[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 14ம் பாகம் 

முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது.

 ம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தவுடன் கிறித்துவர்கள் அவருக்கு எப்படியெல்லாம் தூண்டில் போட்டார்களோ அதேபோல முஸ்லீம்களும் தூண்டில் போட்டார்கள்.

பொய், லஞ்சம், மற்றும் அரசியல் அழுத்தங்கள்

  1. 1933, மே மாத வாக்கில் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது ஜி. ஏ. கவயீ என்ற தீண்டப்படாதோர்  சமூகத்தலைவர் அம்பேத்கரை மூன்று – நான்கு முறை சந்தித்தார். அப்போது அவருடன் மதம் மாறும் விஷயம் பற்றி விவாதித்தார். இந்தியா திரும்பியபின் கவயீ, ‘அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தில் சேர்வதாக உள்ளார்’ என்ற செய்தியைப் பரப்பி விட்டார்.

இதை மறுத்து அம்பேத்கர், ‘நான் இந்துமதத்தைப் பின்பற்றுபவனாக இருக்கப் போவதில்லைதான். அதுபோலவே நான் இஸ்லாமிய மதத்தையும் ஏற்கமாட்டேன். இந்நாட்களில் நான் புத்தமதத்தால் கவரப்பட்டுள்ளேன். ஆனால் நான் எனது சமூகத்திற்கு ஏற்றதோர் ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்வரை மத விஷயத்தில் எதுவும் செய்யப் போவதில்லை’ என்று விளக்கம் அளித்தார் ((வசந்த்மூன் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்)).

1935ல் அம்பேத்கர் மதம் மாறுவேன் என்று முடிவெடுத்ததும் உலகின் பெருஞ்செல்வரான ஹைதராபாத் நிஜாம் தீண்டத்தகாதவர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்பார்களேயானால் அதற்கென ஐந்துகோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்தார்.

மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்த கே. எல். கௌபா என்ற முஸ்லீம் தலைவர் அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். இந்தியாவில் இருக்கின்ற முகம்மதியர்கள் அம்பேத்கரையும் தீண்டப்படாத வகுப்பு மக்களையும் மரியாதையுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும்,  அரசியல் சமுதாயம் பொருளாதாரம் மதம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முழுமையான சமத்துவமும் சம உரிமையும் உறுதியாக அளிக்கப்படும் என்றும் அத்தந்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அம்பேத்கர் இது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேச விரும்பினால் 1935 அக்டோபர் 20ம்நாள் பதுவானில் நடைபெறும் முகம்மதியர் மாநாட்டிற்கு வருமாறு கௌபா தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டிற்கு அம்பேத்கர் போகவில்லை.

இஸ்லாமிய மதத்திற்கு மாறாதே என்ற அம்பேத்கர்

1935ம் ஆண்டு நாசிக் அருகே ஒரு கிராமத்தில் சில தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறவுள்ளார்கள் என்று தெரியவந்ததும், அவசரப்பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

1936 ஜனவரியில் முஸ்லீம்களின் இரண்டு தூதுக்குழுவினர் அம்பேத்கரைச் சந்தித்து இஸ்லாமில் சேருமாறு வேண்டினர். அம்பேத்கர் அதை நிராகரித்தார்.

1946ல் இலண்டனில் அம்பேத்கர் அவருடைய கோரிக்கை அறிக்கையை உடனடியாக அச்சிட்டுக் கொண்டு, இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை வகித்த அரசியல் தலைவர்களை அணுகினார். தீண்டப்படாத வகுப்பினரை இஸ்லாம் மதத்தில் சேருமாறு அறிவுரை கூறியிருக்கிறீர்களா என்று அம்பேத்கரிடம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அரசியல் நிருபர் கேட்டடார். அப்போது, அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று பதிலளித்தார் அம்பேத்கர். ஏற்கனவே அம்பேத்கர் இஸ்லாமில் இணையப்போகிறார் என்ற வதந்தியை முஸ்லீம்கள் கிளப்பியபோது உடனுக்குடன் அம்பேத்கர் அதை மறுத்தார் என்பதை நாம் பார்த்தோம்.

தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லீமாக மதம் மாறுவதை  அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்லாம் ஒரு பேரழிவு மார்க்கம் என்ற அம்பேத்கர்

தங்களது அரசியல் உரிமைகளைப் பெற பூனாவில் ஷெட்யூல்டு வகுப்பினரால் துவங்கப்பட்ட சத்தியாகிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. அப்போது 1946, ஜூலை 26ல் அம்பேத்கர் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் ‘‘….. ஒரு விதத்தில் தாம் காங்கிரசுக்கு நன்மை செய்பவரே. காங்கிரஸ் ஸ்தாபனத்தை முற்றிலுமாக செயலற்றதாக ஆக்குவது எங்களது சக்தியில் உள்ளது. நானும் எனது சமூகமும் முஸ்லீம்களாக மாற முடிவு செய்ய முடியாதா? திரு. ஜின்னாவின் மதத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வகையிலும் நான் இழந்தவனாக மாட்டேன், மற்றும் நிர்வாகக் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லீம் உறுப்பினராக என்னை நியமிக்கக்கூடும். அந்தத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. ஏனெனில் முழு பேரழிவிலிருந்து காங்கிரசைக் காப்பாற்ற விரும்புகிறேன்.

இத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் ஏன் நான் இறங்கவில்லை? அது ஏனெனில் காங்கிரசுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் துவக்கியுள்ள போராட்டத்தில் எனது கட்சி குறைந்தபட்ச எதிர்ப்பு என்ற கொள்கையை எடுத்துள்ளது’’ என்று கூறினார்.

ஒருசமயம் அம்பேத்கர் தாம் ஏன் இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்.

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’என்று கூறினார் ((Ambethkar – A Critical Study)).

அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி பாலாசாகிப் தேசாய் கூறுகிறார்:

‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின்மீதும், அதன் பண்பாட்டின்மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’ ((Kamble, J.R.Rise and Awakening of the Depressed Classes in India, National Publishing House, New Delhi, 1979, P.211))

அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இதுபோன்று வேறுபல காரணங்களும் உண்டு. அவற்றையும் காண்போம்.

இந்தியாவில் புத்தமதத்தை அழித்தது இஸ்லாமே

அம்பேத்கர் புத்தமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த புத்தமதம் அழிய இரண்டு காரணங்களை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒன்று பிராமணீயம்,  இரண்டாவது இஸ்லாம்.

1950, மே மாதம் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் புத்தமதத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கினார் அம்பேத்கர்.

அதில் ‘புத்தமதம் வீழ்ச்சியடைந்ததின் காரணங்களைக் குறித்துக் கூறுகையில், சங்கராச்சாரியாரின் வாதத் திறமையால் புத்தமதம் அழிந்துவிட்டது என்று பலர் முன்வைக்கும் கருத்தை அவர் மறுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் புத்தமதம் வழக்கத்திலிருந்தது என்ற உண்மை இந்தக்கூற்றைப் பொய்யாக்கிவிடுகிறது.

வைஷ்ணவ மற்றும் சைவ சம்பிரதாயங்கள் தோன்றியதே புத்தமதத்தின் மறைவிற்கான காரணம் என்று தாம் நம்புவதாக கூறினார். இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான். எஞ்சியிருந்த புத்தத் துறவிகள் சீனா, திபேத், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுக்குப் போய்விட்டனர். புத்தமதத்தை மீண்டும் இந்தியாவில் நிலைநிறுத்த வேறொரு சமய குருமார் அமைப்பு ஒன்றை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இதற்குள் 90சதவித பௌத்தர்கள் இந்துமதத்திற்கு மாறிவிட்டதால் இது தோல்வியுற்றது’ என்று கூறுகிறார்.

அதேபோல் பௌத்தர்களின் உலகத் தோழமை மாநாடு இலங்கையில் 1950 மே 25 முதல் ஜூன் 6வரை நடைபெற்றது. கொழும்பில் நடந்த சர்வதேசக்கூட்டத்தில் 1950 ஜூன் 6ல் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் ‘……. புத்தமதத்துக்கு  எதிராக பிராமண – சத்திரியர் கூட்டணியை உருவாக்கினர். பிராமணியம் மேல்நிலைக்கு வந்ததால் புத்தமதம் வீழ்ச்சியுற அது ஒரு காரணமாயிற்று. புத்தமதம் இந்தியாவில் வீழ்ச்சியுற வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாக இருந்தது.

கிரேக்கர்கள் புத்தமதத்துக்கு இடையூறு செய்யவில்லை. புத்தமத நடவடிக்கைகளுக்கு கிரேக்கர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஹூணர்கள் இந்தியாவைத் தாக்கினர். அவர்கள் குப்தர்களால் தோற்கடிக்கப்பட்ட பின் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இதற்கு முன்பு ஹூணர்கள் புத்தமதத்தை அழித்துவிட முயன்றனர்.

ஆனால், முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளை அகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.

நாளந்தா பல்கலைக் கழகத்தை புத்தர்களின் கோட்டை என்று கருதிய முஸ்லீம்கள் ஏராளமான துறவிகளை அவர்கள் ராணுவ வீரர்கள் என்று கருதி கொன்றுவிட்டனர். இக்கொடிய தாக்குதலிலிருந்து தப்பிய சில பிக்குகள் அண்டை நாடுகளான நேபாளம், திபேத், சீனா ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினர்.’’ என்று கூறினார்.

1954 டிசம்பர் 4ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.

‘‘புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை.

முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோக சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமணத் தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரச்சாரம் செய்தான். இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின் மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்தபிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’ என்று கூறுகிறார்.

14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்ததுதான் காரணம்.

அடுத்த காரணம் முக்கியமான காரணம் ஆகும்.

அரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு

அம்பேத்கரின் மதமாற்றமே சமத்துவம், சகோதரத்துவம் வேண்டித்தான். அந்த சமத்துவம், சகோதரத்துவம் இஸ்லாத்தில் உண்டா? இதற்கு ‘பாகிஸ்தான்’ நூலில் அம்பேத்கர் விளக்கத்தைப் பார்ப்போம்.

‘‘…. இனி அடுத்து சாதிமுறையை எடுத்துக்கொள்வோம். சகோதரத்துவத்தைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதைக் கொண்டு, அடிமைத்தன முறையிலிருந்தும், சாதிமுறையிலிருந்தும் விடுபட்ட சமயமாக பலரும் இஸ்லாமைக் கருதுகிறார்கள்.

இவற்றில் அடிமைத்தனத்தைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. இப்போது அது சட்ட ரீதியாக ஒழித்துக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அது நடைமுறையிலிருந்து வந்தபோது இஸ்லாமிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் தான் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்துவந்தது. அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை.

சர் டபிள்யூ. முய்ர் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பயங்கர மின்னல் வெட்டும் சமயத்தில் அவன் கால் விலங்கை மேலும் இறுக்கினான்… தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’

ஆனால் பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. வங்க முஸ்லீம்களிடையே நிலவும் நிலைமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இஸ்லாமிய சாதிப் பிரிவுகள்

வங்காள மாகாணத்துக்கு 1901 ஆம் வருடம் குடிமதிப்புக் கணக்கெடுத்த கண்காணிப்பாளர் வங்காள முஸ்லீம்களைப் பற்றி பின்கண்ட சுவையான விவரங்களைக் கூறுகிறார்.

‘‘பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மாகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது.

முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்:

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப்

2. அஜ்லாஃப்

ஆகியவையே அவை. அஷ்ராஃப் என்பதற்கு உயர்குடிமகன் என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.

இஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்

தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’,  ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள்.  ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்

 

இந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

A. அஷ்ராஃப்கள் உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துகள்

2. ஷேக்குகள்

3. பட்டாணியர்கள்

4. மொகலாயர்கள்

5. மாலிக்குகள்

6. மிர்ஜாக்கள்

B. அஜ்லாஃப் என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1) பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.

4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.

C. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.

பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மௌக்தா, மெஹ்தார்.

ஜாதி உயர்வுதாழ்வைக் கட்டிக்காக்கவே ஜமாத்துகள்

முஸ்லீம் சமூக அமைப்பில் காணப்படும் மற்றோர் அம்சத்தையும் குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் குறிப்பிடுகிறார்; அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ‘‘பஞ்சாயத்துமுறை’’தான் அது.

கலப்புத் திருமணத்தை எதிர்க்கும் இஸ்லாம்

அவர் கூறியதாவது:

…… பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துகளைப்போன்றே முஸ்லீம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லீம்களில் மேட்டுதட்டுப்பிரிவினரும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும்.

உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றான். அவன் அவமானப் படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.

இஸ்லாம் இழிவு செய்யும் தொழிலாளர் சாதிகள்

இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது. அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாடமுடியும்.

ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.’’

இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடிமதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.’’ என்று அம்பேத்கர் எழுதுகிறார்.

சகோதரத்துவம், சமத்துவம் வேண்டி மதமாற்றத்தை அறிவித்த அம்பேத்கர் அந்த சகோதரத்துவம், சமத்துவம் இல்லாத இஸ்லாத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்? அம்பேத்கர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காததற்கு இஸ்லாத்தில் நிலவிய ஜாதி முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.

 முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 ||

 இஸ்லாம் மதம் பெண்களை மதிக்கிறதா ? அம்பேத்கர் அது பற்றி என்ன சொல்லுகிறார் ?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

(தொடர்வோம்…)

 

63 Replies to “[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்”

  1. சூப்பர் , நேத்துதான் இஸ்லாம் அடிமைமுறையை ஒழித்ததா . என்ற பதிவை போட்டேன்… (அல்லா சொன்னதை , குரானில் இருந்து மட்டும் எடுத்து போட்டிருக்கிறேன்) … இங்கு வரும் முஸ்லிம்கள் அதைவந்து படித்தால் அல்லாவைப்பற்றிய நல்ல ஞானம் பிறக்கும்.

    https://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html

  2. இஸ்லாம் மட்டுமே இந்தியாவிற்கான தீர்வு………
    அப்போதுதான் இந்துகள் தங்களின் வரலாற்று பிழைகளை, தங்களின் போலி மதசார்பின்மையை, “முட்டாள் தன்மையை”, சொந்த சகோதரனை எதிர்க்கும் போக்கினை கைவிடுவார்கள். ஒரே இந்து தலைவரின் கீழ் ஒன்றுபடுவார்கள் .

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா அனைத்தும் இந்துக்களை அழிக்க விரும்பும் நாடுகள்தான்.

    இந்து ராஜ்ஜியமே தீர்வு. அது இந்தியாவை கடந்த ஒரு தேசமாக இருக்க வேண்டும்.

    எங்கும், எப்போதும், எதிலும் “இந்து”. அதுவே இந்து ராஜ்ஜியம்.

    புலம்பல்களைவிட போராட்டமே தீர்வு…..

    (இந்த கருத்துகள் சுருக்கமாகவும், துண்டுபட்டவைகலாகவும் இருந்தாலும் இந்து வாசகர்கள் தங்கள் மனதினில் விவரித்து பார்க்கவும்)

  3. //அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. //
    அம்பேத்கர் குரானை படித்ததில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது..

  4. // அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.//

    I also Strongly disagree with this sentence. Please Read Tamilan’s Blog…

  5. இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அன்வர்ஷேக் அவர்கள் எழுதியுள்ள நூல்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம். திரு.வெங்கடேசன் அவர்களின் இதுபோன்ற படைப்புகள் தொடரட்டும். பாராட்டுகள். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தின் உண்மை முகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

    வித்யா நிதி.

  6. நல்ல வேளை எங்கே இஸ்லாம் இனிய மார்க்கம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். ஏன்னா இது மாதிரி ஒருதலைப் பட்சமான ” போஸ்டர் பார்த்து கதை சொல்லும்” அறிவார்ந்த பிளாக்லே அப்படி பாராட்டினாத்தான் அதிசயம் .

    இஸ்லாத்தில் சாதியோ , இல்லை பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளோ இல்லை என்பதை அறிய குர்-ஆன் முழுமையும் நீங்க வாசிக்கனும்னு அவசியமில்லீங்க. நபி ஸல்லல்லாகு அலைஹிவ ச்ல்லாம் அவங்களோட இறுதிப் பேருரைய மட்டுமே படிச்சா போதும் .

    “எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்”-முகம்மது நபி (ஸ்ல்) இறுதிப் பேருரை.

  7. அன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே அடிமை முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது , என்றாலும் அடிமை விடுதலை , சரி நிகர் சமானமாகப் பேணுதல் ஆகியவற்றை வலியுறுத்தியதும் இஸ்லாமே.

    “ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!” (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

    அப்புறம் சார் முதல்லே அடிமைன்னா யாருன்னு முடிவுக்கு வாங்க சார் . (வீட்டு வேலை)பணியாளர்கள்னும் அதைச்சொல்லலாம்.

    பண்ணையார்களுக்கு தொண்டூதியம் செய்ய தாழ்த்தப்பட்ட மக்களை மாட்டுக் கொட்டடியில் அடைப்பது போன்று தங்களது வீட்டு மூலையில் தங்க வைத்து ஆயுள் முழுக்க வேலை வாங்குவதன் பெயர் என்ன?

    அத்தகைய நடைமுறை அந்த காலகட்டத்திம் மட்டுமல்ல இப்போதும் தமிழக கிராமங்களில் இருக்கிறதே .

    நமது இளையராஜா பிறாஜ பிறந்த பண்ணைப்புறத்திலேயே கூட இன்னமும் ” இரட்டைக் குவளை முறை” நடைமுறையில் உள்ளதே!

    உண்மை இப்படி இருக்க ஏன் இஸ்லாத்தின் மீது மட்டும் இப்படி ஒரு காழ்புணர்ச்சி ?

  8. அருமை. இஸ்லாம் மதத்தைப் பற்றிய அம்பேத்கரின் கருத்துக்கள் நமக்கு நல்ல படிப்பினையாக இருக்கட்டும். நம் ஒற்றுமையை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். நம்மில் ஒற்றுமை காண்பது மிகவும் அவசர அவசிய தேவை. நன்றி. ஹிந்துக்களை ஹிந்துக்களாக வாழவிட வேண்டும் என்று அரசிடமும் வலிமையான முறையில் தெரிவிக்க வேண்டும். நன்றி..

  9. “/////எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்”-முகம்மது நபி (ஸ்ல்) இறுதிப் பேருரை.////
    ஜனாப் மொஹி,
    பிறகு ஏன் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்திய ஆந்திர இஸ்லாமிய இளைஞரை காதலித்த அரேபியா நாட்டு பெண்ணுக்கு அவரை திருமணம் செய்து வைக்க ஏற்கவில்லை,.தப்பி தன் காதலனோடு பாஸ்போர்ட் கூட இன்றி நம் நாட்டிற்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த அப்பெண் நான் திரும்பி என் நாட்டிற்கு சென்றால் கொன்றுவிடுவார்கள் என்று கெஞ்சியதும் அப்பெண்ணை இந்நாட்டினுள் அனுமதித்தது அன்றைய அரசு அப்பெண் இன்றும் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இஸ்லாமியர்களில் உயர்வு தாழ்வு இல்லைஎன்பதும் அரபியர் தங்களை உயர்ந்தவர் என்றும் இந்தியர் இஸ்லாமியர் ஆனாலும் தாழ்ந்தவர் இல்லை என்றும் கருதுவது உண்மை என்றால் ஏன் அஜ்ஜோடியை பிரிக்கவும் கொல்லவும் நினைக்கவேண்டும். சும்மாங்காட்டியும் நாங்களும் அவுங்களும் சமம் என்று நீங்கதான் ஓயாம சொல்லிகிறீங்க அரபிகள் பொறுத்தவரை இந்தியர்கள் இஸ்லாமியர் ஆனாலும் ரொம்ப தாழ்வாகத்தான் நினைக்கின்றனர். அப்பெண் இந்தியா ஓடிவந்தவுடன் எல்லா நாட்டு அரபிகளும் கொந்தளித்தனர் என்பது உண்மை. அப்பெண்ணை ஹராமி என்று திட்டி தீர்த்தார்கள் இதனை நேரிடையாக கெட்டவர்கள் சொன்னது. குல்லு இந்தி பார்ரா (எல்லா இந்தியர்களும் வெளியேறுங்கள்) என்று சொன்னதாகவும் கூறினார்கள்.
    அரபியை பொறுத்தவரை மற்றவர் எல்லாமே மட்டம் வொயிட் ஸ்கின் மட்டும் ஒஸ்தி மற்ற நாட்டு அரபிகளுக்கு தரவரிசை உண்டு அவ்வளவே.
    அவர்களுக்கு நீங்களும் (இஸ்லாமியர் ஆனாலும்) ஹிந்திதான் நானும் ஹிந்திதான்

  10. மோஹி அவர்களே
    இஸ்லாம் இனிய மார்க்கம் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி சொன்னால் சொல்கிறவர் இஸ்லாம் பற்றி அறியவில்லை என்று அர்த்தம். சமுதாயப் புரட்சியை அன்பால் முகமது கொண்டு வந்திருந்தார் என்றால் நாங்களே சொல்வோம் இஸ்லாம் இனிய மார்க்கம் என்று. ஆனால் முழுக்க முழுக்க வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு வியாபாரக் கூட்டத்தை கொள்ளை அடித்து, பெண்களை அடிமைகளாக பிடித்து கற்பழித்து, அடிமை வியாபாரம் செய்து மதம் பரப்பிய ஒரு கொடுரமான மனிதரை இறுதித்தூதர் என்று எப்படி சொலல முடியும். கன்புசியஸ், புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் எந்த வன்முறையை கையில் ஏந்தவில்லை. அவர்களுடைய மதமும் எல்லா நாடுகளிலும் பரவத்தானே செய்துள்ளது?
    கொலைகாரனை, கொள்ளைக்காரனை, பொம்பளைப் பொறுக்கியை ரோல் மாடலாக வைத்துள்ள உங்களுக்கு காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போலத்தான் தெரியும்.

  11. மொஹி

    //அன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே அடிமை முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது , என்றாலும் அடிமை விடுதலை , சரி நிகர் சமானமாகப் பேணுதல் ஆகியவற்றை வலியுறுத்தியதும் இஸ்லாமே.
    //

    கிணற்று தவளை தெரியுமா – அன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே என்றால் என்ன – அரபு நாடு தான் உலகம் என்று அர்த்தமா. இஸ்லாம் தோன்றிய அந்த கீடு நாட்களில் இந்தியா அதன் ஞான மரபின் உச்சத்தில் இருந்தது. அத்வைதம், பக்தி மார்க்கம், புத்தம் எல்லாம் அதன் உச்சத்தில் இருந்தன. உம்மவர் மரத்தின் மீது விளையாடி கொண்டு இருக்கையில் எம்மவர் ஞானத்தின் உச்சத்தை தொட்டிருன்தனர்.

    நீங்கள் சொன்ன இதே கேடு கேட்ட வசனத்தை முன்பே ஒருவர் எழுதி இருந்தார். அதற்கக் பதில் முன்பே கொடுத்தாகி விட்டது.

    இஸ்லாம் ஒரு சம தர்ம மதம் என்று சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை – கராச்சியில் 800 பேர் செத்துவிட்டனர் ஒரு வருடத்திலே – இதெல்லாம் ரெண்டு இஸ்லாம் காட்டு கும்பல் சண்டையிலே – இஸ்லாத்தில் ஒரு வசனத்தை காட்டி சமாதானம் என்கிறீர்கள் ஆனால் இந்த வசனத்திற்கு முரணாக பல்லாயிரம் வசனங்கள் உள்ளன. நபிகள் அவரின் வசித்திக்கு ஏற்ப உளறியதை எல்லாம் சமாதானமாக சொல்லாதீர்கள். அதே நபிகள் அவனை வெட்டு, குத்து விடாத தொரத்தி பிடி என்று அல்லா சொன்னதாக வரும் வசனங்களை நீர் படித்ததில்லையா.

  12. மோஹி,

    \\பண்ணையார்களுக்கு தொண்டூதியம் செய்ய தாழ்த்தப்பட்ட மக்களை மாட்டுக் கொட்டடியில் அடைப்பது போன்று தங்களது வீட்டு மூலையில் தங்க வைத்து ஆயுள் முழுக்க வேலை வாங்குவதன் பெயர் என்ன?\\

    என்ன காமெடி செய்கிறீர்கள். கொத்தடிமை என்பதற்கும் தாழ்த்தபட்ட என்ற சொல்லுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கொத்தடிமை என்ற முறை ஆப்ரகாமிய மத தாக்குதலின் பின்பு பாரதத்தில் நுழைந்த ஒன்று.

    \\நமது இளையராஜா பிறாஜ பிறந்த பண்ணைப்புறத்திலேயே கூட இன்னமும் ” இரட்டைக் குவளை முறை” நடைமுறையில் உள்ளதே!\\

    அட பெரிய 5 start ஹோட்டலி கூட தான் ஆளுக்கு பணத்திற்கு பதவிக்கு ஏற்றவாறு மரியாதை செய்கிறார்கள். அதற்காக அவ்வாறு மரியாதை செய்யாதவர்கள் எல்லாம் தாழ்த்தப் பட்டவர்களா?

    அட தங்கள் அறிவை நினைத்து எனக்கு வியப்பாக உள்ளது. காப்பி மற்றும் டீ என்ற பழக்கமே கிறித்துவ கொள்ளை கூட்டம் இங்கு வந்த பின்பு தான் ஏற்பட்டது.

    ஆப்ரகாமிய மதவாதம் இந்தியாவில் நுழைந்த பின்பு தான் சாதிகள் வக்கிரம் கொண்டவையாக மாற்றப் பட்டன் என்பதை தாங்கள் அறிவீர்களா?

    மோஹி, உங்கள் பாட்டன் முப்பாட்டனும் ஒரு ஹிந்து தான் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் உடலில் ஓடுவது அரேபிய இரத்தம் இல்லை. நீங்கள் மீண்டும் ஹிந்துவாக மாறுவது தான் உங்கள் முன்னோர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.

  13. ஹா ஹா சாரங் – கிணற்றுத் தவளை நல்லாத் தெரியும் சார் – உங்களப் பார்த்தாக்கூட அப்படித் தான் தெரியுது . சரி எல்லாம் உச்சத்துலே இருந்த மதத்திலே தான சார் சாதி ரீதியிலான பாரபட்சமும் , அடிமை செய்கிற அதே வேலையை தொண்டூதியமும் செய்கிற தலித்துகளை வைச்சுருந்தீங்க 😀 இது கராபாத்ரியின் கண்ட உண்மை . வேறு ஆதாரம் வேணும்னா சொல்லுங்க சார் – உங்களுக்காக இது கூட செய்ய மாட்டோம 😀 – அப்புறம் இன்னொரு அதி மேதாவி சார் திராவிடன் சொல்லி இருக்காரு பாகிஸ்தான்லே சண்டை இல்லையா , அஙே இல்லையா இங்கே இல்லையானு . உண்மைதான் , சன்னி ஷியா அடிச்சுகிறானுவ.அதுலே எவனும் தான் தான் பிறப்பாலே உசந்தவன் நீ தாழ்ந்தவன்னு சொல்லலீங்க. அது வழிபாட்டு சித்தாந்தம் மட்டுமே . அவங்க அடிச்சுக்கிட்டா அது அவங்களோட அறியாமை . நீங்க தான் குறை சொல்றதுக்காச்சும் குர்-ஆனை படிச்சு இருப்பீங்களே . அதுலே எங்கே சார் சன்னி , ஷியானு வருது ? :)அப்புறம் திராவிடன் சார் , ஒரு முஸ்லீமா இருக்கிறது மட்டுமே இன்னொரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யத் தகுதி இல்லீங்க சார் . சவுதிலே கூடா தான் ஒரு சவுதிப் பெண்ணை அரபி அல்லாத இன்னொரு ஆண் மணம் முடிக்க முடியாது . அது அந்த நாட்டுச்சட்டம் சார் – 120 கி.மீட்டர் வேகத்துக்கு மேல வண்டி ஓட்டக் கூடாதுன்னு கூடத்தான் சவுதிலே சட்டம் இருக்கு . விட்ட அது என்ன குரான் லே சொல்லி இருக்கான்னு கேட்பீங்க போலெ இருக்கே 🙂 🙂 சரி திராவிடன் சார் ஒரு வாதத்துக்கே வைச்சுக்கிடுவோம் , உங்க வீட்டுப் பெண்ணை , ஒரு இந்து என்கிற ஒரே காரணத்துக்கக மட்டுமே இன்னொரு இந்துவுக்கு மணம் முடிச்சுக் குடுப்பீங்களா சார் ??

  14. சாரங் சார் இது உங்களுக்காக //////1834க்கு முன் இந்தியாவில் அடிமை முறை தொடர்ந்து நிலவி இருந்தது. அந்த முறையில் ஆண்களும் பெண்களும் ஆடு, மாடுகளைப் போல் விற்கப்பட்டு வந்தனர். எழுநூறு வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் ஒரு இளம் அடிமைப் பெண்ணை விற்ற விற்பனைப் பத்திரம் கிடைத்துள்ளது. அது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் மொழியாக்கம் கீழ் வருமாறு:

    “விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.

    “ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

    “இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”

    மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

    “அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”

    “உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”

    பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!//// https://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php

  15. ராஜா பாஸ் , ஆமா இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இதே கதைய சொல்லிட்டு இருக்கப் போறீங்க . கத்திக்குப் பயந்து இஸ்லாத்துக்கு மாறிட்டான் , பால் பவுடருக்கு ஆசைப் பட்டு கிறிஸ்டீனா மாறிட்டான்னு .கேரள மாநில கடற்கரைக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்க வந்தவர் பெரும் படையோடவா வந்தாரு . கத்திக்குப் பயந்து இஸ்லாத்துக்கு வாரவன் வேண்டாவே வேண்டாம் 🙂 அப்படி ஒரு கோழை .:Dகுதிரைய தண்ணிலே வற்புறுத்திக்காட்டாலாம் ஆனா அது தண்ணி குடிக்குதா இல்லையான்னு பார்த்துட்டே இருக்க முடியுமா பாஸ் ? அப்புறம் சாரங் பஸ் ” இஸ்லாத்தை இருக்க வெட்கமா இல்லையா” நு ஒரு வார்த்தை கேட்டுப் புட்டீங்களே . பட் உங்க கோபம் புடிச்சு இருக்கு 😀 . சரி , சமணர்களையும் , வைணவர்களையும் கழுவேற்றிக் கொன்ற இந்து மத்ததிலெதானெ நீங்க இருக்கீங வெட்கமா இல்லையானு நானெல்லம் கெட்க மாட்டென் சார் 🙂 நாம வாழ்ந்து கொண்டிருக்கிற இதே காலகட்டத்திலே தான் சார் மேலவலவு உட்பட பல இடங்களில் இப்போவும் தாழ்த்தப்பட்டவர்களை வெட்டி சாய்க்கிற ஒரு மதத்துலே இருக்கீங்கலே வெட்கமா இல்லையானு கெட்கமாட்டேன் சார் 🙂 இன்னமும் தீண்டாமைச் சுவர் , இரட்டை குவளை முறை நடை முறையில் உள்ள ஒரு மதத்திலே இருக்கீங்களே வெட்கமா இல்லையான்னு நான் கேட்க மாட்டென் சரங் 🙂 சார் இது மனிதர்களா செய்த தவறு இதற்க்கும் இந்து மதத்திற்க்கும் சம்பந்தம் இல்லைனு உங்களாலே சொல்ல முடியுமா ? காஞ்சிப் பெரியவர் ” தெய்வத்தின் குரல்’ புத்தகத்திலேயே சாதியத்தை வலியுறூதிறார் சார் . நீங்க படிச்சு இருப்பீங்கன்னு நம்Bஉறேன் .ம்ம்ம் இங்கே தான் நம்மா ரஜா பாஸ் சொன்னது நினைவுக்கு வருது ராஜ பாஸ் “கத்தியைக் கொண்டுதான் இஸ்லாம் வளர்ந்தது” என்கிற புழுகு மூட்டையை விவேகானந்தரே ஏற்றுக்கொள்ளவில்லை தெரியுமா?

  16. ராஜா , நீங்க சொல்றது தவறு . அரேபிய நாடுகளில் ,திருமணக் கோடை கொடுக்க சக்தி இருக்கிற எந்த ஒரு கருப்பின அரபியும் வெள்ளை இனப் பெண் உட்பட எந்த பெண்ணையும் மணந்துகொள்ள முடியும். அரபுலகில் வேலை பார்க்கிற இந்து நபர்களுகேல்லாம் தெரியாத இன பேதம் உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் தெரிஞ்சுது ? , குரானோட தமிழாக்கத்த தனக்குத் தெரிந்த வழியிலே படிச்சுட்டு ஆளாளுக்கு கருத்துச் சொல்றீங்க போல 🙂 சத்தியமா நீங்க இஸ்லாத்தை தெரிஞ்சுக்கணும்நு குரானை படிக்கலை , குறை சொல்றதுக்கும் , கேவலமா சித்தரிக்கிறதுக்கும் ஏதாவது கிடைக்குமான்னு தேடுறதுக்கு மட்டும்தான்நு தெரியும் .

    அதாவது கிராமத்துலே ஒரு பழமொழி உண்டு ” புருஷன் மேல கோவிச்சுகிட்டு கொழுந்தன் ……. கடிச்சாலம் ” அது மாதிரி , இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிற திராவிட கழகங்களின் மேல உள்ள கோவத்தை , அவங்கள எதிர் கொள்ள முடியாம இஸ்லாமியர்களையும் , கிறிஸ்தவர்களையும் விமர்சிக்கிறீங்கன்னு தோணுது 🙂

    சார் நீங்க எல்லாமே சுஜிபி சார் 🙂 இஸ்லாம் தோன்றிய காலத்துலே இருந்தே எல்லா வகையான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டிருக்கு சாரே 🙂 அதுக்காக நீங்க மனம் தளராதீங்க சார் . குறை சொல்லிட்டே இருங்க 🙂

  17. “இந்து நண்பர்கள்” எனும் வார்த்தைப் பதிலா ” இந்து நபர்கள்”நு அடிச்சுட்டேன் , திருத்திப் படிக்கவும் .:) ஒருத்தனே எத்தனைப் பேருக்குத்தான் சார் பதில் சொல்றது . நேரமின்மை , அவசரத்துலே இந்த எழுத்துப் பிழை .

  18. இன்றைய செய்தி தாளில், லிபிய அதிபர் கடாபி இருக்குமிடம் தெரியவில்லை என்றும் எங்கோ பதுங்கி இருக்கிறார் என்றும் நியூஸ் வந்துள்ளது. மேலும், வங்கதேச தந்தை முஜிபூர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் இருவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் தான், கடாபிக்கு இன்று இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளது என்று , வங்கதேசத்தின் இந்நாள் அதிபரும் , முஜிபூர் ரஹ்மானின் மகளுமான திருமதி ஹசீனா அவர்கள் தெரிவித்து , மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    இந்த வார வெள்ளிக்கிழமை மசூதி தொழுகையின் போதும் வழக்கம் போல, பாகிஸ்தானின் தற்கொலைப்படையினர் , தொழுகைக்கு வந்தவர்களை ( பிற பிரிவு முஸ்லிம்களை ) கொன்று விளையாடியுள்ளனர். குர்ரான் முழுவதையும் படித்தவர்களுக்கு தான் , வஹாபிகளும் சில இஸ்லாமியர்களும் ஏன் கொலைவெறி பிடித்து அலைகிறார்கள் என்பது புரியும்.

    இஸ்லாத்தை ஏற்காதவர்களை அழித்து ஒழிக்க அங்கு ஏராளமான கட்டளைகள் உள்ளன. அதை படித்தே இவர்கள் வெறியர்களாக மாறி மனித இனத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இனியும் இஸ்லாம் அன்பு மார்க்கம் என்று பொய் சொல்லித்திரிவோருக்கு ஒரு வேண்டுகோள், குர்ரான் முழுவதையும் படியுங்கள், அது பெண்களை கேவலப்படுத்துவதுடன், பிற மதத்தவரை இழிவுபடுத்தும் ஏராளமான வாசகங்களை கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

  19. //இறுதித்தூதர் என்று எப்படி சொலல முடியும்//

    இறுதித்தூதர் தான் – அப்படியே இருக்கட்டும் இப்படிப்பட்ட இன்னொரு ஒரு கிறுக்கரை இந்த உலகம் இனிமேல் காணாமலே இருப்பது நல்லது தான். ஒரே ஒரு ஆள் விடிவை நோக்கி சென்று கொண்டிருந்த உலகத்தையே நாசமாக்க முடியும் என்றால் இன்னொருத்தர் வந்தால் அம்புட்டு தான்.

  20. @ Mohi
    “உண்மை இப்படி இருக்க ஏன் இஸ்லாத்தின் மீது மட்டும் இப்படி ஒரு காழ்புணர்ச்சி ?”
    Your statement admits to the following.
    1) There IS slavery in Islam
    2) But, hey, there is/has been slavery all over the world, including in India and in Ilayaraja’s farm.
    Your whinge is: So why everyone is picking on Islam?
    I hope I have understood you so far correctly.
    The problem is you are confusing a RELIGIOUS doctrine with SOCIAL problems. Your Islam clearly condones slavery. Read Tamilian’s blog spot. You are welcome to challenge him if he has misquoted Koran
    I read recently about this Saudi lady ( member of Parliament ?) who wanted to bring slavery back in Saudi Arabia to stop men from straying from their marriages . She wanted slave women from eastern European countries to be used for this purpose. She said Islam condones slavery practice.Here we are talking about a modern Islamic society!!
    Bonded labor is a curse on the society and need to be condemned. But, there is no Hindu religious book condoning this practice. Bhagavat Gita does not stipulate how one should beat or rape his slaves!!!Krishna did not exactly tell Arjuna how he should treat his slave women!
    Would you now like to return to your mother religion, the religion of your forefathers, Sanatana Dharma? Or are you still happy to wallow in this alien desert cult and it’s violent ways ?

  21. //…நமது இளையராஜா பிறாஜ பிறந்த பண்ணைப்புறத்திலேயே கூட இன்னமும் ” இரட்டைக் குவளை முறை” நடைமுறையில் உள்ளதே!..//

    @Mohi

    மிகக் கடுமையாக இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டிக்கிறேன்.

    இளையராஜா ஒரு தீவிரமான இந்து என்பதாலும், தலித் என்பதாலும் இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் செய்ய உங்களுக்குத் தோன்றுகிறது.

    வெறிபிடித்த மதத்தினனான ஔரங்கசீப் ஹைதரபாத் மீது படையெடுத்தான். ஹைதராபாத் முஸ்லீம்கள் ஷியாக்கள் என்பதால், அவர்களுடைய மசூதியை இழிவுபடுத்துவதற்காகத் தனது குதிரைகள் வைக்கோல் உண்டு, மலம் கழிக்கும் குதிரை லாயமாக அதை மாற்றினான். இஸ்லாமிய சாதி வெறி என்றும் தொடர்ந்து வருகிறது. மசூதியைக் கேவலமாக்கிய ஔரங்கசீப்பைக் கண்டிக்கும் நேர்மை உங்களுக்கு இருக்கிறதா ?

    ஷியாக்கள் சுன்னிகளுக்கான மசூதியிலும், சுன்னிகள் ஷியாக்களுக்கான மசூதியிலும் தொழ ஆரம்பித்த பின்னர்தான் சாதி இல்லை என்று சொல்லும் தகுதி உங்களுக்கு வரும்.

    சாதி வெறி என்பது இஸ்லாமிய மதத்தால்தான் இந்தியாவில் கேவலமான நிலைக்கு வந்தது.

    மனிதர் கழிவை மனிதர் சுமக்கும் நிலையை இந்தியாவில் உருவாக்கியதே இஸ்லாம்தான். நீங்கள் இந்த வரலாற்று உண்மைகளை மறைக்க முடியாது.

    என்னதான் நீங்கள் அரபியர்களின் காலடியை முத்தமிட்டாலும், அவர்கள் பார்வையில் நீங்கள் வெறும் அடிமைகள்தான். இஸ்லாமில் இருக்கும் என் சகோதரிகளை அரபிகள் வெறும் வலங்கைப் பெண்களாகத்தான் நடத்துகிறார்கள்.

    இஸ்லாமியராக மாறிய எங்கள் சகோதரர்களுக்கு சுயமரியாதை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், இஸ்லாமியராக மாறிவிட்ட எங்களுடைய சகோதரிகளின் மானத்திற்காக நாங்கள் போராடுவோம்.

    ஏனெனில், மதம் மாறாததால் நாங்கள் காப்பாற்றிய சுயமரியாதையும், சுரணையும் இந்துக்களான எங்களிடம்தான் எஞ்சி இருக்கிறது.

    இந்தக் கட்டுரையில் அம்பேத்கர் சொல்லி உள்ள ஆதாரங்களில் ஒன்றைக் கூட உங்களால் மறுக்க முடியவில்லை. நடைமுறைக்கு வராத புத்தகக் கருத்துக்களைக் காட்டி உங்கள் அடிமை விசுவாசத்தை நிச்சயித்துக் கொள்கிறீர்கள்.

    உங்களுக்குள் ஓடும் இந்து ரத்தம் என்றாவது சூடு பெற்று உயிர்த்தெழும். அதற்கு அம்பேத்கர் போன்ற இந்துக்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    .

  22. இங்கு அரபு நாட்டுக்கு வக்காலத்து வாங்கும் மோஹி போன்ற இஸ்லாமிய சமயவேரியர்கள் விஷம் கக்குவதை எல்லாம் தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு எதற்கு வெளியிட்டு வருகின்றனர் என்று யோசித்தேன். புரிந்து விட்டது – ‘நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினால் இப்படி ஒரு காமெடி பீஸ் ஆகி விடுவீர்கள். ஆகையால் அந்தப் பக்கம் போகாதீர்கள்’ என்று காட்டுவதற்காகத் தான் வெளியிடுகிறார்கள்.

    மோஹி, தொடருங்கள் உங்கள் பணியை. நீங்கள் தமாஷ் பண்ணுவதை வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கிறது.

  23. ஜெனாப் மொஹி,

    \\\\\\\\\\\\”போஸ்டர் பார்த்து கதை சொல்லும் அறிவார்ந்த பிளாக்லே அப்படி பாராட்டினாத்தான் அதிசயம்”\\\\\\\\

    ஆமா, நீங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் ப்ரசங்கங்களிலிருந்து ஹிந்து மதம் பற்றி கசடுற கற்று அதன்மூலம் ஹிந்து மதத்தை எடை போடும் முயற்சியைஎப்படி விளிப்பது????

    \\\\\\\\இஸ்லாத்தில் சாதியோ , இல்லை பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளோ இல்லை என்பதை அறிய குர்-ஆன் முழுமையும் நீங்க வாசிக்கனும்னு அவசியமில்லீங்க\\\\\\\\\

    அப்படி எதிர் பார்க்கும் நீங்கள் வேதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். இல்லையெனில் இதைப்பற்றி பேசுவது வெட்டி.

    \\\\\\\ சன்னி ஷியா அடிச்சுகிறானுவ.அதுலே எவனும் தான் தான் பிறப்பாலே உசந்தவன் நீ தாழ்ந்தவன்னு சொல்லலீங்க. அது வழிபாட்டு சித்தாந்தம் மட்டுமே . அவங்க அடிச்சுக்கிட்டா அது அவங்களோட அறியாமை .\\\\\\

    தர்காக்களை தகர்த்து ஆங்கே மஸ்ஜித் கட்ட சொல்லும் தேவ்பந்தி, வஹாபி சுன்னி முஸல்மான்களை பரேல்வி முஸல்மான்கள் ஒத்துக்கொள்ளாமல் இருப்பது அறியாமையா?

    அஹ்மத் ராஜா கான் பரேல்வி அவர்கள் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் தேவ்பந்தி, ஷியா, வஹாபி மற்றும் காதியானி(அஹ்மதியா)களுக்கெதிராக ஃபாத்வா வெளியிட்டது அறியாமையா. அவர் என்ன எக்ஸோடஸும் டால்முடும் படித்து விட்டா ஃபாத்வா கொடுத்தார்?

    இஸ்லாத்தில் சாதி அடிப்படையில் பேதம் இல்லையெனில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வாங்குவது எதனால்? அறியாமையினாலா? எரியர வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற அறிவின் அடிப்படையில் மட்டுமன்றோ?

    தேவ்பந்தி முஸல்மானின் நிக்காஹ்வை பரேல்வி காஜி செய்து வைத்தால் அது செல்லுபடியாகாது என்பது எப்படியோ? அறிவா அறியாமையா?

    பாகிஸ்தானில் தேராஇஸ்மாயில்கான், கராச்சி மற்றும் ஃபைஸலாபாத் போன்ற இடங்களில் பரேல்வி சுன்னி முஸல்மான்களை தேவ்பந்தி சுன்னி முஸல்மான்கள் கொத்து கொத்தாக கொலை செய்வது அதுவும் உங்களது “ஸல்லல்லாஹு அலைஹிவ சல்லம்” அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கொலை செய்வது அறியாமையால் அன்று மாறாக குரான்-ஏ-ஷெரீஃபை படித்து அவர்கள் அறிந்தது சரி என்பதால் தான்.

    படிக்க https://en.wikipedia.org/wiki/Barelvi

    \\\\\\\கத்திக்குப் பயந்து இஸ்லாத்துக்கு வாரவன் வேண்டாவே வேண்டாம் \\\\\

    ஆஹா. கத்திக்கு பயந்து இஸ்லாத்துக்கு போனவர்கள் இன்று இஸ்லாத்தில் இருப்பவர்களின் முன்னோர்கள். அது நிகழ்ந்தது முகலாயர் காலத்தில். இன்று “கத்திக்குப் பயந்து இஸ்லாத்துக்கு வாரவன் வேண்டாவே வேண்டாம்” என்று நீங்கள் சொல்வது தமாஷாக இல்லை?

    \\\\\\\\ சரி , சமணர்களையும் , வைணவர்களையும் கழுவேற்றிக் கொன்ற இந்து மத்ததிலெதானெ நீங்க இருக்கீங வெட்கமா \\\\\\\

    சமணர்களை கழுவேற்றியாதாக கதை தான் உண்டு சரித்திரமோ சரித்திர ஆதாரமோ கிடையாது. அது சரி வைணவர்களை கழுவேற்றினார்களா?ஹாய் ரப்பா தேணு புத்தி தேதே மோமினோங்கோ?

    \\\\\\\\\நாம வாழ்ந்து கொண்டிருக்கிற இதே காலகட்டத்திலே தான் சார் மேலவலவு உட்பட பல இடங்களில் இப்போவும் தாழ்த்தப்பட்டவர்களை வெட்டி சாய்க்கிற ஒரு மதத்துலே இருக்கீங்கலே வெட்கமா இல்லையானு கெட்கமாட்டேன் சார் இன்னமும் தீண்டாமைச் சுவர் , இரட்டை குவளை முறை நடை முறையில் உள்ள ஒரு மதத்திலே இருக்கீங்களே வெட்கமா இல்லையான்னு நான் கேட்க மாட்டென் \\\\

    \\\\\அடிமை செய்கிற அதே வேலையை தொண்டூதியமும் செய்கிற தலித்துகளை வைச்சுருந்தீங்க \\\\\

    ஜெனாபேஆலி, அப்போ ஸ்ரீ ம.வெங்கடேசன் அஷ்ராஃப் மற்றும் அஜ்லாஃப் பற்றி சொல்லிய கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி கண்டும் காணாமலிருப்பதேனோ? முழுப்பூஷணியை சோற்றில் மறைக்க கூடாது.

    ///////தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.

    மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

    மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்

    சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்./////////

    \\\\\சத்தியமா நீங்க இஸ்லாத்தை தெரிஞ்சுக்கணும்நு குரானை படிக்கலை , குறை சொல்றதுக்கும் , கேவலமா சித்தரிக்கிறதுக்கும் ஏதாவது கிடைக்குமான்னு தேடுறதுக்கு மட்டும்தான்நு தெரியும் .\\\\

    ஆனா நீங்கள் ஹிந்து புத்தகங்களைப் படிப்பது ஹிந்துவாக மாற என்றே அறிகிறோம்.

    இஸ்மே க்யா குஃப்துகூ இஸ்மே க்யா குஃப்துகூ

  24. தனக்கு திமை செய்வோருக்கும் நன்மை செய்–இஸ்லாம்

    இந்து நண்பர்கள் தாங்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதன் முலம் இஸ்லாத்தை அதிகமாக என்னால் உணர முடிஞ்சது . விமர்சனத்தின் விலக்ககள் அறிந்து எனது இமானை பலபடுதினேன் .

    இஸ்லாத்தை விமர்சிபதாக நினைத்து இந்து சமுதாயத்தை இழிவு படுதுரிர்கள் .
    ஏன் நான் அவவாறு சொல்கிறான் என்றால் . இஸ்லாம் சமயத்தில் ஒவொரு மசுதிய்லும் ஒவொரு இஸ்லாமிய மத பாடசாலை இயங்கிறது .அதில் இஸ்லாமிய சித்தாந்தம் பைய்ற்சிவிக்கபடுகிறது தலைமுறை தலைமுறையாக .அனால் இந்து வழிபாடு தலத்தில் அவ்வறு இல்லை ஏன் ?

    நிங்களும் மற்றவர்களும் போதிப்பது இந்து வழிபாட்டுமுறைய ? இஸ்லாமிய சித்தாந்தம் ?

  25. மொஹி போன்றவர்களுக்கு புரிய வைப்பது என்பது

    ஒரு மத யானையின் காலை ஒரு சிறு நாரால் கட்டுவது போல

    வைரத்தை பூவால் அறுப்பது போல

    சமுத்திரத்தை ஒரு துளி தேன் கொண்டு இனிப்பாக்குவது போல விடுங்கப்பா

  26. //
    தனக்கு திமை செய்வோருக்கும் நன்மை செய்–இஸ்லாம்

    //

    அதாவது தனக்கு தீமை செய்வோருக்கு தீனி போடு – அப்புறம் நல்லா கொழத்த பின்னர் ஒரே வெட்டு – எல்லாரையும் ஆடுன்னு நினைக்கிறீங்களா

    //
    இஸ்லாத்தை அதிகமாக என்னால் உணர முடிஞ்சது
    //

    இஸ்லாத்தை உணருவதுன்ன என்னன்னா ?

  27. @INDIAN ISLAMIC STATE ,
    //இஸ்லாத்தை விமர்சிபதாக நினைத்து இந்து சமுதாயத்தை இழிவு படுதுரிர்கள்
    ஏன் நான் அவவாறு சொல்கிறான் என்றால் . இஸ்லாம் சமயத்தில் ஒவொரு மசுதிய்லும் ஒவொரு இஸ்லாமிய மத பாடசாலை இயங்கிறது .அதில் இஸ்லாமிய சித்தாந்தம் பைய்ற்சிவிக்கபடுகிறது தலைமுறை தலைமுறையாக .அனால் இந்து வழிபாடு தலத்தில் அவ்வறு இல்லை ஏன் ?//

    கொலை,கொள்ளை,கற்பழிப்பை நியாயப்படுத்தவேண்டுமானால் ,முதலில் வேலை செய்யும் மூளையை மழுங்கடிக்கவேண்டும். அதானால் தான் உங்களின் ”இஸ்லாமிய மத பாடசாலை” ஒவ்வொரு மசூதியிலும் “இஸ்லாமிய சித்தாந்தம்” என்னும் மூளை சலவையை ,முஸ்லிம்களுக்கு சிறுவயது முதலே செய்கிறது. எங்களுக்கு அந்த மாதிரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு ஹிந்துவும் உலகத்தை புரிந்துகொள்ளும் வயது வந்தவுடன் இறைவனையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்காக தனியாக பாடசாலை செல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    அது சரி , இதை படித்தீர்களா? உங்கள் மாதிரியான ஆட்களுக்காகத்தான் எழுதியுள்ளேன்.
    https://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html
    https://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_27.html

  28. ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

    இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் – தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.

    ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்

    அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.

    ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ – முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ – அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.

    பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு

    பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் – கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் – செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

    இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர – தர்ம சாஸ்திர – புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் – இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.

    நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் – இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.

    நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் – இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் – நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.

    ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி – இழிபிறவி – நாலாம் ஜாதி – சூத்திரன் பார்ப்பானின் அடிமை – பார்ப்பானின் தாசி மக்கள் – நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

    “ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது

    ஹிந்து என்றோ – இந்துமதம் என்றோ – இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது – ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய – இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர – புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.

    தவிரவும் இந்தியா என்ற சொல் – ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?

    பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

    அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

    ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.

    The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

  29. // ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. //

    யோவ் அறிவு ஜீவி,

    இந்நாட்டில் துலுக்கனுக்குச் செய்யப்படும் மூளைச்சலவை உனது மறுமொழியிலிருந்து தெரிகிறது. நல்ல தண்ணீரில் சோப்பு போட்டு சலவை செய்தாலாவது பரவாயில்லை. சாக்கடை தண்ணீரில் சலவை செய்கிறார்கள்.

