ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!
சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் ‘சொல்லும் செயலும்’ என்ற தலைப்பில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். அதாவது இறுதிவரை ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார் என்ற கருத்திலே சாமி சிதம்பரனார் சொல்கிறார்:-
‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”
சாமி சிதம்பரனார் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தி. க. நண்பர் ஒருவரிடம் ‘‘இறந்தபின் அவர்களுக்காக அழுவது கூட தவறா?’’ என்று கேட்டபோது, அந்த நண்பர் ‘‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’’ ஒரு பகுத்தறிவுவாதி. பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டார்’’ என்று கூறினார். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இந்த நிகழ்ச்சி ‘சொல்லும்-செயலும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. முன்னரே கூறியபடி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் இறுதிவரை ஒன்றாகவே இருக்கும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக் கூறுப்பட்டுள்ளது. வீரமணியும் 14-08-98 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேசும்போது ‘‘தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினார்களோ அதைச் செய்தார்கள். எதைச் செய்தார்களோ அதை மட்டும்தான் பேசினார்கள். இதுதான் பெரியாரின் ஒரு தனித்தன்மை. சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற அந்தக் கட்டத்திற்கு அய்யா அவர்கள் போகவில்லை’’ என்று சொல்கிறார்.
இவர் சொல்கின்றாற்போல ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்ததா? வீரமணி சொல்வதும் கூட உண்மையா?
பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலில் “தமது தள்ளாத வயதிலும் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் பெரியார் கண்ணீர் உகுத்ததும் இன்னும் நம் கண்களில் நிற்கிறது’’ என்று குறிப்பிடுகிறார். இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மேலும் ஓர் ஆதாரம் இதோ!
சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் ‘மூதறிஞர் காலமாகி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்த நேரம், தள்ளாத வயதிலும் மயானத்திற்கே வந்து பெரியார் சிறுபிள்ளை மாதிரி குலுங்கி குலுங்கி அழுதாரே’ என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் எதைச் சொன்னரோ அதைச் செய்யவில்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் வீரமணி என்ன சொல்கிறார்? தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினாரோ அதைச் செய்தார்கள் என்று சொல்கிறார். அதனால் வீரமணி எழுதிய புத்தகத்திலிருந்தே வீரமணி சொன்னது பொய் என்று நிரூபிக்கலாம். இதோ!
வீரமணி கூறுகிறார்:- ‘‘கொள்கைகளில் நேருக்கு நேர் எதிரியாக இருந்த திரு. ராஜாஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் எத்தனை முறை தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிப் பார்த்தார்கள்!ஆச்சாரியார் மறைந்தபோது முடியாத உடல்நிலையிலும் மயானம் வரை சென்று கசிந்துருகிய தந்தை பெரியாரின் மனிதாபிமானத்தையும்…” சங்கராச்சாரியார் என்ற புத்தகத்திலே இவ்வாறு கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் புகழ்கிறார்.
ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கே படிக்காத காரியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கரே செய்கிறபோது அதை பாராட்டுகிறாரே வீரமணி. இதுதான் பகுத்தறிவா? அதாவது பிணத்தைப் பார்த்து மக்கள் அழுவதால் அது மூடநம்பிக்கை; அதே பிணத்தைப் பார்த்து ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது வாரிசுகளோ அழுவதால் அது மனிதாபிமானம்; பகுத்தறிவு. இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அகராதி போலும்!
பிணத்தைப் பார்த்து அழக்ககூடாது என்று கட்டளையிட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதது ஏன்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அந்த கட்டத்திற்கே ஈ.வே. ராமசாமி நாயக்கர் போகவில்லை என்று வீரமணி பொய் சொல்கிறாரே-அப்படியென்றால் பிணத்தைப் பார்த்து அழக்கூடாது என்று சொன்னக் கட்டத்திலிருந்து இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதக்கட்டத்திற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் சென்றது ஏன்?
இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன?
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை நாம் அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்க்கையில் முரண்பாடாக நடந்துக்கொண்டதை மறைத்துப் பொய் சொல்வதுதான் அவருடைய சீடரான வீரமணியின் வேலை. பொய் சொல்வதில் வீரமணியும் விலக்கல்ல என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
இதில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது மூன்று மதத்துக்கும் பொதுவான ஏற்றாற்போல நாகம்மையாருடைய பிணத்தை எடுத்துச் சென்று எரிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கின்றனர். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதைவிட ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கை முரண்பாடுதான் தெரிகிறது.
எப்படி?
நாகம்மையார் 1933-ல் இறந்தார். 1933-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பழுத்த நாத்திகவாதியாக, பகுத்தறிவாளராக இருந்தார் என்பதை அவருடைய சீடர்கள் சொல்கின்றனர். 1927-லே இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று காந்தியிடம் சொன்னார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்தார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய மனைவியின் பிணத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப்படி எடுத்துச்சென்று எரித்தது கொள்கை முரண்பாடு அல்லவா? தன்னுடைய மனைவியின் பிணத்திற்காக எல்லா மதப்படியும் எடுத்துச் சென்றதுதான் பகுத்தறிவா? ஆனால் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா மதத்திற்கும் எதிராகத்தானே அடக்கம் செய்திருக்க வேண்டும்! அப்படி செய்பவர்தான் நாத்திகவாதி, பகுத்தறிவுவாதியாக இருக்கமுடியும்?
அதைவிட்டு தனக்காக, தன் குடும்பத்திற்காக ஒரு கொள்கையும், மக்களுக்கு ஒரு கொள்கையும் சொல்வதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பகுத்தறிவுக்கொள்கையா?

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்
பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் –
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும்
பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)
பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01
போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி
திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்
போகப் போகத் தெரியும் – 33
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி
போகப் போகத் தெரியும் – 32
போகப் போகத் தெரியும் – 30
போகப் போகத் தெரியும் – 28
போகப் போகத் தெரியும் – 27
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக
போகப் போகத் தெரியும் – 23
பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக்
பெரியாரின் மறுபக்கம் – பாகம்6 (பெரியாரின் கடவுள் நம்பிக்கை!)
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு
போகப் போகத் தெரியும்-11
போகப் போகத் தெரியும் – 5
வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு![பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்](http://www.tamilhindu.com/wp-content/uploads/veeramani.jpg)
பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்


‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”










நம்மில் பலரும் மிக வயதானவுடன் நம் நிலை அறியாது குழந்தைத்தனத்தை அடைந்துவிடுவோம். 1972 ல் பெரியாருக்கு 92 வயது. அதனால் தன்னுடன் பணிபுரிந்த தன் தோழமைக்கு உரிய ஒருவர் இறந்தது அவருக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சில நேரம் சகவயதினரின் மறைவு நம்மை பெரும் அளவு பாதிக்கும், அந்த வயதில் அவருக்கு கொள்கைளைவிட உணர்ச்சிகள் மேலாக எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்தவர் அன்பினால் உணர்ச்சி வசப்பட்டால் அது மூட நம்பிக்கை,பெரியார் அதே காரணங்களுக்காக உணர்ச்சி வசப்பட்டால் அது பகுத்தறிவு இல்லையா?
இதே பெரியார் மதச்சார்பற்ற அரசு பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
“மதச சார்பற்ற அரசு என்பது எந்த மதத்தையும் சாரதா அரசாக இருக்கவேண்டும்,அப்படி இல்லாமல் எல்லமத்தையும் சமமாக பின்பற்ற கூடாது.அது எல்ல ஆண்களையும் சமமாக விரும்பும் பெண்ணை கன்னிப்பெண் என்று சொல்வது போல ஆகிவிடும்” என்றார்.
அவர் அளவுகோல் படிப் பார்த்தால் எல்லா மதத்தையும் சமமாக பின்பற்றுவோர் எப்படி நாத்திக வாதியவார் ?
அவருக்கு சில உள்நோக்கங்கள் இருந்தும் அதனை வெளியில் சொல்லமுடியாமல் நாத்திகம்,பகுத்தறிவு என பிரசாரம் செய்ததும் ( மனசாட்சிக்கு மறைத்து) வெண்மணி படுகொலைக்கு சப்பை கட்டு கட்டியதிலிருந்தே தெரிகிறதே?
தமிழகம் இன்னும் அவரை விருப்பு வெறுப்பிலாமல் ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது.
//……..நம்மில் பலரும் மிக வயதானவுடன் நம் நிலை அறியாது குழந்தைத்தனத்தை அடைந்துவிடுவோம். 1972 ல் பெரியாருக்கு 92 வயது. அதனால் தன்னுடன் பணிபுரிந்த தன் தோழமைக்கு உரிய ஒருவர் இறந்தது அவருக்கு பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சில நேரம் சகவயதினரின் மறைவு நம்மை பெரும் அளவு பாதிக்கும், அந்த வயதில் அவருக்கு கொள்கைளைவிட உணர்ச்சிகள் மேலாக எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்……..//
ராம்குமரன்,
ஈவேராவிற்கு benefit of doubt கொடுப்பது தவறல்ல. அது ஒற்றைப் பார்வையை தவிர்க்கிறது.
ஈவேராவின் குணத்தைப் பார்க்கும்போது, அவருக்கு பணம் மற்றும் சொத்து விவகாரங்களில்தான் காதல். குடும்பப்பாங்கான கற்புக்கரசியான தனது மனைவியின் மேல் அவருக்குக் காதலே கிடையாது. ஏன் ஒரு சராசரி அன்பு கூட கிடையாது என்பது தெரிகிறது.
மேலும், ராஜகோபாலச்சாரிதான் அவருக்கு பணம் சொத்து அரசியல் செல்வாக்கு போன்றவற்றில் உதவி செய்தவர். அரசியல் விவகாரங்களில் ஒருவர் வளர மற்றவர் உதவியுள்ளனர். எனவே, ஈவேராவிற்கு அழுகை வர வயது ஒரு காரணமாகத் தெரியவில்லை.
நான் ஏதோ ஒரு இதழில் (வாரமலர் ?) படித்ததை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
ஈவேராவுடைய பெற்றோர்கள் அவருடைய மது மாது சூது போன்ற கீழ்த்தரமான நடத்தைகளையும், பண வெறியையும் கண்டு வெறுத்துப்போய் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் திருச்செந்தூர் முருகனுக்கு எழுதி வைத்துவிட்டார்கள். ஈவேராவிற்கு ஐந்து பைசாகூட கிடையாது.
அப்போது நொந்துபோயிருந்த ஈவேராவிற்கு அவரது சொத்துக்களைத் திரும்பிப்பெற உதவினவர் ராஜாஜிதான்.
திருச்செந்தூரில் இருக்கும் கடவுளின் பெயர் முருகன் இல்லை. அதனால், திருச்செந்தூரில் ஒரு முருகன் கோயில் கட்டி அந்தக் கோயிலுக்கு ட்ரஸ்டியாக ஈவேரா மாறினால் அந்த சொத்துக்கள் முழுவதும் ஈவேராவிற்கு வந்துவிடும் என்று அறிவுரை சொல்லி, அத்தனை சொத்துக்களையும் ஈவேராவிற்குக் கிடைக்கச் செய்தார் ராஜாஜி.
இப்படிப்பட்டவர் இறந்துபோனால் சாதாரண மனிதனே அழுவான். அப்படி இருக்கும்போது பணத்தாசை மிக்க ஈவேரா கதறி கதறி அழுததில் என்ன வியப்பு இருக்கக்கூடும்?
விசித்திரமான உண்மை என்னவென்றால், கடவுள் இல்லை அதுவும் இந்துக் கடவுளையும், இந்து மதத்தையும் அழிக்க வேண்டும் என்று போராடும் திக இயக்கத்தின் பணம் திருச்செந்தூரில் உள்ள ஒரு கோயில் பணம். ஒரு கோயில் பணத்தை இப்படி ஒரு இயக்கம் முறைகேடாகப் பயன்படுத்தலாமா என்பதும், இதை ஏன் யாரும் எதிர்த்துப் போராடவில்லை என்பதும் புரியாத புதிர்கள்.
முறைகேட்டினால் பணம்பெற்று, முறைகேடான வாழ்க்கையை வாழ்ந்து, முறைகேடான அரசியலை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்த ஈவேராவைப் பற்றிய உண்மைகளை சொல்ல அனைவரும் அஞ்சுகிறார்கள். வன்முறையால் அவை அடக்கப்படுகின்றன.
இந்த சூழலில் உண்மைகளை வெளியே சொல்லும் தீரர்களான சுப்புவும், வெங்கடேசனும் புதிய தலைமுறைக்கு நம்பிக்கையும், அறிவையும் அளிக்கிறார்கள். அவர்களுடைய இந்தப் பணியால் அடுத்த தலைமுறையாவது சாதி மத வெறி இல்லாமல், முன்னேற்றப்பாதையில் செல்லும். அவர்கள் வாழ்க !! அவர்களது சந்ததியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ அந்த திருச்செந்தூர் செந்திலாண்டவனையும், அதே திருச்செந்தூரில் உள்ள பொறுமையை இழந்துகொண்டிருக்கும் முருகப் பெருமானையும் வேண்டிக்கொள்கிறேன்.
ம.வெங்கடேசன் சொல்லியுள்ள இந்தத் தகவலில் இருந்து ஈவேராவிற்கு தன் மனைவியின் மேல் கொஞ்சம்கூட அன்பே இருந்ததில்லை தெளிவாகத் தெரிகிறது. தனது விபச்சாரத் தோழிகளுக்கும், அவர்களுடைய மாமாக்களும் தனது மனைவியையே உணவு சமைத்து வரச் சொன்ன ஈவேரா அவர் இறந்து போனபோது வருத்தப்படவில்லை என்பது ஒரு பெண்ணான எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
குடும்பப்பாங்கான ஒரு பெண் இறந்துபோனால் ஈவேராவிற்கு வருத்தமே ஏற்படாது.
அவருடைய கொள்கைகளை அப்படியே பின்பற்றியிருந்தால் அவருடைய தொண்டர்கள் ஈவேராவைப் போல விபச்சாரவிடுதிகளில்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், ஈவேராவை தங்களுடைய சாதி வெறிக்கும் மத வெறிக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துவதால், அவர்களுக்கு இப்படிப்பட்ட இழிநிலை ஏற்படவில்லை. கெட்டதிலும் நல்லது.
e v ramasamiyin kadavul illai enbathum kooda iraval kolgaithan. adhu comunistukalidam irundhu kalavadappattdhu. communistugalum kadavul maruppai kattuvatharkku munnurimai tharuvathillai manitha sakthi menmaiyanathu enbathai munniruthugirargal.
இந்து மதத்தை காக்க பெரியாரைத் திட்டினால் போதும் என்று நினைபவர்களுக்கு, ஒரு சக இந்து என்ற முறையில் நான் சொல்லிக் கொள்வது என்ன என்றால், நீங்கள் மலையைக் கிள்ளி எலியை அடிக்கப் பார்க்கிறீர்கள் என்பது தான். பெரியாரை பற்றி அவர் இப்படி, அப்படி என்று இப்போது விலாவாரியாக ஆராய்ந்து எழுதி நீங்கள் சாதிக்கப் போவது என்ன?
“கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்பதில் தவறில்லை. “கடவுள் இல்லை” என்று கூறுவதிலும் தவறு இல்லை.
கடவுள் இல்லை என்ற அடிப்படையில் இருந்து கொண்டு, அப்படி கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடுமோ என்று ஆராய்வதுதான், மிகச் சிறந்த கடவுள் ஆரய்ச்சி. விவேகானந்தர் நாத்தீகராக இருந்து ஆராய்ந்து ஆத்தீகர் ஆனவர்.
பெரியாரிடம் பகுத்தறிவும் இருந்தது. அடாவடியும் இருந்தது. பெரியார் கூறியதைப் படித்தவர்கள் அவரிடம் இருந்து அடாவடித் தனத்தை மட்டும் கற்றுக் கொண்டார்களே தவிர பகுத்தறிவைக் கற்கவில்லை.
பெரியாரிப் பாராட்டுவது என்றால் அவருடைய எதிர்த்து கேள்வி கேட்கும் Method is appreciable.
Tamil nadu politics was controlled by Bhramins, hence the fight to wrestle the power from Bhramins was started much before Periyaar by Justice Party leaders.
But we dont want to under estimate Periyaars effect on Tamil nadu soceity from the period 1920 to 1970.
But the effect of Periyaars writings can not make the same chemical reaction in tamil nadu hereafter.
Because Periyaars strong points were
1)Bhramins were not mingling with non- Bhramins.
Bhramins were considering themselves as higher class people during Periyaars days
2) Bhramins were high in numbers in Governmet Jobs and in Politics.
3) Hindu Religion was eclipsed with Superstition and Rigid caste system.
Now the above three points are nullified as follows,
1) Bhramins are mingling with non Bhramins freely. Many Bhramins eat at their friends home, including the friends from suppressed once.
2) Bhramins presence in Government offices are negligible
3) Hinduism is cleared of Superstition to a great extent. caste system is fostered by political leaders/ Caste leaders for their own benefit. now even suppressed people depict their caste tag proudly. Its only in tamil nadu the caste feeling is very high than in any other part of India. Hence in that way Periyaars camapaign in fact resulted increase in caste pride rather making a homogenious soceity.
Hence we can use Periyaars life as a mile stone, But its effect on future generations will be negligible.
The Congress fought against British from 1885 to 1947. But is there any meaning if congress started fighting against British now?
Similaraly Periyaar camapaigned against Hinduism, Caste proud Bhramins during 1920 to 1970. Now the caste feeling Bhramins are not there. They are gone.
I request the todays Hindutvaists as not to waste their time in debasing Periyaar, but use their energy to unite all Indians and to improve India.
Also Hinduism has povision for atheism in it. Hinduism allows rebellion against God.Infact the Periyaars history shows that Hinduism allows unbridled experiments on religion, while there is no scope or room for experimenters in many other religions! Hence please try to interpret Periyar in the right context, for the betterment of Hinduism!
We need not altogether reject Periyaar’s observation.
We have to understand and accept the following facts.
1) Bhramins were maintaining more distance from the other sections of the soceity
2) We failed to take the core principles of Hinduism to all sections of the Hindu Soceity.
3) We did not remove superstition from Hinduism fully.
On the above back ground , let us grasp Periyaar’s preachings in the right context and shall work for the Betterment of all Indians, not Just only other Hindus, but also Muslims, Christians as well- though they keep on abusing us!
Another part of the matter is that we dont have Bhramins- good,kind brilliant and gentleman Bhramins now.
Because I think that we, the so called ” Bhramins ” of today are very weak in Spirtualism and religion, which was exposed by Jeyanthiraa episode.We paid little or no attention to Hinduism to that extent that we could not identify whether a person is fit to be a Guru or not!
So we have to learn, modify little!
And we have lot of work left before us.
If we read what Swami Vivekanatha said, it can shed more light!
திருச்சிக்காரனின் வார்த்தைகள் சிந்திக்க தகுந்தவை
பெரியாரை பற்றி ஆராய்ந்து இந்து மதத்திற்கு ஒரு இலாபமும் இல்லை, ஆனால் இந்து மதத்தை பற்றி பலரின் மனதில் ஒரு கெட்ட எண்ணத்தை உருவாக்கிய , இந்து மதத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்பொழுது அதில் உள்ள தீமைகளை நீக்க குரல்கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இந்து மதத்தை தவறு அது சொல்லும் தத்துவங்கள் அனைத்தும் குப்பை என்று சொல்லி பலரையும் இந்து மதமென்றால் ஏதோ தீயது என்ற நம்ப வைத்த ஒருவரின் யோக்கியதையை பற்றி ஆராய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால் அவரைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. பகுத்தறிவு கொள்கைப்படி ஒருவரை பற்றி ஆராய்ந்து நம் கருத்தை தெரிவிப்பது வசைப்பாடுதல் ஆகாது.
With reference to Sri Tiruchikaaran’s observations:
1. I earnestly request him to make comments after having facts and figures at his disposal thoroughly.
2. There was very good interaction between Brahmins and other catste people all through past centuries. You need to read history, literature and sociology to konw about this. Just read one book titled En Charitram by Dr U.Ve.Saa. and you will know what kind of rapport was in vogue in the 18th and 19th century Hindu society in Tamilnadu.
3. Religion and social customs are two different aspects. You should not blame the religion if you find any anamoilies in the customs of a society. Customs come by practice started by some influential at a point of time and continued generation after generation blindly by practice. For instance, there is no sanction for castes or even reference in our Srutis OR Smrutis. Only Varna is discussed-NOT prescribed or imposed- in our smrutis. But the main blame on Hinduism is the caste system prevailing in the Hindu society with high and low status confusing it with Varna! Hindu religion has NOT NOT devided people on the basis of castes. Also, there is no sanction for untouchability in Hindu religion. It is NOT only Brahimns by caste but also people of other castes who consider themselves higher than the other, who are a step below in the social hierarchy. Even among the Dalits, there is this kind of high and low classification. Again, it is a socail evil and religion is NOT responsible for this. This kind of High and Low differences is prevalent in every society in different forms. Ask Calcary Siva and he will tell you about Arabian Society. Even in African societies, there are caste differences with high and low conscinece.
4. It is wrong to concieve that Brahmins were occupying most of the jobs in the government during the Bitish Raj. There were many nonBrahmins holding top posts and you have to study the situation of 18th and 19 th centures. Even before that, nonBrahmins held higher posts at the time of Chera, Chozha Pandia Kings, Nayaks, etc. You need to study the history to konw this. Brahimns took the lead in govt job oriented education while other communities concentrated on business, agriculture, crafts etc. Since there was no sufficient hands from other castes, opportunities atoumatically came to Brahimins., generally.
5. Again, it was Brahmins who took the lead in Congress movement. The mantle automatically fell into the hands of Brahmins. Acually, many Brahmnins encouraged and motivated non Brahmins to join Congress. For instance, it was Rajaji, a Brahmin, who motivated EVR to join Congress and EVR could even become the president of TNCC. Again, Sri Staymoorhti, a Brahmin, encouraged Kamaraj and gave him opportunity to come to the forefront in the party. When some non Brahmins were discriminated by some Brahmins in the Congress, it was Brahmins who remedied it.
5. Congress started contesting elections only after 1936. When it contested for the first time , Justice Party was routed. It is wrong to think that Justice Party was started to oppose Congress. It was started to seek more job opportunities in the government for high caste Hindus.Even before its inception, there were many qualified Non Brahmins holding good positions in all departments. There was no discrimination but insufficiency of qualified Non Brahmins that made Brahmins to hold many posts. Nobody prevented Non Brahmins to qualify to hold govt. jobs. Many Dalits could get education and jobs in the Govt departments in those days thanks to the Christian Missionaries. In my opinion, Britsh Raj is a blessing in disguise for Hindustan.
6. Considering EVR a reformist is WRONG. He had not brought any reform and his only contribution is dividing Hindus on the lines of Brahmins and Non Brahmins. The impression that he was a great thinker and reformist should be eraced from the mind of our people. My thanks go to Ma. Venkatesan for his courage in projecting EVR in his real worth. EVR and his Movement are dead but not burried. The stench is still in the air. WE need to remove that for a healthy atmosphere..
7. Think of many Vaishnava and Saivate saints even from the so called lowest castes. Aslo, Narayana Gurus, Vaikunda Swamis Ayodhidasars and Ambedkars. Though there was discrimination on the basis of caste in the Hindu society (NOT according to religion), pepole with determination could come up . We must develop that kind of temperament among all. Not by reservation in education and govt jobs!
Finally, let me state that half baked knowledge is dangerous than ignorance!
MY DEAR CALGARY SIVA, you said we need to think on Sri Tiruchikaran’s sayings and therefore I did!
MALARMANNAN
Again,
Congress did NOT fight the British from 1885. The first voice from the platform of the Congress saying freedom is our birth right was heard only in 1905 from the lips of Tilak Maharaj. We still need to fight the BRITISH as Hindus on behalf of our fellow Hindus in Malaysia and Sri Lanka. And also for equating Hindustan with Pakistan in the fight against terror!
Hindu religion does NOT proscribe atheism. It does NOT condemn it as blasphemy and put an atheist to death. EVR’s atheism was uncivilised, hurting the sentiments of Hindus particularly. His advice to Nathigam P Ramaswami was to condemn Hindu religion only (read Teevira Itazhkal published by Kalachuvadu). A decent and sincere atheist only argues, does not hurt others’ belief. Many gullible nonBrahmins are tutored that EVR was their saviour .We rneed to educate them politely without any harsh words against EVR so that they are not offended and start seeing the reality.
It is WRONG to think caste discrimination is more in Tamil Nadu. It has been more severe in other parts of Hindustan. In the north, most people retain their caste identity in their name. Compared to other states, discrimination against Dalits TN is less. EVR did NOT preach but spit venom. EVR does deserve appreciation for certain matters but it has to be dealt with separately.
மலர் மன்னன் என் கருத்தை மறுத்து எழுதுவதாக நினைத்து, நான் எழுதாத கருத்துக்களுக்கு வியாக்கியானம் கொடுத்துள்ளார்.
//3.Religion and social customs are two different aspects. You should not blame the religion if you find any anamoilies in the customs of a society// சாதி முறைக்கு இந்து மதம் தான் காரணம் என்று நான் எந்த இடத்திலும் கூறவேயில்லை. இந்து மதத்தின் முக்கியமான கருத்துக்கள் சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் சென்று அடையவில்லை என்றுதான் எழுதியிருந்தேன்.
It is wrong to concieve that Brahmins were occupying most of the jobs in the government during the Bitish Raj. There were many nonBrahmins holding top posts and you have to study the situation of 18th and 19 th centures. Even before that, nonBrahmins held higher posts at the time of Chera, Chozha Pandia Kings, Nayaks, etc. You need to study the history to konw this. Brahimns took the lead in govt job oriented education while other communities concentrated on business, agriculture, crafts etc. Since there was no sufficient hands from other castes, opportunities atoumatically came to Brahimins., generally.
1850- 1950 கால கட்டத்தில் அரசாங்க பணிகளில் பிராமணர்கள் எத்தனை பேர் , பிராமணரல்லாதார் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இது விஷயமாக நான் வேறு தளங்களில் எழுதிய ஒரு விஷயத்தை மேற்க்கோள் காட்ட விரும்பு கிறேன்.
“எல்லா சாதிக்காரரூக்கும் நில, புலம் இருக்கிறது அல்லது வருமானம் வரும் தொழில் இருக்கிறது!தொழில் செய்யும் வாய்ப்பு இருந்தது. பார்ப்பானை வூருக்கே எடுத்துக் காட்டாக வாழ வேண்டும், பண ஆசை இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறி தெருவிலே பிச்சை எடுக்க விட்டார்கள். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது! ஆங்கிலேயன் காலத்தில் அரசாங்கத்தில் தபால், ரயில்வே என்று புதிய துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்த போது, அதை உபயோகித்து கொண்டான்- சோற்றுக்கு, துணீக்கு வழி கிடைத்தது- இதில் என்ன தவறு?
எல்லோருக்கும் திறமை இருக்கிறது, சாதி வித்யாசம் தொழில் அடிப்படையில் உருவானது, அது மறைய வேண்டும், என்றுதான் விரும்புகிறோம்.
2. There was very good interaction between Brahmins and other catste people all through past centuries. You need to read history, literature and sociology to konw about this. Just read one book titled En Charitram by Dr U.Ve.Saa. and you will know what kind of rapport was in vogue in the 18th and 19th century Hindu society in Tamilnadu.
நான் எழுதியது பெரும்பாலான பிராமணர்களைப் பற்றி – உ . வே.ச, பாரதி போன்ற ஒரு சில விதிவிலக்குகளைப் பற்றியல்ல. .
பிராமணர்கள் அக்கிரகாரங்களில் வாழ்ந்தது எல்லோருக்கும் தெரியும். அவர்களுக்கு பிற சமூகத்தினருடன் கலந்து பழகும் வாய்ப்பை சமூகம் அளிக்கவில்லை என்பதே என் கருத்து.
அதற்க்காக கூட அவர்களை நான் குறை கூறவில்லை. அவர்களின் நிலைமை அவர்கள் தனித்து வாழ வேண்டிய சூழ்நிலை.
இது விஷயமாக நான் வேறு தளங்களில் எழுதிய ஒரு விஷயத்தை மேற்க்கோள் காட்ட விரும்புகிறேன்.
“பிராமணர்கள் பிறரை ஒதுக்கவில்லை. அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்! சிறிய பிரச்சினைகளை கூட அரிவாள் முனையில் “தீர்க்கும்” வெறித்தனத்தில் இருந்து அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.”
நானும் பிராமண சமூகத்தை சேர்ந்தவன் தான். ஆனால் மாற்றிக் கொள்ள வேண்டியது, செம்மைப் படுத்த வேண்டியது ஏதாவது இருந்தால், அதை அறிந்து கொள்ள விரும்புபவன்!
எனக்கு முன்பு வாழ்ந்த என் முன்னேர்கள் என்னை விட நல்லவராகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே நான் தீர்மானாமாக கருதுகிறேன். அப்படியானால் எப்படி இவ்வளவு பூசல் வுண்டானது என்பதே என் ஆராய்ச்சி.
நான் உண்மைகளை தான் எழுதுகிறேன். பூசி மொழுகியோ, கயிறு திரித்தோ எழுத
எனக்குத் தெரியாது.
உண்மையை எவராலும் மறைக்கவும் முடியாது. வாய்மையே வெல்லும், சத்யமேவ ஜெயதே.
//இந்து மதத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்பொழுது அதில் உள்ள தீமைகளை நீக்க குரல்கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இந்து மதத்தை தவறு அது சொல்லும் தத்துவங்கள் அனைத்தும் குப்பை என்று சொல்லி பலரையும் இந்து மதமென்றால் ஏதோ தீயது என்ற நம்ப வைத்த ஒருவரின் யோக்கியதையை பற்றி ஆராய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்//
இந்து மதத்தின் வலிமை என்ன என்று தெரியாமலே இதை எழுதியிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.
இந்து மதம் விமரிசனங்களை தாங்கிக் கொள்ளும், விமரிசனங்களை வரவேற்கும், விமரிசனங்களுக்கு தக்க பதிலை தரும் மதம் ஆகும்.
பெரும்பாலான மதங்களில் கேள்வி கேட்பதற்கு அனுமதி இல்லை. கூறப்பட்டதை அப்படியே கேட்டுக் கொண்டு, நம்பி, அடி பணிய வேண்டும், அடிமையாக இருக்க வேண்டும். கேள்வி கேட்டால், விமரிசித்தால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும்.
ஆனால் இந்து மதம் அடிமைகளுக்கான மதம் அல்ல. இந்து மதம் விடுதலை அடைய விரும்புபவர்களுக்கான, சுதந்திரமான மதம் ஆகும்!
எனவே இந்து மதத்தை ‘ தீயது ‘ என்று கூறுபவர்கள் கூட, அப்படி அந்த மதத்தை விமரிசனம் செய்ய அந்த மதம் சுதந்திரம் வழங்கியுள்ளது என்பதை, அவர்கள் அறியாமலேயே நிரூபிக்கிறார்கள் !
பெரியார் வேறு மதத்திலே இருந்து கொண்டு “கடவுள் இல்லை” என்று கூறியிருந்தால், அவருக்கு என்ன தண்டனை வழங்கப் பட்டு இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்!
ஒருவன் தைரியமாக, “கடவுள் இருக்கிறாரா இல்லையா, ஒரு மனிதனின் உடல் இறந்த பின் அவன் உயிர் தொடர்ந்து வாழ்கிறதா இல்லையா? ” போன்ற முக்கியமான ஆராய்ச்சிகளை செய்ய விரும்பினால் – அதற்க்கு முழு சுதந்திரம் அளிக்கும் ஒரே மதம் இந்து மதம் தான். அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளன், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக வாழும் சமுதாயத்தில் மட்டுமே உருவாக முடியும், வாழ முடியும், ஆராய்ச்சி செய்ய முடியும்!
இதுதான் பெரியாரின் வாழ்கை இந்த உலகுக்கு உணர்த்தும் பாடம் ஆகும்!
பெரியார் சொல்வதை இங்கெ யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவரது கருத்துக்கள் சிலவற்றில் உண்மை இருப்பதையும், இந்து மதத்தை இன்னும் செம்மைப் படுத்த அந்தக் கருத்துக்கள் உதவும் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பெரியார் தன்னை அறியாமலே இந்து மதத்திற்கு நல்லது செய்தே இருக்கிறார் என்றே கூறலாம்.
For a system to be stable, their should be a feed back and that feed back should be a negative feed back.
எனவே இந்து மதம் யாரையும், “இதை சொல்லாதே, அதை சொல்லாதே” என்று மாற்று கருத்துக்களைப் பார்த்து பயந்து ஓடும் மதம் அல்ல.
இந்து மதம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு, உண்மையை நம்பி இயங்குகிறது. இந்து மதத்தின் மிக அடிப்படையான கருத்தே ” சத்யம் ஏவ ஜெயதே ( உண்மையே வெல்லும்)” என்பதாகும்.
இந்த “சத்யம் ஏவ ஜெயதே” என்பது முண்டக உபநிஷத்தின் அடிப்படைக் கருத்து ஆகும்.
இதை உபநிஷத் கூறினாலும், கூறாவிட்டாலும் உண்மையை யாராலும் வெல்ல முடியாது!
எனவே “இந்து மதம் கூறுகிறது” என்று கூறி யார் எந்தக் கருத்தை கூறினாலும், அந்தக் கருத்தை உண்மையின் உரைகல்லில் வைத்து பரிசோதிக்க தயங்கத் தேவையே இல்லை.
யாரவது எந்தக் கருத்தையாவது உண்மையா இல்லையா என்று சோதிக்கத் தயங்கினால், அவர்கள் இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் கூறுவேன்!
Whatever written in Hindu Religious texts such as Vedhaas, Bagavath Geethaa can be questioned, tested and verified in the Laborataory of Truth without any hesitation!
எனவே இந்து மதம் என்பதே ஒரு பகுத்தறிவு மதம் தான். அவ்வப் போது அது இருளில் தள்ளப் பட்டால், அதை கிருட்டினர், புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்றவர்கள் அவ்வப் போது மீண்டும் pakuththarivu paathaikku alaithu vanthu vullanar.
Hence if any one tries to make Hindu religion as a dogmatic religion, blind folded religion, dictating religion, constrained religion, they are nothing but naive and their efforts will be futile!
பிராமனர்கள் மட்டும் கூட்டமாக அக்கிரகாரத்தில் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. கிராமங்களில் பல சமூகங்களும் தனித்தனியே தான் வாழ்ந்து வந்துள்ளனர். நகரங்களில் தான் முதலில் பலரும் கூடி வாழும் நிலை ஏற்ப்பட்டது. இன்றும் கூட பல கிராமங்களில் யாதவர் தெரு, வானியர் தெரு, வெள்ளாளர் தெரு என்று இருப்பதை நீங்கள் கானலாம்.
//அப்படியானால் எப்படி இவ்வளவு பூசல் வுண்டானது என்பதே என் ஆராய்ச்சி.
வெறுப்பு எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நம் கண்ணெதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்துழைக்கும் ஐ.டி துறையினரை அந்த நாட்டு அரசாங்கம் வரவேற்றது. அமெரிக்க மக்களும் தங்களுக்கு வேலை இருக்கும்வரை பாதகமில்லை என்ற எண்ணத்தில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இன்று தங்கள் வேலை இந்தியர்களால் பறிபோகிறது என்று எண்ணும் அமெரிக்க மக்கள் இந்தியர்கள் வேண்டாம் என்கின்றனர், அதே போல அமெரிக்க அரசும் H1B விசாவில் இருப்பவரை வேலையில் அமர்த்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கு இந்தியர்கள் மீது அமெரிக்க மக்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்படுவதை நாம் காணலாம். அதேபோல கனினி துறையில் வேலை பார்ப்போருக்கு பைகள் வ்ழிய சம்பளம் கொடுத்தமையால் நகரங்களிலும் புறநகரங்களிலும் வீட்டுமனைகளின் விலை அதிகரித்துள்ளது, அதனால் சாதாரண மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவாகி வருகிறது. இதனால் கனினி துறையினர் மீது சாதாரன மக்களின் மனதில் ஒரு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இதே மாதிரி வெறுப்பு மற்ற ஜாதியினருக்கும் பிராமனர்கள் மேல் உருவாகியது ஏனெனில் அவர்கள் ஆங்கிலம் கற்று பல அரசு துறைகளில் பதவி வகிக்கத் தொடங்கியிருந்தனர். இந்த வெறுப்பை ஊதி ஊதி பெரிதாக்கியது பெரியாரும் அவரது சிஷ்யகோடிகளும்.
//இந்து மதத்தின் வலிமை என்ன என்று தெரியாமலே இதை எழுதியிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்
நான் சொல்ல வந்தது இந்துமதத்தை பற்றி சொன்னாலே தவறு என்ற தொனியில் அல்ல. நீங்கள் சொல்வது போல் இந்துமதம் முழுக்க முழுக்க பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வளர்ந்த முறையே. இந்துமதத்தை பற்றி சொன்னவர் தன் சுய சிந்தனையோடு சொன்னாரா, சொன்னவர் எப்படிபட்டவர் ( ஒரு பைத்தியம் நம்மை பார்த்து நீ ராஜா, நீ பைத்தியம் என்றால் நாம் கவனத்திலெடுத்துக்கொள்ள மாட்டோம் அதேநேரம் ஒரு நல்ல மனிதர் அப்படி சொன்னால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று) , அவர் மற்ற நேரங்களில் எப்படியெல்லாம் நடந்திருக்கிறார் என்பதை கண்டறியவே ஈவேராவை பற்றிய நமது ஆராய்தல் முக்கியமாகிறது.
//பிராமனர்கள் மட்டும் கூட்டமாக அக்கிரகாரத்தில் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. கிராமங்களில் பல சமூகங்களும் தனித்தனியே தான் வாழ்ந்து வந்துள்ளனர்//
எல்லா சாதியினரும் தனித் தனியே தான் வாழ்ந்து வந்தனர். அதே நேரம் பிராமணர்கள் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருந்தனர். சமுதாயத்தின் ஒரு கோடியில் பிராமணன் இருந்தான். பிற கோடியில் உள்ள சாதி முதல் எல்லா சாதியினரையும் பிராமணன் நிலைக்கு கொண்டு வருவதுதான் சமூகத்தின் இலட்சியம். அதை செய்ய வேண்டிய பொறுப்பு பிராமணர்களுக்கு இருந்தது. ஆனால் அப்படி எல்லா சாதியினைரையும் ஆன்மீக நிலையில் உயர்த்துகிற செயலை செய்யாமல் விட்டு விட்டார்களோ, அல்லது இன்னும் முயற்சி செய்து இருக்கலாமோ என்பது நம் கருத்து.
//கனினி துறையில் வேலை பார்ப்போருக்கு பைகள் வ்ழிய சம்பளம் கொடுத்தமையால்//
அமேரிக்காவில் நாம் சென்று வேலை செய்வதால் அந்த நாட்டினர் வெறுப்பு அடைவதற்கும், சொந்த நாட்டில் பதவி வகிக்கும் போது சக நாட்டினர் வெறுப்பு அடைவதற்கும் வித்யாசம் உள்ளது. இதே தமிழ் நாட்டில், இதே தமிழர்கள் தான் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பிராமணர்களுக்கு மனப்பூர்வமாக உயர்வான மரியாதை கொடுத்து வந்தனர். எனவே பெரியார் சொன்னவுடன் உடனே அவர்கள் மனம் மாறியது எப்படி?
தமிழ் நாட்டு மக்கள் மனசாட்சி இல்லாதவர்கள் அல்ல. பெரியார் பிராமணர்களைத் திட்டியதில் சிறிது கூட நியாயம் இல்லை என்றோ, பிராமணர்கள் மீது சிறு தவறு கூட இல்லை என்றோ, பெரியார் வேண்டும் என்றே பிராமணர்களை பழி வாங்குகிறார் என்றோ பிற தமிழர்கள் எண்ணியிருந்தால், அவர்கள் பெரியாரை திட்ட விட்டு சும்மா இருக்க மாட்டார்கள். எனவே இது விஷயத்தில் நாம் அவ்வளவு எளிதாக பையிலே பணம், கையிலே காசு என்று முடிவுக்கு வர முடியாது!
இதே தமிழ் நாட்டில், இதே தமிழர்கள் தான் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பிராமணர்களுக்கு மனப்பூர்வமாக உயர்வான மரியாதை கொடுத்து வந்தனர். எனவே பெரியார் சொன்னவுடன் உடனே அவர்கள் மனம் மாறியது எப்படி?
பலநூறு ஆண்டுகாலமாக வாழ்ந்த பிராமனர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். வேதத்தை பேணுதலும், தர்மத்தை பேணுதலும் தன் கடமை என வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு விதிக்கபட்டது எளிய முறை வாழ்க்கையே , அதன்படி அவர்கள் வாழ்ந்தப்பொழுது மற்ற சமூகத்தினரிடம் அவர்களுக்கு நன்மதிப்பு இருந்தது. ஆனால் இறுதியில் தன் கடமைகளில் இருந்து தவறி பிரிட்டிஷ்காரனிடம் வேலையில் சேர்வதற்கு வேதத்தை ஓதுவதையும், ரட்சிப்பதையும் பல பிராமனர்கள் நிறுத்தினர். அதனால் மற்றவர்களிடம் அவர்களது மதிப்பு குறைய ஆரம்பித்தது. இதைப் பற்றி நீங்கள் விரிவாக தெய்வத்தின் குரல் முதல் பாகத்தில் படிக்கலாம். காஞ்சி பெரியவர் அந்த புத்தகத்தில் சமூக சீர்கேடிற்கு முதல் காரனமாக கூறுவது பிராமனர்களைத்தான்.
//சொந்த நாட்டில் பதவி வகிக்கும் போது சக நாட்டினர் வெறுப்பு அடைவதற்கும் வித்யாசம் உள்ளது.
இதே சொந்த நாட்டில் தான் பலரும் தன் சொந்த மக்களான கனினித்துறையினரின் மீது வெறுப்பு கொண்டுள்ளனர்.
//தமிழ் நாட்டு மக்கள் மனசாட்சி இல்லாதவர்கள் அல்ல
தமிழ்நாட்டு மக்கள் பெரியார் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டப்பொழுது சும்மா வேடிக்கைத்தான் பார்த்தார்களே தவிர பொங்கியெழவில்லை. இத்தனைக்கும் அது பிராமன எதிர்ப்பு போராட்டம் அல்ல, இந்து மதத்தினர் வழிப்படும் கடவுளை, தங்கள் உயிருக்கு உயிராக நினைக்கும் ஒரு ஆதர்ச புருஷனை அவமானப்படுத்திய நிகழ்வு. மேலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஈவேரா துதுபாடிகள் அல்லர், இப்பொழுதும் இருக்கும் கூட்டம் போலத்தான் அவரின் அடியாட்கள் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். என்ன அவர்கள் அதிகம் கத்துவதால் நமக்கு என்னமோ எல்லோரும் அப்படி கத்துவது போல் இருக்கிறது.
// இந்துமதத்தை பற்றி சொன்னவர் தன் சுய சிந்தனையோடு சொன்னாரா, சொன்னவர் எப்படிபட்டவர் ( ஒரு பைத்தியம் நம்மை பார்த்து நீ ராஜா, நீ பைத்தியம் என்றால் நாம் கவனத்திலெடுத்துக்கொள்ள மாட்டோம் அதேநேரம் ஒரு நல்ல மனிதர் அப்படி சொன்னால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று) , அவர் மற்ற நேரங்களில் எப்படியெல்லாம் நடந்திருக்கிறார் என்பதை கண்டறியவே ஈவேராவை பற்றிய நமது ஆராய்தல் முக்கியமாகிறது //
நண்பர் ராம் குமார் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பெரியாரை பற்றிய ஆராய்ச்சியை விட, அவர் கூறியதில் இந்து மதத்தை செம்மைப் படுத்த, இந்தியாவை முன்னேற்ற ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்று பார்ப்பது தான் நல்லது. இந்து மதம் இப்போது குழப்பமான நிலையில் உள்ளது. சரியாக வழி நடத்த செல்ல தகுதியான ஆட்கள் இல்லை. மக்களும், குரு என்று சொல்லப் படுபவர்கள் எவ்வளவு சொத்து வைத்து உள்ளனர், எவ்வளவு அரசியல் செல்வாக்கு உள்ளது என்று பார்த்து அவரிடம் போனால் வேலை நடக்குமா என்று சிந்திக்கிறார்களே தவிர, உண்மையான ஆன்மீக சிந்தனை உடைய குருக்களும் அரிதாக உள்ளனர், பகதர்களும் இதைப் புரியாமல் உள்ளனர்!
இந்து மதத்தை பகுத்தறிவுப் பாதையிலே, சுவாமி விவேகானந்தரின் பாதையிலே, ஆதி சங்கரரின் பாதியிலே தான் அழைத்து செல்ல வேண்டும். எனவே கேள்வி கேட்பது, சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது அவசியம் ஆகும்.
வெறுமனே மண்டையை ஆட்டும், ஆட்டு மந்தையை போல நாம் இருக்க முடியாது. அங்கவஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில் இருகக் கட்டிக் கொண்டு, காவி கட்டியவரின் காலில் எல்லாம் (அவரின் யோக்கியதை தெரியாமலேயே) விழுந்து மதத்தை கெடுத்து நாமும் கெட்டு விட்டோம்.
எனவே தைரியமாக எழுந்து ஆக வேண்டிய செயலைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
பெரியார் இந்து மதத்தின் தவறுகளை மட்டுமே பார்த்தார். இந்து மதத்தின் வலிமையை, அருமையை, நன்மையை , உணமையை பார்க்கவில்லை.
ஆனால் நாம் பெரியாரின் குறைகளை பார்ப்பதை விட அவரின் கேள்வி கேட்க்கும், எதிர்க் கருத்துக்களை முன் வைக்கும் பாணியால், இந்து மதத்துக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசிப்பது, அதிக சிறப்பைத் தரும் என்பது என் தாழ்மையான கருத்து.
U.VE. Saa describes about the situation prevailed in the society of his times in his autobiography. NOT just his interactions.
Brahmins were given lands by kings, princes, zamindars etc., but most of the Brhasmins preferred to maintain the land through tenancy. Brahmins always took the lead whenever changes were in the offing in the society, it was NOT only during the British Raj but even prior to that. This should not be contruced as they snatched the opportunities from other communities, as blamed by justice party. Every caste has its share of the poor. Similarly, Poor exist in Brahmin community too.
It was not just Brahmins but people from all castes, if settled comfortable, avoided work involving physical strain. They spent their time in avenues that required brains’ application.
Hatred toiward Brahmins was nurtured only from personal grudge of EVR against his Brahmin counterparts in the Congress. Even Justice Party ddi NOT carry a systematic hate compaign against Brahmins. At a point of time, it had also wanted Brahmins to join the party. It was EVR who opposed it and his decades of sustained campaign against Brahmins consolidated Non Brahmins to consider Brahmins their adversaries. It did NOT happen all of a sudden in one day but it took deep root gradually. It is human psyche to find fault with others for personal failures. This kind of human weakness was exploited to successfully run the hate campaign against one community.
YES, the number of non Brahmins in govt departments were less compared to the number of Brahmins in earlier days. It does NOT mean Brahmins snatched the opportunity from Non Brahmins. The preferecne and priority of Non Brahmin castes were elsewhere while Brahmins found govt jobs preferrable (I’ve written one lengthy article in thinnai some time back under titile Dravida Iyakkam kaiyil edutta jaatiyum varnamum discussing about this. IF you agree Hindu religion ddi NOT sanction OR set the caste system, well , I am happy). It was NOT poverty that led Brahmins to join govt departments. They knew on which side the butter is spread in the slice while others thought living as an employee under somebody was below their prestige (when I am mentioning Brahmins and Non Brahmins, I refer them as a whole only) . Otherwise, who prevented others to follow suit? Education was not the prerogative of Brahmins. Also, it was not only Brhmins but also all so called upper castes who were going to Macaulay syllabus schools and colleges, and many amongst them joined govt departments. I have made a very deep study, going through old records and I can say the number of non Brahmins in govt departments , colleges and schools was less compared to Brahmins but it was not negligible. This was because the priority was elesewhere as for Non Brahmins. In my previous posting, I mentioned about my work in Tamil for Kizhakku Pathippagam. This topic is discussed in that eleborately.
If Hindu society is found any undesirable customs and practices, well, criticise them and try to eliminate them. BUT for heaven’s sake, do NOT find fault with Hindu religion. Unless you are thorough in all aspects of a religion, you better restrain from criticising it. If the society has any supersitions and baseless beliefs, atrocious practices and disgusting systems, we cannot find fault with the religion for such lapses. What EVR did was finding fault witrh Hindu religion for the lapses on the part of Hindu society. He also blamed the religion totally as worthles and ran hate campaign against Brahmins on personal grounds.Further, he projected Brahmins as the pillars of Hindu religion, the concept propagated by Christian missionaries. You should know that Christian missionaries proudly admitted that Dravidian Movement was the in house time bomb they had planted in the Hindu Society. A sincere reformist does not turn a traitor. It is naive to think EVR was a reformist and pakuttarivaalar ( I do NOT know the English equalent to this word, no matter whatever admirers of EVR mean by that! For me, Realisation of God is pakuttarivu).
Kindly note that my age and preocupations do not permit me to enter into any kind of debates or arguments and try to establish that I am right. My intention is only to share with others what I could gather with my very limited understanding. That too keeping aside my work ( still I have to work to make a decent living; I do NOT own any asset or savings to maintain myself. And my earnings, like my needs, are also very limited! ).
MALARMANNAN
மலர் மன்னன் அவர்களே, நீங்கள் கூறியபடி இப்படி இந்த வயதிலும் உழைத்து வருவதை பாராட்டுகிறேன். நீங்கள் என்னை விட வயதில் முதியவரானால் உங்களுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்.
//Every caste has its share of the poor. Similarly, Poor exist in Brahmin community too- நானும் அவர்களில் ஒருவன்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!
//Hatred toiward Brahmins was nurtured only from personal grudge of EVR against his Brahmin counterparts in the Congress.//
பெரியார் பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியதும் அதில் கணிசமாக வெற்றி பெற்றதும் எல்லோரும் அறிந்ததே! எனவே அவருடைய பேச்சு ஏன் மக்கள் மத்தியில் எடு பட்டது? பிராமணர்கள் பிற மக்களை விட்டு அதிக தூரத்தில் இருந்தனரா? – என்பதை எல்லாம் பற்றி யோசிக்காகாமல் வெறுமனே ஈ. வே. ராவை வைவதால் ஒரு பயனும் இல்லை என்பதை நான் பலமுறை எழுதி விட்டேன்!
I have made a very deep study, going through old records and I can say the number of non Brahmins in govt departments , colleges and schools was less compared to Brahmins but it was not negligible. This was because the priority was elesewhere as for Non Brahmins. எல்லா பிரிவு மக்களையும், எல்லா சாதி மக்களையும், பிராமிணர்கள் நிலைக்கு உயர்த்த பாடு படுவதுதான் பிராமணர்களின் கடமை.
BUT for heaven’s sake, do NOT find fault with Hindu religion. Unless you are thorough in all aspects of a religion, you better restrain from criticising it. இந்து மதத்தின் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறையும் மதிப்பும் உண்டோ, அதற்க்கு குறையாத அளவுக்கு மதிப்பும் , அக்கறையும் உடையவன் நான். ஆனால் சரியான தூய்மையான, உண்மையான இந்து மதத்தை, தவறான கருத்துக்கள் சூழ்ந்த போது அதை நீக்கி தூய்மையான இந்து மதத்தை வெளிப் படுத்தும் பொறுப்பு எனக்கும் உண்டு!
இந்து மத்தில் இப்படி செய், அப்படி செய்யாதே என்று யாரும் கட்டளை போட முடியாது!
இந்து மதம் அடிமைகளுக்கான மதம் அல்ல. இந்து மதம் விடுதலை அடைய விரும்புபவர்களுக்கான, சுதந்திரமான மதம் ஆகும்!
நான் இந்து மதத்தை முழுதும் கற்றவன் அல்லன். மிகச் சிறிதே கற்றவன். ஆனால் மிகச் சிறிதே கற்ற போதும் நான் இந்து மதத்தை மார்க்கண்டேயன், கிருஷ்ணர், புத்தர், ஆதி சங்கரர், பட்டினத்தார், அப்பர், விவேகானந்தர், தியாகராசர் போன்ற, பொருளை ஒதுக்கி ஆன்மீகத்துக்கு இடம் கொடுத்தவர்களிடம் இருந்து கற்றவன் ! எனவே நான் தைரியமான , சரியான இந்து மதத்தை பின்பற்றுபவன்.
நீங்களும் தயவு செய்து சுவாமி விவேகானந்தர் எழுதியதை முழுவதும் படியுங்கள்.
அப்போது இந்து மதம் எவ்வளவு வலிமையும், உண்மையும் , நேர்மையும் உடைய மதம் எனபதைப் புரிந்து கொள்வீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் யாரிடமும் “BUT for heaven’s sake, do NOT find fault with Hindu religion” என்று எழுத வேண்டிய அவசியம் இருக்காது! மாறாக இந்து மதத்தின் மீது வீசப்படும் விமரிசனக்களுக்கு சரியான பதில் அளிக்கும் வலிமையை நீங்கள் பெறுவீர்கள்!
//It is naive to think EVR was a reformist and pakuttarivaalar ( I do NOT know the English equalent to this word, no matter whatever admirers of EVR mean by that! For me, Realisation of God is pakuttarivu)//
For your reference let me humbly mention that the English equalent to this word “pakuttarivaalar” is-
“Rationalist “!
நீங்கள் என்னை விட வயதில் முதியவராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு என் நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் !
//தமிழ்நாட்டு மக்கள் பெரியார் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டப்பொழுது சும்மா வேடிக்கைத்தான் பார்த்தார்களே தவிர பொங்கியெழவில்லை. இத்தனைக்கும் அது பிராமன எதிர்ப்பு போராட்டம் அல்ல, இந்து மதத்தினர் வழிப்படும் கடவுளை, தங்கள் உயிருக்கு உயிராக நினைக்கும் ஒரு ஆதர்ச புருஷனை அவமானப்படுத்திய நிகழ்வு//
இந்து மதத்தில் பல கடவுள் வழிபாடு உள்ளது. வையத்துள் வாழ்வாங்கு வாந்தவர்கள் தான் இந்து மதத்தில் வானுறையும் தெய்வத்துள் ஒருவராக வைக்கப் பட்டுள்ளனர். அப்படிப் பார்த்தால் மக்களுக்கு எடுத்துக்க காட்டாக வாழ்ந்து மக்களுக்காக பாடு பட்ட இராமர், முருகன், ஐய்யப்பன், காலி, விநாயகர், சிவன் என்று எல்லோரும் நமக்கு கடவுள்கள். முருகரின் சிறப்பு பரப்பப் பட்ட அளவுக்கு இராமரின் சிறப்பு தமிழ் நாட்டில் மக்களைடியாயே சரியாக பரப்ப படவில்லை. பிராமணர்கள் இராமரை வணங்கி வந்த போதும் அவரை பிற மக்களிடம் அவ்வளவு சரியாகப் பரப்பவில்லை. இதை புரிந்து கொண்ட பெரியார் இராமரிடம் தன் “வீரத்தைக்” காட்டி விட்டார். அததான் நான் பெரியாரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது என்றே கூறி வருகிறேன்.
//அதேபோல கனினி துறையில் வேலை பார்ப்போருக்கு பைகள் வ்ழிய சம்பளம் கொடுத்தமையால் நகரங்களிலும் புறநகரங்களிலும் வீட்டுமனைகளின் விலை அதிகரித்துள்ளது, அதனால் சாதாரண மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவாகி வருகிறது. இதனால் கனினி துறையினர் மீது சாதாரன மக்களின் மனதில் ஒரு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இதே மாதிரி வெறுப்பு மற்ற ஜாதியினருக்கும் பிராமனர்கள் மேல் உருவாகியது//
அப்படிப் பார்த்தால், பிராமணர்களை விட செட்டியார்கள் தான் அதிக பணக்காரர்கள் ஆக இருந்தனர், எனவே அவர்கள் மீது தானே அதிக வெறுப்பு தோன்றி இருக்க வேண்டும்?
திருச்சி ஐயா, உங்கள் கருத்துக்களைக் கூர்மையாக, தெளிவாக முன்வைக்கிறீர்கள்.
// முருகரின் சிறப்பு பரப்பப் பட்ட அளவுக்கு இராமரின் சிறப்பு தமிழ் நாட்டில் மக்களைடியாயே சரியாக பரப்ப படவில்லை. பிராமணர்கள் இராமரை வணங்கி வந்த போதும் அவரை பிற மக்களிடம் அவ்வளவு சரியாகப் பரப்பவில்லை. இதை புரிந்து கொண்ட பெரியார் இராமரிடம் தன் “வீரத்தைக்” காட்டி விட்டார். //
இந்த விஷயத்தில் நீங்கள் சொல்வது தவறு. ராமரைப் பற்றிய அப்படி ஒரு கருத்தை உருவாக்கிய திராவிய இயக்க பொய்ப் பிரசாரத்திற்கு நீங்களும் பலியாகி யிருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது. என்ன கொடுமை!
ஈவேரா என்ற இந்த ஆசாமியின் பெயரிலேயே ராமசாமி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும். இவரோடு இயக்கத்தில் ஒருந்த இன்னொரு ரெட்டியார் பெயரிலும் ராமசாமி இருக்கிறார். இவர்கள் குடும்பங்களில் எப்படி ராமர் பெயர்களை வைத்தார்கள் என்று யோசிக்க வேண்டாமா?
”தமிழர் திருமகன் இராமன்” என்ற எனது இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன் –
http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html
இதில் பற்பல சான்றுகளை அளித்திருக்கிறேன். செவ்வியல் கலை, இலக்கியம் மட்டுமல்ல, பாவைக் கூத்து, தெருக்கூத்து ஆகிய நாட்டுப்புறக் கலைகளிலும் கூட இராமகாதை தமிழகம் முழுதும் பரவியிருந்தது. உவச்சர் (தச்சர்) குலத்தில் உதித்த கம்பன் என்கிற மகா கவிஞன் தான் தமிழில் இராமனது தெய்வீக சரித்திரத்தை எழுதினான். தமிழ் மொழியின் அதி உன்னத காவியமாக என்றென்றும் வாழ்வது ராமகாதை தானே! இதை விட வேறென்ன வேண்டும்?
விஷ்ணு/ராம /கிருஷ்ண வழிபாடு தமிழ் நாட்டில் ஒரு fringe போலவும், முருக வழிபாடு mainstream போலவும் (ஆனால் ஏசு வழிபாடு அதை விட mainstream.. ஆதித் தமிழ்க் குரங்கே சிலுவை போட்டுக் கொண்டு தான் பிறந்தது!) போலித் தமிழறிஞர்களாலும், இனவெறியர்களாலும் சொல்லப் பட்டு வருகிறது. இது திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் அன்றி வேறில்லை.
//பலநூறு ஆண்டுகாலமாக வாழ்ந்த பிராமனர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். வேதத்தை பேணுதலும், தர்மத்தை பேணுதலும் தன் கடமை என வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு விதிக்கபட்டது எளிய முறை வாழ்க்கையே , அதன்படி அவர்கள் வாழ்ந்தப்பொழுது மற்ற சமூகத்தினரிடம் அவர்களுக்கு நன்மதிப்பு இருந்தது. ஆனால் இறுதியில் தன் கடமைகளில் இருந்து தவறி பிரிட்டிஷ்காரனிடம் வேலையில் சேர்வதற்கு வேதத்தை ஓதுவதையும், ரட்சிப்பதையும் பல பிராமனர்கள் நிறுத்தினர். அதனால் மற்றவர்களிடம் அவர்களது மதிப்பு குறைய ஆரம்பித்தது//
புரிகிறதா? இப்போது நீங்கள் செய்யப் போவது என்ன?
இது வரையில் நீங்கள், மடம் என்ற பெயரில் பில்லியன் கணக்கில் சொத்து சேர்த்து, அதே நேரத்தில் துறவி என்றும் கூறிக் கொண்டவர்களின் காலில் விழுந்து வணங்குவதையே ஆன்மீகப் பணியாக செய்து வந்தீர்கள். இப்போது அதுவும் பல்லைக் காட்டி விட்டது. யார் காலில் விழுகிறோம், அவரின் யோக்கியதை என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆன்மீக அறிவு இல்லாத நிலைதான் இன்று தமிழக பிராமணர்களின் நிலை.
இப்போது தமிழ் நாட்டில் உள்ள பிராமணர்களுக்கு பணத்தை தவிர, பதவியைத் தவிர, பட்சணத்தை தவிர வேறு எந்த சிந்தனயும் இல்லை. நாம் பிற பிராமணர்களிடம் ஆன்மிகம் குறித்து பேச முனைந்தால் அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. பணம் சம்பாரிப்பது, ஷேர் வாங்குவது, நிலம் வாங்குவது, கிரிக்கெட் பற்றி பேசினால் ஆர்வமாக கேட்கின்றனர்.
குறைந்த பட்சம் விடுமுறை நாட்களில் ஒரு அரை மணி நேரம் கடவுளிடம் தனிமையில் பூஜை செய்ய எத்தனை பேரால் முடியும்?
மிகச் சிலர் பஜனைக்கு செல்கின்றனர்! பஜனைக்கு போனேன் என்று அங்கு வருவோர் போவோரிடம் சிரித்துப் பேசுவது, கூச்சல் என்று காலம் கழிகிறது.
எனவே இப்போது பில்டிங்கு ஸ்டிராங்கு, பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்கு என்ற நிலையில் தான் இன்றைக்கு தமிழக பிராமணர்கள் உள்ளனர்.
இப்போது இந்த நிலைக்கு பிராமணர்களைக் கொண்டு வந்து விட்டது யார்? தெய்வத்தின் குரல் எழுதியவர் உருவாக்கிய பிராதன சிஷ்யர்களின் ஆச்சாரம் என்ன?
இப்படி பட்ட மக்கள் கூட்டத்தில் இருந்து இது போன்ற “குரு” தான் உருவாக முடியும்- சுவாமி விவேகானந்தரோ, ஆதி சங்கரரோ , தியாகராசரோவா உருவாக முடியும்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தரை உருவாக்கினார். தெய்வத்தின் குரலார் உருவாக்கிய சிஷியரகளின் சிறப்பு என்ன?
நல்ல சிஷியர்கள், நல்ல பக்த kodikal enru sirippaai sirikkum nilaiyil ulllom!
உண்மயான தெய்வத்தின் குரல், பகவானின் குரல், பகவானின் கீதம், பகவத் கீதை தான் , அதை நன்கு படியுங்கள்!
Dear Jataayuji,
Kamba Raamayanam is a great epic. But how mant tamilans read Kamba Raamayan? Many of us can read only tamil pros, but find it a bit difficult to read and interpret poetry. Then how can we expect common tamils can read and interpret Kamba Raamayan? Then how can we expect that Kamba Raamayan is sufficient to take Raamayan to all Tamils?
We need to take the sacrifice and genunity of Rama swami, seethamma, Laxman swamy, Bharathan saamy, Laxman saamy, Kukan swami, Jadaayu saami, Anuman saami, sukreevan saami, Ankathan saami, Nalan saamy, Neelan saamy, Kumuthan saamy, sambaathi saamy, veebishan saamy, Anil saamy, Thiyakaraasar saami, Ramdoss saamy, Thulasidoss saamy, …etc to the common peoples doors.
We can to prepare Nivethan food, sing keerthanaas on Raama and distribute the prassatham at the common peoples door, the people in cheris also!
சந்துரு வர்ணு நீ, அந்த
சந்தமூனு ஹிருதயார
விந்தமூன ஜூசி பிரம்மானந்த மனுபவின்ச்சுவார்
எந்தரோ மஹானுபாவுலு,
அந்தரிக்கி வந்தனமு
DID we REALISE THE “பிரம்மானந்தம்” derived out by worshipping Rama?
If we had realised “பிரம்மானந்தம்” derived out by worshipping Rama, did we share it with other people, as much as possible?
Kindly read the following:
ராமர் பாலம் இந்தியாவின் கலாச்சாரச் சின்னம்தானா? கேட்பதில் தவறில்லை!
இந்திய மக்கள் கலாசாரம் என்பது என்ன? எனக்குத் தெரிந்த வரையில்
1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது
2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது
3) குடும்ப வாழ்க்கை
4) பிறர் மனைவியை விரும்பாமை
5) ஒழுக்கமான வாழ்க்கை
6) விருந்தோம்பல்… இப்படியான பண்புகளின் படி வாழ்ந்து வந்த சமுதாயம் தான் இந்திய சமுதாயம், தமிழ் சமுதாயம்!
இப்போது கணிசமான அளவில் இந்தப் பண்புகளில் இருந்து மாறு பட்டு வாழ்ந்தாலும், மேற்கூறிய, மற்ற பிற நல்ல பண்புகளை குறிக்கோளாக வைத்துதான், இந்திய சமுதாயம் செயல் பட்டு வருகிறது !
இராமாயணம் அரசியல், சமூகம் என பல பரிமாணங்களை உடையது!
அரசியல் ரீதியாகப் பார்த்தால் “பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது! கொள்கை என்பது இடுப்பில் அணியும் வேட்டி போன்றது” என்றார் அண்ணா! தன் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றூம் கொள்கைக்கு ஆக, தன் பதவியை துச்சமாக கருதி காடு சென்றது தான், இராமாயணத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி.
இரண்டாவது நிகழ்ச்சி இராமனோடு, சீதையும் தானாக வனம் சென்றது! இந்திய வரலாற்றிலே, கண்ணகி,சீதை, சந்திரமதி போன்ற சில பெண்கள் உலகிற்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்! அது என்னவென்றால் “கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு கொள்வது” -என்பது மட்டும் அல்ல!’- கணவன் எந்த தாழ்ந்த நிலயை அடைந்தாலும், அவனை விட்டுக் கொடுக்காமல், விட்டு விலகாமல், அவன் துயரங்களில் பங்கு எடுத்து, அவன் மீண்டு வர ஒத்துலைப்பதுதான் கற்பு’ என்பதுதான் கண்ணகி, சீதை போன்ற பெண்கள் உலகிற்கு விட்டுச் சென்ற வரலாறு!
அப்படிப்பட்ட கற்புக்கரசிகளின், கர்ப்பளிக்க கயவர்கள் முனையும்போது,நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்காது- எவ்வளவு சிரமப் பட்டாலும், அந்தக் கர்ப்புக்கரசிக்கு உதவி செய்யும் என்பதன் சான்றுதான் இராமாயணமும், சிலப்பதிகாரமும், இந்தப் பாலமும்! எனவே இந்தப் பாலம் இந்திய மக்களின் கலாச்சாரத் தோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது ! அதே நேரத்தில் இந்தப் பாலம் ஒரு நிணவுச் சின்னம் என்பதால், இந்தப் பாலம் முக்கியமா அல்லது கால்வாய் முக்கியமா என்று கேட்பதில் தவறு இல்லை!
மற்றவரின் நன்மைக்கு ஆக தான் துயரங்களை சுமப்பது தான் இராமரின் கொள்கை! எனவே இந்தப் பாலத்தை இடிபப்தால் இராமருக்கு ஒரு நட்டமும் இல்லை! ஆனால் எல்லோரும் தங்கள் பெற்றோர் நினைவாக ஏதாவது ஒரு பொருளை வைத்திருப்பது போலத்தான் இந்தப் பாலமும்! எனவே இந்தக் கால்வாயினால் உண்மை உபயோகம் இருந்தால், கால்வாயை வெட்டிக் கொள்ளலாம்! உதாரணமாக இராமர், வட அமெரிக்கா தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் கட்டியிருந்தால், அதில் கால்வாய் அமைப்பது உபயோகம் ஆனா ஒன்று! ஆனால் வெறும் 450 KM பயண தூரம் மீட்ச்ப் படுத்த 4000 கோடி கொட்டி, தண்டதிற்கு கால்வாய் அமைக்க வேண்டியது என்ன? That also in a sea route where the ship transportation is not existing!!!!!!!
Have we expalined the Scarifices of Rama in his aim to live upto his Principles?
Have we explained that Rama is even better than any God, as Gods are sitting in Skies (???) and watching, while Rama was helping others even in his adversity?
I dont consider Rama as God (to be frank I can not confirm whether there is any God really existing, as I have not seen any God so far, at the same time I did not rule out the possibilities that the God could be real), but I consider Rama as a one above God – in case God is existing!
மற்றவரின் நன்மைக்கு ஆக தான் துயரங்களை சுமப்பது தான் இராமரின் கொள்கை!
Hence, I consider Rama as a one above God !
I am sorry , Mr. Jaataayu may not like to read this, but I repeattu, I consider Rama even above Vishnu(in case Vishnu is existing)
But did I probagate my ideas to the common people sufficiently?
வந்தனமு
I regret that my remark about Pakuttarivaalar is taken literally. In the present TN miliew, Pakittarivaalar has a spl meaning! For information, I am the author of a book entitled Chintanaiyaalar Vivekanandar published by Prema Prasuram, Chennai 600 024. It is available with the publisher and popular book shops. I have also translated some of the works of Swami Vivekananda for Sri Ramakrishna Mutt (Calcutta) and a book for children published by Vivekananda Kenra, Chennai. During the centenary of Swamiji, My father and me were asked to stay at Sri Ramakrishna MUtt in Chennai to study the entire works of Swamiji and select portions to highlight for pamphlets! Thanks for sending me down memory lane!
MALARMANNAN
Swami Vivekananda’s harsh criticisms relate to Hindu society: not t Hindu religion.
MALARMANNAN
திருச்சிக்காரரும் இராம்குமாரும் மலர்மன்னனும் ஆற்றும் இந்த எதிர்வினைகளால் இந்துக்களாகிய நாமே சுயபரிசோதனைகளைச் செய்து கொள்ளுகிறோம். இதுவும் நமக்கு இந்துவாக இருப்பதால் கிடைத்த பலமே. சாதிக்கட்டுப்பாடுகளும் பிரிவினைகளும் இன்று எத்தகைய கேடுகளை விளைவித்திருந்தாலும் , இன்று இந்து சமுதாயம் பெரும்பான்மையாக இருப்பதற்குக் காரணம் இந்தச் சாதிக்கட்டுப்பாடே என்றும் இந்தத்தடை இல்லாது போயிருப்பின் இந்துசமுதாயம் முழுவதும் இசுலாமியர்களாகவோ கிறித்தவர்களாகவோ மதம் மாறியிருக்கக் கூடும் என்றும் எங்கோ படித்ததாகவோ யாரோ கூறியதாகவோ நினைவு. இன்று சாதிகளுக்குத் தேவை இல்லை. தொழில்கள் இயந்திர மயமாகி விட்டபின் சாதித் தொழில்களும் இல்லை. நீ செய்யாத போனாலும் உன் முப்பாட்டன் என்னை இழிவு செய்தான் என்று பிராமண சமூகத்தையும் இந்துதத்துவ ஞான சமயக்கோட்பாடுகளையும் பெரியார்தாசர்கள் கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
Sri Muthukumaraswami is cent per cent right. It was only because of the caste system and absence of one book and one Guru in the Hindu society that sustained the onslaught of Christianity and Mohmedanism. Malaysia and Indonesia fell because of the absence of that kind of in-built safety system. It is better the caste system is maintained without any rigid restriction: We better continue it as a loose federation . Only discrimination on the basis of caste has to be totally banned. Every caste has its own traditional and cultural exclusivities and this kind of uniqueness leads to the wishes of maintaining the caste system. If the caste system dies a natural death in course of time, well, no regrets. But let us try to retain all caste wise exclusivities that are beautiful and aesthetic.
The topic of these exchange of views and remarks are in response to the book by Sri. Ma. Venkatesan determined to reveal the role of EVR in the context of Hindu society. But that was lost because EVR was projected as a reformist and rationalist by some readers justifying his uncivilised and anarchic propoaganda against one comunity and one religion. . He was neither a reformist nor a rationalist. We had very many better reformists and rationalists with positive aptitude and EVR had not not propagated any reform that was not already insisted on by positive reformers we have had earlier. The contribution of EVR is only hatred and consolidation of sevearal communities against one community in the society. EVR has to be exposed in his true colour because there are still some gullible amongst us thinking EVR was a reformer and his criticism against Hindu religion has to be evaluated. Ma Venkatesan is doing yeoman service to Hindu society by unmaslking EVR, very much essential to remove the EVR Maya even amongst some innocent, kind hearted and tolerant Hindus! It is obnly beacuse of this kind of staguna vikruti that Hindu society has been paying heavy price, refusing to learn from the past bitter experiences! EVR has to be appreciated for his thrift and handling public money with care. In his personal life, he helped a widow in the family to marry of her choice, which may also be appreciated. His campaign against Brahmins took years to gather strength and thinking that the society listened to his hate campaign at once is not correct.
MALARMANNAN
நல்லது. இவ்வளவு தூரம் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்தவர் இப்படி எழுவது வியப்பை அளிக்கிறது.
Kindly Refer the following:
நூல்: இளைய பாரதமே எழுக, பகுதி 7-இந்தியாவின் எதிர்காலம் பக்கம் 165,166
“நம்மைச் சுற்றிலும் காண்கிற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால் பிறகு எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம். ”
“நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம். மாலையில் உட்கார்ந்து மூச்சின் வழியாக காற்றை இழுத்து விட்டால் எல்லாம் ஆயிற்றா? அல்லது நீங்கள் மூன்று முறை மூக்கைப் பிடித்துக் கொண்டு காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வர வேண்டுமா? என்ன வேடிக்கை இது, சுத்த முட்டாள் தனம்? தேவை சித்த சுத்தி, இதய தூய்மை, . அது எவ்வாறு வரும்? முதலில் விராட்டை, அதாவது உங்களை சுற்றி இருப்பவர்களை வழி படுங்கள். ” //
இதற்க்கு என்ன அர்த்தம்? விவேகானந்தர் தெய்வங்களை இகழ்கிறார் என்று அர்த்தமா? சந்தியாவந்தனம், பிராணாயாமம் செய்வதை இகழகிறார் என்று அர்த்தமா- இல்லை.
இல்லவே இல்லை, எது முக்கியமானது, எது மிக மிக அவசியமானது என்பதை தெளிவு படுத்த இப்படிக் கூறியுள்ளார்.
அதைப் போல ஆதி சங்கரர், மண்டன மிஷ்ரருடன் என்ன வாதம் செய்தார்? மண்டன மிஸ்ரர் மிகச் சிறந்த வேத பண்டிதர் ஆயிற்றே! வேதத்தில் கூறிய கர்மாக்களை மிகச் சரியாக செய்பவர் ஆயிற்றே! அப்படியானால் ஆதி சங்கரருக்கு மண்டன மிஷ்ரருடன் என்ன வாக்குவாதம்?
மண்டன மிஸ்ரர் கர்மாவினாலேயே விடுதலையை, முக்தியை கூட அடைந்து விடலாம் என்று நினைக்கும் மீமாம்ச கொள்கை உடையவர். அனால் ஆதி சங்கரரோ கர்மாவினால் அல்ல, ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்ற கொள்கை உடையவர்.
அப்படியானால் ஆதி சங்கரர் வேத கர்மாக்களை இகழ்கிறார் என்று அர்த்தமா?
நான் இந்து மதத்தை குறை கூறவோ , கண்டிக்கவோ இல்லை, சரியான , தூய்மையான இந்து மதத்தை வெளியே எடுக்க முயற்சி செய்கிறேன். அதற்காக இந்து மதத்தை மூடியுள்ள தூசிகளை தட்டி சுத்தம் செய்கிறேம். அது உங்களுக்கு நான் இந்து மதத்தை விமரிப்பது போல தோன்றினால் அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்?
With all humbleness, I wish to mention that I write all these only to preserve the correct Hinduism , and by which, I think, India can improve . I belive that the correct Hinduism can bring peace in the world, and makes the earth a better place to live.
With all humbleness, I wish to mention that i am not writing these to prove that I am brilliant or some thing like that- I dont mention my name, nor I put my Photo. I dont claim that all I wrote is correct, Might be all wrong, might be some thing right some thing wrong, might be all I wrote are right but in Kachchaa languge, also it could be that all I wrote might be Right and Pakka.
Any one can analyse what I wrote, any one can criticise what I wrote, all are welcome!
My aim is to bring out the True , Genuine, good and brillaint Hinduism.
Asathomaa Sathkamaya,
(from illution to truth)
Thamasomaa Jyothrkamaya,
(from darkness to light)
Mirityomaa Amirithyamkamaya
(from death to immoratl life)
Oh, God please lead us!
The basic question was whether EVR’s activities should be taken into acount as comments on Hindu religion and his intention was to reform Hindu society and the purpose of his hate campaign in the guise of reformation by putting all other communities of Hindu society against one Hindu community , thinking that it s the pillar of Hindu society .(as propagated by Christian missionaries) was with good intention or because of his personal motive of settling score with his former colleagues, who were Brahmins. But that was lost in the heat of exchange of views. Deviation always leads to futile excercise. The intention is to remove EVR Maya from our midst and we appreciate Ma. Venkatesan for what he has done for this. WE have had positive reformers for Hindu society right from Sri Ramanuja and even before him upto Raja Rammohan Roy to Swami Vivekananda, Narayana Gru, Vaikundaswami and many more. Thus, we don’t need an EVR, a negative force , the traitor of Hindu society and the stooge of Christian missonaries. Swamiji’s comments are for the society and its assumption of the religion but not the Hindu religion as such. Finally,
It should be “Ga maya,” not kamaya. It is OK if it is a slip but it is repeated. Pointed with good intention only.
MALARMANNAN