பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

(DERSPIEGEL  என்ற ஜெர்மானிய பத்திரிகைக்கு திருவனந்தபுர மஹாராஜா உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா அளித்த நேர்முகம் –  தமிழில் வி. ரமணன் )

பத்மநாபசுவாமி கோவிலுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு  என்ன?

நாங்கள் சேரர்கள். முன்னாளில் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய நான்கு அரச வம்சங்களுள் ஒன்று எங்களுடையது.  எங்கள் குடும்பம் நீண்ட நெடிய பரம்பரையாக,  பல கிளைகளை கொண்டுள்ளது.  1750 வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானம் அளவிலும் வளத்திலும் செழிப்பாக இருந்தது.  என் மூதாதைய மன்னர்களில் ஒருவர் மிக தனித்தன்மை வாய்ந்த,  சரித்திர பிரசித்தி பெற்ற  ஒரு ஆன்மீக முடிவை எடுத்தார்.  ஆன்மீகத்தில் ஈர்க்கபட்ட அவர் எங்கள் குலதெய்வமான பத்மநாப சுவாமியிடம் அவரது செல்வம் அனைத்தையும்  நாட்டையும் கோவிலுக்கு கொடுத்துச் சரணடைந்தார்.   நமது குடும்பம், கோவிலையும் அதிலுள்ள சொத்துகளையும் நாட்டையும்  அவர் சார்பில்   பாதுகாத்து வர வேண்டும். ஆனால் நமது குடும்பத்தினருக்கு அதனால் எந்த விதச் செருக்குமிருக்கக் கூடாது என்று சொல்லி  இந்த முடிவை எடுத்தார்.  கலிங்கப்போரில் பேரரசர் அசோகர் எல்லாவற்றையும் புத்தருக்கு அர்ப்பணித்தமாதிரி, தன் செல்வத்தையும் நாட்டையுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தார்.  அதிகப் பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள்  பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார்.  தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைக்காரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினாமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும்.

பத்மநாபசுவாமி கோவில்

இந்தியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று உங்களுடையது. ஆனால் மற்ற முன்னாள் அரச குடும்பங்கள் போல இல்லாமல் ஏன் மிக எளிமையாகவும்  சிக்கனமாகவும் வாழ்கிறீர்கள்?

இதைப் பற்றி சொல்லுவதற்கு நாம் கொஞ்சம் கடந்த காலத்திற்குப் போக வேண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியர்கள் எழுந்தது 1857ல் என எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 1741ல் டச்சுக் காரர்கள் இங்கு காலடியெடுத்து வைத்த உடனேயே அவர்களை தோற்கடித்த ஆசியசக்தி திருவாங்கூர் சமஸ்தானம். போர் முடிந்ததும் அத்தனை டச்சுக்காரர்களும் எங்கள் முதாதையர் முன் மண்டியிட்டிருக்கிறார்கள். ஒரு டச்சுக்காரர் பெனடிக்ட்ஸ் என்பவர் எங்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிருக்கிறார். அவரை கிரேட் கபித்தான் என்று அழைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியான ஃபிராங்களின் ரூஸ்வெல்ட்டின் முதாதையர் என்பதை, பின்னாளில் அவரது பேரன் எங்களது பழைய ஆவணங்களை பார்க்க இங்கு வந்த போது தெரிந்து கொண்டேன்.

உத்திராடம் திருநாள் மன்னர் மார்த்தாண்டவர்மா பின்னர் 1839ல் கிட்டத்தட்ட சிப்பாய் புரட்சி எழுவதற்கு  ஏறக்குறைய 20 ஆண்டுகள் முன்னால் பிரிட்டிஷ்காரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுந்தோம். அதற்கான தண்டனை கடுமையாக இருந்தது. ஐம்பதாயிரம் எண்ணிக்கையிலான எங்களது  போலீசையையும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு, தலைநகரையும் கொல்லத்துக்கு மாற்றி, அவர்களது  இரண்டு பிரிட்டிஷ் ராணுவ ரெஜிமெண்டுகளை நிறுத்தி அதன் செலவை எங்களை ஏற்கச் சொன்னார்கள். தாமஸ்மன்ரோ தன்னையே திருவாங்கூரின் திவானாக அறிவித்து கொண்டார். நாங்கள் அதற்கும் தளராமல் இருந்தபோது  மத போதகர்களை கொண்டு வந்தனர். எங்கள் மன்னர் குடும்பங்கள் அப்போதும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்கவில்லை.  நாங்கள் எப்போதாவது வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது உண்டு; ஆனால் அதனால் எங்கள் எளிய வாழ்க்கை முறை எந்த விதத்திலும் பாதிக்கவோ, மாறவோ இல்லை.  இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளியில் இருந்து எத்தனையோ ஊடுபாடுகள் ஏற்பட்ட போதும், எங்கள் வாழ்க்கை முறை சமய ஆன்மீக  நம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.

”அந்த செல்வம் யாருக்கும்  சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள்.

இப்போது கோவில் ரகசிய அறைகள் திறக்கப் பட்டு விட்டன. உலகம் முழுவதும் உங்கள் நன்கொடைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த அளவற்ற திடீர் கவனம், விமர்சனம் என கோவிலைச் சுற்றி நிகழுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும், நான் அங்கு என்ன நடக்கிறது என்று கருத்து  சொல்லமுடியாது. விஷயம் கோர்ட்டில் உள்ளது.  இருந்தும் இது மட்டில் சொல்லுகிறேன், அரசாங்கம் கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுப்பதிலோ, அதிக பாதுகாப்பு போடுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தயவு செய்து அந்த பொருட்களை கோவிலிலிருந்து நீக்கப் படக்கூடாது. அந்த செல்வம் யாருக்கும்  சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. அவை கடவுளுக்கே சொந்தம்; அவ்வாறு இருப்பதை நமது சட்டம் அனுமதிக்கிறது. கடவுளின் செல்வம் பற்றி  இப்படி விவாதங்கள் உள்ளது துரதிருஷ்டமானது.  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். மற்றபடி நான் என் ஆலோசகர்களை கேட்கவேண்டும். எங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாகக் கோவிலுக்குப் பொருட்கள் நன்கொடை எல்லாம் அளித்து வருகிறது. நான் கோவில் தலைமை புரவலர், நான் ஒவ்வொரு நாளும் அங்கு போகிறேன். நான் ஒரு நாள் போக விட்டுபோனால் கூட  நான் பழைய திருவாங்கூர் பாரம்பரியபடி  – ரூ 166,35 அபராதம் செலுத்திவிட்டு தான் மறுநாள் போக வேண்டும்.

ஆனால் அந்த செல்வத்தை ஏழைகளுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்த வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?

இப்போது இந்தியாவில் படித்தவர்கள் நிறைய இருக்கிறோம், ஆனால் கோவிலுக்குள் நிகழ்ந்த தானங்களைப் பற்றிய இந்த கருத்து முற்போக்கானது அல்ல. மெல்ல நம் இந்திய அடையாளத்தை இழந்து வருகிறோம் (என்பதையே இது காட்டுகிறது). இப்பொழுது பணமே எல்லாமாகி விட்டது.  ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.  என்னால் உலகத்தை மாற்ற முடியாததால் நான் ஏமாற்றமடைந்தவனாகயிருப்பதை விட வேதாந்தியாக இருப்பதையே விரும்புகிறேன்.

marthandavarma

இப்படிபட்ட மதநம்பிக்கைகள் எல்லாம் குருட்டுநம்பிக்கைகள் என்பது பகுத்தறிவாளார்கள் வாதிடுகின்றனரே…

தயவு செய்து இங்கிலாந்தில் 1500களில் எட்டாம் ஹென்றியின்  காலத்தை நினைவுபடுத்தி பாருங்கள். அவருக்கு இரண்டு விஷயங்களில் மிகுந்த நாட்டம். மனைவிகளும், பணமும். அதனால் சர்ச்சுகளில் சுரண்டிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் தன் மனைவியை (Catherine of Aragon) விவாகரத்துச் செய்ய விரும்பிய போது, சிக்கிக் கொண்டார்.  அவரது மனைவி தீவிர கத்தோலிக்கராக இருந்ததால் சர்ச் விவாக ரத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவருடைய கிறிஸ்தவ குருவின் ஆலோசனையின் பேரில் ஒரு புதிய சர்ச்சை உருவாக்கினார்.  ஒரு விவாகரத்துக்காக ஒரு மதப் பிரிவையே உருவாக்கினார். இது மட்டும் பகுத்தறிவா?

சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம்  வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம்  நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிக கடினம்.  நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே  இன்றைய உலகம் இயங்குகிறது. தென் ஆப்பிரிகாவில் ஒரு வனவிலங்கு பூங்காவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பல கொடிய விலங்குகளைப் பார்த்தபின்  வந்த கைடிடம் எது மிக பயங்கரமான மிருகம் என கேட்டேன்.  அவர்  முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினார்.

உங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்ன? உங்கள் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்துகிறது?

நாங்கள் டிராவல் எஜென்சி மற்றும் ஹோட்டல் தொழில்களில் இருக்கிறோம் .நான் ஒரு  பிரிட்டிஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சேர்மனாக இருக்கிறேன். ஏதோ பத்திரிகையில் எழுதியிருப்பது போல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிளகு அனுப்பவில்லை. நாங்கள் ஏழு அறக்கட்டளைகள் இயக்குகிறோம். ஏழைகளின் கல்வி, மருத்துவம்  மற்றும் வீடுகள் போன்றவற்றிற்காக  ஒரு ஆண்டுக்கு ஐந்து முதல் எட்டு லட்சம் வரை செலவழிக்கிறோம்.பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறோம்,. குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வருமானத்திலிருந்து  நிறைய செய்கிறார்கள். எங்கள் சமூக பணிகளை ஒரு அரசும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது பற்றி கவலையில்லை. நாங்கள் விரும்புவதினால்  செய்கிறோம்

தங்கச் சிலைகள், ரத்தினம் மற்றும் வைரங்கள், வைடூரியங்கள், தங்கம் பதித்த நெப்போலியன் கால மற்றும் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் இருப்பது அனைத்தும் உண்மையா?

நான் அந்த அறைகள் உள்ளே போனது இல்லை.  கடவுளுக்குச் சேவை செய்யும் மன்னர்கள் இப்படிபட்ட செல்வக் குவியலை பார்க்கக் கூடாது. அதனால் செல்வத்தின் மீது ஆசை வரக்கூடும். ஆனால் அறைகளின் உள்ளே மதிப்பு மிக்க செல்வம் இருப்பது தெரியும்.

இந்த பொது விவாதங்களினால் உங்களை விட உங்கள் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் கோபமாக இருக்கிறார்களா?

எங்கள் குடும்பத்திலேயே நான்தான் மிகுந்த கோபக்காரன். ஆனால் இந்த விஷயத்தில்  எங்கள் அனைவரது உணர்வும் ஒரே மாதிரிதான். நான் ஒரு படை வீரானாயிருந்தவன். 15 ஆண்டுகள் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் கேப்டானாக இருந்தவன். நாங்கள் கொடுத்த நன்கொடைகளுக்காக எங்களை விமர்சிப்பவர்களை நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எவரோ  செய்துவிட்டு போன செயல்களுக்காக இவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்?  அவர்கள் நம்பும் விஷயத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? கடவுளுக்கு கொடுத்த நன்கொடைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதம்?

uthradan-thirunaal-marthanda-varma

90 வயதில், நீங்கள் ஒரு கைத்தடி பயன்படுத்தக் கூட இல்லை.  உங்கள் தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது ?

நாங்கள் மிகவும் கண்டிப்புடனும் எளிமையாகவும்  வளர்க்கப்பட்டவன். என் நாள் காலை 4 மணிக்கு தொடங்குகிறது யோகா செய்த பின் வேதங்கள் படிப்பேன். பால் தவிர பானங்கள் அருந்துவதில்லை. (teetotaler. )  வெஜிட்டேரியன் உண்வு மட்டுமே. தினமும் கோவிலுக்குச் சென்று பத்மநாபருடன் தனியே 10 நிமிடங்களை கழித்து விட்டுத் திரும்புவேன். பின் எனக்கு பிடித்த ஹாபியான  “மீடீயா சர்ஜரி” செய்வேன். எளிய காலை உணவிற்குப் பின் செய்தித்தாட்கள்களை படித்து விட்டு கத்தரித்து வைத்திருந்த முக்கிய செய்திகளை நோட்புக்கில் ஒட்டி வைப்பேன். என்னிடம் 30 ஆண்டு கலெக்‌ஷனிருக்கிறது.  ஒரு வேளை எங்கள் குடும்பக் குழந்தைகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லா விட்டால் அவைகளை  டிரஸ்ட் பள்ளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். பின் பொது மக்கள் என்னை சந்திக்க வருவார்கள். விழாக்களுக்கு அழைப்பர்.  நான் நல்ல பேச்சாளன். பிறகு மதியம் சுமார் இருபது நிமிடம் படுத்துறங்குவேன். இரவு 9.45க்கு படுக்கைக்கு போவேன்.  எப்போதுமே நன்றாக தூங்கிவிடுவேன். மனத்தில் எந்த பாரமும் இல்லாதால் எளிதாக உடனே தூக்கம் வருகிறது.

இப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா? அதைப்  பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது  ஏற்கனவே இன்ஷ்யூர்  செய்யப்பட்டுள்ளதா?

(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும்  நான் கவலைப் படமாட்டேன்.  அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..

கர்நாடக இசைக் கலைஞர்கள் சுவாதித் திருநாள், ஒவிய கலைஞர் ராஜா ரவிவர்மா போன்றவர்கள் உங்கள்  புகழ்பெற்ற முதாதையர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம்?

இசைக்கும் ஓவியத்திற்கும் தெய்வீகத்தையும் மனித உணர்வையும் கொடுத்த மாபெரும் கலைஞர்களின் பாரம்பரியம் தொடர்கிறது  நான் கலைகளை நேசிப்பவன். அழகிய சிலைகளை சேகரிக்கிறேன். ஓருமுறை வெனிஸ் நகரில் ஒரு அழகான பீங்கான் சிலையைப் பார்த்தேன் .ஊஞ்சலில் ஆடும் பெண்.  ஆடும்பொழுது  அவள் கால் தரையில்  படுமிடத்தில்  மணலின் தடம் கூட தத்ரூமாகயிருந்தது. விலை 100 பவுண்டுகள். அன்னிய செலாவணி கடுமையாக இருந்த காலம் அது. என்னால் 40 பவுண்டுகள் தான் தர முடிந்தது என்பதால் வந்துவிட்டேன். கடைக்காரர் கூப்பிட்டு நான் கேட்ட விலைக்குக் கொடுத்தார்.  அவர் சொன்ன காரணம் “கண்ணை மூடிக் கொண்டு ஒரே மாதிரி  இருநூறு சிலைகளை வாங்குபவர் அல்ல நீங்கள், நுணுக்கமான வேலைப் பாடுகளுக்கு மதிப்பளிப்பவர் என்று தெரிகிறது” என்றார்.

கேரளா 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரு கம்யூனிஸ்ட் கோட்டையாக உள்ளது.  ஆனாலும் மக்கள் உஙகளை மன்னராகவே மதிக்கிறார்கள். உங்களை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இது உங்களுக்கு விசித்திரமாகயிருக்கிறதா?

ஆமாம். ஆச்சரியம் தான். ஏனெனில் நான் மிக எளிமையாக இதையெல்லாம் விரும்பாமல் தான் இருக்கிறேன்.  ஹரித்துவாரில் என் குருவின் கூட்டங்களுக்கு போனால்  கூட பின் வரிசையில்தான் இதே முண்டு – சட்டை அணிந்தே அமர்கிறேன்.  யாராவது திருவனந்தபுரம் மன்னர் வந்திருக்கிறாமே எங்கே என்றால் கையை உயர்த்துவேன். பலர் நம்பியதில்லை.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான – ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள அரச குடும்பங்களுடன் ஓப்பிடும்போது  நீங்கள் எந்த அளவிற்கு பணக்காரர்கள்?

அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுபவனில்லை.  இந்த தகவல்  ஒருக்கால் உங்களுக்கு உதவலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் பீரங்கி சல்யூட் வழக்கமிருந்த்து.  மிக பணக்கார சமாஸ்தானத்திற்கு அதிகபட்சம்  21 என்பதில் துவங்கி  மிக சிறிய சம்ஸ்தானத்திற்கு 11 வரை என்று ஒரு ஆர்டர்   இருந்தது. அதில் திருவாங்கூருக்கு 21. உலக போருக்கு  நாங்கள் படை தராததிற்காக அதை 19 ஆக குறைத்தார்கள்.

உங்கள் வாரிசு யார்?

மருமக்கள் வாரிசு முறை பரம்பரையை பின்ப்ற்றுபவ்ர்கள் நாங்கள்.. எனக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிரார்கள். ஆனால் என் சகோதரியின் மகன் தான் எனக்கு அடுத்த ராஜா.  ஒரு முறை ஒரு ஐரோப்பிய மாது எனனை சந்தித்தபோது இந்த எளிதில் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வாரிசு முறையைப் பற்றி  அவருக்கு விளக்கினேன்.. அவர் திரும்பிப்போய் தன் நண்பர்களிடம். அவர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை ஆனால் அது எதுவாகயிருந்தாலும் பெண்களுக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டேன்  என்றாராம், பெண்ணின் உரிமையை பல காலமாக போற்றும் அமைப்பு எங்களுடையது. கேரளா மெதுவாக மீண்டும் ஆணாதிக்கப்  போக்குக்கு மாறி வருகிறது. அது நல்லதல்ல. பொதுவாகவே நமது நாட்டில் பெண்களை இரண்டாம் வகுப்பு குடிமக்களாகதான் நடத்துகிறோம். நீங்கள் ஒரு மனிதனை பார்க்கும்போது ஒரு நபரைத்தான் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு குடும்பத்தையே பார்க்கிறீர்கள்.

தினசரி காலையில் கோவிலில் தெய்வத்துடன் 10 நிமிடம் தனியாக யிருக்கிறீர்கள் அரசனும் தெய்வமுமாக! அந்த வேளையில் எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வோரு முறையும் மெய்சிலிர்த்து புல்லரித்து போகும்  அந்த நிகழ்வு.  ஒரு அற்புதமான பரவசமான தருணம்.

93 Replies to “பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்”

  1. திருவனந்தபுரம் மன்னரின் நேர்காணல் மிக அற்புதம். தமிழ் இந்து விற்கு நமது நன்றிகள் பலப்பல.

  2. ஆஹா என்ன ஒரு எளிமை? ஸ்பெக் ட்ரம் புகழ் “ராஜா” பற்றி அறிந்தே பழகிப் போன செய்திகள் மத்தியில் இந்த ராஜாவை பற்றி மீடியாக்கள் கவலை படப்போவதில்லை. அதனால் இந்த மன்னருக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வெட்கம்கெட்ட டிவி சேனல்களும் செய்திப்பத்ரிகைகளும் பத்மநாபனின் செல்வத்தை ஏலம் விடும்/”பொதுவுடைமை” ஆக்கும் முயற்சிகளில் தான் ஈடுபடுகின்றன. பத்மநாபனின் திருவுள்ளம் யாரே அறிவார்?

  3. இப்படியும் மனிதர்கள் இப்போதும் வாழ்கிறார்கள்.நம்மை சுற்றி நல்ல விஷயங்களே நடப்பதில்லை என்று பல சமயங்களில் மனம் விரக்தி அடைகிறது . ஆனால் எது குறித்தும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் திருவனந்தபுர மன்னரின் பேட்டியை படித்தவுடன் எழுகிறது.எப்பேர்ப்பட்ட எளிமை, ஆன்மீக சிந்தனை,கடவுள் நம்பிக்கை.இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் நம்மிடையே வாழ்வதால் தான் மழை பெய்கிறது.மன்னர் குடும்பம் நீடூழி வாழ எல்லாம் வல்ல பத்மநாப சுவாமியை வேண்டுவோம்…..

  4. மலை முழுங்கி மகாதேவன்களாக ஆ ராசாக்கள் இருக்கும் போது இந்த எளிமையான நேர்மையான ராஜா வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார் . மன்னர் குடும்பம் நீடூழி வாழ்க.

    சாணக்கியர் தான் நினைவுக்கு வருகிறார் . இவர்கள் இன்றைய சாணக்கியர்கள். போற்றுதலுக்கு உரியவர்கள் .

    https://hayyram.blogspot.com/2011/07/blog-post_16.html

  5. அரச தரப்பைப் பேட்டி கண்டு ஒரு ஜெர்மனிய பத்திரிக்கை தகவல்கள் தருகின்றது.

    ஆனால், பிரபலமாக்கப்பட்ட இந்திய மீடியாவின் இக்கால ஜமீந்தார்களோ, அக்கால அரசதரப்பைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கவே முனைந்து உழைக்கின்றன. வெட்கம் அற்ற பிழைப்பு.

    ஹிந்துஸ்தான் டைம்ஸைப் பாராட்டுகிறேன்.

    இதை மொழிபெயர்த்துத் தகவல்கள் தந்து, நன்மைமேலும், நேர்மறை வாழ்க்கையின் மேலும் நம்பிக்கை வரவழைத்த வி. ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    .

  6. இருபதாம் நூற்றாண்டிந் இணையற்ற மனிதர். கோடானுகோடி செல்வத்தின் பரம்பரை உரிமை என்ற செருக்கு எள்ளளவும் அற்ற அதிசய மனிதர்.
    இவர்தான் இன்றைய உண்மை சாமியார். இவர் புகழ் உலகம் உள்ளளவும் உயர்ந்து விளங்கும். இவரை சந்தித்து உரையடியாடியமைக்கு மிக்க நன்றி.

  7. உண்மையில் இவர்தான் ‘பாரத ரத்னா’.

    நெகிழ்ச்சியூட்டும் நேர்காணல்.

    தமிழ் ஹிந்துவுக்கு நன்றி.

    -சேக்கிழான்.

  8. உலகத்தின் எந்த ஒரு மூலையில் வாழ்ந்தாலும் ஹிந்து சமயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கோவில் நகை சொத்து இவை யாருக்கு சொந்தம் என்று நம்புவாரோ அதனையே திருவனந்தபுரத்து மன்னரும் கூறுகிறார். ஹிந்து சமயத்திலும் ஆலய வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்பற்றி கூறினாலும் அதனை பொருட்படுத்தத்தேவையில்லை. மன்னர் கருத்தையும் ஹிந்துக்களின் கருத்தையும் மதித்து உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் செயல் படும் என்று நம்புவோம்.

  9. எளிமைக்கு உதரணமாக விளங்கும் அதிசய மனிதர். மிக எதார்த்தமான வாழ்கையை தேர்ந்து உள்ளார்.இவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

    ”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள். – அப்படமான உண்மை

    செல்வம் அனைத்தையும் பத்மநாப சுவாமிக்கு சொந்தம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இருக்க கூடாது.ஆனால் செல்வம் கோவில் ரகசிய அறைகலில்

    கோவில் ரகசிய அறைகளில் தூங்குவதால் யாருக்கம் உபோயோகம் இல்லை.
    அதனை ஏழை இந்துகளின் கல்விக்கும் , மருத்துவதிற்கும் பயன் படுத்தினால் தெய்வத்தின் அருள் எல்லோர்க்கும் உண்டு

  10. முன்னாள் அரச குடும்பத்தின் எளிமை

    இங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள எங்கள் குடும்ப நண்பரது மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். அந்த நண்பருக்கு மன்னர் குடும்பத்துடன் நல்ல பழக்கமிருந்தது. திருமணத்திற்கு திருவிதாங்கூர் இளவரசியும் அவரது கணவரும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த அனைவரும் பட்டாடைகள், நகைகள் அணிந்து படாடோபமாக வந்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் மிகச் சாதாரண ஆடையில் மிக எளிமையாகக் காட்சியளித்தனர். இன்று பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவர்களின் எளிமைதான் கண்முன்னே தோன்றுகிறது.

    – இரா. பிரகதீஸ்வரி,
    அறந்தாங்கி

  11. இங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

    மன்னருக்கு செல்வத்தின் மேல் விருப்பம் இல்லை.

    இப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளதா?

    (சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..

    திருட்டு போவதை விட ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது கூச்சலாக இருந்தாலும் பரிசிலிக்க வேண்டிய நியாயம்.

  12. maarthanda varman”s humble submission about Padamanabhaswamy:s jewellery,belong to the temple and it is responsiblity of the temple trust/authorities to decide as what they can do & donars donated for ultimate running and maintenacne of the temple.and even today, in Tamiland, many great temples like Brahadeeswara and vaideeswaran temple have properties exteneded throuhgout the state of Tamiland.So, it is now left to the concerned Trust to manage things.and it is not business of anybody.

  13. குறள் 1067:

    இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    கரப்பார் இரவன்மின் என்று.

    கலைஞர் உரை:

    கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

    மு.வ உரை:

    இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

    சாலமன் பாப்பையா உரை:

    பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

    Translation:

    One thing I beg of beggars all, ‘If beg ye may,
    Of those who hide their wealth, beg not, I pray’.

    Explanation:

    I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly”.

  14. 1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

    இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

    “சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

    பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

    கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

    தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

    ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.

    கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

    எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”

    ====கேரள உயர்நீதி மன்றம்.

  15. @ Kalimulla

    இது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்

    இதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பேச எந்த ஒரு தகுதியும் கிடையாது. நீங்கள் விவாதம் செய்ய வேறு தலைப்புகள் பல உள்ளன். எப்பொழுது ஆப்ரகாபியர்கள் இந்த மண்ணில் கால் வைத்தர்களோ அந்த பொழுதே இந்த நாட்டில் தரித்திரம் குடி கொண்டுவிட்டது. ஒரு கோயிலேயே இவ்வளவு பணம் இருந்து இருந்தால் மற்ற கோயில்களில் எவ்வளவு செலவம் இருக்க வேண்டும். அப்படி என்றால் மக்கள் எவ்வள்வு வசதி வாய்புடன் இருந்து இருப்பர் என்று சற்று நினைத்து பாருங்கள். அதுவும் தவிர வாய்ப்பு கிடைத்தால் ஹம்பி சென்று பாருங்கள்.

    இந்த மண்ணிற்கு சிறிதும் சம்மந்தம இல்லாத பாலைவன கோட்பாட்டை விட்டு உங்கள் பாட்டன் முப்பாட்டனால் பேணி காக்கப்பட்ட பண்பாட்டிற்கு திரும்புங்கள். சாதி முறையும், ஜமீந்தார் முறையும், மொழி ரீதியான பிளவுகளும் ஆப்ரகாபிய படையெடுப்பின் பின்பே வந்தது என்பதை நினைவிள் கொள்ளுங்கள்.

    அரேபிய மதத்தை போன்ற குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் நாங்கள் அல்ல. அனைத்து கோயில் மற்றும் வருமானமும் இந்தய அரசாங்கத்திற்கு தான் போகிறது. அவ்வளவு ஏன் அரேபிய மத சடங்கிற்காக இந்திய அரசு வழங்கும் பணத்தில் பெரும்பான்மையானவை கோயில் நிலத்தில் இருந்து பெறபடும் பணம் தானே?

    அதுவும் தவிர ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில பக்தர்கள் தரும் பணத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக கொடுக்கும் ஹிந்துக்களை பார்க்கும் பொழுது எப்பொழுது பார்த்தாலும் சலுகை வேண்டும் சலுகை வேண்டும் என்று கையேந்தி நிற்கும் உங்கள் இனத்திற்கு, கொடுக்கும் எங்களை பார்த்து ஏளம் செய்வது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போல் உள்ளது. என்றைக்காவது உங்கள் மதத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை நாட்டிற்காக் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த நாட்டின் 45% நிலத்தையே அரேபிய மத்ததிற்கு விட்டு கொடுத்து இருக்கிறோம். ஆனால் நீங்களோ ஒரு 2 ஏக்கர் நிலத்தை அயோத்தில் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் யார் நல்லவர்கள் யார் பிச்சைகாரர்கள் யார் மத வெறியர்கள் என்று.

    அதுவும் தவிர ஹிந்துக்கள் நல்லவர்கள், அதனால் தான் நீங்கள் மதம் மாறினாலும் இங்கு பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறீகள்.

    அதுவும் தவிர நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் ஒன்று உள்ளது

    https://www.jeyamohan.in/?p=18111

    பத்மநாபசாமியின் சொத்து இரு வகை. நகைகள் உள்ளே உள்ள சொத்து என்றால் வெளியே உள்ள சொத்து,நிலங்கள். பழங்காலத்தில் கோயிலுக்குப் பலர் நிலங்களையும் கட்டிடங்களையும் தானமாக எழுதி வைத்தார்கள். வாரிசில்லா சொத்தை பத்மநாபனுக்கு அளிக்கும் வழக்கமிருந்தது. மன்னரும் ஏராளமான நிலங்களை அளித்தார். ஆகவே திருவனந்தபுரத்தில் இன்றும் பத்மநாபசாமிக்குச் சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் நகரின் நடுவில். திருவிதாங்கூர் முழுக்கப் பல்லாயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள் உள்ளன. எல்லாத் தென்கேரள நகர்களிலும் பல்லாயிரம் கட்டிடங்கள் உள்ளன.
    அந்நிலங்கள் கோயிலின் பல்வேறு ஊழியர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டன. கோயிலுக்குப் பொருட்களை அளித்தவர்களின் உபயோகத்துக்கும் வாடகைக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் எவரும் அந்நிலங்களை சுதந்திரத்துக்குப்பின்னர் திருப்பி அளிக்கவில்லை. அந்நிலங்களும் கட்டிடங்களும் முழுக்கத் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. திருவனந்தபுரம் நகருக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்பது ஆவணக்கணக்கு. அவற்றில் பல இன்று பெரும் கடைகளாகக் கட்டப்பட்டு லட்சக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கிறது. கோயிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சாலைபஜாரில் செண்ட் ஒன்றுக்கு ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் அமைந்த கட்டிடத்துக்கு எண்பது வருடங்களாக வருடம் நாற்பது ரூபாய் வாடகை கட்டி வருகிறார்கள்!
    பத்மநாபசாமியின் நகைகளை விற்பதோ ஏலம்போடுவதோ அசாத்தியமென அனைவருக்கும் தெரியும். அதற்கு இந்தியத் தொல்பொருள் துறை அனுமதிக்காது. ஆனால் அவரது நிலங்களை விற்பதோ ஏலம்போடுவதோ முழுக்கமுழுக்க சட்டபூர்வமானதே. ஆகவே இந்நிலங்களை விற்றால் என்ன? எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படலாம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே? -என்றார்
    செய்யமுடியாது. அந்நிலங்களை வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகள் அல்ல. பெரும்பாலும் பெருவணிகர்கள். அரசியல் பின்னணி கொண்டவர்கள். இடதுசாரிகள் வலதுசாரிகள். முக்கால்வாசி நிலங்கள் மாற்று மதத்தவர்களின் கைவசம் உள்ளன, அவர்களே அதிகமும் வணிகர்களாக இருந்தார்கள். மிகக்கணிசமான நிலங்கள் தமிழ் வணிகர்களின் கைகளில் உள்ளன. பத்மநாபசாமியின் சொத்தை ’மக்களுக்கு’ ப் பயன்படுத்தவேண்டுமெனச் சொல்பவர்கள் இந்தச்சொத்தை ஏழை மக்களுக்கு முதலில் பயன்படுத்திக் காட்டலாமே. பத்மநாபசாமியின் சொத்து கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து மக்கள்நலனைப் பாதுகாக்கலாமே?
    இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.

  16. //இது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்

    இதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பே//

    Solan

    நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் அது பொது விசயமும் கூட. தனிப்பட்ட விசயம் என்று சொல்லமுடியாது. யு எஸ்ஸில் ஒரு வீட்டில் குழந்தையைப்போட்டு பெற்றோர் தொடர்ந்து அடித்தாளோ, அல்லது கணவன் மனைவி கூச்சலிட்டுச் சண்டையிட்டாலோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் போலிசுக்குப்போன் பண்ணி வரவழைத்து விடுவார்கள். ஒரளவுக்குத்தான் “தனிப்பட்ட விசயம்’

    இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறது.

    அரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது ? கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad? R all of them Hindus ?

    இந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.

    மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்? இனி அரசகுடும்பம் தலையிடாது.

    பின்னர் அக்கோயிலைப்பாதுகாப்பது ஆர்? களைப்பாதுகாப்பது ஆர்? கடைசியாக அரசுதானே ? இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி போட்டுச் செய்யப்போகிறார்களா? அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்.

    இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா ? அதனால் ஆருக்கு நன்மை என்ற கேள்விகளைக்கேட்பதற்கும் ஒருவன் இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்பது எப்படி? அப்பணம் எங்களுக்குத்தான். உங்களுக்கு பேசவே அருகதையில்லை என்பது பொருளிடமிருக்கும் பேராசையே. இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? நகைவியாபாரிகள் மட்டும்தான் இந்துக்களாகயிருக்கமுடியும் போலிருக்கிறதே ?

    சரி. அவற்றை என்னதான் செய்வது ? பத்மநாப சுவாமி கோயிலுக்குத்தான் அவ்வளவு நகையையும் செல்வமும் என்றால் ஒரே ஒரு கோயிலுக்குத் தேவையில்லை. அவ்வளவு இருக்கிறது அங்கே. ஏற்கனவே திருப்பதி கோயில் ‘பணக்காரச்சாமி’ என்று பெயரெடுத்துவிட்டது. இன்னும் பணக்காரச்சாமிகளை உருவாக்கவேண்டுமா ? இன்னொரு பதிவில் ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்.

  17. //இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.//

    //திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னன் கொடுத்த நகைகள் எல்லாம் காணோம் என்ற குற்றச் சாற்று எழவில்லையா? நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே! குறிப்பிட்ட தேதிக்குள் நகைக் கணக்குகள் பார்க்கப்பட்டு, அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வில்லையா?

    ஆண்டு ஒன்றுக்கு அக்கோயிலின் வருமானம் ரூ.33,199 என்றும், செலவு ரூ.33 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கணக்குச் சொன்னார்களே தீட்சதப் பார்ப்பனர்கள் – அதே நேரத்தில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரப்பட்ட 18 மாதங்களில் வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே!//

    //கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன//

    If we look at the above, we can see pattern
    1) the people (who are already exploiting the donations offered to the temples and its assets– dont want to have any accountability)–To continue their looting and to deny the transparency to a common hindu, they dont want any regulation from govt, common man and of course, poor devotees,
    2) to hide their looting in matters of temple jewels,land revenue, money revenue, they just point fingers at govt, other hindus who are demanding transparency and accountability.
    3) a small group of people form various fronts and claim “we hindus will take care of the wealth and affairs ourselves”– does it not sound means we are already there to loot the money.. wealth is meant for our looting..we will not give share… therefore others dont talk about this..
    4) Even a small pvt/govt co submits audited accounts every year, there are millions of hindu temples, chruches and mosques, pvt mutts… are they submitting their accounts to their devotees after calling for a general body meeting like that…they appeal for donation but they dont ask public to come and have a look at their financial and other transactions…

  18. ////இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறதுஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது ? கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad? R all of them Hindus ?///////
    வலுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். அதுவே காவலுக்கு தகுந்த ஊழியர்களை தகுந்த ஊதியத்தோடு நியமிக்கும். ஊரில் உள்ள வயல்வெளிகளை காவல் காக்கும் தலையாரிக்கு அப்படியே வயலின் விளைச்சல் முழுதும் அள்ளி கொட்ட முடியாது.தகுந்த ஊதியம் மட்டுமே தரமுடியும்

    ////இந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.///
    ஆமாம் இந்தியாவுக்கு மட்டும் என்று கூட சொல்ல கூடாது, உலகம் முழுதுக்கும் தொடர்பு உண்டு. என்று இனி சொல்ல வேண்டும்

    ////மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்? இனி அரசகுடும்பம் தலையிடாது.

    பின்னர் அக்கோயிலைப்பாதுகாப்பது ஆர்? களைப்பாதுகாப்பது ஆர்? கடைசியாக அரசுதானே ? இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி
    போட்டுச் செய்யப்போகிறார்களா? அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்////////////
    இதற்கு மத சார்பற்ற !!! இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.

    இதில் வைணவ சுடராழி திரு ஜோசெப்பை வேறு உவமை காட்டுகிறீர். அவர் நிலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு? இரண்டு வாரங்கள் முன்பு அவர் தளத்தில் அவர் வெளியிட்ட ஞாயிறு கேள்வி பதில் பகுதியில் பத்மநாபனின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்ற தலைப்பில் அவரது பேச்சு வெளியானது.நீஎங்கள் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் எல்லாம் அவரின் கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள்.
    இன்று இக்கருத்தை நான் எழுதும் போது திருவரங்கத்தந்தாதி 17 ம் பாகம் விளக்கம் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அவர் அல்லும் பகலும் அனவரதம் அவனையே நினைத்து கொண்டிருக்கும் உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்.
    /////ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்./////
    இல்லாத பல கோயில்களுக்கு கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை அதையும் நீங்கள் வலியுறுத்தவில்லை.
    நாளை ஒரு பள்ளிவாசலில் அல்லது சர்ச்சில் இவ்வளவு பொருள் கண்டுபிடிக்கபட்டால் அதனை பற்றி நாக்கை தொங்க போட்டு கொண்டு அதனை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு வந்து இந்துக்கள் அலைய மாட்டார்கள், மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் எழுதுவதுதான் சொத்துக்கள் மேல் பேராசை கொண்டுள்ளது என தெளிவாய் தெரிகிறது.

  19. ஜோ. அமலன் அவர்களே……

    ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வது என்றால் தங்களுக்கு கொள்ளை பிரியம் போலும்…

    .// இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா //

    அந்த செல்வங்களெல்லாம் இன்றைய ரூபாயாகவா இருக்கின்றன ? அப்படியே எடுத்து செலவு செய்வதற்கு ? அவற்றின் தொன்மைக்கு ஒரு மதிப்பே கிடையாதா ? கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேற்படி செல்வங்களுக்கு புனித தன்மை கிடையாதா ? அந்த செல்வங்களை அழிக்காமல் ,உரு மாற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா ?

    நம்முடைய தரித்திரத்திற்கு இந்த ஒரு கோயிலின் செல்வம் போதாது. அதற்காக ஒவ்வொரு கோயிலாக கொள்ளையடிக்க கிளம்பிவிடுவோமா ? எங்கள் கோயிலில் கிடைத்த பணம் எங்களுக்கு என்று சொன்னால் அது உங்களுக்கு பேராசையாக தெரிகிறதா ?

    கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்களிடம் உள்ள செல்வங்களை அரசின் கட்டுப்பாட்டில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதா ?

    ஒரே ஒரு ஹிந்து கோயிலில் கிடைத்த சொத்தைப் பற்றி இவ்வளவு விவாதம். சரி, மற்ற மதங்களை பற்றி ஏன் ஒருவரும்பேசுவதில்லை?குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நகரிலும் நட்ட நடுவில் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வைத்துள்ளனரே,அதை பற்றி உங்களைப்போன்ற பொது நல வாதிகள் இன்றுவரை மூச்சு விட்டது உண்டா? முஸ்லீம்கள் சந்து சந்துக்கு கட்டும் மசூதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது[ பெரும்பாலும் அரசை ஏமாற்றி ஹவாலா மூலம் வரும் பணம் ] என்ற கேள்வியையாவது நீங்கள் எழுப்பியது உண்டா? கிடப்பது கிடக்க அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் அடித்துக்கொள்வது ஏன்?

    // இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? //

    இறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா ? விட்டால் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே ?

    கோயிலில் இத்தனை செல்வம் இருப்பது தெரியவந்தது நீதிமன்றத்தால் தான் .ஆகவே தான் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகிறது.உங்கள் வீட்டில் எவ்வளவு நகை இருக்கிறது, அதை எங்கே வைத்துள்ளீர்கள் என்பதை செய்தித்தாளில் விளம்பரம் செய்வீர்களா ? செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போது அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று மூக்கால் அழுதால் எப்படி ? கேட்டால் இந்த வழக்கை தொடுத்ததே ஒரு ஹிந்துதானே என்பீர்கள். சுந்தரராஜன் போன்ற துரோகிகளை ஹிந்து மதம் தொடர்ந்து எதிர் கொண்டே வருகிறது.

    அனைத்து ஹிந்து கோயில்களையும் அரசுகள் தங்கள் பிடியில் இருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்கட்டும். எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம். வேறு எவரும் நடுவில் புகுந்து நாட்டாமை செய்ய தேவையில்லை……

  20. //வலுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். //

    Dravid

    கோயில் இருக்குமிடம் கேரளா. ஆங்கு நாத்திகர்களோ பார்ப்பன எதிர்ப்பாளர்களோ ஆட்சியில் இல்லை. சாண்டியின் அரசு அந்தக்கோயிலை எடுத்துகொள்ளவில்லை. பாதுகாப்பு மட்டுமே தருகிறது. கோயில் இன்றும் அரசபரம்பரையிடம்தான் இருக்கிறது.

    “மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால்” என்று சொல‌வதே பொருட்பிழை. முன்பு இக்கோயில் ஆத்திக‌ சாம‌ஜ‌த்திட‌ம் இருந்த‌து போலப் பேசுகிறீர்க‌ளே ?

    அன்றும் இன்றும் அஃது ஆத்திக‌ ச‌மாஜ‌த்திட‌ம் இல்லை. ம‌ன்ன‌ர் கையில்தான் இருந்த‌து. இருக்கிற‌து.

    உங்க‌ள் கோரிக்கையைச் சாண்டியிட‌ம் வைக்க முடியாது. ம‌ன்ன‌ரிட‌ம்தான் வைக்க‌வேண்டும். ம‌ன்ன‌ர் இங்கு பேசுவ‌தைப்பார்த்தால் ஆத்திக‌ர்க‌ள் ஒரு க‌மிட்டி வைத்து இவ‌ரிட‌ம் வ‌ந்தால் கொடுப்பார் போல‌த்தான் தெரிகிற‌து. அவ‌ர் அப்ப‌டிச் செய்ய‌லாம். உரிமை உண்டு. சாண்டியோ வேறெவ‌ருமோ த‌டுக்க‌முடியாது.

    ஆயிர‌க்க‌ண‌க்கான‌வாண்டுக‌ளாக‌ ஏன் ம‌ன்ன‌ர் செய்ய‌வில்லை திராவிடன் ? ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ? ஏனென்றால், அன்று சிரி ப‌த்ம‌நாப‌ சுவாமி ஏழை. இன்று ப‌ண‌க்கார‌ர்.

    அற்ற‌ குள‌த்தில் அறுனீர்ப்ப‌ற‌வைக‌ள் வ‌ருமா ? வாரா. எல்லாம் ப‌ண‌ம். கொள்ளைப்ப‌ண‌ம். ஆசை ஆரை விட்ட‌து ?

  21. இது தான் திராவிட பொய் என்று சொல்வது. முதலில் உங்கள் பார்வையில் அது பார்ப்பன கோயில், பார்பன கடவுள், அதில் திராவிட திராவைகளுக்கு என்ன வேலை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு வராதீர்கள். அது எங்கள் தனிப்பட்ட சொத்து. அது மட்டும் இன்றி திராவிட கலகத்தின் சொத்தை பற்றி நாங்கள் எங்காவது கேஸ் போட்டோமா?

    இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது.

    இது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. நீங்கள் சொன்ன கணக்கு கோயில் தட்டில் விழும் பணம். அந்த கணக்கு வாடகை பற்றியது கிடையாது. இதை தான் முழு பூசணீக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வது. வாடகை பணத்தை பற்றிய தீட்சிதர்கள் சமர்பித்த கணக்கை வசதியாக மறைத்துவிட்டு இப்படி பொய் பேசுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லை. ஏன் கத்தோலிக்க கிறித்துவ மிஷினரி ஊழல் பற்றி செய்தி வந்ததே அதை பற்றி ஏன் எந்த திராவிட திராவைகளும் வாய் திறக்கவில்லை. ஹோ… முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் சர்ச்க்கு போக வேண்டுமே.. அவ்வாறு போனால் செருப்பால் அடிப்பார்களே? இந்த முற்போக்கு கம்யூனிஸ்டுகள் எல்லாம் கிறித்துவ மிஷிநரிகளின் கூலிப்படைகள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்காவது போய் உங்கள் பொய்யை பரப்புங்கள் எடுபடும்,

  22. //இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.//

    There s no connection between Central Government and this temple. The matter here involves only three persons: the king, the petitioner who is now dead, and the State Govt. Now, only two. the king and the State Govt.

    State Govt has already gone on record that the temple belongs to the King and as such, the unearthed wealth will also go to him if he wants. But the king does not. In case he had said yes, we want, the State wont bother; and leave the temple and wont give protection to the jewels as they r private property.

    Only because the jewels have now no ownership, the state is giving protection by paying from taxpayers money which include people of other religions also.

  23. // இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு?
    இறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா ? //

    நான் கேட்ட‌ கேள்வி அப்ப‌டியே இருக்கிற‌து. அத‌ற்கு ப‌தில் சொல்ல‌த்தெரியாம‌ல் திசை திருப்புகிறீர்க‌ள்.

    ம‌ன்ன‌ர் சொன்னார்: ‘அவை திருட்டே போனாலும் நான் க‌வ‌லைப்ப‌ட‌மாட்டோம். ஏனென்றால் அவை எங்க‌ள் ந‌கைக‌ளாக‌ப் பார்க்க‌வில்லை”

    இதேதான் ப‌த்ம‌நாப‌ சுவாமிக்கும் வ‌ரும். ந‌கைக‌ள் ம‌னித‌னால் ப‌துக்க‌ப்ப‌ட்டவை ஆங்கே. அல்ல‌து கோயிலுக்காக‌ கொடுக்க‌ப்ப‌ட்டவை.

    அவைக‌ளைக் கோயிலுக்காக‌க் கொடுக்க‌ப்ப‌டாவிட்டாலும் கோயில் கோயிலே. சுவாமி சுவாமியே. ந‌கைக‌ளைப்போட்டுவிட்டால் சுவாமிக்கு தேஜ‌ஸ் வ‌ன்து விடும் போடாவிட்டால் போய்விடும் என்ப‌து ம‌னித‌னின் க‌ற்ப‌னை.

    ஆனால் ம‌னித‌ன் அப்ப‌டி அல‌ங்கார‌ம் ப‌ண்ண‌க்கூடாது என்று சொல்ல‌வில்லை. ம‌த‌மும் சொல்ல‌வில்லை. ஆயினும் ஒரு எல்லை உண்டு. அள‌வுக்கு மீறி ப‌ண‌க்கார‌த்த‌ன‌ம் காட்ட‌ப்ப‌ட‌க்கூடாது.

    கோயிலில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ள் சுவாமிக்குத் தேவையில்ல‌. அவ்வ‌ள‌வு அதிக‌ம். என‌வேதான் நான் கேட்ட‌ கேள்வி.

    ப‌ண‌ம் என்றால் பிண‌மும் வாய்பிள‌க்கும். ப‌ண‌ம் பாதாள‌ம் வ‌ரைக்கும் பாயும். பண‌ம் ப‌ன்தியிலே குண‌ம் குப்பையிலே என்ப‌தெல்லாம் ம‌னித‌னின் வாழ்க்கையிலே. இறைவ‌னோடு க‌லன்த‌ வாழ்க்கையில் இருக்கா. இருக்க‌ முடியா.

    இறைவ‌னுக்க‌ளிப்ப‌டும் நிவேத‌ன‌ங்க‌ளில் ஆடம்ப‌ரம்‌ இருக்க‌க்கூடா. அவை ம‌னித‌னின் அட‌க்க‌ உண‌ர்வின் அடையாள‌மாக‌வே இருக்க‌ வேண்டும்.

    ‘கோயிலில் என‌க்குத்தான் முத‌ல்ம‌ரியாதை’ என்ப‌த‌ற்கும்;. ப‌ண‌க்கார‌ன் எவ‌ன் என்று பார்த்துப் ப‌ல்லிளித்துத் த‌ட்டை நீட்டுவ‌த‌ற்கும் இறைவ‌னுக்கும் தொட‌ர்பில்லை. ப‌த்ம‌நாப‌ சுவாமி கோயிலில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ளுக்கும் சுவாமிக்கும் முடிச்சுப்போடுவ‌து சுவாமியை அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌தாகும். ந‌கைக‌ள் ஆருடைய‌வை என்ற‌ கேள்வி ம‌னித‌னின் பிரச்சினை ம‌ட்டுமே.

    (In this .com, I have however defended treating the rich differently or preferentially on a different principle that should not be taken out of that context.)

  24. சுடராளி ஜோசப்பைப்பற்றி திராவிடன் எழுதியதில் அப்பாவித்தனமே பளிச்சிடுகிறது.

    அவரப்பற்றி நான் சொன்னது இத்தளத்தை நடாத்துவோருக்கே. இங்கெழுதும் உங்களைப்போன்றேருக்கன்று. இவர்கள் ஒரு பிழையைச் செய்தார்கள். தளத்தில் எவரும் எழுதலாம். ஆபாசமாக மட்டும் இருக்கக்கூடாதென்று விதியைப்போட்டுவிட்டு தளத்தில் எழுதுபவர் எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். நாளை எந்த சாதி என்று ஆராய்ச்சிசெய்தாலும் வியப்பில்லை.

    மேலும் இணைய தள விவாதமேடைகளில் கண்டிப்பாக எழுதுபவரின் உண்மை விவரங்கள் வெளியிடப்படவேண்டும் என சிலமேடைகள் மட்டுமே கேட்கும். பலர் கேட்கமாட்டார்கள். அப்படிப்பலரில் இதுவும் ஒன்று.

    ஆக, என் பெயரை வைத்து ‘கிருத்துவர்’ என ஆதாரமில்லாமலும் தேவையில்லாமலும் முடிவு கட்டி ‘இந்து மதத்தைப்பற்றிய ஆர்வத்துக்கு நன்றிகள்’ என்று எழுதிவிட்டார்கள். ஏதோ, இவர்கள்தான் இந்துமதத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பது போலவும், இவர்கள் மதத்தைப்பற்றி பாசிட்டிவாக எழுதினால் இவர்கள் நன்றிகள் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து பிறர் எழுதுவது போலவும் அதீத கற்பனை.

    மேலே கூறிய கருத்துகளுக்கு இலகுவாகத்தான் சுடராளி ஜோசப்பைப்பற்றி சொல்லப்பட்டது. ஒருவேளை அவர் வெறும் ஜோசப் என்று இங்கு எழுதிவிட்டால் இவர்கள் அவரிடமும் பந்தா காட்டுவார்கள்: “நீங்கள் ஜோசப்பாக இருந்தாலும் ஆழ்வார்கள் மேல காட்டும் ஆர்வம் பாரட்டுக்குரியது. நன்றிகள் என்று.” இஃது எப்ப‌டி இருக்கு?’

    (The honorary title Sudraali was conferred on him by Srirangam Aandavan (jeevar) swamigal. Joseph swaami told the Jeeyar that he wanted to change his name into a Vaishnavite name, for which the Jeeyar replied: ‘Let the present name continue’. Hence, his name continues. Joseph swami is a prof of Tamil, a catholic christian by birth. He remained unmarried. His parents insisted on his marriage and traced a bride within community or caste which meant a fellow catholic christian. But the son told his parents: I don’t mind whoever she is, but she must be deeply immersed in Azhwaars, which, Prof hoped, would definitely turn her towards Srivaisnavism. Accordingly, a catholic bride was found. She is a fellow prof of Tamil equally immersed in Azhwaars. Her names too continues as a christian name.

    Similarly I know of another popular person, a woman but she is a saivite. The title on her was conferred by Kanchi seer for her services to Saivism. But I wont divulge her name here for reasons personal to me, except one bio fact that she was also born as a catholic christian.)

    மேலும் திராவிட‌ன். நாமெல்லாரும் பாம‌ர‌ர்க‌ள். உண்டு உற‌ங்கி க‌ண்டு க‌ளித்து வாழும் அற்ப‌ர்க‌ள். ஆனால் ந‌ம‌க்கும் இறைவ‌ன் தேவை. போகிறோம். வ‌ண‌ங்குகிறோம். நாமெல்லாரும் ஆழ்வாராக‌ முடியா. ந‌ம்மாழ்வாரே ‘விண்ண‌க‌ம் செல்வ‌து ம‌ண்ண‌வ‌ர் விதியே!’ என்று ந‌ம‌க்குச் சொல்லிவிட்டாலும் நாம் அஃதை இப்போது செய்ய‌விய‌லா. அஃதாவ‌து சுடராளி ஜோச‌ப்பைப்போல‌ இறையுண‌ர்வில் எப்போதும் ஆழ‌ங்கால் ப‌ட‌ முடியாது. ந‌ம‌க்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்க்கை நெறி அப்ப‌டி.

    அவ‌ரைப்போன்றோரையும் இங்கு எழுதுப‌வ‌ர்க‌ளையும் (நுங்க‌ள‌யும் சேர்த்துத்தான்) முடிச்சுப்போடுவ‌து அவ‌ரைப்போன்றோரின் புக‌ழை மாசுப‌டுத்துவ‌தாகும்.

    “If I write abt Azhwaars, I am a great vainava ” – please get rid of this idiotic notion.

    Read me to know abt them. If u like, get inspired to read them on your own. If u find me unreadable, don’t read me. If u find me twisting facts here and there, point them out with proofs. Beyond that, don’t go.

  25. அன்பார்ந்த ஸ்ரீ த்ராவிடன், பூஜ்ய ஸ்ரீ வரதயெதிராஜ ஜீயர் ஸ்வாமிகளால் ஜோசஃப் அய்யங்கார் ஸ்வாமி என கௌரவிக்கப்பட்ட அந்த பரம பாகவதோத்தமரின் ஓரிரு ஒலி நாடாக்கள் கேட்டு நான் பயன் பெற்றுள்ளேன். அன்னாரது திருவரங்கத்தந்தாதி ஒளிபரப்பாவதாக சொல்லியுள்ளீர்கள். கேழ்க்க மிக ஆவலாக உள்ளேன். இணையதளம் மூலம் கேழ்க்க இயலுமெனில் அது சார்ந்த சுட்டி விவரம் தெரிவிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

    தமிழ் ஹிந்து தள நிர்வாகிகள் இயலுமானால் அன்னாரது வ்யாசங்களை நமது தளத்திலும் வெளியிட விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  26. Even now the tax paid by the majority hindus are spent for haj subsidy, special minority scholarships, and many minority oriented programmes. In some states the temple collections are diverted for minority religious places also. Thiruppathy collections were controlled by non-hindu chief ministers like Venkal Rao, Rajasekharareddy, Brahmananda reddy etc. How much of it goes to hindu temples? Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only. Any one who does not believe in Hinduism, idol worship, and temple worship culture has no right to even comment on it.

  27. https://www.dajoseph.com/
    உயர்திரு கிருஷ்ண குமார் ஐயா,
    மேலுள்ள சுட்டியில் சென்று தாங்கள் அவரின் உரைகளை கேட்கலாம்.
    ஞாயிறு கேள்வி பதில் மற்றும் வாராவாராம் அவரின் வைணவ உரைகளும் வெளியாகின்றன. அவரின் மெயில் deyeje@yahoo.com இம்முகவரியில் தொடர்பு கொண்டால் அவர் தளத்தில் வரும் புது உரைகளின் விவரம் உங்கள் மெயில்க்கு அனுப்பி வைப்பார்.

  28. jo amalan

    //
    இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா
    //

    தமிழகித்துர்க்கு மட்டும் மேடம் மாற்றம் செய்ய வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் ஏழாயிரம் கோடிகள். இதை எல்லாம் பொது பணமாக்கி எல்ல்லாருக்கும் ரூவா கொடுத்துரலாமே.

    உமது பேச்சில் கொஞ்சமாவது ஞாயம் இருக்கா. உங்களுக்கு இப்படி எழுட வெக்கமாவே இல்லையா. வாடிகனுக்கு வரும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு கூழ் ஊத்தவா செலவு பண்றாங்க. ஏன் ஆப்ரிக்காவுக்கு அனுப்பலாமே. எல்லா பணமும் மதம் மாற்ற உலகம் பூர அனுப்பப் படல

    சில்லி சாம் ப்ளாகுல போய் வாடிகன் சொத்து மக்களுக்கேன்னு எழுதுங்க – பிரசூரம் கூட ஆவாது

    அரசு பாதுகாப்பு செலவை தானே ஏத்துக்காது. அத பூரா கோவில் கணக்குல எழுதிருவானுங்க

    கோவில் சொத்து கோவிலுக்கே. உண்டியல்ல போட்ட காசு கோவிலுக்கே. அரசுக்கு பணம் வேணும்னா கோவிலுக்கு வெளியல உண்டியல் வெச்சு பாக்க சொல்லுங்க. ஒரு பய காசு போடறானான்னு பாப்போம்.

  29. இது தான் திராவிட பொய் என்று சொல்வது. .இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது. …இது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. etc

    This is written by Gomathi.

    The writer shd begin her or his mge clearly stating against whose mge she or he is addressing above mge. I think it is agains Kans’ mge.

    Pl avoid confusion.

  30. //Even now the tax paid by the majority hindus are spent for haj subsidy, special minority scholarships, and many minority oriented programmes. In some states the temple collections are diverted for minority religious places also. Thiruppathy collections were controlled by non-hindu chief ministers like Venkal Rao, Rajasekharareddy, Brahmananda reddy etc. How much of it goes to hindu temples? Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only. Any one who does not believe in Hinduism, idol worship, and temple worship culture has no right to even comment on it.//

    Ravi!

    In this forum, comments r passed on Christianity and Islam, and the acts of the respective leaders, the theologies etc. by Hindus are sharply criticized.

    Y not extend the same right to others to pass comments on ur religion, the acts or ur religious leaders and ur theology or philosophy ?

    Cd u reply ?

    Next, take ur statement: “Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only.”.

    It s a very vague statement. First, consider this fact that becomes obvious from the interview of the ex-King in this blog post itself.

    He disassociates with the temple assets now. The CM, Kerala has already come forward with the offer that if the King intervenes to accept the treasure, the State has no objection as it belongs to him, and it will leave the scene.

    If the king had accepted the offer, there wont be any discussion or prob now.

    Now that he has washed his hands off, we take up ur next proposal of giving to Hindus Who r such Hindus ? Do u mean the Hindus of Kerala? Coz. the Hindus of Kerala wont allow any Hindus to interfere with their temple affairs They did not allow Tamil vaishanavite ceremonies in Tvm temple ? u refer to them only dont u?.

    Ok. accepted. Has any Hindu orgn of Kerala come fwd ? Not till now. Even if they come fwd, they shd prove their collective identity No such identity exists there. If some group of course comes forward, it will open a Pandora’s box of litigation. Other Hindus of Kerala will ask: Who has given right to this group to stake claim to the treasure ?

    Ok, now take ur next stake holders namely: temple goers.

    This s the vaguest part of all !

    Who r they ? As Nagarajan says, everyone from every state and country professing Hindu religion goes there to worship. Among whom who r in ur mind to whom the treasure shd be entrusted? Pl tell us. The prob will b solved. People will thank u.

  31. அனைத்து ஹிந்து கோயில்களையும் அரசுகள் தங்கள் பிடியில் இருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்கட்டும். எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம். வேறு எவரும் நடுவில் புகுந்து நாட்டாமை செய்ய தேவையில்லை……

    Dear Sarvana Kr

    All of u r repeating the same error as above. Only in TN, the temples – that too, not all temples – r under govt control. In Kerala, the big temples like Sabarimalai and Guruvaayoor and all other major and minor temples r not under govt. Tvm temple s under the king; now he wants to abadndon it. No mosque, no church and no temple is under Kerala govt.

    In AP, the govt control Thirumala through TTD wihich has independent powers to manage the temple, although the money goes to state also. The state does not interfere in its day to day affairs.

    எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம்

    Ok. do it. But how ?

    Hav alreay replied to ravi.

    If Hindus of Kerala r organised as one impenetrable entity and speaks in one voice and acts as one group, legally too, meaning incorporated because managing money s involved here – – u can make the above statement. Otherwise, it s an empty boast.

    Reg ur other qn, which s often written here and elsewhere, as to Why dont u interefere with the wealth of other religions ?

    pl note the following:

    No such occurence of massive wealth getting uncovered suddenly one fine day after day to the great surprise of all Indians and also aborad, has been reported so far.

    Even if found, the respective religion can say to the govt we can look after it ourselves. Their offer will b convincing because they speak in one voice and there r no splinter groups among them.

    I dont think any Church or any Mosque has such amount of wealth in jewellery as found here. They may b receiving money from abroad, but they dont hoard. They spend for their purposes.

    In case if found and quarrels follow, as to to whom the wealth should belong, the matter will become controversial and will be publicly debated.

    Wealth s not associated with God or religion; it gets associated with the men or orgn who manage the wealth. It comes under the worldly material affairs. So, no true christian or muslim will object to public discussion reg its ownership.

    The material wealth of mosques r managed by wakf board, of course, it s a muslim body. But if there r quarrels within, goint upto court, the same will invite comments from all kinds of peopl, and a common muslim will take it as a material affair only, not spiritual affair. Fatwa s passed only in cases of blashphemy against the religious concepts and their Prophet. Not for questioning their material wealth. If I ask how much money is gotten to build the mosque, and if I further allege that in building it, some tainted money s used, and if I prove it, it s not blashpemy. I may perhaps be attacked physically or verbally and challenged in court by the rival parties – but no religious maulana will pass a fatwa against me, saying I hav blasphemied.

    The prob of wealth and God getting mixed is with u only. I hav pointed out here that Padmanapa swamy has nothing to do with the treasure and also, whether u say it belongs to him, or not, He does not bother, if we accept Hindu religious principle of God s above our material wealth.

    In the burqa controversy, in many fora, many people from other religions also participated in the discussions in indian visual and print media, or also abroad giving comments. No one issued fatwa against them.

    There r so many court battles involving Hindu orgns quarrelling among themselves regarding wealth and also, the procedures of worship – that went upto SC now. and during British times, the white judges gave verditcts to be followed by Hindu temples – white men who came from England, decided how to worship and even interpreted the procedures. I am not mocking; just reminding you that it is all in archival records, that show, there is absolutely no unity among u.
    Even after independence, the temple affairs go to court.

    For this lack of solidarity amog u, the philosophy of ur religion itself may b partly responsible. Because of extreme flexibility in forms of worship etc. there r differences everywhere: regional, linguistic, community-wise etc. V think Ram alone s God. But in Rajasthan, certain groups of Hindus have built a temple for Ravanan. There r Hindus in TN who name their children against the demon figure of Ramayanam. Nowadays we see a tv ad for Ravanan Masala Nadagak kaavalar Manohar said in open forum that Ravananan merits heroic adoration; so, he portrayed him as such in his drama Lankeshwaran.

    Similar instances of diametrically opposite views obtain among Hindus – region wise and language wise. The controversy regarding which lang is fit in worship is ancient one in TN. U cant say it was started by Dravidian parties. The controversies over procedures are many, many.

    The religion, as I have oftentimes written here, allows its followers to choose their own way from among the many. Yet, the confusion that arises from such freedom, is not resolved. Cd not be resolved coz of lack of singe leadership. Who has the right to tell me that I shd worship only Lord Shiva, not other Gods ? Or only Lord Vishnu, not Lord Shiva ? None. I can do as I like; and make my son follow me. A mutt leader can say the same to his followers who may b in lakhs, Can u stop them? But in Islam, it s possible to stop. In Christianity, it s possible to ex-communicate (the case of Spinoza is a good ex)

    Christianity, too, has a variety of splinter groups; but each one has its own leader and functions as an independent unity, w/o disturbing other groups, hence no court cases aganst one another. Islam has spilinter groups, who kill one another as in Iran or Iraq; and yet, in Indian context, they r solidly united.

    Unity s strength.

  32. //உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்//

    திராவிட்

    ஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.

    ஆழ்வார்கள் ‘சிரிதரன்’ என்றுதான் எழதியிருக்கிறார்கள். ரிஷிகளை இருடிகள் எனவும். விஷ்ணுசித்தன் என்ற தன் தந்தைபெயரை, விட்டுச்சித்தன் என்று ஆண்டாளும் எழுதியிருக்கிறார்கள்.

    வேண்டுமென்றால் பாசுரமழை பொழிகிறேன். நனைகிறீர்களா ?

  33. //சுந்தரராஜன் போன்ற துரோகி//

    திரு சுந்தரராஜன் துரோகி என்று சொல்வதே பாவமாகும். அவர் ஒரு நல்ல தமிழ் வைணவர். மகாராஜாக்களின் காலம் முடிந்தபின். திருவாங்கூர் மகாராஜா தன் ராஜ பரிவாரங்களைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. பேட்டி கொடுத்தவர் இராணவ வேலைக்குப்போய் விட்டார். கோயில் ஒரு ராஜா அமைத்த பழங்காலத்திலிருந்து தொடர்ந்த கமிட்டியால் பராமரிக்கப்பட்டு வந்தது. அவர்கள் கோயில் பராமரிப்பைச் சரிவரக் கவனிக்கவில்லையென்பதனாலேயே சுந்தரராஜன் போராடத்தில் இறங்கினார். கோயிலையும் சுவாமியையும் பற்றித் தன் வாணாள் முழுவதும் கவலைப்பட்டு இறுதியில் மரணமடைந்தவரை இந்து மதத்துரோகியென்பது சரியா ? அவர் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை.

    அவர் இப்படி செய்தவுடந்தான் பலவாண்டுகளாக பெயிண்டு கூட அடிக்கப்படாமல் இடிந்து கிடந்த ராஜகோபுரம் புணரமைக்கப்பட்டது. இப்பதிவில் போடப்பட்டிருக்கும் படம் பழைய படம். பழைய கோபுரத்தைக்காட்டுகிறது. புதிய படத்தைப்பார்க்கவும். கூகுளில் கிட்டும்.

  34. ஜோ அமலன்

    //
    //உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்//

    திராவிட்

    ஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.

    ஆழ்வார்கள் ‘சிரிதரன்’ என்றுதான் எழதியிருக்கிறார்கள். ரிஷிகளை இருடிகள் எனவும். விஷ்ணுசித்தன் என்ற தன் தந்தைபெயரை, விட்டுச்சித்தன் என்று ஆண்டாளும் எழுதியிருக்கிறார்கள்.

    வேண்டுமென்றால் பாசுரமழை பொழிகிறேன். நனைகிறீர்களா ?

    //

    உங்கள் பேச்சு குழந்தை தனமாக் இருக்கு

    அமலன் ஆதி பிரான் …
    விமலன் விண்ணவர் கோன்
    திருக்கமல பாதம் வந்து …

    என்று தான் ஆழ்வார் எழுதுகிறார்

    ஆதி, அமலன்,, விமலன், கமல பாதம் எல்லாம் சமஸ்க்ரித்த வார்த்தைகள் தான்.

    ஏன் ஆழ்வார்

    தூய முதல் காலப் பிரான் என்று ஆரம்பிக்கவில்லை

    ஹ்ருஷிகேச: என்பதற்கு இருடிகேசன் என்று எழுதி விட்டதாலேயே நீங்கள் சரடு விட்டுக் கொண்டிருக்க முடியாது

    ஸ்ரீதரன் என்று பாசுரங்களில் வருமிடங்களில் சிரிதரன் என்று எழுதினால் அது தமிழாகிவிடுமா – அது தமிழ் லிபியில் எழுதப்பட்ட ஸ்ரீதரன் என்பதன் குறிப்பு அவ்வளவுதான்

    இது ஒன்றும் தமிழோரோடு உரையாடுவதற்காக எழுதப்பட்டதல்ல. அந்தகாலத்தில் கேசவன் என்ற சமஸ்க்ரித்த சொல்லிய புரிந்து கொள்ள முடிந்தவர்கள் ஸ்ரீதரன் என்பதை புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?

    இதெல்லாம் வெறும் கருணாநிதி பேச்சு – எதோ முன்னாடி தமிழர்கள் தனித்தமிழ் பேசிக்கொண்டிருந்தாதாகவும் ஆரியர்கள் கலப்பு செய்ததாகவும் உடான்சு விட்டு – பாருங்கள் ஆழ்வார்களை அவர்கள் சுத்த தமிழில் எப்படி எழுதி உள்ளார்கள் என்று பிட்டு காட்டுவதேலாம் வீண் வேலை

  35. jo amalan

    //
    Now that he has washed his hands off, we take up ur next proposal of giving to Hindus Who r such Hindus ? Do u mean the Hindus of Kerala? Coz. the Hindus of Kerala wont allow any Hindus to interfere with their temple affairs They did not allow Tamil vaishanavite ceremonies in Tvm temple ? u refer to them only dont u?.
    //

    The issue is not about who owns it – it is about for what the money is put to use and it must be for the hindu cause. Please do not shoot at a different direction.

    A hindu always says

    Sarve bavantu sukinaha sarve santu niramayaa sarve badraani pashyantu ma kaschith dukkabaath baveth

    from this state to what state we have been pushed to. We are left with no choice now

    it is a shame that hindus have to go this far to worry about such things – their genorosity had been exploited so much that they are pushed to sitation.

  36. சாரங் !

    நீங்கள் என்னைச் சரியாகப் படிக்க முயல்வதில்லையென்றே நினைக்கிறேன். என்னை வாசித்து நீங்கள் எடுத்துக்கொண்ட கருத்து யாதெனில், நான் வடமொழிக்கு எதிரி, வடமொழி வேதங்களுக்கு எதிரி என்பதாகும். தவறான புரிதல்.

    நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அஃதாவது, சித்தர்களோ, ஆழ்வார்களோ, அல்லது இலக்கியத்தில் சங்க இலக்கியமோ, வள்ளுவரோ, இளங்கோவோ வடமொழிச்சொற்களை ஒதுக்கவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழி இங்கே வந்துவிட்டது.

    ஆயினும் அவர்களுள் பலர் வட சொற்களைத் தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றவில்லை. எ.கா சித்தர்கள். ஆனால், ஆழ்வார்கள் செய்தார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எடுத்தாளாமல், தமிழ்ப்படுத்தியே எழுதினார்கள். எ.கா இருடிகள் சிரிதரன், விட்டுச்சித்தன் போன்று.

    எந்த பாசுரத்திலும் வடசொல் அப்படியே சமசுகிருத உச்சரிப்பில் இருக்கவே இருக்காது. நினைவிருக்கட்டும்: குலசேகரராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், முதலாழ்வார்கள் சமசுகிருதத்தில் விற்பன்னர்கள்.

    இதையேன் செய்தார்கள் என்று நான் ஆராயப்போனால் அங்கேயும் நீங்கள் ஏதாவது உள்ளோக்கம் தேடுவீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். மனத்தை மூடும்போது எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.

    தமிழ் – தமிழர் – தமிழர்களுக்காகவே – தமிழர்களில் அனைவருக்குமாக‌ என்பதே பார்முலா. இதுவே சிரிவைணவத்தின் கொள்கையாகும்.

    இந்தத்தளமும் அதை நோக்கித்தான் செல்கிறது. “தமிழர்களில் தாய்மதம்” என்கிறார்கள். What do they mean ?

  37. ஜோ.அமலன் ரேயன் பெர்னாண்டோ அவர்களே……

    // So, no true christian or muslim will object to public discussion reg its ownership. //

    என்ன சார் புது கதை விடுகிறீர்கள் ? இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தங்கள் சொத்துக்களை பற்றிய கணக்கை என்றாவது வெளியிட்டுள்ளார்களா ?நெல்லை மற்றும் கன்யாகுமரி பகுதிகளில் நடை பெரும் டையோசீசன் தேர்தல்களில் பெரும் அமளிகள் நடைபெறுகிறதே , எதற்காக ? சொத்துக்க்காகத்தானே ?

    தேர்தலில் யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்பதில் இருந்து சொத்து விவகாரம் வரை கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அவரவர் வழிபாட்டு தலங்களில் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது . ஹிந்துக்களிடம் அது போன்ற அடிமைத்தனம் கிடையாது.

    பிரேமானந்தா கைதானபோது ,நாகர்கோயிலை சேர்ந்த ஜான் மோசஸ் என்ற ஒரு பாதிரியாரும் அதே போன்ற பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளுக்காக கைதானார். அந்த வழக்கு என்ன ஆனது.?
    சட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் அல்போன்சும் ,குமாரதாசும் [ இருவரும் கிறிஸ்தவர்கள் ] மேற்படி பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று பகிரங்கமாக அரசை மிரட்டினர் .அரசும் பணிந்தது.இந்த இருவரும் தான் ஜெயலலிதா கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது அதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார்கள்.ஆனால் ஹிந்துக்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் ஹிந்து அரசியல்வாதிகள் வாயே திறக்க மாட்டார்கள்.அதுதான் எங்கள் பிரச்சினை……

    இஸ்லாமியர்களுக்கும் ,கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவர்.

    // I dont think any Church or any Mosque has such amount of wealth in jewellery as found here.//

    சொத்து என்றால் பணமும் நகையும் மட்டும்தானா ? ஒரு சதுர அடிக்கு தங்கத்தை விட விலை மதிப்பு அதிகம் உள்ள இடங்கள் சர்ச் , மற்றும் மசூதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. [ பெரும்பாலும் வர்த்தக பயன்பாட்டில் உள்ளவை ] அவற்றின் மதிப்பைஎல்லாம் கணக்கிட ஒப்புக்கொள்வார்களா?

    மேலும் , இது தமிழ் இணைய தளம். இங்கு உங்கள் ஆங்கில புலமையை காட்டுவானேன் …… வேறு ஒரு விவாதத்தில் மணிப்பிரவாள நடைக்கு எதிராக தமிழ் ஹிந்துவுக்கு கடிதம் எழுதியது நீங்கள் தானே….ஏன் இந்த போலித்தனம்……

  38. //இது ஒன்றும் தமிழோரோடு உரையாடுவதற்காக எழுதப்பட்டதல்ல//

    saarang

    தமிழருக்காகவே எழுதப்பட்டதால் ‘தமிழரோடு உரையாட ‘ என்ற சொல்லாடல்.

    ஆழ்வார்கள் தமிழருக்காகத்தான் எழுதினார்கள். ஆழ்வார்கள் நோக்கம் அதுவே. திருமால் வணக்கத்தை ஒவ்வொரு தமிழனுக்கும் – நிறம், ஜாதி, குலம், பணம் – என்று எந்தவித தடங்களுமில்லாமல், அனைவருக்கும் என்ற விடாப்பிடி கொள்கையே அவர்தம் கொள்கையாகும். அஃதை அருமையாகப்புரிந்து கொண்டவர் இராமனுஜர். எனவேதான் நாலாயிரம் பரப்பப்பட்டது. எனவேதான் ஆழ்வார்களின் சித்தாந்தமே எமது கொள்கையென்றார். எனவேதான் தலித்துகளுக்காக தாம் கட்டிய கோயிலில் தனினேரம் ஒதுக்கினார் (திருநாராயணபுரம்). எனவேதான் கொள்கைக் காவலர்களாக புராதனத்தில் ஊறிக்கிடந்த அவர் பிறந்த ஜாதிக்காரகளைப் பகைத்துக்கொண்டார். எனவேதான் நாடு கடத்தப்பட்டார்.எனவேதான் அவருக்குத் தொண்டர்கள் வெகு சிலரே அவர் காலத்தில்.

    ஆழ்வார்களின் மகத்தான தமிழருக்குச் செய்த சேவை இராமனுஜரையும் அவருடன் இருந்த முதன்மைச்சீடர்களான ஆழ்வான், பெரியநம்பி போன்றொரை வைத்துப்பார்க்கும்போதே தெளிவாகும்.

    சித்தர்களைப்போல அடாவடித்தமிழ் எழுதாமலும் அல்லது சங்கத்தமிழ் எழுதாமல் பேச்சுத்தமிழ் அல்லது பழகுதமிழில் எழுதுவதே அவர்கள் நோக்கம். ஆழ்வார்களைப்படிக்க பொழிப்புரையோ பதவுரையோ தேவையில்லை.

    ஆழ்வார்கள் “வடமொழியைத் தமிழர்கள் பேண வேண்டும்; வேதங்கள் படித்தால்தான் இந்துமதம் தெளிவாகும்” என்று தமிழர்களைப் பயமுறுத்தவில்லை. ஆழ்வார்களைப்படிக்கும் ஒவ்வொரு தமிழனும் ‘இவர் நம்மாளு’ என்ற உணர்வு உடனேயே வரும்.

    நன்மாறன், சடகோபன் என்றழைக்கப்பட்டவரை ‘இவர் நம்ம ஆழ்வார்’ என்று உணர்வு கொண்டு அவரிடம் போனார்கள் தமிழர்கள். நம்ம ஆழ்வார் மருவி நம்மாழ்வார் ஆனது. இந்த உணர்வு வெகு இன்றியமையாதது. இந்த உணர்வு போய் அன்னியத்தன்மை போனால், எல்லாமே போய்விடும்.வருக்கு ‘இவர் நம்ம ஆழ்வார்’ என்று உணர்வு கொண்டு அவரிடம் போனார்கள் தமிழர்கள். நம்ம ஆழ்வார் மருவி நம்மாழ்வார் ஆனது. இந்த உணர்வு வெகு இன்றியமையாதது. இந்த உணர்வு போய் அன்னியத்தன்மை போனால், எல்லாமே போய்விடும்..ஊருக்கு வெளியிலே காட்டுக்கோ மலைக்கோ ஓடவில்லை நம்மாழ்வார். ஊருக்குள்ளே ஒரு மரப்பொந்தில்தான் வாழ்ந்தார். பிற ஆழ்வார்களும் மக்களைவிட்டு அகலவே இல்லை. மக்களில் ஒருவராகத்தான் வாழ்ந்தார்கள்.

    ஆழ்வார்களுள் ஒருவர் தனக்கு வடமொழியோ வேறெந்த சடங்கு சமாச்சாரங்களோ தெரியா. எனக்கு கல்வியறிவு கிடையாது. எனக்குச் ஜாதியோ வேறெந்த பெருமைகளோ கிடையா. நான் ஒரு ஒதுக்கப்பட்ட பஞ்சமன். இருப்பினும் திருமாலே எனக்கு ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். அஃதாவது உன் கருணை எனக்கு உண்டு. உன்னைத் தவிர நான் வேறொன்றும் எனக்கு வேண்டவே வேண்டா !” என்றார்.

    “குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்;
    நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்;
    புலன்கள் ஐந்தும் வென்றிலேன்; பொறியிலேன்; புனித! நின்
    இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே !”

    – திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார்.

    கற்பனை பண்ணிப்பாருங்கள். இப்படி ஆழ்வாரே சொல்லும்போது அப்படிப்பட்ட குணங்களைக்கொண்ட ஒரு தமிழன் என்ன நினைப்பான்? “அடடே, என்னைப்போலவே இருக்கிறாரே. அப்போ நானும் திருமாலிடம் போகலாமே? ” என்றுதான்.

    எந்த மதம் மக்களைவிட்டு உச்சாணிக்கொம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேசுகிறதோ அது தானாகவே அழிந்துவிடும்.

    ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் செய்த தொண்டை இன்றுகூட உங்களால் செய்யமுடியவில்லை.

    வரலாற்றில் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதைகள் ஏராளம்.

  39. //The issue is not about who owns it – it is about for what the money is put to use and it must be for the hindu cause. Please do not shoot at a different direction.//

    One follows the other. If u resolve the issue ” Who owns the treasure ?’, the second issue: To what use, the treasure shd be put ?” can be resolved w/o efforteless ease.

    We shd shoot that direction namely the first qn.

    Suppose it is decided that the King owns it; and suppose the King accepts it, where s the qn how to use the treasure ? for others to ask. The king is in full authority to decide the qn and no one can interfere.

    Suppose the King decides to give all the treasure to the govt of Kerala, can anyone qn him? Cant. Except asking the king to take an assurance in writing from the state to use a part thereof for either Hindus or to the temple Suppose the king refuses. Ha…ha..u cant do precious little.

    Coz. here so many of us have supported the point that the treasure belongs to the king only, and further, to my insistently put contrary view, that the King is the owner of the temple. Remember that.

    Having written or said like that, u now cant stand in the way of how the king will put to use the treasure if given to him. Also, note the facts which come out clearly from the above posted interview that the King and his family members now think differently today. They are modern in the sense that they have given up all paraphernalia associated with royal household. He now thinks that all that he does shd be welcomed by the malayali masses. By antogonising them he cant be called a malayalai king.

    Against this mindset, if he is given the choice to decide the qn to what use to put, he will defintiely give a substantial part of the treasure, if not fully, to the welfare of Kerala people.

    Suppose the king did not accept the offer to decide the qn, then, as u liked, the treasure will go to the temple and the temple will decide.

    It is, forgive me, to say this that, the TEMPLE here is vague. Temple means the God abiding there. God wont come and spk. Further, it means bricks, mortar etc. So, ultimately the temple means a committee of human beings who r the hindus.

    Read my earlier mge. The Committee s weak and non functional. That s y he went to court.\

    Can v trust that committee with such treasure?

  40. எனக்குத் தெரிந்து ஸ்ரீதரன் என்பதை “சிறீதரன்” என்றோ “சீதரன்” என்று தான் ஆழ்வார்கள் கூறுகிறார்கள். ஜோ எழுதுவது போல “சிரிதரன்” என்றல்ல. ஸ்ரீவைஷ்ணவத்தையும் சீவைணவம் என்று தான் எழுத வேண்டும். சொல்லப் போனால், ‘வைணவம்’ என்ற பதம் சமஸ்கிருதத்தில் “மூங்கில் சம்பந்தமானது” என்று கூட அர்த்தம் இருக்கிறது (வேணு = மூங்கில்), ஆகையால் குழப்பம் வராமல் இருப்பதற்கு “சீவைட்டணவம்” என்று தான் சொல்ல வேண்டும்.

    ஸ்ரீவைனவத்தை ‘சிரிவைணவம்’ என்று திரும்பத் திரும்ப எழுதுவது ஸ்ரீவைஷ்ணவத்தைப் பார்த்து நகைப்பது போல உள்ளது.

  41. முன்பு ஒரு மறுமொழியில் ஸ்ரீ எழுத வரவில்லை என்றீர் , மீண்டும் இப்போது அது ஒன்றும் பாவமில்லை ஆழ்வார்கள் அப்படித்தான் பாடினார்கள் என்கிறீர் , இப்போது தெரிகிறதா ஏதோ ஒரு பதில் சொல்லவேண்டும் என்று சொல்வது. மேலும் ஆழ்வார்களும் நாமும் ஒன்றா? இதற்கு ஒரு தனி கதை எழுதுவீர். எனக்கு நீங்கள் சொல்ல வந்தது புரிய வில்லை என்று,எழுதுங்கள் . திரு ஜோசெப் அவர்களுக்கு இணையாக நான் யாரையும் சொல்ல வில்லை, அவர் நிலை வேறு உயரம் வேறு. நீங்கள் முன்பு கிறித்தவ பெயரில் வைணவர் உண்டு என்று அவர் பெயரை காட்டும் போது அவரின் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களுக்கு நேர்மாறனவை என்று தெரிவிக்கவே எழுதினேன்,உங்களை நான் அவருடன் ஒப்பிடுவேன் என்று நீங்கள் நினைத்து கூட பார்க்க வேண்டாம்.
    குடந்தை சாரங்கபாணி கோயிலில் உள்ள பசு மடத்துக்கு மாதம் தோறும் தீவனம் வாங்கி தரும் கிறித்தவ பெண்மணி உள்ளார் அவர் உண்மையான வைணவர் என்பதை நான் அறிவேன். மறோர் இஸ்லாமியர் வேறொரு பிரசித்தி பெற்ற பெருமாளை தினம் சேவிக்காமல் காலை உணவு கூட கொள்வதில்லை, அக்கோயில் பட்டர் சொன்னது இது.
    அப்புறம் எது தனி மனித தாக்குதல் உங்கள் கருத்துக்கு பதில் தந்தால் அது தாக்குதலா? நீங்கள் எழுதுவதை படிக்க கூடாதா? அப்புறம் ஏன் சுவாமி எழுதுகிறீர்?நீங்கள் செய்வது தான் தனி நபர் தாக்குதல். என்னை மட்டும் படிக்க கூடாது என்பது/ இங்கே வந்து முதலில் இட்ட பின்னுட்டம் அதற்கு பதில் இப்படித்தானே செல்கிறது. இதுதானே இங்கு நடைமுறை? பிறர்க்கு சொன்ன கருத்துக்கு பதில் கருத்துள்ளவர்கள் இங்கு பதிவிடுவது இயல்பான விஷயம்.

  42. ////ஸ்ரீவைனவத்தை ‘சிரிவைணவம்’ என்று திரும்பத் திரும்ப எழுதுவது ஸ்ரீவைஷ்ணவத்தைப் பார்த்து நகைப்பது போல உள்ளது./////
    அதேதான் நக்கலாக அழைக்கும் வார்த்தை பிரயோகம் இது.

  43. ////மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்? இனி அரசகுடும்பம் தலையிடாது.
    பின்னர் அக்கோயிலைப்பாதுகாப்பது ஆர்? களைப்பாதுகாப்பது ஆர்? கடைசியாக அரசுதானே ? இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி
    போட்டுச் செய்யப்போகிறார்களா? அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்////////////
    இதற்கு மத சார்பற்ற !!! இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்./////
    இதற்குத்தானே இப்படி பதில் கொடுத்தீர்கள்
    ////ஆயிர‌க்க‌ண‌க்கான‌வாண்டுக‌ளாக‌ ஏன் ம‌ன்ன‌ர் செய்ய‌வில்லை திராவிடன் ? ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ? ஏனென்றால், அன்று சிரி ப‌த்ம‌நாப‌ சுவாமி ஏழை. இன்று ப‌ண‌க்கார‌ர்.
    அற்ற‌ குள‌த்தில் அறுனீர்ப்ப‌ற‌வைக‌ள் வ‌ருமா ? வாரா. எல்லாம் ப‌ண‌ம். கொள்ளைப்ப‌ண‌ம். ஆசை ஆரை விட்ட‌து //////
    அற்ற குளத்தில் தற்போது வந்த பொக்கிசத்துக்கு வந்த அறுநீர் பறவை அதனை பொது சொத்தாக்க துடிக்கும் உங்களை போன்றோர் தான்.
    மேலும் மன்னர் மேல் மக்களுக்கு இருந்த மதிப்பினால் யாரும் அவரிடம் அப்படி கேட்கவில்லை. இன்றும் ஊர்களில் ஒரு குடும்பத்தால் நிர்வகிக்க படும் பல கோயில்கள் உள்ளன அவற்றையும் யாரும் கொடுங்கள் என்று கேட்கவில்லை காரணம் அக்குடும்பத்தின் மீதுள்ள மதிப்பே, நாளை அக்குடும்பம் போர்ப்பில் வெளியேற நினைத்தால் நிச்சயம் சொத்து இல்லாவிட்டாலும் அதனை ஏற்று நடத்த ஒரு சிலர் இருக்கிறார்கள் நிச்சயம்
    பின்னர் ஏன் நீங்கள் முதலில் இப்படி ஒரு கருத்து போட்டீர்கள் ?
    நான் கேட்கிறேன் இப்போது என்ன கேரளா அரசு மட்டும் திடீர் என்று தற்போது காவல் போடணும் பணத்தை அபரிக்கதான் அரசு காவல் போட்டதா?

    ////இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறதுஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது ? கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது.////

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கு பொக்கிஷம் பொது சொத்தாகி அரசின் கஜானாவுக்கு செல்லக்கூடாது என்பதே கரு. அது மன்னார் நிர்வகிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மன்னர் கைவிட்டு விட்டார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்) பிற இந்து அமைப்புகள் அரசு தலையீடின்றி அனுமதித்தால் நடத்தும் என்பது அர்த்தம். அச்சொத்து முழுதும் இந்து மத மேம்பாடு மக்கள் வளர்ச்சிக்கு மட்டுமே (அது மலையாளிகளுக்கு மட்டும் என்றாலும் பரவாயில்லை) என்பதுதான் எண்ணம்.
    ///There s no connection between Central Government and this temple. The matter here involves only three persons: the king, the petitioner who is now dead, and the State Govt. Now, only two. the king and the State Govt./////
    எல்லாம் தெரிந்த அமலன் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமே ஒரு சலுகையாக அவர்களின் வழிபாட்டு தளங்களை அவர்களே நிர்வகிக்க அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது.இந்து வழிபாட்டு தளங்களுக்கு அல்ல. இந்திய அரசின் அந்த சலுகையை பயன்படுத்தி தான் மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு மட்டும் விலக்களித்து இந்திய அரசால் விலக்களிக்க படாத இந்து ஆலயங்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ளன. இதில் எந்த மாநிலத்தில் எத்தனை கோயில்கள் அரசிடம் கட்டுபாட்டில் உள்ளன என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது அவ்வளவே.

  44. Jo amalan

    //
    One follows the other. If u resolve the issue ” Who owns the treasure ?’, the second issue: To what use, the treasure shd be put ?” can be resolved w/o efforteless ease.

    We shd shoot that direction namely the first qn.
    //

    you seem to be demonstrating immense management sense 🙂 If Karunanidhi gets to own it will the second question even arise 🙂

    One has to decide the end goal and based on the goal we should decide who should be the custodian.

    Your stupendous startling suggestion is like first choosing a tasmac owner as the custodian and then letting him decide who will own the money 🙂

    எப்படி ஜோ எப்படி உங்களால மட்டும் இப்படி க்ரியேடிவா யோசிக்க முடியுது

  45. கந்தர்வன் !

    “எனக்குத் தெரிந்து” என்றெல்லாம் சொல்லக்கூடாது. நாலாயிர திவ்ய பிரபந்தம் கடைகளிலும் நூலகங்களிலும், ஏன், வலைபதிவுகளிலும், கிடைக்கிறது. நேராகவே படிக்கலாம். ரொம்ப இலகு. ஏன் “எனக்குத் தெரிந்தவரை” யென்று ? படித்துவிட்டால், எப்படி உண்டு என உரக்கச் சொல்லலாமல்லவா ?

    இங்கு வடமொழியா? தமிழா? என்பதல்ல கேள்வி. ஆழ்வார்களின் நோக்கமென்ன ? அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் ? என்பதே.

    “இல்லை! ..இல்லை !! அவர்கள் தமிழை விட்டார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எழுதினார்கள்” என்று சொல்வது அவர்களின் நோக்கத்தையும் செயலையும் சிறுமைப்படுத்துவாகும். மனிதர்களுக்கு உள்ள ஈகோ பிரச்னைகள் அவர்களுக்கில்லை.

    அப்படியே அவர்கள்முன் தமிழ்வழி பூசனையா? வடவழி பூசனையா? என்று கேட்டதற்கு அவர்கள் இதுவே ! அதுவே ! என்றெல்லாம் பிதற்றவில்லை. மாறாக, இரண்டுமே இருக்கலாமென்றார்கள். என்ன உட்பொருள் ?

    ஆம். நான் சொன்னதேதான் ! அவர்கள் காலத்தில் கற்றறிந்தோர் சிலரே. நகரன்களில் வாழ்ந்தவரைவிட பட்டி தொட்டிகளில் வாழ்ந்த பாமர மக்களே கோடி.. அலகு குத்திக்காவடி தூக்குபவர்களுக்கு வடமொழி தெரியுமா ? வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா ? என்றெல்லாம் நினைத்தவர்கள் ஆழ்வார்கள். அதே வேளையில் வடமொழி வழி இருப்பதை அவர்கள் வெறுக்கவுமில்லை. வேண்டாமெனவுமில்லை.

    தமிழ் வழி மீது உள்ள காழ்ப்புணர்வால், ஆழ்வார்களின் தொண்டையே மாற்றி தமக்கு வசதியாகச் சொல்லலாமா ?

    தமிழிலே புழங்கும் வடசொற்களுக்கு என்ன பொருட்கள் என்பதெல்லாம் இங்கு விவாதிக்கப்படவில்லை. எனவே தவிர்க்கவும்.

    சிரிவைணவம் என்பதை ஸ்ரீவைணவம் என்பது எழுதுவதா அன்று அப்படியேயா என்பது கவுரப்பிரச்னை. உங்களுக்கு இருக்கிறது போலும்.

    The Bible and the Koran in Tamil r easily available in open market. Their preachers speak in Tamil everywhere. Although Arabic s used in mosque worship, their preachers speak in public platforms only in Tamil. There s no controversy of ‘Which language’ when they explain their religion to the masses. It s definitely Tamil.

    The problem s only with u. U don’t want keep Tamil as the centre for all your actions. Not that u shd reject Sanskrit and the scriptures outright, but that u shd make Tamil as the centre of all ur actions when u interact with Tamil masses. U don’t want to do so, and don’t want others like Azhwars do so either, as seen from ur valiant efforts to project Azhwaars as ones who gave primacy to Sanskrit.

  46. //அச்சொத்து முழுதும் இந்து மத மேம்பாடு மக்கள் வளர்ச்சிக்கு மட்டுமே (அது மலையாளிகளுக்கு மட்டும் என்றாலும் பரவாயில்லை) என்பதுதான் எண்ணம்.
    //

    போகட்டும். மலையாளி இந்துக்களே எடுக்கட்டும். எப்படி? அவர்களுக்கென்று ஓரமைப்பு உண்டா ? பங்காளிச்சண்டை வரும். இது சொத்துச்சண்டை. மதச்சண்டையன்று.

    அப்படி அமைப்பு ஒன்றிருந்தால் இச்சொத்துக்களை பாதுகாப்பு எப்படி என்பதே முதல் பிர்ச்சினை. அதைத் தீர்க்க அவர்களால் முடியாது. காவலர்கள் வேண்டும்.

    பின்னர்தான் எப்படிச்செலவிடவேண்டுமென்பது. அவற்றை ஒரே ஒரு கோயிலுக்கு என்று செய்தால், ஏற்கனவே இந்துமதமென்றால் பணம் என்ற நினைப்பு மேலும் உறுதிப்படும்.

    முதலில் கேரள இந்துக்கள் ஆர்? அமைப்பு எங்கே?

    கேரள அரசு முரட்டுத்தனமாக வந்து தடாலடியாகக் காவலர்களை அனுப்பவில்லை. ஒரு கோடி பாதுகாப்புக்கு ஒதுக்கவில்லை. எவருமே முன்வராததால், அரசின் கடமையாகிறது.

    நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நாட்டாண்மை வேண்டாம் என்றெல்லாம் எழுதுவதை உங்கள் சொந்த தளத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே கேள்விகளை ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைப்படிப்பதற்காகத்தான் இத்தளம்.

  47. Sarang has written: “You seem to be demonstrating immense management sense If Karunanidhi gets to own it will the second question even arise One has to decide the end goal and based on the goal we should decide who should be the custodian. Your stupendous startling suggestion is like first choosing a tasmac owner as the custodian and then letting him decide who will own the money ”

    Sarang!

    Ur obsession with Karunanithi s not my obsession. Tasmac, karunanithi etc r out of qn here.

    First qn to decide: Who owns the treasure?

    The qn has arisen only because the King has abandoned the treasure. “I don’t care even if the treasure is burgled” he said arrogantly in the interview published by Tamilhindu.com.
    If u resolve the qn, only then the other qn will arise as to What to do with the treasure? Or, what r the uses to which it can be put to?

    If u can’t tackle the first qn satisfactorily, u cant come to the next qn at all because the next qn is non sequitur.

    Imagine this: U want to buy a particular land. U desire that. U have money. No encumbrances so far. But at the time of buying, it came to light that the alleged ownership is wrong. First the qn who is the ownership ought to b settled beyond doubt, through legal and governmental sources. Only after resolving the ownership, which means the legitimate seller, all other things will be taken up freely. Then, u can buy the land happily.

    So, shoot the first qn down correctly.

  48. ”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள். //

    இது சரி. இன்று மன்னராட்சி இல்லை. முன்னாள் மன்னர்கள் இன்று பாமரமக்களுள் இணைந்து வாழ்பவர்களே. இம்மன்னர் பரம்பரையும் அப்படித்தான்.

    //(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..//

    இது சரியல்ல. பாமர மககளோடு மன்னர் பரம்பரை இணைந்து பாமரக்குடிகளாகி விட்டாலும், அவர்கள் பத்மநாப சுவாமியின் பக்தர்களே. அல்லது தாசர்கள் என்பது மாறவில்லை. திருட்டுப்போனாலும் கவலைப்படமாட்டேன் என்பது பக்தனின் பேச்சன்று.

    கடவுள் பார்த்துப்பார் என்பதும் பிழை. கடவுளுக்கும் பணத்துக்கும் தொடர்பில்லை. தன்னையே கொள்ளையடிக்க வந்தவனையும் ஆழ்வாராக்குவார் (திருமங்கையாழ்வார் திவ்ய சரிதம்), இல்லை ஊரைக் கொள்ளையடித்தவனையும் பாதுகாப்பார் (கள்ளபிரான் சரிதம்).

    மார்த்தாண்டவர்மா எப்படிச் சொல்லியிருக்கவேண்டும்? இப்படி.

    “நாங்கள் இப்போது மன்னர்களைப்போல வாழவைல்லை. உங்களுள் ஒருவரே. எங்களுக்கு அச்சொத்துக்கள் வேண்டா. அவைகள் இறைவனுக்களிப்பட்ட நிவேதனங்கள். எங்களால் பாதுகாக்க முடியாது. அதற்கு எங்களுக்குத் திறனில்லை. ஆயினும் அச்சொத்துக்கள் திருட்டுப்போகாமல் பாதுகாக்கப்படவேண்டும் அல்லது கோயில் காரியங்களுக்கு செலவழிக்கப்படவேண்டுமென்பதே எங்கள் அவா. அதைச்செய்பவர்கள் எவரேனும் முன்வன்தால் பெரிதும் நாங்கள் மகிழ்வோம்!’

    இதுவே ஒரு பக்தனின் அடக்கமான பதிலாக இருக்க முடியும்.

    ((வேட்டுப்பறி சரிதம் அனைவருக்கும் தெரியுமாதலால் கள்ளபிரான் சரிதம் (பெயர்க்காரணம்) இங்கு போடப்படுகிறது.)

    கள்ளபிரான் சரிதம்: கள்ளபிரான் என்பது நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் உள்ள திவ்ய தேசக்கோயில். இங்குதான் ஆழ்வார் புளியமரப்பொந்தில் வாழ்ன்தார். இலக்கியத்தில் இக்கடவுளில் பெயர் மகர நெடுங்குழை காதர்.

    ஒருநாள் ஒரு திருடன் ஒரு வீட்டில் கொள்ளையடித்ததை மக்கள் பார்த்துவிட்டு அவனைத்துரத்திக் கொண்டுவந்தனர். அவன் கொள்ளையடித்த பொருளை கோயில் பின்புறத்தில் ஒழித்துவிட்டு, கோயிலுள் நுழைந்து மகர நெடுக்ன்குழை காதரின் பின் ஒழிந்து கொண்டான். இவன் கோயிலுக்குள் நுழைந்ததைப்பார்த்த மக்கள் உள்ளே வந்து தேடினார்கள். கள்ளன் கிடைக்கவில்லை. பின்னர் மகர நெடுங்குழை காதரிடம் ‘இங்கு ஒரு கள்ளன் ஓடிவந்தானே பார்த்தீரா ? என்று கேட்க. திருமால், ‘அப்படி எவரும் வரவில்லையே ! நான் இங்கேதானே இருக்கிறேன்.!!” என்றவுடன் மக்கள் போய்விட்டார்கள்.

    பின்னர் ‘வெளியே வா’ என்றார் மகர நெடுங்குழை காதர். அவன் அவர்முன் மண்டியிட்டு, ‘சாமி, என்னைக் காட்டிக்கொடுக்காமல் காத்தீர்! இன்று முதல் நான் உமக்கடிமை செய்வோம்!’ என்று சொல்லி, பின்னர் கொள்ளயடித்த பொருளை அவ்வீட்டிலேயே ஆருக்கும் தெரியாமல் வைத்து வந்தான். வைணவனானான்.

    இதுமுதற்கொண்டு, மகர நெடுங்குழை காதர், கள்ளபிரான் என்றத் திருநாமத்தாலே ஊர் மக்களால் அழைக்கப்பட்டார். கள்ளபிரான் கோயிலெங்கேயிருக்கிறது என்றால்தான் இன்று அங்குள்ளவர்களுக்குத் தெரியும். கள்ளபிரான் தேரோட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் விசேடமானது. ஊர்மக்கள் ஜாதி, மத, இன பேதமன்றி கலந்து தேர்வடம் பிடிப்பார்கள். அவ்வூரில் கணிசமாக கிருத்துவரும் இசுலாமியரும் வாழ்கிறார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

  49. Dont assume that God encourages robbery. The meaning of the story s that v can b reformed. Reformation of Thirumangai aazhwaar has been recorded by the Azhwaar himself.

  50. Even if people cant forgive us, God will. No matter who u r. That s the meaning of the story. This also comes from the story of a dog associated with the same God Kallapiraan.

  51. ஜோ,
    நீங்கள் சொல்வதே சரி, நீங்களே சிறந்த வைணவர் இங்குள்ள யாருக்கும் சரியான கருத்து இல்லை,பத்மநாபனின் சொத்துக்களை பற்றி நீங்கள் சொல்வதே மிக சிறந்த கருத்து. தேவரீர் தாங்கள் யோசிக்கும் அளவு யாரும் ரூம் போட்டால் கூட யோசிக்க முடியாது. உங்கள் வாதங்கள் அபாரம் (முன்னாள் வந்தால் முட்டு பின்னால் வந்தால் உதை.) உங்களின் உயர்ந்த எண்ணம் என்ன என்பது உங்கள் கருத்துகளால் எல்லோருக்கும் விளங்கி விட்டிருக்கும் இந்நேரம். இப்படியே கண்டினுவ் பண்ணுங்க சுவாமி. புதுசா வரவங்களும் தெரிஞ்சுக்கட்டும்

  52. நாலாயிரத்தில் ஸ்ரீதரன் என்ற நாமம் வரும் இடங்கள் இதோ –

    “குழகன் சிரீதரன்” (58), “செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
    சிரீதரா” (147), “செங்கணெடுமால். சிரீதரா” (382), “தீமைசெய்யும் சிரீதரா” (514), “பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்” (553), “திருவிருந்த
    மார்பன் சிரீதரன்றன்” (2443), “திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்” (2473), “ஏழும் எய்தாய். சிரீதரா” (2840), “தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே” (2974), “சிரீஇதரன்செய்யதா” (2975), “சிரீதரன் தொல்புகழ் பாடி” (3060), “சிரீதரன் மூர்த்தியீ தென்னும்” (3157)

    எல்லா இடங்களிலும் “சிரீதரன்” என்று தான் உள்ளது. ஓரிடத்திலாவது “சிரிதரன்” என்று இருக்கிறதா என்று அனைவரும் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும்.

  53. ஜோ அமலன்,

    //
    இங்கு வடமொழியா? தமிழா? என்பதல்ல கேள்வி. ஆழ்வார்களின் நோக்கமென்ன ? அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் ? என்பதே.

    “இல்லை! ..இல்லை !! அவர்கள் தமிழை விட்டார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எழுதினார்கள்” என்று சொல்வது அவர்களின் நோக்கத்தையும் செயலையும் சிறுமைப்படுத்துவாகும். மனிதர்களுக்கு உள்ள ஈகோ பிரச்னைகள் அவர்களுக்கில்லை.
    //

    ஆழ்வார்கள் தமிழை ‘விட்டார்கள்’ என்று யார் சொன்னார் இங்கு? பிதற்றலுக்கு ஒரு எல்லையே இல்லையா?

    //
    ஆம். நான் சொன்னதேதான் ! அவர்கள் காலத்தில் கற்றறிந்தோர் சிலரே. நகரன்களில் வாழ்ந்தவரைவிட பட்டி தொட்டிகளில் வாழ்ந்த பாமர மக்களே கோடி.. அலகு குத்திக்காவடி தூக்குபவர்களுக்கு வடமொழி தெரியுமா ? வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா ? என்றெல்லாம் நினைத்தவர்கள் ஆழ்வார்கள். அதே வேளையில் வடமொழி வழி இருப்பதை அவர்கள் வெறுக்கவுமில்லை. வேண்டாமெனவுமில்லை.
    //

    நீங்கள் ஏதோ Time Machine – இல் போய் அவர்கள் காலத்தில் மக்கள் எந்த அளவுக்குப் படிப்பறிவு பெற்றிருந்தனர் என்று பார்த்து வந்திருக்கிறீர்கள் பொது.
    ஆம், “பட்டி தொட்டிகளில் இருந்தவர்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் பிரபந்தம் புரியுமலவிற்குத் தமிழறிஞர்களாக இருந்தனர்”. என்ன பேச்சு இது? பட்டி தொட்டியில் உள்ள படிக்காத பாமரர்களிடம் போய்

    “ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்
    ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
    வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
    ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே.”

    என்று சொன்னால் புரிந்து விடப் போகிறது…?

    ஆழ்வார்களின் பிரபந்தத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறீர். சொல்கிறேன். அது பரிபூரணமான பிரம்மானுபவத்தில் தானாகப் பெருக்கெடுத்து ஓடிய தெய்வத்தமிழ்ச் சொற் பிரவாகமே அன்றி, “பட்டி தொட்டிகளில் இருப்பவர்களும் விரும்பட்டும்” என்பதற்காக அல்ல.

    //
    தமிழ் வழி மீது உள்ள காழ்ப்புணர்வால், ஆழ்வார்களின் தொண்டையே மாற்றி தமக்கு வசதியாகச் சொல்லலாமா ?
    //

    தமிழ் ஹிந்துவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பாருங்கள். நான், சாரங், மற்றும் ஏனையோர் இட்டுள்ள மறுமொழிகளையும் போய்ப் பாருங்கள். மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் நாங்கள் தமிழையும் ஸ்ரீவைஷ்ணவத்தையும் புறக்கணிப்பதாகக் கழகம் மூட்டுகிறீர்கள்.

  54. எல்லா இடங்களிலும் “சிரீதரன்” என்று தான் உள்ளது. ஓரிடத்திலாவது “சிரிதரன்” என்று இருக்கிறதா என்று அனைவரும் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும்.//

    True. Ur spelling s correct. I have mistakenly written a wrong spelling. But the spelling does not matter as it is irrelevent to my point. My point is தமிழ் உச்சரிப்புக்கு உட்படுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில்வந்தால் பிரச்சினையில்லை. சிரீத‌ர‌ன் என்றே இருக்க‌ட்டும். த‌மிழ‌ர்க‌ள் உச்ச‌ரிப்பார்க‌ள். க‌வ‌லையை விடுங்க‌ள். முடிந்த‌து. ஆழ்வார்க‌ள் எதையும் திணிக்க‌வில்லை. த‌மிழ் த‌மிழ‌ர்க‌ளை ம‌ன‌தில் இறுத்திவைத்தே அவ‌ர்க‌ள் திருமால் வ‌ண‌க்க‌ம் அமைந்த‌து. போதுமா ?

    உங்க‌ளுக்கு ஆசை என்றால், அவ‌ர்க‌ள் வ‌ட‌மொழிக்காக‌த்தான் வாழ்ந்தார்க‌ள்; த‌மிழ‌ர்க‌ளையும் அப்ப‌டி வாழ‌ச்சொன்னார்கள் என்று சொல்லிக்கொள்ளுங்க‌ளேன்.

    நான் சொல்கிறேன். ஆழ்வார்க‌ள் அனைவ‌ரும் உத்த்ர‌பிர‌தேச‌த்தில் ஆச்சார‌மான‌ காசிப்ப‌ண்டித‌ர்க‌ள் குடும்ப‌ங்க‌ளில் பிறந்த‌‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் தாய்மொழி ச‌ம‌சுகிருத‌ம். ஆச்சார இந்தும‌த‌த்தை த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ப‌ர‌ப்ப‌வே அவ‌ர்க‌ள் த‌மிழ்நாடு வந்தார்க‌ள். இதை நான் நாலாயிர‌த்திவ்ய பிரபந்தத‌த்தில் அவ‌ர்க‌ள் எழுதிய‌லிருந்து க‌ண்டுபிடித்தேன்.

  55. சுதந்திர பாரதத்தின் சரித்திரத்தில் இன்று வரை அரசின் கைக்குப் போன பல விஷயங்கள் உருப்படாமல் போயிருக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் முதற்கொண்டு BSNL வரை, பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை. கோவில் நிர்வாகம் இதற்கு விதிவிலக்கல்ல. பத்மநாப ஸ்வாமி கோவில் நகைகளை ஏழைகளுக்குச் செலவிடலாம என்று திருவாய் மலர்ந்தருளும் பலர் சொந்த சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு மாற்றி விட்டு நில உச்சவரம்பு என்று சட்டம் பேசிய சிகாமணிகளே. உம்மன் சாண்டி கைப்பற்ற வரவில்லை என்று தம்பட்டம் அடிப்போர் சபரிமலை கோவிலின் நிர்வாகத்தை எண்ணிப்பார்க்கட்டுமே. திட்டமிடலில் தொடங்கி வருமானத்தை நிர்வகிப்பது வரை அரசு நிர்வாகத்தில் அங்கே எத்தனை குளறுபடிகள்? கோவில்களை ஏடிஎம் மெஷின்களாகவே பார்த்துப் பழகிய அவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் கொள்ளை அடிப்பர். அரசியல்வாதிகள், அதுவும் இறை நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு ஓட்டுக்காக எதுவும் செய்யும் பச்சோந்திகள் நிர்வாகத்தில் கோவிலை விடுவது என்பது கயவனை நம்பும் முட்டாள்தனம். கொத்துக் கொத்தாக ஓட்டு விழுகிறது என்பதால் கிறிஸ்தவ, முஸ்லீம் மத விஷயங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதில்லை. அது இல்லாததால் இந்துக்கள் விஷயத்தில் வாயில் வருவதெல்லாம் வார்த்தை என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். ஓட்டாலடித்த பிண்டங்களை நம்பி பரமனின் கோவிலை விட முடியாது.

    நிற்க. மீன் கிட்டாவிடினும் பரவாயில்லை குட்டை குழம்பினாலே போதும் என்று குச்சியோடு அலையும் ஜோ அமலன் போன்றோரை கண்டு கொள்ளாதிருப்பது நேரவிரயத்தைத் தவிர்க்க உதவும்…

  56. ஜோ அமலன்

    ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றத்தான் பிறந்தார்கள் என்றால் – நீர் கூறுவது போல சிவ வாக்கியராக இருந்தவர் எதற்கு திருமழிசை ஆழ்வாராக மாற வேண்டும் . சிவ வாக்கிராகவே இருந்து கொண்டு தமிழ் தொண்டு புரிந்து இருக்கலாமே. அடடா என்ன ஒரு லாஜிக் காப்பு.

    ஆழ்வார்கள் தமிழ் தொன்டார்ற பிறந்தார்கள்.தமிழ் தாத்தா அவர்கள் பாசுரம் எழுத பிறந்தார்

    அப்புறம் உங்கள் லிஸ்டில் – கருணாநிதி பகவத் பக்தியை பரப்ப பிறந்தார். சோனியா தேச தொன்டார்ற பிறந்தவள்

    உமக்கு மறுமொழி இடுவது வெட்டி வேலை என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் சும்மா நீர் எவ்வளவு தூரம் தான் போகிறீர் எவ்வளவு தான் உளறுகிறீர் என்று பார்க்கலாம் என்ற ஒரு ஆசை தான்.

    ஆழ்வார்கள் தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகம் செய்து பாசுரங்களை அமைக்க வில்லை –

    கமலப்பூ நாறுமோ அதென்ன கமலப்பூ தாமரைப்பூ என்று சொன்னால் ஆகாதா.

    அது சரி படைபோர்க்கு முழங்கும் பாஞ்ச சந்யமா பாஞ்ச ஜன்யமா? ஹி ஹி 🙂

    இதென்ன அண்டக் குலத்திற்கு – உலக வழியினருக்கு என்று ஏன் இல்லை

    அதென்ன அதிபதி ஆகி 🙂 உடையோனாகி என்றல்லவா இருக்க வேண்டும்

    ஆழ்வார்வாகள் பரம + ஆத்மா என்பதை தான் பெரும் + ஆள் = பெருமாள் என்றார்கள் எதற்காக

    ஆழ்வார்கள் காலத்திருக்கு முன்பே இருடிகேசன், பெருமாள், சிரீதரன், அரி இலக்குமி, மலரால், சோதி, விட்டுசித்தன் போன்ற வார்த்தைகள் தமிழில் புழக்கத்தில் இருந்தன அவ்வளவே.

    தமிழாக்கப் படாத வார்த்தைகளை பாஞ்ச ஜன்யம் அப்படியே தான் உபயோகம் செய்துள்ளனர்.

    ஆழ்வார்களின் focus பக்தி – சக்கையை விட்டு விட்டு சாரை பிடிப்பதேனோ = அது சரி நமக்கு எது பிட்க்கிமோ எதை பேசினால் எல்லாரையும் குழப்பலாமோ அதை தானே நாம் செய்வோம். நாம் அறிவாளி என்று காண்பித்தே ஆகா வேண்டும் என்ற இருவது வருட ஆர்வ கோளாறு.

  57. Jo Amalan

    again you are demonstrating your immense knowledge. 🙂

    it is based on what the goal is, the custodian needs to be decided and not otherwise. It is like making gajini custodian of indological book house 🙂

    if the goal is clear – then based on the goal a custodian needs to be decided.

    If you choose maulana as the custodian and then later tell him this money needs to be spent for hindu cause then …. he he

    கொரங்கு கைல பூ மாலய தரலாமா

    எல்லோருக்கும் வைணவம் சொல்லி கொடுத்தால் வந்த கொடுமையை தான் அனுபவித்து கொண்டிருக்கிறோம் போதாதா – ஒரு ஜோசப் உருவாகலாம் அனால் ஆயிரம் ஆயிரம் ஸ்ருங்களக் குட்டிகள் கூடவே உருவாவதால் அதை செய்வது சரி இல்லை என்பதே என் அபிப்ராயம். இவைகள் ப்லாகுகளில் தலை அறு என்பதை தலையை அறு என்று என்பது போல எழ்துவார்கள் – இதுக்கும் இஸ்லாத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் என்ன வித்யாசம் என்று வேறு கேட்பார்கள்.

    இதெல்லாம் தேவையா – லட்சியம் ஒன்றை சரியாக உருவாக்காததால் வந்த வினை இது – அந்த லட்சியத்திர்க்கேற்ப ஒருவரை பணியில் அமர்தாதால் என்ன என்ன பிரச்சனையை பாருங்கள்

  58. jo amalan

    ////(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..//

    இது சரியல்ல. பாமர மககளோடு மன்னர் பரம்பரை இணைந்து பாமரக்குடிகளாகி விட்டாலும், அவர்கள் பத்மநாப சுவாமியின் பக்தர்களே. அல்லது தாசர்கள் என்பது மாறவில்லை. திருட்டுப்போனாலும் கவலைப்படமாட்டேன் என்பது பக்தனின் பேச்சன்று
    //

    அவர் பாக்தரோ இல்லையோ நீங்கள் தெளிவாக வில்லை.

    திருடு போனாலும் நான் கவலை பட மாட்டேன் என்று தான் உண்மையான பக்தன் சொல்வான் – அவர் சொன்ன அடுத்த வார்த்தை அவன் பார்த்து கொள்வான் – நான் தான் காப்பாளன் என்று நினைப்பவன் பக்தன் அல்ல. என் கையில் ஒன்றும் இல்லை என்று நினைப்பவனே பக்தன்.

    என்ன அழகில் பிரபந்தம் படித்தீர் ?

  59. ஜோ அமலன்
    //
    ஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.
    //
    இதெல்லாம் பேத்தல் – ஆழ்வார்கள் அவர்களை ஆண்டவனுக்காக பாடினார்கள். இது என்ன வைரமுத்து சினிமா பாட்டா

    ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழில் எழுதினார்கள் (ஏழாம் வேற்றுமை உருபு) இறைவனுக்காக எழுதினார்கள் (நான்காம் வேற்றுமை உருபு )

    உடனே திருப்பலாண்டிளிருந்தும் திருமாளையிளிருந்தும் மக்களை நோக்கி பாடுவது போலுள்ள சில பாசுரங்களை அடுக்க வேண்டாம்

    ஆழ்வார்கள் பாடியதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு. ஆழ்வார்கள் பாமர மக்களுக்காக பாடினார் என்பது வேறு

    einstein E = MC2 என்பதை நாம் படிப்பதற்காக கண்டுபிடிக்கவில்லை. அது கண்டுபிடிக்க பட வேண்டியது அதானால் கண்டு பிடித்தார்.

    நீங்க ஏன் இப்படி லாஜிக் ஓட்டயோடவே எழுதிறீங்க.

  60. //அவர் பக்தரோ இல்லையோ நீங்கள் தெளிவாக வில்லை. திருடு போனாலும் நான் கவலை பட மாட்டேன் என்று தான் உண்மையான பக்தன் சொல்வான் – அவர் சொன்ன அடுத்த வார்த்தை அவன் பார்த்து கொள்வான் – நான் தான் காப்பாளன் என்று நினைப்பவன் பக்தன் அல்ல. என் கையில் ஒன்றும் இல்லை என்று நினைப்பவனே பக்தன்.//

    ரொம்ப ஆச்சரியமான விளக்கம். நாளை கோயிலுள் கொலை நடந்தாலும் நான் கவலைப்படமாட்டேன் என்றால், அவன் தான் உண்மையான பக்தன் என்று சொன்னாலும் சொல்வார் சாரங்க்.

    கோயிலுள் கொலைகள் நடந்துள்ளன. நான் ஏற்கனவே இங்கெழுதிய கள்ளபிரான் கோயிலில் (ஆழ்வார் திருநகரி மகர நெடுங்குழை காதர்) 70 களில் ஒரு பயங்கர கொலை நடந்தது. இரவு 8 மணியளவில் ஒரு திருடன் வந்தான். சாதாரண நாள். ஆருமில்லை. பூஜாரி அவனுக்காக தீபம் ஏற்றி தட்டைக்கொண்டுவரும்போது, ஒரே போடு. பூஜாரி ரத்தவெள்ளத்தில் பிணமானார். காதரின் நகைகளணைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். மறுநாள மாலையில் அவன் பிடிபட்டான்.

    அதன்பிறகு தமிழக அரசு நவதிருப்பதிகள் மாலை 6 மணிக்குமேல் திறந்துவைக்கக்கூடாதென்று கட்டளையிட்டுவிட்டது. போனால் பகலில் போகவும். ஓகே.

    இக்கொலை நெல்லைமாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தை ஒரேயடியாகத் தூக்கிபோட்டு கலங்க வைத்தது. ஊர் மக்களெல்லாம் அரற்றினார்கள். பக்தர்கள் அல்லவா? இவர்கள் சாரங்க் சொன்னபக்தர்கள் என்றால் நமக்கென்ன ? என்று இருந்திருப்பார்கள்.

    ஆனால் நம் மார்த்தாண்ட வர்மா கலங்க மாட்டார். அவரும் பக்தரல்லவா ? சார்ங்க் ரொம்ப பிரதமாக சிந்திக்கிறீர்கள். கிரியேடிவிடி வழிந்தோடுகிறது.

    ‘பெருமாள் பாத்துப்பார்’ என்று கோயிலை நடாத்துபவர் நினைத்துக்கொண்டிருந்தால், எல்லாமே பறிபோகும். இந்த ராஜாவின் கையில்தான் இன்றுவரை கோயில் இருக்கிறது. அரசு எடுத்துக்கொள்ளவைல்லை.

    இன்று நாளிதழ்கள் வாசித்தீர்களா சாரங்க்?

    தேவபிரசனம் நடக்கவிருக்கிறது. ஏன்? சுந்தரராஜன் மரணத்திற்குப்பின் பத்மநாப சுவாமி கோபமடைந்திருக்கிறாராம். மேலும் கோயிலுள் நடந்த, நடைபெற்றுவரும் நிகழ்வுகள் சுவாமியின் கோபத்திற்குக் காரணமாம். கோயில் முழுவதுமே போலீசு; பக்தர்கள் வேடத்தில் கண்காணிப்பு. கோயில் என்ற நினைப்பே வரமுடியாதபடி.

    ராஜா இதனால் கோயில் சடங்குகள் கமிட்டியோ கலந்தாலோசித்தாராம். அதன்படி தேவப்பிரசனம் செய்ய்வேண்டுமென்பது முடிவானது.

    இங்கே தேவப்பிரசனம் என்றதைப்பற்றி நாம் பேசவில்லை. ராஜாவின் செயலே. கோயில் நகைத் திருட்டுபோய் விட்டால் நான் கவலைப்பட மாட்டேன் எனச் சிரித்துக்கொண்டே திமிராகப்பேசிய இவர், ஏன் பத்மநாப சுவாமிக்குக் கோபம் வந்துவிடும் எனக் கவலை கொள்கிறார்?

    திருடன் வந்து இலகுவாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவானா ? பூஜார்களைக்கொல்வான். துப்பாக்கியால் சுடுவான். அவன் ஒருவனல்ல, கூட்டமாக வருவான். அதெல்லாம் நடத்தித்தான் 1 லட்சம் கோடி நகைககளித் திருட முடியும். மேலும் போலிசு குமிப்பு இருக்கிறது. போலிசுக்கும் இவர்களுக்கும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடக்கும்.

    என்னவோ இரவில் வந்து நைசாகத் திருடி இரவிலே ஓடிவிடுவான் என்றல்லவா இவர் பேசுகிறார் !

    பக்தனாம். வெறுங்கையாம். இவர் பக்தர் மட்டுமே என்று சாரங்குக்கு ஆர் சொன்னது ? இவர்கள் பரம்பரை தர்மகர்த்தாக்கள். பாதுகாவலர்கள். மட்டுமா ? இவர்கள் ஆட்சி செய்ய பத்மநாபசுவாமிதான் உதவ வேண்டுமென்று பத்மநாபசுவாமியுன் தாசர்கள் என பிரகடனப்படுத்திக்கொண்டு, தாம் எந்த அரசு முடிவெடுத்தாலும் அதை சுவாமிதான் எடுத்தார் என்று மக்களிடம் சொல்லி தங்கள் கைகளைக் கழுவிக்கொண்டவர்கள்

    இவர்கள் பக்தர்கள் மட்டுமா ?

    உண்மையான பக்தர்கள் எதற்கெல்லாம் கலங்குவார்கள் என்று விளக்க பல புராணக்கதைகள் உண்டு. பெரிய புராணம் படிக்கவும்

    His statement that he wont bother if anything happened to the treasure is arrogance, more so, when he made it laughing !

    If he is not interested, then why does he still interfere with the procedures of the temple ? Why does he still run the temple with his own Committee? Why not he completely abdicate his responsibility?

  61. //if the goal is clear – then based on the goal a custodian needs to be decided.//

    I say, decide the custodian. The raja does not want to be. Kerala Hindus do not want any other Hindu to stake claim or to b part of the custodian group.

    Then, the custodian(s) shd come from among the Kerala Hindus.

    There s no HR RE Minister in Kerala. Even a minister is alloted such a portfolia, it is for overseeing law and order problems or some complains from the general public only, not to run the temple day to day, or owning the treasure.

    So, the state is out.

    Tell me who will b the custodian (s).

    I said, the qn will open a Pandora’s box of confusions. Because there s no solidarity or no single group among them.

    Instead of addressing the core qn I have repeatedly written, u r trying to evade it.

    Cd anyone else come forward to resolve the qn: Who will take care of the treasure and how?

  62. //
    அது சரி படைபோர்க்கு முழங்கும் பாஞ்ச சந்யமா பாஞ்ச ஜன்யமா? ஹி ஹி
    //

    இந்த பிரஷ்ணம் பான்ச சன்யமா இல்லை பாஞ்ச சன்யமா என்று இருந்திருக்க வேண்டும்

  63. ஜோ அமலன்
    //
    ஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.
    //
    இதெல்லாம் பேத்தல் – ஆழ்வார்கள் அவர்களை ஆண்டவனுக்காக பாடினார்கள். இது என்ன வைரமுத்து சினிமா பாட்டா
    ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழில் எழுதினார்கள் (ஏழாம் வேற்றுமை உருபு) இறைவனுக்காக எழுதினார்கள் (நான்காம் வேற்றுமை உருபு )
    உடனே திருப்பலாண்டிளிருந்தும் திருமாளையிளிருந்தும் மக்களை நோக்கி பாடுவது போலுள்ள சில பாசுரங்களை அடுக்க வேண்டாம்
    ஆழ்வார்கள் பாடியதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு. ஆழ்வார்கள் பாமர மக்களுக்காக பாடினார் என்பது வேறு
    einstein E = MC2 என்பதை நாம் படிப்பதற்காக கண்டுபிடிக்கவில்லை. அது கண்டுபிடிக்க பட வேண்டியது அதானால் கண்டு பிடித்தார்.
    நீங்க ஏன் இப்படி லாஜிக் ஓட்டயோடவே எழுதிறீங்க.

    SARANG

    லாஜிக் பார்த்து மதமில்லை. லாஜிக்கும் அப்பாற்பட்டதே மதம்.

    ஆழ்வார்கள் திருமால் வணக்கத்தை மக்களிடம் – பாமர மக்களிடம் எடுத்துச் செல்லவே எழுதினார்கள். தமிழ்மக்களிடையே திருமால் வணக்கம் முழுக்கமுழுக்கப் பரவ வேண்டுமென்பதே அவர்கள் ஆசை.

    அவர்கள் ஓரிடத்தில் இல்லை. தமிழ்நாடு முழுக்க நடந்தார்கள். நம்மாழ்வார் கேரளா திருவல்லா வரைக்கும் போய் மலைநாட்டுத் திவ்ய தேசங்களைப்பாடினார். ஆண்டாள் கூட கள்ளழகர் கோயிலுக்கும் திருவரங்கத்தும் தன் தகப்பனாரோடு சென்றார். திருமங்கையாழ்வார் வெறும் சாமியாராக மட்டுமில்லாமல், ஜீயராக திருவரங்க மடத்துக்குத் தலைமை தாங்கி, அக்கோயிலை பவுத்தர்கள் தாக்குதலிருந்து பெருமதில்களையெழுப்பிக் காப்பாற்றினார்.

    அவர் சமகாலத்தவரான விப்ரநாராயணன் என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் வெறும்பக்தனாக தான் மட்டும் உய்ய பாசுரங்கள் எழுதவில்லை. நினைக்கவுமில்லை. அவர் சமூகத்தில் ஜாதிவேறுபாட்டால் தலித்துகள் படும் வேதனையை உணர்ந்தவர்.

    “பழுது இலா ஒழுகல் ஆற்றுப் பல சதுர்பேதிமார்கள் !
    இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்
    தொழுமின் நீர், கொடுமின், கொண்மின், என்று நின்னோடும் ஒக்க‌
    வழிபட அருளினாய் போல், மதில் திருவரங்கத்தானே !

    அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
    தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
    நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
    அவர்கள்தாம் புலையர் போலும், அரங்க மா நகருளானே !

    ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்ளேலும்
    போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே.

    (Some scholars cite the above pasurams to prove that Thondarippodi was a contemporary with Thiruppaanar and he is here referring to the famous incident of insult to Thiruppaanar. The incident sent Thonadarippodi, a Brahmin by birth, to write extremely! He is addressing these paasurams to Brahmins of Srirangam.)

    இதே போல நம்மாழ்வாரும் ‘நான் பார்ப்பது ஒன்றேயொன்று எவரிடமும். அவர்கள் திருமால் வணக்கம் செய்பவரா என்று மட்டுமே. அப்படிச்செய்பவர் தலித்தாக இருந்தால் அன்னாருக்கு நான் 7 பிறவிகளிலும் அடிமை என்று உரக்கச்சொல்லிக்கொள்கிறேன்”

    ஆழ்வார்கள் யோகிகளாக சமண பவுத்தர்களைப்போல மலைக்குகைகளில் ஒழித்துக்கொள்ளவில்லை. மக்களின் வேதனைகளைப்பகிர்ந்து, அவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடின்றி திருமால் வணக்கம் செய்யவேண்டுமென எதிர்பார்த்தவர்கள். திருமழிசையாழ்வார் தலித்தாக இருந்தாலும் மயிலாப்பூர் அந்தணக்குடியில் பிறந்த பேயாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டார். திருப்பாணாழ்வார் ஜாதித்துவேசம் பண்ணப்பட்டாலும் அத்துவேசம் செய்தவர்களுக்கு தன் தவறையுணரும்படி செய்யப்பட்டு அவர் ஆழ்வாராக்கப்பட்டார். (References to castes is prohibited in Shrivaishnavism; We do here, coz v r not writing here as members of that sect)

    பெரியாழ்வார் வெறும்பக்தராக பாடிக்கொண்டிருக்கவில்லை. திருவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு நடந்து சென்று திருமாலில் பரத்துவத்தைப் பாண்டியனின் அரண்மனையில் பிறசமய் வாதிகளோடு வாதிட்டு நிலைநாட்டினார். இவருக்கு ஏன் அந்த வம்பு? திருமங்கையாழ்வார் பவுத்தர்களோடு போரிட்டார். இவருக்கு ஏன் அந்த வம்பு ? திருமழிசையாழ்வார் பல்லவனோடு பொருதிட்டார். பல்லவனுக்கு இவருக்கும் நடந்த மோதல் அலாதியானது. இவருக்கு ஏன் அந்த வம்பு ?

    மதுரகவி மதுரைத்தமிழ்ச்சங்கத்திற்குச் சென்று ‘நம்மாழ்வாரை இழிவுபடித்தியவர் ஆரின்கே? என்று வெகுண்டெழுந்தார். இவருக்கு ஏன் அந்த வம்பு ? திருமழிசையாழ்வார், “நீர் தலித்து, நீர் காவியுடை போட்டால் மட்டும் நாங்கள் மதித்துவிட மாட்டோம். உமக்கு வேள்விசெய்ய மாட்டோம்” எனச் சொல்லி அவமானப்படுத்திய வேள்விப்பார்ப்பனர்களோடு போராடி வெற்றிபெற்றார். இவருக்கு ஏன் அந்த வம்பு ?

    இப்படி அனைவரைப் பற்றியும் (ஆண்டாளைத்தவிர) எழுதலாம். ஏதோ தாம் உய்ய அறையைப்பூட்டிக்கொண்டு யோகாவில் அமர்ந்து இறைவனைத்தேடினார்கள் இவர்கள் என்பது திரிபே.

    ஆச்சாரியர்கள் ஆழ்வார்களின் உள்ளக்கிடக்கையை உணர்ந்தார்கள். மக்களுக்காகவே மதம் எதையும் அவர்களிடமிருந்து மறைக்கக்கூடாது. திருமாலைப்பற்றி அனைவருக்கும் சொல்லி வாழ்வதே நம் கடப்பணி என்று இராமானுஜர் உணர்ந்தானாலேயே கூரைமீதேறிய ஊர்மக்களைக் கூவியழைத்து, மறைபொருளைத் திறந்த பொருளாக்கினார் and antognisd the orthodox brahmins and his own guru Thirukkoottiyur nambi.

    திருவாய்மொழியை ‘திராவிட வேதம்’ எனவும் திருவாய்மொழி நான்கு வேதங்களில் சாரம், திருமங்கையாழ்வார் எழுதிவை ஆரங்கங்களுக்கு நிகரானவை என இராமானுஜர் ஒரு உள்ளோக்கம் வைத்தே சொன்னார். அஃதாவது, தமிழ் வழியினர் ரொம்ப தமிழர்களில். அன்னாருக்கு வடமொழி வேதங்கள் அருகில் வரமுடியா. அன்னார் பேதப்படக்கூடாது, பார்ப்பனர்களுக்கே இம்மதம் என போய்விடக்கூடாது என்பதே உள்ளோக்கமாகும் என நான் கருதுகிறேன் எனவே வைணவர்களுக்கு பிரபந்தம் ஓதுதல் கட்டாயப்படுத்தினார். தொண்டரைபொடியாழ்வாரின் கனவை அல்லது கட்டளையை திருநாராயணபுரத்தில் (மைசூருக்குப்பக்கம்) நிறைவேற்றினார். தலித்துகள் உடன் நாமும் கோயிலுக்கு வரவதா என்று கேட்ட வைதீகரிடம், ‘அவாளுக்கு ரண்டு நாள் ஒதுக்கியிருக்கிறேன். நீங்கோ மத்த நாள் வாங்க. ஆச்சாரம் கெடாது. எவருக்கு அவாகூட நின்னு சாமி கும்பிடனும்னொ தோணுதோ அவா வரலாம்” என்றார். Some accepted the offer who r today.

    எனவே ஆழ்வார்களும் ஆச்சாரியர்கள் மக்களிடமிருந்து விலகிக்கொண்டு தம் உயர்வுக்கு வழிதேடவில்லை.

    தேடியிருந்தால் சாரங் கரெக்ட். நான் பேத்தல்.

  64. ஆழ்வார்களின் focus பக்தி – சக்கையை விட்டு விட்டு சாரை பிடிப்பதேனோ = அது சரி நமக்கு எது பிட்க்கிமோ எதை பேசினால் எல்லாரையும் குழப்பலாமோ அதை தானே நாம் செய்வோம். நாம் அறிவாளி என்று காண்பித்தே ஆகா வேண்டும் என்ற இருவது வருட ஆர்வ கோளாறு.

    Sarang

    Wrong in my view.

    How to take the bakthi is also their concern. They did not write to show off their poetic powers or knowledge of impeccable Tamil. If u had emphasised this point out, ut wd have been a real Hindu who has the passion to bring the religion to all. U hav failed to do that. Instead u r harping on other things which r dearer to ur heart namely, Sanskritisation and ur pet theme that it was loved and welcomed by all. The Azhwaars focused on bhakti. U say. But Bhakti cant be focused. Focus implies a conscious activity with a purpose.Bhakitt is a spontaneous act from the heart of hearts.
    The tremendous success of the Saivite Triumvirate and also, of the fourth in the galaxy Saint Manickavaasagar, owes only to Tamil . They also employed Sanskrit words liberally, but it was Tamil which helped them reach the masses fast and deeper. If the Famous Four had imitated the Jains and their manipravalam filled with direct Sanskrit words, w/o caring to Tamilise, Siva worship wd not have been rooted in TN. The Achaariyaars who wrote padis, imitated that; hence, their reach was limited. The hindu.com writer Jadaya is aggrieved with the vainava paripasai used by the padis and feels it hampered the reach of Vainavaism. The essay is available in this blog. U can read it.

    Azhwaars rejected the pulavar Tamil. They chose only that Tamil which could reach the common masses. They cd have filled their passurams with arcane Sanskrit words directly as one person s putting his comments here easily. But they dont. They tamilized them and used. Thus, they wanted to avoid such barriers between them and the people. They built a modus Vivendi.
    U hav cited many words mockingly with the sole objective of pidgeon-holing the Aazhwaars as Sanskirt lovers.
    They r not lovers of the lang; but they accepted the Vaideega Indhu matham so far as it related to Thirumaaal and superimposed the same on to the indigenous worship of Thirumaal, which, as all of us know, came from sangam and beyond. Paripaadal sings Thirumaal and Tolkaappiyar names Thirumaal as the presiding deity of forest dwelling Tamils. மாயோன் மேவ காடுறை உலகமும் Remember Tolkappiyar confesses that he has written what had already happened and had come down to his generation, Therefore, I have said ‘beyond sangam’. Nammaazhwaar addresses Kallalagar as Mayoon, the same word Tolkaappiyar used. It s not Sanskrit

    கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னர்
    வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
    வளர் இனம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
    தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே

    Remember Kallalagar malai is a forest area; and the God is the deity of the forest dwellers, a fact acknowledged humbly by Periyaazhwaar, Aandaal, Thirumangai aazhwaar and Nammaazhvaar:

    Let us resist from the attempt of taking Aazhwaars to agraharams and hand over the ownership to the residents there on a platter – an attempt resisted by Achaariyaars. Azhwaars belong to the Tamil masses across population – no caste, no creed, no money power and no skin color.

    If v hav this nature of accommodation in our minds, v will not rummage the paasurams to cull out words to prove where they used Sanskirt to the delight of Sanskrit lobby.

    The words u have cited, I reiterate, are Tamilised Sanskrit words Meaning, whether they can be pronounced easily by masses who don’t know Sanskrit s the only objective.
    Remember, Nammaazhvaar was famous only among Non Brahmin masses before he was discovered by Natha munikal more than a century after. Such masses wd not have gone to him had he had the pretensions of – which most of u have – of Sanskritisation. Nammaazhvaar was unknown to Sanskrit loving brahmins.

    “உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”

    சோறு, வெத்திலை தின்னு என்பதெல்லாம் தமிழில் கூட நாகரிகமானதல்ல. அஃதாவது மேட்டுக்குடியினர் விரும்பா அல்லது பிரயோக்கிக்காத் தமிழ். வெறும் தூத்துக்குடி தமிழ். ஆனால் நம்மாழ்வார் இப்படித்தான் எழுதினார். தமிழில் கூட இப்படியென்றால் இவரை விட மக்களை விரும்பியவர் உணர்ந்தவர் ஆர் ?

    Sanskritisation will alienate people. Only you and your caste people will feel BELONGED to the religion if it uses more and more Sanskrit and relegates Tamil. Some other Tamils too will but they r like the Tamil rural audience going to watch a Hollywood movie and don’t know or cd nt know what the characters speak in the movie.

    Azhwaars hav known all these drawbacks; which, alas! persons like u, still don’t. Staggering to think they lived more than a half a millennium ago with such progressive thinking; and u live now with such regressive thinking.

    நம்மாழ்வார் அடைந்த விரக்தியோடு நாமும் முடிப்போம்:

    நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க,
    எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை ?

  65. \\\\\\\\\\The Bible and the Koran in Tamil r easily available in open market. Their preachers speak in Tamil everywhere.\\\\\\\\\

    ஸ்ரீ அமலன் அப்படித்தெரியவில்லையே?

    என் காதில் விழுந்த ப்ரசங்கங்கள் மற்றும் பாடல்களிலிருந்து :- (உபயம் பொதிகை தொல்லைக்காட்சி)

    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (என்ன விதேசி மிஷ நரி மொழி என்பது சர்வேஸ்வரனுக்கே வெளிச்சம்)

    பூரண சுவிசேஷ வேதாகம கல்லூரி (ஹிந்துக்களுக்கு வேதம் ஆகமம் சரி. மிஷ நரிகளுக்கு வேதம் எது ஆகமம் எது)

    ஏசு நாமமே ஜெயம் ஜெயமே (ஏன் ஏசுவின் பெயருக்கு வெற்றி என்றால் அவர் சுவனத்திலிருந்து கீழே விழுந்து விடுவாரோ?)

    மிஷ நரிகள் ஸ்ரீராம சந்த்ரனுக்கு ஜெயமங்களம் என்ற தமிழ்ப் பாடல் மெட்டைத் திருடி அமைத்த பாடல் கீழே தரப்பட்டுள்ளது :-

    சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம்
    ஆதி திரியேகநாதனுக்கு சுபமங்களம்
    பாரேரு நீதனுக்கு பரமபொற்பாதனுக்கு
    நேரேரு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

    பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
    பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
    காரோன் அனுகூலனுக்கு கன்னிமரி சேயனுக்கு
    கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு

    தெருத்தெருவாக ஹிந்துக்களைப் பாவிகளே என்று கூவிக்கூவி க்றைஸ்தவ பல்பசை வ்யாபாரிகள் ஏசுவின் நாமத்தை கனம் பண்ண விழைவதில் ப்ரயோகமாகும் பாஷைக்கு மேலே உதாரணங்கள். பூத கண்ணாடி பைசாச கண்ணாடி சாத்தான் கண்ணாடி என்று ஏதாவதொரு கண்ணாடி கொண்டு தமிழைத் தேடித் துளாவலாம்.

  66. சாரங்

    ///ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றத்தான் பிறந்தார்கள் என்றால் – நீர் கூறுவது போல சிவ வாக்கியராக இருந்தவர் எதற்கு திருமழிசை ஆழ்வாராக மாற வேண்டும் . சிவ வாக்கிராகவே இருந்து கொண்டு தமிழ் தொண்டு புரிந்து இருக்கலாமே. அடடா என்ன ஒரு லாஜிக் காப்பு. ///

    ஜோ அமலன் அப்படி எங்கே சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்ல முடியுமா?

  67. ஜோ அமலன் சொல்வதில் உண்மை உள்ளது. ஹிந்து மதம் மக்களிடமிருந்து விலகி நிற்காமலிருக்க ஒருமொழிச் சார்பு என்பது தவிர்க்கப் படவேண்டும். சமஸ்கிருதம் தரும் வேத, புராண, இதிகாச நூல்களின் நற்கருத்துக்களை ஏற்கும் அதே வேளையில் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ஆன்ம/ மனதளவில் நெருக்கமான அவரது தாய் மொழியில் அவரை அணுகுதலே அவருக்கும் ஹிந்து மதத்திற்கும் உள்ள பந்தத்தைப் பலப் படுத்தும்.

    ஜோ அமலனின் கீழ் வரும் கருத்து நமது மதத்திற்கு நன்மை பயக்க வல்லது.

    ///Sanskritisation will alienate people. Only you and your caste people will feel BELONGED to the religion if it uses more and more Sanskrit and relegates Tamil. Some other Tamils too will but they r like the Tamil rural audience going to watch a Hollywood movie and don’t know or cd nt know what the characters speak in the movie.

    Azhwaars hav known all these drawbacks; which, alas! persons like u, still don’t. Staggering to think they lived more than a half a millennium ago with such progressive thinking; and u live now with such regressive thinking. ///

    இதுபோலவே “ஆழ்வார்களும் ‘ஸ்ரீ’ என்ற எழுத்துப் பயன்பாட்டை தவிர்த்திருக்கிறார்கள்” என்று ஜோ அமலன் நம் முன் வைத்திருக்கும் கருத்தும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது ஆகும்.

    ஆயினும் கூட ஜோ அமலன் ‘ஸ்ரீ பத்மநாபன் என்று ஜெயமோகன் ஏன் எழுதுவதில்லை’ என்று இங்கே வந்து வினா எழுப்பியதும், பலர் இந்த தளத்தில் வைணவ பக்தி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள் எழுதிவருகின்ற நிலையில், இங்கே வைணவம் குறித்து பக்திபூர்வமான கட்டுரைகள் இல்லை என்று எழுதியதும், இவை போன்ற பிற எழுத்துக்களும் அவரது நோக்கத்தை சந்தேகத்துக்கு உரியதாக்குகின்றன.

  68. க்ருஷ்ணகுமார் சொல்வதுபோல, கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் மதத்தைப் பரப்ப எதைவேண்டுமானாலும் பிடித்துக் கொள்கிறார்கள். அது அவர்களின் தந்திரம், திறமை.

    இப்போது சென்னையில் கிறிஸ்தவ மிஷநரிகள் கிறிஸ்தவ பிராமணர் சங்கம் என்று ஒன்றைத் துவக்கியிருக்கிறார்கள். பிராமணர்கள் இப்போது ஹிந்து மதத்தில் நவீன தீண்டத்தாகாதவர்களாக, திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகளால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்டோர் மத்தியில் அக்கப் பட்டு விட்டதால், வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஏழை பிராமணர்களைக் குறிவைத்துப் பிடிக்கிறார்கள். இதற்கு கிறிஸ்தவ மிஷநரிகள் வேதங்களிலிருந்து மேற்கோள் என்று வேதங்களில் இல்லாததையெல்லாம் சொல்லுகிறார்கள். வேதத்தில் எங்கோ ‘கன்னிபுத்திராய நமஹா ‘ என்று இருக்கிறது என்றும் அது ஏசுவைத்தான் குறிக்கிறது என்றும் வேறு பசப்பல். வேதத்தில் இப்படியெல்லாம் கிடையாது என்பது இன்றைய பிராமணர்களில் பெரும்பான்மையினர் வேதம் படிக்காததால் தெரியாது. இதை தந்திரமாகப் பயன்படுத்த கிறிஸ்தவ மிஷநரிகள் தயார்.

    இத்தனை இருந்தும் நமது மதத்தில் உள்ள பெரியவர்களோ, அறிஞர்களோ எல்லாம் தெரிந்த பிராமணர்களோ இன்னமும் மக்களை முழு அளவில் சென்றடைய சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தயக்கம் காட்டுகின்றனர் . எவரையும் அவரவர் தாய் மொழியின் மூலமாகத்தான் முழுமையாக அணுக முடியும் என்ற அடிப்படை உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.

  69. அஞ்சன் குமார்

    ஜோ அமலன் இதை மலர்மன்னன் அவர்களின் கட்டுரையில் மறுமொழி இட்டுரிக்கிறார்

  70. அச்சச்சோ அமலன்,

    //
    ஆழ்வார்கள் திருமால் வணக்கத்தை மக்களிடம் – பாமர மக்களிடம் எடுத்துச் செல்லவே எழுதினார்கள். தமிழ்மக்களிடையே திருமால் வணக்கம் முழுக்கமுழுக்கப் பரவ வேண்டுமென்பதே அவர்கள் ஆசை.
    //

    உமது பேத்தலை விடுத்து – பாசுரங்களை கூர்ந்து படியுங்கள். ஆழ்வார்கள் மக்களுக்காக (நாலாம் வேற்றுமை உருபு) பாசுரங்கள் எழுதவில்லை. அப்படியெனில் அவர்களுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன வித்யாசம் இருக்க போகிறது.

    பக்தி பெருகியது பாடினார்கள் , தமிழில் பாடினார்கள். ஆழ்வார்கள் கவிகள் அல்லவே தமிழ் வளர்பதற்கு.

    அது தமிழில் இருப்பதால் சௌகர்யமாக இருக்கிறது நமக்கு அவ்வளவே.

    ஆழ்வார் மாலே வந்து என் நாவில் புகுந்து பாடுகிறான் என்கிறார். உண்ணும் சோறு யாரை பற்றி யாருக்காக எழுதியது.

    திருவாய் மொழி கடைசி பத்து கடைசி இருவத்தி இரண்டு பாசுரங்கள் நன்றாக படியுங்கள் அது யாருக்காக எழுதப்பட்டது என்பது விளங்கும் – உங்களுக்கு விளங்காது 🙂

    எம் முன்னோர்கள் உம்மை போல அல்ல புத்திசாலிகள் சமஸ்க்ரிதஹ்தை வேர்த்தவர்கள் இல்லை. எம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் கழக கண்மணிகள் இருந்திருக்க வில்லை. மிச நரிகள் இருந்திருக்கவில்லை, terror காரர்கள் இருந்திருக்கவில்லை. எங்களிடம் பிரிவினை இருந்திருக்கவில்லை. பாரதம் ஒன்றாகவே இருந்தது – அங்கு சமஸ்க்ரிதமே ராஷ்ட்ரிய மொழியாக இருந்தது. அன்று பாமரனும் சமஸ்க்ரிதம் தெரிந்து வைத்திருந்தனர்.

    சமஸ்க்ரிதத்திர்க்கு நல்ல மரியாதை இருந்தது – அது ஏதோ அக்ராகார பாஷை என்பது போல கலவாநித்தளம் எல்லாம் வேண்டாம். சம்ச்சக்ரிதம் வ்யவஹார பாஷ்யாக இருந்தது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை அத்தனையும் பொருக்கி (உதானரனமாக எப்படி ஒரு வண்டிக்காரன் பண்டிதனின் சமஸ்க்ரிதத்தில் தவறு கண்டுபிடிக்கிரான் ) எடுத்து கிருஷ்ணஸ்வாமி என்பவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். வேண்டுமானால் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். எதையாவது கொஞ்சம் அலசி விட்டு எழுதுங்கள். நமது தலை மண்டையில் உதிப்பதெல்லாம் உண்மை அல்ல என்பதாவது தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

    பிரபந்தத்தில் உள்ள சம்ச்க்ரித்த வார்த்தைகளின் பட்டியலை தருகிறேன். இது இப்படி இருப்பதானையே இதை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை – நேரே அப்படி கற்பனை செய்து கொண்டு ஏதேதோ எழுதுகிறீர்.

    அமர அழும்ப துழாவி என் ஆவி அமர தழுவிற்று இனி அகலுமோ – இங்கே எதற்கு அமர அரமன்னு சம்ச்க்ரித்த வார்த்தைகள் ?

    ஆழ்வார்களின் தமிழ் அருஞ்சுவயுடன் இருக்கிறது என்பதற்கு மறுப்பே இல்லை அதற்காக அவர்களை தமிழ் தொண்டாற்றினார்கள் – சமஸ்க்ரிதத்தை வெறுத்தார்கள் என்றெல்லாம் buld up கொடுக்க வேண்டாம்.

    இப்படி கொடுத்து விட்டால் அப்புறம் வசிடியாக இருக்கும் – எதற்கு? ஆறிப்போன ஆரிய திராவிட சண்டை மூட்டத்தான். அப்புறம் ஆழ்வார்கள் அனைவரும் இயேசுவின் சிஷ்யர்கள் அவர்கள் விவில்யத்தியா பார்த்தே பாசுரம் பாடினார்கள் என்று கட்டி விடலாமா அல்லவா ?

  71. ஜோ அமலன்

    //
    Cd anyone else come forward to resolve the qn: Who will take care of the treasure and how?
    .//

    திங்கட்கிழமை கார்த்தால ஏழு மணி – அம்மா சமையல் அறையில் வேக வேகமாக சமையல் செய்து கொண்டிருக்கிறார் – அப்போ அஞ்சு வயசு பையன் சமல் அறைக்கு வந்து அம்மா நான் உனக்கு help பண்ணட்டுமான்னு கேக்கறான். அம்மா சொல்றார் – அடேய் அப்பா நீ சும்மா இரு அதுவே போதும் நான் பாத்துக்கறேன்

    சரியா ஜோ அமலன் சார்

  72. அவரது நோக்கத்தை சந்தேகத்துக்கு உரியதாக்குகின்றன.

    Mr Anjana kr

    நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது.

    அப்படி நோக்கமிருப்பவன் இத்தளத்தில் எழத மாட்டான்.

    இத்தளத்தில் எழுதும் ஒரே நோக்கம் ஆழ்வார்களைப்பற்றிச் சிறிது பேசலாமே என்றுதான்.

  73. சாரங்கிடம் வாதம் புரிவது பயனில்லாச் செயல்.

    இருப்பினும் மற்றவர்களுக்காக:

    தமிழை விரும்பியோர் தன் தாய்மொழியெனப் பெருமைப்பட்டுக்கொண்டோர், இத்தமிழிலேயே பாடுவோம் என்றவர்கள் ஆழ்வார்கள்.

    பூதத்தாழ்வார் தன்னைப் பெருந்தமிழன் என்றுதான் அறிவிக்கிறார்:

    “யானே தவம்செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்;
    யானே தவம் உடையேன்; எம் பெருமான்! – யானே
    இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன் –
    பெருந்தமிழன் நல்லேன், பெரிது”

    இவ்வாறு நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் என்று இவர்கள் தாங்கள் இன்தமிழ் மாலை திருமாலுக்குச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள்.

    எல்லாவற்றையும் இங்கெடுத்து எழுதவியலாது. இராமானுஜரை, தமிழ்த்தலைவன் என்பார்கள். தமிழ்த்தலைவன் சபாக்கள் இன்றும் உண்டு.

    இவர்கள் தமிழர்கள். இவர்கள் தாய்மொழி தமிழ். மேலும், ஆழ்வார்கள் மட்டுமில்லாமல் ஆச்சாரியர்கள் அனைவரும் தொல் தமிழ் இலக்கிய இலக்கியங்களை (சங்கம் போன்று) ஆழ்ந்து கற்றவர்கள். ஆழ்வார்களுள் சிலர் வடமொழியில் தேர்ச்சியுடையவர்கள். தமிழ் மொழித் தேர்ச்சியில்லாமல் திருப்பாவை படைக்கமுடியாது. அது அத்தனயும் தமிழ்த்தேன்.

    தமிழ்சங்கத்தில் “நம்மாழ்வார் பாடல்கள் வெறும்பக்திப்பாடல்கள் மட்டுமே; எனவே ஈண்டு அரக்கேற்றம் செய்யலாகா” என்றவுடன், “இல்லை…அவைகளுக்கு தமிழ்ச்சிறப்புமுண்டு” என்று மதுரகவி சொல்ல, அப்படியானால் அவர் பாடலகளில் ஒன்றைச்சங்கப்பலகையில் வையுமெனச் சொன்னதும் மதுரகவி ஒன்றை வைக்க பலகை நீரில் மூழ்கியது.

    வைத்த பாடல்:

    “கண்ணன் கழல் இணை
    நண்ணும் மனம் உடையீர் !
    எண்ணும் திருநாமம்
    திண்ணம் நாரணமே”

    இது திருவாய்மொழியின் வரலாறு.

    ஆழ்வார்களுக்குத் தமிழ்ச்சேவை என்ற குறி கிடையாது. எனினும் அவர்கள் தமிழை வாழ்த்த நன்றி சொல்லி, தமிழால் மாலை சூடினோம் என்று பெருமை கொண்டார்கள்.

    சாரங்கிடம் ஈகோ கிளாஷ் பண்ண ஆழ்வார்களைப்பயன்படுத்தப்படுவதாக அசிங்கமாக உணர்கிறேன். சாரங்..உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்:

    “ஆழ்வார்கள் வடமொழியைப்போற்றினார்கள். தமிழர்களுக்காக நாங்கள் அவதாரம் செய்யவில்லை என்றார்கள். வடமொழிதெரிந்த பார்ப்பனர்களுக்காகவே நாங்கள் வந்தோம் என்றார்கள். தமிழ் ஒதுக்கப்படவேண்டும். அது நீசபாசை.” இவைதானே நீங்கள் விரும்புவது.

    தமிழ் இந்துமதத்தை விட்டு அகலும்போது, அல்லது அகல வைத்தால், இந்து மதம் தமிழர்களை விட்டு அகலும். இஃது உண்மை. எவரெல்லாம் தமிழை அகல வைக்கமுயல்கிறார்களோ அவரெல்லாம் இம்மதத்தின் துரோகிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்.

  74. //திங்கட்கிழமை கார்த்தால ஏழு மணி – அம்மா சமையல் அறையில் வேக வேகமாக சமையல் செய்து கொண்டிருக்கிறார் – அப்போ அஞ்சு வயசு பையன் சமல் அறைக்கு வந்து அம்மா நான் உனக்கு help பண்ணட்டுமான்னு கேக்கறான். அம்மா சொல்றார் – அடேய் அப்பா நீ சும்மா இரு அதுவே போதும் நான் பாத்துக்கறேன்//

    My point is not understood.

    The legitimate claimants are Hindus, in the refusal of the king to be the claimant. Ok. But the word, ‘the Hindus’ here is vague. Because, wealth found is tangible. And the claimants shd also come in flesh and blood – that is, tangible.

    Mere the word, Hindus here is intangible.

    In order to become tangible, they must come as a group with official legitimacy. Like Registration as incorporate, or a legally formed hierarchical organisation. Is there any such organisation in Kerala ?

    மொட்டையா ஹிந்துக்களுக்கு கொடு என்றால், அவர்கள் ஆர்? முதலில் முன்னாள் நிறுத்து என்றுதானே கேட்பார்கள்?

  75. நாலாயிரத்தில் ஸ்ரீதரன் என்ற நாமம் வரும் இடங்கள் இதோ -Gandharavan

    ஸ்ரீதரன் has been tamilised into சிரீதரன்.

    Azhvaars did not write kirantha ezuthukkal. If quoted, I will accept.

  76. Krishna kr writes:

    மிஷ நரிகள் ஸ்ரீராம சந்த்ரனுக்கு ஜெயமங்களம் என்ற தமிழ்ப் பாடல் மெட்டைத் திருடி அமைத்த பாடல் கீழே தரப்பட்டுள்ளது :-

    Mr Kumar

    I like the strategy and technique of the missionaries, which r still adopted by their indigenous successors.

    It s called inculturation, or acculturation as Dict says.

    Hav explained it in the bio of Roberto D’ Nobili in this forum.

    Missionaries r practical persons like merchants They wd use only that with which people r so familiar in daily life. The missioneries were also aware that the people r originally Hindus; and as such, r so accustomed to Hindu practices and customs, which include Language style also. To tell them to give up all their original legacies s a rude barbaric and also, stupid act, they knew.

    So, they adopted the very words used in Hindu religion. Also, many many Hindu customs also.

    Names to their followers also, as in NE, were given w/o disturbing their Hindu ancestry. Thus, v see today many Tamil Christians having Hindu names. Geetha, Lakshmi, Jegannnathan, Vishwanathan, r hilariously found among Tamil Christians. The girl by name Kavya Vishwanathan who was booked by Police for pilagiarsing another writer’s novel in USA, is a Tamil Christian.

    Whereas here in ur religion, Tamil s opposed by certain elements whom I call traitors to ur religion.

  77. //பலகை நீரில் மூழ்கியது.//

    மூழ்க வேண்டுமா மிதக்க வேண்டுமா என்று எனக்குச் சரியாக நினைவில்லை

  78. ஜோ அமலன்

    //
    இராமானுஜரை, தமிழ்த்தலைவன் என்பார்கள்//

    எசுகூஸ்மீ – தமிழ் தலைவன் என்பது பேயாழ்வாரின் பெயர். ராமானுச நூரந்தாதியில் வந்து விட்டால் அது ராமனுஜரின் பெயரா

    மன்னிய பேர் இருள் மாண்ட பின் ….
    தமிழ் தலைவன் பொன்னடி போற்றும் ….

    பெயாழ்வாரின் பொன்னடி போற்றுபவர் ராமானுசர் என்று அமுதனார் பாடுகிறார்

    அப்புறம் சாரங் புரிந்து கொள்ளவே மாட்டேன்கிறார் என்று சொல்லிவிட்டு – நான் சொன்னதையே சொல்கிறீரே

    //
    பூதத்தாழ்வார் தன்னைப் பெருந்தமிழன் என்றுதான் அறிவிக்கிறார்:

    “யானே தவம்செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்;
    யானே தவம் உடையேன்; எம் பெருமான்! – யானே
    இருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன் –
    பெருந்தமிழன் நல்லேன், பெரிது”

    இவ்வாறு நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் என்று இவர்கள் தாங்கள் இன்தமிழ் மாலை திருமாலுக்குச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள்.
    //

    பார்த்தீர்களா ஆழ்வார்கள் பாமரர்களுக்காக பாடுகிறேன் என்றா சொன்னார்கள் – மாலுக்காக பாடுகிறேன் என்று தானே சொல்கிறார்கள்.

    அவர்கள் தமிழர்கள் அல்ல என்று நான் சொன்னேனா – அவர்களது பாசுரங்கள் தமிழ் இல்லை என்று நான் சொன்னேனா – அது சமஸ்க்ரித்த வார்த்தை கலப்பே இல்லாத தமிழ் இல்லை என்பது தான் சொன்னேன்.

    அவர்களது நோக்கம் தமிழ் வளர்ச்சி இல்லை பக்தி என்று தான் நான் சொன்னேன்

    சரியா – நாம கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலே எல்லாம் சரியாகிடும்

  79. //இராமானுஜரை, தமிழ்த்தலைவன் என்பார்கள்//

    எசுகூஸ்மீ – தமிழ் தலைவன் என்பது பேயாழ்வாரின் பெயர். ராமானுச நூரந்தாதியில் வந்து விட்டால் அது ராமனுஜரின் பெயரா

    மன்னிய பேர் இருள் மாண்ட பின் ….
    தமிழ் தலைவன் பொன்னடி போற்றும்
    /

    Thank u. My mind said ‘check it b4 put in.

    I cdn’t as i am away from home. I thought no one wd care. ஆர் கண்டிபிடிக்கப்போகிறார் எனற் திமிர்தான்.

    Thank u for ur help.

    கடைசியில் என் கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி விட்டார் சாரங். நான் பூதத்தாழ்வாரைச் சொன்னேன். இராமனுஜரைச் சொன்னேன். சாரங் பேயாழ்வாரையும் சேர்த்து உறுப்பினர் எண்ணிக்கையை கூட்டிவிட்டார்.

    என் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  80. //
    என் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    .//

    என்னை கேட்காமலேயே எனக்கு கொடுக்கப்பட்ட பதவியை உடனே நான் ராஜினாமா செய்கிறேன் – என்னால் உங்களைப் போல உளற முடியாது மன்னிக்கவும்

  81. Jo Amalan

    உங்கள் நோக்கத்தில் பிழை இல்லை என்று சொல்கிறீர்கள். எனக்கு முழு நம்பிக்கை வராவிட்டாலும் உங்கள் கூற்றை முழுவதுமாக ஏற்கிறேன். நல்ல நோக்கோடு, ஆழ்வார்களின் தமிழ் அமுதை, பக்திப் பிரவாகத்தை யார் அனுபவித்தாலும் அதைத் தடை செய்ய எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஏன் யாருக்குமே இல்லை.

    ஆனால், நீங்கள் மறு மொழியாக எழுதும்போது கட்டுரையின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறுவதற்கு ஆழ்வார்களை, அவர்களது பக்தி பூர்வமான தமிழ்ப் பாடல்களைப் பயன்படுத்துவது முறையாகாதல்லவா?

    ‘ஆழ்வார்கள் பாசுரங்களை வைத்துப் பிறிதொரு நாளில் ஸ்ரீ பத்மநாப சுவாமியின் பொக்கிஷத்தைக் கையாள்வது குறித்துத் பிறிதொருவர் தம் சொந்தக் கருத்தை நிலை செய்யப் பயன்படுத்துவார்’ என ஆழ்வார்கள் நினைத்திருக்க வாய்ப்பே இல்லையே.

    எனவே இந்தக் காரணத்துக்கு ஆழ்வார்களது பாசுரங்களைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் ஆழ்வார்கள் பற்றிய அறிவை நல்ல தமிழ் இலக்கிய ரசனைக்காக்கவுமோ அல்லது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், திருமால் மீதான பக்திரசம் ததும்பும் கட்டுரைக்காவுமோ பயன்படுத்துதலே முறை ஆகும்.

    ஓர் ஆராய்ச்சியாளராக ஆழ்வார்களது பாசுரங்களைப் பயன்படுத்தி ஆய்வறிக்கைகள் செய்தால் அதில் தவறில்லை. ஆனால் அத்தகு ஆய்வறிக்கைகளை வைக்க வேண்டிய இடம் வலைத்தளம் அல்ல. பல்கலைக் கழகங்களே அதற்கான தக்க இடம் ஆகும்.

    ஆக, இடம் – பொருள் – ஏவல் என்ற தகுதிகளை வைத்து உங்களது இங்குள்ள எழுத்துக்களைப் பற்றி நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    தமிழும் ஹிந்து மதமும் குறித்த உங்கள் கருத்துக்கள் எனக்கும் ஏற்புடையனவே.

    “என் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று நீங்கள் கூறுவதில் எள்ளல் இருந்தாலும் உண்மை இல்லையே.

    நீங்களே சொல்லி வருவது போல தமிழ்கட்சி என்பது ஆழ்வார்களின், நாயன்மார்களின், சமயக் குரவர்களின், சந்தானக் குரவர்களின், மெய்கண்டாரின், நக்கீரன் -அவ்வையார்- தொல்காப்பியர் – அகத்தியர் – திருவள்ளுவர் உள்ளிட்ட எண்ணிலடங்கா சங்கப் புலவர்களின் கட்சி ஆகுமே அது. நீங்கள் இத்தகைய பெருமக்களின் தமிழ்க் கட்சியில் இணைந்து வைணவச் சுடராழி ஜோசப்பைப் போலப் பனி செய்வீர்களானால் இருகரம் நீட்டி, குவித்து வரவேற்கிறேன்.

    நான் தமிழ் ஹிந்து. நீங்கள் தமிழரே. நீங்களும் தமிழ் ஹிந்துவாக ஆழ்வார்களின், நாயன்மார்களின் பக்தி ரசத்தில் திளைக்க முற்பட்டால், அது இறைவன் செயலாகவே தொழுவேன்.

  82. Jo Amalan

    ///Whereas here in ur religion, Tamil s opposed by certain elements whom I call traitors to ur religion.///
    Who has the authority to declare anyone as a traitor to the religion?
    None has. You cannot arrogate yourselves with such authority.

    Are you so certain as to whatever you say is correct? I do not think that Tamil is opposed by any one in our religion. One could say that it has only an equal place with Sanskrit but not a pre-eminent place over Sanskrit.

    Hinduism is the most tolerant religion that this world has ever seen and is seeing. It does not issue fatwas like the ones issued on Salman Rushdie or Taslima Nasreen. Hinduism has never waged wars like the Crusade Wars or the Jihads. It never will.

    It will take all criticisms and brickbats like yours in its stride and remain ever vibrant.

  83. ///கோனார் சஹாயனுக்கு///

    அது என்ன கோனார் சகாயன்?

    கோனார் தமிழுரை படித்தவர் என்றால் சகாயன் இல்லையே.

    கோனார் தமிழுரை விற்றவரோ?

  84. Jo Amalan

    //The legitimate claimants are Hindus, in the refusal of the king to be the claimant. //

    ///In order to become tangible, they must come as a group with official legitimacy. Like Registration as incorporate, or a legally formed hierarchical organisation. Is there any such organisation in Kerala ?///

    ஹிந்து மதம் ஏனைய சில மதங்களைப் போல நிறுவன மதம் அல்ல. எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பும் மொத்த ஹிந்து மதத்துக்கும் பொறுப்போ உரிமையோ கொண்டாடமுடியாது. இதுதான் அதன் பலவீனம், பலமும் கூட. ஏதாவது ஒரே ஒரு அமைப்பு இருந்திருந்தால் அந்த அமைப்பை கத்திமுனையில் முகலாய மன்னர்களோ, துப்பாக்கி முனையில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பால அரசுகளோ தமது மதத்துக்கு என்றோ மாற்றி அன்றே இந்த தேசம் முழுமையுமே தமது மதத்தினராக மாற்றி இருப்பார்கள். அது நடக்கவில்லை. எமது மதத்தின் கடைசி ஆள் உள்ளவரை எமது மதத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதை கனத்து, உரத்துச் சொல்ல முடியும். ஏனெனில் ஒவ்வொருவரும் இந்த மதத்தின் பொறுப்பாளரே

    ஆனால் எந்த ஹிந்துவும் இந்தப் பொக்கிஷத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் மாட்டார்.

    நீதிமன்றங்கள் மூலவரை ஒரு legal entity ஆக ஏற்றுக் கொண்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இதனை நிறுவுகின்றன. இந்தப் பொக்கிஷம் இருக்கும் இடம் கோவில்.எனவே இவை எல்லாம் மூலவரான ஸ்ரீ பத்மநாப சுவாமியையே சேரும் என்பது நிச்சயமான நேர்மையான சட்ட உண்மை.

    இவைபோக,

    மன்னர் பத்மனாபதாசனாகத்தான் ஆண்டார் என்பது வரலாறு. திருவாங்கூர் நாட்டின் மன்னர் ஸ்ரீபத்மநாபன்தான் என்பதும் வரலாறு. நாடு சுதந்திரம் அடைந்தபின்னர், நாட்டை பாரத நாட்டோடு இணைத்து விட்டோம். கோவில் ஸ்ரீபத்மனாபனுடையது. கோவில் சொத்துக்கள் பத்மனாபனுடையது. இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமையும் என்பது எனது கருத்து.

  85. பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

    அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

    வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

    அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

    ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம்.

    தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

    சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி.

    கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

    கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

    மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது.

    மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

    சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன.

    இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

    அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை.

    கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

    ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர்.

    ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

    நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

    ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நிலஉடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

    சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர்.

    பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

    சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

    பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம்.

    ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

    அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது.

    கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

    இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

    பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர்.

    மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

    விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின.

    நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

    சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.

    திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

    பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

    தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

    அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது.

    ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

    இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

    ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

    பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

    இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

    விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

    சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

    ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.

    கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன.

    கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

    ‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை.

    தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

    தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

    கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

    பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
    ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்?

    தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

    பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

    இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு

    1. வேதம் கற்றிருக்க வேண்டும்,

    2. நில உடைமையாளராக இருக்க வேண்டும்

    என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

    வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை.

    அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

    பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

    மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான்.

    தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

    சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

    வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

    அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான்.

    ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

    வுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

    சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

    சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

    சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள்.

    சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

    இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, அரசு.

    இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர்.

    வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

    கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

    ___________________________________________________

    ஆதாரங்கள்:

    சதாசிவ பண்டாரத்தார்,
    கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
    மயிலை சீனி.வேங்கடசாமி,
    குடவாயில் பாலசுப்ரமணியம்,
    நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

  86. ஜோ அமலன்

    உங்களைப் பற்றி அறியாத பலரும் உங்களைப் போன்ற ஒரு பரிதாபத்துக்குரிய ஆளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போகட்டும்.

    ஜோ அமலன் சொன்னது
    ”கோயிலுள் கொலைகள் நடந்துள்ளன. நான் ஏற்கனவே இங்கெழுதிய கள்ளபிரான் கோயிலில் (ஆழ்வார் திருநகரி மகர நெடுங்குழை காதர்) 70 களில் ஒரு பயங்கர கொலை நடந்தது. இரவு 8 மணியளவில் ஒரு திருடன் வந்தான். சாதாரண நாள். ஆருமில்லை. பூஜாரி அவனுக்காக தீபம் ஏற்றி தட்டைக்கொண்டுவரும்போது, ஒரே போடு. பூஜாரி ரத்தவெள்ளத்தில் பிணமானார். காதரின் நகைகளணைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். மறுநாள மாலையில் அவன் பிடிபட்டான்.”

    அமலன் உடான்ஸ் விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும். முதலில் மகர நெடுங்குழைக்காதர் என்ற பெயரில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திவ்யதேசம் தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி அல்ல. மேலும் தென் திருப்பேரையில் நகைகள் 1987ம் வருடம் கொள்ளை போனது உண்மை, 70ம் வருடத்தில் அல்ல. ஆனால் எந்த அர்ச்சகரும் கொலை செய்யப் படவில்லை. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும். நான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன். மேலும் கள்ளபிரான் என்பது ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளின் பெயர். இப்படி அனைத்தையும் பொய்யாகச் சொல்லும் உங்களது தர்க்கம் எவ்வளவு புரட்டானது என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாமல் உங்களோடு விவாதித்து நேர விரயம் செய்து விட்டார்கள். லூசுத்தனமாக உளறுவதற்கும் ஒரு அளவு உண்டு. நீங்கள் எங்கள் கோவில்களை இத்தனை வருடங்கள் கொள்ளையடித்தது போதும் உங்கள் துருத்தியை நீங்கள் ஊதுங்கள் எங்கள் கோவில்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் நோக்கத்தை நான் ஏற்கனவே பிற தளங்களில் அறிந்தவன் என்பதினால் இங்கிருப்பவர்களை எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளேன்

    ச.திருமலை

    இங்கு யாரும் இவரை சீரியசாக எடுத்துக் கொண்டு விவாதத்திற்குப் போக வேண்டாம் மனநிலை தவறிய கேஸ்களுடன் விவாதிப்பது நமக்கு நேர விரயம் மட்டுமே. இவர் பொய்யான தகவல்களைச் சொல்வதினால் நான் சுட்டிக் காண்பிக்க நேரிட்டது.

  87. KANS அவர்களே…..

    சற்று மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்…ஹிந்து மதத்தின் மீதான துவேஷம் உங்கள் கண்ணை மறைக்கிறது………சற்று அறிவுக்கண்ணை திறந்து சார்பில்லாமல் வரலாற்றை கவனிக்க பழகுங்கள்…..உங்கள் நீண்ட பிதற்றலுக்கான பதிலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கீழ்க்காணும் கட்டுரையில் காணலாம்……..

    இனி திரு ,ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை பார்க்கலாம்….

    .//..உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

    அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும். பல்வேறு குலங்களை தொகுத்தவன் என்று பொருள். குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்குவதாகவே இருந்தது இந்திய மன்னராட்சி முறை. அதனுடன் முரண்படும்போதே போர்கள் நிகழ்ந்தன.அதற்கு திருமண உறவு ஒரு முக்கியமான வழிமுறை. ஐதீகங்கள் மூலமும், குல ஆசாரங்கள்மூலமும், அதிகாரம் பங்குவைக்கப்பட்டும் அந்த பொது ஒப்புதல் உருவாக்கப்பட்டது

    ’பொன்னியின் செல்வனை’ மட்டுமே வாசித்துப்பாருங்கள். சோழர்களின் ஆட்சி என்பது சம்புவரையர்கள், பழுவேட்டரையர்கள், மலையமான்கள் என பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சி என்பதை அறிவீர்கள். ராஜராஜன் அவர்கள் அனைவரையும் திறம்பட இணைத்து உறுதியான அரசை உருவாக்கினான். அது கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்தது. அத்தனைகாலம் தமிழ் மண்ணில் உள்நாட்டு அமைதி நீடித்தது. தமிழ் வரலாற்றில் அது ஒருசாதனை. அதற்காகவே அவன் இன்றும் மாமன்னன் என கொண்டாடப்படுகிறான்.

    உள்நாட்டு அமைதியை உருவாக்கிய சோழர்கள் சீரான வரிவசூல் முறைமையையும் உருவாக்கினார்கள். ஒரு மைய அரசு வந்ததுமே அதைத்தான் செய்யும். ஏனென்றால் அரசு என்பதே மக்களின் உற்பத்தியில் உள்ள உபரியை வசூல் செய்து மையநிதியை உருவாக்கிக்கொள்வதுதான். வரிவசூலுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் சோழநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றில் அந்த பகுதி மக்களாலேயே தேர்வு செய்யப்படும் நிர்வாக அமைப்புகள் செயல்பட்டன.

    சோழர்களின் காலகட்டத்தின் முக்கியமான சாதனையே இந்த வட்டார நிர்வாக அமைப்புகள்தான். இவற்றைக்கொண்டு வட்டார அளவில் நீதி வழங்கப்பட்டது. அந்தந்த பகுதியின் பொதுநிதி மக்களுக்காகச் செலவிடப்பட்டது. ஆனால் சோழர் காலகட்டத்தின் உச்சகட்ட சாதனை என்றால் நீர்ப்பாசனத்துக்காக உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு சபைகள் போன்ற கிராமசபை அமைப்புகள்தான். நீரை சீராக பங்கிடவும் நீர்நிலைகளை உருவாக்கவும் அந்த சபைகள் பெரிதும் பயன்பட்டன

    இவை எந்த அளவுக்கு வெற்றிகள் என்பதற்கு ஆதாரம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுக்காலம் கழித்து இன்றும்கூட இந்த அமைப்புகள் [நாட்டார் சபைகள்] தமிழகத்தின் பல பகுதிகளில் நீதி நிர்வாகத்துக்கும் நீர்மேலாண்மைக்குமாகச் செயல்பட்டு வருகின்றன என்பதுதான். குமரிமாவட்டத்தில் இன்றும்கூட சோழர்காலத்து ஏரிநீர் நிர்வாக அமைப்புகள் ஓரளவு செயல்பட்டுவருகின்றன. ஆயிரம் வருடக்காலம் இவை சீரான விவசாயத்தை இங்கே நிலைநாட்டின.

    இவ்விஷயங்கள் அன்றைய சூழலை வைத்துப்பார்த்தால் சாதாரண சாதனைகள் அல்ல. இந்த அளவுக்கு சிக்கலற்ற சீரான நலம்நாடும் நிர்வாக அமைப்புகள் பத்தாம் நூற்றாண்டில் உலகின் எந்தெந்த பகுதிகளில் இருந்தன என்று பார்த்தால் நம்மால் அதிகம் கண்டுபிடிக்கமுடியாது. அன்றைய ஐரோப்பா இன்றும்கூட ஐரோப்பிய மனசாட்சியை வேட்டையாடிக்கொண்டிருக்கும் மாபெரும் மத அடக்குமுறைகள், நிலப்பிரபுத்துவ கொடுமைகள் அரங்கேறிய மத்தியகாலகட்டம் வழியாக சென்றுகொண்டிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்த மத்தியகாலகட்டம் அவர்களால் கோதிக் காலகட்டம் என்று இன்றும் இலக்கியங்களில் பீதியுடன் பதிவுசெய்யப்படுகிறது.

    அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி.கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார்,. இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.

    படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி.

    கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலைஞானமாகவும் அன்றாடவாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.

    பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள்கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.

    சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.

    இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக்கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

    ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை[சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.

    அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணார்களின் சேவையும் இன்றும்கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதி பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மதநம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.

    ஆம், பிராமணர்களும் கோயில்களும் ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் இந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாகவேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று. இதே காலகட்டத்தில் உலகின் மற்றபகுதிகளில் ஈவிரக்கமற்ற இனஅழித்தொழிப்பு மூலம் ஆதிக்கம் உருவானது என்பதை இதனுடன் நாம் ஒப்பிடவேண்டும். இந்திய மன்னர்கள் பிராமணர்களையும் பௌத்த சமணத்துறவிகளையும் பயன்படுத்தி நிகழ்த்திய ஆதிக்கம் என்பது சாத்வீகமானது. அழிவு அற்றது. அந்த மக்களின் பண்பாடுகள் கூட அழிக்கப்படவில்லை, அவை மைய பண்பாட்டுச்சரடு ஒன்றால் தொகுக்கப்பட்டன. இது தேவையில்லை என்றால் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் அடுத்த வழி பரிபூரண அழித்தொழிப்பும் வன்முறையும்தான். இந்த வழியை வன்முறை என்பவர்கள் இதைவிட் பலமடங்கு வன்முறைமூலம் உருவான ஒருங்கிணைதலை நியாயப்படுத்தும் தரப்புகளின் குரலாக ஒலிக்கும் அபத்தத்தையும் நாம் காணலாம்.

    உலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

    சோழர்காலகட்டத்தில் பிராமண ஆதிக்கம் உருவானது பற்றி மேடைகளில் பேசுவோர் அக்காலத்தில்தான் இன்றும் நீடிக்கும் வேளாள ஆதிக்கம் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்றும் அதே ஆய்வாளர்கள் சொல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டுவரும்தோறும் நிலநிர்வாகம்செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்று பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். ஒருகட்டத்தில் தமிழக வேளாண் நிலம் முழுக்கவே வேளாளர் மற்றும் அவர்களின் மத அமைப்பான சைவ மடங்களின் கைகளுக்குச் சென்று அப்படியே பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை நீடித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் வேளாளர் வகித்த அதிகாரத்தின் துளியைக்கூட பிராமணர்கள் ருசிக்க நேர்ந்ததில்லை என்பதே உண்மை.

    பிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.

    சோழர் காலகட்டத்தில் வரிவசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் நிலையான அரசும் வரிவசூலுக்கான அமைப்புவசதியும் இருந்ததுதான். கொஞ்சம் கொஞ்சமாக வரிவசூல் தமிழ்வரலாற்றிலேயே அதிகமான அளவுக்கு சென்றது. ஆனால் அதை நாம் அன்றைய சூழலை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இருநூறாண்டுக்காலம் தமிழகநிலத்தில் உள்சண்டைகள் தீர்க்கப்பட்டிருந்தன. அதற்கான விலை அந்த வரிகள். சோழ அரசு வீழ்ச்சி அடைந்தபின் அந்த மக்கள் அந்த வரிவசூலை விட பலபல மடங்கு கொள்ளைக்குக் கொடுக்கவேண்டியிருந்தது.

    தமிழக சரித்திரத்திலேயே மிகப்பிரம்மாண்டமான மக்கள்நலத்திட்டங்கள் இருகாலகட்டங்களில்தான் செய்யப்பட்டன. ஒன்று சோழர் காலம். இன்னொன்று நாயக்கர் காலம். இன்று நம் நலம்நாடும் ஜனநாயக அரசுகள்கூட அதற்கிணையான மக்கள்நலத்திட்டங்களை செய்யவில்லை .தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் இவ்விரு காலகட்டங்களில் வெட்டப்பட்டவை. காவேரியின் கிளைகள்கூட அவர்களால் கட்டியமைக்கப்பட்டவை. தமிழகத்தின் பாசன நிலங்களில் பெரும்பகுதி விரிவான வாய்க்கால் அமைப்புகள் மூலம் சோழர்காலகட்டத்தில்தான் விவசாயத்துக்கு வந்தது. ஆயிரம் வருடங்களாக தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல்வயல்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மைய அரசு உருவாகி அதன்மூலம் திரட்டப்பட்ட பெருமூலதனமே அதை சாத்தியமாக்கியது.

    தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!

    குமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.

    சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததா? ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.

    ஒருநாடுகூட விதிவிலக்கு கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அன்றைய மக்களிடம் அதைப்பற்றிய அறவுணர்ச்சி இல்லை. நமக்கு இன்று மாடுகளை கட்டி வண்டியோட்டுவது பிழை என தோன்றவில்லை அல்லவா? நாளை நம் சந்ததிகள் அதற்காக நம்மை தூற்றுவார்கள். இன்றே உலகின் பல நாடுகளில் விலங்குகளை அடிமையாக வைத்து உழைப்பை சுரண்டுவது தடைசெய்யப்பட்டுள்லது. தத்துவமேதையான பிளேட்டோ கூட அடிமைமுறையை ஆதரிப்பதைக் காணலாம். உலக அளவில் பார்த்தால் இயந்திரங்கள் வந்துதான் அடிமையுழைப்பை மெல்லமெல்ல இல்லாமலாக்கின.

    அதில்கூட சோழர்களின் காலகட்டம் அவர்கள் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் இருந்ததை விட மேலான நிலையில் இருந்தது என்பதைக் காணலாம். ஐரோப்பாவில் எல்லா உழைப்பாளிகளும் ஏதோ ஒருவகையில் அடிமைகளாக இருந்த காலம் அது. ஆனால் சோழர்காலத்தில் விவசாயத்தொழிலாளர் மட்டுமே அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிலை கொடுமையானது, ஆனால் கம்மியர், தச்சர் போன்ற பிற உழைப்பாளிகள் சுதந்திரமானவர்களாகவே இருந்தார்கள்.

    கல்வி எப்படி இருந்தது? அன்று உலகில் எங்கும் சீரான பொதுக்கல்வி இருக்கவில்லை. தேவைக்கேற்பவே கல்வி இருந்தது. ஐரோப்பாவில் பிரபுக்களல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இங்கே கம்மியர், சிற்பிகள் தச்சர்கள் ஆகியோர் தொழில்குழுக்களாக இயங்கினர். அவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே கல்வி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் தமிழும் சிற்பஞானமும் கற்பிக்கப்பட்டது. சோழர்காலத்திலேயே இந்தியாவின் முக்கியமான சிற்பநூல்கள் உருவாயின. சோழர்காலக் கதைகளை வைத்துப் பார்த்தால் பொதுவாக வணிகர்களும், வேளாண்குடிமக்களும் கல்விகற்றதாகவே தெரிகிறது. அவர்கள் கவிஞர்களையும் கலைஞர்களையும் பேணியிருக்கிறார்கள். கவிதைகளை ரசித்திருக்கிறார்கள்.

    சோழர்காலகட்டத்தின் தேவரடியார் சமூகம் பற்றி இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. இதுவும் உண்மைநிலை உணராத பேச்சே. ராஜராஜசோழன் வடக்கே வெங்கி, கலிங்கநாடுகளில் இருந்து தேவரடியார்களைக் கொண்டுவந்து குடியேற்றினான். அன்று ஊர்கள் விரிந்துஆலயங்கள் பெருகியபடியே சென்றமையால் மேலும் மேலும் தேவரடியார் தேவைப்பட்டார்கள். அதற்காகவே பொட்டுகட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் உருவகிக்கும் சமூகக்கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழை. பொட்டுகட்டுதல் ஓரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. ஆகவேதான் அது நீடித்தது. வெறும் ஏமாற்று மூலமோ வன்முறை மூலமோ அந்த முறை தக்கவைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமேதும் இல்லை.

    தேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும்தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை. தமிழகத்தின் மாமன்னர்கள் தேவரடியார் பெண்களை மணந்து பட்டத்தரசிகளாக ஆக்கியிருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டத்தரசி தேவரடியார்தான். திருவிதாங்கூரின் மன்னர் ராஜா ராமவர்மாவின் பட்டத்தரசி அபிராமி தேவரடியார்தான்.

    பின்னாளில் போர்கள் மற்றும் பஞ்சங்கள் வழியாக மெல்லமெல்ல தேவரடியார் நிலை தாழ்ந்தனர். அவர்கள் ஒரு சமூகத்தின் உபரியில் வாழ்பவர்கள். உற்பத்தியுடன் தொடர்பற்றவர்கள். ஆகவே பொருளியல் வீழ்ச்சியால் அவர்களை புரக்கும் அமைப்புகள் சரிந்தபோது அவர்களும் தாசிகளாக ஆனார்கள். சோழப்பேரரசின் காலகட்டத்தில் அன்றைய பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக சிறப்புடன் அவர்கள் விளங்கினார்கள். ஆனால் சோழர்காலத்தில் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் நிலை தாழ்வாகவே இருந்தது. நில உடைமை முழுக்க முழுக்க ஆண்களின் கைக்குச் சென்றமையால் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களுக்கு கல்வி இல்லை. ஒப்புநோக்க நல்ல கல்விதேவரடியார்களுக்கு மட்டுமே கிடைத்தது.

    சோழப்பேரரசின் வீழ்ச்சிக்காலகட்டத்தில் பல சிக்கல்கள் உருவாயின. அவற்றை கெ.கெ.பிள்ளை விரிவாக எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க பேரரசுகளுக்கு உள்ள சிக்கல் ஒன்றுதான். அது விரிந்து விரிந்து சென்று ஒரு கட்டத்தில் அந்த விரிவாலேயே அழிய ஆரம்பிக்கும். சோழப்பேரரசு ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியாமல் ஆனது. அதற்கான ராணுவ நடவடிக்கைகளே அதன் நிதியாதாரத்தை அழித்தன.

    வரிவசூல் கொடுமையானதாக மாறியது. பெரும் கோயில்களை நிர்வாகம்செய்ய உருவாக்கப்பட்ட அமைப்புகள் மையக்கண்காணிப்பை இழந்து ஊழல்மிக்கவையாக ஆயின. பல ராணுவ தளபதிகள் தன்னிச்சையாக வரிவசூல் செய்தார்கள். குறுநில மன்னர்கள் எதிர்கால கலகங்களுக்காக நிதி சேர்க்க ஆரம்பித்தனர். ஆகவே மக்கள் பொறுமை இழந்து கலகம் செய்தனர்.

    சோழர்காலத்தில் ஏதோ ஒருகட்டத்தில் நிர்வாக வசதிக்காக சாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டன. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க சோழர்கள் மாபெரும் தேர்விழாக்களை ஏற்பாடு செய்தனர். தேர்வடத்தில் வலது வடத்தை பிடிப்பவர்கள் இடது வடத்தை பிடிப்பவர்கள் என ஒரு பிரிவினை உருவாக்கப்பட்டு அதுவே மெல்லமெல்ல பெரிய பேதமாக ஆகியது. உண்மையில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக தெரியவில்லை. ஒரேசாதியில் கூட வலங்கை இடங்கைப் பிரிவினை இருந்தது.

    ஏதோ ஒரு கட்டத்தில் வரிவச்சூல்சாதிகள் வரிகொடுக்கும் சாதிகள் நடுவே பூசல்கள் வெடித்து அது வலங்கை இடங்கை போராக ஆகியிருக்கலாம். இரண்டாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே பூசல்கள் மூலம் சோழ நிர்வாகமே ஸ்தம்பித்தது. அச்சிக்கல்களை தீர்க்கவே முடியவில்லை. சோழர்காலத்தில் ஆரம்பித்த வலங்கை இடங்கை போர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை நீடித்தது. சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலெயே அந்தப்போர் நடந்தது. தொடர்ந்து அரியணையில் திறனற்ற மன்னர்கள் வந்தார்கள். சோழ அரசு மெல்ல சரிந்து மறைந்தது. அது அழிந்தபின்னர்தான் அது இருந்தபோது அது மக்களுக்கு அளித்தது என்ன என்பது தெரிந்தது. அதன்பின் நாம் காண்பது சூறையாடல்களின், அழிவின் காலகட்டங்களை.

    ராஜராஜன் காலத்திலேயே பல பகுதிகளில் மக்கள் கடுமையான வரிவசூலுக்கு எதிராக முறையிட்டும் சிறு கலவரங்களில் ஈடுபட்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ராஜராஜனுக்கு கனவுகள் இருந்தன. வரண்ட வடதமிழகப்பகுதிகளுக்கு காவேரி நீரைக் கொண்டுசென்று ஏரிகளை அமைத்து வேளாண்நிலங்களை உருவாக்க முனைந்திருந்தான். சந்தைகளும், சாலைகளும், சாலையோரம் கோயில்களும், கோயில்களை சுற்றி ஊர்களும், நகரங்களும் உருவாக்க்கிக் கொண்டிருந்தன. நாம் இன்றும் பயன்படுத்தும் பல சாலைகள் அப்போது உருவானவை. தமிழ்மன்னர்களில் நிலைப்படை [நிரந்தர ராணுவம்] வைத்துக்கொண்ட மன்னன் ராஜராஜனே. அதன் முன்பு மன்னர்கள் போர்த்தேவைக்கே ராணுவத்தை திரட்டினர்.

    ராஜராஜன் கடற்படையை நிறுவி தொலைதூர தீவுகளான சாவகம் கடாரத்தை வெல்வதில் கவனம்செலுத்தியதும் வரிச்சுமையை அதிகரித்தது. ஆனால் அது தேவையாக இருந்தது. அந்த படையெடுப்புகள் நாடுபிடிப்பதற்கானவையாக தெரியவில்லை. சோழநாடு உற்பத்தியை அதிகரித்தபோது வணிகம் கட்டாயமாக ஆகியது. வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் வணிகவழிகள் மெல் கட்டுப்பாடு தேவை. ராஜராஜன் வெங்கி கலிங்கம் வரை படைகொண்டு சென்றது வணிகவழிகளுக்காகவே. கடாரம் சாவகம் போன்ற இடங்களின் வழியாக சோழநாட்டுடன் வணிகம்செய்த சீனவணிகர்களை கட்டுக்குள் கொணரவே அப்படையெடுப்பு நிகழ்ந்திருக்கலாம். அடுத்த இருநூறு வருடம் சோழநாட்டை சிக்கலில்லாமல் அயல்வணிகத்தில் ஈடுபடச்செய்தவை அந்த படையெடுப்புகளே

    ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.

    அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள்.

    ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை

    அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே

    ஆனால் அதையும் வரலாற்றில் வைத்தே செய்யவேண்டும். ராஜராஜன் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் நிலஅடிமைமுறை உறுதியாக வேரோடி பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்தது. அவரது காலகட்டத்தில்தான் பெண்ணை குடும்பத்தின் அடிமையாக ஆக்கும் நில உரிமைச்சட்டங்கள் உருவாகி வந்தன. ஆம், அந்தக் காலகட்டத்தில் நீதி குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும். வலியோரை எளியோர் பணிந்து நடந்திருப்பார்கள். மனித உரிமைகள் இருந்திருக்காது.வன்முறைமூலம் வரிவசூல் செய்யப்பட்டிருக்கும். அவையெல்லாம் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். அந்த காலகட்டத்தை உடைந்த்து தாண்டித்தான் நாம் நவீன காலகட்டத்துக்குள் புக முடிந்தது

    ஆம், அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல.

    ஜெ //

    kans அவர்களே….உங்களைப்போன்ற ஹிந்து மத துவேஷிகள் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் ஹிந்து மதத்தின் தலையீட்டை மட்டுமே குறிப்பிட்டு வருகின்றீர்கள்……சமணர்களோ, பவுத்தர்களோ அரசியலில் தலையிட்டதே இல்லையா ? சமணர்களும் பவுத்தர்களும் அரசியலில் விளைவித்ததர்கான ஆதாரங்கள் பல உள்ளன…..பவுத்தர்களின் லட்சணத்தை தெரிந்து கொள்ள பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம். தற்போது இலங்கையில் நடப்பதை கவனித்தாலே போதும். தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விட்டு , அங்கு நடந்த கோர படுகொலைகளுக்கு காரணமானவர்கள் ” உங்கள் அசோக சக்கரவர்த்தி” யின் வழித்தோன்றல்களான புத்த பிக்குகளே………..

    சமணர்களின் கழுவேற்றம் பற்றி உங்களைப்போன்றவர்கள் நெடுங்காலமாக மறைக்கும் ஒரு விஷயம் உண்டு……அங்கு நடந்தது சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையேயான பந்தயம். போட்டியில் தோற்பவர்கள் கழுவிலேற வேண்டும் என்பது விதிமுறை. ஒருவேளை மேற்படி போட்டியில் [ அனல் வாதம், புனல் வாதம் ] திருஞானசம்பந்தர் தோற்றிருந்தால் அவரும்,அவரைசார்ந்த சைவர்களும் கழுவில் ஏற்றப்பட்டிருப்பர்.
    கிறிஸ்தவ மிஷ நரி களான கால்டுவெல் போன்றோர் வாந்தி எடுத்ததை வைத்துக்கொண்டு ஹிந்து மதத்திற்கு எதிராக துவேஷ பிரச்சாரம் செய்யும் ரொமீலா தாப்பர், அ.மார்க்ஸ் , தொ.பரமசிவன் போன்ற ”வரலாற்று ஆய்வாளர்களிடம் ” சான்றிதழ் பெற வேண்டிய நிலையில் ஹிந்து மதம் இல்லை…..

    ஹிந்து மதம் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் நின்று கொண்டு தங்கள் கழிவுகளால் அதனை களங்கப்படுத்தும் முயற்சி தொன்று தொட்டு நடந்து வருகிறது.அதனால் அந்த மகா சமுத்திரம் இதுவரை களங்கப்பட்டதில்லை .இனியும் களங்கப்படப்போவதில்லை …..
    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்…..

  88. வேளாங்கண்ணி சர்ச்சின் வருமானமும், சொத்தும் குறித்து யாருக்காவது தெரியுமா? அங்கு சேரும் பணமும், சொத்தும் என்ன ஆகிறது? எனக்கு தெரிந்து பலர் அங்கே பணமாகவும், தங்கமாகவும் நிறைய கொடுத்திருக்கிறார்கள். அதுபோல நந்தனத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சின் சொத்து விவரங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம். சும்மா ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.

    கோவில் நகைகளை அரசுடமை ஆக்குவதற்காக போராடும் முன், சர்ச்சுகளின் சொத்தும் அரசுக்கே உரிமை என்று கேட்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. சர்ச்சுகளின் சொத்துக்கள் அரசுக்கு உரிமையாகும் நாளில் கோவில் நகைகளை அரசு பொறுப்பில் விட எந்த தயக்கமும் இருக்கமுடியாது.

  89. Can anyone comment on the following news???

    திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் உள்ள அரிய பொக்கிஷ சொத்துக்களை ராஜ குடும்பத்தினர் எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்துள்ளன என கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

    கேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன் னாள் முதல்-அமைச்ச ருமான வி.எஸ்.அச்சுதா னந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் உள்ள அரிய பொற்குவியல் சொத்துக்களை ராஜ குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வதாக தகவல் உள்ளது. இது சம்பந்தமாக புகார்கள் கிடைத்துள்ளன.

    மன்னராட்சி முடிந்த சூழ்நிலையில், பத்மநாப சாமி கோவிலில் உள்ள பொக்கிஷத்தின் மீது ராஜ குடும்பத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை. கோவில் பொற்குவியல் அங்கு பாதுகாப்பாக இல்லை.

    பத்மநாபசாமி கோவி லில் அனைத்து நாட் களும் மன்னர் உத்திரா டம் திருநாள் மார்த் தாண்ட வர்மா தரிசனம் செய்து வருகிறார். ஒரு நாள் அவ்வாறு தரிசனம் முடிந்து வெளியே திரும்பி வரும்போது அவரது கையில் இருந்த பாத்திரத்தில் கோவில் பிரசாதமான பாயசம் இருக்கவில்லை.

    மாறாக பாதுகாப்பு அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம் இருந்ததை அங்குள்ள பூசாரி கண்டுபிடித்து விட்டார். இதைத் தொடர்ந்து தன் மீது சூடான தண்ணீரை ஊற்றி கொல்வதற்கு மார்த்தாண்ட வர்மா முயற்சி செய்ததாக அந்த பூசாரி புகார் கூறினார்.

    கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் கணக்கெடுப்பை தடுப்பதற்காகத்தான் மார்த் தாண்டவர்மா தேவ பிரசன்னம் நடத்தினார்.

    பத்மநாபசாமி கோவில் ரகசிய அறையில் இருக்கும் பொக்கிஷத்தை தொடுபவர்களின் குடும்பத்தை அது பாதிக்கும் என்றும், மரணம் கூட ஏற்படலாம் எனவும் தேவ பிரசன்னத்தில் தெரிந்ததாக கூறப்படுகிறது. மற்ற எவரும் சொத்தை தொடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சி முயற்சிதான் இது.

    பாம்பின் படம் பதித்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறையை மார்த்தாண்ட வர்மா ஏற்கனவே திறந்திருந்தார்.

    மார்த்தாண்ட வர்மா ரகசிய அறையை திறந்ததால் அவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்துக்கு அந்த அறையை திறந்து உள்ளே உள்ள பொருட்களின் மதிப்பை கணக்கிட உரிமை இல்லை என்று அவர் கூறுவது ஏன்?.

    – இவ்வாறு வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்

  90. வேணாட்டு அரசனுக்கும் இந்த திருவாங்கூர் சமஸ்தானதுக்கும் என்ன தொடர்பு. வேணாட்டு அரசன் தமிழன். பாண்டிய சோழ மன்னர்களுக்கு பெண் கொடுத்தவன். 1745 ஆண்டு வேணாட்டு அரசு குடும்பத்தை வேறோடு அழித்து விட்டு உருவாக்கப்பட்டது இந்த திருவாங்கூர் சமஸ்தானம்.

    கத்திக்காரர் மெய்காப்பாளாராக இருந்தது வேணாட்டு அரசுக்கே.

  91. வேணாட்டு அரசனுக்கும் இந்த திருவாங்கூர் சமஸ்தானதுக்கும் என்ன தொடர்பு. வேணாட்டு அரசன் தமிழன். பாண்டிய சோழ மன்னர்களுக்கு பெண் கொடுத்தவன். 1745 ஆண்டு வேணாட்டு அரசு குடும்பத்தை வேறோடு அழித்து விட்டு உருவாக்கப்பட்டது இந்த திருவாங்கூர் சமஸ்தானம். மாலிக் கபூருடம் இருந்துபாண்டியன்னன் பொக்கிஷங்களை காப்பாற்றி திருவனந்தபுரம் வைத்தது வேணாட்டு அரசன். நாங்கள் கத்திக்காரர் மெய்காப்பாளாராக இருந்தது வேணாட்டு அரசுக்கே. கேரள சித்திர வல்லி என்று வேணாட்டு அரசன் ஷிரங்ஙம் கல்வெட்டு உள்ளது.

  92. சரவணகுமாரின் கடிதம் .அற்புதம்.தொடா்ந்து பலவிசயங்கள் குறித்து தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.பயன் உள்ளதாக இருக்கும். நன்றி

  93. பெருஞ்செல்வத்தை பயனற்ற முறையில் புட்டி எவ்வளவுகாலம் வைப்பது ? விடை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *