தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.
தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.
நம்முடையது மூத்தகுடி. அது எப்படிப்பட்டது என்பதை, “வழங்குவதுள் வீழ்ந்தக் கண்..” என்னும் ‘குடிமை‘ அதிகாரக் குறளுக்கு உரையாகப் பரிமேலழகர் கூறிகிறார். “தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட தமிழ்க்குடி என்பது படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிப் பெருமை உடையது என்று தெளிவுறுத்துகிறார். குடிமை என்பது, தம் மரபு விடாது, வழி வழியாக என்றென்றும் கடைபிடித்து வருதல் என்று பொருள். ஒரு செயல் வழக்கத்தில் உள்ளதென்றால் – அதிலும் அது என்று துவக்கப்பட்டது என்று அறியாத பழமை கொண்டதென்றால், அதை நம் முன்னோர் ஆய்ந்து, தெளிந்துதான் கடைபிடித்திருப்பர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.
அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.
தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.
‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் – இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி, ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.
ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.
மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.
எங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.
நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!
இந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.
இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.
இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?
ஆண் வருடனும், ஆண் வருடியும்
இந்தக் கதை தொடர்பான மற்றொரு கோணல் விளக்கம், ஒரு ஆண் வருடனும், ஒரு ஆண் வருடியும் சேர்வதால் பிறக்கும் குழந்தையே புது வருடமாகும் என்பது. அதனால் இது தமிழ் வருடப் பிறப்பு ஆகாது என்று சொல்லும் இவர்கள், யார் இந்த வருடன், யார் இந்த வருடி என்று தெரிந்து சொல்கிறார்களா?
வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால் ‘பொழிதல்‘ என்பது பொருள். அதன்படி இந்த வருடன், வருடி என்பவர்களெல்லாம் யார் என்றால், பொழிதல் என்னும் வினைப் பெயருக்கு உருவம் கொடுத்து உருவகப் படுத்தி சொல்லப்படுகிற கதை என்றாகிறது. அது குழந்தைகளுக்கும் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை. குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!
தீர ஆராய்ந்தால், வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.
வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.
வருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு ‘வான வரம்பன்’ என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.
அது என்ன ஆடு- கோட்பாடு? இப்படியும் ஒரு பட்டப் பெயரா? கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.
இந்தச் சேர அரசன் சாதாரணன் அல்லன். பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து இவன் மீது பாடப் பட்டவைதான். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தின் பதிகத்தில், இந்த அரசன், தண்டகாரண்யத்திற்குச் சென்று அங்கிருந்த வருடையைப் பிடித்து, தொண்டி நகருக்குக் கொண்டு வந்தான், அதன் மூலம் வான வரம்பன் என்னும் பெயரும் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.
“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்”
தண்டகாரண்யம் என்பது விந்திய மலையின் தெற்குச் சரிவில் உள்ள காடு. (ராமர் வந்ததாக ராமாயணத்திலும் சொல்லப் படும் தண்டகாரண்யம் இதுவே). இந்தச் சேர மன்னன் தண்டகாரண்யம் சென்று வருடையைக் கொணர்ந்து, வான வரம்பன் என்றும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் பெயர் பெற்றான் என்றால், அவன் வானத்தையே முட்டுவது போன்ற விந்திய மலையை எட்டி, அதனால் வான வரம்பன் என்னும் பெயரையும் பெற்று, அங்கு திரிந்துக் கொண்டிருந்த வரையாடு என்னும், மலையாடு என்னும் வருடையைக் கொணர்ந்து, அதனால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் பட்டத்தையும் பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது.
இமயத்தை எட்டிய இவன் முன்னோன் “இமய வரம்பன்” என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக “வான வரம்பன்” என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?
வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின் ஆரம்பம் மேடம் ஆதலாலும், ஆரம்பம் என்பது ஒரு உயர்த்த இடமாக இருக்க வேண்டும் என்னும் விழைவை ஒட்டியும் இந்த மலையாட்டினைக் கொணர்ந்துள்ளான் என்று புலனாகிறது. இன்றும் இரவிக்குளம், மூணாறு பகுதியில் காணப்படும், அபூர்வ வகை வரையாடு இந்த வருடையே.
இந்த வருடையைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்பு வருகிறது. கண்ணகியின் கதையை சேரன் செங்குட்டுவன் தெரிந்துகொள்ளும் முன், மலைப்பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் “வரையாடு வருடையும்” பார்க்கிறான் என்று சிலம்பு கூறுகிறது. (காட்சிக் காதை) இதன் மூலம் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே இருந்தவன் என்று தெரிகிறது. அந்நாளில் வருடைக்கு எத்துணை முக்கியத்துவம் இருந்திருந்தால், அதைக் கொண்டு வந்திருப்பான்?
நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள். மூணாறில் காணப்படும் வருடை (Nilgiri Tahr), இமயத்தில் காணப்படும் வருடை (Himalayan Tahr) வகையைச் சேர்ந்தது. இமயத்தில் காணப்படும் வரையாடு பொதியத்திலும் உலவ வேண்டும். சேரன் மலைநாட்டிலும் உலவ வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். இமயத்து வருடை வகை ஆடுகள் அந்நாளில் விந்திய மலையிலும் இருந்திருக்க வேண்டும். அவற்றை விந்தியத்திலிருந்து, சேரமான் கொண்டு வந்திருக்கிறான்.
சூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை துவங்கும், மேட ராசியில் என்பதாலும், அவ்விராசி வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.
இதில் வருடன், வருடி என்ற ஜோடி எப்படி வந்தது? இப்படி ஜோடியாக சொல்லப்பட்டு, அந்த ஜோடியிடமிருந்து வருடம் பிறந்தது என்பது ஆபாசம் அல்லவா என்பது நம் குழந்தைக் கதை கேட்பாளர்கள் கொண்ட கவலை.
மேடத்தில் ஜோடி உள்ளது. அதுவும் ஆணும், ஆணும் சேர்ந்த ஜோடி! இந்த ஜோடியை நம் முன்னோர்கள் தம் பாடல்களில் பதிந்துள்ளனர். இந்த ஜோடியைப் பற்றி பரிபாடலில் இரு இடங்களில் காணலாம்.
இந்த அண்டம் முழுவதும், அவனிடத்திலேயே தோன்றி, அவனிடத்திலேயே விரிந்தன என்று திருமால் பெருமையைப் பேசும் 3-ஆம் பாடலில், எவை எல்லாம் தொன்றுதொட்டு அவனால் துவங்கப் பட்டவை என்று பட்டியலிடுகையில், “தாமா இருவரும்” என்று அசுவினி குமாரர்களைப் பற்றி சொல்லப்படுகிறது. படைப்புக்காலம் தொடங்கி, சில விஷயங்கள் முன்னோடியாக உள்ளன. பிரமன் முதலான தேவர்கள், சூரியன் முதலான கிரகங்கள், அசுவினி தேவர்கள் முதலான விண்மீன்கள், ஐம்பொறிகள், வசுக்கள், ருத்திரர்கள் என்று இந்தப் பட்டியல் செல்கிறது.
செவ்வேள் பற்றிய பரிபாடல் 8 -ஆம் பாடலில், யார் யாரெல்லாம் பரம் குன்றத்தில் இருக்கும் குமரனைக் காண வந்துள்ளனர் என்னும் போதும், அவரவர் வகையில், முதன்மை பெற்றவர்களையே சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், “மருந்துரை இருவரும்” என்று இரட்டையரான அசுவினி சகோதரர்களைப் பற்றி சொல்லபடுகிறது.
ஞாயிறு தன் பயணத்தை ஆடு – தலையாகத் துவங்குகையில், இரட்டையரான அசுவினி தேவர்களிடமிருந்து தான் துவங்குகிறான். (சோதிடப்படி, சூர்யக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், மருத்துவக்குடி என்பதும் இந்த ஊரின் மற்றொரு பெயர் என்பது நினைவு கூறத் தக்கது. ஆடுதுறை மாசாத்தனார் என்னும் சங்கப் புலவரும் இருந்திருக்கிறார். ) மருத்துவர்களான இவர்கள் இருவரை முதலாகக் கொண்டு வருடம் பிறக்கிறது. ஆண் வருடன், ஆண் வருடி என்று இதை (யாரோ) உருவகப்படுத்தியதால், குழந்தைக் கதை கேட்பாளர்கள் அதையே பிடித்துக்கொண்டு விட்டனர்.
இவர்களுக்கு, நம் சங்கப் புலவர்கள், இன்னொரு அதிர்ச்சிக் கதை வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டு, சங்கப் பாடல்களுக்கே முழுக்குப் போட்டு விடுவார்களோ நம் கதை விரும்பிகள்?
முன் கூறிய பரிபாடலில், தாமா என்று அசுவினி தேவர்களைக் குறித்துள்ளார்கள். தாமா என்றால் தாவும் குதிரை என்பது பொருள். அசுவினி தேவர்கள் குதிரையின் வயிற்றில் பிறந்தவர்கள். இதற்கு உரை கூறும் பரிமேலழகர், “உருப்பசி குதிரைப்பெட்டையாகியாளைக் கண்டு நயந்து, தானும் அவள்பாற் செல்கின்ற ஆதித்தியனுடைய நாசிகைத் துளைகளால் இரண்டு வீரிய விந்துகள் வீழ, அவர் அங்கே இரட்டைகளாய்த் தோன்றினர்” என்கிறார்.
இதை ஆபாசக் கதை என்பதா அல்லது ஆரியக் கதை என்பதா அல்லது ஆரியத் திணிப்பு என்பதா? ஆனால், சங்கப் புலவர் கடுவனிள வெயினனார் கூற, பரிமேலழகர் விளக்கியுள்ளாரே? இந்தக் கதைகள் எல்லாம் நம் தமிழ் முன்னோரும் ஏற்று, கையாண்டவையாக உள்ளனவே? ஆபாசம் என்றாலோ, அருவருப்பு என்றாலோ, அவர்கள் இவற்றை எழுதியிருப்பர்களா? நாம் சிந்திக்க வேண்டும்.
வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.
துவக்கம் என்பது அசுவினியிலிருந்துதான் என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
பரிபாடல் 19-இல், முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரம் குன்றத்தில் ஒரு ஓவிய மாடம் இருந்தது என்றும் அங்கே முதலாவதாக இருந்த ஓவியம், சூரியம் வலம் வரும் அசுவினி முதலாவதாகிய நாண்மீன்கள், மற்ற பிற மீன்கள் (நட்சத்திரங்கள்) கொண்ட காலச் சக்கரத்தை விளக்கும் ஓவியமாகும் என்கிறார் நப்பண்ணனார்.
“என்றூழ் உரைவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்”
இங்கு சுடர் நேமி என்று ஞாயிறு மண்டலத்தை, சோதிடத்தில் கூறுவது போல, சக்கரம் என்கிறார். அந்தச் சக்கரத்தின் தலை மேடம் என்னும் ஆடு!
அசுவினி முதலான மீன்கள் தொட்டே திங்களும் வலம் வருகிறான். தன் மனைவியர் மற்றும் சுற்றத்தார் புடை சூழ, பாண்டிய மன்னன் பரம் குன்றத்தைச் சுற்றி வருவது, அசுவினி முதலான விண்மீன்கள் புடை சூழ, திங்களானவன் மேரு மலையைச் சுற்றி வருவதற்கு ஒப்பாகும் என்கிறது 19 – ஆம் பரிபாடல். “சுடரோடு சூழ் வரு தாரகை மேருப் புடை வரு சூழல்”
சூரியன் கதையில், ‘தாமா’வான அசுவினி, சந்திரன் கதையில், 27 மனைவிகளுள் முதன்மையான அசுவினி என்னும் பெண்ணாகி விடுகிறான்! ஆரியத் திணிப்பு, ஆபாசம் என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் இந்தக் கதைகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது என்று பகுத்தறிவுவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவியலை நம் முன்னோரும் தெரிந்து கொண்டுள்ளனர்.
ஞாயிறும், திங்களும், வானத்தைப் புணர்ந்தன – என்பது போன்ற சொற்றொடர்களை சங்கத் தமிழில் காணலாம். “வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப” என்று ஆரம்பிக்கும் பரிபாடல் 11- ஐ விளக்கும் போது, “மேலவாய நாண்மீன்களைக் கீழாய மதி புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை ‘விசும்பு புணர்ப்ப’ என்றார்” என்று பரிமேலழகர் கூறுகிறார்.
திங்களானது தான் மணந்த மனைவியருள், ரோஹிணியிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் என்று கூறப்படுவதெல்லாம், அதன் சுற்றுப் பாதையிலேயே ரோஹிணி நட்சத்திரமும் அமையப் பெற்றதால்தான். வானப் பாதையில், சந்திரன் செல்லும்போது, மற்ற நட்சத்திரங்கள் அந்தப் பாதையிலிருந்து சற்று விலகியே உள்ளன. ரோஹிணி மட்டும்தான் பாதையிலேயே அமைத்துள்ளது. திங்கள் ரோஹிணியைக் கடக்கும் போது, அந்த நட்சத்திரத்துடன் ஓட்டிச் செல்வது போலக் காணப்படுவதால், அதை நினைவூட்டக் கதையாகக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.
வருடையும் சித்திரையும்.
இங்கே ஒரு கேள்வி எழலாம். சூரியன் மேடத்திலிருந்து பயணம் தொடங்குவது, 12 ராசிகளைப் பற்றியதாக இருக்கலாம். மேடம் என்பது ராசிகளுள் முதன்மையானது. வருடக் கணக்கு என்பது, சித்திரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று இது எப்படி காட்டுகிறது? வேறு ஒரு மாதத்திலிருந்து கூட வருடம் ஆரம்பமாகியிருக்கலாமே என்று கேட்கலாம்.
தமிழ் சான்றோர் இந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. சூரிய மாதத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், மேடம் முதலான ராசிகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சோதிடக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பழைய நாடிச் சுவடிகளைப் பார்த்தால், சூரிய மாதங்களான சித்திரை போன்றவற்றை, அவற்றின் ராசியின் பெயர் அல்லது பிற தமிழ்ப் பெயர்களால் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சித்திரை மாதத்தை மேடம், மை, மறி, ஆடு, வருடை, கொறி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். சூடாமணி நிகண்டிலும் இவற்றைக் காணலாம்.
இரண்டு விதமான மாதக் குறிப்புகளை நாம் பின்பற்றி இருக்கிறோம். ஒன்று சூரிய மாதம், மற்றொன்று சந்திர மாதம். ராசிகளின் பெயரைக் குறித்தே சூரியன் சஞ்சரிக்கும் மாதங்கள் சொல்லப்பட்டன. சந்திரனைக் குறித்தே சித்திரை என்னும் மாதங்கள் சொல்லப்பட்டன.
மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.
சூடாமணி நிகண்டு தரும் சூத்திரப்படி, இன்றைய தமிழ் மாதப் பெயர்களை பௌர்ணமி வரும் நட்சத்திரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.
பின்வருவன, பௌர்ணமி காணும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள். அவையே, அந்த மாதப் பெயர்களாக ஏற்கப்பட்டுள்ளன.
சித்திரை – சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி.
வைகாசி – விசாகத்தின் மற்றொரு பெயர் வைகாசி
ஆனி – மூல நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆனி.
ஆடி – உத்திராட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆடி..
ஆவணி – அவிட்ட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆவணி.
புரட்டாசி – பூரட்டாதி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் புரட்டை
ஐப்பசி – அசுவினி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஐப்பசி.
கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம்
மார்கழி – மிருக சீரிடத்தின் மற்றொரு பெயர் மார்கழி
தை – இது விதிவிலக்கு. தைப்பதால் அது தை. எதைத் தைக்கிறது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
மாசி – மகம் நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் மாசி.
பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி.
இந்த இரண்டு வகை மாதங்களையும் பின்பற்றி வந்தது குறித்து, பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.
(தொடரும்…)
சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2
தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
ஒரு நதியின் நசிவு
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1
தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?
ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்
ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்![தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/koveru-kazhuthaigal-by-imayam.jpg)
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
ஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தலபுராணம் என்னும் கருவூலம் – 3
தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
தலபுராணம் என்னும் கருவூலம் – 2
தேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2













// தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.//
சரியாகச் சொன்னீர்கள்.
// கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.//
ஆம். அது தான் உண்மை.
// நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும்.//
சபாஷ்!
//… ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!//
[(:-)))
// கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?//
பலே!
// குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!//
[(:-)))
நன்றாக ரசித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்செல்வன்.
நமது சிந்தனை எப்படி இருக்கிறதோ அதே போல் தான் நமது செயல்களும், பார்க்கும் பார்வைகளும் இருக்கும்.
நமது தலைவர்களின் இந்து புராண பார்வை வக்கிரமாகவே இருந்து வருகிறது.
இதற்கு காரணம் சொல்ல தேவையில்லை.
பொங்கல் வாழ்த்துக்கள்..
நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியமைக்கு வந்தனம் .. நன்றி.
வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.i am not criticising ….heir any scientific evidence for this
நாளைக்கு கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு முதழ்மந்த்ரி வரும்பொழுது டிசம்பர் மாதத்தை வர்ஷப்போறப்பாக கொண்டாடுவோமே என்று சொல்லுவார் .
அதையும் கீட்டுகொள்ளவேண்டியதுதான் .தமிழனின் தலைவிதி அப்படித்தானே .
எப்பொழுது தமிழன் சினிமா பைத்தியம் விட்டு ஒழிகறதோ ,அன்று தன சொயமாக சிந்தனை பண்ண தொடங்குவான்.கடவுள் தமிழனையும் தமிழ்நாட்டையும் காப்பாட்டட்டும் .
ஹரிஹரக்ரிஷ்ணன்
A thought provoking and fact-finding article
Politicians are bold enough to touch anything and everything and change it to their benifits in the name of self-respect.
நல்ல கட்டுரை ஜெயஸ்ரீ!
இந்தத் தொகுப்பில் சில பிழைகள் உள்ளன. காட்டாக:
“பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி”
இது பல்குன் என்ற பூர்வபல்குனி (தமிழில் பூரம்) நட்சத்திரத்தில் நிறைமதி வருவதால்.
பிற பின்னர் நேரம் கிட்டுகையில்..
Namasthe,
Today I saw an advertisement for the coming up show in Kalaignar TV. Which again going to hit once again on our traditional “Thali”.
Karthu yuddham is the programme name which they are scheduled to air on Sunday 1.30
What is the best way to stop this programme.
I need your suggestions.
Thanks.
ஆய்வு நோக்கில் எழுதப் பட்ட இன்னொரு முத்தான கட்டுரை ஜெயஸ்ரீ. அப்பப்பா, எங்கெங்கிருந்தெல்லாம் இலக்கியச் சான்றுகள் அளிக்கிறீர்கள் ! அருமை.
வேத இலக்கியத்தில் ஆண்டுகளைக் குறிக்கும் ’ஸம்வத்ஸரம்’ என்ற சொல் மேகங்கள், மழை மற்றும் காலச் சுழற்சியுடன் தொடர்புடையது. எனவே வருடம் என்பதும் வர்ஷம் (மழை) என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்தேன். அச்சொல்லை மேஷ ராசி மற்றும் வரையாடு என்ற தனித்துவமுள்ள விலங்குடன் இணைத்து நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் புதுமையாக இருந்தது.
// தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது. //
தமிழர் திரிக்கவில்லை.. இப்போது ஆட்சியில் இருக்கும் கேடுகெட்ட அரசியல் கட்சியும், அதன் மாநில அரசுமே செய்த கலாசாரப் படுகொலை இது.
இந்தத் திரிபும் விரைவில் அழியும்,
திரு குமார் :-
// “பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி”
இது பல்குன் என்ற பூர்வபல்குனி (தமிழில் பூரம்) நட்சத்திரத்தில் நிறைமதி வருவதால். //
தமிழில் பங்குனி – வட மொழியில் பால்குண நட்சத்திரங்கள் – இரண்டு. அவை பூர்வ பல்குனி, உத்திர பல்குனி ஆகும். பூர்வ பல்குனி பூரம் என்றும், உத்தர பல்குனி உத்திரம் என்றும் தமிழில் வழங்கப்படும்.
சூடாமணி நிகண்டு 1-1-72 சூத்திரப்படி உத்திரம் தான் பங்குனி என்ற பெயருடன் வழங்கப்படுகிறது.
சூத்திரம் 1-1-72 :-
“பங்குனி கடையில் வந்து பற்றிய சனியினோடு
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரமென்றாகும்.”
(பத உரை :- உத்தரத்தின் பெயர் – பங்குனி, கடை எழும் சனி, செங்கதிர் நாள் )
இதற்கு முந்தின சூத்திரத்தில் பூரம் பற்றி வருகிறது
சூத்திரம் 1-1-71 :-
“இடை எழும் சனியே துர்க்கை எலி பகவதி நாளோடு
கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம்”.
(பத உரை :- பூரத்தின் பெயர் :- இடை எழும் சனி, துர்க்கை, எலி, பகவதி நாள், நாவிதன், கணை என்னும் ஆறு பெயர்கள். )
உத்தரத்தில்தான் நிறை மதி அமைகிறது.
பங்குனி உத்தரத் திருநாள் வைணவ ஆலயங்களில் தாயார்- பெருமாள் கல்யாண நாள். பங்குனி உத்தரம் பற்றி கட்டுரையில் காணலாம்.
முழுமதி அடையும் நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதப் பெயர்கள் தமிழிலும், வட மொழியிலும் மாதப் பெயர்களாக உள்ளன. அந்த வகையில் பார்த்தாலும், சூத்திரம் தெரியாதவர்கள் கூட பங்குனி மாதத்தில் பூரணமடையும் உத்தர நட்சத்திரத்தின் பெயரும் பங்குனியாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு விடலாம்.
பால்குண நட்சத்திரங்களைப் போல, இரண்டு ஆஷாட நட்சத்திரங்களும், இரண்டு பாத்ரபத நட்சத்திரங்களும் உள்ளன.
அவற்றுள், ஆஷாட என்னும் ஆடி மதத்திற்குப் பெயர் தருவது உத்தராடம் அலல்து உத்த்ராஷாட.
பாத்ரபத என்னும் புரட்டாசி மாதத்திற்குப் பெயர் தருவது பூர்வ பாத்ரபத என்னும் பூரட்டாதி. பூரட்டாதி என்பது புரட்டை எனப்படும் என்கிறது சூத்திரம் 1-1-78
தாங்கள் கண்ட பிற பிழைகள் எவை என்று அறிய ஆவலாக உள்ளேன்.
- ஜெயஸ்ரீ
நன்றி திரு ஜடாயு.
ஜோதிடத்தை முறையாகப் பயின்றதனால், ஆண்டு மற்றும் யுகக் கணக்கை பற்றிய ஆதாரமான கொள்கைகள் பற்றி அறிந்துள்ளேன். வேதாங்க ஜோதிடத்தில், ஐந்து வருட யுகக் கணக்கில், சம்வத்சரம் என்று முடியும் ஐந்து வித பெயர்கள் உள்ளன. அவை பல்வேறு தொகுதிப் பெயர்களாக வந்துள்ளன. மேலும் சம்வத்சரம் என்பது அந்நாளில் சரத் மற்றும் ஹேமந்த ருதுக்களின் பொதுப் பெயராக இருந்தது. பிறகு ‘ருதுக்களின் யாத்திரை’ என்பது சம்வத்சரம் ஆயிற்று. (samvasanthi rituvaha yatra). தமிழ் நிகண்டுகளிலும், இந்தப் பொருள்தான் – அதாவது சம்வத்சரம் என்பது ‘இருதுக்கள் வசித்தலுடையது.” – என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் வர்ஷம் என்பது, ஆண்டு என்ற பொருளில் நிகண்டில் காணப்படவில்லை. அது மழைக்கு வேறு பெயராகத் தான் காணப்படுகிறது. வர்ஷம் என்னும் வருடம், “பூமியை நனைத்தலுடயது’ என்னும் பொருள் கொண்டது என்று உரை கூறுகிறது.
மாறாக வருடம் என்பதே முதல் பெயராகவும், வர்சரம், ஆண்டு, சமை, ஆயனம் என்பவை அதன் பிற பெயர்களாகவும் சொல்லப்பட்டுள்ளன. இதனால் வருடம் என்பது தொன்மை வாய்ந்த சொல் என்று தெரிகிறது.
வருடம் என்றால் ‘பிரீதி செய்யுதலுடயது” என்று கூறுகிறது நிகண்டு பத உரை. இந்த அர்த்தம் புதிதாக – புதிராக இருக்கவே, இதை ஏன் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்ற குடைச்சல் இருந்து கொண்டே வந்தது.
ஆனால் பதிற்றுப்பத்து படித்தபோது, அதன் பதிகத்தில், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் பெயர்க் காரணமாக அவன் வருடையைக் கொண்டு வந்த செய்தியைப் படித்தவுடன், பிற தொடர்புகள் தென்பட்டன. ஆடுகளைப் பற்றிய அங்க சாத்திரம் ஜோதிடத்தில் உண்டு. கார்க மகரிஷி சொன்னதாக வராஹா மிஹிரர், நான்கு வித ஆடுகளைக் கூறி, அவற்றின் உயர்வைச் சொல்கிறார். குட்டக, குடில, ஜடில, வாமன என்னும் நான்கு வகை ஆடுகளில், வாமன என்பதன் அங்க லட்சணம் Nigiri Tahr எனப்படும் வரயாடை ஒத்தது. இதை வருடை என்று தமிழில் கூறுவார். அந்த வருடை, மேடம் என்பது பரிபாடல் 11 -இன் மூலம் தெரிந்தது. அதனால் வருடை என்பதே வருடம் என்னும் சொல்லின் மூலமாக இருக்கலாம் என்பது என் கருத்து.
‘பிரீதி செய்யுதலுடயது” என்னும் பதப் பொருளும், இந்த ஆட்டு வர்க்கம் தரும் வளத்தை ஒட்டி, அனைவரும் விரும்பத்தக்கது என்று ஆகிறது. கார்க ரிஷி கூற்றுப் படி இந்த நான்கு ஆட்டு வர்கங்களும், திருமகளின் குழந்தைகள்.
Another clarification.
வத்சரம் என்பது, ருதுக்களைக் கொண்டது.
வருடம் என்பது மாதங்களைக் கொண்டது.
சூரிய மாதமும் , சந்திர மாதமும், நிலையான சுழற்சியைக் கொண்டவை. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நிழைவது அந்த மாதப் பிறப்பாகும்.
அப்படி மகர ராசியில் நுழைவது மகர சங்கராந்தி (சங்கராந்தி என்னும் சொல் சங்கரமணம் என்னும் சொல்லிலிருந்து மருவியது. சங்கரமணம் என்றால் நுழைதல் என்று பொருள். ) வட அயனம் தனுர் ராசி 6 – ஆம் பாகையிலே ஆரம்பித்து விடுகிறது. அது மாத முதல் அல்ல. மகர ராசி பூஜ்யம் பாகை தான் தை மாத ஆரம்பம்.
இந்த வகையில், சித்திரை முதல் மாதம். அதில் சூரியன் நுழையும் நேரம் வருடப் பிறப்பு.
edwin
//வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.i am not criticising ….heir any scientific evidence for this//
Scientific evidence for what? All these are obvious truths of science.
ஏழு குதிரைகள், ஏழு வர்ணங்கள்.
சூர்ய்னே ஒரு குதிரையாகச் செல்லுதல் என்பது ஒரு வர்ணனை. சூரியனின் பிள்ளைகள் அசுவினி தேவர்கள்.
இவர்கள் ஜோடியாகச் செல்வது மற்றொரு வர்ணனை.
இதற்கு மேல் அசுவினி தேவர்களைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால், அதுவே ஒரு தனிக் கட்டுரையாக ஆகிவிடும்.
சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.
அச்வா என்றால் குதிரை.
அச்வா என்னும் வட மொழிச் சொல்லிலிருந்து அஸ்வினி என்பது வந்தது. அதன் தமிழ்ப் பெயர்கள், நான் காட்டிய மேற்கோள்களில் காணலாம்,
அஸ்வினி தேவர்கள் இரட்டையர்.
ஓடும் குதிரையாக உருவகப்படுத்தப் படும் சூரியனின் மைந்தர்கள் இந்த அஸ்வினி தேவர்கள்.
இருக்கு வேதத்தில் 12 இடங்களில் சொல்லப்படும் இவர்களைக் குறித்த வர்ணனைகள் மூலமும், புருஷ சூக்தத்தின் கடைசி பகுதி மூலமும், இவர்கள் எப்படி ஜோடியாக வருடத்தை அழைத்துச் செல்கிறார்கள் என்று புரியும்.
பகல்- இரவு என்னும் ஜோடி,
வானம்- பூமி என்னும் ஜோடி,
நெருப்பும் – காற்றும் (solar radiation) என்னும் ஜோடி,
பிராணன் – அபானன் என்னும் ஜோடி,
ஈரத் தன்மை – ஒளி என்னும் ஜோடி,
அவையெல்லாம் ‘அஸ்விநௌ வியாத்தம்’ என்று இரட்டைப் படையாக இருக்கும் அஸ்வினி தேவர்கள். இவை எல்லாம் வேதக் கருத்துக்கள்.
ஓயாது ஓடும் சூரியனின் secondary product ( அதன் குழந்தைகள் என்று உருவகப்படுத்தப்படுகிறது) என்னும் படி, சூரியனின் பயணத்துடன் என்றென்றும் கூடவே வரும் பகலும், இரவும் அஸ்வினி தேவர்கள்.
வானத்தையும் பூமியையும் இணைக்கும் சூரியனின் அம்சங்கள் அஸ்வினி தேவர்கள்.
சூரியனது நெருப்பாகவும், அவனிடமிருந்து வரும் வெப்பக் காற்றாகவும் இருப்பவர் அஸ்வினி தேவர்கள்.
உள்ளிழுக்கும் பிராணன், வெளியே விடும் அபானன் என்று, இரு வேறு விதமானவைகளை நிலை பெறச் செய்யும் சூரிய சக்தி அஸ்வினி தேவர்கள்.
இவர்கள் நாசாத்யர்கள். அதாவது ந- அசத்யர்கள். அதாவது சத்யமானவர்கள்
ஈரத் தன்மையாக ஒரு அஸ்வினி எல்லாவற்றிலும் ஊடுருவுகின்றான். மற்றொரு அஸ்வினி ஒளியாக ஊடுருவுகின்றான்
சூரியனின் by-product- ஆக இரண்டிரண்டாக வரும் இவை வருடம் முழுவதும், சூரியன் என்னும் குதிரையைப் போலவே ஓடிக் கொண்டிருப்பவை.
இவற்றின் தன்மைப் புரிந்து கொண்டால், மரணத்தை வென்றவன் ஆவாய். அதனால், இவர்கள் மருத்துவர்கள் எனப்படுகிறார்கள். வேதாந்தத்தை அறிந்தவனுக்கு இது தெரியும், இது புரியும்.
இக்கட்டுரையில் மேற்கோள் காட்டிய பரிபாடல் எழுதிய பண்டைத் தமிழர் இதைப் புரிந்து கொண்ட வேதாந்திகள்.
இக்காலத்தில் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேதம் படிக்கத் தேவையில்லை. பரிபாடல் போன்ற பழைய நூல்கள் சொல்லும் இறைக் கருத்துக்களைப் படியுங்கள்.
ஆனால் இன்றைய திராவிட உரை ஆசிரியர்கள் எழுதிய உரை வைத்துப் படிக்காதீர்கள். பரிமேலழகர் போன்ற பண்டைய தமிழ் உரை ஆசிரியர்கள் எழுதியவற்றைப் படித்தாலே போதும். இந்தக் கேள்வி உங்களிடமிருந்து வராது.
தங்களின் கட்டுரை மிக அருமையான ஆய்வுக்கட்டுரை. அடியேன் எழுதிய முந்தைய குறிப்பு சற்றே அவசரத்தில் ஏதோ பிழை காணும் தொனியில் வந்துவிட்டது. மன்னிக்கவும்.
பிழைகள் என்று சொன்னதை மாற்றி ஐயங்கள் என்று கேட்கிறேன்.
1 . பங்குனியில் பூரம் உத்திரம் இரண்டிலும் நிறைமதி வருவதால் பங்குனி அல்லவா?
2. ஆனி மாதம் அனுஷத்தால் வருவதா அல்லது அல்லது மூலம் மூலமா?
3. ஆவணிக்கு அவிட்டமா திருவோணமா?
4. தை பூசத்திலிருந்து வருவதல்லவா?
தெருட்ட வேண்டுகிறேன்.
தெரிந்துக் கொள்ள எவ்வளவு இருக்கிறது என்று, நுனிப்புல் மேயும் என்னைப் போன்றவர்களுக்கு, உங்கள் கட்டுரை மூலம் புரிய வைத்து விட்டீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
திரு குமார்
//1 . பங்குனியில் பூரம் உத்திரம் இரண்டிலும் நிறைமதி வருவதால் பங்குனி அல்லவா?
2. ஆனி மாதம் அனுஷத்தால் வருவதா அல்லது அல்லது மூலம் மூலமா?
3. ஆவணிக்கு அவிட்டமா திருவோணமா?
4. தை பூசத்திலிருந்து வருவதல்லவா? //
கட்டுரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
கடைசியில் சொல்லப்பட்டுள்ள நட்சத்திரங்களைக் கவனிக்கவும். அவற்றின் அடிப்படையில்தான் மாதப் பெயர்கள் அமைந்துள்ளன.
இவற்றுள் தை விதி விலக்கு. இக்கட்டுரையின் 2 -ஆம் பகுதியில் விளக்கம் காணவும்.
வானியல் விளக்கமாக, சந்திரன், சூரியனிலிருந்து 168-01 முதல் 180 பாகை வரை வரும் பொழுது பௌர்ணமி எனப்படும். கட்டுரையில் கூறியுள்ள நட்சத்திரங்களில் தான் பௌர்ணமி வரும். ஆனால், சூரிய, சந்திரன் வருடத்தின் கால அளவு மாறுபடுவதால், இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சந்திர வருடத்தில் ஒரு அதிக மாதம் வரும். அதனால், முன் பின்னான நட்சத்திரத்தில் சில சமயம் பௌர்ணமி ஆரம்பிக்கும், அல்லது முடியும். ஆனால் மேற்சொன்ன நட்சத்திரங்களில் அந்தந்த மாதங்களில் சூரியனும், சந்திரனும் எதிர் எதிராக வரும்.
நீங்கள் கேட்ட கேள்விகள்
1. மேற் சொன்ன காரணத்தின் படி, பூரத்தில் பௌர்ணமி ஆரம்பித்து, உத்திரத்தில் முடியலாம். அல்லது உத்தரத்தில் ஆரம்பித்து ஹஸ்தத்தில் முடியலாம். வால்மீகி ராமாயணத்தில், அனுமன் சீதையைக் கண்ட நற் செய்தியைக் கொண்டுவந்தவுடன், ராமர் உடனேயே போருக்குப் புறப்படலாம் என்று நாள் நட்சத்திரம் பற்றி கூறுகிறார். அவரது பிறந்த நட்சத்திரத்திலிருந்து, ஆறாவது நட்சத்திரமான உத்தரம் என்னும் சாதகத் தாரை (தாரா பலன் பற்றியது ) அன்று நடக்கிறது. மறுநாள் அந்த நட்சத்திரம் , ஹஸ்தத்தில் இணைகிறது, அதனால் உடனேயே புறப்படுவோம் என்கிறார்.
‘உத்தர நட்சத்திரம் நாளை ஹஸ்த நட்சத்திரத்துடன் சேருகிறது” என்கிறார் (வால்மீகி ராமாயணம் 6-4-5)
சாதகத் தாரையான உத்தரத்தில் கிளம்புவது சிறந்தது, ஆனால் மறுநாள் ஹஸ்தம் வந்து விடுகிறது என்று சொல்லாமல், உத்தரம் ஹஸ்தத்தில் சேர்ந்து விடுகிறது என்றால், உத்தரத்தில் ஆரம்பித்த பௌர்ணமி, சூரிய உதயத்துன் போது ஹஸ்தத்தில் தொடர்கிறது என்று பொருள் கொள்வதாகிறது. சூரிய உதயத்தில் இருக்கும் நட்சத்திரம் தான் நாளினது நட்சத்திரம். அதனால் முதல் நாளே பௌர்ணமி + உத்தரம் இருக்கும் நேரத்தில் ராமர் கிளம்பினார்.
2. ஆனியில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் மூலம். அல்லது கேட்டையிலும் துவங்கும். கேட்டை நட்சத்திரம் ஜ்யேஷ்டா என்று வடமொழியில் சொல்லப்படும். அதைகொண்டு வடமொழியில், ஆனி மாதம் ஜ்யேஷ்டா எனப்படும். அனுஷம் இன்னும் முன்னரே வருகிறது. பௌர்ணமி அப்பொழுது ஆரம்பிப்பது துர்லபம்.
3. ஆவணிக்கு அவிட்டம். முன் பின்னாக இருந்தாலும், அவிட்டத்தில் தான் நேர் எதிரே வருகின்றன.
4. வட மொழியில், பூசத்தில் பௌர்ணமி என்பதால், அது புஷ்ய மாதமாகிறது. தமிழில் தை என்பது சிறப்புப் பெயர். அது எவ்வாறு என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம்.
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்ற அறிவிப்பை கேலி, கிண்டல் செய்வதா? கருணாநிதி கண்டனம்
கடந்த கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது-பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக அறிவித்து அந்நாள் முதல் நம்முடைய ஆண்டு கணக்கை மேற்கொள்வோம். இது நாம் கணித்தது அல்ல. பெரும்புலவர் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி அன்றைக்கு பெரியார் போன்றோருடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்று அவர்கள் யாத்துத்தந்தது, வகுத்துத் தந்தது நம்முடைய தமிழ் வருட கணக்கு.
நமக்கு இருக்கிற வருடங்கள் எல்லாம் வருடப்பிறப்பு என்றாலும் கூட- ஒரு ஆண் வருட, இன்னொரு ஆண் வருடி அதன் மூலமாக பிறந்த வருடப்பிறப்புகள்தான் அந்த வருடப்பிறப்புகள் என்ற காரணத்தால் நம்முடைய வருடப்பிறப்பு, தமிழனுடைய வருடப்பிறப்பு இதுதான் -வள்ளுவருடைய ஆண்டு தான் நாம் வருடப் பிறப்பாக ஆண்டுப் பிறப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறுதியிட்டு முடிவு செய்து அரசின் சார்பாக சட்டப்பேரவையிலே அனைவருடைய ஏகோபித்த கருத்தையும் பெற்று வெளியிடப்பட்ட அந்த செய்தியை இன்றைக்கு பத்திரிகைகளிலே பார்த்தால் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, அவை எல்லாம் விமர்சிக்கப்படுகிற காட்சியை நாம் காண்கிறோம்.
அவற்றை பார்க்கும்போது எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒருவகையிலே இதில் மகிழ்ச்சிதான். நம்முடைய தமிழனை எப்படியாவது, யாராவது, கேலிசெய்து தூண்டிவிட்டால்தான் அவன் சொரணையோடு எழுந்து நடமாடுவான். அவன் உலகத்திற்காக செய்ய வேண்டிய, தமிழுக்காக ஆற்ற வேண்டிய காரியத்தை செய்வான் என்ற முறையிலே தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்கிற வீரம், இந்த மகிழ்ச்சியை நாமெல்லாம் இன்று பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் எல்லாம் சிந்திக்கும் வகையில் இந்த நாள் பயன்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்? இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?
யார் யார் என்ன கூறினாலும் நாங்கள் எங்கள் பண்பாட்டை கேவலபடுத்தும் அந்நியர்களையும் அவர்களின் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஏற்கவே மாட்டோம். அறிவியல் பார்வையில் வாழவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள்தான் எங்களை பற்றி முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள். ஆரியர்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் நாங்கள் ஏன் எங்கள் பண்பாடாக எங்கள் தலை விதியாக கொள்ளவேண்டும்? எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்ளுவோம். எங்களுக்காக ஆரியர்களாகிய நீங்கள் எந்த கவலையும் அக்கறையையும் கொள்ளவேண்டாம். முதலில் நீங்கள் நேர்மையாக நாணயமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அது உங்களின் ரத்த ஓட்டத்துக்கு எதிரானது அல்லவா? புரிகிறது.
//யாரோ
17 January 2010 at 2:55 pm
நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்?//
உங்களுக்கு பெயரில்தான் பிரச்சினை என்றால் மாதத்தில் ஏன் மாற்றம்?
//ராஜேந்திரன்
17 January 2010 at 3:13 pm
யார் யார் என்ன கூறினாலும் நாங்கள் எங்கள் பண்பாட்டை கேவலபடுத்தும் அந்நியர்களையும் அவர்களின் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஏற்கவே மாட்டோம்.//
நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் சமஸ்கிருதம் மூலமாக தமிழ் பண்பாடு எவ்வாறு கேவலப்பட்டது என்று விளக்கினால் உங்கள் கோபம் எல்லோருக்கும் புரியும்.
//அறிவியல் பார்வையில் வாழவே நாங்கள் விரும்புகிறோம்.//
//எங்களுக்காக ஆரியர்களாகிய நீங்கள் எந்த கவலையும் அக்கறையையும் கொள்ளவேண்டாம்.//
அறிவியலே தூக்கி எறிந்து விட்ட ஆரிய பொய் வாதத்தை இன்னும் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
வணக்கம் ராஜேந்திரன்.
முதல்வர் விரும்பியவாறே சொரணையோடு நீங்கள் வீறு கொண்டு எழுந்து, ‘பண்பாட்டினை ‘ எழுத்தில் காண்பித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் ரத்த ஓட்டத்தையே அலசிய அறிவையும், அறிவியலையும் பார்த்து வியக்கிறோம்.
மரபணு ஆராய்ச்சியாளர்களும் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும், ஆரியர் என்பதும் ஆரியத் திணிப்பு என்பதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகிறார்களே, அவை தான் அறிவியல் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் வேறு எதோ சொல்கிறீர்களே! ஓஹோ இதுதான் ‘திராவிட மாயை’ என்பதோ? கிணற்றுக்குள்ளேயே உட்கார வைக்கும் திராவிட அறிவியல் என்பது இதுதானோ?
பரவாயில்லை. நீங்கள் திராவிட அறிவியலிலேயே இருந்து கொள்ளுங்கள். எங்களுக்குத் தமிழ் அறிவு போதும். இந்தத் தமிழ் அறிவு அன்றைய தமிழர் கலாச்சாரத்தை எங்களுக்குக் காட்டுகிறது. ஆனால் உங்கள் திராவிட அறிவு, கதையைத் தாண்டி, கதை காட்டும் உள்ளறிவைக் கூடக் காண விடுவதில்லை. தை பிறந்தால் வழி பிறக்காதா? க- தை வழியாக உங்களுக்கும் அறிவு பிறக்காதா?
இது இருக்கட்டும். என்னவோ சமஸ்க்ருதம், சமஸ்க்ருத ஆதிக்கம் என்கிறீர்களே, உங்கள் பெயர் ஏன் அப்படி இருக்கிறது? யாரேனும் சம்ஸ்க்ருத ஆதிக்கம் உங்கள் மீது செய்து விட்டார்களா? உங்கள் தலைவர் பெயரும் ஏன் அப்படி? அவர் பிள்ளையின் பெயர் எந்த மொழியின் ஆதிக்கத்தில்? ‘நவீன கால பாகீரதன்’ என்று அவரும் தன தந்தையை ஒகேனக்கல் வெற்றிக்குப் (?) பெயர் சூட்டினாரே, ஏன்? சம்ஸ்க்ருதமும், ஆரியமும் இந்த அளவுக்கா திராவிட அறிவில் கலந்துள்ளன?
அது மட்டுமல்ல. திருவாலங்காடு செப்பேடுகள் என்று நூறு வருடங்களுக்கு முனனால் ராஜேந்திர சோழர் கால் செப்பேடுகள் கிடைத்துள்ளனவே, அவற்றிலும் சமஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளனவே? அப்பொழுதே சமஸ்க்ருதத் திணிப்பு செய்து விட்டார்களோ?
அதற்கு முன்னாலேயே, தொல்காப்பியர் தொல்காப்பியர் என்று ஒருவர் இருந்தாரே. அவர் இயற் பெயர் “திரனதுமாக்கினி” என்ற சமஸ்க்ருதப் பெயர் என்றும் அவர் வடபால் ஜமதக்கினியின் மகன் என்றும் நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் பாயிர உரையில் கூறியுள்ளாரே, அப்பொழுதே சமஸ்க்ருதத் திணிப்பு ஆரம்பித்து விட்டதோ?
தொல்காப்பியரும்
“இயற் சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”
என்று செய்யுள் ஈட்டுவதிலும் வடசொல்லைப் புகுத்தி விட்டாரே?
என்ன அநியாயம்?
அது மட்டுமா?
“வடசொல் கிளவி வடஎழுத்து ஓரி இ
எழுத்தோடு புணர்ந்த சொல் ஆகும்மே”
என்று வடமொழி எழுத்தை எப்படித் தமிழ்ப் படுத்தலாம் என்று வேறே சொல்லி விட்டார். திராவிடர்களாகிய உங்களுக்கு வேலை அதிகம் தான், தொல்காப்பியர் புகுத்திய சமஸ்க்ருத ஆதிக்கத்தைக் களைந்தெறிய வேண்டாமோ?
அது மட்டுமா? ‘திருக்குறள் தேவர்’ – அவர்தான் வள்ளுவர் என்று நீங்கள் சொல்கிறீர்களே – அவரை அப்படிச் சொல்லக்கூடாது. அவரைத் தேவன் என்று சொல்ல வேண்டும். ‘மறந்தேயும் வள்ளுவன் என்பான் ஓர் பேதை, அவன் சொல் கொள்ளார் அறிவுடையார்” என்று மாமூலனார் சொன்னபடி வள்ளுவர் என்று சொல்லாமல், ‘திருக்குறள் தேவர் என்று சொன்னால்தானே பொருத்தமாக இருக்கும்? அவரது மனைவியின் பெயரும் ‘மாதானுபங்கி’ என்னும் சம்ஸ்க்ருதப் பெயர் என்று நேமி நாதர் (போச்சுடா இதுவும் சம்ஸ்க்ருதப் பெயர்) கூறியுள்ளாரே, ஆனால் அப்பெயரே அவரது இயற் பெயர் என்றும் திராவிடத்தார் கூறுகிறார்களே, இந்த அளவுக்கு சமஸ்க்ருத ஆதிக்கம் எந்த நாளிலோ ஆரம்பித்து விட்டதே, அந்தக் கலாசாரத்தைத் தானே திருக்குறள் தேவரும், தொல்காப்பியரும் தந்திருக்க வேண்டும்? அப்பொழுதிலிருந்தே நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டுமே?
இதை எல்லாம் உங்கள் திராவிடத் தலைவர்கள் உங்களுக்குச் சொல்லவில்லையா? அறிவியல் பார்வை உங்களுக்குக் கிடைத்து விட்டதோ இல்லையோ, முதலில், சரித்திரத்தை – பழந்தமிழர் சரித்திரத்தை, அவர் வாழ்ந்த வேத வாழ்வைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிந்திக்கச் சொல்கிறார் இல்லையா தலைவர்? சுயமாகச் சிந்திக்க ஆரம்பியுங்கள். சீக்கிரம்…
இன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்திலேயே, திராவிட வித்தகர்கள் காட்டும் வேடிக்கையை பார்த்து சிரிப்பு தாளவில்லை.
திராவிடத் தலைவர் தர்மலிங்கத்தின் பேரன் பிரதீப்பின் திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர், திராவிட சிந்தனை கொண்ட தர்மலிங்கத்தின் பேரனுக்கு சம்ஸ்க்ருதப் பெயரா. இதோ நான் தரும் தமிழ்ப் பெயர் என்று ‘மதிவாணன்’ என்று பெயர் சூடி இருக்கிறார். வேதவழித் திருமணங்களில் ஜாத கர்மா, நாம கர்மா என்று திருமண நாள் அன்று மீண்டும் பெயர் சூட்டுவர். அந்தத் தொழிலையும் தன கையில் முதல்வர் எடுத்துக் கொண்டு விட்டார் போலிருக்கிறது!!
பத்து மாதம் சுமந்து, கனவுகளுடன் பெற்றெடுத்தத் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட தாய்க்குத்தான் முதல் உரிமை. தாய்தான் தன் குழந்தையில் காதில் பெயரைச் சொல்லுவாள். ஐங்குரவர்களுள் முதன்மை இருவரான தாய் தந்தையாரது பெயர் சூட்டும் உரிமையில், பெற்ற பிள்ளைக்குக் கூட கை வைக்க உரிமை கிடையாது என்பது பகுத்தறிவு. இவர்களது திராவிடப் பகுத்தறிவு காட்டும் புதுமைப் பகுத்தறிவு இதுதான் போல..
நிற்க,
பெயர் சூட்டினவரின் பெயர் சம்ஸ்க்ருதப் பெயர்.
யாருடை பேரன் என்றாரோ அவர் பெயரும் சம்ஸ்ருதப் பெயர் – தர்ம லிங்கம்.
சூட்டப்பட்ட பெயர் ‘மதிவாணன்’
மதி என்பது ‘மத்’ என்ற சமஸ்க்ருத வேரிலிருந்து வந்த, தமிழிலும் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்.
மத் என்றால் ஆட்டுதல், குலுக்குதல், கடைதல் என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்.
கடையப்பட்டு அறிவு வருவதால், அறிவுக்கு மதி என்று பெயர்.
கடையப்பட்டதால், மேருவுக்கு மந்தர மலை என்று பெயர் வந்தது.
கடையும் கோல் ‘மத்து’ என்றாகியது.
‘உன்மத்தம்’ பிடித்து அலைந்தான் என்கிறோமே, அதிகமாக ‘ஆடுகிறான்’, ‘ஆட்டம் போடுகிறான்’ என்பதால், உன்’மத்தம்’ என்று சொல்லப்படுகிறது.
அதே போல் வாணன்.
இது வாணி என்பதன் ஆண் பால் பெயர்.
‘வா’ என்னும் சமஸ்க்ருத வேரிலிருந்து வரும் பல பெயர்களுள் இவையும் உண்டு.
‘வா; என்றால் வெல்லுதல்.
ஒரு துறையில் வெல்லக்கூடிய திறமை ஒருவனுக்கு இருக்குமானால், அத்துறையில் ‘வாணன்’ என்னும் பெயர் பெறுகிறான்.
மதிவாணன் என்றால் அறிவு மூலம் வெல்லக்கூடியவன் என்று பொருள்.
வாணிகம், வாணிகன் என்பதெல்லாம் இந்த ‘வா’ என்னும் சமஸ்க்ருத வேரிலிருந்துதான் தோன்றின.
எப்படிப்போனாலும், தமிழும், சம்ஸ்க்ருதமும் பிரிக்க முடியாத மொழிகள். காரணத்தை முந்தின மன்வந்தரத்திலிருந்தே தேட வேண்டும் என்பது என் கருத்து.
சம்ஸ்க்ருதம் வேத பாஷையாக என்றும் உள்ளது.
பேசும் மொழியாக, வேறு மொழிகள் இருந்திருக்கின்றன.
பூமத்திய ரேகைக் பகுதி வரையில் பரவியிருந்த இந்த நாவலம் தீவு என்னும் ஜம்புத் தீவின் நாமிருக்கும் பகுதியின் பேசு மொழியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் இருந்திருக்க வேண்டும். 10,000 ஆண்டுகளுக்கு முன், முதல் சங்கம் வந்த போது, தமிழுக்கு வரி வடிவம் கொடுத்தவர் அகத்தியர். அன்றிலிருந்து எழுத்து வடிவிலும், தமிழ் வந்திருக்கிறது.வேத மொழியாக சம்ஸ்க்ருதமும், பேச்சு மொழியாக தமிழும் இருக்கவே, அவற்றுள் ஒற்றுமை இருப்பதில் வியப்பில்லை.
கொசுறு செய்தி:-
சொல். குரல், பேச்சு போன்ற பல பொருள்கள் இருந்தாலும், வாணி என்பதற்கு ‘வேத ஒலி என்றும் பொருள் உண்டு.
ஸ்ரீமத் பாகவதம் 11.12.18 -இல் ‘ததைவமே வ்யக்திர் இயம் ஹீ வாணி” என்று வேத ஒலி என்னும் பொருளில் வருகிறது.
வாணன் என்பதன் பொருளை, இதை ஒட்டியும் அறிந்து கொள்ளலாம்.
நம்ம கலிஞரு கீராறே….கலிஞரு; மஞ்சா துண்டுக்கு எவ்ளோ வெளக்கம் குட்துக்கறாருன்னு அல்லாத்துக்கும் தெரியும். அதுவும் அல்லா வெளக்கமும் ஒரே ”பகுத்தறிவு” மழ!
அதே மாரி, நேத்து அன்பயகன் வூட்டு கண்ணாலத்துல “கருணாநிதி” பேருக்கு படா டமாஸா ஒரு வெளக்கம் குட்துக்குன்னாரு, அஆங்!
முத்து, அயகிரி, கனிமொயி, ஸ்டாலின் ….ஒரு பெரிய லிஸ்டு போட்டு இன்னாத்துக்கு அப்டி பேர வச்சேன்னு அத வுட பெரிய வெளக்கம் குட்துட்டு, “கருணாநிதின்ற பேரு ஸம்ஸ்கிருதப் பேருன்னு அல்லாம் கிண்டல் பண்றாங்கோ; அப்டி கடியாது, அல்லா மத கடவுளுங்களுக்கும் உள்ள பொதுவான பேரு அது. அத்தொட்டு தான் அந்தப் பேர வச்சுக்கினேன்” அப்டீன்னு ஸோக்கா ஸொல்லிக்கினாரு கடவுள் நம்பிக்கையே இல்லாத இந்த மன்ஸன். நம்ம பாய்ங்க அல்லாவ “கருணாநிதி”ன்னா ஸொல்றாங்க? இல்ல நம்ம கிறுஸ்துங்க அல்லாம் ஏசுவ “கருணாநிதி”ன்னு ஸொல்றாங்களா? இன்னா புருடா இது, ஆ?
துண்டு வெளக்கம் ஸூப்பர்னா…பேரு வெளக்கம் ஸூப்பரோ ஸூப்பர்!
சரி, அத்தோட வுட்டாரா? ”பிரதீப்” அப்டீன்னு இருந்த கண்ணால மாப்ள பேர “மதிவாணன்” அப்டீன்னு மாத்திப்புட்டாருங்கோ! அன்பயகன் வூட்ல அல்லாரும் பேஜாராய்டாங்க. ஸொல்லவும் முட்ல; மெல்லவும் முட்ல. இன்னா செய்வாங்க? தானத் தலிவன், தமிழினத் தலிவன் இஸ்டமா செய்ய ஸொல்ல இன்னா செய்ய முடியும்?
தன்னோட பேரனுக்கு ”ஆதித்யா”ன்னு பேரு கீதே, அத மாத்த தாவல? ஊரானுங்க வூட்ல வந்து குந்திக்குனு அவனுங்க வூட்டு பஸங்க பேரல்லாம் மாத்திக்கினு கீறாரே இந்த கலிஞரு?
இதுல ஆரியன்…திராவிடன்…அப்டீன்னு ஓல்டாயிப்போன டுபாக்கூர் மேட்டர இன்னும் நம்பிக்கினு இருக்கானுங்க நறிய முட்டாப் பயலுங்க.
இன்னாவோ போ! நல்ல தமிழ் வியாபாரம்!
வெறுப்பா கீது நைனா…
வர்டா…
மன்னாரு
அலோ…அல்லார்கிட்டயும் மன்னாப்பு ஸொல்லிக்கிறேன். ஒரு மேட்டர எயுத ஸொல்ல படிக்கிறவங்களுக்கு கொயப்பம் வராம ஸொல்லனும். ஆனாக்கா நா அப்டி இல்லாம ஒரு ஸ்மால் மிஷ்டேக் பண்டேம்பா.
நா மேல ஸொல்லிக்கிற அன்பயகன் நம்ம மினிஷ்டரு அன்பயகன் இல்ல. பி.டபிள்யு.டி சீப் இஞ்ஜினீரு அன்பயகன். அதாவது பழைய தல தர்மலிங்கம் மகன் தான் இவுரு.
ஓகேவா?!
மன்னாரு
யாரோ
//மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?// உங்கள் மானம் உடலில் எங்கிருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக காட்டமுடியுமா? //மானமுள்ள தமிழனுக்கு// என்று நிரூபிக்க ஏதாவது சர்டிபிகேட் இருக்கா? நான் பகுத்தறிவு வாதிப்பா. சர்டிபிகேட் பாக்காம உங்க மானத்த நான் ஒத்துக்க மாட்டேன். சரியா!
ஏம்மா இவங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன்னு நேரத்தை வீனடிக்கிரேங்க என்ன சொன்னாலும் இவங்க திருந்தபோவது இல்லை மூழ்கி முத்தெடுக்க எத்தனையோ விசயங்களா இல்லை நாங்களாவது அனுபவிப்போமே
ஊரிலே yemara வாங்க இருக்கிற வரிலும் ematri கொண்டு irukkalame. இவங்க தொழில் நடத்துற atthani viyapramum திv utpada எல்லாமே இங்கிலீஷ் ஆதிக்கம் தான்.. சன் டிவி இலே ethanai tamil வார்த்தை வருddu, ஐயோ ஐயோ
பிரமாதமான அலசல்.
மறுமொழிகளும் பிரமாதம்
ஜெயஸ்ரீ அவர்களின் தமிழ் ஜோதிடம் மற்றும் அறிவியல் அறிவாழத்தைக் கண்டு வியக்கிறேன்.அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.