மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » இந்து மத மேன்மை, சமூகம், மகளிர்

ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்

மங்கை-மாங்கல்யம்-மங்கலம்-மகிமை

thaali”மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது திருமணத்தில் இன்றியமையாத முக்கியமான சடங்கு. மணமகன், மணமகளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உண்டு. மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படுவதால்தான். பாரத தேசத்தில் வாழும் அனைத்து ஹிந்து சமுதாயத்தினரின் திருமண வைபவத்திலும், தாலி ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.

kannadasan“மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையாலல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள் வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது…..

ஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்…. திருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்? அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்….

பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ’காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும். இந்தக் காப்புகளுக்காகவே கையில் ’காப்பு’ அணியப்படுகிறது. ‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் ’காப்பு’க் கட்டப்படுகிறது…. பெண்ணைத் தெய்வமாக்கி, கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.

– கவிஞர் கண்ணதாசன் - “அர்த்தமுள்ள இந்து மதம்” முதல் பகுதி.

தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவிப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திருமண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின்னம்; பார் புகழும் பாரதப் பண்பாட்டின் பழம்பெருமை பகரும் சின்னம்.

பல நூற்றாண்டுகளாக, ஏறக்குறைய ஆயிரம் வருடங்கள் அந்நியரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தபோது கூட நம் கலாசாரத்திற்கு ஆபத்து வரவில்லை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு ஆவதற்குள், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், எப்பேர்பட்ட மாற்றங்கள்! மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமும், இந்து விரோத சக்திகளின் தாக்குதலும், பாதகம் மிகுந்த கல்வித் திட்டங்களும், சுயநலம் மிகுந்த ஆட்சியாளர்களும், அந்நிய சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கிடக்கும் பொறுப்பற்ற ஊடகங்களும், சேர்ந்து நம் கலாசாரத்தை அழிவு நோக்கிக் கொண்டு செல்கின்றன.

 

இந்துக்களை அவமதிக்கும் “மேற்கத்திய ஊடக” நிறுவனம்

அந்த அழிவுப்பாதையில் ஒரு மைல்கல்லாக ஒரு நிகழ்ச்சியைneeya-naana-1 கடந்த மாதம் ஞாயிற்றுக் கிழமை (11-10-09 அன்று) “ஸ்டார் விஜய்” தொலைக்காட்சி அரங்கேற்றியது. ”ஸ்டார் விஜய்” ராபர்ட் முர்டாக் என்பவரின் “ஸ்டார் நெட்வொர்க்” குழுமத்தைச் சேர்ந்த, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் “நீயா நானா” என்றொரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம்.

neeya-naana-2-gopinathஇந்நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் ”மெர்குரி கிரியேஷன்ஸ்” என்று சொல்லக்கூடிய ஒரு நிறுவனம். இதன் நிர்வாகத் தலைவராக (CEO) ‘திரு.ஆண்டனி’ இருக்கிறார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ‘கோபிநாத்’ என்பவரும் ஒரு ஹிந்து விரோதி என்றே அறியப்படுகிறார். ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு அதை இரண்டு குழுக்கள் விவாதிப்பதே இந்நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவனத்தின் நோக்கம் என்னவோ அதையே தீர்ப்பாக கோபிநாத் அறிவிப்பார்.

நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.

”குலதெய்வ வழிபாடு தேவையா?”, என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னர் விவாதம் நடத்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவாதத்தில் பங்கேற்றவர்கள், பெற்றோர்கள் ஒரு குழுவாகவும் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். பெற்றோர்கள் குலதெய்வ வழிபாடு தேவை என்றும் இளைஞர்கள் குலதெய்வ வழிபாடு தேவையில்லை என்பது போலவும் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, பார்ப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதே போல், “கோவில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டுமா”, “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா” போன்ற தலைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்விவாதங்களில் வைதீக, ஆகம முறைகளைத் தவறாக விமரிசித்தும், பிராம்மண சமுதாயத்தினரை தாக்கியும் கருத்துகள் சொல்லப்பட்டன. பூசாரிகள், குருக்கள் இடையே பகை ஏற்படுத்துவதும், கிராமத் தெய்வங்களை வழிபடுபவர்களை ஹிந்து கலாசாரத்திலிருந்து பிரிப்பதுமே நோக்கம் கொண்டதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. பிராம்மண கலாசாரமே ஹிந்து கலாசாரம் என்பது போலவும், அதற்கும் தமிழ்க் கலாசாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கும் விதமாக நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சி.

இந்த மாதிரியான விவாதங்களில் கலந்து கொள்பவர்கள், குறிப்பாக நிறுவனத்தின் நோக்கத்திற்குச் சாதகமாகப் பேசக்கூடிய அணியில் பங்கு பெறுபவர்கள் அந்நிறுவனத்தால் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இதே கோபிநாத் நடத்திய இதே ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நேரிடையாகப் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு.

neeya-naana-4சில சமயங்களில், எதிரணியில் பங்கு பெறுபவர்கள் தொலைக்காட்சியில் தங்கள் முகம் தெரியவேண்டும் என்று அலைபவர்களாக இருப்பர். அந்த இந்துக்கள், நம் கலாசாரத்தை நாமே குறை சொல்கிறோமே, கிண்டல் செய்கிறோமே என்கிற நினைப்பே இல்லாமல், கேனத்தனமாக சிரித்துக் கொண்டும், மடத்தனமாக உளறிக் கொண்டும், தொலைக் காட்சியில் தங்கள் முகம் சில நிமிடங்கள் தெரியவேண்டும் என்பதற்காக தன்மானம், சுயமரியாதை என அனைத்தையும் இழந்து நிற்பதுதான் மிகவும் வேதனை.

இதே போல் தான், கடந்த 11-ஆம் தேதியன்றும் “பெண்கள் தாலி அணிவது அவசியமா” என்ற பொருள் விவாதிக்கப் பட்டது. தாலி தேவையில்லை என்கிற விஷவித்தை மக்கள் மனத்தில் விதைப்பது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம். வழக்கம்போல் அந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை நடத்திச் செல்வது கோபிநாத்தின் நோக்கம்.

எனவே ’தாலி தேவையில்லை’ என்கிற அணியில் பேசியவர்கள்neeya-naana-7 முன்னரே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இவர்களில் சிலர் ஹிந்து விரோதி என்பதும் ‘பகுத்தறிவு’ப் பாசறையில் இருந்து வந்தவர்கள் என்பதும் நிதர்சனம். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிரபலம் ‘நிர்மலா பெரியசாமி’ என்கிற ‘முற்போக்கு’ச் சிந்தனையாளர். ஒரு காலத்தில் தொலைக் காட்சிகளில் செய்தி வாசிக்கும்போதே இவரின் லட்சணத்தைப் பலர் பார்த்திருக்கலாம். மற்றபடி இவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

 

விவாதங்களில் சொல்லப்பட்ட “முத்தான” கருத்துகள்

  •  தாலி அணிவது வெறும் மூடநம்பிக்கையே. அதில் தெய்வீகமோ, புனிதத்துவமோ ஒன்றும் இல்லை. அது ஒரு சாதாரண பொருள் தான்.
  •  பெரும்பான்மையான பெண்கள் இப்போது தாலி அணிவதில்லை.
  • வேலைக்குச் செல்லும் பெண்கள் மணமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. எனவே, தாலியை தங்கள் ரவிக்கைக்குள் மறைத்துச் செல்கிறார்கள்.
  • பல பெண்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.
  • பெரும்பான்மையான பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியைக் கழற்றி வைத்து விடுகிறார்கள்.
  • தாலி என்பது நாய்களின்  உரிமம் போன்றது தான். நாயின் உரிமத்தை அதன் கழுத்தில் தொங்க விடுவதைப்போல் பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குகிறது. அவ்வளவு தான். (இதைச் சொல்லியது ஒரு கிறுத்துவப் பெண்மணி).

நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை சமயங்களில் மருத்துவர் தாலியைக் கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?” என்று கேட்க “கழற்றிவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்” என்று கூறிய பெண்மணியிடம், “மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?” என்று கேவலமாக ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணியை அவமானம் செய்துள்ளார் கோபிநாத்.

neeya-naana-5

neeya-naana-6

நிகழ்ச்சியில், ”தாலி தேவையில்லை” என்ற அணியில் பல பெண்கள் தாலியைக் கழற்ற தயாராக இருந்தார்கள். ஒரு 65 வயதான ஒரு முற்போக்கான பெண், ‘இங்கேயே இப்போதே தாலியை கழற்றுவீர்களா?’ என்று கோபிநாத் கேட்டவுடன் தாலியைக் கழற்றி அவர் கையில் கொடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், ’தலைமை’ தாங்கியவர்களில் ஒருவரான “ஓவியா” அந்தப் பெண்ணின் ஆணித்தரமான முடிவுக்குப் பாராட்டி, “சிறந்த பங்கேற்பாளர்” என்ற பரிசு வழங்கி கௌரவித்தார். அப்போது அந்தப் பெண்ணின் ’தைரியத்தையும்’ ‘பகுத்தறிவையும்’ பாராட்டி கையொலி எழுப்புமாறு அனைவரையும் வற்புறுத்தியுள்ளார் கோபிநாத்.

தாலி அணிவது அவசியம்; அது நமது கலாசாரம் என்று அதன்neeya-naana-31 முக்கியத்துவத்தைப் பேசிய எதிரணியினரின் கருத்துக்கள் பல நிகழ்ச்சித் தொகுப்பில் மறைக்கப் பட்டுள்ளன என்பது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது. நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத் வேண்டுமென்றே தாலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் கேலி செய்துள்ளார். திருமணம் ஆகாத இளம்பெண்கள் மனதிலும் மற்றும் கிராமப்புற பெண்கள் மனதிலும் இந்த நிகழ்ச்சி எந்த மாதிரியான எண்ணங்களை விதைத்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

 

தாலியில்லையேல் ”பகுத்தறிவு”ம் இல்லை, ”சுயமரியாதை”யும் இல்லை.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழர் இந்துக்கள் அல்ல’ என்கிற பிரசாரத்தை, தொடர்ந்து செய்து வருகின்றன. ஹிந்து கலாசாரம் வேறு, தமிழ் கலாசாரம் வேறு என்று எப்படியெல்லாமோ தமிழ் ஹிந்துக்களை ஏமாற்ற முயற்சி செய்தும் வருகின்றன. இம்மாதிரியான முயற்சிகள் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஹிந்து கலாசாரத்தைக் கொச்சை படுத்தும் நோக்கத்துடன் இவர்கள் ஆரம்பித்த வழக்கம்தான் “சுயமரியாதைத் திருமணம்” என்பது. சுயமரியாதைத் திருமண இயக்கம் படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். நடக்கும் ஒரு சில சுயமரியாதைத் திருமணங்களில் கூட, திருமண மந்திரங்களையும், திருமணத்தை நடத்தும் பிராம்மண புரோகிதரையும், தெய்வ வழிபாடுகளையும்தான் இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர “மாங்கல்ய தாரணம்” என்னும் தாலி கட்டும் புனிதச் சடங்கை நிறுத்த முடியவில்லை. திராவிடத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் நடத்தப் படும் சுயமரியாதைத் திருமணங்களில் கூட, பெரியார் பள்ளி, அண்ணா கல்லூரி என்கிற பகுத்தறிவுப் பாசறைகளில் பயின்று வந்த அத்தலைவர்கள் தங்கள் கையாலேயே தாலிகளை எடுத்துக் கொடுத்து திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.

 

தமிழ்’க் கட்சிகளும், இந்து இயக்கங்களும்

neeya-naana-9இந்த அளவிற்கு, தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட இந்தப் புனிதச் சடங்கை மக்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. திருமண வாழ்வின், தாம்பத்தியத்தின் புனிதச் சின்னத்தை, பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தை, தெய்வீகப் பாரம்பரியத்தை அவமரியாதை செய்த இந்நிகழ்ச்சிக்கு சிறிதளவு கூட எதிர்ப்பு வராதது வேதனை அளிப்பதாக இருக்கின்றது.

நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைப் பேட்டியில் திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் தவறில்லை என்று சொன்னதற்குக் கொதித்துக் கிளம்பிய ’தமிழ்’ அரசியல் கட்சிகள் தற்போது மௌனம் காப்பதன் மூலம் கிறுத்துவ நிறுவனங்களை எதிர்ப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதாவது குஷ்பு என்கிற தனி மனிதரிடம் காட்டிய தங்கள் வீரத்தையும் சூரத்தனத்தையும், சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த ஒரு கிறுத்துவ ஊடக நிறுவனத்திடம் காட்டத் துணியவில்லை அவர்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தாங்களும் பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்துவதாலும், ”இந்து எதிர்ப்பு” என்கிற நோக்கத்தில் ஒன்று படுவதாலும், ”தமிழ்” அரசியல் கட்சிகள் சக தொலைக்காட்சி நிறுவனத்தை எதிர்க்க விரும்பவில்லை என்கிற உண்மை தான்.

சரி, இவர்கள் யோக்கியதை தான் தெரிந்திருக்கிறது. ஆனால் ஹிந்து இயக்கங்கள் ஏன்
தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவைகள் தங்களின் மற்ற
சேவைகளில் ஈடுபட்டிருந்தாலும் இப்பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு
போராட்டம் நடத்தியிருக்கலாம். பல்வேறு காரணங்களால் போராட்டம் நடத்த முடியாத
நிலையில் ஒரு பத்திரிகை அறிக்கை மூலமாவது தங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும்.
“விஜயபாரதம்” இதழ் இந்நிகழ்ச்சியைக் குறித்து கண்டனம் செய்து ஒரு கட்டுரை
எழுதியுள்ளது பாராட்டத் தக்கது.

இந்து முன்னணி தலைவர் திரு ராமகோபாலன் அவர்களும் மற்றும் அவ்வியக்கத்தைச்
சேர்ந்த பரமேஸ்வரன் முதலான சில தொண்டர்களும் நேரிடையாக தங்கள் எதிர்ப்பைத்
தெரிவித்ததும் பாராட்டத் தகுந்தது. அவர்களின் செயல்பாடு இக்கட்டுரையில்
பின்னால் வருகிறது.

ஆனால் பா.ஜ.கவைப் பொறுத்தவரை பெண்களின் “கடற்கரை கைப்பந்து”
விளையாட்டிற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க மகளிர்
அணி இவ்விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது மிகவும் வருந்தத்தக்கது. அதே போல்
நடிகைகளின் உடைகள் விஷயத்திற்கெல்லாம் போராட்டம் நடத்தும் ஹிந்து மக்கள் கட்சி
இவ்விஷயத்தில் ஏதும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்து சமூகம் இந்து இயக்கங்களிடம் பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளது. இந்து
இயக்கங்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டும்.  இந்து ஆன்மீக பத்திரிகைகளும்,
தொலைக்காட்சி சானல்களும் சில இருந்தாலும், இந்து அரசியல் மற்றும் கலாசாரக்
கொள்கைகளை ஆணித்தரமாக மக்களிடையே எடுத்துச் செல்ல இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு
ஊடக நிறுவனம் இல்லாத நிலையில், இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு இந்து இயக்கங்கள்
கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டியது அவசியமாகிறது. அந்த இயக்கங்களிடம்
விஷயம் தெரிவிக்கப் பட்டதையடுத்து அவை வரும் நாட்களில் தங்கள் எதிர்ப்பை,
போராட்டங்கள் மூலம் காட்டும் என்று இந்து சமூகம் எதிர்பார்க்கிறது. 

தனிமனிதர்கள் தெரிவித்த எதிர்ப்பு

கட்சிகளும் இயக்கங்களும் பேசாமல் இருந்தாலும் சில தனிமனிதர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை. அவர்கள் விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் (CEO) திரு ஸ்ரீராம் அவர்களையும், மெர்குரி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அவர்கள் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆரம்பத்தில் ஒரிரண்டு அழைப்புகளை ஏற்றுப் பேசிய திரு ஸ்ரீராம் அவர்கள் பின்னர் தன் காரியதரிசி மூலம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்தார். இந்து முன்னணியைச் சேர்ந்த திரு. பரமேஸ்வரன் என்பவரும் ஸ்ரீராம், ஆண்டனி இருவரையும் தொடர்பு கொண்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கௌதம் என்பவர் ஆண்டனியிடம் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, இதே போல் மற்ற மதத்தவரின் கலாசாரத்தையும், பழக்கவழக்கங்களையும் அவமதிப்புச் செய்து நிகழ்ச்சி தயாரிப்பீர்களா என்று கேட்டபோது, “நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நேயர்களின் கருத்தைத்தான் பதிவு செய்தோம். மேலும் நான் அய்யாவழி வைகுந்தரின் பக்தன். எனவே இந்துக் கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி தயாரிக்க மாட்டேன்” என்று சொல்லியுள்ளார்.

இதனிடையே தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்தவுடன் சற்று கலங்கிப்போன ஆண்டனி, இந்து முன்னணியைச் சேர்ந்த மற்றொரு தொண்டர் மூலம் இந்து முன்னணி தலைவர் திரு ராமகோபாலன்ஜி அவர்களைச் சந்தித்து, இந்த விஷயத்தைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசாமல், “சித்தர்கள்” என்ற மற்றொரு நிகழ்ச்சிக்கு அவரைத் தலைமை தாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். திரு ராமகோபாலன் அவர்களின் அலுவலகத்திலிருந்து அவர் கிளம்பும்போது அங்கு இருந்த திரு. பரமேஸ்வரன் நேராகவும் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதன் பிறகே திரு. ராமகோபாலன் அவர்களுக்கு விஷயம் தெரிந்துள்ளது.

ஆண்டனி-ராமகோபாலன் சந்திப்பைப் பற்றி அறிந்துகொண்ட கட்டுரையாளர் ஹரன் அவர்கள் ராமகோபாலன் அவர்களைத் தொடர்புகொண்டு விஜய் டிவி நிறுவனம் பொது மன்னிப்பு கேட்குமாறு அவர்களை வற்புறுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டு, மேலும் ஹிந்து முன்னணி சார்பில் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். போராட்டத்தைப் பற்றி பரமேஸ்வரன் அவர்களிடமும் பேசிய ஹரன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச துணைத் தலைவர் திரு வேதாந்தம் அவர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு நல்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.

திரு. ஹரன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, ராமகோபாலன் அவர்கள் விஜய் டிவி ஸ்ரீராம் அவர்களைத் தொடர்பு கொண்டு, ”தொலைக்காட்சியின் மூலம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும், அது தான் நியாயம்” என்று கூறியதற்கு, “எங்கள் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் இருக்கிறது. அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்கலாம் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சால்ஜாப்பு கூறியுள்ளார் ஸ்ரீராம்.

இதனிடையே, சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுப்ரமணியம் என்கிற வழக்குரைஞர், விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் திரு ஸ்ரீராம், மெர்குரி கிரியேஷன் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி, விஜய் டிவி நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத், மாநில காவல் துறைத் தலைவர், நகர காவல்துறை ஆணையர், ஆகியோருக்கு சட்ட அறிவிப்புப் புகார் (Legal Notice) அனுப்பியுள்ளார். அதில், மாங்கல்யம், இந்துத் திருமணங்கள் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை ஆகியவற்றின் புனிதத்தை எடுத்துக் கூறி, ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஸ்ரீராம், ஆண்டனி, கோபிநாத் ஆகியோருக்குக் கடுமையாகத் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ள அவர், அவர்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும் என்று கோரியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் காவல்துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அந்தப் புகாரை மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அவர்களுக்கும், மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

விஜய் டிவி நிறுவனமும், மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனமும் புரிந்துள்ள குற்றங்கள் இ.பி.கோ. 153(a), 153(b) மற்றும் 295(a) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தக்கவை என்பது குறிப்பிடத் தக்கது.

 

மற்ற ஊடகங்களின் ‘ஹிந்து’ எதிர்ப்பு

ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதும், ஹிந்து கலாசாரத்தைக் கிண்டல் செய்வதும், ஹிந்து நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதும், அவற்றை மூட நம்பிக்கைகள் என்று எகத்தாளம் செய்வதும், ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நம் நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிரான நோக்கம் கொண்டவையே. ஹிந்துக்களுக்கு எதிராக செய்திகளும், கட்டுரைகளும், நிகழ்ச்சிகளும் வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு இயங்குகின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அந்நிய சக்திகளின் கைப்பாவையாக இயங்குகின்றன. அந்நிய நிறுவனங்களின் நிதியுதவியால் இயங்குவதால் அந்நிறுவனங்களின் சொல்படி நடக்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்களில் வேலை பார்ப்பவர்கள் கிறுத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும், மார்க்ஸிய (இடதுசாரி) சிந்தனை உள்ளவர்களாகவும், (தமிழகத்தைப் பொருத்தவரை) திராவிட இன வெறியாளர்களாகவும் இருப்பதால், அந்நிய சக்திகளின் ஆதரவாளர்களாகச் செயல்படுகின்றனர். இருக்கின்ற ஒருசில ஹிந்துக்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது.

இதே விஜய் டிவி தொலைக்காட்சியில், “நடந்தது என்ன” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் பெரும்பான்மையாக ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளையே காணலாம். அதே போல், “சன் நியூஸ்” சானலில் “நிஜம்” என்கிற நிகழ்ச்சியும், “Zee தமிழ்” டிவியில் “நம்பினால் நம்புங்கள்” என்கிற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகின்றன. ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் இந்த மூன்று நிறுவனங்களும் மேற்கண்ட நிகழ்ச்சிகள் மூலம் போட்டி போடுகின்றன. குறிப்பாக மேற்கண்ட நிகழ்ச்சிகளில், கிராமப்புறங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடக்கும் திருவிழாக்கள், ஏழை மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதையே தொழிலாகக் கொண்டிருகின்றன இந்த சானல்கள்.

தமிழக முதல்வர் பெயரில் இயங்கும் “கலைஞர் டிவி”, “விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று கூடச் சொல்லாமல் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று சொன்னாலும், அதைப்பற்றிக் கவலையே படாமல் அதன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் தன்மானமற்ற ’ஜந்துக்கள்’ போன்றல்லவோ இருக்கிறார்கள் ‘ஹிந்துக்கள்’!

தன்னை ஏதோ தமிழ் மொழியின் காவலனாகக் காண்பித்துக் கொள்ளும் பா.ம.கவின் ”மக்கள் டிவி”, ‘தமிழ்’ என்கிற பெயரில் ஹிந்து கலாசாரத்தின் முக்கியமான அம்சங்களை தமிழ் கலாசாரம் என்று திரித்துக் கூறி, தமிழ் கலாசாரம் வேறு, ஹிந்து கலாசாரம் வேறு என்பது போன்று பொய்பிரசாரம் செய்து வருகிறது. இந்தச் சானலின் நிகழ்ச்சிகளில், ஹிந்து வெறுப்பு மண்டிக்கிடக்கும். தமிழ் கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று, நன்னன் என்கிற ”பகுத்தறிவுப் பேராசிரியர்” ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார். ஹிந்து பண்பாட்டை தமிழ் பண்பாடு என சொல்வது தவறல்ல அதுவே உண்மையும் கூட. ஆனால் தமிழ் பண்பாடு என்கிற பெயரில் தமிழரின் ஆன்மிக அடிப்படையை அழிப்பதுதான் தவறு. அந்த ஆன்மிக அடிப்படை ஹிந்து தர்மம்தான்.

ஒரு நிறுவனம் பாக்கியில்லாமல் அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஹிந்துக்களைப் பழித்து, ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதையே செய்து வருகின்றன. அனைத்து சானல்களில் காட்டப்படும் மெகா தொடர்களைப் பார்த்தால் ஹிந்து எதிர்ப்பு நிதர்சனமாகத் தெரியும். கோவில்களில்தான் சதியாலோசனைகளும், குடும்பச் சண்டைகளும், புறங்கூறுதலும் நடக்கும்; கோவில்கள் காதலர் பூங்காக்களாகவும் காண்பிக்கப்படும்; ஆனால் சர்ச்சுகள் அன்பு ஊறும் இடங்களாகவும், மசூதிகள் அமைதியான இடங்களாகவும் காண்பிக்கப்படும். காவியுடை அணிந்த இந்துச் சாமியார் தீயவராகவும், வெள்ளையுடை அணிந்த கிறுத்துவப் பாதிரியார் அன்பே உருவானவராகவும், தாடியும் தொப்பியும் அணிந்த மௌலவி அமைதியே உருவானவராகவும் சித்தரிக்கப்படுவர். புரோகிதர்கள் கோமாளிகளாகச் சித்தரிக்கப்படுவர். ஹிந்துக் குடும்பங்களில் தான் சண்டைகளும், சச்சரவுகளும், அசிங்கங்களும் காண்பிக்கப்படும். அவற்றைப் பல மணிநேரங்கள், தங்கள் வீட்டு வேலைகளையும் கூட மறந்து, நம் அப்பாவி ஹிந்துப்பெண்மணிகள் பார்த்துக்கொண்டு அந்நிகழ்ச்சிகளில் ஒன்றிவிடுவர். நம் கலாசாரத்தையும், பழக்க வழக்கங்களையும், இந்த மெகா தொடர்கள் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் அவமதிக்கின்றனவே என்கிற உறுத்தலே இல்லாமல் இந்துக்கள், குறிப்பாகப் பெண்மணிகள் அத்தொடர்களுக்கு அடிமைகளாக இருப்பது மற்றுமொரு வேதனையான விஷயம்.

ஹிந்து துவேஷமும், ஹிந்து எதிர்ப்பும் போதாது என்று, கிறுத்துவ ஆதரவும், இஸ்லாமிய ஆதரவும் அப்பட்டமாகத் தெரிகின்ற அளவிற்கு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. கிறுத்துவ மதப்பிரசாரம் இல்லாத சானல்களே இல்லை எனலாம். அதே போல் தான் இஸ்லாமிய மதப் பிரசரமும். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போதாதென்று, ”மதச்சார்பின்மை” என்கிற பெயரில், அரசு நிறுவனமான தூர்தர்ஷனின் ‘பொதிகை’ சானலிலும் அந்நிய மதப் பிரசாரம் அரங்கேற்றப் படுகிறது.

புனித தினங்களில் நடக்கும் திருவிழாக்களைக் காட்டுவதற்கும், மதப் பிரசாரத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆனால் அனைத்து சானல்களிலும் அந்நிய மதப் பிரசாரம் காண்பிக்கப் படுவது நம் நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது.

ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் பிராந்திய நிறுவனங்களுக்குச் சற்றும் சளைத்தவையல்ல. ஏழு நாட்களும், இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் இவை, செய்திகளிலும், விவாதங்களிலும், கடுமையான ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவை. அமர்நாத் கோவிலின் பனிலிங்கம், சபரிமலையின் மகர ஜோதி, சபரி மலையில் 10-வயது முதல் 50-வயது வரையிலான பெண்களை அனுமதிக்காமல் இருப்பது, புரி ஜகன்னாதர் கோவிலின் ‘மஹா பிரசாதம்’ , குருவாயூர் கோவிலின் உடைக் கட்டுப்பாடு, போன்ற பல விஷயங்களை வேண்டுமென்றே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, ஹிந்து எதிர்ப்பார்களர் மூலம் அந்தப் பாரம்பரிய வழக்கங்களை முறைகேடாக விமரிசனம் செய்து, நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் மனதில் சந்தேக வித்துக்களை விதைத்து ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். நகர்ப்புற இளைஞர்களை மிகவும் தவறான வழியில் நடத்திச் செல்கின்றன இந்த சானல்கள்.

 

இந்துக்கள் தரும் ஆலோசனைகள்

11-ஆம் தேதி ’விஜய் டிவி’ நடத்திய ’நீயா நானா’ நிகழ்ச்சியை அடுத்து 12-ஆம் தேதியும், 13-ஆம் தேதியும், இக்கட்டுரையாளருக்கு பலர் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் வேதனையைப் பகிர்ந்துகொண்டனர். மற்ற சில இந்து இயக்கவாதிகளிடமும் பலர் தங்கள் எண்ணத்தைத் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த உதாரணத்தின்படி விஜய் டிவிக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் பின்வரும் பொருள்களில் நிகழ்ச்சிகளோ, விவாதங்களோ நடத்துமாறு இந்துக்கள் ஆலோசனைகள் வைக்கின்றனர். இந்த ஆலோசனைகளைச் சவால்களாக எடுத்துக் கொண்டு இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும், அதிகாரிகளும் நிகழ்ச்சிகள் தயாரித்து ஆவன செய்வார்களா? இதோ சில தலைப்புகள்:

  • முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?
  • இஸ்லாமியச் சடங்கான ‘சுன்னத்’ தேவையா?
  • மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?
  • ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?
  • கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?
  • மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?
  • தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?
  • மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?
    உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?
  • இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?
  • மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?

இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.

 

சமீபத்திய நிகழ்வு

கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று மாலை, கௌதம், வழக்குரைஞர் சுப்ரமணியம் பாலாஜி, புகைப்படக் கலைஞர் ஸ்ரீனிவாசன், ஹரன் ஆகியோர் திரு ஆண்டனி அவர்களை அவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசியுள்ளனர். அப்போது ஆண்டனி, “எங்கள் நிகழ்ச்சியில் விவாதிக்கப் படும் தலைப்புகள்/கருக்கள் ஆகியவற்றை முடிவு செய்வது தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ”அறிஞர்” குழு தான். நாங்கள் எங்களுக்குத் தோன்றும் விஷயங்களைப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இது நாம் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தொலைக்காட்சி நிறுவனம், தான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் விவாதிக்கப் படவேண்டிய கருப்பொருளை, தான் ’ஏற்பாடு’ செய்துள்ள ஒரு ”அறிஞர்” குழுவின் மூலம் முடிவு செய்கிறது. அந்த “அறிஞர்” குழு ஹிந்துக்களின் ஆன்மிக, கலாசார, விஷயங்களையும், பாரம்பரிய வழக்கங்களையும் மட்டுமே பெரும்பாலும் விவாதப் பொருளாகத் தேர்வு செய்கிறது. பின்னர் விவாத மேடையில் பலவிதத் திரித்தல்களுக்கும், நகையாடல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப் பட்டு அக்கருப்பொருள் ஒரு வேண்டாத சடங்காக, தேவையற்ற வழக்கமாக பார்வையாளர்களின் மனத்தில் குழப்பத்தை விளைவித்து அவர்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குமாறு முன்வைக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிறுவனம், தயாரிப்பு நிறுவனம், மற்றும் நிகழ்ச்சி நடத்துபவர் ஆகியோரின் யோக்கியதையைப் பார்த்தோம். அதே போல் கருப்பொருளையும், தலைப்புகளையும் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள “அறிஞர்கள்” எப்பேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். ஒரு நிறுவனத்தில் பின்பற்றப்படும் இதே வழிமுறையைத் தான் இதே போல நிகழ்ச்சிகள் நடத்தும் மற்ற நிறுவனங்களும் பின்பற்றும் என்பதும் நாம் ஊகிக்கக் கூடியதே. ஏனென்றால், கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் ”ஹிந்து எதிர்ப்பு” என்கிற ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளன அல்லவா?!

விஜய் டிவியைப் பொருத்த வரையில் அந்த “அறிஞர்” குழுவில் உள்ள அங்கத்தினர்கள் யார் யார் என்று தெரிவிக்க மறுத்து தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார் ஆண்டனி. அதே சமயத்தில் அவர் அலுவலகத்தில் தயாராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தலைப்புகளின் பட்டியல் கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று கௌதம் முதலிய நால்வர் குழு தெரிவித்துள்ளது. அவற்றில் சில:

  • பிறந்த குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி ஆகியோர்களின் பெயர்களை வைப்பது அவசியமா?
  • அழகு மிகுந்தவர்கள் தென்னிந்தியப் பெண்களா, வட இந்தியப் பெண்களா?
  • மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் — கணவர்கள் vs மனைவிகள்.

மேலும், கடந்த 18-10-09 அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, “அண்ணிகளுக்குப் பிரச்சினை வருவது நாத்தனாராலா அல்லது கொழுந்தனாராலா?” என்பதாகும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் மூலம் திருமணம்/தாம்பத்தியம் என்கிற உறவையும், குடும்பம், கூட்டுக் குடும்பம் ஆகியவற்றின் மதிப்பையும், நிலைகுலையச் செய்வதே இவர்களின் நோக்கம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கும். அதாவது நம் பாரத தேசத்திற்கே உரியதான ஆன்மிக, கலாசாரப் பாரம்பரியத்தை அழித்து தங்களின் கலாசாரத்தை நிலைநிறுத்துவதே இந்த அந்நிய சக்திகளின் “மிகப் பெரிய சதி” என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தச் சதி நிறைவேறுவதற்கு, போலி மதச்சார்பின்மை பேசும் அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும், மார்க்ஸீய கம்யூனிச வாதிகளும், நாத்திகம் பேசும் திராவிட இனவெறியாளர்களும் துணை போகின்றனர் என்பதில் ஐயமில்லை. இந்த மாபெரும் சதியைப் புரிந்து கொள்ளாமல் இந்துக்களும் அசட்டுத் தனமாக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டும், அவற்றைக் கண்டுகளித்துக் கொண்டும், ஏமாந்துபோவது மிகவும் வேதனையும் துரதிர்ஷ்டவசமும் ஆனதாகும்.

கௌதம் முதலிய நால்வர் குழுவிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பேசிய திரு ஆண்டனி, வியாபார உத்திகள், டி.ஆர்.பி கணக்குகள், போன்ற காரணங்களைச் சொல்லி சமாளிக்க முயன்றிருக்கிறார். ஆனால் பொது மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்கிற தங்கள் கோரிக்கையில் நால்வரும் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் ஹிந்துக்களைப் புண்படுத்தும் விதமாக எதிர்காலத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், சமூகப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். இவர்களின் மனநிலையையும், புண்பட்ட உணர்வையும் கடைசியில் புரிந்துகொண்ட ஆண்டனி இரண்டு வாரம் கழித்து மூன்றாவது வார நிகழ்சியில் பொது மன்னிப்பு கேட்பதாக வாக்களித்துள்ளார்.

 

அரசாங்கத்தின் பொறுப்பு

இந்த மாதிரியான நிலைப்பாடு ஊடகங்களில் தொடர்வது நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகும். முளையிலேயே கிள்ளப்பட்டிருக்க வேண்டிய இத்தீங்கு, தற்போது பெருமளவிற்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு மேலும் காவல்துறையும் அரசாங்கமும் வாளாவிருப்பது சரியன்று. மதச்சார்பற்ற தேசத்தில் ஒரு மதத்தவர்களை மட்டும் தாழ்த்தி, பழி சொல்லி, விமரிசனம் செய்து ஊடகங்கள் நடந்துகொள்வது அனுமதிக்கப் படக்கூடாது. ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்ளும் பட்சத்தில் காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, நீதிமன்றம் தண்டனை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசாங்கமும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனையில் கூட, விஜய் டிவியும், மெர்குரி கிரியேஷன்ஸும், பொது மன்னிப்பு கேட்காத பட்சத்தில், காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தரவேண்டும். அம்மாதிரி எடுக்கப்படும் நடவடிக்கை மற்ற ஊடகங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அவைகள் தங்கள் சமூகப் பொறுப்புகளை உணருமாறு அமையவேண்டும்.

 

முடிவுரை

ஹிந்துக்களும், தங்கள் முகங்கள் தொலைக்காட்சியில் தெரிவதைவிட, தங்கள் கலாசாரமும், பாரம்பரியமும் காப்பாற்றப் படுவதே முக்கியம் என்று நினைத்துச் செயல்படவேண்டும். தங்களுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களையும், ஊடகங்களையும் ஆதரவு அளிக்காமல் ஒதுக்க வேண்டும். அப்போது தான் ஊடகங்கள் திருந்தும்.

மெர்குரி கிரியேஷன்ஸ் (திரு ஆண்டனி) அலுவலகத்தை
0-9840712192 என்கிற எண்ணிலும்,

விஜய் டிவி (திரு ஸ்ரீராம்) அலுவலகத்தை
044-28224696 மற்றும் 044-28214201 ஆகிய எண்களிலும்

தொடர்பு கொண்டு, வாசகர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் விஜய் டிவி நிறுவனத்திற்கு,

“15.ஜகன்னாதன் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600034”

என்கிற முகவரிக்குக் கடிதங்கள் எழுதியும்,

http://vijay.indya.com/ என்கிற தளத்திற்குச் சென்று
http://app.indya.com/feedback/starfeedback.asp?channel=star என்கிற இடத்தில் மின் அஞ்சல்கள் அனுப்பியும் வாசகர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

csmail@startv.com என்ற முகவரிக்கும், ceo@starnews.co.in என்ற முகவரிக்கும் கூட மின் அஞ்சல்கள் அனுப்பலாம்.

மேலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க “தகவல் மற்றும் ஒளிபரப்பு” அமைச்சகத்திற்கு osd.inb@nic.in மற்றும் mib.inb@sb.nic.in ஆகிய முகவரிகளுக்கும் அஞ்சல்கள் அனுப்பலாம்.

நிகழ்சியின் மூலமாக பொது மன்னிப்பு கேட்பதை ஆண்டனி மட்டும் முடிவு செய்ய முடியாது. விஜய் டிவி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீராம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவரோ வெளிநாட்டில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு அவர்கள் சம்மதித்தால் தான் மன்னிப்புக் கேட்போம் என்று கூறியுள்ளார். அந்நிறுவனமோ உலகம் முழுவதும் பரவியுள்ள சக்தி வாய்ந்த மேற்கத்திய ஊடக நிறுவனம்.

neeya-naana-8இந்நிலையில் இந்துக்கள் வேறு விதமாகவும் தங்கள் எதிர்ப்பைக் காட்டலாம். முதலாவதாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும், அவற்றில் கலந்து கொள்வதையும் தவிர்க்கவேண்டும். இரண்டாவதாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். மூன்றாவதாக அந்நிகழ்ச்சிகளை விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கும் வியாபார நிறுவனங்களைக் கண்டித்து அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அந்நிறுவனங்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்தும். தொலைக்காட்சி நிறுவனங்களும் அம்மாதிரியான நிகழ்ச்சித் தயாரிப்புகளை நிறுத்தும்.

ஆகவே, விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சித் தயாரிப்புக்கு ஆதரவு தரும் ”லையன் டேட்ஸ்” நிறுவனத்தைக் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு வாசகர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடிதம், தொலைபேசி, மற்றும் மின் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கலாம். தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் பட்சத்தில் லையன் டேட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்றும் அவர்களிடம் வலியுறுத்தலாம்.

Mr.Ponnudurai,
Managing Director
M/S Lion Dates Impex Pvt Ltd.,
4A/3. Kaveri Road, Trichy – 620002.
Tel: 0431-2730047 / 2730191.
E-Mail: md@liondates.com

மக்கள் சக்தி என்பது மகத்தானது. தமிழ் ஹிந்துக்கள் அதை உணர்ந்து செயல்பட்டால் அந்நிய சக்திகளின் பிடியில் உள்ள ஊடகங்கள் மரியாதையாக மக்கள் வழிக்கு வரும்.

படங்கள் நன்றி: www.techsatish.net/

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

238 மறுமொழிகள் »

  1. அருமையான, காலத்திற்குத் தேவையான கட்டுரை. எழுதிய தமிழ்ச் செல்வனுக்கு வாழ்த்துக்களும், இந்துச் சமூகத்திற்கு எழுமின், விழிமின் என வேண்டுகோள்களும்..

    வெற்றிச்செல்வன்

  2. I am very pleased that finally TamilHindu has brought this issue to the front.
    Vijay TV has being doing this for a long time.
    This is one programe mentioned. There is another program too that speak ill of our religion,
    “Nadanthathu Yena”. We Hindus must inform our friend circles and family members of this media war against our religion.

    A small request to Mr Tamil Chelvan, is it possible if you can translate this entire article in english. It will be easy to distribute among my tamil friends in Singapore as they are very very poor in reading tamil.

    Thank you Mr Tamil Chelvan.

  3. எங்கள் உணர்சிகளையும் கோபங்களையும் கொட்டித்தீர்க்க நிஜமாகவே ஒரு வழி செய்து கொடுத்தீர்கள் அய்யா. அது மட்டுமா ஒரு வாரமாக சன் டி வியில் காசியைப் பற்றி மிகவும் கேவலமாக காண்பித்து வருகிறார்கள். ஹிந்தியில் பேசுபவர்கள் வேறு எதையோ சொல்ல அதை தமிழில் அவதூறான கருத்து வருமாறு வேண்டுமென்றே மொழி பெயர்க்கிறார்கள். ஓரிரு கடைகளில் கஞ்சா கிடைக்கும் என்று ஒருவர் ஹிந்தியில் சொல்ல எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்று தமிழில் மொழிபெயர்கிறார்கள். மேலும் அகோரிகள் நரமாமிசம் சாப்பிடுவதை காண்பிப்பதாக சொல்லி நன்றா மொட்டை கிராப் வெட்டிய கிழவர் ஒருவரை ஏதோ ஒன்றை கடிக்கக் குடுத்து அவர் அதை கடுத்து முழுங்காமல் துப்புகிறார், அதையும் காட்டி சாமியார்கள் நரமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்றும் கூசாமல் அவதூறு பரப்பும் அட்டூழியம் நடக்கிறது. யார் தட்டிக் கேட்பது , எப்படி தட்டிக் கேட்பது…இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள் ஒன்று கூடுங்கள். இல்லையேல் நாளை உங்கள் வீடு உங்களுக்கில்லை.

  4. நான் பொன்னுதுரைக்கு எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டேன். மேலும் இனிமேல் எங்கள் வீட்டில் லயன் டேட்ஸ் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாகவும் அவருக்கு தெரிவித்துவிட்டேன். நீங்கள் செய்தீர்களா?

  5. நல்ல கட்டுரை அய்யா. நீங்கள் எழுதிய இதே கட்டுரையை ‘பாரத்வாணி’ மற்றும் ‘voice of india’ வில் படித்தேன். நீயா நானா சிலகாலமாக இந்து எதிர்ப்பை காட்டி வருகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், சன் செய்திகள் தொலைக்காட்சியில் வரும் ‘நிஜம்’ நிகழ்ச்சி மிகவும் கேவலமாகவும் இந்து சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வதுமாக உள்ளது. இதற்க்கு என்ன செய்ய? மேலும், நீங்கள் நடிகை குஷ்பூவை ஆதரித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால், அவரே ஒரு இந்து எதிரிதான். ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையின் கதாபாத்திரத்தில் நடித்தார்..

    மேலும், இந்தியாவில் உள்ள ஊடகங்கள் யாரால் கய்யாளப்படுகின்றன என்பதற்கு ஒரு பட்டியல்:-

    NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain that supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan. Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of Communist party of India.His wife and Brinda Karat are sisters.

    India Today which used to be the only national weekly which supported BJP is now bought by NDTV!! Since then the tone has changed drastically and turned into Hindu bashing.

    CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its
    branches in all over the world with HQ in US. The Church annually allocates
    $800 million for promotion of its channel. Its Indian head is Rajdeep
    Sardesai and his wife Sagarika Ghosh.

    Times group list: Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust , Femina, Vijaya Times,Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many more. Times Group is owned by Bennet & Coleman. ‘World Christian Council’ does 80 percent of the Funding, and an Englishman and an Italian equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of Sonia Gandhi.

    Star TV: It is run by an Australian, Robert Murdoch, who is supported by St. Peters Pontificial Church Melbourne.

    Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration with Times Group.

    The Hindu: English daily, started over 125 years has been recently taken over by Joshua Society, Berne, Switzerland. N.Ram’s wife is a Swiss national.

    Indian Express: Divided into two groups. The Indian Express and new Indian Express (southern edition) .ACTS Christian Ministries have major stake in the Indian Express and latter is still with the Indian counterpart.

    Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao. Ramoji Rao is connected with film industry and owns a huge studio in Andhra Pradesh.

    Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a
    Congress Minister has purchased this Telugu daily very recently.

    The Statesman: It is controlled by Communist Party of India. Kairali TV: It
    is controlled by Communist party of India (Marxist)

    Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have major investment.

    Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company with its chief Editor M.J. Akbar.

    http://rajee.sulekha.com/blog/post/2007/12/who-controls-indian-media.htm ….

    இதற்க்கு ஒரு உதாரணத்தையும் சொல்லலாம்.. சென்ற ஆண்டு சுவாமி லக்ஷ்மனானந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டவுடன், அதை மாவோயிஸ்டுகள் தான் செய்தனர் என்று ‘The Anti-Hindu’ (formerly ‘The Hindu’) ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இங்கு ஒரு கேள்வி எழும். ஒரு துறவியை ஏன் மாவோயிஸ்டுகள் கொள்ளவேண்டும் என்று? இதற்க்கு கூறப்பட்ட காரணம் என்ன தெரியுமா? மவோச்டினர் இடதுசாரிகள். பழங்குடியினராக இருந்தவர்களை அத்துறவி இந்துக்களாக மாற்றிவிட்டார், அதனால்தான் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், கிறித்தவ மற்றும் முகமதீய போதகர்களும் அதையே செய்கின்றனர். அவர்களை எந்த மாவோயிஸ்டுகளும் கொள்ள வில்லையே, ஏன் ஒரு எச்சரிக்கை கூட தெரிவிக்கவில்லையே! அப்படியிருக்க ஏன் ஒரு இந்துத்துறவியை மட்டும் கொன்றனர்? இதற்க்கு ஆதாரம் எந்த ஊடகங்டலிலும் காண்பிக்கப்படவில்லை!! இந்துக்கள் சாதிவெறி பிடித்தவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் ஒரு இந்துத்துறவி தாழ்த்தப்பட்டவர்களை பாதுகாத்து, அவர்கள் வாழும் இடங்களில் கோவில்கள் எழுப்பினால், அவரை கொன்றுவிடுகிறார்கள். பூரி ஜகன்னாதர் கோவிலில் அனுமதிக்கபடாதவர்களின் இல்லங்களில் ஜகன்னாதர் சிலையை எடுத்து சென்ற 85- ஆண்டு வயது முதிய லக்ஷ்மானந்த சரஸ்வதி கண்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி அன்று
    நாயை சுடுவதுபோல சுடப்பட்டு இறந்தார்! இதுவே ஆஸ்த்ரேலிய பாதிரி கிரகம் ச்டேஇன்ஸ் கொல்லப்பட்டபோது இந்துக்களை வாயில் போட்ட மென்னவர்கள், இப்பொழுது வாயை இருக்க மூடிக்கொண்டு விட்டனர்.

    மேலும், இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு, முகமதீயர்கள் “வந்தே மாதரம்” பாடக்கூடாது என்று பாத்வா பிரப்பித்தவர்கலி எதிர்க்காமல் ‘அது அவர்கள் மத நம்பிக்கை’ என்று கூறும் செகுலர் வா(ந்)திகள் இராமன் கட்டியதே சேதுப்பாலம் என்று கூறிய இந்துக்களின் நம்பிக்கை மட்டும் மூடநம்பிக்கை என்று சொல்கின்றனர். அதற்க்கு சம்மந்தமே இல்லாமல், இராமன் குடிகாரன் என்று பேசுகிறார்கள்.. இராமன் குடிகாரனா இல்லையா என்பது இருக்கட்டும், வாதத்திற்காக முதல்வர் சொன்னதை எடுத்துக்கொள்ளலாம். ஏன் குடிகாரனால் பாலம் கட்டினால் நிற்காதா? இவர் கூடத்தான் குடிகாரர், இதுநாள் வரையில் எத்தனை பாலங்களை திறந்திருப்பார்? அவைஎல்லாம் இடிந்து விழுந்து விட்டதா? நின்று சென்னை மாநகரின் வாகனங்களை தாங்கவில்லையா? பிறகு இராமன் குடிகாரன் என்பது இங்கு என்ன??

    கேட்டால் ஏதோ ‘பகுத்தறிவு’ என்கிறார்கள், அது ஏதோ மற்றவர்களுக்கு இல்லாதது போலவும், இவர்கள்தான் வேருஎதோ கிரகத்திற்கு சென்று அதை வாங்கிவந்தது போலவும் பேசுகிறார்கள்…
    நெற்றியில் திருநீறு இடுவது மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டு, முகமதீயர்களுடன் ரமலான் நாளின்போது குல்லா அணிதுகொண்டு கூழ் குடிப்பதுதான் பகுத்தறிவா? ஏன், அதையே மாரியம்மன் கோவிலில் ஊற்றும்போது வாங்கிக் குடித்தால், செரிக்காதா??

    மக்கள்தான் சிந்திக்கவேண்டும்… செய்வார்களா???

  6. அருமையான தகவல் மேலும் சரியான முகவரிகளை தந்து அசத்திவிட்டீர்கள்

  7. இந்த பதிவை மிகவும் பாராட்டுகிறேன் .
    சமுக பொறுபற்ற ஒரு தொல்லை காட்சி விஜய் டிவி , பணத்திற்காக எதை வேண்டுமானாலும் ஒலிபரப்புவார்கள் . அதில் வரும் போலி சித்த வைத்தியர்களும் , போலி சாமியார்களுமே அதற்க்கு சாட்சி .
    சமிபத்தில் கம்பி என்னிகொண்டுருக்கும் புலிகறி வைத்தியர், மீது புகார் கொடுத்த அனைவரும் சொன்னது , டிவி நிகட்சியயை பார்த்து தான், இவரிடம் வந்தோம் . அவரின் நிகட்சி , கிட்டத்தட்ட அணைத்து நாள்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் . காவல் துறை, அந்த கேசில் விஜய் டிவியையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும், அப்பொதுதான் இதுபோன்ற ,சமுதாயத்தை சிரழிக்கும் தொலைகாட்சி நிகட்சிகள் முடிவுக்கு வரும். இதில் சன் டிவியை பாராட்ட வேண்டும் .அவர்கள் இதுபோன்ற போலி வைத்தியர்கள் நிகட்சியை ஒளிபரப்புவதில்லை.
    வாருங்கள் , இதுபோன்ற நிகட்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களை புறகணிபோம்.

  8. விஜய் டிவி ஒரு போணி ஆகாத டி.வி. ஆரம்பத்தில் இவர்கள் வீராப்பாக செய்திகள் எல்லாம் ஆரம்பித்து பின்னர் சூரியன் எரித்ததில் ஓய்ந்து போனார்கள்.

    இதே ஸ்டார் டிவியில் பல விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தியை இழிவாக ஒரு பார்வையாளர் பேசினார் என்பதற்காக ஒரு புகழ்வாய்ந்த டாக் ஷோவை ரத்து பண்ணியது ஞாபகம் இருக்கலாம்.

    ஹரன் ஐயா, தங்களைப் போன்ற தன்னலமற்ற உழைப்பாளர்கள்தாம் இப்போது இந்து மதத்திற்குத் தேவை. பலருக்கு இது போன்ற அபத்தங்கள் தெரிவதில்லை. நாம் இதனால் இப்போதே இந்த ஊடகங்களுக்கு நம்மால் முடிந்த எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.

    எம்.எப்.ஹூசைன் போன்ற இந்து விரோத, வக்கிர காமாந்தக ஓவியர்களுக்கு ஊடகங்கள் அடிக்கும் ஜால்ராவைப் பார்க்கும்போது இது புலப்படுகிறது. இந்து மதம் இப்போது ஒரு பிற்போக்குத்தனமாக திட்டமிட்டு சித்தரிக்கப்படுகிறது. இது பெரும் சதி.

    நன்றி

    ஜயராமன்

  9. நீங்கள் எந்த அளவுக்கு புண்புட்டிருக்கிறீர்கள் என்பதை அடுத்தவரை புண்ப‌டுத்தியே புரியவைக்க வேண்டுமா நண்பரே?

  10. There are far more deeper purposes to such planned executions than just ridiculing and hurting the sentiments of Hindus.

    It is part of the plan to completely destroy the “identity”.

    “Identity” is very important for the survival of an individual or a society. And people and an individual will always have and take an identity - knowingly and unknowingly. No one can be without an identity.

    All the abrahamic faiths, when they become powerful in a country, make sure that the existing identity is completely erased, and the identity of the abrahamic faith is enforced. “Cultural revolution” of mass murderer Mao is a typical example.

    The dress that was identified as “christian” in the moghul and british period is now no more identified as “christian” or “european”, but have been become part of an accepted identity and almost only visible identity. In addition, this dress is made compulsory as the “only” decent and professional attire.

    The question is, can some one wear a decent dhoti and shirt and go to work in an MNC company in India?

    What is the dress you wear for a job interview?

    Why only one particular way of dressing is considered as decent and respectable?

    Many of the MNC companies insist in their code of business ethics to wear european dress. Even in the humid Chennai, in the months of April and May, people will be wearing shoes and ties and suffer the skin problems. But, can they resist? They cannot.

    You know why?

    Because, you are a slave who do not have the intelligence or honor to make the choice on you own. Only the european or arabic or communist boss knows what is right for a slave like you. And you can only follow their commandments.

    Identity is what you do that come from what you are. A slave can only follow and cannot lead a life on one’s own terms and desire. Dear friends, we are still slaves who have no freedom to choose what we want to wear or do.

    Mohandas Gandhi ji went to the round table conference wearing the dress of the poor indians not to get any emotional sympathy, but to prove that the identity is as honourable and on par with other coats and suits in the meeting.

    But, now how many of our political leaders sport the Khadi dress at international meetings?

    The leaders and elites and the media make others follow the monotheistic culture. And the multi-cultural environment and pro-nature living are ridiculed.

    Now the government and corporates make sure that a multi-cultural environment is discouraged and enforce the monotheistic idealism to be the normal way of living.

    Wear only european dress, eat in the european style, dance in the european style, speak like a european, have the european bodylanguage - and never ever behave in any manner that will indicate that you have an identity different from european.

    Not being different is the mandatory norm. Accepting this norm, you just become a machine, just a lifeless spoke in the wheel of life. Just a zombie who only performs what is expected from it.

    I was informed that MNCs in India recommend not to have any picture of deities on their workplace giving the reason that it may offend people of other faith. And, now, who will get offended by seeing gods in forms? You know who.

    I was also told that this rule is not strictly enforced so far; but, still exists in the Code of Business Ethics of a company. So, if a muslim or a christian or a communist raise a complaint against a hindu co-worker for having the picture of a deity on the table, the company has to support the complaint, and punish the hindu.

    A representative from a famous MNC informed me that he was taught at the training not to have any kumkum or vibhoothi when meeting clients and also when at working premises. But, a muslim colleague who underwent the same training was told that this rule is not applicable to him.

    But, hinduism is the multi-cultural and multi-ethnic phenomenon that gives the complete freedom and choice to have an identity one wants to have at any time. But, can Hinduism be practiced in the modern day? Can a multi-cultural environment be allowed?

    The lady who removed the Thali before the entire audience must answer the following question:

    “Mother, now you have the freedom to decide not to wear the Thali. But, will your grand children have the same freedom if they want to wear the Thali?”

    Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?

    If the media has the honour and ethics of journalism, it must do that.

    My heartfelt congratulations to the author of this article for his war. May your tribe multiply with rationale and exhibit a positive courage as Gandhi ji !!

  11. பாவிகளே. நீங்கள் பாவ பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறீர்கள். அதனால் விமர்சனம் செய்வதுதேவையாக இருக்கிறது.

    தேவனின் வலிமையால் அனைத்து ஊடகங்களும் தேவனின் சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    இயேசுவின் நாமத்தினால், பேய்கள் ஓடுகின்றன. நோய்கள் தீருகின்றன.

    இதே போல ஏராளமான அற்புதங்களை கொண்ட டெஸ்டிமனிகள் இருக்கின்றன.

    மாற்கு 16

    17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

    சகோ. சாது செல்லப்பாவும் பிரஜாபதிதான் இயேசு என்பதை விஷம் குடித்து தனது விசுவாசத்தை நிரூபிப்பார்.

    சகோ தினகரன் மாதிரி பாஸ்டர்கள் எவ்வளவு பேரை இயேசுவின் பெயரால் கையை வைத்து குணப்படுத்தியிருக்கிறார்கள்!

    அதே வரியில் இருக்கும் ”விஷத்தை குடித்தாலும் அவர்களை சேதப்படுத்தாது” என்ற வரிக்கேற்ப இனி ஒவ்வொரு சுவிசேச கூட்டத்திலும் யார் கொண்டுவரும் விஷத்தையும் குடித்து தங்களது விசுவாசத்தை நிரூபிப்பார்கள்.

    இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால், மக்களை குணப்படுத்தும்போது, அதே விசுவாசத்தால் விஷம் குடிப்பதா கஷ்டம்?

    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.

    நாங்கள் குடித்து காண்பிக்கிறோம்.
    உயிருள்ள தேவன் எப்படி நோயாளிகளை குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தையும் முறிப்பார். நோயாளிகளை எப்படி அவர் குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தை முறிப்பதா அவருக்கு கஷ்டம்?

    நாங்கள் நடத்தும் ஒவ்வொரு சுவிசேஷ கூட்டத்திலும் உங்களை எதிர்பார்க்கிறோம். தைரியமிருந்தால் விஷததை கொண்டுவாருங்கள்.

    உயிருள்ள தேவனின் மீது எங்களது விசுவாசத்தை நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்

  12. //நீங்கள் எந்த அளவுக்கு புண்புட்டிருக்கிறீர்கள் என்பதை அடுத்தவரை புண்ப‌டுத்தியே புரியவைக்க வேண்டுமா நண்பரே?//

    ரெவரெந்ட் நாட்டாமை அவர்களே,
    நாங்கள் வேண்டுமென்ற யாரையும் புண்படுத்தவில்லை.. இங்கு நடக்கும் சதி காரியங்களெல்லாம் உங்கள் ஆட்கள் செய்வதுதான் என்பதை நாங்கள் அறிவோம்! உங்களைப்போல நாங்கள் மற்றமதத்தினர் நூல்களை திரித்து, கேவலபடுத்தி hate literature ஆக வினியோகிப்பதில்லை. எல்லா குற்றங்களையும் நீங்கள் செய்துவிட்டு, எங்களுக்கு அறிவுரை கூற ஓடிவந்துவிட்டீர்களா??

  13. //நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை சமயங்களில் மருத்துவர் தாலியைக் கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?” என்று கேட்க “கழற்றிவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்” என்று கூறிய பெண்மணியிடம், “மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?” என்று கேவலமாக ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணியை அவமானம் செய்துள்ளார் கோபிநாத்.//

    ஒரு மாணவர்/மாணவி மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, தலைமை மருத்துவர் அம்மாணவர்களிடம் “உங்கள் முன்பு ஒரு இளம்பெண் சிகிச்சைக்காக துணியில்லாமல் இருந்தால், அவளை உங்கள் தங்கையாகவோ, மகளாகவோ நினைக்கவேண்டும்” என்று கூறுவர். எனவே ஒரு மருத்துவருக்கும் ஒரு நோயாளிக்கும் இருக்கும் உறவை கொச்சைத்தனமாக கேட்டது கோபிநாத்தின் “பொம்பளை பொறுக்கித்தனத்தையும்” “கேவலமான மனப்பான்மயயும்தான்” காட்டுகிறது.

    தயவுசெய்து இந்த மறுமொழியை EDIT செய்யவேண்டாம். கோபிநாத் பேசியது சரி என்றால், நான் சொன்னதும் சரிதானே……..

  14. சரியான சமயத்தில் வந்த அருமோயான கட்டுரை. முகவரிகளும் தந்து எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  15. சரியான சமயத்தில் வந்த அருமையான கட்டுரை. முகவரிகளும் தந்து எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  16. I would say what Sun Tv is doing is more Blasphemous than Vijay.. Their caption is காசியின் நிஜ முகம். Will they have guts to depict Jeruselam or Mecca like this ? I think Hindus have become extreme soft target

    S Baskar

  17. மிக‌ மிக‌ தேவையான‌ பார்வை, ஒரு குறிப்பான‌ யொச‌னை
    நாம் ந‌ம்முடைய‌ சுற்ற‌த்தாரிட‌ம் முத‌லில் இது தவறான‌ பாதை என்ப‌தை புரிய‌ வைக்க‌
    வேண்டும், மிக‌ க‌டுமையான ப‌ணியாக‌ இது தான் தெரிகிற‌து,

    பிற‌கு தான் ம‌ற்ற‌ ம‌த‌த்த‌வ‌ரிட‌ம் நாம் வ‌லிமையாக‌ பேச‌ முடியும்,

    உறுதியான‌ க‌ருத்துக்க‌ள்,

    நன்றி,

    ச‌ஹ்ரித‌ய‌ன்

  18. இவர்கள் ஹிந்துக்களைத் தங்கள் பால் இழுக்க சில உத்திகளை வைத்துள்ளார்கள். “பக்தித் திருவிழா” “மார்கழி மகோற்சவம்” என்பது போன்ற நிகழ்ச்சிகளைத் தான் குறிப்பிடுகிறேன். எதைத்தான் பார்ப்பது என்ற விவரம் அறியாமல் பெரியவர்களும் குழந்தைகளோடு சேர்ந்து டீவீயில் காட்டுவதைஎல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும்.பொதுவாக தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வந்ததிலிருந்து படிக்கும் பழக்கமும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதும் மிக மிகக் குறைந்து விட்டன.இப்போது கணினிகள் வேறு சேர்ந்துவிட்டன! ஏதாவது படிக்க வேண்டும் என்றாலும் அறிவுக்கு சிறிதும் பொருந்தாத பத்திரிகைகளைத்தான் படிக்கிறார்கள்.( இந்த ஊடகங்கள் எல்லாம் வெறும் வணிக மையங்கள்தான் என்ற உணர்வு இல்லாது). இந்த technological progrees ஐ எப்படிக் கையாளவேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தவே ஒரு இயக்கம் வேண்டும் போல இருக்கிறது!

  19. ceo@starnews.co.in This address not reacheable Just now i checked,

    Sahridhayan

  20. வணக்கம்

    ஒரு வீட்டின் இல்லத்தலைவியை மாற்றினாலே போதும் அந்த குடும்பமே மாறிப் போகும் என்பதை அறிந்தே அவர்கள் தொலைக்காட்சியை குறி வைத்து உள்ளார்கள்,

    இதை நன்றாக அறிந்த “பகா அறிவு” அரசாங்கம் அந்த” தொல்லை காட்சிப் பெட்டி” யை இலவசமாக வேறு கொடுத்து உள்ளது, இக்கட்டுரையின் அதி முக்கியமான கேள்வி என்னவென்றால் ஏன் எந்த இந்து அமைப்புகளும் எதிர் குரல் எழுப்ப வில்லை? என்பது.

    இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்ற நண்பர்களின் வேட்கை நன்றாக புரிகிறது, ஒரு சிலரால் எழுப்பப் படும் குரலால் என்ன விளைவு இருக்கும்? தனி மரம் தோப்பாகுமா?

    இந்து அமைப்புகள் இந்தப் பிரச்சினையை உடனடியாக கையாளும் என்று நாம் எதிர் பார்ப்போம். நம்பிக்கையுடன்.

  21. I heard about this program earlier and it pained me so much. This has been happening for a long long time. Even Movies - every other movie will ridicule Hindu customs and the comedian, who in the name of ‘pagutharivu’ ridicules the Hindu beliefs was given the Padma award. All movies, even the old b/w movies show a christian father as selfless, loveable character, but will show a Hindu sanyasi in bad light.
    All TV follow the same path. As the article says correctly, there is no unity amoung Hindus. We dont vote collectively to create a vote bank. Hindus themselves will ridicule if someone follows rituals religiously. I have seen many muslims doing ‘namaz’ in public places (Marina Beach, Egnore Station etc). But if I do ’sandyavandanam’ in a public place, will the public accept it. The police will book me under public nuisance case.

    A very good and timely article. Hope the Hindus wake up to the alarming threat our society is facing and reciprocate appropriately.

    And these all happens only because of people like ‘Nattamai’. Are you really human? pal valiyum thalai valiyum thanakku vantha than theriyum. Just for quoting some expamle, you are spitting venom and say that you are getting hurt. Then how will it feel if Hindus really hurt you? No wonder India and Hindus are in such a situation.

  22. ஸ்டார் விஜயின் அடுத்த நிகழ்ச்சியாக நீயா நானாவில் “எத்தனை நாளுக்குத்தான் இந்த புருஷனோடு மாரடிப்பது இந்த ஆள் இருப்பது நமக்கு தேவையா? இல்லையா? என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி சம்மந்தப் பட்டவர்களின் குடும்பத்தார் பங்கு பெரும் நிகழ்ச்சியாக தயாரித்து ஒளிபரப்ப தயாரா?

  23. சிறு வயதில் நான் பார்த்த பல திரைப்படங்களில் கட்டுரையில் சொன்னது போல் அனாதைகளை ஆதரிப்பவர் பாதிரியாராகவோ அல்லது முஸ்லிம் பெரியவராகவோ இருப்பார். விதிவிலக்காக நடிகர் திலகம் நடித்த “தெய்வமகன்” படத்தில் மட்டும் அனாதை இல்லத்தலைவராக ஒரு க்ருஷ்ணபக்தர்(நாகையா) இருந்தார். இந்த “talk show(dog show)க்களின் தரம் என்னவென்று வெளிக்கொணர்ந்ததிற்கு பாராட்டுக்கள்.

  24. // Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?
    //

    இந்திய இந்து சமுதாயமானது பரந்துவிரிந்த இந்தியப் பெருங்கடலைப் போல மகா விஸ்தாரமானது; அதனைக் கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இந்த உலகில் இல்லை; இந்த மாபெரும் அமைப்புக்கு உயிர் கொடுத்து நடத்திச் செல்வதில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது; அவர்களாலேயே இந்து மார்க்கம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்;

    கடைபிடிக்கப்படும் அத்தனை சடங்குகளையும் வடிவமைத்து கடைபிடிப்பதிலும் அவர்கள் பங்கே சிறப்பானது; அல்லது அவர்களுக்காகவே அனைத்து சடங்குகளும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; அப்படியானால் எதனைத் தொடரவேண்டும் எதனைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர்களே முடிவுசெய்கிறார்கள்; எனவே தான் பக்தி மார்க்கத்தில் சக்தியை பிரதானப்படுத்துகிறோம்;

    ஆனால் இஸ்லாத்திலோ கிறிஸ்தவத்திலோ அப்படியல்ல;
    அங்கே பெண்களுக்கு சுதந்தரம் பேச்சளவில் கூட கிடையாது; அவர்களாக முடிவெடுத்து எதையும் செய்யமுடியாது; இந்நிலையில் பெண்கள் எப்படி முன்வந்து புர்காவை கழட்டமுடியும்? அதற்கும் தர்காவிலிருந்து உத்தரவு வரவேண்டுமே;

    அதே போல இங்கே “பாவாடை”(பெண்கள் அணிவது; பாவம் அறியாமையினால் “அங்கி”யை “பாவாடை” என்று ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டார்..!) என்று சொல்லப்பட்ட அங்கியும் கூட கிறிஸ்தவ அமைப்பினால் திணிக்கப்பட்டதுதான்; அதுவும் இப்போது மாறிவருகிறது;

    தன்னை வேறுபடுத்திக் காட்டுவதும் தனித்தன்மையுடன் இருக்கவிரும்புவதும் ஒவ்வொரு உயிருக்குமுள்ள சிறப்பான குணமாகும்;

    தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இருக்குமானால் அதனை அறியவும் இதுபோன்ற விவாதங்கள் உதவுமே; அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்ச்சி உண்டாகும்; சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ.

    உதாரணத்துக்கு நமது தேசப் பிதாவான காந்திஜி வெள்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவரது ஆடையினிமித்தம் அவமானப்படுத்தப்பட்டாராம்; ஆனாலும் அவர் மனதளவில் அவமானப்பட்டதாகவோ மனம் புண்பட்டதாகவோ தெரியவில்லை;காரணம் அவருக்கு தன்மீது இருந்த திருப்தியுணர்வு;

    அதே போல தாலி போன்ற சமுதாய சடங்குகளைக் குறித்த மரியாதை ஒருவருக்கு இருக்குமானால் ஏன் மனம் புண்படவேண்டும்? ஆனால் அதனைக் கட்டாயமாக சுமப்பதனால் அவமானப்பட்டு மனம் புண்பட வாய்ப்புண்டு;

    தாலி,மெட்டி,பொட்டு என அனைத்திலும் பெண்களை வித்தியாசப்படுத்தும் சமுதாயம் ஆண்களுக்கு ஏன் ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை; அல்லது அவர்கள் ஏன் கடைபிடிக்கவில்லை; இதுவும் இந்து சமுதாயத்தின் சிறப்பானதொரு நடைமுறையாகும்; யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஒவ்வொருவருக்கும் சுயாதீனமும் சுதந்தரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; விரும்பினால் ஆச்சாரமாக இருக்கலாம் அல்லது “டாஸ்மாக்”கிலும் கிடக்கலாம்; அது இறைவன் “உறங்கும்” ஆன்மாவை ஒன்றும் செய்யாது; இது புரியாமல் காசுக்காக யாரோ எவரோ எதையோ செய்தால் நமக்கென்ன..? (…என்று மேல்நாட்டு அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை; நானே எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்..!)

  25. மறுமொழியிட்ட மற்றும் பாராட்டிய அனைவருக்கும் மற்றும் கட்டுரைக்குப் படங்கள் சேர்த்து சிறப்பு கூட்டிய ஆசிரியர் குழுவிற்கும் நன்றி.

    //Kreshna
    6 November 2009 at 2:42 pm

    A small request to Mr Tamil Chelvan, is it possible if you can translate this entire article in english. It will be easy to distribute among my tamil friends in Singapore as they are very very poor in reading tamil.//

    கிருஷ்ணா! ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதி விஜய் வாணி தளத்தில் வந்துள்ளது. இதோ இணைப்புகள்:

    http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=891

    http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=892

    http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=895

    //ram
    6 November 2009 at 2:53 pm//

    ராம்! நீங்கள் சொல்வது சரி தான். இந்துக்களின் புண்ணியத் தலமான “காசி” பற்றிய அந்தத் தொடரைப் பார்த்து நானும் கொதித்துப் போனேன். அந்த மாதிரியான நிகழ்ச்சிகளை விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்கும் நிறுவனங்களைக் கண்டித்து அவற்றின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நம் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    லையன் டேட்ஸ் நிறுவனத்தினரிடம் உங்கள் எதிர்ப்பையும் வருத்தத்தையும் தெரிவித்ததற்கு நன்றி.

    //வள்ளுவன்
    6 November 2009 at 4:05 pm

    மேலும், நீங்கள் நடிகை குஷ்பூவை ஆதரித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால், அவரே ஒரு இந்து எதிரிதான். ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையின் கதாபாத்திரத்தில் நடித்தார்.. //

    வள்ளுவன்! நான் குஷ்புவைப் பற்றி நன்கு அறிந்தவன். எனவே என் கனவிலும் அவருக்கு ஆதரவாக எழுத மாட்டேன். நான் சுட்டிக்காட்டியது, ஒரு தனிப் பெண்மணியிடம் தங்கள் வீரத்தைக் காட்டிய தமிழ் இயக்கங்கள் ஒரு கிறுத்துவ நிறுவனத்திடம் காட்ட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதைத்தான்.

    //naataamai
    6 November 2009 at 6:37 pm
    நீங்கள் எந்த அளவுக்கு புண்புட்டிருக்கிறீர்கள் என்பதை அடுத்தவரை புண்ப‌டுத்தியே புரியவைக்க வேண்டுமா நண்பரே?//

    நண்பர் நாட்டாமை! நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை என்பதைத் தெளிவாகவேச் சொல்லியிருக்கிறேன்.

    //ஜயராமன்
    6 November 2009 at 6:11 pm
    எம்.எப்.ஹூசைன் போன்ற இந்து விரோத, வக்கிர காமாந்தக ஓவியர்களுக்கு ஊடகங்கள் அடிக்கும் ஜால்ராவைப் பார்க்கும்போது இது புலப்படுகிறது. இந்து மதம் இப்போது ஒரு பிற்போக்குத்தனமாக திட்டமிட்டு சித்தரிக்கப்படுகிறது. இது பெரும் சதி.//

    முற்றிலும் சரி. எம்.எப்.ஹூசைன் பிரச்சனை மீண்டும் வரும் போலிருக்கிறது. அரசாங்கமே அவரை இந்தியாவிற்கு திருப்பி அழைப்பதாகச் செய்திகள் வருகின்றன. பார்ப்போம்.

    // களிமிகு கணபதி
    6 November 2009 at 6:38 pm
    There are far more deeper purposes to such planned executions than just ridiculing and hurting the sentiments of Hindus.
    It is part of the plan to completely destroy the “identity”.//

    சரியாகச் சொன்னீர்கள் கணபதி.

    மேலும் ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி நீங்கள் சொன்னதையும் நான் ஆமோதிக்கிறேன். வேதனையான விஷயம் என்னவென்றால், தாங்கள் பணி புரியும் அலுவலகங்களில் அந்தந்த நிறுவனங்கள் சொல்லியுள்ளபடி ஆடை அல்லது சீருடை அணிந்து செல்லும் நம் மக்களே ஆலயங்களுக்கு கன்னபின்னாவென்று உடையணிந்து வருகிறார்கள். அரை நிஜாரும் டி-சட்டையும் அணிந்த ஆண்களையும், குட்டை ஜீன்ஸும் குட்டை சட்டையும் அணிந்த பெண்களையும் சர்வ சாதாரணமாக நம் கோவில்களில் பார்க்க முடிகிறது. என் செய்வது?

    // I was informed that MNCs in India recommend not to have any picture of deities on their workplace giving the reason that it may offend people of other faith. And, now, who will get offended by seeing gods in forms? You know who. A representative from a famous MNC informed me that he was taught at the training not to have any kumkum or vibhoothi when meeting clients and also when at working premises. But, a muslim colleague who underwent the same training was told that this rule is not applicable to him. //

    உண்மை தான். இது பல நிறுவனங்களில் நடைபெறுகிறது. சில நிறுவனங்களில் சபரி மலை விரதத்தின் போது கூட வேட்டி மற்றும் துளசி மாலைகள் அனுமதிக்கப் படுவதில்லை.

    வினு, ராஜாராமன், வெற்றிச் செல்வன் ஆகியோருக்கும் நன்றி.

    இக்கட்டுரையில் விட்டுப்போன சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன். சமூக அக்கறைக் கொண்ட சில பெண்மணிகளும் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள்.

    “விஜில்” இணையதளத்தின் ஆசிரியர் திருமதி ராதாராஜன் விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் திரு ஸ்ரீராம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, ”நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமே நாங்கள். தயரிப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை தயாரித்த ஆண்டனி என்பவரை உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.அவர் உறுதியளித்தபடி ராதாராஜனைத் தொடர்புகொண்ட ஆண்டனி, “தாலியைக் கழற்றுவதைப் போன்ற காட்சிகள் ’அலைபாயுதே’ போன்ற பல திரைப்படங்களில் காட்டும்போதெல்லாம் ஏன் சும்மா இருந்தீர்கள்? அப்போது அமைதி காத்துவிட்டு இப்போது மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். ராதாராஜன், “பெரும்பான்மையான இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதற்காக வரைமுறையில்லாமல் அவர்களின் மத, கலாசார, ஆன்மீக உணர்வுகளைப் புண்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொண்டு போவீர்களா? மாங்கல்யத்தின் புனிதத்துவம் பற்றி உங்களுகுத் தெரியுமா? சமூகப் பொறுப்பு இருக்கிறதா உங்களிடம்? பெரும்பான்மை மக்கள் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று கேட்டதற்கு, “நானும் தேவர் ஜாதி தான், பொன் முத்துராமலிங்கத் தேவர் எனக்குத் தெய்வம் போன்றவர்” என்று கூறிய ஆண்டனி, “நாங்களாக எதுவும் செய்யவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சொன்ன அவர்களுடைய கருத்தைத் தான் படம் பிடித்துள்ளோம்” என்று சிறு வருத்தம் கூடத் தெரிவிக்காமல் பேசிமுடித்துள்ளார்.

    திருமதி உமா ஆனந்த் என்கிற பெண்மணியும் திரு ஸ்ரீராம் அவர்களைத் தொடர்பு கொண்டு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்து தொலைக்காட்சி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவரிடம், “எங்கள் தலைமை அலுவலகத்திடம் கேட்டுத்தான் முடிவு செய்வோம்” என்று ஸ்ரீராம் கூறியுள்ளார்.

    மக்கள் விரைவில் விழிப்படைய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

    நன்றி, அன்புடன்

    தமிழ்செல்வன்

  26. SNKM, Sahridhayan, பாஸ்கர், Rishi, b, Sathish, Superstar, G.Ranganathan ஆகியோருக்கும் நன்றி.

  27. நாம் தேவை இல்லாமல்

    ௧) மோதிரம் மாற்றுவது

    ௨) பிறந்த நாள் கொண்டாடுவது

    ௩) புது வருடப் பிறப்பு அன்று கண் விழித்து ” கொண்டாடுவது”

    ௪) பார்ர்டிகளில் கலந்து கொள்வது

    இதை எல்லாம் தவிர்க்க வேண்டும்.

    காதலர் தினம், அக்க தினம், அப்பா தினம், அம்மா தினம் …. இப்படி … ஒரே ஒரு நாள்தான் அம்மாவை நினைக்க வேண்டுமா?

    ஆனால் கட்டாயப் படுத்தக் கூடாது. அன்பின் அடிப்படையில் எடுத்துச் சொல்லி, நமது கலாச்சாரத்தை காப்பற்ற வேண்டும்.

  28. கிளாடி,

    உங்க் காட்டில் மழை. விளையாடு. நீர் எங்களை நையாடி செய்து எழுதினால் அதை தமிழ் ஹிந்து வெளியிடும். பதிலுக்கு நாங்கள் எழுதினால் அதை வெளியிடாது.

  29. நண்பர்களே,

    ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் - இந்து மதம் இயற்கை மதம் - அதன் ஆதிமூலம் வரலாற்றுக்கு முற்பட்டது - எப்படி அதன் ஆரம்பம் யாருக்கும் தெரியாதோ அது போல அதற்கு முடிவும் இல்லை.

    சிந்தித்துப்பாருங்கள் - ஆயிரம் மதங்கள் வந்த பின்னும் - வேற்று மதங்களின் தலையீடுகள் வந்த பின்னும் - இன்று வரை இந்து மதம் வாழ்கிறது - இனியும் வாழும்.

    ஆனால் எனது கோரிக்கையெல்லாம் இந்துவின் பெயரால் மதவெறியைத் தூண்டாதீர்கள். என்னைப் பொறுத்தவரை மனிதமும் - மனிதனும் தான் இந்து மதம் தவிர சடங்குகள் அல்ல. ஊன்றிச் சிந்திப்பின் உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்துதான் - ஆனால் இன்று மதத்தின் பெயரால் நாம் நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம். மதங்கள் வந்தது எம்மை நல்லவழியில் வாழவைக்க ஆனால் நாமோ இன்று மதங்களின் பெயரால் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

    எங்கள் மதத்தினை நியாயப்படுத்த விளைகையில் பிற மதங்களைக் கொச்சைப்படுத்துவது தவறு - ஏனெனில் மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது - சில (பல) வேளைகளில் அது சுயநலம் சார்ந்தது - ஆக மற்றவர் நம்பிக்கையை - நலத்தை நாம் கொச்சைப்டுத்துவது அழகல்ல - ஒரு இந்து அதைச் செய்ய மாட்டான்.

    யார் எதைச்சொன்னாலும் - என்ன செய்தாலும் இந்து மதம் வாழும். ஏனென்றால் மனிதனால் தான் அறிந்தவற்றை மட்டும் தான் பகுத்தறிய முடியும் - கற்றதோ கைமண்ணளவு - அதற்குள் பகுத்தறிந்துகொண்டு கிணற்றுத் தவளையாய் பேசுபவர்களிடம் நாம் விவாதிப்பதே தவறு.

    உண்மையில் மதங்களுக்கு அப்பால் மனிதர்களை - மனிதத்தை நேசியுங்கள் - அது தான் உண்மையான இந்துத்துவம் - மதவெறி இந்துத்துவம் அல்ல.

  30. ////18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

    சகோ. சாது செல்லப்பாவும் பிரஜாபதிதான் இயேசு என்பதை விஷம் குடித்து தனது விசுவாசத்தை நிரூபிப்பார்.
    //

    விஷத்தை குடித்து இயேசுதான் உண்மையான உயிருள்ள தேவன் என்று நிரூபிக்கும் சகோதரர் சாது செல்லப்பா கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்.

    கர்த்தருக்கு ஸ்தோத்ரம்

    எந்த விஷத்தை குடிக்கப்போகிறார்? பொட்டாசியம் சயனைடா? அதனை யார் வேண்டுமானாலும் கொண்டுவந்து கொடுக்கலாமா? எத்தனை பேர் கொண்டுவந்து கொடுத்தாலும் குடித்து காண்பிப்பாரா?

    இந்த நிகழ்ச்சி எப்போது நடக்கப்போகிறது என்பதை தெரியப்படுத்தினால் நல்லது.

  31. // நான் பொன்னுதுரைக்கு எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டேன். மேலும் இனிமேல் எங்கள் வீட்டில் லயன் டேட்ஸ் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாகவும் அவருக்கு தெரிவித்துவிட்டேன். நீங்கள் செய்தீர்களா?

    ராம் சார், அடியேனும் தெரிவித்துவிட்டேன் - முன் உதரணமாக இடுந்ததற்கு நன்றி

    <>

  32. // நான் பொன்னுதுரைக்கு எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டேன். மேலும் இனிமேல் எங்கள் வீட்டில் லயன் டேட்ஸ் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாகவும் அவருக்கு தெரிவித்துவிட்டேன். நீங்கள் செய்தீர்களா?

    ராம் சார், அடியேனும் தெரிவித்துவிட்டேன் - முன் உதரணமாக இடுந்ததற்கு நன்றி

    Contents of my e-mail to Lion Dates MD

    I have painfully watched several Neeya Naana programs where the topics/host specifically target good Hindu practices and beliefs. I m not a fanatic - i believe in Worship Yours Respect Others philosophy. These programs are nothing short of filthy missionary acts. They are mainly focused on creating an Identify crisis for Hindu - Why should they take a topi like “Is is necessary to wear Mangal Sutra”, why not take up a generic topic name “Is it required to wear religious symbols - Cross, Ring, Mangal Sutra”…

    As the sponsor of the program - you are in a way responsible for what is being conveyed -your money is used for propaganda - they money i regularly spend on Lion Dates is being used for propaganda.

    Is it not correct on my part to stop buying lion dates - Well i do not buy ITC products[Ashirwad Atta, Paper Kraft notebooks, Mangaldeep agarbathi, Bingo snacks] at all, for the simple fact that they made money by killing so many people through cancer.

    I earnestly urge you to act and stop sponsoring such unscrupulous programs.

  33. கிலாடி அவர்களே நீங்கள் பெரிய கில்லாடி - உங்களின் மறுமொழி எழுதும் முறை அற்புதமாக இருக்கிறது

    முதலில் எல்லோரும் ஆமாம் என்று சொல்லும் கருத்தை வைக்கிறீர்கள் பின்பு சமயோசிதமாக உங்களின் உண்மை கருத்தை அனால் உண்மைக்கு புறம்பான கருத்தை வைக்கிறீர்கள்
    - இதை தானே காலம் காலமா செய்கிறார்கள் - பிரசார பீரங்கிகள்

    உங்களால் கண்ணிகஸ்ரீகளிடம் நீங்கள் ஏன் மோதிரம் அணிகிரிர்கள் - அதை கழட்டி எறியுங்கள் என்று கூற முடியுமா

    ஹிந்து மதத்தில் ஆண்களுக்கு எவ்வளவு கட்டுபாட்குல் உண்டு என்று உங்களுக்கு தெரியாதா இல்லை தெரியாதது போல் பாவனையா?

    glady
    6 November 2009 at 11:16 pm
    // Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?
    //

    இந்திய இந்து சமுதாயமானது பரந்துவிரிந்த இந்தியப் பெருங்கடலைப் போல மகா விஸ்தாரமானது; அதனைக் கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இந்த உலகில் இல்லை; இந்த மாபெரும் அமைப்புக்கு உயிர் கொடுத்து நடத்திச் செல்வதில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது; அவர்களாலேயே இந்து மார்க்கம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்;

  34. நன்று ;நன்று.

  35. மன்னிப்பு கோருவதற்கு ஹாங்காங் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஆலோசிக்க வேண்டும் எனக் கூறும் விஜய் டிவி நிறுவனத்தார், பிற மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் படியான நிகழ்ச்சிகளைத் தயார் செய்யும் முன்பு ஹாங்காங்கைத் தொடர்பு கொண்டு ஆலோசித்தார்களா??

  36. யப்பா யப்பா டிடஸ் முடியல முடியல

    //டிடஸ்
    6 November 2009 at 8:20 pm

    //தேவனின் வலிமையால் அனைத்து ஊடகங்களும் தேவனின் சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

    உங்காளு ஒருத்தர் சாத்தான் மூலமா ஒரு லெட்டர் போட்டிருக்காரு - இங்க படிங்க அதை (http://chillsams.webs.com/apps/blog/?page=2)
    - அப்போ தேவனின் வலிமையால் தான் சாத்தனும் லெட்டர் போட்டரோ?
    இதெல்லாம் உமக்கே சுத்த பேத்தலா இல்லை.

    //பாவிகளே. நீங்கள் பாவ பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறீர்கள். அதனால் விமர்சனம் செய்வதுதேவையாக இருக்கிறது.

    மேலே சொன்ன லேட்டேர்ல சாத்தான் கிறிஸ்தவருக்கு தான் அனுப்பி இருக்காரு - சாத்தான் என்ன சொல்றாரு தெரியுமா “ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!”
    உங்கள் பாவங்களை போக்கி உங்களை எல்லாம் யோக்கியர் ஆக்கின அந்த தேவனால் ஏன் உங்களை நல்ல வழியிலே நடத்தி செல்ல இயல வில்லை? - ஏன் உங்களக்கு உங்கள் தேவன் ஜபம் செய்ய வேண்டி நினவூட்டவில்லை? உங்கள்ளுக்கு நினைவூட்ட ஒரு சாத்தான் தேவை படுகிறார் - அப்போ நீங்கள் எல்லாம் உங்கள் தேவனின் கரம் பற்றிய பின்னும் பாவியாகவே உள்ளிர்கள் என்று தானே அர்த்தம்!!!

    // சகோ. சாது செல்லப்பாவும் பிரஜாபதிதான் இயேசு என்பதை விஷம் குடித்து தனது விசுவாசத்தை நிரூபிப்பார்.

    எனக்கு ஒன்னு சுத்தமா புரியவே இல்லை - சரி நம்ம பேச்சுக்கு இயேசு பிரஜாபதிதான் அப்படின்னு வெச்சுப்போம்

    இயேசு பிரஜாபதி என்றால் நீங்கதானேப்பா ஹிந்துக்களா மாறனும்

    அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டர் - ப்ரஜாபதிங்க்ரவரு ஹிந்து தர்மப்படி/வேதப்படி ஜீவாத்மா கூட்டத்தில் ஒருவர் - அவருக்கு வயது நூறு தேவ வருடம் என்று சொல்லப்பட்டிருக்கு - அப்போ உங்க இயேசு நூறு வர்ஷத்துக்கு அப்புறம் உங்கள எல்லாம் காப்பாத்த மாட்டாரு - பாத்துக்கோங்க இப்போவே சொல்லிட்டேன்

    அப்புறம் சாது செல்லப்பா கிட்ட கொஞ்சம் ரூம் போட்டு டீப்பா எதாவது யோசிக்க சொல்லுங்க - இப்ப அபத்தமா போய்டிச்சு பாத்திங்கள

    // நாங்கள் நடத்தும் ஒவ்வொரு சுவிசேஷ கூட்டத்திலும் உங்களை எதிர்பார்க்கிறோம். தைரியமிருந்தால் விஷததை கொண்டுவாருங்கள்.

    ஐயோ தமிழன் மரபு கூட உங்கள்ளுக்கு தெரியாத - இன்ன செய்தாரை …..

    நாங்கள் ஏனையா உங்களுக்கு விஷத்தை கொடுக்க வேண்டும் - ஆலகால விஷத்தை குடித்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் - உங்களக்கு வேணும்னா எங்கள ஏன் கேக்கறிங்க - அதான் கடைல நிறைய்ய கிடைக்குதே

    வைகுண்டம் (வீடு பேரு) புகுவது மன்னவர்க்கு இயல்பு அப்படின்னு எழுதி வெச்சாங்க எங்காளுங்க - அதவாது பாவ புண்ணியமெல்லாம் பாத்துகிட்டு திரியாத சாமிய பாத்திக்கிட்டு இருன்னு சொன்னாங்க

    இந்த பாவி மேட்டர் எல்லாம் கொஞ்சம் ஓல்ட் பேஷன் - புதுசா எதாவது சொல்லுங்க

  37. இவர்களே யாராவது ஒரு அம்மையாரைத் தேர்ந்து எடுத்து இருப்பார்கள்.

    அவர் தாலி, மெட்டி ஆகியவற்றின் மீது வெறுப்பு உடையவராக இருக்கக் கூடும்.

    அல்லது அவர் பிறரை அவ மரியாதை செய்வதே தனக்கு சுயமரியாதை என நினைக்கும் மானமிகு அம்மையாராக இருக்க கூடும். அவரை முன் வரிசையில் உட்கார வைத்து கேட்போம் , கழட்டி குடுங்கள் என்று கூறியிருக்கக் கூடும். இப்படியாக நாடகம் நடத்தி தமிழ் பண்பாட்டை பின்னுக்குத் தள்ளி மேற்க்கத்திய டேட்டிங் கலாச்சாரத்துக்கு பாய் விரிக்கிறார்கள்.

    மேற்க்கத்திய கலாச்சாரத்தை புகுத்திய கையேடு, அப்படியே அதற்கு பொருத்தமான அவர்களின் மார்க்கத்தையும் புகுத்துவதும் ஒரு பிளான்.

  38. Mr gopinath has “bounded rationality” and he simply entertains and the morals he is preaching is defective.He is not suitable to take up serious topics in depth.Further he wants some one sided talk always.He is also biased in his remarks.the socalled experts are not much recognised.He reflects mediocrity and clap-trap.

  39. இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதனை மத நம்பிக்கையாக இல்லாமல் தனி மனித அல்லது ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையாக பார்த்தாலும் இதனை விமரிசனம் செய்ய விஜய் டிவி மற்றும் கோபிநாத் போன்ற கைக்கூலிகளுக்கு அருகதை கிடையாது. இந்த மண்ணில் உள்ள மக்களின் நம்பிக்கைகளை சிதைக்க முயற்சிக்கும் சிறு மதி படைத்தவர்களின் உளறல்கள் இவை. கோபிநாத் யார்? இந்தியாவில் பிறந்தவன் தானே? அவனது வீட்டில் உள்ள பெண்களோ அல்லது ஆண்டனி வீட்டில் உள்ள பெண்களோ தாலி அணியாமல் இருக்கிறார்களா? ஒரு குறிப்பிட்ட இனத்தின் நம்பிக்கைகளை விமரிசனம் செய்யும் அளவிற்கு எங்கிருந்து வந்தது இந்த துணிவு? இதே போல் மற்ற இனத்தவரின் நம்பிக்கையையும் விமர்சிக்கும் துணிவு உள்ளதா கோபிநாத்துக்கும் ஆண்டனிக்கும்? பம்பாய் படத்தை இயக்கியவருடைய வீட்டிற்கு என்ன நேர்ந்தது என்பது நாடறியும். இந்நாட்டில் மெஜாரிட்டியாக உள்ள மக்களுக்கு மைனாரிட்டி மக்களின் உரிமைகள் கூட கிடையாது. ஒட்டு பொறுக்கிகள் உள்ள வரை இதனை மாற்றுவது கடினம். இதே போல் மற்ற நிகழ்ச்சி பொறுப்பாளர்களின் தொடர்புகளையும் அளித்தால் அவர்களையும் தொடர்பு கொண்டு நமது நியாமான எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவிக்க முடியும். நன்றி !

  40. Lord Macaulay’s address to the British Parliament on 2nd February 1835…
    “I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief such wealth I have seen in this country, such high moral values, people of such caliber that I do not think that we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is goodand greater than their own, they will lose their self esteem, their native culture and they will become what we want them, a truly dominated nation”
    எங்கிருந்து ஆரம்பித்துள்ளது பார்த்தீர்களா விஷ(ம)மான நடவடிக்கைகள்!

  41. Anne Frank’s diary has been censored out of a school textbook in Lebanon following a campaign by the militant group Hezbollah which claimed the classic work promotes Zionism.
    The New Indian Express,p11,07.11.2009.
    The diary has been censored not because it hurts the sentiments of the Muslims but it promotes Zionism.In contrast in our country anybody can ridicule the custom and tradition of the poor Hindus. Mischivous Gopinath is always choosing topics which not only hurt but ridicule the Hindus.If he is really bold enough he can choose topics from other culture also. It is the duty of every Hindus to avoid such channels and rejct the products of the promoters.

  42. ///Sarang
    7 November 2009 at 2:07 am
    // நான் பொன்னுதுரைக்கு எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டேன். மேலும் இனிமேல் எங்கள் வீட்டில் லயன் டேட்ஸ் வாங்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாகவும் அவருக்கு தெரிவித்துவிட்டேன். நீங்கள் செய்தீர்களா?

    ராம் சார், அடியேனும் தெரிவித்துவிட்டேன் - முன் உதரணமாக இடுந்ததற்கு நன்றி///

    அன்பிற்குரிய சாரங், என்னோடு கைகோர்த்ததற்கு நன்றி. எனது மடல் இதோ!
    To
    Mr.Ponnudurai,
    Managing Director
    M/S Lion Dates Impex Pvt Ltd.,
    4A/3. Kaveri Road, Trichy – 620002.
    Tel: 0431-2730047 / 2730191.
    E-Mail: md@liondates.com
    Dear Mr. Ponnudurai,
    I am a man of Hindustan who is regularly using your product lion dates. In our family from elders and childrens all of us regularly buy your product and use it. But from this month we decided to boycott your products. Our full family decided the same because of your company made upset us by sponsoring continuously to anti religional program of vijay tv called neeya nana. With great disappointment from this month we never buy your lion dates products and forever. Because of the program neeyaa naanaa is continuously making controversial argument to destroy our hindu culture we strongly condemn your company to support Vijay TV neeya naana program. My humble request you to please stop sponsoring the program and kindly stop hurting hindus feelings.
    If the thing continues I wish to inform and keep saying about our disappointment to my friends and other family members and I will advise them to not to buy your products because of your anti hindu support.//
    இவ்வாறு மடலிட்டிருக்கிறேன். நன்றி சாரங். மேலும் நண்பர்கள் தொடர்ந்து தங்களுடைய அதிருப்தியை தெரிவிப்பது நமக்கு வலு சேர்க்கும். செய்வார்களா?

  43. நன்றி தமிழ்செல்வன். ஒரு வேண்டுகோள். அப்படியே கட்டுரை ஆசிரியர் ஹரன் அவர்களின் இமெயில் முகவரி கொடுப்பீர்களா. அவர்களுக்கு எனது சார்பாக நன்றியை தெரிவிக்க காத்திருக்கிறேன். தந்தால் மகிழ்வேன்.
    அன்புடன்
    ராம்

  44. கிளாடியார் எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது அவர் மனது விசாலமடைந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே அவர் வழியிலேயே சென்று விசாலமான மனதுடன் கன்னியாஸ்திரீ என்பவர்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதால் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்களா? அல்லது அவ்வாறு அழைக்கப்படுவது வெறும் பெயர் தான், கன்னித்தன்மைக்கு அவசியம் இல்லை என்று திருச்சபை சொல்லியிருக்கிறதா? என்பதை பற்றியும் விவாதிப்போம். யாரையும் புன்படுத்தும் நோக்கமில்லை. விவாதிக்கும் போது தானே நம்மை நாமே மறுநிர்மானம் செய்துகொள்ள முடியும். தாலியைப் பற்றி விவாதித்ததை கிளாடி ஆமோதித்ததைப் போல இந்த விவாதத்திற்கும் தயாரா???

  45. ///ஆண்டனி-ராமகோபாலன் சந்திப்பைப் பற்றி அறிந்துகொண்ட கட்டுரையாளர் ஹரன் அவர்கள் ராமகோபாலன் அவர்களைத் தொடர்புகொண்டு விஜய் டிவி நிறுவனம் பொது மன்னிப்பு கேட்குமாறு அவர்களை வற்புறுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டு, மேலும் ஹிந்து முன்னணி சார்பில் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். போராட்டத்தைப் பற்றி பரமேஸ்வரன் அவர்களிடமும் பேசிய ஹரன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச துணைத் தலைவர் திரு வேதாந்தம் அவர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு நல்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.

    திரு. ஹரன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, ராமகோபாலன் அவர்கள் விஜய் டிவி ஸ்ரீராம் அவர்களைத் தொடர்பு கொண்டு, ”தொலைக்காட்சியின் மூலம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும், அது தான் நியாயம்” என்று கூறியதற்கு, “எங்கள் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் இருக்கிறது. அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்கலாம் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சால்ஜாப்பு கூறியுள்ளார் ஸ்ரீராம்.

