காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

மூலம்: சீதாராம் கோயல்
தமிழில்: ஜடாயு 

[சீதா ராம் கோயல் எழுதிய Islam vis-à-vis Hindu Temples (1993, Voice of India publication) என்ற நூலின் கடைசி அத்தியாயத்தின் மொழியாக்கம் இது. இந்த விஷயம் பற்றி இந்துத் தரப்பிலிருந்து தெளிவான, கூர்மையான வரலாற்றுக் கண்ணோட்ட்த்துடன் எழுதப் பட்ட கட்டுரை இது.

இணையமும் தகவல் தொழில் நுட்பமும் பெரிதாக வளராத 1990களில் சீதாராம் கோயல் இதை எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பும் அவர் மீது பெரும் மரியாதையும் ஏற்படுகிற்து. அவரது புனித நினைவுக்கு இந்த மொழியாக்கம் சமர்ப்பணம்].

காபா முன்பு ஒரு சிவாலயமாக இருந்து பிறகு முகமது நபியால் மசூதியாக மாற்றப் பட்டது என்ற கருத்தை முன்வைக்கும் ஒரு கட்டுரையை சில வருடங்கள் முன்பு படித்தேன். அந்தக் கட்டுரையின்படி அப்போது காபாவின் பிரதான தெய்வமாக இருந்த மகாதேவரைக் குறித்த ஒரு நீளமான பழைய அரபி மொழிப் பாடலும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பொ.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் காலத்தில் இயற்றப் பட்ட பாடல் அது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது.

[பொ.மு: பொதுயுகத்திற்கு முன், Before Common Era, BCE.   பொ.பி: பொதுயுகத்திற்குப் பின், Common Era, CE]

அந்தக் கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் ஆர்வ மேலீட்டால் ஒரு காரியத்தில் இறங்கினார். இப்போது நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டத்திய அரபு இலக்கியத் தொகுப்புகள் எல்லாவற்றையும் அலசி அதில் இந்தப் பாடல் இருக்கிறதா என்று தேட முயன்றார். இதற்காக வெளிநாடுகளில் உள்ள பல நூலகங்களையும் தொடர்பு கொண்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.  எனவே, ”உலகின் எல்லா இடங்களிலும் உள்ள பல பழைய கட்டிடங்களும் ஏதோ ஒரு காலத்தில் ஹிந்து சின்ன்ங்களாக இருந்தவையே” என்பதான அரிய கருத்துக்களைக்  கூறும் மரபைச் சேர்ந்த “ஹிந்து வரலாற்றாசிரியர்களின்” இன்னொரு தயாரிப்பாக இருக்கக் கூடும் என்று கருதி நானும் அவரும் அந்தக் கட்டுரையை முழுவதுமாக நிராகரித்து விட்டோம்.

ஆனால் தற்போதைய ஆய்வின் போது நான் கண்டறிந்த சில தகவல்கள் எனது தீர்ப்பை மாற்றிக் கொள்ள என்னைத் தூண்டுகின்றன. காபா ஒரு சிவாலயமாகத் தான் இருந்தது என்று அறுதியிட்டு இப்போதும் என்னால் கூறமுடியாது தான்.  ஆனால் சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், காபா ஒரு புகழ்பெற்ற ஹிந்து புனிதத் தலமாக இருந்தது என்ற முடிபை ஒரேயடியாகத் தள்ளி விடமுடியாது. இந்த ஆய்வுத் தகவல்கள் எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடப் படட்டும். இந்தக் கட்டுரையில் அவற்றை முன்வைக்கிறேன்.

காபா வரைபடம்

பண்டைய அரேபியாவில் இந்துக்கள்

பண்டைய இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், சிந்த், பலுசிஸ்தான், மக்ரான் ஆகிய பிரதேசங்களின் கடற்கரைகளில் பல துறைமுகங்கள் இருந்தன. (மக்ரான் – Makran – இன்றைய ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரைப் பிரதேசம், ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்தது).  இத் துறைமுகங்கள் ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே பணப் புழக்கம் மிகுந்த, தொடர்ச்சியான கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்தன எனபதற்கு இப்போது ஏராளமான அகழ்வுச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. மேலதிக சான்றுகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன ((Shaikha Haya Ali Al Khalifa and Michael Rice (ed.), Bahrain through the ages, the Archaeology, London, 1986, pp. 73-75, 94-107, 376-82; Andre Wink, Al-Hind: The Making of the Indo-Islamic World, Vol. I, OUP, 1990, Chapters II and III; Lokesh Chandra et. al. (ed.), India’s Contribution to World Thought and Culture: A Vivekananda Commemoration Volume, Madras, 1970, pp. 579-88; Muhammad Abdul Nayeem, Prehistory and Protohistory of the Arabian Peninsula, Vol. I, Saudi Arabia, Hyderabad (India), 1990. pp. 160-69.)).

சீனா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள்  ஒரு பக்கத்திலிருந்தும்,  ஈரான், அரேபியா, எதியோப்பியா, எகிப்து, மேற்கு ஆசியா, ஐரோப்பா மறு பக்கத்திலிருந்தும் இந்த வணிகத்தில் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களும், உலோகங்களும், பல்வேறு தொழில்சார்ந்த தயாரிப்புகளும் ஏற்றுமதி செய்யப் பட்டது இந்த வணிகத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.  அரபிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றின் கரைகளை ஒட்டிய நாடுகளின் கடற்கரைப் பிரதேசங்களிலெல்லாம் இந்திய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன.  மேற்குறிப்பிட்ட இந்தியத் துறைமுகப் பகுதிகளிலும் அரேபிய, ஈரானிய, எதியோப்பிய, எகிப்திய, சிரிய, ஐரோப்பிய வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்தன. மற்ற அனைவரையும் விட எதியோப்பிய, அரேபிய வணிகர்களே அதிகமாக இருந்தனர்.

இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர் என்பதற்கு இப்னு இஷாக் (Ibn Ishaq) சான்று பகர்கிறார். அபிசீனியர்கள் ஏமன் நாட்டின் மீது படையெடுத்தபோது  அரபிகளில் சக்தி வாய்ந்த ஹிமாய (Himayrite) பழங்குடியின் தலைவர் ஸாயிஃப் தூ யஜான் (Sayf b. Dhû Yazan) ஈரானிய அரசர் குஸ்ருவிடம் (Chosroes) உதவி கேட்கப் போகிறார். அவர் சொல்கிறார் “அரசே, கருங்காக்கைகள் (ravens) எங்கள் நாட்டை ஆக்கிரமித்து விட்டன”. குஸ்ரு கேட்கிறார், “எந்தக் காக்கைகள்? அபிசினீயர்களா, சிந்தியர்களா?” ((Sîrat Rasûl Allãh, op. cit., p. 30.))

காக்கைகள் என்பது கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல். அந்தக் காலகட்ட்த்தில் அரேபியர்களும், ஈரானியர்களும் இந்தச் சொல்லால் இந்தியர்களையும், அபிசீனியர்களையும் அடையாளப் படுத்தினர்.

இன்னொரு சான்று. முகமது நபியைப் பார்ப்பதற்காக பி அல் ஹாரித் (B. al-Hãrith) குழு வந்திருந்தது. “அவர்கள் நபியிடம் வந்தபோது, இந்தியர்களைப் போன்று தோற்றமளிக்கும் இவர்கள் யார்?” என்று நபி கேட்டார். அவர்கள் பி அல் ஹாரித் பி காப் (B. al-Hãrith b. Ka’b.) குழுவினர் என்று சொன்னார்கள்” ((Ibid., p. 646. Tãrîkh-i-Tabarî, op. cit, p. 46, report the Prophet as saying, “Yeh to Hindustãnî mã’lûm hole haiñ.”)).   இதன்மூலம் முகமது நபியவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி நன்கு பரிச்சயம் இருந்தது என்றே தோன்றுகிறது.

இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த “வத்” (Wadd) என்ற அரேபிய தெய்வத்தின் உருவம் குறித்து அறிஞர் Ch.முகமது இஸ்மாயில் இவ்வாறு எழுதுகிறார் (‘An Image of Wadd: A Pre-Islamic Arabian God’ என்ற கட்டுரை) –

“பழைய அரபுப் பதிவுகளின் படி, வத் நெடிய உருவம் கொண்டவர்; இடையில் குறுக்காகக் கட்டப் பட்ட துணியும், அதன் மீது வேறொரு துணியும் கொண்ட ஆடையணிந்தவர்; வாள், வில், அம்பறாத்துணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவர். அவரது உருவத்திற்கு முன்பாக,  ஒரு உலக்கையும் அதனுடன் இணைந்த ஒரு கொடியும் சித்தரிக்கப் படும்.

இது இங்கு கொடுக்கப் பட்டுள்ள அகழாய்வில் கிடைத்த ’வத்’  சிற்ப உருவத்துடன் பொருந்துவதில்லை என்று பார்த்தவுடன் தெரிகிறது. இந்தப் படத்தில் ஒரு குள்ள உருவம், ஸ்காட்லாந்து படைவீரர்கள் போன்று மடிப்புகளுடன் கூடிய, பாவாடை போன்ற உடையணிந்திருப்பதாகக் காட்டப் படுகிறது. தலையில் உள்ள தொப்பியில் ஆரம் போன்று தொங்கும் இழைகள் நீண்ட மயிர்க்கற்றைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் கூட, கிராமப்புறங்களில் இருந்து ஏமன் நாட்டின் ஏடன் (Aden) துறைமுக நகருக்கு வரும்  பதூனிகள் (Beduins –  ஒட்டகம் வளர்க்கும் அரபு பழங்குடியினர்) தங்கள் தலையின் கீழ்ப்பகுதியை சிரைத்துக் கொள்வதையும், உச்சியில் சிறு குடுமி வைத்துக் கொள்வதையும், சில சமயம் இந்துக்களைப் போன்று நீண்ட கூந்தலை குடுமியாக அள்ளி முடிவதையும் காண முடியும்.  இதன் அடிப்படையில், அரேபிய மக்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  இந்தப் படத்தை சர் ஜான் மார்ஷல் (Sir John Marshall) அவர்களுக்கு அனுப்பினேன்.  அவர் எனக்கு அனுப்பிய பதிலில்,  இந்த பாவாடை அணிந்த அரபிய தெய்வ உருவத்திற்கும் சிந்து சமவெளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தாம் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார். பாவாடைகள் எல்லாக் காலகட்டங்களிலும் அணியப் பட்டன; ஆனால் இந்த உருவம் சிந்துசமவெளி நாகரீகத்திற்கு 2500 ஆண்டுகள் பிந்தைய காலத்தியது என்றும் கூறினார். அதாவது, இந்த உருவத்தை பொ.மு 800 காலத்தியதாக அவர் மதிப்பிட்டார்.” ((Indian Antiquary, Vol. LVIII [May, 1929], pp. 91-92.))

ஆனால் சர் ஜான் மார்ஷலின் காலத்திற்குப் பிறகு செய்யப் பட்ட பல  அகழ்வாராய்ச்சிகள் அரேபியாவுக்கும் சிந்து பிரதேசத்திற்குமிடையே இடையறாத தொடர்புகள் இருந்தன என்று சந்தேகமின்றி நிரூபிக்கின்றன.  இந்தத் தொடர்புகள் சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தொடங்கி விட்டன. சிந்து, பலுசிஸ்தான், மக்ரான், ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஃபார்ஸ் மாகாணம் (Fars Province) , பாரசீக வளைகுடா தீவுப் பிரதேசங்கள், தெற்கு அரேபியா ஆகிய பகுதிகள் பெரிதும் ஒத்த கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை.

பாகனிய அரபு தெய்வங்கள்

பயணங்களாலும், வணிகத்தாலும் ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்புகள், செழுமையான கலாசாரத் தொடர்புகளுக்கும் வழிவகுத்தன.  குறிப்பாக, ஹிந்துக்களும் சரி, பாகனிய வழிபாட்டாளர்களாக இருந்த அரபிக்களும் சரி,  தீர்க்கதரிசி மதங்களுக்கே உரியதான பிறரை விலக்கும் தன்மையை (exclusivism) கொண்டிருக்கவில்லை.  இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே என்பதை முன்பு பார்த்தோம். இயற்கை வழிபாட்டு பாகனிய மனநிலை (the pagan psyche) எல்லா தேசங்களிலும், எல்லா காலங்களிலும் தெய்வங்கள் குறித்து ஒரே விதமான படிமங்களையும், உருவகங்களையும், புராணங்களையுமே வெளிப்படுத்துகிறது என்பதை மதங்களை ஒப்பீடு செய்து பயிலும் ஆய்வாளர்களூம், மாணவர்களும் நன்கு அறிவார்கள்.

குறிப்பாக, தெற்கு அரேபியாவின் மிகப் பழைய குடிகளான ஸபையூன்கள் (Sabaeans) இந்தியாவுடன் மிகச் செழிப்பான வணிகம் செய்து வந்தனர். இந்தியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் அவர்கள் குடியிருப்புகளை நிறுவியிருந்தனர். அவர்கள் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் தங்கள் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சூரிய ஆலயங்களையும் அமைத்திருந்தனர். அவர்கள் மறுபிறவிக் கொள்கையிலும், யுகங்கள் குறித்த காலச் சுழற்சி முறை பற்றிய கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். முக்கியமான இன்னொரு விஷயம் – ஸபையூன்களின் மத ஸ்தாபகராக பூதாஸ்ப் (Bûdasp)  என்பவரை அரபிகள் குறிப்பிடுகின்றனர். ((First Encyclopaedia of Islam, op. cit, Vol. II, p. 770.)) இந்த பூதாஸ்ப் போதிசத்துவரே அன்றி வேறொருவர் இல்லை.

பண்டைய அரேபிய விக்கிர ஆராதனைகளில், பால் (Baal) என்ற தெய்வத்தின் வழிபாடு மிகப் பரவலாக இருந்த்து. இந்த தெய்வத்தைக் குறித்து பைபிளிலும், குரானிலும் நிறைய வசைபாடல் உள்ளது.  குரானின் 37.123 வசனத்திற்கு விரிவுரை எழுதுகையில் அப்துல்லா யூசுப் அலி  கூறுகிறார் – ”சிரியாவின் பால் என்ற சூரியக் கடவுள் வழிபாடு பெருவளர்ச்சியடைந்த போது,  அஹப், அசரியா (Ahab, Azariah) ஆகிய கடவுளர்களின் வழிபாடு தேய்ந்து மங்கியது. பால் கடவுள் வழிபாட்டில் இயற்கை சக்திகளை வணங்குதல், இந்தியாவின் லிங்க வழிபாடு போல உயிர் பிறப்பிக்கும் சக்திகளை வணங்குதல் ஆகிய அம்சங்களும் இருந்தன.” ((The Meaning of the Glorious Qur’ãn, Text, Translation and Commentary, Cairo, Third Edition, 1983. Vol. II, p. 1203, Footnote 4112.)).

இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன”  என்றும் அவர் குறிப்பிடுகிறார் ((Summarised by Will Durant, op. cit., p. 309.)). அரேபியாவில் அக்கால கட்ட்த்தில் வசித்த இந்துக்கள் பால் கடவுளை சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருந்தால் அது ஆச்சரியமே இல்லை. இது போன்ற பல சிவலிங்க உருவங்கள் காபாவிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும், அரேபியாவின் பற்ற இடங்களிலும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

காபா என்னும் புனிதத் தலம்:

வரலாற்று ரீதியாக, உண்மையில் காபா பல்வேறு விதமான தெய்வ உருவங்களால் நிரம்பிய பாகனிய கோயிலாகத் தான் இருந்தது.  இறைத் தூதர் ஆபிரகாமால் அது இறை இல்லமாக நிறுவப் பட்டது என்று கூறும் இஸ்லாமிய கருத்தாக்கம் ஒரு முழு கற்பனையே அன்றி வேறில்லை. எனவே, அரேபியாவில் அப்போது வசித்த இந்துக்கள் காபாவில் வழிபட்டு வந்திருக்க்க் கூடும் என்பது விசித்திரமான விஷயமே அல்ல. பாகனிய மனம் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா தெய்வ உருவங்களையும் இயல்பாக வழிபாட்டுணர்வுடனேயே நோக்கும்.  இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொ.பி. 1560 -1620 காலகட்ட்த்தில் வாழ்ந்த புகழ்பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஃபிரிஷ்டா (Firishta) எழுதுகிறார் – “இஸ்லாமின் தோற்றத்திற்கு முன்,  காபாவிலுள்ள விக்கிரகங்களை வழிபடுவதற்காக இந்தியாவின் பிராமணர்கள்  தொடர்ந்து அங்கு புனித யாத்திரை செய்து கொண்டிருந்தனர்” ((Tãrîkh-i-Firishta translated into Urdu, Nawal Kishore Press, Lucknow, 1933, Vol. II, p. 498 corresponding to p. 311 of the Persian text. The sentence in Urdu reads, “Aur Brahman Hindustãn ke qibl zahûr Islãm khãna-i-Ka‘ba ki ziyãrat aur wãhañ kê butoñ kî prastish kê wãstê hameshah ãmdo-shud kartê thê.” See also Tãrîkh-i-Firishta, translated into Urdu by Abd Illahi Khwaja, 1983, Vol. II, p. 885, and John Briggs, op. cit., Vol. IV, p. 234. He observes in a footnote, “The subject is full of interest, opens an extensive field of investigation for the Oriental antiquary, as leading to the development of the history of a period at which India and Egypt were closely connected…” )). தனக்கு முன்னிருந்த வரலாற்றாசிரியர்களையும் இந்த விஷயத்தில் ஆதாரமாக அவர் குறிப்பிடுகிறார்.

லாத், மனாத் (Lãt, Manãt) என்கிற இரண்டு பிரதான பெண் தெய்வங்கள் முகமது நபி அவர்களை அழிக்க வரும்போது அரேபியாவில் இருந்து ஓடிவிட்டன என்றும் அவை சோமநாதர் கோயிலில் தஞ்சம் புகுந்து விட்டன என்றும் முஸ்லிம்கள் பல காலம் நம்பி வந்தனர். முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீண்டும் மீண்டும் இந்தக் கோயிலின் மீது படையெடுத்து வந்ததற்கு அரேபியாவில் உருவான இந்த ஐதிகமும் ஒரு முக்கிய காரணம்.

ஏன் சோமநாதர் கோயில்? ஏனென்றால், இந்தியாவின் மேற்குக்  கடற்கரைப் பகுதியான சௌராஷ்டிரத்தில்  பிரசித்தி பெற்று விளங்கிய அந்தக் கோயில்தான், அங்கிருந்த அரேபிய பாகனியர்களுக்கு முக்கியமான ஒரு புனிதத் தலமாக விளங்கியது,  அரேபியாவில் இருந்த ஹிந்துக்களுக்கு காபா விளங்கியது போல. இது ஒன்றும் அதிஊகம் அல்ல. ஏனென்றால் இதே கடற்கரையில் உள்ள பிரபாச பட்டணம் (Prabhas Patan) இந்திய-அரபு வணிகத்தின் முக்கிய துறைமுகமாக இருந்தது. இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அங்கு பெருவாரியாக அரபிக்கள் வசித்து வந்ததற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது. இஸ்லாமுக்குப் பின்வந்த காலங்களிலும், வாகேலா (Vãghelãs) அரசர்களின் காலம் வரை கூட, அரேபியர்கள் இத்துறைமுகத்தில் வசித்து வந்தது குறித்து இந்த நூலின் 3வது அத்தியாயத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

இந்து நினைவில்..

காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது. அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு  பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –

“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள். ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.

அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங்  கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்” ((Lokesh Chandra et. al. (ed.), op. cit., p. 598.)).

குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம் ((Makkê-Madînê dî Goshatî, edited by Dr. Kulwant Singh, Panjabi University, Patiala, 1988, p. 49. )). மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும் ((By “BrahmaNas” Guru Nanak means the priestly class, al-Hums among the pagan Quraysh. Furqãn, of course, is the Qur’ãn. The word “Muhammad” in Arabic means “he who is prayed to”. )).

ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன ((It is on record that the Prophet changed all personal names which referred to ancient Gods and Goddesses of Arabia, and substituted them with Jewish names. The practice continues till today in all conversions to Islam.)).  அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார்.  எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர். கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார்.  மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”. ((Translated from a Hindi version of Makkê-Madînê dî Goshatî, op. cit, p. 188.))

இது குரு நானக் கூறியதாக மேற்குறிப்பிட்ட நூலில் வருவது.

இஸ்லாமுக்கு முந்தைய காலத்திய அரபிக்களில் இந்துக்கள் இருந்தார்கள் என்பதற்கோ,  அவர்களுக்கு ஹிந்துப் பெயர்கள் இருந்தன என்பதற்கோ, பிராமணர்கள் வழிபட்டார்கள் என்பதற்கோ, அதர்வ வேதத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கோ,  இதுவரை  மிக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை ((Though the al-Hums who looked after the Ka‘ba in the pre-Islamic period resembled the BrãhmaNas in many respects (First Encyclopaedia of Islam. op. cit, Vol. III. p. 335).)). ஆனால் இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள் ஜனம் ஸாகி நூலில் பதிவாகியிருப்பதாகக் கருத இடமிருக்கிறது.  இஸ்லாம் படையெடுத்த இடங்களில் எல்லாம், அங்கு வசித்த இந்துக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடவேண்டிய நிலை எற்பட்டது என்பதை முஸ்லிம் வரலாற்றாசிரியர்களே ஆவணப் படுத்தியுள்ளனர். ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களால் கையகப் படுத்தப் பட்டபோதும் இதுவே நிகழ்ந்தது.

உலகில் எல்லா இடங்களிலும் பொது மக்கள் வரலாற்று நிகழ்வுகளை தங்கள் கலாசாரத்தின் மொழியிலேயே நினைவுறுத்திப் புரிந்து கொள்ளும் பழக்கத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். குரு நானக்கிடம் இந்தக் கதை வந்து சேர்ந்த காலத்திலோ, அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்திலோ, இந்துக்களின் நினைவில் காபா ஒரு சிவாலயமாகவும், அங்குள்ள பிரதான தெய்வம் சிவலிங்கமாகவும் பதிந்து போயிருக்கலாம். காபாவில் வழிபாடு நடத்திய பாகனிய பூசாரிகளை பிராமணர்களாகவும், குரானை அதர்வ வேதத்தின் பொய்யான திரிபாகவும் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். தெளிவாக விளங்கும் விஷயம் என்னவென்றால், இஸ்லாம் உருவான அந்த தருணத்தில் அரேபியாவில் குடியிருந்த அல்லது அங்கு சென்றிருந்த இந்துக்கள், அரேபியாவின் பழம்பெரும் மத்த்தைப் புரட்டிப் போட்டு புதிய நம்பிக்கை முறைகளை பலாத்காரமாகப் புகுத்திய அந்தப் “புரட்சி”யை சுத்தமாக விரும்பவில்லை; அதைப் பற்றிய நல்லெண்ணம் எதுவும் அவர்களுக்கு இல்லை.

நபியைப் பற்றியும், அவரைப் பின்பற்றுபவர்களைப் பற்றியும் இந்துக்கள் மனதில் அப்போது உருவான பிம்பம் மிகச் சரியானதே என்று பிற்காலத்தில் அவர்களது தாயகத்தில் இஸ்லாம் விளைவித்த அனுபவங்கள் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டன.  ஒரு மாபெரும் மத உபதேசகராக நபியை நிலைநிறுத்தி, ஒரு அமைதி மார்க்கமாக இஸ்லாமுக்கு வெள்ளையடித்துக் கற்பிக்க இந்திய அரசு இயந்திரம் முழுவதும் சேர்ந்து இமாலய முயற்சிகள் செய்து வருகிறது. ஆனாலும் கூட, இன்று வரை தொடர்ந்து வரும் இந்தக் கதையை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இந்துக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் நிஜம்.

எப்படியானாலும், காபாவை முன்வைத்து நான் எழுதிய இந்த விஷயங்கள் இத்துறையில் உள்ள வரலாற்றாசிரியர்களால் மேலும் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதில் ஐயமில்லை.

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர்.
1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.

நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சான்றுகள்:

50 Replies to “காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?”

  1. Pingback: Indli.com
  2. அன்புள்ள ஜடாயு,

    மிக தெளிவான அற்புதமான கட்டுரை. உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்லான் அருளட்டும்.

  3. பேரன்பின் ஜடாயு அவர்களுக்கு,

    மிகச்சிறப்பான ஆய்வு… நீண்ட காலமாக நம் மக்கள் காபா ஒரு சிவஸ்தலம் என்றே நம்பி வருகிறார்கள்.. சவுதி அரேபியாவிற்கு பணி நிமித்தம் சென்ற பலருடனும் பேசும் போது (இலங்கையிலிருந்து சென்ற தமிழ் இந்துக்கள்) அவர்கள் இதனை உறுதிபடத் தெரிவித்தார்கள்.. அதிலும் ஒருவர் சொன்ன விஷயம் முக்கியமானது.

    அவர் குறிப்பிடுகிறார்.. தான் ஒரு பெரிய விபத்தில் சிக்கியதாகவும்.. சன நெருக்கடி மிகுந்த சவுதி அரேபியாவின் பெருந்தெருவில் நிகழ்ந்த இந்த விபத்தால் தனக்குப் பெரிய காயங்கள் உண்டானதாகவும்.. அப்போது அவ்வழிச் சென்ற முஸ்லீம் ஒருவர் அவ்விடத்தே மண்டியிட்டு ஏதோ வாசகங்கள் சொல்லி பிரார்த்தித்ததாயும்… இதனால் தன் உடலிலிருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளிச் செல்லாமல் பாதுகாக்கப்பெற்றதாயும்..

    இலங்கைத் தமிழ் இந்துவான இவர் சொன்னது உண்மையோ.. பொய்யோ நான் அறிகிலேன்.. ஆனால், இப்படிக் குரான் ஓதுவதால் மருத்துவ நிலைப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிகிற போது, இப்போது தாங்கள் கோடிட்டுக் காட்டுவது போல குரான் அதர்வவேதத்தின் திரிபு என்பதாக இருக்குமோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.

    இஸ்லாமியச் சடங்காசாரங்களில் சைவசமய மரபுகள் சில பின்பற்றப்பெறுவதாகத் தெரிவதும், இதே சிவாலயம் அமைந்த பூமியின் செல்வாக்காக இருக்கலாம்..
    மூன்றாம் பிறை பார்ப்பது.. நோன்பு நோற்பது.. இப்படிச் சில ஒற்றுமையான சடங்காசாரங்கள் சைவமரபின் வெளிப்பாடு போலவே தோன்றுகின்றன.
    காபாவில் கிடைக்கிற புனிதநீரூக்கும் சிறப்புச் சக்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இது பழைய நம் சிவாலயப் புனித தீர்த்தமாக இருந்திருக்கலாமல்லவா..?

    இப்படி எல்லாம் சிந்திப்பதற்கு நான் அறிந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் சில உதவி செய்வதாகவும் தெரிகிறது.. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் என்கிற முகமது இப்ராஹிம் பாடியது இராஜநாயகம் என்ற இஸ்லாமியக் காவியம்..

    இதில் உள்ள 20ம் படலம் ஹக்பத்துல்லாவில் குறுபான் கொடுத்த படலம் என்று அழைக்கப்பெறுகிறது..
    இப்படலத்தில் காபா பற்றிய சில செய்திகள் கிடைக்கிறது. இதில் காபா பற்றிய பாடல் ஒன்று..

    “அத்தலத்திழிந்தங்கிருந்தனர் அதன் மேல்
    அமரர்கள் கரத்தினால் இயற்ற
    எத்தலத்தினிலும் வியனுற விளங்கி
    இலங்கொளி கதிர்மதி இருபால்
    நித்த நித்தமும் சாய்ந்தோட மேலவர்கள்
    தவமெலாம் நிறைவுற உலக
    மத்திமத்துதித்த ககுபத்துல்லா தன்
    வாய் திறந்தழுதது அன்றே

    இந்தப் பாடலில் காபா அழுததாகவும் சொல்லப்படுகிறது.. அதற்கு கடவுள் அதனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க, அது சொல்லிற்று..

    “… எனைச் சூழ் தரவுன்னக் கிணையாய் இயற்றிய புத்துகளை வைத்து
    ஆதிவித வணக்கம் புரிந்தனர் கொடியோர் ஆகையால் அழுதனன் என்ன..” (பாடல்- 20-05)
    தன்னைச் சுற்றிக் கொடியவர்கள் சிலைகளை (புத்துக்களை) வைத்து வழிபடுவதால் அழுதேன்..

    இதன் பிறகு நபிகள் வந்து இவற்றை அகற்றி காபாவைத் தூய்மை செய்ததாகவும் அங்கே குறுபான் (உயிர்பலி) கொடுத்ததாகவும்.. இந்த இராஜநாயகம் நூல் குறிப்பிடுகிறது.
    அதனையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது..

    “பொருந்தும் எப்பதிக்கும் முதற்திருப்பதியாம்
    புனிதநன்னகரில் வந்ததன் பின்
    அருந்தவமியற்றும் ககுபத்துல்லாவுட்
    புகுந்து அதைச்சூழ்ந்து அணியாய்
    இருந்த புத்தனைத்தும் ஏவலார் தமை விட்
    எடுத்தெறிந்திடப் புரிந்து இறையைப்
    பரிந்ததிலிருந்து வணங்கியுட் கனிந்து
    பரவினர் கருணையங் கடலே (பாடல்- 20-10)

    நபிகள் பிராமண மரபினர் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுவதாக எழுதியிருக்கிறீர்கள்.. அவர் குலம் குறைஷியங்குலம் என்று இப்படலம் கூறுகிறது.. (குற்றமற்று உயரும் குறைஷியங்குலத்தின் கொழுந்ததுவாய்)

    கலிமா (மூலமந்திரம்) என்று இருப்பது பற்றி தாங்கள் ஏதும் அறிந்திருக்கிறீர்களா..?
    முஹம்மது நபி தம் காலத்தில் பல மாறுதல்கள் செய்ததும்.. ஒரு (சிவ) ஆலயமாக இருந்த காபாவை மாற்றியமைத்ததும்.. நான் நினைக்கிறேன்..

    ஓரளவு தெளிவாகவே பல்வேறு இடங்களிலும் பதிவு செய்யப்பெற்றிருக்கிறது..
    முஹம்மது பற்றியும் காபா பற்றியும் குரான் பற்றியும் மேன் மேலும் ஆய்வு செய்தால்.. அதனூடே பொதிந்திருக்கும் சைவ இறையியல் சார் உண்மைகளும் சிவாலயம் என்று நிறுவுவதற்கான சான்றுகளும் நிறைக் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

    இங்கு தரப்பெற்றிருக்கும் படங்களும் மிகச்சிறப்பாக உள்ளன.. தங்கள் பணி மேலும் சிறக்க பார்வதீ பரமேஸ்வரன் பேரருள் புரியட்டும்.

    தி.மயூரகிரி சர்மா

  4. திரு. ஜடாயு,
    உங்கள் கட்டுரையை படிப்பதற்கு முன்புதான் ஒரு பேட்டியை படித்தேன்.
    Mr.Sheikh ‘Adel Shehato என்பவர் எகிப்து சிறையிலிருந்து விடுதலை
    அடைந்துள்ளார். தங்களின் ஆட்சி எகிப்தில் அமைந்தால் வரலாற்று
    சிறப்பு மிக்க பிரமிட் போன்ற பாகனீய குறியீடுகள் சுற்றுலாத்துறையிலிருந்து நீக்கப்படும் என்று கூறுகிறார்.
    https://www.memri.org/report/en/0/0/0/0/0/0/5601.htm

    ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின்போது பாமியன் புத்தர் சிலைகள்
    சிதைக்கப் பட்டதும் என் நினைவுக்கு வந்தது.

    தங்கள் முன்னோர்கள் புரிந்த அக்கிரமங்கள் வெளிவந்து விடுமோ என்றே
    இவர்கள் அஞ்சுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
    அதனாலேயே இவற்றைப் போன்ற குறியீடுகளை இன்றுவரை அழிக்க
    முயல்வதாகவே நான் சந்தேகிக்கிறேன்.

  5. மனாத் என்பதையும் சோ-மனாத் என்பதையும் குழப்பிக்கொண்டதாலேயே சோமநாத் ஆலயத்தை அழிக்க முனைந்தனர். அவர்கள் இங்கே வந்து தாக்கியதற்கு அங்கிருந்த இந்துக்கள் வந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

    அல்-லா என்பது ஆண் கடவுள், அல்-லாத் என்பது பெண் கடவுள்

  6. க்றைஸ்தவ பித்தலாட்டங்களைப்பற்றி பல வ்யாசங்கள் எழுதிய ஸ்ரீ சீதாராம் கோயல் பற்றிய அறிமுகம் மற்றும் இந்த காபா பற்றிய தமிழாக்கத்திற்கு நன்றி ஸ்ரீ ஜடாயு.

    ஹரே க்ருஷ்ண இயக்கத்தினர் உலகின் பற்பல பகுதிகளில் ஹிந்து மதத்தின் தாக்கம் க்றைஸ்தவ இஸ்லாமிய மதங்களின் அறிமுகத்தின் முன் ஆங்கே இருந்த சமயங்கள் பற்றியும் அவை ஹிந்து மதத்தை ஒத்து இருந்ததைப்பற்றி விரிவாகத்தொகுத்துள்ளனர்

    அரேபிய பகுதிகளைப்பற்றிய தொகுப்பு கீழ் கண்ட சுட்டியில்

    https://www.salagram.net/VWHMid-East.html

    அரேபிய கவிதைகளில் மஹாதேவர் மற்றும் ஹிந்து போன்ற பதங்களைக் காணலாம்

    முக்யமாக ஒரு ஈரானிய மஸ்ஜிதில் மேற்கூறையில் காணப்படும் மயூரம் மற்றும் சதுர்புஜ விஷ்ணுவின் திருவுருவங்கள் மேலும் ஆராயத்தேவையானவை.

    ஆனால் பாமியான் புத்தா போன்று எவையெவை இஸ்லாமியர்களால் மிச்சம் வைக்கப்படும் என்று சொல்ல இயலாது

  7. அன்புள்ள மயூரகிரி சர்மா அவர்களுக்கு, நன்றி.

    // இஸ்லாமியச் சடங்காசாரங்களில் சைவசமய மரபுகள் சில பின்பற்றப்பெறுவதாகத் தெரிவதும், இதே சிவாலயம் அமைந்த பூமியின் செல்வாக்காக இருக்கலாம்..
    மூன்றாம் பிறை பார்ப்பது.. நோன்பு நோற்பது.. இப்படிச் சில ஒற்றுமையான சடங்காசாரங்கள் சைவமரபின் வெளிப்பாடு போலவே தோன்றுகின்றன.
    காபாவில் கிடைக்கிற புனிதநீரூக்கும் சிறப்புச் சக்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இது பழைய நம் சிவாலயப் புனித தீர்த்தமாக இருந்திருக்கலாமல்லவா..? //

    இந்தக் கட்டுரையை நீங்கள் முற்றிலும் வேறு விதமாக எதிர்த் திசையில் உள்வாங்கியிருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இங்கு பேசப்படுவது எல்லாம் *இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு* அரேபியாவில் இருந்த பாகனிய மதம் பற்றியே, இஸ்லாம் பற்றி அல்ல. இதனை எப்படி இஸ்லாமுக்கும் சைவத்திற்குமான ஒருவித இணைப்பாக நீங்கள் காண்கிறீர்கள் என்பது புரியவில்லை. தயவு செய்து குரானில் சைவசித்தாந்தத்தைத் தேட வேண்டாம் !!!

    அந்தப் பழைய பாகனிய மதங்களை ஒழித்து, அதனைப் பின்பற்றியவர்கர்ளை கொடூரமாக அழித்தே, இஸ்லாம் வேரூன்றியது. ஆனால் அந்தப் பாகனிய மதங்களின் சில கூறுகளை தன்னையறியாமல் சுவீகரித்தது, கிறிஸ்தவம் போலவே. இஸ்லாம் குறித்து எழுதிய வரலாற்றாசிரியர்கள் இதனை மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.

    // தன்னைச் சுற்றிக் கொடியவர்கள் சிலைகளை (புத்துக்களை) வைத்து வழிபடுவதால் அழுதேன்..
    இதன் பிறகு நபிகள் வந்து இவற்றை அகற்றி காபாவைத் தூய்மை செய்ததாகவும் //

    முகமது நபி மெக்காவை முற்றுகையிட்டு, பாகனியர்களை குரூரமாகக் கொன்றொழித்து அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட புராதன பாகனிய அரபு தெய்வங்களின் விக்கிரகங்களை உடைத்த சம்பவத்தையே இஸ்லாமியக் கதையாடல்களில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள். அச்சுறுத்தி இஸ்லாமுக்கு மதம் மாற்றப் பட்ட பாகனியர்களை அவர்கள் கைகளாலேயே அவர்கள் முன்பு வழிபட்ட தெய்வங்களின் சிலைகளை உடைக்க நபியும் அவரது தோழர்களும் ஆணையிட்டார்கள்.

    இந்த சம்பவம் பற்றி சீதாராம் கோயல் இதே நூலில் மிக விரிவாக இதற்கு முந்தைய அத்தியாயங்களில் எழுதியிருக்கிறார். இங்கே படிக்கலாம் –

    The Prophet Destroys Pagan Temples –
    https://voiceofdharma.org/books/htemples2/ch16.htm

    Muhammad and the Meccans –
    https://voiceofdharma.org/books/htemples2/ch15.htm

  8. // அவர் குலம் குறைஷியங்குலம் என்று இப்படலம் கூறுகிறது.. (குற்றமற்று உயரும் குறைஷியங்குலத்தின் கொழுந்ததுவாய்) //

    அவர் குரேஷி தான். அப்படித் தான் இஸ்லாமிய வரலாற்று நூல்களும் கூறுகின்றன. அது தான் சரித்திர உண்மை.

    // நபிகள் பிராமண மரபினர் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுவதாக எழுதியிருக்கிறீர்கள்.. //

    குரு நானக் அவ்வாறு தான் அறிந்த ஐதிகத்தின் அடிப்படையில் கூறியதாக அந்த சீக்கிய நூல் பதிவு செய்கிறது.. அதனை “சான்றுகள்” பகுதியில் சீதாராம் கோயல் விளக்கியிருக்கிறாரே –

    // [13] By “BrahmaNas” Guru Nanak means the priestly class, al-Hums among the pagan Quraysh. Furqãn, of course, is the Qur’ãn. The word “Muhammad” in Arabic means “he who is prayed to” //

    காபாவில் இருந்த அல்-ஹம்ஸ் என்ற பாகனிய பூசாரிகளையே தனக்குத் தெரிந்த கலாசார மொழியில் பிராமணர்கள் என்று குரு நானக் உருவகித்துக் கொண்டிருக்கலாம் என்கிறார் கோயல். மற்றபடி பிராமணர்களுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  9. அன்புள்ள க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு, நன்றி.

    // ஹரே க்ருஷ்ண இயக்கத்தினர் உலகின் பற்பல பகுதிகளில் ஹிந்து மதத்தின் தாக்கம் க்றைஸ்தவ இஸ்லாமிய மதங்களின் அறிமுகத்தின் முன் ஆங்கே இருந்த சமயங்கள் பற்றியும் அவை ஹிந்து மதத்தை ஒத்து இருந்ததைப்பற்றி விரிவாகத்தொகுத்துள்ளனர் //

    இவை எந்த வித வரலாற்றுக் கண்ணோட்டமும் இல்லாமல் ஓட்டைப் பானை கோட்பாடுகளாக (crack pot theories) கூறப் படுபவை. ”BADR is the place where BADRINATH temple once existed in IRAQ, which got demolished when those Hvites became Shiiates. Hvites are called that in Hebrew which means SHIVITES in Sanskrit language” போன்ற வரிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன!

    இவற்றை சொல்பவர்கள் யாரும் வரலாற்றாசிரியர்கள் அல்ல, ஒருவகைக் கோமாளிகள். இவர்கள் குறிப்பிடும் அராபியப் பாடல்கள் ஆதாரபூர்வமானவை அல்ல, இட்டுக் கட்டியவை. அரேபியா முழுவதும், எகிப்து முழுவதும், மேற்காசியாவில் எங்கெங்கும் இந்து தர்மம் கோலாச்சியது போன்ற ஒரு அதீத சித்திரத்தை ஜோடிக்கிறார்களே அன்றி, உண்மையைத் தேடும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

    இத்தகைய “ஹிந்து வரலாற்று” சித்தரிப்புகளைத்தான் சீதாராம் கோயல் இக்கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் கேலி செய்து நிராகரிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    சீதாராம் கோயலின் இந்த நூல் முழுவதையுமே நீங்கள் இணையத்தில் படிக்கலாம் – https://voiceofdharma.org/books/htemples2/ ஒவ்வொரு தகவலுக்கும் எந்த அளவு ஆதாரங்களை அவர் தேடி அளிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். அப்போதும் கூட தனது முடிவுகளை அவற்றின் வரையறைகளையும் குறிப்பிட்டுத் தான் அவர் பதிவு செய்கிறார். இது தான் உண்மையான, ஏற்றுக் கொள்ளத்தக்க வரலாற்று ஆய்வு.

  10. மயூரகிரி சர்மா,

    \\அப்போது அவ்வழிச் சென்ற முஸ்லீம் ஒருவர் அவ்விடத்தே மண்டியிட்டு ஏதோ வாசகங்கள் சொல்லி பிரார்த்தித்ததாயும்… இதனால் தன் உடலிலிருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளிச் செல்லாமல் பாதுகாக்கப்பெற்றதாயும்.\\

    இதை கேட்பதற்கு பெந்தகோஸ்தே நடத்தும் SUNDAY COMEDY SHOW மாதிரி இருக்கிறது. இது போன்று ஒன்று நடந்து இருந்தால் அதை இந்நேரம் அதை பிரபலப்படுத்தி அதை வைத்தும் மதம் மாற்றி இருப்பார்கள். தற்பொழுது முஸ்லீம்களும் கிறித்துவர்களை போல மதம் மாற்ற ஆரம்பித்துவிட்டனர். வேலுர் மற்றும் ஆம்பூர் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்வோர் இதை தெளிவாக காணலாம்…

    \\அதனூடே பொதிந்திருக்கும் சைவ இறையியல் சார் உண்மைகளும் சிவாலயம் என்று நிறுவுவதற்கான சான்றுகளும் நிறைக் கிடைக்கும் என்று நம்புகிறேன்\\

    கேட்பதற்கே அறுவருப்பாக உள்ளது.

    பாலைவனத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால, அவர்களிடம் உள்ள ஒரு சிறு தண்ணீர் குட்டையை பிரம்மாண்டமானதாக போற்றலாம். ஆனால் பல ஆயிரம் பிரம்மாண்டமான ஆறுகளால் செழித்து வளர்ந்த நமக்கு அது ஒரு சிறு அழுக்கு தண்ணீர் குட்டை. அவ்வளவு தான்.

    அதற்காக அந்த அழுக்கு குட்டையில் காவிரியின் தனமை இருக்கிறதா என்பது ஆராய முயற்சிப்பது முட்டாள் தனம்.

  11. // ஹரே க்ருஷ்ண இயக்கத்தினர் உலகின் பற்பல பகுதிகளில் ஹிந்து மதத்தின் தாக்கம் க்றைஸ்தவ இஸ்லாமிய மதங்களின் அறிமுகத்தின் முன் ஆங்கே இருந்த சமயங்கள் பற்றியும் அவை ஹிந்து மதத்தை ஒத்து இருந்ததைப்பற்றி விரிவாகத்தொகுத்துள்ளனர் //

    இவை எந்த வித வரலாற்றுக் கண்ணோட்டமும் இல்லாமல் ஓட்டைப் பானை கோட்பாடுகளாக (crack pot theories) கூறப் படுபவை. ”BADR is the place where BADRINATH temple once existed in IRAQ, which got demolished when those Hvites became Shiiates. Hvites are called that in Hebrew which means SHIVITES in Sanskrit language” போன்ற வரிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன!

    Shri Jatayu pardon me to communicate in English. I wish to clarify some of the views expressed.

    True, many of the research articles produced by the Hindu Research Diaspora is rubbished; thrown as garbage in dustbin for want of indepth study supported by undisputed source materials. Neverthless the process goes on.

    Regarding the URL I have given, I would like to insist that this is not a Research Paper of ISKCON. This is just one among a large collection of papers compiled by Hindu enthusiast ISKCONites enquiring about religious practices in vogue in Europe, America, Africa and Arabia before Christianity and Islam. True many of them could be (Why each one need to be subjected to scrutiny for its validity) just pet theories. But, Still I do not have reason enough to simply throw the lock stock and barrel to the dustbin. Let the readers surf through the mammoth information, study for themselves and form their opinions. That’s it.

    Even today, leftist professional historians do not digest opposition by Hindutva forces of Aryan Invasion theory (well moulded theory of secularists over quite a long period). If someone follows the leftist viewpoints, it would appear, as if, the view points of Hindu Diaspora is out and out rubbish.

    Shri.Sita Ram Goel is well acknowledged as a balanced historian atleast amongst Hindu Diaspora. Although I have not read his book on kaafa, I happened to read, “Jesus Christ – An artifice of aggression” and a few opinions on it. Especially, that of his bitter critic Dr.J.Kuruvachira, the Christian missonery. Ofcourse, if someone takes the pain to read completely Sh.Goel and Dr J, one can conclude that Dr J’s comments are like that of an unsuccessful fox rubbishing the taste of grapes. Competitive name calling, and more important, rubbishing the source materials of Sh.Goel (rebuttal requires class scholarly exercise).

    Some of the acerbic comments :
    1. ” Unfortunately, most of Goel’s writings cannot be qualified as scholarly and therefore they hardly merit a rebuttal or a rejoinder. In addition, an exercise of the sort will be useless against a prejudiced author like Goel. But because of their innate capacity to poison the minds of uncritical readers and their tendency to legitimise and promote communal hatred between Hindus and Christians, Hindus and Muslims, Hindus and secular ideologists, a critique of his writings is called for”
    In spite of what has been written, Dr.J wrote a lengthy 26 page rebuttal which would in itself pin point a critical reader as to who is prejudiced.

    2. ” The content, intent and style of Goel’s Jesus Christ: An Artifice for Aggression reveal that it is a well designed handbook for Hindu communalists.

    Ofcourse why the heart of Dr.J burns can be understood from following comment :

    “The overwhelming concern of Goel in his Jesus Christ: An Artifice for Aggression is to destroy the ‘Jesus of history’ and to sell a ‘Jesus of myth’ instead. Basically, Goel is asking Christians to surrender their affirmation of the historical Jesus so that Christ becomes a mere idea. But as E. Kasemann has rightly pointed out, every verse of the Gospels tells us that the origin of Christianity is not the kerygma, not the resurrection experience of the disciples, not the Christ-idea but a historical event, the appearance of the Man Jesus of Nazareth and his Message”

    I respectfully read every piece of idea of Hindu ideologues on other religions for what they are. May be everyone may not be right. But the ideologues over the period have become smarter and the research papers are more critical. Kudos for the undying spirit. As we say in Hindustani, “Hum honge kamyam ek din”. That we will be successful a day.

  12. \\\\\பாலைவனத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால, அவர்களிடம் உள்ள ஒரு சிறு தண்ணீர் குட்டையை பிரம்மாண்டமானதாக போற்றலாம். ஆனால் பல ஆயிரம் பிரம்மாண்டமான ஆறுகளால் செழித்து வளர்ந்த நமக்கு அது ஒரு சிறு அழுக்கு தண்ணீர் குட்டை. அவ்வளவு தான்.\\\

    ஸ்ரீமதி கோமதி செட்டி, தங்கள் ஹிந்து உணர்வுகளுக்கு என் வணக்கங்கள். இஸ்லாமியர்களுக்கு முக்யமான ஒரு நீர்நிலை, (ஆப்-ஏ-ஜம் ஜம் – Aab-E-zum-zum?) அதே கோணத்தில் ஹிந்துக்களுக்கு முக்யமில்லை தான். பின்னும் உலகில் எங்காயினும் நீர் என்பது ஹிந்துக்களுக்கு மிகப் புனிதமானதே.

  13. உலகெலாம் பல்கிப் பெருகி இருந்த சனாதன தர்மத்தின் சீர்கெடுக்கப்பட்ட வடிவமே இஸ்லாம் என்பது என் கருத்து. அதனால்தான், சனாதன தர்மத்தின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், படிமங்கள் போன்றவை அந்தச் சீர்கெடுக்கப்பட்ட மதத்திலும் அங்கும் இங்குமாகத் தொடருகின்றன.

    எனவே, சைவசித்தாந்தத்துடன் தொடர்புடைய விஷயங்கள் ஒன்றிரண்டை இஸ்லாமில் மயூரகிரி ஷர்மாவால் காண முடிகிறது.

    கலைநயத்தோடு கட்டப்பட்ட குளத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், குளத்தை உபயோகிப்பதில் இருந்து விலகி இருக்கலாம். ஆனால், அது குளமே இல்லை என்று மறுத்து விடமுடியாது. அதேபோல மயூரகிரி ஷர்மா இக்கட்டுரையில் கண்ட சைவசித்தாந்தத் தொடர்புகளை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், விவதிக்கலாம். (காபா ஒரு விஷ்ணு கோயிலாக இருந்ததற்கும் தரவுகள் உண்டு. விவாதிக்க வேண்டிய தரவுகள்.)

    கழிவுநீரை வெளியேற்றி, குளத்தை அதன் இயல்பான தெள்ளிய நிலைக்கு மாற்றி, மீண்டும் உபயோகத்துக்குக் கொண்டு வரவேண்டும். தாகம் தீர்க்க அது செய்ய வேண்டிய பணியாகும்.

    சீர்கெடுக்கப்பட்ட சனாதன மார்க்கத்தை, அதன் முந்தைய ஆரோக்கிய நிலைக்கு நாம் கொண்டு வரவேண்டும். உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இந்த உண்மையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு இதுதான் வழி. ஆதாரங்கள் பல கொடுக்கலாம்.

    உதாரணமாகத் தங்களை இந்திய மரபில் வந்தவர்களாக அடையாளம் காணும் இஸ்லாமியர்கள், இந்து நம்பிக்கைகளை இஸ்லாமிய நம்பிக்கைக்கு இணையாக மதிப்பதைக் காணலாம் (உம்: மானனீய அப்துல் கலாம் ஜி). அதேபோல, உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் சனாதன தர்ம மரபின் தொடர்ச்சியாகத் தங்கள் மரபை அடையாளம் காணத் தேவையான கண்ணொளியை நாம் தர வேண்டும்.

    இந்தப் புரிதலுக்கு வழிகள் செய்தாலே உலகத்தில் உள்ள வன்முறைகள் 90% குறைந்துவிடும்.

    இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் “ இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?“ என்ற கட்டுரையை எழுதினேன்.

    ஏனெனில், இந்தப் புரிதலை முதலில் ஏற்படுத்தாமல் இஸ்லாமியராகத் திரிந்துவிட்ட ஒருவரின் ஆன்மீகப் பாதையைச் செப்பனிட்டுவிட முடியாது. அவரைத் தாய்மதம் திருப்புவதும் முழுமையானதாகவும் இருக்காது.

    பெயரில் மட்டுமே அவர் இந்துவாக இருப்பார். உலகத்தில் அவரது வாழ்வும், அணுகுமுறையும் ஆபிரகாமியத் தன்மையை மட்டுமே கொண்டிருக்கும். புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை என்று ஆபிரகாமிய அணுகுமுறையோடுதான் அவர் செயல்படுவார்.

    அந்த வகையில் சீதாராம் கோயலின் இந்தக் கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் இந்துவில் இதுவரை வெளியான முக்கியமான கட்டுரைகளில் முதல் மூன்று இடங்களில் இக்கட்டுரையும் இருக்கும்.

    இதை மொழிபெயர்த்த ஜடாயுவிற்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பால் மிகப் பெரிய சக்தி ஒன்று நுண்மையாக உயரே தமிழ் உலகில் எழப்போகிறது. அதைச் செய்த ஜடாயுவிற்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இக்கட்டுரையைப் படிப்பவர்களிடம் இதுவரை இருந்த குழ்ப்பங்கள், தயக்கங்கள் எல்லாம் விலக வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். முக்கியமாக உலகெல்லாம் இந்து தர்மம் பரவி இருந்ததா ? என்ற கேள்வி குறித்து.

    கட்டுரையின் மூல ஆசிரியரான சீதாராம் கோயல் அவர்கள் காபா என்பது சிவாலயம் என்பதை மறுக்கவில்லை. அது ஒரு இந்து கோயில்தான் என்று மிகத் தெளிவாக அவர் சொல்லி விட்டார்.

    அவருடைய ஆய்வு முறை நவீன அறிவியல் பூர்வமானது என்பதைக் கவனிக்க வேண்டும். நவீன அறிவியல் முறையே இந்துத்துவர்களின் வரலாற்று அறிதல் கருவியாக இருக்கிறது. அதற்கு மாறாக, இந்துத்துவ வரலாற்று அறிதல் கருவிக்கு எதிராக இருப்பது மார்க்கஸிய முரணியங்கியல் கருவி.

    மார்க்கஸிய முறையை அறிவியல்பூர்வமாகப் புறக்கணிப்பதுதான் இந்து ஞான மரபினைச் சந்தேகத்துடன், இகழ்ச்சியுடன் பார்ப்பதைத் தவிர்க்கும். “இந்து ஞான மரபு” என்பதைக் கண்டறிந்தவர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

    எனவே, நவீன அறிவியல் பூர்வ முறையைக் கருவியாகக் கொண்ட நமக்கு காபா ஒரு இந்துத் தலமாக இருந்தது என்ற உண்மையையோ, அல்லது அரபியாவில் இருந்த இந்து தர்மம் பிற்காலத்தில் சீர்கெட்டது என்ற தெளிவையோ வெளியில் சொல்லத் தயக்கம் சுத்தமாகத் தேவையில்லை. இந்த உண்மையை நம் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    அவற்றைச் செய்யத் தயங்கினால் அது, சீதாராம் கோயலையும் அவரது அறிவியல் பூர்வ அணுகல் முறையையும் அவமதிப்பதற்குச் சமம் என்றே நான் கருதுகிறேன்.

    .

  14. என்னுடைய சிறுவயதில் பள்ளிவாசலில் ஓதும் சத்தம் கேட்டு, அசப்பில் மந்திரம் ஓதுவது மாதிரியே கேட்குதே என்று சொன்னதற்கு என் தந்தை, அதர்வண வேதத்தை திருடிட்டு போயிட்டாங்க. எல்லா விதத்திலும் நமக்கு நேர் எதிரா பழக்கங்கள் அதாவது எழுதுவது வலமிருந்து இடம், சந்த்ரோதயம் பார்ப்பது என்பது மாதிரி மாற்றி வைத்துக் கொண்டு விட்டார்கள் என்று சொன்னார்.
    இதே போன்று பல பெரியவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. அவர்கள் கோயல் புத்தகத்தைப் படித்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு நம்பிக்கையாகவே நிலவுகிறது.
    ஜோசியம் பார்த்தல், திருஷ்டி கழித்தல், ஓதுவது மூலம் வைத்தியம் செய்தல் போன்ற அவர்களின் பல பழக்கங்கள் பார்த்தால் இந்த நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இருக்கலாம் என்று தான் தோன்றும்.

  15. As quoted in this article always ghaba is an Hindu temple no doubt about it. as per quran and rig veda are speaking the same value of god. islam is the part of hindusim as shik and jainism,and we can make lot of quote that quran in india is difer from quran in the arabic.

  16. There are a number of examples of these in Hindu scriptures. The Atharva Veda is also known as ‘Brahma Veda’ or in its meaning as the Devine Knowledge. An Analysis of the Vedas reveal that ‘Brahma’ is actually Abraham, where the initial letter A in Abraham is moved to the end making it Brahma. This analysis is accurate when one writes the two words in Arabic script, a language close to that spoken by Prophet Abraham. Similarly, Abraham’s first wife Sarah is mentioned in the Vedas as Saraswati, and Prophet Nuh (Noah of The Flood) is mentioned as Manuh or Manu. Some Pundits consider Atharva Veda as the Book of Abraham. Prophets Ismail (Ishmael) and Ishaq (Isaac) are named Atharva and Angira, respectively, in the Vedas.

    Table 1

    Brahma Abraham
    Saraswati Sarah
    Manu, Manuh Nuh

    Search in net about islam in hindu scripture – will get many like this

  17. விருட்சம்,

    நீங்கள் குறிப்பிடுவது போன்ற புரளிகள் பல இருக்கின்றன. உண்மையை மட்டுமே நாடும் அறிவியல்பூர்வ இந்துத்துவர்களாக நாம் அவற்றை ஒதுக்க வேண்டும்.

    உதாரணமாக, ஆபிரகாம் என்பது ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு அப்பிராமணனாகத் தண்டிக்கப்பட்ட ஒரு பிராம்ணனின் பெயர் என்று ஒரு புரளி உலவுகிறது. அவன் நம் தமிழ்நாட்டில் உள்ள சேலம் எனும் ஊரைச் சேர்ந்தவன் என்கிறார் கட்டுரை ஆசிரியர். அதனால்தான் இஸ்ரேலுக்குப் போனபின்னரும் அங்கு ஜெரு”சேலம்” எனும் நகரை உருவாக்கினார் என்கிறார். (நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன். வேண்டுமானால், அக்கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்.)

    இதெல்லாம், ஆதாரமற்ற நப்பாசைப் பீடத்தில் கட்டப்படும், அறிவிலிகளின் கதைக் கோட்டைகள். இதே போல திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்த “தேவநேயப் பாவாணரும்” அவர் அல்லக்கைகளும் பொய்கைகளைச் சமைப்பர்.

    திராவிட பாரம்பரியக் கட்டுக் கதைகளை ஒதுக்கும் நாம், இந்துக்களின் இதைப் போன்ற வெட்டிக் கதைகளையும் ஒதுக்க வேண்டும். எந்தக் கதையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். விஞ்ஞான பூர்வமாக, வரலாற்றுப் புரிதலோடு, மெய்ஞான அறிதலோடு அலசப்படவேண்டும்.

    இந்துத்துவ வரலாற்று அணுகல் என்பது எப்போதும் ஆதாரங்கள் கொண்ட அறிவியல் பூர்வ முறையாகத்தான் இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் மாடன் மோட்சம், சார்வாகன் என்பவன் ஒரு பெரிய தத்துவவாதி, சார்வாகம் என்றொரு தத்துவப் பிரிவு இருக்கிறது, தோமஸ் இந்தியாவுக்கு வந்து கிறுத்துவ மதத்தைப் பரப்பினார், இந்து சமூகம் என்பது நிலவுடமைச் சமுதாயம் என்பவை போல நாமும் நம் பங்குக்குப் பொய்க்கதைகள் பரப்புவோம்.

    இதனால் உண்மையான வரலாற்றுப் புரிதல்கள் ஏற்படாமல் போகின்றன.

    .

  18. குரான் எப்படி அதர்வண வேதாமாகும்.

    அதர்வண வேடத்தில் எஞ்சி இருக்கும் பகுதிகளையும் குரானையும் பார்த்தல் சம்பந்தமே இல்லையே?

    அவர்கள் குரான் ஓதும் விதம் சாமத்தை ஒத்து இருக்கலாம் அனால் குர்ஆனில் இருக்கும் குப்பைகள் ஒருக்காலும் அதர்வண வேதத்தில் இருந்திருக்காது என்று நிச்சயமாக சொல்ல முடியும்.

  19. இக்கட்டுரையின் நோக்கம் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதற்கு இங்கு வெளிவரும் பெரும்பாலான மறுமொழிகளே சாட்சி. இக்கட்டுரைக்கு இப்போது எவ்வித அவ்சியமும் இல்லை என்பது என் கருத்து.

    ஸீதாராம் கோயல், ராம் ஸவ்ரூப் ஆகியோடுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவன் நான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஸீதாராம் கோயல் ராம் ஸ்வரூப் கட்டுரைகளைத் தமிழில் வெளியிட்டேன் (பெரும்பாலும் அவை ஹிந்து மித்ரனில் வெளியாயின என்று நினைக்கிறேன்). இந்தக் காபா விஷயத்தைப் பெரிது படுத்துவது ஹிந்து சமுக நலனுக்கு எதிராகவே முகமதியரால் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்பதை ஸீதாராம் கோயல் அவர்களிடமே சொல்லியிருக்கிறேன். அவரும் நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ஒருவிதத்தில் நீ சொல்வது சரிதான் என்று ஒப்புக்கொன்டார். ஸீதாராம் கோயல் நூல்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்ய அவர் எனக்கு அனுமதி அளித்தார். நான் எழுத்துப் பூர்வமான அனுமதி வேண்டும் என்று கேட்டேன். தேவையில்லை என்றுவிட்டார். மொழியாக்கம் செய்த நூல்கள் மூலம் வரக் கூடிய வருமானமும் தமக்கு வேண்டியதில்லை என்றார். நான் எழுத்து மூலம் அவரது அனுமதி கேட்டது பிற்காலத்தில் எவரேனும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. நானும் மொழி பெயர்ப்பு முயற்சியைக் கைவிட்டேன். ஸீதாராம் கோயலும் ராம் ஸவ்ரூப்பும் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தவன் நான். ஸீதாராம் கோயல் நேருவின் தவறுகளையும் சுய நலனையும் விவரித்து அவரால் நம்க்கு நேர்ந்துள்ள கேடுகள விளக்கி ஒரு தொடர் கட்டுரையை ஆர்கனைசரில் எழுதுவதாக இருந்தார். ஆர்கனைசரும் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் பார்த்து காந்தி கொல்லப்பட்டதால் அர்கனைசர் கோயலின் கட்டுரைத் தொடரை வெளியிடும் முடிவிலிருந்து பின்வாங்கியது. இதுபற்றியெல்லாம் கோயல் என்னிடம் நிறையப் பேசியிருக்கிறார்.
    இப்போது இதெல்லாம் தேவையில்லாத பழங்கதைகள்தான்.
    -மலர்மன்னன்

  20. அன்புள்ள ஜடாயு வணக்கம்.
    நான் சமீபத்தில் குர் ஆனில் படித்து வியந்தது. இஸ்லாமுக்கு முந்தைய அரேபியர்களிடம் ஒரு பழக்கம் இருந்துள்ளது அது ஒட்டகங்களை கோயிலுக்கு நேர்ந்து விடுவது. இது நம் ஊரில் கோயிலுக்கு காளைகளை, ஆடுகளை நேர்ந்து விடுவது போலவே உள்ளது.

    மேலும் அகட விகடம் புகழ் வாணியம்பாடி பேராசிரியர் அப்துல் காதர் பேசியதில் கேட்டவை.
    ௧. காபாவின் அருகில் ஒரு சுவர் உள்ளது அதற்கு ஹிந்து சுவர் என்று பெயர் அதன் திசை நோக்கி முஹம்மது வணங்கி உள்ளார்.

    ௨. முஹம்மது ஒரு முறை வீட்டு வாசலில் நின்று, இந்திய திசை நோக்கி மெய் மறந்து நின்றுள்ளார். ஏன் என நண்பர்கள் கேட்டதற்கு , ஹிந்துஸ்தானத்தில் இருந்து ஞானத் தென்றல் வீசுகிறது என்று கூறியுள்ளார்.

    மற்றபடி நீங்கள் மயூரகிரி சர்மாவுக்கு கூறியதை வழி மொழிகிறேன். குர் ஆனில் சைவத்தையும், அதர்வண வேதத்தையும் தேட வேண்டாம். நான் படித்த வரை அதில் சில சட்ட திட்டங்களும் மற்றும் முஸ்லிம்களால் வரலாறு என்று நம்பப்படும் விஷயங்கள்தான் அதிகம். ஞானத் தேடலுக்கான விடை அதில் மருந்துக்கு கூட கிடையாது.

    விபத்துக்குப் பின் தொழுதவுடன் இரத்தம் நின்றது எல்லாம் டுபாகூர். சவுதியில் இரத்தம் பெருக்கோடிய பல விபத்துக்களை கண்ணால் கண்டவன் நான். நான் சவுதியில் பல முறை இரத்த தானம் செய்தவனும் கூட.

    இரத்தத்தில் கூட வேற்றுமை பார்பவர்கள் அரபிக்கள். நான் ஒரு முறை ஒரு அரபி நண்பனின் நண்பனுக்காக ஒரு இரத்தக் கொடையாளியைத் தேடிய பொழுது அவர்கள் சொன்ன கட்டளை, இரத்தம் கொடுப்பவர் ஒரு முஸ்லிமாகவும் , ஆணாகவும் மட்டுமே இருக்க வேண்டும். நான் சொல்லிய டோனார் ஒரு பெண்ணாக இருந்ததால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இதை கேட்ட என் தமிழ் முஸ்லிம் நண்பன் சொன்னது , விடுங்க சாகட்டும் .

    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  21. மற்றும் ஓர் ஆதாராம் இருக்கிறது . பழைய காலத்தில் அந்த இனத்தவர்கள் உடைத்த கோயில்களை கவனித்தால் அதில் சிவன் கோயில்கள் அதிகம் இல்லை. விஜயநகரத்தின் தலைநகரமான ஹம்பி என்னும் இடத்தில் பஹ்மனி சுல்தான்கள் உடைத்த கோயில்கள் எல்லாமே விஷ்ணு கோயில்கள். அங்குள்ள விருபா க்ஷேச்வர கோயில் என்னும் சிவன் கோவிலுக்கு எந்த சேதமும் விளைவிக்கவில்லை .

  22. // True many of them could be (Why each one need to be subjected to scrutiny for its validity) just pet theories. But, Still I do not have reason enough to simply throw the lock stock and barrel to the dustbin. Let the readers surf through the mammoth information, study for themselves and form their opinions. That’s it. //

    அன்புள்ள கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, நீங்களே சொல்கிறீர்கள் mammoth information என்று.. அதில் ஒரு சிலவற்றைப் பார்த்தாலே முழுத் தொகுப்பும் எப்படிப் பட்டது என்று தெரிந்து விடுகிறதே..

    ஓரளவு முதல் கட்ட ஆய்வு செய்து, பிறகு ஒரு informed guess / hypothesis சொல்வது வேறு… ஆனால் இஷ்டத்துக்கு கற்பனை செய்து ஏதாவது புருடா விடுவது வேறு. இந்த புருடாக்களை நாம் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்க வேண்டும்.. சில அப்பாவி வாசகர்கள் இந்தப் பொய்களையெல்லாம் நம்பி அதை மேலும் பரப்பும் சாத்தியமும் இருக்கிறது. எனவே இவற்றை பரப்பவே கூடாது என்பது என் எண்ணம்.

    மேலும், இத்தகைய ஜோடனைகளின் அடிப்படையில் இந்து தர்மத்தின் மேன்மையையும், பரவலையும் சொல்லும் பரிதாபகரமான நிலையில் நாம் இல்லை. ஆதாரபூர்வமான தகவல்களும், ஆய்வுகளுமே நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றை சரியாகத் தொகுத்து present செய்தாலே போதும். ஆனால் ஜோடனைக் காரர்கள் அதற்கான புரிதலையும், உழைப்பையும், ஈடுபாட்டையும் தரத் தயாராக இல்லை என்பது தான் நிஜம்.

  23. // Ravindranath

    மற்றும் ஓர் ஆதாராம் இருக்கிறது . பழைய காலத்தில் அந்த இனத்தவர்கள் உடைத்த கோயில்களை கவனித்தால் அதில் சிவன் கோயில்கள் அதிகம் இல்லை. விஜயநகரத்தின் தலைநகரமான ஹம்பி என்னும் இடத்தில் பஹ்மனி சுல்தான்கள் உடைத்த கோயில்கள் எல்லாமே விஷ்ணு கோயில்கள். அங்குள்ள விருபா க்ஷேச்வர கோயில் என்னும் சிவன் கோவிலுக்கு எந்த சேதமும் விளைவிக்கவில்லை . //

    பிழையான observation.

    இந்தியா முழுதும் சோமநாதபுரம், வாராணசி, உஜ்ஜயினி, வாரங்கலில் ஹனுமகொண்டாவிலுள்ள கலையழகு மிக்க ஆயிரம்-தூண் சிவாலயம் என்று பற்பல இடங்களில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் சிவன் கோயில்களை உடைத்துத் தள்ளியிருக்கிறார்களே.. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிதம்பரம் கோயில் இவையும் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் கொள்ளையடிக்கப் பட்டு சேதப் படுத்தப் பட்டவையே..

    ஹம்பியில் விருபாட்சர் கோயிலிலும் உள்ளே சிற்பங்கள் உடைந்து தான் உள்ளன.. பிற்காலத்தில் இத்தகைய கோயில்களில் மூல விக்கிரகத்தை மட்டும் மறுபிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கி விடுவார்கள், இப்போது வழிபாடு நடப்பதாலேயே அது தாக்கப் படவில்லை என்று அர்த்தமல்ல.

    பல கோயில்களில் மறு வழிபாடு ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி விட்டது, சிலவற்றில் இன்றுவரை தொடங்கவில்லை -அவ்வளவே..

  24. ” முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது.”

    So, the root cause is as usual a Brahmin only… cheei….

  25. \\\\\\\\\ஓரளவு முதல் கட்ட ஆய்வு செய்து, பிறகு ஒரு informed guess / hypothesis சொல்வது வேறு… ஆனால் இஷ்டத்துக்கு கற்பனை செய்து ஏதாவது புருடா விடுவது வேறு. இந்த புருடாக்களை நாம் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்க வேண்டும்.. சில அப்பாவி வாசகர்கள் இந்தப் பொய்களையெல்லாம் நம்பி அதை மேலும் பரப்பும் சாத்தியமும் இருக்கிறது. எனவே இவற்றை பரப்பவே கூடாது என்பது என் எண்ணம்.\\\\\\\

    க்ஷமிக்கவும். நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் சொல்லப்பட்ட விஷயத்தை மட்டும் பார்த்து விட்டு அதில் ஆதாரம் இருப்பதற்கான சாத்யக்கூறுகள் ஏதேனும் இருக்கிறதா என்று கூட பார்க்காது விஷய்த்தைப் புறந்தள்ளும் போக்கு முன் தீர்மானத்தினாலானது. அது சரியல்ல என்பது என் அபிப்ராயம்.

    \\\\கலைநயத்தோடு கட்டப்பட்ட குளத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், குளத்தை உபயோகிப்பதில் இருந்து விலகி இருக்கலாம். ஆனால், அது குளமே இல்லை என்று மறுத்து விடமுடியாது. அதேபோல மயூரகிரி ஷர்மா இக்கட்டுரையில் கண்ட சைவசித்தாந்தத் தொடர்புகளை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், விவதிக்கலாம். (காபா ஒரு விஷ்ணு கோயிலாக இருந்ததற்கும் தரவுகள் உண்டு. விவாதிக்க வேண்டிய தரவுகள்.)

    கழிவுநீரை வெளியேற்றி, குளத்தை அதன் இயல்பான தெள்ளிய நிலைக்கு மாற்றி, மீண்டும் உபயோகத்துக்குக் கொண்டு வரவேண்டும். தாகம் தீர்க்க அது செய்ய வேண்டிய பணியாகும்.\\\\

    ஸ்ரீ களிமிகுகணபதி, அது குளமில்லை கூபம். முக்யமாக கழிவுநீர் போன்ற சமாசாரங்களும் அறவே இல்லை. ஆப்-ஏ-ஜம் ஜம் என்ற முஸல்மான்களுக்கான புனித நீர் மாசில்லா தூய்மையான நீர். சவூதி ராஜ்ய ஸர்க்கார், இந்த கூபத்தை நன்றாகவே பராமரித்து வருகிறது. என் முஸல்மாணிய நண்பர்கள் கங்கா ஜலம் போல் புனிதமானதாக கண்ணாடி மற்றும் ப்ளாஸ்டிக் குடுகைகளில் இதை எடுத்து வந்து சஹ முஸல்மான்களுக்கு பகிர்ந்ததை பார்த்திருக்கிறேன்.

    மேலதிக விவரங்களுக்கு
    https://en.wikipedia.org/wiki/Zamzam_Well

    ஸ்ரீமான் ஜடாயு, நீங்கள் சொன்ன விஷயத்தில் ஒன்று மறுப்பில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டியது குறைந்த பக்ஷம் தெரிந்த பொய்யை புறந்தள்ள வேண்டும். உண்மையை அறிவுறுத்த வேண்டும். உண்மை நடக்க ஆரம்பிப்பதற்கு முன் பொய்யானது பூலோக பரிக்ரமாவை முடித்து விடும் போலும்.

  26. இக்கட்டுரை தொடர்பில் தெடரும் விவாதங்கள் உற்சாகமளிக்கின்றன.. தொடர்ந்து விவாதிப்பதனூடாக பலரிடமிருந்து பல நல்ல விஷயங்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்..

  27. //////Sarav
    2 September 2011 at 9:47 am
    ” முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது.”

    So, the root cause is as usual a Brahmin only… cheei//////
    இந்த அப்ரோச் நல்ல இருக்கே, இஸ்லாமை நிறுவியவரும் பிராமணர் என்று கூற ஆரம்பித்தால் கலக உடன்பிறப்புகளும் மற்றும் எல்லா தரப்பு மக்களும் இதனையும் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறதே.

  28. காபா முன்பு சிவாலயமாக இருந்ததா? என்ற ஸ்ரீ சீதா ராம் கோயல் அவர்களின் கட்டுரை திரு ஜடாயு அவர்களால் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
    பன்நெடுங்காலம் நமக்கு அரபுத்தொட ர்பு இருந்தது வரலாறு கூறும் உண்மை.
    இங்கிருந்து அங்கும் வணிகர் சென்றிருந்திருக்கலாம். அனால் அதர்வ வேதத்தின் திரிபு குரான் என்பதும் காபா சிவலிங்க வடிவத்தோடு ஒத்துள்ளது என்பதும் ஹிந்துக்களின் ஊகங்களே. உலகெங்கும் காணப்படும் பூர்வ குடிகளின் சமய நம்பிக்கைகள் வழிபடு முறைகள் ஆகியவரோடு நமது சமயப்பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒற்றுமைகள் காணப்படுவது இயல்பே. இது வெறும் cultural parallel மட்டும் தான். அன்றி நம்முடைய சமயம் பண்பாடு ஆகியன பெகனியம் அன்று. இன்னும் ஆழ்ந்தகன்றது நுண்ணியது. அராபியப் பழம் சமயத்தினை ஒருசிலக் கூறுகளில் ஒத்திருந்தக் காரணத்தாலே அல்லது அந்தக்காரணம் காட்டி நம் பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

  29. பாராட்டும், கருத்துக் கூறும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    // உலகெங்கும் காணப்படும் பூர்வ குடிகளின் சமய நம்பிக்கைகள் வழிபடு முறைகள் ஆகியவரோடு நமது சமயப்பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒற்றுமைகள் காணப்படுவது இயல்பே. இது வெறும் cultural parallel மட்டும் தான். //

    சிவஸ்ரீ ஐயா, சரியாகச் சொன்னீர்கள்.. இயற்கை சக்திகளையும், விக்கிரகங்களையும் வழிபடும் இத்தகைய மன நிலையை pagan psyche என்று கோயல் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதை வைத்து காபாவை எப்படி அந்த நாளைய இந்து மனம் சிவலிங்கமாக உருவகித்துக் கொண்டிருக்கலாம் என்று ஒரு அறிவியல்பூர்வமான பார்வையையும் தருகிறார்.

    இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் பாகனியர்களுடன் கூட இந்துக்களும் இருந்திருக்கலாம், இஸ்லாமின் தாக்குதலால் அவர்கள் இந்தியாவுக்குத் தப்பியோடி வரக் கூடிய நிலை ஏற்பட்டது என்பது இக்கட்டுரை தரும் புதிய பார்வை. இத்திறக்கில் ஆய்வுகள் செய்யப் படவேண்டும்.

    ஆனால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டம் இருளடைந்தது (”ஜஹிலியா”) என்று கூறி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அது தொடர்பான எல்லாச் சுவடுகளையும் அழித்தொழித்து விட்டனர். எனவே இப்போது கிடைக்கும் சொற்ப பழம்பொருட்களையும், நூல்களையும் வைத்து அந்த கலாசாரம் பற்றிய சித்திரத்தை உருவாக்குவது என்பது மிகச் சவாலான, கடினமான பணி. இருப்பினும் ஒரு சில வரலாற்றாசிரியர்கள் இத்திறக்கில் ஆய்வு செய்து பல திற்ப்புகளைத் தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

  30. // இஸ்லாமுக்கு முந்தைய காலகட்டம் இருளடைந்தது (”ஜஹிலியா”) என்று கூறி இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அது தொடர்பான எல்லாச் சுவடுகளையும் அழித்தொழித்து விட்டனர். //

    இஸ்லாமுக்கும், முகம்மதுக்கும், முகம்மதுவின் கற்பனைத் தாதா அல்லாவுக்கும் பிரத்யக்ஷமான உண்மைகளைக் கண்டால் அலர்ஜி என்பதை உணர்வதற்கு இந்த ஒரு விஷயமே போதும்.

    வரலாற்றை மறைத்தல், ஆவணங்களை மாற்றி எழுதுதல் போன்ற அசுர ராட்சஸ காரியங்கள் அதுகளுக்குக் கைவந்த கலை. திரும்பப் பெறவே இயலாத ஓவியம், சிற்பம், கல்வெட்டு, பழமையான ஓலைச் சுவடிகள் என்று எந்த வரலாற்றுப் பொக்கிஷத்தையும் கண்ணை மூடிக் கொண்டு தூள் தூளாக்குவதும் தீயிலிட்டு திருப்திப்பட்டுக் கொள்ளுவது இவர்களின் பொழுதுபோக்கு. இப்படி வரலாற்றைச் சிதைப்பதையே பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இஸ்லாம் ஊடுருவிய எல்லா நாடுகளிலும் இந்த கதி தான் – வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொருட்சேதம் இப்படி.

    இந்த அழகில் ‘இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், சத்திய மார்க்கம்’ என்று எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு பிரச்சாரம் நடத்துகிறார்களோ தெரியவில்லை.

  31. இது ஒரு நல்ல காப்ஷாவா இருக்கு…. வர வர நம்ம நாட்டி …..,

    குரனில், ஆப்ராகம் மக்கவுள்ள சிலைகளை உடைச்சராருனு இருக்கு.. எனக்கு என்ன சந்தேகமுன்ன நம்ம ஈ.வே.ரா பெரியார் போன ஜென்மத்தில இங்கே பொறந்தரப்பரோ..

    மறுபடி ஒரு காப்ஷாவா…,
    //௨. முஹம்மது ஒரு முறை வீட்டு வாசலில் நின்று, இந்திய திசை நோக்கி மெய் மறந்து நின்றுள்ளார். ஏன் என நண்பர்கள் கேட்டதற்கு , ஹிந்துஸ்தானத்தில் இருந்து ஞானத் தென்றல் வீசுகிறது என்று கூறியுள்ளார்.//

    இதிலிருந்து எனக்கு என்ன சந்தேகமுன்ன அது வந்து நம்மா அன்னே ஹாசேரவ இருக்குமோ!!!

  32. ” முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது.”
    So, the root cause is as usual a Brahmin only… cheei//////

    //இந்த அப்ரோச் நல்ல இருக்கே, இஸ்லாமை நிறுவியவரும் பிராமணர் என்று கூற ஆரம்பித்தால் கலக உடன்பிறப்புகளும் மற்றும் எல்லா தரப்பு மக்களும் இதனையும் எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறதே.//

    ரசித்தேன்…..

    இந்த கட்டுரையை படித்தபொழுது ஜடாயு ஓரளவு குர்ஆனின் கருத்துக்களுக்கு ஒத்தே வருகிறார். முகமது நபிக்கு முன்பு அந்த அரேபியர்கள் சிலைகளை வணங்கி வந்தனர்.அவர்களின் முன்னோர்கள் யூத வழி வந்தவர்களே! யூதர்களின் ஒரு பிரிவுதான் நம் ஊர் பிராமணர்கள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். எனவேதான் அன்றைய அரபுகளுக்கும் இன்றைய நம் நாட்டு பிராமணர்களுக்கும் பல இடங்களில் ஒற்றுமையை பார்க்க முடியும். இதை நான் பல கட்டுரைகளில் விளக்கியும் இருக்கிறேன்.

    ‘இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுங்கள்’
    -குர்ஆன் 2:136

  33. @ suvanapriyan

    இயேசு ,மோசே,ஆபிரகாம் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனின் அவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் விவிலியத்தை ஏன் ஏற்க மறுக்கிறிர்கள் ???? குர் ஆண் கடவுளின் கடைசி வார்த்தை எனின் ஏன் கடவுள் ஏன் அதை பாகம் பாகமாக அளிக்க வேண்டும் ????முதலில் பைபிள் .அதன் பின் குர் ஆண் ,அடுத்த பார்ட் எப்போ ரிலீஸ் தலைவா ????
    நான் கண்டு அனைத்து இஸ்லாமிய தொலைகாட்சிகளிலும் பைபிள் வசைபாட படுகிறது,இயேசுவின் பிறப்பு பற்றி கேளிவிமர்சனங்கள் கூறபடுகின்றன..இப்படி இருக்கும் போது இயேசுவை வார்த்தைக்கு மட்டும் தூதராக கொள்ளும் நீங்கள் கிறிஸ்தவர்கள் கூறும் பாவிகள் கோட்பாட்டை ஏற்று மீட்பரை அடையாளம் காண ஏன் தயக்கம் ???? உலக மக்கள் அனைவரும் எம் சகோதரர்கள் என கூறும் உங்கள் கூடம் தான் இன்னும் தீராத மத்திய கிழக்கு பிரச்சனைக்கு காரணம் …பல இஸ்லாமிய ப்ளொக்குகளில் யூத கொடி எரிக்கப்படும் கணினியச்சு கலை வடிவம் பதிவேற்றபட்டுள்ளது….

    how Islam can be solution for the humanity???????????????

  34. கொழும்பு தமிழரே

    இதெல்லாத்தையும் சும்மா விடுவாரா அல்லா (என்கிற முஹம்மது) – வகை வகையா வஹீ வெச்சுருக்காரு.

    அதாவது ஈசா என்கிற இயேசு கையில் அல்லாஹு கொடுத்தது குர் ஆன் தான் – ஆனாங்காட்டி அத மக்கள் தங்கள் சொந்த சரக்கை ஏற்றி (அல்லா இருக்கும் சுவனத்தில் இல்லாத சரக்கு ஆற்றை) மாத்திபுட்டானுங்கோ – இதையும் அல்லாஹு கண்டு பிடிச்சு நபிஹல் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சல்லல்லாஹு அலைஹிசவசல்லம் (சிம்பிள சொன்ன நபிகள் – இவ்வளோ மரியாதை கொடுத்து சொல்லான்கட்டி என்ன போட்டு தள்ளிருவாஹா, எனக்கு குட்டி புள்ள (சின்ன பய்யன்) இருக்குதப்ப ) அவர்களிடம் சொல்லிபுட்டாரு.

    உண்மையான குரான் அதாவது இப்போ இருக்கறதுக்கு முன்னாடி இருந்த உண்மையான குரான் ஒரு கொகக்குள்ள சிக்கிகிச்சாம்

    “அந்தக் குகையிலிருந்தோரும், சாசனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?” குரான் 18:9 ”

    ஏசுவை பற்றி குர்ஆனில் வெகுவாக புகழ்ந்து தள்ளப்படுகிறது – கிட்டத்தட்ட ஸல் அவர்களை எல்லா ஆசா பாசங்களுக்கும் உள்ளாபவர் என்றும் ஏசு அதை எல்லாம் வென்றவர் போலவும் தான் சித்தரிக்கப்படுகிறது – இதுக்கும் அல்லாஹு வஹி கொடித்திருக்கிறாரு.

    //how Islam can be solution for the humanity???????????????//

    ச்சே இதென்ன இப்படி கேட்டுபுட்டீய – இஸ்லாமு மதம் இல்ல அது ஒரு மார்கம்ல

    நமது அல்லாஹு வஹி மூலம் நபி (சுருக்கத்திற்கு வருந்துகிறேன்) அவர்களுக்கு தெரிவித்த அச்சு அசல் வசனம்

    “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”

    பார்த்தீர்களா பார்தீர்கள இஸ்லாம் கொல்ல சொல்கிறது என்றீர்களே பாருங்கள் பாருங்கள் இஸ்லாம் அன்பு கொள்ள சொல்கிறது தப்ப கொல்ல சொல்கிறது என்று புரிந்து கொண்டோம்
    ஒரே ஒரு பிரச்சன என்னான்னா இது அல்லாஹு மொதல்ல சொல்லல – இத மொதல்ல கண்டுபிடிச்சது யூதர்கள். யூதர்களுக்கும் அல்லாஹு தான் குர் ஆன் கொடுத்தான் என்றால் நான் கண்ணா பினா என்று திட்ட வேண்டி வரும். இது பழைய ஏற்பட்டு வசனமல்ல – இது இருப்பது யூத குருமார்களான மனிதர்களால் செய்யப்பட டால்முடிளிருந்து அல்லா காபி ரைட் patent இல்லாத காலத்தில் வஹித்து கொடுத்துள்ளார்

    அதை ஒத்துக்கொண்டும் உள்ளார் – இப்படி

    “5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். ”

    இங்க தான் மாட்டிகிட்டார் அல்லா – அல்லாவின் சொல்படி பார்த்தல் இது அல்லாவே யூதர்களின் புனித புத்தகமான பழைய ஏற்பாட்டில் சொல்லியதாக இருக்க வேண்டும் – ஆனா பாருங்க யூதர்களே டால்முத் இறைவனால் செயப்பட்டது அல்ல மனிதர்களால் எழுதப்பட்ட என்று தான் சொல்கிறார்கள்.

    அல்லாஹு தப்பான reference கொடுத்திருக்கிறார் – விடுங்கப்பா அந்த காலத்துல என்ன கூகுளா இருந்தது சர்ச்சு பண்ணி கரக்ட் reference கொடுக்க.

    சரி அது பழய ஏற்பாட்டிலே இருந்தாலும் அல்லாஹ்வே தான் பல பேர அடிச்சு நொறுக்கி கூட்டம் கூட்டமாக போட்டு தள்ளி இருக்கிறார் – சொல்றது என்னமோ நல்லாத்தான் இருக்கு ஆனா செயல் என்னமோ வேற மாதிரி இருக்கு. வசனமெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கு ஆக்சன் தான் ரெம்ப வீக்கா இருக்கு

    5.32 அல்லாஹு அபாரமா மனித நேயத்ததி பற்றி சொல்லி இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லிப்புட்டு அடுத்த வஹியில் பாருங்க

    5:33
    அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு

    கொழும்பு தமிழன் அவர்களே என்ன பயந்துடீன்களா கவலையே வேண்டாம்
    இந்த வரியா நல்லா படிங்க
    “அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து” – அதென்ன கூடவே தூதருடனும் என்று சேர்த்தே வருகிறது. இன்னிக்கி யாராவது நபிகள் நாயகத்திடம் போர் செய்ய முடியுமா அவர் தான் ஒரு யூத பெண் கொடுத்த விஷ ஆட்டுக் கறியை சாப்பிட்டு விட்டு சுவனத்திற்கு போய் விட்டாரே.

    அல்லாஹு சொன்னது எல்லா காலத்திற்கும் பொருந்தும் பொருந்த வேண்டும் அல்லவா ? அட அப்படிதான் ஒரு வஹி சொல்கிறது.

    “அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து” என்ற வஹியில் அல்லா தான் ஒட்டிக் கொண்டிருக்கிறாரே தவிர தூதர் இல்லை அதனால நீங்கள் கடைசி இறை தூதரை தப்பா சொல்லாத வரை உங்கள யாரும் போட்டுத்தள்ள மாட்டார்கள். அல்லவை திட்டினால் பரவில்லை – அவர் அன்பாளன் அருளாளன்.

    எல்லத்தய்ம் படிச்சிட்டு அல்லாதான் மொதல்ல மூணு தூதர்களிடம் குரானை இறக்கினாரே அது எதுவும் உருப்பிடியா வரலைய கடைசி இறை தூதரான நபிகளிடம் தந்த குரான் மட்டும் எப்படி நிக்கும் – இப்படி எல்லாம் கேள்வி வருதா ?

    இந்த காபிர்களுக்கு விளங்கவே மாட்டேங்கதுப்பா ! அதான் அல்லா குரான்லையே சொல்லிட்டாரே குரானை மாற்றம் வராமல் நானே காப்பாத்துவேன்னு. என்ன அத ஏன் முன்னாலேயே செய்யலேன்னு கேக்குறீங்கள – ஒங்களுக்கு சொன்னா புரியாது இப்படி பட்ட வசனம் அல்லா முன்னாடி தந்த விவில்யங்களில் இருக்கா குரான்ல தானே இருக்கு – இன்னுமா புரியல விடுங்க தூக்கம் வருது எனக்கு.

  35. குமார்

    //குரனில், ஆப்ராகம் மக்கவுள்ள சிலைகளை உடைச்சராருனு இருக்கு.. எனக்கு என்ன சந்தேகமுன்ன நம்ம ஈ.வே.ரா பெரியார் போன ஜென்மத்தில இங்கே பொறந்தரப்பரோ..
    //
    எதுக்கும் பத்தரமா இருங்கா பெரியாரை போய் முன்னாள் – “நபிஹல் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சல்லல்லாஹு அலைஹிசவசல்லம்” என்கிறீர்களா போட்டுதல்லிருவாங்க்ய

  36. @ சாரங் அண்ணா அவர்களக்கு ,

    கொஞ்சம் காலதாமதமா மறுமொழி இடுவதற்கு மன்னிக்கவும்…,இஸ்லாமிக் டிவி ல சொன்னாங்கோ,தற்கால அறிவியல் விடயங்கள் சாமனியர்கலக்கு புரியும் படியாக இல்லை,அனால் குர்-ஆனில் 1400 வருடங்கள் முன்பே அனைத்தும் சொல்லப்பட்டு விட்டது…மிகவும் எளிதாக புரியும் படிக்கு….நீங்க சொன்ன விஷயத்த எல்லாம் 3 முறை படிச்சு பார்த்த பின்தான் புரிஞ்சுகிட்டேன்.வடிவேலு மாரி சொன்னா ச்ச்சப்ப்பா,முடியல ..இந்துமத நூல்கள் கிரந்தம் ,சமஸ்கிரதம் ஆகியவற்றில் இருப்பினும் அவற்றின் தமிழ் வடிவங்கள் புரியும் படியான தமிழில் அளிக்கப்பட்டுள்ளது,அய்யா சுவனபிரியன்ஜி இதற்கும் ஏதும் குர் ஆண் மேற்கோள் காட்டி எழுதுவார்னு பொறுத்திருந்து பார்போம்.
    மற்றும் மதிப்புக்குரிய அண்ணா சாரங்,என்னை அவர்களே என அழைப்பதை விட,தம்பி,வா ,போ என அழைத்தால் மகிழ்ச்சி கொள்வேன்;நான் சிறியவன்

  37. நேற்று ராத்திரி வசந்தம் டிவி ல மோசேஸ் கதைய படமா போட்டாங்க.மோசேஸ் ரொம்ப நல்லவர் தான்…பாவம் மக்களக்கு கடவுள்ட செய்திகள சொல்ல ரொம்ப கஷ்டபடுராறு…….ஆனா அந்த யூத மக்கள் ரவுசு தான் தாங்க முடியல..செங்கடல் ரெண்டா பிரிஞ்சு ஒரு வழியா அடிமை வாழ்க்கைல இருந்து தப்பிசிடோம்னு சந்தோசபடாம,மன்னா சாப்பட்டுல உப்பு இல்லை,துங்கும் போது கொசு கடிக்குது,சாப்புட கறி.மீனு,முட்டை வேணும்…னு படம் புல்லா ரவுசுதான்..பாலைவனதுல கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு தனி நிலம் அடைய மனசு இல்ல அவிங்கலக்கு,நடுவுல ஒரு “டாக் பாய்” வேற மோசேச நம்பி சரி வராது,திரும்பி அடிமை வாழ்க்கை வாழ எகிப்துகே போய்டுவோம் னு சொல்ல,பாதி மக்க அவன் கூட போராக ..மீதி பேர் கோவத்துல அந்த பயலுவள குத்தி கொன்னு போடுறாங்க……ஆனாலும் கடவுள் இந்த இட-ஒதுக்கீடு செஞ்ச முறைல நம்ம அண்ணன் ராஜபக்சே தோத்துடாறு . எப்டினா,யூதர்கலக்கு உறுதி அளிச்ச நிலம் ஏற்கனவே அராபிய மக்களக்கு சொந்தமானது.ஆனா கடவுள் குடுத்த ஒப்பந்த படி இந்த யூத மக்க அவிங்கள கொன்னு,கடவுளே நன்றி னு ஆடி பாடுரைங்க…..உலக மக்களோட உறவாட கடவுள் தெர்ம்து எடுத்தது யூதர்களை தானாம்…கடவுள்ட புள்ளைங்க …இப்புடிய இருப்பாக ???மாரியாத்தா இவனுங்க இப்புடி சின்னபுள்ளதனமா ஏதேதோ கதை விட்டு திரிஞ்சு கிட்டு இருந்தப்ப நாம வேதங்களை இயற்றி பல்வேறு கலைகளையும் கற்று முன்னேறி இருந்தோமே னு தான் தோணுது..ஆனா மோசேச நடிச்சவரு அவர் நடிப்பா சிறப்பா குடுத்து இருந்தாரு

  38. கொழும்புத் தமிழன் அவர்களே

    வயது வித்யாசம் இன்றி தளங்களில் மரியாதை தந்து பேசுவதே சரி என்று எனக்குப் படுகிறது.

    சுவனப்ரியன் சொல்ரார். அரபு நாட்டுக்காரன் நம்ம ஊர் காரன் மாதிரி இருக்கானாம். அதை உல்டா பன்னித்தான் இஸ்லாமிய சகோக்கள் உள்ளனர்.

    தலையில குடுமி வெச்சா இவக தாடில குடுமி வெக்கரது. காலைல கல்யானம் பன்னா ராத்ரி பன்ரது. குலிச்சிட்டு சுத்தமா இருந்தா சுத்தமா குலிக்காமா இருக்கரது.

    எவ்வலோ மாத்திப்புட்டாங்க பாத்தீகளா

    அரபு நாட்டுக்காரனின் சில பழக்க வழக்கங்கள் நம்மல மாதிரி இருன்தா உடனே இந்தியர்கலின் மூதாதயர்கள் இஸ்ரேலியர்கள் என்றா முடிவு கட்டுவது,

    பல மும்மீன்கள் காட்டுமிராண்டி பழக்கவழக்கங்களை கொண்டவர்களாக இருக்கிரார்க. அதற்காக காட்டுமிராண்டிகளை நாம் எப்பொதாவது திட்டுகிரோமா.

    இஸ்ரேல்காரன், ப்ராமனன் ஸம்ப்ந்தம் . அமாவாஸை அப்துல் காதர் ஸம்ப்ந்தம் தான்.

    ஹிந்துத்வத்தை உல்டா செய்து, அதிலிருன்து எதை எதையோ உருவி ஜொராஸ்ட்ர் அவெஸ்தாவை கிறுக்கி வைத்தார். இதிலிருனது கேனத்தனமானதை மட்டும் உருவி பழைய விவில்யத்தை எழுதினார்கள். இந்த கட்டுக்கதைகளை தப்பும் தவருமாக கேட்டு, நபிகள் அவுத்துவுட்டது தான் குரான். உதாரணமாக, நபிகள் சொல்ரார் யேஸுவின் அம்மா மிரியாம் என்றும் அவருக்கு ஒரு ஸகோதரர் இருக்கிரார் அவர் பெயர் ஆரொன் என்று.

    இது நபிகள் நாயகத்தின் பெரிய குளருபடிகலுள் ஒன்று. இந்த மிரியாம் என்பவர் மொஸஸின் ஸாகோதரி ஆவார். மோஸஸின் அன்னன் தான் ஆரோன் ஆவார். ரெண்து மரியத்தின் கதைகளையும் கேட்டுவிட்டு குழம்பிப் போய் ரெண்டையும் ஜாயின் பன்னி புத்சா ஒரு கதை செய்தார் ஸல்லல்லாஹு அவர்கள்.

    இதிலே விசயம் என்னன்னா, குரான்ல தப்பெ இல்லன்னு தம்மட்டமடிக்கிரார்கள். இந்த ஒரு தப்பே போதும் குரான் அல்லா சொன்னதில்ல எல்லாம் ஸல்லா சொன்னதுன்னு.

    இதை எதுக்கு சொல்லவந்தேன்னா அரசல் புரசலா கேட்ட கதைகளை வைத்தே உருவான மதங்கள் இவை. இதிலிருன்து வசனமெல்லாம் வேர எழுதுரார் சுவன்ப்ப்ரியன்.

    இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மவேல், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்’ என்று கூறுங்கள்’
    -குர்ஆன் 2:136

    இதை பத்தி முன்னமே எழுதியாச்சு, இப்படி சொன்ன அல்லா எப்பதி யுதர்களையும் காபிர்களயும் காத்துமிராண்திதனமாக கொல்லச்சொன்னார் என்று.

    அல்லா சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இதற்குப் பெயர் ஹிப்பாக்ரஸி என்பார்கள்.

  39. dear sir your article is immensely worthy and i want to add something. ooran adigal in his book veera saiva madangal writes one of the atheenakarthar visited kabba in saudi and worshipprd lord siva 400 hundred years ago and on his presence many miracles started happening. i request all readers to buy the copy and comment on it. i even request the tamil hindu people to invite him to write on this. my wishes to writer and may halasya siva or allah bless him long life and secure him 72 gifts after he passes away.

  40. அன்பு சகொதேர்களே ,

    நீக்கள்எப்போதான் உண்மை சொள்ளபோகிரிகொலோ ,உண்மையில் தாங்கள் விவாதத்திற்கு தயாராக இருந்தால் சொலுங்கள் உண்மை அறிய நாம் செய்வோம் விவதம் ,செல்வோம் உண்மை வழியில்

  41. Kabba once was a hindu temple.i assure.here are proofs.Kabba is derived from the word KABBALISHWARA -ISHWARA of KABBA.but many one dont know this.here are some proves.an inscription of king vickramadithya was found in kabba.

    SHIVA AND SHAKTI (Durga) IN QURAN AND ISLAM

    The original name of Saudi Arabia till today remains as Arabastan just like Pakistan, Hindustan (india), Afghanistan, Turkistan etc.
    St(h)an = land, origin, place; is a sanskrit word the oldest of all languages in which the Hindu scriptures ‘Vedas’ have been written and incidently Rigveda of Vedas is the oldest text known to mankind.
    Pakistan = Pak+stan = Land of Pak or Pakis
    Afghanistan = Afghan + stan = Land of Afghans
    Turkistan = Turk+stan = Land of Turks
    In Arabic and Bengali (indian language) the sound ‘va’ becomes ‘ba’ hence
    Aravastan à Arabastan
    Arav+Stan à Horse + Land à Land of Horses
    We all know that Saudi Arabia was known for its amazing breed of horses before the discovery of the use of oil found in Saudi Arabia. All the sanskrit names of these countries clearly indicate that once these were under the influence or direct rule of a culture whose primary language was sanskrit and the Vedic People of Sanathana/arya dharma have been using Sanskrit as their language and their holy Vedas are in Sanskrit.
    This article is mainly based on the findings of Islamic Research Foundation – IRF and its Dr. Zakir Naik. Dr. Zakir Naik and IRF claim that Quran is the last book from god and Vedas probably the first.
    Age of Quran (Islamic scripture) 1,400+ Years ———–IRF & Dr. Zakir Naik
    Age of Vedas (Sanathana Dharma/Hinduism) 4,000+ Years ———–IRF & Dr. Zakir Naik
    But the 12000+ Years old Dwaraka the city of Hindu Deity has been found undersea in Gujarat and Vedas came long before krsna. Hence
    Age of Vedas 12,000+Years
    IRF & Dr. Zakir Naik have claimed that Allah or Ilah of Islam & Quran is mentioned in the Vedas as Ila(h)
    Ila(h) in Vedas = Allah or Ilah in Quran of Islam ————IRF & Dr. Zakir Naik
    Ila(h) = Female aspect of the creator or creation = Shakti or Durga ———–Hinduism / Vedas
    Ila(h) = Shakti ——-If a=b & b=c then a=c (basic mathematics)
    [Please note that Shakti is the consort of the male aspect of god S(h)iva]
    Al(in Arabic)=’The’(in English)
    Ex:- Al Islam, Al Haram, Al Hijab, Al Kabah
    Allah = Al+ Ila(h) = Al Ilah
    = Al Shakti (Durga)
    = The Shakti
    Allah in Quran = 2698 times
    Shakti (Durga) in Quaran = 2698 times
    Since Allah (Quran of Islam) = Ila(Vedas in Hinduism) = Shakti
    [Remember Ila(h) in Vedas = Allah or Ilah in Quran of Islam according to IRF & Dr. Zakir Naik]
    Allah, Amba, Akka, Amma are the synonyms which are being used to invoke mother Shakti in Hinduism before the existence of Quran.
    Ila(h) in Quran = Ila(h) in Vedas ———–IRF & Dr. Zakir Naik
    = Shakti in Hinduism
    Ial(h) in Quran à 275 times ß Shakti in Quran
    Shakti in Quran= 275 times
    Shakti (Durga) in Quran = Shakti (Durga) as Allah + Shakti (Durga) as Ilah
    = 2698 + 275
    Shakti (Durga) in Quran = 2973
    The word B(h)ismilah has 6 different variations in pronunciation as given below
    B(h)ismillah = B(h)asmallah = B(h)ismallah = B(h)ismilah = B(h)asmalah = B(h)asmallah
    Mullahs are translating the
    B(h)ismilah Ar Rahman Ar Rahim as “In (or with) the name of Allah, who is Beneficent and Merciful”
    It is obvious that Rahman = Beneficient
    Rahim = Merciful
    But B(h)ismilah # In (or with) the name of Allah
    B(h)ismilah or B(h)asmillah = B(h)asma + Allah
    [or]
    B(h)ismallah = B(h)isma+Allah (or) B(h)isma+Ilah = B(h)ismilah
    But Arabic dictionary has no word B(h)isma or B(h)asma meaning ‘In (or with) the name of Allah’
    But once again Sanskrit does this have word and Vedas have it too. I have showed you in the beginning of the article that all these regions were once a part of Vedic Dharma or Culture (Sanathana / Arya Dharma) which is now known as Hinduism and Sanskrit was and is the language of the Vedic Hindu people.
    B(h)asma = Ash ————Sanskrit language
    Allah(,Amba, Akka, Amma) = Shakti ————Sanskrit language
    Allah =God ————Arabic Langauge
    Alah (Quran or Islam) =Ilah(Vedas or Hinduism) ————IRF & Dr. Zakir Naik
    Hence
    B(h)asma+Allah = Ash God
    = S(h)iva the male aspect of creator/creation in Hinduism
    = The black part of the Sangey Aswed in Kabah
    B(h)asmallahßB(h)asma+AllahßS(h)iva+ShaktißHinduism
    And also
    B(h)asma+Allah =Shiva+Shakti
    Ash is the symbol of Shiva who is also known as the destroyer or the destructing aspect of the Hindu Trinity. Shiva is always depicted as wearing Ash (=Vibhooti) on his forehead.
    GOD=Generator = Brahma
    Operator =Vishnu
    Destroyer =Shiva
    B(h)isma =The Terrible ———Sanskrit language
    S(h)iva’s is depicted in Vedas as Bhima =He who is terrible
    Ghora =He Who is terrible
    Rudra = He who is terrible
    B(h)isma =S(h)iva
    B(h)ismallahß B(h)isma+AllahßS(h)iva+ShaktißHinduism
    AllahßShakti is the silver part of the sanghey ashwed.
    AshwedßAshwetha(Sanskrit)=Non white=Black stoneßShivaLingamßHinduismßVedas
    B(h)asmilahßB(h)asma+ilahßShiva+ShaktißHinduismßVedas
    B(h)ismilahßB(h)isma+ilahßShiva+ShaktißHinduismßVedas
    Ishana, Isha and Mahesh or Maheshwara are among the many names of Shiva.
    I(n)shallah=I(n)sha+Allah ————–Allah=God [Quran/Arabic/Islam]
    =Shiva God
    Allah =Shakti ———Sanskrit language
    Allah =Al+Ilah=Shakti ———Sanskrit language
    I(n)shallah=I(n)sha+Allah
    =ShivaShakti

    Ma(h)shallah=Mahesh+Allah ————–Allah=God [Quran/Arabic/Islam]
    =Shiva God
    =Mahesh+Allah
    =Ma(h)shallah
    [OR]
    =Shiva+Shakti —————Allah=Shakti (Sanskrit)
    =ShivaShakti

    Subhanallah=Subhan+Allah ————–Allah=God
    [Quran/Arabic/Islam]
    =Ganesh+Allah
    =Ganesh+Gauri(shakti) ————–Allah=Shakti=Gauri(Sanskrit)
    =GauriGanesh
    [OR]
    =Ganesh+The Almighty God ——-Allah=The Almighty God(Arabic)
    =Ganesh The Almighty God
    [OR]
    =Subhan+Allah
    =Ganapati+Allah ————Subhan=Ganapati(Sanskrit)
    =Shiva+Allah ————Ganapati=Shiva(rigveda)
    =Shiva+Shakti
    =ShivaShakti
    =Subhan+Allah
    =Ganapati+The Almighty God
    =Shiva The Almighty God
    MehdißMahadevaßShiva
    If you are still not convinced that Sanskrit language oriented Vedic culture and Vedas were never in aravastan(arbastan) which is now known as Saudi Arabia even after pointing out that its name itself is Sanskrit but not Arabic then may be the poem written by Labi-Bin-E- Akhtab-Bin-E-Turfa who lived in Arabia around 1850 B.C. which is 2300 years before Mohammad (pbuh)
    “Aya muwarekal araj yushaiya noha minar Arya-e Wa aradakallaha manyonaifail jikaratun”

    “Oh the divine land of Aryas (India) (how) very blessed art thou! Because thou art the chosen of God and blessed with knowledge”

    “Wahalatijali Yatun ainana sahabi akha-atun jikra Wahajayhi yonajjalur -rasu minal

    HINDATUN ” “That celestial knowledge which like four lighthouses shone in such brilliance – through the (utterances of) Indian sages in fourfold abundance.”

    “Wahowa alamus SAMA wal YAJUR minallahay Tanajeelan Fa-e-noma ya akhigo mutiabay-an Yobassheriyona jatun”

    “Bursting with (Divine) knowledge are SAM & YAJUR bestowed on creation,

    Hence brothers respect and follow the Vedas, guides to salvation”

    “Wa-isa nain huma RIG ATHAR nasayhin Ka-a-Khuwatun Wa asant Ala-udan wabowa masha -e-ratun”

    “Two others, the Rig and Athar teach us fraternity , Sheltering under their lustre dispels darkness till eternity”

    This verse can be found in Sair- Ul-Okul which is an anthology of Arabic poetry which was compiled in 1742 AD under the order of Turkish sultan Salim. It is present in the famous library called Makhatab-e-Sultania of Istanbul, Tuekry.
    The above proves that the influence of Sanskrit, Vedic culture, Vedas was present in Arabia long before the Quran or the prophet Muhammad (pbuh) who removed all 360 idols in kabah but retained the Sangey AswedßLingey AswethaßNon-white LingamßShivalinga and kissed it with love and honor and still muslims do so as a follower of him.

    ShivaShakti
    Prophet Mohammed’s uncle poem was adjudged as the best poem during OKAJ festival (pre-Islamic era) just before Mohammed stormed this great temple of Hindus. Still is the best poem for the entire civilized world:

    Qafa Vinak Ziqra Min Ulumin Tav Aseru
    Kaluban Ayattul Hawa Va Tazakkaru
    A man who has spent all his life in sin and immortality and has wasted away his life in passion and fury,
    Va Tazakeroha Audan Elalvadae Lilvara Valuk
    Yane Zatulla He Yom Tab Aseru
    If he repents in the end and wants to return to morality, is there a way for his redemption?
    Va Ahlolaha Azahu Armiman Mahadev
    O Manazel Ilamuddine Minjum Va Sayattaru
    Even if only once he sincerely worship Mahadev, he can attain the highest position in the path of righteousness.
    Va Sahabi Keylam Feem Qamil Hinde Yoman
    Va Yaquloon Latahazan Fainnak Tavajjaru
    Oh Lord! Take away all my life and in return pray grant me even a single day’s stay in Hind (India) as a man becomes spiritually free on reaching that holy land.
    Mayassayare Akhalaqan Hasnan Kullahum
    Najumum Azaat Summ Gabul Hindu
    By dint of a pilgrimage of Hind a man attains the merit of noble deeds and gets the privilege of pious touch with ideal Hindu teachers.lancing through some research material recently, I was pleasantly surprised to come across a reference to a king Vikramaditya inscription found in the Kaaba in Mecca proving beyond doubt that the Arabian Peninsula formed a part of his Indian Empire. The text of the crucial Vikramaditya inscription, found inscribed on a gold dish hung inside the Kaaba shrine in Mecca, is found recorded on page 315 of a volume known as ‘Sayar-ul-Okul’ treasured in the Makhtab-e-Sultania library in Istanbul, Turkey. Rendered in free English the inscription says:

    “Fortunate are those who were born (and lived) during king Vikram’s reign. He was a noble, generous dutiful ruler, devoted to the welfare of his subjects. But at that time we Arabs, oblivious of God, were lost in sensual pleasures. Plotting and torture were rampant. The darkness of ignorance had enveloped our country. Like the lamb struggling for her life in the cruel paws of a wolf we Arabs were caught up in ignorance. The entire country was enveloped in a darkness so intense as on a new moon night. But the present dawn and pleasant sunshine of education is the result of the favour of the noble king Vikramaditya whose benevolent supervision did not lose sight of us- foreigners as we were. He spread his sacred religion amongst us and sent scholars whose brilliance shone like that of the sun from his country to ours. These scholars and preceptors through whose benevolence we were once again made cognisant of the presence of God, introduced to His sacred existence and put on the road of Truth, had come to our country to preach their religion and impart education at king Vikramaditya’s behest.” For those who would like to read the Arabic wording I reproduce it hereunder in

    Roman script:
    “Itrashaphai Santu Ibikramatul Phahalameen Karimun Yartapheeha Wayosassaru Bihillahaya Samaini
    Ela Motakabberen Sihillaha Yuhee Quid min howa Yapakhara phajjal asari nahone osirom bayjayhalem.
    Yundan blabin Kajan blnaya khtoryaha sadunya kanateph netephi bejehalin Atadari bilamasa- rateen
    phakef tasabuhu kaunnieja majekaralhada walador. As hmiman burukankad toluho watastaru hihila
    Yakajibaymana balay kulk amarena phaneya jaunabilamary Bikramatum”.

    King Vikramaditya was a staunch worshipper of S(h)iva hence it is highly possible that it is he who built the kabah for the s(h)iva or shivalinga since one of the name of shiva is kabbaleshwaraßKabbah+Ishwara(Sanskrit)ßKabbah+GodßGod of Kabbah
    AgreshwarßAgra+Ishwara(Sanskrit)ßAgra+GodßGod of Agra.
    Till date Agreshwara and kabbaleshwara are the names of Shiva in Agra of Punjab and south India respectively.
    Much later, yet five centuries before Mohammed, there was a poet named Jarkham bin Tai, who wrote a beautiful poem on Lord Krishna
    ok here is the number 786 it is the seperate form of OM.
    https://www.youtube.com/watch?v=i5PZYDWPmD4
    and there are many proofs.i can post if u want.thx for reading.

  42. வணக்கம்
    என் மனதில் பட்டதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. மசூதியை வலம் வருவது இஸ்லாமியர்களின் வழக்கமல்ல, ஆனால் காபாவில் மாறுதலாகச் செய்கின்றனர். நமாஸ் செய்து முடித்தபின் கைகளைக் காதுகளின் அருகில் கொண்டு செல்கின்றனர், இது நம் நாட்டு அந்தணர்கள் பெரியோர்களை வணங்கும் போது செய்வதைப் போன்று உள்ளது (நான் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவள் அல்லள்) குறைஷி என்பது குருஸ்ரீ என்பதன் திரிபாக இருக்குமோ (தங்கை+ஸ்ரீ – தங்கச்சி, அப்பா+ஸ்ரீ – அப்பச்சி, அக்கா+ஸ்ரீ அக்கச்சி , ஆய்+ஸ்ரீ ஆய்ச்சி என்பது போன்று இருக்கலாம், மேலும் மெக்காவில் அவர்கள் அணியும் ஆடை தைக்கபடாத வேட்டியும் மேல் துண்டும் தான், இதுவும் அந்தணர்கள் அணிவதைப் போன்று தான் உள்ளது,(அதற்கு இஹராம்(ihram) என்று பெயர் கூகுள் இமேஜில் தேடிப் பார்க்கவும்) அந்தணர்கள் பஞ்ச கச்சம் என்ற விதத்தில் தெய்வீக காரியத்தில் இருக்கும் போது அணிகிறார்கள் மற்றைய நேரங்களில் இது போன்று தான் அணிகிறார்கள்,

  43. சனாதன தரமம் உலகில் நிலைபெறவேண்டும் என்பது இறைவனின் விருப்பம் .
    ஒம் பிரம்மாம சிவாய விஷ்ணுவாய போற்றி போற்றி…

  44. உலகில் பல்வேறு மதங்களும்,அவை சார்ந்த நம்பிக்கைகளும் உள்ளன.அவை காலப் போக்கில் பல்வேறு மாறுதல்களை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன.ஆனால்,முடிந்த முடிபாக,இவர்தான் கடைசி இறைதூதர் என்று ஒரு மதம் கூறுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

  45. இந்து எனப்படும் அரச மரம் பல கிழைகளை கொன்டுள்ளது. ஆதன் கிழைகள் சமரச சுத்த சன்மார்க்கக்கத்தை தோற்றத்தை விளைவிக்கின்றது என்பதே உண்மை.

  46. மேலே சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும் பொய்யாகவும் இருக்கின்றன. காபத்துல்லாஹ் என்பது இறைவனின் வீடு ஆகும். அது ஒரு சிவாலயமில்லை. சிவாலயமென்று நீங்கள் சொல்வது சுத்தப் பொய்.

  47. இஸ்லாத்தை பற்றி தெரியவில்லை என்றால் பழனி பாபா மற்றும் Dr.சாகிர் நாயக் ஸ்பீச் கேளுங்க. மனுசனா மாறுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *