முகப்பு » அரசியல், தொடர்

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

அச்சிட அச்சிட

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு -

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)

(தொடரும்…)

 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , ,

 

85 மறுமொழிகள் பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

  1. bookmarks.oneindia.in on September 5, 2009 at 7:56 am

    தமிழ்ஹிந்து » தாழ்த்தப்பட்டவருக்குப் பாடுபட்டவரா பெரியார்?…

    தாழ்த்தப்பட்டவருக்குப் பாடுபட்டவரா பெரியார்? http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/trackback/...

  2. pligg.com on September 5, 2009 at 7:59 am

    தமிழ்ஹிந்து » தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா பெரியார்?…

    தாழ்த்தப்பட்டவருக்குப் பாடுபட்டவரா பெரியார்? http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/trackback/...

  3. தமிழ் ஓவியா on September 6, 2009 at 5:02 pm

    //துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.//

    ம.வெங்கடேசன் இந்தப்புத்தகத்தை பொய் “மை” கொண்டே எழுதியுள்ளார் என்பதற்கு மேலே இவர் எழுதியுள்ள எழுத்தே சான்று.

    பெரியார் தான் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே இதற்கு தெளிவான பதிலைச் சொல்லியுள்ளார். அதையெல்லாம் படிக்காமல் பூனை கண்னை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு போய் விட்டது என்று நினைக்குமாம். அது போல் வெங்கடேசனும் நினைத்துக் கொள்கிறார். அதை பார்ப்பனியமும் கோயபல்ஸ்பாணியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்துக்கு வலுச் சேர்க்க நினைக்கிறது. உங்களின் அறியாமையை நினைத்து பரிதாபப் படுவதைத் தவர வேறு வழியில்லை.

    இது குறித்த பதிவை தமிழ் ஓவியா வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன். அதனுடைய சுட்டி

    http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_05.html

    கீற்று இணையதளத்திற்கும் அனுப்பி வைத்தேன். அவர்களும் அதைப் பதிவு செய்துள்ளார்கள். அதனுடைய சுட்டி

    http://www.keetru.com/rebel/periyar/96.php

  4. தமிழ் ஓவியா on September 6, 2009 at 6:34 pm

    பெரியாரைப் பற்றி உண்மைக்கு மாறாக இழித்தும் பழித்தும் எழுதி பார்ப்பனர்களை மகிழ்வித்து வரும் வெங்கடேசன் நமது ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். அப்போது தெரிந்து விடும் அவரின் உண்மை முகம்.

    நமது கேள்வி

    அருண்ஷோரி என்ற வடநாட்டுப் பார்ப்பன எழுத்தாளரால் எழுதப்பட்ட 665 பக்கங்கள் கொண்ட இந்தப் “worshipping false Gods – Ambedkar,and the Facts which have been Erased” புத்தகத்தில் அம்பேத்கரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி எழுதியுள்ளார். (மக்கள் பின்பற்ற தகுதி இல்லாதவர் அம்பேத்கர் என்றெல்லாம் கொச்சைப் படுத்தி எழுதியுள்ளார்)அதற்கு மறுப்பு தெரிவித்து இதுவரை ஏதாவது எழுதியுள்ளீர்களா?

    ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் செயல்பட்ட பெரியாரையும், அம்பேத்கரையும்(உண்மைக்கு மாறாக) விமர்சிப்பதில் காட்டும் அக்கரையை அந்நூலுக்கு மறுப்பு தெரிவிப்பதில் ஏன் காட்டவில்லை?

    விடை நமக்குத்தான் நன்கு தெரியுமே?

    ஆனாலும்

    இதற்கான வெங்கடேசன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அருண்ஷோரியின் மேற்கண்ட நூல் வெளிவந்தவுடன் 30-7-2007 @ 5.8.2007 ஆகிய நாட்களில் அந்நூலை மறுத்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தி “அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்கு மறுப்பு” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் பெரியாரின் தொண்டர் கி.வீரமணி அவர்கள்.

    அம்பேத்கர் மேல் எங்களுக்கு அதாவது பெரியார் தொண்டர்களுக்கு உள்ள அக்கரை உங்களைப்போன்றவர்களை விட ஆயிரம் மடங்கு அக்கரை அதிகம் வெங்கடேசன்.

    பார்ப்பன வலையிலியிலிருந்து மீண்டு வாருங்கள் வெங்கடேசன்.எத்தனையோ தோழர்கள் அறியாமல் செய்து விட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். நீங்களும் வெட்கப்படாமல் மீண்டு வாருங்கள்.

    நன்றி.

  5. Malarmannan on September 6, 2009 at 9:08 pm

    I WISH THOSE WHO THINK EVR WAS NOT ANTI DALIT READ THIS:

    In 1948, Dalit associations demanded apology from EVR for his COMPLAINT that the prices had gone up because Dalits have also started enjoying the comforts (Dalit women wearing blouse, Dalits eating rice instead of millets). There were also plans to conduct demonstrations against EVR for his anti-Dalit attitude (can anybody cite one popular leader having come up from DK? On the contrary, ANNA MADE IT A POINT TO BRING UP SATAYVANI MUTHU TO THE LIME LIGHT. AND WHEN DMK WAS FOUNDED, ILAM PARITI, A DALIT WAS MADE DISTRICT SECRETARY FOR MADRAS, THE STATE CAPITAL. LATER, HE WAS REMOVED BECUSE OF HIS ANTI PARTY ATTITUDE. HIS SON IS NOW A MINISTER IN KARUNANIDHI’S CABINET). Anbu Ponnoviyam has recorded EVR’S ANTI-DALIT ATTITUDE. Anbu Ponnoviyam was one of the Dalit intellectuals and if I my memory is not failing,he was an ardent suporter of Ayodhidaasar. Unfortunately, Anbu Ponnoviyam was not given due attention when he was alive. Again, if my memory is rifght, Anbu Ponnoviyam expired in 2004, before we could gather most of the details about Dalits treated bad by EVR and his DK.

    DK literature is cleverly edited and rewritten and we cannot take it authentic. Veeramani is now a businessman engaged in marketing education and the DK propaganda machinery is now his palything. So, many early editions of EVR’s speaches and writings and books about him are tampered with intentionally. It is DK that spreads falsehood since its inception.
    MALARMANNAN

  6. ஒகை நடராஜன் on September 6, 2009 at 10:31 pm

    தமிழ் ஓவியா கொடுத்திருக்கும் சுட்டியில் துணி விலயேறக் காரணம் பற்றி ஒரு விளக்கமும் இல்லை.

    ஓகை நடராஜன்.

  7. திருச்சிக் காரன் on September 6, 2009 at 11:19 pm

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

  8. ram on September 7, 2009 at 6:37 am

    தமிழ் ஓவியா என்பவர் நன்றாக ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட சிந்த்க்கத் தெரியாத போலி பகுத்தறிவு வாதி. அவருக்கு பார்பனர்களையும் இந்துக்களையும் அவமதிப்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவு தான்

  9. தமிழ் ஓவியா on September 7, 2009 at 7:08 am

    திருச்சிக்காரரே விவாதத்தை திசை திருப்பாமல் விவாதியுங்கள்.

  10. Malarmannan on September 7, 2009 at 8:42 am

    Communal GO was insisted on NOT only to sideline Brahmins but also to reduce employment/educational opportunities of Dalits. I have been writing for several years and telling the BJP leaders that since caste based politics is ruling the roost, Brahmins and Dalits should join hands politically. Though many second rank leaders like Sri Naraendra Modi, Smt Uma Bharti, Sri Kalyan Singh, Sri Pramodh Mahajan (when he was alive), Sri Ila. Ganesan etc., appreciated my suggestion and said they would work for it, the decision making leadership at the top did not give due consideration to my suggestion. And uyltimastely, Mayavati was the beneficiary!
    I first met Sri Guruji Golwalkar in 1969 as a pressman at the Virat Hindu Sammelan in Udupi arranged by VHP and interviewed Guruji for more than four hours(I was NEVER in RSS and even now I do NOT belong to any Hindu organisation including RSS). I immediately became his ardent admirer and since then I was in his contact until he cast his physical body aside. Though I was an outsider, Guruji treated me as his own lith and kin, a rare phenomeon possible only with certain persons. Guruji made all heads of Mutts to declare that there was no place for untouchbility in the Hindu society and no Hindu scripture has sanction for untouchability. He made them to declare that Dalits are part and parcel of Hindu society. This was Guruji’s great achievement at that Virat Hindu Sammelan. He also saw that every sect of Hindu Mutt participated in that Sammelan and declare against untouchability and Dalits being marginalised in the society. My interview was given large space in Deccan Herald of the day and sincce I was associated with a German syndicated feature agency at that time, my interview with Sri Guruji reached many countries of Europe and given prominent position. Guruji complemented for this later. I sent Sri Guruji the clippings from German, English and French periodicals displaying his interview and Guruji was happy that he was able to clear the misunderstanding in the West about Hindu view on Dalits. I refer this mainly because Sri Guruji’s basic message in that interview was Dalits are part and parcel of Hindu society and discrimination in any form against them should stop.

    MALARMANNAN

  11. Malarmannan on September 7, 2009 at 8:46 am

    Agian, Dr Ambedkar had very cordial relationship with Sri Veer Sawarkar, The Hindu Maha Sabha leader and Hindutva ideologue and saw eye to eye with him in many issues. He has praised Veer Sarwarkar and it is a recorded document.
    MALARMANNAN

  12. திருச்சிக் காரன் on September 7, 2009 at 8:54 am

    சகோதரர் த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    கட்டுரை எதைப் பற்றியது?

    பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

    பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் மனப் பூர்வமான அக்கறை காட்டி இருந்தால், அவர்களின் பாசறையில் பயின்றவர்களுக்கு அந்த உணர்வு சிறிதாவது இருந்திருக்க வேண்டும் அல்லவா?

    நான் கேட்டது சரியான திசையில் தான். மிக முக்கியமான கேள்விதான்.

    திசை திருப்பும் வகையிலே என்ன கேட்டு விட்டோம்? கந்தசாமி திரைப்படம் பற்றி ஒன்றும் கேட்கவில்லையே?

    தங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றால் அதை நேரடியாக சொல்லி விட வேண்டியதுதானே?

    உங்களின் பார்வைக்கு அதே கேள்விகளை மீண்டும் முன் வைக்கிறோம் !

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?

  13. திருச்சிகாரர் வாதத்தை திசை திருப்பவில்லை தமிழ் ஓவியா…வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரித்த பிராம்மணர்களின் எண்ணிக்கையை விட தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திராவிட இயக்கத்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பதுதான் வரலாற்று உண்மை. குறைவு மட்டுமல்ல கீழ்வெண்மணி சம்பவத்துக்கு ஈவெரா வெளியிட்ட மனிதத்தன்மையற்ற அறிக்கையானது மனநிலை பிறழ்ந்த திராவிடக்கும்பலின் தலித் விரோத மானுட விரோத இனவெறி கோட்பாடுகளுக்கு என்றென்றைக்கும் சான்றாக விளங்குகிறது. திராவிட கழகத்தின் அடுத்த தலைவராக ஒரு தலித்தை சரி வேண்டாம், தள்ளாத வயதில் ஈவெராவை திருமணம் செய்து கொள்ள வைக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை தலைவியாக்கியிருக்க வேண்டாமோ? ஈவெரா மனத்தளவில் வக்கிரமும் செயலளவில் ஆபாசமும் கொண்டவர். அன்றைக்கு புரையோடிப்போயிருந்த சமுதாய அவலங்களை தன் வெறுப்பியல் ஆபாசங்களுக்கு முற்போக்கு முலாம் போட மூலதனமாக்கிக்கொண்டார். அதற்காக அவரது முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஈவெரா ஒரு சமுதாய மனநிலை பிறழ்ச்சியின் அடையாளமாக பகுத்தாய்வு செய்யப்பட வேண்டியவர். அந்த பகுத்தாய்வை நாம் தொடக்கி வைப்போம்…ஈவெராவின் கடைசி சிலையும் அருங்காட்சியக பொருளாக மாறும் வரை

  14. திருச்சிக் காரன் on September 7, 2009 at 9:48 am

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே,

    //ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் செயல்பட்ட பெரியாரையும், அம்பேத்கரையும்(உண்மைக்கு மாறாக)//

    அம்பேத்காரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களா?
    வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குதா?

    காமரசாரும் அரசியல் வாதிதான். மரியாதைக்குரிய மறைந்த தாமரைக் கனியாரும் அரசியல் வாதிதான்- அதற்காக காமரசாரும் தாமரைக் கனியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகக் கூற முடியுமா?

    அம்பேத்கர் என்றவுடன் முதலில் எனக்கு நினைவு வருவது என்னுடைய மாணவப் பருவம்தான்! சென்னை கன்னிமரா நூலகத்தில், சில நாட்கள், மாலை நேரம் படித்துக் கொண்டிருக்கும் போது, நூலகர் “நேரம் ஆகி விட்டது” என்று நினைவு படுத்துவார். ‘ஒரு நாளைக்காவது, அம்பத்கரைப் போல படித்தோம்’ என்று மன நிறைவுடன் செல்வேன்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    பெரியாரிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புரிந்து கொள்ள வேண்டியது , திருத்திக் கொள்ள வேண்டியது உள்ளது என்றே நான் எழுதி வருகிறேன்.

    ஆனால் நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்காக முயற்சி செய்து
    வருகிறீர்கள்! ஆனால் இப்படி எல்லாம் எழுதினால் தான் கழக அரசியல் ஏணியில் மேலே செல்ல முடியும்! WE WISH YOU ALL THE BEST AND ALL SUCCESS!

  15. shankar on September 7, 2009 at 12:22 pm

    Hi

    There is no need to publish my thoughts.

    Let me confess that I am an aredent follower of hindutva. But I disagree with the tone of the series that you have been publishing on EVR.

    I agree that EVR was stupid, mis-informed and had very doubtful credentials. But unfortunately he has a large followership amongst Tamils – courtesy dravidian parties. Without even understanding what he stands for – he is revered as a visionary.

    To counter him or his ideals is NOT so important than attracting dravidian party members to the fold of hindutva. The best way would be to either ignore him completely or accept him as one of the many thousand hindu saints who had a different opinion. If you look at our guru parampara – Adi shankara or ramanuja or Madhva or even Ramalinga swamigal, Rajaram mohan roy, Arya Samajins and Ayyavazhi are extremely different people and would have been categorized as having completely radical thoughts during their time. I am sure Mimamsakas would have thought about Adishankara as an heretic and same case for others. Our guru parampara is so diverse that inclusion of an atheist would make no difference in the long run – say 20 years. This is bound to confuse the dravidian parties and its followers and naturally they will be assimilated with the main stream.

    Our current enemies are not the dravidian parties or athestic thoughts. The enemies are the militant other religion folks who are converting our innocent hindus. These dravidian parties and its members are somewhere in between and it is imperative to make them join our fight against our real enemies. There is a need for unity and strengthening our cause. Let us look at how protestants and catholics are united here in India – they guys fight tooth and nail in Europe.

    Whatever I suggested my sound to be wierd or out of mind. But imagine, it is not wierd as compared to inclusion of Buddha in the Dasavthar list.
    Hope you take this in the right spirit. Do revert back to me.

    regards
    Sankarasubramanian

  16. RAMGOBAL on September 7, 2009 at 12:40 pm

    தமிழ் ஓவியா கூறியதில் தவறு யேதுமில்லை. பார்பனர்கள் பொதுவாக ஏமாற்று வேலைகளை செய்து வந்தார்கள். அதிலும் தலித்துகளை அடிமைபடுத்தி இழிவு படுத்தினார்கள் ஆனால் அதனை அழித்த மனஉறுதியுள்ள வீரர்தான் பெரியார் அவர்கள். இதனை பொது கண்னோட்டத்தில் பார்த்தால் தெரியும், மத கண்னோட்டத்தில் பார்த்தால் உங்களுக்க ஏற்பட்ட ஏமாற்றத்தால் வெறுப்புதான் தோன்றும் எனவே தயவு செய்து தியானம் செய்யுங்கள். கோபம் குறையும்.

  17. Malarmannan on September 7, 2009 at 2:12 pm

    I was saying the same thing to Sri Rama Gopalan years ago what Sri Sanakra narayanan has said here. I was telling to simply ignore EVR. But having found that kind of approach is giving him clean chit as a reformer on par, I changed my view point.
    I find Sri Aravindan’s opinion valuable.
    MLARMANNAN

  18. palPalani on September 7, 2009 at 2:29 pm

    அடங்கொய்யால, நானும் தமிழன்தான்… தமிழ்நாட்டுலதான் இருக்கேன்… ஆனா நீங்க பேசுறது ஒன்நேமி புரியலையே???

  19. ram on September 7, 2009 at 2:32 pm

    தமிழ் ஓவியாவை எங்கே ஆளையே கானோம். பதில் சொல்லமுடியாத கேள்வி வந்தால் எஸ்கேப் ஆகிவிடுவார் எப்பொவுமே. அவரிடம் நான் பலமுறை கேள்வி கேட்டுவிட்டேன். ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை ஏன் மசூதியின் முன்னும் சர்ச்சுகள் முன்னும் வைக்கவில்லை என்று பலமுறை கேட்டாயிற்று. பதிலே இல்லை.

  20. ஜடாயு on September 7, 2009 at 2:57 pm

    Shankar wrote :

    // I am sure Mimamsakas would have thought about Adishankara as an heretic and same case for others. Our guru parampara is so diverse that inclusion of an atheist would make no difference in the long run – say 20 years. This is bound to confuse the dravidian parties and its followers and naturally they will be assimilated with the main stream. Our current enemies are not the dravidian parties or athestic thoughts. //

    Dear Shankar, the fact of the matter is that EVR is NOT one of those respectable atheists and rationalists who are fine flowers of human thought – like Kapila (founder of Sankhya philosophy) and the Hindu materialists like Kanada & Brihaspati, Ingersol or Niteze.

    The fact is that EVR was not even a thinker of any order, but an anti-Indian anti-Hindu hate-monger, racist, highly selfish and vengeful political backroom player.

    In TN, the Dravidian ideology and Periyar are the main weapon by which anti-Hindu forces attack Hindu Dharma. So, an expose of the man and the ideology is imperative.

    But Hindu acivists should not harbor any feeling of animosity or enmity with our misguided brethern who are still stuck in either Dravidian parties or Dravidian ideologies. Most of them follow Hinduisum in their family and also in public. Even those half-minded and confused lot are sure to return to their in-born Dharmik instincts in course of time.

    Pl also read his short article of Jeyamohan.

    அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
    http://jeyamohan.in/?p=368

  21. கிரிஷ் on September 7, 2009 at 2:58 pm

    தமிழ் ஓவியா இங்கே மட்டுமல்ல. அவர்களின் வலைப்பூவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து கடவுள் ஒழிப்பு மட்டுமே. அதற்கும் வெறும் கூப்பாடு மட்டுமே போடுவார்கள். பகுத்தறிவு, கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லும் இவர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை.

    எல்லோரும் நல்ல விளக்கங்களை ஆதாரத்தோடு கொடுக்க முனையும்போது ராம்கோபால் மட்டும் பொத்தாம் பொதுவாக மறுமொழி இடுகிறார். சப்பென்று இருக்கிறது. ஆதாரங்களை திரட்டினால் தேவலை.

    இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார். என்னுடைய கருத்து பெரும்பான்மை இடங்களில் அவருடன் ஒத்துப் போவதும் ஒரு காரணம்.

  22. கிரிஷ் on September 7, 2009 at 2:59 pm

    தமிழ் ஓவியா இங்கே மட்டுமல்ல. அவர்களின் வலைப்பூவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து கடவுள் ஒழிப்பு மட்டுமே. அதற்கும் வெறும் கூப்பாடு மட்டுமே போடுவார்கள். பகுத்தறிவு, கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லும் இவர்கள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே தருவதில்லை.

  23. கிரிஷ் on September 7, 2009 at 2:59 pm

    எல்லோரும் நல்ல விளக்கங்களை ஆதாரத்தோடு கொடுக்க முனையும்போது ராம்கோபால் மட்டும் பொத்தாம் பொதுவாக மறுமொழி இடுகிறார். சப்பென்று இருக்கிறது. ஆதாரங்களை திரட்டினால் தேவலை.

    இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார். என்னுடைய கருத்து பெரும்பான்மை இடங்களில் அவருடன் ஒத்துப் போவதும் ஒரு காரணம்.

  24. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 5:17 pm

    கிரிஷ் அவ‌ர்க‌ளே , நீங்க‌ள் வாழ்க!

    //இந்நேரத்தில் திருச்சிக்காரன் அவர்களை பாராட்டி கொள்கிறேன். உயிரைக்கொடுத்து எல்லா மறுமொழிகளுக்கும் பதில் போடுகிறார்//

    ந‌ண்பா, ச‌கோத‌ரா ந‌ன்றி, ஏன்டா இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்தோம் என்று ஆகி விட்ட‌து. வ‌டிவேலு போல‌ எல்லொரும் “ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன்” என்று எல்லா ச‌ந்துக்கும் இழுத்து அடிக்கிறாங்க‌!

    க‌ம்பயூட்ட‌ர‌ உடைத்து விட்டு கிராம‌த்துக்கு போனால் தான் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    muzumuttaal@yahoo.co.in தான் என் மெயில் ஐ.டி.

    தேங்க்ஸ் த‌லைவா, நீ வாழ்க‌!

  25. தமிழ் ஓவியா on September 7, 2009 at 6:26 pm

    //தமிழ் ஓவியாவை எங்கே ஆளையே கானோம். பதில் சொல்லமுடியாத கேள்வி வந்தால் எஸ்கேப் ஆகிவிடுவார் எப்பொவுமே. அவரிடம் நான் பலமுறை கேள்வி கேட்டுவிட்டேன். ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை ஏன் மசூதியின் முன்னும் சர்ச்சுகள் முன்னும் வைக்கவில்லை என்று பலமுறை கேட்டாயிற்று. பதிலே இல்லை.//

    ஆரோக்கியமான விவாதத்திற்குடபட்ட எல்லாக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் அதற்கெல்லாம் சளைத்தவகள் அல்ல.

    திண்டுக்கல் சர்ச் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்.

  26. தமிழ் ஓவியா on September 7, 2009 at 6:38 pm

    //வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா?

    த‌மிழ் ஓவியா அவ‌ர்க‌ளே, நீங்கள் இத‌ற்க்கு குர‌ல் கொடுக்க‌த் த‌யாரா?

    இதைக் கேட்டால் என்ன தவறு? தெய்வக் குத்தமா? பகுத்தறிவுக் குத்தமா?//

    தி.க.விற்கு தலைவர்களாக இருந்தவர்கள் பெரியார் ,மணியம்மையார், வீரமணி .

    இதில் பெரியார் மட்டுமே தத்துவத்தின் தலைவர்.

    மற்றவர்கள் பெரியாரின் கொள்கையை பரப்பும் தி.க.என்ற அமைப்பிற்கு தலைவர் பொறுப்பு வகிப்பவர்கள். இதில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தலித் பிரிவு என்பதெல்லாம் கிடையாது. இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    இன்னும் கேட்டால் தி.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கும் தன்மை அடியோடு இல்லை. மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்.

    இயக்கத்திற்ககா, உழைக்கும் தோழர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு தேடி வந்து கொண்டிருக்கிறது. பொறுப்புக்காக இயக்கத்தில் யாரும் இல்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள் திருச்சிக்காரர் மற்றும் அவரின் தோழர்களே

    ———–விவாதிப்போம்

  27. தமிழ் ஓவியா on September 7, 2009 at 6:44 pm

    //தமிழ் ஓவியா என்பவர் நன்றாக ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட சிந்த்க்கத் தெரியாத போலி பகுத்தறிவு வாதி. அவருக்கு பார்பனர்களையும் இந்துக்களையும் அவமதிப்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.//

    ராம் ஒன்றைத்தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    பார்ப்பனர்களும் இந்து மதமும்தான் எங்களை சூத்திரன் என்று இழிவுபடுத்தி வருகிறது. இன்றுகூட கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்படுவது இந்து மதத்தில்தான்.

    இந்து மதமும் பார்ப்பனர்களும் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதை விளக்கப் புகுந்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம் அந்த அள்வுக்கு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது இன்று வரை .

    எங்களை இழிவு படுத்தும் இந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்துகிறோம். இல்லை என்று நீங்கள் விவாதியுங்கள். எது சரி என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்.
    நன்றி
    ————விவாதிப்போம்

  28. தமிழ் ஓவியா on September 7, 2009 at 6:56 pm

    //இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிங்கர் அம்பேத்கர் என்று நான் மனப் பூர்வமாகச் சொல்வேன்.

    அப்படிப்பட்ட ஒரு அறிங்கரை, பெரியாருடன் ஒப்பு வைக்க முடியுமா?

    அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம் அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

    பெரியாரின் முக்கிய குறிக்கோள் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனருக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு தன்னை அரசியல், பொருளாதார, சமூக அரசியலில் உயர்த்திக் கொள்வது இவைதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!//

    திருச்சிக்காரரே பெரியாரையும் அம்பேத்கரையும் பேதப்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை பார்ப்பனியம் தொடர்ந்து செய்து வந்து கொண்டேயிருக்கிறது. அதற்கெல்லாம் தக்க பதிலடியை தொடர்புடைய தலைவர்கள் உள்பட பலரும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் தரும் தகவல்கள் உங்கள் பார்வைக்கு…

    பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் ஆ. இராசா பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி…

    அம்பேத்கர் – பெரியார் இந்த இரண்டு தலைவர்களும் தன்னைப் பற்றி பரிசோதனை செய்து கொண்டவர்கள். சுயவிளம்புகை செய்து கொண்டவர்கள்.
    குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பெரியார் , “நான் யார்? ஈ.வே.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகத்திலே இருக்கிற பிற சமுதாயத்தைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொண்டினைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் செய்து கொண்டிருக்கிறேன்’’

    - இது பெரியார் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிற சுய பிரகடனம்.
    அதைப்போல் அம்பேத்கர் ஒரு இடத்தில் சொல்லுகிறார்:
    I am not a worshipper of idol – நான் சிலைகளை, கடவுளை வணங்குகிறவன் அல்ல. I believe destruction of idols- நான் கடவுளை சிலைகளை அழிப்பதை ஒரு தொழிலாக நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவன்.
    என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் சொல்லுகின்றார்: I hate Gandhi and his philosophy of Hinduism நான் காந்தியையும் அவர் சார்ந்திருக்கிற இந்துயிசத்தையும் வெறுக்கிறேன், ஏனென்றால் காந்தியைப் பாராட்டுவது என்பது வேறு, தேசத்திற்கு நலன் செய்வது என்பது வேறு, வேறு வேறு மட்டுமல்ல சில நேரங்களில் இவை எதிரும் புதிருமாக இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். I love India அதனால்தான் சொல்லுகிறார்: Gandhi and loving this nation are two distinct and different things and sometimes afford equally opposite என்று குறிப்பிடுகிறார். ஆக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இரண்டு தலைவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

    பெரியார் – அம்பேத்கர்: இயங்கிய தளம் வேறு

    இன்னொன்று இன்றைக்குப் பெரியார் யார், அம்பேத்கர் யார் என்கின்ற சிந்தனையில் இந்த இரண்டு தளத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார்கள். பெரியாருக்குள்ளும் அம்பேத்கருக்குள்ளும் போகிற போது நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் ஓர்மை உண்டு. இருவரும் ஒன்றாகச் சிந்தித்த இடங்கள் உண்டு. இரண்டு பேருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது. நாம் மறுதலித்துவிட முடியாது.

    பெரியார் எந்தப் பற்றுக்கும் ஆட்படாதவர், எந்தப் பற்றுக்கும் ஆட்படாத தன்னை திராவிட சித்தாந்தம் என்ற சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அம்பேத்கருக்கு அந்தக் கட்டாயம் தேவைப்படவில்லை. இன்னும் நான் சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு தந்தைபெரியாருக்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்திருக்கிறது. ஆனால் இந்திதான் இந்த மண்ணிற்கு ஆட்சிமொழியாக, பொது மொழியாக இருக்க வேண்டுமென்று பதிவு செய்தவர் அம்பேத்கர். வேறுபாடுதான். புரிந்து கொள்ள வேண்டும்.

    I need a strong centre என்று சொன்னவர் அம்பேத்கர். மிக முக்கியமான இடத்திலிருக்கிற மய்ய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்கு தந்தையாக இருந்தவர் தந்தை பெரியார். இவையெல்லாம் இருக்கின்ற வேறுபாடுகள். ஒரு காலகட்டத்தில் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கேட்டவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பிரிவினையை அம்பேத்கர் ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ஏனென்றால் அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற போது, தலித் விடுதலை என்று வருகிறபோது அல்லது மானிட விடுதலை என்று வருகிறபோது இந்த பூகோள அமைப்பு என்கின்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி, தான் எந்த இனம் என்கின்ற அடையாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. திராவிட இன அடையாளத்தைக்கூட தந்தை பெரியார் ஒரு பெருமைமிக்க அடையாளமாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

    மேலும் தகவல்களை அறிந்து கொள்ள

    http://rajadmk.blogspot.com/ வலைப்பூவை படிக்கவும்,

    ——————விவாதிப்போம்.

  29. //தி.க.விற்கு தலைவர்களாக இருந்தவர்கள் பெரியார் ,மணியம்மையார், வீரமணி . இதில் பெரியார் மட்டுமே தத்துவத்தின் தலைவர். மற்றவர்கள் பெரியாரின் கொள்கையை பரப்பும் தி.க.என்ற அமைப்பிற்கு தலைவர் பொறுப்பு வகிப்பவர்கள். இதில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தலித் பிரிவு என்பதெல்லாம் கிடையாது. இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.//

    ஓ தத்துவம் சித்தாந்தம் எல்லாம் ஈவெரா…மற்றவர்கள் அதில் தலையிட மாட்டார்கள். அதாவது திராவிட கழகத்தின் தலை ஈவெரா வீரமணியும் மணியம்மையும் இன்னபிற உறுப்புகள். இந்த வர்ணாஸிரமத்தை ஏற்று திராவிடர் கழகத்துக்குள் வரும் போது பழைய சாதியை தலை முழுகிவிடவேண்டும். அடப்பாவிகளா ஏமாற்றுவித்தையிலேயே பெரிய ஏமாற்றுவித்தையாக அல்லவா இருக்கிறது இது….ஒருவன் திராவிடர் கழகத்துக்குள் வரும் போது அவன் தன் சாதியை அழித்துவிட்டால் அவனது வரலாற்றுக்கொடுமை போய்விடுமா? காலம் காலமாக நிலச்சுவாந்தார் குடும்பங்களிலிருந்து வந்த வீரமணிக்கும் வீரமணியின் பாட்டன் முப்பாட்டன் அப்பன் குடும்பங்களால் கூலியில்லா கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு கூலி கேட்டதற்கு கீழ் வெண்மணியில் கொளுத்தப்பட்ட தலித் குடும்பங்களிலிருந்து ஒருவன் திராவிட கழகத்துக்குள் வந்தால் அந்த திராவிட கழகத்தவருக்கும் வீரமணிக்கும் தலைமைக்கான போட்டியில் அல்லது தகுதிப்பார்ப்பதில் ஒரே அளவுகோலைத்தான் வைப்பீர்களா? அட இடஒதுக்கீடு எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா? நான் நினைத்ததை விட கேவலமான கேலிக்கூத்தடிப்பு போல திராவிட கழக ஆபாசங்கள்…

  30. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 7:26 pm

    //இயக்கத்திற்ககா, உழைக்கும் தோழர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு தேடி வந்து கொண்டிருக்கிறது. பொறுப்புக்காக இயக்கத்தில் யாரும் இல்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள் திருச்சிக்காரர் மற்றும் அவரின் தோழர்களே //

    இதெல்லாஞ் ச‌ரி!

    கொள்கை என்ப‌து என்ன?

    வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் என்ப‌து க‌ழ‌க‌த்தின் மிக‌ முக்கிய‌ கொள்கையா இல்லையா?

    அப்ப‌ கொள்கை எல்லாம் பிற‌ருக்கு அறிவுரை கூற‌ ம‌ட்டும் தானா?

    கொள்கையை நாமே பின்ப‌ற்ற வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லையா?

    60 வ‌ருட‌த்துக்கு மேலான‌ க‌ழ‌க‌ வ‌ர‌லாற்றில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை தாங்கிப் பிடிக்க‌வில்லையா?அவ‌ர்க‌ளுக்கு வ‌குப்பு வாரி பிர‌தி நிதித்துவ‌ம் த‌ர‌ப் ப‌ட்ட‌தா?

    தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை த‌ல‌மைப் பொறுப்புக்கு கொண்டு வ‌ர‌ நேர‌ம், கால‌ம், நாள், ந‌ட்ச்ச‌த்திர‌ம் பார்க்க‌ வேண்டுமா?

    தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ர் மீது காட்டும் க‌ரிச‌ன‌ம் வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிகிர‌தே?

    //இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    இன்னும் கேட்டால் தி.க.வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கும் தன்மை அடியோடு இல்லை. மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்//

    //பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது!//

    அப்ப‌டி போடு!

    //தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.

    மனிதர்களாக ஒன்றிணைந்திருக்கிறோம்!//

    “அப்ப‌ பார்ப்ப‌ன‌ர், பார்ப்ப‌ன‌ர‌ல்லாதார் பேத‌ம் ம‌ட்டும் பார்க்க‌ வேண்டுமா? பார்ப்பான் பேரை சொல்லி, பார்ப்பானைத் திட்டி,ச‌ம‌த்துவ‌ வேட‌மிட்டு க‌ண்ணுக் கெட்டிய‌ தூர‌ம் வ‌ரை வ‌ளைக்க‌ வேண்டிய‌து. க‌ல்லா நிர‌ம்பிய‌வுட‌ன், பொறுப்பில் இருப்ப‌வ‌ர‌க‌ளுக்கு ஜாதி பார்க்க‌க் கூடாது என்று த‌லித்க‌ளுக்கு ப‌ட்டை நாம‌ம் போட‌ப் ப‌டுவ‌தாக‌” ம‌க்க‌ள் பேசிக் கொள்கிறார்க‌ளே!

    நீங்க‌ள் குர‌ல் கொடுக்க‌க் கூடாதா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.