மூலம் : பேராசிரியர் ஆர். வைத்தியநாதன்
தமிழில்: மது
செப்டம்பர் 4 (2009) அன்று சில தினசரிகளில், காஞ்சி சங்கராச்சாரியாரின் மீது போடப்பட்ட வழக்குகளில் சாட்சிகள் அரசுத்தரப்புக்கு எதிர்மறையாக பேசுவதாகவும், கடைசியில் வழக்கே பொய் என்று நிரூபிக்கப் படக்கூடும் என்றும் சிறிய செய்தியாக வெளிவந்தது. பழமையும் பாரம்பரியமும் உள்ள ஒரு அமைப்பின் மீது அரசு நடத்திய தாக்குதலும், இத்தனை நாள் அந்த அமைப்பு பட்ட அவமானங்களும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவை.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று. என் நண்பருக்கு அன்று அது புரியவில்லை. நம்மில் பலருக்கு இந்தியாவைப் போன்றதொரு நாட்டில் ‘மதச்சார்பற்ற’ அரசு எப்படி இயங்கும் என்றே புரிவதில்லை. இதை சற்று விரிவாக கீழே தொடர்வோம்.
சங்கராச்சாரியாரின் கைது பற்றி, NDTV-யில் திருமதி பர்கா தத் அவர்களால் நடத்தப்படும் “We the people” என்கிற நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், சட்டம் எல்லோருக்கும் சமமானது அதனால் ஜெயேந்திரரை, குறைந்த பட்சம் ஒரு பப்பு யாதவ் போலவோ ஒரு தஸ்லிமுதீன் போலவோவாவது நடத்தப் படவேண்டும் என்று கேட்டது பரிதாபமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட “பகுத்தறிவுவாதி” ஒருவர் சொன்னார் - ”ஜெயேந்திரர் நிரந்தரமாக வேலூர் சிறையிலேயே இருக்கட்டும் ஏனெனில் அவர் சிறையில் இருப்பது சிறையை புனிதப்படுத்தும் என்று ஒரு பக்தர் சொல்கிறாரே”.
இப்புனித பீடத்தின் மீது தொடுக்கப் பட்ட இந்த தாக்குதல், ஒரு பரந்து விரிந்த பார்வையில் இந்து மத பாரம்பரியத்திற்கு, பெயரளவிலேயே மதச்சார்பற்ற நடுநிலைமையுடன் செயல்படும் இந்த அரசியலமைப்பிடமிருந்து வரும் மிரட்டலாகவே புரிந்து கொள்ளப் படவேண்டும்.
இது ஏதோ அனாமத்தாக எங்கோ எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கக் கூடிய வழக்கா? நிகழ்வுகளைப் பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. உடுப்பியிலுள்ள பெஜாவர் மடத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும், அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தரான கனகதாசர் என்கிற குருபர் இனத்தைச் சேர்ந்த பக்தகவி மடத்தால் அவமதிக்கப் பட்ட சம்பவம் திடீரென்று நினைவுக்கு வந்துவிட்டதே இந்த கோரிக்கைக்கு காரணம். இங்கேயும் பெஜாவர் மடத்து சுவாமிகள் தலித்துகளுடன் கலந்து பழகியதும், சமூக அமைதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார் என்ற விஷயமும் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது. அவர் கல்வித் துறையில் மிகுந்த முயற்சியுடனும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக எழுந்த இயக்கத்தின் முன்னிலையிலும் இருந்து வந்தார்.
மூலவர்கள் புரட்சியில் இறங்குவதால் அரசுக்கு நடுக்கம்
நமது பாரம்பரியத்தில் இரண்டு விதமான மடங்கள் இருக்கின்றன. கோவில்களில் கருவறைக்குள் இருக்கும் தெய்வத்தைப் போல ஒரு வகையும், திருவிழா நாட்களில் கோவிலைச் சுற்றி வீதியெங்கும் ஊர்வலமாக பவனி வரும் உற்சவ மூர்த்தியாக இன்னொரு வகையையும் என்று சற்று எளிமையாக சொல்லலாம். இந்த உற்சவ மூர்த்திகள், நன்கு உடுத்திக் கொண்டு கண்டவர் ரசிக்கும் அளவில் இருக்கும் இந்து மதத்தின் முகங்கள். உற்சவ மூர்த்திகளாக வலம் வரும் இந்த துறவிகளுக்கு ஆங்கிலம் தெரியும், பத்திரிக்கையாளர்களை கையாளுவார்கள், தொலைகாட்சி ஊடகங்களுக்கு திறமையாக பேட்டி கொடுப்பார்கள், இவர்களில் சிலர் உலகம் முழுவதும் சுற்றி வருவார்கள்.
இவர்கள் சனாதன தருமத்தின் ‘முத்திரை அடையாளம்’ (Brand Image) என்று சொல்லலாம். ஒரு விதத்தில் இவர்கள் மதச் சார்பற்றவர்கள்; விளைவுகள் எதுவும் புரியாமல் அடிக்கடி சர்வ சமய சமரசத்தைப் பற்றி பேசுவார்கள்; சிலர் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இவர்களது மதசம்பந்தமில்லாத மற்ற விஷயங்களில் (secular) செயல்பாடுகள் காரணமாகவே கூட அரசுடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள் – ரஜனீஷின் வாழ்க்கையில் நடந்தது போல. அமிர்தானந்தமயி அம்மா, ஸ்ரீ ஸ்ரீ, ரஜனீஷ், மகேஷ் யோகி போன்றவர்களை இந்த பிரிவில் சேர்க்கலாம்.
இதற்கு முன் சொன்ன மூலவர் வகையில், அண்மைக் காலம் வரை உலகச் சூழலைப் பற்றி எந்த கவலையும் இன்றி, தமது தருமத்தின் மீதே கவனம் செலுத்தி வந்த சங்கர, மத்வ மடங்களை சொல்லலாம். சிருங்கேரி, காஞ்சி, உடுப்பி போன்ற மடங்கள், தங்கள் பாரம்பரியத்திலும், தங்கள் ஸ்தாபகர்களான ஆதி சங்கரர், மத்வாச்சாரியார் போன்ற குருக்களிடமிருந்தே தம் சக்தியை பெறுகின்றன.
உலக வழக்குகளில் தலையிடாமல் ஒதுங்கி இருந்த வரை, இந்த புனித பீடங்களிடம் மதச் சார்பற்ற அரசு பொறுமை காட்டி வந்தது. ஏனெனில் இந்த மடங்கள் தம் இருப்பின் நியாயத்தைத் தமது இந்த நிலைப்பாட்டினாலேயே பெற்றனவே தவிர, அவற்றுக்கு மத சம்பந்தமில்லாத ஆதரவு எதுவும் தேவைப்படவில்லை. எப்போது இந்த மடங்கள் சமூக புரட்சியிலும், கல்வி – சுகாதாரம் போன்ற துறைகளிலும் பங்கு கொள்ள ஆரம்பித்தனவோ அப்போதே மதச்சார்பற்ற அரசு அதிர்ந்து போனது. ஏனெனில் அதன் பிறகு சாதி பிரச்னைகளிலும், ஏழ்மையிலும் போராட அரசியல் வாதிகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் ஒரு நியாயம் இல்லாமல் போய்விடுகிறது. இதே உற்சவ மூர்த்திகளாக வலம் வரும், மதச்சார்பற்ற துறவிகளிடம் அவர்கள் எப்படி செயல் பட்டாலும் அரசுக்கு கவலை இல்லை, ஏனெனில் இந்த வகை துறவிகளுக்கு பெரிதாக பாரம்பரியமோ, ஆயிரம் வருட தார்மீக நியாயங்களோ இல்லை – அவர்களிடம் பெரும்பாலும் இருப்பது வசீகரமான ஆளுமை மட்டும்தான்.
மதமாற்றமா அல்லது சாதீயமற்ற நிலையா?
இந்தப் பின்னணியில்தான் காஞ்சி பெரியவர் நேரடியாக மதசம்பந்தமில்லாத சமூக சிக்கல்களை தமது பீடத்தைக் கொண்டே தீர்த்துவைக்க முயன்றார். தலித்துக்களை நெருங்கி, அவர்களது வாழ்வில் முன்னேற்றத்துக்கும், மதிப்பான ஒரு நிலையை அவர்கள் அடையவும் ஒரு தீர்வை அவர் முயன்றபோது அரசு வர்க்கம் நிலைகுலைந்தது. தலித் மக்களின் ‘விடுதலைக்கு’ பொதுவாக ஏற்கப்பட்ட தீர்வாக அரசியல் பிரசங்கங்களில் கூறப்படும், வேறு மதங்களுக்கு மாறி விடுதல் அல்லது தத்தமது சாதியை தூக்கி எறிந்து விடக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றிலிருந்து இவரது முயற்சி மாறுபட்டதால், மதச்சார்பற்ற அரசு கவலை கொள்ள ஆரம்பித்தது.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திட்டமோ, அவர்கள் இன்றைய சமூக அமைப்பினுள் இருந்தவாறே, கண்ணியமும் மரியாதையும் கொண்டு வாழும் சாத்தியத்தை முன்னெடுத்து வைக்கிறது. மதமாற்றம் அல்லது சாதி ஒழிப்பு பற்றிய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகள் – இவை இரண்டை மட்டுமெ தமது தீர்வாகக் கொண்ட தலித் அரசியல் வாதிகளுக்கும், மதச்சார்பின்மை வாதிகளுக்கும், இவரது நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ள கடினமாக இருந்தன.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், கருவறையில் மூல தெய்வத்தைப் போல இருப்பதுதான் நியாயம் என்று நினைத்து மடத்தைச் சேர்ந்த சில பழமைவாதிகளுமே அவரை எதிர்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை எந்தவகையில் இறங்கி வந்து மக்களின் நடைமுறை வாழ்வின் தீர்வுக்கு பாடுபட்டாலும் அது ஒரு வகையில் இழிவான துரோக செயல். இந்த ஒரு இடத்தில் மட்டும், வியக்கத்தக்க வகையில், பழமை வாதிகள் மதச்சார்பின்மை வாதிகளுடன் சேர்ந்து மடத்தை எதிர்த்தார்கள். இதை அரசியல் வழக்கில் சொல்வதானால், வலது கோடியும் இடது கோடியும் நடுநிலைமையை தீர்த்துக்கட்ட சேர்ந்துகொண்ட கூட்டு என்று சொல்லலாம்.
ஒருவேளை இந்த அரசு மதச்சார்ப்பற்ற அல்லது நடுநிலைமை அரசாக இல்லாமல், இந்து தருமத்தை காக்கக் கூடிய அரசாக இருந்திருந்தால், இந்த பிரச்சனை வேறு விதத்தில் அணுகப் பட்டிருக்கும். அரசிடமிருந்து கடும் எதிர்ப்பும், தடங்கலாக இருப்பதற்காக பழமை வாதிகளும் தண்டிக்கப் பட்டிருப்பார். ஆனால் அரசோ கருத்தளவில் மதச்சார்பற்றதாகவும் , நடைமுறையில் ஆயிரம் ஆண்டு கால பாரம்பரியமுள்ள தர்ம ஸ்தாபனங்களுக்கு விரோதமாகவும் இருக்கிறது.
சீனாவின் அழைப்பு
சீனாவிலிருந்து வந்த அழைப்பு நமது சமூகத்திற்கும், மடத்திற்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அங்கிருந்து அழைப்பு விடுத்த அரசு சார்பற்ற அமைப்பு, சீன அரசின் உயர்மட்டத்தில் அனுமதி பெறாமலும், இது போன்ற விஷயங்களில் சீனா எப்படி செயல் படும் என்று தெரியாமலும் நிச்சயம் அழைப்பு விடுத்திருக்காது என்பது நிச்சயம். பைபிளை உள்ளே எடுத்துச் செல்வதற்கும், போப்பாண்டவர் விஜயம் செய்வதற்கும் தடைகள் விதிக்கும் சீன அதிகாரம், இந்து மதத் தலைமை ஒன்றை அழைக்க அனுமதி அளித்தது வியப்புக்குரியது.
இந்த கட்டுரை ஆசிரியர் இந்திய சீன அதிகாரிகளிடம் பழகியதிலிருந்து, சீனா ஊடூருவல் போக்கு இல்லாத, எல்லா கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லுகிற, ஹிந்து மதம் போன்ற மதங்கள் இருப்பதை வரவேற்கிறது என்று தெரியவந்தது. இந்தியா ஒரு தர்ம பூமியாக இருப்பதால் மறுபிறப்பில் இங்கே வந்து பிறப்பதே சிறந்தது என்று ஒரு பழைமையான சீன ஐதீகம் இருக்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் தூண்டப்பட்டது என்று சொல்லப்படும், சீன அரசின் பலுன் கோங் (Falun Gong) அனுபவமும், தாலாய் லாமா உடனான பிரச்சனைகளாலும், சீன மக்களின் மதத் தேவைகளுக்கு வேறு உபாயங்களை பீஜிங் தேடுமாறு செய்துவிட்டது.
எந்த ஒரு அரசும், இதை ஒரு பிராந்திய ராஜ தந்திரமாக கருதி, முனிவரின் விஜயத்தை ஏற்பாட்டு செய்வதில் முனைப்புடன் குதித்திருக்கும். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ள காஞ்சி மடம் போன்ற அமைப்புகளால் வரலாற்றில் மிக முக்கியமான சமூகத் தொடர்பு ஏற்படுவதை இந்திய அரசு ஊக்கப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, இவ்வாறு கடல் கடந்து பயணிப்பதால் “மாசு” படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பழமை வாதிகளுக்கு துணை போனதன் மூலம் இந்த முயற்சியை தடுத்துவிட்டது.
உள்ளபடியே அரசின் நடுநிலை தர்ம அமைப்புக்களுக்கு ஒரு அபாயமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த நடுநிலை இந்து அமைப்புகளிடம் மட்டும்தான் கடைபிடிக்கப் படுகிறதே தவிர, ஆபிரகாமிய அமைப்புகளிடம் பலிப்பதில்லை – அவை அரசை மிரட்டியே தம் முடிவுகளை சாதித்துக் கொள்ளுகின்றன. சுதந்திரம் பெற்ற போதே, அரசு காலனியாதிக்கத்தால் சர்ச்சுக்கு வழங்கப் பட்ட நிலம் மற்றும் இதர சொத்துக்களை இனாமாகவோ, குறைந்த விலையிலோ பெற்றிருக்க வேண்டும்; ஆனால் அப்படி செய்ய வில்லை.
இந்த பாலைவன பாரம்பரியங்கள் அரசை எப்படியும் மிரட்டலாம் ஏனெனில் அவர்களுக்கு உலக பின்புலமும் ஆதரவும் இருக்கிறது. ஆபிரகாமின் இரண்டாவது குழந்தை தனது உள்ளூர் பிரச்சனைகளையும் உலக பிரச்சினைகளாக தன உலகளாவிய நெட்வொர்க்கின் மூலம் பெரிது படுத்துகிறது, அதே நேரத்தில் மூன்றாவது குழந்தை தனது உலக பிரச்சனைகளை எல்லாம் உள்ளூருக்கு கொண்டுவந்து விடுகிறது. எங்கோ அமெரிக்காவில் ஜெரேமி பால்வெல் என்கிற தொலைக் காட்சி மதப்பிரசாரகர் முகமது நபியை ஒரு தீவிரவாதி என்று சொன்னதற்கு மும்பையில் ஐந்து பேர் சாக நேர்ந்தது. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம் ஜபுவாவில் கன்னியாஸ்தீரிகள் மீது நடந்த “ஹிந்து வெறியர்களின்” தாக்குதலுக்கு உலக அளவில் கோபமும் கண்டனமும் எழுகிறது, உண்மையில் அந்த தாக்குதல் அதே மதத்தைச் சேர்ந்த சில ரௌடிகளால் நிகழ்த்தப்பட்டது எனும்போதும்.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர (International Religious Freedom) ஆய்வுக் குழுவின் விமர்சனங்களை உள்ளூர் ஆங்கில ஊடகங்கள் பிடித்துக் கொண்டு, ஹிந்து பெரும்பான்மையை கடுமையாக விமர்சிக்கின்றன. ISI தொடர்புள்ள குற்றங்களுக்காக மேற்கொள்ளப்பட சில கைது நடவடிக்கைகளை எதிர்த்து எழுந்த வன்முறையை பார்த்தால், புனித ரமலான் மாதத்தில் ஏன் அந்த கைதுகள் நடைபெற்றன என்று ஒரு முதல்வரே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் தாராளமாக ஒரு தீபாவளி அன்றைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் படலாம். உத்தர பிரதேச போலீஸ ஒரு மதப் பள்ளிக் கூடத்தில் சோதனை மேற்கொண்ட போது எழுந்த கூச்சல் கதறலையும், அதனைத் தொடர்ந்து பிரதம மந்திரியே தலையிட்டு வருத்தம் தெரிவித்ததையும் நினைத்துப் பாருங்கள்.
பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. காஞ்சி முனிவர் கைது செய்யப் பட்டபோது பெரிதாக வன்முறை நிகழ வில்லை – அதனால் பொதுமக்களுக்கே அவர் கைதில் கவலையோ பாதிப்போ இல்லை என்பன போன்ற அபத்தமான கருத்துக்கள் உருவாகின்றன.
அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். சனாதன தருமத்தின் மென்மையான இந்த போக்கே, அரசால் அல்லது வேறு வகையில் சொல்லப் போனால் க்ஷத்ரிய அரசனால் அதற்கு பாதுகாப்பு தேவை என்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அத்தகைய அரசால் மட்டுமே சொல்லாலும் செயலாலும் எல்லா வகையான இந்திய மரபுகளையும் காப்பாற்றி அவற்றின் புனிதத்தன்மையைத் தொடரச்செய்ய முடியும்.
கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர்.
இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள், நிறுவனத்தினுடையவை அல்ல.

சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்
வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்
மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4
வையகம் இதுதானடா
சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5
உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி
பரமக்குடி முதல் பாடசாலை வரை![பால் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/outcast.jpg)
பால் [சிறுகதை]
புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02
புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 1
ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்![சுமைதாங்கி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/sumaithaangi-isakki-amman1.jpg)
சுமைதாங்கி [சிறுகதை]
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்
ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?
”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?
தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
சுய அறிதலும் வரலாற்று அறிதலும்
ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!













பேராசிரியர் வைத்தியனாதன் அவர்களின் இந்த ஆங்கிலக் கட்டுரையைப் படித்த போதே, இது தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே; தமிழ் இந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே என்று நினைத்தேன். மது நல்ல முறையில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு என் பாரட்டுகளும் நன்றியும்.
நம்முடைய இந்து மதம் நமக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை அளித்துள்ளது. மேலாதிக்கம் இன்றி ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கின்றோம். அதோடு ஆன்மாக்கள் பல, அவற்றின் பக்குவ அபக்குவங்களும் பல என்பதையும் இந்து மதம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏகான்மவாதம் பேசும் சங்கரர் கொள்கையும் கூட வியவகாரத்தில் ஆன்மாக்கள் பல என்றே கூறுகின்றது. அதனால் இயல்பாகவே கொள்கை மறுப்பு வாதங்கள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் கூடவே இருந்து வருகின்றது. இதன் விளைவு நம்மைப் பல பிரிவினராக ஆக்குவதைக் கண்ட பெரியோர்கள் வேதம் அல்லது வைதிகம் என்ற பெயரில் ஒற்றுமைப்படுத்த அவ்வப்போது முயன்றுள்ளனர். சிலசமயங்களில் வெற்றி பெற்றாலும் இன்றும் முழு வெற்றி அடைய முடியவில்லை. இந்து மதத்தினர் சிறுசிறு குழுக்களாகத்தான் உள்ளனர். எனவே உண்மையில் ஒவ்வொரு குழுவினரும் சிறுபான்மையராக மைனாரிடியாகத்தான் உள்ளோம். ஒன்று சேரவரும் நிலையில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர், தமிழ் , வடமொழி வேற்றுமையை தெய்வநாயகம் போன்றோரும் தீராவிடப் பகுத்தறிவாளர்களும் ஊதிக் கிளறிக் கொழுந்து விடச் செய்து விடுகின்றனர். தமிழ் சைவர்கள் தங்கள் திருமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வீரமணிகளைய்ம் இராமகிருஷ்ணன்களையும் சார்கின்றனர். இந்து தர்மத்திற்கும் இந்திய நாட்டுக்கும் நேரிட்டுள்ள அந்நிய சமயப் படையெடுப்பால் விளையும் கேடுகளை நம்மில் ஒவ்வொருவரும் ஓரளவுக்காவது அறிந்து வைத்திருந்தாலும் நாம் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாதவர்களாகவே உள்ளோம்.
கிறித்தவரும் இசுலாமியர்ரும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் என்ப்பட்டாலும், தங்களுடைய வேற்றுமைகள் எல்லாவற்றையும் மறந்து, ஏன், கிறித்துவர் இசுலாமியர் என்ற வேற்றுமையையும் மறந்து ஒன்றுபட்டுப் பெரும்பான்மையராகி, மதச்சார்பில்லாதவர்கள் என்ற ஓட்டுப் பொறுக்கிகளுடன் சேர்ந்து கொண்டு நம்மை நசுக்குகின்றனர். வேதம்= வைதிகம்= இந்து = பார்ப்பனீயம் என்று சொல்லிச் சொல்லி, வடமொழி தமிழுக்கு எதிரானது என்ற நஞ்சினைத் தமிழ்ச் சமூகதிற்குச் செலுத்தி நம்மை ஒன்று சேரவொட்டாது தடுத்து வைத்துள்ளனர்.
நமக்குத் தமிழ்மொழியின் மீது காதல் கொண்ட பிறமொழிகளை வெறுக்காத இந்தியமொழிகளிலும் ஆங்கிலத்திலும் பேசக் கூடிய , எந்த மடத்துச் சம்பிரதாயங்களிலும் சிக்கிக் கொள்ளாத இந்து மத்தின் அனைத்துக் கொள்கைகளையும் நன்கு அறிந்த அவற்றை மதித்துப் போற்றுகின்ற இளந்துறவி வேண்டும்.
நான் துறவி என்றவகையில் பெரிதும் போற்றுகின்ற முந்திய காஞ்சிமடத்துப் பெரியவர் மடத்துச் சம்பிரதாயங்களைக் காப்பாறுவதற்காகவே தாம் மடாதிபதியாக இருப்பதாகக் கூறினார். சமூகச் சிந்தனை உடைய ஜெயேந்திரர் அந்த சம்பிரதாயங்களைப் புறக்கணித்ததாக அவர்மேல் குறை சொல்லப்பட்டதும் உண்டு.
ஸ்மார்த்த மடங்களிலும் மாத்துவ மடங்களிலும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இடமில்லை. சைவ ஆதீனங்களும் சைவ ஒழுக்கத்தால் அன்றி பிறப்பால் சாதிச் சைவர்களுக்கே மதிப்பளிக்கின்றன.
இந்தநிலையில் தேசாந்திரிகள் போலத் திரிகின்ற சைவத்துறவிகளும், நாராணகுரு , அய்யாவைகுண்ட சிவபதி போன்றோரும் இந்து தருமத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர்.
ஆதிபராசக்தி வழிபாட்டினர், சத்திய சாயிபாபா பக்தர்கள், மற்றும் ‘மாடர்ன்’ உற்சவ மூர்த்திகளும் ஓரளவு ‘செத்தாரைத் துயிலெழுப்பும், குருடர்களுக்குப் பார்வையத் தரும்’ பால் தினகரன், சாதுசெல்லப்பா போன்றோர்களின் செல்வாக்கை ஆதிக்கத்தைத் தடுத்து வந்துள்ளனர்.
அரசியல் சட்டப்படி நாம் பெரும்பான்மையினர். நடைமுறையில் சிறுபான்மையினர். இசுலாமியரும் கிறித்துவரும் சட்டத்தின் பார்வையிலும் அரசியல் வாதிகளின் கண்ணோட்டத்திலும் சிறுபான்மையினர்; நடவடிக்கையில் பெரும்பான்மையினர். இராமகிருட்டிண மடத்தினர் சிறுபான்மையினர் தகுதி வேண்டி வழக்குத் தொடுத்துத் தோல்வியுற்ற செய்தியை மறந்து விடக் கூடாது.
நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயேந்திரரைக் கைவிட்டாலும் தர்மம் கைவிடாது.
எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர் பொன்னுச்சாமி அவர்களுடைய அன்புமகன் திருநாவுக்கரசு என்னும் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவனை உடன்பயின்ற கிறித்துவ அரக்கன் துண்டு துண்டாக்கிய கொடுமையை அவனுடைய இயேசுவே மன்னித்துக் காப்பற்றினார் என்றால், உண்மையான துறவியை கடவுள் கைவிடுவாரா?
மஹா பெரியவாள் தவிர இப்போது உள்ள கஞ்சி மடாதிபதிகளின் செய்கையால் உண்மையான இந்துக்கள் வெட்கி தலை குனிந்தனர் என்பதே உண்மை . மஹா பெரியவாள் தவிர இவர்கள் வணங்க தக்கவர்களா என்பது கேள்வி குறியே . ஆனாலும் அவர் கைது செய்த விதம் கண்டிக்க தக்கதே … அதே சமயம் இவருக்காக போராட தோன்றவில்லை என்பதே உண்மை .
இந்தக் கட்டுரையை பல கோணங்களில் இருந்து நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நான் எடுத்த எடுப்பிலேயே தெளிவாக சொல்வது என்ன என்றால், யார் ஒருவரையும் கஷ்டப் பட வைத்து அதில் நாம் மகிழ்ச்சி அடையும் படியான குரூர சிந்தனை உடையவன் அல்ல நான்.
எனவே ஜெயேந்திரர் கஷ்டப் படுத்தப் பட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால், நாம் அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால் இந்து மதம் பாதிப்படையக் கூடாது என்பதில் நமக்கு உண்மையான அக்கறை உண்டு. இந்து மதம் மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறது.
இந்து மதத்தின் சிந்தனைகள் எல்லா இந்துக்களையும் சென்று அடையும் படியான நிலையம்,
ஒவ்வொரு ஹிந்துவும், இந்து மதத்தின் கருத்துக்களைப் பிரதிபலித்து தாங்கள் அறிந்ததை வெளியிடுவதுமாக
முண்டக உபநிஷத்தின் தத்துவமான உண்மையே வெல்லும், சத்யம் ஏவ ஜெயதே என்பதின் அடிப்படையில் பகுத்தறிவு வழியில் ,
தன் முழு ஒளியுடன் இந்து மதம் பிரகாசிக்கப் போகிறது.
இந்த நிலையில் யாரும் வந்து “அப்படி எல்லாம் பேசப் படாது, சும்மா இருடா அம்பி, அதிகப் பிரசங்கி தனமா பேசாதே”‘ என்று அதட்டி மிரட்டி, இந்து மதத்தின் உண்மைகளை மூட்டை கட்டி மூலையில் போட்டு மூட நினைத்தால், இந்து மதத்தின் பெயரால் தாங்கள் மஞ்சக் குளிக்கலாம் என்று நினைத்தால்
இனிமேல் அது நடவாது.
ஒவ்வொரு இந்துவும் மேன் மேலும் ஆத்மா வலிமை பெற்று ஒரு அப்பராக, ஒரு சமபந்தராக, ஒரு விவேகானதராக, ஒரு பட்டினத்தாராக ஆத்மா வலிமை பெற்று விடுதலை அடையும் நிலை உருவாக்கப் போகிறது.
நாம் இது குறித்து தொடர்ந்து எழுதுவோம்.
அதாவது பீடாதிபதிகள் காலை, மாலை சந்தியாவந்தனமும், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும் வரையே அவர்களை அரசியல்வாதிகளும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் விட்டு வைத்திருப்பர். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிற மதங்களுக்கு மதமாற்றம் செய்ய இடையூறாக இல்லாதவரையிலும், சாதிக்கொடுமைகளை மாற்ற முயலாதவரையும் மட்டுமே விட்டு வைத்திருப்பார்கள்… இல்லையெனில் எப்பாடுபட்டாவது அவரை முடக்கி வைத்துவிடுவார்கள் என்பதே ஸ்ரீ.ஜெயேந்திரர் கைது நமக்குச் சொல்லும் சேதி.. ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் இந்துவாகவே இருந்தாலும் இதுபோன்ற துரோகங்கள் செய்யத்தயங்குவதில்லை என்பதை இந்தக் கைதுகள் சொல்கின்றன. நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதை வைத்துத்தான் இந்துக்களின் எதிர்காலம் இருக்கிறது.
மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல்களின் கைகள் ஆளும்வர்க்கத்தின் உயர்நிலைவரை எட்டி இருக்கின்றன என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. இந்து மெஜாரிட்டி நாட்டில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதும், அரசை மிரட்டாத, வாக்குவங்கியாக மாறாத இந்துக்களுக்கு அழிவு உறுதி என்பதும் கண்கூடு..
விழிப்போம் இந்துக்களே…. இதுபோன்ற பல கால கட்டங்களை கடந்து வந்துள்ள இந்துமதம் இதையும் தாண்டிச் சென்று அனைத்து மதங்களையும் செரிக்கும், ஏப்பம் விடும்..
அரு மையான கட்டுரையை எழுதிய பேராசிரியர் வைத்தியநாதன் அவர்களுக்கும், அருமையாக தமிழாக்கம் செய்த மது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
[...] http://www.tamilhindu.com [...]
சங்கராச்சாரியார் குறித்த வழக்கின் தற்கால போக்கு குறித்து விவரமாக எழுதப்பபட்டிருக்க வேண்டும்.
சாட்சிகள் பல்டியடித்ததாக எழுதப்பட்டுள்ளது. அது உண்மைதான். ஆனால், அதன் விவரங்கள் முழுமையாக தெரிந்துகொண்டால் இந்த வழக்குகள் எத்தனை பொய்யானவை, எத்தனை உள்நோக்கு கொண்டவை என்று எந்த ஒரு “பகுத்தறிவு”க்கும் புரிந்துபோகும். ஏனென்றால், வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்தார்கள் என்றால் பொதுவாக ஏதோ மிரட்டப்பட்டோ, காசுக்கு வாங்கப்பட்டோ இருக்கலாம் என்று தோன்றினாலும் தோன்றும். ஆனால், விவரங்களை அறியும்போது இதில் வெளிவரும் உண்மை புரியும்.
இது குறித்து மிகச்சில பத்திரிக்கைகளியே சிறிய அளவில் செய்தி வந்துள்ளது. பல பெரும்பான்மை ஜனரஞ்சக ஊடகங்கள் இந்த வழக்கின் திருப்புகளை இருட்டடிப்பு செய்துவிட்டன. இது வருந்தத்தக்கது.
பல்டியடித்த சாட்சிகள் எல்லோருமே தாங்கள் வெறும்பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டதாகவும், அல்லது வெறும் போட்டோவைக் காட்டி அடையாளம் காட்டப்பட்டதாகவும் சொல்லியிருக்கின்றனர். அதாவது, போலிஸ் செட்டப் செய்த வழக்கு இது என்று தெளிவாக தெரிகிறது.
இது குறித்து நிறைய விவரமாக எழுதலாம். ஆனால், நேரமில்லை.
பல்டியடித்தவர்களில் முக்கியமானவர்கள் கொலையாண்ட சங்கரராமனின் குடும்பத்தினர். இவர்களையும் போட்டோவைக் காட்டி இப்படி வாக்குமூலம் சொல்லுமாறு போலிஸ் பாடம் எடுத்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இது வெட்க்கேடு. அப்போதைய முதல்வர் இந்த கேசில் எத்தனை தனிப்பட்டு ஈடுபாடு கொண்டு கொலையுண்டவரின் குடும்பத்தை அழைத்து குரூப் போட்டோ எடுத்துகொண்டு விசேஷ அன்பளிப்பாக அரசு பணத்தைக் கொடுத்தார் என்பதை இதோடு நினைத்துப்பாருங்கள். நிலைமையின் தீவிரம் புரியும்.
நன்றி
ஜயராமன்
IIT vaidyanathan doesnt have any common sense if he want to condemn about his saints arrest y he is dicriminatinting other religions did christians r muslim govt arrested him.We know JJ was his devotee also she is also having faith in Hindu religion and in him also
Mr.Jayaraman,
Is the litigation on sankaracharya is really a forged one??? will you please share us the details reg. that if you have time ..
Thanks..
வைத்தியநாதன் இக்கட்டுரையில் உறுதியான, நடுநிலையான இந்து அணுகுமுறையை அளித்திருக்கிறார். தமிழாக்கம் செய்த மது அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
இந்த வழக்கு விவகாரத்தில் ஸ்ரீஜயேந்திரர் இந்துவிரோத சக்திகளால் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டு, அன்றைய ஜெ.அரசும் இதில் உடந்தையாகும் நிலை ஏற்பட்டது. தலிச் சேரிகளில் நுழைந்த முதல் சங்கராசாரியார் என்ற ஏற்றத்திற்கு உரிய சுவாமிகள், அவரைச் சுற்றியிருந்தவர்கள், மடத்தின் நிர்வாகம், சதிவலை ஆகிய பல காரணங்களால் கைது செய்யப் பட்டு துன்புறும் நிலை ஏற்பட்டது. ஆனால் உண்மை உறங்காது, வெளிவந்தே தீரும். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தான் சபரிமலை மூலஸ்தானத்தில் 20 வருடம் முன்பு நுழைந்ததாக நடிகை ஜெயமாலா பரபரப்பு கிளப்பினார் (5-6 வருடம் முன்பு கிறிஸ்தவராகி, தற்போது வெறிபிடித்தது போல மதப்பிரசாரம் செய்துவருகிறார் இவர்). சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன, ஜெயேந்திரர் கேஸ் போலவே! உலக அளவில் பெருமதிப்பு பெற்ற யோக, ஆன்மிக குரு ஒருவரது ஆசிரமத்திற்குள், அமைப்புக்குள் புகுந்து அங்கு ”பாலியல் குற்றங்களை” உற்பத்தி செய்ய இதே சக்திகளால் சதித்திட்டம் தீட்டப் பட்டு, அவர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், அது முறியடிக்கப் பட்டது – இது நான் நேரடியாக அறிய வந்த விஷயம். இவையெல்லாமே திட்டமிட்ட சதிகள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
எல்லா இந்து பூசாரிகளும், மதத்தலைவர்களும் அப்பழுக்கற்ற நடத்தை உள்ளவர்கள் என்று கூற வரவில்லை – அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ”கூடா ஒழுக்கம்” பற்றி ஒரு அதிகாரம் எழுதிய வள்ளுவரது பாரம்பரியம் நம்முடையது. ராவண சன்யாசிகள் உண்டு என்று தன் ஆதிகாவியத்திலேயே சித்தரித்த மதம் நம்முடையது..
ஆனால் இந்துக்களின் இத்தகைய சுதந்திரமான sceptical நோக்கைப் பயன்படுத்தி உண்மையான, நேர்மையான, பாரம்பரியமிக்க இந்து மத அமைப்புகளின் மதிப்பைக் குறைக்குமாறு சதித் திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்படுத்தும் கேடுகெட்ட கயவர்கள், மதமாற்ற வெறியர்கள் இங்கே உலவுகிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அவர்களது மத அதிகார பீடங்களின் முழு ஒத்துழைப்பும், உதவியும் உண்டு. டாவின்சி கோட் நாவலில் வரும் சம்பவங்கள் வெறும் புனைவு அல்ல, அவை ஒவ்வொன்றுக்கும் பின் அவற்றை விஞ்சும் வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன என்று அந்த நாவலை எழுதிய டான் பிரவுன் கூறியிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
// அதாவது பீடாதிபதிகள் காலை, மாலை சந்தியாவந்தனமும், பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும் வரையே //
வெற்றிச் செல்வன், அத்வைத நெறிப் படி துறவறம் பூணும் சன்யாசிகள் அனைத்து நித்ய கர்மங்களையும் துறந்தவர்கள், அதில் சந்தியாவந்தனமும் அடக்கம், அவர்கள் பூணூலை அறுத்தெறிந்து பின்னரே துறவிகள் ஆகிறார்கள். பரம்பொருளின் உன்னத தியானமாக விளங்குவதால் காயத்ரி மந்திரத்தை அவர்கள் ஜபிக்கலாம், தியானமாக. அதுவும் கர்மா/சடங்கு என்ற வகையில் அல்ல.
தன்னலத்திற்காக அல்லாமல், உலக நலனுக்காகவே செய்யப் படும் இறைவழிபாடு, தியானம், ஜபம் மட்டுமே அவர்களுக்கு விதிக்கப் பட்டது.
இந்து மதம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது அது குறிப்பிட்ட முறைகளை கடைப் பிடித்து வருகிறது. பல அறிங்கர்கள் அவ்வப் போது அது செல்ல வேண்டிய திசையை சரியாக்கித் தந்து வருகின்றனர்.
குறிப்பாக சொல்வதானால், சமீப காலத்தில் புத்தர், அப்பர் உள்ளிட்ட நாயன்மார்கள், ஆதி சங்கரர், ஆழ்வார்கள், இராமானுஜர், மத்வர், மிக சமீபத்தில் இராமகிருஷ்ண- விவேகானந்தர் ஆகியோர் (இன்னும் பலர் உண்டு)இந்து மதத்தின் அறிய உண்மைகளை வெளிப்படுத்தி சரியான பாதியில் கொண்டு சென்றவர்கள்- இவர்கள் எல்லாம் இந்து மதத்தைக் காக்க, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்பதை வரலாறு கூறுகிறது.
இப்போதோ புற்றீசல் போல “God Man” களும் “ஆச்சாரியார்களும்”, சாமியார்களும் உருவாகி அருள் பாலிக்கின்றனர். நாம் யாரயும் குறை சொல்லவில்லை. இகழவும் இல்லை. இவர்களைப் போல புதியதாக வருபவராக இருந்தாலும் சரி, அல்லது சம்பிரதாய முறையிலான ஆச்சாரியாராக, மடாதிபதியாக, துறவியாக இருந்தாலும் சரி – நாம் இவர்களிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். உங்களால இந்து மதத்திற்கு ஏதாவது நல்லது பண்ண முடிந்தால் சரி, நீங்கள் இந்து மதத்தைக் காப்பதாக இருந்தால் சரி,
ஆனால் இந்து கட்டுரையின் படி பார்த்தால், இந்து மதத்தின் வேலையே இவர்களை எல்லாம் காப்பதாக தான் இருக்கும் போல இருக்கிறதே!
