அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

”ராமர் அங்கேதான் பிறந்தாரா? அங்கே கோவில் கட்டலைன்னா இப்ப என்ன? ஆதாரம் இருக்கா அங்கேதான் ராமர் பிறந்தாருன்னுட்டு?” – கேள்விகள், கேள்விகள்.

”இந்தத் தீர்ப்பு இப்ப வரலைன்னு யாரு அழுதா? இந்த இளைய தலைமுறைக்கு ராமர்னாலே யாருன்னு தெரியாது. அதைப் பத்தியெல்லாம் யாரும் கவலைப்படலை.” — இப்படியும் கமெண்ட்கள்.

இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் கறையான முடிசூடா இளவரசன் ராகுல் வின்சி என்கிற ராகுல் காந்தி, “அயோத்தியை விட முக்கிய விஷயங்கள் இருக்கின்றன” என்று சொல்ல பத்திரிகைகள் அதை அப்படியே பக்கங்களில் பிரதானமாக வாந்தியெடுத்தன. (கல்மாடி சுருட்டினதில் வாங்க வேண்டிய கப்பமா? குடும்ப நண்பர் குவிட்ரோச்சி கொடுக்க வேண்டிய கமிஷனா? – எது அயோத்தியை விட முக்கியம் என யாரும் கேட்கவில்லை.)

ஆனால் தீர்ப்பின் நேரம் நெருங்க நெருங்க நாடெங்கும் மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கவனித்தார்கள். மூன்றரை மணி– நான்கு– நான்கு இருபது- தீர்ப்பு வர ஆரம்பித்தது. சந்தித்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. போன்கால்கள் எஸ்.எம்.எஸ்கள் எதிர்பாராதவர்களிடமிருந்தெல்லாம் வர ஆரம்பித்தன!

தீர்ப்பு தெளிவாக இருந்தது.

ayodhya_makeshift_templeஅது ராமர் கோயில்தான். அந்த இடம் ஸ்ரீராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் (ஹிந்தியில் “தேவ-துல்ய”) வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது. பாபர் அங்கு, அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னால் அங்கே ஒரு கோயில் அமைப்பு இருந்தது. அதை அவன் இடித்தானா இல்லையா என்பது கேள்விக்குரியது. ஆனால் அதன் இடிபாடுகளின் மீது- அவனுக்குச் சொந்தமில்லாத இடத்தில்- அவன் கட்டியதுதான் அந்தக் கட்டிடம். எனவே அது ”ராம் லல்லா” என்கிற குழந்தை ராமருக்குச் சொந்தமானது.

தீர்ப்பு தெளிவாகத்தான் இருந்தது. ஆங்கில, ஹிந்தி தொலைக்காட்சி சேனல்களில் அப்படியே சொல்லவும் செய்தார்கள். ஆனால் தமிழ்த் தொலைக்காட்சி சானல்களில் ராமர் என்கிற வார்த்தை வராமல் பார்த்துக் கொண்ட விதம், அந்தத் தீர்ப்பை முடிந்தவரை முஸ்லீம்களுக்குச் சாதகமாக வந்ததுபோல சொன்ன விதம் இருக்கிறதே, மகா சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்புக்குரியதாகவும் இருந்தது!

மூன்று நீதிபதிகளுமே கும்மட்டம் இருந்த மையப்பகுதி, ஸ்ரீராம ஜென்ம பூமியின் இதயப்பகுதி ஹிந்துக்களுக்கு உரியது எனத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள ராம் சபூத்ரா மற்றும் சீதா கீ ரசோயீ ஆகிய வழிபாட்டு மேடைகள் உள்ள இடம் நிர்மோஹி அகாராவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். நிர்மோஹி அகாரா என்ற மடம் 1885-லேயே ராமஜன்மபூமி விஷயமாக நீதிமன்றத்தை அணுகியவர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு ஹிந்துக்களுக்கு எதிராக நடந்தது. சுதந்திர பாரதத்தின் நீதித்துறை 60 வருடங்கள் கழித்தாவது அந்தக் களங்கத்தைத் துடைத்திருக்கிறது.

நீதிபதி கானின் தீர்ப்பில் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதி இப்படிப் பங்குபோடப்பட வேண்டுமெனக் கூறுகிறது:

மையக் கும்மட்டத்துக்குக் கீழே ராம்லாலா விக்கிரகங்கள் வைத்துள்ள தற்காலிகக் கோயில் அமைந்துள்ள பகுதி ஹிந்துக்களுக்கே இறுதியாக அளிக்கப்பட வேண்டும் என மேலும் அறிவுறுத்தப்படுகிறது. நிர்மோஹி அகாராவுக்கு ராம் சபுத்ரா பகுதியும் சீதா ரஸோயி பகுதியும் அளிக்கப்பட வேண்டும் என நெறியுறுத்தப்படுகிறது.

ayodhya_verdict_judges

நீதிபதி சுகிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறியிருப்பது:

மூன்று கும்மட்டங்கள் இருந்த இடத்திற்குக் கீழாக உள்ள பகுதி பகவான் ராம ஜென்மஸ்தான தெய்வம் என்றும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாகவும் ஹிந்து மத நம்பிக்கை கருதுவதால் அது ஹிந்துக்களுக்கு உரியதாகும். வழக்குத் தொடுத்தவர்கள் (அதாவது முஸ்லீம்கள்) அதற்கு எந்த இடையூறும் எவ்விதத்திலும் செய்யக் கூடாது.

நீதிபதி தரம் வீர் ஷர்மா தனது தீர்ப்புச் சுருக்கத்தில் முன்னுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியிருப்பது:

1. சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடமா?

சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடம். அந்த இடமே சட்டரீதியில் ஓர் ஆளுமையாகவும் தெய்வமாகவும் கருதப்பட வேண்டும். ஏனெனில் அது பகவான் ராமர் குழந்தையாகப் பிறந்த இடமாக, இறைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

2. சர்ச்சைக்குரிய கட்டிடம் மசூதியா? அது எப்போது கட்டப்பட்டது? யாரால் கட்டப்பட்டது?

சர்ச்சைக்குரிய கட்டிடம் பாபரால் கட்டப்பட்டது. அது கட்டப்பட்ட ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அது இஸ்லாமிய மதநெறிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டது. எனவே அது ஒரு மசூதியாகக் கருதப்பட முடியாது.

3. அங்கு மசூதி ஹிந்து கோவிலை இடித்த பிறகு கட்டப்பட்டதா?

அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் அந்த இடிக்கப்பட்ட கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான ஹிந்து மத வழிபாட்டுக் கட்டிடம் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளது.

************

இதே விஷயங்களைத்தான் ஹிந்துத்துவ வாதிகளும், அயோத்தி இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியவர்களும் இத்தனை ஆண்டுகளாகக் கூறிவந்துள்ளார்கள். ஆனால் ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும் ஏதோ பிரம்மாண்டமான- தினசரி தொழுகை நடத்தி வரப்பட்ட- மசூதியை ஹிந்துத்துவர்கள் இடித்துவிட்டதாகப் பொய்ப் பிரசாரம் செய்தார்கள். அதன் விளைவாகவே இந்தியா முழுக்க கலவரங்கள் உருவாகின. மதச்சார்பின்மையின் நாயகன்களாகவும் சிறுபான்மையினரின் காவலன்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள இந்த அறிவுஜீவிகள் அப்பாவிகளின் இரத்த ஆற்றில் மூழ்கி முக்குளிக்கவும் தயங்கவில்லை.

ஆனால் இது ஒரு நிலத் தகராறுப் பிரச்சினையோ அல்லது மத வழிபாட்டுத்தலம் குறித்த இரு சாராரின் பிரச்சினையோ மட்டும் அல்ல. தேசம் குறித்த இரு அடிப்படையான பார்வைகள் இங்கே மோதியுள்ளன.

ayodhya_jai_shri_ramஇந்தத் தேசத்துக்கென்று ஒரு பண்பாட்டு வளமை உள்ளது. அதுவே இந்தத் தேசத்தை ஒன்றுபடுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே நாம் நம் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக, அந்தப் பண்பாட்டு மதிப்பீடுகளை நாம் பலி கொடுத்துவிடக்கூடாது என்பது ஒரு பார்வை.

மாறாக நமக்கென்று ஒரு பண்பாடு கிடையாது. ஒரு சமுதாயத்தை தாஜா செய்து, ஒவ்வொரு சமுதாயத்தையும் ஒன்றோடொன்று மோதவிட்டு அரசியல் நடத்துவதே சாலச்சிறந்தது என்கிற மற்றொரு பார்வை. அந்நியர்களையும் அரசியல் இலாபமிருந்தால் தேசிய நாயகர்களாக்கும் வக்கிரம் கொண்ட அந்தப் பார்வை மதச்சார்பின்மை என்கிற பெயரில் இந்த நாட்டில் கோலோச்சியது. இந்தத் தேசத்தின் வரலாற்றை வெறுமனே அதிகாரத்தையும் பொருளாதார உறவுகளையும் மட்டுமே கொண்டு கட்டுடைக்கும் பார்வை அது.

அதே நேரத்தில், தேசிய அளவில் கருத்துரீதியாக வெற்றிடத்தை உருவாக்கி, அங்கு அந்நிய தேசக் கருத்தாங்கங்ளை விதைத்து, ஆன்ம அறுவடைக்கென களம் இறங்கியிருந்தன ஆக்கிரமிப்பு மத சக்திகள்.

வாக்கு வங்கிகளுக்காக மக்களைப் பிளக்கும் போலி மதச்சார்பின்மையும், வலுவற்ற வக்கிர அரசியலைப் பயன்படுத்தி விரிவாதிக்க ஆன்ம அறுவடை செய்யும் சக்திகளும் கைகோர்த்ததன் சின்னமாக மாறியது பாப்ரி கும்மட்டம். சோவியத் உடைந்த காலகட்டம் அது. வளமையான புரவலனை இழந்த இந்திய இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் வகாபிய இஸ்லாமிய சக்திகள் கைகொடுக்க முன்வந்தன.

அதன் விளைவாக மவுண்ட்ரோடு மாவோ பத்திரிகை உள்ளிட்ட எல்லா இந்திய இடதுசாரி அறிவுஜீவிகளும் இஸ்லாமிய நேசர்களானார்கள். பொதுவாகவே மார்க்ஸியச் சித்தாந்திகளுக்கு வகாபிய இஸ்லாமியக் கருத்தியல் சாய்வு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட, இஸ்லாமியச் சக்திகளை எங்கும் தாக்கும்போது தங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர் அல்ல எனக் காட்ட இந்தியாவில் ஹிந்துத்துவத்தை தாக்குவது, ஓர் அருமையான பப்ளிக் ரிலேஷன் தந்திரம். (1990-களின் தொடக்கத்தில்தான் முதலாம் புஷ் ஈராக்கின் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.) எனவே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் இந்திய நோக்கர்கள் உட்பட இந்திய இடதுசாரிகளின் இஸ்லாமிய நேசபாவத்தை முழு மனதுடன் ஆதரித்தனர். உலக அரங்கில் ஹிந்துத்துவர்கள் சர்வதேச வில்லன்களாக்கப்பட்டனர்.

1992 டிசம்பர்-6 வலதுசாரி-இடதுசாரி வேறுபாடில்லாமல் கறுப்பு ஞாயிறாகச் சித்தரிக்கப்பட்டது. சோ துக்ளக்குக்கு கறுப்புச் சட்டை போட்டார். இல்லாத மசூதிக்குப் பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக ஒவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும் அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. இந்த 18 வருட பொய்ப் பிரசாரத்தைத்தான் அக்குவேறு ஆணி வேறாக இந்தத் தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது.

************

சரி, உண்மையைத் தீர விசாரிப்போம் என்று அரசே ஆணையிட்டு 2003-இல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போதுதான் எத்தனை எதிர்ப்புகள்! எத்தனை போலித்தனமான ஊடக விளையாட்டுகள்! ஒன்றை மட்டும் பார்க்கலாம். அவுட்லுக் பத்திரிகையின் எழுத்தாளர் சந்தீபன் தேப் அயோத்தி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்த விஷயங்களைக் கட்டுரையாக எழுதினார். அங்கு பல சுதைச் சிற்பங்கள், பழைய தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகியவை கிடைத்திருப்பதை அவர் எழுதினார். இதற்கு இர்பான் ஹபீப் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் இடைக்கால அறிக்கைகளில் பாப்ரி அமைப்பின் கீழே எவ்வித பிறிதொரு அமைப்பும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை எனச் சொல்லி வந்தார்கள். சந்தீபன் தேப் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எழுதிய பதிலில் குறிப்பிட்டார்:

”இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த புதிய (அதாவது இடைக்கால) அறிக்கை குறித்து எழுதிய பெரும்பாலான நாளேடுகள் பாப்ரி மசூதியின் கீழ் எவ்வித அமைப்பும் இல்லை என்று எழுதினாலும், உண்மையில் அந்த அறிக்கை என்ன சொல்கிறதென்றால், 30 அகழ்வாராய்ச்சிக்கான குழிகள் தோண்டப்பட்டதில், மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகள் 8 குழிகளில் கிட்டியுள்ளன. 16 குழிகளில் எதுவும் கிடைக்கவில்லை, 5 குழிகளில் மேலே இருக்கும் அமைப்பால் முடிவு செய்ய முடியவில்லை. ஒரு குழி இன்னும் தோண்டவில்லை. கண்டுபிடித்த விஷயங்களாக ஆவணம் சொல்லியிருப்பவை: கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைக்கப்ப்ட்ட செங்கல் சுவர்களுக்கான ஆதாரம், அலங்காரத்துடனான வண்ணத் தரைகள், பல தூண்களின் அடித்தளங்கள், நான்கு பக்கங்களிலும் யக்க்ஷர்கள் கொண்ட 1.64 அடி நீளமுள்ள கருங்கல் தூண்” (அவுட்லுக், ஜூன் 23, 2003)

ஆனால், இர்பான் ஹபீப்பும், மற்ற பிரபல நாளேடுகளும் கோயிலுக்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனச் சொல்லத் தயங்கவில்லை; கூசவில்லை. இந்த ஏமாற்று வேலை தீர்ப்பு வருவதற்கு சில நாள்கள் முன்னால் கூட நடத்தப் பட்டது. CNN-IBN டிவியில், “அயோத்தித் தீர்ப்பு, வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்” (Ayodhya dispute hinges on historical evidence) என்கிற தலைப்பில் ஒரு செய்தித் துணுக்கு. அதில் அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்து ஓர் ஆராய்ச்சியாளர் பேசுகிறார். பின்னர் அந்த அறிக்கை தவறு என்று இஸ்லாமியர் ஒருவரும் பின்னர் தமோதர் ஜா என்கிற மார்க்ஸியரும் (இவரை, சர்வதேசப் புகழ்மிக்க வரலாற்று அறிஞர் என நிகழ்ச்சியில் சொல்கிறார்கள்.) இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்தது மசூதியைத்தான் என்று சொல்கிறார்கள். பிறகு செய்தித் தொகுப்பாளர், “வரலாற்று அறிஞர்கள் ஒருபக்கம் இப்படிச் சொல்கிறார்கள்; ஹிந்து தரப்போ இதை மறுக்கிறது” என்கிறார்! ஏதோ ஹிந்துக்கள் வரலாற்று ஆசிரியர்களுக்கு எதிர் என்றும், இஸ்லாமியர்களே வரலாற்று ஆதாரப்படி நடப்பதாகவும் ஓர் ஊடகப் பிரமையை வலிந்து உருவாக்குகிறார்கள்!

இத்தகைய ஊடக மோசடிகளையும் அயோத்தி தீர்ப்பு தகர்த்து எறிந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு போலி அறிவுஜீவிகளும் விலைக்குப் போன ஊடகங்களும் உருவாக்கிப் பரப்பிய பொய்களை அம்பலப்படுத்தி, ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில்தான் என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறது. அந்த வகையிலும் இத்தீர்ப்பு முக்கியமானதாகிறது.

ayodhya_karsevaks

அயோத்தியில் அடிமைச் சின்னமான பாப்ரி கும்மட்டத்தை நீக்கும் அறப்போரில் கரசேவகர்கள் மௌலானா முலாயம் சிங்கின் குண்டடிகளைத் தங்கள் நெஞ்சில் சுமந்து பலிதானிகள் ஆனார்கள். ஆனால் அந்தத் தியாகிகளுக்கு மதவெறியர்கள் என்றும் மசூதியை இடித்தவர்கள் என்றும் பழி சுமத்தப்பட்டது. இன்று, அவர்கள் மதவெறியர்கள் அல்ல; தாய்நாட்டின் அவமானத்தைத் துடைத்த தேசபக்தர்கள் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு அவர்கள் தியாகத்தினால் நமக்குக் கிடைத்திருக்கும் பிரசாதம். அதனால் நாம் மேலும் உத்வேகம் பெறுவோம். அனைத்து இந்திய மக்களையும்- குறிப்பாக இஸ்லாமியச் சகோதரர்களையும்- உண்மையை உணரச் செய்து, அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு மகோன்னதமானதோர் ஆலயத்தை, அன்பினால், சமரசத் தன்மையால் அமைப்போம்.

ஜெய் ஸ்ரீ ராம்!

220 Replies to “அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்”

  1. அதி விரைவில் வெளியிடப்பட்ட அற்புதமான கட்டுரை.

    ஊடகப் பிரச்சாரங்களாலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களாலும் பொதுமக்கள் கூட அயோத்திப் பிரச்சனையில் கருத்து மாறாட்டம் கொண்டிருக்கும்போது ஆணி அடித்தாற்போல் இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த மைல்க்கல் தீர்ப்பினால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் சிந்தனையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். இவ்வழக்கின் மேல் முறையீட்டில் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பு வந்தாலும் கூட இந்த தீர்ப்பு செய்திருக்கும் நன்மை குறைந்து விடாத அளவுக்கு மிகத் தெளிவான இந்த தீர்ப்பு மிகப் பெரிய நல்ல செய்தி.

    ஓகை நடராஜன்.

  2. ராமனுக்காக சடாயு போல் தியாகம் செய்த கரசேவை வீரர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.

    ராமருக்காக அணில் போல உடனடி கட்டுரையை இரவெல்லாம் விழித்தெழுதி வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

  3. ஜெய் ஸ்ரீ ராம் !
    ஆயிரம் ஆண்டுக்கால அவமானம் துடைத்தெறியப்பட்டது.
    சத்தியம் பளிச்சென்று களங்கமில்லாமல் அந்த ராமனைப் போல் நிற்கிறது
    புரட்டர்கள்,குள்ள நரிகள், பொய்யே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் இவர்கள் ராம சத்தியத்துக்கு முன்னால் தூசு
    பதவி வெறி, பண வெறி கொண்டு தர்மத்தின் சின்னங்களாகவும், கருணையின் ஊற்றுக் கண்களாகவும் உலகத்துக்கே வாழும் வழி காட்டிய , காட்டும் மனிதர்களாக நம் மண்ணில் வந்திறங்கிய நம் தெய்வங்கள், அது சார்ந்த தத்துவங்கள், கலாச்சாரம், மரபுகள் இவற்றை வாய் கூசாமல் தூற்றி கொண்டிருக்கும் அரசியல் வாதிகள்,போலி அறிவு ஜீவிகள்,விலை போன ஊடகங்கள் இவர்கள் இனிமேல் திருந்துவார்களாக.
    இந்த விஷயம் பற்றி சரியான நேரத்தில் விளக்கம் அளித்த தமிழ் ஹிந்துவுக்குப் பாராட்டுக்கள்.நன்றி.

  4. சுன்னி வக்பு வாரியத்துக்கும் பொதுவான இசுலாமிய சமூகத்திற்கும் இப்போது ஒரு அறிய வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. தங்கள் மதமும் பண்பாடும் பெருந்தன்மையானவை என நிரூபிக்க அவர்கள் விரும்பும் பட்சத்தில், தங்கள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை ராமர் என்ற லோக புருஷரின் ஆலயத்திற்காக கொடுப்பதே அது.

    இதன் மூலம், இசுலாம் பிற மதத்தவர்களின் ஆலயங்களின் மேல் தங்கள் மசூதியை நிறுவாது என்ற தங்களின் கொள்கையையும் நிலை நாட்டிக் கொள்ளலாம்.

    மூன்று நீதிபதிகளின் தீர்ப்பிலும் ராமர் பிறந்த இடம் இது தான் என்று உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது. இன்றைய இந்திய இசுலாமியரின் முன்னோர் ராமரை வழிபட்டவர்களே என்ற உண்மையை உணர்ந்து , மேலும் இவ்விஷயத்தில் மேல் முறையீடு போன்ற குழப்பங்கள் மேற்கொள்ளக் கூடாது.

  5. புனித சரயு நதியில் தங்களது குருதியை கலந்த மற்றும் கோத்ராவில் அக்னிக்கு இரையான கரசேவகர்களுக்கும் நம் அஞ்சலி.

  6. Great.
    Felt very happy for the clarity of thoughts contained in this timely Opinion on the Court Judgement. Thank you for sharing.
    God Bless.
    Jai Shri Ram.
    Srinivasan. V.

  7. எந்தக் கருணாநிதி, இந்து மதத்தை இழிவுபடுத்தினாரோ, அந்தக் கருணாநிதியையே, சஇடு கேட் வழியாகவாவது வரவழைத்து, அதே இந்துக் கோவிலில் பலமணி நேரம் தபஸ் செய்ய வைத்த, அதே இந்து தெய்வங்கள், எந்தத தொல்பொருள் அராய்ச்சி நிலையம் கண்டுபிடிப்பு என்ற பெயரில், கருணாநிதிகளும், சோனியா காந்திகளும், அம்பிகா சொநிகளும் மற்றும் அவர்கள் தரப்பு, இந்து தேச விரோத சக்திகளும், தூண்டிவிட, ராமர் என்பவர் இல்லை என்றார்களோ, அதே தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளின் மூலமாக , ராமர் இருந்தார் என்று மற்றும் அல்ல , கடவுளாக இன்றும் இருக்கிறார் என்றும், அதே இடத்தில், குழந்தையாகப் பிறந்தார் என்று சொல்ல வைத்து, ராமரை இகழ்ந்தவர்களின் முகத்தில், பாபம் புரிந்த களையை, ஏற்ப்படுத்தயுள் ளார். ரம்மர் கட்டிய பாலம் என்றால், ராமர் எந்தக் காலேஜில் இன்ஜினியரிங் படித்தார் என்று கேட்ட கருணாநிதிக்கு, நல்ல போலாப்பு சூடாக, பாபரோ அவரின் ஏஜெண்டோ மசூதியைக் கட்டியதற்கு ஆதாரம் இல்லைஎனக்கூறி, அது மசூதியே இல்லை என்று தீர்ப்பளித்தாய்விட்டது. ராமர் இல்லையென்று சொன்னவர்கள் இனி தேசவிரோதசக்திகலாக அறிவிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இஸ்லாமியர்களுக்கு, தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டு, சீக்கிரமே, ஒசாமா பின் லேடன் என்பவரை இந்தியப் பிரதமராக ஆக்கிவிடுவார்கள்.

  8. இருட்டில் செல்லலும் பயந்தாங்கொள்ளி ஒருவன், பயத்தைப் போக்கிக்கொள்ளக, கத்திக் கொண்டே போவதுபோல், மன்மொஹனும், சோனியா காந்தியும், அமைதி காக்க வேண்டும் அமைதி காக்க வேண்டும் என்று கத்தியதைப்பார்க்க, பரிதாபமாய், இருந்து, ஒன்றும், நடக்காமல் போனது, அவர்கள் இருட்டு மனதில், புதிய இருட்டு திட்டங்களைத் தீட்ட வைக்கப்போகின்றது.

  9. ஆத்ம வடிவில் ராமனும் ரஹீமும் ஒன்றே என்று போதிப்பது ஹிந்து மதம் ஒன்றே. மற்றவர்கள் தனது கடவுளை ஒப்புகொள்ளாதவர்களை தனிப் பெயர் கொடுத்துத் தள்ளிவைப்பார்கள், தனது வழிக்குக் கொண்டு செல்வார்கள் அல்லது ஒழிக்கவும் பார்ப்பர்கள். இந்தப் பரந்த நோக்கினாலேயே பாரதத்தில் அனைத்து மதங்களும் தழைக்க முடியும். அதைப் புரிந்து கொள்ளது செல்பவர்களுக்கு, காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் இப்படி அனைவருக்கும் இடம் அளிப்பதால், அதற்குண்டான விலையையும் பொறுமையுடனே கொடுத்துக் கொண்டிருக்கும். வாழ்க பாரதம்! வாழ்க ராம நாமம்!

  10. மீடியாக்களின் ரியாக்ஷன் ஆச்சரியமாக இருந்தது. யாருமே அந்த இடம் இந்துக்களுக்குத்தான் சொந்தம், ராமர் கோவிலுக்குத்தான் சொந்தம் என்று நீதிபதிகள் தெள்ளத்தெளிவாகச் சொன்னதை பற்றி பேசவில்லை. ஒரு வரியில் அதை சொல்லி விட்டு போய்விட்டார்கள். இதே முஸ்லிம்களுக்கு ஆதரவாக வந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.

    இப்போது “பெருந்தன்மையாக இந்துக்கள் அந்த இடத்தை பப்பாதியாக முஸ்லிம்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவேண்டும்” என்பதிலிருந்து, இந்த கோர்ட் தீர்ப்பே செல்லாது – கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்பது வரை சானல்கள் கத்திக் கொண்டிருந்தது முட்டாள்தனமாக இருந்தது.

    இது எவ்வளவு தூரம் இந்திய – இந்து விரோத சக்திகளிடம் நமது டிவி சானல்கள் சிக்கி உள்ளன என்று தெளிவாக தெரிகிறது. முஸ்லிம் அமைப்புகளே கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பொது, ராஜ்தீப் சார்தேசாய் மட்டும் “சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வீர்கள் தானே…” என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு டிவியில் “Ayodhya is no more relevant. India has moved on..” என்று ஸ்லைட் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி இந்தியா நகர்ந்து போய் இருந்தால் இவ்வளவு பாதுகாப்பு ஏன்?

  11. தீர்ப்பு ஜில்லுனு இருக்கு.

    ஸ்ரீ ராமனே சரணம்.

    ஸ்ரீ ராமர் கோவிலையும் திட்டிய மிட்டிருந்தபடி சீக்கிரம் முடிக்க ஸ்ரீ ராமனே அருள் புரிய வேண்டும். ஹிந்துக்கள் யாவரும் 1400 இந்திய மண்ணுக்கு இழைக்கப்பட்ட அனைத்து களங்கங்களையும் களைய, எந்த மன வேற்றுமைகளிருந்தாலும் மறந்து ஒன்றுபடவேண்டு்ம். மனவேற்றுமைகளையே ஆய்வு செய்தால் கூட அவைகளில் வேற்றுமைகளுக்கு தீர்வு காண முடியாதவாறு அப்படி ஒன்றுமில்லை. மனமிருந்தால் மார்கமுண்டு. (when there is a will there is always a way)

  12. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தவுடனேயே தீர்ப்பை உள்ளவாறு அறிய வேண்டும் என்று ஆவலில் பல தளங்களுக்கும் ஓடினோம். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் செய்திகளைக் கேட்டோம். இருந்தும் தெளிவாக தீர்ப்பின் தன்மை இத்தகையது என்று அறியமுடியவில்லை. இப்பொழுது ஆசிரியபர் குழுவின் கட்டுரை அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. மிகவும் மனநிறைவைத் தருகிறது.

    என்றென்றும் ஸத்தியத்தின் உருவமாக விளங்குபவரும் சர்வவல்லமை மிக்கவருமாகிய பகவான் ஸ்ரீராமச் சந்திர மஹாப்ரபுவின் கருணையால் விளைந்த அறுவடை இது என்று மகிழமுடிகிறது. இந்த நல்ல தீர்ப்பிற்காக உழைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்…

    ஜெய ஜெய ராம்…ராம்.. ஸ்ரீ ராமஜெயம்….

  13. இது ஸ்ரீ ராமருக்கு கிடைத்த வெற்றி அவரின் வானர சேனைகலான கரசேவகர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி, ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி.. இது வரையில் தேச விரோத பண்பாட்டு விரோத இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யுனிச போலி மதசார்பின்மை பேசும் காங்கிரஸ் மற்றும் கழக வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி, ராமரை இழித்தும் பழித்தும் பேசிய கருணாநிதிக்கு இந்த தீர்ப்பு ஒரு நெத்தியடி.. இனி மேலாவது ராமர் இஞ்சினீயரா ராமர் பாலம் இல்லவே இல்லை போன்ற புலம்பல்களை பேசக்கூடாது. ராம ஜென்ம பூமி எப்படி ராமர் பிறந்த இடமோ சேது பாலமும் ராமர் கட்டிய பாலம் தான் இப்படி ஒரு தீர்ப்பு கூடிய விரைவில் வரத்தான் போகிறது. […..] கருணாநிதிக்கு கண்திறக்க அந்த ஸ்ரீ ராமமூர்த்தி கருணை காட்ட வேண்டும் இல்லை என்றால் கருனாநிதிய்ன் கடைசி காலம் குருடன் திருதராஷ்ட்ரன் கதி தான் ஏற்படும்.

    [Edited and published]

  14. இது எம் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி . போற்றி கொண்டாட வேண்டிய தருணம் இது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த அரசியல் வியாதிகளாலும், மீடியாக்களின் துரோகத்தினாலும் இப்படி அமைதியாக இருக்க வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளபற்றிக்குறோம்.
    ஆனால் , நாங்கள் திருவள்ளுரில் [ தமிழ்நாட்டில்] காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினோம்.
    ஜெய் ஸ்ரீ ராம் !
    தொடர்புக்கு karateselva@hotmail.com.

  15. Shri RV
    These are the answers to your three doubts.

    Q. What is the birth place of Jesus Christ ? A : Bethlehem.
    likewise
    Q what is the birthplace of Lord Rama? A: Ayodhya.

    The question was if Rama was born in Ayodhya or somewhere else. The question was not that if ‘God is there or not’.

    You had a doubt, how it was not a Mosque like stated by a judge. The judges agreed that a mosque should be built in specific manner ; But the one that was built over Rama’s temple was not conforming or adhering to those construction rules to be strictly followed in case of a mosque.

    Judges agreed that the disputed building was constructed on the top of the temple though they did not specify that the temple was demolished and immediately masjid was built.

  16. //
    அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட, இஸ்லாமிய சக்திகளை எங்கும் தாக்கும் போது தங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர் அல்ல எனக் காட்ட இந்தியாவில் ஹிந்துத்துவத்தை தாக்குவது ஒரு அருமையான ப்ப்ளிக் ரிலேஷன் தந்திரம்.
    //

    சாட்டை அடி… இந்த கட்டுரையின் ஒவ்வொரு வரியுமே ஆழ்ந்த பொருள் கொண்டிருக்கிறது. கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.

    கூகிள் டூடுல் போல, நிகழ்வுகளுக்கு தக்க மூட் (mood) வெளிப்படும்படி தமிழ் ஹிந்துவும் லோகோ வை மாற்றுவது நன்றாக இருக்கிறது. உங்களது creativity க்கு என் பாராட்டுகள்.

  17. ஆர்.வி. பதிவில் போட்ட மறுமொழியை இங்கும் இடுகிறேன் –

    // அப்புறம் நிர்மோஹி ஆகாராவாம், இதுவும் ஹிந்து அமைப்புதானே, இதற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் என்றும் புரியவில்லை. //

    இது மும்முனை வழக்கு. இரண்டு இந்து தரப்புகள், ஒரு முஸ்லிம் தரப்பு.

    இடிக்கப் பட்ட கும்மட்டங்களுக்கு கீழுள்ள பகுதிக்கு உரிமை கோரி இந்துக்கள் சார்பாகப் போட்ட வழக்குகள் எல்லாம் ராம் லல்லாவின் பெயரால் தேவகி நந்தன் அகர்வால் போட்ட வழக்கில் ஒன்றிணைக்கப் பட்டன. இங்கு party ராம் ஜன்மபூமி நியாஸ்.

    கும்மட்டங்களுக்கு வெளியே உள் முற்றத்தில் (inner courtyard) ராம் சபூத்ரா & சீதா கீ ரசோயி ஆகிய வழிபாட்டு மேடைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வகித்து வருவது நிர்மோஹி அகாரா என்ற இந்து மடம். உள்முற்றத்திற்கும் வெளி முற்றத்திற்கும் (outer coutryard) சேர்த்து உரிமை கோரி அவர்கள் வழக்குப் போட்டார்கள்.

    சுன்னி வக்ஃப் போர்ட் இந்த மூன்று பகுதிகளுமே தங்கள் உரிமை என்று கேட்டு வழக்குப் போட்டது. அந்த பெடிஷன் டிஸ்மிஸ் செய்யப் பட்டுவிட்டது. மூன்றில் ஒருபங்கான வெளிமுற்றம் அவர்களுக்கு வழங்கப் படவேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.

  18. பாரத பூமி பழம் பெரும் பூமி, நாம் அதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர் என்றான் பாரதி. நம் பூமியை அன்னியர் ஆக்கிரமித்துக் கொண்டு, இங்குள்ளவர்களை கட்டாய மதமாற்றம் செய்துவிட்டு, அவர்களைக் கொண்டே இந்த பூமி தனக்குச் சொந்தம் என்று மார்ட்ட வைத்த நம்மவர்கள் உண்மை வெளிவந்த இந்த நேரத்தில் தாங்கள் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்வார்களா? போலி மதச்சார்பின்மை, தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் வாதிகள், சமரசம் பேசுவோர், இந்த மண்ணின் பெருமையை உணர வேண்டிய காலகட்டம் இது. நேற்று வரை நமது நிலைப்பாட்டைக் கேலியும் கண்டனமும் செய்தவர்கள் இன்று தீர்ப்பை வரவேற்கிறோம் என்கிறார்கள். யாரை ஏமாற்ற இந்த போலி நாடகம்? இவர்கள் சாயம் வெளுத்து ரொம்ப நாளாகிவிட்டது.

  19. ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம் … ஜெய் ஸ்ரீ ராம்

  20. I bow at the feet of Shri Ramji.
    Jai Shri Ram, Jai Shri Ram!
    Thanks Tamil Hindu for a great artcile and for your clarity.

  21. இடம் இரெண்டில் ஒரு பங்கு இந்துக்களுக்கு வந்தது என்பதை விட எனக்கு இதில் முக்கியமான வெற்றியாகத் தெரிவது அது ராம ஜன்ம பூமி என்ற தீர்ப்பு. இது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கான தீர்ப்பு. ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பெருவாரி மக்களின் நம்பிக்கை மேல் சேறு வாரி இறைத்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள் ? சேது சமுத்திர விவகாரம் தொடர்பாக அம்பிகா சோனி ராமாயணம் ஒரு நிகழ்வு அல்ல என்று அறிக்கை எல்லாம் தாக்கல் செய்து பின் பின்வாங்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்.

    இப்போ சில கேள்விகள்.
    இந்த பாகப் பிரிவினை என்பது சில தனியார் அமைப்புகளுக்கு போவது சரியா? இந்துக்களுக்கு சொந்தம் அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று எதுவானாலும் அது மொத்த இந்துக்கள் மொத்த முஸ்லிம்களைத் தானே குறிக்கும். அது எப்படி சில அமைப்புகளுக்கு செல்ல முடியும்? இதை யாராவது விளக்குங்கள். இதில் எனக்கு மொத்தமும் வேண்டும் என்று மேல் முறையீடுக்கு வேறு செல்ல இருக்கிறார்கள்.

    அடுத்து அங்கே கோவில் இருந்தது நிரூபணம் ஆனது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அந்த இடம் சரியா ராமர் பிறந்த இடம் தான் என்று சொல்ல எந்த ஆதாரம் முன் வைக்கப் பட்டது?

  22. Pingback: Indli.com
  23. டி வீ கலந்துரையாடலின் போது பர்க்கா தத் சுன்னி வகைப் போர்டு சேர்மனிடம் ‘இன்ஷா அல்லா’ என்று சொன்ன போது அவர் யார் ,அவரது எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்று விளங்கி விட்டது.

  24. Good article. Wonderful Judgement proving that justice still prevails. Still this Irfan Habib is saying that the inscriptions found by ASI are doctored and the authenticiy of ASI’s report should be verified (todays TOI has reported this).
    Shabhana Asmi has said that she feels like a second class citizen in India and this judgement is injustice against muslim communitiy.

    இராமனும் அல்லாவும் வந்தால் கூட இவர்களை திருத்த முடியாது
    ஜெய் ஸ்ரீ ராம்….

  25. அந்த தேசிய அவமானச் சின்னத்தை அகற்றும் பணியை மும்முரமாக மேற்கொண்டிருந்தபோது, ஸ்தூல சரீரத்தினுள் நான் இருக்கிறபோதே அங்கு மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை ராம் லல்லா எனும் குழந்தை ராமனாய்க் கண்டு மகிழ்வதற்கான பிரமாண்ட ஆலயம் அமைந்துவிடும் என உறுதியாய் நம்பியிருந்தேன். அதற்கான சூழல் உருவாகி வருகிறது.
    இத்தாலியின் பிரஜை சோனியாவும் மன்மோகனும், பதவிப் பசி கொண்ட என் பழைய நண்பன் ப.சி.யும் பிற அடிவருடிகளும் வேண்டுமென்றே செய்த ஆர்ப்பாட்டங்கள் பிசுபிசுத்துப்போனதும் மகிழ்ச்சியூட்டுகிற சமாசாரம்.
    ஆனலும் அந்த மூன்றிலொரு பங்கு அனாவசியம், எனக்குச் சம்மதமில்லை. தில்லி ஜும்மா மசூதியை ஒட்டி ஒரு ஆலயம் எழுப்பினால் அதற்கு ஒப்புவார்களாமா?
    -மலர்மன்னன்

  26. மிக நல்ல விளக்க கட்டுரை. இந்த நல்ல நேரத்தில், ஒரு மாமனிதரின் நற்ச்யல்களை நாம் ஞாபக படுத்தி கொள்ள வேண்டும். 1885 முதல் வழக்கு தொடர்ந்து போராடி வந்த மக்களுக்கு ஞாயம் கிடைக்காமல் அல்லலுற்ற ஹிந்து மக்கள், சுதந்திரம் கிடைத்த பின்பாவது தமக்கு யாரேனும் உதவ மாட்டார்களா என்று எண்ணி ஏங்கி இருந்த பொது, அவர்களின் பக்கம் ஞாயம் இருந்ததை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நினைத்து, முதன் முதலாக சோம்நாத்தில் இருந்து ரத யாத்திரை துவங்கிய திரு அத்வானி தான் இந்தியாவின் முதல் நாயகன். தன்னுடைய இந்த முடிவினால் எண்ணற்ற வசை மொழிகளை அவர் ஏற்று கொண்டார். ஆனாலும் மனம் தளரவில்லை, தன் நிலையில் உறுதியாக இருந்தார். அவருக்கு இந்த தீர்ப்பு சமர்ப்பணம். அவர் சொல்லுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்டவர், உயிர் அதில் உயிர் இழந்தவர்கள் அனைவருக்கும் இந்த தீர்ப்பு சமர்ப்பணம். Jay Shri Ram

  27. ஹிந்துஸ்தானத்தில் தங்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் உணர்பவர்கள் அனைவரும் தாராளமாக மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுவிடலாம். இங்கு ஏன் வீணாகச் சங்கடப்பட்டுக்கொண்டு வாழவேண்டும்? அப்படிப் போனால் சிறிது இடமாவது மிஞ்சும். ஏற்கனவே இங்கு இட நெருக்கடியைத் திட்ட்டமிட்டு அதிகரிக்கச் செய்து வருகிறவர்களாயிற்றே இவர்கள்!
    -மலர்மன்னன்

  28. உள்ளதை உள்ளபடி உலகிற்கு எடுத்துரைத்த இந்த கட்டுரைக்கு மிக்க நன்றி. இந்த உண்மை மிகவும் இன்றியமையாதது.

    தவறான தகவல்களை பரப்பி கலவரங்களை ஏவிவிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வாழ்க தமிழ். வாழ்க இந்து. வாழ்க தமிழ்இந்து.

  29. ஜெய் ஸ்ரீராம்
    தேசிய பணியில் இது ஒரு மைல் கல் ….

  30. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஆஞ்சநேயா
    இஸ்லாமிய மிதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் – ஒதுகிய இடத்தை நீங்களாகவே மனதிருப்தியுடன் இந்துக்களுக்கு விட்டுக்கொடுங்கள். உங்கள் நம்பகதன்மையையும் பாரததேச பற்றையும் நிருபிக்க ஒரு நல்ல வாய்பு உங்களுக்கு கிட்டியுள்ளது. விட்டுக்கொடுத்தால் தோல்வி அடைந்ததாக எண்ணக்கூடாது. இது தோல்வி என்றால் இஸ்லாமியர்களுக்காக கலியபாத் இயக்கம் தொடங்கி நாட்டின் எல்லா வளர்ச்சியிலும் இஸ்லாமியர்களுக்கே முதல் பங்கு என்பதுவரை இந்துக்கள் விட்டுக்கொடுத்து வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கும் சலுகைகள் போல் எந்த இஸ்லாமிய நாடுகளிலும் சலுகைகள் அளிப்பதில்லை. இங்கே நீங்கள் அமைதியாக வாழ்வது போல் எந்த இஸ்லாமிய நாட்டிலும் முஸ்லீம்கள் அமைதியாக வாழவில்லை என்பதையும் சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் இடத்தை விட்டுக்கொடுத்தால் இந்துக்களே அயோதியில் பாபர் நினைவாக நல்ல மசூதி ஒன்றை கட்டித்தருவார்கள்

  31. இந்தக் கட்டுரை உற்சாகம் அளிக்கும் நேரத்தில், தினமணி போன்ற நாளிதழ்கள், இத்தீர்ப்பினை அரசியல்தனமான தீர்ப்பு என்றும் கட்டைப்பஞ்சாயத்து என்றும் எழுதுவது வேதனையாக உள்ளது.

  32. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும் என்று நீருபிக்கபட்டுவிட்டது
    இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக போராடி உயிர் நீத்த கரஷேவகர்களுக்கு சமர்ப்பணம்
    ஜெய் ஸ்ரீ ராம் !

    UNITED DO WE STAND IN DEFENSE OF OUR MOTHER LAND
    JAI HINDU RASTRA

  33. தீர்ப்பில் ஒரு முக்கியான விஷயம் – இந்த கும்மட்டம் சுன்னி முஸ்லிம்களை செர்ந்ததெய் இல்லை அது ஷியா முஸ்லிம்களுடையது என்பது – சுன்னி வக்ப் இதை சொந்தம் கொண்டாடுவது வினோதம்

    //
    Whether the Waqf in question cannot be a Sunni Waqf as the
    building was not allegedly constructed by a Sunni
    Mohammedan but was allegedly constructed by Meer Baqi
    who was allegedly a Shia Muslim and the alleged Mutwalis
    were allegedly Shia Mohammedans? If so, its effect?
    Decided against the plaintiffs (waqf)
    //

    இது மசூதியாக இருக்கவே mudiyaathu என்பதற்கு தீர்ப்பு
    – மூன்று பக்கமும் கல்லறைகள் நிறைந்த இடத்தில் இஸ்லாத்தின் படி masoothi இருக்க முடியாது

    //
    Whether the building in question could not legally be a
    mosque as on plaintiffs own showing it was surrounded by a
    graveyard on three sides.
    Decided against the plaintiffs (waqf)
    //

    இந்த மாதிரி வக்ப் போர்டுக்கு பல தர்ம அடி கொடுத்திருக்கிறது தீர்ப்பு – போனா போகுதேன்னு ஒரு பங்க கொடுத்திருக்காங்க – சுப்ரீம் கோர்ட்டுல அதுவும் மிஞ்சாது

    ராமர் இங்கு தான் பிரந்தார என்ன அதாரம் என்று சில அறிவு ஜீவிகளும், லா பாயிண்ட் மகான்களும் கேள்வி எழுப்பலாம். அந்த காலத்துல முனிசிபாலிட்டி வெச்சு பிறப்பு சான்றிதழ் கொடுக்காததே இதற்க்கு காரணம், UID இல்லாததே இதற்க்கு காரணம், முனிசிபாலிட் இருந்திருந்தாலும் அந்த ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேண்டும் என்றே எல்லாத்தையும் எரித்து விட்டார்கள், அல்லது கரையான் அறிச்சிருச்சு, அல்லது தன்நில முழிகிடுச்சு இந்த மாதிரி தர பதில் சொல்ல முடியும்

    அந்த காலத்துல ரெக்கார்டெல்லாம் வாய் வழி தான் – வாய் வழியாக சமூகம் முரண்பாடு இல்லாள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்

    – இதே ரேஞ்சுல போனால் வரலாறு என்பதற்கே அதாரம் இருக்க முடியாது

    கிருஷ்ணர் இருந்ததற்கான வராலாற்று பூர்வ ஆதாரங்கள் தெளிவாகவே உள்ளன – கிருஷ்ணரே நான் வில் வீரர்களில் ராமன் என்று தெளிவாக சொல்கிறார்

  34. வணக்கம்
    இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்துக் கரசேவகர்களுக்கும் என் சிரத்தையான அஞ்சலிகள், தீர்ப்பை விவரமாக வெளியிட்ட தங்களுக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்களும் நன்றியும்
    சத்யமேவ ஜயதே
    அன்புடன்
    நந்திதா

  35. https://thiruchchikkaaran.wordpress.com/2010/10/01/ayodhya-past-present-and-future/

    அயோத்தி – நேற்று, இன்று , நாளை !

    இந்த தீர்ப்பில் வக்பு வாரியதின் கோரிக்கையான, முழு நிலமும் அதற்க்கு வழங்கப் பட வேண்டும் என்பதை, கோர்ட் தள்ளுபடி செய்து விட்டதால் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லியுள்ளது. ஹிந்து மகா சபையும் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லி உள்ளது.

    மற்றபடி பொதுவாக பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளன.

    இந்த தீர்ப்பையும் அதற்கான காரணிகளையும் நாம் அனைவரும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    இதிலே இஸ்லாமிய சகோதரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால், இந்த நிலத்தில் இருந்த பாப்ரி அமைப்பு ஆனது, கோவிலின் இடிபாடுகளின் மீது எழுப்பப் பட்டு உள்ளது என்பதை, அதற்க்கான ஆதரங்களை தொல் பொருள் ஆராய்ச்சி கழகம் வழங்கி உள்ளதை ஏற்று கோர்ட் ஒத்துக் கொண்டுள்ளது.

    அந்தக் கோவிலானது இடிக்கப் படாமல் அது தானாகவே சிதிலம் அடைந்து இருந்தாலும், அந்த சிதிலத்தின் மீதுதான் பாப்ரி அமைப்பு கட்டப் பட்டு உள்ளது.

    எனவே ஒரு கோவிலின் மீது பாப்ரி அமைப்பை கட்டியது சரியல்ல ((அந்தக் கோவில் சிதிலம் அடைந்த நிலையில் இருந்தாலும்). அந்தக் காலத்தில் இதை எதிர்த்துக் கேட்க முடியாமல் இருந்திருக்கலாம், அதற்கு இன்றைய இஸ்லாமிய சகோதரகள பொறுப்பு அல்ல. எனவே இஸ்லாமிய சகோதரர்கள், தங்களின் இந்து சகோதரர்களுக்கு நீதி கிட்டியதாகவே உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அதே நேரம் நான் இந்து சகோதரகளை கேட்டுக் கொள்வது என வென்றால், இஸ்லாமிய சகோதர்களை அரவணைத்து அவர்களை சகோதரராகவே நடத்த வேண்டும். அவர்களுக்கு மன வருத்தமோ, அநீதியோ நடக்கும் படி விடக் கூடாது.

    ………..
    ……………

    இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது இஸ்லாமியர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை அனைவரும் உணர முடியும்.

    இந்த இடிப்பை திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என சில நண்பர்கள் சொல்லி, அதற்காக வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர். இது நமக்கு ஒப்புமை இல்லை. ஒருவரை மிதித்து விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?

    அதே நேரம் நாம் சொல்லுவது என்னவென்றால் இந்தியர்கள அனைவரும் சகிப்புத் தன்மை, சமரசம், சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கைக் கொண்டால், எல்லோரும் ஒருவரை ஒருவர் நண்பர்களாகவே நோக்குவோம். அந்த நிலையில் சர்ச்சைகள் வராது, வந்தாலும் எளிதில் தீர்ந்து விடும்.

    ………

  36. ”ராமர் அங்கேதான் பிறந்தாரா? ஆதாரம் இருக்கா அங்கேதான் ராமர் பிறந்தாருன்னுட்டு?” – பகுத்தறிவு மேதாவிகள் சில கேட்ட இதுபோன்ற கேள்விகளுக்கு, அவர்கள் முகத்தில் செருப்பால் அடித்தது போன்ற பதிலை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ளது.
    “அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம்.”

    மான, ரோஷமுள்ள ஜென்மங்களா இருந்தா, இப்படி கேள்வி கேட்டோமேனு நெனச்சு, தூக்குல தொங்கிடுவான். ஆனா இதுங்க………
    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  37. The media will continue to keep the emotions high among the rage boys till the O’bummer come to India in November. Around that time these rage boys imported from our great neighbor will start firing crackers (தீபாவளி வெடி இல்லை) around the nation. Since O’bummber has promised UN seat if Kashmir problem is resolved, our Italian lady and her cohorts will take this great opportunity to give away Kashmir to our patriotic brethren.

    As Dec 6, 1992 served the purpose of justifying all the terrorism for 28 years, this verdict will serve the same for another century.

  38. https://news.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-day-after-ayodhya-verdict-muslims-mull-radical-response.htm

    See the above link. It reflects the sentiments of the muslims. Only the Hindus welcome the verdict, as Hindus are law abiding and respect the courts verdict. Muslims are saying that 1/3rd land given to them is like charity and they dont want charity. Let them give it back then to Hindus, why should they go to Supreme court?

    Even if entire India is given to them and entire India is converted to Islam, they will not be happy. Then they will start fighting amoung themselves as Shia-Sunny, as happning in other islamic countries.

    God save this world.

  39. ராமபிரானின் பிறப்பும் அவரின் ஜன்மஸ்தானமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில் இருந்ததும், அது இடிக்கப்பட்டதும் அந்த இடர்பாடுகளில் கும்மட்டம் கட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது வரைக்கும் நீதிபதிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

    முஸ்லிம்களின் டைட்டில் ஸூட் நிராகரித்தமைக்கும் என் நன்றி.

    இத்தனைக்கும் பிறகு, முஸ்லிம்களுக்கு எதற்கு மூன்றில் ஒரு பாகம்? ஆகவே தான் இது ஒரு அரசியல் பஞ்சாயத்து தீர்ப்பு என்று கூறப்படுகிறது. இவ்விஷயத்தில் தினமணியுடன் நான் பரிபூரணமாக ஒத்துப் போகிறேன்.

    மேலும் ஒரு முக்கியமான விஷயம்:

    காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் திரு நரசிம்ஹராவ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
    அவறன்றி வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரும் அந்த சமயத்தில் பிரதமராக இருந்திருந்தால்…கும்மட்டம் தரைமட்டமாகியிருக்காது. வாழ்க நரசிம்ஹராவ்.

  40. என் உடன் பிறந்தோர் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
    வட மாநிலங்களில், முக்கியமாக பிஹார், உத்தரப் பிரதேசம் முதலான ப்குதிகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்கையில் “ ராம், ராம்” என்றே முகமன் கூறிக்கொள்வர். தொலைபேசியில் பேசுகிறபோதும் ’ஹலோ’ என்பதற்கு பதிலாக ”ராம், ராம்” என்றே கூறுவர். இனி நாமும் இந்த வழமையை மேற்கொள்வோம். ஸ்ரீ ராமன் மேன்மேலும் காத்தருள்வான்.

    வடக்கே இறுதி யாத்திரையின்போது கூட ”ராம் நாம் ஸ்த்ய ஹை” என்று சொல்லிக்கொண்டேதான் சடலத்தை எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ராமனுடைய நாமமே கால காலத்திற்கும் ஸத்தியம் என உணர்வோமாக.
    -மலர்மன்னன்

  41. நமக்கு வரலாற்று பாடம் எடுக்க உயர்நீதிமண்ற நீதிபதிகள் தேவைபடுகிறார்கள்.இந்தநிலை மாறவேண்டாமா?

  42. ஸ்ரீ ராமன் ஹிந்துக்களுக்கு மாத்திரம் அல்ல, முகமதியர், கிறிஸ்தவர், என சகலருக்கும் அவன் மர்யாதா புருஷோத்தம் என உணர்ந்து ஒப்புக்கொள்வோம். அவன் பெயர் சொல்வது அனைவருக்கும் பெருமையே.
    உத்தரப் பிரதேசத்தில் முகமதியர் பலரும் மர்யாதா புருஷோத்தம் என்றே ஸ்ரீ ராமனைக் குறிப்பிடுவது வழக்கம்.

    -மலர்மன்னன்

  43. It was the muslims who were saying that they will abide by the coutrs’ decision.

    Now they say they will appeal against the judgement.

    Suppose, the supreme court too supports the judgement.

    What will they do?

    Oppose that too?

    Avangala thiruththave mudiyathu.

  44. //மான, ரோஷமுள்ள ஜென்மங்களா இருந்தா, இப்படி கேள்வி கேட்டோமேனு நெனச்சு, தூக்குல தொங்கிடுவான். ஆனா இதுங்க………
    //

    இப்படி எல்லாம் பின்னூட்டம் இடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    இங்கே நானும் இதே கேள்வியை எழுப்பி இருக்கிறேன். இது அறிவுஜீவிக் கேள்வி எல்லாம் இல்லை. கடை நிலைக் கேள்வி தான். கொஞ்சம் மேலே போய் பின்னூட்டம் படிச்சுட்டு மேற்கொண்டு கருத்து சொல்லுங்க. அவசரப்பட்டு எதுவும் சொல்லிட வேண்டாம்.

  45. 1, edited

    2, edited

    3, அப்படியே
    இந்துக்களுக்கு பாதகமாக அது மசூதிதான் என தீர்ப்பு வந்திருந்தால் தமிழ் ஹிந்து வலை தளத்தில்,
    காங்கிரஸ் காரர்களின் ஓட்டுப்பொருக்கித்தீர்ப்பு! ஓட்டுக்காக காங்கிரஸ் அரசால் சிறுபான்மை மக்களை திருப்தி படுத்த அறிவிக்கப்பட்ட தீர்ப்பு!! என ஊளையிட்டிருப்பார்கள்.

    3,இனிமுதல் வரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் இதே போல ஏற்றுக்கொண்டால் நாட்டில் அமைதி நிலவும்.

  46. A commendable perspective from a Muslim media-person:

    https://indiatoday.intoday.in/site/Story/114574/India/qw-naqvis-take-on-ayodhya-verdict.html

    TV Today News Director QW Naqvi’s take on Ayodhya verdict

    This is a landmark judgement in the judicial history of India and will hopefully settle the dispute which was haunting the nation for the past 60 years. The best part of the judgement is that all 3 learned judges of the Bench concurred that the portion below the central dome of the Babri Mosque, where at present the idol is kept belongs to Hindus/will be allotted to Hindus in final decree. Therefore, the core issue of the dispute has been disposed of and has left no room for any further doubt/ dispute whatsoever.

    Two judges concurred that Muslims also have a right on the land in dispute (except the place which was beneath the central dome and where the idol is presently situated) and at least 1/3rd of the said land should be given to Muslims. Thus, the court has accepted the claims of Muslims on the disputed site, barring the place where idols are kept presently.

    But I am a bit disappointed by the statement of Zafaryab Jilani that he intends to appeal against the judgement in the Supreme Court. No question that he has every right to go to the higher court but i think Muslims as a community should realise that this is the rarest moment in the history of Free India and they will present a really historical example by accepting the decision as it is. History does gives us rare moments to rise above the level and set the example for future generations. If they decide not to appeal, it will really be the greatest and proudest moment for all those who have strong belief in secularism and Sarva Dharma Sam Bhav.

  47. A very sane response from MJ Akbar

    https://indiatoday.intoday.in/site/Story/114497/Top%20Stories/india-today-editorial-director-mj-akbars-take-on-ayodhya-verdict.html

    The Ayodhya judgement, in which there was unanimity on the core issue of the Lord Rama temple, offers a unique opportunity for an amicable resolution of the most challenging dispute in our lifetime.

    It resolves disputes over the birthplace of Lord Rama, and offers space within the larger zone for the construction of a mosque, if the Sunni Waqf Board opts to do so since it has been granted one-third of the site.

    For me the most important fact has been the peaceful, mature reaction of the people of India. They have risen above the nightmares of the past and taken a historic stride towards our dreams for the future.

  48. இனிமேலாவது இந்துக்கள் சில இந்துவிரோத சக்திகளுக்கு அடிவருடிகளாக போவதை தவிர்க்க வேண்டும் . முசுலீம்கலும் கண்ட கண்ட பேச்சை கேட்டு கொண்டு டிசம்பர் 6 , 7 ன்னு கொடி பிடிக்காதீங்க நாளைக்கு இப்படி தான் ஊரே நாறிபோய்டும்.

    (edited)

  49. இந்த சந்தோஷமான நேரத்தில் அகழ்வாராய்ச்சி நிகழ்ந்த காலத்தை நாம்
    ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும்.
    அகழ்வாராய்ச்சியின் முடிவினால்தான் இந்த தீர்ப்பு நமக்கு கிட்டியுள்ளது.
    அந்த அகழ்வாராய்ச்சி பா.ஜ.கவின் ஆட்சியின் போதுதான் நிகழ்ந்தது.
    ஆகவே நம்மை யாரும் ஏமாற்ற முடிய வில்லை.
    அதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மசூதியின் மேலேயே மசூதி
    கட்டப்பட்டுள்ளது என்று கூறியிருப்பார்கள். ரூபாய்க்கு 3 அகழ்வாராய்ச்சி
    நிபுணர்கள் இன்று கிடைக்கிறார்கள்.

    இப்பொழுதாவது நாம் நம் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில்
    பா.ஜ.கவிற்கு மட்டுமே வாக்கு அளிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து
    கொள்வோம். அவர்களும் அப்படித்தான் என்று விட்டேத்தியாக இருந்தால்
    இன்று இந்த தீர்ப்பு கூட கிடைத்திருக்காது.

    மேலும், இந்த தீர்ப்பின் மூலம் ஒரு விஷயம் உறுதிபடுத்த பட்டுள்ளது.
    முகலாய மன்னர்கள் நம் கோவில்களை இடித்து அதன் மேல் மசூதிகளை
    கட்டியுள்ளார்கள் என்று சில நிபுணர்களாவது தைரியமாக வெளியில்
    சொல்வார்கள்.

  50. இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

  51. //மேலும், இந்த தீர்ப்பின் மூலம் ஒரு விஷயம் உறுதிபடுத்த பட்டுள்ளது.
    முகலாய மன்னர்கள் நம் கோவில்களை இடித்து
    //

    இதற்க்கு நீதிபதி கான் சப்பை கட்டு கட்டியுள்ளார் – அதாவது ஒரு பாழடைந்த கோவில் இருந்ததாம் அது சும்மா வேஸ்டா கிடக்கேன்னு பாபர் அந்த பாழடைந்த கோவிலின் இடிபாடுகளை கொண்டு கும்முட்டம் கட்டினானாம்

    //
    No temple was demolished for constructing the mosque.
    4. Mosque was constructed over the ruins of temples which were lying in utter ruins since a
    very long time before the construction of mosque and some material thereof was used in
    construction of the மொஸஃஉஎ
    //

    கேக்கவே சிரிப்பா இருக்கு – பாபர் எதற்காக ஒரு வேண்டுதல் இருந்து அந்த இடத்தை தேர்ந்தெடுத்து கட்டனும் – ஒரு சம தாயில் கட்டுவது எளிதல்லவா
    போயும் போயும் பழைய இடிபாடுகளை கொண்டும் ஒரு புது குமுட்டம் ஏன் கட்டனும் – புச்சா materials வச்சு கட்டலாம்ல

    இவர் தனது தீர்ப்பில் முஸ்லிம்கள் ரெம்ப நல்லவர்கள் என்று அருமையாக கட்டிவுட்டிருக்கார் – இவாராலும் கூட அகழ்வாராய்ச்சி கூறும் உண்மைகளை மறுக்க முடியவில்லை அதனாலேயே சாதகமான தீர்ப்பு

  52. salahudeen,

    You have proved that my statements are correct.

    Keep it up.

    You guys will never change

  53. இது எப்படி கட்டபஞ்சாயத்து தீர்ப்பு? அங்கே கோவில் இருந்துச்சா அபப்டீங்கிறதின் அடிப்படையில அந்த இடம் யாருக்குன்னு முடிவு பண்றதாதானே இரண்டு பக்கமும் முடிவு பண்ணினாங்க. இத கட்டபஞ்சாயத்து அபப்டீன்னு சொல்றது அழுவாச்சி ஆட்டம் அவ்வளவுதான்.

  54. salahudeen

    என்ன குருட்டுத்தனமான உளறல் இது – விஷயம் 1992 பற்றி மட்டும் அல்ல – மசூதி இருக்குமிடமெல்லாம் முஸ்லிமுக்கு சொந்தம் என்றால் எப்படி – அப்படி பார்த்தல் இன்று பாகிஸ்தான் இந்தியாவிற்கு தான் சொந்தம் – ஆப்கானிஸ்தான் கூட – இதெல்லாம் ஒரு காலத்தில் இந்தியாவின் map பில் இருந்தன

    சரி அதிருக்கட்டும் – அந்த கும்முட்டதின் கீழே கோவில் கட்டிடம் இருக்கிறதே அதை இடிக்காமல் பாபர் என்ற வெறியன் கும்மட்டம் கட்டினானோ?

    வெறி பிடித்து திரிவதை நிறுத்துங்கள் – ஒரு மாபெரும் சமூகமே பத்தாயிரம் வருடங்களாக போற்றும் ஒருவரின் பிறந்தா ஊரை சூறையாடிய ஒருவன் வெறியனாக தான் இருக்க வேண்டும் – புத்தர் சிலைகளை தகர்த்தத்தையும் நீங்கள் ஒரு அறிவான செயல் என்று சொல்வீர்கள் போல் உள்ளது

  55. பொய்யை பரப்பாதிர் நிச்சயமாக அது ராமன் பிறந்த இடம் இல்லை நன்றாக சிந்தித்து செயல் படுங்கள் இறைவன் உங்களுக்கு நல் அறிவையும் ஈமானையும் தந்து அருள் புரிவானாக பாபர் மசூதியை மீட்க்க போராடும் நல்ல அறிவும் புத்தியும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் புர்வானாக .அயோத்தியில் மனிதன் வாழ ஆரம்பித்து 3000 வருடங்கள் தான் ஆகின்றன ஆனால் ராமன் பிறந்து பல லட்சம் வருடங்கள் ஆனதாக நான் சொல்ல வில்லை உங்கள் புராணங்கள் தான் சொல்கின்றன எதையும் உண்மையான கோணத்தில் அலசி ஆராய்ந்து பாருங்கள் புத்தியை செலவிடுங்கள் முட்டாளாக நீங்கள் கூறுவது தான் சரியென்று அடம் பிடிக்காமல் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நீதியை நிலை நிறுத்துங்கள் அது போதும் .

  56. Jai Shriram! “Mandir wahan banayenge; Kasam Ram ki” . I was travelling with tension during the delivery of the judgment. At the end of the dark tunnel, there is light. Again and again the dark face of the virtueless Anti national Secular media reaches millions of homes. Thats what I read from the post on media discussion. I pray lord Ram that the Hindu Diaspora is blessed with strong Media presence to call the secular spade a spade Jai Shriram!

  57. ராமர் கோவில இடிச்சித்தான் மசூதி கட்டி இருக்கானுங்கன்றது தெளிவாயிட்டது. அதுக்கப்புறமும் என்ன பேச்சு? உங்க தாத்தாவுக்கு சொந்த மான வீட்டை இன்னொருத்தன் இடிச்சி வீடு கட்டிகிட்டா சண்டை போடுவமா இல்லையா… இந்துக்கள் அமைதியா இருந்து இருந்து கோர்ட்டு கேசுன்னு நூறு வருஷம் அலைஞ்சி பொறுமை இழந்து உணர்ச்சி வசப்பட்டதை பெருசா சொல்றானுங்க.
    என்ன பொறுத்த வரைக்கும் கும்மட்டக் கட்டிடத்தை இடிச்சது தவறே இல்லை.

    இன்னும் வரலாற்றை எடுத்து பார்த்தா பல சர்ச்சுங்களும் மாட்டும். அவனுங்களும் லேசு இல்லை.. கோவில இடிச்சி இடிச்சி கட்டிருக்கானுங்க. சென்னை கபாலிஸ்வரர் கோவிலே அப்படி கிறிஸ்தவ அடாவடியில் தான் இடம் மாற்றப் பட்டதாம். அதைப் பத்தி தமிழ் இந்து கட்டுரை அவசியம் வெளியிடனும்.

  58. \\salahudeen,

    You have proved that my statements are correct.

    Keep it up.

    You guys will never change//

    @
    Smitha
    The above my comment not told by my me it’s told by famous Supreme Court advocate Mr.Rajeeve Thawan. Keep cool

  59. // விரிவாதிக்க ஆன்ம அறுவடை செய்யும் சக்தி

    Expansionist soul-harvesting powers? whoa…. தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆற்றல் வியக்க வைக்கிறது. சொல்லின் செல்வன் மாருதியின் அருள் உங்களுக்கு நிறைய இருப்பது தெரிகிறது.

  60. நம் காலத்தில் நாம் கண்ணால் பார்த்த- பாமியன் புத்தர் சிலை தகர்ப்பு, பாரதத்தை பிரித்தது , காஷ்மீரிலிருந்து நாலு லட்சம் ஹிந்துக்கள் விரட்டி அடிப்பு, அங்கு நூற்றுக் கணக்கான கோயில்கள் இடிப்பு, பாகிஸ்தான், பங்களாதேஷ்,மலேசியா இங்கெல்லாம் ஹிந்துக்கள் அழிப்பு, கோயில்கள் இடிப்பு, இதற்கெல்லாம் என்ன நீதி?

    அதுவுமில்லாமல் இந்த தீர்ப்பினால் ஒரு வகையில் ஹிந்துக்களுக்கு ஏமாற்றம்..
    நீதி மன்றம் சன்னி வாகப் வாரியத்தின் வழக்கை முழுதுமாக தள்ளுபடி செய்துவிட்டது. அது ராமர் பிறந்த இடம் தான் என்றும் கூறி விட்டது,அங்கு ஒரு கோயிலின் இடி பாடுகளின் மேல் முஸ்லிம்களின் கட்டடம் கட்டப் பட்டது என்றும் கூறி விட்டது.
    இப்படி இருக்கும் போது எதற்கு அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலம்?
    ஆகவே முஸ்லீம்கள் கட்டப் பஞ்சயது என்று கூற வேண்டியதில்லை.
    அப்படிச் சொன்னாள் அதை ஹிந்துக்கள் தான் சொல்ல வேண்டும்.
    இவ்வளவு நடந்தும் ஹிந்துக்கள் எவ்வளவு நியாயமாக, கருணையாக உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.

  61. ராமர் அங்குதான் பிறந்தாரா என்று கேட்பவர்களுக்கு- காஷ்மீரில்’ ஹசரத்பால் மசூதி’ என்றொரு மசூதி உள்ளது.அங்கு முகம்மதுவின் தலை முடி ஒரு பேழையில் வைக்கப்ப்டுள்ளது.அதற்கு யாரும் அத்தாட்சி கேட்பீர்களா?

  62. அப்போது பலர் அத்வானி அவர்களை எப்படியெல்லாம் கரித்துக் கொட்டினர்.
    இன்று அதற்கு நியாயம் கிடைத்தது.

  63. என்னை பொறுத்தவரை இது கட்ட பஞ்சாயத்து தீர்ப்பே!! இடித்த இடம் ராமர் கோவில் இருந்தவிடமெனில் எதற்காக அதை பங்குபோடவேண்டும்? இப்படி போனா போவதென்று பங்கு கொடுத்தும் த்ருப்த்தியடைந்தர்களா? அது சரி! இவர்கள்தான் உலகமே தன் கையில் வரும்வரை விடமாட்டார்களே! நாய் வாலை நிமர்த்த முடியுமா என்ன?

  64. ”மந்திர் ஹை உதர். மஸ்ஜித் கஹாங் ஹை?” என்று கேட்டு நரசிம்மராவுக்கு முன்னரே ராமஜன்ம பூமிக்கு அடிக்கல் நாட்டியவர் விபிசிங்.

  65. தினமணியின் தலையங்கம் மிகவும் நடுநிலமையுடன் எழுதப்பட்டது போல் இருந்தாலும் அதில் லேசாக செகுலரிச வாசனை அடிக்கிறது. இந்தமாயை எப்போது விலகும் என்று தெரியவில்லை. இனிமேல் டிசம்பர் ஆறு துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுமா என்று முஸ்லிம்களை அடிவருடும் மதசார்பற்ற கட்சிகள் தெளிவு படுத்தவேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செல்பவர்களை அவர்கள் யாராகவிருந்தாலும் தங்கள் ஆதரவை தெரிவித்து இந்திய தேசத்தின் “மதசார்பின்மையை” காப்பாற்றுவார்களா? இத்தாலி காங்கிரஸ,் கோவிலும் மசூதியும் அருகருகே கட்ட முயற்சிக்குமா?

  66. இது மகத்தான வெற்றி என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. ஆனால், போராட்டம் இத்துடன் முடிந்தது, மையறு கருணையும், உணர்வும், வாய்மையும் உருவான தருமத்தின் தனிமூர்த்தி இராமபிரானுக்கு கோவில் கட்டி உள்ளத்தால் பொய்யாது ஒழுகி, சநாதன தர்மம் தழைத்தோங்கி பாரதம் பெருமை பெற்றிடும் என்பது போன்ற வருணனைகள் இன்னும் கனவுகளே. போராட்டம் இனியும் தொடரும். இசுலாமியர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடவுள்ளனர்.

    இவர்களை இயக்கும் வஹாபி சக்திகள் என்ன செய்வர் என்பது கவனத்துடன் கண்காணித்து நாம் தற்காக்க வேண்டிய விஷயம். இத்தாலிக்கு அடிவருடும் காங்கிரசு அரசு நியாயமாக நடக்கும் என்பது சூரியன் மேற்கில் உதிக்கும் என எதிர்பார்பதற்கு ஒப்பாகும். வழக்கம் போல இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்து வரும் போராடங்களையும் வெல்லத் தயாராயிருக்க வேண்டும்.

    தீமை தீயும் வரை நல்லோர்ர்கு ஓய்வில்லை. நல்லோர் அனைவரும் சூரிய பகவானைப் பின்பற்ற வேண்டும். ஓய்வு என்பது இந்துக்களுக்கு இன்னும் சில காலம் இருக்கக் கூடாது, உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தது. வருவதை எதிர்கொள்வோம். நாளை நமதே!

  67. Brilliant Judgement,

    I feel extremely Happy and serene after the judgement. I am certainly worried about the way Barqa Dutt and other Cronies are reacting.. When the same Barqa was doing an interview about kashmir many years back , She mentioned as a Matter of fact that the current generation of Kashmiri Youths brought up without knowing that Pandits once lived there. When she told that it was so emotionless and “Reporting” attitude. But now she reacts as if a great injustice was committed to Muslims.
    Now with such a vengeance in her face saying the Temple cannot be build because WAKF board is going to SC and it would take decades.

    Regards
    S Baskar

  68. \\சரி அதிருக்கட்டும் – அந்த கும்முட்டதின் கீழே கோவில் கட்டிடம் இருக்கிறதே அதை இடிக்காமல் பாபர் என்ற வெறியன் கும்மட்டம் கட்டினானோ? //

    யார் இந்த பாபர்?

    டாக்டர் ராதி சியாம் சுக்லா எனும் ஹிந்து மத அறிஞர் ”சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்” எனும் நூ­ல் 458லிஆம் பக்கத்தில் ”ராமர் கோயிலை பாபர் இடித்தார் எனக் கூறுவதே அநீதியாகும்” எனக் குறிப்பிடுகிறார். அதே நூ­ன் 16லிம் பக்கத்தில் அயோத்திலுள்ள ”தாண்ட்தவான் குண்ட்” என்ற கோயிலுக்கு பாபர் 500 ”பிகாஸ்” நிலம் வழங்கியதாக குறிப்பிடுகிறார். அதற்கான ஆதார ஆவணம் இப்போதும் உள்ள அதே கோயி­ல் இருக்கிறது என டாக்டர் சுக்லா என்பவர் குறிப்பிடுகிறார். தவிர, அயோத்தியிலுள்ள வேறு பல கோயில்களுக்கும் பாபர் நில தானங்களை வழங்கியிருக்கிறார்.

    பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில், ”உன் குடிமக்கள் வணங்கும் ஆலயங்களை மதித்து நட” என்றும் ”உன் குடிமக்கள் (இந்துக்கள்) மனதைக் கவர மாட்டிறைச்சி உண்பதை கைவிடு” என்றும் எழுதியிருக்கிறார். இக்கடிதம் டெல்­யில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இப்போதும் இருக்கிறது. இவர் தான் பாபர்!

  69. நன்றாகக் கவனியுங்கள் .இந்த தீர்ப்பை மிகப் பெரும்பான்மையான ஹிந்துக்கள் – மூன்றில் ஒரு பாகம் நிலம் போனாலும்- வரவேற்றிருக்கிறார்கள் . .
    ஆனால் முலீம்கள் வெறுப்பைக் கக்குகின்றனர்.
    அதிலும் படித்த முஸ்லீம்கள் நீதிபதிகள் மீது நெருப்பைக் கொட்டுவதைப் பார்க்கும் போது, ஹிந்துக்கள் இனிமேலாவது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று புரிகிறது.
    தங்களுக்கு ஒன்று சாதகமாக இல்லை என்றால் கோர்ட்டை அவதூறாகப் பேசுகின்றனர்.
    இது வரை அவர்கள் கோர்ட்டு சொல்வதை ஏற்போம் என்று சொன்னது பொய். அதாவது தங்களுக்கு சாதகமாக சொன்னால் ஏற்பார்கள் இல்லை என்றால் இல்லை.
    உதாரணமாக் – பர்கா தத் ,பார்ஹன் நக்வி போன்றவர்கள் -நீதிபதிகள் மசூதி இடிப்பை பற்றி சொல்லாதது தவறு என்றும்,ராமர் அந்த குறிப்பிட்ட இடத்தில் தான் பிறந்தார் என்று நீதிபதிகள் எவ்வாறு கூறலாம் என்றும் மிகக் கோபமாகக் கேட்கின்றனர்
    அத்வானி அவர்கள் ‘ராமருக்கு ஒரு மாபெரும் ஆலயம்- பவிஷ்ய மந்திர்- அமைக்க வேண்டும் என்று கூறியதை கேலி செய்யும் விதமாகப் பேசுகின்றனர்.
    பீ ஜெ பீ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
    ஆக எப்போதும் இவர்கள் வைத்ததே சட்டம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
    சட்டத்தை பற்றியும்,மதசார்பற்ற தன்மையைப் பற்றியும் பேசுகின்றனர்.
    நியாயத்தைப் பற்றிப் பேசுகின்றனர்
    காஷ்மீரில் நாலு லட்சம் ஹிந்துக்கள் துரத்தி அடிக்கப் பட்ட அநியாயத்தை பேச மாட்டார்கள்.
    ஆக இவர்கள் நஞ்சு தோய்ந்த நெஞ்சினர் என்பதை புரிந்து கொள்வோம்.

  70. கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது கேள்விப் பட்டிருக்கிறோம்
    ஆனால் பாபர் ஹிந்துக்களின் நிலத்தை ஹிந்துக்களுக்குக் கொடுத்தது – கடைத் தேங்காயை எடுத்து கடைக்கரனுக்கே விற்றது போல்.

  71. லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன் இருந்தவருக்கு ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் கோயில் எடுக்க முடியுமே.!

  72. சபதம் ஏற்போம்!

    அயோத்தி மண்ணை மீட்டோம்- இனிமேல்
    அடிமைச் சிந்தனை மாய்ப்போம்!

    அந்நியன் எழுதிய சரித்திரத்தாலே
    அல்லல் பட்டது போதும்!
    இன்னுயிர் தன்னை ஈந்தவர் தியாகம்
    இனிமேலேனும் காப்போம்!

    பார்புகழ் நாட்டின் பண்டைய நிலையைப்
    பார்த்திடத் துள்ளுது உள்ளம்!
    ஆர்த்திடும் அலையாய் அயலவர் நடுங்கிட
    ஆடுது மக்களின் வெள்ளம்!

    வழிபடு முறைகள் வேறுபட்டாலும்
    வலியநல் ஒற்றுமை கண்டோம்!
    இழிவுகள் நீக்கிடப் புறப்படுகின்றோம்-
    இன்றே சபதம் ஏற்போம்!

    உடைமை என்பது நமதே – அதிலே
    உரிமை பிறருக்கில்லை!
    அடிமைச் சிந்தனை மாய்ப்போம் – தேவி
    அன்னை பாரதம் வாழ்க!

    அயோத்தி மண்ணை மீட்டோம்- இனிமேல்
    அடிமைச் சிந்தனை மாய்ப்போம்!

    – சேக்கிழான்.
    .

  73. ஸ்லாலுதீன்

    யார் கிட்ட பூ சுற்றுகிறீர்கள்? எவன் நிலத்தை எடுத்து எவன் எவனுக்கு கொடுப்பது? எங்கிருந்தோ இங்கு வந்து பாபர் இங்கிருந்தவர்களின் நிலத்தைப் புடுங்கி தானம் கொடுக்கிறானாமா? சொல்கிறவனுக்கு புத்தி இல்லை என்றால் கேக்கும் நாங்கள் என்ன கேனையர்களா? பாபர் அங்கிருந்த பிருமாண்டமான ராமர் கோவிலை இடித்த விபரத்தை இந்த அம்மாள் சொல்லியிருக்கிறார்

    Safiha-i Chahal Nasaih Bahadur Shahi, written by the daughter of Bahadur Shah Alamgir during the early 18th century.

    Out of the above Chahal Nasaih (“Forty Advices”), twenty-five instructions were copied and incorporated in the manuscript entitled Nasihat-i Bist-o-Panjam Az Chahal Nisaih Bahadur Shahi in 1816 AD, which is the oldest known account of the destruction of Ram Janmabhoomi for construction of the Babri Mosque, and its author is none other than Aurangzeb’s grand daughter.

    இந்த ஷாகி பாபர் ராமர் கோவிலை இடித்ததை உறுதிப் படுத்தியிருக்கிறார். இந்த ஷாகி யாரோ பி ஜே பி காரர் அல்ல கொடுங்கோலன் அவுரங்கசீப்பின் கொள்ளுப் பேத்தி. இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேண்டும்? பாபர் முதல் திப்புசுல்த்தான் வரை தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சில இடங்களில் ஒரு சில தானங்களை நயவஞ்சகமாகச் செய்தனர். ஆனால் அவர்கள் அழித்ததே அதிகம். ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. பாபர், அவுரங்கசீப்புகள் பாதையில் போகாமல் இனியாவது நாகரீக மனிதர்களாக வாழப் பழகுங்கள்.

  74. //இன்று, அவர்கள் மதவெறியர்கள் அல்ல; தாய்நாட்டின் அவமானத்தைத் துடைத்த தேசபக்தர்கள் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது.//

    இப்போது வந்திருக்கும் (நல்ல) தீர்ப்பு நிலம் யாருடையது என்பது தொடர்பானது. ஆனால், அங்கே இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டது நியாயம் என்னும் தீர்ப்பு வரவில்லை. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டுதானே இருக்கிறது?

  75. திருச்சிக்காரன்,
    //இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது இஸ்லாமியர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை அனைவரும் உணர முடியும்.

    இந்த இடிப்பை திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என சில நண்பர்கள் சொல்லி, அதற்காக வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர். இது நமக்கு ஒப்புமை இல்லை. ஒருவரை மிதித்து விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?
    //

    ஒருவரை மிதித்துவிட்டு சாரி சொன்னால் சரிஆகிவிடும். வேறென்ன செய்ய முடியும்? ஆம்புலன்சையா கூப்பிட முடியும்? மேலும் பல்லாயிரக்கணக்கான மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்ட ஹிந்துக்களுக்கு மிதிபடுதலின் ரணம் நீங்கள் சொல்லித் தெரியவேண்டியதல்ல. எதிர்பாராமல் இடித்ததாக யாரும் சொல்லவில்லை. உயிரைப் பணயம் வைத்தும், தியாகம் செய்தும் செய்த கரசெவைப் பெரும்பணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் கொச்சைப் படுத்துகிறீர்கள்.
    தயவு செய்து பெருந்தியாகத்தை உங்கள் செக்யூலர் விளம்பரத்துக்காக மாற்றி எழுதுவதை நிறுத்துங்கள்.

  76. கவிஞர் ஹரன் பிரசன்னா அவர்களே

    நீங்கள் வழக்கறிஞரா? இத்தனை சரியாக பாயிண்டை பிடிக்கிறீர்களே. எனக்கும் அந்த கட்டுரையை படித்த போது இது தோன்றியது. ஆனால் இந்த கட்டுரை என்ன சொல்கிறது என கட்டுரையை முழுதும் படித்து முடித்த போது தோன்றியது என்றால் இவ்வளவு நாள் “மசூதியை உடைத்தார்கள்” “மசூதியை உடைத்தார்கள்” என்று அவர்களை வெறியர்கள் என்று எல்லா ஊடகங்களும் சொன்னதே அதற்கான முகாந்தரம் இப்போது இல்லாமல் போய்விட்டது. காந்தி வெள்ளைக்காரன் சட்டத்தை எதிர்த்து உப்பு எடுத்தது குற்றம்தான். காந்தி சட்டப்படி குற்றவாளிதான். ஆனால் அவர் உப்பை எடுத்தது ஒரு தேச பக்தி செயல் என்பது தெரிகிறது. ஆனால் கரசேவகர்கள் உடைத்தது ஒரு அவமான சின்னத்தைதான் அடிமை சின்னத்தை அல்ல என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இப்போது? கரசேவகர்கள் அந்த கும்மட்டத்தை உடைத்தது சட்டப்படி குற்றம்தான். ஆனால் இடிக்கபப்ட்டது மசூதி அல்ல. அது இஸ்லாமிய நெறிமுறைக்கு புறம்பாகவும் ஹிந்துக்களின் தன்மானத்தை சிதைக்கவும் உருவாக்கப்பட்ட கும்மட்டம் மட்டுமே என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக்கியதால் கரசேவகர்கள் சட்டப்படி குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் செய்தது ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட ஒரு வடுவை அழித்து தேச சேவைதான் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இதைத்தான் அந்த கட்டுரை சொல்கிறது புரிந்ததா?

  77. இனி தொலைபேசியை எடுத்தால் ‘ஹலோ’ கிடையாது.
    ‘ஜெய் ஸ்ரீ ராம்’ தான் !

  78. //டாக்டர் ராதி சியாம் சுக்லா எனும் ஹிந்து மத அறிஞர் ”சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்” எனும் நூ­ல் 458லிஆம் பக்கத்தில் ”ராமர் கோயிலை பாபர் இடித்தார் எனக் கூறுவதே அநீதியாகும்” எனக் குறிப்பிடுகிறார். அதே நூ­ன் 16லிம் பக்கத்தில் அயோத்திலுள்ள ”தாண்ட்தவான் குண்ட்” என்ற கோயிலுக்கு பாபர் 500 ”பிகாஸ்” நிலம் வழங்கியதாக குறிப்பிடுகிறார். அதற்கான ஆதார ஆவணம் இப்போதும் உள்ள அதே கோயி­ல் இருக்கிறது என டாக்டர் சுக்லா என்பவர் குறிப்பிடுகிறார். தவிர, அயோத்தியிலுள்ள வேறு பல கோயில்களுக்கும் பாபர் நில தானங்களை வழங்கியிருக்கிறார்.//

    உட்டா பாபர்தான் ராமர் கோவில் தர்மகத்தா அப்டின்னு சொல்விங்க போல இருக்கு.
    பிரதர் நீங்க கூட பாபர் காலத்திலோ,அவுரங்கசிப் காலத்திலோ கட்டாயமாக மிரட்டி மதம் மாற்ற பட்ட ஒரு இந்துவின் வாரிசுதான்.
    அவர்கள் கொன்று குவிக்காத இந்துக்களா? அவர்கள் இடிக்காத கோவில்களா ? ஏன் இப்படி அந்த பாபர் நல்லவன் என்றும் கோவில் தர்மகத்தா என்றும் பொய் சொல்கிறீர்கள். இந்துக்களை அழிப்பதையே தன முதல் கடமையாக கொண்டுதான் அணைத்து முஸ்லிம் மன்னர்களும் ஆட்சி செய்தனர் ஒன்று மதமாற்றம் அல்லது தலை என்று அலைந்த கூட்டத்தில் ஒருவன் அவன்,அவனை போய் ரொம்ப நல்லவன் என்று புகழும் அளவு உங்களை எல்லாம் மந்திரித்து வைத்துள்ளர்கள்.
    ஏன் சுக்லா கிக்லா எல்லாம் தேடுறீங்க? நம்ம ஊர்லே நிறைய கமலகாசன்,கருப்பு காரர்கள் மற்றும் பல சனிகள் மன்னிக்கவும் ஞானிகள் உள்ளனர் அந்த இடம் அன்பால் விளைந்த மசூதி என்று சர்டிபிகடே கொடுக்க.
    இதே தளத்தில் அங்கே கோவில் இருந்ததற்க்கான அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் பற்றிய கட்டுரை இருக்கிறது படித்து பாருங்கள்.

    உங்களுக்கு தீர்ப்பு பிடிக்கவில்லை என்று வாதிட்டால் அது வேறு.
    (நீங்களும் நாங்களும் எப்படியும் உறவினர்கள் தாம். நமக்குள் நியாயப்படி பிரித்து கொள்ளுவது,கூட குறைவு என்று மீண்டும் போராடுவது ஒருவர் மற்றவர்க்கு விட்டு கொடுப்பது எல்லாம் வேறு)

    அனால் அந்த கால கொடூரர்களை நல்லவர்களாக்க பார்க்கதிர்கள்.
    இந்திய வரலாற்றில் படர்ந்த தூர்நாற்றம் அடிக்கும் ரத்தகரைதான் இஸ்லாமியர் படையெடுப்பும் அவர்களின் ஆட்சி ,அடக்கு முறை,கட்டாய மதமாற்றம் மற்றும் அடிமை சின்னங்களை நிறுவுதல்.

  79. இஸ்லாமிய அறிவுஜீவிகளின் வஹாபி வகை முஸ்லிம் இந்தியா என்ற கனவு சுக்கு நூறாக உடைந்து போனது இந்த தீர்ப்பின் முலம் முக்கால்வாசி உறுதி செய்ய பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் யுக்தியுடன் கூடிய சாத்தியகூறுகளை ஆயும் புத்தியை வளர்த்து கொள்வதே அவர்கள் இந்த பூமியில் தன் மதத்தையும், தங்களையும் காப்பாற்றி கொள்ள வழி! செய்வார்களா.. இன்ஷால்லாஹ்… சந்தேகம் தான்!!….

    நிதிபதி கான் மேற்கோளே காட்டிய டார்வினின் உண்மையை எத்தனை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு செயல் பட போகிறார்கள் என்பது அந்த அல்லாஹுக்குதான் வெளிச்சம்!

    ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் சீதா ராம்! ஜெய் ஹனுமான்!

  80. தமிழ் ஹிந்து இணையதளத்துக்கு எனது மணமார்ந்த பாராட்டுகள் உண்மை செய்தியை உலகுக்கு அளிக்கும் பணி தொடரட்டும் …..

  81. இங்குள்ள முஸ்லீம்களின் முன்னோர்கள் ஹிந்துக்களே
    ஆகவே அவர்கள் ஹிந்துக்களை தங்கள் எதிரியாக நினைக்க வேண்டியதில்லை
    அரேபியாவிலிருந் தும், துருக்கியிலிருந்தும் படை எடுத்து வந்தவர்களால் அவர்களது முன்னோர் மதம் மாற்றப் பட்டனர்.
    ஆகவே ராமர் அவர்களுக்கும் ‘மர்யாதா புருஷோத்தமன்’ தான். பாரதத் தாய் அவர்களுக்கும் தாய் தான்
    இதை உணர்ந்தால் நன்மை விளையும். கலகம் அழியும்

    காங்கிரசையும்,லாலுக்கள், கருனாநிதிக்கள் , முலாயம்கள், மாயாவாதிகள் , ராஜ்தீப்கள், பிரநாய் ராய்கள், அருந்ததிகள், ஹிந்து ராம்கள் இவர்களெல்லாரும் ஹிந்துக்களை ஏமாற்றுவது போலவே முஸ்லீம்களையும் ஏமாற்றுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    அவர்கள் முஸ்லீம்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றா கவலைப் படுகின்றனர்?. இல்லை.
    அரசியல் வாதிகள் அவர்களின் ஓட்டைப் பெற்று தாங்களும் தங்கள் குடும்பங்களும் சுகபோக வா ழ்க்கை வாழலாம் என்று நினைக்கின்றனர்.
    ஊடகங்களில் உள்ளவர்களும்,அறிவு ஜீவி்கள் என்பவர்களும், கம்யுனிஸ்டுகளும் வெள்ளைக் கிறிஸ்தவ நாடுகள் மற்றும் சீனாவின் ஐந்தாம் படையாக செயல் படுகின்றனர்.

    இவர்களால் ஒரு சில தனிப்பட்ட முஸ்லீம்கள் லாபம் அடையலாம்
    ஆனால் பெரும்பான்மையான முஸ்லீம் சமுதாயத்துக்கு எந்த நன்மையையும் இல்ல
    இதை உணர வேண்டும்.
    வில்லன் போல் இவர்களால் சித்தரிக்கப் பட்ட குஜராத் முதல் அமைச்சர் மோடியை இன்று அங்குள்ள முஸ்லீம்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
    சமீபத்தில் நடந்த தேர்தல்களில் அவருக்கு ஓட்டுப் போட்டனர்
    அதனால்தான் இப்போது காங்கிரஸ் சொக்ராபுதீன் விவகாரத்தை பெரிதாக ஊதி விடுகிறது.
    ஆகவே முஸ்லீம்கள் தங்கள் கூட இருந்து குழி பறிக்கும் சக்திகளை நம்பாமல் இவ்வளவு காலம் தங்களுக்கு சகல உரிமைகளையும் முகம் சுளிக்காமல் அளித்து வந்த ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்
    அது தங்கள் முன்னோர்களின் உணர்வுதான் என்பதை உணர வேண்டும்.

  82. வணக்கம்

    ///பாபர் முதல் திப்புசுல்த்தான் வரை ////

    சகோதரர்களே திப்பு ஒரு சுல்தான்தானா? திப்புவை ஒரு சுதந்திர போர்வீரன் போல நினைத்துக் கொண்டு, சொல்லிக் கொண்டு திரியும் சிலருக்காக.

    இதைப் படிக்கவும். ஆதாரங்களோடு.

    https://arvindneela.blogspot.com/2008/02/blog-post_07.html

  83. //ராகுல் வின்சி//

    ம்ஹூம்…ராவுல் வின்சி (Raul Vinci).
    /
    //அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் அந்த இடிக்கப்பட்ட கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான ஹிந்து மத வழிபாட்டுக் கட்டிடம் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளது.//

    இல்லை. அங்கு ஏற்கனவே இருந்தது ஒரு கோவிலின் இடிபாடுகள். இடித்து கட்டப்படவில்லை. அந்த இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டது.

    சீனு.

  84. //ஆகவே அவர்கள் ஹிந்துக்களை தங்கள் எதிரியாக நினைக்க வேண்டியதில்லை
    அரேபியாவிலிருந் தும், துருக்கியிலிருந்தும் படை எடுத்து வந்தவர்களால் அவர்களது முன்னோர் மதம் மாற்றப் பட்டனர்.//

    🙂 நடக்கும்னு நினைக்கறீங்களா?

  85. salahudeen

    ஹய்யோ ஹம்மா சிரிச்சு மாலல – பாபர் அந்தகாலத்திலேயே காங்கிரஸ் கட்சி நடத்தினார் போல இருக்கு – ஓட்டுக்கு என்னவெல்லாம் செய்ய சொல்றார் பாருங்களேன்

    இந்த மேட்டர் தெரிஞ்சா காங்கிரஸ் காரங்க நேருவ உட்டுட்டு பாபர பிடிச்சிகிருவாங்க

    பாபர் நாமம் வாழ்க
    அவுரங்கசீப் நாமம் வாழ்க

    துலுக்க மன்னர்கள் இந்த நாட்டில் செய்த அட்டோழியத்தியா படித்தால் ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த வேலை சாப்பிடவே வெட்கமா இருக்கும்

    Gang Rape
    Destroying relgious and scientific books
    Brutally killing learned people
    killing all children, women and old people
    destroying temples, temple vigrahams
    forcing relgious conversion
    illegal taxing

    இதெல்லாம் வெறும் போயன்ட்டு தான் சம்பவங்களை பயத்தால் உங்களுக்கே உங்களுங்க மேல வாந்தி வரும்

    //

    1 October 2010 at 10:25 pm
    \\சரி அதிருக்கட்டும் – அந்த கும்முட்டதின் கீழே கோவில் கட்டிடம் இருக்கிறதே அதை இடிக்காமல் பாபர் என்ற வெறியன் கும்மட்டம் கட்டினானோ? //

    யார் இந்த பாபர்?

    டாக்டர் ராதி சியாம் சுக்லா எனும் ஹிந்து மத அறிஞர் ”சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்” எனும் நூ­ல் 458லிஆம் பக்கத்தில் ”ராமர் கோயிலை பாபர் இடித்தார் எனக் கூறுவதே அநீதியாகும்” எனக் குறிப்பிடுகிறார். அதே நூ­ன் 16லிம் பக்கத்தில் அயோத்திலுள்ள ”தாண்ட்தவான் குண்ட்” என்ற கோயிலுக்கு பாபர் 500 ”பிகாஸ்” நிலம் வழங்கியதாக குறிப்பிடுகிறார். அதற்கான ஆதார ஆவணம் இப்போதும் உள்ள அதே கோயி­ல் இருக்கிறது என டாக்டர் சுக்லா என்பவர் குறிப்பிடுகிறார். தவிர, அயோத்தியிலுள்ள வேறு பல கோயில்களுக்கும் பாபர் நில தானங்களை வழங்கியிருக்கிறார்.

    பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில், ”உன் குடிமக்கள் வணங்கும் ஆலயங்களை மதித்து நட” என்றும் ”உன் குடிமக்கள் (இந்துக்கள்) மனதைக் கவர மாட்டிறைச்சி உண்பதை கைவிடு” என்றும் எழுதியிருக்கிறார். இக்கடிதம் டெல்­யில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இப்போதும் இருக்கிறது. இவர் தான் பாபர்
    //

  86. திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    //மேலும் பல்லாயிரக்கணக்கான மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்ட ஹிந்துக்களுக்கு மிதிபடுதலின் ரணம் நீங்கள் சொல்லித் தெரியவேண்டியதல்ல.//

    அன்றைக்கு இந்துக்கள் மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்டு கஷ்டப் பட்டார்கள் என்றால், பதிலுக்கு இன்றைக்கு இருப்பவர்களை மன வருத்தம் அடைய செய்வது, ரணமாக்குவது சரியா?

    //எதிர்பாராமல் இடித்ததாக யாரும் சொல்லவில்லை. உயிரைப் பணயம் வைத்தும், தியாகம் செய்தும் செய்த கரசெவைப் பெரும்பணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் கொச்சைப் படுத்துகிறீர்கள்.//

    சொன்னதால் தான் எழுதி இருக்கிறோம்.

    இந்த இடிப்பு நிகழ்வில் பங்கு பெற்ற பல பிரபலமானவர்களே, இந்த இடிப்பு எதிர்பாராத விதமாக நடந்து விட்டடது என்று சொன்னதை பத்திரிகைகளில் படித்த நினைவு இருக்கிறது.

    I further refer the comment of Sri. Jattayu at the following article.

    //https://tamilhindu.com/2010/09/ayodhya-a-turning-point-in-history/
    //
    ஜடாயு

    30 September 2010 at 3:01 pm
    அன்புள்ள திருச்சிக்காரன்,

    பாபர் கட்டிடம் அந்தக் குறிப்பிட்ட நாளில் இடிக்கப் பட்டது ஒரு *அசாதரணமான* வரலாற்றுத் தருணம். ராமஜன்ம பூமி இயக்கத்தை அதுவரை வழிநடத்தி வந்த தலைவர்களே எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு அது, திட்டமிடப் பட்ட நிகழ்வு *அல்ல* என்பதை மனதில் கொள்ளவும். லிபர்ஹான் கமிட்டி அறிக்கையும் அதைத் தெளிவுபடுத்துகிறது..

    அயோத்தி இயக்கத் தலைவர்களிடையே இதற்கான இரண்டு வகை எதிர்வினைகள் இருந்தன.

    உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கல் போன்றவர்கள் இந்த நிகழ்வுக்காக நாங்கள் சிறிதும் வருந்தவில்லை (dont regret) என்றார்கள்.
    ஹெச்.வி.சேஷாத்ரி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள், அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு (highly regrettable) என்றார்கள். நான் ஆர்.எஸ்.எஸ், அத்வானி கட்சி.//

    திரு. ஜடாயு மட்டும் அல்ல, பல முக்கியஸ்தர்கள இது எதிர்பாராமல் நடந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ******************

    திரு. கார்கில் ஜெய் அவர்களே,

    நாம் முன்பு ஒரு விடயமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்ட போது நீங்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றி திட்டி எழுதினீர்கள். தமிழ் இந்துவும் அதை அப்படியே வெளியிட்டது. அதோடு தமிழ் இந்துவில் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள சிலர் எழுத வேண்டும் என்று பின்னூட்டம் இட்டதால் நாம் அவ்வப் போது எழுதி வருகிறோம்.

    இருந்தாலும் உங்களின் கருத்துக்களில் கருத்துப் பரிமாற்றம் செய்வதை தவிர்த்து வருகிறோம். இதற்க்கு முந்தைய ஒரு கட்டுரையிலும் நீங்கள் என்னை கண்டித்து எழுதி இருந்தீர்கள். ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் விட்டு விட்டேன். இந்த முறையும் நீங்கள் என்னைக் குறி வைத்து எழுதுகிறீர்கள்.

    இந்த முறையும் பொருட்படுத்தாமல் இருந்திருப்பேன். ஆனால் இந்து மதத்தை பற்றிய அக்கறை எனக்கு இருக்கிறது.

    இந்து மதம் என்பது பிறரை அச்சுறுத்தும் மதமாக என்றுமே இருந்தது இல்லை.

    மிகப் புராதனமானது இந்து மதம். சகிப்புத் தன்மை, அரவணைக்கும் தன்மை ஆகியவை உள்ள மதமாக இந்து மதம் உள்ளது. இந்து மதத்தின் முக்கியக் கருத்துக்களை இங்கே நினைவு படுத்த கூடாது என்று நீங்கள் கருதினால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள்.

    திரு. ஜடாயு எந்தக் பின்னூட்டதிற்கு பதில் பின்னோட்டம் அளித்தாரோ அந்தப் பின்னூட்டத்தையும் இங்கே மறுபடி எழுதி இருக்கிறேன். படித்து விட்டு என்னை செக்யூலர் என்று சொல்வீர்களோ, அல்லது தனிப் பட்ட முறையில் விரோதத்தைக் காட்ட உபயோகப் படுத்துவீர்களோ , அல்லது இன்னும் எந்தப் பட்டம் கட்ட முடியுமோ முயலுங்கள்.

    //29 September 2010 at 10:26 pm
    அன்பிற்குரிய திரு. ஜடாயு,

    இந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா, அதை இடித்து மசூதி கட்டினார்களா என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த நிலத்திற்கான டைட்டில் பற்றிய தீர்ப்பு நாளை வெளியாக இருக்கிறது.

    இந்த தீர்ப்புக்காக காத்து இருக்காமல் அவசரப் பட்டு வேகம் காட்டி மசூதியை உடைத்ததால் இந்து மதத்திற்கு, இந்துக்களுக்கு , இராமரின் கொள்கைக்கு , அவரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து இருக்கிறீர்களா?

    இராமரின் முக்கிய சிறப்பே அவர் அயோத்தியின் ஆட்சியை விட்டுக் கொடுத்ததுதான். கைகேயி கேட்டு இருந்தால் எப்போதிக்குமாக கூட ஆட்சியை விட்டுக் கொடுத்து இருப்பார். சரி, அவர் விட்டுக் கொடுத்ததைப் போல எல்லோரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் – ஆனால் இப்படி அடாவடியாக உடைப்பது இராமரின் கொள்கைக்கு பொருத்தமானதா?

    ஸ்லாம் டாக் மில்லியனர்- அது ஒன்னும் சிறந்த படம் போல எனக்குத் தோன்றவில்லை. ஆனால் விருது எல்லாம் குடுத்து இருக்கிறார்கள். அதிலே கூட இராமரைப் பற்றி ஒரு கேள்வி கேட்பது போலவும், அது சம்பந்தமாக கலவரம் நடந்தது போலவும், ஒரு சிறுவனை இராமர் போல வேடமிட்டு நிற்க வைத்து காட்டி இருப்பார்கள்.

    சரி, இராமரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டது – அதை விடுங்கள். அதை விட முக்கியம் அவருடைய கொள்கைகள். இராமர் தன்னை பற்றிக் கவலைப் படுவதை விட, எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதியவர்.

    இராமர் இருந்திருந்தால் அவர் இப்படி தனக்கு கோவில் கட்டுவதாக சொல்லிக் கொண்டு அனுமதியின்றி இடித்ததை ரசித்து இருப்பாரா? அந்த மசூதி அல்லது சிலர் சொல்வது போலக் கட்டிடம் இடிக்கப் பட்டதால் இலட்சக் கணக்கான இஸ்லாமியரக்ள மன வருத்தம் அடைந்துள்ளனர். அந்த மன வருத்தம், இராமரே அதைப் பார்த்து மிக வருந்தி இருப்பாரா இல்லையா என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

    இராமர் ஆயுதம் ஏந்தியது காப்பதற்கு தான், அப்பாவிகளைக் காப்பதற்கு தான். அப்பாவியான ஒருவரை தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார். குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?அந்த மசூதியின் மீது கடப்பாறையை பாய்ச்சியது இராமனின் பினாமினா (Phenomena) மீது பாய்ச்சியது போலத்தான்.

    உலக்குக்கே வழி காட்ட வேண்டிய நிலையில் இந்து மதம் உள்ளது. வெண்ணை பொங்கும் நேரத்திலே தாழியை உடைக்க வேண்டுமா? இதில் விவேகானந்தரையும் இழுக்கிறீர்கள். இந்துக்கள் சர்ச்சுக்கு செல்கிறார்கள. மசூதிகளைக் கட்டித் தருகிறார்கள், அது நல்லது என்று விவேகானந்தர் சொல்லவில்லையா? உடைக்கப் பட்ட கோவில்களை தான் திருப்பி எழுப்ப சொன்னார். மசூதி அல்லது சமாதி என்று சொல்லப் படுகிற இடத்தை பலவந்தமாக உடைத்து அதிலே கோவில் கட்டலாம் என்று சுவாமி ஒரு போதும் எண்ணக் கூட மாட்டார்.

    இந்து மதமும் அடாவடி, அராஜக செயல்களை நம்பும், இறங்கும் மதம் என்று ஆக்கி விட்டால், நாளைய தலை முறையினர் மன்னிக்க மாட்டார்கள். உலகத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் , ஒளியையும் உண்மையையும் தரக் கூடிய ஒரு மதத்தை சரியாக சிந்திக்காமல் தவறான பாதைக்கு கொண்டு போக வேண்டாம். அப்படிக் கொண்டு போவது எளிதல்ல.//

    இதுதான் நான் எழுதிய பின்னூட்டம். இந்தப் பின்னூட்டம் என்னைத் திட்ட உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் .

    நான் தெளிவாக சொல்லிக் கொள்வது என்னவென்றால் மசூதியோ அல்லது கும்மாட்டமோ அல்லது மசூதியோ அல்லது கட்டிடமோஅது அனுமதி இல்லாமல், அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இடிக்கப் பட்டது இராமரின் கொள்கைகளுக்கு எதிரானது, இராமர் இருந்திருந்தால் அதில் மிக்க மன வருத்தம் அடைந்து இருப்பார் என்பதுதான்.

    கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான்.

    அதற்குப் பதிலாக ஒரு தோளில் சீதையையும், மறு தோளில் இராவணன் மனைவி மண்டோதரியையும் தூக்கி வரவில்லை. இராமனின் கொள்கை என்ன வென்று அனுமனுக்கு நன்றாகத் தெரியும்.

    போரிலே ஆயுதம் இழந்த நிலையில் இராவணன் நின்றபோது கூட “இன்று போய் நாளை வா” என்று சொன்னவர் இராமன் .

    தன்னை துன்புறுத்திய அரக்கிகளை கூட ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னாவர் சீதை அவர்கள்.

    அப்படிப் பட்டவர்களின் பேரால் அப்பாவிகளின் மனதில் அச்சத்தை உண்டு பண்ணுவது சரியான இந்து மதம் அல்ல என்று நான் சொல்கிறேன். அது இந்து மதத்திற்கு விரோதமானது என்பதை நான் சொல்லுகிறேன்.

    நான் இன்னும் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இப்போது இராமரே அயோத்தியை ஆண்டு கொண்டு இருந்தால், தீர்ப்பு வரும் முன்னே அந்த மசூதி இடிக்கப்படும் போல ஒரு நிலை உருவாவதை இராமர் அறிந்தால், தான் ஒருவராக தனியே நின்று அந்த மசூதியை சுற்றிலும் தன்னுடைய அஸ்திரங்களை மழை போல பொழிந்து, அந்த மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார் என்பதுதான்.

    கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு , அந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகள் இடித்தால் அதில் யாருமே ஆட்செபிக்கவோ, மன வருத்தம் அடையவோ, அச்சப் படவோ எதுவும் இல்லை. அரசாங்கம் அவ்வப் போது பல வழிபாட்டு தளங்களை, பொது இடங்களில் இருந்து அகற்றி வருகிறது.

    இதை எல்லாம் நன்றாகப் படியுங்கள், படித்து விட்டு என்னை இன்னும் என்ன சொல்ல வேண்டுமோ உங்கள் விருப்பம் போல சொல்லிக் கொள்ளுங்கள்.

    //உயிரைப் பணயம் வைத்தும், தியாகம் செய்தும் செய்த கரசெவைப் பெரும்பணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் கொச்சைப் படுத்துகிறீர்கள்.
    தயவு செய்து பெருந்தியாகத்தை உங்கள் செக்யூலர் விளம்பரத்துக்காக மாற்றி எழுதுவதை நிறுத்துங்கள்.//

    “பெரும் பணி” செய்பவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் மட்டும் தான் இந்த தளத்தில் எழுதலாமா என்பதையும், என்னைப் போன்றவர்கள் எழுதக் கூடாதா என்பதையும் தமிழ் இந்து நிர்வாகம் தெரியப் படுத்தினால் நல்லது.

  87. திரு.ஜடாயு அவர்களுக்கு,
    அரவிந்தன் நீலகண்டனின் அருமையான கட்டுரையின் லிங்கை அளித்ததற்கு நன்றி.
    அக்கட்டுரையில் எனக்கு பிடித்த வாக்கியம்.
    “ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை”.
    இடது சாரிகளின் மனித விரோத, தேச விரோத மனப்பான்மையை
    தோலுரித்து காட்டியுள்ளார்.

    நம் குழந்தைகள் வழவழ கொழகொழ வரலாற்றையே படித்து குழம்பி
    உள்ளார்கள். அவர்களை சரியான பாதையில் திருப்புவது சுலபமல்ல.
    இருந்தாலும் அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் முயற்சியில்,
    சிலராவது உண்மையை உணர்வார்கள் என்று நம்புவோம்.

  88. இங்குள்ள ஹிந்து அல்லாத அனைத்து மதத்தவர்களும் முன்னொரு காலத்தில் ஹிந்துவாக இருந்தவர்கள் தான் என்பதை மறுக்க மாட்டார்கள் . அந்நிய சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்தோ அல்லது பணத்துக்காகவோ அல்லது ஏமாற்றியோ தான் நிச்சியம் மற்றியிருபார்கள் . முன்னோர்கள் செய்த தவறை திருத்த ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டு தாய்மதம் அனுஷ்டிக ஸ்ரீ ராமன் அருள் அவர்களுக்கு கிடைக்க வேண்டுவோம்.

    //என் உடன் பிறந்தோர் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
    வட மாநிலங்களில், முக்கியமாக பிஹார், உத்தரப் பிரதேசம் முதலான ப்குதிகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்கையில் “ ராம், ராம்” என்றே முகமன் கூறிக்கொள்வர். தொலைபேசியில் பேசுகிறபோதும் ’ஹலோ’ என்பதற்கு பதிலாக ”ராம், ராம்” என்றே கூறுவர்.//
    இதனை முழுமையாக ஒப்புகொள்கிறேன் . ஹிந்துக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் . நன்றி மலர்மன்னன் அவர்களே

    ஜெய் ஸ்ரீராம்
    வந்தே மாதரம்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  89. திரு. திருச்சிக்காரன்,

    //அன்றைக்கு இந்துக்கள் மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்டு கஷ்டப் பட்டார்கள் என்றால், பதிலுக்கு இன்றைக்கு இருப்பவர்களை மன வருத்தம் அடைய செய்வது, ரணமாக்குவது சரியா? //

    கரசேவகர்களின் செயலைக் கொச்சைபடுத்துகிறீர்கள். கர சேவகர்கள் இஸ்லாமியர்களை ரணப்படுத்தவில்லை; ஹிந்துக்களின் தீரா ரணத்துக்கு களிம்பு தடவிக் கொண்டார்கள். இதனால் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரணம் ஏற்பட்டதென்றால் அது அவர்களின் பார்வைக் கோளாறு; அவர்கள் வரலாற்றை படித்து, அவர்கள் ஏற்படுத்திய ரணங்களை நினைத்துப பார்த்து மன அமைதி அடையட்டும். முல்லாக்கள் அவர்களுக்கு நிலையை விளக்கட்டும். சலாம் அலைக்கும்.

    //இந்த இடிப்பு நிகழ்வில் பங்கு பெற்ற பல பிரபலமானவர்களே, இந்த இடிப்பு எதிர்பாராத விதமாக நடந்து விட்டடது என்று சொன்னதை பத்திரிகைகளில் படித்த நினைவு இருக்கிறது. //

    அதில் உயிர்த்தியாகம் செய்த கரசேவகர்களைக் கேளுங்கள். அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். பிரபலமானவர்கள் எதிர்பாராதது என்று சொன்னது ஹிந்துக்களுள் அன்று பொங்கிய தன்மானத்தைக் குறித்து இருக்கலாம். ஏனென்றால் அதுதான் எதிர்பாராதது. அது எதிர்பார்க்கப்பட்டு இருந்தால் என்றோ பாபர் மசூதியின் முடிவும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும்.

    //அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இடிக்கப் பட்டது இராமரின் கொள்கைகளுக்கு எதிரானது, இராமர் இருந்திருந்தால் அதில் மிக்க மன வருத்தம் அடைந்து இருப்பார் என்பதுதான். //

    இராவணின் அரசாங்கச் சட்டப்படி இராமன் மேல்தான் தவறு. tresspass செய்த அனுமன் மேல்தான் தவறு. கரசேவர்கர்கள் தங்களை ராமன் எனவில்லை. இலங்கேஸ்வரனின் அரண்மனையைக் கொளுத்திய அனுமன் பரிவாரம் என்றே தங்களை நினைத்தனர்.

    //அதற்குப் பதிலாக ஒரு தோளில் சீதையையும், மறு தோளில் இராவணன் மனைவி மண்டோதரியையும் தூக்கி வரவில்லை. //
    ராமர் கோவிலை இடித்தற்குப் பதிலாக, நாங்கள் ஜும்மா மசூதியை இடிக்கவில்லை. பாபர் கல்லறையைத்தான் இடித்தோம். ஜும்மா மசூதி தான் மண்டோதரி.

    //இராமனின் கொள்கை என்ன வென்று அனுமனுக்கு நன்றாகத் தெரியும். //

    இலங்கபுரியை எரித்தது அனுமன் இல்லையா ? வேறு யார் ?

    திருச்சிக்காரன், உங்கள் போன்ற சுயனலவியாதிகளால்தான் ஹிந்து சமூகத்தின், ஹிந்து தியாகிகளின் செயல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன. பல ஹிந்துக்களை குறைசொல்லி விளம்பரம் தேடுகிறீர்கள். மற்றவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.

  90. காஷ்மீரில் ‘ஹிந்துக்களை ஒழிக்கும்’ இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் முன்னூறுக்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப் பட்டுள்ளன.
    கடைசியாக சென்ற மாதம் ஒரு ஜெயின் கோயில் முழுமையாகத் தரை மட்டமாக்கப் பட்டது
    அதன் பூசாரி விக்ரஹா மூர்த்திகளுடன் குஜராத் தப்பி ஓடினார்
    இதை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம்
    இந்த காயங்களுக்கு யார் களிம்பு பூசுவது?
    இதை யாரும் பேசுவதில்லையே ஏன்?

  91. சரி கும்முட்டத்தை இடித்த கர சேவகர்கள் போகட்டும்
    ஒன்றும் அறியா கர சேவகர்களை கோத்ராவில் துடிக்க துடிக்க எரித்தார்களே, அது உங்கள் கண்ணில் படவில்லையா?

  92. //இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரணம் ஏற்பட்டதென்றால் அது அவர்களின் பார்வைக் கோளாறு; அவர்கள் வரலாற்றை படித்து, அவர்கள் ஏற்படுத்திய ரணங்களை நினைத்துப பார்த்து மன அமைதி அடையட்டும்//

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிலர் செய்த தவறுக்கு இன்று சிலரை ரணப் படுத்துவது என்ன நியாயம்? இன்று இருப்பவர்கள ரணம் ஏற்ப்படுத்தவில்லை.

    //அதில் உயிர்த்தியாகம் செய்த கரசேவகர்களைக் கேளுங்கள். அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். பிரபலமானவர்கள் எதிர்பாராதது என்று சொன்னது ஹிந்துக்களுள் அன்று பொங்கிய தன்மானத்தைக் குறித்து இருக்கலாம். ஏனென்றால் அதுதான் எதிர்பாராதது. //

    நான் ரெபர் செய்ததைப் படித்தீர்களா, அதில் தெளிவாக இருக்கிறது. உங்களுக்குப் புரியாவிட்டாலும் படிப்பவர்களுக்குப் புரியும்.

    //இராவணின் அரசாங்கச் சட்டப்படி இராமன் மேல்தான் தவறு. tresspass செய்த அனுமன் மேல்தான் தவறு. //

    உங்களுடைய ஒப்புமை சரி அல்ல. இந்தியா நம் தாய் நாடு, இப்போது தீர்ப்பு அளித்த உயர் நீதி மன்றம் அதே இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதிதான். அது தீர்ப்பு வழங்கும் வரை காத்து இருக்காமல் அடாவடியாக இடித்து இருக்கிரார்கள.

    //ராமர் கோவிலை இடித்தற்குப் பதிலாக, நாங்கள் ஜும்மா மசூதியை இடிக்கவில்லை. பாபர் கல்லறையைத்தான் இடித்தோம். ஜும்மா மசூதி தான் மண்டோதரி. //

    உங்கள் பதிலே நீங்கள் செய்த செயல் எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.

    இடித்ததற்கு பதில் இடிப்பு செய்து இருக்கிரீர்கள.

    தூக்கி சென்றதற்கு பதிலாக தூக்கி வருவதைப் போல. மண்டோதரியை தூக்கி வருவதற்கு பதில் வேறு ஒரு பெண்ணை தூக்கி வந்து இருக்கிறார்கள்.

    மொத்தத்திலே இந்த செயல் இது இராவணத் தனமே என்பதைக் காட்டுகிறது.

    //இலங்கபுரியை எரித்தது அனுமன் இல்லையா ? வேறு யார் ?//

    இராவணன் சீதையை தூக்கி சென்றதால் தான், அவரைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்றான். அனுமன் வாலில் தீ வைக்கப் பட்டது.

    சீதையை விட்டு விடச் சொல்லி அனுமன் கேட்ட போது இராவணன் அதை ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒத்துக் கொண்டு இருந்தால் அனுமன் எதுவும் செய்து இருக்கப் போவது இல்லை.

    அபலையாக இருந்த சீதையை தூக்கி வந்த இராவணனுக்கு பாடம் கற்பிக்கவும், அவனுடைய அக்கிரம செயல்களுக்கு துணை போனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் அனுமன் இலங்கா தகனம் செய்தான்.

    ஒரு அபலையைக் காக்க அனுமன் செய்த முயற்சிகளை, இன்றைக்கு பல்வேறு அப்பாவிகளின் உயிர் அழிப்பிற்கும் , மன உடைதலுக்கும் காரணமான முயற்சிகளுடன் ஒப்பிட்டு அனுமனைக் கொச்சைப் படுத்துகிறீர்கள்.

    அப்பாவியான ஒருவருக்கு கூட தீங்கு நினைக்கவில்லை அனுமன். அப்படித் தீங்கு நினைத்திருக்கக் கூட மாட்டான் அனுமன்.

    இதை மீண்டும் சொல்கிறேன்.

    அப்பாவியான ஒருவருக்கு கூட தீங்கு நினைக்கவில்லை அனுமன். அப்படித் தீங்கு நினைத்திருக்கக் கூட மாட்டான் அனுமன்.

    இதை உங்களால மறுக்க முடியுமா?

    இங்கே இந்த இடிப்பு சம்பந்தமாக நாட்டில் எழுந்த கலவரங்களில் அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப் பட்டு, உடைமைகள் அழிக்கப் பட்டு, அப்பாவிகள் அச்சுறுத்தப் பட்ட செயல்களை- ஒரு அபலைப் பெண்ணைக் காக்க முயன்ற அனுமனின் செயலோடு ஒப்பிட்டு அனுமனைக் கொச்சைப் படுத்துகிறீர்கள்.

    இராவணன் இறந்து ஐநூறு ஆண்டுகள் கழித்து, அவனுடைய உறவுகாரப் பையனை போய்த் தாக்கவில்லை அனுமன்.

    அனுமன் கட்டுப் பாடு உள்ளவன். சர்வாதிகார, காமக் கொடூர , பயங்கர வாதிகளுக்கு எதிராக அவன் நிகழ்த்திய சாகசங்களை, அப்பாவிகளின் மனதை காயப் படுத்தும் இடிப்பு செயலுடன் ஒப்பிடுவது தவறு.

    //திருச்சிக்காரன், உங்கள் போன்ற சுயனலவியாதிகளால்தான் ஹிந்து சமூகத்தின், ஹிந்து தியாகிகளின் செயல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன.//

    இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ வைத்து பட்டம் பதவி நான் தேடவில்லை. இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ வைத்து நான் ஒரு பைசா கூட சம்பாரிக்கவில்லை.

    பேருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களைப் போட்டுக் கொண்டு நான் இந்து மதத்திற்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லிக் கொள்வது யார்.

    //திருச்சிக்காரன், உங்கள் போன்ற சுயனலவியாதிகளால்தான் ஹிந்து சமூகத்தின், ஹிந்து தியாகிகளின் செயல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன.//

    இந்து சமூகம் என்பது என்ன? சில அமைப்புகள் மட்டும் தான் இந்து சமூகமா? ஒட்டு மொத்த இந்து சமூகமும் இடிப்பு செயலை ஆதரிப்பது போலக் காட்டி ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீதும் பழி போடாதீர்கள்.

    //பல ஹிந்துக்களை குறைசொல்லி விளம்பரம் தேடுகிறீர்கள்.//

    எந்த ஒரு இந்துவையோ, எந்த ஒரு மனிதனையோ நான் குறை சொல்லவில்லை. அவர்கள் தவறான வழிகாட்டுதலினால் தவறான பாதைக்கு செல்லக் கூடாது என்பதற்காக எழுதுகிறேன்.

    //மற்றவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்//

    நான் எப்போது பின்னூட்டம் போடுவேன், எப்போது சான்ஸ் கிடைக்கும் , நாம் புகுந்து திட்டலாம் என்ற நோக்கம் மாறினால் பொன்னான நிறம் மிச்சம் ஆகும்.

  93. ஆயிரம் ஆண்டுக்கால அடிமைத்தனத்தால் சராசரி ஹிந்துவின் உள்ளத்தில் அச்சமும் தயக்கமும், சகல உரிமைகளையும் விட்டுக்கொடுத்து ஒதுங்கிக்கொள்வதும் வேரோடிப் போயுள்ளன. இந்த இயலாமையை மறைத்துக்கொள்ள தாராள மனப்பான்மை, பெருந்தன்மை, சமரசப் போக்கு முதலான போர்வைகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன. த்னது கோழைத்தனத்திற்கு சமாதானம் சொல்ல நமது ஹிந்து சமயக் கோட்பாட்டின் உன்னத அம்சங்களை அவன் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் ( அத்தகைய அம்சங்கள் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பொருத்தமாக இருக்கும் என்பதை நமது ஞானாசிரியன் பார்த்தசாரதி தெளிவாகவே அறிவுறுத்தியுள்ள போதிலும்!). இதற்காக சராசரி ஹிந்துவின் மீது கோபப்படாமல் நாம் பொறுமையாக அவனுக்கு சுயமரியாதையைப் புகட்ட வேண்டுமேயல்லாது, இகழலாகாது. அப்படிச் செய்வதால் எதிர் விளைவே ஏற்படும். அந்த சராசரி ஹிந்துவின் அகந்தை எனும் ஈகோ மேலும் மேலும் அவனைத் தனது நிலைப்பாடுதான் சரி என்று சாதிக்கத் தூண்டும். ஹிந்துக்களிடையே விழிப்புணர்வூட்டுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு அசாத்தியப் பொறுமை தேவைப்படுகிறது என்பதை அனுபவத்தில் அறிந்துள்ளேன். காரிய சித்திக்காக நம்மவரே குழம்பும்படியான சில ஸ்ட்ராடஜிகளையும் அவ்வப்போது நான் எடுக்க வேண்டியுள்ளது!
    -மலர்மன்னன்

  94. “உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு” என்பதும்,
    “மற்ற மதத்தினரின் இடத்தில் மசூதி கட்டுவது இஸ்லாமுக்கு எதிரானது”
    என்பதும் பேச்சளவில் பேட்டியின் போது தான் பயன்படுகிறது. மீனாக்ஷி அம்மன் கோயிலில் இவர்களால் உடைக்கப்பட்ட லிங்கமே இதற்கு சாட்சி. பாமியான் புத்தர் சமீபத்திய சாட்சி. காபா இருந்த இடத்திலேயே சிலைகளுடைய அமைப்பு இருந்ததாகவும், அது உடைக்கப்பட்டதும் வரலாறே.

    மேலும் இராமன் பிறந்த இடம் என்பது நம்பிக்கை தான் என்றால், கடவுளின் தூதர் என்று இவர்களால் நம்பப்படுகின்ற நபிகள் நாயகம் அல் அஸ்கா மசூதியிலிருந்து புராக் என்ற குதிரையில் சொர்கத்திற்கு சென்றார் என்பதும் நம்பிக்கை தானே….அங்கே மட்டும் ஏன் உரிமை போராட்டம் நடத்த வேண்டும்?

    உண்மையான வரலாறை சமுதாயத்திலுருந்து மறைத்தது தான் மூல காரணம் மற்றும் குற்றம். அந்த குற்றத்திற்கு அரசியல்வாதிகள் காரணம். அவர்களை ஆதரித்து வளரவிட்டது மக்களுடைய குற்றம்.

    இந்த தீர்ப்பு உண்மையில் பிஜேபிக்கு வருத்தமாக இருக்கும். இராமர் கோயில் கட்டிவிட்டால் இவர்களுக்கு பிஸினஸ் போய்விடும்.

    செந்தில்

  95. தேசிய அவமானச் சின்னத்தை அகற்றும் பணியை மேற்கோண்டமைக்காகப் பாராட்டாவிட்டாலும் கிரிமினல்கள் என்று வர்ணிக்காமலாவது இருப்பார் களாக. வெள்ளைக்காரன் காலத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற அனைவருமே அவனது சட்டப்படி கிரிமினல்களாகத்தான் நடத்தப்பட்டார்கள். அவனது சட்டமே இங்கு இன்னும் நீடிப்பதால் கர சேவகர்களையும் கிரிமினல்களாகக் கருதும் மனோபாவம் தொடர்கிறது போலும். அவமானச் சின்னம் அகற்றப்பட வேண்டும் என்று ஹிந்துக்கள் பல்லாணடுக் காலம் அமைதியாகக் கோரி வந்தும் அதற்கு ஒருவிதப் பலனும் கிட்டாததால் இறுதியில் தாங்களாகவே அதனை இடித்துத் தள்ள வேண்டியதாயிற்று. மேலும், அது இடிக்கப்படும்போது மாற்று சமயத்தினரின் வழிபாட்டுத் தலமாக இருக்கவில்லை. நம் குழந்தை ராமனை வழிபடும் இடமாகவே இருந்தது. ஹிந்துக்கள் பாழடைந்துபோன கட்டிடத்தில் குழந்தை ராமனை தொடர்ந்து வழிபட விரும்பாமல் அங்கு அவனுக்க்குப் புதிதாக ஓர் ஆலயம் எழுப்பவே பழைய கட்டிடத்தை இடித்தார்கள். அதிகார பீடங்கள் அலட்சியம் செய்ததால் ஹிந்துக்கள் தாமாகவே அந்தப்பணியைச் செய்துமுடித்தார்கள்.

    இனியாவ்து ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஹிந்துக்களின் ஏழே ஏழு புனிதத் தலங்களில் மட்டுமாவது ஊர் எல்லைக்குள் ஹிந்துஸ் தானத்திற்கு வெளியிலிருந்து வந்த மாற்றுச் சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள் ஏதும் இல்லாத்வாறு அப்புனிதத் தலங்களை ஹிந்து ரிசர்வ் ஏரியாககளாக நோட்டிஃபை செய்ய வேண்டும். ஹிந்துக்களின் இந்தக் குறைந்த பட்ச விருப்பத்தைகூட அதிகார பீடங்களால் நிறைவேற்ற முடியாமல் போகுமானால் ஹிந்துக்கள் மீண்டும் பொறுமை இழக்க நேரிடும்.
    -மலர்மன்னன்

  96. திரு, கார்கில் ஜெய் அவர்களே,

    ஒரு விடயத்திற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

    இராமர் பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எதையும் நீங்கள் மறுக்கவில்லை.

    இராமர் மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்ப்பவர் என்பதையும், அப்பாவிகளின் மனம் காயப் படுத்தப் படுவதை இராமர் ஒப்ப மாட்டார் என்பதையும் நீங்கள் புரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

    விரைவிலே அனுமனையும் நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள.

    இலக்குவன், சீதை, அனுமன்…. முதல் துளசி தாசர், இராமதாசர்…. காந்தி வரை எல்லோரும் இராமரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் தான். இராமரின் கொள்கைக்கு மாறான வகையில் அவர்கள் மனம் ஒரு போதும் எண்ணாது.

    இராமரின் கொள்கை தான் உலகில் சமாதானத்தையும். இணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது. நாம் அதைப் பின்பற்றாமல் உலகுக்கு அதை எடுத்துக் காட்ட முடியாது. படிப்பது இராமாயணம், இடிப்பது அடுத்தவரின் வழிபாட்டு தளம் என்ற வகையிலே செயல் பாடாமல் சரியான இராமரின் பாதைக்கு வாருங்கள் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

    மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி செலுத்தி விடை பெறுகிறேன்.

  97. அயோத்தி: நடந்தது இதுதான்!

    1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

    2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

    3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

    எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

    ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

    “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

    “நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

    5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

    6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் – அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

    படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

    ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

    https://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

  98. திரு. திருச்சிக்காரன்,
    // கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான். // அநியாயமாக தூக்கி வந்தாலும் இராவணன் காதலால் தூக்கி வந்தான். இராவணன் ஒரு நல்ல வீரன். சிவ பக்தன். உங்கள் கற்பனையில் உள்ளதுபோல் கோழை இல்லை. இன்று பொய் நாளை வா என்றவுடன் ஓடிவிடவோ அல்லது ‘எனக்கில்லன்னா அவனுக்கும் கிடைக்கக் கூடாது’ என்று சொல்லி சீதையை கொன்றுவிடவோ செய்த சாடிஸ்ட் இல்லை. ஆக சம்பந்தமில்லாத விஷயமான ராவணனை, எவ்வளவோ மோசமான, காரணமேயில்லாமல், இலாபமில்லாமல், ஹிந்துக்களை துன்புருத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு கோவிலை இடித்த சாடிஸ்ட் பாபரோடு, தொடர்பு படுத்துவது உங்களுக்கே வந்த கலை.

    //அதற்குப் பதிலாக ஒரு தோளில் சீதையையும், மறு தோளில் இராவணன் மனைவி மண்டோதரியையும் தூக்கி வரவில்லை. // மறுபடியும் சொல்கிறேன், கரசேவகர்களின் மீது பழி போடாதீர்கள். ஹிந்து துரோகிகளால் ஹிந்துத்தியாகிகளை எதுவும் செய்துவிட முடியாது. கரசேவகர்கள் மண்டோதரியையும் தூக்கி வரவில்லை, மசூதியையும் இடிக்கவில்லை. அவர்கள் செய்தது ராமர் கோவிலுக்காக இருந்த தடையை நீக்கியது மட்டுமே.

    //போரிலே ஆயுதம் இழந்த நிலையில் இராவணன் நின்றபோது கூட “இன்று போய் நாளை வா” என்று சொன்னவர் இராமன். // இராமர் காத்திருந்தது ஒரு நாள். ஹிந்துக்கள் காத்திருந்தது சில தலைமுறைகள்.

    //இப்போது இராமரே அயோத்தியை ஆண்டு கொண்டு இருந்தால் …. தான் ஒருவராக தனியே நின்று அந்த மசூதியை சுற்றிலும் தன்னுடைய அஸ்திரங்களை மழை போல பொழிந்து, அந்த மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார் என்பதுதான்.//

    கலிகாலத்தில் இருக்கிறீர்கள். திரேத்தா யுக கனவுகளில் லயித்திருப்பதைத் தவிர்த்து சிந்தியுங்கள். திரேத்தா யுக இராமர் மசூதிக்கு சேதாரம் வராமல் காத்திருக்கலாம். ஆனால் துவாபர யுகத்துக் கிருஷ்ணர் இருந்திருந்தால் தனி ஒருவராக பாபர் கல்லறையை பெயர்த்து பொங்குமா கடலில் வீசியிருப்பார்.

    இராமன் குடிகாரன், ஹிந்து திருடன் என்பதைச் சொல்லும் உங்கள் திராவிட, செக்யூலரிச தத்துவங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு பண்டாரங்கள் பலங்கொண்டு எழுந்த, இந்திய வரலாற்றில் பெருமை நிகழ்ச்சியான டிசம்பர் 6 1992 – டை தூற்றாதீர்கள். ஏனென்றால் :

    சாம, தான, பேதம் கழித்தே தண்டம் எடுத்தனர் பண்டாரங்கள்.

  99. இங்கே பல இந்துக்கள் இன்றைய முஸ்லீம்கள் முன்பு இந்துவாக இருந்தவர்களே என்று கூறியுள்ளனர்.

    இது தவறாகும்.

    தமிழ்நாட்டின் பெரும்பான்மையான முஸ்லீம்கள் அரபியாவிலிருந்து இங்கு வந்து செட்டில் ஆனவர்கள். மரைக்காயர்கள் அனைவரும் அரபுநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்களே. தமிழ் பேசும் பணடைய முஸ்லீம்கள் அனைவரும் அரபியர்களே. அவர்களை தமிழர்கள் என்று அவர்களே அழைத்துகொள்வதில்லை. இங்கே வெளியில் அரசியல் பேச மட்டுமே அவர்கள் தங்களை தமிழர்கள் என்று அழைத்துகொள்வார்கள். உள்ளே சமூகத்துக்குள் அவர்கள் தங்களை அரபியர்கள் என்றே குறித்துகொள்வார்கள். ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தங்களை அரசியல் காரணத்துக்காகக் கூட தமிழர்கள் என்று அழைத்துகொள்வதில்லை. தாங்கள் அரபியர்கள் என்பதில் பெருமிதம் அடைவார்கள்.

    இரண்டாவது வடக்கிலிருந்து இங்கே வந்து குடியேறிய உருது பேசும் முஸ்லீம்கள். இவர்களும் தமிழர்கள் அல்ல. இங்கே உருது பேசும் முஸ்லீம்களில் கணிசமானவர்கள் தங்களை அரபியர்கள் அல்லது துருக்கியர்கள் என்றே குறிப்பிடுவர். சையது என்பவர்கள் நபி என்று இவர்கள் கூறும் முகம்மதின் வழித்தோன்றல்கள். முகம்மதின் வழித்தோன்றல்கள் எப்படி இந்தியர்களாக இருக்கமுடியும்? அவர்களும் அரபியர்களே என்றே அறியவும்.

    வடக்கிலிருந்து இங்கே வந்து உருது பேசும் முஸ்லீம்களில் பட்டாணிகள் மட்டுமே இந்துக்களாக இருந்து முஸ்லீம்களாக ஆனவர்கள். சஷி கபூர் ராஜ்கபூர் ஆகியோர் இந்து பட்டாணிகள். அவர்களது உறவினர்களான இன்றைய பட்டாணிகள் பெரும்பாலோனோர் கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டனர்.

  100. யுகங்கள் தோறும் நடைமுறைகள் மாறும்.
    மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமபிரான் ராவண வதத்திற்கு முன்பு பல வதங்களைச் செய்தவர்தான்.-வாலி வதம் உள்பட. ஒவ்வொரு வதத்திற்கும் ஒரு நியாயம் இருந்தது, நியதி இருந்தது. ராம பிரான் தமது யுக தர்மத்திற்கு ஏற்பச் செயலாற்றினார்.

    ராமாயணத்தை வெறுமே பாராயணம் செய்தால் போதாது. அதில் பொதிந்துள்ள உட்பொருளை கிரகித்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.

    துளஸிதாஸரின் ராம சரித மானஸை முழுமையாகப் படித்த பிறகுதான் துளஸிதாஸரின் நிலைப்பாடு பற்றிப் பேச முடியும்.

    பகத ராமதாஸர் மக்களுக்கு ஹிந்து உணர்வையூட்டி தமது உரிமைகளுக்காகப் போராடும் போர்க்குணத்தை அவர்களுக்கு ஊட்டியவர்,

    காந்திஜி எனது உடலைக் கூறு போட்ட பிறகுதான் பாரத தேசத்தைக் கூறுபோட முடியும் என்று சொன்னவர். ஆனால் பின்னர் தேசம் துண்டாடப் படுவதற்கு இணங்கினார். சொன்ன சொல் காக்கவில்லை. நான் ஹிந்து, முகமதியர், கிறிஸ்தவர் ஆகிய அனைவருக்கும் பொதுவானவன் என்பதால் ஹிந்து-முஸ்லிம் என்கிற மத அடிப்படையில் பாரதப் பிரிவினை பற்றிய பேச்சு வார்த்தையில் ஹிந்துக்கள் சார்பில் நான் கலந்துகொள்வது சரியல்ல.
    ஆர் எஸ்.எஸ்., ஹிந்து மஹாசபை போன்ற ஹிந்து அமைப்புகள் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதே முறை என்று சொல்லி காந்திஜி ஒதுங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மேலும் தமது ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு என்றும் சொன்னவர் காந்திஜி. ஆகவே அவரைப் பட்டியலில் சேர்ப்பது சரியாக இருக்காது.

    போக்கிரிகள் வம்புக்கு வருவதை அப்பாவிகள் மனம் புண்பட்டுவிட்டதாகக் கூறுவது சரியல்ல. சிரமம் பார்க்காமல் அயோத்திக்கு ஒரு நடை போய் அங்கு வசிக்கும் முகமதியரிடம் கருத்துக் கேட்டால், நாங்கள் வழிபட்ட மசூதி எதையும் எவரும் சேதப்படுத்தவில்லை. நாங்கள் வழிப்படாத பழைய பாழுங் கட்டிடம்தானே இடிக்கப்பட்டது என்று சொல்லக் கேட்கலாம். ஸுன்னி வக் போர்டுதான் ஹிந்துக்கள் புனித்மாகக் கருதும் ராமஜன்மஸ்தானை ரியல் எஸ்டேட் கன்ணோட்டத்துடன் உரிமைகோரியது. அயோத்தி வாழ் பாமர முகமதிய மக்கள் அல்லர்!
    ஏதோ வழிபாடு நடைபெறும் மசூதி இடிக்கப்பட்டதுபோல் நாடு முழுவதும் பிரசாரம் செய்து பாமர முகமதியரைத் தூண்டிவிட்டனரேயன்றி எந்த அப்பாவியின் மனமும் அந்தப் பாழ் மண்டபம் இடிக்கப்பட்டமைக்காகப் புண்பட்டுவிடவில்லை.
    பாரத தொல்பொருள் துறை அதற்காக ஆட்சேபம் எழுப்புவதே முறை. ஆனால் தன் பொறுப்பில் உள்ள ஆயிரக்கணக்கான பழங் கட்டிடங்களை ஒழுங்காகப் பராமரிக்க மாட்டாமல் அவை மெல்ல மெல்ல இடிந்து விழுவதற்கு இடமளித்து வரும் தொல்பொருள் துறைக்கு அவ்வாறு ஆட்சேபம் எழுப்பவும் யோக்கியதை இல்லை.

    இன்றளவும் ஹிந்துக்கள் மனம் புண்படியாகவும் மனம் குமுறும்படியாகவும் பல நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும், ஏன் ஹிந்துஸ்தானத்திலேயேகூட நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அதுபற்றிப் பேச நாதியில்லை.

    நீங்கள் எதுவும் பேசி ஹிந்துக்களுக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்கி விடாதீர்கள், நாங்கள் இங்கு நல்லபடியாகவே இருக்கிறோம் என்று அவசர அவ்சரமாக, கண்களில் அச்சம் தெரிய ஹிந்துக்களே சொல்லும் அளவுக்கு மலேசியாவில் ஹிந்துக்கள் போராடும் உரிமையின்றி இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்கின்றனர். ஆனால் இதுபற்றிப்பேசவும் நாதியில்லை. ஆனால் இங்கு பிற சமய வழிபாடே நடக்காத மண்டபம் இடிக்கப் பட்டதற்காகத் தாமாகவே அப்பாவிகளைக் கற்பனை செய்துகொண்டு, அந்த ‘அப்பாவிகள்’ மனம் புண்பட்டுவிட்டதாக வருந்துவோர் நம்மிடையே காணப்படுகிறார்கள்! என் ஆசான் ஸ்ரீ க்ருஷ்ணன்தான் நம்மவர் அனைவருக்கும் சரியான சமூகப் பிரக்ஞையை ஊட்டவேண்டும்!
    -மலர்மன்னன்

  101. அன்புக்குரிய நண்பர் அருள் அவர்களே,

    //1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல): //

    இதை நீங்கள் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? இந்திய மக்கள் எல்லோரிடமும் யாரை வழி படுகிறீர்கள் என்று கேட்டீர்களா?

    சரி இராமன் வெறும் பத்து பேரால மட்டுமே தெய்வமாக வழி படப் படுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பத்து பேர் அவர்களுக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிரார்கள. அந்தக் கோவிலை இடித்தோ, அல்லது அது சிதிலமானால் அந்த இடத்தை ஆக்கிரமித்து வேறு மதத்தவர் கட்டிடம் கட்டுவது எந்த சட்டப் படி சரியாகும்?

    முதன்மையாக வழி பட்டால் என்ன? கூட சேர்த்து வழி பட்டால் என்ன, இதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது? நீங்கள் ஏன் துடிக்க வேண்டும்? ஒருவர் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறார். . அவருக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கிறார்கள். மூத்த அண்ணனுடன் பணி மற்றும் பல காரணங்களுக்காக மிக நெருக்கமாக இருக்கிறார். மற்ற அண்ணன்கள மீது வருக்கு பாசமோ, மரியாதையோ, அக்கறையோ, அன்போ இல்லை என்று அர்த்தமா?

    .//இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன்//

    நீங்கள் ஏன் துடிக்க வேண்டும்? ஆயிரம் சாமியோ , பல்லாயிரம் சாமியோ, இந்தியர்கள எப்படியோ வழி பட்டு விட்டுப் போகட்டுமே. உங்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாதததால் அதைப் பொறுக்க முடியவில்லை. ஒருவரை விமரிசிக்கும் போது கூட அவரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்கிற அடிப்படைப் பண்பு கூட இல்லாத உங்களின் எண்ணப் போக்கால் எப்படி நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்?

    //2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.//

    துளசி தாசர் இராமரின் வரலாற்றையே இந்தியில் எழுதி உள்ளார். துளசி தாசர் தன்னுடைய சம கால வரலாற்றை எழுதவில்ல்லையே.

    துளசி தாசர் அசோகர், குப்தர் , ஹர்ஷர்…. பாபர் உட்பட இந்தியாவின் முழு வரலாற்றையும் எழுதியதாக தெரியவில்லை!

    //3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.//

    இராமர் அந்த இடத்தில் பிறந்தார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதே கோர்ட்டாரின் கருத்து.

    //4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். //
    பிற மதங்களின் வழிப்பட்டு முறைகளை இஸ்லாமிய அரசர்கள வெறுத்து இருக்கின்றனர். அவர்கள பல கோவில்களை கொள்ளை அடித்தும் உள்ளனர், அழித்தும் உள்ளனர் என்பதாக வரலாறு இருக்கிறது. தாலிபானக்ள புத்தர் சிலைகளை பீரங்கி வைத்து உடைத்தனரே.

    //(ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்)//

    எடுத்துக் காட்டு தர முடியுமா? ஆதாரம் தாருங்கள் )

    எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

    ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

    “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

    “நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

    5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.//

    The idols could have been placed in 1949. They might have keen to continue the worship which their fore fathers had been doing years ago! விவகரமானது இன்றல்ல நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடை பெற்று வருகிறது.

    //6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.//
    We strongly condemn the demolition. இடிக்கப் பட்டதை நாம் கண்டிக்கிறோம்!

    //7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் – அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.//

    கோர்ட் தீர்ப்பு நீங்கள் விரும்பிய வண்ணம் இல்லாததால், உங்கள வெறுப்புணர்ச்சியை கோர்ட் மீதும் காட்டுகிறீர்கள்.

    //படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.:

    ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.//

    எல்லாம் சமம் தான். உங்களுக்கு மத சகிப்பின்மை இல்லாததால் அப்படித் தோன்றுகிறது

    மொத்தத்திலே இந்து மதத்தின் மீது வெறுப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் உங்கள் நெஞ்சில் நிரம்பி உள்ளதால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியாமல் நீங்கள் இருப்பதாகவே தெரிகிறது, அதற்க்காக எல்லோரையும் குற்றம் சொல்லுவது புலனாகிறது.

  102. மலர் மன்னன் ஐயா,
    //இயலாமையை மறைத்துக்கொள்ள தாராள மனப்பான்மை, பெருந்தன்மை, சமரசப் போக்கு முதலான போர்வைகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன. த்னது கோழைத்தனத்திற்கு சமாதானம் சொல்ல நமது ஹிந்து சமயக் கோட்பாட்டின் உன்னத அம்சங்களை அவன் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் ( அத்தகைய அம்சங்கள் எப்போதெல்லாம், எங்கெல்லாம் பொருத்தமாக இருக்கும் என்பதை நமது ஞானாசிரியன் பார்த்தசாரதி தெளிவாகவே அறிவுறுத்தியுள்ள போதிலும்!). இதற்காக சராசரி ஹிந்துவின் மீது கோபப்படாமல் நாம் பொறுமையாக அவனுக்கு சுயமரியாதையைப் புகட்ட வேண்டுமேயல்லாது, இகழலாகாது.//

    நீங்கள் சொல்வது சாலச் சிறந்ததே..மிக்க நன்றி..

    ஆனால் சிலர், நாம் சற்றே ரிலாக்ஸ்டாக எழுதும் சரியான வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் தலித்களுக்கு எதிராகவும், தமிழர்க்கு எதிராகவும் செயல்பட்டீர்கள் என்று ஒரு சீன் கிரியேட் பண்ணுவார்கள் பாருங்கள்.. அப்போது தெரியும்..

  103. திரு. கார்கில் ஜெய் அவர்களே

    //திரேத்தா யுக இராமர் மசூதிக்கு சேதாரம் வராமல் காத்திருக்கலாம். //

    மீண்டும் நன்றி செலுத்துகிறேன். இராமரை ஓரளவுக்கு புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    இராமர் இன்று ஆட்சியில் இருந்தாலும் , இன்றைய கால கட்டத்தில் இருந்தாலும் மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார்.

    இன்னும் தெளிவாக சொன்னால், இன்றைய கால கட்டத்தில் இராமர் இருந்து, அவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், யாரவது ஒருவர் அவரிடம் இந்த மசூதி அல்லது அமைப்பை காத்து கொடுங்கள் என்று கோரினால், யார் மீதும் அம்பு பட்டு விடாமல் இலாகவமாக அஸ்திர மழை பொழிந்து, சுற்றிலும் அரணாக அமைத்துக் கொடுத்து இருப்பார். அவர் தான் இராமர். அவருக்கு கோவில் கட்டப் போகு முன் அவரைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள்.

    இராமரை இந்துக்கள் நம்பிக்கை அடிப்படையில் கடவுளாக வணங்குகிறார்கள். கொள்கை அடிப்படையிலும், அதே நேரத்தில் கடவுளாகவும் இராமரை அணுகிய அவருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களான துளசிதாஸ், இராமதாஸ், தியாகராசர் போன்றவர்கள், இராமர் அன்றும் இன்றும் எப்போதும் அதே குணாதிசயமும் பண்பும் அன்பும், கருணையும், நியாயமும், உடையவராகவே சொல்லுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். இராமர் என்றும் மாறாதவர், சனாதனமானவர் என்பதே அவர்களின் கருத்து.

    கிரிஷ்ணரை பற்றியும் நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்- சமோஹம் சர்வ பூதேஷு, என்று சொல்லி இருக்கிறார். நான் எல்லோரிடத்தும் சமமாக இருக்கிறேன், எனக்கு வேண்டாதவர் என்று யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

    // கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான். // அநியாயமாக தூக்கி வந்தாலும் இராவணன் காதலால் தூக்கி வந்தான். இராவணன் ஒரு நல்ல வீரன். சிவ பக்தன். உங்கள் கற்பனையில் உள்ளதுபோல் கோழை இல்லை. இன்று பொய் நாளை வா என்றவுடன் ஓடிவிடவோ அல்லது ‘எனக்கில்லன்னா அவனுக்கும் கிடைக்கக் கூடாது’ என்று சொல்லி சீதையை கொன்றுவிடவோ செய்த சாடிஸ்ட் இல்லை. ஆக சம்பந்தமில்லாத விஷயமான ராவணனை, எவ்வளவோ மோசமான, காரணமேயில்லாமல், இலாபமில்லாமல், ஹிந்துக்களை துன்புருத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு கோவிலை இடித்த சாடிஸ்ட் பாபரோடு, தொடர்பு படுத்துவது உங்களுக்கே வந்த கலை.//

    இராவணனுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள். அவனால் சீதை அவர்களுக்கு வாழ் நாள் முழுதும் ஏற்பட்ட துன்பம் உங்களுக்கு பொருட்டாக தெரியவில்லை. அவனால் எத்தனை பெண்களின் கற்பு சூறையாடப் பட்டது என்பதையும் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை.

    நான் பாபரைப் போற்றவில்லை. பாபர் கோவிலை இடித்தாரா என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலாது. அப்படி இடித்து இருந்தாலும் அதற்க்கு இந்நாளைய இஸ்லாமியரை அச்சப் படும் படி செய்வது சரி அல்ல என்பதே நான் சொல்லிக் கொள்வது

    //இராமன் குடிகாரன், ஹிந்து திருடன் என்பதைச் சொல்லும் உங்கள் திராவிட, செக்யூலரிச தத்துவங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு //

    இராமர் குடித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும், இராமர் குடிபழக்கம் உடையவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை எனபதையும் லாஜிக் அடிப்படையில் தெளிவாக பல தளங்களில் விளக்கி எழுதி வருகிறோம்.

    இராமர் குடி, ஆட்டம், பாட்டம் என்று சொகுசாக வாழ்ந்து இருந்திருந்தால் காட்டுக்குப் போ என்று சொன்னவுடன், அத்தனை சொகுசுகளையும் விட்டு விட்டு எப்படிப் போக மன வந்திருக்கும்.

    ஒரு இளவரசன் குடி, ஆட்டம், என்று இருந்திருந்தால் சரி, சரி ஆட்சி வேண்டாம், அப்படியே அயோத்தியில் என் மாளிகையில் தங்கி நான் என் லைபை என்ஜாய் பண்ணிட்டு போறேன் என்று கைகேயியிடம் சொல்லி இருந்திருப்பார்.

    எனவே இராமர் குடி காரன் என்று சொல்வது காழ்ப்புணர்ச்சி பிரச்சாரமே.

    மற்றபடி இராமரை பிறர் வைத்தாலும் கட்டுப்பாடுடன் அமைதி காப்பதே கொள்கையாகை விட்டது. எதுவும் வேண்டா என்று இராமருக்கு பணிவிடை செய்ய காட்டுக்கு சென்ற சீதை அவர்களைப் பார்த்தே ஒரு குடிமகனார் குறை கூறினார். இராமர் ஆட்சில் இருந்தும், இலக்குவனோ, பரதனோ, அனுமனோ… யாருமே அந்தக் குடி மகனை திட்டவோ, துன்புறுத்தவோ இல்லையே. அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரை பொறுத்தல் தலை என்பது கொள்கை .

    //ஹிந்து துரோகிகளால் ஹிந்துத்தியாகிகளை எதுவும் செய்துவிட முடியாது//

    சொல்ல வருவதை தெளிவாக சொல்லுங்கள். யாரை ஹிந்து துரோகி என்று குறிப்பிடுகிறீர்கள?

    “ஹிந்து துரோகிகளால் ஹிந்துத்தியாகிகளை எதுவும் செய்துவிட முடியாது “என்கிறீர்கள். தியாகிகளின் ஆதரவாளர்களால துரோகிகளை ஏதாவது செய்ய முடியும் என சொல்லாமல் சொல்லுகிறீர்களா?

  104. திருச்சிக்காரன்,
    //இடித்ததற்கு பதில் இடிப்பு செய்து இருக்கிரீர்கள. //

    ஆம். நன்றி.

    // தூக்கி சென்றதற்கு பதிலாக தூக்கி வருவதைப் போல. மண்டோதரியை தூக்கி வருவதற்கு பதில் வேறு ஒரு பெண்ணை தூக்கி வந்து இருக்கிறார்கள். //

    அவர்கள் இடித்தது எங்கள் ராமனின் ஒரே கோவிலை. நாங்கள் அல்லாவின் ஊர் சென்று அவரின் மசூதியை இடிக்கவில்லை. எங்கள் ராமனின் கலைக்கோவிலை கட்ட களைக்கட்டிடத்தை பிடிங்கினோம்.

    //மொத்தத்திலே இடித்த இந்த செயல் இது இராவணத் தனமே .. //

    நீங்கள் எழுதவது கேணைத் தனமே.

  105. ஸ்ரீ ராமபிரானின் குண விசேஷங்களை அறிந்துகொள்வதற்கு நமக்கெல்லாம் மூலாதாரமாக இருப்பது வால்மீகி ராமாயணம் என்கிற இதிஹாசம்தான். இந்த வால்மீகி ராமாயணத்திலேயேகூட திசைக்குச் சிலவாய் மொத்தம் பதினான்கு வித்தியாசமான பிரதிகள் உள்ளன. எல்லாம் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்கிற விவகாரம்தான். வால்மீகி ராமாயணப்படி ஸ்ரீ ராமனின் பிரக்ஞையில் தான் ஒரு மனிதன் என்பதாகவே இருந்து வந்துள்ளது. மஹா யோகிகளும் முனிவர்களும் அவனை ஓர் அவதார புருஷன் என அடையாளம் கண்டு கொண்டதோடு சிலர் அந்த உண்மையை அவனிடமே எடுத்துரைத்த போதிலும் ராமபிரானின் பிரக்ஞையில் அது நீடித்ததில்லை. எனவேதான் அவன் மர்யாதா புருஷோத்தம் எனக் கொண்டாடபப்படுகிறான்.
    தாடகை பெண் என்பதால் முதலில் தயங்கியவன் பின்னர் விளக்கம் பெற்று அவளைக் கொன்றான். லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அரிந்தத்ற்காக அவனைக் கடிந்துகொள்ளவில்லை, அச்செயலைத் தடுக்கவும் இல்லை. சீதையைச் சீண்டிய அவளது அடாத செயலுக்கு அது சரியான தண்டனை என்றே அங்கீகரித்தான். சீதையின் ஆசைக்காகத் தெரிந்தே மாயமானைப் பின் தொடர்ந்து சென்று கொன்றான். தவ சீலர்களின் ஆசியினால் அசாத்தியமான சாதனைகள் கைவரப்பெற்ற மானிடன் என்பதாகவே அவனனது பிரக்ஞையில் தன்னைப் பற்றிய அனுமானம் இருந்தது. பெரும்பான்மை மகக்ள் கருத்து என்னவாக இருக்கக்கூடும் என யூகித்து, ஒரே ஒருவன் சொன்னாலும் அது பலபேருக்குள்ள அபிப்பிராயத்திற்கு அடையாளம் என மனைவியைக் கானகத்திற்கு அனுப்பினான். காலப் போக்கில்தான் மக்கள் ராமனை ராமாவதாரமாக உணர்ந்து கடவுளாக வழிபட ஆரம்பித்துள்ளனர். அது முற்றிலும் சரியே (தெய்வத்துள் வைக்கப்படும் என்ற இலக்கணத்தின் பிரகாரம்). ஆகையால் ராமபிரான் எந்த சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டிருப்பான் என்றெல்லாம் அனுமானம் செய்துகொண்டு ஹைப்பாதெடிகலாகப் பேசுவது பொருத்தமாக இருக்காது. ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் அப்படியல்ல. நான் இறைவன் எனச் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் பிரகடனம் செய்தவன் அவன். தான் இறைவன் என்பதை சமயம் கிடைத்த போதெல்லாம் நிரூபணம் செய்தவனுங்கூட.

    சீதைய சகல மரியாதைகளுடன் ராமபிரானிடம் அனுப்பிவைத்துத் தன்னைத் தற்காத்துக்கொள்ளுமாறுதான் அனுமன் ராவணனுக்கு உபதேசம் செய்கிறான். ராமன் வந்து மீட்பதே சீதைக்கும் ராமனுக்கும் பெருமை என்பதால் வந்த விதமே திரும்பிச் செல்கிறான். ராம தூதனுக்கே இவ்வளவு சக்தியிருப்பின் ராமனுக்கு எவ்வளவு இருக்கும் என உணர்த்தவே லங்கா தகனம் செய்தான்.

    ராமாவதாரம் நிகழ்ந்து எத்தனையோ காலம் ஆன பிறகு இயற்றப்பட்டது துளஸி தாஸரின் ராம சரித் மானஸ். அது ராமரைக் கடவுளாகத் துதித்து இயற்றப்பட்ட சரித்திரம். அதில் பாப்ரி சமாசாரத்தைத் தேடிப்பார்த்து எதையும் காணோம் என்று சொல்வது அறியாமை.

    ராமபிரானின் திருக் கலியாண குணங்களைப் பற்றிப் பேச்சுவதாயின் வால்மீகி ராமாயணத்தை ஆதாரமாகக்கொள்வதே பொருத்தம். தியாகப் ப்ரும்மத்தின் கிருதிகளையல்ல. கிருதிகளை பக்தி வெள்ளத்தில் திளைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    -மலர்மன்னன்

  106. Mr Tiruchikaran, of course Lord Rama would have protected the mosque ONLY if the Muslims had surrendered unconditionly to Him.
    I am sorry to say this but your imagination is running wild here about Lord Ram protecting adharmic activities of the Islamists.
    I agree with Mr Kargil Jay

  107. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்ரீ மலர் மன்னன் ஐயா அவர்களே,

    நீண்ட நாட்கள் கழித்து உங்களின் பின்னூட்டங்களை இங்கே காண்பது எனக்கு மிக்க மகில்ழ்ச்சி அளிக்கிறது

    இராமனின் சிறந்த குணங்களை வால்மீகி சிறப்பாக் விவரித்துள்ளார். அவருக்கு நம் நன்றிகள்.

    அதே நேரம் துளசிதாசர், இராமதாசர், தியாகராசர் இவர்கள தங்கள் வாழ்க்கை முழுவதும் இராம சிந்தனையிலே செலவிட்டவர்கள், இராமனோடு வாழ்ந்தவர்கள், இதை எல்லாம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மற்றபடி இப்போது இராமர் இருந்திருந்தால் அப்போது என்ன செய்து இருப்பார் என்று எண்ணுவது தவறு இல்லை என நினைக்கிறேன், அது மிக அவசியம் என நினைக்கிறேன்.

    இராமரின் குணம், தியாகம், செயல்கள் ஆகியவற்றின் தாக்கம் இந்தியாவில் உள்ளா ஒவ்வொருவரின் மனதிலும் (அல்லது பெரும்பாலனவர்களின் மனதில்) அறிந்தோ அறியாமலோ இருக்கிறது. அந்த தாக்கம் இந்திய சமுதாயத்தில் எல்லா கால கட்டத்திலும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது,

    கான்வென்ட்டிலே பத்தாம் வகுப்பு படிக்கும் படிக்கும் சிறுமிகள் சிலர் பயணம் செய்த ரயிலிலே நானும் பயணம் செய்தேன். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்க நேரிட்டது. சிறப்பான ஆங்கிலத்தில் பல விடயங்களையும் (குறிப்பாக சினிமா) பற்றி அவர்கள பேசிக் கொண்டு வந்தனர். திடீரென்று பேச்சு இராமருக்கு வந்தது. சில சிறுமிகள இராமரை குறை சொல்ல, ஒரு சிறுமி , ஹேய் ராமா இஸ் கிரேட், ராமா ராக்ஸ் யார் (rama rocks yaar) என்றார். அவர்கள தமிழ் நாட்டை செர்ந்தவர்கள.

    இராமரின் சரியான் குணங்களை , கொள்கைகளை சொல்லுவது அவசியம் என்பதாலேயே சொல்லுகிறோம்.

  108. Sri Rama,

    //Rama
    3 October 2010 at 2:28 pm
    Mr Tiruchikaran, of course Lord Rama would have protected the mosque ONLY if the Muslims had surrendered unconditionly to Him.
    I am sorry to say this but your imagination is running wild here about Lord Ram protecting adharmic activities of the Islamists.
    I agree with Mr Kargil Jay//

    I can guess that you are well educated, may be much better than me. I have been reading your comments for almost a year now in this blog itself. Some times our tone of argument is same, many times we differ.

    But it is very surprising for me that many your comments posses some sort of contempt or hatredness for other religions- in my perception. If its wrong , let me apolaogise to you!

    Any way irrespective of the tenents of the religion, a person can be good or bad- Right?

    Now, when you coin the word Adharmic islaamist,

    You please consider that how will you feel, if you were born as a muslim girl in India. Assume that you were educated and brought up with good traits. You never saw any temple demolished in your life time in Ayodhya. But you saw that a mosque (or structure) was in the site, and it was demolished with vengence by hindu mobs. Does not this create some sort of fear in your mind that Hindu mobs can do any thing and go scot free .

    How would have you felt? Now, if further some one comes and tells at you that you are an adharmic islaamist, what you will feel? All in the name of Rama, now what will you think of Rama.

    Coming to our Ayodhya Rama, Ramas heart be full of mercy, mercy only. There be only very little room for other charcteristics like valour , politics… in his heart.

    When Rama saw some one in trouble, in despair, looking for help … he dont wait for them to approach him and ask for help. The mercy in his heart is that much , he would see that their pain is releived, and they smile.

    If you have any elders in your family, who have some interest in Rama, please tell the above, you please let me know, whether they agree with this or not.

    If you agree with Mr. Kargil Jay , let him be happier. Even if the entire world is up against me, I would keep highlighting the exact and true concepts of Rama. What a fanatastic Phenomena be he!

  109. //////சில்லுண்டி
    3 October 2010 at 4:05 am

    இங்கே பல இந்துக்கள் இன்றைய முஸ்லீம்கள் முன்பு இந்துவாக இருந்தவர்களே என்று கூறியுள்ளனர்.

    இது தவறாகும். ////
    உங்கள் கருத்து தவறானது முஸ்லிம்கள் நம்முடைய ரத்த சொந்தங்களே பிற்காலத்தில் மதம் மாற்றப்பட்டவர்களே.
    ஒரு உதாரணம்
    சகோதரர் பாஸ்கர் கொடுத்திருக்கும் லிங்கில் உள்ள திரு அரவிந்தன் கட்டுரையை படிக்கவும்.

    ////////#
    B.பாஸ்கர்
    2 October 2010 at 1:42 pm

    வணக்கம்

    ///பாபர் முதல் திப்புசுல்த்தான் வரை ////

    சகோதரர்களே திப்பு ஒரு சுல்தான்தானா? திப்புவை ஒரு சுதந்திர போர்வீரன் போல நினைத்துக் கொண்டு, சொல்லிக் கொண்டு திரியும் சிலருக்காக.

    இதைப் படிக்கவும். ஆதாரங்களோடு.

    https://arvindneela.blogspot.com/2008/02/blog-post_07.html
    /////////////////////////////////////////////////////////
    //////ட்ரைலர் ///////
    எடுத்துக்காட்டாக சையது அப்துல் துலாய்க்கு திப்பு ஜனவரி 18 1790 இல் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடலாம்:

    “அல்லா மற்றும் அல்லாவின் தூதரான முகமதுவின் அருளால் கோழிக்கோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னமும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள் ஆனால் இவர்களையும் நான் வெகு விரைவில் இஸ்லாத்தை தழுவ செய்துவிடுவேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஜிகாத் ஆகும்.” [5]

  110. அயோத்தி நான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட விஷயம். எனக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு. ஆகவேதான் இந்தக் கட்டுரை விஷயத்தில் தொடர்ந்து மறுமொழி அளித்துக்கொண்டிருக்கிறேன்.

    வாமனனாய் வந்த பிரபுவே நரசிம்மமாய் வந்தான், நரசிம்மமாய் வந்தவனே ராமனாயும் வந்தான், பின் ராமனாய் வந்தவனே என் எஜமானன் க்ருஷ்ணனாயும் வந்துள்ளான். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பதைத் தொடர்ந்து ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்று சொன்னால்தான் போற்றுதல் முழுமை பெறும்.. இதுவே மந்திரமாகவும் சிலருக்கு உபதேசிக்கப்பட்டதுண்டு. பொதுவாக மந்திரோபதேசங்கள் அவ்வாறு அமைவதில்லை. இதற்கு மட்டும் விதி விலக்கு. ராமனையும் க்ருஷ்ணனையும் இணைத்து ராம க்ருஷ்ணன் என்று பெயர் சூட்டுகிற வழக்கமும் உள்ளது. இவையெல்லாம் ஏன் என்று யோசிக்க வேண்டும். இவ்வாறான இரட்டைத்தன்மை வேறு தெய்வங்கள் விஷயத்தில் இல்லை. அவதாரங்களில் ராமனை அடுத்து க்ருஷ்ணனாய் வருகிறார், நம் பிரபு. யுக தர்மப்படி நடந்தால் மட்டுமே விமோசனம் என அறிவுறுத்துவதே நோக்கம். நமது யுகத்திற்கு நாம் ஆதர்சமாய்க் கொள்ள வேண்டியது க்ருஷ்ணாவதாரத்தையே என்பது தாத்பர்யம். இஷ்ட தெய்வ மாக யாரை வேண்டுமானாலும் கொள்ளலாம். எந்தத் திரு வடிவத்தின் மீதும் பக்தி செய்து உருகலாம். ஆனால் அறிவுரை பெற வேண்டியது நமது யுக தர்மத்தின் பிரகாரம் க்ருஷ்ணனிடமே. ராமனேதான் இந்த யுகத்திற்கு ஏற்ப நடந்து வழிகாட்டக் க்ருஷ்ணனாய்த் தோன்றியுள்ளான். எனவே ராமன் இந்த யுகத்தில் இருப்பின் எவ்வாறு நடந்து கொள்வான் என்றெல்லாம் விவாதிப்பது வெறும் பொழுது போக்காகவே இருக்கும். ராமன் இந்த யுக்த்தில் தோன்றினால் இந்த யுகத்திற்கு ஏற்பக் க்ருஷ்ண னாகவே நடந்து கொள்வான் என்பது பால பாடம்.
    ராமன், க்ருஷ்ணன் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள் என்பதை மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
    -மலர்மன்னன்

  111. தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை, போர்க்களத்தில்கூட மனிதாபிமானத் துடன் நடந்துகொள்ளும் பண்பாடு, மன்னிக்கும் தயாள குணம் போன்ற உன்னத அம்சங்கள் நமக்கு இருப்பதால்தான் அந்நிய மதங்கள் ஹிந்து பூமியில் கால் பதிக்க முடிந்தது என்பதோடு நம்மைச் சீரழிக்கவும் அவற்றால் முடிந்தது. யுக தர்மத்தைக் கடைப்பிடிக்க நாம் தவறியதால் வந்த வினை. க்ருத யுகத்து தர்மத்தைக் கலி யுகத்தில் கடைப்பிடித்தால் தோல்வியும் அழிவும்தாம் நிகழும்.

    ராவணனின் யோக்கியதாம்சங்களை அறிந்திருந்தமையால்தான் மர்யாதா புருஷோத்தம் அவனை இன்றுபோய் நாளை வா என்றான். அந்தச் சலுகையை அவன் வேறு யாருக்கும் அளிக்கவில்லை. ராமாவதார நுட்பத்தை நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். சீதாபஹரணம் ராவண வதத்திற்கான ஒரு காரணமேயன்றி வேறல்ல. எதற்கும் ஒரு நியாயம் வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் நம் தாயாரை எவராலும் கவர்ந்து செல்லவும் இயலுமோ? மேலும் ராவணனின் அகந்தையை முற்றிலுமாக அழிக்கவே இன்று போய் நாளை வா என்றான், ராமன். இதே வழக்கத்தைக் கலியுகத்தில் நம் மாவீரன் ப்ருத்விராஜ் செளஹான் கடைப்பிடித்ததால் ஹிந்து தேசம் அடிமைப்பட்டுப் போவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.
    இளம் வயதிலிருந்தே துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று புகட்டப்பட்டதால்தான் சராசரி ஹிந்துவின் மனப் போக்கு வக்கிரமாகப் போயிற்று. தனது பயங்கொள்ளித்தனத்திற்கு விதவிதமாக சமாதானம் சொல்லித் தனது முறையான எதிர்வினையாற்ற மாட்டாத தன்மைக்காகத் தனக்குத்தானே நியாயம் கற்பித்துக்கொள்கிறான். தன் குற்ற உணர்வை மறைத்துக்கொள்ள ராமாவதார நுட்பம் தெரியாமலே கோதண்ட ராமனை வேறு தன் பக்கத்திற்கு இழுக்கிறான். இது கண்டு என் கோதண்ட ராமன நகைக்கிறான். தனது கோதண்டத்தை ஒருமுறை பார்த்துக் கொள்கிறான். அனுமனோ வாய் பொத்திச் சிரிப்பை அடக்கிக் கொள்கிறான்! ஆகா, என்னவொரு அற்புதக் காட்சி!

    சராசரி ஹிந்துவின் சுபாவத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நம் பாரதியும் மோதி மிதித்து விடு பாப்பா என்றான். ரெளத்ரம் பழகு என்று புதிய ஆத்திச்சூடி எழுதினான். ராஜஸம் பயில் என்றான். சராசரி ஹிந்து நம் அனுதாபத்திற்குரியவன். கோபத்திற்கு அல்ல.
    -மலர்மன்னன்

  112. இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தி.
    சவுதி அரேபியாவில் ஒரு வீட்டுக்குள் சில ஹிந்துக்கள் கடவுளர்களின் மூர்த்தங்களை வைத்து ஆராதனை,பூஜை செய்து கொண்டிருந்தனர்.
    திடீரென்று உள்ளே நுழைந்த ‘முட்டவாலி’ என்ற முஸ்லீம் மத போலீசார் அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து இனிமேல் அம்மாதிரி செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்து சென்றனர். இது எவ்வளவுஅநியாயம்!

    ஒருவரது வீட்டுக்கு உள்ளேயே அவர்களுக்கு மத சுதந்திரத்தை மறுக்கும் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது அதற்கு வால் பிடிப்பவர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?

    நம் நாட்டில் இந்த நிலை வரும் வரை நாம் அவர்கள் புண்களுக்கு ‘களிம்பு’ தடவிக் கொண்டிருக்க வேண்டுமா?

  113. இராமரின் கொள்கைகள் இன்றைக்கும், என்றைக்கும் பொருத்தமானவை.

    இராமரின் கொள்கைகள் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானவை.

    அன்று உலகத்தில் நல்லவர்கள இருந்தனர், இன்று அப்படி இல்லை என்று பலர் நினைக்கிறார்கள் . அன்றும் கைகேயி அவர்கள் ஆசையில் விழுந்து அநீதி செய்து விட்டார். அன்றும் இராவணன் போன்றவர்கள் அடாத செயலகளை செய்தனர்.

    இன்றைக்கு மத சகிப்புத் தன்மை இல்லாத மத வெறிக் கொள்கையில் மூளை சலவை எய்து கொண்டவர்களையும், உலகம் முழுதும் தன கண்டிரோலில் வைக்க நினைக்கும் எதேச்ச் சதிகார சக்திகளையும் சேர்த்து எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

    இவர்களை எல்லாம் எதிர் கொள்ள நாம் உபயோகப் படுத்த வேண்டியது அதே இராமனின் முறைதான். வெல்லும் வலிமை இருந்தும் கடுமை காட்டாத கருணாகரன் இராமரின் வழியே நாகரீகத்துக்கு இட்டு செல்லும்.
    காட்டு மிராண்டி தனத்துக்கு பதில் காட்டு மிராண்டி தனம் செய்வது உலகத்தில் நன்மையை அளிக்காது.

    இராமனின் விட்டுக் கொடுக்கும் தியாகமே மனிதத்தை வாழ வைக்கும் வழி ஆகும். இராமரின் கொள்கைகள் என்றுமே அவுட் டேடட் ஆகாது.

    கிரிஷ்ணரின் கொள்கைகளும் மனதில் வெறுப்பில்லாத , எல்லோரயும் நட்புடன் நோக்கும் கொள்கையே.

    //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்),

    நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக ),

    ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

    க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

    ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

    யோகி (யோக நெறியில் நிற்பவன்)

    யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

    த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

    மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

    யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

    ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

    மனதிலே வெறுப்புக் கருத்துக்களை வைத்துக் கொண்டு, பிறரை பகையுடன் நோக்கிக் கொண்டு, மனதில் கருணைக்குப் பதில் பிறரை அச்சுறுத்தும் வகையில் செயல் படும் போக்கை கடைப் பிடித்தால் அதை கிருஷ்ணர் விரும்புவாரா? விரும்ப மாட்டார்.

  114. இராமனின் கையில் இருக்கும் கோதண்டம், கொடுங்கோலரை எதிர்க்கவே. அப்பாவிகளை அச்சப் படுத்த அல்ல.

    கோதண்ட ராமனின் முகம் எப்போதும் சிரித்த முகமே. அனுமனும் அப்படியே. ஆனால் எப்போது அந்த மந்த ஹாசம் மாறும் என்றால் அப்பாவிகளை யாராவது துன்புறுத்தும் போதோ, அச்சப்படுத்தும் படும் போதோதான். இராமனின் கரம் அபயக் கரம். அவரின் பேரை சொல்லிக் கொண்டு அப்பாவிகள் அச்சப்படுத்தும் படியான செயலை செய்வதை அவர்கள் ரசிக்க மாட்டார்கள்.

    நான் கோதண்ட இராமரை என் பக்கம் இழுக்கவில்லை. நான் அவர் பக்கம் இருக்கிறேன்.

    ***************

    இந்தியர்கள் ஒன்று பட்டு, பிரிதிவிராஜ் சவுஹான் தலைமையில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருந்தால் அப்படி நடந்திருக்காது.

    பிருதிவி ராஜ் சவுஹான் தோற்றதற்கு காரணம், ஜெயசிம்மனின் பதவி ஆசையே. தன்னுடைய மகளை மணந்தவன் என்று கூட பார்க்காமல் ஜெயசிம்மன் பிரிதிவிராஜனை அழிக்க உதவினான். வட நாட்டு எட்டப்பன் ஜெயசிம்மன்.

  115. Shri Malarman, thank you for your incissive comments.Nobody could have said it any better with such clarity.Thank you sir once again.
    Mr Tiruchikaran, I do not” hate” other religins. Hindus have been on the receving end from the cult religions for over 800 years.I am fighting for the just cause of the Hindus and I have no objection if someone takes offence at my response.To me , Ayothiya is the birth place of Shri Rama and His temple was destroyed by the “Barbaric Islamists” and a mosque was constructed on it’s site. Hindus have been fighting for their holy site for centuries and the best thing that happened was the destruction of this mosque, which was the symbol of Islamic blood thirsty barbarisim.The issue of Aothya would not have progressed without the destruction of this mosque and we have to thank the Kar Sevas for the same.
    To think that Shri Rama would have protected such a structre is , to put it mildly, is just plain ridiculous.It is high time we hindus stand for dhrma and fight against Islamic evils.Legally? Yes. But sometimes we have to fight against unjust laws( emergency laws under Indira Ghandhi, for example).The structure was never a worshipping place for the Muslims as per one of the judges.
    Krishna did not exactly ask Arujuna to throw down his arms when facing the evil Kavruvas.He even urged Arjunan to shoot Karna when Karna was armless with his chariot stuck in the mud.
    Preaching ahimsa is easy.Acting with conviction for dharma is hard.

  116. தோற்ற்றுப் போன முஹம்மது கோரியை மன்னித்து திரும்பிச் செல்ல பிருத்விராஜ் அனுமதித்ததால்தான் பின் நிகழ்வுகள் சாத்தியமாயின. சரித்திரதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    நாம்மிடையே ஜயசந்திரன்களுக்குக் குறைவே இல்லை. அத்ற்காக துரோகம் செய்வதும் நம் பொதுப் புத்தி என்று சமாதானம் சொல்லிக்கொள்வதில் பொருளில்லை.

    ஹிந்து சமுதாயத்தில் எப்படி மஹா வீரர்களுக்க்கும் மகத்தான தியாக சீலர்களுக்கும் பஞ்சமில்லையோ அப்படிப் பச்சைத் துரோகிகளுக்கும் பஞ்சமேயில்லை என்பது தெரிந்த விஷயமே. என்ன செய்யலாம், இந்த துரோக பரம்பரை இன்றளவும் தொடர்ந்து வருவதால்தான் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு காலம் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. துரோகிகள் தம் செயலை நியாயப்படுத்த விரோதிகள் சார்பாகப் பேசுவதே வழக்கம். அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்கிறது. அல்லோபநிஷத் எழுதியவனும், அதைப் பாராயணம் செய்தவனும், அரியணையில் ஏறுபவன் எவனாயினும் அவன் மஹாவிஷ்ணுவின் அம்சம், ஆகவே சுல்தான் வகையறாவும் திருமாலின் அம்சம் என்று சாதித்தவனும் வெள்ளைக்காரனைப் பாராட்டி வீட்டின் நடுக்கூடத்தில் விக்டோரியா மகாராணி, ஏழாம் எட்வர்டு , ஐந்தாம் ஜார்ஜ் படங்களை மாட்டி மகிழ்ந்தவனும் ஹிந்து சமூகத்தில் கணிசமாகவே இருந்தனர். அந்தப் ப்ரம்பரை இன்ற்ளவும் தொடர்கிறது. நல்லது, தொடரட்டும், இதுவும் நமது மன உறுதிக்கு ஒரு சோதனை என்று போக வேண்டியதுதான்!
    -மலர்மன்னன்.

  117. Mr.Rama,

    You have not addressed to the point – the example which I mentioned- The fear put upon the minds of the innocent people of islamic faith.

    I specifically mentioned that the presnt day muslims never saw the hindu temple demolished, but they witnessed that the Masjidh was demolished without any permission from court – which is recorded and displayed all over the world- You are not addressing this.

    Its not just ridiculous, but its painful to notice that Rams name is sullified by religious chuanism comitted in his name- which has no provision in Hinduism.

    I want the Hinduism to be Hinduism. I dont want Jihadhi concepts to be thrusted into Hindism. There is no room for Jihadism (whatever for it may be) in Hindusism.

    The more a person subscribe to any form of Jihadhism, the more he is ignoring or distancing from Hinduism.

    We cant allow the Hinduism to be getting crooked into diaganoly opposite concepts.

    If one pray at Hindu Gods , its not just that Hinduism.

    None of the Hindu Gods told that they will bless and help only particular race (this was mentioned by Swami Vivekaanadha during his Chicago speech )

    None of the Hindu Gods incite hatredness against any other religion or people of any other religion.

    Whenever a Hindu prays at Hindu Gods, he finds only mercy, compassion, calm, peace, beauty, affection and hope in his Gods face.

    https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/18/goddess-sarasvathi/

    Hindus dont find not at all find even an iota of Hatredness, or animosity (towards people of other regions) from their Gods.

    That means Hinduism does not authorise the uanapparoved demolitions or any other action of that kind.

    This perversion of Hindusim ( beliving in unlawful arraogance) is one of the greatest threats faced by Hinduism ever, but it hasjust started, I hope Hinduism will recover fully.

  118. இந்து மத துரோகி துரோகி என்று பலரும் எழுதுகிறார்கள். யார் இந்து மத துரோகி என்று தெளிவாக சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்.

  119. ‘அப்பாவிகளை அச்சுறுருத்தும்படியான’ செயல்களைச் செய்தவர்கள் இதோ:
    நான்கு லட்சம் அப்பாவி ஹிந்துக்களை மசூதியின் ஒழி பெருக்கி மூலம் பயமுறுத்தி ,மற்றும் தாக்குதல் நடத்தி காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டுவெளியேற்றியவர்கள் .
    பாகிஸ்தானிலிருந்து வந்து சிரித்துக் கொண்டே நட்சத்திர ஹோட்டல்கள்,ரயில்வே நிலையம் இங்கெல்லாம் கண்டவரை சுட்டவர்கள்
    மும்பை ரயில் வண்டிகளில் ஒரே நாளில் பல இடங்களில் குண்டுகளை வைத்து அப்பாவி மக்களை மேலுலகம் அனுப்பியவர்கள்.
    பெங்களுரு.கர்நவதி, ( அஹ்மதாபாத்), சூரத்,ஜெய்பூர்,வதோதரா, பாக்யநகர்( ஹைதராபாத்)இங்கெல்லாம் பொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொன்றவர்கள்
    அக்ஷர்தாம் கோவிலில் பக்தர்களை சுட்டுக் கொன்றவர்கள்
    கோயம்பத்தூரில் சர வெடி போல் தொடர் குண்டு வைத்து பலரைக் கொன்றவர்கள்
    கேரளா மாராடுவில் ஏழை ஹிந்து மீனவர்களை ஒரு இரவில் தாக்கி கொன்றவர்கள்
    காசியில் ரகுநாத் மந்திரில் பக்தர்களை கொன்றவர்கள்
    ஒன்றுமறியா பயணிகள் உயிரைக் கையில் பிடித்திருக்க விமானத்தை காண்டகாருக்கு கடத்தியவர்கள்
    கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்களை எரித்தவர்கள்
    இவர்களைத்தானே சொல்கிறீர்கள்

  120. can one imagine the agony of the kith and kin of those who were killed in terrorist violence?
    can one tell them to chant Ram Naam?
    what if it happens to one of our close relatives?
    we are here not talking of individual reactions ,but responsible action from the state on which the onus of protecting the citizens rests.

    But the state under the control of fake secularists and vote bank hungry politicians is just not worried about taking stringent action against the terrorists.

    It removes the POTA., it does not execute afzal even after the supreme court verdict.
    to dilute the action against the islamic terrorists, it invents ‘saffron terror’
    it conducts trial against a pakistani terrorist who cold bloodedly killed innocents as if it is a property dispute.
    it keeps brainwashing the people that ‘terrorism has no religion’ which is not true.
    it rakes up the bogey of ‘fake encounter’ against any state which tries to take against terrorists
    it refuses to give approval to bills passed by states like Gujarat to combat terrorism
    all these send clear signal to the terrorists that they need not have any fear about law but can merrily continue their acts and get away.
    the anger of the Hindus is not to instigate individuals to violence or justify violence but to create opinion so that hindus are awakened and will patronise only those who are ready to protect them from terrorists.

  121. ‘Writing on the wall’ என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அதுபோல் ஹிந்து சமூகத்தில் உள்ள துரோகிகள் யார் என்பதுதான் ஸ்பஷ்டமாகத்தெரிகிறதே, அதை என் வாயால் வேறு சொல்ல வேண்டுமா? காவியை வெறும் வர்ணம் என்று கருதும் அளவுக்கு சொந்தக் கலாசார, பாரம்பரிய அறிவு இல்லாத என் பழைய நண்பன் பதவிப் பசி எடுத்த ப.சி. தொடங்கி இங்கு வரையிலும் எண்ணிறந்த துரோகிகள் மலிந்து கிடக்கின்றனரே! நாட்டில் அடையாளம் காட்ட வேண்டிய அளவுக்கு இவர்கள் துர்லபமாகவா இருக்கிறார்கள்? கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றியலைந்து ஆர்ப்பாட்டமின்றி என் சமுதாயத்திற்குத் தனி நபராக என்னால் இயன்ற அளவு கடமையைச் செய்து வரும் நான் சந்தித்த பலரில் கணிசமானோர் அத்தகையோராகத் தானே காணப்படுகிறார்கள்? எனினும் அதனால் சோர்வடைந்துவிடாமல் உற்சாகம் மிக்க பல இளைஞர்களின் விழிப்புணர்ச்சி கண்டு புத்துணர்ச்சி பெற்று வருகிறேன்.
    -மலர்மன்னன்

  122. //The fear put upon the minds of the innocent people of islamic faith.//

    இந்த வாசகத்தில் உள்ள பொருள் பிழையை மட்டும் பார்ப்போம்.
    முகமதிய சமய நம்பிக்கை உள்ள அப்பாவி மக்களின் மனதில் அச்சம் தோற்றுவிக்கப்பட்டதாக மேற்படி வாசகத்தில் கூறப்படுகிறது.
    இவ்வாறு எங்கு எப்போது எவரால் அச்சம் தோற்றுவிக்கப்பட்டது? முகமதிய மகக்ள் வாழும் பகுதி எங்காவது ஹிந்துக்கள் திடீர் தாக்குதல் ஏதேனும் நிகழ்த்தினர்களா? அல்லது எச்சரிக்கை ஏதும் விடுத்தார்களா?

    நான் அறிந்த ஓர் உண்மையைச் சொல்கிறேன். அந்த் தேசிய அவமானச் சின்னம் அகற்றப்பட்டபொழுது இரண்டு நாட்களுக்கு மயான அமைதி நிலவியது. குறிப்பாக முகமதியர் வட்டாரங்களிலிருந்து எவரும் மூச்சு விடவில்லை. ஆனால் நமது போலி மதச் சார்பின்மைவாதிகள் ஏதோ மிகப் பெரிய அநியாயம் நிகழ்ந்துவிடதாகக் கூக்குரலிட ஆரம்பித்தார்கள். இடிக்கப்பட்டதன் விளைவு மோசமாக இருக்கும் என்று அவர்களாகவே முகமதிய அமைப்புகளுக்கு எடுத்துக் கொடுத்தார்கள். இப்போதுகூட மத்திய உள்துறை எனும் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள பசியே அப்பீல் செய்யத் தூண்டிவிடுவதைப் பார்க்கிறோம் அல்லவா? இப்படி அப்போதும் இந்த வாக்கு வங்கி அரசியல்வாதிகளும் தங்களை நடுநிலை மகானுபாவர்களாகக் காட்டிக்கொள்ள விழையும் மீடியாக்காரர்களும் பெரிய அபசாரம் ஏதோ நிகழ்ந்துவிட்டதாகக் கூவினார்கள். அதன் பிறகே முகமதிய அமைப்புகள் துணிவு வரப்பெற்று தங்களின் வழிபாடு நடைபெறும் மசூதி இடிக்கப்பட்டு விட்டதாக வதந்தி பரப்பி அப்பாவி முகமதிய மக்களைத் தூண்டிவிட்டுக் கலவரத்தில் இறங்கியது. எப்போதுமே முதலில் கலவரத்தைத் தொடங்கி வைப்பவர்கள் பொறுமையோ பொது அறிவோ இல்லாத மூர்ககத்னமான மச்த வெறியுள்ள முகமதிய மக்கள்தான்.
    ஹிந்து- முகமதியர் கலகம் நீண்ட நெடுங் காலமாகவே உள்ளதுதான். ஆனால் எப்போதுமே ஆரம்பித்து வைப்பவர்கள் முகமதியர்தான் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமான விஷ்யம. கலவரங்களால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான். அவர்களில் ஹிந்து- முகமதியர் என்ற பாகுபாடு ஏதும் இல்லை. பொதுவாக முணுக்கென்றாலே வீதிக்கு வந்து வன்முறையில் இறங்கிவிடுபவர்கள் முகமதியர்தான். உலகில் எந்த மூலையிலோ முகமதிய மதத்திற்கு பாதகமாக ஏதோ நடந்துவிட்டதாக வேண்டுமென்றே தூண்டிவிட்ட வெறும் வதந்தியை வைத்தே இங்கு திடீரெனப் பெரும் கலவரத்தில் இறங்குபவர்கள் யார்? முகமதியரின் இறைத் தூதரின் கேலிச் சித்திரத்தை எங்கோ யாரோ போட்டுவிட்டார்களாம், அதற்கு இங்கே எங்கு பார்த்தாலும் நாச வேலைகளில் ஈடுபட்டது யார்?

    வழிபாட்டுத்தலம் என்கிற புனித உணர்வெல்லாம் இருக்குமானால் ரமலான் மாதத்தில் ஷியாக்களின் வழிபாட்டுத்தலத்தில் வழிபாடு நடைபெறும் சமயம் பார்த்து குண்டு வீசுபவர்கள் யார்? இவர்களுடைய புனிதத்திலும் புனிதமான மெக்காவிலேயே வழிபாட்டுத்தலத்தில் அவர்களே குண்டு வீசிப் பொருதிக்கொள்ளவில்லையா? இவர்களுக்கு அவர்களது சமய வழிபாடு ஏதும் நடைபெறாத, பெரும்பகுதி பாழடைந்து கிடந்த மண்டபம் இடிபட்டத்தில் மனம் புண்ப்ட்டுவிட்டதாமா? வெறும் மண்டபம் இடிபட்டதற்காக இன்றளவும் பெரும் பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் செய்பவர்கள்தான் மனம் புண்பட்டுப்போன அப்பாவிகளா? மதத்தின் பெயரால் ஜிஹாது நடத்துவதாகக் கூறிக் கையை வெட்டுதல், கழுத்தை அறுத்தல் என்று வெறிபிடித்து அலைபவர்கள் அப்பாவிகளா? இதுவரை எத்தனை அப்பாவி முகமதியர் குடும்பங்கள் ஹிந்துக்களின் தாக்குதலால் வீடிழந்து அகதிகளாக முகாம்களில் வசித்துக்கொண்டிருக்கின்றன? குஜராத்தில் முகமதிய்ர் தாக்கப்பட்டது குறித்து எத்தனை மிகையான வதந்திகள்! அப்படி ஏதும் கடுமையாக இருப்பின் வெகு அருகாமையிலேயே உள்ள பாகிஸ்தானுக்குப் பலர் தப்பிச் சென்றிருக்க மாட்டார்களா? அப்படி ஒரு குடும்பமாவது பாகிஸ்தானுக்குச் சென்றதுண்டா? ஹிந்துஸ்தானத்தில் எங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று இதுவரை முகமதியரால் எங்காகிலும் புகார் செய்யப்பட்டதுண்டா? அந்தக் கட்டிடத்தை இடித்ததால்தான் நாடு முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்க ஆரம்பித்டதுவிட்டன என்று குண்டு வெடிப்புகளுக்கு நியாயம் கற்பிக்கிறானே சராசரி ஹிந்து, இந்த வெட்கக்கேட்டை எங்கு போய்ச் சொல்வது? ஹிந்துக்களின் மிகப் புனிதமான தலங்களுள் அயோத்தியும் ஒன்று, அங்கு மாற்றுச் சமயத்தினரின் வழிபாட்டுத் தலம் இருப்பதே அநியாயம் என்றுகூட இந்த சராசரி ஹிந்துவுக்கு சொரணை வரவில்லையே! இந்த லட்சணத்தில் தப்பும் தவறுமாகப் பெரிய பெரிய தத்துவ விளக்கங்கள் வேறு! வெட்கக்கேடு!
    -மலர்மன்னன்

  123. சாதாரண மக்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர்கள் சுற்றி உள்ள சூழ்நிலை, கேட்கும் பேச்சுக்கள், படிக்கும் நூல்கள், தரப்படும் அறிவுரை இவற்றின் தாக்கத்தால் அவர்களின் கேரக்டர் உருவாகிறது.

    எல்லா மக்களிடமும் வெறுப்புணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் (அத்வேஷ்டா) , எல்லோரிடமும் சிநேகமாக பழகுதல் போன்ற கருத்துக்களை பரப்ப கூடியவர் இன்றைக்கு யாரவது இருந்தால் அதை செய்யக் கூடிய அளவுக்கு சிறந்த கருத்துக்களை பெற்று இருப்பவன் இந்துவே.

    எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையில் இறங்குவார்கள் என்று நான் கருதவில்லை. சாதரணமான முஸ்லீம், தன் பிழைப்பை பார்த்தால் போறும் என்று இருப்பவரும் பலர் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

    தன்னுடைய வழிபாட்டுத் தலம் இடிக்கப் படுவது ஒருவரின் மனதில் அச்சத்தையும் , பாதுக்கப்பின்மையையும் உருவாக்கும். இந்த பாப்ரி மசூதி அல்லது அமைப்பு இடிக்கப் பட்ட போது துக்ளக் சோ கூட அதை கண்டித்தார் என நினைக்கிறேன். அவர் தன்னுடைய இதழின் அட்டைப் படத்தில் முழுக்க கருப்பாக வெளியிட்டு தன்னுடைய அதிருப்தியை காட்டினார் என நினைக்கிறேன். கிட்டத் தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் படித்ததால் அதை அவ்வளவு சரியாக நினைவு கூற இயலவில்லை.

    மற்றபடி எழுதப்பட்டுள்ள பல விடயங்கள், மத சகிப்புத் தன்மை முழுதும் இல்லாத தன்மையாக இருப்பதாகவே உணர்கிறேன். உண்மையான இந்து மதம் சகிப்புத் தன்மை வாய்ந்த‌தும் , எல்லோரையும் அரவணைப்பதுமாக இருக்கிறது. உலகிற்கே சகிப்புத் தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் எடுத்துக் காட்டி உலகுக்கு வழி காட்டும் பொறுப்பு இந்து மதத்திற்கு இருக்கிறது. இராகிருஷ்ண பரமஹம்சர் எல்லா மதங்களின் வழி முறைகளையும் கைக் கொண்டு எல்லா வழிகளின் மூலமாகவும் ஆன்மீக உச்சத்தை அடைந்தார் என்று படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு இந்து மத ஞானிகள், வெறுப்பற்ற தன்மையை உடையவராக இருந்திருக்கின்றனர்.

    தமிழ் இந்து தளத்திலும், திருச்சிக்காரன் தளத்திலும் மத சகிப்புத் தன்மை இல்லாத மன நிலைக்கு சென்று விட்ட பிற மதத்தை சேர்ந்த சிலருடன் மல்லுக் கட்டி விவாதித்து இருக்கிறோம். இந்து மதத்திலும் இந்த அளவுக்கு நிலைமை ஆகி இருப்பது எனக்கு வருத்தத்தையும் , திகைப்பையும் உருவாக்குகிறது.

    ஆனாலும் அடிப்படையில் இந்து மதம் சகிப்புத் தன்மை உள்ள மதமே. பிற சில மதங்களின் அடிப்படையே மத சகிப்புத் தன்மை இல்லாத கொள்கைகளால் கட்டப் பட்டு இருக்கிறது. பிற மதத்தை பற்றி தெரிந்து கொண்டாலே அவன் எங்கே நம்ப கட்டுப்பாட்டில் இருந்து விலகி விடுவானோ என்று பயந்து கூட அப்படி அவர்கள உருவாக்கி இருக்கக் கூடும். ஆனால் இந்து மதம் உண்மைகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டு இருப்பதால், அது எந்தக் கவலையும் இல்லாமல் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவும் , முயற்சி செய்யவும் தைரியமாக அனுமதி அளிக்கிறது.

    பிற மார்க்கத்தவரை வெறுக்க வேண்டும் என்றோ, பிற மதத்தவரின் வழிபாட்டு முறைகளை வெறுக்க‌ வேண்டும் என்றோ, இந்து ம‌த‌ ஸ்ருதிக‌ளில் ஒரு இட‌த்தில் கூட‌ இல்லை. ப‌க‌வ‌த் கீதையில் எல்லா வ‌ழிபாட்டு முறைக‌ளையும் ப‌ற்றி சொல்லி விட்டார். உருவ‌ம் இல்லாத‌ க‌ண்ணுக்கு எட்டாத‌ நிலையில்(அவ்ய‌க்த‌ம்) வழிபாடு செய்வ‌தையும் சொல்லி இருக்கிரார்.

    பிற‌ ம‌தத்த‌வ‌ரின் ம‌ன‌தில் உள்ள‌ வெறுப்புண‌ர்ச்சியை, ச‌கிப்புத் த‌ன்மை இல்லாத‌ த‌ன்மையை மாற்றி நாகரீக‌த்தை உருவாக்க‌வெ முய‌லுகிரேன். அது முடிய‌வெ முடியாது என்று நினைக்க‌ வேண்டாம். ஆதி ச‌ங்க‌ரரும் தியாக‌ராச‌ரும் அமைதி வ‌ழியிலெ ஆன்மீக‌த்தை ப‌ர‌ப்பின‌ர்.

    சுவாமி விவெகான‌ந்த‌ர் சிகாகோ போன‌ போது ம‌ன‌தில் அமைதியையும், ஆசீர்வாத‌ங்க‌ளையுமே எடுத்து சென்றார். க‌ட்டையையோ, க‌ட‌ப்ப‌ரையையோ எடுத்து செல்ல‌வில்லை.

    த‌ப்பும் த‌வ‌றுமாக‌ எழுதுவ‌து யார் என்று மூளைச் ச‌ல‌வை செய்து கொள்ளாமல் ந‌டு நிலையுட‌ன் ப‌டிப்ப‌வ‌ருக்கு தெரியும். வெட்க‌ப் ப‌டுகிறென், இந்துக்க‌ளிட‌த்தில் இத்த‌னை ச‌கிப்புத் த‌ன்மை இல்லாத‌ நிலையும், வெறுப்புண‌ர்ச்சியும் உருவ‌க்க‌ப் ப‌ட்டு இருப்ப‌தைக் க‌ண்டு

    நான் சினெக‌த்தை உருவாக்க எழுதுகிரேன், ஆனால் ப‌திலுக்கு வெறுப்பு இன்னும் அதிக‌மாவ‌தையே காண்கிறேன். அதனால் இப்பொதைக்கு இந்த‌ப் பின்னூட்ட‌த்துட‌ன் முடிக்கிறேன்.

    இந்துக்களிட‌ம் இந்து ம‌த‌த்தை எடுத்து செல்லுவ‌தே என் முத‌ல் ப‌ணியாக இருக்க‌ வேண்டும் என்ப‌தை புரிந்து கொண்டேன். க‌ட‌மையை செய்வோம், ப‌ல‌னைப் ப‌ற்றி எண்ணவில்லை.

    ந‌ன்றி.

  124. இது த‌ப்பும் த‌வ‌றுமான‌ த‌த்துவ‌ விளக்க‌மா?

    //அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்),

    நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக ),

    ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

    க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

    ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

    யோகி (யோக நெறியில் நிற்பவன்)

    யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

    த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

    மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

    யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

    ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

    இது த‌ப்பும் த‌வ‌றுமான‌ த‌த்துவ‌ விளக்க‌மா?

  125. எல்லா இஸ்லாமியரும் வன்முறையில் இறங்க மாட்டார்கள். எல்லா ஹிந்துக்களும் வன்முறையில் இறங்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் வன்முறையில் இறங்க மாட்டார்கள்.எல்லா யூதர்களும் வன்முறையில் இறங்க மாட்டார்கள்.எல்லா பவுத்தர்களும் வன்முறையில் இறங்க மாட்டார்கள்.

    அனால் இஸ்லாமியர்கள் ஒரு இடத்தில பெரும்பான்மையாக ஆனால் மற்றவர்களை வாழ விடுவ தில்லையே ஏன் , இதற்கு என்ன தீர்வு என்பது தான்கேள்வி.
    நாம் பல கேள்விகள் கேட்கவில்லை. ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம்- காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடியுமா?
    கண்ணுக்கு எதிரே தெரிவதை இல்லை என்று சொல்ல முடியாது.

  126. //பிற‌ ம‌தத்த‌வ‌ரின் ம‌ன‌தில் உள்ள‌ வெறுப்புண‌ர்ச்சியை, ச‌கிப்புத் த‌ன்மை இல்லாத‌ த‌ன்மையை மாற்றி நாகரீக‌த்தை உருவாக்க‌வெ முய‌லுகிரேன். அது முடிய‌வெ முடியாது என்று நினைக்க‌ வேண்டாம். //

    இதை வீட்டில் பத்திரமாக உட்கார்ந்துகொண்டு இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பதன் மூலம் சாதிக்க முடியாது. வெளியே வந்து, மேல் விஷாரம், கீழ் விஷாரம், முத்தானத்தம், அய்யம்ப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டத்து ஊர்கள், ராமநாதபுரம், கேரளக் கடற்கரையோரம் என முகமதியர் கூடுதலாக வாழும் இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசிப் பார்த்தால் உண்மை நிலைமை புரியும். அவ்வளவு ஏன், எங்கெல்லாம் முகமதியப் பெண்கள் முற்றிலும் கறுப்பு புர்க்கா அணிந்து நடமாடுகிறார் களோ அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் எவ்வளவு தூரம் வஹ்ஹாபி முகமதியம் அவர்களிடையே வேரூன்றி இருக்கிறது என்கிற அதிர்ச்சி தெரிய வரும். உலகம் முழுவதுமே சகிப்புத்தன்மையின்றி சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் சமூகம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவர்களை நாகரிகப்படுத்த வீட்டில் உட்கார்ந்துகொண்டு இணையத்தில் எழுதி முயற்சி செய்வதாகக் கூறுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. எதிரில் ஓடிவரும் யானையைப் பார்த்து விலகாமல் அதுவும் பிரம்மம் நானும் பிரம்மம் என்று அசையாமல் நின்று பின் யானையின் தும்பிக்கையால் தூக்கி எறியப்பட்ட புத்திசாலி சீடனைப் போல் தத்துவம் பேசுபவர்களிடம் என்ன கூறுவது? எந்தச் சமயத்தில் எவரிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் பேசுவதை எதில் சேர்ப்பது? சுவாமி விவேகானந்தர் எதற்காக மாநாட்டுக்குக் கம்பையும் கடப்பாறையையும் எடுத்துச் செல்ல வேண்டும்? அதே சமயம் கப்பலில் அதே விவேகானந்தர் ஹிந்து கலாசாரத்தை ஏளனம் செய்த வெள்ளையருக்கு புத்தி புகட்ட தோளையும் தொடையையும் தட்டி பொருத வருமாறு அழைத்ததைக் கேள்விப்பட்டதில்லையா? ஆதிசங்கரர் நமது ஆறு சமயப் பிரிவுகளைத்தான் இணைத்து ஹிந்துக்களை ஒருங்கிணைத்தார். ஹிந்துஸ்தானத்திற்குள் வெளியியிலிருந்து தந்திரமாகவும் பலாத்கார மாகவும் நுழைந்த மாற்று சமயங்களை அந்தப் பட்டியலில் சேர்க்க இயலாது! எதையும் அரைகுறையாகவே புரிந்துகொண்டு அவ்வாறு புரிந்துகொண்டதை மேலும் அரைகுறையாக எடுத்துக் கூறும் அதி மேதாவித்தனத்தைக் காணும்போது கார்கில் ஜெய் போன்ற இள ரத்தங்களுக்கு எரிச்சல் ஏற்படுவது இய்றகைதான். எனக்கே பொறுமையிழக்கும் நிலை வந்துவிடுகிறதே!
    -மலர்மன்னன்

  127. தினமணி சொன்னது போல தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்துதான், ஏனென்றால், ராமஜக்ன்ம பூமி என்று முடிவாகிவிட்ட பின்னால் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முஸ்லிம்களுக்குக் கொடுப்பது என்பது சட்டத்துக்கு அப்பாற்பட்டதே. இந்த நிலத்தை கபர்ஸ்தான் ஆக்குவோம், அதாவது கல்லறை ஆக்குவோம் என்று முஸ்லிம்கள் முழங்க ஆரம்பித்துவிட்டார்கள், அதாவது ஜிஹாதிகளை அங்கே புதைக்கவாம். இதுதான் மத நல்லிணக்கமா? இப்படியெல்லாம் இவர்கள் செய்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும்?

  128. சுவாமி விவேகனந்தர் நூறு வருடங்களுக்கு முன் கூறிய அறிவுரைகளை இஸ்லாமியரும் , கிறிஸ்தவரும் கேட்டனரா?
    கேட்டிருந்தால் இன்று ஹிந்துக்கள் இவ்வாறு பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பார்களா?

  129. ஒரு வகையில் சொல்லப் போனால் பாரதம் ,பாகிஸ்தான், பங்களாதேஷ் இவை இணைந்து செயல் பட்டால் ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவாக முடியும்.
    நம் மூதாதையர்கள் எல்லோர் குருதியும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுவே.
    இங்குள்ள முஸ்லீம்களின் பழக்க வழக்கங்களும் அரேபியாவில் உள்ளவர்களைப் போன்றதன்று.

    ஆனால் மேலை நாடுகள் இதை விரும்ப மாட்டார்கள்
    அதற்காகவே அவர்கள் ஊடகங்களை வைத்திருக்கின்றனர்
    அரசியல் வாதிகளுக்கு வாய்க்கரிசி போடுகின்றனர்
    இதை மக்கள் உணர்ந்து மாறினால்…..

  130. Mr Tiruchikaran, you are going in a tangent. Please read Shri Malrmanna’s response.
    It is the Islamists who are bent on Hindu’s destruction, Practicing Ahimsa against such evil cult had resulted in Hindus becoming second class citizens in their own country. Desire to preach and practice ahimsa arises from this dhimmi, servile attitude.Thanks to Gandhi, decades of illogical , brain washing,cowardly teachings by him and subsequent fostering and nuturing of these ideas, by the self serving, Muslim appeasing Congress on the general populace had resulted in our nation becoming a haven for Islamic vandalisim . What you are expecting the Hindus to do is having been beaten to a bloody pulp by the Muslims,having their temples destroyed,having been converted at the point of sword ,to turn the other cheek and lie down on the floor whimpering quiely ” Ahimsa, Ahimsa”.What we are saying is” enough is enough, let us at least get back our holy sites,let us all live in peace and harmony, respecting each others way of life, but not in dhimmitude”
    .Bleeding heart liberals, secularists are more of a danger to the Hindus than bomb strapped muslim terrorists.
    Your point about poor innocent Muslim who had the misfortune of being born in a muslim community and langushing in private at atrocities done by their fanatical brothers does not cut ice. None are willing to come forward and declare openly that Hindus are not kaffirs and Hinduisim should be respected and honoured.

  131. //சுவாமி விவேகனந்தர் நூறு வருடங்களுக்கு முன் கூறிய அறிவுரைகளை இஸ்லாமியரும் , கிறிஸ்தவரும் கேட்டனரா?//

    First let Hindus listen and follow what swami said.

  132. //சுவாமி விவேகனந்தர் நூறு வருடங்களுக்கு முன் கூறிய அறிவுரைகளை இஸ்லாமியரும் , கிறிஸ்தவரும் கேட்டனரா?//

    Yes, Americans were curious to see and listen to Swami Vivekaanadha. Unfortunately the monentum was not sustained.

    Now, first let Hindus listen and follow what swami said. Lety Hindus continue to practice friendship, love and harmony with others and let others learn from Hindus.

    HINDUS have to induct these traits to all in the world

    Every one knows that Swami Vivekaandha was emerging a winner in the Parilment of Religions, conducted at 1893, he won so, because he knew the truth, experienced the truth himself and spoke the truth. He had full of affection for all the people in the world, and for sure the people of India also. These were even acknowledged by experts from other religions, some times reluctantly.

    Swamis words had the power of love and truth.

    We dont tread much in the path of spirituality, hence we dont have the power of love and truth. Instead I can find the hatredness and rationalising arrogance.

    We can not keep the onus of reforming each and every person in the world.

    Hindus has to sustain the momentem set by him.

    Instead of doing that , you preach arraogance and rely on using force, and asking whether others listend to Swami.

  133. //ஒரு வகையில் சொல்லப் போனால் பாரதம் ,பாகிஸ்தான், பங்களாதேஷ் இவை இணைந்து செயல் பட்டால் ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவாக முடியும்.
    நம் மூதாதையர்கள் எல்லோர் குருதியும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுவே.
    இங்குள்ள முஸ்லீம்களின் பழக்க வழக்கங்களும் அரேபியாவில் உள்ளவர்களைப் போன்றதன்று. – ஸ்ரீ ஆர். ஸ்ரீதரன்//

    உண்மைதான். ஆதர்சமான கருத்துதான். ஆனால் மேற்கு நாடுகளைக் குறை சொல்லி என்ன பயன்? கீழ்த்திசை நாடுகள் ஒன்றுபட்டு வல்லமை மிக்க சக்தியாக விளங்குவதை அவை விரும்ப மாட்டா என்பது தெரிந்த விஷயம்தானே! அதையும் மீறி செயல்படுவதல்லவா சாமர்த்தியம்? ஆனால் ஆற்றில் எவ்வளவோ தண்ணீர் போயாகிவிட்டது. இனிப் பேசிப் பயனில்லை. மேலும் ஒரு முக்கியமான விஷயம்:

    உலகம் முழுவதுமுள்ள முகமதியரை முற்றிலும் அராபிய கலாசாரத்தில் ஆழ்த்தி ஒரே அச்சில் வார்த்த பதுமைகளாக ஆக்கும் வஹ்ஹாபி கோட்பாடு முகமதியரிடையே மிக வேகமாகவும் செல்வாக்குடனும் பரவி வருகிறது. இப்போதே தமிழ் நாட்டின் தென் மாநிலங்களிலும் கேரளத்திலும் வஹ்ஹாபி கரம் மேலோங்கியுள்ளது. தர்கா வழிபாட்டுக்கு முடிவு கட்டும் காலம் முகமதியரிடையே நெருங்குகிறது. சுஃபி பாடல்களுக்கும் கவ்வாலி பாடல்களுக்கும் முடிவு காலம் நெருங்குகிறது. எனவே விரைவில் முழுக்க, முழுக்க அராபிய முகமதிய கலாசாரத் தோற்றங்களையே எங்கும் காணலாம். முன்பெல்லாம் அல்லாபிச்சை எனப்துபோன்ற பெயர்களைத் தமிழ் நாட்டில் கேட்பது இயல்பு. இப்போது அப்படியில்லை.

    ஐம்பதுகளில் நான் கல்கத்தா அமிர்த பஜார் பத்ரிகாவில் வேலை பார்த்தபொழுது தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு பாரதம் ஒரு வல்லரசாகத் திகழ்வது அவசியம் என்றும், இதன் பொருட்டு பாரதம், பாகிஸ்தான், பர்மா, இலங்கை ஆகிய நாடுகள் ஒரே கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் ஒரு கட்டுரை எழுதினேன். ஏனெனில் அடிப்படையில் இவை ஒரே கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை. இவ்வாறு இவை கூட்டமைப்பாகச் செயல்பட்டால் அவற்றின் பாதுகாப்பு, ராணுவ செலவுகள் பெரிதும் குறைந்து உபரியாக உள்ள நிதியை வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டேன். கட்டுரை மிகவும் பாராட்டப்பட்ட போதிலும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அப்போதே கூறினர். காரணம் துவேஷத்தில் பிறந்த பாகிஸ்தான் துவேஷத்தையே வளர்த்து வந்ததும் ப்ர்மா இலங்கை முதலானவையும் பாரத வம்சாவழியினரை விரட்டியடிக்க வேளை பார்த்து வந்ததும்தான்.
    -மலர்மன்னன்

  134. //Your point about poor innocent Muslim who had the misfortune of being born in a muslim community and langushing in private at atrocities done by their fanatical brothers does not cut ice. None are willing to come forward and declare openly that Hindus are not kaffirs and Hinduisim should be respected and honoured.//

    Its all about education and preaching. i

  135. Mr. Rama

    //Your point about poor innocent Muslim who had the misfortune of being born in a muslim community and langushing in private at atrocities done by their fanatical brothers does not cut ice. None are willing to come forward and declare openly that Hindus are not kaffirs and Hinduisim should be respected and honoured.//

    Thanks at leaset you try to address the point now.

    I have to reiterate that the education, Surroundings magazaines, media, family … like these factors makes one persons charcter.

    I have seen many muslims in Kerala, who dont care about fasting in ramdhan, and not attched to their religion – credit goes to communist principles.

    If the communism can bring the people out from fundemaentalistic religious concept, why cant the Religious harmony principle can do the same? Ofcourse religious harmony does not make one person an athiest, but make him understand the genuine principles & practices in other religions as well.

    I want to bring the muslims out from Jihadhi concepts and untolerance for other religions. We can do that, we have do do that, its not possible in a day, but the world needs it.

    Instead of doing that, you pull me into the untolerant , fundementalistic concepts , which are alien to Hinduism.

    My aim is to make all behave more civilised, leaving away barbaric concepts.

    But your comments are trying to push me into Barbarism from Civilsation.

    I am not here to get sunked into the Barbaric concepts.

    I have explained sufficently , if required I can expalian further. I addressd to many of the points raised by many.

  136. Dear Thiruchchikaarar

    You have got the true meaning of Advesta wrong (again). It cannot be templated to fit anything and everything- please remember Krishna was teaching this admist two sets of army – he was encouraging Arjuna to fight the war – If only Arjuna were to take the meaning Advesta as it is – he would have for sure ran away from the war scene

    Arjuna initially said that he would not fight and become a sanyaasi – Krishna was of a different opinion – according to you (and also a few others) it is because Krishna had animosity towards Kauravaas – so in essense Geetha is a war story (according to some)

    Krishna asked Yudistrar to lie about Aswataamaa’s death – so krishna had animosity towards Dronar

    Rama killed Vaali unnecessarrily – so according to you Rama had animosity towards Vaali 🙂
    Rama kept quite despite Sugreevan breaking his promise – so according to you Rama had double standards.

    Buddar said it is desire that causes difficulty – so he made everyone a sanyaasi – what happened eventually – everybody became a sanyasi and had babies in the ashram

    this is the result of blindly following something.

    If not for 1992, hindus would have been doomed – it was a turning point in recent times for the awakening of Hindu spirit

  137. வணக்கம்

    சகோதரர் திருச்சியார் அவர்களே புலிக்குட்டியாக இருந்தால் அதை தாரளமாய்க் கொஞ்சி விளையாடலாம் அது குட்டியாக இருக்கும் வரைதான். அதுவளர்ந்த புலி ஆனபின் கூட தாரளமாக அதன் மீது அன்பைப் பொழியலாம் அது கூண்டுக்குள் இருக்கும் வரை.

    ///சுவாமி விவெகான‌ந்த‌ர் சிகாகோ போன‌ போது ம‌ன‌தில் அமைதியையும், ஆசீர்வாத‌ங்க‌ளையுமே எடுத்து சென்றார். க‌ட்டையையோ, க‌ட‌ப்ப‌ரையையோ எடுத்து செல்ல‌வில்லை. ///

    ஆனால் இங்கு படையெடுத்த இஸ்லாமியனோ , கிறிஸ்துவ வியாபாரியான வெள்ளையனோ இவர்கள் யாரும் அமைதியோ, ஆசிர்வாதமோ இங்கே கொண்டுவரவில்லை, மாறாக வாளோடும், துப்பாகியோடும், பீரங்கியோடும்தான் வந்தார்கள்.

  138. //இராகிருஷ்ண பரமஹம்சர் எல்லா மதங்களின் வழி முறைகளையும் கைக் கொண்டு எல்லா வழிகளின் மூலமாகவும் ஆன்மீக உச்சத்தை அடைந்தார் என்று படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு இந்து மத ஞானிகள், வெறுப்பற்ற தன்மையை உடையவராக இருந்திருக்கின்றனர். //

    இராமகிருஷ்ணரின் கதை “Hiss but don’t bite” நினைவுக்கு வருகிறது. 1992ல் இந்துக்கள் செய்தது hissதான்!
    முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றோ, அவர்களுடைய மசூதிகள் எல்லாம் இடிக்கப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லையே!
    மேலும் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறவேண்டும் என்றால் அவர்களுடைய ப்ளாகுக்கு அல்லவா செல்ல வேண்டும்!?

  139. அன்புக்குரிய நண்பர், சகோதரர் திரு.பாஸ்கர் அவர்களே,

    வணக்கம்

    //ஆனால் இங்கு படையெடுத்த இஸ்லாமியனோ , கிறிஸ்துவ வியாபாரியான வெள்ளையனோ இவர்கள் யாரும் அமைதியோ, ஆசிர்வாதமோ இங்கே கொண்டுவரவில்லை, மாறாக வாளோடும், துப்பாகியோடும், பீரங்கியோடும்தான் வந்தார்கள்.//

    இது உண்மைதானே . பிறரை அழித்து, தான் வாழும் காட்டு மிராண்டித் தனத்தைதானே அன்று முதல் இன்று வரை செய்து கொண்டு இருக்கிரார்கள.

    ஆனால் அடுத்தவரை அழிக்காமல் எல்லோரும் சேர்ந்து வாழ முடியும் என்பதை தானே இந்தியா தன் செய்தியாக அன்று தொட்டு இன்று வரை செய்து வருகிறது.

    இராமர், அரிச்சந்திரன் காட்டுக்குப் போகவில்லையா?

    அசோகன் நினைத்து இருந்தால் இன்னொரு அலெக்சாண்டர் ஆகி இருக்க முடியுமே, வாளைக் கீழே போட்டு சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நடவில்லையா?

    வெள்ளையனை எதிர்த்து ஆயுதம் ஏந்தி இருந்தால் அவன் சட்டினி ஆகி இருப்பானே. ஆனால் இன்று உலகிலே மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா, ஒபாமா….. மட்டும் அல்ல, உலகமே வியந்து பாராட்டும் அளவுக்கு தன்னிடத்திலே தன்னை ஆதிக்கம் செய்பவரை எதிர்த்துப் போராடும் போது கூட அவருக்கு தீங்கு செய்யாத முறை… அது பண்டைய இந்தியாவின் முறை, அது இந்து மதத்தின் முறையே.

    அதற்காக ஒருவன் கத்தியால் குத்த வந்தால் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பாருங்கள் என்று சொல்லவில்லை. அலாவுதீன் காலத்தில், பாபர் காலத்தில், இந்துக்கள் அடங்கி இருக்க வேண்டிய படி வலிமை இல்லாமல் இருந்தனர்.

    இப்போது அடாவடி செய்யும் வலிமை இருக்கிறது, ஆனாலும் இந்து மத கோட்பாட்டுப் படி அடாவடி செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால், கோர்ட் தீர்ப்புக்கு காத்து இருந்தால் அது சரியான இந்து தன்மையாக இருந்திருக்கும்.

    அந்த இடத்தில் கோவில் இருந்ததா என்பது அந்த லோகாலிட்டியில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வந்த குடும்பங்களுக்கு அவர்கள் தலை முறை தலை முறையாக கேள்விப் பட்டு இருப்பார்கள். நியாயம் தங்கள் பக்கம் இருக்கிறது என்னும் போது இப்படி அவசரப் பட வேண்டியது எதற்கு?

    வெறும் பேருக்கு மட்டும் இந்துவாக இருந்து கொண்டு, இந்து தன்மை இல்லாமல் இருந்தால் அது சரியாகுமா?

    சில செயல் பாடுகள் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை சிதைத்து விடுமோ என்பதை எண்ணிப் பாருங்கள். வேறு மதத்தை இந்து மதம் என்ற பெயரில் பின்பற்ற வேண்டுமா?

  140. அன்புக்குரிய நண்பர் திரு. சாரங் அவர்களே,

    அத்வேஷ்டா என்றால் என்ன என்பதை முன்பே விவாதித்து இருக்கிறோம். துவேசம் என்றால் வெறுப்பு. மனதிலே வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார். அதில் என்ன தவறான புரிதலோ….!

    என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அவர் வழிபடும் மசூதியை பார்க்கும் போது எனக்கு வெறுப்பு இல்லை. அவர் வழிபடும் மசூதியானது முன்பு கோவிலாக இருந்தது என்றால், அது அவர் தப்பு இல்லை, அவருக்கு முன் வாழ்ந்தவர்கள தப்பு. அந்த இடம் கோவிலாக இருந்தது என்பது உண்மையானால், நான் சிவில் கேசு போடுவேன்.

    இப்போது எனக்கு கூட சென்னையில் ஒரு பிளாட் (plot) இருக்கிறது. யாரவது அதை ஆக்கிரமித்து கட்டிடம் போட்டால் என்ன செய்வது, கேஸ் தான் போட முடியும்.

    ஐந்தே ஐந்து கிராமம் குடுத்தால் கூட போதும் என்றார் கிருஷ்ணர். சூதாட்டத்தில் நாட்டைப் பறித்து விட்டு, வூசி முனை கூட கொடுக்க முடியாது என்று திருதராஷ்டிரன் கோர்ட்டிலே சொன்னான் துரியோதனன். அதற்க்கு மேல் அப்பீல் செய்ய அன்று மேல் கோர்ட் எதுவும் இல்லை. அதனால் போருக்கு சென்றனர்.

    அர்ஜுனன் மனைவியை புடைவையை பிடித்து இழுக்க வைத்து வேடிக்கை பார்த்தான் துரியோதனன். பலபேர் முன்னாள் புடைவை பிடித்து இழுத்து அட்டெம்ப் டு ரேப் கிரிமினல் குற்றமும் துரியோதனர் மற்றும் துச்சாதனர் மேல் உள்ளது.

    அது போன்ற அவமானம் யாருக்கு ஏற்பட்டாலும் அவர் சார்பாக நீங்கள் போராட்டம் நடத்தலாம், நானும் ஆதரிப்பேன். ஆனால் அடுத்தவரை அவமானப் படுத்தி விட்டு அதற்க்கு தர்மப் போர் என்று பேர் வைக்க வேண்டாம்.

    மற்றபடி என் மீது உள்ள கோவத்தை இராமர் மீது பலரும் காட்டுகிறார்கள். இராமர் இருக்கட்டும், அவர் காலம் வேறே, என்று தங்களுக்கு ஒத்து வராவிட்டால் இராமரையும் விட்டு விடத் தயாராகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். வாலியை இராமர் தண்டித்தது தொடர்பான நமது கருத்துக்களை இந்தக் கட்டுரையில் வைத்து இருக்கிறோம்.

    https://thiruchchikkaaran.wordpress.com/2010/07/27/vaali-killin/

    வாலி- சுக்ரீவன்- இராமர் தொடர்பான விவாதங்களை அங்கே வைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

    கண்ணை மூடி நான் எதையும் குருட்டுத் தனமாக பின்பற்றுவது இல்லை. அதையும் நீங்கள்… என்னைப் பார்த்து சொல்வது…. irony யாக உள்ளது.

    இந்து உணர்வு என்பது என்ன? முதலில் அதை சொல்லுங்கள். இந்து உணர்வு என்பது இந்து மதத்தின் கொள்கையின் படி இருக்க வேண்டும்.

    1992 சம்பவம், அதற்க்கான காரணம் இவை எல்லாம பற்றி விரிவான பல கட்டுரைகள் திருச்சிக்காரன் தளத்திலே வெளியாகும்.

  141. I am dutifully reading the most respected Sri Malarmannan Sir’s comments under this article. Each and every word of his comment is educative and eye opener to us, especially younger generation. I sincerely thank Sri Malarmanan Sir for his great service to the younger generation of Hindu society. I request all his comments in this article are collected and made into one article and published in TamilHIndu so that we can preserve it and read it again and again to regenuate our energy and IQ.. Otherwise, all those golden words of this genious will be lost to the prosperity.

    This is my humble request to the editorial board of TamilHindu.
    Thanks.
    Senthilkumar K

  142. திருச்சிகாரர் இந்த தளத்தில் ஒரு இலக்கண (Ideal) மனிதராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்துகளை எதிர்த்து போர் தொடுக்காதீர்கள். அவருடைய எண்ணங்கள் சத்வ குணத்தின் உச்சமாக வெளி வருகின்றன. கோர்ட் உத்தரவுக்காக பொருத்து இருக்க வேண்டும், தர்மத்தின் படி பொறுமை காக்க வேண்டும். வாய்மையே வெல்லும். மனிதர் எவரையும் வெறுக்க கூடாது. இதுவும் ஹிந்துத்வத்தின் ஒரு வெளிப்பாடே. அவர் சொல்லும் கருத்து ஒருவரையும் எதிர்த்து அல்ல.

  143. பின்னூட்டங்களின் பெரும்பகுதி திருச்சிக்காரன் என்ற பெயரில் ஒருவரின் திசைதிருப்பும் வாதங்களாகவே இருக்கிறது. அதிலும் ராமர் பாணங்களாலேயே வேலி அமைத்து மசூதியைக் காத்திருப்பார் என்று எழுதியிருப்பது அவர் நண்பர் கருத்து கந்தசாமியின் உளறலை ஒத்திருக்கிறது.

  144. அன்பிற்குரிய நண்பர் ராம் அவர்களே,

    நன்றி. உண்மையான நட்பு என்பது தெயவீகத்துக்கு அழைத்து செல்லக் கூடியது என்று சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார். அதன் எடுத்துக் காட்டாக நீங்கள் இருக்கிறீர்கள்.

    இங்கு என் கருத்துக்களை மறுத்து பின்னூட்டம் இடும் அனைவரும் எனது அன்பு நண்பர்களே, ஆனால் மூச்சு விடக் கூட நேரம் இல்லாத படிக்கு ஒரே நேரத்தில் பலர் கேள்வி கணைகளை தொடுக்கும் நேரத்திலே, உதவியாக வந்து இருக்கிறீர்கள், கருடனே வந்து இறக்கையால் தடவிக் கொடுத்து போன்ற செயலாகும், மீண்டும் நன்றி.

    நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த நிலையை நாம் அனைவரும் எட்ட முயற்சி செய்வோம்.

    //கோர்ட் உத்தரவுக்காக பொருத்து இருக்க வேண்டும், தர்மத்தின் படி பொறுமை காக்க வேண்டும். வாய்மையே வெல்லும். மனிதர் எவரையும் வெறுக்க கூடாது. இதுவும் ஹிந்துத்வத்தின் ஒரு வெளிப்பாடே// இதைத்தான் நான் சொல்கிறேன்.

    உண்மையிலே நான் யாரையும் எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை. சரியான பாதையை ஒட்டி நாம் செல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன். அதை நீங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு மிக நன்றி.

  145. ஒரு வகையில் சுவாமிஜியின் சிகாகோ உரையே மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் ஹிந்துக்களுக்கு அறிவுரை சொல்வதையும், மதம் மாற்ற நினைப்பதையும் கண்டித்துதான்

  146. அத்வேஷ்டானாம், சர்வ பூதானம் மைத்ரா….. உள்ளிட்ட கருத்துக்கள் எல்லா மக்களுக்கும் அவசியமானவை.

    இந்த கருத்துக்கள் மனிதத்தை வாழ வைக்கக் கூடிய கருத்துக்கள். வெறுப்புக் கருத்துக்களை சுவீகரித்துக் கொண்ட மனிதர்களை மனிதாபிமானத்துக்கு இட்டு செல்லக் கூடிய கருத்துக்கள். இந்தக் கருத்துக்களை தளத்தில் எல்லா மதத்தை சேர்ந்த நண்பர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் வெளியிட்டு வருகிறோம்.

    மேலும் இங்கே நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. கருத்துக்களை முன் வைக்கிறோம். சிந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கருத்துக்கள் இந்து மதத்தை சேர்ந்த நண்பர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்களே. இன்னும் சொல்லப் போனால் இந்து மதத்தை சேர்ந்த நண்பர்கள் இதை நிச்சயம் நினைவில் வைக்க வேண்டும், ஏனெனில் இவை கீதையில் உள்ள முக்கியமான கருத்துக்கள்.

    இங்கே நாம் முன் வைக்கும் கருத்துக்கள் எல்லா மக்களுக்கும் என்றாலும் , குறிப்பாக இந்துக்களுக்கும் தான். எனவே உலகில் உள்ள பிற மதத்தவர்கள் மட்டும் அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ரா….. கருத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள், இந்துக்கள் அதற்க்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்ற ரீதியில் நாம் சிந்திக்கவில்லை.

    மேலும் தமிழ் இந்து தளத்தை இந்துக்கள் மட்டும் படிப்பதாக் நான் நினைக்கவில்லை. கிறிஸ்தவ , இஸ்லாமிய ம‌த‌த்தை சேர்ந்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளும், இன்னும் மார்க்சீய‌ , பெரியாரிய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளும் த‌மிழ் இந்து த‌ள‌த்தைப் ப‌டித்து வ‌ருவதாக‌வெ நான் க‌ருதுகிறேன். அதோடு அவ‌ர்களின் த‌ள‌ங்க‌ளில் இங்கே எழுத‌ப் ப‌ட்டுள்ள‌ க‌ட்டுரைக‌ள், ம‌ற்றூம் பின்னூட்ட‌ம் தொட‌ர்பாக‌ கூட‌ அவ‌ர்க‌ள் தள‌ங்க‌ளில் விவாதித்து, விம‌ரிசித்து வ‌ருகின்றன‌ர் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியாதா?

  147. இந்து மதக் கொள்கை என்னவென்றால்

    ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதாஹ்’ அதாவது எவன் தர்மத்தைக் காக்கிறானோ அவன் தர்மத்தால் காக்கப் படுவான். ஆகவே நம் தர்மத்துக்கு ஆபத்து ஏற்பட்டால் சும்மா இருத்தல் கூடாது – வேத வாக்கு
    அக்கிரமக்காரர்களை ,அவர்கள் உறவினர்களானாலும்,நண்பர்களானாலும்.ஆச்சர்யர்களானாலும் எதிர்க்க வேண்டும்- கிருஷ்ணா பரமாத்மா

    ‘பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா .மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’- மகாகவி பாரதி

    ராணா பிரதாப்பும்,சத்ரபதி சிவாஜியும், கிருஷ்ண தேவராயரும் இந்த மாதிரி குழம்பியிருந்தால் இன்று ‘இந்து மதக் கொள்கை’ என்று பேசக் கூட ஒருவரும் இருந்திருக்க மாட்டோம்.

    ஆகவே ஹிந்து சமயம் மற்றவர் அக்கிரமம் செய்யும் போது கையைப் பிசைந்து கொண்டு இருக்கச் சொல்லவில்லை.

    தர்மம் என்பது ஹிந்துக்களுக்கே உரிய ஒன்று.
    அது மற்றவர்களுக்கு புரியாது
    உதாரணமாக இரு அரசர்கள் போர் புரிந்தால் -இரவில் போர் புரியக் கூடாது,பெண்கள்,பசுக்கள்,அந்தணர்கள் இவர்களுக்கு துன்பம் கொடுக்கக் கூடாது,பயிர்களை நாசம் செய்யக் கூடாது . ஆயுதம் இழந்தவர்களுடன் போர் புரியக் கூடாது.புறமுதுகிட்டு ஒடுபபவர்களை தாக்கக் கூடாது இப்படிப் பலகோட்பாடுகள்.

    இதெல்லாம் ஹிந்து அல்லாதாருக்குப் புரியாது.
    அதனால்தான் முதன் முதலில் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்த போது ஹிந்து மன்னர்கள் முஸ்லீம்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குழம்பினர்.
    ஏனென்றால் முஸ்லீம் களுக்கு ‘போர் தர்மம்’ கிடையாது.
    அவர்கள் இரவில் திடீரென்று தாகுவர்,பெண்களை தூ்க்சி செல்வர்,அந்தணர்களை கொல்வர், மதம் மாற்றுவர் , கோயில்களை சூறை ஆடுவர், கொள்ளை அடிப்பர் .

    சத்ரபதி சிவாஜிதான் முதன் முதலில் முஸ்லீம்களை அவர்கள் முறையிலேயே எதிர்கொண்டு வெற்றி கண்டார்.
    அப்சல் கான் வஞ்சகமாக அவரைக் கொல்ல நினைத்து கட்டித் தழுவிய போது தான் முந்திக் கொண்டு அவனைக் கொன்றார் .
    ஆகவே நமது தர்மத்தை நம்மவர்களிடம் தான் கடைப் பிடிக்க வேண்டும்.
    மற்றவர்களிடம் அல்ல

  148. ம‌ரியாதைக்குரிய‌ ச‌கோத‌ரி க‌மலா அவ‌ர்க‌ளே,

    இராம‌ரின் கொள்கை, குணாதிச‌ய‌ம் தொட‌ர்பாக‌ இன்னும் ஆழ்ந்து சிந்தியுங்கள். நான் சொல்வ‌து உள‌ரலா, உண்மையா என்ப‌து தெரியும்.

    ஓரிர‌ண்டு பின்னூட்ட‌ம் போடுவ‌தோடு முடித்துக் கொண்டால், என‌க்கு நேர‌மும் மிச்ச‌ம். ஆனால் விவாத‌ம் தொட‌ருவ‌தால் தொடர்ந்து பின்னூட்ட‌ம் இட‌ வேண்டியுள்ளது.

    நான் எழுதிய‌ முத‌ல் பின்னூட்ட‌த்தை ப‌டித்து பாருங்கள்.

    (I request tamil hndu moderator to permit me to repeat my first comment here)

    //அயோத்தி – நேற்று, இன்று , நாளை !

    இந்த தீர்ப்பில் வக்பு வாரியதின் கோரிக்கையான, முழு நிலமும் அதற்க்கு வழங்கப் பட வேண்டும் என்பதை, கோர்ட் தள்ளுபடி செய்து விட்டதால் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லியுள்ளது. ஹிந்து மகா சபையும் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லி உள்ளது.

    மற்றபடி பொதுவாக பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளன.

    இந்த தீர்ப்பையும் அதற்கான காரணிகளையும் நாம் அனைவரும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    இதிலே இஸ்லாமிய சகோதரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால், இந்த நிலத்தில் இருந்த பாப்ரி அமைப்பு ஆனது, கோவிலின் இடிபாடுகளின் மீது எழுப்பப் பட்டு உள்ளது என்பதை, அதற்க்கான ஆதரங்களை தொல் பொருள் ஆராய்ச்சி கழகம் வழங்கி உள்ளதை ஏற்று கோர்ட் ஒத்துக் கொண்டுள்ளது.

    அந்தக் கோவிலானது இடிக்கப் படாமல் அது தானாகவே சிதிலம் அடைந்து இருந்தாலும், அந்த சிதிலத்தின் மீதுதான் பாப்ரி அமைப்பு கட்டப் பட்டு உள்ளது.

    எனவே ஒரு கோவிலின் மீது பாப்ரி அமைப்பை கட்டியது சரியல்ல ((அந்தக் கோவில் சிதிலம் அடைந்த நிலையில் இருந்தாலும்). அந்தக் காலத்தில் இதை எதிர்த்துக் கேட்க முடியாமல் இருந்திருக்கலாம், அதற்கு இன்றைய இஸ்லாமிய சகோதரகள பொறுப்பு அல்ல. எனவே இஸ்லாமிய சகோதரர்கள், தங்களின் இந்து சகோதரர்களுக்கு நீதி கிட்டியதாகவே உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அதே நேரம் நான் இந்து சகோதரகளை கேட்டுக் கொள்வது என வென்றால், இஸ்லாமிய சகோதர்களை அரவணைத்து அவர்களை சகோதரராகவே நடத்த வேண்டும். அவர்களுக்கு மன வருத்தமோ, அநீதியோ நடக்கும் படி விடக் கூடாது.

    ………..
    ……………

    இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது இஸ்லாமியர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை அனைவரும் உணர முடியும்.

    இந்த இடிப்பை திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என சில நண்பர்கள் சொல்லி, அதற்காக வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர். இது நமக்கு ஒப்புமை இல்லை. ஒருவரை மிதித்து விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?

    அதே நேரம் நாம் சொல்லுவது என்னவென்றால் இந்தியர்கள அனைவரும் சகிப்புத் தன்மை, சமரசம், சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கைக் கொண்டால், எல்லோரும் ஒருவரை ஒருவர் நண்பர்களாகவே நோக்குவோம். அந்த நிலையில் சர்ச்சைகள் வராது, வந்தாலும் எளிதில் தீர்ந்து விடும்.//

    இதில் என்ன பெரிய‌ த‌வ‌று இருக்கிற‌து.

    இதை விட‌ க‌டுமையாக‌ வ‌ந்த‌ பின்னூட்ட‌ங்க‌ளை எல்லாம் விட்டு விட்டு,
    ப‌ழைய‌ விவாத‌ நிக‌ழ்வுக‌ளை ம‌ன‌தில் வைத்துக் கொண்டு என்னைக் க‌ட்ட‌ம் க‌ட்ட‌ முய‌ற்சி செய்த‌த‌னாலேதான் விவாத‌ம் இவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ந்த‌து.

    இதை விட‌ க‌டுமையாக‌ வ‌ந்த‌ பின்னூட்ட‌ங்க‌ளை

    //அருள்

    2 October 2010 at 11:03 pm
    அயோத்தி: நடந்தது இதுதான்!

    1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

    2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

    3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

    …………
    …………..//

    மேல் காணும் பின்னூட்ட‌தை நீங்க‌ள் படிக்க‌வில்லையா? இது ப‌ற்றி நீங்க‌ள் பதிலோ ஆட்செப‌மோ தெரிவித்தீர்க‌ளா?

    அனேக‌மாக‌ ஒருவ‌ரைத் த‌விர‌ யாருமே இத‌ற்க்கு ப‌தில் தெரிவிக்க‌வில்லை என‌ நினைக்கிரென், திரு. ம‌ல‌ர் ம‌ன்ன‌ன் ம‌ட்டும் அவ‌ர‌து ஒரு பின்னூட்ட‌த்தில் துள்சி தாச‌ர் ப‌ற்றிக் குறிப்பிட்டு இருந்தார்.

    இவ்வாறாக‌ நீங‌கள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் என்னை ம‌ட்டுமே குறிப்பிட்டு எழுதுவ‌தால் தான் , அத‌ற்க்கு ப‌திலாக‌ நான் பின்னூட்ட‌ம் இடும் ப‌டியாகி விட்ட‌து. இதுதான் அதிக‌ பின்னூட்ட‌திற்க்கு கார‌ண‌ம். விட‌ய‌த்தை மைய‌ப் ப‌டுத்தி எழுதாம‌ல் என்னை மைய‌ப் ப‌டுத்தி , இப்படி எழுதுவார் பாருங்க‌ள், அப்ப‌டி சொல்லுவார் பாருங்க‌ள் என்று எழுதுவ‌தால் தான் திசை திரும்புகிற‌து.

    எனவே என்னை விட்டு விட்டு விட‌ய‌த்தை ஆராயுங்க‌ள். நான் என‌து த‌ள‌ம் உட்ப‌ட எந்த‌ இட‌த்திலும் என் பெய‌ர், போட்டோ எல்லாம் போட்டு என்னை விளம்ப‌ர‌ப் ப‌டுத்திக் கொள்ள‌வில்லை.

    இன்னும் என்ன‌ வேண்டுமானாலும் கேலி செய்து எழுதிக் கொள்ளுங்க‌ள். உங்க‌ளின் க‌டுமைக்கு, கிண்ட‌லுக்கு அஞ்சி உண்மையை சொல்லாம‌ல் பின் வாங்கும் ந‌ப‌ர் அல்ல‌ நான்.

  149. வணக்கம்

    சகோதரர் திருசிக் காரர் அவர்கள் திசை திருப்ப வில்லை, தனது கருத்துக்களை பதிக்கிறார். பின்னூட்டங்கள் என்பது தனது கருத்துக்களை பரிமாறும் ஒரு தளம். இப்படி ஒரு கோணத்தில் இருந்தும் பிரச்சினையை அணுக வேண்டும் என்று சொல்கிறார்.

  150. குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனன் தன் முன்னே தனது ஆசான்கள்,பாட்டனார்கள்,சகோதரர்கள்,உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் எல்லோரும் திரண்டிருப்பதைப் பார்த்து எவ்வாறு அவர்களுடன் சமர் புரிவது எவ்வாறு என்று குழம்பிய போது கிருஷ்ண பகவான் ‘பாரோர் போற்றும் பகவத் கீதையின் வாயிலாக ‘ தர்மத்தைக் காக்க, அதர்மத்தை அழிக்க, ஆசானோ,சகோதரனோ,யாராக இருந்தாலும் அவர்களுடன் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் போரிட்டே ஆகவேண்டும் என்று உபதேசம் செய்கிறார்.
    இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்

    மேலும் நமது தர்மம் சில நுட்பமான கோட்பாடுகளைக் கொண்டது
    அது தனி மனிதனுக்கு கொல்லாமை,பொய் பேசாமை இவற்றைப் போதிக்கிறது
    அனால் ஒரு அரசன் அவனது நாட்டுக்கோ,சமுதாயத்துக்கோ,தர்மத்துக்கோ ஊறு செய்பவர்களைக் கொல்வது தவறென்று சொல்லவில்லை.
    ஒரு அரசன் சாம,பேத,தான,தண்டம் இவற்றைக் கைக் கொள்ளலாம்.
    அகவே எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் ஒரே தர்மம் இல்லை

    ராமன் முனி புங்கவர்களின் யாகத்துக்கு தீங்கு விளைத்த கர தூஷணர்கள் மற்றும் அதர்மம் புரிந்த வாலி, ராவணன் இவர்களை வதம் செய்தது உதாரணம்.

    நம் இதிஹாசங்கள்,புராணங்கள்,நீதி நூல்கள் இவை முழுதுமே தீயவர்களையும், நாட்டுக்கும்,சமூகத்துக்கும்,தர்மதுக்கும் தீங்கு செய்பவர்களை கடுமையாகத் தண்டிப்பது குறித்த ஏராளமான உதாரணங்கள் உள்ளன
    .எங்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றோ ,சும்மா அஹிம்சை பேச வேண்டும் என்றோ சொல்லவில்லை

    ஒருவரது நிலத்தை மற்றொருவன் ஆக்கிரமித்துக் கொண்டால் ‘போனால் போகட்டும்.அவனே அனுபவித்துக் கொள்ளட்டும்’ என்று சொல்வது நிலச் சொந்தக்காரனின் இஷ்டம்
    ஆனால் நாட்டை எதிரிகள் ஆக்கிரமித்துக் கொண்டால் அவ்வாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
    அது தர்மமும் ஆகாது.
    இந்த தவறைத் தான் காந்தி செய்தார்

  151. எவ்வளவோ பொறுமையாக இருந்தாலும், TV யை திறந்து அவனுங்க பேசுறத கேட்டா கோபம் கோபமாக தான் வருது. அரைச்ச மாவை ஆயிரம் பேரை கூட்டி கொண்டு வந்து அரைக்கிறார்கள் இந்த கோஎபெல்ஸ் ப்ரசாரகாரர்கள். எப்படியாவது, யாராவது வன்முறையில் ஈடுபட மாட்டார்களா என்ற எண்ணத்துடன், நாலா பக்கத்தில் இருந்து நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் செய்கிற அக்கிரமத்தை பார்த்து நெறைய பேர் குமுறுகிறார்கள். 1885 முதல் வழக்குகள் பல தொடர்ந்து நியாயத்திற்காக போராடியவர்களுக்கு ஒருவரும் ஆதரவு தரவில்லை. நாம் எல்லாம் குனிய குனிய குட்டு தான் நல்லா வாங்குறோம்.

  152. ஹிந்து சமயம் பற்றி தவறான தகவல்களைக் கூறி மார்க்சிஸ்ட் மற்றும் பெரியாரிச நண்பர்களைக் குழப்பக் கூடாதல்லவா?
    ஒரு சித்தாந்தம் தவறாக இருந்து அதைக் கடைப் பிடிப்பவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை
    ஆனால் ஒரு சித்தாந்தம் உயர்வாகவும், உண்மையாகவும் இருந்து அதைக் கடைப் பிடிப்பவர்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களை மாற்றி விடலாம்.ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் உண்மையை மக்கள் உணர்வர்.

    அதுபோல்தான் ஹிந்து சமயமும். அதில் மிக அறிய,உயர்ந்த,உன்னதமான,மனித குலத்துக்கு ஆதாரமான கருத்துக்கள் ஏராளமாக உள்ளன
    சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டோ, வேண்டுமென்றே தவறாகக் கடைப் பிடித்தாலோ அது அவர்களின் தவறே.
    அதற்காக ஹிந்து சமயத்தைக் குறை கூற முடியாது.
    இதுதான் மற்ற கோட்பாடுகளுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் வேறுபாடு .
    அதனாலேயே அதற்கு ‘சனாதன தர்மம்’என்று பெயர்
    என்றும் நிலைத்து நிற்கக் கூடியது.எக்காலத்துக்கும் மாறாதது.நன்மை பயக்கக் கூடியது.

  153. Hindu Bharath once spanned from Persia/Afghanistan to Cambodia. Now, it had been reduced to one third of it’s former size.Similarly, the Hindus have a comparatively a well reduced population. All thanks to “ahimsa/forgive and forget policies” practiced by the Rajput kings. If say, Mohammed Gori was dealt with just punishment, the lives of thousands of innocent hindus would have been saved.
    This failed policy of ahimsa in the face of naked barbaric aggression from the maruding Islamists against our dharmic bhoomi and our culture and tradition is being actively promoted by Mr Tiruchikaran and the bleeding hearts.
    We all know what the end result will be if their advice is taken seriously.Hindus will be dhimmis in their own nation, paying jaiza to muslims.
    By the way Mr Tiruchikaran, have you gone and preached ( or educated, as you want to put it ) your ahimsa to the muslims? Eagerly awaiting the results of such experiments.

  154. அன்று முஸ்லிம் படையெடுப்பாளர்கள் செய்த நாசத்திற்க்கு இன்று பரிகாரம் தேடப்படுகிறது. அது இப்போது உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்க்கு அநியாயமாகத் தெரிகிறது. இதில் யார் பக்கம் நியாயம் சொல்ல முடியும்?
    வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது சரிதானே?
    நம் நாட்டில் உள்ள reservation system என்ன செய்கிறது? முன்னர் வாய்ப்பிழந்தவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று SC, ST, BC, OBC சலுகை கொடுக்கிறோம். சரி. ஆனால் அதனால் பாதிப்படைவது இப்போது உள்ள FCக்கள்தானே? இந்த reservationல் பயன் அடைபவர்கள் இந்துக்கள் மட்டுமில்லையே, முஸ்லிமாக, கிறிஸ்டியனாக மதம் மாறியவர்களும்தானே? சலுகை பரிகாரம் சரி என்றால் கோவில் பரிகாரமும் சரிதானே?!
    அவன்தான் என்னை மொதல்ல திருப்பி அடிச்சான்னு சொல்றவனுக்கு வக்காலத்து வாங்கத்தான் எவ்வளோ பேர்!

  155. After seeing these comments in Tamil, the depth of Tamil Language, amazing, I tried with english keyboard, seems lot of patience.

    Somebody at the of grandfather dancing with the age grandchild — Can not believe you people take it so serious. The follwing comment goes beyond relationship, religion, caste, even own mother.

    “Money talks BullShit Walks ” — Ohi — Money Man, money that will do anything. Why do you everytime some hindu issues Karunidhi comes so hard about Ram or something when he goes quite when there is terriorst attack, worried about his foreign bank account held in Muslim and Christian countries. Just get over that, chant money, think everything interms of money,

  156. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துப் பேசுபவர்கள் –

    கம்யுனிஸ்டுகள்- இவர்கள் சீனாவின் ஐந்தாம் படைகள். பாரதம் தனக்கு நிகராக வந்துவிடக் கூடாதே என்று சீனா நினைக்கிறது .ஆசியாவில் அதனுடன்போட்டி போடக் கூடியது பாரதம் ஒன்று தான் .அதனால் எப்படியாவது நாட்டில் குழப்பம் விளைவித்து முடிந்தால் நாட்டையே உடைக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது
    அதற்காகவே பல படித்தவர்கள் என்று சொல்லப்படும் துரோகிகளை வாய்க்கரிசி போட்டு வளர்க்கிறது.இவர்கள் பெரும்பாலும் கல்வித்துறை
    மற்றும் எழுத்தாளர்களாக உள்ளனர். இவர்கள் பெருவாரியாக ஹிந்துக்களே.( ஹிந்து ராம்,ரொமிலா தபார்)

    இரண்டாவது கிறிஸ்தவ மேலை நாடுகளின் சம்பளப் பட்டியலில் உள்ளவர்கள்.
    இவர்களின் முதலாளிகளின் குறிக்கோளும் மேல் சொன்னது போன்றே. கூடுதலாக இவர்கள் பன்னாட்டு கம்பனிகள் இங்கு கொழுக்கவும் மறைமுகமாக வேலை செய்கின்றனர்.( உதாரணம்- பாபா ராம்தேவ் மீது தாக்கு, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பீதி)
    இவர்கள் பெரும் எண்ணிக்கையில் ஊடகங்களில் உள்ளனர்.மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்,சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் உள்ளனர்.
    இந்தப் பிரிவில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் மற்றும் வெளிப்படையான கிறிஸ்தவர்கள் மற்றும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்.( ராஜ்தீப் சர்தேசாய், கஸ்பர்)

    மூன்றாவது சவுதி அரேபியா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஒற்றர்கள். இவர்களின் முதலாளிகளின் குறிக்கோள் பாரதத்தை முஸ்லீம் நாடாக மற்ற வேண்டும்
    இவர்களும் அறிவு ஜீவிகள் என்ற கும்பலில்,ஊடகங்களில்,பெரும்பான்மையாக உள்ளனர்.மேலும் சினிமாத் துறையிலும் ஊடுருவியுள்ளனர்.
    இந்தப் பிரிவில் உள்ளவர்கள் ஹிந்துக்கள் மற்றும் படித்த முஸ்லீம்கள்.( இர்பான் ஹபிப்,ஷபன ஆசமி,ஜாவேத் அக்தர், பர்கா தத் )

    மேற்கூறிய மூன்று ஹிந்து விரோத,தேசவிரோத சக்திகளுக்கும் பெரும்பாலான அரசியல் கடசிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர்.

    இவர்களின் பலம் அளவில்லாத பணம்.
    ஹிந்துக்களின் சுயநலம்.

    ஆகவே ஹிந்துக்கள் தங்கள் நேரம் ,உழைப்பு,செல்வம் இதில் எது முடியுமோ அதை ஹிந்து இயக்கங்களான ஆர் எஸ் எஸ், வீ ஹெச் பீ, ஹிந்து முன்னணி, சேவா பாரதி, அம்ருதானந்தமாயி பீடம், சத்ய சாய் சேவை தளம்.ஆதி பராசக்தி பீடம், அர்ஷா வித்யா குருகுலம், ராமகிருஷ்ணா மிஷன்,சாரதா ஆஷ்ரமம்,ஸ்ரீ ஸ்ரீ வாழும் கலை அமைப்பு,ஜெயின் சங்கம், ராஜஸ்தான் சங்கம் இவைகளுக்கு வழங்க வேண்டும்.

    ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஹிந்து வாய்ஸ் ( மாதாந்திரி) ,நேஷனல் ஸ்பிரிட் ( வாராந்தரி) –(இரண்டும் மும்பையிலிருந்து வருகின்றன), ஆர்கநிசெர்,பயனீர்,ச்டடேச்மன்,எக்ஸ்பிரஸ் ,நியூஸ் டுடே இவைகளை வாங்க வேண்டும்

    தமிழில் விஜய பாரதம்,ஹிந்து மித்திரன்,பசுத்தாய், ராமகிருஷ்ண விஜயம், சனாதன சாரதி,ஒரே நாடு இவைகளை வாங்கலாம் .

  157. yes
    at the core of these things there is money.
    Are our our politicians,mediamen and women, the so-called intellectuals fools to just waste their breath supporting muslim terrorists and christian missionaries just for nothing?
    its all about money ,honey!
    thats why they keep on howling like ‘howling monkeys’of amazon
    when one monkey starts howling other will join the chorus

    initially karunanidhi would have thought that his ‘bosses’ would welcome the Ayodhya judgement
    subsequently they would have castigated him.
    so he has changed his tune

  158. //By the way Mr Tiruchikaran, have you gone and preached ( or educated, as you want to put it ) your ahimsa to the muslims? Eagerly awaiting the results of such experiments.//

    ஏன், பீர்பால் அக்பரை மாற்ற வில்லையா? மிகவும் இறுக்கமான மதத்தை சேர்ந்த அக்பர், ஹிந்து மதத்தில் மிகவும் உயர்வான கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ளவில்லையா? இந்த விடயத்தில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுகிறேன்.

    //இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

    ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன.//

    மற்றபடி கருணையே உருவான இராமரின் சிறப்பை பற்றி இஸ்லாமியரிடம் எடுத்து சொல்லும் படியான நிலையிலா வைத்து இருக்கிறீர்கள்? இராம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவர்கள் முகம் சுளிக்கிறார்கள்.

    எந்த தவறுமற்ற, மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்றுக் கொண்ட புருஷோத்தமனின் (இராமரின்) பெயரால் காட்டுமிராண்டி தனத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அதற்க்கு உங்களைப் போனறவர்கள வக்காலத்து! இராமரின் பெயருக்கு எவ்வளவு களங்கம் உண்டாக்க முடியுமோ அவ்வளவு உண்டாக்கி விட்டு, இப்போது என்னிடம் வந்து ஏகடியம் பேசுகிறீர்கள்.

    ஸ்லாம் டாக் மில்லியனர் படத்தில் அனில் கபூர் இஸ்லாமிய இளைங்கனிடம் இராமாயணம் தொடர்பாக ஒரு கேள்வி கேட்பார். உடனே பிளாஷ் பேக் போட்டு அந்த இளைங்கன், சிறுவனாக இருந்த போது கலவரம் வந்ததாகவும், அதற்க்கு காரணம் என்பதாக கடைசியில் ஒரு சிறுவனுக்கு இராமன் வேடம் போட்டு கையில் வில்லோடு நிற்பது போல படத்தில் காட்டி இருக்கிரார்கள. அதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு வந்திருப்பார்கள். ஏனெனில் இராமரையும் தங்களோடு அடாவடி லிஸ்டில் சேர்த்துக் கொண்ட திருப்தி.
    இராமர் உங்களிடம் வந்து அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டாரா? அதற்காக அடாவடியாக அனுமதி இல்லாமல் இடிக்க சொன்னாரா? கோவில் இருந்த இடத்தில் மசூதி எப்படி வந்தது என்று கேட்பது அந்த கோவிலை வைத்திருந்து வழிபட்டவர்களின் நியாயமான கேள்வி. ஆனால் அதற்கும் இராமருக்கும் என்ன சம்பந்தம்?

    ஒரு இடத்தில் உள்ள மக்கள் இராமருக்கு கோவிலை கட்டி வழிபட்டுள்ளனர். அந்த இடத்தின் மேலே வேறு ஒரு கட்டிடம் அல்லது மசூதி அமைக்கப் பட்டு விட்டது என்றால் அந்த மக்களுக்கு தங்கள் இடத்தை திரும்ப பெற உரிமை உண்டு, அதற்க்கு தான் சட்டம், நீதி எல்லா இருக்கிறது. ஆனால் இதில் அவர்களின் நியாயம் கூட பின்னுக்கு தள்ளப் பட்ட படி தம்பட்டங்களும், மேள தாளங்களும் அடித்து விட்டனர்.
    என்னவோ இராமரே இவர்கள் செய்ததை எல்லாம் அப்ரூவ் செய்து ஆதரித்தது போல காட்டுகின்றனர்.
    அவரவர்கள் தங்களின் மனதில் உள்ள வெறுப்புக் கருத்துக்களை நியாயம் போலக் காட்டவும், இன்னும் சிலர் தங்கள் வாழ்வை வளம் படுத்திக் கொள்ளவும் இராமரின் பெயர் எக்கேடு கேட்டால் என்ன என்று சுயநலமாக செயல் பட்டு விட்டனர்.

    முதலில் சித்தி கைகேயியின் ஆசையால் இராமர் கஷ்டப் பட்டார். பிறகு இராவணனின் ஆசையால் கஷ்டம் வந்தது. அந்தக் கஷ்டம் எல்லாம் அவர் பட்டு விட்டார். இன்றைக்கு இப்படி ஒரு சோதனை இராமருக்கு, அவர் இல்லாத கால கட்டத்தில் அவரின் பெயரைக் கெடுத்து தாங்கள் கல்லா கட்டுகின்றனர். இராமருக்கு உழைப்பதாக சொல்லி ஒரு பக்கம் கல்லா ஓடுகிறது. இன்னொரு பக்கம் இராமரைத் திட்டி கல்லா ஓடுகிறது.
    இவ்வளவையும் மீறி இராமரின் சரியான கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    அடாவடி அராஜக வழிக்கு சென்றவர்களிடம் இருந்து இராமரை
    மீட்டு வால்மீகி, துளசி தாசர், இராமதாசர், தியாகராசரின் இராமரை உண்மையான இராமரை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    ஆனால் நம்பிக்கை உள்ளவன் சுவாமி விவேகானந்தர் சொன்னது போல மலை கூட அவனைத் தடுக்க முடியாது. நம்பிக்கை இல்லாதவர் தான் அரசியலவாதிகள் சொல்றதியே ஜனங்கள் கேட்பதில்லையே, நாம் சொன்னால் கேட்பார்களா என புலம்புவார்கள்.

    நாம் சுவாமி சொன்னது போல, ஆன்மீகம் என்பது பேரிகைகளை முழக்கி, படைகளை நடத்தி வெளிப்படையாக தெரியும் நிகழ்வு அல்ல, ரோஜாக்கள் மலர்வது போல ஆன்மீக உண்மைகளை அமைதியாக மக்கள் மனதில் மலர வைக்கப் படும் என்பது போலவே செய்வோம். . புத்தருக்கும் , ஆதி சங்கரருக்கும், தியாக ராசருக்கும், விவேகானந்தருக்கும் வெற்றி கிடைத்தது என்றால் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும். அதன் அளவு எவ்வளவு என்று சொல்ல முடியாது. கத்தியை நம்புபவனுக்கு புத்தியின் வலிமை தெரியாது . கட்டையை நம்புபவனுக்கு உண்மையின் வலிமை தெரியாது.

    உலகிலே உள்ள எல்லா சிறுவருக்கும், (சிறுமியருக்கும் அவசியம்) சரியான கல்வியை தருவதன் மூலம் அவர்கள மனதில் உள்ள மத வெறிக் கருத்துக்களை சரி செய்ய முடியும் என்பதை 9/11 க்கு பிறகு உணர்ந்த அமெரிக்க சில மாதங்கள் கழித்தவுடன் அதை பற்றி மறந்து விட்டது.
    மத வெறி வூட்டப் படுவது போதனையால், கல்வியால், கருத்துக்களால தான். மத வெறியை முறியடிக்கவும் போதனை, கல்வி, கருத்துக்களே செய்ய வேண்டும்.

  159. //ஹிந்து சமயம் பற்றி தவறான தகவல்களைக் கூறி மார்க்சிஸ்ட் மற்றும் பெரியாரிச நண்பர்களைக் குழப்பக் கூடாதல்லவா?//

    அதனால் தான் இந்து மத்தில் பிற மதங்களின் மீதான வெறுப்புக்கோ, மத வெறிக்கோ, மத சகிப்புத் தன்மை இன்மைக்கோ, இடம் இல்லை, எந்த சுருதியிலும் அந்த கருத்துக்கள் இல்லை என்பதை தெளிவு படுத்தி எழுதி வருகிறேன்.

  160. //அதனாலேயே அதற்கு ‘சனாதன தர்மம்’என்று பெயர்//
    ஸநாதன என்பதற்குத் தொன்மையான என்றுதான் அர்த்தம். நமது தேசத்தில் முன்பு ஒரேயொரு தர்மமே இருந்தது. அப்போது வெறும் தர்மம் என்றே குறிப்பிட்டு வந்தனர். பின்னர் சாக்கியம் போன்ற பிற தருமங்களும் இடம் பெறலாயின. எனவே நமது தர்மத்தைப் பிற்காலத்தில் ஸநாதன (தொன்மையான) தர்மம் என்று குறிப்பிட்டு அடையாளப் படுத்த வேண்டியதாயிற்று. இந்த நுட்பமான விஷயங்களையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதே உத்தமம். மனம் போன போக்கில் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கலாகாது.
    -மலர்மன்னன்

  161. Dear Ram,

    do you belong to Kumbakoam area? 🙂

    Dear Thiruchchikaaran

    Adveshta means without dwesham -no doubt, however you seem to be getting the context wrong every time.

    What amounts to animosity?

    Did Krishna have animosity towards kauravas?

    why then did he ask arjuna to wage a war?

    every possible peaceful approaches were tried before going to war-similarly Hindus tried their best to get back the place adharmically held by islamists when this did not work out they resorted to a mechanism that would allow them to take control of the place.

    Duryodhana did not even accede to a bit of land? so too-hindus did not ask all the islamists to quit india, nor quit UP,nor quit ayodya-all they wanted was one ground land were Ram temple already existed and which was brutally ransacked by babar.

    where is dwesham here-if hindus say-all muslims run away from india because you are muslims that is dwesham.

    So please get the context right. bagawad geetha is no maths to equate 2 to 2.

  162. Dear Sridharan,
    News Today has changed hands and is now a supporter of DMK! This is for your information.
    With best wishes,
    Malarmannan

  163. //By the way Mr Tiruchikaran, have you gone and preached ( or educated, as you want to put it ) your ahimsa to the muslims? Eagerly awaiting the results of such experiments. -Rama//

    Dear Sri Rama,
    There is no direct answer from the person to whom the question relates. Instead, there is usual irrelevant blah… blah… blah…from him! What is the point in wasting time in addressing such persons?

    He says he is educating through his blog andby commenting in tamil hindu! Is there any statistics for his readership?
    Malarmannan

  164. Dear Thiruchchikaaran,

    Haven’t to listened to the tyagarajar song

    Sarasa sama dhana bhedha dhanda chatura

    You say we have to take the message of Ram to Muslims and you say they feel irritared even when the name Ram is aired 🙂

    We feel it is a waste to find vaalmiki’s within islamists? Ravanaadis obviously will feel irritated hearing Rama Nama.

    Know your opponents well before you shape your strategy? or at least use Anubava Arivu to decide?

    What you are saying are all verily true but only in isolation. the ground reality is way different. Please adapt your message/approach. Platoicity is the the deadliest city to live-it is merely a screen saver city

  165. Malarmannaji,
    thanks for the information
    its shocking
    i take back my words as far as that is concerned

  166. ராமர் தனக்குக் கோயில் கட்டு என்று சொல்ல மாட்டார்
    நாம்தான் கட்ட வேண்டும்
    முஸ்லீம்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அல்லா கேட்டாரா?

  167. ஸநாதன என்பதற்கு நிலையான, நிரந்தரமான, உலகளாவிய என்றெல்லாம் பொருள் கூறலாம். ஆனால் இவை யாவும் அடிப்படையில் தொன்மைத் தன்மையின் காரணமாகவே உருவாயின. இதை நான் இங்கு சொல்லக் காரணம் இப்போதுதான் ஒரு வாசகர் எனது மறுமொழியைப் படித்து விட்டுத் தொலைபேசியில் கேள்வி எழுப்பினார். இதே கேள்வி மேலும் பலருக்கும் இருக்குமாதலால் அவருக்குச் சொன்ன பதிலை இங்கேயும் குறிப்பிடுகிறேன். இந்த அடிப்படையில் ஸ்ரீ ஸ்ரீதரன் நமது ஹிந்து சமயம் குறித்துத் தெரிவித்த கருத்து சரியேயாகும் (என்றும் நிலைத்து நிற்கக் கூடியது.எக்காலத்துக்கும் மாறாதது.நன்மை பயக்கக் கூடியது- ஸ்ரீ ஸ்ரீதரன்). பொதுவாக சமஸ்க்ருதத்தில் ஒரு சொல்லுக்குப் பலப்பல பொருள்கள் உண்டு. மற்ற மொழிகளிலும் ஒரு சொல் பல பொருள் என்ற நிலைமை இருப்பினும் சமஸ்க்ருதத்தில் இந்நிலை மிகவும் கூடுதலாகவே உள்ளது. சில சொற்கள் மிகவும் குழப்பமூட்டும் அளவுக்கு வெவ்வேறு பொருள் தருவதாகவும் உள்ளன! உதாரணமாக மஹிஷி என்ற சொல்! இதனால்தான் தப்புத்தப்பாகப் பொருள் சொல்லி ஹிந்து தர்மத்தைப் பழிக்கும் செயலில் பலர் துணிவுடன் இறங்குவது சாத்தியமாக உள்ளது!
    -மலர்மன்னன்

  168. ஹிந்துக்களுக்கு உபதேசம் செய்யும் பெரியவரே ,நீங்கள் ஒன்று செய்யுங்கள்
    உங்களது மார்கிச்ய ,பெரியாரிய,முஸ்லீம் நண்பர்களை அழைத்துக் கொண்டு காஷ்மீர் செல்லுங்கள்
    பிரிவினை வாதம் துவங்கியது முதல் இடிக்கப் பட்ட முன்னூறு கோயில்களை ( கடைசியாக் சென்ற மாதம் இடிக்கப்பட்டது ஒரு ஜெயின் கோயில்)இடித்தது தவறல்லவா ,இஸ்லாம் அன்பு மதமல்லவா,ஆகவே மறுபடி அதை கட்டித் தாருங்கள் என்று கேட்டு தகவல் சொல்லி அனுப்புங்கள்( உயிரோடு இருந்தால்)

  169. just see what islam does to the Hinuds ,especially the so-called dalits.

    Hindus in Sindh: Religious divide prevails at relief camp
    Author: Saher Baloch, Karachi
    Publication: NewAgeIslam
    Date: September 28, 2010
    URL:
    https://www.NewAgeIslam.com/NewAgeIslamArticleDetail.aspx?ArticleID=3476

    Even after facing a natural calamity and being displaced from their home
    and hearth, people at a roadside camp near Makli are reluctant to give
    up their prejudices and will not even share water with members of the
    Hindu community while sharing the same camp.

    Some 35 families are living at a camp in front of the district and
    sessions court near Makli, Thatta. Arranged side by side, these camps
    include members of a minority community as well. Despite a drinking
    water tank just a few steps away, arranged by an NGO a month ago, most
    of the people at the camp walk as far as six kilometers in search of
    water just because that tank is frequented by the Hindus.

    “I cannot drink water from the same water tank as these people,” said
    Khairoo, 45, who lost everything in the recent floods. Attempting to
    give a reason he said that the water got “impure” if a non-Muslim drank
    from it. Lighting a cigarette as he spoke, he candidly added: “My family
    and I have compromised with our life, home and everything that we had.
    But we cannot compromise with our belief.”

    Elderly people were of the same opinion as well. Sammo Ali, 75, is
    living at the camp since Ramazan and proudly says that he has not
    touched the food that was given to them and to the Hindus in the same
    dishes. Although all these people belong to the same village, yet there
    is a divide in the camps as those belonging to the lowest caste or
    minority are kept aside, as a medical camp set up by Pakistan Medical
    Association (PMA) is built in between.

    The minorities living at the other side of the camp, oblivious to how
    they are treated, keep a vigilant eye for a van or a truck carrying
    food. Most of them admit that they get into a fray if “one of them hits
    us,” but some of them silently take the beating when a fight breaks out
    during food distribution.

    Soni, 16, left her goth with her parents when they heard the flood
    warnings from a nearby mosque. Being the eldest among her eight
    siblings, she said that women from the “other side” often beat her
    sisters up when they went ahead to get food. She said her family had
    just been waiting for the floods to subside so that they could go back
    to their home. “We are continuously suffering by the hands of these
    people and have to accept the fact that we have to stay with them until
    we are free to go to our homes.”

    Discrimination on the basis of caste and religion was a huge issue in
    Sindh, said Pirbhu Satyani, founder and an active member of the Pakistan
    Dalit Solidarity Network.

    He said that for the past few weeks he had been receiving a lot of
    complaints where, merely on the basis of religious differences, many
    people belonging to the minority sect were not issued registration cards
    at the camps.

    “A majority of the two million people belonging to the Dalits and
    Scheduled castes are settled in the province of Sindh. And even being
    one of the early settlers of Umerkot and Thatta district, they are
    silently suffering from the discriminatory treatment meted out to them
    from various quarters.”

    In the same vein he said that what he found to be most distressing was
    the fact that even in these times when a large portion of the country’s
    population had been displaced with no clue about their future, some
    people were still bothered about such matters. “The fact is that as a
    nation we have let the differences, either they be of ethnic, sectarian
    or religious nature, grow inside us and they are now so deep-rooted that
    no matter what happens we think in the same terms.”

    The camp is being run by lawyers and doctors belonging to the Lawyers
    Bar Council and the Pakistan Medical Association respectively.

    __._,_.___
    Reply to sender | Reply to group | Reply via web post | Start a new topic

  170. அன்புக்குரிய நண்பர் திரு. சாரங்,

    ராம் என்ற பேரை எடுத்தவுடன் இஸ்லாமியர் முகம் சுளிக்கிறார்கள், ஏன் என்றால் அவர் பெயராலே இஸ்லாமியர்களின் மசூதி அல்லது கட்டிடம் இடிக்கப் பட்டது. அதானாலே அவர்கள் முகம் சுளிக்கின்றனர்.

    இராமர் விடயத்தில் பிற மதத்து நண்பர்கள் அவர்களைப் புரிதல் செய்து வைக்க என்னால் முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த ஒரு நண்பர் (கிறிஸ்தவர்) அவரும் இன்னும் சிலரும் பிளாட் எடுத்து தங்கியிருந்தோம். பேசும்போது அவருக்கு முதலில் இராமாயணம் என்றால் என்ன என்று முழுமையாக தெரியக் கூட இல்லை.

    நாங்கள் ரூமிலே இராமரைப் பற்றி,புத்தரைப் பற்றி, சாக்ரடீஸ்… பற்றி எல்லாம் பேசுவதை அவர் கேட்டுக் கொண்டு இருப்பார்.

    ஒரு நாள் இரவிலே நாங்கள் காரிலே சென்று கொண்டு இருந்தோம், நகரம் முடிந்து வனப் பகுதியில் உள்ள ரோட்டில் கார் சென்றது. கும்மிருட்டாக இருந்தது. நான் அப்போது இதுதான் சொன்னேன், ”அடேயப்பா காட்டிலே இவ்வளவு இருட்டா, விலங்கு , பூச்சி, பொட்டு எவ்வளவு இருக்கும்! ” என்று.

    அப்போது பின்னால் இருக்கும் கிறிஸ்தவ நண்பர் சொன்னார், ”ரொம்பக் கஷ்டம்தான், இராமரை கடவுளாக வணங்குவது சரியானதுதான்” என்றார். (அதாவது இராமர் காட்டிலே பொறுமையோடு இன்னல்களை சுமந்ததை அவர் புரிந்து கொண்டார் )!

    ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் குறிப்பாக ராம் என்றாலே , தங்கள் துன்பத்துக்கு காரணம் ராம் தான் என்று நினைக்கிறார்கள்.

    யாருக்குமே துன்பம் தர விரும்பாதவர் இராம், அவருக்கு இப்படி ஒரு அவப் பெயரை உருவாக்கி விட்டீர்கள் சாரங். ஆனால் அந்த உறுத்தல் உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. பிற மதத்தினர் மீதான வெறி உங்களை அந்த அளவுக்கு ஆக்கி விட்டது. உண்மையிலே உங்களுக்கு இராம் மீது கொஞ்சமாவது அபிமானம் இருந்தால் இப்படி அவர் பெயரைக் கெடுக்க ஒப்பி இருக்க மாட்டீர்கள்.

    இங்கே பேதம் நடந்து கொண்டு கொண்டு இருக்கும் போதே தண்டத்தை ஆரம்பித்தது சரியா?

    மேலும் துரியோதனாதிகளின் உவமை சரியானது அல்ல. பாண்டவர்களின் கண் முன்னே அவர்களின் நாட்டை சூதாடிக் கவர்ந்தான் துரியோதனன். பாண்டவர்களின் கண் முன்னே பாஞ்சாலியின் புடவையை உருவி அவமானப் படுத்தினான். இன்றைக்கு இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கோவில் உடைக்கப் பட்டதா, அந்த கோவில் மேல் மசூதி எழுப்பப் பட்டதா என்பதை அறியாதவர்கள், அவர்கள பார்க்கவில்லை.

    அத்வேஷ்டா என்றால் என்ன என்பதை பற்றி மறுபடியும் நாம் இங்கே விவாதிக்க வேண்டுமா, அது பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் தயவு செய்து என்னுடைய தளத்திற்கு வரவும். அப்படி நீங்கள் வந்து விவாதிக்க என் தளம் தகுதி இல்லாதது என்று நினைத்தால் உங்கள தளத்திலோ, அல்லது நீங்கள் சொல்லும் வேறு எந்த தளத்திலோ வந்து விவாதிக்க தயார். அத்வேஷ்டா பற்றி இங்கே விவாதித்து இவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    நான் யாரையும் விரோதியாகவோ எதிரியாகவோ கருதவில்லை. மனிதர்களின் நெஞ்சத்தில் புகுத்தப் பட்ட கருத்துக்களே, அவர்களின் மன நிலையை உருவாக்குகிறது. எனவே மனிதர்களின் மனதில் உள்ள வெறுப்புக் கருத்துக்களுக்கு , முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுக்கு எதிராகவே நான் போராடுகிறேன். என்னுடைய போராட்டம் கருத்துக்களுக்கு எதிரானது , மனிதர்களுக்கு எதிரானது அல்ல.

    எவ்வளவு பாண்டித்தியம் உடையவராக இருந்தாலும் நெஞ்சிலே கருணை, அன்பு, பொறுமை, நியாயம் இல்லாவிட்டால் பலன் இல்லை. வெறுப்பு நெஞ்சிலே இருந்தால் அது அன்பை தடுத்து விடும்.

  171. //ராமர் தனக்குக் கோயில் கட்டு என்று சொல்ல மாட்டார்
    நாம்தான் கட்ட வேண்டும்//

    சரிதான், இராமருக்கு கோவிலுக்கு கட்ட வேண்டியது நாம்தான். , அது அவரின் கொள்கையின் அடிப்படையிலே தான் கட்டப் பட வேண்டும்.
    அது நம் வழிபாட்டிற்காகத் தான், இராமருக்காக அல்ல. இராமர் தனக்காக என்று எதையும் கேட்கவில்லை.

  172. தூங்குபவரை எழுப்ப முடியும்
    தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது
    இந்த பாப்ரி கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் முஸ்லீம்கள் ராமரை ஐந்து வேளை வணங்கிக் கொண்டிருந்தனரா?
    இப்போது அவர் மீது த்வேஷம் வருவதற்கு!

  173. //ஹிந்துக்களுக்கு உபதேசம் செய்யும் பெரியவரே //

    என் நான் இந்துக்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? இந்துக்களுக்கு உபதேசம் செய்ய நான் யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமா?

  174. //அன்று முஸ்லிம் படையெடுப்பாளர்கள் செய்த நாசத்திற்கு இன்று பரிகாரம் தேடப்படுகிறது. அது இப்போது உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்க்கு அநியாயமாகத் தெரிகிறது. இதில் யார் பக்கம் நியாயம் சொல்ல முடியும்?
    வினைவிதைத்தவன் வினைஅறுப்பான் என்பது சரிதானே?- armchaircritic//
    என் அன்பு நண்பரே,
    இன்றும் படையெடுப்புகள் தொடரவே செய்கின்றன, பல விதங்களில். பயங்கரவாதிகளின் ஊடுருவலாக, கள்ள நோட்டைப் புழக்கத்தில்விட்டு ந்மது பொருளாதாரத்தைச் சீரழிப்பதாக , சுற்றுலா வீஸாவுடன் வந்துவிட்டு இங்கேயே கலியாணங்கட்டிக்கொண்டு நிரந்தரமாகிவிடுவதாக, இன்னும் பலப்பலவாறாகப் படையெடுப்புகள் தொடர்கின்றன. உள்ளூர் சகாயம் இல்லாமல் இப்படி பகிரங்கமான தாக்குதலை நடத்துவது சாத்தியமில்லை என்று மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினசிலும் ஹோட்டல் தாஜிலும் நடந்த ஆக்ரமிப்புபற்றிச் சொல்லப்படவில்லையா? வெகு சிலரே அடங்கிய ஒரு சிறு கும்பல் பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக தைரியமாக வந்து மக்கள் பெருமளவில் குவிந்துள்ள இடங்களை அறிந்து அங்கெல்லாம் விளயாட்டாகக் கண்ணில் படுகிறவர்களையெல்ல்லாம் சுட்டுத்தள்ள முடிகிறது என்றால் இது எப்படி சாத்தியம்? மேலும், பெரும்பான்மையினருக்கு இல்லாத சலுகைகளுடன் ஆட்சியாளரின், அரசியல் கட்சிகளின், மீடியாக்களின் செல்லப்பிள்ளைகளாக இங்கு வாழும் முகமதியர் ஒரு குறையுமின்றி, ஜமாத் என்ற பெயரில் போட்டி அரசாங்கமே நடத்தி வருவது தெரியாதா? முகமதியரிடையே கல்வியறிவின்மையும், வறுமையும் காணப்படுகிறது என்றால் அதற்குக் காரணமே மதத்தைக் காரணம் காட்டி வத வத என்று பிள்ளை பெற்றுத்தள்ளுதல், மவுல்விகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சமயக் கல்விமட்டுமே கற்றல் (மதரஸாவில் இலவசமாய் ஆகாரம் கொடுத்து மதக் கல்வி புகட்டிச் சிறு வயதிலேயே மாற்றுச் சமயங்கள் மீது வெறுப்பும் விரோதமும் வளரச் செய்து கொடிய வன்முறையாளர்களாக்குதல்!) முகமதிய சமுதாயத்தில் மேல் த்ட்டில் உள்ளவர்கள் வேண்டுமென்றேதான் தம் சமூகத்தில் உள்ள அடித்தள மக்களை அதே நிலையில் வைத்திருக்கிறார்கள். மேலும் முகமதியர் என்பதற்காக இங்கு எவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, வாணிபம், வங்கி உதவி ஆகியவற்றில் எவ்வித பாரபட்சமும் காட்டபப்டுவதில்லை. மட்டுமல்ல, வங்கிகளில் மைனாரிட்டி விசேஷச் சலுகை என்ற பெயரில் நிதி உதவிகள் அள்ளித்தரப்படுகின்றன முகமதியர் வியாபாரத்திலும் சுய தொழில்களிலும் அதிவேகமாக முன்னேறி வருவதையும் இங்கு காணலாம். அது மட்டுமா? நமது கோயில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வரும்போது மசூதி குறுக்கிடுமானால் மவுனமாக அடங்கி ஒடுங்கிச் செல்ல வேண்டி யுள்ளது. போதாக்குறைக்கு தம்மை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவகளே முகமதியரை நாம் அச்சுறுத்தி வைத்திருப்பதாக வேறு குற்றம் சாட்டுகிறார்கள்! ஆகையால் வினை விதைத்தவர்கள் வினை அறுப்பதாகக் கூறாதீர்கள்! நாம்தான் சொந்த மண்ணிலேயே இரண்டாந்தரக் குடி மக்களாக ஆகிக்கொண்டிருக்கிறோம்!
    -மலர்மன்னன்

  175. வாங்க வேண்டியவர்களிடம் ‘வாங்கியிருந்தால்’ சரி

  176. முதுமை முற்ற்றிவிட்டபோதிலும் சென்னை, பெங்களூர், புவனேஸ்வர், கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களிலும் ஜாதி மத வேறுபாடின்றித் தக்க உதவிகளை வழங்கும் பலவாறான அறக்கட்டளைகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் இடைவிடாது நாடு முழுவதும் பயணம் செய்து வருவதால் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துறவாடி வருகிறேன். இதுவரை ஸ்ரீ ராமன் பெயர் கேட்டதும் முகம் சுளிக்கும் ஒரு முகமதியரைக்கூட நான் சந்திக்கவில்லை. அப்படியிருக்க இவ்வாறு ஸ்ரீ ராமன் பெயருக்கு இழுக்குண்டாக்குவது தகாத செயலாகும். ஹிந்து இயக்கங்கள் மீது அவர்களுக்குத் தவறான எண்ணம் இருப்பது உண்மையே ஆனால் ஸ்ரீ ராமனை துவேஷிப்போர் இல்லை. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ஸ்ரீ ராமன் மீது அன்பும் மரியாதையும் செலுத்துவதுதான் முகமதியர் இயல்பு. ஸ்ரீ ராமனை வெறுக்கிற விசித்திரப் பேர்வழிகள் இங்கே தமிழ் நாட்டில்தான் திராவிடர் கழகம் என்ற லேபிளுடன் நடமாடுகின்றனர். அந்த வாசனையிலிருந்து மீளாத கருணாநிதியும் அதே துர்நாற்றத்தைக் கிளப்பி சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து வருகிறார்!
    வெறும் விதண்டா விவாத்திற்காக முகமதியர் ஸ்ரீ ராமன் என்றாலே முகம் சுளிப்பதாகக் கூறி முகமதிய சகோதரர்களுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கி விட வேண்டாம். அப்படிச் செய்தால் அபாண்டமாகத் தங்கள் மீது அவ்வாறு பழி சுமத்துவதாக முகமதியரின் கோபத்திற்கும் ஆளாகிவிட நேரும்! அப்படியொரு சங்கடத்திற்கு ஆளாகக் நேர்ந்தால் அப்புறம் பிளேட்டைத் திருப்பிப் போட்டு முகமதியரைக் குறைகூறும் விதமாக அத்வேஷ்டா என்று மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்!
    -மலர்மன்னன்

  177. பாப்ரி கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் முஸ்லீம்கள் ராமரை ஐந்து வேளை வணங்கிக் கொண்டிருந்தனர் என்று நான் சொல்லவில்லையே.

    அதே நேரம் பாப்ரி கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் இராமரின் மீது அவர்கள் குறிப்பிட்டு வருத்தப் படும்படியாக , தங்களுக்கு அவரால் கஷ்டம் என்று நினைக்கும்படியாகவோ இல்லை.

    பொதுவாகவே இராமரின் தியாகம், பொறுமை, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் ஒரு மரியாதைக்குரியவர் என்பதை லாஜிக் மற்றும் ரீசனிங் அடிப்படையில் புரிய வைக்க முடியும்

    . இராமரின் கொள்கைகள் உலகில் அமைதியை, இணக்கத்தை அளிக்கக் கூடியவை என்பதை ரீசனிங் அடிப்படையில் யாரும் ஒத்துக் கொள்வார்கள.

    ஆனால் இப்போது இராம‌ர் என்ற‌வுட‌ன், வாப்பா இடிப்பு பார்ட்டி என்கிறார்க‌ள். இந்துக்களே, சாமி கும்பிடுப‌வ‌ர்களே இப்ப‌டி கிண்ட‌லாக‌ அழைக்கிறார்க‌ள்.

    உல‌கில் ம‌த‌ ச‌கிப்புத் தன்மை, அர‌வ‌ணைக்கும் த‌ன்மை, அஹிம்சை…. இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌ கொள்கைகளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட் ஒரே ம‌த‌மான‌ இந்து ம‌தத்தை, பாலைவ‌ன‌ வெறிக் கொள்கைக‌ளின் பால் த‌ள்ளுப‌வ‌ர்க‌ள் தான் உற‌ங்குவ‌து போல‌ ந‌டிப்ப‌வ‌ர்க‌ள்.

  178. உண்மையை சொல்ல த‌ய‌ங்க‌ வேண்டிய‌தில்லை. எப்ப‌டி வேண்டுமானாலும் திருப்பிப் போட‌ முய‌லலாம். என‌க்கு அட்டியில்லை. ந‌டு நிலையுட‌ன் ப‌டிப்ப‌வ‌ர்களுக்கு எது உண்மை என்று தெரியும்.

    மேலும் ஒருவ‌ன் த‌ன்னை இந்து என்று சொல்லிக் கொள்ள‌ யாரிட‌மாவ‌து லைசென்ஸ் வாங்க‌ வேண்டுமா? இந்து ம‌த‌த்தின் அத்வேஷ்டா கொள்கைக்கு எதிரான வ‌கையில் வெறுப்பு உண‌ர்ச்சியை ம‌ன‌தில் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள், இந்து ம‌த‌த்தில் இல்லாத‌ கான்செப்டான‌ ம‌த‌ வெறியை அதில் திணிக்க‌ முய‌ல‌ப‌வ‌ர்களே த‌ங்களை இந்துக்க‌ள் என்று சொல்லிக் கொள்ளும்போது,

    இந்து ம‌தத்தின் அஹிம்சையை, அமைதியை, அத்வேஷ்டாவை, ந‌ல்லிண‌க்க‌த்தை ம‌ன‌தில் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ளை இந்துக்க‌ள் என‌ அழைத்துக் கொள்ள யாரிட‌மும் ப‌ர்மிச‌ன் வாங்க‌ வேண்டிய‌தில்லை.

  179. முழுப் பூச‌ணிக்காயை சோற்றில் ம‌ றைக்க‌ முடியுமா? இய‌க்க‌ங்க‌ள் தான் கார‌ண‌ம் என்றாலும் சாதாரண‌ முஸ்லீம்க‌ள் இராம‌ருக்காக‌த் தான் தான் தங்க‌ள் பள்ளி இடிக்க‌ப் ப‌ட்ட‌து என்றும், அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராயிருந்தால் நீங்க‌ள் ஏன் எங்க‌ள் பள்ளியை இடிக்க‌ விட்டீர்க‌ள் என‌வும் கேட்கின்ர‌ன‌ர்.

    நான் ப‌ல ம‌தத்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை ச‌ந்த்தித்து வ‌ருகீரேன். அவ‌ர்களிட‌ம் ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ம் ப‌ற்றியும், இராம‌ர் ப‌ற்றியும் பேசியும் வ‌ருகிறேன். என‌க்கு கிடைத்த‌ அனுப‌வ‌ங்க‌ளையே எழுதுகிறேன், விவாத‌த்தில் நான் சொல்வ‌தை அழுத்த‌ம் காட்ட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ சும்மா எழுத‌வில்லை.

  180. ஹிந்து என்கிற சொரணையோ புரிந்துணர்வோ இல்லாமல் நடப்பு உலகம் பற்றிச் சிறிதும் கவலையின்றி வெறுமே சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் ஹிந்து சமூகத்தில் அதிகம் காணப்படுவதுதான் இன்றைக்குப் பிரச்சினையே. இல்லாவிட்டால் இத்தாலி நாட்டு மாஃபியா கூட்டம் இங்கே அதிகாரம் செலுத்தும் நிலை வந்திருக்குமா? ராஹுல் என்கிற சிறுவனுக்கு சிமியும் ஆர் எஸ் எஸ்சும் ஒன்றுதான் என்று சொல்கிற தைரியம்தான் வந்திருக்குமா? அல்லது இங்கே கருணாநிதி ஜயலலிதா வகையறாக்கள் மாற்றி மாற்றி அதிகாரம் செலுத்தும் நிலைதான் இருக்குமா? ஹிந்துக்களின் சொரணையற்ற போக்கு மாற வேண்டும் என்றுதான் பலரும் அவரவர் நிலைகளில் உழைத்து வருகிறார்கள்.
    //ஆனால் இப்போது இராம‌ர் என்ற‌வுட‌ன், வாப்பா இடிப்பு பார்ட்டி என்கிறார்க‌ள். இந்துக்களே, சாமி கும்பிடுப‌வ‌ர்களே இப்ப‌டி கிண்ட‌லாக‌ அழைக்கிறார்க‌ள். //
    இவர்களைத்தான் பச்சைத் துரோகிகள் என்பது. நாளைக்கே இனி ஹிந்துக்கள் கோவில் குளம் என்றெல்லாம் போகக் கூடாது என்று சொன்னால் வீட்டிற்குள் கதவுகளை மூடிக்கொண்டாவது சாமி கும்பிடலாமா என்று கேட்பவர்கள் இவர்கள்!

    இம்மாதிரியான நிலை இருந்தபொழுதுதான் ஹிந்துக்களின் அச்சத்தைக் களைய வேண்டும் என்பதற்காக சைத்தன்ய மஹாப்ரபு துணிவுடன் வீதியில் இறங்கி ஊர் ஊராக ஓடிச் சென்று உரத்த குரலில் பகவான் க்ருஷ்ணனின் பெருமைகளைப் பாடித் திரிந்தார்.

    ஹிந்து என்று சொல்லிக்கொள்ள லைசென்ஸ் தேவை இல்லை, ஹிந்துவாக இருந்தால் ஹிந்து சமயம், சமூகம் குறித்து வாய்க்கு வநதபடிப் பேசலாம் என்கிற தைரியத்தில்தான் ஹிந்து சமூகத்தில் பலர் தன்னைச் சுற்றிலும் என்ன மாதிரியான நிலைமை உள்ளது என்கிற பிரக்ஞைகூட இல்லாமல் எதையாவது சொல்லித் தங்களை மிகப் பரந்த மனப்பான்மையுள்ளவர் களாகக் காட்டிக்கொண்டு அற்ப சுகம் காண்கிறார்கள்.
    இவர்களுக்கே ஏதேனும் பாதிப்பு ஏற்படும் வரை இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
    -மலர்மன்னன்

  181. இடிப்பு பார்ட்டி என்று சொன்னால் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சொல்லிக் கொள்ளச் சொல்லுங்கள்
    அவர்கள் இடித்ததைத்தான் திரும்பக் கட்ட முயல்கிறோம் என்று சொல்லுங்கள்.

  182. திரு . திருச்சிக்காரன்
    //நான் ப‌ல ம‌தத்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை ச‌ந்த்தித்து வ‌ருகீரேன். அவ‌ர்களிட‌ம் ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ம் ப‌ற்றியும், இராம‌ர் ப‌ற்றியும் பேசியும் வ‌ருகிறேன்//
    நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். ஹிந்து மதத்தை விட்டுவிட்டு வேறு மதத்துக்கு மாறிவிடுங்கள். இதுவே நீங்கள் ஹிந்து மதத்துக்கு செய்யும் நற்செயல்.

    //இராம‌ருக்காக‌த் தான் தான் தங்க‌ள் பள்ளி இடிக்க‌ப் ப‌ட்ட‌து என்றும், அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராயிருந்தால் நீங்க‌ள் ஏன் எங்க‌ள் பள்ளியை இடிக்க‌ விட்டீர்க‌ள் என‌வும் கேட்கின்ர‌ன‌ர்.//

    அவர் கெட்டவராய் இருந்தால் ஏன் அவர் தன் கோவிலை இடிக்க விட்டார் என்று கேட்டு எப்போதும்போல் குழப்ப வேண்டியதுதானே?

    ஒருவேளை நீங்கள் விபீஷனனாகப் பிறந்திருந்தால், ராமரிடமே, ராமரின் நற்குணங்கள், மத சகிப்புத்தன்மை, ‘முகம்மதோடு அறுவரானோம்..முஸ்ராபோடு எழுவரானோம்’, பொறுமை, இராவணனுக்கு விட்டுக்கொடுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்றெல்லாம் பேசி, சீதை போனால் போகிறாள், விட்டுக் கொடுத்துவிடுவோம் என்று ராமரையே கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  183. சாரங்,
    //யாருக்குமே துன்பம் தர விரும்பாதவர் இராம், அவருக்கு இப்படி ஒரு அவப் பெயரை உருவாக்கி விட்டீர்கள் சாரங். ஆனால் அந்த உறுத்தல் உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. பிற மதத்தினர் மீதான வெறி உங்களை அந்த அளவுக்கு ஆக்கி விட்டது.//

    இப்படியெல்லாம் திருச்சிக்காரன் சொல்கிறாரே, இந்த மாதிரி நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏதாவது ஹாத்திக்கு வைத்திருந்த ஆட்டை களவாண்டு விட்டீர்களா? அல்லது அன்றன்றுள்ள அப்பத்தை அபேஸ் செய்துவிட்டீர்களா?

  184. Dear Tiruchchikaaran,

    What you say is no Wrong,however the context is completely a misplaced one. Please see what shri malarmannan is trying to explain.

    You are holding firm on a theoretical point – please move beyond that.

    You seem to generalize Seerangaththu kaakaa stories and what you hear here and there. Instead of just talking about Rama to Islamists,please also take the message of islam to them,tell them their legend,tell them what they have destroyed so far. They will realize their mistakes and may change.

    You are trying to correct problems without focussing on the problem. Beating around the bush will not yeild anything.

    If you talk to them about Rama-they will talk sharia to you. they will say Rama was not a true muslim and why we should bother. Please understand the concept of peace is very unique to hindusim-Islam has been developed otherwise.So,you first need to preach about the deficiencies and the terrorist approach of islam.

  185. திரு . திருச்சிக்காரன்

    ////இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

    ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன.//

    அக்பர் ஹிந்துவாகிவிட்டார் என்பதெல்லாம் இயலாமையின் வெற்றுப் பெருமையின் வெளிப்பாடு. அடிமையின் அல்ப திருப்தி. வெறும் stockholm syndrom .

    பசு மாமிசத்தைத் துறந்து விட்டார்களா? சரி, போன வருடம் மலேசியாவில் ஹிந்து கோவிலுக்கு நிலம் வாங்கிய இடத்தில், சகோதரர்கள் பசுவை வெட்டி தலையை வீசியது நினைவு இல்லையா? அந்நிலத்தில் என்ன மசூதியா இருந்தது? இதோ ஜடாயு எழுதிய கட்டுரை : https://tamilhindu.com/2009/09/are-hindus-abandoned-world-over/ இந்நிகழ்ச்சிக்கு உங்கள் திமுகவினர் என்ன கருத்து சொல்லினர்?

  186. உலகில் மக்களிடம் எந்த அளவுக்கு அன்பும், சகிப்புத் தன்மையும், வெறுப்பற்ற மன நிலையும் , நல்லிணக்கமும், சமரசமும், சமத்துவமும் உள்ளதோ அந்த அளவுக்கு இந்த உலகம் பாதுகாப்பானது.

  187. பரந்த மனப்பான்மை உண்மையிலேயே எனக்கு வந்தால் அது நல்லதுதான். நாம் ஒன்றும் பேர், போட்டோ எல்லாம் போட்டு பிரபலப் படுத்திக் கொள்ளவில்லையே, இதிலே அற்ப சுகம் என்ன? .

  188. Is Mr Tiruchikaran for real? No amount of logical reasoning and evidence will change his illogical stance.He is from this group of “Pseudo Hindus ” who want to portray themselves in public as broad minded mahathmas,dripping with human kindness, unlike us barbarians. Such stance is taken for no other reason than to please their Islamists/Christians friends and to show them what a broad minded Hindus they are.It also helps to bulid up their frail egos. (see, I am a better Hindu than you vandals)
    My prayers to Shri Rama are to save our nation from these holier than thou “HINDUS”

  189. ////#
    திருச்சிக்காரன்
    7 October 2010 at 10:19 am

    உலகில் மக்களிடம் எந்த அளவுக்கு அன்பும், சகிப்புத் தன்மையும், வெறுப்பற்ற மன நிலையும் , நல்லிணக்கமும், சமரசமும், சமத்துவமும் உள்ளதோ அந்த அளவுக்கு இந்த உலகம் பாதுகாப்பானது.////////

    இவை அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்க வேண்டும்.
    இது இந்து சமய மக்களுக்கு அதிகமாகவே உள்ளது. நீங்கள் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மற்ற சமயத்தவர் தான் ஒரு துளியும் இல்லாத அளவு நடந்து கொள்கிறார்கள்.
    ஒரு எல்லை மீறும் போது ஏற்பட்டதுதான் சாது மிரண்ட கதை என்று நினைக்கிறேன்.
    இந்த இடிப்பு சம்பவம் ஒரு தவறு என்று எடுத்துகொண்டாலும், அவர்கள் செய்த பல நூறு தவறுகளை பார்க்கும் போது இந்த ஒரு தவறுக்கு மட்டும் நீங்கள் இந்த அளவு வரிந்து கொண்டு நம்மை குற்றவாளி ஆக்குவது போல பேசகூடாது.
    நாம் (இந்து சமுகம்) ஆரம்ப காலத்திலிருந்தே அன்பும், சகிப்புத் தன்மையும், வெறுப்பற்ற மன நிலையும் , நல்லிணக்கமும், சமரசமும், சமத்துவமும் கொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறது. இன்றும் நாம் இப்படி இருக்கவே விரும்புகிறோம். உங்களுக்கே தெரியும் இதற்கு எதிரான மன நிலை உடையவர்கள் யார் என்று.
    உங்கள் எழுத்துக்கள் நன்றாகத்தான் இருக்கும்,சமய நல்லிணக்கம் என்பது நீங்கள் மட்டுமே வலியுறுத்தி கூறும் விஷயம். உங்களின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் இந்த ரெண்டு நாட்களாக நீங்கள் எதற்காக இந்து சமுதாயத்தை குற்றப்படுத்த பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. இடித்தது தவறு என்றே நானும் நினைத்திருந்தேன் (ஆனால் அது நம்முடைய உரிமையான இடம் அதனை சட்டப்படி நாம் பெற்றாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது).இப்போது உங்கள் வாதம் மற்றும் அதற்கான திரு மலர்மன்னன் ஐயாவினுடைய மறுமொழிகளை படிக்கும் போது நாம தரப்பிலுள்ள நியாமும் நன்றாக விளங்குகிறது.திரு கார்கில் மற்றும் திரு ஸ்ரீதரனும் மற்றும் பலரும் கூட நிதானமாக விளக்கியுள்ளதகவே தெரிகிறது.
    நீங்கள் நன்றாக சிந்திக்கிறீர்கள்,நிறைய நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் ஆனால் நீங்களும் செகுலர் ஆகா இருக்க நினைப்பது போல தோன்றுகிறது. சமரசம் என்பது இரு தரப்பும் மனதில் நினைக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியாதா?
    நாம் எப்போதும் தியாகிகளாகவே இருந்து வெற்றிபெற முடியாது என்று நினைக்கிறேன். கேட்ட நியாயம் கிடைக்காத போது எடுத்து கொள்ள முயல்வது மனித இயல்பு தானே.நாமே அடங்கி போன பரம்பரையாகவே இருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
    இங்கே நடக்கும் விவாதங்களை பார்க்கும் போது கோரியை அன்றே அந்த பிருத்துவி ராஜன் போர் தர்மம் பார்க்காமல் கொன்றிருந்தால் இன்று நாம் நம் சகோதரர்களுக்குள் அடித்து கொண்டிருக்கமாடோமோ என்று தோன்றுகிறது.
    இது போல நாளைய சமுதாயம் நம்மை தர்மம் பேசி உரிமையை இழந்த திம்மிகளாக பார்க்கும் என்று கூட தோன்றுகிறது, அந்த அளவு நாம் சகிப்பு தன்மை, மதநல்லிணக்கம்( நாம் மட்டும்தான் ),விட்டு கொடுத்தல், இந்து தர்மத்தின் அத்வேஷ்ட்டா என்று எல்லாம் பேசி கொண்டிருக்கிறோமோ என்று கூட என்ன தோன்றுகிறது.

  190. Dear Mr.Saarang,

    Before I talk about Rama to others, first let me follow to his principles show that I am eligible to explain about Rama and his principles, which are required for peace in the world.

    If I demolish other persons place of worship, I have no face to talk about Rama to others. In fact, if a person is a true Rama devotee, he can not face even Rma, after he was a party of unauthorised and vengenceful demolition. ,

    You persume many things on your own. Do You think I am not talking to people of other religions?

    I dont show hatredness for other religions. May be with you intolerance attitude, you may get Sharia reply from them. I dont want to discuss about your tolerance for other deities even within your religion…. , for further discussion visit our blog, we can discuss.

    Let me repeat what I wrote already, which applies to you as well.

    //I want to bring the muslims out from Jihadhi concepts and untolerance for other religions. We can do that, we have do do that, its not possible in a day, but the world needs it.

    Instead of doing that, you pull me into the untolerant , fundementalistic concepts , which are alien to Hinduism.

    My aim is to make all behave more civilised, leaving away barbaric concepts.

    But your comments are trying to push me into Barbarism from Civilisation.

    I am not beating around the bush, I have been telling very staright, I am not ready to get into Jihadhi type hatredness.

    I requested you many times that seerangakaththu kaakka storeies need not be discussed here. If you want you can discuss it at my blog. It was told that not to be discussed here… right?

    ……………….
    Dear Mr. Kargil Jay

    திரு . திருச்சிக்காரன்

    ////இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

    ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன.//

    I already wrote that this was told by Swami Vivekaandha.

    அக்பர் ஹிந்துவாகிவிட்டார் என்பதெல்லாம் இயலாமையின் வெற்றுப் பெருமையின் வெளிப்பாடு. அடிமையின் அல்ப திருப்தி. வெறும் stockholm syndrom .

    I can confidently say, Swami Vivekaanadha emerged as a winner, he was spiritullay powerful!

    //ஒருவேளை நீங்கள் விபீஷனனாகப் பிறந்திருந்தால், ராமரிடமே, ராமரின் நற்குணங்கள், மத சகிப்புத்தன்மை, ‘முகம்மதோடு அறுவரானோம்..முஸ்ராபோடு எழுவரானோம்’, பொறுமை, இராவணனுக்கு விட்டுக்கொடுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்றெல்லாம் பேசி, சீதை போனால் போகிறாள், விட்டுக் கொடுத்துவிடுவோம் என்று ராமரையே கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

    I already clarified claearly that Ramas hands are the hands of rescue and protection. His followers were also like that. Even the simple vanara soldier were ready to die to fight against the tyrant kidnapper Ravanaa.

    We know what we follow. For us each and every women in the world are Sita, we want to protect the honour of each and every women in the world, irrespective of her religion, sect, race or language.

    We will never indulge in teasing or humilating any innocent women, innocent man. Similaraly We will not indulge in unauthorised demolition.

    We want to be just and fair.

    If any man kidnap any innocent girl, whatever the religion he belongs, I am ready to try my best to rescue her.

    You can wrote thousand times that I will surrender Sitama cowardly to ravanaa, still I wont become a Religious Chuanist. I will never indulge in hate probagation, which may lead into insecurity of women of other religion.

    I repeat, For me, each and every women in the world are to be protected , which would be the right way to pay respect for Sitama.

  191. Kargil Jay,

    //இராம‌ருக்காக‌த் தான் தான் தங்க‌ள் பள்ளி இடிக்க‌ப் ப‌ட்ட‌து என்றும், அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராயிருந்தால் நீங்க‌ள் ஏன் எங்க‌ள் பள்ளியை இடிக்க‌ விட்டீர்க‌ள் என‌வும் கேட்கின்ர‌ன‌ர்.//

    அவர் கெட்டவராய் இருந்தால் ஏன் அவர் தன் கோவிலை இடிக்க விட்டார் என்று கேட்டு எப்போதும்போல் குழப்ப வேண்டியதுதானே?//

    Its very clear that you try to confuse the people.

    The Muslims are asking me that if Ram is so compassionate, fair & just, why did their followers indulge in vengenceful demolition of Mosque (Mosque acording to them).

    Rama was not here in the Babars period, hence the question him allowing the madhir to be demolished or not does not exist. Saying this I also say that, I

  192. Der Mr. Babu,

    Thanks for your interset in this debate and your compliments!.

    //உலகில் மக்களிடம் எந்த அளவுக்கு அன்பும், சகிப்புத் தன்மையும், வெறுப்பற்ற மன நிலையும் , நல்லிணக்கமும், சமரசமும், சமத்துவமும் உள்ளதோ அந்த அளவுக்கு இந்த உலகம் பாதுகாப்பானது.////////

    இவை அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்க வேண்டும்.///

    இருக்க வேண்டும் என்றால், நாகரீகம் இல்லாதவர்களுக்கு நாம் தான் நாகரீகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாகரீகம் இல்லை என்பதால் நாமும் அவர்களைப் போல வெறியராக ஆக முடியாது.

    //ஆனால் இந்த ரெண்டு நாட்களாக நீங்கள் எதற்காக இந்து சமுதாயத்தை குற்றப்படுத்த பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. //

    இது சரியான வாக்கியம் இல்லை நண்பரே. நான் இந்துக்களையோ, இந்து சமூகத்தையோ குறை சொல்லவில்லை. ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் இடிப்பை ஆதரிக்கவோ, அப்ப்ரூவ் செய்யவோ இல்லை.

    மேலும் நான் குறை சொல்லுவது குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, கொள்கைகளை மட்டும்தான். இடிப்பு செயல் தவறு என்றுதான் சொல்லுகிறேன். ஒட்டு மொத்தமாக நான் யாரயும் குறை சொல்லவில்லை.

    //நாம் (இந்து சமுகம்) ஆரம்ப காலத்திலிருந்தே அன்பும், சகிப்புத் தன்மையும், வெறுப்பற்ற மன நிலையும் , நல்லிணக்கமும், சமரசமும், சமத்துவமும் கொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறது. இன்றும் நாம் இப்படி இருக்கவே விரும்புகிறோம்//

    வரலாற்றில் இது வரை இந்து சமுதாயம் அடாவடி யில் ஈடுபட்டதே இல்லை. இதுதான் முதல் முறை. அது எனக்கு கவலையை அளிக்கிறது. இந்த ரூட்டிலேயே தொடர்ந்து போனால் அத்வேஷ் டா இந்து மதம் இராமரின், கிரிஷ்ணரின் , சங்கரரின் இந்து மதம் இல்லாமல் போய், இந்து மதம் என்ற பெயரிலே கழுத்திலே துண்டை சுற்றிக் கொண்டு தெருவிலே அடாவடி செய்வது என்று ஆகி விடுமோ என கவலைப் படுகிறேன்.

    //இப்போது உங்கள் வாதம் மற்றும் அதற்கான திரு மலர்மன்னன் ஐயாவினுடைய மறுமொழிகளை படிக்கும் போது நாம தரப்பிலுள்ள நியாமும் நன்றாக விளங்குகிறது.திரு கார்கில் மற்றும் திரு ஸ்ரீதரனும் மற்றும் பலரும் கூட நிதானமாக விளக்கியுள்ளதகவே தெரிகிறது.//

    உங்கள் விருப்பம் சார், உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். சொல்ல வேண்டியது கடமை , அதனால் சொல்லுகிறோம்.

    //இது போல நாளைய சமுதாயம் நம்மை தர்மம் பேசி உரிமையை இழந்த திம்மிகளாக பார்க்கும் என்று கூட தோன்றுகிறது, அந்த அளவு நாம் சகிப்பு தன்மை, மதநல்லிணக்கம்( நாம் மட்டும்தான் ),விட்டு கொடுத்தல், இந்து தர்மத்தின் அத்வேஷ்ட்டா என்று எல்லாம் பேசி கொண்டிருக்கிறோமோ என்று கூட என்ன தோன்றுகிறது.//

    அலாவுதீன் காலத்தில், அவுரங்க சீப் காலத்தில் கூட இந்து சமுதாயம் சமாளித்து நின்று இருக்கிறது. இரான் போல பாரசீய மதத்தை இழக்கவில்லை. யாரும் இங்கே திம்மிகள் ஆகப் போவது இல்லை. முதலில் இந்து மதத்தை வைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.

    இந்து மதம் என்ற பெயரிலே , பாலைவன அடாவடி , அராஜக வெறுப்புக் கருத்துக்களை சுவீகாரம் செய்து கொண்டு பெயருக்கு மட்டும் இந்துவாக வாழ்ந்தால் அதுவும் உண்மையிலே திம்மி வாழ்க்கை தான். வேறு மதக் கருத்து, செயல் பாடுகளை காப்பி அடித்து மனதளவில் அவர்களின் கருத்துக்கு திம்மியாக நான் வாழ விரும்பவில்லை.

  193. //Rama
    7 October 2010 at 11:49 am
    Is Mr Tiruchikaran for real? No amount of logical reasoning and evidence will change his illogical stance.He is from this group of “Pseudo Hindus ” who want to portray themselves in public as broad minded mahathmas,dripping with human kindness, unlike us barbarians. Such stance is taken for no other reason than to please their Islamists/Christians friends and to show them what a broad minded Hindus they are.It also helps to bulid up their frail egos. (see, I am a better Hindu than you vandals)
    My prayers to Shri Rama are to save our nation from these holier than thou “HINDUS”//

    நான் எனக்கு பேர் வர வேண்டும் என்று எழுதவில்லை திரு. ராமா அவர்களே.

    இந்து மதத்தின் பெயரை, இராமரின் பெயர் கெட்டு விட வேண்டாம் என்று தான் எழுதுகிறோம்.

    நீங்கள் என் தளத்துக்கு வந்து பாருங்கள். பலரும் என்னை திட்டியே எழுதுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் நானும் உங்களைப் போல எழுதினால் எனக்கு அதிக நண்பர்களும் கிடைப்பார்கள். கிறஸ்தவ மதத்தை சேர்ந்த சகிப்புத் தன்மை இல்லாத நண்பர்கள கூட என்னைத் தான் அதிகம் திட்டுகிறார்கள்.

    ஏனெனில் இந்து மத த்தை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதத்தை திட்டினால், ஒரு வகையில் அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது. இவன் கோதாவில இறங்குறான், நாமும் இறங்க்வோம் என வரவேர்க்கினறனர்.

    நான் மத நல்லிணக்கம், நான் உங்கள் கடவுளையும் வணக்குகிறேன் என்று எழுதினால், என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை, இன்னும் அதிகமாக கோவப் படுகிறார்கள்.

    நீங்கள் எந்த வகையில் வெறுப்புக் கருத்துக்களை, மத வெறியை எந்த லாஜிக் வைத்து ரீசன் பண்ண போகிறீர்கள் என்று தெரியவில்லை.

    நீங்கள் எந்த வகையில் வெறுப்புக் கருத்துக்களை, மத வெறியை எந்த லாஜிக் வைத்து ரீசன் பண்ண போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒசாமா பின் லேடன் அல் காயிதா கூட தன நடவடிக்கைகளை நியாப் படுத்தி பேசுகிறார்கள். ஜார்ஜ் புஷ் வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன் என்று பொய் சொல்லி உதார் விட்டு இராக் மீது படை எடுத்து கடைசியில் ஒரு வேப்பனும் இல்லை என்று சொல்லி விட்டு, போப்பிடம் போய் இது குருசெடு போர் போன்றது என்று அதிரடியாகக் கலக்கினார்.

    நீங்கள் எப்படி ரீசனிங் சொல்வீர்கள?

  194. dear tiruchchikaaran

    to avoid mosquito bites what do you do? many of us use all out? You, gloing by your approach,i predict will stitch a mosquito dress and wear it for erver

    When you get fever what do you do- i take medicine. You going by advestha will feel pity for the microbes and won’t take medicines.

    If you let the islamist cancer grow, you will have to amputate the country which we already did by giving away pakistan and bangladesh.

    your principles are jainish and lack practicality-Jainish ahimsa lacks imagination and is absolutely theoretical- you know what happened to jainism per se.

    From inside an A/C room-you are preaching the poor that SUN is good for life- it does not scorch. You say this in summer. Please get to the streets feel the heat and then tell people how to beat the heat.

    No one is a fool here not to understand what peace stands for. Please understand that you are not teaching to KG students here.

    do not assume what Rama’s message was? i do not know what it is for sure,but i take things as it is.

    Hanuman tried to bring a peaceful deal-when Ravana refused the offer,Rama waged the war.so is the case with masjid. Just like how ravana usurped seetha, islamists usurped a monumental hindu temple,destroyed it and built a kumuttam over it. Several peace calls were put forth by hindus,alas in vain. Hindus very much like how Rama took back seetha,took back the land.

    You are speaking as though we are barbarians and only you are holding the torch of peace high above. Kindly Get out of this delusion.

  195. Dear Friends,

    So far, I have explained my observations sufficiently.

    Hope there is no need for any further explanation regarding this article from my side.

    Hence its opt for me to leave at this stage.

    I also had an opportunity to learn all your opinions through your comments.

    If you wantany clarifications you can read my comments from the begining.

    Still you need any furthur clarifications you can contact me at my blog.

    I thank you for all your participation.

    Thanks to tamilhindu editorial team as well, for pateintly reading and publishing my comments.

    Asaththoma Sathghamaya,

    Thamasoma Jyothirgamaya ,

    Mirithyoma Amirthyunghamaya!

  196. மத நல்லிணக்கம், சர்வமதசமரசம் என்றேல்லாம் பக்கம் பக்கமாய் எழுதும் திருச்சிக்காரர்கள் முக்கியமாய் உணரவேண்டியது இதுதான்:

    இந்த சமரசப்பருப்பெல்லாம் ஹிந்துக்களிடம் மட்டுமே வேகும். அதுவும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில்தான் வேகும்.

    தக்கியா (Taqiyyah) தேவைப்படாத காலம் வந்தவுடன் – அதற்கு 30 % எட்டினாலே போதும் – இந்த மாதிரி ராம்ரஹீம் பாய் பாய் என்று சமரசம் பேசுபவர்களுக்குத்தான் முதல் ஆப்பு காத்திருக்கும்.

    இவர்களுக்காகவே இந்தக் கவிதை அர்ப்பணம்:

    ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்துக்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரையாவது..

  197. Rama’scompassion was not for barbarians and rakshasas who wantonly harass good people and despite repeated entreaties refuse to heed the words of the wise and do not mend their ways.
    If sama,bheda,dhana fail then he takes up hi ‘Danda’ that is ‘Kodanda”

  198. இப்போது அவர்களால் திட்டத்தான் முடியும்
    பாகிஸ்தான், சவுதி,மலேசியா,பங்களாதேஷ் போல் ஹிந்துக்கள் சிறுபான்மையாக ஆனால் திட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்
    ஒன்று ஜிசியா கேட்பார்கள், அல்லது கட்டாய மதம் மாற்றம், அல்லது ‘கழுத்தறுப்பு’

  199. ராமா, மலர்மன்னன், சாரங்
    நல்ல கருத்துக்களைச் சொன்னீர்கள். நன்றி. I really enjoyed it.

    விட்டுக் கொடுத்த பிரிதிவிராஜ் சௌஹான் நிலைப்பாட்டால் என்ன ஆனது, ஆயிரம் வருடங்கள் இழப்பு , எத்தனை ஆயிரம் கோவில்கள், எத்தனை ஆயிரம் பெண்கள் என்று விளக்கிய பின்னும் ஒவ்வொரு பெண்ணுமே சீதாமாதாதான், விட்டுக்கொடுங்கள் என்ற பதிலே கிடைக்கிறது. I am really tired.. better we move to next article.

  200. திருச்சிகார அண்ணா!

    என்னால ராமனை பற்றி இங்கு இடப்பட்ட உங்க கருத்துக்களை ஏற்று கொள்ள முடியவில்லை.இடம் பொருளுக்கு சம்பந்தம் இல்லாமல் உங்கள் இடுகைகள் உள்ளது.

    ஒன்னுத்துக்கு மட்டும் நான் கேள்வி கேக்குறேன்.

    //இந்த இடிப்பை திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என சில நண்பர்கள் சொல்லி, அதற்காக வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர். இது நமக்கு ஒப்புமை இல்லை. ஒருவரை மிதித்து விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?//

    சாரி சொல்லாமல் மறுபடியும் மிதித்து விடுவது தானே நியாயம் என்கிறிர்களா?.

    ஆயிரம் வருடங்களாக பல்லாயிரம் முறைகள் மிதிபட்ட ஒருவன் ஒரு முறை திருப்பி மிதித்து விட்டதற்கு எத்தனை அலம்பல்களையும் புலம்பல்களையும்,அராஜக பேச்சுக்களையும் பார்த்து வருகிறோம்.அதுல உங்களை மாதிரி அராஜகஅஹிம்சைவாதிகளும் அடக்கம்.

    பல்லாயிரம் முறைகள் ஹிந்துவை மிதித்து நம்மிடம் ஒரு முறை குறைந்த பட்சம் சாரி கூட கேட்காதவர்களிடம் மற்றும் உன்னை மிதித்தது 100 % சரி தான் எண்ணுபவர்களிடம் , ராமன் என்னும் உத்தம புருஷனை பற்றி சொல்லி ,தெய்வமே வந்து பிறந்தவனை என்று சொல்லி ,தெய்வமாக வாழ்ந்தவனை என்று சொல்லி ,தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருப்பவனை என்று சொல்லி நம்மை அன்றும் இன்றும் மிதித்தவர்கள்,நாளையும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஒரே மிதியில் பூமியில் புதைத்து விட நினைத்து கொண்டு இருப்பவர்களை “ராமன்” நல்லவன் என்று அவர்களை ஏற்று கொள்ள செய்ய ஹிந்து அவர்களின் காலை நாக்கால் நக்க வேண்டும் என்று உங்களை போன்று அராஜக,பயங்கரவாத,தீவிரவாத அஹிம்சைவாதிகள் எதிர் பார்ப்பது என்ன நியாயம்?

    அருளுக்கு பதில் சொல்லாமல் விட்டதற்கு காரணம் அந்த குற்றச்சாட்டுகளில் குழந்தைதனம் கலந்த அறியாமை இருந்தது தான்.அருள் பெரிய கேள்வி கேட்டா பதில் நிச்சயம் வரும்…

  201. //ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்துக்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரையாவது..-தீ வண்ணன்//

    இக்கவிதை தரும் எச்சரிக்கைக்கு முன்னோடிபோல் ஒரு சங்கடம் உண்மையிலேயே நடந்தது.

    சில ஆண்டுகளுக்குமுன் பெங்களூரில் ஒரு சிறு அச்சகத்தார் புட்ட பர்த்தி ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா ஆசிரமம் தொடர்பான சிறு நூல் ஒன்றை அச்சிடும் பணியை மேற்கொண்டிருந்தனர். அதன் அட்டையில் புட்டபர்த்தி ஆசிரம வழக்கப்படி எல்லா சமயங்களின் அடையாளச் சின்னங்களையும் பொறித்திருந்தனர். அச்சகத்திற்கு ஆர்டர் கொடுக்க வந்த தீவிர மதப் பற்றுள்ள ஒரு முகமதியர் புட்டபர்த்தி புத்தக அட்டையில் தமது மதத்தின் சின்னமும் பிற மதச் சின்னங்களுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு அதெப்படித் தங்கள் மதத்தின் புனிதச் சின்னத்தைப் பிற மதங்களின் சின்னங்களோடு இணைவைக்கப் போயிற்று என்று சண்டைக்குப் போனார். இதுபற்றியெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது, எங்களுக்கு வந்த ஆர்டரை நாங்கள் செய்துகொடுக்கிறோம் என்று அச்சக உரிமையாளர் விளக்கமளித்தும் அந்த முகமதியர் சமாதானமடையவில்லை. அன்றிரவே அந்தச் சிறு அச்சகம் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றிய செய்தி மறுநாள் டெக்கான் ஹெரால்டிலும் வெளியாயிற்று.
    -மலர்மன்னன்

  202. சனாதன தர்மம் மட்டுமே இருந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் செயலையும், வாழ்க்கை முறையையும் இந்த கால கட்டத்தில் புரிந்து கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. நாம் இதிகாசங்களைத் தவிர்த்து புத்தரின் காலத்திற்கு முந்தய நம் சரித்திரத்தை படித்தால் நம் முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமோ என்னவோ!

  203. கோடானு கோடி முஸ்லீம்களில் ஒருவராவது-அட இருவர் கூட வேண்டாம், ஹிந்துக்கள் ராமனை தெய்வமாகப் போற்றுகின்றனர்..அயோத்தி என்றாலே ராமர்தான் நினைவுக்கு வரும்.படை எடுத்து வந்த ஒருவன் கோயிலை இடித்தான்.அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே நாம் அதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொன்னாரா?
    திருச்சிக் காரர் சொல்லி தான் அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

  204. “அயோத்தியா ஹிந்துக்களுக்கு புனிதமான இடம் முஸ்லிம்கள் எங்குவேண்டுமானாலும் தங்கள் தொழுகையை செய்யலாம் ஆக அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட இடத்தை விட்டுக்கொடுத்து ராமபிரான் கோயிலை கட்ட உதவினால் நாட்டின் நன்மதிப்பை பெறுவார்கள்” என்று IBN தொலைக் காட்சியில் நடந்த கலந்துரையாடலில் பிரபல இந்தி நடிகர் பாருக் ஷேக் அவர்கள் கூறினார்.

  205. when you read-don’t miss to read comments from the islamist brothers – see what a nice people they are 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *