வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

bharat_mata_abanindranathவந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

– வந்தே மாதரம்:  மகாகவி பாரதியாரின் மொழியாக்கம் (முழுவதும் இங்கே).

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும்  நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: – ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: – கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: – ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: – கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: – ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: – ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: – ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: – லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: – ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: – வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: – தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

– கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, திருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து.   இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான  வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன – வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

–  ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்”  என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்!

70 Replies to “வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!”

  1. //ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்//
    என்ன அருமையான யோசனை. இதை அவர்கள் எதிர்க்கிறார்களோ இல்லயோ நம் ‘sickular’ கட்சிகள் கண்டிப்பாக எதிர்க்கும். அவர்கள் அடிமடியிலேயே கை வைக்கும் யோசனை ஆயிற்றே! வாக்கு வங்கிகள் திவாலானால் அவர்களே திவால் ஆகி விடுவார்களே.

    ஆனால் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ரவிசங்கர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வந்தேமாதரம் பாடுவது அவரவர் இஷ்டம் என்று Darul Uloom at Deoband அறிவித்து விட்டதே!

  2. //ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்//

    ஏன் இந்த வெறி ! !!!!!!!

  3. ” நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது “.

    மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது.

    வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

    தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

    இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.

  4. இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு.

    இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

    கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான ‘ஜெவோகா விட்னஸ்’ பிரிவைச் சேர்ந்தார்கள்.

    அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது.

    ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

    19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

    இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.

    (comment edited & published)

  5. //ஏன் இந்த வெறி ! !!!!!!!//
    You want to have the cake and eat it too!

  6. sharraj

    /// ஏன் இந்த வெறி ! !!!!!!!

    தேசியப்பற்று உங்களுக்கு வெறி அகிடிச்சோ

    எது வெறி – அண்ட வந்தவர்கள் வந்தே மாதரம் என்னும் தேசிய கீதத்தை தாங்களே தடை செய்வதா அல்லது தேசியம் வேண்டதொர்க்கு வோட்டுரிமை எதற்கு என்பதா – சொல்லப்போனால் தேசியத்திற்கு எதிராக நடப்போரை நாடல்லவா கடத்த வேண்டும்

    மதம் என்ற பெயரில் போலியாக அல்லவே வாழ்கிறார்கள் அரபு நாட்டு இஸ்லாமியர்கள் – அரேபியாவிலிருந்து ஒரு கூட்டம் விடுமறை நாட்களில் பகேரின் கிளம்பிவிடும் – ஏன் அங்கு அரேபியாவில் இருக்கும் பல சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன – அங்கே சென்று குடித்து – அப்புறம் இத்யாதி இத்யாதி கும்மாளம் அடித்து திரும்பும் – இது தான் ஷரியா சட்டப்படி நடக்கும் அழகா – அங்கேயே அல்லாடுது இங்கே வந்து இந்திய தாயை அவமானப்படுத்த வந்துட்டாங்க

  7. வந்தேமாதரம் பாடுவது பிரச்சினை இல்லை தான். இந்திய தேசியக் கொடி, தேசிய கீதம் இவை தான் ஆகாது. பாக் தேசிய கீதம், கொடி மட்டும் ஏற்றலாம். வணக்கம் சொல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூட சொல்கிறார்கள். இதெல்லாம் அறிகுறிகள் தான். உண்மையான நோய் தேசப்பற்று இல்லாமை. மத அடிப்படையில் தேச பக்தி இருக்கிறது. அவர்கள் மதம் இந்த நாட்டை சேர்ந்தது இல்லை. அந்த மதம் எங்கிருந்து வந்ததோ அங்கு தானே பக்தி இருக்கும்.

  8. // நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது

    அப்போ இறைவன் இங்கே நம்மோடு இல்லை என்கிறீர்கள் – ஒன்னே ஒன்னு நீங்க எல்லாம் புரிஞ்சிக்கணும் – எதிலும் இறைவனை காண்பது அழகா – இல்ல யாருமே பாக்கட ஒன்ன இறைவன்னு கும்பிடறது அழகா

    இவ்வளோ பேசற நீங்க – அரபு நாட்டுக்கு வந்தா பெண்கள் பொட்டு வெச்சுக்க கூத்து – ரமலான் அப்போ பகல்ல யாரும் பாக்குற மாதிரி சாப்டா கூடாது – அப்புறம் என்ன என்ன ரூல்ஸ் போடறீங்க – உங்களுக்கு ஒன்னு – எங்கள்ளுக்கு ஒன்ன – இதுக்கி பேர் தான் காட்டு மிராண்டி தனம்

    // இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்
    //

    இது உமக்கே கேவலமா இல்ல சொல்றதுக்கு – தீவிரவாதமா என்னன்னு இப்போ ஒலகத்துக்கே தெரிஞ்சு போச்சு ஒக்வா

    உங்கள யாரும் கட்டாய பதுதலா – நீங்க தான் பாடகூதடுன்னு கட்டையா படதுறீங்க – பாடின வெட்டுவேன்னு சொல்றீங்க – இது தானே வெறி

    /// இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை

    இதெல்லாம் கொஞ்சம் காமெடி – ஷரியா சட்டமே வன்முறையின் ஓர் சுருக்க வடிவம் – இதை பற்றி இந்த தலத்தில் நிறைய மறுமொழிகள் உள்ளன

    – ஒருவன் தன மனைவியை பச்சை பிரம்பால் அடிக்கலாம் – இது வன்முறை இல்லையா – ஒருவன் இஸ்லாதிருக்கு எதிராக செயல் பட்டால் அவனை கொள்ளலாம் இது வன்முறை இல்லையா

    – இந்தியாவில் முதலில் வன்முறையை தூண்டியது யாருன்னு உங்களுக்கு சொல்லனுமா ? கஜினி முஹம்மத் – எவ்வளோ வன்முறையை கட்டவிழ்தான் என்று சொல்லனுமா எவ்வோளோ கொயவில்களை இடித்தான், எவ்வோளோ பெண்களை கற்பழித்தான், எவ்வளவு ஹிந்துக்களை கொன்றான்? ஏன் திப்பு சுல்தான் செய்தா அட்டுழிங்கால் தான் எவ்வளவு

    இது அணைத்திருக்கும் மூல காரணம் உங்கள் மதம் தான் தரும் இடம் தான் – காபிர், பத்வாபோன்ற துரும்புகள் தான் – நீங்கெல்லாம் பாடவா போடறத நிரிதினாலே உலகம் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் – ஆனா உன்ன ஒரு பத்வா போட்டுர்ரது – ஒரு வரையறையே கிடையாது – கொஞ்ச நாலா ஒருர்தருக்கு ஒருத்தர் பத்வா போட்டுக்கிட்டு எல்லாரும் காளியாகிடாம பாத்துக்கொங்கா

    இந்தியா வேண்டுமாம் – இந்திய கீதம் வேண்டாமாம் – மலேசியா இஸ்லாமியர்களுக்கு yoga வேண்டுமாம் ஆனால் ஆன அது உருவான ஹின்டு மதம் வேன்டமாம் – Pre hypocrisy

    //தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும்

    அப்போ எல்லாருமா சேந்து குரான் ஓதலாமா – இல்ல அல்ல உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என்ற பாடலை தேசிய கீதமா மாத்திடலாமா

    // ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது

    அப்போ நீங்க தமிழ்நாட்டிலே படிக்கல – தமிழ்நாட்டுல வாழல? இல்ல வாழ போறது இல்ல அப்படிம்பிங்களா

    தமிழ்நாட்டின் அரசு முத்திரை என்னன்னு தெரியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் சாமி கோபுரம்

    நீங்க தமிழ் நாட்டிலே படிதவரானால் உங்கள் மத கொள்கை படி நீங்கள் ஒரு காபிர் – ஒரு கோவில் முத்திரையை ஆதாரமாக கொண்டதை தான் நீங்கள் கற்றுள்ளீர்கள் – படிச்சதா எல்லாம் மருந்துருங்கா – உங்களுக்கு ஏத்தமாதிரி புதுசா படிக்க முயற்சி பண்ணுங்க

  9. //sharraj

    19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

    இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.//

    will you people ever try to think? god has given us brains to think and you people never use it. No one is forcing you to sing ‘vande mataram’. All we condemn is you saying ‘I will not sing vande mataram’. If muslims dont tell anything and keep their mouth shut when others are singing ‘vande matarma’ no one is going to notice or make it a big issue. You people make it a big issue and then complain about others.

    its pity that you are talking about ‘இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்’.. this is what we call ‘satan vedam oodhugirathu’ 🙂

    read this news article…

    https://news.rediff.com/report/2009/nov/02/uk-queen-will-wear-burkha-radicals.htm

    What will you call this? I am sure you will call this as your relgious belief… god save this country.

  10. இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களின் வாதம் நகைப்பிற்குரியது.

    //மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.//

    சரி… அப்படியே வைத்துக் கொள்வோம். பிறகு ஏன் எந்த முஸ்லிமையும் பாட வேண்டாம் என்று பத்வா போடுகிறீர்கள் ?? வந்தே மாதரம் பாடாமல் இருந்து தான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் மதப் பற்றைக் காட்ட வேண்டுமா என்ன?? பிறகு வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள் எல்லாம் யார்??

  11. Sharraj

    //
    இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது
    //

    உலகத்தில் முக்கால் வாசி மதம் இத தான் பின்பட்ற்றுது- நீங்க ஒன்னும் வித்யாசம பன்ரதா நெனப்பு வேனாம்

    “சர்வ தேவ நமஸ்காரஹா கேஸவம் ப்ரதி கட்சதி” – இது பேரியர்வர்கல் அவர்கலை வனங்கினால் சொல்வது -அதாவது – உண் வானக்கம் எனக்கு அல்ல இறைவனை சென்று அடயும் அப்படின்ன அர்தம்

    உமது எல்ல சேயல்கலும் இறைவனை நோக்கி, எல்ல வனக்கமும் இறைவனை நொக்கி, என் வாழ்வே இறைவனை நொக்கி என்கிற என்னம் இருக்கனுமே தவிர உம்மைபொல வெறி இருக்க கூடாது

    வாழும் பொழுது எதிலுமெ இறைவனை கானாத நீர் எப்படி வாழ்வு முடியும் பின்னர் இறைவனை கானப்பொகிரீர்

    கொஞ்மவது மூலைக்கு வேலை கொடுத்தால் நான் சொல்வது புரியும்

  12. நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

    முஸ்லீம் என்பவன் இறைவனை மட்டும் வணங்குபவன்.
    இறைவன் அல்லாத எதை வணங்கிநாளும் அவன் முஸ்லீமல்ல.
    இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    இஸ்லாத்தில் சேரயாருடை அனுமதியும்,யாருடைய அங்கிகாரமும் தேவைஇல்லை.
    முஸ்லீமுடைய கடமைகலில் கூட்டியோ அல்லது கு்றைத்தோ கூடசொல்லவோ, செய்யவோ அனுமதி இல்லை.

    பிறகுயார் முஸ்லீம்?
    படைத்தவனை மட்டும் வணங்க வேண்டும்.
    தீயதை தடுத்து நல்லதை ஏவவேண்டும்.
    அவனுக்கு சில கடமைகள்உல்லது,அதை அவன்நிறைவேற்ற வேண்டும்.
    இதில் மாறுபட்டவனை முஸ்லீம் என்று அழைக்கவேண்டாம்,
    அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்

  13. எப்பொழுதுமே கவிதையில் அல்லது பாடலில் வரிகளை நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது. மதிமுகம் என்றால் முகத்தையும், சந்திராயன் அனுப்பிய நிலவின் புகைப்படத்தையும் ஒப்பிடக் கூடாது. அதே போல் தான் இதுவும்.வந்தே மாதரம் ஒரு கவிதை/பாடல். வணங்குகிறேன் என்றால் மண்டியிட்டு பயபக்தியுடன் வணங்குவது அல்ல. ஆழமான, உண்மையான மரியாதையை செலுத்துவது , தாயிடம் செலுத்தப்படும் அன்பைப் போல. ஆனால் கவிதையைக் கூட ரசிக்கத் தெரியாத இந்த ‘அறிவாளிகள்’ ஒரு கவிதையை அப்படியே நேராகப் பொருள் கொண்டு பொங்கி எழுந்திருக்கிறார்கள்.
    இவர்களிடம் எப்படி விளக்குவது…

    இந்த விஷயத்தில் இஸ்லாமியர்கள் மீது குற்றமில்லை. ஏனெனில் அவர்களின் அடிப்படை சித்தாந்தமே குரான் மட்டும் தான். ஒரு வார்த்தை மாறாமல் அதை உண்மை என்பர். வேறு எதையும் கேட்க மாட்டார்கள். அவர்களிடம் சென்று வாதம் புரிவது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான்..

  14. சின்னாமனி அஷ்ரஃப் அலி அய்யா

    மதம் நல்லது தான் மனிதனுக்கு தான் மதம் பிடித்தால் எல்லாம் செய்வான் என்கிறிர்கள் – நீங்கள் சொன்ன திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் ஒருவன் எனது நண்பனின் மாமா – எனது நண்பனே இதை பற்றி பலமுறை கவலை கொண்டிருக்கிறார்

    எல்லாம் OK
    // அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்

    ஏன் நீங்கள் முஸ்லிம் அல்லாதவனை ஒரு சக மனிதன் என்று அழைக்கக்கூடாது

    Worship yours Respect All – இதை எல்லோரும் செய்யலாமே – இது மிக எளிதான ஒன்று தானே

    நான் சொல்வது சரி தானே!

  15. B.R.ஹரன்:
    // நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். //

    திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக அவர் சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;

    சந்தியா ஜெயின்:
    // தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்”என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.//

    சரி,இந்த கட்டுரையின் ஆசிரியர் அதனை வழிமொழிகிறாரா?
    ரொம்ப சந்தோஷம்,பாரதத் தாயை நீங்களே கூறுபோட்டு விற்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே..!

    அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
    சற்று விவரம் கேட்கவேண்டும்..!

    இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?

    சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!

    ஒரு திரைப்படத்தில் “ஆச்சி” மனோரமா என்று நினைக்கிறேன்,வந்தே மாதரம் என்பதை “வந்தேமாத்ரோம்” அதாவது வந்து ஏமாத்துறோம் என்பார்கள், பரியாசமாக; இன்றைக்கும் அதுதான் நடக்கிறது;

    கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்கவே வெள்ளைக்காரன் வந்தானோ எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள், ஒற்றை இலக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உண்மையான தியாகிகள்; சுதந்தரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளோ மனம் வெதும்பிய நிலையிலிருக்கின்றனர்; அவர்களுக்காக ஒரு துரும்பும் கிள்ளிப் போட மனமில்லாத நான் “பாரத் மாதா கீ ஜே” என முழங்கி ஆகப் போவதென்னவோ?

    ரொம்ப ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால் எங்கே அந்நியன் வந்து ஆக்கிரமித்து விடுவானோ என பயந்து போய் கிடக்கிறேன்…!

    சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் “வந்தே மாதரம்” பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?

    “சந்தியா வந்தனம்” செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் “எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டே” என்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!

  16. சின்னாமனி அஷ்ரஃப் அலி/ஷர்ராஜ் அவர்களே

    //முஸ்லீம் என்பவன் இறைவனை மட்டும் வணங்குபவன்.

    வணக்கத்தையும் சரணாகதியையும் வீணாக போட்டு கொழப்பி கொண்டுள்ளீர்கள் என்றே நான் நினைக்கிறேன் – ஹிந்து மதத்தில் வேதாந்திகளும் இறைவனை தவிர யாரிடமும் சரணாகதி செய்ய மாட்டர்கள் – வீட்டில் பெரியவர்களை விழுந்து வணங்குவதற்கும் கோயிலில் இறைவன் முன் வணகுவதற்கும் விதிமுறைகள் உள்ளன

    வணக்கம் என்பது மரியாதை செலுத்துவது அதாவது ஓர் உருவில் இருக்கும் ஒருவர் இன்னொரு உருவில் இருக்கும் ஒருவருக்கு மரியாதை செலுத்துவது. சரணாகதி என்பது – ஒருவனின் ஆன்ம நிலயை உணர்ந்து அதை இறைவனிடம் ஒப்பு கொடுப்பது – அல்லது இறைவா நான் எனது ஆன்ம நிலயை உணர்ந்தேன் என்று இறைவனிடம் சொல்லுவது

    வந்தே மாதரத்தை சொல்வதென்பது அதனிடம் சரண் புகுந்தேன் என்பதல்ல – தாய் மண்ணிற்கு மரியாதை செலுத்துவதே

    நான் சொல்வதில் தவறேதும் இல்லையே

  17. //இதில் மாறுபட்டவனை முஸ்லீம் என்று அழைக்கவேண்டாம்,
    அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்//
    அப்போ அவனுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றீங்களா!!!! என்னதிது சின்னபுள்ளதனமா இருக்கு அப்புறம் அவனுக்கு அந்த கட்சியில எப்பிடி பொழப்பு நடக்கும்???!!!

  18. //மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;// இந்தியாவில் எல்லா முஸ்லிமும் கிட்டத்தட்ட அப்படித்தானே
    //இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?//
    எது இருப்பது எது இல்லாதது?
    (‘sickular’ கட்சிகளில் இல்லாத) நாத்திகர்களை கேளுங்கள் நீங்கள் இருக்கு என்று சொல்வதை இல்லை என்று சொல்வார்கள்
    தாய் பாசம் என்பதே மாயம் என்று சொல்வீர்களா ஒரு 10 மாதம் சுமந்ததற்க்கே வாழ்நாள் முழுவதும் மரியாதை செலுத்த வேண்டும் என்றால் வாழ இடமும் வழியும் கொடுக்கும் நாட்டை தாய் நாடு என்று சொல்வதும் மரியாதை செலுத்துவதும் மாயமான ஒன்றில்லைதானே?
    //“சந்தியா வந்தனம்” செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் “எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டே” என்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!//
    TR மாதிரி எழுதணும்னு ஏதோ எழுதிட்டீங்கன்னு நெனைக்கிறேன் சந்தியாவந்தனம் சூரியனை பார்த்து பண்ணறது வீட்டுக்கு வெளியிலோ மொட்டை மாடியிலோ ஜன்னல் எங்க வந்தது
    சந்தியாவந்தனம் செய்ய வெக்கப்பட்டு ஜன்னல மூடறாங்கன்னு சொல்ல வரீங்களோ! அந்த அளவுக்கு சந்தியாவந்தனம் பண்ணறவங்க பயந்து போய் கெடக்கறாங்க ‘sickular’ அரசியல்வாதிகளோட ஆட்சியிலன்னு எடுத்தக்கலாமா??

  19. Glady ,good you are back, Now let us talk about the Christian paedophille priests,.
    Where shall we start? Or shall we start talking about the nuns getting raped by the your holy fathers? Don’t run away again without facing the “truth” about christianiy.

  20. ரொம்ப நல்லவன் மாறி பேச வேண்டியது.

    நல்லவன் மாறி ஆனா நல்லவன் இல்ல.

    நீங்க பாட்டுக்கு “ஒரே கடவுளை” அமைதியா வணங்கிக் கொண்டு இருந்தா, யாரும் உங்களை குறை சொல்லப் போவது இல்லை.

    ஆனால் அந்த கடவுளை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. அந்த காட்டு மிராண்டிக் கட்டளைகளுக்கு கீழ் படிய மறுத்தால் கழுத்தை வெட்டுவேன் என்பது, காபிர்கள் என்பது, ஜிஹாத் செய்ய வேண்டும், மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பது.

    அதற்குப் பரிசாக சொர்க்கத்திலே அழகிய கண்களை உடைய யாரும் தொடாதவர்கள் நம்மை வரவேற்பார்கள் என்பது.

    நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

    என‌வே யாரும் காணாத‌ ஒரு விசய‌த்தை, அப்படியே ந‌ம்ப‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து ஏன்?

    க‌ட‌வுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்க‌ள் அங்கீக‌ரிக்கிறீர்க‌ளா?

    பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை இல்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா?

    க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.

    அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

    யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை சுவிசெசகர்கள் சுவீகாரம் செய்து கொண்டார்கள்

    அதே வியாதி இசுலாமியருக்கும் பரவியது, ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

    யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

    சரி யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!

    சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,

    நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,

    யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.

    வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப் படுத்தக் கூடாது என்கிறார்கள் அல்லவா,

    அதைப் போல நீங்களும்

    “ஒரே கடவுள் தான்,
    அவரை வணங்க்கித் தான் ஆக வேண்டும்.
    அப்படி வணங்காதவர் மீது ஜிஹாத் போர் நடத்தி அவர்களை கொல்ல வேண்டும்”
    என்பது போன்ற காட்டு மிராண்டி, காம கொடூர கருத்துக்களை குரானில் இருந்து எடுத்து, மற்றவர்களை கட்டளை போடாமல் கட்டாயப் படுத்தாமல் இருங்கள்.

    அப்போது உங்களையும் யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்.

  21. இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் தாய் மற்றும் தாய் நாட்டை விற்க துணிந்தவர்கள். இவர்களிடம் நீதி, இரக்கத்தை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்/ எதிர்காலத்தை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் இவர்களல்ல.

    ஜெய் ஹிந்த்

  22. //பிறகுயார் முஸ்லீம்?
    படைத்தவனை மட்டும் வணங்க வேண்டும்.
    தீயதை தடுத்து நல்லதை ஏவ வேண்டும்.//

    இது சும்மா ஒப்புக்கு கூறப்படும் விளக்கம்!

    சரியான விரிவான விளக்கத்தை ஜனாப் ரஹ்மத்துல்லா அவர்கள் நமக்கு இதே தமிழ் இந்து தளத்திலே அளித்து இருக்கிறார்.

    https://tamilhindu.com/2009/09/unnai_pol_oruvan_review/

    பார்வை: உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

    //ரஹ்மத்துல்லா
    4 October 2009 at 7:35 pm

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

    கமலஹாசன் ஒரு காபிர். அவரது கரிசனத்தையோ அல்லது உங்களது கரிசனத்தையோ முஸ்லீம்களான நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

    (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

    நீங்களெல்லாம் இப்படித்தான் அல்லாஹ்வின் கொள்கைகளை கேலி செய்வீர்கள் என்பதை அல்குரானிலேயே அறிவித்துள்ளான்.

    குண்டு வைப்பது குண்டு வைப்பது என்று இங்கே பலர் பேசி வருகிறார்கள். என்னவோ அது பெரிய தப்பு என்பது மாதிரி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு சண்டை வந்தால் இந்தியா குண்டுதான் வைக்கும். அது தப்பா?

    இஸ்லாமியர்கள் ஒரு தேசம். அவர்கள் எந்த தேசத்தின் உள்ளேயும் வரமாட்டார்கள். இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

    ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

    ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)

    இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)

    ‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

    டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று காய்தே ஆஸஸம் முகம்மதலி ஜின்னா அறிவித்து காபிர்களை படுகொலை செய்தது அதற்கு முன்னால் காபிர்கள் முஸ்லீம்களை கொன்றதால் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு தனி தேசம். அது தார்-உல் இஸ்லாம். அதனை காப்பாற்றவும், காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட.

    ஜிகாதுக்கு புறப்படாதவர்கள் முஸ்லீம்களே அல்ல

    இனி அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவர்களுக்காக ஜானஸா [மரணத்தொழுகை] தொழாதீர் .மேலும் அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் [9:84]

    அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.//

    —————-

    ஜனாப் ரஹ்மத்துல்லாவே சரியான இஸ்லாத்தை நமக்கு காட்டுகிறார்.

  23. வாய்யா வாய்யா கிலாடி –

    நீ யாருன்னு காட்டிபுட்ட

    //
    திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; …… மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்
    //

    அப்போ நீர், அசோக் குமார் கோபாலன், அப்புறம் இங்கே வந்து வாரி இறைக்கும் ஏனையவர்கள் எல்லாரையும் டேரக்டா ஏசுவே வானத்துலேருந்து தூக்கி போட்டாரா – எலே அம்புட்டு பேறும் நேத்து வரைக்கும் மாரியாத்தாவ கும்பிட்ட பயலுவ இன்னிக்கு ஏதோ மேரி ஆத்தாவ கும்பிரானுவா

    அம்புட்டு பேறும் இப்போ மூளைய வாடகைக்கு விட்டுட்டு வந்டுட்டீங்கா அவ்வோலாவவே தான்

    // அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
    சற்று விவரம் கேட்கவேண்டும்..!
    ///

    மெய்யாலுமே கேக்கறேன் – கழட்டி வெச்சுட்டுத்தான் பெசுரிரோ
    பாரத தாயின் விலாசம் காஷ்மீர் – கன்யாகுமாரி வரைக்கும் – அத்தனையும் அவள் தான் – நீர் ஒத்துகிட்டாலும் ஒத்துக்காட்டியும் அவளின் கிருபை 🙂 உமக்கு இல்லாவிடில் நீர் ஒரு காரியமும் நடத்த இயலாது

    //
    சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!
    //

    ஏதோ தொன்றதேல்லாம் எழுத வேண்டியது – அப்போ இங்கிலாந்து இங்கிலாந்துன்னு ஒரு நாடு இருக்கு – அவங்க முன்னங்கட்டிலேந்தே ஒரே நாடத்தான் இருந்தாங்க – அவங்கள யாரும் ஆட்சி செய்யலா – அப்போ உங்களின் அறிவு மிக்க கூற்றுப்படி – அவர்களுக்கு தேசிய கீதம் என்று ஒன்று இல்லை அப்படிதானே – புட் பால் மேட்ச் விளையாடறதுக்கு முன்னாடி கூட பாடரங்கலேய்ய.

    சும்மா ஒளர வேண்டியது – உங்களை சொல்லி குற்றமில்லை – எல்லாம் ஸுர்ப் எக்ஸ்செல் போட்டு சலவை செய்துள்ளார்கள்

    //இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?

    இருப்பது என்று எதை சொல்கிறீர் – நான் ஒன்னும் ஒங்கள மூளை வழிபாடு செய்ய சொல்லலையே?
    நீங்கள் வந்தே மாதரம் சொல்லாட்டி பாவிகள் ஆகிடுவீர்கள், நீங்கள் சாத்தானின் கூடத்தில் சேர்ந்து விடுவீர்கள் என்று சொல்லலியே

    தேவையே இல்லாம ஒரு கூட்டம் – வந்தே மாதரம் மீது பத்வா பதிநோன்னுவா என்கிறார்கள் – இந்த அல்ப வேலை தான் வேண்டாம் என்கிறோம்

    //
    சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் “வந்தே மாதரம்” பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?
    //

    அப்போ பைபிள் மட்டும் படிச்சு என்ன பிரயோஜனம் – நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கா

    அப்போ சிக்கன் சாப்ட்ரவனுகெல்லம் தேசிய உனர்வெ கூடாதுன்னு சொல்ரிங்கல – இது ரொம்ப புதுசா இருக்கெ

  24. அப்பப்பா… ஒரு நாட்டில் இருந்துகொண்டு அந்த நாட்டின் தேசிய பாடலையும், தேசிய கீதத்தையும் பாடச் சொல்ல எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? இவர்களைப் போன்ற கிறிஸ்துவர்களையோ, முஸ்லீம்களையோ குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். (இவர்கள் இப்படி இல்லையென்றால்தான் நாம் கொஞ்சம் பயப்பட வேண்டும்). நாம் கண்டிக்க வேண்டியது நம் அரசாங்கத்தைத்தான். அது நம் குரலுக்கு செவிசாய்க்காத போது இதை செய்ய திராணியுள்ள பாஜக கட்சியை அரசுக்கட்டிலில் அமர்த்துவது தான் நாம் செய்யவேண்டியது. தேர்தல் சமயங்களில் இது போன்ற கட்டுரைகளை நம் போன்றவர்கள் முயற்சி எடுத்து பரப்ப வேண்டும். தமிழ் ஹிந்துவிற்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள்.

    பாஜக கட்சிக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. நாடும் எங்களைப் போன்றோரும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். தயவு செய்து உங்கள் உட்கட்சிப் பூசல்களை நிறுத்திவிட்டு நாட்டுப்பிரச்சனைகளை கவனியுங்கள்.

    ஒரு முக்கியமான விஷயம். நம் நாட்டையும் நமது பண்பாட்டையும் மிகவும் மதிக்கும் ஹிந்து அல்லாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இவர்களைப் போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மிகவும் மனவருத்தத்தையும் தளர்ச்சியையும் கொடுக்கும், கொடுக்கின்றன. அவர்களுக்கு இறைவன் அமைதியைக் கொடுக்கட்டும்.

  25. அன்புள்ள Sarang,

    ////Sarang
    13 November 2009 at 8:32 pm
    அன்புள்ள திருச்சிகார நன்பரெ –

    //க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.
    //

    ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் – நீங்கள் ஏன் இங்கே உள்ள சில இஸ்லாமியரையும் க்ரிஸ்தவரயும் சிந்திக்க சொல்கிறிர்கல் அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல் – இவ்வளவு கடினமானதை, அவர்கள் வேதத்திற்கு சற்றும் அடுக்காத யோசனை என்னும் செயலை அவர்கள் கட்டாயம் செய்ய மாட்டார்கள்

    கடலில் உப்பை கொட்டி என்னதான் ஆகபோகிறது////

    சிந்திப்பதும், சிந்திக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

    ஆனால் இன அழிப்பு, இனப் படுகொலைகளை செய்வதற்காகவும், தங்களின் காம வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு சிலரின் கற்ப்பனையில் உருவான கற்பிதங்கள்,

    உலகத்திலே எத்தனைக் கோடிப் பேரின் உயிரைக் குடித்து, இரத்த ஆறை ஓட விட்டு, நாகரிக சமுதாயத்திலே இன்னமும் காட்டு மிராண்டிக் கருத்துக்களை , காமக் கொடூர கருத்துக்களை, கொலை வெறிக் கருத்துக்களை, நச்சுக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது அவசியமே.

    சிறு துளி பெரு வெள்ளம்

  26. //ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் – நீங்கள் ஏன் இங்கே உள்ள சில இஸ்லாமியரையும் க்ரிஸ்தவரயும் சிந்திக்க சொல்கிறிர்கல் அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல்//
    அய்யா சாரங் அருமயாக சொன்னார்
    பயப்படுதல்தான் அடிப்படை என்ற மதங்களை சேர்ந்தவர்கள் பயந்தே வாழ்ந்து judgement dayக்கு பயந்தேதான் சாகிறார்கள். அதுதான் சரி என்று அவர்கள் சொல்வது ‘மூக்கறுபட்டவன்’ சொல்வது போல்தான்.
    தூங்கறவனை எழுப்ப முடியும் தூங்கற மாதிரி நடிக்கிறவனை…???

  27. kumar
    “உங்களுக்கு மட்டும் ஏன் இந்த மதவெறி ?”

    மதவெறி அல்ல. முஸ்ஸிம் முஸ்ஸிமாக வாழநினைப்பது மதவெறிய???
    முஸ்ஸிம் என்ற அரபி பெயர் தமிழ் விளக்கம் ” இறைவனுக்கு கட்டு பட்டவன்”

    armchaircritic
    //ஏன் இந்த வெறி ! !!!!!!!//
    You want to have the cake and eat it too!

    தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ” (comment edited & published) ”
    ஆசிரியர் தன் பொறுப்பை என்னை அறிந்து கெல்ல செய்துவிட்டர். “”

    Sarang

    – இந்தியாவில் முதலில் வன்முறையை தூண்டியது யாருன்னு உங்களுக்கு சொல்லனுமா ? கஜினி முஹம்மத் – எவ்வளோ வன்முறையை கட்டவிழ்தான் என்று சொல்லனுமா எவ்வோளோ கொயவில்களை இடித்தான், எவ்வோளோ பெண்களை கற்பழித்தான், எவ்வளவு ஹிந்துக்களை கொன்றான்? ”

    அன்பு நண்பர் Sarang . மற்றும் மற்று மத நண்பர்களே !

    1. இந்தியாவில் முதலில் லட்சகனக்கான சிலை வணங்கிகளை இந்து என்ற வளையத்திற்குள் வர வைத்தது யாருன்னு உங்களுக்கு சொல்லனுமா ? கஜினி முஹம்மத் – எவ்வளோ வன்முறையை செய்துள்ளர். முதலில் கொள்ளையடிப்பதற்க்கு வந்தார்கள். மதம் பரப்பஅல்ல. கொள்ளையடிப்பதற்க்குகே வன்முறையை செய்துள்ளர்.

    இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சியை கஜினி முஹம்மத் வழி வந்தவர்கள் வாள் முனையில் பரப்பியிருந்தால் TAMILHINDU, HIDUSTHAN, என்று சொல்ல நீங்கள்
    இந்துவக இருந்துதிருக்கமாட்டீர்கள்.

    2. இஸ்லாம் மதமாக அறிமுக படுத்த படவில்லை. இது மார்க்கம் . இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறும் வாழ்க்கை முறை.
    படித்து பாருங்கள் இஸ்லாம் பற்றி . உணர்விர்கள்.

    3. ” அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல் – இவ்வளவு கடினமானதை, அவர்கள் வேதத்திற்கு சற்றும் அடுக்காத யோசனை என்னும் செயலை அவர்கள் கட்டாயம் செய்ய மாட்டார்கள் ”

    உலகத்திலேயெ சிந்திக்க சொல்லும் சீரிய வேதம் இஸ்லாம்.

    * (திருக்குர் ஆன்) பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது (நபிகள் நாயகத்தின்மீது) இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! (தி-ருக்குர்ஆன் 38:29)
    * இவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றனவா? (திருக்குர்ஆன் 47:24)

    உலகத்திலேயெ சிந்திக்க சொல்லும் சீரிய வேதம் இஸ்லாம்.

  28. Dear Mr. armchaircritic

    //armchaircritic
    14 November 2009 at 9:58 am
    //ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் – நீங்கள் ஏன் இங்கே உள்ள சில இஸ்லாமியரையும் க்ரிஸ்தவரயும் சிந்திக்க சொல்கிறிர்கல் அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல்//
    அய்யா சாரங் அருமயாக சொன்னார்
    பயப்படுதல்தான் அடிப்படை என்ற மதங்களை சேர்ந்தவர்கள் பயந்தே வாழ்ந்து judgement dayக்கு பயந்தேதான் சாகிறார்கள். அதுதான் சரி என்று அவர்கள் சொல்வது ‘மூக்கறுபட்டவன்’ சொல்வது போல்தான்.
    தூங்கறவனை எழுப்ப முடியும் தூங்கற மாதிரி நடிக்கிறவனை…???//

    தூங்குகிறார்களோ , தூங்குவது போல நடிக்கிகிறார்களோ என்னவோ செய்யட்டும்.

    அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் கண்கள் திறந்து, எழுந்து உட்கார்ந்து நியாயத்தை , மனிதத்தை, உண்மையை நோக்கும்படி செய்ய நான் முயற்சி செய்தால்,

    அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல முடியுமா?

  29. //உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல முடியுமா?//
    எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நம்மிலேயே தெளிவு இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்கும் போது உங்கள் அறிவும் நேரமும் சிந்தனையும் அவர்களுக்கு உதவினால் அதிகம் பலன் இருக்குமே.

  30. சகோதரர் sharraj அவர்களே,

    சிந்திக்க உரிமை இருக்கிறதா?

    சரி சிந்திக்கலாம்.

    “இல்லை ஒரு கடவுள் அல்லாவினைத் தவிர, முஹமது அவரின் தூதுவர்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது எப்படி உண்மை ?

    இதை முகமது தான் சொல்லியிருக்கிறார். தன்னையே தூதுவர் என்று அறிவிக்கிறார்.
    அல்லாவோ -வேறு என்ன பெயரோ – கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவில்லை.

    காந்த புலத்தை, மின் கடத்திகள் வூடுருவி செல்லும்போது அதில் மின்னோட்டம் உருவாகும் என்று உலகின் எந்த மூலையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். நான் மட்டும் அல்ல, பலரும் அதை நிரூபித்துக் காட்ட முடியும்.

    எனவே நான்
    “Whenever the magnetic flux is cut by the electric conductors , in the direction perpendicular to the magnetic foeld, an emf will be induced in the electric conductor”

    என்கிற கருத்தை வெளிப்படையாக சொல்கிறேன்.

    ஆனால் நீங்கள் நிரூபிக்கப் படாத கடவுளை, யாரும் பார்க்காத கடவுளை இருப்பதாக கூறி பல கட்டளைகளை போட்டு காட்டு மிராண்டிக் கருத்துக்களை, காம கொடூர, காம தரகு கருத்துக்களை அந்த கடவுளின் பெயரால் திணித்து மக்களை வேட்டையாட கடவுளின் பெயரால் அனுமதி அளிக்கிறீர்கள்.

    நீங்க பாட்டுக்கு “ஒரே கடவுளை” அமைதியா வணங்கிக் கொண்டு இருந்தா, யாரும் உங்களை குறை சொல்லப் போவது இல்லை.

    ஆனால் அந்த கடவுளை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. அந்த காட்டு மிராண்டிக் கட்டளைகளுக்கு கீழ் படிய மறுத்தால் கழுத்தை வெட்டுவேன் என்பது, காபிர்கள் என்பது, ஜிஹாத் செய்ய வேண்டும், மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பது.

    அதற்குப் பரிசாக சொர்க்கத்திலே அழகிய கண்களை உடைய யாரும் தொடாதவர்கள் நம்மை வரவேற்பார்கள் என்பது.

    நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

    என‌வே யாரும் காணாத‌ ஒரு விசய‌த்தை, அப்படியே ந‌ம்ப‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து ஏன்?

    க‌ட‌வுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்க‌ள் அங்கீக‌ரிக்கிறீர்க‌ளா?

    பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று

    பிடரிகளை வெட்டுவோம், பிட்டத்தை வெட்டுவோம் என்று காட்டு மிரானைடி கொலை வெறியை பரப்பி உலகை சுடு காடு ஆக்கும் கருத்துக்களை நிரூபிக்காத, யாருக்கும் காட்டப் படாத கடவுளின் பெயரால் திணிக்கிறீர்கள்.

    இது சரியா,

    சிந்தித்து பதில் சொல்லுங்கள்.

    எல்லோரையும் கட்டாயப் படுத்தி, அவர்களுடன் சண்டை போட்டு, பிடரிகளை வெட்டி …. இது எல்லாம் தேவையா? நாகரீக சமுதாயமாக இருக்கக் கூடாதா?

    சிந்தித்து பதில் சொல்லுங்கள்.

  31. Dear Mr. armchaircritic/ Mr. Sarang

    armchaircritic
    14 November 2009 at 10:03 pm
    //உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல முடியுமா?//
    எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நம்மிலேயே தெளிவு இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்கும் போது உங்கள் அறிவும் நேரமும் சிந்தனையும் அவர்களுக்கு உதவினால் அதிகம் பலன் இருக்குமே//

    இங்கே இத்தனை பேர் எழுதும் போது, எனக்கு மட்டும் அறிவரை என்றால், என் மேல் மட்டும் தனியாக என்ன அக்கறை என்று தெரிந்து கொள்ளலாமா?

    மேலும் அறிவுரையும் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு போல //ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் -// என்று அதட்டலும் மிரட்டலுமாக இருக்கிறதே.

    எனக்கு எது வேண்டிய வேலை, எது வேண்டாத வேலை என்று தீர்மானிக்க வேண்டியது நான் தானே ?

    இதை எழுதுங்கள், அதை எழுதாதீர்கள் என்று உங்களை நான் கூறவில்லையே?

  32. ஒரு மார்க்கத்தை சேர்ந்தவர் வெறுப்புக் கருத்துக்களையோ, கொலை வெறிக் கருத்துக்களையோ, இன அழிப்புக் கருத்துக்களையோ, கர்ப்பளிப்புக் கருத்துக்களையோ கூறியிருந்தால் அவர்களை அம்பலப் படுத்துவதிலோ, கண்டிப்பதிலோ, திட்டுவதிலோ, இகழ்வதிலோ ஒரு காரணம் இருக்கிறது என்று கூறலாம்.

    காரணமே இல்லாமல் இகழ்வது, நல்லிணக்கத்தைக் கெடுத்து , வெறுப்பை அதிகரித்து பிளவை ஆழமாக்கும்.

    இங்கெ சகோதரர் sharraj என்பவர் //சிலை வணங்கிகளை// என்று கூறியுள்ளது அவசியம் இல்லாதது, தவறானது கூட என நினைக்கிறேன்.

    சிலை வழிபாடு செய்பவர்கள், அப்படி என்ன தவறான கருத்தை வைத்து இருக்கிறார்கள் என்று கூறி விட்டு //சிலை வணங்கிகளை// என்று எழுதி இருக்கிலாம்.

    சிலை வணக்கம் செய்பவர்களும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை இது வரை கொடுக்கவில்லை.

    அதே நேரம் அவர்கள் இது மட்டும் தான் கடவுள் என்று கூறி பிறரின் மேல் வெறுப்பு உணர்ச்சியை தூண்டாத வரையிலே, அவர்கள் பார்க்காத கடவுளை வணங்கி அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, வேறு எந்த குற்றச் சாட்டும் அவர்கள் பேரிலே இல்லாத போது

    சிலை வழிபாடு செய்பவர்கள, உருவமில்லாத கடவுளை வணங்குவதை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை.உருவ வழிப்பாடு செய்பவர்கள், தங்களுக்கு நன்மை வேண்டும் என்று கேட்கிறார்களே தவிர, நான் வணங்கும் உருவத்தை வணங்காதவனை கொல்ல வேண்டும் என்று நினைப்பதில்லை எனும் நிலையிலே,

    //சிலை வணங்கிகளை//

    என்று அவர்களைப் பார்த்துக் கூறினால்,

    அவர்கள் பதிலுக்கு,

    //பெண்களை சப்ளை செய்யும் மாமா பயலை வணங்கிகளை//

    என்று கூறும் படிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது போல ஆகி விடும்.

    எனவே கருத்துக்கு கருத்து என்ற வகையிலே கருத்து அடிப்படையிலே வாக்குவாதம் செய்வதே சரி. தவறான கருத்தை யாரவது கூறி இருந்தால், அந்த கருத்தை சுட்டிக் கட்டி அவரை கண்டிக்கலாம்.

  33. அடடா, வந்தே மாதரம் பாடுவது இஸ்லாமுக்கு எதிராம்! குரானுக்கு எதிராம்! அதனால் பாடமாட்டார்களாம்! பாத்வா இடுவார்களாம்…

    சரி ஷார்ராஜ் மற்றும் சின்னமணி ashraf ali, மற்ற சமூகத்தினரோடும், மதத்தினரோடும் சேர்ந்து வாழ்வதுகூடத்தான் இஸ்லாமுக்கும் குரானுக்கும் எதிரானது! மற்ற மதத்தவர்களை (காபிர்களை) கொல்லசொல்கிறதே குரான்… அப்படியென்றால், நாளை அதிகாரம், பதவி ஆகியவை உங்கள் கைக்குவந்தால் இஸ்லாம் சொல்லும் அதே வெறியாட்டத்தை நிறைவேற்ற இதே இமாம்களும் முல்லாக்களும் மற்ற மதத்தினரைக் கொல்லச்சொல்லி, சொர்கத்தில் 72 அழகான நங்கைகளுடன் பாலியலுறவு கொள்ளசொல்வார்கள், அதையும் நீங்கள் ஆமோதிப்பீர்கள், அப்படித்தானே???

    இஸ்லாமின் உண்மையான முகம் இப்பொழுது வெளிச்சம்…

    //திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக அவர் சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;//

    கிளாடி அவர்களே, பெரிய அறிவாளி என்று நினைப்பா உங்களுக்கு? நீங்கள் சொல்வதைப்போல காசுக்காகத்தான் அவர் வந்தே மாதரம் பாடினார் என்றால், ‘slumdog millionaire’ படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கும்பொழுது ஏன் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன?? இதுவரையில் வேறு எந்த முகமதீயரும் சாதிக்காததயா அவர் சாதித்துவிட்டார்? சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தாலோ, விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் ஸ்லாம் வென்றாலோ எந்த இந்துவாவது பிள்ளையார் கோவிலில் அர்ச்சனை செய்து பார்த்திருக்கிறீர்களா?? மேலும், கருணாநிதி “சிறுபான்மை தங்கத்தினால் இன்று இந்தியாவுக்கும் தமிழகதிருக்கும் பெருமை” என்றாரே, அதற்க்கு என்ன சொல்வீர்கள்??

  34. திருச்சிகார நண்பரே

    நான் வெறும் காமேடிக்க்காகதான் சொன்னேன் – நீங்கள் பொறுமையுடன் செய்யும் தொண்டினை தொடருங்கள் – நீங்கள் எழுப்பும் ஆழமான கேள்விகள் நிச்சயம் பலன் தரும்

    அய்யா ஷர்ராஜ்
    // இந்தியாவில் முதலில் லட்சகனக்கான சிலை வணங்கிகளை இந்து என்ற வளையத்திற்குள் வர வைத்தது யாருன்னு உங்களுக்கு சொல்லனுமா

    அய்யா நாங்கள் சிலை வணங்கிகள் கிடையாது – கடவுள் வணங்கிகள் – உங்களின் அடாத திமிர் மற்றும் வெறி இதிலிருந்தே தெரிகிறது
    நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தோம் – இந்த வலயம் எல்லாம் உங்களின் கற்பனையே

    சிலையை வணகுவது கேவலும் என்று என்னவதே கீழதனமான ஒரு சிந்தனை – எங்கும், எதிலும் இறைவனை காணும் தன்மை எங்களிடம் உள்ளது, ஏழு மேகத்தின் மேலே “easy chair” போட்டு தூங்கற ஒருத்தரை மட்டும் இறைவனை பார்ப்பது உங்களின் குறுகிய தன்மை உங்களது – கடவுள் என்ற தத்துவமே எதையும் கடந்தும் இருக்க வேண்டும், எதன் உள்ளும் இருக்க வேண்டும் – நீங்கள் எல்லாம் கடவுளை “கட” 🙂 என்று மட்டும் தான் அழைக்க முடியும்

    /// இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சியை கஜினி முஹம்மத் வழி வந்தவர்கள் வாள் முனையில்

    அச்சோடா கஜினி ஒரு பெரரருலான போல பேசறீங்க –

    கஜினி மற்றும் அந்த கீழ்த்தனமா வழி வந்தவர் அனைவரும் அண்ணன் தம்பியை கொன்றும் அப்பாவை கொன்றும் தானாகவே மடிந்தார்கள் – அவர்களின் செல்வாக்கு பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே இருந்தது – கொஞ்சம் வரலாற்றை புரட்டி பாருங்கள்

    இன்னும் ஒன்று சொல்லி கொள்கிறேன் – இந்தியாவில் உள்ள அணைத்து இஸ்லாமியர்களுக்கும் கஜினி வழி வந்தவர் தான் – கொஞ்சம் யோசித்து பார்த்தல் உங்களின் அழகு நன்றாக புரியும்

    //2. இஸ்லாம் மதமாக அறிமுக படுத்த படவில்லை. இது மார்க்கம் . இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறும் வாழ்க்கை முறை.
    படித்து பாருங்கள் இஸ்லாம் பற்றி . உணர்விர்கள்.
    //

    இஸ்லாம்ல இருக்குற அத்தனையும் அட்ட காபி “Judaism” லேருந்து – அங்க கோஷர் இங்க ஹலால் , அங்கேருந்துடான் குள்ள, தாடி எல்லாம் காபி. அப்புறம் அங்க சண்டே சாபத் இங்க வெள்ளி – அங்கயும் பன்றி கரி கூடாது இங்கேயும் கூடாது, மோசேஸ் – மூஸா அப்ரகாம் இப்ராஹீம் – இப்படி எல்லாமே காபி – இதுல மார்கம்னு வேற மார் தட்டிகிறீங்க – ஒரு நல்ல மார்கமா இருந்து இப்படி உலகையே அச்சுறுத்தும் வகையில் சீர் கெட்டு போகாது

    இதெல்லாம் வெறும் மேலிருந்தவாரயாக காபி அடித்தவைகள் – எக்க சக்க மேட்டர் இருக்கு

    //உலகத்திலேயெ சிந்திக்க சொல்லும் சீரிய வேதம் இஸ்லாம்.

    இதை போல காமெடி உண்டா – சிந்திசீங்கன்ன இப்படியா இருப்பீங்க – அதெப்படீங்க உங்களுக்கும் ஒரே ஏக இறைவன் , “jews” சுக்கும் ஒரே எத இறைவன், க்ரிச்தவறக்கும் ஒரே ஏக இறைவன் – எப்படி எவ்வளோ ஒருதருங்கா – அவர் இவரா இவர் அவரா – ஆனா எல்லாரும் காபி அதிசது என்னமோ ஒருதர்டேருந்து – ஒரு காட்டுமிராண்டி தனதிளிறேந்து இன்னொன்று

    திருச்சிகாரர் அவர்கள் மேலே புட்டு புட்டு வைத்துள்ளார் – ரகமத்துல்லா என்ன சொன்னார்னு பாத்திங்கல்ல

    நான் ஒரு இஸ்லாமிய கல்லூரியில் தான் படித்தேன் – எனக்கு தெரிஞ்சு யாருமே சிந்திச்திள்ள – எல்லர்ம் தஸ் புஸ்ஸுன்னு குதிப்பாங்க

    இஸ்லாம் என்பது மேலுருந்த வாரியாக காபி அடிக்கப்பட்ட ஒரு மதம் – இதை வைத்துக்கொண்டு எப்படி தான் மட்டும் வாழலாம், ஆதவனை வெட்டலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாமே தவிர ஆன்ம விசாரங்கள் பற்றி துளி கூட அதில் அலசப்படவில்லை – மூன்று நிலைகள் உண்டு – “sleep”, “deep sleep” “awakened” – இதில் என்னய்யா மதங்கள் வெறும் “awakened” நிலையிலேயே நின்று விடுகிண்ட்ரணா மற்ற நிலைகளை பூரணமாக ஆராய்ந்து நடைமுறை படுத்தினா ஒரே மதம் உண்டென்றால் அது ஹிந்து மதம் தான்

  35. திருச்சிகார நண்பரே

    நான் எழுதியது உங்களை இத்தனை தூரம் புண்படுத்தி இருக்குமெனில் அதற்காக வருந்திகிறேன் – உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்

    நீங்கள் எத்தனையோ முறை தெளிவாக உங்கள் எதிர் வாதங்களை வைத்தும் சிலர் திரும்ப திரும்ப வெறுமனே – ” எல்லோரும் பாவி, ஜிகாத், காபிர்” அப்படி எழுதிகொண்டிருந்தார்கள் – இதை பார்த்தே ஒரு காமெடி” கலந்த பதில் எழுடுவடாக நினைத்துக்கொண்டு எழுதிவிட்டேன் அவ்வளவுதான்

    //நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் -// என்று அதட்டலும் மிரட்டலுமாக இருக்கிறதே
    //

    இப்படி எல்லாம் எனக்கு எண்ணமே இல்லை – நான் உங்கள் மேல் நிறையா மரியாதை வைத்திருக்கிறேன் – அசராமல் நேரம் செலவழித்து எல்லாருக்கும் நறுக்கென பதில் எழுதுவதை பார்த்து ராம் அவர்களை போல நானும் ஆசியாரியபட்டிடுக்கிறேன்

    சரி நான் உங்களுக்கு அறிவுரை கூறவில்லை என்பதற்கு லோகிகாலாக ஒரு சான்று –
    நான் உங்களை பதில் கூறவேண்டம் என்று சொன்னால் அதெப்படி நியாயமாகும் – நான் கூடத்தான் கிலாடியின் மற்றும் டிடாசின் உளறல்களுக்கு விடாமல் பதில் சொல்ல முயல்கிறேன் – அதனால் எனது எண்ணம் உங்கள்ளுக்கு அறிவுரை கூர்வதற்காக இல்லை

    உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கேலம் நான் பெரிய ஆல் இல்லை – அடியேன் சிறிய ஞானத்தன்

    மீண்டும் ஒரு முறை உங்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் – இனிமேல் மறுமொழி எழுதும் பொழுது கொஞ்சம் கவனமாகவே எழுதுவேன்

  36. அனைவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக…,
    வந்தேமாதரம் பற்றி .,
    ஏனிந்த சண்டைகள் எல்லோருக்கும் பொதுவாக பொறுமையாக யோசியுங்கள் .இந்தியா ஒரு ஜனநாயக நாடு .ஒரு மதத்தினர் பிரச்சினையோடும் ஒரு மதத்தினர் பிரச்சினை இல்லாமலும் வாழ்வது சரியான விஷயம் அல்ல .
    நாம் எல்லாவற்றிற்கும் பொதுவான வைகளை நடைமுறை படுத்தினால் போதும் .பிரச்சினைகள் ஓய்ந்துவிடும்.
    வந்தே மாதரத்தில் இரண்டு வரி இயேசு பற்றி போற்றி எங்களை காப்பாற்று என்று இருந்தால் அதை ஒரு இந்திய கிறிஸ்டியன் எழுதி இருந்தால் இந்து அமைப்புகள் இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கும் .
    பொதுவாக ஒரு கிறிஸ்டியன் ஏசுவையும் ,ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும்,ஒரு இந்து அவர்களின் கடஉல் களையும் வணங்குவது எல்லோருக்கும் தெரியும் .நான் வணங்கும் கடஉல் சரி என மற்றவரிடம் சொல்லலாம் .கட்டாய மாக திணிக்கக் எந்த மதமும் சொல்லியதில்லை .
    இப்போதிருக்கும் வந்தே மாதரம் எழுதிய ஒருவர் பல மதத்தினர் வாழும் இந்தியாவில் இந்து மதத்தினர் வழிபடும் இரண்டு கடவுள் களை மட்டும் ஏன் அந்த பாடலில் சொருகினர் .எந்த கடவுளையும் சேர்க்காமல் நாட்டை மட்டும் பற்றி எழுதி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது .புரிந்து கொண்டு சேர்ந்து வாழ முயற்சி செய்ஓம்.
    வாழ்க பாரதம் .

  37. இங்கு பல மறு மொழிகளைக் கண்டு குழம்பிப் போய் வலையில் ஒரு தேடல் செய்தேன்.
    விகிபீடியாவில் கண்டது இதோ…

    Rabindranath Tagore அப்பொழுதே இதைப் பற்றி கூறியிருக்கிறார். படியுங்கள்.
    “The core of Vande Mataram is a hymn to Bharat Mata( Mother India): this is so plain that there can be no debate about it. Of course Bankimchandra does show Durga to be inseparably united with Bengal in the end, but no Mussulman [Muslim], christians and Arya Samajis can be expected patriotically to worship the ten-handed deity as ‘Swadesh’ [the nation].
    இதையும் படியுங்கள்.
    Dr.Rajendra Prasad, who was presiding the Constituent Assembly on January 24, 1950, made the following statement which was also adopted as the final decision on the issue:
    The composition consisting of words and music known as Jana Gana Mana is the National Anthem of India, subject to such alterations as the Government may authorise as occasion arises, and the song Vande Mataram, which has played a historic part in the struggle for Indian freedom, shall be honored equally with Jana Gana Mana and shall have equal status with it. (Applause) I hope this will satisfy members. (Constituent Assembly of India, Vol. XII, 24-1-1950)

    கீழ் காண்பது தேசியப் பாடலாக அறிவிக்கப் பட்ட, வானொலியில் தினம் காலையில் இடம் பெறும் versionம் அதன் பொருளும்
    Vande Mataram
    sujalaam
    suphalaam
    malayaja sheethalam
    shashya shyamalaam
    Maataram, vande maataram
    Shubhra jothsana pulakitha yaminim
    Phulla kusumitat drumah dala shobhinim
    Suhasinim, Sumadhura bhAshinim
    sukhadaam varadhaam, maataram
    Vande mataraam

    My obeisance to Mother India!
    With flowing beneficial waters
    Filled with choicest fruits
    With cooling breeze
    Green with the harvest
    O mother! My obeisance to you!
    Ecstatic moonlit nights
    The plants blooming with flowers
    Sweet speaker of sweet languages
    Fount of blessings,
    Mother, I salute you!
    வந்தேமாதரம் என்ற முழு பாடலையும் இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இப்போது எழுந்துள்ள fatwa கூட அந்தப் பாடலில் இந்து கடவுள்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன என்பதற்காக அல்ல. கடைசி வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள வந்தே என்பதற்கான அர்த்தத்தை பற்றிதான்.
    ஆனால் uthuman அவர்களே நீங்கள் கூறியுள்ளது போல//நாம் எல்லாவற்றிற்கும் பொதுவான வைகளை நடைமுறை படுத்தினால் போதும் .பிரச்சினைகள் ஓய்ந்துவிடும்.//
    என்பதற்க்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற சட்ட சிக்கலைப் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்களா??!!

  38. Dear Gentle men,

    Some of my brothers following islaamic faith, has sent me mails blaming me as spiting venom on Islam, referring my comments written for this article. I chose to write my reply here itself as it will be known to other brothers from Islamic faith.

    Brothers, I dont have hatredness against Muslims. I consider all Muslim women as my sisters, and all the Muslims as my brothers – that is in my word and in spirit.

    Some friends ask me

    //என்னவோ நானும் பள்ளியில் வந்து தொழ தயார்,நோன்பு வைக்கிறேன்,என பீலாவேற….மனசுல இவ்வளவு வன்மத்தை வச்சிகிட்டு,,,,,வாய் மட்டும் தான் இவ்வளவு நாளா பேசீருக்கு…..//

    this is not a பீலா

    These pracatices does not harm others, in fact these practices- if you forget every thing and concentrate on prayer or mediatation it is good. So as part of showing religious harmaony I am ready to do these along with you, whole heratedly.

    I also appreciate another good practices in islam: not taking interest for lonas.

    I appreciate Islam for banning Drinking and Gambling.

    அத‌ற்காக‌ ஜிஹாத் என்ற பெய‌ரிலே அப்பாவிக‌ளைக் கொல்வ‌து, தலாக் கூறி த‌விக்க‌ விடுவ‌து, க‌ட‌வுள் இல்லை என்று கூறினால் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை, Jisiya tax for non Muslims…. Cant the Muslim brothers understand that these and similar principles can obliterate the humanity?

    I cant give a blanket apparoval for Islam, for that matter to any idealaogy.

    I have critcised many Hindu Leaders, I have criticised many practices in Hinduism, in this same Tamil Hindu magazine.

    I
    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்து, மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு என்பது போல தோன்றும். உண்மையில் இந்தக் கருத்தை உடைய பலரும் அமைதியான வாழ்க்கையை நடத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும், அமைதியாகவே வாழ்ந்து முடிக்கக் கூடும்.

    அனால் இந்தக் கருத்தை அவர்கள் பிறருக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் போகிறார்கள்.

    நூறு வருடம் கழித்து இந்தக் கருத்தைப் படிக்கும் ஒருவர், அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் ஒருவர், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்களை இகழ்சியிடன் நோக்க ஆரம்பிப்பார். அது வார்த்தையிலும் வெளி வரும். சகிப்புத் தன்மை இல்லாமல் போய் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். அதனால் மோதல், சண்டைகள், இரத்த வெறி உருவாகும்.

    ALSO READ THIS NEWS:

    //போர்ட் ஹூட் (டெக்சாஸ்): அமெரிக்க ராணுவ தளத்தில், ராணுவ டாக்டர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.

    டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஹூட் என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

    சரமாரியாக சுட்ட டாக்டரின் பெயர் மேஜர் மாலிக் ஹசன் எனத் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கத் தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 31 பேர் காயமடைந்துள்லனர்.

    அமெரிக்க ராணுவ தளம் ஒன்றில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் ஹசனும் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாகவும், குண்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து ராணுவ அதிகாரி பாப் கோன் கூறுகையில், ஹசன் மரணமடையும் நிலையில் இல்லை. அவர் காயமடைந்துள்ளார். மொத்தம் நான்கு முறை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவருடைய நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளது. ஆனால் மரணமடையும் நிலையில் இல்லை என்றார்.

    ஹசன் 39 வயதாகும் நபர். விர்ஜீனியாவைச் சேர்ந்தவர்.

    இந்த சம்பவம் குறித்து அதிபர் ஒபாமா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் பயங்கரமான வன்முறைச் செயலாகும். வெளிநாடுகளில் தீரத்துடன் செயல்பட்டு உயிரிழந்து வரும் அமெரிக்க வீரர்கள் குறித்து நாம் கவலைப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் நமது நாட்டிலேயே தீரமிக்க ராணுவ வீரர்கள் சிலரை இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

    அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராணுவ தளத்திற்குள்ளேயே இவ்வாறு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

    ஹசன் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம்தான் வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து போர்ட் ரூட் தளத்திற்கு டாக்டர் ஹசன் மாற்றப்பட்டார். அவர் ஒரு மன நல மருத்துவர் ஆவார்.//

    I request all Brothers… whatever religion you follows, you leave aside the affinity and DONT ENCOUARGE KILLING OF INNOCENTS ON THE NAME OF GOD!

  39. அனைவரின் மீதும் சாந்தி உண்டாவதாக…,
    mr.armchaircritic அவர்களே.., தாங்கள் தமிழில் முழுவதுமாக transulate பண்ணியிருந்தால் கொஞ்சம் சரியாய் இருந்திருக்கும் .
    சரி நீங்கள் குறிப்பட்டது போலே வந்தே என்பதற்கு மட்டும் அல்ல கடவுள் களின் பேர்கள் வந்ததற்க்கும் தான் பிரச்சினையை start பண்ணி இருக்கிறார்கள்.
    வந்தே என்பதற்கு மட்டுமே வைத்துக்கொண்டு யோசனை செய்து பாருங்கள் .
    இந்துக்கள் தாய்யையும் கடவுள் ஆக வணங்குகிறார்கள் .சுருக்கமாக சொன்னால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடவுள் விசயத்தில் வேறுபாடு என்வென்றால் முஸ்லிம்களுக்கு கடவுள் ஒருவர் மற்றதுஎல்லாம் அவரால் படைக்கப் பட்டது .இந்துக்களுக்கு
    எல்லாமே கடவுள் for example பூமி ,மரம் ,தாய் .ext……
    முஸ்லிம்கள் தாய் இக்கு மரியாதையை செலுத்துவார்கள் ஆனால் வணங்க மாட்டார்கள் .பூமியை கடவுள் களாக இந்துக்கள் நினைக்கிறார்கள்.
    இந்துக்கள் தான் வணங்கும் கடவுள் சரியென சொல்லலாம் கட்டாய படுத்தக் கூடாது .இந்துக்களுக்கு தாய் ,பூமி கடவுள் தான்
    முஸ்லிம்கள் எப்படி அதை வணங்ககுவார்கள்.
    மரியாதைகும்,வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
    மேலும் நான் பொதுவாக என்று குறிப்பட்டதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன் .
    மதம் சம்பந்தம் படாத விசயங்களில் பொதுவானதை கொண்டுவாருங்கள் .இந்தியா ஜனநாயக நாடு என்பதை மறந்து விடாதீர்கள் .இங்கு அவரவர் வணங்கும் கடவுள் களை அவரவர் கள் இஷ்டப்படி விடுங்கள் அதில் போய் வில்லங்கம் பண்ணாதீர்கள் .
    இந்திய சட்டமும் அதைதான் கூறியுள்ளது .இப்பொழுதான் புதியதாக சட்டம் கொண்டுவர வேண்டுமா ?
    நாட்டுப் பற்று என்பது இப்பொழுது இந்தியாவில் வந்தே மாதரம் பாடலிலும் ,கிரிக்கெட்டிலும் தான் அதிகம் பேசப்படிகிறது.
    இது மட்டுமா நாட்டுப்பற்று ?அல்லது இதுதான் நாட்டுப் பற்றா? நமது இந்திய திரு நாட்டில் எரிவாயு ,மின்சாரம் மிக தேவை நாம் மின்சாரத்தையும் ,petrol ,desol போன்ற வற்றை யோசித்து சொல்லுங்கள் மிச்சப் படுத்துகிறோமா 24 மணி நேரம் மின்சாரத்தை வீணடிக்கிறோம் .பெட்ரோல் அதற்க்கு மேல வீணடிக்கிறோம் .
    இந்த பாடல் பற்றி இதுவரை இந்த பிரச்சினை இல்லை இருந்தாலும் இந்த அளவிற்கு இல்லை அதாவது சுதந்திரம் வாங்கியதிலிருந்து இப்பொழுது விஸ்வருபம் எடுக்கிறது என்றால் காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .
    ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சுட்சியை சில நமது அரசியல் வாதிகளிடம் விட்டுச் சென்று விட்டார்கள் .அதை அரசியல் வாதிகள் செய்கிறார்கள் .
    நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள் .
    வாழ்க பாரதம் .

  40. //இந்தியாவில் 800 ஆண்டுகள் ஆட்சியை கஜினி முஹம்மத் வழி வந்தவர்கள் வாள் முனையில் பரப்பியிருந்தால் TAMILHINDU, HIDUSTHAN, என்று சொல்ல நீங்கள்
    இந்துவக இருந்துதிருக்கமாட்டீர்கள்.//

    //இந்தியாவில் 700 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய ஆட்சி இருந்தது,தாங்கள் சொல்வது போல கட்டாய மதமாற்றம் செய்து இருந்தால்,ஒன்று,ஏற்றவர்கள் முஸ்லிமாகி இருப்பார்கள்,ஏற்காதவர்கள் செத்து போய்யிருப்பார்கள்,இன்னக்கி 80% இந்தியாவில் ஹிந்துக்களும் இருக்கமுடியாது,நீங்களும் இங்க ஹிந்துவா இருந்து பேசிகிட்டு இருந்திருக்கவும் முடியாது…..//

    இது ச‌ரியான‌ கேள்விதான்!

    யாருனா ப‌தில் சொல்றீங்க‌ளா?

    அலாவுதீன் கில்ஜியோ, அவுர‌ங்க‌ சீபோ என் க‌ழுத்திலே க‌த்தியை வைத்து ஒன்று ம‌த‌மாற்ற‌ம் செஞ்சுக்கொ, இல்லை சாவுனு சொல்லியிருந்தா நான் உயிரோடு இருந்திருக்க‌ முடியுமா?

    இன்னக்கி 80% இந்தியாவில் ஹிந்துக்களும் இருக்க முடியுமா? நீங்களும் இங்க ஹிந்துவா இருந்து பேசிகிட்டு இருக்க முடியுமா?

    முடியும்.

    என் வூரிலே இருக்கிர‌வ‌ன் அத்த‌னை பேரும் சாக‌த் த‌யார்னு க‌ழுத்தைக் காட்ட‌ரான்.

    அப்ப‌ அலாவுதீன் கில்ஜி என்ன‌ நினைச்சிருப்பான்?

    எல்லோரையும் கொலை செய்து விட்டால், க‌ல்ல‌றை தானே மிஞ்சும்?

    கல்லறைக‌ளின் ந‌டுவே அம‌ர்ந்து, இற‌ந்த‌வ‌ர்க‌ளின் ஆவியையா ஆட்சி செய்ய‌ முடியும்?

    அல்லாத்தியும் கொன்னா எனுக்கு இன்னா கிடைக்கும்?

    இவ‌னுங்க உசிரோட‌ இருந்தா தான், நான் இவ‌னுங்க‌ளை ஆள‌ முடியும்!

    இவ‌னுங்க‌ எல்லோரியும் கொலை ப‌ண்ணினா, எவ‌ன் இந்த‌ நில‌த்தில‌ வெள்ளாமை பார்ப்பான்?

    எவ‌ன் க‌திரு அறுப்பான்?

    எவ‌ன் என‌க்கு வ‌ரி கொடுப்பான்?

    இந்த‌ காபிர் ப‌ச‌ங்களை உசிரோட‌ விட்டா, ந‌ம‌க்கு கீழ் ப‌டிஞ்சு ஒழுங்கா ந‌ட‌ப்ப‌னுங்க. சாதுவா இருப்ப‌னுங்க‌. இவ‌னுங்க‌ளை ஆளுவ‌து எளிது.

    ஆனா இவ‌னை ந‌ம்பிக்கையுள்ள‌வ‌னா மாத்தி புட்டா அங்கியும், இங்கியும் வெட்டிகினு , குத்திகினு திரிவாங்க‌.

    அப்ப‌ இவ‌னுங்க‌ளை அட‌க்குற‌தும் க‌ஷ்ட‌ம், நாட்டுல‌ வேலையும் ஒழுங்கா ந‌ட‌க்காது, க‌ஜான‌வும் காலியாகும்.

    அத‌னால இந்த‌ காபிர் ப‌ச‌ங்களில் கொஞ்ச‌ பேரை ம‌ட்டும் ந‌ம்பிக்கையாள‌ரா மாத்தி புட்டு, மிச்ச‌ எல்லாரையும் காபிராவே இருந்தா தான் ந‌ம‌க்கு ந‌ல்ல‌து, இன்னும் ஜிசியா வ‌ரியும் போட்டு க‌ஜானாவை ரொப்ப‌லாம்னு நினைத்து இருப்பான்.

    க‌ர்னாடாகாவிலே ஹ‌ரி ஹ‌ர‌ர், புக்க‌ர் இர‌ண்டு பேரையும் பிடித்துக் கொண்டு போய் மொட்டை அடித்து அவ‌ர்களை க‌ட்டாய‌ ம‌த‌மாற்ற‌ம் செய்து சிறையிலே போட்ட‌தாக‌வும், அவ‌ர்க‌ள் த‌ப்பி வ‌ந்து புதிய‌ விஜ‌ய‌ ந‌க‌ர‌ சாம்ராஜ்ஜிய‌த்தை ஸ்தாபித்த‌தாக‌வும் வ‌ர‌லாறு சொல்கிற‌து.

  41. திருசிக்காரரே உங்களுடிய பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வெளியிடுவதால் நீங்கள் சொல்றதெல்லாம் உண்மை என்று ஆகிவிடாது.

    கத்திமுனையில் மதமாற்றம் பண்ணியதாக அவதூறு சொல்லிட்டு அதுக்கு லாஜிக்கா கேள்வி கேட்டா உங்க கற்பனையில் பதில் சொல்றீங்க, இப்போதாவது புரியுதா? கொள்கையில் உறுதியாக இருந்தால் யாரையும் மதம் மாற்றம் செய்ய முடியாது என்பது, அப்படியே பிளாக் மெயில் செய்து மதம் மாற்றினாலும் அது நீடிக்காது, அதனால இந்த வாள் முனையில் மதம் மாற்றம் நடந்தது என்பதெல்லாம் உங்களை போன்ற சிலரால் மிகைபடுத்த பட்ட ஒரு கற்பனையே தவிர வேறில்லை. அப்படியே ஒரு சின்ன கேள்வி தேச பற்று என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை என்ன? கொஞ்சம் தெளிவாக சொன்னால் நலம்.

    தள நிர்வாகிகளே தயவு செய்து, பின்னூட்டமிட்டால் அனுமதியுங்கள் எல்லாவற்றையும் மறுப்பதின் மூலம் கருத்து பரிமாற்றத்தை தடை செய்ய வேண்டாம்.

  42. கத்தி முனையிலே முப்பது கோடி மக்களையும் மத மாற்றம் செய்ய முடியாது.

    ஓரளவு மக்களை மத மாற்றம் செய்யலாம் .

    அதை விட சிறந்த வழி ஜிசியா வரி விதிப்பது.

    வரி கட்ட முடியாதவன் தானாக வழிக்கு வருவான். நான் முன்பே கூறியது போல இந்த காபிர்களை, அப்படியே விட்டு வைத்தால் தான் நல்லது
    என புரிந்து கொண்டு இருக்கிறான்.

    நான் இன்றைக்கு இந்தியாவில் வசிக்கும் இசுலாமியர்களை வெறுக்கவோ, குறை சொல்லவோ இல்லை. அவர்களும் என்னைப் போலத்தான். எனக்கு ரஜினி படம் பிடிக்கும் என்றால் நான் பார்க்கிறேன். என் நண்பனுக்கு, சகோதரனுக்கு கமல் படம் பிடிக்கும் என்றால் அது அவன் விருப்பம்.

    ஆனால் இந்தியாவிலே இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் வரை தான் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கும்.

    எம்மதமும் சம்மதம் என்று சொல்லும், ஒரே மார்க்கததவன் பிற மார்க்கதினரோடு சேர்ந்து வழி பாடு செய்யத் தயார் என்று கூறும் ஒரே மார்க்கததவன் இந்து மட்டுமே.

    இப்போது மக்கள் தொகை பிறப்பு விகிதம் போகும் வேகத்திலே இன்னும் அதிக நாட்கள் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பானமியினராக இருக்க மாட்டார்கள் ,

    அதற்குப் பிறகு இங்கே சிலுவைப் போர்கள் நடக்குமோ அல்லது பாலஸ்தீன் போல ஆகுமோ தெரியாது!

    ஆனால் இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் வரையிலே இந்த நாட்டை, அரிச் சந்திரனின் நாடாக, புறாவுக்கு வூனைத் தந்த சிபி சோழனின் நாடாக, அசோகரின் நாடாக, காந்தியின் நாடாக தான் வைத்து இருப்போம்.

  43. நயா அவர்களே, திருச்சிக்காரர் உளறுகிறார், மிகைப்படுத்துகிறார் என்பதெல்லாம் இருக்கட்டும்.. சரி, நீங்கள் வைக்கும் prejudice படி, அவர் இந்து எனவே அவர் பக்கம் பேசுகிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

    The Mohammedan conquest of India is probably the bloodiest story in history. The Islamic historians and scholars have recorded with great glee and pride the slaughters of Hindus, forced conversions, abduction of Hindu women and children to slave markets and the destruction of temples carried out by the warriors of Islam during 800 AD to 1700 AD. Millions of Hindus were converted to Islam by sword during this period.
    – William Durant, The Story of Civilization: Our Oriental Heritage” (page 459)…

    இதற்கென்ன சொல்ல? வில்லியம் டூரண்டும் மிகைப்படுதினாரா??
    எத்தனை கொலைகள்! எத்தனை அராஜகங்கள்! எத்தனை கற்பழிப்புகள்! எத்தனை பேர் இரத்தம் அவர்கள் வால்களிளிருந்து ஆறாக ஓடியிருக்கும்!! ஆனால் இதெல்லாம் சொன்னால் “அது கற்பனை, அது மிகைப்படுத்துதல்” என்று சற்றும் நியாமில்லாமல், மனிதாபிமானமில்லாமல் இல்லாமல் சொல்வீர்கள்..
    ஏனெலில், உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் “முகமதீயர்களுக்கு போனால் உயிரு, இந்துக்களுக்குப் போனால் மயிறு” என்றுதானே சொல்கிறது… காஷ்மீரில் இருந்த பண்டிதர்கள் எங்கே? பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இருந்த இந்துக்கள் எங்கே??? ஹாரி பாட்டர் கதையில் வருவதுபோல ‘திடீர்’ நு மறைந்து விட்டார்களா???

  44. வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் என்னுடைய நிலைப் பாடு இதுதான்.

    இந்தப் பாடலை கட்டாயப் படுத்தி திணிப்பது அந்தப் பாடலின் பெருமையைக் குறைக்கும்.

    அதை வேண்டா வெறுப்பாக பாடும்படி வைப்பது தேவையா?

    மேலும் பிறரை கட்டாயப் படுத்துதல், பிற மார்க்கத்தவரை வெறுப்பது ஆகிய தன்மைகள் இந்தியரின் குணாதிசத்துக்கு ஒப்பில்லாதது, இந்த செயல்களை செய்பவர் தன்னை அறியாமலே இந்து தன்மையில் இருந்து மாறி விடுகிறார்.

    நான் செய்ய‌ முய‌ற்ச்சி செய்வ‌து என்ன‌ வென்றால், இசுலாமிய‌ மார்க்க‌த்தினால் உல‌க‌த்தில் உள்ள‌ பிற‌ ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டும் சாத‌க‌ பாத‌க‌ங்களை, அந்த‌ மார்க்க‌த்தை பின் ப‌ற்றும் இந்திய‌ர்க‌ளை, அறிய‌ச் செய்வ‌துதான்.

    அதை புரிந்து கொண்டால் அவ‌ர்களுக்கும் ந‌ண்மை. உல‌குக்கும் ந‌ன்மை.

    இந்தியாவில் உள்ள‌ 99 ச‌த‌வீத‌ இசுலாமிய‌ருக்கும், இசுலாத்தின் அடிப்ப‌டையில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் ப‌ய‌ங்க‌ர‌ வாத‌த்திற்க்கும் நேர‌டி தொட‌ர்பு கிடையாது. ஆனால் ஒவ்வொரு இசுலாமிய‌ரும் மேலை நாடுக‌ளில் தீவிர‌வாதியோ என‌ ச‌ந்தெக‌ப் ப‌டுத்த‌ப் ப‌டுகிரார்.

    ஷாருக் கானை ச‌ந்தேக‌ப் ப‌ட்டார்க‌ள். ந‌ம‌து ம‌திப்பிற்க்குறிய‌ க‌லாம் ஐயாவை கூட‌ செக் செய்து விட்ட‌ன‌ர்.

    குரானில் உள்ள‌ க‌ருத்துக்கள் ஒவ்வொன்றையும் சீர் தூக்கி பார்த்து , அதில் உள்ள த‌வ‌றான‌ க‌ருத்துக்களை நீக்கினால், இப்போது குழ‌ந்தைக‌ளாக‌ இருக்கும் இசுலாமிய‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் ஆகும் போது எல்லொரும் அவ‌ர்களை ம‌திப்பார்க‌ள்.

  45. “பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்”

  46. //கத்திமுனையில் மதமாற்றம் பண்ணியதாக அவதூறு சொல்லிட்டு அதுக்கு லாஜிக்கா கேள்வி கேட்டா உங்க கற்பனையில் பதில் சொல்றீங்க,

    இது அவதூறு இல்லை – இது நீங்கள் உருவான கதை 🙂

    ஒரு சிலர் நிறைய பணம்,பதவி கொடுத்து ஆசை காட்டி மாற்றினார்கள் – ஒரு சிலர் கற்பழித்து, கொலை செய்து வேறு வழி இல்லாமல் செய்து விட்டார்கள் – திருவரங்கத்தில் மட்டும் கஜினி மொகமது வீடு வீடாக சென்று கொன்ற பாமர மக்களின் எண்ணிக்கை 17,000 – சீர்காழி அருகே ஒரு ஊர் இருக்கிறது தெரியுமா – அதில் அத்தனை பெரும் படை எடுப்பின் பொழுது கற்பழிக்கப்பட்டு வேறு வழி இல்லாமல் ஒரு மதத்தை தழுவியவர்கள்

  47. Valluvan sir…you will never get a reply for your comment from ‘Naya’ 🙂

    We are in a country where ‘Godhra Train Carnage’ is an accident but the emotional reaction to that is a ‘planned genocide’. ‘Swami Lakshmanananda’s assasination is a naxal activity, but the emotional reaction to that is a planned attack’.

    sattaan kitta kooda nyayam ethirparkalam, ana namma Indian ‘Sickularist’ kitta…mooch….’nyayamna kilo enna vela’nu kebanga…

  48. Naya,S
    Simple advise, whether you like it or not.
    Get your facts right reg conversions of Hindus by Muslims during the Mogul time before advising and questioning others. You can get all the facts written by the Mohamedians themselves during this barbaric period. The pseudosecularist’s daring, empror Akbar, was no different. Also, do some research and find out why it is hard to GET OUT OF MUSLIM RELIGION, once you are in. The person who leaves Islam is worse than a Kaffir and the punishment is death, hence the unwillingness and inability to leave this religion.
    Ignorant remarks as above by you shows you what you really are- blindly or delibrately ignorant.

  49. வள்ளுவன் ஐயா,

    இந்திய திருநாட்டை கொள்ளை அடிக்க வந்த முகலாயர்கள் செய்த அட்டூழியங்களைஎல்லாம் நான் நியாயப் படுத்தவில்லை ஆனால் அவர்கள் மதம் மாற்றம் செய்ய மட்டுமே வந்தவர்களை போல இங்குள்ள சிலர் சித்தரிப்பதைதான் மறுக்கிறேன். அன்றைய காலத்தில் வளமான பூமியாக இருந்த இந்திய திருநாட்டின் மேல் படையெடுப்பது என்பது அவர்களது பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள மட்டுமே.

    ஏன் முகலாயர்கள் வருவதற்கு முன் இந்த மண்ணில் போர் என்பதே நடக்கவில்லையா? கலிங்க போரை பற்றி படித்ததில்லையா நீங்கள்? எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லபட்டார்கள்? இங்குள்ள குறுநில மன்னர்கள் ஒருவர் மற்றவரோடு அடித்து கொள்ள வில்லையா? அப்பொழுது மட்டும் உயிர்கள் பலியாக வில்லையா? கற்பு சூறையாடப் படவில்லையா?

    வள்ளுவன் ஐயா அன்றைய காலத்தில் போர் என்பது ஒரு சாதாரண நிகழ்வு, வரலாறு நெடுக ஏகப்பட்ட போர்களும், பல்லாயிரக்கனக்கான உயிரிழப்புகளையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் முகலாயர்களுடைய படையெடுப்புக்கு மட்டும் மத முலாம் பூசுவது ஏன் என்பதுதான் என் கேள்வி.

    உதாரணத்திற்கு உங்களையே எடுத்து கொள்வோம், நீங்கள் ஹிந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர் உங்களை நான் மிரட்டியோ அல்லது பணம் கொடுத்தோ மதம் மாற செய்ய முடியுமா? அப்படியே நான் பலவந்த படுத்தினாலும் உங்களுடைய மாற்றம் போலியானதுதானே, அது எத்தனை நாள் நீடிக்கும். கொள்கை பிடிப்பில்லாத தொண்டர்களால் ஒரு இயக்கத்திற்கோ, கட்சிக்கோ லாபமா, நட்டமா?
    என்னுடைய வேதனை என்னவென்றால் நம் முன்னோர்களை வெளியிலிருந்து வந்த யாரோ மிரட்டி மதம் மாற்றினான் என்று சொல்வதின் மூலம் நம் முன்னோர்களை கோழைகளாக சித்தரிப்பது ஏன்? அந்த அளவிற்கு கையாலாகதவர்களா நம் முன்னோர்கள்?

    என்னுடைய இந்த கேள்விகளை ஏட்டிக்கு போட்டியாக எடுத்து கொள்ளாமல் கொஞ்சம் சிந்தனை செய்து பதில் சொல்லுங்கள். மேலும் ஹாய் மதன் எழுதிய வந்தார்கள், வென்றார்கள் என்ற புத்தகத்தையும் படித்து பாருங்கள் எளிய தமிழில் மிக தெளிவான ஒரு புத்தகம்.

  50. நயா அவர்களுக்கு,

    //இந்திய திருநாட்டை கொள்ளை அடிக்க வந்த முகலாயர்கள் செய்த அட்டூழியங்களைஎல்லாம் நான் நியாயப் படுத்தவில்லை ஆனால் அவர்கள் மதம் மாற்றம் செய்ய மட்டுமே வந்தவர்களை போல இங்குள்ள சிலர் சித்தரிப்பதைதான் மறுக்கிறேன். அன்றைய காலத்தில் வளமான பூமியாக இருந்த இந்திய திருநாட்டின் மேல் படையெடுப்பது என்பது அவர்களது பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள மட்டுமே. //

    சரி சார்/மேடம், நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான்.. அப்படி பொன்னிர்க்கும் பொருளிர்க்குமட்டும் சூறையாடினார்கள் என்றால், கோவில்களை கொள்ளை அடித்து, செல்வத்தை மட்டும்தானே எடுத்துசென்றிருக்கவேண்டும்? மாறாக ஏன் இடித்தார்கள்? ஒரு கட்டிடத்தை தேவையில்லாமல் இடித்தால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்:- ஒன்று அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கவேண்டும், இல்லை அக்கட்டிடங்களை வெருத்திருக்கவேண்டும்.. சிலைகளையும் உருவ வழிபாட்டையும் வெறுக்கும் ஆபிரகாமியர்கள் மட்டுமே இதை செய்வர்! எனவே இரண்டாவதாக சொன்னதுதான் காரணம்…

    //ஏன் முகலாயர்கள் வருவதற்கு முன் இந்த மண்ணில் போர் என்பதே நடக்கவில்லையா? கலிங்க போரை பற்றி படித்ததில்லையா நீங்கள்? எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லபட்டார்கள்? இங்குள்ள குறுநில மன்னர்கள் ஒருவர் மற்றவரோடு அடித்து கொள்ள வில்லையா? அப்பொழுது மட்டும் உயிர்கள் பலியாக வில்லையா? கற்பு சூறையாடப் படவில்லையா?//

    யாரும் இதனை மறுக்கவில்லையே.. ஆனால் இவையனைத்தும் பொருள், பதவி இவற்றிற்காக நடந்த போர்கள்.. மதத்தின் பெயரால் நடந்த “புனிதப்போர்கள்” அல்லவே! முகமதியர்கள் வருவதற்கு முன்னால் மத அடிப்படையில் நடந்த வெறுப்புசெயல் ஒன்றுதான்.. புஷ்யமித்ர சுங்கன் என்ற அரசன் பவுத்தர்களை தன் அரசாங்கத்திலிருந்து விரட்டியடித்தான்.. ஆனால் இதற்கும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை! இது எதிரியான ரொமிலா தாப்பர் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை…

    “Among the detractors is Romila Thapar, who writes that archaeological evidence casts doubt on the claims of Buddhist persecution by Pushyamitra[4]. Support of the Buddhist faith by the Sungas at some point is suggested by an epigraph on the gateway of Barhut, which mentions its erection “during the supremacy of the Sungas”.[5]”

    https://en.wikipedia.org/wiki/Pusyamitra_Sunga

    முகமதியர்கள் வருவதற்கு முன்பாக நடந்த மதரீதியான சண்டைகள் மிக மிக குறைவு.. அச்சண்டைகளின்போது இரத்த ஆறு ஓடியதாக இதுவரையில் ஆதாரங்கள் இல்லை!

    //வள்ளுவன் ஐயா அன்றைய காலத்தில் போர் என்பது ஒரு சாதாரண நிகழ்வு, வரலாறு நெடுக ஏகப்பட்ட போர்களும், பல்லாயிரக்கனக்கான உயிரிழப்புகளையும் நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் முகலாயர்களுடைய படையெடுப்புக்கு மட்டும் மத முலாம் பூசுவது ஏன் என்பதுதான் என் கேள்வி.//

    உண்மைதான்.. ஆனால் நீங்கள் சொல்வதுபோல அவை இந்தியாவில் மட்டும் நடக்கவில்லையே.. உலகம்முழுக்க அல்லவா நடந்தது? ஆப்கானிஸ்தானில் இருந்த புத்தர் சிலைகள் எங்கே??

    //உதாரணத்திற்கு உங்களையே எடுத்து கொள்வோம், நீங்கள் ஹிந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர் உங்களை நான் மிரட்டியோ அல்லது பணம் கொடுத்தோ மதம் மாற செய்ய முடியுமா? அப்படியே நான் பலவந்த படுத்தினாலும் உங்களுடைய மாற்றம் போலியானதுதானே, அது எத்தனை நாள் நீடிக்கும். கொள்கை பிடிப்பில்லாத தொண்டர்களால் ஒரு இயக்கத்திற்கோ, கட்சிக்கோ லாபமா, நட்டமா?
    என்னுடைய வேதனை என்னவென்றால் நம் முன்னோர்களை வெளியிலிருந்து வந்த யாரோ மிரட்டி மதம் மாற்றினான் என்று சொல்வதின் மூலம் நம் முன்னோர்களை கோழைகளாக சித்தரிப்பது ஏன்? அந்த அளவிற்கு கையாலாகதவர்களா நம் முன்னோர்கள்?//

    நீங்கள் சொல்வது சிந்திக்கதகதாக இருந்தாலும் அதில் உண்மையில்லையே.. சரி ஒரு எதிர் கேள்வி கேட்கிறேன்.. அப்படி நியாயத்தினால்தான், வேற்றுமைக்காகத்தான் மக்கள் மதம் மாறினார்கள் என்றால் ஏன் எந்த இந்துவும் அதனை எதிர்க்கவில்லை? இன்று இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பஜரங் தள், விசுவ இந்து பரிசத் போன்ற கூட்டங்கள் அன்று இல்லையா?? ஏன் மன்னன் சிவாஜி அவுரங்கசீப், அப்சல் கான் போன்றவர்களுடன் ஏன் மோதினான்?? என்ன காரணம்? நம் முன்னோர்கள் அனைவரும் கோழைகள், முகலாயர்களுக்கு பயந்து அடிபணிந்து விட்டனர் என்று நான் சொல்லவில்லை! ஆனால், மன்னன் சொல்வதை கேட்கவில்லைஎன்றால் தலை போய்விடுமே!! சரி இந்து மதம் சாதிகளைக் காட்டி மக்களை பிரித்து விட்டது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.. இக்குறைகளை சரி செய்ய பிறந்துதானே பவுத்த, சமண மதங்கள்.. அவை எப்படி அழிந்தன? இந்துக்கள் கொன்றார்கள், அந்தணர்கள் கொன்றார்கள் போன்ற பொய்வாதத்தை கேட்டுக்கேட்டு காதுகள் புளித்துவிட்டன.. அண்ணல் அம்பேத்கரே முகலாயர்கள் செய்த அட்டூழியங்களால் தான் பவுத்த மதம் இறந்து விட்டது என்று சொல்லியிருக்கிறாரே..

    ”இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் முசல்மான்களின் படையெடுப்புகள் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. ‘புத்’ தின் எதிரியாகவே இசுலாம் வெளிப்பட்டது… இசுலாம் பவுத்தத்தை இந்தியாவில் மட்டுமல்ல, தான் பரவிய இடத்தில் இருந்தெல்லாம் ஒழித்துவிட்டது. ”
    (பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியம் – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எத்தும் பேச்சும் தொகுதி 3)

    //என்னுடைய இந்த கேள்விகளை ஏட்டிக்கு போட்டியாக எடுத்து கொள்ளாமல் கொஞ்சம் சிந்தனை செய்து பதில் சொல்லுங்கள். மேலும் ஹாய் மதன் எழுதிய வந்தார்கள், வென்றார்கள் என்ற புத்தகத்தையும் படித்து பாருங்கள் எளிய தமிழில் மிக தெளிவான ஒரு புத்தகம்.//

    உங்களைநான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.. மாறாக சிந்திக்க வாய்ப்பு தருவதால் நீங்கள் சொல்வதை முழுவதுவுமாக நிராகரிக்கவும் முடியாது…

    //Valluvan sir…you will never get a reply for your comment from ‘Naya’ :)//

    சதீஷ் அவர்களே, நயா அவர்கள் மட்டுமல்ல, அதற்க்கு எவராலும் பதில் சொல்லமுடியாது!

    இறுதியாக தோழர் நயா அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்… எல்லா முகமதீயர்களும் மதவெறியர்கள், சகிப்புத்தன்மையற்றவர்கள், பயங்கரவாதிகள் என்று நான் சொல்லவில்லை.. நல்லவர்களும் இருக்கிறார்கள்.. ஆனால், எல்லா முகமதீயர்களும் டாக்டர். அப்துல் கலாமைப்போல என்று ஒரு பொய்க்கதை உருவாக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..

    நன்றி.. வாழ்த்துக்கள்!!

  51. வள்ளுவரே ……?
    ஒரு விசயத்தை முதலில் தவறான கண்ணோட்டத்தில் உள் வாங்கிக் கொண்டால் எல்லாமே தவறாகத்தான் தெரியும் .

    //சரி சார்/மேடம், நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான்.. அப்படி பொன்னிர்க்கும் பொருளிர்க்குமட்டும் சூறையாடினார்கள் என்றால், கோவில்களை கொள்ளை அடித்து, செல்வத்தை மட்டும்தானே எடுத்துசென்றிருக்கவேண்டும்? மாறாக ஏன் இடித்தார்கள்? ஒரு கட்டிடத்தை தேவையில்லாமல் இடித்தால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்:- ஒன்று அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கவேண்டும், இல்லை அக்கட்டிடங்களை வெருத்திருக்கவேண்டும்.. சிலைகளையும் உருவ வழிபாட்டையும் வெறுக்கும் ஆபிரகாமியர்கள் மட்டுமே இதை செய்வர்! எனவே இரண்டாவதாக சொன்னதுதான் காரணம்…//

    எல்லா இந்துக்களும் கெட்டவர்கலில்லை,எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கலில்லை .நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்கள் மதம் மாற்றுவதற்கும் ,கோயில்களை இடிப்பதற்கும் படை எடுத்தார்கள் என்றால் இந்தோனேசியாவிற்கும், மலேசியாவிற்கும் எந்த முஸ்லிம் படை சென்று அவர்களை மாற்றியது .அது மட்டுமில்லாமல் இன்று சைனா ,அமெரிக்கா,பிரிட்டன் ,போன்ற பல நாடுகளில் இன்றும் முஸ்லிம்களாக மாறிக்கொண்ட ,மாறி கொன்றிருக்கின்ற அவர்களுக்கு பணப்பிரச்சினையா…?

    //”இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் முசல்மான்களின் படையெடுப்புகள் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. ‘புத்’ தின் எதிரியாகவே இசுலாம் வெளிப்பட்டது… இசுலாம் பவுத்தத்தை இந்தியாவில் மட்டுமல்ல, தான் பரவிய இடத்தில் இருந்தெல்லாம் ஒழித்துவிட்டது. ”
    (பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியம் – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எத்தும் பேச்சும் தொகுதி 3)//

    அதே அம்பேத்கார்தான் சாதி து என்று சொல்லி இருக்கிறார் .

    //இக்குறைகளை சரி செய்ய பிறந்துதானே பவுத்த, சமண மதங்கள்.. அவை எப்படி அழிந்தன? இந்துக்கள் கொன்றார்கள், அந்தணர்கள் கொன்றார்கள் போன்ற பொய்வாதத்தை கேட்டுக்கேட்டு காதுகள் புளித்துவிட்டன.. அண்ணல் அம்பேத்கரே முகலாயர்கள் செய்த அட்டூழியங்களால் தான் பவுத்த மதம் இறந்து விட்டது என்று சொல்லியிருக்கிறாரே..//

    காதுகள் புளித்து விட்டன என்று எழுதுவதற்கு பதிலாக கசப்பாய் இருக்கிறது என்று எழுதி இருந்தால் சரியாய் அமைந்து இருக்கும் …,ஏனென்றால் உண்மை கசக்கத்தான் செய்யும் .

    // இறுதியாக தோழர் நயா அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்… எல்லா முகமதீயர்களும் மதவெறியர்கள், சகிப்புத்தன்மையற்றவர்கள், பயங்கரவாதிகள் என்று நான் சொல்லவில்லை.. நல்லவர்களும் இருக்கிறார்கள்.. ஆனால், எல்லா முகமதீயர்களும் டாக்டர். அப்துல் கலாமைப்போல என்று ஒரு பொய்க்கதை உருவாக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..//

    நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் எல்லோருக்கும் பட்டம் கொடுக்காதீர்கள் .

    பதிலுக்கு பதில் கொடுக்கிறேன் என்பதற்காக இதை எழுதவில்லை ….
    சற்று பொதுவாக சித்தித்து பாருங்கள் நம்ம நாடு மத விஷயங்களில் இப்படியே போய் கொண்டிருந்தால் …..?

    jaihind

  52. //இக்குறைகளை சரி செய்ய பிறந்துதானே பவுத்த, சமண மதங்கள்.. அவை எப்படி அழிந்தன? இந்துக்கள் கொன்றார்கள், அந்தணர்கள் கொன்றார்கள் போன்ற பொய்வாதத்தை கேட்டுக்கேட்டு காதுகள் புளித்துவிட்டன.. அண்ணல் அம்பேத்கரே முகலாயர்கள் செய்த அட்டூழியங்களால் தான் பவுத்த மதம் இறந்து விட்டது என்று சொல்லியிருக்கிறாரே..//

    காதுகள் புளித்து விட்டன என்று எழுதுவதற்கு பதிலாக கசப்பாய் இருக்கிறது என்று எழுதி இருந்தால் சரியாய் அமைந்து இருக்கும் …,ஏனென்றால் உண்மை கசக்கத்தான் செய்யும் .

    இது க‌ச‌ப்பான‌ உண்மை இல்லை, அப்ப‌ட்ட‌மான‌ பொய்.

    இது இந்து ம‌த‌த்தின் மேல் எழுந்த‌ காண்டுவெறியினால் புனைய‌ப் ப‌ட்ட‌ க‌ட்டுக் க‌தை.

    There is neither any reference nor any deatails in the History, about this concoted masscare story that Jains and Buddhists were killed by Hindus.

    இன்னும் சொன்னால், ச‌ம‌ண‌ர்களும் , ப‌வுத்த‌ர்க‌ளும் த‌ங்க‌ள் வர‌லாற்றை, தாங்க‌ளே பதிவு செய்து வைத்து உள்ள‌ன‌ர். அதில் இப்படி இந்துக்க‌ள் ப‌டுகொலை செய்த‌தாக‌ குறிப்பு எதுவும் இல்லை. இப்ப‌டிப் ப‌ட்ட‌ நிக‌ழ்வு ந‌டை பெற‌வில்லை என‌ அவ‌ர்கள் கூறுகின்ற‌ன‌ர்.

    இந்த‌ பொய் பிர‌ச்சார‌ம் காழ்ப்புண‌ர்ச்சியின் அடிப் ப‌டையிலே ந‌ட‌த்த‌ப் ப‌டுகிர‌து.

    Only our close friends from Periyaarism, have produced this story in vain, and other thick friends Abrahamaites propagate this false story in vain!

  53. நயா அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழிதான் இத்தளத்தில் நான் எழுதிய கடைசி மறுமொழியாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.. ஆனால், நலம் விரும்புவான் (யார் நலத்தை?) எழுதியிருக்கிற மறுமொழியை படித்தவுடன் கட்டாயம் இதற்க்கு விடயளிக்கவேண்டும்.. இல்லையென்றால் முகமதீயர்களும், கிறித்தவர்களும், கருப்புச்சட்டைக்காரர்களும் தாங்கள் வென்றுவிட்டதாக மார்தட்டிக் கொள்வார்கள்… எனவே, நலம் விரும்புவான் செய்த சிந்தனைகளை நிந்தனை செய்யாமல் விடுவதற்கு என் மனம் இடமளிக்கவில்லை!

    //ஒரு விசயத்தை முதலில் தவறான கண்ணோட்டத்தில் உள் வாங்கிக் கொண்டால் எல்லாமே தவறாகத்தான் தெரியும் .//

    அதைத்தான் நானும் சொல்கிறேன்.. தொடக்கத்திலிருந்தே உங்கள் ஆட்கள் உலகம் முழுவதுமுள்ள அனைத்து மதங்களும் பொய், தங்கள் மதம் மட்டுமே உண்மை என்று நினைத்ததனால்தான் ஏராளமான அப்பாவி பாகனீய மக்களது இரத்தம் உலகம் முழுவதும் ஓடியது…

    //எல்லா இந்துக்களும் கெட்டவர்கலில்லை,எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கலில்லை .நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்கள் மதம் மாற்றுவதற்கும் ,கோயில்களை இடிப்பதற்கும் படை எடுத்தார்கள் என்றால் இந்தோனேசியாவிற்கும், மலேசியாவிற்கும் எந்த முஸ்லிம் படை சென்று அவர்களை மாற்றியது .அது மட்டுமில்லாமல் இன்று சைனா ,அமெரிக்கா,பிரிட்டன் ,போன்ற பல நாடுகளில் இன்றும் முஸ்லிம்களாக மாறிக்கொண்ட ,மாறி கொன்றிருக்கின்ற அவர்களுக்கு பணப்பிரச்சினையா…?//

    இந்தோனேசியாவின் வரலாறு உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றே சொல்லவேண்டும்.. இதோ:-

    “The Indonesian archipelago has been an important trade region since at least the seventh century, when the Srivijaya Kingdom traded with China and India. Local rulers gradually adopted Indian cultural, religious and political models from the early centuries CE, and Hindu and Buddhist kingdoms flourished. Indonesian history has been influenced by foreign powers drawn to its natural resources. Muslim traders brought Islam, and European powers fought one another to monopolize trade in the Spice Islands of Maluku during the Age of Discovery.”

    “From the seventh century CE, the powerful Srivijaya naval kingdom flourished as a result of trade and the influences of Hinduism and Buddhism that were imported with it.[16] Between the eighth and 10th centuries CE, the agricultural Buddhist Sailendra and Hindu Mataram dynasties thrived and declined in inland Java, leaving grand religious monuments such as Sailendra’s Borobudur and Mataram’s Prambanan. The Hindu Majapahit kingdom was founded in eastern Java in the late 13th century, and under Gajah Mada, its influence stretched over much of Indonesia; this period is often referred to as a “Golden Age” in Indonesian history.”

    https://en.wikipedia.org/wiki/Indonesia#History ….

    விக்கிபீடியா ஒரு செகுலர் தளம்.. எனவே, உண்மையில் நடந்தது என்ன என்றெழுதினால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.. ஆகையால் எழுதவில்லை!!

    அடுத்து மலேசியா:-

    “The Chinese and Indians established kingdoms in the area in the 2nd and 3rd centuries CE—as many as 30, according to Chinese sources. Kedah—known as Kedaram, Cheh-Cha (according to I-Ching) or Kataha, in ancient Pallava or Sanskrit—was in the direct route of invasions of Indian traders and kings. Rajendra Chola, the ancient Tamil emperor who is now thought to have laid Kota Gelanggi to waste, controlled Kedah in 1025. His successor, Vira Rajendra Chola, had to put down a Kedah rebellion to overthrow the invaders. The coming of the Chola reduced the majesty of Srivijaya, which had exerted influence over Kedah, Pattani and as far as Ligor.

    The Buddhist kingdom of Ligor took control of Kedah shortly after. Its king Chandrabhanu used it as a base to attack Sri Lanka in the 11th century, an event noted in a stone inscription in Nagapattinum in Tamil Nadu and in the Sri Lankan chronicles, Mahavamsa. During the first millennium, the people of the Malay Peninsula adopted Hinduism and Buddhism and the use of the Sanskrit language. They later converted to Islam.”

    “In the early 15th century, Parameswara, a prince from Palembang from the once Srivijayan empire, established a dynasty and founded the Malacca Sultanate. Conquest forced him and many others to flee Palembang. Parameswara in particular sailed to Temasek to escape persecution. There he came under the protection of Temagi, a Malay chief from Patani who was appointed by the King of Siam as Regent of Temasek. Within a few days, Parameswara killed Temagi and appointed himself regent. Some five years later he had to leave Temasek, due to threats from Siam. During this period, a Javanese fleet from Majapahit attacked Temasek.

    Parameswara headed north to found a new settlement. At Muar, Parameswara considered siting his new kingdom at either Biawak Busuk or at Kota Buruk. Finding that the Muar location was not suitable, he continued his journey northwards. Along the way, he reportedly visited Sening Ujong (former name of present-day Sungai Ujong) before reaching a fishing village at the mouth of the Bertam River (former name of the Malacca River). Over time this developed into modern-day Malacca Town. According to the Malay Annals, here Parameswara saw a mouse deer outwitting a dog resting under a Malacca tree. Taking this as a good omen, he decided to establish a kingdom called Malacca. He built and improved facilities for trade.

    According to a theory, Parameswara became a Muslim when he married a Princess of Pasai and he took the fashionable Persian title “Shah”, calling himself Iskandar Shah.[25] There are also references that indicate that some members of the ruling class and the merchant community residing in Malacca were already Muslims. Chinese chronicles mention that in 1414, the son of the first ruler of Malacca visited the Ming emperor to inform them that his father had died. Parameswara’s son was then officially recognised as the second ruler of Malacca by the Chinese Emperor and styled Raja Sri Rama Vikrama, Raja of Parameswara of Temasek and Melaka and he was known to his Muslim subjects as Sultan Sri Iskandar Zulkarnain Shah or Sultan Megat Iskandar Shah. He ruled Malacca from 1414 to 1424.”

    https://en.wikipedia.org/wiki/Malaysia

    மலேசியாவை ஆண்ட மன்னர்களின் பெயர்களைப் பார்க்கவும்:- பரமேஸ்வரா, இராஜா ஸ்ரீ இராஜா விக்ரமா, இன்று எந்த முஸ்லீம் இதுபோன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறீர்களா?? மற்றும், இன்று மலேசியாவில் உள்ள இந்துக்களின் நிலை என்ன? இதே தளத்தில் வந்த கட்டுரையை நீங்கள் படிக்கவில்லையா? நம் போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்கள் இதையெல்லாம் காட்டமாட்டார்கள்…

    https://tamilhindu.com/2009/09/are-hindus-abandoned-world-over/

    மாரியம்மன் கோவிலைக் கட்டினால், அவர்களால் உண்மையான முஸ்லீம்களாக வாழமுடியாதாம்.. கோவிலிலிருந்து வரும் ‘சத்தங்கள்’ அவர்கள் தொழுகைக்கு இடையூறாக இருக்குமாம்…
    ஆனால், நாங்கள் மட்டும் இங்கு தினமும் ஐந்து முறை “அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை.. நபிகள் நாயகம் சல்லல்லாஹூவைத் தவிர வேறு ஆசிரியரில்லை” என்பதை எங்கள் வேலைகள், பூஜைகளுக்கு இடையூறாக கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும், அப்படிதானே????

    அடுத்ததாக ஏதோ அமெரிக்க, பிரிடன் போன்ற நாடுகளில் மக்கள் இஸ்லாமைத் தழுவிக்கொள்கிறார்கள் என்று பீத்திநீர்களே… உங்களுக்கு ஒன்று தெரியுமா?? பிரான்ஸ் நாட்டில், எப்படி இஸ்லாமை எதிர்கொள்ளலாம் என்று அவ்வப்போது விவாதிக்கப் படுகிறது:-

    https://islaminaction08.blogspot.com/2009/10/france-takes-on-islam-deportations-have.html ….

    பிரிட்டனின் நிலைமை அதைவிட மோசம்! எலிசபெத்து ராணியே படுதா அணிய வேண்டும் என்று ‘பாத்வா’ போடும் அளவுக்கு சகிப்புத்தன்மை சீரழிந்துவிட்டது! உலகையே ஆண்டுகொண்டிருந்த பிரிட்டனின் நிலை இன்று இஸ்லாமின் கையில் சிக்கித் தவிக்கிறது:-

    https://news.rediff.com/report/2009/nov/02/uk-queen-will-wear-burkha-radicals.htm

    அமெரிக்காவில் இஸ்லாம் என்னென்ன செய்ய முற்படுகிறது என்பதை முகமது அஸ்கர் (Mohammed Asghar) எனும் இஸ்லாமியரே எழுதியுள்ளார்:-

    https://www.islam-watch.org/iw-new/index.php?view=article&catid=67%3Aasghar&id=195%3Awhy-muslims-chose-the-capitol-hill-lawn-for-praying-to-allah&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=58 …..

    ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவையே இஸ்லாம் என்ன செய்ய எண்ணுகிறது என்பதை கவலைகொள்ளும் ஐரோப்பா கிறித்தவர்கள் எழுதியுள்ளனர்:-

    https://www.albatrus.org/english/living/ourtimes/islam_conquer_europe.htm ….

    //அதே அம்பேத்கார்தான் சாதி து என்று சொல்லி இருக்கிறார் .//

    இந்து மதத்தில் சாதிப் பிரச்சனை உண்டு என்பதைக் கண்டுபிடிக்க நியூட்டனோ, ஐந்ச்டீனோ தேவையில்லை! உலகறிந்ததுதான்… ஆனால், அவ்வப்போது நல்ல சீர்த்திருத்த வாதிகள் தோன்றி இன்று இந்து மதம் சாதி, மொழி, இனம், நாடு என்பதெல்லாம் கடந்து மக்களை “மனிதர்களாக” வாழவைத்துக் கொண்டிருக்கிறது! நான் பலமுறை சொன்னதுபோல அமெரிக்காவின் டெட்ராயிட் நகரம் முதல் லோக்கல் பழவந்தாங்கல் வரை அந்தணர்களாக பிரக்காதவர்களே இன்று அந்தணர்களாக வாழ்கின்றனர்! இதற்க்கு உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம்.. எனக்கே ஏறத்தாழ 12 பேர் தெரியும்!!! ஆனால், சாதியே இல்லை, சாதிக்கொடுமைகளை ‘அழிக்கும்’ மதம் என்று நீங்கள் பிரசாரம் செய்யும் இஸ்லாமில் எத்தனை சாதிகள் உண்டு என்று தெரியுமா?? படித்துப் பாருங்கள்:-

    https://tamilhindu.com/2009/07/periyar_marubakkam_part05/ ….

    // நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் எல்லோருக்கும் பட்டம் கொடுக்காதீர்கள் .

    பதிலுக்கு பதில் கொடுக்கிறேன் என்பதற்காக இதை எழுதவில்லை ….
    சற்று பொதுவாக சித்தித்து பாருங்கள் நம்ம நாடு மத விஷயங்களில் இப்படியே போய் கொண்டிருந்தால் …..?//

    நீங்கள் எப்படிச் சொன்னாலும் எனக்குக் கவலையில்லை… ஆனால், நீங்கள் தினார்களும், ரியாத்களும் கொடுத்து கரெக்ட் செய்து இந்து மதத்தை அழிப்பதற்காகவே உருவாக்கியவைதானே இந்த ‘திராவிட’ கட்சிகளெல்லாம்… மதச்சார்பின்மை என்று வாய்கிழியப் பேசிவிட்டு பிறகு “முகமதீயர்களுக்கே நாட்டில் முன்னுரிமை” என்று பேசும் மன்மோகன் சிங் போன்றவர்களையும் அவரை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தும் ‘அன்னை சோனியா காந்தி’ போன்ற போலி மதசார்பின்மைவாதிகளும் இருக்கும் வரையில் உங்கள் காட்டில் மழைதான்!! ஆடுங்க, கடைசீல எல்லாரும் அடங்கத்தான் வேணும்…

    //காதுகள் புளித்து விட்டன என்று எழுதுவதற்கு பதிலாக கசப்பாய் இருக்கிறது என்று எழுதி இருந்தால் சரியாய் அமைந்து இருக்கும் …,ஏனென்றால் உண்மை கசக்கத்தான் செய்யும் .//

    இனி மறுமொழியே எழுதக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட நான், அதை உடைத்தெறிந்து கடைசீயாக ஒரு மறுமொழியை மட்டும் எழுத நினைத்தது இதற்காகத்தான்.. மெயின் ஈவென்ட் வந்துவிட்டது! இஸ்லாம், கிறித்தவம் இரண்டுமே மற்ற மதத்தினரை இரக்கமில்லாமல் கொன்றுகுவித்தே பரவின என்பதற்காக இந்து மதமும் அவ்வாறுதான் பவுத்தர்களையும் சமணர்களையும் கொன்றே பரவியது என்று கூறும் கணக்கிலடங்கா முகமதீயர்/கிறித்தவர்/கருபபுச்சட்டைக்காரர்களுள் நீங்களும் ஒருவர், அவ்வளவே….

    சரி, அதை சற்று அலசுவோம்… இது ஒன்றும் புதியதல்ல! ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாக தி.க., தி.மு.க. பொய்யர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதையே இது!!

    ஒரு அந்தணன் இந்து மதத்தை விட்டு வேறுஏதாவது மதத்திற்கு மாறி, பிறகு மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினால்கூட அவன்/அவள் ஒரு இந்து அவ்வளவே, மீண்டும் அந்தணனாக ஆக முடியாது!

    பவுத்தம், சமணம் இரண்டு மதங்களிலும் எத்தனை அந்தணர்கள் இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா??

    பவுத்தம்:-
    1. போதிதர்மா
    2. புத்தபலிதா
    3. நாகர்ஜுனா
    4. அச்வகோஷா
    5. அசங்கா
    6. குமாரஜீவா
    7. தின்னகா
    8. தர்மகீர்த்தி
    9. சந்திரகீர்த்தி
    10. ஷாந்திதேவா
    11. ரத்னகீர்த்தி

    சமணம்:-
    1. பிரபாச்சந்த்ரா
    2. அனந்தவீர்யா
    3. தேவசூரி
    4. ஹேமச்சந்திரா
    5. நேமிச்சந்த்ரா
    6. மல்லிசேனா
    7. சித்தசெனா திவாகரா..

    பொறுங்கள், இது பகவான் புத்தர் (கி.மு. 550-483) மற்றும் 24- ஆவது சமணத் தீர்த்தங்கரரான வர்தமான் மகாவீரர் (கி.மு. 599-527) உடன் வாழ்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் அந்தனர்களாகப் பிறந்து பிறகு பவுத்தராகவோ சமணராகவோ மதம் மாறியவர்களின் பட்டியல். சரி, இது நடந்து இன்னை தேதிக்கு 1500 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. பிறகு இந்த கி.பி. 500-1500, இந்த 1000 ஆண்டுகளில்தான் பவுத்தர்கள் மற்றும் சமணர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது! இந்த காலகட்டங்களில் வந்தவர்கள் யார் என்று அனைவரும் அறிவர்… சரி, அப்படியென்றால் இதற்கும் இந்துக்களுக்கும் சம்பந்தமே இல்லையா என்றால், உள்ளது. முகமதியர்கள் வாளைக் காட்டி பவுத்தர்களையும் சமணர்களையும் அடக்கினர், இந்துக்கள் தர்மத்தினாலும், வாதத்தினாலும் மாற்றினர்…

    சில முக்கியமான மதமாற்றங்கள்:-

    1. திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். இது நடந்தது கி.பி. 7- ஆம் நூற்றாண்டில்!!

    2. பகவத் இராமானுஜர் (கி.பி. 1017-1137) மைசூரை ஆண்டுவந்த விட்டலதேவன் எனும் அரசனை சமணத்திலிருந்து வைணவத்திற்கு மாற்றினார்! எப்படி? கத்தியாளல்ல, “என் மதத்திற்கு மாறாவிட்டால் நீ நாராகிததில் எரிவாய்” என்று பயமுறுத்தி அல்ல, ஆசை காட்டியல்ல. வேறெப்படி? சமணத் துறவிகளாலும், அம்மதகுருகளாலும் குணப் படுத்தமுடியாத அரசனின் மகளின் நோயை குணப் படுத்தினார். இதனால், நன்றிக்கடனாக விட்டலதேவன் எனும் அவ்வரசன் இராமானுஜரிடம் சரணடைந்து வைணவனாகிறான்.. அவனுக்கு இட்ட புதிய பெயர் ‘விஷ்ணுவர்தணன்’…

    3. ஸ்ரீ மத்வாச்சாரியார் (கி.பி. 1238-1317) துறவு பூண்டவுடன் அவருடன் வாதிட வாதிசிம்ஹா எனும் வைசேஷிகரும், புத்திசாகரா எனும் பவுத்தமதத் துறவியும் அவர் மடத்தைத் தேடி வருகின்றனர்.. “இச்சிறுவனை எளிதில் வென்றுவிடலாம்” என்று இறுமாப்புடன் இருந்தவர்களை முதல் நாளில் அவரை வெல்ல, அவ்விருவரும் “நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம்” என்று எழுதிக்கொடுத்து அன்றிரவே உடுப்பியை விட்டு ஓடிவிடுகின்றனர்!!

    4. அப்பர் ஸ்வாமிகள் (கி.பி. 7- ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவர். அவருக்கு இன்னொரு பெயர் திருநாவுக்கரசர். பிழைப்பிற்காக முதலாம் மகேந்த்ரவர்மன் எனும் சமண அரசனிடம் பணிபுரிந்து அவரும் சமணராகி ‘தர்மசேனா’ என்று பெயரை மாற்றிக்கொள்கிறார். ஆனால், ஒருமுறை வயிற்றுவலி வர, அதை சமண குருமார்கள் குணப்படுத்தாமல் போக, சிவபெருமானை வேண்ட வயிற்றுவலி குணமாகிறது. அதனால் மீண்டும் சைவத்தைத் தழுவியதால் அவ்வரசன் அவரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசியபோழுதும் “நற்றுணையாவது நமச்சிவாயமே!” என்றுபாட, அவர் காப்பற்றப் படுகிறார்…

    ஆனால், இது எதையும் பொருட்படுத்தாமல் “அந்தணர்கள் கொன்றார்கள்”, “இந்துக்கள் கொன்றார்கள்” என்று பழைய பல்லவியையே பாடுகிறீர்கள்!
    இதில் செகுலர் வா(ந்)திகள் செய்யும் ஒரு கபட நாடகம்… “திருஞானசம்பந்தர் மதுரையில் 2000 சமணர்களை உயிருடன் எரித்தாராம்!!!”. இதைக் கேட்டால் சிரிப்புதான் வரும்!

    ஏனெனில், திருஞானசம்பந்தர் வாழ்ந்ததே 16 ஆண்டுகாலம்தான்.. பால்மணம் மாறாத குழந்தை ஒன்றல்ல, இரண்டல்ல 2000 பேரை உயிருடன் எரித்தார் என்று சொன்னால், உங்கள் சொல்படி அச்சமணர்கள் ‘கய்யாளாகாதவர்கள்’ என்கிறீர்களா? நயா சொன்னதுபோல ‘கோழைகள்’ என்கிறீர்களா???

    போதுண்டா சாமி.. இந்தமாதிரி இணையதளத்துல அரட்டை அடித்தடித்தே என் ஆயிசு கரைந்துவிடும் போல இருக்கு.. அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்…. இனி யார் என்ன உளறினாலும் நான் விளக்கம், மறுமொழி எழுதி எந்நேரத்தை வீனடிக்கப்போவதில்லை!

    திருச்சிக்காரர், சதீஷ், கார்கில் ஜெய், இராம், மற்றும் இந்து மதத்தை பாதுகாக்கப் போராடும் பிற சகோதர/சகோதரிகளுக்கு:-
    நாம என்ன சொன்னாலும் இந்த முஸ்லீமாக, கிரிச்டியனுங்க, கழகக் கண்மணிங்க திருந்த மாட்டாங்க.. ஆகையால், இவர்களுடன் “வெட்டிவாதம்” செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.. முடிந்தால், நீங்களும் கட்டுரை எழுதுங்க, இல்லையென்றால், இராமாயணம், வேதங்கள், பகவத் கீதை, திருவாசகம், திருக்குறள், தேவாரம், திவ்ய பிரபந்தம் ஏதாவது படித்து சுற்றுப்புறத்திலுள்ள சிறுவர்களுக்கு கற்பிக்கவும்… பைசா பிரயோஜனம் இல்லாமே இவங்களோட “வெட்டிவாதம்” செய்யாதீங்க! இவங்க கிட்ட எதையாவது சொல்றதுங்கறது தண்ணிமேல எழுதற மாதிரிதான்..

    இந்துமதம் உண்மையான வாதங்கள், தர்மம், தத்துவம் ஆகியவைக்கே அடிபணியும்.. ஆகையால்தான் பவுத்தமும் சமணமும் ஒருகாலத்தில் இந்நாட்டில் கொடிகட்டிப் பறந்தன! ஆனால் கிறித்தவப் பாதிரிகளோட மதமாற்றத்திற்கோ, முல்லாக்களோட ‘பாத்வா’ கோ இல்லை! இதை உணர்த்தும் வகையில், கூடிய சீக்கிரம் பலர் வியக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடக்கும்…

    வெங்காயம் என்ன, கத்திரிக்கா, தக்காளி, பூசிநிக்கா, ஏன் கோயம்பேடு காய்கறி அங்காடியே வந்தாலும் இந்து மதத்தின் மயிரைக்கூடப் பிடுங்க முடியாது நு சொல்லுங்க!!

    இனி இந்த மாதிரி ‘சில்லறை வாதங்களை’ நான் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கிறேன்….

    என்றும் அன்புடன்,
    வள்ளுவன்.

  54. ஐயா வள்ளுவன் அவர்களே,
    நண்பர் திருச்சிக்காரன் அவ்ர்களுக்கு,ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்,முடிந்தால் அதை பெற்று படித்து பாருங்கள்,அல்லது,உங்களது மெயில் முகவரி தாருங்கள்.அதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்,….

    தவிர ஹிந்து மதம் பற்றிய எனது சந்தேகங்களை,திருச்சிகாரனிடம் கேட்டு பதில் இல்லை…அதை உங்களிடம் வைக்கலாம் என எண்ணுகிறேன்..
    முடிந்தால் பதில் கூருங்கள்….

    அதற்கு மெயில் முகவரி தாருங்கள்……

    என்னுடன் விவாதிக்க விரும்பும் யாரும் என்னை தொடர்பு கொள்ளலாம்..

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

  55. ///திருச்சிக்காரர், சதீஷ், கார்கில் ஜெய், இராம், மற்றும் இந்து மதத்தை பாதுகாக்கப் போராடும் பிற சகோதர/சகோதரிகளுக்கு:-
    நாம என்ன சொன்னாலும் இந்த முஸ்லீமாக, கிரிச்டியனுங்க, கழகக் கண்மணிங்க திருந்த மாட்டாங்க.. ஆகையால், இவர்களுடன் “வெட்டிவாதம்” செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.. முடிந்தால், நீங்களும் கட்டுரை எழுதுங்க, இல்லையென்றால், இராமாயணம், வேதங்கள், பகவத் கீதை, திருவாசகம், திருக்குறள், தேவாரம், திவ்ய பிரபந்தம் ஏதாவது படித்து சுற்றுப்புறத்திலுள்ள சிறுவர்களுக்கு கற்பிக்கவும்… பைசா பிரயோஜனம் இல்லாமே இவங்களோட “வெட்டிவாதம்” செய்யாதீங்க! இவங்க கிட்ட எதையாவது சொல்றதுங்கறது தண்ணிமேல எழுதற மாதிரிதான்..
    இந்துமதம் உண்மையான வாதங்கள், தர்மம், தத்துவம் ஆகியவைக்கே அடிபணியும்.. ஆகையால்தான் பவுத்தமும் சமணமும் ஒருகாலத்தில் இந்நாட்டில் கொடிகட்டிப் பறந்தன! ஆனால் கிறித்தவப் பாதிரிகளோட மதமாற்றத்திற்கோ, முல்லாக்களோட ‘பாத்வா’ கோ இல்லை! இதை உணர்த்தும் வகையில், கூடிய சீக்கிரம் பலர் வியக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடக்கும்…
    வெங்காயம் என்ன, கத்திரிக்கா, தக்காளி, பூசிநிக்கா, ஏன் கோயம்பேடு காய்கறி அங்காடியே வந்தாலும் இந்து மதத்தின் மயிரைக்கூடப் பிடுங்க முடியாது நு சொல்லுங்க!!
    இனி இந்த மாதிரி ‘சில்லறை வாதங்களை’ நான் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கிறேன்….
    என்றும் அன்புடன்,
    வள்ளுவன்.///மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். அதே நேரத்தில் மனதில் இருந்ததை கொட்டித் தீர்த்து விட்டீர்கள். நண்பரே மனம் அமைதியானவுடன் மீண்டும் நிதானமாக வாருங்கள். ஒன்றும் அவசரம் இல்லை. எறும்பூற கல்லும் தேயும் என்பார்களே. அது போல தொடர்ந்த வாதத்தால் குறைந்தது ஒரு கிறிஸ்தவரையோ ஒரு முஸ்லீமையோ இந்துக்களின் நிலைமை பற்றி யோசிக்க வைத்தால் எதிர்காலத்தில் இந்துக்களின் நிலைமைக்காக அவர்களே நமது சார்பாக பேசும் அளவு நம்மால் ஒருவருக்காவது புரிய வைத்தால் அதுவே நமது சக்தி என்போம். நண்பர் வள்ளுவன் அவர்களே நான் எனது இறுதி மூச்சிறுக்கும் வரை இந்துவாக வாழ்ந்து இந்துவாக மடிவதை பெருமையாகவே கொள்கிறேன். அது வரையிலும் எனது தர்மத்தை காக்கவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் உறுதியாக இருப்பேன். உங்கள் பணி சிறக்கட்டும். நான் உங்களோடு இருக்கிறேன். நன்றி.

  56. வள்ளுவன் அவர்களே

    //அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்…. இனி யார் என்ன உளறினாலும் நான் விளக்கம், மறுமொழி எழுதி எந்நேரத்தை வீனடிக்கப்போவதில்லை

    நீங்களே சொன்னீர்கள் ராமானுஜரும், சங்கரரும் புத்தர்களை வாதில்தான் வென்றார் என்று. அவர்களும் அன்று அப்படிதான் சூன்யவாதம் பேசி திரிந்துகொண்டிருந்தார்கள் – இதை எடுத்தா சூன்யம் அதை எடுத்த சூன்யம் அப்படிதானே உலரிகொண்டிருந்தார்கள் – பலர் முயன்று வாதிட்டு அவர்களை மனம் மாற்றினார்கள் (கவனிக்க மதம் அல்ல மனம்) – உங்களைபோல் அவர்களும் கைவிட்டிருந்தால் இன்றைக்கு எல்லாமே சூன்யமாகத்தான் இருக்கும்

    உங்களின் நற்பணியை தொடருங்கள் – இந்த சொல்லுரை எல்லாம் வேண்டாம் – இதை கூட சில அற்பர்கள் தங்களின் வெற்றியாக கருதக்கூடும்

    மற்றவர்கள் செய்வது விதண்டா வாதம் – நீங்கள் உங்கள் வாதத்தை தொடருங்கள்

  57. சகோதரர் ரஜின் அவர்களே,

    //தவிர ஹிந்து மதம் பற்றிய எனது சந்தேகங்களை,திருச்சிகாரனிடம் கேட்டு பதில் இல்லை…

    நன்றி
    அன்புடன்
    ரஜின்//

    நீங்கள் என்ன கேட்டு நான் விளக்காமல் விட்டு விட்டேன்?

    உங்களின் விரக்தியினால் உண்டான கடுப்பை எல்லாம் கொட்டி, கடிதம் அனுப்பி உள்ளீர்கள்.

    அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்?

    2 நாட்களாக என்னுடைய மெயில் பாக்சை செக் செய்யவும் இல்லை.

    After you told here, I was quick to check and found 2 mails from you.

    நீங்கள் பெரிய மடலாக அனுப்பி பல கேள்விகளை கேட்டால் நான் என்ன செய்ய முடியும்? ஒரு நேரத்திலே ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை கேட்டால் பதில் அளிக்க முடியும்.

    As per your question list,

    //இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்,கொடூரமானவர்கள்,அவர்கள்,கோவில்களை இடித்தார்கள்,பெண்களை கற்பழித்தார்கள்,இன்ன பிற கொடுஞ்செயல்களில் இட்டுபட்டார்கள்.அதனால் இஸ்லாம் அதை தான் போத்டிக்கிறது என்ற தங்களின் வாதம்,எண்ணம் தவறானது,என்பதற்கும்,யாரையும் வெருக்கசொல்லாத மதம் என ஹிந்து மதத்துக்கு தாங்கள் இட்ட புனை பெயரால்,அது ஏதோ உத்தமம் மாதிரி பரப்புவது,தவறு.//

    அதாவ‌து இசுலாமிய‌ ம‌ன்ன‌ர்க‌ள் கொடுமை செய்து அத‌னால் இசுலாத்திற்க்கு கெட்ட‌ பெய‌ர் வ‌ந்த‌து போல‌வும், இசுலாம் அஹிம்சையை போதிக்கும் ம‌த‌ம் போல‌வும் எழுதி இருக்கிறீர்க‌ள்‍.

    இது உண்மையா பொய்யா என்று எல்லொருக்கும் தெரியும். இப்போது நான் என்ன‌ செய்ய‌ வேண்டும்? “அத்வேஷ்டா , ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ , கருண‌ ஏவ‌ ச‌” என்ப‌து இந்து ம‌த‌ புத்த‌க‌மான‌ கீதையிலே இல்லை, இசுலாத்தின் க‌ருத்து என்கிறீர்க‌ளா? இதை இசுலாத்தின் க‌ருத்து ஆக்கி கொள்ளுங்க‌ள், நான் ஆத‌ரிக்கிறேன்!

    அது தானே நீங்க‌ள் நான் பிர‌ச்சார‌மாக‌ செய்ய‌ சொல்ல‌ வ‌ருவ‌து?

    நீங்க‌ள் விரும்புவ‌து ச‌ரியே, இந்த‌ “அத்வேஷ்டா , ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ , கருண‌ ஏவ‌ ச‌” க‌ருத்தை ஆபிர‌காமிய‌ மார்க்க‌ங்க‌ளின் மைய‌க் க‌ருத்து ஆக மாற்றுவோம். இந்த‌க் க‌ருத்தை நீங்க‌ள் பிர‌ச்சார‌ம் செய்ய‌ நான் ஆத‌ரிக்கிறேன். இந்த‌க் க‌ருத்தை யூத‌ ம‌த‌த்தின், கிருஸ்துவ‌த்தின், இசுலாத்தின் அடிப்ப‌டை க‌ருத்து ஆக்குவோம்.

    —————–

    இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌ ஒரு சில‌ ம‌ன்ன‌ர்க‌ள் பொது ம‌க்க‌ளை கொன்ற‌தாக‌ காட்ட‌, பாடு ப‌ட்டு தேடி இருக்கிறீர்க‌ள். அப்படி தேடியும் கூட‌ ம‌க்க‌ளைக் கொன்ற‌தாக , க‌ற்ப‌ழித்தாக‌ இல்லாம‌ல், ஜுஜூபி குற்ற‌ங்க‌ளை எல்லாம் தேடி எடுத்து போட்டு இருக்கிறீர்க‌ள்.

    //பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

    “பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்”. (புறநானூறு 15). //

    இன்னும் தேடி பெரிய‌ கேசாக‌ப் பிடித்து,

    இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

    “வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
    நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே” (புறம் 6)

    என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.//

    இன்னும் தேடி, பெண்க‌ளை க‌ற்ப்ப‌ழிப்பு செய்தி இருக்கிற‌தா என்று பார்த்து, இல்லாம‌ல்

    //பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

    நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

    வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)////

    கேன‌த் த‌ன‌மாக செய்து இருக்கிறான் என‌ சொல்கிறீர்க‌ள் , த‌ன்னிட‌ம் சிக்கிய‌ பெண்க‌ளை அடிமைக‌ளாக்கி த‌ன் உல்லாச‌த்துக்கு உப‌யொக‌ப் ப‌டுத்தாம‌ல் , மொட்டை அடித்து விட்டு விட்டான் த‌மிழ் அர‌ச‌ன், என்ப‌து பொருள் .

    க‌டைசியில் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு, சில‌ கொலை க‌ற்ப்ப‌ழிப்பு குற்ற‌ங்க‌ளியும் தேடி எடுத்து இருக்கிறீர்க‌ள்

    //முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

    நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

    இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    (இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).

    (இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

    இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

    இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி ” . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்” ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).//

    ——————

    மொத்த‌மாக‌ எல்லாவ‌ற்றுக்கும் ந‌ம‌து எளிய‌ ப‌தில்:

    பொது ம‌க்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌வோ, பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்க்வோ, இன‌ அழிப்பு செய்ய‌வோ இந்து ம‌த‌ம் சொல்லியிருக்கிற‌தா‍ ‍- சொல்ல‌வில்லை, சொல்ல‌வேயில்லை. ஒரு போதும் சொல்ல‌வில்லை,

    ம‌த‌த்தைப் ப‌ர‌ப்ப‌ ப‌டை எடுக்க‌ இந்து ம‌த‌ம் சொல்லி இருக்கிற‌தா? -சொல்ல‌வில்லை, சொல்ல‌வேயில்லை. ஒரு போதும் சொல்ல‌வில்லை.

    பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரை சேர்ந்த‌வ‌ரை வெறுக்க‌, தாக்க‌, இந்து ம‌த‌ம் சொல்லி இருக்கிற‌தா?- சொல்ல‌வில்லை, சொல்ல‌வேயில்லை. ஒரு போதும் சொல்ல‌வில்லை.

    ————————-

    “அத்வேஷ்டா , ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ , கருண‌ ஏவ‌ ச‌”

    இந்த‌க் க‌ருத்தை இசுலாமிய‌ர் உள்ளிட்ட‌ ஆபிர‌காமைய‌ ந‌ம்பிக்கையாளர் எல்லொரிட‌மும் நீங்க‌ள் ப‌ர‌ப்புங்க‌ள்‍. இதை ஆபிர‌காமிய‌ மார்க்க‌ங்க‌ளின் மைய‌க் க‌ருத்து ஆக்குவோம்..

    இந்து ம‌த‌ம் முழுமையாக‌ மூட‌ர்க‌ளிட‌ம், ர‌வுடிக‌ளிட‌ம் சிக்கி விடாம‌ல் இருக்க‌ இந்த‌ க‌ருத்தை நான் இந்துக்க‌ளுக்கு நினைவு ப‌டுத்திக் கொண்டேயிருப்பேன்.

    ————————————–

    //என்னுடன் விவாதிக்க விரும்பும் யாரும் என்னை தொடர்பு கொள்ளலாம்..

    நன்றி
    அன்புடன்
    ரஜின்//

    யாரும் உங்களுடன் விவாதிப்பதால் என்ன பயன்?

    இசுலாத்திலே கருத்துக்கள கடுமையாக இருந்தாலும், நான் நல்லிணக்க அடிப் படையிலே சேர்ந்து மசூதியில் தொழுகத் தயார் என்றும், ரமலான் மாதத்திலே நோன்பு இருக்க தயார் என்றும் கூறி இருக்கிறேன்.

    இந்து மதத்திலே நல்ல கருத்துக்கள் இருப்பதாக தெரிந்தால் நீங்கள் அதை பாராட்டவும், நல்லிணக்க அடிப்படையிலே இந்துக்களுடன் சேர்ந்து வணங்கவும் போகிறீர்களா? ஆம் என்றால் சொல்லுங்கள், எல்லா விளக்கமும் அளிப்போம்.

    இல்லை என்றால் சர்வங்க்கர் சொல்வது போல பாறைக்கு நீர் வார்த்து என்ன பலன்?
    —————-

    நன்றி
    அன்புடன்

    திருச்சிக் கார‌ன்

  58. //அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,

    அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், //

    I dont hold the Present day Muslims as guilty of What Kazini, Khori did.

    I dont hate my Muslim Brethrens.

    I want all the Muslims to be protected and be given equal opportunities.

  59. /////ரஜின்
    24 November 2009 at 11:03 am
    ஐயா வள்ளுவன் அவர்களே,
    நண்பர் திருச்சிக்காரன் அவ்ர்களுக்கு,ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்,முடிந்தால் அதை பெற்று படித்து பாருங்கள்,அல்லது,உங்களது மெயில் முகவரி தாருங்கள்.அதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்,….
    தவிர ஹிந்து மதம் பற்றிய எனது சந்தேகங்களை,திருச்சிகாரனிடம் கேட்டு பதில் இல்லை…அதை உங்களிடம் வைக்கலாம் என எண்ணுகிறேன்..
    முடிந்தால் பதில் கூருங்கள்….
    அதற்கு மெயில் முகவரி தாருங்கள்……
    என்னுடன் விவாதிக்க விரும்பும் யாரும் என்னை தொடர்பு கொள்ளலாம்..
    நன்றி
    அன்புடன்
    ரஜின்////// நண்பர் ரஜின் அவர்களே! ஹிந்து மதம் பற்றிய உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க இங்கே நிறைய பேர் காத்திருக்கும் போது ஏன் திருச்சிக்காரர், மதுரைக்காரர் என்று ஊர் ஊராகப் போய் தனித்தனியாக கேட்டு கஷ்டப் படுகிறீர்கள். பொது இடத்தில் உங்கள் முகத்திரை கிழிக்கப்படுகிறது என்று பயமா? எல்லாருக்கும் அவரவர் மதம் பற்றிய ஞாயம் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஞாயம் இந்து தர்மத்தில் தான் இருக்கும். முரண்பாடுகளும் விளக்கங்களும் கூட அதில் அடங்கும். அதனால் பசி கொண்ட புலி மானை கூட்டத்திலிருந்து தனியே விரட்டி அடித்து திண்ண நினைப்பது போல தனியாக ஒருவரை பிடித்து அவரை உலுக்க நினைக்கிறீர்களோ. உங்கள் சந்தேகங்களை இங்கேயே கேளுங்கள்.

  60. //நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்//.\

    நண்பர் ரஜின்,

    இதை ராஜேந்திரன் எந்த ஹிந்து தர்மத்தை படித்து விட்டு செய்தான் என்பதை தெரிவிக்க முடியுமா!

    ஆனால் என்னால் முடியும் கோரியும்,கஜினியும் இன்னும் பல கேடு கேட்டவனுங்களும் எந்த தர்மத்தை படிச்சுட்டு செய்தானுங்க என்று! வேணும்னா சொல்லுங்க, லிஸ்ட் போட்டு சொல்லுறேன். ஆனா அது உங்க அடிப்படைகளை துவம்சம் செய்யும். நீங்க வருத்த படகூடாது அப்புறமா !

    இங்கே பல இஸ்லாமிய சகோதரர்கள் கனவு காணுவது போல அமெரிக்காவிலேயும் ,ஐரோபெலேயும் இஸ்லாம் மனசை மாத்தி பரவிட்டு வரலை. அது ஒரு பெண்ணை பிள்ளை பெற்று போடும் எந்திரமாகவே எண்ணி பரவி வருகிறது என்று சொல்லலாம் .

    அன்புடன்
    பிரதீப் பெருமாள்

  61. நண்பர்களே…
    திருச்சிக்காரன் அவர்களுக்கு நான் அனுப்பிய மெயிலில்,ஹிந்து மதம் பற்றிய எனது விமர்சனம் கடுமையாகவே அமைந்துவிட்டது…அதற்கு,நான் எனது அடுத்த மெயில்களில்,மன்னிப்பும்,வருத்தமும் தெரிவித்துவிட்டேன்..
    இப்போது,தங்கள் மத்தியிலும்,எனது அந்த விமர்சனத்துக்கு,அவரிடமும்,எனது மற்ற ஹிந்து சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…

    எனது அந்த கோபம்,திருச்சிக்காரன் போன்ற நண்பர்கள்,இஸ்லாத்தை விளங்கியுள்ளோம்,என கூறிக்கொண்டு,அதன் மீது வன்மத்தை,வெரும் அபாண்ட விமர்சனமாக,முன்வைத்ததே….இஸ்லாம் சம்பந்தமாக கேட்கப் பட்ட கேள்விகளுக்கு,எனது பதிலை அனைவரும் கண்டுள்ளீர்கள்….

    அந்த விமர்சனத்தை எழுதிய பிறகு,அதை எண்ணி வருந்திய கணங்களே அதிகம்…
    இஸ்லாம் என்பது ஹிந்துக்களுக்கும்,அல்லது மாற்றுமத்த்தவர்களுக்கும், முந்தய காலகட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள்,அல்லது தற்கால முஸ்லிம்கள்,இவர்களில் எவர் தீயவராக இருந்தாரோ அவரே முன்னுதாரணமாக்கப் ப்டுகிறார்.
    இஸ்லாம் பற்றி அறியவேண்டுமா…இஸ்லாத்தின் மூலமான குர் ஆன் மற்றும் ஹதீஸ்களை எடுத்துகொள்ளுங்கள்.அதை விமர்சிக்க வேண்டுமா,எந்த தயக்கமும் வேண்டாம்.அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் அது குர் ஆன் ஹதீஸ்களில் இருந்தே இருக்கவேண்டும்.அதுவல்லாது,
    அவர் ஃபத்வா கொடுத்தாரே,அந்த முஸ்லிம் அரசன்,கோவிலை இடித்தானே,இவன் இப்படி செய்தானே,என்று சொல்லிவிட்டு,இஸ்லாம் இதை சொன்னதால் தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என சொல்வது ஏற்கதக்கதல்ல.
    குர் ஆனில் இப்ப்டி ஒரு வசனம் உள்ளதே,இப்படி ஒரு ஹதீஸ் உள்ளதே,என கூருங்கள்,இன்ஷா அல்லாஹ் விளக்கம் தரலாம்..
    அதுவே நடுநிலையானதாக இருக்கும்.அதையே எல்லா காலத்திலும் வலியுருத்துகிறேன்…

    தங்களது விமர்சனம் எப்படியுள்ளதென்றால், 2 இழைத்த தவறால்,ஹிந்து மதமே அதை தான் கற்பிக்கிறது என்று,நான் சொல்வது எவ்வளவு அறிவீனமோ,அதை போன்றதே….

    அன்றைய முஸ்லிம் அரசர்களில் சிலர் கட்டாய மதமாற்றம் செய்து இருக்க்லாம்,ஆனால் அது இஸ்லாம் சொன்னதல்ல.உள்ளத்தால் கடவுளை ஏற்காத மக்களால் எந்த பயனும் இல்லை.அவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாவது இஸ்லாத்திற்க்கு அவ்சியமற்ற ஒன்று…
    எனது கருத்துபடி,கட்டாய மதமாற்றம் செய்பவன்,அக்கால்மாக இருந்தாலும்,தற்காலமாக இருந்தாலும்,வெட்டி எரியப்பட வேண்டிய கள்ளியை போன்றவன்..

    இன்று பத்வா கொடுப்பவர்கள் பலர்,இஸ்லாத்தை விளங்கியவர்களாக இருந்தாலும்,அவர்கள் பண்டைய உலமாக்கள் வகுத்த பல சட்டங்களை முன்னுதாரணமாக கொள்பவர்கள்,அவ்ர்கள் வெளியிடும் பத்வாக்களை இன்றைய முஸ்லிம்கள்,ஆராயக்கூடியவர்களாக உள்ளனர்..பல விஷயங்களில்,அவ்ர்களது பத்வா முஸ்லிம்களாலேயே ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை…ஆனால் அது அனைத்து முஸ்லிம்களின் பிரதிபலிப்பாக பார்க்கப் படுகிறது….அது தவறு.

    ஹிந்து அரசர்கள்,செய்த குற்றங்களை நான் பட்டியலிட்டத்ற்கான காரணம்,ஒரு குறிப்பிட்ட அரசன் செய்யும் குற்றத்திற்க்கு,காரணம் அவர் சார்ந்துள்ள மதம் அல்ல,ஹிந்துவானாலும்,முஸ்லிமானாலும் தவறு தவறுதான்,அத்ற்கு,மதம் பொருப்பாகாது,என உணர்த்தவே,தவிர,ஹிந்துக்கள் செய்தார்கள்,அதனால் முஸ்லிம்கள் செய்தது சரி என நியாயப் படுத்த அல்ல.

    ஹிந்துக்களை நான் ஒருபோதும் வெருத்ததில்லை.எனது மார்க்கமும் அதை ஒருநாளும் சொன்னதில்லை…..அப்படி சொல்லி இருப்பின் நான் அதில் நிலைத்திருக்க வாய்ப்பில்லை.எனக்கு சிறந்த ஹிந்து நண்பர்கள் பலர் உள்ளனர்…
    அது போல நமது நாட்டில் மதத்தின் பெயரால் நடக்கும் பிரச்சனைகளே,நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்க்ல்லாக உள்ளது…அது மலிவான அரசியல்வாதிகளாலும்,சில மதவாதிகளாலும் தூண்டப்படுகிறது….ஆனால் பாதிக்கப்படுவது ஏதும் அறியாத அப்பாவி மக்களே…
    அவர்களின்,செயலை மக்களாகிய நாம் கருத்தில் கொள்ளாமல்,ஒற்றுமையுடன் வாழ முனைவதே,நலம் பயக்கும்…

    தாலிபான்களும்,பத்வா தருபவர்களும்,அரேபியர்களும்,இஸ்லாத்தின் ஏகப்பிரதினிதிகள் அல்ல…..அவர்கள் செய்வது இஸ்லாமும் அல்ல.

    குர் ஆன்,ஹதீஸ் மட்டுமே,இஸ்லாத்தின் அடிப்படை…

    நண்பர் திருச்சிக்காரன் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

    //I dont hold the Present day Muslims as guilty of What Kazini, Khori did.
    I dont hate my Muslim Brethrens.
    I want all the Muslims to be protected and be given equal opportunities.//

    முழுமையாக வரவேற்கிறேன்…
    அதை அனைத்து மக்களுக்கும் பொதுவாக நான் வழிமொழிகிறேன்.

    நண்பர் ராம் அவ்ர்களே,எனது விமர்சனத்தை இங்கு முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை…அதன் மூலம்,ஹிந்துக்களின்,மனதை புண்படுத்துவது சத்தியமாக எனது நோக்கமும் அல்ல.
    எனது நோக்கம் மதநல்லிணக்கமே….

    அதை தவிற இங்கு வந்து விவாதிக்க எனக்கு எந்த நோக்கமும் இல்லை.

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

    (comment edited & published)

  62. Dear Mr. Razin,

    I have many times appreciated you that you are a moderate man.

    Similaraly if any clarification about any verse in Quran or Hathees is asked, you moderate its meaning and present it as if it is a peace treaty.

    Janaab Rahamaththulla is giving exact interpretation, without any hesitation.

    I would take the interpretations from both you as well as Janaab Rahamathullah.

    I once agin reiterate that

    இந்தியாவிலே இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் வரை தான் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கும்.

    எம்மதமும் சம்மதம் என்று சொல்லும், ஒரே மார்க்கததவன் பிற மார்க்கதினரோடு சேர்ந்து வழி பாடு செய்யத் தயார் என்று கூறும் ஒரே மார்க்கததவன் இந்து மட்டுமே.

    இப்போது மக்கள் தொகை பிறப்பு விகிதம் போகும் வேகத்திலே இன்னும் அதிக நாட்கள் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பானமியினராக இருக்க மாட்டார்கள் ,

    அதற்குப் பிறகு இங்கே சிலுவைப் போர்கள் நடக்குமோ அல்லது பாலஸ்தீன் போல ஆகுமோ தெரியாது!

    ஆனால் இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் வரையிலே இந்த நாட்டை, அரிச் சந்திரனின் நாடாக, புறாவுக்கு வூனைத் தந்த சிபி சோழனின் நாடாக, அசோகரின் நாடாக, காந்தியின் நாடாக தான் வைத்து இருப்போம்.

    and I stand not just with words, but

    I stand with both word and spirit on “அத்வேஷ்டா , ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ , கருண‌ ஏவ‌ ச‌” – .

    I say that,

    The more the numbers of the people in the world imbibe and follow this – “அத்வேஷ்டா , ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ , கருண‌ ஏவ‌ ச‌” – more the peace and happiness will be in the world!

    Thanks.

  63. சகோதரர்,நண்பர் திருச்சிக்காரன் அவர்களே….

    //இந்தியாவிலே இந்துக்கள் பெருவாரியாக இருக்கும் வரை தான் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கும்.

    எம்மதமும் சம்மதம் என்று சொல்லும், ஒரே மார்க்கததவன் பிற மார்க்கதினரோடு சேர்ந்து வழி பாடு செய்யத் தயார் என்று கூறும் ஒரே மார்க்கததவரான ஹிந்துக்களும்,
    ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என கூறும் நாங்கள் இருக்கும் வரையிலும்,இன்ஷா அல்லாஹ் இந்தியா நிச்சயம் மதச்சார்பற்ற நாடே…..
    இது எனது வாயளவிலான வாதம் அல்ல,இது எனது உறுதிமொழியாகவே இங்கு முன்மொழிகிறேன்.

    {இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் என்னை போன்ற ஒரு சராசரி இந்தியக் குடிமகன்களே….இதுவே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்து.}

    இதுவல்லாது,இந்திய ஒருமைபாட்டிற்கு,மதச்சாயம் பூச ஒருபோது அனுமதிக்கமாட்டோம்.

    இந்தியாவில் எக்காலமும்,ஹிந்துக்களே பெரும்பான்மையினர்.அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    முஸ்லிம்கள் என்றாலே,ஜனாப்?? ரஹ்மத்துல்லாஹ்,உங்களுக்கு உதாரணமாகிவிடுகிறார்.
    அவர்களை போன்றவர்களை முஸ்லிம்களாகிய நாங்களே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை…நீங்கதான்,அவனை முஸ்லிம்களின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள்.
    தேசத்தின் ஒருமைபாட்டுக்கு எதிரி,அப்பாவிமக்களை அநியாயமாக கொல்பவன்,நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிப்பவன்,எக்காலத்திலும்,முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.அவனை நோக்கி பாயும் முதல் அம்பு,முஸ்லிம்களான எங்களுடையதாகவே இருக்கும்…..அவன் முஸ்லிமானால்,அவனை கொல்லும் தார்மீக உரிமை எங்களுக்கே உரியது….

    சகோதரரே,ரஹ்மத்துல்லா போன்றவர்கள்,இஸ்லாத்தின் மீது விழுந்த கரும்புள்ளி,அதை கலைய நாங்களே முயல்கிறோம்..அவர்களை போன்றவர்கள்,எல்லா மதத்திலும் உள்ளவர்களே…அவர்கள்,நீக்கப்பட வேண்டிய கலைச்செடிகள்…..அவர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமற்றது…

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

  64. சகோதரர் ரஜின் அவர்களே,

    Can you please answer?

    //இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்,கொடூரமானவர்கள்,அவர்கள்,கோவில்களை இடித்தார்கள்,பெண்களை கற்பழித்தார்கள்,இன்ன பிற கொடுஞ்செயல்களில் இட்டுபட்டார்கள்.அதனால் இஸ்லாம் அதை தான் போத்டிக்கிறது என்ற தங்களின் வாதம்,எண்ணம் தவறானது,என்பதற்கும்,யாரையும் வெருக்கசொல்லாத மதம் என ஹிந்து மதத்துக்கு தாங்கள் இட்ட புனை பெயரால்,அது ஏதோ உத்தமம் மாதிரி பரப்புவது,தவறு.//

    சகோதரர் ராஜின் அவர்களே,

    “இந்து மதம் வெறுப்பில்லாமல் இருக்கும்படி அறிவுரை கூறும் மதம் என பிரச்சாரம் செய்யக் கூடாது , அது தவறு” என்கிறீர்கள். இந்து மதம் ஏதோ உத்தமம் மாதிரி பரப்புவது,தவறு- அதாவது அது ஒரு கெட்ட மதம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது தான் நீங்கள் என்னிடம் எதிர் பார்ர்ப்பது – இது தான் மத நல்லிணக்கமா?

    —————–

    இசுலாத்திலே கருத்துக்கள கடுமையாக இருந்தாலும், நான் நல்லிணக்க அடிப் படையிலே சேர்ந்து மசூதியில் தொழுகத் தயார் என்றும், ரமலான் மாதத்திலே நோன்பு இருக்க தயார் என்றும் கூறி இருக்கிறேன்.

    இந்து மதத்திலே நல்ல கருத்துக்கள் இருப்பதாக தெரிந்தால் நீங்கள் அதை பாராட்டவும், நல்லிணக்க அடிப்படையிலே இந்துக்களுடன் சேர்ந்து வணங்கவும் போகிறீர்களா?

    What is your answer or reply for this?

    —————————————————

    //தேசத்தின் ஒருமைபாட்டுக்கு எதிரி,அப்பாவிமக்களை அநியாயமாக கொல்பவன்,நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிப்பவன்,எக்காலத்திலும்,முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.அவனை நோக்கி பாயும் முதல் அம்பு,முஸ்லிம்களான எங்களுடையதாகவே இருக்கும்…..அவன் முஸ்லிமானால்,அவனை கொல்லும் தார்மீக உரிமை எங்களுக்கே உரியது….//

    நமது தேசத்திலே மட்டும் அல்ல, உலகிலே பல இடங்களிலும் அப்பாவிகள் கொள்ளப் படக் காரணமானது என்ன?

    வெறுப்புக் கருத்துக்களை , பிற மதத்தவர் மீது வெறுப்பை தூண்டும் கருத்துக்களை ஒரு மனிதன் சிறுவனாக இருக்கும் போது இருந்தே கேட்டு அது அவன் மனதிலே விஷ விருட்சமாக வளர்ந்து அவனை வெறியன் ஆக்குகிறது.

    அந்த விசக் கருத்துக்களை நல்ல கருத்துக்கள் போல சித்தரித்து விட்டு, அந்தக் கருத்துக்களால் பாதிக்கப் பட்ட மனிதனை நோக்கி அம்பு விட்டு என்ன பலன்?

    இதை நான் சொன்னால்

    “திருச்சிக்காரன் போன்ற நண்பர்கள்,இஸ்லாத்தை விளங்கியுள்ளோம்,என கூறிக்கொண்டு,அதன் மீது வன்மத்தை,வெரும் அபாண்ட விமர்சனமாக,முன்வைத்ததே….”
    என்று விசக் கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்கி மனிதத்தை பற்றிய அக்கறை இல்லாமல் செயல் படுவது ஏன் என வருத்தத்துடன் கேட்கிறேன்?

    ——————

    Can you please answer?

    நன்றி

    அன்புடன்

    திருச்சிக் கார‌ன்

  65. வணக்கம்

    வாள்முனையில் மதம் பரப்ப படவில்லை?! ஆனால் நண்பர் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பின்வரும் இந்த பதிவிற்காக சேகரித்து வைத்து இருக்கும் சான்றுகளை பார்த்தால் தலையே சுற்றுகிறதே,
    https://arvindneela.blogspot.com/2008/02/blog-post_07.html

    சரி அடுத்து.

    https://arvindneela.blogspot.com/2008/06/blog-post_30.html

    இந்தப் பதிவின் ஆரம்பமே அமர்க்களமான புகைப் படமாக உள்ளது, மேல்சொன்ன திப்புவின் காலத்தில் நாம் இல்லை, அடுத்து இருப்பது நிச்சயமாக திப்புவின் காலம் இல்லை,

    ஆக இதில் காணப்படும் அனைவரும் முஸ்லிம்கள் இல்லையா?
    அல்லது அந்தப் புகைப் படம் எடுத்தது இந்தியாவில் இல்லையா?

  66. Pingback: srivijayan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *