ஆன்மிகம், போலி ஆன்மிகம், துறவு, சாமியார்கள் : ஒரு கேள்வி-பதில் - ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்
முகப்பு » ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன் தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது.

முதலாவதாகச் சொல்லப்படுவது  நித்ய சிவராத்திரி.

இது தினந்தோறும் பகல் மடங்கியபின், உயிர்களை உறங்கவைக்கும் இரவாக வருவது. ஒவ்வொரு இரவும் சிவனது ராத்திரிதான்.

முத்தொழில் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.

இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின்  முக்கியத்துவம் வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற்குமுன், மற்ற மூன்று சிவராத்திரிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

மூன்றாவது சிவராத்திரி வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.

இந்த மகா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம்பித்த நாள். ஒரு அழிவைத் தொடந்து இன்னொரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும், பிறப்பது கலியுகம் என்பதால், அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தானே இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும்போது, சுமாரான காலம்- அது அழிந்தாலும், அதனிலிருந்து உருவாவது ஏனோ தானோ என்றுதானே இருக்கும்? சிறந்த ஒன்று உருவாக வேண்டுமென்றால், ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்தால்தானே உண்டு?

இதுதான் அடி முடி காணா சிவராத்திரியின் போது நிகழ்ந்து, ஒரு புது சுழற்சி உண்டாக ஏதுவாகிறது. இதைப் புரிந்து கொள்ள வேதம் கூறும் பிரபஞ்ச நிலையை– A Vedic Model of Creation-ஐத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதம் கூறும் பிரபஞ்ச அறிவியல்

இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது.

அப்படி என்ன விரிந்த சிந்தனையை வேதம் காட்டுகிறது என்றால், இதோ சில முக்கியக் கருத்துக்கள்.

1) நாம் இருக்கும் இந்த அண்டவெளி மட்டுமல்ல, கோடானு கோடி அண்டவெளிகள், பலப் பல உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.

2) நமக்கு மேலும் கீழும் நமக்கு அப்பாலும் நம்மை அப்பால் கொண்டும் பிரபஞ்சங்கள் இருக்கின்றன.

3) அவை எல்லாம் பிரம்மன் என்றும் ஹிரண்யகர்பன் என்றும் சொல்லபடும் அந்த முழுமுதல் இறைவனின் கர்ப்பத்தில் உள்ளன.

4) கணக்கிட இயலாதவையாக அவை உள்ளன.

5) இந்த உலகங்கள் என்று ஆரம்பித்தன என்றும் தெரியாத, சொல்ல முடியாத ஆதியும் இல்லாமல், அந்தமும் இல்லாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன.

6) புருஷ சூக்தம் கூறும் குறிப்பிடத்தக்க அமைப்பு, கவனிக்கத் தக்கது. இறைவனே படைத்து, எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தாலும், தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில் இருக்கிறது. பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்குகிறது. எஞ்சிய கால் பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது என்று 3, 4 -ஆம் ஸ்லோகங்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்ட அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்தால், அது சக்கர வடிவுடையதாக இருக்க வேண்டும். இதற்கும் பிரமாணம் உள்ளது. ச்வேதாஸ்வதர உபநிஷதத்தில், இந்தப் பிரபஞ்சம் பிரம்மச் சக்கரமாக உள்ளது என்று விவரிக்கப்படுகின்றது. இதன் பலவித பாகங்களும் விவரிக்கப்பட்டு, இதில், கர்மம் என்னும் பாசக் கயிற்றில் கட்டப்பட்டு ஜீவன் சுழன்று வருகிறான். மீண்டும் மீண்டும் சுழலுகையில், பிரம்ம ஸ்வரூபத்தைப் புரிந்துகொண்டு, இந்தச் சக்கரத்தில் சுழலச் செய்யும் பிறவிப் பிணியிலிருந்து முடிவில் விடுபடுகிறான்.

ஆக, உலகங்களையும், பால்வெளி போன்ற கலாக்சிகளையும் தன்னகத்தே கொண்ட பிரபஞ்சம் சுழலும் சக்கர வடிவினதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில்தான், ஆதியும் இருக்காது, அந்தமும் இருக்காது. சக்கர அமைப்பில்தான் எங்கே தோன்றியது, எங்கே முடிந்தது என்று சொல்ல முடியாமல் இருக்கும். கணக்கிலடங்காத பல சக்கரங்கள் ஒன்றுக்கு அப்பால் ஒன்றென infinity அளவில் இருக்க முடியும். ஒன்றுக்கு மேலும், அல்லது கீழும் என்றும், Concurrent circles- ஆக முடிவில்லாமல், கணக்கில்லாமல் ஒன்றை அடுத்து ஒன்றாகவும் இருக்க முடியும்.

கால நேமி என்று உபநிஷத் சொல்லும் இந்த அமைப்பில் தோற்றம் என்னும் நிலையில் கால் பங்கு உள்ளன. முக்கால் பங்கு என்றுமே தோன்றாதவை.

இந்த அமைப்பில் உலகங்கள் நுண் அணுத் துகள்களாக unmanifest எனப்படும் வெளிப்பாடு இல்லாத முக்கால் பகுதியில் சுற்றி வரும். தோற்றம் இருக்கும் கால் பகுதியுள் நுழையும்போது ஸ்ட்ரிங் தியரி (String theory) போல, தெரியா நிலையிலிருந்து, தெரிநிலைக்கு, அதாவது manifest நிலைக்கு மாறி தோற்றம் அல்லது படைப்பு என்னும் பகுதிக்குள் விரையும்.

அப்படிப்பட்ட அமைப்பு நடராஜரின் தாண்டவக் கோலத்தில் காணப்படுகிறது!

chakraநடராஜர் உருவ அமைப்பு, நாட்டியத்திலும், சிற்ப சாத்திரத்திலும் சில குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டது. ஒரு வட்ட வடிவத்தினுள், இரண்டு முக்கோணங்களை மேலும், கீழுமாக உள்ளடக்கியது.

இந்தப் படம் சுதர்சனச் சக்கரமும் தான்!

நடராஜர் உருவத்தை இந்த அமைப்புக்குள்தான் வடிவமைப்பர். சுதர்சனரும் யோகா நரசிம்ஹரும் இணைந்த உருவமும் இந்த அமைப்புக்குள்தான் அடங்கும்.

nataraja-in-chakra-form

நடராஜரைக் கவனித்தால், ஒரு அரிய காஸ்மிக் அமைப்பு புலனாகும். அவரது மேல் இரண்டு கைகளிலும், ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் அக்கினியும் வைத்திருப்பார். இந்த இரண்டு கைகளையும், அவரது நாபியுடன் இணைத்து, கோடுகளாக நீட்டினால், அவை சக்கரத்தை 90 பாகைகளிலான 4 சம கூறுகளாகப் பிரிக்கும். இங்குதான் வேத மதம் கூறும் Theory of Creation- பிரபஞ்சத்தின் அமைப்பு காணப்படுகிறது.

nataraja-theory-of-creation-1

வலக் கை உடுக்கையிலிருந்து, இடக் கை அக்கினி வரை இருப்பது ‘தோன்றும் பிரபஞ்சம்’ (எ) ‘the visible part of Creation’. அக்கினியிலிருந்து, உடுக்கை வரை unmanifest பிரபஞ்சம் (–) the invisible part of Creation. அதன் மையப்பகுதி அந்தகாரம் என்னும் அதி இருட்டு. அது, அசுரனை மிதித்து அடக்குவதாகக் காட்டப்படுகிறது.

நடராஜர் தன் இடது காலை வீசி உயர்த்திய வீச்சு காட்டும் பகுதி முதல், தோற்றத்திற்குத் தயாராகிற - இன்னும் உருவம் கொள்ளாத பிரபஞ்சத் துகள்கள் இடித்தும், வெடித்தும் அழிவின் மூலம், ஆக்கம் நோக்கிப் பாயும் பிரபஞ்சப் பகுதியைக் காட்டுகிறது.

nataraja-theory-of-creation-2

அந்தப் பகுதியில், மற்ற இரு கைகளின் முத்திரைகளும், Force- அதற்குப் போட்டியான Anti-Force தத்துவங்களாக சிவா- பார்வதி போட்டியைக் காட்டுகின்றன. உடுக்கை அடிக்கும் கைப் பகுதியை நெருங்க நெருங்க, ஊர்த்துவ முகமான, மேல் நோக்கிய கை செல்லும் பாதையைக் காட்ட, ஓம்கார நாதத்திலிருந்து உலகங்கள் பிறக்கின்றன.

nataraja-theory-of-creation-3

மேல் காட்டிய படத்தில் உடுக்கை முதல், மறுகையில் உள்ள அக்கினி வரை, இருக்கும் பகுதி சக்கரத்தின் கால் பகுதி. இதுவே புருஷ சூக்தம் கூறும் மீண்டும் மீண்டும் தோன்றி வரும் கால் பங்கு பிரபஞ்சம். இந்தப் படத்தில், உடுக்கைப் பகுதியில், படைப்புக் கடவுளான நான்முகப் பிரமனின் வேலை தொடங்குகிறது. இங்கே சிவனுக்கு வேலை இல்லை. மேலும் கீழும், எல்லை இல்லாத இந்தப் பகுதியில், பல பிரமன்கள் பல்வேறு பிரபஞ்சங்களில் படைப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றார். இங்கே சிவனும் தென்படுவதில்லை. விஷ்ணுவும் தென்படுவதில்லை.

படைப்பு தொடங்கியவுடன், அது விஷ்ணு பதம் ஆகிறது. உடுக்கைப் பகுதி முதல், அக்கினிப் பகுதி வரை, விஷ்ணுவின் காக்கும் பகுதியும், காலமும் ஆகும். இது பிரமனின் ஆயுளில் 100 வருடங்கள். (31104000,00,00,000 மனித வருடங்கள்) நாம் இன்று இருப்பது பிரமனின் ஆயுளில் 50 வருடங்கள் தாண்டி, முதல் நாள் மத்தியானம். அதாவது, நடராஜரது தலை உச்சி காட்டும் பகுதியில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இன்னும் பாதி காலம் தாண்டினால் இந்தப் பிரபஞ்சம், அக்கினிப் பகுதியைச் சென்றடையும்.

படைத்து, காத்த இந்தப் பிரபஞ்சம், முழு அழிவைச் சந்திக்கும் இடம் அது. அங்கே பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் வேலை இல்லை. மேலும், கீழும் பார்த்தாலும், எல்லை இல்லாத அக்கினிப் பிழம்பாக இருக்கும் அதுதான் மகா சிவராத்திரி. அது தான் அடி முடி காண இயலா அதிசயம் நிகழும் இந்தப் பிரபஞ்சத்தின், அதன் தோற்றத்தின் முடிவு நாள்.

nataraja-theory-of-creation-4

தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து, தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது, சிவபெருமானின் பிரளய அக்கினியில் உலகங்கள் எல்லாம் அழிகின்றன. இந்தப் பகுதியில், குறுக்குவாட்டிலும், நெடுக்குவாட்டிலும் அக்கினிதான் உள்ளது. ஒரு சுவராக, ஒரு மா மலையாக இந்த Exit- zone-இல் சிவபெருமான் அக்கினி ரூபத்தில் நிற்கிறார். அதுதான் அடி முடி காண இயலா உருவம். அது நடந்தது அல்லது நடக்கப்போவது மாசி மாத தேய்பிறை சதுர்தசியில். அதுவே மகா சிவராத்திரி எனப்படுவது.

மகா சிவராத்திரியின் முக்கியக் கதை, அழிவிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுமாறு பார்வதி வேண்டிகொண்டது. கால் பங்கு தோற்ற வெளியில், பிரமனின் 100 ஆண்டு காலமும், உயிர்கள் கர்ம வினையில் பிணைபட்டு உழன்று விட்டன. இப்பொழுதோ ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று சிவபெருமான் தாண்டவம் ஆடுகிறார். அப்படி என்றால், இன்னும் முக்கால் பங்கு பிரபஞ்சமும், அதாவது பிரமனின் வயதுக் கணக்கில் 300 வருடங்களும் உயிர்கள் பிணைபட்டுக் கிடக்க வேண்டுமா? அவற்றுக்கு விடிவு கிடையாதா என்று பார்வதி வேண்டிக்கொள்ளவே ‘கடைசி சான்ஸ்’ என்று மகா சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படவே, சிவபெருமான் உயிர்களுக்கு விடிவு கொடுக்கிறார்.

அந்தகாரமான இருளிலும், அழிவிலும் கூட நடராஜரது ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவரது பலம் வெளித்தெரியும் சிவராத்திரியில், பக்தர்களும், அந்தச் சலனத்தை மேற்கொண்டு, கண்விழித்து அவரைத் தியானிக்கிறார்கள். அந்தத் தியானம் கடவுள்களுள் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக அல்லது தெரிந்து கொண்டதற்காக அல்ல. பிரளயாக்கினியிலிருந்து தப்ப, அதைத் தரும் சிவபெருமானை வேண்டி விடுதலை பெறவே, அடி முடி காண இயலாத இறைவனாக வழிபடுகின்றனர் .

இந்தத் தாத்பரியத்தின் ஒரு அடிப்படைதான், நான்முகப் பிரமனுக்குக் கோவில் இல்லாமல் இருப்பது (சில இடங்களில் விதிவிலக்காக இருக்கின்றன.) பிரமனின் ‘கெம்பா’ (எ) உடுக்கை காட்டும் படைப்பின் ஆரம்ப இடம். பிரமனிலிருந்துதான் மற்ற கடவுள்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தத்தமது செய்யல்பாடுகளாக படைப்பை மேலும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் தோற்றம் உள்ள கால் பகுதியில் பிரமனைக் காண இயலாது. அங்கே பிரமனுக்குக் கோயில் கிடையாது. மாறாக, எல்லாக் கோயில்களிலும், வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது, பிரமன்தான் அங்கு உற்சவத்தை நடத்திச் செல்பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம்மோத்சவத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.

படைப்பு என்று உயிர்கள் கால் பதித்தவுடன், அங்கு தானும் கால் பதிப்பவர் விஷ்ணு. பிரமனின் 100 வயது காலமும், ஓடி ஆடி, அவதாரங்கள் பல எடுத்து, உயிர்களைக் காத்து, வழிப்படுத்தி என்று, ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ வேலை விஷ்ணுவுக்கு.

மேலே காட்டிய படங்களில், ஒவ்வொரு சுற்றும், ஒரு குறிப்பிட்ட பௌதிக விதிகளுக்குட்பட்ட பிரபஞ்சம். இதைப் போல், கணக்கிடமுடியாத பல பிரபஞ்சங்களும் அதனதன் விதிகளுக்கு உட்பட்டு கால் பங்கு தோற்றமாகவும், முக்கால் பங்கு தோற்றம் இல்லாத சஞ்சரிப்பாகவும் உள்ளன. எந்நேரமும் கால் பங்கு பகுதியில் நுழைவும், நீங்குதலும் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்நேரமும் புதிது புதிதாக பிரமன்கள் தோன்றிப் படைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். விஷ்ணுவும், சிவனும் தொழில் செய்துகொண்டே இருக்கின்றார்கள். எல்லா பிரமன்களுக்கும் ஆயுள் 100 தான். சக்கரத்தின் அச்சின் அருகில் உள்ள பிரபஞ்சத்தில் வேகம் அதிகம். சீக்கிரமே 100 வயது ஆயுள் முடிந்து விடும். ஆனால் ஆயுள் 100 என்பதற்கு ஏற்றார்போல் நாள், வருடக் கணக்குகள் அங்கே இருக்கும்.

இவை எல்லாமே சக்கர வடிவான அமைப்பில் சௌக்கியமாக இருக்கின்றன. ‘சௌக்கியமாக’ என்று ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், வாஸ்து சாத்திரப்படி, 16 வித நில அல்லது கட்டமைப்புகளுள், ‘விருத்தாகாரம்’ என்னும் வட்ட வடிவ அமைப்பு சிறந்தது. பாதுகாப்பனது. அது மட்டுமல்ல, அறிவு ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுவது. கல்விச் சாலைகளும், ஆன்மிகம் போதிக்கும் மடங்களும் வட்ட வடிவில் இருப்பது சிறந்தது.

சக்கரத்தாழ்வாராக இந்த அமைப்பு இருப்பதால்தான், அவரது பாதுகாப்பில் பிரபஞ்சமே சுழன்று கொண்டிருக்கிறது.

chakkaraththaalwar-and-yoga-narasmihar

இந்த பிரம்மாணடமான சக்கரத்தில், யோக நரசிம்ஹரும் யோகத்தில் ஆழ்ந்து, சக்கரத்துடனேயே, பயணிக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து, எல்லாப் பொருள்களிலும் உள்ளிலிருந்து கடையும் கடவுளாக, யோகேஸ்வரனாக இருக்கிறார்.

இவை எல்லாம் நாராயணன் என்னும் பரப் பிரம்மத்தின் கருவில் உள்ளன என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன. நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். கால் பகுதியின் படைப்புக் கடவுளான பிரமனை நான்முகப் பிரமன் என்பர். நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பிக்கவே அவருக்கு நான்கு முகங்களும், இந்தப் பெயரும் ஏற்பட்டன.

ஆனால் பிரபஞ்சத்தையே தன் கருவாகக் கொண்ட பிரம்மம், முழு முதல் பிரம்மம். பிரம்மம் என்றால் பெரியது என்றும், விரிந்துகொண்டே இருப்பது என்றும் பொருள். அந்த பிரம்மமே அனைத்து உலகிலும், மூன்று மூர்த்திகள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களிலும் வியாபித்துள்ளார்.

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் இருக்கும் என்பதற்கு ஏற்றார்போல இந்த அண்டம் சார்ந்த கடவுள் நிலைகளை, நம் மனித உடலிலும் காணலாம். நம் உடலெங்கும் பல பாகங்கள் பல வேலைகளைச் செய்கின்றன. கண் பார்க்கிறது, காது கேட்கிறது, உள் உறுப்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம், கழிவு நீக்குதல், என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன- ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு வேலைக்கு அதிபதிகளாக இயங்குவதைப் போல.

இந்த உறுப்புகளுக்கெல்லாம் அதிபதி மூளை. மூளையின் செயல்பாடே இவ்வுறுப்புகள் மூலம் நடைபெறுகிறது- முழு முதல் பிரம்மன், மற்ற கடவுள்கள் மூலம் இயக்குவதைப் போல.

நம் உடல் முழுவதும், உயிர் வியாபித்துள்ளது- நாராயணன் எங்கும் வியாபித்து இருப்பதைப் போல.

ஜடப் பொருளிலும் அவன் வியாபித்துள்ளான். இதைப் புரிந்துகொள்ள, நடராஜ தத்துவம் தெரிய வேண்டும். தோற்றம் இல்லா முக்கால் பங்கு பிரபஞ்சத்திலும் நடராஜரது நடன அசைவு உள்ளது போல, ஜடப் பொருளிலும் அவற்றின் அணுவுக்குள் இருக்கும் அசைவாக நாராயணன் வியாபித்துள்ளான்.

நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.

சக்கரம் போன்ற நம் உடலிலும், ஒரு உறுப்புக்கும் மற்றொரு உறுப்புக்கும் போட்டி கிடையாது, பொறாமை கிடையாது. கண், ஒலியைக் கேட்காது, காது, காட்சிகளைப் பார்க்காது. அவை அவை தத்தம் செயல்களை ஆற்றுகின்றன. ஆனால் நாம் எப்பொழுதுமே மூளையை நினைவில் கொள்வதில்லை. உறுப்புகளின் செயல்பாடுகள் மூலமாக மூளையின் முக்கியத்துவத்தை அறிகிறோம். மூளையைப் போல அந்தப் பரம்பொருள் இருக்கிறான். அவன் இருக்கிறான், அவனே நம் குறிக்கோள் என்று புரிந்து கொள்ள, நம் உடல் உறுப்புகள் போல பல கடவுளர்களும் உதவுகின்றனர்.

அக்கடவுளர்களுக்குள் போட்டி என்றோ, சண்டை என்றோ கதைகள் வழங்கி வந்தால், சிறிய குழந்தைகள் போல வெளிப் பார்வைக்குத் தெரியும் கதையை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று தேட வேண்டும். அப்படி நம்மைத் தேடச் செய்வதற்குத் தான் அப்படிப்பட்ட கதைகள் எழுந்துள்ளன. தேடினால் தான் கிடைக்கும், சு-தர்சனம்- இறைவனின் சிறந்த தரிசனம்.

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

32 மறுமொழிகள் »

  1. Fantastic

  2. //தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து, தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது,//

    நிபுணர்கள் நம் கேலக்ஸிக்கல் ஏதோ ஒரு இடத்தை நோக்கி அதிவேகமாக பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது என்றே கூறுகின்றனர். ப்ளாக் ஹோல் என்று பெயரிட்ட இடத்தை அடையும் போது கிரஹங்கள் அனைத்தும் மிகப்பெரிய தீப்பிழம்பாகி பின் கருமை நிறம் அடைந்து காணாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆக நிபுணர்கள் உயிரைக் கொடுத்து ஆராய்ச்சி செய்வதெல்லாம் இந்து தர்ம வழிபாட்டு முறைகளின் அர்தங்களிலேயே புதைந்திருக்கின்றது தெளிவாகிறது. அவற்றைப் புரிந்து கொள்வதே நமது கடமையாகும்.

    ///வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது.///

    உண்மை.

    நன்றி
    ஜெயஸ்ரீ அவர்களே.

  3. ஒரு யுகம் என்றால் எத்தைனை வருடம்? கலியுகம் இன்னும் எத்தைனை வருடங்கள் போகும் என்று சொல்வீர்களா ஜெயஸ்ரீ அவர்களே! அறிந்து கொள்ள ஆசை.

    நன்றாக விளக்குகிறீர்கள். தொடருங்கள்.
    நன்றி.

  4. v v v good matter
    bala

  5. அப்ப்ப்பப்ப்ப்ப்பாடா………………. என்ன சொல்ல! போகப்போக தெரியும்…. ஓடிப்போனானா பாரதி அடுத்து புத்தகமாக ………………..

  6. // இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது. //

    கண்களைத் தெளிவிக்கும் அற்புதமான விஞ்ஞான மார்க்க நம்பிக்கை சார்ந்த கட்டுரைக்கு நன்றி..நன்றி..நன்றிகள் பல..!

    இறை நம்பிக்கையினை வளர்க்கும் இதுபோன்ற பல்வேறு ஆராய்ச்சிகள் முடிவுகள் இன்னும் வரட்டும்;
    பொய்மை ஒழிந்து வாய்மை வெல்லட்டும்..!
    அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்..!!

  7. Respected Madam

    Thanks for your writing. Please keep writing more on many subjects.

    regards

  8. //ஒரு யுகம் என்றால் எத்தைனை வருடம்? கலியுகம் இன்னும் எத்தைனை வருடங்கள் போகும் என்று சொல்வீர்களா ஜெயஸ்ரீ அவர்களே! அறிந்து கொள்ள ஆசை//

    கண்டிப்பாக எழுதுகிறேன். வேத மதத்தைப் பின்பற்றிய தமிழர் வரலாறு பற்றி சொல்லுவதற்கு முதல் படி, காலக் கணக்குதான். செம்பு காலம், வெண்கல காலம், இரும்பு காலம் என்பதெல்லாம் வெளிநாட்டவர்களுக்குத்தான். நமக்கு அவையெல்லாம் வினாடிப் பொழுதுகள் போல. கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இருக்கும், தமிழ் மற்றும் வேத கலாசாரத்தை மன்வந்திர மற்றும் யுக அடிப்படையிலேதான் சொல்ல முடியும். அதிலும் இந்த யுகம என்பது குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே ஆணித்தரமான் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதில் ஆரம்பித்து, தமிழ் ஹிந்துவின் பெருமையைச் சொல்ல வேண்டும். இதைச் செய்யும் கருவியாக தெய்வம் என்னை செலுத்தினால், திறம்படச் செய்வேன் என்று நம்புகிறேன்.

    நிற்க, இந்தக் கட்டுரையிலேயே, சில முக்கிய விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. மூலக் கருத்தை விட்டு வெளியே போகக் கூடாது என்ற காரணத்தால், இதனுடம் தொடர்பு கொண்ட பிற விஷயங்களைக் கட்டுரையில் சொல்லாமல், மறு மொழியாகச் சொல்லலாம் என்று இருந்தேன். கேள்வி கேளுங்கள். இரண்டு முக்கிய விஷயங்களும், இன்றைய பிரபஞ்ச அறிவியலை, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துடன் எப்படி இணைப்பது (synchronise) என்பதும் இன்னும் சொல்லப்பட வேண்டும்.

  9. இந்து மதம் என்பது அறிவியலை உள்ளடக்கியது என்பதை
    தகுந்த முறையில் ஆக்கம் செய்தமைக்கு வாழ்த்துகிறேன் நண்பரே

    தொடரட்டும் உங்கள் பணி..

  10. Excellent Jayashree madam. Thanks for such a wonderful article. Keep writing more and educate people like me.

    Thanks to Tamilhindu for the wonderful service you are doing.

  11. அன்புள்ள ஜெயஸ்ரீஜி,

    இப்போது தான் நிதானமாக இந்தக் கட்டுரையைப் படிக்கிறேன். Tao of physics ஐயும், Carl Sagaon ஐயும் சிவராத்திரியையும், சுதர்சன தத்துவத்தையும் ஒரே இழையில் அருமையாகக் கோத்து அளித்திருக்கிறீர்கள்.

    சுதர்சன சக்கரத்தில் உள்ள ஜோதி வலயம் (திருவாட்சியை) பலமுறை தரிசித்திருக்கிறேன். ஆனால் நடராஜரைச் சுற்றியிருக்கும் திருவாட்சியுடன் அதை இணைத்துக் காணத் தோன்றவில்லை. சுதர்சன வழிபாடு என்பது லௌகீகமாக ரட்சைக்காக செய்யப் படுவது என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பின் எப்பேர்ப் பட்ட பிரபஞ்ச தரிசனம் இருக்கிறது என்று இந்தக் கட்டுரை விளக்கி விட்டது.

    இந்துக் கண்ணோட்டத்தில் காலம் என்பது பிரம்மாண்டமானதாகவும், சுழற்சியாகவும் கூறப் படுகிறது. யுகங்கள் போன்ற பெரிய பெரிய எண்கள் அதையே உணர்த்துகின்றன என்று நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் (மார்க்சியர், இந்து விரோத நிலைப்பாடு கொண்டவர்) மேற்கத்திய உலகின் நேர்கோடான காலமுறை (linear time) தான் அறிவுபூர்வமானது, இந்துக்கள் காலத்தை சுழற்சி முறையில் கணக்கிட்டது பாமரத் தனமானது, அதனால் தான் இந்துக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லாமல் போய்விட்டது என்றும் கருத்து தெரிவித்திருந்ததாகப் படித்தேன்.. இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை விளக்க முடியுமா? விரிவாக எழுதவேண்டுமென்றால் தனிக் கட்டுரையாகவே கூட எழுதுங்கள்.

    அன்புடன்,
    ஜடாயு

  12. S.Raman

    தங்களது கட்டுரை வெகு நன்றாக உள்ளது. மகிழ்ச்சி.
    ஸ்ரீ அருணாச்சல மகாத்மியத்தில் வரும் வெண்பா இது:

    “ஆதி அருணாச்சலப் பேரற்புத லிங்கத்துருக் கொள்
    ஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் - சோதி எழும்
    ஈசனை மால் முன்னம் அரர் ஏத்திவழி பட்ட நாள்
    மாசி சிவராத்திரியாம் அற்று”

    மார்கழி திருவாதிரை அன்று எழும் சோதியின் வெப்பம் தாங்காது திருமால் முதல் கொண்டு தேவர்கள் வழி பட அதுவே மலையாய் குளிர்ந்து மாசி சிவராத்திரியன்று அருணாச்சல லிங்கம் ஆயிற்று, என்பதுவே இதன் வெளிப்படைப் பொருள். இதன் உட்கருத்தாக மார்கழி திருவாதிரை சம்பந்தப்பட்ட நடராஜராகிய (ஓயாது ஆடி ஓடி உழைக்கும்) “சலம்” என்று மாசி சிவராத்திரி சம்பந்தப்பட்ட (அமைதியான) அருணாசலமாக “அசலம்” ஆகுதோ அதுதான் முக்தி எனக் கொள்ளலாமோ? அல்லது சலம் - அசலம் இரண்டையும் வெவ்வேறாகப் பார்க்காது இரண்டிலும் இருக்கும் இறைவனை உணர்வதே முக்தி எனவும் கொள்ளலாமோ?

  13. திரு ராமன்,

    இந்த பிரபஞ்ச படைப்பியலில், முக்தி பற்றிய விஷயத்தை நான் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

    அதை படித்துவிட்டு, அவரவர் தங்கள் வழக்கப்படி பின்பற்றும் கடவுள் கொள்கைகளுக்கு, in the frame work of a Grand Design of God - விளக்கம் காணலாம்.

  14. நன்றி திரு ஜடாயு.

    Thanks for your suggestion.
    It is a waste of time listening to or reading what the likes of Ms Thapar does and countering them.
    You can not change those who refuse to change.
    Instead let me concentrate on what Hinduism says.
    There is a lot more that our people must know.
    First task is to clear the confusion on how to understand the existence of the many Gods and how to view the gods other than the one who is dear to us.
    I think I can devote my time and thoughts on this.

  15. Brilliant Maam,

    Yes I do understand that we need to SCIENTIFICALLY talk about Hinduism and you are doing brilliant job. I always feel Hinduism and the seers have gone beyond Science ( Science I mean Knowledge that can be attained through Karmendriyam, Manas and Intellect). I do not think our seers would have attained the knowledge of “Time is relative” as Science has arrived very late. Their mode ( I feel ) should be very different.

    Regards
    S Baskar

  16. Jatayu,

    is it not Einstein way back proved Time and Space are curved rather than linear. In one of his thought experiment the cause is seen after the effect..

    We should not waste time on romillas

    Regards
    S Baskar

  17. //பிரமனின் ‘கெம்பா’ (எ) உடுக்கை காட்டும் படைப்பின் ஆரம்ப இடம். பிரமனிலிருந்துதான் மற்ற கடவுள்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தத்தமது செய்யல்பாடுகளாக படைப்பை மேலும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் தோற்றம் உள்ள கால் பகுதியில் பிரமனைக் காண இயலாது. அங்கே பிரமனுக்குக் கோயில் கிடையாது. மாறாக, எல்லாக் கோயில்களிலும், வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது, பிரமன்தான் அங்கு உற்சவத்தை நடத்திச் செல்பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம்மோத்சவத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.//

    தெளிவான விளக்கம். காலை வேளையில் அற்புத தரிசனமும் கூட. சுதர்சனமும், நரசிம்மரும் இணைந்த யோகமுறையை, நடராஜரின் தாண்டவத்தோடு ஒப்பிட்டது பற்றிய விளக்கமும் அற்புதமாய் இருக்கிறது.

  18. Thanks for everyone who have recorded their comments.

    Some of my thoughts on what Mr S.Baskar has said:-

    * This Vedic religion is perfect science and everything that it speaks can be explained in scientific language. By science we also mean that it must be subject to test and must be repeatable. All that can be done with every facet you come to understand of Vedism.

    * It is because the athman is Vigyaana mayan which is the penultimate state that one passes before realising Brahman of the nature of Ananda mayan. It is also because That Supreme Being who is equated with Gyaana is housed in the Athman. Through Him we realise Him!! It is this Gyaana which is in the nature of Bhakthi - bhakthi because you are over-awed at what you understand through this gyaana - is the state of Realizing Brahman.

    *There is only one thing that can not be explained by science or intelligence. That is the ultimate experience of Realization of Brahman Himself.
    Let me explain it this way.

    It is established in Taittriya passages that the Soul is capable of possessing knowledge (by virtue of Brahman having entered it as an Intelligent Being) and using it for realization of the Brahman but it is found wanting in achieving its goal (of describing Realisation of Brahman) because ‘yatho vaacho nivarthanthe’. (Without being able to attain Him, speech returns with the mind).

    The following is what I request the readers to ponder over.
    From the above verse of Taittriya upanishad, one inference can be made.
    When does a thing, sent to reach another thing, return?
    When it strikes it but unable to go further, it is returned back to its source.
    This is the principle of echo.

    If it be said that speech and mind are returned without attaining Him, does it not imply that the Intelligent soul, the Vigyana mayan though capable of knowing him till his boundary level (if something like that exists) but can not go further because if it goes further that amounts to Liberation from where it would not return to tell us what had happened?
    (kandavar vindilar, vindavar kandilar).

    But until that threshold level, the Soul’s speech and mind keep doing the shuttle and re-shuttle trips.
    If this logic is accepted as plausible, then we say that the Soul’s urge to employ whatever means of Knowledge that it has at its disposal is justified because it is only too natural for that Soul and it is almost possible to go almost near the Supreme Brahman.

    It is like this.
    We can understand the meaning of every word of Sage Bhrigu’s version of his search for Brahman in the 3rd chapter in Taittriya upanishad.
    We can also recite his words with full knowledge of the meanings but only until he says ‘ha vu, ha , vu, ha, vu’.
    What he experienced when he screamed in Bliss, these words can not be understood by us nor can it be measured by any instrument.
    But until he reached that level we are able to follow his mind.

    This is similar to establish scientifically what kind of satisfaction that a mother experiences when she rushes to the crying baby, lifts it and feeds it.
    We do have instruments to measure every type of activity in her brain at that moment of experience but no instrument to measure the real satisfaction that is something special to her.

    By this it is being stated that science and other branches of knowledge are capable of going farther than we believe but shorter than the real experience of Brahman. This is due to the upanishadic injunction of the shred of difference between vigyana mayan and ananda mayan whereby it is held that Intelligence can not explain Bliss (ananda).

    In my limited knowledge of science I can think of only one comparison with Realization of Brahman. The status of Liberation is something akin to osmosis.

    * Sri Baskar said
    //I do not think our seers would have attained the knowledge of “Time is relative” as Science has arrived very late. Their mode ( I feel ) should be very different.//

    Their mode is also discernible from Vedic Vigyana.
    The seers realized “Maha kaala” (The stationary Time which we can visualise as the Chakra with Nataraja imposed on it - explained in this article - to show how the 3 and 5 states of Time and Space occur in the Grand design of Time and Space.)
    This is possible only when you escape from the ‘Kaala krama” (Relartive time) which is happening inside the Chakra.

    When viewed from outside the system - you can see this with a bird’s eye and say what is what and where it happens.

    When you are part of the system and within the system, you can see only the time and space at that place.

    Your consciousness must expand to see the Whole and the parts in the Whole.
    Vedism gives ready-made knowledge of how to do this.

  19. On linear time and Ms Thapar’s poor understanding of Vedic cosmology, she has overlooked the concept of escape velocity! I read that Voyager which left the Solar system is on the come back trail!!

    She has also forgotten Cause and effect theory.

    When a cause begets an effect, it also means the effect will beget another effect for which it becomes the cause. This puts them in a cycle of no beginning and no end. Such a model will not be linear but circular or elliptical or what ever else that can be similar to them.

  20. அருமை ஜெயஸ்ரீ!

    படிக்க படிக்க யோசிக்க வைக்கும் பதிவு. தொடருங்கள் உங்கள் ஆன்மீக-அறிவியல் பணியை..

    அன்புடன்
    திவாகர்

  21. நன்றி திரு திவாகர் அவர்களே,

    ஒரு கேள்வி,
    தாங்கள் ‘திருமலைத் திருடன்’ தந்த திவாகரா?

  22. என்ன ஒரு அருமையானக் கட்டுரை..!!!!!!!!!
    அனைவரும் படித்து அறிய வேண்டிய ஒன்று..

    ஆசிருயருக்கு நன்றிகள்..

    திருச்சிற்றம்பலம்..

  23. திரு ஜெயஸ்ரீ அவர்களே …
    கட்டுரை நன்றாக இருந்தது …
    படித்தவுடன் எனக்கு ஒரு கேள்வி ஒரு எண்ணம் தோன்றியது …

    கேள்வி:
    சிவன், பிரம்மா என்று அதிகம் அலசப்பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ்வளவாக அலசப்படவில்லை … பிரம்மாவிற்கு நான்முகம் கருத்து அருமை … நான் அறிந்த செய்திகளில் இருந்து பார்க்கையில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல் , அழித்தல் இவர்களது தொழில் .. இதில் பிரப்பென்பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும் விஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய ஒருவர் தான் பிரம்மா என்று கூறினார்கள். இதனால் தான் பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லை என்றும் ஒரு கருத்து …

    எண்ணம்:
    உங்கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகவே உள்ளது. உங்களது விமர்சனங்களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு கூட ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும், அவர் ஹிந்து மதத்திற்கு எதிரே நிற்கிறார் என்ற ஒரே காரணத்தினாலும், அவரது கருத்துக்களை உதாசினப்படுத்தி, அவரது கருத்துக்களை கேட்பதே நேரக்கொடுமை என்று சொல்கிறீர்கள்.
    இதை நான் இரு கண்ணோட்டத்தில் பார்கிறேன்.
    1 ) எனது கருத்தை ஒத்துக்கொள்ள முடியாவிட்டால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்ற பெருமிதப்பு.
    2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரியாது என்ற ஏளனம்.

    எனக்கு உங்களைப்பத்தியும் தெரியாது அந்த மிஸ்.தாபர் பற்றியும் எதுவும் தெரியாது.

    ஆனால் உங்களது கட்டுரை மற்றும் உங்களது விமர்சனங்கள் இப்படி ஒரு தாக்கத்தைத்தான் எனக்கு ஏற்ப்படுத்தியது.

    நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுளை நம்பிக்கொண்டு அந்த நம்பிக்கை தான் சரி என்று முடிவெடுத்துக்கொண்டு, அந்த நம்பிக்கையை நியாப்படுத்த காரணங்கள் தேடும் ஒரு சராசரி ஆன்மீகவாதி போலவே புலப்படுகிறீர்கள் !

    எனது வேண்டுகோள் :
    இப்படி ஒரு கட்டுரையை ஒரு பகுத்தரிவாளறது பார்வையில் இருந்து பார்க்க / படிக்க விரும்புகிறேன்.
    பகுத்தறிவாளன் என்று இங்கு நான் கூறியது, இரு எல்லைகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு திறன் உடையவன் என்று .
    உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது எல்லா கருத்திற்கும் பொருந்தும்.
    ஆனால் உங்களது கருத்தை அதற்க்கு மாற்றுக்கருத்து அல்லது நேரெதிரான கருத்து உள்ளவர்களிடம் உரையாடிபாருங்கள். உங்களது கருத்தைப்பற்றி உங்களுக்கே தெரியாத சில விசயங்களை அவர் சொல்லகூடும். முடிவு எடுப்பது உங்களது சுதந்திரம்…

    (”there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” - i dont know whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing all those tamil lines above.)

  24. திரு அரவிந்த் அவர்களே,
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

    //கேள்வி:
    சிவன், பிரம்மா என்று அதிகம் அலசப்பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ்வளவாக அலசப்படவில்லை …//

    இனி வரப்போகும் கட்டுரைகளில் - இரண்டு இடங்களில் மட்டுமே - ஹிந்து வாசகர்கள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படிப்பட்ட இரண்டு இடங்களில் மட்டுமே, விஷ்ணுவைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன்.
    இப்படி நான் சொல்வதால், நான் ஏதோ பெரிய அறிவு ஜீவி மாதிரி பேசிக்கொண்டு, என் நம்பிக்கையை நிலை நாட்டத் தேவையானதை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்றும் நீங்களும், மற்றவர்களும் சொல்லலாம்.

    என்னைப் பொறுத்த வரை, ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. படிப்படியாக ஒவ்வொரு நிலையாகச் சொல்லி, தெளிவு படுத்தி, அதன் பிறகுதான் மேற்கொண்டு செல்ல முடியும். (ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்குச் செல்வதற்கு ஒருவருக்கு பல பிறவிகள் கூட ஆகலாம்!!).
    அது மட்டுமல்லாமல், இந்து மதத்தைப் பற்றி தற்காலக் கட்டத்தில் இருக்கும் அபிபிராயங்கள், நம்பிக்கைகள் - அவற்றில் எந்த அளவு இந்து மதத்தின் சாராம்சம் உள்ளது என்ற அடிப்படையிலும், இடம், காலத்திற்குத் தேவையானவற்றை இந்தத் தளத்தில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

    அதுவும் ஆசிரியர் குழுவின் விருப்பம் இருந்தால் தான் எழுத வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. இப்படி சொல்லிவிட்டுத்த்தான் இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த தளத்தின் குறிக்கோள் என்ன, அதன் அடிப்படையில் எவற்றைப் பிரசுரிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சில reservations இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு வரும் பட்சத்தில், தொடர்ந்து எழுத விருப்பமில்லை.

    ******
    //பிரம்மாவிற்கு நான்முகம் கருத்து அருமை//

    இது முன்னோர் கருத்து. இதுவரை நான் எழுதிய எதுவுமே என் சொந்தக் கருத்து கிடையாது. எல்லாமே மூல நூல்களில் உள்ளவை அல்லது ஆச்சார்யா புருஷர்கள் சொன்னவையே. இன்றைய கண்ணோட்டத்தின் படி showcase செய்கிறேன். அவ்வளவுதான்.

    *****

    //நான் அறிந்த செய்திகளில் இருந்து பார்க்கையில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல் , அழித்தல் இவர்களது தொழில் .. இதில் பிரப்பென்பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும் விஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய ஒருவர் தான் பிரம்மா என்று கூறினார்கள். இதனால் தான் பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லை என்றும் ஒரு கருத்து …//

    இது ஆதார கருத்து அல்ல.
    எந்த தெய்வமாக இருந்தாலும், வருடாந்திர உத்சவம், பிரம்மோத்சவம் என்று வருவதில் புதைத்துள்ள கருத்தே நான் எழுதியது.

    (Cont’d)

  25. திரு அரவிந்த் அவர்களே,

    //எண்ணம்:
    உங்கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகவே உள்ளது. //

    பதில்- 1:-
    இந்தத் தளம் ஆன்மீகக் கருத்துக்களை தருவது என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

    பதில்-2 -

    ஆன்மீகவாதி என்று என்னை சொல்லிக் கொள்ள மாட்டேன். எனக்கு ஆன்மீக வாதி என்றால் யார் என்று தெரியாது. அதைப் போன்ற வார்த்தைகள், இந்நாளைய வார்த்தைகள்.
    தெய்வத்தை நாடுபவர்கள் நான்கு வகையானவர்கள். அந்த நான்கு வகைகளுக்குள் நான் வருகிறேன். கீதையில் கிருஷ்ணர் சொன்ன அந்த நான்கு வகைகளை அடுத்த கட்டுரையில் கொடுத்துள்ளேன். நீங்கள் சொல்லும் ஆன்மீகவாதி இந்த நான்கு பிரிவுகளுக்குள் வருகிறாரா?

    அந்த நான்கு பிரிவுகளுக்குள் தெய்வத்தை வழிபடுகிறவர்கள் அடங்கி விடுகிறார்கள். அவற்றுக்குள் வராதவர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தொலைத்தவனும், எங்கே என்று தெரியாதவனும் தேடுவான்.

    நீங்கள் சொன்னீர்களே, “உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.” என்று..
    இந்த நான்கு பிரிவுக்குள் வருபவர்கள் - தெய்வம் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பி அவனை வழிபடுகிறவர்கள் - அவன் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் வழிபடுகிறவர்கள் - ஒரு குழந்தை தன் தகப்பனிடம் கேட்டால் அவன் நிச்சயமாக் செய்து கொடுப்பான் என்று கேட்பதைப் போல துளியும் சந்தேஹம் இல்லாமல் அவனை வழிபடுகிறவர்கள், கேட்கிறவர்கள் - அவர்களால் ஆமாம் சாமி போட முடியும்.

    அந்த நான்கு வகைகளில் நான் மூன்றாவது வகையான ஜின்ஞாசு வகைக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றேன் என்பது என்னைப் பற்றிய எனது எண்ணம்..
    மூன்றாவது நிலையில் நின்று நான் பேசுவதால், என் பேச்சு - நீங்கள் சொல்வது உட்பட பல எண்ணங்களை, தாக்கங்களை உண்டாக்கலாம். புரியாமலும் போகலாம்.

    ******

    ///நீங்கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுளை நம்பிக்கொண்டு அந்த நம்பிக்கை தான் சரி என்று முடிவெடுத்துக்கொண்டு, அந்த நம்பிக்கையை நியாப்படுத்த காரணங்கள் தேடும் ஒரு சராசரி ஆன்மீகவாதி போலவே புலப்படுகிறீர்கள் !

    எனது வேண்டுகோள் :
    இப்படி ஒரு கட்டுரையை ஒரு பகுத்தரிவாளறது பார்வையில் இருந்து பார்க்க / படிக்க விரும்புகிறேன்.
    பகுத்தறிவாளன் என்று இங்கு நான் கூறியது, இரு எல்லைகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு திறன் உடையவன் என்று .
    உங்களது கருத்திற்கு ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது எல்லா கருத்திற்கும் பொருந்தும்.
    ஆனால் உங்களது கருத்தை அதற்க்கு மாற்றுக்கருத்து அல்லது நேரெதிரான கருத்து உள்ளவர்களிடம் உரையாடிபாருங்கள். உங்களது கருத்தைப்பற்றி உங்களுக்கே தெரியாத சில விசயங்களை அவர் சொல்லகூடும். முடிவு எடுப்பது உங்களது சுதந்திரம்…///

    * இப்படி நீங்கள் சொல்வதன் மூலம் நீங்கள் அந்த நான்கு வகைக்குள் வரவில்லை என்று தெரிகிறது. உங்களைக் convince பண்ண வேண்டும் என்ற அவசியம் எனக்கிலை. அது தெய்வத்தின் வேலை.

    * பகுத்து அறிதலுக்குப் புறம்பாக இந்தக் கட்டுரையில் என்ன உள்ளது என்று சொல்லுங்கள்.

    * மாற்றுக் கருத்து என்று நீங்கள் சொல்வது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்று தெரிகிறது. அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவற்றைப் பேசுபவர்கள் விஷயம் அவர்களுக்கு. அவற்றை செவி மடுக்க என் நேரத்தை செலவிட விருப்பமில்லை.

    *******

    (”there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” - i dont know whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing all those tamil lines above.)

    கடவுள் இருக்கிறானா இல்லையா என்பதை, நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது போல என்றால், அதற்கு பதில் நம்மாழ்வாரிலிருந்து:-

    “உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்,
    உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்,
    உளனென இலனென இவை குணம் உடைமையில்
    உளனிரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே.

    இதை நம்மை வைத்தே சொல்லலாம்.
    From star to star dust ஆனது இந்தப் பிரபஞ்சம்.
    இதை நான் இப்பொழுது எழுதும் கணினிப் பலகையும், மேலே சுழலும் மின் விசிறியும், மற்ற பல சௌகரியங்களும் எங்கிருந்து வந்தன? ஒரு காலத்தில் இவை இல்லை. இன்று உருவமும், சக்தியுடனும் இருக்கின்றன. இவை வந்தது இந்த star dust லிருந்துதானே ?

    இவற்றை யார் செய்தது? என்னைப் போன்ற மனிதன் தானே? இவற்றைச் செய்த மனிதனுக்கு - தான் வருவதும் போவதும் அவன் கையில் கிடையாது.

    முன்பு இல்லாமலும், இனி ஒருநாள் இல்லாமல் போகவும் போகிற இந்த ஜெயஸ்ரீயால், இந்த star dust லிருந்து உருவாகி, உருவத்தோடு உலாவி, இந்த star dust லிருந்து உருவான சௌகரியங்களை அனுபவிப்பது சாத்தியம் என்றால், இதைச் செய்தேன், அதைச் செய்வேன் என்று செய்து உலவுவது சாத்தியம் என்றால், இந்தப் பிரபஞ்சத்தின் ஊடே செலுத்தும் - சென்று கொண்டிருக்கும் அந்த சக்தியும், என்று நினைத்தாலும், எப்படி விரும்பினாலும், உருவம் கொண்டு, சக்தி கொண்டு - என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமே?
    அதுதான் நம்மாழ்வார் சொன்ன:-‘உளனிரு தகைமை’

    இதில் என்ன ஆச்சர்யம் என்றால், விண்ணைத் தொட்ட ஆராய்ச்சியாளனும் சரி, அணுவைப் பிளந்த அறிவியலானும் சரி, இந்த சக்தியை - இது நம்மை மீறின, நம்மை இயக்கும் சக்தி என்று உணர்ந்திருக்கின்றனர். அதிக விஞானம், அதிக மெய்ஞானம் கொண்டவர்களுக்கு இது தெய்வம் என்று தெரிகிறது.

    (cont’d)

  26. தாப்பர் பற்றி

    // உங்களது விமர்சனங்களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு கூட ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும், அவர் ஹிந்து மதத்திற்கு எதிரே நிற்கிறார் என்ற ஒரே காரணத்தினாலும், அவரது கருத்துக்களை உதாசினப்படுத்தி, அவரது கருத்துக்களை கேட்பதே நேரக்கொடுமை என்று சொல்கிறீர்கள்.
    இதை நான் இரு கண்ணோட்டத்தில் பார்கிறேன்.
    1 ) எனது கருத்தை ஒத்துக்கொள்ள முடியாவிட்டால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்ற பெருமிதப்பு.
    2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரியாது என்ற ஏளனம்.

    எனக்கு உங்களைப்பத்தியும் தெரியாது அந்த மிஸ்.தாபர் பற்றியும் எதுவும் தெரியாது.

    ஆனால் உங்களது கட்டுரை மற்றும் உங்களது விமர்சனங்கள் இப்படி ஒரு தாக்கத்தைத்தான் எனக்கு ஏற்ப்படுத்தியது.////

    இந்து மதத்தின் அடிப்படை தெரியாதவர்களுக்கு - விளக்கம் சொல்வது வீண் என்பது என் கருத்து. இதில் என்ன பெருமிதம், ஏளனம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

    தாப்பர் போன்றவர்கள் பேசுவதற்குப் பதில் சொல்ல்வது வீண் என்றதற்குக் காரணம் - அவர்கள் basic assumptions -இத் தொடவில்லை. ஒரு ஆராய்ச்சி என்று எடுத்துகொண்டீர்கள் என்றால், அதைச் செய்ய விதிமுறைகள் உள்ளன. முதல் விதி you must get your axioms right. You must have the right set of assumptions. இவை இல்லாமல் எந்த விஞானியும் ஆராய்ச்சி செய்ய மாட்டான். எந்த மெய்ஞானியும் ஞானத்தைப் பற்றிப் பேச மாட்டான். Basic assumption -எ தவறு என்கையில், அவர்கள் இதைச் சொன்னார்கள், இது எனக்கு ஒப்புமை, அல்லது நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று மேற்கொண்டு எப்படி போக முடியும்?

    ஆரியப் படையெடுப்பு, வேத கால வரையறுப்பு இவை அனைத்தும் தவறான axiom அடிப்படையில் எழுந்தவை. அதனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் கவிழ்ந்து விடும்.

    அந்த axiom :-
    *வரலாற்றை அறிந்து கொள்ள ரிக் வேதத்தை அடிப்படையாக எடுத்தது.
    வரலாற்றை அறிந்து கொள்ள வேதங்கள் அடிப்படை அல்ல. வரலாற்றை புராண, இதிகாசங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
    ரிக் வேதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது, அதனால் ஆரியன் வந்தான், மற்றவர்களை விரட்டினான் என்பதை வேதம் அறிந்தவர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
    வேதம் - ஒதுவதற்குத் தான்.
    வேதம் ஓதுதலின் பயனை, ஒலி அலைகளுக்கே முக்கியத்துவம் என்பதை, போபால் வாயிக் கசிவு சமயத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம் செய்து ஒரு குடும்பத்தினர் உயிர் தப்பிய காரணத்தை ஆராய்ச்சி செய்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் அறிவர். இப்படி ஒரு பக்கம் வேத ஒலியின் மேன்மை தெரிந்து கொண்டு இருக்கையில், வேதத்தை ஒரு வரலாற்று நூலாகப் பார்பவர்களை யார் சீந்துவார்கள்?

    தாபர் மட்டுமல்ல, அவரைப் போன்ற பலரது கருத்துக்களும் என் inbox -இல் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. எங்கே எந்த ஆராய்ச்சியாளர் அத்தகைய கருத்துக்களை எதிர் கொள்கிறாரோ, அங்கே அவர்களுக்கு, எனக்குத் தெரிந்த ஆதாரங்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.

    From one of my write-ups to give supportive evidence to a scholar working on ’stones’ in cremation practices found in saraswathy civilisation to counter the mis interpretations by a foreigner:-

    “It is incorrect to interpret practices and traditions on the basis of Rig Vedas. No one trained in Vedic tradition or Vedic knowledge would ever do that. Vedas are not meant for knowing or learning their meanings and using them for deciphering history (like the concept of the Aryan invasion ) nor for deducing the practices. We have the hierarchy in this. Vedas are mystic hymns capable of invoking Gods. We dont look for quotes or authentication from them. Even the acharyas (shankara or ramanuja) - though they have taken Rig vedas as one of their pramana sastras for writing commentary for Brahma sutras, have quoted sparingly from Rig vedas. Where they have done, that was for establishing some tattwa.. ……

    ……What Vedas convey can be learned from Upanishads. Upanishads are the mouthpiece of Vedas. Vedas are like the clouds that give rains and the Upanishads are like the rain water. Let all those who want to look for Vedic authentication for practices, look for them in Kalpa sutras. They are like the readily available tap water.”

    *****
    Such being the case, it is a phenomenal waste of time and scholarship for nearly 2 centuries by digging into Vedas to substantiate Aryan invasion.

    On cosmology, Vedic wisdom is logical and feasible. Some scientist - thinkers have started conceding that while Ms Thapar is still caught up with outdated thought.

  27. மீண்டும் ஒரு மிகச் சிறந்த ஆன்மிகம்-அறிவியல் இரண்டும் சேர்ந்தப் பதிவு.

  28. ஜெயஸ்ரீ அவர்களே

    இந்த தாபரின் பரமார்த்த சிஷ்யர் frits stall எழுதிய discovering vedas புத்தகத்தை படித்துவிட்டு தான் மேலே முன்னோட்டம் இட்டிருந்தேன் - அவர் புதிதாக ஒன்று சொல்கிறார் - இதெல்லாம் சீனாவிலிருந்து (xinjiang) ஆரம்பித்ததாம் - இப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் - இவர்கள் சீனாவிலிருந்து வந்தார்களாம், ஈரானிலிருந்து வந்தார்களாம் - இந்திய மண்ணை தொட்டவுடன் இவர்களுக்கு ஞானம் வந்துவிட்டது - அவர் சொல்லும்படி பார்த்தல் அவர்கள் இந்தியாவுக்கு வருவதும் ரிக் வேதம் இயற்றப்பட்டது ஒரே காலமாக உள்ளது - இந்தியாவிற்கு வது, இகுள்ள மொழிகளை சன ஏறத்தில் கற்றுக்கொண்டு ஆர்யா இடிய மொழியை உருவாக்கி ஷா என்ரத்தில் கவிகளாகி ரிக் மிக நுட்பமான அறிவை பெற்று திடீர் என்று ரிக் வேதம் இயற்றினார்கள் - இதை எப்படி நிரயம் செய்கிறார்கள் - ரிக் வேதத்தில் 752 தடவை அஸ்வம் எட்று வருகிறது ஆனால் இந்தியாவில் குதிரைகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லையாம் [அதாவது ரிக் வேதம் எபது கிட்டத்தட்ட ஒரு wordsworth poem போல இயற்கை வர்நிக்கிரதி என்பது போல எழுதிகிறார்கள் இந்த கிறுக்கர்கள்]
    இந்தியாவில் ரதமே இல்லையாம் அதும் வெளியிருது வந்ததாம் - எப்படி அப்பா ரத்தை ஒட்டிக்கொண்டு மா மலைகளை கடந்தார்கள் என்று யாரவது கேட்டுவிட போகிறானே என்று அதற்கும் ஒரு சமாளிப்பு அளிக்கிறார் frits stall - அற்புதமான சமாளிப்பு - அதாவது ரதம் பற்றிய அறிவு மட்டுமே நாடு கடந்து வந்ததாம் ரதம் இல்லையாம்

    அக்னிஸ்,அக்னிம், அக்னிக்ப்யஸ் என்பது கிரேக்க ignis, ignem, ignibus என்பதுபோல் இருப்பதனால் சீனவில்ருந்தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று முடிவு செய்கிறார் இந்த அறிவு ஜீவி

    இப்படி ஒரு வரலாற்று நூல் என்று சிலர் கொள்ளும் பைதியக்கரதனத்தயும் தாண்டி ரிக் வேதம் ஒரு wordsworth கவிதை என்பது போல இவர் பேசுகிறார்

    யாரவது இப்படி ஒன்றுக்கும் உபகொகம் இல்லாத விஷ்யத்த்தை உயிரை கொடுத்து மனப்பாடம் செய்வார்கள, அதற்காக எல்லா சுகத்தையும் விட்டு விட்டு காட்டிலும் மலையிலும் யாகம் செய்வார்கள - சோறு தண்ணி இல்லாமல் வாடி வதந்குவார்கள - இப்படி எல்லாம் கேட்டால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் - புதிதாக ஏதாவது ஆராய்ச்சி செய்து புதிதாக காரணம் சொல்வார்கள் - சீனாவில் இருந்ந்து இல்லை அண்டார்டிக்கா குளிர் தாங்காமல் எல்லோரும் இந்திய வந்ததார்கள் என்று அடுத்து ஓர் பெரிய ஆராச்சி கண்டுபிடிப்பு வரப்போகிறது - அதுக்கப்புறம் ஆர்டிக் - இப்படி சுத்திக்கொண்டே இருப்பார்கள்

  29. நன்றி சாரங் அவர்களே.

    சீனா என்றவுடன் போகர் ஞாபகத்திற்கு வருகிறார். வேதக் கருத்தைக் கற்ற சீனர் அவர் ஒருவர் தான். ‘போகர் 7000′ மூலம் அவர் த்ருனதுமாக்னி (தொல்காப்பியர்), அகத்தியர், தேரையார் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், கடல் கொண்டுவிட்ட கபாட புரத்தில் இருந்தது தெரிகிறது. இதற்கெல்லாம் எழுத்து பூர்வமாக ஆதாரம் இருக்கிறது. ஆனால் அந்த மேதைகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நம்ம ஊர் தமிழ்க் காவலர்களும் வாயைத் திறக்க மாட்டார்கள். வாயைத் திறந்தால், தமிழும், சமக்ருதமும் கூடிக் குலாவி இருந்த தமிழ் நாட்டை வெளிக் காட்ட வேண்டியிருக்கும். அப்படி காட்டினால் என்ன தவறு? யாருக்கு நஷ்டம்?
    தமிழுக்கு அல்லவே.

    தமிழ் பேச்சு மொழியாக எங்கணும் இருந்தது என்று உலகுக்குக் காண்பிக்கலாம் அல்லவா? வட வேங்கடம் முதல், குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் என்றது அதற்குப் பிற்பட்ட காலத்தில்தானே? அதற்குமுன் - கபாடபுரம் சங்கத் தலைமையகமாக இருந்த காலத்தில், எங்கணும் தமிழ்தானே இருந்திருக்கின்றது? சீனரான போகர் தமிழில்தான் பேசி எழுதினார்.

    ரோமக சித்தரும் (இவர் பெயரில் சமஸ்க்ருதத்தில் ஜோதிட சித்தாந்தமும் உள்ளது. அதைப் பஞ்ச சித்தந்தங்களில் ஒன்றாக, வராஹா மிஹிரர் எடுத்தாண்டுள்ளார் ), ம்லேச்ச நாடு என்னும் வட மேற்குப் பகுதியிலிருந்து வந்து, தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் பாடல்களில் ம்லேச்சர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. திருவிளையாடல் புராணம் ( பழையது ) நடந்த , கடல் கொண்ட அந்நாள் தமிழகத்தில் அவர் வந்ததாகக் குறிப்பு உள்ளது என்றும் அறிகிறேன்.

    சீனத்துக்கு வருவோம்.
    சமீபத்திய மரபணு ஆராய்ச்சியின் மூலம், சீனா, மலேசியா, சிங்கபூர், ஜப்பான் என்று கோபால் பல்பொடி விளம்பரம் போல எல்லா கிழக்காசிய நாடுகளில் உள்ள மக்களும், இந்தியாவிலிருந்துதான் சென்றவர்கள் என்று தெரிகிறது. தாபரும் அவரது சிஷ்யரும் இதற்கு எப்படி சப்பை கட்டு கட்டப் போகிறார்கள்?

    துக்குணியூண்டு நாடு இந்தியா. அங்கிருந்து எப்படி வேறு வேறு ஜாடையில் மரபணு கிளம்பி போயிருக்க வேண்டும் என்று கேட்பார்கள். அங்கும் நம் தமிழ் இலக்கியம் தான் ஆதாரம் காட்டுகிறதே? கடல் வடிம்பலம் நின்ற பாண்டியன் ஆண்ட நாடு ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா வரை பரவி இருந்ததே? மூன்று ஊழி பார்த்த இடம் கடல் கொண்ட குமரி நாடு. ஆழ்கடல் படத்தை எடுத்துப்பாருங்கள். நம் கிழக்குத் தொடர்ச்சி மலை அதே கோணத்தில் மடகாஸ்கர் வரை செல்கிறது. பன்மலை அடுக்கம் கொண்ட குமரி மலைத் தொடர் என்று தெரிகிறது. அப்படிப் பரந்து இருந்த நாட்டில் இருந்த மக்கள் ஒவ்வொரு ஊழியின் போதும், சிதறி - பரவி ஜப்பான் வரை சென்றிருக்க சாத்தியக் கூறு இருக்கிறதே! அப்படிப் பார்க்கும் பொழுது சீனாவில் வேதம் இருந்தால், அது போன ரூட் இங்கிருந்துதான் என்றாகிறது.

    மரபணு ஆராய்ச்சி சொல்லும் இந்த ஒற்றுமையை, தமிழ் இலக்கியமும் வழி மொழிவது போலக் காட்டும் போது, கடல் கொண்ட குமரியை நாம் முன்னிறுத்த வேண்டும்.
    இதைப் பற்றிய என் கட்டுரையை இங்கே காணலாம்.
    http://jayasreesaranathan.blogspot.com/2009/12/india-as-base-of-asian-populations.html

  30. ஜெயஸ்ரீ அவர்களே,

    தமிழ் இலக்கிய கொட்ப்ட்டிருக்கும் போகரை பற்றிய குறிப்பிற்கும் மிக்க நன்றி

    எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை - இவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு இந்தியாவிற்கு வர வேண்டிய அவசியம் தான் என்ன - இந்த ஆராயிச்சி கூட்டத்தின் கூற்றுப்படி வேத காலத்தில் பித்தளை ஏஜ் கூட இல்லை - நீர் வளம் ஒன்று மட்டும் தான் இருக்க முடியம் - அதற்காக இமயத்தை கடப்பவன் முட்டலாகதான் இருக்கணும் - சீனாவில் இல்லாத நீர் வளமா

    இவர்கள் ரதத்தை பற்றி இன்னொரு பைதிக்கார விளக்கம் தருகின்றனர் - அதாவது இந்தியாவில் spoked wheel இல்லையாம் - full wheel தான் இருந்ததாம் (இதுவரை நொண்டி எடுத்த ஆராய்ச்சியில் full wheel மட்டும் தான் கிடைத்திருக்கிறதாம் - இதக்கு தேரை கட்டுகிறார்கள்)

    இதனால் என்ன முடிவென்றால் - spoked wheel சீனவிளிருந்தான் இங்கு வந்திருக்க வேண்டுமாம் - இந்தியாவிலாவது full wheel கிடைத்தது - அங்கு எங்குமே ஒரு சக்கரமும் கிடைக்கவில்லையே - அப்புறம் எப்படி அது சீனாவிலிருந்து வந்திருக்க வேண்டும் - இப்படியே போனால் இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டு கழித்து - சைக்கிள் சீனவில்ருந்து (spoked wheel) வந்தது - பஸ் இந்தியாவிலிருந்து (full wheel) வந்தது என்பார்களோ?

    இந்தியாவிலிருந்து சென்று வேறு வேறு மரபணு சென்றிருக்க முடியாது - ஆனால் சீன, இரான், மெக்ஸிகோ, கிரேக்கம், செகச்லோவகிய, ரஷ்ய, கம்போடிய, அலாஸ்கா, அண்டார்டிக்கா, இப்படி பல ஊரிலிருந்து (டீ சாப்பிடுவதற்காக) வந்து இந்தியாவில் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புது மரபணு கலாசாரம் உண்டு பன்னார்களோ? - அப்படி எல்லா மரபணுவையும் சேர்த்தல் அதிலிருத்து மனிதன் வந்திருக்க மாட்டான் ஒரு விந்தையான காண்ட மிருகம் தான் வந்திருக்கும் - இனியாவிளிருந்து சென்றவரல் தான் அங்கிருக்கும் மக்களுள் கலந்ததன் மூலம் சற்று மாறுபட்ட தோற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

    தாபர் குழுவினருக்கு இதெல்லாம் ரொம்ப சுலபம் - உண்மையை சொல்ல தான் கஷ்டப்பட வேண்டும் - புதிதாக - இந்த மரபனுக்கேல்லாம் உலா மரபணு அலாஸ்காவில் உள்ள ஒரு மக்களிடேய தான் இருக்கிறது - அவர்கள் பேசும் மொழி அப்படியே அச்சு அசல் சமஸ்க்ரிதம் மாதிரி தான் உள்ளது அங்கும் ஆ, ஆ, இ,ஈ எல்லாம் உள்ளது அதானால் அலச்காவிளிருந்து அவர்கள் ஒரு கட்டையை பிடித்துக்கொண்டு பசிபிக் மஹா கடலை கடந்து ஜப்பான் வந்தார்கள் அங்கிருந்து மொங்கோலியா மக்களுண்டன் சேர்த்து கொண்டு சீன வந்தார்கள் - அங்கிருந்து புறப்பட்டும் இந்தியாவிற்கு பெரும் திரளாக டீ சாப்பிடுவதற்காக வந்தார்கள் - டீ கிடைக்காததால் தேடி கொண்டே இருந்தார்கள் - அந்த ஆதங்கத்தில் தான் வேதம் படைத்துத் டீ வேண்டும் என்று வேள்வி செய்தார்கள் - கிடைத்தபாடில்லை - டீ கிடைக்கவிட்டாலும் அவர்களுக்கு வேள்வி செய்வது பழகி விட்டபடியால் அதை தொடர்ந்து செய்து வந்தார்கள்

  31. இந்தியா (குமரி நாடு) ஆப்பிரிக்காவுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையேயான பாலம். அப்பிரிக்காவின் இந்த மன்வந்திரத்தின் முதல் தோற்றமான மனித வகைகள் கிழக்கிலும் வடக்கிலும் பரவ, குமரிக் கண்டம் பாலமாக இருந்திருக்க வேண்டும்.

    போகர் , ரோமசர் போன்றவர் எங்கணும் உலவும் வகையில் பாரத தேசம் பரந்து இருந்தது இந்நாளில்.

    You will get lot of details in this :-

    http://www.hinduwisdom.info/index.htm

    Also read Dr N.S. Rajaram’s works

  32. “அந்நாளில்” என்று படிக்கவும் .

    >> போகர் , ரோமசர் போன்றவர் எங்கணும் உலவும் வகையில் பாரத தேசம் பரந்து இருந்தது அந்நாளில் .

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

"));