Monthly Archives: July 2011

அரசியல், நிகழ்வுகள், பயங்கரவாதம்

திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

உச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ! ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார்...

மேலும் »

அரசியல், பிறமதங்கள், பொது

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ?

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், நேர்காணல்

பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

July 25, 2011
-
பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள்....

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பன் பாடிய குறள்

July 22, 2011
-
கம்பன் பாடிய குறள்

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல... மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்...

மேலும் »

சமூகம், பிறமதங்கள், வரலாறு

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3

தெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது... குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடானிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், பிறமதங்கள்

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்... நிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது... இங்ஙனம் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லுவது, இருப்பவற்றைத் தவறாகத் திரிப்பது, தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் எடுத்தாள்வது போன்றவை மதத்தன்மைக்கு எதிரானவை. ஆனால், மதத் தலைமைப் பீடாதிபதிகளுக்குப் பிரியமானவை...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

மாயையை அறிதல்

மாயையை அறிதல்

மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.

மேலும் »

இலக்கியம், கதைகள், புத்தக விமர்சனம்

பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள்... பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான்... பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே தம்மைக் காண்கிறார்கள்... எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்துமுறை- குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது... "வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது" என்று மண்டோ யாரை...

மேலும் »

சமூகம், நிகழ்வுகள்

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா? இத்தகைய “கடவுளால்" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?... கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்... இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது ...

மேலும் »