பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

மூலம்:ஆர். வைத்தியநாதன், பேராசிரியர், இந்திய மேலாண்மை நிறுவனம் (Indian Institue of Management) – பெங்களூரு

தமிழில் : தண்புனலி

bomb-blastநாட்டை ராணுவம் நிர்வகிக்கிறது என்ற நிலை ஒரு சில தேசங்களில் மட்டுமே காணப்படுகிறது. பாகிஸ்தானில் இந்த நிலைதான் மேலோங்கி உள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரத்தையே ராணுவம்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல பெரிய நிறுவனங்கள் ராணுவ சார்புடையவைதான். ஃபாஜி அறக்கட்டளை, ராணுவத்தினர் நல அறக்கட்டளை, பாகிரா அறக்கட்டளை, ஷாகின் அறக்கட்டளை என பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் பெரிய நிறுவனங்கள் எல்லாம் ராணுவச் சார்புடையவைதான். கராச்சி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய கம்பெனிகளுக்குச் சொந்தமானவைதான்.

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரானுவச் சார்புடைய நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பாகிஸ்தான் ராணுவமும் அதன் உளவு அமைப்புமான ஐ.எஸ்.ஐ யும் தான் பாகிஸ்தான் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. எனவே நிலையான பாகிஸ்தான் என்று கூறுவதை உடனே நாம் நிறுத்த வேண்டும். நிலையான பாகிஸ்தான் என்றால் இந்தியாவில் உள்ள நகரங்களை பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ யும் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தும் என்றுதான் அர்த்தமாகும்.

சமீப காலமாக பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போக வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. ஒரு பத்திரிகை குழுமத்தாலும், ’பிளீடிங் ஹார்ட் லிபரல்ஸ்’ எனப்படும் ரத்தம் கசியும் இருதயம் கொண்ட பரந்த மனப்பான்மையாளர்களாலும் இத்தகைய குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என்று மூன்று வகையானவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

mahesh-bhatt-bollywood-directorமுதலாவதாக, தேசப் பிரிவினைக்கு முன்பே பிறந்தவர்கள். அவர்கள் மிகவும் முதியவர்களாக உள்ளார்கள். பழைய நினைவுகள் அவர்களது நெஞ்சங்களில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. லாகூர் ஹவேலிஸ், அல்வாக்கள், முஜிராக்கள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிரிவினர் திரையுலகத்தோடு தொடர்புடையவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் இடமளித்தால் சந்தை விரிவைடயும் என்பது அவர்கள் கணக்காகும். மூன்றாவது பிரிவினர் ‘பிளீங்க் ஹார்ட் லிபரல்ஸ்’ எனப்படும் ரத்தம் கசியும் இருதயம் கொண்ட பரந்த மனப்பான்மையாளர்கள் ஆவர். இந்தியாவின் இளைய சகோதரனாக பாகிஸ்தானைக் கருதும் அவர்கள், பாகிஸ்தான் நலிந்துள்ளதே என்று வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூன்று பேரின் எண்ணமும் தவறுதான். ஆனால் இந்த மூன்று தரப்பினரும் தேசிய அளவில் கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களது கருத்தை ஒதுக்குங்கள், தவிர்த்துவிடுங்கள், நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை உணர்த்துங்கள். குறிப்பாக மூன்றாவது தரப்பினரின் எண்ணம் கிண்டலுக்கும், கேலிக்கும் உரியது என்பதைப் புலப்படுத்துங்கள்.

writer Kuldip Nayyar(left), actress Nandita Das(center)and pakistan human rights activist asma jahangeer hold candles during India's Independence Day celebrations, at Wagah, the joint India-Pakistan border check post, on  August . 14 mid night.
writer Kuldip Nayyar(left), actress Nandita Das(center)and pakistan human rights activist asma jahangeer hold candles during India's Independence Day celebrations, at Wagah, the joint India-Pakistan border check post, on August . 14 mid night.

மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இந்த மூன்றாவது தரப்பினர் பாகிஸ்தானின் பொருளாதார அமைப்பு பற்றிய அடிப்படை அறிவுகூட அற்றவர்கள். ஏதோ அரைகுறையாக அறிந்திருந்தாலும் கூட அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாதவர்கள். 1973 ஆம் வருட பாகிஸ்தான் அரசியல் சாசன பதிப்பில் ‘உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை சர்வ வல்லமை பொருந்திய அல்லாவுக்கே உரியதாகும். இதை அல்லா வரையறை செய்துள்ள வரம்புக்கு உட்பட்டு பாகிஸ்தான் மக்கள் பிரயோகிக்க வேண்டும். அதை ஒரு புனித அறக்கட்டளையாகக் கருதி செயலாற்ற வேண்டும். இஸ்லாம் கூறியுள்ளபடி ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், பொறையுடைமை, சமூக நீதி ஆகியவை முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்று முன்னுரைப் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை நிறைவேற்றுவதற்கான கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ராணுவம் என்பதுதான் பாகிஸ்தானின் நிலைப்பாடாகும். இதை பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் கியானி சமீபத்தில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். பெனாசிர் புட்டோவின் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா குழு பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரையும் விசாரித்தது. இந்தக் குழு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியின் முயற்சி காரணமாக நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தக் குழு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை விசாரிக்கவே இல்லை. கெர்ரி-லுகர் மசோதா குறித்து விசாரணை நடத்த ராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்தார்கள், எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உடனே ராணுவத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கெரியை அதிபர் சர்தாரி கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு ராணுவம் தனித்தன்மையுடன் யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மெழுகுவர்த்தியை முத்தமிடுபவர்கள் சொல்லும் கருத்துக்களால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அல்லாவின் எண்ணத்தை நிறைவேற்றவே தான் இயங்கி வருவதாக பாகிஸ்தான் அரசு கருதிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு பரிமாணத்தைப் பார்ப்போம். இறை நம்பிக்கையற்றவர்களை அவர்கள் பாகிஸ்தானுக்கு உள்ளே இருந்தாலும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி அழித்தே தீரவேண்டும். அதற்காக தற்கொலைப் படையினரை ஏவி விடுவதுகூட தவறல்ல என்பதுதான் பாகிஸ்தானின் நிலைப்பாடாகும். பாகிஸ்தான் ராணுவம் தனது செயல்பாட்டைத் திருத்திக் கொள்ளும் என்றோ அல்லது இந்தக் கடினமான நிலைப்பாடு தணிந்துவிடும் என்றோ நம்புகின்றவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள். அப்படி எதுவும் பாகிஸ்தானில் நடப்பது சாத்தியமல்ல.

சமீபத்தில் தேசியப் பாதுகாப்பும் பயங்கரவாதமும் என்ற தலைப்பில் ஆதரப்பூர்வமான ஆய்வு ஒன்றை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் உருவாக்கி உள்ளது. இதில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் எப்படி உருவாகி படர்ந்து பரவி வருகிறது என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு கராச்சி வர்த்தக சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கராச்சி வர்த்தக சபையுடந்தான் வியாபரத் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று மெழுகுவர்த்தியை முத்தமிடுபவர்கள் பிடிவாதம் பிடித்த வருகிறார்கள். இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை எங்களால் இப்போதே சொல்ல முடியாது.

உலகின் எந்த மூலையில் பயங்கரவாத நிகழ்வு நடைபெற்றாலும் அதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உண்டு என்பது கடந்த 10 ஆண்டுகால நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தால் புலனாகிறது. பயங்கரவாதத்திற்கு சவுதி அரேபியா நிதி உதவி அளிக்கிறது. சதித்திட்டம் லண்டனில் வகுக்கப்படுகிறது. அதை உலகம் முழுவதும் பாகிஸ்தானியர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். பாகிஸ்தானின் கூட்டாளியான அமெரிக்கா, தனது நாட்டுக்குள் வரும் ஒவ்வொரு பாகிஸ்தான் பிரஜையையும் முழுமையாக சோதனை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் பிரஜைகள் கொண்டுவரும் பொருட்கள் மற்றும் உடைமைகளையும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்துகிறது.

இன்னொரு கூட்டாளியான சவுதி அரேபியா பாகிஸ்தான் பிரஜைகளுக்கு சுலபமாக விசா வழங்குவதில்லை. கடுமையான விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே விசாவை வழங்க முன்வருகிறது. சீனாவில் உள்ள ஜின்ஞியாங்க் பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாகிஸ்தானியர்கள்தான் காரணம் என்று சீனா கவலை கொண்டுள்ளது. பல கலவரக்காரர்கள் வெளியே அதிகம் தெரியாதபடி தூக்கில் தொங்கவிடப்பட்டு விட்டார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் பல துண்டுகளாக உடைந்து சிதறினால் அது நல்லதுதான். அது அமைதிக்கு உகந்ததாக இருக்கும். இது நிகழ்ந்தால் இந்தியாவுக்கு மட்டும் நல்லதல்ல. உலகத்திற்கே நல்லது. மெழுகுவர்த்தியை முத்தமிடுபவர்கள் தங்களது செயல்திட்டம் முற்றிலும் தவறானது என்பதை உணராது இருக்கிறார்கள். அவர்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படவில்லை. அவர்களது அபத்தமான நிலைப்பாட்டிற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது நிகழப்போவதில்லை. அப்படி நிகழவும் கூடாது.

மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.  காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை.

நாம் பொறுமையாக செயல்பட வேண்டும். நிதானமாக செயல்படவேண்டும். யாரையும் தாக்கக்கூடாது. நமது இளைய சகோதரனான பாகிஸ்தானை பரிவுடன் நடத்தவேண்டும் என்று சொல்லுகின்ற ஐ.கே.குஜ்ரால் கோட்பாட்டை குப்பைத் தொட்டியில் வீசியெறிய வேண்டும். இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தால் அந்த இரண்டு கன்னங்களையும் மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அறைபடுவதற்காக மூன்றாவது கன்னம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதாக குஜ்ரால் கோட்பாடு நடைமுறைக்கு சாத்தியமற்றதை முன்வைக்கிறது. அரசியல் ரீதியாக இப்படிச் சிந்திப்பது ஆபத்தானது. இத்தகைய சிந்தனை உடையவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

உலகின் கண்முன்னால் பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று நிரூபிக்க நாம்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று நாம் அழைக்கவேண்டும். அதற்கேற்ப அதை நடத்த வேண்டும். மெழுகுவர்த்தியை முத்தமிடும் விவரம் புரியாத வெற்று சமாதானவாதிகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். மாயையிலிருந்து நாம் விடுபட வேண்டும் தென்னாப்பிரிக்கா இனப்பாகுபாடு காட்டுகிறது என்ற அடிப்படையில் அது புறக்கணிக்கப்படுகிறது. அது ஒதுக்கி வைக்கப்படுகிறது. பாகிஸ்தானை நாம் பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும், இன்னும் மற்றுமுள்ள எல்லாத் துறைகள் ரீதியாகவும் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். பாகிஸ்தான் உடன் உள்ள உறவை முழுமையாக துண்டிக்க வேண்டும். பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

முதலில் பாகிஸ்தானை நாம் புறக்கணித்தால்தான் மற்ற நாடுகளையும் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளமுடியும். நாம் மிகப்பெரிய தேசம் என்ற முறையில் இதைச் செய்தால் இதனால் எதிர்பார்க்கும் விளைவு ஏற்படக்கூடும். நம்மைப் பின்பற்றி வேறு சில நாடுகளும் பாகிஸ்தானைப் புறக்கணிக்க முன்வரக்கூடும். ஒரு சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிச்சயமாக ஏற்படும். அதைவிடுத்து மும்பை தாக்கப்பட்டபோது வெற்று சமாதான விரும்பிகள் மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக்கொண்டு அமைதி தேவை, அமைதி தேவை என்று திரும்பத் திரும்ப கூறியதைப் போல, இப்போது புனே நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோதும் முன்புபோலவே சமாதானம் சமாதானம் என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தால் ஏற்படுகின்ற விளைவு விரும்பத்தக்கதாக இருக்காது. மேலும் பல பலிகடாக்களை பாகிஸ்தான் பகாசுரனுக்கு நாம் படைப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

நன்றி: விஜயபாரதம்  05-03-2010 இதழ்

10 Replies to “பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்”

  1. பாகிஸ்தான் ஒரு போக்கிரி தேசம். துவேஷத்தில் பிறந்த அந்த தேசம், பாரத தேசத்திற்கு சங்கடம் விளைய வேண்டும் என்பதற்காக எத்தகைய இழிசெயலைச் செய்வதற்கும் தயங்குவதில்லை. பாகிஸ்தான் அரசே பாரதத்தின் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து பாரதத்தில் புழக்கத்தில் விட்டு நமது பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வருகிறது. இப்படியொரு அருவருப்பான செயலை இதற்கு முன் இரண்டாம் உலகப் போர்க்கால ஹிட்லரின் ஜெர்மனிதான் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தான் அச்சடித்த பாரத தேச ரூபாய் நோட்டுகளை பாரதத்தில் புழக்கத்தில்விட பாகிஸ்தான் தனது தூதரகப் பிரத்யேகச் சலுகைகளையும் துஷ்பிரயோகம் செய்யத் தயங்குவதில்லை. நியாயப்படி இதுவே இன்னொரு சொரணையுள்ள நாடாக இருந்தால் பாகிஸ்தானுடனான தனது ராஜீய உறவுகளைத் துண்டித்துக் கொண்டிருக்கும். பாகிஸ்தான் பிரஜைகளுகு வீஸா வழங்குவதையும் நிறுத்தியிருக்கும். பாரத தேச ஆட்சியாளர்களுக்குத்தான் அப்படியொரு சொரணை இல்லையே!

    சர்வ தேச அரங்கில் பாகிஸ்தான் – இந்தியா விவகாரங்கள் சரிவரப் புரிவதில்லை. புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கரையும் இல்லை. இந்தியாவும் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடு என்பதை பிற நாடுகள் அறிந்துள்ளன. இன்று பாகிஸ்தான் அரசு தனது மேலாதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே தாலிபான்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடிவருகிறது. தாலிபான்களும் பாகிஸ்தான் அரசு ஒரு பக்கம் அமெரிக்காவுக்குச் சாதகமாக நடந்து வருவதாலும் முழுக்க முழுக்க இஸ்லாமியச் சட்டங்களை அமல் செய்யத் தாமதிப்பதாலுமே பாகிஸ்தான் அரசை எதிர்த்து பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசு மீனுக்குத் த்லையும் பாம்புக்கு வாலும் என்பதுபோல தாலிபான்களுக்கும் சாதகம், அமெரிக்காவுக்கும் சாத்கம் என நடப்பதைத் தாலிபான்கள் விரும்பவில்லை. இந்த நுணுக்கங்களை அறியாத சர்வ தேச அரங்கு, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மிகத் தீவிரமாகச் செயல்படுவதாகக கருதுகின்றது. இந்தியா தனது இஸ்லாமியப் பிரஜைகளின் விரோதத்திற்கு ஆளாகி விடுவோமோ என்கிற வீண் தயக்கத்தினால் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கிவருகிறது. இதன் விளைவாக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாரதம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்னும் எண்ணம் சர்வ தேச அரங்கில் வலுத்து வருகிறது. இந்நிலை நீடித்தால், பாரதத்தின் மீது பயங்கரவாத் முத்திரை விழ அதிக நாட்கள் ஆகாது. இன்று பயங்கர வாதச் செயலகளில் பாரத்தத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் ஈடுபடுகின்றனர். கேரளமே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் விளைநிலமாக மாறியுள்ளது. எனவேதான் இன்று பொதுவாக இந்தியர்கள் மீதும் சர்வதேச வட்டாரத்தில் வெறுப்பு வளரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பிரதமரே சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நியாயமான சந்தேகத்தின் பேரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞர் விசாரிக்கப்பட்டபோது அவருக்கு பகிரங்கமாக அனுதாபம் தெரிவித்தது நினைவிருக்கும். மலேசியாவிலும் வளைகுடா நாடுகளிலும் அவதியுறும் இந்தியர்களுக்காகக் கவலைப்படாத இந்தியப் பிரதமர், ஒரு இந்திய இளைஞன் மீது அவன் ஒரு முஸ்லிம் என்பதற்காகப் பரிவு காட்டிப் பேசியதால்தான் இன்று பொதுவாக இந்தியர்கள் மீதே ஆஸ்திரேலியாவில் வெறுப்பு வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் எவரும் சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன் திண்ணை இணைய இதழில் சிறந்த அறிஞரும மூத்த பத்திரிகையாளருமான மலர்மன்னன் அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கர வாத முத்திரை விழப் போகிறது என்ற தலைப்பில் ஒர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதினார்கள். அப்படிப்பட்ட நிலை வெகு வேகமாக உருவாகிவருகிறது. பயங்கரவாததிற்கு எதிராக இதுவரை இந்தியா உருப்படியாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எழும் கேள்விக்குத் திருப்திகரமாக பதில் அளிக்கும் நிலையில் நாம் இல்லை. துரதிருஷ்டவசமாக திரு வைத்திய நாதன், மல்ர்மன்னன் இன்னும் ஒரு சிலர் மிகவும் சிறுபான்மையினராகவும் ஹிந்துமத வெறியர்களாகவும் சில ஹிந்துத்துவச் சார்புள்ளவ்ர்களால்கூடக் கருதப்படுவது வேதனையான விஷ்யம்.

    சத்தியபாமா.

  2. தீவிரவாதிகளுடன் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க நினைக்கும் உள்துறை அமைச்சர், வரலாறு காணாத விலைவாசியினால் பரிதவிக்கும் சாமாநியர்களைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் மேலும் விலை ஏற்றத்திற்கு வித்திடும் நிதி அமைச்சர், பன்னாட்டு கம்பனிகளின் பொருளாதார சதி திட்டங்களில் சிக்கி நமது நாட்டின் ஆதாரமான விவசாயத்தையே பாழாக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வணிக விவகாரத்துறை அமைச்சர், மறைமுகமாக நமது நாட்டின் மீது பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் அணுசக்தி பலம் கொண்ட பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை சமாளிக்க தெரியாத வெளிஉறவுத்துரை அமைச்சர்கள், அமெரிக்க மற்றும் இத்தாலிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கைப்பாவையாக செயல்பட்டுவரும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைவி, இன்னும் பல உதவாக்கரைகள், இவர்கள் அனைவரிடமிருந்தும் நமது மக்களை இறைவன் ஒருவனால்தான் காப்பாற்ற இயலும்! எனினும் தேசபக்தி கொண்ட நாம போன்ற சாமானிய மக்கள் விரும்புவது, கொஞ்சம் தேச பக்தி கொண்ட அதிகாரிகள் மூலம், எதிரிகளின் சதிகளை முறியடிக்கும் வலுவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள். எதிரி நாடுகளின் பலவீனங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தி, நாம் அவர்களால் சந்திக்கும் பிரச்சினைகளைப்போல் பன்மடங்கு பிரச்சினைகளை அவர்களுக்கு உண்டாக்கும் முயற்சிகள் நடைபெற்றால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழ முடியும். நமது பலம் எதுவோ அதனை வலுப்படுத்த உதவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

  3. இது குறித்து இந்த தளத்தில் ஒரு poll வைத்தால் என்ன?!

  4. intha idathil intha karuthai veliyiduvathu muraiya enru teriavillai. ayinum solgiren. sameepathil rameswaram,ramanathapuram,tirupullani agiya tiruthalangalukku sentru irunthom. aathi sethu entru azhaikapadum tiruppullani jagannatha perumal kovilukku satru tholaivil kadal amaithiyaaga ulla soozhalil pala bakthargal punitha neeraaduvathum,parigaarangal seivathum, poojaigal seivathumaaga irunthanar. kadalukku miga arugileye thonmayaana hanumaar kovilum ullathu. enaku terinthu 4 1/2 varudam munbu ingu sentru irunthom. appozhuthu thirupullani kovilil irunthu kadalukku sellum vazhiyil oru 5-6 veedugal irunthaal perithu. adhuvum angu vazhiyil ulla muneeswaran kovilukkaga irukkum kudumbangalum, hanumaar kovil archakar kudumbamum irunthathu. aanal inru oru siriya muslim village aaga uru maari kondu irukkirathu antha adarntha marangalum, uppalamum ulla kadalukku chellum vazhi. oru siriya durgahvum katta patu ullathu. manitha neya makkal katchi,tamilnadu muslim munnetra kazhagam agiya irandum sernthu ingu pala nilangalai aakramithu angu irukkum sorpa makkalai muslimaaga maatri kondu irukirathu. oru 20 veedugalil bagirangamaaga vellikizhamai thorum pakistanin desiya kodi parakka vidapadugirathu (en friday mattumnu terila). varuda varudam 2 murai ramar,jagannathar agiya urchava moorthigal intha samudra karai vanthu thiruvizha nadakkum. aanal kadantha 2 muraiyaaga perumalum,ramarum varum samayamaaga antha chinna durgahvil oliperukkiyin moolam uruduvil sathamaaga sila paatukkal vaikapaduginrana. eppozhuthu kalavaram seialaam enru intha irandu katchi kaarargalum kaathu irukka, koiyilukkum, angu kadarkaraiyil ulla vazhipaatu thalangal,kovilgal agiyavatrukkum paramparai atheena karthavana Raja Ragunatha sethupathy kudumbathaar ithai patri kandu kollamal irukka karanam???. ithai vida naan kanda peria athirchi ramanathapuram station. unreserved ticket kudukkum idathukku miga arugamaiyil utkaarum idathukku melaaga 2 calendar (2010) thongi kondu irunthathu. athil hindi,gujrathi ina malai vaazh makkal sirikkum,vilayaadum kaatchigal. nan kooda etho govt. calendar ena ninaithen. nanraaga athai nokka ella maathathirkum keezh oru sila vilakkangal paarthen migavum athirchiyadainthen. avvalavum Joshua project ena azhaikapadum suvisesha aananda jepa kootam enra amaipin thondu matrum saadhanaigal. pala malai vaazh makkal matrum avargalin munthiaya theiva vazhipaadu, varumai agiyavatrai patri mattamaaga vilakki vittu, avargalil yesuvin irudhayathukku pathiramanavargal enru koorapatirukkum thogaigal ovvoru kaadu matrum malai vaazh makkal Gujarath,Assam,Orissa,Belur ponra idangalil matham maariyavargal patria kurippu. mukkiyamaaga HO ina makkal “Himarai Dev” enra kuthiraiyai vaithu vazhipaduginranar(athavathu namma oorla kuthiraiyoda mathurai veeran irukkumla…). ivargalin vazhipaatai thavaraaga sitharithu athil suvisesha kootathil sernthavargal “4300” enru kuripidapattu irunthathu. Yarukkenum kidaithaal paarkalam (February – 2010) pakkathu keezh. idhai vida kodumai. Theeviramaaga sivanai vazhipadum “Lingaayat” inathavar, karnatakavin pala pagudigalil ullanar. ivargal sivanul oru angam ena nambugiravargal. siriya sivalingathai brahmanargal pol ivargalum poonool pol pottu naduvil lingathai thonga vitu iruppar. ivargalin vazhipaatu murai, siva nambikkai agiyavatrai avathooraga thirithu oru kurippu (right hand side), ivargalil varumaiyai kaati avargalukkaga jepithadhil maariyavargal 40 lingayath kudumbangal.(left hand side notes). September 2010.keezh irukkum. ivargalukkaaga melum jebippom enru vaakiyam pachai ezhuthukkalil kadaiysiyil. migavum athirnthen ithai kandu. lingaayath makkal migavum theevira veera saiva makkal. eppadi intha abrahmiya madhathaaral ippadi ooduruva mudinthathu??

  5. காஷ்மீர் விவகாரம்” விகாரம்” ஆன காலந்தொட்டே பாகிஸ்தான் ஆசியில்லாமல் எந்தவொரு இஸ்லாமிய பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்குள் நடைபெறாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் நம்மை பிடித்த சாபக்கேடு போலிமதச்சார்பின்மைவா(வியா)திகளால் ஆளப்படும் அரசும், ஊடகங்களும் இத்தகைய விவகாரத்தை மிகவும் மென்மையாகத்தான் அணுகுகின்றன. சில தினங்களுக்குமுன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ல் வந்த திரு வீர் சங்வி அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்திய உளவு அமைப்புகள் போக்குவரத்து காவல் துறை போல்தான் செயல்படுகிறது என்பது மிகையல்ல. இஸ்ரேலின் மோசாட் போன்று செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தின் வேரையறுத்துவிட முடியும். ஆனால் மனித உரிமைக்காவலர்களும், ஆர்வலர்களும் ஊளையிட ஆரம்பித்துவிடுவார்கள் நமது ஊடகங்களும் பக்கவாத்தியம் இசைக்க ஆரம்பித்துவிடும். சமாதானம் யாரிடம் பேசப்படவேண்டும் என்று ஒரு வரையறை உண்டு. அதற்குத் தகுதியில்லாத நாடு பாகிஸ்தான். சர்வதேச அளவில் “இந்தியா ஒரு சமாதான விரும்பி” என்கிற மொக்கையான “(அ)கௌரவத்துக்கு ஆசைப்படுவதால் “இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு அப்பாவிகள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்தலக்ஷணத்தில் சமாதானப் பேச்சினால் ஒரு பலனும் இல்லை என்பது சாதாரண அறிவுடையோர்க்கும் தெரியும். HINDUS FLEE PAKSITHAN: FIND NO HELP IN INDIA என்கிற கட்டுரை மார்ச் 14 The Week இதழில் வந்ததைப் படிக்க வேண்டுகிறேன். அதைப்படித்தால் நாம் எவ்வளவு இளிச்சவாயர்கள் என்பது தெரியும்,

  6. https://idlyvadai.blogspot.com/2010/03/blog-post_09.html#links

    The week பத்திரிகை யின் தமிழ் செய்தி இட்லி வடை ப்ளாக் இல் படிக்கவும்.. தொடர்பு மேலே … ஸ்ரீ லங்கா ஆகட்டும் பாகிஸ்தான் ஆகட்டும் இந்துகள் கதி அதோ கதி தான் … எதிர்கால இந்தியாவில் எப்படியோ ……தி வீக் பத்திரிகையின் செய்தி நம் தமில்ஹிண்டு வில் கட்டுரையாக வர வேண்டும்…

  7. எந்தவொரு நாட்டிலாவது துவேஷத்தின் அடிப்படையில் ஒரு பிரிவு மக்கள் பிற பெரும்பான்மையினராலும், அவர்களின் அரசாலும் ஒடுக்கப்பட்டால் மனித உரிமையின் அடிப்படையில் குரல் எழுப்பிப் பரிகாரம் காணும் உரிமை வேறொரு நாட்டிற்கும் நாடுகளுக்கும் உண்டு என்பது சர்வ தேச சட்டம். இதன் அடிப்படையில்தான் ஆப்ரிக்காவில் நிகழும் இனவொழிப்புககள் கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றன. இலங்கையில் ஈழத் தமிழர் மீதான அரசு வன்முறையை சர்வ தேசக் கண்டனமும் விசாரணையும் வலியுறுத்தப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி கட்சித் தலைவர்கள் போர்க் குற்றவாளிகளாக மட்டுமின்றி, யூத இன ஒழிப்பு, அரசு வன்முறை ஆகிய குற்றச் சாட்டுகளின் அடிப்படையிலும் விசாரிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணடை நாடுகளில் மட்டுமின்றி, மலேசியா, இலங்கை, பாலி, பிஜி எனப் பல்வேறு நாடுகளிலும் ஹிந்துக்கள் பலவாறான கொடுமைகளுக்கு அங்குள்ள அரசுகளின் முழு ஒத்துழைப்புடன் ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்காக வன்மையாகக் கண்டனக் குரல் எழுப்பி சர்வ தேச அரங்கில் ஹிந்து ஆதரவை எழுப்ப நம் அரசு நினைத்தால் சாத்தியமே. ஆனால் நமது மதச் சார்பற்ற அரசு இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதே இல்லை! நமக்கும் இதுபற்றிக் கவலை இல்லை. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு தேசத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து ஆதிக்கம் செலுத்துவதாக ஹிந்துக்கள் அழுது புலம்புவதைக் கேட்கும்போது எரிச்சல்தான் வருகிறது. ஹிந்துக்களே, ஆடுகள்தாம் பலியிடப்படும், சிங்கங்களோ புலிகளோ பலியிடப்படுவதில்லை. நீங்கள் ஆடுகளாக இருக்கும்வரை உங்களுக்கு பலிபீடம்தான் சாசுவதம் என்பதை உணர்வீர்களாக.

  8. In the context of this article, I am reproducing below a part of the recent speech given by President V Putin in Russia.
    Is there any leader willing to give a similar statement concerning their country?

    Putin’s Speech on Feb. 04, 2013

    This is one time our elected leaders should pay attention to the advice of Vladimir Putin…. how scary is that?

    On February 4th, 2013, Vladimir Putin, the Russian president, addressed the Duma, (Russian Parliament), and gave a speech about the tensions with minorities in Russia: “In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, then we advise them to go to those places where that’s the state law. Russia does not need minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of most minorities. When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the national interest first, observing that the minorities are not Russians.

    The politicians in the Duma gave Putin a five minute standing ovation.

  9. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இஸ்லாமிய மக்கள் வெறுப்பை மிக வேகமாக சம்பாதித்து வருகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *