முகப்பு » அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொருளாதாரம்

நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03

அச்சிட அச்சிட

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.

பிரதமர், ஆளும் கட்சி மற்றும் மத்திய அரசாங்கம்:

ஒரு சில பத்திரிக்கைகள் சொல்லுவது உண்மையானால்:

இந்தியாவை ஆளும் மந்திரிசபையில் ஒரு முக்கியமான துறையின் ஒரு முக்கியமான மந்திரி இந்தியாவின் முக்கியமான வளங்களில் ஒன்றை தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தன் கட்சித் தலைவரின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுகிறார். எதுவுமே நடவாதது மாதிரி நான் எல்லாமே பிரதமருக்குத் தெரிவித்தே நடந்து கொண்டேன் என்றும், தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்றும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், பிரதமருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்து விடவில்லை என்றும் ஆணவத்துடனும், திமிருடனும், அலட்சியத்துடனும் யாரும் தன்னை அசைத்து விட முடியாது என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் ஊழல்களை இந்த மந்திரி இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றே பத்திரிக்கை தகவல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

three_monkeys_507515மந்திரிசபையில் உள்ள மந்திரிகளின் செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்த வேண்டிய பிரதமரோ இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருந்த பொழுதிலும், அன்றாடம் பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் அவரிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக் கொண்ட போதும், அவற்றையெல்லாம் காணாதவர் போல கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு செயல் படுகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தனக்குக் கீழே செயல் படும் மந்திரிகளின் ஊழல்களை கண் கொண்டு பார்க்க மாட்டேன், காது கொண்டு கேட்க்க மாட்டேன், வாய் கொண்டு பேச மாட்டேன் என்று காந்தியின் மூன்று குரங்குகள் போல அமைதி காக்கிறார் பிரதம மந்திரி.  அதைவிடப் பெரிய தவறாக ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது: எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஊழல் மந்திரி தவறு செய்யும் பொழுதெல்லாம் தனக்குக் கீழேயுள்ள புலனாய்வு அமைப்பு தன் கடமையைச் செய்ய விடாமலும் அதே பிரதமர் தடுத்து வருகிறார்.

பிரதம மந்திரியின் ஆளும் கட்சியோ தன் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்து மாட்டிக் கொள்ளும் பொழுது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே அதன் குறியாக இருக்கிறது. அதற்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது.

காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் சிங்வி, ராஜா மீது எவ்வித குற்றசாட்டுக்கும் ஆதாரமே இல்லையே, எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழுப்பூசணிக்காயையும் கொஞ்சம் கூட மனசாட்சியும் நேர்மையும் இன்றி சோற்றில் மறைக்கிறார்.

நாடு முழுவதும் தீவீரவாதமும், நக்சல் பயங்கரமும் நடந்தாலும் அவற்றையெல்லாம் அடக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், தீவீரவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் அடுத்த தேர்தலில் தன் ஓட்டு வங்கியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக அதன் மந்திரிசபையின் முக்கிய மந்திரி ஒருவர் அடிக்கும் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

ஆக பயங்கரவாதிகளிடம் மட்டும் இன்றி கொள்ளைக்காரர்களிடமும் காங்கிரஸ் கட்சி அனுசரணையாக இருக்கவே விரும்புகிறது. இப்படியாகப் பட்ட ஒரு கட்சியையும், பிரதமரையும் நம்பி ஓட்டுப் போடும் மக்களும் இருக்கும் வரை இந்த தேசத்திற்கு விமோசனமே கிடையாது.

அரசு இயந்திரங்கள்:

ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர் கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே அரசு இயந்திரத்தை இந்த காங்கிரஸ் அரசால் பயன் படுத்தி வருகிறது. ஆ.ராஜாவை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று தடுக்கும் அதே பிரதமரே, குஜராத்தில் மோடியின் அரசாங்கம் மீது அதே சிபிஐ அமைப்பை ஏவி விட்டுப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள்: corruption2

ஊடகங்கள் சொல்லுவதைப் பார்த்தால், பொதுத்துறை நிறுவனங்களான டாடா போன்ற மக்கள் நம்பிக்கை பெற்ற பெரு நிறுவனங்கள் கூட நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களை வைத்துச் செயல் பட்டது அவர்கள் பெற்ற நன் மதிப்பை குலைத்து விட்டது என்று தெரிகிறது.

ஆளும் கட்சியிடம் தங்கள் நிறுவனங்களுக்கான சலுகைகளைப் பெற இடைத் தரகர்களைப் பயன் படுத்துவது சகஜமான ஒரு காரியம். என்றாலும் கூட பிரதமரின் உரிமையில் கூடத் தலையிடும் கீழ்த்தரமான வேலைகளை அத்தனை பெரு நிறுவனங்களும் செய்து வருகின்றன என்பது இந்த ஊழல் விசாரணை மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ராஜாவின் அராஜகங்களை எதிர்த்து எஸ்டெல் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கல் முறைகேடானது என்று வழக்குத் தொடர்ந்தது.

ஆனால் அந்த நிறுவனத்தையும் மிரட்டி வழக்கு வாபஸ் வாங்க வைக்கப் பட்டது. அந்த நிறுவனத்தின் பிற லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியதால் வேறு வழியின்றி அந்த நிறுவனமும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இருந்தாலும், ராஜா மிரட்டியதால் மட்டுமே வாபஸ் வாங்க நேர்ந்தது என்ற உண்மையை அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்:

எதிர்க்கட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 1 லட்சம் கோடி ரூபாய் என்பது பிரமாண்டமான ஒரு ஊழல். இந்த ஊழலை பிரதான எதிர்க்கட்சியான பாஜக எப்படி கையாண்டிருக்க வேண்டும்? அது நினைத்திருந்தால் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து இந்த 2ஜி ஏலமே நடக்க விடாமல் செய்திருக்கலாம். அத்வானி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருக்கலாம். ஆனால் அதை எதையுமே செய்யாமல் சம்பிரதாயமான பலவீனமான ஒரு எதிர்ப்பையே இன்று வரை காட்டி வருகிறது.

60 கோடி ரூபாய் போஃபோர்ஸ் ஊழலின் பொழுது வானமே இடிந்து விழுந்து விட்டது போல ருத்ரதாண்டவம் ஆடிய இடதுகளும் இன்ன பிற கட்சிகளும் அதை விட ஆயிரம் மடங்குக்கும் மேலான இந்த ஊழலில் லேசாக முனகுவதும் அவ்வப்பொழுது பிரதமருக்கு லெட்டர் போடுவதும் மட்டுமே தங்கள் கடமை என்று ஒதுங்கிக் கொள்கின்றன.

நாடு தழுவிய போராட்டம் எல்லாம் கிடையாது. நாளைக்கு தமிழ் நாட்டில் பிச்சையாகக் கிடைக்கும் நான்கு எம் எல் ஏ சீட்டுக்களும் இரண்டும் எம் பி சீட்டுக்களும் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

தமிழ் நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக மட்டுமே இந்த ஊழலை தன் வாழ்க்கைப் பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி வருகிறது. அதுவும் ஊழல் செய்தது திமுக என்பதினால் மட்டுமே இந்த எதிர்ப்பு.

இதே ஊழலை லல்லுவோ, முலாயமோ செய்திருந்தால் அதிமுக கவலைப் பட்டிருக்காது.

ஜெயலலிதா இந்த ஊழலை கடுமையாக எதிர்த்து வருகிறார். அறிக்கைப் போர் நடத்தி வருகிறார். இருந்தாலும் அவரது முந்தைய ஊழல்கள் காரணமாக அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற கேள்வி உடனே எழுந்து விடுகிறது. ஜெயலலிதா தனது கூடா நட்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகச் செய்ய நேர்ந்த ஒரு சில ஊழல்கள் இந்த மாபெரும் ஊழலுடன் ஒப்பிடும் பொழுது வங்கிக் கொள்ளையின் முன்னால் ஒரு சிறிய பிக்பாக்கெட் திருட்டுப் போன்றது. ஆனால் அவரது பெயர் கெட்டதும், அவர் மீதான நம்பிக்கை போனதும் போனதுதான்.

அரசியலில் செய்யும் சிறு தவறுகள் கூட ஒருவரது அரசியல் எதிர்காலத்தையே அழித்து விடும் என்பதை ஜெயலலிதா இன்று வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

karunanidhi-photo-family-treeஊடகங்கள் தரும் இந்தச் செய்திகளின் காரணமாக  கீழ்க்கண்ட கருத்து பொது மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது:

“சுயநல காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் அதே நேரத்தில் ஆட்சியில் இருக்கும் திமிர் காரணமாக தாங்கள் எந்த ஊழலையும் செய்யலாம், எந்தக் கொலை பாதகங்களையும் செய்யலாம், யாரும் இந்தியாவில் இவர்களைத் தட்டிக் கேட்க உரிமையில்லை என்ற ஆணவத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியும் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தாரும் செயல் பட்டு வருகிறார்கள்.”

தனது கொள்ளையை மறைக்க, தன் குடும்பத்தைப் பாதுகாக்க எவ்வளவு கீழ்த்தரமாகவும் தான் நடந்து கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் கருணாநிதி நிரூபித்தே வருகிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அவரிடமிருந்து நேர்மையையும், கண்ணியத்தையும், நாட்டுப் பற்றையும், உண்மையையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஒரு காலத்தில் மாநில சுயாட்சி கேட்டுப் போராடிய அதே கருணாநிதி, ஒன்றிணைந்த இந்தியாவை எதிர்த்த அதே கருணாநிதி, இன்று அதே ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளை அடிக்க முடிந்திருப்பது இந்திய தேசிய உணர்விற்குக் கிடைத்த மாபெரும் அடி. இந்தக் கொள்ளையின் முழுப் பயனும் இவரது குடும்பத்திற்கும் கட்சிக்குமே சென்றிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ராஜா ஒரு கருவி மட்டுமே என்பதை விபரம் தெரிந்த அனைவரும் நன்கு அறிவர்.

கருணாநிதி ஊழல் செய்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. சர்க்காரியா விசாரணையின் பொழுது கருணாநிதி செய்த ஊழல்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்டன. பின்னர் இதே காங்கிரஸ் கூட்டணியால் அவை மன்னிக்கவும் பட்டன.

karunanidhi_575035அப்பொழுது கருணாநிதி கேட்டார் “தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்று. புறங்கையை நக்கி, முழங்கை வரை நக்கி, முழுக்கையையும் நக்கி இன்று ஒட்டு மொத்த தேனையும் குடித்து விட்டு வெறும் புறங்கையில் வழியும் தேனை மட்டும் மக்களுக்கு எச்சில் காசாக, பிச்சைக் காசாக, ஓட்டுப் போட லஞ்சப் பணமாக எறிந்து கொண்டிருக்கிறார். புறங்கையை நக்கியதெல்லாம் அந்தக் காலம்; இப்பொழுது முழுத் தேனையுமே கடத்தி விடுகிறார்கள்.

இப்படிக் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தைக் கொண்டுதான் கருணாநிதியால் தமிழ் நாட்டில் ஒரு நாலு கோடி வாக்காளர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முடிகிறது. இந்த ஊழல் மூலம் கிட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளில் வெறும் ஒரு 4000 கோடி ரூபாய்களை மட்டுமே தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்கரிசியாக அளித்து அவர்களின் ஓட்டுக்களை இவர் எளிதாகப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட முடியும். மீண்டும்.

இந்த ஊழலில் கிடைத்த வருவாயில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து மீண்டும் மக்களுக்குக் கொடுக்கும் லஞ்சமாக முதலீடு செய்து இதை விட பெரிய ஊழலில் இதை விட பெரிய தொகையை அறுவடை செய்து விடுவார்கள்.  இதை விட பெரிய ஊழலைச் செய்து இதை விட அதிகமாகக் கொள்ளையடிக்கலாம். இது ஒரு விபரீத சுழற்சி. இது போன்ற பெரும் ஊழல்கள் மாபெரும் ஜனநாயகப் படுகொலையில் முடிந்து தேர்தலைக் கேலிக் கூத்தாகச் செய்து விடும்.

இன்று இதை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த ஊழல்கள் எமனாக முடியும்.

தலித்துகள்:

dalits_exploitedதங்களது சுயநலக் கொள்ளைகளுக்கு அரசியல்வாதிகள் தலித்துகளை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகளையும், தாங்கள் பெற வேண்டிய தாக்குதல்களையும் இந்தக் கேடயங்கள் அனுபவிக்கும்படி செய்து விடுகின்றனர். கிள்ளுக் கீரை போல தலித்துகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

அதனால்தான் இந்த ஊழலில் ராஜாவைக் காக்கும் பொருட்டு மிகக் கேவலமான, அசிங்கமான ஒரு காரியத்தையும் இந்தக் கருணாநிதி செய்துள்ளார். அதுதான் “தலித் என்பதினால் ஆதிக்கச் சக்திகள் ராஜாவை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது.

கருணாநிதி சொல்வது உண்மையானால் ஏன் ஜெயலலிதாவின் மீது டான்சி முறைகேட்டில் வழக்குப் போட்டார்கள்? ஏன் நரசிம்ம ராவை குற்றம் சாட்டினார்கள்? எதனால் ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் துரத்தித் துரத்தி அடித்தார்கள்? சசி தரூர் ஏன் பதவி விலகினார்? இவர்கள் எல்லாம் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அல்லவா? இவர்கள் எல்லோரும் தலித் அல்லவே? தலித் என்பதற்காக பாலகிருஷ்ணனுக்கு தலைமை நீதிபதி பதவி கிட்டாமல் போனதா? மீரா குமாருக்கு சபாநாயகர் பதவியை யாராவது எதிர்த்தார்களா?

கருணாநிதி பரப்பும் இந்த அவதூறை முதலில் தலித்துக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப் பட்ட பெருத்த அவமானம் இந்தக் குற்றச்சாட்டு.

பத்திரிக்கைகள்/தொலைக்காட்சிகள்:

இந்த விஷயத்தில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து வரும் விதம் அரசியல்வாதிகளின் செயலை விடக் கேவலமாக இருக்கின்றது. முக்கியமாகத் தமிழகப் பத்திரிகைகள் இந்த ஊழலைக் கண்டு கொள்ளவேயில்லை. எந்த தினசரிகளிலும் இது குறித்த முழு விபரமோ செய்தியோ வெளியிடப் படுவதில்லை. censorship-791503

தமிழ் பத்திரிகைகளையும், டிவிக்களையுமே நம்பி தங்கள் பொதுப் புத்தியை வளர்த்துக் கொள்ளுபவர்களாகத்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணோ இந்தக் கொள்ளையை மூடி மறைப்பதன் மூலம் இந்தக் கொள்ளைக்குத் துணை போய்க் கொண்டிருக்கின்றது.

சென்னை விமான நிலையத்தில் ராஜாவைக் கேள்வி கேட்ட பெண் நிருபர்களை ராஜாவும் அவரது அடியாட்களும் பிடித்துத் தள்ளி தாக்கியிருக்கிறார்கள்.

இருந்தாலும், தமிழக அரசின் அச்சுறுத்தல்களுக்கும் அராஜகங்களும் பயந்து நடுங்கிக் கொண்டும், அரசு வீசும் எலும்புத் துண்டுகளான அரசு விளம்பரங்களுக்கும் ஆசைப் பட்டுக் கொண்டும் நம் பத்திரிகைகள் இந்த ஊழலை ஒட்டு மொத்தமாக மூடி மறைத்து விட்டன என்பதே உண்மை.

தமிழ் மக்களின் இதயத் துடிப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விகடன் குழுமத்தின் ஜீனியர் விகடன் பத்திரிகையில் இந்த ஒட்டு மொத்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளியிடாமல் இதில் சம்பந்தப் பட்டுள்ள கனிமொழி, ராஜாத்தி அம்மையார் ஆகியோரின் பெயர்களை மறைத்து விட்டு மலிவான ஒரு கட்டுரையை மட்டும் வெளியிட்டு தன் தாழ்ந்த தரத்தை மேலும் தாழ்த்திக் கொண்டிருக்கிறது என்று மற்ற ஊடகங்களோடு ஒப்பிடுபவர்கள் எண்ணுகிறார்கள்.

narsimha_garbage_can_20070820ஒரு நரசிம்மராவுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் கொடுக்கப் பட்டது என்ற விவகாரத்திலும், ராஜீவ் காந்திக்கு 60 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டது என்ற ஊழலிலும், ஜெயலலிதாவுக்கு நூறு செருப்புக்கள் இருந்தன என்பதைக் காட்டுவதிலும், நித்யானந்தாவின் அந்தரங்கங்களையும் காட்டுவதில் பேரார்வம் காட்டிய நம் தமிழகப் பத்திரிகைகள் ஊழல்களுக்கு எல்லாம் தாயான இந்த 1 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் பொருத்தவரை தங்களது சகல அங்கங்கங்களையும் பொத்திக் கொண்டு இருக்கின்றன. இது இந்த ஊழலுக்கு நம் பத்திரிகைகளும் விலை போன கொடுமையைத்தான் காட்டுகின்றன.

இந்திய அளவில் இந்துத்துவ தீவீரவாதத்தை (?!) அழிக்க அவதாரம் எடுத்துள்ள செக்யூலரிஸ்டுகளான பரக்கா தத் என்ற டெலிவிஷன் பத்திரிகையாளரும், வீர் சங்வி என்ற பத்திரிகையாளரும் இந்த ஊழலில் ராஜாவை மந்திரியாக நியமிக்கும் பொருட்டு கனிமொழியின் சார்பாக தரகு வேலை செய்திருப்பதாக சிபிஐ விசாரணை உறுதிப் படுத்துகிறது. நரேந்திர மோடியைத் தூக்கில் போட வேண்டும் என்று டெலிவிஷனில் காட்டுக் கூச்சல் போடும் பரக்கா தத்தின் நேர்மை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கேவலம் காசு வாங்கிக் கொண்டு தரகு வேலை செய்யும் ஒரு நான்காம் தர பெண்மணிதான் இவ்வளவு நாட்களும் செக்குலார் வேடம் போட்ட இந்த பரக்கா தத் என்பது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இருந்தாலும் எந்தவித வெட்கமோ அவமான உணர்வோ தார்மீகப் பொறுப்போ இல்லாமல் ஒரு கேவலமான ப்ரோக்கர்களாக, காசு வாங்கிக் கொண்டு ஆளை அமர்த்தித் தரும் தரகர்களான பரக்கா தத்துகளும், வீர் சங்விகளும் இன்னமும் தங்களை இந்து வெறியில் இருந்து பாரதத்தைக் காக்க வந்த பரமாத்மாக்களாகக் காட்டிக் கொண்டு டெலிவிஷனில் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் இந்திய மக்கள் பார்த்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஊடகங்கள்:

தமிழ் நாட்டின் பத்திரிகைகளும், டிவிக்களும் தான் கடும் மொளன விரதம் அனுஷ்டிக்கின்றன என்றில்லை; தமிழ் மக்களின் அறிவு ஜீவிக் குரலாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பெரும்பாலான வலைப்பதிவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.

images3நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டும் என்று கதறிய தமிழ் வலைப்பதிவர்கள், பார்வதியை சிகிச்சைக்கு அனுமதிக்காததற்குக் கூச்சல் போட்ட தமிழ் வலைப்பதிவர்கள், ஒரு சினிமா வெளிவந்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையைப் போய் எழுதித் தொலையும் தமிழ் ப்ளாகர்கள், அறிவு ஜீவித் தனம் என்ற போர்வையில் இனவெறியைப் பரப்பும் வலைப் பதிவர்கள், தமிழ் நாட்டின் முதல்வரும் அவர் குடும்பமும் ஒரு தமிழ் நாட்டு மந்திரி மூலமாக 1 லட்சம் கோடி கொள்ளையடித்தது பற்றி வசதியாகக் கண்டு கொள்ளவேயில்லை.

இதை விடக் கொடுமை தமிழில் கொஞ்சம் சிந்தித்து எழுதக் கூடிய ஒன்றிரண்டு வலைப்பதிவர்கள்கூட இதில் ராஜா ஊழல் செய்திருக்க எந்த வித முகாந்திரமுமே இல்லை என்று ஊருக்கு முன்னால் ராஜாவுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி விட்டிருந்தார்கள்! இன்று இவ்வளவு விஷயங்கள் வெளி வந்த பின்னால் முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இட்லி வடை என்ற பதிவர் ஒருவர் மட்டும் செஸ் போட்டிகளுக்கு நடுவே இந்த ஊழல் சம்பந்தமான ஏதோ நாலு பத்திரிகைச் செய்திகளைப் போட்டு ஒப்பேத்தியிருக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஊழல் நாட்டில் நடக்கவேயில்லை.

தமிழ் ப்ளாகர்களுக்கு எல்லாம் இன்னும் நித்யானந்தாவைத் தூக்கில் போட வேண்டுமா அல்லது கழுவில் ஏற்ற வேண்டுமா என்றே இன்னும் தீர்மானம் செய்து முடியவில்லை! இதுவே ஒரு ஜெயலலிதா ஒரு லட்சம் வாங்கியிருந்தால் இன்று தமிழ் இணைய உலகமே பற்றி எரிந்திருக்கும்.

இந்திய பொது மக்கள்: 9973tressduncecap2

இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். கொள்ளை போவது தங்கள் சொத்து என்பதை அறியாமலேயே இந்தக் கயவர்களுக்குப் போய் மீண்டும் மீண்டும் தங்களது ஓட்டுக்களைப் போட்டு தங்களுக்குத் தாங்களே மக்களும் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஜனநாயகம் என்னும் யானை தன் தலையில் தானே சகதியை அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.

ஆக மத்தியிலும் மாநிலத்திலும் தங்களை ஆளும் கட்சிகள் தங்களது பணத்தை, அதுவும் 1 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்து விட்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் மீண்டும் அதே கொள்ளைக்காரர்களிடம் காசு வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராகி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்காகக் இவர்களுக்கு கொடுக்கப் படும் பிச்சைக்காசு இவர்களிடமிருந்தே திருடப் பட்ட பணம் என்பதே தெரியாமல் அற்பப் பணத்திற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும் தங்கள் எதிர்காலத்தையும் தன்மானத்தையும், பாதுகாப்பையுமே அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராஜா தன் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றிருந்த பொழுது கிராம மக்கள் எல்லாரும் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் நாள் முழுவதும் இல்லை என்று அவர் காரை மறித்துப் போராடியிருக்கிறார்கள். கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பவரின் சொந்த மக்களுக்குக் குடிக்க நீரில்லை, மின்சாரம் இல்லை. கடும் கோடை வெப்பத்தில் நீரில்லாமல் மின்சாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜா தனது ஏ சி சொகுசுக் காரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, போராடிய மக்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தகுதியில்லாத கயவர்களுக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் நடக்கும் என்பதை மக்கள் இனியாவது உணர வேண்டும். இனியாவது மக்கள் திருந்த வேண்டும்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு ஒன்றே இது போன்ற ஊழல்களின் ஊற்றுக் கண், அடிப்படை. அவர்கள் விழித்துக் கொள்ளாத வரை ராஜாக்கள் இந்தியாவைச் சுரண்டுவது நிற்கப் போவதில்லை.

பாராட்டுதலுக்கு உரிய சிலர்:

gopikrishnan-photoஇந்த விஷயத்தில் ஆரம்பம் முதலாகவே மிகுந்த பொறுப்புணர்வுடனும், பத்திரிகையாளருக்குரிய கடமையுணர்வுடனும், தேசத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் புலனாய்வு செய்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவித்த ஒரே பத்திரிகை கல்கத்தா மற்றும் டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான  “தி டெய்லி பயனீர்” மட்டுமே.

அதன் புலனாய்வுப் பிரிவு பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் தான் இந்த ஊழலை உலகத்திற்கு அம்பலப் படுத்தியவர். இதுதான் உண்மையான புலனாய்வு முயற்சி.

பயனீர் பத்திரிகை உடனடியாக இந்த ஊழல் குறித்தான பதிவுகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீரா ராடியாவின் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். பயனீர் ஆசிரியர், “நாங்கள் சொல்வது சத்தியம், கோர்ட்டில் சந்திக்கத் தயார், மிரட்டலுக்குப் பணிய முடியாது” என்று அறிவித்து விட்டார்.

ஆட்சி தந்த ஆணவமும், செல்வாக்கும், ரவுடிகளின் துணையும், அரசு இயந்திரங்களும், பணமும் கொண்ட மாபெரும் ஆதிக்க சக்தியான ஒரு ஆ.ராஜாவை ஒரு சிறிய பத்திரிகையாளரான கோபிகிருஷ்ணன் அச்சமின்றி துணிவுடன் இந்த அளவு எதிர்த்துப் போராடி உண்மையை வெளிக் கொணர்ந்தது இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ஒரு சாதனையே. பயனீர் நாளிதழ் வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய சேவையை இந்தியாவுக்குச் செய்துள்ளார்கள். அவர்களது துணிவுக்கும், கடமையுணர்வுக்கும் ஒட்டு மொத்த தேசமும் கடன் பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் இந்திய ஜனநாயகத்தின் மீது நமக்கு இன்னமும் ஒரு நம்பிக்கை இழை மிச்சம் இருக்கின்றது. வாழ்க அவர்கள் பணி.

(இந்தக் கட்டுரையும்கூட பெரும்பாலும் பயனீர் பத்திரிகையின் கட்டுரைகளின் அடிப்படையிலேயே எழுதப் பட்டுள்ளது. பயனீர் பத்திரிகையைப் பாராட்டி உங்கள் கருத்துக்களை அனுப்பி அவர்களை இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பயனீர் பத்திரிகையின் இணைய முகவரி:  http://www.dailypioneer.com.

திரு. ஜே. கோபிகிருஷ்ணன் அவர்களின் வலைப் பக்கத்தில் இந்த ஊழல் சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் விரிவாகப் படித்தறியலாம். அவருடைய வலைப்பதிவு இங்கே. ராஜாவின் ஊழலைத் தவிர அன்புமணி ராமதாஸின் ஊழல், இந்திய ராணுவ ஊழல்கள் போன்ற பல்வேறு ஊழல்களை அம்பலப் படுத்திய அவரது புலனாய்வு கட்டுரைகள் பல அவரது வலைத் தளத்தில் படிக்கக் கிட்டுகின்றன.)

ஹெட்லைன்ஸ் டுடே டி வி, நாட்டை விலை பேசும் தரகியான நீரா ராடியாவோடு ராஜாவும் கனிமொழியும் தனித்தனியாக நடத்திய உரையாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை பதிவு செய்தது மத்திய அரசின் பொருளாதார உளவுப் பிரிவு.

இவர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்த டேப்புக்களை இந்த டி வி எப்படியோ பெற்று வெளியிட்டு விட்டது. இந்த உரையாடல்களை வெளியிடக் கூடாது என்று நீரா ராடியா கோர்ட்டுக்குப் போய் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ராஜா அப்படிப் பேசவேயில்லை என்று மறுக்கிறார்; ஆனால் ராடியாவோ நாங்கள் பேசியதை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

சுயநலக் காரணங்களுக்காகவே இருந்தாலும் கூட, அதிமுக மட்டும் எதிர்க்காமல் போயிருந்தால் இந்த ஊழல் நடந்தது கூட எவருக்கும் தெரியாமல் போயிருந்திருக்கும். அந்த வகையில், அதிமுகவின் எதிர்ப்பு செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

three-wise-monkeys

எனது நோக்கம் என்ன?

எனது இந்தக் கட்டுரையின் நோக்கமே இந்திய மக்களிடம் ஒரு சிறிய விழிப்புணர்வை ஒரு மிகச் சிறிய அளவில் ஒரு சிலரிடமாவது உருவாக்குவது மட்டுமே.

சங்கை ஊதிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் காதும் கேட்காமலா போய் விடும் என்ற ஒரே நம்பிக்கையினால் மட்டுமே கோபிகிருஷ்ணன்களும், பயனீர்களும், தமிழ் ஹிந்துக்களும் இன்றும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்யப் பட வேண்டும்?

மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு சோனியாவால் ஆட்டுவிக்கப் படும் இந்த ஆட்சி இருக்கும் வரை ராஜா தண்டிக்கப் படப் போவதில்லை. அவர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மீட்கப் படப் போவதும் இல்லை.

barsஆனால் என்றாவது ஒரு நாள் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட ஒரு அரசு வருமானால், இந்த ஊழலுக்கு முதல் காரணமான தரகர் நீரா ராடியா, ஆ.ராஜா, அவர் கொள்ளையடித்து கப்பம் கட்டிய அவரது கட்சித் தலைவர், அவரது துணைவி, மகள், பிற குடும்பத்தினர், ராஜாவுக்கு உதவிய மற்ற தரகர்கள், பத்திரிகையாளர்கள் பரக்காதத், சங்வி, ராஜாவுக்கு உதவிய அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரையும் விட இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் விசாரிக்கப் பட்டு அவர்களது உடந்தைகள், ஊழல்கள் இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டு, மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்.

அமெரிக்கா போன்ற தேசங்களில் இவை போன்ற ஊழல்கள் வெளியில் வந்து விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப் படும் பொழுது சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான கடும் தண்டனை அளிக்கப் படுகிறது. அதே போன்ற தண்டனைகள் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை மக்கள் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு மக்களின் சக்தியினால் மட்டுமே தண்டனை அளிக்க முடியும். அதைச் செய்வது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

ஒரு வேளை எதிர்கட்சிகளின், கோர்ட்டின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேறு வழியின்றி ராஜா பதவியிறங்கினாலோ அல்லது வேறு துறைக்கு மாற்றப் பட்டாலோ கூட அடுத்த ஆட்சி இவரது குற்றத்தை நிரூபித்து இவருக்கும் கூட்டாளிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும். இவர் கொள்ளையடித்த பணத்தை உலகின் எந்த மூலையில் ஒளித்து வைத்திருந்தாலும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து இந்தியாவின் அடிப்படை வசதிகளை, கல்வியை, கட்டுமானங்களை வலுப்படுத்தப் பயன் படுத்த வேண்டும்.

இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

democracy1

நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.

இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு 1 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தப் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப் படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்?

சிந்தியுங்கள்.

(முற்றும்)

 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

 

44 மறுமொழிகள் நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03

  1. Rama on May 19, 2010 at 9:34 am

    My sincere thanks to the author for this fantastic artcile. I also take off my hats to the courageous jouranilst Mr. Gopikrishnan and Daily Pioneer.
    My dream:
    India will be taken over by a truely patriotic Indian with interest of the country only at his/her heart. He/She will make the following changes:
    .The parliment,state and central, all will be dissolved. Emergency rule will be imposed and all politicians of all colours will be arrested.All wealth belonging to the politicians and their family/friends will be consficated, including all the money in Swiss banks and other accounts. The onus then will be on the politicians to prove that the money genuinley belong to them, say within 3 months. Otherwise they will be summarily executed in public.( I am harsh here but why waste more money in feeding these scoundrels for years from the public purse by keeping them in prision)
    India will be renamed as Bharath.
    Conversions will be banned and all Missionaries will be booted out of India.
    Islam will have to evolve and fit in with present Indian way of life. So, all passages pertaining to Kaffirs ( Hindus, etc ) will be taken off from Koran. There will be a geniune attempt to intergrate all Muslims back into Indian cullture and not to the alien Arabic culture.
    All castes in all religions will be banned.. All help will be given to all economically backward people , irrespective of caste/creed. All reservations will be abolished.
    True Infdian history written by native scholarly Indians will be taught at school.
    Democracy will be reestablished after all these goals ( or at least most) had been obtained.
    I can only dream on and others can put their input into these dreams.

  2. ஜடாயு on May 19, 2010 at 11:17 am

    அட்டகாசமான அலசல். தமிழில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எழுதப் பட்ட மிகச் சிறந்த கட்டுரை இது என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

    விஸ்வாமித்ரா சொல்வது போன்று அனைத்து ஊடகங்களும், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் இந்த பூதாகாரமான ஊழலைப் பற்றி வாய்திறக்காமல் இருப்பது வெட்கக் கேடு, பெரும் தலைகுனிவு… போபர்ஸ் ஊழல்களைக் கண்டு நாடு கொதித்தெழுந்த சூழல் எல்லாம் கடந்த காலமாகியே போய் விட்டது. அந்தத் தீப்பொறி அங்கங்கே இன்னும் கோபிகிருஷ்ணன்களாக, பயனியர்களாக எரிந்து கொண்டிருக்கிறது. அது பெருநெருப்பாகட்டும்!

  3. arasaivadivel on May 19, 2010 at 1:05 pm

    இன்னமும் எருமை மாட்டுதோலுடன் சூடு சுரணை இல்லாமல் சுயநலத்துடன் வாழ்ந்தொமேனால் வரும்கால சந்ததிகள் நம்மை மன்னிக்காது.இந்த கட்டுரையை பிரதிஎடுத்து பொதுமக்களிடம் விநியோகித்து
    விழிப்புணர்வு ஊட்வேண்டும்.மேடைதோறும் பேசவேண்டும்.இந்த ஊழலை
    மூடிமறைக்கும் ஊடகங்களை புறம்தள்ளி,உண்மையை மக்கள் மத்தில்
    கொண்டு செல்வது நம் கடமை………..வடிவேல்சிவம்

  4. அ. நம்பி on May 19, 2010 at 3:56 pm

    ஐயா விஸ்வாமித்ரா அவர்களே,

    ஒரு லட்சம் கோடி ரூபாய்தானே, இதற்குப் போய் இப்படி அலட்டிக்கொள்கிறீர்களே? என்ன ஒரு கோடி கோடி ரூபாயா போய்விட்டது?

    ஒரு சுதந்திர நாட்டில் (அதுவும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என சொல்லப்படும் நாட்டில்) ஒரு லட்சம் கோடி ஊழல் செய்யக்கூட குடிமகன் ஒருவருக்கு (அமைச்சரும் குடிமகன்தானே?) உரிமை இல்லையா?

    இந்த உரிமைகூட இல்லையென்றால் அப்புறம் என்ன புடலங்காய்ச் சுதந்திர நாடு?

    ஊழல் செய்வது குடிமக்களின் அடிப்படை உரிமை; இந்த உரிமையை மதித்து நடந்துகொள்வதுதான் சுதந்திர நாட்டுக் குடிமக்களின் இலக்கணமாகவும் பண்பாடாகவும் இருத்தல்வேண்டும்.

    குடிமக்களின் ஊழல் செய்யும் அடிப்படை உரிமை வாழ்க; வளர்க!

  5. gopal on May 19, 2010 at 4:48 pm

    தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் எல்லாம் கருணாநிதியிடம் விலை போய்விட்டன.குசுப்பு கருணாநிதியிடம் போய் சேர்ந்து விட்டதை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.கசாப் தி.மு.க வில் சேர்ந்தால் அவனுக்கு பொது மன்னிப்பு கிடைக்கும் என்று ௦ ஒரு வதந்தி உலவுகிறது. இந்த நிலையில் நம் நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

  6. snkm on May 19, 2010 at 5:41 pm

    நன்றி! இது போன்ற மக்களை விழிப்புறச் செய்யும் செயல்களில் எதிர்க் கட்சிகள் ஈடு பட வேண்டும்! திரு கோபாலகிருஷ்ணன், தமிழ் ஹிந்து , சுப்பிரமணியம் சுவாமி, மற்றும் விச்வமித்ரா உங்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்! இந்திய மக்கள் விழிப்புற வேண்டிய தருணம் இது! இனியும் தாமதித்தால் நாட்டை அடமானம் வைத்து விட்டு இவர்கள் அனைவரும் வேறு எங்காவது சென்று விடக் கூடிய அபாயமும் உள்ளது!
    விச்வமித்ரா உங்கள் பெயருக்கு ஏற்றாற்போல் தாங்கள் உலகுக்கே நன்மை புரிந்து உள்ளீர்கள்! உலகுக்கு நண்பனான உங்களை அடையாளம் காட்டிய தமிழ் ஹிந்து வுக்கு நன்றிகள் பல!

  7. Rajaraman on May 19, 2010 at 5:57 pm

    படிக்க படிக்க வயிறு எரிகிறது.. நம் நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது.. விமோசனமே இல்லையா..

  8. reality on May 19, 2010 at 8:52 pm

    90களில், வை கோபாலசாமி, கருணாநிதிக்கு எதிராகப் போனபோது, கோபாலசாமியை “வயசான காலத்துல, நிம்மதியா ஆள விடாம, கெடுக்கிறானே, அவுர் போன அப்புறம், இவன் வர வேண்டியதுதானே’, என்று கூறிய கும்பல்கள் தான், இப்போதும், பிள்ளைகளாய், பேரன்களாய், மருமகன்களாய், குடும்பம் குடும்பமாக உள்ளனர்; இன்றும் அக் கும்பல்கள் கருணாநிதி- ராஜ என்கிற குடும்பக்களுக்குத்தான் ஜால்ரா போடும்; பதைபதைப்பவர்கள் வெகு சிலரே; வேலை வாய்ப்பு சந்தையில், இன்றும் ஆற்காடு வீராசாமி ஆட்களே உள்ளனர்; மாறனால் மிரட்டப்பட்ட டாடா வின் அலுவலகத்தில் நீரா ராதியா இருப்பது என்றால், மாறனுக்கு மன்மோகன், தொலைத்தொடர்பு இலாகா தராததும், இவர்களின் மாமன்-மருமான் கூட்டு கொள்ளைக்காகத்தான்; ‘வரி கட்டினோமா வாயை மூடிநோமா’ என்றுதான் நினைக்க வைக்கிறார்கள். மன்மோகன் நேர்மையின் அவதாரம் என்று யாராவது நம்பியிருந்தீர்கள் என்றால் இப்போதாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

    (edited and published)

  9. suresh on May 19, 2010 at 11:21 pm

    இந்தியாவில் இன்று உள்ள அணைத்து புலனாய்வு பத்திரிகைகளும் ஒருவரது அந்தரங்க வாழ்க்கையில் நடந்தவற்றை படத்துடன் விவரிப்பதிலும் பாலியல் படங்களை போட்டு அதை காசாக்குவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஒரு லட்சம் கோடி ஊழல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. குறிப்பாக The Hindu போன்ற பத்திரிகைகள் ஏன் கருணாவிடம் மண்டியிட்டு கிடக்கின்றன என்று தெரியவில்லை. இத்தனைக்கும் கருணாவிடம் அதிகம் பார்பன திட்டுக்களை வாங்கிய பத்திரிகை இதுதான். போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் இன் பங்கை பெரிதாக வெளியிட்ட இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த ஒரு தேசிய பத்திரிகை ஒரு ஊழல் வாதியிடம் இப்படி மண்டியிட்டு கிடக்க காரணம் என்ன? வெறும் அரசு விளம்பரத்திற்காக மட்டும் என்று சொன்னால் அது காதில் பூ சுற்றும் வேலைதான்.
    திரு ராசா அவர்களை எனக்கு சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே நான் கல்லூரியில் படிக்கும் போதே தெரியும். மிகவும் எளிமையான அனைவர் இடமும் தன அன்பை வெளிபடித்திய அவரா இவர் என்று சொல்ல வைத்து விட்டது உங்கள் கட்டுரை. பதவி வந்தால் எப்பேர் பட்ட மனிதரும் தன் நிலை மறந்து விடுவார் என்பதற்கு இவரே சாட்சி. இவரை எனக்கு தெரியும் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஒரு பெருச்சாளியை பற்றி அறிய வைத்ததற்கு மிக்க நன்றி Tamil Hindu.

  10. நித்யா on May 20, 2010 at 12:21 am

    விஸ்வாமித்ரா அவர்களுக்கு,

    இவ்வளவு தெளிவான விவரங்களை எங்களுக்கு அளிக்க எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என்பது புரிகிறது.

    உலகின் பிற பகுதிகளின் அற்புதமான அரசியல் அமைப்புகளையும் நடைமுறைகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற இந்த காலசூழலில், இந்திய அரசியலமைப்பின் மீதான, என்னையும் உள்ளடக்கிய பெரும்பான்மையான சாமான்ய மக்களின் மீதான உங்களின் கோபம் கலந்த எழுத்துநடை, உங்களைப்போன்ற எண்ணம் கொண்ட என்னையும் போன்ற பலரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன்.

    ஒரு கை ஓசை என்பது இயலாத ஒன்று, ஆனால் இந்தியாவின் மக்கள் பெரும்பான்மையானவர்கள் அடித்தட்டு மக்கள் மட்டுமே, அவர்களுக்கு ஒரு ஆயிரம் ருபாய் வருகிறது என்பதற்க்காக, அதனின் நன்றிக்கடனாக ஓட்டு போட்டுக்கொண்டிருக்கும் செயலை நம்மை போன்றவர்கள் கண்டிக்க கூட இயலாத அளவு அறியாமையை அதைவிட ஏழ்மையை அவர்களின் மீது தினிதிருக்கிரார்கள் இந்த அரசியல் சாயம் பூசிய கொள்ளைக்காரர்கள். அதே நேரத்தில் இங்கு குறிப்பிட்டுள்ள இந்த அடித்தட்டு பெரும்பான்மயானவர்களே யார் தேர்தலில் ஜெயிக்க போகிறார்கள் என்பதை முடிவெடுக்கிறார்கள்.

    நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என கருதுகிறேன், பெரும்பான்மையான மேல்தட்டு மக்கள், விழிப்புணர்வு கொண்டவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள் ஓட்டு அளிப்பதே இல்லை.
    இதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம், முதன்மையாக அனைவராலும் சொல்லப்படுவது, எனக்கும் அனுபவமுள்ள ஒரு விஷயம், நாம் அங்கு போகும் முன்னே நமது ஓட்டை யாரோ ஒரு சமூக விரோதி போட்டுவிடுவது, அடுத்து அங்கு நடக்கும் சமூக விரோதிகளின் அடாவடி செயல்கள். கடமைகள் பொறுப்புகள் நிமித்தமாக ஓட்டுச் சாவடி இருக்குமிடதிலிருந்து தூரத்தில் இருப்பது. கடைசியாக என்னுடைய நிலைமை வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் இருப்பது, என்னை போன்றோருக்கு ஓட்டு உரிமையே இல்லை என்றே தோன்றுகிறது, இல்லையென்றால் ஓட்டு போடுவதற்காக ஏறக்குறைய ஒரு லட்ச ருபாய் செலவு செய்து வரவேண்டும். இதில் ஓட்டு போடும் நாளை மதிக்கும் இந்த அடித்தட்டு மக்களை என்னதான் குறை சொல்வது.

    இது போன்ற காரணங்களால் விழிப்புணர்வும் வளமான இந்தியாவை காணும் ஆர்வமும், இன்னமும் நம்பிக்கையும் கொண்ட உங்களை என்னை போன்றோரில் பெரும்பான்மையோர் ஓட்டு போடுவதில்லை.

    ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிகிறது, நம் நாட்டை கொள்ளை கொண்ட முகம்மதுக்கள், ஆங்கிலேயர்கள் மேலும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அரசியல் வியாதிகள் ஆகியோர் கொள்ளையடித்தது போக இன்னமும் போதுமான வளங்களுடனே நமது இந்தியா சரியான ஆட்சியார்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன்.

    உங்களுடைய விழிப்புணர்வு முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள், நன்றிகள்


    நித்யா

  11. Satheesh on May 20, 2010 at 12:40 am

    சரியான சாட்டை அடி அய்யா
    “இறுதியாக இந்திய பொது மக்களையே நான் இந்த ஊழல்கள் அனைத்திற்கும் காரணமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவேன். ”
    இது 100 % உண்மை.

    ஆட்சி, பணம், பதவி இவை கொடுத்த திமிர் , “என்னை என்ன செய்து விட முடியும்” என்ற மெதப்பு இவர்களை மேலும் மேலும் ஆணவத்திற்கு அழைத்து செல்கிறது. மேலும் மேலும் அவர்களே வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெற்று ஆணவ சிரிப்பு உதிர்கிறார்கள். உத்தமனை போல் பேசுகிறார்கள். இது மிக பெரிய ஆபாசம்.

    “ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையே எந்தவித பொது அறிவும் இன்றி விழிப்புணர்வும் இன்றி, சமூக அக்கறையும் இன்றி, தங்கள் எதிர்காலம் குறித்த உணர்வு இன்றி, தங்கள் சந்ததியினர் குறித்த எதிர்கால பொறுப்பு இன்றி, தேசத்தின் மீது அக்கறையின்றி, சுயநலமும் அறிவின்மையும் மேலிட மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இந்த போக்கு”

    இது தான் இந்த அரசியல் வாதிகளின் மூலதனம் . தேர்தல் நேரத்தில் இவை அனைத்தையும் மக்கள் ‘மறந்து’ விடுவார்கள் . இது மறதி கிடையாது, இவர்களின் அக்கறை இன்மை.இது தான் இந்த அரசியல் வாதிகளின் வெற்றிக்கு துடுப்பு சீட்டு.

    இப்படி பட்ட மக்கள் இருக்கும் வரை இப்படி பட்ட ராஜாக்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

    ‘வாய்மையே வெல்லும்’ என்று வெறும் நமது அரசு சினத்தில் மட்டும் தான் பார்க்க முடிகிறது. எங்கும் பொய்மை, எதிலும் பொய்மை,
    பொய்யர்களின் நடுவில் பொய்யனே வெற்றி பெறுகிறான். அதவாது பொய்மையே வெற்றி பெறுகிறது.

    இப்படி பொய்மையின் வெற்றியை கண்டு அதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் ‘இயலாமையில்’ தவிப்பது மிக பெரிய தண்டனை/கொடுமை .பிரளயம் வந்து விட்டால் நிம்மதி என்று தோன்றுகிறது.

  12. Rama on May 20, 2010 at 7:46 am

    Is there any way I can get an English transilation of this great article? I want to send it to as many people as possible.

  13. vedamgopal on May 20, 2010 at 8:11 am

    விஸ்வாமித்திரா அவர்களே அருமையான சாட்டை அடி கட்டுரை அளித்தற்கு நன்றி. மெகனாஸ் கோல்ட் என்ற படத்தில் கூட்டம் கூட்டமாக குதிரையில் ஒரு பள்ளதாக்கை நோக்கி கொள்ளையடிக்க செல்வார்கள் அப்படி இந்தியாவில் இன்று அன்நியன் அடித்த கொள்ளையை போல் பல மடங்கு கொள்ளையை அரசியல் வாதிகள் அடிக்கிறார்கள். ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இவர்களைவிட இடிஅமீன் போன்ற சர்வாதிகாரியே எவ்வளவோ மேல்
    டாடா போன்ற நிறுவனங்கள் இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் வெகுகாலமாக தேச பற்றிலும் இந்துமத பற்றிலும் வெகுவாக ஈடுபாடுடன் செயல்பட்டுவந்தன. ஆனால் இன்றோ அவர்களின் வாரிசுகள் அன்நிய சக்திகளுக்கு விலைபோய்விட்டார்கள்.
    தட்டிகேட்கவேண்டிய எதிர்கட்சிகள் பத்திரிகைகள் நீதிமன்றங்கள் எல்லாம் இன்று விலைபேசபட்டுவிட்டது. எல்லா கொள்ளையிலும் இன்று இவர்களுக்கும் ஒரு கனிசமான பங்கு போய்கொண்டிருக்கிறது என்பது உண்மை
    வாரிசு அரசியல் என்பது தகப்பனுக்குபிறகு மகனோ மகளோ என்ற வரம்பை மீறி நமது தஷ்ஷினாமூர்த்தி என்கின்ற தெலுங்கு தமிழரின் மொத்த குடும்ப வாரிசுகள் ஒரேசமயத்தில் அரசியலில்புகுந்து கொள்ளையடிக்கின்றன.
    குடும்ப அரசியல் ஆலமர படத்தை பிட்நோட்டிஸ் போட்டு பொதுமக்களுக்கு வினயோகிக்கவேண்டும்.

    “நாலாம் தலைமுறையைபார் நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று ஒரு கிராமியப் பழமொழி உண்டு. இவர்கள் சித்தப்பன் என்றால் வரவேற்போம் ஆனால் இப்படி சொத்தப்பன்களாக பெருக்கெடுத்தால் நாடுதாங்காது. பரக்கா தத்துகளுக்கும், வீர் சங்விகளுக்கும் உங்களைபோல் நாக்கைபிடுங்கி நாறும் அளவிற்க்கு நிறைய வலைதளங்களில் சாடியுள்ளார்கள். கொள்ளைகார அரசியல்வாதிகள் வீசிஎறியும் எச்சில் ரொட்டியை தின்று ஜிவிக்கும் இவர்கள் திருந்தமாட்டார்கள்.

    கலகம் பிறந்தால்தான் வழிபிறக்கும் என்ற இலக்கை எதிர்நோக்கி போய்கொண்டிருக்கிறோம்.

    (edited and published)

  14. arasaivadivel on May 20, 2010 at 11:26 am

    ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் ஜாதியை கேடயமாக பயன்படுத்தும்
    பரிசுத்த வீரர் முதல்வர்,ஜாதியை தகுதியாக நினைத்து பதவியை வழங்குவது எவ்வளவு கேவலம் எனபது இனியாவது ஒரைக்குமா?நேர்மையும்,உண்மையும்,எவனிடத்தில் உள்ளதோ,நிர்வாகத்திறமை
    எவனிடத்தில் உள்ளதோ,அவனே ஆலவரவேண்டும்.ஜாதி சில நற் பண்புகளை கட்டமைத்துள்ளது என்றால்,இனி அந்த ஜாதி அமைப்பை
    வரவேற்ப்பதில் தவறில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.
    மேற்கண்டவிஸ்வமித்திரர் கட்டுரையை நண்பர்கள்
    அனிவருக்கும், பத்திரிக்கைகளுக்கும்,உடனே அனுப்பி
    நாட்டுக்கு சேவை செய்யுங்கள். அக்னி குஞ்சொன்று
    கண்டேன் அதை ஆங்கு பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு……………………………..வடிவேல்சிவம்

  15. Karan on May 20, 2010 at 9:02 pm

    விஸ்வாமித்ரா, மிக அருமையான கட்டுரை வாழ்த்துக்கள். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது, மீடியாக்கள் ஏன் செய்திகளை அவ்வளவாக தருவதில்லை. ஹிந்து என்.டி.டி.வியிடம் ஐக்கியமாகி விட்டது. என்.டி.டிவி எப்போதும் காங்கிரஸின் அடிவருடி, அதேப்போல் மற்ற ஊடகங்களுக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கலாம். மேலும் பிஜேபி க்கூட அவ்வளவாக போராட்டம் நடத்தாததற்க்கு அவர்களுக்கும் ஆதாயம் ஏதேனும் இருக்கலாம். விஸ்வாமித்ரா ஒரு லட்சம் கோடி என்பது சிறிய தொகையில்லை. அதை எப்படி கையாளுகிறார்கள். இதில் பினாமிக்கள் யார், இந்தப்பணம் ஏதோ ஒரு ஸ்விஸ் வங்கியிலோ அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டு தீவிலோதான் தூங்கிக் கொண்டிருக்கும். அதை எப்படி பணமாற்று செய்கிறார்கள், என்பதை உங்கள் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்ல முடியுமா.

  16. reality on May 21, 2010 at 1:12 am

    “தி ஹிந்து” போன்ற பத்திரிகைகள் ஏன் கருணாவிடம் மண்டியிட்டு கிடக்கின்றன என்று தெரியவில்லை. இத்தனைக்கும் கருணாவிடம் அதிகம் பார்பன திட்டுக்களை வாங்கிய பத்திரிகை இதுதான். போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் இன் பங்கை பெரிதாக வெளியிட்ட இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த ஒரு தேசிய பத்திரிகை ஒரு ஊழல் வாதியிடம் இப்படி மண்டியிட்டு கிடக்க காரணம் என்ன? வெறும் அரசு விளம்பரத்திற்காக மட்டும் என்று சொன்னால் அது காதில் பூ சுற்றும் வேலைதான்”.
    தி ஹிந்து , தி அண்டி-ஹிந்து வாக மாறியது காலத்தின் கோலம்.
    ஆர் வெங்கட்ராமன், மத்தியில் தொழில் அமைச்சராக இருந்தபோது, தி ஹிந்துவில் வேலைநிறுத்தம் வந்தபோது, பிரச்சனையை தீர்க்க உதவாதபோது, அச்சமயம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, திமுக ஆட்களை பிரிண்டிங் செச்டின் போன்றவற்றில் , ஹிந்துவில் அமர்த்தினால் உதவி செய்வதாகக் கூறி, ஆட்களை முழுவதுமாக அமர்த்திவிட்டு ஏமாற்றிவிட்டார். அன்றில் இருந்து தி ஹிந்து , திமுக வின் கூடார மாகிவிட்டது. போபோர்ஸ் ஊழலை, சுவிஸ் சித்ரா சுப்ரமன்யத்துடன் சேர்ந்து, கருணாநிதியால் தூண்டப்பட்ட காம்ரெட் ராம், அப்போதைய எம்.டி, கஸ்தூரியை மீறி, அனுமதி இல்லாமல், ஹிந்து நிறுவன பணத்தைக் வாரி இரைத்து, பேப்பர் கொளுத்தலில் எல்லாம் ஈடுபட்டு, மிரட்டி, பிரண்ட்லைன்ஐ ஆரம்பித்துக் கொண்டார். ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற கஸ்தூரியை, தி ஹிந்துவை விட்டு வெளிஏற்றினார். இதுதான் சுருக்கமான தி ஹிந்து வின் அண்டி ஹிந்து மாற்றத்தின் பின்னணி,.

  17. Ram on May 21, 2010 at 10:03 am

    Recently Mr.Raja is arguing that 2G spectrum is like “PDS rice” and 3G is like “Basmati rice”. The primary reason he is offering for the low price sell-off of 2G spectrum is that it would benefit the common man and will bring down the call rates. It would have been a very great gesture towards common man, if the 2G spectrum is given free to BSNL with an advice to bring down callrates to the bare minimum. The 2G spectrum was not allotted to BSNL, but some 3G spectrum was given to it. The companies which got the 2G spectrum allotments sold it to companies which operate from Norway, UAE. Are these countries very poor and do they care for Indian common man’s benefit. In fact ETISALAT is charging hefty call charges on the Indian expatriates in UAE and that is one of the company which got benefits of the 2G spectrum allotment. ETISALAT blocks Hindu websites too and deprives the Indian expatriats access to knowledge on Hinduism.

  18. Ram on May 21, 2010 at 10:08 am

    I understand that UNINOR is one of the brand of the Norway based company TELENOR that got benefited from the 2G spectrum allotment. Indians should unitedly reject this mobile service provider and go only for Indian brands.If UNINOR fails in business, then they will go and ask Mr.Raja to return the money that would have transferred hands for the 2G spectrum.

  19. SunnyGreen on May 21, 2010 at 10:32 am

    My greatest appreciation goes to the author and to this website, brining up this to public.

    It is shocking to see this is happening. In another few years goes like this people will not have any faith in the current political system and every state would be in align with Bengal, Orissa and more maoists. Even “the hindu” ram (capital letter removed pursposely) got partnership with Karunanidhi and became his “samandhi”.

    We should blame the culture partly, people affection towards the people with money. I guarantee including myself, everyone posted comment here would respect people with money, once started respecting people with money (though there is no benefit by doing that, we still do), they always going to chase the money, the respect and power earn from the socieity is one drives to make money anyway very harmful way. Forget about politicians from small provisional store to big corporation, financial institutions, everyone body is interested in the money and everyone of us chansing and try to accumulate quickly, the quickness to accumulation is the problem, turning back on those people who work for them, employees, sub-contractors is unaccpetable. Second reason is the alochol, many men who earn Rs.100 a day spend Rs.80-90 on alchol, that has to go as well. These are fundamental problem in the socieity, which these bastrads use (look at his family — shameless), do not care about anything — except money. Spalsh cash win everyone — rob them back deeply

    This is big Cancer stories like this will be a theraphy, but this is going to help, instead put many people to look at this in lost of frustration,s I could not do anything except watching. Karunithin is doing this for 60 years, continously, how hard you control still he is rigging the votes.

    Everyone fundamentally respect people for their social conciousness and their education nor for money. I have strong faith there will be turn around, hope this not from mosists foriming Govt. like Nepal then nobody can restore the country back.

  20. ss on May 21, 2010 at 11:50 am

    இன்னும் ஒரு மெகா ஊழல் இந்திய ரயில்வே அமைச்சகம் நடத்தி கொண்டு இருக்கிறது …. !!! பழைய பொருட்கள் ஏலம் விடுவது ரயில்வே இல் அடிக்கடி நடப்பதே. அதாவது இனி அவை அவ்வளவாக நடைமுறைக்கு ஒத்து வராததாகவோ, அல்லது மிக பழமையான பொருட்களாக இருக்கலாம். தற்போதிய ரயில்வே அமைச்சகம் ஒவ்வொரு ரயில்வேயிற்கும் target (southern,western,northcentral,eastern,northeastern etc…)நிர்ணயித்து இருப்பது சில நூறு கோடிகள். To attain the target, அவர்கள் உடைத்து எடுத்து ஏலத்தில் விற்பது எவை தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நம் சொந்த பாரதத்தில் சுரண்டப்பட்ட இரும்பு, எஹ்கு மற்றை கனிம வளங்களை கொண்டு கட்டப்பட்ட தரமான ரயில் தண்டவாளங்கள், rail coaches, இன்னும் சில இரும்பு,தரமான நல்ல உறுதியான பொருட்கள் தயாரிக்க பட்டவை. ஆனால் இன்று அவை எல்லாம் ஏலத்தில் எடுத்து ஏற்றுமதி ஆகும் இடம்(ங்கள்): சீனா,ரஷ்யா,பெல்ஜியம் போன்ற நாடுகள். இவற்றில் எவ்வளவு பணம், எவ்வளவு அன்பளிப்பு கை மாறும் என்பது என்னால் கணிக்க இயலாவிட்டாலும் நிச்சயமாக நம் எல்லோருக்கும் ஓரளவேனும் கணிக்க இயலும். ஒவ்வொரு ரயில்வே வீதம் கணக்கு இட்டால் சில பல கோடிகள் கைமாறும். இவை எவ்வளவு அந்நிய கரன்சி நோட்டுக்கள் போகும் என்பதையும் நினைவிற்கொள்க. மேட்டர் அப்டியே ரிவர்சு !! இப்போ பெரம்பலூர் coach factory ல தயாரகுற வண்டிங்க எங்கேர்ந்து தயாரிப்பு பொருட்களை பெறுகிறது தெரியுமா? நம் மிகவும் நட்பு நாடான சீனா !!! தரம் நிரந்தரம் !!! நான் எழுதியது மிக மிக குறைவு சாதரணமாக இருக்கிறது. ஆயினும் கோடி வீட்டில் இருக்கும் நம் திருவாளர் பொதுஜனத்துக்கு இந்த கோடிகள் புரியுமா ?

  21. அப்பாவி உலகம் on May 21, 2010 at 12:37 pm

    கட்டுரை மிகவும் அருமை. தோழி நித்யா கூறியது போல் நீங்கள் நெறையவே மெனக்கெட்டு இந்த கட்டுரை தயாராகி இருக்கிறது!

    நீங்கள் கொடுத்த சில சுட்டிகள் வேலை செய்யல..முக்கியமா அந்த Documents! அத படிக்க முடியல!

    திருட்டு பசங்க.. thehindu பத்திரிகைல அந்த போஸ்ட் காணாம போச்சுன்னு போட்டுட்டான். இன்னைய சூழ்நிலைல இந்திய அரசோட நாலு தூணும் வயசான, திருட்டுத்தனமான பெருச்சளிங்களால அரிச்சு போச்சு!

    உங்கள மாதிரி நாலு(நாலுன்ன வெறும் நாலு இல்ல) நல்ல் சேர்ந்து விழிப்புணர்ச்சி இயக்கம் தொடங்கி, என்ன மாதிரி அப்பாவி உலகத்தில இருக்க அடித்தட்டு மக்களுக்கும், நாட்டின் கடைகோடியில இருப்பவர்களுக்கும் எட்டரமாதிரி சொல்லணும். ஓங்கி சொல்லணும். அடிச்சு சொல்லணும்.

    நெறைய்ய பெருச்சாளிங்களை பார்த்துட்டேன். பெரியார்தாசன், சு.ப. வீ, கீ.வீரமணி, etc. இவங்கல்லாம் முதல்ல பேசறப்போ என்னமா கருத்து சொல்றாங்க! நிச்சயம் எல்லாரும் கேப்பாங்க. கேட்டு திருந்துவாங்கன்னு நெனைச்சேன்! ஆனா இவர்களோட பேச்சு வெறும் பொழுது போக்கரதுக்குன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்.

    மக்கள் கிட்ட நேரடியா பேசற இவர்கள மொதல்ல தண்டிச்சிட்டு, அப்பறம் போய் மக்களை கேளுங்க!

    இவர்கள் சாதிய விட்டுட்டா, அரசியலே பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டு இன்னைக்கு நாட்டையே சீரழிக்கிறார்கள்!… சாத்திய ஒழிக்கணும். பிரிவினைய ஒழிக்கணும். ஓற்றுமைய வளக்கணும்.. ச்ச்சச்ச்சச்ச்ச்ஸ் .. மூச்சு வாங்குது!

    [Edited and published]

  22. pragadheeswaran on May 21, 2010 at 5:43 pm

    கலி புருஷன் இந்தியாவில் பிறப்பார் என்று மஹா பாஹவாத புராணத்தில் படித்து இருக்கிறேன் …. அதனால் தான் இந்தியாவில் வேறங்கும் இல்லாத அளவுக்கு உழல்ல்கல் , மத மாற்றம் , தீவிரவாதம் , சுத்தம் இல்லாமை வளர்கிறதோ … கல்கி அவதார் இந்தியாவில் ஆவதற்கு ஒரு காரணம் வேண்டும் அல்லவா … ( இப்பிடி எல்லாம் நினச்சு என் மனசை நான் தேதிகிறோம் )…….

  23. R.Ganesh on May 21, 2010 at 6:19 pm

    மிக,மிக,மிக,மிக அருமையான கட்டுரை .அத்தனையும் உண்மை
    என் சிரம் தாழ்ந்த நன்றி விஸ்வாமித்ரா அவர்களே!

    சரி இத்தனைக்கும் மூல காரணம் என்ன?
    வேறு என்ன! குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, கல்வியறிவு இல்லா பொதுமக்களிடமும்,நேர்மையற்ற ஆட்சியாளர்களிடமும் சிக்கித்தவிக்கும் நம் ஜனநாயகம் தான்.

    நம் அரசியல் சாசனம்(constitution) மற்றும் நீதி சாசனம்(Indian penal Code) மாற்றப்படும் வரை நமக்கு விடிமோட்சம் கிடையாது.எல்லாவற்றையும் கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கையில் வாழும் மக்களிடையே புரட்சியும் வராது.

    கருணாநிதி,ஜெயா,மாயா,லாலு போனால் இதைவிட மோசமாக நாலு பேர் வருவார்கள்.தேசபக்தியும் திறமையும் வாய்ந்த இந்தியர்கள் தெரு தெருவாக அலைந்து, கை கூப்பி, ஒட்டு பிச்சை கேட்க மாட்டார்கள் .ஆனால் இவ்வாறு செய்யும் எத்தர்கள்தான் ஆட்சி அமைக்கமுடியும்
    அதாவது கல்யாணம் ஆனால் பைத்தியம் தெளியும் பைத்தியம் தெளிந்தால்தான் கல்யாணம் ஆகும் எனும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
    இனி ஜனநாயகத்தால் எதுவும் சாதிக்க முடியாது.
    நேர்மையும் தேசபக்தியும் திறமையும் தைரியமமும மிக்க ஒரு சர்வாதிகாரி நமக்கு தேவை.
    அதற்கு பிரார்த்திப்போம்

  24. R.Sridharan on May 21, 2010 at 8:31 pm

    ‘பாரத் ஸ்வாபிமான்’ இயக்கம் நடத்தும் பாபா ராம்தேவ் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்
    இந்த ஹிமாலய ஊழலைப் பற்றி அவர் பட்டி தொட்டியிலெல்லாம் பேச வேண்டும் .

    ரா.ஸ்ரீதரன்

  25. R.Sridharan on May 21, 2010 at 8:36 pm

    வீரமணி சமீபத்தில் கருனாநிதியிடமிருது பத்து லட்ச ரூபாய்க்கு செக் வாங்கியதை டீவீயில் பார்த்தேன்
    முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொது அவர் வீரமணிக்கு ஐந்து லட்சம் கொடுத்தார்

    ஆக வீரமணியின் லட்சியம் எல்லாம் லட்சங்களில் தான் இருக்கிறது
    .

    ரா.ஸ்ரீதரன்

  26. சேக்கிழான் on May 22, 2010 at 4:16 pm

    அற்புதம் விஸ்வமித்திரரே.
    ஜடங்கள் ஆகிவிட்ட ஜனங்கள் தான் இத்தனைக்கும் காரணம் என்று முத்தாய்ப்பாகக் கூறியுள்ளீர்கள். இது முற்றிலும் உண்மை. ராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைப்பாட்டால் தானே வாஜ்பாயை வீட்டுக்கு அனுப்பினார்கள்? இந்த மக்கள் (நாமும் தான்) அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
    பயனீர் நாழிதழ் – கோபிகிருஷ்ணன் கட்டுரையும் படித்தேன். துணிச்சலான முயற்சி. அவரது அடியொற்றி இக்கட்டுரையை எழுதிய விஸ்வமித்ராவுக்கும், வெளியிட்ட தமிழ் ஹிந்து-வுக்கும் நன்றி.
    இந்த கருத்துப் பரவல் மக்கள் இயக்கமாக வேண்டும். பா.ஜ.க.வின் அத்வானி தலைமையில் இதற்கான முயற்சி நடந்தால் நாட்டுக்கு நல்லது.
    -சேக்கிழான்

  27. குழலேந்தி on May 22, 2010 at 4:20 pm

    இக்கட்டுரை தொடர்பான ஒரு கவிதை:
    குழலும் யாழும் -வலைப்பூவில் வெளியானது.

    ——–

    ராசாக்களுக்கு விண்ணப்பம்

    ஒன்று.. பத்து…
    நூறு… ஆயிரம்…
    லட்சம்… கோடி…
    இந்த வரிசையில்
    மாபெரும் இலக்கத்துக்கு
    பெயர் காண வேண்டும்.

    உடனடித் தேவை –
    கோடியை விடப் பெரிய
    கேடி இலக்கம்.

    பில்லியன், டிரில்லியன்
    இலக்கங்களை விட
    பெரிய தமிழ் இலக்கம்
    அவசர அவசியம்.

    மறைந்துபோன
    சங்கம், பதுமம்
    எண்ணிக்கைகளையேனும்
    மறுநிர்மாணம் செய்யுங்கள்.

    எவ்வாறேனும்
    புதிய மாபெரும்
    இலக்கம் வேண்டும்.

    ஊழல்களை எழுதுகையில்
    கைவிரல் வலிக்கிறது.
    இனிமேலும்
    ஆயிரம் கோடி,
    லட்சம் கோடி
    என்று
    நீட்டி முழக்க இயலாது.

    ஆயிரம் ரூபாய் நோட்டு
    அச்சிட்டது போல,
    லட்சம் கோடிக்கு
    ஒரு வார்த்தை
    கிட்டாதா என்ன?

    சீக்கிரம்
    கண்டுபிடியுங்கள்
    ராசாக்களே!

    ————–
    நாள்: 16.04.2010

  28. R.Sridharan on November 12, 2010 at 4:04 am

    அன்று ‘தமிழ் ஹிந்து’ கின்னஸ் ரெகார்டுக்குத் தகுதி பெறும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எழுதியது .
    இன்று நாடே பேசுகிறது.
    வளர்க உம் பணி

  29. virutcham on November 14, 2010 at 6:14 pm

    தமிழ் வலையுலக அறிவு ஜீவிகள் இந்துத்வா எதிர்ப்பு கூச்சல் போட்டே தங்களை அறிவு ஜீவிகளாக பறை சாற்றிக் கொள்பவர்கள்.
    ஹுசேனுக்கு அதரவாக பதிவு போடுவதில் காட்டிய ஆர்வமும் அவசரமும் ஆத்திரமும் போன்று வேறு எந்த அநியாயத்துக்கும் காட்டியதாக நான் காணவில்லை.

    இதோ ராஜா ஊழல் பற்றிய பதிவில் காணும் பின்னூட்டங்கள் சொல்லும் நமது வலைப்பதிவர்களின் தலையாய கவலை எதுவென்று

    http://dondu.blogspot.com/2010/05/blog-post_08.html
    http://dondu.blogspot.com/2010/09/29092010.html

  30. R.Sridharan on November 16, 2010 at 8:16 pm

    இதற்கெல்லாம் காரணம் ராசா அல்ல
    இதற்குப் பின் இருக்கும் அக்கிரமமே உருவான ,கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக தமிழ் மண்ணில் விஷத்தைக் கலந்து கெடுத்துக் கொண்டிருக்கும் ‘தமிழினத் தலைவரும் ‘, சமீப காலத்தில் அவரது ‘பெரிய்ய்ய ‘ குடும்பமும்.
    ஹிந்து முன்னணியின் ராம கோபாலன் அவர்கள் சொல்வது போல்’ மூக்கைப் பிடித்தால் வாய் திறக்கும்’

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.