(DERSPIEGEL என்ற ஜெர்மானிய பத்திரிகைக்கு திருவனந்தபுர மஹாராஜா உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா அளித்த நேர்முகம் – தமிழில் வி. ரமணன் )
பத்மநாபசுவாமி கோவிலுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
நாங்கள் சேரர்கள். முன்னாளில் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய நான்கு அரச வம்சங்களுள் ஒன்று எங்களுடையது. எங்கள் குடும்பம் நீண்ட நெடிய பரம்பரையாக, பல கிளைகளை கொண்டுள்ளது. 1750 வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானம் அளவிலும் வளத்திலும் செழிப்பாக இருந்தது. என் மூதாதைய மன்னர்களில் ஒருவர் மிக தனித்தன்மை வாய்ந்த, சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக முடிவை எடுத்தார். ஆன்மீகத்தில் ஈர்க்கபட்ட அவர் எங்கள் குலதெய்வமான பத்மநாப சுவாமியிடம் அவரது செல்வம் அனைத்தையும் நாட்டையும் கோவிலுக்கு கொடுத்துச் சரணடைந்தார். நமது குடும்பம், கோவிலையும் அதிலுள்ள சொத்துகளையும் நாட்டையும் அவர் சார்பில் பாதுகாத்து வர வேண்டும். ஆனால் நமது குடும்பத்தினருக்கு அதனால் எந்த விதச் செருக்குமிருக்கக் கூடாது என்று சொல்லி இந்த முடிவை எடுத்தார். கலிங்கப்போரில் பேரரசர் அசோகர் எல்லாவற்றையும் புத்தருக்கு அர்ப்பணித்தமாதிரி, தன் செல்வத்தையும் நாட்டையுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தார். அதிகப் பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைக்காரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினாமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும்.

இந்தியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று உங்களுடையது. ஆனால் மற்ற முன்னாள் அரச குடும்பங்கள் போல இல்லாமல் ஏன் மிக எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்கிறீர்கள்?
இதைப் பற்றி சொல்லுவதற்கு நாம் கொஞ்சம் கடந்த காலத்திற்குப் போக வேண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியர்கள் எழுந்தது 1857ல் என எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 1741ல் டச்சுக் காரர்கள் இங்கு காலடியெடுத்து வைத்த உடனேயே அவர்களை தோற்கடித்த ஆசியசக்தி திருவாங்கூர் சமஸ்தானம். போர் முடிந்ததும் அத்தனை டச்சுக்காரர்களும் எங்கள் முதாதையர் முன் மண்டியிட்டிருக்கிறார்கள். ஒரு டச்சுக்காரர் பெனடிக்ட்ஸ் என்பவர் எங்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிருக்கிறார். அவரை கிரேட் கபித்தான் என்று அழைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியான ஃபிராங்களின் ரூஸ்வெல்ட்டின் முதாதையர் என்பதை, பின்னாளில் அவரது பேரன் எங்களது பழைய ஆவணங்களை பார்க்க இங்கு வந்த போது தெரிந்து கொண்டேன்.
பின்னர் 1839ல் கிட்டத்தட்ட சிப்பாய் புரட்சி எழுவதற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் முன்னால் பிரிட்டிஷ்காரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுந்தோம். அதற்கான தண்டனை கடுமையாக இருந்தது. ஐம்பதாயிரம் எண்ணிக்கையிலான எங்களது போலீசையையும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு, தலைநகரையும் கொல்லத்துக்கு மாற்றி, அவர்களது இரண்டு பிரிட்டிஷ் ராணுவ ரெஜிமெண்டுகளை நிறுத்தி அதன் செலவை எங்களை ஏற்கச் சொன்னார்கள். தாமஸ்மன்ரோ தன்னையே திருவாங்கூரின் திவானாக அறிவித்து கொண்டார். நாங்கள் அதற்கும் தளராமல் இருந்தபோது மத போதகர்களை கொண்டு வந்தனர். எங்கள் மன்னர் குடும்பங்கள் அப்போதும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்கவில்லை. நாங்கள் எப்போதாவது வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது உண்டு; ஆனால் அதனால் எங்கள் எளிய வாழ்க்கை முறை எந்த விதத்திலும் பாதிக்கவோ, மாறவோ இல்லை. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளியில் இருந்து எத்தனையோ ஊடுபாடுகள் ஏற்பட்ட போதும், எங்கள் வாழ்க்கை முறை சமய ஆன்மீக நம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.
”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள்.
இப்போது கோவில் ரகசிய அறைகள் திறக்கப் பட்டு விட்டன. உலகம் முழுவதும் உங்கள் நன்கொடைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த அளவற்ற திடீர் கவனம், விமர்சனம் என கோவிலைச் சுற்றி நிகழுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மன்னிக்கவும், நான் அங்கு என்ன நடக்கிறது என்று கருத்து சொல்லமுடியாது. விஷயம் கோர்ட்டில் உள்ளது. இருந்தும் இது மட்டில் சொல்லுகிறேன், அரசாங்கம் கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுப்பதிலோ, அதிக பாதுகாப்பு போடுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தயவு செய்து அந்த பொருட்களை கோவிலிலிருந்து நீக்கப் படக்கூடாது. அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. அவை கடவுளுக்கே சொந்தம்; அவ்வாறு இருப்பதை நமது சட்டம் அனுமதிக்கிறது. கடவுளின் செல்வம் பற்றி இப்படி விவாதங்கள் உள்ளது துரதிருஷ்டமானது. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். மற்றபடி நான் என் ஆலோசகர்களை கேட்கவேண்டும். எங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாகக் கோவிலுக்குப் பொருட்கள் நன்கொடை எல்லாம் அளித்து வருகிறது. நான் கோவில் தலைமை புரவலர், நான் ஒவ்வொரு நாளும் அங்கு போகிறேன். நான் ஒரு நாள் போக விட்டுபோனால் கூட நான் பழைய திருவாங்கூர் பாரம்பரியபடி - ரூ 166,35 அபராதம் செலுத்திவிட்டு தான் மறுநாள் போக வேண்டும்.
ஆனால் அந்த செல்வத்தை ஏழைகளுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்த வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?
இப்போது இந்தியாவில் படித்தவர்கள் நிறைய இருக்கிறோம், ஆனால் கோவிலுக்குள் நிகழ்ந்த தானங்களைப் பற்றிய இந்த கருத்து முற்போக்கானது அல்ல. மெல்ல நம் இந்திய அடையாளத்தை இழந்து வருகிறோம் (என்பதையே இது காட்டுகிறது). இப்பொழுது பணமே எல்லாமாகி விட்டது. ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. என்னால் உலகத்தை மாற்ற முடியாததால் நான் ஏமாற்றமடைந்தவனாகயிருப்பதை விட வேதாந்தியாக இருப்பதையே விரும்புகிறேன்.

இப்படிபட்ட மதநம்பிக்கைகள் எல்லாம் குருட்டுநம்பிக்கைகள் என்பது பகுத்தறிவாளார்கள் வாதிடுகின்றனரே…
தயவு செய்து இங்கிலாந்தில் 1500களில் எட்டாம் ஹென்றியின் காலத்தை நினைவுபடுத்தி பாருங்கள். அவருக்கு இரண்டு விஷயங்களில் மிகுந்த நாட்டம். மனைவிகளும், பணமும். அதனால் சர்ச்சுகளில் சுரண்டிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் தன் மனைவியை (Catherine of Aragon) விவாகரத்துச் செய்ய விரும்பிய போது, சிக்கிக் கொண்டார். அவரது மனைவி தீவிர கத்தோலிக்கராக இருந்ததால் சர்ச் விவாக ரத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவருடைய கிறிஸ்தவ குருவின் ஆலோசனையின் பேரில் ஒரு புதிய சர்ச்சை உருவாக்கினார். ஒரு விவாகரத்துக்காக ஒரு மதப் பிரிவையே உருவாக்கினார். இது மட்டும் பகுத்தறிவா?
சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிக கடினம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. தென் ஆப்பிரிகாவில் ஒரு வனவிலங்கு பூங்காவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பல கொடிய விலங்குகளைப் பார்த்தபின் வந்த கைடிடம் எது மிக பயங்கரமான மிருகம் என கேட்டேன். அவர் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினார்.
உங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்ன? உங்கள் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்துகிறது?
நாங்கள் டிராவல் எஜென்சி மற்றும் ஹோட்டல் தொழில்களில் இருக்கிறோம் .நான் ஒரு பிரிட்டிஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சேர்மனாக இருக்கிறேன். ஏதோ பத்திரிகையில் எழுதியிருப்பது போல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிளகு அனுப்பவில்லை. நாங்கள் ஏழு அறக்கட்டளைகள் இயக்குகிறோம். ஏழைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் வீடுகள் போன்றவற்றிற்காக ஒரு ஆண்டுக்கு ஐந்து முதல் எட்டு லட்சம் வரை செலவழிக்கிறோம்.பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறோம்,. குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வருமானத்திலிருந்து நிறைய செய்கிறார்கள். எங்கள் சமூக பணிகளை ஒரு அரசும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது பற்றி கவலையில்லை. நாங்கள் விரும்புவதினால் செய்கிறோம்
தங்கச் சிலைகள், ரத்தினம் மற்றும் வைரங்கள், வைடூரியங்கள், தங்கம் பதித்த நெப்போலியன் கால மற்றும் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் இருப்பது அனைத்தும் உண்மையா?
நான் அந்த அறைகள் உள்ளே போனது இல்லை. கடவுளுக்குச் சேவை செய்யும் மன்னர்கள் இப்படிபட்ட செல்வக் குவியலை பார்க்கக் கூடாது. அதனால் செல்வத்தின் மீது ஆசை வரக்கூடும். ஆனால் அறைகளின் உள்ளே மதிப்பு மிக்க செல்வம் இருப்பது தெரியும்.
இந்த பொது விவாதங்களினால் உங்களை விட உங்கள் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் கோபமாக இருக்கிறார்களா?
எங்கள் குடும்பத்திலேயே நான்தான் மிகுந்த கோபக்காரன். ஆனால் இந்த விஷயத்தில் எங்கள் அனைவரது உணர்வும் ஒரே மாதிரிதான். நான் ஒரு படை வீரானாயிருந்தவன். 15 ஆண்டுகள் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் கேப்டானாக இருந்தவன். நாங்கள் கொடுத்த நன்கொடைகளுக்காக எங்களை விமர்சிப்பவர்களை நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எவரோ செய்துவிட்டு போன செயல்களுக்காக இவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அவர்கள் நம்பும் விஷயத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? கடவுளுக்கு கொடுத்த நன்கொடைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதம்?

90 வயதில், நீங்கள் ஒரு கைத்தடி பயன்படுத்தக் கூட இல்லை. உங்கள் தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது ?
நாங்கள் மிகவும் கண்டிப்புடனும் எளிமையாகவும் வளர்க்கப்பட்டவன். என் நாள் காலை 4 மணிக்கு தொடங்குகிறது யோகா செய்த பின் வேதங்கள் படிப்பேன். பால் தவிர பானங்கள் அருந்துவதில்லை. (teetotaler. ) வெஜிட்டேரியன் உண்வு மட்டுமே. தினமும் கோவிலுக்குச் சென்று பத்மநாபருடன் தனியே 10 நிமிடங்களை கழித்து விட்டுத் திரும்புவேன். பின் எனக்கு பிடித்த ஹாபியான “மீடீயா சர்ஜரி” செய்வேன். எளிய காலை உணவிற்குப் பின் செய்தித்தாட்கள்களை படித்து விட்டு கத்தரித்து வைத்திருந்த முக்கிய செய்திகளை நோட்புக்கில் ஒட்டி வைப்பேன். என்னிடம் 30 ஆண்டு கலெக்ஷனிருக்கிறது. ஒரு வேளை எங்கள் குடும்பக் குழந்தைகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லா விட்டால் அவைகளை டிரஸ்ட் பள்ளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். பின் பொது மக்கள் என்னை சந்திக்க வருவார்கள். விழாக்களுக்கு அழைப்பர். நான் நல்ல பேச்சாளன். பிறகு மதியம் சுமார் இருபது நிமிடம் படுத்துறங்குவேன். இரவு 9.45க்கு படுக்கைக்கு போவேன். எப்போதுமே நன்றாக தூங்கிவிடுவேன். மனத்தில் எந்த பாரமும் இல்லாதால் எளிதாக உடனே தூக்கம் வருகிறது.
இப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளதா?
(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..
கர்நாடக இசைக் கலைஞர்கள் சுவாதித் திருநாள், ஒவிய கலைஞர் ராஜா ரவிவர்மா போன்றவர்கள் உங்கள் புகழ்பெற்ற முதாதையர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம்?
இசைக்கும் ஓவியத்திற்கும் தெய்வீகத்தையும் மனித உணர்வையும் கொடுத்த மாபெரும் கலைஞர்களின் பாரம்பரியம் தொடர்கிறது நான் கலைகளை நேசிப்பவன். அழகிய சிலைகளை சேகரிக்கிறேன். ஓருமுறை வெனிஸ் நகரில் ஒரு அழகான பீங்கான் சிலையைப் பார்த்தேன் .ஊஞ்சலில் ஆடும் பெண். ஆடும்பொழுது அவள் கால் தரையில் படுமிடத்தில் மணலின் தடம் கூட தத்ரூமாகயிருந்தது. விலை 100 பவுண்டுகள். அன்னிய செலாவணி கடுமையாக இருந்த காலம் அது. என்னால் 40 பவுண்டுகள் தான் தர முடிந்தது என்பதால் வந்துவிட்டேன். கடைக்காரர் கூப்பிட்டு நான் கேட்ட விலைக்குக் கொடுத்தார். அவர் சொன்ன காரணம் “கண்ணை மூடிக் கொண்டு ஒரே மாதிரி இருநூறு சிலைகளை வாங்குபவர் அல்ல நீங்கள், நுணுக்கமான வேலைப் பாடுகளுக்கு மதிப்பளிப்பவர் என்று தெரிகிறது” என்றார்.
கேரளா 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரு கம்யூனிஸ்ட் கோட்டையாக உள்ளது. ஆனாலும் மக்கள் உஙகளை மன்னராகவே மதிக்கிறார்கள். உங்களை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இது உங்களுக்கு விசித்திரமாகயிருக்கிறதா?
ஆமாம். ஆச்சரியம் தான். ஏனெனில் நான் மிக எளிமையாக இதையெல்லாம் விரும்பாமல் தான் இருக்கிறேன். ஹரித்துவாரில் என் குருவின் கூட்டங்களுக்கு போனால் கூட பின் வரிசையில்தான் இதே முண்டு – சட்டை அணிந்தே அமர்கிறேன். யாராவது திருவனந்தபுரம் மன்னர் வந்திருக்கிறாமே எங்கே என்றால் கையை உயர்த்துவேன். பலர் நம்பியதில்லை.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான – ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள அரச குடும்பங்களுடன் ஓப்பிடும்போது நீங்கள் எந்த அளவிற்கு பணக்காரர்கள்?
அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுபவனில்லை. இந்த தகவல் ஒருக்கால் உங்களுக்கு உதவலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் பீரங்கி சல்யூட் வழக்கமிருந்த்து. மிக பணக்கார சமாஸ்தானத்திற்கு அதிகபட்சம் 21 என்பதில் துவங்கி மிக சிறிய சம்ஸ்தானத்திற்கு 11 வரை என்று ஒரு ஆர்டர் இருந்தது. அதில் திருவாங்கூருக்கு 21. உலக போருக்கு நாங்கள் படை தராததிற்காக அதை 19 ஆக குறைத்தார்கள்.

உங்கள் வாரிசு யார்?
மருமக்கள் வாரிசு முறை பரம்பரையை பின்ப்ற்றுபவ்ர்கள் நாங்கள்.. எனக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிரார்கள். ஆனால் என் சகோதரியின் மகன் தான் எனக்கு அடுத்த ராஜா. ஒரு முறை ஒரு ஐரோப்பிய மாது எனனை சந்தித்தபோது இந்த எளிதில் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வாரிசு முறையைப் பற்றி அவருக்கு விளக்கினேன்.. அவர் திரும்பிப்போய் தன் நண்பர்களிடம். அவர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை ஆனால் அது எதுவாகயிருந்தாலும் பெண்களுக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டேன் என்றாராம், பெண்ணின் உரிமையை பல காலமாக போற்றும் அமைப்பு எங்களுடையது. கேரளா மெதுவாக மீண்டும் ஆணாதிக்கப் போக்குக்கு மாறி வருகிறது. அது நல்லதல்ல. பொதுவாகவே நமது நாட்டில் பெண்களை இரண்டாம் வகுப்பு குடிமக்களாகதான் நடத்துகிறோம். நீங்கள் ஒரு மனிதனை பார்க்கும்போது ஒரு நபரைத்தான் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு குடும்பத்தையே பார்க்கிறீர்கள்.
தினசரி காலையில் கோவிலில் தெய்வத்துடன் 10 நிமிடம் தனியாக யிருக்கிறீர்கள் அரசனும் தெய்வமுமாக! அந்த வேளையில் எப்படி உணர்கிறீர்கள்?
ஒவ்வோரு முறையும் மெய்சிலிர்த்து புல்லரித்து போகும் அந்த நிகழ்வு. ஒரு அற்புதமான பரவசமான தருணம்.

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?
சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்
மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?
ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
அருணையின் கருணை
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?
கம்பன் கண்ட சிவராம தரிசனம்
பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்
அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)
கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்
வேல் உண்டு, பயமேன்?![[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்](http://www.tamilhindu.com/wp-content/uploads/Chibhavanandar-150x150.jpg)
[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்
நார்வே சிறையும் போதிசத்வரும்
இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)![[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி](http://www.tamilhindu.com/wp-content/uploads/chitbhavananda-150x150.png)
[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்



திருவனந்தபுரம் மன்னரின் நேர்காணல் மிக அற்புதம். தமிழ் இந்து விற்கு நமது நன்றிகள் பலப்பல.
ஆஹா என்ன ஒரு எளிமை? ஸ்பெக் ட்ரம் புகழ் “ராஜா” பற்றி அறிந்தே பழகிப் போன செய்திகள் மத்தியில் இந்த ராஜாவை பற்றி மீடியாக்கள் கவலை படப்போவதில்லை. அதனால் இந்த மன்னருக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வெட்கம்கெட்ட டிவி சேனல்களும் செய்திப்பத்ரிகைகளும் பத்மநாபனின் செல்வத்தை ஏலம் விடும்/”பொதுவுடைமை” ஆக்கும் முயற்சிகளில் தான் ஈடுபடுகின்றன. பத்மநாபனின் திருவுள்ளம் யாரே அறிவார்?
இப்படியும் மனிதர்கள் இப்போதும் வாழ்கிறார்கள்.நம்மை சுற்றி நல்ல விஷயங்களே நடப்பதில்லை என்று பல சமயங்களில் மனம் விரக்தி அடைகிறது . ஆனால் எது குறித்தும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் திருவனந்தபுர மன்னரின் பேட்டியை படித்தவுடன் எழுகிறது.எப்பேர்ப்பட்ட எளிமை, ஆன்மீக சிந்தனை,கடவுள் நம்பிக்கை.இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் நம்மிடையே வாழ்வதால் தான் மழை பெய்கிறது.மன்னர் குடும்பம் நீடூழி வாழ எல்லாம் வல்ல பத்மநாப சுவாமியை வேண்டுவோம்…..
மலை முழுங்கி மகாதேவன்களாக ஆ ராசாக்கள் இருக்கும் போது இந்த எளிமையான நேர்மையான ராஜா வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார் . மன்னர் குடும்பம் நீடூழி வாழ்க.
சாணக்கியர் தான் நினைவுக்கு வருகிறார் . இவர்கள் இன்றைய சாணக்கியர்கள். போற்றுதலுக்கு உரியவர்கள் .
http://hayyram.blogspot.com/2011/07/blog-post_16.html
அரச தரப்பைப் பேட்டி கண்டு ஒரு ஜெர்மனிய பத்திரிக்கை தகவல்கள் தருகின்றது.
ஆனால், பிரபலமாக்கப்பட்ட இந்திய மீடியாவின் இக்கால ஜமீந்தார்களோ, அக்கால அரசதரப்பைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கவே முனைந்து உழைக்கின்றன. வெட்கம் அற்ற பிழைப்பு.
ஹிந்துஸ்தான் டைம்ஸைப் பாராட்டுகிறேன்.
இதை மொழிபெயர்த்துத் தகவல்கள் தந்து, நன்மைமேலும், நேர்மறை வாழ்க்கையின் மேலும் நம்பிக்கை வரவழைத்த வி. ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
.
இருபதாம் நூற்றாண்டிந் இணையற்ற மனிதர். கோடானுகோடி செல்வத்தின் பரம்பரை உரிமை என்ற செருக்கு எள்ளளவும் அற்ற அதிசய மனிதர்.
இவர்தான் இன்றைய உண்மை சாமியார். இவர் புகழ் உலகம் உள்ளளவும் உயர்ந்து விளங்கும். இவரை சந்தித்து உரையடியாடியமைக்கு மிக்க நன்றி.
உண்மையில் இவர்தான் ‘பாரத ரத்னா’.
நெகிழ்ச்சியூட்டும் நேர்காணல்.
தமிழ் ஹிந்துவுக்கு நன்றி.
-சேக்கிழான்.
உலகத்தின் எந்த ஒரு மூலையில் வாழ்ந்தாலும் ஹிந்து சமயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கோவில் நகை சொத்து இவை யாருக்கு சொந்தம் என்று நம்புவாரோ அதனையே திருவனந்தபுரத்து மன்னரும் கூறுகிறார். ஹிந்து சமயத்திலும் ஆலய வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்பற்றி கூறினாலும் அதனை பொருட்படுத்தத்தேவையில்லை. மன்னர் கருத்தையும் ஹிந்துக்களின் கருத்தையும் மதித்து உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் செயல் படும் என்று நம்புவோம்.
எளிமைக்கு உதரணமாக விளங்கும் அதிசய மனிதர். மிக எதார்த்தமான வாழ்கையை தேர்ந்து உள்ளார்.இவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள். – அப்படமான உண்மை
செல்வம் அனைத்தையும் பத்மநாப சுவாமிக்கு சொந்தம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இருக்க கூடாது.ஆனால் செல்வம் கோவில் ரகசிய அறைகலில்
கோவில் ரகசிய அறைகளில் தூங்குவதால் யாருக்கம் உபோயோகம் இல்லை.
அதனை ஏழை இந்துகளின் கல்விக்கும் , மருத்துவதிற்கும் பயன் படுத்தினால் தெய்வத்தின் அருள் எல்லோர்க்கும் உண்டு
முன்னாள் அரச குடும்பத்தின் எளிமை
இங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள எங்கள் குடும்ப நண்பரது மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். அந்த நண்பருக்கு மன்னர் குடும்பத்துடன் நல்ல பழக்கமிருந்தது. திருமணத்திற்கு திருவிதாங்கூர் இளவரசியும் அவரது கணவரும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த அனைவரும் பட்டாடைகள், நகைகள் அணிந்து படாடோபமாக வந்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் மிகச் சாதாரண ஆடையில் மிக எளிமையாகக் காட்சியளித்தனர். இன்று பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவர்களின் எளிமைதான் கண்முன்னே தோன்றுகிறது.
– இரா. பிரகதீஸ்வரி,
அறந்தாங்கி
இங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
மன்னருக்கு செல்வத்தின் மேல் விருப்பம் இல்லை.
இப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளதா?
(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..
திருட்டு போவதை விட ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது கூச்சலாக இருந்தாலும் பரிசிலிக்க வேண்டிய நியாயம்.
maarthanda varman”s humble submission about Padamanabhaswamy:s jewellery,belong to the temple and it is responsiblity of the temple trust/authorities to decide as what they can do & donars donated for ultimate running and maintenacne of the temple.and even today, in Tamiland, many great temples like Brahadeeswara and vaideeswaran temple have properties exteneded throuhgout the state of Tamiland.So, it is now left to the concerned Trust to manage things.and it is not business of anybody.
குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
கலைஞர் உரை:
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.
மு.வ உரை:
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.
Translation:
One thing I beg of beggars all, ‘If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray’.
Explanation:
I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly”.
1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:
“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.
பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.
தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.
ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.
கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.
எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”
====கேரள உயர்நீதி மன்றம்.
@ Kalimulla
இது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்
இதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பேச எந்த ஒரு தகுதியும் கிடையாது. நீங்கள் விவாதம் செய்ய வேறு தலைப்புகள் பல உள்ளன். எப்பொழுது ஆப்ரகாபியர்கள் இந்த மண்ணில் கால் வைத்தர்களோ அந்த பொழுதே இந்த நாட்டில் தரித்திரம் குடி கொண்டுவிட்டது. ஒரு கோயிலேயே இவ்வளவு பணம் இருந்து இருந்தால் மற்ற கோயில்களில் எவ்வளவு செலவம் இருக்க வேண்டும். அப்படி என்றால் மக்கள் எவ்வள்வு வசதி வாய்புடன் இருந்து இருப்பர் என்று சற்று நினைத்து பாருங்கள். அதுவும் தவிர வாய்ப்பு கிடைத்தால் ஹம்பி சென்று பாருங்கள்.
இந்த மண்ணிற்கு சிறிதும் சம்மந்தம இல்லாத பாலைவன கோட்பாட்டை விட்டு உங்கள் பாட்டன் முப்பாட்டனால் பேணி காக்கப்பட்ட பண்பாட்டிற்கு திரும்புங்கள். சாதி முறையும், ஜமீந்தார் முறையும், மொழி ரீதியான பிளவுகளும் ஆப்ரகாபிய படையெடுப்பின் பின்பே வந்தது என்பதை நினைவிள் கொள்ளுங்கள்.
அரேபிய மதத்தை போன்ற குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் நாங்கள் அல்ல. அனைத்து கோயில் மற்றும் வருமானமும் இந்தய அரசாங்கத்திற்கு தான் போகிறது. அவ்வளவு ஏன் அரேபிய மத சடங்கிற்காக இந்திய அரசு வழங்கும் பணத்தில் பெரும்பான்மையானவை கோயில் நிலத்தில் இருந்து பெறபடும் பணம் தானே?
அதுவும் தவிர ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில பக்தர்கள் தரும் பணத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக கொடுக்கும் ஹிந்துக்களை பார்க்கும் பொழுது எப்பொழுது பார்த்தாலும் சலுகை வேண்டும் சலுகை வேண்டும் என்று கையேந்தி நிற்கும் உங்கள் இனத்திற்கு, கொடுக்கும் எங்களை பார்த்து ஏளம் செய்வது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போல் உள்ளது. என்றைக்காவது உங்கள் மதத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை நாட்டிற்காக் கொடுத்து இருக்கிறீர்களா? இந்த நாட்டின் 45% நிலத்தையே அரேபிய மத்ததிற்கு விட்டு கொடுத்து இருக்கிறோம். ஆனால் நீங்களோ ஒரு 2 ஏக்கர் நிலத்தை அயோத்தில் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் யார் நல்லவர்கள் யார் பிச்சைகாரர்கள் யார் மத வெறியர்கள் என்று.
அதுவும் தவிர ஹிந்துக்கள் நல்லவர்கள், அதனால் தான் நீங்கள் மதம் மாறினாலும் இங்கு பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறீகள்.
அதுவும் தவிர நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் ஒன்று உள்ளது
http://www.jeyamohan.in/?p=18111
பத்மநாபசாமியின் சொத்து இரு வகை. நகைகள் உள்ளே உள்ள சொத்து என்றால் வெளியே உள்ள சொத்து,நிலங்கள். பழங்காலத்தில் கோயிலுக்குப் பலர் நிலங்களையும் கட்டிடங்களையும் தானமாக எழுதி வைத்தார்கள். வாரிசில்லா சொத்தை பத்மநாபனுக்கு அளிக்கும் வழக்கமிருந்தது. மன்னரும் ஏராளமான நிலங்களை அளித்தார். ஆகவே திருவனந்தபுரத்தில் இன்றும் பத்மநாபசாமிக்குச் சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் நகரின் நடுவில். திருவிதாங்கூர் முழுக்கப் பல்லாயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள் உள்ளன. எல்லாத் தென்கேரள நகர்களிலும் பல்லாயிரம் கட்டிடங்கள் உள்ளன.
அந்நிலங்கள் கோயிலின் பல்வேறு ஊழியர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டன. கோயிலுக்குப் பொருட்களை அளித்தவர்களின் உபயோகத்துக்கும் வாடகைக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் எவரும் அந்நிலங்களை சுதந்திரத்துக்குப்பின்னர் திருப்பி அளிக்கவில்லை. அந்நிலங்களும் கட்டிடங்களும் முழுக்கத் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. திருவனந்தபுரம் நகருக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்பது ஆவணக்கணக்கு. அவற்றில் பல இன்று பெரும் கடைகளாகக் கட்டப்பட்டு லட்சக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கிறது. கோயிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சாலைபஜாரில் செண்ட் ஒன்றுக்கு ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் அமைந்த கட்டிடத்துக்கு எண்பது வருடங்களாக வருடம் நாற்பது ரூபாய் வாடகை கட்டி வருகிறார்கள்!
பத்மநாபசாமியின் நகைகளை விற்பதோ ஏலம்போடுவதோ அசாத்தியமென அனைவருக்கும் தெரியும். அதற்கு இந்தியத் தொல்பொருள் துறை அனுமதிக்காது. ஆனால் அவரது நிலங்களை விற்பதோ ஏலம்போடுவதோ முழுக்கமுழுக்க சட்டபூர்வமானதே. ஆகவே இந்நிலங்களை விற்றால் என்ன? எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படலாம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே? -என்றார்
செய்யமுடியாது. அந்நிலங்களை வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகள் அல்ல. பெரும்பாலும் பெருவணிகர்கள். அரசியல் பின்னணி கொண்டவர்கள். இடதுசாரிகள் வலதுசாரிகள். முக்கால்வாசி நிலங்கள் மாற்று மதத்தவர்களின் கைவசம் உள்ளன, அவர்களே அதிகமும் வணிகர்களாக இருந்தார்கள். மிகக்கணிசமான நிலங்கள் தமிழ் வணிகர்களின் கைகளில் உள்ளன. பத்மநாபசாமியின் சொத்தை ’மக்களுக்கு’ ப் பயன்படுத்தவேண்டுமெனச் சொல்பவர்கள் இந்தச்சொத்தை ஏழை மக்களுக்கு முதலில் பயன்படுத்திக் காட்டலாமே. பத்மநாபசாமியின் சொத்து கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து மக்கள்நலனைப் பாதுகாக்கலாமே?
இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.
//இது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்
இதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பே//
Solan
நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் அது பொது விசயமும் கூட. தனிப்பட்ட விசயம் என்று சொல்லமுடியாது. யு எஸ்ஸில் ஒரு வீட்டில் குழந்தையைப்போட்டு பெற்றோர் தொடர்ந்து அடித்தாளோ, அல்லது கணவன் மனைவி கூச்சலிட்டுச் சண்டையிட்டாலோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் போலிசுக்குப்போன் பண்ணி வரவழைத்து விடுவார்கள். ஒரளவுக்குத்தான் “தனிப்பட்ட விசயம்’
இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறது.
அரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது ? கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad? R all of them Hindus ?
இந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.
மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்? இனி அரசகுடும்பம் தலையிடாது.
பின்னர் அக்கோயிலைப்பாதுகாப்பது ஆர்? களைப்பாதுகாப்பது ஆர்? கடைசியாக அரசுதானே ? இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி போட்டுச் செய்யப்போகிறார்களா? அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்.
இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா ? அதனால் ஆருக்கு நன்மை என்ற கேள்விகளைக்கேட்பதற்கும் ஒருவன் இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்பது எப்படி? அப்பணம் எங்களுக்குத்தான். உங்களுக்கு பேசவே அருகதையில்லை என்பது பொருளிடமிருக்கும் பேராசையே. இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? நகைவியாபாரிகள் மட்டும்தான் இந்துக்களாகயிருக்கமுடியும் போலிருக்கிறதே ?
சரி. அவற்றை என்னதான் செய்வது ? பத்மநாப சுவாமி கோயிலுக்குத்தான் அவ்வளவு நகையையும் செல்வமும் என்றால் ஒரே ஒரு கோயிலுக்குத் தேவையில்லை. அவ்வளவு இருக்கிறது அங்கே. ஏற்கனவே திருப்பதி கோயில் ‘பணக்காரச்சாமி’ என்று பெயரெடுத்துவிட்டது. இன்னும் பணக்காரச்சாமிகளை உருவாக்கவேண்டுமா ? இன்னொரு பதிவில் ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்.
//இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.//
//திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னன் கொடுத்த நகைகள் எல்லாம் காணோம் என்ற குற்றச் சாற்று எழவில்லையா? நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே! குறிப்பிட்ட தேதிக்குள் நகைக் கணக்குகள் பார்க்கப்பட்டு, அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வில்லையா?
ஆண்டு ஒன்றுக்கு அக்கோயிலின் வருமானம் ரூ.33,199 என்றும், செலவு ரூ.33 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கணக்குச் சொன்னார்களே தீட்சதப் பார்ப்பனர்கள் – அதே நேரத்தில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரப்பட்ட 18 மாதங்களில் வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே!//
//கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன//
If we look at the above, we can see pattern
1) the people (who are already exploiting the donations offered to the temples and its assets– dont want to have any accountability)–To continue their looting and to deny the transparency to a common hindu, they dont want any regulation from govt, common man and of course, poor devotees,
2) to hide their looting in matters of temple jewels,land revenue, money revenue, they just point fingers at govt, other hindus who are demanding transparency and accountability.
3) a small group of people form various fronts and claim “we hindus will take care of the wealth and affairs ourselves”– does it not sound means we are already there to loot the money.. wealth is meant for our looting..we will not give share… therefore others dont talk about this..
4) Even a small pvt/govt co submits audited accounts every year, there are millions of hindu temples, chruches and mosques, pvt mutts… are they submitting their accounts to their devotees after calling for a general body meeting like that…they appeal for donation but they dont ask public to come and have a look at their financial and other transactions…
////இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறதுஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது ? கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad? R all of them Hindus ?///////
வலுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். அதுவே காவலுக்கு தகுந்த ஊழியர்களை தகுந்த ஊதியத்தோடு நியமிக்கும். ஊரில் உள்ள வயல்வெளிகளை காவல் காக்கும் தலையாரிக்கு அப்படியே வயலின் விளைச்சல் முழுதும் அள்ளி கொட்ட முடியாது.தகுந்த ஊதியம் மட்டுமே தரமுடியும்
////இந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.///
ஆமாம் இந்தியாவுக்கு மட்டும் என்று கூட சொல்ல கூடாது, உலகம் முழுதுக்கும் தொடர்பு உண்டு. என்று இனி சொல்ல வேண்டும்
////மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்? இனி அரசகுடும்பம் தலையிடாது.
பின்னர் அக்கோயிலைப்பாதுகாப்பது ஆர்? களைப்பாதுகாப்பது ஆர்? கடைசியாக அரசுதானே ? இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி
போட்டுச் செய்யப்போகிறார்களா? அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்////////////
இதற்கு மத சார்பற்ற !!! இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.
இதில் வைணவ சுடராழி திரு ஜோசெப்பை வேறு உவமை காட்டுகிறீர். அவர் நிலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு? இரண்டு வாரங்கள் முன்பு அவர் தளத்தில் அவர் வெளியிட்ட ஞாயிறு கேள்வி பதில் பகுதியில் பத்மநாபனின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்ற தலைப்பில் அவரது பேச்சு வெளியானது.நீஎங்கள் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் எல்லாம் அவரின் கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள்.
இன்று இக்கருத்தை நான் எழுதும் போது திருவரங்கத்தந்தாதி 17 ம் பாகம் விளக்கம் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அவர் அல்லும் பகலும் அனவரதம் அவனையே நினைத்து கொண்டிருக்கும் உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்.
/////ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்./////
இல்லாத பல கோயில்களுக்கு கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை அதையும் நீங்கள் வலியுறுத்தவில்லை.
நாளை ஒரு பள்ளிவாசலில் அல்லது சர்ச்சில் இவ்வளவு பொருள் கண்டுபிடிக்கபட்டால் அதனை பற்றி நாக்கை தொங்க போட்டு கொண்டு அதனை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு வந்து இந்துக்கள் அலைய மாட்டார்கள், மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் எழுதுவதுதான் சொத்துக்கள் மேல் பேராசை கொண்டுள்ளது என தெளிவாய் தெரிகிறது.
ஜோ. அமலன் அவர்களே……
ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வது என்றால் தங்களுக்கு கொள்ளை பிரியம் போலும்…
.// இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா //
அந்த செல்வங்களெல்லாம் இன்றைய ரூபாயாகவா இருக்கின்றன ? அப்படியே எடுத்து செலவு செய்வதற்கு ? அவற்றின் தொன்மைக்கு ஒரு மதிப்பே கிடையாதா ? கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேற்படி செல்வங்களுக்கு புனித தன்மை கிடையாதா ? அந்த செல்வங்களை அழிக்காமல் ,உரு மாற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா ?
நம்முடைய தரித்திரத்திற்கு இந்த ஒரு கோயிலின் செல்வம் போதாது. அதற்காக ஒவ்வொரு கோயிலாக கொள்ளையடிக்க கிளம்பிவிடுவோமா ? எங்கள் கோயிலில் கிடைத்த பணம் எங்களுக்கு என்று சொன்னால் அது உங்களுக்கு பேராசையாக தெரிகிறதா ?
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்களிடம் உள்ள செல்வங்களை அரசின் கட்டுப்பாட்டில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதா ?
ஒரே ஒரு ஹிந்து கோயிலில் கிடைத்த சொத்தைப் பற்றி இவ்வளவு விவாதம். சரி, மற்ற மதங்களை பற்றி ஏன் ஒருவரும்பேசுவதில்லை?குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நகரிலும் நட்ட நடுவில் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வைத்துள்ளனரே,அதை பற்றி உங்களைப்போன்ற பொது நல வாதிகள் இன்றுவரை மூச்சு விட்டது உண்டா? முஸ்லீம்கள் சந்து சந்துக்கு கட்டும் மசூதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது[ பெரும்பாலும் அரசை ஏமாற்றி ஹவாலா மூலம் வரும் பணம் ] என்ற கேள்வியையாவது நீங்கள் எழுப்பியது உண்டா? கிடப்பது கிடக்க அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் அடித்துக்கொள்வது ஏன்?
// இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? //
இறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா ? விட்டால் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே ?
கோயிலில் இத்தனை செல்வம் இருப்பது தெரியவந்தது நீதிமன்றத்தால் தான் .ஆகவே தான் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகிறது.உங்கள் வீட்டில் எவ்வளவு நகை இருக்கிறது, அதை எங்கே வைத்துள்ளீர்கள் என்பதை செய்தித்தாளில் விளம்பரம் செய்வீர்களா ? செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போது அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று மூக்கால் அழுதால் எப்படி ? கேட்டால் இந்த வழக்கை தொடுத்ததே ஒரு ஹிந்துதானே என்பீர்கள். சுந்தரராஜன் போன்ற துரோகிகளை ஹிந்து மதம் தொடர்ந்து எதிர் கொண்டே வருகிறது.
அனைத்து ஹிந்து கோயில்களையும் அரசுகள் தங்கள் பிடியில் இருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்கட்டும். எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம். வேறு எவரும் நடுவில் புகுந்து நாட்டாமை செய்ய தேவையில்லை……
//வலுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். //
Dravid
கோயில் இருக்குமிடம் கேரளா. ஆங்கு நாத்திகர்களோ பார்ப்பன எதிர்ப்பாளர்களோ ஆட்சியில் இல்லை. சாண்டியின் அரசு அந்தக்கோயிலை எடுத்துகொள்ளவில்லை. பாதுகாப்பு மட்டுமே தருகிறது. கோயில் இன்றும் அரசபரம்பரையிடம்தான் இருக்கிறது.
“மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால்” என்று சொலவதே பொருட்பிழை. முன்பு இக்கோயில் ஆத்திக சாமஜத்திடம் இருந்தது போலப் பேசுகிறீர்களே ?
அன்றும் இன்றும் அஃது ஆத்திக சமாஜத்திடம் இல்லை. மன்னர் கையில்தான் இருந்தது. இருக்கிறது.
உங்கள் கோரிக்கையைச் சாண்டியிடம் வைக்க முடியாது. மன்னரிடம்தான் வைக்கவேண்டும். மன்னர் இங்கு பேசுவதைப்பார்த்தால் ஆத்திகர்கள் ஒரு கமிட்டி வைத்து இவரிடம் வந்தால் கொடுப்பார் போலத்தான் தெரிகிறது. அவர் அப்படிச் செய்யலாம். உரிமை உண்டு. சாண்டியோ வேறெவருமோ தடுக்கமுடியாது.
ஆயிரக்கணக்கானவாண்டுகளாக ஏன் மன்னர் செய்யவில்லை திராவிடன் ? ஏன் ஆத்திகர்கள் அவரிடம் “எங்களுக்குக் கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லவைல்லை ? ஏனென்றால், அன்று சிரி பத்மநாப சுவாமி ஏழை. இன்று பணக்காரர்.
அற்ற குளத்தில் அறுனீர்ப்பறவைகள் வருமா ? வாரா. எல்லாம் பணம். கொள்ளைப்பணம். ஆசை ஆரை விட்டது ?
இது தான் திராவிட பொய் என்று சொல்வது. முதலில் உங்கள் பார்வையில் அது பார்ப்பன கோயில், பார்பன கடவுள், அதில் திராவிட திராவைகளுக்கு என்ன வேலை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு வராதீர்கள். அது எங்கள் தனிப்பட்ட சொத்து. அது மட்டும் இன்றி திராவிட கலகத்தின் சொத்தை பற்றி நாங்கள் எங்காவது கேஸ் போட்டோமா?
இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது.
இது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. நீங்கள் சொன்ன கணக்கு கோயில் தட்டில் விழும் பணம். அந்த கணக்கு வாடகை பற்றியது கிடையாது. இதை தான் முழு பூசணீக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வது. வாடகை பணத்தை பற்றிய தீட்சிதர்கள் சமர்பித்த கணக்கை வசதியாக மறைத்துவிட்டு இப்படி பொய் பேசுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லை. ஏன் கத்தோலிக்க கிறித்துவ மிஷினரி ஊழல் பற்றி செய்தி வந்ததே அதை பற்றி ஏன் எந்த திராவிட திராவைகளும் வாய் திறக்கவில்லை. ஹோ… முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் சர்ச்க்கு போக வேண்டுமே.. அவ்வாறு போனால் செருப்பால் அடிப்பார்களே? இந்த முற்போக்கு கம்யூனிஸ்டுகள் எல்லாம் கிறித்துவ மிஷிநரிகளின் கூலிப்படைகள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்காவது போய் உங்கள் பொய்யை பரப்புங்கள் எடுபடும்,
//இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.//
There s no connection between Central Government and this temple. The matter here involves only three persons: the king, the petitioner who is now dead, and the State Govt. Now, only two. the king and the State Govt.
State Govt has already gone on record that the temple belongs to the King and as such, the unearthed wealth will also go to him if he wants. But the king does not. In case he had said yes, we want, the State wont bother; and leave the temple and wont give protection to the jewels as they r private property.
Only because the jewels have now no ownership, the state is giving protection by paying from taxpayers money which include people of other religions also.
// இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு?
இறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா ? //
நான் கேட்ட கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு பதில் சொல்லத்தெரியாமல் திசை திருப்புகிறீர்கள்.
மன்னர் சொன்னார்: ‘அவை திருட்டே போனாலும் நான் கவலைப்படமாட்டோம். ஏனென்றால் அவை எங்கள் நகைகளாகப் பார்க்கவில்லை”
இதேதான் பத்மநாப சுவாமிக்கும் வரும். நகைகள் மனிதனால் பதுக்கப்பட்டவை ஆங்கே. அல்லது கோயிலுக்காக கொடுக்கப்பட்டவை.
அவைகளைக் கோயிலுக்காகக் கொடுக்கப்படாவிட்டாலும் கோயில் கோயிலே. சுவாமி சுவாமியே. நகைகளைப்போட்டுவிட்டால் சுவாமிக்கு தேஜஸ் வன்து விடும் போடாவிட்டால் போய்விடும் என்பது மனிதனின் கற்பனை.
ஆனால் மனிதன் அப்படி அலங்காரம் பண்ணக்கூடாது என்று சொல்லவில்லை. மதமும் சொல்லவில்லை. ஆயினும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கு மீறி பணக்காரத்தனம் காட்டப்படக்கூடாது.
கோயிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் சுவாமிக்குத் தேவையில்ல. அவ்வளவு அதிகம். எனவேதான் நான் கேட்ட கேள்வி.
பணம் என்றால் பிணமும் வாய்பிளக்கும். பணம் பாதாளம் வரைக்கும் பாயும். பணம் பன்தியிலே குணம் குப்பையிலே என்பதெல்லாம் மனிதனின் வாழ்க்கையிலே. இறைவனோடு கலன்த வாழ்க்கையில் இருக்கா. இருக்க முடியா.
இறைவனுக்களிப்படும் நிவேதனங்களில் ஆடம்பரம் இருக்கக்கூடா. அவை மனிதனின் அடக்க உணர்வின் அடையாளமாகவே இருக்க வேண்டும்.
‘கோயிலில் எனக்குத்தான் முதல்மரியாதை’ என்பதற்கும்;. பணக்காரன் எவன் என்று பார்த்துப் பல்லிளித்துத் தட்டை நீட்டுவதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை. பத்மநாப சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளுக்கும் சுவாமிக்கும் முடிச்சுப்போடுவது சுவாமியை அவமானப்படுத்துவதாகும். நகைகள் ஆருடையவை என்ற கேள்வி மனிதனின் பிரச்சினை மட்டுமே.
(In this .com, I have however defended treating the rich differently or preferentially on a different principle that should not be taken out of that context.)
சுடராளி ஜோசப்பைப்பற்றி திராவிடன் எழுதியதில் அப்பாவித்தனமே பளிச்சிடுகிறது.
அவரப்பற்றி நான் சொன்னது இத்தளத்தை நடாத்துவோருக்கே. இங்கெழுதும் உங்களைப்போன்றேருக்கன்று. இவர்கள் ஒரு பிழையைச் செய்தார்கள். தளத்தில் எவரும் எழுதலாம். ஆபாசமாக மட்டும் இருக்கக்கூடாதென்று விதியைப்போட்டுவிட்டு தளத்தில் எழுதுபவர் எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். நாளை எந்த சாதி என்று ஆராய்ச்சிசெய்தாலும் வியப்பில்லை.
மேலும் இணைய தள விவாதமேடைகளில் கண்டிப்பாக எழுதுபவரின் உண்மை விவரங்கள் வெளியிடப்படவேண்டும் என சிலமேடைகள் மட்டுமே கேட்கும். பலர் கேட்கமாட்டார்கள். அப்படிப்பலரில் இதுவும் ஒன்று.
ஆக, என் பெயரை வைத்து ‘கிருத்துவர்’ என ஆதாரமில்லாமலும் தேவையில்லாமலும் முடிவு கட்டி ‘இந்து மதத்தைப்பற்றிய ஆர்வத்துக்கு நன்றிகள்’ என்று எழுதிவிட்டார்கள். ஏதோ, இவர்கள்தான் இந்துமதத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பது போலவும், இவர்கள் மதத்தைப்பற்றி பாசிட்டிவாக எழுதினால் இவர்கள் நன்றிகள் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து பிறர் எழுதுவது போலவும் அதீத கற்பனை.
மேலே கூறிய கருத்துகளுக்கு இலகுவாகத்தான் சுடராளி ஜோசப்பைப்பற்றி சொல்லப்பட்டது. ஒருவேளை அவர் வெறும் ஜோசப் என்று இங்கு எழுதிவிட்டால் இவர்கள் அவரிடமும் பந்தா காட்டுவார்கள்: “நீங்கள் ஜோசப்பாக இருந்தாலும் ஆழ்வார்கள் மேல காட்டும் ஆர்வம் பாரட்டுக்குரியது. நன்றிகள் என்று.” இஃது எப்படி இருக்கு?’
(The honorary title Sudraali was conferred on him by Srirangam Aandavan (jeevar) swamigal. Joseph swaami told the Jeeyar that he wanted to change his name into a Vaishnavite name, for which the Jeeyar replied: ‘Let the present name continue’. Hence, his name continues. Joseph swami is a prof of Tamil, a catholic christian by birth. He remained unmarried. His parents insisted on his marriage and traced a bride within community or caste which meant a fellow catholic christian. But the son told his parents: I don’t mind whoever she is, but she must be deeply immersed in Azhwaars, which, Prof hoped, would definitely turn her towards Srivaisnavism. Accordingly, a catholic bride was found. She is a fellow prof of Tamil equally immersed in Azhwaars. Her names too continues as a christian name.
Similarly I know of another popular person, a woman but she is a saivite. The title on her was conferred by Kanchi seer for her services to Saivism. But I wont divulge her name here for reasons personal to me, except one bio fact that she was also born as a catholic christian.)
மேலும் திராவிடன். நாமெல்லாரும் பாமரர்கள். உண்டு உறங்கி கண்டு களித்து வாழும் அற்பர்கள். ஆனால் நமக்கும் இறைவன் தேவை. போகிறோம். வணங்குகிறோம். நாமெல்லாரும் ஆழ்வாராக முடியா. நம்மாழ்வாரே ‘விண்ணகம் செல்வது மண்ணவர் விதியே!’ என்று நமக்குச் சொல்லிவிட்டாலும் நாம் அஃதை இப்போது செய்யவியலா. அஃதாவது சுடராளி ஜோசப்பைப்போல இறையுணர்வில் எப்போதும் ஆழங்கால் பட முடியாது. நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை நெறி அப்படி.
அவரைப்போன்றோரையும் இங்கு எழுதுபவர்களையும் (நுங்களயும் சேர்த்துத்தான்) முடிச்சுப்போடுவது அவரைப்போன்றோரின் புகழை மாசுபடுத்துவதாகும்.
“If I write abt Azhwaars, I am a great vainava ” – please get rid of this idiotic notion.
Read me to know abt them. If u like, get inspired to read them on your own. If u find me unreadable, don’t read me. If u find me twisting facts here and there, point them out with proofs. Beyond that, don’t go.
அன்பார்ந்த ஸ்ரீ த்ராவிடன், பூஜ்ய ஸ்ரீ வரதயெதிராஜ ஜீயர் ஸ்வாமிகளால் ஜோசஃப் அய்யங்கார் ஸ்வாமி என கௌரவிக்கப்பட்ட அந்த பரம பாகவதோத்தமரின் ஓரிரு ஒலி நாடாக்கள் கேட்டு நான் பயன் பெற்றுள்ளேன். அன்னாரது திருவரங்கத்தந்தாதி ஒளிபரப்பாவதாக சொல்லியுள்ளீர்கள். கேழ்க்க மிக ஆவலாக உள்ளேன். இணையதளம் மூலம் கேழ்க்க இயலுமெனில் அது சார்ந்த சுட்டி விவரம் தெரிவிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.
தமிழ் ஹிந்து தள நிர்வாகிகள் இயலுமானால் அன்னாரது வ்யாசங்களை நமது தளத்திலும் வெளியிட விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
Even now the tax paid by the majority hindus are spent for haj subsidy, special minority scholarships, and many minority oriented programmes. In some states the temple collections are diverted for minority religious places also. Thiruppathy collections were controlled by non-hindu chief ministers like Venkal Rao, Rajasekharareddy, Brahmananda reddy etc. How much of it goes to hindu temples? Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only. Any one who does not believe in Hinduism, idol worship, and temple worship culture has no right to even comment on it.
http://www.dajoseph.com/
உயர்திரு கிருஷ்ண குமார் ஐயா,
மேலுள்ள சுட்டியில் சென்று தாங்கள் அவரின் உரைகளை கேட்கலாம்.
ஞாயிறு கேள்வி பதில் மற்றும் வாராவாராம் அவரின் வைணவ உரைகளும் வெளியாகின்றன. அவரின் மெயில் deyeje@yahoo.com இம்முகவரியில் தொடர்பு கொண்டால் அவர் தளத்தில் வரும் புது உரைகளின் விவரம் உங்கள் மெயில்க்கு அனுப்பி வைப்பார்.
jo amalan
//
இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா
//
தமிழகித்துர்க்கு மட்டும் மேடம் மாற்றம் செய்ய வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் ஏழாயிரம் கோடிகள். இதை எல்லாம் பொது பணமாக்கி எல்ல்லாருக்கும் ரூவா கொடுத்துரலாமே.
உமது பேச்சில் கொஞ்சமாவது ஞாயம் இருக்கா. உங்களுக்கு இப்படி எழுட வெக்கமாவே இல்லையா. வாடிகனுக்கு வரும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு கூழ் ஊத்தவா செலவு பண்றாங்க. ஏன் ஆப்ரிக்காவுக்கு அனுப்பலாமே. எல்லா பணமும் மதம் மாற்ற உலகம் பூர அனுப்பப் படல
சில்லி சாம் ப்ளாகுல போய் வாடிகன் சொத்து மக்களுக்கேன்னு எழுதுங்க – பிரசூரம் கூட ஆவாது
அரசு பாதுகாப்பு செலவை தானே ஏத்துக்காது. அத பூரா கோவில் கணக்குல எழுதிருவானுங்க
கோவில் சொத்து கோவிலுக்கே. உண்டியல்ல போட்ட காசு கோவிலுக்கே. அரசுக்கு பணம் வேணும்னா கோவிலுக்கு வெளியல உண்டியல் வெச்சு பாக்க சொல்லுங்க. ஒரு பய காசு போடறானான்னு பாப்போம்.
இது தான் திராவிட பொய் என்று சொல்வது. .இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது. …இது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. etc
This is written by Gomathi.
The writer shd begin her or his mge clearly stating against whose mge she or he is addressing above mge. I think it is agains Kans’ mge.
Pl avoid confusion.
//Even now the tax paid by the majority hindus are spent for haj subsidy, special minority scholarships, and many minority oriented programmes. In some states the temple collections are diverted for minority religious places also. Thiruppathy collections were controlled by non-hindu chief ministers like Venkal Rao, Rajasekharareddy, Brahmananda reddy etc. How much of it goes to hindu temples? Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only. Any one who does not believe in Hinduism, idol worship, and temple worship culture has no right to even comment on it.//
Ravi!
In this forum, comments r passed on Christianity and Islam, and the acts of the respective leaders, the theologies etc. by Hindus are sharply criticized.
Y not extend the same right to others to pass comments on ur religion, the acts or ur religious leaders and ur theology or philosophy ?
Cd u reply ?
Next, take ur statement: “Let the Padmanabha swamy temple assets remain with Temple and King. This belongs to Temple goers only.”.
It s a very vague statement. First, consider this fact that becomes obvious from the interview of the ex-King in this blog post itself.
He disassociates with the temple assets now. The CM, Kerala has already come forward with the offer that if the King intervenes to accept the treasure, the State has no objection as it belongs to him, and it will leave the scene.
If the king had accepted the offer, there wont be any discussion or prob now.
Now that he has washed his hands off, we take up ur next proposal of giving to Hindus Who r such Hindus ? Do u mean the Hindus of Kerala? Coz. the Hindus of Kerala wont allow any Hindus to interfere with their temple affairs They did not allow Tamil vaishanavite ceremonies in Tvm temple ? u refer to them only dont u?.
Ok. accepted. Has any Hindu orgn of Kerala come fwd ? Not till now. Even if they come fwd, they shd prove their collective identity No such identity exists there. If some group of course comes forward, it will open a Pandora’s box of litigation. Other Hindus of Kerala will ask: Who has given right to this group to stake claim to the treasure ?
Ok, now take ur next stake holders namely: temple goers.
This s the vaguest part of all !
Who r they ? As Nagarajan says, everyone from every state and country professing Hindu religion goes there to worship. Among whom who r in ur mind to whom the treasure shd be entrusted? Pl tell us. The prob will b solved. People will thank u.