முகப்பு » அரசியல்

செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

அச்சிட அச்சிட

secularism

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

 

44 மறுமொழிகள் செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

  1. senthilvel on May 6, 2010 at 9:04 am

    tanil hindu ,nagai suvaiyaga oru unmaiyai solli irukirathu,paratukal.

  2. வித்யா நிதி on May 6, 2010 at 10:19 am

    சபாஷ் ஹரன் அவர்களே . ஹிந்து முன்னணி பொதுக்கூட்டம் கேட்டது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது உங்கள் கட்டுரை. இது போல் சாதாரண மக்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகள் மேலும் தமிழ் ஹிந்துவில் வரவேண்டும்.

    வித்யா நிதி

  3. bala on May 6, 2010 at 11:09 am

    அருமை. இன்னும் நிறைய இருக்கிறதே பிரசன்னா.
    எங்கு குண்டு வெடித்தாலும் அதை RSS தான் வைத்திருக்கும் என்று சொல்லவேண்டும். பிடிபடுபவன் ஜிஹாதியாக இருந்தால் இதற்க்கெல்லாம் காரணம் ஏழ்மை மற்றும் அந்த சமூஹம் புறக்கணிக்கபடுவது என்று கூற வேண்டும், மா வோ இஸ்டாக இருந்தால் அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காததால் இந்த விளைவு என்று கூற வேண்டும்.

  4. Kannan on May 6, 2010 at 11:54 am

    Great one! You forgot to add the following phrase of our secular politicians: “we will have adjustments with like-minded parties”.

  5. RGK on May 6, 2010 at 2:10 pm

    True secularism i.e. separation of religion and state is not practiced by anyone. To my mind it is politics plain & simple. Some attributes of a Secular State are –

    • Equality of all citizens meaning a Uniform Civil Code.
    • Economic / social status not religion to be a basis of government aid.
    • No State Aid to institutions that impart religious education.
    • Followers of every religion are allowed to manage their religious & charitable institutions with no state control. However, they will need to operate within a broad framework of rules such that their wealth is used for public benefit and national interests / security.
    • No Polygamy shall be allowed; one man one wife is the rule for all.
    • Followers of every religion are to follow family planning as excessive population is what is pulling India down.
    • Every citizen can freely practice his religion but fraudulent conversions are banned.
    • Freedom of speech & expression allowed with adequate safeguards though.
    • Sentiment of majority community towards the cow and against its slaughter was incorporated in articles 48 and is honored.
    —Extract from an artcle written by Shri.Sanjeev Nayyar

    RGK

  6. அ. நம்பி on May 6, 2010 at 2:32 pm

    //விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.//

    `கருணாநிதியின் `அடேங்கப்பா’ கட்டளை!’

    (கண்டிப்பாக ஹரன் பிரசன்னா ஒப்புக்கொள்வார்… என்று நினக்கிறேன்.

    http://nanavuhal.wordpress.com/2010/05/06/karunanidhi-3/

  7. Maduraiyampathi on May 6, 2010 at 2:42 pm

    நன்றாக ரசித்தேன்…:)

  8. rsk on May 6, 2010 at 3:50 pm

    When taslima nasreen wrotre about islam, muslims asked for her to be deported from india.

    The indian govt said ” When she speaks about religion, she must be careful not to hurt anyone”.

    But M.F hussain can paint hindu Goddesses in the nude. That is freedom of expression – U see.

    Mu.Ka was once asked why he attended ramzan fasting meetings & not vinayakar chathurthi meetings. His reply – Ramzan is a social festival, that is why I attend.

    Did not know that.

    Brahmins are aryans but tamil muslims & christians are dravidians.

  9. Manivannan on May 6, 2010 at 4:05 pm

    A good article, good work keep doing.

  10. Jeyakumar on May 6, 2010 at 5:16 pm

    ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பா.. இப்பவே கண்ணக் கட்டுதே.. எப்படி இப்படி கரெக்டா ஞாபகம் வச்சிகிட்டு நான் முற்போக்காளராகுறது? நினைக்கவே மலைப்பா இருக்கே.. கருணாநிதி அய்யாவுக்கு இப்படி பல கலரா மாறுவதற்கே ஒரு பாராட்டு விழா நடத்தலாம் போலிருக்கே..

    அருமையான, உண்மையை நகைச்சுவையுடன் தொட்டுக்காட்டும் கட்டுரை. வாழ்த்துக்கள் ஹரன்பிரசன்னா..

  11. kargil jay on May 6, 2010 at 5:16 pm

    அறிமுகத்தைப் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. என் புரிதல் சரியா? செக்யூலரிச படத்தில் நான் தேறிவிட்டேநா?
    சம்பந்தமில்லாமல், பர்தாவை விலக்க வேண்டியதைப் பற்றிப் பேசக்கூடாது, ஆனால் பெண்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியாமல் நிறுத்தப் பட்டிருப்பதைப் பற்றி உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.

  12. vedamgopal on May 6, 2010 at 6:38 pm

    ஸெக்யூலர் என்றால் மதங்களும் அரசாங்கமும் வேறுபட்டு தனி தனியே செயல் படுவன என்று பொருள். ஆனால் அவ்வாறாகவா நடக்கிறது நம்நாட்டில் ? இந்துகோவில்களில் அரசாங்கம் சட்டவிரோதமாக தலையிட்டு எந்தகுளறுபடியையும் செய்யலாம் ஆனால் சர்சிலும் மசூதியிலும் அரசாங்கம் தலையிடக்கூடாது அதுவே உண்மையான ஸெக்யூலரிஸம்
    சமஸ்கிரதம் ஒரு ஜாதியை சேர்ந்தது ஆனால் உருது ஸெக்யூலரானது கோவில் ஒரு மதத்தை சேர்ந்தது ஆனால் சர்ச் மசூதி ஸெக்யூலரானது
    சாமியார் ஒரு மதத்தை சேர்ந்தவர் ஆனால் பாதிரி இமாம் ஸெக்யூலரானவர்
    பி.ஜே.பி ஒரு மதவாத கட்சி முஸ்லீம்லீக் ஸெக்யூலரானது
    டோங்காடியா ஒரு மதவாதி புகாரி பாதரி பொதுவாதி ஸெக்யூலர்
    இந்துத்துவம் மதவாதம் ஆனால் சிகாட் மதமாற்றம் பொதுவாதம் ஸெக்யூலர்
    பாரதம் மதவாதம் இத்தாலி பொதுவாதம் ஸெக்யூலர்

    இப்படிப்பட்ட போலி மதசார்பின்மை என்ற ஸெக்யூலரிஸம் 1976 ஆண்டு இந்திராவால் சட்டம் ஆக்கப்பட்டது. இதன் ஒரேகுறிக்கோள் சிறுபான்மையினரை காக்காய்பிடித்து அவர்களது ஓட்டுவங்கியை ஒட்டுமொத்தகுத்தகை எடுப்பது. சுயநலநோக்கோடு பணம் சம்பாதிப்பது. நாட்டு முன்னேற்றம் பாதுகாப்பு வருங்கால இளைய தலைமுறைபற்றி சிறிதும் சிந்திக்காமல் கொள்ளைஅடிப்பதுதான் உன்னதமான ஸெக்யூலரிஸம் !!!!!!

    ஸெக்யூலரிஸம் நம்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மதம். அதாவது கிருஸ்துவிஸம் முஸ்லீம்மிஸம் இந்துவிஸம் கம்யூனிஸம் செக்யூலரிஸம். ஆனால் தேசியவாதிகள் இந்த செக்யூலரிஸத்தை சூடோ செக்யூலரிஸம் என்று அழைக்கிறார்கள் (அதாவது போலியான மதசார்பின்மை). செக்யூலர்களது புராதன புத்தகம் ” கான்ஸ்டிடுசன் ஆப் இந்தியா” (இந்திய அரசியல் சட்டம்). இதை இதுவரையில் 118 இடங்களில் தேவைக்கேற்றார்போல் மாற்றியுள்ளார்கள்.

    ஸெக்யூலரிஸம் என்ற கீழ்தரமான அரசியல் எவ்வாறு நடந்துவந்துள்ளது என்பதை பற்றி அறிய ( 650 Truths you must know before it is too late – by P.Deivamuthu – Hindu Voice) Rs.70/- (210 Abhinav, 2nd floor, Teen Dongri, Yeshwant Nagar, Goregaon West, Mumbai 400062) (E.mail hinduvoice@mtnl.net.in web http://hinduvoicemumbai.blogspot.com)

  13. vedamgopal on May 6, 2010 at 7:12 pm

    A quote from the Hindu Voice cover page (results of secularism as on to-day)
    “Is this the legacy you want to leave behind for your sons and daughters?
    // 200 years ago Hindus in Kandahar (Afghanistan) were performing Pooja, singing Bhajans and Kirtans. To-day there is no one, replaced by Al Qaeda and Taliban’s ?//
    //100 years ago, Hindus in Karachi and Lahore were performing Pooja, singing Bhajans and Kirtans. To-day there is none. All have vanished into thin air? //
    // 50 years ago, Hindus in Srinagar (Kashmir) too were performing Pooja, singing Bhajans and Kirtans. To-day no one is left there to do so. All have been chased away ? //
    Considering the above Historic facts, 50 years from now, will you (or your son/daughter or grand son/grand daughter_ be able to perform Pooja, singing Bhajans and Kirtans ?
    LOGIC SAYS – NO
    Social demography also confirms this. Symptoms too point out towards that stark eventuality.
    Is this the legacy you want to leave behind for your sons and daughters ? if not, get up from your deep slumber and face the challenge, before it is too late.

  14. snkm on May 6, 2010 at 9:08 pm

    நாம் நம் நினைவுகளை நல்லதாக செய்துகொண்டு, செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்போமாக! நம் வீரத்தையும் விவேகத்தையும் உலகம் உணரும் நேரம் வந்து விட்டது! இனியும் தாமதிக்க தேவையில்லை! ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!

  15. செந்தழல் ரவி on May 6, 2010 at 9:37 pm

    /// ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.///

    முதல் பந்திலேயே சிக்ஸர். இதுக்கு மேல என்ன சொல்ல ? பிச்சு உதறிட்டீங்க…

  16. ram on May 6, 2010 at 9:59 pm

    // பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்// இதாவது பரவாயில்லை. பல ஜாதிக்காரர்கள் விலைமாது கதாபாத்திரத்தை படமாக்கிய போதும் அந்தப் பெண்களை தங்கள் ஜாதி அடையாளத்துடன் காட்ட மாட்டார்கள். ஆனால் ஒரு பிராமண குடும்பத்தை படம் முழுவதும் காட்டி அந்தக் குடும்பத்து பெண்ணை வேசியாக்கியவர் பாலச்சந்தர் தான்.

    (Edited and published.)

  17. Selvakumar on May 6, 2010 at 10:25 pm

    உலகமயம் ஆகுதலின் ஒரு விளைவே secularism. இப்போது நாத்திகம் என்று சொல்லுவது ஒரு fashion. நெற்றியில் திருநாமம் அணிவது இப்போது கிராமதனமாக பார்க்க படுகிறது.

  18. அன்பன் on May 7, 2010 at 12:05 am

    இந்து மதம் மட்டும் தாக்குதலுக்கு உட்படுத்தப் படுகிறது. ஏன்? இந்தியாவில் இந்துக்கள் மட்டும்தான் பிற மதங்களுக்கு மாறுகிறார்கள். அது ஏன்? அரசியலில் பிழைப்புக்காக இந்து மதம் மட்டும் தாக்கப் படுகிறது. இந்துக்கள் அறுதி பெரும்பான்மையுள்ள இந்தியாவில், இந்து மதத்தைத் தாகுபவர்களுக்கு,அரசியலில் வழமான நிலை. ஏன்? அழுக்காறு, அவா, வெகுழி, இன்னாச் சொல் இவை நான்குமகற்றி, அறவழியில் சுய பரிசோதனை செய்தால் உண்மை விளங்கும்.

  19. raman on May 7, 2010 at 3:39 am
  20. Bala sreenivasan on May 7, 2010 at 6:36 am

    We are a race that does not learn any lessons from history which is repeatedly and forcefully teaching us!
    If there is an opportunity to divide, discriminate against and be hostile to others within the Hindu society, we don’t miss it.
    The great Brahmin-Non-Brahmin divide!
    The strong divisions within the non-Brahmin segments..
    Even the the downtrodden sections are not free from hostilities.
    The antagonism between Pallars and Parayars is a case in point
    Saiva-Vaishanava conflict. Within the Vaishanava sect, Vada kalai-Then kalai.
    (Here we have the dubious distinction of moving the Privy Council during the colonial rule to resolve a dispute whether the temple elephant’s forehead should be decorated with ‘Vadakalai’ or ‘Thenkalai’ naamam! The colonial rulers had to mediate!!
    The hostility within ‘Smarta’ Brahmins- Vada ma, Vaathi ma, Ashta Sahasram and Brahacharanam!
    As long as we remain in our cocoons of arrogance and ignorance, secularists will have a free run.

  21. reality on May 7, 2010 at 7:03 am

    இந்திய அரசியல் சாசனத்தில், அதுவரை இல்லாத ‘செக்யுலர்’ என்ற வார்த்தையை சேர்த்தது, இந்திரா காந்தி தான்.
    ஒருவர் தன வர்ணத்திர்க்காக, ஜாதிக்காக, குடும்பத்திற்காக போராடும்போது, தான் பிறந்த மதத்தைப் பணயம் வைக்காமல், மற்ற மதங்களை உயர்த்தி, தன மதத்தை தாழ்த்தாமல் இருக்கவேண்டும்; கருணாநிதிகள் தங்கள் செய்கைகளின் மூலம், தனிமனிதன் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்; மோசத்திற்கு ஒரு உதாரணம்; அப்படிப்பட்டவர் தலைவர், முன்னோடி, ஆள்பவர் என்றால், பேய் அரசாட்சி தான்; அவரை ஆதரிக்கும் மக்கள் ‘பிணம் தின்னிகள்’, என் எனில் , அம்மக்கள் தான் சாதிரங்களாகவும், சட்டம் செய்பவர்களாகவும், பேசுகிறவரகளாகவும் இருக்கிறார்கள்.

    (Edited and published.)

  22. Sarang on May 7, 2010 at 10:43 am

    ஹரன் பிரசன்னா அவர்கள் இன்றைய நிலைமையை அழகாக சொல்லி உள்ளார் – நாம் நமது எதிர்காலத்தை பற்ற்யும் சிந்தை செய்ய வேண்டாமோ – செய்து பார்த்ததில் இப்படி தான் எக்கு தோன்றுகிறது

    கலைஞர் கனவில் வந்து சொன்னபடி புதிய திட்டங்கள கழக அரசு வெளியிடுகியது

    - மதிய உணவு திட்டத்தில் ஹைதராபாத் தம் பிரியாணி
    - ரமலான் மாதத்தில் எவனுக்கும் சோறு கிடையாது ராத்திரி மட்டும் கஞ்சி தான்
    - திருவள்ளுவர் சிலையில் மீசை எடுக்கப்பட்டு குல்லா போடப்படும்
    - அண்ணன் அழகிரி அதிசயமாக நாடாளுமன்றம் வந்தார் – கட்டம் போட்ட கைலியில் இருந்தார் – பா சி வாரிசு மற்றும் பல கழக கண்மணிகளின் வாரிசுகள் கைலியில் வந்தனர்

    - புதிய காந்தி படம் திரைக்கு வருகிறது – கான்ட் கோட்சேயால் சுடப்பட்டு oh jesus, oh jesus, oh jesus என்று மூன்று முறை சொல்லியபடி ஆவியை விடுகிறார்

    - இருக்கும் கொஞ்ச நஞ்ச கோவில்களுக்கும் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமறை விடப்படுகிறது

    - தமிழன் என்ன மானம் கெட்டவனா, இளிச்சவாயனா – இனி தமிழ் புத்தாண்டு புனித ரமலான் நாளில் தான் கொண்டாடப்படும் –

    - பகலில் திருமணம் நடத்த தடை – நாடு ராத்திரியில் தான் திருமணம் – விருந்துக்கு தலப்பாக்கட்டு பிரியாணி மட்டும் தான்

    - லவ்பெல் அல்லதாஸ் புதிய சுகாதார திட்டங்களை வெளி இடுகிறார் – உடல்நலம் மற்றும் ஆண்மனலம்கருதி இனி எல்லோரும் ஹலால் கரி மட்டுமே புசிக்க வேண்டும் – பொது இடங்களில் ஹலால் கரி மட்டுமே விற்க வேண்டும் – இனி திரைப்படங்களில் யாராவது கரி சாப்பிடும் படி காட்சி வந்தால் – இது ஹலால் கரி என்று சிறிய எழுத்துக்களில் போட வேண்டும் – அப்படி இல்லை என்றால் ஹலால் இல்லாத கரி உண்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்றாவது போட வேண்டும்

    - ஆசாரம் கருதி மற்றும் இருதய நோய் வராமல் இருக்கு அனைவரும் தண்ணீரை எச்சில் செய்து தான் குடிக்க வேண்டும்

    - ஆசாரம் கருதி மற்றும் தோற்று நோய் வராமல் இருக்க அனைவரும் ஒரே தட்டில் தான் சாப்பிட வேண்டும் – ஹோடேல்களில் இனி ஒருவருக்கும் தனி பலதே கிடையாது – ஒரே இல் தான் இருக்கும் அதிலேயே அத்தனை பெரும் சாப்பிட வேண்டும்

    - தமிழக சுற்றுலா துறை அமைச்சர் புதிய திட்டங்களை அறிவிக்கிறார்
    இனி தமிழாக சுற்றுலா துறை சார்பாக தினசரி நான்கு முறை என்பதிலிருந்து நிமிடத்திருக்கு நான்கு முறையாக ரயில்கள், மற்றும் வோல்வோ பேருந்துகள் வட்டப்பாதையில் திருவல்லிக்கேணி மஸ்ஜித், மவுண்ட் ரோடு தர்க்ஹா, வேளச்சேரி மஸ்ஜித், ஆதம்பாக்கம் அழ அம்மா மஸ்ஜித், மீசபெட்டை தர்கா வழியாக செல்லும்
    – மீட்பர் paraloga சர்வீஸ் தினசரி அறுவது முறை சாந்தோம் ஆலயம், பெரம்பூர் ஆலயம், வேளச்சேரியில் இருக்கும் எக்கச்சக்க் ஆலயங்கள், சின்ன மலை AG சபை vazhiyaaga செல்லும்

    – ECR roottil adikku adi silvaigal ullathaal – walker 24 hours சர்வீஸ் erpaadu seyyappadum

    … thodaralaam

  23. Prakash Santhanam on May 7, 2010 at 10:50 am

    அய்யா நான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவன். நான் இப்ப படிச்சு ஒரு நல்ல நிலைமையில இருக்கேன். இனிமேல் எனக்கோ என் சந்ததியினருக்கோ இடஒதுக்கீடெல்லாம் வேண்டாம். நானோ என் சந்ததியினரோ பார்ப்பன ஜாதிக்கு மாறி கோவில் கருவறையில நின்னு தமிழ்-ல பாட்டு பாடி சாமி கும்பிடனும். இதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்காங்க. இருந்தா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. நானும் எவ்வளவு நாள் தான் பள்ள பயளா இருந்து அவமானப்படுறது.

  24. Venkata krishnan on May 7, 2010 at 12:06 pm

    சபாஷ், சாட்டை அடி, நம்மவர்களுக்கு சகிப்புத்தன்மை நிறைந்துள்ளது, ஆகயால்தான், நாம் அரசியல் கோமாளிகளை நம்மை ஆளும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம். இவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் பொறாமையின் வெளிப்பாடே. தான் மட்டுமே அறிவாளி மட்ட்றவர் எல்லாம் மூடர்கள் என்ற நினைப்பு.

  25. ஜடாயு on May 7, 2010 at 12:15 pm

    \இந்திய அரசியலில் செக்யூலரிசம் என்பது இந்து மதத்தை அடிக்கப் பயன்படும் தடி என்ற அளவில் தான் இருக்கிறது. உலகத்திலேயே ”செக்யூலர் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சி” என்று ஒரு கட்சி இந்தியாவில் மட்டும் தான் இருக்க முடியும்.

    நெத்தியடி பிரசன்னா. இதே மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க.

  26. Sarang on May 7, 2010 at 1:01 pm

    பிரகாஷ் சந்தானம் அவர்களே

    உங்கள் பேரிரை வைத்து என்ன என்று ஆராயாமல் நீங்கள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டு எழுதுகிறேன்

    இருக்கும் கோவில்களில் ஏற்கனவே பஞ்சப்பாடு – பலருக்கு வெறும் 1000 ருபாய் தான் சம்பளம் – நாம் ஒன்று செய்வோம் – நாம் இருவருமாக சேர்ந்து ஒரு கோவில் கட்டுவோம் – நீங்களே சகலமும் பார்த்துக்கொள்ளலாம் – இந்து திட்டம் உங்களுக்கு ஒத்துவருமாயின் எனது மின்னஞ்சல் முகவரியை தருகிறேன் தொடர்பு கொள்ளுங்கள்

  27. vedamgopal on May 8, 2010 at 4:25 am

    RGK points are valid and a must to be implemented immediately in India to establish a true secular country. Also add
    1. Conversion to be stopped totally. ( a cancer eating India’s vast land and oldest culture)
    2. Article 370 to be scrapped.
    3. All the Bangladeshi infiltrators are to be deported back to their country.
    4. Steps to be taken to re-locate Kashmir padits back to their original place.
    5. IMTD act to be scrapped.
    6. No foreign investment in electronic & print media.
    7. All the foreign funds for charity should be regulated through Govt and it should be distributed to the religious institution according to their population
    8. No regional parties which do not formed a independent state assembly are not allowed to contest for parliament election

  28. Ramesh on May 8, 2010 at 10:37 pm

    இன்னும் சில் விட்டு விட்டர்கள்
    ஜோசியம் ஜாதகம் பார்க்க வேண்டும்
    நுமேரோலோகி படி பேர் மாற்ற வேண்டும் மத்தவங்க கேலி பண்ணுவாங்கனு அப்பாவுக்கு தமிழ் பேர் வைக்கறேன்னு வச்சி நுமேரோலோகிபடி இனிதியால மாத்திக்கணும்

    கலர் துண்டு போட்டுக்கணும்

  29. Varatharaajan. R on May 9, 2010 at 7:01 am

    மிக அற்புதமான நய்யாண்டி கட்டுரை! தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள பித்தலாட்ட அரசியல் தலைவர்களை தோல் உ ரித்து விட்டீர்கள் ஹரன் பிரசன்னா !! ஆனால் இப்படிப்பட்ட அயோக்கியர்களிடமிருந்து சமுதாயத்தை காப்பாற்ற வழிதெரியாமல் திண்டாடும் நமக்கு விடிவுகாலம் எப்போது?

  30. subbu on May 10, 2010 at 9:15 am

    நையாண்டி நாயகர் ஹரன்ப்ரசன்னாவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

    என்னுடைய பங்குக்கு ஒரு புலனாய்வுத் தகவலைச் சொல்லிவைக்கிறேன்.

    பிரபல நாளிதழில் தொழிற்சங்கத் தலைவர் அவர், திராவிட பாரம்பரியத்தில் வந்தவர். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் வேளை வந்தபோது அது ராகு காலம் என்பதால் கையெழுத்துப் போடாமல் என்வி சாப்பிடப் போய்விட்டார். அந்த முற்போக்குப் பத்திரிக்கையும் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

    அன்புடன்
    சுப்பு

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.