ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்…

View More ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

View More அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]

சோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே! உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே!. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்!” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.

View More தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]

‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?

ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! …. இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது! மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?

View More ‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?

என்ன, விளையாடறாங்களா?!

கட்டிடங்கள், மாடிகள், பாலங்கள் சரிந்து விழுந்து… அதையெல்லாம் அண்டக்கொடுத்து சரிசெய்யவே நேரம் ஓடிப்போனது… இன்னும் பத்து பேரை எக்ஸ்ட்ராவாகப் போட்டு இன்னுமொரு கமிட்டி வேண்டுமானால் போடுகிறேன் என்கிறார். பாவம், ரப்பர் ஸ்டாம்ப் பிரதமருக்கு இதுவே அதிகபட்ச சாதனைதான்…

View More என்ன, விளையாடறாங்களா?!

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்….கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்…

View More இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3

“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.

View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3

எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது… முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்…

View More எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்

நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.

View More இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்

ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்

திப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டன.. 200 ஆண்டுகளாக கோவிலில் மூலவர் விக்கிரகமே இல்லை.. அண்மையில் மக்கள் முறைப்படி அபிராமி அம்மனை மலைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தும், காவல் துறை பிரச்சினை உருவாகும் என்று கூறி மூலவர் விக்கிரகத்தை அகற்றி விட்டது… இருநூறு ஆண்டுகள் ஆகியும் தங்கள் மலைக்கோவிலில் வழிபட உரிமை கிடைக்காமல் இருப்பது திண்டுக்கல் இந்துக்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம்.. .

View More ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்