மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » இலக்கியம், சைவம், பிறமதங்கள்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் - “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.

324px-statue_of_g_u_popeபோப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் - “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”.  தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.

இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.

போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்,  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் - “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.

ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.

“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால்  மறைக்கப்பட்டுவிட்டது.

திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. போப் எழுதியுள்ளார். ஜி.யூ. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.  ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஜி.யூ. போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஞானாசிரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் திருவாதவூரரை ஆட்கொள்ளுகிறான். இதன் பின்னர் அடிகளுக்கு மதுரையினொடு தொடர்பு முற்றிலும் நீங்குகிறது. பூவுலகிற்குத் தான் எழுந்தருளிய பணி நிறைவுற்றதும் இறைவன் உடனிருந்த அடியவர்கள அங்குக் குருந்த மரத்தடியில் ஓர் பீடம் அமைத்துத் தன்னை வழிபட்டு வருக  என்றும் சிலநாட்களில் அங்குள்ள பொய்கையின் ந்டுவில் ஒரு பேரொளி தோன்றும் என்றும் அதில் அனைவரும் புகுந்து திருக்கயிலை வருக என்றும் கூறியருளினான். திருவாதவூரரை மட்டும் அவர்களுடன் பேரொளியில் புகாமல் யாத்திரையாகத் தில்லைக்கு வருக என்றும் வழியில் அவர் வழிபடும் தலங்களில் குருவடிவாய் காட்சி அளிப்பதாகவும் கூறியருளித் திருக்கயிலைக்கு எழுந்தருளினான்.

siva_as_guru_to_manikkavasagarஇறைவனின் பிரிவாற்றாமையால் வருந்திய திருவாதவூரர் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு இறைவனின் காட்சியைப் பெறாமையால் வருந்தி நீத்தல்விண்ணப்பம் என்னும் இந்தப் பதிகத்தை அருளினார். இறைவன் காட்சி நல்கினான். இது மாணிக்கவாசகரது வரலாற்றைப் பாடிய கடவுண்மாமுனிவர் அறிவிக்கும் செய்திகள்.

‘உன்னை பிரிந்த யான் என் உடலைத் தீவாய் மடுக்கிலேன், மலைமேல் உருண்டு உயிரை மாய்ப்பேனல்லேன்,  நாதனே! இந்த உடலும் உயிரும் உன்னுடைய உடைமையென்றே இவ்வுடலைவிட்டு உயிரைப் பிரிக்க அஞ்சினேன், என் செய்வேன்’ என நிலத்தில் வீழ்ந்து புரண்டு அழுது புலம்பினார். கற்றைவார் சடையார் கோலங்காட்டி ஆட்கொண்ட அன்றே, வாதவூரர், சுற்றமும் தொடர்பும் முற்றிலும் நீத்தார்; இன்பமும் துன்பமும் அற்றார்; உடல்மேல் அபிமானம் துறந்தார்; வெறுக்கை (செல்வம்)மேல் வெறுக்கை வைத்தார்; செற்றமும் செருக்கும் காய்ந்தார்; நல்வினை தீவினை இரண்டும் தீர்ந்தார்.  இறைவன் திருவாதவூரரை ஆட்கொண்ட பின் அவரது நிலையாகப்  பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தில் அறிவிப்பது இந்நிலை

இனி, போப் இந்த கட்டத்தில் மணிவாசகரை எப்படி அறிமுகம் செய்கின்றார் எனக் காண்போம்.

நீத்தல் விண்ணப்பம் முழுவதும் ஆன்ம முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஐம்புல மயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தெய்வத்தின் துணை வேண்டி மானுடம் எழுப்பும் உணர்ச்சி மிக்க பாடல்கள் என்ற முன்னுரையுடன் ஜி.யூ. போப், மாணிக்க வாசகர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றைக் கூறுகின்றார் -

”சிவன் குருவாக வந்து ஆட்கொண்டு பிரிந்த பின், திருவாதவூரர் பாண்டி நட்டில் உள்ள சிவத்தலங்களைக் கண்டு வழிபடலை மேற்கொண்டார். முதலில் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கினார். திருப்பெருந்துறையிலும் மதுரையிலும் பெற்றிருந்த இறையனுபவத்திற்கு எதிர்விளைவான சோதனைகள் உத்தரகோச மங்கையில் திருவாதவூரருக்கு ஏற்பட்டன.

இளமையும்  பாண்டியமன்னனின் தனிப்பட்ட பேரன்பும் பெற்றிருந்த அடிகள் இதுவரை செல்வச்செழிப்புடன் இல்லற இன்பத்தில் வளமாக வாழ்ந்திருந்தார். இப்பொழுது அனைத்தையும் துறந்த துறவியாக மாற்றம் பெற்றார். மதுரையில் அமைச்சராக இருந்தபோது பெற்றிருந்த சுகபோக வாழ்க்கை அனுபவ நினைவும், உத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் இருந்த சூழலும் அடிகளுடைய புதிய தவவாழ்க்கைக்குப் பெருஞ்சோதனையாக இருந்தன. புலனிச்சை செய்யும் மயக்கத்தில் சிக்கிய அவர் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோளை அங்கு அவர் எட்ட முடியவில்லை.

உத்தரகோசமங்கைக் கோயிலின் சூழல் அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்தது. நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள பாடல்களைப் பார்த்தால் அவர் இருநிலைகளில் வருந்தி வந்தார் என அறிகிறோம். ஒன்று, அந்தக் கோவிலில் கூட்டம் கூட்டமாக இருந்த தேவரடியார்களின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட மனமயக்கம்; இரண்டாவது, புதிதாக அவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கைக்கு உரிய விரதங்களைக் மனம் ஒன்றிக்கடைப் பிடிக்க இயலாமை.

இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.”  - From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.

ஜி.யூ. போப் கூறும் இந்த வரலாறு மணிவாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன் மானம் உள்ள தமிழர்கள் போப்புக்குப் புகழ்மாலை சூட்டித் திருவாதவூரடிகளை ஒழுக்கக் கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?

போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்.

திருவாசகத்தில், குறிப்பாக நீத்தல் விண்ணப்பத்தில், திருவாதவூரடிகள் தாம் பெண்மயக்கத்தில் வருந்துவதாகக் கூறுவது போன்ற செய்திகள் அவர் தம்மைப் பற்றிக் கூறிய ஒப்புதல் வாக்கு மூலமல்ல. இது வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து  மேலும் வினைகளை ஈட்டிக் கொள்ளும் இயல்பைத் திருவாதவூரடிகள் தம்மேல் ஏற்றிக் கொண்டு கூறியதாகும். இதற்கு இவ்வாறன்றி, நம் அடிகளே மகளிர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் மனத்தளவில் மகளிரை நினைந்திருந்தார் என்றும் அவ்வாறு இருப்பினும்  விழுத்தொழும்பில் நின்றதால் தம்மைக் கைவிடலாகாது என இறைவனிடம் மன்றாடினார் என்றும் அறியாது கூறிய போப்பை  எம்பெருமான் மன்னிப்பாராக.

உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி உலகவருக்காக இறைவனிடம் வேண்டுதல் இந்து பக்தி இலக்கிய மரபு. இதற்குத் தமிழிலேயே ஒரு சான்று காணலாம்.

காரைக்காலம்மையார் பெண்ணடியார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. அவர் அருளிய ‘திருவிரட்டைமணிமாலை’ என்னும் திருப்பதிகத்தில்,

“நினையாது ஒழிதிகண் டாய்நெஞ்சமே
இங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நம்
தாதைநொந் தாத செந்தீ
அனையான் அமரர் பிரான் அண்ட
வானன் அடித்தலமே” (13)

என்னும் பாடலில் தமக்கு மனைவியும் மக்களும் உள்ளதாகவும், நெஞ்சம் அவர்களை நினயாதொழிய வேண்டும் எனவும் பாடுகிறார். காரைக்கால் அம்மையாருக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என இந்தப் பாடலின் அடிப்படையில் கூறினால், அவ்வாறு சொல்பவனை அறிவுடையவன் எனலாமா?

போப்பின் கருத்து அவருடைய கிறித்துவ மரபையொட்டி எழுந்ததுவாகும். கிறித்துவ Saint களில் பலர் Sinner களாக இருந்து Saint ஆனவர்களே. இந்த மரபில் எழுந்ததுதானே “Every saint had a past; and ever Sinner has a future” (Imitation of Christ) எனும் கொள்கை.

galatic_sivaஇந்தக் கோட்பாடு நம் ஆசாரிய மூர்த்திகளுக்கும் இந்து மரபுக்கும் ஒவ்வாத ஒன்று.

முத்தி நிலையில் பரமுத்தி அபரமுத்தி என்று இருநிலைகள் உண்டு. பரமுத்தியாவது சிவவியாபகத்தில் இரண்டறக் கலந்துவிடும் நிலை. இத்தகையோருக்கு மறுபிறப்பில்லை.

அபரமுத்தி என்பது பதமுத்தி என்றும் சொல்லப்படும். பதமுத்தியில் உள்ளவர்கள் இறைவன் ஆணையின்படி மீண்டும் உலகநன்மையின் பொருட்டுப் பிறந்து உரிய காலத்தில் பரமுத்தி அடைவர்.

இத்தகைய உயர்ந்த ஆன்மாக்களாக சிவனடியை மறவாப் பான்மையராக இருந்து, இறைவன் ஆணையால் ஒருபயன் கருதி உலகிற்கு அனுப்பப்பட்டவரே நம் ஆசாரிய மூர்த்திகள். அவர்களுடைய அருளிச்செயல்களிலேயே இதற்கு அகச்சான்றுகள் உள்ளன.

“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.

கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.

மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.

திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,

“நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
…………………………………………………………………
ஆக்கி ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே” (அதிசயப்பத்து 8)

எனக் கூறினார்.

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! திருவாசகத்தை மொழிபெயர்த்ததனல் அதன் பெருமையை உலகெங்கினும் போப் பரப்பினார் என்றால் இப்புகழோடு, மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார் என்றும் ஆம்..

இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே.

போப் சைவ சித்தாந்தத்தைப் நூல்கள் வாயிலாகப் படித்திருந்தாலும் சித்தாந்த மரபினை அறியார். திருமுறைகளில் ஐயம் வந்தால், அதனை சித்தாந்த நெறி நிற்கும் சான்றோரிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். வெறும் தமிழ்ப்புலமை மட்டும் போதாது.(இதற்குச் சான்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய ‘தியாகராய செட்டியார்’ வரலாறு பார்க்கவும்). இந்த அறியாமையால் அவர் தவறான குறிப்புக்களும் எழுதியுள்ளார். இதனால் போப் சைவ நெறியைப் பாராட்டுகின்றாரா அல்லது பிற கிறித்துவர்களைப் போலக் கேலி செய்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுமாறு சில இடங்களில் கருத்துத் தெரிவிக்கின்றார்.

எப்படி ‘சங்கீதம்’ என்ற பைபிள் பகுதி கிறித்தவர்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றதோ அப்படியே திருவாசகமும் காலங்காலமாகத் தமிழ்மொழி பேசும் மக்களின் பெரும்பான்மையோரின் மனத்தைத் தொட்டுள்ளது எனத் திருவாசகத்தைப் புகழ்ந்த போப் அவர்கள், இதில், மேன்மையான ஆன்மிகத் தத்துவச் சிந்தனைகளோடு மடமையானது என்று சொல்லத்தக்க உருவவழிபாடு பேணலும் கலந்துள்ளது; இன்றைய சைவநெறியில் ஒன்றையொன்று மறுதலித்துக்கின்ற, அதேசமயத்தில் பரஸ்பரம் வலுவூட்டுகின்ற இரு இயல்புகள் செழித்துள்ளன. சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எத்துணைக் கெத்துணை முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அத்துணைக்கு அத்துணை ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார் (There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce  to be the grossest idolatory. And this leads to the thought that in caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen on another. The more philosophical and refined the caivite becomes , the more enthusiastic does he often apper to be in the performance of the incongruous rites of the popular worship. )

சைவம் உருவவழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஆன்ம ஞானியும் புறவழிபாட்டைக் கைவிடலாகாது. சிவச்சொரூபம் அருவமாய் எங்கும் வியாபித்துள்ளது. உருவுடைய சீவர்களாகிய நாம் அந்த வியாபகத்தின் உள் உள்ளோம்.  நமக்குப் புறத்தேயுள்ள பொருள்களையே காண வல்ல கருவிகளைக் கொண்டுள்ள நாம் நமக்கு உள்ளும் புறம்பும் உள்ள அருவமாக உள்ள நம்மை நடத்திச் செல்லும் இறையின் அந்த வியாபக வடிவம் வழிபடுவதற்கு முன்னிலை(சன்னிதானம்) ஆகாது. அதனால்தான் உருவ வழிபாட்டை இந்து சமயம் வற்புறுத்துகின்றது. இறைவன் அடியவர் உளங்கொள்ளும் எந்த வடிவத்திலும் வந்து அருள்புரிவான், அந்த வடிவங்களெல்லாம் அருள்வடிவமே அன்றிக் கல் மண் பொன் போன்ற மாயாகாரிய வடிவங்கள் அல்ல என்பது இந்து மதக் கோட்பாடு. இறைவன் எந்த வடிவில்  தங்களுக்கு அருள் செய்தானோ அந்த உருவினைத் திருமுறையாசிரியர்கள் போற்றியுள்ளனர். மணிவாசகப் பெருமானுக்குச் சிவன் குருவடிவில் வந்தருளினான். ஆதலால் திருவாசகம் முழுவதும் குருஸ்துதியே ஆகும்.

தங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்று கூறிக் கொள்ளுகின்ற கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அக்கிறித்து, முகம்மது என்பாரையே தம்முடைய மூர்த்திகளாகக் கொள்ளுவதால் அந்த இருவரும் அடைந்த கதியை அக்கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அடைவர் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.  இவர்களும் உருவ வழிபாடு உடையவர்களே.

போப் மணிவாசகப் பெருமானைப் பிழைபடக் காட்டிய மற்றொரு முக்கியமான இடத்தை அறிய வேண்டும்.

இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டுத் தான் மணிவாசகரை ஆட்கொண்டதை உலகுக்கு அறிவித்தபின் , மணிவாசகர் தில்லைக்குச் செல்லுமுன் நடந்த நிகழ்ச்சிகளைத் திருவிளையடற் புராணமும் திருவாதவூரர்ப் புராணமும் விரித்துக் கூறுகின்றன. இறைவன் தன்பொருட்டு மண்சுமந்து கோவால் மொத்துண்ட கருணைத் திறத்தை நினைந்து மணிவாசகர் நினைந்து பலவாறு அழுது புலம்பினார். பாண்டியன் வாதவூரடிகளை அடைந்து வணங்கித் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ‘யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங்களே ஏற்று நடத்தல் வேண்டும்’ என மன்னன் மணிவாசகரிடம் வேண்டி நின்றான். அரசனது அன்பினை உணர்ந்த வாதவூரடிகள், ‘என்னைத் திருபெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்றார். அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் ‘பெரியீர் நும் திருவுளப்படி செய்க’ எனக் கூறி விடை அளித்தான். திருவாதவூரர் நற்றவக் கோலம் பூண்டு திருப்பெருந்துறை நோக்கிச் சென்றார்.

manikka_vasagar_statueதமிழ்ச் சான்றோர்கள் கூறும் வாதவூரடிகள் வரலாறு இவ்வாறு இருக்க போப் இதனை வேறு விதமாகக் கூறுகின்றார். பாண்டிய நாட்டில் உள்ள மதுரைப் பெருங்கோவிலுக்கும் சோழமண்டலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லைப் பெருங் கோவிலுக்கும் ஏதோ ஒரு பெரிய போட்டி இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தில்லைக் கோவில் மதுரைக் கோவிலை பலநிலைகளில் முதன்மை பெற்றது எனலாம். மாணிக்க வாசகர் மதுரையை விடு நீங்கிய பின் மீண்டும் மதுரைக்கு வரவேயில்லை. இவர் குதிரைவாங்க அளித்த தன் பொருளைக் கவர்ந்து கொண்டதனைப் பாண்டிய மன்னன் மனதார மன்னிக்கவே இல்லை என ஊகிக்கலாம். போப்பின் ஊகத்தின்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் தன்னை மனதார மன்னிக்காததால்தான் அவர் மீள மதுரைக்கு வரவில்லை என்பதாகும்.(It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses)

திருவாசகம் மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரையில் போப் மாணிக்கவாசகர் வரலாறு எழுதியுள்ளார். அதில் பாண்டிய மன்னன் தன்னுடைய பிழைக்கு மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரைத் தன்னுடைய அமைச்சராகப் பணிகொள்ளுவதற்குத் தனக்குத் தகுதியில்லையாதலால் நாட்டை ஆளும் உரிமையை அவருக்கு அளித்துவிட முன் வந்ததாகவும் கூறியதற்குக் கண்டபத்து என்னும் பதிகத்தின் அறிமுகத்தில் கூறியுள்ள இந்தச் செய்தி முரண்படுகின்றது.(The King now pays the saint a visit, acknowledges all his  mistakes, declares his unworthiness to have such a , and offers to resign to him the kingdom)

இந்த முரண்பாடுகளால் ஒன்று நன்கு தெரிய வருகின்றது. புராணங்களும், சைவ உலகமும்  மாணிக்க வாசகருக்கு அளித்துள்ள உயர்வையும் அவருடைய மேன்மையையும் போப் அறிந்திருந்தாலும் , அவருடைய கிறித்துவ மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும்,  Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து  விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

தமிழனுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் தாமஸ் எனக் கூறுவோருக்கும் போப்புக்கும் என்ன வேறுபாடு? ஒரே குட்டையில் ஊறியவர்கள் தானே!

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

203 மறுமொழிகள் »

  1. திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.

    டேனியல் தங்கப்பா

    (Comment edited & published)

  2. ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி பூர்வமான பல உண்மைகள் சான்றுகளுடன் எடுத்துரைக்கப்பட்ட கட்டுரையை படித்தபின் சற்று அயர்ச்சியாக/சோர்வாக/உணர்ச்சிபூர்வமாக உணரும் அனைத்து வாசகர்களும் ‘டேனியல் தங்கப்பா’ வின் மறுமொழியை படித்தால் ஒரு பெரிய நூற்றாண்டு நகைச்சுவையை (Millenium Joke) படித்த சிரிப்பு வரும். அதன் மூலம் அந்த சோர்வை நீக்கிகொண்டு அடுத்த கட்டுரைகளை படிக்க வேண்டுகிறேன்.

    இன்னமும் திருவள்ளுவரை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லுவோர்க்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம்பெற்றிருக்கும் ‘திருவள்ளுவர் ஒரு இந்து’ என்ற கட்டுரையை படித்து தெளிவுறவும். இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை.

  3. ச‌கோத‌ர‌ர் டேனியல் தங்கப்பா அவ‌ர்க‌ளே,

    நாச‌ரேய‌னாகிய‌ இயெசு என்ப‌வ‌ர் கிரிஸ்துவா,

    அல்ல‌து

    டேனியல் தங்கப்பாவாகிய‌ நீங்க‌ள் கிரிஸ்துவா ?

    ஏனெனில் நீங்க‌ள் கூறும் ப‌ல‌ க‌ருத்துக்க‌ள், இயேசு கூறிய‌தற்க்கு முர‌ணாக‌ உள்ளது.

    என‌வே நீங்க‌ள் புதிய‌ தூதுவ‌ரா?

    அல்ல‌து நீங்க‌ள் புதிய கிரிஸ்துவா?

    இல்லை நீங்க‌ள் தான் உண்மையான‌ கிரிஸ்துவா?

    இதை தெளிவு ப‌டுத்த‌ முடியுமா?

    இதை நீங்க‌ள் விளக்கினால், நாங்க‌ள் புதிய‌ கிருஸ்துவாகிய‌ உங்க‌ளை வ‌ர‌வேற்க்க‌, எங்க‌ளைத் த‌யார் செய்து கொள்ள முடியும்.

    க‌ழுதைக் குட்டியை அவிழ்த்துக் கொண்டு வ‌ர‌வும், ம‌ர‌க் கிளைக‌ள வெட்டிப் போடுவ‌த‌ற்க்கும், எக்காள‌த் தொனியுட‌ன் ஓச‌ன்னா பாடுவத‌ற்க்கும் எங்க‌ளைத் த‌யார் செய்து கொள்ள முடியும்!

    இதில் என‌க்கு இன்னொரு ச‌ந்தேக‌மும் உ ண்டாகிறது.

    நீங்க‌ள் ஏற்க்கென‌வே,

    ம‌திப்பிற்க்குரிய‌ , மாட்சிமை பொருந்திய‌, மாண்புமிகு சோனியா அம்மையார் அவ‌ர்க‌ள்தான், உண்மையான‌ ம‌ஹாத்மா என்று

    நாட்டாமை பாணியிலே க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து அதிர‌டி தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ளீர்க‌ள்.

    ஒரு வேளை அவ‌ரும் கிருஸ்துவா என்ப‌தையும் தெரிய‌ப் ப‌டுத்துங்க‌ள்.

    அப்போதுதான் நீங்க‌ள் பயணிக்க‌ எத்த‌னை க‌ழுதைக் குட்டிக‌ள அவிழ்த்துக் கொண்டு வ‌ருவ‌து, என‌ப‌தை நாங்க‌ள் அறிந்து கொள்ள முடியும்

  4. அருமையாக எழுதியிருக்கிறீர் ஐயா! மனமார்ந்த நன்றிகள்.

    ராபர்ட் டி நொபிலியில் ஆரம்பித்து, ஜி.யூ.போப், ஜோசெப் பெஸ்கி, கால்டுவெல் வரை அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பேன் நான். இவர்கள் தமிழ் கற்றது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல. அதன் மூலம் நம் ஆன்மீக நூல்களைத் திரித்து, நம் கலாசாரத்தை மாற்றியமைத்து, நம் மக்களை குழப்பி மதமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்குத் தான்.

    கலாசாரக் களவை ஆரம்பித்தது ராபர்ட் டி நொபிலி தானே! திராவிட இனம் என்ற புளுகு மூட்டையினை அவிழ்த்துவிட்டது கால்டுவெல் தானே! இன்னும் இங்கு திராவிட இனவெறிக் கொள்கை பேசிக்கொண்டிருக்கும் கழகங்களின் பகுத்தறிவு முட்டாள்கள் கால்டுவெல் பேரைச் சொல்லித்தானே தங்கள் பிழைப்பை ஒட்டிக் கொண்ட்டிருகிறார்கள்!

    இந்தக் கிறுஸ்துவ வேடதாரிப் பாதிரிகள் வழியில் வந்து இன்னும் நம்மை ஏமாற்ற முயற்சிப்பவர்கள் தானெ மைகேல் விட்ஸல், ஃப்ரான்ஸிஸ் க்ளூனி போன்றவர்கள் எல்லாம்! இவர்களின் அடிவருடிகளாக இருந்து கொண்டு குழப்பத்தை விளைவிப்பவர்கள் தானே தெய்வநாயகம் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள்!

    இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த ஏமாற்றும் கிறுஸ்துவக் கும்பலுடன், வைதீக/ஸம்ஸ்க்ருத வழிபாட்டுமுறைகளை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கும் ஒரு சில தமிழ் சைவ ஸ்தாபனங்கள், கைகோர்த்துக் கொள்வது தான். அவர்கள் விரைவில் விழிப்புணர்ச்சி கொண்டு கிறுஸ்துவக் கும்பலிலிருந்து வெளிவரவேண்டும். அதற்கு சிவ பெருமான் அருள் புரியட்டும்.

  5. டேனியல்,

    திருநாவுக்கரசர் மதம் மாற மறுத்தபோது கல்லில் கட்டி கடலில் தள்ளப்பட்டார். அப்போதும் அவர் “கற்றுணை பூட்டி ஓர் கடலினுள் பாய்சினும் நற்றுணையாவது நமசிவாயவே ” என மன உறுதியுடன்பாடினார்.

    பக்த ப்ரஹலாதன், ஹிரண்யகசிபு மூட்டிய நெருப்பில் நின்றுகொண்டும் நாராயணனின் நாமத்தை கைவிடவில்லை.

    சீக்கியர்களின் குரு கோவிந்தசிம்மனின் பால்மணம் மாறாத இரண்டு பச்சிளம் குழந்தைகள் கூட கொடியவன் ஔரங்கசிபினால் இசுலாமுக்கு மதம் மாற செய்த கொடுமையும் கண்டு அஞ்சாது மரணத்தை ஏற்றது இந்த பாரத மண்ணில்.

    தனது குருதியினால் பாவங்களை கழுவ வந்ததக பிதற்றிய இயேசு, சாவைய்ம் சிலுவைபாட்டையும் கண்டு அஞ்சி நடுங்கி எல்லாம்வல்ல தேவனை “ஏலி ஏலி லாமா ஸெபதநிக்” ( ஏன் தேவே, ஏன் தேவே ஏன் என்னை கைவிட்டீர். மத்தேயு 27:46) என்று கூவி கதறி தேவ நிந்தனை செய்து பெரும் பாவியாக மரித்ததை கண்டால் வருவது அருவருப்பு .

    ஏசுவே தேவன் என்றல், என் தேவனே, என் தேவனே என்று அவன் அழைத்து யாரை ? ஏன் ?

    வள்ளுவரை கிருஸ்துவர் என்று கூறும் நீர், உம் இயேசு “என் தேவன, என் தேவனே” என்று அழைத்து எம் சிவனை என்று அறிவீரோ ?

    தன்னை தேவன் கூறி இயேசு செய்த தீவினை பயன் எம்பெருமான் அவனை மரணத்தில் இருந்து காக்கவில்லை.

  6. Dear All,

    Tamil Hindu is afraid of truth and Truth. So they are editing my comments. Hence I will not post here hereafter.

    Daniel Thangappa

    (Comment edited & published)

  7. யேசுவின் சீடரென்று சொல்லிக்கொள்ளும் தாமஸ் இயேசு நாட்டிலிருந்து கால்நடையாக பாலைவனங்களையும் மலை கடல்களையும் தாண்டி கேரளாவுக்கு வந்து அங்கிருந்தவர்களை தேவமக்களாக்கி விட்டு பல நூறு கிலோமீட்டர்களை தாண்டி மயிலாப்பூர் வந்து சத்து போனதாக கதைகட்டுபவர்கள், அதை வரலாறாக்க துடிக்கும் நமது போலி மதசகிப்பு அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தமாதிரி பித்தலாட்டம் நடக்கத்தான் செய்யும் . இந்து புராணங்களிலிருந்து வரிகளை திருடி அது தங்கள் இயேசுவை சொல்லுவது என்று சாதிப்பது.இதையெல்லாம் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்த்து பதில் கொடுத்து சரிசெய்யவேண்டிய இந்து சாதிப்பிரிவினையை பேசிப்பேசி தழ்ந்துக்கொண்டேபோகின்றது. படகோட்டியை தழுவி குகனோடும் ஐவரானோம் என்று உருகிய ராமனையும் எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் என்று சமத்துவம் சொன்ன யாதவக்ருஷ்ணனையும் பாமரர்களுக்கு எடுத்துச்சொள்ளவேண்டிய மடாதிபதிகளும் பீடதிபதிகளும் தங்களுக்கு கிடைக்கும் விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் போலி மதசகிப்பு அரசியல்வாதிகள் முன்னால் தலைகுனிந்து நிற்கும்போது நாம் தான் நம்மை காத்துக்கொள்ளவேண்டியுள்ளது.நமது பாரதத்தின் வேத புராண இதிகாச பொக்கிஷங்களை நாம் மதித்து படித்து வரும் தலைமுறைகளுக்கு சொல்லவேண்டும். இல்லைஎண்டல் பெரு நரகத்துக்குப்போகவேன்டிவரும். கிறிஸ்துவர்களுக்கு டானியல் தங்கப்பன் போன்றவர்களுக்கு நன் சொல்வது அப்படி உங்கள் எசுவைப்பற்றித்தான் சைவமும் வைணவமும் சொல்லுகிரதுஎன்றல் இறைமகன் யேசுவைப்பற்றி சொன்ன இந்துமதம்தானே உங்கள் தாய்மதம். அப்படிஎன்றல் பேசாமல் இந்துமதத்துக்கே வந்து தைரியமாக வணங்குங்கள். எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை முப்பத்துமூன்று கோடி தெய்வ வடிவங்களுக்கு பூஜை செய்து சாப்படுபோடும் நாங்கள் ஒரு எசுவுக்குக்கூட சாப்படுபோட்டு ஒன்றும் குறைந்து போகமட்டோம். ஆகவே வீணாக ஜோக்கடித்து காலம் களையாமல் வாருங்கள் தெய்வராஜ்ஜியம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

  8. //மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//

    சரி டேனியல் தகர டப்பா அப்புறம்

    டேனி:

    மேலும் அந்த பரிசுத்த ஆவியானது வாங்கிய குதிரைகளை மன்னருக்கு தர வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவைகளை செகண்ட் ஹேண்டாக ஒரு அரபு வியாபாரிக்கு விற்றுவிட்டு அந்த பணத்தைக் கொண்டு ஒரு பெட்டகம் நிறைய சோப்பு வாங்கி அதை மாணிக்க வாசகரிடம் தந்து இன்று முதல் நீர் இந்த கட்டிகளினாலேயே பூரண ஸ்நானம் செய்வீராக . ஆமென் என்று கூறி மறைந்தது.

    ம்ம் அப்புறம் டேனியல் சீக்கிரம் கதையை சொல்லி முடிங்க தூக்கம் தூக்கமா வருது…….ஹா…………வ் .

  9. முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் சீரிய ஆராய்ச்சியும், தெவிட்டாத தெள்ளிய நடையும் மிகவும் பாராட்டுக்குரியன. கிறித்துவப் பாதிரியார்களின் தமிழார்வத்தின் காரணத்தைத் தெளிய வகையில் எடுத்தெழுதியமைக்கு மிக்க நன்றி.

    ஐயா டேனிய‌ல் த‌ங்க‌ப்பா இவற்றைப் படித்தாலும் உண்மையை ஏற்கும் பக்குவம் வரப்பெறாதவராகவே இருக்கிறார். வாதத்துக்கு வந்துவிட்டால், கொரில்லாப் போர் போல வெடியை வீசிவிட்டு ஓடி விடக் கூடாது. இருந்து பதிலிருத்தி, தம் பக்க நியாயங்களைத் தெளிவாக வைக்கவேண்டும், மாற்றுக் கருத்தில் உள்ள நியாயத்தை ஒப்புக்கொள்ளும் பக்குவம் வரப் பெறவேண்டும். ஏதோதோ எழுதிவிட்டு, ப‌தில் வந்தால் அதைச்ச‌ந்திக்கும் நிதான‌மும், தைரிய‌மும் இல்லாம‌ல், டே, நீ எல்லாம் எங்க‌ப்பா ! என்று தேடும் வ‌ண்ண‌ம் ஓட‌க்கூடாது.

    இதோ என் ச‌வால்.

    பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌ம் என்றால், ஏசு ஏன் இற‌ந்தார்? அவ‌ர் பாவி என்ப‌தை ஒப்புக் கொள்கிறீர்க‌ளா? ம‌ற்ற‌வ‌ர் பாவ‌த்திற்காக‌ ம‌ரித்தார் என்கிறீர்க‌ளே, பாவ‌ம் என்ப‌து என்ன‌, மாற்றத் த‌க்க‌ ஒரு காசோலையா? எங்கே அப்ப‌டிச் சொல்லியிருக்கிற‌து?

    புன‌ர‌பி ஜ‌ன‌ன‌ம் புன‌ர‌பி ம‌ர‌ண‌ம்.

    ஒவ்வொரு பிற‌ப்பிற்கும் முடிவு ம‌ர‌ண‌மே.
    பாவ‌ம் செய்யாத‌வ‌னும் ம‌ரிக்கிறான், செய்த‌வ‌னும் ம‌ரிக்கிறான்.
    பிற‌ந்த‌ சிறிது நேர‌த்தில் இற‌க்கும் குழந்தை செய்த‌ பாவ‌ம் என்ன? ம‌ரிப்ப‌த‌ற்கு?
    பிறந்த ஒவ்வொரு ஜீவனும் இறக்கிறதே, என்ன பாவம் செய்தது?

    இங்கே எம‌து தொட‌ர் முழ‌க்க‌ம்.

    பிற‌ந்தோம் பிற‌ந்தோம், இந்துவாய்ப் பிற‌ந்தோம்
    இற‌ப்போம் இற‌ப்போம், இந்துவாய் இற‌ப்போம்

    புனரபி ஜனனம் புனரபி மரணம்

    மீண்டும் பிற‌ப்போம், மீண்டும் பிற‌ப்போம்
    மீண்டும் மீண்டும் இந்துவாய்ப் பிற‌ப்போம்
    மீண்டும் மீண்டும் பார‌த‌ தேச‌த்தில்
    இந்துவாய்ப் பிற‌ப்போம்.

    இந்துவாய்ப் பிற‌ப்போம், இந்துவாய் வ‌ள‌ர்வோம்
    இந்துவாய் வாழ்வோம், இந்துவாய் இற‌ப்போம்

    மீண்டும் மீண்டும் இந்துவாய்ப் பிற‌ப்போம்

    புண்ணிய‌ம் செய்வோம், புண்ணிய‌ம் செய்வோம்,
    திண்ணிய‌ம் சொல்வோம், திண்ணிய‌ம் சொல்வோம்
    புண்ணியம் செய்து, புண்ணியம் செய்து
    மீண்டும் மீண்டும் இந்துவாய்ப் பிற‌ப்போம்.

  10. ஆசிரியர் குழுவுக்கு,

    கிருத்துவத்தினையும் அதன் பெருமைகளையும் எடுத்துரைத்து சதா எழுதினாலும் படித்து ஏதாவது தெரிந்துகொள்ளலாம். ஆவி பாவி ஜீவி என்று கூவி கூவி படிப்பதற்கே வெறுப்பாக இருக்கும் விசயங்களை எழுதும் நபர்களின் வாசகங்களை தவிர்த்தால் நன்று. வள்ளுவனாம் கிருத்துவனாம்….. பைத்தியக்கார தனமான வரிகளை தடை செய்தால் நல்லது. ஒரு நல்ல நிலையில் படிக்கும்போது இடைஇடையே வரும் இதுபோன்ற பின்னூட்டங்கள் பிசாசுகளைப்போல் படிக்கும் ஆர்வத்தை குறைக்கிறதே!

  11. Hello Daniel,

    You are afraid of truth, thats why you are not continuing further with your comments, be open to know good thinks from any religion.

  12. Daniel Thangappa

    I want to name you like this, but I cannot because I am a shaivaite and I was preached to love other religion that exist in this world, The more tolerant we are the more high you dogs bark.

    regards

    True Shaivaite

    P.S Other readers excuse for posting this comment

    (Comment edited & published)

  13. intha katturai eluthiya asiriyaria eppadi thodarpu kolvathu?

  14. // சரி டேனியல் தகர டப்பா //
    நீங்க..? “சூப்பர”இஷ்டாரா..?
    அடப்போங்கய்யா காலிப் பெருங்காய டப்பாவ விட மோசமான..?..!
    தனி மனித தாக்குதல்களை விட்டு எதிர் கருத்தினை மட்டும் அழுத்தமாகப் பதித்தல் போதுமே..!

    // போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்

    இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன //

    இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்;
    அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..!
    பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?

    இறைவனையே சலனப்படுத்திய பெண்களைக் குறித்து விவரமாக புராணங்களிலும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் கோவில்களிலும் காண்கிறோமே,இதில் மாணிக்க வாசகர் எம்மாத்திரம்..?

    // இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே //

    இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை;
    தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின் மூன்றாம் அதிகாரத்தினை வாசித்துப் பாருங்கள்.(Gospel according to John;chapter.3)

  15. //ஆவி பாவி ஜீவி என்று கூவி கூவி படிப்பதற்கே வெறுப்பாக இருக்கும் விசயங்களை எழுதும் நபர்களின் வாசகங்களை தவிர்த்தால் நன்று. வள்ளுவனாம் கிருத்துவனாம்….. பைத்தியக்கார தனமான வரிகளை தடை செய்தால் நல்லது. ஒரு நல்ல நிலையில் படிக்கும்போது இடைஇடையே வரும் இதுபோன்ற பின்னூட்டங்கள் பிசாசுகளைப்போல் படிக்கும் ஆர்வத்தை குறைக்கிறதே//

    I second this.
    .

  16. இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்;
    அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..!
    பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?

    But G.U.Pope did not believe in God and only believed in Falsehood and bluffed.

    If you have evidences on what ever you are talking about -why don’t you produce them instead of attacking me personally- either here or at my blog?

    யோவான்: 6
    48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

    AUthor of this Gospel died, Paul died as well Jesus Died?

    Is Jesus right- Please answer this Mr.Chilsam

  17. Chillsam

    /இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை;
    தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின்/

    திரு சில்சாம் அவர்களே, நீங்கள் காட்டியுள்ள யோவான் சுவிஷேசத்தின் பகுதி, ‘தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் மறுபிறப்படைய வேண்டும்’ என்பது ஒரே பிறப்பில் ஒருவன் அடைகின்ற அல்லது அடைய வேண்டும் என சுவிஷேசம் கூறுகின்ற நிலையாகும். அது ஒன்றும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதோ, அந்தப் பரிமாணங்களுக்கேற்ற உயர்நிலைகளைக் கொண்டதோ அல்ல.
    யோவான் சுவிஷேசம் கூறுவது ஒரேபிறப்பு. தாயின் வயிற்றிலிருந்து பெற்ற ஒரே உடல். அந்த உடல் குழந்தையாக இருந்து முதிய கிழமைபருவம் அடையும் மூப்பினைப் பரிமாணம் என்று சொல்லுவது பொருந்தாது. அது பல பிறவியும் அல்ல
    மறுபிறப்பினையும் அதனால் அடையும் பல உடல்களையும் மாணிக்கவாசகர்,
    ‘செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” எனக் குறிப்பிடுகின்ரார். இந்தப் பல்வகைப் பிறப்பினையும் திரு ஜி.யூ.போப் அவர்கள், His various embodiments என்னும் தலைப்பில், Within these immobile and mobile forms of life,
    In every species born, weary I’ve grown, great lord! ” என அழகாக மொழிபெயர்த்திட்டுள்ளார். அவர் species என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ள சிறப்பை நோக்குக. தாய் வயிற்றில் பிறந்த ஒரு உடலைக் கொண்டு அடையும் வளர்ச்சி, மூப்புகளை species எனலாமோ?

    யோவன் சுவிஷேசம் 3:5 ‘இயேசு நிக்கொதேமுக்குக் கூறுகிறார் “நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிட்மிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது”

    இங்கு இயேசு குறிப்பிடுவது, மனிதனுக்கு ஒரே பிறப்பு உண்டு. இந்த ஒரே பிறப்பில் ஞானஸ்நானம்( நீரிலிருந்து) பெற்று செம்மறியாட்டுக் கூட்டத்தில்( ஆவியில்) ஒருவனாக ஆகவேண்டும்.. இப்படிச் செம்மறி ஆட்டு,மந்தையில் ஒரு ஆடாகாமல் போனால் தேவனின் இராஜ்யமாகிய ஆட்டுப்பட்டியில் உனக்கு இடம் கிடைக்காது. உனக்கு நிரந்தர நரகமே கிடைக்கும்.

    பைபிளையும் Imitation of Christ by Thomas Kempis போன்ற கிறித்துவநூல்களையும் தமிழ் இந்துக்கள் படித்துச் சுவைப்பது உண்டு. யோவான் சுவிஷேசத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ப்குதிக்கு இந்து நூல்களில் கூறப்பட்டுள்ள அறங்களின் அடிப்படையில் தமிழ் இந்துவாகிய நான் வேறு விதமாகப் பொருள் காண்பேன்.

    பிறப்புக்களில் எல்லாம் மனிதப் பிறப்பு மிகவும் உயர்ந்தது. இதனைத் தவற விட்டால் இனி எந்தப் பிறப்பு வந்து வாய்க்குமோ? அறியோம். கிடைத்தற்கு அரிய இந்தப் பிறப்பிலேயே பிறப்பினை அறுத்து வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியத்தைச் செய்துகொள்ள வேண்டும். அதற்கு சற்குருவை அடைந்து தீட்சை(நீரினால்) பெற்று, அவர் காட்டிய வழியில் நின்று இறையருளை (ஆவியை)ப் பெறவேண்டும். குருவருளும் திருவருளும் இன்றி ஒருவன் பிறப்பை அறுப்பதோ வீடுபேற்றை அடைவதோ இயலாது. ஒருவன் தாய் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு இறப்பு; குருவருளும் திருவருளும் பெறத் தகுதியாக்கும் தீட்சை மற்றொரு பிறப்பு.

    நீங்கள் பைபிளை மேற்கோள் காட்டிச் சிலவற்றைக் கூறியதால் நான் இவ்விளக்கம் அளித்தேன். டேனியல் தங்கப்பாபோல் தகரடப்பா ஒலி எழுந்திருந்தால் கேளாது போயிருப்பேன்

  18. Monday, March 09, 2009
    Darwin conference does not speak for Vatican, says theorist

    A leading intelligent design proponent said Friday that views expressed this week at a Darwin conference in Rome should not be confused with the Vatican’s position on intelligent design and Darwinism.
    Organisers of the March 3 to 7 conference, Biological Evolution: Facts and Theories, at the Pontifical Gregorian University in Rome had declined to invite intelligent design speakers because they felt the theory lacked scientific merit.

    Bruce Chapman, president of the Seattle-based Discovery Institute, an intelligent design think tank, said he believes the Pope remains in serious “fruitful dialogue” with intelligent design even though speakers of the conference, sponsored by a Catholic Church-related agency, may be critical of the theory.

    “The views of the Pope and views of people holding the conference are not the same,” Chapman told The Christian Post on Friday. “A large purpose of this conference was to criticise and trash intelligent design and try to make it seem like it’s the Vatican’s [point of view]. They are intentionally trying to confuse people.”

    He added, “Not only is the Papal household keeping its distance from this conference, the Pope has said some things friendly to intelligent design and critical of Darwinism.”

    The intelligent design proponent said Pope Benedict XVI was critical of evolution as a random process during the first homily he delivered. At his coronation, the Pope said, “We are not some casual and meaningless product of evolution. Each of us is the result of a thought of God.”

    Chapman, a Roman Catholic himself, emphasised that the conference’s sponsor, The Pontifical Council on Culture, is an office of the Vatican but represented neither the Vatican nor the Pope himself.

    “Just because someone has money to come to Rome and have a conference doesn’t mean they speak for the Catholic Church, any more than some committee in the Senate or the House can speak for the United States Government,” he said.

    Moreover, Chapman pointed out that the event was funded by the John Templeton Foundation, which publicly opposes intelligent design.

    In an article published Thursday, the Rev Tomasz Tramfe, an official of the Pontifical Council on Culture and a Templeton representative told the Associated Press that Templeton did not place any restrictions on who was invited to speak.

    “They sent us the proposal after they had most of the speakers already. We decided to make the grant in part because it is a really good speakers’ list,” Paul Wason, director of the Templeton Foundation’s science and religion programmes, told AP.

    Chapman, however, disputed the report, saying he was told by Tramfre in 2007 that it was the Templeton Foundation that prohibited scientists with views supporting intelligent design from speaking at the conference.

    The restriction, according to Chapman, prevented intelligent design proponents such as Michael Behe, the Catholic author of Darwin’s Black Box, from defending their views at the conference.

    Chapman indicated it was not fair for organisers of the Darwin conference to allow staunch critics of intelligent design to speak while silencing a pro-intelligent design voice.

    “We are calling attention to their hypocrisy,” said Chapman. “You can’t attack people and not allow them to defend themselves.”

    In their announcement of the conference last year, organisers emphasised that proponents of creationism and intelligent design would not be invited to participate.

    Following the remark, the late Fr Richard John Neuhaus, editor of “First Things”, criticised the way the conference organisers “lump[ed] together” creationism and intelligent design.

    “They are quite distinct enterprises; the former is typically in defense of a literal reading of Genesis while the latter is a scientifically based theory of purpose or teleology in natural development,” wrote Neuhaus in the December issue of the Catholic-based journal.

    In an AP article on Thursday, the conference director said organisers thought the inclusion of intelligent design in the event would make dialogue “very difficult” because they did not consider it to be “a scientific perspective, nor a theological or philosophical one”.

    Chapman acknowledged that critics, often left-leaning journalists, cause confusion by associating intelligent design with creationism.

    He said a headline by FOXNews that read “Creationists, Intelligent Design Advocates Blast Vatican for Not Inviting Them to Evolution Conference”, was misleading.

    “The opposite is true. We were defending the Vatican and the Catholic Church,” Chapman clarified.

    The Discovery Institute president went on to explain the difference between microevolution, changes that take place over time within the species, with macroevolution, the process by which one species becomes another species.

    He said that while intelligent design proponents and the Catholic Church accept microevolution, he believes both reject the proposal by Darwin that unguided random chance and mutation produces new species and how it suggests life was created that way.
    http://clericalwhispers.blogspot.com/2009/03/darwin-conference-does-not-speak-for.html

  19. தேவப்ரியா அவர்களுக்கு, ‘கவுண்டர் க்வெஸ்டியன்’ பண்ணும் எல்லோரும் இயேசு நாதராகி விடமுடியாது, நண்பரே.

    நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்பியது வேறு, நீங்கள் கேட்கும் கேள்வி வேறு; வரலாற்றில் இருந்திருக்க முடியாத ஒரு நபரைக் குறித்து உங்களுக்கு என்ன அக்கறை..?

    நீங்கள் நம்பாவிட்டாலும் நான் நம்புகிறேன், ‘ மாணிக்கவாசகனார்’ எனும் மகான் இந்த மண்ணில் வாழ்ந்தார்; அவரைக் குறித்து இருவேறு கருத்துக்கள் இங்கே அலசப்படுகிறது; அவர்மீது கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டை அவர் காலத்திலேயே வாழ்ந்த யாரும் அவர் மீது எழுப்பி அவரைக் குற்றஞ்சாட்டவில்லையே என்பதும் G.U.போப் அவர்களுடைய “கண்ணீர் கதை”யினைக் குறித்து வேறு சமகால குறிப்பு இல்லாத நிலையில் அதுவும் கட்டுக்கதை என்பதுவும் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது;

    இதனையே ‘வரலாற்றில் இல்லாத இயேசு’வைக் குறித்து மிகவும் சுவாரசியமாக ஆராய்ந்துகொண்டிருக்கும் நீங்களும் கவனத்தில் கொள்ளலாமே என்பதே எனது யோசனையாகும்;

    இயேசுவுக்கும் முந்தைய காலத்து தத்துவ ஞானிகள், மாவீரர்கள், நம் நாட்டு புத்தர், அவரது சீடர் அசோக சக்ரவர்த்தி ஆகியோரைப் பற்றிய குறிப்புகளே இங்கே பத்திரமாக இருக்கிறதே;

    இயேசு நாதரைப் பற்றிய ஒன்றும் இல்லாதிருந்தால் அதனை அந்த காலத்து ஞானிகளே மறுத்திருப்பார்களே என்பதே எனது எண்ணம்..!

    இறுதியாக ஆசிரியர் C.N.Muthukumaraswamy (author) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்; அவருடைய கருத்துக்களில் நான் கிஞ்சித்தும் மாறுபடவில்லை; முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்; அதிலும்
    பின்வரும் குறிப்பு அற்புதமானது;

    // பிறப்புக்களில் எல்லாம் மனிதப் பிறப்பு மிகவும் உயர்ந்தது. இதனைத் தவற விட்டால் இனி எந்தப் பிறப்பு வந்து வாய்க்குமோ? அறியோம். கிடைத்தற்கு அரிய இந்தப் பிறப்பிலேயே பிறப்பினை அறுத்து வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியத்தைச் செய்துகொள்ள வேண்டும். அதற்கு சற்குருவை அடைந்து தீட்சை(நீரினால்) பெற்று, அவர் காட்டிய வழியில் நின்று இறையருளை (ஆவியை)ப் பெறவேண்டும். குருவருளும் திருவருளும் இன்றி ஒருவன் பிறப்பை அறுப்பதோ வீடுபேற்றை அடைவதோ இயலாது. ஒருவன் தாய் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு இறப்பு; குருவருளும் திருவருளும் பெறத் தகுதியாக்கும் தீட்சை மற்றொரு பிறப்பு. //

    இதிலும் கூட இயேசுநாதர் மாறுபடவில்லை;
    குறிப்பிட்ட அந்த சுவிசேடப் பகுதியில் “ஞானஸ்நானம்” என்பதை “தண்ணீரில் முழுகுதல்” என்ற பொருளில் அவர் குறிப்பிடவில்லை என்றே எண்ணுகிறேன்;

    ஆனாலும் கிறித்தவர்களில் சிலர் தங்கள் “அறுவடை”க்கு இந்த வசனத்தையே தவறாகப் பயன்படுத்துகின்றனர்;

    “ஞானஸ்நானம்” என்ற சொல் உட்பட பல வார்த்தைகளிலேயே அதன் பொருள் விளங்கும்; காரணம் இவை சமஸ்கிருத கலப்பான சொற்கள்;

    கிருஷ்ணனுடன் இருந்த அர்ஜுனனுக்கு அவர் யாராகத் தெரிந்தார்?
    யாரை மகான் எனலாம்?
    ஒரு மகானை எதனால் குருவாக ஏற்கலாம்?
    குருவே பரப்பிரம்மம் ஆவாரா?

    இவை நான் தேடும் கேள்விகள்;
    உங்கள் அன்புக்கு நன்றி;
    தொடர்ந்து பேசுவோம்,இறைவன் நாடினால்..!

  20. //இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.” -

    From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.//‘

    The above paragraph has irked Dr Muthukumarasamy.

    Here, we may understand that the outlook of G.U.Pope on Tiruvasagam is not that of a Hindu but that of a stranger.

    Suppose I read the Bible and I am not a Christian. What will be my outlook? Only as a stranger. And, after reading it, I may say, ‘Tthere are many places in that book which attracted me, which found me in tears etc.’

    What does it all mean? My experience with the Book and that of a devote Christian are not same. He approaches the Book as his holy scripture. I approach it as an important book or as a historical document that date immediately after the protagonist (Christ) death, or as an example of dignified and excellent English to learn from, to name a few reasons why I read. During the course of my reading and later review, I may say, “I find Christ not as a Lord or God, but simply as a noble man who some noble teachings to pass to us. “
    I don’t think at all that Christians will flay me alive for my ‘experience’ with their book. In fact, I said it so to so many; and none of them took me to task for that.

    This is the way we must treat Pope’s experiences with Tiruvaasagam.

    Further, his statement on Manivaasagar’s ‘struggle with flesh’ is not a humiliation on the saint; rather, it enhances the spirituality that the saint came to represent in our minds. It adds aura to the saint halo.

    Dr Muthukumarasaamy says that

    “இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே”

    It is not correct according to me. In Hindu religion too, such a concept exists. In fact, ‘Every saint has a past and every man has a future’ can also be a rehash of the following Tamil proverb, which comes from the Hindu religion straight:

    நதி மூலமும் ரிஷி மூலமும் கேட்கக்கூடாது.

    Alvaars are the finest examples of having had a PAST and repenting that, and finally becoming alvaars. Manivaasagar’s is only one pathikam that is shown here. But alvaars have so many. Believe me or not, even during his last leg of his Divya Desha yaatra, Thirumangai alvaar prays at Kedarnath to relieve him from the pangs of sensual feelings.

    I agree that the ‘pangs’ or ‘sins’ of the saints are symbolic, which represent the ‘pangs’ and ‘sins’ of the entire humanity. That exactly is also what comes out from Pope’s clear statement He says, as quoted by Dr Kumarasamy,

    ‘Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded.’ He accepts that Manivaasagar’s lines can be interpreted by us differently. “
    Same interpretation exists for Alvaar’s paasurams where they tell us about their struggle with flesh. The Vaishanva commentators interpret it differently as Pope attributes to Hindu commentators..
    In the paragraph quoted by Dr Kumaarasaamy, which is the corner stone of his whole article, I find Pope not motivated by any base feelings in approaching Tiruvaasagam.

    His is a signal service to Tirvasagam. Hats off to him! He embodies the famous statement: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.

    How many of us have spent a life time over that book? Has he translated it for Europeans with the motive of making all of them Christians? The Europeans were already Christians, weren’t they? Why did he bring the book to Europe? Did he get any monetary benefit or benefit to his religion? Nothing. All for the love of Tamil and Tamil literature. He was motivated purely by யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்

  21. இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!

    ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.

    கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!

    “இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய் கொடுங்கள்” என்று இயேசு தமது போதகர்களுக்குச் சொல்கிறார். ஆனால், இன்றைய ‘கிறிஸ்துமத வியாபாரிகளோ’ எதையும் கொடுத்துப் பழகியவர்களாக இல்லை; வாங்கிக் குவிப்பவர்களாகவே வாழ்கிறார்கள்!

    “ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!

    இந்த நிலைக்கு, இந்தியாவில் மூலதாரமாக – முன் உதாரணமாக வழிகாட்டிய அயோக்யன் திருட்டுத் தினகரன்தான்!

    ஏழை – எளிய மக்களுக்குத் தொண்டு செய்து, இயேசுவின் நாமத்தைக் கனம் செய்ய வேண்டிய ஊழியக்காரன், அந்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, காசுபறித்துக் குடும்பத்தையே உலகப் பணக்காரர் வரிசைக்குக் கொண்டு சென்றான் என்பது, ‘ஊழியம்’ என்ற பெயரால் கொள்ளையடிக்க வருவதற்கு முன் வழிகாட்டியாகிவிட்டது.

    எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!

    அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.

    தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!

    திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.

    உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.

    இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

    தூத்துக்குடி என். பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன்-சி.லாசரஸ்!

    நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!

    “என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரக்கடவன்” – என்றார், இயேசு.

    ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்து விட்டு போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார்.

    நோய் இல்லாத மனிதன் எவனும் பூமியில் இல்லை! திருட்டுத் தினகரனும் நோயால்தான் செத்தான்! மோகன்-சி.லாசரஸ்சுக்கும் நோய்களுண்டு.

    இந்த நோயாளி லாசரஸ்தான் மற்றவர்களுக்கு சுகம் அளிப்பதாகச் சொல்லி, காசடித்துக் கொண்டிருக்கிறார்! பாமரக் கிறிஸ்துவர்களும் கோடி கோடியாகக் காணிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள்! மோகன் உல்லாச வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்!

    இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

    நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

    அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

    நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

    சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

    எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!

    எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!

    “ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!

    இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!

    பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!

    வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!

    பார்ப்பனர்களின் இந்து மதத்தால் சூத்திர நாலாஞ்சாதியாக்கப்பட்டு, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட தனித்தகரக் குவளையில் தந்து, செத்த பிணத்தைக் கூட தனிச்சுடுகாட்டில் போடு என்று வருண தருமம் அனுபவித்து மீண்ட மக்கள், ஏழை பங்களான் இயேசுவைத் தேடி வந்தால் இடையிலே இப்படிப் பணப் பேய்களாக தினகரன் – லாசரஸ் போன்ற திருடர்கள் நிற்கிறார்கள்!

    தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.

    நாட்டை ஆட்சி செய்பவர்களும் லாசரஸ் போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.

    இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக!

    - நன்றி. நாத்திகம், 18.07.2008 இதழ்.

  22. Dear editor u r editing christians comments then wat about that sathyamithram comment many time i posted if people do mistake criticise them only no one can find sin on jesus he took over all the sin on him so jesus couldn feel the presence of almighty pls dont criticise about jesus unless somebody criticise abt ur god also dont publish like that dirty words may god forgive this sin

  23. Dear Editor,
    Kindly donot allow any negative comments about any articles in TamilHindu. Particularly donot accept the article written by other religious people. This is not for avoiding their comments, but we should not divert our attention to read and fellow the message given by these good articles.
    Humble request for other religion people:
    Kindly donot write any thing about your religion here or donot criticism anything here. Since every statement may have inner and deep spiritual meanings, it is difficult to understand.
    If you want write any thing against such article, there are somany website/forms.

    Somu

  24. Dear Somu,
    This is nothing but discrimination based on religion. No honest author will run away from critics. If you expect only praises for the articles, who will point out the wrong things? If anyone is afraid of critics, they shoudl not even publish any articles. Appreciations will come automatically if the article is good. Also, critics too will be there. You dont have to do a moderator job in tamilhindu.com

    Thanks,
    Ashok

  25. //You dont have to do a moderator job in tamilhindu.com//
    He is not doing any moderator job. But definitely an anti-humanistic cult preacher like you do not have to do cheap Christian propaganda in Tamil Hindu. That is what you, your sidekicks Daniel Chellapa and Gladys are doing. And TH has shown extreme patience at your obscene Abrahamic absurdities.

  26. In another article on Sivasithaandham, Dr Muthukumaarasaamy bemoans that the sithandham is confined to Tamil nadu only.

    Jadayu wrote that that confinement is due to language hurdle. He has pointed out that Srivaishnavaim did not suffer the same fate thanks to eminent bilingual acharyas - in Sanskrit and Tamil - who took the philosophy of Srivaishnavaism to entire India by way of translating it from Tamil to Sanskrit.

    Saivasithaandam lacked such eminent achaaryas-cum-bilingual scholars. தமிழ் மொழியால் சைவசித்தாந்தம் முடக்கப்பட்டது. சமஸ்கிருதத்தால், வைஷணவம் வெளி சென்றது.

    இந்த சூழலில், ஒருவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்து வெளிநாட்டிற்கு கொண்டுசென்றது நம்மால் பாராட்டபடவேண்டும்.

    போப் தம் மதத்தைப் பரப்பத்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இதில் யாதெரும் சங்கையுமில்லை. ஆனால், அவர் தன் 62ம் அகவையில் இந்தியாவை விட்டு, அஃதாவது தமிழகத்தை விட்டு தன் நாட்டிற்கு உடல் நலக்குறைவால் நிரந்தரமாக போய்விட்டார். போனபின், தன்னை மதப்பிரச்சாரத்திலிருந்து விடுவிடுவித்துகொண்டு, முழுனேரக் கல்விப்பணிக்கு மாற்றிக்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Prof of Tamil and Telugu பொறுப்பை ஏற்றுகொண்டார்.

    பின்னர் அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றபின், தன் 81ம் அகவையில் தன் நெடுநால் கனவான திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தார்.

    நான் கண்டவரை, அவர் மாணிக்கவாசகரின் பெயரைகெடுக்க வேண்டும் என்று செய்தாரில்லை.

    அவர் அனைத்து தமிழர்களால் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டியவர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

  27. Ashok kumar Ganesan:
    //You dont have to do a moderator job in tamilhindu.com//

    அரவிந்தன் நீலகண்டன் :
    // He is not doing any moderator job. But definitely an anti-humanistic cult preacher like you do not have to do cheap Christian propaganda in Tamil Hindu. That is what you, your sidekicks Daniel Chellapa and Gladys are doing. And TH has shown extreme patience at your obscene Abrahamic absurdities. //

    நண்பரே, திரு.அஷோக் அவர்களது கருத்து சற்று மேற்கண்ட கிறித்தவர்க்கு எதிரான பதிவுக்கு ஆதரவாக பதிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன்;
    அவரது பெருந்தன்மையினை மதிக்காவிட்டாலும் மிதிக்காதிருங்கள், ப்ளீஸ்..!

    அத்துடன் சம்பந்தமில்லாமல் என்னையும் வீண்வம்புக்கு இழுக்கிறீர்கள்; என்னுடைய எந்த கேள்விக்கும் எந்த உண்மையான பக்தரும் தகுந்த‌ பதிலைத் தரவில்லை; இங்கே பகிர்ந்தலுமில்லை; நட்புணர்வுமில்லை;
    நான் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்யவுமில்லை;

    அதிர்ச்சிகரமான ஒரு உண்மை இங்கே யாருக்கும் தெரியாது, திரு.திருச்சிக்காரன், தேவப்பிரியா போன்றோர் தான் அதிகமாக கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கிறித்தவத்தை விமர்சிப்பதாக எண்ணி எண்ணற்ற பதிவுகளைப் போட்டீர்கள்;

    ஆனால் அதன் “எதிர் விளைவு” உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..!

  28. கள்ளபிரான் அவர்களே

    வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு தமிழை வளர்க்கிறோம் என்று வருபவர்கள் எல்லாம் தமிழை வளர்க வருவதில்லை. அதன் மூலம் கிருஸ்துவத்தை எப்படியெல்லாம் பரப்பலாம் என்றே வருகிறார்கள். வேலை முடிந்தவுடன் தன் நாட்டிற்கு திரும்பியவுடன் நல்லவர்க போல் காட்டிக்கொள்ள இந்த மாதிரி மொழி பெயர்ப்புகள் அவர்களுக்கு தேவைபடுகின்றன அவ்வளவே

    நாரதர்

  29. Dear Mr. KallapirAn,

    You commented:

    “இந்த சூழலில், ஒருவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்து வெளிநாட்டிற்கு கொண்டுசென்றது நம்மால் பாராட்டபடவேண்டும்.

    ……………நான் கண்டவரை, அவர் மாணிக்கவாசகரின் பெயரைகெடுக்க வேண்டும் என்று செய்தாரில்லை.

    ………………அவர் அனைத்து தமிழர்களால் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டியவர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.”

    My comment:

    My response here cannot explain the facts more clearly than this article. But, yet I am aghast at your comment so is responding to you.

    Please read the beautiful article again. The author clearly states how Pope introduced the great work to the evangelists. He had done it not to propagate Tiruvasakam but to teach people on how to deride it.

    It is translated not for public consumption of the west, but for the ecumenical hate speech.

  30. தேவபிரியா,, ஆர்.சி. மதத்தின் வழிபாடுகளில் மாம்சமும் இரத்தமும் சாப்பிடும் ஒருபழக்கம் உள்ளது. இதோ நித்திய உடன்படிக்கைக்கான எனது உடல், எனது இரத்தம் என்று கூறப்பட்டு இயேசுவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் சாப்பிடுகிறீர்கள். எப்படிதோன்றுகிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு நீங்கள் செய்யப்போகும் பாவங்களுக்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சிலுவையில் மரித்த (ராஜதுரோகத்துக்காக என்பது வேறுவிசயம்) தேவ ஆட்டுக்குட்டியான தேவமைந்தருடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் சாப்பிட. அவர்தானே சொல்லியிருக்கிறார் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் வியர்வைசிந்தி உழைத்த உங்கள் அப்பா சாகும்போது எனது அன்பு மக்களே எனது மரணத்துக்குப்பிறகு என் மாம்சத்தையும் இரத்தத்தையும் நீங்கள் பங்குவைத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு இறந்துபோனால் அவரது கடைசி ஆசையாச்சே என்று நீங்கள் சாப்பிடுவீர்களா…? அதுபோன்ற பாவம் தானே இதுவும். என்று விடுவீர்கள் இந்த பாவச்செயலை. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாவது தெரியுமா…?

  31. ஐயா இயேசு யாரை நோக்கி தேவனே தேவனே என கூப்பிட்டார் , ஏன் இறந்தார் என்பதற்கு காரணங்களை கூறினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, அது உங்களுக்கு புரியவும் புரியாது,
    உமாசங்கர் நீங்கள் இந்துவாகவே இருங்கள் ரொம்ப சந்தோஷம்.

  32. திருவாசகத்தைக் காட்டிலும் தன்னை மேன்மையாக மாணிக்கவாசகர் எண்ணிருந்தால் தன்னைப் பற்றியோ தன் அரசரைப் பற்றியோ எழுதி தனது புலமையினை வெளிப்படுத்தியிருப்பார்;

    ஆனால் மனுக்குலத்தின் துர்பாக்கிய நிலையில் தன்னையே வைத்து இறைவனை நினைந்துருகிய மாணிக்கவாசகருக்காக நாம் பரிந்து பேசுவதைவிட்டு நமது பக்தி முயற்சியினை மாணிக்கவாசகரின் வழியில் நின்று செய்யலாமே;

    அதனை ஜி.யு.போப் தடுத்துவிடமுடியாது,சரிதானே..?

  33. சில்சம்..,
    கிருஷ்ணன் அர்சுனனுடனிருந்தபோது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தனது எல்லாமெல்லாமான உறவாக நண்பனாக ஆசானாக தான் தோன்றியிருக்கும். கண்ணனும் அதத்தான் நம் எல்லூரிடமும் எதிர்பார்க்கிறான். சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ : அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:! கடமைகளை எல்லாம் விட்டொழித்து என்னையே சரண் அடைவாயாக நான் உன் பாவங்களை நீக்கி மோக்ஷம் அருள்வேன் கலங்காதே. என்று தான் கீதையில் கூறுகிறார்.
    புலனடக்கம் உள்ளவராக, காம குரோத லோப மோக மத மாச்சரிய இடும்பை அகந்தை போன்ற அழுக்குகளை நீங்கியவராக, எல்லா உயிரையும் தன்னுயிர் போல சமமாக கணக்கூடியவராக, இன்ப துன்பங்களை சமமாக காண்பவராக, இருமைகளை வெற்றி தோல்வி, இன்ப துன்பம், சுக துக்கம் புகழ்ச்சி இகழ்ச்சி, போன்ற இருமைகளை களைந்து நடுநிலையில் நிர்ப்பவராக யார் உள்ளாரோ அவரை மகான் எனலாம்.
    மகானோ யாராகவோ இருந்தாலும் அவர் குருவாக வேண்டும் என்றால் அதற்கான தகுதி நமக்கு இருக்க வேண்டும். அப்படி தகுதி உள்ள சீடனைத்தேடி நல்ல குருவானவர் வருவார், தேடி ஏங்கி இருப்பார் (விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணரைப்போல ) நல்ல குருவைக்காணாமல் இருந்தால் குருவும் சீடனும் அழிந்து சமுதாயத்தையும் அழித்து விடுவார்கள்.
    மாதா பிதா குரு தெய்வம் என்பது இந்துக்களின் கலாசாரம். அம்மா தான் அப்பாவை ஒரு மகனுக்கு அடையாளம் காட்ட முடியும், அப்பா தான் மகனுக்கு நல்ல குருவினைக்கட்ட முடியும், நல்ல ஆசிரியன் மாணாக்கனுக்கு தெய்வத்தை உணர்த்துவார். அம்மாவைப்பற்றியும், அப்பாவைப்பற்றியும், கடவுளைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும் ஒரு நல்ல குரு மட்டும் தான் சொல்ல முடியும். அப்படிப்பட்ட குருவை பிரத்யக்ஷ தெய்வமாக வணங்க நமது முன்னோர்கள் வழி காட்டுகிறார்கள்.
    குரூர் பிரம்மா குரூர் விஷ்ணு குரூர் தேவோ மகேச்வர:
    குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:
    குருதான் பிரம்மா விஷ்ணு மகேச்வரனாக இருக்கிறார்,அவரே சாக்ஷாத் பரப்ரஹ்மமாகவும் உள்ளார் எனவே குருவை வணங்குவோம்.
    ஆக குருவே பரப்ரஹ்மம் தான்
    நமக்கு தொடர்ந்து பேசலாம் சகோதரா ……!

  34. தமிழ் இந்து குழுவுக்கு வணக்கம்,

    நாங்கள் இந்துக்கள் என்றாலும், பல வருடங்களாக எங்கள் வீட்டில் இயேசு கிறிஸ்து படம் வைத்திருந்தோம். அவரும் ஒரு கடவுள் என்று வணங்கியும் வந்தோம்.

    இந்த தளத்தை படித்துவிட்டுத்தான் விஷயம் புரிந்து அந்த படத்தை எடுத்தேன்.

    அதன் பின்னர் எங்கள் குடும்பத்தில் நல்ல செய்திகள் வருகின்றன. பிரிந்திருந்த எங்கள் குடும்பத்து பெண் மீண்டும் கணவனோடு இணைந்ஹிருக்கிறாள்

    தமிழ் இந்துவுக்கு நன்றி. நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  35. AGNIPUTHIRAN
    8 October 2009 at 6:36 pm
    If Jesus can be taken as per His word, No man who has accepted Jesus must have died.

    Where as Judas got the Bread from the Hands of Jesus and Satan entered Judas.

    You don’t these verses quoted in any of the Churches -Why?

  36. டேனியல் அவர்களே,

    உங்களையும் சந்தோஷப் படுத்தியதில் மகிழ்ச்சி.

    என் சவாலை மட்டும் ஏன் கவனிக்கவில்லை.
    பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் மரித்த ஏசு பாவியா?
    பிறந்ததும் இறக்கும் குழந்தை செய்த பாவம் என்ன?

    நான் இந்துவாய் இருப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை,
    மீண்டும் மீண்டும் இந்துவாய்ப் பிறப்பேன், அதுவும் பாரதத் திருநாட்டில் என்றும் சொன்னேன். இத‌ன் அடிநாத‌ம், புன‌ர‌பி ஜனனம் புன‌ரபி ம‌ர‌ண‌ம் என்ப‌தே. நான் புண்ணிய‌ம் செய்து அத‌ன் ப‌ல‌னாக‌ மீண்டும் பாரதத் திருநாட்டில் இந்துவாய்ப் பிறப்பேன் என்றேன்.

    புண்ணிய‌த்தின் ப‌ல‌ன் இந்துவாய்ப் பிற‌த்த‌ல் என்றே ந‌ம்புகிறேன்.

    கிறித்துவமோ பாவ‌ம் செய்தாய், ம‌ரிப்பாய் என்கிற‌து.

  37. திரு கள்ளப்பிரான்
    My article on Pope and his love for Thiruvasagam is neither intended to denigrate him nor to undermine his services to Thiruvasagam and Tamil. I am quite conscious of the famous epitaph on his grave yard. I , as a saivite, am full of gratitude for his lofty expressions about Tamil saivam and Thiruvasagam. I am quite aware of the fact that but for his translation into English, the verses of Thiruvasagam could not have found a place in the popular book ‘ Prayer” an anthology of divine songs compiled originally in Germany, by a German scholar called Friedrich Heiler. Indeed Pope had, as ThiruvasakamaNi K.M. BalasubrahmaNiam claimed, opened the treasure trove of Thiruvasakam to Western savants.
    All my comments were on the aramic religion to which Pope owed allegiance , which coloured his vision and rendered him diffident about the evoution of such a saint as Manikkavsagar from a pagan culture.Though Manikkavasagar possessed qualities akin to and admixture of St Francis of Assisim st.Paul, Could the circumstances of the East bring about such an Apostle as Manikkavasagar? Pope wonders and doubts.

    Of course Pope was Great and Noble when compared with other evangelists like Rober caldwell., but his visions at times became tainted.
    Pope had studied Thiruvathavurar puraNam, which deals with the life history of Manikkavasagar. This book gives authentic story. There were other sources also. But Pope invented and threaded his own version of Manikkavasagar life history, much suited to his christian vision, contravening the traditional views, that I objected.

    Temple worship is a part of daily routine for a saivite. Pope picturises graphically and vividly the ecstatic worship of saiva devotees in front of Vikrahas in the temple. and goes to the length of correctly saying the images in the temple were a personifcation and incarnation of the God beyond time and space. And also gives his opinion that most of the Thiruvasagam verses were sung in front of the idols in the temple .While he describing the temple worship and puja rituals, one cannot say he was an iconoclast.
    But I do take exception to his following statement on saiva devotion:
    “There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in the caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish toether , and even to strenthen on another. The more philosophical and refined the Caivite becomes ,the more enthusiastic does he often appear to be in the incongruous rites of the popular worship”
    Saivite worship rituals are neither incongruous nor grossest idolatory.

    நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது. This saying does not mean saints were sinners. Most of the puranic saints like parthvajar, viyasar, Vanmiki were born of castes like Brahmins, fishermen, hunters etc. If you attempt to look at their origin , you may risk prejudice, and thereby sin against them. If you see the birth place of Kaveri, you may wonder , how this tiny spring could be AkaNda kaveri inTamilNadu.
    You have every right to be proud of your Vaishnava Achrys( Your name implies your religion) who were உபய பாஷா சம்பன்னர்கள் masters of Sanskrit and Tamil, and owing to ther mastery in both the languages they were able to propagate Srivaishnavism in the North . I do agree the Tamil chauvinism confined Saivam to Tamilnadu alone.
    But I request you, not to equate the service of Vaishnava Acharyas to that of Pope, if they were of equal merit Christians would sing thiruvasagam in their daily prayers as their own. [edited]

  38. ஜி.யு. போப் அவர்களின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதோடு திருவாசகத்தை மொழியாக்கம் செய்தபோது அவரது அணுகுமுறை என்ன, நோக்கங்கள் என்ன என்பதையும் ஆய்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள் முத்துக்குமாரசுவாமி ஐயா. மிக்க நன்றி.

    ஹைதராபாத் நகரில் டேங்க் பண்ட் சாலையில் தியாகராஜ சுவாமிகள், பத்ராசல ராமதாஸ், அன்னமாசாரியர் ஆகிய பக்த கவிகளுக்கு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். பெங்களூரில் பசவேஸ்வரர், கனகதாசர் ஆகிய சைவ, வைணவ குருமார்களின் சிலைகள் உள்ளன..

    தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா? அவரது புனித நினைவைப் போற்றும் வகையில் அரசு ஏதாவது செய்திருக்கிறதா? மாறாக, இன்று தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் உட்பட திராவிடக் கட்சி அரசியல்வாதிகளில் பலர் மாணிக்கவாசகரையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் ஏளனம் செய்தும், கிண்டலடித்தும், அவமத்திதுமே மேடைகளில் பேசி வந்திருக்கிறார்கள்! இன்னும் பேசி வருகிறார்கள்.

    ”மொழிபெயர்த்த” வெள்ளைய மிஷநரிக்கு ராஜ மரியாதை! (அதுவும் தவறான அணுகுமுறையுடனும், பிழைகளுடனும் உள்நோக்கத்துடன்மும் மொழிபெயர்த்தவர்) ஆனால் மூலநூலை எழுதிய சமயக் குரவருக்கு, பேரருளாருக்கு அவமதிப்பு! தமிழர்களின் பகுத்தறிவு உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது.

    ”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள். போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்! சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் - மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.

    ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.

  39. ஜி.யு.போப் கல்லறை புகைப்படம்:

    http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

    அந்தக் கல்லறைக்கு அருகில் இருக்கும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தத்துவ ஞானியின் கல்லறைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் அதே புகைப்படக் காரர் படமெடுத்துப் போட்டிருக்கிறார் (பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்).

    தமிழக கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு இஷ்டதெய்வமல்லவா போப்? அதனால், அவரது கல்லறையை நன்கு போற்றிப் பாதுகாக்கிறார்கள். அவர்களது நன்றியுணர்வும், தங்களுக்காக உழைத்தவர்களது நினைவைப் போற்றும் மாண்பும் பாரட்டுக்குரியவை.

  40. ஜடாயு அவ‌ர்க‌ளே,

    த‌ங்க‌ள‌து ப‌ல‌ ப‌டைப்புக‌ளைப் ப‌டித்து ம‌கிழ்ந்திருக்கிறேன்.

    த‌ங்க‌ள‌து கேள்வி:

    தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா?

    என‌து பார்வை:

    த‌ய‌வு செய்து மாணிக்க‌வாச‌க‌ப் பெருமானையும், போப்பையும் ஒப்பிட‌ற்க‌.
    மாணிக்கவாசகப் பெருமான், நாய‌ன்மார்க‌ளில் சேர்க்க‌ப் ப‌டாவிட்டாலும், ச‌ம‌ய‌க் குற‌வ‌ர் நால்வ‌ரில் ஒருவ‌ராக‌, ந‌ம‌து சிவால‌ய‌ங்க‌ள் அனைத்திலும் இறைத்தொண்ட‌ராக‌ ந‌ம‌க்கு அருள்ப‌லித்துக்கொண்டிருப்ப‌வ‌ர். அறுப‌த்துமூவ‌ர் உற்ச‌வ‌ம் எங்கு எடுப்பினும், அங்கெல்லாம் எழுந்த‌ருளுப‌வ‌ர்.
    சிவச் சன்னதியில் ஓதுவார் மூர்த்திகள் திருப்ப‌திக‌ங்க‌ள் பாடும்போதெல்லாம் அவ‌ர்க‌ள‌து நாவில் நர்த்த‌ன‌ம் செய்ப‌வ‌ர்.

    போப்புட‌ன் நோக்குங்கால், ந‌ம‌து “அர‌சு” (அர‌சிய‌லார்) செய்யாத‌து தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத‌ ஐய‌ருக்குச் சிற‌ப்பு செய்யாத‌து, ம‌க‌த்தான‌ துரோக‌மாகும். தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத‌ ஐய‌ர் அவ‌ர்க‌ள் புற‌நானூற்றைக் குப்பைக‌ளாய்க் கிட‌ந்த‌ குவிய‌ல்க‌ளிலிருந்து எடுத்து, இன்றைய‌ எழுத்து வ‌டிவில் ப‌திப்பித்திருக்காவிட்டால், த‌ற்போதைய (தம்மைத் தாமே நியமித்துக்கொண்ட) “த‌மிழின‌த்தின் த‌லைவ‌ர்” க‌ருணாநிதி அவர்க‌ள், புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சியை மெச்சி நீண்ட கட்டுரை எழுதிப் புகழ் அடைந்திருக்க முடியாது. கலைஞர் என்ற அடைமொழியையும் அடைந்திருக்க முடியாது. ஆனால் அவ‌ரோ, த‌மிழ்த்தாத்தாவின் நூற்றாண்டு பிறந்த அன்று தாம் முதல்வராக இருந்தும், தமிழ்த் தாத்தாவின் திருவுருவ‌ப்ப‌ட‌த்துக்குக் கூட‌ மாலையிட‌வில்லை. அண்ணா நூற்றாண்டு கொண்டாடும் அர‌சு, கடந்த ஓராண்டாக “த‌மிழ்த்தாத்தா” என்ற‌ சொல்லைக்கூட‌ உச்ச‌ரிக்க‌வில்லை. ஏனென்றால், வீர‌ம‌ணி, அன்ப‌ழ‌க‌ன், க‌ருணாநிதி உள்ளிட்டோரின் நோபல் பரிசுக் கண்டுபிடிப்பு தமிழ்த்தாத்தா ஒரு தமிழரல்லர் !!! போப்போ ப‌ச்சைத் த‌மிழ‌ர் !!!

  41. உமாசங்கர் ஐயா, உ.வேசாவுக்கு உரிய மரியாதை செய்யாத அவலத்தையும் கூறியதற்கு நன்றி. கோடிக் கணக்கான தமிழர்கள் நெஞ்சில் தமிழ்த் தாத்தா வாழ்கிறார்.

    கேரளத்தின் கம்யூனிச அரசே ஆதி சங்கரர் பெயரில் காலடியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவியது, அந்த வளாகத்தில் அவரது சிலை கூட உள்ளது என்று நினைக்கிறேன். அப்போதைய கேரள முதல்வர் ஈ,.எம்.எஸ் அந்தத் திறப்பு விழாவில் ஆதிசங்கரரைப் போற்றினார்; கேரளத்தின் தத்துவ ஞானத்தின் அடையாளமாக சங்கரரைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.

    நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நாம் ஆலயத்தில் வணங்கிப் போற்றுகிறோம் தான்! அது மரபு, பாரம்பரியம். ஆனால், அது போதும், பொது இடங்களில் அவர்களது திருவுருவங்கள் அவசியமில்லை என்ற பார்வை சரியானதல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். ஏனென்றில், இவர்கள் சமயாசாரியர்கள் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின், பண்பாட்டின் தலைசிறந்த அடையாளங்களும் ஆவார்கள்.

    நமது உண்மையான கலாசாரம் வீதிகளிலும் உலா வரவேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் ஆயிரம் ஆண்டு பழைய கோயில்கள் படைத்த ஊர்களில், முச்சந்திகளில் கலையுணர்வும் இல்லாமல், காட்சியழகும் இல்லாமல் கைவிரலை நீட்டிக் கொண்டும், நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கும் அரசியல் இனவெறி கரும்பூதங்கள் தான் இந்த மண்ணின் அடையாளம் என்ற எண்ணம் இங்கு வாழும் இளைய தலைமுறைக்கும், இங்கு பயணிகளாக வரும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்! அதனை நாம் தடுக்க வேண்டும்.

    எனவே இந்தக் காரணம் கருதியாவது, தெய்வீக உன்னதங்கள் தெருவுக்கு வரட்டும்.

  42. //திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//

    நெசம்மாவா? முடியல சாமி. ஆண்டவா! (நீ இருந்தால்) இந்த டேனியலை மன்னிக்கவும்.

  43. //glady
    8 October 2009 at 5:49 pm

    அதிர்ச்சிகரமான ஒரு உண்மை இங்கே யாருக்கும் தெரியாது, திரு.திருச்சிக்காரன், தேவப்பிரியா போன்றோர் தான் அதிகமாக கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கிறித்தவத்தை விமர்சிப்பதாக எண்ணி எண்ணற்ற பதிவுகளைப் போட்டீர்கள்;

    ஆனால் அதன் “எதிர் விளைவு” உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..!//

    அதிர்ச்சி எல்லாம் சுவிசேச‌ சூழ்ச் சியாளருக்கு ம‌ட்டும் தான்!

    எதிர் விளைவு எல்லாம் சுவிசேச‌ சூழ்ச்சிக்கு எதிரான‌ விளைவுதான்!

    நீங்க‌ள் எப்பொதெல்ல‌ம் காட்டு மிரான்டிக் க‌ருத்துக‌ளை, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை இங்கே சைக்கிள் கேப்பில் நுழைப்பீர்க‌ளோ, அப்போதெல்லாம், நானோ வேறு யாரோ வ‌ந்து உங்க‌ளுக்கு வ‌குப்புக‌ள் எடுப்போம்.

    நான் இயேசுவின் கொள்கைகளை எடுத்து விளக்கியது, அருமை சகோதரர்கள் திரு.கிளாடி, திரு.அசோக், திரு.டேனியேல் உள்ளிட்ட எல்லாக் கிருத்துவர்களும் வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை விட்டு விட்டு,
    நாகரிக மனிதராக, அன்பு, சமரசத்தின் அடிப்படையில் செயல்படும் பண்புகளைப் பெறுவதற்காகத்தான்.

    என்னுடைய விளக்கங்களை படிக்கும் எல்லோருக்கும் அது புரியும்.

    இந்துக்களுக்கு தேவையான எல்லாக் கருத்துக்களும் இந்து மதத்தில் உள்ளன. மனித வாழ்க்கையை வாழும் போதே கடவுளைக் காணும் அளவுக்கு சிறந்த ஆத்மிகம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.

    வேறு எந்த மதத்திலும் மனிதன் கடவுளைக் கண்டு, கடவுளோடு கலந்து, முழு விடுதலையும், எல்லையற்ற ஆனந்தமும், சுத‌ந்திர‌மும் பெரும் வாய்ப்பு இல்லை.

    பிற‌ ம‌த‌ங்க‌ளில் எவ‌ரும் இந்த‌ ம‌ண்ணூல‌கில் அதிக‌ ப‌ட்ச‌ம் அடைய‌க் கூடிய‌ ப‌த‌வி, க‌ல்ல‌ரைக்குள் தூக்க‌ம் மாத்திர‌மே என்ப‌து உங்க‌ளுக்கே தெரியும்.

    ஏதோ இயேசுவின் பெயரைக் கூறுகிறீர்களே, அவர் கூறிய கர்ப்பனைகளை நினைவு படுத்தி, உங்களைக் காட்டு மிராண்டி கொள்கையில் இருந்து, வெறுப்புக் கொள்கையில் இருந்து விடுவித்து, பிறகு இந்து மதத்தின் கருத்துக்களால் உங்களை க‌ட‌வுளுக்கு அருகில் அழைத்து செல்ல‌லாம் என்று ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌ன் தான், முத‌ல் ப‌டியாக‌ இயேசு கிரிஸ்துவின் கொள்கைக‌ளை உங்க‌ளுக்கு விளக்கிகினேன்.

    ஆனால் முத்துக்க‌ளையும் மிதித்து எங்க‌ளையும் பீறிப் போட்ட‌ செய‌ல் தான் ந‌டை பெற்ற‌து.

    நீங்க‌ள் எப்பொதெல்ல‌ம் காட்டு மிரான்டிக் க‌ருத்துக‌ளை, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை இங்கே சைக்கிள் கேப்பில் நுழைப்பீர்க‌ளோ, அப்போதெல்லாம், நானோ வெறு யாரோ வ‌ந்து உங்க‌ளுக்கு வ‌குப்புக‌ள் எடுப்போம்.

    எங்களுக்கு எல்லொருமே சினெகித‌ர், ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ தான்.

    நாங்கள் (திருச்சிக்காரன், தேவப்பிரியா போன்றோர்) அகத்தியரைப் போல ஜீரணம் செய்து ஏப்பம் விடக் கூடியவர்கள், என்பது, இங்கெ எழுதும் இந்து மதத்தை சேர்ந்த சான்றோர்களுக்குத் தெரியும்.

  44. Thank you Thiru Jadayu for the photo of the cemetry of G.UPope. I have hitherto believed that the epitaph on his cemetry was as it was widely propagated. Iam shocked to know how we are duped so long with lies .

  45. ஆகா ரொம்ப கவலைப்பட்டது போதும் திருச்சிக்காரரே, நீர் இறைவன் அருகில் எங்களை அழித்து செல்கிரீராக்கும், எல்லாம் நேரம். நாங்கள் இறைவன் அருகில் தான் இருக்கிறோம், இறைவன் இயேசு எங்களுடன் தான் இருக்கிறார். கிறிஸ்தவ வாழ்வின் முடிவு கல்லறை தூக்கம் அல்ல அது நித்திய வீட்டிற்கான நுழை வாயில், நீங்கள் நம்புவதை போல இந்த பாழ் உலகில் மறுபடி ஏதோ ஒரு வகையில் பிறந்து அல்லல் உறுவது எங்கள் விருப்பம் அல்ல. நீங்கள் ரொம்ப வகுப்புகள் எடுத்து மெனக்கெட வேண்டாம்.

  46. //daniel
    9 October 2009 at 10:31 am
    ஆகா ரொம்ப கவலைப்பட்டது போதும் திருச்சிக்காரரே, நீர் இறைவன் அருகில் எங்களை அழித்து செல்கிரீராக்கும், எல்லாம் நேரம். நாங்கள் இறைவன் அருகில் தான் இருக்கிறோம், இறைவன் இயேசு எங்களுடன் தான் இருக்கிறார். கிறிஸ்தவ வாழ்வின் முடிவு கல்லறை தூக்கம் அல்ல அது நித்திய வீட்டிற்கான நுழை வாயில், நீங்கள் நம்புவதை போல இந்த பாழ் உலகில் மறுபடி ஏதோ ஒரு வகையில் பிறந்து அல்லல் உறுவது எங்கள் விருப்பம் அல்ல. நீங்கள் ரொம்ப வகுப்புகள் எடுத்து மெனக்கெட வேண்டாம்.//
    யோவான்: 6: 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

    If these are Jesus words -then Jesus is a Bluffer.

    Those who ate Manna died and who ate Jesus also died.

    The Why do you call Jesus as Divine?

  47. G.U.Pope is not a saint. Manickavaasagar, Alwaars and Nayanmaars are.

    Commemorating G.U.Pope is a political act, as you said. But commemorating the saints is not a political act for politicians to enact. It is a religious act for devotees to perform piously.

    Whether G.U.Pope mertis such commemoration with an erection of a statue is not the question. Because, Jadayu and the DMK politicians wont accept each other.

    The question is whether commemoration of saints in public places will be accepted by Hindus or not.

    Jadaya may conduct a poll among hindus and tell us the result. i am sure, most will disagree with Jadayu.

    For e.g. may you try and erect a statue to Nammaazavaar or Thirumangai alvaars in Marina Beach, and say you have done it in order to perpetuate the culture of Tamils or Hindus in all its glory, You will have to face the music from Tamil Vaishnavaas and the virulent protest will come from them against your act or proposal.

    Namaazvaar is worshipped as a deity. And the thiruvurumas of alvaars should be immediately placed next at the feet of Thirumaal as they first partake of the blessing of the Thirumaal before it comes to you and me. Please watch what they do in Vaishnva temples.

    In certain temples, they have separate shrine for alvaars.. The book Naalaayiram is part and parcel of the daily worship of Vaishnvaas. The Vaishnvaa achaarayss like Ramanujar and Desikan are also treated in the same manner explained above by having their thiruvurams inside temples.

    Erecting statues in public placesfor the alvaars or achaaryas, in the name of culture, is a highly objectionable act. Please don’t even dream about that.

    Their work may be part of Tamil literature. Some like you may treat them as cultural icons. But they have become part and parcel of Vaishnava worship; and their worship SHOULD BE STRICTLY CONFINED ONLY TO TEMPLES, or, WITHIN THE PUJA ROOM OF VAISHNAVAS OR TAMIL HINDUS.

    The anti-hindu acts of Kazagams are a historical process. History is always in flux. It changes according to the blow of wind. It should not be feared at. I therefore dont criticise politicians as they act in temporary self-interest. Karunannithai has but a few years, perhaps a few months, before he breathes his last. Along with him other old timers. The generation is going. The wind may take a different turn thereafter. On the contrary, you can focus your preventive act against the evangelists or Islamisation, also from within, as frequently pointed out by Subramania Bharati and also, Arvindan Neelakantan in their writings.

    Similarly, the caste angle. Kazagams don’t want even to mention Uu.Ve.Saa.

    Here, the confusion is between religion and literature.

    Uu.Ve.Sa was not concerned with religious literature. His religion was his private matter. He did not serve the religion as an achaaraya or any public figure from public platform, like Bharati or others have done. The poor man was purely a literary being. He lived for Tamil literature only. He should not be seen as a man connected with hindu religion.

    If Uu.Ve.Sa is not commemorated adequately or properly by the incumbent politicians, that comes under the domain of caste politics. It has nothing to do with religion. How does it affect you as a Tamil Hindu? It affects you only as a Tamil brahmins or a Tamil literature lover.

    If you mix the caste politics, literature with Hindu religion, you run the risk of brahminising the religion; and then, the feeling that THERE IS ONLY ONE ENTITY CALLED TAMILHINDU will be diluted. Please read Aravindan Neelakantan and Subramania Bhrati, you will find that we must ensure that nothing should be done against the process of equality in the religion.

  48. Ditto for Savite saints.

    However, comments from Dr Muthukumaarasaamy will be more valid here.

  49. There is an article on G.U.Pope in Today Dinamalar by J.M.Saali, former sub-editor of Ananda Vikatan

  50. இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் கிறிஸ்தவத்தை புரிந்து கொண்டுள்ள லட்சணம். மரணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தான் இயேசு மரணத்தை விட்டு உயிர்த்து எழுந்து காண்பித்தார் (இதை மாத்திரம் நீர் நம்பவா போகிறீர்). இதுவே உமக்கு குழப்பமாக இருக்கையில் நித்திய ஜீவனை பற்றி தெரியவா போகிறது.
    முள்ளில் உதைக்கிறது உமக்கு கடினமாம். நீர் எழுதிக்குவிப்பதால் கிறிஸ்தவம் அழிந்துவிட போவதில்லை.உம்மோடு வழக்காடுவதில் பிரயோஜனமில்லை ஏனெனில் நீர் கிறிஸ்தவத்தை உமது அறிவால் மாத்திரம் உணர்ந்து கொள்ள முயன்று அதை குறைகூறிக்கொண்டிருக்கிறீர். இயேசு உம்மையும் சந்திப்பார்.
    நாங்கள் உணர்ந்தும் விசுவாசித்தும் இருக்கும் இயேசு எப்போதும் எங்களோடு உள்ளார். எத்தனையோ பேர் 2000 ஆண்டுகளாக உணர்ந்த ஆத்தும ரட்சிப்பு என்ற இந்த விஷேஷம் உமக்கு மாத்திரம் வெறுப்பாக உள்ளது. இயேசுவை குற்றப்படுத்த அப்போது உள்ளவர்களாலேயே முடியவில்லை, 2000 ஆண்டுகளுக்கு பிறகு வந்த நீர் குறை கூறுகிறீர்.

  51. இந்து மதத்தை பற்றிய சந்தேகங்கள் தர்மசங்கடமான கேள்விகள் பல கேட்பதற்கு இருக்கின்றன ஆனால் அதை கேட்டால் நிச்சயம் எனது பதிவுகள் நீக்கப்படும். இத்தளம் கிறிஸ்தவத்தை இகழும் ஒரு களமாகிவிட்டதை எண்ணி வருந்துகிறேன். நண்பர்களே உங்களுடைய நம்பிக்கைகளையும் குறித்து ஐயங்களை எழுப்ப முடியும். இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவத்தின் மேல் புழுதி வாரி தூற்றும் தேவிபிரியா போன்றோர்களின் பதிவுகளை தல நிர்வாகம் ஆதரிப்பது வருந்தத்தக்கதே.

  52. கள்ளபிரான், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றி எந்தக் குழப்பமும் எனக்கு இல்லை. அவர்கள் சமயாசாரியர்கள் என்பதை நான் மறுக்கவில்லை. இந்த வரிகளைப் பாருங்கள் -

    // ஏனென்றில், இவர்கள் *சமயாசாரியர்கள் மட்டுமல்ல*, தமிழ்க் கலாசாரத்தின், பண்பாட்டின் தலைசிறந்த அடையாளங்களும் ஆவார்கள். //

    சம்பிரதாயமாக வைஷ்ணவத்தைப் பின்பற்றாதவர்களுக்கும் நம்மாழ்வாரின் ஆன்மிக, தத்துவ, கலாசார பரிமாணம் பற்றிய கல்வி/புரிதல் தரப்பட வேண்டும். திருவுருவங்கள், புத்தகங்கள், விழாக்கள் எல்லாமே இதற்கு உதவும்.

    திருப்பதியில் நெடுஞ்சாலையில் ஒரு ரவுண்டானாவில் ஸ்ரீராமானுஜருக்கு சிலை உள்ளது - Ramanuja circle என்றே அந்த சந்திப்புக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். அதற்கு எங்கே எதிர்ப்பு வந்தது? அந்த வழியாகப் போகும் ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீராமானுஜரின் அடியார்கள் பெருமிதத்துடன் அந்தச் சிலையைப் பார்த்துவிட்டுச் செல்வதை நான் கவனித்திருக்கிறேன். வெகுஜன அபிப்பிராயத்திற்கு இது ஒரு சான்று! இதே போன்று தான் பெங்களூரில் பசவேஸ்வரா circleம் உள்ளது. மதுரையில் ஒரு மாணிக்கவாசகர் சர்க்கிள் உருவாக்கினால், இந்துக்கள் எதிர்ப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட கருத்து எதுவாகவேனும் இருக்கட்டும் - ஆனால் தக்க ஆதாரங்கள் இல்லாமல் அதுதான் பெரும்பான்மை இந்துக் கருத்து என்று வாதிட வேண்டாம்..

    // If Uu.Ve.Sa is not commemorated adequately or properly by the incumbent politicians, that comes under the domain of caste politics. It has nothing to do with religion. How does it affect you as a Tamil Hindu? It affects you only as a Tamil brahmins or a Tamil literature lover. //

    தமிழ் இலக்கியம், அதிலும் குறிப்பாக மரபிலக்கியம் தமிழ்-இந்துக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத அங்கம் அல்லவா? கலாசார சீர்கேடு, கலாசாரத் திரிப்பு, கலாசார அழிப்பு, கலாசார ஒதுக்கல் அனைத்தும் தமிழ் ஹிந்துவின் பிரசினைகள் தானே?

    ”இந்து” என்பதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் உள்ள விஷயமாகப் பார்ப்பது தவறு. அப்படிச் செய்தால் தமிழ்ஹிந்து தளம் குமுதம் பக்தி அல்லது சக்தி விகடன் மாதிரி ஆகி விடவேண்டும். அது தமிழ் இந்து தளத்திற்கும் நல்லதல்ல, தமிழ் இந்து சமுதாயத்திற்கும் நல்லதல்ல.

  53. I agree to your main point that the name and fame of the Hindu saints, achaarayas be also spread. But it should be in such a way that the common public is not be misled to associate these saints and achaaryas with ordinary mortals like G.U.Poper or any Politicians, for .e.g erecting their statues in Marina Beach or in the roundana at Anna Nagar for e.g as we have erected to Azagu Muthukone in Egmore circle, or innumerable political leaders, will give the impression to the onlooker that the saints and achaaryaas are ordinary mortals.

    Ramanujar statue is in place, as you have pointed out, which is considered to be an important pilgrimage centre of Vaishnavism. Same Ramanujar statue should not be in Anna Nagar statue for people to look at like a monument or memorial or work of art.

    The achaaryaas and alvaars are different in the sense the statues of Hanumaar or Ramar are found placed at public places, esp. the Vishwaroopa Hanumaar in the road junction in Karolbagh, (Jhandewalan crossing) New Delhi, , which is not a religious place. So, people wont mind gods and goddesess like Hanumar or Ramar in public places. ( In North India, I have seen Ramar and Hanumar statues even in public parks.) At the same time, lets ensure that the alvaars and achaaryaas be placed only in a place which is associated with religion, as in Tirupathi. In short, in a fitting manner. On seeing such statues, one gets the feeling of piety (bakthi). On seeing statues of politicians or scholars, who are mere mortals, although eminent in their chosen field, their fans gets the feeling of admiration or reverence, which is not bhakti.

    What DMK is doing against Uu.Ve.Sa is not killing of Tamil culture (கலாச்சார அழிப்பு). திராவிடக்கழகங்கள் செய்வது தங்கள் பார்ப்பன எதிர்ப்பைக்காட்டவே. எனவே, என்னைப்பொறுத்தவரை, உ.வே.சாவைப் புறக்கணிப்பது என்பது இந்துமதம் சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு குறிப்ப்ட்ட இனத்தாரின் பிரச்சனையாகும். DMK vs Tamil brahmins issue. It is not the issue for all Tamil Hindus.

    அப்படிப்பார்த்தால், தேவரின் சிலை மதுரையில் ஒரு இதர ஜாதியனரால் உடைக்கப்பட்டால், அதுவும் இந்துப்பிரச்சனை ஆகிவிடும். ராஜாஜியை கழகத்தவர் திட்டினாலோ, சு.சாமியை ஜாதியைச்சொல்லித் திட்டினாலோ, சோவைத்திட்டினாலோ, (இருவருமே அப்படித்தான் கழகத்தவராலோ, இலங்கைப்புலி ஆதரவாளர்களோ திட்டப்பட்டு வருகிறார்கள்)

    எல்லாமே இந்துப்பிரச்சனையாகி விடுமல்லவா? எனவே ஜாதிப்பிரச்னை வேறு. இந்துமதப்பிரச்சனை வேறு.

    I would like to know the opinions of other writers on the above two points:

    1. Commemoration
    2. Neglect of Uu.Ve.Saa.

  54. அன்பு நண்பர் ந.உமாசங்கர் அவர்களுக்கு,
    கட்டுரைக்குப் பொருத்தமானவற்றை மட்டும் எழுத வேண்டும் என்ற ஒருவித சுயகட்டுப்பாடு காரணமாகவே பதிலளிக்கிறதில்லையே தவிர பதிலளிக்கமுடியாத கேள்வி ஏதுமில்லை;

    ஆனாலும் மௌனமும் கூட பல சமயங்களில் சிறந்த பதிலாக அமைவதுண்டு;ஏனெனில் நமது உள்மனம் அந்த கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடிக்கும் ஆற்றலையுடையதாகும்;

    ஆனால் இங்கே “தேவப்ரியா” மற்றும் “திருச்சிக்காரன்” போன்றோர் தங்கள் சுயபெருமைக்காக எதை எதையோ பதிப்(பிக்கிறார்கள்..!);

    வேதம் சொல்லுகிறது, “மூடன் தன் உள்ளத்திலுள்ளதையெல்லாம் வெளிப்படுத்துகிறான்” இயேசுவானவரும் சொன்னார், “சுயத்திலிருந்து பேசுகிறவன் சுயபெருமைக்காகவே பேசுகிறான் ” காரணம் தனக்குத் தெரியாதது ஏதுமில்லை எனக் காட்டும் அவசரமே..!

    // என் சவாலை மட்டும் ஏன் கவனிக்கவில்லை.
    பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் மரித்த ஏசு பாவியா?
    பிறந்ததும் இறக்கும் குழந்தை செய்த பாவம் என்ன? //

    நண்பரே, நீங்கள் சவால் விடுமளவுக்கு விஷயம் அத்தனை முக்கியமானதல்ல; அதனை அறிவதும் அத்தனை சிரமமானது அல்ல‌;
    அதற்கான பதிலை நீங்கள் அன்றாடம் வந்து போகும் இந்த இணைய தளத்திலேயே பெற்றுக்கொள்ளமுடியும்.

    நீங்கள் எப்படி குறிப்பிட்ட ஒரு காரியத்தில் அல்லது கொள்கையில் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக இருக்கிறீர்களோ அந்த நம்பிக்கையே மற்றவரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

    “தேவப்ரியா” தான் மேற்கோள் காட்டும் புத்தக ஆசிரியர்களை நம்புவதால் பைபிளையும் அது சம்பந்தமான அனைத்தையும் புறக்கணிக்கிறார்;

    “திருச்சிக்காரனோ” சாத்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார்;
    ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபலமான “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” தமிழ்நாட்டில் சென்னை,கோவை,திருச்சி போன்ற மாவட்டங்களில் இயங்குகிறது; அதன் கொள்கை ஈர்ப்பின் பாதிப்பே அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது; தன்னையறியாமல் அவரே இதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்;

    // புண்ணிய‌த்தின் ப‌ல‌ன் இந்துவாய்ப் பிற‌த்த‌ல் என்றே ந‌ம்புகிறேன்.
    கிறித்துவமோ பாவ‌ம் செய்தாய், ம‌ரிப்பாய் என்கிற‌து. //

    “மீண்டும் பிறத்தல்” எனும் கொள்கையினாலேயே பல்வேறு சடங்குகளைச் செய்துக் கொண்டிருக்கிறோம்;

    பாவ புண்ணியத்தைக் குறித்த அச்சம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இருந்து வந்தது; ஏனெனில் இந்து மதம் சார்ந்த பாபிலோனிய மற்றும் அதற்கும் முந்தைய எகிப்திய கலாச்சாரம் சார்ந்த தெய்வ நம்பிக்கைகள் மிகப் பழமையானவை; எனவே துஷ்ட தேவதைகளைக் குறித்தும் செத்த ஆவிகளைக் குறித்தும் இருந்த பல்வேறு மூடநம்பிக்கைகள் காரணமாக ப‌ல்வேறு “கர்மா தியரிகள்” ஏற்கனவே இங்கே இருந்து வந்துள்ளது;

    ஆனால் மாணிக்கவாசகர் போன்றோர் இதற்கு மாறாக இறைவனை தியானம் மூலம் அடையும் எளிய வழிகளை ஆராய்ந்தனர்; அந்த கருத்துகளே ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டு அறிஞர்களைக் கவர்ந்தது; அதனை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வது சாதாரண காரியமா என்ன‌..? திருவாசகம் மாத்திரமா, திருக்குறள் போன்ற பொக்கிஷங்களும் அயல்நாட்டினர் வந்த பிறகுதானே தமிழர்கள் கவனத்துக்கு வந்தது..?

    எனவே இதற்கு முன் யாராகப் பிறந்தீர்கள் என்றோ இனி யாராக பிறக்கப்போகிறீர்கள் என்றோ தெரியாத ஒரு நம்பிக்கையை நீங்களா வளர்த்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறீர்கள்;

    இந்து மதத்திலேயே இருவித நம்பிக்கைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா?

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    இதில் எது உண்மையான கொள்கை என்ற முடிவுக்கே இன்னும் யாரும் வந்தபாடில்லையே..!

    நண்பர் தேவப்ரியா அவர்களுக்கு, நீங்கள் மெத்தப் படித்த பெரிய அ(ரை?)றிவாளி என்பதாலேயே உங்களிடம் பேச பயமாக இருக்கிறது; “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற ரீதியில் உங்கள் கதை ஓடிக் கொண்டிருக்கிறது; உங்கள் சுயரூபம் வெளிப்படும் போது ஓரங்கட்டப்படுவீர்கள்;
    உங்களுக்கு ஒரு வார்த்தை, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை நீங்கள் படித்திருந்தாலும் கொக்கு மீன் பிடிப்பது போல படிக்கவில்லை;
    உங்களால் அந்த கொக்கைப் பிடிக்கவும் முடியாது;பைபிளில் மரணம் என்ற‌ சொல்லாட்சி வரும் சூழ்நிலை என்ன அதன் பொருள் என்ன என்பதை அறியாத சிறுமதியாளர்களுக்கு என்ன சொல்லி விளக்கமுடியும்?

    “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல,தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தை மட்டும் உங்கள் பைபிளில் இல்லையா?

    பவுலடிகள் ரோமருக்கு எழுதும் போது, “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் கிரியைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” என்கிறார்.இதன் சூட்சமத்தைத் தேவைப்பட்டால் தத்துவ மேதையான “பிளாட்டோ” கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..!

    இங்கே மற்றொருவர் குறிப்பிட்டது போல இயேசுவானவரின் மாம்சத்தையும் இரத்தத்தையும் யாரும் தின்று குடிக்கவில்லை; ஆனால் ஒவ்வொரு திருப்பலியின் போதும் “என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள்” என்றதையே கிறித்தவர்கள் செய்கிறார்கள்;

    இதுவும் காலப்போக்கில் மற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம் போலாகிவிட்டது,தனிகதை..!

    அன்பு நண்பர் ந.உமாசங்கர் அவர்களுக்கு,
    கட்டுரைக்குப் பொருத்தமானவற்றை மட்டும் எழுத வேண்டும் என்ற ஒருவித சுயக் கட்டுப்பாடு காரணமாகவே பதிலளிக்கிறதில்லையே தவிர பதிலளிக்கமுடியாத கேள்வி ஏதுமில்லை;

    ஆனாலும் மௌனமும் கூட பல சமயங்களில் சிறந்த பதிலாக அமைவதுண்டு; ஏனெனில் நமது உள்மனம் அந்த கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடிக்கும் ஆற்றலையுடையதாகும்;

    ஆனால் இங்கே “தேவப்ரியா” மற்றும் “திருச்சிக்காரன்” போன்றோர் தங்கள் சுயபெருமைக்காக எதை எதையோ பதிப்(பிக்கிறார்கள்..!) ;

    வேதம் சொல்லுகிறது, “மூடன் தன் உள்ளத்திலுள்ளதையெல்லாம் வெளிப்படுத்துகிறான்” இயேசுவானவரும் சொன்னார், “சுயத்திலிருந்து பேசுகிறவன் சுயபெருமைக்காகவே பேசுகிறான் ”
    காரணம் தனக்குத் தெரியாதது ஏதுமில்லை எனக் காட்டும் அவசரமே..!

    // என் சவாலை மட்டும் ஏன் கவனிக்கவில்லை.
    பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் மரித்த ஏசு பாவியா?
    பிறந்ததும் இறக்கும் குழந்தை செய்த பாவம் என்ன? //

    நண்பரே, நீங்கள் சவால் விடுமளவுக்கு விஷயம் அத்தனை முக்கியமானதல்ல; அதனை அறிவதும் அத்தனை சிரமமானது அல்ல‌; அதற்கான பதிலை நீங்கள் அன்றாடம் வந்து போகும் இந்த இணைய தளத்திலேயே பெற்றுக் கொள்ளமுடியும்.

    நீங்கள் எப்படி குறிப்பிட்ட ஒரு காரியத்தில் அல்லது கொள்கையில் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக இருக்கிறீர்களோ அந்த நம்பிக்கையே மற்றவரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

    “தேவப்ரியா” தான் மேற்கோள் காட்டும் புத்தக ஆசிரியர்களை நம்புவதால் பைபிளையும் அது சம்பந்தமான அனைத்தையும் புறக்கணிக்கிறார்;

    “திருச்சிக்காரனோ” சாத்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார்;
    ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபலமான “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” தமிழ்நாட்டில் சென்னை,கோவை,திருச்சி போன்ற மாவட்டங்களில் இயங்குகிறது; அதன் கொள்கை ஈர்ப்பின் பாதிப்பே அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது; தன்னையறியாமல் அவரே இதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்;

    // புண்ணிய‌த்தின் ப‌ல‌ன் இந்துவாய்ப் பிற‌த்த‌ல் என்றே ந‌ம்புகிறேன்.
    கிறித்துவமோ பாவ‌ம் செய்தாய், ம‌ரிப்பாய் என்கிற‌து. //

    “மீண்டும் பிறத்தல்” எனும் கொள்கையினாலேயே பல்வேறு சடங்குகளைச் செய்துக் கொண்டிருக்கிறோம்;

    பாவ புண்ணியத்தைக் குறித்த அச்சம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இருந்து வந்தது; ஏனெனில் இந்து மதம் சார்ந்த பாபிலோனிய மற்றும் அதற்கும் முந்தைய எகிப்திய கலாச்சாரம் சார்ந்த தெய்வ நம்பிக்கைகள் மிகப் பழமையானவை; எனவே துஷ்ட தேவதைகளைக் குறித்தும் செத்த ஆவிகளைக் குறித்தும் இருந்த பல்வேறு மூடநம்பிக்கைகள் காரணமாக ப‌ல்வேறு “கர்மா தியரிகள்” ஏற்கனவே இங்கே இருந்து வந்துள்ளது;

    ஆனால் மாணிக்கவாசகர் போன்றோர் இதற்கு மாறாக இறைவனை தியானம் மூலம் அடையும் எளிய வழிகளை ஆராய்ந்தனர்; அந்த கருத்துகளே ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டு அறிஞர்களைக் கவர்ந்தது;
    அதனை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வது சாதாரண காரியமா என்ன‌..?
    திருவாசகம் மாத்திரமா, திருக்குறள் போன்ற பொக்கிஷங்களும் அயல்நாட்டினர் வந்த பிறகுதானே தமிழர்கள் கவனத்துக்கு வந்தது..?

    எனவே இதற்கு முன் யாராகப் பிறந்தீர்கள் என்றோ இனி யாராக பிறக்கப்போகிறீர்கள் என்றோ தெரியாத ஒரு நம்பிக்கையை நீங்களா வளர்த்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறீர்கள்;

    இந்து மதத்திலேயே இருவித நம்பிக்கைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா?

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    இதில் எது உண்மையான கொள்கை என்ற முடிவுக்கே இன்னும் யாரும் வந்தபாடில்லையே..!

    நண்பர் தேவப்ரியா அவர்களுக்கு, நீங்கள் மெத்தப் படித்த பெரிய அ(ரை?)றிவாளி என்பதாலேயே உங்களிடம் பேச பயமாக இருக்கிறது; “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற ரீதியில் உங்கள் கதை ஓடிக் கொண்டிருக்கிறது; உங்கள் சுயரூபம் வெளிப்படும் போது ஓரங்கட்டப்படுவீர்கள்;

    உங்களுக்கு ஒரு வார்த்தை, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை நீங்கள் படித்திருந்தாலும் கொக்கு மீன் பிடிப்பது போல படிக்கவில்லை; உங்களால் அந்த கொக்கைப் பிடிக்கவும் முடியாது; பைபிளில் “மரணம்” என்ற‌ சொல்லாட்சி வரும் சூழ்நிலை என்ன அதன் பொருள் என்ன என்பதை அறியாத சிறுமதியாளர்களுக்கு என்ன சொல்லி விளக்கமுடியும்?

    “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தை மட்டும் உங்கள் பைபிளில் இல்லையா?

    பவுலடிகள் ரோமருக்கு எழுதும் போது, “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் கிரியைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” என்கிறார்; இதன் சூட்சமத்தைத் தேவைப்பட்டால் தத்துவ மேதையான “பிளாட்டோ”வைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..!

    இங்கே மற்றொருவர் குறிப்பிட்டது போல இயேசுவானவரின் மாம்சத்தையும் இரத்தத்தையும் யாரும் தின்று குடிக்கவில்லை; ஆனால் ஒவ்வொரு திருப்பலியின் போதும் “என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள்” என்றதையே கிறித்தவர்கள் செய்கிறார்கள்;

    இதுவும் காலப்போக்கில் மற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம் போலாகிவிட்டது,தனிகதை..!

  55. வணக்கம்,

    ///இந்து மதத்திலேயே இருவித நம்பிக்கைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா?

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    இதில் எது உண்மையான கொள்கை என்ற முடிவுக்கே இன்னும் யாரும் வந்தபாடில்லையே..! ///

    நண்பர் ஸ்ரீ கிலாடி அவர்களே சும்மா தெரியாத விஷயத்தை தெரிந்த மாதிரி திரிக்காதீர்கள், இந்து தர்மத்தார் யாவருமே மறு பிறப்புக் கொள்கை கொண்டவர்களே,

    இதில் இரண்டு நம்பிக்கை என்றுமே இல்லை, முதலில் முக்தி என்பதே பிறப்பறுத்தல் என்பதுதான், அப்படியிருக்க ஒரே பிறவியில் தெய்வத்தொடினைந்து என்பதுவே முரணானது,

    எத்துனை பிறப்பெடுத்து இன்று உயர் பிறப்பாம் மானுடம் என்னும் மகத்துவம் பெற்றோம் என்று பாடாத அடியாரில்லை,

    ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். இது ஒன்றும் ஆட்டோ வாசகமல்ல, அனுபவ வாசகம்.
    ஊழ்வினை கடன் தீர்க்க உழலும் நாமெல்லாம் நல்வழி நடந்தாகிலும் மேல்வழி செல்ல பிறப்பறுத்து ஆகவேண்டியுள்ளது. எனவே அடுத்த பிறப்பின் இன்பமும் துன்பமும் இப்பிறப்பின் பலாபலனே,

    மறுபிறப்பின் வாழ்முறையும் இன்று நம் கையில் தானுள்ளது.
    நான் பெற்ற துன்பம் நான் என்றோ எப்பிறப்பிலோ யாருக்கோ கொடுத்த துன்பமே அன்றி எந்தக்காலத்திலோ யாரோ செய்த பாவத்தை இறைவன் என்மேல் திணிக்கவில்லை,

    இன்று நான் செய்யும் பாவங்கள் நாளை எனக்குத்தான், அதையும் இறைவன் யார்மீதும் திணிக்க மாட்டான். யதார்த்தமாக ஒருவார்த்தை சொன்னால் என் மகனின் மீது நான் எவ்வளவோ பாசமுள்ளவன் ஆயினும் அவனுடைய பசிக்கு நான் உண்ண முடியாது. அவன் வலியை நான் உணர முடியாது. உண்ணும் இன்பமும் வலி உணரும் துன்பமும் அவனது ஊழ்வினையே.

  56. இந்து மதம் மட்டும் அல்ல, புத்த மதமும், ஜைன மதமும் பிறப்பு, இறப்பு மறு பிறப்பு, இறப்பு….. என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

  57. ஒரு உயிர் பிறப்பது ஒரு முறைதான் என்றால், கருணை உள்ள கடவுள்
    எதற்க்கு ஒரு குழந்தையை பிறக்கும் போதே கண் குருடாக கஷ்டப் படும்படி படைக்க வேண்டும்?எதற்க்கு ஒரு குழந்தையை ஏழை வீட்டிலும், ஒரு குழந்தையை செல்வந்தர் வீட்டிலும் பிறக்க வைக்க வேண்டும்.

    எங்களின் (அதாவது இந்து, புத்த, ஜைன மதங்களின்) பிறப்பு, இறப்பு , மீண்டும் மறு பிறப்பு, இறப்பு….சுழ‌ற்ச்சி தத்துவத்தின் படி, ஒரு குழந்தை குருடாக பிறக்கிரது என்றால் அதற்க்கு காரணம், அந்த உயிர் முந்தைய பிறவியிலே யாரொ ஒருவரின், அல்லது சிலரின் கண்களைக் குருடாக்கி இருக்கலாம்.எனவே (அவரால் குருடாக்கப் பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையிலே), இவர் குருடாகப் பிறக்க நேரிடுகிறது.

    ஆனால் ஆபிர‌காமிய‌ பிர‌ச்சார‌க‌ர்க‌ள் கூறுவ‌து போல‌ “கடவுள் ஒரு உயிரை ஒரே முறை படைக்கிறார், இறந்தவுடன் கல்லறை” என்றால், “மறு பிறப்பு இல்லை” என்றால் - இந்த உலகத்தில் மனிதர்கள் படும் அத்தனை கஷ்டங்களுக்கும் கடவுளே காரணம் என்பதாக அமைந்து விடும்.

    காரணமே இல்லாமல் ஒருவரை தண்டிப்பவன் கொடுங்கோலனான சாடிஸ்ட் மட்டும் தான்.

    நான் ஒரு சினிமா பார்த்தேன்.

    அதில் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவன், கும்பலில் உள்ள ஒரு அடியாளிடம் ஒரு நபரைக் கொலை செய்யும் வேலையை ஒப்படைப்பான்.
    அந்த அடியாள் குறி தவறி வேறு ஒரு நபரை சுட்டு விடுவான்.
    ரவுடிக் கும்பலின் தலைவன், ”ஏண்டா வேறு ஆளை சுட்ட?” என்பான்!
    அடியாள் “குறி தவறி விட்டது பாஸ்” என்பான்.
    பாஸ் “எங்க நீ ஓடு, என் குறி தவறுதானு பார்க்கலாம்” என்று கூறி துப்பாக்கியை எடுப்பான்.
    அடியாள் “வேண்டாம் பாஸ்” என்று அலறிய படிய ஓடுவான்.
    அந்த ரவுடிக் கும்பலின் பாஸ் அவனை சுட்டு விட்டு, தவறு செய்பவனை நான் மன்னிப்பது இல்லை என்பான்.

    ரவுடிக் கும்பலின் பாஸ் கூட, ஒருவனைத் தவறு செய்தான் என்ற காரணத்திற்கு தண்டித்தான்.

    ஆபிரகாமிய மதங்களிலோ, கடவுள் புத்தம் புதியதாக ஒரு உயிரைப் படைத்து, அதை எந்தக் காரணமும் இல்லாமல் குருடாகப் படைக்கிறார் என்று கூறுவதன் மூலம், கடவுள் தவறே செய்யாத ஒருவனை தண்டிப்பதாகக் கற்பனை கட்டி விட்டனர்- அதாவது இவர்களின் கட்டுக் கதையின் படி, ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனுக்கு இருக்கும் நியாயம் கூட கருணையுள்ள இறைவனுக்கு இல்லை என்ற வகையிலே உருவாக்க‌ப் ப‌ட்ட‌ காட்டு மிராண்டிகளின் கற்பனையை, உண்மை தத்துவமும் போல நம்மிடம் திணிக்கின்றனர்.

    எனவே பிறப்பு, இறப்பு, மறு பிறப்பு…. சுழ‌ற்ச்சி தத்துவமே இறைவனின் பெருமைக்கும் , கருணைக்கும் உரிய தத்துவமாகும்.

    ஒரே பிறப்பு, இறப்பு என்றால் இறைவன் சர்வ சக்தி உள்ளவனாக ஆனால் கருணை இல்லாத, கொடூர ச‌ர்வாதிகாரியாக‌வே க‌ருத‌ப் ப‌ட‌ வேண்டிய‌தாகி விடும்.

    இதில் யுக்தியோடு (logic), அனுப‌வ‌ங்க‌ளினால் கிடைத்த‌ ஆதார‌மும் இருக்கிற‌து.

    இந்து மதத்தில் பல அறிங்கர்கள், முற்பிறப்பில் நடந்த சம்பவங்களை நினைவு கூறும் ஆற்றல் பெற்று இருந்தனர். விவேகானந்தர் சிகாகோவிலே பேசும் போது, “நீங்கள் மனக் குவிப்பையும், தியானத்தையும் தொடர்ந்து பழகினால் உங்களால் பழைய பிறவிகளில் நடை பெற்ற சம்பவங்களை நினைவு கூற முடியும்” என்றார். “என்னாலே என் கடந்த பிறவிகளில் நடை பெற்ற சம்பவங்களை நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது” என்றார்.

    புத்தர், காட்டிலே ப‌ல‌‌ வ‌ருட‌ம் த‌வ‌ம் இருந்து பிறப்பு, இறப்பு, மறு பிறப்பு…. சுழ‌ற்ச்சி தத்துவ‌த்தை உறுதி செய்துள்ளார். உயிர் ப‌ல‌ பிற‌விக‌ளை எடுத்து பிணி, மூப்பு, சாக்காடு உட்ப‌ட‌ ப‌ல‌ துய‌ர‌ங்க‌ளில் சிக்கி துய‌ர் அடைவ‌தாக‌வும், ஆசையை அழிப்ப‌தே துன்ப‌ வாழ‌க்கை ச‌க்க‌ர‌த்தில் இருந்து விடு ப‌டும் வ‌ழி என்ப‌துவுமே புத்த‌ரின் சித்தாந்த‌ம்.

    பட்டினத்தார்,

    “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

    அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

    பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

    பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

    முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

    இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

    என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

    என்று பாடியுள்ளார்!

    என‌வே ஆபிர‌காமிய‌ பிர‌ச்சார‌க‌ர்க‌ள், த‌மில் ஹிந்து அளித்த‌ க‌ருத்து சுத‌ந்திர‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி

    ம‌க்க‌ளை ப‌ய‌முறுத்தக் காட்டுமிராண்டிக் கால‌த்தில் ‌ உப‌யொகித்த,
    க‌ட‌வுளை கொடுமையான‌வ‌ராக‌ சித்த‌ரிக்கும் - ஒரே பிற‌ப்பு, இற‌ப்பு, க‌ல்ல‌றை த‌த்துவ‌த்தை - மீண்டும், மீண்டும் பிர‌ச்சார‌ம் செய்தாலும்,

    நாம் அதை நிராக‌ரித்து, அவ‌ர்க‌ளுக்கு உண்மையை, நியாய‌த்தை விள‌க்க‌ வேண்டும்.

  58. சகோதரரே,

    daniel நீங்கள் எழுதுவதை உணர்ந்து தான் எழுதுகிறீர்களா?

    //திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//

    சர்ச் செய்துள்ள கேவலமானவற்றை ஏன் இங்கே வ்ந்து அருவருப்பாக்கும் வண்ணம் வாந்தி எடுக்கீறீர்கள்.

    திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா- நான் சில குறள்களையும் அதற்கு G.U.Pope உரைகளையும் தருகிறேன்.

    திருவள்ளுவர் கிறிஸ்துவத்தின் அடிப்படைகளை பல குறள்களில் எதிர்க்கிர்றார், ஒன்றில் கூட வைதீகத்தை எதிர்க்கவில்லை, முழுமையாக ஆதரிக்கிறா.

    படியுங்கள். போப் ஆங்கில மொழிபெயர்ப்பை.

    18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
    If the heaven dry up, neither yearly festivals,
    nor daily worship will be offered in this world, to the celestials.
    19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
    If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of ‘penitence’.
    If rain fall not, penance and alms-
    deeds will not dwell within this spacious world.
    20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
    ]When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
    If it be said that the duties of life cannot be discharged by any person without water,
    so without rain there cannot be the flowing of water.
    543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    Learning and virtue of the sages spring,
    From all-controlling sceptre of the king.
    The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
    559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain.
    If the king acts contrary to justice, rain will become
    unseasonable, and the heavens will withhold their showers.
    560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
    Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie.
    If the guardian (of the country) neglects to guard it,
    the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

    மழை இல்லை என்றால் உலகமே இல்லை என்றவர், அதைவிடவும் நாட்டுக்குக் கேடு அந்தணர்கள் வேதம் ஓதுதலை விடுவது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

  59. chillsam
    நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்பியது வேறு, நீங்கள் கேட்கும் கேள்வி வேறு; வரலாற்றில் இருந்திருக்க முடியாத ஒரு நபரைக் குறித்து உங்களுக்கு என்ன அக்கறை..?

    இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்;
    அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..!
    பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?

    தேவப்ரியா அவர்களுக்கு, ‘கவுண்டர் க்வெஸ்டியன்’ பண்ணும் எல்லோரும் இயேசு நாதராகி விடமுடியாது, நண்பரே.//

    நண்பரே,

    பைபிளிற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை.

    கிடைத்துள்ள ஆதாரங்கள் ந்ல்லாம் நடுநிலை பைபிளியல் அறிஞகளால் பைபிளிற்கு எதிராக் உள்ளது என்பது தான். அதைப் பாமரரிடம் மறைத்து சர்ச் எத்தனை காலம் தான் ஏமாற்றும்? நீங்கள் உண்மை கூறுவோரை எத்கனி நாள் பொய்யாக நிந்திப்பீர்.

    இஸ்ரேல் அகழ்வாய்வுகள்
    தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்பது பொய், எபிரேயர் இஸ்ரேலின் ஆதி கானானியரே என்கிறட்து.

    எகிப்திலிருந்து யாத்திரை முழு பொய் என்றும், அந்த காலகட்டத்தில் கானான் எகிப்திற்கு அடிமைப் பட்டு இருந்தது.

    ஜெருசலெம் 7ம் நூற்றாண்டு வரை சிறு கிராமமாகவே இருந்தது. தாவீது, சாலமொன் கதைகள் வெறும் கட்டுகதைகள்.

    ஏசு கன்னிக்கு பிறந்தார், உயிர்த்தெழுந்தார் என்பவை சற்றும் ஆதாரமில்லத புனையலகள்.
    ஏசு- பவுல் தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தனர் -சுவிசேஷப்படி. இவை அனைத்தும் இன்றைய நிலையில் நடுநிலை பைபிளியல் அறிஞர் ஏற்பவை

  60. டேனியல் அவர்களே,

    தாங்கள் எனது கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலிருக்கவில்லை, வேறு விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவது தங்களிடம் என் கேள்விக்குப் பதில் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கியது. இப்போது, “இந்து மதத்தை பற்றிய சந்தேகங்கள் தர்மசங்கடமான கேள்விகள் பல கேட்பதற்கு இருக்கின்றன ” என்று சொல்வதிலிருந்து, தாங்கள் எமது கேள்வி தர்மசங்கடமானது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. நான் தங்களுக்கு எந்த தர்ம சங்கடத்தையும், ஏன் சாதா சங்கடத்தையும் கூட அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால், எமது அத்வைதம் என்னில் மட்டுமல்ல, தங்களுக்குள்ளும் இருக்கும் பரம்பொருளான பரமனை, ப்ரம்மனை உணரச் சொல்லிப் போதிக்கிறது, வழிநடத்துகிறது. யாம் யாரையும் எசு முதல் நேற்று மதம் மாறியவர் உட்பட, பாவி என்றழைக்க முற்படுவதில்லை. எம்மைப் பாவி என்றும், என்னிடத்திலே வாருங்கள் என்றும் அழைப்பதையும் எம்மால் ஏற்க அல்லது சகிக்க இயலவில்லை.

    தங்களுக்குள் இருக்கும் பரப்ப்ரம்மனைப் பார்க்க யாம் முயலுவதால், தங்களது வருத்தம் எம்மையும் வருத்துகிறது. ஆனால், உலகெங்கிலும் இருக்கும் எம் மதத்தோரை, ஏழ்மை, இயலாமை, நோய், அறியாமை இன்னபிற காரணங்களில் வாடுவோரை வெறும் இகச் சுகங்களைக் காட்டி, கிறித்துவர் என்ற கணக்கில் சேர்த்து, கிறித்துவக் கல்லறைகளின் எண்ணிக்கையை ஏற்றும் முயற்சியை, இறை ஊழியம் என்று சொல்வதாலும், நற்செய்தி என்று சொல்வதாலும், எம் மதத்தைப் பழிக்கும் இழிக்கும் வேலையை கிறித்துவ மதமே ஒரு திட்டமிட்ட செயலாகச் செய்வதாலும், போப் போன்ற மதத் தலைவர்களே அதனை முன் நின்று செய்வதாலும் யாம் இத்தகு கேள்விகளை எழுப்பக் கடமைப் படுகிறோம். தங்கள் பதில் கேள்விக்குறியதாக இருக்கவேண்டுமே அல்லாது அரசிய்ல்வாதியைப் போல் அங்கே இப்படி இருக்கிறதே, இங்கே இப்படி இருக்கிறதே என்றால் அது வாதம் ஆகாது. இருந்தும் கூட‌, தாங்க‌ள் இக்கேள்விக‌ள் த‌ங்க‌ளைத் த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ப் ப‌டுத்துவ‌தாகச் சொல்வதால் நான் இக்கேள்வியை மேலும் தங்களிடம் வலியுறுத்தவில்லை.

  61. அன்புள்ள glady அவர்களுக்கு,

    தாங்கள் சொல்வது:

    ///
    எனவே துஷ்ட தேவதைகளைக் குறித்தும் செத்த ஆவிகளைக் குறித்தும் இருந்த பல்வேறு மூடநம்பிக்கைகள் காரணமாக ப‌ல்வேறு “கர்மா தியரிகள்” ஏற்கனவே இங்கே இருந்து வந்துள்ளது;

    ஆனால் மாணிக்கவாசகர் போன்றோர் இதற்கு மாறாக இறைவனை தியானம் மூலம் அடையும் எளிய வழிகளை ஆராய்ந்தனர்; அந்த கருத்துகளே ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டு அறிஞர்களைக் கவர்ந்தது; அதனை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வது சாதாரண காரியமா என்ன‌..? திருவாசகம் மாத்திரமா, திருக்குறள் போன்ற பொக்கிஷங்களும் அயல்நாட்டினர் வந்த பிறகுதானே தமிழர்கள் கவனத்துக்கு வந்தது..?
    ////

    க‌ர்மா திய‌ரிக‌ள் மூட‌ ந‌ம்பிக்கை கார‌ண‌மாக‌, என்று தாங்க‌ள் கூறுவ‌து, தாங்க‌ள் க‌ர்ம‌வினை ப‌ற்றி ச‌ரியாக அறிய‌வில்லை என்ற‌ க‌ருத்தை நிலை நிறுத்துகிற‌து. ம‌னித‌ இய‌ல்பு த‌ன‌க்குப் புரியாத‌தை ஒதுக்குவ‌தும் அல்ல‌து ஒடுக்குவ‌துமே. க‌ர்ம‌வினை ப‌ற்றி வ‌ள்ளுவ‌ரின் க‌ருத்துக்க‌ளைப் ப‌டித்துப் பாருங்க‌ள்.

    இந்து ம‌த‌ம் நீங்க‌ள் கூறுவ‌து போல் “இரு நம்பிக்கை” கொண்ட‌த‌ல்ல. ஓர் ஆராய்ச்சி போல பலவிதமான கருத்துக்களை சர்வ சுதந்திரமாக எல்லா ஞானியரும் கூற அதிலிருந்து அவரவர் சிற்றறிவுக்கு எது எட்டுகிறதோ, அதை நூல் போல் பிடித்து மேலேற, பிறவிப் பெருங்கடலிலிருந்து ஈடேற வழி செய்கிறது. கர்ம வினைகள் பற்றி பூர்வ மீமாம்சமும், பகவத் கீதை உள்ளிட்டவையும் போதிப்பதைப் படித்தீர்ப்பீர்களானால், “மூடநம்பிக்கை” என்ற கடுமையான சொல்லைப் பயன்படுத்தியிருக்கமாட்டீர்கள். க‌டும் சொற்க‌ள் அறியாமையாலும், இய‌லாமையாலும் வ‌ருகின்ற‌ன‌. சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எதிராளியில் க‌டும் சொற்க‌ளாலும் வ‌ருகின்ற‌ன‌.
    நான் இதுகாறும் க‌டும் சொல்லேதும் கூற‌வில்லை.
    ப‌க்தி மார்க்க‌ம், க‌ர்ம‌ மார்க்க‌ம், ஞான‌ மார்க்க‌ம் என்று வெவ்வேறு வித‌ வ‌ழிக‌ளை இந்து ம‌த‌ம் உள்ளாட‌க்கிய‌து. It is an all-inclusive path. Depending on one’s abilitiies one can follow what appeals to one.

    இவ‌ற்றில் ஒன்றில் ஒன்று ச‌ளைத்த‌ல்ல‌. ஞான‌மார்க்க‌த்தில் செல்பவ‌‌ரும், பக்தி மார்க்கத்தில் செல்பவரும், கர்ம மார்க்கத்தில் செல்பவரும், அதே பேற்றையே அடைகின்றனர். இம்மதம் நான் மட்டுமே ஜீவஒளி என்று எப்போதும் சொல்வதில்லை.

    க‌ட்டுரைக்குப் பொருத்த‌மான‌வ‌ற்றை எழுதும் சுய‌க் க‌ட்டுப்பாடு கார‌ண‌மாக‌ என் கேள்விக்குப் ப‌திலிருக்க‌வில்லை என்ப‌து ஏற்க‌விய‌ல‌வில்லை. ஏனெனில், டேனிய‌ல் அவ்ர்க‌ளின் ஆர‌ம்ப‌மே க‌ட்டுரையின் தொட‌ர்பில்லாத “திராவிட‌ர் அல்ல‌ அவ‌ர்” என்ற‌ சொற்கள். நான் இன்னும் இத‌ற்குள் போக‌வில்லை. யார் திராவிட‌ர் என்ற‌ சான்றித‌ழ் கொடுக்கும் வ‌ல்ல‌மை கொண்டார் எவ‌ர்? மாணிக்கவாச‌க‌ர் திராவிட‌ர் இல்லை எனில், இங்கே எவ‌ர் திராவிட‌ர்? டேனிய‌லும், நீங்க‌ளும் நானும் உள்ப‌ட? என‌வே, என் முதல் கேள்விக்குப் பதிலிருத்தல், டேனியல் அவர்கள் வாக்கில் த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ம் என்ப‌து தெளிவு.

  62. Look how glady brings south North divide.. They will never change.. Every Alwars Pasuram talks about birth cycle and how the grace of god is being requested to break this cycle. Anyhow let us not waste our time in writing elaborate answers to Galdy and co..

    S baskar

  63. கள்ளபிரான் அவர்களே,

    தமிழ்த்தாத்தாவுக்குத் தமிழக அரசு சிறப்புச் செய்யாதது தமிழுக்கு மட்டுமல்ல தமிழ் இந்துவுக்கும் துரோகம் என்பதே என் கருத்து. ஜி.யூ.போப் தமிழர், திராவிடர், இந்தியர் அல்லர் என்றாலும் அவரது தமிழ்த் தொண்டைப் போற்றுகிறோம் என்ற நிலைபாட்டை எடுக்கும்போது, தமிழுக்கு எவரையும் விட மகத்தான தொண்டு செய்த தமிழ்த்தாத்தாவின் நினைவைப் போற்றாதிருத்தல் தமிழுக்குச் செய்யப் படும் துரோகம், அவமரியாதை. தமிழுடன் பின்னிப் பிணைந்த தமிழ் இந்துவுக்குச் செய்யப் படும் அவமரியாதை, துரோகம்.

    தமிழ் அந்தணர்களும் தமிழர்களே, தமிழ் இந்துக்களே. அந்தணர் என்பதாலேயே தமிழ் இந்துக்கள் இத்தகு அவமரியாதைகளைக் கண்டுகொள்ளக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.

  64. வணக்கம்,

    ஸ்ரீ உமா சங்கர் அவர்களே,
    /பாப்பான் காலை நக்குவதை விட பிரிட்டிஷ் காலை நக்கலாம்// என்று சொன்ன பெரியாரின் வழிவந்தவர்களிடம் உ வே சா அய்யரை (பாப்பான்) பெருமைப் படுத்த சொல்வதாவது. என்ன விளையாடுகிறீர்களா?

  65. // “திருச்சிக்காரனோ” சாத்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார்;
    ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபலமான “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” தமிழ்நாட்டில் சென்னை,கோவை,திருச்சி போன்ற மாவட்டங்களில் இயங்குகிறது; அதன் கொள்கை ஈர்ப்பின் பாதிப்பே அவரது கருத்துக்களில் வெளிப்படுகிறது; தன்னையறியாமல் அவரே இதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்;//

    இதற்க்கு நாம் பதில் எழுதுவது ஏன் என்றால் இங்கெ “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” என்று குறிப்பிடப் பட்டது, தெளிவாக குறிப்பிடாமல் வெறுமனே “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” என்று குறிப்பிட்டு எழுதினால் - இதைப் படிக்கும் நண்பர்கள், திரு. கிளாடியார் “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” என்று குறிப்பிடுவது, எது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

    திரு. கிளாடியார் அவர்களே,

    “திருச்சிக்காரனோ” சாத்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார்;

    இயேசு கிறிஸ்துவையே சாத்தான் என்று இகழும் அளவுக்கு நீங்கள் காழ்ப்புணர்ச்சி உடையவர் ஆகிவிட்டீர்களா?

    நான் இந்த தளத்திலே இயேசு கிறிஸ்துவை, நான் மரியாதை செய்பவன் என்றும், இயேசு கிறிஸ்துவை வணங்கி வழிபடுபவன் என்றும் பலமுறை எழுதிய தோடு, பலமுறை இயேசு கிருஸ்துவுக்கு வக்காலத்தும் வாங்கி விட்டேன்.

    அதைப் பயன் படுத்தி என்னைக் கட்டம் கட்ட சில கைத்தடிகள், என்னை கிரிப்டோ கிருத்துவர் என்றும், டுபாக்கூர் என்றும் பழித்து மகிழ்ந்தனர்.

    இப்போது நீங்களோ என்னைக் கட்டம் கட்ட, இயேசு கிருஸ்துவையே சாத்தான் எனப் பழிக்கும் அளவுக்கு சென்று விட்டீர்களா?

    //ஏற்கனவே வெளிநாடுகளில் பிரபலமான “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” தமிழ்நாட்டில் சென்னை,கோவை,திருச்சி போன்ற மாவட்டங்களில் இயங்குகிறது;//

    வெளி நாடுகளில் பிரபலமான பல ஆலயங்கள் தமிழ்நாட்டில் சென்னை,கோவை,திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ளன என்றால் , இன்னும் இன்னும் நீங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறி வைத்து பழிப்பதையே காட்டுகிறது.

    அல்லது உண்மையிலே நீங்கள் “சாத்தானை வழிபடும் ஆலயங்கள்” என்று குறிப்பிடுவது கத்தோலிக்கர்கள் ஆலயங்களாக இருக்கக் கூடும். மேரி மாதாவை நீங்கள் கடவுளாக கருதுவது இல்லை என நினைக்கிறேன், ஆனால் சாதரண ஒரு மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட நீங்கள் கொடுக்காமல் மேரி மாதாவை சாத்தான் என்று குறிப்பிடுவது சரி அல்ல. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீயே என்று கூறிய பிறகுதான், உன்னுடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டவரே என்றார்.

    எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    நான் முக்கியமாக வழிபடுவது, முருகர், துர்க்கை, இராமர், சிவ பெருமான் உள்ளிட்ட பல இந்துக் கடவுள்களைத் தான்.

    நான் இயேசு கிறிஸ்துவை, மேரி மாதாவை வணங்குவது எப்போதாவது ஒரு முறை தான்.

    நான் கடைத்தேற, விடுதலை அடைய நம்பி இருப்பது இந்துக் கடவுள்களை மட்டுமே.

    ஒரு இந்து சகிப்புத் தன்மையும், சினேக உணர்வும் உடையவனாக இருப்பான் என்ற அளவிலேயே நான் இயேசு கிறிஸ்துவை, மேரி மாதாவை மரியாதை செய்து வருகிறேன்.

    நீங்கள் வழி படுவது பிதாவையா, சுதனையா, பரிசுத்த ஆவியையா, கர்த்தரையா, ஜெஹோவாவையா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் வக்காலத்து வாங்குகிறேன் என்ற காரணத்துக்காக நீங்கள் இயேசு கிறிஸ்துவையோ, மேரி மாதாவையோ பழிப்பது சரியா?

    வெறுப்புக் கருத்துக்களை விட்டு விடுங்கள்!

    நான் மேலே கூறியது சரி அல்ல என்றால், கிளாடியார் விளக்கம் அளிப்பார்!

  66. அன்புள்ள glady அவர்களே,

    தங்கள் கூற்று:

    ///
    திருவாசகம் மாத்திரமா, திருக்குறள் போன்ற பொக்கிஷங்களும் அயல்நாட்டினர் வந்த பிறகுதானே தமிழர்கள் கவனத்துக்கு வந்தது..?
    ///

    அடடா, ஏற்கெனவே பலர் சொல்லிவந்திருக்கிறார்கள், தாமஸ்தான் தமிழர்களுக்குச் சிந்திக்கவே கற்றுக் கொடுத்ததாக தேவசஹாயம் உள்ளிட்டோர் “பிரசங்கம்” செய்வதாக. நீங்கள் இங்கேயே ஆரம்பித்துவிட்டீர்கள்.

    அதெப்படி ஐயா, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்கள், பல நூற்றாண்டுகளாக, திருவாசகம், திருக்குறள் முத்லானவற்றை அறியாதவர்களாக நீங்கள் “கண்டுபிடித்திருக்கிறீர்கள்?” வியக்கத் தக்க வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர் தமது இலக்கியத்தையே அறியாத்வர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்கே அடுக்குமா?

    பொய்யையே சொல்லிவழக்கப் படுத்துதல் கூடாது என்று இதற்காகத்தான் சொல்லித் தருகிறார்கள். வரிசையாகச் சொல்லி வரும் போது இப்படித்தான் யாருக்கும் அடுக்காத அபாண்டத்தைச் சொல்லிச் சிக்க வேண்டி வரும்.

    வாஸ்கோடகாமா வருவதற்கு முன்னர் கேரளாவுக்கே வராதவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கே இருப்பதாகச் சொல்லும் விந்தை போன்றதே இந்தப் பொய்யும்.

  67. //santhanam
    7 October 2009 at 4:05 pm
    இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!//

    What is happening at CSI Church by its bishop. A christian pastor gives details of Swindling and domination by relatives of BISHOPS

    http://www.devapriyaji.wordpress.com

  68. CSI சபைகளில் பிஷப்கள் அக்கிரமம்

    CSI சபைகளின் டையோசிஸ்களில் பெரும்பாலான பிஷப் தன் நெருங்கின சொந்தக்காரர்களைச் சரியான படிப்பு, தகுதி, பணிமூப்பு இல்லாதவர்களானாலும், சீனியாரிட்டி பார்க்காமலும் நிர்வாக கமிட்டியை கலந்தாலோசிக்காமலும், தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரமாக பிஷப் தன் சொந்தங்களை பதவியில் இருத்தி அவர்கள் மூலமாக பணக்கொள்ளையும், சபை, ஸ்தாபனம், கல்லூரி, நிலவிற்பனைகளைகளையும் எந்த எதிர்ப்பும் இன்றி நடத்தி பணக்கொள்ளையில் இறங்கியுள்ளார்கள். ஆந்திரா, கர்நாடகா, முக்கியமாக தமிழ்நாடு டையோசிஸ்களில் இப்படிப்பட்ட அக்கிரமம் சர்வ சாதாரணமாக அனைத்து மக்களும் கண்டுக்கொண்டுயிருக்க துணிகரமாக இக்காரியங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் இப்போது இரண்டு CSI டையோசிஸ் பிஷப்மார்களின் சொந்தங்களைக்குறித்து எனக்கு வந்த தகவலின்படி வெளியிடுகிறேன்.

    http://www.jamakaran.com/tam/2009/february/csi.htm

  69. தமிழ் ஹிந்து தளமானது , ஹிந்து மதத்தின் தன்மையைப் போலவே, எல்லா மார்க்கதவரின் கருத்துக்களுக்கும் இடம் அளித்து, இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீது வைக்கப் படும் விமரிசனங்களையும், தாக்குதல் களையும் வெளியிட்டு வருகிறது.

    ஆனால் இந்து மதத்தின் மீது கூறப்படும் விமரிசனங்கள் என்பது வேறு -
    இந்து மதத்தைப் பற்றி வேண்டுமென்றே திரித்துக் கூறுவது அல்லது அறியாமல் உளறுவது என்பது வேறு.

    இப்படி யாராவது வேண்டுமென்றே இந்து மதத்தைப் பற்றி திரித்து கூறினாலோ அல்லது அறியாமல் உளறினாலோ,
    ஒன்று தமிழ் இந்து - அது இந்து மதத்தைப் பற்றி நன்கு அறிந்தது என்ற வகையில - உடனக்குடன் விளக்கம் அளிக்க வேண்டும்,
    அல்லது அந்தக் கருத்துக்களை மட்டுமாவது மட்டுறுத்த வேண்டும்.

    இங்கெ திரு. கிளாடியார் ஒரு கோணிப் புளுகை எழுதி விட்டு சைலேன்டாக சென்று விட்டார்.

    //இந்து மதத்திலேயே இருவித நம்பிக்கைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா?

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    இதில் எது உண்மையான கொள்கை என்ற முடிவுக்கே இன்னும் யாரும் வந்தபாடில்லையே..! //

    இரண்டாவது ஜி,யூ போப் போல நமக்கு இந்து மதத்தைப் பற்றி விளக்குகிறார் மறைதிரு கிளாடியார்.

    நாங்கள் (இந்துக்கள்) கூட கிருஸ்தவத்தைப் பற்றி எழுதுகிறோம். ஆனால் நாங்கள் சரியாக மேற்க்கோள் காட்டி எழுதுகிறோம். யாராவது தவறாக எழுதினாலும் திருத்துகிறோம்.

    ஆனால் கிளாடியார் இப்படி வேண்டுமென்றே சூழ்ச்சியாக எழுதும்போது தமிழ் ஹிந்து துணை போகலாமா|?

    வடக்கு, தெற்கு, கிழ்க்கு, மேற்கு என எங்கிலும் இந்து மதம் என்றாலே மறு பிறப்பு கொள்கை தானே! புத்த மதம் , சமண மதம் கூட மறுபிறப்பு கொள்கை தானே?

    “புழுவாய்ப் பிறப்பினும் புண்ணியா நின்னடி என் மனத்தே”

    என்று பாடியது தமிழில் தானே?

    இந்தக் கருத்து லத்தீன் மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதா?

    இந்தக் கருத்து சமஸ்கிரத மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதா?

    ஆதி தமிழன் நெக்குருகி வழி படும்போது அவன் நெஞ்சிலிருந்து வந்த கருத்தை, அப்படியே மூடி மறைத்து, மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என வடக்கிலிருந்து வந்ததாக திரு. கிளாடியார், சூது செய்ததை தமிழ் இந்து அனுமதிக்கலாமா? அனுமத்தித்தால் உடனே விளக்கம் அளிக்காமல் விடலாமா|?

    //அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;//

    //தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்//

    திரு. கிளாடியார்,
    இந்து மதம் கண்டெடுத்த ஒரு உண்மையை எழுதி -தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்- என்று எழுதி

    அதில் தன்னுடைய ஒரே பிறப்பு - என்ற அறியாமையையும் கலந்து விட்டார்,

    ” ஒரே பிறவி”" என்று தன்னுடைய அறியாமையை அல்லது சூழ்ச்சியை நைசாக இறக்குகிறார்.

    அப்படி தெய்வத்தோடு இணைந்த பிறவி, பல பிறவிகளில் அல்லல் பட்டுக் கடைசியில் பரிசாக வந்த கடைசிப் பிறவி. அதற்குப் பிறகு பிறவிகள் இல்லை, துன்பம் இல்லை பேரானந்தம் தான்!

    இந்துக்கள் இந்த தெளிவான உண்மையை அறிந்து கொண்டு முடிவைப் பல்லாயிரம் வருடங்கள் முன்பே எடுத்து விட்டனர்.

    இப்போது ஒரு முடிவே எடுக்க வேண்டியது தமிழ் இந்துதான். திரு கிலாடியார் எழுதியது அறியாமையினாலா, அல்லது சூழ்ச்சியினாலா என்பதை புரிந்து ,

    இது போன்ற தவறான கருத்துக்களை மட்டுறுத்துவதா அல்லது அனுமதித்துவிட்டு அதோடு சேர்ந்து விளக்கமும் அளிக்க வேண்டியதா என்ற முடிவு தான் பாக்கி உள்ளது. அதை எடுக்க வேண்டிய உரிமையும், பொறுப்பும் ஆசிரியர் குழுவுக்கே உள்ளது.

  70. அன்புள்ள glady அவர்களே,

    தங்கள் கூற்று:

    ///

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    //

    ஆரியம்‍ .. திராவிடம் , வடக்கு … தெற்கு,
    எத்தனை விதமாகப் பிரித்தாளும் சதிசெய்வீர்கள் ?
    அத்த‌னையும் க‌ட்டுக் க‌தை, கட்டைப் பிரித்துக் குச்சியை உடைக்கும் தொழில்.
    நீங்க‌ளே அப்ப‌டி உடைப‌ட்ட‌ ஒரு குச்சிதான் என்ப‌து போக‌ப் போக‌ப் புரிந்துகொள்வீர்க‌ள்.

    மேற்கு, கிழ‌க்கை ஆள‌வும், கொள்ளை அடிக்க‌வும் செய்யும் த‌ந்திர‌மே இது.
    21 ஆம் நூற்றாண்டின் பிர‌க‌ட‌ன‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ கொள்கை, இல‌க்கு எல்லாமே
    “ச‌ர்ச்சை விதை, ஆன்மாவை அறுவ‌டை செய்” என்ப‌துதான்.

    இங்குள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் உறையும் இறை மூர்த்திக‌ளை, சாத்தான் என்று தாங்க‌ள் வ‌ர்ணிக்கும்போது, த‌ங்க‌ளை ஏவி விட்ட‌ மேற்க‌த்திய‌ எத்தர்களின் உள்ள‌ம் முழுதும் நிறைந்திருக்கும் வ‌ன்ம‌மும், குள்ள‌ந‌ரித்த‌ன‌மும், ஆளுகை வெறியும் வெளிப்ப‌டுகிற‌து. எமது கண்ணை எமது கையாலேயே குத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். யாம் முன்ன‌மே சொன்ன‌துபோல‌, க‌டும் சொற்க‌ள் அறியாமையாலும், இய‌லாமையாலும் வ‌ருகின்ற‌ன‌. தாங்க‌ள் ஏவ‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தை நீங்க‌ள் இன்னமும் அறிய‌வில்லை. தேவப் பிரியா அவர்களைப் போல உண்மையை நீங்களும் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  71. Messers Devapriyaa and Dr Muthukumarasamy!

    If you are damn sure that Pope played mischief in his translations, the right course is to undo the mischief by bringing out perfect translations in English. Who will do that? Is there any eminent bilingual scholar who are equally fervant as both of you are in this cause, found in Tamilnadu today? I wonder.

    There are a few English translations available for Thirukkural but all of them were by foreigners who are Christians.,

    All other talk against the Pope’s works will be nothing but a cry in the wilderness.

    (Comment edited & published)

  72. Mr Kallappiran,
    May I request you to read again my essay? I have refrained from commenting upon the quality of Pope’s translation. On the contrary I have done proper justice in praising his services in translating Thiruvasakam and Tami lsaivaites are grateful to him that but for his efforts Thiruvasgam verses would not have found a place in the book “Prayer” an anthology of divine poetry, compiled by a German in the last century.
    Where I differed from Pope, Please read again the article and find out yourself.
    I belive you have not come across with the translation of Thirukkural by V.V.S Ayyar, Suddhananda Bharathi and others. The translation of V.V.S Aiyar is far superior to Pope’s Translation. I have pointed out the area where he transgressed and misrepresented, defaming my religious culture. Suppresio veri , suggessio falsi is a latin maxim, which means suppression of a truth is suggesting falsehood. If I followed suit of simply praising Pope without pointing out where He failed, then, I would be in collusion with him in disparaging my temple worship, Archa(Idol) worship, and Adiyar worship , the three worships my scripures have ordained me and the votaries of siva. This is the rule with Vaishnavism also, so far as I have read vaishnava literature. Idol worship is highly sacred to a vaishnava than saiva ,
    I wonder how many of those who express abundance of praise have read his works! Sivaprakasam, a saivasiddhanta treatise opines about such people as.
    தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந் தறிதல்
    இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர்ஏ திலருற்று
    இகழ்ந்தினரேல் இகழ்ந்திடுவர் தமக்கென ஒன்றுஇலரே”

  73. வணக்கம்,

    ஸ்ரீ உமா சங்கர் அவர்களே,

    இந்த கிலாடி எனும் நண்பர் முன்பே ஒருதரம் சாதுக்களாய்……. பதிவிலேயே என்று நினைக்கிறேன் வெள்ளைக்காரன் வந்துதான் நமக்கு கல்வியறிவை உண்டாக்கினதாக எழுதியிருந்தார், அப்போதே நண்பர் திருச்சி காரர் முதல் பல நண்பர்கள் அவரை தெளிவிக்க முயன்று தோற்றுப்போனோம்.

    இப்போது மீண்டும் அதே கணையை தொடுக்கிறார். என்னமோ வெள்ளைக்காரன் வந்து கிறிஸ்துவின் பெயரால் நமக்கு எழுத்தறிவித்தது போல் திரித்துக் கொண்டிருப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை போலும்.

    பாத்தியா இதுதான் பாரின் சென்ட்டு இந்தியாவில் இது வாங்கறது தண்டம் என்று வழிப்போக்கர்கள் பீற்றிக்கொள்வது போல மேலும் மேலும் வெள்ளைக்காரனையே புத்தி சாலியாக்கிக் கொண்டு இருக்கிறார், கேட்டால் உண்மையை சொல்கிறேன் என்பார்.

    ஏன் வெள்ளைக்காரன் வரும் முன்பே திருவள்ளுவர் குறள் இயற்றவில்லையா மாணிக்க வாசகர் திருவாசகம் சொல்லவில்லையா என்ற நண்பர் திருச்சியாரின் கேள்விக்கு இத்தனை நாள் யோசித்து இப்போது அவைகளை வெளிக்கொண்டு வந்து மீண்டும் வெள்ளையனுக்கு பெருமை சேர்க்க முயற்சிக்கிறார். குறளும், திருவாசகமும் வெள்ளையரின் வருகைக்கு பின்னர் தான் வெளிச்சத்துக்கு வந்தது என்ற பதிலின் மூலம்.

    “சுயத்திலிருந்து பேசுகிறவன் சுயபெருமைக்காகவே பேசுகிறான் ”

    என்னே ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு, தன் இறைவனை சுயமாக சுய சிந்தனையுடன் வழிபட்டாலோ, இறை பெருமை பேசினாலோ தானே அதன் பேரானந்தத்தை சுயத்தில் அனுபவிக்க முடியும், எதோ கோவிலுக்கு போனோம் அங்கே முழங்காளிட்டோம், எதிரே இருக்கும் ஒருவர் பாடம் நடத்துவார், அதை கேட்டுவிட்டு அவர் சொல்வதை வழிமொழிந்து, அவர் என்னே சொல்கிறாரோ அதன்படி நடந்து, ……. அட போங்க சார், சுயம் என்ற சுதந்திரம் கூட இல்லாமல் உங்களால் எப்படி மானுடம் காக்க முடியும். எப்படி இறைவனை உணர முடியும்.

    “சுயத்திலிருந்து பேசுகிறவன் சுயபெருமைக்காகவே பேசுகிறான் ”

    நன்றாக இந்த வரிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அடிமைத்தனத்தை உங்கள் இறைவனே ஆரம்பித்து உள்ளான் என்பதை அறிவீர்கள். ( உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான் நண்பர் கிலாடி)

  74. Dr Muthukumarasamy!

    First of all, may I say I have not read any translation of Thirukkural or Thiruvaasagam. But I know there are other translators who have rendered these two works in English. From you I have now come to know that there are Tamilians like VVS Iyer and Bharti who did that. Thank you, Prof!

    Having not read any of them, including the above two, I cant say which translator was faithful to the original.

    You have found Pope motivated in his translation to maligjn your religious culture. This is a message obvious to any casual reader of your long essay. Pope was motivated and his sole purpose in translation was to belittle Hindu religion. This point was also reiterated by other commentators here, esp. Devipriya.

    From your further allusion to Manickavaasagar’s sensuality as done by Pope, you want to emphasis the point that Pope props up Manickavaasagar as a victim of flesh. A point I didn’t find fault with.

    Now, you are saying you accept his contribution to Tamil literature as one who brought it outside Tamilnadu to Europe. Your grouse is only where he failed to be faithful to the original and where he gave a wanton meaning that is a humiliation to your religious culture.

    Take heart! His translation was read only during his time immediately after it came to light and then forgotten forever Today, no Englishman or foreigner refers to his translation of both works. The reason for this is mainly because his English is outdated. It is Victorian. Today, we, in England, don’t speak or write that English. Therefore, his efforts in bringing both the works to Europe has become a fiasco.

    No Hindu need to be agitated over any of his ‘clandestine’ desire to malign Hindu religion or Manickavasagar in the minds of Europeans. After all, no European cares for Pope’s translation today.

    Coming to VVS Iyer or Subramniya Bharati’s translations, I have not read VVS Iyer’s English anywhere. But Bharati’s I have. He is not a great shakes as a writer in English. His English work is pedestrian, that does not evoke any enthusiam in anyone to continue. He is the best Tamil poet according to unanimous judgement of people; a pioneer in Tamil prose, according to historians of Tamil literature, but his Tamil prose is old fashioned unlike yours. His translation of English work, such as Tagore’s essays, into Tamil is sprightly because he could put his heart into it and also, because he chose only those subjects like Nationalism which were dear to his heart. His translation from Tamil into English is so-so.

    In his transaltion of Tirukkural etc., Bharati can be faithful to the original because his mother tongue is Tamil and he is a devote Hindu who has no axes to grind, unlike Pope. It is safe to say, however, that his English translation of Thirukkural must be uninteresting.

    Merely being faithful wont help a translation to survive for years. It should also be interesting to read, or has the ability to hook the readers on and on. It requires extraordinary lingusitic skill. Bharti lacked it in English although he ‘ruled’ Tamil. Popl had it but, alas, only in the brand of English which is now outdated.

    Edward Fitgerald is also a Victorian and his translation of Bhagvat Gita (Song Celestial) has become a classic. That was because he rendered the Gita into poetic form which delights even today. His purpose was literary and no one has accused him so far as you have done with Pope for motivated malignity. He also wrote the life of Buddha (not a translation) as ‘Light of Asia’, again, in poetic form, an enduring classic of English literature today.

    Pope failed. His failure is the failure of Tamil classics to travel abroad. VVS Iyer and Bharat’s efforts are known to you and a few only. As I said, mere translation or being merely faithful to the original wont help Tamil classics to fly high and above. It requires talent in English.

    Therefore, your Tiruvaasagam and Tirukkural lie in Tamilnadu for the readership of Tamilians only. Your Saiva Sithandan never took off for want of helpers who are great masters in English. Your Saiva Thirumarais have also not taken off for want of such masters. The only master who took them out stands now accused; and further, he has become a thing of past to your relief.

    Lets search for translators now. Who are they? Where are they? Any Tamil Hindus for the job?

    Why not Dr Muthukumaarasaamy himself who writes in English also?

  75. அன்புள்ள கள்ளபிரான் அவர்களே,

    டேனியல், glady முதலானோரின் கருத்துக்களைப் படித்தபின் …..

    தற்போதைய தேவை திருவாசகத்தை போப்பின் ஆங்கில வடிவிலிருந்தும், மேலும் இப்படி பிற மொழிகளுக்கு மாற்றப் பட்ட பிற இலக்கியங்களையும் கூட,
    தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும், அப்போதுதான் “தமிழர்கள் அவற்றைப் பற்றி முதல் முறையாக” அறிந்து கொள்ள முடியும்.

    ஒருவேளை, தமது தமிழ்த்தொண்டாக glady அவர்கள் செய்தால், தற்போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் அல்லது மகன் வழிப் பேரன் முதல்வராகும்போது, திலகர் திடல் அருகே ஒரு சிலையை glady அவர்களுக்கு நிறுவக் கூடும்.

  76. //தற்போதைய தேவை திருவாசகத்தை போப்பின் ஆங்கில வடிவிலிருந்தும், மேலும் இப்படி பிற மொழிகளுக்கு மாற்றப் பட்ட பிற இலக்கியங்களையும் கூட,
    தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும், அப்போதுதான் “தமிழர்கள் அவற்றைப் பற்றி முதல் முறையாக” அறிந்து கொள்ள முடியும்.//

    Your point is that the mischievous translations in English should be re-translated into Tamil so that the ‘mischiefs’ can be let known to people like Gladys. This is a different issue, with a different purpose.

    The purpose of Dr Muthukumarasamy is that we must undo the mischief done by Pope and I questioned him how you are going to do that.

    To make it potent, you ought to translate the Saiva Thirumaris in English with the view to bring out the originals faithfully revealing the religious culture such Thirumarais embody.

    English is the medium in which the translations are required. Because, scholars in other languages will read the English translations and bring out the translations in their own languages, thus, the Thirumarais can spread world wide.

    (Comment edited & published)

  77. //தமிழ் ஹிந்து தளமானது , ஹிந்து மதத்தின் தன்மையைப் போலவே, எல்லா மார்க்கதவரின் கருத்துக்களுக்கும் இடம் அளித்து, இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீது வைக்கப் படும் விமரிசனங்களையும், தாக்குதல் களையும் வெளியிட்டு வருகிறது.//

    This is a good policy. Unless you know what others think about you, you will live in an ivory tower and become armchair critics.

    Religion is public matter although many individuals may benefit from it as private matter The Hindus should know what are those criticisms Christians and Muslim level against their religion with the object of propagating their religions among Hindus. Only then, the Hindus can go to those vulnerable Hindus and explain to them. So, it is a good policy of this .com to post both sides although here, no one is going to be converted to any other religion on reading the posts. All this is just for knowing.

    However, the posters need to draw a line somewhere in usage of words. Using ‘avan’ for the founders of other religions like Islam and Christianity should be tabooed. Recently, Dr Muthukumaarasaamy used ‘avan’ for Jesus.

    Unless the other side abuses the Hindu spiritual leaders, acharayss or saints or Hindus gods and goddesses using similar words, there is no justification to abuse their gods or founders with such words.

    As Malarmannan has observed in this topic, such wanton abuse will make the followers of other religions who are abused, get more and more rooted in their religions, instead of making them convinced about your points!

  78. My Tamil software is not working

  79. மேற்க்கோள் காட்டும்போது த‌மக்கு வாய்ப்பாக‌ வேண்டியதை மட்டும் மேற்க்கோள் காட்டி விட்டு செல்வது சரி அல்ல.

    //தமிழ் ஹிந்து தளமானது , ஹிந்து மதத்தின் தன்மையைப் போலவே, எல்லா மார்க்கதவரின் கருத்துக்களுக்கும் இடம் அளித்து, இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீது வைக்கப் படும் விமரிசனங்களையும், தாக்குதல் களையும் வெளியிட்டு வருகிறது.

    ஆனால் இந்து மதத்தின் மீது கூறப்படும் விமரிசனங்கள் என்பது வேறு -
    இந்து மதத்தைப் பற்றி வேண்டுமென்றே திரித்துக் கூறுவது அல்லது அறியாமல் உளறுவது என்பது வேறு.

    இப்படி யாராவது வேண்டுமென்றே இந்து மதத்தைப் பற்றி திரித்து கூறினாலோ அல்லது அறியாமல் உளறினாலோ,
    ஒன்று தமிழ் இந்து - அது இந்து மதத்தைப் பற்றி நன்கு அறிந்தது என்ற வகையில - உடனக்குடன் விளக்கம் அளிக்க வேண்டும்,
    அல்லது அந்தக் கருத்துக்களை மட்டுமாவது மட்டுறுத்த வேண்டும்.

    இங்கெ திரு. கிளாடியார் ஒரு கோணிப் புளுகை எழுதி விட்டு சைலேன்டாக சென்று விட்டார்.

    //இந்து மதத்திலேயே இருவித நம்பிக்கைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா?

    அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

    இதில் எது உண்மையான கொள்கை என்ற முடிவுக்கே இன்னும் யாரும் வந்தபாடில்லையே..! //

    இரண்டாவது ஜி,யூ போப் போல நமக்கு இந்து மதத்தைப் பற்றி விளக்குகிறார் மறைதிரு கிளாடியார்.

    நாங்கள் (இந்துக்கள்) கூட கிருஸ்தவத்தைப் பற்றி எழுதுகிறோம். ஆனால் நாங்கள் சரியாக மேற்க்கோள் காட்டி எழுதுகிறோம். யாராவது தவறாக எழுதினாலும் திருத்துகிறோம்.

    ஆனால் கிளாடியார் இப்படி வேண்டுமென்றே சூழ்ச்சியாக எழுதும்போது தமிழ் ஹிந்து துணை போகலாமா|?

    வடக்கு, தெற்கு, கிழ்க்கு, மேற்கு என எங்கிலும் இந்து மதம் என்றாலே மறு பிறப்பு கொள்கை தானே! புத்த மதம் , சமண மதம் கூட மறுபிறப்பு கொள்கை தானே?

    “புழுவாய்ப் பிறப்பினும் புண்ணியா நின்னடி என் மனத்தே”

    என்று பாடியது தமிழில் தானே?

    இந்தக் கருத்து லத்தீன் மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதா?

    இந்தக் கருத்து சமஸ்கிரத மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதா?

    ஆதி தமிழன் நெக்குருகி வழி படும்போது அவன் நெஞ்சிலிருந்து வந்த கருத்தை, அப்படியே மூடி மறைத்து, மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என வடக்கிலிருந்து வந்ததாக திரு. கிளாடியார், சூது செய்ததை தமிழ் இந்து அனுமதிக்கலாமா? அனுமத்தித்தால் உடனே விளக்கம் அளிக்காமல் விடலாமா|?//

    விமரிசனங்கள் நியாயமான விமரிசனமாக இருந்தால் சரி. ஆனால் அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு பொய்ப் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்க முடியாது. அப்படி செய்தாலும் அதற்க்கு தகுந்த விளக்கம் அளிக்கப் படும். நான் விமரிசங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. விசமப் பிரச்சாரத்தை அனும‌தித்தால் உடனக்குடன் விளக்கம் அளிக்க வேண்டும், என்றுதான் த‌மில் ஹிந்து வைக் கேட்டுக் கொண்டென்.

    உலகிலேயே பிற மதக் கருத்துக்களை ஆக்க பூர்வமான முறையிலே அணுகுபவர்கள், பிற மதத்தினரால் தெய்வமாக வணங்கப் படுபவர்களை மதிப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே.

    ஜான்சனார் என்பவர் இராமரை விட யாழ்ப்பாணத்திலே இருக்கும் ஒரு இந்து தமிழர் உயர்ந்தவர் என்று கூறும் போது இந்த சமத்துவ அறிவுரையை வழங்கியிருக்க்லாம் அல்லவா?

    த‌மிழிலே இறைவனை அவன், இவன், பித்தன், சித்தன், பித்தா பிறை சூடி … என்றெல்லாம் கூறுவது வழக்கம் தான்.

    //மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.//

    என‌வே இறைவ‌னையே செய்தான் என்று தான் எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து.

    அது அவமரியாதை அல்ல‌. அது த‌மிழிலே வ‌ழ‌க்கில் இருந்து வ‌ரும் முறை. த‌மிழ் மொழியின் ந‌டை அறிந்த‌வ‌ருக்கு இது புரியும்.

  80. //kALLaPiRAAn
    10 October 2009 at 4:59 pm
    Messers Devapriyaa and Dr Muthukumarasamy!

    If you are damn sure that Pope played mischief in his translations, the right course is to undo the mischief by bringing out perfect translations in English. Who will do that? Is there any eminent bilingual scholar who are equally fervant as both of you are in this cause, found in Tamilnadu today? I wonder.

    There are a few English translations available for Thirukkural but all of them were by foreigners who are Christians.,

    All other talk against the Pope’s works will be nothing but a cry in the wilderness.

    (Comment edited & published)//

    I cannot talk about Thiru Vasgam translation.
    We hardly have good Even Tamil Commentary for Thirukural, in Tamil forget about English.

    We should do some thing.

  81. திருவாசகத்தின் முதல் ஆங்கில மொழியாக்கம் செய்தவர் ஜி.யு. போப். ஆனால் அதற்குப் பிறகு சிவபக்தியும், சைவ சித்தாந்த ஞானமும் பெற்ற இந்துக்களே செய்த அழகிய மொழியாக்கங்கள் வந்துள்ளன.

    இணையத்தில் ஆதாரபூர்வமான பன்னிரு திருமுறைகளுக்கான தளம்
    http://www.thevaaram.org. தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் அவர்களின் ஆசியுடன், பாரம்பரிய சைவ மடங்கள் அமைத்திருக்கும் அருமையான இணையதளம் இது.

    இதில் எட்டாம் திருமுறை (திருவாசகம்) என்பதன் கீழ், சேக்கிழார் அடிப்பொடி தஞ்சை தி.ந, ராமச்சந்திரன் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பே உள்ளது - ஜி.யு. போப் உடையது அல்ல. எனவே சைவ குருமார்கள் ஆதாரபூர்வமான மொழிபெயர்ப்பாக எதனை முன் நிறுத்துகிறார்கள் என்பது தெளிவு. இந்த மொழியாக்கம் எளிமையானது, அழகானது. தமிழர் அல்லாத உங்கள் நண்பர்கள் படிப்பதற்கு இந்த மொழியாக்கத்தைப் பரிந்துரை செய்யுங்கள்.

    உதாரணமாக, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்ற புகழ்பெற்ற பாடல் :

    O Mother !
    O Father !
    O Gem beyond compare !
    O rare Nectar Emerging from Love !
    I am an outcaste.
    I foster mere worms in my body,
    uttering falsehood in Increasing numbers and wasting my precious days.
    On me You conferred the salvific Siva-Consciosuness !
    O Opulence !
    O God Siva !
    In this very birth,
    I caught You and hold You in my firm grip.
    How can You move away at all?

    - Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

  82. // I cannot talk about Thiru Vasgam translation.
    We hardly have good Even Tamil Commentary for Thirukural, in Tamil forget about English. //

    தேவப்ரியா, தமிழர்களாகிய நாம் அந்த அளவுக்கு சோடை போனவர்கள் இல்லை. திருக்குறளுக்கு அற்புதமான, பலதரப்பட்ட உரைகள் வந்துள்ளன.

    நீங்கள் திருக்குறளை அதன் கலாசாரப் பின்னணியோடு, பாரம்பரிய உரைகளோடு ஆழ்ந்து கற்க விரும்பினால், “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” என்கிற இந்த அருமையான நூலைப் பரிந்துரை செய்கிறேன். இது பற்றீய எனது முந்தைய கட்டுரை ஒன்று -
    http://jataayu.blogspot.com/2007/01/blog-post_20.html

  83. I fully agree about Ki.Vaa.Jaa’ book, but Still Jadayuji, which is one of the Clsassics.

    My actual point is- in the web- I am looking for short Two lines - in Unicode- for all of us to just use, and not the soft copy of huge Volume.

    I still regard Ki.vaa.Ja work and equally Namakkal Kavignanar are the best as for as 20th century translations are.

    Can we make Unicode two line commentary for all.

  84. Dear Tiruchy resident!

    We use ‘avan’ for God, for poets like Bharat and Kannadaasan(’Bharati sonnaan’, ‘Bharati Paadinannan’). The use of ‘avan’ or singular is not unique to Tamil language. It is common in Hindi, English. In English, it is Thee (avan or nee) for God.

    But Dr Muthukumaarasaamy’s use of ‘avan’ to Jesus does not fall under this category. It falls under the category of ‘hate language’. You may read him to know what I am saying.

    All that the Christians writers are putting up here, ‘distortions’ of Hindu theology etc. can be countered by explaining the theology of your religion, point by point. If they use hate language, there is clear justification for hate language on your part. That is to say, if they have used ‘avan’ for any spiritual guru or achaarya of your religion, then Dr Muthukumaarasaamy is justified in using ‘avan’ for Jesus.

    Did they use hate language? If so, where?

    Howsoever good or valid or righteous your points are, all of them will tumble to dustbins, if you use hate language. As I said already, the readers suspect that you are losing the argument and that is why, you are resorting to hate language.

    Even this forum allows such language, it is the user who is at a disadvantage here.

    Hope you understand my point.

  85. //உதாரணமாக, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்ற புகழ்பெற்ற பாடல் ://

    Can I get the full poem or pathikam? URL pl

  86. //Even this forum allows such language, it is the user who is at a disadvantage here.
    //

    This sentence should be read as:

    Even if this forum has allowed such language, the loser is the user of such hate language, as his arguments become suspect in the eyes of persons who read both sides.

  87. I got the poem online. I have heard abt it. It is for the first time I have come to the poem straight. I will post about it later to say how far Mr Ramachandran has succeeded in bringing out the spirit intended by Manickavaasagar.

    This does not imply I can sit in judgement over others in this exercise. But simply for interest. I am a jolly good small fellow with some English and little Tamil.

    Meanwhile, Mr Jadayu a question for you!

    If there exists such translation like this, why is that even in other states of India, leave alone Europe, people do not refer to the Tamil saints or Saiva Sithaandham?

    Ask a Hindu in other states, he says he is aware, and may know it firsthand, all about Vedas and other Hindu scriptures. But he draws a blank when it comes to Tamil Hindu scriptures, including Azwaars. (Malayalee Hindus may be exception.)

  88. திரு. கள்ள பிரான் அவர்களே,

    1) முதலில் என்னுடைய ஒரு சிறிய சந்தேககத்தை தீர்க்க முடியுமா?

    நான் திருச்சியை சேர்ந்தவன் என்பதால், திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதுகிறேன்.

    நீங்கள் எதற்க்காக “கள்ளபிரான்” என்ற பெயரில் எழுதுகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? எத்தனையோ பெயர்கள் இருக்க இதைத் தேர்ந்து எடுத்தது ஏன் என்பதை விளக்க முடியுமா?

    நீங்கள் ஒரு இந்து கடவுளை நையாண்டி செய்யும் வண்ணம் இந்தப் பெயரில் எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது!

    இதற்க்கு நீங்கள் சரியான விளக்கம் அளித்தால், நீங்கள் கேட்பதற்கு பதில் அளிக்க வேண்டியது உண்டு எனக் கருதலாம்.

    2) //We use ‘avan’ for God, for poets like Bharat and Kannadaasan(’Bharati sonnaan’, ‘Bharati Paadinannan’). The use of ‘avan’ or singular is not unique to Tamil language. It is common in Hindi, English. In English, it is Thee (avan or nee) for God.

    But Dr Muthukumaarasaamy’s use of ‘avan’ to Jesus does not fall under this category. It falls under the category of ‘hate language’. You may read him to know what I am saying.//

    முனைவர் கூறியதை எடுத்து அப்படியே மேற்க்கோள் காட்டி கூறினால் சரியாக இருக்கும். நீங்கள் பொத்தாம் பொதுவாக கூறினால் அதை எப்படி ஏற்க இயலும்?

    //That is to say, if they have used ‘avan’ for any spiritual guru or achaarya of your religion, then Dr Muthukumaarasaamy is justified in using ‘avan’ for Jesus.//

    இயேசு கிறிஸ்துவை நீங்கள் கடவுளாக கருதுகிறீர்களா? அல்லது ஆச்சாரியராக கருதுகிறீர்களா?

    //All that the Christians writers are putting up here, ‘distortions’ of Hindu theology etc. can be countered by explaining the theology of your religion, point by point. If they use hate language, there is clear justification for hate language on your part.//

    கிருஸ்தவர்கள் hate language ஐ உபயோகித்தாலும், நான் கூடுமன வரை hate language ஐ உபயோகிப்பதைத் தவிர்த்தே வருகிறேன். பல இந்து பதிவாளர்களும் அப்படியே செய்கின்றனர்! சில இந்து பதிவாளர்கள் மட்டுமே எல்லை மீறுகின்றனர்.

    ஆனால் கிருத்துவர்கள் ஒவ்வொருவரும் - ஒவ்வொருவரும்- எப்படி எல்லாம், எப்போதெல்லாம் இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும், குறை கூறியும் பேசலாம் , இந்து மத த‌த்துவ‌ங்க‌ளைத் திரித்துக் கூற‌லாம் என்று த‌ய‌க்க‌மின்றி செய‌ல் ப‌டுவ‌தாக‌ நான் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ எண்ணுகிறென். அத‌ன் பாதிப்பினால் தான் சில இந்துக்க‌ள் வ‌ர‌ம்பு மீறி எழுதுவ‌தாக‌ எண்ணுகிறென்.

  89. ///
    I got the poem online. I have heard abt it. It is for the first time I have come to the poem straight. I will post about it later to say how far Mr Ramachandran has succeeded in bringing out the spirit intended by Manickavaasagar.
    ///

    ///
    I got the poem online. I have heard abt it. It is for the first time I have come to the poem straight. I will post about it later to say how far Mr Ramachandran has succeeded in bringing out the spirit intended by Manickavaasagar.
    ///

    சேக்கிழார் அடிப்பொடி தஞ்சை தி.ந, ராமச்சந்திரன் அவர்கள் வாழும் கால‌த்தில் நாமும் வாழ்வ‌து ம‌கிழ்ச்சி த‌ரும் விஷ‌ய‌ம். அவ‌ர் சைவ‌ சித்தாந்தத்தில் ஆராய்ச்சி ப‌ல‌ செய்த‌வ‌ர். யாழ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தால் இத‌ற்காக‌ D.Litt வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர். அவ‌ரை நேரில் ச‌ந்திக்கும் பெரும் பேறெய்தினேன். எளிமையும், அட‌க்க‌மும் நிறைந்த‌வ‌ர். நித்த‌மும் சைவ‌த் த‌மிழ் நூல்க‌ளை ஆராய்ந்து வ‌ருப‌வ‌ர்.

  90. தமிழகத்தில் மட்டுமே சைவம் தழைத்தது போன்ற மாயத் தோற்றம் இங்கே நிலவுவதை ஓரிரு பின்னூட்டங்களில் காண்கிறேன். இது உண்மை அல்ல. சைவ மரபு பாரதமெங்கும் விரிந்து பரந்து காணப் பட்டதே. உதாரணமாக கர்நாடகத்தில் வீர சைவ மரபு இருக்கிறதே. லிங்காயத்துகள் சைவர்களே.

  91. Ask a Hindu in other states, he says he is aware, and may know it firsthand, all about Vedas and other Hindu scriptures. But he draws a blank when it comes to Tamil Hindu scriptures, including Azwaars. (Malayalee Hindus may be exception.)//

    It is not surprising.
    While Karnataka state govt promotes translation of Basavanna and other Hindu saints, Tamil Nadu govt promotes only Thirukkural and nothing else.
    That is why

  92. //நான் திருச்சியை சேர்ந்தவன் என்பதால், திருச்சிக்காரன் என்ற பெயரில் எழுதுகிறேன்.//

    உங்கள் பெயரில் நான் எந்தக்குறையும் காணவில்லை. என்னிடம் தமிழ் தட்டச்சு இல்லாததால் ஆங்கிலத்தில் அப்படி விளித்தேன்.

    //நீங்கள் எதற்காக “கள்ளபிரான்” என்ற பெயரில் எழுதுகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? எத்தனையோ பெயர்கள் இருக்க இதைத் தேர்ந்து எடுத்தது ஏன் என்பதை விளக்க முடியுமா?//

    இது எந்த இந்துக்கடவுளை அழைக்கும் பெயர் என நீங்கள்தான் சொல்லுங்களேன்.

    //நீங்கள் ஒரு இந்து கடவுளை நையாண்டி செய்யும் வண்ணம் இந்தப் பெயரில் எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது!//

    அப்படியெல்லாம் இல்லை.
    ‘நையாண்டி’ என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது.
    சில நையாண்டிகள் மட்டுமே விதிவிலக்கு.
    உங்களைக்கூடத்தான் ‘கிறுத்தவப்பிரச்சாரம் செய்கிறார்’ என எழுதியிருக்கிறார்கள்.
    நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

    இந்துமதத்தின் கொள்கைகளை முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இந்து மதம் சொல்வதில்லை. எனவே எனக்குப்பிடித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை ஏன் ஏற்றுக்கொள்கிறேன் என விளக்கும்போது, அது, தானாகவே ‘நையாண்டி’ பண்ணுவது போலத் தோன்றும்.

    எடுத்துக்காட்டாக, இராமானுஜரின் தொண்டர்கள், சைவத்தெய்வங்களை வணங்குவதில்லை. எனவே, அவர்கள் இந்துமதத்தை நையாண்டி பண்ணுவதாக எடுத்துக்கொள்ளலாமா? அது மட்டுமன்றி, சைவத்தெய்வங்களை குறிப்பிடும்போது, அவற்றை ‘பிற தேவதைகள்’ எனச்சொல்வர். சைவத்திருமுறைகளை அவர்கள் தொடுவதே இல்லை.

    எனவே, அவரவர் பார்வை அவரவருக்கு. நான் இந்துக்களை மட்டும்தான் குறிப்பிடுகிறேன். மற்ற மதத்ததவரைப்பற்றி அல்ல.

    அவரவர் பார்வையை இப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்துமதத்துவேஷம் என்று கோபித்தால், உங்களுக்கும் இசுலாமியருக்கும் தூரமில்லை.

  93. //தமிழகத்தில் மட்டுமே சைவம் தழைத்தது போன்ற மாயத் தோற்றம் இங்கே நிலவுவதை ஓரிரு பின்னூட்டங்களில் காண்கிறேன். இது உண்மை அல்ல. சைவ மரபு பாரதமெங்கும் விரிந்து பரந்து காணப் பட்டதே. உதாரணமாக கர்நாடகத்தில் வீர சைவ மரபு இருக்கிறதே. லிங்காயத்துகள் சைவர்களே.//

    சைவசித்தாந்தமும் வீரசைவமும் ஒன்றா? கடவுள் மட்டுமே ஒன்று. Theology is different. இதைப்பற்றி, Dr Muthukumaarasaamy அவர்களே விளக்க பொறுத்தமானவர்.

    இராமானுசரும், மத்வாச்சாரியரும் இராமரைத்தான் கும்பிட்டார்கள். அவர்கள் தொண்டர்களுக்கும் சொன்னார்கள். ஆனால், இருவரும் அணுகுமுறைகளிலும்,வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் தேற்றம்.

    இதைப்போலவே, சைவசித்தாந்தமும், வீரசைவமும். தெரிந்தவர்கள் உமாசங்கருக்கு விளக்கலாம்.

    இந்து மதம் வேறுபாடுகளை விட்டுக்கொடுக்கிறது அல்லவா?

  94. //It is not surprising.
    While Karnataka state govt promotes translation of Basavanna and other Hindu saints, Tamil Nadu govt promotes only Thirukkural and nothing else.//

    Dear Anbarasan!

    Thirukkural, whatever followers of different relgions in TN may claim, is a book of maxims common to all Tamil people. பொதுமறை அல்லது நீதிநூல். It is a secular book in that sense. It is ancient dating back to 2nd BC. It is one of the glorious books in Tamil litlerature which the Tamil people are legitimately proud of.

    Respecting the sentiments of Tamil people, the TN government considers it its duty to spread its name and fame among other people so that Tamils will feel respected by others for having such books in their past. Tamils are proud of their literary heritage, you know that.

    On the other hand, the Hindu scriptures like Saivaththiurmaraikal and Naalaayiram or other such scriptures - are purely religious. They also form part of the literature. But there lurks some danger.

    What is that? If the Government attempts to propagate them among other people, as you wish, then, the followers of other religions will ask the government to propagate their scriptures also. Koran and Bible do not need such governmental help. But they will demand that Umaruppulavar’s works, Veeramamunivar’s work be spread, as they are also part of the Tamil literature.

    Jains and Buddhists will demand similarly for governmental help for their innumerable scriptures which form a solid part of our literature.

    You are therefore opening a Pandora’s box here.

    I feel that it is the sacred duty of Tamil Hindus to propagate their scriptures, if they like, among other people, out of their own hard work and money. They should not rely on TN government for that.

  95. //இயேசு கிறிஸ்துவை நீங்கள் கடவுளாக கருதுகிறீர்களா? அல்லது ஆச்சாரியராக கருதுகிறீர்களா?//

    ஏசு மட்டுமேன்ன, அல்லா போன்ற எல்லாரைப்பற்றி என் பொதுப்பார்வை ஒன்றே.

    அவர்கள் கடவுளா, இறைத்தூதரா என்பது என் பிரச்சனையல்ல. அவர்கள் எப்படியிருப்பினும் அது என்னைப் பாதிக்காது.

    அதே சமயத்தில், அவர்கள், அவர்கள் வழிசெல்போருக்கு, எப்படித் தோன்றுகிறார்கள் என்பது கவனிக்கப்படவேண்டும். அவர்களுக்கு, கடவுளாகவோ, இறைத்தூதராகத் தோன்றின், நாம் யார் அவர்களைகேட்க?

    அதைப்போல, நீங்கள் மாணிக்கவாசகரை ஒரு இறைப்புனிதர் (Saint) என்று ஏற்றுக்கொள்வதை அவர்கள் நுழைந்து கேட்கக்கூடாது.

    கன்னிமரியாளுக்கு ஏசு பிறந்தார் என அவர்கள் நம்புகிறார்கள்.
    அப்பர் இறந்த குழந்தையை உயிர்ப்பித்தார் என நீங்கள் நம்புகிறீர்கள்.
    மகமதுவுக்கு அல்லாவே அவர்கள் மறையைச் சொன்னார் என அவர்கள் நம்புகிறார்கள்.
    சிவனே தமிழ்ச்சங்கத்தில் நுழைந்து தன் பாட்டைப்பாடினார் என நீங்கள் நம்புகிறீர்கள்.

    இப்படி இருபக்கங்கள். ஒருவர் மற்றவரின் நம்பிக்கை பொய் அல்லது ஏமாற்றுவேலை எனச் சொல்லின், அதன் பெயர் மதச்சண்டையாகும். தேவையற்ற ஒன்று.

  96. /நீங்கள் எதற்காக “கள்ளபிரான்” என்ற பெயரில் எழுதுகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? எத்தனையோ பெயர்கள் இருக்க இதைத் தேர்ந்து எடுத்தது ஏன் என்பதை விளக்க முடியுமா?/

    //இது எந்த இந்துக்கடவுளை அழைக்கும் பெயர் என நீங்கள்தான் சொல்லுங்களேன்//

    /நீங்கள் ஒரு இந்து கடவுளை நையாண்டி செய்யும் வண்ணம் இந்தப் பெயரில் எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது!/

    //அப்படியெல்லாம் இல்லை.
    ‘நையாண்டி’ என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது//

    நான் கேட்டதற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை.

    நீங்கள் “கள்ளபிரான்” என்ற பெயரில் எழுத ஏதாவது ஒரு காரணத்தை அளித்து இருந்தால், நாம் அந்தக் காரணம் சரியா என்று விவாதிக்கலாம்.

    எனவே நீங்கள் பதில் அளிக்காததால், இதற்க்கு மேலே நான் என் கருத்தைக் கூறுகிறேன்.

    நீங்கள் இந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான கண்ண பிரானை நக்கல் அடிக்கும் விதத்திலே, கள்ள பிரான் என்று எழுதுவதாகவே நான் கருதுகிறேன்.

    கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். அப்படி இல்லா விட்டால் நீங்கள் பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி மகிழ்வதாகவே கருத முடியும்.

    பேருந்திலே பயணம் செய்யும் போது அருகிலே அமர்ந்து இருப்பவரை சற்று தள்ளி அமரச் சொல்ல விரும்பினால், நாம் “பிளீஸ், கொஞ்சம் தள்ளி ஒக்கார முடியுமா?” என்று கேட்போம். ஆனால் அருகில் இருப்பவர் நம்முடைய நெருங்கிய தோழன், பள்ளித் தோழன் என்றால் அவனிடம் நாம், “நாயே, தள்ளி ஒக்காருடா!” என்று கூட சொல்லலாம். ஆனால் நமக்கு தோழர் அல்லாத ஒருவரிடம் இந்த வார்த்தையை பயன் படுத்தினால் அது வரம்பு மீறியதாகவே ஆகும்.

    //அவரவர் பார்வையை இப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால், இந்துமதத்துவேஷம் என்று கோபித்தால், உங்களுக்கும் இசுலாமியருக்கும் தூரமில்லை//

    பார்வைகள் ஒரே மாதிரி இருக்கும் என்று நான் கூற வரவில்லை. ஆனால் பார்வையின் நோக்கம் என்று ஒன்று உண்டு. அது நல்ல நோக்கமாகவும் இருக்கலாம். தீய நோக்கமாகவும் இருக்கலாம். பாராட்டாகவும் இருக்கலாம். இழிவு செய்வதாகவும் இருக்கலாம்.

    //இல்லையென்றால், இந்துமதத்துவேஷம் என்று கோபித்தால், உங்களுக்கும் இசுலாமியருக்கும் தூரமில்லை//

    நான் உங்கள் மீது கோவித்தேனா? நீங்கள் இரு வார காலமாக இதே பெயரில் தானே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்? நான் எதுவும் கூறவில்லையே!

    நீங்கள் பிற (இந்து) மதக் கடவுளை நக்கலடித்துக் கொண்டே, ஆனால் அதே நேரத்தில் பிறர் அப்படி செய்யக் கூடாது என்ற எதிர்பார்ப்பு உடையவரக, பிறருக்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள், என்றுதான் கூறுகிறேன்.

    விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? நீங்கள், உங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துப் போடாமல், பிறர் கண்ணில் இருக்கும் துரும்பைக் குறை கூறுவது பலன் தருமா என்றுதான் கேட்கிறேன். நான் உங்கள் மீது கோவப் படவில்லையே!

    திரு. கிளாடி கூட இந்து மதம் அப்படி சொல்கிறது, இப்படி சொல்கிறது, வடக்கு, தெற்கு என்று அண்டப் புளுகை அவிழ்த்து விட்டு சுவிசேஷக் கருத்துக்களை திணிக்கப் பார்க்கிறார். ஆனாலும் திரு. கிளாடி இந்து மதக் கடவுள்களை நக்கல் அடிக்கும் வகையிலே பெயரை வைத்து எழுதவில்லை.

    ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிட்டாலே இந்து கடவுளை இழிவு செய்வது போல பெயரை வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள். இது சரியா? நீங்கள் பிறரையோ குறை கூற முடியுமா?

  97. //எடுத்துக்காட்டாக, இராமானுஜரின் தொண்டர்கள், சைவத்தெய்வங்களை வணங்குவதில்லை. எனவே, அவர்கள் இந்துமதத்தை நையாண்டி பண்ணுவதாக எடுத்துக்கொள்ளலாமா? அது மட்டுமன்றி, சைவத்தெய்வங்களை குறிப்பிடும்போது, அவற்றை ‘பிற தேவதைகள்’ எனச்சொல்வர். சைவத்திருமுறைகளை அவர்கள் தொடுவதே இல்லை.

    எனவே, அவரவர் பார்வை அவரவருக்கு. நான் இந்துக்களை மட்டும்தான் குறிப்பிடுகிறேன். மற்ற மதத்ததவரைப்பற்றி அல்ல.//

    அது எப்ப‌டி? அது எப்ப‌டி நையான்டியாகும்? அவ‌ர்க‌ள் சிவ‌ பெருமானை இழிவு ப‌டுத்தும் வ‌கையிலெ பெய‌ரை வைத்துக் கொண்டு பின்னூட்ட‌ம் இட‌வில்லையெ?

    அவ‌ர்க‌ள் சிவ‌னை வ‌ண‌ங்காத‌தே , சிவ‌னை நையாண்டி செய்த‌து போல‌ என்ப‌தாக‌ யாரும் கூற‌ மாட்டார்க‌ள்.

    சிவ‌னை பெருமானையோ, விஷ்னுவையோ வ‌ண‌ங்குவ‌தும் , வ‌ணங்காத‌தும் அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். இந்து ம‌த‌த்தில் க‌ட்டாய‌ம் என்ப‌து இல்லையே!

    நீ இந்த‌க் க‌டவுளை வ‌ண‌ங்காவிட்டால் எரி ந‌ர‌கத்திலே ஆக்கினைக்கு உள்ளாக்க‌ப் ப‌டுவாய் என்ற‌ சாப‌மோ, அல்ல‌து இப்பொதே த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப் ப‌டும் என்ற‌ அச்சுறுத்த‌லோ இந்து ம‌த‌த்தில் இல்லையே!

    //சைவத்திருமுறைகளை அவர்கள் தொடுவதே இல்லை//

    அத‌னால் என்ன‌ பிர‌ச்சினை? அது எல்லாம் அவ‌ரவ‌ர் விருப்ப‌ம். ஒருவ‌ர் சைவ‌ சித்தாந்த‌ நூல்க‌ளை ம‌ட்டும் ப‌டித்தாலும், பிர‌ப‌த‌ங்களை ம‌ட்டும் ப‌டித்தாலும், கீதையை ம‌ட்டும் ப‌டித்தாலும், வேத‌ங்களை ம‌ட்டும் ப‌டித்தாலும் , எல்லாவ‌ற்றையும் ‍ப‌டித்தாலும், எல்லாம் அவ‌ரவ‌ர் விருப்ப‌ம். அது பிற‌ரை இக‌ழ்வ‌தாக‌க் க‌ருத‌ ப‌ட‌ முடியாது.

    //அது மட்டுமன்றி, சைவத்தெய்வங்களை குறிப்பிடும்போது, அவற்றை ‘பிற தேவதைகள்’ எனச்சொல்வர்.//

    ந‌ல்லது “தேவதைகள்” என்றே கூறியுள்ளான‌ர்.

    சாத்தான் என்று கூற‌வில்லையே?

  98. “Thirukkural, whatever followers of different relgions in TN may claim, is a book of maxims common to all Tamil people. பொதுமறை அல்லது நீதிநூல். It is a secular book in that sense”

    Mr KaLLapiran

    Yes,Thirukural is a podhu marai-marai itself means vedas in Tamil-one can say marai [ vedas] are universal in the sense the ideas transcend time and place.
    It is a book of maxims common to all people and not just Tamil speakers. Thiruvalluvar is talking as an ancient Indian rooted in Dharma.
    Thirukural is full of many ancient [ but timeless] Indian concepts like karma, moksha etc.
    Direct references like “Indran” , ” Puthelir” and ” Thiru” can be found in the book that prove this idea. Yet some very learned persons with power would want us to believe many things.
    They are so confident we wont go a book shop , buy a copy of the book and make an effort to read .
    It is the political establishment in our state [who have ulterior motives ]who claim first it was a Jain work and now a Christian work inspired by st. Thomas.
    Thankfully they have not said it was Mao inspired or Lenin inspired or Kamalhaasan inspired. They would say that too, all depends on their needs of that time!
    Please read Munaivar’s article on Seevaka sinthamani here.
    .

  99. Dear Saravanan!

    The major claimants to Thiruvalluvar are

    Jains
    Srivaishanvas

    Others are politically motivated such as Christians and Muslims.

    Muslims hang on to the notion of monotheism. For that matter, they also claim Vedas as their own because the Vedas said, which I have already quoted in a sanskrit sloka, that God is one and He is called different names. Monotheism is deeply embedded in Vedas, according to Dr Zakir,a muslim spokesman.

    Jains stopped fighting for the right of Tiruvalluvar. Because, they had already built a temple hundreds of years ago in TN and worship goes on for centuries there. The Jain name for Thiruvalluvar is KONDAKONDA ACHAARYA.

    Srivaishnvaas’ claim rests on Valuvaar’s words like தாமரைக்கண்ணான் உலகு and so on.

    There are detailed theses on the subject.

    About Thomas, I dont know.

    But there was an interesting incident that really happened during the 1980s. One Ganesa Iyer of Srirangam went to the Bishop of Tiruchy and told him that he (Iyer) could prove that Tiruvalluvar was a Christian. Iyer demanded some lakhs for his research. He got but never came back. A police case was registered. He was caught; and he returned the money.

    I point this out to say there is much politics here.

    Even restricting the claimants to just two - Jains and Srivaishnavaas, I would say, lets leave it out to them to take Valluvar as they like.

    According to my reading, Valluvar appears to be more Jain less Hindu. During his time, Jainism was on the rise. This is a personal opinion, not for debate.

    An essay on this subject to propel the claimant of Hindus will be highly interesting. Any taker?

  100. //நீங்கள் இந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான கண்ண பிரானை நக்கல் அடிக்கும் விதத்திலே, கள்ள பிரான் என்று எழுதுவதாகவே நான் கருதுகிறேன்.

    கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். அப்படி இல்லா விட்டால் நீங்கள் பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி மகிழ்வதாகவே கருத முடியும்//

    What is your age, Mr Tirchykkaaran?

    You astonish me with your ignorance of Hindu religion as followed by Tamilians. Why dont get the help of Messers Arvaindan Neelakantan, Malarmannan, Dr Muthukumarasaamy or Jadayu who are familiar in this .com.

    They should tell you who this Kallapiraan is!

    Please come back after knowing it. If not, I will be saddled with that responsibility. But I am a இரண்டும் கெட்டான். Not a fit person for the job, I mean.

    They are really fit and they should help you.

  101. வள்ளுவர் பொதுவானவர் தான். வள்ளுவரின் திருக்குறள் உலகப் பொதுமறை தான். வள்ளுவர் உண்மையை மட்டுமே எழுதுவார். பொய்யா மொழிப் புலவரின் உண்மை கருத்துக்களைக் கேளுங்கள்.

    “பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும், மற்று
    நிலையாமை காணப் படும்”

    ( பற்றும் அற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும். இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வந்து நிலையாமை காணப் படும் )

    இதை அறிந்தும் அறியாதவர் போல பிறப்பு இறப்புக் கொள்கை வடக்கிலிரிந்து வந்ததாக கதை கட்ட நினைக்கும் சுவிசேஷ சூழ்ச்சிகள் பலிக்குமா?

  102. கள்ளபிரான் அவர்களே

    நான் கூறியது சைவ மரபைப் பற்றி. வீரசைவமும், சைவசித்தாந்தமும் வேறுபடுமேயானாலும், இவை சைவமரபின் உள்ளடக்கமே. தங்களுக்குத் தெரிந்து, எமக்குத் தெரியாதது எது இருப்பினும் தெளிவுசெய்தால் தெரிந்து கொள்வோம். “எல்லாம் எமக்குத் தெரியும்” என்பது என் கருத்தல்ல. பிற‌ரை எழுத‌ச்சொல்வ‌தைக்காட்டிலும் தாங்க‌ளே எழுத‌லாமே? தங்கள் அறிவு பிறருக்கும் பயன் தரட்டுமே.

    த‌மிழக அரசு (பிற‌ மாநில‌ அர‌சுக‌ளும் கூட) ஹிந்து அறநிலைய‌த் துறை மூல‌ம் திருக்கோவில்க‌ளையும் திருக்கோவில் சொத்துக்க‌ளையும் நிர்வ‌கிப்ப‌தால், அந்த‌ நிதியிலிருந்தே, அத்துறை மூல‌மாக‌வே இத்த‌கு ப‌திப்புக்க‌ளைச் செய்ய‌லாம். அத‌னால், பிற‌ச‌ம‌ய‌த்தார் கோருவ‌து த‌விர்க்க‌ப் ப‌ட‌லாம் அல்ல‌து அது குறித்து எந்த‌க் க‌வ‌லையும் வேண்டாம். அத்துறை மூல‌மாக‌ இசைப்ப‌ள்ளிக‌ளும், நாட்டிய‌ப்ப‌ள்ளிக‌ளும் ஏற்க‌ன‌வே ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஸ்த‌ல‌வ‌ர‌லாறு முத‌லிய‌ நூல்க‌ள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ப‌திப்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன. அதுபோல‌ இதுவும் ந‌ட‌க்க‌லாம்.

  103. திருவள்ளுவமாலை

    ‘செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
    பொய்யா மொழிக்கும் பொருளொன்றே–செய்யா
    அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
    யிதற்குரிய ரல்லாதா ரில்.’

    -வெள்ளி வீதியார்

    ‘செய்யா மொழி- வேதங்கள்( எழுதப் படாதது)
    பொய்யா மொழி- திருக்குறள்.

    வேதங்கள் கூறுவதும் திருவள்ளுவர் உரைத்த திருக்குறள்
    கூறுவதும் ஒன்றே. வேதங்கள் அந்தணர் மட்டுமே பயன்படுத்த; திருக்குறள் எல்லா மக்களும் படித்து கடைப்பிடிக்க ஆனதாகும்.

    ———————————
    வேதங்கள் பாணினியால் வ.கா.மு. 5ம் நூற்றாண்டில் சமஸ்க்ருத இலக்கணம் வகுக்கப்பட்டது. அதற்கு சில பல நூற்றாண்டின் முன் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணமும்- வியாசரின் மஹாபாரதமும் அடக்கப் பட்டன.

    ஆனால் பாணினிக்கு 1000 ஆண்டுகள் முன்பே வரையப்பட்டிருந்த வேதங்கள் பாணினி சமஸ்க்ருத இலக்கணம வரம்பில் வராது. அதன் சொல் பகுப்புமுறைகள் முன்பிருந்த நடை. எனவே வேதங்கள் எழுதப்படல் கூடாது என்பது வழக்கு. எனவே அவை வடமொழியில் ஸ்ருதி- கேட்கப் படுவது எனப்படுவது எனப் படும்.

    சங்க இலக்கியத்தில் வேதங்களை – வேதம். நான்மறை, மறை, புலம், ஓத்து, ஆரங்கம், கேள்வி, எழுதாக் கற்பு, எனப் பல பெயர்களில் வழங்கப் பட்டுள்ளது

    ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதுஆகி,
    வேதப்பொருளாய், மிகவிளங்கித், தீதுஅற்றோர்
    உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளமுருக்குமே
    வள்ளுவர் வாய்மொழி மாண்பு. 24
    -மாங்குடி மருதனார்.

    படிப்போர்ககு எளிதாக, அரிய கருத்துக்களை-வேதங்கள் கூறும் நற்பண்புகளை மிக எளிதாக குற்றமற்றோர் உள்ளங்களில் படிக்கும் போது உள்ளத்தை உருக வைக்கும்வகையில் எழுதப்பட்டதே வள்ளுவர் எழுதியதின் சிறப்பு.

    Thirukural is dated to around 250CE, By then Tamilnadu has been taken over by Kalapirar, and lively Sangam Literature gave away to Ethical, Thirukural was the first.

    Thiruvalluvar was the first, he avoided naming any God directly in Kadavul Vazthu, but has used Vedic Principles all through out.

  104. நண்பர் கள்ளப்பிரான் அவர்கள் ஒரு மறுமொழியில் வீரசைவமும் சைவசித்தாந்தமும் ஒன்றா என முத்துக்குமாரசுவாமி விளக்க வேண்டும் என எழுதியிருந்தார். மகிழ்ச்சிதான்.
    தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒன்றுதான். காரணம் அதன் வரலாற்றுப் பின்னணி.
    திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்தவர் குருநமச்சிவாய மூர்த்திகள். அவருடைய மாணாக்கர்களில் ஒருவர் சிவப்பிரகாசர். விஜயநகரமன்னன் விருப்பாச்சிராயர் என்பவரது ஆட்சிக்கு உடபட்டதாக தில்லை, குடந்தை முதலிய பகுதிக்ள் அக்காலத்தில் இருந்ந்து வந்தன. இப்பகுதியை வேலூரில் இருந்த இலிங்க்ண்ணபத்தர் என்னும் வீரசைவர் ஆட்சிக்கீழ் இருந்தது. அவர் கன்னடமொழியினர். அவருடைய குரு சித்தராமதேவ சுவாமிகள் என்ற வீரசைவ குரு. இந்த இலிங்கண்ணபத்தர் இலிங்கதாரணம்(வீரசைவச்சின்னம்) இல்லாதவர்களிடம்முகங்கூடக் கொடுத்துப் பேசமாட்டார். இந்தக்காலத்தில், தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோவிலின் வ்ழிபாடுகளில் வேற்றுச் சமயத்தவரால் பெருந்தொல்லைகள் நேரிட்டது. தில்லைவழந்தணர்கள் அரசனைச் சந்தித்துக் குறை தீர்த்துக் கொள்ள இயலவில்லை. இறைவன் ஆணைப்படி தில்லைவாழந்தணர்கள் சிவப்பிரகாசரிடம் வந்து உதவி கேட்டனர். குருவின் அனுமதியின்பேரில் சிவப்பிரகாசர் வீர்சைவமதம் தழுவி இலிங்கதாரணம் செய்துகொண்டு, இலிங்கண்ணனைச் சந்தித்து நிலமையைச் சீர் செய்தார். குருவின் ஆணைப்படித் துறையூரில் வீரசைவமடம் அமைத்து சமயப்பணி செய்து வந்தார். துறையூர் சிவப்பிரகாசர்மடமே தமிழ்நாட்டில் முதல் வீரசைவமடம். இவர் வழியாகத்தான் ஏனைய வீரசைவ மடங்களாகிய பொம்மையபுரமடம், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடம் முதலாயின தோன்றின. தமிழக வீரசைவர்கள் சைவசித்தாந்திகளே. நால்வர் பெருமக்களையே ஆசாரியர்களாகக் கொண்டனர். வீரசைவரான.கற்பனைக் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நால்வர் நான்மணிமாலை , சைவசமய குரவர்களைப் போற்றும் அற்புதமானநூல்.

    வீரசைவர்களுக்கு அவர்கள் தரித்திருக்கும் இலிங்கமே வழிபடு கடவுள். வீரசைவர்களுக்கு அங்கலிங்க வழிபாடும் ஜங்கம (அடியார்) வழிபாடும் இன்றியமையாக் கடமைகள். தாயின் கருவில் இருக்கும்போதே தாயின் கையிலோ அல்லது கழுத்திலோ ஒரு இலிங்கத்தைக் கட்டி விடுவர். குழந்தை பிறந்தவுடன் அந்தலிங்கத்தைக் குழ்ந்தைக்கு அணிந்துவிடுவர். இது அங்க இலிங்கம் எனப்படும். அங்கம் - உடல். இலிங்க தாரணம் செய்து கொண்டவர்களிடம் தொழில் வேறுபாடு உண்டே அன்றிச் சாதி வேறுபாடு இல்லை. இதைப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
    என்னுடைய நண்பர் ஒருவர். இலிங்க தாரணம் உடையவர். தார்வார் பல்கலைக் கழகத்துக்குத் தேர்வாளராகச் சென்றிருந்தார். அங்கு முடி திருத்தகம் ஒன்றுக்கு சென்று சவரம் செய்து கொண்டார். முடிதிருத்திக் கொள்ளும் முன் சட்டையை கழற்றி ஆணியில் மாட்டினார். முடிதிருத்தும் வேலை முடிந்தவுடன், முடிதிருத்தியவர் இந்த நண்பரைத் தம் இல்லத்திற்கு உணவருந்த அழைத்தாராம். ஏனெனில் அவரும் ஒரு இலிங்கதாரண வீர்சைவர். இலிங்கதாரணமுடையவர் ஜங்கமர் எனப்படுவார். உணவளித்து வழிபடுதற்கு உரியவர்.

    எங்கள் ஊரில் ஜங்கமர் எனும் ஓரினத்தவர்கள் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் கட்டிட வேலை செய்யும் உழைப்பாளிகள். தெலுங்கு மொழி பேசுகிறார்கள். சதாசிவனே அவர்கள் வழிபடும் தெய்வம். அவர்களுடைய திருமணத்துக்கு முந்தி மணமக்களுக்கு இலிங்கதாரணம் நடைபெறும். இது ஒரு முக்கியமான திருமணச் சடங்கு. ஒருகாலத்தில் சைவ உணவுப் பழக்கம் உடையராக இருந்த இவர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் இலிங்கதாரணத்தை மறக்கவில்லை.

    Theologyயில் வீரசைவம் ஐக்கியவாதசைவம் என்ற பிரிவைச் சேர்ந்தது. உமாபதிசிவம் அவர்களின் சங்கற்ப நிராகரணத்தில் இக் கொள்கை மறுக்கப்படுகின்றது. இது வெறும் கொள்கை வேறுபாடு. சமய வேறுபாடு அல்ல. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொற்றவன்குடியில் உள்ள உமாபதி சிவாச்சாரியாரின் திருமடம் துறையூர் வீரசைவ ஆதீனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருப்பது அறியத்தக்கது.

  105. //கன்னிமரியாளுக்கு ஏசு பிறந்தார் என அவர்கள் நம்புகிறார்கள்.
    அப்பர் இறந்த குழந்தையை உயிர்ப்பித்தார் என நீங்கள் நம்புகிறீர்கள்.
    மகமதுவுக்கு அல்லாவே அவர்கள் மறையைச் சொன்னார் என அவர்கள் நம்புகிறார்கள்.
    சிவனே தமிழ்ச்சங்கத்தில் நுழைந்து தன் பாட்டைப்பாடினார் என நீங்கள் நம்புகிறீர்கள்.

    இப்படி இருபக்கங்கள். ஒருவர் மற்றவரின் நம்பிக்கை பொய் அல்லது ஏமாற்றுவேலை எனச் சொல்லின், அதன் பெயர் மதச்சண்டையாகும். தேவையற்ற ஒன்று.
    //
    சரிதான் கள்ளபிரான் அவர்களே,

    ஆனால் பிரச்னை என்னவென்றால், இந்த அறிவுரை முஸ்லீம்களிடமும் கிறிஸ்துவர்களிடமுமே முதலில் சொல்லப்படவேண்டும். இந்துக்களிடம் அல்ல.

    ஏனெனில், இந்துக்கள் எப்போதுமே இந்துமதத்திற்கு வெளியிலும் ஆன்மீகம் உண்டு என்று கருதுபவர்கள். ஏன் கிறிஸ்துவமும் இஸ்லாமும் அழித்த பாகனிஸத்திலும் ஆன்மீகம் உண்டு என்று கருதுப்வர்கள்.

    ஆனால், கிறிஸ்துவமே இறைவழி, மற்றதெல்லாம் சாத்தானின் வழி என்று கிறிஸ்துவர்கள் சொல்வதையும்,
    முஸ்லீம்கள் அல்லாவின் பாதையில் போர்புரிகிறார்கள் மற்றவர்கள் சாத்தானின் பாதையில் போர் புரிகிறார்கள் என்று சொல்வதையுமே கண்டிக்க வேண்டும்.
    பிரச்னை என்னவென்றால், இவர்களது மதப்புத்தகத்திலேயே இந்த வெறுப்பு வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இவைகள் எல்லாமே தனிநபர் கல்ட்கள், இறைவனுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனப்தற்கு இவையே சாட்சி.

    இந்த பிரபஞ்சத்தை படைத்த இறை இப்படியெல்லாம் பேசுமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். ஆனால், தங்கள் பிராண்டு கடவுளை விற்கும் இந்த வியாபாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிந்தனையெல்லாம் கிடையாதே? காசு அதிகாரம் இவையே இந்த கடவுள் வியாபாரிகளுக்கு குறிக்கோள்.

  106. Dear Mr. KaLLaPiraan,

    Now you are putting the onus on me to find out the reason as why you had chosen the name “கள்ளபிரான்”. How can I find the reason, for you chose a name, gentle man!

    I am a tamil, I never come across any name “கள்ளபிரான்”.

    But, I or for that matter any one can make out that one can keep the name “கள்ளபிரான்”, to scorn கண்ணபிரான்!

    Well, I dont charge you or blame you that you have kept the name to scorn Kannapiraan, thats why I had asked you the reason for chosing that particular name, which I had not heard so far any where any time!

    //You astonish me with your ignorance of Hindu religion as followed by Tamilians//

    I agree, I am a simple man, I am not an authority.

    But to explain the reason as why you keep that name, if at all you want to tell the reason, or “find”it, that has to be done by you.

    Of course, you need not answer my question. You can skip and leave.

    But you should note that these all were started as you expect others to give respect to religious personalties of other religions. You know that how I respect and adore even those personalities revered in other religions!

    I may be a naive, ignorant, I am just only asking for a clarification.

    I asked at you, because you have chosen the name. I am naive, ignorant but I am not that much naive to approach many pandits and ask each of them as why this gentleman had chosen the name “கள்ளபிரான்”.

    I keep the same question intact!

    If you want to answer the question, you can even do it now. Or if you want to refer any pandits, well , you can do it.

    You can skip the question!

    You can also tell me that “I need not clarify you, I would keep any name, my wish….!”.

  107. //ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிட்டாலே இந்து கடவுளை இழிவு செய்வது போல பெயரை வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள். இது சரியா?//
    திருச்சிக்காரரே,
    கள்ளபிரான் என்று பெயர் வைப்பது தவறா? குடலூரில் உள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் ஒரு ஆசிரியர் பெயர்கூட கள்ளபிரான். பின்னூட்டம் இடுபவரின் உண்மை பெயராககூட அது இருக்கலாம், இதற்க்கேல்லாமா ஒருவர் விளக்கம் தரவேண்டும்? குற்றஞ்சாட்ட ஒரு வரைமுறையே இல்லையா?

    அசோக்

  108. முனைவர் முத்துக்குமாரசாமியவர்களின் விரிவான பதிலைப் படித்து தெரியாத விஷயமெல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. வீரசைவத்துக்கும் சைவசித்தாந்ததுக்கும் இருக்கும் ஒற்றுமைகள், வேற்றுமைகள் பற்றி எனக்கு தெரியாது. எழுதியதற்கு நன்றி.

    நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

  109. வணக்கம்,

    அன்பார்ந்த நண்பர்களே இந்தகட்டுரை ஸ்ரீ மாணிக்கவாசகர் அவர்கள் இயற்றிய திரு வாசகத்தை போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசகத்திற்கு (தனக்கும்) ஒரு நற்பெயரை (வெளிநாட்டில்) ஏற்படுத்தி இருப்பினும் மாணிக்க வாசகரை பல இடங்களில் கீழ்ப்படுத்தி இருக்கிறார். அதன் உள்நோக்கம் என்ன என்பதுதான் ஆராயத்தக்கது,

    இந்து தர்மத்தினர் தர்மங்களை பாடல்களில் வெளிப்படுத்தினாலும் அவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாகி விடவில்லை என்பதையே போப் அவர்கள் எப்போதோ ஆணித்தரமாக அடிக்கல்நாட்டி விட்டார் இன்றைய போலி கிறிஸ்துவ சாதுக்களுக்கு என்பதுவே இக்கட்டுரையின் மீதான எனது கருத்து,

    மேலும் போப் அவர்கள் மாணிக்கவாசகரை ஒரு சிவனடியார் என்று நன்றாகவே அறிந்திருந்தும் பின் எப்படி தான் தங்கி இருந்த இடத்தில் மாணிக்கவாசகர் முழந்தாளிட்டு தொழுவது போன்ற ஒரு உணர்வை பெற்று இருந்திருக்கிறார். மாணிக்க வாசகர் மட்டுமல்லாது வள்ளுவரும் கிறிஸ்துவை அறிந்துள்ளனர் , கிறிஸ்துவின் வாழ்க்கையே அவர்களுக்கு மெய்யுணர்வு ஏற்ப்பட காரணமாயிருந்தது, என்பது போன்ற கருத்து. இவைகளெல்லாம் கிறிஸ்துவத்தின் ஒரு தொலை நோக்கு திட்டமாகவே நான் அறிகிறேன்.

    அன்பு நண்பர் திருச்சிக்காரர் அவர்களே நண்பர் ஸ்ரீ கள்ளபிரான் என்பவர் கள்ளழகரையும் , கண்ணபிரானையும், சேர்த்து பெயர் வைத்து இருப்பார் என வைத்துக் கொள்ளுங்களேன். அதை வைத்து ஏன் வீணாக இடத்தை நிரப்புகிறீர்கள். இன்னும் பல முக்கியமான விவாதங்கள் இருக்கும் அதற்க்கு உங்கள் சிந்தனையை செலவிடலாமே?. நன்றி.

  110. சரியாப்போச்சு. கள்ள்பிரானைத்தெரியாமல் ஒரு தமிழ் இந்துவா?

    திருவழுதி நாட்டை காரிமாறன் ஆண்டு வந்தார். அவர்கள் பாண்டியன் கீழ் வருவர். குறுநிலம்.

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுக்காவில் அப்பன் குளம் என்றொரு சிற்றூர். அவ்வூரும் அதைசுற்றியுள்ள ஊர்களும் திருவழுதி நாடெனப்படும்.

    ப்லவாண்டுகளாகியும் காரிமாறன் - உடையநங்கை தம்பதியருக்கு வாரிசு பிறக்கவில்லை. அவர்கள் குலதெய்வத்தை வேண்டினர். அத்தெய்வம், திருவழுதி நாட்டில் இருந்த ஊரான திருவைகுண்டம் உறையும் மகரனெடுங்குலைகாதர்.

    ஒரு ஆண் குழந்தை பிற்ந்தது. அக்குழந்தைக்கு நன்மாறன் எனத்திருநாமமிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், குழந்தை பேசவேண்டிய பருவம் வந்தும் பேசவில்லை. என்வே, திருவைகுண்டத்திற்குச் சென்ற குலதெய்வத்தை வேண்டி நின்றனர். அப்போது, அக்குழந்தை தவழ்ந்து சென்று அங்குள்ள புளியமரத்தில் சென்று ஏறி உட்கார்ந்து கொண்டு கணகளைமூடி தவத்தில் ஆழ்ந்து விட்டது. இஃது ஒரு தெய்வக்குழந்தை என அறிந்த பெற்றோர் அக்குழந்தையை மகரனெடுங்குழைக்காதருக்கே வ்ழங்கின்ர்.

    ப்லவாண்டுகளுக்குப் பின்னர் பக்கத்து ஊரான திருத்தொலை வில்லிமங்களம் என்றவூரைச்ச்சேர்ந்த அந்தணர் ஒருவர் தனக்காக ஒரு குருவைத்தேடி வடநாடு யாத்திரை செல்ல, அங்கே அவ்ர் ஒரு ஒளியைக்காண், அஃது அவரை அவர் பிறந்த ஊருக்கருகில் உள்ள திருவைகுண்டத்துக்கே அழைத்துக்கொண்டு விட, அவர் அக்குழந்தையைக் (இப்போது பெரிய்வர) கண்டார். அவரை சோதித்து, இவரே நான் தேடிய் குரு என்று கண்டார். இவர் கேட்ட கேள்வியும் குரு சொன்ன பதிலும் வெகுபிரசித்தம்.

    குரு-சிஷ்யர் கதை நீண்ட ஒன்றானதால், விரிவஞ்சி விட்லாயிற்று. பெயர்கள் மட்டும் தருகிறேன்.

    குரு - நம்மாழவார்
    சிஷயன் - மதுரகவியாழ்வார்.

    கள்ளபிரான் இங்கே எப்படி வந்தார்? திருவைகுண்டத்துப்பெருமாளுக்கு இன்னொரு திருநாமமே கள்ளபிரான் ஆகும்.

    ஒரு நாள், ஒரு திருடனை ஊர்மக்கள் விரட்டிக்கொண்டு வர, அவன் மகரனெடுங்குழைக்காதரின் பின் ஒளிந்து கொண்டான்.

    ‘என்னப்பா…ஏன் என் பின்னால் ?..’

    ‘என்னை விரட்டிக்கொண்டு வருகிறார்கள். காப்பாத்து’

    மக்கள் வந்து தேடினார்கள். அவர்க்ள் கண்ணுக்கு கள்ளன் தெரிய்வில்லை. பின்னர் சென்று விட்டனர்.

    ‘வெளியே வா. என்னிடம் வந்து காப்பாத்து என்ற்தனால், என் பக்தன் நீ.’

    ‘என்னைக் காப்பாத்தின சாமி..நான் எப்பொது நுழைந்தேனோ அப்போது உனக்கு நான் அடிமை. என் சாமி நீயே; என கள்வுத்தொழிலை விட்டு ஆன்மிகனெறியில் நின்றான் அக்கள்ளன்.

    அன்று தொட்டு, அவ்வூர்மக்கள் திருமாலை, கள்ள்பிரான் என வழங்களாயினர். கள்ளன ஒருவனின் தெய்வம்.

    (இக்கதை வேறுவிதமாகவும் வழங்கும். அது வருமாறு:

    காலதூஷகன் என்ற சோரன் (திருடன்) தான் திருடிய பொருளில் பாதி வைகுண்டநாதனுக்கு சமர்ப்பித்ததாகவும், ஒருசமயம் அரண்மனையில் திருடுகையில் பிடிக்கப்பட்டு வைகுண்டநாதனை ‘காப்பாத்து’ என இறைஞ்சி வேண்டிக்கொள்ள், பெருமாள் திருடன் வேடம் பூண்டு அரசனுக்கு த்ததுவங்களை உபதேசித்து, காலதூஷன் திருடன் அல்ல; யோகி என்று அரசன் நினைக்க, பெருமாள் திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாக்கி அரசனின் வேண்டுகோளின்படி, ‘கள்ளபிரான்’ என்ற திருநாமம் பெற்றார்.

    கள்ளபிரான், வைகுண்டநாதன், மகரனெடுங்குழைகாதர் (காதணிகள் பெரியதாக இருக்கும்) என்பதெல்லாம் திருநாமங்கள்.

    மூலவர்: ஷிரிவைகுண்டநாதன், கள்ளபிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
    தாயார்: வைகுந்தவல்லி, பூதேவி (இரண்டு தனிக்கோவில் நாச்சியார்கள்)
    தீர்த்தம்: தாம்பிரபருணி ஆறு
    விமானம்: சந்த்ர விமானம்

    ஆற்றங்கரையில் உள்ளது.

    (இத்தலத்தில் ஒரு நாயும் கள்ளபிரானின் திருவருளைப்பெற்று வீடு பேறடைந்ததாக ஸ்தல் வரலாறு).

    ஊர்மக்களுக்கு இதுவே ரொம்ப பிடித்தபெயராகும். என்வே, விளம்பரங்க்ள் இப்படித்தான் வரும்:

    ‘கள்ளபிரான் தேரோட்டம் நாளை தொடங்கும். அனைவரும் வருக்’
    ‘கள்ளபிரான் கோயிலில் சிறப்பு பூசை, நம்மாழ்வார் திருநடசத்த்ரத்தையொட்டி திரளாய் வருக்!

    இப்படி ஒரு விசேடமான பெயராகும் இது.

    This is a very symbolic story. The theme is egalitarianism. To anyone, irrespective of his station in life, however low that he may be in the reckoning of the world, he is not at all rejected in the eyes of the God. He is welcome always and he will be taken in. He will reach his Lotus Feet. இதுதான் மையக்கரு இக்கதையின்.

    இக்கரு மற்ற் பாகவதப்புராணத்தில் வரும் நிகழ்ச்சிகளிலும் வரும்.

    இப்போது புரிந்ததா திருச்சியாரே?

  111. நன்றி முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களே.

  112. திருச்சி காரன் அவர்களுக்கு
    கள்ள பிரான் என்பது ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுடைய திரு நாமம். ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம் நவ திருப்பதியில் ஒன்று. திரு கள்ள பிரான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவராக இருக்க கூடும். ஆழ்வார்கள் தங்களுடைய பாசுரங்களில் எம்பெருமானை கள்வா என்றும் என் உள்ளங்கவர் கள்வா என்றும் அழைப்பதுண்டு . ஆகையால் இவர் கிருஷ்ணா பரமாத்மாவை கேலி செய்வதாக எண்ணுதல் தவறு.

    Refer to this link for more information:
    http://home.att.net/~srivai/srivai.htm

  113. ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் பெயர்:கள்ளப்பிரான்
    திருவள்ளுவரின் சமயம் பற்றி ஜெயமோகன் தன்னுடைய blog இல் எழுதியிருக்கிறார்(அவர் சமணர் என்று) அதற்க்கு ஜடாயுவின் மறுமொழியும் (அவர் ஹிந்து என்று) உள்ளது.இதைத்தவிர இன்னொரு அன்பர் தன்னுடைய blog இல் திருக்குறளுக்கு சமண விளக்கங்கள் எழுதி வருகிறார். அவருடைய தளத்தின் பெயரை ஜெயமோகனின் தளத்திலேயே காணலாம்.

  114. இறைவனைக் கள்ளன் என்று அழைக்கும் வழக்கம் சைவத்திலும் உண்டு. முதல் திருமுறையே சிவனை ‘என்னுள்ளங்கவர் கள்வன்” என்று தொடங்குகின்றது, திருமுறைகளில் சிவனைக் கள்ளன் எனக் கொண்டாடும் இடங்கள் பலவுண்டு. அவை எல்லம் இலக்கியச் சுவை மிகுந்த இடங்கள். திருஞானசம்பந்தர் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் “சிறுத்தொண்டர் உள்ள மெல்லா முள்கி நின்றாங்கே யுடனாடும் கள்ளம் வல்லான் காதல் செய்கோவில் கழுக்குன்றே” என இறைவனைக் ‘கள்ளம் வல்லான்’ எனப்பாடுகின்றார். ஸ்றீ ருத்திர்மும் சிவனை “தஸ்கராணாம் பதயே நம:” எனப் போற்றுகின்றது. இதற்குத் ‘திருடர்களின் தலைவனே போற்றி என்பது பொருள்.
    கள்வனின் இயல்பு தன்னை மறைத்துக் கொள்வது. உயிர் என்று உண்டோ அன்றே இறைவன் உயிரில் கலந்து நின்று அதனை உயர்த்தும் பணியை மேற்கொண்டுள்ளான். அதனை உயிர் அறிவதில்லை. அப்பர் பெருமான் ஒரு பாடலில்,, “யானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” என்று பாடுகின்றார். இறைவனின் இயல்பினை யாராலும் முழுதுமாக அறிய முடியாது. அறிந்த அளவுக்கும் அப்பால் அவ்ன் நழுவி விடுகின்றான். அத்னால் அவனை மணிவாசகர் ‘ஒளிக்கும் சோரன்”(கள்வன்) என்கிறார்.

    இந்தப் பொருள்களெல்லாம் வைணவர்களின் அனுபவப் பொருளுக்கு இணையாகாது. வெண்ணெய் திருடி ஆய்சியர்கள் கையில் மத்தினால் மொத்துண்டு நைந்துபோன தயிர்கடையும் கயிற்றினால் மரவுரலில் கட்டுண்டு கிடக்கும் மாயக் கண்ணனுக்கு உரிய பெயர் கள்ளப்பிரான் என்பது.
    பொருளற்ற பெயர்களைத் தங்கள் மக்களுக்குச் சூட்டி மகிழும் இக்காலத் தமிழ்ர்களுக்கு மாறாகக் “கள்ளப்பிரான்” என்ற பக்தி உணர்வு பீறிடெழும் பெயரைச் சூட்டி மகிழ்ந்த அவரின் பெற்றோருக்கு என் வணக்கங்கள்.

  115. நல்லது. விளக்கம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    எனக்கு யாரயும் பழி கூற வேண்டும் என்று எண்ணம் கிடையாது. அதனால் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேனே தவிர, குற்றம் சாட்டவில்லை என்பதையும் தெளிவாக்குகிறேன்.

    //Well, I dont charge you or blame you that you have kept the name to scorn Kannapiraan, thats why I had asked you the reason for chosing that particular name//

    கண்ணனை உள்ளம் கவர் கள்வன் என்று அழைப்பது மட்டும் அல்ல, ஆயர் பாடியில் விளையாட்டாக எல்லோர் வீட்டிலும் வெண்ணை கவர்வதாகவும் கூறுவது யாவரும் அறிந்ததே.

    ஆனால் கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை அவரை வணங்கும் அவரது பக்தர்களுக்கு மட்டுமே உண்டு.

    நான் முன்பு எழுதியதை மீண்டும் மேற்க்கோள் காட்டுகிறேன்.

    //கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். அப்படி இல்லா விட்டால் நீங்கள் பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி மகிழ்வதாகவே கருத முடியும்.

    பேருந்திலே பயணம் செய்யும் போது அருகிலே அமர்ந்து இருப்பவரை சற்று தள்ளி அமரச் சொல்ல விரும்பினால், நாம் “பிளீஸ், கொஞ்சம் தள்ளி ஒக்கார முடியுமா?” என்று கேட்போம். ஆனால் அருகில் இருப்பவர் நம்முடைய நெருங்கிய தோழன், பள்ளித் தோழன் என்றால் அவனிடம் நாம், “நாயே, தள்ளி ஒக்காருடா!” என்று கூட சொல்லலாம். ஆனால் நமக்கு தோழர் அல்லாத ஒருவரிடம் இந்த வார்த்தையை பயன் படுத்தினால் அது வரம்பு மீறியதாகவே ஆகும். //

    //கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். //

    திருவாளர் கள்ளபிரான் நாம் கேட்ட போதே, “ஆமாம், நான் கண்ணபிரானை மனப் பூர்வமாக வழி படுபவன், கண்ணன் என் உள்ளங்கவர் கள்வன்” என்று கூறியிருந்தால், நாம் அவரைப் பாராட்டியிருப்போம். அல்லது என்னுடைய இயற்பெயரே கள்ள பிரான் என்று கூறியிருந்தாலும் நாம் அவரைப் பாராட்டியிருப்போம்.

    //Madhavan
    13 October 2009 at 1:19 am
    திருச்சி காரன் அவர்களுக்கு
    கள்ள பிரான் என்பது ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுடைய திரு நாமம். ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம் நவ திருப்பதியில் ஒன்று. திரு கள்ள பிரான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவராக இருக்க கூடும்//

    திருவாளர் Madhavan அவர்களே,

    எந்த ஒரு வைஷ்ணவரும் கண்ணனை நான் மனமார வணங்குகிறேன் என்று கூறத் தயங்க வேண்டிய அவசியமில்லை. சரியா?

    //அன்பு நண்பர் திருச்சிக்காரர் அவர்களே நண்பர் ஸ்ரீ கள்ளபிரான் என்பவர் கள்ளழகரையும் , கண்ணபிரானையும், சேர்த்து பெயர் வைத்து இருப்பார் என வைத்துக் கொள்ளுங்களேன். அதை வைத்து ஏன் வீணாக இடத்தை நிரப்புகிறீர்கள்//

    அன்பு நண்பர் பாஸ்கர் அவர்களே,

    நான் ஏன் இந்த அளவுக்கு எழுதுகிறேன் என்பதை அன்பு நண்பர் பாஸ்கர் புரிந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். சுவி செசங்கள் இதை முன்னுதாரணமாய் வைத்து எல்லா இந்துக் கடவுள்களையும் இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்.

    கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு.

    வக்காலத்து வாங்கும் சுவி சேசங்களுக்கு நாம் தெரிவிப்பது என்ன வென்றால், இதை போலவே சுவி செசில் கூறப் பட்டுள்ளவர்கள் பற்றியும் எழுத முடியும் என்பதை தெரிவிக்கிறேன்.

  116. முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி,
    திரு.கள்ளபிரானின் வேண்டுகோளுக்கு நீங்கள் அளித்த விரிவான பதிலுக்கு நன்றி. மேலும் பலர் பல கோணங்களில் அந்த பெயரினைப்பற்றி கூறினர். இந்த ஆரோக்கியமான விவாதம் நன்றாக உள்ளது. சிலபல விஷயங்களை அறிந்துகொண்டோம் என்ற திருப்தியும் உள்ளது.
    திருச்சிக்காரரும், இந்த முறையில் நடந்துகொண்டால் நலமாயிருக்கும். அதைவிடுத்து, அனைவரிடமும் மல்லுக்கு நிற்பதும், சட்டங்கள் போடுவதும், மிரட்டல் விடுவதும் அழகல்ல.
    நன்றி,
    அசோக்

  117. //கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். அப்படி இல்லா விட்டால் நீங்கள் பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி மகிழ்வதாகவே கருத முடியும்.//

    இது தவறான கண்ணோட்டம். தலிபானித்தனம்.

    யார் கண்ணனின் பக்தர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது? தங்களை அப்படி பிறர் அறியும்படி செய்வது ஒரு போலித்தனமாக அல்லவா? பக்தி என்பது தனிப்பட்ட விடயமும் அல்லவா?

    அப்படியே நாம் சிலரையோ அல்லது பலரையோ அவர்கள் சொல்லாமல் அறியுமுடியுமாயின் நன்று. இல்லையெனில்…?

    மதம்சாரா அறிஞர்களும் கடவுளரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். அனைவரும் பக்தர்கள் மனத்தைப்புண்படுத்தும் நோக்கத்தில் எழுதுவது இல்லை. இந்துமதம் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இசுலாம் இப்படி பிறர் தலையிடுவதைக் கண்டிக்கிறது.

    இவர்கள்தான் எங்கள் கடவுளின் திருநாமங்களைச் சொல்லவேண்டும். மற்றார் கூடாது என்பதெல்லாம் தலிபானித்தனமாகும்.

    ஏன், கிறுத்துவப்பெயரையும் வைத்துக்கொண்டே இந்துவாக இருக்க முடியுமா?
    அஃது இந்துமதத்தை அவமானமும் இந்துக்களின் மனங்களை புண்படுத்தவும் செய்யுமா? பதில்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

    மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் ஒரு பேராசிரியர். பெயர்: ஜோசப். இவர் பிறப்பால் கிறுத்துவர். இவர் தமிழ் சமய இலக்கியங்களை ஆராயும்பொழுது, ஆழ்வார்களின் பாசுராங்களைப் உற்றுப்படிக்க நேர்ந்தது.

    அவைகளைப்படிக்கும் எவருக்கும் இது தெரியும். ஆழ்வார்களின் திருமால் காதல் படிப்போரையும் தொற்றிக்கொள்ளும்.

    ஜோசப் தன்னை ஆழ்வார்களின் காலடியிலே சமர்ப்பிக்கும்படி ஆயிற்று. ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் என வைணவர்கள் ஆராதனை செய்வர். இவரும் செய்ய ஆரம்பித்தார். ஆழ்வார்களுக்குப்போனால், ஆழ்வார்களின் சிந்தாந்தத்தை வழியெடுத்துசென்ற ஆச்சாரியர்களும் வருவார்கள் அன்றோ! அவர்களையும் கண்டு, பின்னர் இராமனுஜரின் சிரிவைணவத்தைக் கண்டு முழு வைணவரானார் பேரா. ஜோசப்.

    ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் கருத்துகளையும், வாழ்வு, தொண்டுகளையும், புகழையும் பரப்பும் வண்ணம் பலவிடங்களில் எடுத்துச்சொன்னார். அதுவே தன் கடப்பணி எனக்கொண்டார்.

    பின்னர் சிரிரங்கம் ஜீயரைச் சென்று தன் வைணவத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட, அவர் ஏற்கனவே இவரைப்பற்றி நன்கு அறிந்தபடியாலும், இவரின் எழுத்துகளைப்படித்திருந்ததாலும், இவரின் வைணவபக்தியை போற்றினார். தனக்கு ஒரு வைணவ நாமத்தை அருளுமாறு கேட்டார் பேராசிரியர்,

    ‘ஜோசப் ..என்று உங்கள் பெற்றோரிட்ட பெயரே இருக்கட்டும். உங்கள் வைணவ சேவையைத் தொடருங்கள்’ என்று சொல்லி, ‘சுடராழி’ என்னும் வைணவப்பட்டத்தை இவருக்கு அணிசெய்ய, இன்று, ‘சுடராழி ஜோசப்’ என்றே பேராசிரியர் வைணவர்களுக்கு அறியப்படுகிறார்.

    இவர் மனையாளும் ஒரு தமிழ்ப்பேராசிரியை. அவர் பெயர் பாத்திமா.தன் உறவுக்குள்ளே பெற்றோர் பெண்ணைத்தேட, பேராசிரியர் பெற்றோருக்குச் சொன்னது: ‘எவராயினும் சரி. ஆனால், ஆழ்வார்களிடம் ஈடுபாடு உடைய்வராயிருக்கவேண்டும்’ எனச் சொல்ல, பாத்திமா வந்தார் ஆழவார்களை மனதில் சுமந்தபடி. பிறப்பால் கிறுத்துவர்கள். இன்று மனத்தாலும் செயலாலும் வைணவர்கள்.

    இப்படி பலபல கதைகள் வாழ்க்கையில்.

  118. //தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுக்காவில் அப்பன் குளம் என்றொரு சிற்றூர். அவ்வூரும் அதைசுற்றியுள்ள ஊர்களும் திருவழுதி நாடெனப்படும்.//

    நம்மாழ்வாரின் திருப்பெற்றோரின் சமாதிகள் இன்றும் அப்பன்குளத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    நம்மாழ்வார் சென்றமர்ந்த புளியமரம் இன்றும் நிற்கிறது. அல்லது அதன் தொடர்ச்சி இன்னும் உள்ளது.

    அப்புளியமரம் ‘புளியாழ்வார்’ என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. வைகுண்டநாதரின் கோயில் முகப்பிலே உள்ளது. அதைச்சுற்றி தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டு, குறிப்பட்ட வேளைகளின் ஆராதனை நடக்கிறது.

    திரு மாதவன் குறிப்பிட்ட நவதிருப்பதிகள் 25 மைல்கள் சுற்றளவில் திருவையில் இருக்கின்றன. அனைத்தும் நம்மாழ்வார் மங்களாசாசனை (பாடல் பெற்ற) செய்யப்பட்டவை.

    மதுரகவியாழ்வார் கேட்ட கேள்வியையும், அதற்கு நம்மாழ்வார் சொன்ன பதிலையும் திருச்சிக்காரன் மதுரகவியாழ்வாரின் திருச்சரிதத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

  119. //ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய தேசத்தில்//

    ஆம்..108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ வைகுண்டமும் ஒன்று.

    நவதிருப்பதிகள் எனவழைக்கப்படும் கோயில்கள் அனைத்தும் 108ல் அடங்கும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யபப்ட்ட கோயில்களே திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்பூவலகில் இல்லா, பரமபதம், வைகுண்டத்தையும் பாடியிருக்கிறார்கள். அவையும் 108ல் வரும்.

    ஆழ்வார்கள் செல்லவியலா, மங்களாசாசனம் செய்யா திருமால் கோயில்களும் உள. அவற்றிலும் பல மிகவும் அறியப்பட்ட புகழ்வாய்ந்தவை உள (எ.டு. திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முஷணம், குணசீலம்.)

  120. The Christians has been so vocal that These Foriegn Padris has done great service to Tamil and Sanskrit by Translating (Actually Mistranslating) them.

    The History behind is a great Cunning one.’

    The Germans started translating in late 18th Century. After seeing that God Krishna Story had many features that have been adopted in New Testament Gospels and the Rejected Gospels. The Missionaries started saying that Christianity entered in to India in 3rd Cen. by Manichaeism and the gospel stories were incorporated in Mahabaratha and Bagavatha, but as the Proof started and Dating of Mahabaratha and Bagavatha to earlier than 600 BCE, this was stopped.

    Later When Sir.Raja Ram Mohan Rai, who knew Sanskrit, learnt Greek, Hebrew and Latin and took on writing about truths of Christianity, the Church felt by converting RamMohan they can get total India converted.

    That was the time British Baptist Church has entered India as Seerampoore Missionary and One Rev. ADAMS, British Pastor known for great Biblical Knowledge deputed to Shaddow RamMohan and they discussed on various subjects and the RESULT.- Rev.ADAMS WAS CONVERTED TO BRahmo Samaj.

    British East India Company and British Govt and Church felt that knowledge of Hinduism is a must and that Translation was must.

    A Colonel.Boden, who had worked in India and Plundered huge wealth, after retirement back in London set up a Trust in Oxford University for Sanskrit. Brtish Church -selected a Non British Citizen-Non British Baptist Christian Maxmuller to do the Veda Translation.
    Swami Dayananda and others took on his mis translations.

    A Great book- Maxmuller -a Masquadrer by Brahmm datt Bharti is a Thouroughly researched one with a copy of Colonel Boden will etc.,

    How did the Bristish Missionaries view these Translaters -

    “I am of the special Obligation to the volume of Monier Williams, Mitchell, Hopkin, Wilson,… Caldwell, Masmuller… and others too numerous to mention.”
    Page-196, The Arsenal of Christian Soldiers in India; by Rev.J.F.Stacker.

  121. நம்மாழ்வாரின் புளிய மரம் இருப்பது ஸ்ரிவைகுண்டத்திலா அல்லது ஆழ்வார் திருநகரியிலா?
    குணசீலம் திருச்சிக்குப பக்கத்திலும் ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்திர்க்குப் பக்கத்திலும் உள்ளன.

  122. திருவாளர் கள்ளபிரான் அவர்களே,

    கடவுள் கள்ளபிரானைப் பற்றியும், ஸ்ரீவைகுண்டம் சேத்திரம் பற்றியும் இவ்வளவு விளக்கங்களைக் கூறியதற்கு நன்றி.

    //கண்ணனைக் கள்வன் என்று அழைக்கும் உரிமை கண்ணனின் பகதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே ஒன்று நீங்கள் கண்ணனை வணங்கி வழிபாடு செய்பவரா என்பதை உறுதிப் படுத்துங்கள். அப்படி இல்லா விட்டால் நீங்கள் பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி மகிழ்வதாகவே கருத முடியும்.//

    இது தவறான கண்ணோட்டம். தலிபானித்தனம்.//

    ஆனால் நான் கூறியது தலிபானியத் தனம் அல்ல. நான் யாரையும் என் கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை!

    நான் யாரிடமும் என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்ற கடவுள்கள் எல்லாம் வெறும் கல்லுகள் என்று கூறவில்லை.

    என் கடவுளை கிண்டல் செய்வது போன்ற பெயர்களை வைத்துக் கொள்வது சரியல்ல, அப்படி செய்வதை தவிருங்கள் என்று தான் கூறினேன்.

    இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துக் கடவுள்களின் பெயரை புனைப் பெயராக வைத்துக் கொண்டு எழுதும்போது, இந்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளா வண்ணம் , அவர்கள் மனம் புண்படா வண்ணம் ஒரு பெயரை வைத்துக் கொள்வதுதான் பண்பாடு, நாகரீகம். நான் அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.

    இது தவறான கண்ணோட்டமா?

    இந்துக்கள் அல்லாதவர் கூட கண்ணனை மதித்து வழிபாடு செய்பவராக இருந்தால் அவர்கள் உரிமையோடு பேசலாம்.

    //ஏன், கிறுத்துவப்பெயரையும் வைத்துக்கொண்டே இந்துவாக இருக்க முடியுமா?
    அஃது இந்துமதத்தை அவமானமும் இந்துக்களின் மனங்களை புண்படுத்தவும் செய்யுமா? பதில்களுக்கு தொடர்ந்து படியுங்கள்

    ஜோசப் ..என்று உங்கள் பெற்றோரிட்ட பெயரே இருக்கட்டும். உங்கள் வைணவ சேவையைத் தொடருங்கள்’ என்று சொல்லி, ‘சுடராழி’ என்னும் வைணவப்பட்டத்தை இவருக்கு அணிசெய்ய, இன்று, ‘சுடராழி ஜோசப்’ என்றே பேராசிரியர் வைணவர்களுக்கு அறியப்படுகிறார்.//

    அதனால் தான் நான் முதலிலேயே கேட்டேன், நீங்கள் ஏன் அந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று?

    நீங்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கள்ளபிரானின் பால் அன்பு கொண்ட அடியவர் என்பதை விளக்கியிருந்தால் நான் அடியார்க்கு அடியார் என்ற வகையிலே உங்களையும் வணங்கி விட்டு சென்று இருப்பேனே!

    நான் கூட இந்து தெய்வங்களை மனமார வணங்கி வழிபடும் இந்துதான். அதே நேரம் நான் இயேசு கிரிச்துவையும், மேரி மாதவையும் மதித்து வணங்குபவன் என்பதையும் பலமுறை கூறி உள்ளேன்.

    அதே போல நீங்களும், அடியார் ‘சுடராழி ஜோசப்’ போல ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கள்ளபிரானின் பால் அன்பு கொண்ட அடியவர் என்பதை விளக்கியிருந்தால் நான் அடியார்க்கு அடியார் என்ற வகையிலே உங்களையும் வணங்கி விட்டு சென்று இருப்பேனே!

    கடவுள் கள்ளபிரானைப் பற்றியும், ஸ்ரீவைகுண்டம் சேத்திரம் பற்றியும் இவ்வளவு விளக்கங்களைக் கூறியதற்கு மீண்டும் நன்றி.

  123. திருச்சிக்காரர் கேட்டதுமே, கள்ளபிரான் விளக்கியிருந்தால் இத்தனை விவாதம் வந்திருக்காது. ஆனால், கட்டுரை ஆசிரியரை ஒரு நீண்ட விளக்கம் அளிக்கச் செய்த வகையில், அனைத்தும் நன்மைக்கே. திருவைகுண்டத்துக் க‌ள்ளபிரானைப் ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளும், குரு நம‌ச்சிவாய‌ரின், சிவ‌ப்பிர‌காச‌ரின் தொண்டு ப‌ற்றியும் அறிந்துகொண்டோம்.

    திருச்சிக்காரருக்கு, கள்வனும் கள்ளனும் எப்போதும் ஒன்றல்ல, சிறு வித்தியாசம் உண்டு.

    கள்வன் கவர்ந்து செல்பவன், திருடன்
    கள்ளன் குறும்பன், கபட நாடக வேடதாரி.

  124. Dear Hindus,
    Please avoid such bigoted Christians. Let them shout until they get mad, and will be forced to stop later. Among the Nayanmars, the famous-four the Naalvar, except Appar, other three, i.e., Gnanasambandar, Manikkavasagar and Sundaramoorthy Nayanar all were Brahmins (sorry sadhi pidithha aariya brahmanargal; as per Christian missionaries like Daniel and others). They also say Aryan Brahmins had spoilt the so-called Dravidian Shaivite religion, which is another blunder. Study the Atharva Veda, it is full of Tantra! The most famous hymn of Shaivites, namely Shri Rudram occurs in the Yajur Veda (the so-called aariya vedham as you say). Hence, if Aryans were non-Shaivites, then do you mean to say that nearly 20-25 of the total 63 Nayanmars were not Shaivites? Even a 3rd standard child will laught at you man! Study Thirukkural properly, it is really a barstardly thesis to say Valluvar was a Christian. As evidence let me tell you Kurals no 10, 25, 167 and 1103 mention rebirth, Lord Indra, Goddess Lakshmi and Lord Shri Hari. Whom are you people fooling man? Did you think we are UKG students with lollypops in our mouth? The 85 year old Arunai Vadivel Mudaliar has challenged your Deivanayagam for a debate on Thirukkural, which your fraud has conveniently escaped!

  125. //நம்மாழ்வாரின் புளிய மரம் இருப்பது ஸ்ரிவைகுண்டத்திலா அல்லது ஆழ்வார் திருநகரியிலா?
    குணசீலம் திருச்சிக்குப பக்கத்திலும் ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்திர்க்குப் பக்கத்திலும் உள்ளன.// கேட்டவர் திரு கிரி.

    நவதிருப்பதிகளில் முதலாக வருவது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள கடவுளின் திருநாமமே கள்ளபிரான். நான் சொன்ன ஸ்தலவரலாறு இக்கோயிலுக்கே.

    புளியாழ்வார் இருப்பது ஆழ்வார் திருநகரி. இது ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அரைமணி நேரப்பயணத்தில் வரும். இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஆதிநாதர். இவரே நம்மாழ்வாரின் குலத்தாருக்கு குலதெய்வம். நம்மாழ்வாரைப்பற்றி நான் எழுதியவை இங்குதான் நடந்தது. நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தது இங்குதான். இங்குதான் ‘உறங்காப்புளி’ எனவழைக்கப்படும் ‘புளியாழ்வார்’ இருக்கிறார்.

    பேருந்து நவதிருப்பதிகளை இணைக்காது. ஏனெனின், அவற்றுள் ஒரு சிலவே பேருந்துச்சாலையில் வரும். மற்றவைகளுக்கு சொந்தக்காரில்தான் போகவேண்டும். ஒருகாலத்தில் ஒற்றையடிச்சாலகள். இன்று ஒற்றையடி தார்ச்சாலைகள். எல்லாமே ஒரு சிலமைல்கள் தூரமே.

    முதல் திருப்பதி இருக்குமிடமே, Srivaikuntam town proper. இங்குதான் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம், முதலியன உள. நவதிருப்பதிகள் இருப்பினும் ஊர்கூடி தேரிழுக்கும் போன்ற பெரியபெரிய விழாக்கள் முதல் திருப்பதியில்தான் நடக்கும். கள்ளபிரான் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது.

    அமைதியான எளிமையான ஊர். தாமிரபரணி ஊருக்குள்ளேயே ஓடி வெளி வந்து தூத்துக்குடி அருகே கடலில் கலக்கும். ஆற்றின் நீர் தேக்கப்பட்டு ஊரெங்கும் நெல் வயல்கள். விவசாயமே மக்கள் தொழில்.

    தேங்காய் சீனிவாசன் பிறந்து வளர்ந்தவூர். (இந்த்ச்செய்தி இண்ட்ரஸ்டா இருக்கா)

    சைவர்களுக்கு: குமரகுருபரர் திருஅவதாரம் செய்தவூர். ஆனால், அவர்கள் சைவர்கள் அல்லவா! என்வே அவருக்கு பெரும் கொல்லைனோய் (வயிற்றுவலி) சிறுபிராயத்தில் ஏற்பட திருச்செந்தூர் முருகன் கோயிலில் சென்று வேண்ட அன்னோய் தீர்க்கப்பட்டு முருகன்மீது பெருங்காதல் கொண்டவரானார் குமரகுருபரர். குமரகுரபரர் நாமத்தில் ஒரு அரசுக்கலைக்க்ல்லூரி இங்கு உண்டு.

    ஸ்ரீவைகுண்டத்திலுருந்து முக்கால் மணினேரப்பயணத்தில் திருச்செந்தூர் வரும். ஒரு மணினேரப்பயணத்தில் தூத்துக்குடி வரும். தூத்துக்குடி மாவட்டம். ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா.

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசேசமான திருவிழா விசாகத்திருவிழா. வைகாசி மாதம் வரும். அதே விசாக நடசத்திரம் நம்மாழ்வாரின் நடசத்திரம். அங்கு அவ்விழா ஜே ஜே என நடக்க, இங்கு நம்மாழ்வாருக்கு 10 நாட்கள் விழா நடக்கும். அன்னொட்களின், யார் வருவார்கள் ஆழ்வார் திருநகரிக்கு நம்மாழ்வாரைப்பார்க்க? ஆம். நவ திருப்பதி பெருமாள்கள் அனைவரும் தததம் சப்பரங்களில் ஆழ்வார் திருநகரிக்கு வருவார்கள். இது விழாவின் உச்சகட்டம்.

    இவ்வூரிலிருந்து அருகில் வருவதுதான் நான்குனேரி. இங்கு பக்கத்திலதான் திருக்குறுங்குடி கோயில் இருக்கிறது.. இது 108ல் ஒன்று. இக்கோயில் பெருமாள் வடிவழகிய நம்பி. திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் திவ்யசரிதங்களில் பெரிய இடம் இக்கோயிலுக்குத்தான். இப்பெருமாளுக்கே, பராங்குசநாயகியாய் நம்மாழ்வார் காதல் கடிதம் எழுதினார் (தமிழ் இலக்கண மரபின் படி - மடல் ஊர்தல் என்று பெயர்). திருமங்கையாழ்வார் தன் இறுதிக்காலத்தில் இங்கு வந்து திருநாடு அலங்கரித்தார். (passed away. அவர் சமாதி இங்குள்ளது.

    இக்கோயில் தலித்துகள் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப்பிடித்தது. அவர்களே இக்கோயிலை முதலில் அமைத்தனர் என்று நாம் நம்பவேண்டியதாயிருக்கிறது. காரணம். நாம் இன்று சொல்லும் அனைத்து ஆழ்வார்களில் காலத்திற்கு முன், ஆதிகாலத்தில் நம்பாடுவான் ஆழ்வார் என்ற தலித்து சரிதம் இக்கோயிலின் ஸ்தல்புராணமாகும். அவருக்காக இக்கோயில் கொடிமரத்தை விலக்கி தன்னைக்காட்டினார் வடிவழகிய நம்பி. எனவே இக்கொடிமரம் இன்றும் அப்படியே விலகி, மூலவரைக்காட்டும்.

    இன்னும் ஒரு ஆதிகாலத்தலித்தும் இங்குண்டு. ஆனால், இன்று இவ்வளவு போதும் ..

  126. //அவருக்காக இக்கோயில் கொடிமரத்தை விலக்கி தன்னைக்காட்டினார் வடிவழகிய நம்பி. //

    அக்கால வழக்கின்படி, அவர் ஊருக்குள் நுழைய முடியாது. இரவில் ஊர் உறங்கியபின் வந்து கோயிலின் முன் நின்று பாசுரங்கள் பாடி, ஊர் விழிக்குமுன், ஊரை விட்டுபோய் விடுவார். அவர் உள்ளே வராததால், கொடிமரத்தை விலக்கித் தன்னைக்காட்டனார் வடிவழகியநம்பி.

  127. ஆஹா, இப்போது திரு. கள்ள பிரான் எழுவது எவ்வளவு சிறப்பாக உள்ளது. பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன்.

  128. நன்றி திரு கள்ளப்பிரான் அவர்களே! நவ திருப்பதிகளையும் திருச்செந்தூரையும் வானமாமலையையும் தரிசித்திருக்கிறேன்.ஆனால் திருக்குறுங்குடி சென்றதில்லை. அத்திருத்தலத்தைப் பற்றி கூறியதற்கும் மற்றத்தலங்களின் தரிசனத்தை மீண்டும் நினைவு படுத்தியதற்கும் நன்றி.

  129. இன்று கொஞசம் எழுதவேண்டியதாயிற்று.

    ஆழ்வாரி திருநகரிக்கு ஒன்பது திருப்பதிகள் பெருமாள்கள் வருவதாக எழுதியதில் ‘நம்மாழ்வாரைப்பார்க்க’ என்று எழுதி விட்டேன்.

    அஃது இப்படி இருக்கவேண்டும்.

    நம்மாழ்வாருக்குத் தரிசன்ம் கொடுக்க.

    ——————————————————————-

    மடல் ஊர்தல் என்பதை தமிழ் இல்க்கணமரபின்படி என்றெழுதிவிட்டேன். அஃது இப்படி இருக்க வேண்டும்.

    தமிழ் இலக்கியமரபின் படி.

    =====================================================================

    காதலிக்கு காதல் கடிதம் வரைவதே ‘மடல் ஊர்தல்’ ஆகும். நம்மாழ்வார் ப்ராங்குசநாயகியாகவும், திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகவும் தங்களைப் பெண்ணாக பாவனை செய்துகொண்டு எழுதியவை.

    காதலி காதல் கடிதம் வரைவதா? எனக்கேட்டால் தவறில்லை.

    திருமாலுக்காக, இந்தவிரு ஆழ்வார்களும் தமிழ் இல்க்கியமரபை மீறினார்கள் எனச்சொல்லப்படுகிறது.

    நம்மாழ்வாரின் இன்னொரு திருநாமம் ப்ராங்குசன்.
    திருமங்காயாழ்வாரின் இன்னொரு திருநாமம் பரகாலன். அவை பெண்பாலாக் மேற்கூறிய இருபெயர்களாக திரிந்தன.

    திருக்குறுங்குடியைபற்றி நானே இவ்வளவு சொன்னேன் என்றால், நம்மாழ்வாருக்கு தலித்துகளைப்பற்றி எவ்வளவு தெரிந்திருக்கும்.

    ஓரிடத்தில் பராங்குசநாயகி ஓட்டமாகவும் நடையாகவும் வடிவழ்கிய நம்பியைத் த்ரிசிக்கச் செல்கிறான். இங்கே, நான் சொன்னேனே தலித்துகள் அவர்களை நினவில் கொள்க. அக்கோயிலைச் சுற்றி அல்லது அக்கோயிலுக்கு சேரி வழியாக்த்தான் சொல்லவேண்டும் என வைத்துக்கொள்ளலாம்.

    ப்ராங்குநாய்கியின் ஓட்டத்தைப்பார்த்து, சேரிப்பெண்கள் கலகலவென் சிரிக்கிறராக்ள். ப்ராங்குசநாய்கிக்கு வெடகமும் அவமானமும் ஆகி விட்டது. விரைந்து விட்டாள்.

    ஏன் சிரித்தார்கள்?

    You cant have guessed it even in dream !

    ஏன்?

    ‘அடி பெண்ணே…இப்போதுதான் உனக்கு இப்படி ஒரு பேரழகன் நம்மூரில் இருக்கிறான் எனத் தெரிந்ததா?’

    (அவர்களுக்கு எப்போது?”)

    ‘எங்களுக்கு எப்போதே தெரிந்து விட்டது. அவ்வழகனின் காதலிகளாய் எப்போதே ஆகிவிட்டோம். நீ ரொம்ப ரொம்ப லேட்!’

    இதுதான் பராங்குசநா்கியின் வெட்கத்துக்குக் காரணம். எனினும் better late than never.

    இதை வெறும் கதையாகப் பார்க்கக்கூடாது.

    It is a symbol. It is never too late to become an adiyaar of Thirumaal. This is what Nammazvaar wants us to know.

    இங்கு மட்டுமல்ல. அவர் மற்ற பாசுரங்களிலும் இக்கருத்து மண்டிக்கிடக்கிறது.

    பராங்குசநாயகி தன் தாயிடம் விசனிக்கிறாள்: I am very late mummy to know Him.

    Her mother consoles: Dont worry. He wont mind. Go…go.

    இதிலிருந்து தெரியவருவது யாதெனில் திருக்குறுங்குடி வடவழகிய நம்பிக்கும் தலித்துகளுக்குமுள்ள தொட்ர்பானது ஆதிகாலத்தில் இருந்த் வருவதாகும். ந்ம்பியின் மற்ற திருநாமங்க்ள் - நின்றநம்பி, இருந்த் நம்பி, குறுங்குடி நம்பி, வைஷ்ணவ நம்பி (இராமனுசருக்கு உபதேசம் பண்ணியதால்), திருப்பாற்கடல் நம்பி, மலை மேல் நம்பி)

    இத்தலத்தோடு தொடர்புடைய் இன்னொரு தலித்து ஆழ்வாரின் பெயர் நம்பியாண்டான். நம்பாடுவானுக்குப் பின் எழுந்தருளியவர்.

    இது வாமணசேத்திரம் என் அழைக்கப்பட்டு, நம்பாடுவான் ஆழ்வாரின் சரிதம், வராஹபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    நம்பாடுவான் ஒரு தலித்து. இவர் ஊர் உறங்கியதும் யாருக்கும் தெரியாமல் பெருமாள் திருக்கோயில் முன் வந்து பாசுரமழை பொழிவாராம். விடியத்தொடங்கியதும், ஊர் எழுமுன்னே, ஊருக்கு வெளியே போய் தன் சேரி மக்களோடு இணைந்துவிடுவாராம். இவர் கோயிலினுள் நழையமுடியாததால், அப்படியே கள்ளத்தனமாக நுழையின், காவலாளி பார்த்தால் பெருங்குற்றமும், அபச்சாரமும் ஆகிவிடும். அதற்காக வெளியே நிற்பாராம். குறுங்குடி நம்பியைப்பார்க்கவே முடியவில்