ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை

ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இந்த மாதிரியான கோர விபத்தில், அதுவும் அரசியல் வாழ்வின் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, மரணம் எய்வதென்பது மிகவும் துக்ககரமான விஷயம். அன்னாருடைய குடும்பத்தாருக்கும், நண்பர் உறவினர்க்கும் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்கட்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அரசியல் வாழ்வு


முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலையே தொழிலாகக் கொண்டிருந்த ராஜசேகர ரெட்டி, கடப்பா தொகுதியிலிருந்து நான்கு முறை லோக்சபாவிற்கும், புலிவெந்துலா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்த ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் திணறிக் கொண்டிருந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் ரெட்டி. 1983லிருந்து 1985 வரையும், பின்னர் 1998லிருந்து 2000 வரையும் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பேற்ற ரெட்டி, 1980லிருந்து 1983 வரை மாநில அமைச்சராகவும் பணி புரிந்தார். தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக முதலமைச்சராக (1999-2004) இருந்தபோது சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் ரெட்டி.


2004-ல் நடக்கவிருந்த பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னால், 2003-ன் இறுதியில் மகா பாதயாத்திரை மேற்கொண்ட ராஜசேகர ரெட்டி, 1500 கிலோமீட்டருக்கும் மேல் மாநிலம் முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்து, காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார். தெலுகு தேசம் கட்சி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையே எதிர்பாராத அளவில் அமைந்தது அந்த வெற்றி. சட்டசபையில் 185 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை அடைந்து முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ராஜசேகர ரெட்டி.


சமீபத்தில் நடந்து முடிந்த 2009 தேர்தல்களில் “முன்னேற்றம் மற்றும் நம்பகத்தன்மை என்கிற கோட்பாட்டில் தேர்தல் களத்தைச் சந்தித்து, பாராளுமன்றத்தில் 33 இடங்களையும், சட்டசபையில் 156 இடங்களையும் பெற வழிசெய்து, மீண்டும் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரெட்டி. ஐந்து தினங்களுக்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும்போது, பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், பலத்த மழை காரணமாகவும், தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும், மலையின் உச்சியில் மோதி நல்லமலா காட்டுப் பகுதியில் எரிந்து வீழ்ந்ததனால், மரணம் அடைந்தார்.


மக்கள் நலத் திட்டங்கள்


2004லிருந்து 2009 வரை ஆட்சி செய்யும்போது, தற்போது அனைத்து மாநிலங்களிலும் பழக்கத்திற்கு வந்துவிட்ட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, போன்ற இலவசத் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு பல நற்திட்டங்களும் செயல் படுத்தினார். “ஜலயக்ஞம்என்ற பெயரில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய, மத்திய, சிறிய நீர்பாசனத் திட்டங்கள், “ஆரோக்ய ஸ்ரீஎன்ற பெயரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், “பவல வட்டிஎன்ற பெயரில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், மற்ற ஏழை மக்களுக்கும் சுய வேலை (சுய வியாபார) ஏற்பாட்டிற்காக குறைந்த வட்டியில் (ஆண்டுக்கு 3 சதவிகிதம்) கடன் வசதி, இந்திரம்மா இல்லு என்ற பெயரில் கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித் தருதல், போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல் படுத்தினார்.


மேற்சொன்ன திட்டங்கள் பெரும் வெற்றியடைந்தன என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட வகையில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தான் நடந்த ஊழல்கள் வெளி வரும் என்று எதிர்பார்ர்க்கப் படுகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் ஆட்சியில் இருப்போருக்கு “நல்ல வருவாய் தருவனவாக இருந்தால், அடுத்து வருகின்ற அரசாங்கத்தினாலும் அதே திட்டங்கள் வேறு பெயர்களில் செயல் படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆயினும், நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் பெருமளவிற்கு குறைந்து போனது. எனவே, ஏழைகளின் பாதுகாவலனாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.


ஊழல் குற்றச்சாட்டுக்கள்


அவருடைய ஆட்சி காலத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். எதிர் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ரெட்டியின் குடும்பம் “சந்தூர் பவர் நிறுவனம்”, ”ஜகதி பப்ளிகேஷன்ஸ், பாரதி சிமெண்ட் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சட்டசபையில் பெரும் விவாதத்திற்குள்ளானதால், ராஜசேகர ரெட்டி வேம்பள்ளி மண்டல் என்ற பகுதியில் இருக்கும் தன்னுடைய இடுபுலபயா எஸ்டேட்டிலிருந்து, அரசாங்க மற்றும் வனத்துறைகளுக்குச் சொந்தாமான 614 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தார். இருந்தாலும் பல ஆண்டுகலாக அந்நிலத்தைச் சொந்தம் கொண்டாடியமைக்காக, ஆந்திரப் பிரதேச விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1973, ஆந்திரப் பிரதேச நில மாற்றம் தடுப்புச் சட்டம் 1977, ஆந்திரப் பிரதேச வனங்கள் சட்டம் 1967, ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம், என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் மாநில முதல் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?


நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “சத்யம்நிறுவன ஊழலில் ராஜசேகர ரெட்டிக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஊடகங்களும், அனைத்து எதிர்கட்ச்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சத்யம் குழுமத்தைச் சார்ந்த “மைதாஸ்நிறுவனத்திற்கும் ரெட்டி அரசு பல பணியொப்பந்தங்களை அளித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவை, அவர் சந்திரபாபு நாயுடுவின் நண்பர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரைக் குறி வைத்து பல வகைகளில் அவருக்கு பெரும் சங்கடங்கள் ஏற்படுத்தியதற்காகவும், அவரை பல விதங்களில் செயல் படமுடியாமல் செய்ததற்காகவும், சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானார் ராஜசேகர ரெட்டி. (மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்).


ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், அனைத்து விதமான தவறான காரணங்களுக்காகவும், ஊடகங்களில் அடிபட்டது. தேவஸ்தானத் தலைவர் பதவிக்கு ஆள் தேர்ந்தெடுப்பது தொடங்கி, கணக்கு வழக்குகள் சரியில்லாமை, நகைகள் மற்றும் தங்கக் காசுகள் குறைவது, நிர்வாகத்தில் ஊழல்கள், நேர்மையில்லாமை, திருமலையில் கிறிஸ்துவ மதமாற்றப் பிரச்சாரங்கள், சமூக விரோத செயல்கள் வரை எல்லா வகையிலும் திருமலைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் அவரது ஆட்சி அமைந்தது. தேவஸ்தான நிர்வாகத்தை முழுமையாகக் கலைத்து விட்டு புதிய நேர்மையான நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று ஆகஸ்டு மாத இறுதியில் தான் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.

ராஜசேகர ரெட்டியின் ஊழலை விவரிக்கும் விதத்தில், , “தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதில் தலை சிறந்தவராக விளங்கும் அளவிற்கு, அவருடைய ஆட்சியில் ஊழல் பெருகிற்றுஎன்று செப்டம்பர் 4ஆம் தேதி இதழில், “தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்கூறியுள்ளது. அன்பிற்குரிய “சாமுவேல்இல்லாதது சோனியாவிற்கு பேரிழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமோ! (ரெட்டியை சாமுவேல் என்று அன்புடன் அழைப்பது காங்கிரஸ் தலைவி சோனியாவின் வழக்கம் என்று பத்திரிகை வட்டாரங்களில் பேச்சு உண்டு).


மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலைமை


மாநிலத்தின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் சாமுவேல் ரெட்டியின் ஆட்சி பல தவறுகளைச் செய்தது என்று சொல்லலாம். 2004 தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக இருந்த சூழ்நிலையோடு கூட, ரெட்டியார் நக்சலைட்டுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட சமரசமும், காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த சமரசத்தின் படி, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி அவர்களைப் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் ரெட்டி. இந்த அமைதிப் பேச்சு என்பது தீவிரவாத, மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தான் சாதகமாக இருக்குமேயன்றி, மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. இந்த உண்மையை சென்ற கால அனுபவங்கள் நமக்குப் பலமுறை உணர்த்தியுள்ளன.


அதேபோல், நக்சலைட்டுகள் ரெட்டியின் அமைதிப் பேச்சு எனும் சடங்கைத் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்தி, பேச்சை பல மாதங்கள் இழுத்தடித்து, இடைப் பட்ட காலத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுத் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். தங்கள் ஆள்பலத்தையும், ஆயுத பலத்தையும், கூட்டிக் கொண்டனர். அதன் விளைவாக, நேபாளத்திலிருந்து ஆந்திரம், ஏன் தமிழகம் வரை, பதினைந்து மாநிலங்களுக்கும் மேலாக தங்கள் இருப்பை விரிவு படுத்தி சிவப்பு அரண் ஏற்படுத்திக் கொண்டனர். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் ஒரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த நக்சல்-மாவோயிஸ்டு பிரச்சனை ராஜசேகர ரெட்டியின் புண்ணியத்தில் மீண்டும் பெரிதும் வளர்ந்தது.


நக்சல்-மாவோயிஸ்டு கூட்டணியானது விடுதலைப் புலிகள் மற்றும் ஜிகாதிகள் ஆகியோருடனும் தங்கள் தொடர்பை விரிவு படுத்திக் கொண்டது. ஆந்திரா தமிழகத்திற்கு இடையிலே நடந்த ஆயுதக் கடத்தல்கள், தமிழகப் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்கள், கைது செய்த தீவிரவாதிகள், விடுதலைப் புலிகள், ஆகிய விவரங்கள் இந்தக் கூட்டணியை உறுதி செய்கின்றன. ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான், ஹைதராபாத்தில் மெக்கா மசூதி, லும்பினி பார்க் ஆகிய இடங்களில் பெரும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து, கொடிக்கணக்கான ரூபாய் அளவில் பொருள் சேதமும் விளைந்தது. அந்தக் குண்டு வெடிப்புகளின் விச்சாரணைகளில் இது வரை எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலமும் நக்சல் பீதியிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் கொலைகளாலும், மற்ற சமூக விரோத நிகழ்வுகளாலும் ஆந்திர மாநிலத்தில் பொதுவாக சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.


கிறிஸ்துவ மயமாக்கப் படும் ஆந்திரம்


2004-ல் ராஜசேகர ரெட்டி அரசு அமைந்ததிலிருந்து, கிறிஸ்துவ எவாங்கலிக்க குழுக்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக கிராமப் புறங்களில் கூட்டுகூட்டாக மக்கள் மதமாற்றம் செய்யப் படுகின்றனர். சர்ச்சுகளிடமும் கிறிஸ்துவ மிஷனரிகளிடமும் ரெட்டி பகிரங்கமாக மிகவும் நெருக்கமாகப் பழகுவதால், அவைகள் துணிச்சலுடன் செயல் படுகின்றன. இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி, போன்ற பல இடங்களில் எவாங்கலிக்கக் குழுக்கள் மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டன. அவர்கள் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை! ரெட்டி அவர்களும் அதற்குப் பல விதங்களிலும் மறைமுகமாக உதவி வந்திருக்கிறார்.


ysr1ஆகஸ்டு 22, 2006-ல் போட்ட அரசாணை எண் 21-ன் படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சர்ச்சுக்கும் செப்பனிடும் வேலைகளுக்காக 80,000 ரூபாயும், புதிதாகக் கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது. (CM Reddy okays public money for Churches – Deccan Chronicle dated 23rd August 2006). மாநிலத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும்போதும், அக்கோவில்களில் வேலை செய்யும் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அர்ச்சகர்கள் மாதம் வெறும் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ருபாய் வரை மட்டுமே சம்பளம் பெற்று வந்த போதும், கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வெறும் பதினைந்து சதவிகிதமே, கோவில்களின் பராமரிப்புக்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும், திருப்பிக் கொடுக்கப் படும் போதும், இம்மாதிரி கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டும் அரசாங்க சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. கோவில்களிலிருந்து வரும் மிச்சமுள்ள எண்பத்தைந்து சதவிகித வருவாயும், அரசின் மற்ற திட்டங்களுக்கும், சிறுபான்மையின சமுதாய நலத் திட்டங்களுக்கும் செலவழிக்கப் படுகின்றன. மேலும் சிம்மாசலத்தில் உள்ள நரசிம்ஹஸ்வாமியின் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் பசு மற்றும் கன்றுக்குட்டி தானங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கசாப்பு ஆலைகள் வைத்துள்ளவருக்கு பசுக்கள் ஏலம் விடப் படுகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலிலிருந்து வரும் நல்ல வருவாயைக் கொண்டு ஒரு கோ-சாலை (பசு மடம்) அமைக்கக் கூட மனமில்லை ரெட்டியின் அரசுக்கு. (மேலும் விவரங்கள் இங்கே).


ராஜசேகர ரெட்டியின் அரசாங்கம் கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்களை விற்று இருபதாயிரம் கோடி ருபாய் நிதி திரட்ட முடிவு செய்தது. பல இடங்களில் அந்நிலங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் சர்ச்சுகளுக்கும் மிஷனரிகளுக்கும் கொடுக்கப் பட்டதாகவும், சில இடங்களில் சர்ச்சுகளும், மசூதிகளும் கட்டப்ட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் க்றுஸ்துவர்களின் ஜனத்தொகைகுச் சற்றும் சம்பந்தமில்லாமல் ஆயிரக் கணக்கான சர்ச்சுகள் மாநிலம் முழுவதும் தோன்றின. ஆங்காங்கே பாதிரிமார்களும், எவாங்கலிக்கர்களும், தங்களுடைய “அறுவடையைச் செய்ய ஆரம்பித்தனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப் புரங்களில், கும்பல் கும்பலாக அப்பாவி மக்கள் மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் ஜனத்தொகை 1.5 சதவிகிதமே என்று அரசின் ஆவணங்கள் (2001 ஜனத்தொகை எடுப்பு) சொன்னாலும், பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் இருக்கலாம் என்று சர்ச்சுகளே நம்புகின்றன. பெருமளவில் செய்யப்படும் மதமாற்றங்களை எண்ணிப்பார்க்கும்போது, 12% சாத்தியமே! மதம் மாறிய பலர் அதை வெளியில் அறிவிப்பதில்லை. இந்து ஷெட்யூல்டு பிரிவினருக்கு மட்டுமே அரசு சலுகைகள் உண்டு என்பதால், மதம் மாறியவர்கள் அச்சலுகைகளை வெளியில் அனுபவித்துக் கொண்டே உள்ளுக்கு கிறீஸ்துவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் ரெட்டியின் அரசு சட்டமன்றத்தில் கிறிஸ்தவராக மற்றும் முஸ்லிமாக மதம் மாறிய ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில், ஏழு கிறிஸ்துவருக்கு ஒரு சர்ச்சும், 40 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதியும், 350 இந்துக்களுக்கு ஒரு கோவிலுமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர, பெரிய வழிபாட்டுத் தலங்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாநிலத்தில் தற்போது 148,000 சர்ச்சுகளும், 176,000 மசூதிகளும், 190,000 கோவில்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).


சட்டத்திற்குப் புறம்பான தங்களுடைய செயல்களைக் கண்டுகொள்ளாமல் மறைமுக ஆதரவுடன் அரசு இருப்பதனால் துணிச்சல் அதிகம் பெற்ற சர்ச்சுகளும், மிஷனரிகளும், திருமலை திருப்பதியை மதமாற்றத் தாக்குதலுக்கு உள்ளாக்க தீர்மானித்தன. அதை ஊக்கப் படுத்தும் விதமாக, ரெட்டி, ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொண்டு அவற்றை தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார். வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கட்டப் படும், மலை மேல் போக கேபிள் கார் வசதி செய்யப்படும் என்றும் சொன்னார். இந்துக்கள் அதிர்ந்து போயினர். நல்ல உள்ளம் கொண்ட, ஏழுமலையானின் பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம், ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. ரெட்டியும், பொங்கியெழுந்த இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து தன் எண்ணத்தைக் கைவிட்டார். {Judgment of a Division Bench of the Andhra Pradesh High Court1997 (2) ALD Page 59 (DB) – Tallapakam Koppu Raghavan Vs State of A.P}.


ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவதாக இல்லை. ஐதராபாத் சாரதா பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வருபானந்தேந்திர ஸ்வாமிகள் புது தில்லியில் இந்து குருமார்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்களுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பொதுவாக ஆந்திர மாநிலத்திலும், குறிப்பாக திருமலை திருப்பதியிலும் நடக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் சட்ட விரோத செயல்களுக்கும், மதமாற்றத்திற்கும், கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ஜி.பிக்‌ஷாபதி தலைமையில் “உண்மை கண்டறியும் குழுஒன்றை அமைத்தார். அக்குழுவில், மற்றொரு முன்னாள் நீதிபதி கே.பி.சித்தப்பா, முன்னாள் காவல்துறை இயக்குனர் ஜெனரல் திரு டி.எஸ். ராவ், ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயாவின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்.பி.கீர்வாணி, குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஆர்.ஸ்ரீஹரி ஆகியோரும் அங்கத்தினர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் 17-06-2006 அன்று ஐதராபாதில் கூடி ஆலோசனை செய்து, பின்னர் அதேமாதம் 21 மற்றும் 22 தேதிகளில் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து ரெட்டியின் அரசும் திருமலையில் எவாங்கலிக்க நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தது (தொடர்புடைய செய்திகள் இங்கே).


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலையத்திற்குத் தேவையான பொருட்களின் கொள்முதல் ஒப்பந்தமும் ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட் என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. (”தி ஹிந்து பிஸினஸ்லைன் செய்தி)


ysr_rajshekar_reddy_20040524இந்து புனிதத் தலங்கள் அருகே மதமாற்ற நடவடிக்கைகளை ரெட்டி அரசாங்கம் நிறுத்தினாலும், மற்றபடி மாநிலம் முழுவதும் மதமாற்றம் நடத்த மிஷனரிகளுக்கு மறைமுக அனுமதி அளித்தது. ராஜசேகர ரெட்டியின் மருமகன் அனில் குமார் ஒரு தேர்ந்த எவாங்கலிக்கர்.  இந்துவாகப் பிறந்து வளர்ந்த இவர், பிறகு மதம் மாறி கிறிஸ்துவ மதபோதகராக வசதியான வாழ்க்கை வாழ்கிறார். ரெட்டியின் மகளைத் திருமணம் செய்த பிறகு ஆந்திர அரசு இவருக்குப் பல வகைகளில் உதவி செய்து வருகிறது. சகோதரர் அனில் குமார் சொந்தமான “ஊழிய அமைப்பு நடத்தி வருகிறார். தான் பரிசுத்த ஆவிகளால் தீண்டப் பட்ட மதபோதகர் என்றும், சக்தியும், ஆளுமையும் பெற்ற ஆசிரியர் என்றும், கிறிஸ்து ராஜ்ஜியத்தின் கொள்கைகளை வெளிக்கொணர்பவர் என்றும், மதப்பற்றுள்ள, மதத்தைக் காப்பாற்றும் வீரர் என்றும், அற்புதங்களின் மூலம் நோய்களைத் தீர்த்து சுகம் அளிப்பவர் என்றும், இயேசுபிரான் பெயரில் அதிசியங்கள் நிகழ்த்துபவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்.


பெங்களூருவில் சில வருடங்கள் முன்னால் (காங்கிரஸ் முதல்வர் தரம்சிங்கின் ஆட்சியின்போது) அமெரிக்க எவாங்கலிக்கர் பென்னி ஹின் நிகழ்த்திய பிரம்மாண்ட ஏமாற்றுக் கூட்டத்தைப் போல அனில் குமாரும் சென்ற ஆண்டு ஐதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்தார். அதற்கு ரெட்டியின் அரசு இயந்திரங்கள் பல விதங்களில் உபயோகப் படுத்தப் பட்டன. நகரமெங்கும் நூற்றுக் கணக்கான விளம்பர பானர்கள் வைக்கப் பட்டன. ராஜசேகர ரெட்டியும், அவர் மனைவியும், மகளும் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். எதிர்கட்சியினர் அரசு இயந்திரங்கள் பயன்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தன. அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதில் என்ன தவறு?என்று அலட்சியமாக கேட்டிருக்கிறார் முதல்வர். ஆந்திராவைச் சேர்ந்த, சுனாமியின் போது தமிழகக் கடலோர மீனவ குடும்பங்களை மதமாற்றம் செய்வதற்காக தனி விமானத்தில் வந்திறங்கிய, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் எவாங்கலிக்கர் கெ.எ.பால் என்பவரை கவிழ்த்து அனில்குமாரை வளரச் செய்யவே ரெட்டி அரசு முயல்வதாக அரசியல் வட்டாரங்களும் ஊடகங்களும் தெரிவித்தன.


இதில் முரணான விஷயம் என்னவென்றால், படித்தவர்களில் கூட பெரும்பாலானவர்களுக்கு ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதோ, அவர் மருமகன் ஒரு எவாங்கலிக்கர் என்பதோ சுத்தமாகத் தெரியாது. 2004-லும் சரி, 2009-லும் சரி, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், குடும்பத்துடன் கிறீஸ்துவப் புனிதத் தலமான பெத்லெஹம் பயணம் மேற்கொண்டார் ரெட்டி. அங்கும் மற்ற புனித இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனைகள் செய்து திரும்பினார். எனவே, முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரை போல, அவர் க்றுஸ்துவர்களுக்காக ஜெருசலேம் யாத்திரைக்கு 2008-09 ஆம் ஆண்டுக்கு 2 கோடி ருபாயும், சர்ச்சுகளும், மசூதிகளும் செப்பனிடப்படுவதற்காக 5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்ததில், ஆச்சரியமில்லையே!


2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் ராயலசீமா கிறீஸ்தவ சதஸ்என்ற அமைப்பின் கீழ் கூடி, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ராயலசீமா திருச்சபையின் பேராயர் யேசு வரப்ரசாத், முன்னாள் பேராயர் சி.வி.எம்.ஃப்ரெட்ரிக் பாபு, பாதிரி சாம்சன், சி.எஸ்.ஐ சர்ச்சு பாஸ்டர் பென்ஹர் பாபு, சி.எஸ்.ஐ.சர்ச்சு செயலாளர் சாமுவேல் பாபு, ழையான் கல்லூரியைச் சேர்ந்த கே.ராஜரத்தினம் ஐசக் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ரெட்டியின் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பாராட்டி, மீண்டும் அவரின் ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் முன்னேறும் என்று கூறி க்றுஸ்துவ சமுதாயத்தினரை காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்குமாறு பணித்தனர். (பார்க்க: “தி இந்து” செய்தி )

.

இந்திய எவாங்கலிக்க கூட்டமைப்பு (Evangelical Fellowship of India EFI) ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் சென்ற மாதம் ஆகஸ்டு 19-ஆம் தேதி அவர்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்துள்ளது. கல்வி, சுகாதார, சமூக துறைகளில் கிறிஸ்துவ சர்ச்சுகளின் பனிகள் போற்றுதலுக்குறியன. அப்பணிகள் அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் அமைதி நிலைக்கவும் உதவி புரிகின்றன என்று முதல்வர் தங்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்து, அவருடைய குடும்பத்திற்காகவும், மற்றும் அவருடன் மரணம் எய்திய மற்ற நான்கு பேரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.


“இந்திய மாநிலத் தலைவர், கிறிஸ்தவர், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்(Head of Indian state, a Christian, killed in chopper crash) என்கிற கட்டுரையை லண்டனைச் சேர்ந்த “Religious Intelligence” என்ற தளம் பிரசுரம் செய்தது. அக்கட்டுரையை எழுதிய புது தில்லியைச் சேர்ந்த விஷால் அரோரா என்கிற பத்திரிகையாளர், “ராஜசேகர ரெட்டியின் தகப்பனார் ராஜா ரெட்டி பர்மா ராணுவத்தில் பணி புரியும்போதே கிறிஸ்துவராக மதம் மாறினார்என்றும் ராஜ சேகர ரெட்டியின் ஆட்சி மீது இந்து தேசியவாதிகள்வீண்பழி சுமத்தி, “ஏராளமானகிறிஸ்துவ பாதிரிகளையும், பணியாளர்களையும் “தாக்கிக் கொன்றுள்ளனர்என்று கொஞ்சம் கூட ஆதாரம் காட்டாமல் எழுதியுள்ளார்.


ராஜசேகர ரெட்டியின் இறுதிச் சடங்கினை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி சானல்கள், ரெட்டி குடும்பத்தின் வன்முறை மிக்க பாரம்பரியத்தை உறுதி செய்யும் விதமாக, “முதல்வரின் தந்தை ராஜா ரெட்டி 75 வயதில் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்என்று கூறின. அவர்களின் பாரம்பரியம் வன்முறை நிறைந்தது என்பதற்கு மற்றொரு சான்று ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த “பூமண்ண சகோதரர்கள் (பூமண்ண கருணாகர ரெட்டி, பூமண்ண சுப்ரமணிய ரெட்டி). அவர்கள் எழுபதுகளில் சமூக விரோத செயல்களுக்காக சிறை தண்டனை பெற்றவர்கள். (மேலும் விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).


மேலும் “ராயலசீமா பகுதிக்கென்றே உரிய வன்முறைக் கலாசாரம், ராஜசேகர ரெட்டி முதல்வரான பிறகு மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த “போராளிகள்மாநிலத் தலைநகரில் ஆட்சி செலுத்தினர்என்று தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்நாளிதழ் விவரிக்கின்றது.


கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பை பூரணமாகக் கலைக்க வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேவஸ்தானத்திற்கு முப்பதாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், நகைகளின் மதிப்பு (கிருஷ்ண தேவ ராயர் காலத்திற்கு முன்னிருந்து இருப்பதால்) கணக்கிட முடியாது என்றும் கூறிய நாயுடு, “திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்என்றும் எச்சரிக்கை விடுத்தார். வாதிகனுக்கு ஈடாக திருமலையை நிர்மாணிக்க வேண்டும் என்ற என்.டி.ராமராவின் ஆசையையும் நினைவு கூர்ந்தார்!

என்ன சொன்னாலும் என்ன செய்தாலும், ராஜசேகர ரெட்டி மக்களைக் கவர்ந்த, ஏழைப் பங்காளன் என்ற பெயர் பெற்ற தலைவர் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரின் மரணச் செய்தி கேட்டு பலர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதிலிருந்தே இவ்வுண்மை புலப்படுகின்றது. தலைவருக்கு ஏதொ ஒன்று என்றால் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது திராவிட கட்சிகளுக்கே உரிய பாரம்பரியம்! ஆட்சியில் இருந்த போதும் சரி, இறந்த பின்பும் சரி, ராஜசேகர ரெட்டி அனைத்து விஷயங்களிலும் திராவிடக் கட்சித் தலைவர்களை ஒளிமங்கச் செய்துவிட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்னாருக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் அரசு விடுமுறை அறிவித்ததில் ஆச்சரியம் இல்லையே!

174 Replies to “ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை”

  1. i do not see any problem in converting someone from one religion to other. people are changing due to their wish,who are we to stop that? if Hinduism has done enough to attract people then why would they convert? Hinduism has been hijacked by few people and they wanted to control every one and i guess thats not going to happen. Unless people in hinduism change nothing is going to stop the conversion.

  2. தமிழ் ஹிந்து குழுவினருக்கு,

    உண்மை அறியும்குழுவின் அறிக்கை போல் உள்ளது பி.ஆர்.ஹரனின் கட்டுரை.

    ராஜசேகர ரெட்டிக்கு சாமுவேல் என்று ஒரு பெயரா?? இவ்வளவு மோசமாகவா அரசு கஜானாவை தனது மாறிய மதத்திற்கு செலவழித்திருக்கிறார்???

    அப்படியெனில் தனக்கு வாக்களித்த இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் ஏமாற்றி இருக்கிறார்..கோவில் வருமானம் கிறிஸ்தவர்களுக்கு சூறையாடப்பட்டுள்ளது. இவரது இறப்பு வருத்தமான விஷயம் என்றாலும் கிறிஸ்தவத்தின் ஊடுருவலை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.. கடவுள்தான் காப்பாற்றவேண்டும் இந்தியாவை…

    சோனியா சாமுவேல் என அழைப்பாராம்.. இது மதச்சார்பற்ற நாடாம்.. அதிலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லையாம்.. படிச்சவன் சூதும் வாதும் செஞ்சால் அய்யோனு போவான்.. அம்போன்னு போவான்னு சொன்னார் பாரதி.. அவன் வரகவி, தீர்க்கதரிசி.. பலிக்கும் என நம்புவோம்..

  3. மதம் மாறுவது அவரவர் தனிப்பட்ட உரிமை. இது சுதந்திர இந்தியா இங்கு யாரையும் கட்டாய படுத்த முடியாது. மத மாற்றதை எதிர்த்து அவர்களை ஒடுக்க நினைக்கும் இவர்கள்தான் சகிப்புதன்மையுடை இந்துக்கள் என்று பிதற்றிகொள்கிறார் திருச்சிகாரர்.

  4. Very comprehensive and well written.
    One of the English channels referred to “Serai selam”[ the newsreader twisted his tongue over that I think] -was it Srisailam?
    Was it in error or have they changed the name of the place too?

  5. Hi Haran,
    Revealing Article!!! Good! Couple of months ago, Kumudam Jothidam AMR mentioned about this Rajasekar and the way he is dealing with Tirupathi Devasthanam. Muslims are crazy about taking over the land eg Pakistan, Bangladesh and Kashmir.
    Christians are after people for conversations. We hindus as usual ignornat of everything and watching tamil movies instead.

    Hindus must unite.

  6. To RAMGOBAL,

    Christians only have the gutss to do this conversions in India.Can you do this in a Arab or a islamic country? Will you Christians have the guts to stand outside the Mosque and preach about your Jesus? You will be beaten up and slain by the muslims. Hindu religion is a tolerant religion. But you Chrisitans are misusing it.Thats why we endure Christians, muslims, EVR and DMK. And remember this we are still SURVIVING AND WILL SURVIVE IN THE FUTURE. Stop your nonsense. If you don’t like this site, then buzz off from here.

  7. வணக்கம் ,
    அய்யா மதம் மாறுதல் என்பது அவரவர் விருப்பம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மதம் மாற்றுவது என்பது வேறு. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு இந்துக்கோயிலான திருப்பதிக்கு கிருத்துவ நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவும், இந்துக்கோவிலுக்கு அதிகாரிகளாக அதைப்பற்றி ஏதுமறியாத கிறிஸ்துவரை அதிகாரியாக நியமிப்பதும், மற்றும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுளது. இதை எல்லாம் இத்துணை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்த இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள்தான். நண்பர் திருச்சிக்காரர் சொன்னதில் என்ன தவறு.

    எனக்கு கிறிஸ்துவம் பிடித்து உள்ளது, அதில் இணைகிறேன் என்று ஒருவர் விரும்பி மதம் மாறுவதே மதம் மாறுதல். அன்றி பல பொய்களையும் கட்டுக்கதைகளையும் சொல்லி பல நாடகமாடி ஏழை மக்களை க்ரிஸ்த்துவத்திர்க்கு இழுத்து இணைப்பது மதமாற்றம். முதலில் இதைத்தான் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

  8. An eyeopener article from Haran.

    I pray that his son should not be the new CM and prefer a neuteral person as CM for Andra.

    It is also rumoured that YSR family collected money from Evangelists church by showing number of converts and construction cost of new churches but by constructing churches and making conversions by using Government funds.

    Let God save our nation.

    Athiravi

  9. The contents of the article is truth and nothing but truth.
    The Indian media has made “YSR” a imminent person as oer the wishes of their masters, the christian western countries.

    It is shame on the part of Hindus even not knowing what is the background of “YSR”, the wholesale dealer of forced conversion.

    As noted by Veer Savarkar, Hindus shall learn militancy and that only could save Hindus in their own home land in future.

