Monthly Archives: March 2010

அனுபவம், ஆன்மிகம்

நம்மைத் தேடி வரும் இறைவன்

நம்மைத் தேடி வரும் இறைவன்

நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்.... கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

மேலும் »

உடல்நலம், உணவு, கேள்வி-பதில், பொது

ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது...ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன.

மேலும் »

சினிமா

அங்காடித் தெரு – திரைப்பார்வை

அங்காடித் தெரு – திரைப்பார்வை

'அண்ணாச்சி' முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

மேலும் »

ஆன்மிகம், நிகழ்வுகள், நேர்காணல், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)

சில வெளிநாட்டு குழுக்களால், இந்து குருமார்களை, குறிப்பாக தென்னிந்திய குருமார்களை ஒழித்துக் கட்டுவதற்காகத் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது... நான் பதிவு செய்த நேர்காணலில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, மறுபடி அலைந்து திரியும் ஒரு சாதாரணத் துறவியாக ஆகத் தான் தயார் என்று நித்யானந்தா கூறினார்.. ஜடாயுவின் பின்னுரை - நித்யானந்தாவின் தற்போதைய நிலைமை கீதை கூறும் “யோக ப்ரஷ்டன்”, அதாவது யோகத்திலிருந்து தவறியவன் என்ற வரையறைக்குப் பொருந்தி வருகிறது என்று நினைக்கிறேன்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

'பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.'-- இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

மேலும் »

அரசியல்

தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?

தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?

தாலி பற்றிய நிகழ்ச்சியால் ஏற்பட்ட பின்னடைவினாலோ அல்லது ஹிந்துக்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தினாலோ, விஜய் டிவி நிறுவனம், “முஸ்லிம் பெண்கள் பர்தா உடை அணிவது அவசியமா?” என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியும் (17-01-10) விளம்பரப்படுத்தப்பட்டது. அதை உஷாராய் கவனித்த ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’, மாநகரக் காவல்துறை ஆணையருக்கும், விஜய் டிவி நிறுவனத்திற்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியது.

மேலும் »

இலக்கியம், பொது, ராமாயணம்

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

March 24, 2010
-
நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது... சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்... தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

மேலும் »

ஆன்மிகம், சமூகம், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)

ஒரு சிறிய வட்டத்தினருக்காகவேனும் பாலுறவுடன் கூடிய தாந்திரீக முறைகளும் பரிசீலிக்கப் பட்டு, பாதுகாப்பாகக் கற்பிப்பதற்கு ஏற்றதாக ஆக்கவேண்டும் என்று அவர் நினைக்கிறார்..அவர் கண்டிப்பாக வெகுசில சீடர்களுடன் தாந்திரீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன்... “உலகை ஒதுக்கும்”, “தப்பித்துச் செல்லும்” வழிமுறைகளைக் கடைப் பிடிப்பதை விட, சமூக விஷயங்களில் பிரசினைகளில் ஈடுபடுவது அவசியமானது என்ற கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டார்... என் அனுபவத்தில், வேறு எந்த இந்து ஆன்மிக குருவும், இந்த உலகளாவிய பிரசினைகளை இவ்வளவு ஆழமாகக் கற்றுப் புரிந்து கொள்ள இந்த அளவுக்கு நேரம் செலவழித்ததில்லை.

மேலும் »

சினிமா

The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை

The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை

சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், நிகழ்வுகள், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 1 (ராஜீவ் மல்ஹோத்ரா)

இந்து அமைப்புகளின் பலவீனங்கள் என்னென்ன என்று எதிராளிகளுக்குத் தெரிய வரும்போது, இதே போன்ற விவகாரங்களை மற்ற இந்து அமைப்புகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும். இதனை ஒரு முன்னறிவிப்பாகவே கூறுகிறேன்... ஒரு விஷயம் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் அது அறிவியலே அல்ல, ஏனென்றால் அறிவியல் அபோதபூர்வமானது, ஒழுக்கவிதிகள் சாராதது... சிவ சூத்திரங்களில் உள்ள 112 ஆன்மிக சாதனை முறைகளில், 6 முறைகள் ஆணும் (யோகி) பெண்ணும் (யோகினி) இணைந்து புரியும் யோகம் பற்றிக் கூறுகின்றன.

மேலும் »