்கள், இது செல்லப்பா போன்றவர்கட்கு தெரியும் எனவே அந்த பிரசங்கங்களை அவர்கள் செய்கிறார்கள்.

    உங்களை குழப்பும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் சொல்வது தங்களுக்கு தெரியாத விஷயம் எனில் நீங்கள் அந்த விஷயத்தில் இருந்து வெளிவந்தது விடுங்கள். அதை பற்றி மேலும் அவர்களிடம் விளக்கம் பெற முயலாதீர்கள். அது செல்லப்பாவை மட்டும் நான் குறிப்பிடவில்லை யாராகிலும் சரி தவறான பாதையில் உங்களை வழிநடத்தக்கூடும். ஆன்மீகத்தில் குழப்பத்திற்கு இடம் தராதீர்கள்.

    இது எல்லாம் விட ஒருவர் உங்களுக்கு இந்து தர்மத்தை ஒருவர் மிகவும் எதார்த்தமாக விளக்க இருக்கிறார் என்றால் அது நண்பர் ஸ்ரீ ராம் அவர்கள் கூறியது போல் கண்ணதாசன் அவர்கள்தான். அவரது அர்த்தமுள்ள இந்து மதம் உரையின் ஒலிநாடாவை வாங்கி கேளுங்கள் அந்த புத்தகங்களை வாங்கி நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.

    இறுதியாக ஒன்று : நீங்கள் எந்த மதத்தின் கோட்பாடுகளை எடுத்து பார்த்தாலும் அதன் முக்கியமான அடிப்படை என்பது இந்து தர்மத்தின் எதாவது ஒரு கூறாகவே இருக்கும்.

  169. வணக்கம்
    //நண்பர் அன்பரசன் அவர்களே,
    இராமனையும் கற்பனை என்று சொல்லிவிடாதிருங்கள்;
    அவரை நம்பித தான் இந்தியாவில் அநேகருடைய வாழ்க்கை ஓடுகிறது..!//

    ஸ்ரீ ராமன் மாத்திரம் அல்ல ஸ்ரீ கிருஷ்ணரையும் கற்பனை என்று கூட கொள்ளலாம் , அதனால் ஒன்றும் குறைந்து விடப்போவது இல்லை ஏனெனில் அந்த கற்பனைகளை விட நிஜமான ஒன்றில் எல்லோரும் உறுதியாக உள்ளோம், ” அகம் பிரம்மாஸ்மி ” .

    அந்த கற்பனை பாத்திரங்கள் வாழ்ந்த வாழ்க்கயை அலசி நாங்கள் கண்டுகொண்டது அவர்கள் இருந்தார்களா இல்லையா என்பது அல்ல
    வாழ்க்கையின் தத்துவம் என்ன என்பதுதான்.

    எப்படி வாழக்கூடாது என்பதற்கும், எப்படி வாழவேண்டும் என்பதற்கும் அந்த கற்பனை பாத்திரங்கள் பங்கெடுத்த காவியங்கள் எங்களுக்கு நிறையவே கற்றுக்கொடுத்து உள்ளது. அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்டோ இல்லையோ இன்று எம்மை சரியான பாதையில் வாழவைக்கிறார்கள்.

    அவர்கள் பொய் என்றால் நாங்கள் அதற்காக வருந்தப்போவது இல்லை, உண்மை எனில் அதற்காக மாற்றாரின் வேதங்களிலும், கலாச்சாரத்திலும் அவர்களை புதைத்து ஆதாரம் தேடி அலையப்போவதுமில்லை.

  170. There is a limit to the patience and tolerance on the part of Hindus. NEITHER Mohmedans NOR Christians can withstand If they start retaliating. There is a saying in Tamil that “Saadhu Mirandaal Kaadu Kollaatu.” You also have Tirukkural that warns “Gunam enum kunreri ninraar vekuli kanamenum kaattal aritu.”

    The patience and tolerance of Hindus should not be taken as cowardice and ignorance or insensitiveness.

    The removal of Babri memorial did NOT happen all of a sudden on a fine morning. There was a demand for its removal ever since it was built that is from five hundred years. Since there was no reaction to the age old demand, Hindus had to take the responsibility of removing that national shame and humiliation into their hands.

    Unless the Christian game plan of proselytisation by hook or crook is stopped, the ire of Hindus might turn on them, like an elephant under rage.

    Hindus have enormous inner strength in store and that is why they are given the tendency of tolerance and patience also. Do NOT under estimate that.

    There is always Sama Dana Beda and finally, Dhanda as options.

    Hindus always retaliate after extreme provocation. Gujarath is a sample of that. And in Gujarath, the BJP govt of Gujarath did take suitable action to maintain law and order. Many Hindus also died in the process of govt action in maintaining law and order and Sri Narendra Modi had to face condemnation from local HIndus for that.

    Gujarath incidents are the aftermath of Godhra Rly Station attrocity of Mohmedan hooligans.

    Stop reminding Gujarath incident without going into details.

    MALARMANNAN

  171. Dear Malarmannan sir,
    I am sorry, if you were hurt by my words. Here are the answers for your questions:
    //3. Howcome anybody is born a sinner and sex is a sin.//

    Sin entered Adam when he went against the will of GOD in the garden of eden (I know you will have questions in this too). Life is passed from the man, while the woman acts as the container and preserver of the baby. All the Children and Grand Children of Adam inherited this sin, all with the other qualities from Adam. So the entire man kind is filled with sin. So, every human is a sinner. The woman is also a sinner, but doesn’t pass her sin to her next generation because the life is passed thru the man and not by woman.

    //4. If you say anybody a sinner by birth or even before being in the process of being born that is during intercourse by his/her would be father and mother, will it not amonut to create inferiority complex in the mind right from a tender age.//

    Sin is like a killer disease (but curable by the blood of Christ). It is always, better to know the real facts (even the bad news too), rather than living in a fantasy. Only when you know that you have a disease, you will look out for medication. The Children will not get in the inferiority complex, because well before they know that they are sinners they have the remedy for the sin. And they can accept the remedy immediatly. It is foolishness for a person to be sick and imagining that they are healthy and die out of the sickness.

    //5. What is the fun in creating everybody a sinner and then redeeming everyone through Bible, which is creation of human beings. Has God nothing else that he should waste his time in such meanigless game?//

    There is no fun in this. God doesn’t create us as sinners. But when we come to this world, we inherite that from our father (which was the disobediance of Adam). Yes, it is Adam’s fault, but we cannot say that as excuse. If you inherite any disease from your parents, won’t go for the treatment? If you are avoiding the treatment, just blaming your parents, your sickness will kill you. So we have to responsible for ourselves.

    Thanks,
    Ashok

  172. //ராமனை கற்பனை என்று சொன்னாலும் இந்துமதம் நிற்கும்.
    இயேசுவை கற்பனை என்றால், கிறிஸ்துவம் நிற்குமா?//
    That is the main difference. We believe in a GOD, but you beleive in a concept. We are not bothered about our religion, Jesus is sufficient for us.
    There is a Judgement day, and on that day, Jesus is going to judge you. And your concepts will not going to help you to escape the eternal hell. It is a hard truth, which you guys doesn’t want to listen. I am sorry for you guys.

    With Love,
    Ashok

  173. இந்துக்களுக்கு “தர்ம யுத்தம்” எனப் படுவதே இஸ்லாமியருக்கு “ஜிகாத்”
    அப்படித் தானே..? போகட்டும்;

    நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு ஒரு வார்த்தை…
    பாவிகள் என்றால் இந்துக்களின் மனம் ஏன் புண்பட வேண்டும்?

    இந்து மதத்தில் இல்லாத தோஷமா, பரிகாரமா?
    கும்பிடற சாமிக்கே பொட்டு வைத்து அழகு பார்க்கும் நாம் அதை ஏன் வைத்துக் கொள்ளுகிறோம் என்று சிந்தித்தோமா?

    இந்து மதத்தில் சொர்க்கம் நரகம் இல்லையா?
    எமன் சித்ரகுப்தன் வரவு செலவு பாவ புண்ணிய கணக்கு கதைகள் இல்லையா?

    இந்துக்கள் வாழ்ந்து கெட்டவர்களய்யா..,அதிலும் தின்று கெட்டவர்கள்; எனவேதான் மதம் மாற்றிய அசோகர் முதலாக கோட்டைவிட்டுவிட்டு நமக்கு சிறிதும் சம்பந்தமில்லாத அசோக சக்கரத்தின் ஆட்சியின் கீழ் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்;

    “பலி” மார்க்கத்துக்கு இந்து மார்க்கத்தைவிட சிறந்த உதாரணம் சூரியனுக்குக் கீழே கிடையாது; எலுமிச்சை பழம் முதல் கடாவெட்டி பொங்க வைப்பது வரை இங்கே ஏற்கனவே எல்லாம் இருக்கிறது;

    தோஷம், பரிகாரம், பிரசாதம் இதற்குள்ளேயே தான் இந்து மார்க்கம் சுழன்றுக் கொண்டிருக்கிறது; கை கயிறு கட்டு முதலாக தாயத்துக்கள் வரை சொல்லும் சேதி என்ன?யாரிடமிருந்து காத்துக் கொள்ள அவைகளை அணிகிறோம்?”திருஷ்டி” என்பதன் தத்துவம் என்ன‌?
    ‘ஆரத்தி” எடுப்பதன் பொருள் என்ன‌?

    இங்கே எல்லாமே ஒரு “கான்செப்ட்” தான் என்கிறார்கள், பெரியவர்கள்;
    அப்படியானால் “ரியாலிட்டி” என்பதே இல்லையா?
    ரிகர்சல் உண்டு; “ஷோ” கிடையாது, அப்படித்தானே?

    ரொம்ப துணிகரமாக ஒருவர் “சிருஷ்டி கர்த்தா” என்பதே ஒரு கான்செப்ட் என்றார்; இன்னொருத்தர் “அகம் ப்ரம்மாஸ்மி” என்கிறார்;

    அப்போ உள்ளே வெறும் சூன்யம் தானா?
    அதனால்தான் சூன்யம் வைப்பவருக்கு அப்படி பயப்படுகிறோமா?

    நீங்களெல்லாரும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளரை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் ஒரே இறைவன் மூன்று தொழிலை செய்கிறான் என்ற அளவிலாவது யோசித்துப்பாருங்கள்; ஓரளவு தெளிவு வரலாம்;

  174. Dear Sri Glady,
    The Christian mindset mocks at others’ beliefs and customs, calls them satanic.
    The HIndu mindset understands individual preference and freedom of choice.
    This is the basic difference.

    As long as Hindus observe patience, you will mock at them as cowards and weaklings. When they retaliate only after several provocations, you will equate them with Jehadis.

    We are advised and allowed Sama, Dana, Beda and finally, Dhanda.
    There is no such thing in Jehad.

    That is the basic difference between Dharma Yudhdham and Jehad.

    The Christian mindset is weak in lanalytical faculty. That creates all problems. While it creates god the big brother are strict father, it also creates equally strong satan, and at times, making satan stronger than god!

    YES, we resort to Dharma Yudhdham when there is no other no other alternative. This is the message you get from avatara concept. Everything is at concept level and you have to make out according to your intellect that has been given to you. It is your intellect level to transform a concept to reality that is why you are given the faculty of intellect.
    MALARMANNAN

  175. அருமை சகோதரர் கிலாடியார் அவர்களே,

    //இந்துக்களுக்கு “தர்ம யுத்தம்” எனப் படுவதே இஸ்லாமியருக்கு “ஜிகாத்”
    அப்படித் தானே..? போகட்டும்//

    சாதுக்களாய் சூழ்ச்சி செய்யும் சுவிசேசக் காரரைப் போல இறைவனுக்கு எதிராக மனமொப்பி பொய் சொல்லுகிறீர்களே, ஏன் இப்படி?

    //இந்துக்களுக்கு “தர்ம யுத்தம்” எனப் படுவதே இஸ்லாமியருக்கு “ஜிகாத்”
    அப்படித் தானே..? //

    இந்த பொய்ப் பழியை பல முறை எழுதி விட்டீர்கள்.

    இந்த பொய்ப் பிரச்சாரத்துக்கு பதிலாக

    இந்தியாவில் நடந்த தரும யுத்தங்கள் எதுவும் சமயக் காராணங்களுக்காக, மத வெறியின் அடிப் படையில் நடத்தப் படவில்லை.

    பாண்டவர்களுக்காக “ஐந்து கிராமங்களை தர முடியுமா, ஐந்து வீடுகளையாவது தர முடியுமா”, என்று கிருட்டினர் கேட்ட போது , “வூசி முனை இடம் கூடத் தர முடியாது” என்று கூறி பாண்டவர்களின் வாழ்வாதாரத்தை அழித்த துரியோதனனின் பெரும் படைக்கு எதிராக நடத்தப் பட்டது தான் தரும யுத்தம்.

    இதை “என் கடவுள் தான் ஒரே ஜீவனுள்ள கடவுள் மற்ற கடவுள்கள் ஜீவநில்லாத கல்லுகள்” என்பவரும்,
    “என் கடவுள்தான் சர்வ வல்லமையுல் ஒரே கடவுள்” என்று நினைப்பவரும், தங்களின் கடவுளின் வலிமையை நிரூபிக்க தாங்கள் வாளை உருவி இரத்த வெள்ளத்தை ஓட விட்ட செயலுடன் ஒப்பிடுகிறீர்கள்.

    இது இந்து மதத்தின் அஹிம்சைக் கொள்கையை அழித்து எங்களையும் வெறியராக்க செய்யும் சூழ்ச்சியே!

    இதை நாம் பலமுறை விளக்கி விட்டோம்.
    நாம் விளக்குமுன்பே நீங்கள் அறிந்ததுதான்.

    ஆனாலும் சுவிசேஷ வெறியில் சூழ்ச்சி பிரச்சாரத்தை
    மீண்டும் மீண்டும் செய்வது சரியா?

  176. அருமை சகோதரர் கிலாடியார் அவர்களே,

    //நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு ஒரு வார்த்தை…
    பாவிகள் என்றால் இந்துக்களின் மனம் ஏன் புண்பட வேண்டும்?//

    அருமை சகோதரர் கிலாடியார் அவர்களே,

    உலகத்தில் மத வெறியை பரப்பும் வகையிலே, பிற மதங்களின் மீது வெறுப்புக் கருத்துக்களையும், பிற மார்க்கங்களை பின்பற்றுபவர்களை இழிவாகப் பேசியும் பல பாவங்களை செய்து வருபவர்கள், தங்களைப் பாவிகள் என்று அழைத்துக் கொள்வதை நாங்கள் குறை கூறவில்லை.

    ஆனால் உலகில் உள்ள எல்லோரையும் பாவிகள் என்று அழைத்து எல்லோரையும் பாவப் பட்டியலில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? எல்லோரையும் பாவப் பட்டியலில் சேர்ப்பது எந்த வகையில் சரி?

  177. நண்பர்களே,
    இந்து மதம் சிறந்தது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது, அறிவியல் பூர்வமானது என்றால், ஏன் சார் அது அதிக மக்களை சென்றடையவில்லை? இந்தியாவில் எப்படி மற்ற மதங்கள் தோன்றியது? கேட்டால், நாத்திகம் கூட இந்து மதம்தான் என்கிறீர்கள்( புத்தமும், சமணமும் உங்கள் மதம்தான் என்று சொல்லிவிட்டீர்கள்).
    மேலும் ஒருவர் சொல்லுகிறார், வெறும் கான்செப்ட் போதும் என்று. “நான் கடவுள்” படம் பார்த்துவிட்டு, டயலாக் பேசுகிறார், இன்னொருவர்.
    சிந்திக்க சொன்னால் சண்டைக்கு வருகிறீர்கள்.
    சந்தோஷ் அவர்களே, நீங்கள் பாவி என்று, நானும் பழைய பாவி என்கிற தைரியத்தில்தான் சொல்லுகிறோம். நீங்களாவது சிந்தியுங்கள்.

    அன்புடன்,
    அசோக். (உண்மை பெயர்தாங்க)

  178. நன்றி மலர்மன்னை ஐயா & ராம்,
    இங்கே அமெரிக்காவில் என் ரூம் மேட் ஒரு கிறிஸ்துவர். என் நிலைமை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன். நல்ல நேரத்தில், தமிழ் ஹிந்து மூலம் உங்கள் நட்பு கிடைத்தது. நான், ஒரு கீதை ஆர்டர் செய்து இருக்கிறேன்.
    மிக்க நன்றி.
    //பாவிகள் என்றால் இந்துக்களின் மனம் ஏன் புண்பட வேண்டும்?//
    நொந்து போய் இருக்கும் என் மனம் புண் படுது ஐயா. கிலாடி. இங்கே வெள்ளையன் கூட, நம்ம கலாச்சாரத்தை கேட்டு ஆச்சர்ய படுறான், நீங்க என்னடான்னா சொந்த (நா)வீட்டையே அசிங்க படுத்தறீங்களே. நீங்க பைபிள் சொன்னபடி வாழ்ந்துக்கோங்க, இந்துக்களை கீதைப்படி வாழவிடுங்க. தொந்தரவு பண்ணாதீங்க.
    சந்தோஷ்.

  179. //இந்து மதம் சிறந்தது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது, அறிவியல் பூர்வமானது என்றால், ஏன் சார் அது அதிக மக்களை சென்றடையவில்லை?//

    அய்யா, சார்பியல் தேற்றம் பிரபஞ்சம் தோன்றிய நாள் முதலாக சத்தியம் என்றாலும் அது இன்றைக்கும் பலருக்கு புரிவதில்லையே ஏன்? ஒளியின் வேகம் குறித்து ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு பல இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள விண்மீன் ஒளிகள் நம்மை வந்தடையும் போதும் மனிதனின் அறியாமையில் விளைந்த “ஆதியாகம” கதையை நம்பி சிருஷ்டியின் வயதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்று நம்புகிற எவாஞ்சலிஸ்டுகளுக்கு இன்னும் பிஸினஸ் ஜரூராக நடக்கிறதே அதன் காரணம் என்ன? நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் இவற்றுக்கும் விடைகள் ஒன்றுதான். வாழ்க வளமுடனும் ….கொஞ்சமாவது சிந்திக்கும் திறனுடனும். (விவிலியத்தை நம்புகிறவனை சிந்திக்க சொல்வது குரூரமான செயல்தான் என்றாலும் ஏதாவது அற்புத சுகமளிக்கும் அல்லேலுயாகூட்டம் பொயாவது உங்கள் மூளைக்குள் ஏதாவது சிலிக்கன் சில்லு வேலை செய்ய ஆரம்பித்துவிடாதா என்கிற அபார நம்பிக்கையுடன் :) )
    அரவிந்தன் நீலகண்டன்

  180. Dear Brother Ashok Kumar Ganesan,

    //சந்தோஷ் அவர்களே, நீங்கள் பாவி என்று, நானும் பழைய பாவி என்கிற தைரியத்தில்தான் சொல்லுகிறோம். நீங்களாவது சிந்தியுங்கள்//

    உலகத்தில் மத வெறியை பரப்பும் வகையிலே, பிற மதங்களின் மீது வெறுப்புக் கருத்துக்களையும், பிற மார்க்கங்களை பின்பற்றுபவர்களை இழிவாகப் பேசியும் பல பாவங்களை செய்து வருபவர்கள், தங்களைப் பாவிகள் என்று அழைத்துக் கொள்வதை நாங்கள் குறை கூறவில்லை.

    ஆனால் உலகில் உள்ள எல்லோரையும் பாவிகள் என்று அழைத்து எல்லோரையும் பாவப் பட்டியலில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? எல்லோரையும் பாவப் பட்டியலில் சேர்ப்பது எந்த வகையில் சரி?

  181. //இந்தியாவில் நடந்த தரும யுத்தங்கள் எதுவும் சமயக் காராணங்களுக்காக, மத வெறியின் அடிப் படையில் நடத்தப் படவில்லை.//
    இந்தியர்கள், ஆன்மீக விஷயத்துக்காக சண்டை போட்டதில்லை. போட்ட சண்டை எல்லாம் லோவ்கீக விஷயத்துக்காக மட்டுமே. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும். அதாவது ராமாயணம், மகாபாரதம் பற்றி சொல்லுகிறேன். இது இரண்டும் வெறும் கதை என்று பலருக்கும் தெரியும், இருந்தாலும் சொல்லுகிறேன்.
    அன்புடன்,
    அசோக்.

  182. அசோக் சார்,

    //நண்பர்களே,
    இந்து மதம் சிறந்தது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது, அறிவியல் பூர்வமானது என்றால், ஏன் சார் அது அதிக மக்களை சென்றடையவில்லை? //

    நூலகத்தில் அதிக கூட்டம் இல்லை சார்!

    டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது சார்!

    அப்ப நூலகத்தை விட டாஸ்மாக்தான் நல்ல விசயமா சார்?

    கூட்டம் அதிகம் இருக்கிற இடத்தில் தான் சரியான உண்மையும் நன்மையும் இருக்கிறது என்று நினைத்து நீங்கள் இன்னும் இன்னும் அதிக மயக்கத்திலே ஆழ்ந்து விடாதீர்கள் சார்!

    தெளிவடைந்து நூலத்துக்கு வாருங்கள் சார்!

    அறிவுக் கண்கள் திறக்கும் சார்!

  183. Abrahamic religions were thrust on people everywhere including Hindustan and that is the reason those two religions have spread like parthenium, the poisonous plant. These two Abrahamic religions change their strategies to convert people to suit times. Christianity was spread by force only at initial stage. Now it is applying various strategies to suit the times. Mohmedanism still wishes to apply force to thrust it on people but is compelled to go the Christian way to proselytise people by various cunning methods because of change of times. Hindu religion does not apply these courses and that is the reason its spreading is slow. Many thinkers and knowledgeable persons have started deserting Christian and Mohmedan religions and are drawn toward Hinduism.
    MALARMANNAN

  184. //நூலகத்தில் அதிக கூட்டம் இல்லை சார்!
    டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது சார்!
    அப்ப நூலகத்தை விட டாஸ்மாக்தான் நல்ல விசயமா சார்? ///
    திருச்சிக்காரன் சார், உங்கள் உவமைகளுக்கும் சிறந்த ஆழமான விளக்கங்களுக்கும் தலைவனங்குகிறேன்.

  185. //நூலகத்தில் அதிக கூட்டம் இல்லை சார்!
    டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது சார்!
    அப்ப நூலகத்தை விட டாஸ்மாக்தான் நல்ல விசயமா சார்?
    கூட்டம் அதிகம் இருக்கிற இடத்தில் தான் சரியான உண்மையும் நன்மையும் இருக்கிறது என்று நினைத்து நீங்கள் இன்னும் இன்னும் அதிக மயக்கத்திலே ஆழ்ந்து விடாதீர்கள் சார்!
    தெளிவடைந்து நூலத்துக்கு வாருங்கள் சார்!
    அறிவுக் கண்கள் திறக்கும் சார்! - Sri Thiruchikkaaran//

    I think there can be no other suitable reply to Sri Ashok’s mockeries. My whole hearted appreciation to Sri Thiruchikkaaran. I wish we have Sri Thiruchikkaaran in every town to open the eyes of converts so that they return to their parent faith which is the need of the hour. Counter proselytisation is the most urgent task before every responsible Hindu today.
    I am only asking the converts of Hindustan to come home to their original faith. I am NOT asking any original Christian OR original Mohmedan to become Hindu, as they want Hindus to become Christians or Mohmedans.

    As Sri Thiruchikkaaran rightly said, let us strive to bring them to the library that is the parent faith from the arrack shop that is their adopted faith.
    MALARMANNAN

  186. அருமை சகோதரர் அசோக் அவர்களே,

    //இந்தியர்கள், ஆன்மீக விஷயத்துக்காக சண்டை போட்டதில்லை. போட்ட சண்டை எல்லாம் லோவ்கீக விஷயத்துக்காக மட்டுமே. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும். அதாவது ராமாயணம், மகாபாரதம் பற்றி சொல்லுகிறேன். .//

    இந்தக் கருத்துக்காக சகோதரர் அசோக் அவர்களைப் பாராட்டுகிறேன்.

    டேனியலார், கிலாடியார் இவர்களுடன் ஒப்பிடும்போது அசோக் சில நேரங்களில் நடுநிலையாக சிந்திக்கிறார். ஆயிரம் ஆனாலும் அவரும் இந்தியர் தானே? அவர் உள்ளத்தின் அடியில் இருக்கும் நியாயம் வெளிவருகிறது.

    ஆனால் சகோதரர் அசோக் உடனே அவசரமாக,

    //அதாவது ராமாயணம், மகாபாரதம் பற்றி சொல்லுகிறேன். இது இரண்டும் வெறும் கதை என்று பலருக்கும் தெரியும், இருந்தாலும் சொல்லுகிறேன்//
    என்று எழுத வேண்டிய அவசியம் என்ன?

    இராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ நம்பி இந்து மதம் இல்லை.

    அதே நேரம் இந்த இரண்டுமே உண்மை வரலாறு இல்லை என்றோ, வெறும் கதைகள் என்றோ அவ்வளவு எளிதில் கதை கட்ட முடியாத அளவுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

    வரலாற்று ஆதாரம் என்பது என்ன? அந்தந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சில் கிடைத்த பொருட்டகளைக் கொண்டு வூகித்தல் இப்படிதான் வரலாறு உண்டாக்கப்படுகிறது!

    வரலாறு என்பது மின்னியக்க வீதிகளைப் போல தெளிவாக நிரூபிக்ப் பட முடியாதது!

    வ‌ர‌லாற்றுக்கு முக்கிய‌ சாட்சி கால‌ம் கால‌மாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு வ‌ருவ‌துதான். அது ஒரு முக்கிய‌மான‌ Communication method.

    கற்ப்புக்கரசி கண்ணகியின் வாழ்க்கைக்கு என்ன ஆதாரம்- சிலப்பதிகாரம் என்னும் நூலைத் தவிர? இராமரின் வாழ்க்கைக்கு நூல் ஆதாரமாக இராமாயணமும், பொருள் ஆதாரமாக (Physical evidence) இந்தப் பாலமும் உள்ளன!

    கூகிள் Earth ல் சென்று அந்தப் பாலத்தைப் பாருங்கள். மிகத் தெளிவாக ஒரு கோடு போல பாலம் தெரிகிறதே?

    அது எப்படி இயற்கை சரியாக பால வடிவில் உருவாக்கும்?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின், நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்!

    பாலத்தில் அகழ்வாராய்ச்சி செய்யுங்கள், அதன் பரிமாண வரை படங்களை எடுங்கள் என்று அழுத்தி சொல்லுகிறோம், தைரியமாக சொல்லுகிறோம்.

    ஆனால் அரசு அகழ்வாராய்ச்சி செய்ய மறுக்கிறது ஏன்? அறிவியலின் பாதையில் போகத் தயங்குவது ஏன்?

    அகழ்வாராய்ச்சி செய்தால் அது பாலம் தான் என்ற உண்மை தெரிந்து விடும் என்று மைய அரசு, பால் மாறுகிறது!

    நீதி மன்றம் அறிவுரை கூறியும் அகழ்வாராய்ச்சி செய்யாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது.

    இராமாயணம் நிச்சயம் நடந்த நிகழ்ச்சி என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அது வெறும் கதையாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்;

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள், அறிவியல் கண்ணோட்டத்தின் மூலமாகவே அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

    இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ள வடிவமும், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இடமும் இராமாயணம் உண்மை நிகழ்வாகவே இருந்திருக்கும் என்ற கருத்துக்கே வலு சேர்க்கின்றன.

    முன்பு நான் இராமயணத்தப் பற்றியோ, இந்தப் பாலத்தைப் பற்றியோ அதிக அக்கறை காட்டவில்லை.

    ஆனால் இந்தப் பாலம் பற்றிய சர்ச்சை வந்தது முதல் நான் இதை கவனத்துடன் நோக்கிய வகையில், இது நேர்த்தியாக அமைக்கப் பட்ட பாலமாகவே, செயற்கையாக உருவாக்கப் பட்ட பாலமாகவே கருத வேண்டியுள்ளது.

    காணாத‌ , உண‌ராத‌ ஒரு ச‌க்திக்கு க‌ண்ண மூடிக் கொண்டு, வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் சாட்சி குடுக்கும் போது, காணும் ஒரு பொருளை ஏன் ஒத்துக் கொள்ள‌க் கூடாது?

    குறுகிய தொலைவு உள்ள கடலைக் கடக்க அறிவியல் அடிப்படையில் என்ன என்ன சாத்தியக் கூறுகள் உள்ளன?

    வான் வழி போக்குவரத்து ஒரு முறையாகும்.

    கப்பல் வழியே கடந்து செல்லுதல் இன்னொரு முறை.

    அதிக பேர் கடக்க சிறந்த முறை பாலம் அமைத்தலே.

    எனவே அறிவியல் முறைப்படி பாலம் அமைத்து கடலைக் கடந்து மறுகரை சென்று உள்ளனர் இராமரும், படையினரும்.

    ஆனால் இதே போல குறுகிய தொலைவு உள்ள செங்கடல் பகுதியை கடக்க ரபி மோசஸ் அவர்கள் கடைப் பிடித்தாக கூறிய அறிவியல் முறை என்ன தெரியுமா?

    ரபி மோசசும் பிற யூதர்களும் எகிப்திலிருந்து தப்பி வந்து செங்கடல் முன்னாள் நின்ற போது, செங்கடல் இரண்டாகப் பிளந்து, நடுவிலே பாதையை விட்டு, இரண்டு பக்கமும் கடல் நீர் சுவர் போல நிற்க சாவகாசமாக அந்தப் பாதைக்குள் நடந்து பாலஸ்தீனியப் பகுதியை அடைகின்றனர்

    இதைக் கூட நாங்கள் கதை என்று அடித்துக் கூறவில்லை- ஆனால் அறிவியல் கோட்பாட்டுக்கு எதிரானது என்பது எல்லோருக்கும் தெரியும்-

    அறிவியல் முறைப் படி நீர் (water) கண்டிப்பாக தானாக பிரியவோ எந்த தடுப்பணையும் இல்லாமல் அப்படி சுவர் போல நிற்கவோ முடியாது.

    ஆனால் அறிவியலுக்கு மேலாக தன்னுடைய ஸ்பெஷல் சக்தியை வைத்து கர்த்தர் அப்படிப் பிரித்து வைத்தாரா என்பது நமக்குத் தெரியாது.

    எனவே அவர்களின் கடல் பிரிப்பு கதையை நாம் ஒத்துக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதைப் பற்றிய நம்முடைய இறுதி முடிவை ஒத்தி வைக்கிறோம்.

    ஆனால் இந்த ரபி மோசஸின் கடல் பிரிப்பு கதையை அப்படியே நம்ப வேண்டும் என்றும்,

    அறிவியல் பூர்வமான ஆதாரம் உள்ள பாலத்தின் வழியே சென்ற இராமயண வரலாற்று நிகழ்வை நாம் கட்டுக் கதை என்று கூற வேண்டும் என்றும், சகோதரர் அசோக் நம்மைக் கட்டாயப்படுத்துவது நியாயமா?

    இந்த உண்மைகளை எடுத்து விளக்கினால் நாம் பாவியா?

  187. சகோதரர் ram அவர்களே ,

    //திருச்சிக்காரன் சார், உங்கள் உவமைகளுக்கும் சிறந்த ஆழமான விளக்கங்களுக்கும் தலைவனங்குகிறேன்.//

    நீங்கள் பாராட்ட வேண்டியது இந்து மதத்தைத் தான். நான் சாதரணமானவன் என்னிடம் ஒரு சிறப்பும் இல்லை.

    என் எழுத்து வலிமையாக இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் இந்து மதம் உண்மையை, சரியான உண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதுதான்.

    என்னை விட பல மங்கு சிறப்பாக எழுத உங்களால் முடியும்

    “நீ என்னை விட வலிமை உடையவனாக இருக்கிறாய். இது என் மேல் ஆணை” என்று நம்மைப் பார்த்துக் கூறிய இணையற்ற சுவாமி விவேகானந்தர் எழுதியதைப் படியுங்கள்!

  188. ஸ்ரீ மலர்மன்னன் ஐயா அவர்களே,

    உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களைப் போன்ற பெரியவர்கள் பாராட்டைப் பெரும் அளவிற்கு நான் தகுதி உடையவன் அல்ல. எனினும் உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அளவிற்கு நாங்கள் உழைக்கவோ, தியாகம் செய்யவோ இல்லை.

    பல முறை உங்களோடு கருத்துக்களில் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால், அது கருத்தளவில் தானே தவிர தனிப் பட்ட முறையில் அல்ல.

    எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும் இடம் இல்லாத மார்க்கங்கள் போல அல்லாமல் அறிவுக்கு, உண்மைக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கும் தருமம் என்பதால் தத்துவ விவாதங்களை நாம் நிகழ்த்த வேண்டியுள்ளது.

    இந்து மதம் மிக முக்கியமான கால கட்டத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும்.

    இது வரை இல்லாத அளவில் இந்து மதத்தைப் பின்பற்றும் எல்லோரும் அதன் தத்துவங்களை முழுவதும் அறிந்து கொள்ளும் நிலையை இன்றைக்கு இன்டர்நெட் முதலியவை அளித்துள்ளன(ஆனாலும் பாரம்பரிய முறையான நேரடித் தொடர்புகள் அதிக சிறப்பானவை என்பதில் சந்தேகமில்லை)

    இந்த புதுப் புனலை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவும்,

    இந்து மதத்தை பின்பற்றும் ஒவ்வொருவரும் தைரியமான சிந்தனைகளுக்கு இடம் அளிக்கும் மார்க்கமாக இந்து மதம் இருப்பதை உறுதிப் படுத்தவுமே,

    நான் தொடர்ந்து கேள்விகளையும், மறுப்புகளையும் வெளியிட்டு வருகிறேன்.

    இந்து மத்தில் உள்ள நூறு கோடி பேரும் விவேகானதரைப் போல, சங்கரரைப் போல ஆத்மீக வலிமையும், அறிவும் உடையவர்களாக ஆவதை நான் என் குறிக்கோளாக வைத்து இருக்கிறேன்.

    உலகில் இருக்கும் எல்லோருக்கும் இந்து மதக் கருத்துக்கள் தேவையாக, மிக அவசியமாக உள்ளதாக சுவாமி விவேகானந்தர் அறிந்து அதை நம்மிடம் கூறியும் உள்ளார்.

    எனவே தான் நான் என் அறிவைக் கூர் தீட்டவே உங்களோடு கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தேன். உங்களிடம் இருந்து பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதயும