முகப்பு » சினிமா

நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

அச்சிட அச்சிட

achchan_urangatha_veedu01எப்பொழுது ஒரு மதமோ, கொள்கையோ, தத்துவமோ, தலைவரோ, நிறுவனப்படுத்தப் படுகிறதோ, சொத்துக்கள் சேருகின்றனவோ அப்பொழுது அந்த இடத்தில் பிரச்சினைகள் துவங்குகின்றன. ஊழல்கள் ஏற்படுகின்றன. சகலவிதமான பாவங்களுக்கும் அந்த நிறுவனத்தின் அபரிதமான பணமும், அதிகாரமும் இட்டுச் செல்கின்றன. இதற்கு இந்து மதத்தின் சில மடங்களும் கூட விலக்கில்லை. குறிப்பாக நிறுவனப் படுத்தப்படும் மத அமைப்புக்களின் மீதும் அதன் நிர்வாகிகள் மதத் தலைவர்கள் மீதும் பல்வேறு விதமான குற்றசாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஏராளமான சர்ச்சுக்களில் சிறுவர்கள் மீது அந்த சர்ச்சுக்களின் பாதிரியார்கள் பாலியல் வன்முறை செய்தார்கள் என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டு பல பாதிரியார்களின் குற்றங்கள் நிரூபணமாகி பாதிக்கப் பட்டவர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு ஏராளமான சர்ச்சுக்கள் இன்று திவாலாகி வருகின்றன. வாடிக்கன் வரை இந்தப் பிரச்சினை அலசப்படுகிறது. இருந்தாலும் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும், கற்பழிப்புக்களும் சர்ச்களில் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இந்திய சர்ச்சுகளும் இந்தப் பிரச்சினைக்குத் தப்பவில்லை.

கேரள மாநிலம் இந்தியாவில் மிக அதிகமான கன்யாஸ்திரீகளையும், பாதிரியார்களையும் உருவாக்குகின்றது. அந்த மாநிலத்தில்தான் இளம் கன்யாஸ்த்ரீகள் மீதும் சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வரும் சிறுவர்கள், சிறுமிகள் மீதும் சர்ச் பாதிரியார்களாலும், கன்யாஸ்த்தீர்களாலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த வக்கிரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சமீபத்தில் ஜெஸ்மின் என்றொரு கன்யாஸ்த்ரீ எழுதிய உண்மை அனுபவங்கள் “ஆமென், ஒரு கன்யாஸ்த்தீரீயின் கதா” என்ற பரபரப்பான புத்தகமாக வெளிவந்து பல பதிப்புக்கள் கண்டும், இன்றும் கேரளாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த கன்யாஸ்த்ரீ ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். கேரள மாநிலத்தின் மிகப் பெரும் பணக்கார சர்ச்சான மலபார் சர்ச் நடத்தும் கல்லூரியில் பணியாற்றியவர். கத்தோலிக்க சர்ச்சுக்களில் நடக்கும் ஊழல்களையும், பெண்கள் மீது நடத்தப் படும் பாலியல் வன்முறைகளையும் கண்டித்ததால் இந்த கன்யாஸ்த்ரீக்கு மனநோய் என்று பொய்யான குற்றம் சாட்டப்பட்டு சபையில் இருந்து விலக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். தன் கதையை தான் கண்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டு கத்தோலிக்க சர்ச்சுக்களின் கோர முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். புதிதாகச் சேரும் கன்யாஸ்திரீகளை மூத்த கன்யாஸ்தீரீகள் தங்கள் ஓரினச் சேர்க்கைக்குப் பலியாடாக்குவதையும், ஆண் பாதிரியார்கள், இளம் பெண்களை கட்டயாப் படுத்திக் கற்பழித்ததையும் அங்கு நிலவும் மோசமான ஊழல்களையும் இந்த சகோதரி அம்பலப் படுத்தியுள்ளார்.

புனிதமான இறைப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படும் பாதிரியார்களும், கன்யாஸ்திரீகளும், பிறரது பாவங்களையெல்லாம் வாங்கி அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்க ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகக் கூறும் இவர்கள் சாதாரண மனிதர்கள் சிந்திக்கக் கூடத் தயங்கும் கொடும் பாவங்களை எவ்வித மனசாட்சியும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். சரி கிறிஸ்துவ மதத்தின் நிறுவனங்களில் நிகழும் ஊழல்களையும், கற்பழிப்புக்களையும் குறை கூற, பேச இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று எந்த ஒரு கிறிஸ்துவரும் கேள்வி எழுப்பலாம். புட்டபர்த்தி சாய்பாபா மடம் உட்பட பல்வேறு இந்து மடங்கள் மீதும் இது போன்ற குற்றசாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பணம் குவியும் இடத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களால் பாவம் சேர்க்கப்படுகிறது. உண்மைதான். இந்துச் சாமியார்களிலும் போலிச்சாமியார்களும் மதுரை ஆதீனம் போன்ற கோமாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இந்துக் கோவில்களில் பணிபுரியும் ஒரு சில அர்ச்சகர்களும் கூட கோவிலுக்குள்ளேயே அசிங்கமாக நடக்கும் சம்பவங்கள் கூட அவ்வப் பொழுது நடக்கின்றனதான். இதில் ஒரு மதத்தை மட்டும் குறிப்பாகக் குற்றம் சாட்ட முடியாதுதான் இருந்தாலும், நிறுவனப்படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கும் இந்து மதத்தைச் சார்ந்த மத நிறுவனங்களுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் இந்து மத மடாலயங்களும், ஆதீனங்களும், சபைகளும், மிஷன்களும் ஒட்டு மொத்த இந்துக்களைக் கட்டுப் படுத்துவதில்லை. இந்து மதம் என்பதே யாராலும் கட்டுப் படுத்தப் படாத இயல்பான ஒரு மதமாகும். இங்கு எந்த ஒரு பூசாரிகளும், சாய்பாபாப்க்களும், சங்கராச்சாரியார்களும், ஜீயர்களும் இந்த மத பக்தர்கள் மீது யாதொரு கட்டுப்பாடும் கொள்ள முடியாது. இங்கு இந்தக் கிழமை சர்ச்சுக்குப் போக வேண்டும் இந்த கிழமை நோன்பு இருக்க வேண்டும் இந்த திசை பார்த்துத்தான் வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை யார் மீதும் திணிக்க முடியாது. இந்து பக்தர்கள் இந்த மடாலயங்களின் தலைவர்களுக்கும் துறவிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள் ஆனால் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த இந்து மதத்தினரும் யாதொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் விதி முறைகளுக்குள்ளும் அடங்காதவர்கள். மடாலயங்களின் நிர்வாக வசதிக்காக அந்தந்த மடங்களுக்குள்ளே பலத்த கட்டுப்பாடுகளும் நியமங்களும் சாஸ்திரங்களும் சடங்குகளும் இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே, கோவில்களுக்கு வெளியே இந்து மதத்தினர் முழு சுதந்திரத்துடனேயே தங்கள் வழிபாடுகளையும் அன்றாட வாழ்க்கை முறைகளையும் நிகழ்த்தி வருகிறார்கள். ஒரு இந்து வெள்ளிக் கிழமை கோவிலுக்குப் போகா விட்டால் அவருக்கு எந்தவொரு பூசாரியும் தண்டனை கொடுப்பதில்லை. ஏனென்றால் இந்து மதம் நிறுவனப் படுத்தப்பட்ட மதம் அல்ல. ஒரு மடத்திற்கு அபிமானம் உள்ள சீடர்களைக் கூட அந்த மடத் தலைவர் கட்டுப் படுத்துவதில்லை. அறிவுரைகளையும், விதிமுறைகளையும் சொல்வார்களே ஒழிய யாரையும் யாரும் நிர்ப்பந்தப் படுத்துவதில்லை. அதனால்தான் இயல்பாக இருத்தலே இந்து மதம் என்று அறியப் படுகிறது. ஒரு வைணவர் தங்கள் குடும்ப வழக்கப் படி ஒரு ஜீயர் மடத்திற்குச் சென்று வணங்கலாம், அந்த ஜீயரைக் குருவாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனாலும் அந்த ஜீயர் அந்த வைணவரின் குடும்ப விவகாரத்திலோ அவர் அன்றாடம் என்ன செய்கிறார் என்ன செய்ய வேண்டும் என்றோ அவர் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்றோ என்று எப்படி கோவிலுக்குப் போக வேண்டும் என்பதையோ வற்புறுத்துவதில்லை, திணிப்பதில்லை. மத சம்பிரதாயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறாரே அன்றி யாரையும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு நிர்ப்பதித்து சட்டம் போட்டு தன் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரவே முடியாது. இது சங்கர மடங்களுக்கும், மேல்மருவத்தூருக்கும், அமிர்தானந்த மாயி அம்மாவுக்கும், சாய்பாபாவுக்கும் எந்தவொரு இந்து மடத்துக்கும் பெரிய மடத்தின் பெரிய குருபீடங்களில் இருந்து சாதாரண சாலையோரக் கோவில் பூசாரிகள் வரை பொருந்தும். இந்து மத அமைப்புகள் இந்துக்களின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது ஒரு எல்லையுடன் நின்று விடுகின்றது.

ஒரு இந்து நாத்திகனாக இருக்க விருப்பப்பட்டால் தாராளமாக இருந்து கொள்ளலாம். அதனால் அவனைக் கோவிலுக்குள் நுழையாதே என்று எந்தப் பூசாரியும் சொல்லி விட முடியாது. தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டு திரிந்த ஈ வெ ராமசாமி நாயக்கரைக் கூட, அவர் ராமர் விக்ரகங்களையும், விநாயகர் சிலைகளையும் செருப்பால் அடித்த பின்னரும் கூட எந்தவொரு இந்து மதத் தலைவரும், மடமும், கோவிலும், பூசாரியும் அவரை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கச் சொல்லவில்லை விலக்கவும் முடியாது. சமுதாயப் பகிஷ்கரிப்பும் நடப்பதில்லை. அனைவரும் இந்து மதத்திற்குள் அடக்கம் என்பதுதான் இந்து மதத்தின் பலமும் பலவீனமூமாக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகின்றது. கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, சடங்குகளை அனுசரித்தாலும் சரி அனுசரிக்கா விட்டாலும் சரி, பக்தி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மத குருமார்களை மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி, கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி எல்லோருமே இந்துக்கள்தான். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள், ஜாதி அமைப்புக்கள் போன்ற மதம் அல்லாத சமுதாய அமைப்புக்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவையுமே ஒரு சில விதிவிலக்குகள் தவிர மதம் சார்ந்தோ கோவில் சார்ந்தோ அமைவதில்லை. மதத்தின் பெயரைச் சொல்லி இந்து மதத்தில் யாரையும் சாதி விலக்கமோ, மத விலக்கமோ, கிராம விலக்கமோ செய்யப் படுவதில்லை. மதத்தின் பெயரால் எவரும் தண்டிக்கப் படுவதும் இல்லை. சாதிக் கொடுமைகள் என்பதும் ஆதிக்க சாதியின் அடக்கு முறைகளும் கூட சாதியினரின் பலத்தின் பாற்பட்டு வருவதே அன்றி இந்து மதத்தின் பெயரால் வருவதல்ல. சாதிக் கட்டுப்பாடுகள் கூட அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரிடம் மட்டும்தான் செல்லுபடியாகுமே தவிர ஒட்டு மொத்த இந்துக்களையும் கட்டுப் படுத்தாது. தீண்டாமைக் கொடுமைகளும் அழிய வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஏராளமான சீர்திருத்தங்களை மதத்தின் பெயரால் எதிர்ப்பு இல்லாமல் அமுல் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க ஜாதிகளின் தீண்டாமைக் கொடுமை மட்டும் அழிக்கப்பட்டு விட்டால் இந்து மதத்தில் இருக்கும் ஒரு பெரிய குறையும் அகன்று விடும். அதுதான் இந்து மதத்தின் இன்றைய நிலமை. இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் மத குருமார்களாலோ, கோவில்களாலோ கட்டுப்படுத்தப் படுவது கிடையாது.

மாறாக கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மதத்தின் பெயரால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப் படுத்தப் படுகிறார்கள். ஜமாத்தினாலும், சர்ச்சுகளினாலும், பாதிரியார்களினாலும் முல்லாக்களாலும் அவர்களின் சுதந்திரம் பெரிதும் கட்டுப் படுத்தப் படுகின்றன. உதாரணமாக பல ஊர்களிலும் சர்ச்சுக்கு ஒழுங்காக வராத கிறிஸ்துவர்கள் பெருத்த தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஒருவர் சர்ச்சுக்குப் போகாமல் தன் மகளின் திருமணத்தை நடத்த மட்டும் சர்ச்சுக்குப் போவாரேயானால் அவர் அந்தச் சர்ச்சுக்கு லட்ச ரூபாயையும் தாண்டும் பெரிய அபராதத்தைக் கட்டினால் மட்டுமே அவரை அந்தச் சமூகத்திற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். மேலும் கிறிஸ்துவர்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதையும் சர்ச்சுக்களும் பாதிரியார்களுமே தீர்மானம் செய்கிறார்கள். சமீபத்தில் நடந்த நாடாளுமனறத் தேர்தலில் ஒரே ஒரு இந்து மட்டும் பி ஜே பி சார்பாக நிற்கிறார் என்பதற்காக அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து பங்குகளும், சர்ச்சுக்களும், பாதிரியார்களும் ஒருமித்துச் சேர்ந்து அனைத்து கிறிஸ்துவர்களும் தி மு க வேட்பாளருக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தங்களுக்கு மதம் இல்லை ஜாதி இல்லை என்று வெளியில் போலியாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் மார்க்ஸிஸ்டு கம்னியுஸ்டு கட்சியினர் கூட தங்கள் மார்க்ஸிஸ்டு வேட்ப்பாளருக்கு ஓட்டுப் போடாமல் தங்கள் சர்ச்சுக்கள் கட்டளையிட்ட தி மு க வேட்பாளருக்கே ஓட்டுப் போட்டார்கள். ஏன் அந்த மார்க்கிஸ்டு கட்சி வேட்பாளரே கூட தனக்கு ஓட்டுப் போட்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆக ஒவ்வொரு கிறிஸ்துவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிப்பட்ட சுதந்திரத்திலும் தனிப்பட்ட குடும்ப தீர்மானங்களிலும் கூட மத அமைப்புகள் தலையிடுகின்றன. யார் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், யார் யாருடன் பேச வேண்டும், யார் என்றைக்கு எந்த சர்ச்சுக்குப் போக வேண்டும், என்பது முதல் தங்கள் சர்ச்சுகளைச் சேர்ந்த ஒருவர் எந்தவிட உள்ளாடை அணிய வேண்டும் என்பது வரை சர்ச்சுக்களும் அதன் பாதிரியார்களும் தீர்மானம் செய்கின்றார்கள். அந்த அளவுக்கு நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுடைய தனி மனித சுதந்திரத்திற்குள் அமைப்புகள் மூக்கை நுழைத்து அவர்களைத் தங்களது சர்வாதிகாரமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஒரு கோவில் அர்ச்சகரோ அல்லது ஒரு சங்கராச்சாரியாரோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் நாலு பேர் கூட கேட்க்க மாட்டான். ஆனால் ஒரு சர்ச்சின் பிஷப் இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கட்டளையிடும் பொழுது பெரும்பாலான கிறிஸ்துவர்கள் தங்கள் கட்சி அபிமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்ச்சின் கட்டளைக்கு அடிபணிகிறார்கள் என்பதை கேரளாவிலும், சமீபத்தில் கன்யாகுமரி தொகுதியிலும் கண்டோம். அதைப் போலவே முஸ்லிம்களின் தனி வாழ்வு முதல் அரசியல் முடிவுகள் வரை அவர்கள் மதத்தின், மத குருமார்களின், மத அமைப்புகளின் கட்டளையின்படியே தீர்மானிக்கப் படுகின்றன. ஒரு சில விதி விலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

உதாரணமாக அமெரிக்காவில் மிட் ராம்னி என்று ஒருவர் ரிபப்ளிகன் ஜனாதிபதி அபேட்ச்சகராக சென்ற ஜனாதிபதி ப்ரைமரி தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு தீவீர மார்மான் (http://www.whymormonism.org/) நம்பிக்கையாளர், கிறிஸ்துவத்தில் ஒரு பிரிவான மார்மோன் சர்ச்சைச் சேர்ந்தவர். இவர் தான் ஜீசஸ் கடவுளின் பிள்ளை என்பதை நம்புவதாகவும் அதே சமயத்தில் தீவீரமான மார்மோன் என்றும் அறிவித்துள்ளார். மார்மோன் சர்ச் கொஞ்சம் மொகமதின் சாயல் கொண்டது. கடவுள் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரிடம் வந்து காதுக்குள் குசு குசுவேன்று பேசுவதாக நம்புவதுதான் முக்கியமான மார்மோன் நம்பிக்கை. இவர்களுக்கு யேசுவை விட தங்கள் சர்ச்சின் பாதிரியார்தான் முக்கியமானவர் அவர்தான் கடவுள் கூட செல்ஃபோனிலோ அல்லது ஹாட்லைனிலோ பேசும் வல்லமை படைத்தவர், அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அப்படிப் பட்ட மார்மோன் ஒருவர் நாளைக்கு ஜனாதிபதியானால் கடவுளுடன் ஹாட்லைனில் பேசும் தன் சர்ச் பாதிரி சொல்வதைக் கேட்ப்பாரா அமெரிக்க கான்ஸிடிடியுஷனைக் கேட்ப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவர் என்னமோ எனக்கு அமெரிக்காவின் அரசிலமைப்புச் சட்டம்தான் முக்கியம் என்கிறார், நம்புவார்தான் யாரும் இல்லை ஏன் நம்ப மாட்டேன் என்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. மார்மோன்களுக்கு எல்லாமே சர்ச்தான், குடும்பம், பிள்ளை, குட்டி, கல்யாணம் எல்லாம் சர்ச் சொல்வது படிதான் நடக்க வேண்டும், சர்ச்தான் அவர்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது. உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் அவர்கள் டவுசருக்குள் போட்டுக் கொள்ளும் உள்ளாடைகளளக் கூட சர்ச்தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிரிக்காதீர்கள் தன் பக்தர்களுக்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட அந்த உள்ளாடைகளுப் பெயர் “புனித ஜட்டிகள்” சர்ச் செய்து விற்கும் மந்திரிக்கப்பட்ட அந்தப் புனிதமான அண்டர் கார்மெண்டுகளைத்தான் அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அப்படியாகப் பட்ட சர்ச்சினால் ஆசீர்வதிக்கப் பட்ட உள்ளாடைகளை அணிந்துகொண்டு வரும் ஒரு ஜனாதிபதி நாளைக்கு எப்படியாகப்பட்ட சட்ட திட்டங்களை வகுப்பார் என்று யோசனை செய்த தீவீர ரிபப்ளிக்கன்கள் கூட அவரை நிராகரித்துவிட்டார்கள். மார்மோன்கள் நிரம்ப வேடிக்கையானவர்கள், அவர்கள் சர்ச்சுக்கு மேலே விமானம் பறக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று ஒரு சட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எப்பொழுது செய்து கொள்ளலாம், எப்பொழுது முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம் சர்ச்தான் தீர்மானம் செய்யும். இப்படிப் பட்ட கடும் மத நிறுவனத்தின் பிடியில் சிக்கி தம் சுதந்திரத்தை இழந்தவர்கள்தான் இந்துக்களையும் பிற மதத்தினரையும் பார்த்துக் காட்டுமிரரண்டிகள் என்றும் பாவிகள் என்றும் ஏசித் திரிகிறார்கள். உலகமெங்கும் இப்படி நிறுவனப் படுத்தப் பட்ட மத நிறுவனங்களும் அதன் தலைவர்களும் மதத்தின் பெயரால் தனி நபர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட கட்டாயப் படுத்தப்பட்ட நிர்ப்பந்தங்கள் இல்லாத சுதந்திரம் கொண்டது இந்து மதம்.

taslima-nasrin முஸ்லிம் மதத்திலும் இதைப் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் பாக்கிஸ்தானை ஆதரிக்கச் சொல்லியும், கிரிக்கெட் மேட்சுகளுக்குக் கூட பாக்கிஸ்தானின் வெற்றிக்குப் பிரார்த்திக்கச் சொல்லியும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றியும் மசூதிகளும் முல்லாக்களும் நிர்ப்பந்திக்கின்றனர். இப்பொழுது இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கல்யாணம் செய்யச் சொல்லும் லவ் ஜிகாதைக் கூட மத நிலையங்கள் அறிவிக்கின்றன. காஃபீர்களின் மீதான வெறுப்பும், தாக்குதலுக்கான கட்டளைகளும் கூட மதத் தொழுகையின் பொழுது அறிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் சொந்த விவாகரங்கள் கூட முல்லாக்களால்தான் தீர்வு செய்யப்படுகின்றன. அங்கு நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை. ஒரு சில அடிப்படைவாத மதக் கொள்கைகளை விமர்சித்த கவிஞர் ரசூல் என்பவர் இன்று வரை மத விலக்கம் செய்யப்பட்டு எண்ணற்ற மன உளைச்சல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு தஸ்லீமா நஸ்ஸ்ரீன் உயிருக்குப் பயந்து நாடு நாடாய் அகதியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

இந்த நிறுவனப் படுத்த மதங்கள் அந்த மதத் தலைவர்களுக்குத் தரும் அளவற்ற சர்வாதிகாரமும், அதிகாரமும், பண பலமும், ஆதிக்கமும் அந்த மதத் தலைவர்களின் ஊழல்களுக்கும் பிற குற்றங்களுக்கும் வித்திடுகின்றன. ஒரு சர்ச் பாதிரியார் என்பவர் யாராலும் கேள்வி கேட்க்கப் பட முடியாதவர், அவர் கட்டளையின் படிதான் அவருக்குக் கீழே உள்ள சர்ச்சின் உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்ற அளவற்ற அதிகாரம் காரணமாக அவரால் துணிந்து கற்பழிப்பு கொலைகள் பிற வன்முறைகளைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட முடிகிறது. ஆக நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் கட்டுப்பாடில்லாத அதிகார வெறி பல்வேறு குற்றங்களுக்கு வழிகோலுகின்றன. இவற்றை பற்றி தமிழ் இந்து ஏன் கவலைப் பட வேண்டும் அது அவர்களது உள் மத வி(வ)காரங்கள் அல்லவா என்று முற்போக்காளர்கள் சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கான பதிலைத் தனியாகப் பார்க்கலாம். முதலில் இப்படி சர்ச்சுக்களின் அதிகார வெறிக்குப் பலியான, சர்ச்சுக்களின் அதிகார வெறியால் சீரழிக்கப் பட்ட ஒரு சிறுமியின் உண்மைக் கதை ஒன்று மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா? இப்பொழுது கமலஹாசன் அளித்துள்ள உன்னைப் போல் ஒருவன் ஒரு அதிசய வரவு. ஒரு துணிவான முயற்சிதான். நமது இயக்குனர்கள் ஒரு சொப்பன வாழ்வில் வாழ்பவர்கள், நடக்க முடியாத சாத்தியம் இல்லாத மிகைப்படுத்தப் பட்ட ஃபாண்டசிகள் எடுப்பதில் மட்டுமே குறியானவர்கள். இவர்களுக்கு நல்ல படங்களும் எடுக்கத் தெரியாது, சமூகப் பிரச்சினைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்லவும் தெரியாது.. மீண்டும் மீண்டும் காதல், பார்த்துக் காதல், பார்க்காமலேயே காதல், கேட்டுக் காதல், கேட்க்காமலேயே காதல் அல்லது வன்முறை – இதைத் தவிர தமிழ் நாட்டுச் சினீமாக்காரர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருப்பதே தெரியாது. அப்படியே வேறு பிரச்சினைகளளத் தொட்டாலும் அவையும் யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாத அபத்தக் குப்பைகளாகவே அமைகின்றன. அபூர்வமாக எப்பொழுதாவது வரும் யதார்த்தப் படங்கள் கூட நிகழ்காலப் பிரச்சினைகளைத் தொடத் துணிவதேயில்லை. கேரளத்தில் தற்காலப் பிரச்சினைகளை துணிந்து தொடர்ந்து தொடுகிறார்கள். ஈநாடு என்ற படம் கேரளத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே படத்தில் ஒட்டு மொத்தமாக அணுக முயன்றது. அதன் பின்னால் எமர்ஜென்சியின் பொழுது நடந்த கோழிக்கோடு ஆர்.இ.சி மாணவனான ராஜன் கொலை வழக்கு சினிமாவாகியது. எத்தனையோ சமகால வழக்குகள் திரைப்படக் கருவாகி மக்களிடம் பிரச்சினையின் ஆழத்தைக்கொண்டு சென்று அவர்களை அலச வைத்தது. எனக்குத் தெரிந்து 94ல் நடந்த இஸ்ரோ நம்பி நாராயணன் கேஸ் மட்டும் தான் இன்னும் திரைப்படமாக வரவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தைக் கலக்கிய கொடூரமான வழக்குகளில் ஒன்று சூரிய நெல்லி பள்ளி மாணவி கடத்தலும், விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டதும். அதில் பல பிரபலங்களின் பெயர்கள் கைதானார்காள். ஒருவரைத் தவிர அனனவரும் விடுவிக்கப் பட்டனர். நெஞ்சைப் பதற வைக்கக் கூடிய அந்தக் கொடூரத்தை இப்பொழுது சினிமாவாக்கியிருக்கிறார் லால் ஜோஸ் என்ற இயக்குனர். இந்தப் படம் கேரளத்தின் சமூக அவலங்கள் பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. பெண்களைப் பெற்றோரின் வயிறைக் கலங்க அடிக்கிறது. ரத்தக் கண்ணீர் வரவழைத்துள்ளது. பிரச்சினையைத் தானே சொல்லுகிறோம் என்று ஏனோ தானோவென்று ஒரு பிரச்சாரப் படமாக எடுத்து விடவில்லை. ஒரு அற்புதமான சினிமாவகவும் எடுத்துள்ளார்கள். பல நாட்களுக்கு நம்மைத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய ஒரு படம் அச்சன் உறங்காத வீடு.

சூரியநெல்லி கேஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1996 செப்டம்பரில் கேரளத்தின் மலைகள் நிறைந்த அடர்வன மாநிலமான இடுக்கி மாவட்டத்தில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி ஒரு பஸ் கண்டக்டர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்த பின் அச்சிறுமியைப் போகப் பொருளாக கேரளத்தின் வெகுமானப் பட்ட கனவான்களுக்கு விற்றிருக்கிறான்., கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஒரு டூர்கொண்டு போய் ஊர் ஊராகப் போய் பெரிய மனுஷாளுக்குப் படைத்திருக்கிறான். 40 நாட்கள் கேரளத்தின் முக்கியப் பிரதானிகளால் சக்கையாகப் பிழீயப்பட்ட அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள்., விஷயம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 43 பேர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து 35 பேர்களுக்கு கீழ்க்கோர்ட் தண்டனை வழங்கியது. ஹைகோர்ர்ட் ஒரே ஒருவனை மட்டும் தண்டித்துவிட்டு பிறரை விடுதலை செய்துவிட்டது. கேரள அரசு வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்பொழுது எடுத்துச் சென்றுள்ளது. ஆனால் சூரியநெல்லி கேரள மக்களின் மனசாட்சியை எந்தவிதத்திலும் பாதித்து விடவில்லை. அதன் பிறகு விதுரர என்ற ஒரு கேசும், அப்புறம் இன்னொரு கேசுமாகக் கேரளத்தில் பள்ளிச் சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு பெரிய மனுஷாளுக்கு சதை விருந்து படைப்பது தொடர்ந்து நடை பெறுகிறது. கேரளத்தின் மந்திரிமார்களும், போலீஸ்மார்களும், நடிகர்களும் கூட இதில் கூட்டாளிகள். நீலலோகிதசநாடார்,, ஜோசஃப் என்று தொடர்ந்து மந்திரிகள் பதவி விலகினாலும் கூட இதுவரை ஒருவர் கூட தண்டனை அடைந்தது இல்லை. அந்தச் சூரியநெல்லி கேஸ் கடந்த வருடம் திரைப்படமாக எடுக்கப்பட்டு மக்களின் மனசாட்சியைக் கடுமையாக உலுக்கி விட்டது. படம் நம் மனசாட்சியை உலுக்கி பல நாட்களுக்கு நம்மை கலங்க அடிக்க வைப்பது. ஒரு நல்ல சினிமாவால் லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கலங்க அடிக்க முடியும், சிந்திக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தச் சிறந்த படம் ஒரு உதாரணம். படம் கேஸ் பற்றியது மட்டும் அல்ல, அதையும் தாண்டி, கிறிஸ்துவ சர்ச்சுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதம் மாறிய மலையாளிகளின் நிலை, பணக்காரர்களின் விளையாட்டுக்கள், பள்ளிகள் மாணவர்கள் மேல் திணிக்கும் சைக்காலஜிக்கலான அழுத்தம், பெற்றோர் பிள்ளைகளின் மீது திணிக்கும் அழுத்தம், குழந்தைகள் மீது கவனமின்மை, அரசின் அலட்சியம், போலீஸின் பாரபட்சம், மீடியாக்களின் கருணையில்லாத பரபரப்பு, பெண்ணப் பெற்றவர்களின் அவல நிலை என்று ஏராளமான பிரச்சினைகளை மிக அழுத்தமாகத் தொட்டுச் சென்று காண்போரைக் கலங்க அடிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

சினிமா மிக மிக பவர்ஃபுல் மீடியா அதை அபத்தக் களஞ்சியங்களுக்கு வீணடிக்கக் கூடாது என்பது இது போன்ற படங்களளப் பார்த்தால் புரியும்., இது எந்த விதத்திலும் ஒரு பிரச்சாரப் படம் அல்ல. நீதி போதனைப் படம் அல்ல, இப்படி இப்படி சமூகம் இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அது காண்போரிடம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காண்போரை மனசாட்சிக்குப் பயந்து நடக்க வைக்கிறது. மிகவும் யதார்த்தமான முறையில் இயல்பான நடிப்பு, சிறப்பான காமிரா, இசை என்று மிகச் சிறந்த ஒரு சினிமாவாக பரிமளிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

அச்சன் உறங்காத வீடு, மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு சமுதாயத்த்தில் படாத துயர் படும், சிறு வயதிலேயே மனைவியை இழந்த ஒரு அச்சன் உறங்க முடியாமல் போன வீட்டின் கதை. கேரளத்தின் மிக அழகிய மலைப் பிரதேசமான பீர்மேட்டில் எலக்டிரிசிட்டி போர்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண அரசு ஊழியரின் வீட்டில் விதி விளையாடச் சின்னாப் பின்னமாகிறது அவரது வாழ்க்கை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைநாட்டில் சில மனித மிருகங்களின் வக்கிரம் அவரது வாழ்க்கையை நிரந்தரமாக நிர்மூலமாக்கி விடுகிறது. கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மணம் மாறி கிறிஸ்துவ மதத்திற்குப் போய் சாமுவேலாகி விடும் பிரபாகரனை கிறிஸ்துவ மதமும் ஏற்கவில்லை, சொந்த பந்தமும் விலக்கி விடுகிறது. அடைக்கலம் கொடுத்த பெந்த கோஸ்தே சர்ச்சில் விசுவாசமான கிறிஸ்துவனாக மாறி விடுகிறார் சாமுவேல். மூன்று பெண்களை ஈன்ற பின் மனைவி மறைந்து விட தனியாளாய் நின்று கனவுகளுடன் பெண்களை வளர்க்கிறார். கனவுகள் ஒவ்வொன்றாக சிதைய ஆரம்பிக்க கடைசிப் பெண்ணான லில்லியிடம் தன் நம்பிக்கையை வைக்கிறார், அவளை ஒரு டாக்டாருக்குவது அவரது லட்சியமாகிறது. பெந்தேகோஸ்தேயின் வெறி பிடித்த பஜனைகள், தன் பெண்கள், அழகிய மலைச் சூழல் என்று அமைதியான நதியாகப் போகும் வாழ்வில் சூறாவளி வீசுகிறது. பள்ளிக்குப் படிக்கப் போன லில்லி கடைசி பஸ்ஸில் கூட வீடு வந்து சேர்வதில்லை. அதன் பிறகு அவளைத் தேடுகிறார். விதி கொடூரமாக விளையாடுகிறது, 40 நாள் கழித்து சின்னா பின்னமாகி வீடு வந்து சேரும் லில்லியய சாமுவேலும் அவரது குடும்பமும் எப்படி எதிர் கொள்வதும். ஈவு இரக்கமற்ற சமுதாயமும் அவர் அன்று வரை வெறித்தனமாக நம்பிக்கை வைத்த பெந்தகோஸ்தே சர்ச்சும், அரசாங்க அமமப்புகளும் நீதித்துறையும் அவரையும் அவர் குடும்பத்தையும் கடித்துக் குதறிச் சின்னா பின்னப் படுத்தித் தற்கொலைக்குத் தள்ளும் வரை செல்கிறது.

படம் பலரது பார்வைகளில் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் இறுதியில் அனைத்துப் புள்ளிகளும் இயல்பாக இணைகின்றன. படம் “சியோன் மணவாளன், ஏசு மஹராஜன்” என்ற வெறித்தனமான பெந்தகோஸ்தே பஜனைப் பாடலுடன் தொடங்குகிறது. வேகமும் விறு விறுப்பும் நிறைந்த பஜனைப் பாடல் காட்சி. அப்படி ஒரு காமிரா கோணமும் விறுவிறுப்பும் நிறைந்த உக்கிரமான காட்சியுடன் படம் துவங்குகிறது. பின்பு அதே பஜனைக் காட்ச்சி சாமுவேல் மனம் வெந்து சர்ச்சினால் கைவிடப்பட்ட பொழுது கலங்கிய மனநிலையுடைய சாமுவேலின் கண்களில் ஃபிஷ் ஐ காட்சியாக விரிவது அபாரம். காமராமேனும் எடிட்டரும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சிகளை எடுத்துள்ளார்கள். படம் முழுவதும் இடுக்கி/கோட்டடயம் மாவட்டத்தின் அடர் பச்சைக் கண்னைக் கவருகிறது. ஆனாலும் அதை ரசிக்கும் மனநிலையைக் கதை நமக்கு அளிப்பதில்லை, காட்சிகளின் விறுவிறுப்பும் கதையும், இசையும் நம் மனதைப் படபடப்பில் ஆழ்த்துகிறது. பலஹீனமான மிருதுவான, இரக்க மனம் உள்ளவர்களை பல நாட்களுக்குத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய உண்மைச் சம்பவம் இந்தத் திரைப்படம்.

வசனங்கள் மிகக் கூர்மையாக வைக்கப்பட்டுள்ளன. வெறித்தனமான பஜனை முடிந்து ஆபீசுக்கும் வரும் சாமுவேல் எதிர்த்த சீட் அம்மணியைக் காட்டி அவர்கள் எல்லாம் வெளுப்புத் தோல் கிறிஸ்துவர்கள் நாங்கள் எல்லாம் கருப்புத் தோல் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதில் தொடங்கி, தொடர்ந்து மலையாளத்தின் சர்ச்சுகளின் கோரப் பிடிகளில் சிக்கித் திணறும் மதம் மாறிய கிறிஸ்துவர்களின் நிலைமை சாடப் படுகிறது. தான் நம்பி விசுவாசமாக நடந்து கொண்ட அதே சர்ச், தன் பெண்ணைக் கடத்திக் கற்பழித்து வீதியில் விற்ற கொடூரன் மதம் மாறி அதே சர்ச்சில் சேர்ந்த ஒரே காரணாத்தினால் மன்னித்து விடச் சொல்கிறது. சாமுவேலின் மத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அந்த சர்ச் சந்தர்ப்பவாதமாகப் பயன் படுத்திக்கொண்டு அவரை நட்டாற்றில் விடுகிறது. எந்தக் கயவன் பெண்ணைக் கடத்தினானோ அவன் அதே சர்ச்சில் சேர்ந்துகொண்டு பாதிரியுடன் சாமுவேலின் குடும்பத்தில் அமைதி நிலவப் பாட்டுப் பாடுகிறான். மத மாற்றம் ஒன்றே குறி என்று பெந்தகோஸ்தே சர்ச்சுகள் வெறித்தனமாக நீதி நியாயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுகின்றன. சாமுவேல் நம்பிய சர்ச்சும் கை விட்ட நிலையில் கலங்கித் தவிக்கிறார். அந்தப் பாதிரியாரிடம் சாமுவேலின் இந்து நண்பர், அரசியல் கட்சிகள் பிரியாணி கொடுத்து ஆட்களைச் சேர்ப்பது போல ஒரு மதத்திற்கு மதமாற்றம் செய்து ஆட்களைச் சேர்க்கும் நீங்கள் எல்லாம் புனிதர்கள்தானா என்று சாடுகிறார். கிறிஸ்துவர்கள் நிறைந்த மலையாளத்தில் இப்படி மதமாற்றத்தை எதிர்த்து ஒரு சினிமா சாடுவது குறிப்பிடத் தக்கது. பெந்தகோஸ்தே சர்ச்சுகள் தீவீர மதமாற்றதில் குறியாக இருக்கும் பொழுது பிற பிரிவு சர்ச்சுகள் தீவீரமான ஜாதி வெறியையை சமுதாய ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றன என்பதையும் படம் சொல்கிறது. மொத்தத்தில் சர்ச்சுகள் கேரள கிறிஸ்துவர்கள் வாழ்விலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக ஒழுக்கங்களிலும் தலையிட்டு அளவற்ற தீமைகளைக் கொணர்வது படத்தில் மிகத் தெளிவாய்ச் சொல்லப்படுவது, சிக்குலார் வியாதி பிடித்த கம்னியுச கேரளாவில் ஒரு ஆச்சரியகரமான நிகழ்வே. சாமுவேலின் இரண்டவது மகளைத் திருமணம் செய்ய தன் மதம் மாறாத இந்துவானச் சொந்தச் சகோதரியின் மகனே விரும்பிய பொழுதும் சர்ச் தலையிட்டுத் தடுத்து விடுகிறது. பெண்ணைக் கடத்திக்கொண்டு போன பஸ் உரிமையாளரின் பையனுக்கு உயர்ஜாதி சர்ச் உறுதுணையாக இருக்கிறது. இப்படி கேரளாவின் அன்றாட அரசியலிலும் சொந்தக் குடும்ப வாழ்விலும் சர்ச்களின் அதிகாரத் தலையீடுகள் பலமாக இருப்பதை இந்தப் படம் அப்பட்டமாகக் காண்பிக்கின்றது. அதனால்தான் அண்டர்வேரில் கூட சர்ச் தலையிடும் அமெரிக்க மார்மோன் உதாரணத்தை உதாரணமாகச் சொல்லி இந்தப் படத்தின் விளக்க ஆரம்பித்தேன்.

மூத்த பெண்கள் இருவருக்கும் படிப்பு வராத காரணத்தினால் தன் நம்பிக்கையை தன் கடைசி மகள் மீது வைக்கும் சாமுவேல் மிகுந்த அழுத்தத்தை கடைசி மகள் மீது செலுத்துகிறார். அந்த பளு அவரது மகளிடம் அளவு கடந்த மன உளளச்சலையும் பயத்ததயும் உருவாக்குகிறது. உயர் தரப் பள்ளியில் 80 மார்க்குகள் பெற்ற பின்னரும் கூட மார்க் போதாது என்று சொல்லி பெற்றோரை அழைத்து வரச் சொல்லும் பள்ளிக் கூடங்களும் பிள்ளைகள் மீது அளவற்ற சுமையை வைக்கின்றன. அந்த அழுத்தம் தாங்காமல் பயந்து நடுங்கிய பெண் தனக்கு லவ் லெட்டர் கொடுத்தவனை நம்பி சென்று விட அவள் வாழ்க்கைச் சூறையாடப் படுகிறது. தவறு அதிக அழுத்தம் கொடுத்த பெற்றொரின் பக்கமா, 100 சதம் வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுக்கும் பள்ளிக்கூடம் மீதா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் கொடுத்த அதிர்ச்சி நிச்சயம் பெற்றோரரயும் பள்ளிக் கூடங்களையும் ஒரு கணமாவது யோசிக்க வைத்திருக்கும். போலீஸின் அதிகார மீறல்கள், பத்திரிகை டி விக்களின் பேராசைகள் எல்லாம் சேர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்துக்கு இடம் இல்லாமல் செய்து விடுவதும் மிகத் தீவீரமாகப் படத்தில் காட்டப் ப்டுகிறது. போலீஸின் அலட்சியத்தால் அப்பாவி ஒருவரும் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் சிக்க நேர்ந்து அவரது வாழ்வும் நாசமாகிறது. சர்ச்களின் அரசியல் விளையாட்டுக்கு சாமுவேல் பகடையாகிறார். அரசியல்வாதிகளும் சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். சர்ச்சின் ஆதரவு பெற முயலும் தன் எதிரியையை எம் எல் ஏ இந்தக் கேசில் சிக்க வைக்க முயல்கிறார். ஒரு அபலைச் சிறுமியின் பரிதாபத்தில் சர்ச்சும், அரசியலும் மீடியாக்களும் குளிர்காய முயல்கின்றன

saleem_kumarபடத்தின் முழுப் பலமுமே அச்சனாக வரும் சலீம் குமாரின் அபாரமான நடிப்புத்தான். மலையாளப் படவுலகின் ஒரு சாதாரரண காமெடியனாக இருந்த சலீம்குமாரை மிகவும் கனமான ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்து அவார்ட் வாங்க வைத்திருக்கிறார் இயக்குனர். அற்புதமான நடிப்பு. வெகு யதார்த்தமாகச் செய்திருக்கிறார். ”ஜட்ஜ் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்று அர்த்தம் அதனால்தான் ஜட்ஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று மனநிலை கலங்கி அவர் சொல்லும் இடத்தில் நம் கண்ணீரைத் தவிர்க்கவே முடிவதில்லை. ’இந்திரா கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்க 10 வருடம் எடுத்துக் கொண்டனர். ஆனால் எனக்கு உடனடியாக தண்டனை கொடுத்துவிட்டார்கள். நான் பாக்யவான்’ என்று நீதித்துறையை மிக யதார்த்தமாகச் சாடுகிறார். இப்படி படம் நெடுக இவரது வெகு யதார்த்த நடிப்பு கண்டு அசந்து போனேன். இந்தப் படம் சிறந்த நடிகருக்கான விருதினை மோகன்லாலுடன் இணைந்து சலீம் குமாருக்கும் வாங்கிக் கொடுத்துள்ளது.

மலையாளப் பட உலகின் ஹீரோக்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இதில் விதிவசத்தில் கேசில் மாட்டிக் கொள்ளும் அப்பாவி இளைஞனாக வருகிறார். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டது என்பதற்காக பீர்மேடு பகுதியின் இயற்கை எழிலைக் காண்பிக்க அவருக்கு ஒரு பாடலல வைத்தது படத்தின் விநியோயகஸ்தர்களின் வணிக நிர்ப்பந்தமாக இருந்திருக்க வேண்டும். படம் ஒரு கேங்க் ரேப் பற்றியதாக இருந்த பொழுதிலும் கூட ஒரு இடத்தில் கூட ஒரு கட்டில் காட்சியோ, கற்பழிப்பு என்ற சொல்லோ, அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கோர நிகழ்வுகளோ காட்டப் படுவது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. எந்த வி்த அபத்தமும், ஆபாசமும், கண்யக் குறைவும் இன்றி இப்படி ஒரு சிக்கலான கேஸ் பற்றிய படத்தை எடுக்க முடியும் என்பது ஆச்சரியமானதொரு விஷயம். பாடல்களும் படத்தில் இருந்து விலகாமல் (ஒரு பாடல் தவிர) பிண்ணனியில் மட்டுமே மிருதுவாகவும் சோகமாகவும் வருகின்றன. அருமையான பாடல்கள்.

படம் பார்த்த பின் சொல்ல முடியாத மன வேதனைக்கும், அழுத்தத்துக்கும் உள்ளானேன். மனம் மிகவும் கனத்துக் கிடந்தது. ஏராளமான கேள்விகளையும் பாடங்களையும் தரும் மிக முக்கியமான ஒரு சினிமா அச்சன் உறங்காத வீடு. அந்த அச்சனை மட்டும் அல்ல படம் பார்க்கும் பெண்ணைப் பெற்ற அச்சன் எவரையுமே பல இரவுகள் உறக்கம் வராமல் அடிக்கக் கூடிய வலுவான திரைப்படம். அவசியம் பார்க்கப் பட வேண்டிய ஒரு திரைப்படம்.

அச்சன் என்ற சொல் ஆண்டவனையும் குறிக்கும், பாதிரியாரையும் குறிக்கும். அச்சனின் பெயரால் அச்சன்கள் போடும் ஆட்டத்தில் அப்பாவி அச்சன்கள் உறங்க முடியாத நிம்மதியற்ற நிலை உருவாவதை அச்சன் உறங்காத வீடு காட்டுகிறது. ஆண்டவனின் பெயரால் மத சாம்ராஜ்யங்கள் நடத்தும் பாதிரியார்கள் பலரும் இப்படி மத வெறியினாலும், அளவற்ற பண பலத்தாலும், அதிகாரக் குவியலினாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் சர்ச்சுக்களில் உறுப்பினர்களின் வாழ்க்கையைச் சின்னா பின்னப் படுத்துகிறார்கள் என்பதை இந்த சினிமா மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளது. கேரள சர்ச்சுக்களில் எப்படி பாதிரியார்கள் இளம் பெண்களைச் சூறையாடுகிறார்கள் என்பதை சின் என்ற ஒரு மலையாள வாடை அடிக்கும் ஆங்கிலப் படம் ஒன்றும் காட்டியுள்ளது. மத மாற்றம், ஊழல், அப்பட்டமான வன்முறைகள், கொலைகள் என்று அனைத்துக் கொடுமைகளையும் இந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்கள் அதன் குருமார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்குகின்றன என்பதை இந்த சினிமா தெளிவாக விளக்குகிறது. நிறுவனப் பட்ட மத அமைப்புகள் எவ்வாறு அந்த அமைப்பின் உறுப்பினர்களான சாமான்யர்கள் வாழ்வைக் குலைக்க முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு தெளிவான சாட்சி. அவசியம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இந்து மதத்தில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் அருமையை இந்தப் படம் விளக்குகிறது.

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

108 மறுமொழிகள் நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

  1. அன்பரசன் on October 13, 2009 at 11:45 pm

    மிகச்சிறப்பான விமர்சனம்.

    இதனை கமலஹாசன் தமிழில் எடுக்காதிருக்கவேண்டும்!

    கிறிஸ்துவ மதம் ஒரு மன்நோய். மனநோயாளிகளையும் மன அழுத்தத்தில் சிக்கியவர்களையுமே அது பற்றுகிறது.

  2. Ashok kumar Ganesan on October 14, 2009 at 1:53 am

    பட விமர்சனம் நன்றாக உள்ளது. தமிழிலும் இத்தகைய படங்கள் வரவேண்டும். ஆனால், இங்கேயும் கிறிஸ்துவ தூஷணம் செய்வதற்காக எழுதப்பட்டது போல் உள்ளது. மொர்மொன்கள் கிறிஸ்துவர்கள் அல்ல. அவர்கள் பைபிளை கூட நம்பாதவர்கள். அவர்கள் நம்புவது “the book of mormon”. அவர்களுடைய வழிபாடு தளத்தை “The Church of Christ” என்றும் அவர்கள் தங்களை Later Day Saints (LDS) என்றும் அழைத்துக்கொள்வார்கள். பல கடவுள் உண்டென்றும், அவர்களும் கடவுள் ஆக முடியும் என்றும் நம்புபவர்கள். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். அவர்கள் கிறிஸ்துவர்களா?
    நான் மொர்மொன்களின் தலைநகரான salt lake நகரத்தில் வாழ்ந்தவன். அங்கே நான் பழகிய 75% மக்கள் மொர்மோன் மதத்தை சேர்ந்தவர்கள். டீ, காப்பி கூட பருகமாட்டார்கள். விவாகரத்து என்பது மிகவும் அரிது அங்கே. எனென்றால் விவாகரத்து செய்தால் நரகம் என்பது அவர்கள் நம்பிக்கை.
    நீங்கள் சொன்ன மற்ற பல விஷயங்களும் அவர்களுக்கு பொருந்தும் (உள்ளாடை உட்பட). அவர்கள் அந்த உள்ளாடையை ஒரு கவசமாக கருதுகிறார்கள்.
    இந்தியாவில் கிறிஸ்துவர்கள் சபைனால் காட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை இல்லை. நான் பல மாதங்களாக ஆலயம் செல்லாமல் இருந்து இருக்கிறேன், என்னை யாரும் விளக்கி வைக்கவில்லை.
    நீங்கள் சொல்வதைப்பார்த்தால், கிறிஸ்துவர்கள் எல்லாம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதை போல் உள்ளது. சொந்த தகப்பன் சொன்ன கட்சிக்குகூட நாம் வோட்டு போடுவதில்லை, அப்படி இருக்கையில் பாஸ்டர் சொன்னா கேட்பாங்களா? அவ்வளவு அடக்கமானவர்களா கிறிஸ்த்துவர்கள்?
    இப்போது எழுத போதுமான நேரமில்லை. தொடருவோம்.
    அன்புடன்,
    அசோக்

  3. kargil jay on October 14, 2009 at 2:09 am

    Anbarasan,
    அமென். In the village I lived, daughter of pastor told me that her father is a rogue and use to womenize teacher in his convent shcool.

  4. தேவப்ரியா சாலமன் on October 14, 2009 at 4:16 am

    It is really Great job by Viswamitra to introduce such a Movie with a Fair and proper Comments.

    Let me try to see the movie to talk further.

  5. தேவப்ரியா சாலமன் on October 14, 2009 at 7:15 am

    After Publicity still the Church supports the Crime Perptuators Who raped and killed Nun Abhaya inside the Catholic Convent.

    There are no takers for that Convent.

    News Report on that.

    INDIA Nun’s death case hampers congregation’s work, says superior
    October 9, 2009
    http://www.ucanews.com/2009/10/09/nun%e2%80%99s-death-case-hampers-congregation%e2%80%99s-work-says-superior/?key=sister+any+john

  6. glady on October 14, 2009 at 7:34 am

    சத்தியமான உண்மை..!

    ஆனால் சில வருடமுன்பு திருச்சியின் பிரபல டிவி ஷோரூம் அதிபர் தனது மகளின் தீராத வியாதி காரணமாக மனம் உடைந்து அவளது மரணத்தைக் காண தைரியமில்லாது புட்டபர்த்தியில் “சாமி” கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் (அதாவது பாதிக்கப்பட்ட மகளுடன்) தற்கொலை செய்து கொண்டார்..!

    (Edited.)

  7. அஞ்ஜனாசுதன் on October 14, 2009 at 11:06 am

    அருமையான விமரிசனம் விஸ்வாமித்ரா. பாராட்டுக்கள்!

    நிறுவனப்பட்ட மதங்கள் வளர வளர அவை மக்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு கேரளம் ஒரு சிறந்த உதாரணம். ஒரு பக்கம் கிறுஸ்துவம், ஒரு பக்கம் இஸ்லாம் என இரண்டு பக்கமும் நடந்துகொண்டிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, “கடவுளின் சொந்த பூமி” என்று அழைக்கப்பட்ட அந்த புண்னிய பூமியின் கலாசாரத்தையும், தெய்வீகத்தையும், மொத்தத்தில் அதன் ஹிந்துத் தன்மையையே இழக்கச் செய்துள்ளது.

    கிறுஸ்துவ இஸ்லாமியர்கள் சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலாக ஜனத்தொகை அதிகமாக, அதனால் சிறுபான்மையினராக ஆகிவிட்ட ஹிந்துக்கள் மேலும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஹிந்துக்களும் ஒரு விழிப்புணர்ச்சியும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் கம்ம்யூனிசக் கட்சிகளிலும் குப்பை கொட்டிக்கொண்டு, மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மடையர்களாக இருப்பது மிகப்பெரிய வேதனை.

    சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் நிறைய மலையாளத்தில் எடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது என்னமோ உண்மை தான். நானும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அனாலும் யதார்த்தத்தில் கேரள மக்கள் எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே! இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபடும் பெரும்பான்மையான பாதிரிமார்களும், கன்யாஸ்த்ரீகளும் கேரளத்திலிருந்து தான் புற்றீசல் போலக் கிளம்புகிறார்கள். எத்தனை ”அச்சன் உறங்காத வீடுகள்” திரைப்படங்கள் வந்தாலும், எத்தனை “ஆமென்” புத்தகங்கள் விற்றாலும், பிரயோஜனம் இல்லை போலிருக்கிறதே.

    அதே போல, இந்தியா முழுவதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய ஜிகாதிகளும் கேரள மண்ணிலிருந்து தான் கிளம்புகிறார்கள்; அங்கு தான் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே தானே “லவ் ஜிகாத்” கூட பயங்கரமான அளவில், கிறுஸ்துவ-ஹிந்து இயக்கங்களை ஒன்று சேர்க்கின்ற அளவிற்கு நடந்துகொண்டிருக்கிறது. மற்றொரு இயக்குனர் நாளை லவ் ஜிஹாத் பற்றிக் கூடப் படம் எடுக்கலாம். நீங்களும் அற்புதமான ஒரு விமரிசனம் எழுதலாம். ஆனால் அதனால் பயன் இருக்குமா?

    கேரள ஹிந்துக்கள் விழிப்பார்களா? கேரளத்தைப் பார்த்து பாரதத்தின் மற்ற பகுதிகளில் உள்ள ஹிந்துக்கள் முன் ஜாக்கிரதையாக இருப்பார்களா? ஜாதி வெறியிலும், மொழி வெறியிலும், அசிங்க அரசியலில் ஈடுபட்டுக்கொண்டு, ஒற்றுமையில்லாமல், எப்பேர்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறார்களே!

    நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. பாரதம் மீண்டும் தன் மகோன்னதத்தை அடையும் என்கிற நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறது. வேதனையும், விரக்தியும், நாள்பட நாள்பட அதிகமாகத்தான் ஆகிறதேயொழிய குறைவதாகத் தெரியவில்லை.

    ஆகட்டும்…..ஆண்டவன் விட்ட வழி.

  8. ram on October 14, 2009 at 12:40 pm

    /////glady
    14 October 2009 at 7:34 am
    சத்தியமான உண்மை..!

    ஆனால் சில வருடமுன்பு திருச்சியின் பிரபல டிவி ஷோரூம் அதிபர் தனது மகளின் தீராத வியாதி காரணமாக மனம் உடைந்து அவளது மரணத்தைக் காண தைரியமில்லாது புட்டபர்த்தியில் “சாமி” கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் (அதாவது பாதிக்கப்பட்ட மகளுடன்) தற்கொலை செய்து கொண்டார்/////

    ஆம், ஊருக்கெல்லாம் வியாதியை ஜபத்திலேயே குணப்படுத்திவிட்டு குணப்படுத்த முடியாத வியாதியில் படுத்த படுக்கையாக இருந்து செத்துப்போன திருட்டு தினகரனை கிளாடியார் ஞியாகபகப்படுத்துகிறார் போலிருக்கிறது.

  9. ரஜின் on October 14, 2009 at 1:18 pm

    //முஸ்லிம் மதத்திலும் இதைப் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.//

    அன்பு சகோதரர்களே…
    இஸ்லாத்தில் கட்டுப்பாடுகள்!…….
    இது இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே, அவர்க்ள்,அதன்படி வாழ இறைவன் கடமையாக்கியவை….அவை கட்டுப்பாடுகள் அல்ல…. கடமைக்கும்,கட்டுப்பாடுக்கும்,பாரிய வேறுபாடு உண்டு…
    உதாரணமாக:கடமை என்பது,ஒருவன்,ஒரு மளிகை கடை வைத்துள்ளான், என்றால்,அதில்,அவன் பொருள்களை,பதுக்காமல்,அதிக விலை இல்லாமல், எடை குறைப்பு செய்யாமல்,கலப்படம் செய்யாமல்,வாடிக்கையாளரிடம், நேர்மையாக நடந்து கொள்வது,அவனது கடமையாகிறது….
    இது,கட்டுப்பாடு அல்ல…..இல்லை,இது கட்டுப்பாடு,என்று எண்ணி,அதை அவன் உடைத்தெறிவானேயானால்,அவன்,அவனது தொழிலுக்கும்,மக்களுக்கும், துரோகம் இழைக்கிறான்…..இதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்…அல்லவா?
    ஒரு முஸ்லிமின் நிலை,மேற்சொன்ன மளிகை கடைக்காரனின் நிலையை ஒத்தது…இஸ்லாத்தில்,ஒரு முஸ்லிமுக்கு சில கடமைகள் இருக்கிறது…அதை செய்தால் தான் அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,மளிகைகாரன், செய்யவேண்டிய,நியாயங்களை,கடைபிடித்தால்,மட்டுமே,அவன் பெயர், வியாபாரி,இல்லயேல்,அவன் சுரண்டல்காரன்.அல்லவா?
    அது போல,அந்த கடமைகளில் இருந்து முஸ்லிம் தவரும் போது,அவன் முஸ்லிமாக இருப்பதில்லை…..
    ஒரு முஸ்லிம்,அவனது தண்டனைக்குரிய குற்றத்திற்க்கே தவிர (கொலை,கொள்ளை,போன்ற பெரிய,சிறிய),மற்ற அனைத்தின் விசாரனையும்,(அவனது கடமை சம்பந்தப்பட்டது)அல்லாஹ்விடமே,என நபி(ஸல்) கூரிய்ள்ளார்கள்…..
    கடமை தவருவது,அவனுக்கும்,இறைவனுக்கு இடையில் உள்ளது…..
    அவ்வளவு தான்……

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

  10. கள்ளபிரான் on October 14, 2009 at 1:27 pm

    விமர்சனம் கட்டாறு வெள்ளமென உணர்ச்சிகளைக் கொட்டி எழுதப்பட்டிருக்கிறது. எழுதலாம். ஆனால் அதை விமர்சனம் எனச்சொல்வது கடினம். தனிமனிதர் ஒருவரின் உணர்ச்சிக்குவியல் என்று மட்டுமே சொல்லலாம்.

    Justice should not only be done; but should seem to be done also. இதைப்போலவே, film criticism should not only be done; but should seem to be done also. எப்படி? அஃதை உங்கள் மொழிநடை சொல்லும். Be moderate.

    திரைப்படங்கள் தற்காலத்தில் கலை ஊடகம் அல்ல. வியாபாரமே. இதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே, நீங்கள் நினைப்பது போல படங்கள் தமிழில் வாரா. கோடிகளைக்கொட்டி கோடிகளை அள்ளுவதே இங்கு முதலும் கடைசியுமான குறிக்கோள். இத்தொழிலுக்குப்பின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வயிற்றைக்கழுவுகின்றன. நாலே நாலுபேர் வந்து படம் பார்த்துவிட்டு, இப்படி, ”படம் பார்த்த பின் சொல்ல முடியாத மன வேதனைக்கும், அழுத்தத்துக்கும் உள்ளானேன். மனம் மிகவும் கனத்துக் கிடந்தது.” என எழுதுவர் என்று இருந்தால் எப்படி அவர்கள் வாழமுடியும்? Therefore, please be realistic.

    இப்படி மதம் என்ற போர்வையில் நடக்கும் அட்டுழியங்களை தோலுரித்துக்காட்டி மக்களை சிந்திக்க வைக்க வேண்டுமெனில், அதற்கு வேறு ஊடகங்களுக்குத்தான் போகவேண்டும். திரையில்தான் என்றால், documentaries are good.

    மலையாளிகளுக்கும் தமிழர்களுக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் உள. அதன்படியே படங்களும் வரும்.

    சினிமா நடிகன் தெய்வமல்ல அங்கு.
    ஆனால், அவனே தெய்வம் இங்கு. அவன் இறந்தால், தமிழர்கள் தற்கொலை பண்ணிக்கொள்வார்கள். இருப்பினும், தமிழில் சிலபடங்கள் வந்தன. கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’

    அஞ்ஜனாசுதன்’s response is realistic.

    As I said, a typical malayaali thinking is far superior to that of a typical Tamilian thinking. Still, how comes they have become as explained by அஞ்ஜனாசுதன்?

    The reason is, as I see it, they are a people who conveniently keep aside their thinking cap, when they deal with religion. In other words, they allow themselves to be swept off their feet.

    So, on the one side, they are ‘thinkers” and on the other side, ‘lap-dogs’. For an onlooker, it will strike bizarre.

    No wonder, Swami Vivekananda called Kerala ‘a mad house’!

  11. களிமிகு கணபதி on October 14, 2009 at 1:56 pm

    Fantastic writing on a film. Reality is shown in its all ugly regal bearings. The author has rendered a great service to all the parents.

    Not only the article talks about the story line, but also educates the readers on its back ground.

    Sadly, this much of detailed background information is not required to be given in the Western readers, where the evangelical atrocities are always open for the people to know. Thanks to their far more honest media and independent justice system.

    But, in India, we do not hear about the people killed and tortured at a christian institute in Kerala. Neither we hear about the atrocities committed against young children by the Indian churches; those atrocities are protected and propagated by the church.

    So, the author of this article had to take a lot of pains to explain the background to the readers.

    And he had clearly stated the difference that happens when such an atrocity is done by a christian over a hindu.

    If such a depressing cruelty is done to the children by a hindu, at least the hindu society is free to question and make the necessary legal activities and get justice.

    But, if the institute is christian or islamic, not only the christians and muslims, the hindus also cannot even question. That is the sad state of affairs in India.

    The article clearly shows not only what atrocities happen in the churches, but also how the churches support such atrocities and protect the criminals.

    Any one who has a son or daughter must read this article before exposing the children into the educational and religious institutions of the christians and muslims. A parent must forward this article to another parent.

    The article has taken the horse to the pond, and also has made elaborate explanations to make the horse understand the necessity of drinking the healthy water.

    But, would the Indian horses prove their intelligence? or

    Would they just continue to remain asses ? and

    Feed their children to a gory life?

    I have heard from reliable sources that as the legal proceedings are harsh and employed in the West (unlike India), the priests and nuns of those countries visit India (and other third world countries) to get all those pervert pleasures in a medically and legally safe way from the orphanages, homes and their other institutions.

    What India need to resolve almost all of these problems is a strong judiciary system that can act independently and in accordance with constitution and not as per our politicians and powerful religious leaders.

  12. ரஜின் on October 14, 2009 at 2:50 pm

    //இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் பாக்கிஸ்தானை ஆதரிக்கச் சொல்லியும், கிரிக்கெட் மேட்சுகளுக்குக் கூட பாக்கிஸ்தானின் வெற்றிக்குப் பிரார்த்திக்கச் சொல்லியும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றியும் மசூதிகளும் முல்லாக்களும் நிர்ப்பந்திக்கின்றனர்.//

    சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…

    கிரிக்கெட் மேச்,,…இத பத்தி,பேசவே எனக்கு தோணல….இதுக்கெல்லாம், பிரார்தனை செய்ய சொல்பவன்,பள்ளியின் ஹஸ்ரத்தாக இருந்தாலும்,அறிவுகெட்டவனே….

    (முல்லா என்று,நீங்கள் ஹஸரத்களை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்…)

    எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும்,என்பது தனி மனித உரிமை….கட்சிகளை பற்றி அறியாதவர்களுக்கு,அதை விளக்கலாமே தவிர,இவருக்கு ஓட்டு போடுங்கள்,என சொல்ல,அவர்களுக்கும்,உரிமை இல்லை…அதை கேட்க்க வேண்டிய அவசியமும்,முஸ்லிம்களுக்கு இல்லை.

    // இப்பொழுது இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கல்யாணம் செய்யச் சொல்லும் லவ் ஜிகாதைக் கூட மத நிலையங்கள் அறிவிக்கின்றன.//

    லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
    முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…
    ஒரு வேலை,அதை இஸ்லாத்தின் சாயம் பூசி,மத நிலையங்கள் செய்யுமேயானால்,அதைவிட ஒரு பெரிய கேடு அவர்களுக்கு தேவை இல்லை…

    இஸ்லாத்தின் பேரால்,குர் ஆனிலும்,என்னுடைய வழிமுறையிலும் இல்லாத ஒன்று வழி கேடாகும்,அனைத்து வழிகேடுகளும்,நரகத்திற்கு இட்டுச்செல்லக் கூடியது.என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்..
    இதை அறிந்த எவனும் இதை செய்ய துணிய மாட்டான்….

    //காஃபீர்களின் மீதான வெறுப்பும், தாக்குதலுக்கான கட்டளைகளும் கூட மதத் தொழுகையின் பொழுது அறிவிக்கப்படுகின்றன.//

    இல்லங்க…இஸ்லாம் அப்படி சொல்லவே இல்ல..இத உன்னை போல் ஒருவன் படவிமர்சனத்தில் உள்ள எனது பின்னூட்டத்தில் தெளிவாக விளக்கிஉள்ளேன்…

    //முஸ்லிம்களின் சொந்த விவாகரங்கள் கூட முல்லாக்களால்தான் தீர்வு செய்யப்படுகின்றன. அங்கு நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை.//

    இஸ்லாத்தில்,நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை.உண்மை தான்….

    //ஒரு சில அடிப்படைவாத மதக் கொள்கைகளை விமர்சித்த கவிஞர் ரசூல் என்பவர் இன்று வரை மத விலக்கம் செய்யப்பட்டு எண்ணற்ற மன உளைச்சல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு தஸ்லீமா நஸ்ஸ்ரீன் உயிருக்குப் பயந்து நாடு நாடாய் அகதியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.//

    இவர்கள்,எதை விமர்சித்தார்கள்,என எனக்கு தெரியாது…இஸ்லாத்திலும்,பல மூடநம்பிக்கைகள்,இடை செருகப்பட்டன,அதை விமர்சித்து இருந்தால்,அதை நான் ஆதரிக்கிறேன்….அது தவிர இஸ்லாமிய சட்டங்கள்,விமர்சனத்துக்கு அப்பார்பட்டது அல்ல….
    ஆனால்,அதை விமர்சிக்கும் முன்,நன்கு அறிந்து இருக்கவேண்டும்….இது அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?….
    அப்படி விமர்சனங்களை,எதிர்கொள்ளும் போது,அதை,விளக்க வேண்டிய பொறுப்பு,பெரியவர்களுக்கு உண்டு…
    —————-
    இது போன்ற பைத்தியக்காரன்,மொத்த முஸ்லிம்களிலும்,1% கூட இருக்க மாட்டான். போக,எங்களைப் போன்றவர்கள் 99% இருக்கோமே,,,எங்கள முஸ்லிமா கன்சிடர் பன்னவே மாட்டேங்குரீங்களே!……….

    நன்றி…

    அன்புடன்
    ரஜின்

  13. களிமிகு கணபதி on October 14, 2009 at 3:48 pm

    Rajin,

    ///இது போன்ற பைத்தியக்காரன்,மொத்த முஸ்லிம்களிலும்,1% கூட இருக்க மாட்டான். போக,எங்களைப் போன்றவர்கள் 99% இருக்கோமே,,,எங்கள முஸ்லிமா கன்சிடர் பன்னவே மாட்டேங்குரீங்களே!///

    Yours is the voice of many of my muslim friends who in their heart and act still continue to follow the Indian ethos instead of islamic theology.

    But, sir, such honorable voices are now losing their power or raised only to cover up the atrocities of Islam.

    If you consider others opinions and religions as important and true as yours, then, sir, you are a Hindu, albeit being a muslim.

  14. ram on October 14, 2009 at 4:12 pm

    ////சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…///

    ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

    ///லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
    முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…///

    ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

    இப்படி அவன் முஸ்லீம் அல்ல என்று கூறிவிடுவது சூப்பர் எஸ்கேபிஸம் தவிர வேறில்லை.

    அப்படி முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏன் நீங்கள் மதத்தில் வைத்திருக்கிறீர்கள். கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!

    இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், அதற்கு அவர் கிறிஸ்து அவனுக்குள் இருந்திருந்தால் அப்படி செய்திருக்கமாட்டான். கிறிஸ்துவாக புஷ் இல்லை என்று சொல்லிவிட்டார்.

    உங்களைப் பொறுத்தவரை ஜிகாத் என்ற பெயரில் குண்டுவைப்பவன் முஸ்லீம் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரை கொலைபாதகன் கிறிஸ்துவன் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். உங்களுக்கு இடையில் இந்துக்கள் சாக வேண்டும்.

    அதர்மம் செய்பவனுக்கு தர்மப்படியான போர் சரிப்பட்டு வராது என்று துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்த சொல்லிக்குடுத்த கிருஷ்ணனின் வழியே சிறந்தது இந்தக்காலத்திற்கு என்று இந்துவுக்கு படுகிறது. அப்படி செய்துவிட்டால் இந்துத்தீவிரவாதம் என்று சொல்லி இன்னும் எங்களை ஏறி மிதிப்பீர்கள்.

    மத்தளமானது இந்து மதம். மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

  15. ரஜின் on October 14, 2009 at 7:45 pm

    சகோதரர் ராம் அவர்களே.
    அவன் செய்தானே,அவனை என்ன செய்யப் போகிறீர்கள்,….இந்த கேள்வி நீங்கள் இந்திய அரசை பார்த்து கேட்டால் பொருத்தமாக இருக்கும்,நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..
    ஒருவன் தவறு செய்தால்,அவனை ஒட்டுமொத்த சமுதாயத்தின்,தார்மீக பொருப்பு கொண்ட பிரதிநிதியாக பார்க்கும்,தங்களது பார்வை,தவறானது….

    // ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன்//

    என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?

    அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
    அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?

    தனி ஒருவனின் செயல்பாடு,முழுமதத்தின்,பிரதிபலிப்பும் அல்ல,அவனது செயல்களுக்கு,மதத்தையும் பொருப்பாக்க முடியாது…..

    இல்லை.மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

    நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?

    இதே நிலை இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியர்களான எங்களுக்கும், பொருந்தும்,

    ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
    மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல….

    சகோதரரே,இத்தனை விஷயங்களும்,நான் இங்கு,பதிந்ததற்கான காரணம்,இஸ்லாமிய பெயர்தாங்கிகளால்,செய்யப்படும்,வன்முறையை ஒரு போதும் நியாயப்படுத்த அல்ல…..
    குற்றம் யார் செய்தாலும்,தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப் பட வேண்டும்.
    இது தான் எனது நிலைப்பாடு,நான் சார்ந்துள்ள மார்க்கமும் ,அதையே சொல்கிறது….

    யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…

    நாம்,நமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் அவ்வளவே…..

    நன்றி..

    அன்புடன்
    ரஜின்

  16. susendran on October 14, 2009 at 8:51 pm

    நண்பர் ராம் அவர்களே,

    முஸ்லிம்களுக்கு தலிபான், ஜிஹாத் ஜெயிச்சு இருந்தா அவங்க முஸ்லிம் ஆயுருபங்க, தோத்துட்டு இருக்கிறதாலே அவங்கள முஸ்லிம் இல்லை என்று சொல்லுராங்க. கிறிஸ்தவன்க இந்தியாவுல கம்மிய இருக்கிறதாலே புஷ் கிறிஸ்தவர் இல்லை என்று சொல்லுராங்க. ஆனா ஒன்னு,இவங்க இப்பிடியே பண்ணிட்டு இருந்தா நாமளும் ஒரு நாள் சொல்ல வேண்டி இருக்கும், கொஞ்ச பேரை ஹிந்துவே இல்லைன்னு, அவங்க ஸ்டைல்ல.

  17. விஸ்வாமித்ரா on October 14, 2009 at 9:09 pm

    கள்ளபிரான் அவர்களுக்கு

    நன்றி. இதை விமர்சனம் என்று எங்குமே நான் குறிப்பிடவில்லையே. அப்புறம் நீங்கள் இதை எப்படி விமர்சனம் என்று கருதினீர்கள் என்பது தெரியவில்லை. எனக்கு சினிமா விமர்சனத்திற்கும் ஒரு சினிமாவைப் பற்றி வேறு கோணத்தில் அலசுவதற்கும் வித்யாசம் தெரியும். இது ஒரு அலசல் அவ்வளவே. நான் அந்தப் படத்தின் டெக்னிக்கல் பகுதிகளுக்குள் போகவில்லை. ஒரு உண்மைச் சமபவம் சினிமாவாக எடுக்கப் பட்டுள்ளது அதற்கும் கேரளத்திலும் உலகம் முழுவதிலும் நிகழும் நிறுவனப் படுத்தப் பட்ட மதங்கள் செய்யும் அக்கிரமத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி இங்கு பேசியுள்ளேன். அவ்வாறு அலசிய வேகத்தில் உணர்ச்சிவயமான சில வார்த்தைகளும், க்ளிஷேக்களும் இருக்கலாம். அவற்றைத் தவிர்க்க முயல்கிறேன். மற்றபடி நீங்கள் நினைப்பது போல இது விமர்சனம் அல்ல.

    கேரளத்தில் அடிக்கடி இது போன்ற தற்கால அரசியல்/சமூக பிரச்சினைகள் சார்ந்த சினிமாக்கள் எடுக்கப் படுகின்றன ஆனால் தமிழில் அந்த அக்கறை இருப்பதில்லை என்றுதான் சொல்லியுள்ளேன் மற்றபடி தமிழில் எப்பொழுதும் இது போன்ற படங்களை மட்டுமே எடுத்து ஓட்டாண்டியாக வேண்டும் என்று சொல்லவில்லை. இவை போன்ற படங்கள் நஷ்டப் படும் என்பது அவசியமில்லை. ஈநாடு, சி பி ஐ டைரிக்குறிப்பு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்ற படங்களே. சமூகப் பிரச்சினைகளையும் இந்தப் படம் போல நன்கு எடுத்தால் நிச்சயம் அவையும் மக்களால் காணப் படும். இந்தப் படம் டாக்குமெண்டரி அல்ல. மிகவும் விறுவிறுப்பான ஒரு சினிமாவே. இப்பொழுது வெளி வந்திருககும் உன்னைப் போல ஒருவன் கூட ஒரு விதத்தில் தற்கால தீவீரவாதப் பிரச்சினையைத் தொடுவதே, அது ஓடவில்லையா என்ன? தண்ணீர் தண்ணீர் படம் வெற்றிகரமாக ஓடியதே? தமிழ் நாட்டு அரசியல் சூழலில் அது போன்ற படங்கள் எடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

    மற்றபடி நான் இங்கு எழுதுபவை எல்லாம் சினிமா விமர்சனங்கள் அல்ல. அவை வெளி வந்த சினிமாவை சற்று வேறு கோணத்தில் அலசும் ஒரு பார்வை மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு மேலே அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ரஜின் , அஷோக் மற்றும் பிற நண்பர்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன்

    நன்றி
    விஸ்வாமித்ரா

  18. armchaircritic on October 14, 2009 at 9:12 pm

    While reading the review I was reminded of a film ‘Mahanadhi’ by Kamalhasan which upset me. It also showed the plight of a father whose daughter was sold off to prostitution. But then I don’t think that film was a hit! As someone above said films are not produced in Tamil for nice reviews but only money. Maybe this says something about the mentality of Tamils. Stage plays are a thing of the past in Tamil nadu, a state with the maximum number of regional TVs and theater activity is also taken up by a very few dedicated which are followed by dedicated fewer! People losing themselves in dream worlds not wanting to see the harsh realities shows that they have lost confidence in everything including themselves. Very sad indeed.

  19. Peter Fernandez on October 14, 2009 at 10:13 pm

    சுசெந்திரன் ,

    //நாமளும் ஒரு நாள் சொல்ல வேண்டி இருக்கும், கொஞ்ச பேரை ஹிந்துவே இல்லைன்னு, அவங்க ஸ்டைல்ல//

    முஸ்லிம்முங்க மாதிரி தானே?

    சொல்லிகோங்கோ!!

  20. Satish on October 14, 2009 at 10:53 pm

    //சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…//

    Dear Mr.Rajin,
    I am sorry to say, this is just ignorance and nothing else. I support Kalimigu Ganapathy’s words on this.
    When I was doing my B.Sc in Loyola college,I had a muslim friend in our class. One day while having lunch, we all friends started talking about the ongoing India-Pakistan Criket match. One of my friend asked our Muslim friend, ‘Nayimudeen, I heard most muslims support pak in the cricket match. Whom do you support?’.He started blushing and could not answer directly and said ‘heehehee…my parents and elders at home support Pakistan, but I support only India’…This happend 15 years back.

    One of my friend studied in SIET college, Chennai. She used to tell me how crazy the girls (majority muslims as SIET is a Muslim college) will rejoice when Pakistan wins a cricket match and how horribly the girls will curse and scold India when India wins. Again this happened 15 years back. I have heard this not from one but many girls who have studied in SIET (my neighbours, my sisters friends, my friends).

    My father who retired from a bank in the prime location in Chennai is a first hand witness of what happens in the mosque. His office toilet had a window, which is open towards the side where a mosque is (its a strip mall shopping complex, with shops outside and the mosque inside. My fathers office was at the first floor and so they shared common wall with the mosque). During friday afternoon prayers, the maulvi or whoever it is, in the mosque will address the gathering on a loud speaker and shout all sort of hatred words against Hindus and will tell the gathering that Hindus are our enemies and instigate them against Hindus. My father used to say, if you are not a hindu you will surely be brain washed by those words . Again this happened nearly 10 years ago.

    We are seeing that things have worsened and not bettered in the last decade.

    I am in the US now. I have a colleague who is a tamil christian. He is 40 yrs and I am ony 33 yrs. We are working in the clients place. In every oppurtunity (or he creates his own oppurtunity) he criticizes India and Indians saying that India is bad and all Indians (hindus) are bad because they killed christians in Orissa and Bihar. This he says even to the Americans. At this age, he dont even have the basic brains to think that he is talking to a foreigner and talking bad about his own country (he got his Green card and will get US citizenship shortly..so he thinks he is an american). he talks this to even the clients. What impression will the american have about Indians and Hindus? This happened even yesterday and he told allnonsense to the clients yesterday evening. My friends who is a telungu guy, got so much frustrated that he could not control and I took great pains to console him.

    These are the teachings christianity and Islam preches to their religious members. And as Ram said, your words are nothing but escapism. Sorry for being harsh…your words are good, your intentions are good. but what about your fellow Muslim and christians in india?

    This article appread in todays Rediff – http://news.rediff.com/report/2009/oct/14/is-love-jihad-terrors-new-mantra.htm

    I was surprised how our Indian ‘Sickular’ media publishes this. Then reading it I realized that its voicing its concerns for the Christians who complained and not for the Hindus. :)

    Regards,
    Satish

    (Edited.)

  21. Ashok kumar Ganesan on October 14, 2009 at 11:11 pm

    //இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், //
    கிறிஸ்துவனை நம்பி கிறிஸ்துவம் இல்லை.
    கிறிஸ்துவை நம்பியே கிறிஸ்துவம் உள்ளது.
    பிரேமானந்தா போன்றவர்கள் தப்பு செய்தார்கள், அதற்காக ஹிந்துத்துவம் தோற்றுவிட்டது என்று ஒத்துக்கொள்வீர்களா?

    அன்புடன்,
    அசோக்

  22. அன்பரசன் on October 15, 2009 at 12:12 am

    //மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?
    //

    அருமையான வரிகள்.

    இந்து அடிவாங்க வேண்டும்.
    ஆனால் அவன் திருப்பி அடித்தால் அது பயங்கரவாதம்.

    டெல்லி தீபாவளி கூட்டத்தில் குண்டு வைப்பவன் முஸ்லீம். ஆனால், அவன் முஸ்லீம் இல்லை என்று இங்கு வந்து சொல்வார்கள்.

    காஷ்மீர் மசூதிகளில் இந்துக்கள் எல்லாம் வெளியேறவேண்டும் இலலையேல் கொல்லப்படுவார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பார்கள். அதனை கேட்டு வெளியேற வேண்டும்.

    அப்படி அறிவிப்பவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று இங்கே வந்து சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆனால் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பணம் வசூல் பண்ணி சப்பொர்ட் செய்வார்கள்.

    இதெல்லாம் பார்த்துகொண்டுதானே இருக்கிறோம்.

  23. Ashok kumar Ganesan on October 15, 2009 at 1:05 am

    //படம் “சியோன் மணவாளன், ஏசு மஹராஜன்” என்ற வெறித்தனமான பெந்தகோஸ்தே பஜனைப் பாடலுடன் தொடங்குகிறது.//
    திரு.விஸ்வாமித்ராவுக்கு கிறிஸ்துவர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. இது வெறி என்றால், காலி கோவிலில் பெண்கள் அருள் (?) வந்து ஆடுவது என்ன??
    வெறி பிடித்த ஒரு கதாபாத்திரத்தை நாயகனாக கொண்ட “நான் கடவுள்” விமர்சனத்தை படித்தேன். அங்கே யாருமே எந்த ஒரு வெறித்தனத்தையும் பற்றி பேசவில்லை. ஒரு ஒருவர் மட்டும், வெறி என்ற வார்த்தையை உபாயோகப்படுத்தி இருந்தார். அவர் நமது விஸ்வாமித்ரா தான். அய்யா விஸ்வாமித்ரா, உங்களுக்கு ஏன் “வெறி” இவ்வளவு பிடித்து இருக்கு?

    அன்புடன்,
    அசோக்

  24. Ashok kumar Ganesan on October 15, 2009 at 3:24 am

    சகோதரர்களே,
    //கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!//
    இதை போன்ற அறியாமையின் வாதங்கள் இங்கே நிறைய பார்க்க முடிகிறது.
    மதம் என்பதும் மார்க்கம் என்பதும், நாம் இறைவனை நோக்கி செல்ல நாம் தேர்ந்தெடுக்கும் பாதை. ஒருவர் ஒரே நேரத்தில் பல பாதைகளில் நடக்க முடியாது. நம்முடன் நமது பாதையில் பயணம் செய்த ஒருவன் பாதையை விட்டு விலகி சென்று (அதாவது தவறுகள் செய்து) மீண்டும் தன்னுடைய பழைய பாதைக்கு வரும்போதும், அவன் வழி தவறி சென்றான் என்ற காரணத்துக்காக விரட்டி விட முடியுமா. அதேபோல் ஒருவரை ஒரு மார்க்கத்தில் இருந்து தள்ளிவைக்க யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் வழி தெரியாமல் இருப்பவர்களை நாம் செல்லும் பாதையில் (அவர்கள் அனுமதியுடன்) அழைத்து செல்வதும் தப்பில்லை. நம் வழியில் நாம் பிறரை சந்திக்க நேரும்போது, நாம் கடந்து வந்த பாதையை சொல்வதும் தப்பில்லை, நாம் செல்லும் பாதை எங்கு போகிறது என்று சொல்வதும் தப்பில்லை. ஒருவர் கேட்டுக்கு செல்லும் பாதையில் சென்றால், அவரை எச்சரிப்பதும் தப்பில்லை. ஆகமொத்தத்தில், சுவிசேஷம் தப்பில்லை.
    நன்றி,
    அசோக்

  25. ram on October 15, 2009 at 6:38 am

    ரஜ்னி

    ///என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?

    அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
    அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?///

    விவாதிக்கும் முன் விஷயத்தை நன்றாக ஆராயுங்கள். புஷ் ஒரு தனி மனிதன் அல்ல. ஒரு நாட்டில் வாழும் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதி. அவன் கொலைபாதகம் செய்கிறான் என்றால் அந்தக் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாகத்தான் , அவர்களுக்காகத்தான் செய்திருக்கிறான் என்பது தான் பொருள். அவ்வாறு செய்யும் போது அந்தக் கோடிக்கணக்கானவர்கள் வாயை மூடி வீரம் பேசினார்கள். எங்கள் நாடு அடக்கி ஆள்கிறது என்று பெருமை கொள்கிறார்கள். ஒரு தனி மனிதனின் செயலை ஒரு மார்கத்தின் செயலாகக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு மார்கத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களின் சார்பாக ஒரு பாதகம் செய்யப்பட்டு அதை அந்த மார்கத்தவர் மார்தட்டி வரவேற்கும் போது அது மார்கத்தின் குற்றமே ஒழிய தனி மனிதனின் குற்றம் அன்று. கிறிஸ்தவம் தோற்றது என்பது உண்மையே.

    ///மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?////

    அவர்கள் செய்தது நியாயம் தான் என்று ஒவ்வொரு இந்துவும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவ்வாறு ஒத்துக் கொள்வேன். ஆனால் அதர்ம வழியும் கொலை பாதகமும் இந்துக்களால் என்றுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.

    கோட்சேவை கைது செய்து தூக்கிலிட்ட போதும் விடுதலை செய்யச்சொல்லி அரசாங்கத்தை மிரட்டியவர்கள் கிடையாது. பிரக்யா சிங் ஆகட்டும் பிரேமானந்தா ஆகட்டும் இந்து என்ற பெயரில் தவறிழைப்பவர்களை தண்டிப்பதை எந்த ஹிந்துவும் கண்டிப்பதில்லை. ஆக இந்து மதம் தோற்கவில்லை. தோற்காது.

    ஆனால் கோயம்புத்தூரில் குண்டு வைத்த மதானியை விடுதலை செய்து டாட்டா காட்டி தாத்தா அனுப்பி வைத்தாரே, அப்போது நீங்கள் எங்கே போனீர்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட முஸ்லீம் குற்றவாளிகள் அரசியல் வாதிகள் பிறந்தநாள் காரணம் சொல்லி விடுதலை செய்யப்பட்டார்களே, அப்போது நீங்கள் எங்கே போனீர்கள், முஸ்லீம் அமைப்புக்கள் ஒன்றுகூடி அவர்களை விடுதலை செய்யக்கூடாது , அவர்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் என்று ஏன் சொல்லவில்லை. எந்த முஸ்லீமும் சொல்லவில்லை. ஏனென்றால் அரசாங்கம் மூலமாக கொலைகாரர்களுக்கு ஆதரவு தேடுகிறீர்கள். உங்கள் மார்கத்தவரின் ஓட்டுக்காக கொலைகள் கண்டிக்கபடுவதில்லை. அதை நீங்கள் வரவேற்கிறீர்கள். அப்போது அதற்கு உங்கள் மார்கம் தான் பொறுப்பு.

    ஒரு வேளை நாளை ஸ்டாலின் பிறந்தநாளுக்காக பிரேமானந்தா விடுதலை என்றால் ஒட்டு மொத்த இந்துக்களும் காரித்துப்புவார்கள். அப்படி நீங்கள் உங்கள் மார்கத்தவரின் குற்றத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிபீர்களா?

    //யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…///

    உங்கள் மதத்தின் பெயராலும் ஆதிக்க உணர்வாலுமே இந்த கொலைபாதங்கள் நடக்கும் போது அதற்கு நீங்கள் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தப்பித்துக் கொள்வது முறையல்ல. காஷ்மீரில் மூன்று லட்ஷம் அப்பாவி இந்து பண்டிட் குடும்பங்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் மதத்தின் பெயரால் சூரையாடப்பட்ட போது ஒட்டு மொத்த இந்திய முஸ்லீம்களும் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டீர்களே? எங்கே போனது உங்கள் தேசிய ஒருமைப்பாடு??

    ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், இந்தியாவில் கண்டபடி குண்டு வெடிக்கும் போது வேடிக்கைபார்த்த முஸ்லீம்களும் முஸ்லீம் நாடுகளும் அமெரிக்கா பொங்கி எழுந்து போர் என்று அறிவித்து ஆப்கனை அழிக்க துவங்கிய போதுதான், இஸ்லாம் அமைதிமார்கம் இங்கே கொலைகாரர்களுக்கு இடமில்லை என்று வாய்க்கு வாய் பிரசாரம் செய்யவே துவங்கினார்கள். அதுவரை இஸ்லாம் அமைதி மார்கம் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது ஏனோ?

  26. ram on October 15, 2009 at 6:53 am

    அசோக்
    ///பிரேமானந்தா போன்றவர்கள் தப்பு செய்தார்கள், அதற்காக ஹிந்துத்துவம் தோற்றுவிட்டது என்று ஒத்துக்கொள்வீர்களா?////

    ஆனால் அவன் ஹிந்துவே இல்லை என்று எந்த் ஹிந்துவும் தப்பிக்கப்பார்க்கவில்லை. அவன் தர்மத்தின் வழியில் இருந்து தவறிசென்று விட்ட குற்றவாளி அவன் தண்டிக்கப்படவேண்டும் மற்றும் தண்டனையை அனுபத்துக் கொண்டிருக்கிறான். அதனை எல்லா ஹிந்துவும் வரவேற்கிறார்கள். அதர்மவாதிகளை மதம் என்ற காரணத்தால் ஒரு போதும் ஹிந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள். மனிதனை மனிதானாகப் பார்ப்பது மட்டுமே ஹிந்துத்துவத்தின் முதல் சிறப்பு. ஆதலால் மனிதனின் நல்லவன் கெட்டவன் என்று மட்டுமே முதலில் பிரித்துப்பார்க்கிறான் ஒரு நல்ல ஹிந்து. அதற்குப் பிறகுதான் மதம் ஜாதி எல்லாம். இது கண்கூடாக தெரிந்த விஷயம் தான்.

    ஆனால் ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி சர்ச் களில் நடக்கும் ஓரினச்சேர்க்கை பற்றியும், கொலைகள் பற்றியும் கொள்ளைகள் பற்றியும் கற்பழிப்புக்கள் பற்றியும் வெளியிடும் போது உங்கள் மிஷனரிகள் எல்லாம் அதனை முடிந்த அளவு மறைக்கப் பார்க்கிறீர்கள். மதம் தான் முக்கியம் அதனால் அதனை மறைத்து விடு என்று சொல்லப்பார்க்கிறார்கள். தனியார் தொலைக்காட்சியில் இது பற்றி நடந்தது என்ன என்று காட்டும் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த ஒரு பிஷப்பிடம் கருத்து கேட்கிறார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா “ஏதாவது சிறிய அளவில் நடந்திருக்கலாம், அதை அந்தம்மா ரொம்ப பெரிசா சொல்றாங்க. மிகைப்படுத்தப் பட்டிருக்கு சார். என்றார். அதாவது சிறிய அளவில் நடந்துருக்காம். அதை ஒத்துக் கொள்கிறார். அது தவறு என்று சீரியஸாக எடுத்துக் கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    கிறிஸ்துவை நம்பி கிறிஸ்தவம் இல்லை. மிஷனரிகளையும் அவற்றின் பணத்தையும் நம்பி தான் கிறிஸ்தவம் இருக்கிறது என்பது உண்மை. நிதர்சன உண்மை.

  27. ram on October 15, 2009 at 7:01 am

    //அய்யா விஸ்வாமித்ரா, உங்களுக்கு ஏன் “வெறி” இவ்வளவு பிடித்து இருக்கு?//
    மதம் மாற்று வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் வெறி வேறு யாருக்கும் இல்லையே. அதைச் சொல்ல வேண்டாமா? சுட்டிக் காட்ட வேண்டாமா? அது தவறா?
    //திரு.விஸ்வாமித்ராவுக்கு கிறிஸ்துவர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. இது வெறி என்றால், காலி கோவிலில் பெண்கள் அருள் (?) வந்து ஆடுவது என்ன??///

    காளி கோவிலில் சாமி வந்து ஆடும் பெண்கள் கடவுள் மேல் உள்ள சொந்த பரவசத்தில் ஆடுகிறார்களே ஒழிய ஆத்தா சொல்லிட்டா எல்லோரும் இந்து மதத்திற்கு மாறிடுங்க என்று சொல்வதற்கில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஆனால் கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் வெறி பிடித்த பிரசாரத்தில் மதம் மாற்றும் பணி நடக்கிறதே. அதைத்தான் விஸ்வாமித்திரர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும் சாமியாடும் பெண்கள் இந்து மதத்தில் இல்லாவிட்டால் நீங்கள் ரத்தம் கக்கிச் சாவீர்கள் என்று சபிப்பதில்லை. இந்து மதத்தை நேரடியாக எந்த மதத்தோடும் அவசரமாக ஒப்பிட்டு விடாதீர்கள். அதற்கு கொஞ்சமாவது அருகதை வேண்டும்.

    (Edited.)

  28. ram on October 15, 2009 at 7:40 am

    ரஜின்
    //ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
    மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல…..//

    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்து மதத்தைச் சார்ந்து இல்லை. இந்து என்பது நாங்கள் வாழும் வழிமுறை. அது ஒரு வாழ்வியல் தர்மம். வாழ்க்கைக்கான ஃபார்முலா. நாங்கள் அதைச் சார்ந்து வாழவில்லை, அப்படியே வாழ்கிறோம். உங்களைப் போன்றவர்கள் தான் குறிப்பிட்ட மார்கத்திற்கு மதம் மாறி அல்லது மாறிய மதத்தைப் பின்பற்றி அதைச் சார்ந்து வாழ்கிறீர்கள்.

    அதைச் சாராமல் வாழ உங்களால் முடியாது. இந்து நாத்திகனாகியும் அவன் இந்து தான். அதாவது இந்துவாக வாழாமலும் ஒருவனால் இந்துவாக இருக்க முடியும். உங்களால் இஸ்லாமியனாக இருக்கப்போவதில்லை ஆனால் இஸ்லாத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?

    சந்தடி சாக்கில் இந்துக்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனி மதத்தை சார்ந்து வாழ்வது போல பேசிவிட்டீர்கள்.

    தேசப்பற்று ஒருமைப்பாட்டில் குறைந்தவர்கள் இல்லை என்று பசப்பு வார்த்தை பேசுகிறீர்களே, இமாலயத்தில் இந்துக்கள் பனிலிங்கத்தை தரிசிக்க போவார்களே, அங்கே அவர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்க குத்தகைக்கு நிலம் கொடுத்ததற்கே முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கலவரமே நடந்ததே! எங்கே உங்கள் தேசிய ஒருமைப்பாடு.

    அப்படி எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்களை நீங்கள் கண்டித்தீரா? சென்னை இமாம் கண்டித்தாரா? மதானி கண்டித்தானா? எந்த முஸ்லீமாவது வெளிப்படையாக அறிக்கை விட்டு இந்துக்களுக்கு ஆதரவாக பேசினீர்களா? எங்கே போனது உங்கள் தேசிய ஒருமைப்பாடு. புடலங்காய் பேச்சு பேசுகிறீர்களே!

    (Edited.)

  29. திருச்சிக் காரன் on October 15, 2009 at 8:49 am

    Dear Brother Mr. Razin

    //ஸகாத்.
    இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று…
    ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.//

    That means if a citizen is not a very rich person but a Muslim he need not pay Shaath.

    But all tne non- muslims have to pay jisiyaa tax whether ordinaru man or rich man.

    That means ordinary man who is already struggling to take care of his family expenses will obviously forced (indirectly) to follow islam!

    //இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.//

    This is discriminataion based on Religion. Are not the Muslims get protected? They are not paying protection money. If a ruler wants to protect some citizens without taxing them, and to protect other citizens only after taxing them, why does he rule that country?

  30. ram on October 15, 2009 at 8:50 am

    //நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..///

    ரஜின் நீங்கள் காமன் மேன் தான் ஒத்துக் கொள்கிறேன், நானும் அப்படியே உங்கள் நம்பிக்கை வீனாகாது. ஆனால் கமலை இதில் இழுக்காதீர்கள். கமல் ஒரு சந்தர்ப்பவாதி என்பது என் கருத்து. குஜராதில் முஸ்லீம் பெண்ணின் கருவழிப்பு பற்றி (ராமன் கிருஷ்னன் என்ற பெயரைஎல்லாம் வம்புக்கிழுத்து) உருக்கமாக விவரிக்கும் கமல் அதற்கும் முன் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பில் எரிந்து துடித்து கரியாய் போன இந்துப் பெண்ணுக்காக ஏன் கண்ணீர் விடவில்லை. நடுநிலைமை என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு சொரிந்து விட்டு இந்துக்களை கிள்ளி விடும் வேலையைத்தான் கமல் செய்திருக்கிறார்.

    இப்படித்தான் எல்லோரும் ஆளுக்கொரு காலை வைத்து இந்துக்களின் குறள்வலையை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள். மூச்சுத்திணறி உடல் துடித்தால் கூட எவ்வளவு திமிர் பார் நம்மை எதிர்க்கிறான் என்கிறீர்கள்.
    நியாயமா?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.