கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.

2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!

3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.

4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான். கண்ணகிக்கு சிலை வைக்கவில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?

cultural-deteriorationகலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும். ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.

ஆதி மனிதன் உணர்ச்சிகளை முறைப்படுத்தி முறையாக வாழ்வதற்கு சரியான வழிதெரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து முட்டி மோதி துன்பங்களை அனுபவித்து போதும் போதும் என்று ஆகி, இந்தப்பாதை சரியில்லை இனிமேல் துன்பமின்றி வாழ இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு சரியான பாதையை வகுத்து, அதற்கான கட்டுப்பாட்டு முறைகளை உண்டாக்கி அதன் படி வாழ்ந்து நிம்மதி அடைந்தான். அவ்வாறு தனக்கு நிம்மதியையும் கொடுத்து மகிழ்ச்சியையும் அதிகரித்த நல்ல வழிமுறைகளை தங்களது சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்தான். அவற்றைப் பின் வரும் சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பாதை வழியாகவே பெரும் சமூகத்தை வழிநடத்தினான். அவ்வாறு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ பெரியோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு வழிவழியாகப் பின்பற்றப்படும் வாழ்க்கை முறையே கலாச்சாரம் என்றழைகப்படுகிறது.

இப்படி நம் தாத்தா சொல்ல அப்பாவும் அப்பா சொல்ல நாமும் நாம் சொல்ல நமது பிள்ளைகளும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழும் பொழுது, துன்பங்களை சந்தித்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லாமல் துன்பங்களை தவிர்த்து வாழ கற்றுக்கொள்கிறோம். இந்த வழி தவறு இந்த வழி சரி என்று முதலிலேயே சொல்லப்பட்டு விடுவதால் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்ததே தெரியாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விடுவோம். இப்படித்தான் கலாச்சாரம் காலம் காலமாக நம்மை வழிநடத்தி வருகிறது.

திருமணம் நமது கலாச்சாரத்தின் ஆணிவேர். கூட்டமாக மனிதன் வாழத்துவங்கியபோது உறவுகளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இவள் எனது மனைவி இனி வேறு ஆடவன் இவளை அணுகக்கூடாது என்று அறிவிக்க திருமணம் தேவைப்பட்டது. பெண்ணுக்கும் ஆடவன் மீதுள்ள உரிமையை நிலைநாட்ட திருமணம் உதவியது. திருமணம் செய்து கொண்டவர்களும் அந்த உறவுக்கு விரோதமாக நடக்க கூடாது என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் வேறு மனிதர்கள் குறுக்கிட மாட்டார்கள். அப்படி வாழ்வது மணம் புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதியைத் தந்தது. இப்படிப்பட்ட அமைதியான வாழ்க்கையை தனித்தனிக் குடும்பங்களாக எல்லா மனிதர்களும் வாழ்ந்ததால் ஒரு சமூகமே அமைதியான் சமூகமாக நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இவ்வித கட்டுப்பாடுகளை மீறிவாழ்வது சமூக விரோதமாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்பட்டதால் அக்காலத்தில் அப்படி மீறுபவர்கள் சமூகத்திலிருந்தே விலக்கிவைக்கப்படுவதும் நடந்தது. எனவே சமூகத்தில் ஒரு அமைதி நிலவியது.

கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியவன் மனிதன் என்பதால் அவற்றை காகிதத்தில் அச்சடித்து வைக்காமல் மனிதனின் ஆழ்மனதில் அச்சடித்தார்கள். அதற்கு முன்னோர்கள் கடைபிடித்த உபாயம் போதனை செய்தல் மூலமும், இதிகாசக் கதைகளை அடிக்கடி மக்களிடம் சொல்வதன் மூலமும் தர்மங்களை மக்களின் மனதில் எழுதினார்கள்.

ஆண் பெண் உறவுகள் பற்றிச் சொல்லும்போது திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அரனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பிறன் மனைவியை இச்சையுடன் பார்க்காத பேராண்மை, நல்லவர்களுக்கு அறன் போன்ற காவலாக இருப்பது மட்டுமல்ல அது மிகச்சிறந்த ஒழுக்கமாகும் என்று கூறுகிறார். ஆண்மை என்பது ஆண் தன்மையைக் குறிக்கும் வழக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வள்ளுவரோ பேராண்மை என்று குறிப்பிடுவதன் மூலம் ஆண்மையின் சிறப்பு ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும் பெருமையை விட பிறருடைய மனைவியின் மீது ஆசைப்படாமல் வாழ்வதே பெருமை என்று ஆணுக்கு எடுத்துரைக்கிறார்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தீமைகளும் பிறர் மனைவிமீது ஆசைப்பட்டு நாடிச் செல்பவரை விட்டு எப்போதும் நீங்காது என்று கூறிகிறார் வள்ளுவப் பெருந்தகை. கட்டுரையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள், வள்ளுவரின் வாக்கு சத்தியம் தான் என்பதை ஆழ உணர்வீர்கள்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்த்தொழுகு வார்.

சந்தேகப்படாமல் நல்லவர் என்று நம்பி வீட்டுக்குள் அனுமதித்தவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். அதாவது நம்பியவர் வீட்டிலேயே அவருக்கு துரோகம் செய்து அவரது மனைவியிடம் இச்சைகொள்ளும் ஆண் செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார். எப்படி வெளியில் இருந்து பிணத்தை வீட்டுக்குள் அழைத்து நாம் வைத்துக்கொள்வதில்லையோ அதே போல அத்தகைய துரோக குணம் கொண்ட ஆண்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு ஆணின் பேராண்மையை எடுத்துச் சொன்ன வள்ளுவர் பெண்ணின் கற்பு பற்றிய சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார்.

இதோ அவர் பெண்ணுக்குச் சொன்னவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் வேறென்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். கற்புடன் வாழ்வேன் என்ற உறுதியுள்ள பெண்ணே உலகில் வேறு எல்லா விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று வள்ளுவர் கற்புடன் வாழ்வதன் உயர்வை பெண்ணுக்குச் சொல்கிறார் வள்ளுவப்பெருந்தகை. இவ்வாறு இல்லறம் நிம்மதியாக நடைபெற வேண்டுமென்றால் பெண் கற்புடன் வாழ்வேண்டும் அதுவே உயர்ந்த வாழ்க்கை என்று பெரியோர்களால் வலியுறுத்தப்பட்டது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

ஆனால் இவையெல்லாம் பள்ளிகூடப் படிப்பில் அதுவும் மனப்பாடப்பாடமாக வந்து மார்க் கொடுத்தால் படித்திருப்போம். அதற்குப் பின் வள்ளுவரை நினைவில் கொள்பவர் யார்? பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தால் மக்களை அப்படியே ஆக்கிரமிப்பது வள்ளுவமா அல்லது மேலைநாட்டு நாகரீகமா என்றால் மேலை நாட்டு நாகரீகமே என்று அடித்துச் சொல்லலாம்.

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!

கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம்.

வள்ளுவர் கற்பு பற்றியும் பிறன்மனை நோக்கா பேராண்மை பற்றியும் ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் விதமாக பல கற்புக்கரசி கதைகளைச் சொல்லியும், இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.

பொதுவாக மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

rama_sita_lakshmana_hanumanபிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.

ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்…

சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் “எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?” என்று புலம்பினான்.

அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள். ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை.

இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது. கமலஹாசன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யவில்லை, அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை இவர்களைப் போன்றவர்கள் நிறுத்துவதில்லை.

ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..

காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. “லக்ஷ்மனா…காப்பாற்று…!! லக்ஷ்மனா…காப்பாற்று…!!” என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள். தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கலங்கினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ “அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். “என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?” என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.

ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception (உள்ளுணர்வு) என்று சொல்வார்களே அதுதான்.

நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கையறையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

hindu_women_paintingபெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் கடித்துக் கொள்ளாது என்றனர்.

பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற வேறு பூதம் கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.

ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வது போதும் போதும் என்றானது. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போய்விடும். குடும்பம் என்ற அமைப்பு கேள்விக்குறியாகிவிடும். இது நாகரீகத்தின் விளைவு.

அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்க, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே. அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம் தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சினிமாக்களும் சீரியல்களும் தொடர்ந்து சந்தேகப்படும் ஆண்கள் அவமானப்படுத்தப் படுவார்கள். “சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா” என்று வசனம் வைப்பார்கள். ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை.  அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.

தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.

மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்.

தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.

1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினே, என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.

அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.

பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது. ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான். அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.

இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மன்னைத்தூவி செல்லும் பெண்களும், ராமனாக வாழ்வது முட்டாள்தனம், கிடைக்குபொழுது அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்று நினைத்து மாற்றான் மனைவி மீது மையல் கொள்ளும் ஆண்களுமே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?

சமீபத்தில் அனந்த லட்சுமி என்ற பெண்ணின் கொலைவழக்கைப் பற்றி செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தவர்களோ அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது. சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.

இந்தியக் கலாச்சாரம் என்பது இந்தியர்களாக வாழ்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு வேலியே ஆகும். பாதுகாப்பு வேலியைத் தாண்டி முள்வேலி மீது விழுந்தால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை கலாச்சாரத்தை கேலி செய்து நாகரீகத்தை உயர்த்திப் பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!

கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம்.

94 Replies to “கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்”

  1. அருமையான கட்டுரை ராம்குமார். மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  2. நல்ல கட்டுரை. கட்டுரையாளர் கருத்துக்களை வழங்கும் விதமும், நடையும் சிறப்பாக உள்ளது.

    அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    ஆண் கையிலே காசு வந்து விட்டால், தன்னிடம் அதிகாரம் இருந்து விட்டால் எதுவும் செய்யலாம் என நினைக்கிறான்.

    ஆண்களை திருத்த முடியாது என முடிவு கட்டி பெண்களை பாதுகாக்கும் வழியிலே நாம் ஈடுபடுகிறோம்.

    இந்த ஆண்களை திருத்த முடியாதா?

    ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கள்ளக் காதல் செய்தால், அவளை அவன்தான் விபச்சாரி ஆக்குகிறான்.

    ஆண்களை சரிப் படுத்த ஆன்மீகமே சரியான வழி. சரியான ஆன்மீகத்தை ஆண், பெண் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்.

  3. மிகவும் அற்புதமான அனைவரும் படித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டுரை

    //அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    – ஒருமுறை என்னுடிய மேலாளர் எங்களுடைய மேல்நாட்டு “Customer” மற்றும் எங்களையும் அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளி (சிக்ஷா) விழாவிற்கு அழைத்து சென்றார் – அங்கே நடந்த கூத்தை கண்ட ஆண்ட மேலைநாட்டு மனிதர் ஆடிபோய் விட்டார் – நான் இந்திய ஒழுக்கமான நாடு என்று நினைத்தேன், இவ்வன்னமா உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்

    ஒரு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களிடம் அதிகம் உள்ளது – பெண்கள் ஒழுக்கம் இல்லாமல் போனால் கலாச்சாரும் அழிந்துவிடும் – குழந்தைகளிடம் ஒரு தாயின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் – தாய் தரமில்லாமல் வாழ்ந்தால் அது குழந்தையை பாதிக்கும், இதுவே தான் எதிர்காலத்தில் கலாச்சாரத்தை கெடுக்கும்

    (Edited.)

  4. நண்பர் சாரங்கன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

    இப்போதைய பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிக சுதந்திரமும், துணிச்சலும் உடையவர்களாக உள்ளனர். அதில் சிலர் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று கணக்கு இல்லாமல் செயல்படுவதும் உண்டு.

    சமுதாயத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது தான். நான் பெண்களை எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லவில்லை. பெண்களே , உங்களை எங்கள் தாயாக நினைக்கிறோம், அந்த தாய்மை மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் கேட்டுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு,

    எவ்வளவு ஆண்கள் உலகில் பெண்களைத் தாயாக நினைகிரார்களோ , அந்த அளவுக்கு சமுதாயம் சீர்படும் என்பதையும் கூறுகிறேன்.

    ஆண்கள் நியாயமாக நடந்தால் பெண்களும் திருந்துவார்கள் அல்லவா?

    //ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்//

    ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்.

  5. This article reflects the normal male chauvinistic attitude of every society in the world. Even in America, they teach all this as is in Bible. I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things and same goes for the adult relationships too. We cannot make them go away by separating them. This sounds like the path of Talibans. Sri Rama is an ideal and looks like he was the only one like this even in his days. He is a symbol of perfect human being. Even his father had many many wives and Ravana lived in the same time too who kidnapped another man’s wife. It is basic instinct and nobody will be able to stop this. When Seetha fell in love at first sight why is it not right for my daughter or your daughter? I think we need to bring up our boys more like Rama and that should solve the problem.

  6. அம்பை அவர்களுக்கு – இந்த கட்டுரையில் “male chauvinism” எங்கு கண்டீர்கள் ஆசிரியர் காதலை பற்றி தவறாக ஏதும் எழுதவில்லையே மாறாக, கள்ளகாதல் செய்யும் வேலையைத்தான் சுட்டிக்காட்டி உள்ளார்.

    – என் மகனோ/மகளோ காதலிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை – கள்ளக் காதல், வேண்டாத உறவு கொண்டால் பிரச்சினையே

    அவர் ஆண் பெண் நட்பு வேண்டாம் என்று கூறியதாக எனக்கு தோன்றவில்லை – மாறாக வேண்டாத நிலையில் அந்த உறவை வைக்காதீர்கள் என்று கூறியதாகவே எனக்கு படுகிறது – எல்லாவற்றிற்குமே ஒரு வரையறை தேவை – ஆண் ஆண் உறவாகட்டும், பெண் பெண் உறவாகட்டும், ஆண் பெண் உறவாகட்டும் – மனம் சம்பாந்தபட்ட வரை ஓகே – உடல் சம்பாந்தம் ஏற்பட ஆரம்பித்தால் சீர்கேடு தான்.

    நடு ராத்திரியில் ஒரு ஆணும் பெண்ணும் நாலு மணி நேரம் அடிக்கடி பேசிக்கொள்வது தேவை இல்லாத ஒன்றே – ஏன் ஆணும் ஆணும் அப்படி பேசிக்கொள்வதே தேவை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்

    //Sri Rama is an ideal and looks like he was the only one like this even in his days

    தசரதர் கள்ளக் காதல் கொள்ளவில்லையே – ராமன் மட்டும் அல்ல – பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன்,ஜனகர், சுக்ரீவன்…. அனேகமாக எல்லோருமே யோக்கியமனவர்களாகவே காட்டப்படுகிறார்கள்

    ராமாயணத்தில் ஒன்று பார்த்திர்களா கள்ள காதல் கொண்ட அனைவருமே தண்டிக்க படுகிறார்கள் – வாலி, ராவணன், சூர்பனகை, அஹல்யை 🙂

    //I think we need to bring up our boys more like Rama and that should solve the problem.

    முற்றிலும் உண்மை

  7. வணக்கம்,

    ஆண்குழந்தைகளுக்கு ராமனைக் காட்டுங்கள், வீட்டில் பிரச்சினை இருக்காது
    பெண்குழந்தைகளுக்கு சீதையை காட்டுங்கள் சமுதாயமே பிரச்சினை இன்றி இருக்கும்.

    எனது பின்னூட்டம் கொஞ்சம் பரியது ஆகிவிட்டமையால் எனது வலை பூவில் …..
    https://sivayogam.blogspot.com/2009/11/blog-post.html

  8. பிறந்ததிலிருந்தே ஆண் பெண் உறவுக்கு மிஞ்சி எதுவும் இல்லையென்பது போல கட்டுப்பாடு முதல் கொண்டாட்டம் வரை சமூகம் நடந்துகொள்வதால் ஏற்படும் ஆர்வ கோளாறே அனைத்துக்கும் காரணமாகிறது;

    “பொன் மேனி உருகுதே” என ஆறு வயது சிறுமியை ஆடவிட்டு ரசித்து சிரித்து ஊக்குவிக்கும் சமுதாயம் அதே சிறுமி பதினாறு வயதில் அதே பாட்டைப் பாடினால் முகத்தைச் சுளிக்கும்;

    குடும்பம் குடும்பமாக வாழுவதில் விலங்குகளே முன்னுதாரணமாக இருக்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே சொல்லி வளர்க்கப்பட்ட இந்த சமுதாயத்தில் முறை தவறும் உறவுகளுக்குக் காரணம் என்று யாரைச் சொல்லுவோம்?

    முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது; “தீட்டு” தோஷமாகும் எனும் “பயம்” >பரிகாரம் செய்தால் போச்சு< எனும் பொய்ப் போதகத்தால் மாற்றப்படுகிறது;

    இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல;

    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது மாற்றிக்கொள்ளமுடியாமல் தொடர்ந்து தவறுகளைத் தொடருகிறான்; அவரா அவர் ரொம்ப உக்கிரமானவர் அவர் நமக்கு சரியாக வராது இவர் போதும் என தெய்வத்தை மனிதன் தேர்ந்தெடுக்கும் தன்மையே மனம் மாறுதலடையாமல் சமூக சீர்கேட்டுக்கும் காரணமாக இருக்கிறது;

    மற்றபடி சில “ஊர்க்காரர்கள்” சொல்வது போல காமமும் கள்ளக்காதலும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மட்டும் உரியதல்ல; ஆண் கள்ளக் காதலை நாடும் போது அவனுடன் தொடர்பு கொள்ளும் பெண் செய்வதும் கள்ளக் காதல்தானே; ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகிறதில்லை; ஒரு பெண்ணின் துணையோ தூண்டுதலோ இல்லாமல் மற்றொரு பெண் முறைதவறிய உறவுகளில் விழுகிறதில்லை; ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அனுபவங்களை கேட்டே மனதளவில் ஆயத்தமாகிறாள்; பிறகு எதிர்பார்த்திருந்த வாய்ப்பு வரும்போது காரியத்தை சாதிக்கிறாள்; அப்பீல் பண்ணுவது (இயற்கை..!) ஆணாக இருப்பினும் சம்மதிப்பது பெண்ணே என்ற அளவில் இதில் பெண்ணின் பங்கே அதிகம்; இதில் ஆணின் பங்கு மிகக் குறைவு என்பது என் கருத்து;

  9. நண்பர் கிலாடியாரே – சில நல்ல கருத்துக்களை சொல்வதை பொல சொல்லி – இடை இடையில் ஹின்துக்கலை ஏலனம் செய்துல்லிர்
    //
    இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல;

    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது
    //

    இது மனிதன் செய்வது இல்லை – இதில் உங்களின் தனிப்பட்ட கருத்தையே காண்கிறேன்

    // இராமன் தெய்வமானது இன்று
    இல்லை அன்றே – அகல்யா விமோசனம் – விபீஷணன் சரணாகதி – ஹனுமாரின் சரணாகதி – இவை எல்லாமே ராமாயண காலத்திலேயே நடந்தவையே – இவர்கள் அனைவரும் ராமன் கடவுள் என்றே நினைத்தவர்கள்

    //
    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது மாற்றிக்கொள்ளமுடியாமல் தொடர்ந்து தவறுகளைத் தொடருகிறான்; அவரா அவர் ரொம்ப உக்கிரமானவர் அவர் நமக்கு சரியாக வராது இவர் போதும் என தெய்வத்தை மனிதன் தேர்ந்தெடுக்கும் தன்மையே மனம் மாறுதலடையாமல் சமூக சீர்கேட்டுக்கும் காரணமாக இருக்கிறது;
    //

    நீங்கள் சுற்றி சுற்றி எங்கே வருகிறீர்கள் என்று புரியாமலா இருப்போம் 🙂

    அதாவது ஹிந்துக்கள் எல்லாம் இஷ்டம் போல கடவுளை கும்பிடுகிறார்கள் என்று தானே ஒரு தவறான முடிவுக்கு வந்துல்லிர்கள் 🙂

    உங்காளால் மட்டும் எப்படி இப்படி யோசிக்க முடியுது !!

    நீங்கள் சொல்லும்படி பார்த்தல் காசு வாங்கிகிட்டு மதம் மாடுபாவர்கள் எல்லாம் காசுக்காக கர்த்தரை தேர்ந்து எடுத்தார் என்குறீர்கள் ?

    என்ன தப்பு பந்னாலும் சேரி (கொலை, கொள்ளை, பெண் ஆசை, பொன் ஆசை …) எதை செய்தாலும் கடைசியில் பாவ மன்னிப்பு கேட்டுகிட்ட போதும் எல்லாம் சரியாகிடும்னு தானே மதம் மாறுகிறார்கள் என்று சொல்றீங்கா?

    நான் ஒரு பாவி, அசிங்கம் புடிச்சவன் – ஆனா கர்த்தர் என் பாவத்தை ஏற்பார் – அவர் தான் எனக்கு வசிடியான சாமி என்று தேர்ந்து எடுத்ததாக சொல்றீங்களா?

    ஏன் இப்படி உங்கள் சகோதரர்களை தூஷணை செய்கிறிர்கள் – ஓ பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற தைரியமா?

    அய்யா – ஹிந்துக்கள் யாரும் இந்த சாமி தான் நான் செய்கிறா தவறை மன்னிப்பார் என்று தேர்ந்தேடுப்படில்லை –
    ராமனை பிடித்திருக்க பலருக்கு பல காரங்கள் இருக்கும் – அது அவர் ஏக பத்தினி விரதன் என்பதால் மட்டுமே அல்ல
    நரசிம்மர் உக்கிரமானவர் என்று சிலர் விடுவதில்லை – அவரை உபாசிக்க சில நிபந்தனைகள் உள்ளன – அதை கடைபிடிக்க இயலாமலெ நரச்மிம்மர் விக்ரகாங்களை சிலர் வீட்டில் வைத்து உபாசிப்பதில்லை

    அதனால் நரசிம்மரை கும்பிடுகிரவர்கள் உயர்தவரொ மற்றவர்கள் தாழ்ன்தவரொ ஆகிவிடுவது இல்லை

    //முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது

    – தெய்வ பயம் தேவை இல்லை – இஸ்லாமியரை விட தெய்வதிருக்கு பயந்தவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன் – அப்படி பயந்தவர்கள் லூட்டி அடிக்கவில்லையா –
    தெய்வம் நின்று கொள்ளும் தன்மையை கொண்டமையால் – யார்க்கும் கடவுள் தண்டிப்பார் என்ற உணர்வு மிஞ்சுவதே இல்லை

    தான் யார், தன் நிலை என்று உணர்ந்து இருப்பவனால் மட்டுமே கட்டுப்பாட்டுடன் இருக்கமுடியும்

  10. ////இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //// கிளாடி சந்தடி சாக்கில் ஸ்ரீ ராமரை வம்புக்கிழுத்து விட்டார். ஏசு கூடத்தான் தான் கடவுள் என்னை துதியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக வானத்தைப் பார்த்து பிதாவே கிளாடி போன்றவர்களை மன்னியுங்கள் என்று சொன்னார். இன்று ஏசுவை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் எங்கள் மீதும் தினிக்கப்பார்க்கிறீர்கள். இதில் ஏது சரி என்று நீங்களே சொல்லுங்கள்?

    ///Ambai
    8 November 2009 at 10:36 pm
    This article reflects the normal male chauvinistic attitude of every society in the world. Even in America, they teach all this as is in Bible. I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things and same goes for the adult relationships too. We cannot make them go away by separating them. This sounds like the path of Talibans////

    அம்பை அவர்களே!

    இந்தக் கட்டுரையில் ஆணாதிக்க மனோபாவம் எங்குமேஇல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே தான் வாழும் வழிமுறை எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் சமூகத்தில் தன்னை மறந்த நிலையில் விழுந்து விடாமல் இருக்க சில யோசானைகள் மூத்தோர் ஆலோசனைப் படி சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். தாலிபானின் பாதை தொனிப்பதாகக் கூறுகிறீர்கள். அது முற்றிலும் தவறு. ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு என்று எங்குமே சோல்லவில்லை. அதில் இருக்க வேண்டிய அளவுகோல் பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வளவே. அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையே ஆகும்.

    ///I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things ///

    அதைப்பற்றி தான் இந்த விவாதிப்பதற்கும் வழிகாட்டவும் தான் இந்தக் கட்டுரையே. அதை அவசரமாக நீங்கள் தாலிபான்களோடு ஒப்பிட்டுவிட்டால் என்ன அர்த்தம். பொறுமையாக படித்துப்பாருங்கள். பல விஷயம் புரியவரும்.

    அன்புடன்
    ராம்

  11. //இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //

    இயேசு?

  12. //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது, அதிகம் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயே எல்லா சமூகத்திலும் பெண்களின் மீது அதன் பொறுப்பு அதிகம் சுமத்தப்படுகிறது. அதனால் அது போன்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

    நன்றி
    அன்புடன்
    ராம்குமார்

  13. ஆண் பல வகையிலும் பெண்ணுக்கு நெருக்குதல் தர முடிகிற இடத்தில் இருக்கிரான். அலவலகத்தில் வேலையை சரியாக செய்யவில்லை என்று பொய்க் குற்றம் கூறி தொல்லை செய்து அழுத்தம் குடுக்க முடியும். அதே போல வீட்டிலும் கணவனுக்கு மாமன், நண்பன் என்று அதட்டல் மிரட்டல் போடுபவர்களும் இருக்கிறார்கள்.

    //ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகிறதில்லை;// இது தவறு.

    ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகின்றனர்.

    பெண்களுக்கு சில சமயம் பணத் தேவைகள் வருகின்றன. கணவனின் சம்பளம் அந்த தேவையை நிறைவு செய்ய இயலாததை பயன்படுத்தி காமுகன் பணத்தை துருப்பு சீட்டாக்கி பெண்களை கெடுக்கிறான்.

    இது அனைவரும் அறிந்ததே.

    //ஒரு பெண்ணின் துணையோ தூண்டுதலோ இல்லாமல் மற்றொரு பெண் முறைதவறிய உறவுகளில் விழுகிறதில்லை; ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அனுபவங்களை கேட்டே மனதளவில் ஆயத்தமாகிறாள்; பிறகு எதிர்பார்த்திருந்த வாய்ப்பு வரும்போது காரியத்தை சாதிக்கிறாள்; //

    “ஒரு பெண்தான் இன்னொரு பெண்ணை கள்ள உறவுக்கு தூண்டுகிறாள்”, என்பதை கேட்கும் போது படிக்கும் எல்லோருக்கும் என்ன தோன்றுகிறது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். என்னைப் பொறுத்தவரையில் இப்படியான ஒரு காரணி நான் இது வரையில் கேட்டு இராதது.

    ஆனால் இது போன்ற காரணி ஒரு 5% முதல் 10% வரை இருக்கக் கூடுமோ என்னவோ.

    ————

    சமுதாயத்தைச் சீர் திருத்த வேண்டிய பொறுப்பு இந்தக் கால கட்டத்தில் ஆணுக்கே அதிக அளவில் உள்ளது என நான் நினைக்கிறேன். ஆண் கள்ள உறவுக்கு தயாராக் இல்லாத போது, பெண்கள் ஆண்களைக் கர்ப்பழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆயிரம் கட்டளைகளைப் போடும் ஆணினமே , எடுத்ததற்கு எல்லாம் வள்ளுவரை மேற்க்கோள் காட்டும் நீங்கள், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பத் தயங்குவது ஏன்?

  14. அன்புள்ள ஸ்ரீ ராம் குமார் அவர்களே,

    //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    //சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது//

    ஆண் ஏன் ஜாடைக்கு பணிய வேண்டும்?

    கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு -என்பதை ஆண் எடுத்து சொல்லலாமே? கள்ளக் காதல் குறைந்தால் நாட்டிலே கிரிமினல் சம்பவங்கள் குறையும் அல்லவா?

    பெண் கள்ள உறவுக்கு மறுத்தால் ஆண் பலவந்தம் செய்வது நடக்கக் கூடும். ஆனால் ஆண் மறுத்தால் பெண் அதிக பட்சமாக என்ன செய்யப் போகிறாள்? இகழ்ச்சியாகப் பேசப் போகிறார் – அவ்வளவுதானே?

  15. காலத்துக்கேற்ற அருமையான கட்டுரை. அறிவு பூர்வமாக உணர்ச்சிகரமாக எழுதப்பட்டது. ஆணுக்குக் குடும்பப் பெருமையும் தன்மானமும் பெண்ணுக்கு அச்சமும் நாணும் மடனும் பாலுணர்வால் ஒருவர் தவறு செய்துவிடாமல் காக்கின்ற கவசங்கள் என தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்திலேயே எழுதிவைத்துள்ளார். தொல்காப்பியத்திற்குப் பேருரை கண்ட பகுத்தறிவாளர் காலத்திலேயே இந்த வரையறைகள் எல்லாம் பத்தாம் பசலிக் கருத்துக்களாக ‘முற்போக்காளர்?’களால் இளைஞர் மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டன. இனி இந்த அசிங்கமே விதியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இவையெல்லாம் அவர்கள் நோக்கில் ‘இந்துத்துவா’க் கொள்கைகள் அல்லவா?

  16. #
    Mani
    9 November 2009 at 9:00 am

    //இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //

    இயேசு?

    Jesus never claimed Divinity in First 3 Gospels called Synoptic.

  17. /////திருச்சிக் காரன்
    9 November 2009 at 9:53 am
    அன்புள்ள ஸ்ரீ ராம் குமார் அவர்களே,

    //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    //சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது//

    ஆண் ஏன் ஜாடைக்கு பணிய வேண்டும்?

    கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு -என்பதை ஆண் எடுத்து சொல்லலாமே? கள்ளக் காதல் குறைந்தால் நாட்டிலே கிரிமினல் சம்பவங்கள் குறையும் அல்லவா?

    பெண் கள்ள உறவுக்கு மறுத்தால் ஆண் பலவந்தம் செய்வது நடக்கக் கூடும். ஆனால் ஆண் மறுத்தால் பெண் அதிக பட்சமாக என்ன செய்யப் போகிறாள்? இகழ்ச்சியாகப் பேசப் போகிறார் – அவ்வளவுதானே?//////
    சகோதரர் திருச்சி அவர்களே! நான் ஆண்கள் தவறான உறவுக்கு செல்லலாம் என்று ஆதரிக்கவே இல்லை. ஆணோ பெண்ணோ, கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொள்வது இரு பாலருக்கும் ஏற்புடையதல்ல. நான் சொல்ல வந்தது பெண்ணுக்கு இவை எளிதில் கிடைக்கும் என்பதை எடுத்தியம்பினேன். நீங்கள் கூறுவதைப்போல சூர்ப்பனகைக்கு மறுப்பு தெரிவித்த ராமனாக ஆண்களும் இருக்க வேண்டியது அவசியமே. அந்த பொறுப்பு ஆண்களையும் சாரும். கண்டிப்பாக ஆண்கள் பிறன் மனை நோக்கா பேறாண்மையாளனாக இருப்பது அவனுக்கும் சமூகத்திற்கும் என்றும் நன்மை பயக்ககூடியதே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

  18. SAIRAM. Congrats Mr. Ramkumar. Very well written. Indeed, there is absolutely no concern for the Society. The so-called freedom of speech, as exploited by everyone, including Cinema, more particularly the TV media through its serials have done more damage than good to the Society. The word காதல் is over-glorified and over-emphasized as if there is nothing for the younger generation except to be after Kaadhal. Even the dialogues between family members are depicted in such a manner as to fan hatred between husband-wife, mother-in-law & daughter-in-law and other relations with avoidable and unwanted argumentary speeches etc. Youngsters misunderstand that their main aim of going to Colleges (now adays it is in Schools also) is to make merry with girls, exchange letters with meaningless poems, spend the hard-earned money of parents towards such ‘infatuations’ and spoil their education, career and life. May be some fructify into successful marriages but, most end in disappointments, unsuccessful and unhappy marriages, divorces and sometimes suicides. May wiser counsel prevail on younger generation through such articles. Thanks and Regards – V.Ramaswamy

  19. அன்புள்ள கட்டுரையாசிரியர் அவர்களுக்கு,

    மிகவும் நல்ல (தைரியமான) கட்டுரை. நீங்கள் சொல்லும் கருத்துக்கள், பெண்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

    இருப்பினும் ஆண்மக்களை பெற்றவர்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ எவ்வித அறிவுரையும் இல்லை என்பது நெருடலாக உள்ளது. ஊசி நுழைய இடம் கொடுத்தால் போன்ற வாக்கியங்கள் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றன. கட்டுரையின் தரத்தையும் குறைக்கின்றன.

    இருபாலருக்கும் கலாச்சாரத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் கவனமாக இருந்தால் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்றிவிட முடியுமா என்ன? ஆண் வர்க்கம் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் கொண்டதாக இருந்தால் (இருகிறது என்பது உண்மை), பெண் கவனமாக இருந்தும் பலனிருக்காதே?

    ஆண் வர்க்கத்தை (அனைத்து வயதினரையும்) மனக்கட்டுப்பாடு கொண்டவர்களாக மாற்றி, பெண்களும் பொறுப்பாக இருந்தால் மட்டுமே கலாச்சாரம் காப்பாற்றப்படும்.

    So என்னைப் பொறுத்தவரை கட்டுரை இன்னமும் முடியவில்லையென்று நினைக்கிறேன். 🙂

  20. நல்ல கட்டுரை ஆசிரியர் அய்யா அவர்களே! இந்த காலத்துக்கு ஏற்ற கட்டுரை…

    ‘சகோதரர் க்லாடிக்கு’ நான் ஒன்றை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன், ஏனெனில் மற்றவை தோழர்களால் ஏற்கனவே உறைக்கும்படி சொல்லப்பட்டுவிட்டது!

    //முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது; //

    அப்படியானால், கழுத்தில் அணியும் சிலுவையை கழட்டிவிடுவது தானே! புத்தரைப்போல உடம்பில் எதையும் அணியாமலே கூட மனக்கட்டுப்பாடுடன் இருக்கலாம்…

    //“தீட்டு” தோஷமாகும் எனும் “பயம்” >பரிகாரம் செய்தால் போச்சு< எனும் பொய்ப் போதகத்தால் மாற்றப்படுகிறது;//

    பரிகாரம் என்பது தெரியாமல் செய்யும் குற்றத்திர்க்குதான்.. எந்த நல்லதையோ, கேட்டதயோ செய்தாலும் கர்மவினைகள் தொடரும், கர்மவினைகள் எல்லாம் தீரும்போதுதான் எந்த உயிரும் (உங்களைப்போல மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா என்ற போதனைக்கு இங்கு இடமில்லை, அனைத்து ஜீவன்களும் ஒன்றே!) மோட்சமடையும்… உங்களைப்போல பல்வேறு இனப்படுகொலை, களவு, இன்னும் சொல்லவே நாவுகூசும் செயல்களை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் சென்று பாதிரியாரிடம் ‘பாவமன்னிப்பு’ கேட்டால் முடிந்துவிடும் என்று எங்குமே சொல்லப்படவில்லை!

    இறைவனே ஆனாலும், பூமிக்குவந்தால் கருமவினகளை அனுசரித்து நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை. அதனால்தான் வேதங்களையும், வேள்விகளையும் நிராகரித்த புத்தரும் மகாவீரரும்கூட கருமம் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை. இன்னும் ஒருபடி மேலாக, திருமணம் செய்து பிள்ளை ஈன்றால்கூட கருமவினை தொடரும் என்று இம்மார்கங்கள் போதிக்கின்றன!
    எனவே உங்கள் “evangelist idea” கள் எங்களுக்குத்தேவயில்லை…

  21. அருமையான கட்டுரை

    மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லபட்டுள்ளது.

    மீடியாக்கள் தான் இந்த அவல நிலைக்கு வெகுவான காரணம் என்பது
    தெளிவு.

    மீடியா திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும். நன்றி

  22. பெண்களை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்துகிறது இக்கட்டுரை. உலகம் இன்று இருக்கும் நிலையில் நிறைய பிற்போக்குக் கருத்துகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. காமம், கற்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களை மிக உயர்வாக்கி அவர்களை மட்டுமே பொறுப்பாக்குவது காலம் காலமாக நடந்துவரும் உத்திதான். அதுவேதான் இங்கேயும் செய்யப்படுகிறது என்று தோன்றுகிறது.

    அதற்குக் கீழே உள்ள உளறல்களே எடுத்துக்காட்டு.

    //1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
    2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினே, என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
    3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
    4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
    5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
    6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

    இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.//

    ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழையும் என்பதெல்லாம் எத்தனை மேம்போக்கான, கிறுக்குத்தனமான வாக்கியம்? இதையெல்லாம் ஒரு பெண் சொல்கிறார் என்றால், பழங்கருத்துகளில் ஊறிப் போயிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆண்கள் என்றால் முயற்சி செய்யத்தான் செய்வார்கள் என்றெல்லாம் ஒருவித உரிமையை அளிப்பதெல்லாம் சரியல்ல. கற்பு என்பது ஆண்களுக்கும் சேர்த்தே.

    ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே காதல் வந்துவிடும் என்று மேலே உள்ள பெண்மணி நம்பினால் அவரைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

  23. ஆண் , பெண் இருவருமே கையிலே காசு வந்தவுடன் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆகி, இந்த உலகம் இன்ப மயமானது, இந்த உலகத்திலே எவ்வளவு இன்பமாக இருக்க முடியுமோ அவ்வளவு இன்பமாக இருக்க வேண்டும் என்றும்,

    வித விதமாக உடை உடுத்துவதிலும், வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வதிலும், மாலையிலே பெரிய ஹோட்டல்களில் உயர் ரக மது பானங்களை அருந்தி மகிழ்வதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

    விலங்குகளைப் போல இன்றைக்கு இந்தக் கணம் எப்படி தன் இரையை அடைய முடியும் என்பது போல – தன்னை எப்படி மகிழ்வித்துக் கொள்ள முடியும் என்ற சிந்தனை இருக்கும் போது கலாச்சாரம் கண்ணுக்குத் தெரியாது. சும்மா மாசம் ஒரு லட்சம் சமபளம் வாங்கிற பயலுவலும், பொண்டுகளும் துள்ளுராங்க.

    600 கோடி பொன்னை விட்டு விட்டு பட்டினத்தார் ஏன் சென்றார். அவர் என்ன கேனையனா? புத்தர் எதற்கு குடும்பத்தையும் ஆட்சியையும் விட்டு காட்டுக்குப் போனார்.

    நான் எல்லோரையும் சந்நியாசி ஆகச் சொல்லவில்லை. வாழ்க்கையின் அடிப்படைகள் என்ன? எத்தனை நாளைக்குத் துள்ள முடியும்-துன்பமே வராது என்று நினைக்கிறார்கள். -துன்பமே வராமல் இருந்தாலும், வயதாவைதையோ, நோய் வருவதையோ, மரணம் வருவதையோ தடுக்க முடியுமா? – இதை சொல்லி கொடுங்கள்- இதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை. அவர்கள் சன்யாசம் வாங்க வேண்டாம், ஆனால் சரியான வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

    பெற்றோர்கள் காசுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தால், குழந்தைகள் வாழ்க்கையை எப்படி சரியாகக் கற்றுக் கொள்ளும்?

    தகப்பனே கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கினால், பிள்ளை என்ன பிரகலாதனாகவா வளருவான் – அவனுக்கு சொல்லிக் கொடுக்க நாரதரும் இல்லாத நிலையில்!

    ஆன்மீக வாதி என்று சொல்லிக் கொள்ளுபவரும் சொத்துக் குவிக்கிறாங்க.

    இதை சொன்னால் நம்மை வைய ஆரம்பித்து விடுவார்கள்.

    சரியான ஆன்மீகத்தை புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்யுங்கள்.

    இந்திய சமூகத்தை அவ்வவப் போது சரியான பாதையில் கொண்டு சென்றது ஆன்மிகம் தான்.

    உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஆன்மிகம் தான் – வேறு என்ன வாய்ப்பு உள்ளது- சட்டமா கொண்டு வர முடியும்? அது தான் சொல்லி விட்டதே , வயதுக்கு வந்தவர்கள் திருமணம் ஆகாதவர்கள் ( பாலத்காரம் செய்யாத நிலையில்) சட்டம் அவர்களை எப்படி, எதற்காக தண்டிக்க முடியும்?

    ஆனால் ஆன்மீகத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் சரியான் ஆத்மீகம் எது என்று நமக்கு தெரியவில்லை.

  24. கலாசார சீரழிவு பற்றித் தன் ஆதங்கத்தை ஒரு பொறுப்புணர்வுடன் கூடிய பார்வையில் இருந்து எழுதியிருக்கிறார் ராம்குமார். சுதந்திர எண்ணம் கொண்ட எல்லா இந்துக்களுக்கும் கவலை தரும் விஷயம் தான் இது. இது பிற்போக்குத் தனம் அல்ல. ஆனால் ஓவராக பெண்களுக்குப் புத்தி சொல்லாமல், நடுநிலைமையுடன், tactful ஆக, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் அவர் எழுதியிருக்கலாம்.

    தமிழ்ஹிந்து தளம் கலாசாரம் பற்றிய விவாதத்தின் எல்லா கண்ணோட்டங்களையும் முன்வைத்து வருகிறது. இது ஆரோக்கியமானது.

    ”அட, இதுதான் இந்திய கலாச்சாரமா தோழர்களே? இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் பிரதிபலிப்பாகப் பெண்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ‘பப்’ போன்ற இடங்களில் பெண்கள் செல்வது இந்திய கலாச்சாரத்துக்கு இழுக்கு என்றால் அங்கு ஆண்கள் செல்வது…

    இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?”

    – இதே தளத்தில் முன்பு வந்திருக்கும் மற்றொரு கட்டுரையில் இருந்து

  25. வணக்கம்,

    ///ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழையும் என்பதெல்லாம் எத்தனை மேம்போக்கான, கிறுக்குத்தனமான வாக்கியம்? இதையெல்லாம் ஒரு பெண் சொல்கிறார் என்றால், பழங்கருத்துகளில் ஊறிப் போயிருக்கிறார்///

    நண்பர் ஸ்ரீ ஹசன் அவர்களே இது கிறுக்கத்தனமான வாக்கியம் என்று ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், கட்டுப்பாடுகள் என்பதில் ஒரு சிலவனவற்றை இந்த அம்மையார் கூறி உள்ளார்கள் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆண்களை பற்றி சொன்னீர்கள், அவர்களுக்கும் கற்பு நெறிகள் உள்ளது, அவர்களையும் தறி கேட்டு போக நமது கலாசாரம் அனுமதிக்க வில்லை. கற்பு நெறி தவறாமல் இருந்த காரணத்தால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ராமன் கடவுளாக மதிக்கப் பட்டான்.

    அந்த அம்மையார் பலபெண்களின் அனுபவத்தை சேகரித்து வைத்தே இக்கருத்துகளை கூறியுள்ளார் என்றே நான் நினைக்கிறேன், அதுமட்டுமல்ல இந்த விஷயத்தில் எனக்கு என் நண்பர்கள், சுற்றுவட்டதாரிடம் இருந்து ஏராளமான அனுபவங்கள் உள்ளன, ஒரே ஒரு வார்த்தை என்னவென்றால் நாம் பெண்களை தெய்வங்களாய் மதிப்பது உண்மையே, ஆனால் பக்தனாகிய நம்மை அந்த தெய்வங்கள் (பெண்கள்) சோதனைக்கு உட்படுத்தும் பொழுது நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா? எனக்கு நிறைய உண்டு.

    மேலும் பல விஷயங்கள் என்னால் சொல்ல முடியும் ஆனால் இந்த பின்னூட்டம் புதிரா புனிதமா என்ற மொக்கையாகி விடக்கூடாது.

    (comment edited & published)

  26. சகோதரர் ஸ்ரீ ராம் குமார்,

    நீங்கள் மிக முக்கியமான ஒரு பொருளை, சரியான நேரத்திலே எல்லோருக்கும் நினைவு படுத்தி “வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூரு போலக் கெடும்” என்ற வகையிலே உங்கள் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள்.

    கட்டுரை மிக முக்கியமானது. உங்கள் நடையும் சிறப்பாக உள்ளது. ஆண்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவரின் பல குறள்களுடன் ஆரம்பத்திலேயே விளக்கி உள்ளீர்கள்.

    நான் சொல்ல வந்தது, இனி ஒழுக்கத்தைக் காப்பதில் ஆண்களும் சம பொறுப்பை வகிக்க வேண்டும், என்பதைத் தான்.

    நீங்கள் ஆண்களை விட்டு விட்டீர்கள் என்று நான் கூறவில்லை.

    நான் //ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்// என்று எழுதியது நண்பர் சாரங்கனின் கருத்துக்கு பதில் கருத்தாகத் தான்.

    Kindly Refer,
    //Sarang
    8 November 2009 at 6:28 pm

    மிகவும் அற்புதமான அனைவரும் படித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டுரை

    //அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    – ஒருமுறை என்னுடிய மேலாளர் எங்களுடைய மேல்நாட்டு “Customer” மற்றும் எங்களையும் அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளி (சிக்ஷா) விழாவிற்கு அழைத்து சென்றார் – அங்கே நடந்த கூத்தை கண்ட ஆண்ட மேலைநாட்டு மனிதர் ஆடிபோய் விட்டார் – நான் இந்திய ஒழுக்கமான நாடு என்று நினைத்தேன், இவ்வன்னமா உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்

    ஒரு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களிடம் அதிகம் உள்ளது – பெண்கள் ஒழுக்கம் இல்லாமல் போனால் கலாச்சாரும் அழிந்துவிடும் – குழந்தைகளிடம் ஒரு தாயின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் – தாய் தரமில்லாமல் வாழ்ந்தால் அது குழந்தையை பாதிக்கும், இதுவே தான் எதிர்காலத்தில் கலாச்சாரத்தை கெடுக்கும்//

    and my reply referring Mr. Sarang

    //திருச்சிக் கார‌ன்
    8 November 2009 at 7:14 pm
    நண்பர் சாரங்கன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

    இப்போதைய பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிக சுதந்திரமும், துணிச்சலும் உடையவர்களாக உள்ளனர். அதில் சிலர் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று கணக்கு இல்லாமல் செயல்படுவதும் உண்டு.

    சமுதாயத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது தான். நான் பெண்களை எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லவில்லை. பெண்களே , உங்களை எங்கள் தாயாக நினைக்கிறோம், அந்த தாய்மை மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் கேட்டுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு,

    எவ்வளவு ஆண்கள் உலகில் பெண்களைத் தாயாக நினைகிரார்களோ , அந்த அளவுக்கு சமுதாயம் சீர்படும் என்பதையும் கூறுகிறேன்.

    ஆண்கள் நியாயமாக நடந்தால் பெண்களும் திருந்துவார்கள் அல்லவா?

    //ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்//

    ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்.//

    This was my reaction to the opinions of Mr. Sarang.

    நன்றி.

    திருச்சிக்காரன்.

  27. வணக்கம்,

    டைனமிக் திருமணம். இதை விட ஒரு கேவலம் நமது நாட்டுக்கு இருக்காது.

    அந்த புதுமைக் கிறுக்கன் சினேகன் சொல்வது ” கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது மனிதர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம், பாசப் பிணைப்பு”

    உண்மைதான் அந்த பாசம் பக்தி, காதல், அன்பு, நட்பு எல்லாமே ஒரே உணர்ச்சியின் பல்வேறு பரிமாணங்கள். எதை எங்கே காட்ட வேண்டும் என்பதே கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பது கூட தெரியாமல் இப்படி வடிகட்டிய முட்டாள் தனமாக இக்கல்யானத்தை ஏற்பாடு செய்து இருக்கும் இவர்கள் வெளிப்படையாக நாகரிக உடையணிந்து இருப்பினும் நிஜத்தில் காட்டுமிராண்டிகளே.

    இந்த கல்யாணத்தில் கவனித்து பார்த்ததில் பங்கேற்ற அநேகர் கிறிஸ்துவர்களே. நண்பர் திருச்சிக்காரர் அடிக்கடி இங்கே எழுதும் போது கிறிஸ்துவர்களை நோக்கி உங்கள் காட்டு மிராண்டிக் கருத்துகள் இங்கே வேண்டாம் என்று எழுதுவார். சில சமயம் நான் அவரை மனதிற்குள் திட்டியது கூட உண்டு. அதற்காக இப்போது அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆமாம் அவர் எழுதிய கருத்து உண்மை என்று உணர்த்தியது இந்த கல்யாணம்.

    தக்க சமயத்தில் இந்த நிகழ்ச்சியை இங்கு சுட்டிக் காட்டிய ஸ்ரீ மணி அவர்களுக்கு நன்றி.

  28. அன்பான நண்பர்களுக்கு,

    இருபாலருக்கும் சேர்ந்ததாகவே எழுதப்பட்ட இந்த கட்டுரை ஓர் ஆணாதிக்க மனோபாவத்துடன் இருப்பதாக அதிகம் விமர்சிக்கப்படுவதாக உணர்கிறேன். பெண்கள் குறித்த ஓரிரு விஷயங்கள் அதிகமானதால் அப்படி ஒரு தொனி கட்டுரைக்கு உண்டாயிருக்கலாம் என்று நினைக்கிறேன். கட்டுரையின் மூலக்கருவான கலாச்சாரம் பற்றிய செய்தியையும் ராமயணத்தையும்
    விட்டுவிட்டு விவாதம் ஆணாதிக்கம் நோக்கி திசை திரும்புவதை நினைத்து வருந்துகிறேன்.

    அதற்கான காரணத்தையும் விளக்குகிறேன். கட்டுரையை எழுதிய நேரத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களையும் அப்போது வெளியான செய்தியையும் கட்டுரையின் மையக்கருத்தை விளக்க அப்படியே கையாண்டேன் என்பதும் அதுவே பெண்களுக்கான பகுதி மிகுதியானது என்ற தோற்றம் உண்டாகவும் காரணமாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனால் கட்டுரை ஒரு ஆணாதிக்க மனோபாவ கட்டுரையாக வெளிப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.

    மேலும் கட்டுரையின் வீச்சு காரணமாக படிக்கும் போது வரும் வேகம் அப்படியே பெண்களை சாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதும் அடியேன் கருத்து. உண்மையென்றுணர்பவர்கள் சொல்லுங்கள்.

    ஹரன் பிரசன்னா என்பவர் பெண்களுக்காக பெண்ணால் சொல்லப்பட்ட சில யோசனைகளை உளரல்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது பெண்கள் ஒரு வரை முறையை வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்வது எப்படி உளறல்களாகும்? என் அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு முறை எனது அலுவலகத்தில் வங்கி அதிகாரியான பெண் 38 லிருந்து 45 க்குள் வயதுள்ளவராக தென்படுபடுபவர் என்னைக்காண வந்திருந்தார். மார்கெட்டிங் டிவிஷனில் இருப்பவர். என்னைப் பார்த்தவுடன்
    கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவர் நான்கு விரல்களை தான் முன்னே நீட்டினார். நானும் அவரது விரல்களை எனது விரல்களால் பற்றி ஹலோ என்று சொல்லிவிட்டு அடுத்த கட்ட பேச்சுக்கு நகர்ந்தோம். ஆனால் அந்தப் பெண் ஏன் எல்லோரையும் போல உள்ளங்கை பதிய கை கொடுக்கவில்லை என்று தோன்றியது. அவரிடம் கேட்டே விட்டேன்.அதற்கு அவரோ அலுவல் ரீதியாக ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு வரையரை இருக்கிறது. நான் அதன் படி ஒரு அளவுடன் என்னை
    வெளிப்படுத்திக் கொள்வேன். அதன் வெளிப்படு தான் இது என்றார்.இப்படி ஒரு கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும் என்று வரையரை வைத்திருக்கும் பெண்கள் அவர்களாக சொன்ன சில விஷயங்களை பெண்களின் நலன் கருதி எழுதுவது உளறல்களா?

    கொலையான பெண்ணை உதாரணமாக எடுத்துக் கூறியது கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இல்லாமல் இப்படி ஒரு பெண் தன்னுயிரையும் இழந்து தன் மகனுக்கும் எமனாகவும் நிற்கிறாளே என்று பரிதாபப்பட்டு அப்படிப்பட்ட நிலையை மற்ற பெண்கள் அடைந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வுக்காக எழுதுவது ஆணாதிக்கமா?

    ஜெயில் கைதியுடன் தகாத உறவு வைத்திருந்த பெண் போலீஸ் கொலையான செய்தி நாளிதழில் வந்தால் அந்தப் பெண்ணின் நடத்தையை சுட்டிக் காட்டினால் ஆணாதிக்கமா? மேலே குறிப்பிட்டது போல இந்த பெண் ஒரு வரையரையுடன் ஆண்களிடம் பழகியிருந்தால் இப்படி கொலையாகியிருப்பாளா என்று பெண்களை சிந்திக்கத் தூண்டுவது ஆணாதிக்கமா?

    இந்தக் கட்டுரையை ராம்குமார் எழுதியதாக நினைக்காமல் ஒரு பத்மாலக்ஷ்மியோ, ஒரு சுப்புலக்ஷ்மியோ அல்லது ஒரு மாதர்சங்க தலைவியோ எழுதியதாக உருவகித்து மீண்டும் படித்துப் பாருங்கள். கட்டுரை பெண்களுக்கு நல்லதையே சொல்லியிருக்கும். ஆண்களுக்கும் சேர்த்தே.
    அன்புடன்
    ராம்

  29. Being a woman, i see this article as a half baked attempt to enforce what a woman should behave.

    This is no better than a Taliban mindset.

    Please read Raguvamsa by Kalidasa.

    In the final chapters of Ragu vamsam, Queen of Agni Varman becomes the ruler of the country.

    How is she going to rule if she keeps up with your rules for the woman?

    Man and woman have the responsibilities as have duties. Both are important for the family. Man should feel reponsible to the family as much as the woman. women have responsibilty to the society as men.

    These kind of rules dictated here are good for keeping the woman for the family and man for the society.

    Dont fall prey to the mores of the christianity and islam where the oppression of woman is dictated based on the theological grounds. There are no theological grounds in Hinduism. Sita does not obey Rama when Rama insists that she should stay in Ayodya. Urmila does obey Lakshman when Lakshman tells her to stay in Ayodya. It just indicates the woman is a human being who can take decision on her own.

    Surpanaka wants to get married to an already married man and proposes to Rama and gets ill treated. The same goes to Ravana who wants to marry Sita who is already married to Rama.

    No difference to man or woman!

  30. ////ஜடாயு
    9 November 2009 at 7:42 pm
    கலாசார சீரழிவு பற்றித் தன் ஆதங்கத்தை ஒரு பொறுப்புணர்வுடன் கூடிய பார்வையில் இருந்து எழுதியிருக்கிறார் ராம்குமார். சுதந்திர எண்ணம் கொண்ட எல்லா இந்துக்களுக்கும் கவலை தரும் விஷயம் தான் இது. இது பிற்போக்குத் தனம் அல்ல. ஆனால் ஓவராக பெண்களுக்குப் புத்தி சொல்லாமல், நடுநிலைமையுடன், tactful ஆக, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் அவர் எழுதியிருக்கலாம்.///

    திரு ஜடாயு அவர்களுக்கு எனது நன்றி. இன்னும் முதிர்ச்சியுடன் எழுத முயற்சிக்கிறேன். உங்களது பல கட்டுரைகளை படித்து உண்மையில் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளின் மூலமாக எனக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கியிருக்கிறீர்கள்.

    ///ஓவராக பெண்களுக்குப் புத்தி சொல்லாமல், ///

    கற்பு பெண்களுக்கு தேவையில்லை, ஆண்களே பெண்களிடம் கன்னித்தன்மையை எதிர் பார்க்காதீர்கள், ஓரினச்சேர்கையை ஆதரித்தால் என்ன தப்பு இப்படியெல்லா குஷ்பு போன்ற பெண்கள் பெண்களுக்கு வழிகாட்டும் போது அது தான் நாகரீகம் என்று பெண்கள் நினைத்துக் கொண்டு அதன் வழியே சில்ல கொஞ்சமும் யோசிக்காமல் செல்லத்துவங்கும் போது பெண்களுக்கு புத்தி சொன்னால் என்ன தப்பு. அதற்கு ஏன் பயப்படுகிறீர்கள்?

    தற்போது நாகரீக உடை அணிந்து கொள்ளும் இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற ஃபேஷன் பரப்பப்படுகிறது. அது உங்களுக்கு தெரியுமா. மீடியாகளின் தாக்கத்தால் அடுத்த தலைமுறை இந்துப் பெண்கள் ட்ரெடீஷனல் ட்ரெஸ்ஸுக்குத் தான் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஜீன்ஸ் போட்டா பொட்டு வேண்டாம் என்பார்கள். இப்பொழிதே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அதாவது நாகரீகம் என்ற பெயரில் பெண்களிடம் எதைச் சொன்னாலும் எடுபட்டுவிடும் ஆபத்து நிதர்சனமாக தெரிகிறது. அதனாலேயே சில விஷயங்களை பெண்களுக்கு அழுத்தமாக சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது. அதில் தயக்கம் என்ன வேண்டி கிடக்கிறது.

    நாம் ஒன்றும் பெண்களை முகத்தை மூடி நடந்து வாருங்கள் என்று சொல்லவில்லையே. பாதுகாப்புடனும் நமது கலாச்சாரம் இது என்று தெரிந்து கொண்டு நடக்கலாம் என்றும் தானே சொல்கிறோம்.

    ஆண்களுக்கு எல்லா புத்திமதியும் ஜடாயுவோ ஹரனோ, திருச்சிக்காரனோ மாறி மாறி சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் பெண்களுக்க் நிஜத்தை சொல்ல பெண்களே வருவதில்லையே! பிறகு யார் தான் சொல்வது.

    நான் சொன்னதில் ஏதேனும் தவறென்றால் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். கேட்டுக்கொள்கிறேன்.
    அன்புடன்
    ராம்

  31. இன்னிக்கு நான் பார்த்த news –

    See what a doctor says about iPill – a contraceptive

    //It’s unfortunate that a perfectly good technology which can be safely used, which can be empowering for women

    இந்த கருமத்தயா “women empowerment” என்கிரார்கள் –
    கல்ல காதலுக்கு இது ஒரு வரப்ரசதாமகவே ஆகிவிட்டது

    நண்பர் திருச்சிக்காரர் சொன்னது போல இது ஒன்னும் சட்டப்படி தப்பில்லை – தனி மனித ஒழுக்கமும் ஆன்மிகமும் தான் இதை மாற்ற முடியும்

    இந்த மாதிரி கட்டுரைகலை பாட புத்தகதில் வைத்து சிரு வயதில் இருன்தே நெரிப்படுத்துதல் வேண்டும்

  32. மிக அருமையான கட்டுரை. இதற்கு எதிராக எழுதியவர்கள் இதன் அர்த்தத்தை முழுவதுமாய் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.

    ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர ‘அப்பன் வளர்ப்பினிலே’ என்று சொல்லவில்ல. ஒரு பெண் ஒழுங்காக இருந்தால் தான் குடும்பம் விளங்கும். குடும்பம் விளங்கினால்தான் சமூகம் செழிக்கும். அதனால்தான் பெண்களுக்கு நம் சமூகத்தில் அதிக அறிவுரைகள். அதை புரிந்துகொள்ளாமல் இது பழைமைவாதம், பத்தாம்பசலித்தனம் என்று கூறுவது விதண்டாவாதம்தான்.

    நம் மக்கள் வெளிநாட்டுக்காரர் சொன்னால் தான் ஒத்துக்கொள்வார்கள் என்றால், இதோ….ஆஸ்கார் வயில்ட் என்ற அறிஞர் கூறியது

    “Between men and women there is no friendship possible. There is passion, enmity, worship, love, but no friendship.”

    இது ஆராய்ந்து பார்த்தால் உண்மை என்று கண்டுகொள்ளலாம்.

  33. நல்ல கட்டுரை அனால் இந்த அநாகரீகமான நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற இந்து மதம் எப்படியான சமூகவியல் சட்டங்களை வகுத்துள்ளது என்பதை தங்களது அடுத்த கட்டுரையில் தர முடியுமா

  34. தயவுசெய்து விளக்கம் அளியுங்கள்!
    தயவுசெய்து விளக்கம் அளியுங்கள்!
    தயவுசெய்து விளக்கம் அளியுங்கள்!

    ஒரு முறை எனது கல்லுரி விடுதியில் எனது இந்து நண்பனும், கிறிஸ்துவ நண்பனும் ஒரு சூடான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்திய கலாச்சாரம் கெடுவதற்கு காரணம் ஆப்ரகாமிய மதங்களே என்பது எனது இந்து நண்பனின் வாதம். அதற்கு கிறிஸ்துவ நண்பன் வினவிய எதிர் வினாக்கள் இதோ.

    . இந்து கடவுள் முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்?
    ஆதி முலமான சிவனுக்கு ஏன் முன்று மனைவிகள்?

    இத்தகைய கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் அந்த மாணவர் திணறிவிட்டார். எனக்கும் விடை தெரியாததால் என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. என்னசெய்வது நங்கள் சாதரண மாணவர்கள்தான்..எங்களுக்கு உங்களை போன்ற பெரியவர்கள்தான் சரியான விளக்கம் தர வேண்டும். இல்லையென்றால் நாளை எங்கள் சந்ததியினருக்கும் இதே நிலை ஏற்படலாம். உதவுங்கள் யாராவது…
    சிவம் சிரேவதர

  35. சகோதரர் Sivam sirevadara ,

    //Sivam sirevadara
    10 November 2009 at 7:37 am

    //தயவுசெய்து விளக்கம் அளியுங்கள்!//

    //இந்து கடவுள் முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்?
    ஆதி முலமான சிவனுக்கு ஏன் முன்று மனைவிகள்?

    இத்தகைய கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் அந்த மாணவர் திணறிவிட்டார். எனக்கும் விடை தெரியாததால் என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை//

    முருக‌ன் இர‌ண்டு ம‌னைவிய‌ர் வைத்து இருந்தால் அவ‌ரைக் க‌ட‌வுளாக‌ ஏற்றுக் கொள்வதில் எங்க‌ளுக்கு என்ன‌ பிரச்சினை? அவ‌ர் ஒன்னும் எங்க‌ள் மனைவியை கூட்டிப் போக‌வில்லையே? வேறு யார் மனைவியையும் தூக்கிப் போக வில்லையே? வூரரிய, உறவறிய மணமுடித்து குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவர்.

    க‌ட‌வுள் என்ப‌வ‌ர் ந‌ல்ல‌வ‌ராக இருக்க‌ வேண்டும், அநியாய‌ம் செய்ப‌வ‌ராக‌ இருக்க‌க் கூடாது. ந‌மக்கு உத‌வி செய்ப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும், தீமையை எதிர்ப்ப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும் -இவைதான் க‌ட‌வுளிட‌ம் ம‌க்க‌ள் எதிர்பார்ப்ப‌து!

    முருக‌ர் வ‌ள்ளியை காத‌லித்துத்தான் வ‌ள்ளியின் விருப்ப‌த்துட‌ன் தான் திரும‌ண‌ம் செய்து கொண்டார்! க‌ற்ப்ப‌ழித்து திரும‌ண‌ம் செய்ய‌வில்லை. முருக‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்த‌ சூர‌ ப‌த்ம‌னுட‌ன் தான் போரிட்டார்.

    ஆனால் ஆபிரகாமிய மதங்களின் கடவுளாக காண்பிக்கப் படும், யூதர் இன நாட்டாண்மையாகிய “கர்த்தரோ” இனப் படுகொலையை செய்வதில் முழு முனைப்பு காட்டியுள்ளார்.

    //மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    இவை எல்லாம் பைபிளில் இருக்கிறதா இல்லையா?

    இவை எல்லாம் பைபிளில் இருக்கிறது என்பது உண்மையா இல்லயா?

    இப்படி இன அழிப்பு செய்து விட்டு, இளம் கன்னிப் பெண்களின் தந்தை , தாயார், அண்ணன் எல்லோரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு, இளமை கன்னிப் பெண்களை தங்கள் காம வெறிக்கு உபயோகப் படுத்திக் கொள்ள கூறியிருக்கிறார், மைனர் குஞ்சாக செயல் பட்ட மோசஸ் என்பவர்.

    எண்ணாகமம் : அதிகாரம் 31.
    செய்யுள்
    17 .ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும் , புருஷ சம்யோகம் அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்.

    18 . ஸ்திரீகளில் புருஷ சம்யோகத்தை அறியாத எல்லாப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

    இப்படியாக “கில்லி” படத்தில் வரும் வில்லனே பரவாயில்லை, அவன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்ய அவளின் அண்ணன் காரங்களை கத்தியால் குத்திக் கொன்று விட்டு, அந்தப் பெண்ணிடம் “செல்லம், செல்லம்” என்று சொல்லியதே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு,

    மும்பைக்கு அப்பாவிப் பெண்களைக் கடத்தும் கொடுமையாளனை விட இன்னும் அதிக அநியாயமாக, இனப் படுகொலை நிகழ்த்தி பெண்களைக் கடத்துபவராக

    ஒரு முழு இனத்திலுள்ள ஆண்கள் அனைவரயும் கொன்று, கன்னியல்லாத பிற பெண்களை எல்லாம் கொன்று, கன்னிப் பெண்களை எல்லாம் ரவுண்ட் அப் செய்து கர்ப்பழித்து தங்கள் உடைமையாக வாழ் நாள் முழுவதும் கற்ப்பழிக்க வைத்துக் கொள்ளுங்கள், என்று யூதருக்கு கட்டளை போட்டவர் மைனர் குஞ்சு மோசஸ், அவருக்கு எல்லா நேரங்களிலும் உதவி செய்த யூதர்களின் நாட்டமை கர்த்தர் என்பதை, அந்த அப்பாவி அபலைப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எண்ணி மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

    இதை நாம் சொல்லவில்லை. பைபிளில் சொல்லி இருக்கிறார்கள்.

    இப்படி மைனர் குஞ்சாக செயல்பட்ட மோசஸ் தான் யூத, கிருத்தவ, இசுலாமிய மற்றும் எல்லா ஆபிரகாமிய மதங்களிலும் கடவுளின் தூதர் என்று பட்டயம் செய்யப் பட்டவர். இந்த ” தூதுவராகியாய” மோசஸை அனுப்பியவர் தான் தங்களின் ஒரே “கடவுள்” என யூதர் , கிருத்துவர் , இசுலாமியர் ஆகியோர், அந்த ஒரே “கடவுளுக்கு” வெவ்வேறு பெயர் இட்டு வணங்கி வருகின்றனர்.

    தான் ஒரு இன‌த்தை ம‌ட்டும் தேர்ந்து எடுத்து, அந்த‌ இன‌த்தை, ”நீ ம‌ற்ற இன‌த்துட‌ன் போராடு, நான் உன்னை வெற்றி பெற‌ வைப்பேன், பிற இன‌ங்க‌ளை நீ அழித்துப் போடு”என்று ஹிட்ல‌ரைப் போல, ராஜ பக்ஷே போல ‌ ரேசிஸ்ட் ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல் ப‌ட்ட‌ ச‌க்திக‌ளையே க‌ட‌வுளாக‌ வ‌ழிப‌டும்போது,

    ஒரு இன‌த்தின் ந‌ன்மைக்கு ம‌ட்டுமே பாடுப‌ட்ட‌, பிற இன‌ங்க‌ளை அழிக்க‌ கூறிய‌ ச‌க்தியை உல‌க‌ம் முழுமைக்குமான‌ க‌ட‌வுளாக‌ நிலை நிறுத்த‌ முய‌லும் போது

    ந‌ல்ல‌ க‌ட‌வுளான‌ முருக‌ரை ம‌கிழ்ச்சியுட‌ன் வாயார‌ப் பாடி, ம‌ன‌மார‌ நினைந்து வ‌ண‌ங்குவ‌தில் த‌மிழ‌ருக்கு மிக்க‌ ம‌கிழ்ச்சியே!

  36. I completely agree with Malar.
    My grown up daughters have a lot of, horror of horrors ” friends” who happen to be males. They do have girl friends too!!These” boy friends ” are a very polite, educated, cultured group ( multicultured, to be precise, Chinese, Vietnamese, Aussies,Koreans, Srilankans, etc) and yes, they do go out at times, to the city and have great time.These boys do visit us sometimes and jump into our pool on a hot afternoon and practically make themselves at home. I have met some of their parents and you would not find more decent people than them.
    To describe my daughters as amoral is simply laughable. You have to teach your children what is right and wrong in life. Bring up your children the right way, infuse them with all the great teachings from our epics from infancy and they will not only look after themselves, both morally and physically but they will also fight for the rights of the community and the nation as a whole. Please trust them to uphold our hindu dharmic values.
    No reason to become moral police here and anyhow, who has the right to appoint themselves as the custodian of our culture? Who is going to define our culture in the first place? Do not Talibanise India.
    Bottom line 1: There are a lot of westerners who respect and appreciate the the opposite sex for what they are rather than for anything sexual.
    Bottom line 2 for Indian youth:: Modern is not western as lot of Westerners follow Indian ( human) values.! Do not ape the worst of the Western culture.
    Note to Mr Glady: Would you like to talk about the Chritian priests who are pedophilles? After all these are the priests who had accepted Jesus as their saviour.Vatican is trying it’s best to sweep all allegations under the carpet. Can their crimes be wiped out due to their “confession”?. Now , that is the topic you should be worrying about rather than preaching to Hindus about our Lord Rama and His Divinity in His times.

  37. Satish
    “Between men and women there is no friendship possible. There is passion, enmity, worship, love, but no friendship.” Oscar Wilde
    I am not sure whether you know of this fact that our friend Oscar was a homosexual.
    Also, just because Oscar said so will not make it a fact.. Honestly, do you not have any woman as friends? If not, why not? Saying that men cannot have women as fiends is rather insulting to the whole gender, This is a typical Islamic mindset where their religion dictates that men cannot be trusted and the women need to wear a tent called burqua to protect themselves from these evil, waiting to rape, men.

  38. Sivam sirevadara அவர்களே

    //. இந்து கடவுள் முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்?
    // ஆதி முலமான சிவனுக்கு ஏன் முன்று மனைவிகள்?

    உங்களை இன்னும் குழப்பட்டுமா
    பெருமாளுக்கு ஏன் எக்கச்சக்க மனைவிகள் 🙂
    கிருஷ்ணர் ஏன் கோபியர் கூடவே இருந்தார்

    பல விளக்கங்கள் கூறலாம் –

    பகவான் ஒருவனே புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான் – அவன் ஒருவனே புருஷன் – மற்றவர் எல்லாரும் (நீங்கள் நான்) பெண்களே (ஆத்மாவின் நிலையை கூறுகிறேன்)

    பகவானை குறித்து பாடிய பல ஆண்கள் ஒரு பெண்ணை தன்னை ஏறிட்டு கொண்டு பாடி உள்ளனர்
    – கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் – இது ஒரு ஆழ்வார் பாசுரம் – ஆழ்வாரின் அம்மா தன் மகளின் ( ஆழ்வாரின் – ஆழ்வாரை பெண்ணாய் பாவித்து ) நிலயை கூறுகிறாள்

    – திருமங்கை ஆழ்வாரோ ஒரு படி மேலே போய் மடல் வடித்தார் – மடல் என்பது பண்டை தமிழ் நாட்டில் ஒரு பெண் தன் காதலன் தன்னை ஏற்க்க கை ஆளும் கடைசி அஸ்திரம் என்று கொள்ளலாம்

    இந்தா வழக்கம் கிறிஸ்தவத்திலும் உண்டு – உங்களின் கிறீஸ்தவ நன்பாரை பார்த்து ஒரே ஓர் கேள்வி கேளுங்கள் போதும்

    கண்ணிகாச்த்ரிகள் கண்ணிகள் என்றால் ஏன் (திருமணம் ஆனதற்கு அடையாளமான ) கையில் மோதிரம் அணிகிறார்கள்

    பதில் – let me do this in english
    Because they are married to the Christ

  39. எந்த ஒரு கட்டுரையாக இருந்தாலும்,

    அது புகையிலையை உபயோகிப்பதால் உண்டாகும் கெடுதலோ
    அல்லது
    லஞ்சம் வாங்குவதால் உண்டாகும் தீமையோ

    அது எதுவாக இருந்தாலும் அதிலே சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் புகுந்து கட்டுரை சம்பந்தப் பட்ட விடயங்களை எழுதுவது போல எழுதி,

    பிறகு இந்துக்கள் கடவுளாக வணங்குபவர்களை, இழிவு செய்து எழுதி தங்களது விஷப் பிரச்சாரத்தை செவ்வனே செய்கின்றனர்.

    மேலும் இந்து மதத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக திரித்து எழுதி விட்டு, பலரும் தக்க பதில் அளிக்கும் போது வாய் மூடி எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

    பிறகு டார்மன்ட் நிலையில் இருக்கும் வைரஸ் கிருமி செயல் படுவது போல மறுபடியும் செயல் பட ஆரம்பிக்கின்றனர்.

    இந்து நேர்மையானவன் என்பதற்கு ஏற்ப தமிழ் இந்துவும் அவர்களின் கருத்தை அப்படியே போடுகிறது. அவர்களின் விஷப் பிரச்சாரத்தை முரியடித்து அவர்களின் காட்டு மிராண்டி காம கொடூர அசிங்கங்களை அம்பலப் படுத்த வேண்டியது நமக்கு அவசியமாவதால் நாம் கட்டுரையின் கருத்துக்கு பதில் அளிப்பதை விட இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

    எனவே தமிழ் இந்து ஆசிரியர் குழாம் சுவுசெச சூழ்சியாளர்களின் விஷப் பிரச்சாரத்திற்கு தனி காலம் (column) ஒதுக்கி விட்டால் அங்கே அவர்களின் அசிங்கத்தை சரி செய்து, நச்சை முறி அடித்து நன்மையை நிலை நாட்ட எளிதாக இருக்கும்.

  40. தோழர் சிவம் சிறேவாதரா அவர்களே, எனக்கும் எல்லாம் தெரியாது, தெரிந்ததை சொல்கிறேன்…

    இந்திய கலாசாரம் அப்ரகாமிய மதங்களால் கேட்டது என்று கூற இயலாது, மேற்கத்திய கலாச்சாரத்தால் கேட்டது என்றே சொல்ல வேண்டும்! மேற்கத்திய கிறித்தவர்கள் அநாகரீகமாக இருக்கிறார்கள் என்பதற்காக அனைத்து கிறித்தவர்களும் அப்படி என்று சொல்லமுடியாது. ஆனால் இதில் ஒரு ரகசியம் உள்ளது:- மேற்கத்திய கலாச்சாரத்தில் திளைத்த அமெரிக்க ஆண்களும் பெண்களும் இன்று சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (ISKCON) சேர்ந்து பண்டையகால இந்தியர்களைப் போல வாழ்கிறார்கள். ஒழுக்கம், தூய்மை, பிறர் மனைவி மீது பற்று வைக்காமல் நம் நாட்டு பக்திமான் களைப்போலவே வாழ்கிறார்கள்! அவர்கள் என்ன சாதியென்று எவருக்கும் தெரியாது, ஆனால் எத்தனை பேர் இன்று அந்தணர்களாக வாழ்கிறார்கள் தெரியுமா?? Stephen Knapp என்ற அமெரிக்கர் கிருஷ்ண பக்தர் ஆகி நந்தானந்தன தாசா என்று பெயர்மாற்றிக்கொண்டு அந்தணராக வாழ்கிறார். Frank Morales என்ற மேற்கத்தியர் தர்ம ப்ரவர்தக ஆச்சார்யா என்று பெயர் மாற்றிக்கொண்டு இந்துத்துறவியாக வாழ்கிறார்!

    இந்துமதம் ஏகப்பட்ட உள்ளர்த்தங்களை (symbolic references) கொண்டது.
    ஆகவே அவற்றை வெறுமே (literally) புரிந்துகொள்ள முயற்சிக்கக்கூடாது.

    சிவபெருமானுக்கு ஒரு மனைவிதான். அவள் சதி, பார்வதி, துர்க்கை என்று பலபெயர்களில் அழைக்கபடுகிறாள். முதல் பிறவியில் அவள் சதி, அடுத்த பிறவியில் பார்வதி, இப்படி பல பெயர்கள் உண்டு. திருமால் (விஷ்ணு) வாமனனாக அவதரித்தபோது வானத்தை அளக்க காலை உயர்த்தினான். அப்பொழுது பிரம்மதேவன் தனது கமண்டலநீறினால் திருமாலின் காலை பூஜை செய்ய, அந்நீர் வேகமாக பூமிக்கு வர, அப்படிவந்தால் பூமியில் உள்ள உயிர்களுக்கு ஆபத்து என்று சிவபெருமான் தனது தலைமுடியில் வைத்துக்கொள்கிறான். பிறகு பாகிரதன் என்ற அரசனின் கோரிக்கையை ஏற்று, அந்நீரை பூமிக்கு அளிக்கிறான் ஈசன். அதுவே கங்கை. பாகீரதன் மூலமாக பூமிக்கு வந்ததால், கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் உண்டு. ஆக கங்கை சிவனின் மனைவி அல்ல!

    முருகப்பெருமான் இரண்டு மனைவிகள் தெய்வானை மற்றும் வள்ளி. வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி.. முருகன் ஞான சக்தி.. (இவை மூன்று சக்திகள்). எனவே எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளர்த்தம் உண்டு. இன்னொரு பொருள்:- தெய்வானை, வள்ளி இருவரும் திருமாலின் புதல்விகள். இவர்களுக்கு, முருகன் முறை. இவர்கள் இருவரும் முருகனை கணவனாக அடைய தவம் செய்கிறார்கள். அவர்களின் உண்மையான பெயர்கள் அமுதவல்லி மற்றும் சுந்தரவல்லி! தவம் செய்து அடுத்த பிறவியில் தெய்வானயாகவும் வள்ளியாகவும் பிறந்து தங்கள் முறைமாமனான முருகனை மணக்கின்றனர்.. இதுவே புராணங்களின் படியும் சரி!

    இந்துவிரோதிகளின் கண்களை உறுத்தும் இன்னொரு கடவுள் கண்ணன். கண்ணனுக்கு எப்படி 16,008 மனைவிகள் என்று கேட்பார்கள். அப்படி 8 பேரை மட்டுமே கண்ணன் அவர்கள் செய்த தவத்திற்கு மெச்சி மணந்துகொள்கிறான்! மற்ற 16,000 பெண்கள் யார்? அவர்கள் நரகாசுரனால் சிறைபிடக்கப்பட்டு அடிமைகளாக வைக்கப்பட்டனர்…
    நரகாசுரை கொன்று அவர்களுக்கு விடிதலை அளித்தான் இறைவன்.. ஆனால் சமுதாயம் அவர்களுக்கு மதிப்பு தராது, வேருஎவரும் அவர்களை மணக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும்போது, அவர்களை காப்பாற்ற எல்லோரையும் மணக்கிறான் பகவான்.
    மேலும் இதற்க்கு இன்னொரு version உம் உண்டு. அதாவது திருமால் இராமனாக வந்தபொழுது, முனிவர்கள், தேவர்கள் அனைவரும் அவனை தொட்டுப்பார்க்கவேண்டும், என்றும் சிலர் அவனோடு விளையாடவேண்டும் என்றும் விருப்பபடுகின்றனர். பல பெண்கள் அவனை மணக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அவன் “ஏகபத்தினி விரதன், மாற்றான் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்பதற்காக அவர்கள் அனைவரையும் தனது அடுத்த பிறவியில் மணப்பதாக அருள்கிறான். அதன்படி அவர்கள் அனைவரும் கோபியர்கலாகவும், நரகாசுரனால் சிறைபிடிக்கப்பட்ட பெண்களாகவும் வந்து கண்ணனை மணக்கின்றனர்!

    ஆனால், இதயெல்லாம் சொன்னால் இதை “கட்டுக்கதை, மூடநம்பிக்கை” என்றெல்லாம் பரிகசிப்பார்கள். அப்படியிருந்தால் ஏன் இவருக்கு இத்தனை மாணவிகள், ஏன் கண்ணன் இராசக்ரீடை விளையாடினான் என்று கவலைப்படுகிறார்கள்? ஒன்று சொல்வதை ஒப்புக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் வேறுஎதாவது அவர்களுக்குத் தெரிந்தால் சொல்லவேண்டும்..

    ஆனால் திருவிளையாடல் திரைப்படத்தில் புலவர் தருமி சொல்வதைப்போல அவர்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும், விடை சொல்லத் தெரியாது.. எனவே அவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்!!

  41. “எல்லாவற்றிற்குமே ஒரு வரையறை தேவை – ஆண் ஆண் உறவாகட்டும், பெண் பெண் உறவாகட்டும், ஆண் பெண் உறவாகட்டும் – மனம் சம்பாந்தபட்ட வரை ஓகே – உடல் சம்பாந்தம் ஏற்பட ஆரம்பித்தால் சீர்கேடு தான்.”
    What does this mean? It is ok to fantacize but not to act on the feelings? Do you know Renuka Devi? Why was she beheaded? She just thought that the reflection of Indra was handsome !! Now you are okay as long as I keep it in my heart and not do it physically? This is the so called our culture? You can lower the bar because you are a man? Why can’t men accept a woman having an affair is the mistake of the husband? Even in the murdered lady’s life, her husband was in Bangalore and who knows what kind of life is he leading? Do you know the story of our business community who always have more than one wife abroad? Men should be able to accept all this and then the family will exist. But, if they cannot accept that woman can do all these too then that is going to destroy the family. It is men’s ego that cannot accept that a woman can have weakness too!! She could love more than one man!! Why is everything difficult for Women? If a woman want to have an affair, why shouldn’t her husband forgive like Deivanai or Valli (whoever was married first) or Dayalu. Men can save women and the families by letting go of thier egos.

  42. //////உங்கள் எல்லோருக்கும் தெரியும் “தி ஹிந்து” ஒரு தீவிர பெண்ணியவாதம் பேசும் (Ultra-feminist) நாளிதழ் என்பது. இதுபோன்ற பெண்ணியவாத ஊடகங்கள் பெரும்பாலும், “மனைவி கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாள்” என்ற செய்தியைக்கூட “மனைவி தன் கையில் கத்தியுடன் இருக்கும்போது அந்த கொடுமைகாரக் கணவன், தன் மனைவிமீது கொலைப்பழி விழவேண்டும் என்னும் தீய எண்ணத்தில் அந்தக் கத்திமீது தன் கழுத்து சரியாகப் பாயும் வகையில் விழுந்து மாண்டான்” என்றுதான் எழுதுவார்கள்!

    அத்தகைய செய்தி வெளியாகும்போது, இன்னொரு பக்கத்தில் ஒரு ஆஸ்தான பெண்ணிய எழுத்தாளர் பெயரில் ஒரு பாஷ்யக் கட்டுரை வெளியாகும். அது “இதுபோல் தன்னை மனைவி கையால் மாய்த்துக் கொண்டு பெண்ணினத்திற்கு மாசு கற்பிக்கும் போக்கு ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் ஆணாதிக்க ம்னப்பான்மையின் வெளிப்பாடு. நம்நாட்டுப் பெண்கள் விழிப்படைந்து தங்கள் உரிமைகளை உணர்ந்து, முழுமையான விடுதலையை இன்னமும் பெறவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன” என்ற ரீதியில் இருக்கும். இதற்கு பின்பாட்டு பாடுவதற்கென்று மறுநாள் அரை டஜன் பெயர்களில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பிரசுரமாகும். இதுதான் நாம் அன்றாடம் காணும் வாடிக்கை.

    அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிகொண்டு அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இன்னும் சில “சமூக ஆர்வலர்கள்” இந்த “கேப்”பில் புகுந்து “கள்ளக்காதலை ‘கள்ளக்காதல்’ என்று அழைக்கக் கூடாது” என்பதுபோல் அறிக்கை விடுவார்கள். உடனே அரசியலில் துண்டு போட இடம் தேடிக்கொண்டிருக்கும் சில முன்னாள் நடிகர்கள் “மனைவி கள்ளக்காதல் செய்வதற்கு கணவன்தான் காரணம். ஆகையால் மனைவி கணவனைக் கொன்றால் மற்ற சட்டங்களில் உள்ளதுபோல அதற்கு கணவனையே பொறுப்பாளி என்று தீர்மானித்து, அவன் தப்பித்தவறிப் பிழைத்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்; அவன் செத்தால் அவனுடைய பெற்றோரைச் சிறையிலடைக்க வேண்டும். மேலும் அவர்களுடய சொத்தையும் பிடுங்க வேண்டும் (இதுதான் முக்கியமான கூறு!!) – இப்படி அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்!

    ஆனால், இன்றைய “தி ஹிந்து” இதழில் கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொலை செய்த செய்தி பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பூசி மெழுகாமல் “உள்ளது உள்ளபடி” இத்தகைய செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருப்பது ஒரு காலத்தின் கட்டாயம் எனலாம். எனெனில் தற்காலத்தில் பல பத்தினிகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதை ஓவர்டைம் போட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் கள்ளக்காதல் என்பது இருமுனையிலும் கூறான கத்தி என்பதை அது அந்தக் கள்ளக்காதலியையும் பதம் பார்க்கும் காட்சிகள் மூலம் காணமுடிகிறது.

    சரி, இப்போது இன்றைய சூடான “க.கா.கொ”-விற்கு வருவோம்:-

    கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
    தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

    அம்பத்தூர், நவ.10 – 2009. செய்தி: தினத்தந்தி//////

    நன்றி : https://tamil498a.blogspot.com/2009/11/blog-post_10.html

    செய்தியை இந்தச் சுட்டியில் படியுங்கள்:

    https://www.dailythanthi.com/article.asp?NewsID=526185&disdate=11/10/2009

    ///ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.///
    இது கொலை செய்த பெண்டாடியின் வாக்கு மூலம்.
    ஆனால் இதெல்லாம் நடந்தாலும் ஆண்களே நீங்கள் ராமனாகவே இருங்கள். ஆண்களே பெண்கள் இப்படி செய்கிறார்களே என்று கூட புலம்பாதீர்கள் அது ஆணாதிக்கவாதமாகும். ஆண்களே பெண்களுக்கு ஆலோசனை சொல்லி கூட கட்டுரை எழுதிவிடாதீர்கள். அது ஆணாதிக்க வாதமாகும். ஆக இதனால் தெரிவிப்பது என்னவென்றால் பெண்களுக்கு முறையற்ற உறவு வைத்துக்கொள்ள முழு சுதந்திரம் இருக்கிறது. ஆண்கள் விரும்பாவிட்டாலும் அவர்களை அழைத்து உறவு கொள்ளும் அளவுக்கு பெண்களுக்கு ஆசைகள் உண்டு. அவர்களும் மனிதர்கள் தானே அம்பை கூறுவது போல.

  43. I just want to react to one point of view here. Often it is asked “Why should a women bear more responsibility for the family. Why do we keep her morals and her conduct more important than that of men. This is unfair”

    My answer would be that instead of getting into fairness or unfairness, lets observe the world and understand how it operates instead of arguing everything from a theoretical plane. Lets say we all agree that drinking is bad and we want to make sure that future generations are not too affected by this problem. Now is it more important for the current generation men or the current generation women to abstain from drinking. Note the word “more important”. It is ofcourse good if both sexes can abstain from it. But who should abstain from it more completely. The answer logically is that whoever has more influence on the next generation, he/she has to be more responsible and abstain from drinking. If we look around and analyze impartially, even with both parents working, a mother has more influence on the child’s life, values. Nature has made it that way. A woman spends much more time with a kid right from child birth, feeding the child etc, her contribution towards child growth is higher and however much we try to change it, the contribution from her will be more due to nature entrusting child birth to her. I have seen umpteen number of cases, where the father drinks but the child doesnt because of the mother’s influence. But I will be very surprised if the mother drinks but the children dont because what the mother does at home will be considered “normal” by children. So once you allow these social evils to take root in women, the next generation will consider these “normal”.

  44. சகோதரி அம்பை அவர்களே,

    கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் உங்களைப் பாராட்டுகிறேன். நன்றி.

    //Do you know the story of our business community who always have more than one wife abroad? Men should be able to accept all this and then the family will exist. But, if they cannot accept that woman can do all these too then that is going to destroy the family. It is men’s ego that cannot accept that a woman can have weakness too!! She could love more than one man!! Why is everything difficult for Women? If a woman want to have an affair, why shouldn’t her husband forgive like Deivanai or Valli (whoever was married first) or Dayalu. Men can save women and the families by letting go of thier egos//

    எந்த ஒரு பழக்க வழக்கமும் கட்டுப் பாடும் – சட்டக் கட்டளையினாலோ, சாத்திரக் கட்டளையினாலோ, சமூகக் கட்டளையினாலோ, வேறு எந்த கட்டளையினாலோ – பெண்களின் மீது திணிக்கப் படக் கூடாது, கட்டுப்பாடு என்பது அன்பின் அடிப்படையில் வரவேண்டும் என்பதாகவே நானும் கருதுகிறேன்.

    இங்கே எழுதப் பட்டுள்ளது,
    //But, if they cannot accept that woman can do all these too then that is going to destroy the family. It is men’s ego that cannot accept that a woman can have weakness too!! She could love more than one man!! Why is everything difficult for Women? If a woman want to have an affair, why shouldn’t her husband forgive like Deivanai or Valli (whoever was married first) or Dayalu. Men can save women and the families by letting go of thier egos// –
    இப்படி எழுத உரிமை உண்டு. வெளிப்படையாக கருத்துக்களைக் கூறுவதுதான் சமூகத்துக்கு நல்லது.

    ஆனால் இந்தக் கருத்தை இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறேன்.

    ஒரு குடும்பத் தலைவனும், தலைவியும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இருவருக்கும் அறுபது வயதைத் தாண்டிய பருவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    அந்த வீட்டிலே வேலை செய்ய வரும் இளம் பெண்ணை குடும்பத் தலைவர் காதலிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நாளடைவில் அந்த வேலைகாரி குடும்பத் தலைவியை மதிப்பது இல்லை. “நீயே வேலையை பாத்துக்கமா” என்று சொல்லி விடுகிறாள், என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    அப்போது குடும்பத் தலைவி, கணவனிடம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நிறுத்த சொல்கிறார். ஆனால் கணவன் அதற்க்கு தயாராக இல்லை.
    எந்தக் காரணம் முன்னிட்டும் அந்த இளம் வேலைக்கார பெண்ணுடனான உறவை முறிக்க கணவர் தயார் இல்லை.

    அதாவது வீட்டின் அங்கீகரிக்கப் படாத புதிய எஜமானி ஆகி விடுகிறாள் அந்த இளம் வேலைக் காரப் பெண்.இப்போது யாரவது வீட்டை விட்டுப் போவதானால் , அதை செய்ய வேண்டியது மனைவிதான்.

    அல்லது மனைவி, இந்த கணவன்- எஜமானியாகிய வேலைக்காரி, இவர்களின் உறவை அங்கீகரித்து – கிட்டத் த‌ட்ட‌ வேலைக்காரிக்கு வேலைகாரியாக வாழ வேண்டும்.

    இன்னொரு குடும்பம், இளம் தம்பதிகள். கணவன் ஒரு தொழில் அதிபர். மனைவிக்கு கணவனின் போட்டித் தொழில் அதிபருடன் காதல் ஏற்ப்பட்டு விடுகிறது.

    தம்பதிகள் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது, கணவனுக்கும் போட்டித் தொழில் அதிபருக்கும் ஒரு வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், உன் மனைவிக்கே திருப்திகராமான சர்வீசு தர உன்னால் முடியவில்லை, நீ எப்படி வாடிக்கையாளருக்கு திருப்தி தர முடியும் என்று எல்லோர் முன்னாலும் கேட்டல், அது நிர்வாணப் படுத்தப் படுவதை விட அதிக அவமானம் என்பதை யாரும் உணரலாம்.

    கணவன் மனைவி உறவு என்பது, ஒரு தனித்துவம் வாய்ந்த நட்பு (Husband and wife relation ship is a special type of friendship) போன்றது.

    நம்பிக்கை, அந்த நம்பிக்கையைக் காத்தல் – இதுதான் இந்த நட்பின் அடிப்படை.

    ம‌னைவிக்கு என்ன‌ வேண்டுமோ எல்லாம் த‌ருகிரோம்‍. ‍
    வ‌ரும் வ‌ருமான‌ம் முழுவ‌தையும் ம‌னைவியிட‌ம் த‌ர‌ வேண்டுமா, த‌ருகிரோம்.
    வாங்கும் சொத்துக்க‌ள் அத்த‌னையையும் ம‌னைவி பேரில் வாங்க‌ வேண்டுமா‍ வாங்குகிறோம்.

    வேறு எந்த‌ப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க‌வில்லை.

    வீட்டு வேலை செய்ய வேண்டுமா, செய்கிறோம்‍,

    ச‌மைக்க‌ வேண்டுமா, நாங்க‌ளே ச‌மைத்து த‌ருகிறோம் (ந‌ன்றாக‌),

    ப‌திலுக்கு ஒரே ஒரு உத‌வி ம‌ட்டும் தான் ம‌னைவியிடம் கேட்கிறோம். அதாவ‌து வேறு எந்த‌ ஆணிட‌மும் அந்த‌ர‌ங்க‌ உற‌வு வேண்டாம் என்கிற‌ ஒரே கோரிக்கை ம‌ட்டும் தான்.

    வேறு ஆணிட‌ம் பேசுங்க‌ள், பழ‌குங்க‌ள் ‍- ஆனால் அந்த‌ர‌ங்க‌ உற‌வு ம‌ட்டும் வேண்டாம், fantacy யும் வேண்டாம் – என்ற‌ ஒரே ஒரு கோரிக்கை ம‌ட்டும் தான் கேட்கிறோம். .

    ஏனெனில் ஒரு க‌ண‌வ‌னின் மான‌ம் அவ‌ள் மனைவியின் ந‌ட‌த்தையில் இருக்கிறது.

    ஒரு ம‌னைவியின் வாழ்க்கையும் மான‌மும் அவ‌ள் கண‌வ‌னின் ந‌ட‌த்தையில் தான் உள்ள‌து.

    இதை நீங்க‌ள் புரிந்து கொள்கிறீர்க‌ளா?

    //கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு// -என்பதை நீங்க‌ள் புரிந்து கொள்கிறீர்க‌ளா?

    எந்த‌ அள‌வுக்கு ம‌ன‌ம் அலைபாயாம‌ல் இருக்கிர‌தோ, அந்த‌ அள‌வுக்கு அந்த‌ ம‌ன‌ம் அமைதியும் வ‌லிமையும் உடைய‌தாக‌ இருக்கிர‌து என்பதை நீங்க‌ள் அனுப‌வ பூர்வ‌மாக‌ உண‌ர்ந்து இருக்கிறீர்க‌ளா?

  45. திரு.வள்ளுவன் அவர்களே நீங்கள் பெயரில் மட்டும் அல்ல நிஜத்திலும்தான்.அருமையான விளக்கம் தந்தீர்கள். திரு.sarang அவர்களும்தான்.

    //கண்ணிகாச்த்ரிகள் கண்ணிகள் என்றால் ஏன் (திருமணம் ஆனதற்கு அடையாளமான ) கையில் மோதிரம் அணிகிறார்கள்
    பதில் – let me do this in english
    Because they are married to the கிறிஸ்ட் //

    என்ன ஒரு எதிர் வாதம்.
    அய்யா திருச்சிக்காரர் அவர்களுக்கும் எனது மிகபெரிய நன்றிகள். இனி நான் அவர்களுக்கு இதற்கான விளக்கத்தை தைரியமாக தெளிய வைப்பேன். தமிழ் இந்து வலைத்தளம் அருமையான சேவையை செய்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை.

  46. நீதி: கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு

    //சரி, இப்போது இன்றைய சூடான “க.கா.கொ”-விற்கு வருவோம்:-

    கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
    தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

    அம்பத்தூர், நவ.10 – 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

    கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசுக்கு போன்

    ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ரகசிய கண்காணிப்பு

    பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

    அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

    திட்டமிட்ட கொலை

    ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

    இதன்காரணமாக சுதாகரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். அதில் இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

    இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு :-

    எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால்
    …………………….
    ………………………..
    …………………………..
    அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

    அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.

    சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.
    …………………..
    ………………………….
    ……………………….
    மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்.

    இவ்வாறு ஷீலா கூறினார்.

    சிறையில் அடைப்பு

    ஷீலா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து ஷீலாவையும், ராஜேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.//

    இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியும் நீதி: கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு

  47. Sivam sirevadara அவர்களே

    Hinduism rediscovered by Anbil Ramaswamy. – இந்த புத்தகத்தில் நிறைய பதில்கள் உள்ளன

    அவர் இந்த புத்தகத்தை எழுத காரணமே ஒரு கிறிஸ்துவர் அவரை பார்த்து ஹிந்து மதத்தை பற்றி அச்சு பிச்சு கேள்விகளை கேட்டதால் தான் –

    அந்த கிறிஸ்தவருக்கு அவர் அப்போதே தக்க பதில் தந்தார் – ஆனால் பல ஹிந்துக்கள் இந்த மாதிரி நோஞ்சான் கேளிகளிலிருந்து தப்ப வைக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலே இந்த புத்தகத்தை எழுதினார்

  48. பெண்களுக்கு இந்துமதம் என்ன கண்ட்ரோல்களை நல்லதாக வைத்திருக்கிறது என்று கேட்டிருக்கிறார்
    புதுமை வாதிகளாலும் நாத்திகர்களாலும் புத்தி ஜீவிகளாலும் அதிகம் விமர்சிக்கப்படும் மனுநீதி கூறுவதைக்கேளுங்கள்
    பிதா ரக்ஷதி கௌமாரே , பதி ரக்ஷதி யௌவனே , புத்திர ரக்ஷதி வார்தக்யே , ந ஸ்திரீ சுதந்தரம் அர்கதி :
    சிறுமியாக இருக்கும்போது அப்பாவும் இளமையில் கணவனும் முதுமையில் மகனும் காப்பாற்ற வேண்டும். பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது
    இந்த கருத்து பெண்ணடிமையாக தோன்றும் ஆனால் முழுமையாக யோசித்துப்பார்த்தால் பெண்களின் பாதுகாப்புக்கு அன்று எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
    இன்றைய வேகமான காலத்தில் பெண்கள் பல இடங்களில் பல விதமான ஆட்க்களை சந்திக்கவேண்டியுள்ளது . அவர்களில் நல்லவர்களும் கேட்டவர்களும் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களுக்கு இது பழம்புராணமாக தோன்றலாம் அவர்கள் கூட தங்கள் மனதை தொட்டு யோசித்தால் இது உண்மையே என்று உணர்வார்கள்.
    பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்பதல்ல இதன் கருத்து. பேணக் தனித்து விடப்படக்கூடாது என்பது தான் இதன் கருத்து. தனித்துவிடப்படும் பெண்களின் அவலம் நாம் காண்கிறது தான
    முன்காலத்தில் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அதன் பிறகு அவளது அப்பாவோ சகோதரனோ கூட அவளை தொட்டு பேச அனுமதியில்லை. பெண்குழந்தைகளை கண்டித்தோ அறிவுறுத்தியோ திருத்த பாட்டி மாமிகள் என்று உறவுகள் இருந்தன. இன்றைய அணு குடும்ப கலாச்சாரத்தில் பெண்குழந்தைகளுக்கு வழிகாட்ட யாரும் இல்லை . பணத்தின் பின்னால் வாழ்க்கை சுகத்துக்காக ஓடும் பெற்றோருக்கு குழந்தைகளிடம் மனம் விட்டு பேச நேரம் இல்லை. அவள் காணும் டிவி சினிமாவில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிக்கிறார்கள் முத்தம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சரிதான் என்று குழந்தை நினைக்கிறாள், அவள் நண்பர்களாலோ வக்கிர சொந்தங்களாலோ தூண்டப்படும் பொது இந்தகாட்சிகள் தானே அவள் மனதில் வரும். அடுத்த ஆண்கள் நம் உடலில் தொட அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்படாத குழந்தை தவறிப்போனால் யார் காரணம்.
    பணம் புகழுக்காக மகள்களை சினிமாவில் நடிக்க விடும் பெற்றோரும் இதேபோல தவறு செய்கிறார்கள். நடிகைகள் பணத்துக்காக செய்வதை சரியானதென்று புதுத்தலைமுறை நம்புகிறது.
    நாம் செய்ய வேண்டியது ஓன்று தான் நமது புராண இதிகாசங்களை பிள்ளைகளுக்கு சொல்லி ஒழுக்கம் பற்றி போதித்து நல்ல கண்ணியமான ஆடைகளை அணியச்செய்து நன்றாக வலர்ப்போம்

  49. //////இப்படி எழுத உரிமை உண்டு. வெளிப்படையாக கருத்துக்களைக் கூறுவதுதான் சமூகத்துக்கு நல்லது.

    ஆனால் இந்தக் கருத்தை இன்னும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறேன்//////

    சகோதரர் திருச்சி அவர்களே,

    எல்லா நேரத்திலுமே மிகவும் நிதானமாகவும் ஆழமாகவும் உங்களால் எழுத முடிவதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியம் அடைகிறேன். ஏனோ என்னால் சில நேரங்களில் அவ்வாறு இருக்க இயலவில்லை. உணர்ச்சி பொங்க எழுதுகிறேன். விவாதிக்கிறேன். உங்கள் நிதானமான எழுத்துக்களே நான் பெற வேண்டிய பக்குவத்திற்கான அளவுகோலாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

    வாழ்த்துக்களும் நன்றியும்..
    சகோதரன்
    ராம்

  50. Rama – I am not bothered about who Oscar Wild is. All I am bothered about is the message. I read this quote when I was in my 12 std. I did not belive it (as I used to arugue like you then)and from then I started observing every boy-girl friendship and after sometime I was convinced. If they are really close, they call themselves brother-sister. This is 99.99% true if the boy and girl are real real close. Rest .01%, i have only seen passion. I dont blame it on man or women. We should be sensible enough to accept that ‘this is Nature’ or if you want to call it ‘practical’. This is how humam mind works. Neither you nor I can change it. You are asking me personal questions – well around 10 years back, i had literally a friend in every place. My friends used to tease me, ‘even if you go to teh moon you will have a friend’, because whereever I go, someone will be there to meet me or I will say, oh this place, I know this person. One fine day, I thought I am too much occupied with ‘friends’ and wanted to know whether they are my real true friends. So I stopped my contacts with everyone and thought, if someone is my real friend they will reach out to me. And you know what, all those whom I thought are my close friends did come back to me and the rest of the crowd got filtered. And 99% of those filtered community is ‘females’. My thought – its practically impossible for a man and women to have a helathy friendship and I dont blame either. Its NATURE. I do have a few ‘women’ friends…but definitely not in my first circle friends. One of my close, if you want to call ‘girl friend’ is a friend to me from my 2nd std. And another is my MCA classmate. But both of them are more like a family friends to us. We seldom get time to meet alone, always we meet as family. Its foolish to belive the media and movies and think that everything is possible. There is a ‘nature’ above us which directs us and we have to accept it. This is in no way an insult to anyone. Lets understand our strengths and weakness and have to courage to accept weakness. Thats what ‘Hinduism’ teaches us.

  51. Sorry Satish ii my comments have offended you in anyway.
    I personally could not give damn about Oscar Wilde either, as it is his personel opinion.
    With due respect, I disagree with your view that males cannot form friendship with females. This is simply an hypothesis of yours. It is not supported any facts.This hypothesis degrades men and equates them to sex maniacs.Respect for women and treating them equal is /should be expected of any civilized men.My circle of friends include a lot of women and they are just that, FRIENDS
    . Let us not go back to SOME OF our bad old days when widows were made to shave their heads and child marriage was rampant. Modern Hindu women can and will hold the Hindu dharma as much as the modern Hindu men.Let us also give due credit to their intelligence and their ability to discriminate between right and wrong. Let us not become Islamists.

  52. இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஒரு விஷயம் ஆணும் பெண்ணும், பழகுவதைப்பத்தி கேட்டால் நாங்கள் அண்ணன் தங்கை ஆக சகோதர பாசத்துடன் தான் பழகுகிறோம் நீங்களாக ஏதாவது தப்பாக எண்ண வேண்டாம் என்பார்கள், நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உதவி செய்து பழகுகிறோம் என்பார்கள், நான் கேட்கிறேன் இந்த பையனோ பெண்ணோ வீட்டில் தங்கள் அண்ணன் தங்கையிடம் இதுபோல தான் பழகுகிறார்களா.? இல்லை என்பதே பெரும்பாலான பதிலாக இருக்கும் கடவுள் நமக்கே நமக்காக தந்த சகோதரத்திடம் ச்நேகமில்லை அதிடம் பேசமாட்டோம் சிரிக்கமாட்டோம் விளையாடமாட்டோம் உதவிசெய்யமாட்டோம் எங்கோ பிறந்த யாருடையவோ சகோதரத்திடம் பாசம் காட்டுவோம் இதுவா சகோதரபாசம். இந்த நடிப்பு பசப்பல்களை விட்டு அவரவர் காரியங்களை பார்க்க புது தலைமுறை முன்வரவேண்டும்.

  53. திரு.சிவம் சிறேவாதரா அவர்களே, மத விளக்கங்களைத் தருவதில் நான் ஒரு சிறு பூச்சி அவ்வளவே! இங்கு பெரும் யானைகளெல்லாம் உள்ளனர்.. அவர்கள் உங்களின் கேள்விகளுக்கு இன்னும் சிறந்த விடைகளைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.. என்னை மன்னிக்கவும், நான் உங்கள் மறுமொழியை சற்று நேரும் முன்புதான் பார்த்தேன், எனவே தான் தாமதம் ஆகிவிட்டது..

    இன்னும் என்கப்பட்ட சூட்சுமங்கள் (symbolic references) இந்து மதத்தில் பொதிந்துள்ளன. சிலவற்றை இங்கு தரவிரும்புகிறேன்!

    ரிக் வேதத்தில், இந்திரன் விருத்தராசுரனை வென்றது, ஆரிய அரசனான இந்திரன் திராவிட மன்னனான விருத்தராசுரன் மீது படையெடுத்து, போரிட்டு வென்றதாக ஆரிய/திராவிட இனவாதத்தைப் பற்றிப் பேசுபவர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா? இதில் உள்ள சூட்சமம் என்ன?

    “The voluminous references to various wars and conflicts in Rigveda are frequently cited as the proof of an invasion and wars between invading white-skinned Aryans and dark-skinned indigenous people. Well, the so-called conflicts and wars mentioned in the Rigveda can be categorized mainly in the following three types:

    A. Conflicts between the forces of nature: Indra, the Thunder-God of the Rig Veda, occupies a central position in the naturalistic aspects of the Rigvedic religion, since it is he who forces the clouds to part with their all-important wealth, the rain. In this task he is pitted against all sorts of demons and spirits whose main activity is the prevention of rainfall and sunshine. Rain, being the highest wealth, is depicted in terms of more terrestrial forms of wealth, such as cows or soma. The clouds are depicted in terms of their physical appearance: as mountains, as the black abodes of the demons who retain the celestial waters of the heavens (i.e. the rains), or as the black demons themselves. This is in no way be construed as the war between white Aryans and black Dravidians. This is a perverted interpretation from those who have not understood the meaning and purport of the Vedic culture and philosophy.

    Most of the verses which mention the wars/conflicts are composed using poetic imagery, and depict the celestial battles of the natural forces, and often take greater and greater recourse to terrestrial terminology and anthropomorphic depictions. The descriptions acquire an increasing tendency to shift from naturalism to mythology. And it is these mythological descriptions which are grabbed at by invasion theorists as descriptions of wars between invading Aryans and indigenous non-Aryans. An example of such distorted interpretation is made of the following verse:

    The body lay in the midst of waters that are neither still nor flowing. The waters press against the secret opening of the Vrtra (the coverer) who lay in deep darkness whose enemy is Indra. Mastered by the enemy, the waters held back like cattle restrained by a trader. Indra crushed the vrtra and broke open the withholding outlet of the river. (Rig Veda, I.32.10-11)

    This verse is a beautiful poetic and metamorphical description of snow-clad dark mountains where the life-sustaining water to feed the rivers flowing in the Aryavarta is held by the hardened ice caps (vrtra demon) and Indra, the rain god by allowing the sun to light its rays on the mountains makes the ice caps break and hence release the water. The invasionists interpret this verse literally on human plane, as the slaying of vrtra, the leader of dark skinned Dravidian people of Indus valley by invading white-skinned Aryan king Indra. This is an absurd and ludicrous interpretation of an obvious conflict between the natural forces.”

    https://www.tamilnation.org/heritage/aryan_dravidian/agrawal.htm

    அதாவது, கார்மேகமான விருதராசுரனை பிழிந்து மழை பெய்ய வைத்தான் இந்திரன் என்று கூறப்படுகிறது! மழைபொழியும் மேகம் கறுப்பாக இருப்பதால், இங்கு விருத்தராசுரனும் கறுப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளான்.. மற்றபடி, இங்கு இரு இனங்கள் மோதிக்கொண்டதாக எந்த சான்றுமில்லையே!

    அடுத்து,
    ஆரிய படையெடுப்புக் கோட்பாளர்கள் ஹரப்பா மற்றும் சிந்து சமவெளியில் குதிரைகள் இல்லை என்று கூறுகிறார்கள். இதற்க்கு, அகழ்வாராய்ச்சிக்காரர்கள் சொல்லும் பதில் ஒரு புறம், வேதங்களை மெய்ஞானமாக உணர்ந்த ஒரு பெரியவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவர் ஸ்ரீ அரவிந்தர்!

    அஸ்வம் என்னும் வடமொழி சொல்லிற்கு, குதிரை என்று பொருள் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். ஆனால்,

    “The word ashva must originally have implied strength or speed or both before it came to be applied to a horse.59

    More specifically,

    The cow and horse, go and ashva, are constantly associated. Usha, the Dawn, is described as gomati ashvavati; Dawn gives to the sacrificer horses and cows. As applied to the physical dawn gomati means accompanied by or bringing the rays of light and is an image of the dawn of illumination in the human mind. Therefore ashvavati also cannot refer merely to the physical steed; it must have a psychological significance as well. A study of the Vedic horse led me to the conclusion that go and ashva represent the two companion ideas of Light and Energy, Consciousness and Force….60

    For the ritualist the word go means simply a physical cow and nothing else, just as its companion word, ashva, means simply a physical horse…. When the Rishi prays to the Dawn, gomad viravad dhehi ratnam uso ashvavat, the ritualistic commentator sees in the invocation only an entreaty for “pleasant wealth to which are attached cows, men (or sons) and horses”. If on the other hand these words are symbolic, the sense will run, “Confirm in us a state of bliss full of light, of conquering energy and of force of vitality.”61

    In other words, Sri Aurobindo rejects a mechanical equation ashva = horse.

    The constant association of the Vedic horse with waters and the ocean, from the Rig-Veda to the Puranic myth of the churning of the ocean, confirms that we are not dealing here with an ordinary animal, as does the depiction of the Ashvins as birds. Within this framework, the ashvamedha sacrifice also deserves a new treatment, which the Indologist Subhash Kak has recently outlined very cogently.62

    Sri Aurobindo’s stand received indirect support from a wholly different angle, that of the late anthropologist Edmund Leach, who warned against the picture of a horse-rich Rig-Vedic society:

    The prominent place given to horses and chariots in the Rig Veda can tell us virtually nothing that might distinguish any real society for which the Rig Veda might provide a partial cosmology. If anything, it suggests that in real society (as opposed to its mythological counterpart), horses and chariots were a rarity, ownership of which was a mark of aristocratic or kingly distinction.63

    Thus the place of the horse in the Rig-Veda needs to be reassessed from a decolonized standpoint, with a fresh look at the Vedic message and experience. If Sri Aurobindo and Leach are both right, then the word ashva refers only occasionally to the actual animal, and its rarity is well reflected in the modest amount of physical remains and depictions. Indeed, even in today’s India, despite having been imported into India for many centuries, the horse remains a relatively rare animal, invisible in most villages.

    At this point, a valid objection could be raised: if the horse did exist in the Indus-Sarasvati civilization, and if one wishes to equate this civilization with Vedic culture,64 the latter at least makes a symbolic use of the animal; why is the horse therefore not depicted more often as a symbol in Harappan art, for instance on the Indus seals? The answer I propose is simple: even if the Rig- Veda is contemporary with, or older than, the mature Indus-Sarasvati civilization, we need not expect Harappan art to be a pure reflection of Vedic concepts. The Veda represents the very specific quest of a few rishis, who are unlikely to have lived in the middle of the Harappan towns. Although Vedic concepts and symbols are visible in Harappan culture, the latter is a popular culture; in the same way, the culture of today’s Indian village need not exactly reflect Chennai’s music and dance sabhas. Between Kalibangan’s peasant sacrificing a goat for good rains and the rishi in quest of Tat ekam, That One, there is a substantial difference, even if they ultimately share the same worldview.

    Only a more subtle approach to Harappan and Vedic cultures can throw light on their apparent differences. ”

    https://www.archaeologyonline.net/artifacts/horse-debate.html

    அதாவது, வேதங்களிலும் சரி, புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் வேறெந்த நூல்களில் உள்ள செய்திகளையும் நாம் நேரடியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு செய்திக்குள், ஒன்பது பொருள் இருக்கும், இதனால்தான் நம் பெரியோர்கள் ஒரு குரு மூலமாக எதையும் கற்கவேண்டும் என்றார்கள்.

    அடுத்து, மகாபாரதப் போரில், கண்ணன் பீமனுக்கு துர்யோதணனின் தொடையைக் காட்டி அங்கடித்து அவனை கொல்லச் சொன்னது போர் விதிமுறைகளை மீறியது என்று சிலர் கூறுவார்கள். இதற்க்கு ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் என்ற குரு கூறும் விளக்கம் என்ன தெரியுமா?

    இங்கு கண்ணன் ஒரு ஆன்மீக குரு, பீமன் ஆன்மிகம் பயிலும் மாணவன், துர்யோதனன் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் இயல்பு குணங்கள்! இவற்றை எல்லாராலும் வென்றுவிட முடியாது. இவற்றை எப்படி வெல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் ஒரு குருவின் வேலை! இக்குணங்களை எங்கடித்தால் வெல்லலாம் என்பது தன்னை உணர்ந்த, உலகை உணர்ந்த ஒரு குருவிற்க்கே தெரியும். அதனால்தான், கண்ணன் துர்யோதணனின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்குக் காட்டுகிறான். அதாவது, இக்குணங்களை வெல்லச்தெய்து மாணவனை முக்திக்கு அழைத்துச் செல்பவர் குரு…

    அடுத்து, மகாபாரதப் போரில், கர்ணன் ஏன் கொல்லப்பட்டான் என்று சிலர் கேட்பார்கள். இதற்கும் ஒரு விளக்கம் உண்டு. இராமாயணத்தில், வாலி இந்திரனின் அவதாரம், சுக்ரீவன் சூரியனின் அவதாரம், அனுமான் வாயுதேவனின் அவதாரம். இராமன் பரம்பொருளின் அவதாரம். மகாபாரதத்தில் கர்ணன் சூரியனின் அவதாரம், அர்ஜுனன் இந்திரனின் அவதாரம், பீமன் வாயுதேவனின் அவதாரம், கண்ணன் பரம்பொருள். இதில் சூட்சமம் என்னவென்றால், வாயு எந்தப்பக்கம் உள்ளாரோ, அப்பக்கமே இறைவனும் இருப்பான். இராமாயணத்தில், வாயு (அனுமான்) சுக்ரிவனுடன் (சூரியன்) இருந்தார். எனவே இராமனும் அப்பக்கமே இருந்தான். அதனால், வாலி (இந்திரன்) இறக்கவேண்டியாயிற்று!
    மகாபாரதத்தில் கதையே மாறுகிறது.. வாயு (பீமன்) அர்ஜுனனுடன் (இந்திரன்) இருக்கிறார், எனவே கண்ணனும் அப்பக்கமே இருக்கிறான். எனவே, கர்ணன் (சூரியன்) இறக்கவேண்டியைற்று!
    இதில் இன்னொரு முக்கியமான கருத்து, இறைவன் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. ஒருமுறை வெல்பவர் இன்னொரு முறை தோற்கிறார், ஒரு முறை தோற்றவர் இன்னொரு முறை வெல்கிறார்!

    கடைசியாக, இராமாயணத்தில் இராவணனுக்கு எப்படி பத்துத் தலைகள் இருந்தன என்று கேட்கிறார்கள். இதற்க்கு ஒருவிதமான விளக்கம்:- இறைவனுக்கு பத்து தலைகள் என்பது நான்கு வேதங்களிலும், ஆறு உபநிடதங்களிலும் அவனுக்கு இருந்த அறிவு (6+4=10) பத்து ஞானிகளுக்கும் பண்டிதர்களுக்கும் நிகராக ஆக்கியது என்று சொல்லப்படுகிறது!

    இதுபோல நிறைய உள்ளன.. எனவே, அவற்றைக் கர்க்கவேண்டுமானால் ஒரு நல்ல குருவிடம் கற்பதே சிறந்தது!

  54. இன்றைய இளைய சமுதாயம் கெடுவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் அவர்களுக்கு அளிக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும்,தங்கள் நிறைவேறாத எண்ணங்களை அவர்கள் மீது திணிப்பதும்தான்
    ஒழுக்கத்தை தான் கடைபிடிக்காது தங்கள் குழந்தைகளிடம் மட்டும் எதிர்பார்ப்பது இதை போன்று ஏமாற்றத்தில்தான் முடியும்.
    இருவருமே இந்த சீர்கேடுகளுக்கு பொறுப்பு.

  55. ராமாயணம் பல நீதிகளை உணர்த்த வால்மீகி பகவானால் எழுதப்பட்ட காவியம் அது பல தத்துவங்களை உள்ளடக்கியது. அதை உணர வேண்டுமென்றால் பாமரனின் நிலையை தாண்டி அதன் உள்ளே சென்றால்தான் அவைகளை புரிந்து கொள்ள முடியும் வெறும் கதையில் வரும் சம்பவங்களை வைத்துக்கொண்டு மட்டும் பார்த்தல் குழப்பமே மிஞ்சும் அதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமாயணம் இன்னும் கேட்கப்பட்டும், படிக்கப்படும் அழியா காவியமாக இருக்கிறது.
    ராமபிரான் கடவுளின் அவதாரம் என்று நம்புபவர்களுக்கு ஒருவிதமாகவும் அது கட்டுக்கதை என்று விமரிசிப்பவர்களுக்கு ஒருவிதமாகவும் தோற்றமளிக்கிறது. என்பதே உண்மை. இரண்டையும் போட்டு குழப்பிகொண்டால் உண்மை விளங்காது.

  56. இராமரை கடவுள் அவதாரம் என்று கருதாவிட்டாலும், இராமாயணத்திலே எந்த முரண்பாடும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    இராமாயணம் நடந்து இருக்க கூடிய ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

    இராமாயணம் முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக நடந்து இருக்க கூடிய ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

    அதற்கு நூல் சான்றாக வால்மீகியின் இராமாயணமும் பிசிகல் எவிடன்சாக பாலமும் உள்ளது.

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நடு நிலையாக ஆராய்ந்தால், இராமாயணம் ஒரு உண்மை நிகழ்வாக இருந்திருக்க எல்லா சாத்தியங்களும், வலுவான் ஆதாரங்களும் உள்ளதை ஒத்துக் கொள்வார்கள்.

    இராமன் கடவுளின் அவதாரமாக இருந்திருக்காவிட்டாலும், அவன் எல்லோரையும் விட மிக பொறுமையாகவும், மிக அதிகமாக விட்டுக் கொடுத்தும், மிக நியாயமாக நடந்து கொண்டும், மிக ஒழுக்கமாக வாழ்ந்தும், மிகுதியான வீரத்தை வெளிக் காட்டியும், செய்வதற்கரிய தியாகத்தை செய்தும்,… இருக்கலாம் எனக் கருதுவதில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை.

    பல சமய அறிங்கர்கள், மத்த கடவுள்கள் எல்லாம் வானத்திலே இருந்து லீலைகளை செய்வதாக கூறப் படும் போது, இராமர் மனிதர்களோடு வாழ்ந்து மிக அதிகமான துன்பத்தை அனுபவித்த தாகவும், அப்படி பல துன்பங்களை அனுபவித்த நேரத்திலும், பிறருக்கு முடிந்த வரை உதவி செய்ததாகவும் எடுத்துக் காட்டி உள்ளனர். எனவே மனிதர்களிலும் இராமனுக்கு சமமானவர் இல்லை. கடவுள்களிலும் இராமனுக்கு சமமானவர் இல்லை என்று கூறியுள்ளனர். எனவே தான் ஒரு சமய அறிங்கர்,
    “சமான மெவரு, ராம நீ சமான
    ரகு வம்ச தாரகா” என்று பாடியுள்ளார், எனக் கூறுகிறார்கள்.

  57. மிக நன்று திருச்சிகாரர் அவர்களே

    இப்படிதான் ஒரு தீக தொண்டர் கீரனார் – நான் ராமாயணத்தை படித்து அத்து வெறும் புளுகு மூட்டை என்று கட்டிகுறேன் என்று கொக்கரித்தார்

    கம்ப ராமாயணம் படித்தார் – அப்புறம் என்ன ராம பக்தர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அவருக்கு பக்தி ஏற்பட்டு அப்புறம் அவர் வாழ்க்கையே ராமாயண சொற்போழிவாற்றியே தான் கழித்தார் – அவ்வளோ மேட்டர் இருக்கு ராமாயணத்துல

  58. சுட்டுதல் :
    //வள்ளுவன்
    12 November 2009 at 3:58 pm

    இராமாயணத்தில், வாலி இந்திரனின் அவதாரம், சுக்ரீவன் சூரியனின் அவதாரம், அனுமான் வாயுதேவனின் அவதாரம். இராமன் பரம்பொருளின் அவதாரம். மகாபாரதத்தில் கர்ணன் சூரியனின் அவதாரம், அர்ஜுனன் இந்திரனின் அவதாரம், பீமன் வாயுதேவனின் அவதாரம், கண்ணன் பரம்பொருள். இதில் சூட்சமம் என்னவென்றால், வாயு எந்தப்பக்கம் உள்ளாரோ, அப்பக்கமே இறைவனும் இருப்பான். இராமாயணத்தில், வாயு (அனுமான்) சுக்ரிவனுடன் (சூரியன்) இருந்தார். எனவே இராமனும் அப்பக்கமே இருந்தான். அதனால், வாலி (இந்திரன்) இறக்கவேண்டியாயிற்று!//
    ——

    வாலி தண்டிக்கப் பட வேண்டியவனே.

    வாலி செய்த தவறை யாரும் தெளிவாக விளக்காமல், அவனை ஒரு பாவப் பட்டவனாக சித்தரித்து விட்டார்கள்.

    நீண்ட குகையின் உள்ளே வாலி அசுரன் மாயாவியுடன் சண்டை செய்யும் போது சுக்ரீவன் வெளியிலே நின்று கொண்டு இருந்தான். வாலி இறந்த இருக்க கூடும் என்று நினைத்து, அரக்கன் மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என நினைத்தே சுக்ரீவன் குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா வந்து விட்டான்.

    அது அவசரத்திலும் பயத்திலும் செய்த செயல். சுக்ரீவன் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை.

    அரசன் இல்லாத சமூகத்துக்கு அரசர் தேவை என்பதால் சுக்ரீவன் அரசராகி விட்டான்.

    இதை புரிந்து கொள்ளவில்லை வாலி. தமையன் சுக்ரீவன் ஆட்சியைப் பிடிக்க ஆசைப் பட்டு குகையை மூடி விட்டதாக நினைத்தான். எனவே சுக்ரீவன் மீது சினம் கொண்டான்.

    ஒரு சிறு தண்டனை கொடுத்து அதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் சுக்ரீவனின் வாழ்வாதாரத்தை சிதைப்பது, சுக்ரீவனை கொல்வது என முடிவு எடுத்தான்.

    சுக்ரீவன் உண்மையிலே அப்பாவி. ஆனால் அவனை விரட்டி விரட்டி அடித்தான் வாலி. சுக்ரீவன் அவனிடம் இருந்து தப்ப ஒவ்வொரு காட்டுக்கும், மலைக்கும் ஓடினான்.

    எங்கு போனாலும் விடாமல் விரட்டி வந்து, சொந்த தமையன் என்றும் பாராமல் புரட்டி புரட்டி அடித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறான் வாலி.

    கடைசியில் வாலி வர முடியாத ரிஷிய மூகி பகுதியில் புகுந்து தன் உயிரைக் காத்துக் கொண்டான் சுக்ரீவன்.

    தான் ரிஷியா முகி பகுதியில் நுழைய முடியாதே என்ற ஒரே காரணத்தினால் சுக்ரீவனை உயிரோடு விட்டு விட்டு, கிஸ்கிந்தா திரும்பி சுக்ரீவனின் மனைவியையும் தனக்கு உடமையாக்கிக் கொண்டு,

    முரட்டுத் தனத்தினால், ஆத்திரத்தினால், மூடத் தனத்தினால் அயோக்கியத் தனம் செய்தவனாகி, சகோதரனுக்கு மாபெரும் அநியாயம் செய்து விட்டான் மாவீரன் வாலி.

    வாலிக்கு அவன் மனைவி தாரையே புத்தி சொல்லி, ஆயிரம் ஆனாலும் சுக்ரீவன் சகோதரன் என்று விளக்கியும், ஆத்திரம் அறிவை மறைத்ததால் வாலி அதை ஏற்கவில்லை.

    எனவே இராமரோ, இலக்குவனோ வாலியை சந்தித்து பஞ்சாயத்து பேச முயற்சி செய்வதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லாமல் போய் விட்டது.

    சுக்ரீவன் விசயத்திலே யார் வந்து சொன்னாலும் சுக்ரீவனை மன்னிக்க , மறக்க தயாராக இல்லை வாலி.

    எனவே மாவீரன் வாலியார் அவர்களை கொல்ல வேண்டியதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. தண்டிக்க பட வேண்டிய கடுமையான குற்றங்களை செய்து விட்டார் வாலியார்.

    சாமாதனத்துக்கான வாய்ப்பை அளிக்கத் தயாராக இல்லை. எனவே வாலியார் வதம் செய்யப் படுவதை தவிர வேறு வழி இல்லை.

    இதுதான் லாஜிக். இப்படி பகுத்தறிவின் அடிப்படையிலான சிந்தனைகளை முன் வைப்பதும் அவசியம் தான்.

    இதை எழுதாமல் வெறுமனே வாலி இந்திரனின் அவதாரம், சுக்ரீவன் சூரியனின் அவதாரம், அனுமான் வாயுதேவனின் அவதாரம்,
    சூரியன் + வாயு > இந்திரனின், என்று எழுதினால்,

    நீதி, நியாயம் பார்க்காமல் வாலி கொலை செய்யப் பட்டது போலவும்,

    வாலி நல்லவருதான், அப்படி வாயு புத்திரன் சூரிய புத்திரன் பக்கம் இருந்ததால அவர் விதி முடிஞ்சு போச்சு என்றும் தவறாக புரிதல் செய்யக் கூடும்.

    நண்பர் வள்ளுவர் உணர்ச்சியுடன் எழுதுகிறார். பல விசயங்களை தெரிந்து வைத்து இருக்கிறார். அதே நேரம் அவர் தைரியமாக பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்.

    இந்து மதமே பகுத்தறிவு மதம் தான். விவேகானந்தர், பட்டினத்தார், தியாகராசர், சங்கரர், புத்தர், நசிகேதஸ் , ஆங்கீரசர் போன்ற சிறப்பான பகுத்தறிவு வாதிகளைக் கோணத் மதம் இந்து மதம் என்பதை நண்பர் வள்ளுவர் நினைவில் வைக்க வேண்டும். வள்ளுவர் அவர்களுக்கு இதை நட்பின் அடிப்படையில் சொல்லுகிறேன். அவருக்கு அறிவுரை கூறுவதாக என்ன வேண்டாம். நான் கூறியது வள்ளுவர் அவர்களைப் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

  59. //விவேகானந்தர், பட்டினத்தார், தியாகராசர், சங்கரர், புத்தர், நசிகேதஸ் , ஆங்கீரசர் போன்ற சிறப்பான பகுத்தறிவு வாதிகளைக் கோணத் மதம் இந்து மதம் என்பதை//
    The corrected sentence is as follows:
    விவேகானந்தர், பட்டினத்தார், தியாகராசர், சங்கரர், புத்தர், நசிகேதஸ் , ஆங்கீரசர் போன்ற சிறப்பான பகுத்தறிவு வாதிகளைக் த‌ந்த‌ மதம் இந்து மதம் என்பதை

  60. //Sarang
    13 November 2009 at 8:56 pm
    மிக நன்று திருச்சிகாரர் அவர்களே//

    Thank you, brother.

  61. திருச்சிக்காரர் விளக்கம் அருமை. அறிவுபூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்ட உம்மை போன்றவர்கள்தான் இந்து மதத்தை பற்றி தெளிவான விளக்கங்களை மக்கள் மத்தியில் வைக்க முடியும்
    உங்கள் பணி வெற்றிபெறவேண்டும்.

  62. //மகாபாரதத்தில் கதையே மாறுகிறது.. வாயு (பீமன்) அர்ஜுனனுடன் (இந்திரன்) இருக்கிறார், எனவே கண்ணனும் அப்பக்கமே இருக்கிறான். எனவே, கர்ணன் (சூரியன்) இறக்கவேண்டியைற்று!
    இதில் இன்னொரு முக்கியமான கருத்து, இறைவன் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. ஒருமுறை வெல்பவர் இன்னொரு முறை தோற்கிறார், ஒரு முறை தோற்றவர் இன்னொரு முறை வெல்கிறார்!//

    வாலி விவகாரம் போலவே கர்ணனும் தண்டிக்கப் பட வேண்டியவனே.

    கர்ணனுக்கு அர்ஜுனனுடன் தொழிலில் போட்டி இருந்தால், அர்ஜுனனைக் களத்திலே சந்தித்து சண்டையிட வேண்டும்.

    துச்சாதனன் திரவுபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவைக்கு கொண்டு வந்த நேரத்திலே, இது ரொம்ப ஒவராப் போகுது என்று உணர்ந்து அந்த நேரத்திலே நண்பன் என்ற முறையிலே துரியோதனனை மட்டுப் படுத்தி, இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று கர்ணன் கூறியிருக்கலாம். .

    கர்ணனிடம் மிகவும் மரியாதை வைத்த ஆருயிர் தோழனாக இருந்திருக்கிறான் துரியோதனன். கர்ணன் ஒரு கருத்து கூறினால் அதை உதாசீனம் செய்திருக்க மாட்டான்.

    அதை விட்டு திரவுபதி கையறு நிலையிலே இருக்கும் போது அவளை ஏகடியம் பேசியது மட்டும் அல்லாமல், அந்த திரவுபதியை துரியோதனின் தொடையிலே வந்து உட்கார் என்று மிகவும் அநியாயமாக அப்பாவி பெண்களை கடத்தி விற்கும் அநியாய மாமா ரேஞ்சுக்கு பேசி, துரியோதனனுக்கு வூக்கம் கொடுத்து இருக்கிறான் கர்ணன்.

    எனவே பீஸ்மர் போன்றவர்களையே களத்திலே காலி செய்யும் போது, கர்ணனுக்கு மட்டும் கரிசனம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

    கர்ணன் அநியாய , அக்கிரம எதேச்சதிகாரர்களின் பக்கம் இருந்திருக்கிறான், அநியாயத்தை செய்ய தூண்டி இருக்கிறான். எனவே அவன் பக்கம் வாயு மகன் இருந்தாலும் இல்லா விட்டாலும், அவனுக்கு வாயு பிடிப்பு மூலம், பவுத்திரம் இருந்தாலும் இல்லாவிட்டலும் அவன் தண்டிக்கப் பட வேண்டியவனே.

    //இதில் சூட்சமம் என்னவென்றால், வாயு எந்தப்பக்கம் உள்ளாரோ, அப்பக்கமே இறைவனும் இருப்பான்//

    இறைவன் என்று யாராவது இருந்தால் அவன் நியாயத்தின் பக்கம் இருப்பன் என்றுதான் மக்கள் நம்புகிறார்கள். இந்து மதத்தை பொருத்த வரையிலே கடவுள் என்றால் அவன் நியாயத்தின் பக்கம் தான் இருப்பான் என்று கூறப்பட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.

    (நியாயத்தை திராட்டிலே விட்டு) வாயுவின் பக்கம் மட்டுமே இறைவன் இருப்பான் என்றால், எல்லோரும் தினமும் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

    முடிவாக சூரியன் மகன் கர்ணனை விட, இந்திரன் மகன் அர்ஜுனனன் சிறந்த வில் வீரனாக இருந்ததையும்,

    அந்த இந்திரன் மகன் அர்ஜுனன் அழும்படிக்கு அவனை விட சிறந்த வீரனாக வேடன் மகன் ஏகலைவன் இருந்ததையும் சுட்டிக் காட்டி,

    சாதரண மக்களாகிய நாமும் ஏகலைவன் போல சிறப்பாக திறமையைக் கட்ட முடியும் என்பதை நினைவுறுத்துகிறோம்.

  63. கர்ணன் இரக்கம் காட்டப்பட வேண்டியவன் அல்லன்.
    அவன் தன நண்பன் துரியோதனனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவன்.
    அவன் உண்மையான நண்பனாக இருந்திருந்தால் தன உடலில் உள்ள கவச குண்டலங்களை இந்திரனிடம் கழற்றி தந்திருக்கமாட்டான்.அவ்வாறு தந்ததால்தான் அவன் போரில் கொல்லப்பட்டான் .
    அவன் தான்தான் வள்ளல் என்ற கர்வத்தில் தன நண்பனுக்கு தெரியாமல்
    இதை செய்துள்ளான்.
    எப்போது அவன் தாய் குந்திஅவனை துறந்துவிட்டாளோ அவன் மீண்டும் தன தாய்க்காக நாகாஸ்த்ரத்தை ஒரு முறைக்கு மேல் அர்ஜுனன் மேல் விடமாட்டேன் என்று தன நண்பனுக்கு தெரியாமல் சத்தியம் செய்து கொடுத்தான்
    திருச்சிகாரர் தெரிவித்துள்ள தவறுகளையும் அவன் தெரிந்தே செய்துள்ளான்.
    எனவே அவன் மரணம் வருத்தற்குரியதன்று.

  64. Dear Mr. rama,

    //rama
    14 November 2009 at 10:42 am
    திருச்சிக்காரர் விளக்கம் அருமை. அறிவுபூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்ட உம்மை போன்றவர்கள்தான் இந்து மதத்தை பற்றி தெளிவான விளக்கங்களை மக்கள் மத்தியில் வைக்க முடியும்
    உங்கள் பணி வெற்றிபெறவேண்டும்.//

    I thank you for your appreciation and for patiently reading my comment.

    At the same time, I dont think that my comments are not that much worth to be appreciated.

    More importantly, the centre point of my opinions are from the concepts of the people like Vivekanantha, Thiyakarasa, Pattinathaar..etc, and I can be attributed only for the language.

  65. திருச்சிக் கார‌ன்
    14 November 2009 at 7:48 pm
    Dear Mr. rama,

    //rama
    14 November 2009 at 10:42 am
    திருச்சிக்காரர் விளக்கம் அருமை. அறிவுபூர்வமாக சிந்திக்கும் திறன் கொண்ட உம்மை போன்றவர்கள்தான் இந்து மதத்தை பற்றி தெளிவான விளக்கங்களை மக்கள் மத்தியில் வைக்க முடியும்
    உங்கள் பணி வெற்றிபெறவேண்டும்.//

    I thank you for your appreciation and for patiently reading my comment.

    //At the same time, I dont think that my comments are not that much worth to be appreciated// had mistake in it and written correctly as follows:

    At the same time, my comments are not that much worth to be appreciated.

    More importantly, the centre point of my opinions are from the concepts of the people like Vivekanantha, Thiyakarasa, Pattinathaar..etc, and I can be attributed only for the language.

    ———–

    Regret for the mistake and sorry for Tamil hindu by this inconvenience!

  66. வணக்கம்

    ///இன்றைய நாகரிக வளர்ச்சியில் ஒரு விஷயம் ஆணும் பெண்ணும், பழகுவதைப்பத்தி கேட்டால் நாங்கள் அண்ணன் தங்கை ஆக சகோதர பாசத்துடன் தான் பழகுகிறோம் நீங்களாக ஏதாவது தப்பாக எண்ண வேண்டாம் என்பார்கள், நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உதவி செய்து பழகுகிறோம் என்பார்கள், நான் கேட்கிறேன் இந்த பையனோ பெண்ணோ வீட்டில் தங்கள் அண்ணன் தங்கையிடம் இதுபோல தான் பழகுகிறார்களா.?///

    எல்லாம் சரி நண்பரே பையனோ பெண்ணோ அழகான, அல்லது சுமாரான அழகு உள்ளவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள். ஏன் அவலட்சனாமான ஒரு மாற்றுப் பாலின நண்பர்களை தேர்ந்து எடுப்பதில்லை? ஏன் இந்த வெளிவேடம், தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வது, இதில் என்ன ஆனந்தம்.

  67. இதே தமிழ் ஹிந்துவில் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் கர்ணனைப் பற்றி மகாபாரத உரையாடல்கள் என்ற பகுதியில் எழுதி இருப்பதையும் கர்ணனைப் பற்றி எழுதியவர்கள் படிக்கலாம்.திரு. ஹரிகிருஷ்ணனின் எழுத்துக்கள் தமிழ் ஹிந்துவில் மறுபடியும் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

  68. Q: What is virginity?
    A: Lack of opportunity….!
    It is not for nothing that our culture forbade our women from being alone even with their own brothers and fathers after a certain age. Our forefathers were practical even while preaching ideals. That is the strength of our culture.

  69. //கர்ணன் இரக்கம் காட்டப்பட வேண்டியவன் அல்லன்.
    அவன் தன நண்பன் துரியோதனனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவன்.
    அவன் உண்மையான நண்பனாக இருந்திருந்தால் தன உடலில் உள்ள கவச குண்டலங்களை இந்திரனிடம் கழற்றி தந்திருக்கமாட்டான்.அவ்வாறு தந்ததால்தான் அவன் போரில் கொல்லப்பட்டான் .
    அவன் தான்தான் வள்ளல் என்ற கர்வத்தில் தன நண்பனுக்கு தெரியாமல்
    இதை செய்துள்ளான்.//

    தோழர் ராமா அவர்களே, கர்ணன் துர்யோதனனுக்கு நண்பன் அவ்வளவே, அடிமை அல்ல! எனவே, கவச குண்டலத்தை தானம் செவது எப்படி நம்பிக்கைத்ரோகம் ஆகும்? நட்பு என்ற contract போட்டபொழுது, என்னைக்கேட்காமல் நீ எதையும் செய்யக்கூடாது என்பனபோன்ற நிபந்தனை ஏதாவது துர்யோதனன் கர்ணனுக்கு பிறப்பித்தானா? துர்யோதனன் கர்ணனுக்கு உண்மையான நண்பனாகவே இருந்திருந்தாலும் முதன்முதலில் அவனைப் பார்த்தபொழுது அவன் வீரமும், திறமையும்தான் அவனைக் கவர்ந்தன. “ஆஹா, இவனைவைத்து அர்ஜுனனை வென்றுவிடலாம்” என்பதற்காகத்தான் கர்ணனுக்கு ஜால்ரா அடிக்கிறான் துர்யோதனன்! ‘செஞ்சோற்றுக்கடன்’ பின்னாளில் நட்பாக மாறுகிறது.. எனவே கர்ணன் ‘நம்பிக்கை துரோகி’ என்றெல்லாம் கூறேவேண்டாம்! கௌரவர் பக்கத்தில் பீஷ்மர், த்ரோனருக்கு அடுத்து கர்ணனே பெரியவன்…

    அன்பிற்குரிய தோழர் திருசிக்காரரே, நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல எவ்வளவுதூரம் இந்துமதத்தில் எதார்த்ததிற்கும் பகுத்தறிவிற்கும் இடம் இருக்கிறதோ, அதே அளவு சூட்சமங்களும் உள்ளன. உதரனத்திற்க்கு வேதங்கள் இறைவன் அந்தணர்களின் அன்பன் என்கிறது. விஷ்ணு சகச்ரனாமத்தில்கூட இறைவுக்கு ‘பிராமணப்ரிய’ என்ற ஒரு பெயர் இருக்கிறது. இப்படி ‘அந்தணர்களின் நண்பன்’ என்றுகூரிக்கொண்ட அதே இறைவன்தான் இராவணன் போன்ற அந்தணனை கொள்கிறான். அதே இறைவன்தான் கிருபாச்சர்யாரையும் (துரோணரின் மைத்துனர்), அச்வத்தாமாவையும் (துரோணரின் மகன்) மரணமே இல்லாத, ஜன்மஜன்மத்திறக்கும் மக்களால் தூற்றப்படுமாரும் சபித்தான் (cursed for immortality). இதை மேலோட்டமாகப் பார்த்தல் “அவர்கள் தவறு செய்தனர், எனவே தண்டிக்கப்பட்டனர்” என்பது பாமர்களுக்கான விடை. ஆனால் இந்துமதம் பாமர மதம் மட்டுமல்ல, ஞானிகளின் மதமும்கூட, எனவே இதற்கும் ஒரு உள்ளர்த்தம் இருக்கக்கொடும்..

    உங்களைப்பற்றி நான் தவறாக எண்ணவில்லை! தேவையில்லாமல் வருந்தாதீர்கள்!

  70. நட்பு என்பதன் இலக்கணம் என்ன ?
    உடுக்கை இழந்தவன் கைபோல் இடுக்கண் களைவது
    தன்னிடம் உள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி நண்பனுக்கு உதவுவது.
    நண்பன் என்று ஏற்றுகொண்டபோது இருவருக்கும் நடுவில் ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தல். அவ்வாறு பார்க்கும்போது கர்ணன் நண்பனுக்கு துரோகம்தான் இழைத்துள்ளான்
    கர்ணனை யாரும் வெல்லமுடியாத சக்திகள் இருந்தும் அவன் தான ஒரு மன்னனை போரிட்டு வென்று நாட்டை கைப்பற்றி அரசனாக ஆகி இருக்கலாம். துரியோதனனிடம் பிச்சை ஏற்றிருக்க வேண்டியதில்லை.
    அவன் துரியோதனனிடம் பெற்றது பிச்சைதான். அந்த வகையில் அவன் தான் வள்ளலாயிருந்தும் துரியோதனனுக்கு அடிமைதான்.

  71. கிறித்துவ நாடான அமெரிக்காவில் முதலில் விவேகானந்தர் ,யோகானந்த,பிரபுபாதா சச்சிதானந்தா போன்றவர்கள் தனி ஒருவராக சென்றுதான் இந்து மத கொள்கைகளை பரப்பினார்கள்.
    ஆனால் இந்து நாடான இந்தியாவில் ஆயிரக்கணக்கான் வேற்றுமத பிரசாரகர்கள் மத பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் பொய்யை நம்ப வைப்பதற்கு அவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.

  72. வள்ளுவன் அவர்களே

    //தோழர் ராமா அவர்களே, கர்ணன் துர்யோதனனுக்கு நண்பன் அவ்வளவே, அடிமை அல்ல! எனவே, கவச குண்டலத்தை தானம் செவது எப்படி நம்பிக்கைத்ரோகம் ஆகும்? நட்பு என்ற contract போட்டபொழுது, என்னைக்கேட்காமல் நீ எதையும் செய்யக்கூடாது என்பனபோன்ற நிபந்தனை ஏதாவது துர்யோதனன் கர்ணனுக்கு பிறப்பித்தானா
    //

    கர்ணன் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதற்கு இன்னொமொரு வலுவான சான்று. குருக்ஷேற்றப் போர் தொடங்கும் முன் – பீஷ்மர் சீரிய போர் வீரர்களை பற்றி கூறுகையில் கர்ணனை முதல் தர போர் வீரர்களில் சேர்க்காமல் விட்டு விடுவார். ஒரு முழுமையான போர் வீரனுக்கு , ரதத்தை கையாள தெரிந்திருக்க வேண்டும், இது கர்ணனுக்கு தெரியாது.

    இதனால் கர்ணன் பிதாமஹருடன் சண்டை போட்டு விட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுது நான் போரிடமாட்டேன் என்று சென்றுவிடுவான் – ஒரு சப்பை மேட்டேருக்காக துரியோதனனை கைவிட்டு செல்ன்றவனை நண்பன் என்றா கூறுவார்கள்

    கர்ணனின் நோக்கம் எல்லாம் எப்படியேனும் அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்பதே – போரில் வெல்ல வேண்டும் என்பதல்ல

    கண்டர்வகள் துரியோதனனை சியி பிடுத்து சென்ற பொது மா வீரனான கர்ணன் என்ன செய்தான் – ஓடி வந்துவிட்டான் – அவனை வழியில் பார்த்த பிதாமகார் காரி உமிழாத குறை தான்

  73. விஜய் டிவி நீயா நானா பற்றி பற்றிஎரியும் விமரிசனங்கள் கண்டேன்.
    அவர்கள் நடத்தும் பக்தி திருவிழா நிகழ்ச்சி காண்பதில்லையா?
    அங்கு கொடுக்கும் பொங்கல், பிரசாதங்களை தின்றுவிட்டு அவர்களை போல் உலகில் இல்லை என்று பேட்டி கொடுக்கும் ரசிகர்களை / பார்க்க வில்லையா?
    வாய்ப்பு அளித்த விஜய் டிவியை பாராட்டும் புராண பிரசாரகர்களை பார்க்கவில்லையா?
    விஜய் டிவி ஒரு வர்த்தக நிறுவனம்.அது தன் பார்வையாளர்களை கவர எது வேண்டுமானாலும் செய்யும்
    கோடிகணக்கில் பணத்தை வைத்திருக்கும் ஹிந்து நிறுவனங்கள் ஹிந்து மதத்தை பரப்ப நிகழ்சிகளை தயார் செய்து ஊடகங்களில் ஒளி பரப்பலாமே?
    அவர்கள் செய்ய மாட்டார்கள்.
    அவர்கள் கருப்பு பணத்தை திருப்பதி கோயில் உண்டியலில் வேண்டுமானாலும்போடுவார்கள்
    வறுமையால் மதம் மாறும்,நம் ஹிந்து மக்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்
    தீண்டாமை என்னும் கொடுமையினால் அடித்தட்டு மக்கள் மற்ற மதத்திற்கு மாறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை
    நேற்று வரை காட்டானாக இருந்த தலித் மதம் மாறி அவன் கரீமாக மாறிவிட்டால் அவன் வைக்கும் கடையில் கறி வாங்க வரிசையில் நிற்ப்பவர்கள்தான் இன்றைய இந்துக்கள் இந்த உண்மையை. எவரும் மறுக்க முடியாது
    நீயா நானா பார்ப்பவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி இருக்கும் இளைய சமுதாயத்தினர். அவர்கள் டைம் பாசுக்காகதான் அந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் மற்ற பல உதவாக்கரை நிகழ்ச்சிகளை போல.
    திரைப்படங்கள் மூலம் நடிகர், நடிகைகள் செய்யாத அசிங்கங்களை பார்த்து கெட்டு போகாத நம் இளைய சமூகம் நீயா நானா பார்த்து மாறிவிட போவதாக்கும்?எனவே அவர்களை விமரிசிப்பதை விடுத்து இளம் வயதினரிடம் நம் ஹிந்து கலாசாரத்தை ஆணித்தரமாக பதிய வைக்க நடவடிக்கை மேற்கொண்டால் நம் கலாசாரம் காப்பாற்றப்படும்

  74. ம‌திப்பிற்குரிய‌ வ‌ள்ளுவ‌ன் அவ‌ர்களே,

    1)அறிவின் அடிப்ப‌டையில் சிந்திப்ப‌துதான் ப‌ண்டித‌ர் வ‌ழி.

    சூட்சும‌ம் என்ற‌ பெய‌ரிலே சில‌ர் நியாய‌த்தை,யுக்தியை பின்னுக்குத் த‌ள்ளி விட்டு இந்திர‌ன், ச‌ந்திர‌னை முன்னுக்கு வைப்ப‌து ஆய்வு வ‌ழிக்கு ச‌ரி அல்ல‌.

    சிற‌ந்த‌ சிந்த‌னையாள‌ர்களான‌ ப‌ட்டின‌த்தார், அப்ப‌ர், தியாக‌ராச‌ர், விவெகான‌ந்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அருண‌கியார் …இவ‌ர்க‌ள் இந்த‌ ச‌ந்திர‌ன், செவ்வாய், ச‌னி….இவ‌ர்க‌ளை ப‌ற்றி புக‌ழ்ந்த‌தாக‌வோ, க‌வ‌லைப் ப‌ட்ட‌தாக‌வோ இருக்கிர‌தா? எத‌ற்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வேண்டும் என்று சிந்தியுங்க‌ள்.

    உப‌ன்யாச‌த்திலே கேட்ட‌தை அப்ப‌டியே எழுதுவ‌து முக்கிய‌மான‌ விச‌ய‌த்தை பின்னுக்குத் த‌ள்ளி விடும்.

    2)

    //அதே அளவு சூட்சமங்களும் உள்ளன. உதரனத்திற்க்கு வேதங்கள் இறைவன் அந்தணர்களின் அன்பன் என்கிறது. விஷ்ணு சகச்ரனாமத்தில்கூட இறைவுக்கு ‘பிராமணப்ரிய’ என்ற ஒரு பெயர் இருக்கிறது. இப்படி ‘அந்தணர்களின் நண்பன்’ என்றுகூரிக்கொண்ட அதே இறைவன்தான் இராவணன் போன்ற அந்தணனை கொள்கிறான். //

    அப்ப‌டியானால்.

    Geetha: Chapter 9, Verse 29
    “ஸ‌மோஹ‌ம் ஸர்வ‌ பூதேஷு ந‌ மே த்வேஷ்யோ அஸ்தி ந‌ ப்ரிய”

    “நான் எல்லா உயிர்க‌ளிட‌த்தும் ச‌ம‌மாயுள்ளேன், நான் யாரையும் வெறுக்க‌வும் இல்லை, விரும்ப‌வும் இல்லை”

    என்று இருக்கிர‌தே அது த‌வ‌றா?

    இப்ப‌டி நீங்க‌ள் “ந‌ம‌க்கு நாமே” என்று உங்க‌ள் மார்க்க‌த்தில் உள்ள‌ ந‌ல்ல‌ விட‌ய‌ங்களை புறந்த‌ள்ளி விட்டு, “இறைவன் அந்தணர்களின் அன்பன் என்கிறது” ‌ என்று ப‌குத்த‌றிவாள‌ர்க‌ளாகிய‌ எங்க‌ளுக்கு மெல்ல‌ அவ‌ல் கொடுத்து விட்டு, பிறகு நீங்க‌ள் க‌ண்ணைக் க‌ச‌க்குவ‌து வேடிக்கை.

  75. அன்புதோழர்கள் திருச்சிக்காரர், ராமா மற்றும் சாரங் அவர்களுக்கு, நான் சொன்னதை நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. ஒருபோதும் பகுத்தறிவு வேண்டாம் என்று நான் சொல்லவில்லை! சில கேள்விகளுக்கு நேரடியாக விடை கிடைக்காது, அவற்றிற்கு சில உள்ளர்த்தங்கள் இருக்கும் என்பதுதான் நான் சொல்லநினைத்தது… அதேபோல இறைவன் அனைவருக்கும் பொது, அனைவருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் சொந்தம்.. அந்தணர்களுக்கு மட்டும் என்கிற காலாவதியான கோட்பாட்டினை நான் ஆதரிக்கவில்லை. திருச்சிக்காரர் கீதையிலிருந்து காட்டிய மேற்கோள் அபாரம்.. நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் எப்படி சில இடங்களில் இறைவனே வேறுபடுகிறான் என்பதைத்தான் இங்கு சுட்டிக்காட்ட எண்ணினேன்..
    உங்கள் வாதம் பிரமாதம்.. என் வேண்டுகோள் யாதெனில் தேவையில்லாமல், கிருத்தவர்களோடும் முகமதீயர்களோடும், கருப்புச்சட்டைக்காரர்களோடும் மறுமொழிகள் மூலம் போரிட்டு நேரத்தை வீணாக்குவதற்கு பதிலாக, நீங்களும் கட்டுரை எழுதுங்களேன்.. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்..
    வாழ்க பாரதம்.. வளர்க வேத மதம்!

  76. இறைவன் எல்லோருக்கும் பிரியமானவன் எல்லோரும் அவனுக்கு ஒன்றுதான். நாம்தான் அவனை கூறுபடுத்துகிறோம். அவனை நம் சிறிய குறுகிய மனதை கொண்டு அவனை கொச்சைப்படுத்துகிறோம். அவனை உணர்ந்தவர்களுக்கு எல்லா பொருட்களும், உயிரினங்களும் அவனாகவே தெரிகிறது என்று பல ஞானிகள் அறுதியிட்டு கூறியுள்ளார்கள். அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல்,உண்மையை பற்றி புரிந்துகொள்ளாமல் விமரிசனங்கள் செய்வது எல்லா காலத்திலும் உண்டு. உணர்ந்து கொண்ட பின் அடங்கி அமைதியாய் இருந்துவிடுவதும் கண்கூடு. சில ஞானிகள் கடவுளை பற்றி பேசியதே கிடையாது. ஏனென்றால் அவனை வர்ணிக்க இயலாது என்பதும் அவனுக்கு உதாரணம் காட்ட எந்த பொருளும் கிடையாது என்பதும் அவர்களுக்கு தெரியும் ஆனால் அவர்களை உலகம் கடவுளுக்கு எதிப்பாளராக நினைக்க தொடங்கியது காலத்தின் கோலம்.

  77. அன்புடன் வணக்கம் தங்களின் இந்த கருத்து மிக நன்றாக இருந்தது நன்றி !!!

    வேறு வழில்லாமல் ஒரு சினிமா சென்றேன் எனக்கு பின்னால் ஒரு தம்பதி ஒரு பெண் குழந்தை படத்தை பார்த்து அம்மா இது மாதிரி அப்பா செத்தா நீங்க வேறு அப்பா சேர்த்துக்குவீங்களா??? பின்னர் கதாநாயகி நாயகனுக்கு பெண்ணியம் எடுத்து அறிவுரை சொல்லி சுமார் 25 வயது நாயகனின் மனதை மாற்றுகிறாள் என்னே அரிய கதை ..இதுக்கு அவார்டு உண்டுல்ல ???

    அய்யன் திருவள்ளுவர் சிலை வைத்தவர்கள் அவர் சொல்லுற மாதிரி நடந்தார்களா ??? ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை ??ஒரு குழந்தை விபரம் தெரியும் போது அது தனது அப்பா அம்மா வை ஒரு முன் மாதிரியாக எடுக்கும் நல்ல அப்பா தன குழந்தைக்கு நல்ல விஷ்யங்களை எடுத்து சொல்லுவார் அல்லது கூட்டு குடும்பம் தாத்தா பாட்டி ராமாயணம் மகாபாரதம் சொல்லி வளர்பார்கள் இப்போ 20 வயது பெண்ணிடம் உனக்கு எது சரி படுதோ அது செய்… நான் என் மகளுக்கு முளு சுதந்திரம் கொடுத்துள்ளேன் என்று பெருமை ?? அவரு எப்பிடி மூணு பெண்டாட்டி கட்டி நாலவது சேர்த்து வச்சுக்குவாரு அவரு கதாநாயகர் அவரை பார்த்து எத்தனை சீரளயுது. நமது முன்னோர்கள் புராண இதிகாசங்களின் மூலமாக நமக்கு ஒழுக்கத்தை கற்பித்தார்கள் !!! ஆனால் இன்று அவைகள் ஒரு மதம் சார்ந்தது என அதை படித்தால் பழமைவாதி மூட நம்பிக்கை ..நமது முன்னோர்கள் நமக்கு காலை முதல் இரவு வரை ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்க்கை கற்று கொடுத்தார்கள் யாரு இன்று அதை பின் பற்றுகிறார்கள் குறைந்தபட்ஷம் முடிந்த விஷயங்களை செய்யலாமே !!! திருந்துவார்களா ??? அய்யா கடவுள் நம்பிக்கை வேண்டாம் நீங்க கோவிலுக்கு போய் சாமி கும்பிட வேண்டாம் ஆனா ஏன் கும்பிடனும்னு வச்சாங்க தெரிஞ்சுக்கோ ..அவ்வளு பெரிய கட்டிடம் என கட்டி வச்சாங்க சும்மா வேலை இல்லமல !!!அதை புரிய ஆர்வம் காட்டு உன் சந்ததிக்கு சொல்லு அதுல பெண்ணுக்கு என்னை மரியாதை . தெரியும் … அந்த மாதிரி காலம் வருமா?? எதோ இந்த தளத்தை பார்த்தவுடன் எழுத தோன்றியது //

  78. கணபதி அவர்களே ,நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை.
    இறைவன் மனிதர்களை நல்லவிதமாகத்தான் படைக்கின்றான்.
    ஆனால் அவர்களில் உள்ள மனம் மட்டும் அவர்களின் சுதந்திரத்திற்கு விட்டு விடுகின்றான். அதை கோயிலாக மாற்றுவதும் குப்பைத்தொட்டியாக வைத்துகொள்வதும் அவர்கள் கையில்தான் உள்ளது. அனுபவங்களின் வாயிலாக ,பயிற்சியின் வாயிலாக, உள்ளத்தை திருத்தி அதில் இறைவன் வாழும் கோயிலாக மாற்றுவது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவன் தான் சற்று திருந்தியவுடன் மற்றவனும் அதுபோல் இருக்கவேண்டும் நினைக்கின்ற நேரத்தில் இது போன்ற சிந்தனைகள் ஏற்ப்படும். அதன் வெளிப்பாடுதான் உங்கள் கருத்த்துக்கள். கண்ணதாசன் ஒருபாட்டில் (உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி ,மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி.)

  79. வணக்கம்

    ///கமலஹாசன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யவில்லை, அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார்.///

    அவர் மலை மேல் இருந்து பிரசாரம் செய்ய வில்லை, ஆனால் அவரது ரசிகர்கள் அவரை தலை மேல் வைத்து உள்ளார்கள் என்பது கூடவா அவர் உணரவில்லை?
    மக்களில் ஒருவராக அவர் என்ன செய்தாலும் யாருக்கும் தெரியாது, மக்கள் கூட்டம் பார்க்கும் ஒருவராக இருப்பவரின் வார்த்தைகள் கவனிக்கப் படும் என்பதை இவர் அறியாதவரா?
    இன்னமும் கலாசார அடிச்சுவடு அறியாதவராய், ஆதிமனிதனாகவே வாழ ஆசைப் படுகிறாரா? அது அவரின் விருப்பம், தனது பிசாத்துக் கருத்துக்களை வெளிப் படுத்தி ஏன் சமுதாயத்தை சீரழிக்கிறார் என்று தெரியவில்லை.

  80. ஒரு நடிகனின் பேச்சு ஒரு நடிப்புதான்
    அதை ரசித்துவிட்டு போவதுதான் சரி
    அவர் ரசிகர்களும் அப்படிதான் இருப்பார்கள்.

  81. வணக்கம்,

    ///அவர் ரசிகர்களும் அப்படிதான் இருப்பார்கள்.//

    எப்படி? சும்மா ரசித்து விட்டு போய் விடுவார்கள் என்கிறீர்களா?
    நண்பரே தன அபிமான நடிகரைப் போலவே வாழும் பித்தர்கள் இந்த நாட்டில் எத்துனை பேர் உள்ளார்கள் என்று நினைக்கிறீர்கள்? எதோ கொஞ்சம் பேர் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    நடிகரின் வாயசைவை வேதமாக எண்ணும் சிற்றறிவுக் கூட்டம் இன்னமும் இங்கே இருக்கிறது. அந்த கூட்டம் தான் கேட்டது போதாது என்று நாட்டையும் சேர்த்துக் கெடுக்கும்.

    அவ்வளவு ஏன் நண்பா இன்னமும் தமிழ் நாடு தன் முதல்வரை கோடம்பாக்கத்தில்தான் தேடுகிறது. என்ன செய்வது?

  82. fantastic,thought provoking article, a must read for the youngsters. The problem with us is we are too liberal, and we do not force our children to learn about our religion and do not force, in other words we are not aggressive enough to propagate our religion. I was asked atleast hundred times “why dont you become a muslim” in the country where i am working,i just laugh it off,i had never seen any one from hindu religion trying to propagate or ask any one to become hindu.

  83. நண்பர் குமரன் அவர்களுக்கு
    நம் தமிழ் நாட்டு இந்து மக்களுக்கு எல்லாமே டைம் பாஸ்தான்
    திருப்பதிக்கு சென்று மொட்டையடித்துக்கொள்வார்கள்
    சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வருவார்கள்
    வேளாங்கண்ணிக்கும் , நாகூர் தர்காவிற்க்கும் சென்று வருவார்கள்
    கடவுளே இல்லை என்று கடவுள் பேரை சொல்லி கொள்ளையடிக்கும் கட்சியிலும் இருந்துகோடு அவர்களுக்கும் ஆமாம்போட்டு காசு பண்ணுவார்கள்
    எல்லா நடிகர்,நடிகைகளின் பின்னாலும் சுற்றி திரிவார்கள்
    இலவசங்களை பெறுவதற்காக பொய் சத்தியம் எத்தனை முறை வேண்டுமானாலும் பண்ணுவார்கள்
    எம்மதமும் சம்மதம் என்று பீற்றிகொள்வதில் இவர்களுக்கு நிகர் இல்லை
    தான் சார்ந்துள்ள மதத்தை பற்றியே சரியாக புரிந்துகொள்ளாமல் பிற மதங்களை பற்றி உயர்வாக பேசுவதை பெருமையாக கருதுபவர்கள்.
    இந்துமதம் உலகம் அனைத்தும் ஓர் குடும்பம் என்று சொல்கிறது
    மற்ற மதங்களுக்கு எல்லாம் அந்த பரந்த பார்வை கிடையாது
    அதை அனைவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்து மதத்தை மற்ற மதத்தினர் இழிவு செய்வதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இந்து மதத்தில் இருந்துகொண்டே நம் மதத்தை இழிவு செய்யும் இந்த கழிவுகளை யார் வெளியே தள்ளுவது? எவ்வாறு தள்ளுவது என்பதுதான் கேள்விக்குறி.
    .
    .

  84. இங்கே இருப்பவர்களில் சிலர் நாகரிகம் என்பது மேற்க்கதியபானிதான் என்று நினைத்து தானும் கெட்டு பிறரையும் கெடுக்க முனைகிறார்கள் ஆனால் மேற்கு நாட்டவர்களோ இந்த தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் அலைந்து கெட்டு நிம்மதியான வாழ்வுக்கு பாரத கலாசாரமே உகந்தது என்று ஹிந்து தர்மத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் . மேலை நாட்டிலோ தனது கலாச்சாரம் தன்னை எந்த அளவுக்கு முட்டாளாக வளர்த்திருக்கிறது என்று உணர்ந்து தானே திருந்தி கீழ்த்திசை நோக்கிக் கும்பிடுகிறான் தனக்கு நல்தர்மத்தை உபதேசிக்குமாறு.என்றும்,ஈஸ்வரன்,பூலாம்பட்டி,பழனி.

  85. Pingback: Indli.com
  86. First I am a new visitor to this. So as I read you people now I feed my opinion.
    //rama on November 10, 2009 at 10:46 am
    My grown up daughters have a lot of, horror of horrors ” friends” who happen to be males. …To describe my daughters as amoral is simply laughable….rama on November 11, 2009 at 12:08 pm
    …My circle of friends include a lot of women and they are just that, FRIENDS//
    .People are living in utopian world. We may need to go little further rama sir, if you continue to have the same idea even after that, then I may accept. Till things go well, people don’t think properly. If things go well, that is my wish, then your daughter will be an exception. That’s all. And you too I consider as exception. Because you people are the first of this type we here about.

  87. A small but important correction in the last sentence of last comment – …first of this type we hear about.

  88. //Ambai on November 10, 2009 at 1:03 pm
    … It is ok to fantacize but not to act on the feelings?//
    Who said it is o.k. to fantasize? But acting is more not o.k.
    உள்ளத்தால் உள்ளலும் தீதே – 282, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – 596, வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு – 595 – திருக்குறளில் திருவள்ளுவர் என்கிற ஆணாதிக்கவாதி(!?).
    It is not to offend, but to make understand – if I think to rape you, and I rape you. Do you think are they the same?
    It is easy to restrain our actions than thinking. This is a basic fact. Do you get it? If one restrains his actions, he is great. At the same time if he can restrain his thought also, then he is greater. If he can dwell in God then he is greatest. That’s all. First thought sprouts. Then it comes through words. Then it becomes action. Refer Gita chapter 2:62-68, 3:6,7,33-43.
    //… Why can’t men accept a woman having an affair is the mistake of the husband?//
    Who are men to accept ? Do you want their acceptance? In spite of the whole world saying, something not to do, the person fell prey to it, does that what ever he likes. Because sri. Ramkumar wrote no body is going to follow it strictly. He expresses his anguish. That’s all. You don’t afraid.
    // Even in the murdered lady’s life, her husband was in Bangalore and who knows what kind of life is he leading? Do you know the story of our business community who always have more than one wife abroad? //
    Many men are accepting it as their fate already. They will continue to do that.
    If your line of argument is we should consider the “child” (a technical word used in psychology for one’s way of behavior, as it is decided by his past, particularly his childhood experiences) in everybody, then can you consider the ‘child’ in a person who offends you?
    And this can be considered by some saints, not by rulers or law, because it is impractical. The government can’t provide security to comparatively right people from terrorists.
    //… Why is everything difficult for Women? If a woman want to have an affair, why shouldn’t her husband forgive like Deivanai or Valli (whoever was married first) or Dayalu.//. Why should he just forgive? He should grant her freedom in the form of divorce. If you accept your husband to have like Karunanidhi, then he should accept you to have like savitri, lakshmi, radhika.. (the tamil actresses). But don’t quote Valli, Devayanai. You were answered by

    வள்ளுவன் on November 10, 2009 at 12:29 pm on that.

  89. //அக்கினிபுத்திரன் on November 10, 2009 at 8:15 pm
    …புதுமை வாதிகளாலும் நாத்திகர்களாலும் புத்தி ஜீவிகளாலும் அதிகம் விமர்சிக்கப்படும் மனுநீதி கூறுவதைக்கேளுங்கள்
    பிதா ரக்ஷதி கௌமாரே , பதி ரக்ஷதி யௌவனே , புத்திர ரக்ஷதி வார்தக்யே , ந ஸ்திரீ சுதந்தரம் அர்கதி :
    சிறுமியாக இருக்கும்போது அப்பாவும் இளமையில் கணவனும் முதுமையில் மகனும் காப்பாற்ற வேண்டும். பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது
    இந்த கருத்து பெண்ணடிமையாக தோன்றும் ஆனால் முழுமையாக யோசித்துப்பார்த்தால் பெண்களின் பாதுகாப்புக்கு அன்று எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
    //
    கருத்து சரிதான். சரியான செய்யுளும், விளக்கமும்
    \ENM9.03a/ पिता रक्षति कौमारे भर्ता रक्षति यौवने |
    \ENM9.03c/ रक्षन्ति स्थविरे पुत्रा न स्त्री स्वातन्त्र्यमर्हति ||\BC. \SC||
    பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே
    ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யமர்ஹதி
    அதாவது, கன்னியாயிருக்கையில் தந்தை பாதுகாக்கிறார். திருமணத்திற்கு பின், இளமையில், கணவன் பாதுகாக்கிறார். பிள்ளைகள் முதுமையில் பாதுகாக்கின்றார்கள். பெண்கள் தன் பாதுகாப்பிற்கு தானன்றி வேறு கதி இன்றி இருத்தல் தகாது. ஒருநூல் அதன் மொத்த கருத்தின் அடிப்படையில் விளக்கப்படவேண்டும். தன்னைக் கொல்ல வருவாளேயானால் தவிர, பெண்களைக் கொல்வது பாவம், பெண் பூஜிக்கப்படும் வீட்டில்தான் தேவதைகள் மகிழ்கிறார்கள், பெண் அழுவாளானால், அவளை அழ வைக்கிற அந்தக் குலமே அழிந்துவிடும், அணிகள், ஆடைகள், அன்னம் போன்றவைகளால் பெண்கள் மகிழ்ச்சிப்படுத்தப்படவேண்டும், 3:55-62, உரிய முறையில் மகளைப் பேணா தந்தை, மனைவியைப் பேணா கணவன், தாயைப் பேணா பிள்ளை பழிக்கத் தக்கவர்கள், முயற்சியுடன் தன் மனைவியைக் காப்பவனே தன்னையும், தன் குலத்தையும், தர்மத்தையும் காப்பவனாகிறான், குழந்தையை ஒரு தாய் காப்பதுபோல ஒரு பெண் காப்பாற்றப்படவேண்டும், பொருள் ஈட்டும்போழ்தும், செலவழிக்கும்போழ்தும், அறக்காரியங்களிலும்…பெண்ணைக் கலந்துகொள்க, பெண்களே வீட்டின் உண்மையான செல்வம், பெண்ணே கனணவனுக்கும், அவன் முன்னோர்களுக்கும் ஸ்வர்கத்தைத் தருபவள், தர்ம கார்யத்திற்காக கணவன் விட்டுச்சென்றிருந்தால் எட்டு வருடமும், கல்விக்காக என்றால் ஆறும், புகழிற்காகவோ, ஆசைக்காக எனின் மூன்று வருடங்களும் காத்திருக்கலாம். அதன்மேல் வரமாட்டான் என்பதால் வேறு விவாஹம் செய்யலாம், பெண்ணிடமிருந்து வரதக்ஷிணை வாங்குவது தகாது…அத்யாயம் 9.
    //அக்கினிபுத்திரன் on November 11, 2009 at 5:51 pm
    … கடவுள் நமக்கே நமக்காக தந்த சகோதரத்திடம் ச்நேகமில்லை அதிடம் பேசமாட்டோம் சிரிக்கமாட்டோம் விளையாடமாட்டோம் உதவிசெய்யமாட்டோம் எங்கோ பிறந்த யாருடையவோ சகோதரத்திடம் பாசம் காட்டுவோம் இதுவா சகோதரபாசம்…//
    தலைவா, நெத்தியடி.
    B. பாஸ்கர். on November 14, 2009 at 10:20 pm
    வணக்கம்
    /// பையனோ பெண்ணோ அழகான, அல்லது சுமாரான அழகு உள்ளவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள். ஏன் அவலட்சனாமான ஒரு மாற்றுப் பாலின நண்பர்களை தேர்ந்து எடுப்பதில்லை? ஏன் இந்த வெளிவேடம், தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வது,//

    ஸூப்பர்.

  90. //Francis Jesus never claimed Divinity in First 3 Gospels called Synoptic.//
    you can study bible better. AND Mathew, and john are direct disciples, on the other hand mark is the disciple of direct disciple peter, and luka is disciple of the anti-christ paul. I do not know which do you mean as the first three?
    மத்தேயு 10-32, 33, 35, 37, 11- 27, 23-9, 24-36, 28-19,
    அருளப்பர் 10-30, 14-6, 7, 8, 9, 11, 12, 13.
    லூக்காஸ் 10-22, 15-12

    திருவெளிப்பாடு 14-1 ஆகியவை ஒப்புநோக்கத்தக்கவை.

  91. //Sivam sirevadara on November 10, 2009 at 7:37 am இந்து கடவுள் முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்? ஆதி முலமான சிவனுக்கு ஏன் முன்று மனைவிகள்? //
    வள்ளி, தெய்வானை பற்றி…
    ஞாநபூமி ஆசிரியர் திரு. மணியன் அவர்கள், ஒருமுறை வெள்ளிமலை ஸ்ரீமத் ஸ்வாமீ மதுரானந்தரைப் பேட்டி கண்டார்களாம். ஸ்வாமீகளிடம் அவர் முருகன், ஶிவன் போன்றவர்கள் எல்லாம் இரு மனைவி உடையவர்களாக இருக்கின்றார்களே, நாமும் இரு திருமணம் புரிந்துகொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்வாமிகள், “ஓ, செய்யலாமே. முருகன் ஆணவம், கன்மம், மாயை என்கிற அஸூரர்களைக் கொன்றுவிட்டு திருமணம் செய்துகொண்டார். நாமும் அவ்வாறு கொன்றுவிட்டு, தேவைப்படுமாயின் கட்டிக்கொள்ளலாம். ஶிவனும் மன்மதனை எரித்துவிட்டுத் திருமணம் செய்துகொண்டார். நாமும் நமக்குள் இருக்கும் காமத்தை எரித்துவிட்டு திருமணம் புரிய எண்ணம் இருந்தால் புரிந்துகொள்ளலாம்” என்றார்களாம்.

  92. இதனை பற்றி கூகிளில் உலவும் போது இந்த பக்கம் பக்கமாக வந்தேன். மிக அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் நான் எண்ணிய எண்ணங்கள் யாவும் உள்ளடக்கி இருப்பதாக திருப்தியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *