‘விடுதலை வேளிவியில் தமிழகம்’ என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பத்தம் தெரியுமா?
1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்.
காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.
மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ!
”சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ”
(அறிவு -1936 மே இதழ்)
ஈ.வே. ராமசாமிநாயக்கர் உயிருடன் இருந்தபோதுதான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.
மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.
கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்:-
பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.
இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.
பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.
பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.
……….. இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், ”இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது” என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.
அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். ”என்னய்யா யோக்கிதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்ததுபோல, திராவிடஸ்தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும்’ என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று அவரே பேசியிருக்கிறார்.
(நூல்: நான் பார்த்த அரசியல்)
ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.
‘துக்ளக்’ ஆசிரியர் சோ கூறுகிறார்:-
…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. ”இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)
உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்:-
வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப்போராட்டம் நடத்தப்பட்டபோது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.
சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும்.
(குமுதம்-03-02-2000)
இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?
‘துக்ளக்’ ஆசிரியர் சோ சொல்வதுதான் உண்மை.
ஆதாரம் இதோ!
27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)
இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா! மேலும் ஓர் ஆதாரம்
தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறார்.
ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்:-
”நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. ”
(தமிழர் தலைவர் பக். 14)
தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறபோது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா!
ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?
இல்லை!
இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்?
– தொடரும்…

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்
போகப் போகத் தெரியும் – 28
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும்
போகப் போகத் தெரியும் – 27
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10
பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் –
பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக்
பெரியாரின் மறுபக்கம் – பாகம்6 (பெரியாரின் கடவுள் நம்பிக்கை!)
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு
பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)
தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!
மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5![சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/yamini-krishnamurthy1.jpg)
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப்
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01
இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4
போகப் போகத் தெரியும் – 43
ஓடிப்போனானா பாரதி? – 11
போகப் போகத் தெரியும் – 42


பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

நாட்டுப்பற்று, மொயிப்பற்று, கலாசார பற்று, ஒரு மண்ணாங்கட்டியும் கடியாதுங்க ராமசாமிக்கு, அஆங்! டுபாகூர் பவுத்தறிவு, வெத்து சுயமருவாத, பாப்பானுங்க மேல வெறி, இந்த மூனு மேட்டர வச்சிகினு, தமியனுங்கல முட்டாலாக்கி, நாலு தலமொறய கெட்துட்டு பூட்டாரே அந்தாளு! வவுத்தெரிச்சலா கீது, இன்னா பன்றது?
இன்னெக்கும் அந்தாளு பேர சொல்லிக்கினு, அவுருக்கு செல வச்சிகினு, பொயப்ப நட்திகினு கீறானுங்களே, அவனுங்கள இன்னா செய்ய? அத்தொட்டு தமியன் இன்னும் முட்டாலா கீறான்னு தானே அர்த்தம்? தமியனுக்கு எப்போ புத்தி வந்து, அவன் எப்ப உஸாராயி…..இன்னாவோ போ….
ஒரே ஃபீலாயிட்சு வாத்யாரே….டாஸ்மாக் போனாதான் மன்ஸு ஸெட்டாவும். இன்னா வர்டா…
மன்னாரு.
இது பெரியாரின் மீது குறை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே.
பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு பார்ப்பன எதிர்ப்பு, இடைப்பட்ட ஜாதியினர் ஆதிக்கத்துக்கு போராட்டம் ஆகியவற்றில்தீவிரமாக இறங்கி அதற்காக ஆங்கிலேய அரசு பக்கம் சார்ந்தார் என்று சொல்வது வேறு; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை என்று சொல்வது வேறு. காங்கிரசை தமிழ்நாட்டில் வளர்த்தவர்கள் (திரு.வி. கல்யாணசுந்தர) முதலியார்-(வரதராஜுலு) நாயுடு-(ஈ.வே.ராமசாமி) நாயக்கர் என்று சொல்வார்கள். மூவருமே காங்கிரசை விட்டு வெளியேறினார்கள். அதனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லி விடுவீர்களா? ராஜாஜி 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபடவில்லை, காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதற்காக அவர் தேசத்துரோகி ஆகிவிடுவாரா?அம்பேத்கார் தலித் முன்னேற்றம் என்ற நோக்கத்துக்காக சுதந்திரத்தை பின்னே தள்ளி காங்கிரசுக்கு எதிராக, ஆங்கில அரசுக்கு சாதகமாக பல சமயங்களில் செயல்பட்டார். அவர் துரோகியா? திருவிதாங்கூர் சமஸ்தானம் சுதந்திரம் அடையவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்ட சர சி.பி. ராமசாமி ஐயர் தேசத்துரோகியா? சிறை செல்வது மட்டும்தான் அளவுகோல் என்றால் கோகலேவும், பாரதியாரும் தேசபக்தர்கள் இல்லையா?
பெரியார் பல குறைகள் உள்ளவர். அவரது அணுகுமுறை வெறுப்புணர்ச்சியின் மேல் கட்டப்பட்டது என்ற விமர்சனத்தில் உண்மை உள்ளது. அப்படி இருக்கும்போது வீணான மிகைப்படுத்தல் தேவை இல்லையே?
//அவரது அணுகுமுறை வெறுப்புணர்ச்சியின் மேல் கட்டப்பட்டது என்ற விமர்சனத்தில் உண்மை உள்ளது//
என்று சொல்லும் ஆர்வி ஏன் பெரியாருக்கு வக்காலத்து வாங்குகிறார்? அவரது வெறுப்புணர்ச்சி ஆர்விக்கு ஏற்புடைத்ததா?
பெரியாரின் தேசத்துரோக வார்த்தைகளுக்கு ஆதாரத்தை இந்த பக்கத்திலேயே கொடுத்திருக்கும்போது, அவரது பேச்சை இங்கேயே பதிந்திருக்கும்போது, எதற்காக கோகலே, பாரதியார் ஆகியவர்களது பேச்சை இங்கே இழுக்கவேண்டும்?
தேசபக்திக்கோ அல்லது நாட்டுப்பற்றுக்கோ ஒரு அடையாளமும் இல்லை என்பதற்காகத்தான் இங்கே ஒவ்வொன்றும் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸிலிருந்தவர்தான் ஜின்னா. அவர் தேசபக்தராகத்தான் இருந்தார். காங்கிரஸிலிருந்து வில்கி தனி நாடு கோரிய பின்னர் அவரை எப்படி இந்தியாவின் தேசபக்தர் என்று கூறமுடியும்?
அதே மாதிரி காங்கிரஸிலிருந்தவர்தான் பெரியார். அவர் அதிலிருந்து விலகி வெள்ளையர்களுக்கு வால் பிடிக்கும் நீதிக்கட்சியில் சேர்ந்து, வெள்ளையனே வெளியேறாதே என்று கேட்டுக்கொண்டபின்னால், அவரை எப்படி தேசபக்தர் என்று கூறமுடியும்?
ஆர்வி என்ன எழுதுகிறோம் என்று படித்துவிட்டு எழுதுங்கள். வினவு மாதிரி, எல்லாவற்றையும் எதிர்த்து எழுதிவிட்டால், கைதட்டிவிடுவார்கள் என்று நினைக்காதீர்கள்.
இங்கே படித்தவர்கள் இருக்கிறார்கள். வினவுவின் விசிலடிச்சான் குஞ்சுகள் இங்கே இல்லை. ஆகவே கைதட்டுகள் கிடைக்காது. உங்களைப்பார்த்து பரிதாபமே வரும்.
வெங்கடேசன் அவர்கள் பெரியார் கருத்துக்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பிய்த்து பிராண்டி திரிபு வேலை செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி வரலாற்றை திரித்து எழுதுகிறார். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவது அயோக்கியத்தனம். யார் தேசத்துரோகி இதோ பெரியார் தெளிவுபடுத்துகிறார்?
”
“நாம் எந்த விதத்தில் தேசத்துரோகிகள்? இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சியென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலைபெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ இந்து தேசத்துக்குத் துரோகம் செய்தாக ஏதாவது ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும். நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.
வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும் அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும் தங்கள் முகச்சாயலும் ஒரே மாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராசியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழவேண்டும் என்றும் நேற்று வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? ளா? அவர்கள் ஒழித்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய தீர்மானித்தாலும் சரி, எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு நாங்களும் கையொப்பம் போடுகிறோம். அதற்குச் சக எத்தனை பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம். பிறகு யார் தேசபக்தர்கள்? யார் கோழைகள்? யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சொல்லி விடுவதாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா? என்று தான் கேட்கின்றேன்”.
————-சேலம் விக்டோரியா மார்க்கெட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு -”குடி அரசு” 14-06-1936
மேலும்
காங்கிரஸ்வரலாறும் மறைக்கப்படும் உண்மைகளும் என்ற நூலைப் படிக்கவும். பல உண்மைகள் உலா வரும்.]
——————விவாதிப்போம்
(Comment edited & published)
கிளம்பிட்டாங்கப்பா!
பெரியாரின் அணுகுமுறை வெறுப்பை அடிப்படையாக உடையது என்றால் பெரியாரைப் பற்றி என்ன தவறாக எழுதினாலும் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பெரியார் காங்கிரசுக்கு ஆற்றிய தொண்டு பற்றி தெரியவேண்டும் என்றால் திரு.வி.க. எழுதியதை படித்துப் பாருங்கள். அவரை அவர் வீட்டுக்கு போய் காங்கிரசுக்கு வா வா என்று அழைத்தது ராஜாஜி என்பதை நினைவு கூருங்கள். சரி அவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டாம் – நான் எழுதியதையாவது இங்கேயே படித்திருக்கலாமே – // பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு பார்ப்பன எதிர்ப்பு, இடைப்பட்ட ஜாதியினர் ஆதிக்கத்துக்கு போராட்டம் ஆகியவற்றில்தீவிரமாக இறங்கி அதற்காக ஆங்கிலேய அரசு பக்கம் சார்ந்தார் என்று சொல்வது வேறு; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை என்று சொல்வது வேறு. // இந்த பதிவில்
// ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?
இல்லை!
சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?
இல்லை!
பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்? //
என்று எழுதி இருப்பது சரி இல்லை என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன். பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாரா, அவர் சிறை சென்றாரா, கோகலே ஈடுபட்டாரா, சிறை சென்றாரா பின் எப்படி ivarkal எல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பது போல இருக்கிறது. ஜின்னா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதில் என்ன சந்தேகம்? அவர் காலமெல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை, தவறான முடிவுகளை எடுத்தார் என்று சொல்லுங்கள், அது உண்மை. அதையே பெரியார் பற்றியும் காலமெல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை, சர்ச்சைக்குரிய சில முடிவுகளை எடுத்தார் என்று சொல்லுங்கள், விவாதமே இல்லை. வீணான மிகைப்படுத்தல் தேவை அற்றது. யாரையும் முன்முடிவுகளுடன் அணுகுவது முட்டாள்தனம்.
அப்புறம் பாரதியும் கொகலேவும் எங்கே vanthaarkal என்று கேட்கும் நீங்கள் வினவு எங்கே வந்தார் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளலாமே? // இங்கே படித்தவர்கள் இருக்கிறார்கள். வினவுவின் விசிலடிச்சான் குஞ்சுகள் இங்கே இல்லை. ஆகவே கைதட்டுகள் கிடைக்காது. உங்களைப்பார்த்து பரிதாபமே வரும்.// வினவு தளத்தில் எனக்கு கைதட்டா? இதை வினவு தளத்திலும் எழுதிவிடுங்களேன்! எல்லாருக்கும் குபீர் சிரிப்புடன் என்ஜாய் செய்வார்கள்!
திரு RV அவர்களே.
பாரதியும், கோகலேவும் எப்போதும் ஆங்கிலேயன் ஆட்சி இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னதில்லை. அனால் பெரியார் தவறு ஈ வே ராமசாமி நாயக்கர் நாட்டுக்கே சுதந்திரம் கொடுத்தாலும் மெட்ராஸ் மாகாணத்திற்கு கொடுக்காதீர்கள் என்று சொன்னார். ஆதலால் பாரதி கோகலே உடன் ராமசாமி நாயக்கரை இணைத்து பேசாதீர்கள்.
பாரத நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும் என்றுமே எதிர்த்து வந்த இயக்கங்கள் (ராமசாமி நாயக்கரின் இயக்கம் உட்பட) நாட்டின் ஒற்றுமைக்கு சமுதாய நல்லிணக்கத்திற்கு படுபட்டனவாம். அனால் நாட்டின் ஒற்றுமை மற்றும் உறுதியையும் பேசும் இயக்கங்கள் அனைத்தும் நாட்டின் பிரிவினையை ஏற்படுத்தி விடுமாம். தங்களை போன்றவர்கள் இருக்கும் வரை நாட்டின் சுதந்திரமும் ஒருமைப்படும் சந்தேகமே
நாரதர்
அட இன்னாங்க இது ஒரே ரோதனையா பூட்சு! ஈ.வெ.ராமசாமி 1919-ல காஙிரஸ்ல சேர ஸொல்ல அவுருக்கு வய்ஸு 40. அதுக்கு மின்னாடி வரெக்கும் ஸொம்மா ஊர சுத்தினுர்ந்தாரு. 6 வர்ஸம் தான் காங்கிரஸ் கச்சில இருந்தாரு. அப்பாலிகா 1925-ல கச்சி புடிக்கல, காந்தியும் புடிக்கலன்னு வெள்ள கயண்டுக்குனாரு. அந்த ஆறு வர்ஸம் கச்சில இருக்க ஸொல்லோ, ஒரே ஒரு தபா ஒத்துயையாம இயக்கத்துல கலந்துக்குனாரு. அவ்லோ தான், அஆங்!
அதுவுங்கூட கச்சில இருக்க ஸொல்ல போராட்டத்துல கல்ந்துக்க மாட்டேன்னு ஸொல்ல முடீல. இஸ்டம் இல்லாம வேண்டா வெறுப்பா கல்ந்துக்குனாரு. வெள்ளகாரனுக்கு எயுத்தாப்புல போராட்டம் செய்னும், அவனாண்டர்ந்து நம்ம நாட்டுக்கு விடுதல வேனூன்னெல்லாம் அந்தாளுக்கு ஒரு நெனப்பும் கடியாது. காங்கிரஸ் கச்சிய வுட்டு கயண்டுக்குன ஒட்னே, நேரா வெள்ளகாரன் கால்ல போய் வுயுந்துக்கானுரு. அவன் நம்ம நாட்ட வுட்டு போவ ஸொல்ல கூட, அவன் கால புட்சுக்குனு, “போவாத, போவாத, எங்க ஊர வுட்டு போவாத; எங்க ஊர மட்டுமாச்சும் ஒன்னோட கண்ட்ரோல்லயே வச்சுக்க” அப்டீன்னு பொலம்புனாரு, அஆங்!
இப்டி இருக்ல்க ஸொல்ல, அவுர எப்டிங்க சொதந்தரத்துக்காவ பாடு பட்டாருன்னு ஸொல்ல முடியும்? அவுரு விடுதல வீரரு இல்ல நைனா, ”விடாத வீரரு”! இன்னா புர்ல? வெள்ளகாரன விடாத வீரரு! இப்ப புர்தா?
சரி வர்டா…
மன்னாரு.
//வினவு மாதிரி, எல்லாவற்றையும் எதிர்த்து எழுதிவிட்டால், கைதட்டிவிடுவார்கள் என்று நினைக்காதீர்கள்//
அய்யா ஆர்வி. நீங்கள் எழுதுவதற்கு வினவு பக்கத்தில் கைதட்டுகிறார்கள் என்று சொல்லவில்லை. வினவு எழுதுவது எல்லாத்தையும் எதிர்த்து எழுதுவது. அதற்கு ஒரு கும்பல் கைதட்டுகிறது. அது போல இங்கும் நீங்கள் எதிர்த்து எழுதினால், யாரும் கைதட்டமாட்டார்கள் என்று சொல்கிறேன்.
நான் சொன்ன ஜின்னா உவமையை கவனமாக விட்டுவிட்டீர்களே? ஜின்னாவும் தேசபக்தரா?
நாரதர்,
// அனால் பெரியார் தவறு ஈ வே ராமசாமி நாயக்கர் நாட்டுக்கே சுதந்திரம் கொடுத்தாலும் மெட்ராஸ் மாகாணத்திற்கு கொடுக்காதீர்கள் என்று சொன்னார். //
பெரியார் அப்படி எப்போதுமே சொன்னதில்லை. அவர் காங்கிரசுக்காக, விடுதலைக்காக உழைத்த கால கட்டம் ஒன்றிருக்கிறது. பெரியாரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் கருத்து. அவர் விடுதலைக்காக உழைத்ததே இல்லை என்றால் அது தகவல் பிழை. கருத்தை இன்னும் வலிமையாக வரலாற்றை திரிக்க வேண்டாமே? அதுவும் பெரியார் விஷயத்தில் அது அவசியமே இல்லை. அவர் ஆங்கில அரசுக்கு சார்பாக பேசினார் என்பதற்கு எக்கச்சக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது பிழையான தகவலை முன்னிறுத்தி பேச என்ன அவசியம்?
மன்னாரு, நீங்கள் அவர் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதை சொல்கிறீர்கள். ம. வெங்கடேசன் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். 1 != 0, அப்படி மிகைப்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
அன்பரசன், // நீங்கள் எழுதுவதற்கு வினவு பக்கத்தில் கைதட்டுகிறார்கள் என்று சொல்லவில்லை… // என் தவறான புரிதல்தான்.
// நான் சொன்ன ஜின்னா உவமையை கவனமாக விட்டுவிட்டீர்களே? ஜின்னாவும் தேசபக்தரா? //
என் முந்தைய மறுமொழியிலிருந்து:
// ஜின்னா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதில் என்ன சந்தேகம்? //
நான் எழுதியதை படித்துவிட்டு பேசலாமே?
ஆர்வி, ஈவேரா 15-8-1947, 26-1-1950 இறு தினங்களையும் ’துக்கநாள்’ ஆக கொண்டாடியவர். அதிலிருந்தே தெரியவில்லையா அவர் இந்திய சுதந்திரம் மேல் உள்ள காழ்ப்பு?
விஜயராகவன்
இந்த கட்டுரையின் தலைப்பு சரி இல்லை.
”தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!” என்பது “ஆங்கில கலோனியத்தின், ஏகாதிபத்தியத்தின் அடிவருடி ஈவேரா” என எழுதப்பட வேண்டும்.
தமிழ் ஓவியா,
பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் விடுதலைக்கு முற்றிலும் எதிராக மாறினார் என்பது உண்மை. சுதந்திரம் கிடைத்த நாளை கருப்பு தினமாக கொண்டாடும்படி சொன்ன ஒரே தலைவர் அவர்தான். திராவிடஸ்தான் வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தார். ஜின்னாவிடம் பேசி எல்லாம் பார்த்தார்.
நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கொளிலே அவர் சொல்வது என்ன? வேறு பலரும் துரோகிகள் என்றுதான் சொல்கிறார். அவர் சொல்லும் கருத்து சரியா தவறா என்ற விஷயத்துக்கே நான் இங்கே வரவில்லை. ஆனால் தனது ஆங்கிலேய அரசு சார்பு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்பது கண்ணுக்கு தெரியாமலா போய்விடும்? அவரது நிலை – பார்ப்பன எதிர்ப்பு, “இடைப்பட்ட” ஜாதிகள் அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவை ஆங்கில ஆதிக்கத்தை விட முக்கியாமனவை, அதற்காக ஆங்கில அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம் – அவருக்கு சரியாக இருக்கலாம், அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் – சில நியாயம்னா காரணங்கள் உட்பட – இருக்கலாம். ஆனால் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது மறைக்க முடியாத உண்மை.
வரலாறு எனபது நம் முன் முடிவுகளுக்கு ஏற்க எழுதப்படுவது இல்லை.
பெரியார் என்பவர் ஏதோ ஒரு சாக்ரடிஸ் போல சித்தரிக்கப்பட்டு வரும் நேரத்தில், ம. வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகள், பெரியார் உண்மையில் எப்படிப் பட்டவர் என்பதை விளக்குகிறது.
ம. வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகள், பெரியாரை பற்றிய விமரிசினங்களை முன் வைக்கிறதே தவிர, அவரை இகழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை.
பெரியார் எல்லோரையும் வாய்க்கு வந்தபடி ஏசியும், இகழ்ந்தும், சாதிக் காழ்ப்புணர்ச்சியை தூண்டியும் வந்த நிலையில், பெரியாரை பிறர் விமரிசிக்கும் போது மட்டும், குய்யோ முறையோ என்று அலறுவது சரியா?
அதே நேரம் பெரியாரிடம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களும் உள்ளன, என்றே நான் கருதுகிறேன்.
பெரியாரைப் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொண்ட பின், பெரியாரின் தாக்கத்தால் தமிழ் நாட்டில் ஏற்ப்பட்ட கேடுகளை கலைந்த பின்,
அவருடைய கருத்துக்களில் நமக்கு உபயோகமானதையும் விளக்கி விட்டால் சரியாக இருக்கும்!
நாரதர்,
// நாரதர்,
// அனால் பெரியார் தவறு ஈ வே ராமசாமி நாயக்கர் நாட்டுக்கே சுதந்திரம் கொடுத்தாலும் மெட்ராஸ் மாகாணத்திற்கு கொடுக்காதீர்கள் என்று சொன்னார். //
பெரியார் அப்படி எப்போதுமே சொன்னதில்லை. //
“பெரியார் அப்படி எப்போதுமே சொன்னதில்லை” என்பது சரியான வார்த்தை பிரயோகம் இல்லை. குழப்பம் தரலாம். That statement is meant to convey “Periyar didn’t hold that position all his life”, not “Periyar never said that.”
பெரியாரின் கருத்துக்கள் உண்மையோ அல்லது பொய்யோ அவை மக்களிடம் சென்றடைந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு காரணம் அவரின் புத்தகங்களை வணிகப்பொருளாக்கி வைத்திருப்பதனால்தான். எனவே பெரியாரின் மறுபக்கம் புத்தகம் நல்ல பலன் அளிக்க வேண்டும் என விரும்பினால் புத்தகத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கவணம் செலுத்த வேண்டும்.
மைடியர் அன்புரசன்
ஜின்னா காங்கிரசை விட்டு பிரிந்து தனிநாடு கேட்டாரா சரித்திரம் தெரியாமல் பேசாதிங்கள்
இந்தியா பிரிவதர்க்கு நம்மவரும் காரணம் இருக்கு.
அன்று விட்டுகொடுத்து இருந்தால் பாக்கிஸ்தான் பிருந்து இருக்காது.
பேச்சுவார்தையில் ஒத்துபொவாதினால்தான் பிரிவினை இன்று யஸ்வன்சிங்,மற்றும் அத்வானிகூட காங்கிர்ஸ்தான் காரணம்என்கின்றனர்.
சில பிராமினர்கள் ஜின்னாமீது மட்டும் பழிபொடுகிறார்கால்.
(comment edited & published)
அஷ்ரப் அலியின் ஜின்னா பாசம் நமக்கு புரிகிறது.
“சின்னாமனி அஷ்ரஃப் அலி
12 October 2009 at 11:52 pm
மைடியர் அன்புரசன்
ஜின்னா காங்கிரசை விட்டு பிரிந்து தனிநாடு கேட்டாரா சரித்திரம் தெரியாமல் பேசாதிங்கள் இந்தியா பிரிவதர்க்கு நம்மவரும் காரணம் இருக்கு.
அன்று விட்டுகொடுத்து இருந்தால் பாக்கிஸ்தான் பிருந்து இருக்காது.”
எப்போதுமே சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினர் தான் விட்டுகொடுக்க வேண்டும். ஏன் நாடு பிரிவினை ஆவதை விரும்பாவிட்டால் சிறுபான்மையினர் விட்டுகொடுக்க வேண்டியதுதானே. எந்த நாட்டிலுமே நடக்காதவைகள் இந்த நாட்டில் மட்டுமே நடக்கும் அது பெரும்பான்மையினர் விட்டுகொடுக்கவேண்டும் எனபது. இன்றும் இந்த அறிவில்லாத மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் இந்த நிலைமை தொடைந்து கொண்டிருப்பது வெட்ககேடு.
நாரதர்
//ஜின்னா காங்கிரசை விட்டு பிரிந்து தனிநாடு கேட்டாரா சரித்திரம் தெரியாமல் பேசாதிங்கள்.//
இன்னா அஸ்ரப் பாய்! இன்னா பேசுரீங்க நீங்க, அ? ஆரு இஸ்ட்ரீ தெர்யாம பேசர்து, ஆ? ஜின்னா தனி நாடு கேக்காம வேற ஆரு கேட்டுக்குனாங்க? காந்தியா, நேருவா, படேலா?
//இந்தியா பிரிவதர்க்கு நம்மவரும் காரணம் இருக்கு.
அன்று விட்டுகொடுத்து இருந்தால் பாக்கிஸ்தான் பிருந்து இருக்காது//
ஆரு ஆருக்கு வுட்டு குடுக்கர்து? ஜின்னா தனியா புட்டுக்குனு போனப்போ, அம்பேத்கார் ஐயா ஸொன்னாப்போல உங்கலையும் ஜின்னா கூட சேத்து பேக் அப் பண்ணிர்ந்தா, எவ்லோ நல்லா இருந்துர்க்கும்? காந்தி ஸொன்னாப்போல உங்கள அப்டியே வுட தாவல? அத்தொட்டு தானே நீங்க இப்டி கேக்குறீங்க? அவ்லோ ரோஸம் இருந்தா உங்க நாட்டுக்கு போவர்து தானே? இங்க இன்னாத்துக்கு குந்திகினு எங்கல கஸ்ட படுத்துறீங்க?
ஸரி, இவ்லோ பேசுரீங்களே…பாகிஸ்தான்ல இந்துக்கள இன்னா பண்ரீங்க? அவுங்கல எப்டி வச்சுருக்கீங்க? ரொம்ப வுட்டு குடுக்குறீங்கலோ? ஸொம்மா இஸ்ட்ரீ தெர்யாம, வாய் இருக்குதுன்னு இஸ்டத்துக்கு பேசக்கூடாது, அஆங்!
//சில பிராமினர்கள் ஜின்னாமீது மட்டும் பழிபொடுகிறார்கால்//
ஐய…தோடா….அஸ்ரப் பாய்! இது நான்ஸென்ஸு பாய்!
இன்னா வர்டா…
மன்னாரு
ஆஹா! ஆஹா!! வெறும் ஜின்னாவை பற்றிய ஒரு மறுமொழியைக்கூட இஸ்லாமியர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை! இவர்களா இந்தியாவை காப்பாற்றப்போகிறார்கள்? ashraf ali, sarfudeen மற்றும் பலர் எழுதிய மறுமொழிகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இவர்கள் சொல்வதெல்லாம் எவ்வளவு அவதூறு என்று தெரிகிறது, இவர்கள் சொல்வதை மதிக்காதீர்கள்!
திரு.வெங்கடேசன், இந்த கட்டுரைக்கு “தேசப்பற்று இல்லாத பெரியார்” என்று பெயர் வைத்ததைவிட “தேச துரோகி பெரியார்” என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!!
எந்த வெங்காயமோ, கத்திரிக்காயோ, முள்ளங்கியோ அல்லது பூசிநிக்கயோ நினைத்தால் கூட இந்தியாவை அந்நியரிடம் தரமுடியாது!!
தமிழ் ஹிந்து நிறைய நல்ல விசயங்களை தருகின்றது . சுவையான சூடான அறிவு பூர்வமான விவாதங்களை படிக்கும் பொது இப்படியெல்லாம் கூட தலைவர்கள் இருந்துள்ளனர் என்று தெரிய முடிகிறது. வளரட்டும் தமிழ் ஹிந்து வின் பணி.
ஆர்.வி அவர்களின் பார்வைக்கு பெரியாரின் கருத்தை சமர்பிக்கிறேன்.படியுங்கள்.
இதுவா விடுதலை முயற்சி? – பெரியாரின் தொலைநோக்கு!
சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!
“இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.
ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.
இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.
இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே
அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.
நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட
நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன்
மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.
திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.
அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!
தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?’
—————— பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 15.06.1946
அஷ்ரப் அலியின் ஜின்னா பாசம் நமக்கு புரிகிறது
இங்க இன்னாத்துக்கு குந்திகினு எங்கல கஸ்ட படுத்துறீங்க
என்ன உங்கநாடா எதுஸார் உங்கநாடு ஆங்கிலேயனிடம் இருந்து
மீட்பதர்க்கு எந்தபிராமிணன் யுத்தம்செய்தான் இஸ்லாமியன் எத்தனை பேர்
இழந்துருக்கொம் தெரியுமா இஸ்லாமியன் ஒன்றும் இற்க்குமதி ஆனவன் இல்லை இந்தநாட்டின் மைந்தன்
விட்டு கொடுப்பது சிறுபான்மைனர் விட்டுகொடுக்கனுமா எதுஸார் ஞாயம்
சிறுபான்மைனர்காள் பலகீனமானவர்காள் பெருபான்மைனர்கள்தான் விட்டுகொடுக்கவேண்டும் பெரியவர்கள் விட்டுகொடுப்பார்கலா சிரியவர்கால்
விட்டுகொடுப்பர்களா என்னசார் உங்கமூளை.
தமிழ் ஓவியாவுக்கு
திரும்ப திரும்ப ஈ வே ரா அவர்களின் பேச்சுகளை போட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆக போவதில்லை… நீங்கள் அவருடைய சீடராக இருந்தால் பகுத்தறியுங்கள்… மேலே நீங்கள் போட்டிருக்கும் பேச்சில் அவர் ஆரியர் திராவிடர் என்று இரு சாராரை பற்றி பேசுகிறார். இது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஆரிய இன கோட்பாட்டை வைத்து அவர் பேசியது.. இன்று 2009 இல் இந்த கோட்பாட்டை பல ஆராய்ச்சியாளர்கள் கை விட்டு விட்டனர். இப்பொழுது அது Aryan Migration theory என்று மாற்ற பட்டுள்ளது… என்னை பொறுத்த வரையில் இதுவும் செத்து போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை…
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் திராவிடம் என்னும் சொல்ல தமிழ் சொல் அல்லவே ! அது தென் இந்தியாவை குறிக்கும் வட மொழி சொல் அன்றோ? இதை எல்லாம் அப்பொழுது அவர் பகுத்து அறியாமல் விட்டு விட்டாரா? இதை தவிர அவர் திராவிடர்கள் என்று கூறுவது யார் யாரை? தமிழகத்தில் இருக்கும் பார்பனர் அல்லாதோர் எல்லாரையுமா? இதில் பிற்படுத்த பட்டோரை அவர் சேர்த்தார் என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனான எனக்கு அழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள் “திராவிட வேதம்” ! எங்களுடைய குல குரு வாக கருத படுபவர் நம்மாழ்வார் … இவர் பிராமணராக பிறக்காவிட்டாலும் இவருடைய வாழி திருநாமத்தில் “காசினியில் ஆரியனாய் காட்டினான் வாழியே!” என்று போற்றுகிறோம்.. மொத்தத்தில் நீங்கள் பகுத்தறிய நிறைய விஷயங்கள் உள்ளன … ஆரியன் என்னும் சொல் முற்காலத்தில் வேள்வி செய்து அக்னியை வணங்குபவர்கள் என்றும், பிற் காலத்தில் நன் நடத்தை உள்ளவர் என்றும் இந்த சொல்லுக்கே பொருள் வேறு வேறாக மாறி இருக்கும் பொது, நீங்கள் யாரை ஆரியர் என்று சொல்லுகிறீர்கள்? யாரை திராவிடர்கள் என்று சொல்லுகிறீர்கள்?
எனக்கு தெரிந்து தமிழகத்தில் எல்லாரும் தமிழர் என்று தான் மற்றவர்களிடம் அறிமுக படுத்தி கொள்கிறார்களே தவிர திராவிடர் என்று அல்ல… திராவிடர் என்னும் சொல் கழகங்களில் தான் வாழ்ந்து வருகிறது…
சரி அவர் அப்போது ஏதோ பேசி விட்டார்.. நீங்கள் அவரை தெய்வம் என்றும் அவர் சொல்லை வேத வாக்கு என்றும் கருதுகிறீர்களா ? உண்மையான பகுத்தறிவாளருக்கு இது அழகல்லவே? நீங்கள் இப்போது சொல்லுங்கள் யார் ஆரியர் யார் திராவிடர் என்று?
தமிழ் ஓவியா,
இந்த பதிவை எழுதிய ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திர போராட்டத்துக்கு எதிரானவர் என்று எழுதி இருக்கிறார். நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கோள் பெரியார் ஏன் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிரான நிலை எடுத்தார் என்று விளக்குகிறது. பெரியாரின் நிலை சரியா தவறா என்பது அடுத்த கேள்வி; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்ப்பு நிலை எடுத்தார் என்பதில் ம. வெங்கடேசனுக்கும், எனக்கும், உங்களுக்கும், பெரியாருக்கும் எந்த வேறுபாடும் இல்லையே!
நீங்கள் பெரியாரின் காரணங்கள் பற்றி பேச விரும்பினால் தாரளமாக பேசுங்கள்.
ம. வெங்கடேசனுடன் எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடு மிக சிம்பிள். வெங்கடேசன் பெரியார் எப்போதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை என்று எழுதி இருப்பது தகவல் பிழை; ஜெயிலுக்கு போவது மட்டுமே விடுதலை போராட்ட வீரருக்கான தகுதி இல்லை. பெரியார் மட்டுமல்ல, பின்னாளில் காங்கிரசை விட்டு விலகிய, காங்க்ரசுக்கு எதிராக போராடிய, ஜின்னா, வரதராஜுலு நாயுடு போன்றவர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான்.
கணக்கில் ஒரு மாணவன் ஃபெயில், தமிழில் பாஸ் என்றால் அவன் எல்லாவற்றிலும் ஃபெயில் என்ற பிம்பத்தை இந்த பதிவு உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் கருத்தோ அவன் எல்லாவற்றிலும் பாஸ் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இது எனக்கு இசைவான விஷயம் இல்லை. எனக்கு தெரிந்த வரைக்கும் பெரியார் தன்னை உத்தமன் என்று நினைத்ததில்லை, இப்படி ஒளி வட்டம் உருவாக்கும் முயற்சியைக் கண்டால் அவர் போங்கடா வெங்காயம் என்றுதான் சொல்வார் என்று தோன்றுகிறது.
ம. வேங்கடேசனைப் பற்றி இந்த ஒரு பதிவை வைத்து நான் எந்த முடிவுக்கும் வருவதிர்கில்லை. இந்த பதிவு மிகைப்படுத்துகிறது என்றுதான் சொல்ல முடியும்.
//உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.//
ஆர்.வி.
பெரியார் என்றால் பெரியார் மட்டுமே.
அவருக்கு எந்த ஒளிவட்டமும் தேவையில்லை.
அவர் ஓரு சாதாரண மனிதன்
பெரியாரைப் பற்றி அவதூறாக,தவறாக விமர்சிப்பவர்களுக்கு பெரியாரின் கருத்தைக் கொண்டே பதில் அளிக்கிறேனேயல்லாது நீங்கள் நினைப்பது போல் எந்த வட்டத்தையும் உருவாக்க அல்ல
ஆர்.வி.
தமிழ் ஓவியா,
பெரியார் சாதாரண மனிதன் என்கிறீர்கள். சரி. அவரது கருத்துகளை ஊர்ந்து கவனித்திருக்கிறீர்கள். இந்த சாதாரண மனிதனின் கருத்துகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தவறு என்று படுகிறதா? இந்த கேள்வியை பார்த்தவுடன் யோசிக்காமல் உங்களால் அடுத்த ஒரு நொடியில் பெரியாரின் இந்த கருத்து தவறானது என்று சொல்ல முடியுமா?
சாதாரண மனிதனின் எல்லா கருத்துகளும் – 100% கருத்துகளும் – உங்களுக்கு சரி என்று படப்போவதில்லை. அப்படி தோன்றினால் அவர் சாதாரண மனிதன் இல்லை. உண்மையில் அசாதாரண மனிதர்கள், மாபெரும் தலைவர்கள் என்று கருதுபவர்கள் மீதும் கூட நமக்கு விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரியார் உங்களை பொறுத்த வரையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது.
உங்களுக்கு பெரியார் மேல் ஒரு மகத்தான பிம்பம் இருக்கிறது. அவரை விமர்சிக்கும் எந்த கருத்தும் – எந்த கருத்தும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் – உங்களுக்கு இசைவானது இல்லை. இது அதிசயமான விஷயம் இல்லை. ஆனால் இதைத்தான் நீங்கள் அவர் தலைக்கு பின் ஒழி வட்டம் எழுப்ப முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறேன். நீங்கள் பெரியாரை உணர்வுபூர்வமாக – “எங்களை” உயர்த்த வந்த உத்தமர் – அணுகுபவர். ஏறக்குறைய அவருடைய பக்தர். உங்களுடன் பெரியாரைப் பற்றி எப்படி அறிவுபூர்வமாக விவாதிக்க முடியும்?
பாருங்கள் இங்கே ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தவர் என்று வாதிடுகிறார். பெரியாரின் பேச்சுகளிலிருந்து இதற்கு மேற்கோள் தருகிறார். நீங்கள் இதை மறுக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் இது வரை தந்த இரண்டு மேற்கோளும் ம. வெங்கடேசனின் நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ம. வெங்கடேசனின் நிலையை மறுக்க வேண்டும் என்றால் அவர் எப்போதும் சுதந்திரப் போராட்டத்தை எதிர்க்கவில்லை என்று காட்ட வேண்டும். அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபொது பேசிய எதையாவது மேற்கோள் காட்ட வேண்டும். அதற்கான ஆவணங்கள் இன்று கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. பெரியார் பக்தரான உங்களுக்கு தெரியலாம். இல்லை கோவை அய்யாமுத்து போன்றவர்களின் நினைவுகளில் கிடைக்கலாம்.
இல்லை என்றால் ஆமாம் பெரியார் எதிர்நிலை எடுத்தார் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும். பிறகு அவர் அப்படி செய்தது சரிதான், இந்த இந்த காரணங்கள் இருக்கின்றன, பெரியார் தன நிலையை இப்படி இப்படி விளக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவர் தனி ஆளாக இருந்தாலும், தன கருத்து அனேகமாக ஒத்துக்கொள்ளப்படாது என்று தெரிந்தாலும், தன கருத்தை எடுத்து சொல்ல அவர் தயங்கியதே இல்லை. ஆமாம் ஒரு ஐந்தாறு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், கடைசி இருபது சொச்சம் வருஷம் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி இருப்பார். அதுதானே உண்மை!
Tamil Oviah, Where were you all this time? You still have not answered my question about this EVR’s wedding, an old man, marrying a young girl old enough to be his grand daughter, condemed by his own partymen, including Annadurai? Is this a man and his third rated ideals you want to follow? You still carry on about Aryan/ Dravidian divide, which is a hoax and proved to be hoax,by all and sundry,invented by the English.
Do not bury your head in the sand and be a EVR fanatic. EVR was nothing more than an opportuntic, selfish,egocentric,megalomaniac.whio took all his pathetic followers for a ride.
S.V.Rajadurai has written two books on this issue.When Anna wanted that the independence day should be celebarated as a joyous occassion Periyar declared that it was a dark day for him.Rajadurai has documented how Periyar and his supporters tried their best to join hands with Jinnah, to create a Davidstan. He even appealed to the British to consider his request. The proposed Dravidstan could have aligned with Pakistan had it materialized.But Jinnah ditched Periyar as he was keen on a state for muslims and British ignored Periyar. So all his plans of forming an independent Dravidastan failed. India became independent and Periyar
had to sulk. Periyar post-his congress days never supported the freedom struggle nor took part in it. The true colors of Periyar have been meticolously documented in those books. Periyar was willing to go to any extent to get a state in the name of Dravidastan but neither
congress, nor jinnah or ambedkar or british gave a positive response.Unable to bear this
he declared Aug 15 1947 as a dark day.
somone is quoting s.v.rajadurai here. one need not do that. s.v.rajadurai is a known rationalist.on the quetion of evr working against the national interest please read his activities during the salt sathyagraha ably documented by sri subbu in poga poga theriyum.
//இங்க இன்னாத்துக்கு குந்திகினு எங்கல கஸ்ட படுத்துறீங்க
என்ன உங்கநாடா எதுஸார் உங்கநாடு ஆங்கிலேயனிடம் இருந்து
மீட்பதர்க்கு எந்தபிராமிணன் யுத்தம்செய்தான் இஸ்லாமியன் எத்தனை பேர்
இழந்துருக்கொம் தெரியுமா இஸ்லாமியன் ஒன்றும் இற்க்குமதி ஆனவன் இல்லை இந்தநாட்டின் மைந்தன்
விட்டு கொடுப்பது சிறுபான்மைனர் விட்டுகொடுக்கனுமா எதுஸார் ஞாயம்
சிறுபான்மைனர்காள் பலகீனமானவர்காள் பெருபான்மைனர்கள்தான் விட்டுகொடுக்கவேண்டும் பெரியவர்கள் விட்டுகொடுப்பார்கலா சிரியவர்கால்
விட்டுகொடுப்பர்களா என்னசார் உங்கமூளை.//
————————-
ashraf ali அவர்களே,
உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி இல்லியா இல்லை இல்லாதது போல நடிக்கிறீங்களா??
“பெரும்பான்மையினர் பலம்படைத்தவர்கள், சிறுபான்மையினர் பலவீனமானவர்கள்” இது உங்கள் லாஜிக்!
ஆகவே பெரும்பான்மையினர் விட்டுக்கொடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள், சரிதான்! ஆனால் இந்த லாஜிக் இந்தியாவுக்கு மட்டும்தானா இல்லை எல்லா நாடுகளுக்கும் பொருந்துமா? பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இருந்த இந்துக்கள் இப்போது எங்கே? ஆபிகநிச்தானில் இருந்த புத்தர் சிலைகள் எங்கே?? காக்கா தூக்கிட்டு போச்சா?? இதை நம்ப நான் மார்க்சிஸ்ட் யு.கே.ஜி. பய்யன் இல்லே!
சரி சார், ஏதோ விட்டுக்கொடுக்கனும்னு சொன்னீங்களே, இங்கு இந்துக்கள் உங்களுக்கு விட்டுக்கொடுத்தைப்போல (திருத்தம், ஏமாந்ததைப்போல) உலகில் வேறு எந்த பெரும்பான்மை சமுதாயம் சிறுபான்மையினருக்கு செய்திருக்கும்??
இந்திய-பாகிஸ்தான் பிரிததார்களே, முகமதியினருக்கு என்று ஒரு நாடு ஒதுக்கினார்களே, அப்படியானால் பெரும்பான்மையான இந்துக்களுக்கு என்று ஒரு நாட்டை ஒதுக்கியிருக்க வேண்டுமா இல்லையா?? இந்துக்களும் முகமதியர்களும் தனி நாடு கேட்கின்றனர் என்று சொன்னார்களே, இதில் என்ன ஒரு கண்ணில் வெண்ணை, இன்னொன்றில் சுண்ணாம்பு?? இந்தியாவில் இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டுமா இல்லையா? ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகூட இதை ‘அநீதி’ என்று சொல்லும்!!
சரி, அரேபியாவில் இந்துக்கள் பலபேர் வேலைபார்க்கிறார்கள். உங்களுக்கு ரமலான் நோன்புவரும்போது, ஒரு மாதம் பகலில் நீங்கள் உண்ணாமல் இருக்கிறீர்கள், சரி. ஆனால் அந்த நாட்டில் வாழ்வதற்காக அவர்களும் பட்டினி கிடக்க வேண்டுமா? ஏன், இப்பொழுது உங்கள் பெரும்பான்மையினர் விட்டுக்கொடுக்க கூடாதா? இதையே இங்கே மாதத்திற்கு ஒரு முறை வரும் ஏகாதசிக்கு பல இந்துக்கள் விரதம் இருக்கிறார்கள், அதனால் அனைத்து உணவு விடுதிகளும் மூடப்பட வேண்டும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் அன்று ஒரு நாள் பட்டினிகிடக்க வேண்டும் என்று சொன்னால் என்ன நடக்கும்?? ஒரு கற்பனை:-
1. எல்லா இடங்களிலும் பந்து அறிவிக்கப்படும். கலவரம் வெடிக்கும், விவேக் சொல்வதைப்போல “ஒரு முழு பஸ் எரியும், அதையும் வீடியோ எடுத்துடுவீங்க”.
2. இந்த யோசனையை கொடுத்தவன் நாக்கு வெட்டப்படவேண்டும் என்று உங்கள் இமாம் ஒருவர் ‘பாத்வா’ போடுவார்.
3. இந்த ‘பார்ப்பனீய அட்டூழியத்தை’ இந்த மூளைகெட்ட வெங்காய தாசர்கள் அங்குமிங்கும் போஸ்டர் அடித்து கார்ப்பரேஷன் கக்கூஸ் மோர்க்கொண்டு ஒட்டுவார்கள். அயோத்யா மண்டபம் மீது கல்வீசி விட்டு முகமூடி கொள்ளயர்களைப்போல வந்த ஆட்டோவிலயே ஏறி பறந்துவிடுவார்கள்.
4. அமெரிக்காவிலிருந்தும், அரேபியாவிலிருந்தும் இரு குழுக்கள் வந்து இங்கு ஏன் ‘சிறுபான்மையினர் கொடுமைபடுத்த படுகிறார்கள்?’ என்று ஆலோசி செய்வார்கள்! உண்மையில் இஸ்லாமிய நாடுகளில் இருந்த, இருக்கும் இந்துக்களின் நிலை என்னவென்று எவரும் வாய்திறக்க மாட்டார்கள்.
5. டாக்டர். மன்மோகன் சிங்கிற்கு இரவில் தூக்கம் வராது!
6. எல்லா ஊடகங்களிலும் போட்டுக் கிழி கிழிவேன்று கிழிப்பார்கள்.
7. ndtv, cnn போன்ற தொலைக்காட்சிகளில் ‘அனல் பறக்கும்’ விவாதங்கள் நடைபெறும். என்.ராம், நந்திதா தாஸ் போன்ற ‘செகுளர்கள்’ பஞ்சாயத்திற்கு வந்து “எப்படி இப்படிஎல்லாம் செய்யலாம், நாளை இந்தியாவை யார் மதிப்பார்கள்? இந்து மதத்தை ஒழித்தே ஆகவேண்டும்” என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள்.
8.கடைசியாக டானி பாயில் போன்ற வெள்ளையர் ஒரு திரைப்படத்தை எடுத்து “அதில் இந்துக்கள் எவ்வாறெல்லாம் முகமதியர்களை கொடுமை படுத்துகிறார்கள்” என்று சித்தரிப்பார்கள். இதற்க்கு இஸ்லாமிய தங்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஆஸ்கார் விருது வாங்கும்பொழுது ஒரே ஒருவரி தமிழில் பேசுவார். உடனே, கருணாநிதி, வீரமணி போன்றவர்கள் தங்கள் ‘பார்ப்பனீய எதிர்ப்பை’ வெளிப்படுத்தும் வகையில் “சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே இந்தியாவுக்குப் பெருமை” என்று அறிக்கை விடுவார்கள்.
இவ்வளவும் எங்களுக்குத் தேவையா?? செத்த பாம்பை எத்தனை முறை அடித்து உங்கள் ‘வீரத்தை’ நிரூபிப்பீர்கள்??
2001 சென்சுஸ் படி உலகில் அதிக மக்கள் (2.1 பில்லியன்) பின்பற்றும் மதம் கிறிஸ்தவம். 14 கிறிஸ்தவ நாடுகள் உள்ளன. அடுத்து இஸ்லாம். 1.3 பில்லியன் பின்பற்றுகிறார்கள். 26 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அடுத்து இந்து. 1 பில்லியன் மக்கள். அனால் இருந்த ஒரே ஒரு நாடையும் விடும் நிலைமையில் இருக்கிறார்கள்.
the difference between the number of muslims and hindus is just 0.3 billion. yet see the countries captured!
மலேசியாவில் பெரும்பான்மையினரான உங்கள் முகமதியர்கள் இந்துக்களுக்கு எவ்வளவு விட்டுகொடுத்தர்கள் என்றுதான் பார்த்தோமே??
குட்ட குட்ட குணிந்து இந்துக்களுக்கு கூன் விழிந்து விட்டது! எவனாவது இதை தட்டி கேட்கக்கூடாது. உடனே அவன் ‘இந்துத்வா தீவிரவாதி’, ‘ஆர்.எஸ்.எஸ்.காரன்’, ‘பார்ப்பனிய ஆதிக்கன்’ என்று வாய்க்கு வந்தவாறு முத்திரை குத்திவிடுவீர்கள்!!
அவனும் வடிவேலு சொல்வதைப்போல:- “ஒண்ணுமே பண்ணலே, உலக லெவெல்ல பழி போடறாங்க” நு பொலம்பிகிட்டு போய்டுவான்.
உங்களுக்கு நான் கேட்கும் ஒரேவொரு கேள்வி:- “வெட்கமாக இல்லை?”.
இந்தியாவில் புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், யூதர்கள், பார்சீக்கள் என்று எத்தனயோ சிறுபான்மையினர்கள் உண்டு. அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு இரண்டு சமுதாயத்தினரை மட்டும் தாக்குகிறார்கள் என்றால், தவறு அவர்கள்மீதா உங்கள்மீதா??
இந்த இரு மாபெரும் மதங்கள் எத்தனை மதங்களை இதுவரை அழித்திருக்கும்? எத்தனை பாகான் மக்களின் இரத்தத்தை குடித்திருக்கும்? இன்னும் வெறி அடங்கவில்லையா??
முதலில் ஆபிகநிச்தான், பிறகு பாகிஸ்தான், வங்கதேசம், இப்போது காஷ்மீரையும் தொட்டு விட்டீர்கள். பிறகு இந்தியா முழுவதையும் எடுத்துக் கொள்வீர்கள்! நாங்கள் உங்களுக்கு என்னையா துரோகம் செய்தோம்???? இலங்கைத் தமிழர்களைப்போல நாங்களும் அகதிகளாக ஆகவேண்டும் என்பது உங்கள் ஆசை. ஆனால் அது நடக்காது தலைவா!
எந்த வெங்காயத்தையோ, வெண்டைக்காயயோ, பூசிநிக்காயயோ வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், கோயம்பேடு காய்கறி அங்காடியே வந்தாலும், இந்து மதத்தின் மயிரைக் கூட பிடுங்க முடியாது!!!!!
முதலில் மனிதனாக இருங்கள், பின்பு இஸ்லாமை கவனிக்கலாம்!