மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!

உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

narndra-modi-campaigns

text1

உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம், விவசாயம், தொழில்துறை, மகளிர் மேம்பாடு, சமூகநலம், சாலை வசதி, அனைத்திற்கும் தேவையான கட்டுமானங்கள் என்று எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
 
கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் உள்ள கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சிமுறையைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.
 
இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போல் வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழைக் குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற்கொள்ளாமல், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவு அற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலக அளவில் இரண்டாம் பரிசைத் தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. இது இரண்டாவது முறை. முதல் முறை சென்ற ஆண்டும் ஐ.நா. பரிசு பெற்றது குஜராத் அரசு. அந்த நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.

un-award-for-modi

 

இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, சிறந்த முதல்வர் விருதை மூன்றுமுறை வென்றுள்ளார் மோடி.
 
மத்திய அரசு, தனியார் ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டு அமைப்புகள், பத்திரிகைகள் என ஒட்டு மொத்தமாக மோடி 90 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். அனைத்து விருதுகளும் அவரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்காகவும் மாநிலத்தின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (Ref:https://gujaratindia.com/state-profile/awards.htm )

இவற்றின் எதிரொலியாகத்தானோ என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளிலும் மற்றும் நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுக்கா பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை இருக்கின்ற இடம் தெரியாமல் செய்து விட்டனர் குஜராத் மக்கள்.
 
குஜராத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிகளில் மோடியின் பிரம்மாண்ட வெற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸை ஒட்டு மொத்தமாக ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளையும் 53 நகராட்சிகளில் 42 நகராட்சிகளையும் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 21-ஐயும், 208 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 155-ஐயும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் பா.ஜ.கட்சிக்கு 80 சதவீத வெற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீத வெற்றியும் மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வெற்றியும் கிடைத்துள்ளன.

success
 text2

ஆம். அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர் ஆகிய ஆறு நகராட்சிகளையும் பெரிய அளவு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது பா.ஜ.கட்சி. கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் மேலும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

table1
 
இந்த வெற்றி மோடியின் சிறந்த நிர்வாகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

மோடியின் நல்லாட்சிக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

  • பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.
  • அரசின் அனைத்துத் துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஊழலற்ற சிறப்பான பணிபுரிதலால், எல்லாத் துறைகளிலும், தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகமான வளர்ச்சி காட்டி சாதனை செய்து வருகிறது மோடி அரசு.
  • மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாகக் கொடுக்காமல் ஏழை மக்களுக்குத் தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு.
  • குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
  • பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
  • “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
  • மேலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. 24 மணிநேரமும் மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப் பெற்று உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் விவசாயிகள் சந்தோஷமாக, கட்டணங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிச் செல்கின்றனர்.
  • பொதுமக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேங்கியுள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 810 புதிய நீதிமன்றங்கள் (700 தற்காலிக நீதிமன்றங்களையும் சேர்த்து) அமைத்துள்ளார். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஒரே வருடத்தில் தீர்க்கப்படவேண்டும் என்கிற கட்டாயமும் பின்பற்றப்படுகிறது. மாலை நேர நீதிமன்றங்களும் நடத்தி, வழக்குகளை விரைவாக முடிக்கிறது குஜராத் அரசு. உச்ச நீதிமன்றம் மாலை நேர கோர்ட்டுகளை நடத்தச்சொல்லி மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
  • அரசு, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாலும் தொழிலாளர்களுடன் நல்ல உறவு முறை பராமரிப்பதாலும் வேலைநிறுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒரு வேலைநாள் கூட வீணாகாமல் மாநிலம் நடக்கிறது.
  • ”சிரஞ்சீவி” திட்டத்தின் மூலம் சிசுக்கொலைகள் முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும், உலக வங்கியும் ஆராய்ந்து வருகின்றன.
  • குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெற அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு ஆஜராவதற்கான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. குழந்தைகளுக்கு சீரான சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை கிடைக்க புதிய வழிமுறையைக் (ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிக்கும் விதமாக- Child Tracking System) கையாள்கிறது அரசாங்கம்.
  • மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் 14 பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளன. தொழிற் கல்விக்கான இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கப்பல் பொறியியல் (Marine Engineering), தடயவியல் விஞ்ஞானம் (Forensic Science) போன்றவற்றிற்கான பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களும், மிகவும் புதிய திட்டமாக “பாதுகாப்பு-சக்தி” (Raksha Shakti) பல்கலைக் கழகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புக்கென்றே பாடத்திட்டம் அமைத்து அதற்கு ஒரு பல்கலையும் துவங்கியள்ளது மோடி அரசின் ஒப்பற்ற சாதனை. அதே போல் குழந்தைகளுக்கென்று ஒரு பிரத்தியேகமன பல்கலையும திட்டமிடப் படுகின்றது.
  • இவ்வளவு நலத்திட்டங்கள் மட்டுமில்லை; வருவாய்க்காக மற்ற மாநிலங்களில் ஆறென ஓடும் குடும்பங்களைக் குலைக்கும் மதுபானம் அறவே இல்லை. மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலே இத்தனை நலத்திட்டங்களும் செயல்படுத்தியுள்ளார் மோடி.
  • நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது.
  • ஊழலற்ற திறமையான அரசாட்சி நடப்பதால், தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் கட்டுமானங்களையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுப்பதால், அவர்கள் மோடியின் குஜராத் மாநிலத்தில் விரும்பி முதலீடு செய்கின்றனர். டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இரண்டே நாள்களில் குஜராத் அரசு முடித்து கொடுத்ததே ஒரு சிறந்த உதாரணம்.

 
shala-praveshotsav-launched-by-honble-cm-02

 

குஜராத் மக்கள் ஜாதி மத வித்தியாசமின்றி மோடியின் பின்னால் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் அளித்த வாக்குகளின் விவரங்களே சான்று.

 

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – வாக்கு விவரங்கள்

vote-details

 

சர்தார் சரோவர் நர்மதா நிகம் திட்டம்

sardarsarovardam

  • மத்தியப்பிரதேசத்தில் தொடங்கி 1312 கிலோமீட்டர் கடந்து குஜராத்தில் வந்து சேரும் நர்மதை நதி இந்தியாவின் நான்காவது பெரிய நதியாகும்.
  • இந் நதிநீரை முறையாகப் பயன்படுத்துவதற்காக ஒரு மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்திற்கு 1961-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.
  • 70,000 கோடி ரூபாய்கள் கணக்கிடப்பட்டுள்ள இத்திட்டம் 2012-ல் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுவிடும்.
  • இத்திட்டத்தினால் மூன்றில் இரண்டு பங்கு மத்தியப் பிரதேசமும் ஒரு பங்கு குஜராத்தும் பயனடையும்.
  • இத்திட்டத்தில் 30 பெரிய அணைகளும் 135 சராசரி அணைகளும் கட்டப்படுகின்றன. முக்கியமான பெரிய அணை 121.9 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இது உலகத்திலேயே பெரிய கான்கிரீட் அணையாக 8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
  • இந்த அணையின் தண்ணீர் மின்உற்பத்திக்கும் வேளாண்மைக்கும் குடிநீர் வசதிக்கும் பயன்படுத்தப்படும். 1450 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 57% மத்தியப் பிரதேசத்திற்கும் 27% மஹாராஷ்டிராவிற்கும் 16% குஜராத்திற்கும் வழங்கப்படும். 9633 கிராமங்களுக்கும் 131 டவுன் பஞ்சாயத்துக்களுக்கும் முழுநேரமும் குடிநீர் கிடைக்கும். ராஜஸ்தானிலுள்ள 75000 ஹெக்டேர் நிலம் உட்பட 1.845 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்குப் நீர்பாசனம் கிடைக்கும்.
  • இத்திட்டத்தினால் 8.7 மெட்ரிக் டன் விவசாய உற்பத்தி செய்யமுடியும்.
  • 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மார்ச் 4, 1998-ல் பா.ஜ.க. குஜராத்தில் ஆட்சியமைத்தது. 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் சரியாக நடத்தப்படவில்லை என்கிற காரணத்தால் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளான கேஷுபாய் படேல், அக்டோபர் 6, 2001-ல் பதவி விலகினார். பின்னர் நரேந்திர மோடி முதல்வர் பொறுப்பேற்றார். பூகம்ப நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு மக்களின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றார்.

narendra-modi-227 பிப்ரவரி 2002 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளான 59 ஹிந்துக்கள் (பெண்கள், குழந்தைகள் உட்பட) பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 ஹிந்துக்களும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினரும் போலி மதச்சார்பின்மைவாதிகளும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் குஜராத்தில் 3000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி கடுமையான பொய்ப்பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் பா.ஜ.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க, நரேந்திர மோடி இரண்டாவதுமுறை முதல்வரானார்.
 
அதிலிருந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை மட்டுமே கடமையாகக் கொண்டு கடுமையாக உழைத்த மோடியை எப்படியாவது பதவிலிருந்து இறக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முயற்சி மேற்கொண்டனர். அவரைக் கொலைகாரராகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவராகவும் சித்தரித்தனர்.
 
2005-ல் நடந்த போலிஸ் என்கௌண்டரில் சொராப்புத்தின் என்கிற பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவத்தையும் மோடிக்கு எதிராகப் பயன்படுத்தினர். 2007 சட்டசபைத் தேர்தலில் மோடியை “மரண வியாபாரி” என்று சொல்லி பிரசாரம் மேற்கொண்டனர் காங்கிரஸ் தலைவி சோனியாவும் அவர் மகன் ராகுலும். ஆயினும் குஜராத் மக்கள் மோடியின் ஊழலற்ற சிறந்த ஆட்சிக்கு ஆதரவளித்தனர். பா.ஜ.க 117 இடங்களில் அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
 
2009 பொதுத் தேர்தலில் மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றிய காங்கிரஸ், நரேந்திர மோடி அரசுக்கு நெருக்கடியாக அரசியல் களத்தில் சில காய்களை நகர்த்தும் விதத்தில், தன் கைப்பாவை சி.பி.ஐ மூலம் சொராப்புத்தின் என்கௌண்டர் வழக்கை உபயோகப்படுத்தி வருகிறது. அவ்வழக்கில் மோடி அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவைக் கைது செய்தது சி.பி.ஐ. மூன்று மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் இறுதியில்தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மத்திய காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.-யைத் தவறாகப் பயன்படுத்துவதாக பா.ஜ.க. கடுமையான பிரசாரம் மேற்கொண்டது. மேலும் காமன்வெல்த் போட்டிகளில் நடந்துள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழலை வெளியில் சொல்லியும் மோடி பிரசாரம் மேற்கொண்டார். குஜராத் மாநில முன்னேற்றங்களைப் பட்டியலிட்டும் மத்திய அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியை விமரிசனம் செய்தும் மோடி மேற்கொண்ட பிரசாரத்திற்கு வரவேற்பு இருந்தது கண்கூடாகத் தெரிந்தது.
 
ஆனால் தங்கள் தலைமையில் மத்திய அரசின் ஆட்சி இருந்தபோதும், வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சாதனைகள் எதுவும் இல்லாததாலும் மோடியின் அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சொல்ல முடியாததாலும் காங்கிரஸ் கட்சியினரின் பிரசாரம் சுரத்தில்லாமல் இருந்தது. மக்களும் கங்கிரஸ் கட்சியினரை ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.
 
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகளில் 30 சதவிகிதம் முஸ்லிம் சமுதாயத்தினர் அளித்தவை என்று மோடி கூறியிருக்கிறார். ராஜ்கோட் நகராட்சியின் 18-வது வார்டில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாமா என்கிற முஸ்லிம் பெண்மணி, “முஸ்லிம் சமுதாயத்தினர் மாநிலத்தின் முன்னேற்றத்தையே விரும்புகின்றனர். முதல்வர் மோடி பல முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதால், குஜராத் முஸ்லிம்கள் பா.ஜ.க நோக்கி வரத்தொடங்கிவிட்டனர். எனக்கு என் சமுதாயத்தினர் 40%-க்கும் மேல் வாக்களித்துள்ளனர்” என்று உறுதியாகக் கூறுகிறார்.

  • வழவழப்பான சாலைகள்
  • 24 மணிநேர மின்சாரம்
  • 24 மணிநேர தண்ணீர்
  • பூரண மதுவிலக்கு அமல்
  • லஞ்சம் என்பதே இல்லை
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி
  • அனைவருக்கும் சுகாதார வசதிகள்

 

navrathri-garba

ஐந்து கோடி குஜராத் மக்கள், ஜாதி மத பேதமின்றி போலிப் பிரசாரங்களை ஒதுக்கி தங்கள் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் வைத்து வாக்களித்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.
 
மோடி பெற்றுள்ள அமோக வெற்றி, காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விழுந்துள்ள மறுக்கமுடியாத, மறக்கமுடியாத அடி என்பதில் சந்தேகமில்லை.

69 Replies to “மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!”

  1. ‘சிலரை எப்போதும் ,எல்லோரையும் சில காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது’ என்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மோடி அவர்கள் நிரூபித்து விட்டார்.
    நேர்மை, நல்ல எண்ணம், தன்னை நம்பி ஆட்சியை அளித்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆவல் இருந்தால் போதும் ,ஒரு ஆட்சியாளருக்கு- பிறகு வானமே எல்லை!.

  2. Pingback: Indli.com
  3. நல்ல கட்டுரை நரேந்திர மோடி யின் புகழ் ஓங்குக.

  4. நல்ல கட்டுரை. கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்தது. குஜராத் மக்கள் அதிர்ஷ்டம் தமிழ் மக்களுக்கு கிடைக்குமா என்று ஏங்குகிறோம்.
    வாழ்க மோடி

  5. thanks for tamilhindu to advice the guj.govt. website. lot of useful info and downloads.
    இத கொஞ்சம் கூட இந்த மஞ்சா துண்டு பாக்காதா?? மாறன் சகோதரர்களிடம் நம் கணினி,தொலை தொடர்பு எல்லாத்தையும் வித்தாச்சு. சீ ….. இங்க இருக்கரவுனுங்க கொஞ்சம் கூட இதை எல்லாம் பாகராங்கள…. திருந்துவைன்களா !!!!

  6. Great and very excellent service to humanity by Shri Modi.

    I request, Mrs Sushma Swaraj has to keep quit. I understand that she passed some comments on Shri Modi.

    BJP Chief Shri Katkari has to advice other leaders to avoid the FROG ATTITUDE”.

    – IRUNGOVEL

  7. ஊழலும், லஞ்சமும், அரசியல் கொள்ளைகளும், ஏமாற்றும், புறங்கையை நக்கியது போக இப்போது எடுத்தது அனைத்தையும் கபளீகரம் செய்திடும் அரசியல் நிர்வாகம் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. எதிலும் ஊழல், எங்கும் ஊழல். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? இத்தனைக்கும் மத்தியில் அனுமன் இலங்கையை எரியூட்டிப் பொசுக்கிய பொது அன்னை சீதை இருந்த அசோக வனம் மட்டும் பசுமையாக இருந்ததாம், அது போல ஊழல் மலிந்த பாரத புண்ணிய தேசத்தில் குஜராத் மட்டும் நம்பிக்கை நட்சத்திரமாகத் துலங்குகிறது. இதற்குக் காரணமாக இருந்த மோடியை “மரண வியாபாரி” என்று வாய் கூசாமல் சொன்னவர்தான் சோனியா. இன்று அவரை சி.ஐ.ஏ. எஜன்ட் என்று சொன்னார் என்று சொல்லி சுதர்சனுக்கு எதிராக விஷயம் புரியாத அரைவேக்காடுகளை விட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் காங்கிரசார் தங்கள் அந்நிய மோகத்துக்காகத் தலை குனிந்து அவமானப் பட வேண்டும்.

  8. மாநிலம், மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் இவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கியதன் மூலம், ஐநா சபையின் பொருளாதார துறை நல்ல பேரை தட்டிக் கொண்டுள்ளது. இது போன்ற ஒப்பற்ற ஒருவர் முதல்வராய் கிடைத்ததற்கு அம்மாநில மக்கள் என்ன தவம் செய்தார்கள், தமிழக மக்கள் என்ன பாவம் செய்தோம் என்று ஏங்க வைத்துள்ளது.

    ஆரோக்யசாமி

  9. திரு.ஹரன் அவர்களுக்கு,
    நாளும் ஒரு ஊழல் வெளிவரும் நேரத்தில், எதிர்கால நம்பிக்கையை அளிக்கும் கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி.

    கட்டுரையில் ஒரு பிழை:
    (1)”மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து”

    குஜராத்தில் விவசாயிகளுக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் தரப்படுகிறது. மற்றவர்களுக்கு மட்டுமே 24 மணி நேர மின்சாரம்.

    (2)ஜோதி கிராம் திட்டத்தை நீங்கள் மேலும் விளக்கியிருக்கலாம். சென்னையை தவிர மற்ற இடங்களில் தினமும் 2 மணி நேரம் மின்சாரத்தடை இருக்கும் நிலையில் தமிழர்கள் அறிய வேண்டிய திட்டம்
    இது.

    சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே எந்த அரசியல்வாதியும் பேச
    விரும்பாத ஒரு விஷயம் விவசாயிகளின் மீது விமர்சனம். விவசாயிகளுக்கு
    கொடுக்கும் (இலவசமோ / விலையிலோ) மின்சாரத்திற்கு தனியான
    கணக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. அதாவது விவசாயத்திற்கு
    எவ்வளவு மின்சாரம் செலவானது? மற்ற உபயோகத்திற்கு எவ்வளவு
    மின்சாரம் செலவானது? என்ற கணக்கு எந்த மாநிலத்திலும் இல்லை.
    இதை தவிர்க்க மோடி அரசு, குஜராத் முழுவதும் புதிய மின்சார கம்பிகளை
    நிறுவியது (New set of Transmission lines throughout Gujrat). சில
    தொலைதூர கிராமங்களில் மட்டும் சுவிட்சுகள் பொருத்தப்பட்டன.
    இதன் மூலம் விவசாயத்திற்கு 8 மணி நேரமும், மற்றவர்களுக்கு 24 மணி
    நேரமும் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இதை எதிர்த்த
    சில விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அபராதமும்
    விதிக்கப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல விவசாயிகளுக்கும் இதன்
    அருமை தெரிய வந்தது.

    24 மணி நேரமும் மின்சாரம் என்று கூறிக்கொண்டு, 8 முதல் 14 மணி
    நேரம் மட்டுமே மின்சாரம் அதுவும் எந்த நேரத்தில் என்பது தெரியாது
    என்ற நிலையிலிருந்து,

    8 மணி நேரம் மட்டுமே மின்சாரம். ஆனால் இந்த நேரப்படி கிடைக்கும்
    என்று ஒவ்வொரு தாலுக்காவிலும் அறிவிக்கப்பட்டு விட்டதால் குறிப்பிட்ட
    நேரத்தில் தங்கள் நிலத்திற்கு சென்றால் போதும். மற்ற நேரத்தில் மற்ற
    வேலைகளை கவனிக்கலாம்.

    (3)அடுத்து உங்கள் கட்டுரையில் கடைசியாக “லஞ்சம் என்பதே இல்லை”
    என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நம்பும்படியாக இல்லை. மற்ற
    மாநிலங்களை விட மிக மிக குறைவு என்று கூறலாமே தவிர லஞ்சமே
    இல்லை என்பதை நம்ப முடிய வில்லை.

  10. //“ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது//

    வாத்யார, தமிழ்நாடே இருண்டு கெடக்ரபோது இந்தமாதிரி நியூஸ் போட்டு, ஏங்க வயித்தெரிச்சல கூட்றீங்க?

    ஆண்டவா!!!!!!! அடுத்த ஜென்மத்ல இவர் ஆளற மாநிலத்ல பொறக்கணும்.

    கதிரவன்

  11. I TRAVEL OFTEN TO KUTCH DISTRICT A DESERT REGION WHERE THERE IS NO WATER NORMALLY DUE TO MUDDY SOIL. .BEFORE 10 YEARS WHEN CONGRESS GOVERNMENT WAS THERE, IN THIS KUTCH DISTRICT THERE WAS NO WATER AND WINNESSED FREQUENT POWER CUTS. NO GOOD ROADS AND NO IMPROVEMENT.
    AFTER MODI HAS TAKEN OVER, GOOD IMPROVEMENT STARTED COMING. IN MY LAST VISIT DURING OCT 10, I FIND THERE IS NO ABSOLUTE POWER CUT ANYMORE WITH 24 HOURS UNINTERUPTED POWER SUPPLY AND WATER IS GIVEN TO ALL VILLAGES BY PIPE LINES ( BEFORE FIVE YEARS, IT USED TO COME IN TANKERS TO VILLAGES ).IN 2007 HUGE PIPE LINES WERE BEING LAID IN THIS DISTRICT FROM NARMADA DAM ( BIG OPPOSITION FROM MANY PEOPLE INSTIGATED BY CONGRESS TO STOP IT AS THEY FEAR THAT MODIS IMAGE WILL FLY IN COLORS ONCE THIS PROJECT CAME). NOW I FOUND ALL PIPE LINES WERE LAID AND EACH AND EVERY VILLAGE GETS WATER THROUGH PIPE LINES. THEY HAVE GOOD ROADS. PEOPLE CONSIDER MODI IS THE KING OF GUJARAT WHERE HINDU CULTURE IS BEAMING AND HINDUS ARE PROUD OF C M.
    WHEN I WENT TO AHEMDABAD, I FOUND THE ROADS ARE TWICE THE SIZE OF OUR ANNA SALAI AND THOSE ROADS IN AHEMADABAD , PARTICULARLY GANDHI NAGAR HAVE TWO FLYOVERS IN SINGLE ROAD – WHICH MEANS THE ROAD SIZE IS MUCH BROADER.
    U/STAND MODI DESTROYED MORE THAN 30,000 SMALL PAVEMENT UNAUTHORISED TEMPLES AND UNAUTHORISED 18,000 MOSQUES. CHRISTIANS ARE JUST 0.5% OF POPULATION AS CONVERSION CAN NOT BE DONE THERE. ( BILL IS WITH PRESIDENT)
    WHICH WERE BLOCKING THE ROAD AND HE GOT IT BROADEN AND MADE THE ROADS WIDEN FOR PEOPLE. YET HE IS A PROUD HINDU AND ENCOURAGE HINDU CULTURE. DURING NAVARATIRI, ONE CAN SEE THE ”DANDIYA’ DANCES IN PUBLIC PLAY GROUNDS OR IN GOVERNMENT OWNED OPEN STADIUMS – WHICH ARE AUCTIONED BY GOVERNMENT FOR RENTAL ( GOOD REVENUE TO GOVERNMENT). PEOPLE WHO GO TO THIS FUNCTIONS PAY RS 100 PER PERSON TO THOSE PRIVATE ORGANISERS.

    SO MODI AUGUMENT THE REVENUE OF GOVERNMENT IN EVERY WAY WITHOUT TAXING THE POOR PEOPLE. CONGRESS OFFERED FREEBEE ”TVS’ TO PEOPLE IF THEY COME TO POWER IN THE LAST ELECTION. GUJARATH PEOPLE TOTALLY REJECTED CONGRESS AS THEY DO NOT WANT TO BE THE BEGGERS ( T N PEOPLE MUST LEARN FROM GUJARATIS ). NOW GUJARAT GOVT IS PLANNING FOR A TUNNEL IN THE SEA TO REDUCE THE DISTANCE BETWEEN SURAT AND MUMBAI. GUJARAT HAS 43 SEA PORTS ALL ESTABLISHED BY GUJARAT GOVERNMENT. EARTH QUACK AFFECTED BHUJ TOWN LOOKS NEW AND CHANGED TOWN WITH BIG BUILDINGS NOW.

    SO MODI IF HE BECOMES THE PM, WILL TURN INDIA IN TO THE NO 1 COUNTRY IN THE WORLD BECOUSE HE KNOWS THE ECONOMIC. HE CAME FROM A POOR FAMILY AND BECOUSE HIS BLOOD IS RUN BY RSS, HE HAS THE OUTLOOK OF BOTH NATIONALISM AND SPIRITUALISM. LONG LIVE SHRI MODI.

  12. நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்களாக எத்தனையோ இலட்சம்
    பேர்கள் இருப்பது போலவே நானும் ஒரு ஆதரவாளன். ஆனால் அவரின்
    மீது எனக்கு சில குறைகளும் உண்டு.

    (1)பா.ஜ.க வின் தலைவர் ஜஸ்வந்த் சிங்க் இந்திய சுதந்திர வரலாற்றை
    பற்றிய ஒரு புத்தகத்தில் சர்தார் வல்லபாய் படேலை விமர்சித்தும்,
    ஜின்னாவை ஆதரித்தும் எழுதியிருந்தார். இந்த புத்தகம் குஜராத்தில்
    தடை செய்யப்பட்டது. மோடி அரசு செய்தது தவறே என்பது என்
    அபிப்பிராயம். ஜனநாயகத்தின் முக்கிய உறுப்பாக விளங்கும் எழுத்துரிமையின் படி, மோடி பலரின் எதிர்ப்புக்கு இடையேயும் அந்த
    புத்தகத்தை தடை செய்திருக்க கூடாது என்பது என் கருத்து.

    (2)அடுத்து இன்றைய குஜராத்தில் பா.ஜ.கவின் ஒரு முக்கிய முகமாக
    மோடி அவர்கள் இல்லாமல், “ஒரே ஒரு” முகமாக விளங்குகிறார். 2ம் கட்ட
    தலைவர்கள் பா.ஜ.கவிலிருந்து பேசுவதில்லை. தொலைநோக்கில்
    பா.ஜ.கவும் திரு.மோடியும் கவனிக்க வேண்டிய விஷயமிது.

    (3)உங்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட “மது விலக்கு” நடைமுறை
    சாத்தியமற்றது. சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் பூரண மது விலக்கு
    மனித சமுதாயத்தில் என்றுமே நடைமுறையில் இருந்ததில்லை. இன்றும்
    பணக்காரர்கள் கூடும் குஜராத்தின் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு மது கிடைக்கும். மது குடும்பத்தை அழிக்கும் என்று கூறிக்கொண்டே
    இருக்க வேண்டியது நம் கடமை. ஆனாலும் அதை மீறி ஒரு சிலர் மதுவை
    அருந்தி கொண்டுதான் இருப்பார்கள். ஏழைகளுக்கு மது கிடைக்கவில்லை
    என்றால் கள்ளச்சாராயத்தை யாரேனும் காய்ச்சத்தான் செய்வார்கள்.
    சில மாதங்களுக்கு முன் கள்ளச்சாரயத்தை அருந்தி குஜராத்தில் பலர்
    உயிரிழந்தது ஞாபகமிருக்கும். என் யூகத்தின்படி குஜராத்தில் பல
    இடங்களில் இப்பொழுதும் கள்ளச்சாராயம் கிடைக்கும் என்றே
    நினைக்கிறேன்.

    காந்திஜி பிறந்த மாநிலம் என்பதால் மது விலக்கை தடை செய்ய ஒரு
    மனத்தடை குஜராத்தில் பலருக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  13. குஜராத்தில் ஐந்து வருடங்களுக்கும் மேல் இருந்திருக்கிறேன். அப்போதும் ஆரவாரமற்ற தேர்தல்கள் இரண்டைச் சந்தித்திருக்கிறோம். அத்வானியின் ரத யாத்திரை ஜாம்நகர் வழியாகவே சென்றது. அப்போதும் குஜராத் அமைதியாகவே இருந்தது. ராஜீவ் காந்தி கொலையின் போதும் அமைதி காத்தது. பொதுவாகவே அமைதியை விரும்பும் மக்கள், எல்லாவற்றுக்கும் மேல் இதயபூர்வமான பக்தி, கலாசாரத்தையும், தாய்மொழியையும் எந்தச் சூழ்நிலையிலும் விடமாட்டார்கள். சற்றும் கெளரவம் பார்க்காமல் கோயில்களிலும், பஜனைகளிலும் ஆடிப்பாடுதல், பக்தர்களுக்குத் தொண்டு செய்தல், மரியாதை காட்டுவது, முடிந்தவரை அன்னதானம் அளிப்பது, ஆயுர்வேத மருத்துவம் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் அதற்கு எனச் சிறப்பு முக்கியத்துவமும் கட்டணக்குறைப்பும். ஆட்டோக்காரர்கள் கூட அதிகப் பணம் வாங்காமல் குறைந்த பட்சம் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்குக் கூட ஆட்டோ ஓட்டி வருவார்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வருட ஆரம்பத்தில் பெப்ரவரியில் பரோடாவில் 21 நாட்கள் இருந்தோம். அங்கிருந்து டகோர் சென்று வர ஆட்டோக் கட்டணம் வெறும் ஐநூறு ரூபாய் தான். போகவர 160 கிமீ கிட்டத் தட்ட. இதையே சென்னையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. மற்ற மாவட்டங்களில் இன்னும் அதிகம் ஆகும்! :((( என்னைப் பொறுத்த வரையில் குஜராத் அப்போவும் சொர்க்கபூமியாகவே இருந்தது. இப்போதும்!

  14. ஆனால், இந்த முன்னேற்றமெல்லாம் நிலையானது என்று நினைக்கிறீர்களா?

    கோடி புகழில் நம்மிடையே இருக்கும் ஓட்டைகளை நாம் கவனிக்க மறந்துவிட்டோம்..

    உதாரணத்திற்கு உங்கள் கட்டுரையிலேயே காட்டறேன்..

    /** முக்கியமான பெரிய அணை 121.9 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இது உலகத்திலேயே பெரிய கான்கிரீட் அணையாக 8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
    …….
    …….
    ராஜஸ்தானிலுள்ள 75000 ஹெக்டேர் நிலம் உட்பட 1.845 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்குப் நீர்பாசனம் கிடைக்கும்.

    **/

    மேலே உள்ள முரண்பாடுகளை காணுங்கள்.. 8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மூழ்கடித்து, 1.8 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு பாசனம் .. இதில் உள்ள முட்டாள்தனத்தையும் முரண்பாடுகளையும் நாமே புரிந்து கொள்ளலாம்..

    அந்த 8 மில்லியன் ஹெக்டேர் மூழ்கிப்போனதில், எவ்வளவு காடுகள் அழிந்திருக்கும்.. எத்தனை காட்டு விலங்குகள் அழிந்திருக்கும்.. தாவர வகைகள்.. ஒரு இயற்கை சூழலையே அழித்துவிட்டு எந்த விதத்தில் நாம் முன்னேற போகிறோம்..

    ஹிந்து மதன் என்று வாய் கிழிய பேசுகிறோமே.. அந்த ஹிந்து மதம் என்பது சனாதன தர்மம் என்பதுதானே.. எல்லா ஜீவராசிகளும் இந்த உலகில் நலமாய் வாழ்ந்து, மனிதர்களும் நலமாய் வாழவேண்டும் என்பதுதானே சனாதன தர்மத்தின் சாராம்சம்.. இந்த் உயரிய குறுக்கோள்களுக்காகவே ஒவ்வொருவருக்கும் ஒரு சுயதர்மத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்?

    இந்த குஜராத் முன்னேற்றத்தில் எங்காவது சனாதன தர்மம் உள்ளதா?

    ரெண்டாவது, மெக்காலைட் கல்விமுறையை எந்த விதத்திலாவது மோடி மாற்றியுள்ளாரா? இல்லையென்றால, நாம் எதற்காக மெக்காலேவை குறை சொல்ல வேண்டும்?

    கிராமிய தொழில்களுக்கு ஏதாவது மோடி செய்துள்ளாரா?

    விவசாயத்தில் பி.டி பருத்தியை நுழைத்துவிட்டது எதற்காக?

    இயற்கை விவசாயத்திற்கு என்ன செய்திருக்கிறார்.. மாறாக அவருடைய மத்திய மந்திரியில் இருக்கும் விவசாய அமைச்சர், இயற்கை விவ்சாயத்தை பரப்பும் ஆர்வலர்களை “ஆர்கானிக் டெரரிஸ்டு என்று சொல்கிறார்.. அதிலேயே மொடியின் மொத்த அரசாங்கமும் எப்படி செயல்படுகிறது என்று நான் புரிந்து கொண்டேன்..

    மோடியின் இந்த் குஜராத் முன்னேற்றத்தில் என்னெவெல்லாம் பாதிப்புகள் நடந்துள்ளன என்று யாராவது யோசித்ததுண்டா?

    வலிமையை (power – either economic or military) வைத்து மட்டுமே எடைபோடும் பழக்கம் நமக்கும் தொற்றிக்கொண்டது மிகவும் வேதனக்குறியது..

  15. மோதி முதலமைச்சர் ஆன ஆறு மாதங்களில் குஜராத் கலவரங்கள் நிகழ்ந்தன. அதற்குப் பழியை மோதி மீது போடுகிறார்கள் சிலர். ஆறு மாதங்களில் ஒரு படையைத் தயார் செய்து ஒரு ரயில் எரிப்பு சம்பவத்தையும் நிறைவேற்றி (அதில் ஹிந்துக்களையே கொன்று) முஸ்லிம் சமூகத்தையே ஒருவர் அழிக்க முடியும் என்றால் அவர் superman போன்ற திறமைகளை உடையவராக இருக்க வேண்டும். அல்லது (காங்கிரஸ் பல வருடங்கள் ஆட்சி புரிந்த)குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தின் மேல் ஹிந்துக்களுக்கு ஒட்டு மொத்தமாக வெறுப்பு இருந்திருக்க வேண்டும். அது கோத்ரா சம்பவத்தினால் வெடித்திருக்க வேண்டும்.எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் மோதி scape goat .

  16. ஹிந்துஸ்தானத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரீ நரேந்திர மோதி. குஜராத் மாநிலம் அவரது சீரிய நிர்வாகத்தில் முன்னேறி வருவதை நண்பர் பி. ஆர். ஹரன் விரிவாகப் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் பிற மாநிலங்களின் முதல்வர்கள், நிதி அமைச்சர்கள், முக்கிய துறைகளை வகிக்கும் அமைச்சர்கள், அரசு செயலர்கள் ஆகியோர் முறை வைத்துக்கொண்டு குஜராத் சென்று கள ஆய்வு செய்து நேரடியாகவே நிர்வாக நடைமுறையினைக் கண்டறிந்து அதனைக் கடைப் பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பது என் விருப்பம். மாநிலம் ஆனாலும், மத்திய ஆட்சி என்றாலும் ஒருமுறை பொறுப்பு பா.ஜ.க. விடம் சென்றுவிட்டால் அதன் பிறகு அது கை மாறவே கூடாது என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன். சரியான நிர்வாகம், மக்கள் நல நடவடிக்கைகள் மூலம் இதை சாதிப்பது பா.ஜ.க. வின் கையில்தான் உள்ளது. ஆனால் குஜராத்தைத் தவிர வேறு எங்கும் இது சாத்தியமாகவில்லை. மோதியிடம் கற்றுக் கொள்வதற்கு பதிலாக அவர் மீது பொறாமை கொள்ளும் விசித்திரம்தான் நான் காண்பது!

    2004 மக்களவைத் தேர்தலின்பொது நான் ஹிமாசல பிரதேசத்தில் இருந்தேன். அங்கு ஒரே ஒரு மாவட்டத்தில்தான் முகமதியர் குறிப்பிட்ட அளவு உள்ளனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் முகமதியரின் மொத்த எண்ணிக்கையே வெறும் இரண்டு சதம்தான்! அங்கு பா.ஜ. க. எளிதில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்பதே தொடக்கத்தில் வழக்கமாக இருந்தது. ஆனால் பின்னர் மக்கள் அதிருப்தியடைந்து காங்கிரஸ்-பா.ஜ.க. என்று மாற்றி மாற்றி ஆட்சி வாய்ப்பை அளிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம் நிர்வாகத்தில் போதிய அக்கரையின்மைதான். ஹிந்துக்கள் வாக்குகள் தாமாகவே கிடைத்துவிடும் என்கிற மெத்தனமும்தான். தமது தவறு எங்கு உள்ளது என்று ஆராய்வதற்கு பதில் மக்கள் மீது ஆத்திரம் வேறு!
    2004 மக்களவைத் தேர்தலின்போது ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள நான்கே நான்கு மக்களவைத் தொகுதிகளில் மூன்று இடங்களில் காங்கிரசும் ஒரே ஒரு இடத்தில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றன. நான் வாக்காளர்கள் பலரையும் சந்தித்து, ’ஹிந்துக்களாக இருந்தும் பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிககவில்லை’ என்று விசாரித்தபோது இதுவரை ஹிந்துக்களுக்காக பா.ஜ. க. என்ன செய்திருக்கிறது, எந்த விதத்தில் அது காங்கிரசிலிருந்து வேறுபடுகிறது என்று சொல்லுங்கள் என்று விவரமறிந்த வாக்காளர்கள் எதிர்க்கேள்வி கேட்டனர். இதுதான் இன்றைக்குள்ள பிரத்தியட்ச நிலைமை.

    பா ஜ க வாய்ப்புப் பெற்றுள்ள பிற மாநிலங்களில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலுமே மோதி அவர்களை அடிக்கடி அழைத்து அவரை முக்கிய நகரங்களில் பேச வைக்க வேண்டும். குஜராத் சாதனைகள் குறித்து அவர் வாய்மொழியாகவே மக்கள் விவரம் அறியச் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அது நாட்டுக்கும் நல்லது, பா.ஜ.க.வுக்கும் நல்லது. மோதியின் மீது சிலர் பொறாமைப்படுவதையும் அவர் ஏதோ தமக்கெல்லாம் போட்டியாக வந்துவிட்டார் என்பதுபோல நடந்துகொள்வதையும் முதலில் நிறுத்த வேண்டும்.

    ஸ்ரீ நரேந்திர மோதியை நான் நன்கு அறிவேன். இன்று அவர் எவ்வளவு பொறுமையாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். மோதி ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்கும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    -மலர்மன்னன்

    (edited and published)

  17. பல நல்ல திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களைப் பற்றி அருமையான கட்டுரையை வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. தினசரி செய்தித்தாள் படித்தாலும் எங்களுக்குத் தெரியாத பல அருமையான தகவல்களைத் தந்துள்ளீர்கள். பின்னூட்டத்தில் வந்து சில கூடுதல் தகவல்களைச் சொல்- உள்ளவர்கள் ஆட்டோ கட்டணம், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் நேரம் குறித்துத் தகவல் தந்துள்ளனர். மிகப் பெருமையாக உள்ளது. நல்ல திட்டங்கள் யார் மூலம் பாரத நாட்டுக்குக் கிடைத்தாலும் அவரைப் பாராட்ட வேண்டியது ஒவ்வொரு இந்தியனது கடமையே. தங்களுக்கு மிக்க நன்றி.
    ம ச அமர்நாத்

  18. ஸ்ரீ மோதி ஆட்சி குறித்து எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் பிற மாநில நிலவரங்களைப் பார்க்கையில் ஸ்ரீ மோதியை மிகவும் பாராட்ட வேண்டியுள்ளது.
    1. லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆனால் மோதி லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெருமளவு குறைத்துவிட்டார்.
    2. கள்ளச் சாராய நடமாட்டம் மதுவிலக்கு இல்லாத இடங்களிலும் இருந்துகொண்டுதானிருக்கும். மதுவிலக்கு இருந்தால் ஒளிவு மறைவாக, அச்சப்பட்டுக் கொண்டு குடிப்பார்கள். அதனால் பிறருக்குக் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படாது. மதுவிலக்கு இல்லாத இடங்களில் பள்ளி மாணவர்கள்கூடக் குடிக்கப் பழகிவிடுகிறார்கள். வசதியுள்ளவர்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பெர்மிட் வைத்துக்கொண்டு குடித்துவிட்டுப் போகட்டும். நடுத்தர வர்க்கத்தினரும் எளியோரும் சீரழியாமல் காக்க மதுவிலக்கு உதவும். எதற்கும் துணிந்தவர்கள் மட்டுமே திருட்டுத்தனமாகக் குடிப்பார்கள். சாலை விதிகள் ஒழுங்ககக் கடைப் பிடிக்கப்படுவதில்லை என்பத்ற்காகச் சாலை விதிகளைக் கைவிடலாமா?

    1967-ல் அண்ணா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றதும், மதுவிலக்கு கைவிடப்படுமா என்று நிருபர்கள் கேட்டபோது, “I am an addict to prohibition” என்று சொன்னார். அதன்பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்ன கருணாநிதியோ ராஜாஜி தமது சுய மரியாதையையும் விட்டுக்கொடுத்து வீடுதேடி வந்து விண்ணப்பித்தும் மதுவிலக்கை ரத்து செய்தார். இன்று தமிழ் நாட்டில் பள்ளி மாணவர்கள் கூடக் குடிப்பதைப் பெருமையாகக் கருதுவதைக் காண்கிறேன்.
    3. பெரிய நீர்த் தேக்கங்களால் நன்மையைவிடத் தீமையே அதிகம். பரவலாக சிறு சிறு நீர்பிடிப்புகளை உருவாக்குவதே புத்திசாலித்தனம். குஜராத்தைப் பொருத்த வரை நீரில் மூழ்வது பெரும்பாலும் வறண்ட நிலமே என்றாலும் அதுவும் இழப்பே.
    4. ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது மெத்தவும் சரியே. ஏற்கனவே பல விதங்களிலும் பிற மாநிலங்களைவிட நன்றாக இருந்துவந்த குஜராத், ஸ்ரீ மோதி ஆளுகையில் மேலும் சிறப்படைந்துள்ளது என்பதே உண்மை.

  19. இந்தியர்களுக்காக என்று மோடி உழைக்க ஆரம்பிக்கிறாரோ, அன்று முதல் இந்தியாவும் நல்ல நிலைமையை அடைய ஆரம்பிக்கும்! நன்றி!

  20. மோடி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
    மிக எளிமையாக வாழ்கிறார்.
    ஒரு சிறிய வீட்டில் ஒரு உதவியாளர், ஒரு சமையல் செய்பவர் இவர்கள் தான்.
    ஜால்ராக்களை அருகில் சேர்ப்பதில்லை.
    யாருக்கும்- தன கட்சியினர் ஆனாலும் சட்டத்துக்குப் புறம்பாகவோ .விதிகளை மீறியோ எந்த உதவியும் செய்வதில்லை.
    அதனால் அவருக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன.
    நிச்சயம் மோடி ஒரு வித்தியாசமான மனிதர்,நேர்மையான தலைவர்.
    இன்று நாறிக் கொண்டிருக்கும் அரசியலில் நறுமணம் பரப்பும் நன்மலர்.

  21. பட்டின குடிபுகல் குஜராத் மாநிலத்தில் தான் அதிகம் என்றும் குஜராத்தின் ஊரகப் பகுதிகளிலிருந்து குடியேறுபவர்களில் 90 விழுக்காடு குஜாரத்திலேயே இருக்கிறார்களென்றும் வெளி மாநிலகளுக்குச் செல்வதில்லை என்றும் தேசிய புள்ளிவிவரத் துறைத் தெரிவிக்கறது. இது குஜராத்தின் வளர்ச்சிக்கு மற்றொரு சான்று.
    மோடியின் சாதனை வியப்பான உண்மை.
    ஊழலற்ற அரசு என்பதை அரசியல் தளத்திற்கு உட்பட்டே பொருள்கொள்ள வேண்டும் என்ற நினைக்கிறேன். காசு கொடுத்தால் கைதாணை (warrant) என்ற உண்மையை கலாம் மீது கைதாணையை குஜாரத்திலிருந்தே பெற்றார்கள்.
    சட்டிஸ்கரில் ராமன் சிங் பொதுவிநியோக முறையை மேம்படுத்தியிருப்பதாகவும் படித்தேன். மற்ற பா ஜ க முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?
    மோடி எப்போது தில்லியில் அரங்கேறுவார்?

  22. முன் உதாரணம் என்ற பட்டியலில் இடம்பெற்றவர்கள் சுதந்திரத்தின் போது நாடு முழுவதும் கொட்டிகிடந்தார்கள் அதனால் நாம் விடுதலை பெற்றோம். ஆனால் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நமது போராதகாலம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று விரல்விட்டு எண்ணகூடிய அளவுக்கு ஒருசிலரே இருக்கிறார்கள். அந்த படடியலில் மோதி இடம் பெற்று வெகுநாட்கள் ஆகிவிட்டது மகிழ்ச்சியே.

    இப்படி உருவாகவேண்டிய தலைவிதான் ஜெயலலிதா. ஆனால் அவர் வாய்த சந்தர்பத்தை தகாத சகவாசங்களால் நழுவவிட்டு ஒரு நம்பிக்கை இல்லாத தன்இச்சையாக செயல்படும் கீழ் நிலைமைக்கு சென்றுவிட்டார். திருந்துவார் என்பதற்கான அறிகுறிகளே தெண்படவில்லை. இவர் செய்வது போல் மோதி தன்பின்னால் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்காமலம் விட்டால் அது அவரது முன்னேற்றத்திற்க்கு நல்லது அல்ல. இதற்க்கு அவர் வாஜ்பாய் அத்வானி போன்ற தலைவர்களை பின்பற்றவேண்டும். அதைபோல் வெளிநாட்டினர் அளிக்கும் பட்டங்களுக்கு மயங்கி பெரும்பான்மை இந்துக்களுக்கு பாதகம் விளைவிக்ககூடிய செயல்களில் இறங்காமல் இருப்பதே நல்லது.

    வாசகர்கள் சுட்டிகாட்டிய சில குறைகளை நிவர்திசெய்யவேண்டும். நான் பணியில் இருந்துபொழுது சிலதடவை குஜராத் சென்று வந்தேன். அப்பொழுது நான்கண்ட பெரிய குறை பலதொழில் நிறுவனங்கள் தாங்கள் விற்கும் பொருட்களுக்கு உண்டானமதிப்பை குறைத்து காட்டியும் பில்லே போடாமலும் அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய வரியை சரிவர செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள். இதைபோல் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கும் (under estimated bill or without bill) கொடுத்தால்தான் நம் பொருட்களை வாங்குவேன் என்கிறார்கள். இது சட்டபடி குற்றம் சிறை தண்டனை உண்டு. இந்தபோக்கு குஜராத்தில் மிகவும் அதிகம்.

  23. .BEFORE 10 YEARS WHEN CONGRESS GOVERNMENT WAS THERE, IN THIS KUTCH DISTRICT THERE WAS NO WATER AND WINNESSED FREQUENT POWER CUTS. NO GOOD ROADS AND NO IMPROVEMENT.//

    கட்ச் மாவட்டம் புஜ் நகரில் நாங்களும் இருந்திருக்கோம். ஜாம்நகரில் இருந்து புஜ்ஜிற்குப் பேருந்துப் பயணம் தான் செய்தோம். சாலைகள் அப்படி ஒன்றும் மோசமாய் இருந்தது இல்லை. மேலும் குஜராத்தின் சாலைமேம்பாட்டுப் பணியாளர்கள் ஒவ்வொரு 3 கி.மீட்டருக்கும் ஒரு சின்ன அலுவலகம் வைத்திருப்பார்கள். சாலையில் பள்ளமோ, வேறு ஏதானும் பிரச்னையோ இருந்தால் அங்கே நாம் புகாரைப் பதிவு செய்தால் உடனுக்குடன் தாற்காலிகமாகச் செப்பனிடப்படும். பின்னர் இரவு நேரங்களில் போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரங்களில் முழுமையான பராமரிப்பு நடக்கும். தண்ணீருக்கும் பிரச்னை இருந்தாலும் எவரும் வந்து தெருக்குழாய்களிலோ, தண்ணீர் லாரிகளிலோ சண்டை போட்டுக்கொண்டது இல்லை. அவங்க அவங்களுக்கு வேண்டிய தண்ணீரை மெளனமாய்பிடித்துச் செல்வார்கள்.

    ஒவ்வொரு கிருஷ்ண ஜயந்திக்கும் நடக்கும் மேளா எனப்படும் சாத்தம், ஆட்டம்(சப்தமி,அஷ்டமி,நவமி)விழாவில் கூடும் கூட்டத்திற்கு எந்தவிதமான கலவரமும் இல்லாமல் மக்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் கலந்து கொள்ள முடியும். முதலமைச்சரோ, அவரின் மகனோ, மற்ற அமைச்சர்களோ நாம் பெயர் சொல்லிக் கூப்பிடலாம். மோதி அவர்களை மோதிபாய் எனக் கூப்பிடலாம். அதுபோலவே மற்ற அமைச்சர்களும். நாங்க பரோடாவில் இருந்தபோது இருமுறை மோதி வந்தும் எந்த ஆர்ப்பாட்டமும், போக்குவரத்து மாற்றுவது போன்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல், ஊர்வலம் போன்றவை இல்லை.

  24. Modiji has been the best CM of any Indian state in the recent years. Thanks for bringing out his influence in Gujarat to the Tamil Hindus.
    Secularism or Hindutva cannot be factors for selecting a party for government. The bottomline is “Governance” and even if a pseudo secularist gives good governance, he would be chosen. My clear understanding on the word secularism in the context of indian politics is “Secularism-anti-Hinduism”; Communalism – NO ANTI HINDUISM. Communalism is not even pro-Hinduism, but only limited to NO ANTI HINDUISM.
    The Indian citizens of religious minorities constituting mainly Christians and Muslims (by the Secular politicians) are now pampered so much that they expect not only favouritism to them, but also one should evidently show their anti-Hinduism. This is not directly the fault of the people belonging to minorities, but they are taught by Mulayam singhs, Dig vijay Singhs, Laloo Yadavs, P.Chidambaram… There is the process of building “Vote banks”
    Congress is an expert in doing simultaneously of providing grants/ concessions / reservations to the minorities and at the same time arrange fulltime propaganda organs like Digvijay Singh, Manish Tiwari etc. against Hindu activists.

  25. தென் குஜராத்தில் சர்காம் நகரத்தில் குஜராத் ஆரசின் ரசாயனத் தொழிற்பேட்டை இருக்கிறது. அங்கிருந்து கழிவுகள் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டடி விட்டமுள்ள குழா வழியே கடலுக்கு எடுத்துச் சென்று கொட்டப்படுகிறது. தினசரி 12 மில்லியன் லிட்டர் கழிவு.வழியில் தட்காம், சரோண்டா, நர்கோல், மரோலி ஆகிய கிராமங்கள் இருக்கின்றன.

    நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழி, நெடுக ஆங்காங்கே ஒழுகுகிறது. அதனால் நிலத்தடி நீர் மாசாகி நான்கு கிராமங்களிலும் விவசாயமும் குடிநீரும் பாதிக்கப்பட்டுவிட்டது. அடி பம்ப்பில் தண்ணீர் சிவப்பாக வருகிறது. அரிசியையும் பருப்பையும் அந்தத் தண்ணீரில் வேகவைப்பது மிகக் கடினம். தண்ணீரிலேயே ரசாயன வாடை வருகிறது. தட்காம் கிராமக் கடற்கரையில் கழிவுகள் குழாயில் வந்து விழும் இடத்தருகே கொஞ்ச நேரம் நின்றாலே குமட்டலும் மூச்சுத் திணறலும் ஏற்படுவதாகப் பத்திரிகையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    நான்கு கிராமங்களிலும் மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் தோல் நோய்கள், நுரையீரல் பிரச்னை, ஜீரணக் கோளாறுகளுடன் அவதிப்படுகிறார்கள் என்று அந்த வட்டார மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கடலில் மீன் வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாப்பி தொழிற்பேட்டையின் கழிவுகளால் டாமன் டையூ கடற்பகுதி மீன்வளம் 65 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஆவுகள் தெரிவிக்கின்றன. தட்காம் கடற் பகுதியும் அருகிலேயே உள்ளது. மீன்வளம் பாதிக்கப்பட்டுவிட்டதால் வருடத்தில் நான்கு மாதங்களில் மட்டுமே மீன் கிடைக்கிறது.

    குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் குழாயைத் தாங்கியிருக்கவேண்டிய சிமென்ட் உடைந்து விட்டது. கடலுக்குள் செல்லும் குழாயே முழுத்தொலைவும் செல்லாமல் பாதியில் உடைந்து, அதன் ஃபில்டர்கள் பழுதாகிவிட்டன.

    இத்தனை சீர்கேடுகளைப் பற்றியும் வாரியம் பொருட்படுத்தவில்லை, எனவே தட் காமில் உள்ள ஒரு குடியிருப்போர் சங்கமும் நான்கு கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களும் குஜராத் உயர்நீதி மன்றத்தில் சென்ற வருடம் வழக்குத் தொடுத்தனர். கழிவுகள் குழா வழியே அனுப்பப்படும் விதத்தைக் கண்காணிக்க, அதற்கென அமைக்கப்பட்ட நிறுவனம் தவறிவிட்டதாக அதன் வக்கீல் கோர்ட்டிலேயே ஒப்புக் கொண்டார்.

    விதிகளின்படி கழிவின் அளவு கடல் நீரில் எந்த விகிதத்தில் இருக்க வேண்டுமென்றால், ஒரு மீன் அதில் 90 நாட்கள் வரை உயிர் வாழ முடியவேண்டும். தட்காம் கழிவைச் சோதனைக்கு அனுப்பியதில் ஒரு மீன் அதில் ஒரு மணி நேரம்கூட உயிருடன் இருக்க முடியாது என்பது தெரியவந்தது. கடலுக்குள் செல்லும் குழா இரண்டு கிலோ மீட்டர் வரை உள்ளே செல்ல வேண்டும், நிலத்தில் குழா ஆறடிக்குக் கீழே புதைக்கப்படவேண்டும் என்ற விதிகளும் பின் பற்றப்படவில்லை. கடலுக்குள் செல்லும் குழா உடைந்து 6 வருடங்களாகிவிட்டன. இப்போது புதுக் குழாயைத் தினசரி 24 மில்லியன் லிட்டர் கழிவு கொண்டு செல்ல வசதியாக அமைக்கலாமா என்று அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.

    குஜராத்தில் நடக்கும் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழல் இல்லை, திறமையான நிர்வாகம் நடக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. மோடியின் மதவாதக் கொள்கைகளை விமர்சிக்கிறவர்கள் கூட சமயங்களில் அங்கே ஊழல் குறைவு என்று சோல்கிறார்கள்.

    அங்கேயே இந்த நிலை. தமிழ்நாட்டில் ஒரு லாரி மணல் எடுக்க அனுமதித்தால் ஆறு லாரி அள்ளுவதற்கான லஞ்சப்பணத்தைக் குடும்பத்தில் ஒருவருக்கான வருவாயாக ஒதுக்கித் தரும் அளவுக்கு ஊழல் ஆட்சிகள் தான் நம் தொடர்ந்த அனுபவம். திருப்பூரில் தொழிலதிபர்களிடமிருந்து வசூலித்து அமைச்சரிடம் பணம் தருவதுதான் எம்.எல்.ஏ.வின் மக்கள் பணி என்று ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

    நொயல் போன்ற அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு அக்கப்போர் அரசியல் ரிப்போர்ட்டிங்கில்தான் நம் மீடியாவும் இருக்கிறது. திருப்பூர் கரூர் சாயப்பட்டறைகள் பற்றி விமர்சித்தால் உடனே அவை கோடிக்கணக்கில் அந்நியச் செலாவணி சம்பாதிப்பதைத் தான் சமாதானமாகச் சோல்கிறார்கள். நம் ஆற்றையும் நம் விவசாயத்தையும் கெடுத்துவிட்டு எதற்காக அந்த அந்நியச் செலாவணி என்ற கேள்விக்குப் பதில் வராது.

    நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்காவும் மேலை நாடுகளும் ஏன் அவர்கள் நாட்டில் இந்தச் சாயக் கழிவு, தோல் பதனிடும் கழிவுத் தொழிலை அனுமதிக்கவில்லை என்று யோசிக்க வேண்டும். அவர்களுடைய சூழலைக் காப்பாற்றி நம் முடையதைக் கெடுத்துக் கொண்டு அந்நியச் செலாவணி யாருக்காகச் சம்பாதிக்கிறோம்?

    நேர்மையான பதில்களைத் தேடுவோமா?

  26. சில ஆண்டுகளுக்கு முன் நான் அகமதாபாத் சென்று ஒரு வாரம் தங்கி இருந்தேன். நான் எப்போதும் கதர் நான்கு முழ வெட்டி, கதர் அரைக்கைச் சட்டை அணிவேன். பாரதத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும் என் உடை அதேதான். அப்படி ஒரு நாள் நான் ‘லால் தர்வாசா’ எனும் பகுதிக்குச் சென்றுவிட்டு நடந்து திரும்பிவந்த போது ஒரு பேனா கடைக்காரர் என்னை அழைத்தார். என்னை கடையில் உட்கார வைத்து உன் ஊர் எது என்றார். நான் தஞ்சாவூர் என்றேன், அது எங்கே இருக்கிறது என்றார். தமிழ் நாட்டில், நீங்கள் ராமேஸ்வரம் செல்லும் வழியில் என்றேன். அவர் உனக்கு இந்த ஊர் பிடித்திருக்கிறதா என்றார், ஆம் என்றேன். ஏன் என்றார். இங்கு காணப்படும் அமைதி, எங்கும் சைவ உணவு, எல்லாவற்றையும் விட பூரண மது விலக்கு என்றேன். ஆம்! மகாத்மா காந்தி பிறந்த மண் என்றார். நிறைய பேசிவிட்டுக் கிளம்பும்போது என்னிடம் ஒரு பாக்கெட் பேனாவைக் கொடுத்து, உன் நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து ஒரு குஜராத்தியின் பரிசு என்று சொல் என்றார். நான் மகிழ்ந்தேன்.

  27. Dear All

    I have no doubt Mr.Narendra Modi is doing a fantastic job for Gujarat when compared to other Chief Ministers in other state including some of the BJP Chief Ministers. I have been travelling to Gujarat very often and can say the transformation of Kutch region as a classic example after the earth quake. But feel we are going over board in our praise for Gujarat.

    There is a big black market for liquour. You can get also a permit for 2 days if you have rail ticket or an air lines ticket and also if you can prove you are from outside the state. We can notice in some of the railway stations TTR trying to collect tickets from everyone to sell to brokers. Liquour is being smuggled from Rajasthan very regularly through transport network. Liquour is not fully abolished and it is thriving well in black market.

    No land registration in Gujarat is straight. Though I agree we can say this for many of the states in India, the % in Gujarat is pretty high. It is 80-75% black and 25% white. This is a big revenue loss to Government.

    The second level cities like Gandhidham (just 70 kms and 40 kms from Bhuj and Kandla) lack civic amenities. It is pretty bad. We can defenitely improve this. We cannot say there is no corruption, but not to the extent in other states. Especially as of now, I have not seen any major charge against Mr.Modi.

    Agree there are lot of good things. But feel we cannot go over board in our praise for any one.

    Best regards

    Siva

  28. திரு நரேந்திர மோடி அவர்கள் தன் பணி தனி பாணி என்று இருந்து கொண்டு கட்சி தனக்குக் கொடுத்த முதல்வர் பதவியை அலங்கார அகங்கார பதவியாக நினைக்காமல் மக்களுக்கு பணிபுரிய கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். திரு மோதி அவர்கள் ஆளும் மாநிலத்தில் பிறக்கவேண்டுமென்று ஒருவர் சுயநலத்தோடு எழுதியிருந்தார் எனக்கு அப்படியெல்லாம் பேராசை இல்லை .அவர் பிரதமராகவுள்ள நாட்டில் நான் வாழ வேண்டும் அவ்வளவே.அவர் பற்றி சிலர் புகழ்வதுபோல் இகழ் மொழி கூறி இருப்பதையும் வெளியிட்டுள்ள தமிழ் ஹிந்துவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.திரு வல்லபாய் பட்டேல் அவர்களைப் பற்றி தரக்குறைவாய் எழுத யாருக்கும் அருகதை இல்லை.அந்த புத்தகத்தை தடை செய்தது மிகச்சரியே.குஜராத் மக்களுக்கு கிடைத்த மோடி அவர்களின் திறன்மிக்க ஆட்சி முழு இந்தியாவுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன்.அருள் புரிய வேண்டும்..
    ஈஸ்வரன்,பழனி.

  29. வணக்கம் ஐயா !

    உங்கள் வலைதளத்தில் செய்திகளை படிக்க என்ன ’பாண்ட்’ தேவை? எங்கு கிடைக்கும் ? ’பாண்ட்’ அனுப்பிவைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    கலிவரதன்

  30. வல்லபபாய் படேல் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
    அவரைப் பற்றி தரக் குறைவாக எழுதப்பட்ட புத்தகத்தை மோடி அவர்கள் அனுமதித்திருந்தால் உடனே,காங்கிரஸ் இதுதான் சந்தர்ப்பம் என்று – குஜராத்தின் மைந்தரை மோடி கேவலப் படுத்தி விட்டார் என்று ஊர் பூரா தமுக்கு அடித்திருப்பார்கள்.அது மோடி அவர்களுக்கு பெருத்த சங்கடத்தை விளைவித்திருக்கும்.

  31. மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவின் வல்லரசு ஆகும்.

  32. வாழ்க மோடி
    வாழ்க மோடி
    வாழ்க மோடி
    வாழ்க மோடி
    Sir,
    I LIKE மோடி BUT THIS COMMANT IS MY OTHER VIEW ONLY DON’T MISTAKE ME.

    Mr. MODY IS CM OF THE ONE OF THE STATE IN INDIA HE TRINED BY RSS AND BJP
    SO DON’T PUSS THE MEDIA AND PEPOLE MODY IS A SUPER MAN [BUT I THINK HE IS A SUPER MAN] TRY TO ALL OVER INDIA RSS AND BJP’s EVERY PERSON AND EVERY MAN LIKE Mr. MODY.

    பிஜேபிய் சார்ந்தவர் எவர் வந்தாலும் மோடி போலதன் செயல் படுவர்யான பிஜேபி மற்றும் RSS பிரச்சரம் செய்யா வேண்டும் மற்றும் அது பொல் செயல்படுதல் நன்று. காரணம் பிஜேபி என்பது ஹிந்து தர்மத்தின் today’s political நகல் போல் செயல்படுதல் வேண்டும் அது தமிழ்நாடு and காங்கிரெஸ் போல் தனி நபர் துதியாக மாறகூடாது

    by

    R. Natarajan

  33. சரியான நேரத்தில் வெளிவந்துள்ள அருமையான கட்டுரை; ஆயினும் சில நண்பர்கள் அவரது அரசு மீது குற்றம் கண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் இல்லை என்று சொல்லவில்லை; எந்த ஒரு மனிதரும் நூறு சதவிகிதம் பூரண வெற்றியாளராக இருக்க முடியாது. ஆனால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது முக்கியம்.

    இந்தியாவின் எந்த ஒரு மாநில முதல்வரும் செய்யாத பல பணிகளை எந்த ஆடாமபரமும் இன்றி மோடி செய்து வருகிறார் என்பதும், புகழ்பாடிகளின் விழாக்களில் கலந்துகொள்வதே தனது கடமை என்று மு.க. போல இருக்காமலும் இருப்பதே மோடியின் சிறப்பு.

    அவரது தனிப்பட்ட இணையதளத்தினை யாரும் படித்து ஆலோசனை சொல்லலாம்; குறைகளைக் குறிப்பிடலாம். அவை சரிசெய்யப்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இப்படி எந்த முதல்வர் நம் நாட்டில் செயல்படுகிறார்? அவரது இணையதளம்:https://www.narendramodi.com/
    எனினும் தன்னிச்சையான செயல்பாடும் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்வதும் அவரது பெரும் குறையே. அதனையும் அவர் சரி செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    -சேக்கிழான்

  34. என்ன செய்து என்ன?? சிறந்த மாநிலப் பரிசும், கெளரவமும் காமன்வெல்த் புகழ் ஷீலா தீக்ஷித்துக்குப் போய் விட்டது. குஜராத் லிஸ்ட்லேயே இல்லை! :(((((((((((

  35. மற்ற பா ஜ க முதல்வர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். எடியூரப்பா பிரமாதமாக விடையளித்துவிட்டார்? பா ஜ க அவரை வீட்டுக்கு அனுப்பி மானத்தைக் காப்பாற்றுமா?

  36. நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் குஜராத்தில் வாழ்ந்திருக்கிறேன். மும்பை மாகாணத்தில் இருந்து குஜராத் பிரிந்து (1966 என்று நினைக்கிறேன்) வந்தபின் குஜாத்தில் தொழில் வளர்ச்சி ஆரம்பித்தது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலும் தொழில் முன்னேற்றம் உண்டாயிற்று. ஆனால் மோதியின் ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சியும் விவசாய வளர்ச்சியும் மிகவும் விரைவாக நடைபெற்றன. மந்திரிகளைப் பொறுத்தவரை எந்த உழலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அரசின் எல்லாவிதத் திட்டங்களும் சரியான முறையில் அமல் படுத்தப் பட்டன. சாபர்மதி நதியையும் நர்மதா நதியையும் இணைத்தார். அம்ரேலி, கட்ச், சுரேந்தரநகர் போன்ற வறட்சி மாவட்டங்களில் தண்ணீர் கிடைக்க ஆரம்பித்தது. இப்படி பல புரட்சிகரமான செயல்களைச் செய்தார். லஞ்சம் கறுப்புப் பணம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மோதியும் அவருடைய மந்திரி சபையும் நாணயமானவர்கள் . குறை என்று பார்த்தால் pollution ஆவதை தடுக்கவில்லை என்பதுதான். தொழில்கள் வளரும்போது மாசுக்கட்டுப்பாடு ஆவதைத் தடுக்கவில்லை.

  37. குஜராத்தைப் பற்றி ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அங்கே பொதுவாக போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது கூடவே ‘ ஜெய் ஸ்ரீக்ரிஷ்ணா ” என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வயல்புரங்களில் நாம் சென்றால் அங்கு வேலை செய்பவர்கள் நம்மை பார்த்தவுடன் ‘ராம் ராம்’ என்று சொல்லுவார்கள். நாமும் திருப்பி ‘ராம் ராம்’ என்று சொல்ல வேண்டும்.

  38. குஜாரத்தில் ராமராஜ்யம் ஆரம்பித்துவிட்டது !
    ஐயா தமிழ்நாட்டிற்கு எபோது தான் ராமராஜ்யம் அரம்பமாகுமோ என்று ஏக்கத்துடன வழிமேல் விழிவைத்து காத்து…………………………………………….

  39. Television journalist Barkha Dutt is no stranger to controversy. Recently Niira Radia tapes emerged of exposing her of lobbying between the DMK and the Congress Party. Another tape around the time of the Gujarat State Election result has been making rounds on the internet and these tapes promise to be even more damning of this so called “fair” and “impartial” journalist.

    These tapes have NDTV’s Group Editor Barkha Dutt, who is supposed to have been conducting her job as an impartial journalist, call the people of Gujarat “historically effete” and thus were, according to her reasoning, attracted to Narendra Modi. The word “effete” can be interpreted in this instance to mean “impotent”.

    This is how Dictionary.com defines the word “Effete”:

    ef·fete
    –adjective
    1. lacking in wholesome vigor; degenerate; decadent: an effete, overrefined society.
    2. exhausted of vigor or energy; worn out: an effete political force.
    3. unable to produce; sterile.

    https://www.newspostindia.com/2010-11-20-tapes-emerge-ndtvs-barkha-dutt-insulting-gujarati-people-on-air

  40. //உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை//

    The forbes list doesn’t say that Ahmedabad is the fastest growing city in India. It mentions Ahmedabad as one of the three cities along with Chennai and Bangalore of the 19 urban centres in the world that are growing fast. There is no ranking by forbes. Please don’t misrepresent facts. (going by forbes list you may have to give best cm award to another two biggest scamsters in recent history – karunanidhi and yeddurappa)

    Gujarat would have improved leaps and bounds under his administration. But that doesn’t absolve him of the genocide he masterminded and executed. Curse of the innocent people killed by him will come back to him one day or the other.

    You could have also mentioned about the US authorities continued rejection of modi’s visa application which only confirms his hand in the riots.

  41. naveed dont forget the genocide of thousands of Hindus and the driving away of 4 lac Hindus from the Kashmir valley by islamic fanatics.

    Dont forget that the Gujarat riots were the reaction to the barbaric burning of 56 innocent Hindus by pouring petrol bombs into the railway coaches by your co religionists.

    In the riots that followed both muslims and Hindus died.
    During the partition of Bharat, thousands of Hindus were killed by being thrown into fire,stabbed , women raped by persons belonging to the religion of peace.

    Still there was no retaliation here.

    Prior to the Bangladesh war, the west pakisthani soldiers , had killed thousands ,mainly Hindus and raped their women.
    Millions had to flee as refugees to Bharat.

    Hundreds of more such instances can be given.But suffice for the present.

    Who is going to answer for these crimes?

  42. //எனினும் தன்னிச்சையான செயல்பாடும் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்வதும் அவரது பெரும் குறையே. அதனையும் அவர் சரி செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். – ஸ்ரீ சேக்கிழான்//

    ஸ்ரீ மோதி தேசிய அளவில் ஒரு தலைவராக அடையாளம் காட்டப்பெறாமல் அவரை குஜராத் மாநிலம் என்கிற வட்டத்திற்குள்ளேயே நிறுத்தி வைத்திருப்பதால்தான் அவர் அவ்வளவில் செயல்பட்டு, தமது பணிகளை எடுத்துக் கூற வேண்டியுள்ளது. சிறந்த பேச்சாளரான அவர், மேடையில் ஆரவாரமாகத் தமது அரசின் சாதனைகளை விவரிக்கும் பொழுது அது தம்மை மட்டுமே அவர் முன்னிறுத்திக் கொள்வதுபோலத் தோற்றமளிக்கிறது. தமது மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் மாநில முதல்வர் என்ற முறையில் அவர் மேற்கொள்கையில் தம்மிச்சையாகச் செயல்படுவதே முறையாகும். அவ்வாறின்றி காங்கிரசைப் போல, அமைச்சர்கள் தேர்வுக்கும் அமைச்சரவை மாற்றங்களுக்கும் தில்லிக்குக் காவடி தூக்கும் சம்பிரதாயத்தைப் பின்பற்றத் தேவையில்லை அல்லவா? மாநில முதல்வரின் கடமைகளையும் உரிமைகளையும் அவர் உணர்ந்தே இருக்கிறார். மனித உரிமைப் பாதுகாப்பு என்ற சாக்கில் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதையும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிசெய்யும் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதையும் அவர் பொருட்படுத்துவதில்லை என்பதாலேயே தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்கிற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது. நரேந்திர மோதியை குஜராத் முதல்வர் என்ற நிலையிலேயே தேசிய அளவில் பயன்படுத்திக் கட்சியை வளர்ப்பதே புத்திசாலித்தனம். இந்த புத்திசாலித்தனம் அகில பாரத பா.ஜ. க. தலைமைக்கு வர வேண்டும். அப்போது ஸ்ரீ மோதி தேசிய அளவில் தலைமையுடன் ஒருங்கிணந்து இயங்குவது சாத்தியமாகும்.

    சொரணை கெட்ட காங்கிரஸ் கட்சியைப்போலவும் விவஸ்தைகெட்ட கழகங்களைப் போலவும் தனிநபர்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவும், அவர்களின் காலடியில் விழுத்கிடக்கவும் வேண்டாம். அதேசமயம் பாராட்டுக்குரியவரைப் பாராட்டி உரிய இடமளித்து அத்தகையோர் நாடு முழுமைக்கும் பயன்படச் செய்வது ஓர் அரசியல் கட்சியின் கடமையாகும்.
    -மலர்மன்னன்

  43. //You could have also mentioned about the US authorities continued rejection of modi’s visa application which only confirms his hand in the riots.-Sri Naveed//
    அமெரிக்க அதிகாரிகளைப் போல் அரைகுறை அறிவுடன் செயல்படுபவர்களை வெறு எங்கும் காண முடியாது. அதிலும் கீழ்த்திசை நாடுகளைப் பற்றிய பொது அறிவு அவர்களுக்கு இல்லவே இல்லை. முகமதியப் பெயர்களுக்கும் ஹிந்துப் பெயர்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிக் கூட அவர்களுக்குக் கவலையில்லை. தாடி வைத்திருந்தாலே முகமதியன் என்று முடிவு கட்டிவிடுவார்கள்! மேலும் அமெரிக்க அரசு தன்னை முகமதியரின் விரோதி அல்ல என்றும் பயங்கர வாதத்தை மட்டுமே தான் எதிர்ப்பதாகவும் காட்டிக்கொள்ளப் பலவாறான நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதில் மோதிக்கு விஸா மறுப்பதும் அடங்கும்.
    -மலர்மன்னன்

  44. குஜராத் பூகம்பம் நிகழ்ந்த போது உதவி செய்யச் சென்ற NGOக்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு வரும் பொருட்களைக் கொடுத்த போது ஓசியில் எதுவும் தேவையில்லை என்று வாங்க மறுத்தவர்கள் குஜராத் மக்கள். 3-4 மாதங்களுக்கு ஓசியில் பிழைக்கவேண்டிய அவசியமில்லை. இப்போதைக்கு வீடுகள் சரியாகும் வரை முகாம்களில் இருப்போம். பிறகு வேலை பார்க்கப் போய்விடுவோம் என்றனர் புஜ் பகுதி மக்கள். குறைந்த அளவிலேயே உதவிகளை ஏற்றனர். தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அந்த மக்களின் attitude உழைத்துப் பிழைக்க வேண்டும் என்பதுதான்.

    நான் பழகியவரையில் குஜராத்திகளிடம் ஒருவன் கஷ்டப்படுகிறான் உதவி செய் என்று கேட்டால், என்ன வேலை தெரியும் அவனுக்கு என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கும். பேரம் பேசினாலும் செய்த வேலைக்குக் காசு கொடுத்துவிடுவார்கள். வேலை முடித்த பிறகு ‘எங்க ஒண்ணுவிட்ட சித்தப்பாவுக்கு பக்கத்துவீட்டுக்காரரோட சம்பந்தி மச்சானுக்கு ஒன்றியச் செயலாளர நல்லாத் தெரியும்.’ என்பது போன்ற பேச்சுக்கள் இருக்காது. உழைப்பை மதிக்கத் தெரிந்த உழைப்பாளிகள். படிப்பதை ஊக்குவிப்பவர்கள். நேர்மையானவர்களை மதிப்பவர்கள். கடவுள் பக்தியுள்ளவர்கள். முன்னேறுவது வியப்பில்லை.

    மோதிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது கோத்ரா கலவரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற வாதத்தால். அவர் ஆட்சியில் செய்த சாதனைகள், Governance, Development, இவற்றை எடுத்துச் சொன்னால் Harvardன் Kennedy School of Governanceல் வந்து பாடம் நடத்துங்கள் என்பார்கள். அமெரிக்கர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள். The more you talk and inspire them, the faster they’ll swing to your side. ஜஸ்வந்த் சிங்கைக் கேட்டால் கதை கதையும் காரணமும் சொல்வார். ஓபாமா வாழும் உதாரணம்.

  45. இப்போதைக்கு வீடுகள் சரியாகும் வரை முகாம்களில் இருப்போம். பிறகு வேலை பார்க்கப் போய்விடுவோம் என்றனர் புஜ் பகுதி மக்கள். குறைந்த அளவிலேயே உதவிகளை ஏற்றனர். //

    உண்மை. புஜ் ராணுவ விமானதளத்தைச் செப்பனிட ஒரு பைசா வாங்காமல் வேலை செய்தனர் பெண் தொழிலாளர்கள். தேசப்பற்று மிகுந்தவர்கள். கூடவே இறை உணர்வும் மிகுந்தவர்கள். ஸ்ரீராமனும், ஸ்ரீகிருஷ்ணனும் இரு கண்கள்.

  46. Shri.Naveed a correction.

    \\\\\\\\\\\\\\But that doesn’t absolve him of the genocide he masterminded and executed. Curse of the innocent people killed by him will come back to him one day or the other.\\\\\\\\\\\\\\

    I can not digest innocent people belonging to any religion annihilated by any one for that matter.

    that said, Its an accusation that the riots that took place in Gujarat has been masterminded and executed by Shri.Modi. The accusation has been made not by all moslems but a section of them and a section of media which is broadly perceived as white church paid media. The white church and section of the moslem community which is fundamentalist by nature have their objectives for making these accusations.

    It is again a fact that shri.Modi took all the measures to contian the violence.

    But yes, I agree with the fact shath prati shath that Curse of the innocent people killed by anyone will come back to him one day or the other.

    and Thats applicable to those who killed innocent people in bombay blasts, Ajmer blasts, coimbatore blasts, world centre bombing, lockerbie and the list is endless.

  47. The US administrators are the most hypocritical lot.
    What is so principled about the US extending red carpet welcome to islamo-military dictators like Musharraf and the communist dictators of China but denying visa to Shri. Modi who has been elected by the people.
    And that country calls itself the greatest democracy!
    The communist fifth columnists and the church played a major role to influence the US government in denying visa to Modi.
    Modi gave two hoots to the US visa.
    He visited Russia and clinched several trade deals wih that country
    Once American companies smell money from the most advanced state of Bharat they will lobby with their government to issue visa to Modi.

  48. அருண் பிரபு,
    அமெரிக்காவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் மனித உரிமை ஒரு வசதி. மக்களாட்சி ஒரு வெளியுறவு/வணிக உத்தி. உண்மையில் இவற்றில் பிடிப்பு இருந்தால் சீனாவை வரைபடத்திலும் காண விழைய மாட்டா. இது இந்தியாவிற்கும் பொருந்தும். மியன்மாரைக் கண்டுகொள்ளாமல் விட்டதும் ஒபாமா இடித்துரைத்ததும் நாமறிந்ததே. மோடி விஷயத்தில் அமேரிக்கா செய்தது கண்டனத்திற்குரியதே.
    இஸ்லாமைத் தாஜா செய்வதென்பது ஒரு பன்னாட்டு வியாதி. இந்தியா அதில் அழுகிவிட்டது. டோனி பிளேர் நடவடிக்கைத் துவங்குமுன்னரே “இது தீவிரவாதத்திற்கு எதிரான போர்; இஸ்லாமிற்கு எதிரானது அன்று”, என்று விளக்கமளித்தார்.

  49. //But that doesn’t absolve him of the genocide he masterminded and executed. Curse of the innocent people killed by him will come back to him one day or the other.//

    Janab.Naveed! This is a variant of my feedback given to a similar insinuation against Modi in Tamil Paper. Evidences are now flowing in to thrash the make-believe work of the “secular” lobby.

    குஜராத் கலவரம் தொடர்பான சிறப்புப் புலனாய்வு நீதிமன்றத்தில் பல கலவர நிகழ்வுகள் கற்பனைப் புனைவு என வாக்குமூலங்கள் வரிசைகட்டி வருகின்றன. இந்த வழக்கில் தீஸ்தா செதல்வாட் ஜாவேத் என்கிற சமூக சேவகி அம்மையார் மிகவும் தீவிரமாக இறங்கி வேலை செய்கிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனமும் நடத்துகிறார். (https://www.cjponline.org/)

    அவர் செய்யும் தொண்டு பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தில் நிறுத்துவோர் பெயரில் இவரே இட்டுக்கட்டிய கொடூரக் கதைகளைக் (cooking up macabre tales of killings) கலவர நிகழ்வுகள் என்று பிரமாண வாக்குமூலமாக சமர்ப்பிப்பது. தொண்டு நிறுவனம் என்பதால் ஏதாவது உதவி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில், “கடையை எரிச்சுப்புட்டங்க, வீட்டைக் கொளூத்திப்புட்டாங்க, உதவி செய்யுங்கம்மா!” என்று வருவோரிடம் பேர் ஊர் முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு,அவர்களிடம் வெற்றுத் தாட்களில் கையொப்பமும் பெற்று, “துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்” என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்திருக்கிறார்.
    (https://www.dailypioneer.com/281457/%E2%80%98Teesta-drafted-affidavits-didnt-divulge-contents.html)
    பலருக்குத் தங்கள் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதே தெரியவில்லை. விசாரித்த போது உளறித் தொலைத்து வாக்குமூலத்தைப் பற்றி தமக்கேதும் தெரியாது என்றும் ‘அந்தம்மா’ சொன்னதைத் தான் தாங்கள் சொல்வதாகவும் கூறியுள்ளனர். என் பெயரில் எப்படி இல்லாத கதைகளைக் கட்டுவாய் என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த சமூக சேவகி அம்மையார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
    (https://www.indianexpress.com/news/guj-riots-accused-moves-sc-for-prosecuting-teesta-for-perjury/699232/)
    (https://www.indianexpress.com/news/an-unconscionable-act/447301/0)
    தீஸ்தா அம்மையாரிடம் உதவியாளராய் வேலை பார்த்த ரயிஸ்கான் பதான் என்பவர் தமக்குத் தெரியாமல் தம் பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும், தம் பெயரில் மேற்கூறிய மோசடிகளைச் செய்ததாக சிறப்புப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    (https://www.dailypioneer.com/282173/Teesta-in-the-dock.html)
    (https://www.indianexpress.com/news/teesta-made-riot-victims-give-false-testimo/679361/)
    அறிவு ஜீவிகள் பலர் செதல்வாட் அம்மையாருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலரை வைத்து “கவலைகொண்ட மக்கள் நீதிமன்றம் (Concerned Citizens Tribunal)” ஒன்றை அமைத்து, “சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் சங்பரிவார் அமைப்பினர் குற்றமிழைத்தனர். நரேந்திர மோடி கலவரத்திற்குத் திட்டம் தீட்டி, குற்றவாளிகளுக்குத் தலைமை தாங்கினார்” என்று தீர்ப்பளித்தனர். இது அம்மையாரின் தொண்டு நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர்களின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காட்சிப்பிழை என்பதும், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சி ஆதாரங்கள் செதல்வாட் அம்மையார் சமைத்துத் தந்தவை என்பது இப்போது தெரிய வருகிறது.

    ஆக ஊடகங்கள் கலவர நிகழ்வுகளாகப் பதிவு செய்தவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. அறிவுஜீவிகள் அவசரப்பட்டு விட்டார்கள்/வழக்கம் போல இடதுபக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்பதுவும் புலனாகிறது. Some vested interests are striving so hard to keep the people and truth in dark.

  50. அமெரிக்க ஆட்சியாளர்களின் பொது அறிவு குறைவாக இருப்பதால்தான் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் ஒசாமா பின் லாடனை தூண்டி விட்டுக் கொண்டும் , மறு பக்கம் அமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் என்று அமெரிக்காவின் ‘தலையைத் தடவி’ பல பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.
    இன்னொரு கோணத்தில் பார்த்தால் வெள்ளையர்களின் கொள்கையான மற்ற நாடுகள் தங்களை விடப் பெரிதாக வளர்ந்து விடக் கூடாதென்ற நோக்கத்தில் பாகிஸ்தானை பாரதத்துக்கு ஒரு ‘செக்’ காக வைப்பதற்காகவும் , ஒரு நாட்டைக் காட்டி இன்னொரு நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதற்காகவும் இருக்கலாம்.

  51. //But that doesn’t absolve him of the genocide he masterminded and executed. Curse of the innocent people killed by him will come back to him one day or the other.- Sri Naveed//

    This is what is generally known as ‘Satan quoting from the scriptures.’
    Does this gentleman know the meaning of genocide? It is of Hindus in Kashmir Valley and Bangladesh successfully carriedout in recent times. Only those Hindus who could escape from Kashmir Valley and Bangladesh taking refuge in different parts of Hindustan were able to survive from genocide, that is total annihilation. I refrain from reminding from the blood soaked pages of the history of Hindustan, where it is full of mass killings of Hindus in their own homeland.

    Can Sri Naveed cite a single case of a Mohmedan having fled to Pakistan from Gujerath to escape from the so called ‘genocide?’ Is NOT Pakistan, the most safest abode for Mohmedans in a stone’s throw distance accross the border of Gujerath state? Don’t say many fled to the adjacent Mumbai where Thackarey’s hand extends to every nook and corner and that it may be more risky in the eyes of Mohmedans (and the truth is Hindustan is the safest place for every division of faith and belief).
    -Malarmannan

  52. //This is what is generally known as ‘Satan quoting from the scriptures.’//

    I didnt kill anybody nor i am defending killing done by any muslim.

    The killing of muslims after the godhra incident happened almost immediately. Finding and marking thousands of muslim households exclusively in a metropolitan city will take months of time. the fact that the mass murder of muslims happened almost immediately confirms that it was planned for months or years and was just waiting for some event to trigger it. logically it also confirms the fact that godhra was pre planned by the modi regime only so as to invent a cause to kill the muslims. they need some reason to start the attack isnt it? forensic department has very clearly said that the fire could have started from inside the train only and its impossible to throw petrol on a moving train.

    if you choose to rely on newspapers then i suggest you to check ‘Times of India’ and’The hindu’ on their reports of Godhra and how it was masterminded.

    There is no doubt that india is the safest place to live for muslims.

    “Is NOT Pakistan, the most safest abode for Mohmedans in a stone’s throw distance accross the border of Gujerath state?” – May i know who said this?

  53. //Is NOT Pakistan, the most safest abode for Mohmedans in a stone’s throw distance accross the border of Gujerath state? //

    Pakistan is NOT even a safe abode for Mohmedans as a whole (leave alone the belief of safest), Gentleman! That is a Sunni moslem dominated state and Shia moslems and other moslem sects are oppressed and persecuted with a method over there.
    (www.abna.ir/data.asp?lang=3&id=158503)

    There is an online petition requesting the world’s attention to stop Shia killings in Pakistan, which would give you the facts.
    http://www.petitiononline.com/1011425/petition.html

    Also, migrants from India to Pakistan in 1947, aka Mohajirs, with hope of an Pan-Islamic h(e)aven, have been fighting for ligitimate rights in Pakistan. Some of them even think of reuniting with India!!!

    https://akchishti.blogspot.com/2010/04/mohajir-tragedy.html
    https://www.upiasia.com/Society_Culture/2007/06/07/commentary_the_demise_of_mohajir_power_in_pakistan/2498/

  54. Sri Arun Prabhu is right. It is only Sunnis, that too of Punjab can feel safe in Pakistan. AND OFLATE, THEY ARE ALSO FACING THE WRATH OF TALIBANS FOR THE DOUBLE GAME THEY ARE PALYING ON ONE SIDE WITH TALIBAN AND WITH THE US ON THE OTHER. TALIBAN WANTS TOTAL LOYALTY FROM PAKISTAN!
    MALARMANNAN

  55. Naveed!
    The reports you’ve cited on ToI and The Hindu have come under a cloud of suspicion with the cooking up macabre tales of killings by Mrs.Teesta Setalvad Javed. Most of the stories reported in the media are now found out to be screenplays & dialogues of Mrs Javed. The Apex court and the SIT are now startled by the revelations of the witnesses who depose that they have been tutored on the tales of horror, reported in the FIR.

    So, relying on media reports and pronouncing verdict is preposterous.

    //“Is NOT Pakistan, the most safest abode for Mohmedans in a stone’s throw distance accross the border of Gujerath state?” – May i know who said this?//
    This was promised by Jinnah and party during the partition of the nation and by Yahoo Khan creation of Bangladesh. People who went to Pakistan relying on those promises now suffer pathetically.
    https://akchishti.blogspot.com/2010/04/mohajir-tragedy.html

  56. mr naveed makes so many sweeping generalisations, it will be very difficult to convince him. You cannot wake up a man ‘who is pretending to be asleep’.

  57. ‘தி ஹிந்து’ நாள் இதழின் தற்கால நிலைபற்றி நவீத் ஒன்றும் அறியமாட்டார் என்று தோன்றுகிறது. அவர்கள் இல்லத்திலிருந்து தமிழ்நாட்டை ஆளும் திராவிடக் கட்சி குடும்பத்தாருடன் திருமண பந்தம் உள்ளது.எனவே
    தி மு க ஆட்சி பற்றிய விமர்சனம் சுத்தமாகக் கிடையாது. ஆசிரியர் ராம் மார்க்சிய சிந்தனையாளர். தி ஹிந்து நடுநிலை தவறி நீண்டகாலம் ஆயிற்று.

  58. ஹிந்து ராம் என்று அழைக்கப்படுவதை விட ஹிந்து பத்திரிகை ராம் என்று அழைத்தால் சரியாக இருக்கும். சிகப்பாக இருக்கிறார் என்று நினைத்தோம் கருப்பும் சேர்ந்து விட்டது. வெளங்கிடும்.
    If possible he should change the name of the publication that he heads. But good will of the name is what fetches him the riches. Whether black or white money is always right!

  59. //I didnt kill anybody nor i am defending killing done by any muslim. -Naveed//

    You cannot escape by saying so intruding in a site run in the interests of Hindus..

    Mohmedan terrorists indulge in mass killings in the name of their religion, calling their cowardice activities Jehad against non-Mohmedans. Also, when they kidnap, they force the victims to recite kalima, shout allaho akbar.

    Have you ever cared to decry in a public forum of your co religionists about Mohmedan terrorists indulging in macabre in the name of your religion? If you are a resident of Hindustan, have you ever cared to mobilise your jamath to come out and promise that they will not give shelter OR supply manpower to the cross border terrorists? Do you know Kerala Mohmedan jamaths are the latest suppliers of trainees for L-e-T camps set up in POK and interior Pakistan? If you are living else where, are you prepared to organise your coreligionsts to assemble in a common place and condemn mohmedan terrorists openly?

    Do NOT pretend as a lover of non-violence and a embodiment of tolerance. Your book recommends killing of non mohmedans and offers beautiful virgins in heaven if you give up your life in the act of killing non Mohmedans if they refuse to accept your religion.
    -Malarmannan

  60. Ram of ‘The Hindu’ is a stooge of the chinese commie dictators
    he frequently visits China and is entertained as a state guest there.
    But China is the number one enemy of Bharat.
    It claims Arunachal pradesh as its own. Has possession of a huge chunk of kashmir occupied by pakisthan and gifted to it.
    It is helping pak’s nuclear programme
    Ram eats the food of Bharat Mata but helps those thugs who are bent upon violating her.

  61. திரு.நரேந்திர மோடியைப் பற்றிய மேலும் ஒரு நல்ல செய்தி. 2002
    கலவரத்தை மிகைப்படுத்தியே பேசி வந்துள்ள வெறியர்கள் கூறிய படி
    திரு. மோடி அவர்களுக்கு எதிராக ஒரு ஆதாரமும் கிடைக்க வில்லை
    என்று செய்தி வரப்போகிறது. (இன்னும் அதிகாரபூர்வமாக செய்தி
    வெளியிடப்படவில்லை).

    உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட விசாரணையின்
    முடிவு கூடிய விரைவில் வெளிவர உள்ளது. அதன்படி திரு.மோடி
    அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டையும் கூற முகாந்திரம் இல்லை என்று
    அறிக்கையில் இருப்பதாக தெரிந்துள்ளது.
    https://ibnlive.in.com/news/clean-chit-to-modi-in-guj-riot-cases-sources/136412-3.html?from=tn

  62. People get rulers for what they deserve…
    If you send 100 TN people (public, not politicians), then Gujarat also will become like that..

  63. வணக்கம்

    மெத்த படித்த அறிவாளிகள் திறமையான ஆட்கள் என்று நினைத்து கொள்ளும் காங்கிரஸ் கட்சி நாட்டை வீணடித்து கொண்டு இருக்கிறது. நாட்டின் நலம் விரும்பிகள் தயவு செய்து ஸ்ரீ நரேந்திர மொடீன் அரசியல் நுணுக்கத்தை அறிந்து அரசியல் நடத்த வேண்டுகிறேன். பிஜேபி மற்ற தலைவர்கள் பின்பட்ற வேண்டும். (பிஜேபி-க்குள் இருக்கும் தலைவர்கள் தங்களுக்குள் பிரிவிநை வகுக்காமல் மற்ற மாநிலகளிலும் பல மோடிகளை உருவாக்க வேண்டும்). மக்களை யோசிக்க விடாமல் இருக்கும் மது மற்றும் தவறான ஊடகங்களையும் தடை செய்தாலே
    போதும்.

  64. மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது.

    குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.
    தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.

    இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

    ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது.

    குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்?

    பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது.

    உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்.

    அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார்.

    சர்தார் சரோவர் அணை கட்டியதால் வாழ்விழந்து, குஜராத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ம.பி. விவசாயிகள். விவாசாய வேலை இல்லாத போது இவர்கள் பிழைப்புக்கு குவார்ட்சு குவாரிகளே ஒரே வழி
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.

    மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

    மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.

    கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது.

    தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

    இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *