ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!

மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே (François Gautier)
தமிழில்: ல. ரோகிணி

sri-sri-ravi-shankar

லட்சக்கணக்கானோர் அவரை பூஜிக்கின்றனர். பயங்கரவாதிகள் அவருடைய காலடியில் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுள்ளனர். அவர் ஒரே ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசி யாருமே, எப்போதுமே பார்த்ததில்லை. உண்மையும், அன்பும் அவருடைய வாழ்க்கையின் மாறாத லட்சியங்களாக இருந்து வருகின்றன. இருந்தும் 30-05-2010 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இழிவுபடுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அவர் பொய் சொல்வது போல் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. உண்மை என்னவென்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஹிந்து குருமார்கள், ஆச்சார்யார்களுக்கு எதிராக புழுதிவாரி துற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்து கொண்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியாருடன் அது தொடங்கியது. இன்று ஊடகங்களும் அரசும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை அவருடைய சீடர்களின் கண்ணோட்டத்திலும், பொதுவாக இந்தியர்கள் மத்தியிலும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். அடுத்தது யரோ?

இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். முதலாவதாக ‘கர்மா’ வைத்தான் சொல்லவேண்டும். ஹிந்துக்கள் பலமுறை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் அசிரத்தை கொண்டவர்களாக, விழிப்பற்றவர்களாக, சில சமயங்களில் அகந்தை கொண்டவர்களாக ஆகிவிட்டனர். இரண்டாவதாக இன்று பல கூட்டுச் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹிந்து தர்மத்தைத் தாக்கி வருகின்றன.

முதலாவதாக இந்த நாட்டின் ‘இயக்கு சக்தியாக’ இன்றியமையாத தலைவராக உள்ள நபர் ஒரு கிறிஸ்தவர்! (சோனியா என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) கிறிஸ்துவ ஆதிக்கம் உள்ள எந்த ஒரு நாட்டிலும், உதாரணமாக ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் ‘ஒரு ஹிந்து’ இவ்வாறு திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கமுடியுமா?

இரண்டாவதாக, இந்தியாவின் இன்றைய தலைவர்களில் பலர் மார்க்சிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். மதம் காலாவதியான ஒன்று. இறுதியில் அதைக் கைகழுவிவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ தொடமாட்டார்கள்). இதன் காரணமாகத்தான் ‘யோக நாடான பாரதத்தில்’ ஆன்மிக மற்றும் யோக ஸ்தாபனங்களைத் தாக்குகிறார்கள்.

மூன்றாவதாக, இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றங்கள் செய்வது, முன் எப்போதையும் விட மிக அதிகமாக நடக்கிறது. இத்தகைய மதமாற்றங்கள் இப்போது நடைபெறும் வீச்சு போல், என்றுமே இருந்ததில்லை. பிரிட்டிஷார் காலத்தில் கூட, கிறிஸ்தவ மதத்திற்கு, இந்த அளவுக்கு மதமாற்றங்கள் நிகழவில்லை. மூன்று சதவீத இந்தியர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘புது சென்ஸஸ்’ விஷயங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சுனாமி வந்த பிறகு தமிழகக் கடற்கரைப் பகுதியில் 12% இந்தியர்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக ஏமாந்த, விவரம் தெரியாத, மேற்கத்திய மக்கள் கொடுத்த லட்சக்கணக்கான டாலர்களின் துணையோடு, இந்த மதமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது ஒரு தீவிரவகை இஸ்லாமை இந்தியாவுக்குத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். ஹிந்து விரோத வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற இந்தச் சூழ்நிலை உதவியாக உள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் உதவியும் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் செயல்படவே இயலாது.

இறுதியாக, தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ‘மேற்கத்திய மயமாதல்’ இந்தியாவில் புயலடிக்கும் வேகத்தில் பரவிக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய அபாயமாக இருக்கக்கூடும். ஏனென்றால் பல ஆசிய நாடுகளின் ஆத்மாக்களை மேற்கத்திய தாக்கம் கொன்றுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் முற்றிலுமாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்துக் குவிக்க முடியுமோ அதில் ஹிந்துக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் காப்பியடித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், ஹிந்து நெறிமுறைகளையும் ஹிந்துக்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் ‘குரான்’ கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ உள்ள ஹிந்துக் குழுக்கள், இடைவிடாது, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு உள்ளன. இதன் விளைவாக ‘பேரம் பேசும் சக்தி’ அவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்களிடம் இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. நரேந்திர மோடி போன்ற ஒரு மாநில முதல்-அமைச்சருக்கே ‘விசா‘ கிடைக்காமல் செய்ய இந்திய கிறிஸ்தவர்களால் முடிகிறது. இத்தனைக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு அதிகமான திறமையோடு, ஊழல் இன்றி செயல்பட்டு வருகிறது.

hindu-gurus-and-saints

எனவே, ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த அமைப்பை, ‘தலைமை ஹிந்து கவுன்சில்’ என்று அழைக்கலாம். ஒவ்வொரு ஹிந்துக் குழுவும், குருவும், தங்களுடைய தலைமையை, சுயேச்சைத் தன்மையைத் தொடரலாம். ஆனால், இவர்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை கூடவேண்டும். பலவிதமான கட்டளைகளை நெறிமுறைகளை இவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 80 கோடி ஹிந்துக்கள், உலக அளவில் சேர்த்து 100 கோடி ஹிந்துக்களும் இந்தக் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

இந்தியா முழுவதிலும் ஏராளமான ஹிந்து குருமார்களும், சுவாமிகளும் உள்ளனர் அவர்கள் அனைவரையும், ஒரே குழுவாக ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இந்தியாவில் 12 மிக முக்கியமான ஹிந்து குருமார்கள் உள்ளனர். பெரும்பாலான சீடர்களை அவர்கள் கொண்டுள்ளனர். பிற எல்லா சுவாமிகள், குருமார்களை அவர்கள் பிரதிநித்த்துவப் படுத்துகின்றனர். எனவே அவர்களைக் கொண்டு இந்தத் தலைமை ஹிந்து கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.

முதல்கட்டமாக, அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரியார், கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும், அதேமாதிரி மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் பற்பல பெரிய குருமார்களும், அவர்களது பெரிய அடியார்கள் கூட்டங்களும் உள்ளன.

aum_om_ohm‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் மட்டுமே இந்த ஞானம் தப்பிப் பிழைப்பது எஞ்சியுள்ளது. இந்த ஞானம் மட்டுமே உலகைக் காக்கவல்லது. தங்களிடம் ‘தேவையான எண்ணிக்கை’ உள்ளது என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் ஹிந்துக்கள் மிகவும் வெற்றிகரமான, சட்டத்தை மதித்து நடக்கும் சக்திவாய்ந்த சமூகமாக விளங்குகின்றனர். அவர்களது குருமார்களை யாரும் கேவலப்படுத்தக்கூடாது.

நன்றி: விஜயபாரதம் 09-07-2010 இதழ்.

francois_gautierபிரபல பத்திரிகையாளர் பிரான்ஸ்வா கொத்தியே 1959-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்தியா வந்த அவர் ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இந்து தர்ம தத்துவங்களையும், இந்து வாழ்க்கை முறையையும், கலாசாரத்தையும் பயின்றார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இந்தியப் பெண் நம்ரதாவை மணம் புரிந்தார். இந்துத்துவம், இந்து அரசியல், சமூக பிரசினைகள் ஆகியவை பற்றி உறுதியான பார்வையுடன் தொடர்ந்து பேசியும்,எழுதியும் வருபவர் கொத்தியே. ரிடீஃப்.காம், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் இவரது பத்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய வரலாறு, இந்து குருமார்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் விவரங்கள் இங்கே..

62 Replies to “ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!”

  1. இந்த முயற்சியை சுவாமி தயானந்தா செய்துவிட்டார்.

    ஆச்சர்ய சபை ஒன்றை உருவாகியிருக்கிறார். இதில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து குருமார்களும் இருக்கிறார்கள்.

    இதற்கு இந்து இயக்கங்களும் சப்போர்ட் செய்தால் நிச்சயமாக இந்த இயக்கத்தை நடத்தலாம்.

    தேவை, ஊடகங்கள், அரசியல் ஆதரவு, அவளவு தான்.

    ஆதிரவி.

  2. as long as we dont have a daily news paper and a television channel we can not fight them. many people are ready for this battle. but i dont find a good general here.

    we need to change our media strategy to counter them. i am ready to work for this.

    with regards
    v.ganessan

    (edited and published)

  3. சுவாமி தயானந்த சரஸ்வதி என திருத்தி வாசிக்கவும்.

    ஆதிரவி

  4. காலத்தின் அவசியம்.
    நம் தருமத்தை போற்றி பாதுகாக்க இது அவசியம். ஊடகங்கள் நம் மதத்தலைவர்களை வேண்டும் போது ஏற்றியும் சுய விளம்பரத்திற்காக தூற்றியும் காட்டுகின்றனர்.
    ஆன்மிக கருத்துகள் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் நம் மதத்தலைவர்களை வேண்டும், ஆனால் ஒரு செய்தி என்று வரும்போது அதை ஆராயாமல் சுய விளம்பரத்திற்காக தூற்றுகின்றனர்.

  5. சமயம் வளர்க்க வேண்டிய சில ஆதினகர்த்தாக்கள் இந்து சமயத்தை அழிக்க போராடும் கலைங்கருக்கு விழா எடுத்து விருது வழங்கி தன் அடிமை சாசனத்தை வுறுதி செய்கின்றனர்.
    ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற நல்ல சமய பெரியவர்கள் அவர்கள் இறை பணியை நன்றாக ஆற்றுகின்றனர்.அதனாலேயே அவரை தாக்க முயற்சிக்கப்பட்டது.
    சந்நியசிகளாலும்,சமயப் பெரியோர்களாலும் இந்த போராட்டத்தில் நமக்கு உரிய ஆலோசனை வழங்க முடியும். ஆனால் அவர்கள் ஆலோசனைப்படி நாம் ஒன்று கூடி ஒற்றுமையாய் போராட வேண்டும்.(கபட சன்னியாசிகளை நாமே ஒதுக்குவோம் ).
    ஆனால் நமக்காக ஒரு அமைப்பு குறைந்தபட்சம் மாநிலம் தழுவியதாக (கட்டுரையில் குறிப்பிட நாடு தழுவியதாக இல்லையென்றாலும்) சாதி ஒழிப்பையும்,சமய முன்னேற்றத்தையும் முதன்மை கொள்கைகளாக கொண்டு வுடனே ஏற்பட வேண்டும்.(எப்படி ஆரம்பிப்பது?எங்கிருந்து ஆரம்பிப்பது?யார் ஆரம்பிப்பது? ஏன் )
    சீடர்கள் நிறைய பேர் தயார் என்று நினைக்கிறேன்.தேவை விவேகனந்தர்.
    ஒவ்வோர் இந்து குழந்தைக்கும் நம் மதத்தின் பெருமையையும், சிறப்பையும்,யோக(யோகா) ,வேத,இதிகாச விளக்கங்களையும் , தேவார, திவ்யப்ரபந்த பாடல்களையும் சென்றடைய தேவையான முயற்சியை எடுக்க வேண்டும்.மனதில் நம் மதத்தை பற்றிய தெளிவான விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.(இவர்களே வருங்கால சிங்கங்கள்,இவர்களை நம்பியே வருங்கால பாரதம் இருக்கிறது ).
    எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் மனோ தைர்யத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டியது மிக மிக அவசியம். (ஆனால் எப்படி என்று யோசிக்க வேண்டும்.).

    ஒன்று படுவோம் வெற்றி நமதே.

    வெற்றிவேல் வீரவேல்.

  6. இனிமேல் ஒரே ஒரு மந்திரம்தான்
    அது ‘ஹிந்து ஹிந்து ஹிந்து ‘என்பதே
    சுவாமி விவேகனந்தர் கூறியபடி’ஹிந்து’ என்ற வார்த்தை மனிதன் கண்டு பிடித்த வார்த்தைகளிலேயே மிக உயர்ந்தது என்று காட்டுவோம்
    பாரதம் உலகின் ஆசானாக மறுபடி எழும் காலம் வந்து விட்டது!

  7. ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தத் தளத்தைப் பார்க்கவும்.

    https://www.acharyasabha.org/

    இந்த ஆச்சார்ய சபா குறித்து வலைத்தளம் ஒன்றில் 2004 ஆம் ஆண்டு (பன்னாட்டு அரசியல்/ நிர்வாக ரீதியிலான) வெளிவந்த ஒரு கட்டுரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நிரலியைத் தருகிறேன். அல்லது கட்டுரையைத் தருகிறேன்.

  8. நமது நோக்கம் ஹிந்து என்றக் கூட்டத்தை மட்டும் கூட்டாமல் மற்ற இனத்தவரையும் மதிக்கும் சனாதன தர்மத்தில் இருக்கும் பட்சத்தில் இதற்கு எனது ஆதரவுமுண்டு.

  9. @babu said
    “ஆனால் நமக்காக ஒரு அமைப்பு குறைந்தபட்சம் மாநிலம் தழுவியதாக (கட்டுரையில் குறிப்பிட நாடு தழுவியதாக இல்லையென்றாலும்) சாதி ஒழிப்பையும்,சமய முன்னேற்றத்தையும் முதன்மை கொள்கைகளாக கொண்டு வுடனே ஏற்பட வேண்டும்.”
    என்னண்ணா பேசறீங்க, rss , seva barathi ,samskritha barathi , இவை எல்லாம் , நாட்டுபற்றும் , இனஒற்றுமைக்காகவும் , கலாச்சாரம் போற்றவும் பாதுகாக்கவும் , நீங்கள் சொல்லிய அத்தனை காரியங்களும் செய்யும் மாபெரும் இயக்கம் .
    ஆனால் விளம்பரம் இல்லாது செய்வார்கள் . இது தேசிய அமைப்பு
    ஏன் தமிழகத்தில் ஹிந்து முன்னணி இல்லையா ?
    வீரத்துறவி ராமகோபாலன் அய்யா மேற்கொண்டுள்ள புனிதபணியினை நீங்கள் எங்கும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அர்ஜுன் சம்பத் ,இந்து மக்கள் கட்சி – இவரை இந்துக்களின் மனசாட்சி என்றல் அது நிச்சியம் மிகை ஆகாது

    பாபு சார் ,
    பாக்கியுள்ள விஷயத்தில் உங்கள் கோபத்துடன் நானும் உடன் படுகிறேன்.
    அப்பறம் இன்னொரு விஷயம்,
    “(எப்படி ஆரம்பிப்பது?எங்கிருந்து ஆரம்பிப்பது?யார் ஆரம்பிப்பது? ஏன் )”
    நீங்கள் விவேகானந்தரை கூட்டத்தில் தேடுகிரிர்கள் ,அக்கூட்டதிற்கு சில சமயம் நீங்கள் ராமகிருஷ்ணர் ஆககூட தோன்றலாம் .
    உசுப்பி உடரதுக்காக சொல்லுலீங்க i honestly belive there are some qualities in you

    (edited and published)

  10. There is an acharya sabha. We must rally round that and ask for firm guidance

    Jai Hind

  11. இந்துக்கள் ஒன்றுபட வேண்டியது மிக அவசியம். அப்படி ஒன்றுபட முடியாமல் போகக் காரணங்கள் என்ன? ஒன்றுபட்டு விடக்கூடாது என்று சில சக்திகள் முனைப்பாகச் செயல்படுகின்றன. இந்து தர்மம், இந்து வழிபாடு, இந்து பண்பாடு இவற்றை பிற்போக்கானவை என்றும், மற்ற மத வழிபாடுகள் முற்போக்கானவை என்றும் சிலர் இந்து மதத்தைக் கேலி பேசி வருவது முக்கிய காரணம். அப்படிப் பேசுபவர்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்களே! ஒரு அரசியல் கட்சியில் இருந்து கொண்டு அந்தக் கட்சிக்கு எதிராகப் பேசினால், அவர்களைக் கட்சியை விட்டு நீக்குகிறார்கள். இந்துக்களைப் பற்றித் தரக்குறைவாக விமரிசிக்கும் இந்து தர்மத்தில் பிறந்தவர்களை நாம் எதுவும் செய்ய முடிவதில்லை. காரணம் நம்முடைய தர்மம் அரசியல் கட்சி அல்லது மற்ற மதங்களைப் போல ஒருவரால் தொடங்கப்பட்டதல்ல. இது ஒரு வாழ்க்கை முறை. முதலில் இதுபோன்ற கருங்காலிகளை ஒடுக்கினால் மட்டுமே நாம் நம் மதத்தை, வழிமுறையைக் கட்டிக் காக்க முடியும். சில இந்துமத மடாதிபதிகளே நாத்திக வாதம் பேசி , இந்துக்களுக்கு எதிராகப் செயல்படும் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களை முற்போக்காளர்கள் என்று காட்டிக்கொள்ளும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும். அத்தகையோர் காவி உடை தரித்து ஊரை ஏமாற்றுவதை முடக்கி வைக்க வேண்டும். நம் வீட்டை முதலில் சரி செய்த பிறகு நம் எதிரிகளை நாம் எதிர் கொண்டு முறியடிக்க முடியும். செய்வோம், வருகிறீர்களா?

  12. Pingback: Indli.com
  13. திரு.தெய்வமுத்து இந்து வாஸ் ஆங்கிலத்தில் 2009 ஆண்டு வெளியிட்ட கைஏடுவின் தமிழ்மொழிபெயர்க்கப்பட்ட சில செய்திகள்

    நீங்கள் ஓட்டு போடும்முன் சில உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும் ?

    தங்களது பெண், பிள்ளை பேரன், பேத்திகள் கோவிலுக்கு செல்லும் பொழுதோ அல்லது கடைகளுக்கு செல்லும் போதோ தீவிரவாதிகளால் குண்டடிபட்டு இறந்தால் எப்படியிறுக்கும் என்பதை பற்றி சற்று சிந்தித்து பார்துள்ளீர்களா ?
    தங்களது பிள்ளைகளோ அல்லது பேரபிள்ளைகளோ நிர்பந்தத்தின் பேரில் தங்கள் இருப்பிடத்தை மாற்றவேண்டிய அவலத்தைப்பற்றி சிந்தித்து பார்த்துள்ளீர்களா ? மேலும் அவர்கள் சனாதன தர்மத்திலிருந்து விலகி அன்னிய மதங்களுக்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டால் என்னவாகும் என்பதைப்பற்றி சிந்தித்து பார்த்துள்ளீர்களா ? இவற்றைப்பற்றி எண்ணும் பொழுது நீங்கள் கதிகலங்வில்லையா ? இவை எல்லாம் புகைபோட்ட தீ போல் நடந்துகொண்டுதான் வருகின்றன இது காட்டு தீ போல் பரவும்முன் நாம் விழித்துக்கொள்ளவேண்டாமா ? உண்மை நிலவரம் என்ன என்பதை சற்று பாருங்கள் !!!

    1. 200 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் இந்துக்கள் சனாதன தர்மத்தி்ன்படி பூஜைகள் செய்துகொண்டும் பஜனைகள் கீர்த்தனைகளை பாடிக்கொண்டும் நேர்தியான தெய்வீக தன்மையுடன் வாழ்ந்தார்கள். இது திருதிராட்டிரரின் மனைவி காந்தாரி பிறந்த ஊர் ஆகும். இப்பொழுது இங்கே ஒரு இந்துவும் இல்லை. இன்று இங்கு இருப்பவர்களெல்லாம் அல் குவித்தா, தலிபான் ஆட்கள். ஷரியா சட்டத்தின்படி கண்ணுக்கு கண் காலுக்கு கால் என்ற பழி பாவ செயல்களை செய்ய தயங்காதவர்கள்.

    2. 100 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் கராய்ச்சியிலும் (இராமனின் பிள்ளைகளான லவ, குசா வாழ்த இடம்) இந்துக்கள் பஜனைகளையும் கீர்தனைகளையும் பாடிக்கொண்டு சனாதன தர்ம்மத்தின் படி வாழ்ந்துவந்தார்கள். பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கே 24 சதவிகிதம் இந்துக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் இன்றோ அங்கு 1 சதவிகிதத்திற்க்கு குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் ” இஸ்லாமிக் ரிபபிளிக் ஆப் பாகிஸ்தான் என்று பிரகடனபடுத்தியது. ஆனால் இந்தியா ” இந்து ரிபபிளிக் ஆப் பாரத்” என்று ஏன் பிரகடனபடுத்தவில்லை ?

    3. 50 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் இந்துக்கள் பூஜை செய்து கொண்டும் பஜனைகளையும் கீர்தனைகளையும் பாடிக்கொண்டும் நேர்தியான வாழ்கை வாழ்ந்துவந்தார்கள். இங்கேதான் சைவம் முதல் முதலில் தோன்றியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இன்று பேருக்குகூட ஒரு இந்துவும் இல்லை. நேருவின் தவறான சுயநல அணுகுமுறையால் மிலேசர்கள் ஆக்கிறமிப்பிற்க்கு நாமே வழிவகுத்துக்கொடுத்தோம். அதனால் இந்துக்கள் எல்லாம் அங்கிருந்து விரட்டப்பட்டு இன்று நம் நாட்டிலேயே அகதிகளாக ஜம்ழூவிலும் டெல்லியிலும் அவதிப்படுகிறார்கள்.

    4. வடகிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம் நாகாலாந்து திரிபுரா மிஸோராம் மணிபூர் எல்லாம் கிருஸ்துவநாடாக மாற்றப்பட்டுவிட்டன அஸ்ஸாமிலும் மேற்க்கு வங்காளத்திலும் பங்களாதேசத்திலிருந்து கோடிகணக்கான இஸ்லாமியர்கள் அத்துமீறி குடியேறியுள்ளார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்து ரேஷன் அட்டையையும் அளித்துவருகிறது நமது அரசு

    5. தெற்கே கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் கிருஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு தீவிரம் அடைந்துவருகிறது. இதைப்போல் ஆந்திராவிலும் ஒரிஸாவிலும் கிருஸ்துவ ஆக்கிரமிப்பு அதிகரித்துவருகிறது. கேரளாவில் இஸ்லாமியர்களின் ஆதீக்கம் வலுவடைந்து வருகிறது.

  14. இந்த சரித்திர தொடர் நிகழ்வுகளை பார்க்கையில் இன்னும் 50 ஆண்டுகளில் நம்முடைய பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் கோவில்களுக்கு சென்று பிரார்தனை செய்யவும் பஜனை கீர்தனைகள் பாட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே ? இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக மதசார்பற்று நாடாக இருக்குமா என்பதும் சந்தேகமே ? நமது குழந்தைகளுக்கு சுதந்திரமாக எண்ணங்களை வெளிப்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே ? யாதார்த்தத்தில் இதுவே நாம் இன்று கண்எதிரே காண்கின்ற அவலங்களாகும் . மேலும் தீவிரவாத ஒருமத சமுகசேர்க்கை கொண்ட மக்கள் மாநிலங்களை ஆக்கிரமித்து வந்துகொண்டிருப்பது இதை மேலும் உறுதிசெய்கிறது.

    இந்துக்களின் வாழ்வாதாரமான பாரதத்தின் எல்லைபகுதிகள் தொடர்ந்து கேட்பாற் இல்லாமல் குறுகிக்கொண்டே வருகிறது. உலகில் 130 கோடீ இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் இவர்கள் 57 இஸ்லாமியநாடுகளில் பரவியுள்ளார்கள். அதைப்போல் 200 கோடீ கிருஸ்துவர்கள் 150 கிருஸ்துவநாடுகளில் பரவியுள்ளார்கள். ஆனால் 90 கோடீ இந்துக்களுக்கோ இருப்பது ஒரேநாடு பாரதம்தான் ஆனால் அப்படி சொந்தம் கொண்டாடமுடியாத அவலநிலைமையை ஸெக்யூலரிஸம் என்ற போலி வேஷத்தை போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்கள் இந்துக்களை நாடு இல்லாத அநாதைகளாக ஆக்க பேயாய் அலைந்துகொண்டீருக்கிறார்கள்.

    இப்படிபட்ட பாரம்பரியத்தையா நீங்கள் உங்களது குழநதைகளுக்கு விட்டுச்செல்லவேண்டும் என நினைக்கிறீர்கள் ? நாம் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்து நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்கவேண்டும். நமது சவால்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளும்முன் நமது நாட்டி் வரலாற்றை சற்று பின் நோக்கி பார்க்கவேண்டும்.

    பாரதம் முனிவர்களும் ரிஷிகளும் வாழந்த பூமி. இந்த புண்ணிய பூமியில்தான் பல கடவுள் அவதாரங்களும் ஞானிகளும் தோன்றினர். ராமர் கிருஷ்னர் மாஹாவீரர் புத்தர் ஆதிசங்கரர் குருநானக் போன்றோர். ஆதனால்தான் பாரதம் தெய்வபூமி புண்ணியபூமி என்று அழைக்கப்படுகிறது. இது நமது தாய்நாடு அவளை பாதரமாதா என்று போற்றி வணங்குகிறோம்.

  15. நமது நாடு 1000 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர் கிருஸ்துவர்களால் ஆளுமைபட்டு இருந்தபோதிலும் பாரதம் இந்து நாடாகத்தான் இருந்தது. உலக சரித்திரத்திலேயே இவ்வாறு 1000 ஆண்டுகளுக்குமேல் அடிமைப்பட்டு பின் புத்துயிர் பெற்ற நாடு நமது பாரதம்தான். இங்கே எண்ணற்ற ஜாதி மொழி இன வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் பிழைத்து நிமிர்ந்து நின்றதற்க்கு காரணம் நமது தெய்வீக கலாசாரமும் பண்பாடுகளுமேயாகும். இங்கு ஆண்மீகமும் அரசியலும் தொன்றுதொட்டு இணையாகபே கடைபிடிக்கப்பட்டதுதான். இந்த உண்மையேதான் (பல வேற்றுமையில் ஒற்றுமை) என்ற இந்துத்துவம் ஆகும்.. நாம் எந்த பூஜைகள் செய்தாலும் முதலில் சங்கல்ப்பம் செய்கிறோம் அப்பொழுது நாம் சொல்லும் முதல் மந்திரம் ” பாரத வருஷே பரதகண்டே ஜம்புதீவீபே” என்று இந்த புண்ணியபூமியை முதலில் வணங்குகிறோம். எனவே பாரதம் இந்துத்துவம் என்ற பிணப்பு இருந்தால்தான் ஸ்திர தன்மையுடன இருக்கமுடியும். இந்துத்துவம் என்பது மனிதநேயத்தின் மொத்த உருவகமே. வேறு எந்த மத கோட்பாடுகளிலும் இல்லாதது இந்துத்துவம் அதுவே தர்மம் அதுவே சத்தியம் அதுவே மணித நேயம். இன்றும் இந்த இந்துத்துவ பிணைப்புதான் நம்நாடு ஜனநாயக மதசார்பற்ற நாடாக பிழைத்து இருப்பதற்க்கு வழிவகுத்துள்ளது.

    ஆனால் தற்சமயம் நிலைமை மிகவும் மோசம்அடைந்து வருகிறது. அன்னியமத ஆதிக்க சக்திகளாலும் தேச ஒற்றுமையை குலைக்கும் போலிமதசார்பின்மை அரசியல் தலைவர்களாலும் பொருப்பற்ற பத்திரிகைகள் தொலைகாட்சிகளாலும் சீரழிந்து அதர்மம் தலைவிரித்து நாட்டை பாடாய்படுத்திவருகிறது. எனவே இந்துகள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்க்கு காலம்தாழ்தாது தாயார் படத்திகொள்வது அவசியமாகும். மீண்டும் வந்தேமாதிரம் கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.

    இன்று பாரதம் ஆறு எம கிங்கணர்களிடம் சிக்கி தவிக்கிறது (Mulla, Missionary, Marxists, Mecaulayists, Media & Maino ) முல்லா மிஷினரி மார்க்ஸிஸ்ட் மெக்காலே மிடியா மெய்னோ. இவர்களுக்கு எள்ளளவும் பாரதத்தின்மீது பற்று கிடையாது. அவர்கள் நமது காலாசாரத்தைப்பற்றியோ நாகரிக பண்பாடுகள் பற்றியோ சிறிதளவும் அக்கரை இல்லாதவர்கள். இவர்களை ஒழித்துகட்டாதவரையில் அமைதி என்பது பாரதத்திற்க்கு இல்லை ? நான் முல்லா மிஷினரி என்று சொன்னது தேசப்பற்று உள்ள முஸ்லீமையோ கிருஸ்துவனையோ அல்ல. இவர்கள் தேசப்பற்றுடன் முல்லாவுக்கும் மிஷினரிகளுக்கும் செவிசாய்க்காமல் இருப்பது ஒன்றே ஒற்றுமையை வளர்க்கும்.

  16. திரு பிரத்யுஷ் அவர்களே,
    நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் பணி செய்வது உண்மையே ஆனாலும் அது கிராமபுரங்களில் தேவையான reach அடையவில்லை என்றே எண்ணுகிறேன்.உதாரணமாக
    நான் தஞ்சாவூர்(இப்போது திருவாரூர்) மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வளர்ந்தவன்.இன்றுவரை என் மற்றும் அருகமையில் உள்ள ஊர்களில் ஆர்எஸ்எஸ் பற்றியோ மற்ற இயக்கங்கள் பற்றியோ யாருக்கும் தெரியாது.எனக்கும் பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வந்தபின் தான் தெரியும்.என் கருத்து இன்னும் அவை போதுமான அளவு மக்களிடம் சேரவில்லை என்று நினைப்பதால் கிராமங்களை மனதில் வைத்தே எழுதினேன்.அங்கு உள்ளவர்களுக்கு நாம் விவாதிக்கும் இந்த விவரங்களே தெரியாது.இப்போது அங்குள்ள ஆர் எஸ் எஸ் பற்றி தெரிந்தவர்கள் ஓரிருவரும் மேதவிகள்(ஆர் எஸ் எஸ் பற்றி தவறான எண்ணங்களை பொய் பரப்புரையால் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்) அங்கும் மத மாற்றம் ஆரம்பித்துவிட்டது.என் உறவினர்கள் எங்கள் வீட்டில் வேலை செய்த வயதான பெண் உட்பட அதில் சிக்கிவிட்டர்கள்.நமக்கு புதிய கோணத்தில் செயலாற்றக்கூடிய,பழிச்சொற்களை உடைத்தெறிந்து ஒவ்வோர் இந்துவின் வீட்டிற்கும் (மனதிற்கும்) சென்றடையக்கூடிய இயக்கம் சம்யப்பெரியோர்களின் ஆசியுடன் தேவை.இப்போதும் நான் இருக்கின்ற இயக்கங்கலை குறை சொல்லவில்லை.இந்த இயக்கத்துக்கு ஆதரவாக கூட இன்னும் சில உண்டாகலாமே.அல்லது இந்த இயக்கங்களே இன்னும் reach ஆகலாம் தவறு இருப்பின் விளக்கவும்.இன்னும் விவரமாக பிறகு எழுதுகிறேன்.(இதற்காக சில வழிகளில் தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்).உண்மை அதுதான்,நிச்சயம் என் பங்களிப்பும் ஒரு துரும்பளவாவது இருக்கும்.
    என்னைப்பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி (ஆனால் ஓவர்தான்).நான் அவ்வளவு தூரம் கற்பனை செய்ய கூட முடியாதவன்.(சொந்த லாபத்துக்க்காகவே கடவுளை வணங்கியவனும் ஆன்மிக கடல் ராமக்ரிஷ்ணரும் ஒப்பிட்டு பார்க்க முடியாதவர்கள்)என் வாழ்நாளுக்குள் என்னால் முடிந்த சிறு சிறு தொண்டுகளை இந்த ஒப்புமையற்ற சமுதாயத்திற்கு செய்யவே நான் விரும்புகிறேன்.

  17. நமது இந்து மதத்தை சந்நியாசிகள் அனைவரும் முதலில் பொது மக்களிடம் நன்றாக பழக வேண்டும்..மடங்கள் அமைந்துள்ள உள்ளூர் பகுதிகளில் உள்ள மக்களிடம் சந்நியாசிகள் நன்றாக பழக வேண்டும்.. பொது மக்களுக்கு ஏற்படும் ஆன்மிக சந்தேகங்களை தீர்க்க தினமும் நேரத்தை ஒதுக்க வேண்டும் அப்பொழுதுதான் பொது மக்களின் மனதில் ஆன்மிக சிந்தனை ஏற்பட வழி வகுக்கும்..பொது மக்களுக்கும் சந்நியாசிகளுக்கும் இடையே பினைப்பு ஏற்படும்.. மேலும் மடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நமது புனித நூலான பகவத் கீதை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.. அப்பொழுதுதான் பாமர மக்களும் நமது மதத்தின் மேன்மையை அறிய முடியும்..நமது இந்து மதத்தின் மீதும் பிடிப்பு ஏற்படும்..இதை படிபடியாக விரிவுபடுத்தி அனைத்து இந்துக்களும் பகவத்கீதை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.. அப்படி செய்தால் தான் அனைத்து இந்துக்களையும் நாம் ஒன்றிணைக்க முடியும்..

  18. நம் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட நமது புனித நூலான பகவத்கீதை முக்கிய பங்காற்றும்..நமது இந்துக்கள் பலருக்கு நமது புனித நூல் பகவத்கீதை என்பது தெரியாது.குறிப்பாக கிராம புறங்களில் மக்கள் நமது புனித நூலான பகவத்கீதையை பத்தி ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றனர்..இதுவே நம் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடாமல் இருபதற்கு மிக முக்கிய காரணமாகும் ஏனென்றால் நம் மக்கள் மிகவும் கடவுள் பக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் குறிப்பாக கிராம புறங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கடவுள் பத்தி கொண்டவர்களாக திருவிழாக்களை விமர்சையாக கொண்டாடுபவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் நம் இந்துகள் அனைவர்க்கும் வாழ்கைக்கு வழிகாட்டும் புனித நூலான பகவத்கீதையை பத்தி அறியாமல் இருப்பதால் நம் இந்து மதத்தின் மேன்மையை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்..எனவே நம் இந்துகள் அனைவரும் நம் புனித நூலான பகவத்கீதையை அறிந்து கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..உதாரணமாக மத்த மதத்தவர்களை எடுத்து கொண்டால் அவர்கள் அனைவரும் அவர்களோட புனிதநூல்களை பத்தி அறிந்து கொண்டவர்களாக அந்த புனித நூல்களில் சொல்லி உள்ளதை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் இதுவே மத்த மதத்தவர்களை ஒன்றிணைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது..ஆனால் துரதிஷ்டவசமாக நம் இந்துகள் நம்முடைய புனித நூலை அறியாமல் இருக்கின்றனர்.. இப்பொழுது நாம் நம் இந்துக்களுக்கு நமது புனித நூலான பகவத்கீதை பத்தி எடுத்துரைக்க வேண்டும்..குறிப்பாக கிராமபுற மக்களுக்கு நம் புனிதநூல் பகவத்கீதை என்று எடுத்து சொல்லி அவர்கள் அனைவருக்கும் எளிய தமிழில் உள்ள பகவத்கீதையை கொடுத்து அவர்களுக்கு தெளிவாக விளக்கி சொல்ல வேண்டும்..அனைத்து இந்துகளின் வீடுகளிலும் கண்டிபாக நமது புனித நூலான பகவத்கீதை இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் புனிதநூலான பகவத்கீதையை நம் இந்துகள் அனைவரும் பின்பற்றி நடந்தால் நம் மக்கள் மனதில் இந்து மதத்தின் மீது பிடிப்பு ஏற்படும். மேலும் நம் மக்களிடையே ஜாதி வேறுபாடுகள் வராது.நாம் அனைவரும் முதலில் இந்துக்கள் என்ற உணர்வும் நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வும் ஏற்படும்.. இனிமேல் நாம் யாருக்காவது அன்பளிப்பு தருவதாக இருந்தால் நமது புனித நூலான பகவத்கீதையை அன்பளிபாக தர வேண்டும்..இதை நாம் அனைவரும் ஒரு கொள்கையாகவே வைத்து கொள்ள வேண்டும். அப்புறம் பாருங்கள் நம் இந்துகள் அனைவரும் ஒன்றினைவதை யாராலும் தடுக்க முடியாது..

  19. ஹிந்துகளின் ஒற்றுமை ஓங்குக,
    நாளை திருவனதபுரத்தில் ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
    இன்நிகழ்ச்சி வெற்றிபெற தமிழ்ஹிந்து சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரியபடுத்துகிறேன்
    ஜெய் பவானி,வந்தே மாதரம்

    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=11790&SKIN=K

    Invitation for Hindu Unity Meet – Thiruvananthapuram

    Dharma Shikshan, Dharmacharan and Dharma Raksha – If this entices you, then Hindu Janajagruti Samiti (HJS) has the ideal platform for you.

    HJS is organizing a Hindu Unity Meet at Thiruvananthapuram on 8th August, 2010.

    The main intention of this gathering is :
    To create awareness about Hindu issues
    To provide Dharmaskikshan and emphasize the importance of Dharmacharan
    To unite Hindus globally
    To achieve broader social interests instead of their narrow-minded power centric Hinduism
    To stop denigration of Hindu Dharma (Righteousness)
    To protect the Nation

    Specialties of this gathering
    A film to show various ways of ‘Dharmacharan’
    Enlightening speeches on Nation and Dharma

    VENUE : Teerthapadam Mandapam, Thiruvananthapuram
    TIME : 5.00 PM
    DATE : 8th AUGUST, 2010
    CONTACT : 99958 76104

  20. கிராமங்களில் வாழ்ந்துகொண்டு அந்த மக்களுக்கு கல்வி, சுகாதாரம் அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்கள் சரி வர கிடைத்திட ஆங்காங்கே அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். எடுத்த எடுப்பில் ஹிந்து ஒற்றுமை என்று ஆரம்பித்தால் சன் t .v பார்க்க கிளம்பி விடுவார்கள் நம் மக்கள். சேவை சேவை சேவை! இதற்கு பிறகுதான் மற்றவை எல்லாமே! கிறித்தவ அமைப்புகள் வெற்றி அடைவது சேவை ஒன்றால் மட்டுமே! நம்மில் எதனை பேர் ஒரு வாரத்துக்கு ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் பொது நல சேவைக்காக ஒதுக்க தயாராக இருக்கிறோம்? மேனிலை பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எத்தனை பேருக்கு சேவை மனப்பாங்கு இருக்கிறது? அதை முளை விட செய்ய நமது இந்து சமுதாயத்தில் என்னென்ன ஏற்பாடுகள் உள்ளன? அதை விடுங்கள் இன்று எத்தனை பேர் ஹிந்து இயக்கங்களில் பிரசாரக் என்று அழைக்கப்படும் முழு நேர ஊழியர்களாக பணியாற்ற முன் வருகிறார்கள்?
    தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் எதிர் வீட்டு காரரோடு மின்னஞ்சலில்தான் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

  21. முல்லா – எமகிங்கரணன் – நம்பர்.1) முல்லாவோ அல்லது முல்வியோ தங்களதுபிடியிலிருந்து இஸ்லாமியர்களை விலகாமல் இருப்பதற்க்கு பல கட்டுபாடுகளை விதித்து தினம் தினம் பட்டுவாக்கள் அறிவிப்பதை ஒரு மாற்றம் இல்லாத கொள்கையா கொண்டுள்ளார்கள். இதன் தீவிரம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் அதிகம். மதசார்பற்ற பாரதத்திலும் நீதிமன்றத்தை புறக்கணித்து தங்களது ஷரியா சட்டத்தை நிலைநிறுத்த முயலுகிறார்கள். (UPA) அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு (Affidavit) பதிவுசெய்து முல்லாக்களின் பட்டுவா சாதாரண சட்டங்களில் தலையீடுதல் கூடாது என்று தீர்ப்பு பெற்றுள்ளார்கள். ஆனால் தீர்ப்பு அளித்த நீதீமன்றமோ பல சமயங்களில் அதை மீறி செயல்படுகிறது.

    உதாரணமாக கேரளாவில் 12 எம்.எல்.ஏ கள் மாநில அவையில் அல்லாவின் பேரால் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். இதற்க்கு ஒரு தனிநபர் கேராளாவின் உயர்சநீதி மன்றத்தில் இது இந்தியசட்டப்படி தவறு என்று முறையிட்டார். ஆனால் உயர்நீதி மன்றம் இதை தள்ளிவிட்டது. எனவே அவர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். உச்சநீதி மன்றமும் கடவுளும் அல்லாவும் ஒன்றுதான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் முல்லாகளோ பல முறை கடவுளும் அல்லாவும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்கள். (அதாவது கடவுள் என்று கூறினால் அல்லாவை தவிற மற்ற கடவுள்கள் உள்ளார் என்று ஏற்க்கவேண்டும்). இது எப்படி இருக்கின்றது என்றால் ஒருவன் தன்னை தானே அயோகியன் என்று வெளிப்படுத்தியும் அவனுக்கு நன்நடத்தை சான்றிதழ் அளிப்பது போல் ஆகும்.

    மேலும் ஒருமுறை அலகாபாத் உயர்தீதி மன்றத்தில் ஸ்ரீவஸ்தா என்ற நீதிபதி ஒரு தீர்பை கூறுகையில் ”ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோரும் இந்திய சட்டம் 51எ படி கீதையில் கூறியுள்ள தர்ம நெறிக்கு கட்டுப்பட்டவர்கள் ” என்று கூறினார். உடனே இவ்வாறு கூறுவது தவறு என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் உச்சநீதிபதி காரே போன்றோர் வாதிட்டார்கள். தங்கள் அல்லா தங்கள் கர்தர் மட்டும் தான் கடவுள் மற்றவை போலி என்று கூறும் குரானும் பைபிளும் தர்ம சாஸ்திரம் ஆகுமா?

    மேலும் இந்த முல்லாக்களின் பட்டுவாக்கள் பல சமயங்களில் இஸ்லாமிய குடும்ப வாழ்வையே அழித்துவிடுகிறது. கணவன் மனைவியை அல்ப காரணங்களுக்கா விசாரணையே இல்லாமல் பிரிப்பது மிகவும் கொடிய பாவம் ஆகும். இதனால் அவர்களின் குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படுகிறது மேலும் சிலர் தாசி தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கண்கூடாக பார்த்தும் அவர்கள் ஷரியா சட்டப்படி பட்டுவா அளிப்பதை நிறுத்தவில்லை.

    முல்லாக்கள் எப்பொழுதுமே தங்கள் இனத்து மக்கள் படிப்பு அறிவு இல்லாதவர்களாகவும் பின் தங்கி இருப்பவர்களாகவும் இருப்பதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான் அவர்கள் அறியாமையாலும் இயலாமையாலும் தாங்கள் வெளிப்படுத்தும் பட்டுவாக்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் முன்னேரினால் எதிர் கேள்விகள் கேட்ப்பார்க்ள என்ற பயம். இது தவிற அடிக்கடி ”இஸ்லாம் பெரிய அபாயத்தில் உள்ளது” என்று முழங்குவார்கள் இதனால் ஒருவித மரண பயத்தில் ”மந்தரித்துவிட்ட கோழி போல்” கூட்டம் கூட்டமாக ஓரே இடத்தில் கூடி தங்களுக்கு கீழ் படிந்து இருப்பார்கள். உண்மையிலும் அதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில படித்த இஸ்லாமிய அறிஞர்கள் முல்லாக்களின் ஆதிக்கத்தால் அதை எதிர்க்க மறுத்துவருகிறார்கள்.

  22. (மிஷின(ந)ரி – எமகிங்கரணன் – நம்பர்.2)
    மிஷினரி என்பவர்களும் சாதாரண கிருஸ்துவர்களும் வேறுபட்டவர்கள். மிஷினரி எப்பொழுதும் மத கோட்பாடுகளை வியாபாரம் செய்யும் இயக்கமாகும். அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் அங்கே வாழும் மக்களது பாரம்பரிய கலாசாரத்தை உரு தெரியாமல் கொன்று கர்தரின் ராஜ்ஜியத்தை நிறுவுவதே ஆகும். டாக்டர்.டேவிட் பிராவ்லே கூற்றப்படி மிஷினரி என்பது உலகமயமாக்கப்பட்ட மிகபெரிய நிறுவனம் அதற்க்கு பல வழிகளில் டாலர் சொத்துக்கள் முடிவு இன்றி குவிந்து கொண்டே இருக்கும். இதில் உள்ளவர்கள் கதோலிகர்கள் பிராடெஸ்டன் எவாஞ்சலிக் போன்றவர்கள். இந்த குழுக்களுக்கு முழுநேர ஊழியர்கள் பல கிளை கழகங்கள் உண்டு. இவர்களது வேலையே மதமாற்ற செய்ய வேண்டிய பணம் கொடுத்தல் சுவிஷேஷ பிரசகங்களை அடிக்கடி கிராம் கிராமமாக கூட்டுதல் மற்ற மத புத்தங்களை பற்றி கீழ்தரமாக விளக்கி பிட் நோட்டிஸ் அடித்து வினயோகம் செய்தல் மீடியா உதவியுடன் தீவிர மதமாற்றத்திற்க்கு தேவையான போலி இன மத ஜாதி வேற்றுமைகளை பெரிதுபடுத்துதல் எல்லாவிதமான சதிவேலைகளிலும் மறைமுகமாக ஊக்குவித்து அராஜகத்தை தூண்டுதல் ஆகியவை ஆகும். இவர்களுடன் போட்டிபோட்டு தடுப்பது என்பது ஒரு பெட்டிக்கடைக்காரன் உலக அளவில் தொழில் செய்யும் ஒரு நிறுவனத்துடன் போட்டி போடுவதற்க்கு இணையாகும். இதில் நமது அரசாங்கமே நேரிடையாக தலையிட்டால் அன்றி தீர்வுகாண்பது அரிது. நமது போராதகாலம் எரிகிற கொள்ளியில எண்ணையை ஊற்றும் அரசாங்கமாக இருக்கிறது. மொத்தத்தில் இது உலகை ஆக்கிரமிக்க நடத்தப்படும் புனித போர் ஆகும்.

  23. (மார்க்ஸிஸ்ட் – எமகிங்கரணன் – நம்பர்.3)

    மார்க்ஸிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் இவர்கள் காரல் மார்க்ஸ் பெற்ற தத்துபிள்ளைகள். அவர் ”மதம் என்பது மயக்கத்தை ஏற்ப்படுத்தும் ஒரு போதைப்பொருள்” என்றார். இவர்கள் எல்லோரும் பொதுவாகவே நாத்தீகர்கள் என்று கூறிக்கொள்வார்கள் அதுவும் இந்து மதத்தை மட்டும் தாக்குவார்கள். மற்ற மத கடவுள்கள் உண்மையில் இல்லை என்று இதுவரையில் சொன்னதில்லை. இவர்களுடைய குருமார்கள் சைனாவிலும் ரஷ்யாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் பாரதம் முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களது எண்ணம் பாரதம் பல மாநிலங்களின் கூட்டு சேர்க்கை அது ரஷ்யாவை போல் பிரிந்து பிரிந்து ஆண்டாலும் தவறு இல்லை. இவர்கள் காஷ்மீரம் பற்றிய முடிவை அந்த மக்களிடமே விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் ஆனால் அதே மாதிரி தீபெத் விஷயத்தில் கூற மறுக்கிறார்கள். (ஏன் என்றால் தீபெத்தை சைனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது). இவர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு சாமரம் வீசிக்கொண்டு சுதந்திரமே வேண்டாம் என்றுகூறியவர்கள். காந்தியையும் சுபாஷ் சந்திர போஸையும் ஜெயபிரகாஷ் நாராயணனையும் வெள்னே வெளியேறு என்ற போராட்டத்தையும் எதிர்த்தவர்கள். இந்திய சைனா யுத்தத்தின் போது சைனாவை ஆதரித்த தேச துரோகிகள். சி.பி.எம். என்பது சைனா கம்யூனிஸ்ட் கட்சியின் பாரத கிளையாகும்.

    ஆனால் இன்று உலகம் பூராகவும் கம்யூனிஸம் கொடைசாய்ந்துவிட்டது. பாரதத்தில் இந்தக்கூட்டம் சிறிதளவில் இருந்தாலும் பல தகாத கூட்டணி சேர்க்கையால் குழப்பங்கள் விளைவிப்பதையும் ஸ்திர தன்மையை குலைப்பதிலுமே என்றும் குறியாய் இருப்பார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ மதசார்பின்மை மீதோ நம்பிக்கை கிடையாது. இவர்கள் தங்களது ஆட்சியை வலுப்படுத்திக்கொள்ள பங்ளாதேசத்திலிருந்து அத்துமீறி நுழைந்த 3 கோடி இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு ஓட்டு உரிமையும் ரேஷன் அட்டையையும் அளித்துள்ளார்கள். மாவோவிஸ்ட் நக்ஸல்பாரிகள் இவர்களின் ஆயுத படை ஆகும். ஆனால் இவர்களின் ஆட்டம் இன்று வெகுவாக அடங்கிவிட்டது. இவர்களையும் மிஷிநரிகளையும் நாட்டைவிட்டு துரத்துவது இன்றியமையாத கடமையாகும்.

  24. பாலா ஸ்ரீநிவாசன் கூறுவது முழுக்க முழக்க உண்மை. ஒரு பொதுக்காரியத்துக்காக கூட்டம் ஏற்பாடு செய்தால் ஒருவரும் வருவதில்லை. கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். இவர் சொல்வது போல தொலைகாட்சி பார்த்தல், வீட்டில் சுகமாக இருத்தல் இதனைத்தான் விரும்புகிறார்கள். சமூக சிந்தனை என்பதே நம்மவர்களுக்கு கொஞ்சம் கூட இருப்பதில்லை. இந்த நெல்லிக்காய் மூட்டைகளை நம்பி யார்தான் என்னதான் செய்ய முடியும். இலவசம் தருகிறார்கள் என்றால் முண்டியடித்துக் கொண்டு ஓடுகின்ற இவர்கள் எந்த சிறிய தியாகத்துக்குக்கூட தயாராக இல்லை. இவர்களைக் கொண்டு என்ன பெரிதாகச் செய்துவிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

  25. Hindu unity is important. The problem is that we ourselves do not bother to know about our religion. When others denigrate our religion we helplessly support them because we do not know anything about our own religion. We have to create awareness about our faith and our spiritual literature. Literature of Ramana Mahrishi is very important in this respect. Young people should be encouraged to listen to the discourses by eminent speakers on advaitha philosophy. They are the future citizen of this country and they should be trained to know more about our religion. This indeed is a big task. But somebody have to start on this task early before our entire population is converted into other religions.

  26. (மிடியா – எமகிங்கரணன் நம்பர்.4)

    மிடியா என்றால் பத்திரிகைகளும் தொலைகாட்சியும். இதில் எல்லா ஆங்கில பத்திரிகையும் அன்னியநாட்டிற்க்கு மட்டுமே சாதகமாக தொண்டூழியம் செய்கின்றது. முஸ்லீம், கிருஸ்துவ பெரும் பணக்கார மாபியா கும்பல்கள் தான் இதில் பெரும் பங்குதாரர்கள். சில பத்திரிகைகளில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. பத்திரிகைகளும் தொலை காட்சிகளும் நாட்டின் முதுகெலும்பு நாட்டின் ஸ்திர தன்மைக்கும், ரகசியங்களை காப்பதற்க்கும் அதற்க்கு பெரும் பங்கு உண்டு. இவ்வாறு அன்னிய பங்கீட்டை பாரதம் தவிற வேறு எந்த நாடும் அனுமதித்ததில்லை. இதனால் நம்நாட்டு பொருளாதாரம் உயருமா அல்லது தொழில் கட்டுமான வழிதடங்கள் அதிகரிக்குமா ? பாரதத்தில் என்ன நல்லது நடந்தாலும் அவர்கள் கண்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு சிறு தவறு நிகழ்ந்தால் அதை ஊதி பெரியதாக்கி உலகம் பூராகவும் செய்திகளை பரப்பும். பாரதம் பெரும் கலவரங்கள் நடக்கும் நாடு இங்கே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். இங்கே தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை இல்லை என்று மறைமுகமாக கூறி நம் நாட்டின் முன்னேற்றத்தை தடைசெய்வதே இதன் நோக்கம் ஆகும்.

    இந்து பத்திரிகையின் ராம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தர உருப்பினர். சைனாவிற்கு அடிக்கடி விஜயம் செய்வார். சைனாவிற்க்கு சாதகமான செய்திகளை தன் பத்திரிகை ழூலம் பரப்புவார். கே.பி.எஸ்.கில் கூற்றி்ன்படி சில பத்திரிகைகள் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையது. (தெகல்கா, கம்யூனலிஸம் காம்பாட் போன்ற பத்திரிகைகள்). கரன் தாபர் என்ற பத்திரிகை ஆசிரியர் மோடியை எலிமிநேட் (கொலை) செய்தாலும் தவறு இல்லை என்கிறார். இந்துக்கள் தாக்கப்படடு கொலை செய்யப்பட்டால் மௌனம் சாதிப்பது அதுவே இஸ்லாமியருக்கோ கிருஸ்துவர்களுக்கோ நேர்ந்தால் செய்திளை திரித்து பெரிதுபடுத்துவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் கலவரம் நடந்து சிலர் இறந்தால் அதை இனபடுகொலைகள் நிகழ்ந்துவிட்டன என்றும் அதைப்போல் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இனபடுகொலைகள் நிகழ்ந்தாலும் அதை சின்ன கலவரம் என்று சித்தரிக்கும். எனவே நாம் மீடியாவில் அன்னிய முதலீடு செய்வதை முதலில் தடை செய்யவேண்டும்.

  27. (மெக்காலே – எமகிங்கரணன் நம்பர் -.5)

    மெகாலேயின் கல்வி திட்டம்தான் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது. அவரின் குறிக்கோள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு உன்னதமான ஆங்கிலம் கற்ற மத்தியஸ்தர்கள் (Mediators) தேவை. அவர்கள் நிறத்தில் இந்தியன் போல் இருந்தாலும் அவன் சொல்லிலும் செயலிலும் எண்ணங்களிலும் நடத்தைகளிலும் ஆங்கிலேயனைப்போல் இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதில் அவர் பெரும் வெற்றியையும் கண்டார். பல அறிவு ஜீவிகள் உற்ப்பத்தி ஆனார்கள். எப்படி ? வெறும் உடலால் இந்தியன் மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருத்தல். இப்படிப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இன்று கம்யூகிஸ்ட்களில் பலரும் காங்கிரஸில் பலரும் மணிதஉரிமை கழகங்களிலும் பலரும் சரித்திர ஆகிரியர்களில் பலரும் பத்திரிகை ஆசிரியர்களில் பலரும் நாட்டை அன்னியனுக்கு விலைபேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் போலி மதசாற்பின்மை பேசிகொண்டு சிறுபான்மையினரை தூண்டிவிட்டுக்கொண்டும் நாட்டின் அமைதியினை குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்து மதம் இந்துக்கள் என்றாலே எட்டிக்காயக கசக்கும். எல்லா தேசவிரோத சக்திகளுக்கு துணைபோக தயங்கமாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் பச்சோந்தி சுயநலகூட்டம். இவர்களின் வாரிசுகளும் இதையே தொடராமல் தடுத்து நிறுத்துவது பாரத இறையாண்மைக்கு மிகவும் அவசியம்.

  28. (மெய்னோ – எமகிங்கரணன் நம்பர்.- 6)

    யார் இந்த மெய்னோ ? அன்டோனியா மெய்னோ இவர் ஒரு ரோம் கதோலிக கிருஸ்துவச்சி. இத்தாலிய நாட்டில் பிறந்த இவர் தற்போது சோனியா காந்தி என்று பெயர் பெற்றுள்ளார். இவருக்கு இந்தியாவை பற்றிய எந்த சரித்திரமும் தெரியாது. அவர்தான் இன்று கொல்லைபுற கதவு வழியாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இவருக்கு கடுகளவும் இந்து தர்மத்தின் மீதோ இந்து காலாசாரத்தி்ன் மீதோ மரியாதை கிடையாது. பதவி ஆசை பிடித்த காங்கிரஸ்காரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சாலாம் அடித்து முடிசூடா பாரத ராணிக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.

    எதற்க்காக காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை இங்கு இறக்குமதி செய்யவேண்டும் ? இங்கே படித்த தேசப்பற்று உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இல்லையா ? ஒரு லண்டன் பாரில் எடுபிடியாக பணிசெய்து கொண்டிருந்த ஒரு பெண் இன்று முக்கியமான உலக தலைவர்களுள் ஒருவராகிவிட்டார் என்று 2004 லண்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்பு செய்தி வெளியிடுகிறது. அவர் பள்ளிபடிப்பைகூட முடிக்கவில்லை சேர்ந்தார்போல் சுயமாக சில வரிகள்கூட பேசத்தெரியாது. இருந்தும் மீடியாக்களின் பரபரப்பினால் திறைமைசாலி போல அரசியல் மேடைகளில் வலம் வருகிறார். பழய லோக் சபா சபாநாயகர் பி.எ.சக்மா காங்கிரஸ் காரியகமிடி கூட்டத்தில் வெயிப்படையாகவே உங்களைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார். இவரும் சரத்பாவாரும் சோனியாவின் வருகை பிடிக்காததால் காங்கிரஸிலிருந்து வெளிவந்து என்.சி.பி. என்ற புது கட்சியை தொடங்கினார்கள். பின்பு பதவிமோகத்தால் தன்மானம் இழந்து அவர்களுடன் கூட்டுவைத்துள்ளார்கள். இவர் ராஜிவை மணந்தபின்பும் 18 வருடங்களுக்கு மேலாக இந்திய பிரஜா உரிமையை பெறவில்லை ஆனாலும் சட்டத்தை மீறி டெல்லி ஓட்டுபட்டியலில் இடம்பெற்றார்கள்.

  29. மெய்னோ

    அவர் தேசப்பற்று இல்லாதவர் வந்தேமாத்திரம் நூறாவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வெளிப்படையாவே மறுத்தார். இது ஒரு காங்கிரஸ்காரனுக்கு அவமானமாக தெரியவில்லை. ஆனால் போப் ஜான்பால் மரணத்திற்க்கு இங்கு விடுமுறை அறிவிக்கிறார். காசு கொடுத்து கட்டாய மதமாற்றம் செய்த கிரஹாம் ஸ்டேன் அவர்களது மனைவி கிலாடி ஸ்டேனுக்கு பத்தமஸ்ரீ பட்டம் கொடுக்கிறார். எதற்க்கு ? அப்பாவி மக்களை தூண்டி காசு கொடுத்து மதமாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை கெடுத்தற்க்கு !!! பென்னி இன் என்ற மதபோதகர் அவர் மேல் வெளிநாட்டில் எண்ணற்ற குற்றசாட்டுகள் பதிவாகியுள்ளது. அவருக்கு பெங்களுரில் ராணுவ விமானதள மைதானத்தில் மோசடி மதபிரசாரம் செய்ய சோனியாவின் வற்புறுத்தலால் அனுமதி கொடுத்தார்கள்.

    சோனியாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கிருஸ்துவர்களும் நாட்டுபற்று இல்லாத சில இஸ்லாமியர்களும்தான். அம்பிகா சோனி ,ஆஸ்கர் பெர்நான்டஸ், அந்தோனி, மார்கெரிட் ஆல்வா என்று ஒரு பெரும் தலையாட்டி கூட்டத்தையே ஏற்படடுத்தியுள்ளார். வால்சன் தம்பு என்ற இந்து வெறுப்பாளி (NCERTs) தலைவர் ஜான் தயாள் (National Intrgration committe) கன்சன் எலியா என்ற இந்து வெறுப்பாளர் (UN & US ) காங்கிரஸ்சில் ( looking into the matters related to cast discrmination in India)

    200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு அல்பத்தனமாக ஒரு வெள்ளைகாரியின் காலடியில் நாட்டைகொடுத்திருப்பது கூனி குருகி அவமானபடவேண்டிய செயலே ஆகும். மகாத்மா காந்தி ”ராம ராஜ்ஜியத்தை” உருவாக்கவேண்டும் என்றார் ஆனால் அந்து ராமாயணத்து கூனீ போல் பாரதத்தில் நுழைந்த புதகி ”ரோம் ராஜ்ஜியத்தை” இங்கு நிறுவ சதிவேலை செய்துகொண்டிருக்கிறார். அவரையும் அவர் வழித்தோன்றல்களையும் நாடுகடத்தினால் நாடு உய்யும்.

    குறிப்பு – சோனியாவை பற்றி மேலும் பல குற்றசாட்டுக்கள் – அரசியல் என்ற தலைப்பில் ” சோனியாவின் முகத்திரை – சில ரகஸியங்கள் ” என்ற கட்டுரையின் மறுமொழிகளையும் பார்க்கவும்

  30. அந்தோனியா மைனோ நமது நேரு குடும்பத்தில் நுழைந்தது ஏதோ தற்செயலாக நடந்தது அல்லவென்றும் அது நமது அயல் நாடு எதிரிகள் நடத்திய சதி என்றும் நான் வலைத் தளத்தில் படித்துள்ளேன்.

  31. இந்த ‘மவுன்ட் ரோடு மோசே துங்’ பத்திரிகை சீனாவின் ஐந்தாம்படை
    எதோ உலகத்திலேயே வேறு செய்தி நிறுவனம் இல்லாதது போல் சென்சார் செய்யப்பட்ட செய்திகளைக் கொடுக்கும் சீனாவின் xinhua ‘ சினுவா’
    செய்தி ஸ்தாபனத்தின் செய்திகளை வெளியிடும் ஒரே இந்தியப் பத்திரிகை
    படித்தவர்கள் என்று சொல்லப் படும் அப்பாவிகள் தினமும் காலையில் பால் வார்த்து வளர்க்கும் நச்சப் பாம்பு.

  32. தேவர்கள்-அரிஜனங்கள், பள்ளர்-பறையர் இவங்க எல்லாமே எல்லா வகையிலும் பின் தங்கிய பிரிவினர். ஆனா பாருங்க ..ஒருத்தரை ஒருத்தர் அழிக்கனும்கிறதுல ரொம்பவே குறியா இருப்பாங்க! எப்பப்பாரு வெட்டு..குத்து… தீவைப்பு ..கற்பழிப்பு..திருவிழாவில கலகம்..போலீஸ்.. கேசு !! சரி இவிங்கதான் அப்படின்னா மேல்சாதின்னு சொல்லிக்கிறவங்க இதை விட மோசம். பெருமாள் கோவில்ல நெத்தில திருநீறு இருக்கிறவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கம்மியாதான் கிடைக்கும். செதம்பரம் நடராசர் கோவிலை கவுருமென்டு எடுத்துகிட்ட போது நாதிகவாதிகளை விட சந்தோசப்பட்டது கோவிந்தராஜா சன்னதி ஐய்யங்கார் சாமிங்கதான்…சென்னையிலேயே நிறைய பெருமாள் கோவில்களில் புள்ளயாருக்கு சதுர்தி பூஜா கிடயாது ஏன்னா அவரு பர்மசிவனோட புள்ளேன்கிற ஒரே காரணத்துக்காக! சரி ஐய்யங்கார் மக்கள் ஒத்துமையா இருப்பங்கன்னு எதிர்பாத்தால் அங்க வட கல- தென் கல சச்சரவு!
    ஒரு கோஷ்டி ராமானுஜர திட்டி தீக்கும், மத்தது தேசிக சாமிய! அவிங்க கோயில் யானைக்கு நாமம் போடற விஷயத்தை வெள்ளக்காரந்தான் பிரிவி கவுன்சில் மூலம் தீத்து வச்சான். சங்கர மடத்துக்கு போனா சிருங்கேரிக்கும் காஞ்சிக்கும் அடி தடி… வரலாறு சொல்ற பாடத்தை கேட்க மாட்டோம்ன்னு புடிவாதமா இருக்கிற நம்ம மக்களை வெச்சுக்கிட்டு ஹிந்து ஒத்துமைய பத்தி நம்ப்ளும்தான் பேசிகிட்டு இருக்கோம்; முழிச்சுக்க மாட்டோம்ரானுவளே ?

  33. மரியாதைக்குரிய வேதம் கோபால் ஐயா அவர்களின் விளக்கங்களை படித்த பிறகும் உணர்வு வராதவர்கள்,திருந்தாதவர்கள்,செகிலாரிசம் பேசுபவர்கள் நிச்சயம் மக்கள் அல்ல மாக்கள் .

  34. வேதம் கோபால் அவர்களுடைய கருத்து முழுக்க முழுக்க உண்மை. இந்தியாவில் இந்துக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டு கிறிஸ்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க போப் இந்தியா வந்தபோதே உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனை நிறைவேற்றப்போவது யார் என்பதும் நிச்சயமாகிவிட்டது. இருநூறு ஆண்டுகள் அந்நிய ஆட்சியை ஒழிக்க நம் தலைவர்கள் செய்த தியாகம் அனைத்தும் ஒரு நொடியில் வீணாகிப் போனது. ஒரு அந்நிய நாட்டுப் பெண்மணி சுதந்திரத்துக்குப் போராடிய ஒரு கட்சியின் தலைவி என்பது அவமானம் என்பது ஒரு காங்கிரஸ் காரனுக்கும் உறைக்கவில்லை. நூற்றி ஆறு கோடி மக்களில் ஒருவன் கூட காங்கிரசுக்குத் தலைமை வகிக்கத் தகுதி இல்லாதவரா? லாலா லஜபதி ராயும், வீர சாவர்க்கரும், ஷாகீத் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் தானா? மக்கள் என்று விழித்துக் கொள்வார்கள்?

  35. சகோதரர் பாரத புத்திரன் சொல்வது அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பது உண்மையே
    அனால் எப்போதும் பரபரப்பான செய்திகள்தான் அதிக முக்கியத்துவம் பெறும்.
    அதனால் அவை தான் எதோ அதிகம் நடப்பது போல் தோன்றும்
    அனால் அது உண்மையல்ல.

    உலகம் பூராவும்- பாகிஸ்தான்,பங்களாதேஷ்,மலேசியா,ஸ்ரீலங்கா,இப்போது பர்மா என்று ஹிந்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ‘தப்பைகள்’- ஏன் சொந்த நாட்டிலேயே கால் தூசிபோல் அரசியல் வாதிகள்,ஊடகங்கள்,போலீஸ்,நீதித் துறை என்று நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கேவலம் -இதனால் கொஞ்சம் சொரணை வந்து கொண்டிருக்கிறது .
    எப்போதுமே பெரும்பாலானவர்கள் செக்கு மாடுகள் மாதிரிதான் இருப்பார்கள்
    ஒன்றிரண்டு லட்சியவாதிகளால்தான் மாற்றம் வரும்.

  36. இந்த ஜாதி சங்கங்களே ஹிந்து எதிரிகள் தூண்டி விட்டு நடத்தப் படுகின்றனவோ என்று சந்தேஹமாக உள்ளது.
    ஹிந்துக்கள் ஒற்றுமையாக ஆகி விடக் கூடாது என்று நடத்தப் படும் சதியோ என்று ஐயமாக உள்ளது
    அதே போல்தான் உதிரிக் கட்சிகள் உதயமாவதும் – விஜயகாந்த்,ராஜ்தாக்கேரே ,சிரஞ்சீவி கட்சிகளால் ஹிந்து எதிரிகளான காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு ஆதாயம் கிடைத்தது.
    சர்ச்சும் கொஞ்சம் விளையாடும்
    பெட்டி கைமாறும்
    எனவே ஹிந்துக்கள் இந்த சக்திகளை புறக்கணிக்க வேண்டும்.
    வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள அவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் போல் வாக்கு வங்கி உருவாக வேண்டும்

  37. அன்புடையீர்
    கோத்தியேயின் தமிழாக்கம் படித்தேன், சிந்தனையை தூண்டும் எழுத்துக்கள்! இதன் ஆங்கில மூலம் லிங்க் தர இயலுமா? நன்றி

  38. ஏழாவது ‘எம்’ ஆக மோதிலால் புத்ரர்களாகிய காங்கிரஸ் காரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

  39. இப்படி ஒரு அமைப்பும், கட்டுப்பாடுகளும் இந்து மதத்திற்குத் தேவையில்லை. யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு அமைப்பு இல்லாமலேயே இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்புவிதனில் சனாதனதர்மம் நிலைத்திருக்க முடியும் என்றால், இனியும் அது தேவையில்லை. இந்து மதத்தைப் பரப்ப தர்ம நெறிகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அன்பு நெறியைப் பரப்புங்கள், இனம், சாதிகள் கடந்து அன்பே உருவான இந்து நெறியைப் பரப்புங்கள் – சனாதனதர்மம் தானாக வாழும்!

    அன்பு என்பது இருக்கும் வரை – இந்து தர்மும் வாழும்! நேற்று வந்த நடைமுறைகளைப் பின்பற்றி இந்துமதம் வாழத் தேவையில்லை.

  40. பெண்கள் உரிமை பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை இல்லை
    ஈரானில் இப்போது ஒரு நடுத்தர வயது உள்ள பெண்மணிக்கு பாலியல் குற்றத்திற்காக கல்லால் அடித்துக் கொல்ல தீர்ப்பு ஆகியுள்ளது.
    சில வருடங்கள் முன்பு உத்தர் பிரதேசத்தில் மாமனாரால் கெடுக்கப் பட்ட முஸ்லிம் பெண்மணி பிறகு தனது கணவனை தன பிள்ளையாக கருத வேண்டும் என்று ஜமாஅத் தீர்ப்பு அளித்தது
    இது எவ்வளவு உயர்ந்த பெண் உரிமை!

  41. வேறு நாட்டில் உள்ள ஆளும் குடும்பத்து ஆண்மகனை வஞ்சகமாக வலையில் விழ வைத்து பின் அந்த நாட்டில் புகுந்து அதை தங்களுக்கு அடிமை ஆக்கும் அளவுக்கு நய வஞ்சகப் பெண்மணிகள் ஹிந்துக்களில் இல்லை.

  42. கம்யுனிஸ்டுகளுக்கு பாரதீய ஜனதா மதவாதக் கட்சி
    ஆனால் முஸ்லிம் லீகும் ,கேரளா காங்கிரசும் மதச் சார்பற்ற கட்சிகள் !
    நல்ல ஜோக்!
    கேரளாவில் , இஸ்லாமை இகழ்ந்ததாக ஒரு கிறிஸ்தவ பேராசிரியரின் கையை ஒரு முஸ்லிம் வெட்டியதற்கு இவர்களிடமிருந்து ஒரு சத்தமும் காணோம்
    பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்
    ரெண்டு பக்கமும் பொட்டி வருகிறது

  43. பங்காரு அடிகளார் மீது வரித்துறை ரெய்டு கூட சிலுவைழலின் சிலுவை்யின் சதியில் ஒரு பகுதியாக இருக்கலாம்.

  44. //தமிழ் ஹிந்து! காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!
    https://allinall2010.blogspot.com/2010/08/blog-post_13.html //
    இப்படியும் சில கருப்பு ஆடுகளா? மற்ற வலைதளத்தை பற்றி இங்கே தரக்குறைவாக ஒருபோதும் ஒருவரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை.
    பார்ப்பனர்கள் எத்தனை ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர், அவர்களில் ப்ரோகிதம் செய்பவர்கள் எத்தனை? எனக்கு தெரிந்து பிரைவேட் கம்பெனியிலும்,us போன்ற வெளிநாட்டிலும் தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
    இந்து மதத்தை காப்பது அவர்களுக்கு கூடுதலாக எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.ஏன் என்றல் அவர்களின் இன்றைய தொழில் கோயில்களை மட்டும் நம்பி இல்லை. எல்லோரும் பண்ட் ஷர்ட் போட்டு மத சம்பளத்திற்கு வேலை பார்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். குடுமியும் கடுக்கனும் அணிந்து மேலாடையின்றியும் எத்தனை நாள்தான் அவர்களாலும் இருக்கமுடியும். இப்போது மதத்தினால்,வழிபாட்டால், கோயில்களில் கிடைக்கும் வருமானம்,கோயில் நிலங்களில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் சுரண்டி கொள்ளை அடிப்பது திராவிட வெறி பிடித்த கருப்பு ஆடுகளே.
    ஆனால் பழி மட்டும் பார்ப்பனர்களுக்கு தான்.அவர்கள் அழிந்து விட்டால் தான் யார்மேல் பழி போடுவது என்று யோசித்து அடுத்து வேறு ஒரு இனத்தையும் அவர்கள் இந்தியாவுக்கு உடுருவிய கதையையும் புதிதாக உருவாக்க வேண்டும்.
    பாகிஸ்தான் சண்டை கூட பார்பன சதியால் தான் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்லி விடுவார்கள். மேலும் எதற்கு எல்லாம் பார்பனர்கள் காரணம் என்று ஒரு பட்டியலே நகைச்சுவையாக நண்பர் ஒருவர் தயாரித்திருக்கிறார்.
    https://nanavuhal.wordpress.com/2010/05/19/few/
    அந்த இனத்தை அழிப்பதும் கடைசியில் அவர்களிடமும் வோட்டுக்கு என்கி நிற்பதும் திராவிட (என்று சொல்லிகொள்ளும்) கட்சிகளின் சதி.
    இத்தகைய திராவிட சதியே உடனே அழிக்கப்பட வேண்டியது.
    சுயமரியாதை பேசும் திராவிட மாயை பிடித்தவர்களுக்கு,பார்ப்பன வீட்டில் பிறந்தவனும் மனிதன் தான் அவனுக்கும் நம்மை போல் உணர்கள் தன்மானம் எல்லாம் உண்டு அவனும் எல்லா உரிமைகளுடனும் பிறந்தவன்தான்.என்ற எண்ணம் கொஞ்சம் கூட இருக்காதா ?
    பிறப்பின் அடிப்படையில் இனி ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக ஏன் பார்ப்பன சமுகத்தை உண்டாக்க பார்கிறார்களோ.
    (பி. கு ) நான் ஒரு பார்ப்பன சமூகத்தவன் அல்ல. மூன்று வேலையும் மாமிசம் உண்ணும்,கழகங்களால் திராவிடன் என்று பிரிக்கப்பட்ட சமுகத்தில் பிறந்தவன்.ஆனால் என் நினைப்பில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த யாரையும் இழிக்காமல், யார் இழிப்பதையும் அனுமதிக்காமல் சுய மரியாதையுடன்,உண்மையான பகுத்தறிவுடன் வாழ்ந்து இறையை உணர நினைக்கும் சராசரி மனிதன்.
    பணக்காரர்களை (பார்பனர் அல்லாத)பார்த்து பூணுல் போட்டவர்கள்
    ஐயா என்று அழைத்து எழுந்து நிற்பதை பலமுறை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். கோவையிலும் பார்த்திருக்கிறேன். இங்கு ஆதிக்க சாதியாக தெரிவது திராவிடர் என்று அழைக்கப் படும் பணக்காரர்களே.

  45. //மார்க்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் இந்து மதம் தவிர மற்ற மதங்களை கேள்வி கேட்பதில்லை என்ற குற்றசாட்டு வைக்கிறார்கள்! இந்துத்வம் அளவு சாதிபிரிவினை மாற்று மதங்களிலா இருக்கு! எந்த சர்ச்சிலாவது காசு கொடுத்தால் முன்னாடி உட்கார் என்று சொல்கிறார்களா, எந்த மசூதியிலாவது காசு கொடுத்தால் சிறப்பு வழிபாடு செய்கிரார்களா//

    இதுவும் அங்கே பதியப்பட்டுள்ளது. காசு வாங்கிகொண்டு உள்ளே வரிசையை அமைப்பது முழுக்க திராவிட அரசாங்கத்தின் அதிகாரிகளே. அரசாங்கம் கோவிலை விட்டு வெளியேறிவிட்டால் கோவில் இந்த முறைகளை முதலில் களைந்து விடும். சிறப்பு வழிபாடு கட்டணமும் உண்டியல் வருமானமும்,கோயில் எல்லா வருமானமும் திராவிட அரசாங்கத்திற்குதான் போகிறது என்ற அறிவு கூட இல்லாதவர்கள் பகுத்தறிவு பற்றி பேசுவதா?

    சாதியை ஒழிக்க விடாமல் நீருற்றி வளர்ப்பது கழகங்களும்,கம்முநிச்ட்டுகளும்,காங்கிரஸ்களும் , மத வியாபாரிகளும் (கிருதுருவ கெட்ட செய்தி பாதிரிகள்) ,அந்த அந்த சாதியின் தலைவர்களும் தான். அவர்களுக்கு அதில்தான் பிழைப்பே ஓடும். சராசரி இந்துவுக்கு அது தேவையில்லாத ஒன்றாகவே கருதப் படுகிறது அவனவன் பிழைப்பை பார்க்கவே நேரம் இல்லாத நிலை இப்போது இந்துக்களுக்கு . அப்படி வெறி பீடித்து நடப்பவர் ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களாலேயே அவ்வாறு நடக்கின்றனர். அதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர்களும் திருத்தப்பட வேண்டியவர்கள் என்றே இந்த சமுகம் விரும்புகிறது.சாதி ஒழிப்பு என்பது எனக்கு தெரிந்து ராமானுஜர் காலம் முதல் இருக்கிறது என்றே தோனுகிறது. சாதி வளர்ப்பு என்னவோ பெரியார் (பேரில் மட்டும்) காலத்திற்கு பிறகுதான் முழு வீச்சில் நடை பெறுகிறது (அரசியல் மற்றும் மத மாற்ற லாபத்திற்காக).

    தவறு செய்தவன் ஆண்டவனே என்றாலும் குற்றம் குற்றமே என்று வாதிடும் நக்கீரர் பிறந்த சமுகம் இது. தவறு செய்தவர் யாவர் ஆயினும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. சங்கராச்சாரியார் தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்க பட வேண்டியவரே அனால் அவர் கைதான முறை அவருக்கு ஏற்பட்ட harassment பற்றி எழுதப்பட்ட கட்டுரைக்கு இவர்கள் முதுகிற்கு பின்னால் செய்யும் பொய் பரப்புரை நிறைந்த கட்டுரை.
    நித்யானந்த தவறு செய்திருந்தால் அவரும் தண்டனை அனுபவிக்க பட வேண்டியவரே அவர் கர்நாடக மாநிலத்திலே ஆசிரமம் வைத்திருந்ததால் வழக்கு அங்கே நடக்கிறது.இதுவும் பார்பன சாதியம், நித்தியானந்தர் பார்பனர் அல்ல என்பதை கூட மறந்து விட்டார்கள்.
    அவரை கைது செய்ய வட இந்திய சென்றது கூட கர்நாடக காவல்துறை.அவர் மேலான வழக்குக்கும் எந்த இந்து அமைப்பிற்கும் தொடர்பு என்று சொல்லமுடியுமா?
    பலான செக்ஸ் புதிர்கள் பற்றி எத்தனையோ வெப் சைட் இருப்பது அவர்கள் கண்ணில் பட வில்லை போல வுள்ளது.
    நித்தியானந்தாவும்,சங்கரச்சரியரும் மட்டும் இந்து மடத்தின் தலைவர்கள் அல்ல, அவர்கள் செய்யும் தவறுகள் ஒன்றும் இந்து மதத்தின் பேரை சொல்லி மதத்தை வளர்பதற்காகசெய்தவை ஒன்றும் அல்ல.சிலுவைப் போர் ஒன்றும் அல்ல .இது தனி மனித தவறு அவர்கள் செயல்கள் எல்லாவற்றையும் இந்துக்கள் ஆதரித்து கொண்டிருக்கவும் இல்லை (இதுவும் இவர்களுக்கு விளங்கவில்லை).

    இவர்கள் தலைவர்கள் செய்த பகுத்தறிவு தவறுகளுக்கு இவர்கள் ஆமாம் சாமி போடுவது போல நாமும் போடுகிறோம் என்று கதை கட்டுகிறார்கள்.
    மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது எம் முப்பாட்டனாரின் வழி,அதிலே சிறிதும் எமக்கு மாற்றம் இல்லை.

    எல்லா வரியும் copy paste செய்யவில்லை ஆனால் அங்குள்ள முழு கட்டுரைக்கு என்னால் முடிந்த அளவு மறுமொழிகள் இவை.

  46. //சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,//
    இதை விட்டுவிட்டேன் கடந்த காலத்தில் ஐந்து ஆண்டுக்கும் மேல் நடந்த பா ஜா கா ஆட்சியில் எத்தனை வழிபாட்டுத்தலங்கள் இடித்து தள்ளப்பட்டன. என்பது எனக்கு தெரியவில்லை பாவம் தெரிந்தவர் யாராவது இருந்தால் இந்த நண்பர்களுக்கு தெரியப்படுதுங்களேன்.
    மற்ற மத நண்பர்கள் நடத்தும் இணைய தளங்கள் எல்லாம் செய்யும் அட்டுழியங்களை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
    தமிழ் இந்து தளம் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை நியாமான முறையில் விளக்கி ஒற்றுமை ஏற்படுத்துவது,விழிப்புணர்வு ஏற்படுத்துவது இனி சிலருக்கு தொழிலில் (அரசியல் மற்றும் மதமாற்ற)
    பாதிப்பு ஏற்படுத்தும் என்ற பயத்திலும் வைத்தெர்ச்சளிலும் வாந்தி எடுத்திருகிறார்கள்.

  47. இப்போது காஷ்மீரில் அங்குள்ள அறுபதாயிரம் சீக்கியர்களை ஒன்று முஸ்லிம்களாக மாற வேண்டும் அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம் வெறியர்கள் கூக்குரலிடுகிறார்கள் .
    இது இந்த கருப்பு ஆடுகளுக்குத் தெரியாதா?
    இதை கண்டிக்காதது என்?

    இதற்கு முன் நான்கு லட்சம் ஹிந்துக்கள் அங்கிருந்து துரத்தப் பட்டனர்
    அப்போது இந்த ஆடுகள் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருந்தனர்?

    அவ்வளவு ஏன்,நாடு பிரிவினை ஆகும்போது இப்போது உள்ள பாகிஸ்தானில் பனிரெண்டு சதம் ஹிந்துக்கள் இருந்தனர்.
    இப்போது கொலை,மத மாற்றம்,அவர்களின் பெண்கள் கட்டாயமாக முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்படு்தல் இவற்றால் ஒரு சதமாகக் குறைந்துள்ளது
    அந்த ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே.
    அவர்களுக்காக இவர்கள் என்ன செய்தனர்?

    இவ்வளவு ஏன் சிறிலங்காவில் இருந்த ஹிந்துக்கள் பிற்படுத்தப் பட்டோர் என்ற வகுப்பில் உள்ளவர்களே.
    அவர்கள் சித்திரவதை அனுபவிக்கும் போது இங்குள்ள திராவிடத் தலைவர்களும் அவர்களின் அடி வருடிகளும் நன்றாக பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு ,சும்மா வசனம் பேசிக்கொண்டு தானே இருந்தார்கள்?

    இப்போதும் அவர்கள் சொல்லொணாத துயரம் தானே அனுபவிக்கிறார்கள்?
    அவர்களுக்கு என்ன செய்தார்கள்?

    மலேசியத் தமிழர்கள் என்ன பார்ப்பனர்களா?
    அவர்களின் தலைவர்கள் இங்கு வந்து ஆதரவுக்கு கெஞ்சினார்களே. ஆனால் ஏறெடுத்தும் பார்க்கவில்லை நய வஞ்சக தமிழ் தலைவர்கள்

    ஆக இவர்கள் யார் பொட்டி கொடுக்கிறார்களோ, எதைச் செய்தால் பதவி சுகம் கிடைக்குமோ அல்லது நீடிக்குமோ அதைதான் செய்வார்கள்.
    அவர்களுக்கு யார் செத்தாலும் ,இருந்தாலும் கவலை இல்லை.

    இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  48. காஷ்மீரில் தீவிரவாதம் ஆரம்பித்த நாள் முதல் நூற்றுக்கணக்கான கோயில்கள் தரை மட்டமாக்கப் பட்டுள்ளன.
    இஸ்லாமிய ஆதிக்கத்தில் முப்பதாயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த சிதிலங்கள் மீது பல இடங்களில் மசூதிகள் கட்டப் பட்டன
    கோவாவில் கிறிஸ்தவ போர்த்துகீசிய ஆட்சியில் நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப் பட்டன
    பிரெஞ்சு கிறிஸ்தவ ஆட்சியில் பாண்டிச்சேரியில் வேதபுரீஸ்வரர் ஆலயம் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப் பட்டது.( இதைப்பற்றி ஒரு நேரடி வர்ணனை கவர்னர் டூப்லேயின் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் உள்ளது)
    ஆங்கிலேய ஆட்சியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் இடிக்கப் பட்டது
    இன்னும் பல உள்ளன
    சொல்லப் போனால் வெட்கம்
    ( இன்றும் நம் நாட்டில் பல இடங்களில் கட்டுமானப் பணி செய்யத் தோண்டும் போது கடவுளின் மூர்த்திகள் கிடைப்பது எதனால்?
    படை எடுத்து வரும் முஸ்லிம்கள் மூலவரை சிதைத்து பங்கப் படுத்தக் கூடாது என்று அவசர அவசரமாக் அப்பாவி ஹிந்துக்கள் புதைத்து விட்டு ஓடியதால்தான்)
    எங்கு நடந்தது இந்த மாதிரி அக்கிரமம் ?
    எத்தனை காலம் இந்துக்கள் அராஜகத்தின் விளிம்பில் வாழ்ந்தனர் ?
    ஆனால் இந்துக்கள் இடித்தது ஒன்றே ஒன்று அதுவும் அவர்களின் முந்தை தெய்வமான புருஷோத்தமன் இராமனின் ஆலயத்தை இடித்து அதன் மீது கட்டிய கட்டிடமே .

  49. அரசியல்வாதிகள் எல்லாருமே ஒன்று என நினைக்கும் போது மாற்றுக்கட்சிக்கு ஒட்டுப்போடுவதால் மட்டும் இந்த நிலையை மாற்றமுடியாது என்பது தெள்ளத்தெளிவாகிறது.

    இருப்பினும் இப்போதைக்கு நமக்கு அதைவிட்டால் வேறு வழி இல்லை!

    நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்குவதற்காக முன்னோர்கள் செய்த தியாகங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்காவது நாம் தியாகங்கள் செய்யத்தான் வேண்டும்: உதாரணத்துக்கு ஒன்று கூற முடியும் இங்கே.

    பல கிருத்தவப்பள்ளிகளில் இந்துக்கடவுள்கள் பற்றி தவறாக குழந்தைகளுக்கு போதிக்கப்படுவதால் உடனடியாக பெற்றோர்கள் இந்துக்குழந்தைகளை போட்டி போட்டுக்கொண்டு அங்கே சேர்க்கும் மனப்பான்மை மாறவேண்டும்.

  50. //சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,//

    இல்லை.. இப்பொது போல, சொனியாவின் ஆட்சி வேண்டும்.. ஒரிஸ்ஸாவின் கந்தமாலில் கிறிஸ்துவர்கள் சுவாமி லக்ஷ்மானந்தாவை சுட்டு கொன்றது போல, மற்ற இடத்திலும் சர்ச்சுகள் செய்ய வேண்டும்.. ஈரோட்டில் நடந்தது போல, தலித் அமைப்புகளை தூண்டிவிட்டு இந்துக்களை தாக்கவேண்டும்..

    இதுதான் உங்களுக்கு தேவை போல..

    திருடனுக்குதான் திருட்டுத்தனம் தெரியும்.. அது போல, பா.ஜ.க வந்தா, நீங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்களோ அதையே அவங்களும் பண்ணுவாங்கன்னு ஒரு பயம்.. அதான், குய்யோ முய்யோன்னு அலறீங்க.. ஆனா, அந்த பா.ஜா.கா வுக்கு, அதுக்கெல்லாம் தைரியம் இல்லைன்னு உங்களுக்கு தெரியாதுன்னி நினக்கிறேன்.. ராஜ தந்திரம் தெரியாம, ” நான் நல்லவன்.. நான் நல்லவன்ன்னு” காட்டறதுலயே பாதி நாள் அவங்களுக்கு போயிடுது..

    உங்கள மாதிரி ஆளுங்களுக்கு, அது வசதியா இருக்குது..

  51. இன்று பாரதத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும்,எதிலும் சர்ச் ஊடுருவியுள்ளது.
    சோனியா மற்றும் காங்கிரஸ் மூலமாக அவர்கள் இந்த நாட்டை இன்று ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்பது சத்யம்.
    இது எவ்வளவு தூரத்துக்குப் போய் விட்டது என்றால் இரண்டு நாட்களுக்கு முன் செய்தித் தாளில் படித்த செய்தி’ சர்ச் ஆப் இங்கிலாந்து ஒரிசாவில் வேதாந்தா என்ற கம்பனி அங்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதி்களில் கனிம வளங்களை தோண்டுவதை எதிர்க்கிறது.’ என்பதாகும்.
    இதில் ராகுல் காந்தி தலையிட்டு அந்த மாநிலத்துக்குச் சென்று பழங்குடியினரிடம் இந்த விஷயம் சம்மந்தமாக் பேசியதும் சந்தேகத்தை வர வழைக்கிறது.
    ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு- அதுவும் வேற்று நாட்டு அமைப்புக்கு நம் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட என்ன உரிமை?
    அதுவும் பொருளாதாரம் சம்மந்தமான விஷயத்தில்?

  52. இப்போது வந்துள்ள செய்தி: காஷ்மீரில் இருந்த ஒரே ஜெயின் கோவில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப் பட்டு அழிக்கப் பட்டது.
    கடவுளரின் மூர்த்திகளுடன் பூசாரி குஜராத் சென்றார்.
    எவ்வளவுதான் நடக்கும் இந்த அட்டூழியம்
    எவ்வளவு காலம்தான் இதையெல்லாம் சிலர் ஆதரித்துக் கொண்டிருப்பர்?
    கண்ணிருந்தும் குருடரோ அவர்?
    அல்லது கைக்காசு கொடுத்தால் பெற்ற அன்னையையும் விற்பரோ?
    .

  53. ‘ஹிந்து மதத்தில்தான் சாதிகள் உள்ளது அதனால்தான் மர்சிக்ஸ்டுகள் கண்டிக்கிறார்கள்’
    இதை விட ஒரு பிதற்றல் வேறு கிடையாது
    இன்று ( செப்டம்பர் இரண்டு)- பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் சுன்னி முஸ்லிம்கள் குண்டு வைத்ததனால் பதினெட்டு பேர் மரணம்.
    இதே போல் ஈரான்,ஈராக் போன்ற நாடுகளிலும் அடிக்கடி நடக்கிறது
    ஷியா,சுன்னி, அகமதியா ,போஹ்ரா, கோஜா, தாவூதி , மொஹாஜிர்,இன்னும் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் பிரிவுகள் உள்ளன.
    ஹிந்துக்கள் இவர்களைப் போல் ஒருவர் மீது ஒருவர் குண்டு வீசுவதில்லை

    அயர்லாந்தில் காலம் காலமாக கதொலிக்கர்களுக்கும், பராடச்ட்டேன்டுகளுக்கும் நடத்து கொடிருக்கும் கொடிய போர் எல்லோரும் அறிந்ததே
    ஆகவே நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளை கொஞ்ச காலம் அங்கெல்லாம் முகாம் போட சொல்லுங்கள் !

  54. கிறிஸ்தவத்திலும் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உள்ளன.
    கதோலிக்,ப்ராடச்டேன்ட், செவன்த் டே அட்வெண்டிஸ்ட், பாப்டிஸ்ட், எஹோவாஸ் விட்னெஸ், சிரியன் ஆர்தொடாக்ஸ், அர்மேனியன், பெண்டகொஸ்ட் , கிரீக் ஆர்தொடாக்ஸ் ,ஆங்கிலிக்கன்,லூதரன்,காப்டிக்,மார்மான்,க்வேகர்ஸ்,மெதடிஸ்ட் , ப்ரஸ்ப்ய்டீரியன் இவை போல்.
    இன்னும் கேட்டால் ஒரு கிறிஸ்டியன் இன்னொரு க்ரிச்டியனை முதல் முதல் பார்க்கும் பொது ‘நீ எந்த சர்ச்சை சேர்ந்தவன்?’ என்று கேட்பான்.
    ஆகவே சும்மா ஜாதி ,ஜாதி என்று பேசி ஹிந்துக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம் .

  55. இந்த இந்துக்கள் ஒன்று படவேண்டும் என்ற தலைப்பு நன்றாக உள்ளது. ஆனால் அப்படி ஒன்று படுவதற்கு ஒரு பொதுவான நூலை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்து ஒரு நண்பரால் மேலே கூறப்பட்டுள்ளது. அது படிக்க நன்றாக உள்ளது. ஒரே நூலை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முற்படுவது என்பது பகுத்தறிவுக்கு ஒத்து வராது. ஏனெனில், இந்துக்களுக்கு பலகோடி என்று கூட ஒரு லிமிட் ( எல்லை) வகுக்க முடியாது. இப்போது இருக்கும் பல புனித நூல்களை போல எதிர்காலத்திலும் பல கோடிக்கணக்கான புனிதர்கள் தோன்றி நல்வழிப்படுத்துவார்கள்.

    ஒரே புனித நூலை எல்லோரும் ஆட்டுமந்தை போல் இருந்தால் ஏற்றுக்கொள்ளமுடியும். இந்துக்கள் ஆட்டுமந்தைகள் அல்ல. நமக்கு மதத்தலைவர் என்று எவரும் கிடையாது. ஏனெனில் இறைவனையே தலைவராக நாம் கொள்கிறோம். ஏனெனில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களையும் நாம் நம்மில் ஒரு பிரிவாகவே பார்க்கிறோம். நாத்திகர்களுக்கு காலப்போக்கில் ஏதாவது அறிவு வளர்ந்து அவர்களும் நல்ல கதிக்கே போய்ச்செருவார்கள் என்பதே நம் மதத்தின் கருத்து.

    எனவே இந்துக்கள் ஒன்றுபட்டு செயல் படுவது என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் இயல்பானது ஆகும்.நம்மிடம் பரந்த மனப்பான்மையும் , உயர்வான கருத்துக்களும் இருக்கும் வரை உலகில் எந்தக்கொம்பனும் ஒன்றும் செய்துவிட முடியாது. பிற நம்பிக்கைகளை மதிப்பது நமது அடிப்படை குணம் ஆகும். ஆனால் பிறர் நம்மை அழிக்க நினைத்து சதிகள் செய்து மதமாற்றம் போன்ற செயல்களில் இறங்கும் இக்காலக்கட்டங்களில் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

    புதிய சிந்தனைகள் மற்றும் புதிய செயல்முறைகள் காலம்தோறும் அறிவியலில்(விஞ்ஞானத்தில்) தோன்றுவது போல , நமது மதம் முற்றிலும் அறிவியல் பூர்வமானது என்பதால் , இங்கும் ஏராளமான புதுமைகள் தோன்றும். எனக்கு தெரிந்து வைணவர்களில் சில பத்தாண்டுகளுக்கு முன்பாக வடகலை மற்றும் தென்கலை சம்பிரதாயத்தை சேர்ந்தோர் தங்கள் குடும்பங்களுக்குள் திருமண உறவுகள் கொள்வது என்பது கிடையாது. பிறகு அவர்கள் குடும்பங்களுக்குள் திருமண உறவுகள் ஏற்படத்தொடங்கி இன்று அதே வைணவக்குடும்பங்கள் மிக உயர்ந்த திருநெல்வேலி சைவ பிள்ளைமார் குடும்பத்திலேயே பெண்களோ, பிள்ளைகளோ எடுத்து திருமணம் செய்யும் அளவுக்கு மாறியுள்ளனர். இந்த சீர்திருத்தங்கள் காலப்போக்கில் தாமாகவே வந்தவை ஆகும்.

    வைணவர்களை போலவே, ஸ்மார்த்த பிராமணர்கள் என்று சொல்லப்படும் குடும்பங்களும் முன்பு அவர்களுக்குள் பல உட்பிரிவுகள் பார்த்து தங்கள் உட்பிரிவிலேயே திருமணம் செய்வது சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை வழக்கமாக இருந்துவந்தது. இன்றோ, அவர்களும் வைஷ்ணவ குடும்பங்களிலும் பிற ஜாதிகளிலும் திருமண உறவுகள் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? ஏனெனில் ஒரிஜினல் இந்து மதத்தில் ஜாதி பிரிவினைகள் எதுவும் கிடையாது. இடையில் வந்த இவைகள் இடையில் போய்விடும்.

    இதுபற்றி என் நண்பர் என்னிடம் இது பணம் உள்ள இடத்தில் மட்டும் நடக்கிறது , பணம் எப்போதுமே பணத்துடன் தான் சேரும .ஆனால் பணமில்லாத ஏழைக்குடும்பங்களில் இது நடப்பதில்லை என்றார் . ஆனால் ஏராளமான காதல் திருமணங்கள் அரங்கேறுகின்றன .
    .
    ஆனால் ஏதோ இந்து மதத்தை பின்பற்றுவோரிடம் மட்டும் ஏராளமான பிரிவினைகள் இருப்பதாகவும், ஏனைய மதங்களை சேர்ந்தவர்கள் ஒரே கடவுள் மற்றும் ஒரே கொள்கை என்று இருப்பது போலவும் ஒரு தொடர்ந்த பொய் பிரச்சாரம் நம் நாட்டில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் மதமாற்ற வியாபாரிகளிடம் கையூட்டு பெறுகிற போலி பகுத்தறிவுவாதிகளும் , பணத்தாசையினால் இது போன்ற பொய் பிரச்சாரங்களுக்கு வெண்தாடி வேந்தர் பெயரில் உள்ள திடலை வாடகைக்கு விட்டு பகுத்தறிவு வாழ்வு நடத்துவது தான்.

    மற்ற மதங்களில் சீர்திருத்தம் சிரமம். ஏனெனில் அவர்கள் புதிய கருத்துக்களுக்கு இடம் இல்லாமல் ஒரே நூலை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். நமக்கு அப்படி அல்ல. எனவே இங்கு தான் பல் வகையான முன்னேற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

  56. namathu inthu matham indiyavil nilaikka vendumanal sathi kalai olikka vendum…melu arasiyal vathikalin suyanalathukaka…..matta mathathinarai valara vidukirarka..enpathai ninaithal en manam mikavum vethanai adaikirathu….india hindu kalin nadu enpathai yarum maranthu vida vendam…valka pjb valarka narenthra modiyin pukal…athvaniyin arulodu…hindu matham valka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *