பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்

pork_steaksபன்றிக்கறியைச் சாப்பிடுபவர்களிடம் கேட்டால், பன்றிக்கறியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும், ஆடு, மாடு கறிகளை விட கொழுப்பில் குறைவானதாக இருக்கும் பன்றிக்கறி சுவையில் மிகுந்திருப்பது உண்மை.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரியவருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்ட மிருகம் பன்றிகளே என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றின் ஆரம்பத்தில், பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க காடுகளில் மனிதர்களுக்கு உதவியிருக்கின்றன. அவை பூமியை கிழங்குக்காக நோண்டிப் போட்ட பின்னால், அந்த நிலங்களில் உழுவது எளிதாக ஆகிறது. தாவரங்களையும் சிறு விலங்குகளையும் பன்றிகள் தின்பதால், பன்றிகள் இருக்கும் பழங்குடி கிராமங்கள் சுத்தமானவையாக ஆகின்றன.

இன்றும் உலகத்தில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஒன்று பன்றிக்கறியாகும். உலகத்திலேயே மிக அதிகமாக பன்றிக்கறி உண்ணும் நாடு சீனா. அங்கு 52.5 மெட்ரிக் டன் அளவு பன்றிக்கறி உண்ணப்படுகிறது. இது அங்கு ஒரு ஆளுக்கு 40 கிலோ அளவாகும். அதற்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வருகின்றன. பசிபிக் தீவு, தென் கிழக்காசியா (லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து பிலிப்பைன்ஸ்) ஆகிய நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுவது பன்றிக்கறிதான். பன்றிக்கறியே அந்த நாடுகளின் முக்கிய உணவு.

இந்திய அரசு பன்றிப் பண்ணைகளில் கவனம் செலுத்தி அவற்றில் குறைந்த செலவில் விவசாயிகள் மிகுந்த லாபம் ஈட்டலாம் என்பதனை அறிவுறுத்தி வருகிறது. [2]

பன்றிக்கறி மூலம் செய்யப்படும் ஏராளமான உணவு வகைகள் இந்தியாவில் புழங்குகின்றன. மேலை நாட்டு உணவில் மிக முக்கியமான ஓர் உணவு பன்றிக்கறி. இத்தாலிய ‘புரோசிட்டோ’ (Prosciutto)* எனப்படும் பன்றிக்கறி அனைவராலும் மிகுந்த சுவை மிகுந்ததாகப் பாராட்டப்படுகிறது.

மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. இதில் கோழிக்கறியை விட மையோக்லோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. மையோக்லோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குக் கெடுதி என உணரலாம்.

 

நூறு கிராம் பன்றிக்கறியில் உள்ள சத்துகள் (Nutritional Value per 100 g)

Energy 1,013 kJ (242 kcal)
Carbohydrates 0.00 g
Sugars 0.00 g
Dietary fiber 0.0 g
Fat 13.92 g
saturated 5.230 g
monounsaturated 6.190 g
polyunsaturated 1.200 g
Protein 27.32 g
Tryptophan 0.338 g
Threonine 1.234 g
Isoleucine 1.260 g
Leucine 2.177 g
Lysine 2.446 g
Methionine 0.712 g
Cystine 0.344 g
Phenylalanine 1.086 g
Tyrosine 0.936 g
Valine 1.473 g
Arginine 1.723 g
Histidine 1.067 g
Alanine 1.603 g
Aspartic acid 2.512 g
Glutamic acid 4.215 g
Glycine 1.409 g
Proline 1.158 g
Serine 1.128 g
Water 57.87 g
Vitamin A equiv. 2 μg (0%)
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%)
Zinc 2.39 mg (24%)

pig-farmதற்போது சுகாதார முறையில் பன்றி வளர்ப்பது தமிழ்நாட்டில் பரவி வருகிறது [3]. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ரங்கபிரபு பல ஏலக்காய்த் தோட்டங்களையும் தென்னந்தோப்புகளையும் பராமரித்து வந்தாலும் திடீரென்று அவரது தென்னை மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன. எவ்வளவுதான் விவசாய அறிவியலறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வேதிப்பொருள்களைத் தெளித்தாலும், பட்டுப்போவது நிற்கவில்லை. அவர் 100 பன்றிகளை வளர்த்து வந்தார். அவரது பன்றிகளின் கழிவுகளை தோப்புகளுக்கு வெளியே கொட்டி வந்தார்கள். அதனை நிறுத்திவிட்டு, அந்த பன்றிக்கழிவையே தென்னைகளுக்குப் போட ஆரம்பித்தார். பட்டுப்போயிருந்த தென்னைகள் கூட துளிர்விட்டு செழுமையாக வளரத்துவங்கின. பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும் அவற்றின் கழிவுகளை இயற்கை உரமாக செடிகொடி மரங்களுக்குப் போடுவதும் இன்றியமையாதது.

எல்லா மாமிசங்களைக் கையாள்வதும், சாப்பிடுவதையும் போலவே பன்றிக்கறியிலும் செய்யவேண்டும். நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றை நன்றாக வேகவைத்து சமைத்து உண்பது போலவே பன்றிக்கறியையும் சமைத்து உண்ண வேண்டும். ஒரு சிலர் பன்றிக்கறியில் மட்டும் புழு இருக்கிறது; நாடாப்புழு இருக்கிறது என்று சொல்லி பன்றிக்கறியை சாப்பிடக்கூடாது என்பது போலச் செய்து வைத்துள்ளார்கள். அது உண்மையல்ல. எல்லாக் கறிகளும் சுகாதாரத்துடனேயே கையாளப்பட வேண்டும். எந்தக் கறியையும் சுகாதாரமின்றி கையாண்டாலோ முழுவதும் சமைக்காமல் இருந்தாலோ சுகாதாரக்கேடுதான். முன்பு மேலை நாடுகளில் பன்றி சுகாதாரமின்றி சமைக்கப்பட்டதால், Trichinosis என்ற வியாதி மிகவும் பரவலாக இருந்தது. நாடாப்புழு என்ற ஒட்டுண்ணி, சரியாக சமைக்கப்படாத பன்றிகறியிலிருந்து மனித குடலில் ஒட்டிக்கொள்வதால் வரும் வியாதியே Trichinosis என்ற இந்த வியாதி. இது தற்போது மேலை நாடுகளிலேயே மிகவும் அரிதாக ஆகிவிட்டது. மேலை நாடுகளில் முழுவதுமாக சமைக்காத பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் தற்போதும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முழுவதுமாக வேகவைத்து சமைக்கப்பட்ட உணவையே நாம் உண்பதால், இந்த பிரச்சினை இல்லை. ஆகவே இப்படி பயமுறுத்துபவர்களின் பொய்களுக்குப் பலியாகவேண்டாம்.

சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறி சுவை மிக்கது.

===

மேலும் படிக்க இணைப்புகள்:

[1] https://www.admin.ox.ac.uk/po/050311.shtml

[2] https://www.indg.in/agriculture/animalhusbandary/agriculture/on-and-off-farm-enterprises/agri-onnoff-piggery

[3] தேனி மாவட்டம், புதுப்பட்டியில் பன்றிப் பண்ணை மூலம் வெற்றி ஈட்டிய பண்ணையாளர் ரங்கபிரபு பற்றிய செய்திக் குறிப்பு-
https://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/Pig-Farming-Success-Story.pdf

===

சில சுவையான பன்றிக்கறி செய்முறைகள்

1. கோவா பன்றிக்கறி விண்டலூ

இது கோவாவின் பிரசித்தமான விண்டலூ. இதனை சாதாரண சாதத்துடனோ, அல்லது சீரக சாதத்துடனோ கலந்து சாப்பிடலாம். கூடவே கீரைப் பொரியல் வைத்துக்கொள்வதும் நன்றாக இருக்கும்.

goan-pork-vindalooதேவையான பொருள்கள்

பன்றிக்கறி – 1 கிலோ
விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது)
இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை – 1 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 6
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி (அல்லது சமைக்க தாவர எண்ணெய்)
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப

** விண்டலூ மசாலா செய்ய–

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம் – 2 (வெட்டியது)
பெரிய தக்காளி – 3 (நறுக்கிக்கொண்டது)
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கருமிளகு – 7
வெள்ளை வினிகர்

செய்முறை: வினிகர் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, அவ்வப்போது வினிகர் சிறிதளவு விட்டு கெட்டியான விழுதாக ஆகும் வரைக்கும் அரைத்துக்கொள்ளுங்கள். விண்டலூ விழுது ரெடி.

இது பன்றிக்கறி விண்டலூ செய்வதற்கு உபயோகப்படுத்திகொண்டாலும், இதே செய்முறையில் கோழிக்கறி விண்டலூ செய்யவும் சுவையானதாக இருக்கும்.

செய்முறை

  • பன்றிக்கறியை கொழுப்பு நீக்கிவிட்டு, விரலளவு சதுரங்களாக வெட்டிகொள்ளவும்.
  • வெட்டிய கறியை விண்டலூ மசாலாவுடன் கலந்து 24 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி விழுது, பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்னர் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
  • இதன் மீது கறியை மட்டும் சேர்க்கவும். கூடவே நீராக இருக்கும் மசாலாவை இப்போது சேர்க்கவேண்டாம்.
  • கறி நன்கு பழுப்பாக ஆகும்வரைக்கும் வதக்கியபின்னர், இப்போது மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.
  • மேலும் ஒரு கோப்பை தண்ணீரும் ருசிக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
  • குறைந்த தீயில் கறி மிருதுவாக ஆகும்வரை வேகவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

===

சுவையான பன்றிக்கறி (கேரளா)

kerala-pork-curryதேவையான பொருள்கள்

பன்றிக்கறி – அரைக்கிலோ
வினிகர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக அரிந்தது)
இஞ்சி – ஒரு தேக்கரண்டி (நீளமாக அரிந்தது)
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 2
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பூண்டு – 12 பற்கள்
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

 

செய்முறை

  • கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
  • ஒரு பிரஷர் குக்கரில் கறியோடு, வினிகர், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, தண்ணீர் சிறிது சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடுங்கள்.
  • விசில் வரும்வரை வெந்தவுடன் அதிகமாக இருக்கும் தண்ணீரை வடித்துவிடுங்கள்
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இத்துடன் வேகவைத்த கறியை சேர்த்து, காய்ந்து பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். மிகுந்த சுவையாக இருக்கும்.

===

prosciutto* ஸ்பெயினில் பன்றித் தொடையை உப்புக்கண்டம் போட்டு ஊறவைத்து ஒரு வருடத்திற்கும் மேலாய் சுவற்றில் மாட்டி விடுகிறார்கள். அதன் நீரெல்லாம் வடிந்து போன தொடை மாமிசத் தொங்கல்கள் ஒவ்வொரு ஹோட்டலினுள்ளும் நுழைந்தவுடனேயே சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன. எக்கச்சக்க விலை. அதை ஸ்லைஸாய் அறுத்து தர ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம். கூடவே ஸ்பானிஷ் ரெட் வைனும் இருந்தால் விசேஷம். அதன் பெயர்தான் புரோசிட்டொ (Prosciutto).

127 Replies to “பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்”

  1. திரு. கோபால் அ வர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் மாமிச உணவு உண்பது இல்லை என்றாலும், உலகிலே பன்றிக்கறி முக்கிய உணவாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

    நான் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். அங்கே ஜெர்மானிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட பன்றிகள், பல குட்டிகளைப் போட்டு, நாற்ப்பது சிவப்பு நிற பன்றிகள் இருந்தன. கருப்பு பன்றிகளை பார்த்துப் பழக்கப் பட்ட எங்களுக்கு சிவப்பு பன்றிகள் வியப்பை அளித்தன. விடுதியில் நாங்கள் உண்ட பிறகு மிச்சம் இருக்கும் உணவை அந்தப் பன்றிகளுக்கு போடுவார்கள்.

    “வெள்ளைக் காரன் வூரு பன்னி கூட சேப்பா இருக்குல” என்று மாணவ மணிகள் பேசிக் கொள்வோம். வருடத்திலே ஓரிரு முறை ஹாஸ்டலில் பன்றிக்கறி போடுவார்கள். மாணவர்கள் முதல் ஆசிரியர், ஆயர் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ‘”ஏ, பன்னிக் கறி பா !” என்று மாணவர்கள் பரபரப்பாக பேசிக் கொள்வார்கள்.

    என்னைப் பொறுத்தவரையிலே, பன்றிகள் நேசிக்கப் பட தக்கவையே. அவைகளை செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கிறார்கள்.

    பன்றிகள் மீது என்ன தவறு? அவற்றுக்கு தேவையான உணவை அதனை வளர்ப்பவர் அளித்தால், அதை உண்டு விட்டு அவை கொட்டிலிலே கிடக்கும்.

    எனக்குத் தெரிந்து எந்தப் பன்றியும் யாரையும் விரட்டியதோ, கடித்ததோ இல்லை.மனிதர்கள் தான் பன்றிகளை விரட்டிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து இருக்கிறேன்.

    பன்றிகள் யாருக்கும் எந்த தொல்லையும் குடுப்பது இல்லை.

    ஆறறிவுடைய மனிதன் வெறித்தனம் கொண்டு பலபேருக்கு பல வித இன்னல்களைத் தருவதோடு ஒப்பிட்டால், பன்றிகள் பாராட்டப் படத் தக்கவையே. சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள இயலும்.

    அவரவரின் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டால், பன்றிகளை இகழ உனக்குத் தகுதி இருக்கிறதா, என்றே கேட்கும் எனவே நான் கருதுகிறேன்!

  2. What exactly is the point of this article? Why is pork is being promoted in TamilHindu? I presume majority of the Hindus are vegetarians and respect sanctity of life even in animals.. [Edited and Published]

  3. //What exactly is the point of this article? Why is pork is being promoted in TamilHindu? I presume majority of the Hindus are vegetarians and respect sanctity of life even in animals.. [Edited and Published]//

    Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.
    [Edited and Published]

  4. ஆன்மிக வாழ்க்கை சாதனை யோகம் என்று செல்லும் போது மாமிசத்தை ஒதுக்க வேண்டும். தனிவாழ்க்கையில் சொந்த மதிப்பீடுகள் அடிப்படையிலும் மாமிசத்தை ஒதுக்கலாம். ஆனால் சமுதாய பொதுவாழ்க்கையில் மாமிசம் உண்போர் வாழ்வது அவசியம். கௌசிகன் எனும் அந்தணனுக்கு தர்மத்தை உபதேசித்தவர் தர்மவ்யாதர் என்கிற கசாப்பு கடைகாரர்தாம். பன்றி கறி மீது ஒரு வெறுப்பை ஆபிரகாமிய மதம் ஒன்று பரப்பி வருகிறது. (ஒருவேளை பழைய பாகனீய சமுதாய விழாக்களில் பன்றி மாமிசம் முக்கியமான பங்கு வகித்ததால் இருக்கலாம். ஒவ்வொரு அஸ்ட்ரிக்ஸ் சாகஸமும் பொன்னிறத்தில் தகதகக்கும் பன்றி இறைச்சி விருந்துடன் தானே முடியும்?) இதனால் பல கிராமங்களில் கூட பன்றி வளர்ப்பது கஷ்டமான விஷயமாக மாறி வருகிறது. அத்துடன் பன்றியை சுகாதாரமாக வளர்க்காத சூழலும் ஏற்பட்டு வருகிறது. பன்றி வேட்டை நம் வேடுவர் சமுதாயங்களில் முக்கியமானது. பரமசிவனே பன்றி வேட்டையாடியிருக்கிறார். எங்கள் மாவட்டத்தில் சிவபெருமான் பன்றி வேட்டை ஆடியதை நினைவுவணங்கும் விதமாக பன்றியடித்தான் விளை, பன்றிபாகம் என ஊர்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி இறைச்சியைதானே படைத்தார். எங்கள் ஊரில் கடுவாமூர்த்தி விடுவாதை சாமிக்கு கொடைவிழாவில் பன்றி இறைச்சி படைப்பார்கள். காட்டுப்பன்றி இன்றைக்கும் விவசாய மக்களுக்கு குறிப்பாக மரச்சீனி கிழங்கு விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனை. எனவே பன்றி வேட்டை முக்கியமான விசயமாகவும் சில சமுதாயங்களிடையே உள்ளது. இந்நிலையில் பன்றி இறைச்சியை எப்படி சமைக்கலாம் என்கிற குறிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே. தமிழ்ஹிந்து அதனை வெளியிட்டது ஒரு நல்ல விசயம்தான்.

  5. I think this post is fully biased. If so, I do not accept this post.

    I second Rama.

    சைவம் என்றால் அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் என்று எல்லா உயிரினங்களும் அடங்கும். அதென்ன பன்றி கறிக்கு மட்டும் ஸ்பெஷல் முக்கியத்துவம்?

    வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.

  6. Out of the seven crore people living in tamilnadu, 6 crore are hindus. In that more than 5 crore people are non-veg eaters.

    All these people are mainly eating un-healthy halal meat, whether hen or goat. If we promote pork, we will get some traditional meat instead of halal. (as muslims won’t enter into this pork business)

    for the 5 crore hindu’s benefits, we need to promote pork business in tamilnadu.

    Thanks Gopal.
    also want to know where we can get some good pork meat in chennai?

  7. என்ன கண்றாவி இது? ஏன் தமிழ்ஹிந்து தளம் இப்படி சில கட்டுரைகளை வெளியிடுகிறது? தயவு செய்து இனி இது போன்ற அனைத்து ஹிந்து சமுதாய மக்களால் விரும்பப்படாத கட்டுரைகளை வெளி இட வேண்டாம். மேலும் இது ஒன்றும் சமையல் குறிப்பு எழுதும் தளம் அல்ல. பச்சயா சொன்னா ரொம்ப கலீஜா,அசிங்கமா,கேவலமா இருக்கு. Remove this article.

    “இதை வெளி இடுவதில் எதோ உள்நோக்கம் இருக்கும் எனில், அது தமிழ் ஹிந்து தளத்தின் நற்பெயரையும், நடுநிலைமையையும் கேள்வி குறி ஆக்குகிறது”

    திரு.ஆர்.கோபால். ஏன் இப்படி எழுத தொடங்கி விட்டீர்கள். எவ்வளவோ நல்ல,விவாதிக்க வேண்டிய, பரிமாற நிரம்ப இருக்கும்பொழுது இதை எடுத்திருப்பது??????

  8. கோபால் அவர்களின் முதல் பதிவான ஜட்கா கறி ஹலால் கறி…. மக்களுக்கு நல்ல விழிப்புணர்வைத் தந்திருக்கும்.

    அதே போல், இப்பதிவு பன்றி பற்றிய கொடூரமான சித்தரிப்பை நீக்கும் என்பதில் ஐயமில்லை.

    வடநாட்டில் ராஜஸ்தான் குஜராத் தவிர மற்ற இந்திய மாநிலங்களில் மாமிசம் உண்ணுபவர்களே அதிகம் உள்ளனர்.

    தீபாவளி அன்று கறி எடுப்பது தமிழ்நாட்டில் நாடார்களின்
    பழக்கமாக இருக்கிறது. அதே போன்று கர்நாடகாவில் உகாதி மறுநாள் அதிகாலையில் வரிசையில் நின்று கறி வாங்குவது பழக்கம்.

    பிராமணர்களும் கள்ளத்தனமாக அசைவம் உண்பது போன்ற செயல்களில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.

    பன்றிக் கறியின் மீதான தவறான கண்ணோட்டம் நீங்க வேண்டும் என்ற இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறட்டும்.

  9. //வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.
    .

    இது போன்று தான் பலவற்றை ஒதுக்கி, பலரை தடை செய்து கேடு செய்திருக்கிறோம் இன்னுமா தொடரவேண்டும் – தமிழ் ஹிந்து புலால் உண்பவர்க்கு கிடையாதோ – கண்ணன் அர்ஜுனனுக்கு தான் கீதை உபதேசம் செய்தான் – அர்ஜுனன் என்ன சுத்த சைவமா? – கீதா சாஸ்த்ரத்தை ஆதியில் உபதேசம் பெற்ற அனைவரும் புலால் உண்ணும் ஷத்ரியரே

  10. // ஜட்கா பிரியன்
    10 May 2010 at 2:01 pm
    Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.//

    Hello Mr. Jhatka, Rama’s point is valid to a great extent. Not just for Hindus, in fact for all Indians, the staple food is vegetarian only (with the exception of fish as staple food in coastal regions). You are forgetting that majority of the Hindus are also *poor* and simply cant afford meat on a daily basis! Even those who are well off either eat meat as a delicacy, or on occassions. This is very much in contrast to the meat-based diet of say, Muslims or westerners.

    If people who turned to vegetarianism claim they are *proud* about it, that is understandable. Bcaz they have adopted a life priciple, either for good health, or to save environment or out of compassion to animals.

    But what is there to be “proud” about being a non-veg eater? Its just a form of food. That way you can be proud about any damn thing, even being a TV Watcher!

    I can understand why R Gopal wrote such an article – it helps to at least to remove aversion to pork from the minds of Hindu meat eaters, if not promote it outright. He seems to be a Hindutva foodie (his previous articles were also about food), a very welcome addition!

    But Pl dont insult or deride the virtues of vegetarian food in the pretext of this.

  11. Rama’s point is not valid. And your argument that Hindus do not prefer meat is flawed.
    Provided with enough spending power, every hindu family will prefer a meat based diet. We are not vegetarians by choice, we are vegetarians by force.

    Hindu religion does not say, its a sin to eat meat. Vegetarian hindus successfully made eunuchs out of lions. Its time they keep quite and let meat eaters do the talking in matters related to their diet.

  12. இந்த தளம் இந்து மதத்தை வளர்க்கவும், பிற மதத்துடன் நல்லுறவு வளர்க்கவும் பாடுபட விழைகிறேன். இது போன்ற வெறுப்பு ஏத்தும் கட்டுரைகள் வேண்டாம்.

  13. சிறப்பான கட்டுரை. இது பொதுமக்களிடையே பன்றிக்கறியை பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும்.

    ஒவ்வொரு விவசாயியும் கூடவே பன்றிகளை வளர்க்கலாம். இதற்கு இந்திய அரசாங்கம் உதவுகிறது.

    NABARD வங்கி சிறு விவசாயிகளுக்கு வெறும் 5% சதவீத முதலீட்டிலேயே பன்றிப்பண்ணைகள் அமைக்க உதவுகிறது.

    வெறும் 28000 ரூபாய் இருந்தால் போதும். ஒரு லட்சத்து அம்பதாயிரம் ரூபாயை நபார்ட் அளிக்கிறது.

    ரங்கபிரபு தனது சிறு தோட்டத்தில் நூறு பன்றிகளை வளர்க்கிறார்.

    பத்துமாதம் வளர்ந்த பன்றிகள் ஒவ்வொன்றும் 12500 ரூபாய் விலைக்கு விற்கலாம்.

    https://nabard.org/modelbankprojects/animal_piggery.asp

    இந்த இணைப்பில் விவசாயிகளுக்கு தேவையான பல விஷயங்கள் உள்ளன. இதனை தமிழ்ப்படுத்தி தமிழ் இந்துவில் பிரசுரித்தால் ஏராளமான மக்களுக்கு உதவியாக இருக்கும்.
    ந்ன்றி

  14. நான் ஒரு அசைவ பிரியன் ஆனால் கோழி, ஆடு மட்டுமே. என் பார்வையில் கோழி, ஆடு மட்டுமே எந்த விதமான் ஒரு தெய்வ சம்பந்தமும் இல்லாதது.பன்றி நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.அதனால் தானோ என்னவோ இதுவரை நம் முன்னோர்கள் பன்றி கறியை ஆதரிக்கவிலலை.

  15. ஜட்க பிரியன்

    // Hindu religion does not say, its a sin to eat meat.

    how do you say so

    “ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி” – this is verily a vedic diction – one needs to unedrstand what himsa means and this is decided based on what one’s swadharma is – eating meat merely for pleasure is no doubt a sin – it should be eaten only by those who absolutely need it for maitaining one’s swaharma

  16. கிருஷ்ணா,
    //
    . என் பார்வையில் கோழி, ஆடு மட்டுமே எந்த விதமான் ஒரு தெய்வ சம்பந்தமும் இல்லாதது.பன்றி நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.அதனால் தானோ என்னவோ இதுவரை நம் முன்னோர்கள் பன்றி கறியை ஆதரிக்கவிலலை
    //

    அதற்காக ஒட்டகச்சிவிங்கியை பிடித்து சாப்பிட முடியுமா என்ன?

    பன்றி என்ன – முள்ளம்பன்றி தான் மிக உகந்தது என்று ஆதரிக்கப்படுகிறது

  17. // நமது வராக அவதாரத்தையே குறிப்பதாக நான் நினைக்கிறேன்.//

    நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. இதுக்கும் பன்றிக்கறி சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்?மச்சாவதாரம் என்றால் மீன். அப்படியென்றால் மீன் சாப்பிடக்கூடாதா? சேவல் முருகனின் கொடி. கோழி சாப்பிடக்கூடாதா? ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரம் ஸ்தல விருட்சமாக இருக்கும். அதற்காக மரத்திலிருந்து எதுவும் எடுத்து சாப்பிடக்கூடாதா?

    தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். விஷ்ணு ஒரு வராகமாகத்தான் அவதாரம் செய்தார். இருக்கும் எல்லா வராகங்களும் விஷ்ணுவின் அவதாரங்களல்ல. :-))

    எது சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும், உடலுக்கும் நல்லதோ அதனை உண்ணவேண்டும். எது சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும், சமூகத்துக்கும் கெட்டதோ அதிலிருந்து விலக வேண்டும்.

  18. //Sarang
    10 May 2010 at 5:21 pm
    //வர வர தமிழ் ஹிந்துவில் இப்படிப்பட்ட பதிவுகள் கொஞ்சம் தலை காட்டுவது போல் உள்ளது.
    .

    இது போன்று தான் பலவற்றை ஒதுக்கி, பலரை தடை செய்து கேடு செய்திருக்கிறோம் இன்னுமா தொடரவேண்டும் – தமிழ் ஹிந்து புலால் உண்பவர்க்கு கிடையாதோ – கண்ணன் அர்ஜுனனுக்கு தான் கீதை உபதேசம் செய்தான் – அர்ஜுனன் என்ன சுத்த சைவமா? – கீதா சாஸ்த்ரத்தை ஆதியில் உபதேசம் பெற்ற அனைவரும் புலால் உண்ணும் ஷத்ரியரே//

    நன்றி சாராங் ஜி!

    குறிப்பாக பீமன் அசைவ உணவு உண்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டி இருப்பதாகவே சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

    இந்து மதம் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களை உயர்த்தும் மதமாகும். இதில் விவேகானந்தர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். பன்றி மாமிசம் சாப்பிடாதவன் இந்துவே அல்ல என்று பஞ்சாபிகள் கருதுகிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்த வரியிலேயே ஆனால் ஆன்மீகத்தில் தீவிரமாக முயல்பவன் புலால் உணவை தவிர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று, புலால் உணவை நினைத்துக் கூடப் பார்க்க கூடாது என்பதையும் குறிப்பீட்டு உள்ளார்.

    வங்காள பார்ப்பனர்கள் மீனை சாப்பிட்டார்கள் என்றே கருதலாம்.

    நம்முடைய மண்டன மிஸ்ரர் (கங்காதீஸ்வரர்) பாண்டித்தியம் பெரும் முன் வீட்டு மாப்பிள்ளையாக இருந்த போது, அவருடைய மாமனார்ர் வீட்டிலே மீனின் எலும்புகளை மட்டுமே அவருக்குப் போட்டு, அவரை உதாசீனம் செய்தனர். அதனால் அவர் வாயில் இரத்தம் இருக்கும். வெறுத்துப் போன கங்காதீஸ்வரர் காசி சென்று வேதங்க்களை நன்கு கற்று திரும்பி வந்தார். முன்பு போல அவருக்கு வெறும் எலும்புகளை போட்ட போது, “என்னிடம் ஏன் எலும்புகளைபோடுகிறீர்கள்? நான் கங்காதீஸ்வரன் , கங்கை அல்ல என்னிடம் எலும்புகளைப் போட'” என்று சம்ஸ்கிருதத்திலே பாடி எல்லோரயும் அசத்தி, மண்டன மிஸ்ரர் என்ற புகழ் பெற்ற பண்டிதராக திகழ்ந்தார்.

    நான் சென்ற வருடம் என் நண்பரின் வீட்டுக்கு முதல் முறையாக விருந்துக்கு சென்றேன். நான் அசைவ உணவு உண்ணாதவன என்பதை அறியாத அவர் பல அசைவ உணவுகளை செய்து விட்டார்.

    பன்றிக் கறியை வெறுப்பது தவறு என்பது மட்டும் அல்ல, பன்றிகளை வெறுப்பதே தவறு. அவை பன்றிகள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை.

    சமரச மறுப்பு முரட்டு சிந்தாந்தங்களுக்கு தங்களை அறியாமலேயே அடிமையாகி கொலை வெறிச் செயல்களை செய்யும் மனிதர்களோடு ஒப்பிடும் போது, பன்றிகள் பல மடங்கு மேல்.

    நான் இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடி இருக்கிறேன். நான் தனி வீடு கட்டி சென்றால், பன்றியை என் பெட் அனிமலாக வளர்ப்பேன்.

  19. ஹிம்சை என்றால் சித்திரவதை.
    ஹலால் என்ற குத்தா முறையில் செய்வது சித்ரவதை.

    ஜட்கா சித்ரவதை அல்ல.

    பிற உயிர்களை துன்புறுத்தாதீர்கள் என்பது பொது அறிவுரை. உண்பதற்காகக்கூட துன்புறுத்தக்கூடாது. ஆனால் பிற உயிர்களை உண்ணக்கூடாது என்றால் தாவரத்தைக்கூட நாம் உண்ணவே முடியாது. வாடிய பயிர்களைக் கண்ட வள்ளலார் வருந்தினார். பயிர்களைக்கூட துன்புறுத்தக்கூடாது. ஆனால் வள்ளலார் உண்ணாமல் இல்லையே.

  20. Sarang,

    Show me a vedic dictat telling “killing animal for food is sin”. PERIOD.
    Don’t show derivative of some vedic source, or buddhist-jain mumbo jumbo about ahimsa etc.,

  21. //Majority ? vegetarians ? sick joke…. I am a proud hindu and a proud non-veg eater.
    //

    //தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.//
    — well SAID.

    @JatkaPrian,
    Now, Sri. Rama ( I am not sure if I know him ) who supported your views on your earlier article, became a ‘sick joke’ teller just because he believes more hindus are vegetarians than non-vegetarians and he dared to write that in this page.

    you are proud non-veg eater? OK. You have something to be proud off. I have none. I am a shameless, sub-altern, cynic, fault-finding,sissy, meanly sadist Veg-eater.

    @ Sri. Rama,
    Are you the yoga teacher from New Jersey?

  22. இந்த கட்டுரை என்னை பொறுத்த வரையில் தமிழ் இந்துவிற்க்கு அவசியமில்லாதது. அது சரி சமையல் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க, மங்கயர் மலர மிஞ்சிட்டீங்க போங்க.

  23. @ ஜட்கப்ரியன் அண்ணோவ்,

    //Provided with enough spending power, every hindu family will prefer a meat based diet//
    ஏனுங்க அண்ணா,
    ‘every’ அப்டின்னா என்னாங்கண்ணா? வோர்ட் வெப் காமிக்குது ‘every’ = (used of count nouns) each and all of the members of a group considered singly and without exception

    பாவம் யாராவது ஒரு சைவ நோஞ்சான் ‘majority of hindus are vegetarians’ அப்டின்னுட்டா அவரு பண்ணறது ‘sick joke’ ; அதாவது குரூர நகைப்பு. ஆனா அரிச்சந்திரன் நீங்க “each and all of Hinduseat meat based diet?” அப்டீன்னு சொன்னீங்கன்னா அது என்னாங்கண்ணா?

    @திருச்சிக்காரன் அண்ணோவ்,
    இந்த ராமாவும், ஜட்காவும் ‘எல்லா’ ஹிந்து திமுக காரங்களும் சைவம் இல்லன்னா எல்லாருமே ஒரே அடியா அசைவம்நு சொல்லி ஹிந்துக்களுக்குள்ள கலவரம் உண்டு பண்றாங்க, திராவிடர் கழகத்துல அவங்கள அறியாம பாடம் படிக்கறாங்கன்னு, உங்க மனசு பதைபதைக்குதுன்னு சொல்லி ஒரு சீன் போற்றவேண்டிதுதானேண்ணா?

    @தமிழ் ஹிந்து எடிட்டர் அண்ணோவ்,
    //மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத//

    அப்டிங்களாண்ணோவ் ? சரிங்க.

  24. என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரை வீம்புக்ககவும், சில சமுதாயத்தினரை வெறுப்பு ஏற்படுத்துவதற்காகவும் எழுத பட்டதாக தோன்றுகிறது.

    வேண்டாமே

    அழகான கருது செறிவு மிக்க ஆன்மிக கட்டுரைகள், நாட்டு நடப்புகள், விமர்சனங்களோடு நிருதிகொள்ளலேமே.

    ஆதிரவி.

  25. பன்றிக்கழிவை போட்டு தேங்காய்களையும் ஏலக்காய்களையும் உற்பத்தி செய்வதை படித்து அதிர்ச்சி அடைகிறேன்.
    பன்றிக்கழிவின் மூலம் உருவாகும் தேங்காய் ஏலக்காய்களை சாப்பிடுவது ஆகுமானதல்ல. இவ்வாறு பன்றியை மறைமுகமாக சாப்பிட வைக்கிற நீங்கள் எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறீர்கள்.
    பன்றிக்கழிவை செடிகொடி மரங்களுக்கு போடுவதை இந்த அரசு தடை செய்யவேண்டும் என்று கோருகிறோம்.

  26. Mr Jatkapriyan, your view that Hindus will eat meat daily if they can afford it is simply a wrong notion.Our Dharma is very compasionate to all living creatures. Arjuna, Bhima or even Lord Rama ate meat does not reduce this principle in anyway. I know many wealthy Hindus who can very well eat meat daily but refrain from doing so on the basis of COMPASSION and nothing else. The basic principle of Hinduisim is not to cause ” Himsha” to others, including animals, AS FAR AS POSSIBLE .What one want to do is upto his “Dharmic” consciousness and that is the beauty of our religion. You can eat meat or refrain from doing so and it is entirely up to you. On this basis,majority of Hindus do NOT eat meat REGULARLY because they have CHOSEN to do so. Sorry for any offence, not intentional.

    (edited and published)

  27. The article is very well written and appreciates the eco-balancing act of Pig rearing. God has made with purpose every animal or every thing in this world. Talking about Pigs is treated taboo subject in India. Even the word “Panni” is used as a scolding. I am vegetarian, but that does not mean I can look down all those who eat Non-vegetarian. Articles such as this will help integrate Hindus following different types of traditions. This also show the versatility and diversity of nature oriented Hindu traditional living.

  28. கொல்லான், புலான் மருததானை; எல்லா உயிரும்
    கைக்கூப்பி தொழும்.
    -திருவள்ளுவர்.
    தன் உடலை வளர்க்க மற்ற உயிரின் உடலை வதைத்தல் முறையோ…
    வள்ளலார் வாழ்ந்த பூமியன்றோ. மனவேதனையுடன். வடிவேல்சிவம்.

  29. பிற மதங்கள் ஜாக், ஜான் , ஹென்றி ஆகிய எல்லோருக்கும் ஒரே அளவான சட்டையைக் கொடுத்து போடச் சொல்லுகின்றன. ஹிந்து மதம் அவரவருக்குப் பொருத்தமான அளவுடைய சட்டையைக் கொடுக்கிறது என்று விவேகானந்தர் மிக அழகாக சொல்லி இருக்கிறார்.

    சமண மதம் முழுமையாக மரக் கறி உணவை மட்டுமே அங்கீகரிக்கிறது. புத்த மதம் துறவை மட்டுமே ஒரே தீர்வாக முன் வைத்தது.

    இந்து மதம் அஹிம்சையை, கொல்லாமையை போதிக்கும், வூக்குவிக்கும் அதே நேரத்திலே புலால் உணவு உண்பவரை குறை சொல்லவோ வெறுக்கவோ இல்லை. இந்து மதத்தில் துறவும் இருக்கிறது, குடும்ப வாழ்க்கையின் மூலம் ஆன்மீகத்தில் முன்னேறுவதும் உள்ளது.

    ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிறருக்கு துன்பம் தராமல் வாழ்வான். புலால் உண்ணாத சமணர்கள் ஐந்து வட்டி, பத்து வட்டிக்கு விட்டு ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதை, அவர்கள் மனசாட்சியோ, மதமோ எப்படி அனுமதிக்கிறது என்று நான் எண்ணியதுண்டு.

    மொத்திலே புலான் உண்டாலும் , உண்ணாவிட்டாலும், உலகில் உள்ள எல்லா இந்துவும் புரவுட் (proud) ஹிந்துவே!

    உலகிலே, பிற மதங்களை வெறுக்கச் சொல்லாத ஒரே மதமாக இந்து மதமே உள்ளது.

    இந்துக்களின் கடவுள்கள் நீ என்னை மாட்டுமே வணங்க வேண்டும், இல்லாவிட்டால் தண்டிப்பேன் எனக் கட்டளை போடவில்லை.

    இவ்வாறாக உலகிலே மதங்களுக்கு இடையிலேயான பூசலை நிறுத்தி, மனிதத்தை வாழ வைக்கும் ஒரே வாய்ப்பாக, கடைசி வாய்ப்பாக இந்து மதம் மாத்திரமே உள்ளது.

    எனவே உலகில் உள்ள நூறு கோடிக்கும் மேலான ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் புரவுட் (proud) ஹிந்துதான்.

  30. //ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிறருக்கு துன்பம் தராமல் வாழ்வான்.//

    ஒருவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு முன்னேருகிறானோ , அந்த அளவுக்கு இந்த உலகத்தில் பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் வாழ்வான்.

  31. கட்டுரை சொல்லும் முக்கியமான விஷயத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

    பன்றிக் கறியில் உள்ள அமினோ அமிலங்கள், புரதம், சத்துக்கள் ஆகியவை மற்ற எந்த உணவையும் விட உடல் நலனுக்கு நல்லது என்று கட்டுரை ஆதாரங்களோடு நிறுவுகிறது.

    ரெட் மீட்டின் சுவையும், வொய்ட் மீட்டின் நலன்களும் தருகின்ற இந்த உணவை மாமிசம் உண்பவர்கள் அதிகம் உண்பது உடல் நலனை கண்டிப்பாக அதிகரிக்கும்.

    இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள்கூட சாப்பிடலாம் போல் இருக்கிறது. சாப்பிடலாமா ?

    ரெஸிப்பி பிரமாதம். இன்னும் பல பன்றிக் கறி ரெஸிப்பிகளைத் தருமாறு வேண்டுகிறேன்.

  32. ஹிந்து சமயம் கொல்லாமையை வலியுறுத்தவில்லை என்றும் புலால் உண்ணுதல் ஹிந்துக்களுக்கு இயல்புதான் என்றும் பலர் இங்கு கூறுகிறார்கள். அப்படியென்றால் ஹிந்து ஞானி என்று இங்கு கொண்டாடப்படும் திருவள்ளுவர் ஏன் புலால் மறுத்தலை வலியுறுத்தி எழுதிருக்கிறார்?
    ஹலால் கறி/ ஜட்கா கறி என்று முன்பு வந்த பதிவையும் இந்தப் பதிவையும் வைத்து நோக்கையிலே அம்பு யாரைக் குறி வைத்துப் பாய்கிறது என்பது தெளிவு.

  33. @உங்கள் சத்யராஜ்,

    //@திருச்சிக்காரன் அண்ணோவ்,
    இந்த ராமாவும், ஜட்காவும் ‘எல்லா’ ஹிந்து திமுக காரங்களும் சைவம் இல்லன்னா எல்லாருமே ஒரே அடியா அசைவம்நு சொல்லி ஹிந்துக்களுக்குள்ள கலவரம் உண்டு பண்றாங்க, திராவிடர் கழகத்துல அவங்கள அறியாம பாடம் படிக்கறாங்கன்னு, உங்க மனசு பதைபதைக்குதுன்னு சொல்லி ஒரு சீன் போற்றவேண்டிதுதானேண்ணா? //

    முந்தைய ஒரு கட்டுரையில் என் மீது இகழ்ச்சி சொற்கள் கூறப் பட்ட போதும், நான் அமைதியாக விலகி வந்தேன். இப்போது சேஸ் செய்து வந்து அடிப்பது போல இருக்கிறது உங்கள் செயல்பாடு. இது அவசியமா, தலைவா?

    பள்ளி மாணவர்கள் போல, நாம் வார்த்தை விளையாட்டு விளையாடும் கால கட்டம் எனக்கு முடிந்து விட்டது தலைவா!

    அன்புக்குரிய நண்பர் சத்யராஜோடு மல்லுக்கு நிற்க, நான் விரும்பவில்லை.

    @உங்கள் சத்யராஜ், உங்கள் மனம் மகிழ்ச்சியை அடையும் வண்ணம் ஒரு செய்தியை எழுதி விட்டு விடை பெறுகுறேன். இனி மேல் நான் தமிழ் இந்துவில் பின்னூட்டம் இட மாட்டேன். எனவே உங்களுக்கு எந்த சிறு தொந்தரவும் இருக்காது, மகிழ்ச்சியா நண்பா?

    பின்னூட்டங்களை கூடுமான வரையில் வெளியிடுகிறோம் என்கிற கோட்பாட்டைக் காட்டி,

    தொடர்பே இல்லாமல் என்னை விமரிசிக்க வேண்டும் என்பதற்காக தனிப் பட்ட அளவில் நடத்தப் படும் காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை, மவுன சாட்சியாக வெளியிடுவதற்கும் நன்றி.

    எல்லோருக்கும் நன்றி.

    இத்தனை காலம் என்னுடைய பல பின்னூட்டங்களை வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கு மிக்க நன்றி!

  34. Mahabharata Anushashan Parva chapter 88

    Narrates the discussion between Dharmaraj Yudhishthira and Pitamah Bhishma about what food one should offer to Piths (ancestors) during the Shraddha (ceremony of dead) to keep them satisfied Paragraph reads as follows “Yudhishthirn said, “0 thou of great puissance, tell me what that object is which, if dedicated to the pitris (dead ancestors), become inexhaustible! What Havi, again, (if offered) lasts for all time? What, indeed, is that which (if presented) becomes eternal?”

    “Bhisma said, Listen to me, 0 Yudhishthira, what those Havis are which persons conversant with the rituals of the Shraddha (the ceremony of dead) regard as suitable in view of Shraddha and what the fruits are that attach to each. With sesame seeds and rice and barley and Masha and water and roots and fruits, if given at Shraddhas, the pitris, 0 king, remain gratified for the period of a month. With fishes offered at Shraddha, the pitris remain gratified for a period of two months. With the muflon they remain gratified for three months and with the hare for four months, with the flesh of the goat for five months, with the bacon (meat of pig) for six months, and with the flesh of birds for seven. With venison obtained from those deer that are called Prishata, they remain gratified for eight months, and with that obtained form the Ruru for nine months, and with the meat of Gavaya for ten months. With the meat of the buffalo their gratification lasts for eleven months. With beef presented at the Shraddha, their gratification, it is said, lasts for a full year. Payesa mixed with ghee is as much acceptable to the pitris as beef. With the meat of Vadhrinasa (a large bull) the gratification of pitris lasts for twelve years. The flesh of rhinoceros, offered to the pitris on anniversaries of the lunar days on which they died, becomes inexhaustible. The potherb called Kalaska, the petals of Kanchana flower, and meat of (red) goat also, thus offered, prove inexhaustible.

  35. இந்த கட்டுரைக்கு இரண்டு நாட்களில் இத்தனை மறுமொழிகளா !! என்னுடைய பங்கிற்கு இதோ ஒர் சுட்டசெய்தி (தினமலர் வாரமலர் மே 2 “2010 ) அமெரிக்காவில் ஸ்டாசி கெம்பல் என்றபெண் ஆஸ்கார் என்ற பன்றியை செல்ல பிராணியாக வளர்துவருகிறார். இதன் வயது இப்பொழுது 20. உலகில் அதிகஆண்டுகள் வாழ்துகொண்டிருக்கும் பன்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதன் எடை 70 கிலோ. ஆலிவ் ஆயிலில் சமைத்த மட்டன் காய்கறிகளைத்தான் சாப்பிடுகிறது
    உலகில் 200 கோடி பன்றிகள் உள்ளன பல வீடுகளில் செல்லபிராணியாக வளர்கபடுகிறது ஆண்பன்றிக்கு எட்டுமாதம் ஆனவுடனே பாலின உணர்ச்சி வந்துவிடும் பெண்பன்றி ஒரே நேரத்தில் 6 முதல் 12 குட்டிகளை பிரகவிக்கும் காட்டு பன்றியைவிட வீட்டுபன்றிக்கு வாழ்நாள் அதிகம்.
    நான் ரசித்தசில மறுமொழிகள்
    திருச்சிக் கார‌ன் //பன்றிக் கறியை வெறுப்பது தவறு என்பது மட்டும் அல்ல, பன்றிகளை வெறுப்பதே தவறு. அவை பன்றிகள் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. சமரச மறுப்பு முரட்டு சிந்தாந்தங்களுக்கு தங்களை அறியாமலேயே அடிமையாகி கொலை வெறிச் செயல்களை செய்யும் மனிதர்களோடு ஒப்பிடும் போது, பன்றிகள் பல மடங்கு மேல். //
    Athiravi //என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரை வீம்புக்ககவும், சில சமுதாயத்தினரை வெறுப்பு ஏற்படுத்துவதற்காகவும் எழுத பட்டதாக தோன்றுகிறது. வேண்டாமே //
    ஷாஜஹான் ராவுத்தர் // பன்றிக்கழிவை செடிகொடி மரங்களுக்கு போடுவதை இந்த அரசு தடை செய்யவேண்டும் என்று கோருகிறோம். //

    மதத்தை காரணம்காட்டி அல்பத்தனமான விஷயங்களுக்கு தடைகோறுவது நியாயமா ? எல்லோரும் புலால் உண்பதை முடிந்தவரை குறைத்துக்கொள்வது தனிமணித வளர்ச்சி நாட்டு வளர்ச்சி உலக அமைதி இவற்றிற்க்கு நல்லது???????????????

    (Edited and published.)

  36. Dear Sirs

    As a person who has been living in Thailand for the past five years and who has been reading Tamil Hindu for the past three years or so I read this article by Sri R Gopal with certain amusement. Pork is a delicacy of Thais and they eat it everyday. Average cholestrol level of a Thai is something you will not be even able to imagine..it is so high.

    It is an universal fact that one man’s food is another man’s poision. Tamil Hindu should try to feed our minds with articles and topics for discussion. We are not here looking for culinary or cookery tips.

    It is also not important to know whether one is vegetarian or nonvegetarian, people choose the type of food according to their culture as well as family upbringing. Organisations like PETA are trying to promote vegetarian way of life as well as ethical treatment to animals. So why not Tamil Hindu take such a noble task rather than making this website into another site for cookery site.

    We all know how to earn money ethically but what we lack is a website that can enlighten our SOULS ! May Tamil Hindu fulfil that task. By touching irrelevent topics which only fuel unwanter controversies, otherwise we will have a website which has got denigrated in the course of its journey by following wrong milestones !!

    Regards

    Mugunthanchari

  37. உறுதியான உடலில்தான் தெளிவான மனம் இருக்கும் என்று நம் முன்னோர்களில் சிலர் கருதினார்கள் போலும். ஆனால், உடலும் மனமும் பலகீனமானாலும் முடிந்த அளவு பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும் சில முன்னோர்கள் கருதினார்கள்.

    பன்றிக் கறியின் சுவையையும் அதனால் உடல் நலன் அதிகமாவதும் குறித்து திருமூலருடைய பாடல்களிலும், சங்கப் பாடல்களிலும் கவிதைகள் உள்ளன.

    அதே போல இந்து மதப் பெரியோர்களின் படைப்புகளான திருக்குறளும், சைவ சித்தாந்த ஆகமங்களும் சைவ உணவின் பெருமையைப் பெரிதாகப் பேசுகின்றன, அசைவ உணவுப் பழக்கத்தை கண்டிக்கின்றன.

    ஆனால், இந்த இரண்டுவகை பழக்கங்களும் இந்துத்துவ சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தனிப்பட்ட மனிதரின் விருப்பத்திற்கு வளையும் சமுதாயமாகவே இந்து மதம் இருக்கிறது.

    வேத ரிஷிகள் அசைவம் உண்டவர்கள்தான். அகத்தியரும், காஸ்யபரும், விசுவாமித்திரரும், பரத்வாஜரும், மற்றுமுள்ள அனைத்துப் பெரியோர்களும் மாமிச உணவையே உண்டவர்கள்.

    பௌத்த, ஜைன மதங்கள் பரவிய இடங்களில் மட்டுமே சைவ உணவுப் பழக்கம் உள்ளது. அவை பரவாத இடங்களில் மாமிச உணவு உண்ணும் பழக்கம் இன்றும் அதிகமாக உள்ளது.

    உதாரணமாக, உபி, ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் பிராமணர்களும் மாமிச உணவு உண்பவர்களே. அவர்களது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மாமிசம் மிக முக்கியத் தேவை. பெங்காலிகள் மீன் உண்பவர்கள்.

    இந்து மதம் என்பது பல்வேறு வழிமுறைகளுக்கும் ஆதரவு அளிப்பது. தன்னுடைய வழிமுறையே சிறந்தது என்று எண்ணி மற்றவரின்மேல் திணிக்காதது.

    எனவே, இந்துக்களின் உடல்-மன நலன்களைக் கருத்தில் கொண்டு இதைப் போன்ற பல கட்டுரைகள் வருவது மிக அவசியம்.

    தேசம் முழுவதும் வலம் வந்து அத்வைதத்தை நிறுவிய ஆதி சங்கரர்கூட அவர் சென்ற இடங்களின் உணவுப் பழக்கத்தின்படி மீனும், மாமிசமும் உண்டார் என்று செவிவழிக் கதைகள் உண்டு. ஷீரடி சாயி பாபாவும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

    நமது நம்பிக்கைகள் மற்றும் புரிதல்களின்படி இந்தத் தளத்தில் வரும் கட்டுரைகள் பரிந்துரைக்கும் ஒரு உணவை ஏற்றுக்கொள்ளுவதோ, விலக்குவதோ நமது சுதந்திரம்.

    ஆனால், சைவம் மட்டுமே சரி, அசைவம் சரியல்ல என்றோ அல்லது அசைவம் மட்டுமே சரி, சைவம் சரியல்ல என்றோ வரையறுப்பது இந்து மதத்தில் இல்லை.

    ஒரு குறிப்பிட்ட வகை உணவின்மீது வெறுப்பைக் காண்பிப்பது சரியல்ல. அன்னம் பிரம்மா. அதை இகழ்வது தவறு.

    உலக அளவில் அதிக அளவு சைவ உணவாளர்களைக் கொண்டுள்ள இந்தியாதான் நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்களை அதிகம் கொண்டுள்ளது.

    WHO வெளியிட்ட ஆதாரபூர்வமான அறிக்கையின்படி, நீரிழிவு நோயால் துன்பப்படுபவர்கள் சதவீதம் கீழே:

    இந்தியா: 31.7

    இந்தோனேசியா: 8.4

    Source: https://www.who.int/diabetes/facts/en/diabcare0504.pdf

    பேசாமல் இந்தோனேசியர்களைப் போல அதிகம் பன்றிக் கறி சாப்பிட்டு நீரிழிவு நோயில் இருந்து விடுபட முயற்சிப்போம்.

    எந்த உணவு நலன் தருகிறதோ, அது சைவமோ அசைவமோ, அதைப் பழகி வலிமை அடைவோம்.

    எந்த உணவு பலன் தரவில்லையோ, அது சைவமோ அசைவமோ, அதை விலக்கி வலிமையைப் பாதுகாப்போம்.

    பழக வேண்டிய அசைவ உணவை வெளியிட்ட தமிழ் இந்து தளம், விலக்க வேண்டிய அசைவ உணவுகளைப் பற்றியும் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

  38. சைவ உணவுப் பழக்கம் இருப்பதால் நான் அசைவ உணவு உண்பவர்களைவிடப் பெரியவன் என்ற கர்வம் எழுமானால், அது ஒரு உயிரைக் கொன்ற செயலைவிட பலகோடி மடங்கு கொடிய பாவமாகும்.

    நாம் கிருஷ்ணரைப் போலவும், ராமரைப் போலவும் வலிமை தரும் உணவுகளை அளவறிந்து உண்டு அவர்களைப் போல உயர்செயல்களைச் செய்வோமாக.

  39. செக்குலரிசம் எழுதிய ஹரன் பிரசன்னா இங்கே கவனிக்கவும்.

    மாட்டுக்கறி தின்றால் செக்குலரிசம். பன்றிக்கறி தின்பதை பற்றி பேசுவது செக்குலரிசம் அல்ல. அது மத நம்பிக்கையை வைத்து உணவில் நடத்தும் பாசிசம்

  40. அன்பு நண்பர்களே,

    இந்த கட்டுரையை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    ஆனால் இந்த கட்டுரையிலும் அசைவமா சைவமா என்ற விவாதம் நடப்பது கண்டு வருத்தமடைகிறேன்.

    தயவு செய்து அரவிந்தன் நீலகண்டனும் திருச்சிக்காரரும் ஆரம்பத்தில் எழுதியதை படிக்க வேண்டுகிறேன். இறைவனுக்கு பன்றிக்கறியே படைத்திருக்கும்போது நாம் அவ்வப்போது உண்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

    சைவ உணவு தவறு என்று சொல்லவும் இல்லை. அசைவ உணவு தவறு என்று சொல்லவும் இல்லை. ஒரு சிலருக்கு சைவ உணவு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்மசாதகர்களுக்கு. தாந்திரிக்த்தில் ஒரு சில இடங்களில் அசைவ உணவு ஆன்மசாதகர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அசைவ உணவு மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு கேடு என்பது அறிவியலும் உணர்த்தும் உண்மை.

    அதற்காக முழுக்க அசைவ உணவை வெறுப்பதோ, அல்லது அசைவ உணவு சாப்பிடுபவர்களை வெறுப்பதோ நல்லதல்ல.

    அதே போல அசைவ உணவு சாப்பிடுபவர்களும் சைவ உணவு சாப்பிடுபவர்களை வெறுப்பதும் நல்லதல்ல. அவரவருக்கு எது பழக்கமோ எது உகந்ததோ அதனை எடுத்துக்கொண்டு செல்வதே நல்லது.

    பெரும்பாலான மக்களுக்கு நிறைய சைவ உணவும் அவ்வப்போது அசைவ உணவும் சாப்பிடுவதே நல்லது.

    நன்றி

  41. பன்றி வளர்ப்பு பற்றிய இந்திய அரசின் தமிழ் பக்கங்கள்

    https://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/oee-oacojTM-da1p-of7s1

    ரங்கபிரபு பற்றிய தமிழ் பிடிஎஃப் கோப்பு

    https://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/Pig-Farming-Success-Story-tamil.pdf

    இந்திய அரசின் விவசாய முன்னேற்ற இணையதளம்

    முழுக்க முழுக்க தமிழில்

    https://www.indg.in/india

    மேலே தமிழ் என்று எழுதியிருப்பதை அழுத்தவும்.

    தமிழ்நாடு அரசு செய்திருக்க வேண்டியதை இந்திய அரசு செய்துள்ளது.

    பாராட்டுவோம்.

  42. sakkarai noiku Panri kari sapida solluvathu siripu than varuthu..white sugar nippatitu namathu param pariya nattu seeni or karupati vellam unna vendum.. also there is another stuff called stevia which is 300% rich in sweet than white sugar (seeni thulasi in tamil)..anyway for readers just to share some good food on vegeterain recently I was introduced to wheat grass and im taking it regularly. Arukam pulluku inaiyaka ithilum sathu niranthe ullathu

    https://en.wikipedia.org/wiki/Wheat_grass

    after seeing my personal benefit I started doing business on this… Ramayanam yeluthiyavar thirudanaka irunthar yenbatharkaka namum thirudanaka irunthu valkaiyai arambika vendum yenru avasiyam illai.. since you guys comparing rishis and saints for food habits im saying this.. namaku yethu vasathiyaka irukinratho athai mattume copy adikum palakam pothuvaka samuthayathil irupathu sapa kedu.. we copy the habbits and rituals.. finally we miss the real truth…

  43. //இந்தோனேசியா: 8.4 //

    இந்தோனேசியா முஸ்லிம் நாடு.அங்கே பன்றிகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறன்.அதனால் தான் அங்கே நிரழிவு நோய் குறைவாக இருக்கிறது!!!

    சவுதி அரேபியாவில் பன்றிகளை நினைத்தாலே கொன்றுவிடுவார்கள்! ஆனால் அங்கே 28 சதவிகிதம் நிரழிவு நோய் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது. அங்கே ஒட்டகத்தையும் மாட்டையும் அதிகமாக உண்ணுவதால் முன்றில் ஒருவருக்கு சிறுநிரக கோளறு உள்ளதாகவும் கணக்கிடபட்டுள்ளது!!!

    அதனால! அதிகமாக உடல் உழைப்பவர்கள்,எல்லாம் வகையான மாமிசத்தையும் சாப்பிடட்டும் ( பன்னியை ஏன் ஒதுக்குவனேன்?!) .உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை மட்டும் சாப்பிடுவதே நல்லது.ஆனால் மனிதர்களின் கர்ம வினை,கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் தேவை அற்றவர்களுக்கே கிடைகிறது! என்ன செய்ய!

    காய் கறியை சாப்பிடுறதாலே நான் உயர்ந்தவன்னு சொல்லிட்டு யாரும் அலைய வேண்டிய அவசியமும் இல்லை!

    நம்ம உலகத்துல கொஞ்ச பேர் பன்னி பீ சாப்பிடுது அதனால தான் அதை நாங்க சாப்பிடறது இல்லை என்று சொல்லுறாங்க! இவங்க மறந்து இருக்கிற விஷயம் என்ன என்றால், ஆடு,மாடு,கோழி,கூட போற வழியில அது கிடைச்சா நக்கிட்டும், கொத்திட்டும் போனதை நாம பார்க்குறோம்! அதுக்கு என்ன தெரியும் எழவு என்னான்னு!

    சுகாதாரமாக வளர்க்கப்பட்ட எந்த மாமிசத்தையும் சாப்பிட நினைபவர்கள் சாப்பிடலாம்!

    @@@**))(@+@))(#*பசு மாடு!!!??? *@yo@t((*()

  44. ரங்கபிரபு பற்றியும் பன்றி வளர்ப்பது பற்றியும் ஏற்கெனவே பத்ரி சேஷாத்ரி எழுதியிருக்கிறார்
    – 2009இலேயே

    https://thoughtsintamil.blogspot.com/2009/01/blog-post_22.html

    (பன்றி வளர்ப்பை பற்றி எழுதியுள்ளதால், பத்ரி செக்குலரா, இந்துத்துவ பாசிஸ்டா?)

  45. I followed this thread. Hindu scriptures expound nontorture( ahimsa) including in food choices. KuraL is clear. I do not think Thirumoolar advocates eating pigs! In fact he wrote about kollaamai like kuraL! Sankaracharya, vedic rishis ate meat? This is completely wrong. Ahimsa paramo dharma- ahimsa is the supreme dharma
    In Bhagavatham, Lord Krishna clearly says eating meat is forbidden. That is the highest life. But there are weak minded people. For them some eating is allowed so as to enable them also to give up later! Clear. This is typical of Hinduism. Nothing is absolute. People are given concessions to rise above their level. Reckless eating of meat is condemned. For Manu, clearly eating meat is forbidden! But in yajna sacrifice if animal food is offered, those who take part in yajna have to take prasad! Refusal is condemned. Clear. Yajna is not for filling stomach for hunger. Eating meat to fill stomach is forbidden. In Mahabharatha, meat is forbidden. Except Kshatriyas who can hunt to show their valour and kill, they can eat only that meat. Sudras have concessions without hunting. Thus there are levels.
    Kshatriyas have to hunt and kill for encouraging warrior like qualities. Sudras may eat *if they wish only on certain days and only certain animals- certainly not cows*. This is because they have to do hard labour. Khsatriyas and sudras also drink alcohol which is also forbidden for those who wish to follow higher life. Higher life is the goal. The goal is to rise always not stay low. For details, see:
    https://en.wikipedia.org/wiki/Vegetarianism_and_religion
    Harming any life attracts papa. Manu says the animal killed will eat that person in next life. Mamsa for Manu is maam (by me) saha (he) means he is eaten by me!
    So what about pigs?
    Certainly not if you want to follow a satvic life and bhakthi etc. What about Kannappa nayanar? Clearly he was a great bhaktha. After realising the Lord, did he eat meat?
    Only before realization he offered through ignorance. Bhakthi overcomes ignorance and cleanses. Gita chapter 9 says the Lord cleanses the worst sinner.
    The idea should not be do eat meat like Nayanar but be a bhaktha like him! Same with other nayanars and azwars who might have done other things but they rose.
    Ravana had dharshan of Rama through hatred but that does not mean hatred is supported
    Takes too long to type this in Tamil!
    This is my contribution. If there is anything wrong please forgive me.
    Thanks

  46. @ களிமிகு கணபதி …
    அய்யா உங்கள் அறிவு கண்டு வியக்கிறேன். தாங்கள் தயவு செய்து திருமூலர்,சங்கரர் அல்லது பகவான் கிருஷ்ணர், ராமர் எங்காவது தங்களுடைய உபதேசங்களில் புலால் உண்பதை அறிவுறுத்தி உள்ளதாக சான்று/ஆதாரம் இருந்தால் இங்கு வெளி இடவும். தயவு செய்து தவறான கருத்துக்களை பதிய வேண்டாம்.
    மேலும் தமிழ் ஹிந்து இது போன்ற கட்டுரைகளை வெளி இடுதல் என்பது ஏன் என புரியவில்லை? கருத்து ரீதியாகவோ மற்ற ஹிந்து மத தொடர்பான விவாதங்கள், கட்டுரைகள்,கருத்து பரிமாற்றங்கள் நிறைய இருக்கும் பொழுது இதை வெளியிடுவது அவ்வளவு அல்ல அவ்வளவுமேவாக நன்றாக இல்லை.

    ஜெய் ஸ்ரீ ராம் !!!

  47. // …. Pork is a delicacy of Thais and they eat it everyday. Average cholestrol level of a Thai is something you will not be even able to imagine..it is so high. …//

    தகவலுக்கு நன்றி.

    பன்றிக்கறி அதிகம் உண்ணும் தாய்லாந்தில் நீரிழிவு வியாதியால் துன்புறுபவர்களின் எண்ணிக்கையோ 2.4 மில்லியன்கள் மட்டுமே. (ஆதாரம்: https://care.diabetesjournals.org/content/26/10/2758.full)

    சைவ உணவுப் பழக்கம் அதிகம் உள்ள இந்தியாவில் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை: 31.7 மில்லியன்கள். உலகில் அதிக அளவு நீரிழிவு வியாதி உள்ளவர் வாழும் நாடு இந்தியா. ஆதாரம்: https://www.who.int/diabetes/facts/en/diabcare0504.pdf).

    இருப்பினும், சைவ உணவினால் ஆன்மீக நலன்கள் உண்டாகும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தே.

  48. பன்றி இறைச்சி மீதுள்ள அருவருப்பு தவறானது என்பது சரி தான்.. ஆனால் கட்டுரை ஆசிரியர் கோபால் பன்றி வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சொல்ல வருகிறார். அவர் கவனிக்காததும், மறுமொழிகளில் இதுவரை சொல்லப் படாததுமான விஷயம் சுற்றுச்சூழல் பின்விளைவுகள்.

    பன்றிகள் உடலளவில் வெப்பப் பிராணிகள் (sweating like a pig என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்). தங்கள் உடல் சூட்டை அவைகள் குறைத்து மெயிண்டெயின் செய்ய ஏராளமான தண்ணீர் தேவைப் படும் – ஒரு மனிதன் தன் எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தும் தண்ணீர் போல 5-6 மடங்கு தண்ணீர். நல்ல தண்ணீர் கிடைக்காத போது அவை மலத்திலும் சேற்றிலும் புரள்கின்றன.

    பாலைவனப் பகுதிகளில் பன்றி வளர்க்கும்போது தண்ணீர்த் தேவை அளவில் அது மனிதனுக்கே போட்டியாக மாறுகிறது.. அதனால் தான் மத்தியக் கிழக்கு பாலைவனத்தில் தோன்றிய செமிட்டிக் மதங்கள் (யூதம், பிறகு இஸ்லாம்..) பன்றி இறைச்சியைத் தடை செய்தன என்று மானுடவியலாளர் மர்வின் ஹாரிஸ் தனது நூலில் கூறுகிறார் (தமிழில் “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்…. “ என்ற பெயரில் வந்துள்ளது). கிறிஸ்தவம் நீர்வளம் நிரம்பிய ஐரோப்பாவில் பரவிய போது பன்றி இறைச்சித் தடை தானாகவே மறைந்து விட்டது..

    இந்தியாவில் நீர்வளம் அதிகமான பகுதிகளில் தான் சுவையான பன்றி இறைச்சி நிறைய உண்கிறார்கள் – கோவா, கர்நாடகத்தின் கூர்க் பகுதி, அஸ்ஸாம் போன்ற பிரதேசங்களில்… நீங்கள் கூர்க்கில் பயணம் செய்யும்போது கொழு கொழுவென்று வளர்ந்து, மாட்டின் உயரம் இருக்கும் வெண்பன்றிகளைப் பார்க்கலாம் – அவை பார்க்கவே கம்பீரமாக இருக்கும். அது மட்டுமல்ல, அங்கு திரியும் கோழிகள், ஆட்டுக்கிடா எல்லாமே மகா புஷ்டியாக இருக்கும்.

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப் பாடு நிலவுகிறது. எனவே, அங்கு சுகாதாரமான முறையில் பன்றி வளர்க்க முடியாது.. அப்படி வளர்க்க வேண்டுமானால், மனிதர்களுக்கான தண்ணீரை பன்றி வளர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.. ஒரு சிலரின் மாமிச உணவு ருசிக்காகத் தரப்படும் மிகப் பெரிய விலை அது..

    கோபால் இதைக் கவனிக்கத் தவறி விட்டார்.

  49. Being a doctor, it will help me if Mr Kalimigu Ganapathy will furinsh me studies ( double blind studies preferably) that supports his theory that pork is good for you ( compared to proper vegetarian diet) and helps to reduce diabetes.. The study in his link is a study on the prevalance of diabetes in Thailand and nothing more.. Genetic factors play a great part in diabetes and Indians are more prone to this disease due to genetic facors.( eg; Fijian Indians eat a lot of meat, including pork and have one of the highest rate of diabetes and cardiovascular diseases)There has been an increase in diabetes in India lately due to sedentry lifestyle (due to increased wealth ) and dietry changes, the population leaning more towards the Western lifestyle and diet. I would like to see the results of a comaprative study in the DEVELOPMENT of diabetes in Indian population with a pork diet vs a proper vegetarian diet Until then, the notion that pork in diet prevents diabetes,as the English say, is all bunkum

  50. Nan solliyathu wheat grass than (Kothumai Nel Kathir).. neenkal solluvathu Arukam Pul …irandum veru veru..both have highly medicinal benefit for blood related disease..

  51. ஜடாயு,

    பன்றியை கர்னாடகத்தில் வளர்த்து, தமிழகத்தில் சாப்பிடக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. விவசாயம் செய்யத் தேவையான நீர் போல் தான் ஆடு, கோழி, பன்றி வளர்க்கவும் வேண்டும். அதெல்லாம் உலக வெப்பமயமாக்கலைக் கூட்டுகின்றது என்பதெல்லாம் ஓவர் திங்கிங்.

    ராமா சொல்வது போல் நீரிழிவு நோய்க்கு பல மரபியல் காரணிகள் உண்டு என்ற போதிலும் பொதுவாக வெஜிடேரியன்கள் அதிக அளவு கார்போஹைட்ரேட்களை உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

    ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் சைவ உணவு உட்கொண்டு இருப்பதில் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அதே போல் அசைவ உணவு உட்கொள்பவர்களை நிராகரிக்காமல், கீழான மனிதர்களாகப் பார்க்காமல் “சோ கால்ட்” ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் இருப்பார்களேயானால் எல்லாம் சுபம்.

    ராமா…நீங்களோ டாக்டர் என்கிறீர்கள். உங்களிடன் வரும் பேஷண்டுகளுக்கு சைவ உணவையே பரிந்துறை செய்வீர்களா ? குழந்தைகள் புரதப் போஷாக்கு இல்லாமல் வளர்வது உங்களுக்கு ஏற்புடையதா ?

    குவாஷிர்கோர் தெரியுமல்லவா ?
    இந்தியாவில் மட்டும், லட்சத்திற்கு 600-700 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2002 கணக்கு (WHO report in wikipedia).

    போங்கய்யா ..போயி புள்ள குட்டிகளுக்கு கறி சோறு போட்டு வளங்கய்யா…

  52. களி மிகு கணபதி அவர்களே!
    நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளி விவரத்தில் இருக்கும் ஜனத்தொகை எண்கள் absolute numbers ஆ percentages ஆ? ஏனெனில் நமது நாட்டின் ஜனத்தொகை தாய்லாந்தை விட மிக அதிகம் அல்லவா?

  53. @ Rama who commented:

    //……..Being a doctor, it will help me if Mr Kalimigu Ganapathy will furinsh me studies ( double blind studies preferably) that supports his theory that pork is good for you ( compared to proper vegetarian diet) and helps to reduce diabetes…//

    மரியாதைக்குரிய டாக்டர் ரமா அவர்களே,

    தாய்லாந்துக் காரர்கள் பன்றிக் கறி அதிகம் சாப்பிடுவதாகவும் அதனால் அவர்களது உடலில் கொழுப்பு அதிகம் இருப்பதாகவும், எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று அன்பர் முகுந்தாச்சாரி அவர்கள் சொல்லி இருந்தார்.

    //………mugunthanchari
    11 May 2010 at 12:46 pm

    Dear Sirs

    As a person who has been living in Thailand for the past five years and who has been reading Tamil Hindu for the past three years or so I read this article by Sri R Gopal with certain amusement. Pork is a delicacy of Thais and they eat it everyday. Average cholestrol level of a Thai is something you will not be even able to imagine..it is so high. …….//

    இது எந்த அளவு சரி என்று அறிய கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படும் வியாதியான டயபட்டீஸை எடுத்துப் பார்த்தபோது, தாய்லாந்துக்காரர்கள் மிக மிகக் குறைவாகவே பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்தது.

    பன்றிக்கறியில் கார்போஹைட்ரேட் இல்லவே இல்லை என இக்கட்டுரை நிறுவுகிறது. எனவே, பன்றிக் கறி அதிகம் உண்டாலும் தாய்லாந்துக்காரர்கள் நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்படவில்லை என்று கருத இடம் இருக்கிறது. அதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

    ஆனால், உணவு மட்டுமே நீரிழிவு நோயை நிர்ணயிக்கிறது என்று நான் எங்கும் சொல்லவில்லை. அதே சமயம், சரியான உணவு முறை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அல்லது தவிர்க்க உதவும் என்பதையும் மறுக்கவும் முடியாது.

    பன்றிக் கறி சத்தான உணவாக இருப்பதால் அதை மற்ற ரெட் மீட்களுக்குப் பதிலாக உண்ண வேண்டும் என்பது என் கருத்து.

    மேலும், நீங்கள் கேட்டுள்ளீர்கள்:
    //….. that supports his theory that pork is good for you ( compared to proper vegetarian diet) and….//

    புரோட்டின்கள் உடலில் சேரத் தேவையான சில அமினோ ஆசிட்கள் மாமிசத்தில் மட்டுமே கிடைக்கின்றன என சிலர் கூறுகின்றனர். அதை தாவர உணவு ஆர்வலர்கள் மறுக்கின்றனர். இருந்தாலும், ”ப்ராப்பர்” வெஜிட்டேரியன் டயட் குறித்துப் பல சந்தேகங்கள் நிலவுகின்றன.

    தாவர உணவாளர்களுக்கு இதை சோயா உணவுகள் மட்டுமே அளிக்கும். அந்த சோயா உணவிலும் சில சத்துக்கள் கிடைக்காது. அதைச் சமன் செய்ய முளைவிட்ட தானியங்களை உண்ண வேண்டும். இவ்விரண்டையும் உண்டால் நீங்கள் சொல்லும் “ப்ராப்ப்ர்” தாவர உணவு சைவர்களுக்குக் கிட்டும்தான்.

    ஆனால், அதிக வலிமை தேவைப்படும் வேலைகள் மற்றும் செயல்களுக்கு (போர் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், etc.) மாமிச உணவு தேவைப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. மானுடம் மேலும் மேலும் வலிமை பெற வேண்டுமானால் மாமிச விரும்பிகள் வெள்ளை மாமிசத்தை, அதிலும் பன்றி மாமிசத்தை, அதிகம் புசிப்பது அவசியமே.

    நீங்கள் சொல்லியுள்ள தகவலுக்கு வருவோம்.

    //…….. Genetic factors play a great part in diabetes and Indians are more prone to this disease due to genetic facors……….. //

    கிறுத்துவ, இசுலாமிய ஆட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களினால், இந்தியரின் உடலானது பஞ்சங்களைத் தாங்கும் வண்ணம் தகவமைந்தது என்றும், அதனால் இந்தியர்கள் நீரிழிவு வியாதியை ஜெனட்டிக்கலாகப் பெற்றார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    ஆனால், அதே ஜெனட்டிக் குடும்பத்தைச் சேர்ந்த பாக்கிஸ்தானிய, பங்களாதேசிய, ஸ்ரீ லங்கா நாட்டினர் ஏன் நீரிழிவால் இந்த அளவு பாதிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

    இந்தியர்கள் வளமடைந்து விட்டதால், உடல் உழைப்பு இன்றி வாழ்கின்றனர். அதனால், நீரிழிவு ஏற்பட்டுள்ளது என்ற வாதம் எந்த அளவு சரி என்பது தெரியவில்லை.

    ஏனெனில், கிராமங்களில் உழைத்து வாழும் ஏழை இந்தியர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அது ஏன் ?

    மேலும், //……the population leaning more towards the Western lifestyle and diet…..// என்று சொல்லியுள்ளீர்கள்.

    இது சரியானால், ஏன் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறிவிட்ட ஜப்பான் போன்ற நாடுகளில், இன்னமும் முற்றிலும் மாறிவிடாத நாம் அனுபவிக்கும் அளவு கொழுப்பினால் எழும் வியாதிகள் இல்லை ? (அங்கே டயபட்டீஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7.4 மில்லியன்கள் மட்டுமே.)

    இவை இருக்கட்டும்.

    நல்ல உடற்பயிற்சிகளோடு, வெள்ளை மாமிசத்தைப் புசித்து வாழ்வது உடலுக்கும் மனத்திற்கும் வலிமை அளிக்கும் என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால், நல்ல உடற்பயிற்சிகள் இருந்தாலும் சிகப்பு மாமிசத்தைப் புசித்து வாழ்ந்தால், உடல்-மன வலிமைகள் குறையும் என்பதைத்தான் மறுக்கவும் முடியுமா?

  54. @ Rishi:

    // ………. நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளி விவரத்தில் இருக்கும் ஜனத்தொகை எண்கள் absolute numbers ஆ percentages ஆ? ……… //

    absolute numbers.

    India: 31.7 millions

    Thailand: 2.4 millions

  55. @ ss, who asked:

    // …. தாங்கள் தயவு செய்து திருமூலர்,சங்கரர் அல்லது பகவான் கிருஷ்ணர், ராமர் எங்காவது தங்களுடைய உபதேசங்களில் புலால் உண்பதை அறிவுறுத்தி உள்ளதாக சான்று/ஆதாரம் இருந்தால் இங்கு வெளி இடவும். ….//

    அவர்கள் கத்திரிக்காயும், வெண்டைக்காயும் சாப்பிட வேண்டும் என்றுகூட உபதேசம் செய்யவில்லை. அதனால், அவற்றைத் தவிர்க்க வேண்டுமா என்ன ?

    கிருஷ்ணரும், ராமரும் மாமிச உணவாளிகள் என்பதை நமது இதிகாசங்கள் தெளிவாகவே தெரிவிக்கின்றன.

  56. @ ஜடாயு.

    // … தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப் பாடு நிலவுகிறது. எனவே, அங்கு சுகாதாரமான முறையில் பன்றி வளர்க்க முடியாது.. அப்படி வளர்க்க வேண்டுமானால், மனிதர்களுக்கான தண்ணீரை பன்றி வளர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.. ஒரு சிலரின் மாமிச உணவு ருசிக்காகத் தரப்படும் மிகப் பெரிய விலை அது.. …//

    உண்மை.

    ஆனால், இந்தத் தண்ணீர் தட்டுப்பாடானது சுற்றுப்புற சூழல் குறைபாடுகளால் தற்காலத்தில் ஏற்பட்ட நிலை அல்லவா? இது இயல்பான ஒன்று இல்லையே.

    சுற்றுப்புற சூழல் மற்றும் அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்ட விஷயங்களில் பன்றிக் கறி உணவு முறையும் ஒன்று. மற்ற உணவு முறைகளும் இதே பாதிப்பை அடைந்திருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

    உதாரணமாக, நெல், வாழை போன்ற பயிர்கள் அதிகம் நீர் தேவைப் படும் விவசாய முறைகள். பன்றிகளுக்குத் தேவைப்படும் நீரைவிட அதிகம் இந்தப் பயிர்களுக்குத் தேவைப்படக் கூடும். இந்தக் கணிப்பு சரியென்றால், நெல், வாழை போன்ற பயிர்களைவிடக் குறைவாகவே நீர் தேவைப்படும் பன்றிகளை உணவிற்காக வளர்ப்பது சிறப்பாக இருக்கும் அன்றோ ?

    வளமான சுற்றுப்புற சூழலை இந்து மத வாழ்க்கை முறையே உருவாக்கி விடுகிறதே. அத்தகைய வளமான சூழலை உருவாக்கிய பின் நாம் விரும்பும் உணவை உண்ண எந்தத் தடையும் இருக்காது.

    ஆனால், பாலைவனத்தில் வாழ சபிக்கப்பட்டவர்கள் உருவாக்கிய ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை முறையை, சொர்க்க பூமியரான நாம் ஏன் வாழ வேண்டும் ?

    பாவப்பட்ட அவர்களுக்குச் செத்த பின்னால்தான் சுவர்க்கமும் நரகமும். நமக்கு இவ்வுலகிலேயே சுவர்க்கம் கிடைக்கும்போது அதை ஏன் தவிர்க்க வேண்டும் ?

  57. There is a lot of deliberately wrong info posted on the web by anti-Hindus. Web is full of these lies. About meat, beef, Hindu theology etc etc. Deliberate misquotes and shloka numbers misquoted. Anti-Hindu fanatics rattle off shloka numbers like they know shastra! All false. Hindus are misguided by these lies by well known anti-Hindus who want to confuse all and sadly even Hindus fall for this. When consulting websites please make sure they are authentic. Consult a proper site always. Hindus must be very careful against proselytisers. Even kuraL, Tamil lit has been mistranslated

    Thanks

  58. இருதய நோய், மாரடைப்பு கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்னைகளுக்கு ஊற்று transfat என்று சொல்லக்கூடிய மார்கரைன், டால்டா ஆகிய செய்ற்கை கொழுப்புகள் என்று சொல்லப்படுகிறது.

    வடக்கிந்தியர்கள் டால்டாவை உபயோகப்படுத்துவதில்லை. நேராக பசு நெய், கொழுப்பையே அதிகம் உபயோக்கிறார்கள். அவர்களிடம் இதய நோயும் குறைவு. தென்னிந்தியாவில் டால்டாவை அதிகம் உபயோகிக்க்கிறார்கள். தென்னிந்தியாவில் மாரடைப்பு இதய நோய் அதிகம்.

  59. Mr Kalimigu Ganapathy, I am sorry to say that you have not provided me with any study which finds that the incidence of diabetes is reduced by regular consumption of pork. All you have provided is opinions of others and your assumptions. Nowhere in the study link provided by you makes any claim about consumption of pork being the preventive measure to ward off diabetes. Genetically we Indians are more prone to diabetes than rest of the world. FACT. We do not know the cause of this genetic defect yet. But this not due to Indians consuming less pork or meat Fact,By your reasoning Muslims/Jews of the world should have the highest incidence of diabetes.!!!!!
    By the way, diabetes is not caused by eating fats.
    The Indians from Fiji consume a lot of meat and have a very high incidence of diabetes and coronary vascular diseases. I know a lot of pateints from Fiji who suffer from diabetes but the incidence of Indians from India, living here in Australia, who consume less meat, pork included, have a lesser incidence of diabetes and Coronary heart diseases
    It will be a long post if I start on the merrits of vegetarian food in comparision with non vegetarian food on general health and cardiovascular diseases.Suffice to say that you have a better chance of living a long healthy life if you stick to vegetarian food. FACT.

  60. ரமா அவர்களே,

    நீங்கள் கேட்பது:

    // …. Mr Kalimigu Ganapathy, I am sorry to say that you have not provided me with any study which finds that the incidence of diabetes is reduced by regular consumption of pork. …//

    நான் சொன்னவை அனைத்தையும் இங்கு இடுகிறேன்:

    //

    No.1 – உலக அளவில் அதிக அளவு சைவ உணவாளர்களைக் கொண்டுள்ள இந்தியாதான் நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்களை அதிகம் கொண்டுள்ளது.

    WHO வெளியிட்ட ஆதாரபூர்வமான அறிக்கையின்படி, நீரிழிவு நோயால் துன்பப்படுபவர்கள் சதவீதம் கீழே:

    இந்தியா: 31.7

    இந்தோனேசியா: 8.4

    Source: https://www.who.int/diabetes/facts/en/diabcare0504.pdf

    No. 2. பேசாமல் இந்தோனேசியர்களைப் போல அதிகம் பன்றிக் கறி சாப்பிட்டு நீரிழிவு நோயில் இருந்து விடுபட முயற்சிப்போம்.

    No. 3. எந்த உணவு நலன் தருகிறதோ, அது சைவமோ அசைவமோ, அதைப் பழகி வலிமை அடைவோம்.

    No. 4. எந்த உணவு பலன் தரவில்லையோ, அது சைவமோ அசைவமோ, அதை விலக்கி வலிமையைப் பாதுகாப்போம்.

    //

    நான் சொன்ன 4 பகுதிகளையும் படித்தால், அவை தரும் பொருள் இதுவே:

    “ தவறான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதால், அது சைவ உணவுப் பழக்கமாக இருந்தாலும், இந்தியர்கள் நீரிழிவால் அவதியுறுகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் சிறந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதால், அது பன்றிக் கறி உணவுப் பழக்கமாக இருந்தாலும், இந்தோனேசியர்கள் நீரிழிவு நோயால் அந்த அளவு பாதிக்கப்பட வில்லை. எனவே, சரியான உணவுப் பழக்கத்தை, அது சைவமோ அசைவமோ பின்பற்றி வலிமையைக் கூட்டிக்கொள்வோம்.”

    ஆனால், நான் சொன்னவற்றில் 2ஐ மட்டும் பிடித்துக்கொண்டு நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். 1, 3, 4களை விட்டு விட்டீர்கள்.

    அதனால், நீரிழிவு நோயைப் பன்றிக் கறி ஒன்றே தீர்த்துவ் விடும் என்று நான் சொன்னது போல அர்த்தம் தருகிறது.

    எந்தப் பிரச்சினைக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உண்டு என்றோ, ஒரே ஒரு கடவுள்தான் உண்மை என்றோ, ஒரே ஒரு புத்தகம்தான் இறுதி உண்மையைச் சொல்லுகிறது என்று சொல்ல நான் என்ன…. இதுவா ?

    சரியான தாவர உணவுகளோடு, வெள்ளை மாமிசங்களில் சிறந்த பன்றிக் கறியையும் பரிந்துரைக்கும், பண்மைத் தன்மையை ஆராதிக்கும் இந்து நான்.

    இவற்றோடு சரியான வாழ்க்கை முறையையும் சேர்த்து வானவில் வாழ்க்கையை வாழச் சொல்வேனே தவிர, ஆண்டவன் – சாத்தான், கறுப்பு – வெள்ளை, சொர்க்கம் -நரகம், சைவம் – அசைவம் என்னும் பிளவு பட்ட வாழ்க்கையை வாழச் சொல்லமாட்டேன்.

    ஏனெனில், நான் இந்து.

  61. தூயவன் கூறுவது முக்கியமானதொன்று. பல இஸ்லாமிய தளங்களில் பொய்யான விளக்கத்துடன் பல சமஸ்கிருத சுலோகங்களை எழுதி அவர்களாக ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள். இப்படி இந்து புத்தகங்களை அவர்கள் அவதூறு செய்வதற்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ் இந்து தளம் சில விளக்கக்கட்டுரைகளை எழுத வேண்டும். அல்லது அந்த சுலோகங்களின் உண்மை பொருளை விளக்கித்தர வேண்டும்.
    இங்கே சங்கதத்திலும் தமிழிலும் அறிவார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

    இஸ்லாமிய தளங்களை அவதூறு செய்யவேண்டாம் என்று தமிழ் இந்து இருப்பது சரியானதுதான். ஆனால் அந்த தளங்கள் இந்து புத்தகங்களுக்கும் சுலோகங்களுக்கும் தவறான விளக்கங்களை அளிக்கும்போது இந்துக்கள் தெளிவடைய சரியான பொருளை சரியான விளக்கத்துடன் அளிப்பது தமிழ் இந்துவின் கடமை.

  62. @ ஸ்ரீ களிமிகு கணபதி

    India: 31.7 millions diabetic / 1001 million population ( 3.17 % )

    Thailand: 2.4 millions / 60 million population ( 4.0 %)

    அதாவது பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடும் தாய்லாந்தில் ஏதோ ஒரு காரணத்தால் நீரிழிவு நோய் 26 .18 % அதிகாமாக உள்ளது என்பது போலே எனக்குத் தோன்றுகிறது.

  63. யொவ் எங்க குல தெய்வம் மாசான சாமிக்கு வருசந்தோறும் பன்னி வெட்டி படி கொடுத்து திருவிழா கொண்டாடுரோம். ஏன்னா எங்க சாமிக்கு பன்னி கறிதான் பிடிக்கும். உங்க வேதமும். சாஸ்திரமும் எங்களை ஒன்னும் கட்டுப்படுத்த முடியாது. அதனால நாங்க இந்து இல்லன்னு ஆயிருவோமா? அட போங்கய்யா நீங்கதாய்யா இந்து இல்ல, எங்க சாமி இந்து சாமி அது பன்னி பலி கேக்கும். நீங்க யாருய்யா அது இந்து இல்ல சாஸ்திரமுல்லன்னு சொல்ல? வந்துட்டானுவ பேச. கணபதி அய்யா மிக்க நன்றி..

  64. மணிகண்டன் அவர்கள் கூறியதை நான் ஆமோதிக்கிறேன். இந்து சமயத்தைப் பற்றி பல பொய்கள் அவதூறுகள் பல நூற்றாண்டுகளாகவே இருக்கின்றன. வெளிநட்டார்கள் கூறிய பல பொய்களை இந்துக்களே நம்புகிறார்கள். ஆரியன் திராவிடன், தமிழ் சமஸ்கிருதம், வர்ண‌ம் ஜாதி இரண்டும் ஒன்று என்ற கதைகள், சதி, விதவை கொடுமை, பெண் அடிமை மற்றும் பல பல. இவை எல்லாம் கூறி வெளிநட்டார் நம் மனோ நிலையை கெடுத்து உள்ளே புகுந்து அராஜகம் செய்தனர்.
    நாட்டிலே பகைவன் வருவதே ஆபத்து. அதனிலும் நம் மனதிலே குடியிருப்பது பேராபத்து.
    இப்போது இணையத்தில் இந்து சாத்திரங்களைப் பற்றி அவதூறாகவும் பல பொய்கள் கூறுவதும் சுலோகங்களை திரிப்பதும் ராமர் முதல் எல்லோரை பற்றியும் பொய்கள் பல பல உள்ள‌ன. யூ டூப் பார்த்தால் முகம்மதுதான் கல்கியென்றும் இந்துக்களுக்கு சாத்திரமே தெரியாது என்றும் சிலர் கிறிஸ்துதான் வேதத்தின் தலைவன் என்றும் பொய்கள்

    தமிழ் இந்து இந்த பொய்களை வெளிப் படுத்தி உண்மை சுலோகங்களை விளக்கி இவர்கள் பித்தலாட்டங்களை எதிர்க்க வேண்டும். இந்த பணி மிக முக்கியமானது என்று கருதுகிறேன். பல அறிஞர்கள் உள்ள இந்த தளத்தில் இதை செய்து இந்துக்களுக்காகவும் இந்து சமயத்திற்காகவும் போராடும் உலகெங்கும் உள்ளவர்களுக்கு முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரும் பணி தொடங்கினால் பிறகு இதை வடநாட்டாரும் பிற பிராந்தியாரும் செய்ய வழியாக அமையும்
    நன்றி

  65. எவ்வுயிரையும் கொல்லாமலும் புண்படுத்தாமலும் இருப்பதே உயர்ந்த ஒழுக்க நிலை. இந்து சமயத்தின் நோக்கமே ஒழுக்கம். பன்றியாவது ஆடாவது உண்ணும் எவரும் உயிர்களை வதம் செய்யாமை நன்றே என்று உணர வேண்டும். அவர்களால் அதை பின் பற்ற முடிய‌ வில்லையெனினும் அந்த நிலை உத்தம நிலை ஒரு நாள் அந்த நிலை எய்துவோம் என்ற மனோநிலையாவது இருக்க வேண்டும். இந்து சமயத்தில் இதற்கு சலுகைகள் உள்ளது. ஆனால் தன்னிச்சை போல் எந்த மாமிசம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் என்பதை தடை விதித்திருக்கிறது
    மாமிசம் உண்போரும் சில நாட்கள் கூடாது என்றால்தான் அந்த எண்ணம் கட்டுப்படுத்த முடியும். அத‌ற்குதான் ஒழுக்க நெறியை கடை பிடிப்பவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. ஒழுக்கம் உயர்ந்தவரையும் இல்லாதவரையும் ஒரே நிலை என்றால் நாம் உயர்வது எப்படி?

    இறைவன் எங்கும் வியாபித்து இருக்கிறான். எல்லா உயிரிலும் உள்ளான் என்பது அடிப்படை நோக்கம் இந்து சமயத்தில் . ஆதாலால் எல்லா உயிரையும் மதிக்க வேண்டும். குறைந்தது அப்படி வாழ்வோரையாவது ஆதரிக்க வேண்டும் மதிக்க வேண்டும்.

    உலகில் பல கொடுமைக்காரர்கள் உள்ளனர். எல்லோரும் நல்லவரல்லர். சுயந‌லத்தோர் பலர். நாம் சாத்வீகமாக மட்டும் இருந்தால் போதாது. இந்த உலகத்தில் நம்மை விழுங்க காத்திருக்கிறார்கள் கயவர்கள். அவர்களை சாத்வீகத்தால் மட்டும் வெல்ல முடியாது.

    தூயவரை கண்டிப்பதும் தண்டிப்பதும் இருக்க வேண்டும். ஆதலால் வீரம் உள்ளவர் வேண்டும். அறத்தைக் காக்க வல்லவர் வேண்டும். சுயநலம் மனிதருள் உள்ளவரை வெறும் நல்லவர் இருந்தால் போதாது. வல்லவரும் வேண்டும். அதற்காகத்தான் அந்த வீரம் வளற சிலர் மாமிசம் உண்ணலாம் வேட்டை ஆடலாம் என்று உள்ளது. கடும் உடல் உழைப்பாளிகளுக்கும் அது தேவை. ஆனால் சாத்வீகர்களுக்கு தேவை இல்லை. இந்த உலகத்தில் கொடுமையாளர்கள் உள்ளவரை வீரம் வேண்டும். கொடுமை தீர ஒழிந்தால் அப்போது சாத்வீகம் மட்டும் போதும்! கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் ‍குறள் 550

  66. >தூயவரை கண்டிப்பதும் தண்டிப்பதும் இருக்க வேண்டும்

    மன்னிக்க வேண்டும் தீயவர் என்று இருக்க வேண்டும். தூயவர் அல்ல. பிழை

  67. Mr Kalimigu Ganapathy
    As I stated earlier, you have not provided any valid data on decreased incidence of diabetes with pork.meat based diet
    Your assumptions are
    1) Thais consume a lot of meat including pork than Indians. There is lesser incidence of Diabetes in Thailand due to this fact.
    Naturally, this is an assumption and has no scientific basis. Please furnish me with studies and trails done on this theory. As I understand, diabetic etiology is multifactoral. :Genetics is the predominant factor. If your parents both suffer from Type 1 Diabetes, there is almost a very high chance of you suffering from juvenile diabets, whether you consume meat or just veggie food.It also evident that Thais suffer MORE from diabets in percentage terms than Indians, as pointed out by Mr Sahtyaraj.
    2) To lead a healthy life, you must consume both meat and vegetable products
    . This is another assumption and has no scientifc basis. We can all live a long happy life on proper vegetarian food.
    To eat meat or not is up to the individual’s dharma consciouness.Claiming that eating meat is good /superior for health is very misleading.

  68. Based on teachings by Swamiji Dhayanandaji Saraswathi, I would like to make some comments. In our religion the whole aim of the individual is to attain ” self realization”. For this you need a contemplative mind.All individuals are made of three” gunas” to a various degree ( sattva, rajjas and tamas). The one with high sattva guna will have a natural tendency to lean towards sprituality and contemplation. The one with high tamas will be selfish and will be immersed in wordly mundane things and affairs. Food has an effect on our gunas, specifically, ” satvika foods”. Meat as such is not ” satvika food” . It promotes tamas.You cannot expect someone to be in a contemplative , spritiual mood after a hefty Goan pork vandaloo. I will not go into Pava/punnya karmas of eating meat.

    (edited and published).

  69. @ உங்கள் சத்யராஜ்

    சரியான கேள்வி ஐயா உங்களுடையது.

    உங்கள் கணக்கின்படி,

    // …….. India: 31.7 millions diabetic / 1001 million population ( 3.17 % )

    Thailand: 2.4 millions / 60 million population ( 4.0 %)

    அதாவது பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடும் தாய்லாந்தில் ஏதோ ஒரு காரணத்தால் நீரிழிவு நோய் 26 .18 % அதிகாமாக உள்ளது என்பது போலே எனக்குத் தோன்றுகிறது…. //

    ஆனால், புள்ளியியல் என்பது இவ்வளவு எளிமையானதாக இல்லை.

    சதவீத கணக்கின்படி, இந்திய கிராமப்புறங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 50 % ஆக இருக்கக் கூடும் என்றும், நகரங்களில் 30% ஆக இருக்கக் கூடும் என்றும் நம்புகிறார்கள். https://www.ehow.com/about_5114154_diabetes-india.html.

    உலகில் அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

    @ ரமா

    எனது கமெண்டுகளை தயை செய்து “முழுமையாகப்” படித்துவிட்டு பிறகு கேள்வி கேளுங்களேன். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். ஆனால், நான் கேட்ட எந்த கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை.

    // … To eat meat or not is up to the individual’s dharma consciouness.Claiming that eating meat is good /superior for health is very misleading….//

    நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது மருத்துவத் துறையில் என்று நீங்கள் எழுதியதில் இருந்து யூகிக்கிறேன்.

    ராணுவம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் மாமிச உணவு முறை பரிந்துரைக்கப்படுவதன் காரணம் என்ன என்பது பற்றி ஒரு டாக்டரான உங்கள் கருத்தை அறிய ஆவல்.

    அத்தோடு, எனக்குத் தெரிந்த பல தாவர உணவாளர்கள் ரஜோ மற்றும் தமோ குணத்தைக் கொண்டவர்களே. சத்வ குணம் கொண்ட தாவர உணவாளர்கள் மிக மிகக் குறைவு.

    தாவர உணவாளர்கள் சத்வ குணம் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரபூர்வ தகவல்கள் ஏதும் இருந்தால் தரவும்.

    @ தூயவன்.

    உங்கள் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்.

  70. Mr Kalimigu Ganapathy, I also want to know, why meat is promoted in army ( if it is true) Maybe you can enlighten me on this. Some of the top Indian cricketers are vegetarians.!!
    Please Sir, provide me with studies that conclusively prove that increased incidence of diabets in India is realted to vegetarian food consumption. Period.

  71. Sri. Kalimigu Ganapathi,
    //ஆனால், புள்ளியியல் என்பது இவ்வளவு எளிமையானதாக இல்லை.

    சதவீத கணக்கின்படி, இந்திய கிராமப்புறங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 50 % ஆக இருக்கக் கூடும் என்றும், நகரங்களில் 30% ஆக இருக்கக் கூடும் என்றும் நம்புகிறார்கள். https://www.ehow.com/about_5114154_diabetes-india.html.

    உலகில் அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.
    //
    Your points are acceptable and should not be neglected. But please prove by statistics or otherwise evidences how pig factors in. That is why I mentioned , % wise they look otherway around than the digabetic population..

    //ராணுவம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் மாமிச உணவு முறை பரிந்துரைக்கப்படுவதன் காரணம் என்ன என்பது பற்றி ஒரு டாக்டரான உங்கள் கருத்தை அறிய ஆவல்.//

    1) In order to increase agression and killing instinct to win.

    //அத்தோடு, எனக்குத் தெரிந்த பல தாவர உணவாளர்கள் ரஜோ மற்றும் தமோ குணத்தைக் கொண்டவர்களே. சத்வ குணம் கொண்ட தாவர உணவாளர்கள் மிக மிகக் குறைவு. //

    2) Your observation is result of your experience. However it lacks knowledge, logic, definition since scientifically there are no three natures defined. If you are going to define them before saying the above predicate, then we can derive or attempt to prove/disprove something.

    //தாவர உணவாளர்கள் சத்வ குணம் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரபூர்வ தகவல்கள் ஏதும் இருந்தால் தரவும்.//

    3) you are asking Dr. Rama to prove Vegetarians are Sathvik natured. For that we need ‘definition’ of two words. 1. vegetarians . 2. Sathvik . Please define Sathvik before asking any proof.

    If we agree to take definitions for ‘Satvik nature’ given by Krsna in Bhagwat gita or Iskcon or Ramakrishna matt then you can find in their own text, that Satvik nature people will eat less powerful but more fresh vegetarian food. While Lord Krishna says ‘Sathvik natured person will choose tender fresh food’ he did not mention that the converse is true. Which means, if a person who eats NV is Sathvik natured, one fine morning he will prefer to eat only vegetarian and further proceed on spirituality.
    //

  72. @ Rama

    // … … provide me with studies that conclusively prove that increased incidence of diabets in India is realted to vegetarian food consumption. Period…..//

    நான் சொல்லாத ஒன்றிற்கு ஏன் ஆதாரம் தரவேண்டும். புரியவில்லை.

    நீங்கள் சொல்லுகிற இந்திய கிரிக்கட் வீரர்கள் வெள்ளை மாமிசம் புசிப்பவர்களே – கும்ப்ளேயைத் தவிர்த்து.

    மற்ற எல்லா விளையாட்டுக்களிலும் முக்கியமாக அத்லட்டிக் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மாமிச உணவு உண்பவர்களே. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கின்றனர். ஆனால், அவை விதிவிலக்குகள் மட்டுமே.

    ஆனால், மாமிச உணவு உண்ணாததால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட அவர்கள் supplementsகளை உண்ணுகிறார்கள். இது சாதாரண மக்களுக்கு அவசியம் இல்லை.

    வெள்ளை மாமிசம் மூளை சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. செஸ் விளையாட்டு வீரரான விஸ்வநாதன் ஆனந்த்கூட வெள்ளை மாமிசம் உண்பவர் என்று கேள்விப்பட்டதுண்டு.

    @ கார்கில் ஜெய்

    //…. But please prove by statistics or otherwise evidences how pig factors in. …//

    மரியாதைக்குரிய ஜெய்,

    இங்கு ஒருவர் தாய்லாந்தில் பன்றிக்கறி சாப்பிடுவதால் அவர்களுக்குக் கொழுப்பு அதிகம் என்று சொல்லி இருந்தார். ஆனால், அந்தத் தகவல் தவறு என்று நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாவில் தாய்லாந்தை விட அதிகம் என்பதைச் சுட்டினேன்.

    மற்றபடி, பன்றிக் கறி நீரிழிவு நோய்க்கு மருந்து என்று நான் சொல்லவில்லை.

    நீரிழிவு நோயை பொறுத்த வரை சைவம், அசைவம் என்பதை விட உணவின் அளவே முக்கியமானது.

    எனவே, வெள்ளை மாமிசமான பன்றிக் கறியை, சிகப்பு மாமிசத்திற்குப் பதிலாக உண்ணலாம் என்பது என் கருத்து.

    பன்றிக் கறி சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும், கொழுப்பு வரும் என்பது தவறான புரிதல். தவறான “மூட நம்பிக்கை”.

    // …. …. Please define Sathvik before asking any proof. …. //

    சாத்வீக மனிதர்களின் குண நலன்கள் என்று விக்கிப்பீடியா சில தகவல்களைச் சொல்லுகிறது. அவை இங்கே:

    A sāttvika individual always works for the welfare of the world. He is always hardworking, alert and lives life moderately. He leads a chaste life. He eats moderately. He speaks the truth and is bold. He never uses vulgar or insulting language. He does not feel jealous nor is he affected by greed and selfishness. He does not cheat or mislead anyone. He does not even allow any evil tendencies to enter his mind. He has good memory and concentration. He also has keen interest in improving his spiritual knowledge, and spends time worshiping god or meditating. In the extreme state he may even perform penance or uninterrupted meditation. A satvic individual can be recognized if his mind, speech and actions synchronize. Manasa, vacha, karmana are the three Sanskrit words used to describe such a state.

    இந்த சாத்வீக குண நலன்களை தாவர உணவுதான் தரும் என டாக்டர். Rama அவர்கள் சொல்லுகிறார்.

    நான் கேட்பது ஆதாரங்களை மட்டும்தான்.

    அவரால் தரமுடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அவர் முன்வைப்பதே தவறான தகவல், தவறான புரிதல்.

    இந்தியா உலக அளவில் அதிகம் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறது என்பது கம்பவுண்டர் வேலை பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரிந்த தகவல்.

    மேலும், புள்ளிவிவரங்கள் குறித்து அபத்தமான கேள்வியை ஒரு விஷயம் தெரிந்த டாக்டர் கேட்கமாட்டார்.

    தாவர உணவை உண்டால் எல்லாரும் சாத்வீகமாகிவிடுவார்கள் என்பது மிக மிகத் தவறான புரிதல். சொர்க்கம், நரகம் போல ஒரு நம்பிக்கை மட்டுமே.

    ஆயுர்வேதத்தின் படி சில உணவுகள் தமோ, ரஜோ குணத்தைக் கொண்டவை. அவற்றை உண்டால் எழும் விளைவு, உண்பவரின் உடலைப் பொறுத்தது.

    முற்றிலும் ரஜோ, தமோ, சாத்வீக குணங்கள் ஒன்றை மற்றொன்று செயல்பாட்டின் அடிப்படையில் சமன் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

    இந்த சமநிலை அடைய, ஒருவருடைய உடம்பின் அமைப்பின்படி, மாமிசம் தேவைப்பட்டால் அதை ஒரு ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைப்பார்.

    சாத்வீகம் மட்டும் வேண்டும் என்றால் அது வியாதியில்தான் கொண்டு போய்விடும்.

  73. Thiru Kalimigu Ganapathy, you said:
    >கிருஷ்ணரும், ராமரும் மாமிச உணவாளிகள் என்பதை நமது இதிகாசங்கள் தெளிவாகவே தெரிவிக்கின்றன.

    Please show evidence. I have heard people argue about Shri Rama but never heard of Lord Krishna

    Kindly show which ithihasa says this. I would appreciate greatly
    Thanks

  74. // …. …. …. Kindly show which ithihasa says this. I would appreciate greatly…. ….. ….. //

    இதிகாசங்களில் வேட்டையாடப் போன இடங்களிலும், விருந்துகளிலும் எந்த உணவினை ராமரும், கிருஷ்ணரும் உண்டார்கள் என்பதைத் தேடிப் பாருங்கள். மிகத் தெளிவாகவே அவர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பது இருக்கிறது.

  75. ராமா அவர்களே!

    வைரத்தை வைரத்தால் பட்டை தீட்ட வேண்டும்! முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்! ஹிம்சையை ஹிம்சையாலே அகற்ற வேண்டும்.சாத்விகமோ,அஹிம்சையையோ அதனிடத்தில் பேசினால் பேசியவரையும் விட்டு வைக்காது,சாத்விகம் மற்றும் அஹிம்சை என்கிற மனிதனின் உயர் தத்துவங்களையும் விட்டு வைக்காது! அதனால் களிமிகு கணபதி ஐயா அவர்களின் எண்ணங்களை அப்படியே ஏற்று கொள்வது மட்டுமே நீங்கள் விடாபிடியாக வைத்துகொண்டிருக்கும் சாத்விகத்தையும் அஹிம்சையையும் காப்பாற்றும்.

    எனவே ஹிந்து அசைவர்கள் பன்றியை சாப்பிடுவதே நாம் ஹிந்து தர்மத்தை காப்பாற்ற இருக்கும் பல வழிகளில் ஒரு உன்னதமான வழி ஆகும்.

  76. Thiru Kalimigu Ganapathy, Lord Krishna never went for hunting as far as I know. Shri Rama did but that does not necessarily mean he ate meat. He had promised His mother Kausalya He would remain as an ascetic on vegetarian food.

    Please show me more. Thanks

  77. @ ஸ்ரீ. களிமிகு கணபதி,
    சாத்விக குணம் என்பதற்கு நீங்கள் கொடுத்தது வரையறை ( definition ) அன்று properties மட்டுமே . மேலும் அறிவியல்பூர்வமானதும அல்ல. சாத்விகத்திற்கான விளக்கம் எழுதியவர் உணவைப் பற்றி குறிப்பிடாதது அவர் கீதைக்குறிப்பையே விட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது.

    We cannot compare apple pie with orange juice. We cannot mix western science with eastern sathvik.

    கிருஷ்ண பகவான் சாத்விக குணத்தினர் சைவ உணவு உண்பர் என்கிறார். அனால் சைவ உணவு கொண்டோர் சாத்விக குணம் எய்துவர் என்று சொல்லவில்லை.

    //நான் சொல்லாத ஒன்றிற்கு ஏன் ஆதாரம் தரவேண்டும். புரியவில்லை.

    நீங்கள் சொல்லுகிற இந்திய கிரிக்கட் வீரர்கள் வெள்ளை மாமிசம் புசிப்பவர்களே – கும்ப்ளேயைத் தவிர்த்து.
    //

    ஸ்ரீ. ராம அவர்கள் , நீங்கள் சொல்லாததற்கு நிரூபணம் கேட்கவில்லை. நீங்கள் கொடுத்த விளக்கங்கள் அறிவியல்பூர்வமாக குறையற்றதாக இல்லாததால், உங்களை முறைப்படி நிறுவக் கோருகிறார். அதைத்தான் குறிப்பிட்டார். ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் அசைவ உணவை உண்டதில்லை. விஸ்வநாதன் ஆனந்த் அசைவம் உண்பதாக நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் உண்டா ?

    //இந்தியா உலக அளவில் அதிகம் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறது என்பது கம்பவுண்டர் வேலை பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரிந்த தகவல்.

    மேலும், புள்ளிவிவரங்கள் குறித்து அபத்தமான கேள்வியை ஒரு விஷயம் தெரிந்த டாக்டர் கேட்கமாட்டார்
    //

    I think Rama’s quesions are very very clear and not absurd as you claim and people with medical knowledge will expect this kind of proof only.

    I studied a diabetes research which revealed one of the Dr. Rama’s point :

    In a single day non-blind study with approximately 50% Indians and 50% caucasians with diabetes, where test subjects with similar amount of blood sugar were treated with constant dose of insulin by injection. sugar levels after 24 and 36 hours revealed that constant dose of insulin had less effect indians and more effective on caucasians.

    This proves that Indians have problems in their genes and not due to vegetarianism.

  78. // sugar levels after 24 and 36 hours revealed that constant dose of insulin had less effect indians and more effective on caucasians.//

    i.e Body response for same level of insulin was different due to nature of their genes.

    Body builders have widely agreed that muscle is combination of heredity and excersie for 75% and diet contributes 25% only.

    So genes is more important.

  79. திருச்சிகார அண்ணா,

    யாரோ என்னவோ சொல்லிடாங்க அன்ரதுக்காக நீங்க இனிமேல் இங்கே எழுதமாட்டேன் என்று சொல்லிவிட்டது என்னை மாதிரி இருக்கிற உங்க ரசிகர்களுக்கெல்லாம் வருத்தமான விஷயம் ணா! தொடர்ந்து எழுதணும்ன்னு வேண்டி கேட்கிறேன் ணா! எதிர்பார்கிறேன் ணா!

    அன்புடன்
    பிரதீப் பெருமாள்

  80. ஸ்ரீ. களிமிகு கணபதி,

    //சதவீத கணக்கின்படி, இந்திய கிராமப்புறங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 50 % ஆக இருக்கக் கூடும் என்றும், நகரங்களில் 30% ஆக இருக்கக் கூடும் என்றும் நம்புகிறார்கள். https://www.ehow.com/about_5114154_diabetes-india.html.//

    உங்கள் மொழிபெயர்ப்பு இம்முறை சரியானதாக எனக்கு தோன்றவில்லை. 50 % இந்தியர்கள் சர்க்கரை நோயினால் வாடுகிறார்கள் என்று நீங்கள் எழுதியது சரியான மொழிபெயர்ப்பு அன்று.

    // The study found that, in addition to the cases that are identified every year, at least 13.3 million cases remain undiagnosed. Researchers believe that number is equal to more than 50 percent of Indians living in rural India and 30 percent in Indian cities. This high rate is due to a high susceptibility to environmental risk factors; urbanization, which has led to decreased physical activity; obesity; and changes in diet. //

    இதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்னவென்றால் ‘நீரிழிவு நோயுள்ள இந்தியர்களில், கிராமங்களில் 50 % பேருக்கும், நகரங்களில் 30 % பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை’ என்பதே.

    //சாத்வீகம் மட்டும் வேண்டும் என்றால் அது வியாதியில்தான் கொண்டு போய்விடும்.//

    லால் பகதூர் சாஸ்திரியும் , காஞ்சி மகா பெரியாவாளும் சாத்வீக உணவே புசித்தனர். அவர்கள் ஆரோக்யமாக இல்லையா ?

    இந்த விவாதம் அலுப்புத் தட்டுவதாலும், ஒரு டாக்டரின் விளக்கங்களே ‘அர்த்தமற்றவை’ என்று தவறாகப் புரிந்து கொல்லப்பட்ட புள்ளியிலால் சித்தரிக்கப் படுவதாலும், தமிழ்ஹிந்துகாவல்பட்டியார் வேலையை நான் செய்ய விரும்பாததாலும் வெளியேறுகிறேன்.

  81. பன்றி பண்ணை நல்ல தொழில். வெள்ளை பன்றி வேகமாக வளரும், நிறைய குட்டிகள் போடும். மேலும் ஹோட்டல்களில், காய்கறி கடைகளில் உள்ள மிகுதியான எஞ்சிய காய்கறிகள் உணவுகளை சேகரித்து தீவனமாக அளிக்கலாம். மிக குறைந்த விலையில்.

    நான் சின்ன வயதில் வெள்ளை பன்றி ஒன்று வளர்தேன். கல்லூரிக்கு போனபிறகு முடியல. சொன்னா நம்பமாட்டீங்க. அந்த பன்றிக்கு நான் வைத்த பெயர் குஷ்பு..

  82. அறிவியல் புள்ளியியல் என்று கேட்கும் டாக்டர் ராமா, சாத்வ குணம், தமஸ குணம் என்று அறிவியலால் டிஃபைன் செய்யப்படாத தத்துவத்தையெல்லாம் எடுத்துக்காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

    மாமிசம் சாப்பிடுவதால் ஒருவனுக்கு இந்த குணம் வரும், இந்த குணம் வராது என்று எப்படிச் சொல்ல முடியும் ? அதற்கு என்ன ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள் ? புள்ளிவிவரங்கள், டபுள் பிளைண்டு, சிங்கிள் பிளைண்டு, டபுள் டெஃப், சிங்கிள் சைடு ஸ்பீக்கர் அவுட் போன்ற எக்ஸ்பெரிமெண்டுகளுடன் விளக்கவும் டாக்டர்.

  83. //
    லால் பகதூர் சாஸ்திரியும் , காஞ்சி மகா பெரியாவாளும் சாத்வீக உணவே புசித்தனர். அவர்கள் ஆரோக்யமாக இல்லையா ?
    //

    ஹைஃபுரோஃபைல் மனிதர்களுடன் எல்லாம் சாமானியனை ஒப்பிட முடியாது.

    ஹெபடைடிஸ் பி வைரஸ் வியாதியால் அவதிப்படுபவர் தான் அமிதாப் பச்சன். ஆனால் அவருக்கு வந்த வியாதியே அதே வயதுள்ள ஒரு சாமானியனுக்கு அவருக்கு வந்த வேளையில் வந்திருந்தால் அவன் என்றோ இறந்திருப்பான். (இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே)

    முதலில் சாத்வீகம், தமஸம் போன்ற வார்த்தைகளை அறிவியல் பூர்வமாக டிஃபைன் செய்யவும். பின்னர் இன்ன இன்ன உணவுகள் சாத்வீகம், இன்ன இன்ன உணவுகள் தமஸம் போன்ற வகைப்படுத்துதலை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகள், பிரசுரிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் நிறுவவும். பிறகு பேசலாம்.

    (edited and published)

  84. //
    In our religion the whole aim of the individual is to attain ” self realization”. For this you need a contemplative mind.All individuals are made of three” gunas” to a various degree ( sattva, rajjas and tamas). The one with high sattva guna will have a natural tendency to lean towards sprituality and contemplation. The one with high tamas will be selfish and will be immersed in wordly mundane things and affairs. Food has an effect on our gunas, specifically, ” satvika foods”. Meat as such is not ” satvika food” . It promotes tamas.You cannot expect someone to be in a contemplative , spritiual mood after a hefty Goan pork vandaloo. I will not go into Pava/punnya karmas of eating meat.
    //
    What is spirituality ?
    What are Sattvic, Rajasic, Tamasic Gunas ?

    How food has an effect on your guna ? and what is guna ? (explain in pure scientific term).

    I know pure vegetarians who shout like dogs on anything and everything. I know good nv eaters who are calm and composed while dealing with a problem.

    I say this vegetarianism is like a semitic religion. It condemns every non believer (non veg eater). It condemns other gods (other foods that are nv), It forces its believers (you) to claim moral superiority over the non believers (us nv eaters). It also tries to proselytise people by brain washing them (vegetarianism is sattvic, spiritual, eternal, calm etc., etc). There is also the phenomenon of “Neurosis of the convert” in the religion of vegetarianism.

    I feel this is precisely what Tamil hindu is fighting against.

    (edited and published)

  85. @ ஸ்ரீ. வஜ்ரா,
    //அறிவியல் புள்ளியியல் என்று கேட்கும் டாக்டர் ராமா, சாத்வ குணம், தமஸ குணம் என்று அறிவியலால் டிஃபைன் செய்யப்படாத தத்துவத்தையெல்லாம் எடுத்துக்காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.//

    யார் யாரெல்லாம் ஆன்மீக எடுத்துக்காட்டு கொடுக்கலாம், எந்த தொழில் செய்பவர் கொடுக்கக் கூடாது என்று நீங்கள் வரையறை(definition ) செய்து பட்டியல் வெளியிடுங்களேன்.

    தர்மவ்யாதர் கூட ஆன்மிகம் சொன்னார். அறிவுக்கண் திறந்தார். கறிக்கடை ஞானி உபதேசத்தை ஏற்கும் நாம், டாக்டரை ஏன் குறை சொல்ல வேண்டும் ? அவர் தம் வல்லறிவைப் பயன்படுத்தி நீரிழி நோய் பற்றி நம் அறிவைத் தூண்ட முயற்சித்தல் தவறா?

    @ தேச பக்தர் ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன்,

    தர்மவ்யாதர் பற்றி எழுதினீர்கள். வாலி எழுதிய தொடரில் தர்மவ்யதர் உயிர் வாழ்தலுக்கே ஒரு தொழிலை செய்வதாகவும், அவரே சைவ உணவுக்காரர் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து யாது?

  86. ஸ்ரீ கார்கில் ஜெய்.

    ஆன்மீக எடுத்துக்காட்டுகள் எல்லாம் இவ்விடத்தில் டபுள் பிளைண்டு எக்ஸ்பெரிமெண்ட் கேட்பவர்கள் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து.

  87. நண்பர் திருச்சிக்காரர் அவர்களே,

    ///@உங்கள் சத்யராஜ், உங்கள் மனம் மகிழ்ச்சியை அடையும் வண்ணம் ஒரு செய்தியை எழுதி விட்டு விடை பெறுகுறேன். இனி மேல் நான் தமிழ் இந்துவில் பின்னூட்டம் இட மாட்டேன். எனவே உங்களுக்கு எந்த சிறு தொந்தரவும் இருக்காது, மகிழ்ச்சியா நண்பா?///

    உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களைப் படித்து தான் நான் தமிழ் ஹிந்து தளத்தின் ரசிகனானேன்.உதாரணமாக இதே தளத்தில்
    “சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்”என்ற கட்டுரையில் உங்கள் பின்னூட்டங்கள் மிகச் சிறப்பாக இருந்தது.அதைப் படித்து தான் உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து படிக்கலானேன்.
    https://tamilhindu.com/2009/08/saadhu-chellappa//

    ///திருச்சிகார அண்ணா,

    யாரோ என்னவோ சொல்லிடாங்க அன்ரதுக்காக நீங்க இனிமேல் இங்கே எழுதமாட்டேன் என்று சொல்லிவிட்டது என்னை மாதிரி இருக்கிற உங்க ரசிகர்களுக்கெல்லாம் வருத்தமான விஷயம் ணா! தொடர்ந்து எழுதணும்ன்னு வேண்டி கேட்கிறேன் ணா! எதிர்பார்கிறேன் ணா!

    அன்புடன்
    பிரதீப் பெருமாள்///

    திரு பிரதீப் பெருமாள் அவர்கள் கேட்டுக்கொண்டதையே நானும் கேட்கிறேன்.திரு சத்யராஜ் அவர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் விடை பெறுவதாக கூறுகிறீர்கள்.ஆனால் என் போன்றவர்களின் மனம் வருந்தும்படி இப்படி விடைபெறுவது நியாயமா? என் போன்றவர்களுக்காக உங்கள் முடியை மறு பரிசீலனை செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  88. Elephants and horses are vegetarians. They are strong and fast etc. Humans do not need animal food gathered out of violence. Milk is essential. Vegetarianism is important for 1) ethics- no harm to life 2) environment and economy 3) health but the first two are more important

    Those who eat meat have to appreciate that life is sacred and it is better to avoid when possible. Like I said, meat eaters can help society against violent human beings. Evil is part of life. When humans are not selfish, then all can be satvic. Till then it is neither possible nor good to say all must be vegetarians
    Please see and comment:

    https://www.youtube.com/watch?v=ZzFC7QP628A

  89. @பிரதீப் பெருமாள், தனபால்

    நன்றி நண்பர்களே,

    உங்களின் அன்புக்கு நன்றி. நீங்கள் கூறும் அளவுக்கு நான் எதையும் சிறப்பாக எழுதவில்லை. என்னையும் விட சிறப்பாக எழுத உங்களால் முடியும். முக்கிய விடயங்களில் தொடர்ந்து என் கருத்தை வெளிப்படுத்துவேன்.

  90. I thought I will not enetr into further discussion on merrits of vegetarian food but decided to do so as a lot of misinformation is being peddled around.
    Anyone can check on these facts.
    Vegetarians live longer and suffer less from Cardiovascular diseases, obesity,diabetes, cancer, especially of colon, diverticulosis and strokes.
    There is no reason why you cannot obtain all your nutritional needs from proper vegetarian food. You do not suffer from lack of power or strength or stamina because of your vegetarian diet. In fact, Alzeimers/dementia is more prevelant in meat eaters than vegetarians.If the Indian army is promoting non veg food to their jawans ( if true) maybe it is to make them dull in their mind!!( joking) You know the old Tamil proverb ” you need muttals for Pattalam”!!!!!
    Check this site, just an example
    https://www.vegetarian-nutrition.info/updates/vegetarian_diets_health_benefits.php

  91. நண்பர் திருச்சிக்காரர் அவர்களே,

    ///முக்கிய விடயங்களில் தொடர்ந்து என் கருத்தை வெளிப்படுத்துவேன்.///

    மிகவும் நன்றி ..

  92. அண்ணன் திருச்சிக்காரர் அவர்களே,

    “நன்றி”

    பிரதீப் பெருமாள்

  93. சும்மா எரிகிற நெருப்பில் கொஞ்சம் கொழுப்பைப் போட்டால் தீ கூடுதலாக எரியும் என்று இதைப் போடுகிறேன். பெட்ரோல், மண்ணெண்ணெய் எல்லாம் ஊற்றினால் நம்மையே சுடும். கொழுப்பு நின்று மெள்ளமாக எரியும். 🙂
    இதையும் படித்துப் பாருங்கள்:
    https://www.huffingtonpost.com/ellen-kanner/meatless-monday-the-meat_b_576246.html
    மைத்ரேயன்

  94. தமிழ் இந்து தளத்தினரே….
    தயவு செய்து இப்பதிவின் ஆரம்பத்தில்
    “இப்பதிவு சைவம் vs அசைவம் பற்றி அல்ல.
    அசைவம் சாப்பிடுபவர்களின் விழிப்புணர்விற்காகவே” என்ற
    செய்தியை போஸ்டர் போல மிகப் பெரிய எழுத்தில் போட்டு விடுங்களேன்.

    கருத்து கந்தசாமிகள் வந்து சைவம் சைவம் என்று கூவுவதை
    நிறுத்துங்களேம்பா…. (பெயர் எதுகை மோனைக்காக, யாரையும்
    குறிப்பிடுவதல்ல)

  95. பன்றிக் கறி சாபிடூம் முன் இதை படிங்க!

    எச்1.என்1 சளிக்காய்ச்சல்
    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

    எச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae)[1]குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A,இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது[2]. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்[3]இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது[4].மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது[5]. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல்,ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது[6]. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
    இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.[7]
    மகாராட்டிர மாநிலம், புணே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி,கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  96. இன்றைய செய்தி. நீரிழிவு நோய் (டயபீடிஸ்) உணவில் அதிகம் கொழுப்புச் சத்து இருந்தால் ஏற்பட வாய்ப்பு அதிகம். நாளுக்குத் தேவையான கலோரிகள் உணவில் இருந்தாலும் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் குடும்பத்தில் ஏற்கனவே நீரிழிவு நோய் ஏற்பட்டிருந்தால், அடுத்த தலைமுறைகளைப் பாதிக்க வாய்ப்புண்டு.
    https://www.nytimes.com/2010/05/18/health/research/18patt.html?ref=health
    மைத்ரேயன்

  97. இதையும் கொஞ்சம் படியுங்கள்.
    https://www.nytimes.com/2010/05/13/sports/13runner.html?ref=health&pagewanted=all
    ஒரு நபருக்குப் பொருந்துவது எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை. இவர் ஒரு மாரதான் ஓட்டக்காரர். ஒரு நாளைக்கு 15 -25 மைலெல்லாம் ஓடுகிறார், பயிற்சிக்காக. இவர் உண்பது 5000-8000 கலோரிகள். நாமெல்லாம் 2500 கலோரி சாப்பிட்டாலே கொஞ்சம் திணறுவோம்.
    முக்கியமான செய்தி இதில். இவர் முழுச் சாக பட்சிணி. அதாவது பால் இத்தியாதி மிருகங்களிலிருந்து கிட்டும் பண்டங்களைக் கூடச் சாப்பிடாத தாவர உணவுக்காரர்.

    இந்த வரிகளையும் பாருங்கள்:
    He said he spent a great deal of time shopping, preparing and cooking food — and chewing. He is among the slowest and most deliberate eaters I know, and there is something about his determination at the table that is reminiscent of his determination on the road: he just doesn’t stop.

    He focuses on three main meals. Breakfast is key: it might be a 1,000-calorie smoothie, with oil, almonds, bananas, blueberries, salt, vanilla, dried coconut, a few dates and maybe brown rice protein powder. Unless he is doing a long run, which for him is seven hours, or about 50 miles, he eats after his first workout. Lunch and dinner are huge salads, whole grains, potatoes and sweet potatoes, and usually beans of some sort or a tempeh-tofu combination.

    “None of this is weird,” he said. “If you go back 300 or 400 years, meat was reserved for special occasions, and those people were working hard. Remember, almost every long-distance runner turns into a vegan while they’re racing, anyway — you can’t digest fat or protein very well.”

    உடனே நான் சைவ உணவை முன்மொழிகிறேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு வகை உணவும் இன்னொன்றை விட மேலானது என்று முடிவு கட்ட முடியாது. நிலம், வேலைகள், உடல் வாகு, குடும்பப் பாரம்பரியம் (நோய்கள், நோயெதிர்ப்புத் திறன் இத்தியாதி) எல்லாம் பொறுத்துதான் நாம் நல்ல முடிவெடுக்க முடியும். ஆர்க்டிக் வட்டத்தில் இருந்து கொண்டு பிஞ்சு வெண்டைக்காய் அதுவும் பச்சையாக, புதிதாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் உதவாது. அங்கு தாவரங்களே வருடத்தில் ஓரிரு மாதங்கள் கிட்டினால் அதிசயம். அவர்களும் ஒன்றும் தேக நலம் இன்றித் துன்பப்படுவதாகத் தெரியவில்லை. பசுமைக் காடான கேரளா, மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் முழுத் தாவர பட்சிணிகளான மக்களும் நோய்களால் துன்பப்படுவதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பலர் முழு தாவர உணவுக்காரர்கள், 90 வயதுக்கு அப்புறமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்- குறைந்தது மூன்று பாட்டிகள், பல தாத்தாக்கள் – தெரிந்த குடும்பங்களில் சமீப காலம் வரை இருந்தார்கள். ஒருவர் 85 வயது வரை பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டும், பஜனைகளில் பாடியும், தினம் ஒரு மணி நேரம் போல நடந்தும் இருந்தார். இவர்களெல்லாம் மிருக உணவு என்றால் பால், தயிர் போன்றனவற்றோடு நிறுத்திக் கொண்டார்கள்.

    பன்றிக்கறி பற்றிய கட்டுரைக்கு இந்த விவாதம், சைவம் எதிர் அசைவம் என்பது அத்தனை உறவற்றது. இந்தியாவில் பல பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன, வளர்க்கப் பட முடியும். அவை பொருளாதார நிலையில் மிக வளமான நிலையில் இல்லாத மனிதர்களில் இருந்து அனைத்துத் தள மனிதருக்கும் கிட்டக் கூடிய ஒரு நல்ல புரத மூலம் என்று சுட்டவே இக்கட்டுரை என நினைக்கிறேன்.

    இந்து மதம் எல்லா வகை உணவுக்காரர்களுக்கும் இடம் தரும் நல்லதொரு ஜனநாயக மதம், அதைத் தொடர்ந்து சகிப்பற்ற சிறையாக ஆக்குவது அதன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
    மைத்ரேயன்

  98. உணர்வுடையன் அண்ணே

    அப்போ mad cow டிசீசே (பேரே நல்ல இருக்குல்ல) எப்படி வருது – அதயும் நிறுத்த சொல்லுங்களேன்

  99. அன்புள்ள உணர்வுடையவன்.

    வேகவைத்த பன்றிக்கறியை சாப்பிடுவதால் பன்றிக்காய்ச்சல் வராது. சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படும் பன்றிகள் மட்டுமல்ல, கோழிகள், ஆடுகள் மாடுகள் எல்லாவற்றிலும் இன்புளூயன்ஸா வரும்.
    birdflu என்று கோழிகளிடம் காய்ச்சல் வந்து அது மனிதர்களுக்கு பரவியது. கோழிக்கறி சாப்பிடாமல் இருப்பீர்களா?
    இது போல பொய்யான விஷயங்களை தமிழ் விக்கிபீடியாவில் எழுதிவிட்டு அதனை இங்கே மேற்கோள் காட்டுவதை நிறுத்துங்கள்.

    ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து…

    Swine influenza virus is common throughout pig populations worldwide. Transmission of the virus from pigs to humans is not common and does not always lead to human influenza, often resulting only in the production of antibodies in the blood. If transmission does cause human influenza, it is called zoonotic swine flu. People with regular exposure to pigs are at increased risk of swine flu infection. The meat of an infected animal poses no risk of infection when properly cooked.

  100. பன்றி இறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?
    மூளைக்காய்சலுக்கு காரணம்
    12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.
    26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:
    இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில் யன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முத ல் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் ப வாங்கியுள்ளது.
    இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    இது ‘ஹிந்து’ தரும் தகவலாகும்.
    1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
    அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்
    இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செய ழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.

  101. 1) 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் பன்றியிறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது. சரி பாதியளவு கொழுப்பு உள்ள பன்றியிறைச்சி நிச்சயம் நல்ல உணவாகயிருக்க முடியாது. மற்றும் பன்றியிறைச்சியில் மனிதனுக்கு கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு கொதிநிலை உச்ச வெப்பத்திலும் நாடாப் புழுக்கள் சாவதில்லை.
    2) மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளீட்ட 66 நோய்கள் பன்றியிறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டு அறிந்துள்ளது.

  102. மை டியர் அந்நிய உணர்வுடையான்,

    //எவ்வளவு கொதிநிலை உச்ச வெப்பத்திலும் நாடாப் புழுக்கள் சாவதில்லை//

    நீங்க என்ன பன்னி கறியை கொதிக்க வச்சு சோதனை செய்து பாத்திங்களா? நண்பரே!

    /மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளீட்ட 66 நோய்கள் பன்றியிறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டு அறிந்துள்ளது/

    இந்த நோய் எல்லாம் அரேபியாவிலும், உங்களை போல மதம் மாறியவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டிலும் இல்லை என்று சொல்ல முடியுமா நண்பரே! நான் கூகிள் சர்ச் போட்டு பார்த்தேன்,இங்கே நீங்கள் குறிப்பிட்ட அத்தனை நோய்களும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலும் உள்ளதே நண்பா! 66 நோய்களை கொஞ்சம் லிஸ்ட் போட்டு குடுத்தா ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளிலும் எத்தனை சதவிகிதத்தினர் அந்த நோய்களால் பாதிக்கபட்டுளார்கள் என்று சொல்லுகிறேன் நண்பா!

  103. உணர்வுடையவன்.
    உங்களது பொய்ப்பிரச்சாரத்தை கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன்.

    https://health.google.com/health/ref/Trichinosis

    Pork and meat from wild animals should be cooked until well done (no traces of pink). Freezing at subzero temperatures (Fahrenheit) for 3 to 4 weeks will kill the organism. Smoking, salting, or drying meat are not reliable methods of killing the organism that causes this infection.

    இந்த நாடாப்புழு பன்றியில் இருப்பது மட்டுமல்ல. எல்லா விலங்குகளிலும் இருக்கிறது. நன்றாக சமைத்து சாப்பிடவேண்டும். அரைகுறையாக வேக வைத்து சாப்பிடக்கூடாது.

  104. அந்நிய உணர்வாளன்,

    இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வைத்து மனிதர்களை கொல்லுவதை பற்றி கவலைப்பட்டு அதனை நிறுத்தச்சொல்லுங்கள்.

    பிறகு பன்றிக்கறியை எப்படி சாப்பிட்டால், சாப்பிடாவிட்டால் உயிர் பிழைக்கலாம் என்று ஆராயலாம். தெரிகிறதா?

  105. அடடா அடடா என்ன அறவியல் பூர்வமாக கண்டுபிடித்து ஞானத்தாலேயே பன்றி சாப்பிட்டால் நன்றி கேட்ட நோய் வரும் என்று அறிந்து அதை தடை செய்துள்ளார்கள் பாருங்கள் – அறுப்பு நாட்டுக்காரன் அறிவே அறிவு – ஆனால் ஒரே plate ல பத்து பேரு எச்சி சோறு சாப்பிடலாம் ஒரு நோயும் வராது –
    இஷ்டம் போல பெண் சகவாசம் வெச்சுக்கலாம் AIDS வரவே வராது
    சிக்கென் குனியா வந்த சிக்கன சாப்பிட்டால் அரபு நாட்டு காரனுக்கு ஒன்னும் ஆவாது – mad cow நோய் வந்த மாட்டு இறைச்சி சாப்பிட்ட ஒண்ணுமே ஆவாது – அப்படிபட்டவன் தான் அரபு நாட்டு காரன் – பன்றி கரி சாப்பிட்ட வரும் நோய்க்கு மட்டும் எதிர்ப்பு சக்தி இல்ல அரபு நட்டு காரனுக்கு

    சரி பன்றி கரி வேண்டாம்னு யூதர்கள் சொன்னட அட்ட காபி அடிச்ச அரபு நாட்டுக்காரன் அதே யூதர்கள் ஒட்டக கரி சாப்பிட கூடாதுன்னு சொன்னனே அத ஏன் காபி அடிக்கல – ஓஹோ எக்ஸாம் மணி அடிச்சிரிச்சா? டீச்சர் பபெர புடுன்கிட்டாரா

    சரி சீனா காரன் அக்டோபஸ் சாப்பிடறான் – அவனுக்கு அக்டோபஸ் காய்ச்சல் நோய் வரும் போல இருக்கே

  106. “டேனியா சோலிய‌ம்” Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

    “Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites.”

    இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன. டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் “ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்” (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.

    ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் “பொதுவான தவறான கருத்து”.அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை. இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் “ஹைபர்டென்ஷன்”ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை

  107. அந்நிய உணர்வாளன்,
    எங்கே இருந்து எடுத்தீர்கள்? இஸ்லாமிய தளத்திலிருந்தா?

    Infection may be prevented with cooking meat thoroughly, and/or freezing the meat at -10oC for 5 days. Most cases occur because infected food handlers contaminate the food.

    https://en.wikipedia.org/wiki/Taenia_solium

    Prevention and Control
    The best way to control of getting tapeworms is by eating fully cooked pork

    ஒன்று தெரியுமா? நீங்கள் சாப்பிடும் சைவ உணவிலும் புழுக்கள் இருக்கலாம். சரியாக கழுவி நன்றாக வேக வைத்த உணவைத்தான் சைவ உணவாக இருந்தாலும் சாப்பிட வேண்டும். வயற்காட்டிலிருந்து வரும் சைவ உணவுக்கு மனித, விலங்கு கழிவுகளைத்தான் உரமாக போடுகிறார்கள். அதிலிருந்தும் புழுக்களோ அல்லது கிருமிகளோ வரலாம். எல்லாவற்றையும் நன்றாக கழுவி சுத்தமாக்கி நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் வியாதி கிடையாது.

    ஈ-கோலி என்னும் கிருமி இருப்பதால் ஏராளமான salad உணவுகள் பாதிக்கப்பட்டன. வருடா வருடம் ஏராளமானவர்கள் e-coli என்ற கிருமியால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இது சைவ உணவுதான். தக்காளி, லெட்டூஸ் ஆகிய காய்கறிகளிலும் இருக்கும். தக்காளி, லெட்டூஸையும் நிறுத்திவிடுவீர்களா?

    உங்களது பொய்ப்பிரச்சாரத்தை உங்களது தளங்களிலேயே வைத்துகொள்ளுங்கள். நீங்களே எழுதி நீங்களே நம்பிக்கொள்ளலாம்.

    இங்கே இருப்பது இந்து புத்தகமே ஆக இருந்தாலும் கேள்வி கேட்கும், எதிர்வாதம் செய்யும் சுதந்திர மனிதர்கள்.

  108. திரு ஆர்.கோபால் அவர்களே,

    //இங்கே இருப்பது இந்து புத்தகமே ஆக இருந்தாலும் கேள்வி கேட்கும், எதிர்வாதம் செய்யும் சுதந்திர மனிதர்கள்///

    மிகச் சரியான, உண்மையான வரிகள்.

  109. பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

    பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1 N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.

    கடந்த 1930ம் ஆண்டுகளில் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது. நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த வைரஸ் மிக அரிதான ஓர் மரபு அணு தொகுதியை கொண்டிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பெரும் ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போதே இந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிக அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. பின்னர் கடந்த 1965ல் ஐரோப்பாவிலும், 1976ம் ஆண்டில் நியூஜெர்ஸியிலும் இந்நோய் கண்டறியப்பட்டது.

    பன்றிக் காய்ச்சல் பரவும் முறை:

    H1N1 வைரஸ், ஓர் பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு வேகமாக பரவுகிறது. நீண்டகால முயற்சிக்கு பின்னர் மனிதரை தாக்குதகிறது. ஆனால், மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது.
    பன்றிகள் வசிக்கும் இடம் அல்லது பன்றி பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்நோய் பரவி, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. குளிர் மற்றும் பனிக்காலங்களிலுமே மிக அதிகமாக பரவுகிறது. குறிப்பாக இந்த நோய்த் தொற்றுக்குள்ளாகி 5 முதல் 6 நாட்களில் பிறரையும் தொற்றுகிறது.

    பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்:

    உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

    பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய பாதிப்புகளை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 34 ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 816 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

  110. Unarvudaiyavan copies and pastes the samething without thinking..
    And it is allowed to be published..

    Whatever the answer given to him, is not read by Unarvudaiyavan…

    I dont understand why this place is given to such people.

  111. //
    I thought I will not enter into further discussion on merits of vegetarian food but decided to do so as a lot of misinformation is being peddled around.
    //

    That is OK, dr. rama.

    Rest of your post is as usual:

    1.Vegetarianism means healthy
    2.Vegetarianism means intelligence
    3.Vegetarianism means environment friendly

    Are the three major misinformation that has to be eradicated from people’s mind.

    Facts:
    Vegetarians are equally foolish as non vegetarians are.
    Vegetarians are equally un-healthy as non vegetarians are (they also die early, suffer from obesity from excessive carbohydrate intake, cardio vascular diseases, suffer from osteoporosis etc.,)
    Vegetarianism damages environment in many ways as non vegetarian food production does.

    [Edited and published]

  112. இப்படி ஓரு பதிவு இந்த தளத்திற்கு தேவையில்லாத ஓன்று.
    யாரை எதிர்க்க இந்த கொம்பு சீவும் வேலை என்று தெரியவில்லை.
    தயவுசெய்து இப்படிப்பட்ட பதிவுகளை இந்த தளத்தில் வெளியிட வேண்டாம்.

  113. I think vegetarianism is certainly much more ethical without any doubt. It certainly more ecologically protective. Meat eating is certainly responsible for a large amount of greenhouse gases even more than industries. See:
    https://www.youtube.com/watch?v=ZzFC7QP628A

    I think meat eating cannot be imposed on all. It is impossible. But eating meat with restrictions is certainly very advisable for people who cannot resist the temptations. I cannot see why they should avoid pig meat then. But beef must be avoided, in my view, as cow is the symbol of motherhood and sacrifice. I cannot support beef eating. Never.

  114. I want to put certain facts here fair and square; hopefully they will address the different perspectives being brought out in the various posts:
    Firstly, food and Religion have no necessary connection & food choices should NOT be dictated by any Religion. Food is both driven by personal choice and environmental considerations. In my view most of the people opposing this article are either practicing vegetarians or Abrahamic apologists who are unwilling to face facts.
    Secondly, in these days of plentitude we can debate over Vegetarian vs. Non-vegetarian diet choices, and a menu of choices for even a cup of coffee (thanks Starbucks!). But when existential questions are raised, it has been proven in many instances that man’s diet choices can significantly vary. As repulsive as the thought may be, people have known to have become cannibals!!
    Thirdly, if we trace back both the Genesis and Civilizational History of man-kind it will be clear that Non-vegetarianism has & must have pre-dated Vegetarianism. Vegetarianism was never a concept that was known to man. What’s more, until the invention of fire we used to eat Raw meat! Cultivation was purely an invention of Women, who would stay behind in doors when men would go out for hunting. Before the invention of cultivation, several generations have lived and died in the earth. The concept of a food that won’t run or attack you back was the primary selling point for cultivation and vegetarianism. This was also the premise on which private ownership of lands emerged and the possibility of matriarchal societies emerged (that’s a separate point).
    So we can safely say that Vegetarian or non-vegetarian food choices are purely personal and have no religious basis. If a Religion ever comes in the way of your own existence, people will soon desert the idea of Religion itself!! This is perhaps the reason why even vegetarians in India are not necessarily vegans. It’s scientifically and factually proven that a pure vegetarian diet of Fruits, vegetable, lentils and grains doesn’t provide all the essential amino acids. In my view forcing vegetarianism down somebody’s throat is no different to saying ‘Pigs must not be eaten”!!
    Coming to the article itself, I think it has made a valuable contribution to the debate of food choices and Religion. In my view, Religion must serve the elevation of spirit and must confine itself to the Mind-Soul continuum. It should not descend to the level of body and its needs. It’s for every animal (including humans) to determine how they must survive. God forbid a day comes when no vegetarian food is available are all these vegetarians planning to die of hunger?
    Almost every part of the article presents pure facts. There was a claim in one of the posts that Thais have highest levels of cholesterol because of constant eating of Pork. This is nothing more than a fancy story. There are several empirical & experimental studies to prove that Thais cholesterol profile is related to the extensive use of coconut in their diet and not necessarily pork. I also have stayed and travelled extensively in South-east Asia and here babies start eating pork before they even eat rice. Any scientist worth his name would agree that Pigs are the closest proxy to human beings and their Anatomy is quite similar to humans. Hating pigs is almost like hating humans walking on 4 legs.
    The Chinese who as a race extensively consume Pork have one of the healthiest cholesterol profiles in the world and have the longest life-expectancy. Comparatively the Malay (predominantly beef eating Muslims) and Indians have much higher propensity for heart related problems and diabetes. Looking for answers on diet choices in Religion is tantamount to trying to find body temperature with a compass. Both serve different purposes and must not be confused!!
    To set the record straight, I’m a vegetarian by choice and habit. My choice is dictated by aesthetics and necessity rather than by any Religious dictum. Nor am I bound by what my Father or Grandfather practiced. The beauty of my Religion, Hinduism is it has space for self-expression and lends itself to self-correction of course. It’s about time we realized this and not descend into the narrower views of Vegetarianism is better than non-Vegetarianism.
    Thanks to the Author for this article and request “tamil Hindu’ to archive this under ‘Religious fallacies and food choices”.

  115. ஆர்.கோபால் ஜி அவர்களின் பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும் கட்டுரை வாசித்தேன். அடியேன் தீவிர சைவ உணவுக்கொள்கையாலனாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை இது போன்ற க்கட்டுரையை தமிழ் ஹிந்துவில் எதிர்பார்க்கவில்லை.
    ஆனால் ஹிந்துக்களில் பெரும்பாலும் அசைவ உணவு ஏற்பவர்கள் தாம். அதிலும் பெரும்பாலோர் பன்றி மாமிசம் சாப்பிடுவோர் என்பது நிதரிசனமான உண்மை. பன்றி இறைச்சியை உண்ணாதவர்கள் யார் என்று பார்க்கில் உயர்குடியினர். மாமிசம் சாப்பிடும் பிராமனர்கூட வடநாட்டில் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. புலால் உணவை ஏற்கும் வேளாண் சாதியினரிடையே சைவ சமயத்தில் அதிகம் திழைக்கிரவர்கள் பன்றி மாமிசம் தவிர்ப்பதை கண்டிருக்கிறேன். கொங்கு மண்டலத்தில் அண்ணமார் வழிபாட்டில் பன்றி குத்துதல் என்ற வழிபாடு இன்றளவும் சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம்.
    சிவஸ்ரீ. விபூதி பூஷன்

  116. நானும் சுத்த சைவ உணவு தான்,ஆனால் இங்கு பிரசூரிக்கப்பட்டுள்ள இறைச்சி படத்தை பார்த்தால் ட்ரை பண்ணி பாப்போமானு தோணுது..ஹீ ஹீ ஹீ …

    ஆனாலும் நம் இயற்கை உணவு முறையிலேயே உடலக்கு தேவையான எத்தனயோ கனியுப்புக்கள்,விட்டமின்கள்,இதர சத்துக்கள் அடங்கியுள்ளன.தேவையில்லாமல் சரியாக வேகாத பன்றி கறியை உண்பான் ஏன்?பின் நாடபுழு பிரச்சனையில் மாடி கொள்வான் ஏன் ???பன்றிக்கறி மகத்துவத்தை விட தமிழ்இந்துவில் இயற்கை உணவு வகைகள்,அதன் கலோரி பெறுமானம்,சக்தி,அளவுக்கு அதிகமான ஊன் உண்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான கட்டுரைகளை எதிர் பாக்கிறோம்.ஏன் எனில் வேறு எந்த மார்க்கமோ,சமயமோ இயற்கை உணவு,மூலிகை மருத்துவம் பற்றி கூறியது இல்லை.அங்கே இருப்பது அனைத்தும் வானத்துல இருக்குற தேவன் சூப்பர் மேன் மாறி வந்து காப்பாத்துவாரு.நாம நல்லவனோ கெட்டவனோ எதுவும் முக்கியம் இல்லை.செஞ்ச பாவம் எல்லாம் சுனாமி மாறி கழுவிட்டு போய்டும் என்பதே….
    பன்றிகறி,ஹலால் ஜட்கா கறி மனித வாழ்கையின் ஒரு பாகம் என்பது உண்மை.ஆயினும் இந்து மத மேன்மையை பறைசாற்று விதத்திலான படைப்புகளை வெளிக்கொண்டு வருவது இளம் இந்து மக்களின் மனதில் அச்சாணியை உருவாக்கி மனம் எனும் வண்டில் வேறு பாதை/மார்க்கம் போவதை தடுக்கும்…

    நன்றி

  117. நான் கேட்டதில் இந்த வெப்சைட்தில் தான் பன்றி இறைச்சி மனிதனுக்கு நல்லது என்று சொல்ல்கிர்கள். இந்த ஆண்டின் மிகவும் உயர்ந்த அவார்ட் இந்த கட்டு கதை எழுதிய உங்களுக்கு குடுக்குமாறு அரசுக்கு பரீந்துறை செய்கிறேன். ஒரு சின்ன REQUEST தங்களால் மக்களுக்கு நல்லது சொல்ல தெரியவில்லையென்றால் வாயை மூடி இருங்கள்.

  118. பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.
    ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே…
    “டேனியா சோலிய‌ம்” Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.
    “Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites.”
    இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
    டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் “ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்” (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான். ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் “பொதுவான தவறான கருத்து”.அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
    இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக், ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் “ஹைபர்டென்ஷன்”ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
    நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
    ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

  119. After viewing this article, I have removed the URL of this website from the ‘Favourites’ List.
    ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’

  120. This article is published wholly to irritate the muslim religion. Now i understand you were a 100% pakka hindu brain washer just like christian and islam brain washer. You people will live until ignorance prevail in our society. shame on you….

  121. @ NVS

    I too my friend. i deleted this site from favarite list which i added just an hour before.

  122. Hindu society is a democratic country. We are evolving to a higher level of culture. Generally Savia Food is good for health and temperament.All discussion should stop here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *