இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.

இது வெறுமே பரந்த மனப்பான்மை எனக்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ பெரும்பாலான இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.

ஆகவே, பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணி கோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. அருகே இருக்கும் மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.

nagore-durgah

ஆனால், நம் இந்து மக்களுக்கு நாகூர் தர்காவை பற்றி முஸ்லீம்களிலேயே ஒரு சாரார் என்ன கருதுகிறார்கள் என்று தெரியாது. அதே போல வேளாங்கண்ணி கோவிலுக்கு தமிழக கிறிஸ்துவர்களிலேயே கணிசமான அளவு கிறிஸ்துவர்கள் போகமாட்டார்கள் என்பதும் தெரியாது.

நாகூர் தர்கா ஒரு சூஃபி தர்கா. தர்கா என்பதே இஸ்லாமுக்கு முரணானது என்று தீவிர இஸ்லாமியர்களான வஹாபிஸ்டுகள் கருதுகிறார்கள். தர்காக்களுக்கு செல்லும் முஸ்லீம்களை கப்ரு வணங்கிகள் என்று இழிவாக குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தனி அரசியல் கட்சிகளும் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகள், அமைப்புகளாக பீப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தவஹீத் ஜமாத் ஆகியவற்றை குறிப்பிடலாம். மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஜவஹிருல்லா என்பவர் ஒரு வஹாபியிஸ்ட் இஸ்லாமியர். சிமி என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது. முஸ்லீம்களில் செல்வாக்குடன் இருக்கும் ஜெயினுலாபுதீன் என்பவரும் இவரும் முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான். அதாவது தர்கா ஆகியவை அழிக்கப்பட வேண்டும், கந்தூரி, சந்தனக்கூடு போன்ற தமிழ்நாட்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அழிக்கப்பட வேண்டும் ஆகியவற்றை இவர்கள் கூறுகிறார்கள். ஜெயினுலாபுதீன் இந்த முறை திமுக கட்சிக்கு ஆதரவளித்திருக்கிறார். இருவருக்குள் வேறுபாடு என்பது யார் மிகத்தீவிரமாக வஹாபியிஸ்ட் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான். உதாரணமாக தமிழ்நாட்டில் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்தித்துகொள்ளும்போது வணக்கம் சொல்லுவது இயல்பு. ஆனால், இவர்கள் அப்படி வணக்கம் கூட சொல்லமாட்டார்கள். ஜெயினுலாபுதீன் பத்து லட்சம் முஸ்லீம்களை கூட்டி மாநாடு நடத்துவதாக கூறிக்கொள்கிறார். ஆகவே இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிறு பிரிவினர் அல்ல.

பாகிஸ்தானில் இப்படிப்பட்ட தர்காக்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். மனித வெடிகுண்டாக உடல் முழுவதும் குண்டுகளை கட்டிகொண்டு இந்த சூபி வணக்கத்தலங்களில் நுழைந்து அங்கு கும்பிடுபவர்களை கொல்வதில் சந்தோஷமடைகிறார்கள். இப்படிப்பட்ட வணக்கதலங்களில் கும்பிடுபவர்கள் முஸ்லீம் என்று பெயரிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டிய காபிர்களே என்பது வாஹாபி சிந்தனை. ஆகவே இப்படி மனித வெடிகுண்டாக சென்று தர்காக்களில் வழிபடுபவர்களை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்வதற்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் விரும்பி வருகிறார்கள் [1].

தமிழ்நாட்டில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த அமைப்புகளையே சார்ந்திருக்கிறார்கள் என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. கோயம்புத்தூரில் குண்டு வைத்தது இஸ்லாமிய இயக்கங்களுக்கு பின்னடைவு என்று ஜெயினுலாபுதீன், ஜ்வஹரில்லா ஆகியோர் கருதுகிறார்கள். வன்முறை தவறு என்பதல்ல. வன்முறையை கைக்கொண்டால், இஸ்லாம் மதத்தை தமிழர்கள் மத்தியில் இப்போது பரப்ப முடியாது என்பதுதான் காரணம் என்று இவர்களே எழுதுகிறார்கள் [2]. ஆகையால் தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.

இதெல்லாம் புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசலும் ஒரு சிவன் கோவில்தான் [3]. அதனை முஸ்லீம்களே இங்கு பதிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பரம்பொருளான எம்பெருமானுக்கு இவர் முஸ்லீம் இவர் இந்து இவர் கிறிஸ்துவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. தன்னிடம் எந்த ரூபத்தில் என்ன குரலில் என்ன மொழியில் கேட்டாலும் அருள்பவர் எம்பெருமான்.

அதே போல, வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில் ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்கள், பெந்த கொஸ்தே கிறிஸ்துவர்கள், பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். ஆனால், எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.

இதுவரை படித்ததிலிருந்தே பெரும்பாலான இந்துக்கள் எல்லா கோவில்களிலும் தெய்வங்களை பார்க்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.

இந்துக்கள் சைவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வைணவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.

சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது உண்மையே.

shiva-familyஆனால், மனித மனம் என்பதன் மூலமே பரம்பொருளை நாம் வழிபடுகிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மனித மனத்தின் வழியே நாம் வழிபடுவதால், மனித மனம் உருவாக்கும் பிம்பங்களின் மூலமாகவே இறைவனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக அமமையும் அப்பனும் அழகாக உடை தரித்து, அழகான நந்தியின் அருகே, மங்களகரமான கோலத்தில் முருகனும் விநாயகனும் அருகருகே அமர்ந்திருக்கும் சந்தோஷமான காட்சியை நாம் பார்க்கிறோம். இதே போல, ராமனும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க உற்றார் உறவினர் புடைசூழ இருக்கும் பட்டாபிஷேக காட்சியைப் பார்க்கிறோம். இது நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இது போல நாமும் குடும்பசகிதமாக நன்றாக வாழவேண்டும் என்ற கருத்தை ஆழ்மனத்தில் விதைக்கிறது. நம் செயல்களில் வெளிப்படுகிறது. நம் சொந்தத்தினரை கருணையுடனும் பாசத்துடனும் அணுகவும் நம்மை தூண்டுகிறது.

ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை செய்யப்படும் காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். அப்படி எரிந்து விழவில்லை என்றாலும் துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம். அவ்வளவுதான். பார்க்கும் உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?

nadukalஇதே போலத்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும். அவை நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அதனால் தான், அகால மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தியடைய தமிழ்நாட்டிலும், இன்னும் பல புராதன கலாச்சாரங்களிலும் அவர்களை நடுகல்லாக அமைத்து நினைவுத்தூண் எழுப்பும் பழக்கம் உண்டு. தவறு செய்யாதிருந்தும், தவறாக தண்டனை அடைந்து இறந்தவன் (உதாரணமாக கோவலன் போன்று), பசி காரணமாகவோ அனாதையானதாலோ இறந்த பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஐந்நூறு ஆண்டுகளாக ஆவியாக சுற்றுவார்கள் என்பது பழங்கால ஐதீகம். ஆகவே அவர்கள் தங்களது துன்பத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பார்கள் என்று கருதி அவர்களை திருப்திப் படுத்த அவர்களுக்கு சிறு கோவில் கட்டி அவர்களுக்கு உணவு போன்றவற்றை அளிப்பது மரபு. ஆனால், இவர்களை வீட்டில் வைக்கமாட்டார்கள். வெளியே காட்டில், அல்லது அனாமத்தான இடங்களில்தான் அமைப்பார்கள். இவர்களை மட்டுமல்ல, நற்சாவு அடைந்தவர்களாக இருந்தாலும், இறந்து போன நிலையில் புகைப்படம் எடுத்ததை வீட்டில் வைக்கமாட்டார்கள். ஏன், கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அப்படி வரைந்திருந்தாலும் வீட்டில் வைத்து வணங்கமாட்டார்கள். சந்தோஷமான நிலையில் இருக்கும் புகைப்படங்களையே வீட்டில் வைத்து மூத்தார் வழிபாடு செய்யவேண்டும்.

தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.

எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.

images-of-jesus-christஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும். இதே போல இஸ்லாமில் ஷியா பிரிவினரும் முகம்மதின் மருமகனான அலி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு இப்போதும் அழுவார்கள். தங்கள் துயரத்தை வெளிக்காட்ட நெஞ்சில் அடித்துகொண்டும், சவுக்கில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக செல்வார்கள்.

இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும் வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.

பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.

இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.

இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.

பார்க்க:
கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை
– முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி

christian_serviceஇப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.

கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் [4]. ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால், கத்தோலிக்க சர்ச் திவாலாகிவிடும் என்று கருதுகிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு சர்ச், பெந்த கொஸ்தே சர்ச் என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் தினசரி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிகொண்டிருந்த பாதிரியார்கள், குற்றங்களுக்காக கேவலப்படும்போது சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!

இந்த கிறிஸ்துவ சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.

bazooka_jesus_christianity_inquisitionஉலகத்தில் பெரும் போர்களை செய்த கிறிஸ்துவர்கள் செல்லும் இடமெங்கும் இனப்படுகொலையையும் ரத்த ஆறறையும் ஓட வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த பழங்குடியினரை கொடூரமான முறைகளில் கொன்றார்கள் [5]. ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை பைபிள் சொல்கிறது என்பதற்காக அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள் [6]. இவையெல்லாம் பைபிளும் இயேசுவும் அவர்களிடையே உருவாக்கிய மன விகாரங்களால் உருவானவையே. ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே.

இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.

தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே?

முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.

எம்பெருமான் துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

இன்பம் தரும் இறைவடிவத்தை, கல்யாண திருக்கோலத்தை, வீட்டில் அமர்த்தி இத்தெய்வீகப் பாடல்களை பாடுவோம்.

ஓம்

ganesha3ந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றனே.

ன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

ன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

–  திருமந்திரம் (திருமூலர்)

ஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.

– திருமுருகாற்றுப்படை வெண்பா (நக்கீரர்)

ண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

– தேவாரம் (சம்பந்தர்)

shiva_paarvathiன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.

– தேவாரம் (அப்பர்)

ம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

– திருவாசகம் (மாணிக்கவாசகர்)

றிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்.

– அற்புதத் திருவந்தாதி (காரைக்காலம்மையார்)

ற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

– பெரிய புராணம் (சேக்கிழார்)

trideviபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

னம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.

– அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர்)

ருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகமுண்ட ஒண்சுடரே.

vishnu-lakshmi2ண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந்துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடிநின்று ஆடிப்
பரந்து திரிகின்றனவே.

– திருவாய்மொழி (நம்மாழ்வார்)

ன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகு
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

– திவ்யப் பிரபந்தம் இயற்பா (பூதத்தாழ்வார்)

ங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

– திருப்பாவை (ஆண்டாள்)

சான்றுகள்:

223 Replies to “இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?”

  1. நானும் பலமுறை சொல்லியே எனது நண்பர்கள் யேசு சிலுவையில் அடிக்கப்பட்ட படத்தை எடுத்தனர். காலங்காத்தால செத்துப் போன பிணத்தை பார்த்துவிட்டு வேலைக்கோ, நல்லகாரியத்துக்கோ எப்படிச் செல்ல முடியும்?

    எல்லாவற்றுக்கும் காரணம் பரந்த மனப்பான்மை என்ற பெயரில் அவர்களை முகதாட்சன்யத்திற்காக நாம் அவர்கள் தரும் படங்களையும், பிரச்சார காகிதங்களையும் வாங்கி வைப்பதே. ஆனால் அதே பிரச்சாரக் காகிதங்களில் இந்து தெய்வங்களை சாத்தான் என எழுதி நம்மிடம் தர அவர்களுக்கு முகதாட்சன்யம் இருப்பதில்லை.

    நமது வீட்டிலிருந்து துவங்குவோம். தவறாக மாற்று மதம் சென்றுவிட்ட நமது நண்பர்களையும் தாய் மதம் திரும்ப அழைப்போம். அவர்கள் தாய்மதமான இந்து மதம் திரும்பும்வரை நமது முயற்சியை கைவிடக்கூடாது. அவர்கள் நமது சகோதரர்கள், சகோதரிகள். அவர்களை நல்வழிப்படுத்தும் கடமையும் நமக்குண்டு.

  2. ஐயா அருமையான முயற்சி, பாராட்டுகள்.
    நீங்கள் எவ்வளவு விளக்கினாலும் சில இந்துக்களுக்கு எதுவும் ஏறாது. இவர்களுக்கு இது ஒரு வியாதியாகவே தெரிகிறது. வேளாங்கண்ணிக்கு நடை பயணம் போகும் பெரும்பாலோர் இந்துக்கள். உண்மை புரியாதவர்கள். கழுத்தில் மாலை மாட்டி பலி கொடுக்க தயாராக இருக்கும் ஆட்டினை போல் தான் இவர்கள் தெரிகிறார்கள். அவர்கள் இதை பெருமையாக நினைக்கும் அளவுக்கு ஒரு மேனியா பிடித்து அலைகின்றனர். இந்து மதம் கொடுக்கும் அளவற்ற சுதந்திரத்தின் சைடு எப்பெக்ட் இது. முடிந்தவரை நாம் தெரிந்தவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்போம்.
    சமீபத்தில் வெறும் இந்துக்கள் மட்டும் வாழும் சில கிராமங்களை பார்த்தேன் சற்று ஆறுதலாக இருந்தது. அங்கு எந்த பிற விஷ கேன்சர் கிருமி மதமும் இன்னும் நுழையவில்லை. .

  3. அனைவருக்கும் இயேசுவின் சமாதனம் கிடைக்கட்டும்,

    இங்கு கட்டுரை எழுதி இருக்கும் அன்பர் பாதிரியார்களின் பாவ செயல்களை தான் குறிப்பிட்டு பேசி இருக்கிறாரே தவிர பைபிளில் உள்ள இயேசுவின் நற்செய்தியை குறிப்பிட்டு ஏதும் கூறவில்லை. கூறவும் முடியாது ஏனென்றால் அது மெய்யான இறைவசனம்..அந்த நாட்டில் அந்த பாதிரியார் அந்த பாவத்தை செய்தார் இந்த நாட்டிலுள்ள பாதிரியார் இந்த பாவத்தை செய்தார் என்று கூறுகிறாரே தவிர பைபிள் வசனத்தில் என்ன குறை கண்டீர்கள். அதில் தான் மனிதர்கள் அனைவருமே பாவிகள் என்று இறைவனால் ஆதிஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. சர்ச் மற்றும் பாதிரியார்களின் செயல்களை வைத்து கிறிஸ்துவ மதத்தை எடை போட வேண்டாம். அப்படி என்றால் நாட்டில் இருக்கும் போலி சாமியார்களை வைத்து இந்து மதம் போலி சாமியார்களை ஊக்குவிக்கும் மதம் என்று எடுத்துகொள்ள முடியுமா.

    //இப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.//

    எதன் அடிப்படையில் இப்படி அபத்தமாக பேசுகிறார் இயேசு தெளிவாக தன் நற்செய்தியில் குறிபிடுகிறார்.
    “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.”

    மன்னிக்கவும் மேற்கத்திய நாடுகளில் மட்டும் தான் அந்த பிரச்சனை இருகிறதா ஏன் இந்த தமிழ்நாட்டில் இந்தியாவில் இந்துகளிடம் விவாகரத்து இல்லையா. இந்தியாவில் முறை தவறிய வாழ்வு இல்லையா. .மறுமணத்தை இங்கு பைபிள் வன்மையாக கண்டிக்கிறது. அந்த நாட்டு மக்கள் சரியாக பின்பற்றவில்லை என்பதற்காக கிறிஸ்துவத்தை குறை சொல்வது அறிவுக்கு அழகல்ல.

    //இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.//

    எதை தவறான வழிபாடு என்கிறார்….. இயேசு வன்முறையாளர் என்று எங்கே பைபிளில் இருக்கிறது கொஞ்சம் எனக்கு சுட்டிக்காட்டலாம்.

    அஞ்ஞானம் உடையோர்களே ஆண்டவரின் வாக்கை கேளுங்கள்

    நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;

    ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

    40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

    41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

    இப்படி கூறிய ஆண்டவனின் குமாரர் போர்புரியுங்கள் என்று கூறினாரா. என்ன அபத்தம். அப்படி என்றல் இந்து மதத்தின் நூலான மகாபாரதம் எதை சொல்கிறதாம். பகவத் கீதையே போர்களத்தில் உபதேசிகபட்ட நூல் தானே. அதற்காக அதை மட்டம் என்று கூற முடியுமா. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரியாதிர்கள். இந்து மதத்தை வளர்கிறேன் என்று கூறி கிறிஸ்துவத்தை இழித்து பேசாதீர்கள் ஆண்டவரின் பார்வையில் அது பெரும் பாவம். அது உங்களுக்கு தான் ஆபத்து. ஆண்டவர் உங்களின் இந்த பாவத்தை மன்னிகும்படிக்கு நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். தயவு செய்து போலி பாதிரிகளின் அட்டகாசத்தை மனதில் கொண்டு இதுதான் கிறிஸ்தவ மதம் என்று கொள்ளாதிர்கள். ஆமென்

  4. // இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். //
    திருமணம் செய்யவில்லை சரி. ஆனால் திருமணம் செய்யாதது தவறு என்றால் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியை வணங்குபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    வன்முறை, தன்னை கும்பிடாதவர்களை கொல்லச் சொன்னார் etc. போன்றவை பைபிளில் எந்த இடத்தில் வருகிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    கட்டுரையில் லாஜிக் என்பது நிறைய இடத்தில் மிஸ்ஸிங். உதாரணமாக
    // தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.
    இதெல்லாம் புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். // கோவிலில் கூட குண்டு வைக்கிறார்கள், கோவிலுக்கு போவதையும் நிறுத்திவிடலாமா? வெளியே போனால் விபத்து ஏற்படுகிறது, வீட்டிலேயே இருக்கலாமா? வீட்டில் இருக்கும்போது பூகம்பம் வந்துவிட்டால்?

  5. மிக அற்புதமான கருத்துக்கள். தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல் கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களி்ல் கலந்து கொள்ளும் இந்துக்களால்தான் அந்த விழா ஏதோ மாபெரும் விழா போல் தோற்றமளிக்கிறது. இந்துக்கள் அவ்விழாக்களைப் புறக்கணித்தால் போதும் . மாதாகோவில் திருவிழாவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் முட்டாள் இந்துக்கள் நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். இவர்கள் திருந்தினால் போதும். கிறிஸ்தவ விழாக்கள் பிசுபிசுத்து போய்விடும். எல்லா ஊா்களிலும் இந்து லோக்கல் டிவி சேனல்கள் ஆரம்பித்து நம் மதத்தின் அருமை பெருமைகளை இந்துக்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொடரட்டும் உங்கள் தொண்டு

  6. all the above songs can be put in beautiful voice. If u can upload in youtube we can use it as daily prayers singing along with voice!!

  7. நம் கடவுளர்கள் கையில் ஆயுதம் வைத்திருந்தாலும் சிரித்த முகத்துடன் மங்களகரமாகவே காட்சியளிப்பார்கள். ஆயுதம் வைத்திருப்பதற்கு காரணம் அதர்மத்தை எதிர்த்து நில் என்று உணர்த்துவதற்கே அன்றி கொடூரமான கொலையுணர்வை தூண்டுவதற்கு அல்ல. அதனால் தான் நம் கடவுளரை கும்பிடும்போது ஆயுதங்களுக்கும் அப்பாற்பட்ட திருவுருவின் அலங்காரமான முகம் மட்டுமே நினைவில் வருகிறது.

    மேலும் நாம் எதைப் பார்க்கிறோமோ அதே நினைவில் நிற்கும். எது நினைவில் நிற்கிறதோ அதே ஆழ்மனப் பதிவாகி நம்மையறியாமல் நம் செயல்களில் வெளிப்படும். இதை நன்றாக உணர்ந்தே நம் முன்னோர்கள் இறையுறுவை வடிவமைத்தார்கள். இன்ன காலத்தி இன்ன கடவுளரை தொழவேண்டும் என்றெல்லாம் வேறு உருவத்திற்கேற்றார் போல வழிபாட்டிற்கு வழிகாட்டினார்கள். இதனையெல்லாம் எல்லா ஹிந்துக்களுக்கும் புரியவைப்பதே பெரிய வேலை.

    எனது உறவினர்கள் எப்பொழுது வீட்டை விட்டுச் சென்றாலும் வழியிலிருக்கும் மாதாகோவிலைப் பார்த்தால் உடனே கைகளால் சிலுவை போட்டுக் கொள்வார்கள். நான் பதிலுக்கு எந்த கிறிஸ்துவ பாதிரியாராவது இந்து தெய்வத்தை தொழச்சொல்லி கிறிஸ்தவர்களுக்கு போதித்ததை நீங்கள் கேட்டதுண்டா என்றேன். ‘இல்லை’ என்றனர். அவ்வாறே போதிக்கப்படாத தெய்வங்களை பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தொழுவதில்லை. நீங்கள் இவ்வாறு அழையா விருந்தாளியாக தொழுவதால் உங்களை மதம் மாற்ற சுலபமாக இருக்கிறது என்றேன். அன்று முதல் வீட்டை விட்டு இறங்கினால் வழியில் சிலுவை போடுவதை நிறுத்தினார்கள்.

    இப்படி பலபேருக்கு சொல்லிப் புரியவைக்க வேண்டி இருக்கிறது. இந்த கட்டுரையாளரின் முயற்சி பாராட்டுக்குறியது. நன்றி தமிழ் ஹிந்து.

  8. @rv

    //கோவிலில் கூட குண்டு வைக்கிறார்கள், கோவிலுக்கு போவதையும் நிறுத்திவிடலாமா?// கோவில்களில் குண்டு வைப்பது இந்துவா? இந்துக்கள் இந்துக்கோவிலுக்கு குண்டுவைக்கும் அளவிற்கு இங்கே உட்பிரிவு தீவிரவாதம் வளரவில்லை. அரசியல் வாதிகள் ஆண்டுக்கணக்காக பிரித்துப் பார்த்தும் நம் அனைத்து ஜாதிக்காரர்களும் ஆன்மீக விஷயத்தில் இன்னும் ஒன்றாகத்தானிருக்கிறார்கள். சிறு சிறு சச்சரவுகள் குண்டுவைக்கும் அளவிற்கு இங்கே பிரிவினை தலைவிரித்தாடவில்லை. ஆனால் ஒரு முஸ்லீம் அஹமதியா பிரிவினனை அடித்தே கொல்லுவான். கீழே உள்ள சுட்டியைப் பார்க்க. தர்காவை குண்டுவத்து தகர்ப்பான். இத்தனைக்கும் எல்லோரும் முஸ்லீம்கள் தான். அதைத்தான் இந்த கட்டுரை பிரதிபலிக்கிறது.

    https://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html

    //திருமணம் செய்யவில்லை சரி. ஆனால் திருமணம் செய்யாதது தவறு என்றால் // இந்தக்கட்டுரை ஏசு திருமணம் செய்யாததை தவறு என்று கூறுவதாகத் தெரியவில்லை. ஏன் குழம்பிக்கொள்கிறீர்கள். சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் கூட பக்தர்கள் ஈஸ்வரனின் ஸ்வரூபம் என்று தான் வழிபடுகிறார்கள். அவரே ஈஸ்வரன் என்னும் போது ஈஸ்வரி ஞாபகமும் கூடவே தானே வருகிறது. ஆனால் ஏசுவைக் கும்பிடும்போது ‘மேரி மெக்டலைன்’ ஞாபகம் எத்தனை பேருக்கு வரும்?

  9. ஆசிரியர் குழுவிற்கு,
    இக்கட்டுரை இங்கு பதிக்கப்படும் மற்றவை போன்ற தரத்தில் இல்லை. இயலுமாயின் இதை நீக்க வேண்டுகிறேன்.

  10. அன்புள்ள ஆர்வி,
    பைபிளைப் பற்றி இங்கே நிறைய எழுத வேண்டியதில்லை. வேண்டுமென்றால் தேடி படித்துகொள்ளுங்கள்.
    சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு துறவி. அவரை வணங்குபவர்கள் எல்லா துறவியரையும் போலத்தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் துறவியரை வணங்குவது துறவறத்தை பாராட்டுவதற்குத்தான். இந்து மதத்தில் துறவறம் இல்லறத்துக்குப் பின்னர்தான் போற்றப்படுகிறது. ஒரு விஷயத்தை முழுமையாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.

    கோவிலில் குண்டு வைக்கிறார்கள் என்பது உண்மைதான். யார் வைக்கிறார்கள்? மேலும் தற்போது மசூதிகளில் வைப்பதைத்தான் முதலாவதாக கருதுகிறார்கள். பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் இருந்தாலும், முதலில் தாக்கப்படுவது ஷியா பிரிவினர் மசூதிகள், சூபி வணக்கத்தலங்கள், அஹ்மதியா மசூதிகள் ஆகியவைதான். வஹாபி கருத்துப்படி முதலில் தூய்மைப்படுத்த வேண்டியது இஸ்லாம் மதத்துக்குள் இருக்கும் தவறான பிரிவினர். இஸ்லாத்தை அவர்கள் தூய்மைப்படுத்திவிட்டு இந்து மதத்து கோவில்களுக்கு வரும்போது அது பற்றி எழுதுவோம்.

  11. ஆர்வி என்பவர் இப்படி சொல்கிறார்

    கட்டுரையில் லாஜிக் என்பது நிறைய இடத்தில் மிஸ்ஸிங். உதாரணமாக
    கோவிலில் கூட குண்டு வைக்கிறார்கள், கோவிலுக்கு போவதையும் நிறுத்திவிடலாமா? வெளியே போனால் விபத்து ஏற்படுகிறது, வீட்டிலேயே இருக்கலாமா? வீட்டில் இருக்கும்போது பூகம்பம் வந்துவிட்டால்?


    அதானே?
    வெளியே போனால் விபத்து ஏற்படத்தான் செய்யும். அதற்காக நடு ரோட்டில் நடந்து போவது ஆபத்து என்று சொல்பவர்களிடம் லாஜிக் மிஸ்ஸிங். ஆர் வி அவர்களே சாவு எல்லோருக்கும் உண்டு. உங்களுடைய லாஜிக் படி நடு ரோட்டிலேயே நடந்து போங்கள். இன்னா வீட்ல சொல்லிக்கினு வந்திட்டியா என்று எவனாவது சொன்னால் அவனிடமும் உன்னிடம் லாஜிக் மிஸ்ஸிங் என்று சொல்லிவிட்டால் போயிற்று.

  12. அன்புள்ள சவிதா லூசிபர் அவர்களே,
    இது இந்துக்களுக்கான கட்டுரை. உங்களுடைய இணையப்பக்கங்களில் இந்து மதத்தை பற்றி என்னவெல்லாம் தவறாக பொய்களாக எழுதுகிறீர்கள் என்று நான் அறிவேன். முதலில் அவற்றை திருத்திவிட்டு இங்கே வாருங்கள்.

    இரண்டாவது பைபிளில் இப்படி சொல்லியிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. தயவு செய்து பைபிளை படித்துவிட்டு வாருங்கள்.

    மேலும் லூசிபர் என்பது கிறிஸ்துவத்தில் சாத்தானின் பெயர். அப்படியெல்லாம் தமிழ்நாட்டு கிறிஸ்துவர்கள் பெயர் வைப்பார்களா? தெரியவில்லை.

    பைபிளில் இருக்கும் வன்முறை, சகிப்புத்தன்மையற்ற வசனங்களை ஒருவர் தொகுத்திருக்கிறார்
    https://skepticsannotatedbible.com/int/long.html
    நீண்ட வரிசை. படிக்க பொறுமை வேண்டும்.

    https://skepticsannotatedbible.com/cruelty/long.html
    குரூரமான வசனங்களது பட்டியல்.


    மகாபாரதம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். பைபிளில் இருக்கும் குரூரமான வன்முறை வசனங்களுக்கு உலகத்தில் இருக்கும் எந்த புத்தகமும் இணை இல்லை.
    இருந்தாலும் மகாபாரதம் பற்றி சொல்கிறேன்.
    போர் தர்மம் வாழவும் அதர்மம் அழியவும் உறவினர்களுக்குள்ளேயே நடக்கும் போர்.

    ஆனால் பைபிளின் வன்முறை அப்படி பட்டதில்லை. அது யூதர்கள் வாழவும், மற்றவர்கள் அழியவும் துணை நிற்கும் யூத தெய்வத்தை பற்றிய கற்பனை. ஒரு தெய்வம் அறத்தின் பக்கமே நிற்குமே அல்லாது, தன்னை வணங்கிய காரணத்துக்காக மறத்தின் பக்கம் ஆதரவளிக்காது. அப்படி மற்றவர்களை கொன்று யூதர்களை மட்டும் காப்பாற்றுவதாக ஒரு தெய்வம் இருக்குமானால் அது தெய்வமாக இருக்காது.

  13. \\\\

    ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

    40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

    41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
    இப்படி கூறிய ஆண்டவனின் குமாரர் போர்புரியுங்கள் என்று கூறினாரா.\\\\\

    ஐயா ஒரு நிமிடம்:-

    விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

    விவிலியம்லூக் 12:51 – நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

    தாம்ஸ் சுவிசேஷம் 16 – ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.

    விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.

    தாமஸ் சுவிசேஷம் 56 – ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

    விவிலியம்: யாத்திரா 23:24 – நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

    விவிலியம்: யாத்திரா 34:13 – அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

    விவிலியம்:உபா. 12:13 – அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.

    விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.

    விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.

    விவிலியம்:உபா. 20:16, 17 – உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற…….. …….. அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.

    விவிலியம்:யாத்திரா. 34:14 – கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.

    இன்னும் இருக்கு சார் அந்த புத்தகத்தில்(பைபிள்) நீங்க எங்களை பார்த்து கேக்குறீங்க ஆண்டவர் போர் புரிய சொன்னாரா என்று 🙂

  14. 1. கோவிலில் குண்டு வைப்பவர் யார் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். நான் சுட்டி இருக்கும் வரிகளில் சொல்லப்படும் பிரச்சினை அது அல்ல – தர்காவில் குண்டு வைக்கப்படலாம், ஹிந்துக்களே அங்கே போய் சாகாதீர்கள் என்கிறார் கட்டுரையாளர். அவரது வரிகளில் // ஆகையால் தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம். // அந்த தவறான வழிநடத்தல், மனித வெடிகுண்டு etc. ரிஸ்க் கோவில் போனாலும் இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன். எழுதியதைப் படித்துவிட்டு பிறகு பதில் எழுதினால் எல்லாருக்கும் சவுகரியம், நேரம் மிச்சம். முன்முடிவுகளோடு படிக்காமல் பதில் எழுதினால் உங்களுக்கும் நேரம் விரயம், எனக்கும் விரயம். இப்படி லாஜிக் இல்லாமல் எழுதுவதை எல்லாம் தமிழ் ஹிந்து தளத்தின் எடிட்டர்கள் கவனித்து திருத்தினால் நன்றாக இருக்கும்.
    ரன்தீர்கபூர் என்று பேரில் இவ்வளவு நல்ல தமிழா? அசத்துகிரீர்களே! இது வரையில் இந்தியாவில் எந்த மசூதியிலும் முஸ்லிம்கள் வெடிகுண்டு வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் சில கோவில்களில் குண்டு வைத்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த கணக்கு பாடத்தில் பூஜ்யத்தை விட ஒன்றோ இரண்டோ மூன்றோ நான்கோதான் பெரிது. உங்களுக்கு வேறு மாதிரி தோன்றினால், தர்காவுக்கு போவதில் ரிஸ்க் அதிகம் என்று தோன்றினால் – நடுரோட்டில் நடப்பது போல – ஏன் என்று விளக்குங்கள். (இல்லாவிட்டால் இது வரை நாலு தர்காவில் குண்டு, ஆனால் இரண்டு கோவிலில்தான் குண்டு என்று புள்ளி விவரமாவது கொடுங்கள்.)

    2. // இந்தக்கட்டுரை ஏசு திருமணம் செய்யாததை தவறு என்று கூறுவதாகத் தெரியவில்லை. // மன்னிக்கவும் ராம், எனக்கு அப்படி தெரியவில்லை. திருமணம் செய்யாதவர் என்பது இந்த பாராவில் ஏசுவைப் பற்றி சொல்லப்படும் நாலு குறைகளில் ஒன்று. உங்கள் கருத்தில் மூன்றுதான் குறை என்றால் இதை எதற்காக அவற்றோடு சேர்த்து சொல்கிறார்? மேலும் கோபாலன் சொல்வதையே பாருங்கள் – // சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு துறவி. அவரை வணங்குபவர்கள் எல்லா துறவியரையும் போலத்தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் துறவியரை வணங்குவது துறவறத்தை பாராட்டுவதற்குத்தான். இந்து மதத்தில் துறவறம் இல்லறத்துக்குப் பின்னர்தான் போற்றப்படுகிறது. // அவர் ஏசு திருமணம் செய்யாதது தவறு என்று சொல்ல வரவில்லை என்று எழுதவில்லை, சந்திரசெகரேந்திரருக்கும் ஏசுவுக்கும் உள்ள வித்தியாசங்களைத்தான் பேசுகிறார்.
    கோபாலன் சார், ஏசுவும் சரி, சந்திரசேகரரும் சரி, விவேகானந்தரும் சரி, அப்பரும் சரி, திருமணம் செய்துகொள்ளாமல் ஆன்மீகத்தில் ஈடுபட்டார்கள். ஏசு செய்தது தவறு என்றால் இவர்கள் செய்தது எப்படி சரியாகும்? இவர்கள் செய்தது சரி என்றால் ஏசு விஷயத்தில் மட்டும் ஏன் குறை காண்கிறீர்கள்?

    3. // பைபிளைப் பற்றி இங்கே நிறைய எழுத வேண்டியதில்லை. வேண்டுமென்றால் தேடி படித்துகொள்ளுங்கள். // ஏசு என்ன சொன்னார் என்று கேட்டால் முக்கால்வாசி பேர் “ஒரு கன்னத்தின் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்றார் என்பார்கள். நீங்கள் அவரை வன்முறையாளர் என்கிறீர்கள். குற்றம் சொல்பவர்தான் ஆதாரத்தையும் காட்ட வேண்டும். மேலும் நான் பைபிளைப் படித்திருக்கிறேன், இப்படி எந்த சுவிசேஷத்திலும் பார்த்ததில்லை.

    4 . மருதமலை, கலக்குகிறீர்கள். // அது யூதர்கள் வாழவும், மற்றவர்கள் அழியவும் துணை நிற்கும் யூத தெய்வத்தை பற்றிய கற்பனை. ஒரு தெய்வம் அறத்தின் பக்கமே நிற்குமே அல்லாது, தன்னை வணங்கிய காரணத்துக்காக மறத்தின் பக்கம் ஆதரவளிக்காது. அப்படி மற்றவர்களை கொன்று யூதர்களை மட்டும் காப்பாற்றுவதாக ஒரு தெய்வம் இருக்குமானால் அது தெய்வமாக இருக்காது. // ஏறக்குறைய என் கருத்தும் இதுதான். இருக்கும் குறைகளை விட்டு ஏன் இல்லாத குறைகள் பின்னால் ஆசிரியர் போகிறார் என்றுதான் தெரியவில்லை.
    என்னுடைய ஒரு பழைய பதிவு இங்கே – https://koottanchoru.wordpress.com/2010/08/10/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    5. சவிதா லூசிஃபர் (இப்படி ஒரு பேர் இருக்க வாய்ப்பில்லையே?) பாதிரிகளை வைத்து ஏசுவை எடை போடாதீர்கள் என்ற வரைக்கும் சரிதான். ஆனால் கண்ணாடி வீடு, கல் என்றெல்லாம் ஆரம்பிக்காதீர்கள். ஹிந்து மதம் கண்ணாடி வீடு அல்ல.

  15. christianity and islam are not at all religions in the true sense of the term
    they are at best dogmas. A rekigion should accept all paths that lead to divinity as true
    But these two do not accept this principle.
    they are fashioned after the supposed teahings of Jesus and Mohammed who were individuals
    any human is bound be fallible.
    So whatever likes and dislikes these two had are reflected in these dogmas
    So they cannot be universal
    at best they are used by vested interests to sow the seeds of discord in the world,crush those who follow different paths,dominate them,divide countries and subjugate them.
    But Hindhu Dharma is a code of conduct evolved for the entire humanity.
    hence it is universal
    It even transcends the definition of ‘religion’ and is ‘Dharma’ which has no parallel in the world

    R.sridharan

  16. //முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.//

    இந்து மத வெறியர்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம் அனால் உண்மையான உள்ளன்போடு பார்பவர்களுக்கு தான் இயேசுவின் சிலுவை சுமக்கும் ஓவியம் ஒரு தியாகத்தின் ஒப்பற்ற தத்துவம் என்பது புரியும். நாம் யாரை நேசிகின்றோமோ அவர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்கிற ஒரு உபதேசத்தை அந்த ஓவியத்தில் காணலாம் . அதை அமங்கலம் என்று சொன்னால் சொல்பவருக்கு ஏதோ மூளை கோளறு என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.அது சரி இந்துக்கள் எதை தியாகம் செய்து இருக்கிறார்கள் அவர்கள் செய்தது எல்லாம் மனிதரில் உயர்வு தாழ்வு கற்பித்து தான். மனிதர் நோக மாந்தர் பார்க்கும் வாழ்க்கை தான் இருந்தது.

    //இப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.//

    ஆண்டவர் தான் நற்செய்தியில் சொல்லி இருப்பது என்ன..
    “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.”

    மேற்கத்திய நாடுகளில் விவாகரத்து அதிகமானதற்கு கிறிஸ்து தான் காரணம் என்றால் இந்தியாவில் விவாகரத்தே நடக்கவில்லையா அல்லது விவாகரத்து செய்வோர் எல்லாம் கிறிஸ்தவ குடும்பங்கள் தானா… இன்றைக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி நிற்போரில் 10 க்கு 8 பேர் இந்துக்கள் தான்.
    அது சரி இந்தியாவில் மட்டும் முறைதவறிய வாழ்வு இல்லையா. இன்று எந்த செய்தித்தாளை புரட்டினாலும் கள்ள காதல் தான் வரிசையாக வந்து நிற்கிறது அப்படி கள்ள காதல் செய்வோர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தானா. இந்துக்கள் எல்லாம் ராம சீதை கதாபாத்திரம் போன்று தான் இருகிறார்களா. மேற்கத்திய கலாச்சாரத்தை இந்துக்கள் ஏற்று கொண்டார்கள் என்றால் இந்து மதம் அவர்களை காக்க எங்கோ தவறி விட்டது.

    //இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.//

    இயேசு வன்முறையை போதித்தார் என்று சொன்னால் உலகம் இந்துக்களை தான் பார்த்து சிரிக்கும். இயேசு எந்த இடத்தில வன்முறையை போதித்தார் என்று சொல்ல முடியுமா.

    நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;

    ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

    40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

    41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

    இதை சொன்னதால் தான் இயேசுவை வன்முறையாளர் என்று கூறுகிறீர்களா. எதிரியிடமும் அன்பு செலுத்துங்கள் என்று சொன்னவர் இயேசு கிறிஸ்து கிறிஸ்துவர்கலாகிய நாங்கள் இயேசு நாதர் போதித்த புதிய ஏற்பாட்டின் படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து உங்கள் இந்து மதத்தை வளர்ப்பதாக நினைத்து கொண்டு கிறித்துவ மதத்தை இழிவு படுத்த வேண்டாம் . போலி பாதிரிகள் செய்யும் தவறுக்கு அவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். போலி பாதிரிகளை மனதில் வைத்து கிறிஸ்துவத்தை எடை போடா வேண்டாம். ஆமென்

  17. அன்புள்ள கோபால்,

    கிறித்துவம், இஸ்லாம், மற்றும் உலகிலுள்ள எல்லா வழிபாட்டு மதங்களும், முறைகளும் நமது இந்து மதத்தின் ஒரு பகுதியே ஆகும். பிரச்சினை என்ன என்றால் தன்னுடைய ஒரு வழியை மட்டுமே உயர்வு என்று சொல்லி மற்ற வழிகளை இழிவாக சொல்லும் போக்கு தான். இதனை செய்வோர் யாராயினும் சரி, அவர்கள் இந்து, முஸ்லிம், கிறித்துவர், நாத்திகர், பவுத்தர், ஜைனர் , எந்த பிரிவை சேர்ந்தவர் ஆனாலும் பிற பிரிவுகளை அழித்து தன்னுடைய பிரிவு மாத்திரமே உலகில் நிலைக்க வேண்டும் என்று என்னும் போக்கு தவறானது என்று உணரவேண்டும்.

    இந்து மதத்தின் வேதங்கள் மற்றும் உபநிஷதங்களில் பல இடங்களில் உண்மை ஒன்றே, அதனை பல அறிஞர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது போல பிற மத நூல்களில் இல்லை. மற்ற மதங்களின் புனித நூல்களில் முக்கியமாக இஸ்லாம், மற்றும் கிறித்துவ மத பிரச்சாரகர்கள் , தங்கள் வழியை ஏற்காவிட்டால் ஏற்க மறுப்பவர்கள் நரகம் போகவேண்டும் என்றும் அதுவும் நிரந்தர நரகம் என்றும் அச்சுறுத்துகிறார்கள் .

    இவர்களின் கருத்துப்படி பார்த்தால் , பிற வழிகளையும் பிற வழிகளைப்பின்பற்றுவோர்களையும் இழிவு படுத்தும் போக்கு இவர்களிடம் காணப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    பெண்களை இழிவு படுத்தி , அடிமையாக வைத்து இருக்கும் போக்கு பிற மத நூல்களில் ஏராளமான இடங்களில் உள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் வேற்று மதத்தை சேர்ந்தவர். அவரிடம் ஏன் பெண்களை இப்படி அநியாயமாக சமத்துவம் இல்லாமல் உங்கள் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளனரே என்று கேட்டதற்கு , அதையெல்லாம் வெளியிலே பேச முடியாது. பேசினால் கொன்று விடுவார்கள். எங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். எங்களில் பலரும் முட்டாள்கள் அல்ல. எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும் ஆனாலும் எங்களால் மாறுதல்கள் செய்யமுடியாத நிலையில் உள்ளோம்.

    இப்படியே போனால் எதிர்காலத்தில் எங்கள் மதத்தை கடவுளே அழித்து விடுவார். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொல்கிறார்.

    கடவுளின் தீர்ப்பு இதுதான்:

    பிற மதங்களை , பிற வழிகளை பின்பற்றுவோரை அச்சுறுத்தி அழிக்க நினைக்கும் புல்லர்கள் , கடவுளால் அழித்து ஒழிக்கப்படுவார்கள். எனவே பிறரை அழிக்க நினைக்கும் இந்த மதங்கள் தானே அழிந்து போகும். ஏனெனில் இவை மிகவும் காட்டுமிராண்டி தனமானவை ஆகும்.

  18. பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது இந்த கட்டுரை.
    கட்டுரையாசிரியருக்கும் தமிழ் இந்துவுக்கும் நன்றிகள் கோடி.

  19. சவிதா லூசிபர் அவர்களே,

    ஏசுவின் நற் செய்தி என்று எதை கூறுகிறீர்கள் – இசாப் கதைகளை சேர்த்து ஒரு பூக்கு அதை தானே பைபிள் என்கிறீர்கள்.

    இந்த தளத்தில் ஏற்கனவே பல முறை பலர் வண்டி வண்டியாக. பைபிள் இருப்பது நற்செய்தி அல்ல காட்டு மிராண்டி செய்திகள் – மனிதனை மந்த தன்மை மறக்க செய்யும் சித்திகள், பல பேத்தல்கள், பல முரண்பாடுகள், கொலை வெறி செய்திகள் இப்படி பல உள்ளதை பட்டியல் இட்டுள்ளார்கள், தேடிப்படிக்கவும். நீங்கள் விருப்பப் பட்டால் உங்களுக்காக ஒரு லிஸ்டு கொடுக்கத் தயார்

    //
    40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

    41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
    //

    இந்த மாதிரி ஒரு பைத்தியம் தான் செய்யும். உங்களை ஒருவர் தொந்தரவு செய்தால் அந்த தொந்தரிவில் இருந்து விடுபடவது தான் புத்திசாலித்தனம், இயற்கையும் கூட.

    இப்படி எல்லாம் உங்கள ஏன் செய்ய சொல்கிறார்கள் தெரியுமா – உங்கள் மூளையை மழங்க வேயக்கத்தான். இப்படியே அடி வாங்கிகிட்டு இருந்தா எமாதரத்துக்கு ஈசியா இருக்கும் இல்லையா

    அப்புறம் ஒரு மேட்டர் இந்த அஹிம்சா கொள்கைகள் எல்லாம் புத்த மதத்தில் இருந்து பைபிள் காபி அடித்தது – இதற்கும் ஏராளமான தரவுகள் உள்ளன. புத்தர் உண்மையாகவே அகிம்சை போதித்தார். பைபிள்காரர்கள் செய்வது வெறும் ஏமாத்து வேலை தான்.

    //
    இப்படி கூறிய ஆண்டவனின் குமாரர் போர்புரியுங்கள் என்று கூறினாரா. என்ன அபத்தம். அப்படி என்றல் இந்து மதத்தின் நூலான மகாபாரதம் எதை சொல்கிறதாம். பகவத் கீதையே போர்களத்தில் உபதேசிகபட்ட நூல் தானே.
    //

    உங்கள் குமரர் அவரது தந்தை செய்ய சொன்னது நல்லவர்களை இனப்படுகொலை. அதாவது இஸ்ரவேல் நாட்டவர் அல்லாதவரை கொலை செய்ய சொன்னார். நீங்கள் பைபிள் முழுமையாக வாசிக்கவில்லை போலும்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர் கொல்ல சொல்வது அயோக்கியர்களை.

    இந்தியா பாகிஸ்தான் போரில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்துவதற்கும். ஆட்சியை பிடிக்க தீமுக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பலரை படுகொலை செய்வதற்கும் வித்யாசம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை. பார்தீர்களா உங்கள் மூளையை எப்படி மழுங்க வைத்துவிட்டார்கள்.

  20. அன்புள்ள சவிதா லூசிபர் அவர்களுக்கு,

    பைபிள் அல்லது சுவிசேஷம் என்பது சுமார் பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட ஏசுவின் சீடர்கள் பெயரால் தொகுக்கப்பட்டதாகும். ஒவ்வொரு சீடரின் தொகுப்பிற்கும், மற்ற சீடர்களின் தொகுப்பிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. இதனைப்பற்றி அறியவிரும்புவோர் இங்கர்சால் அவர்களின் நூல்களை படித்தால் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

    ஏசு பிரானின் மலை பிரசங்கம் ஒன்று மட்டுமே அவரால் நிகழ்த்தப்பட்டது ஆகும். ஏனைய பகுதிகள் ஏராளமான முரண்பாடுகளை தன்னகத்தே ஏராளமாக கொண்டுள்ளன. இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய ராபர்ட் க்ரீன் இங்கர்சால் போன்ற உண்மை பகுத்தறிவு சிந்தனையாளர்களை அந்த நாட்டிலே ஏராளமான இடையூறுகளை சந்திக்க வைத்தார்கள். அவ்வளவு இடையூறுகளையும் மீறி , இங்கர்சால் அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்து கிறித்துவத்தை மரணப்படுக்கைக்கு அனுப்பினார்.

    இயேசு வேறு , கிறித்தவம் வேறு என்பதை இங்கர்சால் அவர்கள் தெளிவாக நிரூபித்தார். அவர் காலத்தில் கிறித்துவ மிஷினரிகள் தலைமறைவாக இருந்தன.

    இங்கர்சால் ஒரு உண்மை பகுத்தறிவாளர். ஆனால் இங்கோ, பெரியார் திடலில் சுவிசேஷ பிரச்சாரம் செய்துவாடகை வசூலித்து வியாபாரம் செய்து வருகிறார்கள் நம்மூரில் உள்ள மோசடி பகுத்தறிவு வாதிகள்.

    நான் உயர்நிலை பள்ளி நாட்களிலேயே ஜேம்சு என்ற கைத்தொழில் ஆசிரியரால் , இலவச பைபிள் வழங்கப்பட்டு , அதை முழுவதும் படித்து , அது முழுவதும் , மலை பிரசங்கத்தை தவிர , ஒரு கொலை நூலே என்பதை அறிந்தேன்.

    பாவம், இது போன்ற நூல்களை படித்து ஏமாறும் கிறித்துவ நண்பர்கள்.

  21. This article deserves alot praise…I know some Hindu friends celebrate Christmas in their house..
    Even set up Christmas trees…. Sad and shocking…. Please all of you educate your kids and children in this subject too…. If not they will be brain washed by their friends….

  22. //சமீபத்தில் வெறும் இந்துக்கள் மட்டும் வாழும் சில கிராமங்களை பார்த்தேன் சற்று ஆறுதலாக இருந்தது. அங்கு எந்த பிற விஷ கேன்சர் கிருமி மதமும் இன்னும் நுழையவில்லை. .//

    திரு. திராவிடன்
    எந்த மதத்தை கேன்சர் என்று சொல்கிறீர்கள்… கிறிஸ்தவ மதத்தையா. கால காலமாக மக்களுள் ஒரு பிரிவினரை சூத்திரர்கள் கீழ் ஜாதியினர் என்று சொல்லி மிருகத்தை விட கேவலமாக நடத்தியது யார். இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை கொடுமை தங்காமல் தான் அவர்கள் சுயமரியாதையோடு கிறிஸ்துவ மதத்தில் இணைந்தார்கள். மறுக்க பட்ட கல்வி அவர்களுக்கு தர பட்டது. பறிக்க பட்ட உரிமைகள் மீட்க பட்டது . சமுதாயத்தில் அவர்களுக்கு சக மனிதன் என்கிற அங்கீகாரம் வழங்க பட்டது . மனிதனை சங்கட படுத்திய உண்மையான கேன்சர் எது என்று நீங்களே இதன் அடிப்படையில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

    ஒரு உண்மையை சொல்கிறேன் ஜாதி இழிவு நீங்க மதம் மாறியது அந்த காலம். இன்றைக்கு கிறிஸ்துவ மதத்திற்கு அணைத்து மேல் தட்டு ஜாதியில் இருந்தும் வருகிறார்கள். காரணம் வாழ்கை சிக்கல்கள் தீர உண்மையான ஆனந்தம் பெருக அனைவரும் இப்போது சர்ச் மீதும் கர்த்தர் மீதும் நம்பிக்கை கொண்டு வருகிறார்கள் இந்து கோயில்களை விட சர்ச்சில் செய்யும் பிரார்த்தனைகள் தங்கள் வாழ்வில் நன்கு பிரதிபலிபதாக சொல்கிறார்கள் அப்படியே கிறிஸ்துவுக்கும் மாற்றம் அடைகிறார்கள். வேண்டுமானால் இன்றைக்கு மதம் மாறிய அனைவரையும் கேட்டு பாருங்கள் இந்த உண்மை தெரியும். ஆமென்

  23. @ rv

    //இது வரையில் இந்தியாவில் எந்த மசூதியிலும் முஸ்லிம்கள் வெடிகுண்டு வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் சில கோவில்களில் குண்டு வைத்திருக்கிறார்கள்.// இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லீம் தலைவர்கள் அம்மக்களை இந்துக்களுக்கு எதிராக திருப்புவதிலேயே அதிகம் செலவிட வேண்டி இருப்பதால் உட்பிரிவுகள்மீது அதிகம் பிரிவினை காட்டுவதில்லை. மேலும் இங்கே சிறுபான்மை என்கிற பச்சாதாபப்பிச்சை தொடர்ந்து பெறவேண்டுமானால் அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டாக வேண்டும் அல்லது ஒற்றுமையுடன் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டும். இங்கே சண்டையிட ரெடிமேடாக இந்துக்கள் இருப்பதால் உட்பிரிவு சண்டைக்கு அவர்களுக்கு வேலை இல்லை என்பதே நிஜம்.

    கடயநல்லூர் தென்காசிப் பகுதியில் முஸ்லீம்கள் மசூதிக்காக சண்டை போட்டுக் கொள்வதை படித்திருப்பீர்கள். அவர்கள் மெஜாரிட்டியாக மாறும் போது (ஏற்கனவே மாறியிருக்கலாம்..அரசாங்கம் சொல்லாது) அந்த பூசல்கள் பெரிதாக வெளிப்படும். அப்போது இஸ்லாம் அமைதி மார்கம் என்று எந்த இஸ்லாமியனுக்கும் சொல்ல முடியாது. உண்மை வெளிப்பட்டு விடும். நீங்கள் அதுவரை காத்திருங்கள்!

  24. அன்புள்ள தமிழ் இந்து தளத்தினருக்கு

    ரெபக்கா மரியம் போன்றோரின் கருத்துக்கள் இந்த கட்டுரைக்கும் இதிலுள்ள கருத்துக்களுக்கும் எந்த விதத்திலும் அறிவுப்பூர்வமாக மறுத்து வரும் கருத்துக்களாக இல்லை.

    என்ன சொன்னாலும், இவர் போன்றோர்கள் கேட்ட பாடத்தையே ஒப்பித்துகொண்டிருப்பார்கள். இவர்கள் போன்றோர்தான் சாதாரண இந்துக்களை பொய் பேசி துர்ஆத்மாக்களை வணங்கவைத்து வழி கெடுக்கிறவர்கள்.

    மர்யம் போன்றோர் தங்கள் வாழ்வில் இது போன்று அவல நிகழ்ச்சிகள் நடக்கும்போதாவது விழித்துகொள்ளட்டும். ஆனால், மூளைச்சலவை காரணமாக அசிங்கத்தை அழகு என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பது மட்டுமல்ல, திரும்பத்திருமப சொன்னதையே மீண்டும் மீண்டும் தங்களுக்கே சொல்லிக்கொண்டு சுயமாகவே மூளைச்சலவை செய்துகொள்ளவும் செய்கிறார்கள்.

    பரிதாபமே மிஞ்சுகிறது.

  25. எனக்குத் தெரிந்த ஒரு பெண் , தற்போது சர்ச்சுக்குச் செல்வதாக எனக்கு தெரிய வந்தது. ஒரு மாலையில் அவருடன் பேசிக் கொண்டிருந்த பொது நாசூக்காக இதை விசாரித்தேன். தனக்கு ஏசுவைக் கும்பிட்டால் நிம்மதி இருக்கிறது என்று கூறினார்.

    ஏசுவைப் பிடித்தால் அவரை வணங்குங்கள். ஏன் சர்ச்சுக்குப் போகிறீர்கள் என்று கேட்டேன். கூடவே , அவர் செல்லும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சு ஒரு அதிகார பீடமே என்றும், மதுவும் ,மாமிசமும் போப் முதல் பாதிரி வரை சகஜம் என்று விளக்கினேன். அந்தப் பெண் மற்றும் அவளது குடும்பம் ஒரு கெட்ட வழக்கமும் அறியாதவர்கள்.

    நிலைகுலைந்த அந்தப் பெண்ணிடம், உங்கள் ஜாதியில் உள்ள பெரியோர்கள் யாரோ ஒருவர் முன்பாக, இங்கே உள்ள அனைத்து பாதிரிகளும் ஈடாவார்களா என்று கேட்க, அவர் அவசரமாக தலை அசைத்தார். சமீப காலமாக பத்திரிகையில் வரும் பாதிரிகளின் அவலமான அந்தரங்க வாழ்க்கையை சுட்டிக் காட்டினேன்.

    இதன் பின்னர், அவளது பாரம்பரியத்தை விசாரித்த போதுதான், அவளுடைய குலதெய்வம் அனுமன் என்றும் அவர்கள் வைணவர்கள் என்றும் சொன்னாள். பிறகு சில நாட்களில் அவளுக்கு அவளின் பாரம்பரியத்தை உணர்த்தி, உபாசனை என்ற மகத்தான பரம்பரை பாரம்பரியத்தின் பெருமையையும் , ரகசியத்தையும் கூறினேன்.

    உடனடியாக அவள் சர்ச்சிற்குப் போவதை நிறுத்தி விட்டதாக கூறினாள். விரைவில் என் மனைவி மூலம் அவளுக்கு ஒரு சுந்தர காண்டம் பரிசளிக்க உள்ளேன்.

  26. திரு ரேபோக்கே மரியம்,
    நீங்கள் இங்கேயே உலவும் நபர் என்பதும் புது பெயருடன் எழுதுகிறீர் என்பதும் என் சந்தேகம்,இருக்கட்டும்.
    இந்த ஜாதி ஜல்லி அடித்தே எவ்வளவு நாள் காலம் ஓட்டுவீர்கள், சரி நீங்கள் சொல்லுவது போல ஜாதி அடிப்படையில் பாதிக்கப்பட்டோர் எல்லாம் கிறித்தவத்துக்கு வந்த பின்பு ஜாதியை துறந்து வாழ்கிறார்கள் என்கிறீர்களா?
    மெய்கோவில்பட்டி தீண்டாமை சம்பவம் யாரால் நடந்தது என்று தெரியுமா?
    மேலும் அன்று குற்ற பரம்பரையினர் என்று ஒரு பரம்பரையே ஏற்படுத்தியது ஆங்கில ஏகாத்திபத்திய கிறித்தவ கேன்சர் அரசு என்பது உங்களுக்கு தெரியுமா?
    இவ்வளவு பேசுகிறீர்களே எந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிறித்தவ குடும்பத்திலாவது உயர்சாதி கிறித்தவர்கள் சம்பந்தம் போட்டதுண்டா? அவ்வளவு ஏன் கிறித்தவ மதத்தினுள் உள்ள அந்தந்த ஜாதி பிரிவினுல்தான் பெண் கொடுக்கிறார்கள் எடுக்கிறார்கள்.சும்மா வந்து ஜல்லி அடிக்க வேண்டாம் நண்பரே.
    தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற பாவச்செயல் அதனை சுயநலத்திற்கு ஆரம்பித்த வகுப்பினர் கண்டனத்துக்கு உரியவர்தாம். ஆனால் அவை அக்காலத்திலிருந்தே ராமானுஜர், காந்தி, பாரதி மற்றும் பல பெரியோர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்க்கப்பட்டு கட்டுபடுத்தபட்டுள்ளது. சிவவாக்கியரின் 40 வது பாடலும் ஜாதி பேதத்தை கண்டிக்கிறது.
    சைவ வைணவ பெரியோர் எல்லாம் எல்லா வருனங்களிலும் இருந்தும் வந்தவர்.கேரளாவில் சிரியன், குரியன் என்றெல்லாம் உயர்ஜாதி கிறித்தவர்கள் உண்டு அவர்களை பொறுத்தவரை மற்ற எல்லா கிறித்தவர்களும் அவர்களை விட குறைவு என்ற மனபோக்குள்ளவர்கள். இங்கேயே ஏழாம் நாள், எட்டாம் நாள், பெந்தகொஸ்தே, டிஸ்கோதே,ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டு கொண்டுதான் உள்ளனர்.
    ஐயா நீங்கள் என்னதான் சொன்னாலும் கிறித்தவம் கேன்சரை விட கொடிய வியாதி.
    மேலும் ஜெயமோகனின் கட்டுரையை நண்பர் ராம் கொடுத்துள்ளார். படித்துபாருங்கள்.

    //////ram
    23 April 2011 at 7:11 am
    யாரேனும் இதைப்படிக்கவில்லையெனில் படிக்கவும், கட்டாயம் படிக்கவும்!

    https://www.jeyamohan.in/?p=௧௧௯௩௦/////////
    எவ்வளவு சொன்னாலும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள் என்பது தெரியும்.
    அனுதாபங்கள்.

  27. திரு ரெபேக்க மரியம்,

    சாதிக் கொடுமை பற்றி பேசுகிறீர்களே, இதையெல்லாம் படித்திருக்கிறீர்களா?

    புரோடச்டண்டு கிறிஸ்தவர்கள் பரமகுருவாகக் கொண்டாடும் Martin Luther-இன் பொன்மொழிகள்:

    “They must assuredly be the base, whoring people, that is, no people of God, and their boast of lineage, circumcision, and law must be accounted as filth. If there were a single pious Jew among them who observed these, he would have to be heard; for God cannot let his saints pray in vain, as Scripture demonstrates by many examples. This is conclusive evidence that they cannot be pious Jews, but must be the multitude of the whoring and murderous people. ”

    “We are at fault in not slaying them. Rather we allow them to live freely in our midst despite an their murdering, cursing, blaspheming, lying, and defaming; we protect and shield their synagogues, houses, life, and property In this way we make them lazy and secure and encourage them to fleece us boldly of our money and goods, as well as to mock and deride us, with a view to finally overcoming us, killing us all for such a great sin, and robbing us of all our property (as they daily pray and hope).”

    “I shall give you my sincere advice:

    (1) First, to set fire to their synagogues or schools and to bury and cover with dirt whatever will not burn, so that no man will ever again see a stone or cinder of them. This is to be done in honor of our Lord and of Christendom, so that God might see that we are Christians

    (2) Second, I advise that their houses also be razed and destroyed. For they pursue in them the same aims as in their synagogues. Instead they might be lodged under a roof or in a barn, like the gypsies. This will bring home to them the fact that they are not masters in our country, as they boast, but that they are living in exile and in captivity, as they incessantly wail and lament about us before God.

    (3) Third, I advise that all their prayer books and Talmudic writings, in which such idolatry, lies, cursing, and blasphemy are taught, be taken from them.

    (4) Fourth, I advise that their rabbis be forbidden to teach henceforth on pain of loss of life and limb.

    (5) Fifth, I advise that safe-conduct on the highways be abolished completely for the Jews. For they have no business in the countryside, since they are not lords, officials, tradesmen, or the like. Let them stay at home. I have heard it said that a rich Jew is now traveling across the country with twelve horses his ambition is to become a Kokhba devouring princes, lords, lands, and people with his usury, so that the great lords view it with jealous eyes.

    (6) Sixth, I advise that usury be prohibited to them, and that all cash and treasure of silver and gold be taken from them and put aside for safekeeping.

    (7) Seventh, I recommend putting a flail, an ax, a hoe, a spade, a distaff, or a spindle into the hands of young, strong Jews and Jewesses and letting them earn their bread in the sweat of their brow, as was imposed on the children of Adam (Gen. 3 [:19]).”

    சரி நீங்கள் புரோடச்டண்டு இல்லை, கத்தொளிக்கு என்று சொன்னால் இருக்கவே இருக்கிறார் Pope Innocent – III. அவர் யூத இனத்தை என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இன்னொரு மறுமொழி இடத் தயார்.

  28. //மர்யம் போன்றோர் தங்கள் வாழ்வில் இது போன்று அவல நிகழ்ச்சிகள் நடக்கும்போதாவது விழித்துகொள்ளட்டும். ஆனால், மூளைச்சலவை காரணமாக அசிங்கத்தை அழகு என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பது மட்டுமல்ல, திரும்பத்திருமப சொன்னதையே மீண்டும் மீண்டும் தங்களுக்கே சொல்லிக்கொண்டு சுயமாகவே மூளைச்சலவை செய்துகொள்ளவும் செய்கிறார்கள்.//

    திரு. மணிமாறன்
    எதை நீங்கள் அவலம் என்று சொல்கிறீர்கள்… நீங்கள் அவலம் என்று சொல்லும் மதம் தான் இந்தியாவிற்கு நவநாகரிகத்தை கற்று தந்த மதம். புதிய கல்வி முறையை கற்று தந்த மதம்.. சதி உடன்கட்டை ஏறுதல் என்கிற காடு மிராண்டி தனமான கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் தான். இங்கு இருக்கும் ஜாதி தீண்டாமை என்னும் கொடிய பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது எந்த மதம்.. நந்தனார் சரித்திரத்தை எழுதிய மதமா..அவ்வுளவு ஏன் தமிழ் ஒரு நீச பாஷை சூத்திர மொழி சமஸ்க்ரிதத்தில் இருந்து உருவான மொழி என்ற முட்டாள் தனமான கருத்து நிலவிய போது அதை தகர்த்து தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி தமிழ் எந்த மொழிக்கும் கடன் பட்ட மொழி அல்ல என்று உலகுக்கு உரைத்தவர்கள் யார். கால்டுவெல் ஹீராஸ் வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் தான். திராவிட மொழி குடும்பங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் எந்த அளவிற்கு வடசொற்களை அதிகமாக பயன்படுத்துகிறதோ அந்த அளவு அந்த மொழிகளுக்கு இனிமை உண்டாகும். தமிழ் எந்த அளவிற்கு வடசொற்களை வெளியில் தள்ளுகிறதோ அந்த அளவு தமிழுக்கு இனிமையும் அழகும் உண்டாம் என்று தமிழின் தனி தன்மையை உலகுக்கு உணர்த்தியது கால்டுவெல் பாதிரியார் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தானே . ஏட்டில் இருந்த திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்ற ஒப்பற்ற தமிழ் நூல்களை அச்சில் ஏற்றியது யார்.இந்தியாவில் ஆரியம் புகும் முன் இங்கு வாழ்ந்த அந்நாளைய திராவிட தமிழர்களின் வரலாற்று உண்மையை உலகுக்கு முதலில் எடுத்து சொன்னவர்கள் யார். இப்படி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் பல நன்மைகள் செய்த கிறிஸ்தவ சமயத்தை அசிங்கம் என்றும் அவலம் என்றும் எழுதுவது உங்கள் கண்மூடித்தனமான மத வெறியை தான் காட்டுகிறது.
    கிறிஸ்துவத்தில் போலி பாதிரிகள் போலி மத பிரச்சாரகர்கள் இருக்கவே தான் செய்கிறார்கள் நான் மறுக்கவில்லை அனால் அவர்களின் அட்டகாசம் தான் கிறிஸ்தவ மதம் என்று யாரும் நம்பிவிட வேண்டாம். பிற மதத்தை தாழ்த்தி அசிங்கபடுத்தி என் நற்செய்தியை கூறுங்கள் என்று ஏசுநாதர் எங்கும் கூறவில்லை.. “பாவத்தின் சம்பளம் மரணம்” “உனக்கு இலவசமாக கிடைத்ததை இலவசமாகவே கொடுத்துவிடு”, என்பதை மறந்து நடக்கும் இந்த போலிகள் விரைவில் தக்க தண்டனை அனுபவிப்பார்கள்.
    //அசிங்கத்தை அழகு என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது//
    யாரையும் முளை சலவை செய்து எதற்கும் மாற்ற முடியாது. கிறிஸ்தவத்திற்கு வந்தால் தங்களுக்கு உண்மையில் ஆறுதல் கிடைப்பதாக நம்புகிறார்கள். எனக்கு தெரிந்த பல இந்து குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு போவதால் பிரச்சனைகள் குடும்ப தொல்லைகள் தீர்ந்த பாடு இல்லை என்று கடைசியாக இங்கே வருகிறார்கள் அவர்களுக்கு குடும்ப தொல்லை நீங்கி மன உளைச்சலை போக்கும் விதமாக பிரார்த்தனை செய்து வைக்கபடுகிறது.. தேவைபட்டால் அவர்கள் வீட்டிற்கே வந்து ஜெபம் செய்கிறோம் அதில் நல்ல பலன் காண்பதாக அவர்களே சொல்கிறார்கள். மதம் மாறுகிறார்கள். இந்து மதத்தில் தீராத பிரச்சனை இதில் தீர்வடைகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். வேண்டும் அனால் மதம் மாறிய இந்நாளைய கிறிஸ்துவர்களை கேட்டு பாருங்கள்

    //அப்புறம் ஒரு மேட்டர் இந்த அஹிம்சா கொள்கைகள் எல்லாம் புத்த மதத்தில் இருந்து பைபிள் காபி அடித்தது – இதற்கும் ஏராளமான தரவுகள் உள்ளன. புத்தர் உண்மையாகவே அகிம்சை போதித்தார். பைபிள்காரர்கள் செய்வது வெறும் ஏமாத்து வேலை தான்.//

    திரு . சாரங்
    ஏன் இந்த உலகத்தில் அகிம்சையை பற்றி சிந்திக்க புத்தர்க்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா. புத்தர் சிந்தித்த அதே அகிம்சையை இயேசு நாதர் ஜெருசலேம் நகரில் சிந்தித்து இருக்க கூடாதா. இருவரின் கருத்துக்கள் ஒன்றாக இருந்தால் காப்பி அடித்ததாக அர்த்தமா. அப்படி பார்த்தால் திருக்குறளில் இருக்கும் பல குறள்கள் பைபிள் நீதி மொழிகளோடு ஒத்து போகிறது அதனால் திருக்குறளை கிறிஸ்தவ நூல் என்று சொல்லிவிட முடியுமா. அல்லது கிறிஸ்தவ நூலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்ல இயலுமா. நீங்கள் சொல்வது போல் பார்த்தல் திருக்குறள், சைவ சித்தாந்தம் அனைத்தும் கிறிஸ்துவ நூல்களே ஏன்என்றால் அதில் உள்ள பல கருத்துக்கள் பைபிளோடு தொடர்புடைய கருத்துக்களாக இருக்கின்றன. ஆகவே நிதானித்து கூறுங்கள். நன்றி. சமாதானத்தையும் அமைதியையும் என் இந்து சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்டவர் வழங்கட்டும் ஆமென்

  29. இக்கட்டுரையை வைத்து ஒரு குழுமத்தில் நடக்கும் விவாதத்தில் நான் இட்ட ஒரு பதிலை இங்கும் இடுகிறேன் –

    ——-
    // ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கிரித்தவராக வாழவில்லை. பல மதங்களையும் சாதனை புரிந்து அந்தந்த வழியில் இறைவனின் காட்சியை அடைந்தது போலவே கிறிஸ்தவத்தையும் சாதனை செய்து கிறிஸ்துவின் தரிசனம் பெற்றார் என்று அவரது வாழ்க்கை வரலாறுகள் தெரிவிக்கின்றன. //

    ஸ்ரீராமகிருஷ்ணர் கிறிஸ்தவத்தை/இஸ்லாமத்தை *சாதனை* செய்தாரா
    என்பது மிகவும் கேள்விக்குரியது. அவரது வாழ்க்கை வரலாற்றில் போகிற
    போக்கில் சின்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒருசில தகவல்களை வைத்து,
    பேனைப் பெருமாளாக்குவது போல ஆக்கிவிட்டார்கள். இதில் சில ராமகிருஷ்ண மடத்தினரும் உண்டு என்பது தான் சோகம்.

    நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவில்லை என்றால், இந்த சுட்டியை கட்டாயம்
    படிக்கவும்: https://www.bharatvani.org/books/wiah/ch6.htm

    சுட்டியிலிருந்து சில வரிகள்:

    .. But is the story true? Ram Swarup finds that it is absent in the
    earliest recordings of Ramakrishna’s own talks. It first appears in a
    biography written 25 years after Ramakrishna’s death by Swami
    Saradananda (Sri Ramakrishna, the Great Master), who had known the
    Master only in the last two years of his life. Even then, mention (on
    just one page in a 1050-page volume) is only made of a vision of a
    luminous figure. The next biographer, Swami Nikhilananda, ventures to
    guess that the figure was “perhaps Mohammed”.6 In subsequent versions,
    this guess became a dead certainty, and that “vision of Mohammed”
    became the basis of the doctrine that he spent some time as a Muslim,
    and likewise as a Christian, and that he “proved the truth” of those
    religions by attaining the highest yogic state on those occasions.7

    … To counter the facile conclusion that Ramakrishna had “practised
    Christianity and Islam and proven their truth”, Siva Prasad Ray points
    out that Ramakrishna was neither baptized nor circumcised, that he is
    not known to have affirmed the Christian or Islamic creed, etc.
    Likewise, he failed to observe Ramzan or Lent, he never took Christian
    or Islamic marriage vows with his wife, he never frequented churches
    or mosques. This objection is entirely valid: thinking about Christ
    or reading some Islamic book is not enough to be a Christian or a
    Muslim.

    Equally to the point, he argues: “‘Avatar’ or incarnation may be
    acceptable to Hinduism but such is not the case with Islam or
    Christianity.”12 In Christianity, one might say that the notion of
    divine incarnation does exist, but it applies exclusively to Jesus
    Christ; applying it to Ramakrishna is plain heresy. Sitting down for
    mental concentration to obtain a “vision” of Christ or Mohammed is
    definitely not a part of the required practices of Christianity or
    Islam. Neither religion has a notion of “salvation” as something to
    be achieved by practising certain states of consciousness. In other
    words: before you claim to have an agreement with other people, check
    with them whether they really agree.

    … Ram Swarup now only had to quote the Supreme Court verdict, which
    had quoted Vivekananda a number of times to this very effect, e.g.:
    “Say it with pride: we are Hindus.”33 Another clinching quotation from
    Ramakrishna himself was that “various creeds you hear about nowadays
    have come into existence through the will of God and will disappear
    again through His will (…) Hindu religion alone is Sanâtana dharma”
    for it “has always existed and will always exist”.34

    ———-

  30. இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து என் நண்பரிடம் கொடுத்தேன். படித்து முடித்த உடனேயே வீட்டில் இருந்த இயேசு மேரி படங்களை எடுத்து என்னிடம் கொடுத்து எங்காவது போட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

    அருமையான கட்டுரை.

    கட்டுரையாசிரியருக்கும் தமிழ் இந்துவுக்கும் வாழ்த்துக்கள்.

  31. வணக்கம்

    முதலில் பாபாஜி அவர்களுக்கு எனது இதய அஞ்சலி.

    சகோதரி சவிதா லூசிபர் அவர்களுக்கு, முதலில் ஒரு கேள்வி

    லூசிபர் என்பது சாத்தான் என்று அறியாமல் இந்த பெயர் வைத்துக் கொண்டீர்களா? சரி அது உங்கள் விருப்பம்.

    இன்றைக்கு அணு ஆயுதங்களை மடியில் கட்டிக் கொண்டு சமாதானம், சமாதானம் என்று கூறிக் கொள்வது பெரும்பாலும் கிறிஸ்துவ நாடுகளே, அவர்கள் உண்மையான கிறிஸ்துவர்கள் இல்லையா? நீங்கள் சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு அது கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை.

    பாதிரிகள் செய்யும் தவறுக்கு அவர்கள் பைபிளில் படித்த சில, பல சமாச்சாரங்களின் தாக்கம், ஆனால் அவர்கள் உண்மையான பாதிரிகள் இல்லை என்று சொல்லி விட்டிர்கள். ஆனால் பைபிள் என்ற ஒரு புத்தகம் தொகுக்கப் பட்டதே இயேசு காலத்தின் பின்னர் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் என்று கண்டு பிடித்து சொன்னதும் கிறிஸ்துவ நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தானே? ஒ அப்படியானால் அவர்கள் சாத்தானின் தூதர்கள். அப்படித்தான் சொல்வீர்கள்.

    அம்மணி நன்றாக உங்களின் வாழ்க்கையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், சுற்றி உள்ளவர்களை கவனியுங்கள், கிறிஸ்துவர்களிடம் இருக்கும் சுய நலம் நன்றாக புலப்படும், ஆனால் கிறிஸ்துவ மாயை உங்கள் மனதை மறைக்கும். ஏனெனில் நீங்கள் சலவை செய்யப் பட்டவர்கள்.

    இயேசுவின் காலத்தின் முன்னரே இருவது நூற்றாண்டுகளாய் இங்கே அவர் சொன்னாதாக நீங்கள் சொன்ன அன்பும் கருணையும் நடை முறையாய் இருந்தவை.

    நமது முன்னோர்கள் சிலர் பாவம் வெள்ளைக் காரனின் அச்சுறுத்தலுக்கும் ரேஷன் வாங்கவும் என்று பயந்தும் வறுமைக்கும் தனது மதத்தை மாற்றிக் கொண்டவர்கள். அவ்வளவுதான். ஆனால் உங்களை போன்றவர்கள் , அல்லது சில தமிழ் பேசும் கிறிஸ்துவர்கள் என்னமோ இயேசுவின் காலத்தில் இருந்தே நாங்கள் கிறிஸ்துவர்கள் என்பதுபோல் பேசி கொண்டு திரிகிறார்கள். பாவம்.

    இது மரியம் அவர்களுக்கு

    ///////// அணைத்து மேல் தட்டு ஜாதியில் இருந்தும் வருகிறார்கள். காரணம் வாழ்கை சிக்கல்கள் தீர உண்மையான ஆனந்தம் பெருக அனைவரும் இப்போது சர்ச் மீதும் கர்த்தர் மீதும் நம்பிக்கை கொண்டு வருகிறார்கள் இந்து கோயில்களை விட சர்ச்சில் செய்யும் பிரார்த்தனைகள் தங்கள் வாழ்வில் நன்கு பிரதிபலிபதாக சொல்கிறார்கள் அப்படியே கிறிஸ்துவுக்கும் மாற்றம் அடைகிறார்கள். //////////////

    மறை முகமாக பணப் பட்டுவாடா, அல்லது நோயாளிகளின் முன்ன்பு வேறு ஒருவற்கு நோய் நீங்குதல் போன்ற நாடகம், இது போன்ற செயல் செய்வதன் மூலம் தான் மேல்தட்டு மக்களை கவர்கின்றன சர்சுகள். பெரிய கடனில் நீங்கள் குறிப்பிடும் ஒரு மேல் சாதிக் காரன் இருந்தால் முதலில் அவனை சர்ச்சுக்கு வர வைத்து சின்ன உதவிகள் செய்து அவனை மறை முகமாக இன்னொருவர் மூலம பிரச்சினைகளை களைந்து இது ஏசுவால் வந்தது என்று நம்பவைப்பது. இந்த தில்லாலங்கடி வேலைகள் இல்லாமல் எந்த மேல் சாதிக் காரன், கீழ்சாதிக்காரன் , நடு சாதிக்காரன், வலது இடது சாதிக் காரன் வந்து கிறிஸ்துவை வணங்க போகிறான்?

    சாதி என்பதுவே ஒரு கட்டமைப்பாக இருந்த ஒரு அமைப்பை கேடு விளைத்தது எந்த ஒரு இந்து அமைப்பும் அல்ல. மேல். கீழ் என்று இன மற்றும் சாதி வேற்றுமை பாராட்டியது வெள்ளைக் காரனிடம் கற்றுக் கொண்டது. இங்கே இருந்த அனைத்து பிரிவுகளையும் அவர்களின் கறுப்பர். வெள்ளையர் என்ற இனப் பார்வையோடு பாரத நாட்டின் சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டு, இன்று மிஷினரி என்ற பெயரில் வந்து சாதி வக்கிரம் பற்றி சொல்லி மனம் மாற்றி, மதம் மாற்றி கலாசாரத்தை மாற்றுவது.

    இதற்க்கு உங்களைப் போன்று உள்ளவர்களை மதம் மாற்றி விற்பதற்கு அவர்களுக்கு தக்க சன்மானம் வேறு, வெளி நாட்டில் இருந்து வருகிறது, ஆனால் உங்கள் போன்றோருக்கு கர்த்தரின் நாமமும் பைபிளும் போதக் குறைக்கு மன உளைச்சல் வேறு? அம்மணி நல்ல மன நோய் மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். தயவு செய்து.

    மேலும் உங்களை போல உள்ளவர்களுக்கு புரிய வைப்பது என்பது :

    தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனின் வேலை என்பதும் நாங்கள் அறிந்ததே.

  32. தற்போது கிறிஸ்துவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திகொள்ளும் தமிழ் நெஞ்சங்களுக்கும் ரெபக்கா மர்யம் அவர்களுக்கும் சவிதாவுக்கும் என் அன்பு கலந்த வேண்டுகோள்.

    உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசு கொலை சித்திரங்கள், ஏசு கொலை செய்யப்பட்ட சிலுவை போன்ற அமங்களகரமான பொருட்களை அகற்றிவிடுங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.

    இயேசு நல்ல போதனைகளை செய்திருக்கிறார் என்று நீங்கள் கருதும் வசனங்களை பாராட்டுங்கள். வேணாமென்று சொல்லவில்லை. ஆனால், துர் மரணம் அடைந்த துர் ஆத்மாக்களை வீட்டில் வைத்து வணங்காதீர்கள். அது வீட்டை சுடுகாடாக ஆக்கிவிடும்.

    வீட்டில் உள்ள அமங்களமான பொருட்களை சித்திரங்களை அகற்றிவிட்டு ஒரு மாதமாவது பாருங்கள். நிச்சயம் மாறுதல் உங்களுக்கு தெரியும்.

    அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
    அன்புடன்
    செல்வராஜ்

  33. ஏசுவை இந்துக்கள் கும்பிடலாமா ? இந்துக்கள் புண்ணிய ஆத்மாக்கள் கிருஸ்துவர்கள் பாவ பிண்டங்கள். பிண்டங்கள் ஏசுவை வணங்கலாம் ஏசுவின் முண்டத்தையும் வணங்கலாம். விவஸ்தை கெட்டவர்களின் கடவுளை வணங்குபவன் இந்துவாக இருக்கமுடியாது !!

  34. //தனக்கு ஏசுவைக் கும்பிட்டால் நிம்மதி இருக்கிறது என்று கூறினார். //
    என்று நினைப்போர்கள் கொஞ்சம் இதைப் படிக்கலாம்..

    https://.hayyram.blogspot.com/2010/11/blog-post_14.html

    மேலும் இதையும் படிக்கலாம்

    https://hayyram.blogspot.com/2010/06/blog-post.html

  35. போனவாரம் சித்திரா பௌரணமியன்று மந்தைவெளி நெடுஞ்சாலை வழியே செல்லுகையில் சுமார் 1000 திற்கும் மேற்ப்பட்ட இந்து பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தி பூ நிறையவைத்த நெத்தியில் குங்கும பொட்டுடனும் கைநிறைய வளையல் காதணி மூக்குத்தியுடனும் மணம்மான பெண்கள் கழுத்தில் தாலி காலில் மெம்டியுடனும் மங்களகரமாக ஓம் சக்தி பாராசக்தி என ஒலி எழுப்பி கடந்து சென்றதை சுமார் 15 நிமிடங்கள் வரை பார்த்தது மனதில் ஒருவித சாந்தியை ஏற்படத்தியது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. கூட்டம் கடந்து சென்றதும் நான் மந்தைவெளி பஸ் நிலயத்திற்கு செல்ல நடக்க ஆரம்பித்தேன்.

    அன்று ஞாயிறுகிழமை வழியில் ஒரு சர்சை கடந்து செல்ல வேண்டும் அங்கும் கூட்டம் நிறைய பிரார்தனை செய்தபின் வெளியே வந்து கொண்டிருந்தது. ஆனால் சற்றுமுன் கண்ட காட்சியின் பசுமை ஷணபொழுதில் வேருடன் சாய்ந்துவிட்டது. அவர்களும் நம்கூடபிறந்த சகோதர இந்துகள்தான். மூளைசலவையால் மேலே சொன்ன அடையாளங்களை துறந்து கோலம் மாறி அமங்கலமாகதான் காட்சியளித்தார்கள். போதாகுறையாக கையில் ஒரு கருப்பு சிகப்பு புத்தகம் இந்த கொடுமையை எங்கே போய் புலம்புவது.

    இப்படி அடையாளங்களை மாற்றிகொள்பவர்கள் ஏன் அவர்களை போல் மிடி கௌன் பிராக் போட்டுக்கொள்ளகூடாது. ஏதாவது துரத்தும் என்ற பயமா அல்லது யாராவது எதையாவது எரிவார்கள் என்ற பயமா. வந்த குழந்தைகளுக்கு தமிழ் தெரியாதா அது என்ன மம்மி தாடி என்ற கூப்பாடு. மம்மி என்றால் ஒரு பிணத்தை போட்டு மூடிவைக்கும் சவ பெட்டி தாடி என்றால் பல அர்தங்களை அகராதி சொல்லுகிறது. [..].

    [Edited and published]

  36. ராம், // /இது வரையில் இந்தியாவில் எந்த மசூதியிலும் முஸ்லிம்கள் வெடிகுண்டு வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் சில கோவில்களில் குண்டு வைத்திருக்கிறார்கள்.// இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லீம் தலைவர்கள் அம்மக்களை இந்துக்களுக்கு எதிராக திருப்புவதிலேயே அதிகம் செலவிட வேண்டி இருப்பதால் உட்பிரிவுகள்மீது அதிகம் பிரிவினை காட்டுவதில்லை. //
    இன்று இந்தியாவில் தர்காவுக்குப் போவதை விட கோவிலுக்கு போவதில்தான் ரிஸ்க் அதிகம் என்று எழுதப்பட்டதை இப்படி out of context ஆக கட்-பேஸ்ட் செய்து பதில் எழுதுகிறீர்களே!

  37. RV,
    நீங்கள் என்ன எல்லா இந்துக்களும் சர்ச்சுக்கும், தர்காவுக்கும் போகவேண்டும்,வீட்டிலே வைத்து இயேசுவை வணங்கவேண்டும் என்று கூறுகிறீர்களா? அவ்வாறு செய்பவர்கள் எளிதாக மதமாற்றத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் மையக்கரு.
    ஒரு வரியினை பிடித்துகொண்டு out of context ஆகா போவது நீங்கள்தான்.
    ரிஸ்க் இருந்தாலும் இந்து கோவில்களுக்கு போய்தான் ஆகவேண்டும் அங்குள்ள ரிஸ்க்கும் களைய பட வேண்டும்.
    ரிஸ்க் இல்லாவிட்டாலும் பிறமத தலங்களுக்கு செல்வது தவிர்க்க படவேண்டும்.
    மதமாற்ற கருத்துகளுக்கு உரிமை undo , அதே அளவு அம்மதமாற்றம் நிகழாமல் தடுக்க விழிப்புணர்வு கருத்துகளை வெளியிட தமிழ் ஹிந்து தளத்திற்கும் உரிமை உண்டு.
    மீண்டும் அதெற்கு எதிராய் context ஐ மாற்றாதீர்கள். பிளிஸ்

  38. //ஆனால் பைபிளின் வன்முறை அப்படி பட்டதில்லை. அது யூதர்கள் வாழவும், மற்றவர்கள் அழியவும் துணை நிற்கும் யூத தெய்வத்தை பற்றிய கற்பனை. ஒரு தெய்வம் அறத்தின் பக்கமே நிற்குமே அல்லாது, தன்னை வணங்கிய காரணத்துக்காக மறத்தின் பக்கம் ஆதரவளிக்காது. அப்படி மற்றவர்களை கொன்று யூதர்களை மட்டும் காப்பாற்றுவதாக ஒரு தெய்வம் இருக்குமானால் அது தெய்வமாக இருக்காது//

    மருதமலை அவர்களுக்கு ,
    நிச்சயம் ஆண்டவர் யூதர்களுக்கு மட்டும் தெய்வம் இல்லை. திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கும் அவர் தெய்வம் தான். விரைவில் அதை கண்கூடாக பார்ப்பீர்கள். எப்படி இஸ்ரேல் மக்களுக்கு அவர்களின் எதிரிகளை ஒழித்து அவர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடுத்தாரோ அதே போல் தமிழர்களுக்கும் ஆர்ய, பவுத்த வெறிபிடித்தவர்களிடம் இருந்து தமிழர்களை காத்து அவர்களுக்கு ஒரு வளமான சுதந்திர பிரதேசத்தை கர்த்தர் ஏற்படுத்தி கொடுப்பார். இஸ்ரேல் மக்களை எகிப்திய பாரோ ( pharoah ) மன்னன் ரமேசெஸ் ( rameses ) இன் அடிமை தலையில் இருந்து விடுவித்தது போல் ஒரு நாள் தமிழர்களுக்கும் இந்திய ஆர்ய, சிங்கள பவுத்த வெறியர்களிடம் இருந்து விடுதலை அடைவர். அப்போது தெரியும் எது உண்மை என்று ஆமென்…

  39. //மர்யம் போன்றோர் தங்கள் வாழ்வில் இது போன்று அவல நிகழ்ச்சிகள் நடக்கும்போதாவது விழித்துகொள்ளட்டும். ஆனால், மூளைச்சலவை காரணமாக அசிங்கத்தை அழகு என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பது மட்டுமல்ல, திரும்பத்திருமப சொன்னதையே மீண்டும் மீண்டும் தங்களுக்கே சொல்லிக்கொண்டு சுயமாகவே மூளைச்சலவை செய்துகொள்ளவும் செய்கிறார்கள்.//

    திரு. மணிமாறன்
    எதை நீங்கள் அவலம் என்று சொல்கிறீர்கள்… நீங்கள் அவலம் என்று சொல்லும் மதம் தான் இந்தியாவிற்கு நவநாகரிகத்தை கற்று தந்த மதம். புதிய கல்வி முறையை ஏற்படுத்தி தந்த மதம்.. சதி உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் போன்ற காடு மிராண்டி தனமான கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் தான். இங்கு இருக்கும் ஜாதி தீண்டாமை என்னும் கொடிய பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது எந்த மதம்.. நந்தனார் சரித்திரத்தை எழுதிய மதமா..அவ்வுளவு ஏன் தமிழ் ஒரு நீச பாஷை சூத்திர மொழி சமஸ்க்ரிதத்தில் இருந்து உருவான மொழி என்ற முட்டாள் தனமான கருத்து நிலவிய போது அதை தகர்த்து தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி தமிழ் எந்த மொழிக்கும் கடன் பட்ட மொழி அல்ல என்று உலகுக்கு உரைத்தவர்கள் யார். கால்டுவெல் ஹீராஸ் வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் தான். திராவிட மொழி குடும்பங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற மொழிகள் எந்த அளவிற்கு வடசொற்களை அதிகமாக பயன்படுத்துகிறதோ அந்த அளவு அந்த மொழிகளுக்கு இனிமை உண்டாகும். தமிழ் எந்த அளவிற்கு வடசொற்களை வெளியில் தள்ளுகிறதோ அந்த அளவு தமிழுக்கு இனிமையும் அழகும் உண்டாம் என்று தமிழின் தனி தன்மையை உலகுக்கு உணர்த்தியது கால்டுவெல் பாதிரியார் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தானே . ஏட்டில் இருந்த திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்ற ஒப்பற்ற தமிழ் நூல்களை அச்சில் ஏற்றியது யார்.இந்தியாவில் ஆரியம் புகும் முன் இங்கு வாழ்ந்த அந்நாளைய திராவிட தமிழர்களின் வரலாற்று உண்மையை உலகுக்கு முதலில் எடுத்து சொன்னவர்கள் யார். இப்படி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் பல நன்மைகள் செய்த கிறிஸ்தவ சமயத்தை அசிங்கம் என்றும் அவலம் என்றும் எழுதுவது உங்கள் கண்மூடித்தனமான மத வெறியை தான் காட்டுகிறது.
    கிறிஸ்துவத்தில் போலி பாதிரிகள் போலி மத பிரச்சாரகர்கள் இருக்கவே தான் செய்கிறார்கள் நான் மறுக்கவில்லை அனால் அவர்களின் அட்டகாசம் தான் கிறிஸ்தவ மதம் என்று யாரும் நம்பிவிட வேண்டாம். பிற மதத்தை தாழ்த்தி அசிங்கபடுத்தி என் நற்செய்தியை கூறுங்கள் என்று ஏசுநாதர் எங்கும் கூறவில்லை.. “பாவத்தின் சம்பளம் மரணம்” “உனக்கு இலவசமாக கிடைத்ததை இலவசமாகவே கொடுத்துவிடு”, என்பதை மறந்து நடக்கும் இந்த போலிகள் விரைவில் தக்க தண்டனை அனுபவிப்பார்கள்.
    //அசிங்கத்தை அழகு என்று சொல்லி பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது//
    யாரையும் முளை சலவை செய்து எதற்கும் மாற்ற முடியாது. கிறிஸ்தவத்திற்கு வந்தால் தங்களுக்கு உண்மையில் ஆறுதல் கிடைப்பதாக நம்புகிறார்கள். எனக்கு தெரிந்த பல இந்து குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு போவதால் பிரச்சனைகள் குடும்ப தொல்லைகள் தீர்ந்த பாடு இல்லை என்று கடைசியாக இங்கே வருகிறார்கள் அவர்களுக்கு குடும்ப தொல்லை நீங்கி மன உளைச்சலை போக்கும் விதமாக பிரார்த்தனை செய்து வைக்கபடுகிறது.. தேவைபட்டால் அவர்கள் வீட்டிற்கே வந்து ஜெபம் செய்கிறோம் அதில் நல்ல பலன் காண்பதாக அவர்களே சொல்கிறார்கள். மதம் மாறுகிறார்கள். இந்து மதத்தில் தீராத பிரச்சனை இதில் தீர்வடைகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். வேண்டும் அனால் மதம் மாறிய இந்நாளைய கிறிஸ்துவர்களை கேட்டு பாருங்கள்

    //அப்புறம் ஒரு மேட்டர் இந்த அஹிம்சா கொள்கைகள் எல்லாம் புத்த மதத்தில் இருந்து பைபிள் காபி அடித்தது – இதற்கும் ஏராளமான தரவுகள் உள்ளன. புத்தர் உண்மையாகவே அகிம்சை போதித்தார். பைபிள்காரர்கள் செய்வது வெறும் ஏமாத்து வேலை தான்.//

    திரு . சாரங்
    ஏன் இந்த உலகத்தில் அகிம்சையை பற்றி சிந்திக்க புத்தர்க்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா. புத்தர் சிந்தித்த அதே அகிம்சையை இயேசு நாதர் ஜெருசலேம் நகரில் சிந்தித்து இருக்க கூடாதா. இருவரின் கருத்துக்கள் ஒன்றாக இருந்தால் காப்பி அடித்ததாக அர்த்தமா. அப்படி பார்த்தால் திருக்குறளில் இருக்கும் பல குறள்கள் பைபிள் நீதி மொழிகளோடு ஒத்து போகிறது அதனால் திருக்குறளை கிறிஸ்தவ நூல் என்று சொல்லிவிட முடியுமா. அல்லது கிறிஸ்தவ நூலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்ல இயலுமா. நீங்கள் சொல்வது போல் பார்த்தல் திருக்குறள், சைவ சித்தாந்தம் அனைத்தும் கிறிஸ்துவ நூல்களே ஏன்என்றால் அதில் உள்ள பல கருத்துக்கள் பைபிளோடு தொடர்புடைய கருத்துக்களாக இருக்கின்றன. ஆகவே நிதானித்து கூறுங்கள். நன்றி. சமாதானத்தையும் அமைதியையும் என் இந்து சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்டவர் வழங்கட்டும் ஆமென்

  40. rebecca maryam

    ////////மருதமலை அவர்களுக்கு ,
    நிச்சயம் ஆண்டவர் யூதர்களுக்கு மட்டும் தெய்வம் இல்லை. திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கும் அவர் தெய்வம் தான். விரைவில் அதை கண்கூடாக பார்ப்பீர்கள். எப்படி இஸ்ரேல் மக்களுக்கு அவர்களின் எதிரிகளை ஒழித்து அவர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடுத்தாரோ அதே போல் தமிழர்களுக்கும் ஆர்ய, பவுத்த வெறிபிடித்தவர்களிடம் இருந்து தமிழர்களை காத்து அவர்களுக்கு ஒரு வளமான சுதந்திர பிரதேசத்தை கர்த்தர் ஏற்படுத்தி கொடுப்பார். இஸ்ரேல் மக்களை எகிப்திய பாரோ ( pharoah ) மன்னன் ரமேசெஸ் ( rameses ) இன் அடிமை தலையில் இருந்து விடுவித்தது போல் ஒரு நாள் தமிழர்களுக்கும் இந்திய ஆர்ய, சிங்கள பவுத்த வெறியர்களிடம் இருந்து விடுதலை அடைவர். அப்போது தெரியும் எது உண்மை என்று ஆமென்…////////////

    உச்சகட்ட கிறித்தவ அடிமைத்தனம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
    இப்போது இந்துக்கள் உங்களுக்கு எதிரிகள் அவர்களை ஒழித்து——-

    பாலைவனத்தில் பிறந்த தமிழ் மொழிக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபர் எப்படி மூத்த குடியான தமிழ் குடிக்கு தெய்வம் ஆகமுடியும் என்று கூட சிந்திக்க முடியாத கிறித்துவ அடிவருடி அடிமைகள். தமிழ் குடியை ஒரு காட்டுமிராண்டிக்கு அடிமை செய்ய ஏங்கும் கிர்த்தவ கான்சர் வியாதி பிடித்த உங்களுக்கு எம் அனுதாபங்களை மீண்டும் தெரிவிக்கிறேன்.

  41. This Rebeca Mariam […] still harps about Aryan/Dravidian divide and no logical,factual arguments in our part will change her brain(!) washed warped thoughts. She is full of hatred for anything and everything about Hinduism. The question is, should we answer to her babbles?

    [Edited and published]

  42. //உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசு கொலை சித்திரங்கள், ஏசு கொலை செய்யப்பட்ட சிலுவை போன்ற அமங்களகரமான பொருட்களை அகற்றிவிடுங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.

    இயேசு நல்ல போதனைகளை செய்திருக்கிறார் என்று நீங்கள் கருதும் வசனங்களை பாராட்டுங்கள். வேணாமென்று சொல்லவில்லை. ஆனால், துர் மரணம் அடைந்த துர் ஆத்மாக்களை வீட்டில் வைத்து வணங்காதீர்கள். அது வீட்டை சுடுகாடாக ஆக்கிவிடும்.

    வீட்டில் உள்ள அமங்களமான பொருட்களை சித்திரங்களை அகற்றிவிட்டு ஒரு மாதமாவது பாருங்கள். நிச்சயம் மாறுதல் உங்களுக்கு தெரியும்.//

    அன்புள்ள செல்வராஜ் அவர்களுக்கு
    இயேசு கிறிஸ்து சிலுவையை சுமப்பது இரத்தம் சிந்துவது போன்ற போன்ற சித்திரம் எங்கள் வீட்டில் பல காலமாக இருக்கிறது .. நான் பள்ளிக்கு செல்லும் காலம் முதல் அதை தான் பார்த்து வணங்கி விட்டு செல்வேன். நான் எழுதிய பரிட்சைகள் முதல் நான் சென்ற வேலைக்கான நேர்காணல் வரை அணைத்திலும் வெற்றிபெற்று இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் அந்த சித்திரம் எந்த எதிர்மறையான விளைவுகளையும் எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்திவிடவில்லை. ஏதோ உங்களிடம் வாதம் செய்து என்ன கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இதை கூறவில்லை. நீங்கள் சொல்வது போல் அது அமங்கலமான ஓவியம் அல்ல. என் அனுபவத்தில் நான் பார்த்த எந்த கிறிஸ்தவ குடும்பத்திலும் அந்த ஓவியத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. நாம் யாரை நேசிகின்றோமோ அவர்களின் நன்மைக்காக இரத்தம் சிந்தி உயிர் துறக்க வேண்டிய நிலை வந்தால் அதை ஏற்று கொள்ளவேண்டும் என்கிற தியாக மனப்பான்மையை சொல்லும் ஓவியம் அது.அந்த ஓவியத்தை பார்க்கும் போது என் உள்ளத்தில் அன்பும் தியாகமனப்பான்மையும் தான் பெருகியது. ஏன்என்றால் இயேசு நாதர் இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக அதை கொச்சை படுத்த வேண்டாம் . தயவு செய்து உங்கள் கருத்தை திரும்ப பெற்று கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக …. ஆமென்.

  43. @rebecca
    நீங்க திராவிடமா, கிறிஸ்டியனா ? நான் ஏன் கேட்கிறேன் என்றால், ஏசு ஒரு வெள்ளைக்காரர் ! திராவிட மக்கள் அவரை பரங்கி என்று கூற மாட்டார்களா ?

  44. மீண்டும் ரெபக்கா மரியம் அவர்களுக்கு,

    ஈழத்தில் சொந்தங்கள் அழிக்கப்பட்டதன் காரணம் பல இருந்தாலும் நான் முக்கியமாக கருதுவது இந்து மத வெறுப்பை பிரதானம் செய்த இயக்கங்கள்தான். பாதிரியார்களே இந்த இயக்கங்களை வழி நடத்தினார்கள். தற்கொலைதாரியாக சென்ற போராளிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி அனுப்பி வைத்ததும் பாதிரியார்கள்தான். இறுதியில் அவர்களை இயக்கங்களிடம் காட்டிக்கொடுத்தும், சிங்களர்களிடம் காட்டிக்கொடுத்தும் அப்பாவி தமிழர்களை கொன்றதும் பாதிரியார்களே.

    மீண்டும் அழிவுகரமான கிறிஸ்துவத்திடம் போகச்சொல்லும் அவல சிந்தனை ஏன் உங்களுக்கு?

    இப்போதாவது தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் சைவ நெறியையும் மீட்டு எடுத்து தமிழர்களாக வாழ்வோம்.

  45. maria – looks like you are in for a definite war here. Since you can’t fight overtly you are doing it covertly here through conversions ande destablization of a solid culture.

    What isralities did to poor tribes, what you did in South America, what happened to jews all over europe is by all means a planned homicide.

    a god who cannot savehimsel is going to save dravida nadu. what a joke, the wolrd needs to be saved from the missionary fools.

    look at the state of affairs in the birth place of jesus. with that as the epicenter there is war all over that place, there is homicide all over, there is no peace anywhere around that area. Is this what you want to unleash here.

    bible unequivocally says Jesus and Karthar are there out to save only israel.

    your andavar is never going to come. you have been saying he is going to come for the past 2000 years and only desperation resulted. to avoid this desperation, you have been killing all people or converting people to christianity hoping that end of the world will come only then and christ will come then. it is true if only the world becomes a christian world, it will no doubt come to an end – thAnga mudiyathu suvisesha troubles.

    btw, islamites say the same thing

    good things in bible (some 15 % of it) is a direct lift from budhdhist texts.

    amen which you use is an adaptation of om (which is also recited as am).
    however when a jesuist says amen people see bad omen

    karthar saved isralites from Rameses so that they could kill his beloved son Jesus – what a joke?

    You will not get the peace by reading bible ten thousand times that you get by just reading one Bagavad Geetha slokam.

    Ungal dukkam SandosamAga mArattum 🙂

    let you progress from tamas to enlightenment
    Shanthi Shanthi Shanthi:

  46. சகோ. ரெபெக்கா மரியம் அவர்களே,

    நீங்கள் இயேசு நாதரை பற்றி சொல்வதானால் தயவு செய்து அவருடைய கருத்துக்களை சரியாக சொல்லவும்.

    பாவம் செய்யாதே என்றே இயேசு சொல்லி இருக்கிறார்.

    உன் கண் உனக்கு இடறுதலை உண்டாக்கினால் கண்ணை எடுத்து விடு , கண்ணோடு நரகத்துக்கு செல்வதை விட கண்ணில்லாமல் இருக்கலாம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறாரே. நீங்கள் இங்கே சொல்வது போல உலக மக்கள் பாவம் செய்தால், பாவம் செய்து விட்டு வா, நான் மன்னிப்பு தருகிறேன் என்று சொன்னதாக எங்கே இருக்கிறது?

    பாவம் செய்யாதே என்பதே இயெசுவின் கோட்பாடு, உங்களின் இந்த பாவம் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டுக்கலாம் கோட்பாட்டால் சமுத்திரத்தையும் , பூமியையும் சுற்றித் திரிந்து இரட்டிப்பு பாவி ஆக்க முயல வேண்டுமா?

    மேலும் நீங்கள் ஏன் அமெரிக்கா, ஐரொப்பா ஆகிய இடங்களில் வசிப்பவர்களை கிறிஸ்துவர் ஆக்க முயலக் கூடாது?

    இயேசு ‘ தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக் கூடாதே ‘ என்றார். மேலை நாடுகளில் ஒருவர எத்தனை முறை விவாகரத்து செய்கிறார்? இந்தியாவில் பெரும்பாலானவர் நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். சாகும் வரை இணை பிரியாமல் கண‌வன் மனைவி அன்பு வாழ்க்கை வாழ்கின்றனர். இப்போது இயேசு கிறிச்துவின் கொள்கைப் படி பத்தாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் சமுதாயத்திடம் நீங்கள் என்ன சொல்ல இருக்கிறது?

    அப்படியானால் நீங்கள் கிறிச்தவ மத பிரச்சாரம் செய்ய வேண்டிய இடம் எது? ஆனால் நீங்கள் இங்கே வந்து அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது ஏன்? ஏனெனில் உங்களுக்கு உண்மையான கிறிச்தவம் எது என்றே தெரியவில்லை.

    இப்போது இயேசு உங்களிடம் வந்து என்ன செய்கிராய் என்றால் என்ன சொல்வீர்கள் . கர்த்தாவே , அமேரிக்கரையும் , ஐரொப்பியரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி வரை இணை பிரியாமல் வாழும் படி செய்வது எங்களால் கூடவில்லையே. அதனால் இங்கே இந்து மதத்தால் உருவான கலாச்சாரத்தால் பிரியாமல் வாழும் இந்த இந்துக்களை….. மதம் மாற்றி அவர்களை பாவிகள் ஆக்கினால் பாவ இராஜ்ஜியம் இங்கேயும் இருக்குமே என்பீர்களா? அப்பாவிகளை ஏன் பாவிகள் ஆக்குகிறாய் என இயேசு கிறிஸ்து சினந்தால் என்ன செய்வீர்கள்?

    இயேசுவை கிறிச்துவை பற்றிய தவறான பிரச்சாரத்தை முறியடித்து, இயேசு கிறிச்துவின் சரியான கருத்துக்களை இந்துகளே விளக்கிக் கூறுவார்கள்.

    மனமிருந்தால் மனம் திரும்பு ங்கள்.

    அல்லது

    பாவ பிரச்சார, இனப் படுகொலை ஆதரவு, மத சகிப்புத் தனமை அழிப்பு, மத வெறி பரப்பு பிரச்சார பாதையில் செல்வதானல் அது உங்கள் விருப்பம். கேட்டுக்கு செல்லும் பாதை அகலமாக உள்ளது.

    ———

    அன்புக்குறிய திரு. கோபால், தமில் இந்து குழு, மற்றும் அனைத்து அன்பு சகோதரருக்கும்,

    இந்தக் கட்டுரையின் கருத்துக்கு மாறாக இயேசுவை இந்துக்கள் தொழலாம் என்னும் கருத்துள்ள கட்டுரையை என்னுடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறேன்.

    இந்தக் கடவுளை கும்பிடு , மத்த கடவுள்கள் ஜீவனில்லாதவர்கள் என்று வெறுப்புணர்ச்சியை கக்கி, தன் மார்க்கம் மட்டுமே இவ்வுலகில் இருக்க வேண்டும் என்கிற ஆவேசத்தில் பல கோடிக கணக்கானவரை அன்று குருசெடு போருக்கு முன்னால் இருந்தே கொல்ல ஆரம்பித்து இன்றும் தொடர்கின்றனர்.

    இந்துக்கள் அந்த மத வெறியாட்டத்தில் பங்கெடுக்க மாட்டார்கள்.

    எனவே இந்துக்கள் பல நாட்கள் இந்துக்களின் அன்புக்குரிய கடவுள்களான, கருமாரி அம்மன், சிவ பெருமான், இராமர், அனுமன், ஐய்யப்பன், முருகன், வினாயகர், விஷ்ணு…. இவர்களை தொழுவதோடு, வருடத்தில் ஓரிரு நாட்களாவது புத்த பிரான், மஹாவீர், அல்லாஹ், இயேசு கிறிஸ்து…ஆகியோரையும் தொழுவது இந்து மதத்துக்கு, இந்துக்களுக்கு சிறப்பே என்கிறதி சொல்லுகிறேன்.

    ———

    என்னைத் திட்டக் காத்திருக்கும் போர் வீரர்கள் திட்டலாம்.

  47. //தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி தமிழ் எந்த மொழிக்கும் கடன் பட்ட மொழி அல்ல என்று உலகுக்கு உரைத்தவர்கள் யார். கால்டுவெல் ஹீராஸ் வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் தான்//

    இது போன்ற பொய்களை இங்கே நிறைய பேர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தமிழ் இந்து தளத்தில் ஏன் இவர்கள் தங்களது பழைய பொய்களை பரப்ப இடம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த பொய்கள் வரும்போதும் இதற்கு பதில் கொடுத்துகொண்டே இருக்க வேண்டுமா? மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களோ மீண்டும் மீண்டும் இதனையே கக்கிகொண்டிருக்கிறார்கள். இது போன்ற அவதூறுகளும் தமிழ் மொழியை இழிவு படுத்துவதும் பல கிறீஸ்துவ தளங்களில் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏன் தமிழ் இந்து தளத்திலும் இடம் கொடுக்க வேண்டும்?

  48. //இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//

    இது ஒரு டுபாக்கூர் என்று புரிந்துகொள்ளுங்கள். யாரோ எப்போதோ செத்தது மற்றவர்களின் பாவங்களை தீர்க்காது. இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா? எவரோ செத்த்தற்கு இப்படியெல்லாம் மடத்தனமாக பொருள் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம்.

  49. \\இஸ்ரேல் மக்களை எகிப்திய பாரோ ( pharoah ) மன்னன் ரமேசெஸ் ( rameses ) இன் அடிமை தலையில் இருந்து விடுவித்தது போல் ஒரு நாள் தமிழர்களுக்கும் இந்திய ஆர்ய, சிங்கள பவுத்த வெறியர்களிடம் இருந்து விடுதலை அடைவர். அப்போது தெரியும் எது உண்மை என்று ஆமென்…\\

    \\சமாதானத்தையும் அமைதியையும் என் இந்து சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்டவர் வழங்கட்டும் ஆமென்\\

    rebecca maryam

    உங்களை மனமார பாராட்டுகிறேன். இந்த அளவுக்கு எந்த ஒரு மதம் மாறிய கிறித்துவர் இவ்வளவு தெளிவாக திருத்தமாக, இந்தியாவை உடைப்பது தான் எங்கள் நோக்கம் என்று உடைத்து விட்டர்கள். உங்கள் இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு நன்றி. உங்கள் அகராதியில் ஒரு நாட்டை துண்டு துண்டாக உடைப்பது தான் சமாதானமா?

    வாடிகனின் உளவாளி சோனியா தான் இந்த இலங்கை போரில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி, அவர் ஆசியில் தான் லட்சகனக்கணன் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விஷயத்தை அழகாக மறைத்து விட்டேர்களே?

    பொதுவாக பூசணி காயை சோற்றில் மறைப்பார்கள் என்று பெயர். ஆனால் இந்த வெள்ளயர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைப்பார்கள்.

    உங்கள் தமிழ் பற்றை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது. ஆங்கிலேயர்கள் பெயரை வைத்து கொண்டு தமிழ் பற்றி பேசும் பொழுதே உங்கள் வண்ட வாளம் தண்ட வாளம் ஏறிவிட்டதே?

    எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் (ஒரு பேச்சுக்கு) உங்களை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி, அதன் மூலம் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிர் இழக்கிறார் என்று வைத்துகொள்வோம். அவர் உடல் சிதைந்து இறந்த பொழுது எடுத்த போட்டோவை வைத்து கொண்டு உங்களால் தினமும் பார்க்க முடியுமா?

    ஒரு சிறு ஐயம்,

    சூரியன் பூமியை சுற்றுகிறது என்று பைபிளில் சொல்லப்பட்டு உள்ளதாமே? அது உண்மையா?

    அப்பறம் பைபிள் படி பூமி ( 430 million old) உருவாகி முழுமையாக 6000 வருடங்கள் கூட ஆகா வில்லையமே? இது உண்மையா?

  50. பிணத்தை வணங்கி, அப்பிணத்தின் மாம்சமாக கருதி அப்பமும் அதன் ரத்தமாக கருதி வைன்னும் குடிப்பவர்களுக்கு.
    எப்படிங்க நல்ல சிந்தனைகள் வரும்? நாமும் ஏன் சார் அவர்களை பின்பற்ற வேண்டும். நம்ம பிள்ளையாரும் பெருமாளும் இருக்கும்போது நமக்கெதுக்கு சார் பிணவழிபாடு?

  51. mariyam,

    //
    //இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//
    //

    Please answer these if you can

    அதான் பாவத்திற்கு பொருப்பேத்தாச்சே இன்னமும் ஏன் எல்லாரையும் பாவிகளே பாவிகலேன்னு ஜல்லியடிக்கிறீங்க?

    இன்னும் பாவிங்க இருக்காங்க அப்படின்னு சொல்றீங்களா

    அது சரி – ஏசுவுக்கு அப்புறம் ஏன் ஒரு கிறிஸ்தவன் கூட இது மாதிரி எல்லோருடைய பாவத்திற்கும் பொறுபேற்று சிலவில் ஏறவில்லை?

    நானும் ஒரு கடதாசி எழுதி வெச்சுட்டு (எல்லோருடைய பாவத்திற்காகவும் நான் தொங்குகிறேன்) fanல தொங்கினா fana கும்பிடுவீன்களா?

    இயேசு உங்களுக்காக நானே சாப்பிடுகிறேன்னு சொல்லிட்டு போயின்ருந்தா இந்த பசிங்கிற எழவே இருந்திருக்காதில்ல, ஏழைங்கெல்லாம் நிம்மதியா இருக்கலாமில்ல?

    எதுக்காக கர்த்தர் உங்களை எல்லாம் பாவத்தோட படைச்சு அப்புறம் பாவத்த துடைக்க ஏசுவ அனுப்பறார்? இது சுத்த பைத்தியகாரத்தனமா இல்ல? இதுக்காக வருத்தப்பட வேண்டியது கர்த்தர் தானே. நீங்க ஏன் வார வாரம் ஒரு நாள் மட்டும் கூவிக்கிட்டு இருக்கீங்க?

    தானே ஒரு உயிரை இன்ஸ்டண்டா உண்டாக்குற கர்த்தர் ஏன் பாவ மில்லாம ஒரு உசுர படைக்க மாட்டேன்கிறார், தெரியலையோ?

    இயேசு வந்துட்டு போன பிற்பாடாவது அந்த அறிவு வந்திருக்கலாமே? ஏசுவே கர்த்தருக்கு இந்த யோசனையை சொல்லலாமே?

    இது சுத்த காங்ரஸ் கவர்மென்டு மாதிரி இல்ல வேலை செய்யுது. மன்மோகன் சிங்கு மாதிரி கர்த்தர் எனக்கு எதுவுமே தெரியாது அப்படிங்கறாரு? இவங்க செஞ்ச பாவத்திற்கு கல்மாடி மாதிரி ஏன் ஏசுவ பலிகடா ஆக்கணும்?

    இயேசு விரும்பி சிலவை ஏற்றார் என்கிறீர்களே அதை ஏன் முப்பது வருஷம் பொறுத்து செஞ்சார். ஏன் ஒரு இருவது இருவத்தஞ்சு வயசிலேயே விரும்பி ஏற்றிருக்கலாமே? அப்பாவும் தானே பாவிகள் இருந்தனர்?

    யூதர்கள் இயேசுவை சிலுவையில் இட்டதால் அவர் மரித்தார், மேட்டர் இவ்வளவு தான்? யூதர்கள் சிலுவையில் இட வில்லை என்றால் அவர் ஏன் மரிக்கப் போகிறார்?

    அதுக்கப்புறம் ஒரு கேள்வி – அதென்ன சிலுவை தேர்ந்தெடுத்து மரிப்பது? வேற ஒரு பொருளே கிடைக்க வில்லையா? மேட்டர் ரொம்ப சிம்பிள்? சிலவில் ஏற்றுவது என்பது ரோம மன்னர்களின் ஒரு வழக்கம்? யேசுவோட இன்னும் கொஞ்ச பேர் சிலவில் எரிநார்களே அவர்களை நீங்கள் ஏன் கும்பிட வில்லை?

    ஏசுவுக்கு முன்னாடி பல பேர் சிலவில் ஏறி இருக்கிறார்கள்? அவர்கள ஏன் விட்டு விட்டீர்கள்?

    இந்த சிலுவை பைத்திய காரத்தை தயவு செஞ்சு நிப்பாட்டுங்க.

  52. //இந்து மத வெறியர்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம் அனால் உண்மையான உள்ளன்போடு பார்பவர்களுக்கு தான் இயேசுவின் சிலுவை சுமக்கும் ஓவியம் ஒரு தியாகத்தின் ஒப்பற்ற தத்துவம் என்பது புரியும்.//

    🙂 அதாவது, பாவம் செய்வது நீங்கள். அந்த பாவத்தை சுமப்பதற்கு ஒருவர் வேண்டும்.

    //கிறிஸ்தவ மதத்தையா. கால காலமாக மக்களுள் ஒரு பிரிவினரை சூத்திரர்கள் கீழ் ஜாதியினர் என்று சொல்லி மிருகத்தை விட கேவலமாக நடத்தியது யார். இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை கொடுமை தங்காமல் தான் அவர்கள் சுயமரியாதையோடு கிறிஸ்துவ மதத்தில் இணைந்தார்கள்.//

    ஹைய்யோ…ஹைய்யோ…இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…

    //இன்றைக்கு அணு ஆயுதங்களை மடியில் கட்டிக் கொண்டு சமாதானம், சமாதானம் என்று கூறிக் கொள்வது பெரும்பாலும் கிறிஸ்துவ நாடுகளே, அவர்கள் உண்மையான கிறிஸ்துவர்கள் இல்லையா? நீங்கள் சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு அது கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை.//

    இதைத்தான் காந்தி சரியாக சொன்னார். “All Christians are unlike Christ”.

  53. அன்பார்ந்த கிருஸ்துவ சகுதர்களே

    இவர்கள் விரும்புவது எல்லாம் இந்துவாக இருக்கவோண்டும் என்று அல்ல
    எல்லரும் இந்தூதுவ வாதியாக இருக்கவேண்டும் . அது இந்தியாவில் இஸ்லாம் இருக்கும் வரை அது நிறைவேறாது .

  54. //திராவிடன் (தென்னாடுடையான்)
    26 April 2011 at 10:54 am
    பிணத்தை வணங்கி, அப்பிணத்தின் மாம்சமாக கருதி அப்பமும் அதன் ரத்தமாக கருதி வைன்னும் குடிப்பவர்களுக்கு.
    எப்படிங்க நல்ல சிந்தனைகள் வரும்? நாமும் ஏன் சார் அவர்களை பின்பற்ற வேண்டும். நம்ம பிள்ளையாரும் பெருமாளும் இருக்கும்போது நமக்கெதுக்கு சார் பிணவழிபாடு?//

    சரியாக சொன்னீர்கள்.
    இது ஒரு கல்ட். அதுவும் குழந்தைகளை மனநோய்க்கு ஆட்படுத்தும் கல்ட்.
    கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களுக்கு இந்து குழந்தைகளை அனுப்பி இந்த கல்ட்டுக்கு தங்கள் குழந்தைகளை பலி கொடுத்த இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

    கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை புறக்கணியுங்கள்.

  55. வணக்கம்

    ரெபேக்க மரியம். முடியல,

    இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் பைபிளை விட்டு வெளியே எட்டிப் பாக்காம இருப்பீங்க? அதுவரை உங்களால் உண்மையை அறிவது கடினம்.

    ”’திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கும் அவர் தெய்வம் தான். விரைவில் அதை கண்கூடாக பார்ப்பீர்கள். எப்படி இஸ்ரேல் மக்களுக்கு அவர்களின் எதிரிகளை ஒழித்து அவர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடுத்தாரோ அதே போல் தமிழர்களுக்கும் ஆர்ய, பவுத்த வெறிபிடித்தவர்களிடம் இருந்து தமிழர்களை காத்து அவர்களுக்கு ஒரு வளமான சுதந்திர பிரதேசத்தை கர்த்தர் ஏற்படுத்தி கொடுப்பார். இஸ்ரேல் மக்களை எகிப்திய பாரோ ( pharoah ) மன்னன் ரமேசெஸ் ( rameses ) இன் அடிமை தலையில் இருந்து விடுவித்தது போல் ஒரு நாள் தமிழர்களுக்கும் இந்திய ஆர்ய, சிங்கள பவுத்த வெறியர்களிடம் இருந்து விடுதலை அடைவர்”””’

    எந்த திராவிடன் வெள்ளைக்காரன் வருகைக்கு முன்னம் ஏசுவை குல தெய்வமாக தொழுதான் என்று ஒரு விளக்கம் தர இயலுமா? சரி ஆரியன் என்பதற்கும் திராவிடன் என்பதற்கும் சரியான விளக்கம் தர முடியுமா உங்களால். ஆரியன்/’திராவிடன் இரண்டும் என்பது இருவேறு இனங்கள் என்பது பொய்யாகி போய் பல காலம் ஆகிவிட்டது, முதலில் இன்று அகழ்ந்து ஆராய்ந்த இந்திய சரித்திரத்தை முதலில் நன்றாக உண்மையான தேச பக்தியோடு படித்து விட்டு பிறகு உங்களின் பைபிளை திறங்கள்.

    சும்மா கண்ணீர் விட்டாலே உணர்ச்சி பொங்கும் தமிழனின் உணர்சிகளை வைத்தே இன்னமும் திராவிட ஆரிய வெறுப்பு நெய் ஊற்றி குளிர் காயும் அரசியல் வாதிகளுக்கு, இதே விஷயத்தை வைத்தே மதம் வளர்ப்போம் என்று (இப்போது உங்களின் பின்னோட்டம் உறுதியாகி விட்டதே) கொக்கரிக்கும் உங்களுக்கும் சரி எங்கே இருக்கிறது தேச பக்தி? எவனோ தனது இனமும் (வெள்ளை) தனது மதமும் வளர்ந்து பின்று காலத்தில் என்றுமே தனக்கே அடிமையாகி இருக்க வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களை இருட்டடிப்பு செய்து இந்திய சரித்திரத்தை எழுதி வைத்ததை மட்டுமே படித்தால் வெள்ளையாய் இருக்கிறவன் போய் சொல்ல மாட்டான் என்ற குருட்டு நம்பிக்கை மட்டுமே இருக்கும். அப்போது எல்லோருமே காமெடி பீசாகி விடுவோம்.

    இன்றைக்கு நீங்கள் சொல்லும் பவுத்த வெறியர்கள் யாருமே புத்தரின் கொள்கைகளுக்கு விரோதமானவர்கள், சரி அதிருக்கட்டும் திராவிடன் என்பவன் யார் என்றாவது தெரியுமா திரும்பவும் பள்ளிக் கூடம் சென்று படித்து விட்டு வாருங்கள், திராவிடம் என்பதுவே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்த நான்கு மொழிகள் பேசிய தென்பகுதியே திராவிடம் என்பதாகும், நீங்கள் என்னடாவென்றால் திராவிடர் என்ற தமிழர்கள் என்று நா கூசாமல் சொல்கிறீர்கள். தமிழன் திராவிடத்தின் ஒரு பகுதியானவன் மட்டுமே.

  56. மரியம் அம்மா,

    //இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//

    அதற்கு ஏன் அவர் 4000 ஆண்டுகள் காத்திருந்தாரோ தெரியவில்லை!

    ஆதாம் பழம் தின்றதால் தான் பாவம் செய்யும் நிலை மனிதனுக்கு வந்தது என்றால், பாவ வாசனையே இல்லாத ஆதாம் ஏவாள் ஏன் பாவம் செய்தார்கள்?

    பாவ வாசனையே இல்லாத பொழுது சில என்சல்கள் மாத்திரம் விழுந்தனராமே? அதில் ஒருவர் தான் சாத்தானாமே? ஆதாம், ஏவாள் “முதல் பாவம்” செய்வதற்கு முன் இது எப்படி சாத்தியம்?

  57. // அன்புக்குறிய திரு. கோபால், தமில் இந்து குழு, மற்றும் அனைத்து அன்பு சகோதரருக்கும்,

    இந்தக் கட்டுரையின் கருத்துக்கு மாறாக இயேசுவை இந்துக்கள் தொழலாம் என்னும் கருத்துள்ள கட்டுரையை என்னுடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறேன். //

    அன்புள்ள திருச்சிக்காரரே,

    பிரேதத்தை வணங்கக் கூடாது என்று கண்ணன் கீதையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறான்:

    “ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள். ” – 17.4

    ஆன்மா பிரிந்து, அரை நிர்வாணமாக, இரத்தம் ஒழுக சிலுவையில் அறைப்பட்டுக் கோரமாகக் கிடக்கும் உடலின் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது இந்த “பிரேத வழிபாடு” கோஷ்டியில் தான் சேரும். கட்டுரை ஆசிரியர் இதைத் தான் கூற வருகிறார்.

  58. வணக்கம்,

    /////நீங்கள் அவலம் என்று சொல்லும் மதம் தான் இந்தியாவிற்கு நவநாகரிகத்தை கற்று தந்த மதம். புதிய கல்வி முறையை ஏற்படுத்தி தந்த மதம்..////

    நாகரிகம் என்று எதை சொல்கிறீர்கள், பேண்டும் சட்டையும் போட்டுக் கொள்வதையா? அதற்க்கு முன்னர் வேட்டியும் அங்கவஸ்திரமும் அணிந்த காலத்தில் கூட உலகின் சிறந்த நாகரிகம் என்ற அடையாளத்தோடு விளங்கியது நமது பாரதம், ஆனால் நாகரிக உடையணிந்த கிறிஸ்துவ வெள்ளையர்கள் உடையணிந்த விலங்குகள், எவன் ஒரு பொண்டாட்டி, அல்லது எந்த பெண் ஒரு கணவனோடு வாழ்கிறாள்? கணவனின் மீதான வெறுப்பும் விவாகரத்தும் கொண்டு வந்து கலாசாரத்தை கெடுத்தது வெள்ளைக்காரன். அவன் என்ன சனாதன தர்மம் கொண்டாடுபவனா?

    நன்றாக நடந்து கொண்டு இருந்த குரு சிஷ்ய உறவுகளை கொச்சைப் படுத்தி மேற்கத்திய பாணியில் கல்வி கொடுக்கிறோம் என்ற போர்வையில் பாரதக் குழந்தைகளை மேலும் மேலும் அடிமைப் படுதினாரே அன்றி ஒன்றும் கிழிக்க வில்லை. எல்லோரும் ஆங்கிலம் பேசினார்கள், ஆனால் அதன் மூலமே அடிமைப் படுத்தப் பட்டார்கள். ஒரு கூட்டமாய் இருந்த மாடுகளை பிரித்து அடித்தார்கள்,

    யார் இந்த கால்டுவெல், அவர் ஒரு மெஷினரி ஆசாமி, தமிழ் மீதுள்ள அக்கறையால் ஒன்றும் அவர் மெனக்கெடவில்லை, அப்படி பாட புத்தகம் மட்டும்தான் சொல்கிறது. தமிழர்களின் வரலாறு முழுக்க தெரிய தமிழ் தெரிந்தால்தான் அதை தனக்கு சாதகமாக மாற்றி எழுத முடியும் என்பதற்காகவும் மதம் மாற்றி வேலைகள் செய்ய தமிழ் உதவும் என்பதற்காகவும் மட்டும்தான் அவர் தமிழ் மீது கவனம் செலுத்தினார். அதே கதை தான் வீரமா முனிவர் என்று அழைக்க படும் ஜோசெப் பெஸ்கியும் முனிவர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாத எந்த தமிழ் தெரியாத தற்குறியோ அவருக்கு அந்த பெயரை வைத்து உள்ளது.

    தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் பாடல்களாகவே உள்ளது பெரும் வரவேற்ப்பு அடையும் என்று தனது மதம் பரப்ப மட்டுமே தமிழ் படித்தார் அல்லாது தமிழ் வளர்க்க அல்ல. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்று யார் எழுதி வைத்தார்கள் விளக்க முடியுமா?

    சுய லாபத்திற்காக இவர்கள் எல்லாம் தமிழ் கற்றதை, பொதுவாக இவர்கள் தமிழ் கற்றது தமிழின் பெருமை என்று இன்னமும் தங்களின் சுய லாபத்திற்காக வரலாற்றை திரித்து பாட புத்தகத்தில் பதித்து இளம் பாரத மக்களை, ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், அதை பிடித்துக் கொண்டு நீங்க என்னமோ தமிழன் என்பவன் வெள்ளைக் கிறிஸ்துவன் வருமுன் நிர்வாணமாய் சுற்றியது போல கூப்பாடு போடுகிறீர்களே, உங்களின் தமிழ் பாசம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது,

    தமிழ் தனியாக எழுதுவதற்கு முடியும், தெலுங்கு மற்ற மொழியெல்லாம் அப்படி இல்லை சமஸ்கிருதம் கலந்ததுதான் எழுத முடியும்னு கால்டு வேல் கண்டு பிடித்தாரே அப்படியானால் நீங்கள் ஏன் தனித் தமிழில் எழுத வில்லை?
    மறுத்து நான் எழுதியது தமிழ் தான் என்று நீங்கள் கூறினால் இந்த தளத்தில் சமஸ்கிருதம் அறிந்த சோதரர்கள் ஏராளம், உங்களின் மடலை விலாவரியாக விளக்கி விட முடியும்.

    சமாதானமான உங்களின் இயேசு ஏன் மற்ற மத கடவுள்களை பார்த்து சாத்தான் என்று வர்ணிக்கும் கிறிஸ்துவரிடம் அவர்களை பழிக்காதே சமாதானமாக இரு என்று கனவில் கூட சொல்வது இல்லை? சும்மா பிணம் என்று சொன்னாலே இவ்வளவு வாதம் செய்கிறீர்களே? செத்த மனிதன் பிணம் அவ்வளவுதான், அவனால் ஒரு காரியம் செய்வதாகாது. ஆனால் கொடும் செயல் புரிவதாக நீங்கள் கருதும் சாத்தானுக்கு ஒப்பாக சனாதன கடவுள்களை சொல்லும் அதிகாரம் உங்களுக்கு யார் தந்தது.

  59. மதமாற்றம் என்பது விபசாரமே – வறுமையில் வாடும்போது பணம் தந்து உதவி செய்ய முன் வருபவன் மதத்திற்கு போவது என்பது – பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக விபச்சாரம் செய்வதைவிடக் கேவலம்.

    கணவன் குடிகாரன் – பொறுப்பற்றவன் – மனைவியை அடித்து உதைத்துக் கொடுமை படுத்துபவன். அந்த பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாமலும் – கணவனின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்று தெரியாமலும் தவிக்கிறபோது – பக்கத்து வீட்டுக்காரன் தான் அந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவதாக் கூறி வலிய வந்து உதவி செய்கிறான்.

    அந்த உதவியை ஏற்றுக்கொண்ட பெண்ணிடம் மெதுவாக நயமாக அவன் தன்னிடம் படுத்துக் கொள்ள வரும்படி அழைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

    அவனை எந்த ரகத்தில் சேர்ப்பது ?

    இளம் பெண்ணின் வறுமையை பயன்படுத்தி அவளை பலவந்தமாக – இல்லை – அவளது பலவீனமான சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு – அவளைக் கற்பழிக்கிறபவன் தானே அவன். சாதாரணமாக பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தபடுத்துவது மட்டுமே இன்று கற்பழிப்பு என்று கருதப்படுவதால் பலவீனமான பெண்களை தன்வசப்படுத்துகிறவர்கள் இந்த கற்பழிப்புக் குற்றங்களிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

    ஆனால் அவர்களும் பெண்களின் கற்பை விலைபேசும் போக்கிரிகள்தாமே !

    அத்தகைய க்றபழிப்புக் குற்றங்களைத்தான் கிறிஸ்துவ மிஷினரிகள் செய்து வருகிறார்கள்.

    ஏழைகளின் வறுமையை விலையாக்கி – இவர்கள் மதம் மாற்றுவதும் கற்பழிப்புக்குச் சமம்தானே ?

    மதம் மாறுகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது – மதம் மாறினால் ஒருமுறைதான் பணம் கிடைக்கும் – ஆனால் விபச்சாரம் செய்தால் தினம் தினம் பணம் கிடைக்கும். அதனால் யாராவது விபச்சாரம் செய்ய முன்வருவார்களா ? அப்படிச் செய்தாலும் அதை நாம் அங்கீகரிப்போமோ ?

    அப்படியிருக்க விபச்சாரத்தாவிடக் கேவலமான மதமாற்றத்தை எப்படி அங்கீகரிப்பது ?

    ”உடலை விற்பது விபச்சாரம் என்றால் – ஆத்மாவை விற்பது மதமாற்றம்”

    வறுமையிலும் கூட யார் விபச்சாரத்திற்குப் போகிறார்கள் ? வறுமையை விரட்ட வேறு நல்ல வழிகளைத் தேட முடியாதவர்கள் பலவீனமான மனது உடையவர்கள்தான் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    அதைபோல லௌகீக வசதிகளை செய்து தர முன்வருகிற மதத்தை நான் முழுமனதுடன் விரும்பியே ஏற்றுக்கொண்டேன் என்று கூறுவதும் மதம் மாறுகிறவரின் மனோபலவீனத்தையே காட்டும்.

    (ஆதாரம் ஆர்.பி.வி.எஸ்.மணியன் – மதமாமற்றம் என்பது விபச்சாரமே ! தடை செய்வது அவசியமே !)

  60. (ஆதாரம் ஆர்.பி.வி.எஸ்.மணியன் – மதமாமற்றம் என்பது விபச்சாரமே ! தடை செய்வது அவசியமே !) – வயிற்றுப் பிழைப்பு – ரயிலடியில் பிரயாணிகள் வந்து இறங்கியதும் ஆட்டோகாரர் ரிக்-ஷாகாரர் டாக்ஸிகார் என்று பலபேர் வந்து ”என்வண்டியில் ஏறு” ”என் வண்டியில் ஏறு” என்று நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். எந்த வண்டியில் ஏறினாலும் நாம் போய் சேரவேண்டிய இடம் நமக்கே தெரிந்திருப்பதால் நிச்சயம் போய்சேரலாம். வண்டிகாரர்கள் போட்டிபோடுவது அவர்களது வயிற்று பிழைப்பிற்காக.

    ஆனால் கடவுள் என்கிற லஷியத்தை அடைய செல்லவேண்டிய பாதை நமக்கே தெரியாமல் இருக்கும் போது இஸ்லாமும் கிருஸ்துவமும் போட்டிபோட்டுக் கொண்டு எங்கள் மதம்தான் சரியானவழி என்று சொல்லி நம்மவரை மதம் மாற்றுவது – கிராக்கிப்பிடிக்க அலைகிறார்கள் என்பதையே காட்டுகிறது. அது அவர்களது வயிற்றுப் பிழைப்பு என்பதும் தெளிவு. இவர்கள் யாரும் கடவுளை பார்த்ததும் இல்லை கடவுளையடைய வழி சொல்லத் தெரிந்தவர்களும் அல்ல. அப்படியிருக்க அவர்களை நம்பி பின்னால் போவது திக்கு தெரியாமல் காட்டில் அலைவதுபோல் ஆகும்.

  61. அனைவருக்கும் வணக்கம் ….
    அன்புள்ள திருச்சிக்காரன் அவர்களே
    //உன் கண் உனக்கு இடறுதலை உண்டாக்கினால் கண்ணை எடுத்து விடு , கண்ணோடு நரகத்துக்கு செல்வதை விட கண்ணில்லாமல் இருக்கலாம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறாரே. நீங்கள் இங்கே சொல்வது போல உலக மக்கள் பாவம் செய்தால், பாவம் செய்து விட்டு வா, நான் மன்னிப்பு தருகிறேன் என்று சொன்னதாக எங்கே இருக்கிறது?//

    பாவம் செய்து விட்டு வா மனிப்பு தருகிறேன் என்று இயேசு கிறிஸ்து எங்கும் சொல்லவில்லை தான். ஆனால் பாவம் செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்க படவேண்டும் என்றும் சொல்லமுடியாது. மனிதன் நிதானம் தவறி தான் பாவம் இழைக்கிறான். தான் செய்வது இன்னது என்று தெரியாமல் தான் பாவங்கள் இழைகின்றனர். அப்படி பாவம் செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு இந்த சமுதாயதிற்கு நன்மை செய்ய ஒரு வாய்ப்பு தருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஏன் இங்கு மட்டும் தான் பாவ மனிப்பு இருக்கிறதா உங்கள் திருவிளையாடல் புராணத்தில் போய் மாபாதகம் தீர்த்த படலம் என்று ஒரு படலம் இருக்கிறது போய் புரட்டி பாருங்கள் அது என்ன பாவம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு பெண்ணாக நான் அதை இங்கே சொன்னால் நன்றாக இருக்காது . அப்படி பட்ட பாவத்திற்கே மதுரைக்கு வந்து மாபாதகன் மனம் வருந்தியவுடன் மன்னித்து அவனுக்கு முக்தி கொடுத்து விட்டதாக முடிகிறது. அதை விடவா ஒரு மனிதன் உச்ச கட்ட பாவத்தை செய்து விட போகிறான். பாவ மன்னிப்பு என்பது தவறு செய்த மனிதன் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக மீண்டும் கொடுக்க படும் ஒரு வாய்ப்பு . அதை பயன்படுத்தி ஒருவன் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறான் என்றால் அந்த பாவத்திற்கு சம்பளமாக அவன் மரணத்தை பெறுவான். அதனால் அவன் செய்த பாவத்தை உணர்ந்து வரும்பொழுது பாவம் மன்னிப்பு தருவதில் எந்த தப்பும் இல்லை. அதில் என்ன குற்றம் கண்டீர்கள். மேலும் கண்களால் பாவம் செய்வதை விட அந்த பிடுங்கி எரிந்து விடு என்று சொல்வதின் நோக்கம் பாவம் செய்யும் முன்பே மனிதனுக்கு அவர் கொடுக்கும் எச்சரிக்கை.. பாவம் செய்து விட்டு மனிப்பு கேட்பதை விட பாவம் செய்யாது இரு என்பதை தான் அவர் கூறினார்.

    //பாவம் செய்யாதே என்பதே இயெசுவின் கோட்பாடு, உங்களின் இந்த பாவம் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டுக்கலாம் கோட்பாட்டால் சமுத்திரத்தையும் , பூமியையும் சுற்றித் திரிந்து இரட்டிப்பு பாவி ஆக்க முயல வேண்டுமா?//

    அது சரி, இதை எங்களுக்கு சொல்வதற்கு முன்னால் முதலில் உங்கள் திருப்பதி திருவண்ணாமலை, காசி , ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு போய் பார்த்து விட்டு வருவது நல்லது . அங்கு வருபவர்கள் எல்லாம் என்ன உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உத்தமர்களா வருகிறார்கள் .அவர் அவர் செய்த பாவத்தை தொலைக்க. தான் செய்த பாவத்தை கழுவி விட்டு போக தான் வருகிறார்கள். போய் பாருங்கள் முறை தவறிய வாழ்வு வாழ்பவர்கள், வியாபாரத்தில் முறைகேடு செய்யும் முதலாளிகள்,அரசியல் பிழைத்தோர்கள், கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்போர்கள் போன்றவர்கள் தான் வருகிறார்கள் அது மட்டும் இல்லாது தாங்கள் முறைகேடாக சம்பாதித்து வைத்த பணத்தை உண்டியலில் போட்டு நிரப்பி செல்கிறார்கள் இதில் கடவுளுக்கு லஞ்சம் வேறு.. சாமானியர்களை விட இவர்கள் கூட்டம் தான் அதிகம் .. மீண்டும் அடுத்தநாள் முதல் தங்கள் பாவ கணக்கை தொடங்குகிறார்கள்..சத்தியமாக இதை நான் சொல்லவில்லை என் இந்து நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இது. காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உங்கள் பாவங்களை கழுவி கழுவி நீங்கள் தான் அந்த சமுதிரத்தையும் கங்கை ஆற்றையும் பாவம் ஆக்கி விட்டீர்கள்.. கிறித்துவ நாடுகளில் ஓடும் நதிகள் எல்லாம் தூய்மையுடன் தான் இருக்கிறது . அங்கு யாரும் போய் பாவத்தை தொலைப்பது இல்லை.

    //அப்படியானால் நீங்கள் கிறிச்தவ மத பிரச்சாரம் செய்ய வேண்டிய இடம் எது? ஆனால் நீங்கள் இங்கே வந்து அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது ஏன்?//
    சகோதரரே நான் இங்கே எந்த மத பிரச்சாரமும் செய்ய வரவில்லை நீங்கள் கிறிஸ்தவ மிஷினரிகளையும். பாதிரியார்கள் மற்றும் பிரச்சாரகர்கள் செய்யும் அட்டகாசத்தையும் தாக்கி பேசி இருந்தால் பரவாயில்லை அவர்கள் பெரும்பாலோர் தவறுசெய்கிறார்கள் என்று எனக்கே தெரியும். அனால் இயேசுவின் சிலுவை சுமக்கும் படத்தை அவரின் தியாகத்தை இவர்கள் மீது உள்ள கோபத்தால் தரைக்குறைவாக இழிவு படுத்தி பேசியது தான் எனக்கு வருத்தத்தை வரவழைத்து . அதற்க்கு தான் அது அபசகுன ஓவியம் இல்லை என்று பேசவந்தேன். வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை.

    //இப்போது இயேசு உங்களிடம் வந்து என்ன செய்கிராய் என்றால் என்ன சொல்வீர்கள் . கர்த்தாவே , அமேரிக்கரையும் , ஐரொப்பியரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி வரை இணை பிரியாமல் வாழும் படி செய்வது எங்களால் கூடவில்லையே. அதனால் இங்கே இந்து மதத்தால் உருவான கலாச்சாரத்தால் பிரியாமல் வாழும் இந்த இந்துக்களை….. மதம் மாற்றி அவர்களை பாவிகள் ஆக்கினால் பாவ இராஜ்ஜியம் இங்கேயும் இருக்குமே என்பீர்களா? அப்பாவிகளை ஏன் பாவிகள் ஆக்குகிறாய் என இயேசு கிறிஸ்து சினந்தால் என்ன செய்வீர்கள்?//

    அன்பு சகோதரரே நிச்சயம் நான் அப்படி கேட்க மாட்டேன்….
    என் ஆண்டவரே அமெரிக்க ஐரோப்பா போன்ற நாடுகளை போல் என் நாடு (சத்தியமாக இந்தியா தான்) ஏற்றம் பெறாமல் இருக்கிறதே. இப்படி எந்த நாட்டிலும் இல்லாத ஊழல் இந்த நாட்டில் மட்டும் ஏன் இருக்கிறது. சரி அரசியவாதிகள் தான் ஊழல் செய்கிறார்கள் என்றால் இந்த மக்களுக்கு அதை பற்றி கவலை இல்லையே.. ஆண்டவரே ..என் மக்கள் மிக நல்லவர்கள் சாதுக்கள் அவர்கள் பாவம் விதியை நொந்து கொண்டு சும்மா இருப்பவர்கள். இது கலியுகம் அப்படி தான் மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்லி விட்டு ..பரந்தாமன் பத்தாவது அவதாரம் எடுத்து வந்து இவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவான் என்று பெருமூச்சு விட்டு வானத்தை பார்க்கும் இந்த மக்களுக்கு ஆண்மையை கொடுத்து புரட்சி மனோபாவத்தை கொடு. தவறு செய்யும் அரசியல்வாதிகளை தட்டி கேட்கும் வீரத்தை கொடு..கேட்டால் தான் கிடைக்கும் அரசாங்கத்தின் கதவுகளை தட்டினால் தான் கிடைக்கும் என்று இவர்களுக்கு உணர்த்து.அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை கொடு. பிரெஞ்சு புரட்சி ரஷ்சிய புரட்சி போன்ற புரட்சி ஏற்படுத்தி ஊழல் பெருசாளிகளிடம் இருந்து இந்த நாட்டை காக்கும் வல்லமையை கொடு. மேலும் நான் நேசிக்கும் என் தாய் தமிழை அதன் தமிழ் பகைவர்களிடம் இருந்து காப்பாற்று என் அன்னை தமிழில் கிரந்த லிபி என்னும் விஷம் ஏறாமல் அது பன்னாட்டு ஒருங்குறியம் ( International unicode) செல்ல வேண்டும். தமிழ் மொழி சர்வதேச அளவில் ஏற்றம் பெற வேண்டும் சீன,பிரெஞ்சு. ஆங்கில எபிரேய மொழி போல சர்வதேச அளவில் பிரபலம் அடைய வேண்டும். உலகில் எதாவது ஒரு முலையில் நாதி இல்லாமல் அலையும் என் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்திற்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடு அவர்களுக்கு என்று ஒரு தனி அரசு வேண்டும் இறைவா.. என்பதாக தான் இருக்கும் என் பிரார்த்தனை ………… கவலை வேண்டாம்… திருச்சிஅண்ணா … மலை கோட்டை உச்சி பிள்ளையாரை கேட்டதாக சொல்லவும்.. நன்றி ஆமென் …

    அன்பு சகோதரர் பாஸ்கர் அவர்களுக்கு …
    உங்கள் ஆரிய திராவிட சந்தேகங்களுக்கு என்னால் இங்கு மணிகணக்கில் தட்டச்சு செய்து விளக்கம் அளித்து கொண்டு இருக்க முடியாது … வேண்டுமானால் மறைமலை அடிகள் . பேராசிரியர் அப்பாதுரை மற்றும் தேவ நேய பாவணரின் நூல்களில் கண்டுகொள்க. உங்களுக்கு தேவையான சந்தேக நிவர்த்தி கிடைக்கலாம்.. இல்லை நீங்கள் சொல்வது போல் வெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நினைத்தால் இதோ https://tamilelibrary.org/teli/tlingust.html பார்த்து கொள்ளுங்கள்… நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.. நீங்கள் நினைப்பது போல் அந்த தியரி ( ஆரிய – திராவிட) இன்னும் இருக்கிறது பொய் ஆகி போய் விட வில்லை.. காலத்திற்கு ஏற்றார் போல் அது வேலை செய்யும் .. நன்றி ஆமென் …

    //பிணத்தை வணங்கி, அப்பிணத்தின் மாம்சமாக கருதி அப்பமும் அதன் ரத்தமாக கருதி வைன்னும் குடிப்பவர்களுக்கு.
    எப்படிங்க நல்ல சிந்தனைகள் வரும்? நாமும் ஏன் சார் அவர்களை பின்பற்ற வேண்டும். நம்ம பிள்ளையாரும் பெருமாளும் இருக்கும்போது நமக்கெதுக்கு சார் பிணவழிபாடு//

    அன்பு சகோதரர் திராவிடன் அவர்களே ….
    இதற்க்கு என்னால் தக்க பதில் தர முடியும் … அனால் நான் உங்கள் மதத்தை திட்டி தவறாக பேசி கிறிஸ்துவத்திற்கு வக்காலத்து வாங்க விரும்பவில்லை.. ஏன்என்றால் அதை இயேசு கிறிஸ்து விரும்பவும் மாட்டார். புராண இதிகாசம்களை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் வேதம் உபநிஷதம் போன்ற அறிவு களஞ்சியங்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருக்கின்றன. அதன் நுட்பத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் கிறிஸ்துவ மத பிரச்சாரகர்களுக்கு இல்லை.. அதனால் அவர்கள் இந்து மதத்தை குறை சொல்லி கொண்டு தான் வயிறு வளர்ப்பார்கள் .நீங்களும் அவர்களை போல் செய்து உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்டி கொள்ள வேண்டாம்.. நான் கிணற்று தவளை இல்லை … அடிப்படையில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் மாற்று மத நூல்களை படிக்கும் பக்குவம் எனக்கும் உண்டு.. … என்னை மதித்து என் கருத்துகளுக்கு மறுமொழி போட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.. என் கருத்துகளை எந்த தணிகையும் செய்யாமல் வெளியிட்ட தமிழ்ஹிந்து தளத்திற்கும் நன்றி…. ஆமென்

  62. ஈழத்தில் சொந்தங்கள் அழிக்கப்பட்டதன் காரணம் பல இருந்தாலும் நான் முக்கியமாக கருதுவது இந்து மத வெறுப்பை பிரதானம் செய்த இயக்கங்கள்தான். பாதிரியார்களே இந்த இயக்கங்களை வழி நடத்தினார்கள். -செல்வராஜ்

    நல்ல நிலையில் வாழ்ந்த இலங்கை தமிழர்கள்- இந்துக்களை பல அழிவுகளுக்குள்ளாக்கி இன்று பரதேசிகள் ஆக்கியவர்களும் இவர்களே. புலிகள் இயக்கம் சில வசதிகளுக்காக உலக தமிழ் பேரவை (Global Tamil Forum)என்ற பெயரிலும் இயங்குகிறது. அதன் தலைவர் இம்மானுவேல் அடிகளார் என்ற பாதிரியார்.தமிழர்களுக்கு இனவாதத்தை ஏற்றிவிட்டு அவர்களை தங்கள் கிறிஸ்தவ மதத்தின் பக்கம் கவருவதற்காக பிரபாகரனை யேசுநாதருடன் ஒப்பிடலாம் என்றும் கூறியவர் இந்த பாதிரியார். தன்னை எதிர்த்த தமிழ் கல்விமான்கள், தலைவர்கள், மாணவர்கள், தொளிலாளிகள் என்று கொன்று குவித்த பிரபாகரனோடு யேசுநாதரை ஒப்பிடுவது சரியானதா என்பதை கிறிஸ்தவர்கள் தான் சொல்ல வேண்டும்

  63. வணக்கம்

    சரியாக சொன்னீர்கள் சிறி லங்கா இந்து,

    இது எதோ இலங்கையில் மட்டும் நடந்தது அல்ல இங்கே பரத தேசத்திலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடக்கும் ஒரு நிகழ்வு,

    எழுந்துவா தன மான மிகு தமிழா என்று சொன்னால் போதும் நமது தமிழர்கள் உடனே உணர்ச்சி பொங்க எழுந்து விடுவார்கள், அதனால் இப்போது கிறிஸ்துவ பாதிரிகள் தனது கவனத்தை பெரும்பாலும் தமிழ்சங்கம் தமிழ் மரபு திராவிடம் என்று கிளம்பி உள்ளார்கள்,

    எப்படி பலவீனம் பார்த்து அடிப்பது என்று அவர்கள் நன்றாக கற்று அறிந்த குள்ள நரிகள். அவர்களுக்கு மற்றும் அரசியல் திராவிடர்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம் தமிழ், தமிழன் என்று சொல்லி விட்டால் போதும் இவர்களின் முதுகிலே ஏறி எவ்வளவு வேண்டுமானாலும் சவாரி செய்யலாம் என்று,

    தமிழ் என்பது எமது மூச்சாக இருக்கட்டும், ஆனால் அதற்காக நன்றாக தமிழ் பேசுகிறான், நொடிக்கு நூறு முறை தமிழ் பற்றி பேசுகிறான், என்பதற்காக அவனை தலைவன் ஆக்கிக் கொண்டு மனிதனுக்கே உரிய தன மானத்தை இழக்க எவன் மறுக்கிறானோ அப்போதுதான் தமிழன் தப்பிக்க முடியும், தமிழனாக இருப்பதை விட மனிதனாக இருப்பது முக்கியமான விஷயம் இல்லையா?

    தமிழ் காப்பானாகவே இப்போதும் ஒரு பாதிரி இங்கே வலம்வந்து கொண்டு இருக்கிறார், அவரும் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டவர்தானே.

    தமிழனை தனி இனமாகவே கருதும்படி மக்களை மூளை சலவை செய்வது பாரத நாட்டிலே உள்நாட்டுக் குழப்பம் விளைவிக்கவே என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும், அரசியல் வாதிகளை கைப்பாவையாக்கி இதனை சாதிக்கிறார்கள், இதற்க்கு திரைப் பட சில்வண்டுகள் வேறு ஒத்து ஊதுவது இன்னமும் மோசமான விஷயம்.

  64. Kindly notedown the below dangerous point…
    “நிச்சயம் ஆண்டவர் யூதர்களுக்கு மட்டும் தெய்வம் இல்லை. திராவிடர் எனப்படும் தமிழர்களுக்கும் அவர் தெய்வம் தான். விரைவில் அதை கண்கூடாக பார்ப்பீர்கள். எப்படி இஸ்ரேல் மக்களுக்கு அவர்களின் எதிரிகளை ஒழித்து அவர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடுத்தாரோ அதே போல் தமிழர்களுக்கும் ஆர்ய, பவுத்த வெறிபிடித்தவர்களிடம் இருந்து தமிழர்களை காத்து அவர்களுக்கு ஒரு வளமான சுதந்திர பிரதேசத்தை கர்த்தர் ஏற்படுத்தி கொடுப்பார்.”

    Now we came to know the christian missionary plan on deviding our country. I think all christians know about this plan but as usual we Hindus are innocent on this. The Politicians might be knowing about this, but for the money from church, they are kept quite. We have to awake and destroy these anti-nationals.

    Mariyam tells don’t see the christian fathers/nuns and their immoral sex activities. But you have to see only Jesus. In another reply Mariyam tells to see the christian missionaries who worked for Tamil. I also thought they did good things for the Tamil. But now I understan that they started the Tamil separatism and now it’s grown to such a level to devide our country on the name of Tamil.
    We have to aware of these kind of Muslim & Christian anti-nationals. Also we have to destroy this.

  65. தொப்பூர் தர்கா பற்றி யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். திருநெல்வேலியை சேர்ந்த ஒரு ஜோசியர் ஒரு பரிகாரத்துக்காக சிலரை இந்த தர்கா சென்று வரச் சொல்லுகிறார். தர்காவுகா ? என்று அதிர்பவர்களிடம் ( இந்துக்கள்) அது சித்தர் பூமி, நாகர் பூமி அதனால் புண்ணிய பூமி . தர்கா னு தயங்காதீங்க என்று கூறுகிறார். எங்களுக்கும் அதே மாதிரி சொல்லப்பட்டது. பல தயக்கங்களுக்கு பிறகு சமீபத்தில் சென்று வந்தோம். உள்ளே சில புற்றுக்கள் இருக்கின்றன. உள்ளே பல இந்து மத சம்பிரதாயங்கள் பின்பற்றப் படுகின்றன. புற்றுக்கு முன் தொட்டில் இடுதல், விளக்கேற்றுதல். மேலும் சந்தகூடு ஊர்வலம், மொட்டை அடித்தல் என்று. பாபா என்று அழைக்கப்படும் சமாதியும் அவரின் மருமகளின் சமாதியும் இருக்கிறது. பாபாவின் கை என்று ஒரு குறியீடை செய்து வைத்து அதற்கு விளக்குகள் ஏற்றப்பட்டு வணகப்படுகிறது. ஒரு ஆலும் வேலும் இருக்கும் இடத்தின் மண்ணை (மரத்தை ) சுற்றி வந்து எல்லோரும் மண் எடுத்துச் செல்கின்றனர். அங்கே உள்ள குரு என்று அழைக்கப்படும் பெரியவர் (சமாதியில் இருக்கும் பாபாவின் மகன். இவரின் மனைவி தான் இன்னொரு சமாதியில் இருப்பவர்) ராமாயணம், மகாபாரதம் என்று உதாரணங்கள் சொல்லுகிறார். குல தெய்வ வழிபாட்டை வலயுருத்துகிறார். தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்று அன்ன தானத்துக்கு பணம் தருவது தான் அங்கே பரிகாரம். அதற்கு முன் ஆலும் வேலும் இருக்கும் இடம் முன் சென்று இரு கைகளையும் தரையில் பரப்பச் சொல்லுகிறார்கள். மனதில் நமது வேண்டுதலைச் செய்து கொள்ளச் சொல்லுகிறார்கள். இரு கைகளும் தானாக சேர்ந்தால் (அங்கே சமாதியில் இருக்கும் பாபா அனுமதி கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப் படும்) வந்து அன்ன தானத்துக்கு பணம் செலுத்தச் சொல்லுகிறார்கள்.

    இந்த இடத்தை பற்றி மேற்கொண்டு வேறு விவரங்கள் தெரியவில்லை புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இஸ்லாமிய சம்பிரதாயமும் இந்து சம்பிரதாயமும் கலந்து இருக்கிறது இங்கே.

  66. christians are considered by themselves as ” sinners ” becouse they think that jesus condoned to crusification for the sake of ” sins” of people. so in churches the priests call the devotees as ” sinners ” or ” pavigale’ . In hinduism , all human beings are ” punniyavangal ” the one who are fortunate to be born as ” human beings”.

    church has ” cross” in which jesus is crusified and made him die. so ‘cross’ is the symbol of
    sorrow, sadness, cruel, pitifull, in which jesus is bleeding in unfortunate postures. His blood is spilled in the ” cross ‘ which is also used in the TOMBs of burial of deads in the christians cemetries. so ‘cross’ is the symbol of dead and death.

    DEAD bodies are brought to churches for prayers before jesus. so church becomes the halting place for the bead bodies before being taken to cemetries. church authorities are very cunning to avoid dead bodies coming on sundays in order to avoid escape from the sight of new converters, foolish hindus heading for this false religion.so churches insist that dead bodies to be brought only during noon time avoiding morning and evening timings to avoid fear to the devotees attending mass prayers..

    so hindus who are in the habit of taking bath after visiting burial ground, should never think of going to church becouse every day some dead bodies are also coming with ”sinners’ in the church. hinduism is for the purity, hygenic and sativik guna of happiness in joyfull mood since our god is for blessing the children ( sons and daughters ) while christians consider that only ”jesus ” alone is the ” son of god’ or the ”messenger of god” or ”i am the man sent by god’ as read in BIBLE. so let all hindus to be vigilent, knowledgeble about our religion and educate the ignorant hindus.

    Our religion is ” sanatana dharma ” is ‘god given teaching” the beginning is unknown, age is unknown, who started is unknown but came in to existence from millions of years in our land of birth which was followed by our forefathers ,while other religions are ” man made religions” and started just before 2000 years ago in another desert region which had seen all terrors, killings and violences that came in to being in our land just before 1000 years ago.

    Even monkeys or cows or birds will stay and take food only in the temples and can not be seen in churches or mosques and do not beg for food in these sinners assembling places.
    so hindus must realise the truth and go and pray hindu gods. christianity is fabricated, falsely planted and edited by st paul with the theory of sadness and sorrow. they talk of ” father god, son of god , holy angel and satan. Right now chiristianity has shown the pictures of ” son of god as jesus ( for us all are sons and daughters ) and satan. NONE HAS ANY IDEA ABOUT THE IMAGE OF FATHER GOD . But for ‘SATAN’ they showed the black figure like beast with two horns .. This alone shows that there is no god in this religion but a satan, who was lucifier thrown out of garden of eden by so called father god ( christians have no idea as to how this god will be ). Hinduism has god – lord vishnu or his consort have beautiful and Lord krishna, lord rama, or anyone, the image and the visualised figure is in the form of idol. Christianity has only ” Satan ” as figure rightnow leaving the ”father god’ in dark.

    i consider in the kali yuga, falsehood has more attractions. people believe shadows are real. so in the astrology, out of nine plants, the shadow grahas called as ” Raghu and ” ketu” which are non existence in the reality but an imaginary grahas ( as nodes or as intersecting points’ in the path of moon -sun axis, the two iluminaries ). these grahas are more powerful due to its showing the shadows ( dark) to the reality. These grahas represent these falsehood religions as ”Rahu is called as north node – representing western religions like christianity, islam while ” ketu” represent eastern religions like Bhuddism, jainism and other faiths ect.

    Those who stick to our hinduism will never be in trouble and will not be in the grip of falsehood
    in the world and will have a happy life in joyful mood if they continue to pray our gods only.

  67. அன்புள்ள பாஸ்கர் அவர்களுக்கு …..

    //ஆனால் நாகரிக உடையணிந்த கிறிஸ்துவ வெள்ளையர்கள் உடையணிந்த விலங்குகள், எவன் ஒரு பொண்டாட்டி, அல்லது எந்த பெண் ஒரு கணவனோடு வாழ்கிறாள்? கணவனின் மீதான வெறுப்பும் விவாகரத்தும் கொண்டு வந்து கலாசாரத்தை கெடுத்தது வெள்ளைக்காரன். அவன் என்ன சனாதன தர்மம் கொண்டாடுபவனா?//

    தாய் மத பற்றாளரே தயவு செய்து கொஞ்சம் பண்பாக பேச கற்று கொள்ளுங்கள் அவசர பட்டு வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம்… இந்த விவாகரத்து,முறைதவறிய வாழ்வு ஆகியவைகளை பற்றி ஏற்கனவே பல முறை எழுதி விட்டேன் . ஆண்டவர் தன் நற்செய்தியில் எங்கும் கேட்பாரற்ற மனம் போன படி வாழ்வு வாழும் படிக்கு கூறவில்லை….. உன் கணவனுக்கு தெரியாமல் துரோகம் செய் என்றோ உன் மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்களோடு தொடர்பை ஏற்படுத்தி கொள் என்று பைபிளில் எங்கே சொல்லப்பட்டு இருக்கிறது… மேல் நாட்டில் அவர்கள் அப்படி வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அந்த நாட்டில் பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை பெற்று விட்டார்கள்.. மேலும் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் அவர்களுக்கு எப்போதோ ஏற்பட்டு விட்டது. அதனால் அவர்கள் யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியத்திற்கு ஆட்பட வில்லை.. தங்களுக்கு தேவையான பிடித்தமான வாழ்கையை அவர்கள் தேர்ந்து எடுத்து கொள்கிறார்கள்..இங்கே இந்தியாவில் இருக்கும் பெண்கள் உங்கள் ஆணாதிக்க சிறையில் இருந்து இப்போது தான் சுகந்திர காற்றையே சுவாசிக்க தொடங்கி இருகிறார்கள்..இந்த நாட்டு பெண்களுக்கு கால காலத்திற்கும் மறுக்க பட்டு வந்த கல்வி ஆங்கிலேயர்கள் காலத்தில் கிறஸ்தவ மிஷனரிகளின் முயற்சியால் ஏற்பட்ட மிக பெரிய மாற்றத்தினால் பெண்களுக்கு கல்வி உரிமை தர பட்டு விட்டது.. இன்று அவர்கள் எல்லா துறையிலும் முன்னேறி விட்டார்கள். பொருளாதார சுதந்திரம் என்பது இப்போது தான் இந்த நாட்டு பெண்களுக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நாட்டிற்க்கு சுகந்திரம் கிடைப்பதற்கு முன் பெண்கள் நிலை எவ்வளவு கேவலமாக இருந்தது என்பதை நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மகாகவி பாரதியின் புதுமைபெண்,பெண்விடுதலை என்ற தலைப்பில் உள்ள கவிதைகளை படித்து பாருங்கள் தெரியும்… அது சரி அடுப்பூதும் பெண்களுக்கு படிபெதற்கு என்று அவர்களை வீட்டு தவளைகள் ஆக்கியவர்கள் நீங்கள். பெண்களை அடிமை படுத்தும் கோட்பாடுடைய மதம் இந்து மதம். உடனே எங்கள் வேத காலத்தில் கார்கி மைத்ரேயி என்று இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று அந்த இரண்டு பெண்களின் பழம்கதையை மீண்டும் தொடங்கவேண்டாம் … ஆதாரம் வேண்டுமானால் போய் இந்துமதத்தின் ஆதார ஸ்ருதியான மனுதர்மத்தின் ஒன்பதாவது அத்யாயத்தை புரட்டி பாருங்கள் தெரியும்.. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆள வருவதற்கு முன்பு வரை மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டு பெண்களின் உரிமைகளை அவளின் சுதந்திரத்தை எந்த அளவு நீங்கள் பறித்தீர்கள் என்பது தெரியும் … நிச்சயம் அவர்கள் சனாதன தர்மம் என்கிற எண்ணத்தில் ஒன்று பட்டு இருந்தார்கள் என்று பகல் கனவு காணாதீர்கள். அன்றைய கால கட்டத்தில் வேறு வழி இல்லாமல் கணவன் எது செய்தாலும் சகித்து கொண்டு ஒரு அடிமையை போல இருந்தார்கள். அதற்க்கு பெயர் சானதன வாழ்வு கிடையாது .. அடிமை வாழ்வு மதத்தின் பெயரால் ஒழுக்கம் ,கற்பு என்று அவர்களை இனியும் நீங்கள் பயமுறுத்தி கட்டி போட முடியாது.. முன்போல் ஆண்கள் செய்யும் கொடுமையை பொறுத்து கொண்டு வாழும் பெண்கள் இப்போது கிடையாது சந்தேகம் இருந்தால் இந்தியாவில் உள்ள குடும்ப நல நீதி மன்றங்களை போய் பார்த்து வாருங்கள்.. பதிவிரதையாக இருப்பதில் தப்பு இல்லை … அனால் அது கணவன் மேல் கொண்ட பேரன்பால் ஏற்பட வேண்டும். பலாத்காரத்தினால் அல்ல… நான் சொன்ன கருத்தை இந்திய திரு நாட்டில் இருக்கும் எந்த பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள் என் பேச்சில் இருக்கும் உண்மை தெரியும் . இதை நான் சொன்னால் உங்களுக்கு கோபம் தான் வரும் ஏன்என்றால் என் பெயரில் புதைந்து இருக்கும் மதம்… ஆகவே இதை பற்றி நம் தேசிய கவி பாரதியாரின் வார்த்தைகளால் தெரிந்து கொள்ளுங்கள்

    “ஸ்திரிகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால். புருஷர் ஸ்த்ரிகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும் .பக்தியே பக்தியை விளைவிக்கும் நம்மை போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலேயே அடிமைப்பட்டு இருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனை தவிர வேறில்லை.அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமை போல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்து கொண்டு தான் இருக்கும்
    அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது'”
    ( பாரதியார் கட்டுரைகள் மாதர் என்ற தலைப்பில் பூம்புகார் பதிப்பகம் பக்கம் பக்க எண் 166 )

    என்ன சகோதரர் பாஸ்கர் அவர்களே போதுமா …. ஆகையால் தயவு செய்து கிறிஸ்துவ மதம் வந்ததால் தான் கணவன் மனைவிக்கு உள்ள உறவின் புனிதம் கெட்டு விட்டதாக தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் கீழ்படியாமையினால் தான் மனிதன் பாவம் அனுபவித்து வருகிறான் என்பது கிறிஸ்துவத்தின் கோட்பாடு .. கிறிஸ்துவம் கணவனுக்கு மனைவி கீழ படிய கூடாது என்று எங்கும் சொல்லவில்லை .. திருமணதிற்கு பிறகு இருவர் ஒன்றாவர் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது..

    //தமிழ் என்பது எமது மூச்சாக இருக்கட்டும், ஆனால் அதற்காக நன்றாக தமிழ் பேசுகிறான், நொடிக்கு நூறு முறை தமிழ் பற்றி பேசுகிறான், என்பதற்காக அவனை தலைவன் ஆக்கிக் கொண்டு மனிதனுக்கே உரிய தன மானத்தை இழக்க எவன் மறுக்கிறானோ அப்போதுதான் தமிழன் தப்பிக்க முடியும், தமிழனாக இருப்பதை விட மனிதனாக இருப்பது முக்கியமான விஷயம் இல்லையா?//

    //யார் இந்த கால்டுவெல், அவர் ஒரு மெஷினரி ஆசாமி, தமிழ் மீதுள்ள அக்கறையால் ஒன்றும் அவர் மெனக்கெடவில்லை, அப்படி பாட புத்தகம் மட்டும்தான் சொல்கிறது. தமிழர்களின் வரலாறு முழுக்க தெரிய தமிழ் தெரிந்தால்தான் அதை தனக்கு சாதகமாக மாற்றி எழுத முடியும் என்பதற்காகவும் மதம் மாற்றி வேலைகள் செய்ய தமிழ் உதவும் என்பதற்காகவும் மட்டும்தான் அவர் தமிழ் மீது கவனம் செலுத்தினார். அதே கதை தான் வீரமா முனிவர் என்று அழைக்க படும் ஜோசெப் பெஸ்கியும் முனிவர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாத எந்த தமிழ் தெரியாத தற்குறியோ அவருக்கு அந்த பெயரை வைத்து உள்ளது//

    சகோதரர் பாஸ்கர் அவர்களே …….
    உங்களின் இந்த அறியாமைக்கு யாரும் பொறுப்பல்ல … உங்களின் ஆரிய மாயை தான் பொறுப்பு கால்டுவெல் மிஷினரியாக கிறித்துவ மத பிரச்சாரம் பண்ண தான் இங்கு வந்தார் .. அவர் அதற்காக தமிழ் கற்று கொள்ளும் பொழுதே தமிழின் இனிமையை நுகர்ந்து அந்த மொழியின் பால் ஏற்பட்ட அன்பினால் தான் தமிழ் மொழியின் தொன்மையை ஆய்வு செய்ய முற்பட்டார் யாரையும் முட்டாள் ஆக்க வேண்டும் என்பதற்காக ஆர்யா திராவிட கருத்தை ஏற்படுத்த வில்லை…. இன்னும் சொல்ல போனால் தங்கள் வரலாறு தெரியாமல் தூங்கி கொண்டு இருந்த தமிழர்களை எழுப்பியவர்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் தான் எல்லோரும் அறிவு இல்லாமல் ஆராய்ச்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் நம்பி ஏமாறும் மூடர்கள் நீங்கள் அனைவரும் தான் அறிவாளிகள் என்பது போல நினைத்துகொள்ள வேண்டாம் .கண்ணை மூடி கொண்டு சூர்யன் அஸ்தமித்து விட்டதா நினைபோது போல் இருக்கிறது உங்கள் விதண்டா வாதம். நிச்சயம் தமிழ் இனம் ஒரு தனி தன்மை வாய்ந்த ஒரு தனி இனம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் அதை நீங்கள் அனுபவபூர்வமாக காண்பீர்கள். அவர் வெளியிட்ட ஆய்வுகளின் சாராம்சம் இது தான் ..

    ” பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வுளவுக்கு எவ்வளவு வடமொழி சொற்களை பயின்று வருகின்றனவோ அவ்வுளவுக்கு அவ்வளவு அந் நூல்கள் அவ்வம் மொழியினரால் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வுளவுக்கு எவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்புடன் போற்ற படும் “.
    -கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

    தமிழின் தனித்தன்மையை தமிழின் தொன்மையை விளங்க செய்தவர் அவர் தான் .நாலடியார், திருக்குறள், திருவாசகம். ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவற்றை உலகிற்கு அறிமுக படுத்தியவர் அவரே. தன் கல்லறையின் மீது தான் ஒரு தமிழ் மாணவர் என்று பொரிக்க படவேண்டும் என்று விழைந்தவர் அவரே .. நிச்சயம் யாரையும் ஏமாற்றுவதற்கு அல்ல..

    நானே சில நேரங்களில் கால்டுவெல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசகத்தை பியானோ வாசித்து மெய் மறந்து பாடும் போது கர்த்தரை நேரில் கண்ட ஆனந்தத்தை போலவே உணருகிறேன். ஆகயால் கால்டுவெல் செய்த பணிகளை குறை சொல்லவேண்டாம் ..

    மீண்டும் சொல்கிறேன் கர்த்தரின் அருளால் தமிழர்களுக்கு கண்டிப்பாக தனி அரசு செலுத்தும் நாடு கிடைக்கும் ( தமிழ்நாடு என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ). உலகின் முதன்மை இனமாக தமிழ் இனம் அப்போது மலரும் … அனைவருக்கும் நன்றி …. என்னுடைய நிறைவான வணக்கங்கள் …..

  68. தோழி மரியம் முதலான கிறித்தவர்களுக்கும், பொதுவாக எல்லா இந்து நண்பர்களுக்கும்…

    ஒரு மோசடியான கும்பலின் வாதத்தை உண்மை என்று நம்பி இங்கு பதிவு செய்திருக்கிறார் மரியம்:

    // வேண்டுமானால் மறைமலை அடிகள் . பேராசிரியர் அப்பாதுரை மற்றும் தேவ நேய பாவணரின் நூல்களில் கண்டுகொள்க. //

    நுனிப்புல் ஆராய்ச்சியாளர்களைப் படித்து மயங்கி ஏமாற வேண்டாம். குறிப்பிட்டிருப்பவர் அனைவரும் பரம பிராடு. மஞ்சக் காமாலை கண்ணுடன் ஆராய்ச்சி செய்து உண்மையை மறைக்கும் இன வெறியர்கள். பெரும்புலவரும் பெரும் சான்றோரும் ஆகிய பரிமேலழகரையே பழித்திருக்கிறார் தேவநேயப் பாவாணர், இதோ:

    குறள் மூலம்:

    (560)
    ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
    காவலன் காவா னெனின்.

    பரிமேலழகரின் பண்டைய உரை:

    காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)

    தேவநேயப் பாவாணரின் மஞ்சக் காமாலை வாசிப்பு:

    “…
    பரிமேலழகர் அறுதொழிலோரைப் பிராமணராகக் கொண்டு, அவ்வழுவை இருமடியாக்க அவரை அந்தணர் என்னுஞ் சொல்லாற் குறித்து, “அறுதொழிலாவன; ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,ஏற்றலென விவை.பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும் ,அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயலொல்லா தென்பதாயிற்று.” என்று தம் ஆரியநஞ்சை வெளிப்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் தமிழறத்தையே இங்கு எடுத்துக் கூறுதலானும் ஆரிய முறையைக் கண்டித்தலானும், பிராமணர் வேதமோதுதலையும் வேள்விவளர்த்தலையும் பருவ மழைக்குக் கரணியமாகக் கூறினாரென்பது பச்சைச் பொய்யாம்.

    செங்கோலாட்சியே பருவமழைக்குக் கரணியமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கவும் ,அதை மறுத்து ஆரிய வேதவேள்வியே அதற்குக் கரணியமென்று பரிமேலழகர் உரைக்க இடந்தந்தது தமிழர் அடிமைத்தனமேயன்றி வேறன்று.பிராமணரை அறுதொழிலோர் என்பது ஆரிய ஏற்பாடேயன்றித் தமிழர் கொள்கையன்று.பரிமேலழகர் கருத்தே வள்ளுவரதாயின்,
    …”

    இந்த ஒரு உதாரணம் போதும், இந்த ‘தமிழறிஞர்கள்’ நோக்கம் என்ன என்பதை புரிந்துக் கொள்ள.

    என் தொடரில் சங்க நூல்களின் குறிப்புகளில் காணப்படும் பழந்தமிழர் மதம் முழுக்க முழுக்க சமஸ்கிருத வேத, உபநிடத, இதிகாச புராணங்களோடு ஒத்துப் போகிறதென சான்றுகளைக் காட்டி வருகிறேன்.

    நாட்டைப் பிரிக்க நினைக்கும் செயின்ட் தாமஸ் கட்சியும் மற்ற மதமாற்ற சூழ்ச்சிக் கட்சியும் இந்த உண்மைகள் பாமர ஹிந்துக்கள் மத்தியில் மேன்மேலும் வெளிவருவதால் ஆரிய-திராவிட இனவாதத்தின் பொய்ம்மை உடைத்து எறியப்படும்.

  69. ////////////அன்பு சகோதரர் திராவிடன் அவர்களே ….
    இதற்க்கு என்னால் தக்க பதில் தர முடியும் … அனால் நான் உங்கள் மதத்தை திட்டி தவறாக பேசி கிறிஸ்துவத்திற்கு வக்காலத்து வாங்க விரும்பவில்லை.. ஏன்என்றால் அதை இயேசு கிறிஸ்து விரும்பவும் மாட்டார். புராண இதிகாசம்களை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் வேதம் உபநிஷதம் போன்ற அறிவு களஞ்சியங்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருக்கின்றன. அதன் நுட்பத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் கிறிஸ்துவ மத பிரச்சாரகர்களுக்கு இல்லை.. அதனால் அவர்கள் இந்து மதத்தை குறை சொல்லி கொண்டு தான் வயிறு வளர்ப்பார்கள் .நீங்களும் அவர்களை போல் செய்து உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்டி கொள்ள வேண்டாம்.. நான் கிணற்று தவளை இல்லை … அடிப்படையில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் மாற்று மத நூல்களை படிக்கும் பக்குவம் எனக்கும் உண்டு///////////////////

    anbu sakothari,

    ஏன் உண்மையான பதில் இருந்தால் தாருங்களேன், எனக்கு தெரியாத விசயத்தை தெரிந்து கொள்வேன். மேலும் நான் திட்டியும் தவறாக பேசியும் எழுத வில்லை உண்மையைத்தான் எழுதினேன். அது இயேசு இறந்த சிலுவையில் இருக்கும் கோலம்தானே? இல்லை என்றால் இல்லையென்று சொல்லுங்கள். மேலும் இறந்த உடல் பிணம் தான் என்னை பொறுத்தவரை. நீங்கள் அப்பத்தையும் வைன்னையும் அருந்துவதும் அதற்கு கொடுக்கும் விளக்கமும் மேலே நான் குறிப்பிட்டதுதானே? மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்.எல்லா கிருத்தவர்களும் நம்பும் கருத்தை தானே குறிப்பிட்டேன்?
    வேறு விளக்கம் இருந்தால் கூறுங்கள். வேறு ஒரு விளக்கமும் அந்த வைன் வைக்கும் குடுவைக்கும் வைன்னுக்கும் நான் கேள்வி பட்டேன் அதை சொன்னால் ??????
    நானும் கிருத்தவத்தை தவறாக பேசி இந்து மதத்துக்கு வக்காலத்து வாங்க வில்லை. நீங்கள் நம்பும் கருத்தை பதிவிட்டதற்கே தவறாக பேசுவதாக கருதுகிறீர்களே? அப்படி என்றால் நீங்கள் நம்பும் கருத்துகளே தவறு என்பது உங்களாலேயே ஒப்பு கொள்ளப்பட்டுவிட்டது.நன்றி சகோதரி
    மேலும் சகோதரி எனக்கு மட்டும் அல்ல எந்த ஒரு இந்துவுக்குமே கிறித்தவத்தை குறை சொல்லி வயிறு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து பிழைப்பு தொழிலாக செய்யும் கிறித்தவ மதமாற்றிகளையும் என்னையும் ஒப்பிடாதீர்கள்.
    நீங்களே முந்தைய கருத்துகளில் இந்து (ஆரிய என்று குறிப்பிட்டு) எழுதி இருக்கிறீர்கள். கிணற்று தவளை அல்லாத நீங்கள் எப்படி கால்டுவெல் கூறுவதை மட்டும் அப்படியே ஏற்பிர்கள்?
    கிறித்து தோன்றும் முன்பே ஏன் உங்கள் பைபிள் படி கடவுளானவர் உலகத்தை படைத்த காலத்துக்கு முன்பே நாகரிகத்தோடு வாழ்ந்த தமிழ் குடிக்கு எப்படி கர்த்தர் தெய்வம் ஆவார்?
    ஆரியன் வரும் முன்னே இங்கு கடவுளாக இருந்தவர் என்ன ஜோஹோவாவா?
    இதற்கு முன் என்னவெல்லாம் உளறி விட்டு இப்போது நல்லவர் போல பேசுகிறீர்கள்
    தமிழ் கடவுள் ஏசுவா?
    தமிழ் வருட பிறப்பு கொண்டாடியதுண்டா? தையிலாவது அதற்காக சிறப்பு வழிபாடு செய்ததுண்டா?
    தமிழர் என்ற உணர்வுடன் ஆங்கில வருட பிறப்பு கொண்டாடாமல் புறக்கனித்ததுண்டா?
    உங்கள் kootrupadi இதிகாச புராணத்தை தவிர வேத உபநிஷத் அறிவு களஞ்சியங்கள் இருக்கும் மதத்தை (உங்கள் கருத்துபடி ஆரிய மதம்) ஏன் உங்கள் கடவுளானவர் அழித்து உங்களைத்தாக்க வேண்டும்? ஏன் அறிவு பூர்வமானவற்றை ஒழிப்பதுதான் அவர் செயலா?

  70. //சிலுவையோ அல்ல‌து சிலுவையில் தொங்கும் இயேசு சுரூப‌த்தையோ வ‌ண‌ங்குவ‌து கிடையாது, ஒருவேளை அப்ப‌டி இருக்குமானால் அது த‌வ‌றுதான். ச‌ரி அப்ப‌டி பார்த்தால் காலில் அம்பு எய்து கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ண‌ரையோ அல்ல‌து ஆற்றில் மூழ்கி ம‌ரித்த‌ ராம‌னையோ நீங்க‌ள் ஏன் வ‌ண‌ங்குகிறீர்க‌ள்?//

    என்று ஒருவர் வேறொரு தளத்தில் பதிந்திருக்கிறார்

    எல்லா அவதாரங்களுக்கும் முடிவு உண்டு. ஆனால் முடிவு முக்கியமல்ல. அவர்களது வாழ்க்கையும் உபதேசமும் தான் முக்கியம். ராமரின் முடிவை எந்த இந்துவும் படம் வரைந்து வணங்குவதில்லை.சுற்றமும் சொந்தங்களும் சூழ இருக்கும் ராமர் பட்டாபிஷேகமே வணங்கப்படுகிறது.

    ஆனால் இயேசு கதையிலோ இயேசு கொல்லப்பட்டதே பிரதானம். அவர் கொல்ல அழைத்துச் செல்லப்படுவதே முக்கியமான நிகழ்வு,. அவர் செத்ததே முக்கியமான கொள்கை. அவர் கொல்லப்பட்ட சிலுவையே முக்கிய வழிபாடு பொருள். இதுதான் பிரேத வழிபாடு என்பது.

    கிறிஸ்துவ போதகர்கள் எப்படியே போகட்டும். சாதாரண இந்துக்கள் இந்த அமங்கள விஷயங்களை தூரப்போட்டுவிட்டு, அமங்களமாக நடத்தப்படும் கிறிஸ்துவ பள்ளிகளை புறக்கணித்தாலே போதுமானது.

  71. @sarang,

    /////////Please answer these if you can

    அதான் பாவத்திற்கு பொருப்பேத்தாச்சே இன்னமும் ஏன் எல்லாரையும் பாவிகளே பாவிகலேன்னு ஜல்லியடிக்கிறீங்க?

    இன்னும் பாவிங்க இருக்காங்க அப்படின்னு சொல்றீங்களா

    அது சரி – ஏசுவுக்கு அப்புறம் ஏன் ஒரு கிறிஸ்தவன் கூட இது மாதிரி எல்லோருடைய பாவத்திற்கும் பொறுபேற்று சிலவில் ஏறவில்லை?

    நானும் ஒரு கடதாசி எழுதி வெச்சுட்டு (எல்லோருடைய பாவத்திற்காகவும் நான் தொங்குகிறேன்) fanல தொங்கினா fana கும்பிடுவீன்களா?

    இயேசு உங்களுக்காக நானே சாப்பிடுகிறேன்னு சொல்லிட்டு போயின்ருந்தா இந்த பசிங்கிற எழவே இருந்திருக்காதில்ல, ஏழைங்கெல்லாம் நிம்மதியா இருக்கலாமில்ல?

    எதுக்காக கர்த்தர் உங்களை எல்லாம் பாவத்தோட படைச்சு அப்புறம் பாவத்த துடைக்க ஏசுவ அனுப்பறார்? இது சுத்த பைத்தியகாரத்தனமா இல்ல? இதுக்காக வருத்தப்பட வேண்டியது கர்த்தர் தானே. நீங்க ஏன் வார வாரம் ஒரு நாள் மட்டும் கூவிக்கிட்டு இருக்கீங்க?

    தானே ஒரு உயிரை இன்ஸ்டண்டா உண்டாக்குற கர்த்தர் ஏன் பாவ மில்லாம ஒரு உசுர படைக்க மாட்டேன்கிறார், தெரியலையோ?

    இயேசு வந்துட்டு போன பிற்பாடாவது அந்த அறிவு வந்திருக்கலாமே? ஏசுவே கர்த்தருக்கு இந்த யோசனையை சொல்லலாமே?

    இது சுத்த காங்ரஸ் கவர்மென்டு மாதிரி இல்ல வேலை செய்யுது. மன்மோகன் சிங்கு மாதிரி கர்த்தர் எனக்கு எதுவுமே தெரியாது அப்படிங்கறாரு? இவங்க செஞ்ச பாவத்திற்கு கல்மாடி மாதிரி ஏன் ஏசுவ பலிகடா ஆக்கணும்?

    இயேசு விரும்பி சிலவை ஏற்றார் என்கிறீர்களே அதை ஏன் முப்பது வருஷம் பொறுத்து செஞ்சார். ஏன் ஒரு இருவது இருவத்தஞ்சு வயசிலேயே விரும்பி ஏற்றிருக்கலாமே? அப்பாவும் தானே பாவிகள் இருந்தனர்?

    யூதர்கள் இயேசுவை சிலுவையில் இட்டதால் அவர் மரித்தார், மேட்டர் இவ்வளவு தான்? யூதர்கள் சிலுவையில் இட வில்லை என்றால் அவர் ஏன் மரிக்கப் போகிறார்?

    அதுக்கப்புறம் ஒரு கேள்வி – அதென்ன சிலுவை தேர்ந்தெடுத்து மரிப்பது? வேற ஒரு பொருளே கிடைக்க வில்லையா? மேட்டர் ரொம்ப சிம்பிள்? சிலவில் ஏற்றுவது என்பது ரோம மன்னர்களின் ஒரு வழக்கம்? யேசுவோட இன்னும் கொஞ்ச பேர் சிலவில் எரிநார்களே அவர்களை நீங்கள் ஏன் கும்பிட வில்லை?

    ஏசுவுக்கு முன்னாடி பல பேர் சிலவில் ஏறி இருக்கிறார்கள்? அவர்கள ஏன் விட்டு விட்டீர்கள்?

    இந்த சிலுவை பைத்திய காரத்தை தயவு செஞ்சு நிப்பாட்டுங்க.////////

    சரியான கேள்விகள். ஆனால் பிரெயின் வாஷ் ஆனவுங்களுக்கு சத்தியமா உரைக்காது!

  72. @mariyam

    //தமிழ் ஒரு உயர் தனி செம்மொழி தமிழ் எந்த மொழிக்கும் கடன் பட்ட மொழி அல்ல என்று உலகுக்கு உரைத்தவர்கள் யார். கால்டுவெல் ஹீராஸ் வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் தான்//

    உ வெ சுவாமிநாதய்யர் வீடு வீடாகச் சென்று அழிந்து போகவிருந்த பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து அச்சிலேற்றி தமிழர்களுக்கு வழங்காமல் போயிருந்தால் இன்றைக்கு புலியை முறத்தால் அடித்த பெண்மணி பற்றி வீரம் பேச புறநானூறும், அகநானூறும் பல அரிய தமிழ் இலக்கியங்களை பார்க்காமலேயே தமிழர்கள் மடிந்திருப்பார்கள். தமிழில் இவ்வளவு விஷயங்கள் கால்டுவெல்ஸா எடுத்துக் கொடுத்தார்.

    https://hayyram.blogspot.com/2010/06/blog-post_24.html

    உ வெ சுவாமிநாத அய்யர் இவைகளைச் செய்து கொண்டிருக்கும் போது கருனாநிதி கூட எங்காவது கோலி குண்டு விளையாடிக் கொண்டு இருப்பார். இன்றைக்கு உவேசா வை மறைத்து தன்னைத் தான் தமிழ் தாத்தா என்று முன்னிருத்திக் கொண்டிருக்கிறார். அதே போல பழைய பொய்யரான காடுவெல்ஸை நீங்கள் தூசி தட்டி முன்னிருத்தப் பார்க்கிறீர்கள். நடக்காது பாப்பா நடக்காது!

  73. தங்கமணி
    25 April 2011 at 9:16 pm

    //இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//

    // இது ஒரு டுபாக்கூர் என்று புரிந்துகொள்ளுங்கள். யாரோ எப்போதோ செத்தது மற்றவர்களின் பாவங்களை தீர்க்காது. இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா? எவரோ செத்த்தற்கு இப்படியெல்லாம் மடத்தனமாக பொருள் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம். //

    தங்கமணி அவர்களின் இந்த கருத்து நம்முடைய தேசத்தின் சுதந்தரத்துக்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தை கேவலப்படுத்துவது போல இருக்கிறது;மேலும் மகாத்மா என்று புகழப்படும் காந்தியடிகள் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படும் சுதந்தரமும் கேள்விக்குரியதாகிறது. என்றைக்கோ வாங்கிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் சுதந்தரம் இன்றைக்கும் இருக்கும்போது காந்தியடிகள் என்பவர் தேசத்துக்காகவும் தேச ஒற்றுமைக்காகவும் உயிர்த்தியாகம் செய்ததாகப் புகழப்படும் போது இயேசுவின் தியாகத்தால் ஒரு பலனும் இல்லை என்பது பாகிஸ்தான் காரனின் கூற்றுப்போலவே இருக்கிறது.

    உருவ வழிபாட்டை நாங்கள் ஊக்கப்படுத்துகிறதில்லை;ஆனாலும் வீரமா, தியாகமா என்ற அலசலில் எனக்கு தோன்றும் கருத்து என்னவென்றால் புதுப்பெண்ணின் அலங்காரத்தைவிட அவள் தாய்மையின் வேதனையில் அவதிப்படுவதே நீங்காத நினைவாகி காலமெல்லாம் நினைவுகூறப்படும் தியாகமாகும்;சிலுவை என்பது நெஞ்சைப் பதறவைக்கும் கொலைக்களம் போலத் தோன்றினாலும் அது மனிதனின் மரணம் ஜனனமான வரலாற்றின் ஆரம்பப்புள்ளி;மரணம் எனும் முற்றுப்புள்ளி அரைப்புள்ளியாகி ஆச்சர்யக்குறியாக மாறிய அதிசயப்பீடம்;உணர்வடைவீர் மாந்தரே..!

  74. பாஸ்கர், உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்து போகிறேன். தமிழா, தமிழன் என்று சொல்லிவிட்டால் எவ்வளவும் ஏமாற தாயாராக இருப்பதை பற்றி என்னத்தை சொல்வது?

  75. அன்புள்ள சில்சாம் அவர்களே,

    உங்களைப் பார்த்து பரிதாபமே மிஞ்சுகிறது. கட்டுரையை நீங்கள் வாசித்ததாகவும் தெரியவில்லை. பின்னூட்டங்களை பார்த்ததாகவும் தெரியவில்லை. இயேசு செத்ததற்கு கிறிஸ்துவர்கள் என்னவெல்லாம் பொருள் கொடுத்து சால்ஜாப்பு சொல்கிறார்கள் எனப்து இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அறிந்ததுதான். இதே மாதிரிதான் முகம்மதின் மருமகன் அலி இறந்ததையும் ஷியா முஸ்லீம்கள் கருதுகிறார்கள். ஒரு சில சியாக்கள் அலி சாகாமல் அல்லாவின் வலப்புறம் அமர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். கிறிஸ்துவர்கள் யகோவா தெய்வத்தை விட பெரிய தெய்வமாக செத்து போன ஏசுவை கருதுவது போல, ஒரு சில ஷியா பிரிவினர் செத்துப் போன அலி அல்லாவை விட உயர்ந்தவர் என்று கூட கூறிகொள்கிறார்கள்.

    நீங்கள் செத்து போன ஏசுவை சொல்வது போலவே, அலியை அல்லாவை விட பெரிய தெய்வமாக கருதுபவர்கள் உங்களிடம் வந்து சொன்னால் உடனே அலியை கும்பிட ஆரம்பித்துவிடுவீர்களா? ஏசுவை சாவுக்கு கூட்டி செல்லும் ஊர்வலத்தை நடத்துபவர்கள் உடனே மாறி அலி செத்துப்போனதற்கு மாரில் அடித்து அழும் ஷியாக்களோடு கூட்டமாக சென்று மாரில் அடித்து அழுவீர்களா?

    போங்க சார். போய் புள்ள குட்டியை படிக்க வைக்கிற வழியப் பாருங்கள். நீங்கள் உளறுவது உங்களுக்கே தெரிவதில்லை. அதன் அசிங்கமும் அமங்களமும் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

    இது கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டதல்ல. பிரேத வழிபாடு என்று தெரியாமல் ஏசுவை தெய்வ படங்களோடு சேர்த்து வைத்து அமங்களத்தை தேடிக்கொள்ளும் இந்து சகோதரர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சில்சாம் போன்ற கிறிஸ்துவ மத வெறியர்களை இப்படிப்பட்ட கட்டுரைகளிலும் தங்களது வாந்தியை வெளிடுவது தேவையில்லை. ஏற்கெனவே ஊரெங்கும் கிறிஸ்துவ வாந்தி இருக்கும்போது தமிழ் இந்து தளத்திலும் ஏன் இந்த வாந்தியை தமிழ் இந்து தளம் அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இங்கும் வந்து வழி கெடுக்க ஏன் தமிழ் இந்து தளம் அனுமதிக்க வேண்டும்?

    தமிழ் இந்து தளம் ஆவண செய்யுமா?

  76. புரிந்தாலும் புரியாதது போல கேட்கும் சில்சாம் அவர்களே,
    காந்தி கொலையாகி சவ ஊர்வலமாக செல்லுவதை இந்து தெய்வங்களோடு வைத்து வணங்கமாட்டார்கள். அப்படி எந்த இந்துவும் வணங்கினால், அதனை கண்டித்தும் தமிழ் இந்துவில் கட்டுரை வரும்.

    பிரேத வழிபாடு கூடாது என்பது குழந்தைகளின் மனநலனுக்கும், குடும்பத்தினரும் மன நலனுக்கும்தான். ஊரெங்கும் அசிங்கங்கள் செய்யும் பாதிரிகளுக்கு அல்ல. பாதிரிகளான நீங்கள் உலகெங்கும் செய்யும் அசிங்கங்களுக்கு உங்கள் பிரேதவழிபாடுதான் காரணம். சிந்தியுங்கள். திருந்துங்கள்.

    தமிழ் இந்து தளத்துக்கு
    சில்சாம் போன்ற பாதிரிகள் இங்கே எழுத அனுமதிக்க வேண்டாம். அவர்கள் இதற்காக பல தளங்களை வைத்துகொண்டு அவதூறு செய்கிறார்கள். அங்கு மறுப்பு எழுதினாலும் பிரசுரிப்பதும் இல்லை. ஐடியை நீக்கி விடுகிறார்கள். எதற்கு அவர்களுக்கு இங்கே கருணை காட்ட வேண்டும்?

  77. சில்சாம் அவர்களே,

    சொற்களைக் கபடமாகப் பயன்படுத்தும் விளையாட்டால் யாரை மயக்கப் பார்க்கிறீர்கள்?

    சுதந்திரப் போராட்ட வீரர்களால் செய்யப்பட்ட தியாகத்தின் பயனை இன்று அனுபவிக்கிறோம் என்பது கண்கூடாக நாம் பார்க்கும் ஒன்று. அவர்கள் தியாகமும் ஆதாரப்பூர்வமாக வரலாற்றில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

    இயேசு அன்று இறந்ததற்காக இன்று கிறிஸ்துவன் சொர்க்கத்தில் நித்திய வாசம் செய்கிறான் என்பது நிரூபிக்கப்படாத கற்பனையே. பெரும் அளவில் யூதர்களை மக்கள் தொகையில் கொண்டிருந்த ரோமப் பேரரசு மன்னர்கள் கிறிஸ்தவத்தைத் தங்கள் நாட்டின் முக்கியமான மதமாக ஏற்கவேண்டும் என்பதற்காகவும், அக்காலத்தில் புதுக் கற்பனையாக எழுந்த ‘இயேசுவின் தெய்வத் தன்மையை’ நிராகரித்த யூதர்களைப் பழி வாங்கவும் ஏற்பட்ட கட்டுக் கதையே அது. Blaise Pascal இதைத் தெளிவாக ஒத்துக் கொண்டுள்ளார் (தன்னை அறியாமலேயே):

    “It is a wonderful thing, and worthy of particular attention, to see this
    Jewish people existing so many years in perpetual misery, it being necessary
    as a proof of Jesus Christ, both that they should exist to prove Him, and
    that they should be miserable because they crucified Him”.

    –Blaise Pascal (PENSEES, No. 640)

    இரண்டுக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்க, பாமரர்கள் மயங்கும் வண்ணம் இரண்டையும் ஒப்பிட்டு ‘இதைப் போல தான் அது’ என்று எழுதுவது உங்கள் குருட்டுத் தனத்தையும் மோசடி புத்தியையும் தான் காட்டுகிறது.

    சிலுவை தியாகத்தின் சின்னம் எல்லாம் இல்லை. அகோரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டும் அமங்கலச் சின்னம். அத்தோடு கோடிக்கணக்கான யூதர்களையும், ஆப்பிரிக்க அமெரிக்க ஆஸ்திரேலிய பழங்குடியினரையும் கொன்று குவிக்க வழிவகுத்த அதிகாரச் சின்னமும் ஆகும்.

  78. Previous pope in vatigan declared that st thomas never visited india but came up to western punjab. immediately all christians in india raised hue and cry against pope ( in 2008/9) that he is blabbering. vatigan denied any knowledge of st thomas visit to india – this letter is attached in the website – http://www.hamsa.org ( hosted by a canadian ex christians who embrassed to hinduism) . he had exposed all the falsehood of christianity which one can see in his website.

    strangly st thomas has tombs – his burials in st thomas mount in chennai on a small hill ( it was parangi malai named after a hindu sage parangi ) , one in syria and another in italy nearby to rome. so there are three tombs for st thomas mount say three burials . is it not falsehood and fabricated. pl visit this website – http://www.hamsa.org which exposed all the falsey of christianity.
    In st thome church in mylapore, inside the church, there are many portraits painted in color as if st thomas was killed by some vaishnavit brahmins. This is the totally unbelievable when pope, the head of christians himself has said that st thomas never visited india but returned after visiting west punjab. vatigan rome letter itself is the testimonal to the statement of previous pope which one can see in the website of this candian priest ( he is an hindu now)
    so pl do not believe christianity as it is fabricated and falsely planted with the aim to bring all the people under the rule of Ameircan/ britan.

  79. Here comes Mr Silly Sam, aka Chillsam with his usual mumbo jumbos.
    The whole Christian philosophy, to put it mildly, sucks.
    Ok dude, answer this.
    Why did Adam and Eve were thrown out of paradise by your all loving Karthar for eating an apple? As far as one can see,they were innocent children and were devoid of any knowledge, of both good and bad and as such did not deserve such punishment from the ever merciful (!) Karthar. It looks like we have better justice on earth now than in your God’s heaven. ( now why did all knowing God created this Satan in the first place? Did God create Satan? Why cannot he destroy this Satan after all these years?) What sort of justice is this that the entire humanity forever to be born as sinners and suffer for a crime( !!!!) of these dumbos Adam/Eve ? What happened to the people who were born prior to Christ’s birth? No salvation for them, eh? Did not the Romans crucify Jesus for his claim that he is God or what ever he claimed to be? So how come the humanity gets absolved for this supposed sacrifice? Why is this eternal hell for non believers? Even a murderer gets a limited sentence and goes on parole here on this earth but your merciful Karthar dishes out eternal hell for the unfortunate. Is your God a male? If so, why?
    Where was your God before He created heaven? Was He in another heaven ? If so, when did He create that heaven? We can go on like this ad infinitum. Your Bible says the world is 6000 years old and flat. Is it true?
    More after you answer these. No vague waffle please. I want clear answers.

  80. Chillisam,

    you have never answered any of my questions in TH, let me try one more time.

    //இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//

    i have asked this to mariaym – she has not replied. Will you answer this

    இயேசு விரும்பி சிலவை ஏற்றார் என்கிறீர்களே அதை ஏன் முப்பது வருஷம் பொறுத்து செஞ்சார். ஏன் ஒரு இருவது இருவத்தஞ்சு வயசிலேயே விரும்பி ஏற்றிருக்கலாமே? அப்பவும் தானே பாவிகள் இருந்தனர்?

    யூதர்கள் இயேசுவை சிலுவையில் இட்டதால் அவர் மரித்தார், மேட்டர் இவ்வளவு தான்? யூதர்கள் சிலுவையில் இடவில்லை என்றால் அவர் ஏன் மரிக்கப் போகிறார்?

    அதுக்கப்புறம் ஒரு கேள்வி – அதென்ன சிலுவை தேர்ந்தெடுத்து மரிப்பது? வேற ஒரு பொருளே கிடைக்க வில்லையா? மேட்டர் ரொம்ப சிம்பிள்? சிலுவையில் ஏற்றுவது என்பது ரோம மன்னர்களின் ஒரு வழக்கம்? யேசுவோட இன்னும் கொஞ்ச பேர் சிலுவையில் எறினர்களே அவர்களை நீங்கள் ஏன் கும்பிட வில்லை?

    Even after Jesus why are there sinners even in christianity. If there are sinners why is no Christian coming forward of sacrifice his life just as Jesus did (as you say). Will it not be a great service to christian kind. Even a benthagosthe has not comeforward to do this, which sounds very puzzling.

    if you do some analysis, i will be happy.

    Indians wholeheartedly praise the efforts of Gandhi in getting freedom. No indians says Gandhi died fighting for Freedom (he died after we got it 🙂 ) No hindu ever puts a picture of Gandhiji being shot in his house and prays.

  81. சிலுவையில் அறையுண்ட ஏசு, வேதனையுடன் ஏலீ, ஏலீ லாமா சபக்தானீ என்று கூவியதாக அவருடைய சீடர்களான மேத்யூவும் மாற்கும் தமது சுவிசேஷங்களில் பதிவு செய்துள்ளனர். இதன் பொருள் கடவுளே , கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர் என்பதாகும். உண்மையான இறைத் தூதர் எவ்வளவு கொடிய சோத்னைக்குள்ளானாலும் இவ்விதம் விரக்தியடைந்து இறைவன் மீது குற்றம் காண மாட்டார்.

    இறைச் சக்தி அளிப்பது எதுவாயினும் சந்தோஷத்துடனும் முழு மனதோடும் ஏற்பவரே வணக்கத்திற்குரியவராவார்.

    திருநாவுக்கரசர் எத்தகைய சித்திர வதைக்கு உள்ளாக்கப்பட்டபோதும் அதையெல்லாம் இனிய அனுபவமாகவே ஏற்றுக் கொண்டார். சீக்கிய சமய குருமார்கள் மொகலாய முகமதிய அரசர்கள் மதம் மாறாவிட்டால் கொடிய தண்டனை என்று எச்சரித்தும் இணங்க மறுத்து அரக்கத்தனமான தண்டனைகளை மனமுவந்து ஏற்ற்றனர். பத்ராசல ராமர் முகமதிய நிஜாமின் வெஞ்சிறையில் உழன்ற போதும் ஸ்ரீ ராம பிரான் மீது நம்பிக்கை இழக்கவில்லை..

    இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து ஏசு இறைத் தூதர் எனவோ இறைவனே என்றோ வணங்கத் தக்கவர் அல்ல என்பதை உணருமாறு இந்த தளத்தில் கேட் கிராஷ் செய்யும் கிறிஸ்தவ அன்பர்களை வேண்டுகிறேன்.
    எல்லை தாண்டி வந்த முழுமை அடையாத இறை தூதர்கள் நமக்கு எதரற்கு? தேவையில்லை. நம்மிடம் வணங்கத் தக்க பரிபூரணப் பக்குவ ஞான இறைத் தூதர்கள் பலர் இருக்க, வேலி தாண்டி வந்த அரைகுறைகளைச் சரணடைய வேண்டாம். ஆகவே, கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவ்ரும் தாய் மதம் திரும்ப அன்போடு அழைக்கிறேன்.
    நீங்கள் அனைவரும் தாய் மதம் திரும்பியபின் நாம் இங்கு கூடிக் குலவுவோம். சரிதானா என் பங்காளிகளே?
    மலர்மன்னன்

  82. மரியம்

    க்ரிஸ்தவன் வந்தான் பென் விடுதலை தந்தான்னெல்லாம் காமடி பன்றிங்க

    அரவிந்தன் எழுதிய கட்டுரை இங்கே படிங்க – https://tamilhindu.com/2010/06/gurukula_system_for_british_poor/

    அப்ப ஔவையார், ஆண்டால், மணிமேகளை, இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எப்படி படிச்சாங்க. பென்கள் பெரும்பாலும் வீட்டினுள் முடங்க ஆரம்பித்தது அரபு நாட்டுக்காரன் படைஎடுத்து வந்ததும் அவன் அட்டூழியம் தாங்காமல் தான் – இதற்க்கு முன் இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்.

    உங்களுக்கு அமெரிக்காவில கூண்டோட பென்களை பேய்கள் என்று சொல்லி கொண்று குவித்த விஷயமெல்லாம் தெரியாத

    க்ரிஸ்தவத்தின் படி பென்கள், விலங்குகள் எல்லாம் துஷ்டர்கள் இல்லையோ. (வசன்கள் சொல்லவா Ÿ )அப்படி ஒரு கான்செப்ட வெச்சுசகிட்டு ஏன் இப்படி இஷ்டம் போல எழுதுறீங்க.

    ஹிந்து மதம் பென்களை தெய்வத்தின் இடத்தில் வைத்துள்ளது . க்ரிஸ்தவம் சாக்கடையில் போட்டுள்ளது. மேற்க்கில் பென் விடுதலயையை என்னவோ சர்சு முன்னிருந்து வாங்கி தந்த மாதிரி ஒரு பிக்சர் கொடுக்குறீங்க – உலக போரின் போது ஆன்கள் எல்லாம் துப்பாக்கி தூக்கிவிட்ட படியால் வேறு வழி இல்லாமல் தபால் துரை, மின் துரை போன்ற துரைகளில் பென்களை வேலைக்கு சேர்தார்கள் –உலகப் போர் நடக்க வில்லை என்றால் பென் விடுதலை தாமதமாகி இருக்கும்.

    இன்டெர்நேஷ்னல் பல்கலைகழகங்கலை கொண்டதாக இருந்த நாடு இது. டாக்சீலாவிலும்,நலந்தாவிலும் இன்டெர்நேஷ்னல் மானவர்கள் வந்து பாடம் படிச்சிட்டு போனாங்க .

    அரபு நாட்டு காட்டுமிராண்டி கும்பல் பத்து லக்ஷம் புத்தகங்களை அழித்தார்கள், பல பண்டிதர்களை கொடுராமாக கொண்றார்கள். சில புத்தகங்கலை காப்பற்ற பல க்யாநிகள் உயிரை துரந்தனர்

    அரபு நாட்டு , ஆங்கிலேய சண்டாளர்கலின் அட்டுழியத்திற்க்கு பின்னும் இந்திய பிழைத்து இறுப்பதற்க்கு ஒரே காரணம் ஹிந்துத்வத்தின், ஹிந்துக்களின் மேன்மையால் தான்.

    1815ல் இந்தியாவின் GDP 24 % இன்று அது நாலு சதவிகிதம், அமெரிகாவின் GDP 27%. க்ரிஸ்தவ ப்ரென்சு மற்றூம் ஆஙிலெயர்கள் இந்தியாவை கொல்லை அடித்தார்கள், இவர்கலிடமிறுந்து ஆயுதம் விற்று அமெரிக்கா காரன் கொல்லை அடித்தான்

    இந்தியர்கள் பென்கள் உட்பட பூமி தான் சூரியன சுத்துதுன்னும், நிலா சூரியனிடமிருந்து இரவல் வாங்கி ஒளிர்கிறது என்றும், ஒலியின் வேகம் என்ன என்பதையும் தெரிந்து ஆங்கிலேயர்க்ள் அறிவதற்கு பல ஆயிரம் ஆண்டுகலுக்கு முன்னே தெரிந்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயனுக்கு சர்ச்சின் பிடியிலிருந்து வெளி வந்த பின்னரே இந்த அரிவு சாத்தியமாயிற்று. சர்சு அறிவாலிகளை தூக்கில போட்ட கதை தான் எல்லாருக்கும் தெரியுமே.

    ஹிந்து மத புத்தகங்களில் எங்கேனும் ஒரு விஷ்யம் அரிவியலுக்கு புரம்பாக காட்ட்குங்கள் பார்ப்போம் – விவில்யத்தின் உலரல்கள் இன்று உலக ப்ரசித்தி

    விசயம் இப்படி இருக்க ஏதோ க்ரிஸ்தவர்கள் தான் உலகிற்க்கு அறிவுப்பால் ஊட்டினார்கள் என்று பிதற்றுவதேனோ

    ஆங்கில கல்விமுறைக்கு வருவோம்

    பிப்த் டிசிப்லின் என்று ஒரு புத்தகமுங்க –ரெம்ப ப்ரசித்திபெற்றது –அதுல பீடர் செஞ்ஜி சொல்ராரு, நம்மாலுங்க மக்கா இருக்கரதுக்கு ஒரே காரணம் நம்ம பாடதிட்ட முறைதான்னு. பெரிய ஆளுங்கலெல்லாம் கல்லூரியிலிருந்து ட்ராப் ஔட்டாமே.

    உலகம் பூர உள்ள மானவர்களை அவர்களின் வாத்தியார்களை பற்றி கேட்டு பாருங்கள் – பெரும்பாலோர் வாத்தியார்கள் பாடம் சொல்லி தருமலவிற்கு தகுதி இல்லை என்று தான் சொல்வார்கள். ஒரு ஐந்து விழுகாடு மட்டுமே திரமையான வாத்தியார்கள்.
    ப்ரீகனாமிக்ஸ் இரண்டாம் பாகம் படியுங்கள், இன்றய வாத்தியார்களை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்கள்.

    ஆங்கில கல்வி முறை வெரும் புத்தம் சார்ந்த கல்வி முறை – புத்தகத்தில் ஔரங்கஜீப் தான் மகா புத்திசாலி என்றால் அது தான் உண்மை.

    இந்திய கல்வி முறையில் நல்லா படிக்கும் மானவன் பண்டிதானாகிறான் –ஆங்கில கல்வி முறையில் மக்கு பையன் படிச்ச கல்லூரியிலேயே எஞ்ஜினியரிங் ப்ரொபெசர் ஆகிறான் (புத்திசாலிகள் சில பேர் தான் பாடம் சொல்ல முன் வருகிரார்க்ள்)

    இது தான் உங்கள் ஆங்கில கல்வியின் நிலை

    நான் இரண்டு முரையிலும் பாடம் படித்தேன், படிக்கிறேன் – என்னால் நிச்சயமாக சொல்ல முடியும் இந்திய கல்வி முறை தான் ஆங்கில முறையை விட பல பல தடவை மேலானது

  83. அனைவருக்கும் அன்பு வணக்கம் …………
    திரு .சாரங்…..
    எப்படியோ இணையத்தளத்தில் உள்ள கிறிஸ்தவத்திற்கு எதிரான வலைபூக்களில் (blogger)களில் இருந்து தேடி துருவி கேள்விகளை தேடி பிடித்து வந்து விட்டிர்கள்…. சரி இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டால் உங்கள் சந்தேகம் அனைத்தும் தீர்ந்து விடும்மா. நான் கொடுக்கபோகிற பதிலில் இருந்து மீண்டும் ஒரு பத்து கேள்விகளை தேடி பிடித்து கொண்டு வந்து எங்கே இதற்கு பதில் சொல் பார்க்கலாம் என்பீர்கள்.. சொல்லவில்லை என்றால் கிறிஸ்தவம் தோற்றது என்று மார்தட்டி கொள்வீர்கள் ..இப்படியே நீங்களும் நானும் கேள்வி பதிலாக அடுக்கி கொண்டே போகவேண்டியது தான்…

    //இயேசு விரும்பி சிலவை ஏற்றார் என்கிறீர்களே அதை ஏன் முப்பது வருஷம் பொறுத்து செஞ்சார். ஏன் ஒரு இருவது இருவத்தஞ்சு வயசிலேயே விரும்பி ஏற்றிருக்கலாமே? அப்பவும் தானே பாவிகள் இருந்தனர்?//

    நான் ஒன்று கேட்கிறேன் இப்போ உங்கள் மதத்தில் ராவணனை கொல்ல தான் ராமராக விஷ்ணு அவதாரம் எடுத்தார் என்று சொல்கிறீகள் ஏன் அவர் தான் பெரிய கடவுள் ஆயிற்றே … மூன்றடியால் மூவுலகம் அளந்த பெரிய கொத்தனார் ஆயிற்றே.. அப்படியே பாம்பு படுகையிலிருந்து எழுந்து நேரடியாக இலங்கைக்கு சென்று ராவணனை வதம் செய்து விட்டு வந்து மீண்டும் படுத்து இருக்கலாமே.. அதை விட்டு அயோத்தியில் தசரதனுக்கு பிறந்தாராம்… சிறுவனாக இருந்து வளர்ந்து குருகுலத்தில் கல்வி கற்று ( அவர்தான் முக்காலமும் உணர்ந்த கடவுள் அப்புறம் என் குருகுலத்திற்கு பொய் கல்வி கற்றார் என்று தெரியவில்லை ) கடைசியில் வனவாசம் சென்று ராவணன் அவன் மனைவியை தூக்கி கொண்டு போன பிறகு குரங்குகளின் துணை கொண்டு பாலம் எல்லாம் கட்டி ச்ச்ச்சச்ச்ச்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்…… அப்பா தாங்க முடியல.. பிறகு ராவணனை அழித்து சீதையை மீட்டாராம் போய் பெரிய பெரிய circus வேலை எல்லாம் செய்து எப்படியோ ராவணனை அழிதாரம்… அதோடு விட்டாரா சீதையை கற்பை சோதித்து பார்க்க அக்னி பரீட்சை மேற்கொன்டாரம் ஏன் இவர் தான் உலகையே காக்கும் கடவுள் ஆயிற்றே பார்த்த மாத்திரத்தில் தெரிந்துகொள்ளும் சக்தி இவருக்கு இல்லையோ..மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று இவர் அப்படி செய்தாராம்.. பாவம் ராமர் என்னும் கடவுளின் பேச்சு மேல் சுற்றி இருந்தவர்களுக்கு நம்பிக்கை இல்லை போலும் .. நண்பரே …இதை விட மொக்க விஷயங்களா பைபிளில் இருக்க போகின்றது …. கிருஷ்ணா அவதாரம் எடுத்தால் அது இன்னும் கேலி கூத்தாக இருக்கும்…. கடவுள் அவதாரம் எடுத்து பல பெண்களுடன் சல்லாபிக்கும் அவதாரம் அது.கிருஷ்ணனை விட கம்சனே மேல் என்று தோன்றும் அதை படித்தால்… எல்லாவற்றையும் நான் இங்கு எழுத முடியாது……. இதை நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் ஆண்டவர் ஆகிய இயேசு …மனிதனாக இந்த உலகில் பிறந்து மனிதனாக வாழ்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து அவர் இந்த உலகத்திற்கு கொண்டு வந்த செய்தியை விட்டு சென்று போக அந்த 30 வருஷம் ஆயிற்று… பிறகு அவர் வந்த நோக்கமான திருபலியை ஏற்று கொண்டு மூன்றாம் நாள் உயிர் பிழைத்து விண்ணுலகம் சென்றார்.. இது தான் நாங்கள நம்பும் எங்கள் கிறிஸ்துவம் ..

    //யூதர்கள் இயேசுவை சிலுவையில் இட்டதால் அவர் மரித்தார், மேட்டர் இவ்வளவு தான்? யூதர்கள் சிலுவையில் இடவில்லை என்றால் அவர் ஏன் மரிக்கப் போகிறார்//

    ஹ்ம்ம்… முதலில் யூதர்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்… என்பது தான் இங்கு பேச்சு… அவர்கள் அவரை சிலுவையில் அறையவில்லை அவர் இவ்வுலகத்தில் பிறந்து மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறைய பட வேண்டும் என்று ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் பல இறை தூதுவர்களால் உணர்த்த பட்டு இருக்கிறது. இது தான் எங்கள் நம்பிக்கை… தினமும் மனிதன் எதாவது அவன் அறிவுக்கு தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்து கொண்டு தான் இருக்கிறான் மனம்வருந்தி அவன் கேட்கும் பாவமன்னிப்பிற்கு மன்னித்து அவனை புனிதன் ஆக்கி கொண்டு தான் இருக்கிறார் இயேசு பிரான் … போதும் என்று நினைக்கிறன் இதை படித்து தேடி துருவி மீண்டும் கேள்விகனைகளை உருவாக்குங்கள்…

    திரு ராம்……
    //உ வெ சுவாமிநாதய்யர் வீடு வீடாகச் சென்று அழிந்து போகவிருந்த பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து அச்சிலேற்றி தமிழர்களுக்கு வழங்காமல் போயிருந்தால் இன்றைக்கு புலியை முறத்தால் அடித்த பெண்மணி பற்றி வீரம் பேச புறநானூறும், அகநானூறும் பல அரிய தமிழ் இலக்கியங்களை பார்க்காமலேயே தமிழர்கள் மடிந்திருப்பார்கள். தமிழில் இவ்வளவு விஷயங்கள் கால்டுவெல்ஸா எடுத்துக் கொடுத்தார்.//

    யாரும் இங்கு உ.வே. சாமிநாத அய்யர் செய்த அரும் பணியை மறந்து விட வில்லை.. அவர் மட்டும் இல்லை தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த சூர்ய நாராயண சாஸ்த்ரி என்னும் பரிதிமால் கலைஞரின் தமிழ் பணியையும் யாரும் மறக்க மாட்டார்கள் தமிழ் உள்ள வரை அவர்கள் எப்போதும் தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றிருப்பார்கள் … அனால் தமிழை உலக மொழிகளில் ஒன்றாக உயர்த்தியதில் கால்ட்வெல்லின் பங்கு மிக முக்கியமானதே..பின்னாளில் இவர்களுக்கு தமிழின் பால் ஆர்வம் ஏற்பட்டு இது போன்ற அரும்பணி செய்ய தூண்டியதே கால்டுவெல் அன்று தூவிய விதை தான்..

    //பழைய பொய்யரான காடுவெல்ஸை நீங்கள் தூசி தட்டி முன்னிருத்தப் பார்க்கிறீர்கள். நடக்காது பாப்பா நடக்காது!//

    யாரும் தூசி தட்ட வேண்டிய அவசியம் இல்லை நண்பரே … புரியும் படி சொல்லவேண்டுமானால் திருவாசகம் உள்ள வரை அவர் இருந்து கொண்டே இருப்பார்…அவர் ஏற்கனவே முன்னின்று கொண்டு தான் இருக்கிறார் வேண்டுமானால் கடற்கரையில் அவருக்கு தமிழக அரசு வைத்திருக்கும் சிலையை போய் பாருங்கள்..அவர் அணைத்து தமிழார்வலர்கள், தமிழ் அறிஞர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்… சும்மா உங்கள் ஆரிய பார்பன சிந்தனைக்கு பிடிக்காத விஷயம் ( allergy )எல்லாம் எல்லோருக்கும் பிடிக்காமல் போகும் என்று தம்பட்டம் அடிக்க வேண்டாம்…நன்றி .. ஆமென்

  84. //ஆங்கிலேயனுக்கு சர்ச்சின் பிடியிலிருந்து வெளி வந்த பின்னரே இந்த அரிவு சாத்தியமாயிற்று. சர்சு அறிவாலிகளை தூக்கில போட்ட கதை தான் எல்லாருக்கும் தெரியுமே. //

    திரு. சாரங் அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையே. “ஏதோ ஒரு சிலர் இப்படி செய்ததால் கிறிஸ்தவமே தவறாகிவிடுமா?” என்று இவர்கள் கூறுவார்கள். இப்படி ஏதோ ஒரு சிலரா செய்திருக்கிறார்கள்? கிறிஸ்தவ புராடச்டண்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்த மார்ட்டின் லூத்தர் கோப்பர்நிகசசைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்:

    “There is talk of a new astrologer who wants to prove that the earth moves and goes around instead of the sky, the sun, the moon, just as if somebody were moving in a carriage or ship might hold that he was sitting still and at rest while the earth and the trees walked and moved. But that is how things are nowadays: when a man wishes to be clever he must . . . invent something special, and the way he does it must needs be the best! The fool wants to turn the whole art of astronomy upside-down. However, as Holy Scripture tells us, so did Joshua bid the sun to stand still and not the earth” (1539).

    யூதர்களை அழிப்பதில் பேராவல் கொண்டிருந்த மார்ட்டின் லூத்தர் ஒரு அறிவியல் எதிர்ப்பாளர் என்றும் தெரிய வருகிறது. இதைப் படித்து கிறித்தவம் எவ்வளவு காமெடியானது என்று சந்தி சிரிக்கட்டும்.

  85. சகோதரி மரியம்/ஆர்.வி./லுஸிபார் !
    நான் இந்தக் கட்டுரையைப் படித்ததில் முதலில் வந்த உறுத்தல் ஜீசசின் திருமணம் செய்து கொள்ளாத வாழ்வு பற்றியது. ஆனால், அந்த விமரிசனத்தின் அடிப்படை, “வணங்கப்படும் வடிவம் துறவின் மேன்மையைப் பிரதிபலிப்பது போலவே இல்லறத்தின் மேன்மையையும் பிரதிபலிப்பதாக இருப்பதே முழுமையாகும்” என்று ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உணர்த்துவதேயாகும். எனவே அக்கருத்தை இந்த அடித்தளத்தில் புரிந்துகொள்ள உமக்கு இறைவன் அருள்வராக!
    இக்கட்டுரையின் இரண்டாவது உறுத்தலாக எனக்குத் தோன்றியது பைபிளில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வன்முறை மற்றும் கொலைவெறிக் கருத்துக்கள். அவை பற்றி நிறைய எடுத்துக்காட்டுக்களை மறுமொழியாளர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளார்கள். அவை பற்றியெல்லாம் எந்த பதிலும் தங்கள் மறுமொழிகளில் காணக்கிடைக்கவில்லையே!
    ஒரு ஹிந்துவுக்கு அவர் வழிபாட்டுத் தலத்துக்குப் போகவேண்டியது அவசியமான ஒன்று. அங்கு போகும்போது இன்று அவர்கள் அனுபவிக்கும் security தொந்தரவுகள் சொல்லில் அடங்காதவை. காரணம் நிச்சயம் ஹிந்துக்கள் அல்லவே ! மாறாக வேறு இடங்களில் தேவையில்லாமல் சென்று அச்சுறுத்தல்களுக்கு உயிர் பலி ஆகவேண்டாம் என்று அறிவுறுத்துவது தவறா?

    அடுத்தது ஜாதியைப் பற்றியது. நீங்களே பாதிரியார்களில் பலர் செய்யும் தவறுகளைப் பார்த்து ஜீசசின் மதத்தைக் குறைகூறக்கூடாது என்று சொன்னதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அது சனாதன ஹிந்து தர்மத்தைத் தவறாகப் பயன்படுத்துகிற/பயன்படுத்திய சிலரை வைத்து இந்த ஹிந்து தர்ம நெறியை முழுதும் தெரிந்துகொண்டதாக எக்காளம் செய்வதை நிறுத்துங்கள். திரு சுந்தரராஜன் என்னும் பெயருள்ள நண்பர் ஜாதி முறை பற்றிய தவறான கண்ணோட்டம் கொண்டு பல கடிதங்களை “தமிழ் பேப்பர்” என்கிற வெப் தளத்தில் “தீபாவளித் திருநாளை”ப் பற்றிய ஒரு கட்டுரையில் எழுதியிருந்த போது 2 விளக்கக் கடிதங்களை எழுதியிருக்கிறேன். பிரியமும் நேரமும் இருந்தால் அந்தத் தளததுக்குப் போய்ப் படித்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தனியாக விளக்கவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. ஏனென்றால், ஹிந்து சமயப் பழக்க வழக்கங்களில் ஒரு ஹிந்துவுக்கு, நாங்களறிய, சந்தேகம் வந்தால் அதைப் போக்குவது எங்கள் கடமை. பாகுபாடே பார்க்காத புனிதர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே விளம்பரம் செய்துகொள்ளும் பிரிவினருக்கு விளக்கங்களினால் பயன் இருக்காது.
    ஒரு கிறிஸ்துவரை church பக்கம் போகாதே என்று நாங்கள் சொல்லவில்லை. ஒரு ஹிந்துவுக்குத்தான் அந்த அறிவுரை தரப்பட்டுள்ளது. மாறாக நீங்களோ உலகத்துக்கே ஹிந்து சமயப் பெருமையைப் புரியவைத்த சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பகவதி அம்மன் கோயில் மதில் அருகில் இருந்துகொண்டு மதம் பரப்புகிற சாக்கில் அங்கு வரும் ஹிந்துக்களுக்கு ஹிந்து சமயம் பற்றித் தவறான கருத்துக்களை bit notice-களாக விநியோகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
    நிச்சயம் மேலை நாட்டுத் தொடர்புகளைப் பெறுவதற்குப் பல millenium-களுக்கு முன்னரே ஹிந்துக்கள் நல்லறிவு / உங்களால் மழுங்கடிக்கப்படாத அறிவு உள்ளவர்களாகவே இருந்தார்கள். divorce, ஒழுக்கக் குறைவான செயல்கள், குடும்ப பந்தப் பாதுகாப்பு இழப்பு ஆகியவை மேலைத் தொடர்புக்குப்பின் நிச்சயம் அதிகரித்துள்ளன என்பதுதான் உண்மை.
    உங்களுக்கு சரியான ஹிந்து சமயம் புரிய வேண்டுமானால் சுவாமி விவேகானந்தரிடம் வாருங்கள் என்று அழைக்கிறேன்.

  86. //அப்ப ஔவையார், ஆண்டால், மணிமேகளை, இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எப்படி படிச்சாங்க. பென்கள் பெரும்பாலும் வீட்டினுள் முடங்க ஆரம்பித்தது அரபு நாட்டுக்காரன் படைஎடுத்து வந்ததும் அவன் அட்டூழியம் தாங்காமல் தான் – இதற்க்கு முன் இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள்//

    திரு. சாரங்…

    ஔவையார், ஆண்டாள், மணிமேகலை இவர்கள் மட்டும் இல்லை இன்னும் சொல்கிறேன் பாருங்கள்.

    அள்ளூர் நன்முல்லையார்
    ஆதி மந்தியார்
    ஒக்கூர் மாசாத்தியார்
    ஓரம் போகியார்
    ஔவையார்
    கச்சிப்பேட்டு நாகையார்
    கழார்க்கீரன் எயிற்றியார்
    காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
    காவற்பெண்டு
    காமக்கணி பசலையார்
    குறமகள் இளவெயினியார்
    குறமகள் குறிஎயினியார்.
    குமிழி ஞாழலார் நப்பசலையார்
    நக்கண்ணையார்
    நன்னாகையார்
    நெடும்பல்லியத்தை
    பக்குடுக்கை நன்கணியார்
    பூங்கண் உத்திரையார்
    பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
    பெரெயில் முறுவலார்
    பேயார்
    பேய்மகள் இளவெயினியார்
    பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
    பொன்முடியார்
    மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
    மாரிப்பித்தியார்
    மாறலோகத்து நப்பசலையார்
    முள்ளியூர்ப் பூதியார்
    வருமுலையாரித்தி
    வெறியாடிய காமக் கண்ணியார்
    வெள்ளி வீதியார்
    வெண்ணிக் குயத்தியார்
    வெண்மணிப் பூதியார்

    போதுமா ……… பெண்ணடிமை தனம் என்னும் இழி வழக்கம் இந்த தமிழ்நாட்டில் என்றுமே இருந்தது கிடையாது … பெண்களை அடிமைகளாக என்னும் பழக்கம் உங்கள் ஆர்ய நச்சு கொள்கைளில் இருந்து வந்தது தான்… எப்போது உங்கள் ஆர்ய காலடி இந்த மண்ணில் பட்டதோ அப்போதே தமிழ்நாட்டிற்கு பிடித்தது சனி சனியாவது நல்லவன் ஏழரை ஆண்டுகள் தான் பிடிப்பான். அனால் உங்கள் ஆரிய சனி இந்த மண்ணை 2500 ஆண்டுகளாக இந்த மண்ணை பிடித்து கொண்டு தமிழர்களை விட்டு அகல மாட்டேன் என்று வம்பு செய்கிறது… நீங்கள் கேட்கலாம் அதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று உங்கள் ஆரிய வேதமாகிய மனு ஸ்ம்ருதியில் போய் பாருங்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று அதில் உங்கள் ஆரிய குல வீரர் மனு தர்மர் சொல்லி இருப்பதை . வேண்டுமானால் சில sample களை தருகிறேன் பாருங்கள் அனால் ரொம்ப நாறும் முக்கை பொத்திக்கொண்டு படியுங்கள் ….

    ” கணவன் துராசாரம் உள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரிலோலனாய் இருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரியானவள் அவனை தெய்வமாக பூசிக்க வேண்டும்”
    ( மனு: 5 :154 )

    “முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநான்கு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்க்கு முன் விவாகஞ்செய்து கொள்ள அவசரபட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும் ( அப்பாடா… நாட்டுக்கு எவ்வுளவு பெரிய காரியம் ) அதனால் பின்பு துக்க படுவான்”. ( மனு 9 : 94 )

    “குலம் நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவனாயும் , பெண்ணுக்கு தக்க ரூபமுள்ளவனாய் தன் ஜாதிக்கு உகந்த ஜாதியுள்ளவனாயும் இருக்கிற வரனுக்கு தனது பெண் எட்டு வயதுக்கு உட்பட்டு இருந்தால், விதிப்படி விவாகஞ் செய்து கொடுத்து விடலாம் ”
    ( மனு 9 : 89 )

    “பாலியத்தில் தகப்பனின் ஆக்ஞையிலும் , இளமையில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளையின் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதே அல்லாது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்க கூடாது”.
    ( மனு 5 : 148 )

    என்ன திரு.சாரங் போதுமா இதற்க்கு மேலும் இருக்கிறது அனால் அதை சொன்னால் தங்காது என் கணினி வெடித்து விடும்.. இதற்க்கு ஆதாரம் இப்போதும் இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் பால்ய திருமணமே சாட்சி. பைபிளில் இதை விட கொடுமையான பெண் அடிமை தனம் இருக்க வாய்ப்பு இல்லை… இயேசு நாதர் எங்கும் பெண்ணடிமை தனத்தை பற்றி சொல்லவில்லை.. உங்கள் ஆரிய தேசம் ஆரிய வர்தம் என்பது இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து மத்ய பிரதேசம் வரை உள்ள பகுதிகள் தான். புத்தர் அவதரித்த பின் உங்கள் வேதம்கள்,யாகங்கள்.ஹோமங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பு குறைந்து போனது. வேத மந்திரத்தால் யாகம் நடத்துவதால் ஒரு பயனும் இல்லை என்று புத்தரின் ஞானம் சொன்ன பிறகு அந்த செல்லா காசான வேதத்தையும்,மனுதர்மத்தையும் தூக்கி கொண்டு இங்கு வந்தீர்கள். வந்தவரை வாழ வைக்கும் தமிழ்மண் உங்களை வரவேற்று வாழ வைத்தது… அது தான் தமிழர்கள் செய்த பெரிய பிழை . நண்பரே நாலந்தா, டாக்சிலா போன்ற பல்கலைகழகங்கள் இருந்தன யாருக்கு அதனால் லாபம்.ஒரு வேலை. இப்போது பல கல்வித்தந்தைகள் நடத்தும் பல்கலைகழகங்கள் போல வெளிநாட்டு மற்றும் காசு அதிகம் உள்ள மாணவர்களிடம் நிறைய பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு மட்டும் கல்வி நடத்தி கொண்டு இருந்தது போல.. எங்கே நானாவது சங்ககால பெண்புலவர்கள் என்று 33 பெயரை சொன்னேன் இவர்கள் இயற்றிய பாடல்கள் அதற்க்கு சான்று.. நீங்கள் உங்கள் ஆரிய வேத காலத்து பெண்களின் பெயர் ஒரு 5 ஆவது சொல்லுங்கள் பாப்போம் மீண்டும் புளித்து போன மைத்ரேயி கார்கி என்று நான் ஆறாம் வகுப்புபாடப்புத்தகத்தில் படித்த உளுத்து போன விஷயத்தையே சொல்லவேண்டாம்…. ஏனென்றால் நானும் தமிழ் பெண் தான் அதனால் சொல்கிறேன்..

    //இந்தியர்கள் பென்கள் உட்பட பூமி தான் சூரியன சுத்துதுன்னும், நிலா சூரியனிடமிருந்து இரவல் வாங்கி ஒளிர்கிறது என்றும், ஒலியின் வேகம் என்ன என்பதையும் தெரிந்து ஆங்கிலேயர்க்ள் அறிவதற்கு பல ஆயிரம் ஆண்டுகலுக்கு முன்னே தெரிந்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயனுக்கு சர்ச்சின் பிடியிலிருந்து வெளி வந்த பின்னரே இந்த அரிவு சாத்தியமாயிற்று. சர்சு அறிவாலிகளை தூக்கில போட்ட கதை தான் எல்லாருக்கும் தெரியுமே//

    அன்புள்ள சகோதரரே சாரங்………
    ஒன்று தெரியுமா இந்த வானியல் ஏற்படும் நிகழ்வை மாற்றங்களை உலகிற்கு அறிமுக படுத்தியவர்கள் நிச்சயம் உங்கள் ஆரியகள் இல்லை மேசபோட்டேமியர்களின் வானியல் ஆய்வு தான் பழமையானது அதற்க்கு பிற்கு பாபிலோனிய வானியல் கருத்தாக்கம் .. நீங்கள் சொல்லும் ஆர்ய ஜோதிஷம் என்பது கரேகர்களிடம் ( greeks ) இருந்து கடன்வங்கியாவை தான் அதற்கு பேரையே யவன ஜாதகம் தான் ஆதாரம் வேணுமா https://en.wikipedia.org/wiki/History_of_astrology இதில் பார்த்து கொள்ளுங்கள் .. வேண்டுமானால் இன்னொரு ஆதாரம் https://highered.mcgraw-hill.com/sites/0072482621/student_view0/astronomy_timeline.html . ஆக எழுத்திலக்கண முறையை கடவுள் ஆன்மாவை பற்றி சொல்லும் முப்பொருள் உண்மையான பசு,பதி.பாசம் ஆகியவற்றை நீங்கள் தமிழர்களிடம் இருந்து கடன் பெற்றது போல ஜோதிடத்தை நீங்கள் கிரேகர்களிடம் இருந்து கடன் பெற்றது தான்.. உலகத்துக்கே நாங்கள் தான் முன்னோடி என்று பகல் கனவு காண வேண்டாம்…

  87. அன்புக்குரிய தங்கை ரெபேக்கா மரியம் அவர்களே,

    //திருச்சிஅண்ணா … மலை கோட்டை உச்சி பிள்ளையாரை கேட்டதாக சொல்லவும்..//

    முதலில் இதை வரவேற்கிறேன். நன்றி. நல்லிணக்கம் மனிதத்துக்கு சமுதாய அமைதிக்கு உதவி யாக, அவசியமாக இருக்கிறது.

    //அது சரி, இதை எங்களுக்கு சொல்வதற்கு முன்னால் முதலில் உங்கள் திருப்பதி திருவண்ணாமலை, காசி , ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு போய் பார்த்து விட்டு வருவது நல்லது . அங்கு வருபவர்கள் எல்லாம் என்ன உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உத்தமர்களா வருகிறார்கள் .அவர் அவர் செய்த பாவத்தை தொலைக்க. தான் செய்த பாவத்தை கழுவி விட்டு போக தான் வருகிறார்கள். போய் பாருங்கள்//

    இந்த பாவத்தின் மேல் உங்களுக்கு என்ன இவ்வளவு பிணைப்போ தெரியவில்லை.

    எல்லோரும் பாவத்தை கழுவத்தான் திருப்பதி போகிறார்கள் என உங்களின் சிந்தனையை ஒட்டியே எல்லோரும் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்.

    திருப்பதிக்கு போய் பார்த்து இருக்கிறீர்களா, பெண்ணுக்கு திருமணம் நடந்ததற்கு , பேரனுக்கு ஆபரேசன் சரியாக நடந்து குணம் ஆனதற்கு, வேலை கிடைத்தற்கு … இப்படியாக பல வேண்டுதல்கள் .. நீங்கள் முதலில் மக்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    . மேலும் மன்னிப்பு என்பது மிக உயர்ந்த தத்துவம். ஒருவர் நமக்கு இழைத்த இன்னலை பொறுத்துக் கொள்ளுவதுது, அதை பொருட்படுத்தாமல் விடுவது, மறப்பது… மன்னிப்பு. இதை கீதையில் “க்ஷமா”‘ என சொல்லி இருக்கின்றனர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர்.

    நீ பிறரின் குற்றங்களை மன்னித்தால், உன்னுடைய குற்றங்களை பிதா மன்னிப்பார் என்றார் இயேசு. நீ பிறரின் குற்றங்களை மன்னிக்காவிட்டால் உன் குற்றமும் மன்னிக்கப் பட மாட்டாது. இவ்வளவு தூரம் தெளிவாக் சொல்லி மன்னிக்கும் , பொறுத்துக் கொள்ளும் மனப் போக்கை உருவாக்க விரும்பினார் இயேசு.

    இதை அப்படியே மாற்றி எல்லோரையும் தடுமாமாறும் படி நீங்கள் எல்லோரும் பாவிகள் தான் என்றும், பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்றும், அப்படி இல்லாவிட்டாலும் ஆதாம் ஏவாள் பாவம் உன் தலையில் இருக்கிறது என்றும், இயேசுலன்றி யாராலும் பாவ மன்னிப்பு வழங்க முடியாது என்றும்,இல்லை என்றால் நரகம் போவாய் என்றும் சிறு வயதில் பள்ளியில் சில் மாணவர்கள், கையை குவித்து விரலை ஆட்டியபடி பாம்புக்கும் பள்ளிக்கும் ஒரு குச்சி (சிலேட் குச்சி) போடு என்று மிரட்டி சிலேட்டு பலப்பங்க்களை சேகரிப்பது போல செய்வது, இது இயேசு பிரான் பாராட்டும் செயல் அல்ல.

    உலகில் உள்ள எல்லோரும் பாவிகள் என்று எந்த இடத்திலும் இயேசு சொன்னதாக எனக்கு தெரிந்தளவில் இல்ல.

    உலகில் உள்ள எல்லோரும் பாவிகள் , அத்தனை பேரின் பாவமும் போவதற்காக என்னை சிலுவையில் அறையுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக எங்காவது இருக்கிறதா , நீங்களே சொல்லுங்கள்.

    இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கருத்துக்களை எல்லாம் திரித்து, அவற்றுக்கு மாறான கருத்து வரும்படியாக மாற்றி தங்களின் சொந்தக் கருத்துக்களை இயேசு கிறிஸ்துவின் கருத்து போல பிரச்சாரம் செய்வது சரியா?

    நீதி மான்களையன்று, பாவிகளையே இரட்சிக்க வந்தேன் என்றார். அப்ப நீதி மான்களும் உள்ளனர், ஆனால் என் அக்கறை பாவ பாதையில் போனவர் மீது நோயாளிக்கு தான் மருத்துவம் தேவைப்படுகிறது. அது போல பாவ பாதையில் சென்றவர்களை திருப்ப முயன்று இருக்கிறார் இயேசு.

    சரி உலகில் உள்ள எல்லோரும் பாவி என்று அடித்து சொல். இயேசு மட்டுமே இரட்சிப்பு தருவார், இல்லை என்றால் நரகம் போவாய் என்று சொல்லி பயமுறுத்தி, நான் சொல்றதை அப்படியே கேளு, ஒத்துக்கோ, யூதர்களுக்கு இனப் படுகொலை செய்ய பிலான போட்டு கொடுத்து செயல் படுத்தியது தெய்வீகமானது, நீ இப்ப வணங்கும் தெய்வம் சாத்தான் என்று … இப்படி சொல்லிக் கொண்டே போவார்கள்.

    உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், அவர் உண்மையிலே என்ன சொன்னார் என்று சிந்தித்து பாருங்கள்

  88. //Sarang
    28 April 2011 at 5:39 pm// இந்த நல்ல கடிதத்தை spelling preview பார்க்காமல் post செய்து ஏன் விமர்சனத்துக்கு ஆளாகிறீர்கள் ?

  89. திரு ராதாகிருஷ்ணன் அவர்களே

    மன்னிக்கவும். எனக்கு கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் எழுதுகிறேன். எழுத்துப்பிழைகள் வராமல் தடுக்க என்னால் இயலவில்லை. முயற்சி செய்கிறேன்

  90. இயேசு சிலுவையில் அறைய பட்டது, சாக்ரடீஸ் விஷம் குடித்தது, திருப்பூர் குமரன் கொடியை விடாமல் மண்டை பிளக்கப் பட்டு இறந்தது… இவை எல்லாம் கொள்கை மேல் கொண்ட உறுதியை காட்டுகிறது.

    சாக்ரடீஸ் தப்பிக்க வழி செய்யப் பட்டு இருந்த போதிலும், அவர் தப்பிக்கவில்லை.

    இயேசு சிலுவையில் அறையப் பட்டது, அக்கால யூதர்களின் அடாவடி தனத்தையே காட்டுகிறது. நீர் யூதர்களின் இராஜாவா என்று கேட்டதற்கு இயேசு நான் ஒரு சாதரணமானவன் என்று பின் வாங்கியிருந்தால் கூட தப்பிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இயேசு தன கொள்கையில் உறுதியாக இருந்து விட்டார்.

    இயேசு வைப் பார்த்தால் தாவீது போலவோ, ஜோசுவா போலவோ ஒரு போர் வீரனுக்குரிய தோற்றமோ, இராஜா போன்ற பந்தாவோ இல்லை. எனவே தான் யூதர்களின் இராஜா என்று சொல்லியதை இயேசு ஒப்புக் கொண்ட போதும், பிலாத்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

    மேலும் இயேசு என் இராச்சியம் இந்த உலகுக்கு உரியது இல்லை என சொல்லி விட்டார். அப்படியானால் சீசரின் ஆட்சிக்கு இயேசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என ஆகி விட்டதால், இதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கவர்னர் பிலாத்து கருதவில்லை.

    ஆனாலும் யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் கலவரம் உண்டாகாமல் இருக்க என்னவாவது பண்ணிக்கங்க என்று கை கழுவி விட்டார். ஆனாலும் தண்டனைக்கு காரணம் என்பதாக இவர் யூதர்களின் இராஜா என சிலுவையில் எழுதி வைக்க சொல்லி பார்மாலிடியை முடித்து விட்டார் பிலாத்து.

    இப்போது இந்தியரகலாகிய நாம் இயேசு சிலுவையில் தொங்கினார் , பிரேதம் …என்று மீண்டும், மீண்டும் சொல்லுவது நமது நாகரீகத்க்கு அழகு அல்ல. அப்படியானால் இயேசு தொழுவத்தில் குழந்தையாக இருப்பதை இந்துக்கள் கும்பிடுவதற்கு ஆட்சேபனை இருக்கிறதா?

    சுவாமி விவேகானந்தரே இந்துக்கள் சர்ச்சுக்கு போகிறார்கள், இது நல்லதே, என்று சொல்லி இருக்கிறார். பாரதியார் கூட இயேசுவை பாராட்டி இருக்கிறார். இந்து மதத்தில் நல்லிணக்கத்துக்கு முக்கிய இடம் இருகிறதே.

  91. //நானே சில நேரங்களில் கால்டுவெல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசகத்தை பியானோ வாசித்து மெய் மறந்து பாடும் போது கர்த்தரை நேரில் கண்ட ஆனந்தத்தை போலவே உணருகிறேன். ஆகயால் கால்டுவெல் செய்த பணிகளை குறை சொல்லவேண்டாம் ..//

    மரியம் ரெபெக்கா அவர்களுக்கு, கால்டுவெலின் திருவாசக மொழிபெயர்ப்பு எங்கு கிடைக்கும்?

    கால்டுவெல் தமிழின ஒற்றுமையை உடைக்க வைத்த ஆரிய திராவிட இன வேற்றுமை என்னும் ‘டைம் பாம்’ அறிவேன். திருவாசகத்தைப் படிக்க அவருக்கு நேரமேது?

  92. // எங்கே நானாவது சங்ககால பெண்புலவர்கள் என்று 33 பெயரை சொன்னேன் இவர்கள் இயற்றிய பாடல்கள் அதற்க்கு சான்று.. நீங்கள் உங்கள் ஆரிய வேத காலத்து பெண்களின் பெயர் ஒரு 5 ஆவது சொல்லுங்கள் பாப்போம் மீண்டும் புளித்து போன மைத்ரேயி கார்கி என்று நான் ஆறாம் வகுப்புபாடப்புத்தகத்தில் படித்த உளுத்து போன விஷயத்தையே சொல்லவேண்டாம்…. ஏனென்றால் நானும் தமிழ் பெண் தான் அதனால் சொல்கிறேன்.. //

    ” வேத நெறி தழைத்த காலத்தில் பெண்கள் கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கினர். இந்துமதத்தின் ஆதார நூல்களான நான்கு வேதங்களில் மிகப் பழமையானது ரிக்வேதம். ரிக்வேத மந்திரங்களை மெய்யுணர்வில் கண்டறிந்த ரிஷிகளை “மந்திர திரஷ்டா” என்று அழைப்பர், இந்துமதத்தின் ஆதிகுருநாதர்கள் இவர்களே. இறைவாக்கினரான இவர்களில் 26 பேர் பெண் ரிஷிகள். உபநிஷதங்களிலும் கார்கி, மைத்ரேயி என்று பிரம்மவாதினி என்றழைக்கப் படும் ஞானப் பெண்களைக் காண்கிறோம்”

    நன்றி: ஜடாயு கட்டுரை – https://jataayu.blogspot.com/2009/04/1.html.

    மனுஸ்மிருதி என்பது இந்துமதத்தின் ஆதார நூல் அல்ல. இந்திய நாட்டில் நூற்றாண்டுகளாக எழுதப் பட்ட ஆயிரக் கணக்கான் சமூக சட்ட நூல்களில் ஒன்று. அதை தெய்வ வாக்காக எந்த இந்துவும் ஏற்பதில்லை, நீங்கள் பைபிளை ஏற்பது போல. தமிழ்ஹிந்துவிலேயே மனுஸ்மிருதியை மறுத்து பல கட்டுரைகள் வந்துள்ளன

    இன்று இந்துக்கள் மனப்பூர்வமாக இந்திய அரசியல் சட்டத்தை ஏற்று அதன்படி தான் தங்கள் பெண்களுக்கு மணம் செய்விக்கிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் தான் பொது சிவில் சட்டத்தை மைனாரிடி உரிமை என்ற பெயரில் எதிர்க்கிறீர்கள். தப்பித் தவறி கிறிஸ்தவர்களை மணம் புரிந்த இந்துப் பெண்கள் கூட இதனால் சரியாக விவாகரத்து கிடைக்காமல் துன்பபடுகிறார்கள். நடிகை ஸ்ரீவித்யா விவகாரம் எல்லாரும் அறிந்தது.

    அது சரி, ரெபெக்கா என்ற அப்பட்டமான செமிட்டிக் பெயரை வைத்துக் கொண்டு, ”சாரங்க” என்ற இந்திய/தமிழ் மரபுவழிப் பட்ட அழகிய பெயரை வைத்துக் கொண்டிருப்பவரை ஏதோ “நீங்கள்” என்று வேற்றினத்தவரைப் போல எண்ணி வெறுப்பைக் கொட்டுகிறீர்களே..

    அன்பு தழைக்கும் இந்த மண்ணில் பிறந்த உங்களிடம் இந்த அளவு அப்பட்டமான இனவெறியையும், வெறுப்புணர்வையும் வளர்த்துவிட்ட பைபிளையும், கால்டுவெல்லையும் நாங்கள் வெறுத்து ஒதுக்காமல் வேறு என்ன செய்யவேண்டும்?

  93. // ரிக்வேத மந்திரங்களை மெய்யுணர்வில் கண்டறிந்த ரிஷிகளை “மந்திர திரஷ்டா” என்று அழைப்பர், இந்துமதத்தின் ஆதிகுருநாதர்கள் இவர்களே. இறைவாக்கினரான இவர்களில் 26 பேர் பெண் ரிஷிகள்.//

    இதைப் பற்றி மேலும் அறிய women rishis in rigveda என்று கூகிளிட்டேன்.. நிறைய பக்கங்கள் வந்தன. அதில் ஒன்றில் கண்டது –

    https://www.hindupedia.com/en/Women_as_Rishikas_in_the_Vedas

    Women rshis (rshika) in the Rig Veda Samhita
    one or more mantra was revealed to each rshika.

    Verse Rishika
    ——————-
    4.18 Aditi
    10.72 Aditirdakshayani
    8.91 Apala atreyi
    10.86 Indrani
    10.85 Urvashi
    10.134 Godha
    10.39, 10.40 Gosha Kakshivati
    10.109 Juhurbramhajaya
    10.184 Tvashta Garbhakarta
    10.107 Dakshina Prajapatya
    10.154 Yami
    10.10 Yami Vaivasvati
    10.127 Ratrirbharadvaji
    1.171 Lopamudra
    10.28 Vasukrapatni
    10.125 Vagambhrni
    5.28 Vishvavara Atreyi
    8.1 Sashvatyangirasi
    10.151 Shradhda Kamayani
    10.159 Shachi Paulomi
    10.189 Sarparajni
    9.86 Sikata Nivavari
    10.85 Surya Savitri
    1.126 Romasha
    10.108 Sarama Devashuni
    9.104 Shikhandinyava Psarasau Kashyapan
    10.142 Jarita Sharngah
    8.71 Suditirangirasah
    10.153 Indra Mataro

    (The list is not exhaustive)

  94. மரியம் ,

    பதில் ரொம்ப பெரிசு ரெண்டு மூனு பதில்களா எழுதுகிறென்

    சுத்தம் இப்படி அற்பதனமாக புரிந்து வைத்திருபீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை. நான் கேட்ட கேல்விக்கு பதில் ஏதும் கானோம், புதுசா என்ன்மோ எதோ பிதற்றல்.

    முதலில் ஆரிய திராவிட பேதம் என்பது ச்ர்சு என்னும் செட்டு போட்டு மிசனரிகள் தயாரித்த ஒரு ஒல்டு ஒடாத படம். அதை உங்களை போல உள்ள சில மேதாவிகளே பார்கிரார்கள்

    ரிக் வேதம் இயற்றிய பல ரிஷிகளில் பலர் பென்கள் (27) – கார்கி ப்ராஹ்மனம் (ப்ராஹ்மனம் என்றால் கடவுலை அறிந்தவர் என்று பொருள்) என்று வேதாந்தத்தில் ப்ரசித்தி பெற்ற ஒரு பகுதி உண்டு – இதில் அரசவையில் (ஆரிய அவையில்) கார்கி என்ற பென் யாக்யவல்கர் என்ற ஒரு அசாதாரன ஆன் ரிஷியை கேள்வி கேட்டு மடக்குகிரார். மைத்ரேயி. என்ற பென் யாக்யவல்கரிடம் பாடம் கற்பதர்க்காகவே அவரை மனக்கிரார்.

    தக்ஷிணா (இந்த பேறு நல்லாஇருகுல்ல), கோஷா , அபலா, கோதா, யாமி, லோபமுத்ரா, இந்ரானி முதலிய முப்பது பென்கள் சுமார் எட்டாயிரம் வருடத்து பாரம்பரியத்தை வளர்த்திருகிரார்கள்.

    சரி தமிழ் ஆண்டால் பாடிய பாடல்களை பார்போமா –

    செங்கற்பொடிக் கூரை வென்பல் தவத்தவர் – இது யாருங்கோ சிகப்பு நிர உடை அனிந்து வெற்றிலை உன்னாததால் வென் பல் உடைய தவம் செய்வோர் -சாது செல்லப்பாவயா ஆண்டால் சொல்ராங்க. இது நீங்கள் சொல்லும் ஆரிய சன்யாசிகளை தானே குறிக்கிரது.

    மனிமேகலை புத்தமதத்தை தழுவினார் –அது என்ன த்ராவிட க்ரிஸ்தவ மதத்தின்ஒரு பிரிவா. புத்தர் என்ன தாமசின் சொந்தக்காரரா – அவர் க்ஷத்ரிய குலத்தில் பிறந்து துரவரம் பூன்டவர் தானே.

    இவ்வளவு பேரை அடுக்கினிர்களே இவர்கள் செய்த நூல்களை நீஙகள் வாசிக்காமல் போயிட்டீங்களே – கந்தர்வன் அவர்க்ள் பழம் தமிழர் கண்ட வேதாந்த கருமணி என்று பல கட்டுரைகள் தமிழ் ஹிந்துவில் எழுதி உள்ளார் – கொஞ்கமேனும் வாசியுங்கள் – வெரும் க்ரிஸ்தவ விஷம் கக்கினால் மட்டும் போதாது விஷ்யம் வேனும் – நீங்கள் சொல்லும் எதுவுமே துலி கூடா ஆராயாமல் சொல்வது. க்ரிஸ்தவம் பரப்ப சர்சு அவுத்து உடும் பொய்கள்.

    ஹிந்து மதம் பற்றி சும்மா விவில்யம் படிக்கிர மாதிரி நுனிப்புல் மேய முடியாது. கொஞ்ஜம் பொருமையும், அறிவும் வேண்டும். நீங்கள் வைக்கும் விஷ்யங்கள் எல்லாம் மேம்போக்கு விஷயங்கள்.

    மனு ஸ்ம்ரிதியை படித்து எதுவும் வெடிக்காது – முதலில் ஸ்ம்ரிதி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் – இது வெறும் கால வழகுக்கு எற்ப இருக்கும் சட்டம். மனு ஸ்ம்ரிதிக்கும் அப்புரம் பல பல ஸ்ம்ரிதிகள் வந்துவிட்டன – விஷ்னு ஸ்ம்ரிதி, யாக்யவல்கர் ஸ்ம்ரிதி, பராசர ஸ்ம்ரிதி இப்படி –இதில் எல்லாம் நீங்கள் சொல்வது போல விஷயங்கள் இல்லையே. இதயும் தவிர ஸ்மிரிதிகள பற்றியும் ஜாதி பற்றியும் தமிழ் ஹிந்துவில் ஏராலமான கட்டுரைகள் உள்ளன- படிய்ங்கள்

    விவில்ய பென் கொடுமைக்கு வருவோம் – பல விஷ்யங்கள் கொமட்டுகிறது – இத போயா holy bible அப்படின்னு சொல்றாங்க

    Genesis

    God “closed all the wombs” because Abimelech believed Abe’s lie. 20:18

    Abraham had several concubines. 25:6

    Jacob is tricked by Laban, the father of Rachel and Leah. Jacob asks for Rachel so that he can “go in unto her.” But Laban gives him Leah instead, and Jacob “went in unto her [Leah]” by mistake. Jacob was fooled until morning — apparently he didn’t know who he was going in unto. Finally they worked things out and Jacob got to “go in unto” Rachel, too. 29:21-30

    Since Jacob hated Leah, God decided to “open her womb” and make Rachel barren. (Like he did to Sarah and Rebekah.) 29:31

    Rachel dies in childbirth; but at least she had another son. And in the Bible, a woman is expected to die happily as long as she has a son. 35:17-18

    “Reuben went and lay with his father’s concubine.” 35:22, 49:4

    Exodus

    Moses, like a coach giving instructions to the team before the big game, tells the men to “come not at your wives” before he goes up to Mt. Sinai. 19:15

    God’s instructions for taking a second wife. 21:10

    If you “entice” an “unmarried maid” to “lie” with you, then you must marry her, unless the father refuses to give her to you, in which case you must pay him the going price for virgins. 22:16

    “Thou shalt not suffer a witch to live.” 22:18 Thousands of innocent women have suffered excruciating deaths because of this verse.

    Leviticus

    When a king sins only the best sacrifice will do — he must offer a male goat to God. But if a commoner sins, a female will do. 4:22-28

    She shall be unclean.”
    Women are dirty and sinful after childbirth, so God prescribes rituals for their purification. (And baby girls make them twice as sinful and dirty as baby boys do.) 12:1-5
    If a man has sex with his father’s wife, kill them both. 20:11
    If a man has sex with his daughter in law, kill them both. 20:12
    If a man has sex with his wife and her mother, burn to death all three. 20:14
    If a woman “lies with a beast” both the woman and the animal are to be killed. 20:15
    Numbers

    The Law of Jealousies. If a man suspects his wife of being unfaithful, he reports it to the priest. The priest then makes her drink some “bitter water.” If she is guilty, the water makes her thigh rot and her belly swell. If innocent, no harm done — the woman is free and will “conceive seed.” In any case, “the man shall be guiltless from iniquity, and this woman shall bear her iniquity.” 5:11-

    “And the spirit of jealousy come upon him … and she be defiled: or if the spirit of jealousy come upon him … and she be not defiled.”
    If a husband is jealous, his wife must submit to the law of jealousies whether she was “defiled” or not. 5:14
    If men make vows, then God expects them to keep them. But a woman cannot make a vow, unless it is “allowed” by her husband or father. If it is “allowed,” then she must keep it — but even so, she is not responsible (her husband or father is). 30:3-16

    மிக மிக முக்கியமான வசனம்

    Under God’s direction, Moses’ army defeats the Midianites. They kill all the adult males, but take the women and children captive. When Moses learns that they left some live, he angrily says: “Have you saved all the women alive? Kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him. But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves.” So they went back and did as Moses (and presumably God) instructed, killing everyone except for the virgins. In this way they got 32,000 virgins — Wow! (Even God gets some of the booty — including the virgins.) 31:1-54

    Deuteronomy

    If a man marries, then decides that he hates his wife, he can claim she wasn’t a virgin when they were married. If her father can’t produce the “tokens of her virginity”, then the woman is to be stoned to death at her father’s doorstep. 22:13-21

    If a betrothed virgin is raped in the city and doesn’t cry out loud enough, then “the men of the city shall stone her to death.” 22:23-24

    If a man rapes an unbetrothed virgin, he must pay her father 50 shekels of silver and then marry her. 22:28-29

    Kings

    Old King David tries to get some heat by having a beautiful virgin minister unto him. 1:1-4

    The wisest man that ever lived (1 Kg.4:31) was misled by his wives into worshipping other gods. 11:4, 15:3

    Jezebel “stirred up” Ahab to “work wickedness in the sight of the Lord.” to punish her, God vows that “the dogs shall eat Jezebel.” 21:23, 25
    The dogs shall eat Jezebel.” Jezebel “stirred up” Ahab to “work wickedness in the sight of the Lord.” To punish her, God will feed her dead body to the dogs. He also plans to feed Ahab’s family to the dogs (if they live in the city) and to the birds (if they are country folks). 21:23-25
    Ezra

    The Israelites offend God by “taking” foreign wives and thereby corrupting “the holy seed.” 9:2

    Ezra tells the men that they must abandon their wives and children if they are to avoid God’s wrath. 10:2-3, 10-12

    Speaking of births, Job says: “Who can bring a clean thing out of an unclean. Not one. 14:4

    ” So according to the Bible, women are dirty (sinful), giving birth is dirty (sinful), and the newborn baby is dirty (sinful).

    Pslams

    “In sin did my mother conceive me.” God considers both women and sex to be sinful. 51:5

    “Let every one of them pass away: like the untimely birth of a woman, that they may not see the sun.”
    A prayer that your enemies will die like an aborted fetus. 58:8

    God sent a plague on the Israelites for “committing whoredom with the daughters of Moab.” But “then stood up Phinehas, and executed judgment [by throwing a spear through a newly married couple]: and so the plague was stayed.” But not before 24,000 (1 Cor.10:8 says 23,000) had died. (See Num.25:6-9 for all the gory details.) 106:29-30

    Proverbs

    Watch out for those evil, strange, and whorish women. 6:24-26
    The feet of strange women “go down to death,” and “her steps take hold on hell.” 5:3-5
    A fair woman without discretion is like a golden jewel in a pig’s snout. 11:22
    “It is better to dwell in a corner of the housetop, than with a brawling woman in a wide house.” 21:9, 25:24
    “It is better to dwell in the wilderness, than with a contentious and an angry woman.” 21:19
    “Whores” and “strange women” lie around waiting to trap innocent men. 23:27-28
    One of the four things that the earth cannot bear is an odious woman when she is married. 30:21, 23
    Don’t give your strength to women. 31:3
    “Who can find a virtuous woman?” Virtuous men are much more common. 31:10 – this is exactly what you see in Europe and the U.S today

    Ecclesiastes
    “I find not: one man among a thousand have I found; but a woman among all those have I not found.”
    The Preacher could find a few good men (maybe one in a thousand or so), but not a single good woman. 7:28

    Isaiah

    Isaiah shows his contempt for women by saying that things have gotten so bad for his people that “women rule over them.” 3:12
    Egypt will become weakened and frightened “like unto women” when God shakes his hand over it. 19:16
    “Tremble, ye women that are at ease .. strip you, and make you bare … They shall lament for the teats.” 32:11-12
    God will punish the men by taking away their property, including their wives, and giving it to others. 6:12

    God is going to do some really bad things to the people because the women burned incense to the “Queen of Heaven”. 44:15-25

    God plans to make the Babylonian men “become like women.” 50:37

    Lamentations

    God “accomplishes his fury” by making women eat their children. 4:10-11

    Hosea

    If you misbehave, God will make your daughters “commit whoredom” and your wife “commit adultery.” 4:13

    Matthew
    Abandon your wife and children for Jesus and he’ll give you a big reward. 19:29

    “Woe unto them that are with child 24:19

    Mark
    In the last days God will make things especially rough on pregnant women. 13:17

    Luke
    Males are holy to God, not females. 2:23

    Romans

    Paul explains that “the natural use” of women is to act as sexual objects for the pleasure of men. 1:27

    Corinthians

    “Art thou loosed from a wife? seek not a wife.” 7:27
    If a woman refuses to cover her head in church, then her her head must be shaved. 11:5-6

    Women are commanded by Paul to be silent in church and to be obedient to men. He further says that “if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in church.” 14:34-35

    Ephesians
    Wives must submit to their husbands “in every thing” as though they were Christ. “For the husband is the head of the wife.” 5:22-24

    Timothy

    “Let the woman learn in silence with all subjection. But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.” 2:11-12

    Men are superior to women since Adam was made before, and sinned after, Eve. But even though women are inferior to men, they shouldn’t be discouraged because they shall “be saved in childbearing.” 2:14-15

    இன்னும் வாந்தியே வரும் விஷய்ங்கள் பென்களை பற்றி இருக்கு – எழதவே வருத்தமா இருக்கு

    தொடரும்

  95. இப்போது இந்தியரகலாகிய நாம் இயேசு சிலுவையில் தொங்கினார் , பிரேதம் …என்று மீண்டும், மீண்டும் சொல்லுவது நமது நாகரீகத்க்கு அழகு அல்ல.
    உண்மையை சொல்வது நாகரிகம் அற்ற செயலா?

    தொழுவத்தில் குழந்தையாக இருப்பதை இந்துக்கள் கும்பிடுவதற்கு ஆட்சேபனை இருக்கிறதா?
    இல்லைதான் ஆனாலும் தேவையற்றது. மீறினால் மதம் மாற்றபடுவீர் என்ற எச்சரிக்கை செய்யத்தான் வேண்டும், இங்கு பிரேதத்தை வணங்குவதால் கிடைக்கும் சைடு எபக்ட்ஸ் விளக்கப்பட்டுள்ளது.
    பூத பிரேதங்களை வழிபட்டால் அந்த உலகங்கலையே அடைய முடியும். இது கீதையின் வாக்கு.

    சுவாமி விவேகானந்தரே இந்துக்கள் சர்ச்சுக்கு போகிறார்கள், இது நல்லதே, என்று சொல்லி இருக்கிறார். பாரதியார் கூட இயேசுவை பாராட்டி இருக்கிறார். இந்து மதத்தில் நல்லிணக்கத்துக்கு முக்கிய இடம் இருகிறதே.

    சுவாமி விவேகானந்தரும் சர்ச்சுக்கு போகும் குப்பன் சுப்பனும் சம அளவு ஆன்ம பலம் உடையவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
    நல்லிணக்கமும் பிறர் நற்குணங்களையும் பாராட்டுவது நம் இயல்பே
    அதற்காக தவறனா வழியில் செல்பவருக்கு அறிவுரையாக வந்த கட்டுரையை எதிர்ப்போருக்கு தகுந்த பதில் தரவேண்டிய அவசியமும் இருக்கிறது.
    இயேசு சிலுவையில் அறைய பட்டது, சாக்ரடீஸ் விஷம் குடித்தது, திருப்பூர் குமரன் கொடியை விடாமல் மண்டை பிளக்கப் பட்டு இறந்தது… இவை எல்லாம் கொள்கை மேல் கொண்ட உறுதியை காட்டுகிறது.

    சிறந்த கொள்கை வீரர் அவ்வளவே.

  96. மரியம் ,

    உங்கள் ஆரிய வேதமாகிய மனு ஸ்ம்ருதியில் போய் பாருங்கள்

    பெரிசா சிரிச்சேன் ஸ்ம்ரிதி என்பது எப்படீங்க வேதமாகும். அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். சில்லிசாம் போன்றோர்கள் ப்லாக்கயும் சர்சிலும் சுவிசேச கூத்தில் சொல்லப்படும் பொய்யான விஷ்யங்களை தமிழ் ஹிந்துவில் வந்து கக்குவதால் என்ன லாபம்.

    வேதமாவது மூன்று (த்ரயி வித்யா) எனப்படுவது (ரிக் யஜுஸ் சாம). ஸ்ம்ருதி எனப்படுவது ஒரு சட்ட அமைப்பு. இது காலத்திற்க்கு எற்றார் போல மாற்றி எழுதப்படுவது. இன்றைக்கு அம்பெத்கார் தான் மனுவாகிவிட்டார்.

    வேத மந்திரத்தினால் யாகம் நடத்துவதால் பயன் இல்லை என்று முதலில் புத்தர் சொல்லவில்லை. இதை முதலில் சொன்னது வேதாந்தங்களே (அத்ர வேதா ந வேதா – ப்ரிஹுதாரன்யக உபநிஷத்) . அப்புரம் பகவத் கீதயில் க்ரிஷ்ணர் வரிக்கு வரி சொல்லி இருக்கிரார்.

    யாகங்கள் யாவும் பயன் கருதி செய்ய்பபடுவன. ஒரு ப்ரதிபலன் எதிர்பார்த்து செய்வதை நிறுத்தினால் தான் வீடு பேரு உண்டாகும் என்பது இதன் கருத்து. யாக்ங்களால் காசு பனம் கிடைக்கும், ஆரோக்யம் கிடைக்கும் அவ்வளவே. மருபடியும் மேம் புல் மேய்ந்து நீங்கள் அடிக்கும் பல்டி இதிலிருந்து தெரிகிறது.

    புத்தர் வந்த பிறகு யாகங்கள் க்ஷீநித்தது என்கிறீர்கள். புத்தத்தை தர்கத்தால் எதிர்கொண்டு வேத வேதாந்த மதம் வலுப்பெற்றது உங்களுக்கு தெரியாதா. போன வாரம் கூட கேரளாவில் ஒரு அதிரதரம் என்ற மாபெறும் யாகம் நிரைவேறியது. யாகங்களால் பயன் எக்க சக்கம் என்று இன்று விஞ்யானிகளே ஒத்து கொண்டு விட்டனர். அக்நி ஹோத்ரம் போன்ற தினமும் செய்யப்படும் ச்ரௌத யக்யங்கள் இன்று ஆஸ்திரேயாவிலும், ஜெர்மனியிலும் வெள்ளை காரர்களே தினமும் செய்கிறார்கள். இங்கே கொஞ்சம் பாருங்கள் -‘agnihotra.com.au/”

    இன்றைக்கு புத்தம் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டது. எங்களால் புத்தம், ஜைனம், சான்க்யம் போன்ற மதங்களை எதிர் கொள்ள முடிந்தது ஏன் என்றால்அவர்கள் எல்லோரும் வேற்று மத்ததவராகினும் நல்லவர்கலாகவும், வாஞ்சயாலும், மிரட்டியும், காசு பனம் கொடுத்தும், பொய் பித்தலாட்டங்கள் செய்தும் தங்கள் மதத்தை ஸ்தாபனம் செய்ய நினைக்கவில்லை. எல்லாமே நேர்மையான வாத ப்ரதி வாதங்கள் மூலம் நடைபெற்றது.

    வாத ப்ரதி வாதம் வைத்து முடிவு எட்டலாம் என்ற் க்ரிஸ்த்வமும் இஸ்லாமும் என்றைக்குமே முன் வராது, வந்தால் இருக்கிர இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்,அதனால் தான் மதம் பரப்ப அல்ப வழிகளை கையாலுகின்றனர். உலகிலே இந்த இரண்டு கூட்டமும் செய்வதை போல வேறு ஒருவருமே ஏன் செய்வதில்லை, ஏன் என்றால் அவர்கள் மதத்தில் ஆழம் இருக்கிறது. செமடிச் மதங்கலிள் கேவலங்கள் மட்டுமெ நிறைந்து காணப்படுகிறது.

    ஏதோ பாபிலோனா பற்றி கஷ்டப்படு கூகுல் செய்து போயும் போயும் விக்கிபீடியா சைட்டயா காட்டுவீங்க

    தொடரும் …

  97. கிறிஸ்தவர்கள் எத்தனை காலம்தான் நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்ற பல்லவியைப் பாடுவார்கள் என்று தெரியவில்லை. அது எப்படி சாத்தியமாகும் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையை விதைத்து விட்டு நெல்லை அறுவடை செய்ய முடியாது என்றால் புரிகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டில் பாவம் செய்யும் மக்களுக்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்வது அபத்தமாக இல்லையா? இயேசு கொலை செய்யப்பட்டது அவர் செய்த பாவங்களுக்காக. பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிள்தான் சொல்கிறது. அவர் என்ன பாவம் செய்தார்? யுதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு சென்று அவர்களின் வழிபாட்டுக்கெதிராக பேசினார். அவர் பேசியது தவறல்ல. அவர் பேசிய இடம் தவறு.

    பைபிள் மிகத் தெளிவாகவே இயேசு இஸ்ரவேலர்களை ரட்சிக்கவே பிறந்தார் என்று சொல்கிறது. காணாமல் போன ஆடுகளான இஸ்ரவேலர்களுக்காகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று அவரே சொல்கிறார். கர்த்தர் இஸ்ரவேலர்களின் ரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரவேலர்கள் என்று கூறப்படும் யுதர்கள் தற்போதும் இயேசுவை வணங்கவில்லை.

    ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் தன் சமுதாயத்திற்காக போராடி கொலைசெய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானால் வணங்குவார்கள். போற்றுவார்கள். மற்ற சமுதாயத்தைச் சேரந்தவர்களும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்வது சரியானதா?

    இதைவிட பெரிய அபத்தம். ஆதாம், ஏவாள் பரம்பரையில் இயேசு 76 -வது தலைமுறையில் பிறக்கிறார். அதன்படி பார்த்தால் ஆதாம், ஏவாள் படைக்கப்பட்டு ஆறாயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. அதிகபட்சம் பத்தாயிரம் ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டாலும் இன்றைய விஞ்ஞானம் உலகம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆவதாகக் கூறுகிறது. நிங்கள் பைபிளை நம்புவீர்களா? விஞ்ஞானத்தை நம்புவீர்களா?

    நம் நாட்டில் நம் கண் முன்னே வாழ்ந்து காட்டிய மகான்களை நம்பாமல் (பட்டினத்தாரை அரசன் கழுவில் ஏற்ற முனைந்தபோது கழுமரம் தீப்பற்றி எரிந்தது. கருவுர் சித்தரை அரசன் சிறையில் அடைத்தபோது மாயமாக மறைந்து விட்டார். வள்ளலார், சுந்தரர் போன்றோர் ஜோதியில் கலந்தவர்கள்) எங்கோ தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல் கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறி சிலுவையில் தொங்கிய இயேசுவை நம்பிக்கொண்டு பிரசாரம் செய்யும் இவர்களை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

  98. ரெபேக்கா அவர்களே,

    இயேசுவைச் சிலுவையில் கொன்றவர்கள் யூதர்கள் என்ற புதிய ஏற்பாட்டு வசனத்தை வைத்து யூத இன அழிப்பை நியாயப்படுத்திய சர்ச்சு காரர்களைப் போல,

    மனு ஸ்மிருதியை வைத்துக் கொண்டு யாரும் பெண்ணடிமைத் தனத்தை நியாயப்படுத்தியதாக வரலாற்றில் எங்குமே இல்லை.

    //
    ” கணவன் துராசாரம் உள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரிலோலனாய் இருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரியானவள் அவனை தெய்வமாக பூசிக்க வேண்டும்”
    ( மனு: 5 :154 )
    //

    இது மனு ஸ்மிருதியில் வரும் பொதுவான கருத்தாகும். பெண்ணடிமைத்தனத்துக்கு என்று ஏற்பட்டதல்ல. இந்த விதி ஆண்களுக்கும் தான்:

    2.225. The teacher, the father, the mother, and an elder brother must not be treated with disrespect, especially by a Brahmana, though one be grievously offended (by them).

    மனு ச்ம்ரிதியில் உள்ளவற்றை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுவதில்லை. என்ன கூற வருகிறேன் என்றால் அவரவர் தேவைக்கேற்ப மனு ஸ்மிருதியில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி “இந்த துயர நிலைக்கு மனு தான் காரணம்” என்று கூறுவதில் நியாயமில்லை. பெண்களைப் பற்றி பின்வருவனவற்றைக் கூட தான் மனு கூறியிருக்கிறார்:

    2.145. The teacher (akarya) is ten times more venerable than a sub-teacher (upadhyaya), the father a hundred times more than the teacher, but the mother a thousand times more than the father.

    3.55. Women must be honoured and adorned by their fathers, brothers, husbands, and brothers-in-law, who desire (their own) welfare.

    3.56. Where women are honoured, there the gods are pleased; but where they are not honoured, no sacred rite yields rewards.

    3.57. Where the female relations live in grief, the family soon wholly perishes; but that family where they are not unhappy ever prospers.

    3.58. The houses on which female relations, not being duly honoured, pronounce a curse, perish completely, as if destroyed by magic.

    3.59. Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.

    3.60. In that family, where the husband is pleased with his wife and the wife with her husband, happiness will assuredly be lasting.

    9.4 …and reprehensible is the son who does not protect his mother after her husband has died.

    9.90. Three years let a damsel wait, though she be marriageable; but after that time let her choose for herself a bridegroom (of) equal (caste and rank).

    9.91. If, being not given in marriage, she herself seeks a husband, she incurs no guilt, nor (does) he whom she weds.

    போதுமா?

    பொதுவாகப் பார்த்தாலும் சாஸ்திரங்களை நன்கு அறிந்த பரமாச்சாரியார்கள் ஆகிய சங்கரரோ, ராமானுஜரோ, யாரும் பெண்களைக் கொடூரமாக நடத்தியவர்கள் கிடையாது.

    இதெல்லாம் இருக்கட்டும். வியாசர் விஷ்ணு புராணத்தில் என்ன சொல்கிறார் என்று பார்த்தீர்களா?

    “It was once a matter of dispute amongst the sages, at what season the least moral merit obtained the greatest reward, and by whom it was most easily displayed…

    Munis heard him exclaim, “Excellent, excellent, is the Kali age!” Again he dived, and again rising, said in their hearing, “Well done, well done Śúdra; thou art happy!” Again he sank down, and as he once more emerged they heard him say, “Well done, well done, women; they are happy! who are more fortunate than they?

    “Riches are accumulated by men in modes not incompatible with their peculiar duties, and they are then to be bestowed upon the worthy, and expended in constant sacrifice. There is great trouble in their acquisition; great care in their preservation; great distress from the want of them; and great grief for their loss. Thus, eminent Brahmans, through these and other sources of anxiety, men attain their allotted spheres of Prajápati and the rest only by exceeding labour and suffering. This is not the case with women: a woman has only to honour her husband, in act, thought, and speech, to reach the same region to which he is elevated; and she thus accomplishes her object without any great exertion. This was the purport of my exclamation, ‘Well done!’ the third time.”

  99. My opinion is that it is not totally wrong for hindus to visit a church or a mosque, but it is not really needed bcos for every question, hinduism has an answer, even for atheists.

    Other relegions become uncomfortable when confronted by atheists.

    As for the hate propoganda by christians against hinduism, I have witnessed it myself. U need not go to churches for this. Just attend the morning school prayer meetings of christian schools in chennai, you will know.

    Another thing I have noticed amongst christians is their obsession for conversion.

    I had a christian friend by name Daniel in engg college.

    Every friday afternooon, he would painstakingly meet all his friends & simply tell them to attend a meeting in beach the next day. If queried about what the mtg was about, he would simply say ” U come, U will like it, it will give U peace of mind”.

    Most of his friends ignored him but he would painstakingly do this every week.

    Another friend by name John told me a very funny thing. He said “Kripananda warriar (famous for his discourses on hinduism) actually admitted to christian missionaries that Jesus was the only true God but expressed his helplessness in saying the truth since he would be exposed before the people”.

    I laughed when he told me this.

    As for Islam berading hindusim, it is happening late night every night in TV channels like WIN tv, makkal tv etc.,

    Forget about what christianity or Islam tells us, the followers (at least a majority of them) unfortunately are doing wrong.

  100. அன்புள்ள தமிழ் இந்து தள்த்தினருக்கும் ஆர் கோபால் அவர்களுக்கும்.

    இது ஒரு நல்ல செய்தி. இதனால் பலரும் பலனடைவார்கள்.

    இதே போல எங்கள் வீட்டிலும் நடந்தது என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எங்களது வீட்டில் எங்கள் தாயாருக்கு நிறைய கிறிஸ்துவ பெண்மணிகள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சர்ச்சுக்குக்கூட போவார்கள். இந்த நட்பால் சகாயமாதா படம் எங்கள் வீட்டுக்கு வந்தது. சகாயமாதா என்ற மேரி, குழந்தை ஏசு படம். நாங்கள் இந்துவாக இருந்தாலும் அது சுவற்றில் தொங்கிகொண்டிருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக வீட்டில் தொந்தரவுகள் ஆரம்பித்தன. இறுதியில் மிகவும் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வாழமுடியாமல் அதனை வாடகைக்கு விட்டுவிட்டு குடிசைக்கு வந்தோம். அப்போதும் அந்த படம் வீட்டில் இருந்தது. இறுதியில் வீட்டையும் குடிசையையும் விற்றுவிட்டு வேறொரு ஊருக்கு சென்று தங்கும்படி நேர்ந்தது. அவ்வாறு வீடு மாரும்போது அந்த படம் எங்கே போனது என்று தெரியவில்லை. அங்கே எங்கள் தாயார் புதிய நண்பர்களை பெற்றார். அதன் மூலம் தினசரி பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். வீட்டில் பழைய சந்தோஷமும் நிம்மதியும் திரும்பியது.

    அன்று எங்களுக்கு இந்து மத பெரியோர்கள் அந்த காலத்தில் இது போல அறிவுரை கூறியிருந்தார்கள் என்றால் பல அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.

    நன்றி

  101. vanakkam,
    marriam avarkalai vetham veru smruthi veru muthalil purunthukollungal. thiravidam enpathu nilapparappai vaithu sollappadum oru sollu, athusari tamillan krustinanal aariathesaththil ulla krustin ningal ethuppavara. sankrit elakkanam nangku padiththavara.( tamilil thirukural padum padukku oru sinna ootharam kalangar ezhuthia urai) visaiyam eppadi erukka ningal sankrit seillukku urai kandu padithathil enakku santhayaththai uruvakkirathu our Vellai veeramamunivar pondrur ouraiy padithirupir polum. nan samivathil our nul padiththan athil viviliyathil ullakaruthukkal aththanaium esu krusthu kuravillayame therkku ungal karuthu enna?

  102. ”JESUS DIED FOR THE SINS OF ALL HUMANS, SO, CHRISTIANS NEED NOT BE BORN AGAIN TO PAY FOR THEIR MISDEEDS AS CHRIST HAS ALREADY COMPENSATED FOR THEM”.

    So now all Christians can go on sinning and no need to repent as Christ has already made them sinless without fearing any consequences. Jesus did never come on earth just to die for the sins of others, neither he die voluntarily, but was crucified by the Romans and Jews. So, how could Jesus wash away all of Christendom’s sins? Jesus did not want to die, but, wanted to live is visible in Mathew 27:46 when he cries out, “My God, My God, why hast though forsaken me?” If, Jesus just bluffed when he said that, he and Jehovah were the same, then, how can a false Son of God ever wipe off any sins?

    DOES A TRUE DIVING BEING EVER FEAR DEATH AS JESUS DID WHEN HE WAS DYING ON THE CROSS ????

    1. If, God’s Spirit had departed from Jesus is he not unfit for worship?
    2. How did Jesus feel the pain of all the worlds varies sins while dying?
    3. How could Jesus have cleansed the sins of unborn future generations ?
    4. Did Jesus dies even for the sins of Christian mass-murders making innocent and liberated?
    5. As per the Bible, all their sins of all the Christians existing and potential have been WHITE WASHED BY JESUS!!
    6. So, why do Christians still die everyday?
    7. If, Jehovah is causing the deaths of Christians even after Jesus paid the wages of their sins, this means both Jehovah and Jesus are fickle minded and cannot be trusted when it comes to redeeming sins!
    8. If, Jesus died spiritually, then, it means he was a hollow entity and he cannot ever siphon off the sins of mankind?
    9. How can such a fake Godman whom a little sin separated from Jehovah, salvage souls?
    10. If, Jehovah is in every Christen, then how is he born sinner?
    11. And, if, a born again Christian is not an eternal sinner, why does he need Jesus assurance?
    12. Where is the specialty of Jesus death, except that, he attained martyrdom for his cult?
    13. Then, why does not the death of the millions of creature and revolutionaries every day cleanse this cosmos of all sins and evils?
    14. If, Jesus died for the sins of all Christians, then, why do Christians get A.D.D.S, go to jail, get executed, get penalized, excommunicated, defrocked, fined, reprimanded, sued etc., ?
    15. How can Jesus salvage the souls of others, when he could not shield himself?

    SEMITIC RELIGIONS NEVER BELIVED IN REBIRTH THEORY

    (Copied from Hindu Voice April issue)

  103. (Copied from Hindu Voice April issue)

    A FEW MORE QUERIES TO THE CHURCH:-

    1. Why does Jesus give birth to more men?
    2. Why does Jesus make a man take birth in an elite nation like England and the other in the Thar where life is impossible?
    3. Why are some spirits born as insects, worms, plants, animals and some as humans?
    4. Why are some humans diabolical and others pious? If, Satan makes them evil, then, what is purpose of having Jesus?
    5. Why do some men have fame, intellect, wealth, power while others are not?
    6. Why different men have varying talent and interests?
    7. Why are children born mad, deformed, handicapped?
    8. Why bad things do happens to good persons, and sometimes, the evil ones live a luxurious life?
    9. If, spirits are immortal, then, from before and after a birth what happens to them?
    10. If, after death, a spirit rests eternally in its tomb, then, from where are these new born Christians produced daily?
    11. How wills Jehovah’s heavenly mansion, accommodate all the souls?
    12. Can a Christian ascend to heaven in flesh? If yes, then, how is he inferior to Jesus?
    13. Does not the biblical doomsday, echo the Hindu idea of Mahapralaya?
    14. After the biblical deluge, from where did Jehovah create the human souls?
    15. Ca a sinner go to Christian heaven, just by converting?

  104. //தமிழ் வருட பிறப்பு கொண்டாடியதுண்டா? தையிலாவது அதற்காக சிறப்பு வழிபாடு செய்ததுண்டா?
    தமிழர் என்ற உணர்வுடன் ஆங்கில வருட பிறப்பு கொண்டாடாமல் புறக்கனித்ததுண்டா//

    திரு. திராவிடன்
    ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் என்ற முறையில் நான் இயேசு பிறந்த ஆங்கில வருட பிறப்பை கொண்டாடுகிறேன்.. அதே போல ஒரு தமிழராக தை முதல்நாளான தமிழ் புத்தாண்டையும் பொங்கல் பண்டிகையையும் நான் என் குடும்பத்துடன் வெகு விமர்சையாக பெருமையுடன் கொண்டாடுகிறேன்.. அன்றைய நாளில் சர்க்கரை பொங்கல் செய்து இறைவனுக்கு படைத்தது. “விவசாயிகளுக்கு நிறைய விளைச்சலை கொடுத்து தமிழ்நாடு உணவு பஞ்சம் இல்லாமல் செழிப்போடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் பிரார்தனை செய்து கொண்டாடுகிறேன்… கவலை வேண்டாம்… இன்னொன்று சொல்லவா பள்ளி கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கு தமிழுணர்வு உண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதும் தமிழ் தாய் வாழ்த்து தான் என் தேசிய கீதம் மறந்தும் கூட ஒரு வங்காளி எழுதிய அர்த்தம் தெரியாத ( பொருள் தெரிந்தாலும் கூட) தேசிய கீதத்திற்கு என்றுமே நான் எழுந்து நின்று தலை வணங்கியது இல்லை ….. நன்றி ஆமென் ….

    திரு சாரங் …..

    உங்கள் பதில்களுக்கு நன்றி….கிறிஸ்துவத்தை காப்பாற்ற 120 கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது ஆனால் பாவம் உங்க இந்து மதத்தை காப்பாற்ற இந்திய துணை கண்டதை விட்டால் வேறு வழி இல்லை.. ஆகையால் நீங்கள் வருத்தபடுவதிலோ கிறிஸ்துவத்தை திட்டிதீர்பதிலோ கவலை பட ஒன்றும் இல்லை .. நிச்சயம் ஒன்று சொல்லவா கோபத்தில் சொல்லவதாக எடுத்து கொள்ள வேண்டாம்.. உங்கள் ஆரிய மதத்திற்கு முடிவுரை எழுத போவது ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் தான் பொறுத்திருந்து பாருங்கள்… நிச்சயம் இந்த இரு பெரும் மதங்கள் இவ்வுலகில் இருக்கும் வரை நீங்கள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ உங்கள் நச்சு பிடித்த கேவலமான் ஹிந்துத்துவா கொள்கையை நிலை நாட்டவே முடியாது. இது போன்ற இணைய தளங்களில் கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான்.. எந்த பலனும் இருக்காது … தமிழர்கள் ஆரிய சூழ்ச்சிக்கு பறிகொடுத்த தங்கள் இன அடையாளத்தை நிச்சயம் மீட்பார்கள்…பொறுத்து இருந்து பாருங்கள் தமிழர்களின் மண் ஆண்டவரின் அருளால் அவர்களுக்கு கிடைக்கபெறும்… அப்போது உங்கள் ஆரிய மதம் செத்த வடமொழியை போல் ஏட்டுக்குள் சுருங்கும்… ஆகாது என்று மட்டும் நினைக்க வேண்டாம் பொறுத்து இருந்து பாருங்கள் உங்கள் ஆரிய கொள்கைகள் செல்லரிபதை .. இது ஆண்டவரின் ஆணை…. ஆமென்… .

  105. //சுவாமி விவேகானந்தரும் சர்ச்சுக்கு போகும் குப்பன் சுப்பனும் சம அளவு ஆன்ம பலம் உடையவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?//

    அவர்களை ஆன்மீக பலம் உள்ளவர்களாக ஆக்குங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை.

    ஒவ்வொரு இந்துவும் கோட்பாட்டின் அடிப்படையில் அனுமனிடமோ, ஐயப்பனிடமோ, முருகனிடமோ…. உணர்வு ரீதியாக தொடர்பு கொள்ள வைத்து, இந்து மதத்தின் கருத்துக்களை அவர்கள் தெரிந்து கொள்ளுமாறு செய்யுங்கள். இதுதான் நம் முன்னே உள்ள முக்கிய பணி. அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும், இதுதான் முக்கியம், ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு இந்துக்கள் முன்னேருகிறார்களோ, அந்த அளவுக்கு இந்து மதம் வலிமை பெரும்.

    வெறுப்பு வேண்டாம் ,சிநேகம் வேண்டும் என்று சொல்லுகிற மதமாக இந்து மதம் உள்ளது. என்னை வணங்காவிட்டால் நீ நரகம் போவாய் என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை, நான் ஒரு இனத்துக்காக மற்ற இனங்களை அழிப்பேன் என்று இந்துக் கடவுளும் சொல்லவில்லை.

    இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் வேறு மதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை என தெரிந்து கொள்வான். இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் இந்துவாக இருந்து கொண்டே தான் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியும் என தெரிந்து கொள்வான்.

    ஒரு சரியான இந்து ஒரு சரியான கிரிஸ்துவனுமாவான், ,ஒரு சரியான கிறிஸ்தவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்.

    நீங்கள் இயேசுவை பார்க்காதே, அவர் சொல்வதை கேட்காதே என்று கண்டிப்பு காட்டி இஸ்லாமிய பாணியில் செயல் பட்டால், அப்பாவியான அவனை மத சகிப்புத் தன்மை அழிப்பு பிரச்சாகர்கள், சமயம் பார்த்து மத வெறி வலையில் சிக்க வைத்து விடுவார்கள். அவனை மீண்டும் சகிப்புத் தன்மை உடையவனாக ஆக்குவது மிக கடினமான வேலையாகும்.

    சுவாமி விவேகானந்தர் இந்துக்கள் சர்ச்சுக்கு போகிறார்கள், அது நல்லதே என்று சொன்னது குப்பன், சுப்பன் போன்ற சாதாரண இந்துக்களை தான்.

    ஆன்மீக வலிமை உடைய நானும், பாரதியாரும் சர்ச்சுக்கு போகிறோம், நீங்கள் பிற மதங்களைப் பார்த்தல் கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.

    ஒவ்வொரு இந்துவையும் சுவாமி விவேகானந்தர் அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும், சரியான இந்துவாக ஆக்க முடியும். அதை செய்ய முடிந்தால் செய்வோம். இல்லாவிட்டால் சாக்கு போக்கு சொல்லாமல் சும்மா இருப்போம்.

  106. இராமன் கடவுள் என்பதற்காக மக்கள் இராமனுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. இன்றைக்கு உலகில் இருக்கும் யாரும் எந்தக் கடவுளையும் பார்க்கவுமில்லை. கடவுள் என்று ஒருவர் இருப்பதற்க்கான சரி பார்த்துக் கொள்ள கூடிய நிரூபணம் எதையு யாரும் தரவும் இல்லை. சரி கடவுள் இருப்பதாக நம்பிக் கொண்டு அமைதியாக தொழுது கொள்வதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் இந்தக் ”கடவுளை’ தான் கும்பிடனும் , அந்தக் ” கடவுள்” ஜீவனில்லை என அடாவடி செய்து அன்று வாளை வைத்து சண்டை போட்டு , இன்று புது ஆயதங்களுடன்.

    இராமனை தசரதனோ, சுமேந்திரரோ, குகனோ, ஜடாயுவோ, அனுமனோ, விபீஷணனோ…, அவர் கடவுளா இல்லையா என்று எல்லாம் ஆராயவில்லை. இவ்வளவு நல்லவர், இவ்வளவு கஷ்டம் வந்த போதும், அவற்றை ஏற்று மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் அனுபவிப்பவர், அவர் இவ்வளவு கஷ்டமா, என்று அவருக்கான பணியில் தன்னை ஈடு படுத்திக் கொண்டனர்.

    பிரதிபலன் எதிரபாராத அன்பு பக்தி அனுமனுடையது. இவர் கடவுள் இவர் நமக்கு சொர்க்கத்தில் இடம் தருவார் என்று அவர்கள் செயல் படவில்லை. தன கணவனின் துன்பத்தில் பங்கெடுக்க காட்டுக்கு வந்த அன்பு தெய்வம் சீதையை விட்டு வைக்காத காம கொடூர எதேச்சதிகார இராவணன் இடம் இருந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

    கடலைக் கடக்க அறிவியல் முறைப் படி பாலம் கட்டி சென்றால் அதைப் பார்த்து கேலி செய்து சிரிக்க வேண்டும்.

    கடல் இரண்டாகப் பிரிந்து நீர் இரண்டு பக்கமும் சுவர் போல நிற்க நடவிலே நடந்து சென்றார் என சொன்னால், கேள்வி கேட்காமல் , மரியாதையுடன் ஒத்துக் கொள்ள வேண்டும், அப்படி நடக்குமா என்றால் இவன் தேவ தூஷணம் செய்தான் என்பார்கள்.

    (to be continued)

  107. Jesus not dead in cross, he was saved by others, his body was buried at Bagal kong in Kashmir. if you know more about it please read around page no:152 in the book of Osho “en ilamai kala anupavankal”.

  108. respected mariyam,
    even wrong messages are in Manu Smruthi hindus are not following it. but your people? they are following bible and Christianity as a foolish, they are not questioning against bible (or) it’s wrong stories and informations. you don’t respect your mother father’s culture or country also and you are not proud about an Indian, then how we can expect to give the respect for our mother religion from you?

  109. தமிழ் இந்து ஆசிரியருக்கு – நான் கிருஸ்துவர்கள் பாவ பிண்டங்கள் அவர்கள் ஏசு என்ற சவ[..]த்தை வணங்கினால் தவறு இல்லை. இந்துக்கள் வணங்குவதுதான் தவறு என்று எழுதிய மறுமொழியை வெளியிட தயங்கி தாமதபடுத்தி வெளியிட்டீர்கள். ஆனால் இங்கே மூளை மழுங்கிய இரண்டு […] கிருஸ்துவர்[..]கள் அநாகரிகமாக வாய்க்கு வந்தபடி உளரி கொட்டுகிறார்கள். அதை ஏன் வெளியிடுகீறிர்கள் என்று தெரியவில்லை.

    இங்கே நான் வெளியிடும் ஆ-நாகரிகமான மறுமொழியையும் வெளியிடுங்கள்.

    ஆரியர்கள் வந்ததும்தான் தமிழ் நாட்டிற்கு சனி பிடித்ததாம் – என்னே கொலம்பஸ் கண்டுபிடிப்பு. ஆரியர் திராவிடர் என்பது இனம் அல்ல எல்லோரும் தமிழர்கள் என்று எத்தனை முறை கூறுவது. ஆரிய பார்பானும் இருக்கிறான் திராவிட பார்பானும் இருக்கிறான். அதைபோல் ஆரிய திராவிட மற்ற வர்ணத்தாரும் இருக்கிறார்கள். உண்மை சரித்திரத்தை ஆராய்ந்தால் ஆரிய திராவிட பார்பனன் சத்திய யுகம் தொட்டு இங்கே வாழ்ந்து வருகிறான் என்பதுதான் உண்மை.

    1. 1000 ஆண்டுகளுக்குமேல் நம்மை அடிமைப்படுத்தி வந்த அன்னிய மிலேச மதங்கள்தான் நாட்டை பிடித்த முதலாவது சனியன்
    2. 1871 ஆம் ஆண்டு கிருஸ்துவ அதிகாரி ஜேம்ஸ் ஸ்டீபன் கொண்டுவந்த குற்ற பரம்பரை சட்டம் நாட்டை பிடித்த இரண்டாவது சனியன். அன்று நாட்டின் ஜனதொகை 26 கோடி இதில் 6 கோடி ஜனங்களை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவந்து கேவலமான முறையில் அடிமைபடுத்தி தீண்டதகாதவர்களாக ஒதுக்கி வைத்து அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தனர்.
    3. தமிழ் என்றும் திராவிடம் என்றும் பொய்உரை சொல்லி தன் முன்னோர்கள் கட்டிகாத்து வளர்த்த மதத்தை (அதாவது தங்கள் தாயையே விலைபேசி) மதம் மாறியவர்கள்தான் தமிழ் நாட்டை பிடித்த முன்றாவது சனியன்.
    4. இப்படி அடிமைப்பட்டு தன்மானம் இழந்து தாழ்வு மனப்பான்மையால் அன்னியனுக்கு காவடி தூக்குவதையே பரம்பரை குணமாக கொண்டு வளர்ந்து வந்த திராவிட கழகங்கள்தான் நான்காவது சனியன்.
    5. விடிவு கிடைக்கும் என்று கழகங்கள் பின் சென்ற ஒரு பெரும் கூட்டம் தான் நாட்டை பிடித்த ஐந்தாவது சனியன்.
    6. போலி மதவாதம் பேசியே இன்று வரை நாட்டை ஆண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருக்கும் காங்கிரஸ் (பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான் – ஏழை மேலும் ஏழையாகிறான்) நாட்டை பிடித்த ஆறாவது சனியன்.
    7. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு அன்னிய கிருஸ்துவ பெண் இன்று மறைமுகமாக இந்தியாவை அடிமைபடுத்தி ஆண்டுகொண்டு இந்தியாவை உலக அரங்கில் ஊழல் செய்வதில் முதல் இடத்தை பிடித்துக்கொடுத்த சோனியா நாட்டை பிடித்த ஏழாவது சனியன்
    8. மிச்கம் உள்ள அரை சனி யார் என்பதை நான் விளக்க தேவை இல்லை

    இப்பொழுதாவது நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் கட்டிகாத்த தாய் மதத்தையும் தாய் நாட்டையும் நேசியுங்கள். உண்மையான உங்கள் சகோதர மதத்திற்கு திரும்புங்கள்.

    [Edited and published]

  110. Fantastic reply Mr Sarang. Thank you. A nice reply to Mr Tiruchikaran by Dravidan, Thank you.The last thing we need is this bleeding heart Hindus.
    Do you think we should stop this rebuttal at this stage? I can see our friend Rebeca Mariam crying her eyes out, sittiing alone in the corner, clutching her cadaver chain and banging her head against the wall, crying” Karthare, Karthare”.
    Please have pity on her please!!!!!

  111. christians who regularly go to church, when they come out of church, we can see their faces are in sober mood with grim look as if they are possessed by some spirit. Yes many sinners who die their dead bodies are brought to church for ” funeral services’ every day and hence their spirits atomosphire spoil the mind and thoughts of church attenders. If your children goes to good school where they are tought good education and good culture ( our hindu culture like music,
    devotion, prayers and dances, story telling ect ) they would come up in life as good citizens if they read and write mother language. if children goes to convents, they would learn english and their mentality is to go abroad and settle leaving the parents in lurch becouse it is the culure of christians since they are tought lessons by foreign missionaries.
    some years ago, when i was staying in a hotel at tuticorin, there were many foreign priests or pasters ( from poland) to attend the church ‘ther ” or car festival ( copied from hinduism), when i was watching in the lobby, lot of indian priests came in ”Q’ one by one to put down knee below
    ( mandiyedal ) and kiss the pasters from poland who were sitting in sofas. This thought reminded me of old british rule when indians were the slaves. christianity was started by a man – st paul to control the entire world under Rome and now followed by british/europeans and americans to expland their colonical rule. Pity some hindus are converting to this devil hunted cult for the sake of money without any pride of being the son of soil without realing that christianity came from a desert region just started before 2000 years ago.

  112. ஆசிரியர் குழுவிற்கு,

    கட்டுரைக்கு சம்பந்தமில்லாத, நூறு சதவிகிதம் வடிகட்டிய இனவெறியும் வயிர்றேரிச்ச்சலும் காழ்ப்புணர்வும் கொண்ட பின்வரும் பதிவைப் பதிப்பித்து எதற்கு? கிறித்தவ வெறியர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதைக் காட்டவா?

    // உங்கள் பதில்களுக்கு நன்றி….கிறிஸ்துவத்தை காப்பாற்ற 120 கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது ஆனால் பாவம் உங்க இந்து மதத்தை காப்பாற்ற இந்திய துணை கண்டதை விட்டால் வேறு வழி இல்லை.. ஆகையால் நீங்கள் வருத்தபடுவதிலோ கிறிஸ்துவத்தை திட்டிதீர்பதிலோ கவலை பட ஒன்றும் இல்லை .. நிச்சயம் ஒன்று சொல்லவா கோபத்தில் சொல்லவதாக எடுத்து கொள்ள வேண்டாம்.. உங்கள் ஆரிய மதத்திற்கு முடிவுரை எழுத போவது ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் தான் பொறுத்திருந்து பாருங்கள்… நிச்சயம் இந்த இரு பெரும் மதங்கள் இவ்வுலகில் இருக்கும் வரை நீங்கள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ உங்கள் நச்சு பிடித்த கேவலமான் ஹிந்துத்துவா கொள்கையை நிலை நாட்டவே முடியாது. இது போன்ற இணைய தளங்களில் கத்தி கொண்டே இருக்க வேண்டியது தான்.. எந்த பலனும் இருக்காது … தமிழர்கள் ஆரிய சூழ்ச்சிக்கு பறிகொடுத்த தங்கள் இன அடையாளத்தை நிச்சயம் மீட்பார்கள்…பொறுத்து இருந்து பாருங்கள் தமிழர்களின் மண் ஆண்டவரின் அருளால் அவர்களுக்கு கிடைக்கபெறும்… அப்போது உங்கள் ஆரிய மதம் செத்த வடமொழியை போல் ஏட்டுக்குள் சுருங்கும்… ஆகாது என்று மட்டும் நினைக்க வேண்டாம் பொறுத்து இருந்து பாருங்கள் உங்கள் ஆரிய கொள்கைகள் செல்லரிபதை .. இது ஆண்டவரின் ஆணை…. ஆமென்… . //

  113. // மறந்தும் கூட ஒரு வங்காளி எழுதிய அர்த்தம் தெரியாத ( பொருள் தெரிந்தாலும் கூட) தேசிய கீதத்திற்கு என்றுமே நான் எழுந்து நின்று தலை வணங்கியது இல்லை ….. நன்றி ஆமென் …. //

    இந்த தேச்ச துரோகியை நாடு கடத்தி பாலஸ்தீனத்திற்கு அனுப்பினால் தான் என்ன பாவம் வரும்?

  114. ரெபோக்கே மரியம் அக்கா,
    உங்களின் தமிழ் உணர்வு புல்லரிக்க வைக்குது போங்கள், தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி, ஒரு இந்தியராக நீங்கள் தெரியவில்லை. இந்திய தேசிய கீதத்தை மதிக்காத நீங்கள் ஒரு இந்தியராக இருக்க தகுதி இல்லாதவர். இதனை பெருமையோடு வேறு சொல்கிறீர். நீங்கள் ஓட்டளிக்கும் வாக்காளர் அடையாள அட்டையிலிருந்து, உங்கள் கடவு சீட்டு எல்லாமே இந்திய அரசாங்கத்தின் ஆவணங்கள்.அவற்றை துறந்துவிட தயாரா? உங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் இடஒதுக்கிடு வேறு, தலையில் அடித்து கொள்ளவேண்டும் போல இருக்கிறது.
    தேசிய கீதத்தை அவமதிக்கும் உங்களை எல்லாம் என்ன செய்வது?
    அய்யோ இப்படியா போகும் கிறித்தவ கான்சரால் தாக்கப்பட்ட புத்தி.
    இந்திய அரசாங்கத்தின் எல்லா சலுகைகளையும் அனுபவித்து கொண்டு, இந்திய அரசாங்கத்தின் தயவில் இங்கே வாழ்ந்து கொண்டு தேசிய கீதத்தை மதிக்கமாட்டேன் தலை வணங்கமாட்டேன் என்கிறீர்களே, உங்களை எல்லாம் சட்டப்படி தண்டிக்கும் அளவு சட்டங்கள் கொண்டு வரவேண்டும்.
    இந்தியாவை அவமதிக்கும் நீங்கள் இங்கே இருக்கவே தகுதி இல்லாதவர்.

    பிணத்துக்கு பாடும் பாடல்களுக்கு தலை வணங்கும் நீங்கள் இந்திய மாதாவுக்கான கீதத்திற்கு எப்படி தலை வணங்குவீர்கள்?

    உங்களின் வணக்கத்தை தமிழ் தாய் மட்டும் ஏற்றுகொள்வாளா?ஏனென்றால் இது வெறும் ஆதாயம் கருதிய நடிப்பு.
    மேலும் இங்கு ஆரிய மதம் என்று எதுவும் இல்லை. இங்கு இருப்பது சனாதன தர்மம். தமிழ் மேல் பாசம் இருப்பது போல நடிக்கிறீர்களே, தமிழர் நிலத்தை ஐந்தாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளரை கடவுளாக வணங்கி வருவது தொன்று தொட்டு உள்ள மரபு.
    அந்த கடவுள்கள் தாம் உண்மையான தமிழ் கடவுள்கள் அவர்களை வணங்குவீரா? தமிழ் பற்றாளரே.
    எங்கிருந்தோ வந்து பணத்தை கொடுத்து சில கிலோ அரிசி மற்றும் ஏதாவது கொடுத்து மதம் என்ற பெயரில் கான்சர் வியாதியை பரப்பிய கூட்டத்தின் கதையை வைத்து கொண்டு இங்கு வந்து உளறாதீர்கள்.
    கிறித்தவ மதம் தமிழ் மண்ணில் அழிந்து மண்ணை கவ்வும். உலகம் எல்லாம் வென்ற அயோக்யர்களின் வரலாறு மிக கேவலமாக தான் அமையும். உலகம் பூர ஆட்டிபடைக்கும் ஆள் பலம் ஆயுத பலம் நிறைந்த திமிரில் இங்கு வந்து கூச்சல் போடாதீர்கள்.
    நீரும் உம கூட்டமும் மண்ணை கவ்வும் அதுவும் இந்த தமிழ் மண்ணில்.

  115. you too agreed with mr kantharvan’s answers. and starts vommitting ur stomach burns helplessly.
    u r not able to with stand his answers thats why u starts cry.
    all chiristian countries are now changing in to hinduism , dont you know the reality. who told only indians are following hinduism? followers are ther in west also.
    i met several persons from europe who visited india for its pilgrim values, and they said they are interested indian hindu culture and moral values.
    dont worry with in half century all ur christian countries will changed into hinduism.

  116. ///you too agreed with mr kantharvan’s answers///sorry this should be typed as kantharvan and saarang’s answers

  117. Mr. Rama….

    There is no need for me to cry in front of Christ for your all mean minded Hindu fanatic comments posted in here … since i truly tell you in the name of christ that peoples of Tamilnadu will one day Dumb away your barbaric Aryan myth and come to the right path of Jesus Christ soon and there is no second thought in that. Mr. Rama and other Aryan&co here all i have to tell you is only one… kindly be grateful to the British Christians who came to rule this subcontinent and created a nation called India for their ease of rule .. and finally which they gave it to you. Only it is the British education ( Western Education in your words) and English language united you peoples of this Indian subcontinent and made you to fight against the British power to get freedom not your devabaasha corpus sanskrit .. Indirectly it is the British education which helped you to get interact with each other easily and worked to obtain freedom and definitely not your Arya gurukula education… Even Swami vivekananda has achieved his goal of spreading Hinduism in western nation just because of western education and coz of English language not because of dead language sanskrit.. so dont think yourself as indian cultural saviours. you peoples are just hindu fanatics thats it..
    well before i take a leave from you all ungrateful fanatics.. i would like to remember you a quote which is said by mahatma gandhi ….
    “If Christians would really live according to the teachings of Christ, as found in the Bible, all of India would be Christian today.”
    And this will come true with in 2 to 3 decades in tamilnadu and you’ll all witness it soon.. Amen.

  118. ரெபெக்க,

    🙂 ரொம்ப சிரிப்பு வந்திச்சு. சுமார் பத்தாயிரம் (வரலாறு தெரிஞ்சு) வருடங்கள் ஹிந்து மதம் தழைத்தாகிவிட்டது, அது பல மதங்களின் கல்லறைகளை பார்த்துவிட்டது. நல்ல மதங்களை தன்னுடன் சேர்த்து வாழ வைத்தாகிவிட்டது. உங்களால் ஒன்னும் செய்துவிட முடியாது.

    கொஞ்சம் மேற்கே திரும்பி மூளை உள்ள மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். எல்லோரும் கொத்துக் கொத்தாக தாங்களாகவே வேதாந்த மதத்தையோ, புத்த மதத்தையோ (குறிப்பாக ஜென்) தழுவுகிரார்கள்.

    stphen-knapp.com

    stephen knapp என்ற புத்திசாலி அமேரிக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா. கிறிஸ்தவமும், இஸ்லாமுமையும் வைத்து கொண்டு அல்லே லூய மட்டுமே பாட முடியும் அது ஒரு conciousness நிலையை எட்ட உதவே உதவாது.

    david frawley என்பவிரின் https://www.vedanet.com/ படிக்கவும்.

    European academy of vedic sciences https://www.veda-academy.com/

    அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்று பலர் வேதாந்த மதத்தை முழுமையாக ஏற்றாகிவிட்டது. அவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா அறிவுடையவர்கள் வேதாந்த மதத்தை தான் போற்றுவார்கள் என்று.

    ஒரு கேள்விக்கு கூட உருப்படியான பதில காணோம். வெட்கமே இல்லாமல் மண் வாரி இறைப்பதனால் பயன் உண்டோ.

    விவில்யத்தில் பென்கள் அப்படியே கொண்டாடப்படுகிறார்கள் என்றீர்கள். கொடுத்த வசனங்களைப் படித்தீர்களா. பெண்களை பற்றி பாலியல் ரீதியாகவும், அடிமைத்தன ரீதியாகவும் எத்தனை எத்தனை வசனங்கள். ஒரு பெண்ணாக இதை படிப்பதற்கு உங்களக்கு மன வருத்தம் கூட இல்லை.
    அதிலும் நான் ஒரு 10% தான் கொடுத்திருந்தேன். பாக்கி எல்லாம் தமிழ் சினிமாவில் பெண்களை கேவலாமாக வர்ணித்து வரும் பாடல் வரிகளை விட மோசம்.

    ஒரு நண்பரிடம் இந்த கட்டுரையை பற்றியும் உங்கள் பதில்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் சொன்னேன், ரேபக்காவுக்கு கொஞ்சமாவது யோசிக்கும் திறன் இருந்தால், நாம் கொடுத்த பதில்கள் அவரை சிந்திக்கவாவது வைக்கும் என்று. அவர் சொன்னார் நான் சத்தியம் செய்கிறேன் இவர்கள் எல்லாம் மூளை மழுங்கியவர்கள் வாய்ப்பே இல்லை என்று. உங்களது சமிபத்திய பதில் என் நண்பர் சொன்னதை எப்படி உண்மையாக்கிவிட்டது பார்த்தீர்களா.

    உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் – நாங்கள் கேட்ட கேள்விகள் சிலதுக்காவது பதில் எழுதிவிட்டு பிறகு உங்கள் சேற்றை இறைக்கும் வேலையே தொடருங்கள்.

    நீங்கள் கட்டுவது மணல் கோட்டை – இஸ்லாமும் கிறிஸ்தவமும் மாபெரும் மதங்களாம். முடியவே இல்ல. விவில்யத்திலாவது 80% தான் குதர்க்கம். புனித குரானில் அது 95%

    உங்களால் நியாமான முறையில் ஹிந்து மதத்தை ஒன்னும் செய்து விட முடியாது. கழகங்கள் காசு கொடுத்து ஒட்டு வாங்குவது போல எவ்வளவு பணத்தை இது வரை இந்தியாவில் கொட்டி உள்ளீர்கள். உங்களால் என்ன முடிந்தது . அரை வேக்காடுகளையும், அப்பாவிகளையும் தான் மத மாற்றம் செய்ய முடிந்தது.

    மக்கள் ஒரு சில முறை காசுக்கு ஒட்டு போடுவார்கள், அப்புரம் காசு வாங்கிகிட்டு தங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். இது மாதிரி தான் உங்க நிலைமயும், எற்கனவே சர்சுல காச வாங்கிகிட்டு வீட்டுல மருபடியும் பில்லையார கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க

    விவில்யத்தியா பற்றி மேற்கில் பல ஆயிரம் சைட்டமைத்து காரி துப்புகிறார்கள்

    கிறிஸ்தவத்தையும், இஸ்லாமையும் வைத்து கொண்டு மனிதன் விழிப்ப்புணர்வு அடையமுடியாது. அவை அடிமை தனத்தையே வளர்க்கும்

    செத்த வட மொழியாம் – ஹி ஹி இல்லைங்க அது சுத்த வட மொழி

    இன்றைக்கு கழகங்கள் ஆளும் தமிழ் நாட்டில் மட்டுமே சமஸ்க்ரிதம் சரளமாக பேச தெரிந்தவர்கள் இரண்டு லட்சம் பேர் இருக்கிறார்கள் ! இந்தியாவை பற்றி கேட்கவா வேண்டும். இந்த இரண்டு லட்சம் பேர் வெறும் பிராமணர்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள், இதில் பெரும் பாலானோர் பிராமணர் அல்லாதவரே.
    இந்தியாவில் மட்டும் அல்லாது அமேரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் பலர் (இந்தியரல்லாதவரும் கூட) சமஸ்க்ரிதம் பயில்கிரார்கள். ஒரு ஆஸ்திரேலியர் அழகாக சமஸ்க்ரிதம் பேசுவதை இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=rvI_yTVdSeQ

    அது சரி விவில்யம் ஒரிஜினல் பிலிம் க்ரேக்க மொழியில கதை வசனம் எழுதினார்கலமே. க்ரீஸ் நாட்டிலேயே க்ரீக் பேசும் மக்களை தேடிகிட்டு இருக்காங்கலாம்

    ஹீப்ரூவ கஸ்டப்பட்டு கட்டாயபடுத்தி இஸ்ரவேல் நாட்டில் வாழ வைக்க முயற்சி எடுத்து கொண்டு இருக்கிரார்கள்.

    உங்கள் இன அடையாலங்களை முதலில் அது தோண்றிய மத்திய ஆசியாவில் போய் மீட்டெடுங்கள், ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் க்ரிஸ்தவம் சந்தி சிரிக்குது.

    ப்ரெஞ்ச்சு நாடுல்லங்க ப்ரெஞ்ச்சு நாடு, அங்க 50% மேல க்ரிஸ்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லோரும் agnostics. க்ரிஸ்தவத்தால் எந்த பயனும் இல்லை என்று நம்புபவர்கள். ஏன் நீங்கள் பெட்டி படுக்கயை எல்லாம் சுருட்டிக் கொண்டு அங்கே போய் ஊழியம் செய்யக் கூடாது. போபுக்கு சமீபத்தில் இந்கிலாந்தவர் வெச்ச ஆப்பு உங்களுக்கு தெரியாதா
    க்ரிஸ்தவம் இருக்கும் 120 நாடுகலில் பெரும் பாலானவை ஆப்ரிகாவிலும், தெற்கு அமேரிகாவிலும் தான். அங்க தான் பாருங்க புத்திசாலிங்க அதிகம் இருக்காங்க. வட அமேரிக்காவிலும், ஐரோபாவிலும் பெயர் அலவிற்க்குதான் இருக்கு.

    அங்கெல்லாம் Jesus Saves இல்லைங்க Save Jesus தான்.

    ஏசுவுக்கு அங்கெல்லாம் ஜெயமில்ல்ங்க பயம்

    தமிழ்ர்களும் ஸ்னாதன தர்மத்தை சேர்ந்தவரே என்பதர்க்கு உங்களுக்கு புரியும் படி அண்ணாதுரை பானியில் ஒன்னு சொல்றேன்

    வேதம் சொல்கிறது. அன்னம் பஹு குர்மி. அன்னத்தை (அன்ன தாணியம் வலமாக செய்யுங்கள்). அன்னம் என்றால் சோறு (சாதம்).

    தமிழன் தாங்க சோறு சாப்பிடறான், வட நாட்டுகாரன் ரொட்டி சாப்பிடறான், அப்போ வேதம் ரொட்டி பஹு குர்மி அப்படீ தானே சொல்லி இருக்கனும், அப்போ வேதம் தமிழனுது தானே.

    பரிபாடல் எழுதியவர் மூத்தவரின் பெயர் கபிலர். அகஸ்தியர் தான் தமிழை வளர்தாராமே, அகஸ்தியர் சனாதனராமே

    எப்படியெல்லாம் புரிய வெக்க வேண்டி இருகுப்பா

  119. சகோ. ரெபெக்கா மரியம் அவர்களே,

    //….கிறிஸ்துவத்தை காப்பாற்ற 120 கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது ஆனால் பாவம் உங்க இந்து மதத்தை காப்பாற்ற இந்திய துணை கண்டதை விட்டால் வேறு வழி இல்லை.. ஆகையால் நீங்கள் வருத்தபடுவதிலோ கிறிஸ்துவத்தை திட்டிதீர்பதிலோ கவலை பட ஒன்றும் இல்லை .. நிச்சயம் ஒன்று சொல்லவா கோபத்தில் சொல்லவதாக எடுத்து கொள்ள வேண்டாம்.. உங்கள் ஆரிய மதத்திற்கு முடிவுரை எழுத போவது ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் தான் பொறுத்திருந்து பாருங்கள்//

    ஆஹா, என்ன ஆசை, என்ன ஆசை ,

    ஆசை இருக்கு தாசில் பண்ண , ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு குப்பை அள்ள என்பார்கள். உலகில் எல்லோரையும் பிற மதங்களின் மீது சகிப்புத் தன்மை இல்லாதவராக பிற மதங்கள் இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பவராக ஆக்க வேண்டும் என்கிற உங்களின் ஆசைக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் அதாவது வாய்ப்பு இருக்கிறது என்றார் பார்க்கலாம்

    இந்து மதம் இருக்கக் கூடாது, அதற்க்கு முடிவுரை எழுத வேண்டும் என்று சகிப்புத் தன்மை இல்லாமல் ஆவேசப் படும் உங்கள் மனநிலை புரிகிறது.

    இது நீங்கள் கோவத்தில் சொன்னதாக எண்ணவில்லை, நீங்கள் நிதானமாக சொன்னதாகவே கருதிக் கொள்வோம். நீங்கள் சொல்லும் ஆபிரகாமிய மத பிரிவினர் பலரும் இப்படி நினைப்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்.

    சரி, இந்து மத அழிப்புக்கு (முடிவுரைக்கு) ஒரு கருவியாக நீங்கள் தேர்ந்து எடுத்து இருப்பது ஆரிய மதம் என்கிற வார்த்தையை.

    இந்து மதம் ஒரே ஒரு ஆன்மீக முறையை மட்டும் தராமல், கர்ம யோகம், தியானம், வேள்வி, கர்ம பலத் தியாகம், துறவு, பக்தி …. இப்படி பல ஆன்மீக முறைகளை சொல்லுகிறது . வட இந்தியாவில் முன்பே மார்க்கண்டேயன், துருவன், பிரஹலாதன் … போன்றோர் பக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கினாலும் காலப் போக்கில் வேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் தென்னாட்டிலோ தொடர்ந்து பக்தி வழிபாடு , உருவ வழிபாடு முக்கிய ஆன்மீக முறையாக பின்பற்றப் பட்டு வந்தது.

    குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு கண்ணன்…என்பதே பண்டைய தமிழரின் வழிபாடு. இதற்கு ஆதாரம் தொல்காப்பியாயத்திலும் உள்ளது,
    நீங்கள் வெறுப்புணர்ச்சியை கைவிட்டு நடுநிலையோடு நோக்கினால், எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் சமுதாயம் முருக வழிபாட்டை சிறிதும் தொய்வின்றி , உற்சாகமாக செய்து வருவதை தெரிந்து கொள்ளலாம்.

    இன்றைக்கு இந்தியா முழுவதும் பின்பற்றப் படும் இந்து மதம் என்பது , இந்த முருகனின் தாயை, தந்தையை, மாமனை, மாமியை, அண்ணனை தம்பியை உருவ வழிபாடு செய்யும் முறைதான். நீங்கள் ஆரிய மதம் என்று எழுதினாலும், தமிழர் மதம் என்று எழுதினாலும், சனாதன தர்மம் என்று எழுதினாலும், இந்து மதம் என்று எழுதினாலும் எல்லாம் ஒன்றாகவே அத்வைதமாகவே இருக்கிறது.

    ஆரியன் சூழ்ச்சி பண்ணுறான் என்று சொல்லி இந்திய நாட்டையும் உடைத்து, இந்து மதத்தையும் அழிக்கலாம் என ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்கும் தமிழன், குளித்து முழுகி, முருகன் கோவிலுக்கு செல்வான்.

    இந்தியாவில், மலேசியாவில், சிங்கையில், தென்னாப்பிரிக்காவில், ஈழத்தில், அமெரிக்காவில் … தமிழ் சமுதாயம் உலகில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் வழி படப் படுகிறான்.

    நீங்கள் அவர்களிடம் சென்று, நீங்கள் பகவத் கீதையில் ஸ்கந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள முருகனை வணங்காதீர்கள் ,

    ஏனெனில் இந்த முருகன், தான் பொறாமையுள்ள கடவுள் என்றோ, தன்னைத் தவிர வேறு கடவுளை கும்பிட்டால் ஏழு தலைமுறைக்கும் வன்மம் வைத்து தண்டிப்பேன் என்றோ சொல்லவில்லை. இதுவே இந்த முருகன் ஜீவனில்லாத கடவுள் என்பதர்க்கு போதுமான சாட்சியாகும்,

    ஜீவனுள்ள கடவுள் என்றால், அவர் தன்னைக் கும்பிடாதவரை கொல்வதற்கு பரிசளிப்பவராகவோ, இன அழிப்புக்கு உதவி செய்பவராகவோ இருக்க வேண்டுமே என்று தைரியமாக பிரச்சாரம் செயுங்கள்.

    நானும் இதே கருத்துக்களை தெளிவாக விளக்கி பிரச்சாரம் செய்வேன்
    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரின் மனசாட்சியிடம்-அவர்கள் எந்தப் பக்கம், அமைதின் பக்கம், நட்பின் பக்கமா அல்லது மத வெறியின் பக்கமா என்று.

  120. இக்கட்டுரையை வெளியிட்டு எங்கள் கண்களை திறந்த தமிழ் இந்து தளத்துக்கு மிக்க நன்றி.

    எங்கள் வீட்டில் இருந்த இயேசு படத்தை எடுத்துவிட்டோம்.தற்போது எங்கள் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறார்கள். அடுத்த வருடம் இந்து பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருக்கிறோம்.

    நன்றி

  121. சகோ. ரோபெக்கா மேரியம் அவர்களே,

    இந்திய தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க மாட்டேன் , வங்க மொழி ….. அது இது என்று, இதெல்லாம் கட்டுரைக்கு தொடர்பில்லாத , ஆனால் இந்திய மக்களை குடி கெடுக்கும் கருத்துக்கள்.

    உலகில் பதினெட்டு மொழி பேசும் வெவ்வேறு மத, இன மக்கள் மனமொப்பி சேர்ந்து வாழும் ஒரே நாடாக இந்தியா உள்ளது. இங்கே குட்டையை குழப்ப வேண்டுமா?

    ஈழத் தமிழருக்கு உதவுவதாக சொல்லி, கடைசியில் அவர்களை முள் வேலியில் மிருகத்தை விட கேவலமான நிலைக்கு சிக்கித் தவிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

    இங்கே இந்தியாவில் இருக்கும் தமிழனையும் இந்தியாவில் இருந்து துண்டாக்கி, அவனையும் சிங்களர் முள் வேலியில் அடைக்கும் நிலைக்கு கொண்டு வருவதை வேடிக்கை பார்க்க முடியாது. மதத்தைப் பற்றிய கட்டுரைக்கு மதம் பற்றிய கருத்துக்களை வைப்பதுதான் சரி.

    இதில் இந்தியாவில் வாழும் 8 கோடி தமிழ் பேசும் இந்தியர்களின் வாழ்வை அழிக்கும் வகையிலே தேச விரோத, மக்கள் விரோத, தமிழர் விரோத கருத்துகளை முன் வைப்பது தமிழருக்கு செய்யும் துரோகமாகும்.

    தமிழ் இந்து தமிழரின் நலனில் அக்கறை உள்ள இதழனால், தங்கச்சி ராபகா மரியம் அறிந்தோ அறியாமலோ எழுதும் தமிழர் விரோத, இந்திய தேச விரோத கருத்துக்களை போடக் கூடாது.

    . இயேசுவை தொழலாமா, எனபதுதான் முக்கிய பொருள். அதை ஒட்டி இந்து மதத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது கூட கட்டுரையின் கருத்துக்கு ஒரு வகையில் தொடர்புடையதே.

    ஆனால் இந்த நாடு நல்ல நாடு, அரசியல்வாதி எப்படி இருந்தாலும் மக்கள நல்லவர்கள், 120 கோடி இந்தியர்கள் அப்பாவிகள்.

    தமிழன் தனியே பிரிந்தால், சிங்களன் சில வெளி நாட்டான துணையோடு தமிழ் நாட்டில் உள்ள தமிழரையும் முள் வேலிக்குள் அடைத்து விடுவான், தங்கச்சி விவரம் புரியாம எழுதுறாங்களோ, அல்லது தெரிஞ்சே எழுதுறாங்களோ என்பதும் நமக்கு தெரியாது

    தமிழ் இந்து தளம் தேச விரோத, தமிழற குடி கெடுக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். .

  122. Vedamgopal comment is very good.

    Ramanathan my thoughts also same like you. Thank you.

  123. Respected Mariya,
    your ambition and your day dreams are very good, keep it. But same time you should be tried to grow your’s children and theirs children as a Christian if you have. Your people couldn’t save your religion in America and in England,…… but you are falling in day dream here. You don’t know Hindustan history, if you can try to know it. Once upon a time Buddhism occupied hole Bharath. but Adi Sankaracharya changed it lonely. We don’t think yours like Buddhist, because your people rounding with killing tool (cross) always.

  124. திருச்சிக்காரன் your comment is excellent.

  125. Christianity and Islam born from desert land (dry land) don’t have wet brain who are following it without knowledge. So we forgive them and we will pray for theirs to get knowledge.

  126. Respected Mariya,
    In Nigeria, Indonesia, Pakistan, Afghanistan,……. Muslims and Christians are fighting and using guns and blasting. In our country also at kerala love jikathi Muslims converting and marring Christian ladies also. But Mariyam is more interesting to destroy Hinduism by both are them. For both them Hindus are enemy here till we are majority. If they are getting majority they will kill them, then Jesus also not come to save them and Allah also not come. please try to understand Mariyam.

  127. அன்பிற்குரிய உள்ளங்களே,

    இக்கட்டுரையையும் அதற்கு வந்த மறுமொழிகளையும் படித்தேன். இங்கே இப்படி விவாதம் நடப்பதையிட்டு உண்மையில் மகிழ்கிறேன். இவற்றின் ஊடாக உண்மை வெளிவர வேண்டும். ஆனாலும் அன்பர்கள் ஒரு விடயத்தில் மிகக் கவனம் செலுத்த வேண்டும்.

    இங்கே சில அன்பர்கள் எழுதிய மறுமொழிகளை படிக்கவே முடியவில்லை. நாம் முதலில் நம்மை புரிந்து கொள்ள வேண்டும். நமது கிராமங்களில் கூட அமங்கல வார்த்தைகளை.. சபையில் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்வதில்லை.

    அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிற நிலையிலும் அதனை மங்கலமாகச் சொல்லும் வழக்கே இருக்கிது. உதாரணமாக, ஒருவர் செத்துப் போனால் அதை அப்படியே சொல்லாமல் காலமாகி விட்டார்.. இயற்கையடைந்திட்டார் இப்படித் தான் சொல்கிறோம். ஏன்.. இந்த உடம்மை மெய் (உண்மை) என்று சொல்கிறோம்.. ஆனால் அது பொய்யல்லவா? ஆக, அமங்கலமாகச் சொல்லக் கூடாது என்றே இங்கும் மங்கலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

    எனவே, அன்பு உள்ளங்கள் இவ்விடயத்தில் சிறிது கவனம் செலத்த வேண்டும். ஆனாலும் இப்படி இரு தரப்பு வாதத்தையும் செய்ய நல்ல தளம் கொடுத்த தமிழ்ஹிந்துவுக்கு நன்றிகள்..

  128. சமய அடிப்படையான இறை வழிபாடு, உருவ வழிபாடு என்பதற்கு எதிரியாக உருவமில்லா வழிபாடு முறைகளைக் கொண்டதில் இஸ்லாமும்,கிறித்தவமும் ஏற்பட்டாலும், அடிப்படைக்கொள்கை மாறுதலான உருவவழிபாட்டைத் தவிர்க்க முடியாததாகி, அடிப்படையே பிழறி, தற்போது, இயேசு உருவ வழிபாடு என்று, கிரித்தவமே காணாமல் போய், உருவ வழிபாட்டைக்கொண்ட, இந்து சமய வழிபாட்டில் ஒன்றாய் கலந்துநிற்கின்றது. இது இந்து சமயத்தின், ஈர்ப்பு சக்தியின் வெளிப்பாடு. உருவம், உருவமில்லாமை என்ற முக்கிய வேறுபாடு நிலைக்காவிடினும், இந்துக்களில் பெரும்பாலோர் புலால் உண்பவர்கள் என இருப்பதனால், முழுமையாய் புலால் உண்ணும் வழக்கத்தவரான கிறித்துவர்களின் யேசுவை, உருவவழிபாட்டில் சேர்த்துக்கொள்ள இந்துக்களால் முடிகின்றது. ஆனால் பாவம், எப்படியாவது, இந்துக்களை இழுத்துப் போட்டுக் கொள்வோம் என்று, ஏசுவும், உருவவழிபாட்டில், தன கொள்கையையும் காற்றில் உதறி, உருவமாய் ஈர்கப்படுகின்றார்.

  129. தமிழச்சி ரேபெக்காவுக்கு,

    // மறந்தும் கூட ஒரு வங்காளி எழுதிய அர்த்தம் தெரியாத ( பொருள் தெரிந்தாலும் கூட) தேசிய கீதத்திற்கு என்றுமே நான் எழுந்து நின்று தலை வணங்கியது இல்லை ….. நன்றி ஆமென் …. //

    அப்போ கிரேக்க மொழியில் யார் யாரோ பால், மத்தேவு , லூக்கு போன்றோர்கள் எழுதிய விவில்யத்தை தூக்கி எறியுங்கள். தூய தமிழ் மனம் வீசும், இன்பம் பேருக்கும் பிரபந்தத்தையும், திருமறையையும் பாடி பரவசியுங்கள். தொல்காப்பியம், பரிபாடல்களில் எங்கள் தமிழ் ஆன்றோர்கள் சுட்டிக் காட்டும் கடவுள்களை வணங்குங்கள். ஹீப்ரூவ் பேசும் இஸ்ரவேல் நாட்டின் எல்லைக் கடவுள் அக்மார்க் தமிழச்சியான உங்களுக்கு எதுக்கு?

  130. நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

    ஐரோப்பா புத்திசாலிகள்(கிரேக்க, ரோம) வாழும் வளமான பிரதேசமாக இருந்தது. என்றைக்கு கிறிஸ்தவம் நுழைந்ததோ அன்றைக்கு பிடித்து தரித்திரம். ஐரோப்பா தலை எடுக்க பல நூற்றாண்டுகள் ஆனது. காபர்னிகஸ் முதலாக பலர் தோன்றி, கிறிஸ்தவ நம்பிக்கைகளை பார்த்து வெந்து நொந்து, உண்மையை தேடி அலைந்து திரிந்து, உண்மையை சொன்னதுக்காக உயிரையே விட்டதால் தான் விமோசனம் பெற்றது ஐரோப்பா.

    இந்தியாவை தரித்திரம் எப்போது ஆட்கொண்டது. முதலில் பத்தாம் நூற்றாண்டில் அப்புறம் பர தரித்திரம் பதினெட்டாம் நூற்றாண்டில் – இதை எப்படி நாம் அறியலாம். இந்தியாவின் அப்போதைய GDP 24%. இப்போதைய GDP 4 %

    ஐரோப்பா தான் இன்றைக்கு உலகில் GDP படி முதன்மையான கூட்டமைப்பு.

    Jesus Never Fails ன்னு எதுக்கு எழுஒட்டிகிட்டு திரியுராங்களோ தெரியல?

  131. என்னுடை ய நண்பர் ஒருவர் ,அவர் கேரளாவை சேர்ந்தவர் , கத்தோலிக்க மார்க்கத்தை சேர்ந்தவர், குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு ஸ்பெயின் நாடு சென்று இருக்கிறார்.

    ஸ்பானிய தலை நகரில் புகழ் பெற்ற கத்தோலிக்க ஆலயம் எது எனக் கேட்டு தெரிந்து கொண்டு, ஞாயிறு காலை மாஸ் அட்டென்ட் பண்ண சென்று இருக்கிறார். அந்த பிரெயரை நடத்த மொத்தம் 7 பாதிரிமார்கள். அதில் கலந்து கொண்ட வர்கள்- என் நண்பர், அவர் மனைவி, மகன், மகள் – நால்வர் மாத்திரமே. நாங்க நாலு பேர் ஆனா ஏழு பாதர்ஸ் என சொல்லி என் நண்பரே சிரித்து விட்டார்.

    இதுதான் “120 நாடு” சிறப்பு.

    இப்படி “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன், ரெண்டு குளம் பாழு ஒண்ணுல தண்ணியே இல்லை” என்னும் படியாக மேலை நாடுகளில் ஒப்புக்கு இவர்கள் மதத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு மதிப்போ , மரியாதையோ கிடையாது. அவர் சொன்ன கோட்பாடுகளை கொஞ்சம் கூட மதிப்பது இல்லை.இங்கே இந்தியாவிலே கூட பலர் போயா விவாகரத்து எல்லாம் பண்ணாம இருக்க முடியாது, இயேசுவை கும்பிடுறோம் இல்ல அத்தோட போயிகிட்டே இருக்கு, அவன் ஒடம்புல பேட் ஸ்மெல் அடிக்குது, அதனால அவ விவாகரத்து பண்ணுவா என்று சாக்கு போக்கு சொல்லை இயேசு வின் கோட்பாடுகளை ஏற கட்டுகின்றனர். இந்த இலட்சனத்துல இவங்க இயேசு கிறிஸ்துவை பற்றி பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்கும் என எல்லோரும் தெரிந்து கொண்டுள்ளனர்.

    அவர்கள் (ஐரோப்பியர் ) மேல் தப்பு இல்லை, கிறிஸ்தவம் என்ற பெயரால் அவர்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது, சகிப்புத் தன்மை அழிப்பு, இனப் படுகொலை ஆதரவு, பிற மதங்களை அழித்து ஒழிக்க நினைக்கும் வெறி ஆகியவைகளை உள்ளடக்கிய கற்கால கால இறக்கம் காட்ட மறுப்பு , உடன் படிக்கை மறுப்பு கோட்பாடுகளே … இவையே. இதனால் நொந்து போன ஐரோப்பியர் மொத்தமாக கை கழுவி விட்டார்கள்.

    இதை நாம் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அமைதி மதங்களை வேட்டையாடி ருசி பார்க்கும் தவிப்பில் துடிக்கிறார்கள்.

    அவர்களிடம் பயின்ற நமது சகோதர சகோதரிகள் சிலர் அந்த மத வெறி விடத்தை இங்கே இந்தியர்களின் தலையில் கட்ட பார்க்கிறார்கள். அதையும் வாங்கி தொண்டைக்கு கீழே போகாமல் வைத்து இந்தியர்கள் அனைவரும் நீலகண்டனாக திகழ்கிறார்கள்.

    இதை நாம் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அமைதி மதங்களை வேட்டையாடி ருசி பார்க்கும் தவிப்பில் துடிக்கிறார்கள். எனவே இன்றைக்கு இயேசுவின் கோட்பாடுகள் என்ன என்பதை மேலை நாட்டு மக்களுக்கு சுட்டிக் காட்டி விளக்கும் பொறுப்பு ம் நமக்கு வந்துள்ளது.

    . மேலை நாட்டு எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கோணத்தில் அணுகி, அவரில் உள்ள சிறப்புகளை முன்னுக்கு கொண்டு வந்து, முறைப்புகளை மட்டுப் புத்தி, அனைவரையும் நல்லிணக்கத்தில் இணைக்க வேண்டிய பொறுப்பு நமக்கே உள்ளது.

    இவற்றை எல்லாம் செய்யும் அன்பும், அமைதியும், உண்மையும், அறிவும் , திறனும் உடையது இந்து மதம்.

    சுவாமி விவேகானதர் இதை சிறப்பாக் செய்தார்.

    எனவே இப்போது நமக்கு முக்கிய தேவை, பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை பிரச்சாரம் செய்வதோடு, வாழ்ந்தும் காட்டக் கூடிய விவேகானந்தர், தியாகராசர், ஆதி சங்கரர் … போனவர்களே.

    ஆனால் அப்படிப் பட்டவர்களை மறைத்துக் கொண்டு பில்லியநேர் கனவான்கள் தங்கள் செல்வாக்கை வைத்து முன்வரிசைக்கு வந்து விடுகின்றனர்.

    எனவே இந்து மதம், புத்தமதம், இயேசுகிறிஸ்துவின் மதம், இஸ்லாம் மதம்…. ஆகியவற்றை உலகில் உள்ள அனைவருக்கும் மிக சரியாக அறிம்கப் படுத்தி, அனைவரையும் நல்லிணக்கத்தில் இணைக்க நம்மால முடியும் . இது செய்யப் படக் கூடியதே. இதற்க்கு சாட்சி, கண் முன் நாம் கண்ட சாட்சி சுவாமி விவேகானந்தரே, அக்பரே, கபீரே!

  132. // என்னுடை ய நண்பர் ஒருவர் ,அவர் கேரளாவை சேர்ந்தவர் , கத்தோலிக்க மார்க்கத்தை சேர்ந்தவர், குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு ஸ்பெயின் நாடு சென்று இருக்கிறார்.

    ஸ்பானிய தலை நகரில் புகழ் பெற்ற கத்தோலிக்க ஆலயம் எது எனக் கேட்டு தெரிந்து கொண்டு, ஞாயிறு காலை மாஸ் அட்டென்ட் பண்ண சென்று இருக்கிறார். அந்த பிரெயரை நடத்த மொத்தம் 7 பாதிரிமார்கள். அதில் கலந்து கொண்ட வர்கள்- என் நண்பர், அவர் மனைவி, மகன், மகள் – நால்வர் மாத்திரமே. நாங்க நாலு பேர் ஆனா ஏழு பாதர்ஸ் என சொல்லி என் நண்பரே சிரித்து விட்டார்.

    இதுதான் “120 நாடு” சிறப்பு.

    இப்படி “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன், ரெண்டு குளம் பாழு ஒண்ணுல தண்ணியே இல்லை” என்னும் படியாக மேலை நாடுகளில் ஒப்புக்கு இவர்கள் மதத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். //

    அதிரடியான பதில். வாய்விட்டு சிரித்தேன்.

    //கிறிஸ்தவம் என்ற பெயரால் அவர்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது, சகிப்புத் தன்மை அழிப்பு, இனப் படுகொலை ஆதரவு, பிற மதங்களை அழித்து ஒழிக்க நினைக்கும் வெறி ஆகியவைகளை உள்ளடக்கிய கற்கால கால இறக்கம் காட்ட மறுப்பு , உடன் படிக்கை மறுப்பு கோட்பாடுகளே … இவையே. இதனால் நொந்து போன ஐரோப்பியர் மொத்தமாக கை கழுவி விட்டார்கள்.

    இதை நாம் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அமைதி மதங்களை வேட்டையாடி ருசி பார்க்கும் தவிப்பில் துடிக்கிறார்கள்.//

    உண்மையான வார்த்தைகள்.

  133. இங்கு நடக்கும் விவாதங்களினால் தெரிய வருவது என்னவென்றால், ஹிந்துக்கள் விஷயம் தெரிந்தவர்களாக, படித்தவர்களாக, அறிவாளிகளாக இருந்தால் ஆபிரகாமிய விஷத்திற்கு பலியாகமாட்டார்கள் என்பதே. அத்துடன் எல்லா ஹிந்து மத இயக்கங்களும் அந்தந்த சமூகங்களுக்கு மத்தியில் வேதாந்த, சித்தாந்த நூல்களைப் பரப்பும் முயற்சிகளையும் தீவிரமாக எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஆபிரகாமிய மதங்களின் அறிவின்மையும் கீழ்மையும் தெளிவாகப் புரியும்.

    உதாரணத்திற்காக, முதல் பாவக் கொள்கையின் அபத்தத்தை விளக்கும் தமிழ் ஹிந்து கட்டுரையை பரப்பினால் எவ்வளவு மதமாறிகள் இரையாகி இருக்க மாட்டார்கள்?

    பல ஹிந்து நண்பர்களிடம் இப்படி ஒரு போக்கு உள்ளது: தங்கள் பிள்ளைகளை “நீ ஹிந்து மதம், கிறித்தவம், இஸ்லாம் எல்லாவற்றையும் படித்து விட்டு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத் தழுவிக் கொள்” என்று சொல்லி விடுகிறார்கள். The formative years for a person are way too precious to be wasted in studying Christianity and Islam which can get potentially brain-damaging. Instead, a systematic approach to learn one’s own family’s Hindu tradition should be devised and put to implementation. When kids grow up, they can later contrast it with Christianity and Islam if needed, and they would only find the two worth trashing.

    Also the need of the hour is a bit of institutionalization with transparency:

    (1) Each movement/organization within Hinduism should have a panel of expert Acharyas with 100% transparency who will give opinions and information on a particular subject matter under contention. They should be equipped and competent enough to promptly counter defamation coming from Abrahamic sources.

    (2) An annual intra-Hindu conference among all the important Acharyas of various Hindu movements to discuss unity in diversity and codes of conduct for brotherly co-existence.

    These are needed in addition to active social service.

  134. ஸஹோதரி ரேபேக்க மாரியம்மாளுக்கு நமஸ்தே

    பரங்கி கும்பினியார் ஹிந்துஸ்தானத்திலே தேவையே இல்லாது போதும் ஜபர்தஸ்தியாக இறக்குமதி செய்தது ரெண்டு விஷயங்கள். ஒன்னு அல்லோபதி ஔஷதங்கள். ரெண்டாவது க்றைஸ்தவம்.

    ஆப்ரஹாமியஸுதர்களான யஹூதிகளுக்கு சொந்தமான பைபல் என்ற பொஸ்தகத்தை புரட்டிப்போட்டு கூட்டி கழித்து ஈஸா மஸியின் ஸீஷர்களான மாட்தியூ,ல்யூகே,ஜோன்,மக்கு ஆகியோர் கருத்தொற்றுமை கூட இல்லாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொகுக்கப்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது க்றைஸ்தவர்களின் புதிய ஏற்பாட்டு பைபல் என்று தெரிகிறது.

    இந்த வ்யாஸம் வாசிக்கையில் ஸ்ரீமான் ஸீதாராம் கோயல் அவர்களின் “Jesus christ – An artifice for aggression” என்ற வ்யாஸம் வாசிக்க நேர்ந்தது. ஈஸா மஸி என்ற மனுஷ்யர் இருந்தாரா என்பதையே இவர் கேள்விக்குறி ஆக்குகிறார். இப்படி இல்லாத ஒரு மனுஷ்யருடைய ஸீஷர்கள் என்று கருதப்ப்பட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட புதிய ஏற்பாடும் ஈஸா மஸியும் “An artifice for aggression” ஏன்று சுட்டப்படுவது தகும் என்றே தோன்றுகிறது.

    ஆகக்கூடி அதுவரை யஹூதிகள் வாசித்து வந்த பைபள் காலாவதி ஆகிவிட்டதாம். நேற்று வந்த அல்லது வ்ந்ததாக கருதப்பட்ட ஈஸா மஸியின் ஸீஷர்களால் ஏற்படுத்தப்பட்ட பொஸ்தகம் ஸத்யமாம். ஒரே ஸஹிக்கவொண்ணா தத்வத்தை இறைஞ்சுபவர்களாயினும் யஹூதிகள் பழைய பொஸ்தகத்தை தூக்கிப்போட்டு விட்டு புது பொஸ்தகத்தை ஏற்கவில்லையானால் மீளா நரகம் ஏகுவார்களாம்.

    இப்படி தடியெடுத்து தண்டல்காரனாகி யஹூதிகளை ஏப்பம் விட விழைந்து அப்பம் சுட்ட க்றைஸ்தவன் சரித்ரத்தில் தன்னை ஏப்பம் விட தன்னுடைய ஸஹிக்கவொண்ணா தத்வம் இன்னொரு தண்டல்காரனை அனுப்பும் என்று எண்ணியிருக்க முடியாது போலும்.

    கும்பினிகாரர்களால் ஜபர்தஸ்தியாக இறக்குமதி செய்யப்ப்ட்ட அல்லோபதி ஔஷதங்களின் தன்மைகளில் விசேஷமானது அதன் காலாவதி திகதி. காலாவதியான அல்லோபதி ஔஷதம் விஷதுல்யமானது என அல்லோபதி வைத்யர்கள் பொதுவாக எச்சரிப்பர். அல்லோபதி ஔஷதம் வாங்கும் போது காலாவதி திகதி பார்த்து வாங்கவும் என்று சஞ்சிகைகளிலும் வானொலி தொல்லைகாட்சியிலும் விளம்பரம் செய்கிறார்கள்.

    யஹூதி மற்றும் க்றைஸ்தவர்கள் ஏற்கும் அதே பொறாமைக்கார ஸஹிக்கவொண்ணா தத்வத்தின் கடைசி மஸிஹாவாக ப்ரகடனமான மஹம்மது நபி அந்த தத்வத்தின் கடைசி நிர்தேசங்கள் என குர் ஆனை தொகுத்து தந்துள்ளார். ஒரே பொறாமைக்கார ஸஹிக்கவொண்ணா தத்வத்தை இறைஞ்சுபவர்கள் என்றால் யஹூதிகளின் பழைய பைபள் க்றைஸ்தவர்களின் புதிய பொஸ்தகம் எல்லாவற்றையும் தலை முழுகி குர் ஆனையன்றோ ஏற்க வேண்டும்.

    ஆகவே அன்புள்ள ஸஹோதரி ரேபேக்க மாரியம்மா, நீவிர் பொறாமைக்கார ஸஹிக்கவொண்ணா தத்வத்தை இறைஞ்சுவது தவிர்க்க இயலாதது என்றால் குறைந்த பக்ஷம் புதிய ஏற்பாட்டு பைபள் பொஸ்தகத்தையும் க்றைஸ்தவத்தையும் தலைமுழுகி பர்தா அணிந்து அந்த தத்வத்தின் கடைசி கட்டளையான குர் ஆனை ஏற்கவும். ஏனெனில் நபிகள் பிறப்பிற்கு பின் அவ்ர் கூற்றின் படி க்றைஸ்தவமும் பைபளும் காலாவதியாகி விட்டன.

    நான் இந்த ஜவாப் முழுக்க ஆப்ரஹாமியர் இறைஞ்சும் தத்வத்தை கடவுள் என்று குறிப்பிடவில்லை.

    ஏனெனில் விவித பாரதீய ஹிந்து தர்சனங்களில் கடவுள் என்ற தத்வம் மிக புனிதமான எல்லோரையும் அரவணைக்கும் அன்புக்குறிய தத்வமாக அறியப்படுகிறது. க்ராம தேவதா ஏக தேவதா பஹு தேவதா ஸகுண நிர்குண அஸ்தி நாஸ்தி என பற்பல ஹிந்து தர்சனங்கள் இருந்த போதும் அவற்றினிடையே கண்யமான தத்வ விசாரம் இருந்து வந்துள்ளது. பூர்வமீமாம்ஸக பௌத்த ஜின வேதாந்த சைவ வைஷ்ணவ தர்சனங்களிடையான தத்வ விசாரம் என்றுமே என் கோட்பாட்டை ஏற்காதவன் மீளா நரகமேகுவான் என சொல்லப்பட்டதில்லை.

    ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
    ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி

    என ஸனாதன தர்மம் சொல்கிறது.

    எப்படி ஆகாஸத்திலிருந்து பூமியில் விழும் வர்ஷாகால ஜலம் தாரை தாரையாக பற்பல நதிகளுடன் சேர்ந்தாலும் கடைசியில் ஸாகரத்தை போய் அடையுமோ அதே போன்று எந்த தேவதையை ஸ்துதி செய்தாலும் கடைசியில் அது கேசவனையே போய் சேரும் என பொருள்.

    ஆக எந்த கடவுளை வணங்குகிறோம் என்பதை விட வணங்குதல் என்ற உயர் பண்பை கொள்ளுதலையே ஸனாதன தர்மம் முக்யமாக கருதுகிறது.

    ஆப்ரஹாமிய மதங்களில் சொல்லப்படும் தத்வம் அளவற்ற பொறாமையுள்ளதாயும் அறவே ஸஹிப்புத்தன்மையற்றதாயும் கிட்டத்தட்ட நமது புராண கால சும்ப நிசும்ப சண்ட முண்ட ஹிரண்யாக்ஷ ஹிரண்யகசிபு போன்ற ராக்ஷஸத்தன்மையொத்ததாய் உள்ளது. அப்பேர்க்கொத்த தத்வம் ஹிந்துவென்ன எந்தவொரு மனுஷ்யனுடைய வணக்கத்திற்கும் உரித்தானதல்ல.

    ஆகவே அம்மணி ரேபேக்க மாரியம்மா, நீவிர் பொறாமைக்கார ஸஹிக்கவொண்ணா தத்வத்தை இறைஞ்சுவது தவிர்க்க இயலாதது என்றால் பர்தா அணிந்து இஸ்லாத்தை ஏற்கவும் க்றைஸ்தவத்தை துறக்கவும். உண்மையான கடவுள் தத்வத்தை அறிய விழையின் ஏதேனும் ஹிந்து தர்சனத்தை பின்பற்ற விழையவும்.

    ஆனால் எதைப்பின்பற்றினும் தின்னும் உப்பிற்கு த்ரோஹம் செய்யலாகாது. பிறந்த ஹிந்துஸ்தானத்தையும் நம் தேசிய கீதத்தையும் அவஹேளனம் செய்வது நம் தேசத்தை தூற்றுவதாகாது. மாறாக உமது பொல்லாத மதத்தின் துர்ஸ்வரூபத்தையே காட்டுவதாக ஆகும். உம்முடைய எழுத்துக்கள் க்றைஸ்தவத்தின் மீது சொச்ச நச்சம் அனுதாபம் வைத்தவர்களை கூட வெறுக்கச் செய்யும்.

    எது நடக்கிறதோ அது நல்லதற்கே – கண்ணன்.

    லோகாஸ்ஸமஸ்தா ஸுகினோ பவந்து.

  135. ரெபேக்கா,

    இது முந்தய பதிலின் தொடர்ச்சி – பாபிலோனியா பற்றியது

    // இல்லை மேசபோட்டேமியர்களின் வானியல் ஆய்வு தான் பழமையானது அதற்க்கு பிற்கு பாபிலோனிய வானியல் கருத்தாக்கம் .. நீங்கள் சொல்லும் ஆர்ய ஜோதிஷம் என்பது கரேகர்களிடம் ( greeks ) இருந்து கடன்வங்கியாவை தான் அதற்கு பேரையே யவன ஜாதகம் தான் ஆதாரம் வேணுமா https://en.wikipedia.org/wiki/History_of_astrology இதில் பார்த்து கொள்ளுங்கள்
    //

    நீங்கள் அரைகுறை அவசரக் கோலம் என்பதை சாக்ஷாத் நிரூபணம் செய்தாகிவிட்டது.

    யாராவது வரலாறு சம்பந்தமான விஷயத்திற்கு விக்கிபீடியாவை நம்புவார்களா? அதில் மாக்ஸ் முல்லர் உளறியது தான் இருக்கும்.

    கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர் வானவியலில் கொண்டிருந்த தனித்துவத்தை பார்ப்போம்

    முதலில் ஜ்யோதிஷம் என்பது வேதங்களுக்கு அங்கமாக சொல்லப்படுகிறது – இதற்கானா சான்று முண்டக உபநிஷத்தில் உள்ளது. வேத காலத்திலிருந்தே ஜ்யோதிஷம்(ஜோசியம் இல்லை வானவியல்) இந்தியர்களுக்கு தெரிந்திருந்தது என்பது இடன் மூலம் நிரூபணம்.

    ரிக் வேதம் தான் உலகின் முதல் புத்தகம் – literary work. இது அனைவரும் (நடுநிலை ஆராய்ச்சியாளர்கள், இந்திய சார்புடைய ஆராச்சியாளர்கள், இந்திய எதிர்ப்பு ஆராச்சியாளர்கள்) ஒத்துக் கொள்வது.

    அகழ்வாராய்ச்சி முடிவுகளும் ரிக் வேதத்தின் காலம் குறைந்தது 12,000 முதல் 6000 BCE ல் என்று நிரூபணம் செய்கிறது,

    மகாபாரத போர் நடந்ததற்கான வானியல் மற்றும் அகழ்வாரைச்சி முடிவுகள் அப்போர் 3017 BCE நடந்தது என்று முடிவு கட்டுகின்றனர். அரவிந்தன் கிருஷ்ணரை பற்றி ஆராய்ச்சி ரூபமாக எழுதிய கட்டுரையை தேடித் படியுங்கள்.

    மகாபாரத இறுதிப்போர் 3017 என்றால், ராமாயண காலத்தையும், அதன் முன்னே வேத காலத்தின் பழமையையும் அறிவுடையவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்

    அப்படிப்பட்ட pazhyamayaana ரிக் வேதத்துல தானுங்க சூரிய ஒளியின் வேகம் பற்றி ஒரு மந்திரம் சொல்கிறது

    dharanirvishva dharshatho jYothishkudhasi soorya vishvamAbHasi rOchanam. (rik 1.50.4)
    the sun’s light quickly pervades the whole world

    அந்த மந்திரத்திற்கான சயனாச்சார்யரின் விளக்கவுரை

    tatha ca smaryate yojananam sahasre dve dve sate dve ca yojane ekena nimisardhena kramamana
    तथा च स्मर्यते-योजनाना सहस्ट्रे द्वे-द्वे शते द्वे च योजने | एकेनं निमशारधेन क्रम मान नामोस्तुटे

    1 yOjana = 9 miles
    110 yards = 9.62025 miles
    2,202 yojanas = 21,144.705 miles
    time taken – 1/2 nimisha = 1/8.75 = 0.114286 secords
    speed of light = 1,85,016.169 miles/sec

    value as per modern science = 1,86,000 miles/sec

    சூரியனா பூமியா சந்திரனா யாருங்க சுத்தறது

    aYam gow: prushnirkramathi asathan maatharam pura:
    pitaram cha prathyanthasva
    ரிக் வேதம் 10.189.1
    இதன் அர்த்தம் – moon being a saltellite of the earth revolves around its mother planet earth and follows it in its revolution around the self luminous father planet Sun

    இதே போல பூமியின் சுற்றளவு என்ன – 108 எண்ணின் பின் உள்ள சித்தாந்தம் என்ன என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் இன்னொரு முறை மண் வாரி இறைத்தால் எழுதுகிறேன்.

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் – https://highered.mcgraw-hill.com/sites/0072482621/student_view0/astronomy_timeline.html

    கிரேக்கர்கள் 700 BCE யில் தான் சந்திர க்ரஹனத்தை பற்றி தெரிந்து கொண்டார்கள் என்று வருகிறது
    Babylonians predict lunar eclipses. The Babylonians used their long record of eclipses to see regular patterns of eclipses. They used these patterns to predict lunar eclipses

    ஆனா பாருங்க மகாபாரத போரின் போது ஏற்பட்ட வானியல் மாற்றங்களை பற்றி விவரிக்கையில் வியாசர் போர் நடந்த மாசம் இரண்டு சந்திர க்ரஹனங்கள் தோண்டியதை பற்றி எழுதிகிறார் (BCE 3017)

    இந்த சுட்டியில் வெறும் ஐரோப்பர்களின் புத்தகங்களையே சான்றாக எடுத்துள்ளார்கள். கிழக்கு புத்தகங்கள் ஒன்றை கூட இவர்கள் புரட்டிப் பார்ப்பதில்லை.

    முக்கியமா ஒரு விஷயம் இந்த சுட்டியில் BCE 30,000 திலிருந்து கணக்கு காட்டுகிறார்கள். அச்சோ போச்சே கர்த்தர் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னாடி அல்லவா பூமியை உண்டாக்கிவிட்டு சண்டே ரெஸ்ட் எடுத்தாரு.

    சமஸ்க்ரிதத்துல சர்வ சராசரத்தை அண்டம் என்று சொல்வார்கள். அண்டம் என்றால் elliptical shape பில் இருக்கும் பொருள் என்று அர்த்தம். இத ஐரோப்பர்கள் எப்போ கண்டு பிடிச்சாங்க?

    இது மட்டுமல்லாது value of pi upto 43, distance between sun and earth, earths gravity , information about various spheres. creation of electricity using copper plates, origin of matter, advanced mettulargy, botany (plants have conciousness) , architecture

    இப்படி பல துறைகளிலும் இந்தியர்கள் சிகரம் தொட்டிருன்தனர் என்பதை ஆதாரத்துடன் நிரூபணம் செய்ய முடியும்.

    பாபிலோனியர்களும், கிரேக்கர்களும் எழுதிய புத்தகங்களில் எங்கே ஒரு சான்று நான் காட்டியது போல காட்டுங்கள் பார்க்கலாம்

    everything has come down from the banks of Ganges – Voltaire, French philosopher

    if there is a country on earth which can justly claim the honour of having been the cradle of human race…. that country is assuredly india

    We europeans are still behind making even our alphabet a perfect one (Prof Macdonall) ( for we can’t even tell the vovels separately)

    அகண்ட பாரதம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை, எல்லோருக்கும் அள்ளிக்கொடத்தது., கிரேக்கர்கள் இங்கு வந்து தான் பாடம் கற்றார்கள் என்பதற்கெல்லாம் பல சான்றுகள் உண்டு.

    விக்கிபீடியா கூகிள் கடவுள், சர்ச்சு பேச்சுக்கள், சில்லிசாம் ப்ளாகு இவைகளை மட்டும் நம்பாமல் கொஞ்சம் அறிவை பயன் படுத்தி பாருங்கள்.

    //
    புத்தரின் ஞானம் சொன்ன பிறகு அந்த செல்லா காசான வேதத்தையும்,மனுதர்மத்தையும் தூக்கி கொண்டு இங்கு வந்தீர்கள். வந்தவரை வாழ வைக்கும் தமிழ்மண் உங்களை வரவேற்று வாழ வைத்தது
    //

    உங்களுக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை – புத்தத்தை பெரும் பலத்துடன் வளர்த்தது புத்தர் இல்லை. அவர் ஸ்தாபனர். புத்தத்திற்கு தத்து ரீதியாக ஏற்றத்தை கொடுத்தது ஒரு தமிழர். அவர் பெயர் நாகர்ஜுனர். புத்தம் தமிழ்நாட்டில் தான் பெரும் தத்துவ பலத்துடன் இருந்தது.

    தமிழ் நாட்டு வேதாந்திகள் தான் புத்த ஜைன மதங்களை ஓட ஓட விரட்டினார்கள் (சங்கரர், ராமாநுஜர் …)

    இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது. நிலைமை இப்படி இருக்க வடக்கிலிருந்து புத்தத்தை பார்த்து பயந்து தெற்கு வந்தார்களாம். எப்பேர்பட்ட பிதற்றல்.

    இதை பற்றி கொஞ்சம் தெறிந்து கொள்ள கந்தர்வர்ன் சங்ககரின் கால நிர்னயம் பற்றீ எழுதிய கட்டுரையையும், அத்ன பின்னுட்டங்கலையும் படிக்கலாம் – https://tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view/

    அறிவை பயன் பயன் படுத்துங்கள் தமிழ் பென்னே . அச்சு பிச்சு அரசல் புரசலாக நீங்கள் சர்சில் காதில் கெட்பதெல்லாம் உண்மையாகிவிடாது. அரை வேக்கட்டு தனமான பேச்சை நிறுத்தி எதையும் ஆதார்பூர்வமாக அறிய எழுத பழகுங்கள்.

  136. இந்த ரெபெக்கா மரியம்ங்கிற ஒளிஞ்சிக்கிட்டு ஒரு குல்மால் பார்ட்டி இந்துக்களை கோபமூட்டிப் பார்த்து, அந்த அடிப்படையில் வரும் கோப எதிர்வினைகளை வைத்து அய்யோ வன்முறை என்று கூவக் காத்திருக்கும் ஒரு ஜந்துவோன்னு எனக்கு ஒரு சந்தேகம்ன்னேன்!!

    இல்லாட்டி எதுக்கு தேசிய கீதத்தை மதிக்கமாட்டேன், 120 கிறிஸ்தவ நாடு சேர்ந்து ஒரு நாட்டுல இருக்கற இந்து மதத்தை அழிக்கும்னு பீலா விடணும்னேன்.
    இந்த காமெடி பீஸை gatewayலயே தடுத்து அனுப்பிடுங்கன்னேன்.

    அப்படியே ஸ்ரீகோபாலுக்கு ஒரு ஜே போடுங்கன்னேன்.

  137. நிறைய கட்டுரைகளை தமிழ் இந்து தளத்திற்கு அளித்த மதிப்பிற்குரிய மயூரகிரி சர்மா அவர்களே.
    இந்த இடத்தில் அமங்கல வார்த்தைகளை உபயோகிப்பது அமங்கல விசயங்கள் மற்றும் காட்சிகள் இந்துக்களின் வீட்டிற்கு சென்று விட கூடாது என்பதற்காக, மேலும் இங்கு உபயோகிக்கும் அமங்கல வார்த்தைகள் எல்லாம் அவர்கள் சிலாகித்து கொண்டாடி கொண்டிருப்பது. அதனை அவர்களுக்கு மற்றும் இந்துக்கள் இரு தரப்பினர்க்கும் உணர்த்தவே.

    இது அறுவை சிகிச்சை தேவை படும் நோய், அதனால் அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

    மேலும் நீங்கள் காந்தியத்தை மட்டும் கடைபிடிப்பவர்.
    உங்களின் இயல்பின் காரணமாக உங்களுக்கு இவை சற்று கடினமாக தோன்றலாம்.
    நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். எதிரியை எதிர்த்து போராடும் போர்வீரர்களுக்கு ஆயுதங்கள் அவசியமாகிறது.

  138. Great article. Thanks a lot. It takes a long time to write in Tamil. Forgive me for writing in English.
    Hindus are always very broadminded and also are naive. Muslims and Christians exploit this to make converts so they can colonize us and exploit us again. Islam and Christianity are not true religions but are political ideologies in the guise of a religion. Christians and Muslims tell a lot of lies and hide what the bible and Koran really say. I am very proud Hindus here have given very good replies and this gives me great hope

    Christians say Jesus was the only son of God. Jesus never said so in the bible. In fact, he said all are sons of God! In fact in Luke 18-19, he says God alone is good. It was Paul, who wrote more than half the Christian bible, who cooked this up. Paul never met Jesus! There is no old testament and new testament. This was a Christian invention. There are Jewish and Christian bibles. God will not change His mind and issue new editions and give up previous teachings! God could not make a 13 year old girl pregnant! As per Jewish law, betrothal is equal to marriage and Mary was betrothed to Joseph. Mary was pregnant and did not tell Joseph but went to stay with her cousin Elizabeth for months! When she returned and was obvious with pregnancy, Joseph saw that and wanted to send her away. But as per Jewish law she would be stoned. She announced God made her pregnant and he had a dream about that conveniently. Strangely, Joseph is not mentioned after this again. Who was Elizabeth? She got pregnant mysteriously as well at the same time. The whole country knew this by then and so they tell Jesus:
    John 8- 41: We are not born of fornication. In Tamil it is even better:
    நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.

    Jesus could never have been born to God as father. Jews believed his father was a Roman soldier called Ben Tiberius Panthera. Christians hide this. Rabbi Skobac openly talks about this.
    Mary had other husbands. One was Alphaeus. Jesus never said his mother was a virgin. She had many children. James was one of them. He wrote a chapter. He and Jesus advocated pure Jewish law. In fact Jesus asks people to kill children who disobey parents as per Mosaic law.

    Jesus never died after crucifixion. This is a lie. He was unconscious. They applied aloe and myrrh. This is not applied to dead bodies but to sick people. He arises after two days with the help of friends and eats and drinks. He still has wounds. He is afraid of Roman soldiers. Why would a spirit have wounds, eat, drink and fear soldiers. There is evidence he escaped and went to Kashmir

    Jesus speaks nonsense in Mark 16. Last verses say he wants people to handle snakes, drink poison and followers can heal the sick. No christian can do these.

    He also wants followers to kill those who do not follow him- Luke 19-27, John 15-6. Acts 3-23 says same. He wants followers to buy swords to kill: Luke 22- 36 to 38

    The love Jesus advocated was only between his followers. All brotherhood, cheek slapping all are only between Christians. Those who do not accept Jesus are to be burnt and killed. Clear. Same as in islam

    Christians will never reply properly and will pretend Jesus was peaceful!

    There is more but will see if Christian apologists challenge me

    Christianity and Islam are cults for political gain. They are adharmic.

    Hindus must never worship Jesus or allah

    We must only stick to our traditions

  139. My two cents worth.
    Rebeca Mariams of India are worse than Islamic jihadis. I was initially of the impression that she was just another common garden variety fundamental brain washed Christian but she is more than that. People of this ilk are traitors to the nation and they will not have any hesitation in selling out our mother land to the Vatican and other such institutions. Nobody is forcing her or her ilk to stay in the Indian soil and heap abuses on its civilization. she is free to go to her beloved Vatican or to any of the 120 countries she mentions!

    Another request to Mr Tiruchikaran. Please, please,stop sermonizing for these Abrahamic cults , thank you. We all know what these cults stand for and I as a Hindu will not waste my time trying to find good things( !!! ) in these cults and promote harmony etc.The Gandhian ways and being passive in the face of sheer abuse and atrocities by these sects, on our culture and our Dharmic way of life.is well and truly over. Foe centuries we have been idiots, being docile, and accommodating. The end result is we have lost one third of our country 64 years ago and now, adding insult to injury,we are also being ruled by these monstrous cults.Thousand years of abuse by these need to be stopped and stopped NOW.
    Last thing Hindus need at this time is for someone from our own faith batting out for these cults.

    (edited and published)

  140. Sarang, க்ருஷ்ணகுமார், THIRUCHCHIKKAARAN comments are fantastic.

  141. ST PAUL, THE PREVIOUS POPE DIED IN APRIL 2005.HIS COFFIN WHICH WAS BURIED IN THE CHAPEL OF VATIGAN CHURCH WAS TAKEN OUT YESTERDAY 1S MAY 2011 AFTER 6 YEARS BECOUSE OF CEREMONY FOR ”BEAUTIFICATION’ IN WHICH THE PRESENT POPE PRAYED TO THE BLOOD OF ST PAUL ( PREVIOUS POPE) AND DID SOME PRAYERS FOR THE COFFIN OF PREVIOUS POPE. THIS COFFIN WILL BE KEPT OPEN FOR PUBLIC FOR ONE MONTH. WHY THEY TOOK OUT THIS COFFIN AFTER SIX MONTHS. ST PAUL DEAD BODY IS GOING TO BE SANCTIFIED TO ‘ SAINTHOOD ” WHICH IS IMPORTANT FOR CHRISTIANS.

    WHAT IS ”SAINTHOOD” – IF SOME PRIEST HAS PERFORMED ANY ‘ MIRACLE ( TWO MIRACLES TO BE PERFORMED ) – WHAT IS THE WONDER THIS ST PAUL DID ? HE JUST PRAYED TO THE ”LORD’ WHO CURED PARKINSON DIESEAS OF A FRENCH NUN. NOW THEY ARE HUNTING FOR ONE MORE MIRACLE ( IT WILL BE PLANTED STORY ).

    JUST COMPARE WITH HINDUISM- MIRACLES ARE HAPPENING IN EVERY TEMPLE AND EVERY BODIES LIFE WITH OUR PRAYERS. NEAR VILLUPURAMM IN A SMALL VILLAGE, EVERY DAY FIRE WILL BURN IN EVERY HOUSE SUDDENTLY WITHOUT ANY REASON – THIS WAS REPORTED IN PAPERS ( ENGLISH AND TAMIL), VILLAGERS APPROACHED FIRE SERVICE DEPARTMENT WHO STATIONED IN THIS VILLAGE FOR A MONTH ALL FIRE ENGINES BUT THEY WERE FED UP WITH DAILY INCIDENTS AND OUT OF FEAR ONE DAY THEY RAN AWAY IN THE NIGHT WITHOUT INFORMING THE VILLAGERS. FINALLY VILLAGERS APPROACHED
    HINDU POOJARIES WHO DID SOME RITUALS AND SOME POOJAS TO DRIVE AWAY THE SPIRITS THAT WAS CAUSING THE FIRE SUDDENTLY IN THIS VILLAGE. EVEN AIADMK DID DHARNA IN THE VILLUPURAM COLLECT OFFICE. SOME VILLAGERS APPROACHED THE CHURCH IN VILLUPURAM WHO DISOWNED AND RAN AWAY SINCE FATHERS IN CHURCH KNEW VERY WELL THEIR PLANTED GOD CAN NOT DO ANY ‘MIRACLE”. THIS NEWS CAME IN THE SUN T VS EVERY DAY TELECAST IN THE NIGHT 10.30 ” NIJAM ” ALL ABOUT HINDUS GOD AND RITUALS. SO FOR HINDUISM WONDERS AND MIRACLES ARE DAILY PART OF LIFE . SAI BABA PERFORMED MANY WONDERS IN HIS LIFE. WE DO NOT HOLD HIM AS GOD.

    BUT FOR CHIRISTIANS, EVEN A SMALL WONDER OF JUST CURING A NUN FOR PARKINSON THIS POPE BODY WAS TAKEN OUT AFTER 6 YEARS TO PRAY FOR HAVING BROUGHT THIS WONDER OF THE WORLD IN RECORDBOOK.. CHRISTIANITY IS THE CURSE TO THE SOCIETY AND CAN NOT DO ANY GOODTHING TO THE HUMAN RACE.

  142. [This comment was Submitted on 2011/04/29 at 6:13pm. & got spammed and deleted. This is being published from backup & hence has a more recent time stamp – Editors].

    திரு. சிறிலங்கா ஹிந்து அவர்களுக்கு
    //பாஸ்கர், உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்து போகிறேன். தமிழா, தமிழன் என்று சொல்லிவிட்டால் எவ்வளவும் ஏமாற தாயாராக இருப்பதை பற்றி என்னத்தை சொல்வது?//

    சிறிலங்கா இந்து அவர்களே எதை வைத்து இவர்கள் கருத்துடன் ஒத்து போகிறீர்கள் என்று தெரியவில்லை… உங்கள் பெயருக்கு பின்னாடி இந்து என்று பின்னொட்டு சேர்த்து கொள்கிறீர்கள்.. இந்து மதத்தால் நீங்களோ இலங்கை வாழ் தமிழர்களோ அடைந்த பயன் என்ன என்று கூற முடியுமா..இன்று வரை போரில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வருபவர்கள் மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தான். சனாதன தர்மம் பேசும் இவர்கள் அல்ல … போரின்போது சிங்கள இராணுவதால் நிகழ்த்த பட்ட வன்முறை வெறியாட்டங்களை உலகுக்கு தெரிய படுத்தியது channel 4 என்னும் மேலைநாட்டு கிறிஸ்தவ ஊடகம் தான் தவிர இந்திய ஊடகங்கள் ஏதும் அல்ல. மேலும் கடைசி கட்ட போரில் விடுதலை புலிகள் வீழ்த்த பட்டார்கள் என்றதும் ராஜபக்சே என்னும் மிருகத்தை ஒரு பெரிய வரலாற்று நாயகன் அளவிற்கு சித்தரித்து கொண்டாடியது இந்த வடஇந்திய ஊடகங்கள் தான்.. அறிவிக்க படாத தசரா பண்டிகையாகவே கொண்டாடியது வடநாட்டு ஆங்கில ஊடகங்கள்…இந்தியாவை சுற்றி இருந்த தொல்லையில் ஒன்று நீங்கி விட்டது என்று பரணி பாடியது.. இப்போது ஐ.நா அறிவித்து இருக்கும் இலங்கை மீதான போர்குற்ற அறிக்கையை பற்றி எந்த இந்திய ஊடகமாவது வாய் திறந்ததா… போர் உக்கிரமாக நடந்து கொண்டு இருந்தபோது உங்களை காக்க தவறியது கலைஞர் மட்டும் தானா.. ஏன் இது நாள் வரையில் நீங்கள் நம்பிக்கையோடு வழிபட்டு வந்த இந்து மத தெய்வங்களான முருகன்,விநாயகன்,சிவன் என்று யாருமே உங்களை காக்க வரவில்லையே. அது கிடக்கட்டும் அவைகள் தான் கற்சிலைகள் உங்களை காக்க வரவில்லை கூப்பிடும் தூரத்தில் இருக்கும் 80 கோடி இந்துகள்ஆவது உங்களுக்காக குரல் கொடுத்தார்களா .. இங்கு தமிழ்நாட்டில் ஈழ தமிழர்களுகாக தெருவில் இறங்கிபோரடியவர்கள் யாரும் இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. கம்யூனிஸ்ட்களும் , நாத்திக கழகங்களும் தமிழ் அமைப்புகளும் தான்.. அது கூட பரவாஇல்லை சகோதரரே.. ஒரே நாளில் 30 ,000 தமிழர்களை கொன்ற அந்த கொடிய மிருகம் ராஜபக்சே இந்திய சுற்று பயணம் மேற்கொள்ளும் போது திருப்பதி கோயிலுக்கு சென்றானே அங்கு அவனுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து சிவப்பு கம்பள மரியாதையோடு வரவேற்பு கொடுத்ததே. அப்போது இந்த சனதானிகள் எங்கே போனார்கள் அந்த கொலைகாரனை உள்ளே விட கூடாது என்று எந்த இந்து மத அமைப்பு இதற்காக திருப்பதி சென்று போராடியது… அவன் இந்த நாட்டிற்க்கு வந்ததை தான் இவர்களால் தடுக்க முடியவில்லை.. திருப்பதி கோயில் என்பது என்ன கருணாநிதியின் சொத்தா அல்லது சோனியாவின் கட்டுபாட்டில் உள்ளதா இந்துகள் ஆகிய இவர்களின் கட்டுபாட்டில் இருப்பது தானே.. ஏன் இவர்கள் தடுக்க வில்லை.. அதை தடுக்க தான் வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு கண்டன அறிக்கையாவது கொடுத்தார்களா .. இதே ராஜபக்சே லண்டன் மாநகருக்கு சுற்று பயணம் சென்ற போது அவன் oxford பல்கலைகழகத்தில் சிறப்புரை ஆற்றுவதாக இருந்தது அதை ஈழ தமிழர்களின் போரட்டதிர்ற்கு வேண்டுகோளிற்கு இணங்க அதை ரத்து செய்து போர் குற்ற நடவடிக்கை வழக்கு தொடர்ந்து கைது செய்யும் தருவாயில் அவசர அவசரமாக தப்பி அவன் இலங்கை வந்தது வேறு கதை.. இனி அவன் எந்த காலத்திலும் லண்டன் கனடா ஆஸ்திரேலியா போன்ற மேற்குலக கிறிஸ்தவ நாடுகளுக்குள் செல்லவே முடியாது.. அவ்வுளவு ஏன் இன்று அமெரிக்க. கனடா. ஐரோப்பிய ஆஸ்திரேலியா கிறிஸ்தவ நாடுகளில் அகதிகளாக சென்று வாழும் ஈழ தமிழர்கள் அனைவரும் அந்த நாட்டு குடிஉரிமையுடன் செழிப்பாக நன்றாகவே இருகிறார்கள். இந்தியாவை நம்பி வந்த தமிழர்கள் தான் அடிப்படை வசதி ஏதும் இன்றி அகதிகள் என்ற பெயரில் நித்ய தரிதிரர்களாக இருகிறார்கள். தனி ஈழம் பெற அணைத்து தகுதிகளும் உங்களுக்கு இருந்தும் ஏன் அது உங்களுக்கு வாய்க்காமல் போனது தெரியுமா…இந்தியாவும் நீங்கள் பின்பற்றிய ஒற்றுமை இல்லாத இந்துமதமும் தான். ஒன்றுக்கு நூறு கடவுள்கள் இருந்தும் எந்த கடவுள் உங்களை காப்பற்றியது நீங்கள் கேட்கலாம் உங்கள் இயேசு கிறிஸ்து மட்டும் என்ன கிழித்திருப்பார் என்று. இதற்க்கு அவர் வரவேண்டும் என்று இல்லை..இதே நீங்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக இருந்தால் உங்களுக்கு நடக்கும் அநீதியை மேற்குலக கிறிஸ்துவ நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. பவுத்தவெறி பிடித்த சிங்களர்களை நார் நாராக கிழித்து எரிந்து உங்களுக்கு தனி ஈழம் எப்போதோ பெற்றுகொடுத்து இருக்கும்.. உதாரணம் வேண்டுமானால் இப்போது உருவான கிழக்கு திமோர் மட்டும் தெற்குசூடான் போன்ற நாடுகளை எடுத்து பாருங்கள். இங்கு இருக்கும் ஆரிய புத்தி படைத்த இந்துக்கள் உங்களுக்காக சத்தியமாக போராடமாட்டார்கள்… அவர்கள் எதற்கு போராடுவார்கள் என்று சொல்லட்டா தமிழை உலகின் முதல் மொழி என்று சொல்லிபாருங்கள் அப்போது மூல நோயாளிக்கு கோபம் வருவது போல் பொத்துக்கொண்டு வரும் .. ஆரிய திராவிட கோட்பாடுகளை கூறுங்கள் அதற்கு மறுப்பு நூல் எழுதி உடனே வெளியிடுவார்கள்.. தை புத்தாண்டு என்று சொல்லுங்கள் அப்போது நீதிமன்றதிர்க்கே சென்று தடை வாங்க செல்வார்கள்… இதற்கு தான் அவர்கள் போராடுவார்கள்.. இப்போது ஐ.நா அவை அளித்துஇருக்கும் இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையை எதிர்கபோவது நிச்சயம் சனாதன இந்தியா தான் எந்த கிறிஸ்துவ நாடுகளும் அல்ல.மேலும் இதில் இருந்து இந்தியாவின் உதவியோடு ராஜபக்சே தப்பிக்கலாம் ( கர்த்தர் அருளால் நிச்சயம் அது நடக்காது) அப்படி நடந்தால் அவன் தப்பித்தால் அவன் திருந்தி நல்லது செய்வான் என்று மட்டும் எண்ண வேண்டாம் … மீண்டும் உங்கள் மீது உள்ள வெறுப்பால் இந்தியாவின் துணையோடு மிச்ச சொச்ச தமிழர்களையும் துன்புறுத்தலாம் … அப்போதும் உங்கள் தெய்வங்கள் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். இந்த சனாதனிகளும் போராடமாட்டார்கள் .. நரி பரியான படலத்திற்கு நாற்பதாவது விருத்தயுரையை எப்படி விஞ்ஞான ரீதியாக எழுதலாம் என்றுதான் யோசித்துக்கொண்டு இருப்பார்கள் …. மிஞ்சி இருப்பது உங்கள் ஓல குரல் மட்டுமே…

  143. அன்புள்ள ரெபெக்கா

    பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டுவது என கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதுதான் இது. அட அதென்ன …//இந்து மதத்தால் நீங்களோ இலங்கை வாழ் தமிழர்களோ அடைந்த பயன் என்ன என்று கூற முடியுமா..இன்று வரை போரில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வருபவர்கள் மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தான். சனாதன தர்மம் பேசும் இவர்கள் அல்ல//

    இலங்கை தமிழர்கள் என்கிற அடையாளமே தமிழ்ஹிந்து சைவ மதம் தந்த அடையாளம்தானே… தாய் எனக்கு செய்த பயன் என்ன என்று சொல்வது போல் உள்ளது உங்கள் வார்த்தைகள். மேற்குலகக் கிரிஸ்தவ நாடுகள் போராடி வருகின்றனவா? எந்த கிறிஸ்தவ நாடுகள்? அவை இடைத்தரகு செய்ய வருகின்றன. போராட வரவில்லை. அந்த இடைத்தரகுக்குள் ஆயிரம் உள் க்ணக்குகளும் உண்டு.

    //இன்று அமெரிக்க. கனடா. ஐரோப்பிய ஆஸ்திரேலியா கிறிஸ்தவ நாடுகளில் அகதிகளாக சென்று வாழும் ஈழ தமிழர்கள் அனைவரும் அந்த நாட்டு குடிஉரிமையுடன் செழிப்பாக நன்றாகவே இருகிறார்கள். இந்தியாவை நம்பி வந்த தமிழர்கள் தான் அடிப்படை வசதி ஏதும் இன்றி அகதிகள் என்ற பெயரில் நித்ய தரிதிரர்களாக இருகிறார்கள். //

    இதுவும் சுத்தமான பொய். அந்த நாடுகளிலெல்லாம் ஈழத்தமிழர்கள் எத்தனையோ கஷ்டப்பட்டார்கள். மேலும் ஈழத்தமிழர்களுக்கு புலப்பெயர்வு அனுமதி வழங்க முனைந்த சில கிறிஸ்தவ அமைப்புகள் அவர்களின் சூழல்களை பயன்படுத்தி மதமாற்றத்தையும் வெட்கமும் மனிதாபிமானமும் இல்லாமல் செய்தார்கள் ஆனால் இந்தியாவில் இன்றைக்கு நல்ல நிலையில் வாழும் பல இலங்கை தமிழ் அகதிகள் உண்டு.

    ஆமாம் மதம் மாறினால் மேற்கத்திய நாடுகள் இலங்கையை கிழிப்பார்கள். எங்கெல்லாம் மதமாறிகள் இருக்கிறார்களோ அவர்களுக்காக எல்லாம் மனித குலத்தை கிழிப்பார்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்க உழைக்கிறோம். இன்றைக்கும் எங்கள் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் அல்லும் பகலும் எம் சகோதரர்களுக்காக அகதிகள் முகாம்களில் உழைக்கிறோம். மானுட சோகத்தை உருவாக்கி அதில் இரத்தமும் அருந்தி ஆயுத வியாபாரம் செய்து கொழுத்து அந்த காசின் உபரிகளில் சில மானுட உரிமை என்கிற எலும்புகளை விட்டெறிந்து அல்லக்கைத்தனமாக அமெரிக்கா உட்பட மேற்கத்க்திய கிறிஸ்தவ நாடுகள் செய்துவரும் மாய்மால மாஃபியா மதம் வளர்க்கும் வேலை இந்திய மக்களீடையே இந்து கலாச்சாரத்தில் இல்லை.

    பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. தவறுகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக கிறிஸ்தவத்தை விதந்தோத வேண்டிய இழிநிலைக்கு தமிழர்களாகிய நாங்கள் தள்ளப்படவும் இல்லை. கண்டம் கண்டமாக இனங்களை கருவறுத்து செல்வச் செழிப்பில் வாழும் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் அடிவருடிகளுக்கு இது புரியாது என்பதில் வியப்பில்லை. ஏனெனில் அமெரிக்க பணக்கொழுப்பில் பரப்பப்படும் கிறிஸ்தவம் இங்கு மதம் அல்ல மனநோய்.

  144. என்று தணியும் இந்த கிருஸ்து மோகம் !!!

    இந்த தமிழ்ஹிந்து தளத்தில் நமது முனோர்களின் பழம் பெருமையை பூத கண்ணாடி கொண்டு ஆராய்ந்து நம்ப தகுந்த செய்திகளை வெளிடுகிறது. இவை எல்லாம் சத்தியம் என்று எல்லோரும் நன்கு அறிவார்கள். ஆனால் கிறிஸ்துவாக மாறியவர்கள் எல்லோரும் எனது முன்னோர்கள் இவர்கள் இல்லை வெள்ளயர்கள் ஆவார்கள் என்று பூளாங்கிதம் அடைகிறார்கள். என்னே ஆனந்தம் என்று பாபிகளாய் கூத்தாடுகிறார்கள். தன்னை கசாப்பு கடைக்கு தான் மாலை இட்டு அழைத்து போகிறான் என்று இந்த ஆட்டு மந்தைகளுக்கு புரிவதில்லை.

    இவ்வாறு மாறுபவர்கள் நம் நாட்டை நாமே காட்டி கொடுக்கிறோம் என்றோ தன் தாய் நாட்டை ஊரானுக்கு விற்கிறோம் என்றோ உணர்சியற்ற ஜடங்களாக இருக்கிறார்கள். உள்ளூர் காரனுக்கு கை கட்டி வேலை செய்வதை விட வெளியூர் காரன் கால் அடியில் வேலை செய்வது பெருமை வாழ்கையின் லஷ்சியம் என்று எண்ணுகிறார்கள். ஜாதீ கொடுமையிலிருந்து விடுபடுவதாக எண்ணி மதம் மாறிய பின்பும் அது தொடர்ந்து வருவதை கண்கூடாக கண்டும் காணாதவர் போல் நடிக்கிறார்கள். (ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இதில் அன்னியர் மதம் வந்து புகல் என்ன நீதி). சந்தையில் ஜட பொருளை கூவி விற்பதுபோல் கடவுளை கூவி விற்று வியாபாரம் செய்கிறார்கள். எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா அப்படிப்பட்டவர் சக்தி வாய்ந்த கடவுளாக இருக்க முடியுமா. மோடி மஸ்தான் வித்தை காட்டுபவதுபோல் ஒருவன் ஆங்கிலத்தில் ஏதோ கூறுகிரான் அதை ஓருவன் தமிழில் மொழி பெயர்ப்பு செய்கிறான் மதம் மாறவில்லை என்றால் ரத்த வாந்தி எடுத்து சாவாய் என்று மோடி மஸ்தான் கூறுவதை போல் பயம் காட்டுகிறார்கள்.

    இன்று இலங்கையில் நடந்தது என்ன ? பல தமிழர்களும் சிங்களத்தவர்களும் படி படியாக கிருஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள்.
    இவர்கள் இருவரிடைதிலும் அவர்களே அறியாமல் பகைமை தீயை ஏவி விட்டார்கள், நஞ்சு விதைகளை அங்கே வித்திட்டாற்கள். (தமிழ் நாட்டில் ஆரியன்-திராவிடன், தமிழ்-சமஸ்கிரதம், பிராமிணன்- பிராமிணன் அல்லாதாவர் என்பதுபோல்). இரண்டுபிரிவிலும் தலை ஆட்டி பொம்மைகளை உருவாக்கினார்கள். இலங்கையை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்). இப்படி கிருஸ்துவர்களாக மாறியவர்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. குரங்கு ஆப்பதத்தை பங்கிட்ட கதை உங்களுக்கு தெரியாதா ! (சர்சிலும் அப்பம் கொடுப்பார்கள்)

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா. சிறந்த தலைஆட்டி ராஜபிராகாசேவா அல்லது பொன்சேகாவா என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. முன்னேரிய நாடுகள் இவ்வாறு முன்னேரிவரும் நாடுகளில் மதமாற்றத்தை செய்து தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி (இங்கே சோனியாவின் கைதடிக்கு மன்மோகன்சிங் ஆடுவதுபோல்) அவர்கள் அறியாமலே மொத்தஇனத்தையும் முன்னேறவிடாமல் தடுப்பதே கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஆகும். அப்படி செய்தால்தான் அவர்கள் நாடு சுபிஷ்ஷமாக இருக்கமுடியும். நமது முதல்வர் பதவி ஆசையை விட்டு காங்கிரஸ் ஆட்டியிலிருந்து விலகியிருந்தால் இலங்கையில் இறந்த பாதி உயிரை காப்பாற்றியிருக்கலாம். தமிழன் உயிரைவிட பதவி பெரிது. இதை ஏன் இந்த திராட-கிருஸ்துவர்கள் உணரவில்லை.

    கிருஸ்துவம் அராஜகத்தை துண்ட அடியாட்களை தயார்செய்கிறது. அதற்கு அரசாங்கமும் துணைபோகிறது. (சிறுபான்மை ஓட்டு) சட்டத்தைகாக்கவேண்டிய வக்கீல்களே பேட்டைரவுடிபோல் தெருவில் இறங்கி கற்களையும் சோடாபாட்டில்களையும் எறிகிறார்கள். இவர்கள் எல்லாம் திராவிட கிருஸ்துவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    தாயே ரெபெக்கா மரியம் இப்படி கண்முடிதனமாக கிருஸ்துவத்தை ஆதரித்தால் இன்று இலங்கை தமிழனுக்கு ஏற்ப்பட்ட கதி தான் இந்திய தமிழனுக்கும் ஒருநாள் ஏற்ப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

  145. ரொபேக்கே மரியம்,

    இவ்விவாதத்தில் தேவையற்ற வகையில் இறைவர்கள்… ஏன இயேசுவைப் பற்றியும் கூட மிக இழிவாகப் பேசப்படுகிறதே என்று கவலையடைந்தேன். ஆனால், தங்களின் எழுத்துக்கள் உங்களுடைய கிறித்துவ வெறியை வெளிக்காட்டுவதாக அமைந்து விட்டது. நான் இது வரை கிறித்துவத்தில் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் உங்கள் எழுத்துக்கள் முடித்து விடப் பார்க்கின்றன.

    இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிற எமக்குத் தெரியாதளவுக்கு இங்கு ஒன்றும் கிறித்துவ மிஷனறிகள் கிழிக்கவல்லை. முகாம்களுக்குள் சென்ற பாதர்கள் முதலில் பைபிள் அதற்குப் பிறகு சாப்பாடு… பைபிள் வாங்கா விட்டால் சாப்பாடும் கொடுக்கோம் என்று சொல்லி நின்றதை அறிவோம்.

    சிலுவை தொங்கும் மனிதர்களுக்கே உடுப்புக் கொடுத்ததையும் அறிவோம். ஆக, கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற… உண்மையில் நீங்கள் நம்பும் இயேசு கிறிஸ்து என்பவர் இருந்தால் அவருக்கு … அவரது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சமயமாக இன்றைய கிறித்துவம் இருக்கிறது. அதற்கு நீங்களே ஒரே சாட்சியாகவும் விளங்கி… கிறித்துவதின் பெருமையை இங்கு வந்து நிலைநாட்டுகிறீர்கள்…(!??????????)

    இனியும் உங்களின் எழுத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாது… பொய்களை பொய்கள் என்றே தெரிந்தும் எழுதும் தங்களின் எழுத்தை இலங்கை வாழ் அனைத்து இந்துக்களின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தேவையில்லை… உங்களால் இங்கு நடக்கும் விவாதத்தில் உரிய வகையில் பங்கேற்க இயலவில்லை என்றால் அதற்கு இது வழியல்ல…

    ஸத்ய மேவ ஜெயதே

  146. சகோ. ராம,

    முதலில் நான் என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.

    நான் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், நான் சொல்லும் கருத்துக்களில் உள்ள விடயங்களைப் பற்றி சிந்திக்காமல், பிரச்சாரகர் நீ பாவி, நீ பாவி என்று என்று மீண்டும் மீண்டும் திட்டுவதைப் போல, நீங்கள் எனக்கு ஒரே உபதேசத்தையே திரும்ப திரும்ப சொல்லுவதால் என்ன பலன்?

    இந்து மதம் என்கிற சனாதன மதம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு உடையது. அதன் அடிப்படை பண்புகளை விட்டு விலகி செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

    நல்ல கருத்துக்கள் எங்கே இருந்தாலும் அவை என்னை நோக்கி வரட்டும் என்கிறது ரிக் வேதம். யாரை வணங்கினாலும், அது என்னை வந்து சேர்க்கிறது என்கிறார் கிருஷ்ணர். ஆதி சங்கரர் சுப்ரமண்யர், இராமர், விஷ்ணு, அம்பாள், சிவன் …இப்படி சங்கரர் பாடாத தெய்வங்களே இல்லை. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை பல முறை சொல்லி இருக்கிறோம்.

    இப்படிப் பட்டோர் உருவாக்கிய சமுதாயத்தில் வளர்ந்த நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    நான் எழுதுவதில் என்ன தவறு?நான் எப்படியான சிந்தாந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

    இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை தவிர பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள் ஜீவனில்லாத பொய் தெய்வங்கள்,…. இது போல எழுத வேண்டுமா?

    ஒருவன் எந்த அளவுக்கு மனதில் வெறுப்புணர்ச்சி உடையவனாக இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் இந்து தன்மை குறைந்தவனாக இருக்கிறான் என்று சொல் முடியும். ஒருவன் எந்த அளவுக்கு பிற மதங்களின் மீது சகிப்புத் தன்மை இல்லாத வனாக இருக்கிறானோ அந்தளவுக்கு அவன் அடாவடி சமரச மறுப்பு பாலைவன சிந்தனையில் சிக்கியவனாக இருக்கிறான்.

    நீங்கள் சொல்வது போல இந்து மதம் பல யுகங்களாக அத்வேஷ்டா, சர்வ பூதானம் மைத்ர, கருண ஏவ ச பாதையில் சென்று விட்டது, அதனால் பல இடங்களை இழந்து விட்டோம், அதனால் இப்ப அத்வேஷ்டாவை தூக்கி போட்டு விட்டு, துவேசத்தை (வெறுப்புணர்ச்சியை) எடுத்துக் கொள் , கருண ஏவ ச வை தூக்கி போட்டு விட்டு கட்டையை போடுறா , சர்வ பூதானம் மைத்ரவை கடாசி விட்டு, வாளை தீட்டு என்றால், இது இந்து மதமா?

    நான் இப்போது போகும் பாதை சரியானதே. நீங்கள் எனக்கு சொல்லும் ” புத்திமதியை” கடை பிடித்தால் தான் நான் (ஆபிரகாமிய என சொல்லப் படும்) முரட்டுப் பிடிவாத, சகிப்புத் தன்மை மறுப்பு, இறக்க மறுப்பு மத வெறிக் கோட்பாடுகளில் சிக்கியவனாவேன்.

    ஆபிராகாமிய சிந்தனை- என சொல்லப் படும் பாதையில் செல்வது நீங்கள் தான். நான் அல்ல.

    ரொபெக்க மரியம் போனறவர்கள் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் பிற மதங்கள் அழிக்கப் பட்டு தன் மதம் மாத்திரமே இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோட்பாடு என்பதை பல ” கிறிஸ்தவ” நண்பர்கள் சொன்னதை நான் கேட்டு இருக்கிறேன். ஏனெனில் அவர்கள் வீட்டில், வழிப்பாட்டு தளத்தில் அப்படி சொல்லிக் கொடுக்கிறார்கள்.

    ஆனால் இந்து வீட்டில், இது முருகர் , நம்ம சாமிபா , கும்புட்டுக்க என்று சொல்வராகளே தவிர, வேற எந்த சாமியையும் கும்பிடக் கூடாது என்று சொல்ல மாட்டார்கள். அவன் தான் இந்து , வெறுப்புணர்ச்சி இல்லாதவன், இந்த உலகத்தை நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து செல்லப் போவது அவன்தான்.

    நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் வீட்டில் என்ன சொல்லிக் குடுத்தார்கள் என்பதை சொல்லுங்கள், இந்த சாமியை மட்டும் கும்பிடு மத்த சாமியை கும்பிடாதே என்று சொல்லிக் கொடுத்தார்களா?

    நீங்கள் முதலில் இந்து மத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பிறகு எனக்கு உபதேசம் செய்ய வாருங்கள்.

    பாலைவன மதவெறி புதை மணலில் சிக்கியவர்களை மல்லுக் கட்டி வெளியே இழுப்பதே பெரும்பாடாக உள்ளது. இதிலே உங்களைப் போன்றவர்களின் ” உபதேசங்கள்” வேறு ரொம்ப “உபகாரமாக” உள்ளது.

    நான் முன்பே சொல்லி இருக்கிறேன். என்னை மத வெறிப் பாதைக்கு இழுக்க முடியாது. பெரும்பாலான இந்துக்கள் மத வெறிப் பாதைக்கு செல்ல மாட்டார்கள், அப்படி சென்றாலும் அவர்கள் விரைவில் சிநேக பாதைக்கு திரும்பி விடுவார்கள்!

  147. நண்பர்களே! மரியம் அவர்களுக்கு இந்த web தளத்தில் இனியும் விளக்க உரைகள் எழுதுவது அர்த்தமற்ற வேலை. இதுவரை எடுத்துரைக்கப்பட்டுள்ள எந்த விஷயத்துக்கும் சரியான counter-ஐ அவர் தரவில்லை. சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டே போய் இப்போது ஒரு ஸ்ரீ லங்கா வாசியை இந்தியருக்கு எதிராகத் திருப்பும் வீண் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நண்பர்கள் இனிமேல் இவரைச் சட்டை செய்யாமல் இருப்பதே நல்லது. தேசிய கீதத்தை வெளிப்படையாக அவமதித்துள்ள இவரை இந்த நாட்டில் சட்டம் என்று ஒன்று இருந்தால் தண்டிக்கட்டும்.

  148. Respected Mariya,
    Are you healthy at brain? I can’t read till now like your comment message, you are liking your religion growth, for it you ready to support nation divide also which is your writing showing, this government allowing in side of India, that is problem.

  149. Respected Mariya,
    Your people is telling always Christians and Jesus are lovable. but from your thought we can’t think like that, your people and Jesus are violent fellows.you total people work is divide of nation and family. This also showing your comments. Really take counseling or reanalyze you yourself, its necessary for you.

  150. அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு நன்றி.
    //இந்து மதத்தால் நீங்களோ இலங்கை வாழ் தமிழர்களோ அடைந்த பயன் என்ன என்று கூற முடியுமா-Rebecca mariya .//
    ஆசை காட்டி மதம் மாற்றுவது கிறிஸ்தவ செயல்கள். அதை வெளிப்படையாகவே ஒரு இந்து தளத்திலேயே கேட்கிறார் இந்துவாக இருப்பதால் என்ன நன்மை என்று .இந்துக்களை திட்ட மிட்டு பிச்சைகாரர்களாக்கியதே என் மதத்திற்கு வந்தால் தான் நீ உயர முடியும் என்பதற்க்காக.
    இலங்கையில் வசிக்கும் இந்து ,பெளத்த மக்கள் மதரீதியாக பல நுறு வருடங்களாக இணந்தே வாழ்கின்றனர். பெளத்த ஆலயங்களில் இந்து கடவுளை வைத்தும் சிங்களவர்கள் வணங்குகின்றனர். இந்து கோவில்களை காணும் பொழுது பெளத்த சிங்களவர்கள் வணங்கியே செல்கிறார்கள். இலங்கையில் சித்திரை வருட பிறப்பு இரு மதத்தவருக்கும் ஒரே தினத்திலேயே வருகிறது. இந்து என்றால் கிறிஸ்தவத்திற்க்கு மாற கூடியவன் அல்லது யேசுவை கும்பிட கூடியவன் என்ற நிலை உருவாகி வரும் போது பெளத்தன் போய் இந்து கடவுளை வணங்குவதை எப்படி பொறுத்து கொள்வார்கள்.நண்பர் பாஸ்கர் சொன்னது போல் தமிழா தமிழன் என்று சொல்லிவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் இழக்க தயாராகும் தமிழர்களது மிக பெரிய பலவீனத்தையும் நன்றாக பயன்படுத்தி முரண்பாடுகளை வளர்த்தெடுத்து மக்களை பிரித்தது வைப்பது மேற்கத்திய நாடுகளுடைய தேவை. அதை தான் இந்தியாவிலும் செய்கின்றன. மேற்குலகு விரும்புவது சமச்சீரற்ற ஒரு குழப்பம் நிறைந்த நாடாக இலங்கை தொடர்ந்து இருக்க வேண்டும். மேற்க்குலகிற்க்கு இலங்கை அரசு கீழ்படிந்து நடக்க தயாரானால் தயாரிக்கபட்ட யுத்தக் குற்ற பத்திரிக்கை குப்பை தொட்டிக்குள் சென்றுவிடும்.30 வருடம் யுத்தத்தினால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு துயரத்தில் நிற்க்கும் மக்களை எப்படி தான் மத மாற்றம் செய்ய மனம் வருகிறதோ தெரியவில்லை.

  151. இங்கு என்னுடைய குரு சொன்ன ஒரு கேள்வி பதிலை பதிய விரும்புகிறேன்.
    கே – பெரும்பான்மையான முஸ்லீம் நாடுகள் உழைக்காமலே பணத்தை குவித்து கொண்டிருக்கிறார்கள் (எண்ணை வளத்தால்), அதை அவர்கள் போக வாழ்க்கைக்கும், மற்ற நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் வன்முறைகளை வளர்ப்பதற்கு பயன் படுத்துகிறார்கள். இன்னொரு பக்க கிருஸ்துவ மேலை நாடுகள் பணக்கார நாடுகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அவர்களும் மிதமிஞ்சிய பணத்தை தங்கள் போக வாழ்க்கைக்கும், கீழை நாடுகளில் மத மாற்றத்திற்கும் மத த்வேஷத்திர்க்கும் பயன் படுத்துகிறார்கள். கடவுள் ஏன் இவர்களுக்கு, அயோக்யர்கள் என்று தெரிந்தும் இவ்வளவு வசதிகளை கொடுத்து நல்லவர்களி சோதிக்கிறார்?
    ப – ஹிரன்யாட்சகன் & ஹிரண்யகசிபு கதை உங்களுக்கு தெரியும், ராவணன் & கும்பகர்ணன் கதையும் தெரியும். பக்தி மார்கத்தில், கடும் தவம் (நோன்பு) இருப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. அந்த பக்திக்கு மெச்சி கடவுள் அவர்களுக்கு பல ( வர) வளங்களை கொடுத்தார். ஆனால் அவைகளை வைத்து எப்பொழுது நல்லவர்களை ஹிம்சிக்க ஆரம்பித்தார்களோ, அப்பொழுது அவர்களது அழிவும் தொடங்கியது, (வரம்) வளங்களை கெட்டதுக்கு பயன்படுத்தினால் அவர்கள் எவ்வளவு கடவுள் மீது அன்பு செலுத்துபவர்களாக இருந்தாலும் அவர்கள் அழிக்கப் படுவார்கள் என்பதே நீதி. கலியுகத்தில் இந்த இருவரும் இரண்டு மதங்களாக (மதத்தினராக) உருவேடுத்திருக்கிரார்களோ?

  152. இந்து சகோதரர்களுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான Jaswant Singhஅவர்கள் நேர்மையுடன் தெரிவித்த ஒரு உண்மையை கவனத்தில் எடுத்து கொள்ளும் படி வேண்டுகிறேன்.
    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா இராணுவ பயிற்சி வழங்கியது மிகப் பெரிய தவறு ஆகும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Jaswant Singh தெரிவித்து உள்ளார். அவர் புதுடில்லியில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்தியா செய்த அத்தவறினால்தான் தமிழர்கள் இன்றும் துன்பத்தில் உழல்கின்றார்கள் என்றார்.

  153. It is important to remember that Jesus asked his followers to *hate their parents* and follow him only. Such being the case no wonder they have our flag

    God being all love omnipotent and omniscient, will never make a 13 year old betrothed girl pregnant
    and then kill the man thus born and ask people to eat his body and drink his blood to save the world!
    This is pure nonsense. It became a cult advocated by Paul. It is Paulianiity .Jesus never said he was god or the only son of god or that he died and rose. All these lies were put out by Paul who changed Jesus statements substantially. Now it is Churchianity. Churches fight for power political and material.

    Christianity is as violent as Islam towards people who do not accept it. Their love is only between their followers. They are good colonial tools. Thus India was flooded by these crooks

    Hindus are always naive and broadminded. These crooks exploit us.

    Even today we are politically so gullible

  154. Sorry.

    “It is important to remember that Jesus asked his followers to *hate their parents* and follow him only. Such being the case no wonder they have our flag”

    I meant they hate our flag.

    Both muslims and Christians are supposed to hate our flags and Bharatha Maatha

  155. //எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்//

    இது தவறான தகவல். பிருபாகரன் மதம் மாறவில்லை. தமிழ் இந்துவாகவே வாழ்ந்து தமிழ் இந்துவாகவே மரித்தார்.

  156. ///இந்து மதத்தால் நீங்களோ இலங்கை வாழ் தமிழர்களோ அடைந்த பயன் என்ன என்று கூற முடியுமா..இன்று வரை போரில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வருபவர்கள் மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தான்.//

    இந்துக்கள் இந்தியாவை ஆண்டு வந்து கொண்டிருந்த வரை இலங்கைத் தமிழர்கள் (விடுதலைப் புலிகள் உட்பட) பாதுகாப்பாகவே இருந்தார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவப் பெண் இந்திய தலைமையை ஆட்டுவிக்கத் துவங்கியவுடன் இந்துக்களான இலங்கைத் தமிழர்களை கூண்டோடு கொன்றுவிட்டாள். இப்போதும் இந்தியா அந்த கிறிஸ்தவச்சியின் கையில் தானிருக்கிறது. நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது.

    (edited and published)

  157. விவாதம் செய்வதன் மூலம் உண்மை வெளியாகும். இந்தச் சகோதரி (மரியம்) பிரச்சார பீரங்கியாகத் தமிழ் ஹிந்து web தளத்தைப் பயன்படுத்தப் போய், “வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட கதையை” நினைவு படுத்திவிட்டார்.

  158. தமிழ் ஹிந்து நிர்வாகிகளுக்கு,
    நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து கண்டபடி எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்; ஆனால் அதற்கு நாங்கள் கொடுக்கும் விளக்கங்களைப் பதிக்கிறதில்லை; இது என்ன நியாயமோ தெரியவில்லை; குற்றவாளிக்குக் கூட தன் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்லும் உரிமை உண்டல்லவா? ஆனால் உங்கள் கோர்ட்டில் நியாயங்கள் புரட்டப்படுகிறதே..? எம்மைக் குறித்த புரட்டுகளை நிறுத்துங்கள் அல்லது உங்களுக்கெதிரான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்..!

  159. Sorry everyone for going off the topic
    Mr Tiruchikaran, my request to you is simple:Stop batting for these desert cults and nothing more. I cannot be more clearer than this. May I also request you, with due respect, to speak for yourself rather than the entire Hindu community?
    My reverence for anything Hindu and it’s teachings cannot be put into words. Specifically, I do not need anyone advocating it’s virtues to ME in the name secularism, broad minded Hindu,etc, thank you. Also, I definitely do not want to search and do in depth study of the barbaric cults to find spiritual answers.I find more values in reading Pancha thanthra stories.
    I want peace, practice my faith and preserve my culture.This I want to do without someone shoving their infantile dogmas down my throat in spite of my repeated protests. Being passive and docile, as we have been in the past in the face of adharmic atrocious activities is the root cause of all our problems. There is no room for failed Gandhian ways to protect our dharma. Please understand that I am not advocating violence. Far from it. I do not want my Hindu brothers and sisters preaching non violence to these morons while being kicked repeatedly in their posterior by them. Arise and DEFEND YOURSELF.

  160. சகோ. ராம ,

    இந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களில் முதலில் என்னைக் குறிப்பிட்டு திருச்சிக்காரனுக்கு சரியா பதிலடி என்பது போல எல்லாம் எழுதி, தொடர்ந்து எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தது நீங்கள் தான்.

    என்னுடைய கோட்பாட்டில் தவறு இருப்பதாக கருதினால் எப்படி தவறு என்று விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு “திராவிடன், நீங்க திருச்சிக்காரனுக்கு சரியாபதிலடி கொடுத்தீங்க” என்று அரசால் புரசலாக பேச வேண்டியது தேவை இல்லாதது. உங்களுக்கு பிறரின் அறிவுரை பிடிக்கவில்லை என்றால், முதலில் நீங்கள் பிறருக்கு உபதேசம் செய்வதை நிறுத்த வேண்டும்.

    பத்தாயிரம் வருட ங்களுக்கு மேலான வரலாறு உடைய இந்திய சமூகத்தையும் , இந்து மதத்தையும் பற்றி பேச நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்து மதத்தின் அடிப்படைகள் என்ன என்பதை சக இந்து சகோதரர்களுக்கு சொல்ல எனக்கு எல்லா உரிமையும் உண்டு. கடவுள் அனுப்பிய தூதுவர் தான் வந்து கட்டளைகளைப் போட்டு இந்த சாமியை தான் கும்பிடனும், இல்லேன்னா 7 தலைமுறைக்கும் வன்மம் எடுக்கப் படும் என்பது போன்ற உருட்டல் மிரட்டல் இந்திய சமூகத்தில் நடக்காது.

    அதே போல இந்து மதத்தின் மீதான உங்கள் கருத்தக்களை வைக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. எது சரியான கருத்து என்பதை இந்துக்கள் தங்கள் மனசாட்சியிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

  161. சில்சம்…! தமிழ் ஹிந்து தெரியாத எதைப்பற்றி எழுதிவிட்டது? அல்லது மறுப்பவர்கள் எதைத் தெரிந்துகொண்டு மறுத்துவிட்டார்கள்? புரியவில்லையே…!

  162. Mr Tiruchikaran, you still don’t get it, do you?
    Simply put, I want to follow Chatrabathi Sivaji’s way and you want to follow failed Gandhian ways.
    I will not be responding to your comments further ( to YOU SPECIFICALLY). I have better things to do than replying ad infinitum, to this sort of pseudo secularist’s ramblings.
    Hopefully, our goals are same. We don’t see eye to eye and let us just leave it at that.
    We have Rebeca and co to deal with and let us put our energy into that. If this sounds like a patronizing advise, then I am sorry.

  163. அன்புள்ள திருச்சிக்காரரே…!
    பெரும்பாலான ஹிந்துக்கள் ஜீசசையும் தெய்வமாகக் கருதுவதற்குக் காரணம் ‘கடவுளைத் தவிர வேறு ஒன்றுக்கு இருப்பே இல்லை’ என்னும் வேதத் தத்துவமே…!

  164. சகோ . ராம,

    //failed Gandhian ways//

    இந்தக் கருத்தை நான் ஏற்க முடியாது. நீங்கள் இப்படி சொல்வதை நான் ஆட்சேபிக்கிறேன்.

    காந்தியின் வழி என்பது எட்டாயிரம் வருட இந்திய சமூகத்தின் வழியே, இராமரின், அரிச்சந்திரரின் , அசோகரின், அக்பரின், சிவாஜியின் வழியே காந்தியின் வழி…

    நீங்கள் காந்தியையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை, சிவாஜியையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை,

    சிவாஜி எந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மை கொண்ட ,மத நல்லிணக்க மாமன்னன் என்று உங்களுக்கு தெரியுமா? பிற மதத்தினர் இந்துக்களை மத ரீதியில் துன்புறுத்தி, அச்சுறுத்தி சிறுமைப் படுத்துவதையே சிவாஜி எதிர்த்தார், ஆனால் பிற மதங்களின் மேல் அவருக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததே இல்லை.

    https://thiruchchikkaaran.wordpress.com/2010/11/28/sivaji-the-peerless-emperor/
    சத்ரபதி சிவாஜி – மத சகிப்புத் தன்மை கொண்ட இணையற்ற மாமன்னன்!

    காந்தியின் வழி தோல்வி அடையவில்லை, அது வெற்றி வழி. இன்று உலகின் மிகச் சிறந்த அரசியல், சமூக சிந்தனையாளர் அனைவரும் காந்தியை வியப்புடன்நோக்குகினறனர். நீங்கள் சொல்லும் வழியில் போனால் இந்து மதமும் இன்னொரு ஆபிரகாமிய கோட்பாட்டு மதமாகவே ஆகும்.

    இந்துக் கடவுளகளை கும்பிட்டுக் கொண்டு உணர்வளவில் ஆபிராமியராக இருக்கும் சமுதாயத்தை உருவாக்க நான் விரும்பவில்லை. இந்தியாவில அது நடக்கவும் நடக்காது.

  165. தமிழ் ஹிந்து என்கிற தளம் ஹிந்துக்களுக்கானது என இக்கணம் வரை நம்பி வருகிறேன். ஹிந்து சமயக் கருத்துகளை எடுத்துக் கூறுவதோடு, ஹிந்து சமூகம் இன்று தனது தாயகத்திலேயே எதிர் நோக்கியுள்ள பிரசினைகளை எடுத்துக் கூறுவதும், ஹிந்து சமூகம் இனியும் அலட்சியமாக இருந்தால் ஏற்படக் கூடிய பாதங்களை விளக்கி எச்சரிப்பதும்கூடத் தனது பொறுப்புகளாக இந்த தளம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் நம்புகிறேன். மாற்று சமயத்தினர் ஹிந்து சமயத் தத்துவங்களை அறிந்து கொள்ளவும் ஹிந்து சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் இந்த தளத்திற்கு வருகை தருவதும் தங்கள் ஐயப்பாடுகளை கண்ணியமான முறையில் உண்மையான அக்கறையுடன் விளக்கம் கேட்பதும் சரியே. ஆனால் தற்சமயம் இங்கு நடைபெறும் வார்த்தையாடல்களைப் பார்க்கும்போது மாற்று சமயத்தினர் தங்கள் சமயத்தைப் பிரசாரம் செய்யவும் ஹிந்து சமயக் கோட்பாடுகளின் நுட்பம் அறியாமலே அவற்றை எள்ளி நகை யாடவும் இந்த தளம் மிகவும் தாராளமான பொது தளமாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் ஹிந்து சமூகப் பிரச்சினைகளின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்வதுமான கருத்துகளுக்கும் இங்கு இடமளிக்கப்படுகிறது. இவ்வாறான கருத்தைக் கூறுவோர் தமக்கு அதற்கு உரிமை இருப்பதாக முழங்கவும் இங்கு இடமளிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறான கருத்துடையோர் அவரவர் ப்ளாக்கில் (Blog) இஷடப்படி எது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாமேயன்றி தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினரின் தாராளப் போக்கை துஷ்பிரயோகம் செய்யலாகாது. ஆசிரியர் குழுவும் இதற்கு இடமளிக்கலாகாது. இல்லையேல் ஹிந்துக்களே நமக்கு எவ்விதக் குறையும் இல்லை, நிம்மதியாகத் தூங்கி மகிழலாம் வாருங்கள் என்கிற பிரச்சாரம்கூட மறுமொழி என்ற பெயரில் இங்கு தொடங்கிவிடும் என்பதை உணர வேண்டுகிறேன். ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் நலன்கள் எந்த அளவுக்கு நாளுக்குநாள் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துக் கூறி ஹிந்துக்க்ளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இந்த தளத்தின் குறிக்கோள்களுள் முக்கியமானதாக இருக்க வேண்டும். இதற்கு விரோதமான கருத்துகளுக்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இடமளிக்கத் தேவையில்லை. அனைத்து சமயத்தினரின் விவாத மேடையாக தமிழ் ஹிந்து இருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து. என் கருத்தை இங்கு தெரிவிக்க முன்வந்தமைக்குக் காரணமும் தமிழ் ஹிந்து வாசகர்கள் பலர் என்னிடம் வேதனை தெரிவித்து எனது கருத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டமையால்தான் என்பதையும் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். ஏனெனில் நீ யாரடா அதிகப் பிரசங்கி என்று கேட்போரும் உண்டு.
    மலர்மன்னன்

  166. ஆரிய-திராவிட பிரிவினை வாதமும் பிராம்மண வெறுப்பும் கொண்ட மரியம் அம்மாள் ‘வீரமாமுனிவர்’ என்ற ஒருவரை குறிப்பிட்டிருக்கிறார். இவர் யாரென்று சிறிது நேரம் ஆராய்ச்சி செய்து பார்த்தோம். இவர் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் கற்றுத் தமிழர்களிடம் கிறித்தவ நோயைப் பரப்ப வந்தவர். இவர் பற்றி கிடைத்த தகவல் இதோ:

    “1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

    இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.”

    இதைப் போலவே ‘தத்துவ போதகர்’ என்று அழைக்கப்பட்ட ராபர்ட் நொபிலி என்பவரைப் பற்றி:

    “Roberto de Nobili adopted also the Indian custom of shaving one’s head and keeping only a tiny tuft. He wore white dhoti and wooden sandals to don the look of a sanyasin. Another symbol he embraced was the wearing of a three-stringed thread across the chest. He interpreted the three-stringed thread as representing the Holy Trinity, Father, Son and Holy Spirit.”

    “His method raised a fierce controversy among his fellow Jesuits and with the Archbishop of Goa Cristóvão de Sá e Lisboa. The dispute was settled by Pope Gregory XV with the Constitution Romanæ Sedis Antistes issued on 31 January 1623. The customs of the three-stringed thread, the tuft, the use of sandalwood paste on the forefront and baths were allowed…”

    ஆகா, கிறித்தவத்தைப் பரப்ப மட்டும் ஆரிய சின்னங்களாகிய பூணூல், குடுமி, கோபி சந்தனம், பல்லக்கு, புலித்தோல் முதலானவை வேண்டும். மற்றபடி ஆரியர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவக் காத்திருக்கும் திராவிடர்களின் விரோதிகள் தான். என்ன வேடிக்கை.

    நன்றி:
    (1) https://en.wikipedia.org/wiki/Roberto_de_Nobili
    (2) https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்

  167. ஹிந்துக்கள் ஏசுவை வணங்கலாம் என எழுதப்படும் மறுமொழியை இங்கு வெளியிடுவதாயின் தமிழ் ஹிந்து என்கிற பெயர் இந்த தளத்திற்குத் தேவையில்லை என்றாகிவிடும். தமிழ் ஹிந்துக்களில் பலர் ஏற்கனவே திசை அறியாது குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் மேலும் தடுமாறுவதற்கே இம்மாதிரியான மறுமொழிகளை வெளியிடுவது வழி செய்யும்.

    நான் பல ஆண்டுகள் பொறுமையுடன் விடாது ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குச் சென்று வந்தேன். அதன் விளைவு ஒரு பத்து கிறிஸ்தவக் குடும்பங்கள் தாய் மதம் திரும்பின. பாதிரியார் பயிற்சி பெற்று வந்த ஒருவரும் பயிற்சியைத் துறந்து தாய் மதம் திரும்பினார். ஒரிஸ்ஸா கந்தமாலிலும் கிறிஸ்தவப் பாதிரிமார் பயிற்சியிலிருந்த இருவர் என்னால் தாய் மதம் திரும்பியுள்ளனர். அங்குள்ள பிரபல ஹிந்து சேவகர் அசோக் சாஹுவைக் கேட்டால் தகவல் தருவார். இவர் ஐ பி எஸ் அதிகாரியாக இருந்து வேலையை ராஜிநாமா செய்தவர். கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டவர். காலஞ்சென்ற ஸ்வாமி லக்ஷ்மணானந்த ஸரஸ்வதி நடத்தி வந்த மடத்திற்குத் தலைமை ஏற்று நடத்துமாறு இவர் என்னிடம் இடைவிடாது வற்புறுத்தி வருகிறார். அது வனவாசிகள் நலனுக்கான மடம். நன்றாக நடைபெற்று வந்தாலும் மக்களுக்கு ஆன்மிக வீர்யம் வரச் செய்வதற்குப் போதுமான தலைமை இல்லை.
    நான் அங்கு தங்கியிருந்தபோது வனவாசிகள் என்னுடன் மிகவும்
    அன்னியோன்னியமாக இருந்ததால் அசோக் சாஹு நான் அந்த மடத்திற்கு தலைமை வகிக்க முற்றிலும் பொருத்தமானவன் என்று முடிவு கட்டிவிட்டார். நான் விடைபெறுகையில் மீண்டும் எப்போது வருவீர்கள் என்று வனவாசிகள் கேட்டபோது அசோக் சாஹு முந்திக்கொண்டு சீக்கிரமே உங்களுடன் இருக்க வந்து விடுவார் என்று அவராகவே அறிவித்து அனாவசியமாக அவர்களை அல்ப சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டார்.

    இவை சம்பந்தமான வீடியோ சுதேசி ஆசிரியர் ஸ்ரீமதி பத்மினி ரவிசந்திரனிடம் உள்ளது.
    மலர்மன்னன்

  168. ஸஹொதரர் சில்ஸாம் ஷலோம்

    நீவிர் உம்முடைய வலைப்பூவில் ஹிந்து ஸமயத்தைப்பற்றி எந்த அளவுக்கு கருத்துகளைச்சிதைத்து ஹிந்து புராணங்களையும் ஹிந்து தேவதைகளையும் பற்றி தரக்குறைவாக எழுதி வருகிறீர் என்பது உமது வலைப்பூவைப் பார்ப்பவர் அறிந்து கொள்வர்.

    இத்தளத்தில் க்றைஸ்தவம் சம்பந்தமாக காஷ்டமான விமர்சனங்களை பார்க்க நேருகிறது. ஆனால் தரம் தாழ்ந்த விமர்சனங்களை தள நிர்வாகிகள் பதிவு செய்வதில்லை என்பது பல மறுமொழிகளின் கீழே எடிட் செய்யப்பட்டது என்ற செய்தியின் மூலம் அறியலாம். இது ஹிந்து மதம் மற்றும் ஹிந்து மதத்தவரின் பெருந்தன்மையென அறிவீர்.

    எல்லாருக்குமானவர் என நாங்கள் அறியும் கடவுள் என்ற தத்வத்திற்கும் ஆப்ரஹாமிய மதங்களுக்கு உரியவர் என நீவிர் ப்ரசாரம் செய்யும் அதீத பொறாமைக்கார தத்வம் தன்னை நம்பாதவன் என்ற ஒரே காரணத்திற்காக மற்றவரை நரகத்தில் தள்ளுவர் என்ற அறுவறறுக்கத்தக்க கோட்பாட்டுக்கும் விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள வேறுபாடு. இத்தனையும் மீறி ஹிந்து மதத்தை சேராதவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு ஆப்ரஹாமிய மதத்தவர் நரகமேகுவார் என எமது தர்சனங்கள் சொல்வதில்லை. ஆதலால் யாதொரு ஹிந்துவும் அவ்வாறு கருதுவதும் இல்லை.

    க்றைஸ்தவம் என்ற கோட்பாடு ஸம்பந்தமாக எமக்கு ஆவாஹனமும் இல்லை விஸர்ஜனமும் இல்லை.

    மேலும் இந்த நிலைப்பாட்டை மீறி யாம், காலமே தேவனைத்தேடு, ஸர்வலோகாதிப நமஸ்காரம், சீரேசுநாதனுக்கு ஜெயமங்களம் போன்று பல க்றைஸ்தவ பாடல்களை கேட்டு மகிழ்ந்ததுண்டு. இனிய இசை என்பதால் மட்டும்.

    ஏன் ப்ரதி தினம் பொதிகையில் ஸ்ரீ ஸாம் செல்லதுரை அவர்களின் மணிப்ரவாள பைபல் ப்ரசங்கம் மற்றும் அவரது மணிப்ரவாள தமிழில் மேற்கத்திய இசையையும் அவ்வப்போது இசைக்காகவும் ஊடே இருக்கும் மணிப்ரவாள ப்ரயோகத்திற்காகவும் அதன் ஸ்வச்சதை அறியவேண்டி கேட்பதுண்டு.

    கடவுள் என க்றைஸ்தவ மத வ்யாபாரிகள் பரப்பும் ஒரு தத்வம் ஸஹிப்புத்தன்மையற்றதாகவும் அதீத பொறாமையின் ஒட்டு மொத்த உருவமாகவும் பரப்பப்படுகிறது. இது க்றைஸ்தவமன்றி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து விதேசி ஆப்ரஹாமிய மதங்களுக்குமான விஷயமாய் உள்ளது.

    ஸனாதன, பௌத்த, ஜைன, சீக்கிய, பூர்வமீமாம்ஸக, அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத, யோக, சாங்க்ய, லோகாயத, நாஸ்திக இத்யாதி எந்த பாரதீய தர்சனங்களிலும் தம்முடைய தர்சனங்களை பின்பற்றாதவர் மீளா நரகமேகுவார் என்ற பிதற்றல் காண இயலாது. ஏனெனில் இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. மற்றும் ஸர்வவ்யாபி மற்றும் ஸர்வ ஜகத் காரண கர்த்தா என அறியப்படும் கடவுள் என்ற தத்வத்திற்கு நேர் விரோதமானது. ஆப்ரஹாமிய தத்வங்களில் சொல்லப்படும் தத்வமாகப்பட்டது ஒப்பு நோக்கவேண்டுமெனில் அதீத பொறாமையுள்ள ஹிரண்யகசிபு போன்ற ராக்ஷஸ ப்ரக்ருதிகளுடன் ஒப்பு நோக்க்த்தக்கது. ராக்ஷஸப்ரக்ருதிகளை வணங்குவது தேவையற்றது. பின்னும் ஒருவர் வணங்க இச்சைப்பட்டால் அது அவரிஷ்டம். ஆனால் அதையே ஸ்வர்க நரகாவரோஹணத்திற்கு ஹேதுவாக ஏற்பது அப்பட்ட மதிஹீனம்.

    உம்முடைய மத்தை சேராதவர் பாபி அவர் நரகமேகுவார் போன்ற பிதற்றல்களை உம் மதத்தைச்சேர்ந்தவரிடம் மட்டும் வ்யாபாரம் செய்யவும். இது போன்ற புனைசுருட்டு சாமான்களை வாங்குவதென்ன ஏறெடுத்துப்பார்க்க கூட ஹிந்துக்கள் தயாரில்லை என்று நீவிர் அறிவது நலம்.

    க்றைஸ்தவத்தை ஏன் ஏற்கக்கூடாது என எம் ஸஹோதர ஹிந்துக்கள் தமக்குள் அளவளாவுவது அவசியமே என்பது இங்கே மதிஹீனமாகவும் வெறித்தனமாகவும் க்றைஸ்தவ ஸஹோதரர்கள் மற்றும் ஸஹோதரிகள் இட்ட மறுமொழிகள் மூலம் துலங்குகிறது.

    இந்த விசாரங்களை படித்து ஒரு க்றைஸ்தவனாவது அன்ய மதஸ்தவரிடம் ஆப்ரஹாமிய மத வ்யாபாரம் செய்வதை தவிர்ப்பானானால் அது லோகஹிதமாகும்.

    எல்லோருக்குமான ஸர்வலோகாதிபனான ஸச்சிதானந்த பகவான் ஆப்ரஹாமிய மதஸ்தர்களுக்கு ஸன்மதி கொடுக்க இறைஞ்சுகிறேன்.

  169. வணக்கம்

    அன்புள்ள சகோதரர்களே ஒவ்வொரு மறுமொழி பதிவிலும் ரெபேக்க மரியம் அவர்கள் கிறிஸ்துவத்தின் மறு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார், எனவே அனைவரும் அவருக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப் பட்டு உள்ளோம். நன்றி ரோபெக்கா மரியம் அவர்களே.

    உணர்ச்சி வசப் படுபவர்களால் உண்மையை மறைக்க முடியாது.

  170. பெரும்பாலான ஹிந்துக்கள் ஏசுவை தெய்வமாக வணங்குபவர்கள் என்றால் மிகையில்ல என்று ஸ்ரீ கோபால் கட்டுரையைத் தொடங்கியதுதான் தவறாகிவிட்டது. ஹிந்துக்களில் பலர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஹிந்துக்களில் பெரும்பாலானவர்கள் என்பதில் கருத்துப் பிழை உள்ளது. ஹிந்துக்களில் பெரும்பாலானவர்கள் இயேசு மீது ஐயோ பாவம் என அனுதாபம் உள்ளவர்கள் எனப்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
    -மலர்மன்னன்

  171. @ Krishnakumar
    I love your writing. What a style and so much substance! Please keep it up. Only problem is whether Rebeca Mariam will be able to comprehend your writing. Being a brain washed Christian, it might just go over her head!

  172. இங்கே சகோ. ரமா ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

    // failed Gandhian ways//

    இந்தக் கருத்து பெரும்பான்மையான இந்திய மக்களின் கருத்தா , பெரும்பான்மையான இந்துக்களின் கருத்தா?

    காந்தியின் வழி எப்படி தோல்வி வழியாக கருதப்பட முடியும்? கத்தியின்றி , இரத்தமின்றி அஹிம்சை வழியில் போராடி வெற்றி பெற்று இருக்கிறார். இன்று உலகமே அவரது முறையைக் கண்டு அதிசயப் படுகிறது. உலக அரசியல் சிந்தனையாளர்கள் அவரைக் கண்டு வியக்கின்றனர். மார்ட்டின் லூதர் கிங் ,மண்டேலா ஆகியோர் அவரது வழியை பின்பற்றி இருக்கின்றனர்.

    மேலும் சிவாஜி வழி என்றால் என்ன? சத்திரபதி சிவாஜியின் வழி மத சகிப்புத் தன்மை உடைய , மத நல்லிணக்க வழியே. அவர் எந்த ஒரு கோட்டையை பிடித்தாலும் இடும் முதல் கட்டளை, பிற மத வழிபாட்டு தலங்களுக்கு முழுப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான்.

    இந்துக்களை அச்சுறுத்தி பலவந்தப் படுத்தி கட்டாய் மதமாற்றம் செய்தல், அடிமைப் படுத்தல் ஆகியவற்றையே சிவாஜி எதிர்த்துப்போராடினாரே யன்றி அவர் மனதில் ஒரு போதும் பிற மதங்களுக்கான வெறுப்புணர்ச்சி இருந்ததே இல்லை.

    காந்தியின் வழி என்பது ஒரு புதிய வழி இல்லை. இந்திய மக்கள் பல்லாயிரம் வருடங்களாக கடை பிடித்த வழியே. இராமரின்,அரிச்சந்திரரின், அசோகரின், அக்பரின்… வழியே காந்தியின் வழி.

    மத சகிப்புத் தன்மை, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் காந்திக்கும், சிவாஜிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  173. இன்று நான் அனைவருடைய கருத்துக்களையும் தொடர்ந்து படித்தேன். பொதுவாக நான் அனைத்து வலை தளங்களுக்கும் சென்று படிக்க கூடியவன்.

    கிறித்துவ மிச்சினரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் வியாதிகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இவர்கள் விவாதத்தை மாற்றி கொண்டே இருப்பார்கள். ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது அந்த விவாதம் முழுமை அடையும் முன்பே, இவர்கள் அடுத்த வேறு ஒரு விஷயத்தை பேசுவார்கள். ஏன் விவாதத்தில் முடிவு ஏற்பட்டால் கண்டிப்பாக தோற்று விடுவார்கள் அல்லவா?

    கொஞ்சம் கூட நா கூசாமல் நமது கலாச்சாரத்தை ஆரிய கலாச்சரம் என்றும், ஆரிய படையெடுப்பு என்றும் கூறும் இந்த முட்டாள்களை என்னவென்று சொல்வது. இவர்களுக்கு எத்தனை ஆதாரங்கள் கட்டினாலும் திரும்ப திரும்ப இதை தான் பேசி கொண்டு இருப்பார்கள். தூங்கறவனை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது.

    அடிபட்டு தான் திருந்துவேன் என்று சொல்பவர்களை என்ன வென்று சொல்வது? இதில் என்ன சிறப்பு என்றால், நம் நாட்டில் பிறந்த ஒருவரையே நமக்கு எதிராக பேசவைத்து ஐரோப்பாவில் இருந்து நாம் அடித்துகொல்வதை ரசித்து கொண்டு இருக்கும் திருட்டு கொள்ளை கூட்டகாரர்கள் உண்மையில் புத்திசாலிகளே!!

  174. வணக்கம்

    //////ஐயோ பாவம் என அனுதாபம் உள்ளவர்கள் எனப்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம்./////
    -மலர்மன்னன்

    மதிப்பிற்கு உரிய ஸ்ரீ மலர்மன்னன் அய்யா அவர்களுக்கு நன்றி.

    இதுவரை வந்த மறுமொழிகளில் மிக சிறந்த வார்த்தை என்று இதனை மட்டுமே சொல்ல முடியும் ஏனெனில் இதுவே உண்மையான பதில்.

    இதுவே பாரத மக்களின் பலவீனம், இன்றும் நமது நாட்டிலே தேர்தலின் போது
    கவனித்தால் நன்றாக புரியும், இவ்வளவு சொல்வானேன் ராஜிவின் மரணமே காங்கிரசின் வெற்றிக்கு துணைபோனது என்பது நாம் அறியாததா?

    எதோ திரைப் படத்தில் நடிகர் சத்திய ராஜ் சொல்லும் வசனம்

    “நம்ம ஆளுங்க எல்லாம் மூக்கை சிந்திகிட்டே முத்திரை குத்தினாதான் திருப்தியா இருப்பாங்க”

    அப்படித்தான் இதுவும். இயேசு என்கிற ஒரு மனிதனின் வாழ்கையை தியாகமாக்கி அவர் சிலுவை சுமந்ததாக ஒரு கண்ணீர் கதையை கண்ணீர் மல்க சொல்லி அதுவும் நமக்காக என்றே அதை சுமந்தார் என்று நமது மனம் கரைய அழுது முதலில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நாம் அவர்களின் வார்த்தைகளுக்கு கரைகிரோமா, கரிசனப் படுகிறோமா என்பதையே. நமது எதிர் வினைகளைப் பொறுத்தே அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இது என் அனுபவத்திலே கண்ட உண்மை.

    இதற்குதான் நமது தர்மத்திலே ஒரு தீர்வு உண்டே அதை மதித்தாலே போதும். ஆம் அவரவர் கர்மாவின்படியே அவரவர் வாழ்வு. இதை மதித்தால் எசுவுக்காக வேண்டுமானால் வருத்தப் படலாம்,

    பொதுவாக இந்த கட்டுரையின் தலைப்பை தாண்டியே என் பதில் உட்பட எல்லாமே உள்ளது, என்னைப் பொறுத்த வரையிலே நமது தர்மத்தின் கட்டுமானம் மனித மனம் சார்ந்தே அதாவது உள்ளத்திலே தான் இறைவனின் உறைவிடம் என்றெல்லாம் சொல்வது ஏனெனில் மனம் தூய்மையாக வேண்டும்.

    பொதுவாகவே மனம் உற்சாகமாக இருந்தாலே அன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தூங்கி எழுந்த உடனே சவமான ஒரு மனிதரை அதுவும் ரத்தமும் துயரமும் நிறைந்த ஒரு உருவத்தை பார்த்து நமது உள்மனம் நம்மை அறியாமலே ஒரு துயர சூழ்நிலைக்கு சென்றுவிடும். அத்தகைய ஆரம்பம் வெளிப் பார்வைக்கு நாளெல்லாம் சந்தோஷமாக இருப்பினும் அவர்களின் நடவடிக்கைகள் கண்டிப்பாக முழுமையாகாது.

    இதை தெளிவாக எழுத வேண்டுமாயின் நிறைய இடம் தேவைப் படும். எனவே நமது முன்னோர்களின் புத்தி சாலித்தனம் எவ்வளவு தீர்க்கமானது என்பதை சில பழமொழிகளின் மூலமாகவே சொல்லி வைத்து இருப்பதை கொண்டு அறியலாம். ஆம் ஒரே வார்த்தையிலே சொல்லி வைத்து உள்ளார்கள்

    எண்ணம் போலே வாழ்வு.

    மேலும் ஸ்ரீ திரு மூலரின் வாக்கை கேளுங்கள் :

    உள்ளம் பெரும் கோவில், ஊனுடம்பு ஆலயம்
    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
    கள்ளப் புலனைந்தும் காண்டா மணிவிளக்கு.

    மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம். இதுவும் சித்தர் வாக்கே.

    இறைவன் வாழும் தூய உள்ளத்தை வீணாக கெடுக்க வேண்டாம் என்பதுவே இங்கே நோக்கம்,

    அஹம் பிரம்மாஸ்மி.

  175. \\\\\\\நான் பல ஆண்டுகள் பொறுமையுடன் விடாது ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குச் சென்று வந்தேன். அதன் விளைவு ஒரு பத்து கிறிஸ்தவக் குடும்பங்கள் தாய் மதம் திரும்பின. பாதிரியார் பயிற்சி பெற்று வந்த ஒருவரும் பயிற்சியைத் துறந்து தாய் மதம் திரும்பினார். \\\\\\\\

    ஸ்ரீ மலர்மன்னன் நமஸ்காரம். பின்னொரு உத்தரத்தில் தில்லியில் முஸல்மான் ஸஹோதர ஸஹோதரிகள் சிலர் தங்கள் முயற்சியால் ஹிந்து மதம் ஏகியதை வாசித்தேன். வளர்க உங்கள் பணி. தான் செழிக்க அடுத்தவன் அழிய வேண்டும் என்ற அடிப்படையில் அமையும் கோட்பாடுகள் துலக்கப்படுதல் நன்று.

    ஆயிரம் வருஷங்களாக இஸ்லாமும் சென்ற ஓரிரு சதாப்தங்கள் க்றைஸ்தவமும் வாள்முனையிலும் துப்பாக்கி முனையிலும் பொய் புனைசுருட்டு பால்பவுடர் பணம் பித்தலாட்டம் போன்ற பன்முக உத்திகளால் மதபரிவர்த்தனம் செய்ய விழைந்தும், மத ரீதியாக நான்கு வர்ண விபாகம் சொல்லப்பட்டு ஆனால் மத சாஸ்த்ரங்கள் உயர்வு தாழ்வு கற்பிக்காத போதும் பல்லாயிரம் ஜாதிகளாக விபாகமாய் உயர்வு தாழ்வுகள் உள் நுழைந்து க்ஷீணமாகிய ஸமூஹத்தை பற்பல இறைவனடியார்கள் அவ்வப்போது தோன்றி ஸமதர்மத்தை ஸ்தாபிக்க விழைந்தும், தேசமும் தர்மமும் சோரம் போகாது காக்கப்பட்டு வருவது இந்த தர்மத்தில் ஆழ்ந்த கோட்பாடுகள் உள்ளதை தெரிவிக்கிறது.

    இவ்வளவுக்குப் பின்னும் ஸர்வ லோக ஹிதமான இந்த தர்மத்தை துறவாது பின்பற்றும் தலித் என்றழைக்கப்படும் எமது ஸஹோதரர்களே உயர்ந்தவர் என்றழைக்கப்படும் ஸஹோதரர்களை விட இந்த தர்மத்தை காப்பதில் அதிகம் பங்களிப்பவர்கள் என எண்ணத்தோன்றுகிறது. ஏதோ காலத்தில் இடப்பட்ட கட்டளைகள் ஸஹிப்புத்தன்மையின்மை போன்ற கூண்டுகளுக்குள் அடைபடாது காலவெள்ளத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டும் அதே சமயம் அஸ்திவாரமான மூலாதார கோட்பாடுகள் மாறாது ஸ்திரமாக இருப்பதும் பின்பற்றுவர்கள் கூண்டிலடைக்கப்படாமல் அதிக பக்ஷ ஸ்வதந்த்ரமுடன் பின்பற்ற வாய்ப்பிருப்பதும் பித்தலாட்ட விதேசி மதங்களின் பிடியில் சிக்காமல் நமது தர்மம் இருப்பதன் காரணமாக தெரிகிறது.

  176. ஸ்ரீ பாஸ்கர், ஸ்ரீ க்ருஷ்ண குமார் இருவருக்கும் நன்றி. இருவரின் மறுமொழிகளில் உள்ள மேலதிக விவரங்கள் வழக்கம் போல மிகுந்த பயன் தருவனவாக உள்ளன.

    என்னைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்கு பதிவு செய்தமைக்குக் காரணம் அவர்கள் வழியிலேயே பொறுமையுடன் சென்று உரிய தருணம் வரும்பொழுது மனம் புண்படாதவாறு எடுத்துச் சொன்னால் அவ்ர்களில் சிலராவது மனந்திரும்புகிறார்கள் என்பதைத் தெரிவிக்கத்தான்.

    என் வீட்டில் சில தெய்வத் திரு உருவங்கள் மாட்டப் பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் கவுன்சலிங்குக்காக என்னிடம் அழைத்து வரப்பட்ட ஓர் இளைஞர் அந்த உருவங்கள் யாவும் பேய் பிசாசுகளாக சர்ச்சின் காம்பவுண்டு சுவர்கள் மீது நின்று ஆடுவதாகவும் புலம்புவதாகவும் என்னிடம் சொன்னார். என்னுடன் இருந்தவர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதிப் படுத்தினேன். வந்திருப்பவர் என்னுடன் பேச என் வீட்டுக்கு வந்திருப்பதால் அவர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்போம் என்று சொன்னேன். அந்த இளைஞர் சொன்னதையெல்லாம் அப்படியா, அப்படியா என்று கேட்டுக் கொண்டிருந்தேனேயன்றி எதிர் வாதம் செய்யவில்லை. அந்த இளைஞர் மேலும் இரு சிட்டிங்குகள் வந்தார். இன்று கர்ம சிரத்தையாய் ஸ்ரீமத் பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீ க்ருஷ்ணனைக் கொண்டாடுகிறார். இதையும் எதற்குச் சொல்கிறேன் என்றால் மனம் புண்படாதவாறு சொல்ல வேண்டியதைத் தக்க தருணம் பார்த்து எடுத்துச் சொன்னால் சிலராவது மனம் திரும்ப வாய்ப்புள்ளது என அனுபவத்தில் அறிந்திருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
    மலர்மன்னன்

  177. ரெபேக்கா மரியம் பிதற்றுகிறார் என்பது தெளிவு. ஆனால் இந்த பிதற்றலுக்கு பதில் சொல்ல இத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறீர்களே!

  178. // ரெபேக்கா மரியம் பிதற்றுகிறார் என்பது தெளிவு. ஆனால் இந்த பிதற்றலுக்கு பதில் சொல்ல இத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறீர்களே! //

    ஆர் வீ,

    இவருக்கு பதில் கூறியது வீணாகவில்லை. மேலும் மேலும் அவர் பிதற்றி கிறிஸ்துவத்தில் சரக்கே இல்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். ஆதலால், பயன் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

  179. ஆர்வீ அவர்களே

    நேரம் வீணாகவில்லை. பலருக்கு மறுமொழிகளில் வந்துள்ள எதிர்ப்புகள் பயன் உள்ளதாகவும் தெளிவு தருவதாகவுமே இருக்கும் – இப்படி கிறிஸ்தவம் பற்றி வந்த கட்டுரைகளின் மறுமொழிகளை மட்டுமே ஒரு புத்தகாமாகவே போடலாம்.

    உதாரணத்திற்கு இனி எந்த பைத்தியமாவது வேத காலத்தில் அறிவீர் சிறந்த பெண்கள் இல்லவே இல்லை என்று சொன்னாலோ, மனு ச்ம்ரிதியில் பெண்களை உயர்த்தி கூறவில்லை என்று சொன்னாலோ இந்த மறுமொழிகளை வாசித்தவர்களுக்கு அந்த பிதற்றல்களை சமாளிக்க ஆதாரம் இருக்குமல்லவா?

  180. இந்த கட்டுரையை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருவீர்களா? மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

  181. கெட்டவன் ஒருவன் மற்றும் அவன் சந்ததியினர் சமுதாயத்தில் இருந்து, சிலர், மாட்டிக்கொண்டோ, துன்பமோ ஆபத்தோ வராமல் இருக்க, அக்கெட்டவனை மன்றாடுதல் இவ்வுலகில் உண்டு. உருவ வழிபாட்டை கொடுமையான முறையில் எதிர்க்கும் கொள்கைகொண்ட இயேசுவை, உருவ வழிபாட்டில் இணைத்துக்கொள்வது, அறியாமையால் தான். உயிருடன் உலவிய / உலவும் ஒன்றை , வணங்குதல் என்பது, அடிபணிதல் என்பது, கிறித்துவ முறையில் கிடையாது. ஏற்பட்ட காலத்திலிருந்தே, உயிரை வாங்குவது, வணங்க வைப்பது, அடிபணிய வைப்பது என்பதே, கிறித்துவ மதத்தில் கொள்கை. என்னெனில், கிறித்துவ மதம் தோன்றும் முன்பே, தோன்றும் போதே எதிர்ப்பையும் எதிர்த்தலையுமே கொள்கையாகக் கொண்டு ஏற்பட்டது.

  182. குடும்பத்தில் வணங்கத்தக்க திருவுருவங்களது ஓவியங்களை தமிழ் இந்து வெளியிட்டால் எடுத்து பிரிண்ட் செய்து கொள்ள வசதியாக இருக்கும். தமிழ் இந்து கவனிக்குமா?

  183. காளான் போல முளைக்கும் பெந்த கொஸ்தே கிறிஸ்து சர்ச்சுகளால் ஏராளமான மலையாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவும் கிறிஸ்துவத்தின் மனவிகாரத்தின் ஒரு விளைவுதான்.

    அப்பாவை கொல்லும் மகன்களும், மகன்களை கொல்லும் அப்பாக்களும் நிறைந்து காணப்படும் பெந்தகொஸ்தே சர்ச்சுகளை மனநோய் நிலையங்கள் என்றே சொல்லிவிடலாம்.

    தமிழர்களை இது போன்ற மனநோய் உருவாக்கும் அமைப்புகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை இந்து தமிழர்களுக்கு உண்டு. இதனை மத சுதந்திரம் என்று கருதி விலகிச் செல்வதால்தான் இப்படிப்பட்ட மனநோய்கள் பெருகுகின்றன.

    https://haindavakeralam.com/HKPage.aspx?PageID=13862&SKIN=C

    Mushrooming Pentacost Mental Asylums – A Threat to society
    18/05/2011 23:30:18 HK

    Kottarakara: Murder attempt on two kids and suicide by the father in usual norms of Kerala media is enough to hit the front page headlines .

    I7 year old JoeMol and 9 year old Joemon was stabbed by their own father Nibu,.Joe Mol died on spot and Joemon is admitted in a Thiruvananthapuram Medical college.The incident happened in a self styled Christian faith healing centre.

    Immanuel church of God Worship Centre, is a Pentacost fraud centre . According to them Nibu was a ‘Patient’ under they Faith healing centre for Mental imbalance. He was discharged on the day when he stabbed his own kids and committed suicide.

    He might be still under the influence of ‘SATAN’ is the only explanation given by the faith healers on why he acted like this. Such faith healing centres which converts people into drug addicts and mentally unstable are mushrooming in Central Kerala. Poor and naïve Hindus are also often the victims of these Freelancers of God.

    Earlier CPM leader had given ‘Conduct Certificate’ to these faith healing centres and lauded them as the centre of Humanitarian activities. Under current UDF Ministry, these Faith centres may soon get get recognised as ‘Alternative Medicine’ !

  184. நீங்கள் சொல்வது உண்மை என்றால் மங்களகரமாக இரண்டு மனைவிகளுடன் இருக்கும் முருகனை பார்த்து எல்லா இந்துக்களும் இரண்டு திருமணம் செய்ய வேண்டுமே… பிரம்மச்சாரியாக வாழும் பிள்ளையாரை பார்த்து திருமணி சியாமல் இருக்க வேண்டுமே ….

  185. திரு. திராவிடன் கூறுகிறார்

    “எந்த மதத்தை கேன்சர் என்று சொல்கிறீர்கள்… கிறிஸ்தவ மதத்தையா. கால காலமாக மக்களுள் ஒரு பிரிவினரை சூத்திரர்கள் கீழ் ஜாதியினர் என்று சொல்லி மிருகத்தை விட கேவலமாக நடத்தியது யார். இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை கொடுமை தங்காமல் தான் அவர்கள் சுயமரியாதையோடு கிறிஸ்துவ மதத்தில் இணைந்தார்கள். மறுக்க பட்ட கல்வி அவர்களுக்கு தர பட்டது. பறிக்க பட்ட உரிமைகள் மீட்க பட்டது . சமுதாயத்தில் அவர்களுக்கு சக மனிதன் என்கிற அங்கீகாரம் வழங்க பட்டது . மனிதனை சங்கட படுத்திய உண்மையான கேன்சர் எது என்று நீங்களே இதன் அடிப்படையில் முடிவு செய்து கொள்ளுங்கள்”.

    இவர் கூறுவதிலிருந்து தலித் கிருஸ்துவர்கள் சாதி வேறுபாடின்றி கிருஸ்துவர்களிடையே சம அந்தஸ்து பெறுகிறார்கள் எனக்கூறுகிறார். இது உண்மை என்றால் என் தலித் கிருச்த்துவர்களுக்கும் இட ஒதிக்கீடு தேவை எனக் கூறுகிறார்கள்?
    மாயூரனாதன்.
    .

  186. திருமயூரநாதன்

    உங்களின் கேள்வி மிகச் சரியானது. சாதிப்பிரிவினைகளை தூண்டுவது இந்துக்கள்ல அல்ல. இந்துங்களின் பேரால் சாதிகளை வைத்துக் கட்சி நடத்திக் கொண்டிருப்பவர்களும்,கடவுள் மறுப்பு என்று இந்துங்களை மட்டும் காயப்படுத்தி பணம் பார்த்துக் கொண்டிருக்கும் நாத்தீகர்களும் தான். உண்மையில் சாதி ஒரு பிரச்சினை என்ற காரணத்திற்காக வெளியேறியிருப்பார்களேயானால் அவர்கள் அங்கு சென்று தங்களைத் தலித் கிறிஸ்தவர்கள் என்று ஏன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த தலித் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்களில் கொடுக்கப்படும் மரியாதை மூன்றாம் தரமானது. பணத்திற்காகவும், சலுகைகளுக்காகவும் தான் பலர் மதம் மாறுகிறார்களே தவிர. கிறிஸ்தவ மதம் உண்மையான மதம் என்றோ அல்லது இயேசு தங்கள் மீட்பர் என்றோ அல்ல. வெகுகாலம் இப்படி கதை சொல்லி யாரும் பணம் பண்ண முடியாது.

  187. சகோதரி ரெபேக்கா மரியம் ,

    உங்களின் குறித்த ஒரு பதிவேற்றதுக்கு தற்போது பதில் கூறவும்….ஈழ நாட்டை சேர்ந்த என் போன்ற தமிழர்க்கு எங்கே தனி நாடு ?????ம்ம் பிறந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்வது தானா தனி நாடு ??????எத்தனையோ சின்ஹல கிறிஸ்தவ அமைச்சர்கள் அரசின் பக்கம் நின்று கொண்டு தமிழர்கள் இறப்பதை கண்டு பால் சோறு பொங்கி கொண்டாடினர்..இவவளவிட்கும் சண்டே மாஸ் மற்றும் தேவா செய்தி கூடங்கள் நடப்பது தமிழ் சின்ஹலம் ஆகிய 2 மொழிகளிலும் ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வது அமெரிக்கா எனும் நாடே…. இதற்கு மேல் தங்களுக்கு கூற வேண்டியது இல்லை….தாங்கள் பேஜார் ஆகி விட்டு துணைக்கு வீரம் செறிந்த எம் ஈழ தமிழ் மக்களை கேடயமாக பயன் படுத்தாதீர் …மற்றும் இலங்கையில் உள்ள பௌதர்களிடம் நீங்கள் ஆரிய இந்தியர்கள்; என்று கூறினால் கட்டாயம் உங்களக்கு காலனி அடி கிடைக்கும்….லங்கா புதுன்கே தேசய …..இது ஒவ்வொரு வாகனத்திலும் இலங்கையில் காண முடியும்….இலங்கை பௌதரகு சொந்தம் ……இதுவே மகா வம்சம் கூறும் இலங்கை …அவ்வாறே ஆரியர் ஆயினும் பல ஆயிரம் வருடங்களாக ஹிந்து மத நெறிகளா அவர்கள் பின் பட்ட்ருகிரார்கள் ??????? அவர்கள் பௌத்தம் மற்றும் கிறிஸ்தவத்தை பின் பற்றுகிறார்கள் ……பிற மத புரிதல் இன்றி பிதற்றும் நீங்கள் பிற நாட்டை பற்றி ஆவது புரிந்து பேசுங்கள்

  188. தமிழ் ஹிந்துவின் பணிகள் பல்லாயிரம் ஆண்டுகள் தளைத்தோங்க தமிழர் நாம் வாழ்த்துகிறோம் …. நான் தமிழ் ஹிந்து என்பதை நினைத்து பெருமை படுகிறேன் ….வாழ்க வளர்க இந்து நெறி

  189. ரெபேக்கா ரெபேக்கா ரெபேக்கா ,,,,,,,,,,
    வக்கீல் வண்டுமுருகன் : எனது கட்சிகாரர் காணமல் பொய் விட்டார் யுவர் ஆணர்…இனிமேலும் யாரும் அவரை கடுப்பேத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  190. Elder people should take steps so that different sectarian followers in Hindu should not hate other sects. Its will unify and strengthen Hinduism. We need an united, strong Hinduism to counter ill effects of other religions influencing our nation.

  191. நீங்கள் கூறியது உண்மையே அனால் உங்களது கண்டுபிடிப்பில் ஓர் தவறு உள்ளது.

    உங்களது கண்டுபிடிப்பு : இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது.

    1. இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை.

    இந்த உருவம் வீடுகளில் வணங்க்கபடுகிறது. (அவர் கீரிடதுடன் இருப்பது.)

    2 இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை.

    இதற்கு காரணம் ஒருவர் மரணபட்டுகையில் உள்ளபோது அவருடைய உருவத்தை புகைபடமாக வணங்கமாட்டார். இதுவே காரணம்.

    3. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது.

    இதற்கு காரணம் ஒருவரின் மரணம் மட்டுமே இந்த உலகில் நிச்சயமானது. ஆண்டாண்ண்டு காலங்கள் மாண்டு புரண்டாலும் மாண்டவர் திரும்பமாட்டார். என்ற உண்மையை உணர்த்தவே இந்த உருவம் வணங்கப்படுகிறது.

  192. சிந்தனைத் துளிகள், உண்மை, எனவே சுடும்!
    ஆபிரகாமிய மதங்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏற்றப்படுகின்றன. உலகிலுள்ளோரில் பல க்றிஸ்துவர்கள் அம்மதத்தினை விட்டு வெளியேறி விட்டார்கள். இயேசு என்பவர் வாழ்ந்ததாக இன்று வரை ஒரு சான்றுமில்லை. வேல் இளங்கன்னி அம்மன் கோவிலே வேளாங்கன்னி அம்மனாக மாற்றப்பட்டிருக்கிறது. க்றிஸ்தவர்கள் வேளாங்கன்னிக்கு பெயர் காரணம் தர முடியுமா? பைபிளில் காணப்படுவது வெறும் கான்ட்ரடிக்ஷன்ஸ் மட்டுமே. கூகுளில் தேடினால் புலப்படும். இக்கட்டுரையின் நோக்கம் இந்துக்களை வலிமையிழந்தவர்களாய், கோழைத்தனத்திற்கு “சகிப்புத்தன்மை, சகோதரத்துவம்” என்றெல்லாம் பெயரிட்டுப் பிற மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம் எனச் சொல்ல வைத்து, அவர்களாலேயே நசுக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே மைனாரிட்டிகளைப் போல வாழ வைத்து, காலம் காலமாய்க் கொடுமையிழைத்த அரசியல் வாதிகளையும் பிற மதத்தினரின் சாயத்தையும் வெளுக்கச் செய்வதே.

    // காந்திய வழி அப்போதைக்கு வெற்றி பெற்றது, காரணம் வெள்ளைக்காரனே இந்தியாவை ஆள்வதற்கு எனக்கு ரிஸோர்ஸ் போதவில்லை என்று முடிவெடுத்துப் பின் வெளியேறிச் சென்றதால் தான் // அதே காந்தியும் நேருவும் எத்துணை கொடுமைகள் புரிந்திருக்கிறார் என்பது நம்மைச் சூழ்ந்துள்ள இன்றைய பிரச்சனைகளைப் பார்த்தாலே தெரியும். அவருடைய “இமாலயத் தவறு” டயலாக் கேட்டிருக்கிறீர்களா?

    !!! அறிவியலுக்கும் ஆபிரகாமியத்துக்கும் ஏணி அல்ல, விண்ணையே வைத்தாலும் எட்டாது, சேராது. மாறாக எம் வேத தர்மம் அறிவியலையே கோட்பாடாகக் கொண்டது. எத்தனை உதாரணங்கள் வேண்டும்? !!!

    !!! எங்கெல்லாம் க்றிஸ்தவம் சென்றதோ அங்கெல்லாம் அழிவு தொடர்ந்தது – எத்தனை உதாரணங்கள் வேண்டும்? !!!

    !!! இங்கே ஒரு சில பின்னூட்டங்களில் அக்பரை சமாதானத் தூதுவர் போலச் சொல்லியிருக்கிறார்கள். அக்பர் என்ற திருடன் தன் மூதாதையர்களைச் சற்றும் மாறாமல் பின்பற்றி எம் மக்களை மட்டுமல்ல, தன் மக்களையே கொன்று குவித்த ஒரு மாமிசக்காரன். அவனை அக்பர் தி க்ரேட் என்று சொல்பவர்கள் மூளையை என்னென்று சொல்வது? !!!

    சாதிக் கொடுமைகளுக்குக் காரணம் எங்கள் மதமல்ல. வேதங்களை படித்தாலே தெரியும், அதில் சாதி என்பதே இல்லையென்பது. வர்ணாஸ்ரமம் என்பது அரசியலாக்கப் பட்டு வெகு நாட்களாகிறது. இது ஹிந்துக்கள் தம் மதத்தினை சரிவர புரியாமல் இருந்ததற்கான விளைவே தவிர, இதற்கு க்றிஸ்தவம் தீர்வாகாது. தாழ்த்தப்பட்ட மக்களை க்றிஸ்தவம் சேர்த்து அவர்களை சக மனிதர்களாக்கியது என்ற டயலாக் எல்லாம் வேண்டாம். அப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடமிருந்து ஒரு க்றிஸ்தவனும் பெண் எடுப்பதில்லை, அதுவும் ஜாதி வகை தான், தலித் க்றிஸ்தவன், ரோமன் கேதோலிக்ஸ், ப்ராடெஸ்டண்ட்ஸ் – என்னைய்யா? யாரிடம் கதை விடுகிறீர்கள் ஜாதி பற்றியும் சகோதரத்துவம் பற்றியும்?

    //”உன்னோடு சேர்ந்து அறுவரானோம்” என்று தாழ்ந்த குலம் எனப்பட்ட படகோட்டி குகனை ஆரத்தழுவிய ராமபிரான் பிறந்த பூமி இது //
    // மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் பராசரருக்கும் பிறந்தவரை வேத வியாசர் என்று பாரெல்லாம் கொண்டாடிய சமூகம் இது //

    போய் உங்கள் அரை வேக்காட்டுத் தனங்களை அறிவுக் கண்ணோடு படியுங்கள். ஹிந்து மதத்தைப் பற்றி விவாதிக்க எல்லாம் உங்களுக்கு க்வாலிஃபிகேஷன், எலிஜிபிலிட்டி எல்லாம் போதவே போதாது. போய் உங்கள் பாதிரியைக் கேள்வி கேளுங்கள். தைரியமிருந்தால்!

  193. இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? வரலாற்று ரீதியில் இங்கே ஆராயப்படுகிறது.
    பைபிள் ஒளியில் இயேசு? கிறிஸ்து?
    https://pagadhu.blogspot.com/

    இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
    https://pagadhu.blogspot.com/2012/08/blog-post_4.html

    ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்
    https://pagadhu.blogspot.com/2012/07/blog-post_25.html

    இயேசு கிறித்து நல்லவரா?
    https://pagadhu.blogspot.com/2012/08/blog-post_6.html

  194. History began with AD and BC. There is a history for Jesus Christ birth. But there is no history for Hindu’s God. All Hindu’s God created by Valmiki or wrote by a writers with there imaginations.

  195. ஏசுவின் பிறப்பு, வாழ்க்கை குறித்தும் ஆவணப் பதிவு எதுவும் இல்லை. அதையும் கற்பனை என்று சொல்லிவிட முடியும். பிரசார பலத்தில் உருவான பிம்பம் என்றே சொல்லலாம். நாம் சொல்வதில்லை. மத நம்பிக்கை உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறோம். அதற்காக, வா தேவ குமாரனைக் கும்பிட்டுப் பரம பிதாவிடம் போய்ச் சேரலாம் என்றால் எப்படி? எல்லாம் ஏசுவே என்று பஜனை பாடி பிற மதஙகளை தூஷித்து மத மாற்றம் செய்ய ஆரம்பிப்பதால்தான் ஏசுவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகிறது. முதலில் டிசம்பர் 25 ஏ ஏசுவின் பிறந்த நாள் அல்லவே? அதாவது தெரியுமா இங்கே மதம் மாறிக் கிறிஸ்தவர்களானவர்களின் பரம்பரைக்கு?
    -மலர்மன்னன்

  196. மலர்மன்னன்!

    பிறமதத்தூடணையில்லாது எவரும் தம் மதத்தைப்பிரச்சாரம் மேற்கொள்ளலாம். தங்கள் மதமே உண்மை மதம் எனச்சொல்லலாம். தேவகுமாரனைத்தொழுது பரலோகத்துக்குச்சொல்லலாமென்று சொல்லலாம்.

    பிறமதத்தூடனையும் நிந்தனையும் மதமாற பணம் பதவி போன்ற உதவிகள் வழங்குவதும் மட்டுமே தவறுகளாகும்.

    ஏனென்றால், இந்தியா ஒரு தியாக்கிரசியாக இன்னும் மாறவில்லை. மாறும்போது இந்துமத்ததைத் தவிர வேறெந்த மதமும் இருக்கக்கூடாதென்று தடுத்தல் தவறாகாது. சவுதி அரேபியாவில் செய்யவில்லையா?

    கிருத்துவர்கள் பலவிதம். இந்துக்களும் அவ்வாறே. வேதங்கள் தெரிந்தோர் அறிந்தோர், அறியாதோர் என்றும் இருப்பது போல. இந்தியாவில் கல்வியும் சிந்தனைத்தாஹமும் உடைய கிருத்துவர்களுக்கு டிசம்பர் 25ம் தேதி ஒரு அரசனால் இயேசுவின் பிறந்தநாளாக உருவாக்கப்பட்டது என்று தெரியும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள் கிருத்துவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

    ஒரு பிறந்த நாளொன்று வேண்டும். அதற்காகத்தான் டிசம்ப்ர் 25. இல்லையா மலர்மன்னன்?

  197. வாழ்க்கை வாழுவதற்கு .
    நாம் காண முடிந்த வரை தான் வாழ்க்கையா?
    நமக்கு தெரிந்த வரை தான் உலகமா?
    பறவை எட்டும் உயரத்தோடு ஆகாயம் முடிந்துவிடுமா என்ன?.
    தேங்கி நின்று விடாதீர்கள் நண்பர்களே.வரலாறு வந்துகொண்டே தான் இருக்கும்.
    வரலாறு படைக்க முயலலாமே.

    அன்புடன்,
    நிலா.

  198. I strongly contempt this article. கர்த்தர் தன்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னித்தவர். கர்த்தர் திருத்த நினைபவர். அவர் உங்கலௌஇம் மன்னிப்பார் கவலை படாதீர். கோபாலை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் தி ஹிந்து ஒரு மதசார்பற்ற நாளிதழாக வளர வேண்டுமென்று நினைக்குறேன். கிறிஸ்தவ மதத்தை பற்றி கூற உங்களுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. இல்லா விடில் அதிகார பூர்வமாக சந்திக்க வேண்டி வரும். நீங்கள் உங்கள் ஹிந்து நம்பிக்கை கொண்டிருங்கள். நாங்கள் கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டிருகுறோம். கிறிஸ்து வல்ழ்ததாக பல வரலாற்று சரித்திர குரிபெடுகள் உள்ளன biblekum அப்பால் . உங்கள் கிருஷ்ணனுக்கும் ராமனுக்கும் எதாவது சரித்திர குரிபெடுகள் உள்ளதா ஒண்டுமே இல்லை. 1000 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும் உங்களது கடவுள் பட்டியலில் சேர்ந்து விடுவார் இது தான் நிஜம். ராமனும் கிருஷ்ணன் சிவன் இவர்கள் எல்லாம் ஒரு கதையின் கேரக்டர் அவ்ளோ தான். அவர்களை nambi payan இல்லை. வெறும் கல் தான் அவர்கள்.

  199. பிரியா ராணி ,
    கிறிஸ்து வாழ்ந்தத வரலாற்று குறிப்பேடு இருக்குனு சொல்றீர்களே அது என்னனு சான்று காட்ட முடியுமா?

  200. ஆமென் ஆமென் என்று பித்துக்குளித்தனமாக எபிரேயத்தில் சொல்லும் பாவ ஆத்மாக்களும் பிணம் தின்னும் இன்ன பிற அராபிய யோக்கிய சிகாமணிகளும் கவனிக்க. புண்ணியர் இயேசுவை பற்றி விவாதிக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. மன்னிக்கவும். அவர் கொலை பாதகத்தை கடுமையாக எதிர்த்தவர். காட்டுமிராண்டி ஆபிரகாமிய தோராவின் விதிகளின்படி இன்னின்ன பாவத்த்திற்க்கு இன்னின்ன மிருகங்களை பலி கொடுக்கவேண்டும் என்று பட்டியல் போட்டு வியாபாரம் வெகு ஜோராக நடந்துகொண்டிருந்தது. அருளாளரான இயேசு இதனை பொறுக்காது எதிர்த்தார். என் தந்தையின் கோயிலை கொலைக்களம் ஆக்காதீர்கள் என்று பலிகொடுக்க விற்பனைக்கு வைத்திருந்த விலங்குகளை விடுவித்தார். தங்கள் பிழைப்பு பறிபோனதால் யூத பூசாரிகள் சதிதிட்டம் தீட்டி அந்த உத்தமரை கொன்றார்கள். மற்றபடி அவர் சொன்னதை எவனும் கேட்கவில்லை. இன்றும் தொடர்கிறது. அராபிய யோக்கியர்கள் ஒரு திருத்தத்த்தோடு கொலை செய்கிறவர்கள். அதாகப்பட்டது பன்றியையும் நாயயும் கொல்லக்கூடாதாம். மற்றபடி எதை வேண்டுமானாலும் கொன்று தின்னலாம். கர்மம்.

  201. # J Joe, Priya rani, Lucifer etc…
    the thing that you call “vedha pusthagam” was compiled 300 years after they crucified Jesus. Who compiled that? By the very scoundrels . i.e, the clergy and nasty roman political adminstration. How could you rely on those blabberings. Respect the master by living his message. The master himself has denied that he is NOT God. Had he been God, He wouldnt have been praying with himself. Isnt it? I see few of you spew venom on the great men of this holy land. Now why would you do that..? Is this what your master taught you? Shame on you. Coming to Rama and Krishna. You imagine that they are imaginary. Their exact dates of birth and time is recorded. The planetary positions against the constallations are presicely matching. Mind you this is not a linear simple reverse calculable thing. Because of the precession of equinoxes that revolves once in 25,600 years, the constellation in which the solar system was drifting would be different. The Period of Moses was Airies and the period of Jesus was Pices. The periods of Krishna and Rama was 4000 years and 7000 years before christ. You dont understand this. 300 years back, your church stonned Galilio to death because he revealed a simple fact that Earth is globe and it revolves around the Sun. Now in 1993 Pope John Paul pleaded guilty and asked pardon for the role of church in killing Galilio. Living burrial grounds like you people dont try to comprehend these matters. Go do your job. hunt and fill your burrial ground – sorry stomach.

  202. பிரியாமணி முதலில் உன் பெயரை கிறிஸ்தவ பெயராக மாற்று. அப்புறம் இந்து மதத்தை தூற்று.ஆமாம் தமிழ் இந்து ஒரு மதசார்பற்ற இதழாக வளரவேண்டும்.அதாவது இந்துக்கள் அனைவரும் secularists ஆக இருக்கவேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் pseudo secularists ஆக இருக்கவேண்டும்.கிறிஸ்தவ மதத்தை பற்றி கூர் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் நீங்கள் நடத்தும் convent களில் இந்து குழந்தைகளிடம் “”கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடன்” என்பது போல இந்துக்களுக்கு விரோதமான கருத்துக்கள கூறுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? ராமன் & கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு வரலாறு குறிப்பேடுகள் உள்ளதா? என்று கேட்கும் பிரியமணியே 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லப்படும் திருவள்ளுவருக்கு கூட ” உண்மையான” வரலாறு இல்லை. ஏசு ஒரு கடவுள் என்கிறீர்கள். அப்புறம் செயின்ட் பேதுரு யார்? அவருக்கும் ஒரு சர்ச் கட்டி வணங்குகிறீர்களே! எங்கள் கடவுள் “கல்” என்றால் சர்ச்களில் (சிலை வடிவில்) நிற்கும் இயேசு எப்படி நிற்கிறார். கல்லாகதானே? உயிரோடா நிற்கிறார்? உங்கள் இயேசு கூட “பைபிள்” என்ற டிராமா வில் வரும் ஒரு கேரக்டர் தான் என்பதை உணரவும்.

  203. /I strongly contempt this article. உமக்கு தமிழும் தெரியவில்லை. இங்லீஷும் தெரிய்வில்லை. கதவிடுககில் சிக்கிய பல்லி போல சிலுவையில் அறைபட்டு, கடவுளே என்னைக் கைவிட்டு விட்டீரே என்று துடித்துச் செத்த இயேசுவா இரட்சகர். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதவர் எப்படிப் பிறரைக் காப்பாற்றுவார்? இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது ஒருகட்டுக்கதை.கிறித்தவம் வாளாலும் ஏமாற்றுவதாலும் பரவிய மதம்.உமக்கு சிவம்பற்றியும் இந்து மதம் கூறும் பரம்பொருள் குறித்தும் பேசும் அறிவு சற்றேனும் இல்லை என்பது உம்முடைய மறுமொழியே அறிவிக்கின்றது.

  204. பிரியா ராணி பாரத நாட்டில் சுதந்திரமாக இருந்துக்கொண்டு இந்து மதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் வாய் கூசாமல் அவதூறு கூறலாம். இதே சவுதி துபாய் முதலிய நாடுகளிலிருந்து அந்த நாட்டு மதத்தை துஷ்பிரச்சாரம் பண்ணினால் பிரியா ராணியை பிரியாணி பண்ணி ஜீரணித்து விடுவார்கள்.

    // கிறிஸ்து வல்ழ்ததாக பல வரலாற்று சரித்திர குரிபெடுகள் உள்ளன biblekum அப்பால் . //

    https://www.jesusneverexisted.com/
    https://www.jesusisbuddha.com/

    இவை இரண்டு போதும்.

  205. I WAS CONVERTED CHRISTIAN WHEN MY CHILD HOOD BECAUSE MY MOTHER AND FATHER CHANGED CHRISTIAN BEFORE I BORN.BUT AFTER MY 10 YEARS I ASK MY MOTHER “WHY DID YOU CHANGE THE RELIGON”.THEY TOLD ME MANY REASONS BUT THEY DID NOT SATISFY .I HAD MANY DOUBT IN BIBLE MY CHILD HOOD .I ASKED ABOUT THAT OUR CHURCH FATHERS ANY BODY DID NOT GIVE ME GOOD ANSWERS.FINALLY I READ GANDHI BIOGRAPHY .THEN I THING AND FOUND WHY MY MOTHER AND FATHER CHANGED THE RELIGION .BECAUSE MY MOTHER WAS BORN A VILLAGE THEM CHILD AGE SHE DOESN’T ANY INFORMATION FOR THEM RELIGION.SO I READ OUR VEDAS ,UPANISHAD,PURANS ,RAMAYANA,MAHABHARATHA.FINALLY WITH BHAVAN NARYANA AND MOTHER LUXMI GRACE SHOW ME ABOUT MY RELIGION.SO I FOLLWED OUR RELIGION POLICIES NOW.I AM TRUE I WAS CHRISTIAN EARLIY DAYS.SO I CAN COMMENT ABOUT CHRISTIAN.FIRST IT IS NOT RELIGION.IT IS FAULT.I DON’T KNOW HOW BE A CHRISTIANS OUR SISTERS BROTHER(WHOLE WORLD) AFTER READING BIBLE.IT IS FAKE.SANADHANA VEDANDHA IS ONLY THE REAL RELIGION THAT’S WHY IT SURVIVE IN THIS WORLD LONG TIME.NATURE I MEAN PRAGRUTHI IT IS WELL KNOWN KEEP THIS WORLD SO IT WILL DESTROY THE ALL FAKE RELGION IN THIS WORLD IN FUTURE.JESUS IS NOT A LEADER HE IS COWARD.HE DID NOT DEFEAT THE JEWES (THEM ENEMY)SO OUR HINDU SISTERS BROTHERS DON’T WORSHIP HIM .BE BRAVE AS LIKE LORD KRISHNA , LORD RAMA ETC.

  206. My heartfelt thanks to Shri R Gopal for opening my eyes. But for his article, I could not have realised how inauspicious it is to have a half naked dead man’s photo in the house.

    I was educated in a convent. At the stroke of 12:00 pm all the students, even if they are not Christians, will have to kneel down and pray the Christian prayer “our Father who art in Heaven”. In the morning assembly we were forced to do the same Christian prayer and sing the Christian hymns in English. I had no opportunity to learn Hindu slokas in the Christian schools where I studied. In music classes only Christian hymns were taught.
    Our teachers were mostly nuns who humiliated Hindu students if they were a little late in coming to the school. The Christian nuns taunted me saying “you have time to decorate your hair to have flowers and to have pottu to decorate yourself. You did not have the time to come to school in time.” Poovum pottum vacchi singarichukka neram irunduchi; palliku late aaga varakkudadunnu theriyalaiah? After the nuns’ stinging remarks, I did not have flowers or did not keep pottu on my forehead.
    At the end of finishing the final year at school, every one was given a copy of the bible ( we had to pay for the bible in our school fees).
    .
    These nuns came to my father at his work place and pestered my father to donate money to the school. He donated money to the nuns a number of times.
    To respect the neighbours, upon their invitation, we went to a Christian prayer meeting. At the end of the mass, every one is forced to donate money, We cannot leave the meeting without donating, because all the doors of the prayer hall were closed. In there prayers, both Christian men and women were weeping that Jesu was nailed on the cross. In fact, instead of prayer meeting, we attended a condolence meeting for Jesu who died many years ago.
    We were unhappy and regretted why on earth we ever attended this Christian thing.
    In Hindu prayer gatherings no one forces us to donate any money. At the end of the Bhajans, the host who organised the bhajans, requests every attendee to have lunch (prasadam).

    The Christians are leeches to suck money from the Hindus. They have no shame to beg for money, and after sucking our money, these ungrateful people abuse us, Hindus. From the war of words between some Christian traitors and some learned Hindus, like Krishna Kumar, Thiruchchikaran and others, I came to know how superior our Hinduism is.
    At the same time, I feel that these trairors who boldly insult our national anthem should be reported to the authorities and get them punished for their heinous crime of insulting our national anthem.
    Thanks again for all the learned Hindus who explained the superiority our belief, Hinduism.

    Shakuntala

  207. மஹேந்திர வர்மன் கட்டிய குடைவரை கோவில் மசூதியாக மாறி உள்ளது பல்லாவரம் பஞ்சபாண்டவர் கோவில்

  208. This is not good.. dont talk or write rubbish articles. any way jesus loves all.. even you hate him

  209. தமிழ் ஹிந்து வலைதளத்திலே இந்து மக்களுக்கு மட்டும தான் என்று தெளிவாக புரிகிறது. இதனால் கிருஸ்தவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ குறை சொல்வது சாதாரணம். இயேசுவின் கருணை முகம் உங்கள் கண்களுக்கு பிணமாகத் தெரியலாம. நாங்கள் எங்கள் குலத்தெய்வமாக அவரை பார்க்கிறோம். இந்தியா மதசார்பற்ற நாடு அதை கெடுத்து விடாதீர்கள். எந்த ஒரு மனிதனும் அவனுடைய மனதிற்கு நல்லதென்று அறியாமல் எதையும் செய்ய மாட்டான். இதில் மூளை சலவை செய்வதற்கு இடமில்லை. இயேசுவின் வாழ்க்கை வரலாறு கட்டுக்கதை என்றால் இந்து மதத்தில் சொல்லப்படும் கதைகள் எப்படி உண்மை என்கிறீர்கள். ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் வேதத்தை முழுமையாக படித்து விட்டு பேசுங்கள்.

  210. well before i take a leave from you all ungrateful fanatics.. i would like to remember you a quote which is said by mahatma gandhi ….
    “If Christians would really live according to the teachings of Christ, as found in the Bible, all of India would be Christian today.”
    And this will come true with in 2 to 3 decades in tamilnadu and you’ll all witness it soon.. Amen.

    ரெபேக்கா மரியம் அவர்களே,
    இதையும் கவனித்து கொள்ளுங்கள், கண்டிப்பாக ஒரு நாள் கிறிஸ்து அழியும்….

    Wait and see

  211. I happened to attend the Salvation Army’s “Bible study” group in Melbourne, Australia. I was shocked to hear about what was said about the Hindus. Under the pretext of studying the Bible, hate speech about Hinduism is delivered in this group. Paul,said his position in the Indian Salvation Army is “Major”. He said his wife’s name is Anandi. His son is employed in Melbourne,he said. The minister of Salvation Army Church, asked Paul how the Salvation Army is serving the Indians in India. What Paul said is 100% blatant lies. I am quoting here what he said to us “In India, the Hindus do idol worship, the Hindus are rich. We Christians are poor, we have to work for them, they are our boss. The Salvation Army in India not only feed the poor, but we educate the poor Christians and the poor people in wood work, construction and carpentry and we help them to get a job. After they found a job, we ask them do you want to become a Christian? We do not convert any Hindus against their will.” Not all Christians are poor, not all Hindus are rich. It is none of his business to say Hindus do idol worship. Christian missionaries deliver hate speech against the Hindus in India, Hindu gods’ idols are destroyed, Hindu temples’ land are encroached by the Christian churches. It is not enough for them what they do to the Hindus in India. They come to Australia, they spread such blatant lies about the Hindus. All the people in the group listened to his lies with rapt attention. I was dumb founded. As I was the only Hindu, in this group, I did not want any argument with the others. It is a known fact how Hindus are converted to other religions.
    I do not know if the Salvation Army works in India. I heard about Mother Teresa’s mission. Here in Melbourne, Salvation Army proclaims that they are for everyone despite one’s religion. What happens in their meeting is unknown to the people who do not attend these meetings.
    Does the Salvation Army exist in India? Can some one clarify my doubt please?
    Nagesh, Melbourne

  212. //Does the Salvation Army exist in India? Can some one clarify my doubt please?//

    In the villages of Tuticorin and Tirunelveli districts mostly among the SCs.

  213. கிறிஸ்துவை பற்றி கிறிஸ்தவ மக்களை பற்றி தவறாக பார்பனிய தந்திரத்தால் எடுத்துகட்டி தரம் தாழ்ந்து புனையப்பட்ட கட்டுரை இது. இந்த தரம் தாழ்ந்த கட்டுரையும் அதை எழுதிய நபரும் கண்டிக்கப்ப வேண்டும். இந்த பொய் கட்டுரை நீக்கப்ப வேண்டும்.

  214. மற்ற விவாதங்களுக்கு முன்பாக, எளிமையாக எனக்கு சொல்லத் தோன்றுவது இதுதான்.
    1. கிறிஸ்துவர்கள் இந்துக் கடவுள்களை வழிபட்டால் இந்துக்களும் ஏசு மற்றும் மேரியை வழிபடலாம்.
    2. கிறிஸ்துவ மதம் மாற்றிகளும், மத துவேஷிகளும், மதவெறியர்களும் இந்துக் கடவுள்களை (மட்டும்) காலா காலமாக சாத்தான், பிசாசு என்று தூற்றி வருவது பற்றிய சூடு – சொரணை இல்லாத இந்துக்களும் தாராளமாக ஏசுவையும் மேரியையும் வழிபடலாம்.

  215. இயேசு மட்டுமே தெய்வம்..ஆனால் இயேசுவுக்கு சிலை வைத்து வணங்குபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல..உருவம் வைக்கப்பட்டால் இந்து.. கிறிஸ்தவன்.. எல்லாம் ஒன்று தான்..இந்து மதத்தவர் நெற்றியில் இடும் குங்குமம் சிவப்பு.. கையில் கயிறு சிவப்பு.. காவி வேஷ்டி (ஆட்டு இரத்தத்தில் தொய்த்து காயவைத்த வெள்ளை துணி) எல்லாம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே குறிக்கும்..வானம், பூமி எல்லாம் படைத்த கடவுள் தனது பாவமில்லா இரத்தத்தை இந்த பூமியில்சிந்தபடனும் இந்த இரத்தத்தினால் மட்டுமே மனிதர்களுக்கு மீட்பு உண்டு.. அப்படி உங்களுக்கும்..எனக்கும்…என் மீது உங்க மீதுள்ள அன்பினால்.. நம்மை பாவம் செய்ய சிந்தனையில் தூண்டும் பிசாசிடம் மீட்க பலியானார் என்பதை நம்பினால்.. முழு மனதாய் கூப்பிட்டால்.. உங்க எல்லார் இருதயத்திலும் தங்கி உங்களுக்குள்ளே வாசம் பண்ணி உங்களை பாவம் இல்லாமல் வாழவைக்க உதவுபவர் அவர் மட்டுமே.. அவர் மட்டுமே சிலுவையில் பிசாசை ஜெயித்தார்.. சிலுவையில் இருந்து தன்னை அடிப்பவனை நேசித்தார்.. அவர் மட்டும் தெய்வம் என்பது SIMPLE… உங்களால் உங்களுக்கு துரோகம் செய்தவர்களை முன்னாடி விட அதிகமா நேசிக்க முடியுமா? குஷ்டரோகியை தொட முடியுமா?.. உங்க சாமி கிட்ட இரத்தம் போக்கு உள்ள பெண் போக முடியுமா? இல்லை.. விபசாரி பெண்ணை மன்னிக்கவும் முடியுமா?.. அவர் நம்மை போல மூவொரு தெய்வம்.. நாம எப்படி.. ஒரு ஆள்=ஆவி + ஆத்துமா+மாம்சசரீரம்
    தெய்வம்=பிதா+இயேசு+பரிசுத்தஆவி( மூவொரு தெய்வம்) இவர் பூமியில் 100% தெய்வமாகவும் 100% மனிதனாகவும் இருந்தார்…இப்போ பரிசுத்தஆவியானவராய் (இவரும் ஆள் தத்துவம் உள்ளவர்) நமக்குள் வசிக்க விரும்புகிறார்..அவரால் மட்டுமே முழு பரிசுத்தமாய் நம்மை வாழவைக்கமுடியும்…
    1)ஜாதி.. மதம்.. பணம் இப்படி எதாவது பெருமை இருந்தா மட்டுமே உங்ககிட்ட வர வாய்ப்பே இல்லை…(ஆனால் பிசாசு உங்களுக்குள் இருந்தால் கண்டிப்பா பெருமை உங்களுக்குள் இருக்கும்.. ஏன் என்றால் அவன்(தூதரில் ஒரு கூட்டம்) பெருமையினால்தான் பிசாசாகவே மாறுகிறான்)
    2)நீங்க ஆசையா விரும்பாம இவர் உங்களுக்குள் வர வாய்ப்பே இல்லை..(ஆனால் நீங்க விரும்பாமலே உங்க அனுமதி இல்லாமலே உங்களுக்குள் அவனால் வரமுடியும்)
    “அவர் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *