முகப்பு » ஆன்மிகம், கவிதை

நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

அச்சிட அச்சிட

புன்னகை எழுதுக பூவிதழே- நல்ல
பொழுது புலர்கிற வேளையிது
மின்னலை எழுதும் கிரணங்களால்-வான்
மிளிர்ந்து மலரும் நேரமிது
தன்னிலை உணர்ந்தநல் ஞானியரும்-ஒளி
தனக்குள் தேடிடும் சாதகரும்
அன்னையின் தளிர்க்கரம் தீண்டியதில்-தம்
ஐம்பொறி அவிக்கும் காலமிது

cosmic_goddess_bhuvaneshvariவெண்ணிற முகில்கள் வான்பரப்பில்-ஒரு
விசித்திர லஹரியில் மிதந்திருக்கும்
பண்ணொலி மிழற்றும் பறவைகளும்-அன்னை
புகழினை எங்கும் ஒலிபரப்பும்
கண்களில் அமுதம் கசிந்திருக்க-தவம்
கனிந்த உயிர்கள் சிலிர்த்திருக்கும்
வண்ணங்கள் விசிறும் தூரிகையால்-கீழ்
வானத்தின் கன்னம் சிவந்திருக்கும்

ஆதவக் கீற்றுகள் அவள்கொடைதான் -அந்த
அருவியின் தாளங்கள் அவள்நடைதான்
மாதவம் புரிபவர் மனக்கதவம்-தொடும்
மலர்க்கரம் அன்னையின் அருளொளிதான்
பாதங்கள் பதித்தவள் பவனிவர-நீலப்
பட்டுக் கம்பளம் வான்வெளிதான்
நாதமிசைக்கிற கடலலைகள்- எங்கள்
நாயகி நகைத்ததன் எதிரொலிதான்

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
சித்திரக்காரர்தம் தூரிகைகள்-இன்னும்
சிந்திக்காதது அவள்நிறமாம்
நித்தில நிலவொளி புன்னைகையாய்-மின்ன
நயனங்கள் தருவதே கதிரொளியாம் 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , ,

 

2 மறுமொழிகள் நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…

  1. tamil10.com on September 28, 2009 at 2:07 pm

    தமிழ்ஹிந்து » நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது……

    தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
    திருவடி இரண்டும் மறையொளியாம்
    வித்தகர் அறிவே பட்டாடை-அவர்…

  2. அஞ்ஜனாசுதன் on September 28, 2009 at 2:16 pm

    முத்தான மரபின் மைந்தன் முத்தையா – இந்து
    மரபிற்கொரு கவிதை தந்தமைக்கு நன்றியையா!
    சத்தான தங்கள் மொழி யறிவையா – சொத்தாக
    வரட்டும் தமிழ் இந்து தளத்திற்கையா!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.