    இதனிடையே, சென்னை அமைந்தகரைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுப்ரமணியம் என்கிற வழக்குரைஞர், விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் திரு ஸ்ரீராம், மெர்குரி கிரியேஷன் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி, விஜய் டிவி நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத், மாநில காவல் துறைத் தலைவர், நகர காவல்துறை ஆணையர், ஆகியோருக்கு சட்ட அறிவிப்புப் புகார் (Legal Notice) அனுப்பியுள்ளார். அதில், மாங்கல்யம், இந்துத் திருமணங்கள் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை ஆகியவற்றின் புனிதத்தை எடுத்துக் கூறி, ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஸ்ரீராம், ஆண்டனி, கோபிநாத் ஆகியோருக்குக் கடுமையாகத் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ள அவர், அவர்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும் என்று கோரியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் காவல்துறை அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அந்தப் புகாரை மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அவர்களுக்கும், மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

    விஜய் டிவி நிறுவனமும், மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனமும் புரிந்துள்ள குற்றங்கள் இ.பி.கோ. 153(a), 153(b) மற்றும் 295(a) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தக்கவை என்பது குறிப்பிடத் தக்கது.///

    கட்டுரையாளர் திரு ஹரன் அவர்களுக்கும் அமைந்தகரை வழக்குரைஞர் ஆர்.சுப்பிரமனியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற எளியவர்களால் செய்ய முடியாத அரிய காரியத்தை முன்னின்று செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்பிக்கிறேன்.

  46. ///திருச்சிக் காரன்
    6 November 2009 at 11:45 pm
    கிளாடி,

    உங்க் காட்டில் மழை. விளையாடு. நீர் எங்களை நையாடி செய்து எழுதினால் அதை தமிழ் ஹிந்து வெளியிடும். பதிலுக்கு நாங்கள் எழுதினால் அதை வெளியிடாது.////

    பதிலுக்கு நாங்கள் எழுதினால் அதை வெளியிடாது என்று திருச்சிக்காரர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. தமிழ் ஹிந்து ஆசிரியர்குழுவினர் கொஞ்சம் கவனிப்பீர்களா? சில நேரங்களில் நமது வாதங்களை கொஞ்சம் ஆனித்தரமாக சொல்ல வேண்டியிருந்தால் என்ன செய்வது. மற்றவர்கள் வாய் துர்நாற்றத்தை வெளிப்படுத்த உதவும் தளம் அதை சுத்தப்படுத்த அதே அளவு உதவினால் நல்லது தானே. இது சிபாரிசு இல்லை. நமக்காக வாதிடும் ஒருவரின் கருத்துக்கள் வெளிப்படாமல் போனால் காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் காரணம். நல்லதே நடக்கட்டும்.

  47. இதோ , இவர்களக்கு அனுப்ப வேண்டிய கண்டன கடிதங்களின் மாதிரிகளை இங்கே பதிந்து உள்ளேன் . அனைவரும் அவர்களுக்கு ஈமெயில் அனுப்ப வேண்டுகிறேன்

    இது ஸ்டார் டிவி தலைமைக்கு அனுப்ப வேண்டிய கடித மாதிரி
    mail id ceo@starnews.co.in and csmail@startv.com
    ——–
    Dear sir,
    I was shocked to watch an program in Star vijai on 11-10-09 night called “Neeya naana” produced by Mr.Antony, Mercury creation and the program was compiled by Mr.Gopinath, in Tamil language.
    It was heart paining to see the program. which is totally insult Hindu culture. Each custom in Hindu religion has it own meaning, which is very hard to understand.
    Hindu religion and Heritage, is ancient in the world, which has concrete evidence for its tradition.
    That program is totally insult Hindu religion and Hindu culture.I request you,
    Please do not broadcast such kind of Program in Star Vijai , which is spoiling the majesty of STAT TV GROUP.
    I and my family Stopped to watch Star vijai.
    Moreover i will continue to encourage people to do that.
    I knew just my decision is not going affect your business . But at least let my own money is not used for insulting my countries heritage.

    With Best Wishes and Regards
    (உங்கள் பெயர் )
    ==============================

    இது Lion dates உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய கடித மாதிரி

    It was heart paining to see the program which you are sponsoring. Why not this program concentrate more on social problems, please don’t sponsor such kind of programs which insults the practice of Indians.

    Until you stop sponsoring or the program changes “I and my family have decided to Boycott the LIONDATES PRODUCTS”. Moreover i will continue to encourage people to do so to the known and near.

    For your kind information, I and my family are continuously using your product for a long time…….. I knew just my decision is not going to disturb the established market of LION DATES. But at least let my own money is not used for insulting my countries heritage.
    with regards
    (your Name)

  48. அனைத்து பதிவர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் , தயவுசெய்து , தங்கள் பதிவில் , ஒரு Banar add அமைத்து , இந்த பதிவிற்கு இணைப்பு தர தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் .
    சமுதாய சீர்கேடுகளை ஊக்குவிக்கும் இதை போன்ற தொலை காட்சி சேனல்களை புறக்கணிப்போம்.
    ஒன்று பட்ட இந்தியாவை , கூறு போட முயற்சிக்கும் , இந்த சேனலை புறகணிப்போம்.

  49. நானும் என் கண்டனத்தை அட்தொளைகட்சி நிறுவன இணையத்தளத்தில் தெரிவித்து விட்டேன்.

    ஆசிரியருக்கு இக்கட்டுரைக்காக நன்றி..

  50. Can you please get us the e mail id or phone number of Simon Gopinath.

    He is seem to be fraud like Director seemaan whose real name is also Simon.

  51. நானும் லயன் டேட்ஸ் ‍நிர்வாக இயக்குனருக்குக் கடிதம் அனுப்பிவிட்டேன்.
    இமெயிலிலும், தனித்தபாலிலும்.

    7th November 2009

    Mr Poonudurai
    Managing Director
    Lion Dates

    Sir,

    I refer to the series of programs by Vijay TV, titled “Neeya Naana” denigrating the various customs and practices of our Motherland, Bharat, that is India. Sanatana Dharma, that is Hinduism, is the most tolerant of religions that this world has so far come across. Its magnanimity extends far and wide and even within itself, in that those who question its very basic principles are allowed to remain within its fold. Other religions like Islam and christianity do not permit any questioning at all and either eliminates or excommunicates those who so question.

    The uniqueness of Sanatana Dharma is that it is magnanimous. The other religions consider this magnanimity as weakness and exploit it for their own mischievous purposes. The print and visual media in India have fallen a prey to the scheming designs of the Western religions who want to poach on Sanatana Dharma.

    The recent episode on “Mangala Sutra” is the last straw on the Camel’s back.

    I note with pain that you are sponsoring this program. My request to you is that if they continue to denigrate the customs of Bharat, please refrain from sponsoring those programs. Please make it clear to them that you wont sponsor such programs, and do that public.

    I for my side have decided that I will not purchase your products until you make it public that you have given this ultimatum to Vijay TV.

    I hope you will take steps so that I may reverse my decision.

  52. அய்யா தமிழ்ச் செல்வன் அவர்களே

    உங்களது ஹிந்து உணர்வு, பக்தி,ஆதங்கம், கோபம் இந்தக் கட்டுரையில் கொப்பளிக்கிறது. உண்மைதான். இதற்குப் பரிகாரம் ஹிந்து சமுதாயம் உணர்வற்றுக் கிடக்கிறது. அதை மாற்றி விழிப்புணர்வுள்ள சமுதாயமாக மாற்றிட நீங்கள் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள். ஹிந்து இயக்கங்களைப் பற்றி கையாலாகாதவர்கள் சக்தி அற்றவர்கள் என்று சொல்லிட எந்த அருகதையும் உங்களுக்குக் கிடையாது. அந்த இயக்கங்கள் உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளின் வசவுகளையும் வாங்கிக்கொண்டு தொடர்ந்து வேலை செய்து வருவதால்தான் ஓரளவிற்கு மக்களிடையே ஹிந்து விழிப்புணர்வு தோன்றியுள்ளது என்பதை நீங்கள் உணரவில்லையோ? ஹிந்து இயக்கங்களின் மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு உருப்படியாக உங்களால் என்ன பண்ண முடியுமோ அதை எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்தால் அதுவே நீங்கள் இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி சாதிப்பதை விட மிகப் பெரிய சேவையாகும். மலையளவு பேசுவதை விட (எழுதுவதை விட) கடுகளவு செயல் உயர்ந்தது.

    வித்யா நிதி

  53. Can you please get the e mail Ids all sponsors of Vijay TV programs?
    We all can boycott those products also.

    When “Sowrd of tipu sultan” was telecast some of the sponsors relieved themselves from sponsoring after hindu organisations threatened them with boycott of their products.

  54. What is the full name of sriram?
    Robert sriram,
    Peter sriram,
    Antony sriram

    Please check.

  55. http://www.liondates.com/contact.html

    Lion Dates Impex Private Limited.,
    4-A/3, Cauvery Road,
    Trichy - 620 002.

    India
    Lion Dates Impex Private Limited.,
    FLAT NO: 8, GOLDEN PERCH APARTMENT,
    NO: 2, WHEAT CROFTS ROAD,
    NUNGAMBAKKAM,CHENNAI – 600 034.

    INDIA.

    Ph : 91- 431- 2730047
    Mobile : (+91)9944446849
    Fax : 91- 431- 2730191.
    E-mail : ldpl@md3.vsnl.net.in

  56. Wonderful article Thamizch chelvan. Your efforts and time spent are admirable.

  57. வித்யா அவர்களே

    // இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி சாதிப்பதை விட மிகப் பெரிய சேவையாகும். மலையளவு பேசுவதை விட (எழுதுவதை விட) கடுகளவு செயல் உயர்ந்தது

    தமிழ்செல்வன் அவர்களின் கட்டுரையால் எவ்வளுவு பேர் செயலில் இறங்கி இருக்கிறார்கள் என்று இந்த கட்டுரையின் மறுமொழியை படித்தால் உங்களுக்கு தெரிய வில்லையா - ராம், உமா ஷங்கர், லோகநாதன், மற்றும் பலர் செயலில் இறங்கி அவர்கள் செய்ததை குருபிட்டிருக்கிறார்கள் - தமிழ்செல்வன் அய்யா அவர்களும் பலர் என்ன செய்தார்கள் என்பதையே எழுதி இருக்கிறார் - அவர் செயலிலும் இறங்குவார் - சிந்தனையை தூண்டுவார், எல்லோரையும் செயலில் இறங்க வைப்பார்

    எழுத்தின் வலிமையும், ஆழமும் உங்களுக்கு புரியலையா… செயலில் மட்டும் இறங்கினால் - ஒருவர் மட்டுமே செயலாற்ற முடியும் - எழுத்தினால் பாலையும் செயலில் இறக்கிவிட முடியும் - இங்கே நீங்கள் காண்பதை போல

    உங்காள் முடிந்தால் யாரையும் மட்டம் தட்டாமல் இருங்கள் - நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் நாங்களும் உங்களுடன் கை கோர்க்கிறோம்

  58. வணக்கம்,

    //தன்னை வேறுபடுத்திக் காட்டுவதும் தனித்தன்மையுடன் இருக்கவிரும்புவதும் ஒவ்வொரு உயிருக்குமுள்ள சிறப்பான குணமாகும்;//

    உண்மைதான் நண்பரே, ஆனால் அந்த ஆன்ம ஞானம் இல்லாமல் ஒன்றும் இது போல் செண்டிமெண்டுகளை வகுக்க வில்லை, அதை ஆதாரமாக வைத்தே சடங்குகள் உருவாகின்றன, தாலி என்பது வெறும் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வில்லை அல்ல, அது ஏற்று இருக்கும் பெண்மணியை தனித்தன்மையாக, தான் மணமானவள் என்று பிறர் தன்னை தவறான எண்ணத்தோடு நோக்காதிருக்க, ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாத்பரியத்தை காக்கும் எண்ணத்தோடு
    உருவாக்கப் பட்டு அதற்க்கு என ஒரு புனிதத்துவம் உண்டாக்கப் பட்டது, அந்த ஒற்றை தாலியே கூட பாரத சமுதாயப் பண்பாட்டின் அடையாளமாகும்.

    //யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஒவ்வொருவருக்கும் சுயாதீனமும் சுதந்தரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; விரும்பினால் ஆச்சாரமாக இருக்கலாம் அல்லது “டாஸ்மாக்”கிலும் கிடக்கலாம்; அது இறைவன் “உறங்கும்” ஆன்மாவை ஒன்றும் செய்யாது; இது புரியாமல் காசுக்காக யாரோ எவரோ எதையோ செய்தால் நமக்கென்ன..?//

    சுயகட்டுப்பாடு என்பதில்தான் தனிமனித சுதந்திரம் அடங்கியுள்ளது, அதற்காக சுதந்திரம் என்ற பெயரில் வேலிகளை தளர்த்தி விட்டால் நம் நாட்டில் மேய்வதற்கு வெள்ளாடுகளுக்கு பஞ்சமா என்ன? சுதந்திரம் நமக்கு ஏன் கொடுக்கப் பட்டது என்பதயும் நாம் அறிந்து கொள்வது வேண்டும். கொடுக்கப் பட்ட சுதந்திரத்திற்கான காரணத்தை முறையில்லாது பயன்படுத்துதல் தவறாகும். ஆச்சாரமாக இருப்பதற்கே எந்தவகையானது என்பது இன்றி, அதாவது இதுதான் இப்படித்தான் என்றில்லாமல் ஆசாரம் என்ற நல்ல விஷயத்தை எப்படி வேண்டுமானாலும் அனுசரிக்கலாம் என்ற சுதந்திரம் தான் சொல்லப் பட்டதே அல்லாமல் அதை விடுத்து நீங்கள் சொல்வது போல் டாஸ் மாகில் கிடப்பது அல்ல, இந்து தர்மத்தின் சுதந்திரம் என்பதனை நீங்கள் தவறாக புனைகிறீர்கள்,
    இறைவன் உறையும் ஆன்மா களங்கப் படாது உனக்கு சுதந்திரம் உள்ளது நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல் உள்ளது உங்கள் வாதம், இதுவும் நையான்டியே, காசுக்காக யாரோ சேர்வது என்றால் தனிப்பட்ட முறையில் சேது கொள்ள வேண்டுமே அன்றி வெளிப்படையாக செய்து தன்னோடு சேர்த்து சமுதாயத்தை சீரழிக்கக் கூடாது.

    ///தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இருக்குமானால் அதனை அறியவும் இது சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்ச்சி உண்டாகும்; சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ///

    பாதமாக எண்ணங்கள் ஏற்ப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்த நிகழ்ச்சியே, அதில் சந்தேகமே இல்லை. தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்களை தகர்க்க பின்னப் பட்ட சதி வலையே இந்த நிகழ்ச்சி. கலாச்சாரத்தின் ஒரு நூலில் ஆரம்பித்து ஒரு ஆலையையே கொளுத்தும் ஆவேசம்.

    //உதாரணத்துக்கு நமது தேசப் பிதாவான காந்திஜி வெள்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவரது ஆடையினிமித்தம் அவமானப்படுத்தப்பட்டாராம்; ஆனாலும் அவர் மனதளவில் அவமானப்பட்டதாகவோ மனம் புண்பட்டதாகவோ தெரியவில்லை;காரணம் அவருக்கு தன்மீது இருந்த திருப்தியுணர்வு;//

    ஆடை விஷயம் என்பது தனிமனித விவகாரம், தாலி என்பது ஒரு சமுதாய அடையாளம்,

    //அதே போல தாலி போன்ற சமுதாய சடங்குகளைக் குறித்த மரியாதை ஒருவருக்கு இருக்குமானால் ஏன் மனம் புண்படவேண்டும்? ஆனால் அதனைக் கட்டாயமாக சுமப்பதனால் அவமானப்பட்டு மனம் புண்பட வாய்ப்புண்டு;//

    கட்டாயமாக சுமக்க இஷ்டமில்லை எனில் ஏன் மணம் முடித்துக் கொள்கிறார்கள்? இந்திய கலாச்சாரத்தை விட்டு வெளியேற நினைக்கும் இவர்கள் எங்காவது வெளிநாடுகளுக்கு போய் காண்ட்ராக்ட் முறையில் வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, இப்படிப் பட்டவர்கள் இந்தியாவில் லைசென்சு வாங்கிய நாயாய் இருப்பதை விட வெளிநாட்டில் எங்காவது ஒரு பேயாய் இருந்து விட்டு போகட்டும்.

    நடந்த டி வி நிகழ்ச்சியில் அறுபது வருடமாக சுமந்து கொண்டு இருந்த தாலியை ஒரு பெண்மணி கழட்டி கொடுத்தாராம், இதை கல்யாணமான அன்றே செய்து இருந்தால் அவரின் கணவராவது நிம்மதியாய் இருந்து இருப்பார் விட்டது சனி என்று.

  59. Hello All,
    First go and see what happening in North India’s, there BJP did whatever they want, you cann’t ask that things, tha’s y they are not able to get people vote in election see now what the are doing (Ex: Bengaluru Goverment).

  60. வணக்கம்,

    அன்புள்ள ஸ்ரீ வித்யா நிதி அவர்களே இங்கே பதிவிடும் நண்பர்கள் தங்களின் கருத்துக்களை பதிவதோடு நில்லாமல் சிலர் களப்பணியும் செய்பவர்கள், அதோடு இது போன்ற கட்டுரைகளும் இந்து விழிப்புணர்ச்சியின் ஒரு அங்கமேயாகும், இதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    கட்டுரையில் இந்து இயக்கங்களின் நிலையை பற்றி வருந்தியுள்ளாரே தவிர குறை கூற வில்லை. மேலும் இது சம்மந்தமாக இந்து அமைப்புகளின் நடவடிக்கைகளை இந்து சமுதாயம் எதிர் பார்க்கிறது என்று அமைப்புகளின் மேலான தனது நம்பிக்கையை தெரிவித்து உள்ளார். இந்த பிரச்சினை குறித்து நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள் என்று அறிய ஆவல்?

  61. ரஜினி கமல் இருவரும் சிவன் வேடம் போட்டு,

    சிவன் வேடத்திலேயே பப்பில் கம் வூதி உடைப்பது இதை எல்லாம் செய்வதாக காமெடி என்று எடுக்கிறார்கள்.

    இதைப் பார்த்து வீட்டிலே மனைவி குழைந்தகளோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

    அதனால் தான் எல்லோருக்கும் தினா வேட்டாக இருக்கிறது.

    இந்த விசயத்தில் - தாங்கள் கடவுள் என்று நினைப்பவருக்கு மரியாதை கொடுப்பவர்கள் - இசுலாமியர்கள்தான்.

  62. நானும் லயன் டேட்ஸ் ‍நிர்வாக இயக்குனருக்குக் கடிதம் அனுப்பிவிட்டேன்.
    இமெயிலிலும், தனித்தபாலிலும்.

    Ungal sevai thodaruttum endru

  63. சரங்,

    பாவிகளே, விஷத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த சாது செல்லப்பாவே விஷம் குடித்து காட்டுவார்.

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நோயாளிகளை பால் தினகரனின் கையாலும், மோகன் லாசரஸ் கையாலும் குணப்படுத்தும்போது, அவர்கள் விஷம் குடித்து காட்டமாட்டார்களா?

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    இனி சுவிசேஷ கூட்டங்களில் விஷம் குடித்து காட்டவில்லை என்றால் ஏன் என்று கேளுங்கள்.

  64. Dear Tamzhselvan, Excellent article and analysis. I have already written to Ponnudurai about the designs of the Vijay TV channel. We have to organise large-scale protests against this atrocity.

  65. //First go and see what happening in North India’s, there BJP did whatever they want, you cann’t ask that things, tha’s y they are not able to get people vote in election see now what the are doing (Ex: Bengaluru Goverment).//
    என்ன சொல்ல வரீங்க… BJPக்கு கிடைச்ச, கிடைக்கற ஆதரவு போலி மத சார்பின்மை பேசி இந்து சமுதாயத்தை நசுக்கும், ஓட்டு பொறுக்கி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பே!

  66. Dear Tidas ,
    When karthar could cure through Paul Dinakaran,why did he go to America when he had kidney problems? Probably kathar wold not cure hypocrites.

    >please ask “Saadhu” chellappa to announce this.

  67. Thank you Mr. Tamilselvan.

    Neeya Nana is a “directed” program and you can see same faces in the programs quite often. I think they are paid & provided with scripts.

    They often discuss like this for years and as you said most of the channels hurt the feelings & sentiments of Hindu religion. It is even worse in north and there are worst, disgusting programs in channels like NDTV imagine, Sony etc. The days are not too far for viewing same kind of programs in our Tamil channels as well.

  68. //Hello All,
    First go and see what happening in North India’s, there BJP did whatever they want, you cann’t ask that things, tha’s y they are not able to get people vote in election see now what the are doing (Ex: Bengaluru Goverment).//

    இந்தியன் என்று கூறிக்கொள்ளும் நண்பரே, 53 இராம பக்தர்கள் கொல்லப்பட்டதற்காக 800 முகமதீயர்களை கொன்ன பாரதிய ஜனதா ‘communal’ என்றால் இந்திரா காந்தி ஒருவர் கொள்ளப்படதற்க்காக 5000 சீக்கியர்களின் இரத்தத்தை குடித்த காங்கிரஸ் எந்த விதத்தில் ’secular’ என்று கூறுகிறீர்கள்?? உண்ணுமே புரியாமல், எதையும் தெரிந்துக்கொள்ளாமல் சும்மா காச்சு மூச்சு நு வானத்துக்கும் பூமிக்கும் சாமிஆடுறது தவிர உங்களுக்கு வேறென்ன தெரியும்????

    டிடஸ் அவர்களே, நீங்கள் கிறித்தவர்களை ஆதரித்து எழுதுகிறீர்களா இல்லை அவர்களது நம்பிக்கைகளை கேலி செய்கிறீர்களா என்று புரியவில்லை. உங்கள் நோக்கம் தான் என்னவென்பதை சொல்கிறீர்களா??

  69. ஐயா சாரங் அவர்களுக்கு,

    வணக்கம்

    ஹிந்து சமுதாயத்திற்காக தாங்கள் ஆற்றிவருகின்ற தொண்டிற்கு தங்கள்
    திருப்பாதம் தொட்டு வணங்குகின்றேன். ஹிந்து நலனிற்காக வேலை செய்து வருகின்றவர்களைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டும் கூற எனக்கு எந்தத் தகுதயும் கிடையாது. அவ்வாறு கூறவும் இல்லை. ஆனால் இந்தக் கட்டுரை எழதியவர் தேவை இல்லாமல் ஹிந்து இயக்கங்களை எதற்காக மட்டம் தட்டும் தொனியில் எழுதவேண்டும். ஹிந்துக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாங்கள் மட்டும் தான் பொறுப்பு. மற்றவர்கள் எந்த செயலும் செய்யக்கூடாது என்று ஹிந்து இயக்கங்கள் எகபோக உரிமை கொண்டாடவில்லை. ஹிந்து தர்மம், பண்பாடு காத்திட இன்னும் நூற்றுக்கணக்கில் இயக்கங்களும், தனி நபர்களும் முன்வரவேண்டும் என்று தான் வலியுறுத்திவருகிறது. ஹிந்து இயக்கங்களில் வேலை செய்து வருபவர்கள் அனைவரும் முற்றும் துறந்த முனிவர்கள் கிடையாது. அவர்கள் தங்கள் சொந்தத் தொழில், வியாபாரம், குடும்பம் போன்றவை களையும் கவனித்து கொண்டு இயக்க வேலைகளுக்காக அதிகமான நேரம் கொடுத்து வருபர்கள். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பல வழக்குகள் போடப்படுகின்றன அதற்காக நீதி மன்றம், வழக்கு வாய்தா என்று சென்று கொண்டிருக்கின்றனர். வருடத்திற்கு பல லட்சம் நிதி வழக்குகளை சந்திப்பதற்கே தேவைப்படுகிறது. ஜாமீன் கிடைக்காமல் ஒரு மாதம் இரண்டு மாதம் என சிறையில் தொண்டர்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறது. சில நேரத்தில் குண்டர் சட்டத்தில் அடைக்கப் படுகின்றனர். அதிலிருந்து வெளிவர எவ்வளவு அலைச்சல் செலவு ஆகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அச்சமயத்தில் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் இயக்கத்திற்கு வருகிறது. தொண்டர்கள் குடும்பத்தில் எத்தனையோ நல்ல கார்யம் துக்க நிகழ்வுகள் நடக்கின்றன. அவைகளையும் கவனித்துக்கொண்டு இயக்க வேலைகளையும் செய்துவரவேண்டும். வீட்டில் மனைவி சொந்தக்காரர்கள் எதிர்ப்பு இருக்கும் அவர்களை சமாளிக்கவேண்டும். இவைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் எந்தவொரு போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் செய்திட முடியும். கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று பொழுது விடிந்தால் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் இயக்கத்தில் உருப்படியான வேலை செய்திட எவரும் முன் வரமாட்டார்கள். இதெல்லாம் இயக்கத்தில் பொறுப்பில் இருந்து வேலை செய்து வருபர்களுக்குதான் தெரியும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பல விதத்திலும் பல பேர் வேலை செய்திட வேண்டும். உங்களால் என்ன செய்திட முடியுமோ அதை செய்துடுங்கள். அது பாராட்டுக்குரியது. தேவையில்லாமல் ஹிந்து இயக்கங்களை மட்டம் தட்டி எழுதும் போக்கை தமிழ் ஹிந்துவில் வெளிவராமல் பார்த்துக்கொண்டால் போதும். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார் ஐயா சாரங் அவர்கள். அதிக வருமானம் வந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்திற்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு மலைவாழ் மக்களிடையே அவர்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களால் முடிந்தால் நீங்களும் வாருங்கள். ஜெய் ஸ்ரீராம்.

    வித்யா நிதி

  70. Dear Mr.Tamil Selvan

    Many thanks for bringing the issue to the notice of all. I and my family have sent our protest to the MD of Lion Dates. We have also taken a conscious decision to boycott all Lion Dates products in the future.

    Thank you

    R.Sivaramakrishnan
    New Delhi.

  71. Good article.Good response.
    And yes, even if our iron levels in our body goes down drastically, no lion dates!
    Btw, Ms Periyasamy wears pottu and sindhoor too,may be its not sentimental but just a fashion statement.Paguththarivu pottu may be!!!
    Pongappa , oorai emathuvadhai niruththunga.
    Sorry to say this , I know many of our sisters or mothers arent like that, but a small section of them watch these TV newsreaders who dont wear thali and admire them for their sponsored saris.
    Will they stop watching silly serials and distorted Ramayans on TV?
    Will they wake up before its too late?
    Will all [ both male and female viewers]who celebrate holy festivals by watching actors and actresses on TV stop that?
    as some people say here, our work starts at home. Its tough work.

  72. ///இந்தியன் என்று கூறிக்கொள்ளும் நண்பரே, 53 இராம பக்தர்கள் கொல்லப்பட்டதற்காக 800 முகமதீயர்களை கொன்ன பாரதிய ஜனதா ‘communal’ என்றால் இந்திரா காந்தி ஒருவர் கொள்ளப்படதற்க்காக 5000 சீக்கியர்களின் இரத்தத்தை குடித்த காங்கிரஸ் எந்த விதத்தில் ’secular’ என்று கூறுகிறீர்கள்?? ///

    வள்ளுவன் அவர்களின் கேள்வி கோடி பெறும். ஆனால் இதை உணராத மூடர்களே இந்தியாவில் அதிகம்.

  73. ///vidya
    8 November 2009 at 12:36 pm
    ஐயா சாரங் அவர்களுக்கு,
    வணக்கம்
    ஆனால் இந்தக் கட்டுரை எழதியவர் தேவை இல்லாமல் ஹிந்து இயக்கங்களை எதற்காக மட்டம் தட்டும் தொனியில் எழுதவேண்டும்.//////

    திரு வித்யா நிதி அவர்களே, உங்கள் சேவைகளுக்கு தலைவணங்குகிறேன்.

    ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த கட்டுரையை எழுதிய தமிழ்செல்வன் இந்து இயக்கங்கள் மீது குற்றம் சுமத்தவில்லை என்றே நினைக்கிறேன். நம்முடைய இயலாமையை குறிப்பிட்டு வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதே உண்மை. அந்த வேதனையை எல்லா இந்து குடும்பங்களும் அனுபவிக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால் ஒரு கிறிஸ்தவ நிறுவனம் தன் தொழிலை லாபகரமாக நடத்த தேவையான மார்க்கெட்டிங் ஆட்கள் வைத்திருப்பதை போல நம்மிடையே நிறைய பிரசாரகர்கள் இல்லை என்பதே குறை.

    அதனால் தான் ஓங்கி குரல் கொடுக்கும் சக்தி கொண்ட சில அமைப்புகளை எங்களைப்போன்ற அப்பாவிகள் நம்ப வேண்டியிருக்கிறாது. பி ஜெ பி போன்றவர்களே மௌனம் சாதிக்கும் போது நமக்கு என்ன செய்யவென்று தெரியவில்லயே! இதற்கு என்ன தீர்வு. என்னால் முடிந்த வரை இது போன்ற கட்டுரைகளை நமது நண்பர்களுக்கு சொந்தக்காரர்களுக்கு அனுப்பி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உதவுகிறேன்.

    ஒரு சாமானியன் இதற்கு மேல் என்ன செய்யமுடியும் என்னும் போது ஒரு வேதனை பிறக்கத்தான் செய்கிறது. இந்தக் கட்டுரையிலும் அப்படிப்பட்ட வேதனையே வெளிப்படுகிறது எனலாம்.

    எனவே இணைந்து கை கொடுத்து இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தால் நம் எல்லோருக்குமே நல்லது நண்பரே. வருத்தத்தை கைவிடுங்கள் தமிழ் ஹிந்துவுக்கு தோள் கொடுங்கள் . ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்றுபடுங்கள். முடிந்த வரை நம் கருத்துக்களை எல்லோருக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு உண்டாக்குங்கள். இது என் பணிவான வேண்டுகோள்.

    நன்றி
    அன்புடன்
    ராம்

  74. //Parthasarathi
    8 November 2009 at 3:51 am
    நானும் லயன் டேட்ஸ் ‍நிர்வாக இயக்குனருக்குக் கடிதம் அனுப்பிவிட்டேன்.
    இமெயிலிலும், தனித்தபாலிலும்.

    Ungal sevai thodaruttum endru///

    வேதனையில் பங்கு கொண்டு எதிர்ப்பிற்கு கை கொடுத்ததற்கு நன்றி நண்பரே.

  75. ////திருச்சிக் காரன்
    8 November 2009 at 12:42 am
    ரஜினி கமல் இருவரும் சிவன் வேடம் போட்டு,

    சிவன் வேடத்திலேயே பப்பில் கம் வூதி உடைப்பது இதை எல்லாம் செய்வதாக காமெடி என்று எடுக்கிறார்கள்./////

    மிகவும் உண்மைசார். அதற்காக அப்படி நடித்த நடிகர்களின் மீது குண்டு வீசினால் தான் நிறுத்துவார்கள் என்னுமளவிற்கு பயப்படுத்த முஸ்லீம்களைப்போல் நம்மால் முடியுமா? சாத்வீகமாக எடுத்துச் சொல்லியே பழகிவிட்டோம். இனி எல்லாவற்றிர்கும் தெருவில் இறங்கி போராட வேண்டும் போல் இருக்கிறது.

  76. நம் நாட்டில் பல்வேறு இந்து இயக்கங்கள் ஆன்மீகம், கலாசாரம், கல்வி, மகளிர் மேம்பாடு, குழந்தைகள் காப்பு, என பல தளங்களில் மாபெரும் சேவை செய்து வருகின்றன. அனைத்து இந்து இயக்கங்களின் மீதும் மதிப்பு வைத்திருப்பவன் நான். அவ்வியக்கங்களைச் சேர்ந்த சில தலைவர்களிடமும், பல தொண்டர்களிடமும் தொடர்பு கொண்டவன். ஒரு தனிப்பட்ட இந்துத்துவவாதி என்கிற முறையில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்துடன் மட்டும் என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ளாமல், அவை ஏற்பாடு செய்கின்ற சேவைகளிலும், போராட்டங்களிலும், என்னால் முடிந்த போது கலந்துகொள்வதும் உண்டு. இயக்கங்களின் தொடர்பு இல்லாமல் பல தனி மனிதர்கள் பலவிதமான சேவைகளை இந்து சமுதாயத்தினருக்குச் செய்து வருகிறார்கள். அம்மாதிரியான தனி மனிதர்களின் சேவைகளிலும் சில சமயங்கள் பங்கு கொள்வதுண்டு.

    ஆர்.எஸ்.எஸ் / வி.ஹெச்.பி/ இந்து முன்னணி இயக்கங்களின் மீதும் பெருமதிப்பு வைத்திருக்கிறேன். சொல்லப்போனால் இன்று நமது நாட்டில், சுதந்திரம் பெற்ற பின்னர் உள்ளான பன்முனை தாக்குதல்களையும் மீறி இந்துத்துவம் நிலைத்து நிற்கிறது என்றால் அது சங்க இயக்கங்களினால் தான் என்றால் அது மிகையாகாது. சங்க இயக்கங்களின் தன்னிகரில்லா சேவைகளை நன்கு அறிந்தும் இருக்கிறேன். பா.ஜ.கட்சி ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதற்கே என் வாக்குகளை அளித்திருக்கிறேன்.

    நான் ஒரு இந்து. இவ்வியக்கங்கள் இந்நாட்டின் இந்துகளால் தங்களின் பிரதினிதிகளாக அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. நானும் அவ்வாறே நம்புகிறேன். ஆகவே, இவ்வியக்கங்களின் ஆதரவாளன் என்கிற முறையில் என் உணர்வுகளை நேர்மையான முறையில் இக்கட்டுரையில் பதிவு செய்ய எனக்கு உரிமையும் உண்டு, அருகதையும் இருக்கின்றது. அவ்வாறே என் கருத்துக்களைப் பதிவும் செய்திருக்கிறேன். சக்தி வாய்ந்த இயக்கங்கள் இருந்தும் இவ்விஷயத்தில் ஒரு போராட்டம் நடத்தப் படவில்லையே என்கிற ஆதங்கத்தில் தான் என் வருத்தத்தைச் சொல்லியிருக்கிறேனே ஒழிய, நம் இயக்கங்களைக் குறை கூறுவதோ அல்லது அவ்வியக்கங்களைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்துவதோ என் நோக்கமன்று.

    ஆகவே, என் உணர்வுகளை இக்கட்டுரையைப் படிக்கும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதையும் மீறி நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் சகோதர சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்பதால் நான் எந்த விதத்திலும் குறைந்து போகப்போவதில்லை.

    பொது வாழ்க்கைக்கு வந்த பின்னால் விமரிசனத்திற்கு அஞ்சினால் முடியுமா? (:-))

    ஆனால் விமரிசனம் செய்பவர்களுக்கு அருகதை வேண்டும் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். இங்கே எனக்கு அருகதை மட்டுமல்லாமல் உரிமையும் உண்டு என்பதை மேலே தெளிவு படுத்தியுள்ளேன்.

    நன்றி, அன்புடன்,

    தமிழ்செல்வன்.

  77. “ய‌ப்பா ய‌ப்பா ஐய‌ப்பா” என்ப‌து போன்ற‌ ட‌ப்பாங்குத்து பாட‌ல்க‌ள் இந்து க‌ட‌வுள்களின் பெய‌ரை வைத்து வ‌ருகின்ற‌ன‌.
    “குருவாயூர‌ப்பா, குருவாயூர‌ப்பா” நான் கொண‌ட‌ காத‌லுக்கு நீதானே சாட்சி… என்று காதைப் பிளக்கின்ற‌ன‌.

    திருவாள‌ர் பால‌ச்சந்த‌ர் , ர‌ஜினியை விவேகான‌ந்த‌ர் போன்ற‌வ‌ர் என‌ வ‌ர்ணித்து புக‌ழார‌ம் சூட்டுகிரார். மாவீர‌ர் அலெக்சான்ட‌ர், நெப்பொலிய‌ன் போன‌பெட் என்றெல்லாம் கூறி வெண்ணையை வைக்க‌லாம‌ அல்ல‌வா? விவெகான‌ந்த‌ர் ‌தான் கிடைத்தாரா?

    ஆனால் நாம் இதை எல்லாம் க‌ண்டு கொள்வ‌தில்லை. சினிமாக் கார‌ர்க‌ள் புரொகிராம் டீ.வி,யிலே வ‌ந்தால், வீட்டு வாச‌லில் க‌ட‌வுளே வ‌ந்து நின்றாலும் நாம் க‌ண்டு கொள்ள‌ப் போவ‌தில்லை.

    எம‌ன் உயிரைப் ப‌றிக்க‌ வ‌ந்த‌ போது மார்க்க‌ண்டேய‌ன் சிவ‌லிங்க‌த்தைக் க‌ட்டிக் கொண்ட‌ தாக‌வும், அப்போது சிவ‌ன் எம‌னை விர‌ட்டிய‌தாக‌வும் கூறுகிரார்க‌ள் அல்லவா?

    எப்பொதுமே சினிமா , கிரிக்கெட் போன்ற பொழுது போக்கு நிக‌ழ்ச்சிக‌ளுக்காக‌ டீ.வி யிலெ க‌தியாக‌ இருக்கும் நாம், ந‌மக்கு ம‌ர‌ண‌ம் போன்ற‌ பிர‌ச்சினை வ‌ந்தால் என்ன‌ செய்ய‌ப் போகிரோம், அந்த‌ டீ.வியை ப‌ற்றிக் கொண்டால் அதில் புரொகிராம் கொடுக்கும், குஷ்பூ, ந‌மீதா, த‌மன்னா போன்ர‌வர்க‌ளோ, அல்ல‌து டோனி, டென்டுல்க‌ர், சேவாக் போன்ர‌வ‌ர்க‌ளோ, டீ.வி யை உடைத்துக் கொண்டு வ‌ந்து ந‌ம்மைக் காக்க‌ அவ‌ர்க‌ளால் முடியுமா?

    டீ.வி. பார்க்கும் நேர‌த்தைக் குறைத்துக் கொண்டு, அந்த‌ நெர‌த்திலே ம‌ன‌க் குவிப்பு, தியான‌ம் இவ‌ற்றில் ஈடுப‌ட‌லாமா? த‌னிமையில் செய்ய‌ப் ப‌டும் பூச‌னையும் ம‌ன‌க் குவிப்பு, தியான‌ம் போல‌ வ‌லிமையான‌து என‌ எண்ணுகிரேன்.

  78. ///Ramesh
    7 November 2009 at 8:57 pm
    What is the full name of sriram?
    Robert sriram,
    Peter sriram,
    Antony sriram

    Please check.///
    இது நல்ல கேள்வி.. யோசிக்க வேண்டிய விஷயம். இப்பல்லாம் வெறும் பேர வெச்சு நம்பமுடியலியே.

  79. தமிழ்செல்வன் அருமையான பணி செய்திருக்கிறார். நாம் அனைவரும் அவருக்குத் தோள் கொடுக்க வேண்டும்.இருந்தாலும் இந்து இயக்கங்கள் மீது குற்றம் சுமத்தும் வரிகளைத் தவிர்த்திருக்க வேண்டும். இந்து இயக்கங்கள் தமிழ் நாட்டிலுள்ள சூழ்நிலையில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. வீரத் துறவி ராமகோபாலன் வணக்கத்துக்குரியவர். அவர் செய்யாததைக் கட்டுரையாளரால் செய்யமுடியாது. மற்றவர் மீது குறை சொல்லும் பணி இயக்கப் பணி ஆகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  80. ///அதிக வருமானம் வந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்திற்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு மலைவாழ் மக்களிடையே அவர்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களால் முடிந்தால் நீங்களும் வாருங்கள். ஜெய் ஸ்ரீராம்.///

    திரு வித்யா நிதி அவர்களே,
    உங்களை போன்ற,சுயநலமில்லாத,சமூக சேவை செய்பவர்களின்,திருப் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

    நம் இந்து நண்பர்கள் அனைவரும் ,தொலைக் காட்சி ஊடகத்தில் நம் இந்து மதத்தின் மீதான இம்மாதிரியான தாக்குதலுக்கு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி செய்ய வேண்டும்.

    மேலும் இதை போன்ற பல இணைய தளங்கள் மூலமாகவும் இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் படி செய்யவேண்டும்.

  81. ////ந.உமாசங்கர்
    7 November 2009 at 8:29 pm
    நானும் லயன் டேட்ஸ் ‍நிர்வாக இயக்குனருக்குக் கடிதம் அனுப்பிவிட்டேன்.
    இமெயிலிலும், தனித்தபாலிலும்.////

    தோள் கொடுத்தமைக்கு நன்றி உமாசங்கர்.

    மேலும் தமிழ் ஹிந்து தளத்திற்கு ஒரு வேண்டுகோள். தமிழ் ஹிந்து தளம் சார்பாக ஒரு கருத்தரங்கு நடத்தினால் அன்பர்கள் நிறைய பேர் பங்கு கொண்டு தங்கள் அனுபவங்களையும் சமூகத்தில் எவ்வாறெல்லாம் இந்து அவமதிப்பு கூட்டத்தினரால் வேதனை அடைந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்தி தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் நம் தர்மத்தை இது போன்றவர்களிடமிருந்து காக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்து அதை செயல் படுத்தவும் உதவும். கலந்து கொள்ள விரும்புவோரின் முகவரிகளை தெரிவிக்கச்சொல்லி அதன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கலாம். உண்மையில் இவ்வாறு உண்டாகும் நபர்களின் குழுவே பின்னர் மிகப்பெரிய இயக்கங்களாகி இந்தியாவையே காப்பாற்றி இருக்கிறது என்பது வரலாறு. முயற்சிக்கலாமே.

    இது ஒரு யோசனை தான். நடத்தினால் அடியேனும் பங்கு கொள்வேன். நமக்கு நாமே திட்டப்படி நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் அவசியத்தில் நாம் இருக்கிறோம் என்ற வெளிப்பாடே எனது இந்த கருத்து. நல்லது நடந்தால் சரிதான்.

  82. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழ் இந்துவுக்குப் பாராட்டுக்கள்.தமிழ்ச்செல்வனுக்குத் தாமிரபட்டமே வழங்கலாம்.

    இது குறித்து இந்து இயக்கங்க எடுத்த நடவடிக்கை: விஜய் டிவி விவகாரம் பற்றி விஜயபாரதம் இதழில் முழுப் பக்கக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது என்பதை நண்பர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  83. நன்றி நண்பர் சுப்பு அவர்களே. இங்கே சில நண்பர்கள் மனம் புண்பட்டுப் போனதை உணர்ந்து மன்னிப்பு கோரியிருக்கிறேன். மேலும் கட்டுரையிலும் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளேன்.

    அன்புடன்

    தமிழ்செல்வன்

  84. //இதே விஜய் டிவி தொலைக்காட்சியில், “நடந்தது என்ன” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் பெரும்பான்மையாக ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளையே காணலாம். அதே போல், “சன் நியூஸ்” சானலில் “நிஜம்” என்கிற நிகழ்ச்சியும், “Zee தமிழ்” டிவியில் “நம்பினால் நம்புங்கள்” என்கிற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகின்றன. ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் இந்த மூன்று நிறுவனங்களும் மேற்கண்ட நிகழ்ச்சிகள் மூலம் போட்டி போடுகின்றன. குறிப்பாக மேற்கண்ட நிகழ்ச்சிகளில், கிராமப்புறங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடக்கும் திருவிழாக்கள், ஏழை மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதையே தொழிலாகக் கொண்டிருகின்றன இந்த சானல்கள்.//-தமிழ்செல்வன்

    This must also be taken up immediately. Also those TV Prayer programmes where in Cures of diseases are claimed, I have recorded that even a CSI Pastor says these are Frauds.

    http://devapriyaji.wordpress.com/2009/10/12/tv-evangelism-and-a-pastor-views-on-it/
    http://devapriyaji.wordpress.com/2009/10/17/d-g-s-dinakaran-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/

    All those who said these Lies and those Produced and the Churches behind it -all must be seriously investigated and action must be taken

  85. லயன் டேட்ஸ்க்கு நான் அனுப்பிய மெயிலின் நகல்.

    K. கண்ணன்,

    பெறுபவர்:

    உயர்திரு. நிர்வாக இயக்குனர்,
    M/s. லயன் டேட்ஸ்.

    வணக்கம்,

    முதலில், ஒரு உபயோகிப்பாளர் என்ற முறையில் தங்களது தரமான தயாரிப்புக்களுக்கான எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால், ஒரு கசப்பான நிலை குறித்து இக்கடிதத்தை எழுதவேண்டியுள்ளது.

    தங்களால் விளம்பர உதவி செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும் விஜய் டிவியின் “நீயா நானா” நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஹிந்துக்களது நம்பிக்கைகளைக் கேலி செய்யும் விதமாகவும் ஹிந்து விரோத சிந்தனைகளை விதைக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

    நாக்குக்கு இனிதான “லயன் டேட்ஸ்” சாப்பிட்டு வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களது நம்பிக்கைகளுக்கும் தேசீய க்லாசாரத்திற்கும் ஊறு விளைவிக்கும் களைகளுக்கு இடம் கொடாமலும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே நினைக்கிறோம்.

    ஒரு இந்தியனாக எங்கள் எண்ணத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறோம். பெருவாரியான ஹிந்துக்களும் தங்கள் தயாரிப்புக்களை வாங்குகிறார்கள்.

    எனவே, இதன் மூலம் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்; உடனடியாக அந்தமாதிரி நிகச்சிகளுக்கு அளிக்கும் விளம்பரங்களை நிறுத்துங்கள்; இதுவரை தாங்கள் விஜய் தொலைக்காட்சிக்கு, அந்த மாதிரியான நிகச்சிகள் நடத்த அளித்து வந்த விளம்பர ஆதரவிற்காக வருத்தம் தெரிவித்து அந்த தொலைக்காட்சி மூலமாகவே அறிவிப்பு வெளியிடுங்கள்.

    இந்த வேண்டுகோளை தாங்கள் புறகணிக்கும்பட்சத்தில், நாங்கள் ‘லயன் டேட்ஸ்’ தயாரிப்புக்களை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும்; மேலும் அந்த முடிவை எங்கள் உறவினர்கள், நண்பர்கள், தெருவாசிகள் மற்றும் எங்கள் நகரவாசிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களின் மேல் நடவடிக்கையை எதிர்பார்த்து நன்றியுடன்,

    கண்ணன், கும்பகோணம்.

  86. Tamilsevan,

    Thanks a lot for your information. I have also sent a mail to Lion dates company. I wont use lion dates products from now onwards. I have also sent a mail to friends regarding this issue.
    Thanks a lot for your effort once again.

    Dear all,
    Please refer the below link to get more informations about the national level issues
    http://www.hindujagruti.org

    Nanri,
    Srikumar S

  87. // விசாலமான மனதுடன் கன்னியாஸ்திரீ என்பவர்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதால் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறார்களா? அல்லது அவ்வாறு அழைக்கப்படுவது வெறும் பெயர் தான், கன்னித்தன்மைக்கு அவசியம் இல்லை என்று திருச்சபை சொல்லியிருக்கிறதா? என்பதை பற்றியும் விவாதிப்போம்…கிளாடி..,இந்த விவாதத்திற்கும் தயாரா? //

    நண்பர் ராம் அவர்களின் அழைப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்; விவாதத்துக்கு நான் ஆயத்தம்; ஆனாலும் அவர் இங்கே விவரமாக அதனைக் குறித்து விவாதிக்க இயலாது; ஏனெனில் இது பின்னூட்டமிடும் பகுதியாகும்; எனவே எனது தளத்துக்கோ அல்லது நான் அழைக்கும் தளத்துக்கோ வரட்டும்; தணிக்கை செய்யாமலும் தவிர்க்காமலும் அவருடைய கருத்தினைப் பதிக்க உத்தரவாதமளிக்கிறேன்..!

  88. B.பாஸ்கர்:
    // ஆடை விஷயம் என்பது தனிமனித விவகாரம், தாலி என்பது ஒரு சமுதாய அடையாளம் //

    சத்தியமாகவே இது புரியவில்லை,நண்பரே; தயவுசெய்து விளக்குங்களேன்..!

  89. செய்தி / வலைப்பூவுக்கு நன்றி

    ஆனால் என் பார்வையில் ஒரு சிறிய வித்தியாசம் …..

    1. ஊடகங்களும், சட்டமும் ஹிந்துக்களுக்கு எதிராய் வளர்ந்துகொண்டு / பேசிக்கொண்டு இருக்கின்றனர், என்ற விஷயத்தை நான் ஓரளவு ஒப்புக்கொள்ளாத் தயார்…….. எனக்கும் இது பெரும் வருத்தத்தை தரும் விஷயம் தான்….

    2. தாலி அணிவது மட்டுமல்ல,
    - விவாகரத்து என்பதையும்
    - கருக்கலைப்பு (அபார்ஷன் ) என்பதையும்
    - முறையற்ற பால் உறவு என்பதையும்
    - கற்பில்லா வாழ்க்கை என்பதையும்
    - முதியோரை வீட்டை விட்டு விரட்டுவதையும் ………ஏதோ கடையில் காபியோ பிட்சாவோ ஆர்டர் பண்ணுவது போல சகஜமாக்கி இந்திய / ஹிந்து பாரம்பர்யத்துக்கு வேட்டு வைப்பதோடு .. பல இந்துக்குடும்பங்களை சீர் அழிக்கின்றனர்…இதே ஊடகங்கள் என்ற (உங்கள் ) எண்ணத்தை / வலைப்பூவின் எண்ணத்தை நான் ஓரளவு ஒப்புக்கொள்ள தயார்

    3. பள்ளிகளில் கருத்தடை சாதனங்கள் வழங்குவது பற்றி நடந்த / நடக்கும் விவாதங்களை படித்து இருப்பீர்கள் …இங்கேயும் ஊடகங்கள் விளையாடின

    4. இதேபோல சமீபத்தில் இ. பி கோ 377 க்கு எதிரான சிறிய போராட்டங்களுக்கு முழு வலிவும் முழு வெளிச்சமும் கொடுத்தன் ஊடகங்கள் …. இவை எல்லாம் ஒரே குறிக்கோளுடன்…அதாவது இந்து எதிர்ப்பு குறிக்கோளுடன் இருக்கலாம் என்றும் நான் ஓரளவு ஒப்புக்கொள்ளத்தயார்……

    5. அதே சமையம் இந்த சீரழிவுக்கு நாமே - அதாவது இந்துக்களே காரணம் என்றும் நான் சந்தேகிக்கிறேன்

    நாம் முன்னேற நாம் மாற வேண்டும்….. இல்லை …இல்லல நாம் தப்பிக்க நாம் மாற வேண்டும் என்ற நிலைமையில் உள்ளோம்

    உதாரணங்கள்

    - ஷஹபானோ கேசை எடுத்துப்ப்பாருங்கள் : சுப்ரீம் கோர்டென்ன, மத்திய அரசென்ன ? யார் வந்தாலும் எங்கள் தனி மனித (விவாக / விவாகரத்து ) சட்டங்களில் யாரும் தலையிட முடியாது என்று … இருதியாக …. உறுதியாக ஒரு சிறுபான்மை சொன்னது … சொன்ன வார்த்தையை காக்க போராடியது …. அந்த போரட்டம் செய்ய இந்துக்கள் தயாரா ?

    - …. தப்போ சரியோ..என் வீட்டு விஷயங்களில் நீ தலையிடாதே.. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்… உன் வேலையை நீ பார் என்று அந்த சிறுபான்மையினர் தெளிவாய், எளிதாய் சொன்னார்களே…… இதை சொல்ல இந்துக்கள் தயாரா ?

    - சரி இதெல்லாம் போகட்டும்….. ஸ்டார் டீவியோ… இல்லை எந்த மண்ணாங்கட்டி டீவியோ, ஹிந்துக்கள் மிகவும் புனிதமாய் போற்றும் தாலியை அவமத்தித்தார்கள் என்று சொல்லுகிறேம்….. ஆனால் தாலியை கயட்டி காண்பித்த அந்த ஹிந்துப் பெண்ணை ஒரு பைட்டக்கோ…..அல்லது பொதுக்கூட்டமோ போட்டு நம்மால் தண்டிக்க முடியுமா ? ….குறைந்த பட்சம் கண்டிக்க (censure) செய்ய முடியுமா ? மதத்தை விட்டு ஒதுக்க முடியுமா ? சத்தியமாய் முடியாது ….. ..

    - இந்த வலைப்பதிவையே பாருங்கள்….. ராம் ஜேத்மலானி, அருண் ஜெயிட்லி என்று வக்கீல் பிரபலங்கள் ஒரு பட்டியலே இருக்கும் தாய் நாட்டில் நாட்டில், யாரோ பாவம், ஒரு சென்னை வக்கீல் நோட்டீஸ் விட்டு இருக்கிறார்…. இவர் நோட்டீசை ஆதரித்து எத்தனை இந்துக்கள் மவுன ஊர்வலம் போகப்போகிறார்கள் ?

    - முன்பொரு காலத்தில் சாமியில்ல்லை என்று சுவற்றில் எழுதிப்பார்த்தார்கள்…. அது நடக்கவில்லை…. ஒரு நாள் அவர்கள் தலைவருக்கு மூளையின் கட்டி என்றவுடன் தொண்டர்கள் மூகாம்பிகை என்ன ? மேல் மருவத்தூர் என்ன என்று போக ஆரம்பித்து விட்டனர்…….

    ஆகவே இப்போது தாலி… கற்பு … ஓரினக் கலப்பு என்று நம் கலாசாரத்துக்கு எதிராய் தாக்குதல் ஆரம்பித்து விட்டது

    - கலாசாரம் தான் இந்தியாவின் ஆணிவேர்……

    - வடக்கே பூஜா என்ற ஒரு இந்துப் பெண் தெருவில் அறைகுறை ஆடையுடன் நடந்து போனாள்…..செய்தி படித்து இருப்பீர்கள் ……கடைசியில் பார்த்தால் அவளுக்கு மூளையில் கோளாறு என்றனர்…. உண்மை தெரியும் முன் அவளுக்கு ஆதரவுக்கு போனது யார் ? ஹிந்துக்களா …இல்லை மற்றவர்களா ? இந்த அலங்கோல ஆட்டம் மற்ற சிறுபான்மையில் நடக்குமா ? நடந்தால் அந்தப் பெண் அந்த மததில் இருக்க முடியுமா ?

    - ஊரெல்லாம் பேசியென்ன … நம் சென்னை family courtக்கு ஒரு தடவை போய் பாருங்கள் … எத்தனை ஹிந்து கேஸ்கள், எத்தனை சிறுபான்மை கேஸ்கள் என்று பாருங்கள் … உடகம் என்ன ஊடகம் … உள்ளே நம் சரக்கு இருக்கும் நிலை தெரியும் ….

    - ஊடகம் சொல்லியா ஒருத்தொருத்தியும் அலிமணி கேட்டு புருஷன் மீதும் மாமியார் மீதும் …வயதான மாமனார் மீதும் கேஸ் போடுகிறாள் ? ஊடகம் சொல்லியா *ஹிந்து* வக்கீல்கள் *ஹிந்துக்களின்* தா….யை அறுக்கிறார்கள் ????….

    என்ன சொல்ல நண்பர்களே….. நாம் முன்னேற நாம் மாற வேண்டும்….. இல்லை …இல்லல நாம் தப்பிக்க நாம் மாற வேண்டும் என்ற நிலைமையில் உள்ளோம்

    என் பார்வைக்கோணத்தில் தப்பிருந்தால் சொல்லுங்களேன்

    அன்புடன்
    சுப்பு

  90. ///glady
    8 November 2009 at 5:02 pm
    B.பாஸ்கர்:
    // ஆடை விஷயம் என்பது தனிமனித விவகாரம், தாலி என்பது ஒரு சமுதாய அடையாளம் //

    சத்தியமாகவே இது புரியவில்லை,நண்பரே; தயவுசெய்து விளக்குங்களேன்..!///

    கிளாடியாரே! நீங்கள் அனியும் ஆடை உங்கள் தனிப்பட்ட விவகாரம், உங்கள் பாதிரியாரின் ஆடை கிறிஸ்தவ அடையாளம் . அப்படித்தான். புரிந்ததா!

  91. ////கண்ணன்
    8 November 2009 at 4:25 pm
    லயன் டேட்ஸ்க்கு நான் அனுப்பிய மெயிலின் நகல்./////
    ///srikumar s
    8 November 2009 at 4:33 pm///

    கரம் குடுத்த நண்பர்களுக்கு நன்றி!

  92. அய்யா புண்ணியவான் டிடஸ் அவர்களே

    என்னை பாவி என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை அருகதையும் இல்லை :-)
    - நீங்கள் என்னை பாவி என்று கூறினால் ஒரு இஸ்லாமியர் உங்களை சைத்தான் என்று கூறுவர், காபிர் என்றும் கூறுவர் ஓகேவா? என் என்றல் அவர் மதபடியே அவர் நடக்கிறார் என்று தன நீங்கள் கொள்ளவேண்டும்.

    கேட்ட கேள்விக்கு பதிலே காணும்? வெறுமே பேசுவதை தவிர்த்து முடிந்தால் நல்ல கருத்துக்களை வைக்கவும். உங்களுக்காக மீண்டும் எனது கேள்விகள்

    * அப்போ தேவனின் வலிமையால் தான் சாத்தனும் லெட்டர் போட்டரோ?
    இதெல்லாம் உமக்கே சுத்த பேத்தலா இல்லை?.

    * உங்கள் பாவங்களை போக்கி உங்களை எல்லாம் யோக்கியர் ஆக்கின அந்த தேவனால் ஏன் உங்களை நல்ல வழியிலே நடத்தி செல்ல இயல வில்லை? - ஏன் உங்களக்கு உங்கள் தேவன் ஜபம் செய்ய வேண்டி நினவூட்டவில்லை? உங்கள்ளுக்கு நினைவூட்ட ஒரு சாத்தான் தேவை படுகிறார் - அப்போ நீங்கள் எல்லாம் உங்கள் தேவனின் கரம் பற்றிய பின்னும் பாவியாகவே உள்ளிர்கள் என்று தானே அர்த்தம்!!!?

    * இயேசு பிரஜாபதி என்றால் நீங்கதானேப்பா ஹிந்துக்களா மாறனும்

    * அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டர் - ப்ரஜாபதிங்க்ரவரு ஹிந்து தர்மப்படி/வேதப்படி ஜீவாத்மா கூட்டத்தில் ஒருவர் - அவருக்கு வயது நூறு தேவ வருடம் என்று சொல்லப்பட்டிருக்கு - அப்போ உங்க இயேசு நூறு வர்ஷத்துக்கு அப்புறம் உங்கள எல்லாம் காப்பாத்த மாட்டாரா
    ஐயோ தமிழன் மரபு கூட உங்கள்ளுக்கு தெரியாத - இன்ன செய்தாரை …..

    * இந்த பாவி மேட்டர் எல்லாம் கொஞ்சம் ஓல்ட் பேஷன் - புதுசா எதாவது சொல்லுங்க

    இப்போ புது மட்டேருக்கு வருவோம்

    டிடஸ்
    8 November 2009 at 3:54 am
    சரங்,

    //கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த சாது செல்லப்பாவே விஷம் குடித்து காட்டுவார்.

    சாது செல்லப்பா - நோட் இட் - உங்கள பினிஷ் பண்ணாம ஒருத்தர் ஓய மாட்டார் போல இருக்கே - உங்களுக்கும் டிடஸ் அவர்களுக்கும் எதாவது வைக்க வரப்பு சண்டையா

    // கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நோயாளிகளை பால் தினகரனின் கையாலும், மோகன் லாசரஸ் கையாலும் குணப்படுத்தும்போது, அவர்கள் விஷம் குடித்து காட்டமாட்டார்களா?

    குணப்படுதினா அவர் டாக்டர் - அப்போ டாக்டர் எல்லாம் விழம் குடிச்சு தான் இதை நிரூபிக்கனுமா - சுத்த பேத்தலா இல்ல

    * உங்கள் தேவன் என்ன கிறிஸ்துவனா பார்த்து தான் குணப்படுதுவார?
    - ஜாதி பேதம் பார்க்கும் தேவனையா நீங்கள் கும்புட்றீங்க? இது சட்டப்படி தப்பில்லையோ?
    * அப்போ கிறிஸ்துவனா இருகரவனுக்கு நோயே இல்லையா?
    * அப்போ யாருமே நோய் வந்து சாவறது இல்லையா?
    * பாவிகளுக்கு தானே நோய் நொடி எல்லாம் வரணும் - உங்களுக்கெல்லாம் ஏன் வருது?
    * பால் தினகரன் குணப்படுத்துவார் என்றால் அவர் ஏன் உயிர் இழந்தார்?
    * சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார் என்பது அனைவரும் அறிந்ததே - இல்ல புதுசா எதாவது கதை உண்டா?

    முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லவும்?

  93. வித்யா அவர்களே

    உங்களை புண் படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல - அப்படி ஏதேனும் செய்திருந்தால் இந்த சிறிய ஞானத்தனை மன்னிக்கவும் - நீங்கள் சொன்னது தமிழ்செல்வன் அவர்களை புண்படுத்தி விடுமோ என்று தான் நான் என் கருத்தை எழுதினேன்

    ///அதிக வருமானம் வந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்திற்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு மலைவாழ் மக்களிடையே அவர்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களால் முடிந்தால் நீங்களும் வாருங்கள். ஜெய் ஸ்ரீராம்.///

    அடியேனும் பங்களிக்க வருகிறேன்!!! உங்கள் இ-மெயில் முகவரியை கொடுங்கள் - உங்களை தொடர்பு கொள்ளுகிறேன் - என்னுடைய இ-மெயில் முகவரி - “srsarangan@gmail.com”

  94. அன்புள்ள நண்பர்களே , இணைய தளம் பயன் படுத்தாத மக்களையும் , இந்த கட்டுரை மற்றும் நிகழ்வு , சென்றடையும் வகைகள் , நடந்த நிகட்சியை சுருக்கமாகவும் ,எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஈமெயில் முகவரிகளை , SMS மூலம் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் .
    மேலும் அந்த தொலைக்காட்சியை புறகணிக்க வேண்டுகோள் விடுக்கவும் .என்னஎன்றால் , அந்த நிகட்சி , ஒரு நல்ல குடும்பத்தை எப்படி சிரழிக்கும் என்பதை அனைவரும் அறிவர் .
    நம்மில் இருக்கும் , வழக்கறிஞ்சர்கள் ஒவ்வொரு உரிள்ளும் , அந்த நிகட்சி , அதன் தயாரிப்பாளர் மற்றும் அதை நடத்தியவர்கள் , அந்த நிகட்சியை sponsor செய்தவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கு பதிய வேண்டும்.

  95. அன்புள்ள சுப்பு அவர்களுக்கு , நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை,ஆனால் இப்பொது தேவை படுவது ஒரு அவசர அறுவை சிகிச்சை.இனிமேல் எந்த உடகமும் இந்த தவறை செய்ய மிகவும் தயங்க வைக்கவேண்டிய சிகிச்சை, தயவு செய்து , இந்த பிரிச்சனையை திசை திருப்பாதிர்கள் . கண்ணாடி விட்டுக்குள் இருந்து கல் ஏறிய வேண்டாம் .கட்டுரையின் நோக்கமே , நம்முள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , நம்மை ஒன்றினைக்கவுமே. முதலில் அந்த தொலைக்காட்சி சேனலுக்கும் , அதை தயாரித்த நிறுவனத்திற்கும் ,நடத்தியவருக்கும் , விளம்பர உதவி அளித்த நிறுவனத்திற்கும் , ஒன்றுபட்ட ஹிந்துவின் வலிமையை புரிய வைப்போம் .
    நீதி மன்றத்தின் முன்பு அவர்களின் குற்ற செயலை எடுத்துரைப்போம் .
    வழக்கு பதிவு செய்யோம்.வாருங்கள் ……
    நம்முள் எதனை பிரிவினை இருந்தாலும் அதை மறந்து ஒன்றுபடுவோம் .

  96. அன்புள்ள கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு, தாங்கள் இந்த ஹிந்து சமூகத்திற்கு மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளிர்கள் . உங்களுக்கு,பாதம் பணிந்த நன்றி ..
    தயவுசெய்து , இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால், உலகம் முழுக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும்.
    USA, France, london இல் வசிக்கும் என் நண்பர்கள் அனைவரிடம் நடந்த நிகட்சியையும் , lion date தயாரிப்பை புறக்கணிக்கும் படியும் (அவர்களிடம் ஹிந்து என்ற உணர்வு மிக அதிகம் ) வேண்டுகோள் விடுத்தது , அவர்கள் அதை ஏற்று கொண்டுள்ளார்கள் .இதை அவர்களுடைய நண்பர்களுக்கு தெரியப்படுத்தி , அந்த நிறுவன தயாரிப்பை புறக்கணிக்க , உதவி செய்வதாகவும் வாக்கு அளித்துள்ளார்கள்.மேலும் இந்த கட்டுரையின் சுருக்கத்தை அங்குள்ள கோவில்களில் போர்டு எழுதி வைக்கவும், அந்த நிறுவன தயாரிப்பை புறக்கணிக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்க முடிவு செய்துள்ளார்கள் .
    எரிவதை புடிங்கினால் கொதிப்பது அடங்கும் ..
    தயவு செய்து, நீங்களே இதை நீதி மன்றத்தின் முன்பு எடுத்து செல்லவும் .
    மிக்க அன்புடன் ..
    வினு..

  97. Feminist Weapons of Family Destruction
    U.S. Must Stop Exporting Feminist Weapons of Family Destruction!
    http://content.msn.co.in/MSNContribute/Story.aspx?PageID=81f5b628-51d8-41cd-82f0-005ecfcb667e
    Also read
    http://www.gurumurthy.net/articledisplay.pl?2009-02-26
    The disaster of ‘me, me’
    26-02-2009
    The current Indian discourse on individual and human rights, which tends to smuggle in even gay and lesbian rights, apes the West. As India attempts to copy the West, it clearly misses the serious economic issues that confront West, thanks to its obsession with unfettered individual and human rights. Many in the West now seem to realise that continuously undermining the moral and social order has led to the present economic crisis. The West did not slide overnight. Beginning from the late 19th century, the Anglo-American West gradually moved away from a relation- based lifestyle to a contract-based lifestyle.

    While culture and tradition govern relation, law and rights inhere in contracts.

    And this move from relation to contracts became almost complete in the second half of the 20th century. With law overriding relations, even parents could not curb the rights of their wards once they legally matured.

    It is the other way. If they acted against their wards, the law would punish the parents for child abuse. So contracts replaced relations, and rule of law substituted for moral order. To what effect? The rise of unfettered individualism and undefined feminism have led to the erosion of families and a rise in divorces, singleparent families, unwed mothers, lesbians, gays and almost the collapse of traditional families. Over 50 per cent of the first marriages, 67 per cent of the second marriages, and 74 per cent of the third marriages end in divorce in the US. Over 40 per cent of births are outside wedlock. Almost half of the families are headed by a single parent.

    Also visit
    http://www.498a.org
    saveindianfamily.org
    tamil498a.blogspot.com

  98. Every Hindu has to read Mahaperiyavar Kanchi Paramacharyas “Dheivaththin Kural” which tells about our religion so nicely. These Media and Film stars are making always fun on Hindus and like Kazhaga Politicians
    Vijay TV program was so bad

    Ravikumar

  99. முதலில் தங்கள் கட்டுரைக்கு நன்றி.

    ஹிந்து மதம் பற்றிய தவறான புறிதல் ஹிந்துகளிடமே அதிகம் இருப்பதுதான் ஹிந்து மதத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சவால். மற்ற மதத்தவர்கள் ஹிந்து மதத்தை இகழ்வதையும் அதன் உள் நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்தோ தெரியாமலோ நம்மவர்கள் சிலர் இதற்கு துணை போவது வேதனையை தருகிறது. ஹிந்து மதம் எத்தகைய ஆபத்துகளால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் இந்த திட்டமிட்ட சர்வதேச சூழ்ச்சி வெற்றிபெறுமானால் அதனால் ஏற்படும் ஆபத்தான சிக்கல்கள் குறித்தும் அறியாதவர்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் இந்த தேசத்தின் ‘மத சார்பின்மை’ கொள்கை ஹிந்துக்களுக்கு எதிரானதாக எவ்வாறு மாறிக்கொன்றிருக்கிறது என்பதை நடுநிலையுடன் சிந்தித்தாலே போதும். நம் மதத்தில் பிரச்சினைகள் இல்லை என்றோ அல்லது அது பற்றி பேசுவதே தவறு என்றோ நான் நிச்சயம் கூற மாட்டேன். அனால் நமது விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதகவும் எதிர் கால இந்தியாவிற்கு நன்மை தரக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கம் நமக்கு இருப்பது மிகவும் முக்கியம்.

  100. Sarang:
    // * பால் தினகரன் குணப்படுத்துவார் என்றால் அவர் ஏன் உயிர் இழந்தார்? //

    நண்பரே, இறந்தது பால் தினகரனின் தகப்பனார் என்று நினைக்கிறேன்;
    அவரும் வயோதிகத்தினிமித்தமே மரித்தார் மற்றும் நீண்டகாலமாகவே பல்வேறு உடல் உறுப்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்பட்டு வந்தார்;
    அந்த பா (வா) திப்புகளுடனே பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யும் பணியினை ஒரு தவமாகவே செய்து வந்தார்;

    அவர் தனது வாழ்வில் ஒரு நாளும் ஒருவரையும் கடிந்தோ புண்படுத்தியோ பேசியதில்லை; ஆனாலும் அவரை தூஷிக்காதோரும் அவரது வளர்ச்சியினைக் கண்டு பொறாமை கொள்ளாதோரும் மிகக் குறைவு; மேலும் அவர் சாதாரண மேஜிக் நிபுணரைப் போல இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என சவால் விட்டு அற்புத வித்தை செய்தவரல்ல; மனதுருக்கத்துடன் இறைவனிடம் பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை மட்டும் செய்வார்;

    B.பாஸ்கர்:
    // ஆடை விஷயம் என்பது தனிமனித விவகாரம், தாலி என்பது ஒரு சமுதாய அடையாளம் //

    glady:
    // சத்தியமாகவே இது புரியவில்லை,நண்பரே; தயவுசெய்து விளக்குங்களேன்..!//

    ram:
    ///கிளாடியாரே! நீங்கள் அனியும் ஆடை உங்கள் தனிப்பட்ட விவகாரம், உங்கள் பாதிரியாரின் ஆடை கிறிஸ்தவ அடையாளம் . அப்படித்தான். புரிந்ததா!///

    நண்பராம் பாஸ்கர் அவர்களை முந்திக் கொண்டாராம், எதையோ சொன்னாராம், இவரும் நண்பராம்… பாஸ்கராம்..?

    போகட்டும், தாலி என்பது பொதுவான விஷயம் சமுதாய அடையாளம் சம்பந்தமான விஷயம் என்பதை நான் ஏற்கனவே அறிவேன்; போலீஸ் ரெய்டுக்குத் தப்பிக்கவும் பலமுறை பலருக்கு தாலி உதவுகிறது என்பதையும் அறிவேன்; ஆனால் நான் எடுத்துக் கொண்ட உதாரணம் தேசப் பிதாவான காந்திஜியின் ஆடை அடையாளம்; அதாவது அவருடைய எளிமையின் அடையாளம் ஆங்கிலேயருக்கு கேலியாக இருந்தது;

    அது போலவே இந்திய பெண்டிர் பெருமையுடன் சுமக்கும் மாங்கல்யம் சிலருக்கு கேலியாக இருக்கிறது; எனவே இரண்டும் சமுதாய அடையாளமே; காந்திஜி தனி மனிதன் அல்ல; அவர் இந்தியாவின் அடையாளம்; எனவே தான் இந்தியாவின் கரன்ஸி ஒவ்வொன்றிலும் அவரது புகைப்படம் இடம் பெறுகிறது;

    மற்றபடி கிறிஸ்தவ விவாததுக்குள் என்னை இந்த தளத்தைப் பொறுத்தவரை யாராலும் இழுக்க முடியாது; அது எனக்குத் தேவையில்லாத விவாதப் பொருளாகும்.

    தாலியின் சென்டிமென்ட்டைப் பொருத்தவரை நானறிந்தவரை
    ஆணைப் பொருத்தவரை பெருமாள் அல்லது சிவனின் பிரதிநிதியாகவும் பெண்ணைப் பொருத்தவரை அவள் சக்தியின் வடிவமாகவும் அல்லது அந்த இஷ்ட தெய்வத்தின் பெண் ரூபமாகவும் இருக்கிறாள்; எனவே தான் பிறக்கும் குழந்தைகளுக்கும் தெய்வங்களின் பெயர்களையே வைக்கிறோம்;

    இதன்படி கணவனே கண்கண்ட தெய்வம் என்று இருந்தாலும் ஒரு பெண்ணைப் பொருத்தவரை கணவன் இரண்டாம் பட்சமே; எனவே தான் தாலிக்கு இருக்கும் மரியாதை அதைக் கட்டிய கணவனுக்கு பல சமயங்களில் கிடைப்பதில்லை;

    அவனை விட அவள் தாலியை சுமக்கக் காரணமாக இருக்கும்-
    அந்த தாலியை இந்த ஆண் கட்ட காரணமாக இருந்த அவளது இஷ்ட தெய்வமான பெருமாள் அல்லது சிவனுக்கே கட்டுப்பட்டவளாக இருக்கிறாள்;

    அதே போல ஆணுக்கும் மேற்சொன்ன அனைத்தும் பொருந்துகிறது;
    சற்று நிதானித்து நான் சொல்வது தவறாக இருந்தால் என்னை திருத்துங்கள்; நன்றி..!

  101. வணக்கம்

    நண்பர் ஸ்ரீ ராம் அவர்களே நண்பர் கிளாடிக்கு என் சார்பில் ஒரு விளக்கம் தந்தமைக்கு நன்றி, இக்கட்டுரை தொடர்பாக தொலைக் காட்சி மற்றும் லயன் டேட்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் இந்த தள நண்பர்களின் சார்பில் நன்றி.

    //நாம் முன்னேற நாம் மாற வேண்டும்….. இல்லை …இல்லல நாம் தப்பிக்க நாம் மாற வேண்டும் என்ற நிலைமையில் உள்ளோம் //

    ஸ்ரீ சுப்பு அவர்களுக்கு, நீங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் நூறு சதம் உண்மை, ஆயினும் இந்த நிலைப் பாடு எடுத்து இருக்க வேண்டிய கால கட்டத்தை நாம் எப்போதோ தாண்டி விட்டோம். இன்னும் சொல்லப் போனால் தவற விட்டோம் என்பதுவே சரி.

    நாம் இனி செய்யப்போவது என்ன? நண்பர் திருச்சிக் காரர் சுட்டிக் காட்டிய திரைப் படங்களில் உள்ள காட்சியை போல் மட்டுமல்ல, நமது கலாசாரம் நழுவுமாறு காணப்படும் எந்த திரைப்படம், ஊடகங்கள், எதுவாகிலும் அதை எதிர்த்து குரல் குடுக்க அனைவரும் தயாராகி இருக்கவேண்டும்.

    ஆடை குறைப்பு , ஆபாசம், இவைகளும் நமது கலாசார விரோத சக்திகளே. இதையும் எதிர்ப்பது தவறு இல்லை. இதனால் சினிமாக் காரர்கள் எதிர்த்தாலும், திரைப் படமே வராது போனாலும் அதற்காக வருந்த வேண்டியது இல்லை, அப்போதுதான் அவர்களும் இந்த மாதிரியான காட்சிகளை படமாக்குதலை நிறுத்துவார்கள். எங்கும் எதிலும் பாரதப் பாரம்பரியத்தை முன்னிறுத்துவது ஒன்றே இப்போதைய நமது குறிக்கோள். இழிவு படுத்துவதை கண்டிப்பதும் அவ்வாறே

    நாமும் அதற்காக மாறவேண்டும் என்பது இதில் கட்டாயமே. அந்நியப் பொருள்களை விரும்பாதிருப்போம், அந்நியக் கலாச்சாரத்தின் அடிப்படைகளை கொண்ட எந்த நிகழ்ச்சியையும் நமது வீட்டில் நடத்தாதிருப்போம் . முதலில் ஒரு விஷயம் நான் சொல்ல கடமைப் பட்டுள்ளேன், நாம் வணங்கும் தெய்வங்களை பார்த்து வணங்கும் போது முறைப் படி வணங்குதல் எப்படி என்று நாம் அறியாததை அறிந்து கொண்டு அதன் படி வணங்குவோம். இப்போது கடவுள்களை பார்த்து பறக்கும் முத்தம் (FLYING KISS) குடுப்பது பல இளைஞர்களிடம் வழக்கமாக உள்ளது, இது நமது கலாசாரம் அல்ல அப்படி செய்யும் இளைஞர்களிடம் அது பற்றி திருந்த செய்வோம் .

    நண்பர் ஸ்ரீ வித்யாநிதி கூறியது போல பிற்படுத்த பட்டவர்கள். மலை வாழ் மக்கள் என்று , வாழ வழி இல்லாதவர் என்று பாரபட்சம் இன்றி நம் சமுதாயத்துக்கு நம்மால் என்ன இயலுமோ அதை கட்டாயம் செய்வோம் என்று சங்கல்பம் செய்து கொள்வோம்.

    மானுட சேவையே மகேசன் சேவை, வாழ்க வித்யா நிதி.

    இத்தகைய சேவைகள் நமக்கு புதியது அல்ல எனினும், அதிகப்படுத்துவோம் என்பதே எனது கருத்து.
    ஜெய் ஹிந்த்.

  102. புண்யவான் டிடாஸ் அவர்களே

    உங்களுக்கு இன்னும் சில கேள்விகள் - இதற்க்கு பதில் சாது செல்லப்பாவோ நீங்களோ விஷம் அருந்தாமலே பதில் சொல்லலாம் - இங்கேயே சொல்லலாம் - என்னை வீணாகா உங்கள் கூட்டத்திற்கு அழைக்காதிர்கள்

    //லூசிப்பரையும் அவன்கூட உள்ள தூதர்களையும் கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே தள்ளியதின் காரணம். ஏசா 14:11-15. அவன் தன்னை தேவனுக்கு சமமாவேன் என்றதினால்தானே!
    //

    அப்படின்னா உங்களுக்கு பரலோகம் போன பிறகும் கூட பாதுகாப்பு கிடையாத?
    ரட்சிக்கப்பட்ட ஒரு ஆவி எதற்கு தன்னை தானே தேவன் என்று என்ன வேண்டும்? - இது தான் ரத்சிக்கபட்டதன் அழகா?
    இதுவும் சாத்தானின் வேலையோ?
    அப்படி என்றால் சாத்தானின் ஆட்சி பரலோகம் வரை பறந்து விரிந்து உள்ளதா?

    ஹிந்து தர்மப்படி - ஒருவன் வீடு பேரு பெற்றான் என்றால் அவன் மறுபடி பிறப்பதில்லை - கடவுளை ஆராதனை செய்துகொண்டு நிம்மதியாக இருப்பான் - அவன் மனம் பேதளிப்பதில்லை, தானும் தேவன் என்ற எண்ணம் அவனுக்கு வருவதில்லை

    நீரே முடிவு செய்யும் !!!

  103. Glady
    //நண்பரே, இறந்தது பால் தினகரனின் தகப்பனார் என்று நினைக்கிறேன்;
    அவரும் வயோதிகத்தினிமித்தமே மரித்தார் மற்றும் நீண்டகாலமாகவே பல்வேறு உடல் உறுப்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்பட்டு வந்தார்;//

    //18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.//

    இப்படி இயேசு வாக்குக்கொடுத்துவிட்டு ஏன் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை?

    ஏன் அவரை இயேசு குணப்படுத்தவில்லை?

  104. ///மற்றபடி கிறிஸ்தவ விவாததுக்குள் என்னை இந்த தளத்தைப் பொறுத்தவரை யாராலும் இழுக்க முடியாது; அது எனக்குத் தேவையில்லாத விவாதப் பொருளாகும்.////
    ஏனப்பா, இந்துக்களைப் பற்றிய விவாதத்திற்கு மட்டுமே வருவீர்களா?

  105. Dear all,

    This is excellent. I am extremely unhappy with the the way media is propagating against Hindus. But at the same time do you think we should Talibanise Hinduism ? Whatever happened to Shabano or Sister Jesmme is wrong ( eventhough Islamist and christians think the other way ) We should not follow Christianity or Islam in this regard. We should also think those religions talk moral values ( if at all ) and nothing spritual. Even after 800 Slokas Krishna tells Arjuna to find his own solution. Yes we should protest but within us we should understand Freedom( Moksha) is the only goal of life. As vidhya and Tamilselvan we should do more களபணி.

    I also sincerely ask we should ignore Gladys and should not waste our time in answering. I think Tiruchikaran has given given enough responses to Glady(s).

    Regards
    S Baskar

  106. வணக்கம்

    இப்படி ஒரு அருமயன கட்டுரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய tamilhindu.com நன்றி!

    நானும் என்னுடைய கண்டனத்தை Lion dats, Vijay Tv ku தெரிவித்துவிட்டேன்.

    மேலும் என்னுடிய நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை அனுப்பிிுள்ளேன்

    ஜெய் ஹிந்த்.

  107. நண்பர்களே
    இந்தக் கட்டுரைக்கான என்னுடய மறுமொழி நவம்பர் 8 ஆம் நாளில் எழதப்பட்டது. நான் போகப் போகத் தெரியும் என்ற தொடரை எழுதும் சுப்பு.தமிழ் செல்வன் என்னுடய இனிய நண்பர்.
    அதே நாளில் வேறு ஒரு சுப்பு இன்னொரு மறுமொழியை எழுதியிருக்கிறார். சுப்புவின் மறுமொழி குறித்து கருத்து சொல்லும் நண்பர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

  108. டிடஸ்
    6 November 2009 at 8:20 pm
    பாவிகளே. நீங்கள் பாவ பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறீர்கள். அதனால் விமர்சனம் செய்வதுதேவையாக இருக்கிறது.

    பதில்: உங்களின் பழக்க வழக்கங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலிய கடற்கரையிலும் பிறந்த மேனியாக தெரிகிறது. என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு பாவமன்னிப்பு வழங்கும் வியாபாரம் புல்லரிக்க வைக்கிறது. அன்பே உங்கள் வேதமென்றால் ஏன் நாடு நாடாக கப்பலில் சென்று அடிமைப்படுத்தி மனிதனை கொன்று குவித்தீர்கள்.

    தேவனின் வலிமையால் அனைத்து ஊடகங்களும் தேவனின் சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

    பதில்: ஏன் உங்களின் தேவ வலிமை உங்கள் மக்களின் ரெட்டை கோபுரங்களில் காணாமல் போயிற்று? சுனாமியில் காணாமல் போயிற்று? ஏன் பூகம்பங்கள் கிருத்துவர்களையும் தாக்குகின்றது? 2000 ம் ஆண்டு வருவதாய் சொன்ன தேவன் எங்கே போனார்?

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    இயேசுவின் நாமத்தினால், பேய்கள் ஓடுகின்றன. நோய்கள் தீருகின்றன.

    அப்படியானால் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வாசலில் நின்று எல்லோரையும் சுகமளிப்பது தானே? கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் என்று ஒன்றை நடத்துவதன் மூலம் இயேசுவின் நாமத்தினால் அல்ல ஊசி மருந்தால் தான் ஏதோ மக்கள் காலம் தள்ளுகிறார்கள் என்பது புரிகிறதா?

    இதே போல ஏராளமான அற்புதங்களை கொண்ட டெஸ்டிமனிகள் இருக்கின்றன.

    டெஸ்டிமனிகள் எல்லா மதத்திலும் தான் இருக்கின்றன.

    மாற்கு 16

    17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

    நவமான பாஷைகள் என்பது மற்ற மதத்தை இகழ்வது தானோ?

    18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

    இதுதான் உலக காமெடி என்பது … தெரு தெருவாய் நீங்கள் சென்று மக்களிடம் விஷம் வாங்கி குடித்தால் ரொம்ப ஈசியாக உங்கள் கட்சிக்கு தொண்டர்கள் கிடைப்பார்களே மக்கா

    சகோ. சாது செல்லப்பாவும் பிரஜாபதிதான் இயேசு என்பதை விஷம் குடித்து தனது விசுவாசத்தை நிரூபிப்பார்.

    ரொம்ப சந்தேகம் மக்களுக்கு வந்தாலும் வரும் வேணும்னா சகோ. சாது செல்லப்பா வை ஓடும் ரயில் முன் குதிக்க சொல்லுங்களேன், அல்லது இருக்கவே இருக்கிறது கரண்ட் கம்பி - எப்படி ஒகே யா? செஞ்சு காமிசிட்டார்னா நான் கூட மாறிடுறேன்.

    சகோ தினகரன் மாதிரி பாஸ்டர்கள் எவ்வளவு பேரை இயேசுவின் பெயரால் கையை வைத்து குணப்படுத்தியிருக்கிறார்கள்!

    நேற்று கூட பேப்பேரில் வந்தது சிறார்களின் மீது துணிஇல்லாமல் கை வைத்த உங்களின் வெளிநாட்டு சகோதரர் பற்றி,

    அதே வரியில் இருக்கும் ”விஷத்தை குடித்தாலும் அவர்களை சேதப்படுத்தாது” என்ற வரிக்கேற்ப இனி ஒவ்வொரு சுவிசேச கூட்டத்திலும் யார் கொண்டுவரும் விஷத்தையும் குடித்து தங்களது விசுவாசத்தை நிரூபிப்பார்கள்.

    இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால், மக்களை குணப்படுத்தும்போது, அதே விசுவாசத்தால் விஷம் குடிப்பதா கஷ்டம்?

    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
    பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.

    சொந்த மதத்திலிருந்து சுயநலத்திற்க்காக மதம் மாறிவிட்டு பாவி என்று சொல்வது உன்னைத்தானே? மக்கா?

    நாங்கள் குடித்து காண்பிக்கிறோம்.
    உயிருள்ள தேவன் எப்படி நோயாளிகளை குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தையும் முறிப்பார். நோயாளிகளை எப்படி அவர் குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தை முறிப்பதா அவருக்கு கஷ்டம்?

    நாங்கள் நடத்தும் ஒவ்வொரு சுவிசேஷ கூட்டத்திலும் உங்களை எதிர்பார்க்கிறோம். தைரியமிருந்தால் விஷததை கொண்டுவாருங்கள்.

    உயிருள்ள தேவனின் மீது எங்களது விசுவாசத்தை நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்

    அய்யோ இப்போவே கண்ணா கட்டுதே!!!!!! ஏசுவே அறியாமல் மனிதர்களை ஏமாற்றும் இவர்களை மன்னிப்பீர்களாக! ஆமென்.

  109. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,
    இந்த கட்டுரையின் நோக்கத்தை , சீர்குலைத்து , பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் கிளாடியார் அவர்களின் பின்னுட்டத்தை , தயவுசெய்து வெளியிட வேண்டாம் .

  110. i watching at every sunday the vijay tv நீயா நானா program , Mr.gopinath giving solution some time amazing some time not satisfied. but over all performence is very good.

    thanks vijay tv & Mr.Gopinath

  111. அலோ…அல்லாருக்கும் வனக்கம்பா! காத்தால ”தினமலர்” படிக்க ஸொல்ல கர்ரண்டு தொட்டு ஸாக் அட்சா மாரி படா பேஜாராயிட்சுபா. இன்னா ஸொல்றது, எப்டி ஸொல்றது, ஒன்னும் புர்ல நைனா.

    மேட்டரு இன்னானாக்கா…தினமலர் காரங்க வர்ஸா வர்ஸம் இஸ்கூல் பஸங்களுக்கு “கெலிச்சு காட்டுவோம்”-னு ஒரு ஃபங்ஸன் வெப்பாங்க. அதுல ஊர்ல கீற பெரிய மன்ஸாள் சிலர இட்டாந்து இஸ்கூல் பஸங்கலுக்கு மூளைல ஏற்றாமாரி புத்தி ஸொல்ல வெப்பாங்க.

    இந்த வர்ஸம் ஃபங்ஸன்ல நேத்து நம்ம விஜய் டிவி கோபிநாத்த இட்டாந்து பஸங்களுக்கு அறிவுர ஸொல்றா மாரி பேச ஸொல்லிகறாங்க தினமலர் காரங்க. அப்பாலிகா எங்க போய் முட்டிக்கற்து ஸொல்லு.

    யார் யாரு இஸ்கூலு பஸங்கலுக்கு புத்தி ஸொல்றதுன்னு தாவல, அஆங்! இன்னா கொடும இது வாத்யாரே! கோபிநாத் பேச ஸொல்லி கேட்டா பஸங்க உருப்புடுவாங்களா?

    தினமலர் காரனுங்களுக்கு மண்டைல மஸாலா கீதா, இல்ல மண்ணு கீதா? இஸ்கூலு பஸங்களுக்கு அறிவுர ஸொல்றா மாரி பேஸர்துக்கு நம்ம ஊர்ல ஆளா இல்ல? போயும் போயும் கோபிநாத்தயா இட்டுனு வர்னும்?

    இன்னாவோ போ நைனா….ஒன்னியும் புர்ல. ஊரு கெட்டு போச்சு. அது மட்டும் புரியுது. அவ்ளோ தான்.

    இன்னா..வர்டா..

    மன்னாரு.

  112. #
    டிடஸ்
    8 November 2009 at 3:54 am

    சரங்,

    பாவிகளே, விஷத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம்.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த சாது செல்லப்பாவே விஷம் குடித்து காட்டுவார்.

    //கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நோயாளிகளை பால் தினகரனின் கையாலும், மோகன் லாசரஸ் கையாலும் குணப்படுத்தும்போது, அவர்கள் விஷம் குடித்து காட்டமாட்டார்களா?

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    இனி சுவிசேஷ கூட்டங்களில் விஷம் குடித்து காட்டவில்லை என்றால் ஏன் என்று கேளுங்கள்.//

    Quiet a few tried and few died and the Practice of holding Snakes are slowly banned in AMERICA.
    I remember a article on this in
    http://www.devapriyaji.wordpress.com

  113. இங்கே சில நண்பர்கள் மறுமொழிகள் இடும்போது உணர்ச்சி வேகத்தில் ஒரு குறிப்பிட்ட நுகர்பொருளையும் விஜய்டிவியையும் புறக்கணிக்கச் சொல்கிறார்கள் - இது மறுமொழிகள் இடும் தனிப்பட்டவர்களின் கருத்து என்பதை தமிழ்ஹிந்து.காம் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

    ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி சார்ந்த நமது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம். அதே வேளையில் அதே குறிப்பிட்ட டிவியில் நல்ல நிகழ்ச்சி வருமானால் அதனை நாம் பாராட்டுவோம். இதுவே தமிழ்ஹிந்து.காம் தளத்தின் நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  114. Dear brothers- I know how much you are affended about our cultural destruction. But unfortunately our community people are not same like before. If you visit US, our girls are trying to imitate more than westerners. Indian culture is being destroyed by our own people.

    (Edited.)

  115. என் பதிலை ஆமோதித்த வாசகர்களுக்கும், எதிர்த்தவர்களுக்கும்….. படித்தவர்களுக்கு நன்றி

    சில விளக்கங்கள் :

    1. நானும் லயன்ஸ் டேட்ஸ் இம்பெக்ஸுக்கு நேற்று ஒரு மென் மடல் எழுதியுள்ளேன்…எதிர்ப்பையும்..வேதனையும் தெரிவித்துள்ளேன்….

    2. இந்த பிரெச்சனையை கோர்டுக்கு கொண்டு செல்போருக்கு என் வணக்கமும் நன்றியும். இதற்காக நிதியோ கையெழுத்து தொடரோ தொடங்கினால் என்னால் ஆனதை செய்ய தயார்

    3. இந்த திரியில் உள்ள உட்கருத்துக்கு நான் எதிரி அல்ல… திசை திருப்ப என் முதல் பதிவை இடவில்லை

    4. இந்திய கலாசாரத்துக்கு பெரும் தாக்குதல் உள்ளிருந்தே ((வெளியே இருந்து இல்லை) என்பது என் திடமான நம்பிக்கை….

    சில சமீபத்திய உதாரணாங்கள்

    5. தென்னாடுடய சிவனே போற்றி என்பவன் வில்லனாகவும், மற்ற மதத்தினர் அன்பொழுகும் நல்லவர்களாகவும் சித்தரித்து ஒரு படம் வந்தது …. இந்த படம் ஒண்ணும் வெளிநாட்டு சதி என நான் நம்பவில்லை …. பொதுவாய் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்ர் கோயில் ஆண்டி என்ற எண்ண ஓட்டத்தின் வடிகாலே இந்த சிந்தனை
    - அந்த படத்தை இந்துக்கள் பார்காமல் இருந்தனரோ ? இந்துக்கள் படத்தை பார்த்தது பணம் போட்டவர்களின் பையை ரொப்பியது போகட்டும் …. ஒவ்வொரு பெரிய ஊரிலும் ஒரே ஒரு நாளாவது அந்த படத்தை எதிர்த்து ஒரு மவுன …சாத்வீகமான ஊர்கோலம் போனோமா ? இல்லை … படத்தை எடுத்த்து யார் ? நம்மவரா ? மார்ஸில் இருந்தா வந்தார் ?
    - நாளை அவருக்கு விழா எடுத்தால் முதல் வரிசையில் நாம் இருப்போமா ? இல்லை சிறுபான்மையா ?

    எங்கே போகிரோம்

    6. ஆகா அவர் கம்யூனிஸ்டு, இவர் பெமினிஸ்டு ….. இவர் இந்து எதிரி அவர் இந்து எதிரி என்கிறோம்….. அது ஏன் சார் …பெமினிஸ்டும் …அல்ட்ரா பெமினிஸ்டும் 100க்க்கு 90 சதவிகிதம் இந்துக்களாய் இருக்கின்றனர் ???
    - இந்த விஜை டீவி ஒளிபரப்பில் தாலியை கைய்யில் பிடித்துக்க்க்கொண்டு இருக்கும் பெண் என்ன சிறுபான்மையா ? அமேரிக்காவில் இருந்து வந்தாரா ?
    - புருஷனுக்குத்தான் மதிப்பில்லை…. புருஷன் சம்பாதித்துபோடும் மெஷின் என்று இந்த அம்மா நினைத்தால் தாலியை ஏன் கட்டிக்கிட்டார் ? யாராவது இவரை கட்டடாயப்படுத்தி இந்துவாய் …தாலி கட்டிய இந்துவாய் இருக்க சொன்னார்களா ? இந்த பொம்பளை யார் ? இவரை நாம் கண்டித்தோமா ? …. யாராவது கேட்பார்களா என்று பார்த்தேன்… யாரும் கேட்டதாய் தெரியவில்லை … நான் கேட்டேன்

    7. தாலி என்ற இழை ((thread) வந்ததால், தாலி தார்காலீகமாய் ஒரு தொலைக்கட்சியில் மட்டுமல்ல, கோர்ட்டில் பல ஆயிரம் கேஸ்களில் தாலி எடுக்கப்படுகிறது …. ..குடும்பங்கள் சீரழிகின்றன…. முதிய பெற்றோர்கள் …தெருவில் நிற்கின்றனர் …. இவை பெரும்பாலும் இந்துக்களிலேயே நடக்கிறது …. தகப்னை அறியாப் பிள்ளைகள் ((விவாகரத்தினால்) உருவாகின்றனர் என்பதை யாரும் சொல்லாததால், நான் முன்வைத்தேன்…

    8. You should become the change you wish to see…. என்பதே என் நம்பிக்கை

    9. 300 … 400 ஆண்டுகள் நம்மை பலரும் ஆண்டனர். இந்து மதத்துக்கு எதிர் என்று பகிரங்கமாய் இருந்தவர்கள் ஆண்ட பல நூற்றாண்டுகளை தேவாரமும் திருவாசகம் பிரபந்தங்களும் வேதமும் கோயிலகளும் ஆயிரம் கால் மண்டபங்களும் தாண்டி வந்துவிட்டன…. …. இன்றைய தாலி கழட்டும் அவலத்தை …. கோர்ட்டு கோர்டாய் குடும்பங்கள் நிற்கும் அவலத்தை நாம் நல்லபடியாய் தாண்டுவோமா என்ற என் ஆதங்கம் தான் என் பதிகளாய் வெளிப்படுக்கின்றன….

    அன்புடன்
    சுப்பு

  116. While reading this arcticle , I realized that how much Vijay T.V neeya nanna program impacted in the hindu society.
    Let me view internally
    Same Vijay is telecasting bakthi program where all hindu related activties are showing.
    Don’t create pain or problem for others , it is not at all a good human thinking or good god won’t like
    Yaarodia valarchiyum Yaaralum thaduka mudiyathu…

    exepcting healthy reply…

    ~Kumar.

    (comment edited & published)

  117. அன்புடையீர்
    தங்கள் கட்டுரையில் விஜய் டிவி ப்ரோக்ராம் பற்றி குறிப்பிட்டவை சரிதான்.
    அதற்கு கமெண்ட் எழுதியவர்கள் நம்மிடம் குறையே இல்லாதது போலவும் மற்ற மதத்தினர் நம்மை அழிக்க பார்ப்பதை போலவும் கோபப்பட்டு இருக்கிறார்கள். நம்மிடையே இருக்கும் சிலரால் இதுபோன்ற கேலிக்கு ஆளாகிறோம். தஞ்சாவூர் பக்கம் முஸ்லிம்களும் தாலி கட்டும் வழக்கம் இப்போதும் உண்டு. மாப்பிள்ளை கட்டமாட்டார். அவர் வீட்டு மூத்த பெண் கட்டுவார். ஆனல் அவர்கள் இதுபோன்ற பட்டிமன்றத்தில் வந்து கேலி பேசமாட்டார்கள். நம் பெண்கள்தான் பேசுவார்கள். ஆணோ பெண்ணோ இந்தபோக்கை நாம் தடுத்தாலே பாதி வெற்றிதான்.

  118. ஹிந்து மதம் என்பது மற்ற வெளிநாட்டு மதங்களை போல், குறுகிய எண்ணங்களை வளர்க்காத அற்புத மதம். அது தன்னகத்தே, வைணவம், சைவம் போன்ற அருமையான ஷன்மதங்களையும், ஜைனம் மற்றும் புத்தம் போன்ற அற்புத அஹிம்சை மதங்களையும் கொண்டு, நம்மை சுயமாய், சுதந்திரமாய் சிந்திக்க வைக்கும் மதம். இதில் எல்லோர் கருத்துக்கும் இடமுண்டு. எனவே விஜய் டிவி போன்றவை, தாலி போன்றவை பற்றி ஒளி பரப்பிவிட்டதால நம் பண்பாடு அழியாது. எதிராளி என்ன சொல்லுகிறான் என்ற அடிப்படையில் மக்கள் பார்ப்பார்களே ஒழியே, மக்கள் மாறிவிட மாட்டர்கள். இருவர் சண்டை போட்டால் ரசிப்பது காலம் காலமா தமிழனிடம் இருக்கும் குணம். ரசித்துவிட்டு அவா அவா வேலயே பார்க்க போயிடுவா. இன்னும் நம் இந்தியா, வெளிநாட்டினர் வாழ விரும்பும் ஜன நாயக நாடாய் இருப்பதற்கு காரணமே, அடுத்தவர் கருத்தை காது கொடுத்து கேட்பதால்தான். இல்லாவிட்டால் இதுவும் ஒரு தாலிபான் நாடாக ஆகிவிடும். நம் ஹிந்து கலாச்சாரத்தை பரப்ப ஏதேனும் டிவி சேனல் ஆரம்பித்து, ஸ்பான்சர் செய்தால் என்ன?

    அது சரி… ஏன் இக்கட்டுரையில் பெண்கள் பின்னூட்டம் இடுவதில்லை என்று கவனித்து சரி செய்வீர்களா?

  119. வர்மன் அவர்களே

    // எனவே விஜய் டிவி போன்றவை, தாலி போன்றவை பற்றி ஒளி பரப்பிவிட்டதால நம் பண்பாடு அழியாது. எதிராளி என்ன சொல்லுகிறான் என்ற அடிப்படையில் மக்கள் பார்ப்பார்களே ஒழியே, மக்கள் மாறிவிட மாட்டர்கள்

    இது உண்மை இல்லை - திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சொன்னால் மக்கள் மனம் மாறக்கூடும்

    அப்புறம் ஏன் மது/புகை விளம்பரங்களை தடை செய்கிறார்கள் - இவ்விலம்பரங்கலாய் தடை செய்ததால் 60% பேர் புதிதாக புகைக்கு அடிமை ஆகாமல் தடுத்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றனா ( இந்தியாவில் புகை விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட பின்னர் ITC நிறுவனம் 4000 கோடிக்கு மேல் வருவாய் இழந்துள்ளது)

    நீங்கள் colgate paste உண்மையிலேயே நல்ல பேஸ்ட் என்று நம்பியடுண்டா இல்லையா? - ஒரு டாக்டரை வைத்து சொல்வதால் பலர் நம்புகிறார்கள்

    Ponds laboratary இதை பரிந்துரைக்கிறது என்று கூறுவார்கள் - உண்மையில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது

    தாலி அணிவது வேஸ்ட் என்று ஒரு பத்து முறை அழுத்தி சொன்னால் உண்மை என்று நம்பும் ஜனம் தான் நம் ஜனம்

    திராவிட கழகத்தினர் பேசி பேசி தானே மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தார்கள் - ஈ.வே.ராவை எல்லாம் பெரியார் என இங்குதானே கூப்பிடுகிறார்கள்

    எறும்பு ஊற காலும் தேயும் என்பது உண்மையே - இவைகளை நாம் உதாசீன படுத்தினால் புல்லுரிவிகள் எங்கும் பரவி விடுவார்கள் - தட்டிக்கேட்கத்தான் வேண்டும்

  120. வணக்கம் வர்மன் , நாம் புதிதாக டிவி சேனல் தொடங்குவதை விட , ஏற்கனவே இயங்கி கொண்டுஇருக்கும் சேனலில் Time Slat வாங்கி ,
    நிகச்சி ஆரம்பிக்கலாம். இதற்கு மிகுந்த முதலிடு தேவை படாது.
    வாருங்கள் யாரவது புள்ளி வைத்து கோலத்தை ஆரம்பியுங்கள் ….

  121. புண்யவான் டிடஸ் அவர்களே,

    எங்கே ஆளை காணோம் - உங்கள் பதிலை எதிர் நோக்கியுள்ளேன்

    ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

    ஒருவனை பாவி என்று கூறி - ஏசுவே உன் பாவத்தை போக்குவார் என்று சொல்வதேல்லாம் சுத்த பித்துக்குளித்தனம்

    இது உங்களை அச்சுறுத்தி மதம் மற்றும் ஒரு அல்ப யுக்தியாகத்தான் பண்டை காலத்திலிருந்து கடைபிடிதுல்லார்கள் என்பது திண்ணம்

    நீ ஒரு பாவி அதனால் என்னை கும்பிடு என்று ஒரு சாமி சொன்னால் அது சாமி இல்லை ஆசாமி தான்

    - அப்படி சொன்னால் அது ஒரு வ்யாபார நோக்கே ஆகும் - நீ எனக்கு அடிமையைறு உன் பாவத்தை நான் போக்குவேன்

    - அல்லது ஒரு கொடுங்கோலனாக இருக்க வேண்டும் - நீங்கள் எல்லோரும் நான் சொல்வதை கேட்காவிட்டால் உங்களை கொன்று விடுவேன் சாட்டையால் அடிப்பேன் என்பது போல

    - அப்புறம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் என்ன வித்யாசத்தை சொல்வீர்கள்

    சிந்தயுங்கள் - உங்கள் கடவுள் மீது அன்பு செலுத்துங்கள் அனால் அதற்கு பாவத்தை ஒரு காரணமாக கொள்ளாதீர்கள்

  122. தமிழ்ஹிந்து » ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்…

    அத அழிவுப்பாதையில் ஒரு மைல்கல்லாக ஒரு நிகழ்ச்சியை கடந்த மாதம் ஞாயிற்றுக் கிழமை (11-10-09 அன்று) “ஸ…

  123. எல்லா விபரங்களும் சரியாக தான் உள்ளன. ஆனால் நாம் இந்துக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. நம் கோயில்களில் திருவிழா நடக்கும் போது எதற்காக தேவையே இல்லாமல் ஆயிரக்கணக்கான பணத்தை செலவு செய்து சினிமா நாடகம் கூத்து சினிமா கச்சேரி எல்லாம் நடத்தி நாமும் கெட்டு கோவிலையும் ஊரையும் கெடுத்து நாசமாகப்போகிறோம் . அந்த பணத்தைக்கொண்டு நம் இந்து பிள்ளைகளின் படிப்புக்கும் மருத்துவத்தும் செலவிடுவோமே .
    அதே போல திருப்பதிக்கும், மதுரைக்கும், சபரிமலைக்கும் , லட்சக்கணக்கான ரூபாய்க்கு வைரமும் தங்கமும் காணிக்கை கொடுத்து போலிமதசார்பின்மை அரசியல்வாதிகளுக்கு திருடக்கொடுக்கும் பணக்கார ஹிந்துக்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் படிப்புக்காகவும் நோய் மருத்துவத்துக்காகவும் வேலைக்காகவ்ம் திருமண வரதட்சினைக்காவும் பணமில்லாத காரணத்தால் எத்தனையோ ஏழைகள் கிறிஸ்துவ ஏமாற்றுக்காரர்களிடம் போக வேண்டி வருகிறது என்பதை யோசித்தீர்களா ? உங்கள் காணிக்கையை இறைவனிடம் கூறி விட்டு அந்த பணத்தை மேலே சொன்னது போன்ற உங்களுக்கு தெரிந்த விதத்தில் உதவலாமே. சும்மா எதோ கோவிலில் இருக்கப்போகும் நகையை விட ஒரு ஏழை இந்து சகோதரியின் திருமணத்துக்கு அது உதவும் என்றால் அதைப்போன்ற புண்ணியம் வேறு என்ன இருக்க முடியும்..? கடவுள் அருளால் பணம் படைத்த பெரியோர்கள் யோசிப்பார்களா

  124. திரு தமிழ் செல்வன் அவர்களுக்கு

    வணக்கம் நண்பரே

    உங்கள் கட்டுரையை படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.

    நான் கேட்பது ஒன்றுதான். பிரச்சினைன்னு வரும்போது அழகா பிரச்சினைய மட்டும் பேச வேண்டியதுதான. அத விட்டுட்டு முஸ்லிம், கிறிஸ்டியன் பத்தி ஏன் பேசணும். அப்ப உங்களுக்கு உங்க வேதனைய விட அவர்கள் வேதனை பட்டா சந்தோஷமா இருக்குதா? நாம எல்லாரும் இந்தியன். சில பேர் தவறாக இருப்பதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமா எழுதி இருக்குறது வேதனையா இருக்கு. இப்ப நீங்க எழுதி இருப்பது மற்ற சமுதாயத்த வேதனை படுத்தினா நம்மளுக்குள்ள தேவையே இல்லாம மனகசப்புதான் வரும். அதனால பிரச்சனைய பத்தி எழுதும்போது நீங்க மட்டும் இல்லாம மற்ற சமுதாயத்தினரும் உங்க கூட கை கோர்துக்கறமாதிரி சொன்னீங்கன்ன எந்த சமுதாயத்த பத்தியும் யாரும் கிண்டல் பண்ணவே முடியாது.
    ok. Thank you.
    -Ubaidullah

  125. திரு Ubaidullah அவர்களே

    ஆசிரியர் ஒன்னும் ஹிந்துக்கள் அல்லாதவரை குறை கூற வில்லையா - மாறாக ஊடகங்கள் நடு நிலையுடன் ஒரு பிரச்சனையை பாராமல் ஹிந்துக்களை ஏளனம் செய்கிறார்கள் என்று தானே கூறி இருக்கிறார் - இந்த கருத்துக்கு வலு சேர்க்க சில கேள்விகளை எழுப்பி உள்ளார் - ஊடகங்கள் நடு நிலைமையுடன் விவடிதார்கள் என்றால் ஏன் தாலியை மட்டும் குறி வைக்க வேண்டும் - ஏன் மோதிரம் மற்றும் வழகினயோ, நிக்கவை பற்றியோ ஒன்றுமே பேசவில்லை - யாவரும் இதுவரை பேசியதாகவே தோன்றவில்லை - இதன் பேர் தான் “targeting” இதை தான் ஆசிரியார் எடுத்து உரைதுள்ளார்

    // அதனால பிரச்சனைய பத்தி எழுதும்போது நீங்க மட்டும் இல்லாம மற்ற சமுதாயத்தினரும் உங்க கூட கை கோர்துக்கறமாதிரி சொன்னீங்கன்ன எந்த சமுதாயத்த பத்தியும் யாரும் கிண்டல் பண்ணவே முடியாது.

    மிகவும் அற்புதமாக சொன்னீர்கள் - இந்த கருத்திற்கு நன்றி

  126. //////Ubaidullah
    10 November 2009 at 11:03 am
    திரு தமிழ் செல்வன் அவர்களுக்கு

    வணக்கம் நண்பரே

    உங்கள் கட்டுரையை படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.

    நான் கேட்பது ஒன்றுதான். பிரச்சினைன்னு வரும்போது அழகா பிரச்சினைய மட்டும் பேச வேண்டியதுதான. அத விட்டுட்டு முஸ்லிம், கிறிஸ்டியன் பத்தி ஏன் பேசணும். அப்ப உங்களுக்கு உங்க வேதனைய விட அவர்கள் வேதனை பட்டா சந்தோஷமா இருக்குதா? நாம எல்லாரும் இந்தியன். சில பேர் தவறாக இருப்பதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமா எழுதி இருக்குறது வேதனையா இருக்கு. இப்ப நீங்க எழுதி இருப்பது மற்ற சமுதாயத்த வேதனை படுத்தினா நம்மளுக்குள்ள தேவையே இல்லாம மனகசப்புதான் வரும். அதனால பிரச்சனைய பத்தி எழுதும்போது நீங்க மட்டும் இல்லாம மற்ற சமுதாயத்தினரும் உங்க கூட கை கோர்துக்கறமாதிரி சொன்னீங்கன்ன எந்த சமுதாயத்த பத்தியும் யாரும் கிண்டல் பண்ணவே முடியாது.
    ok. Thank you.
    -Ubaidullah///////
    உண்மைதான் திரு உபய்துல்லா, ஆனால் இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் மற்ற மதத்தவர்கள் அதை அமைதியாக வேடிக்கை தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. கொஞ்ச காலம் முன்பு கலைஞர் அவர்கள் இந்துக்கள் விரும்பி வணங்கும் ஸ்ரீமிகவும் அவமதித்து பேசிய போது ஒரு வாரப்பத்திரிகை தமிழக இஸ்லாம் தலைவர்களிடம் கருத்து கேட்டது. அதற்கு அந்த இஸ்லாம் தலைவர் உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு. இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றே வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

    இப்படி இந்துக்களுக்கு பிரச்சனை என்று வரும்போது கழன்று கொள்பவர்களை எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும். ஏன் இப்போது கூட எங்களை வம்புக்கிழுக்காதீர்கள் என்று சொன்ன நீங்கள் ஒரு இந்துவின் சார்பாக முஸ்லீம் நண்பனான நான் விஜய் டிவிக்கு எதிர்ப்பு தெரிவிக்க்கிறேன் என்று சொல்லவில்லையே. அவர்களின் மெயில் ஐடி இருக்கிறது எங்கள் சார்பாக நீங்கள் ஏதேனும் எதிர்ப்பு கருத்து மடல் அனுப்பினீர்களா? சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் இந்துக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

    ஆனால் எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த முஸ்லீம் தலைவர்களும் கிறிஸ்தவ தலைவர்களும் பரிந்து பேச வருவதில்லை. அது என்றைக்கு நடக்கிறது அப்போது நீங்கள் நினைப்பதும் நடக்கும். மற்றபடி எல்லோரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை.

  127. /////காலம் முன்பு கலைஞர் அவர்கள் இந்துக்கள் விரும்பி வணங்கும் ஸ்ரீமிகவும் அவமதித்து பேசிய போது /// இதில் ஸ்ரீ ராமர் என்ற வார்த்தை மிஸ் ஆகி விட்டது. அதை சேர்த்து படிக்குமாறு வேண்டுகிறேன்.

  128. The lady who removed her thali for the benefit of camera and gopinath would have been suitably rewarded.The action was a mere drama and not real one. For money , in our country , some people may even be preapred to strip in front of camera.

    I watched Vijay’s super singer season 2 and noted all the Farces. One well desreving singer was not selected inspite of best singing for a well known reason . Not only that , the person was even humiliated in the end.They preplan everything and decide the victors in advance and stage manage the show as real. Even the judges are silent for they anyway get their rewards. Even some insiders know the happenings but they can not open their mouth for obvious reasons.
    gopinath is well known for his partisan attitude. Even in one programme,if he has the guts, let him speak against any other religion or anchors such a programme, Then ,he would know his place.He is paid for wounding Hindus and you can expect nothing more from him.
    But in my humble opinion they will not easily succeed in their one point agenda of destroying HINDUISM, for the simple fact that Hinduism is the Greatest.
    Regarding sponsor Lion dates I have shared my feelings with them and hope that better sense prevail in them.
    Many writers agree with me that if they continue to sponsor such Hindu baiting progarms they will do it at their own peril.

  129. அய்யா

    நன்றி

    எங்கள் மனதில் உள்ள கோபங்கள் உங்கள் பதிவில்.

    தொடரட்டும் உங்கள் நற் பணி.

    என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு .

    ஜெய் ஹிந்து
    ஆனந்த்

  130. நன்று. வாழ்க வளமுடன்.

  131. //ஒருவனை பாவி என்று கூறி - ஏசுவே உன் பாவத்தை போக்குவார் என்று சொல்வதேல்லாம் சுத்த பித்துக்குளித்தனம்
    இது உங்களை அச்சுறுத்தி மதம் மற்றும் ஒரு அல்ப யுக்தியாகத்தான் பண்டை காலத்திலிருந்து கடைபிடிதுல்லார்கள் என்பது திண்ணம்
    நீ ஒரு பாவி அதனால் என்னை கும்பிடு என்று ஒரு சாமி சொன்னால் அது சாமி இல்லை ஆசாமி தான் //

    பாவிகளை பாவிகள் என்று சொல்லாமல் புண்ணியவான் என்றா சொல்லமுடியும்?

    இயேசுவை கும்பிட்டு விஷம் குடித்தால் இயேசு காப்பாற்றுவேன் என்று சொல்கிறார்.
    யார் உண்மையான ஜீவனுள்ள தேவன்?
    இயேசு இருக்கிறார் என்று நிரூபிக்க இயேசுவே ஒரு உபாயம் தருகிறார்.

    <b)மாற்கு 16:18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்

    சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்.

    இறந்துவிட்டால், இயேசு என்பது சும்மா ஒரு கற்பனை என்று பொருள் .. இல்லையா?

    இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்.
    அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்.

    ஜீவனுள்ள தேவன் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார்.

  132. Content of email sent to Lion Dates:

    விலை அதிகமானாலும் லயன் டேட்ஸ் வாங்குபவன் நான். சமீபத்தில் விஜய் டீவீன் நீயா நானா நிகழ்ச்சியில் நமது இந்து மதங்களை அவமதிக்கும் கருத்துக்கள் மிக அதிகமாக இருப்பதை காண்கிறேன். இதனை ஆதரித்து வழங்குபவராய் உங்கள் நிறுவனம் இருக்கிறது. இந்து மத வெறுப்பு நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யும் நிறுவனமாக நீங்கள் இருக்க வேண்டாமே?

    இனிமேலும் லயன் டேட்ஸ் பொருட்களை நானும் மற்றும் என் நண்பர்கள் குடும்பங்களும் வாங்குவதா வேண்டாமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம். பெற்ற தாயையும் குடும்பத்தையும் விற்று வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இல்லை என்று நம்புகிறோம்.

    அன்புடன்
    திருமலை முரளி

  133. //சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்.
    இறந்துவிட்டால், இயேசு என்பது சும்மா ஒரு கற்பனை என்று பொருள் .. இல்லையா?
    இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்.
    அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்.//

    வாத்யாரே…டிடஸ்! சூது பார்டிய காலி பன்றதுன்னே முடிவு பண்டியா, ஆ?

    நானும் பிகின்னிங்லேந்து பாத்துகினு வரேன்….நீ ஒரு மாறி ரூட்ல தான் போயினுருக்க….நடத்து நைனா!

    நல்ல வேல தான்…அது. செய்ஞ்சு முடி.
    உனுக்கு கோடி புன்யம் கீது, அ ஆங், ஸொல்டேன்.

    இன்னா வர்டா…

    மன்னாரு.

  134. டிடஸ்
    // சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்.

    இறந்துவிட்டால், இயேசு என்பது சும்மா ஒரு கற்பனை என்று பொருள் .. இல்லையா?

    இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்.
    அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்.

    ஜீவனுள்ள தேவன் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார்.//

    நண்பர் டைடஸ் அல்ல, டிடஸ் அது என்ன கண்ராவியோ இது நிச்சயமாக கிறிஸ்தவ பெயரல்ல; உங்கள் அணுகுமுறையும் கிறிஸ்தவ அணுகுமுறையல்ல; ஏனெனில் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் வேதப் பிரமாணத்துக்கு விரோதமான சவால்களை எடுத்துவிட்டு உண்மைக்கு மாறான கொள்கைகளை அறிவிக்கமாட்டீர்கள்;

    இது வடிவேல் காமெடி ட்ராக் போல இருக்கிறது; “ஏண்டா,நாந்தான் செட்டில் பண்ணி அனுப்பிட்டேனே,பிறகு ஏண்டா…” என ரௌடியிடம் அடிவாங்கிவிட்டு புலம்புவாரே அது போல சாது செல்லப்பாவுக்காக நீங்கள் எதற்கு சவால் விடவேண்டும்?

    (Edited.)

  135. டிடஸ்

    உண்மைலே முடியலா - நீங்க சொல்ற பதில் படிச்சிட்டு ஒரு வடிவேலு ஜோக்கு தான் எனக்கு நினைவுக்கு வந்தது? (கையா புடிச்சு இழுத்தியா? - என்ன கையா புடிச்சு இழுத்தியா? ) இந்த ரெண்சுலேயே பதில் சொல்றீங்க !!!

    சரி மேட்டேருக்கு வருவோம்

    ஏன் சாது செல்லப்பா மேலேயே குறியா இருக்கீங்க? :-) அய்யா யாரவது சாது செல்லப்பாவை பார்த்து அவருக்கு எதிரா ஒரு பெரிய சதி நடக்குதுன்னு சொல்லுங்கப்பா - இயேசுவை மட்டும் இல்ல, உங்க கிட்டேந்து செல்லப்பாவையும் நாங்கதான் காப்பாத்தனும் போல இருக்கே!!!

    //ஒருவனை பாவி என்று கூறி - ஏசுவே உன் பாவத்தை போக்குவார் என்று சொல்வதேல்லாம் சுத்த பித்துக்குளித்தனம்
    இது உங்களை அச்சுறுத்தி மதம் மற்றும் ஒரு அல்ப யுக்தியாகத்தான் பண்டை காலத்திலிருந்து கடைபிடிதுல்லார்கள் என்பது திண்ணம்
    நீ ஒரு பாவி அதனால் என்னை கும்பிடு என்று ஒரு சாமி சொன்னால் அது சாமி இல்லை ஆசாமி தான் //

    பாவிகளை பாவிகள் என்று சொல்லாமல் புண்ணியவான் என்றா சொல்லமுடியும்?
    //

    பதில் (கேள்வி) : அப்போ என்ன கர்த்தர் சாமி இல்ல ஆசாமி இல்லேன்னா சொல்றீங்களா?
    உண்மையாவா?

    // சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்.

    பதில் (கேள்வி) அதென்ன செல்லப்பாவை மட்டும் தான் உங்க தேவன் காப்பாதுவாரா - உங்கள எல்லாம் காப்பாதா மாட்டாரா?

    பதில் (கேள்விகள்)
    * எப்போ குடிக்கபோறார்? - சயனைடு வெச்சிருகறது சட்டப்படி குற்றம்? செல்லப்பாவுக்கு சயனைடு எங்கிருந்து கிடைத்தது? யார் கொடுத்தா? செல்லப்பா சட்ட விரூத செயலில் ஈடுபடுபாவரா? வேற என்ன மேஜிக் எல்லாம் அவர் பண்ணுவார்? கொஞ்சம் விரிவாக எழுதுவிர்களா?

    //
    இயேசுவை கும்பிட்டு விஷம் குடித்தால் இயேசு காப்பாற்றுவேன் என்று சொல்கிறார்.
    யார் உண்மையான ஜீவனுள்ள தேவன்?

    இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்.
    அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்.
    //

    பதில் (கேள்வி)
    அப்போ விஷம் அருந்தாமலேயே நிறைய கிறிஸ்தவர்கள் இறக்கிறார்களே அது ஏன்? சாது செல்லப்பா விஷம் குடிச்சும் சாகலேன்னா அவர் எப்படி நித்திய இன்பம் தரும் பரலோகம் போவார்? விஷம் குடிச்சவங்கலையே காப்பத்த முடிஞ்ச கர்த்தர் இயேசுவை சில்வையில் அறைந்த போது ஏன் காப்பதலா? செல்லப்பா என்ன அவ்வோலோ பெரிய ஆளா? இயேசுவை விடவும் மேம்பட்டவரா?

    அப்போ உங்க தேவனுக்கு விஷம் குடிச்சா தான் புடிக்குமோ? என்ன ஒரே கட்டுமிராண்டிதனமா இருக்கு !!!

    தேவன் ஏன் எல்லாரையும் விஷம் குடிக்க சொல்றார் - அவருக்கு வேற வேலையே இல்லையா? இதென்ன விஷமமா இருக்கே?

    சிவன் என்ன செஞ்சார் தெரியுமா - ஆல கால விஷம் எங்கே மற்றவரை தாக்கிவிடுமோ என்று, தானே விஷத்தை குடித்தார்

    இப்போ சொல்லுங்க யாரு ஜீவனுள்ள தேவன் என்று? விஷம் குடிக்கசொள்ளும் தேவனா? மற்றவரை காப்பாற்ற தான் விஷத்தை உண்ட சிவனா?

    அப்புறம் மத்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவே இல்லையே? அதையெல்லாம் அப்படியே கண்டுக்காம விட்டுட்டு செளளப்பாவ தீர்துகட்டரதுலேயே இருக்கீங்க? இப்பவாச்சும் சொல்லுங்க உங்களுக்கும் செல்லப்பாவுக்கும் என்ன ப்ரிச்சனை?

  136. பெந்தகொஸ்தே தலைவர் பாம்பு கடித்து செத்து போனார்

    பெந்தகொஸ்தே கழண்ட கேஸ்கள் – இது அமெரிக்காவிலேயே

    பெந்த கொஸ்தே கழண்ட கும்பல் ஆடுவதையும் பாம்புகளை எடுத்து முகத்தில் தேய்த்துகொள்வதையும் பார்க்கலாம்

    இந்த பாம்பு தேய்த்து தன் நம்பிக்கையை காட்டுவதை ஆரம்பித்த கிறிஸ்துவ பெந்தகொஸ்தே தலைவர் பாம்பு கடித்து செத்து போனார் என்பது உபரி செய்தி

    தற்போது அமெரிக்காவில் இது போல பாம்புகளை எடுத்து பிரச்சாரம் செய்வதும் அல்லேலூயா கத்துவதும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

  137. I’ve got something to say to all you people.

    “A great civilization is not conquered from without until it has destroyed itself from within.”

    In other words, the demise of Hinduism and the Hindu culture will not be plotted by outsiders, but by a majority of imbeciles who are ashamed to proclaim that they are Hindus. They prefer the tag ’secularists’. The fact that we have chosen a ‘ultra secular’ government to rule us does not help either. Gloomy days ahead.

  138. உபயதுல்லா அவர்களுக்கு வணக்கம்.
    இந்தப் பிரச்சினையை பேசும்போது இஸ்லாமியர்களையும் கிருத்துவர்களையும் இழுப்பது ஏன் என்று கேட்கிறிர்கள். படிப்பவகளுக்கு உங்கள் கேள்வி நியாயம் போலத் தோன்றலாம்.
    எனக்கும் சில கேள்விகள் உண்டு. அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.
    ரம்ஜான் விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பழகன் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசினார் என்பது சமீபத்திய நிகழ்வு.இதை முஸ்லீம்கள் எப்படி அனுமதித்தார்கள்?
    சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடப்போன ஓதுவார் ஆருமுகசாமியோடு உள்ளே நுழைந்தார் ஒரு முஸ்லீம் வழக்கறிஜர். அவருக்கு அங்கெ என்ன வேலை?
    ராமர் பாலத்தை உடைப்போம் என்று மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் சவால் விட்டாரே எஸ்ரா சற்குணம் அவருக்கு ராம பக்தனின் பாதத்தைக் கழுவும் தகுதி உண்டா?
    இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொன்ன பிறகு எல்லோரும் நியாயமாக நடந்து கொள்ளலாம்.

  139. ////“A great civilization is not conquered from without until it has destroyed itself from within.”////

    அபோகாலிப்டோ படத்தில துவங்கினதும் வருமே அதே வார்த்தைகள். நல்லா இருக்கு.

  140. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் !
    எனக்கு யாராவது தெளிய படுத்துங்களேன் !
    ஸ்ரீ கிலாடியரே ப்ளீஸ் ப்ளீஸ் !

    பால் தினகரன் அவர்களின் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னமே சொல்லும் இறை அருளை பற்றியே என் சந்தேகம். அவரை பற்றி wikipedia வில் பின் வரும் செய்தி உள்ளது !

    He had the Reputation of Being a Prophet, who could foresee the things in store for India and the nations of the world.few examples are given here.He prophesied that ‘A God Fearing man’ would be the President of United States in 2000, and as he said, George.W.Bush, a Religious Conservative and a Openly-proclaiming Christian won th race for the White House that year.Similarly as per his Prophecy in 1985, Shri Arjun Singh became an Indian Union Minister from a being the Chief Minister of Madhya Pradhesh.Similarly he prophesied about a person that would become the President of U.S in 2009, which matches perfectly with the Policies of Barack Hussien Obama.

    அதே போல்

    On May 21, 1986, while on their way to board a flight to Coimbatore to visit the site of his new engineering college, the car in which Dhinakaran, Stella and Evangeline ( Daughter ) were traveling was involved in a crash. Dhinakaran and Stella sustained serious injuries and Evangeline(Angel) was killed. This event affected Dhinakaran for many years to come.

    ஏன் இந்த கர்த்தருடன் நேரடி தொடர்பு வைத்து இருந்த இந்த புண்ணியவானுக்கு அவர் மகள் அகாலமாக இறக்க போகும் விஷயத்தை கர்த்தர் இவருக்கு முதலில் தெரிவிக்க வில்லை ! தெரிந்து இருந்தால் அதை தவிர்த்து இருப்பார் இல்லையா ???!!!

  141. Dear krishnan,

    //
    In other words, the demise of Hinduism and the Hindu culture will not be plotted by outsiders, but by a majority of imbeciles who are ashamed to proclaim that they are Hindus
    //

    True, I completely agree with you, however I am also urging to go beyond the effect and look at the cause. We will be destroyed unless we curb the cause

    To me the cause for this situation is Repetitive well planned propaganda

    I don’t think Hindus were ashamed about themselves before the English came in - The well thought out, well funded propanda machinery (missionary :-) ) has been engaged in mud slinging against a religion and targeting the weak minds for a couple of centuries now - it is possible to systematically rewrite history, push wrong information and make people doubt their convictions…

    This is pure psychology and it works - this is how people build great brands, make people buy useless products. Why on earth is Coca cola the top most band, why are people buying things that they do not need, why are people buying new jeans every week using credit card (People keep 5 to 10 credit cards these days even though they need it) - it is not just because people have money, it is because they are induced to…

    Repetitive propaganda works - it is scientifically proven….

    (comment edited & published)

  142. //உங்கள் அணுகுமுறையும் கிறிஸ்தவ அணுகுமுறையல்ல; ஏனெனில் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் வேதப் பிரமாணத்துக்கு விரோதமான சவால்களை எடுத்துவிட்டு உண்மைக்கு மாறான கொள்கைகளை அறிவிக்கமாட்டீர்கள்;
    //

    படுபாவி,

    உங்கள் அறியாமை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கடுகுமுனையேனும் கிறிஸ்துவராக இருந்தால், நீங்களும் விஷம் குடிக்கலாம். அது ஒன்றும் செய்யாது.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதி இது

    “சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொய் சொன்னார் என்று கூறுகிறீர்களா?

    வியாதியஸ்தர்கள் மீது கை வைத்து சொஸ்தம் செய்வது வேதப்பிரமாணத்துக்கு எதிராக இல்லாதபோது, விஷத்தை குடித்து காட்டுவது எப்படி வேதப்பிரமாணத்துக்கு எதிராகும்?

    சாது செல்லப்பாவும், மோகன் லாசரஸும், பால் தினகரனும் நிச்சயம் விஷம் குடித்து காட்டுவார்கள்.

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  143. //சாது செல்லப்பாவும், மோகன் லாசரஸும், பால் தினகரனும் நிச்சயம் விஷம் குடித்து காட்டுவார்கள். //
    இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கிட்டான்னு அவங்க சொல்லப் போறாங்க

  144. படுபாவி என்கிறா புண்ணியவானே

    நீங்கள் டிடஸ் அவர்களை பற்றி கூறியது சரியே என்று எனக்கும் தோன்றுகிறது

    அவர் கிறிஸ்தவரும் அல்ல, கட்டாயமாக ஹிந்துவும் அல்ல - வேற ஏதோ

    //சாது செல்லப்பாவும், மோகன் லாசரஸும், பால் தினகரனும் நிச்சயம் விஷம் குடித்து காட்டுவார்கள். //

    நோக்கம் தெளிவா இல்ல :-)

    டிடஸ் உமது பனி தொடரட்டும் - சும்மா எழுதி தள்ளுங்கள் - இன்னும் இந்த லிஸ்ட்ல எவ்வோளோ பேர சேக்க போறீங்க

    இப்படி எல்லாம் பண்ண நெஜமாவே பாவின்னு தான்யா சொல்லுவாங்க - இதுகெல்லாம் பாவ மனிப்பு கிடைகாதைய்யா

  145. //
    glady wrote
    அவர் தனது வாழ்வில் ஒரு நாளும் ஒருவரையும் கடிந்தோ புண்படுத்தியோ பேசியதில்லை; ஆனாலும் அவரை தூஷிக்காதோரும் அவரது வளர்ச்சியினைக் கண்டு பொறாமை கொள்ளாதோரும் மிகக் குறைவு; மேலும் அவர் சாதாரண மேஜிக் நிபுணரைப் போல இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என சவால் விட்டு அற்புத வித்தை செய்தவரல்ல;
    //

    DGS dinakaran இதோ இயேசு வருகிறார், வெகு சீகிரமே வருகிறார் என்று கூறுவார் - இது மேஜிக் இல்லையா - நான் இயேசுவை சந்தித்தேன் பேசினேன் என்று சொல்லுவார் - இது மேஜிக் இல்லையா
    இயேசு என்னை பொறி இயல் கல்லூரி கட்ட சொன்னார் - ஏன் இயேசு சீகிரமே வந்து படிப்பதர்காகவா - இயேசு சீக்கிரமே வருகிறார் என்றால் எதற்காக இந்த பொறி இயல் கல்லூரி - இயேசு சொல்லி இருந்தால் ஏழைகளுக்கு கிராமத்தில் ஒரு கல்லூரி தொடங்கு என்றல்லவா சொல்லி இருப்பார் - கோவையில கட்ட சொல்லுவார்
    காருண்யாவில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? எனது நண்பன் அங்கு தான் படித்தான்.

    கூட்டத்தில் உள்ளவர்கள் பேரை சொல்லி ஏதோ ஒரு மாயை செய்ய ஆரம்பித்தது முதலில் அவர் தானே - நானே ஒரு முறை ஒரு மேஜிக் கேட்டுஇருக்கேன் - “ஒரு பெண்ணை பற்றி சொல்ல போகிறேன் - அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது - அவர் வடக்கு இந்தியாவில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார், அய்யா என்னை காப்பாத்துங்கள் என்று கதறி அழுதார், “நான் கர்த்தரை நோக்கி - என் பிதாவே இந்த பேயை விர்ரடுங்கள் - உங்கள் வலிமையால் இந்த பேய் தொலைந்து போகட்டும் என்று மன்றாடினேன் - அந்த பேய் ஓடிவிட்டது - அந்த பெண்ணும் கர்த்தரை நோக்கி நன்றி கூறிவிட்டு ஊர் திரும்தினால்”

    இதுக்கு பேர் மேஜிக் இல்லையா - இன்னும் பல மேஜிக் பண்ணிருக்காரு - சொல்லனுமா

    கொஞ்சம் ஏமாந்தா காலி பன்னிருவீன்களே

    எமத்துகாரர்களுக்கு (எந்த மதத்தினராக) தங்களின் உயர்வே முக்கியம் - கடவுளோ, மக்களோ அல்ல

  146. இங்கே நீயா நானா வுக்கு எதிராக வெளிப்படும் உணர்வுகளை மதிக்கிறேன்.
    அதே நேரத்தில் என்னுடைய கருத்தையும் பதிய விழைகிறேன்..

    எதிர்ப்பு தெரிவிக்க எளிதாக கூட்டம் சேர்த்து விட முடிகிறது..

    அதே நேரத்தில், ஆக்க பூர்வமான விஷயங்களுக்கு கூடுபவர்கள் குறைவே..

    நாம் செய்ய வேண்டியது மாணவர்களிடம் ஹிந்து மத சிந்தனைகளை வளர்ப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான்..

    மாவட்டம் தோறும் ஒரு அரங்கத்தில் ஹிந்து மத சிந்தனைகளை இளையோரிடம் எடுத்துசெல்லும் கருத்தரங்குகளை சீரான இடைவெளியில் நடத்த ஏதேனும் முயற்சி எடுக்கவும்..

    அது, புதிய தலைமுறையை கொட்டாவி விட வைக்கும் பழைய பாணியில் இல்லாமல் இதே கோபி நாத் போன்று இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் பேசுபவரால் நடத்தப்பட வேண்டும்..

    ஹிந்து இயக்கங்கள் செய்யும் ஆக்கபூர்வமான பணிகள் பற்றிய செய்திகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவேண்டும்..

    மக்கள் பங்கு பெரும் வண்ணம் திட்டங்களையும், விழாக்களையும், தொண்டுகளையும் மறுவடிவு செய்ய வேண்டும்..

    இவற்றில் பங்கு பெற ஆர்வமுடன் இருக்கிறேன்..

    மற்றபடி இதுபோன்ற சில்லறை நிகழ்ச்சிகள் பற்றி நண்பர்கள் மனம் வெதும்ப வேண்டாம்..

    நன்றி..

  147. // ஏன் இந்த கர்த்தருடன் நேரடி தொடர்பு வைத்து இருந்த இந்த புண்ணியவானுக்கு அவர் மகள் அகாலமாக இறக்க போகும் விஷயத்தை கர்த்தர் இவருக்கு முதலில் தெரிவிக்க வில்லை ! தெரிந்து இருந்தால் அதை தவிர்த்து இருப்பார் இல்லையா ???!!! //

    ஆம்,தவிர்த்திருக்கலாம்; தவிர்த்திருக்கக்கூடும்; ஆனாலும் இரண்டு வாய்ப்புகளை நாம் யூகிக்கக்கூடும்; ஒன்று இறைவன் அந்த நிகழ்ச்சியை அவருக்கு வெளிப்படுத்தாமலிருந்திருக்க வேண்டும் அல்லது இறைவன் வெளிப்படுத்தியிருந்தும் அவர் விளங்கிக் கொள்ளாமலிருந்திருக்கலாம்;

    மேலும் இறைவன் தற்காலத்தில் நிகழும் ஒரு தீமையின் மூலம் ஒரு நன்மையை பிற்காலத்தில் அவரது பின்சந்ததியாருக்கு வைத்திருப்பாரானால் அதை எந்த மகானும் எதிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்;

    இறைவன் சில விசேஷ சமயங்களில் சிலருக்கு சில காரியங்களை வெளிப்படுத்தலாம்; ஆனாலும் மனிதனிடம் சொல்லிவிட்டே அனைத்தையும் செய்யவேண்டிய அவசியம் இறைவனுக்குக் கிடையாது;

    இது என்னுடைய சமநிலையான பார்வையாகும்..!

  148. அன்பர் Sarang அவர்களுக்கு,
    வாழ்த்துக்கள்;
    //DGS dinakaran இதோ இயேசு வருகிறார், வெகு சீகிரமே வருகிறார் என்று கூறுவார் - இது மேஜிக் இல்லையா -

    நான் இயேசுவை சந்தித்தேன் பேசினேன் என்று சொல்லுவார் - இது மேஜிக் இல்லையா

    “நான் கர்த்தரை நோக்கி - என் பிதாவே இந்த பேயை விரட்டுங்கள் - உங்கள் வலிமையால் இந்த பேய் தொலைந்து போகட்டும் என்று மன்றாடினேன் - அந்த பேய் ஓடிவிட்டது - அந்த பெண்ணும் கர்த்தரை நோக்கி நன்றி கூறிவிட்டு ஊர் திரும்பினாள்” இதுக்கு பேர் மேஜிக் இல்லையா ‍ //

    நீங்கள் குறிப்பிட்ட மூன்றும் “செய்தி” வகையே தவிர மேஜிக் அல்ல என்பது எனது கருத்து;அது உண்மையான செய்தியா அல்லது உண்மைக்கு மாறானதா என்பது தனியான ஆராய்ச்சியாகும்;

    1. “இதோ வரேன்” என்று சொல்லுவதில்லையா? சில சமயம் நாம் கட்டுக்கடங்காவிட்டால் வந்து ரெண்டு போடு போடுவதில்லையா? அதுபோலவே இதுவும் எச்சரிப்பின் வாக்கியம் அல்லது ஆறுதல் வாக்கியமாகும்.

    2. ஒரு குறிப்பிட்ட இறைபக்தியில் மூழ்கி இருப்போர் தனது இஷ்ட தெய்வத்தை சந்தித்ததாகச் சொல்வதில்லையா? அது சொல்லப்படும் சூழ்நிலையிலேயே அதன் நோக்கம் தெரிந்துவிடும்.

    3. பாதிக்கப்பட்டு நிம்மதியடைந்தோரின் அனுபவத்தினைப் பார்வையாளரால் எப்படி புரிந்துகொள்ளமுடியும்? கிராமங்களில் காத்துகருப்பு அடித்துவிட்டது என்று கோடாங்கியிடம் போனால் அவன் எதையோ செய்வான்; பிரச்சினை தீர்ந்தால் சரி என அவன் சாட்டையால் அடித்தாலும்- வேப்பிலையால் அடித்தாலும் பொறுத்துக் கொள்ளுவதில்லையா? அதைவிட இது பரவாயில்லையே, பிரார்த்தனை தானே செய்தார்?

    (Edited.)

  149. “சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”

    இவ்வளவு இயேசுவை நம்பும் கிளாடி, மேற்கண்ட வாக்கியத்தின் படி விஷத்தை குடித்து, இயேசு சொன்னதை நிரூபித்து காட்டலாமே?

    வியாதியஸ்தர்கள் மீது கைவைத்து டிஜிஎஸ் தினகரன் குணப்படுத்துவது உண்மை என்று இயேசு சொன்னதை வைத்தும் டிஜி எஸ் தினகரன் சொன்னதை வைத்தும் நம்பும் கிளாடி அதே வரியில் அடுத்து இருப்பதையும் நம்புவதில் என்ன பிரச்னை?

  150. ////அன்னை தெரசாவின் சில சேவைகள் பாராட்டுக்குரியவைகளாக வெளியே தெரிந்தாலும் இவரது உண்மையான இந்திய நோக்கம் (India Mission) என்ன ?

    முதலில் இவருடைய சேவைகள் பற்றி கீழ்கண்ட கேள்விகள் எழும்புகின்றன.

    1. உலகில் ஏழைகள் அனைத்து நாடுகளிலும் இருக்கும் போது, ஏன் இந்திய ஏழைகள் மட்டும் இவருடைய கண்களுக்கு தெரிந்தது ? இந்திய ஏழைகள் இவரிடம் சென்று சேவைகளை கேட்டார்களா ?

    2. இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு, வறுமையில் சாகும் நாடு, இங்கு வாழும் மனிதர்கள் உணவு உண்ணவே தகுதியற்ற மடையர்கள் போன்ற பிரம்மையை மேற்கத்தியவர்களிடம் இவர் ஏன் உருவாக்கினார் ? இதை வைத்து இவருக்கு நிறைய பிச்சை பணம் கிடைத்ததா ? இதை இவர் எவ்வாறு பயன்படுத்தினார் ?

    3. ஒரு நாடு விட்டு இன்னொரு நாடு வந்திருக்கும் போது, அங்குள்ள மக்களையும், மக்களின் நம்பிக்கைகளையும், மக்களின் கலாசாரத்தையும் மதித்து நடப்பது நாகரிகமல்லவா ? அதை விடுத்து தன்னுடைய கடவுள் தான் உண்மையான கடவுள் என்று கடவுள் போதனையை ஏன் துவக்கினார் ?

    4. இவர் தன்னுடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் இருந்த ஏழைகளையும் நோயாளிகளையும் முதலில் கவனித்தாரா ? ஏசு கிறிஸ்து இவர் கனவில் தோன்றி இந்தியர்களை குறிவைக்க தூண்டியதன் மர்மம் என்ன ?

    5. உண்மையிலேயே ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கு உதவுவதற்கும், கடவுளுக்கும் என்ன சம்மந்தம் ? இதை அனைத்து கிறிஸ்தவர்களும் தங்களுக்கு கேட்டு கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி ?
    ஏழைகளின் சேவையையும் கடவுளையும் ஏன் கலந்தார் ? இங்கு தான் அல்பானிய தெரசாவின் உண்மையான நோக்கம் வெளிப்படுகிறது.

    6. இவர் 610 மிஷனரிகளை (மிஷனரியா இல்லை குள்ளநரியா) நிறுவியிருக்கிறார். சேவை செய்வதற்கு ஏன் மிஷனரிகளை நிறுவ வேண்டும் ? கடவுளை அப்புற வைத்து விட்டு சேவை செய்வதற்கு கடவுள் சாயமில்லாத தொண்டு நிறுவனங்கள் தானே நிறுவ வேண்டும் ?
    ஆக மொத்தத்தில் இவருடைய குறிக்கோள், இந்திய நோயாளிகளுக்கு உதவுவது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் உதவுவதை ஒரு ஆயுதமாக கொண்டு தம்முடைய மதத்தை பரப்புவதே இவரது இந்திய நோக்கம். இவருடைய செய்கைகளுக்கு பேராதரவு அளித்தது மேற்கத்திய நாடுகள்////

    நன்றி: http://muttalyesu.blogspot.com/2008/06/blog-post_28.html

  151. Sarang,
    Islam gets a hell lot of negative publicity these days. Yet, Moslems do not worry about their religion being maligned or their people being converted, do they? The reason is simple. Every Moslem - whether he is uneducated or educated - stands up for his religion. No matter what the people around him say, he will not convert to any other religion. It does not happen with Hindus for two reasons.

    1. Hindu parents do a crappy job of bringing up their children. No emphasis on values or ethos. Most upper middle class children are brought up like hippies - they do not have the intellectual capacity to objectively look at different philosophies around the world and follow the path that suits them best.

    2. A large number of upper caste Hindus, people who do not know anything about Hinduism, treat lower caste people like subhuman filth. I’ve seen this happen right in front of my very eyes. This is one of the main reasons why people convert to Christianity or Islam. To save our religion, we should stop doing that and stand up for the concept of ‘universal brotherhood’ - the idea that we are all bound together by one force - brahman.

  152. நண்பர் க்லாடியாரே

    //நீங்கள் குறிப்பிட்ட மூன்றும் “செய்தி” வகையே தவிர மேஜிக் அல்ல என்பது எனது கருத்து;அது உண்மையான செய்தியா அல்லது உண்மைக்கு மாறானதா என்பது தனியான ஆராய்ச்சியாகும்;
    //

    இது வெறும் சப்பைக்கட்டு என்று இதை எழுடும்போடே உங்கள்ளுக்கு தோன்றி இருக்குமே? தோன்றவில்லையா?

    அப்போ நானும் செய்தி சொல்லட்டுமா - “நான் நேற்று ஆழ் த்ய்தானத்தில் இருக்கும்போது ஒரு வெள்ளை குதிரையை கண்டேன், அது என்னை ஏற்றி கொண்டு எங்கோ சென்றது - அது நான் கனவில் மட்டுமே கண்ட ஓர் உலகத்தில் என்னை விட்டு விட்டு சென்றது - அங்கு நான் கடவுளை கண்டேன் - அவர் என்னை அருக்தில் அழைத்து கிலாடி என்று ஒருவர் உள்ளார் அவருக்கு நான் விரைவில் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அனுப்ப உள்ளேன் - இதை நீ செண்டு அவரிடம் சொல்லு என்றார்

    இதை நான் உங்களிடம் வந்து சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் (அதை நீங்கள் நம்புபாவர் என்றே வைத்துக்கொள்ளுங்கள்)

    நீரே முடிவு செய்யும் - இது செய்தியா? பொய்யா? மாஜிக்கா? நான் சொல்கிறேன் மூன்றுமே என்று
    உங்களுக்கு மில்லியன் டாலர் கிடைக்க போறது பொய் செய்தி, நான் தேவனை பார்த்தேன் அவர் என்னிடம் சொன்னார் என்பது மாஜிக் - புரிஞ்சதா?

    நீங்கள் தானே சொன்னீர்கள் - தினகரன் ரொம்பா நல்லவர் உண்மையே பேசுவார் உண்மையா பிரார்த்தனை செய்வார் - இப்போ நீரே உண்மையா பொய்யான்னு ஆராச்சி பண்ணனும் அப்படின்னா என்ன - இந்த ஆண்ட புளுகை எல்லாம் ஆராச்சி வேற செய்யனுமா?

    //
    1. “இதோ வரேன்” என்று சொல்லுவதில்லையா? சில சமயம் நாம் கட்டுக்கடங்காவிட்டால் வந்து ரெண்டு போடு போடுவதில்லையா
    //

    அப்போ உங்களையெல்லாம் பாவிகள் என்று சொல்வதும் வெறும் எச்சரிக்கையா? அவசரப்பட்டு எமாந்துடீன்களே -” டீடாஸ் ப்ளீஸ் நோட் திஸ்”

    மவனே நீ என்ன மட்டும் நம்பு - இல்லாங்கட்டி மோசேஸ் கிட்ட ஏற்கானவே மேட்டர சொல்லிருக்கேன் - அப்போ ஹிந்துக்கள் இருந்தாங்கன்னு எனக்கு தெரியாது (ஏன் என்றால் எங்க அறிவெல்லாம் இஸ்ரவேல் அப்புறம் ரோமானிய, கிரேக், எகிப்து பற்றிதான்) இப்போ ஹிந்துக்களையும் அந்த கிராக்கியர் இத்யாதி லிஸ்ட்ல சேத்துருவேன் - இதுவும் வெறும் எச்சரிக்கை தானாம்பா - திருச்சி காரர் - நீங்கள் இவ்வோளோ நாலா கேட்டுவந்த கேள்விக்கு இதுதானாம் பதில்

    அப்போ பைபிள் பூர வெறும் எச்செரிக்கை தானா - “instructions and precautions manual” மாதிரி

    இப்பத்தானே கிலடியாரே நீங்கள் சொல்ல வருகிறீர்கள் - சப்பகட்டு கட்டினானும் பொருந்த கட்டனும்

    //
    “ஒரு குறிப்பிட்ட இறைபக்தியில் மூழ்கி இருப்போர் தனது இஷ்ட தெய்வத்தை சந்தித்ததாகச் சொல்வதில்லையா? அது சொல்லப்படும் சூழ்நிலையிலேயே அதன் நோக்கம் தெரிந்துவிடும்.”
    //

    யாரும் சாமி வரப்போரார் அப்படின்னு சொல்லி ஏமாத்தல , அப்படியெ உன்மை மாதிரியே புஇல்ட் உப் கொடுக்கல

    //
    வியாதியஸ்தர்கள் மீது கைவைத்து டிஜிஎஸ் தினகரன் குணப்படுத்துவது உண்மை என்று இயேசு சொன்னதை வைத்தும் டிஜி எஸ் தினகரன் சொன்னதை வைத்தும் நம்பும் கிளாடி அதே வரியில் அடுத்து இருப்பதையும் நம்புவதில் என்ன பிரச்னை?
    //

    பேய் ஒட்டுரென்னு ப்ரார்தனை பன்னல மெஜிக் தான் அது யார் செஞாலும் அது மெஜிக் தான்

  153. Dear krishnan
    //
    Sarang,
    Islam gets a hell lot of negative publicity these days. Yet, Moslems do not worry about their religion being maligned or their people being converted, do they? The reason is simple. Every Moslem - whether he is uneducated or educated - stands up for his religion. No matter what the people around him say, he will not convert to any other religion. It does not happen with Hindus for two reasons.

    1. Hindu parents do a crappy job of bringing up their children. No emphasis on values or ethos. Most upper middle class children are brought up like hippies - they do not have the intellectual capacity to objectively look at different philosophies around the world and follow the path that suits them best.
    //

    You are right. Perhaps i am also trying to say the saying the same thing.

    Muslims don’t bother because, there is much more internal branding within themselves. despite this fact there are several Muslims who have converted to other religions - if this is the case for Muslims - think about our state - propaganda can kill our religion

    i also concur that we should emphasize the true value of our religion to our kids, however i am also urging that we should involve in a simultaneous pursuit - to teach our children (internal branding) and to voice our opinions about misleading propaganda against our religion (positioning) . Simultaneity is crucial – that is how Muslims are still striving

  154. எப்படியாயினும் எனக்கு முழு விவரம் தெரியாதவற்றுக்கு அல்லது மற்றவருக்காக வக்காலத்து வாங்கி வரிக்கு வரி பதில் சொல்லுவது என்னால் ஆகாத காரியம்.

    எனவேதான்,
    // இது என்னுடைய சமநிலையான பார்வையாகும்..! // என குறிப்பிட்டேன்; மேலும் “இறைவன்” என்று குறிப்பிட்டு எழுதியதையும் கவனிக்கவும்;

    நீங்கள் உங்கள் மற்ற சந்தேகங்களை சம்பந்தபட்டவர்களுக்கே எழுதி கேட்கலாமே; மற்றும் அவர்களது தளமும் இங்கே செயல்படுகிறது; பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்;

    நண்பர் அவர்கள் குறிப்பிடும் சப்பைக்கட்டு எனக்குத் தெரியாது; அதற்கு அவசியமும் இல்லை;

    நீங்கள் சொன்ன “வெள்ளைகுதிரை” கற்பனை கதையானாலும் என்மீதான அன்பினால்- உங்களது உள்ளுணர்வின் காரணமாக அந்த வெள்ளைகுதிரை கனவு கண்டிருந்தாலும் அதுவும் நடைபெறக் கூடியது என்றே நான் நம்புகிறேன்;

    ஏனெனில் கற்பனை கனவாகலாம்;
    கற்பனை செய்து கனவு காண இயலாது.

    மேஜிக் என்பதோ பலர் முன்னிலையில் அல்லது ஒரு மேடையில் சில தந்திர வித்தைகளை பயன்படுத்தி செய்து காண்பிக்கப்படுவது; பிரார்த்தனை செய்வது மேஜிக் அல்ல; வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுகிறோம் அது “மேஜிக்”கா..?

    “பேய் பிடித்திருக்கிறது” என்பது பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்; அதை சரி செய்ய தனிப்பட்ட முறையில் மனநல “ஆலோசனை” வழங்க வேண்டும்;அதுவே நேர்மையான முறை;

    ஆனாலும் திரள் கூட்டம் ஒருவித நம்பிக்கையினால் திரண்டு வரும் போது (உடல் வலி,தலைவலி,தூக்கமின்மை,கெட்ட கனவு…etc) அவ்வளவு பேரிடமும் தனித்தனியாகப் பேசமுடியாத சூழ்நிலையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று சொல்வதும் ஒரு வித மனோதத்துவ சிகிச்சையே; அது மோசடியல்ல;

    ஏனெனில் சுகம் பெற்றவர்களே தம‌து அனுப‌வத்தைப் பதிவு செய்கிறார்கள்; உங்கள் அடுத்த வீட்டுக்காரருக்குக் கூட இந்த அனுபவம் கிடைத்திருக்கலாம், கேட்டுப்பாருங்களேன்..!

    கிராமங்களில் மக்கள் அறியாமையினால் காய்ச்சல் வந்தால் கூட பூஜாரியிடம் சென்று மந்திரிக்கிறார்கள்; காரணம் அவர்களுக்கு பிரச்சினை தீர வேண்டும், அவ்வளவுதான்; அதைவிட நாகரீகமான முறையில் பிரார்த்தனை செய்வது மேஜிக் என்று எனக்குத் தோன்றவில்லை;

  155. Really there are many TV programes like this.
    Any how we should not allow these types of antihindu programes atleast in india.

    The chirstians and muslims are very jealousy about our hindu religion.As our religion is not
    only a religion but it is a life style that we cannot get anywhere in the world.
    So let us safe guard our religion from others.

    thanks
    sathish

  156. நண்பர் கிலாடி

    //
    எப்படியாயினும் எனக்கு முழு விவரம் தெரியாதவற்றுக்கு அல்லது மற்றவருக்காக வக்காலத்து வாங்கி வரிக்கு வரி பதில் சொல்லுவது என்னால் ஆகாத காரியம்.
    //

    இவ்வளவு நாலா நீங்க இதைத் தான் செய்துகொண்டிருக்குறீர்கள்
    எங்காவது ஓரிரு இடத்தில் உளறினால் பரவா இல்லை வரிக்கு வரி உலருவதால் தான் வரிக்கு வரி பதில்

    //
    நண்பர் அவர்கள் குறிப்பிடும் சப்பைக்கட்டு எனக்குத் தெரியாது; அதற்கு அவசியமும் இல்லை;

    நீங்கள் சொன்ன “வெள்ளைகுதிரை” கற்பனை கதையானாலும் என்மீதான அன்பினால்- உங்களது உள்ளுணர்வின் காரணமாக அந்த வெள்ளைகுதிரை கனவு கண்டிருந்தாலும் அதுவும் நடைபெறக் கூடியது என்றே நான் நம்புகிறேன்;

    ஏனெனில் கற்பனை கனவாகலாம்;
    கற்பனை செய்து கனவு காண இயலாது.
    //

    உங்களுக்கு மிக வெள்ளை மனது - உகல்லுக்கு நிச்சயம் அந்த ஒரு மில்லியன் டாலர் கிடைக்கும் - நம்புங்கள்

    //
    மேஜிக் என்பதோ பலர் முன்னிலையில் அல்லது ஒரு மேடையில் சில தந்திர வித்தைகளை பயன்படுத்தி செய்து காண்பிக்கப்படுவது; பிரார்த்தனை செய்வது மேஜிக் அல்ல; வாசலில் திருஷ்டி பூசணிக்காய் கட்டுகிறோம் அது “மேஜிக்”கா..?
    //

    தந்திர வேலை - சரியாக சொன்னீர்கள் - தினகரன் மட்டும் அல்ல பல ஹிந்து சாமியார்களும் இறைவனை கண்டேன் இதோ வர்றார் அவர் என்னை மட்டும் உங்களில் தேர்ந்து எடுத்து இன்ஜினியரிங் காலேஜ் கட்ட சொன்னார் என்று பொய் சொல்லுவது மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும் - அய்யா பிராத்தனையிலும் உண்மை இருக்க வேண்டும் - சும்மா வேணும் மக்களை கவருவதற்காக பொய் சொல்லப்டாது

    ஊருக்கே பூசணி சுற்றி த்ரிச்டி போகும் என்று சொல்வது மேஜிக் மட்டும் அல்ல சுட்டியா ஆண்ட பூசினியை ரோட்டில் போட்டு உடைத்து பலரை விபத்தில் சாகடிப்பது மனிதாபிமானமற்ற செயலும் கூட

    // ஏனெனில் சுகம் பெற்றவர்களே தம‌து அனுப‌வத்தைப் பதிவு செய்கிறார்கள்; உங்கள் அடுத்த வீட்டுக்காரருக்குக் கூட இந்த அனுபவம் கிடைத்திருக்கலாம், கேட்டுப்பாருங்களேன்..!

    இதெல்லாம் காசு வாங்கி கூறினார்கள் - இதை பற்றி பலர் ஏற்கனவே புட்டு புட்டு வைத்துள்ளார்கள்

    //
    கிராமங்களில் மக்கள் அறியாமையினால் காய்ச்சல் வந்தால் கூட பூஜாரியிடம் சென்று மந்திரிக்கிறார்கள்; காரணம் அவர்களுக்கு பிரச்சினை தீர வேண்டும், அவ்வளவுதான்; அதைவிட நாகரீகமான முறையில் பிரார்த்தனை செய்வது மேஜிக் என்று எனக்குத் தோன்றவில்லை;
    //

    பூசாரியும் பிரார்த்தனை தான் செய்கிறார் - தினகரன் செய்தால் மட்டும் அது நாகரீகமாகி விடாது - மேஜிக் யார் செய்தாலும் அது தவறே - நம்பவைத்து கெடுப்பது மிகப்பெரிய தவறே - இதை வேட்டி கட்டின பூசாரி செய்தாலும் கோட்டுபோட்ட தினகரன் செய்தாலும் தவறே

    //
    ஆனாலும் திரள் கூட்டம் ஒருவித நம்பிக்கையினால் திரண்டு வரும் போது (உடல் வலி,தலைவலி,தூக்கமின்மை,கெட்ட கனவு…etc) அவ்வளவு பேரிடமும் தனித்தனியாகப் பேசமுடியாத சூழ்நிலையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று சொல்வதும் ஒரு வித மனோதத்துவ சிகிச்சையே; அது மோசடியல்ல;
    //

    அய்யா தினகரன் பைபிளை அல்லவே மேற்கோள் காட்டுகிறார் - அப்போ என்ன பைபிள் மனோ தத்துவ நோயை தீர்க்கும் ஒரு மெடிக்கல் பூக்கா
    அப்போ அத ஏன் மெடிக்கல் காலேஜுல பாடமா வேக்கரதிள்ள

    சப்பைக்கட்டு கட்டினால் இப்படித்தான் முன்னுக்கு பின் முரணா போய்டும் . கொஞ்சம் யோசிச்சு பதில் அனுப்புங்க.

  157. Dear Tamilhindu,

    Please dont publish Galdys comments. they have n number of medias to make thier comments. This is one of the few medium where hindus get the oppertunity to make their comments. I will be able to understand the intenion of this guy perfectly. But, I am sure, the common person (who is unware of hindu dharam and Christian goons) cant understand his statements. Please consider this request and block him completely.

    Ivan,
    SRI

  158. SRI சொலவதை மறுக்கிறேன்.

    கிளாடி போன்ற கிறிஸ்துவ பிரச்சாரங்களை உடைக்க தமிழ் இந்துவே நல்ல தளம்.

    இது போல அவர்களது தளங்களில் வாதிட அனுமதிக்க மாட்டார்கள்.

    கிறிஸ்துவத்தை அவர்களது முழு வாதத்தையும் வைத்தே அவர்களது பொய்களை கிழிக்க தமிழ்நாட்டில் வேறு தளமே இல்லை.

    ஆகவே இவர்களது முழு கருத்துக்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  159. அன்புள்ள தமிழ் இந்து தளத்தினருக்கு,

    நான் இந்த கேள்வியை கிளாடியிடம் கேட்டேன்.

    அதற்கு அவர் பதிலளித்து, அதனை நீங்கள் எடிட் செய்தீர்களா என்று அறிய ஆவலாய் உள்ளேன்.
    //
    “சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”

    இவ்வளவு இயேசுவை நம்பும் கிளாடி, மேற்கண்ட வாக்கியத்தின் படி விஷத்தை குடித்து, இயேசு சொன்னதை நிரூபித்து காட்டலாமே?

    வியாதியஸ்தர்கள் மீது கைவைத்து டிஜிஎஸ் தினகரன் குணப்படுத்துவது உண்மை என்று இயேசு சொன்னதை வைத்தும் டிஜி எஸ் தினகரன் சொன்னதை வைத்தும் நம்பும் கிளாடி அதே வரியில் அடுத்து இருப்பதையும் நம்புவதில் என்ன பிரச்னை
    //
    இதற்கு கிளாடி பதில் சொல்லவில்லை என்றால், ஏன் அவர் இதற்கு பதிலளிக்க மறுக்கிறார் என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

  160. திரு கிலாடி சார்,

    தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.

    பல கொலைகளும்,பல கற்பழிப்புகளும் செய்து விட்டு,யேசுவிடம் பாவமன்னிப்பு பெற்றுவிட்டு இறக்கும் கிருஸ்தவன் ஒருவன் எங்கு செல்வான்?கடவுளிடமா? அல்லது மீளா நரகத்திற்கா?

    எந்த குற்றமும் செய்யாமல்,ஏழைகளுக்கு உதவி,தர்ம காரியங்கள் பல செய்து,இந்துகடவுளைக் கும்பிட்டு வாழ்ந்து,இறக்கும் ஒரு இந்து எங்கு செல்வான் மீளா நரகத்திற்கா?