    Srinivasan TR

  10. நீங்கள் சொல்வது போல் ஆசைவார்த்தைகளையும்,பொய்களையும் நம்பி மதம் மாறினால் எத்தனை நாட்களுக்கு அங்கே நீடிப்பார்? கட்டாய மதமாற்றம் என்பது மிகப்பெரிய காமெடி என்றால் ஆசைகாட்டி மதமாற்றம் என்பது அதை விட பெரிய காமெடி.சாதிக்கொடுமைகள்,தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக நீங்கள் ஒரு துரும்பை எடுத்து போடுங்கள்.பிய்த்து கொண்டு ஓடுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

  11. அற்புதம். ஹரனின் பணி தொடரட்டும்.

    திருவோண்ம் – பெருமாளின் பிறநத நட்சத்திரம். சாமுவேலின் இறந்த தினம்.
    அவர் ஹெலிக்காப்ட்டர் விழுந்த இடம் ‘நல்ல மலை.
    மோதிய குன்று ‘ ருத்ர குன்று ‘

    சந்திரபாபு நாயுடுவின் வார்த்தை மெய்யானது பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

  12. பாரபட்சமற்ற முறையில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரை. ஹரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

    மதமாற்ற முயற்சிகளை நியாயப் படுத்த முயல்பவர்களுக்கு:

    இயல்பாக இந்துமதத்தை விரும்பாமலோ அல்லது வெறுத்தோ மதம் மாறினால் அதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. பலவிதமான யுத்திகளினால் மதமாற்றம் செய்யப்படும் போது கூட மதம் மாறியவர்களை யாரும் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் மதம் மாற்ற செய்யப்படும் உத்திகளையும் அதிகார மற்றும் அரசு இயந்திர துஷ்பிரயோகங்களையும் அரசு பணத்தை அதற்காக செலவிடுவதையுமே விமர்சனம் செய்கிறார்கள்.

    மதமாற்ற முயற்சிகளை நியாயப்படுத்த முயல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ஓகை நடராஜன்.

  13. அருமையான, ஆராய்ந்தெழுதிய கட்டுரை.

    யார் சொன்னதையும் பொருட்படுத்தாமல் ‘மோசமான வானிலை’யில் சென்றதை ‘arrogance of power’ என்பதைத் தவிர வேறு எதில் சேர்ப்பது?

    இவரோடு சேர்ந்த மரணமடைந்த அனைவரின் ஆன்மா(க்கள்) சாந்தியடைவதாக!

  14. மதம் மாற்றுவேன், அது என் சுதந்திரம் என்கிறார்கள்.

    ஆனால் மதம் மாறிய பின் அவர்கள் செய்வது என்ன ?

    கையிலே கருப்பு உறைக்குள் பைபிளை எப்போதும் வைத்துக் கொள்கிறார்கள். அதில் தவறில்லை.

    அதை விட அவர்கள் முக்கியமாக செய்யும் வேலை பிற மதங்கள் பொய்யானவை என்றும், பிற மதக் கடவுள்கள் ஜீவனில்லாதவை என்றும், தங்கள் கடவுள் மட்டுமே ஜீவனுள்ளவை என்றும், என்னவோ இவர்கள் கடவுளிடம் கைக் குலுக்கி விட்டு வந்தது போல சரடு விடுவார்கள்.

    இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை தான், அசோகர், அக்பர், காந்தி…என எல்லோரையும் உருவாகிய இந்திய சமுதாயம் சகிப்புத் தன்மை உடைய சமுதாயம் தான்.

    இந்த 10,000 வருடத்துக்கும் முந்தைய சமுதாயத்தைப் பாழாக்கும் வகையிலே, என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்றும், என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து இந்தியா முழுவதையும் பாலஸ்தீன் போல ஆகும் நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்கின்றனர்.

    இது நடக்காமல் தடுக்கப் போவது ஆண்டவன் தான்.

    என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றெல்லாம் கூறும் கொள்கையுடையவர் இந்த உலகையே சுடுகாடு ஆக்காமல் ஓய மாட்டார்கள்.

    எனவே இந்தியாவில் எந்த மதம் வேண்டுமானாலும் பரப்பப் படலாம். ஆனால் தன் மதம் மட்டுமே உண்மை , தன் கடவுளை மட்டுமே இந்த உலகம் முழுவதும் வணங்க வேண்டும் என்ற சர்வாதிகார கொடுங்கோல் மதங்களை, கல்லறைகளை உருவாக்கும் மதங்களை பரவ அனுமதிக்க முடியாது.

    உங்ககளை விட எங்களுக்கு தேவ குமாரனைப் பற்றி நன்றாகத் தெரியும். பலர் அவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். சிலர் வணங்கிக் கொண்டும் இருக்கின்றோம்.

    ஆனால் உங்களின் தேவை என்ன? இந்து மதக் கடவுள்களை இகழ வேண்டும், இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். பிறகு வெறி பிடித்த கொள்கை உடைய கூட்டங்கள் மட்டும் இருக்கும்- அவர்களும் அடித்துக் கொண்டு சாக வேண்டும்- இதற்க்கு பெயர் சுதந்திரமா?

    நீங்கள் ஏன் மத மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டும்? தேவ‌ குமார‌னை வணங்க வேண்டும், அவ்வளவுதானே? நான் வருகிறேன், பலே பேரை கூட்டி வருகிறேன்!ஆனால் பிற‌ தெய்வ‌ங்க‌ளையும் ம‌ன‌மார‌ வணங்குவேன்!

    ஆனால் இவர்களுக்கு தேவ‌ குமார‌ன் பற்றி அதிக‌ அக்க‌றை இல்லை! கெச‌ட்டில் பெய‌ர் மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும், கணக்கு காட்டி வாழ்க்கையை வளமாக்க வேண்டும்! நான் தேவ‌ ‌ குமார‌னை வண‌ங்குவ‌து கூட‌ இவ‌ர்க‌ளுக்கு இர‌ண்டாம் ப‌ட்ச‌ம் தான். முதலீல் பிற‌ தெய்வங்க‌ளை இக‌ழ‌ வேண்டும்!

    ஆனால் கடவுள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருப்பார்!

    கடவுள் நல்லவங்களுக்கு பல கஷ்டத்தைக் குடுப்பான். ஆனால் கை விட மாட்டான்.

  15. ராஜசேகர் ரெட்டியை பற்றி மற்றுமொரு நெருடலான விஷயம். சத்யம் (!?) கம்ப்யூட்டர்ஸ் ஊழலில், செய்தி வெளியாகி ஏறத்தாழ 20 நாட்கள் சென்ற பிறகே CBI விசாரணைக்கு உத்தரவிட்டார் ரெட்டி அவர்கள். மேலும் அவருக்கும் அதில் தொடர்பு உள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

  16. One thing I do not understand about the christian converts is that they still retain their hindu names. Is it out of deference to their mother religion or to fool the public, as YSR did in his life time. YSR’s wife name is Lakshmi. Had a huge chuckle when I see a Christian walking with the name Lakhshmi and a nice little red bindi to boot!! And these people make fun of our religion and customs!!!
    Also, why do Christians celebrate church festivals like the way it is done in Hindu temples (they call it 8 naal nonbu vizha etc..) . Should it be not done the way Vatican or whatever the new churches prescribe in the western world?
    Why do Christian converts seek reservation once they embrace Christianity? After all, Christianity is supposed to be a very noble religion that does not discriminate people based on language or wealth or origin or birth? Why do Dalit Christians have separate burial grounds from other CASTE (LOL) Christians?
    Christianity as usual poses a lot of questions rather than answers. No wonder, people in the west are getting disillusioned with Christianity.

  17. Mathasakippu thanmai enpathu Hinduvukku mattum ulla oru vishayam illai.Anal inke Hindu ellam sakitthukkondu vazha vendiyullathu.Kristin muslim vote akal matha thalaivarkal chollum partikkuthan kidaikkum.Hindu vote…? Em mathathamum sammatham entu ettukkolla nankal ready, atupola chollikkolla avarkal munvaramattarkal. athuvarai en matham than sammatham

  18. வாழ்க்கையின் பெரும் போராட்டங்களில் மிதந்து மாபெரும் மக்கள் தலைவராக
    உருவெடுத்த ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவத்தின் அதிகார உருவாக்க கண்ணியில் ஆந்திரப் பகடையாக மாறிவிட்டார் என்பது இந்த தேசத்தின், சமூகத்தின் துரதிர்ஷ்டம்,கேடு – வேறென்ன சொல்வது?

    நடுநிலையாக எழுதப் பட்ட சிறந்த கட்டுரை ஹரன். ஒவ்வொரு செய்தித் தகவலுக்கும் சுட்டிகளை அளித்திருப்பது கட்டுரையை காத்திரமாக்குகிறது.

    // Nambi Narayanan
    திருவோண்ம் – பெருமாளின் பிறநத நட்சத்திரம். சாமுவேலின் இறந்த தினம்.
    அவர் ஹெலிக்காப்ட்டர் விழுந்த இடம் ‘நல்ல மலை.
    மோதிய குன்று ‘ ருத்ர குன்று ‘

    சந்திரபாபு நாயுடுவின் வார்த்தை மெய்யானது பற்றி யாரும் குறிப்பிடவில்லை. //

    இத்தகைய பார்வை அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியது. சிறிதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. அப்போ ரெட்டி கூடச் சென்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?? அவர்களையும் பெருமாள் தண்டித்து கொன்று விட்டாரா??

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்காக மனித காரணங்களையும் (human errors), சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமலிருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நம்பி நாராயணன் போன்ற பெரியவர் இப்படி மூட நம்பிக்கை கலந்த குரூர திருப்தியை வெளிப்படுத்துவது வருத்தமளிக்கிறது.

  19. திருச்சிகாரர்….
    ஆகமொத்தத்தில் யாருக்கும் சகிப்புதன்மை கிடையாது. பிதற்றுவது மற்ற மதத்தின் மீது வெறியை மட்டுமே தூண்டும். ஆசைகாட்டியும், கட்டாயபடுத்தியும் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் அவர் பேராசை பிடித்த மூடராக இருக்கவேண்டும் அல்லது உங்கள் மதத்தில் கட்டுகதைகளுக்கு இதுவே பரவாயில்லை என்று இருக்க வேண்டும். ஆனால் எவரையும் கட்டாய படுத்த முடியாது அவ்வாறு கட்டாய படுத்தினால் RSS, vhp கூட்டங்கள் சும்மா விட்டுவிடுமா… ஒரு மாதத்திற்கு முன்பு கிரிஸ்துவ மதத்திலிருந்து 200 பேர் கொண்ட ஒரு கிராமமே இந்து மதத்திற்கு மாறியது (DINAMALAR ). அதற்காக அவர் பொறாமையோ… கோபமோ… வெறி பிடித்தோ திரியவில்லை. உண்மையில் சொல்ல போனால் போலி சகிப்பு தன்மையுடையவரகளே இந்துக்கள் ஆனால் அனைவரும் அல்ல.

    (Edited and published – Tamilhindu Editorial.)

  20. Y. Samuel Rajasekar Reddy was a crook. God is there to take care of the activities of such crooks. When thugs from Amma’s TN Police landed in Mahbood Nagar to arrest Kanchi Sankaracharya on false and imaginary cases, Samuel Reddy knew the story behind. However, this scoundrel kept quiet and cooperated with Amma’s police. Amma’s police spread the false message that Kanchi Acharya was planning to fly to Nepal in a helicopter. This man was a party to the conspiracy designed by Amma. He allowed the TN police to take Kanchi Acharya to be taken out of his state handcuffed. Samuel Reddy died on a Pradosham day on Rudrakonda hills.

    (Edited and published – Tamilhindu Editorial.)

  21. First class article.

    Shows the reality.

    Hope people get disillusioned.

    Please continue.

  22. Many people ask why did other innocents die in the crash? No answer. Better stay away from crooks…else pay the penalty.

  23. திருச்சகாரரே…

    இவர்கள் தான் சகிப்புதன்மையுடையவர்களா… சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

  24. திருவாளர். சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் மதிப்பு அவர் காங்கிரஸூக்கு வாரி வழங்கிய பணமூட்டை சுரங்கங்களினால் ஏற்பட்டது. இன்று மன்மோகன் சிங்கின் அரசிற்கு பணத்தால் ரோடு போட்டு அதில் நிறைய்ய மண்டூக எம்மெல்லேக்களையும் அனுப்பித்தந்த பெருமையும் முக்கியத்துவமும் சாமுவேல் ரெட்டிகாருவுக்கு உண்டு.

    இதனாலேயே, சம்பவம் நடந்த உடனே மேடத்தின் அடிமையாகிய காங்கிரஸ் சர்க்காருக்கு எலும்பில் சுரம் வந்துவிட்டது. வரலாறு காணாத அளவிற்கு அனைத்துப் படைகளும் சாமுவேல் காருவின் சடலத்தை ராப்பகலாக தேடினார்கள்.

    திருப்பதி மலையை திருடப்பார்த்தவர் இந்த ரெட்டிகாரு. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கிருத்துவரே உப தலைவராக போடப்பட்டார், எல்லாரின் எதிர்ப்பையும் மீறி. பல முக்கிய கோயில் காண்டிராக்டுகள், பிரசாதம் உட்பட, கிருத்துவர்களின் கைகளுக்குப்போயின.

    சாமுவேல் ராஜசேகர ரெட்டிகாரு ஒரு மதமாற்ற கிருத்துவ வெறியர். அவர் தன்னைச்சுற்றி எல்லா துறைகளிலும் மதமாறிய கிருத்துவர்களையே வைத்துக்கொண்டார்.

    அவரோடு சேர்ந்து மறித்த சுப்ரமணியம், மற்றும் வெஸ்லி இருவரும் மதமாறிய கிருத்துவர்கள் என்பது அழகாக மறைக்கப்படுகிறது. சாமுவேல் ரெட்டிகாருவின் பெயரைக்கூட அழகாய் ஊடகங்கள் மறைக்கின்றன.

    ரெட்டிகாரு இரண்டாம் முறை பதவியேற்றபின் உடனே போய் வந்த புனிதயாத்திரை ஜெருசேலத்திற்கு. பிறகு, அனைத்து கிருத்துவர்களும் ஜெருசேலம் போக மானியம் வழங்க உத்தரவு போட்டார் இவர்.

    கிருத்துவத்தை வளர்ப்பது தப்பில்லை. ஆனால், முக்கிய மந்திரியாய் உட்கார்ந்து அதைச்செய்யக்கூடாது. அதிலும், இந்துக்களின் கோயில்களின் பணத்தை எடுத்து அதை செய்யக்கூடாது. அப்படி களவாடியவர் சாமுவேல் ரெட்டிகாரு.

    தெய்வம் நின்று கொல்லும். புராதனமான இந்து திருப்பதி மலையை கையாள முயற்சித்த ரெட்டிகாரு பிரதோச தினத்தற்கு சிவன்மலையில் (ருத்ரகோண்டா மலை) சிதறி எறிந்து மறைந்து போனது இறைவனின் இச்சை என்றே எனக்குத்தோன்றுகிறது.

    இப்போது அவர் மகன் ஸ்டீபன் ரெட்டிகாருவை முதன்மந்திரியாக்க ஜால்ராக்களின் ஓலம் எழுந்திருக்கிறது. ஸ்டீபன் ரெட்டிகாரு நடத்தும் டிவி மற்றும் பல பணமுதலை தொழில்கள் நிரந்தரமாக ஆந்திரத்தை சுரண்டவும், இத்தாலிய காங்கிரஸூக்கு பைனான்ஸ் செய்யவும் இந்த சதி செய்யப்படுகிறது. மனவாடுகள் இதற்கு மயங்கிவிடக்கூடாது.

    கடப்பா தாலுக்காவை ரெட்டிகாருவின் பெயரில் மாற்றப்போகிறார்களாம். கொடுமைடா சாமு, சாரி, சாமி!!!

    நன்றி

    ஜயராமன்

  25. ந‌ண்ப‌ர் ராம‌ கோபால்,

    என்ன‌ ச‌கிப்புத் த‌ன்மை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்க‌ள்?

    ர‌மலானீல் நோன்பு இருக்க‌ வேண்டுமா?

    என் த‌லைவ‌னைப் போல‌ வெறும‌னே கஞ்சி குடித்து க‌தை அளக்காம‌ல், காலை 4 ம‌ணி முத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ர‌ நீர் கூட‌ அருந்தாம‌ல் காற்றை ம‌ட்டும் சுவாசித்து நோன்பு இருக்கிறொம்.

    உல‌கின் எல்லா ம‌த‌ங்க‌லையும் புரிந்து கொண்டு வூக்குவிக்கும் ஒரே ம‌த‌மான‌ இந்து ம‌த‌ம் அழிந்து விடுமோ என்ற‌ அச்ச‌த்தினாலேயே, பல‌ இந்துக்க‌ள், அப்ப‌டி இந்து ம‌த‌ம் அழியா வ‌ண்ணம் காக்க பிற‌ ம‌த‌ங்க‌ளை எதிர்க்கிறார்க‌ள்.

    நாங்க‌ள் மத மாற்ற‌ம் செய்ய‌ மாட்டோம் என்று பிற‌ ம‌த‌த்த‌வ‌ர் கூறினால், அதை உண்மையாக‌க் க‌டை பிடித்தால், இந்துக்க‌ள் எல்லா ம‌த‌ங்க‌ளையும் மிக‌ சிற‌ப்பாக‌ பின் பற்றிக் காட்டுவார்க‌ள்‍!(நான் என்னையும், என் ந‌ண்ப‌ர்க‌ளையும் வைத்து இதைச் சொல்கிரேன். நான் இந்து ம‌த‌த்தின் பிர‌தி நிதி அல்ல‌. ந‌ம்பி, ராம‌, ஜ‌டாயு த‌ய‌வு செய்து ச‌ண்டைக்கு வ‌ர‌ வேண்டாம்)!

    இந்துவாக‌ இருந்தால் கோவிலுக்கும் போக‌லாம், ச‌ர்ச்சுக்கும் போக‌லாம், நோன்பும் இருக்க‌லாம், ம‌சூதிக்கும் போக‌லாம், க‌ட‌வுள் இல்லை என்றும் வாதாட‌லாம்!உண்மையை ஆராய‌லாம். அறிந்த‌ உண்மைக‌ள வெளிப் ப‌டுத்த‌லாம்!

    இதில் எதையும் இந்து ம‌த‌ம் த‌டை செய்ய‌வில்லை. எந்த‌ வ‌ழியில் வேண்டுமானாலும், உருவ‌த்திலோ, உருவ‌ம் இல்லாம‌லோ வ‌ண‌ங்க‌ த‌டை இல்லை. இந்து ம‌த‌ம் யாரையும், எந்த‌ மார்க்க‌த்த‌யும் வெறுக்க‌ கூற‌வில்லை.

    “அத்வேஷ்டா ( வெறுப்பில்லாத‌வ‌னாய்), ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளுட‌னும் சினேக‌ பாவ‌த்துட‌ன்), க‌ருண‌ ஏவ‌ ச‌(க‌ருணையே உடைய‌வ‌னாய்)” -இப்ப‌டி இருப்ப‌வ‌னைத் தான் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்” என்று க‌ட‌வுள் சொல்லி இருக்கிறார்.
    இது இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டை- இதை நான் தைரிய‌மாக‌ச் சொல்கிரேன்! இது எல்லா இந்துக்க‌ளுக்குமான‌ க‌ருத்து!

    ஆனால் பிற‌ ம‌த‌ங்க‌ளை அழிக்க‌ வேண்டும்,குறிப்பாக‌ இந்து ம‌த‌த்தை அழிக்க‌ வேண்டும், என்று செய‌ல் ப‌டுவ‌தை “ச‌கிப்புத் த‌ன்மை” என்ற பெய‌ரில் அனும‌திக்க‌ முடியாது.

  26. //TN Police landed in Mahbood Nagar to arrest Kanchi Sankaracharya on false and imaginary cases, Samuel Reddy knew the story behind. However, this scoundrel kept quiet and cooperated with Amma’s police. Amma’s police spread the false message that Kanchi Acharya was planning to fly to Nepal in a helicopter. This man was a party to the conspiracy designed by Amma. He allowed the TN police to take Kanchi Acharya to be taken out of his state handcuffed//

    க‌ர்ம‌ம், க‌ர்ம‌ம், கிர‌ஹ‌ச்சார‌ம‌ய்யா! இவ்வ‌ளவு ந‌ட‌ந்தும் புத்தி லேது!

  27. அதாவது இயெசுவை ம‌திக்கிறேன், பாராட்டுகிரேன் என்றால், ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து.

    ஆனால் இந்து ம‌த‌த்தை சுவாஹா செய்ய‌ முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ப் ப‌ட்ட‌து என்று எழுதினாலும் ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து.

    அப்ப‌ ஜ‌டாயுவின் கொள்கைதான் என்ன?

    உண்மையிலேயே புரிய‌வில்லை!

  28. Wonderful article. The following article that appeared in thinnai site on 2005 provides all the details of the atrocities done by Y Samuel Rajasekhara Reddy and his ilk:

    முதல்வர் Y ஸாமுவேல் ராஜஸேகர ரெட்டியினால் ஆண்டியாக்கப்படும் அறநிலையத்துறை

    Friday September 2, 2005

    திண்ணை

    https://www.thinnai.com/?module=displaystory&story_id=80509021&format=html

  29. வணக்கம்,

    ஸ்ரீ ஜடாயு அய்யா சொல்வதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஸ்ரீ நம்பி அவர்கள் சொன்னது போல் நாம் கருத்து எடுத்துக்கொண்டால் நமது கடவுளர்களும் சாதாரண மனிதர்கள் போல் பழி வாங்கும் மனமுடயர் என்பது போலல்லவா ஆகிவிடும்.

    நமது எதிர்ப்புகள் ராஜசேகர ரெட்டி என்பவர் மீதானது அல்ல. அவர் துர் மரணம் அடைந்தது உண்மையில் வருந்த தக்க விஷயம். ஆனால் நமது எதிர்ப்பு அவரது அதிகார துஷ்ப்ரயோகம், மதமாற்றும் வெறித்தனம், மற்றும் திருப்பதி என்ற இந்துக்கோயிலின் செல்வங்களால் தன்னை வளம் பெறசெய்த கிறிஸ்துவத்திற்கு நன்றிக்கடன் செய்ய முயன்றது போன்ற அவரது தகாத செயல்களைத்தான்.

    மோசமான வானிலை குறித்து எச்சரித்தும் அவர் பயணித்து உள்ளார் என்பதுவே அவரின் விதி முடிந்தது என்பதை கட்டுகிறது. ஏனெனில் விதியின் பாதையிலேதான் மதியின் பயணம் என்பதும் இந்துக்களின் தர்மமாகும். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கிறிஸ்துவ தர்மம்.

    குப்பான்டிக்கு, அய்யா எதோ ஒரு காலத்தில் தொழில் சார்ந்து வகுக்கப்பட்ட வர்ணங்கள் பிற்காலத்தில் சாதி என்று மாறி பாடுபடுத்தியது, இன்றும் சில இடங்களில் பழமைவாதிகளால் சாதிக்கலவரங்கள் ஏற்ப்படுகிறது என்றால் பல காலங்களாக ஊறித்திளைத்தவர் திடீரென்று தங்களை மாற்றிக்கொள்வர் என்பது சிரமமே. நாங்களும் அதை மறுக்கவில்லை.
    ஆனால் இளைய தலைமுறையினர் அதை வெகுவாக மாற்றி உள்ளனர் என்பது கண்கூடான உண்மை அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு தலித் ஆனவர் தனது குலத்தொழிலை விட்டு கொஞ்சம் உயர் தொழில் செய்வாராகின் அவரை யாரும் ஒதுக்கி வைப்பது இல்லை. அவரின் தொழில் மாறிய போதே அவரின் வர்ணம் மாறுகின்றது. இதுவே இயல்பு.

    மேலும் தீண்டாமை என்று மீண்டும் மீண்டும் அரசியல் பண்ணவேண்டாம். எப்போதோ அதற்க்கு சாவு மணி அடிக்க தொடங்கியாயிற்று. இன்று மிக குறைந்து போயுள்ள தீண்டாமை நோயானது , மிக விரைவில் ஒருநாள் மரணம் அடையும்.

    ஸ்ரீ ராம் கோபால் அவர்களே, நாம் வீசும் வார்த்தைகள் மட்டுமே சுடும். ஏனெனில் இது வெறும் விவாதம் மட்டுமே. நமது கருத்துக்களை அள்ளி வீசுகிறோம். அதற்க்காக சகிப்பு தன்மை இல்லாதவர்கள் என்ற தங்களின் கருத்து பொய்யானது. உங்களின் வீடு அண்டை வீட்டாரால் ஆக்ரமிக்கப்ப்படும்போது நீங்கள் சகித்துக்கொண்டு இருப்பீர்களா,
    அவர்களின் வீட்டுக்குள் என்ன செய்தாலும் நீங்கள் கேட்கப்போவது இல்லை, ஆனால் உங்கள் காம்பவுண்டை தாண்டி உங்கள் எல்லைக்கு வந்து குழி தொண்டினால் அவர்கள் ரோஜா செடி வைப்பதாகவே இருப்பினும் நீங்கள் வேடிக்கை பார்க்கப்போவதில்லையே, அதுபோல்தான் எமது குரலும் என்பதை உணர்க.

  30. //எதோ ஒரு காலத்தில் தொழில் சார்ந்து வகுக்கப்பட்ட வர்ணங்கள் பிற்காலத்தில் சாதி என்று மாறி பாடுபடுத்தியது, இன்றும் சில இடங்களில் பழமைவாதிகளால் சாதிக்கலவரங்கள் ஏற்ப்படுகிறது என்றால் பல காலங்களாக ஊறித்திளைத்தவர் திடீரென்று தங்களை மாற்றிக்கொள்வர் என்பது சிரமமே. நாங்களும் அதை மறுக்கவில்லை.
    ஆனால் இளைய தலைமுறையினர் அதை வெகுவாக மாற்றி உள்ளனர் என்பது கண்கூடான உண்மை அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு தலித் ஆனவர் தனது குலத்தொழிலை விட்டு கொஞ்சம் உயர் தொழில் செய்வாராகின் அவரை யாரும் ஒதுக்கி வைப்பது இல்லை. அவரின் தொழில் மாறிய போதே அவரின் வர்ணம் மாறுகின்றது. இதுவே இயல்பு. //

    //மேலும் தீண்டாமை என்று மீண்டும் மீண்டும் அரசியல் பண்ணவேண்டாம். எப்போதோ அதற்க்கு சாவு மணி அடிக்க தொடங்கியாயிற்று. இன்று மிக குறைந்து போயுள்ள தீண்டாமை நோயானது , மிக விரைவில் ஒருநாள் மரணம் அடையும்//

    Great, Great!

    Baaskar Aiyaa Rocks!

  31. மிகவும் அருமையான கட்டுரை. நோட்டுக்கு வோட்டு விற்பவர்களும், வசதிகளுக்காக மதம் மாறுபவர்களும் – இதைப் படித்து, சிந்திக்க வேண்டும். நம் வீட்டைக் கொள்ளையடிக்க – நாமே கதவைத் திறந்து வைத்துவிட்டு, திருடிச் செல்பவனிடம் சில்லறை வாங்கிக் கொள்வது போன்றதுதான் – அரசியல் வியாதிகளையும், மத மாற்ற மடையர்களையும் ஊக்குவிப்பது.

  32. //மிகவும் அருமையான கட்டுரை. நோட்டுக்கு வோட்டு விற்பவர்களும், வசதிகளுக்காக மதம் மாறுபவர்களும் – இதைப் படித்து, சிந்திக்க வேண்டும். நம் வீட்டைக் கொள்ளையடிக்க – நாமே கதவைத் திறந்து வைத்துவிட்டு, திருடிச் செல்பவனிடம் சில்லறை வாங்கிக் கொள்வது போன்றதுதான் – அரசியல் வியாதிகளையும், மத மாற்ற மடையர்களையும் ஊக்குவிப்பது.//

    நன்றி நண்பர் திருச்சிக்காரர் அவர்களே, நன்றி ஸ்ரீ கெளதம் அவர்களே, நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மை எனினும் பலவந்தமாக கதவை திறந்து திருடுபவர்களை கண்டும் சகிப்புத்தன்மை வேண்டும் என்று நம்மிடம் கூறும் நண்பர்களை என்னவென்று சொல்வது.

  33. //திருச்சிக் கார‌ன்
    7 September 2009 at 1:56 pm edit
    அதாவது இயெசுவை ம‌திக்கிறேன், பாராட்டுகிரேன் என்றால், ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து. //

    நான் விமர்சித்தது “நாம் பாராட்டுகிறோம்” என்று நீங்கள் எல்லா இந்துக்களும் இப்படி என்ற தொனியில் எழுதியதற்காக. இப்போது ‘நான்’ என்று எழுத ஆரம்பித்து விட்டீர்கள் – நன்றி, சந்தோஷம். :))

    // ஆனால் இந்து ம‌த‌த்தை சுவாஹா செய்ய‌ முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ப் ப‌ட்ட‌து என்று எழுதினாலும் ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து. //

    ?????

  34. //திருச்சிக் கார‌ன்
    7 September 2009 at 1:56 pm edit
    அதாவது இயெசுவை ம‌திக்கிறேன், பாராட்டுகிரேன் என்றால், ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து. //

    நான் விமர்சித்தது “நாம் பாராட்டுகிறோம்” என்று நீங்கள் எல்லா இந்துக்களும் இப்படி என்ற தொனியில் எழுதியதற்காக. இப்போது ‘நான்’ என்று எழுத ஆரம்பித்து விட்டீர்கள் – நன்றி, சந்தோஷம். :))//

    இதற்க்கு முன்பாகவே

    //ஜ‌டாயு (author)
    18 August 2009 at 11:33 pm

    / இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
    ….
    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. /

    திருச்சி, பயங்கரமாகக் காமெடி பண்ணுகிறீர்கள். //

    என்று சிலிர்த்து சீறியுள்ளார்.

    நம்மைப் பற்றி- மன்னிக்க- என்னைப் பற்றி விமரிசிக்கலாம் என்றே நண்பர் ஜடாயுவுக்கு நான் முன்பே கூறியுள்ளேன். அதை வரவேற்கவும் செய்கிறேன்.

    அந்த அளவுக்கு வேகமானவர் இப்போது மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல

    “வாழ்க்கையின் பெரும் போராட்டங்களில் மிதந்து மாபெரும் மக்கள் தலைவராக
    உருவெடுத்த ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவத்தின் அதிகார உருவாக்க கண்ணியில் ஆந்திரப் பகடையாக மாறிவிட்டார் என்பது இந்த தேசத்தின், சமூகத்தின் துரதிர்ஷ்டம்,கேடு – வேறென்ன சொல்வது?”

    மென்மையாக ஒத்தடம் கொடுப்பது போல எழுவது, நமக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது என்பது தான் நான் கூற வருவது.

    “அவர் மெதுவாகத் தட்டினார் ஆனால் பாவம் அடி பலமாக விழுந்து விட்டது” என்று எழுதுவது போல உள்ளது.

    இரங்கல் எழுதுவது என்றால் தனியாக எழுதி விடலாமே?

    இதற்கு முன்பே நாம் ஒரு சிறிய வினாவினை முன் வைத்தோம். அதற்க்கு எளிதாக விடை அளித்திருக்க இயலும்.

    //இந்து மதம் என்பது பல்வேறு துறைகளையும், சம்பிரதாயங்களையும் ஒன்றடைக்கியது. இந்து ஒற்றுமை என்பது இவை அனைத்தையும் அழித்துவிடாமல், ஆனால் ஒருங்கிணைத்து இந்து சமுதாய மேம்பாட்டிற்காகவும், உலக நன்மைக்காகவும் நிகழ வேண்டும்//

    ஒரு அடிப்ப‌டை வேண்டும், அந்த‌ அடிப்ப‌டையில் தான் ஒற்றுமை வ‌ர‌ முடியும்.

    அது என்ன‌ அடிப்ப‌டை என்று தீர்மானிக்க‌ வேண்டும்.

    ராம‌னும் இந்துதான். ராவ‌ண‌னும் இந்துதான். ராவ‌ண‌னும் த‌வ‌ம், பூச‌னை இதில் குறைந்த‌வ‌ன‌ல்ல‌.

    இரண்டு பேரின் அடிப்ப‌டையும் ஒன்றா?

    இருவ‌ருக்கும் ந‌வீன‌ ஜ‌டாயு ஒற்றுமை ஏற்ப்ப‌டுத்த‌ போகிறாரா?

    If Raavanan is ready to rectify himself , repent and surrender himself then we can make peace, even Raama ready to accept peace with him, provided only if Raavanaa prepared to hand over Seethaamaa!

    But when Raavanaa refused to hand over the custody of seethamma, we want to know as how shall our ந‌வீன‌ ஜ‌டாயு can make ஒற்றுமை between two Hindus- Raaman and Raavanaa!

    புராண‌ ஜ‌டாயு சாமியை எங்களுக்கு ந‌ன்கு தெரியும். வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ்ந்த‌ அவ‌ர் எங்களீன் க‌ட‌வுள்.

    செல்வாக்கு, ஆள் பல‌ம் இல்லாத‌, த‌ரையில் நிற்க்கும், காலில் செருப்பு கூட‌ இல்லாத‌, ம‌ர‌வுரி அணிந்த‌, ராம‌னின் ப‌க்க‌மே நாம் நிற்க்கிறோம்.

    ந‌வீன‌ ஜ‌டாயு எந்த‌ப் ப‌க்க‌ம்?//

    ஆனால் இதற்க்கு இது வரை பதில் வந்ததாக நாம் பார்க்கவில்லை.

    ஜடாயுஜி நியாயமானவர், நேர்மையானவர்,இந்து மதத்தின் சிறந்த புதல்வர் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
    அவர் மிகப் பெரிய பண்டிதர் என்றும் உபய வேதாந்த என்றும் நினைக்கலாம் ((சரியா ?)!

    ஆனால் அவர் சில நேரங்களில் சிலிர்ப்பும், சில நேரங்களில் ஒத்தடமுமாக இருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. ஒத்தடம் கொடுப்பது தவறில்லை, ஆனால் யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம்!

    நாம் குறை கூறவில்லை. ஆச்சரியத்தைத் தான் வெளிப்படுத்துகிறோம்!

  35. // ஆனால் அவர் சில நேரங்களில் சிலிர்ப்பும், சில நேரங்களில் ஒத்தடமுமாக இருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. ஒத்தடம் கொடுப்பது தவறில்லை, ஆனால் யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம்!

    நாம் குறை கூறவில்லை. ஆச்சரியத்தைத் தான் வெளிப்படுத்துகிறோம்! //

    அன்புள்ள திருச்சிக்காரன் சார், வியப்புகள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை, சரிதானே ! :))

    நான் ரெட்டிக்கு ஒத்தடம் கொடுக்கவில்லை. ரெட்டியின் செயல்பாடுகளையும் சரி, அவரது அரசியலையும் சரி நான் சிறிதளவும் ஆதரிக்கவில்லை, தீவிரமாக எதிர்க்கிறேன். ரெட்டிகள் போன்று வணிகம், அரசியல், கல்வி என்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கும், அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் சமூகத்தினரை கிறிஸ்தவம் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது.
    இந்த சூழலில் சிறந்த தலைமைப் பண்பும் போர்க்குணமும் மிக்க மக்கள் தலைவர், இந்து சூழலில் பிறந்து வளர்ந்தும் கிறிஸ்தவ கேம்ப் பக்கம் போய்விட்டாரே என்ற என் ஆதங்கத்தையும், வேதனையையும் வெளிப்படுத்துகிறேன். அதைத் தான் இந்த தேசத்தின் துரதிர்ஷ்டம் என்று கூறினேன். கர்நாடக பா.ஜ.க அரசில் மந்திரிகளாக இருக்கும் இந்து அபிமான ரெட்டிகள் கூட சமூக காரணங்களால் இந்த கிறிஸ்தவ வெறியரையும், அவரது அரசியலையும் எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். எல்லா இந்து சமூகக் குழுக்களையும் கிறிஸ்தவ அதிகார அரசியல் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்.

    மற்றபடி, அவர் இறக்க நேரிட்ட விபத்து கடவுள் தண்டனை என்றெல்லாம் பிதற்றுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். புத்தியுள்ள இந்துக்களில் சிலரே இப்படி மூடத்தனமாக பேசுவது வருத்தமளிக்கிறது.

  36. //மற்றபடி, அவர் இறக்க நேரிட்ட விபத்து கடவுள் தண்டனை என்றெல்லாம் பிதற்றுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். புத்தியுள்ள இந்துக்களில் சிலரே இப்படி மூடத்தனமாக பேசுவது வருத்தமளிக்கிறது.//

    சரியான வார்த்தைகள்.

    இப்படி கடவுள் கொன்றார் என்பதெல்லாம் உண்மையென்றால், எத்தனையோ கடுமையான நாத்திகவாதிகளெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து, இயற்கையாக இறந்திருக்கிறார்கள்; இன்னும் நிறைய ஹிந்து மத எதிர்க்கருத்து உடையவர்கள் எல்லாம் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் – என்பதைச் சொல்லி, கடவுள் இல்லை என்பது உண்மைதான் என்பதனையும் ஏற்றுக்கொண்டாகவேண்டியிருக்கும். அதனால், இயற்கையான மரணம் போல, எதிர்பாராத மரணம் ரெட்டியின் மரணம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

  37. //மற்றபடி, அவர் இறக்க நேரிட்ட விபத்து கடவுள் தண்டனை என்றெல்லாம் பிதற்றுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். புத்தியுள்ள இந்துக்களில் சிலரே இப்படி மூடத்தனமாக பேசுவது வருத்தமளிக்கிறது.//

    நானும் சேர்ந்துக்குறேன்.

    In fact, I commented as “one less christian”. I will get back my words and I apologise for that.

  38. அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தன்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு ரெட்டியின் மரணம் ஒரு சரியான பாடம். யாருக்கும் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

    சில நூறு மதவெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படும் அளவு ஹிந்து மதம் ஒன்றும் பலவீனமானது இல்லை. உலகமே எதிர்த்தாலும் உண்மை இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. எனக்கென்னவோ இங்கு அனைவரும் தேவையில்லாமல் பயப்படுவது போல் தான் தோன்றுகிறது. கடந்த பன்னிரண்டு வருடங்களாக நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய ‘இயக்கங்களின்’ , அவர்களின் செயல்பாடுகளின் தீமையைபப் பற்றி கேட்டு வருகிறேன். எனக்கு முன்னால் என் தந்தை பல வருடங்களாக இவற்றைக் கேட்டு வருகிறார். ஆனால் நாம் பயப்படுவது போல் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள் சிறிது சிறிதாக தாங்களாகவே பலவீனமானார்கள்.அதை மறைக்கவே இப்போது கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர்.

  39. //சில நூறு மதவெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படும் அளவு ஹிந்து மதம் ஒன்றும் பலவீனமானது இல்லை. உலகமே எதிர்த்தாலும் உண்மை இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. எனக்கென்னவோ இங்கு அனைவரும் தேவையில்லாமல் பயப்படுவது போல் தான் தோன்றுகிறது. கடந்த பன்னிரண்டு வருடங்களாக நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய ‘இயக்கங்களின்’ , அவர்களின் செயல்பாடுகளின் தீமையைபப் பற்றி கேட்டு வருகிறேன். எனக்கு முன்னால் என் தந்தை பல வருடங்களாக இவற்றைக் கேட்டு வருகிறார். ஆனால் நாம் பயப்படுவது போல் இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஹிந்து மதத்தை எதிர்த்தவர்கள் சிறிது சிறிதாக தாங்களாகவே பலவீனமானார்கள்.அதை மறைக்கவே இப்போது கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர்//

    BRAVO MR. BHEEMAA! KEEP IT UP!

    BUT WE HAVE TO BE CAREFUL! THEY ARE ACTIVE AND MONEY IS PLAYING!

    BECAUSE AS LONG AS A PERSON IS HINDU, HE HAS THE PROVISION TO UNDERSTAND ALL RELIGIONS, FOLLOW THE GOOD THINGS IN IT. IN FACT HINDUISM HAS MOTHER TYPE LOOK ON OTHER RELIGIONS.

    HENCE WE HAVE TO BE CAREFUL TO KEEP THE NUMBERS!

    BECAUSE ONCE THEY TURN INTO ANY OTHER RELIGION, THERE MAIN MOTIVE WILL TO OBLITERATE ALL OTHER RELIGIONS AND FOR THAT THEY WOULD RESORT INTO ANY MEANS TO ACHEIVE THE SAME!

    WE ARE NOT AGANIST ANY RELIGION, WE ENCOURAGE ALL RELIGIONS, BUT FOR THE SURVIVOL OF ALL RELIGIONS, AND INFACT FOR THE SURVIVAL OF THE MAN KIND WE NEED A SUBSATANTIAL HINDU FOLLOW UP.

    A hindu may momentarly move in intolerance and violant path , but we can easily bring back into right way because the fundematals of Hinduism is of Ahimsa and tolerance!

  40. Reddy’s death undeniably a colossal loss for Christians

    என்று தலையங்கம் எழுதியுள்ளது கிறிஸ்டியன் டுடே இந்தியா என்ற பத்திரிகை.

    https://in.christiantoday.com/articles/view-reddys-death-undeniably-a-colossal-loss-for-christians/4481.htm

    இதில் வெளிப்படையாகவே ரெட்டி எப்படி தனது அரசியல் அதிகாரத்தை கிறிஸ்தவ மதப்பரப்பலுக்காகவே முழுமையாக உபயோகித்தார் என்பதைச் சொல்லி புளகாங்கிதமடைகிறார் இதை எழுதியிருக்கும் எவாங்கலிஸ்ட்.

    இந்த வரிகளைப் பாருங்கள் –

    // Without doubt, the death is more of a shock and cause of grief to the Christian community who slowly-yet-surely had found a pillar of support at the highest level of the Government in this really fearful and tumultuous time. //

    // Church leaders in India would agree that it would take another decade
    to *find a peer commensurate with Reddy* who was even-handed and filled
    with egalitarian and inclusive principles //

    // Just ten days back, in a first, *the Christian politico* dauntlessly adopted a resolution supporting the Dalit Christians. //

    // The chief minister apart from taking gargantuan tasks that brought
    unprecedented development had pioneered scores of initiatives for
    Christians. “He set up the A.P. State Christian Finance Corporation
    which is first of its kind in the country. He also introduced the
    novel schemes like Government subsidy to the Holy Land and assistance
    for Christian Mass Marriages for the first time,” according to Andhra
    Pradesh Federation of Churches (APFC), a state-level apex body of the
    Bishops and Heads of Churches of all Christian Denominations. //

  41. “எவாங்கலிஸ்ட்” என்பது எந்த பொருளும் தராத வார்த்தையாகும்;
    கிரேக்க வார்த்தையான அதன் உச்சரிப்பு “இவாஞ்சலிஸ்ட்” அல்லது “இவாஞ்சலிக்கல்” என்று வரவேண்டும்;

    அது கிறிஸ்தவத்துக்கு மட்டுமே சொந்தமான வார்த்தையல்ல;
    அதன் தமிழாக்கம் “நற்செய்தி” அல்லது “நல்ல செய்தி” எனலாம்;
    ஆங்கிலத்தில் “GOOD NEWS”

    எனவே யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தமுடியும்;
    இதன் மூலம் நீங்களே மறைமுகமாக அவர்களைப் புகழுகிறீர்கள்;
    அதாவது அவர்கள் எதோ நல்ல செய்தியினை மக்களுக்குச் சொல்பவர்கள் என‌..!

    இதனை “சுவிசேஷம்” என்றும் சொல்வார்கள்;
    அது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும்;
    சுவிசேஷம் எனும் வார்த்தையினை மூன்றாகப் பிரிக்கலாம்;
    சு+வி+சேஷம்.
    சேஷம்=செய்தி;
    விசேஷம்=விசேஷித்த செய்தி

    அதனுடன் அல்லது எதனுடன் “சு” சேர்ந்தாலும் “பரிசுத்தம்” அல்லது தூய்மை எனப் பொருள்படும்; எனவே சுவிசேஷம் என்பது “தூய்மையான நற்செய்தி”
    எனப் பொருள்படும்.

  42. //இதனை “சுவிசேஷம்” என்றும் சொல்வார்கள்;
    அது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும்;
    சுவிசேஷம் எனும் வார்த்தையினை மூன்றாகப் பிரிக்கலாம்;
    சு+வி+சேஷம்.
    சேஷம்=செய்தி;
    விசேஷம்=விசேஷித்த செய்தி

    அதனுடன் அல்லது எதனுடன் “சு” சேர்ந்தாலும் “பரிசுத்தம்” அல்லது தூய்மை எனப் பொருள்படும்; எனவே சுவிசேஷம் என்பது “தூய்மையான நற்செய்தி”
    எனப் பொருள்படும்//

    ஆனால் சுவி சேசம் என்ற பெயரில் பரப்பப் படுவது எல்லாம் வெறுப்புக் கருத்துக்கள் தான், பிற மதங்களை எல்லாம் அழித்து விட்டு தன் மார்க்கத்தை மட்டுமே நிலை நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் தான்.

    எதையாவது செய்து எப்படியாவது பெயரையும் மதத்தையும் மாற்றி டார்கெட்ஐ அச்சீவ் செய்து இன்சென்டிவ் பெரும் செயல்கள் தான்.

    ஆனால் இந்து மதம் பிற மதங்களை எல்லாம் ஒரு தாயின் பார்வையோடு அணுகுகிறது.

    ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால், அவர் சர்ச்க்கோ, கோவிலுக்கோ சினகாகுக்கோ (synagouge) செல்ல முடியாது. அப்படி சென்றால் ஷரியா சட்டப்படி தண்டனைக்கு ஆளாக வேண்டும் (இதை எழுதுவதால் ராம கோபால், தமிழ் அரசன் தவறாக என்ன மாட்டர்கள், நான் எழுதுவது சரிதான் என்று அவர்களுக்குத் தெரியும்).

    கிரிஸ்துவர்களுக்கோ அவர்கள் சர்ச்சில் இருந்து நீக்கப் படுவார்கள்.

    ஆனால் இந்துவாக இருந்தால் கோவிலுக்கு சென்று மனாமார வழி படலாம்.

    அதே நேரம் எப்போதாவது சர்ச், மசூதி சென்றாலும் யாரும் தடை செய்ய மாட்டார்கள்.

    எனவே இந்துக்கள் எந்த அளவுக்கு இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த உலகில் சமரசம் நிலவும்.

    இந்தியாவில் இந்து மதம் அழிந்து இஸ்லாமும் கிருஸ்துவமும் அதிகமாக இருந்தால் இந்தியா முழுவதும் பாலஸ்தீன் போல ஆகி விடும் என்ற என்னுடைய உண்மையான கவலையினாலே நான் இதை எழுதுகிறேன்!

    அதே நேரம் இந்துக்களில் சிலர் வெறுப்புக் கருத்துக்களுக்கு சிலநேரம் மனதில் இடம் தரக் கூடும். ஆனால் அவை எல்லாம் ஆபிரகாமிய மதங்களின் ஆணவ, அராஜகக் கருத்துக்களின் விளைவாக உருவாகும் நிகழ்ச்சி (அதாவது உடலில் நோய் வந்தால் வெள்ளணுக்கள் அதிகமாக ஆவது போல)!

    ஆனால் நாம் அவர்களை விரைவாக எளிதில் சரியான பாதைக்கு கொண்டு வர முடியும். ஏனெனில் இந்து மதத்தின் அடிப்படை அஹிம்சையும், உண்மையும், சகிப்புத் தன்மையும், கருணையும் ஆகும்!

  43. வேளாங்க‌ண்ணி ஆரோக்கிய‌ மாதா கோவிலில் ந‌ட‌ந்த‌ ச‌ப்ப‌ரத் திருவிழாவை, தொலைக் காட்சியில் காட்டினார்க‌ள். அதை ர‌சித்துப் பார்த்தேன். ஏனெனில் இந்து ம‌த‌ம் என் ம‌ன‌தில் அன்புக் க‌ருத்துக்க‌ளை, ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ள‌ர்த்து உள்ள‌து.

    தொலைக் காட்சிக்கு பேட்டி கொடுத்த‌ ம‌றைத் த‌ந்தையார், உலகின் பல பகுதிகளில் இருந்தும், எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் அதில் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினார்!

    எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்று அவ‌ர் சொன்னாலும் உண்மை என்ன‌ வென்றால் இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்றுதான் அர்த்த‌ம். வேறு எந்த‌ ம‌த‌த்தை செர்ந்த‌வ‌ர் அந்த‌த் திரு விழாவிலே க‌ல‌ந்து இருக்க‌ப் போகிறார்க‌ள்? யூத‌ர்க‌ள் வருவார்க‌ளா? இசுலாமிய‌ர் வ‌ருவார்க‌ளா?

  44. // ஆனால் சுவி சேசம் என்ற பெயரில் பரப்பப் படுவது எல்லாம் வெறுப்புக் கருத்துக்கள் தான், பிற மதங்களை எல்லாம் அழித்து விட்டு தன் மார்க்கத்தை மட்டுமே நிலை நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் தான் //

    நான் மார்க்கங்களைப் பற்றி ஒன்றும் சொல்லாத நிலையிலேயே என்னை வாதத்துக்கு அழைக்கிறீர்கள்..!

    எனது விளக்கத்தைக் குறித்து எதுவும் சொல்ல தோன்றவில்லையா..?

    ஒவ்வொரு மார்க்கத்துக்கும் தனது சிறப்புகளைக் குறித்துப் பேச உரிமையுண்டு; வெளிநாட்டுக்காரன் மதம் மாற்றுகிறான் என்று கூச்சல் போட்டது ஒரு காலம்; வெளிநாட்டு பணம் ஓலமிட்டது அந்த காலம்;

    ஆனால் இன்று நாகரிகமடைந்த சர்வதேச சமுதாயத்தில் இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது;

    எல்லோராலும் கிறிஸ்தவ நாடு என்று எண்ணப்படும் அமெரிக்காவில் தான் இந்த நிலை; அங்கு ஒரு ஆசிரியரோ அலுவலகப்பணியாளரோ தான் பணிபுரியுமிடத்தில் மற்றவருடைய பாவத்தைக் குறித்து குற்றப்படுத்தியோ இயேசுகிறிஸ்துவே ஒரே தெய்வம் என்றோ பேசுவது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது;

    உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் முழுமையான சட்டரீதியான மத சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளது;

    இது வளர்ச்சிக்கு உதவுமே தவிர தளர்ச்சிக்கு அல்ல‌..!

    மேலும் வாதிக்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

    My Email id: gladytcs@gmail.com

  45. //தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில், ஏழு கிறிஸ்துவருக்கு ஒரு சர்ச்சும், 40 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதியும், 350 இந்துக்களுக்கு ஒரு கோவிலுமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர, பெரிய வழிபாட்டுத் தலங்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாநிலத்தில் தற்போது 148,000 சர்ச்சுகளும், 176,000 மசூதிகளும், 190,000 கோவில்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (விவரங்கள் இங்கே மற்றும் இங்கே). //

    மேலே நான் சுட்டிக் காட்டியுள்ள ஆய்வுகள் டாக்டர் ஹனுமான் சௌத்ரி என்பவருடையது. அவர் தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகி ஆந்திர அரசாங்கம் சர்ச்சுகளைச் செப்பனிடுவதற்காக அரசாங்க கஜானாவிலிருந்து நிதியுதவி செய்வதற்கும், ஜெருசேலம் யாத்திரைக்கு நிதி வழுஙவதற்கும் தடை வாங்கியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    https://timesofindia.indiatimes.com/news/city/hyderabad/HC-stays-govt-funds-for-church-repairs/articleshow/4984058.cms

    HC stays govt funds for church repairs
    TNN 8 September 2009, 05:12am IST

    A two-member bench of the AP High Court on Monday directed the authorities to maintain status quo on government funds for building or repairing churches. The bench of Chief Justice Anil R Dave and Justice C V Nagarjuna Reddy was hearing a writ petition filed by Tripuraneni Hanuman Chowdary complaining that the state government was engaging itself in the promotion of a religion contrary to court injunctions. He listed 49 GOs, placing 150 Christian institutions as beneficiaries of state aid. The petitioner argued that there were no legislative sanction for the said expenditures and thus illegal. Listing various GOs between December 2001 and March 2009, he said the state was promoting Christian related activities in the guise of SC/ST welfare. He said the state was getting involved in a systematic manner for promoting church-related activities.

    The petitioner had earlier filed a writ challenging the action of the government in granting funds for Christian pilgrimage. A two-member bench by an order dated July 22 had suspended the GO granting such allowances.

  46. //கிரிஸ்துவர்களுக்கோ அவர்கள் சர்ச்சில் இருந்து நீக்கப் படுவார்கள்.//

    ஏனுங்க கோவிலுக்குள் இந்து கடவுளை வழிபட விழைந்த யேசுதாசையோ, காலஞ்சென்ற மெர்ஸி வயலார் ரவியையோ, மீரா ஜாஸ்மினையோ கிறிஸ்தவ சபை நீக்கம் செய்ததாக செய்தி வரவில்லையே, மாறாக இவர்களெல்லாம் வந்ததால் தீட்டு ஆகிவிட்டது என கோவிலை கழுவிவிட்டார்கள் என்றல்லவா செய்தி வந்தது, பல கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளே நுழைய தடை என போர்டு உள்ளதே, இதில் சகிப்பு தன்மை எங்கிருந்து வந்தது.

  47. ஜயராமன் சார்,
    ஒருவர் இறந்தபின் ஏன் அவர் இறந்தார் என மதத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கிறீர்கள். என்னே உங்கள் கருணை உள்ளம்.

  48. ஏனுங்க sir,

    கோவிலுக்குள் இந்து கடவுளை வழிபட விழைந்த யேசுதாசசை கிறிஸ்தவ சபை நீக்கம் செய்து இருந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட் 25 வருடங்களுக்கு முன்! அதற்க்கு பிறகு பரிகார பூஜை என்றெல்லாம் ஏதோ செய்து அன்னார் சபையிலே மீண்டும் இணைந்தார்!

    மற்றவர்கள் கோவிலுக்குள் நுழைய வில்லை!

    //பல கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளே நுழைய தடை என போர்டு உள்ளதே, இதில் சகிப்பு தன்மை எங்கிருந்து வந்தது//

    பல கோவில்களில் அல்ல மிகச் சில கோவில்களில்.

    இந்துக் கோவில்களில் சில வழக்கங்கள் உள்ளன.

    இந்துப் பெண்கள் மாத விலக்கான நாள்களில் சுகாதரக் காரணத்திற்காக கோவிலுக்கு செல்வதில்லை. அது இந்துப் பெண்கள் எல்லோருக்கும் தெரியும். இந்துப் பெண்களுக்கு அந்த கட்டுப்பாடு அன்னையிடம் சேர்ந்து கோவிலுக்கு செல்லும் போது இருந்து வரும்.

    ஆனால் பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம் என்பதால், பெண்களை மட்டும் தனியாக நிறுத்த வேண்டாம் என்பதால், சில கோவில்கள் இரண்டு பாலரையும் நிறுத்தி விடுகின்றன. ஆனால் காலப் போக்கில் பல கோவில்கள் அந்தப் பொறுப்பை பெண்களிடமே விட்டு அவர்களே கட்டுப் பாடாக நடந்து கொள்ளட்டும் என்ற நிலையை எடுக்கின்றன.

    கட்டுப்பாடு உள்ள சில கோவில்களும் விரைவில் மாறி விடும், நீங்க கவலைப் படாதீர்கள் பிரதர்.

  49. This “karurtoday”and “ramgobal” must be be christians ,unabadhedly hiding behind hindu names and writing against hinduism.

  50. நண்பர் ஜோ:
    //பல கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளே நுழைய தடை என போர்டு உள்ளதே, இதில் சகிப்பு தன்மை எங்கிருந்து வந்தது//

    திருச்சிக்காரன்:
    // பல கோவில்களில் அல்ல மிகச் சில கோவில்களில். //

    ஆகமவிதி என்ற ஒன்று இருப்பது திருச்சிக்காரனுக்குத் தெரிந்திருக்கவேண்டும்; அதன்படி கட்டப்பட்ட கோவில்களில் மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல; வேற்று இனத்தவருக்கும் கூட அவரவர் நிற்கவேண்டிய இடம் உட்பட பல கட்டுப்பாடுகள் உண்டு;

    அவர்கள் அனுமதிக்காததும் நியாயமே; நம்பிக்கையில்லாத மனநிலையில் உள்ளே செல்பவரால் வீண் குழப்பமே நிகழும்; இன்னும் அந்த கோவிலின் வழிபாட்டு முறைகள் அறியாதவர் வேடிக்கைப் பொருளாக மாறுவதுடன் சலசலப்புக்கும் காரணமாவார்;

    இன்னும் சில கோவில்களில் எப்பேர்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும் சட்டையை (மட்டும்..!) கழட்டிவிட்டுத் தான் செல்லவேண்டும்;

    இப்படி நியாயமான காரணங்களைச் சொல்வதைவிட்டு சப்பைக்கட்டும் சவடாலும் விட்டு சிலர் காலம் தள்ளுவதுமுண்டு;

    “செத்தைக்கு மெத்தை போட்டாலும் இத்தை
    வித்தைக்கு சித்திக் காது ” என வள்ளுவர் கூறவில்லை, நான் கூறுகிறேன்..!

  51. //எல்லோராலும் கிறிஸ்தவ நாடு என்று எண்ணப்படும் அமெரிக்காவில் தான் இந்த நிலை; அங்கு ஒரு ஆசிரியரோ அலுவலகப்பணியாளரோ தான் பணிபுரியுமிடத்தில் மற்றவருடைய பாவத்தைக் குறித்து குற்றப்படுத்தியோ இயேசுகிறிஸ்துவே ஒரே தெய்வம் என்றோ பேசுவது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது//

    ஐரோப்பியர் அமெரிக்கர், மார்க்கத்தில் இருந்து (அந்த மார்க்கத்தால் அவர்கள் சமுதாயமே கெட்ட போதும்) பட்டது போதும், இப்போதாவது தப்பிப்போம் என்று விடு பட்ட நிலையிலே உள்ளனர்.

    இந்தியாதான் உங்களுக்கு சரியான இடம். புகுந்து விளையாடுங்கள்.

  52. திருச்சிக்கார நண்பரே,
    வெள்ளையர்கள் இன்று மன நிம்மதியில்லாமல் இருப்பதற்கான காரணம் அவர்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
    1) குடிக்காதே
    2) விபச்சார எண்ணமே பாவம்
    3) முறையற்ற பாலுறவு தவறு
    4) உலக செல்வங்கள் மேல் நம்பிக்கை வைக்காதே, நித்திய ஜீவனையே நாடு
    இது மாதிரியான போதனைகள் அவர்கள் சமுதாயம் கெட்டுவிட்டதாக்கும், என்னய்யா இது உங்களுக்கே அ நியாயமா தெரியல. அதுபோக பல பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு இறை பக்தியை ஊட்டி வளர்ப்பதில்லை, அது தேவையில்லை என்பதை விட அது முக்கியமல்ல என்பதே பிரதான எண்ணம். அதுபோக அவர்களது தான் தோன்றித்தனமான வாழ்க்கை முறைக்கு கணக்கு கொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் இது சரி இது தவறு என போதிக்கும் கிறிஸ்தவம் அவர்களுக்கு கசக்கிறது. குடித்து, போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கும் ஒரு வெள்ளையனிடம் என்னய்யா உனக்கு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை இருக்கான்னு கேட்டா அவன் பதில் சொல்லும் நிதானத்திலேயே இருக்கமாட்டான், ஏன்னா அவந்தான் பைபிளை புரட்டி படித்தே இருக்கமாட்டானே.
    என்னமோ வெள்ளைக்காரன் எல்லாம் யோசித்து சிந்திச்சு தெளிவடைஞ்சு கிறிஸ்தவத்தை நிராகரிக்கிரான்னு சொல்லி இந்திய கிறிஸ்தவர்களை அவனைவிட தரம் தாழ்த்த வேண்டாம், இந்திய கிறிஸ்தவன் எல்லாம் பணத்துக்காகத்தான் மதம் மாறுகிறான் என கொச்சை படுத்த வேண்டாம்.

  53. ஏனுங்க நீங்க கிறிஸ்துவையும் ஒரு தெய்வமாக ஏத்துக்கறீங்க, சர்ச்சுக்கு வருவதையும் நீங்கள் தவறாக நினைப்பதில்லை சந்தோஷம் தான், எனக்கும் இந்துக்களான பல உறவினர்கள் உண்டு, எங்கள் உறவுகளில் பாதி பேர் இந்துக்களே, சிறுவயதிலேயே ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் குறைந்தது 5 தடவைகளாவது படித்து இருக்கிறேன், இப்போதும் எங்கள் வீட்டில் பகவத் கீதை உள்ளது. இந்துக்களை நான் எதிரிகளாக பார்ப்பவனல்ல, அப்படி கிறிஸ்துவும் போதிக்கவில்லை. ஆனால் எனது தனிப்பட்ட ஆத்தும் மீட்புக்கு கிறிஸ்துவின் வழி ரட்சிப்பை ஏற்றதாக காண்கிறேன், இயேசுவால் நான் பெற்ற வற்றை மற்றவருக்கு சொல்வதின் எனக்கு தயக்கம் இருப்பதில்லை அதை ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இந்து மதத்திலேயே சைவம் வைணவம் என்ற பிரிவுகள் ஒன்றையொன்று நிராகரித்து வந்துள்ளன (இப்போது வேண்டுமனால் இல்லாமல் இருக்கலாம்). சிவ வழி கைலாசமும், நாராயணன் வழி வைகுந்தமும் அவரவர் அடியவருக்கு பெரிதாக இருந்தது. இறைவனே இல்லை என சொல்லும் நாத்திகமும் இப்பாரத பூமியில் இருந்து வந்துள்ளது, இருக்கிறது, இதையெல்லாம் ஏற்று கொள்பவர்கள் கிறிஸ்துவின் வழி ரட்சிப்பை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறீர்கள், கேட்டால் வெளியே இருந்து வந்த மதம் என முத்திரை குத்தப்படும், அப்போ சுராஷ்டிரர் உருவாக்கிய பாரசீக மதம் வெளியே இருந்து வந்தது தானே. வாசுதேவ குடும்பகம் (உலகம் முழுவதும் ஒரு குடும்பம்) என்ற கொள்கைக்கு அப்போ என்ன அர்த்தம்.கிறிஸ்தவத்தை நீங்கள் கோட் சூட் போட்ட வெள்ளைக்கார மதமாக ஏன் நினைக்கிறீர்கள். அதுவும் மத்திய ஆசியாவில் உருவான மார்க்கம் தானே.
    இன்றைக்கும் சீதா ராம் கோயல், எம் எஸ் என் மேனன், கோன்ராட் எல்ஸ்ட், தீனா நாத் பத்ரா போன்றோர் கிறிஸ்தவத்தை இகழ்ந்தும், கேவலப்படுத்தியும் தானே பேசி வருகின்றனர்.

  54. What Vatican Radio says about Y Samuel Rajasekhara Reddy’s demise?

    Vatican Radio

    https://www.radiovaticana.org/in2/Articolo.asp?c=313791

    03/09/2009 13.25.06

    Andhra Pradesh Chief Minister killed in copter crash

    (September 3, 2009) The sixty year old Andhra Pradesh state Chief Minister Y.S.R. Reddy, a powerful Indian politician and four other people were killed when their helicopter crashed in the dense jungles of southern India during a pounding rainstorm, on Wednesday, 2nd of September. On Thursday morning, commandoes and police finally reached the site of the crash after hacking through the jungles and found the bodies of all five people who had been on the aircraft, including Dr. Reddy. Television also reported that five bodies had been found at the site about 275 kilometres south of the state capital, Hyderabad. The privately owned helicopter took off from Hyderabad and lost contact with air traffic controllers about 45 minutes into the flight. Reddy, who was surveying drought conditions in some of the remote parts of the state. Dr Reddy belongs to Prime Minister Manmohan Singh’s ruling Congress Party. A devout Christian in Hindu-majority India, and a medical doctor by profession, Reddy worked his way into the Congress leadership over the past three decades by taking up the cause of poor farmers and landless labourers. He has built several educational institutions and handed them over to Loyola Academy run by the Jesuits. Mgr. Marampudi Joji, archbishop of Hyderabad, said that the Church of Andhra Pradesh has lost a champion of the oppressed and a champion of the rights of Dalit Christians. The chief minister understood their suffering and injustices they bore. Only a few days ago, on 26 August, he had sponsored a motion to the state’s official central government in New Delhi, asking that Christian Dalits be ensured the same rights as Hindu Dalits. The bishop of Hyderabad, describes the Chief Minister as “a model politician and leader. All have benefited from his inclusive politics, especially the poor and marginalized. He has never acted to discriminate on the basis of caste or creed”. A Christian who was "never afraid to declare his faith", Reddy was frequently threatened by extremist groups who did not accept his policy of equality.

  55. நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது?

    ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் உங்க‌ள் மார்க்கம் பெருவாரியாக பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. கிரிஸ்து இவ‌ர்க‌ளை எல்லாம் சொர்க‌த்தில் சேர்ப்பாரா?

    நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது!

    2000 வருட‌ங்க‌ளாக‌ நீங்க‌ள் மார்க்க‌ப் பிரச்சார‌ம் செய்த‌ அழ‌கில்தான் அவ‌ர்க‌ள் இந்த மானாவாரி ம‌ன‌ம் போல‌ உற‌வு என்று, வில‌ங்குக‌ளே ப‌ர‌வாயில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு சீர் கெட்டு உள்ள‌ன‌ர்.

    ஐரோப்பியர் அமெரிக்கர், மார்க்கத்தில் இருந்து (அந்த மார்க்கத்தால் அவர்கள் சமுதாயமே கெட்ட போதும்) பட்டது போதும், இப்போதாவது தப்பிப்போம் என்று விடு பட்ட நிலையிலே உள்ளனர்.

    இப்போது இங்கே ஒழுங்காக‌ குடும்ப‌ம் குட்டி என்று வாழ்க்கை ந‌ட‌த்தும் எங்க‌ள‌யும் கெடுக்க‌ பார்க்கிறீர்க‌ள்!

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    உங்க‌ள் வழியில் போனால் நாங்க‌ள் நிச்ச‌ய‌ம் ந‌ர‌க‌த்துக்குத்தான் போக‌ முடியும்!

    உங்க‌ள் வ‌ழி ந‌ர‌க‌த்துக்கான‌ வ‌ழி,

    என் வ‌ழி ந‌ன்மைக்கு ச‌ரியான‌ வ‌ழி!

  56. //வெள்ளையர்கள் இன்று மன நிம்மதியில்லாமல் இருப்பதற்கான காரணம் அவர்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
    1) குடிக்காதே
    2) விபச்சார எண்ணமே பாவம்
    3) முறையற்ற பாலுறவு தவறு
    4) உலக செல்வங்கள் மேல் நம்பிக்கை வைக்காதே, நித்திய ஜீவனையே நாடு
    இது மாதிரியான போதனைகள் அவர்கள் சமுதாயம் கெட்டுவிட்டதாக்கும், என்னய்யா இது உங்களுக்கே அ நியாயமா தெரியல. அதுபோக பல பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு இறை பக்தியை ஊட்டி வளர்ப்பதில்லை, அது தேவையில்லை என்பதை விட அது முக்கியமல்ல என்பதே பிரதான எண்ணம்//

    அப்படியானால் உங்களின் வழி முறையால் நல்ல சமுதாயத்தைச் உருவாக்க முடியவில்லை என்பதுதானே உண்மை?

    (வெள்ளையர்கள் அவர்கள் ஒன்றும் மன நிம்மதி இல்லாமல் இருப்பது போலத் தெரியவில்லையே! அவர்கள் நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள்- விட்டது தொல்லை என்ற நிலையில்)

    பெற்றோர் வூட்டி வளர்க்கிரார்களோ, இல்லையோ 2000 வருடமாக திருச் சபைகள், எவான்கலிஸ்தடுகள், கத்தோலிக்கம், லூத்திரனஸ், பெந்தொகொஸ்தெ, கிரேக் ஆர்தோடக்ஸ்… இப்படியாக எல்லோரும் சேர்ந்து உருவாகிய மக்கள் சமுதாயத்தின் இலட்சணம் இதுதான்.

    இப்போது நீங்கள் இயேசு கிருஸ்துவிதம் போய், கூறப் போவது என்ன?

    ” ஐரோப்பியர்களை, அமெரிக்கரை எங்களால் குடும்ப வாழ்க்கைக்கு திருப்பி சரியான கிறிஸ்தவர்கள் ஆக்க இயலவில்லை. அதனால் ஏற்கனவே 8000 வருடங்களாக குடும்ப வாழ்க்கை நடத்திய சமுதாயத்தினரின் கையிலே பைபிளை குடுத்து விட்டோம், இவ்வாறாக சரியான கிருஸ்தவர்களை உருவாக்கி விட்டோம்” என்று கூறப் போகிறீர்களா?

    இங்கேயும் பிற சமுதாயத்தினரை விட கிருஸ்தவ சமுதாயத்தினர் அதிக அளவில் மேற்க்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் வாய்ப்பு உள்ளது.

    இஸ்லாமியரின் காலச்சாரம் அரேபிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். அப்படிப் பார்த்தால் கிருஸ்தவர்களுக்கு கலாச்சாரம் என்றால் அது மேற்க்கத்திய கலாச்சாரம் தவிர வேறு இல்லை.

    எனவே இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்களும் மேற்க்கத்திய கிருத்துவரின் வாழ்க்கை முறைக்கு முழுவதும் மாற எல்லா சாத்தியங்களும் உள்ளன.

    அப்படி இந்தியாவில் ஏற்கனவே குடும்ப வாழ்க்கை நடத்தியவரையும், மார்க்கத்தை மாற்றி விபச்சாரக் கலாச்சாரத்தில் புகுத்திய நிலையில் அப்போது நீங்கள் இயேசு கிருஸ்துவிதம் போய், கூறப் போவது என்ன? அதிக பட்சமாகவே
    ” ஆண்டவனே, இது சாத்தானின் வேலை ” என்று சமாளிக்கலாம்.

    அப்போது இயேசு பிரதியுத்தரமாக,

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, எவாங்கிலிஸ்ட்களே, சுவிசேஷகர்களே உங்களுக்கு ஐயோ! ஒவ்வொருவனையும் உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிந்தீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்கி விட்டீர்கள் ” என்று சொல்வாரா மாட்டாரா?

  57. நண்பரே வார்த்தைகளை கோபத்தில் கொட்ட வேண்டாம், என்னவோ இங்கு உள்ள கிறிஸ்தவரெல்லாம் முறைதவறி நடக்கிறார்கள் என்றல்லவா உங்கள் கருத்து இருக்கிறது. ஆதி முதல் கிறிஸ்தவம் பரவியிருந்த இடங்களில் (2000 வருடம் முன்பு இருந்த ஆசிய மைனர் பகுதிகளில், வட மேற்கு ஆப்பிரிக்காவில்) கிறிஸ்தவர்கள் தவறான விபசார வழியில் நடக்கிறார்கள் என உங்களால் காண்பிக்க முடியுமா. அவ்வாறு இருக்கும் வெள்ளைக்காரன் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறானாக்கும். கிறிஸ்துவின் போதனைகளில் வேசி மார்க்கத்தாராய் நடவுங்கள் என எங்காவது கூறப்பட்டுள்ளதா? கிறிஸ்தவனை குறை கூறுங்கள் ஆனால் கிறிஸ்துவின் போதனைகளை குறை கூறவேண்டாம்.
    கிறிஸ்தவ வழி நரகத்துக்கு போகும் வழி என ஆத்திரப்பட்டு கூறாதீர்கள்
    ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் கடவுளுக்கு பயந்த கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முறைதவறி வாழ்க்கையை சீர்கெடுத்துக்கொண்ட வாலிபரிடம் அங்குள்ள சபையானது நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுதான் வருகிறது.
    எனவே மேலை நாட்டவரின் கலாச்சார சீர்கேட்டுக்கு கிறிஸ்தவத்தை இழுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், அப்படி செய்வது இந்திய கிறிஸ்தவரையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது

  58. இந்திய பெரு நகரங்களில் முறைதவறிய உறவுகளும், குடித்து வெறித்து விபசார வழியில் செல்லும் நபர்கள் இருக்கிறார்கள், இதற்கு இந்து மதத்தை யாராவது குறை கூற முடியுமா, அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளும், பாலியல் வன்முறைகளும், முறைதவறிய உறவுகளால் நடக்கும் படுகொலைகளுக்கும் மதத்தை தானா இழுப்பீர்கள், நல்லா இருக்குதைய்யா உங்க நியாயம்.

  59. //ஏனுங்க நீங்க கிறிஸ்துவையும் ஒரு தெய்வமாக ஏத்துக்கறீங்க, சர்ச்சுக்கு வருவதையும் நீங்கள் தவறாக நினைப்பதில்லை சந்தோஷம் தான், எனக்கும் இந்துக்களான பல உறவினர்கள் உண்டு, எங்கள் உறவுகளில் பாதி பேர் இந்துக்களே, சிறுவயதிலேயே ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் குறைந்தது 5 தடவைகளாவது படித்து இருக்கிறேன், இப்போதும் எங்கள் வீட்டில் பகவத் கீதை உள்ளது. இந்துக்களை நான் எதிரிகளாக பார்ப்பவனல்ல, அப்படி கிறிஸ்துவும் போதிக்கவில்லை. ஆனால் எனது தனிப்பட்ட ஆத்தும் மீட்புக்கு கிறிஸ்துவின் வழி ரட்சிப்பை ஏற்றதாக காண்கிறேன், இயேசுவால் நான் பெற்ற வற்றை மற்றவருக்கு சொல்வதின் எனக்கு தயக்கம் இருப்பதில்லை அதை ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இந்து மதத்திலேயே சைவம் வைணவம் என்ற பிரிவுகள் ஒன்றையொன்று நிராகரித்து வந்துள்ளன (இப்போது வேண்டுமனால் இல்லாமல் இருக்கலாம்). சிவ வழி கைலாசமும், நாராயணன் வழி வைகுந்தமும் அவரவர் அடியவருக்கு பெரிதாக இருந்தது. இறைவனே இல்லை என சொல்லும் நாத்திகமும் இப்பாரத பூமியில் இருந்து வந்துள்ளது, இருக்கிறது, இதையெல்லாம் ஏற்று கொள்பவர்கள் கிறிஸ்துவின் வழி ரட்சிப்பை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறீர்கள்//

    ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ரா இருக்கீங்க‌. ஆனால் உண்மையிலே நீங்க‌ள் இயேசுவின் பெய‌ரால் “இயேசுவால் நான் பெற்ற வற்றை மற்றவருக்கு சொல்ல‌ வ‌ரும் செய்தி” என்ன‌?

    நாங்க‌ இயேசு கிரிஸ்துவை புரிந்து தானெ இருக்கிறொம்? அவ‌ர் கூறீய க‌ருத்துக்க‌ள பின்ப‌ற்றிக் கொன்டுதானெ இருக்கிறொம்?

    இயேசு கிருஸ்த்து கூறிய‌ சிற‌ந்த‌ க‌ருத்துக்க‌ள், இந்து ம‌த‌த்த‌வ‌ர் பின்ப‌ற்றும் க‌ருத்தோடு ஒத்துதானே இருக்கிற‌து!

    இயேசு கிருஸ்து “உன் ச‌கொத‌ர‌னோடு வ‌ழ‌க்கு இருந்தால் முத‌லில் அவ‌னுக்கு கொடுக்க‌ வேண்டிய‌தைக் கொடுத்து அவ‌னுட‌ன் ச‌மாதான‌மாகி பிற‌கு இறைவ‌னிட‌ம் வ‌ந்து ப‌லியை செலுத்து” என்றார்.
    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே, த‌ன் பேரில் த‌வ‌றே இல்லாத‌ போதும், த‌ன் த‌மைய‌னிட‌ம் காலில் விழுந்து அர‌சை ஆளுங்க‌ள் என்று க‌த‌றினார் ப‌ர‌த‌ன் சாமி.

    இயேசு கிருஸ்து “த‌ன்னை ம‌றுத்து த‌ன் சிலுவையை சும‌ந்து கொண்டு என்னைப் பின் தொட‌ர‌ட்டும்” என்றார்.

    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே த‌ன்னை ம‌றுத்து தான் துன்ப‌ங்க‌ளை த‌ய‌ங்காம‌ல் ஏற்று காடு சென்றார் இராம‌ர் சாமி.

    “ஒருவ‌ன் ஒரு பெண்ணை இச்சையுட‌ன் பார்த்தாலே அவ‌ன் விப‌ச்சார‌ம் செய்த‌வ‌ன் ஆவான்” என்றார் இயேசு கிருஸ்து!
    த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ வேறு எந்த‌ப் பெண்ணையும் ம‌ன‌தாலும் நினையாம‌ல் வாழ்ந்த‌வ‌ர் இராம‌ர் சாமி.

    என‌வே இந்துக்க‌ள் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ சிற‌ப்பாக‌ க‌ருதிப் பின்ப‌ற்றி வ‌ந்த‌ கொள்கைகளும், இயேசு கிருஸ்துவின் கொள்கைகளும் ஒன்றாக‌த் தானே உள்ள‌து. இதில் நீங்க‌ள் புதிய‌தாக‌க் கூற‌ வ‌ருவ‌து என்ன‌?

    இயேசு கிருஸ்துவின் பெய‌ராலே வெறுப்புக் க‌ருத்துக்க‌ளையும், காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளையும் பிர‌ச்சார‌ம் செய்து, எங்க‌ளையும் கெடுத்து, இயேசு கிருஸ்துவுக்கும் அதிக‌ வேத‌னையை உண்டாக்க‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் த‌வ‌றா?

  60. இங்கு உள்ள கிறிஸ்தவனும் ஒழுங்காக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என்று தான் வாழ்க்கை நடத்துகிறான்

  61. What Christian Today say about Y Samuel R Reddy?

    Editorial
    View: Reddy’s death undeniably a colossal loss for Christians

    https://in.christiantoday.com/articles/view-reddys-death-undeniably-a-colossal-loss-for-christians/4481.htm

    The death is more of a shock and cause of grief to the Christian community who slowly-yet-surely had found a pillar of support at the highest level of the Government in this really fearful and tumultuous time.

    Church leaders in India would agree that it would take another decade to find a peer commensurate with Reddy

    If Reddy’s death is the greatest loss in the political circle, the same goes for Christians whose pleas had been humbly addressed and grievances punctually redressed by the deceased leader.

    The chief minister was praised and thanked by leading Christian councils.

    It was not an outright move. Th

    To all, Reddy promised action. Apparently he had even promised to lead a Christian delegation to New Delhi to speak to the highest authorities ….

    Following his visit to Delhi with a delegation, it was pertinent that Minister for Minorities came out with a statement acknowledging….

    Further, a perusal of his contributions in his own state evinces more. The chief minister apart from taking gargantuan tasks that brought unprecedented development had pioneered scores of initiatives for Christians. “He set up the A.P. State Christian Finance Corporation which is first of its kind in the country. He also introduced the novel schemes like Government subsidy to the Holy Land and assistance for Christian Mass Marriages for the first time,” according to Andhra Pradesh Federation of Churches (APFC), a state-level apex body of the Bishops and Heads of Churches of all Christian Denominations.

    Now comes the joke.

    As we are overwhelmed with the feeling of loss and prayers are told for the bereaved families, it is also well timed to enlighten ourselves how tiny we are in this earth, our brilliant techies and technologies which appeared impotent and deficient during that intimidating search operation that we all watched over TV channels. Truly, the meagerness of our intelligence only must amplify our trust in God as we continue to believe him to be the panacea of our lives.

    It says that the technology is impotent and proved deficient, but only God can be the panacea of our lives.

    The question is why God was not a panacea to Y Samuel Reddy’s life?

    It only proves that the abrahamic god is only a poison not to be trusted.

  62. What Christian Today say about Y Samuel R Reddy?

    Editorial
    View: Reddy’s death undeniably a colossal loss for Christians

    https://in.christiantoday.com/articles/view-reddys-death-undeniably-a-colossal-loss-for-christians/4481.htm

    The death is more of a shock and cause of grief to the Christian community who slowly-yet-surely had found a pillar of support at the highest level of the Government in this really fearful and tumultuous time.

    Church leaders in India would agree that it would take another decade to find a peer commensurate with Reddy

    If Reddy’s death is the greatest loss in the political circle, the same goes for Christians whose pleas had been humbly addressed and grievances punctually redressed by the deceased leader.

    The chief minister was praised and thanked by leading Christian councils.

    It was not an outright move.

    To all, Reddy promised action. Apparently he had even promised to lead a Christian delegation to New Delhi to speak to the highest authorities ….

    Following his visit to Delhi with a delegation, it was pertinent that Minister for Minorities came out with a statement acknowledging….

    Further, a perusal of his contributions in his own state evinces more. The chief minister apart from taking gargantuan tasks that brought unprecedented development had pioneered scores of initiatives for Christians. “He set up the A.P. State Christian Finance Corporation which is first of its kind in the country. He also introduced the novel schemes like Government subsidy to the Holy Land and assistance for Christian Mass Marriages for the first time,” according to Andhra Pradesh Federation of Churches (APFC), a state-level apex body of the Bishops and Heads of Churches of all Christian Denominations.

    Now comes the joke.

    As we are overwhelmed with the feeling of loss and prayers are told for the bereaved families, it is also well timed to enlighten ourselves how tiny we are in this earth, our brilliant techies and technologies which appeared impotent and deficient during that intimidating search operation that we all watched over TV channels. Truly, the meagerness of our intelligence only must amplify our trust in God as we continue to believe him to be the panacea of our lives.

    It says that the technology is impotent and proved deficient, but only God can be the panacea of our lives.

    The question is why God was not a panacea to Y Samuel Reddy’s life?

    It only proves that the abrahamic god is only a poison not to be trusted.

  63. //இங்கு உள்ள கிறிஸ்தவனும் ஒழுங்காக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என்று தான் வாழ்க்கை நடத்துகிறான்//

    ச‌ரிதான்.அந்த‌க் க‌லாச்சார‌த்தை எங்கெ இருந்து க‌ற்றீர்க‌ள்? ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்து மத‌த்தைப் பின்ப‌ற்றி வ‌ந்த‌ இந்திய‌ ச‌முதாய‌த்தினுள் இருப்ப‌தாலேயே அப்ப‌டி ஒழுங்காக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என்று தான் வாழ்க்கை நடத்துகிற ப‌டியாக‌ இருக்கிற‌து!

    பெரும்பான‌மையான‌ ம‌க்க‌ள் ஒரு ப‌ண்பாட்டைப் பின்ப‌ற்றும் போது அவ‌ர்க‌ளுட‌ன் ஒன்றாக‌ வாழ்ப‌வ‌ர்க‌ள், அந்த‌க் க‌லாச்சார‌த்தில் இருந்து அதிக‌ம் மாற‌ முடியாது.

    ஆனால் இந்துக்க‌ள் எண்ணிக்கை குறையுமானால், அப்போது எந்த‌ ம‌த‌ம் பெருவாரியாக‌ இருக்கிர‌தோ அந்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌ இட‌த்தின் ப‌ண்பாட்டின் தாக்க‌ம் அதிக‌மாக‌ இருக்கும்.

    இஸ்லாமிய‌ர் அதிக‌மாக‌ இருந்தால் கூட‌ குடும்ப‌ வாழ்க்கை முறையே இருக்கும். ஆனால் ப‌ல‌தார‌ ம‌ண‌ முறை அதிக‌மாகும்.

    கிருஸ்த‌வ‌ர் எண்ணீக்கை அதிக‌மானால் மேலை நாட்டின‌ரின் ப‌ண்பாட்டின் தா‌க்க‌ம் அதிக‌மாக‌ இருக்கும்!

  64. வணக்கம்,
    //இயேசு கிருஸ்துவின் பெய‌ராலே வெறுப்புக் க‌ருத்துக்க‌ளையும், காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளையும் பிர‌ச்சார‌ம் செய்து, எங்க‌ளையும் கெடுத்து, இயேசு கிருஸ்துவுக்கும் அதிக‌ வேத‌னையை உண்டாக்க‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் த‌வ‌றா?//
    நண்பர் திருசிக்காரரின் கேள்விக்கு
    // இங்கு உள்ள கிறிஸ்தவனும் ஒழுங்காக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என்று தான் வாழ்க்கை நடத்துகிறான்// இது சரியான பதிலில்லையே.

  65. களிமிகு கணபதி அவர்களே,

    திரு.இராஜசேகர ரெட்டி அவர்கள் கிறித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை விமர்சனங்களா..?

    // It says that the technology is impotent and proved deficient, but only God can be the panacea of our lives.

    The question is why God was not a panacea to Y Samuel Reddy’s life?

    It only proves that the abrahamic god is only a poison not to be trusted.//

    இதே விமர்சனத்தை காலஞ்சென்ற திரு.இராஜீவ் அவர்களின் கோர மரணத்துக்கும் செய்வீர்களா..?

    நீங்கள் நம்பும் எந்த கடவுள் தான் இவற்றுக்கு பதில் சொல்லமுடியும்?

    பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு நம்மை நாம் சமாதானம் செய்துகொள்ள விதவிதமான தத்துவங்களை செய்துவைத்துள்ளோம்.

    ஒருவேளை திரு.இராஜசேகர ரெட்டி அவர்கள் இந்துவாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்றாவது யாராவது சொல்லமுடியுமா?

    சாதாரண மனுஷ்ய ஞானத்துக்கு இவை புலப்படாது;

    இந்த நிலையில் “ஆபிரகாமிய கடவுள்” என்று யாரைச் சொல்லுகிறீர்களோ அவரே உங்களுக்கும் கடவுளாக இருந்தால் உங்கள் கதி என்னவாகும்?

    ஏனெனில் ஆபிரகாமின் மூன்றாம் மனைவியின் சந்ததியினரே இந்தியத் திராவிட இனம் என ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது;

    “ஆபிரகாமிய கடவுள்” விஷம் எனில் “விஷ்ணு” உண்ட ஆலகால விஷம் எது?

    1948 ல் சுதந்தரம் பெற்ற “இஸ்ரேல்” தேசத்தின் இன்றைய மேன்மையைக் கண்டபிறகும் அவர்களது முன்னோரின் (“ஆபிரகாமிய கடவுள்”) கடவுளைக் கண்டு மரியாதை வரவில்லையா?

    எந்த வளமும் இல்லாத அந்த தேசத்தின் ஏற்றத்துக்குக் காரணம் என்ன‌?

    எல்லாம் இருந்தும் சுமார் 3000 வருட பக்தி இயக்க பாரம்பரியம் இருந்தும் இந்தியா ஏன் முன்னேறவில்லை?

    இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கும்,விஞ்ஞான வளர்ச்சிக்கும் அவர்கள் பங்காற்றவில்லையா?

    ஒருவன் தன் நாவை அடக்காமல் தன்னை பக்திமான் என்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் என வேதம் கூறுகிறது.

  66. அருமை நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர்கள்கிலாடியார், ஜோசெப், அசோக் குமார் ஆகியோர்களுக்கு நான் இங்கே வேண்டுமென்றே மட்டம் தட்டும் வகையில் எழுதுவது போலத் தோன்றலாம்.

    ஆனால் நான் எல்லோரையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆன்மீக விசயத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் எதையும் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஒத்துக் கொள்வது கிடையாது. நமக்கு ஆன்மீகமும் ஒரு அறிவியலே!

    ஆன்மீக ஆராய்ச்சிகளை பல்லாயிரம் வருடங்கள் செய்த நாடு நம் நாடு.

    நம்மிடம் வந்து ஒரு நூலைக் குடுத்து அதில் உள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    அதுவும் அந்த நூலில் முக்கியமாகக் கூறப் பட்டுள்ள விடயம் என்ன என்றால், அது யூதர்களின் வரலாறு தான்.

    யூதர்கள் எங்கே போய் அடிமையாக இருந்தார்கள்?

    யூதர்கள் எப்படித் தப்பி வேறு இடம் சேர்ந்தார்கள்?

    யூதர்கள் யார் யாருடன் சண்டை போட்டார்கள்?

    இவர்களுக்கு ராஜாவாக இருந்தது யார்-

    இதைப் போன்ற தகவல்களைத் தரும் நூலை வரலாற்று நூல் என்ற வகையில் வைக்க வேண்டிய நூலை, இந்த வரலாற்றோடு, சகிப்புத் தன்மையை அழிக்கும் காட்டு மிராண்டிக் கருத்துக்களும் அதிக அளவில் உள்ள நூலை, ஆன்மீக நூல் என்று நம் தலையில் கட்டப் பார்த்தால், நாம் அதை எதிர்க்காமல் இருக்க முடியுமா?
    இந்த நூலை ஆன்மீக நூல் என்றால் – அதை ஒத்துக் கொள்ளும் அளவுக்கா நாம் வெகுளியாக இருக்கிறோம்?

    இவர்களின் காட்டு மிராண்டிக் கருத்துக்களை மட்டுறுத்தல் செய்யத்தான் யூதர்களின் நடுவிலே, யூதராகவே இயேசு கிறிஸ்து அவதரித்து, தன்னால் முடிந்த அளவுக்கு யூதர்களை நாகரீகமுள்ள சமுதாயமாக மாற்ற முயன்றார்.

    ஆனால் அவரை சிலுவையில் யூதர்கள் அறிந்து விட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய‌ப் ப‌ட்ட‌து ந‌மக்கும் வ‌ருத்த‌த்தை அளிக்கும் ஒரு நிக‌ழ்வுதான். ஆனால் நாம் அத‌ற்க்காக‌ யூதர்கள் ப‌ழி வாங்க‌ப் ப‌ட‌க் கூடாது என்றே க‌ருதுகிரோம்.

    இது எல்லாம் யூத‌ரின் வ‌ர‌லாற்று நிக‌ழ்வுக‌ள்.

    இயெசுவின் க‌ருத்துக்க‌ள் எல்லாம், மனித‌ன் அன்றாட‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌தைக் குறித்த‌ அறிவுரைக‌ள். ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளியில் முத‌ல் வ‌குப்பில் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஆசிரியை, “ப‌க்க‌த்தில் இருக்கும் மாண‌வ‌னைக் கிள்ள‌க் கூடாது, தின‌மும் காலையில் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌தும் ஆசிரிய‌ருக்கு வ‌ண்க்க‌ம் செலுத்த‌ வேண்டும்” என்ப‌து போன்ற‌ அறிவுரைக‌ள்!

    பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்தும் த‌குதியும், திற‌மையும் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த‌து என்றாலும், அத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை.

    ஆனாலும் இயேசு கிரிஸ்து ஒரு அருமையான‌வ‌ர், அற்புத‌மான‌வ‌ர், அவ‌ரைக் க‌ட‌வுள் என்று வ‌ழிப‌ட‌ எம‌க்கு த‌ய‌க்க‌ம் இல்லை.

    யூத‌ருக்கு அடைப்ப‌டை நாக‌ரீக‌ம் அளித்து காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளில் இருந்து அவ‌ர்‌க‌ளை விடுவிக்க‌வே இயேசு கிரிஸ்து முய‌ன்றார்.அதற்க்கே அவ‌ருக்கு நேர‌ம் ச‌ரியாக‌ இருந்த‌து. ஆனால் அவரையே சிலுவையில் யூதர்கள் அறிந்து விட்டனர்.

    இதிலே முஹ‌ம்ம‌து ந‌பியான‌வ‌ர், மெக்காவிலிருந்து த‌ப்பி யூத‌ர்க‌ளை அடைந்து அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை அறிந்து, அவ‌ர்க‌ளுக்கும் அரேபிய‌ர்க‌ளுக்கும் ஒப்பும் வ‌கையிலே, யூத‌ரின் நூலை அடைப்ப‌டையாக‌ வைத்தே பெய‌ரை எல்லாம் அர‌பிய‌ மொழியிலெ மாற்ற‌ம் செய்து, ஆபிர‌காமை- இப்ர‌ஹிம் என்றும், மோச‌சை- மூசா என்றும் வைத்து “புதிய‌” மார்க்க‌த்தை துவ‌ங்கினார்.

    இப்ப‌டி செய்வதால் யூத‌ரும் த‌ன்னோடு இருப்பார்க‌ள், அரேபிய‌ரின் ப‌ழ‌க்க‌த்துக்கு ஏற்ப பல‌ ம‌னைவிக‌ள் திரும‌ண‌ம் செய்ய அனும‌தி என்று எல்லாம் புரொவிச‌ன் வைத்தார். ஆனால் ந‌பியோடு சேர‌ யூதர்கள் விரும்ப‌வில்லை!

    கிருஸ்தவ ம‌த‌ம் என்ற‌ பெய‌ரில் இயெசு கிருஸ்துவுக்கு பெய‌ர‌ளவில் இட‌ம் கொடுத்த‌ ஐரொப்பிய‌ரும், முஹ‌ம‌திய‌ ம‌தத்தைப் பின்ப‌ற்றிய‌ அரேபிய‌ரும்‍- ஒரே க‌ட‌வுள் தான் ‍- ‍அது யார் க‌ட‌வுள் என்று பார்த்து விடுவொம்- என்று வாளை உருவி, கொடும் போர்க‌ளில் இற‌ங்கின‌ர்.

    ஆனால் இந்த‌ பாலைவ‌ன‌ ம‌த‌ங்க‌ள் உருவாவ‌த‌ற்க்குப் ப‌ல்லாயிர‌ம்‌ வ‌ருட‌ங்கள் முன்பே ஆன்மீக‌ ஆராய்ச்சியில் சிற‌ந்து விள‌ங்கிய ந‌ம்மிட‌ம் வ‌ந்து, இப்படிக் காட்டுமிராண்டித் த‌ன‌மும், பைத்திய‌க்கார‌த் த‌ன‌மும் நிறைந்த‌ க‌ல‌க்க‌ல் ச‌ர‌க்கை
    இவ‌ர்க‌ள் ந‌ம்மிட‌ம் அழுத்தி திணிப்ப‌து ஏன்?

  67. The boast of heraldry the pomp of power
    And all that wealth ever gave
    Await alike the inevitable hour
    Paths of glory lead but to the grave
    —–Thomas grey

  68. // அருமை நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர்கள் கிலாடியார், ஜோசப், அசோக் குமார் ஆகியோர்களுக்கு நான் இங்கே வேண்டுமென்றே மட்டம் தட்டும் வகையில் எழுதுவது போலத் தோன்றலாம். //

    திருச்சிக்குப் பக்கத்தில் முந்திரிக் காடுகள் அதிகம் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்; அதன் பாதிப்பு சிலருக்கு வந்துவிடுகிறது;
    போகட்டும்,பரவாயில்லை;

    ஆனாலும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவதென்னவென்றால், யாரும் யாரையும் மட்டந்தட்ட முடியாது; இது வெறும் “காமெண்ட்” பகுதிதான்;

    எனவே மூளையை ரொம்ப சூடாக்கிக் கொள்ளாமல் தங்கள் கருத்தினைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொண்டால் போதும்;

  69. // “ஆபிரகாமிய கடவுள்” விஷம் எனில் “விஷ்ணு” உண்ட ஆலகால விஷம் எது? //

    திருத்தி வாசிக்கவும்:
    “ஆபிரகாமிய கடவுள்” விஷம் எனில் “சிவன்”(நீலகண்டன்) உண்ட ஆலகால விஷம் எது?

  70. //பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்தும் த‌குதியும், திற‌மையும் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த‌து என்றாலும், அத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை.//

    ஆடு நனையுதே என ஓநாய் அழுததாம்..!

    கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 500 வருடமுன்பே கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ்,பிளாட்டோ…போனறோருடைய போதனைகளால் அறிவு செறிவடைந்திருந்த காலக் கட்ட‌த்தில்தான் இயேசுகிறிஸ்து பிறந்தார்;
    அவர் கற்கால யுகத்தில் பிறக்கவில்லை;ஆனால் அவராக விரும்பி ஏழை,எளிய மக்களைத் தன் களமாக்கிக் கொண்டார்;

    யூத மத அறிஞர்கள் அவரிடம் வந்து வாதிட்டனரே தவிர அவர் யாருடனும் வாக்குவாதம் செய்யவில்லை;
    யாருடனும் போராடவில்லை;
    யாருக்கும் போதிக்கவுமில்லை;

    தமது போதனைகளை எளிமையான உவமைகள் மூலமும் உதாரணங்கள் மூலமும் நிறுவினார்; மற்றபடி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேள்வியையே பதிலாகத் தந்து மார்க்க அறிஞர்களையே தடுமாறச் செய்தவ‌ர்;

    //யூத‌ருக்கு அடைப்ப‌டை நாக‌ரீக‌ம் அளித்து காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளில் இருந்து அவ‌ர்‌க‌ளை விடுவிக்க‌வே இயேசு கிறிஸ்து முய‌ன்றார்; அதற்கே அவ‌ருக்கு நேர‌ம் ச‌ரியாக‌ இருந்தது; ஆனால் அவரையே சிலுவையில் யூதர்கள் அறைந்து விட்டனர்.//

    ஐயோ பாவம்,இயேசுகிறிஸ்துவின் மீது என்னே அக்கறை,உங்களுக்கு..!
    அவரை யாரும் சிலுவையில் அறையவில்லை;
    அவர்தம்மைத் தாம் “பாவப் பரிகார பலி”யாக ஒப்புக்கொடுத்தார்,என வேதம் சொல்லுகிறது;

    நீங்கள் யூதர்களின் வெறும் வரலாற்றுப் புத்தகம் எனப் பழிக்கிற அதே சாதாரண புத்தகத்தில்தான் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 700 வருடத்துக்கு முன்பதாகவே தீர்க்கன் ஒருவனால் இந்த செய்தியானது பதிவு செய்யப்பட்டுள்ளது;

    இதுவும் கூட கட்டுக்கதையல்ல என்பதனை நிரூபிக்கும் வண்ணமாக இந்த நவீன காலத்தின் அகழ்வாராய்ச்சியில் அதன் முழுப் பிரதியும் தோற்சுருளாக ஒரு மண்கலயத்திலிருந்து கிடைத்துள்ளது;அதனுடன் சுமார் 4000 வருடமாக யூதர்கள் பயன்படுத்தும் ஏன் இயேசுகிறிஸ்துவும் கூட பயன்படுத்திய வேதப் பிரதிகள் மிகச் சரியாக ஒத்துள்ளது;

    யூதர்களின் தண்டனை முறையானது கல்லெறிதல் ஆகும்;
    ஆனால் தீர்க்கரின் வாக்குப்படி இயேசுவானவர் தனது முழு இரத்தத்தையும் சிலுவை மரத்தில் சிந்தியாக வேண்டும்;

    அதற்கு ஏற்ப அவர் ரோம சாம்ராஜ்ய காலத்தில் வந்து பிறந்தார்;
    காரணம் அவர்கள் கண்டுபிடித்த கொடூரமான தண்டனை முறை தான் சிலுவையறைதல்;

    இப்படி இன்னும் நிறைய உண்டு;

  71. யூதர்கள் பலர், காட்டுமிராண்டி கொள்கையில் இருந்து வந்தவர்கள் அல்ல, பிற இன மக்களை அவர்கள் விரட்டியது தவறு என்றால் நம் நாட்டில் கூட அதற்கு பல உதாரணங்களை கூற முடியும். யூத இனம் தெரிந்தெடுக்கப்பட்ட இனம், ஆனால் அதற்காக அவர்கள் தவறுகள் செய்த போது இறைவன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை, பலமுறை அவர்கள் தண்டிக்கப்பட்டனர், இயேசு என்ற மேசியாவின் வருகை குறித்து பல தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள் அவர்களுக்கு இருந்தும் அவர்கள் அதை உதாசீனம் செய்தனர். கடைசியில் இயேசுவையும் சிலுவையில் அறைந்தனர். 2000 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு 2ம் உலக போரில் ஹிட்லரால் ஏறத்தாழ அழிக்கப்பட்டனர், ஆனாலும் வேத வாக்கியங்களின் படியே அவர்கள் மறுபடியுமாக அவர்களது பூர்வ நாட்டில் குடியமர்த்தப்பட்டனர்.
    ஒன்றை கவனித்தீர்களானால் ஆச்சரியப்படுவீர்கள் உலக முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் பல்வேறு துறைகளில் யூதர்கள் மற்றும் பிராமண சமுதாயத்தினரின் பங்கு அதிக அளவில் இருக்கும். இவ்விரு கூட்ட மக்களுமே ஒரே வழித்தோன்றலில் இருந்து வந்தவர்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
    ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் பல ஆண்டுகளாக யூத ஆதரவு நிலையையே எடுத்து வந்திருக்கின்றன, நீங்கள் காட்டுமிராண்டிகள் என சொன்ன அதே யூதரை தார்.
    இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து இந்து வேதங்களிலேயே முன்னறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் அதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்

  72. //ச‌ரிதான்.அந்த‌க் க‌லாச்சார‌த்தை எங்கெ இருந்து க‌ற்றீர்க‌ள்? ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்து மத‌த்தைப் பின்ப‌ற்றி வ‌ந்த‌ இந்திய‌ ச‌முதாய‌த்தினுள் இருப்ப‌தாலேயே அப்ப‌டி ஒழுங்காக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என்று தான் வாழ்க்கை நடத்துகிற ப‌டியாக‌ இருக்கிற‌து//
    ஏன் நம் நாட்டிலேயே பலதார மணம் போன்றவை இருந்திருக்கிறதே. கிறிஸ்த‌வ‌ம் ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை ஆத‌ரித்த‌தில்லை

  73. ஆத்தும மீட்புக்கு உண்டான வழியை கூறுகிறோம், அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம், மற்றபடி கட்டாயப்படுத்தி, ஆசைகாட்டி மதமாற்றம் செய்வதற்கு நானும் எதிரிதான். தங்களது மதத்தை பிரசாரம் செய்ய அனைத்து மதத்தவருக்கும் உரிமை உள்ளது, கிருஷ்ண பக்தி இயக்க நிறுவனரான பிரபுபாதா சுவாமிகள், கீதை உண்மையுருவில் என்ற நூலின் அறிமுக பக்கங்களில் “ஒருவன் கீதையை புரிந்துகொள்ள வேண்டுமானால் அவன் பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார், இது மதமாற்றத்துக்கான முதற்படியா, இல்லை என்பது தான் என் கருத்து. கிருஷ்ணரின் போதனைகளை அறிந்துகொள்ள ஒருவர் அவரை கடவுளாக ஏற்க வேண்டும் என்கிறார், அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம். அதேபோல தான் கிறித்துவத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ள இயேசுவின் வழி மீட்பை ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும், இதுவும் உங்கள் சுய முடிவின் அதிகாரமே, யாரும் உங்களை கட்டாயப்படுத்த போவதில்லை.
    இயேசு தனது போதனைகளில் மனிதன் மரணத்துக்கு பின் அடையப்போகும் மகிமையைப்பற்றி மாத்திரமே இயம்பினார். என் ராஜ்யம் இவ்வுலகத்துக்கு அடுத்தது அல்ல என்றார், என்னை பின்பற்றுவதால் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, இடுக்கமான வாசல் வழியே போக நேரிடும், எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் என்று தான் கூறினார், ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்பதே அவரது போதனை. அழிந்துபோகும் உலக சம்பத்தையோ மேன்மையையோ வைத்து இயேசுவின் பால் யாரையும் அவர் ஈர்க்க சொல்லவில்லை. ஒரு கிறித்தவனுக்கு இவ்வுலக வாழ்வு என்பது கூடார வாழ்க்கை தான்.
    வாளால் கிறித்தவம் பரவியதும் தவறு, ஆசைகாட்டி பரப்பப்பட்டதும் இயேசுவுக்கு ஏற்புடையதல்ல‌.

  74. If you read the writings here , if you know the truth you can understand the ignrance of so called saviours of Hinduism. The writer of the article did not give any proof for anyu conversion happned in AP. Its all hearsay.
    Many Hindus think the rituals in Churches in India are based on Hindu culture. It is not true. All the rituals are taken from Jewish culture. Even before christ was born in this world, plople in Israel used to wear sack and apply ashes all over their body and pray to God as penance. Like this all the rituals followed in Church are from Jewish tradition. In Chritians, Catholic women used to wear “Pottu” as being Indian culture.

  75. //ஏன் நம் நாட்டிலேயே பலதார மணம் போன்றவை இருந்திருக்கிறதே//

    ந‌ம் நாட்டிலே எத்த‌னை பேர் ப‌ல‌தார‌ ம‌ன‌ம் செய்கிறார்கள்? நீங்க‌ள் வசிக்கும் ப‌குதியில், உங்க‌ள் தெருவில் எத்த‌னை பேர் ப‌ல‌ தார‌ ம‌ண‌ம் செய்து உள்ள‌ன‌ர்?

    நுறு குடும்ப‌ங்கள் இருந்தால் அதில் எத்த‌னை குடும்ப‌ம் ப‌ல‌தார‌ ம‌ண‌ம் உள்ள‌து. ஒன்று? இர‌ண்டு?

    யாரோ சில‌ர் ப‌ல‌தார‌ ம‌ண‌ம் செய்வ‌தை வைத்து அதுதான் ப‌ண்பாடு என்று கூறுவ‌து காழ்ப்புண‌ர்ச்சியே!

    //கிறிஸ்த‌வ‌ம் ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை ஆத‌ரித்த‌தில்லை//

    கிறிஸ்த‌வ‌ம் ப‌ல‌தார‌ ம‌ண‌த்தை ஆத‌ரித்த‌தில்லை என்ப‌து ச‌ரியே!

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவக் குடும்ப‌ங்க‌ள், குடும்ப‌ வாழ்க்கை முறையை எங்கிருந்து பெற்றார்க‌ள்?
    அவ‌ர்க‌ளின் பாட்ட‌ன், முப் பாட்ட‌ன் என‌ ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக விடாம‌ல் பின்ப‌ற்றி வ‌ந்த‌ ப‌ண்பாட்டில் இருந்தா? இல்லை அவ‌ர்க‌ளுக்கு புதிய‌தாக‌க் கிடைத்த‌ ம‌த‌த்தில் இருந்தா?

  76. //இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து இந்து வேதங்களிலேயே முன்னறிவிக்கப்பட்டு இருந்தது//

    இது…சாது செல்லப்பாவோட டையலாக்! :-))

    // ஆனால் அதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்//

    ஸோஸப்பு வந்த பிறகு இங்க ஒரே காமடி தான். :-))

  77. அருமை ந‌ண்ப‌ர் ஜோச‌ப் அவ‌ர்க‌ளே,

    //யூதர்கள் பலர், காட்டுமிராண்டி கொள்கையில் இருந்து வந்தவர்கள் அல்ல, பிற இன மக்களை அவர்கள் விரட்டியது தவறு என்றால் நம் நாட்டில் கூட அதற்கு பல உதாரணங்களை கூற முடியும்//

    இதுதான் காட்டு மிராண்டித் த‌ன‌த்துக்கு வ‌க்காலத்து வாங்குவ‌து என்ப‌து.

    இவ்வ‌ளவு ப‌டித்து நீங்க‌ள் கற்ற‌து இது தானா?

    ஒரு ம‌க்கள் கூட்ட‌ம் வாழும் போது, அவ‌ர்க‌ளை அங்கு இருந்து அடித்து விர‌ட்டுவ‌து நியாய‌மா?

    அதுவும் அவ‌ர்க‌ளை விடாம‌ல் ச‌ங்க‌ரிக்க‌ப் ப‌ண்ணு என்று க‌ட்ட‌ளை வேறு.

    த‌ய‌வு செய்து நீதி என்ன‌ என்று சிந்தியுங்க‌ள். நீதியின் ப‌க்க‌ம் இருங்க‌ள்.

    மத‌ப் ப‌ற்று இருக்க‌லாம் . ஆனால் அது ம‌ன‌சாட்சியை, நியாய‌த்தை அழிக்கும் அளவுக்கு இருக்க‌க் கூடாது.

  78. //கிருஷ்ண பக்தி இயக்க நிறுவனரான பிரபுபாதா சுவாமிகள், கீதை உண்மையுருவில் என்ற நூலின் அறிமுக பக்கங்களில் “ஒருவன் கீதையை புரிந்துகொள்ள வேண்டுமானால் அவன் பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்//

    இதை நான் எதிர்க்கிறேன். இது நாகரீக‌ம் அல்ல‌. இது உல‌க‌ அமைதிக்கு எதிரான‌து. கிரிஷ்ண‌ரே அப்ப‌டி “என்னை முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூற‌வில்லை.

    இந்த‌ உல‌கில் யார் என்னுடைய‌ க‌ட‌வுள் மட்டூமே முழுமுதற்கடவுள்/ ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள்/ உண்மையான‌ க‌ட‌வுள் என்று கூறுகிறாரோ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள அறியாம‌லேயே வெறுப்பை, ச‌ண்டையை, வ‌ன்முறையை, அழிவை விதைக்கின்ற‌ன‌ர்.

  79. Hello Trichy kaaran,

    I red your all comments…

    I appreciate you. Because, your all the comments are expressing our Christianity only… not your Hinduism…

  80. அப்பு இதில் காமெடி என்ன இருக்கு அப்போ சாது செல்லப்பா மேற்கோள் காட்டும் வேத மந்திரங்களுக்கு என்ன விளக்கம் வைத்து இருக்கிறீர்கள்?? கன்னி சுத்தாயாய நமஹ, பஞ்சகாயாய நமஹ இதெல்லாம் எப்படி விளக்குவீர்கள்,
    திருச்சிக்காரரே
    நீங்க மட்டும் வெள்ளைக்காரன் பண்ணும் அட்டகாசங்களுக்கெல்லாம் கிறிஸ்தவத்தை காரணமாக்குகிறீர்கள், இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன‌?
    அப்புறம் தேவர்கள் அசுரர்கள் என்ற பேரில் நடந்த போர்களில் பல அசுரர்கள் சூர சம்ஹாரம் செய்யப்பட்டார்களே இது காட்டு மிராண்டித்தனமாக நான் இதுவரை நினைக்கவில்லை ஆனால் நீங்கள் நினைக்க வைத்து விடுவீர்கள் போல‌.
    கானானியர், ஏவியர்,எபூசியர், அமலேக்கியர் போன்றோரின் பழக்கவழக்கங்களை பற்றி பிற வரலாற்று நூல்களை படித்து பாருங்கள் அப்புறம் தெரியும் அசுரர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று.
    துரத்தப்பட்ட ஜாதிகளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்களே அப்போ பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து அசுரர்களுக்கு தராமல் ஏமாற்றப்பட்டது எந்த வகையில் நியாயம், ஏன்னா அப்போ தானே அவர்களை போர் என்ற பேரில் படுகொலை செய்யலாம். இது மட்டும் காட்டுமிராண்டித்தனம் இல்லாமல் வேறு என்ன‌?

  81. வணக்கம்,
    //திரு.இராஜசேகர ரெட்டி அவர்கள் கிறித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை விமர்சனங்களா..?//

    ஸ்ரீ ராஜசேகர ரெட்டி கிறிஸ்துவர் என்ற காரணத்துக்கான விமரிசனங்கள் அல்ல இது,
    அவர் தன் சுய லாபத்திற்காக மக்களை மதம் மாற்ற அதிகார துஷ்ப்ரயோகம் செய்தமைக்கான விமர்சனங்கள்.

    //ஏனெனில் ஆபிரகாமின் மூன்றாம் மனைவியின் சந்ததியினரே இந்தியத் திராவிட இனம் என ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது//

    எந்த ஆராய்ச்சி என்று விளக்க முடியுமா, இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் வெள்ளைக்காரன் எல்லாம் தந்துடையதாக உரிமை கொண்டாட எல்லாமே தனக்கும் தன் மதம் சார்ந்தவைக்கும் என்பது போலவே பல விஷயங்களை சித்தரித்து உள்ளான்.

    //ஒருவன் தன் நாவை அடக்காமல் தன்னை பக்திமான் என்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் என வேதம் கூறுகிறது//

    உண்மை, கடற்கரையிலும் மைதானங்களிலும் கிறிஸ்துவர்கள் தங்கள் நாவை அடக்கட்டும், மாற்றுமதக்கடவுள் சிலைகளை வெறும் கல் என்றும், இந்து கடவுள்கள் எல்லாம் சக்தியற்றவை என்று பஸ் நிறுத்தத்திலும், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளிடமும் பிரச்சாரம் செய்யும் நாக்குகளை அடக்குங்கள் சாமிகளா.

  82. அருமை ந‌ண்ப‌ர் கிளாடி அவ‌ர்க‌ளே,

    //பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்தும் த‌குதியும், திற‌மையும் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த‌து என்றாலும், அத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை.//

    ஆடு நனையுதே என ஓநாய் அழுததாம்..!//

    ஆண்ட‌வ‌ரே இவ‌ர்க‌ளை ம‌ன்னியுங்க‌ள், தாம் செய்வ‌து என்ன‌ என்று இவ‌ர்க‌ள் அறியாம‌ல் இருக்கிறார்க‌ள்!

    //யூத மத அறிஞர்கள் அவரிடம் வந்து வாதிட்டனரே தவிர அவர் யாருடனும் வாக்குவாதம் செய்யவில்லை;
    யாருடனும் போராடவில்லை;
    யாருக்கும் போதிக்கவுமில்லை;

    தமது போதனைகளை எளிமையான உவமைகள் மூலமும் உதாரணங்கள் மூலமும் நிறுவினார்;//

    இதைத் தான் நானும் கூறினேன்!

    இயெசுவின் க‌ருத்துக்க‌ள் எல்லாம், மனித‌ன் அன்றாட‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌தைக் குறித்த‌ அறிவுரைக‌ள். ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளியில் முத‌ல் வ‌குப்பில் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஆசிரியை, “ப‌க்க‌த்தில் இருக்கும் மாண‌வ‌னைக் கிள்ள‌க் கூடாது, தின‌மும் காலையில் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌தும் ஆசிரிய‌ருக்கு வ‌ண்க்க‌ம் செலுத்த‌ வேண்டும்” என்ப‌து போன்ற‌ அறிவுரைக‌ள்!

    //மற்றபடி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேள்வியையே பதிலாகத் தந்து மார்க்க அறிஞர்களையே தடுமாறச் செய்தவ‌ர்//

    கேள்வி கேட்ட‌வ‌ர்கள் -அவ‌ர்க‌ள் மார்க்க‌ அறிங்க‌ர்க‌ளா? மாயாக்கார‌ர்க‌ளா?

    //ஐயோ பாவம்,இயேசுகிறிஸ்துவின் மீது என்னே அக்கறை,உங்களுக்கு..!//

    ந‌ல்ல‌து. உங்க‌ளுக்கு உங்க‌ள் மத‌த்தின் மீது ம‌ட்டும்தான் அக்கறை வரும் போலும். க‌ற்பாறை போன்ற‌ இத‌ய‌ம் உடைய‌வ‌ரா?

    //அவரை யாரும் சிலுவையில் அறையவில்லை;
    அவர்தம்மைத் தாம் “பாவப் பரிகார பலி”யாக ஒப்புக்கொடுத்தார்,என வேதம் சொல்லுகிறது//

    யூத‌ குருமார்க‌ள் , யூதாசின் மூல‌ம் இயேசுவை அடையாளங் க‌ண்டு அவ‌ரை பிலாத்துவினிட‌ம் அழைத்து சென்ற‌ன‌ர். இது குறித்து நான் அதிக‌ம் விவாதித்து இயெசு கிருஸ்துவை கொச்சைப் ப‌டுத்த‌ விரும‌ப‌வில்லை.

    //நீங்கள் யூதர்களின் வெறும் வரலாற்றுப் புத்தகம் எனப் பழிக்கிற அதே சாதாரண புத்தகத்தில்தான் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 700 வருடத்துக்கு முன்பதாகவே தீர்க்கன் ஒருவனால் இந்த செய்தியானது பதிவு செய்யப்பட்டுள்ளது//

    நாம் ப‌ழிக்க‌வில்லை. வ‌ர‌லாற்றுப் புத்த‌க‌த்தை நாம் ஏன் ப‌ழிக்கிறோம்? அதில் என்ன‌ உள்ள து?

    யூதர்கள் எங்கே போய் அடிமையாக இருந்தார்கள்?

    யூதர்கள் எப்படித் தப்பி வேறு இடம் சேர்ந்தார்கள்?

    யூதர்கள் யார் யாருடன் சண்டை போட்டார்கள்?

    இவர்களுக்கு ராஜாவாக இருந்தது யார்-

    இதுதானே?

    தீர்க்க‌ன் உரைக்க‌வில்லை என்றால் இயெசு கிரிஸ்து அவ‌ர்க‌ளைக் க‌ட‌வுள் என்று க‌ருத‌ மாட்டீர்க‌ளா?

  83. சகோதரர் ஜோசெப் அவர்களே,

    //திருச்சிக்காரரே
    நீங்க மட்டும் வெள்ளைக்காரன் பண்ணும் அட்டகாசங்களுக்கெல்லாம் கிறிஸ்தவத்தை காரணமாக்குகிறீர்கள், இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன‌?//

    2000 வருடமாக ஒரு மார்க்கத்தை, புனித நூல், திருச் சபை, பிரசாரகர்கள், அதிகாரம் இப்படிக் கட்டமைப்புகளோடு பிரச்சாரம் செய்து அவர்கள் உறுவாக்கிய சமுதாயத்தின் நிலை என்ன? நான் சொன்னது பொய்யா? இதில் என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கிறது?

    //அப்புறம் தேவர்கள் அசுரர்கள் என்ற பேரில் நடந்த போர்களில் பல அசுரர்கள் சூர சம்ஹாரம் செய்யப்பட்டார்களே இது காட்டு மிராண்டித்தனமாக நான் இதுவரை நினைக்கவில்லை ஆனால் நீங்கள் நினைக்க வைத்து விடுவீர்கள் போல‌//

    அசுரர்கள் பிறன் மனைவியைத் தூக்கிச் செல்வதையும், பல பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவதையும் வாடிக்கையாகச் செய்து பலரைத் துன்புறுத்தி வந்தனர். எனவே அவர்களுக்கு எதிராக நடை பெற்ற போர்கள்- அது அவசியம் தான்- சீதையை இராவணன் தூக்கி சென்றான். விடுவிக்க மறுத்து விட்டான்- அதனால் தான் போர் செய்யப் பட்டது.

    அது ஒரு இனத்துக்கு ஆதரவாக, பல இனங்களை அழிக்க உதவிய செயல் அல்ல.

    கானானியர், ஏவியர்,எபூசியர், அமலேக்கியர்- யூதரின் பெண்களைத் தூக்கிச் சென்றார்களா?

    //கானானியர், ஏவியர்,எபூசியர், அமலேக்கியர் போன்றோரின் பழக்கவழக்கங்களை பற்றி பிற வரலாற்று நூல்களை படித்து பாருங்கள் அப்புறம் தெரியும் அசுரர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று//

    அதிக சிரமம் வேண்டாம். யூதர்களின் வரலாற்று நூலிலேயே குறிப்பிட்டு உள்ளனர். அவர்கள் செய்த தவறு அவர்கள் வேறு தெய்வங்களை வணங்கியதுதான். அதைத் தவிர அவர்கள் இஸ்ரவேலருக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்தாகப் பதிவில்லை. இடங்களைப் பிடிக்க பல இனங்கள் முழுவதுமாக அழிக்கப் பட்டுள்ளன!

    //பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து அசுரர்களுக்கு தராமல் ஏமாற்றப்பட்டது எந்த வகையில் நியாயம்//

    நியாயம் இல்லைதான். அதைக் கடவுள் செய்தாலும் நியாயம் இல்லை என்று கூறும் மனசாட்சி, நேர்மை உடையவன் இந்து.

    //ஏன்னா அப்போ தானே அவர்களை போர் என்ற பேரில் படுகொலை செய்யலாம். இது மட்டும் காட்டுமிராண்டித்தனம் இல்லாமல் வேறு என்ன‌//

    இது உண்மைக்கு புறம்பானது. மக்களைக் கொடுமைப் படுத்தி, துன்புறுத்தி, சித்திரவதை செய்து, பெண்களை வன்புணர்ச்சி செய்த அரக்கர்களிடம் இருந்து மக்களைக் காக்கத் தான் போர் செய்யப் பட்டது. எப்போது அரக்கனாக இருப்பவன் மனம் மாறுகிறானோ அப்போது அவன் அரக்கனாக கருதப் படுவதில்லை.

    அப்பாவிகளைக் காக்க மட்டுமே அரக்கர்களுக்கு எதிராகப் போர் நடத்தப் பட்டது.
    தவறு செய்த தேவர்களும் தண்டிக்கப் பட்டார்கள்.

    //துரத்தப்பட்ட ஜாதிகளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்களே//

    தயவு செய்து நாகரீகத்தையும் மனிதத் தன்மையையும் நினைவு கூறுங்கள். மக்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டதோடு, சங்காரம் செய்யப் பட்டு , இன அழிப்பு நடை பெற்றுள்ளது. இதில் நீங்கள் “துரத்தப்பட்ட ஜாதிகளுக்காக ” என்று இழிவாக பேசுகிறீர்கள்.

    உங்கள் மனதில் நியாயத்தையும் , இரக்கத்தையும் , நீதியையும் உண்டு பண்ண எல்லா தெய்வத்திடமும் வேண்டுவதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

    //யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    நீங்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும். நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை- நீங்கள் எவ்வளவு
    திறமையோடு பேசினாலும்- நாகரிக சமுதாயம் அதை ஏற்காது.

  84. நான் திறமையாக பேசுவதாக எல்லாம் நினைக்கவில்லை ஐயா, நான் ஒரு சாதாரண கிறிஸ்தவன், தமிழன்,இந்தியன்.
    கானானியரை பற்றி நீங்கள் மற்ற நூல்களை படித்து அறிந்திருக்க முடியாது தான், ஓரினச்சேர்க்கை, நரபலி, முறையற்ற உறவுகள், இன்னும் நீங்கள் அசுரர்களை பற்றி கூறிய அத்துணை காரியங்களும் இவர்களுக்கு பொருந்தும் என பைபிள் இல்லை, மற்ற விளக்கங்களே கூறுகின்றன. மோவாபியர் அம்மோனியர் போன்றோர் இஸ்ரவேல் இனத்துக்கு சகோதர முறையோராய் இருந்தும் அவர்கள் இஸ்ரவேலரை அவர்களது தேசத்தை கடந்து செல்ல அனுமதிக்கவில்லை, அவர்கள் மேல் படையெடுத்து வந்தனர், இது போன்ற பல இன்னல்களை இஸ்ரவேலர் சந்தித்தனர்.
    இந்திய கடவுள்களை மட்டமாக பேசும் சிலர் மீது இவ்வளவு கோபம் வருவது உங்களுக்கு இயற்கையே ஆனால் யேகோவா என்ற இஸ்ரவேலின் கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்துவிட்டு இன்றைய இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதை தான் சங் பரிவார அமைப்புகள் செய்து வருகின்றன‌

  85. //2000 வருடமாக ஒரு மார்க்கத்தை, புனித நூல், திருச் சபை, பிரசாரகர்கள், அதிகாரம் இப்படிக் கட்டமைப்புகளோடு பிரச்சாரம் செய்து அவர்கள் உறுவாக்கிய சமுதாயத்தின் நிலை என்ன? நான் சொன்னது பொய்யா? இதில் என்ன காழ்ப்புணர்ச்சி இருக்கிறது?//

    ஆமாம் அவர்கள் நிலை பரிதாபகரமானது தான், இதெற்கெல்லாம் காரணம் அவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு வெளியே வந்ததே. இயேசு அவர்களை குடியுங்கள், விபச்சாரம் செய்யுங்கள், விவாகரத்து செய்யுங்கள், முறையற்ற உறவு கொள்ளுங்கள் என சொல்லவில்லை, இதையெல்லாம் கிறிஸ்தவம் அனுமதிக்காததும் அவர்கள் தங்களது ஞானத்தினால் காரியங்களை சாதிக்கமுடியும் என்று சுய பெருமை கொண்டதுமே அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.
    இன்றைக்கு இந்தியாவிலேயே நடைபெறும் முறையற்ற உறவுகள், அதிகரிக்கும் விவாகரத்துகள், டாஸ்மாக்கில் அலையடிக்கும் கூட்டம், கொலைக்கலாச்சாரம் இதுக்கெல்லாம் மதம் காரணமா, வெள்ளைக்காரன் மதத்தை விட்டு வெளியே வந்து இதை செய்கிறான், இந்தியாவில் நாம் பக்திமான் என கூறிக்கொண்டே இதை செய்கிறோம் ( நான் சொல்வது இந்தியாவில் உள்ள எல்லா மதத்தினரையும் தான்) எனவே மனிதனின் கட்டுப்பாடற்ற தாந்தோன்றித்தனத்துக்கு நீங்கள் மதத்தை காரணமாக கூறமுடியாது.

  86. @Mr.Joseph
    //ஆத்தும மீட்புக்கு உண்டான வழியை கூறுகிறோம், அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்//

    Why/who are you promoting this in first place? If it is true everyone will accept n follow it promotion is not required. Also the promotion directly tells others are false you people alone true. Here comes the problem. You can promote by telling you are true, the ultimate etc…. but touching others sentiments is the trouble. As per my understanding no one begging for conversions first place. This is pure marketing activity planned n executed. Fixing targets like these many churches should be there, a branch can be openned if you have so many under your arms etc… basically money motivation with incentives etc… I agree there are service oriented people. But for the service they shouldn’t expect to follow in religion etc… Service means without any expectation. Anyone like that??? Really bad marketing technique used to promote it. This makes us to loose our temperament.

  87. ஏனெனில் ஆபிரகாமின் மூன்றாம் மனைவியின் சந்ததியினரே இந்தியத் திராவிட இனம் என ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது

    அறிவு கெட்டதனமான வரலாற்றுக்கு சிறிதும் தொடர்பில்லாத வரலாற்றுக்கு புறம்பான ஆதாரமற்ற இந்த கூற்றை ஜோசேப் கண்டிப்பாக விளக்க வேண்டும். ஏற்கனவே கிறித்தவர்கள் கூறுகிறார்கள் Pongal is derived from their Thanks Giving day function. தமிழனுக்கும் இந்து மதத்திற்கும் அவன் தாய் நாட்டிலேயே அவனது அடையாளங்கள் இவர்களை போன்ற வந்தேறிகளால் / வந்தேறிகளை பின்பற்றுவோரால் அழிக்க முற்படுவது கொடுமையிலும் கொடுமை. இவை அனைத்தையும் தாண்டி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிற்பது தான் தமிழின், இந்து மதத்தின் பெருமை.

    தமிழனும் திராவிடனும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு வரலாற்றை நிரப்பிகொண்டிருப்பவன்

    இயேசு என்னும் ஒரு சாதரண மனிதனை சுற்றி ஏன் இவ்வளவு நம்பிக்கைகளும், கட்டுகதைகளும், அதை சுற்றி கோடிக்கணக்கான டாலர் வணிகமும் ?. அதையும் நம்பி திரியும் கோடிகணக்கான மனிதர்கள்….

    நம் திருவள்ளுவர் அதே காலத்தில் இயேசுவை விட பல மடங்கு சிறப்பான பல வகையிலும் சிறப்பான பல நல்ல கருத்துக்களை உலக மக்களுக்கு கொடுத்துள்ளார். அரசியல் அதிகாரம் எழுதிய அவருக்கு இயேசுவை போல கடவுளாக தன்னை சித்தரித்துக்கொள்ளகூடிய அரசியல் தெரியவில்லையே …..

    இது தான் தமிழனின் சிறப்பு ….

    கவலை கொள்ளாதிர்கள் நண்பர்களே….. நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான் ஏசுவும் கிறிஸ்தவமும். பல்லாயிரம் ஆண்டுகளாக வேருன்றி நிற்கும் ஆலமரம் தமிழும் இந்து மதமும் … ஈராயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டதலேயே நிலைத்து விட்டதாக நினைக்கிறார்கள் … கலாவெல்ளத்தால் அடித்து செல்ல முடியாத கலாச்சாரம் நம் கலாச்சாரம் … நாடு பிடிக்க வந்த வந்தேறிகள் விட்டுச்சென்ற எச்சம் கிருத்துவமும் இஸ்லாமும்… அதை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்… அதைவிடுத்து அது மணக்குது என்றால் அது நுகர்பவனின் அறிவுக்கோலாறு….

    சந்தானம் எங்கள் நாட்டின் புழுதி…. அதில் விழைந்த அற்புதம் இந்து மதம்… இதை உணர மறுப்பவன் மடையன்…. உணராமல் இருப்பவன் வெகுளி…. இந்த அற்புதத்தை உணரதவனை எச்சத்தை நுகர அழைப்பவன் அயோக்கியன்……

  88. முந்திய விவாதத்துக்குப் பொருத்தமில்லாததாக என்னுடைய பின்னூட்டம் இருக்குமானால் தாராளமாக நீக்கலாம்; மற்றபடி நீங்கள் செய்வது சரியல்ல‌; Please consider me..!

    நேரமெடுத்து நிதானமாக- விவரமானதொரு பதிலை ஆயத்தம் செய்து கொடுத்தால் ஏன் அதை நீக்குகிறீர்கள்..?

    அருவருப்பான சொற்களால் தூஷிக்கிறவர்களுடையது மட்டும்தான் இங்கே பதிக்கப்படுமா..?

    // அறிவு கெட்டதனமான வரலாற்றுக்கு சிறிதும் தொடர்பில்லாத வரலாற்றுக்கு புறம்பான ஆதாரமற்ற இந்த கூற்றை //

    “பன்னீர்” என்பது நண்பரின் பெயர்; ஆனால் அவரது வார்த்தைகள் அத்துணை வாசமாக இல்லையே..!

    நாம் சொல்லும் ஆபிரஹாம் சுமார் 4000 வருடத்துக்கு முன்பு வாழ்ந்தவர்; வெறும் 62 வருடத்துக்கு முன்பு இந்தியா சுதந்தரம் பெற்றபோது 30 கோடியாக இருந்த மக்கள் தொகை இன்றைக்கு 4 மடங்காகி 120 கோடியில் நிற்கிறது; அப்படியானால் அந்த கால மக்கள் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்;
    அவர்களின் வாழ்நாள் எவ்வளவாக இருந்தது என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு யோசிக்கவேண்டுமல்லவா..?

    ஆசியக் கண்டத்திலேயே சுற்றி வந்த ஒரு பிரபலமான மனிதரின் மறுமனையாட்டியின் பிள்ளைகள் புலம் பெயர்ந்து அவர்கள் வாழ்ந்துவந்த இடத்திலிருந்து கிழக்கே கீழ்த் தேசத்துக்குப் போக ஆபிரகாமினால் அனுப்பப் பட்டார்கள் என வேதம் சொல்லுகிறது;

    யாரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை;
    தேவர்களின் கமண்டல ஜலத்திலிருந்து பிறக்கவுமில்லை;
    ஆங்காங்கு குடியேறிய மக்கள் குழுக்கள் அனைவருமே வேறொரு இடத்திலிருந்து வந்தவர்களே;

    அப்படியானால் யார் அறிவுகெட்டத்தனமாக‌ (மனுக்குல‌) வரலாற்றுக்குப் புறம்பாக சிந்திக்கிறார்கள் என அவரவரே யோசிக்கட்டும்;

    பொத்தாம் பொதுவில் சொல்லலாம்,”கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றியது தமிழினம்” என்று;
    இது கோணியில் கல்லைக் கட்டி அடிப்பதைப் போன்றது;

    2000 வருடத்துக்கு முன்பு (எனும் காலக் கணக்கை வகுத்துக்கொடுத்ததே யூதர்கள் தான்..!) தமிழைக் குறித்து எதாகிலும் ஆதாரம் இருந்தால் அதையும் இங்கே பதிவு செய்யுங்கள்;

    அப்படியே ஆதாரம் என எதாவது இருந்தாலும் அதனை வெளிக் கொணர்ந்தது தமிழன் கிடையாது; தமிழுக்கு இலக்கணம் வகுத்ததும் தமிழன் கிடையாது; பிறகென்ன பெருமை..?

    ஆபிரகாமை மறுத்து யாரும் மனுக்குல வரலாற்றை எழுத முடியாது;
    அவர் வணங்கிய சிருஷ்டிக் கர்த்தாவான தெய்வத்தையும் புறக்கணிக்க முடியாது; ஆதி மனுஷனின் சிருஷ்டிப்பின் வரலாறு முதலாக தலைமுறைகளின், மொழிகளின், சாதிகளின், பருவங்களின் மற்றும் விதைத்தலின் அனைத்து குறிப்புகளும் ஆதாரங்களும் யூதர்களின் வேதத்திலேயே இருக்கிறது;

    மாத்திரமல்ல, “குரான்” எனும் இஸ்லாமிய வேதத்துக்கும் மூலம் யூத வேதம்தான்; இஸ்லாமிய வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்கூட யூதத்தைத் தழுவியது;

    நண்பர் முதலில் ஆரிய- திராவிட கலாச்சாரத்தை எனக்கு விளக்கட்டும்;
    பிறகு தமிழனைக் குறித்துப் பேசுவோம்..!

  89. தமிழன் என்ற முறையில் நமது வாழ்விடம், பண்புகள் மீது எனக்கு நன்மதிப்பு எப்போதும் உண்டு. இந்திய கலாச்சாரத்தை போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயர் குறிப்பிடும்படியாக சில கலாச்சாரங்கள் சிறந்து விளங்கியிருக்கின்றன. உதாரணமாக பண்டைய எகிப்திய மற்றும் சீன கலாச்சாரம் அகியனவற்றை கூறலாம். ஒவ்வொரு கலாச்சார பிண்ணனியத்திலிருந்தும் பல நல்ல விஷயங்கள் மக்களுக்கு பயனடையும்படி வந்திருக்கின்றன இதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும், எனவே இந்திய கலாச்சாரம் தான் மற்ற எல்லா கலாச்சாரத்திற்கும் முன்னோடியாக இருந்தது, சிறந்தது என்பது நம்மை நாமே பாராட்டிக்கொள்ள தான் பயன்படும் என்பது எனது கருத்து.

  90. ஐயா கிலாடியரே ….

    “பன்னீர்” என்பது நண்பரின் பெயர்; ஆனால் அவரது வார்த்தைகள் அத்துணை வாசமாக இல்லையே..

    என்னுடைய கூற்றில் எதை வாசனை அற்றதாக நினைக்கிறீர் ….?

    காரணம் சொன்னால் நான் விளக்க தயாராக இருக்கின்றேன் உங்களின் மூக்கடைப்பை

    நீங்கள் கூட தமிழன் தான், இந்து தான், சில தலைமுறைகளுக்கு முன்னாள் மதமாறிய இந்து….

    உங்களுடைய ஆபிரஹாம் இருந்ததற்கான வரலாற்றுக்கு ஆதாரம் இருந்தால் இங்கே கொடுங்கள்… உங்களுடைய வேதத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது…. அது பல்வேறு காலகட்டங்களில் பலரால் புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை…

    “யாரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை;
    தேவர்களின் கமண்டல ஜலத்திலிருந்து பிறக்கவுமில்லை;
    ஆங்காங்கு குடியேறிய மக்கள் குழுக்கள் அனைவருமே வேறொரு இடத்திலிருந்து வந்தவர்களே”

    நீங்களே உண்மையை சொல்லிவிட்டு கர்த்தர் தான் மனிதனை படைத்தார் என்று நம்புவது எவ்வளவு பெரிய முரண்பாடு…

    “அப்படியே ஆதாரம் என எதாவது இருந்தாலும் அதனை வெளிக் கொணர்ந்தது தமிழன் கிடையாது; ”

    உலகில் எவ்வளவோ அழகான பெண்கள் இருந்தாலும் நம் அம்மாவை அழகில்லை என்றோ அசிங்கம் என்றோ மனதில் சிறு எண்ணம் கூட வராதல்லவா ….. அதை போலத்தானையா ….. தமிழும் நம் அம்மாவை போன்றது …..
    நம்மால் இயலாத பொழுது வேறு யாராவது நம் அம்மாவை பராமரிக்கும் பொழுது அவள் நம் அம்மா இல்லை என்று நிராகரிப்பது சரியா கிலடியரே …..?

    “தமிழுக்கு இலக்கணம் வகுத்ததும் தமிழன் கிடையாது; ”

    இதிலிருந்தே தெரியவில்லையே உங்களுக்கு தெரிந்த வரலாறு இவ்வளவு தான் என்று…. உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பது தவறில்லை…. அப்படி தெரியாத வரலாறை ஏன் மற்றவர்க்கும் போதிக்கின்றீர்… வரலாறு தெரியாமல் தமிழின் பெருமை தெரியாமல் பிதற்றும் உங்களை போன்ற சிலரால் நம் சரியான வரலாறு அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது…. அப்படி எங்கோ நடந்த பிழை தான் இன்று நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த ஆபிரஹாம்…. யாரையா அந்த மனிதன்… ஒரு சாதரண மனிதனுக்கா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒரு இனத்தின் வரலாற்றையே பழிக்காதீர்கள் …..
    இந்த இரண்டு பக்கங்களையும் படியுங்கள் நீங்கள் கேட்ட ஆதாரம்… வரலாற்றுக்கு ஆதாரம் ……
    https://www.muthamilmantram.com/viewtopic.php?f=176&t=21688


    https://www.muthamilmantram.com/viewtopic.php?f=150&t=20953

  91. ஒப்புக்காக “தமிழன் என்ற முறையில் நமது வாழ்விடம், பண்புகள் மீது எனக்கு நன்மதிப்பு எப்போதும் உண்டு” என்று எழுதி விட்டு, பிறகு எப்படியெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை தனித்துவத்தை சிறுமைப் படுத்தலாம் என்று யோசித்து எழுதியுள்ளார்கள்.

    சிந்து சமவெளி நாகரீகம், நைல் ஆற்று நாகரீகம், சுமேரிய நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் எல்லாரும் படித்ததுதான். தெரிந்ததுதான்.

    அதே நேரம் இந்திய நாகரீகத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்தியாவில் இருப்பது போன்ற பழைமையான இலக்கியங்கள் குறிப்பாக தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள், இசை, நாட்டியக் கலைகள், அந்த அளவுக்கு மற்ற நாகரீகத்தில் இல்லை.

    ஆன்மிக கருத்துகள் இந்தியாவில் சிறப்பாக வளர்ந்தன. மற்ற 3 நாகரீகங்களும் ஆன்மீக விசயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை.

    குடும்ப வாழ்க்கையிலும் இந்தியக் தனி சிறப்புடன் இருந்து வந்துள்ளது.

    இந்தியாவிலேயே பிறந்து மிகச் சிறந்த இந்தியக் குடும்ப வாழ்க்கை கலாச்சாரத்தால் உருவான நல்ல சூழலைப் பெற்று ஆனாலும்
    “அய்யோ, நம்ப மார்க்கத்தை நாம எங்கே இருந்து பெற்றோமோ அவர்கள் விபச்சாரக் கலாச்சாரத்தில் இருக்கிறானே, இந்த நாட்டில் இப்படி நல்ல கலாச்சாரம் இருக்கிறதே” என்று வயிறு எரிந்து எழுதியது போலவே உள்ளது!

  92. Dear Mr.Joseph,

    “கானானியர், ஏவியர்,எபூசியர், அமலேக்கியர் போன்றோரின் பழக்கவழக்கங்களை பற்றி பிற வரலாற்று நூல்களை படித்து பாருங்கள் அப்புறம் தெரியும் அசுரர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்” என்று.

    Sir,

    Please give the names of books which told habits about this peoples.My kind requestion to you is that, when you giving reference,consider that it should be social history books instead of religious books.

    Thanks,
    Prathip Perumal

  93. ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு,

    “இந்திய கடவுள்களை மட்டமாக பேசும் சிலர் மீது இவ்வளவு கோபம் வருவது உங்களுக்கு இயற்கையே ஆனால் யேகோவா என்ற இஸ்ரவேலின் கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்துவிட்டு இன்றைய இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதை தான் சங் பரிவார அமைப்புகள் செய்து வருகின்றன‌”

    யூதர்களின் யேகோவாவை என்றுமே சங்க் பரிவார் அமைப்பினர் கேவலமாக பேசியதில்லை. ஆதாரம் இருந்ததால் காட்டுங்கள் பார்ப்போமே. இவ்வளவு என் உங்கள் ஏசுவையும், முஸ்லிம்களின் அல்லாஹ்வையும் கூட அவர்கள் பழித்து பேசியதாக நான் இதுவரை கேட்டறியாத விஷயம்.

    அது சரி அய்யா, உங்கள் தேவகுமாரனை சிலுவையில் அறைந்து படுபாதகமாக கொலை செய்த யூத மதத்தினரை காப்பதே தங்கள் தலையாய பணி என்று செய்து வரும் தேவகுமாரனின் கிறிஸ்தவ நாடுகளை எந்த வகையில் சேர்பிர்கள்.

    உண்மையில் எந்த காலத்திலும் ஹிந்து மதத்திற்கும், யூத மதத்திற்கும் மோதல் நிகழாத போது அவர்களை சங்க்பரிவார் ஆதரிப்பதில் என்ன தவறு.

    அன்புடன்,
    பிரதிப் பெருமாள்

  94. வணக்கம்,

    நண்பர் கிலாடி

    //நண்பர் முதலில் ஆரிய- திராவிட கலாச்சாரத்தை எனக்கு விளக்கட்டும்;
    பிறகு தமிழனைக் குறித்துப் பேசுவோம்..!//

    ஆபிரகாமிய அடிமை தளத்தில் உள்ள உமக்கு எதற்க்காக ஆரிய திராவிட கலாசாரம் தெரிய வேண்டும், பள்ளிக்கூடத்தில் அரைகுறையாக சொல்லிக்குடுத்த சரித்திரத்தை வைத்துக்கொண்டு இங்கே இந்த தளத்தில் மட்டுமல்லாது எங்கும் பினாத்தும் நீர் எந்த உண்மையையும் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.

    தமிழுக்கு இலக்கணம் வகுக்க என்று இங்கிலீஷ் காரனா வருவான். நீங்கள் ஆமாம் என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால் உங்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

  95. எல்லாம் தெரியும், நான் சொல்வதே சரியானது, இதற்கு மேல் தெரிந்துக் கொள்ள எதுவுமில்லை என நான் முடிவு செய்துவிட்டால் எனக்கு யாரும் எதுவும் கற்றுத் தரமுடியாது; நான் கற்றுக் கொள்ளவும் மாட்டேன்;

    பன்னீர் என்ற நண்பர் தன் எதிராளிகளை // மடையன்,முட்டாள்,அயோக்கியன் // என்கிறார்; கேட்டால் எனக்கு // மூக்கடைப்பு // என்கிறார்;

    பிரதிப்பெருமாள் அவர்களோ,
    //அது சரி அய்யா, உங்கள் தேவகுமாரனை சிலுவையில் அறைந்து படுபாதகமாக கொலை செய்த யூத மதத்தினரை காப்பதே தங்கள் தலையாய பணி என்று செய்து வரும் தேவகுமாரனின் கிறிஸ்தவ நாடுகளை எந்த வகையில் சேர்பிர்கள்.

    உண்மையில் எந்த காலத்திலும் ஹிந்து மதத்திற்கும், யூத மதத்திற்கும் மோதல் நிகழாத போது அவர்களை சங்க்பரிவார் ஆதரிப்பதில் என்ன தவறு // என்கிறார்;

    கிறிஸ்தவர்கள் யூதருக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறேன்; இன்றைக்கு பாலஸ்தீனத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இஸ்ரேல் தேசத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்பது அன்றாட செய்தியாகும்.

    நீங்கள் எதையாவது தெரிந்துகொள்ள விரும்பினால் கேளுங்கள்;
    பதில் சொல்ல முயற்சிக்கிறேன்; ஆனால் இங்கே அதை பதிக்க மாட்டார்கள்; மேலும் தணிக்கை செய்வார்கள்; நான் தூஷணமான அடுத்தவரைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தில் வந்தவனல்ல;

    ஆனாலும் கூட எனது பெரும்பாலான கருத்துக்கள் முடக்கப்பட்டன; அல்லது தணிக்கைச் செய்யப்பட்டன; இதனால் இங்கே விவாதிக்கப்படும் எந்த ஒரு விஷயத்துக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது;

    எனது மூதாதையர் ஆசாரமான உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள்;
    இன்றைக்கு மதம் மாறியதால் தாழ் குலமாகி விட்டோம்;
    (“குலத் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்” என்ற முதுமொழி அசரீரியாக‌..!)

    நான் சமூகக் கொடுமைகளை மட்டுமே பதிவு செய்கிறேன்; மற்றும் வரலாற்றுரீதியாக நான் அறிந்தவற்றைப் பதிவு செய்கிறேன்;
    கிறித்தவ மதத்துக்கு ஆதரவான கருத்துக்கள் என்னிடமிருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் தந்ததில்லை;

    எனவே வெளிப்படையான கேள்வி பதில் முறையிலான- பொதுவான- சுதந்தரமான ஒரு தொடுப்பைத் துவங்கினால் பிரயோஜனமாக இருக்கும். ஆனாலும் இங்கே சிலர் மாற்றுமதக் கருத்துகளே தேவையில்லை எனக் கூறியிருந்ததையும் கவனிக்கவேண்டும்..!

  96. //யூதர்களின் யேகோவாவை என்றுமே சங்க் பரிவார் அமைப்பினர் கேவலமாக பேசியதில்லை. ஆதாரம் இருந்ததால் காட்டுங்கள் பார்ப்போமே. இவ்வளவு என் உங்கள் ஏசுவையும், முஸ்லிம்களின் அல்லாஹ்வையும் கூட அவர்கள் பழித்து பேசியதாக நான் இதுவரை கேட்டறியாத விஷயம்//

    தீனா நாத் பத்ரா, சீதா ராம் கோயல் போன்றோர் அதை தானே செய்து வருகின்றனர். அவுட்லுக் இதழில் பத்ரா இயேசுவின் பிறப்பை குறித்து கேவலமாக பேசினார், சீதா ராம் கோயலின் எழுத்துக்களை நீங்கள் படித்ததில்லை?? இவர்களுக்கு ஒத்து ஊத கொன்ராட் எல்ஸ்ட் போன்ற மேலை நாட்டு மேதாவிகள் வேறு, ஐயா நானும் ஆர்கனைசர் தளத்தை படிப்பவன் தான். குருஜி கோவல்கார் எழுதிய குருஜி ஆன் கிறிஸ்டியானிட்டி என்ற பதிவை படியுங்கள் பின்னர் தெரியும் இக்காலத்தில் உள்ள கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் எந்த அளவுக்கு குருஜி கொண்டிருக்கும் கருத்தை விட்டு வழிவிலகி வந்துள்ளனர் என்பது தெரியும்.

  97. நண்பர் ஸ்ரீ கிலாடி அவர்களே,

    “கிறிஸ்தவர்கள் யூதருக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறேன்; இன்றைக்கு பாலஸ்தீனத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இஸ்ரேல் தேசத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்பது அன்றாட செய்தியாகும்”.

    பணி காரணமாக நான் மிடில் ஈஸ்ட்க்கும் பார் ஈஸ்ட்க்கும் பல முறை பயணம் செய்துள்ளேன், சிலமுறை மேற்கு ஐரோப்பாவிற்கும்.எங்கும் பெரும்பான்மையான கிருஸ்தவர்கள் யூதர்களை எதிர்த்து பிரசாரம் செய்ததாக நான் பார்க்கவில்லை படிக்கவும் இல்லை. அப்படியே சில போராட்டம் இருந்து இருந்தாலும் அது சில தனிப்பட்ட மனித நேய அமைப்புகளின் கிறிஸ்தவ அடையாளம் இல்லாத போராட்டமாகவே இருந்து இருகின்றன. எந்த கிறிஸ்தவ பாதிரியும் முன்னின்று நடத்தியதாக நாம் பார்க்கவில்லை.

    ஆனால் நிறைய கிருத்தவர்கள் யூதர்களை ஆதரிப்பதை தனிப்பட்ட முறையில் கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சிறுபிள்ளை என்றால் ஒன்றை மிண்டும் நினைவுபடுத்த விரும்பிகிறேன். இன்றைக்கு யூதர்களின் இஸ்ரேல்யை பாதுகாக்கும் பணியை அனைத்து கிறிஸ்தவ நாடுகளும் செய்து வருகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கு எந்த ஆதாரமும் காட்ட தேவை இல்லை.

    பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடுகள் ஜனநாயக நாடுகள் எனும் போது பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் யூதர்களின் அட்டகாசத்தை எதிர்கிறார்கள் என்றால் எப்படி இந்த பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் யூதர்களின் இஸ்ரேல்யை,அவர்களின் தனிகாட்டு ராஜாங்கத்தை ஆதரிகிறார்கள் என்பதை தெளிவு படுத்துவிர்களா?

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  98. Dear பிரதீப் பெருமாள்,

    The christian nations are supporting Israel not because they love Jews, but because they hate the Muslims more than the Jews.

    Even after the second world war, many a christian countries sustained laws against Jews. In England the hotels and motels put a board announcing “no entry” to Jews.

    Even now the hatred against Jews is practiced to a great extent, but not so overt to be noticed by occasional tourists.

  99. //// எனது மூதாதையர் ஆசாரமான உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள்;
    இன்றைக்கு மதம் மாறியதால் தாழ் குலமாகி விட்டோம்;
    (”குலத் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்” என்ற முதுமொழி அசரீரியாக‌..!) ///

    மதம் மாறினாலும், மனம் மட்டும் மாறவில்லை. உள்ளிப்பூண்டை எத்தனை தேய்த்தாலும் நாறித்தான் கிடைக்கிறது. தாழ்வான குலம் என்பதே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், இவர் தாழ் குலமாகிவிட்டாராம்.

  100. நண்பர் பிரதீப் பெருமாள் அவர்களே,
    தாங்கள் சொன்னது போல நான் சிறுவன் தான்;
    இதனால் நான் இன்னும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறேன்;
    ஆனாலும் தவறான குழந்தைத்தனமான செய்திகளைப் பதிக்காமலிருக்க கவனமாக இருக்கிறேன்;

    சிலர் “ஆராய்ச்சியாளர்கள்” என யாரோ முகமறியாதோர் மீது பழிபோட்டு கண்டதையும் எழுதும்போது நான் எனக்குத் தோன்றியதை மட்டும் எழுதுகிறேன்; இதனால் நான் தவறாக எழுதினாலும் உங்களைப் போன்றோரால் நல்ல தகவல்களை மற்றவர் அறிய வாய்ப்பாகவும் அமைகிறது;

    இஸ்லாமியர் மார்க்கக் காரணங்களுக்காக யூதரை எதிர்க்கிறார்கள்;
    கிறிஸ்தவரோ மார்க்கக் காரணங்களுக்காக யூதரை ஆதரிக்கவில்லை;
    இதனை தாங்கள் முந்தி அறிய விரும்புகிறேன்;

    யூதருடைய தனித்தன்மை என்னவென்றால் ஆதரிப்பவரிடமிருந்து காரியம் சாதித்துக் கொள்வாரே தவிர அவர் தனது சொந்த அடையாளங்களை இழக்கமாட்டார்;

    இந்தியாவும் இந்தியரும் இந்துவும் கூட எந்த நிலையிலும் நமது அடையாளங்களை இழந்துவிடாமலிருக்கவே போராடுகிறோம்;

    ஆனால் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதமாற்றத்தின் மூலம் நடைபெறுவதாகச் எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வேறு சில அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை முடிவுகள்,கலாச்சார பழக்க வழக்க மாற்றங்கள் காரணமாக‌ இந்தியா கொள்ளை போய்க் கொண்டிருப்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

  101. Mr.josephdaniel tells,

    please visit the website https://www.hinduunity.org and see how far the right wing hindu activists portray the cause of Zionism and How they openly support the state of Israel.

    Mr.பிரதீப் பெருமாள் Told,

    உண்மையில் எந்த காலத்திலும் ஹிந்து மதத்திற்கும், யூத மதத்திற்கும் மோதல் நிகழாத போது அவர்களை சங்க்பரிவார் ஆதரிப்பதில் என்ன தவறு.

  102. ஹிந்து நண்பர்களே,

    ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்! ஏக இறைவனை வணங்குவதாகவும், எங்கள் அனைவருக்கும் ஒரே கடவுள் என்று சொல்லி பீலா விட்டு கொண்டு இருக்கும் முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களால் உலகம் அழீயும் நாள் வெகு தொலைவில் இல்லை. குறைந்த பட்சம் அந்த மதங்கள் உருவான பாலைவனத்தை போலவே உலகை மாற்றி காட்டுவதே இவர்களின் லட்சியம்.

    அதில் இருந்து இந்த உலகை காப்பாற்ற லோகமாதவை பின்வரும் சுலோகத்தால் வேண்டுவோம்.

    உலகை காத்து ரக்ஷீபதற்கு :

    யா ஸ்ரீ: சுயம் ஸ்க்ருதினாம் பவநேஷ்வலக்ஷ்மி :
    பாபாத்மனாம் க்ருததியாம் ஹ்ரிதயேஷு புத்தி:
    ச்ரத்தா ஸதாம் குலஜனப்ரபவஸ்ய லஜ்ஜா
    தாம் த்வாம் நதா: ஸ்ம பரிபாலய தேவி விஸ்வம்!!

    உலகின் பாபங்களை விலக்குவற்கு :

    “தேவி ப்ரஸீத பரிபாலய நோஅரிபீதே:
    நித்யம் யதாசுரவதாததுனைவ சத்ய:!
    பாபாநி சர்வஜகதாம் ப்ரஷமம் நயாசு’
    உத்பாதபாகஜநிதாம்ச்’ ச மஹோபஸர்கான்!!”

    அனைவரும் வாழ்க வளமுடன்!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  103. நண்பர் ஸ்ரீ கிலாடி அவர்களே”

    “ஆனால் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதமாற்றத்தின் மூலம் நடைபெறுவதாகச் எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வேறு சில அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை முடிவுகள்,கலாச்சார பழக்க வழக்க மாற்றங்கள் காரணமாக‌ இந்தியா கொள்ளை போய்க் கொண்டிருப்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.”

    சரியாக சொன்னிர்கள்!!

    அதோடு மட்டும் இல்லாமல் கிறிஸ்தவ மதமாற்றத்தின் முலம் நம் மற்றும் நம் வரும் தலைமுறையின் உயிரையும் கொள்ளை அடிக்க அவர்கள் முயற்சிகிறார்கள் என்பதே என்னுடைய மற்றும் இங்கு வந்த ஹிந்து nanbargalin குற்றச்சாட்டு.

    அதற்கு சரியான உதாரணம் தர வேண்டும் என்றால் கடந்த 2003 ம ஆண்டு அமெரிக்காக்காரன் நம்மை இராக்கில் சண்டை போட துணைக்கு குப்பிட்டது ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு.

    ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததால் முடியாது போடா வெள்ளையனே என்று சொல்லி அமைதி ஆகி விட்டோம்.அதுவே இங்கு கிறிஸ்தவர் அதிகமாக இருந்துஇருந்தால் உணர்ச்சி ரீதியாக அமெரிக்காகாரனுக்கு அடிமை ஆகி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு இருப்போமே இல்லையா? அதற்கு ஏதுவாகவே புஷ் ஜெஷுவ ப்ராஜெக்ட் என்ற பெயரில் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்ப அதிக நிதி ஒதுக்கிடு செய்து உள்ளது என்பது நம் அப்பாவி கிறிஸ்தவ மத மாற்ற பிரியர்களுக்கு தெரியாதது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  104. Dear Pradeep Perumal,
    //ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்ததால் முடியாது போடா வெள்ளையனே என்று சொல்லி அமைதி ஆகி விட்டோம்.அதுவே இங்கு கிறிஸ்தவர் அதிகமாக இருந்துஇருந்தால் உணர்ச்சி ரீதியாக அமெரிக்காகாரனுக்கு அடிமை ஆகி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு இருப்போமே இல்லையா? அதற்கு ஏதுவாகவே புஷ் ஜெஷுவ ப்ராஜெக்ட் என்ற பெயரில் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்ப அதிக நிதி ஒதுக்கிடு செய்து உள்ளது என்பது நம் அப்பாவி கிறிஸ்தவ மத மாற்ற பிரியர்களுக்கு தெரியாதது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.//
    Nepal is a hindu country. If Nepal is waging a war against some other country, for some stupid reasons and if Nepal is calling India for support, will India go to support Nepal (just because it is a Hindu country)?

    Your Brother,
    Ashok

  105. நண்பர் ஜயராமன் அவர்களே,
    // “மதம் மாறினாலும், மனம் மட்டும் மாறவில்லை. உள்ளிப்பூண்டை எத்தனை தேய்த்தாலும் நாறித்தான் கிடைக்கிறது. தாழ்வான குலம் என்பதே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், இவர் தாழ் குலமாகிவிட்டாராம்” //

    இது எனது சொந்த கருத்து அல்ல;
    எனது சமுதாயம் என்னை நடத்திய விதத்தையே வேதனையுடன் பதித்தேன்;
    இந்த தளத்திலும் கூட மதம் மாறியவன் ஏன் தனது சமுதாயத்தைக் குறிப்பிடவேண்டும் என விவாதம் நடக்கிறது;

    எனது சமுதாயம் என்பது ஜாதி அல்ல, எனது அடையாளம்; எனது “ப்ளாக்”(Blog)கில் என் மீது அருவருப்பான தூஷணங்கள் பதிக்கப்படுகிறதே,
    அது ஏன்..?

    உயர்வகுப்பார் என்ற காரணத்துக்காக எமது அரசாங்கத்தால் தாழ்த்தப்படவில்லையா..?

    திறமையிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படவில்லையா..?

  106. Hey You Ashok,

    Let some other country to attack Nepal,then you see wheather India goes or not for Support to Nepal. Don’t compare Childishly and which is not valuable and as your imaginations.

    After You seeing the reality you comparing bullshitly.Really you are Slave to Western white pigs Countries I say.

    Why the Bloody Italy,UK,Germany,Philipines(Near Past Converted,The only christian country in ASIA),Spanish troops are working in Iraq and Afghanistan.The simple reason is they are united under totalitarian christian philosophy to loot others religions,language,culture,heritage, economy and souls.

    Prathip Perumal

  107. Dear Prathip Perumal,
    Who is behaving Childishly? I can also, quote from the history. India helped Bangladesh sometime back, even though it is not a Hindu country. India thought that Bangladesh was on the right side, so it helped, not because of religious causes. In srilanka, when tamilians were attacked, India didn’t support the tamilians, even though they were many Hindus.
    What I am trying to say is, just because someone is Christian, they need not support America.
    You are confusing yourself with world politics and spritual beliefs.

    Your Brother,
    Ashok

    (Comment edited & published )

  108. அண்ணே அ”சோக்”குமார், உங்க நெசப்பேரு எண்ணாண்ணே?? சாமுவேல் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்ருன்ற பேருல ஒளிஞ்சிருந்தது மாதிரி உங்க நெசப்பேரு என்னான்னு தெரிஞ்சா உங்கள ஒதுக்கிட்டாவது போகலாம்.. நீங்க என்னான்னா எங்க சாமிப்பேர்ல இருந்துகிட்டு செத்த பொனத்த தூக்கிப் பேசுறீங்க.. என்ன செய்யுறது.. உங்களுக்கு விதிச்சது அவ்வளவுதான்…

  109. திரு ஜோசப் டேனியல் அவர்களே,

    “தீனா நாத் பத்ரா, சீதா ராம் கோயல் போன்றோர் அதை தானே செய்து வருகின்றனர். அவுட்லுக் இதழில் பத்ரா இயேசுவின் பிறப்பை குறித்து கேவலமாக பேசினார், சீதா ராம் கோயலின் எழுத்துக்களை நீங்கள் படித்ததில்லை?? இவர்களுக்கு ஒத்து ஊத கொன்ராட் எல்ஸ்ட் போன்ற மேலை நாட்டு மேதாவிகள் வேறு,”

    ஓஹோ அப்படியா!

    இயேசுவின் பிறப்பை பற்றி அவர்கள் அவ்வளவு தரகுறைவாக பேசி உள்ளர்களா? இது எனக்கு தெரியாமல் போனதே. சரி என்ன தவறு, இனிமேல் இயேசுவின் பிறப்பு எந்த அளவுக்கு கேவலமானதாக அவர்கள் நினைகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறேன் .

    என் இடுகையை இப்படி படியுங்களேன்!!

    //யூதர்களின் யேகோவாவை என்றுமே சங்க் பரிவார் அமைப்பினர் கேவலமாக பேசியதில்லை. ஆதாரம் இருந்ததால் காட்டுங்கள் பார்ப்போமே. இவ்வளவு ஏன் உங்களின் கர்த்தர், முஸ்லிம்களின் அல்லாஹ்வையும் கூட அவர்கள் பழித்து பேசியதாக நான் இதுவரை கேட்டறியாத விஷயம்//

    சரி ஆய்டுசிங்களண்ண?!!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  110. சகோதரர் அசோக் KG அவர்களே,

    நீங்க என்னை பார்த்து சொல்றிங்க,
    “You are confusing yourself with world politics and spritual beliefs”.

    நண்பர் திருச்சிகாரர் சொன்னார்!
    //INRI என்றால் ” இவர் யூதர்களின் ராஜாவாகிய இயேசு” என்று//.

    அப்பிடின்னா இயேசு அரசியல்வாதியா? ஆன்மிகவாதியா?
    எனக்கு இன்னொரு confusion – நும் வந்து இருக்கே !

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  111. Mr Pradeep Kumar
    That was a reply for your question. There are people from your SIDE TOO who could spew venom

  112. Then there may be a possibility of asking whether Lord Ram is a king or a God. What would you reply for this question Mr.Pradeep

  113. //Then there may be a possibility of asking whether Lord Ram is a king or a God. //

    Well Daniel. The answer is GOD Ram (not Lord Ram) is the King as well a God.

    What is your answer now – Jebus is a spiritualist and a politician?

  114. We as christians believe that Jesus is the Son of God, he himself had said that his kingdom was not of this world. So definitely he wasn’t a politician. Jews when looking for a messiah to liberate from the Roman rule misunderstood Jesus’ divine mission of redemption and hence they couldn’t think beyond the earthly Jewish kingdom, so they rejected him and wanted him to be killed.
    JESUS WAS NEVER A POLITICIAN

  115. Dear களிமிகு கணபதி,
    To keep it simple, JESUS is GOD.
    There are some other explanations about he being a king too. But there is no point answering you. Because, based on the other conversations, I concluded, you guys are asking questions not in the intension of knowing things, but just for the sake of argument.

    Your Brother,
    Ashok

  116. Dear குழந்தவேலு,
    My original name is Ashok kumar Ganesan only. I dont have any need to change my name.
    //உங்க நெசப்பேரு என்னான்னு தெரிஞ்சா உங்கள ஒதுக்கிட்டாவது போகலாம்..//
    What are gonna do with me brother?

    With Love,
    Ashok

  117. விவாதம் ஒரு மாதிரியா போய்கிட்டிருக்கு. ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்பறேன்.

    நம்பறவனுக்கு ஆதாரம் தேவை இல்லை.
    நம்பாதவனுக்கு ஆதாரம் காட்டி பயன் இல்லை.

    இந்திய கிறிஸ்தவர்கள் யாரும் ஆகாசத்துல இருந்து குதிச்சுடலே. இதே கதை தான் முஸ்லிம்க்கும்.

    இருக்க இடம் கொடுத்ததாலே கிடைக்கு நாலு ஆடு கேட்ட ஓநாய் போல தான் இப்ப நிகழ்ச்சிகள் நடக்குது.

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.
    மீண்டும் தர்மம் வெல்லும்.

    சனாதன தர்மத்தினை நாம் நம் தர்மத்தினை சேர்ந்தவங்களுக்கு சரியா சொல்லிகொடுக்கற வேலைய விட்டுட்டு, கோடலிகாம்புகளுக்கு ஏனையா வகுப்பு எடுத்துட்டு இருக்கீங்க. பெட்டிய பூட்டுனா இருக்கிற பொக்கிஷத்த காப்பாத்தலாம். தயவு செஞ்சு அதச் செய்ங்க முதல்ல.

  118. Dear Mr.Daniel,

    I accepts the answer given by Mr.Ganapathy.Please tell your Answer Wheather Jesus is Spritualist or Politician?

    And some more I am Telling to you about SRI RAMACHANDRA PRABHU, that he never proclaimed that he is Bhagavan but it was given to him since he realised his SELF in his life time itself.It means !HE KNOW WHO HE IS! And also through out of the GODHEAD PERSONALITY stay at this planet,nobody won him physically or mentally except PURE LOVE which is transcendal,which you materialistic christians can not understand.

    But as your beliefs, you confusing that JESUS is Son of GOD and some times you peoples saying that He is GOD. And some other times your Book tells he is the King and finally he was Murdered By the order of a King.This sense raises lot of Doubts about his divinity and finally it lets us to think that he was 20th century politician may be who lived in 1st century BC.

    SRI RAM was shown the meaning of SACRIFICE by living a LIFE (Merging in to divine Cosmic ocean) .

    But Jesus shown the meaning of Sacrifice by death. So that,we real Hindus realised that the way of Jesus is the way to death (Cycle of Karma).

    With Love,
    Prathip Perumal (I am not Kumar)

  119. YSR பாவம்யா, அவர் சாவை பத்தியெல்லாம் நாம் தப்பா பேசக்கூடாது. அவர் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையை நாம் விமர்சனம் பண்ணலாம். இந்துக்களின் திருப்பதி பணத்தில் ஜெருசலேம் டூர் போறது கொஞ்சம் டூ மச் தான். ஆனால் முதல்வன் அர்ஜுன் மாதிரி சில பல நல்ல நல்ல வேலை எல்லாம் செஞ்சு இருக்கார்யா இந்த ஆளு. நாம அவர் செஞ்ச தப்பை மட்டும் சொல்லும் போது, மத்தவங்களுக்கு நாம பொய் பேசற மாதிரி தெரியும். இந்த டேனியல், அசோக்கு எல்லாம் நல்லவங்களா தெரியறாங்க எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க.
    கட்டாய மதமாற்றம் தப்பு.
    இந்துக்கள் மனதை நோகடிக்கறது பெரிய தப்பு. ( திருப்பி அடிச்சா வலிக்கும் தலைவா)
    நீ சர்ச்சுக்கு போனியா, பிரார்த்தனை பண்ணினியான்னு இருக்குனும்.
    சரியா?? நல்ல படியா சொல்லும்போதே கேட்டுக்கணும்.
    பரிவுடன்,
    சந்தோஷ்

  120. அன்பிற்குரிய நண்பர் டேனியல் அவர்களுக்கு,

    “We as christians believe that Jesus is the Son of God, he himself had said that his kingdom was not of this world. So definitely he wasn’t a politician.”

    இயேசு என்று சொல்லபடுபவர் ராஜாவின் ஆணையின் படி கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் ஏற்றுகொண்டிர்கள். ஏன் எனில் அவர் அந்த அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக என்பதுவும் அனைவரும் அறிந்ததே.

    அவர் தன்னை தானே கடவுளின் மகனாக சொல்லி கொண்டார் என்பதுவும் ஒரு குற்றச்சாட்டு. அவரின் பல பேச்சுக்கள் அந்த அரசாங்கத்திற்கு எதிராக இருந்ததாகவும் ரோமானியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    அவர் எங்கோ இருக்கிற சொர்க்கம் என்ற அரசாங்கத்தை பற்றி பேசி அதற்கு நான் தான் ராஜா என்று சொல்லி இருந்தால் இங்கே இருக்கிற அரசு நடத்தும் ஒரு ராஜா எதற்காக கவலை பட போகிறார். அதுவும் ரோமானியர் போன்ற மிகவும் செழுமையான கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள்.

    அந்த காலத்தில் அரசாங்கத்தால் பெருமளவில் கண்டு கொள்ளப்படாதவர்கள் இயேசுவின் பின்னால் நின்று இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிகிறோம் . அரசாங்கத்தின் அரவணைப்பும் ஆதரவும் இருந்தவர்கள் இந்த இயேசுவை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதுவும் நம் பகுத்தறிவுக்கு தெரிகிறது.இதில் இருந்து நமக்கு புரிவது என்ன என்றால் அவர் ரோமானிய அரசாங்கத்து எதிராக செயல்பட்ட ஒரு யூத புரட்சிக்காரன் என்பது மட்டுமே. இதையே தான் கார்ல்மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் போன்ற கம்யூனிசம் மற்றும் சோசலிசம் என்ற அரசியல் மார்கங்களை தந்த அரசியல் மேதைகளும் ஆமோதித்து இருக்கிறார்கள்.

    எனவே இயேசு என்பவர் ஆன்மிகம் பேசி தன் அரசியல் செல்வாக்கை உயர்த்த நினைத்த சாதரண மனிதன் என்பது தெளிவு.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  121. Mr Prathip Perumal,
    First of all it is difficult to talk to ppl like you who have preconcieved notions abt christianity. We believe that Jesus is the God’s plan of salvation to man. He’s one of the trinity. Just as water exists in 3 forms as ice, water and vapour. Plenty of explanations had already been given.
    For us Jesus is the way of life and we are happy in that, if you feel that it is the way of death then so be it to you. Who bothers!! if you have an opinipn like that

  122. Prathip
    யூதர்கள் ரோமானியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தனர், அவர்களுக்கு என சில சலுகைகள் கிடைத்த போதும் அவர்கள் அடிமை வாழ்வை வெறுத்தனர், அதனால் ஒரு யூத அரசன் (மெசியா) தோன்றுவான் எனவும் தங்களை விடுவிப்பான் எனவும் நம்பினர். ஆனால் மேசிவாவாக வந்த இயேசுவோ அவர்களது ராஜ்யத்தை பற்றியல்லாமல் விண்ணுலக ராஜ்யத்தை பற்றி பேசினார், மனுக்குல மீட்புக்கான மேசியா என்பதை அவர்கள் உணரவில்லை.
    அவரை கொலை செய்யும்படி எந்த ராஜாவும் அவருக்கு ஆணையிடவில்லை அவரது விசாரணை ரோம சக்கரவர்த்தியான சீசர் முன்னிலையிலும் செய்யப்படவில்லை, ரோம கவர்னராக இருந்த பிலாத்து அவரை விடுவிக்க எண்ணினான், ஆனால் அவர்மேல் பொறாமை கொண்ட யூதர் அவரை சிலுவையில் அறையப்பட வேண்டும் என கலகம் செய்தனர். அவர்களை திருப்திபடுத்தவே அவன் கடைசியில் அவர்களை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான்.
    எவ்வலவு சொல்லியும் என்ன பயன் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள போவதில்லை, ஏனெனில் கிறிஸ்தவர்கள் மேல் மாத்திரம் அல்ல இயேசுவின் மீதும் உங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருப்பதாக தெரிகிறது

  123. //நம்பறவனுக்கு ஆதாரம் தேவை இல்லை.
    நம்பாதவனுக்கு ஆதாரம் காட்டி பயன் இல்லை//

    அஷ்வின் ஜி இதையேதான் நாங்களும் உங்களுக்கு சொல்கிறோம், அப்புறம் என்னவோ சொன்னீங்களே, கோடாலிகாம்புகள்ன்னு, அப்படியே நாங்க இருந்துட்டு போறோம்.

  124. //பகுத்தறிவுக்கு தெரிகிறது.இதில் இருந்து நமக்கு புரிவது என்ன என்றால் அவர் ரோமானிய அரசாங்கத்து எதிராக செயல்பட்ட ஒரு யூத புரட்சிக்காரன் என்பது மட்டுமே. இதையே தான் கார்ல்மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் போன்ற கம்யூனிசம் மற்றும் சோசலிசம் என்ற அரசியல் மார்கங்களை தந்த அரசியல் மேதைகளும் ஆமோதித்து இருக்கிறார்கள்//

    ???பகுத்தறிவு????, அடி ஆத்தி என்ன கடைசியில இப்பூடி, உங்க ஆத்திகத்துக்கு நாத்திகம் பேசிய மார்க்ஸும் எங்கெல்சும் சப்போர்ட்டா.

  125. இந்துவாக‌ இருந்தால் கோவிலுக்கும் போக‌லாம், ச‌ர்ச்சுக்கும் போக‌லாம், நோன்பும் இருக்க‌லாம், ம‌சூதிக்கும் போக‌லாம், க‌ட‌வுள் இல்லை என்றும் வாதாட‌லாம்!உண்மையை ஆராய‌லாம். அறிந்த‌ உண்மைக‌ள வெளிப் ப‌டுத்த‌லாம்!

    இதில் எதையும் இந்து ம‌த‌ம் த‌டை செய்ய‌வில்லை. எந்த‌ வ‌ழியில் வேண்டுமானாலும், உருவ‌த்திலோ, உருவ‌ம் இல்லாம‌லோ வ‌ண‌ங்க‌ த‌டை இல்லை. இந்து ம‌த‌ம் யாரையும், எந்த‌ மார்க்க‌த்த‌யும் வெறுக்க‌ கூற‌வில்லை.

    “அத்வேஷ்டா ( வெறுப்பில்லாத‌வ‌னாய்), ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளுட‌னும் சினேக‌ பாவ‌த்துட‌ன்), க‌ருண‌ ஏவ‌ ச‌(க‌ருணையே உடைய‌வ‌னாய்)” -இப்ப‌டி இருப்ப‌வ‌னைத் தான் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்” என்று க‌ட‌வுள் சொல்லி இருக்கிறார்.
    இது இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டை- இதை நான் தைரிய‌மாக‌ச் சொல்கிரேன்! இது எல்லா இந்துக்க‌ளுக்குமான‌ க‌ருத்து!

    ஆனால் “கிருஸ்துவராக” இருந்தால் என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள் எல்லாம் பொய்யான கடவுள்கள், பைபிள் மட்டுமே உண்மை, மற்ற நூல்கள் எல்லாம் பொய் என்று கூறி காட்டு மிராண்டிக் கருத்துக்களுக்கு சப்பைக் கட்டு கட்டவேண்டும்.

    இது இந்தியாவின் சகிப்புத் தன்மைக்கு எதிரானது. பிற மார்க்கங்களுடன் சகிப்புத் தன்மை இல்லாமல் இருக்க மறுக்கும்,

    அதோடு சகிப்புத் தன்மை உடைய இந்து மதத்தை அழித்து நம்மையும் வெறியர்கள் ஆக்கப் பார்க்கின்றனர், இந்த சுவி சேச வெறியர்கள்.

    இவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது கல்லுக்கு புத்தி சொல்வது போன்றது.

  126. ///இவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது கல்லுக்கு புத்தி சொல்வது போன்றது///

    அப்பாடா, திருச்சிக்காரன் சார்….இப்போதாவது இதை சொல்லவேண்டும் என்று தோன்றியதே. ஏனெனில் நான் பல நாட்களாக உங்களது பதில் சொல்லும் ஆற்றலை நினைத்து பிரமிப்படைந்திருக்கிறேன்.. இருப்பினும் இவர்களுக்குப் போய் இவர் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றும் தோன்றியிருக்கிறது. உங்களுக்கே சலிப்பு ஏற்படும் என்றால் இவர்களை என்ன சொல்வது ..?

    இந்த டேனியல் கிலாடி போன்றவர்களெல்லாம் நம்மதத்தின் மீது சேறு பூசுவதே ஏசுவுக்குச் செய்யும் சேவை என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டவர்கள். இவர்கள் நீங்கள் என்ன உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் அதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இவர்களை புறக்கணித்து விட்டு குறைந்த பட்சம் நமது இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் செயலில் மாத்திரம் அக்கரை காட்டினாலே போதும். பாதி அழிவைக் காப்பாற்றலாம். எனர்ஜியாவது மிச்சமாகும். உங்கள் கருத்தாழம் மிக்க விளக்கங்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள் ஐயா!

  127. சகோதரர் ராம் அவர்களே,

    நீங்கள் பாராட்டும் அளவுக்கு சிறந்த வகையிலே நான் எதுவும் எழுதி விடவில்லை.

    ஆனாலும் இவர்களைப் பற்றி முழுதும் அறிந்து கொள்ள முடிந்தது.

    நாட்டையும் சமூகத்தையும் இன்னும் எவ்வளவு கெடுக்கப் போகிறார்களோ.

  128. சகோதரர் திருச்சிக்காரன்,
    உங்கள் பேச்சை பார்த்தால். மதம் மாறினால் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். பரீட்சைக்கு படிப்பது போல பைபிள் படித்து, அப்படி பணம் எதுவும் கிடைக்காததால் வெறுத்து போய் பேசுவது போல உள்ளது.
    //“அத்வேஷ்டா ( வெறுப்பில்லாத‌வ‌னாய்), ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளுட‌னும் சினேக‌ பாவ‌த்துட‌ன்), க‌ருண‌ ஏவ‌ ச‌(க‌ருணையே உடைய‌வ‌னாய்)” -இப்ப‌டி இருப்ப‌வ‌னைத் தான் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்” என்று க‌ட‌வுள் சொல்லி இருக்கிறார்.//
    இதை உங்க கடவுள் உங்கள் முன் தோன்றி சொன்னாரா? நீங்களும் புத்தகத்தை வைத்துதானே சொல்கிறீர்கள். இங்கே நீங்கள் கும்பலாக சேர்ந்து சொல்வதால் மட்டுமே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆகி விடாது.
    //என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள் எல்லாம் பொய்யான கடவுள்கள், பைபிள் மட்டுமே உண்மை, மற்ற நூல்கள் எல்லாம் பொய்//
    இது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும், இதுதான் உண்மை. இது மாறபோவது இல்லை.

    அன்புடன்,
    அசோக்

  129. ஹாய் வணக்கம் திரு.டேனியல் ,

    எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இயேசு மேலயோ கிறிஸ்டியன் மேலயோ இல்லைங்க. என்னோட ஆதங்கம் எல்லாம் அது நமக்கு எங்கே இருந்து வந்துட்டு இருகோ அங்கேயே அது தோத்து இருக்கிறப்போ அது எப்படி நம்மளை கரை சேர்க்கும் என்பது தான். அதோட அவசியம் நமக்கு என்ன என்பது தான். இங்கேயே நாம சொர்க்கம் போறதுல இருந்து கடவுள் அடியிலே போய சேர்ற வரைக்கும், ஏன் கடவுல ஆக தேவையான எல்லா தத்துவங்களும் இருக்குறப்போ எதுக்கோ எங்கேயோ யாருக்கோ வந்த தத்துவம் நமக்கு எதற்கு என்பது தான்ga.

    இன்னிக்கு அந்த அளவுக்கு பாதிப்பு வரலைங்க ஆனா இது ரொம்ப அச்சுன்ன நம்மோட கலாச்சாரமும் அமெரிக்க ஐரோப் மாதிரி ஆயுடுமோ என்ற அடுத்த தலைமுறை பற்றிய பயம் தான். ஆகாது என்று தைரியமாக சொல்ற அளவுக்கு கிறிஸ்தவம் இல்லைங்க. இப்ப நடகரதை பாக்கறப்பவே தெரியுதுங்க.

    தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க ” தாய போல பிள்ளை நுல போல சேலை’ என்று. நமக்கு கிறிஸ்தவம் ஆக்ரோசமா வந்துட்டு இருகிற மேற்கை பாத்தே நாம கிறிஸ்தவத்தை இன்னும் ஆக்ரோசமா எதிர்கிரோமுங்க. கர்த்தருக்கு தெரியுமுங்க நாங்க ஏன் இதை செயுரோமுன்னு. நாங்க செய்வோமுங்க. நீங்க அடங்கற வரை செய்வோமுங்க.

  130. வணக்கம்
    ////ஆனாலும் இவர்களைப் பற்றி முழுதும் அறிந்து கொள்ள முடிந்தது. ///

    ///நீங்கள் பாராட்டும் அளவுக்கு சிறந்த வகையிலே நான் எதுவும் எழுதி விடவில்லை.////

    நண்பர் திருச்சிக்காரர் அவர்களே நண்பர் ஸ்ரீ ராம் அவர்கள் பாராட்டியதில் ஒன்றும் தவறு இல்லை, ஏனெனில் அவர்களின் வசனங்கள் மூலமே அவர்களுக்கு தெளிவு படுத்த முயன்றீர்கள்,

    இந்தப்பதிவில் முதலில் உள்ள உங்களின் வாக்கியங்களுக்காக எனது இந்த பாராட்டு, பரவாஇல்லை கல் என தெரிந்தும் நார் உரிக்க முயன்றீர்கள்.

    ” தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்த கூலி தரும்”

    அந்தக்கூலிதான் இப்பதிவின் முதலில் உள்ள உங்களின் வரிகள்.

  131. வணக்கம்

    ஆசிரியர் குழுவிற்கு,

    நம் தாய் தமிழை நேரடியாய் இங்கே பதிப்பிக்க செய்தமைக்கு மிக்க நன்றி.

  132. நண்பர் ஸ்ரீ பாஸ்கர் ஐயா அவர்களே,

    நீங்கள் கூறியது சரியே.

    நீங்கள் ஆரம்பத்திலேயே சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    நான் தான் புரியாமல் நேரத்தை வீணடித்து விட்டேன்.

    அந்த நேரத்தை கடவுள் வழிபாட்டிலாவது செலவிட்டு இருக்கலாம்.

  133. // இந்த டேனியல், கிலாடி போன்றவர்களெல்லாம் நம்மதத்தின் மீது சேறு பூசுவதே //

    திரு.றாம் அவர்களே எனது பதிவுகளையெல்லாம் படித்துவிட்டுத் தான இந்தக் குற்றச்சாட்டினை முன்வைக்கிறீர்களா?
    மிகவும் வருத்தம்;

    என்னால் முடிந்த அளவுக்கு சமதளத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்; அதுகூட ஏன் தெரியுமா? அப்படியாவது இங்கே நான் எழுதியது பதிக்கப்பட வாய்ப்பு கிட்டுமே என;

    நான் மத வைராக்கியமாக எழுதுவதில்லை;
    அப்படியும் என்னுடைய பெரும்பாலான கருத்துக்கள் தள்ளப்பட்டன; காரணம் இது உங்கள் தளம்;

    எனது குருவையும் எனது நம்பிக்கையையும் தொடர்ந்து பழித்தும் இழித்தும் பேசிக் கொண்டிருக்கிறது உங்கள் அணி;

    நாங்களோ வழக்கம்போல சிறுபான்மையினர் என உங்களால் தள்ளப்பட்டவர்கள்;

    நாங்கள் மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தால் உங்களிடம் விளக்கம் கூற எதுவும் இருந்திருக்காது;

    மதம் மாற்றியவர்களும் இங்கு வந்து எதையும் கூறப் போவதில்லை;

    (Edited.)

  134. // பிரதீப் பெருமாள்
    24 September 2009 at 12:41 pm
    சகோதரர் அசோக் KG அவர்களே //

    உங்கள் தலைவர் திரு.இராமன் அவர்கள் கூட யுத்த தர்மத்தைக் கடைபிடிக்க “இன்று போய், நாளை வா” என்று எதிரிக்கும் வாய்ப்பு கொடுத்து தர்மத்தைக் கடைபிடித்தான் என அந்த கதையில் கேட்டிருக்கிறோம்;

    ஆனால் இங்கே உங்களை எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கும் வெறும் மூன்று பேரை பழிப்பதும் பரியாசம் செய்வதும் நல்லதுதானா?

    அசோக் என்பவர் வெளிப்படையாகவே தனது கருத்துக்களைச் சொல்லுகிறார்; அதை ஏற்கலாம அல்லது மறுக்கலாம்; அதைவிட்டு அவரை பகடி செய்வதுபோல அவருடைய கிறிஸ்தவப் பெயரைக் கேட்பதும் வேண்டுமென்றே அவரது பெயரை சுருக்கி “KG” எனப் போடுவதும் நாகரிகமா?

    திருச்சிக்காரன் என்பவர் பைபிளை அரைகுறையாகப் படித்துவிட்டு எதையோ போட்டால் அதற்கு ஒரு பாராட்டு;
    இதே போல இந்து வேதங்களின் ஐயங்களைக் கேட்டால் அதற்கு ஒரு சமாளிப்பு;

    மெய்யாக‌வே விவாதிக்க விரும்பினால் அது ஒரு வெளிப்படையான நட்பின் அடிப்படையிலான விவாதமாக இருக்கட்டும்;

  135. //இந்த டேனியல் கிலாடி போன்றவர்களெல்லாம் நம்மதத்தின் மீது சேறு பூசுவதே ஏசுவுக்குச் செய்யும் சேவை என்று ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டவர்கள். இவர்கள் நீங்கள் என்ன உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் அதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இவர்களை புறக்கணித்து விட்டு குறைந்த பட்சம் நமது இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் செயலில் மாத்திரம் அக்கரை காட்டினாலே போதும். பாதி அழிவைக் காப்பாற்றலாம். எனர்ஜியாவது மிச்சமாகும்.//

    டானியல் போன்றோர்கள் கோடாலிக் காம்பாகத்தான் இருப்போம் என்கிறார்கள். விஷயம் புரிந்து விட்டது. அவர்கள் அஜெண்டா-வில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இந்துக்கள் இப்போதாவது விழிப்புணர்வு பெற்றால் நல்லது.

  136. Dear Malarmannan Sir,
    I have answered your questions which you said that you have Asked Sadhu Chellappa. But, the editor of Tamil Hindu didn’t publish it.
    Brother Glady,
    You are really lucky. Atleast few of your comments are published. And thanks for talking for me brother. God bless you.
    Brothers,
    Since most of our replies are not published, you feel we dont have any answer for your questions. Anyways, truth cannot be hidden for long.

    With Love,
    Ashok

  137. க்லடி,

    “உங்கள் தலைவர் திரு.இராமன் அவர்கள் கூட யுத்த தர்மத்தைக் கடைபிடிக்க “இன்று போய், நாளை வா” என்று எதிரிக்கும் வாய்ப்பு கொடுத்து தர்மத்தைக் கடைபிடித்தான் என அந்த கதையில் கேட்டிருக்கிறோம்;”

    உங்கள் தலைவர் யூத இயேசு அவர்கள் கூட தர்மத்தைக் கடைபிடிக்க “ஒரு கன்னத்தை அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டு” என்று எதிரிக்கும் வாய்ப்பு கொடுத்து தர்மத்தைக் கடைபிடித்தான் என அந்த கதையில் கேட்டிருக்கிறோம்;

    நீங்கள் எங்களை இழித்து பேசுவதாலேயே நாங்கள் அதை உங்களிடம் இருந்து கற்று செய்கிறோம் என்பதை தெளிக !

  138. //திருச்சிக்காரன் என்பவர் பைபிளை அரைகுறையாகப் படித்துவிட்டு எதையோ போட்டால் அதற்கு ஒரு பாராட்டு;
    இதே போல இந்து வேதங்களின் ஐயங்களைக் கேட்டால் அதற்கு ஒரு சமாளிப்பு//

    நண்பர்களே,

    என்னைப் பாராட்டுவதில் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் திருச்சிக் காரன் இறக்கலாம். திருச்சிக் காரனின் உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால், அவன் அதுவரை சேர்த்து வைத்த சொத்து பத்து, சொந்த பந்தம், பெயர் புகழ் எல்ல்லாம் முடிந்தது. அதற்குப் பிறகு எனக்கும் திருச்சிக் காரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    நான் அடுத்த பிறவியில் மானாகவோ, மீனாகவோ பிறந்தால் போன பிறவியில் நான் திருச்சிக் காரன் என்ற பெயரிலே எழுதிப் பல பாராட்டுகளைப் பெற்றவன் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இருப்பேனா?

    அருமை நண்பர் கிலாடியார் அவர்களே,

    எல்லோரும் சேர்ந்து உங்களைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம் – நீங்கள்,

    பிற மார்க்கங்களை எல்லாம் வெறுப்பது, கண்டிப்பது, இகழ்வது, அடியோடு ஒழிப்பது,
    அதே போல இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும், ஒவ்வொரு மனிதனையும் பிற மார்க்கங்களை வெறுக்கும் மன நிலைக்கு மாற்றுவது தான் கடவுளுக்கு செய்யும் தொண்டு, என்று நினைக்கும் காட்டு மிராண்டிக் கொள்கையை மாற்றிக் கொள்வீர்களானால்- மாலை மரியாதையுடன் உங்களை பாராட்டுவோம், வாழ்த்துவோம்.

  139. //நீங்கள் எங்களை இழித்து பேசுவதாலேயே நாங்கள் அதை உங்களிடம் இருந்து கற்று செய்கிறோம் என்பதை தெளிக !//
    பிரதீப் பெருமாள், நல்ல விஷயம் நிறைய சொன்னோமே, ஏதாவது கத்துக்கிட்டீங்களா?

    //நான் தான் புரியாமல் நேரத்தை வீணடித்து விட்டேன். //
    உங்களுக்கு எதுவுமே புரிவதில்லை திருசிக்காரரே, அதுதான் இப்போ பிரச்னை.குதர்க்கம் பேசனும்ன்னு எண்ணத்தோட திரிஞ்சா எதுவும் புரியாதுங்க. கொஞ்சம் உண்மையை தேடுங்கள், எல்லாம் புரியும்.

    அன்புடன்,
    அசோக்.

  140. அன்புள்ள அசோக் அவர்களே,

    இதுல நீங்க சொன்னது எனக்கு ஏறிச்சா இல்ல நான் சொன்னது உங்களுக்கு ஏறிச்சா அன்றது முக்கியம் இல்ல. நம்மளை யாரும் வந்து ஏறிட குடாது. அது தான் முக்கியம்.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  141. //உங்களுக்கு எதுவுமே புரிவதில்லை திருசிக்காரரே, அதுதான் இப்போ பிரச்னை.குதர்க்கம் பேசனும்ன்னு எண்ணத்தோட திரிஞ்சா எதுவும் புரியாதுங்க. கொஞ்சம் உண்மையை தேடுங்கள், எல்லாம் புரியும்.//

    நீங்கள் என்னைப் பார்த்து “குதர்க்கம் பேசனும்ன்னு எண்ணத்தோட திரிஞ்சா எதுவும் புரியாதுங்க. கொஞ்சம் உண்மையை தேடுங்கள், எல்லாம் புரியும்”
    என்று எழுதியதைப் படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது எது என்றால்,
    இயேசு கிறிஸ்து கூறியதைக் கேட்டு யூத குருமார்கள் “இவன் தேவ தூஷணம் சொன்னான்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

    நான் என்னை இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிடுவதாக தவறாக எண்ணி விடாதீர்கள். ஆனால் நீங்கள் யூத குருமார்களின் ரேஞ்சுக்கு போய் விடுவீர்களோ என்றே அஞ்சுகிறேன். அதனால் தான் இவ்வளவு சிரமப் பட்டு எழுதுகிறேன்.

  142. asok சொல்கிறார்
    //பிரதீப் பெருமாள், நல்ல விஷயம் நிறைய சொன்னோமே, ஏதாவது கத்துக்கிட்டீங்களா?//

    இந்த அராத்துத்தனமான கேள்விக்கு என்ன பதில்?

    இவர் சொல்வதெல்லாம்பொய் என்று அன்பரசன் நிரூபித்ததும் பதில் சொல்லமுடியாமல் ஓடிய்வர் இங்கே பிரதிப்பெருமாளுக்கு பாடம் எடுக்கிறார்.

    கொடுமை!

  143. அது என்ன “அராத்து”த்தனம்..?
    “யாகாவாராயினும்…” குறள் தெரியுமா..?

    இங்கே நான் உணர்ச்சிகரமாக எழுதிய நியாயமான கோபத்துடன் கூடிய பல நாகரீகமான வார்த்தைகள் கூட தணிக்கை செய்யப்படுகிறது;

    ஆனால் பெரும்பான்மையினரான உங்கள் தூஷணங்களெல்லாம் பதிக்கப்படுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை; நீங்களெல்லாம் சாம, பேத, தான, தண்டம் முழுதாக அறிந்தவர்களாச்சுதே..! ‘

    பொய் சொல்லுகிறீர்கள்” என்பதைவிட மரபின்படி “உண்மைக்கு மாறானது” என்பது சிறப்பான சொல்லாட்சியாகும்..!

  144. //திருச்சிக்காரன் என்பவர் பைபிளை அரைகுறையாகப் படித்துவிட்டு எதையோ போட்டால் அதற்கு ஒரு பாராட்டு;
    இதே போல இந்து வேதங்களின் ஐயங்களைக் கேட்டால் அதற்கு ஒரு சமாளிப்பு//

    அருமை நண்பர் கிலாடியார் அவர்களே,

    எல்லோரும் சேர்ந்து உங்களைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம் – நீங்கள்,

    பிற மார்க்கங்களை எல்லாம் வெறுப்பது, கண்டிப்பது, இகழ்வது, அடியோடு ஒழிப்பது,
    அதே போல இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும், ஒவ்வொரு மனிதனையும் பிற மார்க்கங்களை வெறுக்கும் மன நிலைக்கு மாற்றுவது தான் கடவுளுக்கு செய்யும் தொண்டு, என்று நினைக்கும் காட்டு மிராண்டிக் கொள்கையை மாற்றிக் கொள்வீர்களானால்- மாலை மரியாதையுடன் உங்களை பாராட்டுவோம், வாழ்த்துவோம்

  145. பாவிகளே

    மனந்திரும்புங்கள்.

    நீங்கள் பாவிகளாக ஆனது ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால்.

    https://en.wikipedia.org/wiki/Original_sin

    ஆதாம் ஏவாள் என்று யாரும் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்வதை நம்பாதீர்கள்.

    6000 வருடங்களுக்கு முன்னால், ஆதாம் ஏவாள் பாவம் செய்ததினால் மனிதர்கள் எல்லோரையும் கர்த்தர் பாவிகளாக்கினார்.

    அப்படி பாவியானவர்களை ரட்சிக்கவே கர்த்தர் தன் ஒரே குமாரனாக தானே அவதரித்தார்.

    இந்த பாவிகளை ரட்சிக்க தானே கர்த்தருக்கு பலியானார்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவத்திலிருந்து மீளுங்கள்.

  146. திரு கிலாடி அவர்களே,

    “ஆனால் பெரும்பான்மையினரான உங்கள் தூஷணங்களெல்லாம் பதிக்கப்படுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை; நீங்களெல்லாம் சாம, பேத, தான, தண்டம் முழுதாக அறிந்தவர்களாச்சுதே..! ”

    நான் எழுதுன நெறைய விஷயம் கூட வரலைங்க. நீங்க நெறைய புலம்புறிங்க தேவை இல்லாம?!!!

    நீங்க ஏன் சிறுபான்மையினர் ஆகி இவ்வளவு கஷ்டபடணும். நோகணும்! கம்நு ஹிந்து மதத்துக்கே வந்துடுங்களேன்.நெறைய விஷயம் உங்களுக்கு ஹிந்து மதத்தை பத்தி தெரிஞ்சு இருக்கு.அப்படி இருக்கிறப்போ எதுக்கு இந்த அந்நிய மதம். நம்ம மதத்துல சொல்லாத எதையும் புதுசா அந்த yudha குரு சொல்லிடலைங்க. அவர் சொன்ன எல்லாத்தையும் எல்லாரும் FOLLOW பண்ணவும் போறதில்லை. குறைந்தபட்சம் நம்ம தனித்தன்மையை காபாத்துவோமே !

  147. பெர்னார்டியாரின் கமெண்ட்டே இதுவரை வந்தவற்றில் நெம்ப நல்ல கமெண்ட்டு. வரலாற்று சிராய்ப்பு மிக்கது. அரவிந்தன் நீலகண்டன், மலர்மன்னன், ’அசோக் ஜி’, திருச்சிக்கார், தேவப்ரியா சாலமோனார், (ஹே)ராம் போன்ற நேர விரயப் பாவிகளே, மனம் திருந்துங்கள். பெர்னார்டியார் சொல்படி நடவுங்கள். பரலோகம் பக்கத்துவீட்டிலேயே காத்திருக்கிறது.

  148. நானும் ஒரு காலத்தில் ஹிந்து கரப்பான் பூச்சியாக அறிவியலை எல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.

    பைபிளை படித்துத்தான் அறிவியல் ஒரு பெரிய பொய் என்று அறிந்தேன். பிறகு பைபிளை மட்டுமே நம்புகிறேன். அறிவியலை சுத்தமாக நம்புவதில்லை. உதாரணமாக நோய்களெல்லாம் பேய் பிடிப்பதால்தான் வருகிறது என்று பைபிள் சொல்கிறது. அதற்கு மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கக்கூடாது. கர்த்தரிடம் பிரார்த்தித்தால் பேய் ஓடிவிடும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரார்த்தனை மூலமாக பேயை ஓட்டி எவ்வளவு பேரை குணப்படுத்திருக்கிறார் என்று பைபிளில் படித்துப்பாருங்கள். அதனால்தான் சுவிசேஷ கூட்டங்களில் பேயோட்டுகிறார்கள். முடவன் நடப்பதும் குருடர் பார்ப்பதும் கர்த்தரின் நாமத்தினால், பேய்கள் ஓடுவதாலேயே! எக்ஸார்ஸிஸ்ட் பார்த்தீர்களா? பாவிகளே! அறிவியலை நம்பி மருத்துவர்களிடம் செல்லாதீர்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.

    ஆதாம் ஏவாள் செய்த முதல் பாவத்திலிருந்து நான், அசோக் குமார் கணேசன், கிலாடி ஆகியோர் மீண்டது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்ட்தால்தான். எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்போகிறது.

    உங்களுக்கு நரகம்தான்.

    கர்த்தரை சந்தோஷப்படுத்த முன்னாளில் யூதர்கள் பலி கொடுத்தார்கள்.

    எதனை பலி கொடுத்தார்கள்? ஆடுகளை பலிகொடுத்தார்கள்.

    மனிதப்பலி கொடுத்தால், கர்த்தர் சந்தோஷமடைவார். அதிலும் மிக உயர்ந்த பலி எதுவாக இருக்கும்?

    கர்த்தரே தன் மகனாக பிறந்து தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் பலியால்தான் கர்த்தர் மிகவும் சந்தோஷமடைவார். அதுதான் அல்டிமேட் பலி!

    கர்த்தரே தன்னைத்தானே பலி கொடுத்து தன்னை சந்தோஷப்படுத்தியதால், உலகத்தின் பாவங்களை கர்த்தர் தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பலியை ஒப்புக்கொள்கிறவர்களை ஆதாம் ஏவாள் செய்த பாவங்களிலிருந்து ரட்சித்து சொர்க்கம் தருவார்.

    பாவிகளே மனந்திரும்புங்கள்.

  149. ஹிந்து கரப்பான் பூச்சி is right in a way.

    with Love,
    Ashok

  150. சகோதரர் பெர்னார்ட் அவர்களே,

    //6000 ஆண்டுகளுக்கு முன்னர் கர்த்தரின் முன்னால் முதலாவதாக பாவம் செய்த ஆதாம் ஏவாளின் பாவங்கள் நம் ஒவ்வொருவர் மீதும் இருப்பதாலேயே நாம் எல்லோரும் பாவிகளாகிறோம்//

    காட்டு மிராண்டிக் கருத்துக்களின் மொத்த உருவாக ஒரு மார்க்கத்தை உருவாக்கி, அதை இயேசுவின் மார்க்கமாக சித்தரித்து இயேசுவின் பெயாராலே திணித்து, அதை இயேசுவின் தலையிலே முள் முடியாக அடிக்கிறார்கள்.

    ஆதாம் ஏவாள் செய்த பாவத்திற்கு கந்தசாமியும், குப்பு சாமியும், வனிதாவும், பாத்திமாவும், காரலினும் எப்படிப் பொறுப்பாக முடியும்?

    வனிதாவின் அப்பா, தாத்தா செய்த குற்றத்துக்கு கூட வனிதா பொறுப்பாக முடியாது.

    வனிதாவின் தாத்தா பல பெண்களை கர்ப்பழித்தவர் என்றால்- அதற்காக அந்த கர்ப்பழிக்கபட்ட பெண்களின் உறவினர்கள்,

    வனிதாவின் தாத்தா இறந்து விட்டார் , அதனால் பேத்தியான வனிதாவை நாங்கள் கர்ப்பழிக்க எங்களுக்கு கோர்ட்டார் அனுமதி அளிக்க வேண்டும் என்று சைதை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால்

    நீதிபதி, தாத்தாவின் கற்ப்பழிப்பு பாவம் வனிதாவின் மேல் உள்ளது,

    எனவே கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற அடிப்படையில் கற்ப்பழிப்புக்கு , கற்ப்பழிப்பு செய்து கொள்ளுங்கள் என்று தீர்ப்பு வழங்க முடியுமா?

    அந்த காட்டு மிராண்டிக் கற்ப்பழிப்பு அனுமதி வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் நேரத்தை வீணடித்ததற்கு பைன் போடுவார்.

    சாதரண மனிதனாகிய நீதிபதியே நியாயமான தீர்ப்பு வழங்கும் போது எல்லோருக்கும் தந்தையான ஆண்டவன் எவ்வளவு நியாயமான நீதிபதியாக இருப்பார்?

    நீ மீனைக் கேட்டால் உன் தகப்பன் பாம்பைக் குடுப்பானா? நீ அப்பத்தைக் கேட்டால் உன் தகப்பன் கல்லைக் குடுப்பானா? உன் தந்தையே இப்படி இருக்கும் போது எல்லோருக்கும் தந்தையானவர் எப்படி கருணையுடனும், நியாயமாகவும் இருப்பார்.

    வனிதாவின் தாத்தா செய்த தவறுக்கு வனிதாவை தண்டனை அன்பவிக்க சொல்லுவாரா? ஆதாம் ஏவாள் செய்த தவறுக்கு ஆண்டவன் எல்லோரையும் பாவியாக பழி சுமத்துவரா?

    “நீதிமான்களை அன்று பாவிகளையே இரட்சிக்க வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியுள்ளாரே.
    இயேசு கிறிஸ்து இந்த உலகிலே பாவிகளும் உள்ளனர், நீதிமான்களும் உள்ளனர் என்று தானே தெளிவாகக் கூறியுள்ளார்.

    ஆதாம் , ஏவாளின் பாவத்தை ஒரு இடத்திலும் இயேசு கிறிஸ்து நம் எல்லோரின் தலையிலும் இரக்கவில்லையே. ஆதாம் ஏவாள் கதையை பற்றி எந்த ஒரு இடத்திலும் இயேசு கிறிஸ்து கூறியதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை!

    இயேசு நீதிமான்களும் இருக்கிறார்கள், பாவிகளும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நீங்களோ இந்த உலகத்தில் எல்லோரும் பாவிகள் என்று பாவப் பழியை சுமத்துகிறீர்கள்.

    இயேசு கிறிஸ்து “நீ மீனைக் கேட்டால் உன் தகப்பன் பாம்பைக் குடுப்பானா? நீ அப்பத்தைக் கேட்டால் உன் தகப்பன் கல்லைக் குடுப்பானா? உன் தந்தையே இப்படி இருக்கும் போது எல்லோருக்கும் தந்தையானவர் எப்படி கருணையுடனும், நியாயமாகவும் இருப்பார்” என்று கூறியதை மறுத்து, கடவுள் ஆதாம், ஏவாளின் பாவத்தை எல்லோர் தலையிலும் கட்டும் அநியாயக் காரர் என்று முள் கிரீடத்தை ஆழமாகப் பதியும்படி அடிக்கிறீர்கள்.

    உங்களிடம் இருந்து இயேசு கிறிஸ்துவைக் காப்பாற்றுவதே எங்களுக்குப் பெரும் பாடாக இருக்கிறது.

    இயேசு இந்த உலகத்திலே இருந்தார் எனவும், யூதர்கள் அவரி சிலுவையிலே அறைந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் இருந்திருந்தாலும், சிலுவையிலே அறையப் பட்டு இருந்தாலும், அவர் மேலே சென்று இருந்தாலும், அவரை விடாமல், எல்லாக் காட்டு மிராண்டிக் கருத்துக்களையும் , வெறுப்புக் கருத்துக்களையும் அவர் மேல் தினமும் ஆணியாக அடிக்கும் பாவத்தை, முள் முடியாக அவர் மேல் இரக்கும் பாவத்தை பல சுவிசெசகர்கள் செய்கின்றனர்.

    அந்தப் பாவத்தில் பங்கெடுத்து இங்கெ வந்து சுத்த இரத்தத்தின் கரை உங்களின் கையிலே படும்படியாக இயேசு கிறிஸ்துவை துன்புறுத்துகிறீர்கள்.

    அதை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவுன் மீது நீங்கள் அடிக்கும் ஆணிகளை இந்துக்களாகிய நாங்கள் எங்கள் கையில் வாங்கி இயேசு கிறிஸ்துவைத் தாங்குவோம்.

    உங்களுக்கு இயேசு கிறுஸ்துவைப் பற்றி சரியாகப் புரிதல் இல்லை. வெறுப்புக் கருத்துக்களும், காட்டு மிராண்டிக் கருத்துக்களாலும் உங்கள் இதயத்தை நிரப்பி அதை சாத்தானின் இருப்பிடமாக வைத்து உள்ள்ளீர்கள்.

    அன்புக் கருத்துக்களும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள இந்து மதத்தால் மட்டுமே இயேசு கிருஸ்துவை புரிந்து கொள்ள முடியும்.

    நாங்கள் அன்பின் பக்கம், உண்மையின் பக்கம் , நியாயத்தின் பக்கம் நிற்கிறோம்-கிரிஷ்ணர், புத்தர், இயேசு கிறிஸ்து எல்லோரும் இருக்கும் பக்கம் -இந்துக்களாகிய நாங்கள் இருக்கிறோம். கிரிஷ்ணர், புத்தர், இயேசு கிறிஸ்து எல்லோரும் எங்களோடுதான் இருக்கிறார்கள்.

    ஆனால் நீங்கள் வெறுமனே இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லிக் கொண்டு எதிரணியில் நிற்கிறீர்கள். அது ஆண்டவனின் அணி அல்ல. அது சைத்தானின் அணி.

    நீங்கள் எங்கள் பக்கம் வந்து விடுங்கள். பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது!

    அல்லது குறைந்த பட்சம் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உளருவதையாவது நிறுத்துங்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாங்கள் சரியாகப் பிரச்சாரம் செய்து தருவோம்.

  151. யப்பா அசோக் குமார் கணேஷா!

    என் பேரு “ பெர்னார்ட்” நு ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலை எதுக்கு இவ்வளவு நிட்டி முழக்கி சிவாஜி ஸ்டைல்-la உணர்ச்சிகரமா வசனம் எழுதி சொல்லுriga .

    இதுக்கு பதிலா நான் பிரபு ஸ்டைல்-la சொல்லனும்னா “என்ன கொடுமை , சரவணன் ”

    வடிவேலு ஸ்டைல்-la சொல்லனும்னா “அய்யோ , அய்யோ ”

    என் ஸ்டைல்-la சொல்லனும்னா “போடா டுபாகூறு”

    ஆப்பிள் சாப்பிட்ட பாவம் பெருசுன்னா, உன் கர்த்தர் எவ்வளவு பெரிய “டுபாகூறு”

    அந்த “டுபாகூறை” கும்பிட்டுதான் எனக்கு சொர்க்கம் கிடைக்கும்னா, அந்த “டுபாகூறு” சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.

  152. நாம் பகுத்தறிவு முறையிலே, அறிவியல் ரீதியிலே மார்க்கங்களை அணுகி நம்முடைய கருத்துக்களை வைக்கிறோம்.

    இந்துக்களாகிய நாம் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி, அவற்றில் உள்ள நல்ல விசயங்களை நாமே எடுத்து விளக்கி வருகிறோம்.

    பிற மார்க்கங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்யப் படுவதையும், வெறுப்புக் கருத்துக்களும், காட்டு மிராண்டிக் கருத்துக்களும் இந்திய சமூகத்தில்
    SLOW POISON ஆக செலுத்தப் படுவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறோம்.

    ஆனால் பெர்னார்ட், அசோக் ஆகியோர் தொடர்ந்து யூதர்களின் காட்டு மிராண்டி கலாச்சாரத்தை தொடர்ந்து இங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    நம் முன்னே உள்ள ஆபத்து என்ன என்பதை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

    இந்தியா முழுவதையும் பாலஸ்தீன் போல மத சண்டை இடும் போர்க்களமாக, சுடுகாடு ஆக ஆக்கி விட்டுத்தான் சுவிசெசகர்கள் ஓய்வார்கள் என்பதை, இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

  153. ஒரே கன்பூஷனா கீதுப்பா..

    பெர்னார்ட், அசோக்கு, கிலாடி.. அல்லாரும் கொஞ்சம் விளக்குங்களேன்.

    கர்த்தர் உலகத்தை படைத்தார்.

    பிறகு ஆதாம் ஏவாளை படைத்தார் (ஓகே 6000 வருசத்துக்கு முன்னாடின்னே வச்சிக்குவோம்)

    ஆதாம் ஏவாள் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி ஒரு மரத்தையும் படைச்சார். (சாப்பிடக்கூடாதுன்னா எதுக்கு மரத்தை படைச்சி தொலைக்கணும்?) அதுசரி ஆதாம் ஏவாள் சாப்பிடப்போறாங்கன்னு கர்த்தருக்கு தெரியாதா? உங்க கர்த்தர் முக்காலமும் அறிந்தவர் இல்லையா? முக்காலமும் அறிந்திருந்தால், ஆதாம் ஏவாள் சாப்பிட்டுடுவாங்கன்னு தெரிஞ்சி மரத்தை படைக்காமல் இருந்திருப்பாரே? அப்ப ஆதாம் ஏவாள் சாப்பிட்டதற்கு யார் பொறுப்பாளி? கர்த்தர்தானே? அப்ப கர்த்தரைத்தானே நரக நெருப்பில போட்டு கர்த்தர் வறுக்கணும்? இதெல்லாம் என்ன லூசுக்கதை? இதையும் மக்கள் நம்புகிறார்கள்!

    சரி ஆதாம் ஏவாள் சாப்பிட்டால் பாவம் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்னார். பாவம்னா, கர்த்தர் சொல்லுக்கு கீழ்படியாம இருக்கறது தானே?

    கீழ்ப்படியாம இருந்தால், நரகத்தில் போட்டு கர்த்தர் சுடுவார். சொல்ற பேச்சை கேக்கலைன்னா கான்வெண்டில் டீச்சர் வெயில்ல முட்டி போட்டு நிக்க வைக்கிறமாதிரி. இங்க கொஞ்சம் ஜாஸ்தி, ஆளை எண்ணெய் கொப்பறையில போட்டு வறுத்து எடுத்துடுவானுங்க..

    ஓகே ஆதாம் ஏவாளுக்கு கர்த்தர் பாவம் கொடுத்ததோட ம்னித குல்ம் மொத்தத்தையும் நரகத்தில சுடறதா கர்த்தர் ஒரு க்டுப்பில தீர்மானிச்சிக்கிறார்.

    சரி நாம கோவிச்சிக்கிட்டோமேன்னு அவர் யோசிக்கிறார். சரி நாமளே கன்னி மேரி வயித்தில பொறந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நமக்குநாமே பலி கொடுப்போம். அப்போ நான் சந்தோஷமாயிடுவேன் (கர்த்தர் ஒரு மாதிரி மசோகிஸ்டுன்னு வச்சிக்குவோம்)

    சரின்னு அவர் பொறக்கிறார். இயேசுதான் கர்த்தரோட புள்ளை, அப்புறம் கர்த்தரும் அவர்தான். கர்த்தரே அவரோட புள்ளையா பொறக்கிறார். கர்த்தரை சந்தோஷப்படுத்த கர்த்தரே கர்த்தருக்கு தன்னைத்தானே பலிகொடுத்து கர்த்தரை சந்தோச்படுத்துகிறார். (யம்மா.. சரியா?)

    மேலே இருக்கிற குழப்பத்தை ஒத்துக்கிடலைன்னா மவனே உனக்கு நரகம்தான். இந்த குழப்பத்தை ஒத்துகிட்டயன்னா உனக்கு சொர்க்கம்.

    …ஙே

    என்ன யாருக்காச்சும் எதாவது பிரியுதா?

    ஆமா,… எனனாங்கயா.. வெளாடறீங்களா?

  154. பிரதீப் பெருமாள்,
    There is no need for me to write in the name of Bernard. I have a good name given by my parents. You are doubting my integrity brother.

    With Love,
    Ashok

  155. //ஆப்பிள் சாப்பிட்ட பாவம் பெருசுன்னா, உன் கர்த்தர் எவ்வளவு பெரிய “டுபாகூறு”//
    Eating an apple is not a sin. But, disobediance to the word of GOD is sin.
    In your eyes looks like a small act of simply eating a fruit. But in real,
    They didn’t consider GOD’s godlyness.
    They became theives by having something, which is not in their authority.
    They became liers by breaking their promise with the GOD. When GOD told them not to eat the fruit, they agreed right.
    They made the serpent (Satan) as Lord, by listening to satan and neglecting GOD’s word.
    Ultimately Adam/Eve chose satan rather than choosing GOD. So they are destined to dwell in Satan’s place (Hell) and not in the GOD’s place (Heaven)

    With Love,
    Ashok

    (Comment edited & published)

  156. ////முடவன் நடப்பதும் குருடர் பார்ப்பதும் கர்த்தரின் நாமத்தினால், பேய்கள் ஓடுவதாலேயே! எக்ஸார்ஸிஸ்ட் பார்த்தீர்களா? பாவிகளே! அறிவியலை நம்பி மருத்துவர்களிடம் செல்லாதீர்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.///

    அட காட்டு மிராண்டி, 1952 ஆம் ஆண்டு மாஜிகல் ரெமெடீஸ் அண்ட் ட்ரக்ஸ் ஆக்ட் மூலம் இந்த மாதிரி ஜபம் செஞ்சு நோயை குணப்படுத்தினால் கைது செய்யலாம். உங்க கூட்டத்தையே இப்படி கைது செய்ய ஒருவன் வர வேண்டும். இந்த மாதிரி மூட நம்பிக்கை உள்ளவங்களை பற்றியெல்லாம் கிண்டல் பண்ணி படம் எடுக்க சத்யராஜுக்கும், மணிவண்ணன் பொன்றவங்களுக்கும் ஆண்மையே கிடையாது. பயந்தாங்கொள்ளிகள்.

    ////ஆதாம் ஏவாள் செய்த முதல் பாவத்திலிருந்து நான், அசோக் குமார் கணேசன், கிலாடி ஆகியோர் மீண்டது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்ட்தால்தான். எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்போகிறது.///

    அட சைக்கோவே….நீ பாவி அதனால மீண்டதாய் நினைக்கிறாய். நாங்கல்லாம் பாவிங்க இல்லையே. நாங்க ஏன் அப்படி நினைக்கனும். மேலும் நாங்க இப்பவே சொர்கத்தில தான் இருக்கோம். அதை நீங்கல்லாம் சேர்ந்து நரகமாக மாத்தாம இருந்தா சரிதான். அதையே நீ இன்னும் புரிஞ்சிக்கல. இனிமே தான் உனக்கு சொர்கம் கிடைக்கப் போகுதான். மறுபடியும் சொல்றேன், நல்ல இந்து மனோவியல் டாக்டரைப் போய் பார்த்து புத்தி தெளிஞ்சிட்டு வாங்கப்பா. கடுப்பேத்தாதீங்க.

  157. According to me all the religion is one…conversion is not required…..because if a man is convert from one religion to other…for some reason he/she will be converted to another religion and so on….his/her mind changes and won’t be stable in one religion,and one thought…

    Religion does not brings anything to life…only self realization brings….

    Religion and god is only for those people who is ignorant…make him fearful.. with set of rules….

    People don’t fight for religion……All the religion and all the gurus is one and the same…

    The differences is not with others…it is with people who contradict with it…

    if you realized yourself…you have no contradictions….

  158. Dear Ragu Sir,

    “சரின்னு அவர் பொறக்கிறார். இயேசுதான் கர்த்தரோட புள்ளை, அப்புறம் கர்த்தரும் அவர்தான். கர்த்தரே அவரோட புள்ளையா பொறக்கிறார். கர்த்தரை சந்தோஷப்படுத்த கர்த்தரே கர்த்தருக்கு தன்னைத்தானே பலிகொடுத்து கர்த்தரை சந்தோச்படுத்துகிறார். (யம்மா.. சரியா?)”

    (Comment edited & published)

  159. ஆதாமின் பாவம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

    எபிரெயர்கள் அப்படி ஒன்று பற்றி என்றுமே சிந்திததே இல்லை. இயேசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

    வர வேண்டிய கிறிஸ்து ஆதி பாவம் நீக்குவார் என்பது கிடையவே கிடையாது.

    அவரவர் பாவம் மட்டுமே அவரவர்கட்கு என்பதை பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுகின்றன. கீழே காணலாம்.

    ஆதாமின் பாவம் என்பது நாத்திகர்களையும்விட கடவுளை கேவலப் படுத்தும் கடவுள் விரோதக் கொள்கை வேறு இருக்க முடியாது.

    உபாகமம்: 24: 16
    பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்,பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
    எரேமியா: 31:29பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
    எசேக்கியேல்: 18:1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

    எசேக்கியேல்: 18:20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்

    ஏசாயா: 3:10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

    விரைவில் மேலும் காண்போம்.

  160. For those of you who write in Samuel Reddy, I quote from Mahatma Gandhiji.

    //My difficulties lay deeper. It was more than I could believe that Jesus was the only Incarnate son of God, and that only he who believed in Him would have everlasting life. If God could have sons, all of us were His sons. If Jesus was like god, or God Himself, then all men were like Goad and could be God Himself. My reason was not ready to believe literally that Jesus by his death and by his blood redeemed the sins of the world…//

  161. Our Pranams to Dr. T.Hanuman Chowdary for saving the taxpayers money and the revenue from Hindu Temples. – B.R.Haran.

    Deccan Chronicle dated 08 October 2009.

    No state money for churches

    The Andhra Pradesh High Court on Monday made it clear that no government money can be spent to construct or repair churches and other Christian religious institutions in the state in pursuance of the GO Ms. No. 42, issued on December 19, 2001.
    A division bench comprising Chief Justice Anil R. Dave and Justice C.V. Nagarjuna Reddy was dealing with a writ petition filed by one Dr Tripuraneni Hanuman Chowdary complaining that the state government was promoting a religion contrary to injunctions of the Constitution. The bench was clarifying its earlier orders of status quo in this regard.
    The petitioner listed the various orders issued between December 2001 and March 2009 and complained that the state under the guise of welfare of SCs and STs was “promoting religious activity relating to Christians”.
    The court had ordered on September 7 to maintain status quo on release of funds under the GO for maintenance, repair and construction of churches.
    When the case came up for hearing, the counsel for the petitioner, Mr Challa Kodanda Ram, complained that the words status quo were being misinterpreted by the officers. The bench then said there shall be no spending of government money in pursuance to the various GOs issued by the government.

    URL: – https://www.deccanchronicle.com/hyderabad/hc-refuses-entertain-media-reports-cm-924#

  162. One thing should be changed at the end of the article. It has come to light that the relatives of dead people were lured by the congress to say that the deaths were suicide due to YSR’s death!
    Maybe the ‘sin’ about which Christianity talks is the sin of incest. Otherwise how did the first two people multiplied into many!?

  163. dear GLADY….//ஆபிரகாமின் மூன்றாம் மனைவியின் சந்ததியினரே இந்தியத் திராவிட இனம் என ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது;//i don’t accept this ….

  164. திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்”

    நடந்துவிட்டது
    ஜெய் ஸ்ரீராம்

  165. அன்புள்ள திரு அசோக்
    கிறிஸ்துவை கடவுள என்று நாங்கள் நம்புகிறோம். அனால் அவர் ஒருவர்தான் கடவுள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    அப்போது அவருக்கு முன்னால் கடவுளே இல்லையா? நம்பரே ஹிந்து மதம் ஒன்றுதான் எல்லா வழிகளும் இறைவனை நோக்கி என்று நம்புகிறது

    அதுடன் உன்மையான செகுலர் மதம். ஆகவேதான் இயேசுவை மற்றும் அல்ல அணைத்து கடவுள்களையும் ஏற்று கொள்கிறது.

    என் மதம் மட்டுமே உண்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

    Sankar

    (Edited and Published.)

  166. பகவானுக்கு தெரியும் அரசன் முதல் சாதாரண மனிதன்வரை இவன் நல்லவனா கெட்டவன என்று கடவுளுக்கு மட்டும் தெரியும். அவன் (ரெட்டி) வினை அவனை சர்வநாசம் செய்துவிட்டது, நல்லவருக்கு ஒரு போதும் இப்படிப்பட்ட சாவு நேராது, ஆந்திரா பிழைத்தது

    .

  167. If ‘jesus heals’ ordinary people in ‘Suvishesha peruviza’ then why Theresa was treated by doctors and Dinakaran was admitted to Apollo Hospital where he died?

    R.Sridharan

  168. Dear Friends

    What ever happened , happened, please let us concentrate for future, we will create unity between us and try to protect our interest and our religion, there are many people being a hindu not supporting hinduism and commenting on us and teasing us, we are strong beliver of god let us belive on god definetly he or she is there and he/she is watching everything and punishing according to their mistake/sin. please treat all hindus as hindus no communal difference and try to be united to keep or goals up. some thing can be destroyed some thing cannot, once we get cancer it can be treated for some time, but it cannot be cured. it will definetly kill. this is also like a cancer, we have to take care to avoid getting cancer otherwise we have to give treatment for some time but end is definite.

    our religion can not be vanished by anybody even muhals could not able to do anything than what this people can do. this people never allow any country with peace and green they will spoil all the country atmosphere creat global warming and social warming. Be Indian by Indian Be hindu and being a hindu we will support our hindusim at the same time we will not critisize any other religion. we have faith on god he will take care for all of the mischieves.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *