ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் அரசின் மெத்தனத்தும் எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஒரு சமூக சேவகர்.
ஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) என்ற பெயரில் சமூக அக்கறையுள்ள சில பிரமுகர்கள் இணைந்து வடிவமைத்த ஒரு மசோதாவின் வரைவு வடிவத்தை முன்வைத்து, அதனை அரசு ஏற்றுக் கொண்டு சட்டமாக இயற்ற வேண்டும் என்ற குறிப்பிட்ட கோரிக்கையுடன் காந்திய வழியில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி முடித்துள்ளார் அண்ணா ஹசாரே.
நாடெங்கும் ஊடகங்கள் அதிதீவிர முனைப்புடன் இந்தப் போராட்டம் பற்றிய செய்திகளைப் பரப்ப, காட்டுத் தீ போல சில நாட்களிலேயே ஒரு மக்கள் இயக்கமாகப் பரவியது. நடுத்தர வர்க்கத்தினரும் இளைஞர்களும் பெருமளவு பல நகரங்களில் பங்கேற்று இந்த இயக்கம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போது, பல ஆதரவுக் குரல்களும், பல கேள்விகளும் எழுந்தன. இப்போது ஜன் லோக்பால் மசோதாவை பரிசீலிக்க கமிட்டி அமைப்பதாக மத்திய அரசு உறுதிமொழி அளித்த நிலையில், அன்னா ஹசாரே தன் உண்ணாவிரதத்தை முடித்துள்ளார். இதனை மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றியாக ஊடகங்கள் முரசறைந்து வருகின்றன.
இது தொடர்பாக நமக்கு வந்த சில முக்கியமான கருத்துக்களை, பார்வைகளை, கேள்விகளை இங்கு தொகுத்து அளிக்கிறோம். இனி வாசகர்களும் இந்த விவாதத்தில் மறுமொழிகள் மூலம் பங்கெடுக்கலாம்.
- ஆசிரியர் குழு
ஆபரணங்கள் நிறைந்த அலங்காரப் பெட்டி என்று இந்தியாவை வர்ணித்தார் அன்னா ஹசாரே. ஆட்சியாளர்கள் இந்தப் பெட்டியை ஆழத்தில் வீசிவிட்டார்கள். ஊழல் என்னும் சேற்றால் மூடி மறைத்து விட்டார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
நமக்கும் தெரிந்த உண்மை தான் இது. ஆனால் இதைச் சொல்லும் உரிமை நமக்கு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். கறை படியாமல் இருந்தால்தான் கைகளை உயர்த்தவும் விரல்களை நீட்டவும் தகுதி உண்டாகும். ஊழலை எதிர்க்கும் போராளிகளில் எத்தனை பேர் ஊழலின் வீச்சை உணர்ந்திருக்கிறார்கள் என்பது சந்தேகம் தான்.
ஆண்டிமுத்து ராசாவும் அரண்மனைப் பெண்டிரும் அடித்த அண்டபகிரண்டக் கொள்ளை மட்டும் தான் ஊழல் என்ற கருத்து அடிப்படையில் தவறானது. பெருமுதலாளிகளாலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் தான் இது சாத்தியமாகிறது என்ற நினைப்பும் சரியானதல்ல. ஊழல் நம்முள்ளும் வெளியேயும் நானாவித வடிவங்களில் உலாவுகிறது. குழந்தைக்கு இடம் கேட்டு பள்ளி உரிமையாளரிடம் பல்லைக் காட்டுகிறோமே அது ஊழல். படிக்கிற குழந்தையை முறையாகப் படிக்கவிடாமல் டியூஷன் என்ற பெயரில் ஆசிரியருக்குப் படி அளக்கிறோமே அது ஊழல். முன்பதிவு செய்யாமல் ரயிலில் ஏறிவிட்டு ரயில்வே ஊழியருக்குக் கொடுக்கிறோமே அது ஊழல். நாற்பது ரூபாய் எந்திரனை நானூறு ரூபாயில் பார்க்கிறோமே அதுவும் ஊழல்தான்.
இருக்கிற ஊழல் போதாதென்று தமிழ்நாட்டில் புது ஊழல் ஒன்று புற்றீசல் போலக் கிளம்பியிருக்கிறது – வாக்குச் சீட்டை விலை பேசும் வைகைக்கரை ஊழல் அது. இத்தனை ஊழல் நம்மோடு பங்காளிகளாகப் பவனி வரும்போது ஊழலுக்கு எதிராகக் கோஷம் போடுவதும் கொடி பிடிப்பதும் எந்தப் பலனையும் தராது. இப்படி எல்லாரையும் ஒதுக்கிவிட்டால் ஊழலை ஒழிப்பது எப்படி என்ற நியாயமான கேள்வி எழலாம். காசு என்ற தூசு படாத ஒருவர்தான் இதைச் செய்ய முடியும். அவருக்குப் பின்னால் நாமெல்லாம் அணிவகுத்து நிற்கலாம்.
காந்தியத்தை சரித்திரத்தின் ஏடுகளில் தான் தேடிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதிரடியாகப் புறப்பட்டிருக்கிறார் அன்னா ஹசாரே. இணையத்திலும் குறுஞ்செய்திகளிலும் இவர் ஹீரோவாகி விட்டார். கதர்க் குல்லாயோடு காட்சி தரும் இந்தப் பெரியவரை நோக்கி ஜீன்ஸ் போட்ட பெண்மணிகள் வாழ்த்துப் பாடுகிறார்கள். வாலிபர்கள் எல்லாம் வரிசையில் வந்து கும்பிடுகிறார்கள்.
ஊழலைத் தடுப்பதற்கான சட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமென்று தில்லியில் உண்ணாவிரதம் இருந்தார் 72 வயது கிசான் பாபுராவ் ஹசாரே. அகிம்சையை முன்னிறுத்தும் இவர் ஒருகாலத்தில் ராணுவத்தில் டிரக் டிரைவராக இருந்தார். பாகிஸ்தான் போரின்போது தன்னுடைய சகாக்கள் குண்டுவீச்சில் மரணமடைந்ததைப் பார்த்தபோது அங்கு ஹசாரேக்குள் ரசவாதம் நிகழ்ந்தது. மகாராஷ்டிரவில் உள்ள தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பிய அவர் பொதுப்பணியில் ஈடுபட்டார். காந்தியத்தை வாழ்நெறியாக ஏற்றுக் கொண்ட இவருக்கு ஆதர்சம் சுவாமி விவேகானந்தர். கிராம நிர்மாணப் பணிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார் அன்னா ஹசாரே. ஐம்பது வருடப் பொதுவாழ்க்கையில் பல்வேறு களங்களைக் கண்ட அவர் சமீபத்தில் ஊழலுக்கு எதிராகத் தன் உயிரைப் பணயம் வைத்தார்.
ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.
அண்ணா ஹசாரே இந்த போராட்டத்தில் முழுக்க முழுக்க சுயநல அரசியல் சக்திகளால் பகடைக்காய் ஆக்கப் பட்டுள்ளாரோ என்று எனக்கு தீவிர சந்தேகம் தோன்றுகிறது. இப்போது இந்த போராட்டம் அவரையும், அவரது தார்மீக நிலைப்பாட்டையும் தாண்டிச் சென்று விட்டது. இனிமேல் இது ஊடகங்களும், மேற்கத்திய ஆதரவு பெற்ற தேர்ந்தெடுக்கப் பட்ட கார்ப்பரேட் ஸ்டைல் என் ஜி ஓக்களும் நடத்தும் நாடகம் மட்டுமே.
கச்சேரி முழு வீச்சில் நடந்து கொண்டிக்கையில் சில சுருதி பேத சுட்டிகளை கவனப் படுத்துகிறேன்:
இந்த சுட்டி ஜன் லோக்பால் மசோதாவின் பல அபத்தங்களை சுட்டிக் காட்டுகிறது.
இந்த சுட்டி இந்த “போராட்டம்” ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான, ஒரு மோசமான செயல்பாடு என்கிறது.
இது மகா காரமான சுட்டி. பொதுவாக சந்தியா ஜெயின் எழுதும் ஸ்டைல். இந்தப் போராட்டமே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு ந(க)டத்தப் படுகிறது என்கிறார்.
சந்தியா ஜெயினின் ’சதிவலை’ கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் மற்ற இரண்டு சுட்டிகள் சொல்லும் விஷயம் மிகவும் தர்க்கபூர்வமானதாக உள்ளது. ஒரு உதாரணம். முதல் சுட்டி இந்த லோக்பால் கமிட்டி தானே போலீஸ், தானே நீதிமன்றம் என்ற அளவு தனக்கு அதிகாரங்களை கோருவதைக் கோடிட்டுக் காட்டி, இந்த அளப்பரிய அதிகாரங்களைப் பெறப் போகும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் உள்ள ஓட்டைகளையும் சுட்டிக் காட்டுகிறது -
5. A selection committee consisting of the following shall be set up:
a. The Chairpersons of both Houses of Parliament
b. Two senior most judges of Supreme Court
c. Two senior most Chief Justices of High Courts.
d. All Nobel Laureates of Indian Origin
e. Chairperson of National Human Rights Commission
f. Last two Magsaysay Award winners of Indian origin
g. Comptroller and Auditor General of India
h. Chief Election Commissioner
i. Bharat Ratna Award winners
j. After the first set of selection process, the outgoing members and Chairperson of Lokpal.
இதன்படி, நோபல் கமிட்டியும் மகசேசே விருது கமிட்டியும் நினைத்தால் அவர்கள் விரும்புவோருக்கு இந்திய அரசியலில் அதிக பலம் தர முடியும் போலிருக்கிறது! நாளைக்கு அருந்ததி ராய்க்கும் அரவிந்த் அடிகாவுக்கும் நோபல் பரிசும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு மகசேசே விருதும், இந்திய கிறிஸ்தவ கவுன்சில் தலைவர் & ”மனித உரிமைப் போராளி” ஜான் தயாலுக்கு பாரத ரத்னாவும் கொடுக்கப்பட்டால், இவர்கள் எல்லாரும் சேர்ந்து இந்திய அரசாங்கத்தையே பணால் ஆக்கிவிட மாட்டார்களா?
ஊழல், அது செயல்படும் விதம், நமது அரசியல் உரிமைகள்/கடமைகள், சட்டம் இது எதையும் பற்றிய ஆழ்ந்த புரிதல் இல்லாமல் சில்லுண்டித் தனமாக, மீடியா பரபரப்பை மட்டுமே முன்னிறுத்தி நடத்தப்படும் ஒரு போராட்டம் இது என்ற எண்ணம் தோன்றுகிறது. அன்னா ஹசாரேயின் தரப்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இருவர் – சுவாமி அக்னிவேஷ், அர்விந்த் கேஜ்ரிவால். இருவருமே அஜெண்டாக்களும் உள்நோக்கங்களும் கொண்டவர்கள். மேலும், ஊழலற்ற, லஞ்சமற்ற, முன்னேற்றத்திற்கு முன்னுதாரணாகத் திகழ்கின்ற குஜராத் அரசை தொடர்ந்து திட்டமிட்டு எதிர்த்து, அதன்மீது சேறுபூசி வரும் எல்லா ஜிப்பாக் காரர்களும் இந்த மேடையில் ஆஜர்!
ஒரு சமூகத்தொண்டராக அண்ணா ஹசாரே மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் அவரது இந்தப் போராட்டம் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. இப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. இது எல்லாவற்றையும் மீறி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து கேட்கும் பாரத் மாதா கீ ஜெய் கோஷம் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இந்த சுட்டிகள் கூறும் சந்தேகங்கள் பொய்யானால் எனக்கு மகிழ்ச்சியே.
ராஜகோபாலன்.ஜா:
இந்த மாதிரி செய்வது, ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன். “தமிழன்” வாழ இன்று அனைத்து கட்சிகளும் போராடுவதைப் போல. இன்னார் இந்த ஊழல் செய்தார் என்று குறிப்பிட்டு கோபம் அடைந்த பலர் இப்போது “இந்த ஊழல் போணுங்க” என்று ஊழலை காலரா கிருமி மாதிரி பேச ஆரம்பித்திருப்பதை நான் கவலையுடன் நோக்குகிறேன். இப்படி ஊழலை பொது எதிரியாக உருவகம் செய்தால் ஆ.ராசா கூட நாளைக்கு ஊழலுக்கு எதிராகப் போராடுவார்.இல்லாத எதிரியை தேடித் தேடி பல முறை போராடலாம் – கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, அமைதி ஊர்வலம் போய்…
இதனை காந்திய வழிப் போராட்டம் என்பீர்களானால் காந்தியிடம் இருந்த ஒன்று இங்கே இல்லை – முனைப்பும், நோக்கமும். அதன் காரணமாகவே இது ஒரு விழிப்புணர்வு எனும் அளவில் முடிந்து விடும் அபாயமும், மக்கள் தங்களது கோபத்தை யாருக்கும் (முக்கியமாக தங்களுக்கு) சிக்கலிலாமல் தெரிவித்து அடங்கி விட கிடைத்த வாய்ப்பாக மழுங்கி விடும் தன்மையும் கொள்ளப் போகிறது என்றே அஞ்சுகிறேன்.
வெள்ளத்தை கட்டுப்படுத்தும் மடை மாற்று உத்தியாக இது மாறிவிடாத வரையில் இது சரியே.
முதல் நாளே மேடையில் தோன்றிய தி இந்துவின் ஆஸ்தான பாகவதர் சுவாமி அக்னிவேஷையும், நக்சலைட் மற்றும் பயங்கரவாத ஆதரவுவா(ந்)தியான சந்தீப் பாண்டேயையும் கண்டவுடனேயே என் சந்தேகம் வலுப்பட்டது. இவர்கள் போதாது என்று சி.என்.என்னும், என்.டி.டி.வியும் அடித் தொண்டையில் கத்தும் பொழுது இவர்களின் நோக்கங்கள் மீது கடும் சந்தேகங்கள் எழுகின்றன. நவம்பர் 26 மும்பைத் தாக்குதலின் பொழுது இதே ராஜ்தீப் சர்தேசாயும், பரக்கா தத்தும் அடிபட்டால் ஊளையிடும் நாய்கள் போல ஆக்ரோஷமாகக் கத்தியது நினைவில் இருக்கலாம். அப்பொழுது அவர்களின் நோக்கம் எந்தவிதத்திலும் அந்தத் தாக்குதலினால் மக்களிடம் ஏற்படும் கோபம் ஆளும் காங்கிரசை நோக்கித் திரும்பி விடக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்தது.
மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகள் என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டினார்களே அன்றி காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடாத வண்ணமும் பி ஜே பி யின் மீது குற்றசாட்டைத் திசை திருப்பும் வண்ணமும் இருவரும் பிரச்சாரம் செய்தனர். பதிலுக்கு பரக்கா தத்துக்கு பத்மஸ்ரீ விருத் கொடுத்து கவனித்துக் கொள்ளப் பட்டது. மேலும் அடுத்த அரசின் ப்ரோக்கராகச் செயல்படும் பதவியும் கிட்டியது. இப்பொழுது அதே கும்பல் அண்ணாவை முன் வைத்து மீண்டும் அரசியல் செய்வதைக் காணும் பொழுது இயல்பாகவே சந்தேகங்கள் எழுகின்றன.
இங்கு குற்றவாளி உறுதியாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவியான சோனியாவும் பிரதமரான மன்மோகனுமே. இருவரும் லோக்பால் மட்டும் அல்ல கருப்புப் பண விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பது, ஊழல் சி வி சி ஐ அமர்த்தியது, ஸ்பெக்ட்ரத்தில் கூட்டுக் கொள்ளை என்று நூற்றுக் கணக்கான ஊழல்களை திறம் பட நடத்தி வருபவர்கள். மாறாக பா ஜ க அண்ணாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றது, லோக்பாலை எதிர்க்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது பொத்தாம் பொதுவாக அரசியல் வாதிகள் என்று குற்றம் சாட்டுவதும், மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு நிற்பதும் யாரை ஏமாற்ற? உறுதியாகச் சொல்லுங்களேன் – இது காங்கிரசுக்கும் லோக்பாலை எதிர்க்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் என்று! அதை விட்டு விட்டு யாரை எதிர்த்து போராடுகிறோம் என்ற ஒரு குறிக்கோளே இல்லாமல் குருட்டாம் போக்கில் அரசியல்வாதியை எதிர்க்கிறோம் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அண்ணா ஹசரேயும், இந்தப் போராட்டங்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டம் என்று தெளிவாக முதலில் அறிவிக்கப் பட வேண்டும். அதைச் செய்வார்களா?
அப்படி யோகா குரு பாபா ராம்தேவோ அல்லது பா ஜ க வோ சொல்லி ஒரு போராட்டம் நடத்தி விடுவர்களோ என்ற அச்சத்தில் இவரைக் கிளப்பி விட்டு, காங்கிரஸை எதிர்த்து அப்படி ஒரு பெரிய போராட்டம் நடந்து விடக் கூடாது என்பதற்காக, அவற்றை நீர்த்துப் போகச் செய்வதற்காக, ராஜ்தீப் சர்தேசாய் போன்ற திருடர்கள் அக்னிவேஷ் போன்ற கூட்டுக் களவாணிகளுடன் சேர்ந்து கொண்டு போடும் கொள்ளைக் கூட்ட ஆதரவு நாடகமாகவே நான் இதைக் காண்கிறேன்.
ஊழல் செய்பவர்களுக்கு தண்ட்னை கொடுக்க அமைப்பு கேட்பதை விட, ஊழல்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை உருவாக்கச் சொல்லி அல்லவா முதலில் போராட வேண்டும்? கிளார்க் லஞ்சம் வாங்கினால் 40 வருடம் தண்டனை அதுவே அரசியல்வாதி ஊழல் செய்தால் 100 வருடம் தண்டனை என்று அமெரிக்காவில் உள்ளது போல கடுமையான சட்டங்களைக் கொண்டு வரச் சொல்லி அல்லவா இந்தப் போராட்டம் நடத்தப் பட்டிருக்க வேண்டும்? ஊழல் நடப்பதைத் தடுக்கும் விதமான மாற்றங்களை இவர்கள் ஏன் கோருவதில்லை? ஊழலுக்கு இடமில்லாத வகையில் பல்வேறு திருத்தங்கள் கோரி போராடியிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுகும் மேலாக லோக்பாலை அமுல் படுத்தக் கோரியும் போராட வேண்டும்.
இருந்தாலும் ஒரு நல்ல தொடக்கம். ஆனால் அது தொடக்கத்திலேயே நின்று போய் விடுமோ என்ற அச்சமும் நாளைக்கு உண்மையான போராட்டம் ஏதும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் ஒரு முயற்சியாகவுமே இது எனக்குத் தோன்றுகிறது. என் சந்தேகம் பொய்த்தால் மகிழ்வேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்திய அரசியலைப் பொருத்தவரை என் சந்தேகங்கள் பொய்த்ததேயில்லை.
அண்ணா சாஹேப் அப்படி ஒன்றும் இளிச்சவாயர் அல்ல சோனியா, என்.டி.டிவி போன்றவர்களிடம் ஏமாறுவதற்கு. அவருக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு அவரின் செயற்கரிய செய்கைகளினால் தான். அவர் ஒரு மீடியா டார்லிங்காக என்றுமே இருந்தது கிடையாது. இன்றைய சூழலில் நவீன இந்தியாவின் ஜீன்ஸ் பாண்ட் இளைஞர்கள் காந்தி குல்லா அணிந்த ஒரு மராட்டிய பாட்டாவுக்கு பின் அணி திரள்வதன் ஆச்சரியம் சாதாரணமானதல்ல.
இதில் அண்ணா சாஹேப்பின் வரைவு மசோதாவில் நல்ல நோக்கத்தில் ஆனால் நடைமுறை சிக்கலான சில விஷயங்களை பூதாகாரம் ஆக்கி காங்கிரஸ் அவரை கிறுக்கனாக்கப் பார்க்கிறது. இந்த வரைவு மசோதாவை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரவில்லை. அதை விவாதிக்கும் குழுவில் சிவில் சமூக பிரதிநிதிகள் உறுப்பினர்களாக 50% வேண்டும் என்றே கோருகிறார். கடைசி வரைவு நிறைவேற்றப்படும் வரை இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு வலு கிடையாது. நாம் எல்லாரும் சேர்ந்து அண்ணா சாஹேப்பிற்கு எழுதுவோம் இது ஏன் நடைமுறையில் சாத்தியம அல்ல என்று.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் இமேஜ் வலுவாக அடி வாங்கி இருக்கிறது. தானாக ஒரு மசோதாவை ஒருக்காலும் அது கொண்டு வந்து இருக்காது. அப்படி கட்டாயபடுத்தி காங்கிரஸ் பலகீனமாக இருக்கும் இவ்விஷயத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பும் வகையில் நடக்கும் ஒரு பெரும் விழைவின் பின்னணியில் காங்கிரசே இருக்கும் என நினைப்பது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது.
எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும். காந்தியும் படேலும் ஜம்னாலாலுக்கும் கன்ஷ்யாம் தாசுக்கும் காசு கேட்டு நச்சரித்து எழுதாத கடிதமா? ஜெ.பி. யின் ‘முழுப்புரட்சியும்’ ரூம் போட்டு யோசித்து செய்யப்பட்டது தான். அதனாலேயே அது தவறாகி விடுமா?
மொத்தத்தில் மக்கள் ரொம்ப நம்பிக்கையிழந்தவர்களாக, சினிக்கலாக ஆகி வருகிறார்கள்…
மீண்டும் ச.திருமலை:
முக்கியமாக என் ஏ சி (NAC – National Advisory Council) என்றழைக்கப் படும் சோனியாவின் இணை அரசுக்கு (பாரலெல் கவர்ண்மெண்ட்) இவர்கள் அந்த வரைவு மசோதாவிலும் போராட்டத்திலும் கொடுக்கும் முக்கியத்துவம் சோனியாவைப் புனிதப் பசுவாக்குகிறது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு முனைப்போடும், தீர்க்கமான குழப்பமில்லாத வரைவுகளுடனும் போராட வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் ஜீன்ஸ் வாலாக்களுக்கு அவர்கள் யாரை எதிர்த்துப் போராடப் போகிறார்கள் என்ற தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
நான் ஜீன்ஸ் போடாமல் அரை டிரவுசர் போட்டிருந்த காலத்தில், ஜெ பியின் பின்னால் போன காலத்தில், எதிர்ப்பது இந்திராவையும் அவரது எதோத்சிகார எமர்ஜென்ஸியும் என்ற தெளிவை ஜெ பி தனக்கு பின்னல் வருபவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொன்னார். பின்னால் போன என்னைப் போன்ற அரை டிரவுசர்களுக்கும் அதே தெளிவு இருந்தது. எந்த கட்டத்திலும் ஜெ பி 20 அம்ச திட்டம் போன்ற கோமாளித்தங்களை ஆதரித்துப் பேசிக் குழப்பம் ஏற்படுத்தவில்லை.
இங்கு மாறாக ஹசாரே என் ஆர் ஜி இக்கும் (NREGS), என் ஏ சி க்கும் (NAC) போடும் ஜால்ரா அவரது போராட்டத்தின் நோக்கம் மீது குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. போராட்டம் என்றால் யாரை எதிர்த்து, எத்ற்காக என்ற தெளிவு வேண்டும். நான் ஊழலை எதிர்த்துப் போராடப் போகிறேன் என்று சொல்லி விட்டு சோனியாஜி வாங்க, என் ஏ சி வாழ்க என்றெல்லாம் சொன்னால் பின்னால் போகும் ஜீன்ஸ்வாலாக்கள் ஜே போடலாமே அன்றி என்னைப் போன்றவர்கள் கேள்வி எழுப்புவார்கள். பதில் தெளிவாகத் தேவை. குப்பாச்சு குழப்பாச்சு போராட்டமாக இருத்தல் கூடாது என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.
அவர் என்றுமே ஒரு மீடியா டார்லிங்காக இல்லாமல் இன்று திடீரென்று மீடியாவின் டார்லிங்குகள் அவர் பின்னால் வருவதினால் நான் அந்த மீடியா டார்லிங்குகளைத் தான் சந்தேகிக்கிறேன். இதே மீடியா டார்லிங்குகள் நாளைக்கு இதே ஜீன்ஸ் வாலாக்களை அன்னை சோனியாதான் லோக்பால் கொண்டு வந்தார் என்று நம்ப வைத்து அன்னையின் ஓட்டு வங்கியாக மாற்றி விடக் கூடிய அபாயமும் உள்ளது!
மீண்டும் திருவாழி மார்பன்:
அவர் சோனியாவிடம் மென்மையாகத்தான் நடந்துகொள்கிறார். ஆனால் மன்மோகன் சிங்கரை நார் நாராக கிழித்து எடுத்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது.
காந்திய போராட்டத்தின் ஒரு முக்கியமான யுக்தி எல்லாரையும் ஒரே சேர பகைத்துக்கொண்டு ரஜபுத்ர ஸ்டைலில் சண்டை போடுவது அல்ல. ஒட்டுமொத்தமாக எதிரிகளை குழுமமாக உருவகிப்பது வெற்றிக்கான வழி அல்ல. எதிர்த் தரப்பிலேயும் ஒரு நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டு போராடுவதில் இரண்டு லாபங்கள் உள்ளன -
1. அது அவர்களிடையே குழப்பத்தை விளைவிக்கும்.
2. வேடிக்கை பார்க்கும் பொதுமக்களிடம் ஆதரவை பெற்றுத்தரும்.
இப்போது அண்ணா சாஹேப் போராடி சோனியா தலைமையில் அல்லது சவுகரியத்தில் வெற்றி பெறுவது தாற்காலிக வெற்றி தான். ஆனால் ஒரு கடுமையான, திறமையான, தன்னாட்சி கொண்ட லஞ்ச ஒழிப்பு கமிஷன் அமைந்தால் பின்னாளில் சோனியாவுக்கு ஆப்பு அடிக்க இப்போது இருக்கும் வாய்ப்பைவிட இன்னும் அதிகம். சரிதானே?
RTI கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் அதன் அடிப்படையில் எண்ணற்ற தன்னார்வக்குழுக்கள் செயல்படுவது காங்கிரசுக்கு ஆதரவாகத்தான் என வாதாட முடியுமா? இது இந்திய சிவில் சமூகத்தின் ஒரு ஊழலுக்கு எதிரான அமைப்பு ரீதியான வெற்றி. தற்போது பயனற்றதாக தோன்றினாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்ல ஒரு அமைப்பு என மதுரை ஜோதிடரான நான் கணிக்கிறேன்
ஊழல் செய்வது தவறு என நினைக்கவைக்கும் அளவுக்காகவது ஒரு வெற்றி.
நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியினரை இந்த லோக்பால் கமிட்டியில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற “பரிந்துரை” கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கவனித்தால் காங்கிரஸ் மற்றும் இடது சார்புடைய அமார்த்தியா சென் டக்கென நினைவுக்கு வருவார்!
இந்திய குடியுரிமை ஆட்கள்தான் இருக்க வேண்டும், இந்திய வம்சாவளி ஆட்களை உள்ளே கொண்டு வருவது ஆபத்து. இந்திய குடியுரிமை ஆட்களுக்கு இருக்கும் சொந்த நாடு என்கிற பாத்யதை உணர்ச்சி வம்சாவளி ஆட்களுக்கு இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.
மக்சேசே விருது வாங்கியவர்கள் உறுப்பினர்களாகலாம் என்பது சந்தீப் பாண்டேயை உள்ளே கொண்டு வர. பின்னே, சேஷனையா கூட்டிவரபோகிறார்கள்?
சிவில் சொசைட்டி என்பது ஊரில் டேரா போட்டிருக்கும் புதிய சர்க்கஸ். பழைய என் ஜி ஓ அமைப்புகள் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி இருந்தன, அந்த பழைய என் ஜி ஓக்களை சிவில் சொசைட்டி என்று புதிய அங்கியால் மூடி ஆட்சியதிகாரம் (Governance) என்கிற பீடத்தில் ஒரு பங்கையும் பெற்றுத் தருவது தற்போதைய சிவில் சொசைட்டி முனைப்புகளின் நோக்கம். இவற்றில் பல, மேற்கு நாடுகளால்- குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையால் உருவாக்கப் பட்டு ஊக்குவிக்கப் படுபவை. குறைந்த செலவில் உலகின் முக்கிய நாடுகளுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டிய அவசியத்தில் இன்று மேற்கு நாடுகள் இருக்கின்றன. எகிப்தில் சிவில் சொசைட்டி போராளிகள்- வலையுலப் புரட்சிக்காரர்கள் – அமெரிக்காவால் பயிற்சி தரப்பட்டவர்கள் என்று வெளிப்படையாகவே செய்திகள் இப்போது வந்து விட்டன. ஏன் நான் இவற்றை சந்தேகமாகவே பார்க்கிறேன் என்றால், உலகத்தை சிவிலைஸ் செய்கிறேன் என்று ஐரோப்பாவோ அமெரிக்காவோ புறப்பட்டால், எனக்குப் பீதியாகி விடுகிறது என்பதால்தான்! சொம்பை எடுத்து உள்ளே வைத்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறேன்.
இது ஒருபுறம் இருக்கட்டும். இவைகளால் மட்டுமே ஊழலை எதிர்க்கும் இது போன்ற முனைப்புகள் தீண்டத் தகாதது என்று சொல்ல மாட்டேன். சொல்லப் போனால் இவற்றை தவிர்க்கவும் முடியாது- ஊழல் பயங்கரமாய் வியாபித்து இருப்பது உண்மைதானே? மக்கள் ஆட்சியாளர்களிடம் நாணயத்தை எதிர்பார்ப்பதே வெகுவாகக் குறைந்து விட்டது என்பது உண்மைதானே? ஒரு ஆதர்ச பிம்பத்தை எதிர்பார்த்து நம் இளைஞ்ர்கள் அலைபாய்கிறார்கள் என்பதும் உண்மைதானே? ஆக இந்த மாதிரி ஒரு முனைப்புக்கான தேவை இருக்கிறதுதான். ஆனாலும் இந்த அலையை யார் உபயோகித்து துடுப்புப் போடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். சாமி கும்பிடும் கூட்டத்தில் பர்சையும் கவனமாகப் பார்த்துக்கொள்வது போல.
சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது என்பது என் அபிப்ராயம். சோவியத் குறித்து ரீகன் சொன்னதைத்தான் சிவில் சொசைட்டி முனைப்புகள் குறித்து நானும் சொல்வேன்- Trust but verify.

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ
ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா
லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?
ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…
புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!
மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்![ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...]](http://www.tamilhindu.com/wp-content/uploads/upa-spectrum-2g.jpg)
ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...]
நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01
ஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்
தர்ம யுத்தம் வென்றது!
மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்
தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!
மக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்
சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு
அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை
இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு –
நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்
திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்
ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்
லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்
சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்
சீனா – விலகும் திரை: ஒரு பார்வை
ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!






தொகுப்பு நன்றாகத் தான் இருக்கிறது,ஆனால் முடிவாக என்னதான் சொல்லவருகிறது என்று பார்த்தால், ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
அன்னா ஹசாரே இதற்கு முன் நடத்திய போராட்டத்தில், அவரை உள்நோக்கம் உடையவராகக் குற்றம் சாட்டிய சரத் பவாரின் அமைச்சர்கள் நான்குபேர் பதவி இறங்க வேண்டி வந்தது. சரத் பவார் மாதிரி ஒரு ஊழல் பெருச்சாளியை மிஞ்ச இப்போது தான் ஒரு ஸ்பெக்ட்ரம்வாலா உருவாகியிருக்கிறார்.
மகாராஷ்ட்ரத்தில் சரத் பவார் ஒரே நேரத்தில் நான்கு குதிரைகளின் மீது (காங்கிரஸ்-சிவசேனா-இன்னும் சில உதிரிக்கட்சிகள்} சவாரி செய்யக் கூடியவர், பிதமர் கனவு பலிக்காவிட்டால் என்ன, கிரிக்கெட்டை வைத்தே ஆயிரம், லட்சம் கோடிகள் சம்பாதிக்க வல்லவர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால், ஹசாரே செய்திருப்பது, அல்லது செய்து கொண்டிருப்பதைக் குறைத்து மதிப்பிட முடியாது.இந்த உண்ணாவிரதத்தில் முதலில் முகத்தில் குத்து வாங்கியவர் சரத் பவார்தான் என்பதையும் சேர்த்துப் பாருங்கள்.ஏற்கெனெவே சூடுபட்ட அனுபவம், இந்தமுறை மரியாதையாக ஒதுங்கிக் கொள்ள வைத்துவிட்டதே!
அரசியல் கட்சிகள் எதையும் நம்பிக் களத்தில் இறங்க ஜனங்கள் தயாராக இல்லை என்பதையே அன்னா ஹசாரே பின்னால் அணிதிரளும் மக்களின் மனநிலை காட்டுகிறது.
திரு ஜடாயு வேறு ஒரு தளத்தில் கொடுத்திருந்த இந்த மூன்று சுட்டிகளையும் பார்த்தேன்.சந்தியா ஜெயின் எழுதிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தில் ஹசாரே கிருத்தவரா என்ற கேள்வி இரண்டு முறை எழுப்பப் பட்டிருந்ததையும் படித்தேன்.
சந்தேகப்படுவதற்கு, ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமை இருப்பது போலவே நம்புவதற்கு ஜனங்களுக்கும் உரிமை இருக்கிறதே! அதற்கு என்ன சொல்வது?
ஆசிரியர் குழுவிற்கு,
121 கோடி மக்களில் சில ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டு உணர்ச்சி வசத்தில்
தடுமாறி எடுத்த முடிவுதான் இது.
இக்கட்டுரையின் முதலில் எழுதியுள்ள திரு.சுப்பு அவர்களின் கருத்துடன்
முழுவதுமாக நான் துணை போகிறேன். நாம் அக்மார்க் யோக்கியர்கள்
அல்ல.
மேலும் நான் இது போன்ற மசோதாக்களை எதிர்ப்பது வேறு
காரணத்திற்காக. இந்தியா 95 சதவிகித ஊழல் நிலையிலிருந்து 5%
நிலைக்கு (0% எட்டக் கூடியதே அல்ல) செல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு.
அது பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவது.
2ம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய முடிவுகள்
பிரதமர் அலுவலகத்தின் பீரோக்களில் கோப்புகளாக ஒளிந்துள்ளன.
ஓய்வூதியம், வங்கி, மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளில்
தனியாரை அனுமதிக்கும் மசோதாக்கள் வெளி வர மறுக்கின்றன.
இவற்றை செயல்படுத்தும்போது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு எழும்.
இதை சமாளித்து நம் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து
சென்றால் ஊழலின் அளவு தன்னாலேயே குறைந்துவிடும்.
ஒரே ஒரு உதாரணம். 2ஜி பற்றியது. அது குறித்த ஊழலைப் பற்றி அல்ல.
தொலைத்தொடர்பு அலைவரிசைகளில் முக்காலே மூணு வீசம் இந்திய
இராணுவத்தின் வசம்தான் இருந்தன. அவற்றை செல் தொலைபேசிக்கு
அளிக்க தொலைத்தொடர்புத் துறை முயன்றது. இராணுவம் அதை
முழுமையாக எதிர்த்தது. குப்பையான காரணங்களையும் கூறியது.
(தேச பாதுகாப்பாம்). இவர்களும் உபயோகிக்க வில்லை. மற்றவர்களுக்கும்
கொடுக்க மறுத்தனர். அரசாங்கம் அதை இராணுவத்திடமிருந்து பிடுங்கியது.
நமக்கு கிடைக்கும் பாடம். அதிகாரம் குவிந்தால் துஷ்பிரயோகமும்,
ஊழலும் இருந்தே தீரும். எந்த லோக்பால் மசோதாவும் ஒன்றும் செய்ய
முடியாது.
பொருளாதார சீர்திருத்தத்தின் அவசியத்தை கீழ்தட்டு மக்களுக்கு
குறைந்த அளவிலேனும் எடுத்து செல்வதுதான் அடுத்த கட்ட இந்திய
அரசியல் தலைவர்களின் பிரச்சினையாகவும், வேலையாகவும் இருக்கும்
என நம்புகிறேன்.
இந்த லோக்பால் மசோதாவை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இது
தவறான சமயத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு. 2ம் தலைமுறை
பொருளாதார சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப் பட்டவுடன் இதை
மேற்கொண்டிருந்தால் சரியாக இருநிருக்கும். இந்த சட்டம் வந்து
விட்டதால் முக்கிய, கடினமான முடிவுகளை எடுக்காமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் நழுவி விடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
ஆசிரியர் குழுவிற்கு கோடி வந்தனங்கள்.
கிரிக்கெட்டிற்கு நிகரான (கிரிக்கெட் டிப்லோமசி உள்ளடங்கிய) பைத்தியக்கரத்தனத்தில் மூழ்கியிருக்கிறது நாடு.
சுப்பு கூறியதைப் போன்று ஊழல் எதிர்ப்பு உள்ளிருந்து துவங்கவேண்டும் என்பதை நான் முற்றிலும் ஏற்கிறேன். மும்பை படுகொலைக்கு மெழுகுவற்றி ஏற்றிவிட்டு வாளாவிருந்த கூட்டம் மீட்டும் மெழுகுவர்த்தியோடு அலைகிறது.
விக்கி லீக்கிற்கு விளக்கமளிக்க வந்த புண்ணியவான் மன்மோகன் சிங் மக்கள் மன்றத்தில் ஊழல் வழக்கை வென்றுவிட்டதாக பதிலளித்தார். நீதி மன்றம் தவிர ஊழலைக் களைய வேறு வழியில்லை.
லோக்பால் மற்றொரு மோசடி வேலையாக உருமாறும். நீதி மன்றம் நீதி வழங்காதெனின் இம்மோசடி நீதி தராது.
இந்த அன்ன ஹசாரே எமாறுபவரா ஏமாற்றுபவரா என்பதை அனுமானிக்க எனக்கு தயக்கமில்லை இயக்குவது யார் அல்லது எது என்பதில் எனக்கு இன்னும் தெளிவில்லை. பவாரை ஆட்சேபிக்கும் அவர் மு க அழகிரி (அவரும் ஊழல் ஒழிப்பு அமைச்சர் கூட்டத்தில் இருக்கிறார்) பற்றி வாயே திறக்கவில்லை. தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் குறித்துக் கூறுபவற்றை இவர் அறியமாட்டாரா? மதுரையில் வந்து நோன்பிருக்கலாமே?
ஹசாரே கிருத்தவர் என்பதால் அவரை சிலுவையில் ஏற்றிவிடலாம். குரேஷி முஸ்லிம் என்பதால் நாம் அழகிரியை ஆதரித்து விடலாம்.ஆண்டிமுத்து ராசா ஹிந்து என்பதால் மொத்தப்பனத்தையும் அவருக்கு மொய் எழுதிவிடலாம். சினிமாக்காரர்கள் கூட சிந்திக்காத லாஜிக் இது.
ராஜ்தீப் சௌன்டு சர்விஸ் செய்ய நினைபது அப்பட்டமாக தெரிந்தது தான் – ஐபீஎன்னில் ஒரு கேவலமான கட்டுரை – ஒரு மனிதன் எத்தனை நால் உணவு இல்லாமல்வாழலாம் – எட்டு வாரம் என்று அருதி இட்டிருந்தார்கள் இந்த பார்டிகள்
இது இப்படி இருக்க மக்கள் என்னமோ தெளிவாக தான்இருக்காங்க – அந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களே அதற்க்கு சாட்சி – அனைவரும் இது காங்கிரச்சிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு எழுதிய கட்டுரை என்றெ சொல்லி இருந்தனர். ஐபீஎன்னை பிரித்து எடுத்திருந்தனர் . – இவர்கள் என்னதான் காங்கிரஸ்ஸை காப்பாத்த நினைத்தாலும் மக்கள் தெலிவா குஜராத் மாடல் தான் சரி, காந்கிரஸ் ஒரு சனி என்று சொல்வது பரவலாக பார்க்க முடிகிரது
ராம்கி, வட நாட்டில் அண்ணா ஹஜாரேவை பலருக்கு தெரியும், பவாரையும் தெரியும். இங்கு அன்ன நோன்பிரிக்கிறார் என்றால் அன்ன உயிர்த்தெழுந்தார் என்றார் கட்டாயம் கலைஙருக்கு தான் மக்கள் ஒட்டு போடுவார்கள்
நதிநீரஎல்லாம் இணைக்க வேண்டும் என்று விஜயகாந்த் ஹரய்யானவில் போயா நோன்பிருப்பார்
காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பாபா ராம்தேவ் ஊழலை எதிர்து ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது. மேலும் அவர் நடத்திவந்த யோகா பயிர்சி நிகழ்சியை அஸ்தா டீ.வீ. யில் வேண்டும் என்றே தடை செய்த்துள்ளது. உமா பாரதியை அன்னா கூட்டத்தில் அனுமதிக்கவில்லை. இது ஒரு கபட நாடகம். சூன்னியகாரி சோனியாவின் நாட்டை பிரிக்கும் சூழ்சி கும்பலுக்கு சர்வஅதிகாரம் பரவசெய்ய நடத்தப்படும் ஒரு சதி வேலைதான் என்பதில் என்ன சந்தேகம் ?
இந்த ஸ்பெக்டரம் ஊழலை விசாரிக்க எத்தனை கமிடிகள் செயல்படுகிறது ஏதாவது உருபடியாக இன்றுவரை வெளிவந்ததா ? இந்த மசோதா இன்று தேவை இல்லை. நீதிமன்றதிலும் சி.பி.ஐ. லும் ஆளும் கட்சி தலையிடாமல் இருந்தாலே போதுமானது.
ஒரு கிருத்துவரை ஆதரித்து சுப்புவின் கட்டுரை அதுவும் தமிழ் ஹிந்துவில். முட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.
முழுக்க முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இந்த அண்ணா ஹஸாரே ஜன் லோக்பால் ட்ராமா.
இந்திய அரசியல் கட்சிகளைத் தங்கள் கைப்பிடிக்குள் அமெரிக்கக் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் ”மல்லிகைப் புரட்சி” என்ற பெயரில் நடக்கும் அமெரிக்க ஆதிக்க முயற்சிகளின் இந்திய வடிவம் இது.
அமெரிக்காவின் பிரச்சார பீரங்கிகளான இந்தியா வாழ் ஆங்கில மீடியாக்களும், அமெரிக்காவிற்குக் கூழைக் கும்பிடு போட்டுப் பிழைக்கும் என்.ஜி.ஓக்களும் ஒன்று சேர்ந்து செய்த அமெரிக்க விசுவாச, இந்திய துரோகம் இது.
இத்தனை நாட்களாக ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் இருந்து வருகிற நாம், இனி அமெரிக்காவின் காலனியாதிக்கத்திற்கு பெருமளவு மாறுவோம். அதனால் ஒருசில லாபங்களும் உண்டு. ஓட்டை விற்பது தப்பு என்றாலும், விற்பதால் லாபங்கள் உண்டுதானே.
சோனியா கந்தி போன்ற யூரோப்பிய மையவாத ஆட்களை அமெரிக்க வெறுக்கிறது. அமெரிக்க அரசியலதிகாரத்தில் கத்தோலிக்கர்களுக்கு அவ்வளவு மதிப்பில்லை.
எல்லாம் மீடியா வசம். எல்லாம் ட்ராமா.
வெர்ல்ட் கப் கிரிக்கெட் முடிந்த உடன் ஆரம்பித்து ஐபிஎல் ஆரம்பித்துச் சூடு பிடிக்கும் முன் முடிந்து போனதால், மீடியாக்களின் ரேட்டிங் குறையாமல் பார்த்துக்கொண்ட மற்றொரு பரபரப்பு மீடியா விளம்பரம் இது.
இந்த அண்ணா ஹஸாரே ஊழல் எதிர்ப்பை ஆதரிப்பவர்களைப் பாருங்கள் – ஜெயலலிதா, எட்டியூரப்பா….
ஊழலைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட இவர்களுக்குத் தகுதி கிடையாது.
கருநாநிதியிடமும், ராவுல் கந்தியிடம் பேட்டி எடுத்திருந்தால் அவர்கள்கூட அண்ணா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்.
ஆனால், அவர்களிடம் மட்டும் இந்தியா வாழ் அமெரிக்க ஊடகங்கள் இது குறித்துக் கேள்விகள் எழுப்பவில்லை. ஏன்?
ஏனென்றால், இந்தியாவில் யார் அரசாள வேண்டும் என்பதை அமெரிக்க முடிவு செய்கிறது.
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பின்னணியில்கூட அமெரிக்காவின் கைகளே இருக்கின்றன என்பது என் ஸம்ஸயம். அமெரிக்க ஆதரவு ஆட்கள் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பெரிது படுத்துவதைக் காணலாம்.
இந்த அண்ணா ஹஸாரே ட்ராமாவை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை ஆதரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதும் இந்தியா வாழ் அமெரிக்க மீடியாவின் வெற்றியே.
மந்தை மந்தைகளாக அண்ணா ஹஸாரே என்னும் வெள்ளாட்டுக்குப் பின்னால் சுவர் தாண்டிய ஜீன்ஸ் பேண்ட் சிங்காரிகளில் ஒருவருக்குக் கூட இந்த ஜன் லோக்பால் மசோதா பற்றித் தெரிந்திருக்காது என்பது சர்வ நிச்சயம்.
காந்தி என்ற பிம்பத்தை உருவாக்கியதும் அமெரிக்க மீடியாக்கள்தான். அந்த பிம்பம் முன்வைத்த கொள்கைகள் நடைமுறையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியதாக எனக்குப் படவில்லை.
ஆனால், காந்திக்கு இந்தியா குறித்து இருந்த புரிதல் வேறு யாருக்கும் இல்லை. காந்தியவாதம் காந்தியால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. காந்தி இருந்திருந்தால் இந்தப் போராட்டத்தை முற்றிலும் நிராகரித்து இருப்பார்.
கவனித்துப் பாருங்கள். இந்தப் போராட்டம் கிராமங்களில் இருந்து எழவில்லை. அமெரிக்கக் கார்ப்பரேட்டின் கரங்கள் நீளும் இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட ஒரு மீடியா ட்ராமா இது.
இந்த அண்ணா ஹஸாரே ட்ராமாவையும் இந்தியா வாழ் அமெரிக்க மீடியாக்கள் உருவாக்கி உள்ளன. இந்தியாவில் ஒரு மிகப் பலமான அமெரிக்க லாபி உருவாகப் போவதுதான் இந்த ட்ராமாவின் விளைவு.
இதற்கும் ஜனநாயகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.
இந்த மசோதா பற்றி ஒரு உரையாடல், அலசல்கூட ஏற்படவில்லை. இது இந்துத்துவமே கிடையாது.
இந்தியாவில் மிகப்பெரிய வன்முறைகளை இந்த ட்ராமா ஆரம்பித்து வைத்துள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்.
தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவர நோபல் பரிசு பற்றிப் பேசுகிறார்கள். இதை தொளுரித்துக்காட்டிய அருணகிரிக்கு நன்றி.
மற்றபடி பல கமெண்டுகள் குழப்பமாக இருக்கின்றன. ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் கிருத்துவர் இருக்கக் கூடாதா . இப்படியே போனால் ஹிந்து அரிசி முஸ்லிம் தேங்காய் கிருத்தவ மாங்காய் என்று பிரித்துவிடுவார்கள்.
\\\\\\\\\இது ஒருபுறம் இருக்கட்டும். இவைகளால் மட்டுமே ஊழலை எதிர்க்கும் இது போன்ற முனைப்புகள் தீண்டத் தகாதது என்று சொல்ல மாட்டேன். சொல்லப் போனால் இவற்றை தவிர்க்கவும் முடியாது- ஊழல் பயங்கரமாய் வியாபித்து இருப்பது உண்மைதானே?\\\\\\\\\\
Every time the country rises against evil forces, the efforts are jeopardized by pseudo good people implanted by the very evil forces against which the country want to fight. This happened during 1857; then happened again around 1947. And it is getting repeated. Let sense prevail to the good souls of Baba Ramdev and Srhi Anna Hazare and let their movement be cleansed of evil people . The implants of white church, naxal movement and corrupt print and visual pseudo secular media is not for the purpose of driving out corruption but for thwarting the efforts of good souls in disguised ways.
The cause is as important as the people involved in achieving the goals. Although a kasai can preach ahimsa, his preaching will have no meaning and it would be ridiculous unless and until he stops butchery. The same rule applies here.
satyameva jayate.
1. எந்த நல்லதும் நடந்துவிடக்கூடாது இந்த நாட்டில்.. எதிலும் சந்தேகம். வெளியில் வீட்டில் அனுமானத்தின் பேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு , அலசல் செய்வது.. “ நோக்கம் இருக்கிறதென்றே நினைக்கிறேன் …. அன்னா ஹஸாரே யாரென இன்னும் பொறுத்துத்தான் பார்ர்க வேண்டும்… இது ஸோனியா காந்தியின் வேலை… இது அது .. “ என்றெல்லாம் பேசுவதை நிறுத்தி எப்பொழுது ஏர்ப்படப் பேசப்போகிறார்கள்? 64 வருடங்களாக இயற்றாத சட்டமா, போடாத சத்தமா.. !! இன்று நிலை என்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முதல் தாலுக்கா அலுவலக ப்யூன் வரை … மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை லஞ்சம் ,, ஊழல்.. எத்தனம்.. பொறுக்க மாட்டாமல் யாரோ ஒருவர் முன்வந்து கேள்வி கேட்டால் .. அவர் கிறித்துவரா, முஸ்லிமா, ஹிந்துவா.. மனிதந்தானா என்றெல்லாம் அலசல்..
2, எல்லா மறுமொழிகளும் ஒன்றை ஒப்புக்கொள்கின்றன.. “ நல்லது நடந்தால் சரி “ என்று. எது நல்லது என்றுகூடச் சொல்லவில்லை.
3. எந்த மாற்றமுமே தனிமனிதனிடமிருந்துதான் உண்டாக வேண்டும் .. மாற்றத்திற்காக அவன் ஏங்க வேண்டும்.. அதைத் தேடிக்கண்டுபிடித்து, தனக்குள் ஏற்றி , வளர்த்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.. இதில் எந்த கருத்து வேற்றுமையும் இருக்க முடியாது.. மறுத்து மொழிவோரெல்லாம் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அவர்களெல்லாம் லஞ்சமே கொடுக்க வில்லையா?> உறுதியாகச் சொல்ல முடியுமா? அல்லது இனிமேல் லஞம் கொடுக்க மாட்டேன் என்ற உத்தரவாதந்தான் கொஉத்திருக்கிறார்களா? ஏதுமில்லை..
4. வெறும் வார்த்தைப் பின்னல் போடாமல் இந்த லோக்பால் பில் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும், ஊரிலும் மாநகரிலும் ,.. நாட்டிலும் இதற்கு என்ன செய்ய வேண்டும், என்று யோசியுங்கள்.. செய்யுங்கள்… பேசாதீர்கள். ஒவ்வொருவரும் அன்னா ஹஸாரேவாக மாறுங்கள். .. அன்னா ஹஸாரே யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறார். அவர் முக்கியமல்ல… அவர் காட்டிய வழி, எடுத்த நோக்கம் இவைகளை மட்டும் பாருங்கள்..
5. கிறித்தவனா என்று முட்டிக்கொள்ள நினைத்தவருக்கு ஒரு வேண்டுகோள் … தயவு செய்து … தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.. ப்ளீஈஸ்… தயவு செய்து… உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்… கைவிடுங்கள்… சுவற்றை வீணக்காதீர்கள்..
இனிமேல் இண்டர்நெட்ட் பயன்படுத்தாதீர்கள் ! ஆங்கில மருந்து சாப்பிடாதீர்கள்… டிவி பார்க்காதீர்கள்.. இன்னும் பல இதெல்லாம் கிறித்துவ ஆதிக்கத்தின் குறியீடுகள்.. இவற்றை ஒதுக்குங்கள்.. [...]
[Edited and published]
I totally agree with the arguements mentioned in this article because I was also talking in the same tone from the day one. Thank you.
அருமை! நன்றி! தமிழ் ஹிந்துவின் முக்கியமான கருத்துக்களை தமிழ் அறிந்த அனைவரும் அறியத் தருவது. எனக்கு இந்த கட்டுரையை படித்தவுடன் இந்த அன்னா ஹசாரேயின் போராட்டம் சரியான வழியில் செல்ல வேண்டும் என்ற கவலை ஏற்படுகிறது!
தமிழ் அறிந்த விவரம் தெரிந்தவர்கள் சரியான வழியை நோக்கி நாட்டை கொண்டு செல்ல பாடு பட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!
நன்றி!
இருளில் ஒரு ஒளிக்கீற்று தெரிந்தால் அதைப் பின்பற்றிப்போவோமா அல்லது அது நம்மை மேலும் இருளில் ஆழ்த்திவிடும் என்றெண்ணி வாளாவிருப்போமா.. அன்னா ஹஸாரே யாராக இருந்தாலும் பரவாயில்லை… இன்று அவர் முன்னின்று நடத்திய போராட்டத்தினால் அடுத்த தலைமுறைக்கு ஓர் உணர்வு வந்திருக்கிறது .. மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்… பெரிய அறிஞர்கள் பலர் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. பார்ப்போம்.
எந்த மாற்றமும் தானாக நிகழ வேண்டுமென்றால் தனி மனிதன் மாறா வேண்டும்.. இனி லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் . சட்டம் போட்டுத்தான் மனிதன் திருந்த வேண்டுமென்றால் உலகத்தில் உள்ள அத்தனை சட்டங்களும் போதா !!
வீட்டின் நலத்துக்கும் நாட்டின் நலத்துக்கும் வேற்றுமையென்பதேயில்லை என்றுணர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அன்னா ஹஸாரே உருவாக வேண்டும்.. இன்றைய அன்னா ஹஸாரே ஒரு உருவகமாக மாறா வேண்டும்..
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.
ரொம்ப சந்தோசம். அண்ணா கசாரே கிறிஸ்தவர் என்று சில இந்து வெறியர்கள் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் இதனால் அவமானம் அண்ணாவுக்கு அல்ல. இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்வதால் அவமானம் இந்து மதத்துக்குத்தான். இப்படிப்பட்டவர்களால்தான் அண்ணல் அம்பேத்கார் இந்து மதத்தை விட்டு போக நேர்ந்தது. அண்ணா சுவாமி விவேகானந்தரால் உந்தப்பட்டவர். நேர்மையானவர். அந்த மசோதாவில் பிரச்சனைகள் இருக்கலாம். இருக்கின்றன. அதனை சரி செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் இதில் சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. ஆனால் சிலர் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு விமர்சனத்துக்கு பதிலாக அவதூறுகளை அண்ணா மீது எறிகிறார்கள். மேலே உள்ள கமெண்டை தமிழ்இந்து தளம் பிரசுரித்திருக்க க் கூடாது.
http://deshgujarat.com/2011/04/10/anna-hazare-appreciates-narendra-modi-and-nitish-kumar-for-rural-development-and-grass-root-work/
அண்ணா ஹசாரே மீதும் அவர் உருவாக்கிய கிராம வளர்ச்சி மீதும் தமிழ்ஹிந்து இணையதளம் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறது. அவரைக் குறித்த அவதூறுகளை இத்தளத்தின் பொறுப்பாளர்கள் கிஞ்சித்தும் நம்பவில்லை என்பதுடன் மிகவும் மனவ்ருத்தத்துடன் நோக்குகிறார்கள். இக்கட்டுரையை – பல கோணங்களிலான பார்வையாக நாங்கள் முன்வைத்ததே இது குறித்து ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்து செல்லவே தவிர அவதூறுகளை வீச அல்ல.
அவதூறுகளைக் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட மறுமொழியை நாங்கள் பிரசுரித்தமைக்கு காரணம் எப்படியெல்லாம் தவறான மனப்பிரமைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள் என காட்டவே அன்றி அந்த மறுமொழியுடனான ஒப்புதலால் அல்ல.
அண்ணா ஹசாரே நல்லவரா கெட்டவரா என்கிற கேள்விக்கே இடமில்லை. அண்ணா ஹசாரே இந்நாட்டின் முன்னேற்றத்தை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பெரும் ஆதர்ச புருஷர். ஆனால் அவருடைய நிழலில் சில
தேசவிரோத சக்திகள் புகுந்துவிடக் கூடாதே என்பதே நம்மில் சிலரின் நியாயமான ஆதங்கம். அண்ணா ஹசாரே குறித்து அவதூறாக இத்தளத்தின் ஆசிரியர் குழு நினைக்கவில்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்.
One person has the guts atleast to raise his voice against corruption and this could raise some momentum against this evil. Let us think positive on these aspects. Do not give religious colour to this. Allow some good things to happen
Sridharan g
there is always a clash of interest between india and bharath. this is reflected in the anna hazare issue also.
columnists, intellectuals and internet heroes are finding fault with anna hazare. they constitute india.
the people of the country are with him. the nation wibes with him.the children love him.housewives worship him and students support him. they are the bharath.
i am glad that tamilhindu has made its stand clear.
இந்த கலகதுக்குப் பின்னால் ராஜ்தீப்போ ,அல்லது சந்தீப்போ இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நாரதர் கலகம் நல்லதில் முடிந்தால் சரி .இத்தனை நாளாய் பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தானே நாம் காத்திருந்தோம் .இதோ இப்போது ஒருவர் வந்து விட்டார் !அண்ணா ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு என்ன வழி என்பதை யோசிக்கும் தருணம் இது . அல்பமான விசயங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு மெய்யினான பாயிண்டைப் பாப்போம் நாம் .அது தான் புத்திசாலித் தனம் .
அன்னா ஹசாரே ஆதர்ச புருஷர் என்பதை தமில்ஹிந்து தெளிவுபடுத்தியிருக்கிறது.மகிழ்ச்சி.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறீங்க.
அண்ணா ஹசாரே இந்தியர்கள் லஞ்சலாவ்ன்யத்தை ஒழித்துகட்ட ஒரு நல்ல வழியை உண்டாகியிருகிறார். நம் அத்தனை மக்களின் ஆதங்கத்தையும் ஒருமுகபடுத்த அவர் உதவியிருக்கிறார் . வேறு வழியே இல்லை ஒவ்வொரு தேர்தலிலும் கொள்ளை கூட்டம் மாறுகிறது என்று நாம் தலையில் அடிதகொண்ட நிலையை மாற்ற இது முதல் படி. சில பேர் இதனை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்கிறனர், ஆனால் நமது அரசியல் நடைமுறை பிரிட்டிஷ் ஏகதிபத்திய அரசை ஒத்துள்ளது . நமது அரசியல்வாதிகளை கொண்டு லஞ்ச ஒழிப்பு அமைப்பை ஏற்படுத்துவது என்பது திருடனை கொண்டே திருட்டை தடுப்பது போல. ஹசாரே மக்கள் சக்தியின் மகத்துவத்தை மன்னர்களை போல செயல்படும் நம் அரசியல்வாதிகளுக்கு புரிய வைத்திருக்கிறார்
காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை
தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு
நல்ல அலசல்.
தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் சந்தேகங்கள் உண்மையானவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.
எந்த ஒரு செயலும் நியாயமானது என்பதற்கான காரண காரியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும். எந்த ஒரு செயலின் பின்புலத்திலும் அதனை மேற்கொள்பவரின் நோக்கங்கள் வெளிப்பட்டே தீரும். தில்லியில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் துவக்கியபோது, அவருக்கு அருகில் வீற்றிருந்தவர்களைக் கண்டபோதே இது உருப்படாது என்பது தெளிவாகிவிட்டது. சுவாமி அக்னிவேஷ் யாரென்று தெரியுமா? அவரைப் பற்றித் தெரியாதவர்கள், நமது ஊர் மதுரை ஆதீனத்தை ஒப்பிட்டுக் கொள்ளலாம். சந்தீப் பாண்டே யாரென்று தெரியுமா? நம் ஊர் எஸ்.வி.ராஜதுரையை ஒப்பிட்டுக் கொள்ளலாம். நற்காரியங்கள் உள்நோக்கங்களுடன் செயல்படுபவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. தன்னைச் சுற்றிலும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தது, தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது கேள்விக்குறி.
அன்னா ஹஸாரே பொதுவாழ்வில் மாறுதலை ஏற்படுத்த காந்தீயத்தைக் கடைபிடித்தவர் என்று முழங்கும் எந்த ஊடகமும், அவர் 1975 ல் ‘ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றத்தை சொல்லவில்லை. இன்னும் பலருக்கு அவர் அந்த கிராமத்தில் நிகழ்த்திய மகத்தான மாற்றங்கள் தெரியாது. அதன் பிறகு மராட்டிய அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்ததும் அவரது குரல் அம்மாநிலத்தில் எடுபடாமல் போனதும் பலருக்குத் தெரியாது. அவரது சரத் பவார் மீதான தனிப்பட்ட வெறுப்பே இந்த உண்ணாவிரத் நாடகத்தின் இறுதியில் வெற்றி கண்டது. அதற்காகவே, ‘சோனியாஜியும் லோக்பால் குழுவில் இடம்பெற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஹஸாரே. ஊழலை ஒழிக்க இதைவிட நல்ல வேறு வழியை யாரும் கண்டுபிடிக்க முடியாது. கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி!
ஊழலுக்கு எதிரான லோக்பால் குழுவில் அரசியல் சார்பற்ற என்ஜிஓக்களும் அரசுப் பிரதிநிதிகளும் தான் இருக்க வேண்டும் என்ற வரையறையே முதலில் தவறானது. பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், இடதுசாரி கட்சிகளின் தலைவரும் ஏன் இக்குழுவில்; இடம்பெறக் கூடாது? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் அரசுடன் போராடி தோல்வியுற்றாலும் மக்களின் மனசாட்சியாகத் திகழ்ந்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லவா? பாஜக பிரமுகர் என்பதால் அவர் லோக்பாலில் சேர்க்கப்படக் கூடாதா? தன்மீதான ஊழல் (1990 – ஹவாலா மோசடி வழக்கு) குற்றச்சாட்டிற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததுடன் நிரபராதி என்று நிரூபிக்கப்படும்வரை எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதம் செய்து வெற்றி கண்ட அத்வானி இக்குழுவில் ஏன் இடம் பெறக் கூடாது? மத்திய அரசின் தொடர் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடும் பரதனோ, து.ராஜாவோ ஏன் இக்குழுவில் இடம் பெறக் கூடாது?
லோக்பால் உறுப்பினர்களை முடிவு செய்ய ஹஸாரே உண்ணாவிரதத்தால் முடியும் என்றால் அவர் ஏன் இதனை முன்வைக்கவில்லை? நோபல் பரிசும் மகசேசே விருதும் தான் நமது நாட்டின் பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கான உரைகல்லா? எனில், நோபல் பரிசு பெறாத மகாத்மா காந்தியை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பதே கேலிக்குரியதாக இல்லையா? தனது மேடையில் அரசியல்வாதிகள் யாரும் ஏறக் கூடாது என்று சொன்ன ஹஸாரே, அக்னிவேஷின் உள்அரசியலை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்?
ஹஸாரே நல்லவர்தான்; அவரைச் சுற்றிலும் இருப்பவர்கள் தான் சரியில்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. நல்லவர் எவரும் தன்னைச் சுற்றிலும் சுயநல வியாபாரிகள் அமர்வதை அனுமதிக்க மாட்டார். தன்னைப் பயன்படுத்தி விளம்பரம் தேடும் பிரமுகர்களை அக்னிப் பிழம்பு போன்ற மாசற்றவர்களால் அனுமதிக்க முடியாது. ஹஸாரே இந்த விஷயத்தில் தோல்வி கண்டவர். லோக்பால் குழுவில் சோனியாவும் (என்.ஏ.சி- தேசிய வழிகாட்டுதல் குழு தலைவராம்) இருக்கலாம் என்று தீர்மானிக்க இவர் யார்? மன்மோகன் சிங்கையும் சரத் பவாரையும் விமர்சிக்கும் ஹஸாரே அவர்களை பின்னிருந்து இயக்குபவரை போற்றுகிறார். இது முரண்பாடு இல்லையா?
ஹஸாரே ஹிந்துவா, கிறிஸ்தவரா என்பதல்ல பிரச்னை. குமரப்பா போன்ற காந்தீயவாதி தூய கிறிஸ்தவராகவும் தேசபக்தராகவும் இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அக்னிவேஷ் ஹிந்து என்பதால் அவரை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. மதம் பிரச்னை அல்ல. அதனை விவாதப் பொருளாக்கி, ‘தமிழ் ஹிந்து’வின் விவாதம் மடைமாற அனுமதிக்க வேண்டாம்.
ஹஸாரேவுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நல்ல அறிமுகம் இருந்ததுண்டு. ஆயினும் அவருடன் ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து பணிபுரிய உடன் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதே நிலைமை தான் ஜெயபிரகாஷ் நாராயணன் எம்ஜென்சியை எதிர்த்து போராடக் கிளம்பியபோதும் இருந்தது. ஜெபி. இந்திராவை எதிர்த்ததைவிட சங்கத்தை கடுமையாக எதிர்த்தவர். ஆனால், தங்கள் மாசற்ற குணத்தாலும் தலைமைப் பண்பாலும் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஜெபியிடமும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் சங்கப் பொறுப்பாளர்களே எமெர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் காலம் வந்தது. அதேபோல, இப்போதும் நிகழ்கிறது. ஹஸாரேவை நீண்ட நாட்களுக்கு சுயநலக் குழுக்கள் பிணைக்கைதியாக வைத்திருக்க முடியாது. ஆயினும் அவர் சுதந்திரமாகச் செயல்பாடாதவரை, அவரது போராட்டம் நாடகமாகவே இருக்கும்.
இன்றுள்ள சூழலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க தகுதி இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் ‘சில’ கம்யூனிஸ்ட் தலைவர்களும் மட்டுமே. ஆனால், அவர்கள் இதே உண்ணாவிரதத்தை நடத்தியிருந்தால் ஊடகங்கள் இந்த அளவிற்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காது; மட்டுமல்ல, போராடுபவர்களைப் பற்றியே விஷத்தை இதே ஊடகங்கள் கக்கி இருக்கும். ஏனெனில் தேசபக்தியுடன் செயல்படும் அரசியல்வாதிகளை நமது ஊடகங்கள் விரும்பியதில்லை. பர்கா தத்தும் ராஜ்தீப்பும் ஹஸாரேவுக்கு வாழ்த்துப்பா பாடும்போது, அவரது உண்ணாவிரதமே கேலிக்குரியதாகி விடுகிறது. அவர்கள் எந்நாளிலும் தேசபக்தர்களை புகழ்ந்ததில்லை.
இன்று நாடு முழுவதும் ஊழுக்கு எதிரான பேரலை மக்களின் உள்ளத்தில்- குறிப்பாக இளம் தலைமுறையினரிடம்- ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வடிகாலாக ஹஸாரே உண்ணாவிரதம் அமைந்ததால் தான் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராடி, அவரை கதாநாயகர் ஆக்கினார்கள். இன்றுள்ள நிலையில் ஊழுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதை ஏற்க மக்கள் சித்தமாக இருக்கிறார்கள்; ஆனால், இதே ஊடகங்கள் ஹஸாரே தவிர்த்த யாரேனும் (அவரும் கூட அக்னிவேஷ், சந்தீப் பாண்டே உடன் இருந்ததால் தான் பிரசுரிக்கப்பட்டார்). உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதனை பிரபலப்படுத்தி இருக்காது.
மொத்தத்தில், ஹஸாரே உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயமாக நடந்தது. அதற்கான சிறிய பலனையும் அடைந்தது. ஆயினும் காரணத்திலும் காரியத்திலும் தெளிவில்லாத காரணத்தால், ஹஸாரே உண்ணாவிரதம் ஒரு தற்காலிக எழுச்சியை ஏற்படுத்தியதுடன் நிறைவடைந்துவிட்டது. நல்ல வேளை, இந்த உண்ணாவிரதத்தை முடித்துவைக்க ஆ.ராசா திகார் சிறையிலிருந்து வெளிவரவில்லை.
-சேக்கிழான்
அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்…
ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோட…
The whole Lokpal bill is a joke. In a democracy, the elected representatives make the law and are responsible for it’s effects. A non elected civilians having the power to over rule the elected government and it’s mechanism is plainly insane. As far as I can see, we have a very flawed democracy in India with very few checks and balances and very few avenues to seek justice for grievances of the populace. At least 40-50% of the people choose not to exercise their right to vote and are indifferent. Until we mature as a nation and are educated to execute our only right, the right to choose who will govern us and our nation in a dharmic way, this system of democracy is unsuitable for our people.
As someone pointed out, Anna Hazzzare is merely agitating against the symptoms rather the disease.Having the Italian mafioso Sonia Maino in the Lokpal committee is equivalent to Dracula in charge of the blood bank. Why does not this man speak against this corrupt lady?
அன்னா ஹசாரே மக்களின் எழுச்சியை ஏற்படுத்திவிட்டார். அவர் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கலாம். அவர் மீது சந்தேகம் உடையவர்கள் ஊழலை எதிர்த்து ஒரு இயக்கத்தை நடத்தலாம். மற்றபடி கட்டின வீட்டைக் குறை சொல்வதால் கால் காசு கூட பயன் இருக்காது.
அன்னா ஹஸாரே பொதுவாழ்வில் மாறுதலை ஏற்படுத்த காந்தீயத்தைக் கடைபிடித்தவர் என்று முழங்கும் எந்த ஊடகமும், அவர் 1975 ல் ‘ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றத்தை சொல்லவில்லை.\\\\\\\\\\\ ஸ்ரீ நானாஜி தேஷ்முக் கோண்டாவில் நிகழ்த்திய மாற்றம் போலவே ஸ்ரீ ஹஸாரே ராலேகான் சிந்தி’ யில் மாற்றம் கொணர்ந்தார்.
\\\\\\\\\\\\\\சுவாமி அக்னிவேஷ் யாரென்று தெரியுமா? அவரைப் பற்றித் தெரியாதவர்கள், நமது ஊர் மதுரை ஆதீனத்தை ஒப்பிட்டுக் கொள்ளலாம். சந்தீப் பாண்டே யாரென்று தெரியுமா? நம் ஊர் எஸ்.வி.ராஜதுரையை ஒப்பிட்டுக் கொள்ளலாம். நற்காரியங்கள் உள்நோக்கங்களுடன் செயல்படுபவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. தன்னைச் சுற்றிலும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தது, தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது கேள்விக்குறி.\\\\\\\\\\\
நக்ஸல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தண்டகாரண்ய வனத்தில் துணை ராணுவ வீரர்களை நக்ஸல்வாதிகள் குள்ளநரித்தனமாக வதம் செய்த போது ராணுவத்தின் போராட்டத்தையும் நக்ஸல் வாதிகளின் ஆட்டத்தையும் ஒன்றாய் ஒப்பிட்டு பேசியவர் பசுத்தோல் போர்த்திய புலியான வேஷதாரி பொய்சாமியார் (ஸ்வாமி அக்னி) வேஷ். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசுவதற்காக ஆப்ரஹாமிய மதவ்யாபார அமைப்புகளின் ஆதரவோடு செயல்படும் ஸ்தாபனங்களிடம் அவார்ட் பெற்ற இந்த வேஷதாரி சோனியா மாதாவையும் மதர் டெரிசாவையும் புகழ்பவர்.
ஹிந்து விரோத அயோக்கிய ஆங்கில சேனல்கள் ஒரு நிகழ்ச்சியை ஸ்துதி பாடுகிறது என்றால் பல்ப் எறிய வேண்டும். அர்ஜுனன் துரியோதனன் இருவருமே கண்ணனை நாடிய போதும் கண்ணன் அர்ஜுனனுக்கே தன்னைக் கொடுத்தான். துரியோதனனுக்கு அல்ல. இதை ஹஸாரே நினைவு கொண்டால் நாட்டுக்கு நல்லது. அல்லெங்கில் 1947ல் ஹிந்துக்கள் மட்டும் “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” என்று பஜனை பாடியதின் விளைவுகளை இன்று நாடு அனுபவிப்பது போல் நாளையும் துர் விளைவுகள் தொடரும்.
ஸ்ரீ ஹஸாரே என்ற பயிரைத்தவிர்த்து கூட இருந்து கோஷம் போடுபவர்களில் பலரும் களைகள். பயிரினூடே புகுந்து கிளம்பும் களைகள் பயிரைப்போன்றே தோன்றினாலும் பயிரையே அழிக்கும் வன்மை பெற்றவை என்பதை மறக்க இயலாது. பாரத சரித்ரம் இதற்கு ஆதாரம்.
பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது வசனம். ஆனால் ஆங்கில மீடியா கூத்தாடிகள், வேஷதாரிகள் போன்ற நாருடன் சேர்ந்த பூவான ஸ்ரீ அண்ணா ஹஸாரே நாறிப்போகாமல் இருந்தால் நாட்டிற்கு நலம்.
இவ்விஷயம் சம்பந்தமாக ஸ்ரீ க்ரிஷன் கக் மற்றும் ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்களின் (விஜயவாணியில் ப்ரசுரமான) கீழ்க்கண்ட வ்யாசங்கள் வாசிக்க வேண்டியவை :-
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1721
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1722
இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் `போகப் போகத் தெரியும் ` சுப்புவா?
, சர்க்காரிடம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை..தாமெத்தையோ”வந்தே’ யென்று துதிக்கிறார், தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார்.” ..
“ பல திசையும் துஷ்டர் கூட்டங்களாச்சு, பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு…சட்டம் மறந்தோர்க்குப் பூஜைகுறைவில்லை“அஞ்சியஞ்சிச்சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே;வஞ்சனைப் பேய்களென்பார் இந்த மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார்; துஞ்சுது முகட்டிலென்பார் மிகத் துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார்..” .. சாத்திரங்களென்றுங்காணார், பொய்ச் சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு கொள்கையிற்பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்…”
சந்தேகம் இவர் தேகம் .
” மானபிமானந்தனை மறைவாக்கும், நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்; வீணான சோதனைக்கே இடமாக்கும் சில விபரீத செயல்களை விளைவாக்கும் .. தானே .. தன்னைத் தானே… தன்னைத்தானே நம்பாதது சந்தேகம் ..”
சந்தேகம் தீராத வியாதி..”
உன்னையறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்.. போகின்ற உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் எண்ணங்களே
மீடியா ஒருவரை உயர்த்தினால் அவர் உயர்ந்து விடுவாரோ? அப்படியெனில் எத்துணை பேர் உயர்ந்திருக்க வேண்டும் இந்நாட்டில்? மக்கள் பிநாயக் சிங் பற்றி என்ன நினைக்கிறார்கள்? “ தமிழகத்து நம்பர் 1 நாளிதழ்”(!) மதுரையில் எரிந்தபோது, எரித்தவர் பற்றி மீடியா என்ன சொல்லியது மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இது ஒரு ட்ராமா என்றால் மீடியா ஏன் வால்பிடித்துப் பின்னே போகிறது? அன்னா கிறித்துவர் என்றால் மீடியாக்களெல்லாம் என்ன.. அனைத்து மீடியாக்களும் “ தி ஹிந்து” உள்பட கிறித்தவ நாடுகளில் உள்ள அமைப்புக்களாலேதானே பணம் கொடுக்கப்படுகின்றன?
அன்னாவை விடுங்கள்.. அவருக்கு வயது 73.. நாளைய இந்தியாவுக்கு அவர் ஏன் பட்டினி கிடக்க வேண்டும்? நாற்காலி வீரர்கள் ஏன் இந்தியாவின் புரையோடிவிட்ட நோய்க்கு மருந்து காணவில்லை…..
தயவுசெய்து கல்லெறியாதீர்… மூழ்கிக்கொண்டிருப்பவனுக்கு கையில் கிடைத்த பாம்பே பழுதாகும்… ஜனலோக் பால் மசோதாவில் குறைகள் இருக்கலாம்.. கூறுங்கள்… திருத்துங்கள்… வெட்டாதீர்கள்… ஆக்க பூர்வமாக சிந்தியுங்கள்…. தொடர்ந்து கண்காணியுங்கள்.. நோக்கத்தைப் பாருங்கள்.. ஆளைப் பார்க்காதீர்கள்…
அன்னா ஹஸாரே நாட்டிற்கு நல்லது செய்யவில்லை என்றால்… வேறு யார் செய்கிறார்கள்.. ஸோனியாவும் ராடியாவுமா ? கருணாவும் கனியுமா?
அரசியல் கட்சிகளுக்கு கூடாத நமது படித்த இந்தியர்கள் சாரை சாரையாக இந்தியாவின் பல பாகங்களிலும் கூடி தங்கள் ஆதரவை சமூக ஆர்வலர்களின் ஆக்கபூர்வமான பணிக்குத் தெரிவித்து ஒரு ஒளி மயமான இந்தியாவை அடையாளம் காட்டி இருக்கிறார்கள். கணிசமான இளைஞர்களின் பங்களிப்பு அதில் இருந்தது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம்.
இது நல்ல ஆரம்பம். இதில் உள்ளர்த்தங்கள் கண்டுபிடிப்பதை விட ஒரு விவாதப் பொருளாக்கி குறைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய முனையலாம். அரசியவாதிகள் என்று பொதுப்படையாக சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும்? மத்தியில் ஆளும் காங்கிரசில் ஊழல் என்றால் மாநிலங்களில் பிற கட்சிகளால் ஊழல். இதில் யார் விதிவிலக்கு? கொள்ளையில் வேண்டுமானால் கூடுதல் குறைய இருக்கும்.
http://wp.me/p12Xc3-1lj (வாழ்த்துக்கள் அன்னா ஹசாரே)
திரு ஸ்ரீதர்,
ஆம்; அது “ போகப்போகத் தெரியும்’ அது யாரென்பது புரியும்
அதன் காரம் நெஞ்சுக்குத் தெரியும் அது சுப்புதானென்பது புரியும்.
ஆம் அதே சுப்புதன்.
அந்த “ போகப்போகத் தெரியும்” இப்போது “ திராவிட மாயை” என்று புத்தகமாக வெளிவந்து ஐந்து பதிப்பு போட்டாகிவிட்டதாம்.
இரண்டாம் புத்தகமும் ரெடியாம்.
முதல் புத்தகத்தின் ஆங்கில வடிவமும் வெளிவரவுள்ளதாம்.
இவையெல்லாம் இந்த தேர்தலுக்குமுன் வந்திருக்கலாம்.