“தன்பெருமை தான் அறியான்”

முதல்வனாகிய சிவபரம்பொருள் அனைத்தையும் அறிவோன், முற்றறிவுடையன் (சர்வக்ஞன்), என வேதாகமங்களும் திருமுறைகளும் உரைக்க, மணிவாசகர் அவர்மேல் அறியமையொன்றை ஏற்றி உரைக்கின்றார். சிவன் அறியாத ஒன்று உண்டு. அதுதான் “தன் பெருமையைத் தான் அறியாத் தன்மை”!

the_dance_of_shiva_and_kali_hc74சிவபெருமான் பேராற்றலும் பெருந்தலைமையும் உடைய மகாதேவன். எனினும் ‘காடுடைய சுடலைப் பொடிபூசி’ ‘தோலுடுத்து’ ‘நஞ்சுண்டு’, கூட்டொருவர் இல்லாமல் “தான் தனியனாக” இருக்கின்றான். அவன் தேவர்களுக்கெல்லம் தேவன் என்றால், தன் பெருமைக்குத் தகுந்தபடி பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, அடிசிலும் அமுதமும் அல்லவோ உணவாகக் கொண்டிருக்க வேண்டும்? நஞ்சை அமுதமாக உண்பானோ?. பித்தேறியவன் தான் தன்னந்தனியனாக அலைவான். சான்றோன் கலைஞானம் உடையவன் தன்னையொத்த சான்றோர் கூட்டத்தில் இருப்பதையே விரும்புவான். இத்தகைய மாறுபட்ட இயல்புகளை உடைய சிவன் எங்ஙனம் முதல்வனாவான்?

இந்த ஐயங்களுக்கு மறுமொழியாகத் திருவாசகத்தில் திருச்சாழல் என்னும் பதிகத்தில், ஒரு பெண்,

“எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்,
தன் பெருமை தான் அறியாத் தன்மையன்”

என்று கூறுகின்றாள்.

“எங்கள் சிவபெருமான் தன்னுடைய ஆடையாகப் பீதாம்பரத்தையோ அன்றித் தோலாடையையோ எதை அணிந்து கொண்டாலும், அறுசுவை உண்டியையோ அல்லது ஆலகால நஞ்சையோ எதைத் தன் உணவாகக் கொண்டாலும், அந்த உடை உணவு ஆகியவற்றால் வரும் பெருமை சிறுமைகளைப் பொருட்படுத்தாதவன்;. அவன், உயிர்களின்மேல் கொண்ட பேரருள் ஒன்றைமட்டுமே திருவுள்ளம் கொள்பவன்; அவனுடைய பெருங்கருணையையும் பேராற்றலையும் அவன் இருப்பிடமும் உடுத்த தோலும்  உண்ட நஞ்சும் சுட்டுவன “ என்னும் கருத்தை அப்பெண்ணின் சொற்கள் விளக்குகின்றன.

கோயில் சுடுகாடு:

சிவன் பேரரசன். மஹாராஜாதி ராஜன். என்றால் அவனுக்குக் கோயில் ஜெய்பூர் அரண்மனை, மைசூர் அரண்மனைபோல சகல ஆடம்பரங்களும் கூடியதாக அல்லவா இருக்க வேண்டும்? அச்சமும் வெறுப்பும் தருவதாகிய சுடுகாடு அவனுக்கு எப்படிப் பெருமைதரும் கோயிலாகும் என்பது கேள்வி.

தோள்மேல் கங்காளம்:

சிவன் தோளிலும் மார்பிலும் சிரத்திலும் கரத்திலும் தரித்தும் தாங்கியும் இருப்பன சுடர்விடும் நவரத்தினங்கள் பொருத்தப்பட்ட விலைமதிப்புள்ள அணிகலன்கள் அல்ல.  அவை நரம்புகளால் கோக்கப்பட்ட எலும்பு மாலைகள்.

எலும்பு முதலியவற்றை அறியாமல் தீண்டிவிட்டாலே உடனே நீராடித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கச் சிவன் மார்பில் நரம்பு ஓடு எலும்புமாலை அணிந்து , தோள்மேல் கங்காளம் (முழு எலும்புக்கூடு) தாங்கியுள்ளானே, இதில் என்ன பெருமை? என்பது கேள்வி.

சுடலைப் பொடி பூசி-

சுடுகாட்டு மண்ணை மிதித்துவந்தாலே உடனே நீரில் மூழ்கித் தூய்மை செய்து கொள்ள வேண்டும். சிவனோ, சுடுகாட்டுச் சாம்பலையே மேனி முழுதும் பூசி நிற்கின்றானே , இதிலென்ன பெருமை.?

இந்தக் கேள்விகளையே கந்த புராணத்தில் தக்கனும் கேட்டான்.

உங்கள் பரன் என்னும் மேலோன்,
‘கானிற் சிந்தும் என்பொடு சிரத்தொகை அணியுமோ?’
‘தேவர் வெந்த சாம்பரும் பூசுமோ?’
‘கரிந்த தீயுடல் ஏந்தியே கானில், ஈந்த கேசமும் தரிக்குமோ?’
‘உலகம் அழிந்திடும்படி உயிர்களை முடிக்குமோ உங்கள் அமலன்?’

கோயில் சுடுகாடு –

உள்ள பொருள்தான் தோன்றும். இதனைச் ‘சற்காரிய வாதம்’ என்று சைவம் பேசும். காட்சிப் பொருளாக உள்ள பொருள்கள் அனைத்தும் செயப்படுபொருள்கள்; காரியப் பொருள்கள். அவை பேரூழி முடிவில் அழியும். அழிதல் என்பது இல்லாமலே போவதன்று. காரியம் முதற்காரணத்தில் அடங்குவதே அழிதல்; முதற் காரணத்திலின்று காரியமாதலே, தோன்றுதல். சட்டி உடைந்தால் மண்ணாகின்றது. மண்ணிலிருந்து மீண்டும் சட்டி பிறக்கின்றது.

உலகம் சடம் . தானாகப் பிறக்கவும் செய்யாது. தானாக அழியவும் செய்யாது. அதனைப் பிறப்பிக்கவும் ஒடுக்கவும் ஒருவன் வேண்டும். அனைத்தையும் ஒடுக்கியவன் எவனோ அவனே மீளத் தோற்றவும் செய்வான். எனவே அவனை ‘ஒடுங்கி’ எனச் சாத்திரம் கூறும்.

பிரபஞ்சம் அனைத்தும் சர்வ சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கும். மாயை சிவசத்தியைச் சார்ந்து இறைவன் திருவடியில் அவனுடைய வைப்பு சக்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சத்தியாக நிற்கும். சிவசத்தி  பிரிப்பின்றி அவனில் ஒடுங்கி நிற்கும். எனவே அனைத்தும் அவனில் ஒடுங்கிய நிலையில் அவன் ஒருவனே இருப்பன்.

அனைத்தும் ஒடுங்கிய நிலையே இங்கு ‘ சுடுகாடு’ என்றும் அந்த நிலையில் அவன் மட்டும் இருத்தலையே ‘தான் தனியன்’ என்றும்  கூறப்பட்டன.

சத்தியும் அவனுள் ஒடுங்குதலையும் வேண்டும்பொழுது பிரிந்து தோன்றுதலையும் சங்க இலக்கியம், ”பெண் உரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்’ என்று கூறிற்று. சிவனது திருவடியில் ஒடுங்கிய மாயையிலிருந்து, அத்திருவடிச் சார்பால் பிரபஞ்சம் அனைத்தும் மீளத்தோன்றும் புனர் உற்பவத்தை,

“நீல மேனி வாலிழைபாகத்து
ஒருவன் இருதால் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறுநூறு)

என்றும்,

“வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே” (அகநானூறு)

என்றும் சங்க இலக்கியங்கள் பேசின.

சுடலைப்பொடி பூசி:

bhairavar-darasuramசர்வ சங்காரகாலத்தில் பிரமன், திருமால் போன்றோர் உட்பட அனைவரின் உடல்களும் அவரவர் ஆட்சி செய்த உலகங்களும் அனைத்தும் எரிந்து சாம்பலாகும். உமையம்மையும் சிவனுள் கரந்து விடுவாள். தனித்து நிற்பவன் சிவன் ஒருவனே. எரிந்த சாம்பல் முழுவதும் சென்றுபடிவதற்கு வேறு இடம் இல்லாதபடியினால் சிவபெருமான் திருமேனியிலேயே படியும். சர்வ சங்காரத்தின் பின்னும் உலகுக்குச் சிவனே சார்பு என்பதையே ‘சுடலைப் பொடி பூசி’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இந்தச் சாம்பல் ஆதி நீறு எனப்படும். இந்த ஆதி விபூதியை, நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில், ‘மதுகையால் நீறணிந்து” என்று புகழ்ந்தார். திருநீறே சங்க இலக்கியத்தில் வெளிப்படும் முதற் சமயச்  சின்னம்.

இன்னொரு விபூதியும் உண்டு. அது அனாதி விபூதி எனப்படும். அது இறைவன் மேல் இயல்பாக உள்ள திருநீறு. நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு. இதனைத் திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் ‘பராவண மாவது நீறு’ என்று ஓதியருளினார். பரன் என்பதற்குப் பெண்பால் பரை. பரையாகிய சிவசத்தியின் வண்ணமே திருநீறு. திருநீறு அணிதல் சிவசத்தியாகிய சிவனருளுடன் கூடியிருத்தலை உணர்த்தும்.

தோலுடுத்தல்:

தாருகவனத்து முனிவர்கள் வைதிகர்களானாலும் தங்களது வேதக்கல்வியையும் கன்மம் செய்யும் ஆற்றலையும் வியந்து கர்வம் கொண்டு சிவபரம்பொருளின் முழுமுதற்றன்மையை மறுத்துச் சிவனை அழிப்பதற்கு ஒரு அபிசார வேள்வி நிகழ்த்தினர். அந்த வேள்வியிலிருந்து புலியும் யானையும் சிங்கமும் வந்தன. புலியைக் கொன்று அதன் உரியை அரையில் தரித்துக் கொண்டான். யானையைக் கொன்று அதன் தோலை மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்டான். மான்தோல் சிங்கத் தோல்களை ஏகாசமாக அணிந்து கொண்டான். ஏகாசம் என்பது மேலாடையைத் தோளினின்றும் மார்பில் விரிந்து வரும்படி அமைத்துப் பூணூல் போல அலங்காரமாக அணிவது.

எனவே, இவன் நாகரிகமற்றவர்கள் போன்று தோலாடை தரித்தவனல்லன். இவன் உடுத்த தோலாடை இவன் வேதங்கூறும் கன்மகாண்டங்களுக்கும் அப்பாலான், கன்ம பலனை ஊட்டும் அதிகாரி அவனே என்பதனை உணர்த்தும்.

கங்காளம் தோள் மேல் காதலித்தான்:

பிட்சாடனர் (கங்கைகொண்ட சோழபுரம்)
பிட்சாடனர் (கங்கைகொண்ட சோழபுரம்)

கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.

படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார். இந்த மூர்த்தம் சிறந்து விளங்கும் திருத்தலம் காயாரோகணம் எனப்படும். இந்த வரலாறு காஞ்சிப்புராணம் காயாரோகணப் படலத்தில் கூறப்படுகின்றது.

இதனால் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனைத் தவிரப் பிற தேவரெல்லாம் செத்துப் பிறக்கும்  ஆன்மவர்க்கங்கள் என்றும் சிவம் ஒன்றே நித்தியப் பொருள் என்றும் உணர்த்தப் பெற்றது.

கபாலத்தில் இரந்துண்பவன்:

சிவனுக்கும் ஐந்து முகம். பிரமனுக்கும் ஐந்துமுகம். அதனால் பிரமன் தானே முழுமுதற் கடவுள் என்ற் கர்வங்கொண்டு திருமாலுடன் கலகமிட்டான். அவன் நடுத்தலையின் முகம் சிவபெருமானை இகழ்ந்து நிந்தித்தது.

“உலகி னுக்குயான் ஒருவ னேஇறை;
உலகம் என்கணே உதித்து ஒடுங்கிடும்
உலகெ லாம்எனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படும்’”

என்று பிரமனின் உச்சித்தலை சிவனை இகழ்ந்து உரைத்தது.

பிரமனுடைய செருக்கை அடக்கி அவனை வாழ்விக்க வேண்டி இறைவன் வைரவக் கடவுளை (பைரவர்) அனுப்பினான். பைரவர் பிரமனின் நடுத்தலையை நகத்தாற் கிள்ளிக் கபாலமாகக் கைக்கொண்டார். அந்த பிரமகபாலம் ஏந்தியவனாகச் சிவபெருமான் ஊழிக்காலத்தில் ஆடுங் கூத்திற்குக் காபாலம் என்றுபெயர். இதனைக் கலித்தொகை என்னும் சங்க இலக்கியம்,

“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால்”

என்றும்,

“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரள
தலைஅங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்”

என்றும் புகழ்ந்து பேசுகின்றது.

பிரம கபாலத்தில் இறைவன் இரந்த செய்தி புராணங்களில் பேசப்படுகின்றது. அவன் வறுமையால் இரக்கவில்லை. இரந்து பெற்ற உணவை அவன் உண்டதாகவும் புராணங்களில் பேசப்படவில்லை.  அவன் இரந்தது குருதிப்பலி. குருதி அகந்தை, கர்வத்தைக் குறிக்கும்.

அவன் இரந்த செய்தியையும் இரந்த பொருளையும் திருமந்திரம் பேசுகின்றது.

“பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்?
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.”

பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”

எனத் திருமூலர் தெருட்டுகின்றார்.

கட்டுரையில் காட்டப்பட்ட செய்திகள் எல்லாம் கந்தபுராணம், காஞ்சிப்புராணம் முதலிய புராணங்களில் சிவபரத்துவத்தை விளக்கக் கூறப்பட்ட கதைகளே.

meykandarகதை கேட்கும் விருப்பம் மக்களுக்கு எல்லாக் காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு. அந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நல்லிசைப் புலவர்கள் சமய உண்மைகளை, தத்துவங்களை உருவகப்படுத்தியும், தேவர்களையும், தெய்வங்களையும் கதைமாந்தர்களாக்கியும் விளக்கிக் கூறினர்.

இங்குக் கூறப்பட்டன சிவபரம்பொருளின் சொரூபநிலை எனப்படும் உண்மைநிலை அல்ல.

இங்கு காட்டப்பட்ட வடிவங்களும், பிட்சாடனக் கோலமும் தமிழகத்தில் கபாலீச்சரம், பசுபதீச்சரம், மாகாளம், காயாரோகணம் எனப் பெயரிய தலங்களில் விளங்குபவை. இவை சைவம் தமிழகத்தில் வளர்ந்த வரலாற்றையும், சைவமானது பவுத்த சமணங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள வேதப்புறம்பான காபாலம், மாவிரதம், பாசுபதம், காளாமுகம் முதலிய நெறிகளைத் தழுவி ஏற்றுக் கொண்ட உண்மையையும் விளக்குவனவாகும். பிற்காலத்தில் வடமொழிப் பாடியகாரர்களால் இதுவே சைவம் எனப் பேசி இகழும் அளவிற்கு இந்நெறிகளுடன் சைவத்திற்கு ஒட்டுதல் இருந்தது.  இதுவே மெய்கண்டார் தோன்றி சிவஞானபோதம் படைக்கக் காரணமாகவும் ஆயிற்று. மெய்கண்டார் வேதத்தைத் தழுவித் திருநெறிய தமிழ்வழி நாட்டிய கொள்கை ‘சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என்றும் சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்றும் ஆன்றோரால் வழங்கப்படுகின்றது.

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமிழிலும், சைவத்திலும் ஆழ்ந்த புலமை உடையவர். பண்டைத் தமிழ் இலக்கியம், திருமுறைகள், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து ஆய்வு நோக்கில் எழுதக் கூடியவர்.

தமிழ்ஹிந்து, திண்ணை, சொல்வனம், வார்த்தை முதலிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

93 Replies to ““தன்பெருமை தான் அறியான்””

  1. நல்ல பதிவு . மஹா சிவராத்திரி வேளையில் தந்து சிவனின் மகிமை உணர்த்தியதற்கு நன்றி .

  2. சிவ‌ம் சாம்ப‌ல் பூசி, த‌னித்திருந்து வ‌லிமை நிலையைக் காட்டும் த‌த்துவ‌ம். அது த‌த்துவ‌ ஞானியின் நிலை.

    அரி ப‌ட்டுப் பீதாம‌ப‌ர‌ம் த‌ரித்து, வ‌லிமை காட்டும் த‌த்துவ‌ம்.
    அது ம‌ன்ன‌ரின் நிலை போன்ற‌து.

    இர‌ண்டுமே , ட‌பிள் பேர‌ல் க‌ன்னாக‌ செய‌ல் ப‌ட்டு ந‌ம‌து அக‌ந்தையை அழித்து ஞான‌த்தை அளிக்கும்

  3. மதிப்பற்குரிய முனைவர் ஐயா அவர்களே,

    நீங்கள் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிந்தனையை தூண்டி , ஆன்மீகப் பாதையில் முன்னேற வைத்துள்ளது. இந்தக் கட்டுரையில் கூட சிவன் நீறு பூசி, எலும்பு அணிந்து இருந்த கோலத்தை நீங்கள் விவரித்து யாக்கை நிலையாமை தத்துவத்தை எனக்கு சூடு போட்டது போல உணரவைத்தது.

    என்னிடம் ஒரு சிறு பிழை உண்டு. அவசரத்திலே சில கட்டுரைகளை முழுவதும் படிக்காமல் சென்று விடுவேன். அவ்வாறே உங்களின் இந்தக் கட்டுரையையும் முழுவதும் படிக்காமல் ஓரளவு படித்து என் கருத்தையும் எழுதி விட்டேன்.

    பிறகு வேறொரு விவாதத்தில் நண்பர் கந்தர்வன், ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதைப் படித்து விட்டு திரும்பி வந்து இந்தக் கட்டுரையில் அவ்வாறு உள்ளதா எனப் படித்தேன். அப்படியே உள்ளது.

    //கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன.

    படைப்புக் கடவுள், காத்தற்கடவுள் ஆகியோரின் காயங்களைச் (எலும்புக் கூடுகளை) சிவபெருமான் தன்தோள்மேல் ஏற்றிக் கொள்வதால் அவர் காயாரோகணர் எனப் புகழப்படுகிறார். இந்த மூர்த்தம் சிறந்து விளங்கும் திருத்தலம் காயாரோகணம் எனப்படும். இந்த வரலாறு காஞ்சிப்புராணம் காயாரோகணப் படலத்தில் கூறப்படுகின்றது.

    இதனால் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனைத் தவிரப் பிற தேவரெல்லாம் செத்துப் பிறக்கும் ஆன்மவர்க்கங்கள் என்றும் சிவம் ஒன்றே நித்தியப் பொருள் என்றும் உணர்த்தப் பெற்றது.//

    நீங்கள் வயதிலும் , அறிவிலும், சிந்தையிலும், பக்தியிலும் எங்களை விட உயரத்தில் இருக்குறீர்கள்.

    இப்போதோ புறம் தொழாமை என்ற கான்செப்ட் முன்னெடுக்கப் பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சைவ வைணவப் பிணக்கு தலை காட்டுகிறது. எல்லாக் கடவுளும் நன்மையே போதிக்கின்றனர். எல்லாக் கடவுள்களும், நல்லவருக்காகா தீமையை எதிர்த்துப் போரிடுவதாகவே உளது.

    எனவே போட்டியும் போராட்டமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலே தானே நடை பெற வேண்டும். இந்நிலையில் சிவன் தான் பெரிய கடவுளா அல்லது நாராயணன் தான் பெரிய கடவுளா என்ற சர்ச்சை நம்மை ஆன்மீகப் பாதையில் முன்னேறாமல் தடுக்குமோ என ஐயப் படுகிறேன்.

    இதனால் ஒரு சாரார் சிவனை மறைமுகமாக மட்டம் தட்டி பேசுவதும், மறு சாரார் நாராயணனை மறைமுகமாக மட்டம் தட்டிப் பேசுவதுமாக இருவருக்கும் இருக்கும் புகழ்ச்சியை விட இகழ்ச்சி அதிகமாகி விடும் போல இருக்கிறதே.

    நீங்கள் எழுதிய ஒவ்வொரு கட்டுரையும் எனக்கு சிந்தனையை தூண்டி , ஆன்மீகப் பாதையில் முன்னேற வைத்துள்ளது.

    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே. சமரசத்தை நோக்கி நாம் பல படிகள் முன்னோக்கி வைக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கோருகிறேன்.

    மார்க்கண்டேயன் பற்றி தங்கள் எழுத வேணும் எனக் கோருகிறேன்.
    இது என்னுடைய வேண்டுகோள்.

    புறம் தொழாமை கோட்பாட்டை எதிர்த்துப் போராடியதில் நேரம் செலவிட்ட எனக்கு, மார்க்கண்டேயன், பிரஹலாதன், துருவன் ஆகியவற்றின் வரலாறு ஆன்மீகப் பாதையில் முன்னேற எனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

    உங்களது நடையிலே மார்க்கண்டேயனை விளக்குங்கள் எனக் கோருகிறேன்.
    .

  4. //
    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,
    //

    எனக்கு அப்படி என்னும்படி இல்லை – சிவனை பரமாத்மாவாக கொண்டாடுபவர்கள் – மற்றவரை ஜீவாத்மாவாககும் நினைப்பார்கள் – அப்படி இருக்கையில் எல்லா தொழிலையும் சிவனே செய்வதாக நினைப்பார்கள்
    இதை வெறுப்பு கருத்து எனு எண்ணவதற்கு ஏதும் இல்லை – முனைவர் அய்யாவை பார்த்தாலே அன்பு நிறைந்தவர் வெறுப்பு இல்லாதவர் என்று தான் தோன்றுகிறது

    மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்

    மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம்

  5. // மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்

    மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம் //

    சாரங், என்னையும் சேர்த்து சொல்கிறீர்களோ?? :)) பரவாயில்லை.

    முனைவர் அய்யாவின் தீவிர சமயவாதக் கருத்துக்களும் எனக்கு ஏற்புடையன அல்ல என்றும் ஒரு மறுமொழியில் சொல்லியிருக்கிறேன் (”அடிமுடி தேடிய புராணம்- ஒரு விளக்கம்” கட்டுரையில்).

    ஆனால் இதில் திருமாலை *இழிவாக* கூறியிருக்கிறது, இதை மட்டும் தனியே படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கந்தர்வன் அலமருவதில் பொருள் இல்லை. புராண விவரணங்களைக் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளாமல் literal ஆகப் பொருள் கொள்வதன் விளைவு அது – இந்து மரபில் அப்படி ஒருபோதும் செய்யப் படவில்லை என்பதே உண்மை. அதனால் தான் கற்பனைக்கும் மீறிய அதி கற்பனைகளை அதி-யதார்த்தமாக (hyper-reality) புராணங்கள் பேசுகின்றன.

    சிவபிரான் சம்ஹார மூர்த்தி என்பதால் இங்கு பிரபஞ்சம் முழுவதும், படைப்பு/காப்புக் கடவுளர்கள் கூட மஹா சம்ஹாரத்தில் ஒடுங்குவதாக உருவகப் படுத்தப் பட்டுள்ளது என்று நான் புரிந்து கொள்கிறேன். இதே கருத்தாக்கத்தை அப்படியே திருப்பிப் போட்டு சிருஷ்டியின் மீது ஏற்றி வைஷ்ணவத்தில் சொல்கிறார்கள்.

    நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
    தான்முகமாய் சங்கரனைப் படைத்தான் – யான்முகமாய்
    அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
    சிந்தாமற் கொண்மினீர் சேர்ந்து

    – திருமழிசையாழ்வார்.

    அவ்வளவு தான். ஒன்றில் படைப்பு, மற்றொன்றில் அழிப்பு. அதுதான் வித்தியாசம்! இரண்டையுமே குறியீட்டு ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    கங்காளம் என்பதன் குறியீட்டு விளக்கம் அதுதான். சைவ புராணங்கள் காபாலிகம், பைரவம் போன்ற நாட்டார் மதங்களின் கருத்தாக்கங்களுக்கு இப்படி “குறியீட்டு ரீதியாக” விளக்கம் அளித்து சைவத்துள் இணைத்துக் கொண்டது என்று ஒரு வரலாற்றுப் பார்வையையும் சேர்த்தே முனைவர் ஐயா இங்கு எழுதியிருப்பது சுவாரஸ்யமானது.

    இதே போன்று வைஷ்ணவத்திலும் நடந்திருக்கிறது – மத்ஸ்யம், கூர்மம், வராகம், நரசிம்ஹம் ஆகியவை தனிப்பட்ட பழங்குடி வழிபாடுகளாக இருந்தவையே. பின்னர் விஷ்ணுவின் அவதார கோட்பாடு என்னும் சரடில் அவையனைத்தும் இணைக்கப் பட்டன என்றும் வரலாற்றாசியர்கள் பலர் கருதுகிறார்கள்..

    பூரி ஜகன்னாதர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் போன்ற சில கோயில்களில் இத்தகைய இணைப்பு நடந்ததற்கான தடயங்கள் கூட ஐதிகங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன என்றும் மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். .

    இந்துப் பார்வையில் இது பற்றி எழுதப் பட்ட ஒரு நல்ல புத்தகம் –
    Adi Deo Arya Devata – A Panoramic View of Tribal Hindu Cultural Interface
    By Sandhya Jain.
    https://www.amazon.com/Adi-Deo-Arya-Devata-Panoramic/dp/8129105225

  6. திரு ஜடாயு,

    //
    புராண விவரணங்களைக் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளாமல் literal ஆகப் பொருள் கொள்வதன் விளைவு அது – இந்து மரபில் அப்படி ஒருபோதும் செய்யப் படவில்லை என்பதே உண்மை. அதனால் தான் கற்பனைக்கும் மீறிய அதி கற்பனைகளை அதி-யதார்த்தமாக (hyper-reality) புராணங்கள் பேசுகின்றன.
    //

    ‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத-த்வைத ஆச்சாரியார்கள் புராணங்களை literal-ஆகத் தான் வியாக்கியானம் பண்ணியுள்ளனர். ஆதி சங்கரரும் அப்படியே literal-ஆகத் தான் சாரீரக பாஷ்யத்தில் (III-iii-32) புராணங்களை எடுத்துள்ளார். ஆகையால், ‘இந்து மரபில் இது இல்லை’ என்று நீங்கள் கூறுவது சரி அன்று. இன்றைய எந்த வைதீக மடங்களையும் கேட்டுப் பாருங்கள் – சிருங்கேரி ஆசாரியரைக் கேட்டுப் பாருங்கள், அஹோபில, வானமாமலை ஜீயரைப் போய்க் கேட்டுப்பாருங்கள். அவர்கள் யாரும் ‘புராணங்கள் கற்பனைகள், உண்மை நிகழ்வுகள் அல்ல’ என்று சொல்கிறார்களா என்று கேட்டு வந்து எழுதுங்கள்.

    //
    மத்ஸ்யம், கூர்மம், வராகம், நரசிம்ஹம் ஆகியவை தனிப்பட்ட பழங்குடி வழிபாடுகளாக இருந்தவையே. பின்னர் விஷ்ணுவின் அவதார கோட்பாடு என்னும் சரடில் அவையனைத்தும் இணைக்கப் பட்டன என்றும் வரலாற்றாசியர்கள் பலர் கருதுகிறார்கள்..
    //

    இந்த ஆராய்ச்சி எல்லாம் அரை-குறையானவை. இதைப் போல, “வேதத்தில் விஷ்ணு சூரியனைக் குறிக்கும்” என்றும், “விஷ்ணு, நாராயணன், வாசுதேவன் இவர்கள் வெவ்வேறு தெய்வங்களாக இருந்தனர்” என்றும், “திராவிடக் கடவுளாகிய திருமாலும் ஆரியக் கடவுளாகிய விஷ்ணு வேறு” என்றும் கூறுவதன் கோஷ்டியில் இது அடங்கும். தசாவதாரங்கள் அனைத்துமே விஷ்ணு தான் என்று வேதத்தில் பல இடங்களிலும், பரிபாடல் முதலிய தமிழ் இலக்கியங்கள் சான்றாகவும் உள்ளன. இளங்கோவடிகள் “வடவரையை மத்தாக்கி” என்ற பாடலில் நாராயணனுடைய பத்து அவதாரங்களைப் பற்றியும் பாடியுள்ளார்.

    //
    பூரி ஜகன்னாதர் கோயில்…இத்தகைய இணைப்பு நடந்ததற்கான தடயங்கள் கூட ஐதிகங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன என்றும் மானுடவியலாளர்கள் கருதுகின்றனர்.
    //

    ஐயா, மீண்டும் கூறுகிறேன் – இந்த மனிதவியல் ஆராய்ச்சி எல்லாம் அரைகுரையானவை. இதை ஏற்றால், “ஆரியர்கள் நாடு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு படை எடுத்து வந்தனர்” போன்ற ஆராய்ச்சிகளையும் ஏற்க வேண்டியது தான்!!

    பூரி ஜகன்னாதர் கோயிலையும் ஏழுமலையானையும் ஒரே இடத்தில் ரிக் வேதம் துதிக்கிறது (X.155.1, X.155.3). மிகவும் ச்பஷ்டமாகவே உள்ளது. சாயண பாஷ்யத்திலும் அப்படியே உள்ளது. திருவேங்கடமுடையான் விஷ்ணுவே என்று இளங்கோ மதுரைக்காண்டம், காடு காண் காதை 35 தொடங்கி 57 வரி முடிய தெளிவாகக் கூறுகிறார். இதற்கும் முன் சங்க இலக்கியமான பரிபாடலும் திருமால் அரங்கத்திலும் திருமலையிலும் எழுந்தருளியிருப்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

  7. //
    ஆனால் சில பத்திகள் நாராயணனை மட்டம் தட்டுவதாக வைணவர்கள் என்னும் படி இருக்கிறது,
    //

    வைணவ‌ ச‌முதாய‌த்தினரின் ம‌ன‌ம் புண் ப‌ட்டு ச‌மூக‌ ஒற்றுமை கெட‌ வாய்ப்பு உள்ள‌தை சுட்டிக் காட்ட‌வே அவ்வாறு எழுதினேன்.

    //மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும் //

    ந‌ல்ல‌து. வைண‌வ‌ர்க‌ள் எப்ப‌டி எண்ணினாலும் எண்ணாவிட்டாலும் , //கங்காளம் என்பது முழு எலும்புக்கூடு. ஊழிக்காலத்தில் தானே முதல்வன் என்றுணர்த்த படைப்புக் கடவுளர், காத்தற்கடவுளர் ஆகியோரின் முழு எலும்புக் கூடுகளை இறைவன் தன் இரு தோள்களிலும் விரும்பித் தாங்குவன் எனத் திருமுறைகளும் புராணங்களும் கூறுகின்றன//இந்த‌க் க‌ருத்து ச‌ம‌ர‌ச‌த்துக்கு இடையூறு ஏற்ப‌டுத்தும் க‌ருத்து என்ப‌தாக‌வே நான் எண்ணுகிறோம்.

    எல்லோரும் அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுளை ம‌ன‌மாற‌ வ‌ண‌ங்க‌லாம். அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுள்க‌ளின் த‌த்துவ‌ சிற‌ப்புக‌ளை எடுத்து வில‌க்க‌லாம். ஒவ்வொரு க‌ட‌வுளுக்கும் ஒரு த‌த்துவ‌ம் இருக்கிர‌து. சிவ‌னாரின் த‌த்துவ‌ம் ஒன்று. இராம‌ரின் த‌த்துவ‌ம் ஒன்று. ப‌ர‌சுராம‌ரின் த‌த்துவ‌ம் ஒன்று. ஆனால் எல்லோருமே ந‌ன்மைக்காக‌ தீமையை எதிர்த்து செய‌ல் ப‌டும் கொள்கை, செய‌ல‌ பாடு உடைய‌வ‌ர்க‌ல். அதே நேர‌ம் ஒவ்வொரு த‌த்துவ‌த்திலும் ஒரு சிற‌ப்பு உள்ள‌து. அத‌ன் புரித‌ல் ம‌க்க‌ளுக்கு உத‌வும்.

    த‌ன‌க்கு பிடித்த‌ க‌ட‌வுளை நெக்குருகி வ‌ண‌ங்குவ‌து , த‌ன் க‌ட‌வுள் வாழி பாட்டுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து, அந்த‌ வ‌ழி பாட்டு முறையை ப‌ர‌ப்புவ‌து என்ப‌து வேறு – ஒரு க‌ட‌வுள் ம‌ட்டுமே உண்மை அல்ல‌து பெரிய‌ க‌ட‌வுள் என்றும், ம‌ற்ற‌ க‌ட‌வுள்க‌ளை வ‌ண‌ங்க‌வே கூடாது என்ற வ‌ழி பாட்டு முறையை ப‌ர‌ப்புவ‌து போட்டிக‌ளை உருவாக்கும் என்ப‌துமே எங்க‌ளின் தெளிவான‌ க‌ருத்து.

    இதை தெளிவாக‌ சொல்லி இருக்கிறோம்.

    //மேலும் சமரம் கோருவோர் எல்லோருடனும் தாழ்மையுடன் “approach” செய்ய வேண்டும் – அதுவே மனதை சமமாக வைக்கும் ஸ்தித பிரக்யர்கள் கொண்டாடும் உண்மையான சமரசம்//

    முனைவ‌ர் ஐயா, என்னை விட‌ வ‌ய‌திலும், அனுப‌வ‌த்திலும் மேலான‌வ‌ர் என்ப‌தால் அவ‌ரிட‌ம் தாழ்மையான் முறையிலே, ஆனால் தெளிவாக‌வே ந‌ம்முடைய‌ க‌ருத்தை தெரிவித்தோம்.

    சார‌ங், நீங‌க‌ளும் என்னை விட‌ வ‌ய‌த‌ன‌வ‌ர் என்றால் உங்க‌ளை தாழ்மையுட‌ன் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌வும் த‌ய‌க்க‌ம் இல்லை. ஆனால் ம‌க்க‌ள் ச‌முதாய‌ ந‌ன்மைக்காக‌ கொள்கை போராட்ட‌ம் தொட‌ரும். By the by நீங்க‌ள் இளைய‌வ‌ர் என‌ நினைக்கிறேன்.

  8. ஒரே ஒரு திருத்தம்:

    “‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம்.”

    என்பதை

    “‘புராணங்கள் கற்பனைகள்’ என்பது இந்துக்களில் ஒரு குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம்.”

    என்று பொருள் கொள்ளவும்.

  9. ஜடாயு அவர்களே

    //
    சாரங், என்னையும் சேர்த்து சொல்கிறீர்களோ?? :)) பரவாயில்லை.
    //

    இல்லை – வேறொரு கட்டுரையின் பின்னூட்டத்தில் நீங்கள் மட்டுமே இரண்டையும் சமமாக எட்திர்தீறல் என்று எழுதி இருக்கிறேன் – அதை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் (அதாவது அந்த கட்டுரையை track செய்து கொண்டிருக்கமாட்டீர்கள்)

    நான் சொல்லவந்ததை முழுவதுமாக பார்த்தல் இப்படி உங்களுக்கு தோணாது என நினைக்கிறேன் அதாவது இந்த இரண்டு பத்திகளையும் சேர்த்து ஒரு பொருள் கொண்டால் [சைவர்களுக்கு சிவன் பரமாத்மா அதனால் அவர்கள் இப்படி கொண்டது தவறில்லை]

    //
    எனக்கு அப்படி என்னும்படி இல்லை – சிவனை பரமாத்மாவாக கொண்டாடுபவர்கள் – மற்றவரை ஜீவாத்மாவாககும் நினைப்பார்கள் – அப்படி இருக்கையில் எல்லா தொழிலையும் சிவனே செய்வதாக நினைப்பார்கள்
    இதை வெறுப்பு கருத்து எனு எண்ணவதற்கு ஏதும் இல்லை – முனைவர் அய்யாவை பார்த்தாலே அன்பு நிறைந்தவர் வெறுப்பு இல்லாதவர் என்று தான் தோன்றுகிறது

    மேலும் வைணவர்கள் நினைப்பார்கள் என்பது எதோ கந்தர்வன் கேட்டதற்காக சொன்னது போல் இருக்கிறது – சமரச வாதிகள் அன்றோ மட்டம் தட்டியதாக என்ன வேண்டும்
    //

    //
    அவ்வளவு தான். ஒன்றில் படைப்பு, மற்றொன்றில் அழிப்பு. அதுதான் வித்தியாசம்! இரண்டையுமே குறியீட்டு ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
    //

    நானும் இதே கருத்தை மனதில் கொண்டு தான் இப்படி சைவ புராங்களில் வருவது த்வேஷம் சார்ந்தது அல்ல என்றே கொள்ளவேண்டும் என்று கொண்டேன்

  10. //
    சார‌ங், நீங‌க‌ளும் என்னை விட‌ வ‌ய‌த‌ன‌வ‌ர் என்றால் உங்க‌ளை தாழ்மையுட‌ன் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌வும் த‌ய‌க்க‌ம் இல்லை. ஆனால் ம‌க்க‌ள் ச‌முதாய‌ ந‌ன்மைக்காக‌ கொள்கை போராட்ட‌ம் தொட‌ரும். By the by நீங்க‌ள் இளைய‌வ‌ர் என‌ நினைக்கிறேன்.
    //
    நண்பரே நான் சம நோக்குடயவர்களின் லக்ஷணங்களை சொன்னேன் [கண்ணன் சொன்னதை ] – நான் என்னை கூறியதை பற்றி சொல்லவில்லை – அந்த எண்ணம் எல்லாம் எனக்கு வரத்து – வேறு சிலரையும் (வயதிலும்) முதியவர்களாக உள்ளவரையும் அணுகுவதில் வித்யாசம் இருந்தது அதையே சொன்னேன் – என்னை திட்டினால் திட்டுபவர்க்கு புண்ணியமே கிட்டும் (அப்படிப் பட்ட ஒரு கீழ் நிலை மனிதன் நான்)

  11. கந்தர்வன் அவர்களே

    //
    புராணங்கள் கற்பனைகள்’ என்பது ஒரு இந்துக்களில் குழுவினருடைய கொள்கையாக இருக்கலாம். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத-த்வைத ஆச்சாரியார்கள் புராணங்களை literal-ஆகத் தான் வியாக்கியானம் பண்ணியுள்ளனர்.
    //

    இந்த கருத்தை ஒத்தே ஜடாயு அவர்களும் வேறொரு மறுமொழியில் (அடி முடி காண அதிசயம் ஒரு பார்வை) சொல்லி இருக்கிறார் – சைவ புராணங்களை குறியீடாக கொள்வர் ஆனால் வைணவ புராணங்களை அவதார நிகழ்வாகவே கொள்வர் என்று

    அதை தெளிவு படுத்தவே இதை தாழ்மையுடன் சொல்கிறேன்

    ஜடாயு அவர்கள் சொன்னது
    //
    பொதுவாக வைஷ்ணவ புராணங்களில் நிகழ்வுகள் மானுடச் செயல் போன்று அமைந்த தெய்வ லீலைகள் என்று கருதப் படுகின்றன. அவதார தத்துவம் என்ற சரடில் அவை அழகுறக் கோர்க்கப் படுகின்றன. உணர்ச்சிமயமான வெளிமுக பக்திக்கு அவை பெரிதும் தூண்டுதல் அளிக்கின்றன.

    ஆனால் சைவ (மற்றும் சாக்த) புராணங்கள் அனைத்துமே குறியீட்டுத் தன்மை கொண்டவை.
    //

  12. // ஐயா, மீண்டும் கூறுகிறேன் – இந்த மனிதவியல் ஆராய்ச்சி எல்லாம் அரைகுரையானவை. இதை ஏற்றால், “ஆரியர்கள் நாடு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு படை எடுத்து வந்தனர்” போன்ற ஆராய்ச்சிகளையும் ஏற்க வேண்டியது தான்!! //

    ஐயா கந்தர்வன்,

    முதலில் நான் ”இந்துப் பார்வையில் எழுதப் பட்டிருக்கும் நல்ல நூல்” என்று சொல்லிக் குறீப்பிட்ட புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது அது பற்றி அறிவீர்களா? பின் எப்படி இப்படி வந்து ”அரைகுறை” என்று ஆணித்தரமாக கருத்து கூறுகிறீர்கள்?

    இன்றைக்கு இந்து மதத்தின் வரலாற்றை (மற்றூம் எல்லா புராதன மதங்கள், கலாசாரங்களின் வரலாற்றினையும் கூடத் தான்) மானுடவியல், சமூகவியல், அகழ்வாராய்ச்சி, மேலும் அறிவியல் அளிக்கும் பல்துறை உபகரணங்களையும் கொண்டு ஆராய்கிறார்கள்.. இதெல்லாவற்றையும் ஒரெயடியில் கொசு விரட்டுவது போல தள்ளிவிட்டு எனது ஐதிகம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது இதெல்லாம் அரைவேக்காடு என்று சொன்னால், அது நகைப்புக்குரியது மட்டுமல்ல, தற்கொலைக்கொப்பான செயலும் ஆகும். அப்படிச் சொல்லும் போக்கால் இந்து மதத்திற்கு நன்மை விளையாது, இழப்பே உண்டாகும்.

    ஆரிய இனவாதம் என்ற ஒரு தவறான கருத்தாக்கம் வரலாற்றுத் துறையில் இருப்பதால் (அதுவும் பெருமளவு தேய்ந்து விட்டது) *எல்லா* ஆய்வுகளுமே தவறாகுமா? அதெல்லாம் தூக்கிப் போடவேண்டியதா? என்ன பார்வை இது??

    ஏற்கனவே இந்துமதத்தை ஆய்வு நோக்கில், வரலாற்று, சமூகவியல் நோக்கில் அணுக, வெளிப்படுத்த, ஆய்வு செய்ய நாம் (அதாவது இந்து மரபின் மீது மரியாதை கொண்டு இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் கல்விகற்ற தரப்பினர்) பெருமளவில் தவறிவிட்டோம். நாம் கோட்டை விட்ட நேரத்தில் முற்றாக எதிர்த் தரப்புக்கள் அந்த discourse ஐ கையில் எடுத்து விட்டார்கள். இதிலிருந்து மிகவும் பாடுபட்டு நாம் மீண்டு வரவேண்டியிருக்கிறது. (இது பற்றிய ஒரு சித்திரத்திற்காக, invading the sacred என்று தமிழ்ஹிந்து தளத்தில் search செய்து அது பற்றிய ஒரு தொடரைப் படியுங்கள்).

    இரண்டு ஆபிரகாமிய மதங்களும் தாங்கள் எதிர்கொண்ட பழங்குடி மரபுகள் அனைத்தையும் சிதைத்து, அவற்றைச் சார்ந்தவர்களையும் கொன்றொழித்தார்கள் என்று வரலாறு நெடுக பதிவு செய்திருக்கிறது.

    ஆனால் இந்து தேசத்தில் அவ்வாறு நிகழவில்லை. பல்வேறு வனவாசிகள், பழங்குடியினரின் மரபுகளையும் (அது சார்ந்த மக்களையும்) இணைத்துக் கொண்டு சைவமும், வைணமும் விரிந்து பரந்தது என்ற உண்மையான வரலாற்றைச் சொல்வது சைவ, வைணவ சமயங்களுக்கு இழுக்கு அல்ல, மாறாக பெருமையே. இதை முதலில் உணருங்கள்.

    // பூரி ஜகன்னாதர் கோயிலையும் ஏழுமலையானையும் ஒரே இடத்தில் ரிக் வேதம் துதிக்கிறது (X.155.1, X.155.3). மிகவும் ச்பஷ்டமாகவே உள்ளது //

    ரிக்வேதத்தின் புவியியல் சரஸ்வதி, சப்த-சிந்துவுக்குள் தான். சில பிற்கால சூக்தஙக்ள் கங்கை யமுனை பற்றிப் பேசுகின்றன. அவ்வளவே. அதில் விந்திய மலையே இல்லை, பிறகு அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் எப்படி இருக்கும்? நீங்கள் சொல்வது ஒரு ஐதிக விளக்கமாகவோ, அல்லது சொற்களைக் கொண்டு செய்யும் ஊகமாகவும் மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.

  13. திரு ஜடாயு,

    //
    ரிக்வேதத்தின் புவியியல் சரஸ்வதி, சப்த-சிந்துவுக்குள் தான். சில பிற்கால சூக்தஙக்ள் கங்கை யமுனை பற்றிப் பேசுகின்றன. அவ்வளவே. அதில் விந்திய மலையே இல்லை, பிறகு அதற்குத் தெற்கே உள்ள பகுதிகள் எப்படி இருக்கும்? நீங்கள் சொல்வது ஒரு ஐதிக விளக்கமாகவோ, அல்லது சொற்களைக் கொண்டு செய்யும் ஊகமாகவும் மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.
    //

    மன்னிக்கவும், வேதங்கள் (சம்ஹிதம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் எல்லாம் சேர்த்து) – அநாதி, அபாருஷேயம் என்பதே வைதீக ஆஸ்திகர்களின் நம்பிக்கையில் ஒரு முக்கியப் பாகம். இதில் “முற்கால சூக்தம், பிற்கால சூக்தம்” என்று கூறுவது எல்லாம் ஏற்புடையது ஆகாது. ஐரோப்பிய அகழ்வாராய்ச்சி-வரலாற்று ஆராய்ச்சி செய்பவர்களிடமே பல கருத்து வேறுபாடுகளும் விவாதமும் உள்ளது. ஆகையால் இந்த ஆராய்ச்சியை வைத்து முடிவாக எதுவும் சொல்ல முடியாது. உதாரணமாக, தமிழ்ச் சங்க நூல்களுக்கு இவர்கள் கூறும் கால வரம்பிற்கு எதிராக சங்க நூல்களிலேயே சான்றுகள் உண்டு.

    ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சமஸ்கிருத ஞானத்திலும் அரைகுறை என்பதற்கு ஒரு சான்று, சங்கரருடைய பாஷ்யத்தில் “பிரும்மம் (பரம்பொருள்)” என்பதையும் “பிரம்மா (நான்முகன்)” என்ற பதத்தையும் George Thibaut என்னும் மொழிபெயர்ப்பாளர் பூசிக் குழப்பி இரண்டுக்குமே “brahman” என்று எழுதியுள்ளது.

    வேதங்கள் அபாருஷேயம் என்பது இன்றைய அனைத்து சங்கர, ராமானுஜ, மத்வ மடங்கள் இன்று ஏற்கும். வேத பாஷ்யகாரர்களும் இதையே எழுதியுள்ளனர்.

    சரி, விஷயத்திற்கு வருவோம். வேதமே இதிகாச-புராணங்களை “ஐந்தாம் வேதம்” என்று கூறுகிறது. இதிகாச-புராணங்கள் வேதங்களின் உபப்பிரம்மணம் (தெளிவாக விளக்குபவை) என்று மகாபாரதம் கூறுகிறது. ரிக் வேதம் X.155.1, X.155.3 ஆகிய மந்திரங்களை முறையே பவிஷ்ய புராணமும், ஸ்காந்த புராணமும் உபப்பிரும்மணம் பண்ணுகிறது (விளக்குகிறது). அவற்றுள், அம்மன்திரங்கள் முறையே திருமளையையும் ஜகன்னாதரையுமே குறிக்கின்றன என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. X.155.3 மந்திரத்தின் சம்ஸ்கிருத மூலத்தைப் படித்தாலே போதும், அது பூரி ஜகன்னாதனைத் தான் குறிக்கின்றது என்பது தெளிவாகும். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு ஓரளவு சரியாகத் தான் உள்ளது. அதைத் தமிழ்ப்படுத்துகிறேன்:

    “வெகுதூரத்தில் யாராலும் செய்யப்படாத, மனிதன் எவனுடைய துணையும் இல்லாமல் கடலில் மிதக்கும் மரக்கட்டையை போய்ப் பற்றுக. அவ்வாறு பற்றினால் வெகுதூரம் தாண்டிச் செல்லலாம்.”

    இன்றளவும் பூரி ஜகன்னாதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலிருந்து தானாகவே மிதந்து வரும் மரக் கட்டையைக் கொண்டு ஜகன்னாதனின் திவ்ய மங்கள மூர்த்தியை புதுப்பிக்கின்றனர் என்பதைக் கேள்விப்படுகிறோம்.

    சரி, வேத பாஷ்யத்ஹ்டில் சாயநாசாரியாரும் இவ்விடத்திற்கு “பூரி ஜகன்னாதனின் பெருமை கூறப்பட்டுள்ளது” என்றே எழுதுகிறார்.

    //
    முதலில் நான் ”இந்துப் பார்வையில் எழுதப் பட்டிருக்கும் நல்ல நூல்” என்று சொல்லிக் குறீப்பிட்ட புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அல்லது அது பற்றி அறிவீர்களா?
    //

    நூலை நான் படித்ததில்லை என்பது உண்மையே. இந்துப் பார்வையில் எழுதப்பட்டதாக இருந்தாலும் “வேதங்கள் அபாருஷேயம்” என்பதற்கு முரணாக இருந்தால் அதை வைதிக ஆஸ்திகர்கள் ஏற்கமாட்டார்கள். அவகாசம் இருந்தால் அதை எடுத்து ஆச்சாரியர்களிடம் கேட்டு அதில் வருபவற்றை நிராகரிக்க முடியும்.

  14. // வெகுதூரத்தில் யாராலும் செய்யப்படாத, மனிதன் எவனுடைய துணையும் இல்லாமல் கடலில் மிதக்கும் மரக்கட்டையை போய்ப் பற்றுக. அவ்வாறு பற்றினால் வெகுதூரம் தாண்டிச் செல்லலாம்.”

    இன்றளவும் பூரி ஜகன்னாதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலிருந்து தானாகவே மிதந்து வரும் மரக் கட்டையைக் கொண்டு ஜகன்னாதனின் திவ்ய மங்கள மூர்த்தியை புதுப்பிக்கின்றனர் என்பதைக் கேள்விப்படுகிறோம்.//

    இது ஒரு அதி அதீதமான ஊகம். கடலில் மிதக்கும் மரக்கட்டை என்பது நாவாயின் proto வடிவத்தைக் குறிப்பதாக இருக்கலாம். இது வேத இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் வரும் படிமம்.. உதாரணமாக, கடலில் மாட்டிக் கொண்ட புஜ்யு (Bhujyu) என்பவனை அஸ்வினி தேவர்கள் மிதக்கும் கட்டைகளைக் கொண்டு (படகின் ப்ரோடோ வடிவம்) காப்பாற்றுவது பற்றிய மந்திரம் பல சூக்தங்களில் வருகிறது. பூரி ஜகன்னாதரின் மர சிற்பம் பற்றிய ஐதிகம் மிகப் பிற்காலத்தில் ஏற்பட்டது.. அந்த ஐதிகத்தின் originஐயே நான் குறிப்பிட்ட புத்தகத்தில் நீங்கள் படிக்கலாம்..

    இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “கன்யகுமாரி” என்ற பெயர் ஒரு வேத சூக்தத்தில் வருகிறது.. அதே சூக்தத்தில் ”நாவேவ ஸிந்தும்” (கடலில் செல்லும் நாவாய்) என்ற குறிப்பும் வருகிறது. இதை வைத்துக் கொண்டு அது கடல் பக்கத்தில் இருக்கும் கன்யாகுமாரி என்ற ஊரைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் எப்படியிருக்கும் (சரியான crackpot theory என்று கருதப் படும்). அது போல்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.

    // வேதங்கள் அபாருஷேயம்” என்பதற்கு முரணாக இருந்தால் அதை வைதிக ஆஸ்திகர்கள் ஏற்கமாட்டார்கள். அவகாசம் இருந்தால் அதை எடுத்து ஆச்சாரியர்களிடம் கேட்டு அதில் வருபவற்றை நிராகரிக்க முடியும். //

    சந்தோஷம் அப்படிப் பட்ட “வைதிக ஆஸ்திகர்கள்” பெரும்பாலும் பிரசிங்ககளாக மட்டுமே இருப்பார்கள். அதனாலும் ஒன்றும் தவறில்லை. பிரசங்கிகளும் இந்து மரபின், சமூகத்தின் அங்கமே, மறுப்பதற்கில்லை.

    ஆனால் இந்துப் பார்வையில் சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் செய்வது, ஒரு genuine ஆன இந்து அறிவியக்கத்தை, இந்து அறிஞர்களே வளர்த்தெடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். அது ஒரு நவீன அறிவுத்துறை. அதி ஊகங்கள் கொண்ட பிரசங்க வியாக்கியானங்கள் அங்கு ஆதாரமாகாது.

    எனவே, நாம் இரு வேறுபட்ட விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டுமே ஒரு வாழும் மதத்திற்கு, கலாசாரத்திற்கு முக்கியமானவை. இரு தரப்புகளின் domainகளுக்கும் உள்ள எல்லைகளைப் புரிந்து கொண்டு நாம் பேசினால் தான் அது அர்த்தமுடையதாகும்.

    வேதங்கள் (அல்லது எந்த “புனித நூலுமே”) ”அபௌருஷேயம்” அல்ல, அவை அனைத்தும் மனிதர்களால் செய்யப் பட்டவையே என்பதே அறிவியல்ரீதியாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட முடியக் கூடிய கருத்து, என் கருத்தும் அதுவே (ஆனால், அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை.. “தமிழ் என் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்” என்ற புதுக் கவிதையை நினைவில் கொள்கிறேன்).

    வேதங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில், அனுபூதி நிலையில் உதித்த உன்னதமான கவிதைகள், உலகின் ஆதிமுதல் மெய்ஞான தரிசன வெளிப்பாடுகள் என்றே நான் கருதுகிறேன். (ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதைச் சொன்ன ரிஷி, சந்தஸ், தேவதை கொடுக்கப் பட்டுள்ளதை இப்படித் தான் நான் புரிந்து கொள்கிறேன் – it is a part of the documentation). இத்தகைய புரிதலுடன் ஒரு நல்ல “ஆஸ்திக” இந்துவாக நான் இருக்க முடியும் என்றும் நம்புகிறேன், அதை உறுதிபடவும் கூறுகிறேன்.

  15. ஒரே ஒரு விளக்கம். விவாதத்தை வளர்க்க அல்ல, வைதீக ஆஸ்திகர்கள் கருத்து என்ன என்பதை விமர்சிக்க மட்டுமே:

    //
    வேதங்கள் (அல்லது எந்த “புனித நூலுமே”) ”அபௌருஷேயம்” அல்ல, அவை அனைத்தும் மனிதர்களால் செய்யப் பட்டவையே என்பதே அறிவியல்ரீதியாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட முடியக் கூடிய கருத்து, என் கருத்தும் அதுவே (ஆனால், அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை.. “தமிழ் என் மூச்சு; ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்” என்ற புதுக் கவிதையை நினைவில் கொள்கிறேன்).

    வேதங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில், அனுபூதி நிலையில் உதித்த உன்னதமான கவிதைகள், உலகின் ஆதிமுதல் மெய்ஞான தரிசன வெளிப்பாடுகள் என்றே நான் கருதுகிறேன். (ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதைச் சொன்ன ரிஷி, சந்தஸ், தேவதை கொடுக்கப் பட்டுள்ளதை இப்படித் தான் நான் புரிந்து கொள்கிறேன் – it is a part of the documentation).
    //

    இந்தக் கருத்துக்கு எதிராக ஆதி சங்கரர் பதில் கூறுகிறார் (பிரும்ம சூத்திரம் I.iii.29):

    As the eternity of the Veda is founded on the absence of the remembrance of an agent only, a doubt with regard to it had been raised owing to the doctrine that the gods and other individuals have sprung from it. That doubt has been refuted in the preceding Sûtra.—The present Sûtra now confirms the, already established, eternity of the Veda. The eternity of the word of the Veda has to be assumed for this very reason, that the world with its definite (eternal) species, such as gods and so on, originates from it.—A mantra also (‘By means of the sacrifice they followed the trace of speech; they found it dwelling in the rishis,’ Rig-veda Samh. X, 71, 3) shows that the speech found (by the rishis) was permanent.—On this point Vedavyâsa also speaks as follows: ‘Formerly the great rishis, being allowed to do so by Svayambhû, obtained, through their penance, the Vedas together with the itihâsas, which had been hidden at the end of the yuga.’

    ஆகையால் சந்தச்சுடனும் தேவதையுடனும் ரிஷி சொல்லப்பட்டது வேதத்தினுடைய அபாருஷேயத்திற்கு முரணானது.

    //
    ஆனால் இந்துப் பார்வையில் சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் செய்வது, ஒரு genuine ஆன இந்து அறிவியக்கத்தை, இந்து அறிஞர்களே வளர்த்தெடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். அது ஒரு நவீன அறிவுத்துறை.
    //

    கண்டிப்பாகச் செய்யலாம். பிரத்தியட்சம் (empirical observation), அனுமானம் (inference) இவை எல்லாம் தக்க பிரமானன்களே. ஆகையால் இவ்வகை ஆராய்ச்சியும் வைதீகமே. ஆனால், நடுநிலையில் நின்று ஆய்வு செய்யவேண்டும். கிரித்துவத்தைப் பரப்புவதற்காக மாக்ஸ் முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்களுடைய “ஆழ்ந்த ஊகத்தை” எல்லாம் கண்மூடித் தனமாக ஆய்வில்லாமல் ஏற்கக் கூடாது. மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய அறிவியல் ஆராய்ச்சியிலோ, peer review, reputation, funding from third parties, போன்ற considerations உள்ளன. அரசியல்வாத அழுத்தங்கள் (political pressures – can someone suggest a better translation? 😉 ) பல உள்ளன. ஆகையால் எந்த ஆராய்ச்சியாளரும் தாங்கள் 20-30 வருடங்களாக ஏற்றுக் கொண்டதை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் (ஆதாரங்கள் கிடைப்பினும்). ஆகையால், இந்நாளில் ‘நடுநிலை ஆராய்ச்சி’ என்பது இந்நாளில் அவ்வளவு சாத்தியம் இல்லை.

    ஏன் சொல்கிறேன் என்றால், நானும் ஆராய்ச்சித் துறையில் தான் வேலை பார்க்கிறேன். இத்துறையில் முனைவர் பட்டம் வைத்துக் கொண்டு அவரவர் செய்யும் பித்தலாட்டத்தை தினமும் கண்கூடாகப் பார்க்கிறேன். ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் போது இவ்விஷயங்களை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது சக்தி இருந்தால் ஆதாரங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்ந்த பிறகே அதை உண்மை என ஏற்க முடியும்.

  16. அன்பின் கந்தர்வன்,

    // ஆகையால் சந்தச்சுடனும் தேவதையுடனும் ரிஷி சொல்லப்பட்டது வேதத்தினுடைய அபாருஷேயத்திற்கு முரணானது. //

    ”முரணானது அல்ல” என்று சொல்ல வந்தீர்கள் என்று தோன்றுகிறது.
    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் “அபௌருஷேயம்” என்பதை என்ன பொருளில் புரிந்து கொள்வது என்பதற்கு அறிவுபூர்வமான விளக்கம் தேவை என்று நினைக்கிறேன்.

    இந்த விஷயம் பற்றி பகழ்பெற்ற வேத அறிஞர் ஆர்.எல்.கஷ்யப் சொல்வதைக் கீழே அளித்திருக்கிறேன்.. இவர் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பெங்களூரில் ஒரு சிறந்த வேத அகாடமியை நடத்தி வருகிறார், வேதம் பற்றிய பல நூல்களை மிக நேர்த்தியாகப் பதிப்பித்தும் உள்ளார்.

    https://vedah.com/org/literature/vedaBooks/mantrasReveal.asp
    Mantrās themselves reveal the secret

    But the real greatness of the mantra lies, as we learn from the mantrās themselves, in the mode of coming to expression. There is a rik of Dīrghatamas declaring that the abode of the mantra is the supreme Ether known as akşhara, unmoving, where dwell all the Gods; and for him who knows this not, the riks have no use. Here is the rik: “The riks abide in the Immutable, supreme Ether where are seated all the Gods; what can he do with the rik who knows not that? Those who know that are indeed here assembled”, RV (1.164.39). There is this another rik in the same hymn: “The voice, vāk, is measured out in four steps; the wise persons brāhmaņa persons know them. Three of them concealed in the profound secrecy cause no movement; the fourth step is what men call the human speech” RV (1.164.45). The import of this rik is profound. The kavi, the seer of the mantra, delves deep into the inner ocean of the heart, has direct perception of the Home of the Gods, the Fourth Plane turīya and expresses the truths he sees in the words of inspiration that are heard on the acquisition of the primal Word. Thus there are four stations or steps of the vāk, Speech, that sets out from the supreme station of Unmoving. Of these, three stations are concealed in the secrecies, secret, not audible to the human ear and the fourth one, in its descent, is the human speech. All the four stages of Speech are known to the rişhi, one who has control of mind, who is consecrated in the secret and inmost parts of his being, not to any other. Thus is it famous that mantrās were not made but were seen by the kavi, the Seer, the satyashrut. And because the paramam vyoma, Supreme Ether, the abode of the Gods and the original source of the Speech of the riks, is not a creation of anyone, the Veda mantrās manifested out of it are also by courtesy identified with it and are said to be eternal. The paramam vyoma has been there before the appearance and after the disappearance of the rişhi, the seer of the mantra. It does not depend (for its existence) on the seer; on the other hand, the perception of the mantra is possible because of it. The mantra-word and its inalienable meaning are there in the sublime spaces of Ether, self-existent but their manifestation depends upon the achievement and competence of the rişhi. That is how we see frequent mention made in the rik samhita of the rişhi as the author of the mantra e.g. “O Seer, by the lauds of the hymn-composers” RV (9.114.2). “They chanted the mantrās carved out of the heart” RV (1.67.2).

    https://vedah.com/org/literature/vedaBooks/eternalityOfVeda.asp
    Eternality of the Veda and the role of rişhis

    When such riks clearly bring out the nature of mantrās as being created, how, it may be asked, can the Veda be said it be eternal, uncreated? The rik quoted above refers to the original, basic vāk, word, of the mantra abiding in the paramam vyoma, when it speaks of it as eternal. The entire Veda came to be understood as eternal on account of its origin in the paramam vyoma. Consider the rik (8.75.6) by the seer Virūpa. “O Virūpa, by the eternal word give now the impulse of the high laud to the Luminous One”. Even Sāyaņa’s commentary on the rik agrees with this. For he says: “By vāk, is meant speech in the form of mantra, which is eternal that is to say, not produced”. In this view, as explained by us, there is no contradiction inconsistency between the eternality of the Veda and the authorship of the rişhi. This has been clarified by Patanjali, author of the mahābhāşhya, while explaining the sūtra (4.3.101) of Pāņini. Patanjali accepted the eternality of the word and idea contained in the Veda, but not of the arrangement and order of syllables, words and sentences. The arrangement of words in the mantra-verse is of the rişhi’s making for the purposes of making the Veda known. Thus both the statements that the Vedās are both created and uncreated are compatible. That the riks are poetry of an extraordinary kind wherein lies their mantra-character, is evidenced by the hymns of Dīrghatamas and Virūpa above referred to. There are hundreds of such instances in the rik samhita which describe the glory of Speech, but they are not mentioned here for fear of swelling the subject with details.

  17. வேதத்தில் உள்ளவைகள் ஒரு மனித அறிவுக்கு அப்பாற்பட்டவையே –

    நீரில் இரண்டு வாயு உண்டு அதில் ஒரு வாயு பிராண வாயு – நிலாவில் மண் கருப்பு போன்றவை பிரத்யக்ஷ்மாகவோ, அனுமானம் மூலமோ அறியவள்ளது அல்ல – ரிஷிகள் இயற்றியது என்பது அவர்கள் தவம் செய்து சூக்ஷ்மமான ஒன்றை அறிந்து கொண்டு அந்த மந்திரத்தை ஒரு சூத்ரம் போல முன்வைத்ததையே குறிக்கும் [மந்திரம் as it is இருந்தது என்பது இல்லாமல் இருக்க வைப்பு உண்டு ] – இன்றும் யாரேனும் தபஸ் செய்தால் நாம் தொலைத்த சம்ஹிதைகளை திரும்ப பெறலாம்

    வேடம் என்பது எல்லா லோகத்துக்கும் பொது – எல்லா லோகத்திலும் சிந்து நதி இருக்க வாய்ப்பு இல்லை- சிந்து நதி போன்ற விஷயங்கள் ரிஷிகள் மூல கருத்துடன் சேர்த்து சொல்லி இருக்கலாம் – ரிஷிகள் உணர்ந்தவற்றை தவிர இன்னும் பல மந்திரங்கள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது

    நீ எதை கொண்டுவந்தாய் இங்கு இழப்பதற்கு என்பதன் மூலம் எல்லாமே இங்கு தான் உள்ளது நித்யமாக உள்ளது என்றும் கொள்ளலாம்

  18. வழக்கம் போல மறுமொழிகள் மிகச் சுவையாக இருக்கின்றன. திருச்சிக்காரர், கந்தர்வன், சாரங் போன்ற இளைஞர்கள் இந்த இடுகைகளைப் படித்து அறிவு சார்ந்த மறுமொழிகளை வழங்குகின்றார்கள். அனைவர்க்கும் என்பாராட்டுக்களும் நன்றியும்.
    சாதகர்களுக்கு அவர்கள் கொண்டொழுகும் நெறிமீது வெறிபோன்ற பத்தி இருப்பது இயல்பு; அது ஒருவகையில் வேண்டியதும் கூட.

    இருப்பது ஒரே பரம்பொருள். சைவனுக்கு வேறுகடவுள் வைணவனுக்கு வேறு ஒரு கடவுள் என இருந்தால் அல்லவா இருவருக்கும் சமரச உடன்படிக்கையும் சமயப் பொறையும் சகிப்புத் தன்மையும் தேவை. சைவம் சுவானுபவத்தை வலியுறுத்த வைணவம் குணானுபவத்தை வலியுறுத்தும். வடிவமில்லாத பரம்பொருளின் இலக்கணத்தை வடிவத்தோடு கூடியதாகப் பேசிப் பக்தன் இறை அனுபவம் பெறுகின்றான். விஷ்ணுவுக்கு உருவமே(அர்ச்சை) சிரேஷ்டம் என வைணவம் பேசும். சைவம் சிவனுக்குத் திரிநேத்ரம் காளகண்டம் சதுர்புயம் என உருவங்கூறினாலும் அருவ நிஷ்களத்தையே சிரேஷ்டமாகக் கூறும். சிவவியாபகத்தில் பரிபூரணமாதலையே முத்தி எனச் சைவம் பேசும். பரிபூரணம் என்பது வடிவமில்லாதது. ஆதலின் அந்த பரிபூரணத்துக்கே அளவிறந்த வடிவங்கள் உண்டு என்றும் திருமால் வடிவமும் அவற்ரில் ஒன்று என்றும் நாரணன் முதலிய நாமங்கள் இடுகுறியாகவும் காரணக்குறியாகவும் வடமொழி இலக்கணப்படியும் சிவம் ஆகிய பரம்பொருளுக்கும் உரியன என்று திராவிட மாபாடியம் பேசும் இதில் எதுவும் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற விவாதத்துக்கே இடமில்லை. இது சாதகனின் பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற அமையும். ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அவற்றின்வியாக்கியானங்களிலும் சைவன் ஈடுபடுவானேயன்றி ஒதுங்கமாட்டான். நிஷ்கள சிவனைப் பாடும் நாயன்மாரும் உருவத்திற்கு உரிய குணங்களை ஏற்றியே பாடியருளியுள்ளனர். அந்த அருளிச்செயல்களை பிரபந்த வியாக்கியானப் பின்னணியில் வாசிக்கும்போது சைவன் அடையும் ஆனந்தம் அலாதியானது.
    “எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே” என்ற நம்பியாரூரரின் வாக்குக்கு விளக்கமாக அமைந்தது, “அபூர்ணன் என்றா, நிஹிதன் என்றா,வடிவழகில்லை என்றா மேன்மையில்லை என்றா, எனக்கு உபகாரி இல்லை என்றா, எத்தைச் சொல்லி மறப்பேன்”(திருவாய்மொழி 1-10-9) என்னும் ஈட்டுரை. இந்த அனுபவம் சைவம் வைணவம் இரண்டற்கும் பொது.

    சைவம் புராணக்கதைகளைக் கருத்தை விளக்கும் குறியீடாகக் கொள்ளுகின்றதே யன்றிப் பிரமாணமாகவும் உண்மை வரலாறாகவும் கொள்வதில்லை. சைவர்கள் போற்றும் புராணங்களில் கடவுளர்கள் கூடக் கதை மாந்தர்களாக வருகின்றனர். எடுத்துக் காட்டாக, சைவப்புரானங்களில் சிறந்ததாகிய திருவிளையாடற்புராணத்தில், வலைவீசின படலம் என்றொரு கதை உள்லது. அதில், ஆலவாய் அழகன் இறைவிக்குத் தனித்ததோர் இடத்திலிருந்து ‘மந்தணமான வேதமறைப் பொருளை’ உனர்த்தினான்.இறைவன் கூறியருளிய மறைப்பொருலை யாது காரனத்தாலோ எம்பிராட்டி ‘மறதி அடைந்தாள் போலக் கவலையுள் சிறிது தோன்ற ஆதரமிலலாய்க் கேட்டாள்’ . இதனைக் கண்ட இறைவன், ‘எம்பால் பராமுகையாகி வேதப் பயன் ஒருட்படாது கேட்டாய். இக்குற்றந்தன்னால் விரதமும் அறனும் இன்றி மீன்படுத்து இழிஞரான பரதவர் மகளாகுக’ எனச் சபித்திட்டான். தாய்க்குப் பரிந்து வந்த முருகனை ஊமையாகுக எனச் சபித்தான். என்று இப்படி கதை போகின்றது.

    வேதப் பொருளை எப்படிக் கேட்க வேண்டும் எனவலியுறுத்துவதே இந்தக் கதையின் பயன். சாத்திரம் படித்த சைவர்கள் சிவமும் சத்தியும் பிரிக்கமுடியாத குணகுணியாகிய தாதான்மிய சம்பந்தம் உடையவர் என்றும் ஐம்முகச் சிவமே அறுமுகச் சிவம் என்று அறிவர். இக்கதை அம்பிகையின் பெருமையைக் குறைத்துவிட்டது என்றோ முருகனைச் சிறுமைப் படுத்திவிட்டதென்றோ சைவர்கள் கருதுவதில்லை. ஏனென்றால் சிவசத்தியும் முருகனும் யார் என்பாதை அவர்கள் நன்கறிவார்கள்.

    சிவம் வேறு சம்புபட்ச திருமால் வேறு என்று சைவர்கள் கருதுவதில்லை. குணங்குறியற்ற சிவத்தின் எண்ணற்ற தடத்த வடிவங்களில் ஒன்று திருமால் மூர்த்தம். திருமாலை முருகனுக்கு மாதுலன் எனப் போற்றும் அருணகிரிப் பெருமான் ஒரு திருப்புகழில்,”ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை யிகழ்வோர்கள் — — ஏழ்நரகு உழல்வாரே” என்றார். விஷ்ணுவுக்குச் சேவை செய்வோரை இகழ்ந்தாலே ஏழ்நரகுத் துன்பம் என்றால், விஷ்ணுவையே இகழ்ந்தால் எத்தகைய துன்பம் நேரிடும். இதனைச் சைவர்கள் அறியாரல்லர். ஏனெனில் சிவமும் விஷ்ணுவும் வேறல்லர்.

    சிவத்தின் அடி தேடிகர்வ பங்கம் அடைந்த திருமால் பரம்பொருளான திருமால் அல்ல. திருமால் என்ற பெயருடைய உயர்பதவியில் இருந்த ஆன்ம வர்க்கத்தில் ஒருவனே.

  19. விளக்கங்களை பொறுமையாக எழுதியதற்கு முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

    வைணவர்களின் தரப்பிலிருந்து வரும் விளக்கங்களையும் அறிந்தால் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்க நல்ல வாய்ப்புண்டு என்று நம்புகிறேன். ஆகையால், அனைவர்க்கும் பயன் கருதி இம்மறுமொழியை எழுதுகிறேன்.

    //
    சாதகர்களுக்கு அவர்கள் கொண்டொழுகும் நெறிமீது வெறிபோன்ற பத்தி இருப்பது இயல்பு; அது ஒருவகையில் வேண்டியதும் கூட.
    //

    “வெறி போன்ற பக்தி” என்று சொல்வதை விட, “தத்துவங்களைத் தெளிவாக அறிவதன் மீதும், அவற்றைத் தெரிந்த அளவிற்கு விமர்சனம் செய்வதின் மீதும் உள்ள நாட்டம்” என்று கூறுவது பொருந்தும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

    //
    விஷ்ணுவுக்கு உருவமே(அர்ச்சை) சிரேஷ்டம் என வைணவம் பேசும்.
    //

    இத்துடன்,

    (௧) இறைவனின் அவதாரங்கள் உண்மையே.

    (௨) பகவான் நம்மைப் போன்று இல்லாமல் தானே ‘இன்ன இன்னாரைத் தாய்-தந்தையாகத் தேர்ந்து எடுத்துப் பிறப்போம்’ என்று சங்கல்பித்துப் பிறக்கிறான், ஆகையால் அவன் பிறப்பு தாழ்மையைக் குறிக்காது – மாறாக அவனுடைய எளிமையைக் (ஜீவர்களுக்கு கருணையாலே நேரில் வந்து காட்சி அளிப்பது போன்றவற்றை விரும்புகிறான் என்பதைக்) குறிக்கும்

    (௩) அவதாரம் பண்ணி செய்த சேஷ்டிதங்கள் உண்மையே; மகாபாரதம், இராமாயணம், பாகவதம், முதலிய புராணங்களின் கதைகள் உண்மையே

    இவை மூன்றும் வைணவர்களுடைய நம்பிக்கையின் முக்கியப் பாகங்கள். ஆகையால், வைணவத்தில் புராணங்களைப் பிரமாணமாக எடுப்பது உண்டு.

    //
    சிவத்தின் அடி தேடிகர்வ பங்கம் அடைந்த திருமால் பரம்பொருளான திருமால் அல்ல. திருமால் என்ற பெயருடைய உயர்பதவியில் இருந்த ஆன்ம வர்க்கத்தில் ஒருவனே.
    //

    இதை முன்பு நீங்கள் பண்ண கட்டுரையிலிருந்தே நான் அறிந்து கொண்டேன். ஆனால், பாமர மக்களுக்கு இது அவ்வளவாகப் புரியாது என்று நினைக்கிறேன். ஆகையால், “பரம்பொருளான திருமால் அல்ல” என்பதைத் தெளிவாக, “அனைவரும் கோயில்களில் வழிபடும் வைகுண்ட வாசியான திருமால் அல்ல, திருமால் என்ற பெயருள்ள வேறு ஒரு தேவதை.” என்று கூறினால் சர்ச்சை நடவாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இம்மாதிரி புராணக் கதைகளை விவரிக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவாக நான் கூரியபடியோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றையோ விளக்கம் தந்தாள் நல்லது என்று அனைவரிடமும் வேண்டுகிறேன்.

  20. பெருமதிப்பிற்குரிய முனவர் அவர்களுக்கு

    தங்களது முதிர்ந்த அனுபவமும், அகந்தையை வென்ற ஆழ்ந்த அறிவும் தங்கள் மறுமொழியில் பளிச்சிடுகின்றன. சைவத்தின் தனிச்சிறப்பான சமரசப்பாங்கும் அரவணைத்துச்செல்லும் பக்குவமும் தங்களது பதிலில் மின்னுகின்றன. அனைவருமே தங்கள் பாணியைப் பின்பற்றுதல் நலம் எனத் தோன்றுகிறது.

    சிவமயம்.

  21. கந்தர்வன் அவர்களெ,

    /// ஆகையால், “பரம்பொருளான திருமால் அல்ல” என்பதைத் தெளிவாக, “அனைவரும் கோயில்களில் வழிபடும் வைகுண்ட வாசியான திருமால் அல்ல, திருமால் என்ற பெயருள்ள வேறு ஒரு தேவதை.” என்று கூறினால் சர்ச்சை நடவாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இம்மாதிரி புராணக் கதைகளை விவரிக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவாக நான் கூரியபடியோ, அல்லது அதற்குச் சமமான ஒன்றையோ விளக்கம் தந்தாள் நல்லது என்று அனைவரிடமும் வேண்டுகிறேன்.//

    இதே போலவே யாருமே வேதப்பிரமாணங்கள் நாராயணனை மட்டுமே பரப்பிரம்மம் என்று கூறுகிறது என்று கூறாமலும் அப்படியே இதுபற்றி கூறவேண்டி வந்தாலும், சில உபநிஷத்துகளும், வேதப்பிரமாணங்களும் சிவனையே பரப்பிரம்மம் என்று கூறுகின்றன என்றும் எழுதவேண்டும் என்றும் கூறுங்களேன். அதுதான் ந‌ல்ல‌து.

  22. திரு உமா சங்கர் அவர்களே,

    நன்று சொன்னீர்கள். அவரவர் அவரர் பாணியை பின்பற்றுவதே சிறப்பு.

    அப்போதுதான் வழி பட்டு முறைகள் அழிந்து விடாமல் இருக்கும். அதே நேரம் அவ்வப் பொது, இந்து மதத்தின் பிற வழி பட்டு முறைகளையும் சிறிது அனுஷ்டிப்பது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    சைவர்கள் ஒரு வருடத்திலே 50 நாட்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை மனப் பூர்வமாக வழிபட்டால், வருடத்திலே ஓரிரு நாட்களாவது பெருமாள் கோவிலுக்கும் சென்று பெருமாளை வழி படுவது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    இதன் மூலம் இந்துக்கள் சமரசப் போக்கு உடையவர்கள் என்பதும் திண்ணமாகும். அதன் மூலம் சைவர்கள் எந்த தெய்வத்தையும், நிந்திக்கவோ, புறக்கணிக்கவோ செய்யாதவர்கள் என்பதும் நிரூபணமாகும்.

    மேலும் சொக்க நாதருக்கு, நாராயணர் தனது தங்கை மீனாட்சியை மணமுடித்துக் கொடுத்ததாகவும் , முருகனுக்கு நாராயணர் மாமா முறை என்பதாகவும் வழக்கில் உள்ளதும் நீங்கள் அறிந்ததே.

    பிராடச்டண்டு கிறிஸ்தவர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ தெய்வம் மேரியை வணங்காமல் புறக்கணிப்பது போல செய்து விடாமல் இந்துக்கள் சமரசத்தை , சகிப்புத் தன்மையை பின்பற்றி வருகின்றனர்.

  23. திரு உமாசங்கர் அவர்களே,

    // இதே போலவே யாருமே வேதப்பிரமாணங்கள் நாராயணனை மட்டுமே பரப்பிரம்மம் என்று கூறுகிறது என்று கூறாமலும் அப்படியே இதுபற்றி கூறவேண்டி வந்தாலும், சில உபநிஷத்துகளும், வேதப்பிரமாணங்களும் சிவனையே பரப்பிரம்மம் என்று கூறுகின்றன என்றும் எழுதவேண்டும் என்றும் கூறுங்களேன். அதுதான் ந‌ல்ல‌து. //

    நான் எழுத வந்தது என்ன என்றால், உங்களுடைய கடவுட்கொள்கையின் படி “சிவனும் விஷ்ணுவும் ஒன்று” என்று கூறுவீர்கலானால், திருமாலுக்குத் தாழ்மையைக் கூறும் புராணங்கள் “பரம்பொருளான திருமாலைப் பற்றியது அல்ல; வேறு தேவதையைப் பற்றியது” என்று தெளிவாக, பாமரர்களுக்குப் புரியுமாறு எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். “சம்பு பட்சம், அணு பட்சம்” போன்ற சொற்கள் அவ்வளவு எளிதில் புரியாது. நீங்கள் கூறுவதைப் பாமரர்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்று எண்ணுவர் என்று உங்கள் நன்மைக்காக கூறுகிறேன்.

    என்னுடைய கடவுட் கொள்கையை இங்கு விமர்சிக்க வரவில்லை. சிலர் விஷ்ணுவை “அகந்தை உற்றார்” என்று கூறியதாலும், புறந்தொழாக் கோட்பாட்டை “காட்டுமிராண்டித்தனம், ஜிஹாதி வன்முறை, அரபு பாலைவனத்தில் தோன்றிய பிற்போக்குக் கோட்பாடு” என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது.

    உபநிஷத்துக்கள் யாரை பரப்பிரம்மாக கூறுகிறது என்பதை சங்கரர், ராமானுஜர், மத்வர், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனி, ஏன் வட நாட்டு புஷ்டி மார்க்கம், நிம்பர்க சம்பிரதாயம், ராமானந்தி சம்பிரதாயம், இவை எல்லாம் ஒருமுகமாக கூறுகின்றன. இந்த ஆச்சாரியர்களின் பாஷ்ய நூல்களிலிருந்து தான் கற்கிறேன். பரிபாடலிலும், “மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி” என்றும், “நாறு அணி துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ” என்றும் பழந்தமிழர்கள் கோஷம் இட்டுள்ளனர். இதை எல்லாம் வைத்து ஒருசேர நடுநிலை நின்று ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். இதற்கு மாறாகவும் முரணாகவும் என்னால் எழுத முடியாது. இதற்காக எந்த தேவதை மேலும் எனக்கு வெறுப்பு உண்டு என்று எண்ணுவது தவறு.

    சொல்லப்போனால், எந்த தேவதையாக இருந்தாலும், எந்த புராணமாக இருந்தாலும், தேவதைகளின் தாழ்மையைக் கூறும் கதைகளை இங்கு விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறேன். இதில் பிரம்ம தேவர் கோப குமாரர்களையும் மாடுகளையும் அபகரித்த கதை, பஸ்மாசுரன் கதை, பாணாசுரன் கதை, இந்திரன் கௌதமர் சினத்துக்கு ஆளான கதை, இந்திரன் நந்தகிராமத்தவர்கள் மீது சினந்து கொண்டு கல்மாரி பொழிந்து தவற்றை உணர்ந்து கண்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கதை, இவையும் அடங்கும்.

    இந்த கதைகளை எல்லாம் public fora-க்களில் விமர்சிக்க வேண்டாம். அவரவர்க்கு இவற்றைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டால், தமது ஆச்சாரியர்களையோ, பெரியோர்களையோ கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

    நன்றி,

    கந்தர்வன்.

  24. பிழைதிருத்தம்:

    // …என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது. //

    // …என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், எங்கள் கடவுட் கொள்கையைத் தெளிவாக விமர்சனம் பண்ணி கட்டிக் காப்பாற்ற அவசியம் வந்தது. //

  25. //புறந்தொழாக் கோட்பாட்டை “காட்டுமிராண்டித்தனம், ஜிஹாதி வன்முறை, அரபு பாலைவனத்தில் தோன்றிய பிற்போக்குக் கோட்பாடு” என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணி மறுமொழிகளை எழுதியதால், அதை தகர்க்க நேரிட்டது.//

    நீங்க‌ள் ஏன் சிந்திக்க‌க் கூடாது?

    ம‌ற‌ந்தும் புற‌ம் தொழாமை என்ப‌து ‍ தான் வ‌ழி படும் க‌ட‌வுளைத் த‌விர‌ வேறு எந்த‌க் க‌ட‌வுளையும் எந்த‌ நேர‌மும் தொழ‌க் கூடாது என்ப‌தே.

    இப்போது ஒருவ‌ர் சைவ‌ர் என்றால், அவ‌ர் பெருமா ள் கோவிலுக்கு சென்று வ‌ண‌ங்கினால், பெருமாள் ப‌க்த‌ர்க‌ள் மகிழ்ச்சி அடைவார்க‌ள். இவ்வாராக ந‌ல்லிண‌க்க‌மும் , ச‌ம‌ய‌ ந‌ட்பும் உருவாகிறது.

    எந்த‌க் கார‌ண‌த்தை முன்னிட்டும் பெருமாள் கோவில் இருக்கும் தெருப் ப‌க்க‌ம் கூட‌ அவ‌ர்க‌ள் போக‌ மாட்டேன் என்றால், அது பிண‌க்க‌த்தை, பூச‌லை, த‌க‌ராறையே உருவாக்கும். முன்பு அவ்வாறு உருவாக்கி இருக்கிர‌து.

    இந்து க‌ட‌வுல்களையே ஒருவ‌ரை ஒருவ‌ர் ப‌ழிப்ப‌து, ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து தேவையில்லை. துவேஷ‌ம் இல்லை என்று சொல்லுவார்க‌ள், துவெஷ‌ம் அதாக‌ வ‌ருகிற‌து.

    புற‌ந்தொழாமை அச்சு அச‌லான‌ ஆபிரகாமிய‌க் கொட்பாடே. த‌ன் ம‌தத்த‌வ‌ர் வேறு க‌ட‌வுளை வ‌ழி ப‌ட்டால் அந்த‌ ம‌த‌த்திற்க்கு போய் விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌த்தினாலெ புற‌ம் தொழாமை உருவான‌து.

  26. //
    புற‌ந்தொழாமை அச்சு அச‌லான‌ ஆபிரகாமிய‌க் கொட்பாடே. த‌ன் ம‌தத்த‌வ‌ர் வேறு க‌ட‌வுளை வ‌ழி ப‌ட்டால் அந்த‌ ம‌த‌த்திற்க்கு போய் விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌த்தினாலெ புற‌ம் தொழாமை உருவான‌து.
    //

    அமாம் அமாம் பயமே காரணம்

    ஆழ்வார் ரொம்ப பயந்து தான் நாலாயிரம் சொன்னார் – ராமானுஜர் எல்லோரையும் வைணவர் ஆக்க வேண்டும் என்பதற்காகவே திரு மந்திர உபதேசம் எல்லோருக்கும் தந்தார் – தேசிகர் முகலாய படை எதுப்பின் பொது எல்லோரும் இஸ்லாமியர் ஆகிவிடுவார் என்பதற்காகவே அப்ஹீதி ஸ்தவம் செய்தார் – இன்ன பிற ஆசார்யர்கள் நமது மக்கள் நமது மதத்து நூல்களே படித்து கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணி தேவையே இல்லாமல் எக்க சக்க கிரந்தங்களை செய்தார்கள் – தேவையா சொல்லுங்கள் திருவாய்மொழி என்பது ஆயிரம் சொச்சம் பாடல்கள் – அதற்க்கு ஒருவர் அராயிரப்படி செய்கிறார், ஒருவர் ஒன்பதாயிர படி செய்கிறார், ஒருவர் பன்னிரெண்டாயிரம், ஒருவர் இருவத்தி நாலாயிரம் ஒருவர் முப்பத்தி ஆறாயிரம் – இது மக்கள் இதை படித்துக்கொண்டே இருக்கணும் அதற்கே நேரம் சரியாய் இருக்கும் என்று எண்ணி செய்த திட்டமிட்ட செயல்

    நாய்னன்மார்களும் இப்படி பயந்து தன நிறைய திருமறை செய்தார்கள் –

    ராமாயணம் இருவத்தி நாலாயிர ஸ்லோகம், கீதை பதினெட்டு காண்டம், பதினெட்டு புராணங்கள், எவ்வளோ உபநிஷத்கள், பெரிய மகா பாரதம், பாகவதம், இப்படி இன்னபிற விஷயங்கள் எல்லாமே திட்டமிட்ட செயல் தான்

    இப்படி மேலே உள்ள எல்லாத்தையும் படித்து மக்கள் எஆந்து இருப்பார்கள் – அதனால் மதம் மாற மாட்டார்கள் இரு எண்ணியே இவை யாவும் செய்யப்பட்டன

  27. உப‌னிட‌த‌ங்க‌ள் சிற‌ப்பான‌ உண்மைகளையே கூறியுள்ள‌ன‌. அவ‌ற்றை த‌ங்க‌ளின் த‌னிப் ப‌ட்ட‌ க‌ருத்துக்கு ஏற்ப‌ வ‌ளைத்து பொருள் கொள்ள‌ முய‌ற்ச்சி செய்ய‌லாம்.

    சிவ‌ன் ப‌ர‌மேச்வ‌ர‌ன் இல்லை, சிவ‌னை தொழ‌க் கூடாது என‌ எந்த‌ உப‌னிட‌த‌மாவ‌து சொல்லி இருக்கிற‌தா?

    பைபிளில் நானே உன்னுடைய‌ க‌ட‌வுள், என்ன‌த் த‌விர‌ உனக்கு வேறு க‌ட‌வுள்க‌ள் வேண்டாம் க‌ட்ட‌ளை இட்டு , நான் பொறாமையுள்ள‌ க‌ட‌வுள் என‌ சொல்லியுள்ளது.

    இந்து ம‌த‌த்திலே எந்த‌ க‌ட‌வுளும் நீ என்னை ம‌ட்டும் தான் வ‌ணங்க‌ வேண்டும், ம‌ற்ற‌வ‌ரை வ‌ண‌ங்க‌ கூடாது என‌ சொல்ல‌வேயில்லை.

    என்னையே ச‌ர‌ண‌டை, நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று தான் சொல்லி இருக்கிறார். அவ‌ரே எந்த‌ ரூப‌த்தை அர்ச்சித்தாலும்,அந்த‌ ரூப‌த்தின் வ‌ழியாக‌ அவ‌ர்க‌ள் கேட்ட‌தை த‌ருவேன் என‌ சொல்லும் அளவுக்கு க‌ருணாமூர்த்தியாக‌, எல்லா வ‌ழி பாட்டின் அடித் த‌ளமாக‌, எல்லாம் த‌ன்னிலே கோர்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌வே இந்துக் க‌ட‌வுள் கூறி இருக்கிரார்.

    இவ்வ‌ள‌வு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப் பான்மையும், வெறுப்பில்லா அன்பு க‌ருத்துக்க‌ளும் உடைய‌ இந்து ம‌தத்திலே குட‌ம் பாலிலே துளி விஷ‌ம் போல‌ ஆபிர‌காமிய‌ முர‌ட்டுப் பிடிவாத‌ ம‌ற‌ந்தும் புற‌ம் தொழா கோட்பாட்டை க‌ல‌க்க‌ வேண்டுமா என்று சிந்தியுங்க‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ளே!

    இந்த‌ உல‌கில் எவ‌ன் ஒருவ‌ன் அத்வேஷ்டா, ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌, க‌ருண‌ ஏவ‌ ச‌ கொள்கையை க‌டைப் பிடிக்கிரானோ, அவ‌ன் எந்த‌ப் பெய‌ரில் இருந்தாலும், எந்த‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌னாக‌ இருந்தாலும் உண்மையில் இந்துதான்.

    யாரையும் வெறுக்காம‌ல், அடுத்த‌வ‌ருக்கு தீங்கு நினைக்காத‌ எந்த‌ வ‌ழிபாட்டு முறையையும் வெறுக்காம‌ல், அவ‌ற்றில் க‌ல‌ந்து கொள்ளும் ம‌ன‌ப் ப‌க்குவ‌ம் உடைய‌வ‌ன் அவனாக‌வே இந்து ஆகி விடுகிரான்.

    ஆனால் தான் சொல்லும் ஒரு க‌ட‌வுள் ம‌ட்டும் தான் உண்மையான் ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள், ம‌த்த‌ க‌ட‌வுள்க‌ள் எல்லாம் ஜீவ‌னில்லாத க‌ல்லுக‌ள் என‌‍

    என்னவோ, தான் க‌ட‌வுளை நேரில் ச‌ந்தித்து பேசி விட்டு வ‌ந்த‌வ‌ர் போல‌வும், தன்னுடைய‌ ஒரெ க‌ட‌வுளுக்கு நிரூப‌ண‌ம் த‌ரத் த‌யார‌க‌ இருப்ப‌து போல‌வும் (ஆனால் நிரூப‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை,என‌வே த‌ர‌ மாட்டார்க‌ள்)

    அத்தாரிட்டி இல்லாம‌லே அத்தாரிட்டி செய்ப‌வ‌ர்க‌ள் ஆபிர‌காமிய‌ கோட்பாட்டில் , செய‌ல் பாடு ஆகிய‌வ‌ற்றை செய்த‌வ‌ராக‌வே ஆகிறார்.

    என்னை ச‌ந்தித்த‌ ஒரு சுவி சேச‌க‌ர் பாலாஜி உண்மையான‌ தெய்வ‌ம் அல்ல‌ என‌க் கூறினார். சிவ‌ன், முருக‌ன் ஈஸ்வ‌ர‌ சொரூப‌ம் அல்ல‌ என‌ சொல‌ப‌வ‌ர்க‌ளுக்கும் அந்த‌ சுவிசெச‌க‌ருக்கும் என்ன‌ பெரிய‌ வித்யாச‌ம்? .

  28. //
    இந்து ம‌த‌த்திலே எந்த‌ க‌ட‌வுளும் நீ என்னை ம‌ட்டும் தான் வ‌ணங்க‌ வேண்டும், ம‌ற்ற‌வ‌ரை வ‌ண‌ங்க‌ கூடாது என‌ சொல்ல‌வேயில்லை.
    //

    அமாம் இல்லை – ஆனால் யார் யாரை வணங்கினால் என்னென்ன கிடைக்கும் என்று சொல்லிஆகிவிட்டது – நீ வணகும் தெய்வத்தை பரமார்த்த ஸ்வரூபமாக வணங்கினால் தான் மோட்சம் – மேலும் என்னை மட்டுமே மோட்சத்திற்கு வணங்கு என்று பல பல இடங்களில் கீதையில் உள்ளது – அவன் அங்கு சொல்வதை பரமாத்மா ஸ்வரூபமாக யாரேனும் கொண்டு அந்த ஒருவரை மட்டுமே வணங்கு என்று எடுத்துகொண்டாலும் சரி – கண்ணன் சொல்வது ஒருவரிடம் ஸ்திரமான சரணாகதி

    மேலும் மேலும் இல்லை இல்லை என்று சொல்ல்லாதீர்கள் – பல கீதை வாக்கியங்களை நான் மற்கோள் வைப்பேன் – சரி நீங்கள் எங்காவது கீதையில் இப்படி பொருள் வரும்படி ஒன்னு காட்டுங்களேன் – “எல்லோரையும் சரண் அடை உனக்கு முக்தி கிடைக்கும்”

    காட்டு மிராண்டி என்ற விஷம் கலந்தது நீங்கள் தான் நண்பரே – நாங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து போக வேண்டும் என்ற எண்ணத்திலே தான் உள்ளோம்

    ஒருவருக்கே உடல் பொருள் ஆவியை சமர்பித்து எல்லோரிடமும் அன்பாக இருப்பவர்கள் விஷம் என்றால் உங்கள் கண்ணில் தான் மஞ்சள் இருக்கிறது

    நீங்கள் சொல்லும் விஷம் யார் யாரை குறை சொல்லும் என்று எண்ணிக்கொட்ட பார்க்காமல் பேசுகிறீர்கள் – புறம் தொழாமையை ஆழ்ந்த பக்தி மார்கமாக முன் வைத்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆசாரியர்கள், ஆதினங்கள், ஜீயர்கள்

    சகல் லோக மான் சஹுனே வந்தே என்பது எல்லா கடவுளிடமும் சரண் அடைந்தாள் மட்டுமே வரும் என்று கிடையாது – அப்படி எண்ணுவது ஒரு எண்ணமே அல்ல – நீங்கள் எதையும் எதையுமோ முடிச்சு போட்டு, கதை பண்ணி விளம்பரம் செய்கிறீர்கள் – உங்கள் புண்ணிய பணியை தொடருங்கள்

    //
    இப்போது ஒருவ‌ர் சைவ‌ர் என்றால், அவ‌ர் பெருமா ள் கோவிலுக்கு சென்று வ‌ண‌ங்கினால், பெருமாள் ப‌க்த‌ர்க‌ள் மகிழ்ச்சி அடைவார்க‌ள். இவ்வாராக ந‌ல்லிண‌க்க‌மும் , ச‌ம‌ய‌ ந‌ட்பும் உருவாகிறது.
    //

    நான் கிருஷ்துவனாக மாறினால் சுவிஷேஷ்க்காரன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான் – அவனை மகிழ்விப்போம். பாபர் மசூதிக்கு குரல் கொடுத்தால் முஸ்லிம் மகிழ்வான் அவனை மகிழ்விப்போம் – எப்படி எல்லாம் point வைக்கிறார்கள்

  29. திருச்சிக் காரன்,

    புறந்தொழாக் கோட்பாட்டைப் பற்றி எவ்வளவு தான் அடியேனும் மதிப்பிற்குரிய சாரங் அவர்களும் எடுத்து விளக்கினாலும், “விடிய விடிய இராமாயணம் கேட்டு…” என்று ஒரு திருஷ்டாந்தம் சொல்வார்களே, அதைப் போல நீங்கள் மறுமொழி இட்டுள்ளீர்கள். இருப்பினும் மற்ற வாசகர்களின் பயன் கருதி (இது வரை விளக்காதவற்றை) விளக்குகிறேன்.

    // சிவ‌னை தொழ‌க் கூடாது என‌ எந்த‌ உப‌னிட‌த‌மாவ‌து சொல்லி இருக்கிற‌தா? //

    “யாரும் சிவனைத் தொழக்கூடாது” என்றா கூறினோம்? “ஒரு கொள்கையை எற்றுவிட்ட நாங்கள் அக்கொள்கையின் படியே நடப்போம்” என்று தான் கூறுகிறோம்.

    // அவ‌ரே எந்த‌ ரூப‌த்தை அர்ச்சித்தாலும்,அந்த‌ ரூப‌த்தின் வ‌ழியாக‌ அவ‌ர்க‌ள் கேட்ட‌தை த‌ருவேன் என‌ சொல்லும் அளவுக்கு க‌ருணாமூர்த்தியாக‌, எல்லா வ‌ழி பாட்டின் அடித் த‌ளமாக‌, எல்லாம் த‌ன்னிலே கோர்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌வே இந்துக் க‌ட‌வுள் கூறி இருக்கிரார். //

    இதை மறுக்கவில்லை. ஆனால், “கேட்டதைத் தருவேன்” என்று கூறவில்லை. “அந்தந்த தேவதைகள் அளிக்கவல்ல பலன்களைத் தருகிறேன்” என்று கூறுகிறார். எனினும், 7.23-இல் “எல்லா வழிபாட்டு முறைகளும் ஒரே பலனை அளிக்கவல்லது அல்ல” என்று உறுதியாகக் கூறுகிறார்.

    // ஆனால் தான் சொல்லும் ஒரு க‌ட‌வுள் ம‌ட்டும் தான் உண்மையான் ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள், ம‌த்த‌ க‌ட‌வுள்க‌ள் எல்லாம் ஜீவ‌னில்லாத க‌ல்லுக‌ள் என‌‍ //

    இப்படி அடியேனோ, சாரங்கோ எங்கு கூறினோம்?

    // என்னை ச‌ந்தித்த‌ ஒரு சுவி சேச‌க‌ர் பாலாஜி உண்மையான‌ தெய்வ‌ம் அல்ல‌ என‌க் கூறினார். சிவ‌ன், முருக‌ன் ஈஸ்வ‌ர‌ சொரூப‌ம் அல்ல‌ என‌ சொல‌ப‌வ‌ர்க‌ளுக்கும் அந்த‌ சுவிசெச‌க‌ருக்கும் என்ன‌ பெரிய‌ வித்யாச‌ம்? . //

    வித்தியாசம் உண்டு. என்ன என்றால், அடியேனோ சாரங்கோ “நீங்கள் வழிபடும் கடவுள் சாத்தான்” என்று கூறவே இல்லை. “உங்கள் இஷ்டப்படி வழிபட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் மனம் விரும்பிய முறையில் தான் வழிபடுவோம்” என்று தான் கூறினோம். மேலும், நாங்களாக முன்வந்து “இந்த ஒரு தேவதைதான் பரதெய்வம்” என்று திணிக்கவில்லை. புறந்தொழாக் கோட்பாட்டை நீங்கள் “காட்டுமிராண்டித் தனம, ஜிஹாதி வன்முறை” என்றெல்லாம் கூறியதால் தான் எங்களுடைய position-ஐ விளக்க நேரிட்டது.

    // என்னவோ, தான் க‌ட‌வுளை நேரில் ச‌ந்தித்து பேசி விட்டு வ‌ந்த‌வ‌ர் போல‌வும், தன்னுடைய‌ ஒரெ க‌ட‌வுளுக்கு நிரூப‌ண‌ம் த‌ரத் த‌யார‌க‌ இருப்ப‌து போல‌வும் (ஆனால் நிரூப‌ண‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை,என‌வே த‌ர‌ மாட்டார்க‌ள்) //

    இது பிரகல்லாதனுடைய தந்தை பிரகல்லாதனுக்கு இட்ட வாதம் – “நேரில் காட்டு, இல்லை என்றால் நீ சொல்வது பொய்”. ஆகையால், தயவு செய்து இந்த வாதத்தை விட்டு விடுங்கள். நீங்கள் கூறுவது போல நிரூபித்துக் காட்டுவது என்பது என்னால் சாத்தியம் அல்ல. என் பக்தி பிரகல்லாதனின் பக்திக்கு முன்பு – சூரியனுக்கு முன் மின்மினியைப் போன்றதாகும்.

  30. // ஆனால் தான் சொல்லும் ஒரு க‌ட‌வுள் ம‌ட்டும் தான் உண்மையான் ஜீவ‌னுள்ள‌ க‌ட‌வுள், ம‌த்த‌ க‌ட‌வுள்க‌ள் எல்லாம் ஜீவ‌னில்லாத க‌ல்லுக‌ள் என‌‍ //

    திரு சாரங் முதலியவர்கள் மேல் வீசப்படும் உண்மை நிலையிலிருந்து மாறுபட்ட மிகக் கொடிய குற்றச்சாட்டு இது. வைஷ்ணவத்தில் ஆன்னா-ஆவன்னா படித்தவர்கள் கூட “மற்ற தேவதைகளும் பந்துக்களே, பாகவதர்களே, வணக்கத்திற்கு உரியவர்களே; அவர்களுடைய பக்தர்களும் நமக்கு சஹோதரர்களே” என்று தான் கூறுவர்.

    மறந்தும் புறந்தோழ வைஷ்ணவப் பெரியவர்கள் சந்த்யா வந்தனம் முதலிய சடங்குகளில் அந்தந்த தேவதைகளுக்கு உரிய வணக்கங்களை தவறாமல் சொல்லிக் கொண்டு தான் வருகிறார்கள். வித்தியாசம் எதில் என்றால், “எப்படி பக்தி பண்ண வேண்டும்? எப்படி சரணாகதி பண்ண வேண்டும்?” என்பவற்றில் மட்டும் தான்.

  31. //இது பிரகல்லாதனுடைய தந்தை பிரகல்லாதனுக்கு இட்ட வாதம் – “நேரில் காட்டு, இல்லை என்றால் நீ சொல்வது பொய்”. ஆகையால், தயவு செய்து இந்த வாதத்தை விட்டு விடுங்கள். நீங்கள் கூறுவது போல நிரூபித்துக் காட்டுவது என்பது என்னால் சாத்தியம் அல்ல. //

    உங்களால் நிரூபித்துக் காட்டுவது சாத்தியம் இல்லை என்றால், நீங்கள் நாராயணன் மட்டுமே ஈஸ்வர சொருபம் என்று ஏன் சொல் வேண்டும்?

    சிவனும் ஈஸ்வர சொரூபம் , முருகனும் ஈஸ்வர சொரூபம்; நாராயணன் எந்த ஈஸ்வரனின் சொரூபமோ, அதே ஈஸ்வரனின் சொரூபம் தான் சிவனும் , ஸ்கந்தனும் என்பது கீதையில் தெளிவாக இருக்கிறதே.

    10.21 ஆதித்யானம் மஹாம்- விஷ்ணுர்

    10. 23 ருத்ராணாம் சங்கரச் – சாஸ்மி

    ஆக கிருஷ்ணர் விஷ்ணு, சங்கரர் இருவருக்கும் சம இடம் கொடுத்து இருவருமே தன அம்சம் என்றுதான் சொல்லி இருக்கிறார்.

    ஹிரண்ய கசிபுவைப் போலவே, உண்மை என்ன என்று தான் நேரில் அறிந்து கொள்ளாமலே தான் கூறுவதுதான் உண்மை என பிடிவாதம் பிடிக்கும் நண்பர்களைத் தான் நாம் நிரூபித்துக் காட்டலாமே என்று சொல்கிறோம். ஒரு கருத்து உண்மை என்பதற்கு அதை நிரூபித்துக் காட்டுவதே சரியான வழி.

    ஹிரண்ய கசிபு, விஷ்ணு கடவுள் இல்லை என்றான். சிலர் இங்கே சிவன் கடவுள் இல்லை என்கிறார்கள்.

  32. ////
    இப்போது ஒருவ‌ர் சைவ‌ர் என்றால், அவ‌ர் பெருமா ள் கோவிலுக்கு சென்று வ‌ண‌ங்கினால், பெருமாள் ப‌க்த‌ர்க‌ள் மகிழ்ச்சி அடைவார்க‌ள். இவ்வாராக ந‌ல்லிண‌க்க‌மும் , ச‌ம‌ய‌ ந‌ட்பும் உருவாகிறது.
    ////

    //நான் கிருஷ்துவனாக மாறினால் சுவிஷேஷ்க்காரன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான் – அவனை மகிழ்விப்போம். பாபர் மசூதிக்கு குரல் கொடுத்தால் முஸ்லிம் மகிழ்வான் அவனை மகிழ்விப்போம் – எப்படி எல்லாம் point வைக்கிறார்கள்//

    எதற்கு எதை ஒப்பு வைக்கிறார்கள் பாருங்கள். ஒரு சைவர் ஒரு நாள் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினால் அது மத மாற்றமா? எப்படிப் பட்ட அநியாயமான கருத்து? பெருமாள் இந்துக்களின் கடவுள் இல்லையா?

    இப்போது யார் கிறிஸ்தவனாக மாறச் சொன்னது? இந்துவாக இருந்தால் தானே எல்லாக் கருத்துக்களையும் படிக்கும் சுதந்திரம் கிடைக்கிறது? இந்துவாக இருந்தால் எந்த வழிபாட்டு தளத்திற்கும் செல்லலாம். இந்து மதம் அதை தடுக்கவில்லை.

    உலகில் உள்ள எல்லா மதங்களையும் அரவணைத்து, அவற்றின் உண்மையான ஆன்மீக கருத்துக்களை வெளிப்படுத்தி, அவற்றில் உள்ள காட்டு மிராண்டி வெறுப்பு கருத்துக்களை நீக்கி அவற்றை செப்பனிட்டு ஒப்படைக்கும், அரவணைப்பும் அன்பும், அறிவும், உண்மையும், திறமையும், வலிமையையும், ஆற்றலும், சகஜத் தன்மையும், சகிப்புத் தன்மையும், எல்லாவற்றுக்கும் மேலாக தைரியமும் உள்ள ஒரே மதம் ஹிந்து மதம்.

    இந்து மதத்தில் உள்ளா ஆன்மீக கருத்துக்கள் மிக ஆழமானவை. அதனால் இந்து தைரியமாக பிற மதத்தினருக்கு உதவ முடியும். இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் பிற மதத்தவரின் வழிபாட்டு தளங்களுக்கு செல்ல அஞ்சுவார்கள்.

  33. திருச்சிக்காரரே,

    //
    10.21 ஆதித்யானம் மஹாம்- விஷ்ணுர்

    10. 23 ருத்ராணாம் சங்கரச் – சாஸ்மி

    ஆக கிருஷ்ணர் விஷ்ணு, சங்கரர் இருவருக்கும் சம இடம் கொடுத்து இருவருமே தன அம்சம் என்றுதான் சொல்லி இருக்கிறார்.
    //

    இதற்கு வேறு இடத்தில் பதில் கூறிவிட்டதாயிற்று (https://tamilhindu.com/2010/02/creation-theory-2/comment-page-8/#comment-11344). ஆகையால் இதை இங்கு வளர்க்க வேண்டாம்.

    //
    ஹிரண்ய கசிபு, விஷ்ணு கடவுள் இல்லை என்றான். சிலர் இங்கே சிவன் கடவுள் இல்லை என்கிறார்கள்.
    //

    என் கடவுட் கொள்கை எனக்குச் சொந்தமான விஷயம். கடவுள் யார் என்ற விஷயத்தில் எனது privacy-ஐயும் sentiments-ஐயும் காலில் இடற்றியது நீங்கள் தான். சொந்த விஷயமான கடவுட் கொள்கையை வைத்துக் கொண்டு மற்ற சித்தாந்தங்களை “காட்டு மிராண்டி கலாச்சாரம், தாலிபானியம்” என்று கூறியது நான் அல்ல. ஏன், தேவை இல்லாமல் நானாக முன்வந்து மற்ற சித்தாந்தன்களைக் கடைபிடிப்போர் இருக்கும் இந்த இடத்தில், “உங்கள் சித்தாந்தம் தவறு” என்று கூறவில்லை.

    இப்பொழுதும் கூறுகிறேன்: “we agree to disagree, and let us each calmly follow our personal beliefs without interfering with others” என்று நீங்கள் ஒரு முறை கூறி வாதத்தை நிறுத்துங்கள். நானும் நிறுத்துகிறேன். “interfering with others” என்று கூறியதில் public fora-க்களில் “உங்கள் சித்தாந்தம் காட்டு மிராண்டித் தனத்தைத் தூண்டும்” என்பது போன்ற கடும் சொற்களை கூறுவதும் அடங்கும்.

    (edited and published)

  34. ்கந்தர்வன் அவர்களே

    நீங்கள் கோயபல்ஸ் பாதையில் பயணிக்கிறீர்கள்.

    ///என் கடவுட் கொள்கை எனக்குச் சொந்தமான விஷயம். கடவுள் யார் என்ற விஷயத்தில் எனது privacy-ஐயும் sentiments-ஐயும் காலில் இடற்றியது நீங்கள் தான். சொந்த விஷயமான கடவுட் கொள்கையை வைத்துக் கொண்டு மற்ற சித்தாந்தங்களை “காட்டு மிராண்டி கலாச்சாரம், தாலிபானியம்” என்று கூறியது நான் அல்ல. ஏன், தேவை இல்லாமல் நானாக முன்வந்து மற்ற சித்தாந்தன்களைக் கடைபிடிப்போர் இருக்கும் இந்த இடத்தில், “உங்கள் சித்தாந்தம் தவறு” என்று கூறவில்லை. ///

    சிவபுராணம் லிங்கபுராணம் சார்ந்த கட்டுரைகளில், நாராயணன் மட்டுமே பரம்பொருள் என்று பிரமாணமான வேத‌நூல்கள் சொல்கின்றன என்று சொன்னதோடல்லாமல், சிவனைப் பரம்பொருள் என்றுசொல்லும் வேத நூலகளைப் பிரமாணம் என்று கொள்ள மாட்டோம் என்றும் சொல்லி, அத்தோடு நில்லாமல், கிருஷ்ணசாமி அய்யங்கரை மேற்கோள் காட்டி அவரது சிறப்புகளை முன்னிறுத்தி, சிவனைப் பரம பாகவதன் என்றும் சொல்லி, ஸ்கந்தபுராணத்தைத் திரித்து எழுதிய ப்ளாக் ஸ்பாட்டை தொடர்பு காட்டி, லிங்கபுராணம் அருணாசலபுராணம் முதலிய நூல்களை தாமஸ நூல்கள் என்றும் சொல்லி, நான் எத்தனை சொல்லியும் கேளாமல் வேதம் மட்டும்தான், தமிழில் உள்ள நாயன்மார்களின் பாசுரம் முதலியன ஏற்கத்தக்கதல்ல என்றும் சொல்லி, நாராயணனைத் தவிர வேறு யாரையும் வணங்காதிருப்பது சீரியது என்றும் சொல்லி வாதம் செய்து வருவது யார்? அது நீங்க‌ள் இல்லையா?

    நமது சாதகத்தில், ஆத்ம விசாரம், பிரம்ம விசாரம் என்று இரண்டு உள்ளன. சாதகன் முதலில் ஆத்ம விசாரம் செய்து பழகவேண்டும் நன்கு தேறிய நிலையில்தான் பிரம்ம விசாரம் செய்ய வேண்டும்.

    திரு ராமன் அவர்கள் எழுதும் ஆத்மவிசாரக் கட்டுரைகள் பகவான் ரமணரின் எளிய வழிமுறையை ஒட்டி எழுதப்படுகின்றன. அவற்றைப் படித்து நன்கு தெளிவு பெறுங்கள். பிறகு பிரம்ம விசாரம் செய்யலாம்.

    இவையெல்லாம் தவிர, இறைவனை உள்ளத்துள் உணர்ந்த எத்தனையோ ஜீவன் முக்தர்களை/ ம‌ஹான்க‌ளை இந்த பாரததேசம்் க‌ண்டிருக்கிற‌து. அவ‌ர்க‌ளில் பெரும்பாலோர் வேத‌ப்ப‌டி நீங்க‌ள் சொல்லும் பிர‌ம்ம‌ விசார‌ம் செய்த‌வ‌ர்க‌ள் அல்ல.

    இறைவ‌னை ஜீபூம்பா பூத‌த்தை பாட்டிலுக்குள் அடைப்பதுப் போல‌, சில‌ வேத‌ நூல்க‌ளுக்குள் அடைத்து, தேடிக் கண்டுபிடிக்கமுடியும் என்று எண்ணுவது தவறே.

    இறைவன் உணர்ந்தோதற்கு உரியவன். பாமரனுக்கும், படித்தவனுக்கும் பாரபட்சம் செய்யாதவன். உங்கள் வாதங்கள் ஏதோ வேதம் படித்தவனுக்கு மட்டுமே பிரம்ம ஞானம் வரும் என்று கூறுவதைப் போல உள்ளது. அது தவறு.

  35. திரு க‌ந்த‌ர்வ‌ன் அவ்ர்க‌ளே,

    ///கந்தர்வன்
    21 February 2010 at 11:36 am
    திருச்சிக்காரரே,

    “ஆதித்யானாம் அஹம் விஷ்ணு” என்று சொன்னதில் “பன்னிரு ஆதித்த்யருள் விஷ்ணு என்ற பெயரை உடைய ஆதித்யர்” என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த விஷ்ணு என்ற பெயரை உடைய ஆதித்யர் பரமாத்மா விஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் என்பது சாஸ்திரம் அறிந்தவர்கட்கு நன்கு தெரியும்.///

    அப்படியானல் இது தெரிந்துமா நீங்கள் அடிமுடி காணாத வரலாறு குறித்த ஒவ்வொரு கட்டுரையிலும், சைவசித்தாந்தத்தை விளக்கும் இந்தக்கட்டுரை உள்பட ஒவ்வொரு கட்டுரையிலும், பல்வேறுபட்ட ஆட்சேபம் கொண்ட மறுமொழிகளைச் செய்தீர்கள்?

    சரியில்லை. முறையில்லை.

  36. திரு உமாசங்கர்,

    //அப்படியானல் இது தெரிந்துமா நீங்கள் அடிமுடி காணாத வரலாறு குறித்த ஒவ்வொரு கட்டுரையிலும், சைவசித்தாந்தத்தை விளக்கும் இந்தக்கட்டுரை உள்பட ஒவ்வொரு கட்டுரையிலும், பல்வேறுபட்ட ஆட்சேபம் கொண்ட மறுமொழிகளைச் செய்தீர்கள்?

    சரியில்லை. முறையில்லை.//

    “பரம்பொருளான திருமால் அல்ல, அதே பெயருடைய வேறு தேவதை” என்று கட்டுரைகளில் முன்பே கூறியிருந்தால் ஆட்சேபம் கொண்ட மருமொழிகளைச் செய்திருக்க மாட்டேன். அப்படி கட்டுரை ஆசிரியர் கூறாததால் அதை நான் எதிர்த்தேன். அப்படிக் கட்டுரை எழுதிய எவரும், “அடி தேடிய திருமால் பன்னிரு ஆதித்தருள் ஒருவரான விஷ்ணு” என்றெல்லாம் கூறவே இல்லை.

    // நாராயணன் மட்டுமே பரம்பொருள் என்று பிரமாணமான வேத‌நூல்கள் சொல்கின்றன என்று சொன்னதோடல்லாமல், சிவனைப் பரம்பொருள் என்றுசொல்லும் வேத நூலகளைப் பிரமாணம் என்று கொள்ள மாட்டோம் என்றும் சொல்லி//

    அவ்வாறு நான் சொல்லவே இல்லை. பரம்பொருளை “சிவன்” என்ற சொல்லால் குறிக்கப்படுவதற்கு நீங்கள் கூறும் அர்த்தத்தை தான் நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் கொள்கிறோம் என்பது எங்கள் சொந்த விஷயம். ஒரே ஒரு உதாரணம்: சுவேதாசுவதார உபநிஷத்தில், “பரம்பொருள் உருத்திரன்” என்று வருகிறது. இந்த உருத்திர சப்தத்திற்கு “புராணங்களில் பிரசித்தமாகச் சொல்லப்படும் திரிபுரம் எரித்த முக்கட் பிரான்” என்று கூறினால் ஏற்புடையது ஆகாது என்று நாங்கள் கொள்கிறோம். ஏன் என்றால், அந்த உபநிஷத்தின் இறுதியில், “சிருஷ்டியின் பொழுது எவன் ஒருவன் பிரம்மாவைப் படைத்து அவனுக்கு வேதங்களை அருளுகிரானோ” என்று வருகிறது. விஷ்ணு தான் பிரம்மாவை உந்தித் தாமரையிளிருந்து படைக்கிறார் என்று அனைவரும் அறிவர். ஹயக்ரீவ அவதாரம் எடுத்து பிரம்மாவுக்கு வேதத்தினை அருளுகிறான் என்றும் வருகிறது. பதிநெட்டுள் எந்த புராணத்திலும் “முக்கட்பிறான் சிவன் பிரம்மாவைப் படைக்கிறார், அவனுக்கு வேதத்தைக் கற்பிக்கிறார்” என்று வருவதாகத் தெரியவில்லை. அதையும் தவிர, விஷ்ணு சஹாஸ்ரனாமத்தில் “ருத்ரன், சிவன்” போன்ற பெயர்களும் விஷ்ணுவிற்கு ஓதப்படுகிறது.

    // நாராயணனைத் தவிர வேறு யாரையும் வணங்காதிருப்பது சீரியது என்றும் சொல்லி வாதம் செய்து வருவது யார்? அது நீங்க‌ள் இல்லையா?//

    இந்த வியவஹாரத்தில் முதன்முதலில் இறங்கியது நான் அல்ல. புறந்தோழா மாந்தர்கள் கடைப்பிடித்து வரும் கொள்கைகளைத் தாறுமாறாக கூறப்பட்டதால் அதை defend பண்ண வந்தேன். நாராயணனைத் தவிர வேறு யாரையும் வணங்காதிருப்பது, என் பார்வையில் எனக்குச் சீறியது என்று தான் சொன்னேன்.

    // ஸ்கந்தபுராணத்தைத் திரித்து எழுதிய ப்ளாக் ஸ்பாட்டை தொடர்பு காட்டி //

    ஆதி சங்கரர் பாஷ்யத்தில் ச்கன்தரை சனத்குமாரரின் மறுபிறப்பு என்றே எழுதியுள்ளார். கையில் பிரம்ம சூத்திர பாஷ்யம் இருந்தால் சமஸ்கிருதத்திலேயே வாசித்துப் பாருங்கள். (இது வரும் இடம் மூன்றாம் அத்தியாயம், மூன்றாம் பாதம், முப்பத்தி இரண்டாம் சூத்திரம்).

    // அத்தோடு நில்லாமல், கிருஷ்ணசாமி அய்யங்கரை மேற்கோள் காட்டி அவரது சிறப்புகளை முன்னிறுத்தி //

    அவரைப் பற்றி இங்கு இனி விமர்சிக்கவோ, தூஷிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    // சிவனைப் பரம பாகவதன் என்றும் சொல்லி //

    சிவன் பரம பாகவதர் என்று பாகவத புராணத்திலும், மகாபாரத ஹரிவம்ச பருவத்திலும் வருகிறது. இதை நானாகக் கற்பிக்கவில்லை. பலரும் ஏற்றுக் கொண்டுள்ளது.

    // லிங்கபுராணம் அருணாசலபுராணம் முதலிய நூல்களை தாமஸ நூல்கள் என்றும் சொல்லி //

    இந்த நூல்களைத் தாமசம் என்று அடியேன் எங்கே சொன்னேன் என்று காட்டுங்கள்.

    // நான் எத்தனை சொல்லியும் கேளாமல் வேதம் மட்டும்தான், தமிழில் உள்ள நாயன்மார்களின் பாசுரம் முதலியன ஏற்கத்தக்கதல்ல என்றும் சொல்லி

    இறைவ‌னை ஜீபூம்பா பூத‌த்தை பாட்டிலுக்குள் அடைப்பதுப் போல‌, சில‌ வேத‌ நூல்க‌ளுக்குள் அடைத்து, தேடிக் கண்டுபிடிக்கமுடியும் என்று எண்ணுவது தவறே.
    //

    எனக்கு ஏற்கத்தக்கதல்ல என்று தான் சொன்னேன். மேலும், வேதத்தைப் பரம பிரமாணமாகக் கொண்டாடுபவர்கள் வேத விருத்தமான இடங்களை ஆதரிப்பதில்லை என்று தான் சொன்னே. உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஏற்கலாம். நானாக முன்வந்து, “உங்கள் சித்தாந்தம் அவ்வளவு சீரியது அல்ல” என்று கூற மாட்டேன்.

    //
    இவையெல்லாம் தவிர, இறைவனை உள்ளத்துள் உணர்ந்த எத்தனையோ ஜீவன் முக்தர்களை/ ம‌ஹான்க‌ளை இந்த பாரததேசம்் க‌ண்டிருக்கிற‌து. அவ‌ர்க‌ளில் பெரும்பாலோர் வேத‌ப்ப‌டி நீங்க‌ள் சொல்லும் பிர‌ம்ம‌ விசார‌ம் செய்த‌வ‌ர்க‌ள் அல்ல.
    //

    இதை நான் மறுக்கவில்லை; வேதத்தைப் படித்தால் தான் முக்தி என்றும் கூறவில்லை.

    //
    பாமரனுக்கும், படித்தவனுக்கும் பாரபட்சம் செய்யாதவன். உங்கள் வாதங்கள் ஏதோ வேதம் படித்தவனுக்கு மட்டுமே பிரம்ம ஞானம் வரும் என்று கூறுவதைப் போல உள்ளது. அது தவறு.
    //

    என்னுடைய வாதத்தைச் சரியாகவே புரிந்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஏத்தும் தமிழ் மறையாகிய நாலாயிரத்தின் வழியாக முக்தி உண்டு என்று ஆச்சாரியார்கள் கூறியுள்ளனர்.

    //
    இவையெல்லாம் தவிர, இறைவனை உள்ளத்துள் உணர்ந்த எத்தனையோ ஜீவன் முக்தர்களை/ ம‌ஹான்க‌ளை இந்த பாரததேசம்் க‌ண்டிருக்கிற‌து. அவ‌ர்க‌ளில் பெரும்பாலோர் வேத‌ப்ப‌டி நீங்க‌ள் சொல்லும் பிர‌ம்ம‌ விசார‌ம் செய்த‌வ‌ர்க‌ள் அல்ல.
    //

    அதையும் அறிவேன். வேட்டுவர் குளத்து சபரிக்கும், பரவையாகிய ஜடாயுவுக்கும் இராமன் மோட்சம் அளித்தான். அவர்கள் பிரம்ம விசாரம் செய்தவர்கள் அல்லர் என்பதையும் அறிவேன். ஆனால், தத்துவத்தையும் சித்தாந்தத்தையும் நிலைநிறுத்த வேதம் இன்றியமையாதது. அதற்கு முரணாக போக முடியாது. இதுவே எங்கள் கொள்கை.

  37. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களே

    ///
    எரிந்த சாம்பல் முழுவதும் சென்றுபடிவதற்கு வேறு இடம் இல்லாதபடியினால் சிவபெருமான் திருமேனியிலேயே படியும். சர்வ சங்காரத்தின் பின்னும் உலகுக்குச் சிவனே சார்பு என்பதையே ‘சுடலைப் பொடி பூசி’ என்னும் தொடர் உணர்த்துகின்றது. இந்தச் சாம்பல் ஆதி நீறு எனப்படும். இந்த ஆதி விபூதியை, நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில், ‘மதுகையால் நீறணிந்து” என்று புகழ்ந்தார். திருநீறே சங்க இலக்கியத்தில் வெளிப்படும் முதற் சமயச் சின்னம்.

    இன்னொரு விபூதியும் உண்டு. அது அனாதி விபூதி எனப்படும். அது இறைவன் மேல் இயல்பாக உள்ள திருநீறு. நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும்//

    ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் ஜோதியின் மேல் இருவித விபூதிகள் ‍ ஒன்று ஆதி விபூதி, மற்றது அனாதி விபூதி ‍ என்ற தத்துவ உண்மையை அறிந்து வியக்கிறேன். இந்த அனாதி விபூதி குறித்த மேலும் விளக்கம் இருந்தால் தயைகூர்ந்து கூற வேண்டுகிறேன்.

  38. //
    உங்களால் நிரூபித்துக் காட்டுவது சாத்தியம் இல்லை என்றால், நீங்கள் நாராயணன் மட்டுமே ஈஸ்வர சொருபம் என்று ஏன் சொல் வேண்டும்?
    //

    சாத்திரத்தில் அரிச்சுவடி அறிந்தவர்களும் சொல்லுவார்கள் இதை – நவீன விஞ்ஞானிகளுக்கும், நமது நாட்டிலேயே முன் வாழ்ந்த நாஸ்திகர்களும், தீகா காரர்களும் மட்டும் தான் ப்ரத்யக்ஷம் ஒன்றே தான் பிரமாணம் என கொள்வர்
    நமது சாஸ்திரத்தில் அனுமானமும் பிரமாணம் – அதாவது மனது ஒத்துக்கொண்டால் போதும் (அதாவது மனதிற்கு ஒப்புக்கொள்ளும் படி இருந்தால் போதும்) – இது இல்லை என்று நீங்கள் சாதிக்க வேண்டாம் – இல்லை என்றால் உங்களுக்கும் வேதாந்தத்திற்கும் சம்மந்தம் இல்லை – கடவுளை நேரில் பார்க்காமலே கடவுள் உள்ளார் என அறுதி இட்டு கூற முடியும் – நியாய சாஸ்திரம் வாசியுங்கள் – அவன் வேதம் சொல்வதை அப்படியே கேட்காமல் அனுமானம் மூலமே கடவுள் இருக்கிறார் – ஆர்த்மா இருக்கிறது, ஆத்மா நித்யம் என்று சாதிக்கிறான்

    அதே அனுமானத்தை கொண்டு பர தெய்வம் யார் என்று சாதித்துக்கொள்ள முடியும் – இது ஆதி சங்கரரே ஜீவன் முக்தி இருக்கிறது என்பதற்கு கையாண்ட ஒரு வழி முறை

    பைபிள் படிப்பதையும், பெரியாரை படிப்பதையும், காக்க பூனை கதை படிப்பதையும் கொஞ்சம் விட்டு விட்டு சாஸ்திரம் வாசியுங்கள் – நன்மை உண்டாகும் தெளிவு பிறக்கும்

  39. //பைபிள் படிப்பதையும், பெரியாரை படிப்பதையும், காக்க பூனை கதை படிப்பதையும் கொஞ்சம் விட்டு விட்டு சாஸ்திரம் வாசியுங்கள்//

    இராஜாஜி, சிறையில் இருந்த போது பைபிள் படித்து இருக்கிறார். பாரதி, காந்தி, விவேகானந்தர் இப்படி இந்திய சிந்தனையாளர் பலரும் பைபிளைப் படித்து உள்ளனர். நான் சாதரணமானவன்.

    நீங்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருந்தால் அவர்களுக்கு உங்கள் அறிவுரையை அளித்து இருக்கலாமே!!!! Just miss!!

  40. நியாயம் தர்க்கம் எல்லாம் உண்மையை யூகிக்க , அனுமானிக்க மாத்திரமே முடியும். அறுதியிட்டு சொல்ல முடியாது.

    இருட்டிலே கயிற்றின் மேல் தொங்குவது பாம்பா அல்லது கயிறா,

    அது அசைந்தால் அது காற்றில் அசைகிறதா அல்லது நெளிகிறதா,

    என்று எல்லாம் யூகித்துக் கொண்டே தர்க்கித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.

    கயிறு என யூகித்து பாம்பைப் பிடித்தால் என்ன ஆகும்?

    இறைவனை நேருக்கு நேர் காண்பது ஒளி பாய்ந்தது போன்ற வெளிச்சமான நிலைமை. பாம்பா, கயிறா – இப்படி விளங்காத உண்மைகள் பலவும் விளங்கும்.

    வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் ஒத்துக் கொள்வ‌து என்றால், எந்த‌ ந‌ம்பிக்கையை ஒத்துக் கொள்வ‌து? இசுலாமிய‌ர் குரானை அப்ப‌டியே ந‌ம்ப‌ வேண்டாம், கேள்வியே கேட்க‌க் கூடாது என்கின்ற‌ன‌ர். கிறிஸ்துவ‌ர் பைபிளை அப்ப‌டியே ந‌ம்ப‌ வேண்டும் என்கின்ற‌ன‌ர். யார் சொல்வ‌தை ந‌ம்புவ‌து? எந்த‌ ந‌ம்பிக்கைக்கும் நிரூப‌ண‌ம் இல்லை. எனவே த‌ங்க‌ள் ந‌ம்பிக்கையை நிலை நிறுத்த‌ வாளை உருவுகின்ற‌ன‌ர். இர‌த்த‌ ஆறு ஓட‌ விட்டு, வெற்றி பெறுப‌வ‌ர் ந‌ம்பிக்கையே உண்மையான‌ ந‌ம்பிக்கை என‌ முடிவு செய்வோம் என்கிற‌ வ‌ழிக்கு சென்ற‌ன‌ர்.

    இந்து ம‌த‌மோ த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ம‌க்க‌ள் முன் வைக்கிற‌து. அந்த‌க் க‌ருத்துக்க‌ளில் உண்மை இருக்கிற‌தா, ந‌ன்மை இருக்கிறதா என்று சிந்திச‌ரித்து பாருங்க‌ள், என‌ தைரிய‌மாக‌ சொல்லுகிற‌து. விவேகான‌ந்த‌ர் அமேரிக்காவுக்கு இந்து ம‌த‌க் க‌ருத்துக்க‌ள் உண்மையான‌து என்று வெறும‌னே ந‌ம்பிக் கொண்டு போக‌வில்லை. எல்லாக் க‌ருத்துக்களையும் ந‌டைமுறையிலே ச‌ரி பார்த்துக் கொண்டுதான் போனார். “ஆழ்ந்து சிந்தியுங்க‌ள் உங்க‌ள் முந்தைய‌ பிற‌விக‌ள் உங்க‌ளுக்கு நினைவுக்கு வ‌ரும், என்னுடைய‌ முந்தைய‌ பிற‌விக‌ளை என்னால் நினைவு கூற‌ முடிந்த‌து” என்றார். அதுதான் அத்தாரிட்டியாக‌ சொல்வ‌து. உம்மாலோ, என்னாலொ அப்ப‌டி சொல்ல‌ முடியுமா?

    க‌ட‌வுள் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌து ந‌ம்பிக்கை. அது ந‌ம்பிக்கை மாத்திர‌மே. க‌ட‌வுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு சொல்வ‌துதான் உறுதியான‌ அத்த‌ரிட்டியோடு சொல்வ‌து. தியாக‌ராச‌ர் இராம‌ரை நேரில் க‌ண்ட‌தாக சொல்கிற‌ரார். சுவாமி விவேகான‌ந்த‌ர் முத‌லில் ந‌ரேந்திர‌னாக‌, க‌ட‌வுள் இருக்கிறாரா? என்று கேட்டார். க‌ட‌வுள் இருக்கிறாரா என்று உண்மையை அறிய‌ விரும்புகிற‌வ‌ன் இன்னும் வேகமாக ஆத்மீக‌ ஆராய்ச்சி செய்வான்.

    இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே உல‌கிலே வாழும் போதே ஒருவ‌ன் க‌ட‌வுளைக் காண‌ முடியும் என்கிற‌து. பிற‌ ம‌த‌ங்க‌ள் எல்லாம் க‌ல்ல‌றைக்கு தான் டிக்கெட் கொடுக்கின்றன‌.

    தானே நேரே பார்த்து விட்டு, உணர்ந்து விட்டு சொல்வதுதான் அத்தாரிட்டியான நிலை.

    மற்றபடி நியாயம் தர்க்கம் எல்லாம் உண்மையை யூகிக்க , அனுமானிக்க மாத்திரமே முடியும். அறுதியிட்டு சொல்ல முடியாது.

  41. //இப்பொழுதும் கூறுகிறேன்: “we agree to disagree, and let us each calmly follow our personal beliefs without interfering with others” என்று நீங்கள் ஒரு முறை கூறி வாதத்தை நிறுத்துங்கள். நானும் நிறுத்துகிறேன்.//

    நான் நாராயணனுக்கு அங்க பிரதட்சிணம் செய்ய தயார் என்று கூறி நிறுத்துகிறேன். இந்துக் கடவுள்களுக்குள்ளே உயர்வு தாழ்வு காட்ட வேண்டாம் எனக் கோரி நிறுத்துகிறேன்.

  42. //
    நியாயம் தர்க்கம் எல்லாம் உண்மையை யூகிக்க , அனுமானிக்க மாத்திரமே முடியும். அறுதியிட்டு சொல்ல முடியாது.

    இருட்டிலே கயிற்றின் மேல் தொங்குவது பாம்பா
    //

    இதை நீங்கலாக சொல்கிறீர்கள இல்லை தெரிந்து கொண்டு சொல்கிறீர்களா – நண்பரே அனுமானம் என்பது அறுதி இட்டு கூறக்கூடிய பிரமாணம் – அதனால் தான் அதற்க்கு பிரமாணம் என்று பெயர் – வெறும் யுகம் என்பதல்ல

    ஒரு முறையேனும் தர்க்கம் வாசியுங்கள் (இரண்டு பக்கம் போதும்) – அப்புறம் தர்கத்தில் மஹா பண்டிதர்கள் உள்ளனர் அவர்களிடம் கேளுங்கள்

    நீங்கள் சொல்லும் யுக முறை “western syllogism” இந்திய முறை பரமான முறை

    கொஞ்சம் விட்டால் என்னென்னவோ சொல்வீர்கள் போல இருக்கே

    ஒரு வேண்டுகோள் படிக்கவே படிக்காமல் எதையும் சொல்லாதீர்கள்

    //
    க‌ட‌வுள் இருக்கிறார் என்று ந‌ம்புவ‌து ந‌ம்பிக்கை. அது ந‌ம்பிக்கை மாத்திர‌மே. க‌ட‌வுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு சொல்வ‌துதான் உறுதியான‌ அத்த‌ரிட்டியோடு சொல்வ‌து.
    //

    இதை தான் இல்லவே இல்லை என்றேன் – ப்ர்யத்யக்ஷம் மட்டுமே பேசுபவன் தீகா காரன் அல்லது நாத்திகன் என்பது நமது சாஸ்திர முடிவு

    உங்களால் முடிந்தால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் என்று நேரில் பார்த்து சொல்லுங்கள் பாப்போம் – என்னால் அனுமானம் மூலம் (மட்டுமே) சொல்ல முடியும்

    அனுமான இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை – தீகா காரனுக்குத்தான் இது புரியலன்னு பார்த்தா

    இது புரிந்தாலே உங்களுக்கு எல்லாம் விளங்கும் – இல்லை என்றால் அடியேன் தெண்டம் சமர்பித்து விலகிக்கொள்கிறேன்

  43. //
    பைபிள் படிப்பதையும், பெரியாரை படிப்பதையும், காக்க பூனை கதை படிப்பதையும் கொஞ்சம் விட்டு விட்டு சாஸ்திரம் வாசியுங்கள்//

    இராஜாஜி, சிறையில் இருந்த போது பைபிள் படித்து இருக்கிறார். பாரதி, காந்தி, விவேகானந்தர் இப்படி இந்திய சிந்தனையாளர் பலரும் பைபிளைப் படித்து உள்ளனர். நான் சாதரணமானவன்.

    நீங்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருந்தால் அவர்களுக்கு உங்கள் அறிவுரையை அளித்து இருக்கலாமே!!!! Just miss!!
    //

    நண்பரே அவர்கள் எல்லாம் உங்களை போல வாய்க்கு வந்ததெல்லாம் மனதிற்கு தோன்றியதெல்லாம் பேசவில்லை – அவர்கள் சாஸ்திரம் வாசித்து முடித்த பின்னரே சில காரணங்கள் கொண்டு bible படித்தனர் – ராஜாஜியை விட்டு வையுங்கள் அவர் தருக சென்று தொழுதார் என்றெல்லாம் புதுசா ஏதும் சொல்ல வேண்டாம்

    கேள்வி கேட்பது தவறில்லை – எந்த பதிலையும் நான் ஏற்க மாட்டேன் என்ற மனப்ப்பாடே தவறு – உங்கள் விஷயத்தில் இது பல முறை நிருபன ஆகிவிட்டது – இதுவும் இல்லை என்றே நீங்கள் சொல்லப் போகிறீர்கள்

  44. Dear Mr. Saarang,

    I dont want to repeat again and again, I told very clearly that க‌ட‌வுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு சொல்வ‌துதான் உறுதியான‌ அத்த‌ரிட்டியோடு சொல்வ‌து.

    This is not western concept. This is Indian concept. Swami Vivekaanadha has told that seeing God is the starting point of Aanmeekam. All other reading, debate ..etc are not sufficient.

    Again I came to the ponit which I wrote already.

    இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே உல‌கிலே வாழும் போதே ஒருவ‌ன் க‌ட‌வுளைக் காண‌ முடியும் என்கிற‌து. பிற‌ ம‌த‌ங்க‌ள் எல்லாம் க‌ல்ல‌றைக்கு தான் டிக்கெட் கொடுக்கின்றன‌.

    Krishna has told very clearly that a person can attain Bhrammam.

    One can belive it and practice yoga,

    He can confirm it after he had seen the Bhrammaam himself. Then he can ascertain that categorically!

    Hindus keep in high esteem, those who claimed to have seen the God….. Adi Sankara, Vivekaanada, Thiyakaraajaa, Pirahalaathan, Dhuruvan….. etc.

    We give respect to others who learns and teaches Sasthras, explains them…etc.

    But the authority lies with the one who had seen the God himself!!!

    Hope I explained sufficiently and you can deliberate on what I wrote.

    My best wishes for you!

  45. //
    I dont want to repeat again and again, I told very clearly that க‌ட‌வுளை நேருக்கு நேர் பார்த்து விட்டு சொல்வ‌துதான் உறுதியான‌ அத்த‌ரிட்டியோடு சொல்வ‌து
    //

    சரி அப்படி என்றால் நான் பார்த்த கடவுளை நீங்கள் எப்படி நம்புவர்கள் – எல்லோருமே கடவுளை பார்த்து தான் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் ஆகாத விஷயம்

    நமது நூல்களோ, பகவானோ (கீதையில்) வேறு விதமாக சொல்கிறது – நீங முழு நம்பிக்கை வை நான் உனக்கு கிடைப்பேன் என்று (நான் உனக்கு ப்ரத்யக்ஷம் ஆனா பின் முழு நம்பிக்கை வை என்பதே) – இந்த அளவிலே தான் நீங்கள் சொல்வது நமது மதத்திற்கு ஏற்புடையது அல்ல

    பல பல பேர் கடவுளை கண்டுள்ளனர் – நான் ஒரு பெரியவரை சென்னை ஜெயலக்ஷ்மி புஸ்தகக கடையில் சந்தித்தேன் – அவர் தான் ஒரு கம்ம்நிச்டாக இருந்தத்யும் பிறகு திருந்தியத்தையும் சிவா பார்வதி தம்பதியர் அவருக்கு நேராக வந்து உதவியதையும் விவரித்தார்

    மேலும் கடவுளை கண்டவன் தான் அறுதி இட வேண்டும் இல்லை – ராமானுஜருக்கு அரங்கன் ஒரு முறை கூட நேரில் வந்து அருளவில்லை – ஆனால் ராமானுஜர் சொன்னதற்காக பிள்ளை உறங்கா வில்லி தாசருக்கு காட்சி தருகிறார் – டில்லியில் ராமானுஜர் என் செல்லப்பிள்ளை வாராய் என்றவுடன் அரச்ச மூர்த்தியாக இருந்த பெருமாள் தாவி அவர் மடியில் வந்தமர்ந்தார் (ஆனால் விஷ்வா ரூப டைசனமோ, சங்க சக்ர தரிசனமோ கிடைக்க வில்லை) – மேலும் திருக்குறுங்குடியில் ராமனுஜரையே குருவாக ஏறு உபதேசம் பெறுகிறார் – இங்கு நீங்கள் பார்க்க வேண்டியது என்ன என்றால் ஸ்வரூபத்தில் ஒரு முறை கூட வர வில்லை ஆனால் அவர் கூறியதற்காக வேறொருவருக்கு ஸ்வரூபம் காட்டி உள்ளார்

    ப்ரத்யக்ஷம் தான் முடிவு இல்லை – சங்க்ய யோகா சாஸ்திரத்தில் ஈடு படுவோருக்கு அந்தர்யாமி ரூபம் தெரியும் ஆனால் அது மனதில் தான் தெரியும் – இதுவும் ப்ரத்யக்ஷம் இல்லையே (புலன்கள் மூலம் அறிவது இல்லை)

    பலருக்கு ஒரு ஜ்யோதி வடிவாகவே மனதில் காட்சி தருவார் – இதுவும் ப்ரத்யக்ஷம் இல்லை

    இதையும் நீங்கள் கருத்தில் கொண்டு நீங்கள் முடிவு கட்ட வேண்டும் என நினைக்கிறேன்

  46. திரு. சாரங்,

    //பல பல பேர் கடவுளை கண்டுள்ளனர் – நான் ஒரு பெரியவரை சென்னை ஜெயலக்ஷ்மி புஸ்தகக கடையில் சந்தித்தேன் – அவர் தான் ஒரு கம்ம்நிச்டாக இருந்தத்யும் பிறகு திருந்தியத்தையும் சிவா பார்வதி தம்பதியர் அவருக்கு நேராக வந்து உதவியதையும் விவரித்தார்//

    இந்த விடயத்தில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் , கொஞ்சம் நிதானமாக ஆராய வேண்டும். நான் கூட போன மாதம் ஒரு நிகழ்ச்சியில் ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு வங்கி அதிகாரி. அவர் தனக்கு கணபதியும், அநுமனும் காட்சி தந்ததாக சொன்னார். பலரும் அப்படி சொல்கின்றனர். கண்ணை மூடிக் கொண்டு இமைக்கு நடுவில் கடவுள் உருவத்தை தியானிப்பதை சிலர் கடவுளைக் கண்டதாக கருதுகின்றனர்.

    கடவுளைக் காண்பது என்பது சாதாரண விடயம் இல்லை. கடவுளைக் கண்டவுடன் ஒருவருக்கு சக்தி அதிகமாகும்.

    விவேகானந்தரும் பிற சீடர்களும் உலகம் வியக்கும் செயலகளை செய்வார் என பரமஹம்சர் சொன்னார். எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தனர்.

    “தெருவில் பிச்சை எடுக்கும் இவர்களா உலகம் வியக்கும் செயலகளை செய்வார்கள்? ” என்றனர். எனக்கு காளி சொல்லி விட்டாள் என்றார் இராமகிருஷ்ணர்.

    கடவுளைக் காண்பது என்பது எளிதல்ல. அப்படிக் கண்டால் நம்முடைய கஷ்டங்கள் பெரும்பாலும் தீர்ந்து விடும். இல்லை என்றால் அவர் கடவுள் இல்லை.

  47. நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
    தேடியும் திரிந்தும் காணவல்லரோ
    மாடமாளிகை சுழ்தில்லை அம்பலத்து
    ஆடி பாதமென் நெஞ்சுள் இருக்கவே

    இறைவனின் பாதங்கள் என் நெஞ்ச‌த்துள் இருக்கையில் வேறெங்கு தேடினாலும் கிடைக்குமோ?
    இறைவனைத் தொண்டர் உள்ளத்தில்தான் தேட முடியும், புறத்தே அல்ல என்கிறார் ….

    ‍‍‍ திருநாவுக்கரசர் பெருமான்.

  48. பெரியது கேட்கின் வரிவடிவேலோய்
    பெரிது பெரிது புவனம் பெரிது
    புவனமோ நான்முகன் படைப்பு
    நான்முகனோ திருமால் உந்தியிற் பிறந்தவன்
    திருமாலோ கடலிற் துயில்பவன்
    குறுமுனியோ க‌ட‌லைக் குடித்த‌வ‌ன்
    குறுமுனியோ க‌ல‌ச‌த்துப் பிற‌ந்த‌வ‌ன்
    க‌ல‌ச‌மோ புவியிற் சிறும‌ண்
    புவியோ அர‌வினுக்கு ஒருத‌லை பார‌ம்
    அர‌வ‌மோ உமைய‌வ‌ள் சிறு கைவிரல் மோதிர‌ம்
    உமைய‌வ‌ளோ இறைவ‌ர் பாக‌த்து ஒடுக்க‌ம்
    இறைவ‌ரோ தொண்ட‌ர் உள்ள‌த்து ஒடுக்க‌ம்
    தொண்ட‌ர்த‌ம் பெருமை சொல்ல‌வும் அரிதே

    ஔவையார்.

    உள்ளத்தில் தேடவேண்டியதைப் பிரபஞ்ச‌மெல்லாம் தேடலாமா?

  49. பெருமதிப்பிற்குரிய முனைவர் அவ்ர்களுக்கு

    விபூதி தயாரிப்பில் கற்பம், அனுகற்பம், உபகற்பம் என்று மூன்று முறைகளில் தயாரிக்கப்படுகிறது என்று படித்திருக்கிறேன். இது குறித்து விரிவாகவும், எப்படி எவ்வாறெல்லாம் அணியவேண்டும்/ அணியக்கூடாது என்பது பற்றியும் தயை கூர்ந்து எடுத்தியம்புமாறு பணிவுடன் கோருகிறேன்.

  50. திருச்சிக் காரரே,

    பிரத்தியட்சமாக கடவுளைக் கண்டேன் என்று பலரும் கூறுவர். சிலர், “பிரத்தியட்சமாக சிவனைக் கண்டேன்” என்பார். சிலர், “பிரத்தியட்சமாக நாராயணனைக் கண்டேன்” என்பார். இதனால் “யார் கடவுள்” என்பதை எப்படி நிரூபணம் பண்ண முடியும்? கௌதம ரிஷியும் பிரத்தியட்சமாக தான் இந்திரனைக் கண்டார். குந்தி தேவி பிரத்தியட்சமாக சூரியதேவனைக் கண்டாள். ஆகையால், “பிரத்தியட்சமாக கண்டுவிட்டால் யார் பர தெய்வம் என்று தெரியும்” என்று நீங்கள் கூறுவது உண்மை அன்று. சரி, அப்படி ஒரு தேவதை பிரத்யட்சமாகத் தோன்றினால், அந்த தேவதையினிடம் “சர்வேச்வரனுடைய இலக்கணங்கள் யாவும் (அனைத்தையும் அறிதல், அனைத்துக்கும் உட்பொருளாக இருத்தல், எங்கும் வியாபித்து இருத்தல், ஆண்ட சராச்சரங்களைப் படைத்தமை) இவரிடம் உள்ளன” என்று பிரத்தியட்சமாக எப்படி நிரூபணம் பண்ண முடியும்? (முடியாதே!) அப்படியானால் பிரத்யட்சமாகக் கண்டு விட்டு மாத்திரம், “இவர் இறைவன்” என்று கூற முடியாதே?

    மோசசும் பிரத்யட்சமாகத் தான் “எரியும் புதர்” வடிவில் ஜெஹோவாவைக் கண்டார் என்று சொல்கிறார்களே? முகம்மதுவும் அல்லாவின் தூதரைப் பிரத்யட்சமாகத் தானே கண்டார் (என்று சொல்கிறார்கள்)? அப்படியானால் ஜெஹோவாவையும் அல்லாவையும் கடவுளாக ஏற்பீர்களா? ஜெஹோவா அல்லாவோ தானே நீங்கள் கூறும் “காட்டுமிராண்டி சித்தாந்தத்தை” உருவாக்கியவர்கள்? பிரத்யட்சமாகத் தானே ஜெஹோவா “என்னைத் தவிர மற்ற கடவுளை வணங்காதே” என்று மோசசிடம் சொன்னார் (என்று சொல்கிறார்கள்)? அப்படிப் பிரத்தியட்சமாக இவர்கள் கண்டிருந்தாலும், நீங்கள் இவ்விரு தெய்வங்களைக் “காட்டுமிராண்டித் தெய்வங்கள்” என்று கூறியது ஏன்?

  51. கந்தர்வன் அவர்களே

    வார்த்தைக்கு வார்த்தை வாத‌ம் செய்வ‌தில் என‌க்கு உட‌ன்பாடில்லை. ஆனாலும் இது கொஞச‌ம் அதிகமாகத் தெரிந்ததால் இந்த‌ மறுமொழி.

    ///சரி, அப்படி ஒரு தேவதை பிரத்யட்சமாகத் தோன்றினால், அந்த தேவதையினிடம் “சர்வேச்வரனுடைய இலக்கணங்கள் யாவும் (அனைத்தையும் அறிதல், அனைத்துக்கும் உட்பொருளாக இருத்தல், எங்கும் வியாபித்து இருத்தல், ஆண்ட சராச்சரங்களைப் படைத்தமை) இவரிடம் உள்ளன” என்று பிரத்தியட்சமாக எப்படி நிரூபணம் பண்ண முடியும்? (முடியாதே!) அப்படியானால் பிரத்யட்சமாகக் கண்டு விட்டு மாத்திரம், “இவர் இறைவன்” என்று கூற முடியாதே?///
    என்கிறீர்களே !!!!!

    இறைவன் நேரில் வந்து உங்களுக்குக் காட்சி தந்தால் அப்போதும் அவரிடம் உங்கள் பெயர் நாராயணனா, பரமசிவனா, விநாயகனா, முருகனா என்றெல்லாமா கேட்பீர்கள்? நீங்கள் இறைவன் என்பதற்கு என்ன அத்தாட்சி, ஏதாவது புகைப்பட அடையாள அட்டை (Voter id card, PAN Card, Ration Card etc) உள்ளதா என்று கேட்பீர்களா? இல்லை, இந்த உலகத்தை நீங்கள் படைத்ததற்கு என்ன ஆதாரம்? ஏதாவது Engineer Completion Certificate உள்ளதா? நீங்கள் பரமாத்மாவா? உப தேவதையா? என்றெல்லாம் கூடக் கேட்பீர்களா?
    இப்படியெல்லாம் கேட்க‌ நீங்கள் ஒன்றும் கருணாநிதி இல்லையே !!!!

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இறைவனை சில பல ஆன்மிக நூல்கள் கூறுவது போல உருவகப்படுத்தியோ, வேதம் அல்லது எந்தப் புத்தகத்தைப் படித்தோ காணமுடியாது. இறைவன் தோன்றுவதும் தோன்றாததும் எவர் கையிலும் இல்லை. தம் உண்மைப் பக்தனுக்கு அந்த பக்தன் வேண்டிய வண்ணம்தான் தோன்றுவார், பக்தனும் அவரைக் கண்ட மாத்திரத்தில் வேறெதையும் நினைக்க மாட்டான்.

    கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே உண்மை.

  52. திரு உமாசங்கர் அவர்களே,

    நீங்கள் கேட்டதர்காகக் கூறுகிறேன்:

    // இறைவன் நேரில் வந்து உங்களுக்குக் காட்சி தந்தால் அப்போதும் அவரிடம் உங்கள் பெயர் நாராயணனா, பரமசிவனா, விநாயகனா, முருகனா என்றெல்லாமா கேட்பீர்கள்? நீங்கள் இறைவன் என்பதற்கு என்ன அத்தாட்சி, ஏதாவது புகைப்பட அடையாள அட்டை (Voter id card, PAN Card, Ration Card etc) உள்ளதா என்று கேட்பீர்களா? இல்லை, இந்த உலகத்தை நீங்கள் படைத்ததற்கு என்ன ஆதாரம்? ஏதாவது Engineer Completion Certificate உள்ளதா? நீங்கள் பரமாத்மாவா? உப தேவதையா? என்றெல்லாம் கூடக் கேட்பீர்களா? //

    அர்ஜுனன் கண்ட விஸ்வரூபத்தைக் கண்டால் ஒத்துக் கொள்வேன். அல்லது நெற்றியில் அழகிய திருமண்ணும், கௌஸ்துப மணியும், வைஜயந்தி மாலையும், மார்பில் ஸ்ரீவத்ச லாஞ்சனமும், உள்ளங்கையிலும் பாதத்தின் உள்ளும் அழகிய சங்க சக்கரம் முதலிய அழகிய குறிகள் இவை எல்லாம் இருந்து, கருடன் மேல் ஆரோஹித்து வந்தால் கண்டிப்பாக பகவான் தான் என்று சொல்வோம். இவை தான் பகவானுக்கு voter id, pan card, எல்லாம். மேலும், ஒருவனுக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்று அவன் முடிவு பண்ணினால், இவற்றுடன் தான் காட்சி அளிப்பான் என்று (எனக்கு அறிவுக்கு எட்டிய வரை) சாஸ்திரத்தில் உள்ளது. இதை மீற மாட்டான், ஏனெனில் அவன் சத்திய சங்கல்பன்.

    “இறைவனை பிரத்தியட்சமாக பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்கிறார்களே, பார்த்திருக்கிறேன். திருப்பதியில் நேரில் பார்த்துள்ளேன், திருவல்லிக் கேணியில் பார்த்துள்ளேன். வாரா வாரம் கோயிலில் நேரிலேயே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

    நன்றி,

    கந்தர்வன்

  53. திரு. கந்தர்வன்,

    //நீங்கள் இவ்விரு தெய்வங்களைக் “காட்டுமிராண்டித் தெய்வங்கள்” என்று கூறியது ஏன்?//

    “காட்டுமிராண்டித் தெய்வங்கள்” – இந்த வார்த்தைகளை நான் எந்த
    எந்த இடத்திலாவது எழுதி இருக்கிறேனா? மேற்கோள் காட்ட முடியுமா?

    என்னுடைய போராட்டம் கருத்துக்களுடன் மட்டும் தான். மனிதருடனோ, தேவருடனோ அல்ல. இதைப் பலமுறை எழுதி விட்டேன்.

    வெறுப்புக் கருத்துக்களை, ஆதாரமில்லாத முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை யார் தெரிவித்து இருந்தாலும் அந்தக் கருத்துக்களைத் தான் நாம் ஆபத்தானது என சுட்டிக் காட்டுகிறோம். தங்களை அறிந்தோ அறியாமலோ சிலர் இப்படிப்பட்ட கருத்துக்களில் சிக்கி விடுகின்றனர்.

    அவர்களை விடுவித்து அத்வேஷ்டா கொள்கைக்கு , அன்புக் கொள்கைக்கு கொண்டு வருவதே என் முயற்சி.

    //பிரத்யட்சமாகத் தானே ஜெஹோவா “என்னைத் தவிர மற்ற கடவுளை வணங்காதே” என்று மோசசிடம் சொன்னார் (என்று சொல்கிறார்கள்)? //

    நீங்களே “என்று சொல்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறீர்கள்.

    பிரத்யட்சமாகத் தானே ஜெஹோவா “என்னைத் தவிர மற்ற கடவுளை வணங்காதே” என்று மோசசிடம் சொன்னார் – என்று மோசஸ் தான் சொல்லியிருக்கிறார்.

    இந்த கான்செப்ட் மோசஸ் என்பவர் உருவாக்கிய கடவுள் பற்றிய கான்செப்ட்.

    மோசஸ் தன்னை தானே இறை தூதர் என அறிவித்துக் கொண்டு, தான் மட்டுமே அவர் பேசியதை கேட்டதாகக் கூறி கட்டளைகளை அறிவித்து இருக்கிறார். இது பற்றி விவரமாக எழுதுவது என்றால் பல பக்கங்கள் வரும். எனவே என்னுடைய தளத்திலே இது பற்றி கட்டுரைகள் வெளியிடுவேன்.

    மேலும் மோஸஸோ, முஹம்மது நபியோ கடவுளைக் காணவேயில்லை எனவும் நான் அடித்து சொல்லவில்லை.

    கடவுளுக்காக காத்திருந்து மனதை தயார் நிலையில் வைத்திருந்து கடவுளைக் காணாமல், திடீரென கடவுளைக் கண்ட அதிர்ச்சியில் கடவுளின் ஒரே பரிமாணம் இதுதான் என்று அவர்கள் முடிவு கட்டி இருக்கக் கூடும்.

    இது பற்றி சுவாமி விவேகானந்தர் அருமையாக சொல்லி இருக்கிறார். இதே தளத்திலே சென்ற மாதம் பற்றி சுவாமி விவேகானந்தர் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரைக்கான பின்னூட்டத்தில் திரு. ஜடாயு ஒரு சுட்டியும் கொடுத்து இருக்கிறார். அவற்றை படித்து பாருங்கள்.

    என்னைப் பொறுத்தவரையில் பிற தெய்வங்களை பற்றி சிறிது கூட தாழ்ச்சியாக எண்ணாமல், மனதிலே வெறுப்பில்லாமல், அமைதியாக வணங்கும் வழிபாடே மிகச் சிறந்த வழிபாடு. அந்த வகையில் அமைதியாக கருப்பண்ணசாமியை வணங்குபவர் செய்யும் வழிபாடும், அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்பவரின் வழிபாடும் மிக சிறந்த வழி பாடு என நான் தைரியமாக சொல்வேன்.

    மசூதியில், சிநோகாகில் சேர்ந்து தொழா நான் தயார். இந்துக்களுக்கு தெரிந்த வழிபாட்டு முறைகளில் ஒன்று உருவமற நிலையில் வழிபடுவது. உருவமற்ற நிலையில் கடவுளை வழிபட்டாலும் அவர்களும் தன்னிடம் வந்து சேர்வதாக கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் (அதே நேரம் அவர்கள் எல்லா உயிர்களுக்கும் இதமாக நடக்க வேண்டும். ). கீதை 12.3, 12.4 .

    கடவுள் என்ற ஒன்று இருப்பதாக இருந்தாலும் இல்லாததாக கருதினாலும், மனக் குவிப்பு என்பது – அது உருவமற்ற நிலையை மனக் குவிப்பு செய்தாலும், ரூபத்தில் மனக் குவிப்பு செய்தாலும் – அது ஒருவரின் மன வலிமையை அதிகரித்து மனதில் அமைதியை உருவாக்கி அவரின் மன நிலையை உயர்த்தும் என கருதலாம். இதுவே ஸ்பிரிட்சுவலிசம்.

  54. கடவுளை நேரில் பார்த்தால்தான் நம்புவேன் என்று சொல்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் எல்லாம் நம்பிக்கைதான்.

    தேங்காயில் எப்போது இளநீர் வந்து நிரம்பியது என்று சொல்ல முடியுமா என்று சொல்வார்கள். ஆட்டிப் பார்த்தால்/வெட்டிப் பார்த்தால் தெரிகிறது.
    நமக்கும் கடவுள் எப்போது தெரிய வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது தெரியும். சில சமயம் தெரியாமலேயும் போகலாம். அதனால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா?

    உலகத்தில் இவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்களே இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் நடக்குமா அதனால் இறைவன் என்பது ஒரு கற்பனை என்ற வாதத்திற்கு தாடி மீசையுடன் சிலர் சாலையில் அலைகிறார்களே அதனால் சலூன் என்பது ஒரு கற்பனை என்று சொல்லலாமா என்ற எதிர் வாதம் நினைவுக்கு வருகிறது.

    நம்பிக்கை என்பதற்கு இன்னொன்றும் சொல்வார்கள். தந்தை யார் என்பது தாய்தான் அடையாளம் காட்ட முடியும் என்று. அதைக் கூட எப்படி நம்புவது? DNA test கொண்டுதானே நிரூபிக்க முடியும்! கடவுள் இல்லை என்பவர்களோ கடவுளை நேரில் கண்டால்தான் நம்ப முடியும் என்பவர்களோ DNA test செய்துதான் தாயை நம்பினார்களா?!
    இப்படி கூறுவதால் நான் தாயை பழிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.

    கடவுளை கண்டவருக்கு கஷ்டங்களே இல்லாமல் போய் விடும் என்பதையும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் ரமணருக்கு cancer இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் அவர் கஷ்டப்பட்டாரா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு துன்பங்களே இல்லாமல் செய்வது என்பதை விட துன்பங்களைத் தாங்கிக்கொள்ள சக்தியைக் கொடுப்பது என்று கொண்டால் கடவுளைப் பற்றிய அதீத கற்பனையையும் அதனால் வரக் கூடிய ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம்.

    இது என் நம்பிக்கை.

  55. ந‌ம்பிக்கைக‌ளை எல்லாம் உண்மையா என‌ நேருக்கு நேர் ப‌ர்த்துக் கொள்ள‌ முடியும் என்று சொல்லும் ம‌த‌மே இந்து ம‌த‌ம்.

    இதைப் புரிந்து கொள்ளாம‌ல் வெறும‌னே ந‌ம்பிக்கை, நான் சொல்வ‌தை நீ ந‌ம்பு என்று சொன்னால் அத‌ற்கு எத்த‌னையோ ம‌த‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.

    இந்து ம‌த‌த்தை பொருத்த‌வ‌ரையில் ஆன்மீக‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌வ‌ன் – அவ‌ன் க‌ர்ம‌ யோகியோ, ச‌ன்யாசியோ, ப‌க்த‌னோ த‌ன‌க்கு வெற்றி கிடைக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் தான் ஆர‌ம்பிக்கிறான்.

    அப்ப‌டி ஆர‌ம்பித்து ஆன்மீக‌ பாதையில் முன்னேறுப‌வ‌ன், த‌ன்னுடைய‌ ந‌ம்பிக்கைக‌ள் உண்மையா என‌ ச‌ரி பார்க்கும் ம‌ன‌ வ‌லிமையை, ம‌ன‌ முதிர்ச்சியை பெற்று விடுகிரான்.

    இதை கீதையிலே தெளிவாக‌ சொல்லி இருக்கிரார்க‌ள். ஞானி பிர‌ம்ம‌த்தை பார்க்கிறான், க‌ல்வி அறிவு உடைய‌ அந்த‌ண‌னிட‌த்தும், யானையினிட‌மும், நாயினிட‌மும் வித்யாச‌ம் இல்லாம‌ல் ஒன்றையே பார்க்கிறான். இவ்வ‌ளவு தெளிவாக‌ சொல்லி இருக்கிரார்க‌ள்.

    தியாக‌ராச‌ர், இராம‌கிரிஷ்ண‌ர், விவேகான‌ந்த‌ர், ப‌ட்டின‌த்தார்,ஆதி ச‌ங்க‌ர‌ர் இவ‌ர்க‌ள் உண்மையினை நேருக்கு நேராக‌ க‌ண்ட‌தாக‌வும் சொல்லி இருக்கிறார்க‌ள்.

    ஆனாலும் சில‌ருக்கு ந‌ம்பிக்கைக்கு மேலே போக‌ விருப்ப‌மில்லை. வெறும் ந‌ம்பிக்கையை வைத்து அறுதி இட்டு சொல்ல‌ முடியாது. நேரில் உண‌ர்ந்தால் அடித்து சொல்ல‌லாம். இதை புரிந்து கொள்ள‌ முடியாதா? ஆனால் இந்த‌ உண்மையை ஒத்துக் கொள்ள‌ சில‌ருக்கு விருப்ப‌மில்லை.

    ந‌ம்மில் ப‌ல‌ருக்கு ஆன்மீக‌ வாழ‌க்கை வீட்டில் இருந்தே ஆர‌ம்பிக்கிற‌து. தாய், த‌க‌ப்ப‌னார், அக்காள், அண்ண‌ன் ஆகியோர் இது சாமி இதை வ‌ணங்கு என்று சொல்லி ஆர‌ம்பிக்கிறார்க‌ள். பிற‌கு ப‌ல‌ நூல்க‌ளைப் ப‌டிக்கிறோம், சில‌ர் ஆன்மீக‌ முய‌ற்ச்சியிலும் ஈடு ப‌டுகிறோம். பல‌ர் குரு அல்ல‌து ஆச்சாரியாரை அணுகுகின்ற‌ன‌ர். இதிலே உண்மையை நேருக்கு நேர் பார்த்த‌ குரு கிடைத்தால் அவ‌ர் உன்னாலும் பார்க்க‌ முடியும் என‌ உற்சாக‌ப் ப‌டுத்துவார். இராம‌கிரிஷ்ண‌ ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர் போன்ற‌வ‌ர்க‌ளோ நானே உன‌க்கு க‌ட‌வுளைக் காட்டுகிறேன் என‌ சொன்ன‌தாக‌ அறிகிறோம். இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஞானிக‌ள் குருவாக‌ கிடைப்ப‌து மிக‌ அரிதுதான்.

    ந‌ம்பிக்கை என்ப‌து இந்து ம‌த‌த்தைப் பொருத்த‌ அளவில் ந‌டை வ‌ண்டி மாதிரி. குழ‌ந்தை ந‌ட‌க்க‌ ஆரம்பிக்கும் போது ந‌டை வ‌ண‌டியை பிடித்துக் கொண்டு ந‌ட‌க்கிர‌து. சில‌ மாத‌ங்க‌ள் க‌ழித்து ந‌டை வ‌ண்டியை விட்டு விட்டு த‌னியே ந‌ன்றாக ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து விடுகிற‌து.

  56. நமக்கு கேன்சர் வந்தால் நாம் சாகிறோம். ஆனால் இந்து மத தத்துவத்தின் படி நாம் மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் பல கஷ்டங்களைப் படுகிறோம். இப்படியாக துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால் ஞானி எனப்படுபவன் அவன் உடலை விட்ட பின் மறுபடியும் பிறந்து இறக்கும் அடிமை நிலையில் சிக்கிக் கொள்வது இல்லை.
    எனவே ரமணருக்கோ , இராம கிருஷ்ண பரமஹம்சருக்கோ கேன்சர் வந்தாலும் , அவர்கள் உடல் அழிய நேரிட்டாலும், அதன் பின் அவர்கள் ஆன்மா விடுதலை அடைகிறதா என்பதே கேள்வி.

    கேன்சர் வந்த போது அவர்களுக்கு வலி இல்லாமல் இருந்ததா என்பதும் முக்கிய கேள்வியே. ஆனால் இதற்கான பதிலை ரமணர் தான் சொல்ல வேண்டும். அல்லது அவருடன் கூட இருந்தவர்கள் சொல்லலாம்.

    மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.

    இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள் தங்களை வந்து தாக்கும் நிலையிலே உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

    எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை.

    இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.

    வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும், பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?
    நாம் இந்த உலகத்திலே சில வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

    அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும், பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம். All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all, (irrevokabaly removed) from us.
    இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.

    நாம் இந்த உலகத்திலே சில வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

    ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.

    தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?

    ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌ வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌ இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

    பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?

    நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன்.

    உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி – எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.

    அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோ ஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .

    இத‌ற்க்கு SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.

    Before I conclude, I want to mention that ,

    I did not say that

    //கடவுளை கண்டவருக்கு கஷ்டங்களே இல்லாமல் போய் விடும்//

    Let me quote what I wrote before,

    //கடவுளைக் காண்பது என்பது எளிதல்ல. அப்படிக் கண்டால் நம்முடைய கஷ்டங்கள் பெரும்பாலும் தீர்ந்து விடும். //

    விவேகானந்தர் கடவுளைக் கண்டதாக கூறினாலும், இராமகிரிஷ்ணரோ, அம்மா, காளி உன் சொரூபத்தை முழுவதும் காட்டி இவனுக்கு முக்தி அளித்து விடாதே. இவன் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் இருக்கிறதே என்று சொன்னதாகவும் கூறப் பட்டு உள்ளது. அந்தப் பணிகளை செய்து முடிக்கும் வரையிலும் பல சோதனைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

    கஷ்டங்கள், கவலைகள் ,துன்பங்கள், அச்சங்கள் இவற்றில் இருந்து ஒட்டு மொத்த விடுதலையே முக்தி எனப் படுகிறது.

    கடவுளைப் பார்த்தவன், தனக்கு இட்ட பணிகளை முடித்து சிறிது காலம் ஆனா பிறகாவது முக்தியை அடைந்தே தீருவான் என்பதாகவே இந்து மத கருத்தாக கருதலாம்.

    அவன் மீண்டும் பிறப்பதில்லை என கீதையில் சொல்லி இருக்கிறது.

  57. நண்பரே

    //
    ந‌ம்பிக்கைக‌ளை எல்லாம் உண்மையா என‌ நேருக்கு நேர் ப‌ர்த்துக் கொள்ள‌ முடியும் என்று சொல்லும் ம‌த‌மே இந்து ம‌த‌ம்.

    இதைப் புரிந்து கொள்ளாம‌ல் வெறும‌னே ந‌ம்பிக்கை, நான் சொல்வ‌தை நீ ந‌ம்பு என்று சொன்னால் அத‌ற்கு எத்த‌னையோ ம‌த‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
    //

    இதில் ஐயப்பாடு இல்லை – ஆனால் நேரில் பார்த்தல் தான் உண்மை என்று நம்புவது தான் கூடாது என்கிறேன் – எல்லா ஆழ்வார்களுக்கும் இறைவன் ப்ரத்யக்ஷம் ஆகவில்லை – ஆனால் எல்லோரும் புந்தது வைகுந்தமே – இப்படி இறைவனை நேருக்கு நேர் பார்க்காதவர்கள் சொல்வெதெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது – முத்துச்வாமி தீட்சிதர் குரு குஹனை நேரில் பார்க்க வில்லை என்றால் அவரது பக்தி குறைந்ததும் இல்லை அவர் சொல்வதில் உண்மை இல்லாமலும் இல்லை

    இதை தான் சொல்ல நினைத்தேன் – மேலும் இந்த தர்க்கம் இத்யாதி எல்லாம் சிலர் நேரில் காண்பி அப்போ தான் நம்புவேன் என்று சொல்வார்கள் அவர்களுக்காக சொன்னது – கடவோய் நேரில் பார்ப்பது அனுமானத்தை விட மேலானதே

  58. எனக்குப் புரியாத பலவற்றில் சில,
    கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் நாம் எதற்கு கடவுளைக் காண வேண்டும்?
    கடவுள், உருவமா அல்லது conceptஆ?
    மனக்குவிப்பு இயலாத பக்தனுக்குதானே உருவம் வேண்டும்?

  59. திருச்சிகாரரே

    கண்ணன் கீதையில் சொல்வது – துன்பம் சுகம் வராமல் இருக்கவே இருக்காது – அதை பொறுத்துக்கொண்டு இரு

    ஞானி என்பவர் துனத்தை பொறுத்துக்கொண்டு இருப்பார் – ஐயோ எனக்கு துன்பம் வந்ததே – இது நான் செய்த வினைதானே என்று என்ன மாட்டார் – துன்பம் வந்ததா ஓகே, சாப்பாடு கிடச்சதா ஓகே, கிடைக்கலையா ஓகே என்று இருப்பார்

    மாத்ரச்பர்ச து கௌந்தேயே சிதோஷ்ண சுக துக்க:
    ஆகாமபாயின: அணித்யா: த்வம் திதிக்ஷவ பாரத

    வரும் போகும் பொறுமையாய் இரு (வரு வழிதான் உண்டோ?) என்று சொல்லிவிட்டார் மேலும் 2-54 2-72 படித்தால் யார் ஞானி, அவர் என்ன பேசுவார், எப்படி பழுகுவார், என்ன செய்வார் என்று தெரிந்து விடும்

    பாரத என்ற பதத்திற்கு அத்வைத வழி வந்த மஹான் மதூசூதன சாஸ்த்ரி, கண்ணன் இப்படி பொறுமை அதிகம் இருப்பவனே பாரதன் என்று சொல்வதாக அர்த்தம் காட்டி உள்ளார் – அது உண்மையோ என்று கூட தோன்றுகிறது கலைஞ்ஞர் வருவார், சோனியா வருவார், பக்தவத்சலம் வருவார், சாஸ்த்ரி வருவார் ரெம்ப பொறுமையா தான் இருக்கோம்

    கான்செர் வந்தா – ஓஹோ கான்சரா இருக்கட்டும் என்று கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் இருப்பார் – இது கண்டிப்பாக நடைமுறையில் சாத்தியமான ஒன்றே

  60. அன்புடைய Armchaircritic அவர்களே,

    நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஹிந்துக்களிலும் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதத்தில் பதில் கூறுவர். வைணவத்தில் என் அறிவிற்கு எட்டிய அளவிற்கு விளக்க முயற்சி செய்கிறேன்.

    // கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் நாம் எதற்கு கடவுளைக் காண வேண்டும்? //

    பர தெய்வமான பெருமாளுக்கு ஐந்து முக்கிய ரூபங்கள் உள்ளன:

    (1) பரம் (form in Vaikuntam, beyond material universe),
    (2) வ்யூஹம் (as the Lord residing in the ocean of milk etc.),
    (3) விபவம் (avatars such as Rama, Krishna, etc.),
    (4) அந்தர்யாமி (inner controller, dwells in the cavity of the heart),
    (5) அர்ச்சை (as the presiding deity of Srirangam, Tirupati, etc. both as moolavar and utsavar)

    இவை அனைத்துமே பகவானின் பூரணமான சுத்தசத்துவ ரூபங்களே. சுத்தசத்துவம் என்றால் “நம்மைப் போன்ற பஞ்ச பூதங்களால் ஆன சரீரம் அல்ல” என்று பொருள். கடவுளின் இந்த ரூபன்களைக் கண்டால் நமக்கும் சத்துவ குணம் அதிகரிக்கும் என்பது சான்றோர் வாக்கு. ஆகையால் கடவுளை நம்புகிறவர்களும் கடவுளை பிரத்யட்சமாகக் காண்பது அவர்களுக்கு நன்மையையே தருகிறது.

    // கடவுள், உருவமா அல்லது conceptஆ? //

    இரண்டுமே. கடவுளுக்கு இலக்கணங்கள் உண்டு (முன்பே ஒரு மறுமொழியில் இதைச் சொல்லி இருந்தேன்). Definition-உம் உண்டு. ஆனால் அவனை முழுமையாக நம் அறிவினால் தெரிந்துக் கொள்வது இயலாது. கடவுளுக்கு எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்ள சக்தி உண்டு. தன் பக்தர்களுக்காக சில ரூபன்களைத் தானாக எடுத்துக் கொள்கிறான். பக்தர்கள் விரும்பி (ஆகம விதி படி, உண்மையான பக்தி உள்ளவர்களால்) பிரதிஷ்டை செய்த விக்ரஹத்தை சுத்த சத்துவமாக மாற்றி தன் திருமேநிகளுள் ஒன்றாகக் கொள்கிறான்.

    // மனக்குவிப்பு இயலாத பக்தனுக்குதானே உருவம் வேண்டும்? //

    அப்படி சொல்பவர்கள் Ram Mohan Roy, Arya Samaj, விவேகானந்தர் போன்ற நவீன வாதிகள் (neo-vedanta) தரப்பினர். எங்களைப் பொறுத்த வரை பகவானே லக்ஷியம், உபாயம் இரண்டுமே. He is both the means and the end. அதாவது, பக்குவம் இல்லாத பக்தன் பக்குவ நிலைக்குச் செல்ல பகவான் திருமேனியை தரிசித்து மங்களாசாசனம் பண்ணி அவனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும். அப்படி பக்குவ நிலைக்குச் சென்றவன் “மற்றவை எல்லாம் தற்காலிகமானவை, ஒரு ஜீவாத்மாவாக இருப்பவனுடைய இயற்கை சுபாவம் பகவானுக்கு அடிமை செய்வதே, அதுவே நிரந்தர இன்பத்தைத் தருகிறது” என்று உணர்ந்து, பகவான் திருமேனியை கண்குளிர தரிசித்து மங்களா சாசனம் பண்ணி அவனுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறான்.

    ஆகையால், “பக்தி என்பது கீழ்ப்படி, ஞானம் என்பது தான் மேல்படி” என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, “அகம்பாவத்துடன் பல நூல்களை வாசித்து, ‘ஞானத்தை வளர்த்துக் கொள்கிறேன்’ என்பவன், இறுதியில் ஞானம் முற்றி பக்தி நிலைக்கு வருகிறான்”. மேலும் பகவானுடைய உருவம் கட்டுக்கதை அல்ல. அவனாகவே உண்மையாகவே அவன் எடுத்துள்ள திருமேநிகளே அவை. கலியுகத்தில் வாழும் நமக்கு, வைகுண்டத்தை இங்கிருந்தபடியே காணவோ, ஹிருதயத்துள் உள்ள பகவானையோ, பஞ்ச பூதங்களின் உள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் ரூபத்தையோ நேராகக் காண்பதற்கு யோக பலம் நமக்குக் கிடையாது. மேலும், அவனுடைய அவதார மூர்த்திகளை காண நாம் கண்ணனுடைய நாளிலும் இல்லை; ராமன் ஆண்ட நாளிலும் வாழவில்லை. இப்படிப்பட்டவர்களாகிய நம் மேல் உள்ள கருணையால் பகவான் தன்னை நமக்கு accessible-ஆக்கிக் கொள்ள கோயில்களில் (மொலவர், உத்சவர்) திருமேநிகளுடன் சேவை சாதிக்கிறான். பகவானுடைய இந்த கல்யாண குணத்தை “சௌலப்யம்” என்று சொல்வார்கள். Old school அத்வைதவாதியான நாராயணபட்டதிரி கூட தமது “நாராயணீயம்” என்னும் படைப்பின் கடைசி தசகத்தில் குருவாயூரப்பன் திருமேனிக்கு மங்களாசாசனம் பண்ணுகிறார்.

  61. //வெறும் ந‌ம்பிக்கையை வைத்து அறுதி இட்டு சொல்ல‌ முடியாது. நேரில் உண‌ர்ந்தால் அடித்து சொல்ல‌லாம். இதை புரிந்து கொள்ள‌ முடியாதா? ஆனால் இந்த‌ உண்மையை ஒத்துக் கொள்ள‌ சில‌ருக்கு விருப்ப‌மில்லை.//

    There are three youngsters, Raajaa, Robert, Rahim living in a remote village in Tamil nadu called எருதுகாரன் பட்டி.

    Robert went to Malaysiya, but could not get job, wandered here and there, get into petty crimes, caught by malesiyan police, taken to prison, police slammed his backs and deported him back to India.

    Rahim went to Abudhabi, his father and brothers were there already, though his salary was less, his food and accomadation were taken care by his father and brothers , he can save substantial amount, he bought Jwels for his sisters and returned to India.

    Both Robert and Rahim met Raja.

    Robert told Maleysia is a very bad place, a hell, whoever goes their will be prisoned and slammed in the back.

    Rahim told Abudhabi is a heaven in earth, whoever goes there enjoysthe life and return with wealth.

    If Raja came to conclusion, only on what others said his conclusion maynot be correct.

    If Raja himself visited Abudhabi Maleysia, stayed there for few months, he can have his own judgement, definitely a better Judgement then relying on what others saY!!

    This above story is only an example to make people understand that which is more reliable and authenticative!

    This is only an example!

  62. Dear Sri Armchaircritic
    கடவுளை கண்டவருக்கு கஷ்டங்களே இல்லாமல் போய் விடும் என்பதையும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் ரமணருக்கு cancer இருந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் அவர் கஷ்டப்பட்டாரா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    ////

    பகவான் ரமணருக்குக் கேன்சர் வந்தது. அண்ணாதுரை அவர்கள் மஹரிஷி என்கிறார்களே அவருக்கே கேன்சர் வந்துவிட்டதே, என்ன பாவம் செய்தார்? என்று கேட்டார். முதல்வரானபின், சிறிது நாட்களில் கேன்சர் வந்து அவதிப்பட்டு இறந்தார்.

    பகவானோ அவரது கையில் இருந்த சேன்சருக்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்று பக்தர்கள் சொன்னபோது, இந்த உடம்புக்கு வைத்தியம் தேவையில்லை என்றார். ரமணாஷ்ரமத்தின் வலைத்தளத்திலிருந்து அப்பகுதியை அப்படியே தருகிறேன்.

    Towards the end of 1948 a small nodule appeared below the elbow of his left arm. As it grew in size, the doctor in charge of the Ashram dispensary cut it out. But in a month’s time it reappeared. Surgeons from Madras were called, and they operated. The wound did not heal, and the tumour came again. On further examination it was diagnosed that the affliction was a case of osteosarcoma, an extremely painful form of bone cancer. The doctors suggested amputating the arm above the affected part. Ramana replied with a smile: “There is no need for alarm. The body is itself a disease. Let it have its natural end. Why mutilate it? Simple dressing of the affected part will do.” Two more operations had to be performed, but the tumour appeared again. Indigenous systems of medicine were tried, and homeopathy too. The disease did not yield to treatment. The sage was quite unconcerned and was supremely indifferent to suffering. He sat as a spectator watching the disease waste the body. But his eyes shone as bright as ever and his grace continued to flow towards all beings. Crowds came in large numbers. Ramana insisted that they should be allowed to have his darshan. Devotees profoundly wished that the sage should cure his body through an exercise of supernormal powers. Some of them imagined that they themselves had had the benefit of these powers which they attributed to Ramana. Ramana had compassion for those who grieved over the suffering, and he sought to comfort them by reminding them of the truth that Bhagavan was not the body: “They take this body for Bhagavan and attribute suffering to him. What a pity! They are despondent that Bhagavan is going to leave them and go away – where can he go, and how?”The end came on the 14th of April 1950. That evening the sage gave darshan to the devotees that came. All that were present in the Ashram knew that the end was nearing. They sat singing Ramana’s hymn to Arunachala with the refrain ‘Arunachala-Siva’. The sage asked his attendants to make him sit up. He opened his luminous and gracious eyes for a brief while; there was a smile; a tear of bliss trickled down from the outer corners of his eyes; and at 8:47 the breathing stopped. There was no struggle, no gasping, none of the signs of death. At that very moment, a brilliant star-like object slowly moved across the sky, reached the summit of the holy hill, Arunachala, and disappeared behind it. It was seen in many parts of India, even as far as Bombay (Mumbai)

  63. Geetha 5.19

    //இஹைவ தைர்ஜித: சர்க்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன:
    நிர்தோஷம் ஹி ஸமம் பிரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா://

    எவர்களது மனது சம நிலையில் நிறுத்தப் பட்டதோ அவர்களால் இங்கேயே (இஹ ஏவ) பிறவி ஜெயிக்கப் பட்டது. பிரம்மம் சமமானதும், தோஷமற்றதும் ஆகையால் அவர்கள் பிரமத்திடம் நிலை பெறுகின்றனர்.

  64. Dear Thiruchchikaaran Friend,

    Thanks for the story – now here tha nyaya vaatha

    a learned Raja will know Rahim and Robert in and Out and in general human beings- he will use his anumana and without going and having first hand experience decide that i cannot trust these words… I may find different experiences or i may find the same experiences as they did

    even if it were truly hevanly place it can look like a hell – it is easy to conclude because for some life is good, for some it is pathetic using the same example he will derive

    such kind of thinking is enough for Raja may never be able to visit both places or 13 other places to see and decide himself

  65. Dear Friend Saraang,

    //a learned Raja will know Rahim and Robert in and Out and in general human beings- he will use his anumana and without going and having first hand experience decide that i cannot trust these words… I may find different experiences or i may find the same experiences as they did//

    I dont know as what anumaana can the Raja (who never ventured out his village ) make about Maleysia and Abudhabi.

    And “learned” , thanks fo using this word. The “learning” for what we learned from books is exactly the same as what Raja ” learned” from Robert and Rahim. What we learned from others may be sometimes false, may be sometimes true, may be some times partially true, may be some times exactly true- but we dont know.

    //I may find different experiences or i may find the same experiences as they did //

    Subsatantila time of stay, and many number of visits- not just one or two visits- can make known facts about the place.

    //such kind of thinking is enough for Raja may never be able to visit both places or 13 other places to see and decide himself//

    I am sorry, some peple can be complacent about what they learn from others. We cant come to the conclusion that Rajas quest for knowing the true nature ends with that.

    Reading about Tajmahal gives some information. Seeing TajMahal gives a more clear Picture.

    I visite Egypt Last year. I saw the Pyramids, the Sphinx face to face. I learnt new things. If any one meet me and gave some concoted stories about Pyramid, I can smile and counter him confidently – “SEE MY FRIEND, I KNOW HOW IT IS THERE, HOW GRAND THE PYRAMIDS ARE, I HAD SEEN THEM , I CLIMBED OVER THEM, I SAT IN THE STEPS OF THE PYRAMIDS, … I FELT THE PYRAMID MYSELF, IT IS LIKE THIS “.

  66. //Reading about Tajmahal gives some information. Seeing TajMahal gives a more clear Picture.

    true – but Anumaana is sufficient enough to decide whether one should venture there or not – i have never visited Taj Mahal i will never because – for me it is a grave yard and a place built out of sin (torturing so many people) – this anumaana is enough to decide

    i will never go to egypt also – anumaana is enough to decide that

    more over there are 200045981 tier 1 tourist spots in the world – i cannot visit them all to come to conclusion – Anumaana helps here immensely

    i did not say Raja came to conclusion just be hearing Rahim and Robert – i said he used his previous knowledge about them and also previous knowlege that what i see (even many times) mmay misguide me

    let us stop this – this will only get funnier as it goes

  67. Mr. Sarang Haven’t you heard that Tajmahal is actually a temple of Siva which was converted as a tomb for Shahjahan’s wife.
    About that story by Tiruchikkaaran if it is meant as an explanation for seeing the god to believe, I have a doubt. Experience of Abudhabi or Malaysia can be checked with others also who have visited either of the places. But seeing God is a different matter. With whom can we cross check?!

  68. Dear Thiruchchikaaran

    Most of the Vedha’s and sutras were composed (or retold) purely out of Anumaana – When a seer says one part of water is Praana Vayu it is without seeing it and just guessing it by Anumaanaa

    Our people have found out a reason for why Birds live in tree top only (or a place well above the ground) – it is not by seeing the birds mind directly, but by Anumaana

    Our people said earth is round and not by going around it

    Our people said the soil in chandran is black – not by going there

    How did someone build the first temple – how did someone build the first Tank, First dam, first neklace – this is not be seeing

    I can tell you that there is a pot there without seeing it. I can say that the Pot is exposed to Sun without seeing either the pot or the sun (Prabha Gata Sayyogam)

    If you say only those who see God are great – how can blind people or old people with vision problem see God

    Vision is just one of the indriyam – there are people who are better off without seeing (closing their eyes) and atually seeing god in their Mind

    OK in the night you dream with eyes closed – you see colorful things which you have never seen before – How? it is not that a dream is a false thing? many things you see in the Dream are true image of something?

  69. Saarang,

    //Our people said earth is round and not by going around it //

    OUR PEPOLE SAID THAT SUN TRAVELS ON 7 HORSED CHARIOT FROM EAST TO WEST EVERY DAY.

    BUT THE TRUTH WAS THAT THE GREAT SUN IS MORE COMFORTABLE IN CENTRE AND EARTH ROTATES .

    //Our people said the soil in chandran is black – not by going there//

    OUR PEOPLE SAID THAT ECLIPSE IS DUE TO SNAKES CATCHING SUN & MOON WHEREAS ECLIPSE IS DUE TO SHADOW.

    I am not insulting or blaming our forefathers, they tried their best to know the truth , with available instruments on their time, and came to some conclusion.

    But the main purpose of Spirtualism is not to know abour sun and moon, it focuses more about the life of one person, what happens to his life after the death of his body.

    The spiritualism is about peoples mortalaity, their sufferings, their life and the way to reach to mortal to immortal.

    So we can test , check and confirm.

    Hinduism is the only religion to say that “TRUTH ALONE PREVAILS”.

    ONe of the Primaray motto of Hinduism is to ” REACH THE TRUTH FROM UNTRUTH”.

    //If you say only those who see God are great – how can blind people or old people with vision problem see God

    Vision is just one of the indriyam – there are people who are better off without seeing (closing their eyes) and atually seeing god in their Mind //

    I wish you might have heard this very popular song (popular in north India)

    ” Dharshan dho Ghanu saamu naathu Moori Akiyaan piyaasi Re”

    (Please give me your Dhrashan, my eyes are longing or thirsting for you)

    By the popular saint SURDAS, who was a BLIND.

    Seeing God does not means only seeing him face to face, seeing God means receiving light in the darkness, where one can see the secrets, the truths…. and everything. It Gives one person satisfection and calmness…, it gives one person strength and power… above all it liberates one person from sorrow and make him independent… A person who sees God may still face some hurdles in his life, but he is at the end of the tunnel… he will soon become totally liberated.

    I hope you can take the right meaning of what I wrote “receiving light in the darkness”- does not mean switching on the street lights.

    Again I respect all the true Spiritualists , irrespective of whether they see the God or not.

    I only wish to mention thst the more they are near to God, the more their words are Authoritative. Once they see the God, their words become More authoritative.

  70. Dear Mr. armchaircritic

    //About that story by Tiruchikkaaran if it is meant as an explanation for seeing the god to believe, I have a doubt. Experience of Abudhabi or Malaysia can be checked with others also who have visited either of the places. But seeing God is a different matter. With whom can we cross check?!//

    When we give an example , we try to give some example with a close approximation. But we dont get a perfect example always.The story what I have given can not be considered as a perfect and exact example for Seeing the God. Hence the example has to be considered as a similarity not necessarily very closer to the original concept.

    Seeing the God, means as I alreday wrote, it sheds light… one can understand many things… one can understand every thing…. they said, seeing God it takes you to the pinnacle of knowledge- after which one has nothing left unknown, one sees everything, one understands every thing beyond doubt with absolute clarity, …the state where one does not require further clarification!

    I thing that Indians , Hindus need not shy away from the concept of seeing the God, realising him face to face… of course our ultimate aim can be total liberation only.

    We make many arguments, we dont carry any credit along with us, as we depart.
    Whatever big philosopher be, one does not carry any credit along with him as he dies.
    unless he acheives total liberation, he ….as per Hindu philosophy again born and the sufferings continue.

    Hence seeing the God is the Primaray goal of any hindu spirtulaist, if he is serious in Spritualism.

  71. friend

    //
    OUR PEPOLE SAID THAT SUN TRAVELS ON 7 HORSED CHARIOT FROM EAST TO WEST EVERY DAY.

    BUT THE TRUTH WAS THAT THE GREAT SUN IS MORE COMFORTABLE IN CENTRE AND EARTH ROTATES .
    //

    friend our people did not say sun rotates earth – SUN is not idle it indeed travels (you can look at science) -uttharaayanam dakshinaayanam

    the one said in Vedha is about light – the 7 charriot represent 7 colors VIBGYOR

    //Our people said the soil in chandran is black – not by going there//

    OUR PEOPLE SAID THAT ECLIPSE IS DUE TO SNAKES CATCHING SUN & MOON WHEREAS ECLIPSE IS DUE TO SHADOW.
    //

    Sir this is astrology and should be read as a symbolic thing – a literal meaning does not help – if you look at the concept it is exactly same – the way it is represented Ragu kethu is what differs

    dear sir,, even to this date almanac predicts eclipses accurately as the super super computers do

    //
    I only wish to mention thst the more they are near to God, the more their words are Authoritative. Once they see the God, their words become More authoritative.
    //
    hope you read Eri Kattha Ramar Story – an english saw God – however we cannot take his words authoritatively

    You may know Badrachala’s Story – God Gave darshan to Muslim king not to Badrachala – we have to take Badrachala’s words more than the Muslim Kings (the king jailed badrachala)

    though i uderstand the intent in your statement – you may have to qualify it appropriately so that others do not take it as it is (if you tell someone – i will not believe you you have not seen god) then it means something than saying i believe in the words of great people who have seen God

    Thanks

  72. Thiruchchikkaaran,

    //
    OUR PEPOLE SAID THAT SUN TRAVELS ON 7 HORSED CHARIOT FROM EAST TO WEST EVERY DAY.

    BUT THE TRUTH WAS THAT THE GREAT SUN IS MORE COMFORTABLE IN CENTRE AND EARTH ROTATES .
    //

    //
    OUR PEOPLE SAID THAT ECLIPSE IS DUE TO SNAKES CATCHING SUN & MOON WHEREAS ECLIPSE IS DUE TO SHADOW.
    //

    First of all, kindly stop using all-caps. It is not decent in an online forum.

    Secondly, your attitude towards our ancestors is condescendingly sympathetic.

    Thirdly, you are probably not aware that the above stories are NOT about the inanimate sun, moon, etc. but about individual souls who control the planetary objects. And these individual souls can take many different bodies simultaneously. Adi Sankara has argued this in his Brahma Sutra Bhashya. But I don’t blame you since you don’t read the Bhashyas of Acharyas, and as far as you are concerned, these Acharyas had primitive knowledge whereas you are blessed with better skills (as shown by your stubbornness in refusing the Gita Bhashyas — now let’s not go back to that now). In any case, how did you conclude that these statements were meant to be literal?

    Fourthly, are you not aware of the plain fact that our traditional astrologers have been able to predict the exact occurrences of solar/lunar eclipses, long before western renaissance and scientific revolution? Also, Sayanacharya (14th/15th Century), in his Rig Veda Bhashya, writes the following “as per the smritis, the rays of the sun travel at the speed of …” and then gives the speed of light, as has been accurately calculated by modern science.

    // I am not insulting or blaming our forefathers, they tried their best to know the truth , with available instruments on their time, and came to some conclusion. //

    Again, this is a very condescending statement and is a spit on the power of penance done by our great Risihis.

    Thanks,

    Gandharvan

  73. Dear Sarang,

    I am surprised at your statement:

    // the one said in Vedha is about light – the 7 charriot represent 7 colors VIBGYOR //

    Is this authentic? What I have heard from upanyasas is that the 7 horses represent Gayatri, Ushnik, Anushtup, Brhati, Pankti, Trstup, and Jagati chandas (prosodic meters).

    I don’t think we need a scientific interpretation in something when it is not warranted. Kindly clarify.

  74. My Dear Friend Mr. Sarang.

    24 February 2010 at 10:59 pm
    friend

    //
    OUR PEPOLE SAID THAT SUN TRAVELS ON 7 HORSED CHARIOT FROM EAST TO WEST EVERY DAY.

    BUT THE TRUTH WAS THAT THE GREAT SUN IS MORE COMFORTABLE IN CENTRE AND EARTH ROTATES .
    //

    friend our people did not say sun rotates earth – SUN is not idle it indeed travels (you can look at science) -uttharaayanam dakshinaayanam //

    The uttharaayanam & dakshinaayanam are also not due to the movement of Sun, it is also due to the movement of (rotation of) earth, its due to that earth rotates with 23 degrees tilt.

    You can find it in any books of astronomy , or you can find it in the net itself.

  75. Dear Mr. Kantharavan,

    //First of all, kindly stop using all-caps. It is not decent in an online forum. //

    I used the caps only to mention the importance of the point, and that too as a reaction- when people try to project Hinduism in a wrong way that Hinduism is a religion based just on belief and guess work.

    Any way I have found that you can make your comments with bold letters and some times with green back ground. If you can explain as how to make these in our comments as well, it will be helpful for us.

    //Secondly, your attitude towards our ancestors is condescendingly sympathetic.//

    Our ancestors were much more intelligent, much more disciplined, much more selfless, much more dedicative , much better than that of me… me, atleast !

    The wheel invented by them is still used by us. I dont underestimate them. I only pointed out that the tools available at their time is less.

    //Thirdly, you are probably not aware that the above stories are NOT about the inanimate sun, moon, etc. but about individual souls who control the planetary objects.//

    “NOT” . Fine. Mr. Kantharvan, I am ready to debate more on this. I found that the belife of the people were about the physical sun. The belief that sun moves from esat to west was about the Physical sun, which we saw everyday… not about the supposed soul which control it.

    //Fourthly, are you not aware of the plain fact that our traditional astrologers have been able to predict the exact occurrences of solar/lunar eclipses, long before western renaissance and scientific revolution?//

    Our astrologers were fantsatic mathematicians and had a much better understanding about Astronomy than westerners. I appreciate them, they found many truths. I reiterate that I have absolute respect for our ancetors, they have found many truths, but we need not rest with the laurels , but continue the research.

    உண்மைகளின் தொகுப்பே இந்து மதம். இந்து மதம் முழுமையாக அறிவின் அடிப்படையில் ஆன மதம். பகுத்தறிவினால், சிந்தனையால், கேள்விகளால் சரி பார்க்கப் பட்ட உண்மைகளின் தொகுப்பே இந்து மதம். அதில் சில பல நம்பிக்கைகள் அவ்வப் போது சேர்க்கப் பட்டு வருகின்றன. அவற்றை இந்து மத அறிங்கர்கள் அவ்வப் போது தூசி தட்டி உண்மையான இந்து மதத்தின் ஒளி வெளிவரும்படி செய்கின்றனர்.

  76. கந்தர்வன் அவர்களே

    //
    Is this authentic? What I have heard from upanyasas is that the 7 horses represent Gayatri, Ushnik, Anushtup, Brhati, Pankti, Trstup, and Jagati chandas (prosodic meters).

    I don’t think we need a scientific interpretation in something when it is not warranted. Kindly clarify.
    //

    (Gayatri, Ushnik, Anushtup, Brhati, Pankti, Trstup, and Jagati chandas (prosodic meters).

    there are people here who dismiss/ridicule such interpretations – i had to resort to a logial interpretation (which is also one that seems acceptable to modern mind 🙂 )

    For every thing there is a devathaa – if we say Ganga went to the heaven it is not the river it is the devatha – i thought getting in to such explanations will only complicate things at hand 🙂

    Our ancestors have gave us so much – despite that we think they were ignorant by wrongly interpreting Sun with Seven chariot wrongly and saying that only earth rotates

  77. //armchaircritic
    24 February 2010 at 10:39 pm
    How do one believe a person who says that he/she has seen the God? What/Where is the proof?//

    மிகவும் அருமையான கேள்வி. I appreciate this question.

    “நீங்கள் உண்மையைக் கண்டவர்களாக இருந்தால், உங்கள் முகமே ஒளி வீசும். எல்லோரும் தாமாகவே உங்களை வணங்குவார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

    அப்படி கடவுளை கண்டதாக சும்மா கூட சொல்ல விட முடியும். ஆனால் ஆன்மீகத்தில் பயற்சி உள்ளவர்கள் அவர்கள் கூறுவது உண்மையா எனப் புரிந்து கொள்ள இயலும் எனவே நான் கருதுகிறேன்.

    நன் கடவுளைக் கண்டு இருக்கிறேன் என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல என நினைக்கிறேன் – except for those who are ready to cheat others for personal gians.

    சுவாமி விவேகனந்தர் எல்லோரிடமும் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா, எனக்கு காட்ட முடியுமா எனக் கேட்டதாகவும், இராம கிருஷ்ணர் ஒருவரே தான் பார்த்ததாகவும், கடவுளைக் கட்டுகிறேன் என்று சொன்னதாகவும் சொல்லப் பட்டு உள்ளது.

  78. Mr. Thiruchchikkar,

    //
    Any way I have found that you can make your comments with bold letters and some times with green back ground. If you can explain as how to make these in our comments as well, it will be helpful for us.
    //

    As per online etiquette, using bold or italics means you are being emphatic. It is understood that a person who wants to shout loudly and angrily uses ALL CAPS. Let us stick to this etiquette. About the green background, the green is not intentional – I use for that, and it happens that it appears as green. If you are not okay with this, I can change that.

    //
    Our ancestors were much more intelligent, much more disciplined, much more selfless, much more dedicative , much better than that of me… me, atleast !
    //

    You may be sincere about this, but it is contrary to your stubbornness in refusing the Bhagavad Gita Bhashyas of Bhagavad Ramanuja, Sri Adi Sankara, Madhvacharya, and others. Anyway, I leave that out to you.

    // I only pointed out that the tools available at their time is less. //

    Friend, you are still in the realm of mundane sciences. Truths were dug out by Rishis by their mastery of subtle sciences, which don’t require external technology and tools. I only pointed out that you indirectly but strongly ridiculed the puranic texts which were spoken by great Rishis by saying that they are unreliable since they don’t correspond to modern science (by your interpretation of the puranic texts, rather than commentary-based or by inquiry with an acharya). Risihis were not fools to concoct their own stories and false theories since they say at the same time that scientific enquiry is a valid means of proof (pratyakSa and anumAna are valid pramANas).

    // I reiterate that I have absolute respect for our ancetors, they have found many truths, but we need not rest with the laurels , but continue the research. //

    I never said anything about research in the realm of mundane sciences. Going to subtle sciences (relation between soul, supersoul, matter etc.), the Vedas are the ultimate authority, and anything that you say or write contradicting them are false. You think that texts are secondary means of knowledge at best, but that is fallacious. I explain why below:

    In the Vedic system, pratyakSa (empirical evidence) and anumAna (logical inference) alone are not the means of proof. There is also a third means which completes all philosophical as well as mundane enquiry: it is known as sabda pramANa. sabda pramANa are the Vedas, and are the ultimate authority. It is also shown by great philosophers (including those today) in India that the Vedas are apauruSeya (not man-made) since (i) no author is remembered for the same, and (ii) no internal contradictions exist.

    Lay people think modern science accepts only two pramANas (valid means of proof): pratyakSa and anumAna (direct empirical evidence and inference). The layperson does not understand that modern scientific inquiry also has its own sabda pramANa (though they won’t call it that) – the axioms etc. Only that we argue that their sabda pramANa is not final since it is clearly man-made and is only tailored to fit in what is empirically observable. As an example, if I adamantly say that “all that you see, hear, smell, feel, and taste are actually false – it is only the work of some divine magician”, there is no logical way of disproving that with any science. Only Vedas and metaphysics come to our rescue then.

    If you want to get into all these and “logically see” and “personally inquire” ignoring all that is readily available, it will only take janmas after janmas and we won’t get anywhere (since we are committing sinful deeds in the mean time by ignoring our vedic duties). It is said that Sri Adi Sankara himself has sung – “If you are spending your time with DukRnkaraNa and other rules of grammar, what is in store for you is only punarapi jananam, punarapi maraNam, punarapi jananI jaDhare shayanam. Hence, just do Nama Sankirtanam and Surrender before a Guru”. Hence, the best way as recommended is to just surrender before an Acharya or guru from a sat-sampradAya with 1000s of years of incontrovertible history (rather than based on hearsay) and unbroken lineage, and just imbibe everything.

    நன்றி,

    கந்தர்வன்

  79. திருச்சிகாரரே

    நீங்களே அனுமானம் செய்துவிட்டீர்களே

    //“நீங்கள் உண்மையைக் கண்டவர்களாக இருந்தால், உங்கள் முகமே ஒளி வீசும். எல்லோரும் தாமாகவே உங்களை வணங்குவார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
    //

    நீங்கள் இங்கு கூறுவது அனுமானம் – முகத்தில் ஒழி இருந்தால் கடவுளை கண்டவர் என்பது வ்யாப்ப்தி

    இந்த அனுமானம் (inference) பற்றி தான் நார் கூறி வந்தேன்

    மேலும் நீங்கள் சொல்வதில் சில தோஷங்கள் உள்ளது
    சிசு பாலன் இறைவனை கண்டான், ராவணன் கூடத்தான், பத்மாசுரன், துரியோதனன், இந்த்ரஜித் இப்படி எல்லோரும் இறைவனை கண்டார்கள் அவர்கள் முகம் கோரமானது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்

    அதனால் கடவுளை கண்டவர்கள் மனம் ப்ராகசிக்காது என்று சொல்ல இயலாது – இந்த பிரஹாசம் அவர்களது நல ஒழுக்கத்தாலும், பக்தியாலும், ஞானத்தாலும் தான் வரும் – ஆன்மா ஸ்வயம் பிரகாசம் (அப்படி தான் வேதாந்திகள் ஒப்புக்கொள்கிறார்கள்)

    இப்படி இருப்பவர்கள் இறைவனை கண்டால் இன்னும் பிரகாசிக்கும் – அதலால் இறைவனை நேரில் காணும் முன்னரே அவர்கள் பிரகாசம் அடைகிறார்கள்

  80. Dear Mr. Sarang,

    //மேலும் நீங்கள் சொல்வதில் சில தோஷங்கள் உள்ளது
    சிசு பாலன் இறைவனை கண்டான், ராவணன் கூடத்தான், பத்மாசுரன், துரியோதனன், இந்த்ரஜித் இப்படி எல்லோரும் இறைவனை கண்டார்கள்//

    wish you might have heard this very popular song (popular in north India)

    ” Dharshan dho Ghanu saamu naathu Moori Akiyaan piyaasi Re”

    (Please give me your Dhrashan, my eyes are longing or thirsting for you)

    By the popular saint SURDAS, who was a BLIND.

    Seeing God does not means only seeing him face to face, seeing God means receiving light in the darkness, where one can see the secrets, the truths…. and everything. It Gives one person satisfection and calmness…, it gives one person strength and power… above all it liberates one person from sorrow and make him independent… A person who sees God may still face some hurdles in his life, but he is at the end of the tunnel… he will soon become totally liberated.

    Even Arjun played with God but not realised until he see him in his full concept.

    //“நீங்கள் உண்மையைக் கண்டவர்களாக இருந்தால், உங்கள் முகமே ஒளி வீசும். எல்லோரும் தாமாகவே உங்களை வணங்குவார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.//

    Can you read it again? It is not my Guess- it was told by Swami Vivekanandha.

    I did not give any fool proof formula to find out whether any person has seen the God.

    I only mentioned that any one wh is practicing spiritualism, can understand whether the person claimed to see the God has gone up in the Spiritual ladder. A cricketer batsman, can know about theskills of another cricketer , say bowler- when he face the balls.

    The best thing for a person is to try to see the God himself, before claiming that ” this” is the most superior God

  81. Dear Friend Sarang,

    //Sarang
    24 February 2010 at 10:59 pm
    friend

    friend our people did not say sun rotates earth – SUN is not idle it indeed travels (you can look at science) -uttharaayanam dakshinaayanam //

    I can not find from Science that SUN travels and hence uttharaayanam & dakshinaayanam are happening.

    Can you please explain as how how SUN travels and make uttharaayanam & dakshinaayanam ?

    Thank you.

  82. nanbare
    //
    Dear Mr. Kantharavan,

    I have found that you can make your comments with bold letters and some times with green back ground. If you can explain as how to make these in our comments as well, it will be helpful for us.
    //

    இதற்கான பதில் நீங்கள் பின்னுட்டம் இடும் “text area” வின் கீழே சொல்லப்பட்டுள்ளது

    //

    You can use these tags:<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
    //

  83. //
    I have found that you can make your comments with bold letters and some times with green back ground. If you can explain as how to make these in our comments as well, it will be helpful for us.
    //

    You can use the following tags: &lt b &lt this is in bold &lt /b &lt , it would appear as this is in bold. If you use &lt i &lt this is in italics &lt /i &lt it would appear as this is in italics. For the text in green background, you can use &lt blockquote &lt contents &lt / blah blah &lt which would then appear as:

    blah blah

    Hope this is helpful

    Gandharvan

  84. Correction to the above

    &lt b &gt this is in bold &lt /b &gt
    &lt i &gt this is in italics &lt /i &gt

    &lt blockquote &gt blah blah &lt /blockquote &gt

    You have to put less than symbol where &lt appears, and greater than symbol where &gt appears.

  85. dear thiruchchikaar

    //
    did not give any fool proof formula to find out whether any person has seen the God.

    I only mentioned that any one wh is practicing spiritualism, can understand whether the person claimed to see the God has gone up in the Spiritual ladder. A cricketer batsman, can know about theskills of another cricketer , say bowler- when he face the balls.
    //

    i am not disagreeing with you – i was only trying to make your statement specifically to mean what it should mean – this is what is callled as விஷேஷித்தல் in tarkam

    one of the ways to put it is as you have now stated – it is possible to detect i one has gone up the spiritula ladder had some form of view of God by looking at his face itself – it will be generally glowing with tejas

    if one barely says only the person who has seen God is correct – this will be misunderstood

    this is what i was trying to show by saying that anumaana (experiencing god through inference and spritual practice) is also a valid method.

    thanks

  86. Dear Friend Sarang,

    I REQUEST YOUR CLARIFICATION ON THIS.

    //Sarang
    24 February 2010 at 10:59 pm
    friend

    friend our people did not say sun rotates earth – SUN is not idle it indeed travels (you can look at science) -uttharaayanam dakshinaayanam //

    I can not find from Science that SUN travels and hence uttharaayanam & dakshinaayanam are happening.

    Can you please explain as how how SUN travels and make uttharaayanam & dakshinaayanam ?

    Thank you.

  87. என் இந்த சண்டையெல்லாம்? முதலில் பிரமநை பார்க்க முடியாது.,
    பார்த்தேன் என்றால் அது முழு பொய். பிரமன் அனுபவம் ஒன்று தான்.
    அதை பார்த்தேன் என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள். பெரிய
    புராணத்தில் அடியார்கள் பார்த்த சிவன் பிரம்மா அனுபவமே. நேரிட்டு யாரும் ப்ர்ஹமனை பார்க்கமுடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர்
    கண்டிலர் என்றார் திருமூலர். பிரம்மா அனுபவத்தை உணர தான் முடியும். விளக்க முடியாது. ஓயாதே உள்ளிருந்து உள்குவர் உள்ளத்தில் உள்ளானே என்று மணி வாசகர் சொல்கிறார். உள்குதல் என்றால் ஆழ்ந்து நினைப்பது. Contemplative meditation,

    திருச்சாழல் அருமையான பாடல். இரண்டு குழுவாக பெண் குழந்தைகள் பாடுவது போல் அமைக்க பட்டுள்ளது. கோவில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன்
    ஆனேடீ. தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும் கையில்@
    உலகனைத்தும் கல் போடி தான் காணேடீ. என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. [@ kaayil = if he gets angry.]

    அன்புடன்,

    சுப்ரமணியன். இரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *