அறியும் அறிவே அறிவு – 4

ரமணரின் “நான் ஆன்மாதான்” என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், “அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்” என்கிறார்.

View More அறியும் அறிவே அறிவு – 4