புன்னகை எழுதுக பூவிதழே- நல்ல
பொழுது புலர்கிற வேளையிது
மின்னலை எழுதும் கிரணங்களால்-வான்
மிளிர்ந்து மலரும் நேரமிது
தன்னிலை உணர்ந்தநல் ஞானியரும்-ஒளி
தனக்குள் தேடிடும் சாதகரும்
அன்னையின் தளிர்க்கரம் தீண்டியதில்-தம்
ஐம்பொறி அவிக்கும் காலமிது
வெண்ணிற முகில்கள் வான்பரப்பில்-ஒரு
விசித்திர லஹரியில் மிதந்திருக்கும்
பண்ணொலி மிழற்றும் பறவைகளும்-அன்னை
புகழினை எங்கும் ஒலிபரப்பும்
கண்களில் அமுதம் கசிந்திருக்க-தவம்
கனிந்த உயிர்கள் சிலிர்த்திருக்கும்
வண்ணங்கள் விசிறும் தூரிகையால்-கீழ்
வானத்தின் கன்னம் சிவந்திருக்கும்
ஆதவக் கீற்றுகள் அவள்கொடைதான் -அந்த
அருவியின் தாளங்கள் அவள்நடைதான்
மாதவம் புரிபவர் மனக்கதவம்-தொடும்
மலர்க்கரம் அன்னையின் அருளொளிதான்
பாதங்கள் பதித்தவள் பவனிவர-நீலப்
பட்டுக் கம்பளம் வான்வெளிதான்
நாதமிசைக்கிற கடலலைகள்- எங்கள்
நாயகி நகைத்ததன் எதிரொலிதான்
தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
சித்திரக்காரர்தம் தூரிகைகள்-இன்னும்
சிந்திக்காதது அவள்நிறமாம்
நித்தில நிலவொளி புன்னைகையாய்-மின்ன
நயனங்கள் தருவதே கதிரொளியாம்

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி
பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்
தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)
தேவி சூக்தம்
இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..
ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!
நவராத்திரி பற்றி பாரதியார்
வீரமுண்டு… வெற்றியுண்டு!
அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்
சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்
நட்சத்திரங்களின் கதை!
பாரதியின் சாக்தம் – 4
பாரதியின் சாக்தம் – 3
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
ஒரு பயணம் சில கோயில்கள்
சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அழைத்து அருள் தரும் தேவி
பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு
தமிழர் கண்ட நீளா தேவி
நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை
கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை
அச்சுதனும், அம்பிகையும்
பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்



தமிழ்ஹிந்து » நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது……
தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்…
முத்தான மரபின் மைந்தன் முத்தையா – இந்து
மரபிற்கொரு கவிதை தந்தமைக்கு நன்றியையா!
சத்தான தங்கள் மொழி யறிவையா – சொத்தாக
வரட்டும் தமிழ் இந்து தளத்திற்கையா!