இந்து மதத்தின் மேலே இன்னும் அதிக சுமையை ஏற்றி வைப்பதாகவே உள்ளது.
நாளைக்கு இங்கெ எழுதுபவர்களின் பேரப் பிள்ளைகள் எல்லாம், அமெரிக்காவில் இருந்தும், ஆப்பிரிகாவில் இருந்தும் இந்து மதத்தின் உண்மைகளை அறிய விரும்பி, பிளைட் பிடித்து இவர்களை நம்பி இங்கெ வரப் போகிறார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைந்தாலாவது பரவாயில்லை, விபரீதங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளாதீர்கள்.
இந்து மதம் என்பது – கோடிக் கணக்கில் சொத்து சேர்க்கவும், அதை முறை கேடாக செலவிடவும், பிரச்சினை வரும்போது தங்களை காத்துக் கொள்ள பயன்படும் கேடயமாகவும் பயன்பட உருவாக்கப் பட்டது அல்ல!
இந்து மதத்தின் பெயரால் ஏதாவது தப்புத் தண்டா நடந்தால் அதனால் பாதிக்கப் படுவது இந்துக்களும், இந்து மதமும் தான்- அதை உணர்கிறீர்களா?
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்து மத்தைப் பயன் படுத்தி இனி யாரும் எந்த விதமான முறை கெடும் செய்ய முடியாது, என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
ஆனால் இந்தக் கட்டுரையோ – நீங்கள் தைரியமாக இருங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், இந்துக்கள் பொங்கி எழுந்து இந்து மதத்தைக் கேடயமாக்கி உங்களுக்கு ஒன்றும் வராமல் பார்த்துக் கொள்வோம் – என்று தைரியம் அளிப்பது போல உள்ளது.
இராவண சன்னியாசிகளின் கையில் இன்னும் பல சீதைகள் சிக்கித் தவிக்கும் படியாக நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!
யாருக்கவது புலனடக்கம் இல்லை என்றால் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தலாம். குடும்ப வாழ்க்கை நடத்தியபடியே ஆன்மீகப் பணி செய்ய முடியும்.
புலனடக்கத்தை உண்டாக்க இந்து மதத்தால் முடியும். விவேகத்தால் உண்டான வைராக்கியம் தான் நிலையானது. அறிவினால் ஏற்பட்ட மன உறுதி சிறப்பான துறவறத்தை அளிக்கும்.
இராவண சன்னியாசிகளால் இந்து மதத்திற்க்கு நன்மை ஒரு பங்கு அளவு என்றால், கேடு நூறு பங்கு அளவு.
உயிரொட்டத்துடன் இருக்கும் இந்து மதத்தை சிதைத்து, இந்தியாவில் உள்ள இந்துக்களை ஐரொப்பியர் நிலைக்கு மாற்றி விட முடியாது.
இந்து மதம் ஒவ்வொரு இந்துக் குடும்பத்திலும் வாழ்கிறது.
அது மத குருமார்களிடம் மட்டும் இல்லை.
என்னைத் திட்டுவதானால் திட்டிக் கொள்ளுங்கள்.
அஞ்சாமல் இந்து மதத்தைக் காப்போம்.
என்றைக்கு”நான் சாகும் வரைக்கும் சங்கராச்சாரியார்தான். சுவாமி விவெகானந்தர் செய்ததை விட பெரிய செயல்களை ஏற்க்கனவே செய்து முடித்து விட்டேன்” என்று அகத்துடன் திருப்பதியில் பேட்டி தரப் பட்டதோ, அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இது முடியும் இடம் எங்கோ” என்று.
என் நண்பருக்கு அன்று அது புரியவில்லை.
I have written about this earlier on YSR. I repeat again. I am not a devotee of the Kanchi Mutt and have visited it only once (some 35 years back). Yet, the humiliating arrest of the Kanchi saint infuriated me. I believed in the social activities of the Mutt. The evil forces that were part of the conspiracy to humiliate the Kanchi Acharya will repent for their sins. YSR was a party to the conspiracy. YSR knew that the charges filed against the Kanchi Acharya were totally false. Yet he did not stop TN police from arresting the saint from his state. He kept quiet when Amma thundered that the Kanchi saint was planning to fly to Nepal and a helicopter was ready to fly him out. Yet YSR did not call Amma’s bluff. Well five years later YSR died in a miserable way – 3 Sep on Pradosham day in Rudrakunda hills (the happenings of the same day in 2004 that gave Amma an excuse to arrest the Kanchi saint). Amma not only lost power in TN but her party predicted to win in most seats in TN failed miserably. Amma will never return to power.
Dear Swami,
/// மஹா பெரியவாள் தவிர இப்போது உள்ள கஞ்சி மடாதிபதிகளின் செய்கையால் உண்மையான இந்துக்கள் வெட்கி தலை குனிந்தனர் என்பதே உண்மை ////
“உண்மை” முதலான பத்திரிக்கைகளை அதிகம் படித்துவிட்டீர்கள் போல. உண்மையில் மகாபெரியவர் என்று நீங்கள் சொல்லும் அவரை நீங்கள் எவ்வளவு மதித்தீர்கள் என்றே சந்தேகமாய் இருக்கிறது. உங்களின் உண்மையும், தெளிவாய் தெரிகிறது என்று நீங்கள் சொல்லியிருக்கும் பொருளும் உண்மையில் புரட்டானது.
மகாபெரியவரின் வருணாசிரம மற்றும் சாதீய கருத்துக்களை விட திரு.ஜயேந்திரரின் அணுகுமுறைக்கு ஆதரவான சனாதன இந்துக்கள் பலரும் உண்டு. நீங்கள் காமகோடி மடத்தின் நடவடிக்கைகளை தெரியாதவர் என்று தெரிகிறது. தயவு செய்து இம்மாதிரி சட்டாம்பிள்ளைக்கருத்துக்களை பதிய வேண்டாம்.
திரு.ஜயேந்திரரின் எந்த மாதிரி நடவடிக்கைகளினால் “உண்மையான” இந்துக்கள் வெட்கப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல முடியுமா? ஒரு குற்றச்சாட்டு சொல்லுமுன் அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது கடமையாகிறது. தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி
ஜயராமன்
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஜெயந்த்ரர் குற்றவாளி என்றால் தண்டிக்க படவேண்டியவர். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் ஜெயந்த்ரர் நடத்தப்பட்ட விதம் சரி இல்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்தை காப்பாற்றும் நடவடிக்கையா அல்லது பழி வாங்கும் நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.
முத்து
நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.
இந்த “பில்லியனேர் புனிதர்கள் ஆதரவு & பாதுகாப்பு” , தொடர்கதை ஆகி இந்து மதம் பாதிக்கப் படக் கூடாதே என்பதே நமது அக்கறை.
ஆனால் நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.
பணக்கார பூசாரிகள் மீது ஏதாவது ”கூடா ஒழுக்க” புகார் வந்தால் உடனே அவருக்கு ஆதரவு பெருகுகிறது. விஷயம் தெரிந்தவர்கள், இந்து மத நூல்களை நன்கு கற்றவர்களே இப்படி செய்கிறார்கள்.
இப்போது கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள் சதி வலையில் சிக்க
வைக்கப் பட்டதை அம்பலப் படுத்துகிறார்கள்.
//சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன//
செய்திகள் கூறுவது என்ன?
செய்தி- 1:
Kochi – A lower court here Tuesday granted bail to Sobha John, who was arrested early this மோனத் for masterminding blackmail operation against the Sabarimala temple priest.
Sobha secured her bail from the chief judicial magistrate court but two of her accomplices weredenied the same.
She was arrested last Wednesday along with two drivers, for forcibly making Kantaru Mohanaru, தி Sabarimala temple priest to pose with a naked woman. They were arrested for blackmailing andextortion. The incident took place in Sobha’a rented flat.
செய்தி-2
Home Minister Kodiyeri Balakrishnan told reporters here yesterday that he had sought a report about the incident and added he would order a comprehensive inquiry if there is any conspiracy behind it.
Police said they had discovered the chief priest’s sexual escapades while investigating a complaint his driver lodged with them alleging that Mohanru was abducted and photographed with a woman at Cochin on Sunday with a view to blackmail him.
The investigation by a police team headed by assistant commissioner A.V. George found the complaint false. It revealed that the thantri had regular sexual affair with the woman identified as Shobha John at the residential apartment. Incidentally, she was arrested two months ago under the Immoral Traffic (Prevention) Act.
Ernakulam Deputy Inspector General of Police K Padmakumar said that the evidence collected by the police revealed that the thantri had visited the flat 20 times. Following this, the priest appeared in person before the Ernakulam Town Central Police on Monday and corrected the complaint.
According to the revised version, the priest had reached the flat looking for a maid servant. A group of youths forced themselves into the flat at that time and took his photograph along with the woman.
The Ernakulam DIG said that the police will conduct a detailed investigation on the basis of the fresh complaint and find out if there was any attempt to blackmail the Sabarimala priest.
எல்லா செய்திகளும் கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள், மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டிற்குப் போனதை உறுதிப் படுத்துகின்றன. கனவான், அருள் திரு கண்டரரு கூட அதை மறுத்ததாகத் தெரியவில்லை.
இப்படி வூர் அறிந்த விடயத்தை,
“சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு” என்று எழுதினால், படிப்பவர்கள் சரடு விடப் படுவதாக என்ன மாட்டார்களா?
தந்திரிக்கு, மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டில் என்ன வேலை?
நாம் எல்லோரும் இங்கே அசோக் குமார், கிளாடி, டேனியல் இவர்களுடன், யூத மதக் கொள்கைகள், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பற்றி கார சாரமாக விவாதிப்பது போல- தந்திரி, மங்கையர் திலகம் சோபா ஜானுடன் விவாதம் செய்ய, மத ஆராய்ச்சி நடத்தப் போனாரா?
கோவிலில் வேலை முடிந்தவுடன் வீடு போய் சேரலாம் அல்லவா? நாமெல்லாம் அப்படித்தானே செய்கிறோம்?
ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-
நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்!
இந்து மதம் என்றாலே உண்மை, நேர்மை, கருணை, நீதி, நியாயம், அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ர, சத்யம் ஏவ ஜெயதே என்று நம்பித் தான் இந்து மதத்தைப் போற்றுகிறோம், மதிக்கிறோம், வணக்குகிறோம்!
தாந்திரியின் வழிதான் இந்து மதம் என்ற அளவுக்கு ஆக்கி விடாதீர்கள் ஐயா!
ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்,
வாழ்க்கை என்றாலே ஆச்சரியம் தான் என்று கூறி விட்டு, தந்திரியின் ஜோதியிலே கலந்து விடாதீர்கள் ஐயா!
Shri.Jeyandrar made Mutt a public place for all and he moved to all places.
He brought so many Schools and Colleges and Hospitals for all. Of course as they are not Aided and hence charge Monthly Tution fees to pay Teachers, which becomes costly for Lower Middle class. Middle class and above feels very comfortable in sending Children here.
Shri.Jayendrar has made Mutt a People Movement
Dear Jeyaraman,
As far as my little knolwedge i have as well as the visits i made to kanchi matt and the programs i attended – i haven’t seen a spirtual person as strong as Maha Periyaval . My humble request is please dont compare him with anybody for God’s sake. I dont think i have to read ” உண்மை(??) ” to put a comment in Tamil Hindu article.
Do you really want me to write all those dirty stuff which were in public domain. I dont think you will deny the infamous story where Jeyanthrar ran away from matt and Maha periyaval has to trace and bring him back . My intention is not to defame jeyanthrar or anybody .( they have done it by their own actions )
Adi sanadhana Dharm cannot be marginalised by the acts of these people. Its still surviving because of the power of Rishi and Muni in this land. But few exceptional cases gave room for the so called rationalist to defame the saint community in total and in the process the hindu religion as well , the slander campaign ran in the media after the arrest and the manner in which the arrest was made is definitely condemnable but if you expect everybody to sympathise and support Jeyandar for his actions – i’m not sure how many will buy that argument.
Saint way of life has different rules and regulations – as said by many – its not just sufficiet that you are leading a saint life ( in this case that was also not there ) – it has to be seen as well.
– You can ignore the above comment as well as the one from Chattampillai –
By the way i dont think i need any certificate from anybody how much respect and belief i have in Mahaperiyaval.
Thanks & Regards
Swami
நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.
இந்த “பில்லியனேர் புனிதர்கள் ஆதரவு & பாதுகாப்பு” , தொடர்கதை ஆகி இந்து மதம் பாதிக்கப் படக் கூடாதே என்பதே நமது அக்கறை.
ஆனால் நாம் எந்த ஒன்று நடக்க கூடாது என்று கவலைப் படுகிறோமோ, அதுவே நடக்கிறது.
பணக்கார பூசாரிகள் மீது ஏதாவது ”கூடா ஒழுக்க” புகார் வந்தால் உடனே அவருக்கு ஆதரவு பெருகுகிறது. விஷயம் தெரிந்தவர்கள், இந்து மத நூல்களை நன்கு கற்றவர்களே இப்படி செய்கிறார்கள்.
இப்போது கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள் சதி வலையில் சிக்க
வைக்கப் பட்டதை அம்பலப் படுத்துகிறார்கள்.
//சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு புகைப்படம் எடுத்தது வரை ஜார்ஜ்கள்/ஜோசப்களின் நடவடிக்கைக்ளை ஊடகங்களே வெளிப் படுத்தியிருக்கின்றன.. இந்த கேஸ்க்ள் எல்லாம் பின்னர் என்ன ஆயின?? காற்றோடு போய்விட்டன//
செய்திகள் கூறுவது என்ன?
செய்தி- 1:
Kochi – A lower court here Tuesday granted bail to Sobha John, who was arrested early this மோனத் for masterminding blackmail operation against the Sabarimala temple priest.
Sobha secured her bail from the chief judicial magistrate court but two of her accomplices weredenied the same.
She was arrested last Wednesday along with two drivers, for forcibly making Kantaru Mohanaru, தி Sabarimala temple priest to pose with a naked woman. They were arrested for blackmailing andextortion. The incident took place in Sobha’a rented flat.
செய்தி-2
Home Minister Kodiyeri Balakrishnan told reporters here yesterday that he had sought a report about the incident and added he would order a comprehensive inquiry if there is any conspiracy behind it.
Police said they had discovered the chief priest’s sexual escapades while investigating a complaint his driver lodged with them alleging that Mohanru was abducted and photographed with a woman at Cochin on Sunday with a view to blackmail him.
The investigation by a police team headed by assistant commissioner A.V. George found the complaint false. It revealed that the thantri had regular sexual affair with the woman identified as Shobha John at the residential apartment. Incidentally, she was arrested two months ago under the Immoral Traffic (Prevention) Act.
Ernakulam Deputy Inspector General of Police K Padmakumar said that the evidence collected by the police revealed that the thantri had visited the flat 20 times. Following this, the priest appeared in person before the Ernakulam Town Central Police on Monday and corrected the complaint.
According to the revised version, the priest had reached the flat looking for a maid servant. A group of youths forced themselves into the flat at that time and took his photograph along with the woman.
The Ernakulam DIG said that the police will conduct a detailed investigation on the basis of the fresh complaint and find out if there was any attempt to blackmail the Sabarimala priest.
எல்லா செய்திகளும் கனவான், அருள் திரு கண்டரரு அவர்கள், மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டிற்குப் போனதை உறுதிப் படுத்துகின்றன. கனவான், அருள் திரு கண்டரரு கூட அதை மறுத்ததாகத் தெரியவில்லை.
இப்படி வூர் அறிந்த விடயத்தை,
“சபரிமலை தந்திரி விவகாரத்திலும், தந்திரி வீட்டில் பெண்களை நுழையவிட்டு” என்று எழுதினால், படிப்பவர்கள் சரடு விடப் படுவதாக என்ன மாட்டார்களா?
தந்திரிக்கு, மங்கையர் திலகம் சோபா ஜான் வீட்டில் என்ன வேலை?
நாம் எல்லோரும் இங்கே அசோக் குமார், கிளாடி, டேனியல் இவர்களுடன், யூத மதக் கொள்கைகள், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பற்றி கார சாரமாக விவாதிப்பது போல- தந்திரி, மங்கையர் திலகம் சோபா ஜானுடன் விவாதம் செய்ய, மத ஆராய்ச்சி நடத்தப் போனாரா?
கோவிலில் வேலை முடிந்தவுடன் வீடு போய் சேரலாம் அல்லவா? நாமெல்லாம் அப்படித்தானே செய்கிறோம்?
ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-
நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்!
இந்து மதம் என்றாலே உண்மை, நேர்மை, கருணை, நீதி, நியாயம், அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ர, சத்யம் ஏவ ஜெயதே என்று நம்பித் தான் இந்து மதத்தைப் போற்றுகிறோம், மதிக்கிறோம், வணக்குகிறோம்!
தாந்திரியின் வழிதான் இந்து மதம் என்ற அளவுக்கு ஆக்கி விடாதீர்கள் ஐயா!
ஐயா, சான்றோர்களே, படித்தவர்களே, இந்து மதம் பற்றி விவரம் தெரிந்தவர்களே, இந்து மதம் காக்கப் பட வேண்டும் என்று உழைப்பவர்களே-நாங்கள் உங்களை மிகவும் நம்பி இருக்கிறோம்,
வாழ்க்கை என்றாலே ஆச்சரியம் தான் என்று கூறி விட்டு, தந்திரியின் ஜோதியிலே கலந்து விடாதீர்கள் ஐயா!
சுவாமி அவர்களே,
///// Dear Jeyaraman,
As far as my little knolwedge i have as well as the visits i made to kanchi matt and the programs i attended – i haven’t seen a spirtual person as strong as Maha Periyaval . My humble request is please dont compare him with anybody for God’s sake. I dont think i have read ” உண்மை(??) ” to put a comment in Tamil Hindu article. /////
You say now that your knowledge is “little”. But, You made a profound statement that “எல்லா இந்துக்களும் வெட்கித்தலைகுனிகிறார்கள்” என்று. What a contradiction!!
Now, You say that “you have not seen a spiritual person as strong as Maha Periyaval”. But, this has no correlation to your earlier statement that “தற்போதைய மடாதிபதிகளின் நடவடிக்கைகளால் எல்லா இந்துக்களும் வெட்கித்தலைகுனிகிறார்கள்”. You may feel Maha Periyaval was more spiritual. That is your personal opinion and may well be true. Even if it is true, How that will mean that “Now real hindus are ashamed with the mutt”.
The brief departure of Sri.Jeyendrar happened more than 25 years back. That is a matter between Maha swami and Sri.Jeyendrar. How that will make you say that “all hindus are ashamed”. After the return of Sri.Jeyendrar, Maha Swami made him part of the mutt acharyahood for next 25 years. Are you more “true” hindu than Maha Swamy to say that you are “ashamed” and not “maha swamy”? Even Maha swamy accepted his vyasapoojai for next 25 years and made him the head for future. You seem to be more loyal than the king!!
If you have any other activity in mind, but don’t want to write here, I am afraid that this talks more about you than Sri. Jeyandrar.
My brother was studying with Sri.Vijayendrar under sri.mahaswamy when Sri.Jeyandrar went briefly and returned. I remember that when Sri.Jeyendrar contacted the mutt after brief period and informed that he is returning, Maha Swamy called all the mutt officials and lectured (anugraha bhasan) for two hours. He sent major battalion of vedic pandits, elephants, horses etc. from Kanchipuram all the way to karnataka border. Sri. Jeyendrar was received with as much a honour as We have never experienced before nor later.
If you know someone at that time, Pls check up with them.
What transpired between the spiritual gurus, You have no right or means to know. Real spirituality means not attachment to anything.
Blaming Guru is a major sin. It will be telling in the astrology with the malefect function of Guru. Guru in vakram also means that we will think very negatively and work towards destruction of sanatana dharma, while feeling secretly attached to that. Sri. Karunanidhi’s horoscope is like that. This is a major major mishap, which please avoid. This will affect the generations also.
Lord Murugan deserted and went and returned. I don’t think Shiva and Parvati feel “ashamed”. Gyaneswar’s father went to Kasi as a saint and came back and started familhy life. Strange are the ways of spiritual gurus. Sri. Jeyendrar has said many times that his life got transformed during those days. I believe that his new vigour and breaking from the strangehold of rituals came out because of his deep introspection and independent thinking.
Thanks for making me write all this. I may not have the interest to respond to you in future. May God show us (including me) the right path!
நன்றி
ஜயராமன்
You said it right Jeyaraman. Very good and many thanks.
People like Swami belong to the group of “Veshadaris”, who try to project their “knowledge” by making a comparison between Maha Periyavah and Periyavah without even understanding the basic facts about the Guru-Sishya concept, relationship, etc. None of these “intellectuals” know what transpired between the Guru and Sishya, but they have the temerity to comment about the incident without realizing that they are exposing only their idiocy. When Maha Periyavah himself had accepted his Sishya and accorded him a warm welcome, who are these small men to comment about it?
It has become a fashion for these “veshadaris” to criticise Periyavah, while claiming themselves as devotees of Maha Periyavah.
Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got?
Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!
Was he or was he not arrested on a night considered ‘holy’ by hindus? And the reason for such an urgency ws cited by the Public Prosecutor ‘he might escape to Nepal for which he had a helicopter ready all revved up’(or words to that effect) !
The Supreme Court, in passing, mentioned that there was no case at all. Then why prolong the agony?
Why must the case go on.
The Inspector who prosecuted this particular case was so notorious that the courts should have dismissed it without a second thought !!
And by writing such articles is not Prof Vaidyanathan inviting his own arrest warrent !
அடாடா, அருமை நண்பர்களே,
புலவர்களுக்கிடையில் சர்ச்சை இருக்கலாம், ஆனால் சண்டை ஆகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னவோ குரு- சிஷ்யர்கள்
கிருட்டினர் – அர்ஜுனர்,
பட்டினத்தார்- பத்ரகிரியார்,
இராமகிரிஷ்னர் – விவேகானந்தர்
போல இங்கெ பெரிய வாக்குவாதம் நடக்கிறதே!
உண்மையான இந்துவா , அவரை விட பெரிய இந்துவா என்றெல்லாம் அனல் பறக்கிறதே! குருவை ஒன்றுமே சொல்லக் கூடாது , அது பாவம் என்று எல்லாம் உபதேசங்கள் நடக்கிறதே!
குரு மிக நல்லவராக இருந்தாலும், அவர் தவறான பக்கத்தில் இருந்தால் அவரை எதிர்க்க தயங்கக் கூடாது என்று சொன்னாரே கிருட்டினர், அவர் இந்து அல்லவா, அவர் ஜொராஸ்டிரிய மதத்தை சேர்ந்தவரா?
இத்தனைக்கும் தகுதியான, சரியான குருவே எதிர் பக்கத்தில், அதர்மத்தின் பக்கத்தில் நிற்கும் சூழ்நிலை இருந்தாலும், வேறு வழி இல்லாமல் அவரை எதிர்த்துதான் ஆக வேண்டும். என்றே கூறியுள்ளார்.
சுயமாக சிந்திக்க விடாமல் சும்மா குரு, குரு என்று ஜல்லியடித்தே இந்து மதத்தை பின்னோக்கித் தள்ளி விட்டீர்கள்.
அங்கவஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு பொடேல், பொடேல் என்று காலில் விழுவதை மட்டுமே ஆன்மீக அனுபவம் போல ஆக்கி விட்டீர்கள்.
இனி வரும் இளைங்கர்களாவது அறிவின் அடிப்படையில், அன்பின் அடிப்படையில் இந்து மதத்தை புரிந்து கொண்டு பாதிப்புகளை சரி செய்து முன்னேறுவார்கள். திரும்பவும் வந்து முட்டுக் கட்டையை போடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
//When Maha Periyavah himself had accepted his Sishya and accorded him a warm welcome, who are these small men to comment about it? //
//who are these small men to comment about it?//
“எல்லோரிடமும் இருப்பது ஒன்றேதான், ஒன்றாகவே இருக்கிறது, அத்வைதம்” என்று சொல்லி இருக்கிறார்கள். இங்கே small men, big man எல்லாம் எதற்கு ? அப்படி நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது!
//Who are these people? What is their local standi? How qualified are they? What right they have got? //
சொல்பவரின் கருத்து என்ன, அந்தக கருத்தில் உண்மை இருக்கிறதா, அவசியமா, நன்மை இருக்கிறதா என்று பார்த்து கருத்தை வெட்டியோ, ஒட்டியோ எழுதலாமே தவிர, தகுதி இருக்கிறதா என்று எல்லாம் கேட்பது , ஆணவப் போக்காகவே புரிந்து கொள்ளப் படும். இந்து மதத்தை சமத்துவ வழியில் வேகமாக கொண்டு சொல்லும் கால கட்டத்தில், நம்முடைய சிந்தனைகளை செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் யாரும் வந்து “அப்படி எல்லாம் பேசப் படாது, நோக்கென்னடா தகுதி இருக்கு, சும்மா இருடா அம்பி, அதிகப் பிரசங்கி தனமா பேசாதே”‘ என்று அதட்டி மிரட்டி, இந்து மதத்தின் உண்மைகளை மூட்டை கட்டி மூலையில் போட்டு மூட நினைத்தால், இந்து மதத்தின் பெயரால் தாங்கள் மஞ்சக் குளிக்கலாம் என்று நினைத்தால்
இனிமேல் அது நடவாது.
//Sinners they are! They just commit sin by their arrogance and stupidity. Even Bhagwan cannot save them!//- சுவிசேசப் பிரசங்கத்தில் கூறப் படும் வார்த்தைகள் போல உள்ளது!
//திரு.ஜயேந்திரரின் எந்த மாதிரி நடவடிக்கைகளினால் “உண்மையான” இந்துக்கள் வெட்கப்பட்டனர் என்று நீங்கள் சொல்ல முடியுமா? ஒரு குற்றச்சாட்டு சொல்லுமுன் அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது கடமையாகிறது. தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். //
@ Jeyaraman – My second reply happened because you mentioned its my duty to explain.:). . Thank you for your clarifications. I really didnt want you or somebody else to give detailed explainations on the other activities so i didnt mention the same. If you feel that shows my character , i’ll leave it there. Thankfully i’m not in public domain nor do i represent the saintly life – so i guess no body has to worry about my character now.
@ Anjanasudhan : i’m not claiming as intellectual . I thought i can express my feelings as comment. The strenght of Sanadhana Dharm lies in purity – Saints are the pillars of purity – When the foundation is destabilised it will create wider consequence for the Dharma itself. I agree i’m not wise enough to comment about saints , i’m not intellectual enough to debate about Guru – Sishya . I dont have enough wisdom to understand the reason behind the actions of saints . But i feel my dharm gave me the courage/strenght to question and express what i feel wrong . Having said that i respect your sentiment of considering Sri. Jeyandhrar as above everybody and the attitude of nobody can raise finger against him . So with this i’ll not be commenting anything further on this topic. Will pray to Bhagavan to save sinners like me as well as great souls like you.
May God descend and save all before the Dharmasya Gilani – reaches the worst stage.
Wish you all – Peace, purity and Happiness.
திருச்சிக்காரன்,
// இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்து மத்தைப் பயன் படுத்தி இனி யாரும் எந்த விதமான முறை கெடும் செய்ய முடியாது, என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். //
//ஆனால் இந்தக் கட்டுரையோ – நீங்கள் தைரியமாக இருங்கள், உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், இந்துக்கள் பொங்கி எழுந்து இந்து மதத்தைக் கேடயமாக்கி உங்களுக்கு ஒன்றும் வராமல் பார்த்துக் கொள்வோம் – என்று தைரியம் அளிப்பது போல உள்ளது.//
நீங்கள் நிதர்சனத்தையும், உண்மை நிலவரங்களையும் கருத்தில் கொள்ளாது பேசுகிறீர்கள்.
கண்டரரு விஷயத்தில் நான் கூறியதில் சிறு தகவல் பிழை இருக்கலாம்.. தந்திரி நடத்தை சரியில்லாதவராகவே இருக்கட்டும். அது தனிநபர் குற்றம், தண்டனைக்குரியது. அதனால் கோயிலின் சான்னித்தியற்கும், ஐயப்பனின் தெய்வீக சூழலுக்கும் மாசு/அசுத்தம் வந்து விடாது,.
இதை இந்து மதத் தத்துவங்களை நன்குணர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஊடகங்களில், ஐயப்பனை வழிபடும் கோடானுகோடி பாமரர்களுக்கிடையில் இது எப்படி பிரசாரம் செய்யப் படுகிறது, எப்படி பேசவைக்கப் படுகிறது என்று பார்த்தால், அதன் தீமை புரியும் – தந்திரியே இப்படி, இனிமே அந்தக் கோயில்ல என்ன இருக்கு? எல்லாக் கோயில் பூசாரிங்களும் இப்படித் தான் இத்யாதி இத்யாதி. இந்த பலத்த பிரசாரத்தால் ஒரு குறுகிய காலத்திற்கு அந்தக் கோயில், பீடம், மத அமைப்பு மேல் ஏற்பட்டு விட்ட கசப்பு/சந்தேக உணர்வை நீக்குவது பெரும்பாடு! முழுக்க கிறிஸ்தவ அதிகார பீடங்களின் பிடியில் சிக்கியுள்ள நமது ஊடக சூழலில் மிக மிகக் கடினமான காரியம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஜெயேந்திரர் விஷயத்தில் எந்த ஆதாரங்களும் தரப்படாமலேயே வழக்கு ஜோடிக்கப் பட்டது. அரசு, காவல்துறை, ஊடகம் இவை இணைந்து பூதாகாரமாக மடத்தின் மீது சேறு பூசப் பட்டது. கடைசியில் இந்த வழக்கு மொத்தமாகவே பிசுபிசுத்துப் போய், ஜெயேந்திரமும், காஞ்சி மடமும் மீண்டு வந்து விடும், அதில் ஐயமில்லை. ஆனால் மடத்தின் மீது எழுந்த காழ்ப்புணர்வு, எதிர்ம்றை விளம்பரம், பாமரர்களிடம் உருவாகிவிட்ட வெறுப்பு இதற்கெல்லாம் யார் நஷ்ட ஈடு தருவார்கள்?? யோசித்தீர்களா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை பேசுகிறது.
மதத்தை துஷ்பிரயோகம் செய்வர்களை டீல் செய்வதை இந்துக்கள் மிக நன்றாகவே அறிவார்கள். இங்கு பேசப் படும் விஷயம் அது அல்ல. எப்படி அரசியல் சக்திகளும், இந்து விரோத சக்திகளும் ஒன்றிணைந்து நேர்மையான இந்து மதத் தலைவர்களையும், பீடங்களையும் அழித்து ஒழிக்க முற்படுகிறார்கள் என்பது பற்றித் தான் பேச்சு.
பாதிரிகள் மேல் சுமத்தப் படும் கணக்கில் அடங்காத பாலியல் குற்றங்களுக்காக சர்ச்சுகளை விற்று நஷ்ட ஈடு தரவேண்டிய புழுத்து நாறிக் கொண்டிருக்கும் நிலையில் பல நாடுகளில் கத்தோலிக்க கிறுஸ்தவ அதிகார பீடங்கள் உள்ளன. ஆனால் இது இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தர்மம், நியாயம், நடத்தை ஒன்றும் தேவையில்லை, பிரசாரக் கருவிகளை கைப் பற்று, அது போதும் அதை வைத்து எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கருதுகின்றன. உங்கள் கண்டனங்கள் போகவேண்டிய இடம் அது தான்!
ஜடாயு அவர்களே,
//பாதிரிகள் மேல் சுமத்தப் படும் கணக்கில் அடங்காத பாலியல் குற்றங்களுக்காக சர்ச்சுகளை விற்று நஷ்ட ஈடு தரவேண்டிய புழுத்து நாறிக் கொண்டிருக்கும் நிலையில் பல நாடுகளில் கத்தோலிக்க கிறுஸ்தவ அதிகார பீடங்கள் உள்ளன. ஆனால் இது இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? //
உண்மையே, குறிப்பாக சமீப காலமாக அமெரிக்காவில் நாளொரு குற்றச்சாட்டும், பொழுதொரு வழக்குமாக உள்ளது. இளம் பெண்கள் பல மில்லியன்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுகின்றனர்.
ஆனால் என்னுடைய கவலை என்னுடைய தர்மத்தைப் பற்றி, என் மக்களைப் பற்றி- இந்து மதம் இன்னொரு கிருத்துவமாவது எனக்கு உடன் பாடில்லை.
நானோ என் உறவினரோ, நண்பரோ சர்ச்க்கு போவதில்லை. நாங்கள் கோவிலுக்குப் போகிறோம்.
அதாவது கிருத்துவத்தை பின்பற்றுவோர் எக்கேடோ கேட்டுப் போகட்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அங்கே திருத்துவது ரொம்பக் கடினம். இந்து மதத்தில் திருத்துவது எளிது. நான் என் வீட்டை முதலில் சரி செய்வேன்.
நான் கிருத்துவத்திற்க்கும் என்னால் முடிந்த அளவு சரி செய்ய முயல்கிறேன். நான் இங்கெ எழுதும் பின்னூட்டங்களை, நீங்கள் படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
//காழ்ப்புணர்வு, எதிர்ம்றை விளம்பரம், பாமரர்களிடம் உருவாகிவிட்ட வெறுப்பு இதற்கெல்லாம் யார் நஷ்ட ஈடு தருவார்கள்?? யோசித்தீர்களா? //
தாந்திரிகள் நிகழ்ச்சி போல ஆங்காங்கே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அது வழக்கமானால் – அது விளம்பரப் படுத்தப் பட்டாலும், படா விட்டாலும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா? கோவில் என்றாலே பெண்கள் பயப்படும் நிலை உருவானால் என்ன செய்வீர்கள்?
ஐரோப்பாவில் கிருத்துவர்கள் செய்வதைப் போல, பேருக்கு மதம் என்று வைத்துக் கொண்டு, சர்ச் பக்கமே போகாமல் இருப்பதைப் போல,
கோவிலுக்குப் போவதை விட போகாமல் இருப்பதே நல்லது என்று பெண்கள் நினைக்கும் அளவுக்கு தாந்திரிகளின் மாந்திரிகம் இருந்தால், அப்போது இந்து மதத்தை எப்படிக் காப்பீர்கள் – ரூபாய் நோட்டிலே சுவிசேசத்தை எழுதி அனுப்புவது போல செய்யப் போகிறோமா?
இப்போது மக்களின் வெறுப்பு இந்து மதத்தின் மேல் இல்லை. தாந்திரிகளின் மேல்தான். நீங்கள் இப்படி முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடித்தால் அவர்கள் இந்து மதத்தையே வெறுக்கும்படியான நிலை உருவாகும்!
நீங்கள் காக்க விரும்புவது இராவண சந்நியாசிகளையா அல்லது இந்து மதத்தையா? இரண்டையும் ஒரு சேரக் காக்க முடியாது. ஒன்று இராவண சன்யாசிகள் ஜெயிப்பார்கள் அல்லது இந்து மதம் ஜெயிக்கும்!
மேலும் இந்து மதத்தைப் பற்றிய சரியான புரிதல் அவசியமானது.
ஆன்மீக வாதிகள் எப்படி இன்பம் அனுபவிப்பார்கள்?
சந்துரு வர்ணு நீ, அந்த (சந்திரன் வகை நீ )
சந்தமூனு ஹிருதயார (அந்த சந்திரனை இதயத்தில் வைத்து)
விந்தமூன ஜூசி பிரம்மானந்த மனுபவின்ச்சுவார் ( இராமரை பார்த்து, வணங்கி பேரானந்தம் அனுபவித்தவர் )
எந்தரோ மஹானுபாவுலு, (எத்தனை நல்லவரோ)
அந்தரிக்கி வந்தனமு (அவருக்கெல்லாம் வணக்கங்கள்)
அந்த பேரானந்தம், சில்லரை இன்பங்களை விட மிக அதிகமானது.
கடவுளின் சிறப்பைக், கருணையைப் புரிந்து கொண்டு, அவரோடு நம் மனதை இழைய விடும் இன்பம், பேரானந்தம்!
“ஈ” ஆனது இனிப்பு பண்டங்களில் உட்காரும். ஆனால் அந்த வழியே மலக் கூடையை தூக்கி சென்றால், பறந்து சென்றூ மலத்தில் உட்காரும்.
ஆனால் தேனீ என்றைக்கும் தேனை மட்டுமே சுவைக்கும்.
நீங்கள் இந்து மதத்தின் மீது தயவு செய்து நம்பிக்கை வையுங்கள்!
பல இலட்சக் கணக்கான தேனீக்களை அது உருவாக்கியுள்ளது!
இன்னும் பல இலட்சக் கணக்கான தேனீக்களை அது உருவாக்கும்!
//தர்மம், நியாயம், நடத்தை ஒன்றும் தேவையில்லை, பிரசாரக் கருவிகளை கைப் பற்று, அது போதும் அதை வைத்து எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கருதுகின்றன//
நாம் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புரிகிறது அல்லவா?
ஒரே நேரத்தில் நமக்கு கிருட்டினர், அப்பர், சங்கரர், விவேகானந்தர், எல்லொரும் தேவைப் படும் அளவுக்கு நிலமை உள்ளது!
ஆனால் நீங்கள் நம்புவது யாரை?
இவர்கள் எல்லாம் சேர்ந்து உண்மையான அப்பரும், சங்கரரும் தளத்திற்க்கு வர முடியாமல் அமுக்கி விடுவார்கள்!
தெருவுக்கு தெரு சிறு சிறு சபைகள் தோன்றக் காரணமே அவர்கள் ஏதோ ஒரு மோசடியினை எதிர்த்து வெளியேறிவர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்;//
Oh my!
That many modadi-kal in the christian institutions in India?
Looks like it is not just because of foriegn money(of course that was swindled from india in the first place), such mushrooming of the christian institutions in india.