முகப்பு » அரசியல், நிகழ்வுகள்

வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

November 12, 2009
-  
அச்சிட அச்சிட

bharat_mata_abanindranathவந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

- வந்தே மாதரம்:  மகாகவி பாரதியாரின் மொழியாக்கம் (முழுவதும் இங்கே).

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும்  நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: – ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: – கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: – ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: – கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: – ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: – ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: – ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: – லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: – ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: – வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: – தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

- கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, திருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து.   இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான  வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன – வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

-  ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்”  என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்! 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

 

70 மறுமொழிகள் வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

  1. armchaircritic on November 12, 2009 at 8:59 am

    //ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்//
    என்ன அருமையான யோசனை. இதை அவர்கள் எதிர்க்கிறார்களோ இல்லயோ நம் ‘sickular’ கட்சிகள் கண்டிப்பாக எதிர்க்கும். அவர்கள் அடிமடியிலேயே கை வைக்கும் யோசனை ஆயிற்றே! வாக்கு வங்கிகள் திவாலானால் அவர்களே திவால் ஆகி விடுவார்களே.

    ஆனால் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ரவிசங்கர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வந்தேமாதரம் பாடுவது அவரவர் இஷ்டம் என்று Darul Uloom at Deoband அறிவித்து விட்டதே!

  2. R. NATARAJAN on November 12, 2009 at 10:51 am

    KEEP TRYING HINDU VOTE BANK AND IGNORE NON HINDU MOMENT POLITICAL PARTIES

  3. sharraj on November 12, 2009 at 1:56 pm

    //ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்//

    ஏன் இந்த வெறி ! !!!!!!!

  4. sharraj on November 12, 2009 at 5:02 pm

    ” நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது “.

    மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது.

    வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

    தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

    இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.

  5. sharraj on November 12, 2009 at 5:08 pm

    இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு.

    இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

    கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான ‘ஜெவோகா விட்னஸ்’ பிரிவைச் சேர்ந்தார்கள்.

    அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது.

    ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.

    19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

    இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.

    (comment edited & published)

  6. kumar on November 12, 2009 at 8:56 pm

    உங்களுக்கு மட்டும் ஏன் இந்த மதவெறி ?

  7. armchaircritic on November 12, 2009 at 9:08 pm

    //ஏன் இந்த வெறி ! !!!!!!!//
    You want to have the cake and eat it too!

  8. Sarang on November 12, 2009 at 9:37 pm

    sharraj

    /// ஏன் இந்த வெறி ! !!!!!!!

    தேசியப்பற்று உங்களுக்கு வெறி அகிடிச்சோ

    எது வெறி – அண்ட வந்தவர்கள் வந்தே மாதரம் என்னும் தேசிய கீதத்தை தாங்களே தடை செய்வதா அல்லது தேசியம் வேண்டதொர்க்கு வோட்டுரிமை எதற்கு என்பதா – சொல்லப்போனால் தேசியத்திற்கு எதிராக நடப்போரை நாடல்லவா கடத்த வேண்டும்

    மதம் என்ற பெயரில் போலியாக அல்லவே வாழ்கிறார்கள் அரபு நாட்டு இஸ்லாமியர்கள் – அரேபியாவிலிருந்து ஒரு கூட்டம் விடுமறை நாட்களில் பகேரின் கிளம்பிவிடும் – ஏன் அங்கு அரேபியாவில் இருக்கும் பல சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன – அங்கே சென்று குடித்து – அப்புறம் இத்யாதி இத்யாதி கும்மாளம் அடித்து திரும்பும் – இது தான் ஷரியா சட்டப்படி நடக்கும் அழகா – அங்கேயே அல்லாடுது இங்கே வந்து இந்திய தாயை அவமானப்படுத்த வந்துட்டாங்க

  9. ravikumar on November 12, 2009 at 9:44 pm

    வந்தேமாதரம் பாடுவது பிரச்சினை இல்லை தான். இந்திய தேசியக் கொடி, தேசிய கீதம் இவை தான் ஆகாது. பாக் தேசிய கீதம், கொடி மட்டும் ஏற்றலாம். வணக்கம் சொல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூட சொல்கிறார்கள். இதெல்லாம் அறிகுறிகள் தான். உண்மையான நோய் தேசப்பற்று இல்லாமை. மத அடிப்படையில் தேச பக்தி இருக்கிறது. அவர்கள் மதம் இந்த நாட்டை சேர்ந்தது இல்லை. அந்த மதம் எங்கிருந்து வந்ததோ அங்கு தானே பக்தி இருக்கும்.

  10. Sarang on November 12, 2009 at 10:43 pm

    // நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது

    அப்போ இறைவன் இங்கே நம்மோடு இல்லை என்கிறீர்கள் – ஒன்னே ஒன்னு நீங்க எல்லாம் புரிஞ்சிக்கணும் – எதிலும் இறைவனை காண்பது அழகா – இல்ல யாருமே பாக்கட ஒன்ன இறைவன்னு கும்பிடறது அழகா

    இவ்வளோ பேசற நீங்க – அரபு நாட்டுக்கு வந்தா பெண்கள் பொட்டு வெச்சுக்க கூத்து – ரமலான் அப்போ பகல்ல யாரும் பாக்குற மாதிரி சாப்டா கூடாது – அப்புறம் என்ன என்ன ரூல்ஸ் போடறீங்க – உங்களுக்கு ஒன்னு – எங்கள்ளுக்கு ஒன்ன – இதுக்கி பேர் தான் காட்டு மிராண்டி தனம்

    // இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்
    //

    இது உமக்கே கேவலமா இல்ல சொல்றதுக்கு – தீவிரவாதமா என்னன்னு இப்போ ஒலகத்துக்கே தெரிஞ்சு போச்சு ஒக்வா

    உங்கள யாரும் கட்டாய பதுதலா – நீங்க தான் பாடகூதடுன்னு கட்டையா படதுறீங்க – பாடின வெட்டுவேன்னு சொல்றீங்க – இது தானே வெறி

    /// இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை

    இதெல்லாம் கொஞ்சம் காமெடி – ஷரியா சட்டமே வன்முறையின் ஓர் சுருக்க வடிவம் – இதை பற்றி இந்த தலத்தில் நிறைய மறுமொழிகள் உள்ளன

    – ஒருவன் தன மனைவியை பச்சை பிரம்பால் அடிக்கலாம் – இது வன்முறை இல்லையா – ஒருவன் இஸ்லாதிருக்கு எதிராக செயல் பட்டால் அவனை கொள்ளலாம் இது வன்முறை இல்லையா

    – இந்தியாவில் முதலில் வன்முறையை தூண்டியது யாருன்னு உங்களுக்கு சொல்லனுமா ? கஜினி முஹம்மத் – எவ்வளோ வன்முறையை கட்டவிழ்தான் என்று சொல்லனுமா எவ்வோளோ கொயவில்களை இடித்தான், எவ்வோளோ பெண்களை கற்பழித்தான், எவ்வளவு ஹிந்துக்களை கொன்றான்? ஏன் திப்பு சுல்தான் செய்தா அட்டுழிங்கால் தான் எவ்வளவு

    இது அணைத்திருக்கும் மூல காரணம் உங்கள் மதம் தான் தரும் இடம் தான் – காபிர், பத்வாபோன்ற துரும்புகள் தான் – நீங்கெல்லாம் பாடவா போடறத நிரிதினாலே உலகம் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் – ஆனா உன்ன ஒரு பத்வா போட்டுர்ரது – ஒரு வரையறையே கிடையாது – கொஞ்ச நாலா ஒருர்தருக்கு ஒருத்தர் பத்வா போட்டுக்கிட்டு எல்லாரும் காளியாகிடாம பாத்துக்கொங்கா

    இந்தியா வேண்டுமாம் – இந்திய கீதம் வேண்டாமாம் – மலேசியா இஸ்லாமியர்களுக்கு yoga வேண்டுமாம் ஆனால் ஆன அது உருவான ஹின்டு மதம் வேன்டமாம் – Pre hypocrisy

    //தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும்

    அப்போ எல்லாருமா சேந்து குரான் ஓதலாமா – இல்ல அல்ல உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என்ற பாடலை தேசிய கீதமா மாத்திடலாமா

    // ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது

    அப்போ நீங்க தமிழ்நாட்டிலே படிக்கல – தமிழ்நாட்டுல வாழல? இல்ல வாழ போறது இல்ல அப்படிம்பிங்களா

    தமிழ்நாட்டின் அரசு முத்திரை என்னன்னு தெரியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் சாமி கோபுரம்

    நீங்க தமிழ் நாட்டிலே படிதவரானால் உங்கள் மத கொள்கை படி நீங்கள் ஒரு காபிர் – ஒரு கோவில் முத்திரையை ஆதாரமாக கொண்டதை தான் நீங்கள் கற்றுள்ளீர்கள் – படிச்சதா எல்லாம் மருந்துருங்கா – உங்களுக்கு ஏத்தமாதிரி புதுசா படிக்க முயற்சி பண்ணுங்க

  11. Satish on November 12, 2009 at 11:05 pm

    //sharraj

    19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

    இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.//

    will you people ever try to think? god has given us brains to think and you people never use it. No one is forcing you to sing ‘vande mataram’. All we condemn is you saying ‘I will not sing vande mataram’. If muslims dont tell anything and keep their mouth shut when others are singing ‘vande matarma’ no one is going to notice or make it a big issue. You people make it a big issue and then complain about others.

    its pity that you are talking about ‘இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்’.. this is what we call ‘satan vedam oodhugirathu’ :)

    read this news article…

    http://news.rediff.com/report/2009/nov/02/uk-queen-will-wear-burkha-radicals.htm

    What will you call this? I am sure you will call this as your relgious belief… god save this country.

  12. Bheemaa on November 12, 2009 at 11:29 pm

    இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களின் வாதம் நகைப்பிற்குரியது.

    //மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.//

    சரி… அப்படியே வைத்துக் கொள்வோம். பிறகு ஏன் எந்த முஸ்லிமையும் பாட வேண்டாம் என்று பத்வா போடுகிறீர்கள் ?? வந்தே மாதரம் பாடாமல் இருந்து தான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் மதப் பற்றைக் காட்ட வேண்டுமா என்ன?? பிறகு வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள் எல்லாம் யார்??

  13. Sarang on November 12, 2009 at 11:51 pm

    Sharraj

    //
    இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது
    //

    உலகத்தில் முக்கால் வாசி மதம் இத தான் பின்பட்ற்றுது- நீங்க ஒன்னும் வித்யாசம பன்ரதா நெனப்பு வேனாம்

    “சர்வ தேவ நமஸ்காரஹா கேஸவம் ப்ரதி கட்சதி” – இது பேரியர்வர்கல் அவர்கலை வனங்கினால் சொல்வது -அதாவது – உண் வானக்கம் எனக்கு அல்ல இறைவனை சென்று அடயும் அப்படின்ன அர்தம்

    உமது எல்ல சேயல்கலும் இறைவனை நோக்கி, எல்ல வனக்கமும் இறைவனை நொக்கி, என் வாழ்வே இறைவனை நொக்கி என்கிற என்னம் இருக்கனுமே தவிர உம்மைபொல வெறி இருக்க கூடாது

    வாழும் பொழுது எதிலுமெ இறைவனை கானாத நீர் எப்படி வாழ்வு முடியும் பின்னர் இறைவனை கானப்பொகிரீர்

    கொஞ்மவது மூலைக்கு வேலை கொடுத்தால் நான் சொல்வது புரியும்

  14. நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

    முஸ்லீம் என்பவன் இறைவனை மட்டும் வணங்குபவன்.
    இறைவன் அல்லாத எதை வணங்கிநாளும் அவன் முஸ்லீமல்ல.
    இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    இஸ்லாத்தில் சேரயாருடை அனுமதியும்,யாருடைய அங்கிகாரமும் தேவைஇல்லை.
    முஸ்லீமுடைய கடமைகலில் கூட்டியோ அல்லது கு்றைத்தோ கூடசொல்லவோ, செய்யவோ அனுமதி இல்லை.

    பிறகுயார் முஸ்லீம்?
    படைத்தவனை மட்டும் வணங்க வேண்டும்.
    தீயதை தடுத்து நல்லதை ஏவவேண்டும்.
    அவனுக்கு சில கடமைகள்உல்லது,அதை அவன்நிறைவேற்ற வேண்டும்.
    இதில் மாறுபட்டவனை முஸ்லீம் என்று அழைக்கவேண்டாம்,
    அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்

  15. Bheemaa on November 13, 2009 at 5:34 am

    எப்பொழுதுமே கவிதையில் அல்லது பாடலில் வரிகளை நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது. மதிமுகம் என்றால் முகத்தையும், சந்திராயன் அனுப்பிய நிலவின் புகைப்படத்தையும் ஒப்பிடக் கூடாது. அதே போல் தான் இதுவும்.வந்தே மாதரம் ஒரு கவிதை/பாடல். வணங்குகிறேன் என்றால் மண்டியிட்டு பயபக்தியுடன் வணங்குவது அல்ல. ஆழமான, உண்மையான மரியாதையை செலுத்துவது , தாயிடம் செலுத்தப்படும் அன்பைப் போல. ஆனால் கவிதையைக் கூட ரசிக்கத் தெரியாத இந்த ‘அறிவாளிகள்’ ஒரு கவிதையை அப்படியே நேராகப் பொருள் கொண்டு பொங்கி எழுந்திருக்கிறார்கள்.
    இவர்களிடம் எப்படி விளக்குவது…

    இந்த விஷயத்தில் இஸ்லாமியர்கள் மீது குற்றமில்லை. ஏனெனில் அவர்களின் அடிப்படை சித்தாந்தமே குரான் மட்டும் தான். ஒரு வார்த்தை மாறாமல் அதை உண்மை என்பர். வேறு எதையும் கேட்க மாட்டார்கள். அவர்களிடம் சென்று வாதம் புரிவது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான்..

  16. Sarang on November 13, 2009 at 6:49 am

    சின்னாமனி அஷ்ரஃப் அலி அய்யா

    மதம் நல்லது தான் மனிதனுக்கு தான் மதம் பிடித்தால் எல்லாம் செய்வான் என்கிறிர்கள் – நீங்கள் சொன்ன திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் ஒருவன் எனது நண்பனின் மாமா – எனது நண்பனே இதை பற்றி பலமுறை கவலை கொண்டிருக்கிறார்

    எல்லாம் OK
    // அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்

    ஏன் நீங்கள் முஸ்லிம் அல்லாதவனை ஒரு சக மனிதன் என்று அழைக்கக்கூடாது

    Worship yours Respect All – இதை எல்லோரும் செய்யலாமே – இது மிக எளிதான ஒன்று தானே

    நான் சொல்வது சரி தானே!

  17. glady on November 13, 2009 at 7:41 am

    B.R.ஹரன்:
    // நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். //

    திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக அவர் சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;

    சந்தியா ஜெயின்:
    // தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்”என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.//

    சரி,இந்த கட்டுரையின் ஆசிரியர் அதனை வழிமொழிகிறாரா?
    ரொம்ப சந்தோஷம்,பாரதத் தாயை நீங்களே கூறுபோட்டு விற்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே..!

    அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
    சற்று விவரம் கேட்கவேண்டும்..!

    இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?

    சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!

    ஒரு திரைப்படத்தில் “ஆச்சி” மனோரமா என்று நினைக்கிறேன்,வந்தே மாதரம் என்பதை “வந்தேமாத்ரோம்” அதாவது வந்து ஏமாத்துறோம் என்பார்கள், பரியாசமாக; இன்றைக்கும் அதுதான் நடக்கிறது;

    கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்கவே வெள்ளைக்காரன் வந்தானோ எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள், ஒற்றை இலக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உண்மையான தியாகிகள்; சுதந்தரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளோ மனம் வெதும்பிய நிலையிலிருக்கின்றனர்; அவர்களுக்காக ஒரு துரும்பும் கிள்ளிப் போட மனமில்லாத நான் “பாரத் மாதா கீ ஜே” என முழங்கி ஆகப் போவதென்னவோ?

    ரொம்ப ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால் எங்கே அந்நியன் வந்து ஆக்கிரமித்து விடுவானோ என பயந்து போய் கிடக்கிறேன்…!

    சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் “வந்தே மாதரம்” பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?

    “சந்தியா வந்தனம்” செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் “எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டே” என்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!

  18. Sarang on November 13, 2009 at 8:12 am

    சின்னாமனி அஷ்ரஃப் அலி/ஷர்ராஜ் அவர்களே

    //முஸ்லீம் என்பவன் இறைவனை மட்டும் வணங்குபவன்.

    வணக்கத்தையும் சரணாகதியையும் வீணாக போட்டு கொழப்பி கொண்டுள்ளீர்கள் என்றே நான் நினைக்கிறேன் – ஹிந்து மதத்தில் வேதாந்திகளும் இறைவனை தவிர யாரிடமும் சரணாகதி செய்ய மாட்டர்கள் – வீட்டில் பெரியவர்களை விழுந்து வணங்குவதற்கும் கோயிலில் இறைவன் முன் வணகுவதற்கும் விதிமுறைகள் உள்ளன

    வணக்கம் என்பது மரியாதை செலுத்துவது அதாவது ஓர் உருவில் இருக்கும் ஒருவர் இன்னொரு உருவில் இருக்கும் ஒருவருக்கு மரியாதை செலுத்துவது. சரணாகதி என்பது – ஒருவனின் ஆன்ம நிலயை உணர்ந்து அதை இறைவனிடம் ஒப்பு கொடுப்பது – அல்லது இறைவா நான் எனது ஆன்ம நிலயை உணர்ந்தேன் என்று இறைவனிடம் சொல்லுவது

    வந்தே மாதரத்தை சொல்வதென்பது அதனிடம் சரண் புகுந்தேன் என்பதல்ல – தாய் மண்ணிற்கு மரியாதை செலுத்துவதே

    நான் சொல்வதில் தவறேதும் இல்லையே

  19. armchaircritic on November 13, 2009 at 9:08 am

    //இதில் மாறுபட்டவனை முஸ்லீம் என்று அழைக்கவேண்டாம்,
    அவன் அந்தகட்சிகாரன் என்று அழைக்கவேண்டும்//
    அப்போ அவனுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டாங்கன்னு சொல்றீங்களா!!!! என்னதிது சின்னபுள்ளதனமா இருக்கு அப்புறம் அவனுக்கு அந்த கட்சியில எப்பிடி பொழப்பு நடக்கும்???!!!

  20. subbu on November 13, 2009 at 9:35 am

    one more feather in haran`s cap.
    the reach and range of tamilhindu is becoming bigger.

  21. armchaircritic on November 13, 2009 at 11:02 am

    //மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;// இந்தியாவில் எல்லா முஸ்லிமும் கிட்டத்தட்ட அப்படித்தானே
    //இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?//
    எது இருப்பது எது இல்லாதது?
    (‘sickular’ கட்சிகளில் இல்லாத) நாத்திகர்களை கேளுங்கள் நீங்கள் இருக்கு என்று சொல்வதை இல்லை என்று சொல்வார்கள்
    தாய் பாசம் என்பதே மாயம் என்று சொல்வீர்களா ஒரு 10 மாதம் சுமந்ததற்க்கே வாழ்நாள் முழுவதும் மரியாதை செலுத்த வேண்டும் என்றால் வாழ இடமும் வழியும் கொடுக்கும் நாட்டை தாய் நாடு என்று சொல்வதும் மரியாதை செலுத்துவதும் மாயமான ஒன்றில்லைதானே?
    //“சந்தியா வந்தனம்” செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் “எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டே” என்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!//
    TR மாதிரி எழுதணும்னு ஏதோ எழுதிட்டீங்கன்னு நெனைக்கிறேன் சந்தியாவந்தனம் சூரியனை பார்த்து பண்ணறது வீட்டுக்கு வெளியிலோ மொட்டை மாடியிலோ ஜன்னல் எங்க வந்தது
    சந்தியாவந்தனம் செய்ய வெக்கப்பட்டு ஜன்னல மூடறாங்கன்னு சொல்ல வரீங்களோ! அந்த அளவுக்கு சந்தியாவந்தனம் பண்ணறவங்க பயந்து போய் கெடக்கறாங்க ‘sickular’ அரசியல்வாதிகளோட ஆட்சியிலன்னு எடுத்தக்கலாமா??

  22. rama on November 13, 2009 at 11:07 am

    Glady ,good you are back, Now let us talk about the Christian paedophille priests,.
    Where shall we start? Or shall we start talking about the nuns getting raped by the your holy fathers? Don’t run away again without facing the “truth” about christianiy.

  23. திருச்சிக் காரன் on November 13, 2009 at 11:13 am

    ரொம்ப நல்லவன் மாறி பேச வேண்டியது.

    நல்லவன் மாறி ஆனா நல்லவன் இல்ல.

    நீங்க பாட்டுக்கு “ஒரே கடவுளை” அமைதியா வணங்கிக் கொண்டு இருந்தா, யாரும் உங்களை குறை சொல்லப் போவது இல்லை.

    ஆனால் அந்த கடவுளை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. அந்த காட்டு மிராண்டிக் கட்டளைகளுக்கு கீழ் படிய மறுத்தால் கழுத்தை வெட்டுவேன் என்பது, காபிர்கள் என்பது, ஜிஹாத் செய்ய வேண்டும், மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பது.

    அதற்குப் பரிசாக சொர்க்கத்திலே அழகிய கண்களை உடைய யாரும் தொடாதவர்கள் நம்மை வரவேற்பார்கள் என்பது.

    நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

    என‌வே யாரும் காணாத‌ ஒரு விசய‌த்தை, அப்படியே ந‌ம்ப‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து ஏன்?

    க‌ட‌வுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்க‌ள் அங்கீக‌ரிக்கிறீர்க‌ளா?

    பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை இல்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா?

    க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.

    அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

    யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை சுவிசெசகர்கள் சுவீகாரம் செய்து கொண்டார்கள்

    அதே வியாதி இசுலாமியருக்கும் பரவியது, ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

    யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

    சரி யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!

    சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,

    நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,

    யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.

    வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப் படுத்தக் கூடாது என்கிறார்கள் அல்லவா,

    அதைப் போல நீங்களும்

    “ஒரே கடவுள் தான்,
    அவரை வணங்க்கித் தான் ஆக வேண்டும்.
    அப்படி வணங்காதவர் மீது ஜிஹாத் போர் நடத்தி அவர்களை கொல்ல வேண்டும்”
    என்பது போன்ற காட்டு மிராண்டி, காம கொடூர கருத்துக்களை குரானில் இருந்து எடுத்து, மற்றவர்களை கட்டளை போடாமல் கட்டாயப் படுத்தாமல் இருங்கள்.

    அப்போது உங்களையும் யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்.

  24. Padmanaban on November 13, 2009 at 11:43 am

    இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் தாய் மற்றும் தாய் நாட்டை விற்க துணிந்தவர்கள். இவர்களிடம் நீதி, இரக்கத்தை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்/ எதிர்காலத்தை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் இவர்களல்ல.

    ஜெய் ஹிந்த்

  25. திருச்சிக் காரன் on November 13, 2009 at 11:56 am

    //பிறகுயார் முஸ்லீம்?
    படைத்தவனை மட்டும் வணங்க வேண்டும்.
    தீயதை தடுத்து நல்லதை ஏவ வேண்டும்.//

    இது சும்மா ஒப்புக்கு கூறப்படும் விளக்கம்!

    சரியான விரிவான விளக்கத்தை ஜனாப் ரஹ்மத்துல்லா அவர்கள் நமக்கு இதே தமிழ் இந்து தளத்திலே அளித்து இருக்கிறார்.

    http://www.tamilhindu.com/2009/09/unnai_pol_oruvan_review/

    பார்வை: உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

    //ரஹ்மத்துல்லா
    4 October 2009 at 7:35 pm

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

    கமலஹாசன் ஒரு காபிர். அவரது கரிசனத்தையோ அல்லது உங்களது கரிசனத்தையோ முஸ்லீம்களான நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

    (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

    நீங்களெல்லாம் இப்படித்தான் அல்லாஹ்வின் கொள்கைகளை கேலி செய்வீர்கள் என்பதை அல்குரானிலேயே அறிவித்துள்ளான்.

    குண்டு வைப்பது குண்டு வைப்பது என்று இங்கே பலர் பேசி வருகிறார்கள். என்னவோ அது பெரிய தப்பு என்பது மாதிரி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு சண்டை வந்தால் இந்தியா குண்டுதான் வைக்கும். அது தப்பா?

    இஸ்லாமியர்கள் ஒரு தேசம். அவர்கள் எந்த தேசத்தின் உள்ளேயும் வரமாட்டார்கள். இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

    ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

    ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)

    இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)

    ‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

    டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று காய்தே ஆஸஸம் முகம்மதலி ஜின்னா அறிவித்து காபிர்களை படுகொலை செய்தது அதற்கு முன்னால் காபிர்கள் முஸ்லீம்களை கொன்றதால் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு தனி தேசம். அது தார்-உல் இஸ்லாம். அதனை காப்பாற்றவும், காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட.

    ஜிகாதுக்கு புறப்படாதவர்கள் முஸ்லீம்களே அல்ல

    இனி அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவர்களுக்காக ஜானஸா [மரணத்தொழுகை] தொழாதீர் .மேலும் அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் [9:84]

    அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.//

    —————-

    ஜனாப் ரஹ்மத்துல்லாவே சரியான இஸ்லாத்தை நமக்கு காட்டுகிறார்.

  26. Sarang on November 13, 2009 at 4:53 pm

    வாய்யா வாய்யா கிலாடி –

    நீ யாருன்னு காட்டிபுட்ட

    //
    திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; …… மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்
    //

    அப்போ நீர், அசோக் குமார் கோபாலன், அப்புறம் இங்கே வந்து வாரி இறைக்கும் ஏனையவர்கள் எல்லாரையும் டேரக்டா ஏசுவே வானத்துலேருந்து தூக்கி போட்டாரா – எலே அம்புட்டு பேறும் நேத்து வரைக்கும் மாரியாத்தாவ கும்பிட்ட பயலுவ இன்னிக்கு ஏதோ மேரி ஆத்தாவ கும்பிரானுவா

    அம்புட்டு பேறும் இப்போ மூளைய வாடகைக்கு விட்டுட்டு வந்டுட்டீங்கா அவ்வோலாவவே தான்

    // அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
    சற்று விவரம் கேட்கவேண்டும்..!
    ///

    மெய்யாலுமே கேக்கறேன் – கழட்டி வெச்சுட்டுத்தான் பெசுரிரோ
    பாரத தாயின் விலாசம் காஷ்மீர் – கன்யாகுமாரி வரைக்கும் – அத்தனையும் அவள் தான் – நீர் ஒத்துகிட்டாலும் ஒத்துக்காட்டியும் அவளின் கிருபை :-) உமக்கு இல்லாவிடில் நீர் ஒரு காரியமும் நடத்த இயலாது

    //
    சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!
    //

    ஏதோ தொன்றதேல்லாம் எழுத வேண்டியது – அப்போ இங்கிலாந்து இங்கிலாந்துன்னு ஒரு நாடு இருக்கு – அவங்க முன்னங்கட்டிலேந்தே ஒரே நாடத்தான் இருந்தாங்க – அவங்கள யாரும் ஆட்சி செய்யலா – அப்போ உங்களின் அறிவு மிக்க கூற்றுப்படி – அவர்களுக்கு தேசிய கீதம் என்று ஒன்று இல்லை அப்படிதானே – புட் பால் மேட்ச் விளையாடறதுக்கு முன்னாடி கூட பாடரங்கலேய்ய.

    சும்மா ஒளர வேண்டியது – உங்களை சொல்லி குற்றமில்லை – எல்லாம் ஸுர்ப் எக்ஸ்செல் போட்டு சலவை செய்துள்ளார்கள்

    //இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?

    இருப்பது என்று எதை சொல்கிறீர் – நான் ஒன்னும் ஒங்கள மூளை வழிபாடு செய்ய சொல்லலையே?
    நீங்கள் வந்தே மாதரம் சொல்லாட்டி பாவிகள் ஆகிடுவீர்கள், நீங்கள் சாத்தானின் கூடத்தில் சேர்ந்து விடுவீர்கள் என்று சொல்லலியே

    தேவையே இல்லாம ஒரு கூட்டம் – வந்தே மாதரம் மீது பத்வா பதிநோன்னுவா என்கிறார்கள் – இந்த அல்ப வேலை தான் வேண்டாம் என்கிறோம்

    //
    சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் “வந்தே மாதரம்” பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?
    //

    அப்போ பைபிள் மட்டும் படிச்சு என்ன பிரயோஜனம் – நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கா

    அப்போ சிக்கன் சாப்ட்ரவனுகெல்லம் தேசிய உனர்வெ கூடாதுன்னு சொல்ரிங்கல – இது ரொம்ப புதுசா இருக்கெ

  27. rama on November 14, 2009 at 5:14 am

    Sarang
    As they say” Nethiadi”
    Hats off to you, please write more, love your style!!

  28. அப்பப்பா… ஒரு நாட்டில் இருந்துகொண்டு அந்த நாட்டின் தேசிய பாடலையும், தேசிய கீதத்தையும் பாடச் சொல்ல எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? இவர்களைப் போன்ற கிறிஸ்துவர்களையோ, முஸ்லீம்களையோ குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். (இவர்கள் இப்படி இல்லையென்றால்தான் நாம் கொஞ்சம் பயப்பட வேண்டும்). நாம் கண்டிக்க வேண்டியது நம் அரசாங்கத்தைத்தான். அது நம் குரலுக்கு செவிசாய்க்காத போது இதை செய்ய திராணியுள்ள பாஜக கட்சியை அரசுக்கட்டிலில் அமர்த்துவது தான் நாம் செய்யவேண்டியது. தேர்தல் சமயங்களில் இது போன்ற கட்டுரைகளை நம் போன்றவர்கள் முயற்சி எடுத்து பரப்ப வேண்டும். தமிழ் ஹிந்துவிற்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள்.

    பாஜக கட்சிக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. நாடும் எங்களைப் போன்றோரும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். தயவு செய்து உங்கள் உட்கட்சிப் பூசல்களை நிறுத்திவிட்டு நாட்டுப்பிரச்சனைகளை கவனியுங்கள்.

    ஒரு முக்கியமான விஷயம். நம் நாட்டையும் நமது பண்பாட்டையும் மிகவும் மதிக்கும் ஹிந்து அல்லாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இவர்களைப் போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மிகவும் மனவருத்தத்தையும் தளர்ச்சியையும் கொடுக்கும், கொடுக்கின்றன. அவர்களுக்கு இறைவன் அமைதியைக் கொடுக்கட்டும்.

  29. திருச்சிக் காரன் on November 14, 2009 at 9:22 am

    அன்புள்ள Sarang,

    ////Sarang
    13 November 2009 at 8:32 pm
    அன்புள்ள திருச்சிகார நன்பரெ –

    //க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.
    //

    ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் – நீங்கள் ஏன் இங்கே உள்ள சில இஸ்லாமியரையும் க்ரிஸ்தவரயும் சிந்திக்க சொல்கிறிர்கல் அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல் – இவ்வளவு கடினமானதை, அவர்கள் வேதத்திற்கு சற்றும் அடுக்காத யோசனை என்னும் செயலை அவர்கள் கட்டாயம் செய்ய மாட்டார்கள்

    கடலில் உப்பை கொட்டி என்னதான் ஆகபோகிறது////

    சிந்திப்பதும், சிந்திக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

    ஆனால் இன அழிப்பு, இனப் படுகொலைகளை செய்வதற்காகவும், தங்களின் காம வக்கிரங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு சிலரின் கற்ப்பனையில் உருவான கற்பிதங்கள்,

    உலகத்திலே எத்தனைக் கோடிப் பேரின் உயிரைக் குடித்து, இரத்த ஆறை ஓட விட்டு, நாகரிக சமுதாயத்திலே இன்னமும் காட்டு மிராண்டிக் கருத்துக்களை , காமக் கொடூர கருத்துக்களை, கொலை வெறிக் கருத்துக்களை, நச்சுக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது அவசியமே.

    சிறு துளி பெரு வெள்ளம்

  30. armchaircritic on November 14, 2009 at 9:58 am

    //ஏன் உங்களுக்கு இந்த வேன்டாத வேலை – நானும் பார்துக்கொன்டு தான் இருக்கிறேன் – நீங்கள் ஏன் இங்கே உள்ள சில இஸ்லாமியரையும் க்ரிஸ்தவரயும் சிந்திக்க சொல்கிறிர்கல் அதுவும் மூலயை எல்லாம் பயன் படுத்த சொல்கிறிர்கல்//
    அய்யா சாரங் அருமயாக சொன்னார்
    பயப்படுதல்தான் அடிப்படை என்ற மதங்களை சேர்ந்தவர்கள் பயந்தே வாழ்ந்து judgement dayக்கு பயந்தேதான் சாகிறார்கள். அதுதான் சரி என்று அவர்கள் சொல்வது ‘மூக்கறுபட்டவன்’ சொல்வது போல்தான்.
    தூங்கறவனை எழுப்ப முடியும் தூங்கற மாதிரி நடிக்கிறவனை…???

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.