    உங்களைப் போன்ற அற்புத சிகாமணிகள் விவரம் தெரியாமல் உளறுவதை நிறுத்துவதற்காகத் தான் நானும், வேறு பலரும் இத்தளத்தில் கட்டுரைகளை வரைந்து வருகிறோம். சங்க இலக்கியங்களில் வேதம் பற்றியும், ஹிந்துமதம் பற்றியும், வைதிக ஒழுக்கம் பற்றியும், திருமால் மற்றும் முருக வழிபாடு பற்றியும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அத்துடன் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் தமிழ் பேப்பர் தளத்தில் அண்மையில் சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். பார்த்துத் தெளியவும்.

  30. பேரில்லாத பெரியசாமி, யாரையா நீர்? இது வரை kans என்பவர் தான் இது போன்று copy & paste வேலையை செய்தார். இப்பொழுது இன்னொறு ஆள், யாருக்கு தெரியும் kans தான் இது போன்ற பெயரில் திரும்ப செய்துள்ளாரோ என்னமோ?

    உங்களை விமர்சித்து தான் நாங்கள் வளர வேண்டும் என்பது இல்லை. அதுவும் தவிர இது அம்மேத்கர் வாழ்க்கை பற்றிய பதிவு. இதில் எங்களை கேள்வி கேட்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.

    நீர் எழுதியதற்கு எல்லாம் நான் பதில் எழுதினால் என்னை விட முட்டாள் உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். முடிந்தால் கீழே உள்ள லிங்கை படித்து புரிந்து கொள். இல்லாவிட்டால்……

    “நான் திராவிடன்” என்னும் சந்திரமுகி நோய்:
    https://thamizhan-thiravidana.blogspot.com/2010/11/blog-post_18.html

    முழுமையான தொல் பொருள் ஆய்வு முடிவுகள்:
    https://www.archaeologyonline.net/artifacts/genetics-aryan-debate.html

    என்னுடைய ஆன்மீக மற்றும் பண்பாடு பற்றிய விசயங்களை நானே தான் தேடி பிடித்து படித்தேன். எனக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு கூட ஒரு வருடத்திற்கு முன்பே ஏற்பட்டது. எங்கள் சமயம் உங்கள் மதத்தை போல பரவியது அல்ல. உருவானது.

  31. indian islamic state

    நீர் பேத்தினதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்

    தூய இஸ்லாம் மார்க்கம் தமிழ் மதமான்னா
    புனித குரான் செந்தமிழில் இயற்றப்பட்டு இருக்கான்னா
    ஸல் அவர்கள் மரத்தமிழாரன்னா
    தஞ்சை பெரிய கோவிலை ஸல் அவர்களின் எட்டாவது போன்ஜாதியான்ன கட்டினாங்க
    ரியாத் தான் முன்பு தமிழ் நாட்டின் தலை நகரமான்ன
    தமிழ் நாட்டவரின் உடை வேட்டியா லுங்கியா பைஜாமாவான்னா
    சோழர்களின் கோடியில் ஒட்டகம் இருந்தான்னா
    தமிழ் நாட்டு மக்கள் அரபு நாட்டு மக்கள் போல மண்ட கிருக்கர்கலான்னா
    திருவள்ளுவர் சொல்லும் ஆதி பகவன் என்பது அல்லவயான்னா
    கப்பலோட்டிய தமிழனார் சென்னைக்கும் அரேபியாவுக்கும் கப்பல் விட்டாரான்னா
    பாரதியார் அரபு புலவறான்னா
    மெக்கா முன்னாடி காயல் பட்டினத்தில் இருந்ததன்னா

    திந்த்ரீவனம் (புளியங்காடு) இன்றைய திண்டிவனம் துபைல இருக்கான்னா

    நீங்கள் சொன்ன ஆராய்ச்சியாளரின் பெயர் கேன கிருகனான்னா

    நேத்து நீங்கள் மக்கள் டி வீ பாத்தீங்க தானே அங்க ரெண்டு லூசுங்க தை மாசாத்த பத்தி பேசினத கேட்டீங்கலான்னா

    ஏன்னா நீங்கள் தொல்காப்பியம் பற்றி கேள்விப் பட்டதிள்ளயான்ன – அதுல எந்த மதத்தை பத்தின்ன இருக்கு

    பரி பாடல்கள், சங்க இலக்கியங்கள் இதெல்லாம் அல்லாவின் புகழான்ன பாடுகிறது

  32. மொஹி

    //
    விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை
    //

    1231 வைகாசி 15th சனிக்கிழமை ஸ்வாமின் வியாழகிழமை இல்ல – கீத்துல போய் இத பத்தி கொஞ்சம் கீருங்க

    எப்படி எல்லாம் சரடு கட்டுரீன்கப்பா – பொதுவாக ரானா சிங்கெல்லாம் (இவர்கள் பொதுவாக மன்னர் பரம்பரையினர் என்பது வேற விஷயம் ) மாரடியர்கலாக இருப்பார்கள் அல்லது ராஜஸ்தான் காரர்களாக இருப்பார்கள்.
    இப்படியே சும்மா குஜராத் கிராமம் வரைக்கும் அடிமையை விரட்டிகிட்டு போனாராக்கும் இல்ல டாடா குட்டியானைல ஏத்திகிட்டு போனாராக்கும்

    சரி குஜராத்ல கிராம மக்கள் கூட சமஸ்க்ரிதத்துல ஒப்பந்தம் போட்டாங்களாக்கும் ரொம்ப சந்தோசம்.

  33. /////சரி திராவிடன் சார் ஒரு வாதத்துக்கே வைச்சுக்கிடுவோம் , உங்க வீட்டுப் பெண்ணை , ஒரு இந்து என்கிற ஒரே காரணத்துக்கக மட்டுமே இன்னொரு இந்துவுக்கு மணம் முடிச்சுக் குடுப்பீங்களா சார் ??//////
    சார் இந்துக்குள்ளே தான் நிச்சயம் மனம் முடிச்சு கொடுப்பேன்.அவர் இந்திய இந்துவானாலும் சரி இலங்கை மற்றும் எந்த நாட்டினரானாலும் பெண்ணுக்கு பிடித்த இந்துவுக்குதான் நிச்சயம் கொடுப்பேன்

  34. ////அப்புறம் திராவிடன் சார் , ஒரு முஸ்லீமா இருக்கிறது மட்டுமே இன்னொரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யத் தகுதி இல்லீங்க சார் . சவுதிலே கூடா தான் ஒரு சவுதிப் பெண்ணை அரபி அல்லாத இன்னொரு ஆண் மணம் முடிக்க முடியாது . அது அந்த நாட்டுச்சட்டம் சார் – 120 கி.மீட்டர் வேகத்துக்கு மேல வண்டி ஓட்டக் கூடாதுன்னு கூடத்தான் சவுதிலே சட்டம் இருக்கு . விட்ட அது என்ன குரான் லே சொல்லி இருக்கான்னு கேட்பீங்க போலெ இருக்கே//////
    குரான் ஹதீஸ் மற்றும் இமாம்கள் சொல்வதும் அதனை ஒட்டியும் மட்டுமே மனித நடைமுறை சட்டங்கள் அங்கு பின்பற்றபடுகின்றன. மோட்டார் வாகன சட்டம் பெரும்பாலும் அமெரிக்காவை பின்பற்றி இருக்கும் (பெண்கள் செல்லும் கார்கள் மட்டும் கண்டிப்பாக அடர்த்தியான சன் கிளாஸ் போடப்படவேண்டும் என்பது தவிர).
    கண்ணூர் காலிகட் போன்ற இடங்களுக்கு வரும் அரபிகள் மகர் கொடுத்து இளம் பெண்களை திருமணம் செய்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டு பிள்ளையையும் வயிற்றில் கொடுத்து விட்டு ஓடுவது நடக்கும் நிகழ்ச்சிதானே (குரான் அதற்கு அனுமதி அளிக்கிறது போற இடத்தில் சும்மா இருக்கமுடியலென்ன மகர் கொடுத்து ஒரு கல்யாணம் கட்டிக்கலாம் மேலதிக தவலுக்கு அண்ணன் தமிழன் தளத்திற்கு சென்று பார்க்கவும்) அது எப்படி இந்திய இஸ்லாமிய சகோதரியை ஒரு அரபி அப்படி உபயோகபடுத்தமட்டும் அவன் நாட்டு சட்டம் அனுமதி அளிக்கிறது?
    ஆனால் என் இந்திய இஸ்லாமிய சகோதரன் தான் விரும்பும் மட்டும் அரபியை மகர் கொடுக்க முடிந்தாலும் மணமுடிக்க அனுமதி மறுக்கிறது? இது நம் மேல் கொண்ட தாழ்வெண்ணம் தானே. ஆனாலும் நீங்கள் அவர்களுக்கு அடிக்கும் ஜால்ரா அங்கே வரை கேட்கிறது போங்கள்.

  35. ///இன்னொரு அதி மேதாவி சார் திராவிடன் சொல்லி இருக்காரு பாகிஸ்தான்லே சண்டை இல்லையா , அஙே இல்லையா இங்கே இல்லையானு /////
    ஐயா நல்லா படிச்சு பாத்து பதில் எழுதுங்க, நான் எங்க பாகிஸ்தான் பத்தி சொல்லி இருக்கேன்.

  36. குர்ரான் ( சர்வ வல்லமை படைத்த அல்லா என்ற கடவுள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தின் மூலம்……..)

    1. அல்லாதான் ஒரே கடவுள் – இதை ஏற்காதவர் (சிலை வழிபாடு செய்கிறவர்கள்) அல்லாவை நம்பும் வரை விரோதிகள் – வெறுக்கத்தக்கவர்கள் (சுரா – 60 ஆயத் – 4)
    2. அப்படி நம்பிக்கை இல்லாதவர்களது மனத்தில் திகிலை ஏற்படுத்துவேன். தலையையும் மற்றும் கை கால்களை துண்டிப்பேன். (8 :12)
    3. நீங்கள் கொலை செய்யவில்லை – அல்லாவிற்காக அதை செய்கிறீர்கள் – உண்மையான நம்பிக்கையுடன் இதை செய்பவரை அல்லா பரிசளித்து போற்றுவார் ( 8:15 -18 )
    4. சிலை வழிபாட்டார்கள் அதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடி அல்லாவின் புனித ராஜ்ஜியத்தை நிறுவுங்கள் (8 :39)
    5. பார் ! எவர் எவர் அல்லாவின் போதனைகளை ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை தீயில் இடவேண்டும். அவர்களது சதை பகுதி எரிந்தபின் விடுவித்து அந்த சதை வளரும்வரை கொடுமைகளை அனுபவிக்கவேண்டும். பார் ! அல்லா உண்மையானவனே ! நேர்மையானவனே ! ( 4 :56 )
    6. நெருப்பு குண்டங்கள் நம்பிக்கை இல்லாதவர்களை போடுவதற்காக என்றும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அவர்களை அதில்தூக்கி எறிந்து அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றி வயற்றில் எரிச்சலை எழுப்பவேண்டும். அவர்களை காய்ச்சிய இரும்பு தடி கொண்டு அடிக்கவேண்டும் ( 22 :19-21)

    மேலே சொன்ன ஆறு ஆயத்துகள் ”ஓரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” . இதை போல் 85 மனிதகுலத்தையே அழிக்கவல்ல ஆயத்துகளை மேற்கோள் காட்டி 1985 இல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் குரானை தடை செய்ய சொல்லி ஒரு வழக்கு போடப்பட்டு சந்திசிரித்தது (கல்கத்தா குர்ரான் வழக்கு). ஸெக்யூலர் வியாதிகளின் எதிர்பாலும் பல கலவரங்கள் நடந்ததாலும் இந்த வழக்கு பின்பு தள்ளி வைக்கப்பட்டது. இவை பொதுமக்களின் அமைதியையும், மதநம்பிக்கைகளையும், மத நல்லிணகத்தையும் கெடுக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி. ஆனால் இந்த புனித போர் அல்லாவின் கூற்றுப்படி நியாயமானதே என்று இஸ்லாமியர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    இவ்வாறு குர்ரான் பல கொடூரமாக செயல்களை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட தூண்டுதலாக இருக்கின்றது. இதனாலேயே இஸ்லாத்தை போதித்த முகமதுவின் குணநலங்களை ஹாதித் ழூலம் நாம் பரிசோதனை செய்தே ஆகவேண்டும். உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிகரம் வைத்தாற்போல் எல்லா இஸ்லாமியர்களுமே அல்லாவை ஏற்க மறுப்பவர் கடவுளின் எதிரி, அவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள் என்பதை பரம்பரை பரபம்பரையாக உறுதியாக நம்புகிறார்கள். இந்த கீழ் தரமான நம்பிக்கை மனிதகுல அழிவிற்கே இட்டுச்செல்லும்.

    புனிதபோர் – பொற்கிழி (அல்லது போர் பரிசு)
    மேலே சொன்ன இரண்டுமே பிரிக்கமுடியாதது. பொற்கிழி என்றால் போரில் கிடைத்த செல்வம் பிடித்த ஆண் பெண் குழந்தைகள் எல்லாம் போரில் ஈடுபடும் முஜாஹீதின்சை சாரும். இவர்கள் நாடோடி வழிப்போக்கர்களின் வண்டிகளையும் தாக்கி கொள்ளை அடிப்பார்கள். கிடைத்தவற்றில் 1/5 பாகம் கருணையுள்ளம் கொண்ட அல்லாவால் அவருடைய தூதுவரான முகமதுவிற்கு அளிக்கவேண்டும் மீதமுள்ள 4/5 பாகத்தை போரில் ஈடுபட்ட முஜாஹீதின்சை சாரும். இதைபோல் பிடித்த பெண்களையும், அடிமைகளையும் பங்கு போடப்படடும். இதை தவிர அல்லா புனிதபோரில் இறந்தவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் சொர்கத்தில் தயாராக பல இளம் கன்னிகா ஸ்தீரிகளையும், பச்சிளம் பாலகர்களையும், பலவிதத்தில் சுகபோகத்தில் திளைக்க என்னென்ன உண்டோ அத்தனையையும் வழங்குவார் (ஜனாத்)

  37. அன்வர் ஷேக் என்ற லண்டனை சார்ந்த இஸ்லாமியர் – எல்லோரும் இஸ்லாதை கடைபிடித்து நடக்கவேண்டும் அவ்வாறு நடக்காதவர்கள் சாத்தானின் கூட்டத்தை சேர்ந்தவர்கள். இஸ்லாதை மறுப்பது என்பது உலகத்திலேயே நினைத்துகூட பார்க்கமுடியாத ஒரு கொடிய பாவமாகும் அப்படிப்பட்டவர்கள் கட்டாயம் தண்டனை பெறவேண்டு்ம். தண்டனைகளை நிறைவேற்ற போர் செய்தல், கொலைசெய்தல், கற்பழித்தல், அங்கஹினம் செய்தல், கல்லால் அடித்து கொல்லுதல் போன்ற கொடூரங்களுக்கு அல்லா இசைந்துள்ளார். அல்லாவின் கனவை நிறைவேற்றுவதே புனிதபோர் (Ref: Islam – The Arab imperialism, Page 148)

    சமிபத்தில் பாக்கிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் மௌலான நவாப்சடா நபுல்லா கான் என்ன கூறியுள்ளார் என்பதை பார்போம் (2008)
    1. ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் சமமானவர்கள் என்பது ஒரு முட்டாள்தனம்.
    2. பெண்கள் வீட்டில் உள்ளேதான் எப்பொழுதும் இருக்கவேண்டும்.
    3. ஷரியா சட்டப்படி பெண்களுக்கு ஓட்டு போடும் உரிமைகிடையாது.
    4. முஸ்லீம் நாடுகளில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஜிசாஸ் வரி செலுத்தவேண்டும்
    5. எல்லா இந்திய இந்துக்களும் முஸ்லீம்களாக மாற்றப்படவேண்டும்.
    6. நமது ஒரேகுறிக்கோள் இடைவிடாது ஜிகாத் செய்வதுதான்
    7. இந்தியாவையையும், இலங்கையையும், பர்மாவையையும் 100 சதவிகித இஸ்லாமியநாடாக மாற்றவேண்டும்.
    8. தீவிரவாதம் ஒன்றுதான் இதற்கு உகந்த ஒரு நல்ல உபாயம்
    9. தீவிரவாதத்தால்தான் பாகிஸ்தானில் பல இந்துக்கள் முஸ்லீம்களாக மாறினார்கள்
    10. முகமது தீவிரவாரத்தால்தான் இஸ்லாமை பரப்பினார் அதன்படியே நாமும் நடப்போம்
    11. எந்த முஸ்லீம்மாவது பல தெய்வங்களை வணங்குபவர்களுடன் உறவுகொண்டால் அவர்களும் காபீர்களாகதான் கருதப்படுவார்கள்
    12. அதைபோல் முஸ்லீம்கள் முஸ்லீமகள்அல்லாத நாடுகளில் குடியேறினால் அவர்களும் காபீர்காகதான் கருதப்படவேண்டும்.
    13. ஜமாத் மறுபடியும் அடிமைத்தனத்தை பாகிஸ்தானில் கொண்டுவரும்
    14. பிடிபட்ட எல்லா இந்துக்களும் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்
    15. இந்து கோவில்களால் இஸ்லாமிய நிலங்கள் மாசுபடுகிறது.
    16. இஸ்லாமிலிருந்து மதம் மாறுபவன் கொல்லப்படவேண்டும்.
    17. உலகின் அனைத்து அறிவு பொக்க்ஷியங்களும் குரானிலும் ஹாதித்திலும் உள்ளது.
    18. விஞ்ஞானமும் தொழில்முன்னேற்றமும் நாகரிகமான வாழ்வதற்க்கு எதிர் போக்கானது.
    19. இஸ்லாத்தில் படிப்பது என்பது குரானில் உள்ளதைப்படிப்பதுதான்.
    20. புகைப்படம் எடுப்பதை ஜமாத் தடைசெய்யும்.
    21. அரேபிய மொழி பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்கப்படும்
    22. செக்யூலரிசம் பேசுபவர்கள் காபீர்கள்.

  38. இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்..

    பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. – அம்பேத்கார்.

    இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. – பெரியார்

    பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம். – டாக்டர் ராதா கிருஷ்ணன்.

    ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள். (காந்திஜி)

    முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது. ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை. -அண்ணாத் துரை

    எனதன்பின் இந்து நண்பர்களே..

    இந்து வேத ஆதி மூல நூல்களில் கடவுளைப் பற்றி கடவுளின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இன்றைய இந்துக்களில் பல கடவுள் கொள்கை வழிபாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிறைந்துள்ளன என்பதை இந்து வேத மூல நூற்களை வாசிக்கும் போது நீங்களாகவே முடிவு செய்து கொள்வீர்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அதுபோலவே இந்து மூல நூற்களில் கடவுளைப் பற்றிக் கூறுப்பட்ட அனைத்து தன்மைகளும் இஸ்லாத்தின் கடவுள் கோற்பாட்டுக்கு ஒத்துப் போவதையும் நீங்கள் உணர முடியும்.

    தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

    அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..

    ‘ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகாள்’ எனப் பாரதியார் சாடுகின்றார்.

  39. கோமதி செட்டி /sarang

    இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

    இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் ” அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்கிறார்கள்.

    அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?

  40. ஒரு விஷயம் புரியவில்லை, இஸ்லாத்தை பற்றி குறை கூறும் இங்குள்ள மத வெறி கூட்டம் எந்த அடிப்படையில் இந்து மதத்தை சரி காண்கிறது?
    இஸ்லாத்தில் சொல்லப்படாத அறிவுப்பூர்வமான, மனித நேய கருத்துக்கள் அப்படி என்னென்ன இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது, நடைமுறை வாழ்க்கையில் அதெல்லாம் பின்பற்றபடுகிறதா?

    Sarang, கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளை உபயோகிங்கள், நீங்கள் இருக்கும் மதம் கிறுக்கு தனமாக இல்லை என்று நிரூபிக்க தயாரா அப்படி என்றால் தங்களுடைய மெயில் ஐடி-யை தரவும், ஏனெனில் உங்களுடன் மோத இந்த இடம் சரிப்பட்டு வராது, ஏனெனில் நீங்கள் என்ன கொச்சையாக எழுதினாலும் திருத்தப்படாமல் இங்கு வெளியிடப்படும் ஆனால் எனக்கு அந்த சுதந்திரம் கிடைக்காது, உங்களுடைய பாஷையில் உங்களுக்கு புரிய வைக்க வேறு தளம் தேவை.

  41. மிஸ்டு

    you missed the point

    இஸ்லாத்தில் இருக்கும் ஒரு மனித நேய கருத்தும் ஹிந்துத்தவ்த்தில் இல்லை தான்

    குர்ஆனில் உள்ள மொத்த வசனங்களில் எண்ணி 75 தான் நல்ல விசயங்களை போதிக்கின்றன அது கூட முல்லா கதை ரேஞ்சுல தான்.

    எனது ஈமெயில் – அருபுகாரன்ஒருமுட்டாள்@அபுதாபி.காம் மாற்று ஈமெயில் – நீஒருமுட்டால்@ரியாத்.நெட்

    வைணவர்கள் தினமும் போசை முடிக்கும் போது சொல்லும் ஒரு பாட்டில் வரும் ஒரு வரி

    “கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ”

    அப்புறம் வேதத்தில் – சர்வே ஜனாஹா சுகினோ பவந்து – உலகில் உள்ள எல்லா ஜனமும் நாளைருக்கனும்பா

    சர்வேஷாம் ச்வச்திர் பவது என்று தொடங்கும் ஒரு வேதா வாக்கில் உலக மக்களுக்காக ஓர் பெரும் பிரார்த்தனை உள்ளது. இது தினமும் மங்கள ஸ்லோகமாக ஹிந்து மக்களால் சொல்லப்பட்டு வருகிறது

    எல்லோருக்கும் மங்கலங்கள் (செழிப்புடன்) இருக்கட்டும் (குரான் இதற்க்கு மாறாக எல்லாருக்கும் மங்களம் (முடிவு) கட்டுவோம் என்கிறது)
    எல்லோரும் அமைதியுடன் இருக்கட்டும்
    எல்லோரும் ஆரோக்யத்துடன் இருக்கட்டும்
    எல்லோரும் முழுமையுடன் இருக்கட்டும்

    இன்னொரு ஷாந்தி மந்த்ரம் (சர்வே பவந்து சுகினஹா என தொடங்கும்)

    இந்த உலகில்

    எல்லோரும் சந்தோஷத்துடன் இருக்கட்டும்
    எல்லோரும் ஆரோஞமின்மயிளிருந்து வெளிவரட்டும்
    எல்லோரும் மங்கள நிலையை பார்க்கட்டும்
    ஒருவர் கூட துக்கப் படாமல் இருக்கட்டும்

    இவை இரண்டும் தினமும் சொல்லப்பட்டு வரும் மந்திரங்கள் – உலகில் இஸ்லாமிய அட்டூழியங்களையும் மீறி கொஞ்சம் அமைதி இருக்கிறது என்றால் இவை தினமாம் எதோ ஒரு ஹிண்டுவால் சொல்லப்படுவதால் தான்

    வேதம் முழுவதும் இப்படித்தான் சிறு சிறு விஷயங்கள் உள்ளன – குர்ஆனில் உள்ளது போல எந்த ஒரு விஷயமும் வேதத்தில் இல்லை பாருங்கோ

    கீழ கொஞ்சம் குர்ஆனில் வரும் அன்பு வாக்கியங்களின் சாம்பிள்
    படிச்சாலே பயம் வருதுப்பா – அல்லா கிட்ட கேர்புல்லா இருக்கணும்பா

    //
    Allah says that you must keep fighting until there is no more persecution and everyone on earth is a முஸ்லிம்//
    Non-muslims will be punished by Allah for their nonbelief.
    Those who disbelieve, promise them a painful doom.
    The Fire is prepared for disbelievers
    We shall cast terror into the hearts of those who disbelieve
    Taste ye the punishment of burning!”
    Those who disobey Allah and his messenger will be burnt with fire and suffer a painful doom
    If the unbelievers do not offer you peace, kill them wherever you find them. Against such you are given clear warrant.
    Have no unbelieving friends. Kill the unbelievers wherever you find them
    Those who deny the truth of Islam will be punished by Allah
    Allah will torment those how deny his revelations
    How many a township have We destroyed! As a raid by night, or while they slept at noon, Our terror came unto them

    Those who disbelieve Our revelations, We shall expose them to the Fire. As often as their skins are consumed We shall exchange them for fresh skins that they may taste the torment.

    The only reward of those who make war upon Allah and His messenger and strive after corruption in the land will be that they will be killed or crucified, or have their hands and feet on alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom.

    And the dwellers of the Fire cry out unto the dwellers of the Garden: Pour on us some water or some wherewith Allah hath provided you. They say: Lo! Allah hath forbidden both to disbelievers (in His guidance).

  42. mist

    //He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky.” With it have We produced diverse pairs of plants each separate from the others.

    Qur’an 20:53
    //

    இதை அல்ல தானே சொன்னார் – அதாவது உலகம் தட்டைன்னு

    அல்லா பொய் சொன்னாரா? அப்படின்னா பொய் சொன்னவரே ஏன் கடவுள்னு கும்படறீங்க

    இல்லாட்டி அல்லா தெரியாம சொன்னாரா? அட இது கூட தெரியாதவரா கடவுள்

    சார் இதெல்லாம் எதுவும் இல்லா – குரான் என்பது முஹம்மதின் பேத்தல்களே

    இது இல்லை உலகம் உருண்டை தான் என்று சொன்னால் அப்புறம் ஏனய்யா காபாவை பார்த்து தொழும் என்று சொல்கிறீர்கள். ஒரு பொருளை பார்த்து தோழா வேண்டும் என்றால் அது தட்டையான உலகில் தான் சாத்தியம் – உருண்டையான உலகில் எங்கு பார்த்து தொழுதாலும் வானத்தை பார்த்து தொழுவது போலதான் – உருண்டையான உலகிலிருந்து காபாவை நோக்கி தொழுவதாக நினைத்து தொழுதால் உங்கள் பின் புறம் தான் உண்மையில் காபாவை நோக்கி இருக்கும்

  43. எப்பா யாரவது கருப்ப நிறத்துடன் இஸ்லாமியர்கள் இருந்தால் உடனே மதம் மாறிருன்கப்பா

    அல்லா சொல்றாரு 3.106 அட கொஞ்சம் மாத்தி 106.3 ன்னு இருந்தா fm channel மாதிரியாவது இருக்கும்

    The Qur’an says faces will turn black if the person is a sinner, and the face will turn white if the person is not.

  44. ////இஸ்லாத்தில் சொல்லப்படாத அறிவுப்பூர்வமான, மனித நேய கருத்துக்கள் அப்படி என்னென்ன இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது////
    ஆம்மாம் இஸ்லாத்தில் உள்ள இது போன்ற மனித நேய கருத்துக்கள் இந்துமதத்தில் இல்லைதானே

    Volume :1 Book :19
    தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.
    1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
    ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.
    3270. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.

  45. @ MIST
    “இஸ்லாத்தை பற்றி குறை கூறும் இங்குள்ள மத வெறி கூட்டம் எந்த அடிப்படையில் இந்து மதத்தை சரி காண்கிறது?”
    “”மத வெறி கூட்டம்”” What is your basis on this statement? No Hindus have declared ” Hindu Jihad” on other religions, unlike the Islam. Mouthing off instead of rational argument will help your cause.
    “”இஸ்லாத்தில் சொல்லப்படாத அறிவுப்பூர்வமான, மனித நேய கருத்துக்கள் “”
    This statement is contradictory in nature. Islam in it’s bloody history of 1500 years, so far has not come out with anything remotely resembling to “அறிவுப்பூர்வமான, மனித நேய கருத்துக்கள்”
    As Hindus, we do not have to prove anything. Hindus were living happily in this country for yonks before the Islamic/ Christian invasion.
    You just have to prove that your Islam is not a crazy cult.

  46. ///தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

    அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.////.
    மு.வ : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
    சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
    தமிழ் அறிஞர்களின் விளக்கம் இப்படி இருக்க நீங்கள் கொடுக்கும் ஏக இறைவனின் திருவடி என்ற விளக்கம் எனக்கு வியப்பளிக்கிறது. அதுவும் இஸ்லாத்திற்கு புறம்பான விளக்கம். அல்லாவுக்கு உருவம் இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை
    தனக்குவமை இல்லாதான் தாள் (திருவடி) உருவம் உள்ள கடவுளுக்குதான் இருக்கும் (உருவமே) இல்லாத கடவுளுக்கு எப்படி தாள் இருக்கும்? காமடிக்கு ஒரு அளவில்லையா?
    திருவள்ளுவர் அல்லவை (ஏக இறைவனை) பற்றி குறிப்பிட்டால் எப்படி இந்திரனையும்,லச்சுமியையும்,தாமரை கண்ணனையும் குறிப்பிடுகிறார். அதிலும் உருவமுள்ள கடவுள்களாக குறிப்பிடுவது புரியவில்லையா? அப்புறம் அல்லாவுக்கு துளி கூட சம்பந்தம் இல்ல்லாத புலால் மறுத்தலையும் ஒரு 10 குறள் எழுதி விட்டாரே? தவம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயம் அதையும் எழுதி இருக்காரே,

    ///ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகாள்’ எனப் பாரதியார் சாடுகின்றார்///
    அந்த பாடலை கொஞ்சம் சுட்டிகாட்டுங்கள் பார்போம்? இதை யார் சொன்னது எதற்காக சொன்னார் என்பது கூட தெரியாமல் சொல்ல வந்து விட்டீர்கள். பின்னர் ஏன் கணபதி பராசக்தி கண்ணன் முருகன் எல்லோரையும் பாடி இருக்கிறார்? பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதம் தமிழில் உண்டு. கண்ணனை அவரை போல சிலாகித்தவர் சமீபத்தில் யாருமே இல்லை, பாரதியின் பகவத் கீதை விளக்கம் தமிழில் உண்டு.

  47. Indian Islamic State என்ற பெயரில் இங்கு ஒருவர் மறுமொழி பதிவு செய்து வருகிறர். அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்டு அதற்கு அவர் அளிக்கும் விடையைப் பொருத்து அதன் பின்னரே இங்கு தமது மறுமொழியைப் பதிவு செய்ய அவருக்க்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    -மலர்மன்னன்

  48. \\\ ” அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்கிறார்கள்.\\\\

    ஜெனாப் ISI, ஈத் முபாரக். முதலில் வேதத்தில் இப்படி எங்காவது எழுதியிருக்கிறதா என்று ஆதாரத்துடன் சொல்லுங்கள். பின் நடைமுறை எப்படி என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். தெருவில் கிடைக்கும் நாலணா பொஸ்தகங்களை படித்து கதையளக்கக்கூடாது.

    திருமுருக க்ருபானந்தவாரியார், பாம்பன் ஸ்வாமிகள், ஸ்வாமி சித்பவானந்தர் போன்ற தமிழகத்தைச்சேர்ந்த சான்றோர் பாபா ராம்தேவ், ஸ்வாமி ப்ரத்யும்னர் போன்ற உத்தர பாரதத்தினர் (ப்ராமண குடும்பத்தில் பிறவாதவர்கள்) வேதம் படித்தார்களே. அவர்களுக்கு நீங்கள் சொன்ன படியெல்லாம் நிகழவில்லை. மாறாக அனைத்து ஹிந்துக்களும் இவர்களை வணக்கத்திறிகுறியவர்களாகவே மதிக்கிறார்கள்.

    ஆனால் குரான்-ஏ-ஷெரிஃபில் சொன்னார்கள் என்பதாகத்தான் தேவ்பந்தி சுன்னி முஸல்மான்கள் பரேல்வி சுன்னி முஸல்மான்களை கொலைவெறியால் நாறிக்கொண்டிருக்கும் baqi sthan ல் கொத்து கொத்தாக கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டில் மல நாற்றமெடுப்பதால் மாற்றாந்தோட்டத்து மல்லிகையின் மணம் மூக்கில் ஏறவில்லை. சொந்த வீட்டில் உள்ள மலங்களை முதலில் கழுவப்பாருங்கள். ஊருக்கு உபதேசம் அப்புறம்.

    \\அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? \\

    இல்லை தான். ஆனால் இசுலாம, கொத்தலிக்க, பந்தகொசுத போன்ற மதங்கள் திருக்குறள்,தொல்காப்பியம் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது பாருங்கள். என்னே அறிவு சார்ந்த ஆராய்ச்சி. போதாதென்று “இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?”. வாஹ் வாஹ் ஜெனாப். அந்த அளவு தமிழ் பற்றென்றால் விதேசி மதங்களை விட்டு தொல் தமிழ் நூற்களில் சொல்லியுள்ள சைவ வைணவ சமயங்களைப்ப்ற்றுவீரா. சவடாலெல்லாம் நன்றாகத்தானிருக்கிறது.

  49. corrupted islamic state

    உருவாகாமல் இயற்கையாக இருப்பதே நல்ல மதம். fan காத்து நல்லதா ஆத்தோரம் வீசும் காத்து நல்லதா.

    சல்லின் சருடுகளை நம்பும் ஒரு கிறுக்குக் கூட்டம் வேறு மதத்தை யார் உருவாக்கியது என்று கேட்கிறது?

    இஸ்லாத்தை பற்றி இவர்கள் என்று நீங்கள் கூருபவர்களுள் இருவர் அயோக்கியர்கள் என்பது நாடறிந்தது – போயும் போயும் பெரியாரையும் அண்ணாவையும் வெச்சா நீங்க பொழப்பு நடத்தனும். ஏன் மஞ்ச துண்டையும் சேத்துக்க வேண்டியது தானே, தவறாம காஞ்சி குடிக்குதே. அம்பேத்கார் குரானை படித்ததில்லை என்பது இந்த கட்டுரையை வாசித்தாலே தெரிய வரும். காந்தி அடிகள் சொன்னதற்கு கட்டாயமே கரணம் (அரசியல் கட்டாயம்).

    அம்பேத்கார் இஸ்லாத்தை பற்றி வேற என்ன சொல்லி இருக்கார் என்பதும் இந்த கட்டுரையில் வெளிச்சம்.

    சல்லு ஏற்படுத்திய சம நீதியை தான் இன்னைக்கு உலகம் அழகா பாக்குதே. அவர் பெரியார் போல எல்லோரும் சமமாக முட்டாளாக கிறுக்கர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். நீங்கள் அப்படி சமமாக இருந்தால் நன்று தொடரும்.

    //
    பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம். – டாக்டர் ராதா கிருஷ்ணன்.
    //

    உலகம் தட்டை என்பது இயற்க்கை மதமா
    நிலா தானாகவே வெளிச்சம் தருகிறது என்பது இயற்க்கை மதமா
    ஜாம் ஜாம் புனித நீர் என்பது இயற்க்கை மதமா – அதில் தான் ஆர்சீனிக் அளவு மிக மிக அதிகமாக இருக்கு
    ஏழே உலகங்கள் இருக்கிறது என்பது இயற்க்கை மதமா
    சொர்கமும் பூமியும் மட்டும் தான் இருக்கிறது என்பது இயற்க்கை மதமா
    சூரியன் பூமியை விட சின்னது அது போமியை சுற்றுகிறது என்பது இயற்கை மதமா
    அல்லா சொர்கத்தை நட்சத்திரங்களால் அலங்கரித்துளார் என்று உள்ளது – அப்பா நீங்க நட்சித்திர உலகத்துக்கா போகறீங்க அதுக்கு என்ன சட்டியே பரவால்ல
    நிலா ஒரு தபா பூமிய கடந்துட்டு ஒரு நாள் ரெஸ்டு எடுக்குதாம் அல்லா சொல்றார்
    குரானின் வசனத்தின் படி சந்திர க்ரகன நடக்க வாய்ப்பே இல்லை – அல்ல சொல்றார் சூரியன் நிலா விய துரத்தி பிடிக்க முடியாது என்று

    மேலும் அவர் உளறுகிறார் – சந்திர க்ரஹனம் வரும் நாளில் உலகம் அழிஞ்சிடுமாம் – உலகம் எவ்வலு வாட்டி செத்து செத்து பிழச்சிருக்கப்ப

    ரெண்டு மாசம் முன்னாடி கூட செத்து பொழச்சதுப்பா

    சூரியன் இல்லாதை இரவு என்று அல்ல சொல்லவில்லை – அல்லா தனி தனியாக இரவையும் பகலையும் படைத்தார் என்று ஸல் சரடு விடுகிறார்

    இதுக்கு மேல எழுத எனக்கே சகிக்கல – ஏதோ அம்புலி மாமா கதைல வரை கிறுக்குத்தனமான கற்பனையா இருக்கு

    பி.கு. இந்திய வேதத்தில் இந்த உளறல்கள் ஏதும் இல்லை. அவை மிகச்சரியாக வானியலை கூறுகின்றன. உலகும் எலிப்டிகல் (அதன் பெயரே அண்டம் தான்). பூமி தான் சூரியனை சுற்றுகிறது., ஒளியின் வேகம் என்ன என்பதை எல்லாம் துல்லியமாக கூறுகிறது.

  50. islaamic state

    //
    அதுபோலவே இந்து மூல நூற்களில் கடவுளைப் பற்றிக் கூறுப்பட்ட அனைத்து தன்மைகளும் இஸ்லாத்தின் கடவுள் கோற்பாட்டுக்கு ஒத்துப் போவதையும் நீங்கள் உணர முடியும்.
    //

    இஸ்லாத்தின் கடவுள் கோபப்படுவார் – இந்திய தர்ம கடவுள் கோவப்படமாட்டார்

    இஸ்லாத்தின் கடவுள் அநியாயமாக இனப் படுகொலை செய்ய சொல்வார் – இந்தியக் கடவுள் அப்படி அல்ல

    இஸ்லாத்தின் கடவுள் ஏழு சொர்கங்கல்ன் மேல ஹைய உக்காந்திருக்கார் – இந்திய கடவுள் கோட்பாடு படி கடவுள் எங்கும் இருக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்து தான் கடவுள்

    இந்திய மத கோட்பாட்டின் படி கடவுள் மரத்திலும் இருக்கிறார் அதாவது கடவுள் உண்மையிலேயே சர்வ வியாபி. இஸ்லாத்தின் படி கடவுள் ஏழு சொர்கத்தின் மேல் தான் இருக்கிறார்

    இந்திய மத கோட்பாட்டின் படி கடவுள் எங்கும் நிறைந்தவர், எதையும் செய்ய கூடியவர், எதையும் அறிந்தவர். இஸ்லாத்தில் அல்லா ஒரு சின்ன விஷயத்தை கூட control பண்ண முடியாதவர் எதுக்கெடுத்தாலும் கோவப் படுபவர். ஒரு விஷயத்தை ஒழுங்க ஒரு தடவை சொல்லத் தெரியாதவர்.

    அல்லா அன்பாளன் ஆனால் அணு குண்டு வீச்வார் அவருக்கு பிடிக்காதவர்களை பார்த்து. சின்னஞ்சிறு குழந்தைகளை என்னை சட்டியில் போட்டு வாட்டுவார்

    அல்லா அருளாளன் அனால் ஒரு கண் தெரியாதவருக்கோ கால் ஊன முற்ரவருக்கோ அவரால் அருளாளனாக இருக்க முடியாது

    அல்லா ஒரோ அலட்டல் insecure பேர்வழி மூச்சுக்கு மூணு தடவ நான் ஒருத்தனே யாறு கிடையாது. வேற யாரையாச்சு கும்பிட்ட கீசிறுவேன் என்பார்

    அல்லா இஸ்லாமியருக்கு மட்டுமே நல்லது செய்வார். இந்திய தர்மக் கடவுளுக்கு எந்த வித்யாசமும் பார்க்கத்தெரியார் – சம ஷத்ரோ ச மித்ரோ ச (நண்பனும் எதிரியும் அவரது சம பார்வையில்)

    அல்லா குருட்டாம்போக்குல தன்னையும் நபியையும் நம்பச்சொல்லி மிரட்டுபவர் – இந்திய தர்மக் கடவுள் நீ யோசித்து எது சரி என்று முடிவு செய். அறிவை பயன் படுத்து, ஞானத்தை தேடு என்பார் (Geetha 18th chapter)

    நாமாக பாக்கப் போனால் அல்லா சொல்வதும் பெரியார் சொல்வதும் தான் ஒன்று – ரெண்டு பேருமே முட்டாள்களே விரும்பினர்

    அல்லா அடிமையை உருவாக்குவார் – இந்திய கடவுள் குணங்களாலே மனிதர் வேறு படுகிறார் அவ்வளவு தான் – எனக்கு அனைவரும் ஒன்று தான். அவனுக்கு அனைவரும் ஒன்று அவன் எனக்கு பிடித்தவன் (கீதா 12th chapter) என்பார்.

    அல்லாவுக்கு அராபிய மதத்தை தவிர வேறு மதம் எதுவும் இருந்ததாக தெரியாது. இந்தியாவிலேயே வேத மதம் ஒன்று விக்ரக வழிபாடில்லாமல் இருந்ததும், இந்தியாவின் பக்தி மார்கங்களும், 700 களில் மிகவும் பிரசித்தியான புத்த மதமும் இருந்ததை அவர் அறியார் – செம்ம GK.

  51. //
    இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது
    //

    எங்கள் மதத்திற்கு பெயர் அவசியம் இல்லை – சனாதன தர்மம் என்பது இயற்கையான மதம் என்றும் சாஸ்வதமான தர்மம் என்று அர்த்தம் கொள்ளலாம்

    உருவாவது என்றுமே அழியும் – உடம்பு, செடி, பானை, எறும்பு. இந்து மதம் உருவாகவில்லை அது இயற்கை, அதற்க்கு அழிவில்லை. [உருவாவது எல்லாம் அழியும் என்பது இயற்கை விதி – physics படிங்க]

    இஸ்லாத்தை தோற்றுவித்த ஸல் அழிந்துவிட்டார். இஸ்லாமும் நிச்சயம் அழியும் – அது அழிவை நோக்கிதான் சென்று கொண்டிரிக்கிறது., அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை ரெத்தம் குடித்ததை அல்லாமல் யாவரது முன்னேரத்திர்க்கும் அது வழி வகுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை

    ஹிந்து மதத்திற்கு பிராமணங்கள் தத்துவங்கள் சிறப்பாகவே உள்ளன. இது ஹிந்துக்களுக்கு தெரிந்ததே. நீங்கள் இதை துபாய் சேக்கிடம் கேட்டுப் பாத்தீர்களா அவருக்கு தெரியாது தான் என்ன செய்ய.

    விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் ஆனால் லூசுங்களை பார்த்த மௌனமாகிவிடுவார்கள் இல்லை என்றா எனக்கு தெரியாதுப்பா என்று சொல்லி விடுவார்கள். எல்லாம் நேரத்தை மிச்சப்படுத்ததான்

    //
    இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது
    என்கிறார்கள்//

    வேதம் என்பது கடவுளால் உருவாக்கப் படவில்லை என்றே வேதம் சொல்கிறது. உருவாக்கப் படும் அனைத்திற்கும் அழிவு உண்டு ஹி ஹி

    //
    ” அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே.
    //
    ஆம் இதக்கு முன்னாடி பதிலிலே விளக்கம்

    //
    அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்கிறார்கள்.
    //

    இது வேதத்தில் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா? அது வேதத்தில் இல்லா விட்டால் நீங்கள் இந்துவாக மாறி விடுகிறீரா

    வீரமணி, பாம்பே கேனயன் ஒருத்தன் , பெரியார், மக்கள் டி வீ இதெல்லாம் பார்த்த இப்படி தான் தப்பு தப்பா சொல்வாங்க.

    சூத்திரன் என்றால் பிராமண அல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. சதுர் வர்நியம் மையா ஸ்ரிஷ்டா என்று நான்கு குணக் கூட்டங்களாக மக்கள் உள்ளார்கள் என்று சொல்கிறது கீதா. இந்த குணக் கூட்டங்களில் தாமச குணம் உடையவர்களை சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறது. பூணல் போட்டுக் கொண்டு தாமச குணத்துடன் இருந்தால் அவனும் சூத்திரன் தான். எப்படி மன நிலை சரி இல்லாதவரை mentall retarded என்கிறோமோ. அதிக அறிவுள்ளவரை புத்தி சாலி என்கிறோமோ அது போல ஒரு சொல்லாடல் தான் சூத்திரன் பிராமணன் என்பதெல்லாம்.

    இன்று ஏராளமான பூணல் போடாவர்கள் வேதம் தெரிந்து வைத்துள்ளனர், வேடம் கத்துக் கொடுக்கின்றனர். இந்த வழக்கு தொடர்ச்சியாக இருந்தது என்பதற்கு என்னால் ஒரு ஆயிரம் ஆதரங்கலாவது தர முடியும். நீர் உளறுவது சரி எனில் இப்படி இருக்கக் கூடாதே.

    //
    நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்;
    //

    வேதம் என்பது வாய் வழியாக கற்றுக் கொடக்கப்டுவது. எழுதி வைத்துபடிப்பதில்லை. எழுதி வைக்காததை எப்படி பார்க்க முடியும். இதிலிருந்தே நீர் சொல்வது பேத்தல் என்பது திண்ணம்

    //
    அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது?
    ./

    இப்படி கேணயர்கள் தான் வாதம் செய்வார்கள். ஹிந்து என்பது ஹிந்துஸ்தானம் என்பதன் சுருக்கம். ஹி + இந்து + ஸ்தானம் = ஹிமாலயம் முதல் இந்துமகா சமுத்திரம் வரை பரந்த இடம் என்பது இதன் பொருள். இந்த ஹிமாலயத்தை பற்றியும், இந்து மகா சமுத்திரத்தை பற்றியும் எண்ணற்ற இடங்களில் குறிப்பு இருக்கிறது.

    இங்கு இருப்பவர்களின் மதம் ஹிந்து மதம்.

    ஷியா முஸ்லிம் சூபி என்பதெல்லாம் குர்ஆனில் இருக்கா – இது மானக் கேடு இல்லையா.

    பெங்களூரை பெங்களூரு என்று பெயர் மாற்றினார்கள் – பெங்களூரு என்பது எங்குமே இல்லை அதனாலே அங்கு வாழ்வதே மானக்கேடு என்று சொலவதை போல இருக்கு.

    அய்யா குர்ஆனில் இந்தியாவை பற்றி ஒரு வரி இல்லை – இங்கு வாழ்வதே ஒரு உண்மையான முஸ்லிமுக்கு மானக் கேடு – அரேபியாவுக்கு பொட்டிய கட்டறீங்களா

    இல்லாதவனுக்கு தான் ஒரு பெயர். இருக்கறவனுக்கு ஆயிரம் பெயர் – எமக்கு ஆயிரம் பெயர் உண்டு

    ஹிந்து மதம், சனாதன தர்மம், தர்மம், பாரட்ட தர்மம். வேதா மதம், வேதாந்த மதம், மிமாம்ச மதம், புண்ணிய மதம், ஞான மதம், சாஸ்வத மதம், நல்லோர்களின் மதம், இப்படி என்னில்டண்கா பெயர்கள் இருக்கு. எல்லா நல்ல விஷயமும் எங்கள் மதத்தின் பெயர்கள் தான்.

    சூரியன் பூமியை சுத்துதா பூமி சூரியனை சுத்துதான்னு கூட தெரியாத கடவுளை கும்பிடுவதை விட ஒரு மானக் கேடு உலகத்தில் வேறில்லை

    உலகம் தட்டை இங்கு இருக்கிற மலைகளை எல்லாம் நகத்தி வெச்ச உலகத்தை நல்லா பாக்கலாம்னு சொல்ற ஒரு மதத்தில் இருப்பதை விட மானக் கேடு வேற என்ன இருக்க முடியும்.

  52. அன்பு நண்பர் சாரங் அவர்களே,

    மிக நன்று சொன்னீர்கள் . எங்களுக்கு எல்லைகள் கிடையாது, பெயர்கள் , உருவங்கள் அனைத்திலுமே , நாங்கள் அளக்க முடியாதவர்கள் , ஏனெனில் ever inclusive and expansive. We don’t exclude any body. Because of the omnipresentness.

    விரிவான கடிதங்கள், தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் .

    சுவாமி விவேகானந்தர் சொன்னதை நினைவு கூர்வோம். ” Entire human life is a travel from a lower level of perfection towards a higher level of perfection”.

  53. தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு….

    INDINA ISLAMIC STATE…..

    ஏற்கனவே இந்தியாவை பிரித்து ஒரு முஸ்லிம் நாடு உருவானது போதாதா ? இதில் இந்திய முஸ்லிம் நாடு வேறா ? தயவுசெய்து இதுபோன்ற பெயர்களை அனுமதிக்காதீர்கள்….[ குறைந்தபட்சம் நமது தளத்தில்…]

  54. இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்..

    பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. – அம்பேத்கார்.

    இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. – பெரியார்

    பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம். – டாக்டர் ராதா கிருஷ்ணன்.

    ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள். (காந்திஜி)

    முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது. ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை. -அண்ணாத் துரை

    இவர்கள் ஏன் அந்த இனிய மார்க்கத்திற்கு மாறவில்லை?

    காந்திஜி, காங்கிரஸ் கூட்டங்களை காந்த சக்தி கொடுக்கும் குரான் வசனங்களுடன் நிகழ்த்தாமல் ரகுபதி ராகவுடனும் ராம நாமத்தைச் சொல்லியும் கீதை ஸ்லோகங்களுடனும் நிகழ்த்தினார்?

    பெரிய மதமாற்ற நிகழ்வை நடத்திய அண்ணல் அம்பேட்கர்கூட இஸ்லாமாகாதது மட்டுமல்ல ஏன் இஸ்லாத்துக்குப் போகவில்லை என்று தெளிவாகக் காரணம் சொல்லியிருக்கிறாரே! நீங்கள் ஏன் அதை எடுத்துப்போடவில்லை?

  55. இஸ்லாத்தின் போரில் கைப்பற்றும் பெண்களை அங்கிகரிக்கும் (பெண்)அடிமைத்தனம். இது ஒரு இஸ்லாமியரின் தளத்திலேயே பெருமையாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படி தன மதத்திலுள்ள வசங்களுக்கு வெட்கமே படாமல் போற்றி எழுதி உள்ளார்

    https://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_8545.html

    அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

    ”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

  56. தமிழ் ஹிந்து வாசகர்களுக்கும், தமிழ் ஹிந்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    மேலும் பல வெற்றிகளை அள்ளித் தரப்போகும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள் !

    வந்தே மாதரம் ! வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் !

  57. கதிரவன் வானில் மேஷ ராசிப்பகுதியில் நுழையும் தோற்றம் இன்று வானியல் காட்சியாக அரும்புகிறது. நமது மூதாதையரின் கால அளவுகள் கதிரவன் மற்றும் சந்திரனின் இருப்பை அடிப்படையாக வைத்தே அமைந்தன. அறிவியல் பூர்வமான இந்த காலக்கணக்குகள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம் முன்னோரால் கையாளப்பட்டது என்பது ஒரு இனிய, அற்புதமான விஷயம்.நமது ஆண்டு 365 1/4 நாட்கள் கொண்ட வருடம் ஆகும். கிரிகோரி பாதிரியார் ஆங்கிலேய நாட்காட்டியை சீர்திருத்தும் முன்னரே, பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் , வானியலில் மிக நுட்பமான கணிதங்களை செய்துள்ளனர்.

    இந்த புனிதமான தமிழ் புத்தாண்டில், நம் நாடும், மொழியும் , பல வகையினானும் சிறக்க எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாதும் அறிந்த முருகப்பெருமான் அருள்புரிவானாக.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன் .

  58. கண்ணன், இது வரை அறிந்திராத தகவல்களை தெரியபடுத்தியத்திற்கு நன்றி.
    காந்திஜி ,டாக்டர் ராதா கிருஷ்ணன், அம்பேத்கார் தெரிவித்த இஸ்லாம் பற்றிய கருத்துக்கள் கருணாநிதி, வைகோ, சீமான் போன்றவர்களின் கருத்துக்கள் மாதிரி இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. தாங்கள் மட்டும் நல்லாக இருந்து கொண்டு மற்றவர்கள் பாதாளத்துக்குள் விழட்டும் என்ற நினைப்பு தான் இது.

    தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு இனிய புது வருட வாழ்த்துக்கள்.

  59. அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்,

  60. பாகம் -8,12,13 ஆகியவை என்னால் படிக்க முடியவில்லை .தயவு செய்து படிக்க ஏற்பாடு செய்யவும்.
    பூ.முருகேசன்.

  61. அற்புதம்.அமைதி மார்க்கம் என்று கதைகட்டி
    தங்களை தாங்களே ஏமாற்றிகொள்பவருக்கு வேதனை அளிக்கலாம்.
    ஆனால் உண்மை இதுவே பிராமணியத்தை விட
    மோசமான அடிமை கொள்கை உள்ள மார்க்கம் இது
    அண்ணல் அமபேத்கருக்கு யார் பணம் கொடுக்க
    முயற்ச்சித்தனர் என்று யோசித்தாலே போதும்.
    குரானை விட இந்து வேதம் கீதை.தமிழ் நூல்களான
    திருக்குறள் ஆத்திசூடி போன்ற நூல்கள் உள்ளன.
    அடக்கிவைக்கபட்டு பிரச்சனை வெடித்தால் சர்வ நாசம்
    ஜாதி,பலி கொடுப்பதை விட்டால் இந்து பௌத்தம்
    போல் சிறந்ததாகிவிடும்.ஆனால் கொடும் சாரியா
    சட்டம் ஜனநாயக நாட்டிற்கு தகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *