பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்.

13 வயதுப் பெண்ணை திருமணம் செய்த ஈ.வே.ரா!

periyar001ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?

அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை. காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது. ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.

அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை? இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை? பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.

இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர்” என்ற நூலில் கூறுகிறார்:-

”(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்கவேண்டும்?”

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் – மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் – கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு! அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு! அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா? ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.

அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே!

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா!

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார். அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம். அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்:-

”ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.”
(நூல் :- தமிழர் தலைவர்)

இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்:-

”நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும் …” (நூல் :- தமிழர் தலைவர்)

(தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.

இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!

9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! – இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) – விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.

அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்:-

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
(நூல்:- தமிழர் தலைவர்)

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்! இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!

இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும். அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே!

அதுமட்டுமல்ல.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

BOX NEWS
நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.
பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்:-

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, periyar003புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!

70 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்”

  1. you have said: கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை

    But, at the time Krishna’s age is not more than 3 or 4.

  2. ஐயா உங்களைப் போல ஆள் இல்லாமல் தான் தவித்துக் கொண்டிருந்தோம் ஐயா! இந்த அயோக்கியர்களுக்கு எதிராக அவர்கள் முகத்திரையைக் கிழிக்க சரியான பதிலடி கொடுக்க இப்படி அங்கங்கே யாரேனும் வந்துதவினால் எங்களுக்கு பெரிய பாக்கியம். தொடருங்கள் ஐயா தொடருங்கள். இது புத்தகமாக வந்தால் குறைந்த பட்சம் இரண்டு பேருக்கு நான் வாங்கிக் கொடுப்பேன்.

    நன்றியுடன்

    ராம்.

  3. பெரியாரின் நாத்திக வாதமெல்லாம், பிராம்மண துவேஷத்துடன் ஒட்டிக்கொண்ட ஒன்று தான். அவர் பிராம்மண துவேஷத்தையும் நாத்திக வேஷத்தையும் (அதுவும் பிராம்மண கடவுள் என்று அவர் சலித்தெடுத்துக்கொண்ட கடவுள்களை மாத்திரமே – கிராமத்து சிறு தெய்வங்கள் எனச் சொல்லப்பட்ட எதையும், மற்ற மதத்தினர் எவரது வழிபாட்டையும் அவர் தொட்டதில்லை. அதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இயேசுவை நிராகரித்தாவது தப்பித்துக்கொள்ளலாம், வசை மாத்திரமே கிடைத்திருக்கும். அல்லாவைப் பற்றி ஒரு சிறு முனகல் இருந்திருந்தால் கூட அவர் உயிர் வாழ்ந்திருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்) – ஆக இவ்விரு கொள்கைகளையும் அவர் மேற்கொண்டது, அவரது 46-வது வயதுக்குப் பிறகு தான். அதற்கு முந்திய அவர் நடத்திய குடியரசு இதழ்களில், அவர் எழுதியது வேறு. குடியரசு இதழைத் தொடங்கி வைத்தது ஒரு சாமியார், பெயர் மறந்து விட்டது.

    இதெல்லாம் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத் தான் வீரமணி (சாரங்கபாணிக் கோனார் – இந்த செய்திக்கு நான் ராஜனுக்கு கட்மைப் பட்டிருக்கிறேன்) ஈ.வே. ரா. வின் எழுத்துக்களை வேறு யாரும் தொட அனுமதிப்பதில்லை. கருநாநிதியும் அவ்வாறே,

    சாமி சிதம்பரனார், அவர் அறிந்த ஈ.வே. ரா. வைப் பற்றி அவர் மனதுக்கு நேர்மையாகவே எழுதியிருக்கிறார். வீரமணி, கருநாநிதி போன்றாரின் பொய்மை அவரிடத்தில் இல்லை. சிறு வயதில் நாகம்மையைத் தான் மணப்பேன் என்று சொன்னதில் பகுத்தறிவு என்கிற மசாலாவைக்கண்டது சாமி சிதம்பரனாரின் தவறே தவிர, பொய்ம்மையில்லை. ஈ.வே.ரா. வின் வாலிப விளையாட்டு வினோதங்களையெல்லாம் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருக்கிறாரே, அந்த நேர்மையை வீரமணியிடமோ கருநாநிதியிடமோ காணமுடியாது.

    சிறுவயதில் பழகியதால் வந்த மோகத்தில் தான் நாகம்மையைத் தேர்ந்த காரணம் காணவேண்டும். இது சாதாரணமாக நிகழும் ஒன்று. அதற்குப் பகுத்தறிவுச் சாயம் ஏன் சாமி சிதம்பரனார் பூசினார் என்பது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

    வாலிப விளையாட்டு எந்த குணத்தில் இருந்ததோ அந்த குணத்தில் தான் அவரது அரசியல், சமூக, இன்னும்மற்ற விஷயங்களில் அவர் அடிக்கடி மாறும் நிலைப்பாடுகளும் இருந்தன. அடிப்படையில் முரடர். தன் மனத்தில் அவ்வப்போது நினைத்ததை, என்ன பல்டியாக இருந்தாலும் அதை கொள்கை என்னும் சாதிக்கும் முரட்டு சுபாவம் அவரது. மற்றபடி, மென்மை, கனிவு, இன்னொருவரைப் புரிந்து கொள்ளுதன் போன்ற குணங்கள் அவரிடம் அறவே இல்லாதவை.

    அடிக்கடி அவர் வெளிப்படையாகச் சொல்வது, எனக்கும் முட்டாள்கள் தான் தேவை.
    அவருக்கு அப்படியே அவர் விரும்பிய படியே முட்டாள்களாகத் தான் கிடைத்தார்கள்
    அதனால் தான் அவர் விரும்பிய படியே கழகத்தில் கேள்வி எழுப்பாது எல்லாம் நடந்தது. ஒரே செம்மறியாட்டு மந்தைகள்.

  4. அந்த ஆரம்ப குடியரசு இதழ்களில் அவர் எழுதியது தெரியவேண்டுமெனில், அவரது நாத்திகக் கொள்கைகளின் ரூபம் தெரியவேண்டுமெனில், அவை விவாதங்கள், விமர்சனங்கள், சர்சைகள்” என்னும் என் புத்தகத்தின் ஒரு கட்டுரையில் காணலாம்.

  5. தன்னுடைய மனைவியைத் தவிர பிற பெண்களிடம் உறவு வைத்து இருப்பவர்கள் , தம் மனைவிக்கு ஏதாவது மரியாதை கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

    தன்னுடைய மனைவியைத் தவிர பிற பெண்களிடம் உறவு வைத்து இருப்பவர்கள் , தம் மனைவிக்கு ஏதாவது மரியாதை கொடுப்பார்களா என்பது சந்தேகமே.
    ஈ.வே. ரா தான் எப்படிப் பட்டவர் என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார்.

    இப்படிப்பட்டவர் இந்து மதத்தை கண்டித்து பேசும் நிலை எப்படி வந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
    இந்து மதத்தை வலிமை உடையதாக்க வேண்டும். எங்கே சீர் திருத்தம் தேவையோ அங்கே சீர் திருத்த வேண்டும்.

    ரேபிஸ் நோய்க்கு மருந்தாக லூயி பாஸ்டர் எதை உபயோகப் படுத்தினார் என்று சிந்தியுங்கள்.

  6. பெரியாரை ப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் தான் அவரை கொண்டாடுகிறார்கள். இதை எல்லாருக்கும் உங்கள் கட்டுரை மூலமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி!

  7. Keep up the good work Venkatesan and the tamilhindu.com team. I’ve already ready the entire book when it was released, but reading once again is no doubt interesting.

  8. பெரியார் செய்தது திருமணமல்ல. பெண் சிசுவதை.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  9. திராவிடக் கட்சியின் பெயரில் ”திராவிடம்” என்னும் சொல் பண்டைக்காலத் தமிழிலக்கியங்களில் உள்ளதா? இல்லையா? எனக்குத் தெரிந்தவரை (அவர்கள் பரிபாஷையில்), “இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என அபிப்பிராயம். ஆரியர்கள் இலக்கியங்களில் தென் தேசங்களைக்குறிக்கும் சொல், ’திராவிடம்’ என்னும் சொல் இருக்கிறது. அது, தெற்கிலுள்ள நாடுகளான, தமிழ் நாடு, கேரளம், கர்னாடகம், ஆந்திரா என்பவைகளைக் குறிக்கிறது. இருப்பினும், ”திராவிடம்” என்னும் சொல் “வடமொழி”ச் சொல்லை தங்களுக்குச் சூட்டிக்கொள்ளவும் அதைப்பற்றி பீற்றிக்கொள்ளும், திராவிடக் கட்சித் தொண்டர் யாராவதோ அல்லது அவர்களின் தற்போதய தலைவர் எனது கேள்விக்கு விளக்கம் தருவார்களா? இப்படி வடமொழிச்சொல்லை தனக்கு இட்டுக்கொண்டு வடமொழியை எதிர்த்தால் என்ன சொல்வது? ”உரே சொல்லட்டும் போ”

  10. அடடா…எப்பேர்பட்ட ஸ்த்ரீலோலன்! இந்த ஸ்த்ரீலோலன் “கற்பு” பற்றி பேசியதும், தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ரவிக்கை அணிவதால் தான் துணியின் விலை ஏறிப்போனது என்று சொன்னதும் தான் நமக்குத் தெரியுமே! இவரைத்தான் பெண்ணியவாதி என்று போற்றுகின்றனர் கழகக் கண்மணிகள்.

    நாகம்மை கோவில் செல்வதைத் தடுப்பதற்காக இவர் அரங்கேற்றிய அசிங்க நாடகத்தை இவர் பெயரில் சினிமா எடுத்தவர்கள் எவ்வாறு திரித்து வெளியிட்டனர் என்பது இதைப் படிப்பவர்களுக்குப் புரியும்.

    தொடரட்டும் தங்கள் சேவை. தமிழ் இந்துவிற்கு நன்றி.

  11. Sami Chidampaarm revealed very many darker side of EVR. BUt the first edition has been very cleverly edited. For instance, to mention a widow he would say “Aruttuk katti.” And EVR is hailed as a staunch crusader of women’s rights and a feminist!

    Anna has also recorded in one of his writings about EVR referring widows as Aruttuk Kattiyatu!

    Once EVR and Samai Chidamparam were travelling in a train. there was lot of crowd in every compartment and they had to travel in diferent compartments. When the train stopped in a station, chitamparam came to EVR’s compartment to make enquiries about his comfort. EVR wanted him to get coffee and gave his Gooja. While handing over , he told Chitamparam to empty it and wash properly. When asked what it contained, EVR said he had to pass his urine in it and the gooja contained his urine! He said he was not able to go the toilet because of the crowd.

    This paragraph has been carefully omitted in the following editions. Probably, we can try the first and original version of samai chitamapram’s book at Gnanaalaya of Pudukkottai!
    MALARMANNAN

  12. சாதுர்யமாக மறைக்கப்பட்ட பல விஷயங்களை அற்புதமாக அம்பலப்படுத்துகின்றீர். தொடரட்டும் உங்கள் சீரிய பணி. இன்றைய, நாளைய சமுதாயம் இவர்களது இருண்ட பக்கங்களையும் அறியட்டும். மணியம்மை குறித்த (விரிவான) பகுதியை எதிர் நோக்குகின்றேன். எழுதிய ம. வெங்கடேசன் அவர்களுக்கு எமது நன்றி மற்றும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  13. In his early days, EVR had many Brahmins in his friends circle. His hatred toward Brhamins began from his personal vendatta against ceratin Brahmin colleagues in the Congress. EVR wanted Gongress adopt a resolution demanding reservation on the basis of communities. The leaders of the Congres, including non-Brahmins did NOT want to support EVR’s proposal because they knew it would divide Hindu Society and create animosity among various castes. Caste consciousness was already strong in the society and they did NOT want further strngthening of it. It was only Dalits who deserved such support because they were supresed by all other communities, was their stand. EVR took it as prestige issue and started creating problem in the camera meetings of Congress. Since Brahmins were in the forefront in the Congress those days, EVR’s hatred turned mainly toward Brahmins. Like Christian proselytisers, EVR also felt thwt it was Brahmin Communuty that was the foundation of Hindu faith, since it was the preastly community. His hatred thus turned on Hindu faith too grsadually. EVR was already a non-believer; he ahd never had any moral values from his early days. When he ran away from home in his youth, he stayed in a Mutt in Khasi as a servant for a living. The mutt was very strict in following cleanliness because that is the first criterion for godlines. EVR was to pluck flowers form the Mut garden for daily pooja. But he should yake his bath before doing that service. EVr never liked to take bath and in the Ganga of Khasi, he neevr felt comfortable in taking bath in cold water. He pretended having taken bath and one day it was found out that he had been cheating all along. He was immediately removed from service and he had to live the life of a beggar in the streets of Khasi. This would have also planted hatred toward Hinduism in his young mind. For some, it is an inborn tendency to react to everything negatively, seeing things upside down for the pleasure of giving shock to others. EVR belonged this category. EVR’s intention was never reforming Hindu society with sincerity. His intention was to totally destrioy Hindu faith. Giving him credibilty and starting to probe as to what sort of ills Hidnu faith and society have to receive such harsh and uncivilisised condemnation from EVR willl be foolhardy. We ahve had very many great reformers, more revolutionary than EVR, who could achieve timely reforms in the Hindu society with good intention, positive thinking. If any one recommends to consider EVR’s criticism simply reject such recommendation. EVR was anti-Hindu. A true and knoeledgeable Hindu will never consider EVR to be a healthy critic and take his words for perusal.

    In 1954, DMK was still considered an anti-Hindu and atheist party. AT that time Kannadsan was also in DMK. He wrote a song for a movie named Mangayar Tilakam. The song was in praise of Sri Tulasi Madha, a devotional song to be sung while performing Tulasi Pooja. There was hue and cry in the party. Karunanidhi, who was always envious of Kannnadsan made it a very big issue. He complained that Kannadasan had acted aginst the policies of DMK. The matter went to Annna for disposal. Anna called Kannadasan and said:
    “I myself do NOT subscribe to the ideology of denouncoing GOD. Do whatever you feel rigth.”
    Kannadasan has recorded this incident in his small book entitled ‘ Unnaiyey Nee Arivaai.’ This was published by Kannadasan Pathippagam, Chennai 600 017. See page 17 to verify my information. The song Kannadasan wrote was:
    Engal Kula Devi Neeyey Sri Tulasi Amma, Anput Taayey.

    Since I was very close to Anna and knew Kannadsan also very well, I am aware fo this incident. Anna encouraged Kannadasan, telling him to simply ignore such silly complaints against him; if he had faith in Hindu way of belief in Gods with variuous manifestations, he can very well nurture that belief, was Anna’s final word. Anna had adviised MGR also, saying if he had faith in God, he should NOT hide it.

    During 1962 elections, Congress garnered support from people by offering Rs. 5/- per voter. But they were taking oath from the voters showing the portrait of Sri Venkatachalapathy of Tirumala to the effect that they would vote for Congress candidate only. “Oru punitam vaainta deivattai oru saamaaniya manitanaana en mun, enakku etiraaka niruttuvatu perum paavam allavaa?” was Anna’s reaction to that.
    MALARMANNAN

  14. I think Malarmannanji’s clarifications are an eye-opener to youngsters like me to differentiate between the original social reformers and duplicates like EVR.

  15. Respected TamilHindu,

    Along with the series of articles, also please give us the name of the publication that published such a wonderful work.

    People who want to buy such a valuable books will benefit.

  16. Super article. May god give more strength to ma.venkatesan for his intellectual fight.
    -va.mu.murali, tirupur.

  17. திராவிடம் திராவிடம் என்று கூறியே தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்யும் இந்நாள் தலைவர்களும் சரி…அந்த நாள் தலைவர்களும் சரி(அண்ணாவை தவிர) அடிப்படையில் தமிழர்கள் அல்ல.அதை மறைக்கத்தான் திராவிடம் என்ற கருவியை கையில் எடுத்தனர்.விளைவு இன்று தமிழன் தன அடையாளத்தை மறந்து நிற்கின்றான். இவர்களுக்கு தமிழ் உணர்வு என்றும் இருந்தது இல்லை…..எல்லா வகையில் தமிழர்களை கொடுமை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

  18. It is really nice to read about these scoundrels who are glorified,..

    Please keep on exposing these people,..

  19. அய்யா சாமி,

    உங்கள மாதிரி ஆளுகளை தான் தேடிட்டு இருக்கிறேன்.

    என்னால டைப் பண்ண நேரம் மற்றும் சூழ்நிலை ஒத்து வருவது இல்லை. ( வீட்டில் computer மற்றும் internet connection இல்லை ).

    summa வேல vetti இல்லாம Indu சமயத்தை பத்தி தப்பு thappaa pesuravangalai சும்மா வெளுத்து வாங்குங்க.

    நாங்க இருக்குறோம்.

    இவிங்களை ஒன்னே ஒன்னு kekkiren.

    Kadvule illaiya
    iila
    Indu kadavul illaiya

    thairiyama solla mudiyuma ?

    Jai hind

    Anand

  20. அய்யா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. இந்துகளுக்காக இம்மாதிரி உண்மைகளை தொளுரிதுகாட்ட ஆள் இல்லை என்று நினைத்தேன். ஆண்டவா! நல்ல வழி காட்டி விட்டாய். அய்யா உங்கள் தொண்டு தொடரட்டும். வாழ்க! வளர்க!

  21. great work…..
    please continue.
    I learnt quite a few new things (even though they may be very old by age)
    Chovisiri

  22. எனது தாழ்மையான கருத்து என்னவென்றால், கடவுள் இல்லை என்று ஈ வே ராமசாமி ஆணித்தரமாகவே கூறி இருக்கிறார். கடவுள் என்று அவர் கூறியது ஹிந்து கடவுளை மட்டும் அல்ல எல்லா மதக்கடவுளையும்தான். ஆனால் அவர் ஹிந்து கடவுளை அதிகமாக விமர்சனம் செய்து இருக்கிறார். மற்ற மத கடவுள்களை விமர்சனம் செய்யவில்லை. இந்த இடத்தில் உற்று கவனித்தால் ஒன்று புரியும். அவர் கடவுள் கூடாது என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்றுதான் கூறியிருக்கிறார். கடவுள் இல்லை என்று அவருக்கு முன்பே கூறிய முன்னோடிகள் மிக குறிப்பாக கௌதம புத்தரும் அப்படித்தான் கூறி இருக்கிறார்கள். ஆகா கடவுள் இல்லை என்பது ஈ வே ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட தனிஒரு ஆராய்ச்சி முடிவு அல்ல. ஈ வே ராமசாமி ஹிந்து கடவுள்களை ஏன் அதிகம் விமர்சனம் செய்தார்? ஏனென்றால் இந்திய அரசு சட்டங்களும் பெருவாரியான இந்திய மக்களும் ஹிந்து தரும சாஸ்திரம் சார்ந்து இருப்பதால். குறிப்பாக இந்திய மக்களின் பலப்பல கஷ்டங்களுக்கு அவர்களின் ஹிந்து தரும சாஸ்திரங்களே காரணமாக முன்னேற்ற தடையாக இருப்பதாக பலப்பல ஹிந்து அறிஞர்களே எழுதியும் கூறியும் வந்திருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில்தான் ஈ வே ராமசாமியும் ஹிந்து கடவுள்களையும் அதன் சாஸ்திரங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். அம்பேத்காரும் அப்படிதானே. நாம் எல்லோரும் தேச பக்தராக கருதும் பகத் சிங் கூட கடவுள் இல்லை என்றுதானே கூறி இருக்கிறார்! ஆக கடவுள் இல்லை என்று ஈ வே ராமசாமி நாயக்கர் மட்டும் கூறவில்லை.

    சாமி சிதம்பரனார் ஈ வே ராமசாமியின் ஒழுக்கமற்ற தன்மையை தமது தமிழர் தலைவர் புத்தகத்தில் மிக நேர்மையுடன் வெளிகாட்டி உள்ளார் என்று நண்பர் ஒருவர் இங்கே குறிப்பிடுகிறார். அந்த புத்தகத்தை சரி பார்த்தவர் யார் ஈ வே ராமசாமிதானே? அப்படி என்றால் அவரிடம் நேர்மை இல்லையா?

    பகுத்தறிவு பேச ஈ வே ராமசாமிக்கு தகுதி இல்லை என்று இங்கே கூறப்படுகிறது. சரி பகுத்தறிவு பேச உலகத்தில் யாருக்கு சரியான தகுதி இருக்கிறது என்று கூறமுடியுமா? பகுத்தறிவை நீங்கள் பேசலாம் நான் பேசலாம் என்று பேசிட முடியுமா? உங்கள் கருத்தை சரியாக சொல்லுங்கள். பகுத்தறிவு கூடாதா அல்லது பகுத்தறிவை பேசவே கூடாதா? பகுத்தறிவு பேசலாம் என்றால் அது நம்முடைய ஜாதி மத கடவுள் சாஸ்திரங்களை ஆராய்ச்சிக்கு கொண்டுவந்துவிடும் அல்லவா? ஆராய்ச்சி செய்வது நமது மதத்துக்கு எதிரானது அல்லவா? ஆக பகுத்தறிவை பேசுகிறவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் முரண்பாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. ஈ வே ராமசாமி பேச தொடங்கும் போது தான் கூறுகிற கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்றுதான் தொடங்குவார். அந்த அடிப்படையில் சீர்தூக்கி பாருங்கள் சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதன் தத்துவம் என்ன? ராமாயணம் இயற்றிய வால்மீகி யார்? ராமாயணம் இயற்ற அவருக்கு தகுதி உண்டா இல்லையா? அட காவியம் இயற்றவும் பகுத்தறிவு கூறவும் தகுதி பார்த்தால் உலகில் யாரும் மிஞ்ச மாட்டார்கள் நண்பர்களே! பகுத்தறிவை பேசுவதை காட்டிலும் அதை புரிந்து வாழ்தலே சரியாக இருக்கும். ஈ வே ராமசாமி நாயக்கர் “தமக்கு பின் வரும் சமுதாயம் என்னைக்கூட பிற்போக்கு வாதி என்று கூறலாம்” என்று கூறி இருக்கிறார். . நமது கிரிஷ்னரை போல நமது ராமரை போல விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல ஈ வே ராமசாமி நாயக்கர்.ஆகையால் நீங்கள் தாராளமாக அவரை விமர்சனம் செய்து சீரிய முறையில் மக்களுக்கு வழி காட்டுங்கள்.

    ஈ வே ராமசாமி நாயக்கர் தமிழர் அல்ல ஆனால் தம்மை என்றும் எப்போதும் தூயத்தமிழன் என்று கூறி எவரையும் ஏமாற்றியதே இல்லை. ஈ வே ராமசாமிக்கு “பெரியார்” என்கிற பட்டத்தை பெண்கள் மாநாட்டில் பெண்களால் கொடுக்கப்பட்டது. நீங்கள் அவரை பெரியார் என்று கட்டாயம் கூறித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முதுபெரும் பிராமணர் ஸ்ரீ ராஜகோபலச்சாரியார் ஈ வே ராமசாமியின் உற்ற நண்பர் என்பதை நீங்கள் உணரவேண்டும். இனம் இனத்துடந்தான் சேரும் என்பார்கள். அந்த வகையில் ஒழுக்கம் அற்ற ராமசாமி ஒழுக்கம் அற்ற ராஜகோபாலச்சாரியாரிடம் நட்பு கொண்டார் என்று கூறுவீர்களா.

    உங்கள் விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது. நண்பர்களே என் கருத்தை விமர்சனம் செய்து எழுதுங்கள்.- ராஜேந்திரன்.

  23. //பகுத்தறிவு பேச ஈ வே ராமசாமிக்கு தகுதி இல்லை என்று இங்கே கூறப்படுகிறது. சரி பகுத்தறிவு பேச உலகத்தில் யாருக்கு சரியான தகுதி இருக்கிறது என்று கூறமுடியுமா? பகுத்தறிவை நீங்கள் பேசலாம் நான் பேசலாம் என்று பேசிட முடியுமா?//

    நண்பர் ராஜேந்திரன் அவர்களே, மிகவும் பொறுமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் நிதானம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    பகுத்தறிவு பேச ராமசாமிக்குத் தகுதி இருக்கிறது. ஆனால் அதில் அவர் உண்மையாக இல்லை என்பதே அநேகரின் குற்றச்சாட்டு. கடவுள் இல்லை என்பது தான் பகுத்தறிவா ? கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையால் பல நன்மைகள் இருக்கிறது என்றல் அதையும் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லி அதை அளவோடு வைத்திருக்க கற்றும் கொடுத்திருந்தால் அது தன உண்மையான பகுத்தறிவு .

    கடவுள் நம்பிக்கையாலும் பாவம் புண்ணியம் என்ற நம்பிக்கையில் கட்டுப்பட்டதாலுமே இன்றும் மக்கள் ஆயிரம் கஷ்டத்திலும் ஒரு அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அதைப் பற்றி ராமசாமி உணராதது ஏன்?

    அதை விட்டு சாமி இல்லை என்று சொல்வதும, சாமி அதுவும் இந்து சாமி சிலைகளை மட்டும் உடைத்து வீரம் காண்பித்ததும் தான் பகுத்தறிவா ?

    நான் விளையாட்டாகச் சொல்லுவேன் குப்பை பொறுக்குபவன் கூட பகுத்தறிவு வாதி தான் என்று. எதைப் பொறுக்கலாம் எதைப் பொறுக்க வேண்டாம் என்று பகுத்தறிந்து போருக்குகிரானே அதனால் என்று. எனவே பகுத்தறிவு என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தம் போல சிலர் கூத்தாடுவது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்தத்தொடர் பயன்படுகிறது . வெறும் விமர்சனம் அல்ல. இது ஒரு விழிப்புணர்ச்சித் தொடர். முழுவதும் படித்துவிட்டு பிறகு பதில் சொல்லலாமே. ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு அவசரம் வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன் .

    //கடவுள் என்று அவர் கூறியது ஹிந்து கடவுளை மட்டும் அல்ல எல்லா மதக்கடவுளையும்தான்// அப்படி அவர் வெளிப்படையாக இல்லை என்பது இந்த தொடரில் பல இடங்களில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் படியுங்கள். நன்றி ராஜேந்திரன்
    அன்புடன்
    ராம்

  24. இங்கெ சிந்தனையாளர் ம. வெங்கடேசன் ஆதாரங்களோடும் , புள்ளி விவரங்களோடும் நடந்தவற்றை விளக்குகிறார். அவர் பெரியாரை இகழ்ச்சியாக எதுவும் எழுதவில்லை.

    அதற்க்கு இங்கெ சிலர் குய்யோ, முறையோ என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

    பெரியாரோ சகட்டு மேனிக்கு வள்ளுவர், கம்பர் , காந்தி என எல்லோரையும் சிறுமைப் படுத்தி எழுத தயங்கவில்லை. அவர் எழுதியதை ரசித்து படித்து விட்டு இங்கெ வந்து ஒப்பாரி வைப்பது ஏன்?

    பெரியாரின் கருத்துக்களில் சில முக்கியமானவைதான். அவை நமக்கு உபயோகப் படும்.

    பெரியாருக்கு தமிழாக வரலாற்றிலே ஒரு இடம் உண்டு அதை குடுப்போம். ஆனால் பெரியாரை ஒரு சித்தர் போலவோ, புத்தர் போலவோ ஒரு ஒளி வட்டத்தைப் போடாமலேயே ஆனால் போட்ட ரேஞ்சுக்கு சித்தரிப்பது நடக்கிறது.

    அவர் பேரை வைத்து சிலர் பில்லியனர் ஆகி விட்டனர்.

    பெரியார் பேரை வைத்து இன்னும் சொத்து குவிக்க அவருக்கு எக்ஸ்ட்ரா பில்டப் குடுத்துப் பார்க்கின்றனர்.

    அதே போல பெரியாரைக் கேடயமாக வைத்து மதமாற்ற வேலையைக் கச்சிதமாக செய்து வயிறு வளர்க்கும் கூட்டமும் உள்ளது.

    அய்யோ எங்க பெரியார் என்பார்கள்.. ஆனால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால், பின் வாங்குவார்கள், ஒரே கடவுள் என்பார்கள், அவர் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள் என்பார்கள், நேற்றுதான் பார்த்தேன் என்பார்கள், நான் சாட்சி குடுக்கிறேன் என்பார்கள்.

    இந்த ரவுசுக்காகத்தான் பெரியார் கடைசி வரை வேறு மதங்களுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ இல்லை.

    பகுத்தறிவு என்று வார்த்தைக்கு இடம் கொடுக்கும் ஒரே மார்க்கம் எது என்று பெரியாருக்கு நன்றாகத் தெரியும். தன கையிலிருக்கும் சரக்கை பகுத்தறிவு லேபில் ஒட்டி விற்க வாய்ப்பு அளிக்கும் மார்க்கம் எது எனபதை அவர் அறிந்து இருந்தார்.

    “கடவுள் இல்லை” என்று கூறினால், கழுத்தை அறுத்து மரண தண்டனை வழங்க வேண்டும், என்று நீதி மன்றத்திலே நீதிபதிகளே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு, காட்டு மிராண்டி முறைகள் இந்த உலகத்தில் இருப்பது பெரியாருக்கு தெரியும்.

    அதனால் தான் தன்னை இழுக்கப் பார்த்த பலருக்கும் டாட்டா காட்டி விட்டார் பெரியார்.

  25. Dear Mr. Rajendran,

    first of all sorry for writing in English as my system does not have the Tamil software. I am not arguing with your views. But Ramasamy was more or less confused personality. Being a kannadiga did not want to criticise Tamil and Tamilians hence, he took a word “Dravidan” from birtish. So, it will give edge to criticise a Tamil as a “Barbaric language” but Tamils have to call him as Tamil leader. Some of his opinions are ” marriage is a bonding, hence marriage system should be abolished” but he married twice!

    “Women should not prefer the pregnancy – because it leads them to slavery” – I wonder then how was he born?

    ” women should not wear the differenciating dress from men, they also should wear lungi, dhoti that too without inner garments” ( may be a social revolution in his kind!!!) –

    “Women should not be limited themself with only one man – many male companions can be prefered” ( what AIDS???) – is he precticed the same in his life?

    Rajaji said several things to EVR but he listened and implemented his second marriage advise only!

    EVR is the totally confused personality, but every isolated person there will be one good thing. The EVR used to call even a small kid also with respect .. I think this is the one HINDHU concept EVR was following unknowingly. Our scriptures say the Athma is same in every body (that is the reason we say “vanakkam or namaste” and not good morning evening night and all) the age is for the physical body. Hencce EVR was unkonwingly respecting every “Athma”

    -T. Senthilkumar

  26. Very informative article and interesting discussion on it.
    Keep it up so long it does not develop into personal animosity.
    Swaminathan.T.N.
    Bangalore. temp. camp at New Jersey.

  27. periyaarin (vzhUvamaithi) sapthamellam adangi oru 30 varudangaL aayiRRu ippothu kEtpathu ellam sillaraich saptham mattumE. manjaL thundai vidaamal suRRi alaiyum oruvaRaalum,suyanidhi(?!) kalloori pugazh sarangapaani konar aalum uNmaiyaana seerthiruththangalaip pEsamudiyuma?

  28. இதை எல்லாம் பெரியார் அவரே தன சுயசரிததிலையே சொல்லிவிட்டார்.. இதை ஏதோ நீங்கள் கண்டு பிடித்ததை போல் வந்து போட்டுள்ளீர்கள்…

    அட அறிதளி… இப்போ தான் இதை எல்லாம் படித்தீர்களா.. ரெம்போ லேட் நீங்கள்…

  29. ஆரியனின் மதமாகிய ஹிந்து மதம் தமிழனுக்கு எவ்வாறு தாய் மாதமாகியது ?

  30. ஹிந்து மதம் எப்படி தமிழனின் மதமாக மாறியது…..? தமிழன் என்றாலே ஹிந்து கிடையாது …..அது பின்னால் ஏற்பட்ட உள் குத்து ..பிராமணர்களின் ஊடுருவல் …….

  31. He was bloody lucky and could easily sell his ideas to the unsupecting Tamil masses.
    He did not have the analytical or academic brilliance, intellectual capabilities or the leadership qualities of his contemporaries in the Congress. Out of sheer insecurity he created an exclusive constituency and got away with many things including sedition.
    He made his ‘Kudi Arasu’ paper and speakers available for pro-British propaganda for a hefty consideration by the colonial rulers. He aided and abetted every move by the Britsh to scuttle the Independence struggle.
    Any self-respecting country would have put him behind bars, but here is an icon of self-respect! It can happen only here

  32. விஜயானந்த் // ஆரியனின் மதமாகிய ஹிந்து மதம் தமிழனுக்கு எவ்வாறு தாய் மாதமாகியது ?//
    Karunaipriyan // ஹிந்து மதம் எப்படி தமிழனின் மதமாக மாறியது…..? தமிழன் என்றாலே ஹிந்து கிடையாது …..அது பின்னால் ஏற்பட்ட உள் குத்து ..பிராமணர்களின் ஊடுருவல் //…….
    அறிவுஜிவிகளே தமிழனின் பக்தியியக்கம்தான் இன்றுவரை இந்துமதத்தை வளர்த்துவந்துள்ளது. திராவிட சைவ சான்றோர்களே வேதம்தான் பக்திமார்கத்தின் முதல் மூலம் என்றும் அதன்பின்தான் ஆகமம் என்று கூறுகிறார்கள். தொல்காப்பியர் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்த புலவர்களும் இந்துமதம்வேறு தமிழர்மதம்வேறு என்று கூறவில்லை. பெரியாரின்வழிவந்த பிதற்றல் கூட்டத்தின் வழிநடப்பவர் என்றால் உண்மையை நம்ப மறுக்கும் உங்களை தெளியவைக்க யாராலும்முடியாது ? அன்னியமதத்தை தாய்மதம் என்று கூறுபவர்கள் அல்லது ஏற்றக்கொள்பவர்கள் தன்தாயையும் தன்தாய்நாட்டையும் விலைபேச துணிந்தவர்கள் ஈனப்பிறவிகள்

  33. விஜயானந் மற்றும் கருணா ப்ரியா! ரொம்ப சரியா சொன்னிங்க! ஹிந்து மதம் தமிழர்களின் தாய் மதம் கிடையாது.தமிழகளின் தாய் மதம் சைவம் தான். ஆனால் நீங்கள் ஒன்றை கவனமாக கொள்ள வேண்டியது என்ன என்றால் தமிழர்களுக்கும்,கிறிஸ்தவத்துக்கும் 300 வருடங்களுக்கு முன்னாள் எந்த தொடர்பும் பெரிதாக ஏற்படவில்லை என்பதும்,500 வருடத்துக்கு முன்னால் இஸ்லாம் நம் மண்ணில் அரேபியாவில் மற்றும் எகிப்தில் இருந்து வந்தவர்கள் மட்டும்தான் என்பதையும் மட்டுமே. ஆகவே தமிழனின் தாய் மதம் சத்தியமாக கிறித்தவமும் இஸ்லாமும் இல்லை!

  34. பிரதீப் பெருமாள் அவர்களே விஜயானந் மற்றும் கருணா ப்ரியா அவர்களுக்கு வக்காலத்துவாங்கும் நீங்கள் தமிழர்மதம் சைவம்தான் என்று கூறுகிறீர்கள் அப்படியென்றால் பெருமாள் என்ற பெயர்கொண்ட உங்கள் வைஷ்ணவம் தமிழர் மதம் இல்லையா ? தானும்குழம்பி மற்றவர்களையும் குழப்புவது சரியா என்று சிந்திக்கவேண்டும்

  35. அரியுருவுகண்டக மகிழ்ந்தவளவிற்கே
    பெரியபரிவோடு பிறைசூடியபிரான்முன்
    சுருதிமுடிவோதுபொருள் சொல்லுதறுணிந்தே
    கருதவரியான்முனிவர் கண்ணில்வெளிநின்றான்

  36. பெரியார் பெருக்குத்தகுந்த பெரிய ஆறுதான் போங்க .காவிரி ஆற்றைப் பார்க்கும் போதெல்லாம் இனி பெரியார்தான் தெரிவார் வெக்கங் கேட்ட வெட்டிப் பயலுகளுக்கு ஏத்த தலைவரைய நம்ம ஆளு.வாழ்க திராவிட நாடு வளர்க பெரியாரின் தொண்டர்கள் (புதல்வர்கள்)

  37. kadavul unda allathu illaya. velai atravargalin pechu thaney ethu. oru manithanai nermaiyaga allathu olungaga nadatha uthavuvathey aanmegam/ ungal nenjil kay vaithu sollungal / ulagin entha aathiganavathu or eraivan undu enru solpavargal endravuthu oru nalavathu entha ulagam nanraga irukka vendum or intha makkal nanraga vala vendum endru pray seithirukkererkala…
    ellaiyey. un suya nalathai thaney andavinedam vendukiray. un veetu problem mattum thana
    ulaga problem.Oru pattu/M S S in Kurai onrum illai marai moorthy kanna… intha padalai
    neengal eraivanidam padungal. irukkindra or illatha kadvulum un manathi eruppar.

  38. இந்த பிரபஞ்சத்தில் மனிதனின் எல்லைமீறிய செயலுக்கும் இயலாமைக்கும் புல் ஸ்டாப் (.) தான் கடவுள்.
    ஸ்ரீ. தியாகராஜ்

  39. ஈ வே ரா வை தலைவர் என்றும் பெரியார் என்றும் சொல்பவர்கள் பாவம்.

  40. முதலில் கிருஸ்ணர், மற்றும் புராண பாத்திரங்களைப் பெரியாருடன் ஒப்பிடக்கூடாது. பெரியார் வெறும் மனிதர். அவர் தன்னை ஒரு மஹான் என்று சொல்லிக் கொள்ளவில்லை. அவரின் சீடர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சீடர்கள் அப்படித்தானே இருப்பார்கள் எங்கேயும்? பெரியார் தன்னை மஹான் என்று சொன்னால் மட்டுமே அவர் விமர்சனத்துக்குட் படவேண்டும்.

    வெங்கடேசன் ஒழுக்கக்கேடு என்று விலைமாதர்களிடன் செல்வதைக் குறிப்பிடுகிறார். அது ஒழுக்கக் கேடல்ல. ஒரு பெண்ணை வற்புறுத்தி உறவு கொள்வதே கண்டனத்திற்குரியது. மணமாகாத ஆண்கள் இப்படி விலைமாதரிடம் செல்வது ஒழுக்க்கேடல்ல. மணமான ஆண்கள் செல்வதுதான் நம்பிக்கைத் துரோகம். வியாதி வாங்கி மனையாளிடம் கொடுப்பது நேரிடும். வெளிநாடுகளில் நிர்வாணக்காட்சிகள் பார்த்தல் போன்றவை காழ்ப்புணர்ச்சியால் எழுதப்படுவ்வை. உண்மையென்றாலும் கெட்ட நடத்தையல்ல.

    பெரியார் பல கொள்கைகளைப் பற்றிப்பேசினார்; எழுதினார். அவைகளப் பற்றி எதிர்வாதம் புரியுங்கள். மாறாக, அவர் விலைமாதர்களிடம் போனார்; வெளிநாட்டில் நிர்வாண காட்சிகள் பார்த்தாரென்பது, பசுமாடு பால் தராவிட்டால் காளை மாடாவது தருமா என்று போய் கறக்க முயற்சிப்பதாகும்.

  41. தமிழர் தலைவர் என்றும் தந்தை பெரியாரென்றும் சொல்லப்படும் ஈ வெ ராவின் லட்சணம் இது என்று வெட்டவெளிச்சமாக்கும் கட்டுரை. அவர் ஈ வே ரா அல்லர். ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கர் என்பது தான் அவரது பெயர். சமூஹத்தின் அத்துணை அறக்கோட்பாடுகளையும் ஒழுக்கலாறுகளையும் எள்ளி நகையாடி கடுமையாக சாடியவர். அவர் நோக்கம் சீர்திருத்தமா மக்கள் முன்னேற்றமா என்பதெல்லாம் கேள்விக்குறிகளே? சரியான சந்தர்ப்பவாதி இவர்தான். காங்கிரசில் இருந்த போது ஆங்கில அரசை எதிர்த்துவிட்டு நீதிக்கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக விடுதலைக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய இந்த ஆசாமியை பெரியார் என்பது வெட்கக்கேடே.
    சில பெரியாரின் பேரர்கள் தமிழர்களின் மதம் ஹிந்துமதம் இல்லை என்று இங்கே கூறவந்திருக்கிறார்கள். தமிழர்தம் சமயம் சிவனியமும் மாலியமும் என்று அவர்களுக்குப் பிடித்தமான தேவனேயப்பாவணரே கூறிவிட்டார். இரண்டும் தனித்தனியே இல்லை ஒரே குடும்பத்தில் சிவபெருமானையும் திருமாலையும் வழிபட்டவர்களும், இருவரையும் வழிபடுபவர்களும் இன்று போல அன்றும் இருந்ததால் இருந்தது இருப்பது ஹிந்து மதமே. சனாதனமாம் தொல் நெறியே. கடவுளே இல்லை என்று கரைகின்றோருக்கு கருப்பென்ன சிவப்பென்ன?
    ஹிந்துமதம் ஆரியரின் மதம் அது வேண்டாமென்றால் இவர்கள் அரேபியர்கள் யூதர்களின் மதங்களுக்கு வால் பிடிப்பது தோள் கொடுப்பது வெட்ககேடு அன்றி வேறென்ன?

  42. உங்கள் பணி சிர்ரக்க வாழ்த்துக்கள் ! ஹிந்து ஒற்றுமை ஓங்குக !
    ஜெய்ஹிந்து!
    பழனிசாமிகாளிஷ்வரன்

  43. ஈ.வே.ரா வை வைத்தே இன்னும் பிழைப்பு நடத்தும் திராவிட குல தங்கங்களே,………….பெரியார்தாசன் என பகுத்தறிவு நாத்திகம் பேசி கடைசியில் அராபியனக்கு கொடி பிடித்த கொங்கு நாட்டு கொண்டைகளே ……..கடவுள் இல்ல,ராமர் என்ன அவ்ளோ பெரிய கட்டுமான பொறியியலாளரா,பாலம் கட்ட …?என உளரும் மஞ்சத்துண்டு மகா ஜனங்களே ……..

    திராவிடன்,ஆரியன் என கதை கிளப்பி தமிழ் மக்களை இந்தியாவில் இருந்து பிரித்து பார்க்கும் இவர்களால் கதற கதற அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் இறப்பின் பொது என்ன பதில் கூற முடிந்தது????..அடுத்த சொறியார் தாசன், கல்லுக்குள்ள சாமி இல்ல அது வெறும் கல்லு தான் நு சொல்லிட்டு எங்கயோ இருக்க கல்ல நோக்கி ஒவ்வொரு நாளும் கும்பிட்டு இருக்காரு ….மஞ்சத்துண்ட பத்தி இனிமே பேச தேவ இல்ல…ஆல் ஓவர் இண்டியா மானம் கப்பல் ஏறிட்டு….விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சின்னு விளம்பரம் பண்ணுவாங்களாம்,அனால் கிறிஸ்துமஸ்கு மட்டும் மேடை போட்டு விளம்பரம் பண்ணி கொண்டாடுவாங்கலாம்,ஓஹோஹோ …நோன்பு கஞ்சி பழக்கத்தோட இப்போ இதுவும் சேந்து கிடுச்சா? ????ராமர் பாலத்தை பற்றி பேசும் பகுத்தறிவு பூச்சிகள்,நோவாவின் பேழை கதை கேள்வி பட்டுருப்பீங்க.அந்த பேழை இன்னும் துருக்கில இருக்காம்,உலகம் புல்லா முல்குற அளவு வெள்ளம் வந்துச்சா?நோவா கப்பல் கட்டுற அளவு பெரிய மரின் என்ஜினியரா ???னு கேளுங்க பகுத்தறிவு பாசுன்களா …..லொள் லொள்

  44. >>>கலக்கல்>>>

    வெங்கடேசனுக்கு ஒரு கைகுலுக்கல்!

    -பாரதி அன்பன்

  45. Malarmannan,

    One small corection. When EVR was in kasi, he wandered around & soon got some work in a mutt. He says that he noticed that the saadhus in the mutt indulged in worldy pleasures in the mutt at night. He found this disgusting.

    One day, as you said, he was found that he was not taking bath & performing bath & hence was kicked out.

    If EVR says that he was indeed disgusted with the saadhus’ activties, he should have walked out immediately. But he chose to stay on till he was evicted.

    This shows his hypocrisy.

  46. Malarmannan,

    I also do not agree with your views on annadurai. In some cases, he was even worse than EVR.

    As long as he was with EVR, he criticised hinduism & even wrote “kamabarasam”. But when he came to power, he ordered the copies of the book to be withdrawn & also changed his slogan to “Ondre kulam, Oruvane Devan”.

    DMK party came to power thanks to Rajaji, but once Anna became CM, he simply refused to heed rajaiji’s advise (He went back on his promise). In other words, he simply used rajaji for his selfish ends.

    It must be noted that annadurai was not confident of winning the elections & had stood for MP seat. He was elected MLA only after he became CM.

    His plays & writings were no less vulgar than EVR. Only difference was that EVR was blunt & used crude language & Anna was quite polished in his writings. But the meaning was the same.

    Also, it was annadurai who started the practice of circulating a hundi & collecting money for party meetings (even when he was in DK). This was not liked by EVR.

  47. EVR never claimed greatness…forget EVR…why dont you talk about the Naidu kings who patronized Brahmins and were behind constructing temples, lakes/tanks and roads…

    or why not about Carvaka

  48. பகுத்தறிவாளன் பிறப்பதில்லை. வளர வளர உருவாகிறான்; உருவாக்கப் படுகிறான். அறிவுத் தெளிவு , முதிர்ச்சி என்பதெல்லாம் பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது பருவத்தில் ஒருவர் எடுத்த நிலை பின்வரும் காலத்தில் முரண்படுவது வியப்பிற்கோ அதிர்ச்சிக்கோ உரியது அல்ல. பல் மதப் பெரியர்களின் வாழ்வில் பால, பால்வினை முறுக்குப் பருவம் பற்றிய தகவல்கள் அறியப் படுவதில்லை; ஆய்வது தேவையும் இல்லை. அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் துணிவும் – சமகாலச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், கருத்துகளை எதிர்த்து – அதற்கான தீர்வுகளும் (அவர்களுக்குத் தோன்றியவை) கருதத் தக்கவை. அவை பின்னர் மாறக்கூடும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
    உண்மை என்பதே ஸ்ருதி, ஸ்மிருதி என வகைப்படுத்தியுள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. மேலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “ஆம்”, “இல்லை’ என்ற இரண்டுக்குள் இருக்கவேண்டும் என்று – ஆங்கிலவழியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட நீதிமன்ற வாதங்கள் போல் – எதிர்பார்ப்பது சரியில்லை. ஒரு கேள்விக்கு ஆறு வித பதில் சாத்தியம் என்று கண்டுள்ளனர்: உண்டு, உண்டு- உண்டு, இல்லை, இல்லை- இல்லை, உண்டு-இல்லை; இல்லை-உண்டு.
    இவை அனைத்தும் ஒரு விவாத்தின் போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பொதுவான எண்ணத்தில் இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவன்றி மேற்கொண்டு இதுபற்றி வாதிடல் காலவிரையம் எனக் கருதி அமைகிறேன். “குணம் நாடி . . . .” என்ற குறள் எல்லாப் பொருட்களிலும் இயக்க முறைகளிலும் விரவிவரும் இயல்பினைத் தெளிவு படுத்துகிறது.

  49. Dr.jayabalan

    உங்கள் கருத்து இந்த விவாதத்திலே ஒரு முத்தாய்ப்பு …! அருமை…!

  50. தமிழ் ஹிந்து ஒரு அற்புதமான தளம். எல்லாவிதமான மாற்றுக்கருத்துக்களையும் பதிவு செய்து, அவற்றை அனைவரும் படித்து தக்க பதில் கொடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நம் நன்றிகள்.

    1. உண்மையான ஆன்மீகவாதியும், உண்மையான பகுத்தறிவு வாதியும் மட்டுமே மிக சிறந்த நண்பர்களாக இருக்க முடியும். ஒரு மனிதன் இறைவழி பாட்டில் ஈடுபடுவதால் கடவுளுக்கு ஒரு லாபமும் இல்லை, ஒரு மனிதன் இறைநம்பிக்கை இன்றி இருப்பதால் , கடவுளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பிரச்சினை எல்லாம் ஒரு மனிதன் தன் கருத்தினை பிறர் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படும் போதுதான். ஆபிரகாமிய மத ஆர்வலர்கள் தினசரி தங்கள் பாதையை ஏற்காதவரை கத்தி, வெடிகுண்டு, தற்கொலைப்படை என்று மேலுலகத்துக்கு அனுப்பும் திருப்பணியை செய்து வருகிறார்கள். மலாலா போன்ற பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லும் சிறந்த பெண்மணிகளை கூட சுட்டுக்கொல்ல முயற்சிக்கிறார்கள்.

    2. ஆபிரகாமிய வெறியர்களோ, நேரடியாக பாஹியான் புத்தர் சிலைகளை வெடிவைத்து பிளந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 200- கோடி புத்தமதத்தின் பலபிரிவுகளை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி, இஸ்லாமியர்களை பழிவாங்கும் முயற்சியில் இறங்கினால் , உலகம் என்ன ஆகும் ?

    3. பெண்களுக்கு சம உரிமை வழங்க மறுப்போரை , அவர்கள் எந்த மதம் அல்லது நம்பிக்கை உடையவராக இருந்தாலும் , எல்லா பெண்களும் ஒன்றுகூடி விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    4. கடவுள் நம்பிக்கை எவ்வளவோ அற்புதங்களை சாதித்திருக்கிறது. ஆனால் கடவுள் நம்பிக்கையை வலுக்கட்டாயத்தின் மூலம் பரப்புவது ஒரு பெரிய அபாயம். அந்த அபாயத்தில் ஆப்ரகாமியர் தொடர்ந்து ஈடு படுகின்றனர். அனைவரும் நாத்திகர்களாக இருப்பதால் கடவுளுக்கு ஒரு சிரமமும் இல்லை. அதே சமயம் நாத்திக கருத்துக்களும் யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படக்கூடாது.

    5. பெரியாரின் சொந்த வாழ்க்கை பேச்சுக்கும், செயலுக்கும் மிக அதிக முரண்பாடுகளை கொண்டது. அவரிடம் ஏதாவது நல்ல கருத்துக்கள் இருந்தால் அவற்றை எடுத்துக்கொள்வோம். அல்லவற்றை தள்ளுவோம். ஆனால் திக என்ற பெயரில் , பரிசுத்த ஆவிக்கு வாடகைக்கு விட்டு துட்டு சம்பாதிக்கும் போலிப்பகுத்தறிவை, ஒட்ட நறுக்குவோம்.

    6. இறை நம்பிக்கை , இறை நம்பிக்கை இல்லாமை , இரண்டுமே உண்மையான பகுத்தறிவு தான். சார்வாகனை விட உயர்ந்த பகுத்தறிவாளர் அல்ல இன்றைய போலிப் பகுத்தறிவு வியாபாரிகள். இங்கர்சால் கிறித்தவ மெஷினரிகளை பார்த்து கேட்ட , அனைத்து கேள்விகளும் அடங்கிய உரையை முழு புத்தகமாக வெளியிடும் தைரியம் உண்டா பெரியார் திடல் குத்தகையாளருக்கு ? போலிப் பகுத்தறிவை திருத்துவோம்.

  51. அந்த ஆளின் அயோக்கியத்தனங்களை அறியார் மட்டுமே அவரை பெரியார் என்று உளறுகின்றனர். பெண்கள்தான் அவருக்கு பெரியார் பட்டதை கொடுத்தனராம்! ஆனால், தன இல்லாளை ஒரு வேசி என்று கூறி பெண் இனம் முழுவதையும் கேவலபடுத்தயுள்ளார். பெண்களுக்கு இது ரொம்ப வேண்டியதுதான். பெரியார் படத்தில் நடித்த (முஸ்லிம்) நடிகை குஷ்பூ ஒரு interview இல் சொன்னார்: “In modern times chastity can’t be expected from girls . There is nothing wrong in premarital sex ”

    ஆரியர்கள் வெளிநாட்டவர்கள் அதனால் அவர்கள் மதம் நமக்கு வேண்டாம் என்றால் அரேபியன் என்னாட்டவன்? அவன் மதம் மட்டும் ஒசத்தியா? மதம் கூடாது என்று சொல்லிவிட்டு குல்லாய் அணிந்துகொண்டு கஞ்சி குடிப்பது வாழ்த்து சொல்வது போன்ற மதம் சார்ந்த செயல்களை செய்வது சரியா? ஆனால் பொட்டு (நெற்றியில்) வைத்தால் தப்பு கழுத்தில் தாலி அணிந்தால் தப்பு.
    திரு கருமுத்து (25.10.11) என்பவர் விலை மாதர்களிடம் போவது தவறல்ல என்று கூறுகிறார். தி மு க வினர் போற்றி புகழும் வள்ளுவர் இவர் கருத்தை ஏற்றுகொள்வரா? (குறள் எண் 54 பார்க்க) வாழும் வள்ளுவர்(!?) வேண்டுமானால் இதை ஏற்றுகொள்வார். ஏன் என்றால் அவரும் செக்ஸ் விஷயத்தில் பெரியார் போலதானே! (கண்ணதாசன் நூல்களை படிக்கவும்)
    திரு ராஜேந்திரன் (5.1.10) என்பவர் புத்தர் “கடவுள் இல்லை” என்று சொன்னாராம்! இப்போது அவரே கடவுள் ஆகிவிட்டாரே! (பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அவருக்கு சிலை எழுப்பி மாலை போட்டு கை எடுத்து கும்பிடுகின்றனர்) விநாயகர் சிலையினை உடைப்பவர்கள் christ சிலை Mary மாதா சிலை புத்தர் சிலைகளையும் உடைக்கவேண்டியதுதானே! இந்து மட்டும்தான் இளிச்சவாயனா?
    திரு சின்னபையன் (17.9.09) என்பவர் சொன்னது போல தமிழ்நாட்டில் 1967க்கு பிறகு வந்த CM கள் அனைவரும் (அண்ணா தவிர).
    Non – tamilians தான்.” கருணா” வின் முன்னோர் அந்திராவினை சேர்ந்தவர்கள். MGR ஒரு மலையாளி ஜெயலலிதா ஒரு கன்னடக்காரர். ஆக, தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்பது எல்லாம் டுபாகூர்.
    கருணாவின் ஜால்றாமணி (வீரமணி) கும்பலை பற்றி வாழ்ந்த (not வாழும்) வள்ளுவர் தனது 850 வது குறளில் “உலகத்தார் உண்டென்பது இல்லை என்பான் வையத்து அலகையா வைக்க படும்” இதன் பொருள்: பெரும்பான்மையான உலக மக்கள் (கடவுள்) உண்டென்பதை (வீரமணி போன்றவர்கள்) இல்லை என்பானை பேய் என்று கருதப்படவேண்டும். இதைவிட வேறு யார் சான்று தரவேண்டும். இதனால்தான் அவரை பெரியார் திட்டினாரோ?
    பகுத்தறிவு பேசும் நண்பர்கள் தங்கள் குழந்தைகளை வழி அனுப்போம்போது “Bye ” என்று கூறுகின்றனர். Bye என்றால் Good bye என்பதின் சுருக்கமாகும். Good bye என்றால் God be with you என்று பொருள் ஆக, அவர்கள் தன்னை அறியாமல் தன குழந்தைகளுக்கு கடவுள் துணை தேடுகிற்ரர்கள். வெளிநாட்டு பகுத்தறிவாளர் இங்கர்சால் தன மகள் மாடிபடிகளிளிருந்து விழப்போனபொது Oh God ! என்று தன்னை அறியாமல் சொன்னவர்தானே! மார்க்சிஸ்ட்களின் குரு “மதம் ஒரு அபின்” என்று சொன்னார். ஆனால் அவரது தொண்டர்கள் இந்து மதத்தை மட்டும் அபினாக நினைகிறார்கள். முஸ்லிம் மதம் என்றால் மட்டும் தேனாக நினைப்பதேன்? அது மதமாக உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? முஸ்லிம்களின் ஓட்டுக்காக அவர்கள் செயும் குண்டு வெடிப்பை கண்டு கொள்ளாத மண்டுகள்தான் இந்த கம்யூனிஸ்ட் கள் நாட்டில் communalism வளர்வதற்கு முக்கிய காரணமே இந்த கம்யூனிஸ்ட் கள்தான்

    A . VISWANATHAN

  52. திரு செந்தில் மே 31, 2013 தேதியிட்ட கருத்திற்கு நன்றி.

  53. மணமாகாத ஆண்கள் இப்படி விலைமாதரிடம் செல்வது ஒழுக்க்கேடல்ல. மணமான ஆண்கள் செல்வதுதான் நம்பிக்கைத் துரோகம்.

    EVR visited brothels even after his marriage. He was referred to as “maapillai naicker” in those circles.

  54. Today only, I happened to visit this site and I read almost all the replies.As a true human being every one should welcome ” Constructive criticism” without any prejudice.This pros and cons will enlighten the thinking of individuals who like to upgrade their knowledge about what is ultimate truth or what was the real or actual history. I wish to quote the suitable THIRUKKURAL in Adhikaram:36 Meyyunarvu-Truth Consciousness Kural No:355.. “Epporul yeth thanmaith thayinum apporul meip porul kanpathu arivu.” The English translation by Kavi Yogi Shuddhananda Bharati is “Knowledge is Truth of things to find
    In every case of every kind.” The beauty is that many a scholars have translated Thirukkural in English but one written by The Great Kavi Yogi Shuddhanand Bharati is unique says my mentor Pathinen Kavanagar Thiru Kanaga Subburathinam; yes ,indeed it is.Another important news is that while this Yogi was in Mascow,Russia he started this work on 11-05-1967 ( his birth day ) and finished the compilation on 24-04-1968. A rare feat…quite unimaginable.Let the viewers and readers of this site be enlightened in all matters. All the answers lie in abundant in our Universal Vedha the Thirukkural and the explanations given by Thiru.Kanaga Subburathinam ,Avadhani has no equals or parallels as on date. If you watch Mega T.V. every morning at 7.30 a.m. after Tamil News, his programme “Vetri Nichchayam” (Success is Certain )every one will make or change their life remarkably to the advantageous position, provided one should follow and practice the simple ways as proposed by him.Wish all the readers of this site to imbibe TRUTH i.e The Almighty or The GOD as many of us call.

  55. Iya neengal solvathu niyaayamatrathu, pala innalkalai thunpathaiyum anupavitha periyorin sollai aarainthu sinthikka vendume thavira avarkalin nadai murai valkkayil nadantha thavarukalai sollaa koodaathu. Neengal pennai kandu mogam kollavillaya? Avar moodanampikkaiyai olikka padupattar.naan ketkiren, atharku pathil sollungal saavu enpath enna? oru vidhai vidhaithal atharku neer mannin daram suriya oli ithu yellam vendum.ithu thanaka natpathu iyarkai. Ithai naam seithaal naam seithaal naam thane kacavul. Athu pol nam valkkayai seeramaikka vendiyathu kadvulthane. Athai vittuvittu

  56. இது புத்தகமாக வெளியிட்டுள்ளிரா?

  57. ராமசாமி நாயக்கர் ஒரு வரலாற்றுப்பிழை

  58. “பாரதி” படத்தைப் போல் “பெரியார்” திரைப்படம் ஏன் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இல்லை?

  59. ஏனென்றால் சொறியார் கூஜாவில் ஒண்ணுக்கு போன காட்சியை திரையில் கொண்டு வர வாய்ப்பு இல்லாததால்!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *