வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக, கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.

குறிப்பாக 1916-இல் பிரகடனப்படுத்தப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ்நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின்தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்தவித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுகளிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அவை குப்பைகளாகத்தான் மலையெனப் பெருகிக் கிடக்கின்றன.

ஒன்று, விலகியிருந்து சாட்சி பூதமாகத் தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும்; அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும்- கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும்– தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால், தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம்தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள் அவர்கள்.

ஆச்சரியமாகத் தான் இருக்கிறது; இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று… சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல; இரு தரப்பினரின் கொள்கை-நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத்தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.

தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ்நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஐம்பது–நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப்புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940-களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப்புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை- கதிர் அறுக்கும் அரிவாளை- ஓங்கிய கையும் முழங்காலுக்குத் தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுகளில் நடந்த கதை என்பது இப்போது தமிழ்மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.

இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம்தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப்படுவது கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின், சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவைதான்.

எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாள்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட ஜம்புலிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகஸங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய்பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை, இந்த 70–80 வருட காலத்தில்.

வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டிதான் வெட்டுப்புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்குமிடம் தசரத ரெட்டியின் சகலை; அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்துவத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப்படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயேதான் சாகஸம். அநேகமாக நாவல் முழுதும் இந்தச் சாதாரண தோரணையிலேயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சிதான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரஹாரம், இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுகளில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை”. அது, ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர்களானால் நாயக்கர்கள்… இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”… என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞைதான் முன்னிற்கிறது.

ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னுதான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு, செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத்தான் செய்யறான்,” என்று பேசிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வருவது, “பாப்பானைத் திட்டனும்னா அப்படி ஒரு ஆவேசம் வருதுய்யா,” என்கிறார் கணேச ரெட்டி.

ஆவேசம் வருது. திட்டணும். ஆனா, “ஏன் அப்படி ஆவேசம் வருது?” என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்திக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்திற்குக் காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்துதான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொதுவெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள். அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும் நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ எழுத்துகள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமைதான் துவேஷத்துக்கான காரணங்களைத் தேடச் சொல்கிறது.

தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்…

“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.

அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”

இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை; ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத, இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை. பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால்தான் மங்காத்தாவுக்கு இந்தச் சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.

“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”

மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப்படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?”

இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்விதான். நமக்குத் தெரியும், இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது, வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அநேகப் பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.

இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய, ஒரு நேரக் காட்சி. ஒரு சோற்றுப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஓர் அப்பாவிக்கும் இடையில்…

இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா

“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க?”

“அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி!”

“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே?”

பதில் சொல்லாது அவன் திசைதிருப்பவே, ஹேமா கேட்கிறாள் திரும்பவும்.

“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”

“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை ‘பிளிச்’சென அவள் முகத்தில் துப்பினான். ”பைத்தியக்காரி… முட்டாள்… தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா? கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்

இது ஒரு காட்சி.

இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை என்று பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.

இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங்களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார் தமிழ்மகன்

இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.”

பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம்; கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940-களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்லீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று படிக்கையில் ஆங்காங்கே தட்டுப்படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்துதான் இத்தகவல்களைச் சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.

இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது. முதல் சினிமா- தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்து அலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்குப் பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கிக் குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி, “அரை நோட்டு ஆகும்கறாங்க!” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம், தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை, ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு… நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு,” என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழிகாட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.

ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது? போட்டியும் பொறாமையும்தானே கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுகளில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.

இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம். அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கைதான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரச்சினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.

வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதிதான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும், அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன், அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது, அவனுக்குத் தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?

அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுத்தடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..

லட்சுமண ரெட்டியார் திராவிடக் கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக்காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.

முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண ரெட்டியாரைச் சந்திக்கிறார். ‘நாடார் குல மித்ரன்’ என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பேசுகிறார். ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார். ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.

லட்சுமண ரெட்டியார் சின்னா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்னப் பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.

இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுறு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?” என்று கேட்கிறான்.

இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்குப் பிடிக்கல மாமா… என்னமோ மூக்கில் பிரச்சினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே”

இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால் அவன் வட்டாரத்தில் பாரதியாரை ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்கச் சிந்தனைப் பிரச்சினைகளும் அதற்கான சமாதானங்களும்.

நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும், “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:

நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?

(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).

எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.

இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”

அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.

“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.

“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.

“அப்படியாடா?” என்று கேட்கிறான் நடராஜனைப் பார்த்து. நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.

“நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.

இருவரும் கிருஷ்ண ப்ரியா வீட்டிற்குப் போகிறார்கள்.

பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவ, “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.

“நான் அப்படிச் சொன்னதாலேதான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.

கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமியோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்” என்கிறார் நடராஜனைப் பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.

தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம், “அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுங்களா இருந்ததால் தான் சாத்தியமாகிறது” என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.

அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலிதா அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக-கார அப்பா வளர்த்த தமிழ்ச் செல்வனை.

”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆமாவா இல்லையா?”

எங்களைத்தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு. க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். ”அம்மாவும் பெரியார் கட்சியா?” என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். ”இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை” என்கிறான்.

இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்… பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் பழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜேஷ், மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத்தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.

“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணிட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?

இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால்தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை.

“எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”

“அழகான பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?

”பிரேமா இங்கே வந்தாளாக்கும்“ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.

”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.

”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”

பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது .அவனுக்கு.…

 

எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில்தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதை மேலுக்குச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன்படுகிற துவேஷமும்தான் தொடர்கிறது.

திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால்தான். தலித் எழுத்துகள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.

தமிழ்மகனின் வெட்டுப்புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.

நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்களாகவே தந்திருக்கிறேன்.

தமிழ்மகனின் வெட்டுப்புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள் தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ்மகன்.

திராவிட இயக்கத்தைப் பற்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும் கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.

எல்லாப் புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.

 
 

வெட்டுப்புலி (நாவல்)  
ஆசிரியர்: தமிழ்மகன்

 உயிர்மை பதிப்பகம்,
1/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம்,
சென்னை- 600018

ப..374 விலை ரூ. 220

 

 

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

160 Replies to “வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு”

  1. “ஆவேசம் வருது. திட்டணும். ஆனா, “ஏன் அப்படி ஆவேசம் வருது?” என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை.”

    May be for MK, there are no reasons or valid reasons.
    But, as an educated fellow you can search in the internet, who knows, you may get crores of reasons. Come out of your biased mind, who knows, you may get crores of reasons.

  2. “ஆவேசம் வருது. திட்டணும். ஆனா, “ஏன் அப்படி ஆவேசம் வருது?” என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை.”

    In my itself I have lot of reasons.

  3. மிக அற்புதமான விமரிசனம். வெங்கட் சுவாமிநாதனின் எழுத்து அற்புதம்.
    வெட்டுப்புலியை உடன் வாங்க உயிர்மை பதிப்பகத்துக்கு உடன் ஓடுகிறேன்.

    இந்த விமரிசனத்தில் என் மனங்கவர்ந்த வாக்கியங்களை கீழே தந்துள்ளேன்.

    1. இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம்.

    2. ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் அவை குப்பைகளாகத்தான் மலையெனப் பெருகிக் கிடக்கின்றன.

    3.இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால், தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம்தான்.

    4. இரு தரப்பினரின் கொள்கை-நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத்தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.

    5. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது.

    6. மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப்படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?”

    7. ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது? போட்டியும் பொறாமையும்தானே கவலைக்குக் காரணம்?

    8. ”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..

    9. அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா?

    10. ராஜேஷ், மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத்தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.

    11. தமிழ்மகனின் வெட்டுப்புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள் தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ்மகன்.

    அற்புதமான விமரிசனத்தை தந்த தமிழ் இந்துவுக்கு நன்றி.

  4. அன்புள்ள வெசா,

    // தமிழ்மகனின் வெட்டுப்புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள் தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ்மகன். //

    படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல்.. தங்கள் விமர்சனத்தைப் பார்த்ததும் உடனடியாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது..

    மிக்க நன்றி.

  5. கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்திற்குக் காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது.

    நெஞ்சுக்கு நீதியில் அவற்றைப் பதிவு செய்யும் திராணி அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் “அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது” என்று சொல்ல முடியாது.

    அந்தக்காலத்து தனி வாழ்க்கையில் ஏற்பட்ட சிறுமைகள் – மனப்பதிவுகள் இன்று மன நோயாகிப்போயிருக்கிறது.

  6. திராவிட கம்யுனிச பங்களிப்பு தமிழ் இலக்கியத்தில் வெறும் குப்பையாகத்தான் இருக்கிறது என்று சொல்லும் விமர்சகர் இந்தப் புத்தகம் அர்த்தமுள்ள ஒரு பங்களைப்பைச் செய்கிறது என்பதைப்போல் கூறுவது சற்றும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    இதில் காட்டப்பட்டிருக்கும் மேற்கொள்களை வைத்துப் பார்த்தால் இந்த நாவல் சுத்த பிராமண ஆதரவு நாவலாக இருக்கும் போல் இருக்கிறது. தமிழ் நாட்டு பிராமணரல்லாதோர் பிராமணர்களைப் பற்றி இவ்வாறுதான் பேசுவார்கள் அல்லது எண்ணுவார்கள் என்ற கட்டமைப்பை உருவாக்குவது இந்த நாவலின் நோக்கம் போலிருக்கிறது. இந்த நாவலுக்கு இதுதான் நோக்கம் என்பதை நாவலை முழுதாகப் படித்தபின்னே உறுதி செய்துகொள்ளலாம் என்றாலும் இந்த விமர்சகருக்கு அதுதான் நோக்கம் என்பதை துல்லியமாக உணர்ந்து உறுதி செய்துகொள்ள முடிகிறது.

    பெரியாரிய கம்யுனிச வாதிகளும் திமுகவும் கட்டமைக்க முயன்ற பிராமண வெறுப்பை ஒட்டுமொத்த தமிழகமும் தலைமேல் தூக்கிக் கொண்டு அலைந்ததாக காட்டப்படும் பிம்பம் பச்சைப் பொய்.

    இந்த நாவலும் விமர்சனமும் கட்டமைக்கும் காட்சி உண்மையென்றால் தமிழ்நாட்டில் நாத்திகம் கொடிகட்டிப் பறந்திருக்க வேண்டும். ஏனென்றால் பெரியாரிய கம்யூனிச திமுக சக்திகள் இறை மறுப்பை முன்னெடுத்து பரப்புரை செய்தன. இதற்காக இந்துமதமல்லாத எல்லா மதங்களையும் விதந்தோதவும் செய்தன. இந்த பரப்புரையும் அது சார்ந்த செயல்பாடுகளின் காரணமாக தமிழர்கள் இந்து மதத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்க வேண்டும். மதவன்முறையும் பிரிவினை கூச்சலும் பல்கிப் பெருத்திருக்க வேண்டும். திருவரங்கத்தையும் தில்லைக் கோயிலையும் பீரங்கி வைத்துத் தகர்த்திருக்க வேண்டும்.

    பொய்களை ஆதாரமாக வைத்து செய்யப்படுகின்ற பெரியாரிய கம்யூனிச திமுக பரப்புரைக்கு எதிராகச் செய்யப்படுகிற அதைவிட பொய்யானதும் மலினமானதுமானது தான் இந்த நாவலின் நோக்கமாக நாம் யூகிக்கக் கூடியதும் அதன் விமர்சனமும்.

  7. ஓகை நடராஜன் சொல்வது தவறு. அருமையான விமர்சனம். அதில் வெசா பதிவு செய்திருப்பவை திராவிட இயக்கங்கள் குறித்த உண்மை. அதைவிட முக்கியமாக திராவிட வெறுப்பியக்கத்தின் மனநிலைகள் குறித்த உண்மை. நாவலை நான் படிக்கவில்லை. படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தேவையை இந்த விமரிசனம் உருவாக்கியுள்ளது.

    இதற்கு ஒரு மறுபக்கம் இருக்கிறது. அதனை நாவல் தொடவில்லை போலும்.
    சங்கராச்சாரியார் முதல் சாரங்க வர்ஷம் வரை மாறும் உலகுக்கு கண்மூடி
    இருந்தது. பாரதி போன்றவர்களை பகிஷ்கரித்தது இன்றைக்கு அசட்டு விஷமாக
    பாரதியை ‘எங்கள் குல கவிஞன்’ என சாதி சாயம் பூசுவது. காலனியம் கொண்டு
    வந்த நவீன மாற்றத்துக்கும் விஷமத்தனமாக காலனியம் தேங்கவைத்த தம் சாதிய மேன்மைவாத அமைப்புக்கும் இடையே மனநிலை பிளவுடன் செயல்பட்டது. இந்த அசட்டுத்தனங்கள் எவ்வித நெடுங்கால நலனும் இல்லாமல் திராவிட வெறுப்புவாதத்தை வளர்க்க மட்டுமே உதவியது. இதை ஒரு பிராம்மண இளைஞன் பார்வையில் சொல்லியிருக்கலாம். எத்தனைதான் மோசமானவராக இருந்தாலும் ஆழமற்றவராக இருந்தாலும் சின்னகுத்தூசி முதல் என்.ராம் வரை படித்த and/or வசதியான பிராம்மண ஜாதிகளில் ஒரு வலிமையான பிரிவுக்கு இருக்கும் ஹிந்து மத வெறுப்பு – திராவிடத்தை -அவன் என்னதான் எட்டி உதைத்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீ பாப்பான் என வைதாலும்- தூக்கிப் பிடிக்கும் தன்மை வந்ததற்கான மனநிலையையும் ஆராய வேண்டும்.

  8. நான் ஒரு வருடம் முன்பே இந்த புத்தகம் படித்து விட்டேன். வெசாவை விட அழகாக இதற்கு விமர்சனம் எழுதி விட முடியாது. அருமையாக இருக்கிறது. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அவருடைய விமர்சனத்துடன் நிச்சயம் ஒத்துப் போவீர்கள்.

  9. மதிப்பற்குரிய திரு வெசா அவர்களுக்கு,
    கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என என்னை எண்ண வைத்த உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.
    சும்மாவா சொன்னார் சி சு செல்லப்பா, சாமிநாதனது பேனா வரிகள் “புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது” என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் – என்று.

    மிக்க நன்றி.
    வணக்கங்களுடன்,
    எஸ் வெங்கடேசன்..
    __________________________________________________________________________

  10. இதோட மூணு பேர் சொல்லியாச்சு. நான் எழுதினதைப் படிச்சுட்டு புஸ்தகம் வாங்கப் போறேன்னு சொல்றவங்க தமிழ் நாட்டிலே இருக்காங்க. புஸ்தகம் வித்தா லாபம் ஹமீத் சாஹேப்புக்குத் தான். அவர் எழுதினவனுக்கே காசு கொடுக்கறதில்லையாம், ஒரு மூணு நாலு பேரைத் தவிர. அப்படியிருக்க எனக்கா புஸ்தகம் வித்துக்கொடுக்கறதுக்கு ஏதும் கொடுக்கப் போறார்.

  11. Situation in TN for Brahmins is/was similar to what the Jews faced in Nazi Germany.( Ok, they were not deported to gas chambers, I concede that). I am just mentioning the TREND of blaming the Brahmins for all the ills of the society.

  12. ஆலந்தூர் மல்லன் நன்றாகப் புனைவுகள் எழுதுகிறார். ஆனால் சாரங்க வர்ஷம் கற்பனை அல்ல. அது வைணவத்தின் வாள். தாத்தாச்சாரியார் போன்ற துரோகிகளை அது துகில் உரித்துக் காட்டுகிறது.ஆசாரியார் என்ற பெயருக்கு அக்னிஹோத்ரம் ஒரு அவமானம் என்பதை அந்த நூல் கண்ணாடி போல் காட்டுகிறது.மல்லன் கதை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளட்டும்.அரைகுறை அறிவோடு வைணவத்தின் பக்கம் வரவேண்டாம்.

  13. //அவர் எழுதினவனுக்கே காசு கொடுக்கறதில்லையாம், ஒரு மூணு நாலு பேரைத் தவிர. அப்படியிருக்க எனக்கா புஸ்தகம் வித்துக்கொடுக்கறதுக்கு ஏதும் கொடுக்கப் போறார்.//

    அச்சு அசல் வெசா நாக் அவுட் பஞ்ச்.

  14. //.அரைகுறை அறிவோடு வைணவத்தின் பக்கம் வரவேண்டாம்.//

    ”குரானை முழுமையாக படித்துவிட்டு வரவும்” என்று அறிவுரை சொல்லும் வஹாபிக்குரல் போலவே ஒலிக்கிறது இது .

  15. ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) சுஜாதா, பாலகுமாரனுக்கு அப்புறம் தமிழ்ப் புஸ்தகங்கள் வாசித்தறியா எனக்கு விமர்சனம் மற்றும் உத்தரங்கள் இப்புஸ்தகம் வாசிக்க அவாவெழுப்புகின்றன.

    \\\\\\\\சின்னகுத்தூசி முதல் என்.ராம் வரை படித்த and/or வசதியான பிராம்மண ஜாதிகளில் ஒரு வலிமையான பிரிவுக்கு இருக்கும் ஹிந்து மத வெறுப்பு…………. நீ பாப்பான் என வைதாலும்- தூக்கிப் பிடிக்கும் தன்மை வந்ததற்கான மனநிலையையும் ஆராய வேண்டும்.\\\\\\

    இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் வேணுமா என்ன? இரண்டே சொற்களில் அம்மனநிலை அடங்கி விடுமே. பணம் புகழ். அவ்வளவே.

  16. // ”குரானை முழுமையாக படித்துவிட்டு வரவும்” என்று அறிவுரை சொல்லும் வஹாபிக்குரல் போலவே ஒலிக்கிறது இது . //

    இதென்ன? முஸ்லீம்கள் காலால் நடந்தால் நாங்கள் தலைகீழ் நின்று கையால் நடப்போம் என்று சொல்வது போல இருக்கிறது.

    ஒன்றை முழுவதும் அறியாமல் அதை விமர்சிப்பது எதுவாக இருந்தாலும் சரிப்படாது என்பது பொதுவான லாஜிக். இதற்கும் வஹாபி இஸ்லாத்துக்கும் முடிச்சு போட்டு நம்மை நாமே முட்டாள்கள் ஆக்கிக் கொள்ள வேண்டாம்.

  17. குரானை முழுக்க படித்து விட்டு ஒரு காஃபிர் அறிவுரை சொன்னவனிடம் போனால் ஆபத்தாயிற்றே, அரங்கசாமி அவர்களே.

  18. //இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் வேணுமா என்ன? இரண்டே சொற்களில் அம்மனநிலை அடங்கி விடுமே. பணம் புகழ். அவ்வளவே.
    .- ஸ்ரீ க்ருஷ்ணகுமார்//

    என். ராமுக்கு இதன் மூலம்தான் பணமும் புகழும் வர வேண்டிய அவசியம் இல்லை. இது ஒருவகை வியாதி. Most loyal than the king அல்லது உன்னைவிட நான் மதச் சார்பின்மைவாதி என்று காட்டிக் கொள்வதில் அதீத ஆசை.

    சின்னக் குத்தூசி என்னுடன் நெருங்கிப் பழகியவர். பணத்துக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டவரல்ல. சிறு வயதில் அக்ரஹாரத்தில் அவருக்கு ஏற்பட்ட சுய அனுபவங்களே பிராமணரான அவ்ருக்கு பிராமணர்கள் மீது தீராத வெறுப்பை ஏற்படுத்தி அதுவே பிறகு ஹிந்து மத துவேஷமாகவும் ஆகிவிட்டது. பழகுவதற்கு மிகவும் இனியவர்தான் அவர். பாரதியார், வ. ரா., தி.ஜ.ர. உள்ளிட்ட பலரும் அக்ரஹாரக் கொடுமைகளுக்கு ஆளானவர்களே. ஆனால் அவர்களுக்கு ஸ்திர புத்தியிருந்ததால் தங்களின் அற்ப சுய அனுபவங்களைக் கொண்டு ஹிந்து மதத்தை எடைபோடும் போக்கு அவர்களிடம் இருக்கவில்லை.
    ஸ்ரீ க்ருஷ்ணகுமார், தமிழின் தற்காலப் ப்டைப்பிலக்கியத்தில் நாவல், சிறுகதை வரிசையில் மட்டுமே பத்திரிகை எழுத்தாளர்களுக்கு அப்பால் நீங்கள் படிக்க வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஸ்ரீ வெ. சா. விடம் கேட்டால் ஒரு சரியான பட்டியல் தருவார்.
    -மலர்மன்னன்

  19. அரை குறை அறிவோடு வைணவத்தின் பக்கம் மட்டுமல்ல எதன் பக்கம் வந்தாலும் அதிகப் பிரசங்கித்தனமாகத்தான் இருக்கும். நிறையக் குதர்க்கவாதிகள் தோன்றியிருப்பதற்கும் அரை குறை அறிவுடன் அவசரமாகக் கருத்துச் சொல்லும் போக்கு அதிகரித்திருப்பதுதான் காரணம்.
    இந்த தளத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மிகவும் தீர்மானமாக சமஸ்க்ருதம் ஒரு டயலெக்ட் என்று கூசாமல் சொல்லியிருந்தார். அதிலிருந்து அவருக்கு டயலெக்டும் தெரியாது சமஸ்க்ருதமும் தெரியாது என்பது அம்பலமாயிற்று. . எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
    -மலர்மன்னன்

  20. // மல்லன் கதை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளட்டும்.அரைகுறை அறிவோடு வைணவத்தின் பக்கம் வரவேண்டாம். //

    மள்ளன் என்ன சொல்ல வருகிறார் என்பதாவது புரிந்ததா? அதற்குள் அரைகுறை என்று அவர் மேல் அர்ச்சனை நடக்க ஆரம்பித்து விட்டது. அவர் எழுதும் கதைகள் குமுதம்-விகடன் ஒன்றரைப் பக்க கதைகள் ரகமா என்ன? ஒவ்வொரு கதைக்கும் பின்னால் எத்தகைய உழைப்பு, எத்தகைய சமூக வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம் இருக்கிறது என்பதை அவரது ஒன்றிரண்டு கதைகளைப் படித்தவர்களே புரிந்து கொள்ளலாமே.

    // சங்கராச்சாரியார் முதல் சாரங்க வர்ஷம் வரை மாறும் உலகுக்கு கண்மூடி
    இருந்தது. //

    இது தான் மள்ளன் சொல்ல வருவது. இதில் என்ன தவறு? சாரங்க வர்ஷம் “வைணவ போர்வாளாக” இருக்கலாம், ஆனால் அப்பட்டமாக ஜாதியத்தையும், ஜாதி வெறியையும், பெண்ணடிமைத் தனத்தையும் தூண்டும் கருத்துக்களும் அதில் இருக்கிறது என்பது மள்ளன் கூறுவதிலிருந்து தெரியவருகிறது. 2011ம் ஆண்டில் இத்தகைய குப்பைகளையும் வைணவம், அத்வைதம் போன்ற லேபிள்களோடு சேர்த்து ஏதோ புனித வாசகங்கள் போல பரப்புரை செய்பவர்கள் மீது தான் நியாயமாக உங்கள் கோபம் திரும்ப வேண்டும்.

    மள்ளனை வசைபாடுவதற்குப் பதிலாக அவரிடம் ஆதாரம் கேட்கலாம் அல்லது அவரது கருத்தை மறுக்கும் விதமாக ஆதாரத்தை எடுத்து வைக்கலாம். அது தான் சிந்திக்கும் மக்கள் செய்யக் கூடியது.

  21. // அரை குறை அறிவோடு வைணவத்தின் பக்கம் மட்டுமல்ல எதன் பக்கம் வந்தாலும் அதிகப் பிரசங்கித்தனமாகத்தான் இருக்கும். நிறையக் குதர்க்கவாதிகள் தோன்றியிருப்பதற்கும் அரை குறை அறிவுடன் அவசரமாகக் கருத்துச் சொல்லும் போக்கு அதிகரித்திருப்பதுதான் காரணம். //

    மிஸ்டர் மலர்மன்னன், என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆலந்தூர் மள்ளனை அரைகுறை என்றும் குதர்க்கவாதி என்றும் சொல்ல வருகிறீர்களா? தெளிவு படுத்தவும். இவை ஆ.மள்ளனுக்குப் பொருந்துபவை அல்ல.

    புத்தர் வரலாற்றில் ஒரு கதை உண்டு. ஒரு குதர்க்க புத்திக் காரன் அவருக்கு நேரே போய் அவரைக் கண்டபடி திட்டுவான். அவன் திட்டி முடித்ததும் புத்தர் கேட்பார், “உனது ஒரு பொருளை எடுத்து எதிரே இருக்கும் மனிதருக்குக் கொடுக்கிறாய்; அந்த மனிதர் அந்தப் பொருளை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அது யாருக்குச் சொந்தம்?” எனக்குத் தான் என்பான் அவன்.

    உடனே புத்தர் சொல்வார், “உனது திட்டுக்களையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று.

    அந்தக் கதை தான் ஞாபகம் வருகிறது.

  22. //மிஸ்டர் மலர்மன்னன், என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆலந்தூர் மள்ளனை அரைகுறை என்றும் குதர்க்கவாதி என்றும் சொல்ல வருகிறீர்களா? தெளிவு படுத்தவும். இவை ஆ.மள்ளனுக்குப் பொருந்துபவை அல்ல. -ஸ்ரீ பாலா//

    நான் குறிப்பிடுவது ஸ்ரீ ஆலந்தூர் மள்ளனை அல்ல என்பது சிறிது யோசித்தாலே புரிந்துவிடுமே!. மள்ளனின் எழுத்தை நான் எப்போதுமே பாராட்டித்தான் எழுதி வந்துள்ளேன்.
    அவரது சிறுகதைகள் பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று வெளிப்படையாக விருப்பம் தெரிவித்ததற்குக் காரணமே அவரது கதைகளில் பொதிந்துள்ள கருத்து பெரும்பாலான ஹிந்துக்களின் கவனத்தை எட்ட வேண்டும் என்பதுதான். மள்ளன் நான் விரும்பும் எழுத்தாளர். பூதாண்டீ… தாமர என்று முடித்தவராயிற்றே!
    -மலர்மன்னன்

  23. வாழ்த்துக்கள் பாலா, சரியாகச் சொன்னீர்கள்.

    ///சங்கராச்சாரியார் முதல் சாரங்க வர்ஷம் வரை மாறும் உலகுக் கு கண்மூடி
    இருந்தது.///
    -என்று மள்ளன் சொன்னால் “சாரங்க வர்ஷம் கற்பனை” என்று பொருள் கொள்ளுதல்தான் குதர்க்கம். அதிலும் கூட அப்படிசொளும்போது ” அப்படியானால் சங்கராச்சாரியார் என்பது கற்பனையா? ” என்கிற கேள்வி வருமே என்று கூட யோசிக்காத அளவுக்குக் குதர்க்க வாதம்.

  24. சாரங்க வர்ஷம் சொல்வது: பிராம்மணனுக்கு அடிமை செய்வதையே தொழிலாகக் கொண்ட சூத்ரன் தனக்கு ஏற்பட்ட தாழ்வு
    மனப்பான்மையால் உந்தப்பட்டும் பிராம்மணனின் உயர்வு கண்டு ஏற்பட்ட பொறாமை குணத்தாலும் “பிராம்மண ஜாதிப்பெண்ணை மணந்து கொண்டால் நாமும் பிராம்மணனாகிவிடலாம். நமக்குப் பிறக்கும் பிள்ளையும் பிராம்மணனாகிவிடுவான்” என்ற கணக்கில் செயல்பட்ட போதுதான் பிராம்மண பெண்ணுக்கும் சூத்ரனுக்கும் பிறந்தவனை ‘சண்டாளன்’ என்று அழைத்து அவனுடைய நிலையை சூத்ரனுடைய நிலைக்கும் கீழாக்கினார் மனு.(பக். 29

    சண்டை வந்தால் சூத்ரன் பக்கமே தண்டனை கொடு என்று மனு சொன்னதற்கும் வலுவான காரணம் உண்டு. இது ஒன்றும் மனுவின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. வேதத்திலேயே இக்கருத்துக்கு ஆதரவு இருக்கிறது. கிருஷ்ண யஜுர் வேதம் 2-ஆம் காண்டம் 5 ஆவது
    ப்ரசனம் 11 ஆவது அநுவாஹத்தில் ‘யத் ப்ராஹ்மணச்ச அப்ராஹ்மணச்ச ப்ரச்னமே யாதாம்’ என கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் “ஒரு ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணன் அல்லாத ஒருவனுக்கும் ஒரு விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் மத்யஸ்தர் ஒருவரிடம் நியாயம் கேட்கச் சென்றால் அந்த மத்யஸ்தர் எது நியாயம் எது நியாயமில்லாதது என்ற விமர்சனத்தில் இறங்காமல் ப்ராஹ்மணன் பக்கத்தையே ஆதரித்து
    தீர்ப்பளிக்க வேண்டியது” வேதத்தில் காணப்படும் இக்கருத்து மனுவின் கருத்துக்கு மூலம். மேலோர் கீழோரைத் துன்புறுத்தினால் அதற்குப் பல காரணங்கள் இருக்க முடியும். ஆனால் கீழோர் மேலோருக்கு துன்பம் கொடுக்க முற்பட்டால் அதன் காரணம் பொறாமை ஒன்றாகத்தான் இருக்க முடியும். சூத்ரன் தனக்கு மேம்பட்டவர்களான மற்ற மூன்று வர்ணத்தவரை இழுக்க பொறாமையைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
    (பக்.34)

    இதை எழுதியவர் யாரோ இல்லை. இதை எழுதியவர்
    ஸ்ரீ.உ.வே.ச.பத்மநாபன் அவர்கள். திருமலையாண்டானை ஆசார்யனாகக் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவ மரபில் வந்த இவர் கௌண்டிய கோத்ரம், போதாயன ஸூத்ரத்தை சார்ந்த கிருஷ்ண யஜுர்வேதி ஆவார். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ வரதயதிராஜ ஜீயரின் மங்களாசனத்தை தம் கவிதை நூலுக்காகப் பெற்றவர். ஸமஸ்க்ருதம், ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இது எப்போதோ எழுதப்பட்ட நூல் அல்ல. வெளியீடு: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கீழை உத்தர வீதி ஸ்ரீ ரங்கம். வெளியீடு ஆண்டு: 12-8-2010 விலை ரூ 100

  25. சாரங்கவர்ஷத்தின், கிருஷ்ண யசுர் வேதத்தின் இப்படிப்பட்ட கருத்துக்களே பிராமண வெறுப்புக்கு அடித்தளம் என்பது மிகையல்ல. இப்படிப்பட்ட கருத்துக்களால்தான் இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் பிராமண வெறுப்பு இருக்கிறது.

    இந்தக் கண்மூடித்தனமான கருத்துக்களை பிராமணர்கள் ஏற்கவில்லை என்று அறிவித்துப் பின்பற்றும் துணிவு வந்தால்தான் இந்துமதம் பிழைக்கும்.

  26. //
    இதன் பொருள் “ஒரு ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணன் அல்லாத ஒருவனுக்கும் ஒரு விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் மத்யஸ்தர் ஒருவரிடம் நியாயம் கேட்கச் சென்றால் அந்த மத்யஸ்தர் எது நியாயம் எது நியாயமில்லாதது என்ற விமர்சனத்தில் இறங்காமல் ப்ராஹ்மணன் பக்கத்தையே ஆதரித்து
    தீர்ப்பளிக்க வேண்டியது
    //

    இன்று ஒரு ட்ராபிக் போலிஸ்காரருக்கும் ஒரு இந்திய பிரஜைக்கும் fine விஷயத்தில் தகராறு வந்தால் போலீச்காரரர் சொல்வது நியமாகும். செல் போன் பேசிக்கொண்டு போனால் டார்கெட் மீட் பண்றதுக்காக கூடவே சேர்த்து rash driving செய்தார் என்று தான் பைன் போடுகிறார்களாம். ரெண்டுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாயாம்.

    போலீஸ்காரர் நல்லவராத்தான் இருப்பார் என்று நம்பி எழுதப்பட்ட சட்டம் இது

    இவை போன்ற காலத்துக்கு உதவாத வெத்து வேட்டு சட்டங்கள் எங்கிருந்தாலும் அதை குப்பையில் போட்டால் நல்லது.

  27. அஞ்சன் குமார்

    //
    இந்த கண்மூடித்தனமான கருத்துக்களை பிராமணர்கள் ஏற்கவில்லை என்று அறிவித்துப் பின்பற்றும் துணிவு வந்தால்தான் இந்துமதம் பிழைக்கும்.
    .//

    இந்த நாற்பது ஆண்டுகால கழக ஆட்சிக்கு பிறகும் பிராமணர்களுக்கு துணிவு என்று கூட ஒன்று இருக்கு என்று நம்புகிறீர்களா.

    கிருஷ்ண யசுர் வேதம் ஸ்ரீ கிருஷ்ணர் எழுதினதா வேளுக்குடி கிருஷ்ணன் எழுதினதா என்று கேட்கும் நிலையில் தான் பிராமணர்கள் இருக்கிறார்கள். நீங்களா ஏன் அவர்கள் எதையோ பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்.

  28. //…இவை போன்ற காலத்துக்கு உதவாத வெத்து வேட்டு சட்டங்கள் எங்கிருந்தாலும் அதை குப்பையில் போட்டால் நல்லது…//

    இவை குப்பைக்குப் போய்விடக்கூடாது என்ற துடிப்பில் இருந்துதான் சாரங்க வர்ஷம் போன்ற புத்தகங்கள் எழுதப்படுகின்றன.

    எனவே, அவை குப்பைக்குப் போகும்வரை நாம் உதாசீனம் செய்யக் கூடாது.

    உள்ளிருந்து கொல்லும் மெக்காலே விஷமுட்கள் இவை.

    .

  29. // இப்படிப்பட்ட கருத்துக்களால்தான் இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் பிராமண வெறுப்பு இருக்கிறது. //

    தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் பிராம்மண வெறுப்பு இருப்பது முக்கியமாக திராவிட இனவெறிக் கட்சிகள் மூளைச் சலவையால் தான். “பிராம்மணர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை” என்னும் தலைப்பில் அரவிந்தன் நீலகண்டன் பெட்டியைக் கொஞ்சம் கேட்டு அதில் சொல்லியுள்ளவற்றைச் சற்று யோசியுங்கள்.

    https://www.archive.org/details/AravindanNeelakandanSpeaksOnAmbedkarVedasManuAndMany

  30. திரு வெ சா அவர்களின் கட்டுரை அருமை. திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமை இயக்கம் ஆகியவற்றில் பங்களிப்பை.மிக சாதாரணமாக திரு வெ சா அவர்கள் எடை போட்டிருக்கிறார். திரு ஆலந்தூர் மள்ளனார் விவாதத தினை வர்ண ஏற்றத்தாழ்வுகளை நியாயப் படுத்தும் மனு நீதி அதற்கு ஆதாரமான யஜூர் வேத கருத்துவரை கொண்டு சென்றிருக்கிறார். திரு அஞ்சனக் குமார் இன்னும் அழுத்தமாக
    “இந்தக் கண்மூடித்தனமான கருத்துக்களை பிராமணர்கள் ஏற்கவில்லை என்று அறிவித்துப் பின்பற்றும் துணிவு வந்தால்தான் இந்துமதம் பிழைக்கும்”. என்று சொல்லியிருக்கிறார்.

    இந்த க்கருத்து மாறுபாடுகளுக்கு காரணம் ஒன்றுதான் அது வர்ணம் சாதி இரண்டும் ஒன்றென்ற மயக்கம். வர்ணம் என்பது சாத்திரங்களை சார்ந்தது மொத்தத்தில் வர்ணனைகள் நான்கே. ஆனால் ஆயிரம் ஆயிரம் உள்ள சாதிகள் இடத்திற்கு இடம் வேறுபாடும் சாதிகள் என்றும் நடைமுறையில் உள்ளன. ஏற்றத்தாழ்வுகள் வர்ணத்தால் வந்தது என்று பலரும் நம்புகின்றனர்.அப்படியானால் இத்தனை சாதிகள் ஏன் வந்தன. நான்கு வர்ணங்கள் தமிழகத்தில் யார்யார். சொல்லமுடியுமா. இதைப் பற்றி நிறைய விவாதிக்கவேண்டும்.
    வர்ணம் நடைமுறை வாழ்வில் இல்லை. அதனை விட்டுத்தள்ளுங்கள். மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சாத்திரங்கள்(பகுதிகள் இடைச்செருகலேன) விளக்கங்கள் யாவற்றையும் நிராகரிப்போம்.அனைவருக்கும் பக்தி ஞானம் பொதுவில் வைப்போம். அதை பிராமணர்கள் சொல்லவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும். யாவரும் முழங்குவோம். மகாகவி பாரதி வழி காட்டிவிட்டாரே பிரம்மொபதேஷம் செய்து. அதைப் பின்பற்றுவோம். வர்ண த்வேஷத்திற்கு வர்ண த்வேஷம் மாற்று அன்று.

  31. ஆலந்தூர் மள்ளன் அவர்களுக்கு,

    நீங்கள் சார்ங்க வர்ஷம் என்ற நூலில் உள்ள மேற்கோள்களை அளீத்திருக்கிறீர்கள். மனு ஸ்மிருதியில் உள்ள சாதியத் தன்மை கொண்ட வாசகங்களை அந்த நூலாசிரியர் ஏன் விதந்தோதி வெளியிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். இந்து மதத்தில் உள்ள ஸ்மிருதி நூல்களின் அருங்காட்சியகத்தில் மனுஸ்மிருதிக்கும் ஒரு இடம் உண்டு என்பதற்கு மேல், அதில் உள்ள சட்டங்களை இன்றைக்கு யாரும் நடைமுறைப்படுத்தக் கோருவதில்லை. வைணவ சமய அமைப்பு ஒன்று இத்தகைய சாதீயக் கருத்துக்களைத் தனது நூல்களில் இணைத்து வெளியிடுமானால், அது கண்டனத்திற்குரியது.

    // வேதத்திலேயே இக்கருத்துக்கு ஆதரவு இருக்கிறது. கிருஷ்ண யஜுர் வேதம் 2-ஆம் காண்டம் 5 ஆவது ப்ரசனம் 11 ஆவது அநுவாஹத்தில் ‘யத் ப்ராஹ்மணச்ச அப்ராஹ்மணச்ச ப்ரச்னமே யாதாம்’ என கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் “ஒரு ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணன் அல்லாத ஒருவனுக்கும் ஒரு விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் மத்யஸ்தர் ஒருவரிடம் நியாயம் கேட்கச் சென்றால் அந்த மத்யஸ்தர் எது நியாயம் எது நியாயமில்லாதது என்ற விமர்சனத்தில் இறங்காமல் ப்ராஹ்மணன் பக்கத்தையே ஆதரித்து தீர்ப்பளிக்க வேண்டியது” வேதத்தில் காணப்படும் இக்கருத்து மனுவின் கருத்துக்கு மூலம். //

    கிருஷ்ண யஜுர்வேத மந்திரம் குறித்த இந்த வியாக்கியானம் முற்றிலும் பிழைபட்டது என்று கருதுகிறேன். சம்பந்தமே இல்லாமல் மேற்கோளை உருவி எடுத்து கூறப்படும் வியாக்கியானம் இது.

    முதலில் மந்திரம் வரும் context. 2ம் காண்டம் 5வது பிரபாடகம் முழுவதும் அமாவாசை பௌர்ணமிகளில் செய்ய வேண்டிய யக்ஞங்களைப் பற்றிக் கூறுகிறது (தர்ச பூர்ணமாசம்), சட்ட விதிகளை அல்ல.

    இதில் 11வது அனுவாகத்தில் நெருப்பை மூட்டுதல், நெய்யை ஊற்றுதல் போன்ற வேள்விச் சடங்குகளை பிரஜாபதியே செய்வதாக உருவகித்துக் கூறும் மந்திரங்கள் உள்ளன. நெய்யைப் புரோட்சிப்பதைப் பற்றிய கடைசி மந்திரம் தான் இங்கு மேற்கோளாக சொல்லப் பட்டிருக்கிறது.

    அந்த மந்திரத் தொகுப்பு இப்படி ஆரம்பிக்கீறது –

    The gods having repeated the Samidhenis could not see the sacrifice. Prajapati in silence performed the sprinkling of the butter. Then indeed did the gods see the sacrifice. In that he silently sprinkles, (it serves) to light up the sacrifice. Verily also he anoints the kindling-sticks. He who knows thus becomes soft. Verily also he delights them. He delights in offspring and cattle [3] who knows thus…

    இப்படி தொடர்கிறது..

    He sprinkles; the world of heaven is as it were secret [6]; verily he makes the world of heaven resplendent for him. He sprinkles straight, for the breath is as it were straight. He sprinkles continuously, for the continuity of the breaths and of food and for the smiting away of the Raksases. If he desire of a man, ‘May he be likely to perish’, he should sprinkle crookedly for him; verily he leads his breath crookedly from him, and swiftly he perishes. The sprinkling is the head of the sacrifice, the ladle is the body [7].

    வேள்வியின் நெய் சொரிதலால், ஆக்கவும் அழித்தலும் இரண்டும் கூடும் என்கிறது மேற்சொன்ன மந்திரம்.. தொடர்ந்து வரும் மந்திரங்கள் –

    Having sprinkled, he anoints the ladle; verily he places the head of the sacrifice on its body. Agni was the messenger of the gods, Daivya of the Asuras; they went to question Prajapati. Prajapati spake to a Brahman (saying), ‘Explain the phrase, “Make announcement”‘, ‘Hearken to this, O ye gods’, he said; ‘Agni the god is the Hotr’, (he said). He chose him of the gods. Then the gods [8] prospered, the Asuras were defeated. The man, who knows thus and for whom they chose his list of ancestors, prospers himself, his enemy is defeated. If a Brahman and a non-Brahman have a litigation, one should support the Brahman; if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman.

    இங்கு பிரஜாபதி தனது சக்தியால் அக்னியை வேள்வித் தலைவனாக (Hotr) நியமித்ததையும், ராஷசர்களை அழித்ததையும் பற்றிக் கூறப் படுகிறது. கடைசி வரியில் Brahman என்று கூறப்படுவது பிராமணன் என்ற மனிதனை அல்ல, பிரம்மத் தன்மையை, தேவத் தன்மையையே குறிக்கீறது என்பது கண்கூடு. தெய்வத் தன்மை கொண்ட அக்னியைத் தேர்ந்தெடுத்து அசுரத் தன்மையை பிரஜாபதி விலக்குகிறார் என்பது உட்பொருள்.

    வேதங்களில் சாதீய கொள்கைகள் இல்லை என்பதை டாக்டர் அம்பேத்கரே தனது ஆய்வுகளில் கண்டடைந்து கூறியுள்ளார். எனவே மனுஸ்மிருதி சுலோகம் ஒன்றுக்கு ஆதரவாக சுருதி வாக்கியத்தை திரித்துப் பொருள் கொண்டுள்ளார் அந்த ஆசிரியர் என்றே தோன்றுகிறது.

  32. //வேதங்களில் சாதீய கொள்கைகள் இல்லை என்பதை டாக்டர் அம்பேத்கரே தனது ஆய்வுகளில் கண்டடைந்து கூறியுள்ளார்
    //

    நிச்சயமாக – அப்போது சாதி என்று ஒன்று இருக்கவே இல்லை. சாதியத்தின் முகத்தை மகாபாரத காலத்தில் தான் பார்க்க முடியும்.

    ஸ்ம்ருதிகளின் மற்றும் அவரற்றின் ஊடுவல்கள் மூலமாகவே சாதிகள் நிலை நிறுத்தப்பட்டன.

    சாரங்க வர்ஷம் படிக்கவில்லை. திருமாலை ஆண்டான் வழி வந்தவர் ஒருவர் இப்படி எழுதி இருந்தார் என்றால் அது நிச்சயமாக வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதே. ஒரு சந்தேகம் திருமலை ஆண்டான் சிஷ்ய பரம்பரை என்று இன்று தனியாக ஒன்று உள்ளதா?

  33. சுக்ல யஜுர்வேதம் 26.2 தெள்ளத் தெளிவாக வேதம் அனைத்து வர்ணத்தினருக்கும் உரியது என்று கூறுகிறது.

    இந்த மந்திரத்தை மேற்கோள் காட்டி சுவாமி விவேகானந்தர் பேசியுள்ளார் –

    This Veda is our only authority, and everyone has the right to it.

    “yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
    Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha”

    (Just as I am speaking these blessed words to the people,
    in the same way you also spread these words among all men and women –
    the Brahmanas, kshtriyas, Sudras and all other,
    whether they are our own people or strangers)

    — Thus says the Shukla Yajur Veda (XXVI. 2). Can you show any authority from this Veda of ours that everyone has not the right to it? The Purânas, no doubt, say that a certain caste has the right to such and such a recension of the Vedas, or a certain caste has no right to study them, or that this portion of the Vedas is for the Satya Yuga and that portion is for the Kali Yuga. But, mark you, the Veda does not say so; it is only your Puranas that do so. But can the servant dictate to the master? The Smritis, Puranas, Tantras — all these are acceptable only so far as they agree with the Vedas; and wherever they are contradictory, they are to be rejected as unreliable. But nowadays we have put the Puranas on even a higher pedestal than the Vedas! The study of the Vedas has almost disappeared from Bengal. How I wish that day will soon come when in every home the Veda will be worshipped together with Shâlagrâma, the household Deity, when the young, the old, and the women will inaugurate the worship of the Veda!

    https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_3/lectures_from_colombo_to_almora/the_religion_we_are_born_in.htm

  34. ஜடாயு அவர்களே

    //yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
    Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha”
    //

    அன்வயம் இப்படி செய்தால் இப்படி இருக்கும் அர்த்தம்

    yathA-imAm vAcham kalyaNIm
    Just as I am speaking these blessed words

    AdadAmi janebhyah;
    Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha

    set this on (spread) , FOR THE PEOPLE (janebyaha 4th declension which indicates for someone), men and women –
    the Brahmanas, kshatriyas, Sudras and all other, whether they are our own people or strangers

    to the people என்பதற்கும் for the people என்பதற்கும் பெரும் வித்யாசம் இருப்பதால் சொல்கிறேன். எப்படி நமது constitution for the people என்று சொல்லப்படுகிறதோ அப்படி.

    ஆக வேதமே “எல்லோருக்காகவும் நான்” என்று தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது. மேலும் ஒரே வரியில் எல்லா ஜனங்களுக்காகவும் சூத்திரர். பிராமணர், பெண்டீர், வைஷ்யர், க்ஷத்ரியர் என்று கூறுவதன் மூலம் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறது வேதம்.

  35. சாரங்,

    நான் சொன்ன துணிவு நேர்மையைச் சார்ந்தது. இதனை வேகம் அல்லது வீரம் எனப் பொருள் கொள்ள வேண்டாம். அதே வரியை இப்படிப் படிக்கவும்.

    “இந்தக் கண்மூடித்தனமான கருத்துக்களை பிராமணர்கள் ஏற்கவில்லை என்று அறிவித்துப் பின்பற்றும் நேர்மை இருந்தால்தான் இந்துமதம் பிழைக்கும்.”

    இப்போது இங்கே கூட பிராமணர்களோ, வேத, இதிகாச புராணங்களோ ,மனு சாத்திரம் உள்ளிட்ட சாத்திரங்களோ சாதியைக் கற்பிக்கவில்லை என்பதில்தான் அத்தனை பிராமணர்களும் குறியாக இருக்கிறார்களே ஒழிய, ஆமாம், கடந்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு அத்தனை சாதிக்கும் மேச்சாதியாக இருந்த பிராமணர்களே பெரும்பான்மைப் பொறுப்பை ஏற்கிறோம் என்று சொல்லும் நேர்மை வரவில்லையே?

    தவறை உணரவேண்டும்,
    உணர்ந்த பின்னால் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்,
    அப்போதுதான் திருந்த முடியும்.
    இங்கோ சப்பைக் கட்டு கட்டுவதில்தான் அத்தனை பெரும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதற்கு எல்லாப் புத்தகத்தையும் புரட்டி ஆராய்ச்சி வேறு.

    மீண்டும் கூறுகிறேன், இந்து மதம் பிழைக்க பிராமணர்கள் வேதமோ, இதிகாசமோ, புராணமோ, சாத்திரமோ, எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் பகுதிகள் உள்ளனவோ அவற்றை புறந்தள்ளி அறிவிக்க வேண்டும், கடந்த காலத்துத் தவறுகளுக்கு வருந்தி மாற்று செய்ய வேண்டும்.

    நீங்கள் இதைப் போன்ற கருத்துக்களைக் குப்பையில் போடவேண்டும் என்று சொன்னதற்கு நன்றி, ஆனால் பின்னோடு ஜடாயு அறிவித்துவிட்டார் இது திரித்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று.

    நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. எங்கெல்லாம் வேத, இதிகாசங்களில் பொருள் தற்போது வசதியாக இல்லையோ அங்கெல்லாம் வேறுவிதமான ஒரு வசதியான பொருள் பிராமணர்களால் தரப்படும். இதுவும் நவீன மெக்காலே டெக்னிக்தான்.

  36. கந்தர்வன்

    நான் அதைக் கேட்டேன். நன்றாக இருக்கிறது .

    ஆனால் இவையெல்லாம் மேச்சாதியினருக்குப் பிடிக்கலாம். தாழ்த்தப் பட்டவர்களைப் பொறுத்த மட்டில் இவையெல்லாம் வெறும் சப்பைக் கட்டுக்கள்தான். Does not appeal to me.

    தவறைத் தவறு என்று ஏற்காதவன் திருந்த வழியேது?

  37. கந்தர்வன்

    தாழ்த்தப்பட்டவர்கள் மீது காலம் காலமாக நடந்துவந்த கொடுமைகள் கற்பனை அல்ல. “ஈ.வே.ராவோ, அம்பேத்காரோ, மேக்காலேயோ மூளைச்சலவை செய்துதான் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அது தெரிய வந்தது” என்று நீங்கள் சொல்வதை அப்பட்டமான நகைச்சுவை என்று சொல்லி
    வெறுப்பை மறைக்கலாம். அவ்வளவே.

    இந்தக் கொடுமைகள் நீதிமன்றக் கதவுகளை வந்தடைந்து பிரிவி கவுன்சில் வரை போய் பதிவானது இந்தக் கட்டுரையில் உள்ளது. இதில் எந்த மூளைச் சலவை வந்தது?

    இந்த வழக்கு மட்டுமல்ல, இதை விடவும் சாதிக் கொடுமைகளை – பிராமணனுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் பிறந்த – மகனுக்கும் மகளுக்கும் நடந்ததை இன்னமும் சில வழக்குகளில் பதிவாகி உள்ளது. முறை தவறிப் பிறந்தவர்கள். ஆதாரமாக வைக்கப் பட்டவை, மனு சாத்திரம் போன்ற சாத்திரங்கள். அவர்களுக்கு சமுதாயம் கொடுத்த பட்டம் வெறுமே விளக்கங்களை மாற்றுவதால் உண்மை மறைந்துவிடாது என்பதை உணருங்கள்.

  38. கந்தர்வன்

    தாழ்த்தப்பட்டவர்கள் மீது காலம் காலமாக நடந்துவந்த கொடுமைகள் கற்பனை அல்ல. “ஈ.வே.ராவோ, அம்பேத்காரோ, மேக்காலேயோ மூளைச்சலவை செய்துதான் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அது தெரிய வந்தது” என்று நீங்கள் சொல்வதை அப்பட்டமான நகைச்சுவை என்று சொல்லி
    வெறுப்பை மறைக்கலாம். அவ்வளவே.

    இந்தக் கொடுமைகள் நீதிமன்றக் கதவுகளை வந்தடைந்து பிரிவி கவுன்சில் வரை போய் பதிவானது இந்தக் கட்டுரையில் உள்ளது. இதில் எந்த மூளைச் சலவை வந்தது?

    https://books.google.co.in/books?id=tB8SvlQqi0YC&pg=PA48&lpg=PA48&dq=castes+in+india+privy+council&source=bl&ots=GXoMlqFbfc&sig=JStBuWqb_PR0pgg9PmGlbrhVLLc&hl=en&ei=aixmTsyNCZDIrQeo5Om2Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEUQ6AEwBw#v=onepage&q=castes%20in%20india%20privy%20council&f=false

    இந்த வழக்கு மட்டுமல்ல, இதை விடவும் சாதிக் கொடுமைகளை – பிராமணனுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் பிறந்த – மகனுக்கும் மகளுக்கும் நடந்ததை இன்னமும் சில வழக்குகளில் பதிவாகி உள்ளது. முறை தவறிப் பிறந்தவர்கள். ஆதாரமாக வைக்கப் பட்டவை, மனு சாத்திரம் போன்ற சாத்திரங்கள். அவர்களுக்கு சமுதாயம் கொடுத்த பட்டம் வெறுமே விளக்கங்களை மாற்றுவதால் உண்மை மறைந்துவிடாது என்பதை உணருங்கள்.

  39. அம்பேத்கார் சொல்வதைக் கவனியுங்கள்:
    வீரசிவாஜிக்கே சில பிராமனர்களால் நிகழ்ந்த சங்கடத்தையும், ஒரு வாரணாசி பிராமணரால் செய்யப் பட்ட பதவிப் பிரமாணத்தையும் பற்றி அவர் எழுதியதையும் படியுங்கள். உண்மையை உணர்ந்து செயல்பட்டால் நமது இந்துமதம் தலைக்கும். இங்கு சில பிராமணர்கள் செய்வதுபோல வெறுமே சப்பைக் கட்டு கட்டினால் இன்று சிலர் தற்காலிக நிம்மதியோ மகிழ்ச்சியோ கொள்ளலாம். ஆனால் உண்மை நிலைத்து நிற்கும்.

    https://www.ambedkar.org/ambcd/38C2.%20Who%20were%20the%20Shudras%20PART%20II.htm

    அம்பேத்கார் சொல்கிறார்.
    So far I have attempted to establish the following propositions :

    (1) That it is the Brahmins who brought about the fall of the Shudras from the second to the fourth Varna in the Indo-Aryan Society;

    (2) That the technique adopted by the Brahmins to degrade the Shudras was to deny them the benefit of the Upanayana;

    (3) That this act of degradation was born out of the spirit of revenge on the part of the Brahmins who were groaning under the tyrannies and oppressions and indignities to which they were subjected by the Shudra kings.

    While all this is crystal clear, there may be some who may yet have some such questions to ask, namely :

    (i) Why should a quarrel with a few kings make the Brahmins the enemies of the whole Shudra community?

    (ii) Was the provocation so great as to create a feeling of hatred and desire to seek vengeance?

    (iii) Were not the parties reconciled? If they were, then their was no occasion for the Brahmins to degrade the Shudras.

    (iv) How did the Shudras suffer this degradation?

    These questions I admit have in them enough force and substance to call for serious consideration. It is only proper that they should be answered.

  40. சிவஸ்ரீ அய்யா,

    வர்ணம் சாதி விளக்கங்கள் கேட்டுப் புளித்து விட்டது . மலர்மன்னனை அய்யாவும் நான் எழுதிய கட்டுரையைப் படியுங்கள் என்பார்கள்.

    நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் உள்ள அம்பேத்கார் எழுதியதில் வர்ணம் சாதி பற்றியும் எப்படி சாதி வருகிறது என்பது பற்றியும் மனு சாத்திர அடிப்படையில் வந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளதைப் படியுங்கள்.

    https://www.ambedkar.org/ambcd/38C2.%20Who%20were%20the%20Shudras%20PART%20II.ஹதம்

    இதில் அனுலோமா பிரமா என்பது குறித்த அட்டவணைகளைப் பாருங்கள். சண்டாளன் என்பவன் எவன் அவனது நிலை என்ன என்பது குறித்துப் படியுங்கள். நாயினும் கேவலமான நிலையை அவனுக்கு மனு சாத்திரம் வழங்கியுள்ளது என்பதைப் பதிந்திருக்கிறார்.

  41. வர்ணம் சாதி என்று பலவித விளக்கம் கொடுப்பவர்கள் யாக்ஞவல்கியர் சுமிரிதியில் (பொ.சா. 300 முதல் 500 குள் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது.) எழுதியவை படிக்க வேண்டுகிறேன். சாதி அப்போதே இருந்தது. அதுவும் மேச்சாதி கீழ்ச்சாதி இருந்தது. கலப்பு சாதி என்றால் ஒரு தாழ்த்தலும் இருந்தது. எல்லாவற்றிலும் மேச்சாதியாக பிராமணர்தான் இருந்தார்கள்.

  42. அஞ்சன் குமார்,

    // நீங்கள் இதைப் போன்ற கருத்துக்களைக் குப்பையில் போடவேண்டும் என்று சொன்னதற்கு நன்றி, ஆனால் பின்னோடு ஜடாயு அறிவித்துவிட்டார் இது திரித்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று. //

    முதலில் நான் எழுதியதை முழுதாகப் படியுங்கள். புத்தகத்தின் சாதியக் கருத்துக்களையும் மனுஸ்மிருதியையும் நானும் கண்டித்திருக்கிறேன்.

    மனுஸ்மிருதி மேற்கோள்கள் திரிக்கப் பட்டவை என்று நான் சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது யஜுர்வேத மந்திரம் குறித்து மட்டுமே. அது தவறு என்று எனக்குத் தோன்றியதால் ஆதாரங்களைத் தேடி எடுத்து இங்கு விளக்கினேன். பொத்தாம் பொதுவாகக் கண்டிப்பது அல்லது ஆதரிப்பது என்பது நல்ல சிந்தனையாளருக்கான இலக்கணம் அல்ல.

    தாழ்த்தப் பட்டவர்கள் மீதான கொடுமைகள் கற்பனை என்று நானும் கூறவில்லை, அந்த உரையில் அரவிந்தனும் கூறவில்லை. திரு கந்தர்வன் அவர்களும் அத்தகைய முடிவுக்கு வந்திருப்பார் என்றும் தோன்றவில்லை.

    நெகிழ்வுத் தன்மை கொண்டிருந்த வர்ண./சாதி அமைப்பு எப்படி பல்வேறு வகைகளில் இறுக்கம் கொண்டதாக, சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திட்டதாக, கொடுமையான அம்சங்கள் கொண்டதாக மாறியது என்பது பல சமூக வரலாற்றுக் கூறுகள் பின்னிப் பிணைந்ததொரு வரலாறு. நீங்களே இங்கு மேற்கோள் தந்திருக்கும் Who are the Shudras போன்ற நூல்களில் அம்பேத்கர் அதனை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.

    கொடுமைகளை, உரிமை இழப்புகளை, தாழ்வுகளை மறுக்கவில்லை. ஆனால் ஆரிய-திராவிட வாதம், பிராமண சூழ்ச்சி போன்ற எளிய வெறுப்புணர்வுக் குடுவைகளில் அதற்கான காரணங்களை அடைத்து முத்திரை குத்துவதை எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன். இது குறித்து, நானும், அரவிந்தனும், பனித்துளியும் இணைந்து முன்பு ஒரு கட்டுரைத் தொடரே எழுதியிருக்கிறோம் –

    சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம்:
    https://tamilhindu.com/tag/jati-castes-a-new-outlook/

    அய்யா வைகுண்டர்,நாராயண குரு, ஐயன் காளி போன்ற தலித் போராளிகள் குறித்தும் அதில் பேசியிருக்கிறோம். இது குறித்த எங்களது முழுமையான பார்வையை அதில் நீங்கள் காணலாம்..

  43. ஜடாயு,

    உங்கள் மறுமொழியில் உள்ள விளக்கத்திலிருந்து:

    /// If a Brahman and a non-Brahman have a litigatio, one should support the Brahman; if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman. ///

    இதில் பிரம்மன் என்பதை :”Brahman என்று கூறப்படுவது பிராமணன் என்ற மனிதனை அல்ல, பிரம்மத் தன்மையை, தேவத் தன்மையையே குறிக்கீறது என்பது கண்கூடு.” என்கிறீர்கள். சரி. ஒப்புக் கொள்கிறேன். non -brahman என்பதை என்ன என்று சொல்கிறீர்கள்? இங்கேதான் “சப்பைக் கட்டு” என்கிறேன்.

    உங்கள் மற்ற கட்டுரைத் தொடரைப் படித்திருக்கிறேன், நன்றாக இருக்கின்றன.

  44. ஜடாயு,

    ///பொத்தாம் பொதுவாகக் கண்டிப்பது அல்லது ஆதரிப்பது என்பது நல்ல சிந்தனையாளருக்கான இலக்கணம் அல்ல. ///

    நான் சுட்டிக் காட்டிய படியும் நீங்களே உங்கள் கட்டுரைத் தொடரில் கூறிய படியும் இத்தனை பாரம்பரியத் தவறுகளைச் சுமந்து வரும் இந்து மேச்சாதியினர் தங்கள் தவறுகளை மறைக்க, பூசி மொழுக, பொத்தாம் பொதுவாகத்தானே பெரியாரின் அல்லது மெக்காலேயின் மூளைச் சலவை என்கிறார்கள் ? பெரியார் ஈ.வே.ரா. பிராமணர்களைத் தனிமைப் படுத்தித் திட்டாவிட்டால் இதே பிராமணர்கள் இன்றைக்கு சமத்துவம் கீதையில் இருக்கிறது, வேதத்தில் இருக்கிறது என்பதெல்லாம் சொல்வார்களா என்பதை யோசியுங்கள். பெரியார் தனது வேலையை ஆரம்பிக்கும் வரைக்கும் வெறுமே யஞவல்கியர் சுமிருதியும் மனு சுமிருதியும்தானே நீதிமன்றம் வரை கோலோச்சியது? மயிலையின், திருவல்லிக்கேணியின் அத்தனை அய்யங்கார் அய்யர் வக்கீல்களும் நீதிமன்றங்களில் வைத்தது என்ன, இன்றைக்கு சமத்துவம் காட்டும் கீதையா இல்லையே அது மனு சுமிருதியே , யாக்யவல்கியரின் சுமிருதியே என்பதை யோசியுங்கள்.

  45. // non -brahman என்பதை என்ன என்று சொல்கிறீர்கள்? இங்கேதான் “சப்பைக் கட்டு” என்கிறேன். //

    non-brahman என்பது பிரம்மம் அற்றது என்று தான் பொருள் படும். அப்படி பொருள் கொண்டால் தான் if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman என்ற வாக்கியத்திற்கு சரியான அர்த்தம் கிடைக்கும். brahman என்ற சொல்லுக்கு பிராமணனாகிய மனிதன் என்று அர்த்தம் கொண்டால் இந்த வாக்கியம் பொருளற்றதாகிறது.

    ’நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக’ என்ற வாக்கியம் உபநிஷதங்களில் பல இடங்களில் வருகிறது,. அதன் ஒரு வடிவம் தான் இது.

    ஒரு நூலின் பாடல்களை அதன் தொடர்ச்சி, context ஆகியவற்றையும் சேர்த்துத் தான் பொருள் கொள்ள வேண்டும், தனியாக உருவி எடுத்து அல்ல. அதனால் தான் அதன் முன் பின்னுள்ள மந்திரங்களின் மொழியாக்கத்தையும், சுட்டியையும் கூட கொடுத்திருக்கிறேன்.

  46. திரு அஞ்சன் குமார்,

    நீங்க சொன்னது பல இடங்களில் நான் ஏற்று கொள்கிறேன். எனக்கும் பல இடங்களில் மனு ஸ்ம்ருதி யோ அல்லது சில ஹிந்து மத நூல்களோ படிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும் .. ஆம் சப்பை கட்டு கட்டுவது சரி இல்லை. பிராமணர்கள் பல சமயங்களில் பல இடங்களில் தவறு செய்துள்ளார்கள் என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும்.

    அனால் உங்களிடம் ஒரு கேள்வி :

    இன்று நடக்கும் ஜாதி கொடுமைகள் கிருஷ்ணா யசுர் வேதம் (அப்படின்னா enna ?) அதை படித்து அதன் படி செயல்படுவதன் விழைவா? கோயிலுக்குள் தலித் ஐ விட மாட்டேன் என்று சொல்லும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும் தேர் வடம் பிடிக்க அனுமதி மறுப்பவர்களும் இதை படித்து தான் செயல் படுகிறார்கள?

    சப்பை கட்டு கட்டுவது மதத்தை வளர்க்க உதவாது .. அதற்காக சமூகத்தில் நடக்கும் அணைத்து தவறுக்கு மதமும் ஒரு குறிப்பிட்ட ஜாதியும் தான் காரணம் என்று சொல்வது சரியா?

    வீர சிவாஜி ஐ மட்டும் அல்ல , மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த விஸ்வ பிராமன ஜாதி யை சேர்ந்தவர்களையும் இன்னும் வேற ஒரு உள் பிரிவை சேர்ந்தவர்களையும் கூட அங்கே உள்ள ஒரு பிராமன பிரிவு பல வகையிலும் தொந்தரவு கொடுத்ததாக படித்துள்ளேன் … இதெல்லாம் அரசியல் அதிகரதிற்காக தான் என்றே தோன்றுகிறது. இதற்கு மனு ஸ்ம்ருதி யோ அல்லது மற்ற நூல்களோ காரணம் என்று தோன்ற வில்லை..

    தமிழ்நாட்டில் கிராமங்களில் நடக்கும் ஜாதி கொடுமைக்கும் இது தான் காரணம் என்று தோன்றுகிறது ..

    ஏன் , justice கட்சி யின் தோற்றதிர்ர்கே இது தான் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து . சமூஹதில் நல்ல அந்தஸ்து உடைய சில ஜாதிகள், நல்ல பணம் நிறைந்த சிலருக்கு காங்கிரஸ் இல் சேர்ந்து தொடர்ந்து பதவி பெற முடியவில்லை . . (அங்கே பார்பனர்களுக்கு அளவுக்கு அதிகமான பங்கு கிடைத்ததாக அவர்கள் நினைத்தார்கள் . அது உண்மை போல தான் எனக்கும் தோன்றுகிறது). அதை எதிர்பதற்காக பார்பன எதிர்ப்பு கோஷத்துடன் புது கட்சி தொடங்கினார்கள் ..

    தீண்டாமையிலும் சரி பார்பன வெறுப்பிலும் சரி, மதத்தை விட அரசியலும் பதவி பற்றும் தான் முக்கிய காரணிகள் என்றே என்ன தோன்றுகிறது ..

    இன்னும் ஒரு விஷயம் ,

    ஹிந்து மதத்தில் ஒரு சில விஷயங்கள் நமக்கு சங்கடமாக இருக்கிறது .. அந்த விஷயங்களை பற்றி தீவிர பிரச்சாரம் செய்ய படுகிறது .. இது ஒரு வகையில் நல்லது தான்..

    அனால் இதே போன்று மற்ற மதங்களில் இருக்கும் தீமைகள் பிரச்சாரம் செய்ய படுவதில்லை .. இது மிகவும் ஆபத்து ..

    இஸ்லாத்தை தமிழகத்தில் எப்பிடி மார்க்கெட் செய்கிறார்கள் ? சமநிலை சமுதாயம் என்று ? பிலால் ஐ கலிமா கூற veithathai கூறுகிறார்கள் .. அனால் அந்த மதத்தின் negatives ஒரு போதும் கூற படுவதில்லை .. (சொல்ல போனால் முஹம்மது இன் தனி வாழ்கை ஐ பற்றி பேசினால் positives கிடைப்பது வெகு அரிது ) ..

    அதனால் தான் இந்த தளத்தில் நமது மதத்தை சற்று mild ஆஹா விமர்சித்து மற்ற மதங்களை முழுமையாக விமர்சிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது ..

    மனு ஸ்ம்ருதி யை பக்கம் பக்கமாக translate செய்து அதை விமர்சிக்க ஏகப்பட்ட பத்திரிகைகள், மற்றும் இனைய தளங்கள் உள்ளன .. பிறகு என் இங்கு அதை செய்யணும் ..

    PS : நான் எந்த வகையிலும் எந்த விஷயத்திலும் அறிஞன் அல்ல .. எதோ என் கருத்தை சொன்னேன் . தவறுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்கிறேன் ..

  47. ஜடாயு,

    இது உங்கள் விளக்கம்.

    //non-brahman என்பது பிரம்மம் அற்றது என்று தான் பொருள் படும். அப்படி பொருள் கொண்டால் தான் if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman என்ற வாக்கியத்திற்கு சரியான அர்த்தம் கிடைக்கும். brahman என்ற சொல்லுக்கு பிராமணனாகிய மனிதன் என்று அர்த்தம் கொண்டால் இந்த வாக்கியம் பொருளற்றதாகிறது.//

    கீழ்க்கண்ட வாக்கியத்தில் உள்ள a Brahman என்பது பிரஜாபதி மொத்த பிரம்மத்தை நோக்கி கூறியதாக பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது ஒரு பிராமணரை நோக்கி கூறியதாக பொருள் கொள்ள வேண்டுமா?

    //Prajapati spake to a Brahman (saying)//

  48. காபிர்

    உங்கள் பெயரைப் பார்த்தால் நீங்கள் இஸ்லாத்தை கண்டிக்கும் ஹிந்து என்று தெரிகிறது.

    நான் பேசுவது எதுவும் இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டவர்களும் அன்றைய இன்றைய பிராமணர்களும் சம்பந்தப் பட்டது.

    வீணே திசை திருப்பக் கிளம்பியுள்ள உங்களுடன் இந்த கருத்து குறித்து இங்கே இப்போது வாதிக்க நான் தயாராக இல்லை. மன்னிக்கவும். உங்களுக்கு என் பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி வாழ்த்துக்கள்.

  49. ஜடாயு,

    அந்த இரு வாக்கியங்களும் மொத்தமாகவே படிக்கலாம்.

    ///If a Brahman and a non-Brahman have a litigation, one should support the Brahman; if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman. if one supports the Brahman, one supports oneself; if one opposes the Brahman, one opposes oneself therefore one should not oppose a Brahman ///

    non – bramhan என்பதுபிரம்மத்தை நிராகரிப்பவன் என்கிறீர்கள். kaafir, in-fidels, unfaithful என்பது போல வேதம் கூட non -brahman என்ற ஒரு பிரிவை ஏற்றது என்கிறீர்களா? நமது மதத்தில் கடவுளை நம்புவன் நம்பாதவன் என்கிற பாகுபாடு இல்லை என்றுதானே எல்லாரும் கூறிவந்திருக்கிறார்கள் , அதுதானே இந்த இந்து மதத்தை பிற மதங்களோடு பிரித்துக் காட்டுவது? நீங்கள் சொலவது உண்மையானால் சாதிப் பிரஷ்டம், மதப் பிரஷ்டம் என்பதெல்லாம் நடந்த அத்தனைப் பஞ்சாயத்துக்களும் வேதத்தின் அடிப்படையில் ஆனவை என்று கூறிவிடுவார்களே? வேண்டாம் ஜடாயு, வேண்டாம் வீணே பிரித்துப் பிரித்துப் பொருள் கூறுவதை விட்டு விட்டு உண்மையை ஏற்று வருகின்ற நாட்களிலாவது மனிதம் காண்போம்.

  50. அம்பட்ட சாதியில் பிறந்த ஒரு ஐந்து அல்லது ஆறு வயது சிறுவன் தனது மாமனுடன் மாமனின் சவரப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு தான் வசிக்கும் ஊரின் ஒதுக்குப் புறமான சேரியிலிருந்து மாமனுக்குக் கீழே பயிற்சியாளனாக ஊரில் உள்ள அய்யர் வீட்டுக்கு (மாமன் )அவருக்குச் சவரம் செய்ய போகிறான்.

    சவரத்துக்கு நாள், நட்சத்திரம், நேரம் பார்த்துதான் செய்வார்கள். வெய்யிலின் கொடுமையில் சிறுவன் கால் பிஞ்சுக் கால் சுடுகிறது. நெடுந்தொலைவு நடக்க வேண்டும். சவர நேரம் சிறுவன் வசதியைப் பார்க்குமா ? சில சமயம் கொட்டும் மழை கூட உண்டு. தொப்பல்தான். குடைக்கு வசதி எது? கூழுக்கே திண்டாட்டம்.

    வெயிலில் நடந்த களைப்பில்/ தாகத்தில் அய்யர் வீட்டில் தண்ணீர் கேட்டால், தூர நின்று சொம்பிலிருந்து அருவியாய்ப் பாயும் “ஜலத்தை” கீழே சிந்தாமல் “கேச்” பிடித்து மூச்சு விடாமல் குடிக்க வேண்டும். சிறிது சிந்தினால் போச்சு. மூச்சு விட நின்றால் “சீக்கிரம் குடியேண்டா, அம்பட்டப்பயலுக்குச சிசுருசை செய்ய எனக்குத் தலை எழுத்து ” என்று வசவு கிடைக்கும்.

    அய்யருக்கு சர்வாங்கம் செய்யப்படுகிறது. இதையும் அந்தச் சிறுவன் பார்க்கிறான். மாமனும், சிறுவனும் நடந்த பாதை கூ ட அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும் முன்னரே தண்ணீர் விட்டு கழுவப் lபடுகிறது.

    அதே சிறுவன் பின்னாளில் அதிகாரத்துக்கு வந்தால் வெறுப்பின் பலனை பிராமணர் அனுபவிக்கத்தானே வேண்டும்?

    காரணம் இல்லாமல் பிராமணர் மீது கீழ்ச்சாதியினருக்கு வெறுப்பு வரவில்லை. இந்த வெறுப்பு அடிப்படைக் காரணமும், நியாயமும் உடையது.

    இந்த வெறுப்பை, கந்தர்வன் சொல்வது போல், வெறுமனே மூளைச்சலவை என்று கொச்சைப் படுத்துவதை விட்டு விடுங்கள். கீழ்ச்சாதியினர் அறியாத வடமொழியிலிருந்து மேற்கோள் காட்டி சாதியை பிராமணன் கற்பிக்கவில்லை என்று நிறுவும் வீண் முயற்சியை விடுங்கள்.

    இன்னமும் கூட பிராமணர்களின் உபநயனம் என்னும் பூணூல் விழாவில் நாவிதர் மீது தீண்டாமைக் கொடுமை செய்யப் படுகிறது. அதை நிறுத்தினேன் என்று இங்கே கட்டுரை எழுதும் மறுமொழி செய்யும் எந்தப் பிராமணனாவது நேசித் தொட்டுச் சொல்ல முடியுமா? அந்தத் தீண்டாமையை தீண்டாமை என்று ஏற்கக் கூட பல பிராமணர்கள் தயாராகவில்லை என்பதுதான் உண்மை.

  51. // கீழ்க்கண்ட வாக்கியத்தில் உள்ள a Brahman என்பது பிரஜாபதி மொத்த பிரம்மத்தை நோக்கி கூறியதாக பொருள் கொள்ள வேண்டுமா? அல்லது ஒரு பிராமணரை நோக்கி கூறியதாக பொருள் கொள்ள வேண்டுமா?

    //Prajapati spake to a Brahman (saying)// //

    கிரிஷ், இந்தப் பழைய ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் பிரம்ம, பிராம்மண என்ற இரு சொற்களையும் Brahman என்றே குறிக்கிறார்கள்.

    மந்திரத்தின் மூலவடிவம், தேவநாகரியில்: (15வது பக்கம்) https://veda.007sites.com/1122XYZPDFABC/SANSKRIT/KYV-TS-2-5-Sanskrit.pdf

    மூல வடிவத்தில் “ப்ராஹ்மண” என்ற சொல் தான் எல்லா இடங்களிலும் வருகிறது. இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.

    பிரஜாபதி ஒரு பிராமணனிடம் தான் பேசுகிறார் – அது சரிதான்.(இங்கும் “ப்ராஹ்மண” என்ற சொல் பிற்காலத்திய ஸ்மிருதிகள் போல ஒரு சமூகக் குழுவைக் குறிக்கவில்லை – வேள்வி நடத்துபவனைக் குறிக்கிறது)

    ஆனால் பிரஜாபதியின் கூற்றில் வரும் “ப்ராஹ்மண” என்ற பதத்திற்கு ”பிரம்ம சம்பந்தமுடைய” என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும்.

    litigation என்ற சொல் மொழியாக்கத்தில் வருகிறது. ஆனால் மூல வடிவத்தில் ”யத் ப்ராஹ்மணஸ்சாப்ராஹ்மணஸ்ச ப்ரச்னமேயாதாம்” .. ப்ரச்னம் என்பதற்கு கேள்வி/விவாதம் என்று பொருள். “வழக்கு” என்பது ஊகித்துப் பெறப்பட்ட பொருளே.

  52. ஜடாயு,

    /// non-brahman என்பது பிரம்மம் அற்றது என்று தான் பொருள் படும். ///

    இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் “பிரமம் அற்றது ஒன்று உண்டு” என்று நமது மதத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது?

  53. // non – bramhan என்பதுபிரம்மத்தை நிராகரிப்பவன் என்கிறீர்கள். kaafir, in-fidels, unfaithful என்பது போல வேதம் கூட non -brahman என்ற ஒரு பிரிவை ஏற்றது என்கிறீர்களா? நமது மதத்தில் கடவுளை நம்புவன் நம்பாதவன் என்கிற பாகுபாடு இல்லை என்றுதானே எல்லாரும் கூறிவந்திருக்கிறார்கள் //

    அஞ்சன் குமார்,

    மீண்டும் மேலோட்டமான வார்த்தை விவரிப்புகளுக்குள்ளேயே சுற்றீ வருகிறீர்கள்.

    இந்த மந்திரத்தில் Brahman, non-brahman என்பவை இரண்டு மனிதக் குழுக்களுக்குக் கொடுக்கப் பட்ட லேபிள்கள் அல்ல. அவை தத்துவார்த்த ரீதியாக, இருவித மனநிலைகளைக் குறிப்பவை. ஆத்மா, அனாத்மா என்று கீதை சொல்வது போல.

    4000 வருடத்திற்கு முற்பட்ட ஒரு பழைய பாடலை அவ்வளவு எளிமையாகப் பிரித்துப்போட்டு இது ஒரு குழுமோதலுக்கான சான்று என்று தீர்ப்புக் கூறிவிடியும் என்று நினைக்கிறீர்களா என்ன?

    // வீணே பிரித்துப் பிரித்துப் பொருள் கூறுவதை விட்டு விட்டு உண்மையை ஏற்று வருகின்ற நாட்களிலாவது மனிதம் காண்போம். //

    பிரித்துப் பொருள் கூறுதல் “:வீணே” என்று கருதினால் பின்பு பழைய இலக்கிய ஆராய்ச்சியில் இறங்கவே கூடாது. நாம் பேசுவது, இன்றைய செய்தித் தாளில் வரும் நேரடியான செய்தியை அல்ல. ஏராளமான மொழி,கலாசார அடுக்குகளால் மூடப் பட்டிருக்கும் ஒரு மிகப் பழைய பாடலை.

    உண்மை என்பது ‘எளிமை’யான கருப்பு-வெள்ளை சமன்பாடுகளை ஏற்பதல்ல நண்பரே. அது கடுமையான உழைப்பின், அறிவுத் தேடலின் பாதை.

  54. @அஞ்சன்குமார்
    Very good suggestion asking PRESENT DAY Brahmins to repent for sins of their FOREFATHERS. I really appreciate this. I am sure such apology from these despicable loathsome creatures called Brahmins will end all cast discrimination prevalent across the society. It will be Utopia again with all it’s glory. Universal brotherhood, tolerance for the down trodden and all that.
    Of course one should bear in mind that only the vile, cunning Brahmins, though making up just 2% of the population, were and still are responsible for all society’s evils.
    Bring back the gas chambers, I say! Let us roast the blighters!

  55. // பெரியார் தனது வேலையை ஆரம்பிக்கும் வரைக்கும் வெறுமே யஞவல்கியர் சுமிருதியும் மனு சுமிருதியும்தானே நீதிமன்றம் வரை கோலோச்சியது? //

    உளறல். ஏதோ பெரியார் என்பவர் சட்டங்களை உருவாக்கி, நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாக இருந்த மேதை என்பது போல சித்தரிக்கிறீர்கள், சிரிப்பு தான் வருகிறது – அவரது தாசர்களே இது கொஞ்சம் ஓவர் என்று எண்ணுவார்கள்.

    உண்மையில் அந்த ஸ்மிருதி நூல்கள் ஒரு general principle என்ற அளவில் தான் ஏற்கப் பட்டன. மற்றபடி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உள்ளூர் மரபுகள், பஞ்சாயத்து, குடி மரபுகள் என்று ஏகப் பட்டது இருந்தது. இது அந்தந்த சமூகங்களே உருவாக்கிக் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அங்கங்கு உள்ள சட்ட விதிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டது பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்க்ள்.

    // மயிலையின், திருவல்லிக்கேணியின் அத்தனை அய்யங்கார் அய்யர் வக்கீல்களும் நீதிமன்றங்களில் வைத்தது என்ன, இன்றைக்கு சமத்துவம் காட்டும் கீதையா இல்லையே அது மனு சுமிருதியே , யாக்யவல்கியரின் சுமிருதியே என்பதை யோசியுங்கள்.//

    மறுபடியும் உளறல். நீங்கள் சொல்லும் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வைத்தது பிரிட்டிஷ் சட்டநெறிகளையும், உள்ளூர் பஞ்சாயத்து விதிகளையுமே.. அவர்கள் ஆங்கிலப் படிப்பு படித்துவந்த பரம்பரையினர், அவர்களில் சம்ஸ்கிருதம் அறிந்தவர்களோ ஸ்மிருதிகள் படித்தவர்களோ மிகக் குறைவாகவே இருந்திருப்பார்கள்.

    ஒரு நடைமுறை உதாரணம். தாய் தந்தை வழியில் ஏழு தலைமுறைகளுக்கு திருமணம் செய்தல் கூடாது என்பது மனுஸ்மிருதியில் உள்ள ஒரு விதி. ஆனால் நீங்கள் குறிப்பிடும் சமூகத்தினரிடையே அத்தை/மாமன் மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் இருக்கிறது. ஏன் மகாபாரதத்திலேயே அர்ஜுனன் சுபத்திரையை மணம் செய்தது வருகிறது. ஸ்மிருதி சட்டங்கள் எங்கும் வரிபிசகாமல் அப்படியே ஏற்கப் படவில்லை, மேலும் மாறும் காலங்களுக்கு ஏற்ப புதிய ஸ்மிருதிகளும் எழுதப் பட்டு வந்துள்ளன. அவை காலத்தில் உறைந்து விட்ட“ஷரியா” சட்டங்கள் அல்ல. இது பல்லாயிரம் பக்க்ங்களில் சமூக வரலாற்று அறிஞர்களால் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

  56. சகோதரரே, ஜடாயு

    நீங்கள் பழைய , பாடல்களின் இலக்கிய ஆராய்ச்சிகளில் இறங்குவது உங்கள் உரிமை அதில் நான் ஏன் தலையிடப் போகிறேன்? ஆனால் தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீறப்பட்டதில் பிராமணர்களுக்கு இருக்கும் பெரும் பங்கை அதனால் வந்த பிராமண வெறுப்பை வெறுமனே மூளைச்சலவை என்று கந்தர்வன் உள்ளிட்டோர் கொச்சைப் படுத்துவதை நீங்கள் நியாயப் படுத்துவதையும், அதற்காக விளக்கங்களை மாற்றி மாற்றி கொடுப்பதையும் எதிர்ப்பது தாழ்த்தப் பட்டவர்களின் உரிமையாகிறதே……

    ஆமாம், நான் மேலோட்டமான வார்த்தை விவரிப்புகளுக்குள்ளேயே சுற்றி நான் வருகிறேன். நீங்கள்? நான் சுட்டிக் காட்டியுள்ள தீண்டாமைத் தீர்ப்புகள் உள்ளே ஏன் புக மறுக்கிறீர்கள்? ஏனெனில் அவை வடமொழியில் இல்லை. தத்துவ ரீதியிலான விளக்கங்கள் அவற்றில் சாத்தியமில்லை. அவற்றில் புகுந்தால் பிராமணர் மீது குற்றமே இல்லை என்று சாதிக்க முடியாது. உண்மை இலக்கிய ஆராய்ச்சியால் மட்டுமே கிடைத்துவிடாது. நாட்டு நடப்புகள், சட்டங்கள், தீர்ப்புகள், இன்னபிற அத்தனையும் அலசினால் மட்டுமே கிடைக்கும். நாட்டு நடப்பை, நடந்த நிகழ்வுகளை ஒதுக்கிய வெறும் இலக்கிய ஆராய்ச்சி உண்மையை நோக்கிய பாதையில் நிச்சயம் வீண்தானே சகோதரா?

  57. ஜடாயு

    வாதம் செய்யும் போது மாற்றுக் கருத்து வைப்பவர் மீது “உளறல்” போன்ற வார்த்தைகள் வந்தால் அது பண்பாடல்ல.

    நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்கள் நீதிமன்றத்தீர்ப்புகளின் அடிப்படை அறியாமல் எழுதப்பட்டவை. சபிண்டா திருமணம் மட்டுமே யாக்யவல்கிய சுமிருதியா என்பதைப் படியுங்கள். கலப்பு சாதி எப்படி வந்தது? சண்டாளன் யார்? சண்டாளனுக்கு என்ன சட்ட ரீதியான உரிமை? யார் முறை தவறிப் பிறந்தவன்? இவையெல்லாம் ஆங்கிலேய நீதிபதிக்குச் சொல்லிகொடுக்கும் வகையில் வடமொழியும் யாக்யவல்கியர் சுமிருதியும் அறிந்தவர் யார்?

    நீங்கள் வாதத்துக்கு உரிய பண்பாட்டுக்குத்திரும்பும் வரை உங்களிடம் வாதம் செய்வதில் பயனில்லை.

  58. அன்புடைய ராமா,

    நல்ல முறையில் satire செய்வதாக நினைத்து எரிகிற தீயில் என்னை விடுகிறீர்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்கள். இது மேலும் வெறுப்பை வளர்க்கும் என்பதை நீங்கள் உணரவில்லை. நான் விரும்புவது தவறை உணர்ந்து திருந்துதலை. நீங்கள் சொல்லும் எண்ணெய்க் கொப்பரையும், கில்லட்டின்களும், கேஸ் அறைகளும் அல்ல. அவற்றைப் பற்றி நீங்கள் நினைக்கக் காரணம் என்ன? பிராமணர்களின் தவறுகளை வெளிப்படையாக நான் எழுதியது உங்களுக்குப் பொறுக்க முடியவில்லை அல்லவா? வெளிப்படையாகச் சொல்லுங்கள். நான் போய் விடுகிறேன். ஆனால் உண்மை ? அது மாறாது. . ஊழ்வினை வந்து உறுத்து ஊட்டுதும். வினைப்பயன் தொலைவதில்லை. தீவினையைப் புரிந்து கொண்டவன் மேலும் அவ்வினை செய்திருப்பான்.

    I am just the messenger. Don’t shoot me. Read the message and take advantage of the message. I am not your opponent. You need not fight me. We can co-exist. But with mutual respect.

  59. தீவினையைப் புரிந்து கொண்டவன் மேலும் அவ்வினை செய்யாதிருப்பான் என்று திருத்திப் படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

  60. // ஜடாயு
    வாதம் செய்யும் போது மாற்றுக் கருத்து வைப்பவர் மீது “உளறல்” போன்ற வார்த்தைகள் வந்தால் அது பண்பாடல்ல. //

    ஒப்புக் கொள்கிறேன். ஆனால் “பெரியார் தனது வேலையை ஆரம்பிக்கும் வரைக்கும்” என்று நீங்கள் எழுதியதைப் பார்த்தவுடன் வந்த எதிர்வினை அது. ஒரு காழ்ப்புணர்வாளரை, காலனிய அடிவருடியை, தலித்துகளை எரித்துக் கொன்றதை ஆதரித்த ஒரு மானுட விரோதியை, கட்டிய மனைவியை தாசி என்று நண்பர்களிடம் கேலிசெய்த ஒழுக்கமற்ற ஒருவரை, பகுத்தறிவு என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய ஒரு போலியை ஏதோ யுகபுருஷர் போல சித்தரிப்பதை வேறு எப்படி சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

  61. ஜடாயு

    நீங்கள் பெரியாரைப் பறிச் சொன்னதை எல்லாம் ஒப்புக் கொள்ளுகிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை!

    ஆனால் பெரியாரின் பிராமண எதிர்ப்பு என்பது தாழ்த்தப்பட்டவர்களின் சார்பான ஓங்கி ஒலித்த குரல் என்பதையும், அதிலும், தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாகப் பேச யாரும் அல்லது அதிகமான அளவில் யாரும் முன்வராத கால கட்டத்தில் என்பதை உணருங்கள். அதனாலேயே அவரது மற்ற குணங்களை மறந்து பெரும்பாலான தாழ்த்தப்பட்டவர்கள் அவரிடம் நன்றி பாராட்டுகிறார்கள் என்பது உண்மை. அதை ஒப்புக் கொள்ள நீங்கள் தயாரா?

    அவரை நான் யுக புருஷர் எனறெல்லாம சொல்லவில்லை. அப்படிப்பட்ட .தோற்ற மயக்கத்தால் வந்த எதிர்வினை என்கிறீர்கள், சரி, மீண்டும் உளறல் என்றீர்களே அது eவந்த எதிர்வினை என்கிறீர்கள், சரி, மீண்டும் உளறல் என்றீர்களே அது எதன் எதிர்வினை? அய்யர் அய்யங்கார்களின் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து நான் சொன்னதுதானே? அதற்கும் உளறல் என்று சொல்ல என்ன வினை இருந்தது? எங்கே பண்பாடு?

  62. அஞ்சன் குமார்

    பிராமணர்கள் சுத்த யோக்கியர்கள் என்று நிரூபிப்பதற்காக சொல்லவில்லை. அவர்கள் எக்கச்சக்க தப்புகளை செய்துள்ளார்கள்.

    நீங்கள் பொதுவில் ஜமீன்கள் செய்ததையும் பிராமணர்கள் செய்ததையும் போட்டு குழப்பி கொள்கிறீர்கள் – அப்படி தான் பெரியார் சிந்திக்க வைத்து விட்டார். பெரியார் செய்ததை விட சீர் திருத்தங்களை பிராமண சமுதாயத்தில் இருந்தவரே அதிகம் செய்துள்ளனர் – இதையும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் நினைப்பது போல இன்றுள்ள நிலைக்கு அவர்களை அவர்களே ஒட்டுமொத்த காரம் என்று பொத்தம் பொதுவில் முடிவு கட்டுவது உங்களது அறியாமையே.

    இந்தியாவில் எத்தனை ராஜாக்கள் மனு ஸ்ம்ருதியை உபயோகித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்?

    சரி பிராமணர்கள் அப்ராமனர்களை அடிமையாக வைத்திருந்தனரா? அவர்கள் கிட்டே செல்லவில்லை? மற்றவர்களை அவர்கள் பக்கம் வர விடவில்லை. – ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்காதே? கோவிலுக்குள் எல்லோரும் நுழைய தடை இது மாதிரி அல்ப விஷயங்கள் தானே?

    எங்காவது கட்டி வைத்து உதைத்துள்ளனரா? கொன்று குவித்துள்ளனரா? 24X7 சோறுதண்ணி கொடுக்காமல் வேலை வாங்கி கசக்கி பிழிந்துள்ளனரா?

    ஆசாரம் காட்டி ஒதுக்கி வைத்ததே அவர்கள் செய்த பெரிய பிழை.

    மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்துகிறேன் – நான் இவை எதையும் காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டவோ நியாயப்படுத்தவோ முற்படவில்லை. இதை சொல்லாவிட்டால் சும்மா ஒரு இருவது முப்பது நாற்பது பின்னூட்டங்கள் வரும். எனக்கு அப்புறம் அழுகை வரும்

    இதை எல்லாம் எதிர்த்து முதலில் போராட தொடங்கியதே நீங்கள் பழை கூறும் மேல் சாதிக்காறரால் தான்.
    சாத்தியம் தலை விரித்தாடியது பூர்வ மிமாம்ச காலத்தில் தான். அப்போது கூட யாரையும் கொடுமை படுத்தவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே இருந்த உரிமைகள் பரிக்கப்படவ்ல்லை. ஒதுக்கப்பட்டனர் ஒடுக்கப்படவில்லை., புத்தர், மகாவீரர் தொடங்கி ஜாதிப் புரட்சியை தொடங்கி வைத்தனர்.

    ராமானுஜர் சம உரிமைக்காக ஒரு அமைதி புரட்சியே செய்தார். உதாரணமாக – அவர் ஊரில் உள்ள வைணவ கோவில்களை எல்லாம் இரண்டு வைணவ ஆகமங்களு ஒன்றான பாஞ்சரற்ற ஆகமத்திற்கு மாற்ற பெரும் முயற்சி எடுத்தார். வைகாசன ஆகமம் ஹரி ஜன மக்களுக்கு கோவிலுக்குள் ப்ரேவேசிக்க தடை வைத்தது. பாஞ்சராத்ர ஆகமம் எல்லோரையும் கொவில்லுக்க்குள் ப்ரேவேசிக்க அனுமதிக்கிறது. ராமானுஜர் திருப்பதி , பூரி மற்றும் சில கேரளா கோவில்களை பாஞ்சராத்ர ஆகமமாக
    மாற்ற முயற்சித்து தோற்றார்.

    பிராமணர்கள் தூரம் இருப்பதற்கு முன் வைக்கும் காரணங்கள் ஆசார அனுஷ்டானன்களே.

    ஹிந்துக்களை எல்லோரும் ஆசாரங்களை ஒரு சீராக கடை பிடிப்பதில்லை. – உதாரணாமாக மகளிரின் மாத பிரச்சனையின் போது விலகல். இறப்பு பிறப்பு காலங்களில் வரும் தீட்டு காப்பது, மடி காப்பது போன்றவை. இதெல்லாம் ஆகம முறைகளில் மிக முக்கியமாக கடை பிடிக்கப் படவேண்டிய விஷயங்களாக இருக்கிறது. தீட்டு காலங்களில் கோவிலுள் எந்த ஹிந்துவும் ப்ரேவிசிப்பது இல்லை.

    இந்த அனுஷ்டானகளை கடைபிடிக்கதோரிடமிருந்து தள்ளி இருக்க/தள்ளி வைக்க தொடங்கிய பிராமணர்கள் செய்த மா பெரும் தவறு இதை சரியாக communicate செய்யாததும் குருட்டு தனமாக சிலவற்றை கடை பிடித்ததும், காலத்திற்கேற்ப சிலவற்றை விட்டுக் கொடுக்காததும் தான்.

    இது பிழை தான் – இன்றைக்கு இவற்றுள் பல நடை முறை சாத்தியங்களே இல்லை.

    கேரளா கோவில்களுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும் நமது கோவில்களில் இந்த கட்டுபாடுகள் எவ்வளவு கம்மி என்று -இது ராமனுஜரின் காலத்திற்கு பிறகு தான் சாத்தியமானது. ராமானுஜருக்கு வைச்னவர்களை விட ஹரி ஜன பக்த கூட்டம் தான் அதிகம். அனால் அவர்களை தள்ளி வைத்து (பொதுவில் அல்ல அவர்களின் பேச்சு வழக்கில்) இன்றும் சில அய்யங்கார் கூட்டம் பக்திமான்கள் போல நடந்துகொள்வது சிறு பிள்ளைத்தனம், கேவலம்.

    மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்துகிறேன் – நான் இவை எதையும் காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டவோ நியாயப்படுத்தவோ முற்படவில்லை. இதை மீண்டும் சொல்லாவிட்டால் சும்மா மீண்டும் இருவது முப்பது நாற்பது பின்னூட்டங்கள் வரும். எனக்கு அப்புறம் அழுகை வரும்

    அம்பேத்காரை விட சங்கம் தான் அதிக அளவு ஜாதிக்கு எதிராக களப்பணி செய்துள்ளது. அவர்கள் செய்வது யார்க்கும் தெரிவதில்லை. அவர்களை யாரும் பெரிய அளவில் encourage செய்வதில்லை. சங்கமா என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

    இவ்வளவு பேசும் நாம் இன்று சாதி கொடுமைகளை களைந்து வரும் சங்கங்களுக்கு ஏன் ஆதரவு தெரிவிப்பதில்லை, அதில் பங்கு கொள்வதில்லை. முன்னேற்ற பாதையில் செல்ல உழைப்பதில்லை.

    படக்குன்னு பெரியார் கட்சியில் சேர்ந்து கோஷம் போடுவது மட்டும் ஏன் – உபயோககரமாக காரியத்தில் இறங்கலாமே . – உதாரணமாக சென்னைக்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் மீன் தொழில் செய்யும் தொழிலாளி தான் சங்கத்தின் district co-ordinator. இங்கே எல்லாம் சமத்துவம் தானே இருக்கிறது. திருமா போன்ற வெறும் பயல்களை விட, மற்ற எனையா தலித் அனுதாபிகளை விட, மிசனரிகளை விட கோசம் போடும் கூட்டத்தை விட சங்கம் செய்யும் களப்பணி ரொம்பவே அதிகம். அவர்களுக்கு நாம் தோல் கொடுக்கலாமே.

    நான் ராமானுஜர் கட்சி – பிரம்ம ஸ்வரூபமான ஒரு மனிதனை கேவலப்படுத்தும் எதுவும் சாக்கடையில் இட வேண்டியதே.

  63. ஜடாயு,

    உங்கள் பொறுமைக்கு நான் தலை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். செய்கிறேன். இப்போது தான் இங்கு வந்தேன் 61 பேர். ஆச்சர்யமாக இருக்கிறது. சாதி பற்றி பேசினால், நிறையப் பேருக்கு ஆவேசம் வருகிறது போலும் சாதிகள் ஒழித்து விட்ட தமிழ் நாட்டில்.

    போகட்டும். அஞ்சன் குமாரோடு வாதம் செய்வது வீண் வீரமணிக்கு alter ego
    போலும். இவருக்கு என் இன்னும் திராவிடப் பெயர் தரப்படவில்லை. அஞ்சன் குமார் பார்ப்பனியத்துக்கு அடிமை என்று பறை சாற்றும் பெயர் அல்லவா?

  64. மதிப்பிற்குரிய அஞ்சன்குமார்,

    // பெரியார் ஈ.வே.ரா. பிராமணர்களைத் தனிமைப் படுத்தித் திட்டாவிட்டால் இதே பிராமணர்கள் இன்றைக்கு சமத்துவம் கீதையில் இருக்கிறது, வேதத்தில் இருக்கிறது என்பதெல்லாம் சொல்வார்களா என்பதை யோசியுங்கள். //

    சிரிப்பு தான் வருகிறது. கீதையில் சமரசம் இருக்கிறது என்று பெரியார் தான் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள் என்று கூறுவதற்குச் சற்று ஒரு படி – இல்லை அரை படி/கால் படி கீழே தான் நீங்கள் மேற்கூறியது.

    இராமானுஜர், இராமானந்தர், சைதன்ய மகாப்பிரபு, ஸ்ரீதர ஐயாவாள், கோபால கிருஷ்ண பாரதியார், பாரதியார், முதலான சீர்திருத்த வாதிகள் எல்லாரும் பெரியாரைத் தான் பின்பற்றியவர்கள் போலும். அபத்தமாக இல்லை?

    உளறல் என்று சொன்னது நீங்கள் கூறிய கருத்தைத் தான். உங்களை அல்ல. இங்கு யாரும் தனிமனிதத் தாக்குதலால் உங்களை விமர்சிக்கவில்லை.

  65. அஞ்சன் குமார் அவர்களே

    பிராமணர்கள் இடமிருந்து மன்னிப்பே நீங்கள் எதிர்பார்த்து இருக்கிறீர்கள். இவர்களை நம்பி என்ன இருக்கிறது. இவர்களால் என்ன பயன் உள்ளது? இவர்களுக்கு ஏன் தனி மரியாதை செய்ய வேண்டும்.

    உண்மையான பிராமண லக்ஷணங்களுடன் யார் இருந்தாலு அவர்களுக்கு தரலாம். என்ன செய்கிறோம் இன்னொருவனை கேளலப்படுத்துகிறோம் என்று தெரிந்து தெரியாமலே வாழும் புழுக்களிடமிருந்து மன்னிப்பையும் மனம் திருந்துதளையும் எதிர்ப்பார்த்து பிரயோஜனம் உண்டா – Just ignore them.

    இவர்கள் சால்ஜாப்பெல்லாம் வீட்டுள்ளும், ஒரு சிறு தெருவிர்க்குள்ளும் தான் – இவர்கள் இப்படியே பேசிக் கொண்டே நைந்து அழுகிப் போய்விடுவார்கள். – போகட்டும் விடுங்கள் – இன்றுள்ள பல பிராமணர்கள் பாரபட்சம் பாராமலேயே இருக்கிறார்கள். ஒரு சிறு வெட்டிக் கூட்டமே குதித்துக்கொண்டிருக்கிறது – அவர்களை அப்படியே விட்டு விடுவது தான் நமக்கு நல்லது.

  66. சகோதரரே, ஜடாயு,

    /// தலித்துகளை எரித்துக் கொன்றதை ஆதரித்த ஒரு மானுட விரோதியை, ///

    வார்த்தைகள் வேகமாக வந்து விழுகின்றன. சரிதான்.

    நீங்களும், நீலகண்டனும், பனித்துளியும் இதே தளத்தில் எழுதிய கட்டுரைத் தொடரைப் படிக்கச் சொல்லியிருந்தீர்கள். அவற்றில் கீழ வெண்மணியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 42 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளும் அவர்களது குடும்பத்தாரும் உயிரோடு கொள்ளப்பட்டது குறித்த கட்டுரை ஏதும் இல்லையே, அது ஏன் விடுபட்டது ?

    அந்த நிகழ்வுக்குக் கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற நிலப் பிரபுதான் காரணம். அண்ணா அனுப்பிவைத்த இரண்டு அமைச்சர் குழு பெரியாரின் சாதியான நாயுடுக்களுக்கு சங்கடம் வரக் கூடாது என்று அந்த நிகழ்வில் சாதி பற்றியே இழுக்கவில்லை. ஆனால், தமிழ் ஹிந்து தளத்தில் நீங்கள் வெளியிட்ட கட்டுரை கூட அதை ஏன் கவனிக்கத் தவறியது? எத்தனையோ எழுதிய நீங்கள், கீழ வெண்மணி குறித்து மட்டும் எழுதவே இல்லையே?

    ஜடாயு, புரிந்து கொள்ளுங்கள். நான் பெரியாரின் . வழிநடப்பவன் அல்ல. ஆனால் பெரியாரே ஆயினும் அவர் செய்த தவறு தவறுதான் என்பவன். பெரியாரே ஆனாலும் அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்த சேவையைப் போற்றுபவன் . அவர் கடவுளை மறுக்கலாம். அவரது கற்பு குறித்த தமிழ் மொழி குறித்த கோட்பாடுகளில் நான் மாறுபடலாம். ஆனால் அவரது சேவையை நான் மதிக்க வேண்டும். ஏனெனில் உண்மை மிகப் பெரியது. உயரியது. அப்படித்தான், வேதமே ஆயினும் தவறான கருத்திருந்தால் தள்ளப் படவேண்டும் என்கிறேன். ஜடாயுவே ஆனாலும் தவறிருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

  67. “உயிரோடு கொள்ளப்பட்டது” என்பது பிழை.”உயிரோடு கொளுத்தப்பட்டது” என்பதே சரி. பிழைக்கு மன்னிக்கவும்.

  68. இராமானுஜர், ஸ்ரீ கூரத்தாழ்வான், நம்பிள்ளை போன்ற பரமாச்சாரியார்களின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி ஈடு முப்பத்தாறாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, பன்னீராயிரப்படி முதலான திவ்யப் பிரபந்த வியாக்கியான நூல்களில் வரும். வாழ்ந்து காட்டிய மகான்களின் வாழ்க்கைச் சரிதங்களைப் படிப்பதே சாதீயத்திற்கு மருந்து. ஈடு வியாக்கியானங்களில் சுட்டிக் காட்டப்படும் சம்பவங்களை எல்லாம் திரட்டி இருபதாம் நூற்றாண்டில் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராச்சாரியர் (PBA) சுவாமி “வாழ்வும் வாக்கும்” என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை எனது நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.தகவலுக்கு இங்கே:

    [64] Mercy (Compassion) is above sAstrAs!!!

    “Ongi” (tiruppavai 3 Arayirappadi)

    ANDAL says “Ongi ulagaLandha uththaman”. When Indra was suffering due to Mahabali, the Lord was born as vamana (small in size). But as he got the dhAnam from mahAbali, he expanded himself out of his happiness. For human beings, the expansion/compression is due to karma and is for selfish reasons. However for the Lord, expansion/compression happens because of his mercy and for others. Hence this is an auspicious quality and not a flaw.

    The people of ayOdhya when they celebrate auspicious qualities of rama, say that “vyasaneshu manushyANam prusambhavathi dhukitah:” (Ayodhya kAnda 2-30)

    (When people suffer, Rama suffers even more than that). To explain the meaning of this slOkA, explains an “Aithihya” emphasizing how important it is to show mercy to people who suffer. Once a few Brahmins were walking along a narrow walkway (a way through broad enough such that only one person can walk at a time). At that time a person from a lower varna was having a huge burden on his head and walking in the opposite direction. Since only one person can walk along the path at a time, the Brahmins were telling the low-varna person to move away and give way to them. At that time, a vaishnava with name Ramanujadasa told them, “He is having a huge burden on his head. Why dont u move to the side and give him way? If thats not possible, why dont u bath after moving near him? Whats wrong in doing that?” At that time the Brahmins replied to him, “Sastras say that even when a person is carrying a burden, he should give way to a brahmin. This rule will be breached if we give way.” Ramanujadasa replied:”Does the sastra prohibit you from showing mercy and giving him way? Mercy (Compassion) need not come because of sastras and is not against sastras”.

    (The details of who should give way to whom has been detailed in manu dharma sastras and other dharma sastras).

    சாதீய வெறியாட்டத்திற்கு இம்மாதிரிச் சம்பவங்களைப் பற்றிப் படிப்பதையே மருந்தாகக் கொள்ளலாம்.

  69. அனைவருக்கும்

    எனது கருத்துக்களை வைத்துவிட்டேன். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதவர் ஏற்காதிருக்கட்டும். இதற்கும் மேலே எதுவும் இதில் எழுதுவதில்லை . ஜடாயு, ராமா உள்ளிட்ட யாரும் தமது மனம் நோகாதிருக்கட்டும். மனம் நோகப் பிறப்பெடுத்த தாழ்த்தப்பட்டவர்கள் அவர் தம் விதிப்படியே போகட்டும்.

  70. @அஞ்சன்குமார்
    I am sorry to say that you either did not get my point or deliberately ignoring it. Sir, you want the PRESENT GENERATION of Brahmins to repent and apologize for their FOREFATHER’S sins. Doesn’t this sound so childish? This reminds me of the Christian doctrines where rest of humanity need to repent forever for original sins of Adam and Eve!!!
    I have not heard anyone demanding the present day Germans to apologize for Nazi Germany’s past treatment of the Jews.
    Why Sir, have you not addressed the cast discrimination and ill treatment of Dalits by other Jatis? Yes, there was atrocious deeds done by one and all against Dalits in the past. Let us not just nit pick the Brahmins ALONE as the root cause of all evils. DK/DMK made scapegoat of Brahmins for political reasons.Only in TN I have seen this murderous hatred against this, MOSTLY poor, docile community. Thanks to years of DK/DMK hatred propaganda, a lot of Tamils have been brainwashed.
    Let us all do something positive against this casts and Jatis but let us also not pick and blame just one particular community for the evils of the past.

  71. சகோதரர்களே
    பெரியார் ஓரளவாவது ஜெயித்து விட்டார் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
    இன்னும் பலர் ஆவர் ஏதோ சேவை செய்ததாய் சொல்வதைப் பார்க்கும்போது .
    தமிழ்ஹிந்துவில் முக்கியமாக திரு வெங்கடேசன் எழுதும் தொடர் மற்றும் இதற்கு முன் வந்த “போக போக தெரியும்” நாம் உண்மை என்று நம்பிய பல விஷயங்களை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன.
    வேறொரு மறுமொழியிலும் சொன்னேன்-ஒரு சாரார் மேல் ஹிந்து சமுதாயந்தின் வெறுப்பை திருப்பியதன் மூலம் -தப்பெல்லாம் அவங்க தான் செஞ்சது என்று கோ[பத்தை வளர்த்ததன் மூலம் பெரும்பாலான மற்ற உயர் ஜாதி இந்துக்கள் சிலர் [ தயவு செய்து கவனிக்கவும்-எல்லாரும் அல்ல] [ இவர்களில் நில உரிமையாளர்கள் , நாட்டாமை type ஆட்கள் , சமூகத்தில் மிக நல்ல நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அடக்கம்]
    தங்கள் தவறை [ தாழ்த்தப்பட்ட சகோதரர்களை ஒதுக்கியது] உணர விடாமல் செய்தது அவரின் மிகப்பெரும் சாதனை. அதன் பின்னணியில் மிஷனரி மூளை.
    ” அவங்க தான் சாரி. எல்லா சாரியும் அவங்க தான்” என்று தேவர் மகன் ரேவதி பாணியில் சொல்லி நம்ப வைத்து விட்டால் தீர்ந்தது கதை.
    உளவியல் ரீதியாக அடுத்தவர் தவறை சதா பார்ப்பது , பேசுவது தன தவறை நன்றாக காம்ப்ளான் போட்டு வளர்க்கவே வழி செய்யும்.

    நான் கல்லூரியில் படித்த போது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் ] சிலர் தான்] தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் ஒன்றாக உணவு அருந்த மாட்டார்கள். விவரம் முதலில் புரியாமல் விழித்த என்னை லூசு என்றார்கள்.

    சுதந்திரத்திற்கு பல காலம் பின்னும் இந்த கொடுமைக்கு காரணம் பிராமணர்கள் அல்ல.அவங்க மட்டும் தான் காரணம் என்று உரம் போட்டு வளர்க்க பட்ட திராவிடமாயை விஷ செடியே காரணம்.திறமையான தோட்டக்காரர் பெரியார் எனப்படுபவர்.
    அவர் நமக்கு ஆதர்சமல்ல. தானாக நல்ல சீர்திருத்தவாதிகள் [ மேலே நண்பர்கள் பட்டியல் கொடுக்கிறர்கள்] மூலம் தீர்ந்திருக்கும் அந்த நோய் -அதை கொண்டு தான் வளர்ந்து அதையும் படு பயங்கரமாக பூதம் போல் வளர்த்து சாதனை செய்தவர் அவர்.சும்மா symptoms தீர்ந்த மாதிரி ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டு விட்டது. வியாதியின் மூலத்திர்க்கல்லவா மருந்து வேண்டும்?
    நமக்கு இன்று அவசர தேவை ஒரு ராமானுஜர், நாராயண குரு , ஒரு விவேகனந்தர்.
    அம்மா அமிர்தானந்தா மயி , சுவாமி தயானந்தர் உருவில் அவர்கள் இருக்கவே செய்கிரரர்கள்.
    தேவை மொத்த , முழு மனதுடன் செய்யப்படும் சுய கிளீனிங்.எல்லோருக்கும், எல்லோருக்கும்.
    வணக்கத்துடன்
    சரவணன்

  72. வெங்கட் சாமிநாதன் போன்றோரால்தான் பிராமண வெறுப்பு அதிகமாகிறது. எனது எந்த எழுத்திலும் தனிமனிதத் தாக்குதல் இல்லை. அனால் அவரோ என் பெயரையும் குறித்து எழுதுகிறார். alter ego என்கிறார். நான் சொன்னதும் சொல்வதும் உண்மை. அது அவருக்குக் கசக்கிறது.

    எனக்கு என் தாய் தந்தையர் இட்ட பெயர் சுடலை. அஞ்சன் குமார் என்பது எனது உயிர் நண்பன், பாரபட்சம் பார்க்காத பிராமணன் எனக்குத் தந்தது என்னை எனது உடன்படிக்கும் நண்பர்கள் ‘சுடலை’ ‘சுட்டது’ என்று கேலி செய்ய அவன் எனக்கு என்பெயரை அஞ்சன் குமார் என்று வைத்துக் கொள்ளச் சொன்னான். என் தாய் தந்தை சம்மதத்துடன் வைத்துக் கொண்டேன்.

    பிராமண வெறுப்பின் காரணத்தை நான் வெளிப்படையாகச் சொன்னதற்கே இவ்வளவு பெரியவர் வெங்கட் சாமிநாதன், அவருக்கே என் மீது இத்தனை வெறுப்பா? பெயர் குறித்தெல்லாம் விமரிசிக்க ? அந்த வேங்கடவனும் சாமினாதனும்தான் கேட்க வேண்டும்.

  73. நம் சமூகம் தன்னில் உள்ள தீமையை விடுத்து நன்மையை வளர்க்கும் திறன் கொண்டது என்பதற்கு மற்றொரு முக்கிய சான்று.

    ஒரு கண்ணப்பர் கதையோ [ திருத்தொண்டர் தொகை எழுதிய ” உயர் ஜாதி” சுந்தரர் , “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்னும்” என்று உரைகல்லாக கண்ணப்பரின் பக்தியை வைக்கும் “உயர் ஜாதி” மாணிக்கவாசகர், கள் குடத்துடன் நாய்களுடன் ,வந்த சிவனை அடையாளம் கண்டு கொண்டு அவிர் பாகத்தை அளித்து [ கூட இருந்த பிராமணர்கள் பிரஷ்டம் செய்யப்போவதாய் மிரட்டிய போதும் ] மோட்சம் பெற்ற சோமாசி மாற நாயனார் , மற்றும் அந்த பிராமணர்களை தண்டித்த சிவன் [ கவனிக்க வேண்டியது-இதையும் யாரும் மறுக்க , மறைக்க வில்லை], ஸ்ரீதர அய்யவாள், அவரை புரிந்து கொள்ளாமல் இருந்து பின் தெளிந்த சக பிராமணர்கள் . சங்கர விஜயங்கள் சொல்லும் பத்ம பாதர் தவம் செய்ய அவருக்கு காட்சி தராமல் ,தன்னை தேடிய சத்திய சந்தனான வேடனுக்கு காட்சி தந்த நரசிம்ஹர், மேலும் தனக்கு காட்சி கிடைக்க வில்லையே என்று வருந்திய அந்த பிராமணரின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், “வேடன் சகவாச விசெஷதினால் தான் உனக்கு என் குரலாவது கேட்கிறது” என்று அசரீரி வாக்கு அருளிய ரசிக்க வைக்கும் நரசிம்ஹர் திருவிளையாடல் ….இன்னும் எழுதினால் பக்கம் போதாது

    இந்த கதைகள் எதுவுமே மறைக்கப்படவில்லை. ஒரு நாளும் இல்லை. ! மேலும் கொண்டாடப்படுகின்றன! ஏனென்று சிந்திதுப்பார்போம்.

    கடல் தாண்டி வந்தவர்களோ, அவர்கள் உள்ளூர் அடைப்பக்கார, சீர் கெடுத்த- வாதிகளோ நமக்கு தேவையில்லை. ஏனெனில் அவர்கள் நோக்கம் பழுது.

    இந்த சோசியல் மீடியா காலத்தில் கூட மூளையை விற்ற மக்களை
    ஏமாற்ற முடிகிறது. அன்று மறைத்திருக்கலாமே ? என் செய்யவில்லை?

    சரவணன்

  74. Anjan kumar has wrongly understood that EVR fought for the dalits.

    He was vehemently anti dalit. He has not conducted one procession/protest meeting for dalits. It was only rhetoric.

    He also did not or refused to see the various caste divisions among non brahmins.

    He spoke on women empowerment, but did he follow that in real life?

    Did he dare talk about caste differences in christianity or islam?

    Never.

    For him, it was brahmin vs non brahmin. That’s all.

  75. //I have not heard anyone demanding the present day Germans to apologize for Nazi Germany’s past treatment of the Jews. Have you addressed the cast discrimination and ill treatment of Dalits by other Jatis? Yes, there was atrocious deeds done by one and all against Dalits in the past. Let us not just nit pick the Brahmins ALONE as the root cause of all evils. not pick and blame just one particular community for the evils of the past.
    .//

    Rama

    What is being pointed out is not a case for apology; but a case of an implicit and ehart felt acceptance and a willing resolve to not repeat the errors of the past. Germans were not asked to apologise by any one for the Holocast horrors Yet, they themselves allowed memorials to Holocast victims erected at the places where the ethnic cleansing took place, like Aushwitz. At the gate to the Auchwitz’ memorial, the Germans took care to write conspicuously the wise warning of the Spanish philosopher George Santayana:

    THOSE WHO FORGET THE PAST WILL BE CONDEMNED TO REPEAT IT”.

    So, the Germans were never in denial mode. They have accepted tha past with the resolve to not repeat the sins of the ego-maniac. Today Jews live happily in Germany with all rights .

    You are not even allowing people here to point out the past for fear that it will amount to holding you responsible for the past. It is not as you assume. You need not own up to all the past acts; but recognise them that they did happen and should not have happened. The purpose of history is to learn from the past. Otherwise, you will go on repeating the wrong past.

    Other castes will take care of themselves and will respond to when they are told about their actions at their places. If they dont, they will be called barabarians. No one in TN liked the Wall in Uthapuram, and no onen in TN supports the Pillis there. Hopefully, the GENEXT Pillais will not repeat it.

    No such jatis like Pillais or Thevars as can be held responsible for the untouchability in TN today are reading and writing here. It is the brahmins like you who are preponderant here. It is therefore the right place to remind you of some of the undesirable things from history.

    For your information, there are still many people, not only the old as sarang wrote here, but younger generations of your caste, indulging in the discrimiantion of people in the name of achaarams. Alandoor Mallan has pointed out one. A long discussion ensued there with a view to obfuscate such bitter realities. Read Geetha Samabasivam’s blogpost on MS apartments and their problems in which post one commenter wrote about her neighbours, a young brahmin couple who considered themselves purer than others, and practised discrimination on the grounds of madi or acharams with fellow apartment residents.. The children of the commenter, who herself an upper caste, complained to her bitterly. It is happening in this day and age and in Chennai city. to boot. ! You may also interact with non- brahmins after winning their confidence and they will have many such experiences with your caste ppl to relate in confidence to you. If they say in public, it will amount to paappana thuveesham. they fear. They are not dalits; but others.

    A few eminent or popular brahmins were pointed out here by Malarmanna with an explanation that the bitter expereinces such men had seen (not undergone) in the agraharams have turned their minds against their own community and they spent or are spending their whole life disparaging their own community. Bharati, N Ram, Thiyagarajan (chinna kuththoosi) were a few example he has pointed out. Of them, only Bharathi belonged to threee generations before. Not others. In them, the anti brahminism is different. You dont much mind it because it is taken to be a quarrels amongst brothers. In others, it is called anti brahminism and worse, they are brainwashed by DK/DMKs. You are getting annoyed with them, arent you ?

    Seeing is believing.

  76. அன்பார்ந்த சஹோதரர் ஸ்ரீ அஞ்சன் குமார் மற்றும் அன்பார்ந்த ஸ்ரீ ஜடாயு,

    \\\\\\\ ஜடாயு
    வாதம் செய்யும் போது மாற்றுக் கருத்து வைப்பவர் மீது “உளறல்” போன்ற வார்த்தைகள் வந்தால் அது பண்பாடல்ல. //
    ஒப்புக் கொள்கிறேன். ஆனால் “பெரியார் தனது வேலையை ஆரம்பிக்கும் வரைக்கும்” என்று நீங்கள் எழுதியதைப் பார்த்தவுடன் வந்த எதிர்வினை அது. ஒரு காழ்ப்புணர்வாளரை, காலனிய அடிவருடியை, தலித்துகளை எரித்துக் கொன்றதை ஆதரித்த ஒரு மானுட விரோதியை, கட்டிய மனைவியை தாசி என்று நண்பர்களிடம் கேலிசெய்த ஒழுக்கமற்ற ஒருவரை, பகுத்தறிவு என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய ஒரு போலியை ஏதோ யுகபுருஷர் போல சித்தரிப்பதை வேறு எப்படி சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?\\\\\\\

    மிக அழகாக கருத்தாழம் மிக போய்க்கொண்டிருந்த கருத்துப் பரிவர்த்தனம் மேற்கண்ட வாசகங்களால் குறைவு பட்டதாகவே தோன்றுகிறது. நேர்முகமான மறைமுகமான மட்டுமீறிய தனிநபர் ஸ்துதி தனிநபர் நிந்தை இதையும் மீறி நம்மால் கருத்துப்பரிவர்த்தனம் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

    பண்பாட்டுக்குறைவாக ஏசப்படுவது கருத்து தானே தவிர கருத்து தெரிவிக்கும் நபர் அல்ல என்ற வாதம் தவறானது. கருத்து ஒன்றும் ஏதோ ஆகாசவாணியினது அல்லவே. ரத்தமும் தோலும் சதையும் கொண்ட உயிருள்ள ஒரு மனிதரது. நீ முட்டாள் என்பதிலும் உன் கருத்து முட்டாள்தனமானது என்பதிலும் பெரிய வித்யாசமில்லை. கருத்து தெரிவிப்பவர் தன் கருத்து சரி, ஞாயம் எனப்படுவதால் தான் அக்கருத்தை தெரிவிக்கிறார். கருத்து ஏன் சரியானது அல்ல என்பதை தெரிவித்தாலேயே கருத்துப்பரிவர்த்தனம் ஆரோக்யமானதாக செல்ல முடியும்.

    குறைந்த பக்ஷம் ஸ்வஜனங்களாகிய அனைத்து ஹிந்துக்களிடையே பண்பாட்டு மிகுந்த வார்த்தைகளால் கருத்துப்பரிவர்த்தனம் இருக்கலாமே. பண்பாட்டுக் குறைவான கருத்துகளைக் கேட்ட பின்னும் பண்பாட்டுடன் உத்தரமளித்த தங்களுக்கு என் வணக்கங்கள். தங்கள் பண்பாட்டில் ஸ்ரீ ஏகநாதரின் ஆத்மகுணங்களைக் காண நேருகிறேன் அன்பான சஹோதரர் ஸ்ரீ அஞ்சன்குமார் அவர்களே.

    அவரின் ஆத்ம குணம் இதோ

    மஹாராஷ்ட்ரத்தில் பைதானில் கோதாவரி நதிக்கரையில் வசித்தவர் ஸ்ரீ ஏகநாதர். பொறுமையை பூஷணமாகக் கொண்டவர். இவர் பொறுமையை சோதிக்க ஒரு நபர் விழைந்தார். அவர் கோதாவரியில் குளிக்க வருங்கால் கை நிறைய வெற்றிலை வைத்துக்கொண்டு படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் உட்கார்ந்தார்.

    எப்போதும் போல குளித்து விட்டு ஆலயத்திற்கு செல்ல விழைந்த ஸ்ரீ ஏகநாதர் இவர் அருகில் வந்ததும் தன் வாயால் மென்று கொண்டிருந்த வெற்றிலைக்குழம்பை அவர் மீது துப்பினார். அவ்வாறானதும் ஸ்ரீ ஏகநாதர் படியிறங்கி மீண்டும் குளித்து விட்டு படியேறினார். அவரைத்தாண்டுகையில் மீண்டும் அந்த நபர் அவர் மீது துப்பினார். கோபம் ஏதும் கொள்ளாது மீண்டும் குளித்து படியேறினார். மீண்டும் அவ்வாறே. இது போல ஒருமுறை இருமுறை அல்ல பதினெட்டு முறை அவ்வாறு நிகழ்ந்தது. வெற்றிலை மென்ற வாய் ஓய்ந்து விட்டது. ஆனால் ஏகநாதரின் பொறுமை சற்றும் குறையவில்லை. அந்த நபர் ஸ்ரீ ஏகநாதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    ஐயா, நான் தங்கள் மீது திரும்பித் திரும்பித் துப்பிய போதும் தாங்கள் என்னை வையவில்லை கோபித்துக் கொள்ளவில்லை. ஏன் தங்கள் முகத்தில் ஒரு சுருக்கம் கூட காண்கில்லேன். இது போன்ற நற்குணம் எனக்கும் கிட்ட அருள்வீர்களா என கேட்டார்.

    அதற்கு ஏகநாதர் பதிலிறுத்தார்.

    ஐயா, நீங்கள் துப்பியதால் உடல் மாசு பட்டது. கோவிலுக்குப் போக சுத்தத்துடன் போக வேண்டுமே என்பதற்காக போய் குளித்தேன். உடல் மாசு குளிப்பதால் போய் விடும். ஆனால் நான் தங்களை வைதிருந்தால் என் மனதும் தங்கள் மனதும் மாசு பட்டிருக்குமே. அதை அகற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல. இறைவனை தரிசனம் செய்ய மாசு பட்ட மனதுடன் எவ்வாறு செல்ல இயலும்? மேலும் நீங்கள் எனக்கு கெடுதல் செய்ததாக ஏன் நினைக்க வேண்டும். உங்கள் செயல் எனக்கு இறைவன் எனக்கு அருளிய வரப்ரசாதம் என்றே நினைக்கிறேன். இதுவரை கோதாவரியில் பதினெட்டு முறை ஸ்நானம் செய்யும் வாய்ப்பு கிட்டியதில்லை. தங்கள் மூலம் அது நிறைவேறியது என்றாறாம்.

    அன்பார்ந்த சஹோதரர் ஸ்ரீ அஞ்சன்குமார், என்மகன் கல்லூரி செல்ல இருக்கிறான். என் பணி ஓய்வு தூரத்திலில்லை. என்வயது என்ன என தாங்கள் அனுமானிக்கலாம். தாங்கள் எவ்வயதினராயினும் தங்கள் ஆத்மகுணம் உயர்ந்தது. அதில் ஒருதுளி எனக்கும் கிட்டுமாறு “யாம் நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்” திருத்தணி இருக்கும் மால்மருகன் அருளட்டும்.

    நான் எழுதிய இந்த உத்தரம் எவரேனையும் புண்படுத்தியிருந்தால் அதற்கும் என் க்ஷமாயாசனம்.

    இந்த உத்தரம் தவறானது என ஆசிரியர் குழு கருதினால் இதை ப்ரசுரம் செய்ய வேண்டா.

    சரியென்று கருதினால் ப்ரசுரம் செய்யுங்கள். இக்கருத்துடன் உட்படாதவர் இருக்கலாம். ஒருவரேனும் இக்கருத்துடன் உட்பட்டார் எனில் அறுமுகப்பெருமான் எனக்கு அருளினான் என்றே எடுத்துக்கொள்கிறேன்.

  77. விசுவ ஹிந்து பரிஷத்துடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் நான் எந்த ஊருக்குப் போனாலும் முதலில் செல்வதோடு தங்குவதும் உண்பதும் தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படும் மிக உயர்ந்த குடியினர் வசிக்கும் பகுதியில்தான். மேலும் அப்பகுதியில் நுழைகையில் சாஷ்டங்மாகத் தரையில் முழு உடம்பும் பட நமஸ்கரிப்பேன். சமூகம் எத்தனையோ கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போதிலும் விடாப் பிடியாக நமது சமயத்திலும் பண்பாட்டிலும் நீடிக்கும் உங்கள் மன உறுதிக்குத் தலை வணங்குகிறேன் என்று சொல்லி அதன் பிறகே குடியிருப்பினுள் நுழைவேன்.
    ( ஒரு முறை நான் காண ஸ்ரீ ராம கோபாலன் அவர்களும் அவ்வாறு நடந்துகொண்டார்) இவ்வாறான வழக்கத்தை நான் மேற்கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சித்து நான் எனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தைத் திரட்டுவதாகக் குறை கூறியவர்கள் உண்டு. வனவாசி கல்யாணில் நான் இருளர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடியதும் அதேபோல் விமர்சிக்கப்பட்டது. தனி நபராக என் வழியில் நான் என் பணியைத் தொடர இதுவும் ஒரு காரணம். 2009 லிலும் அதற்கு முன்பும் ஒரிஸ்ஸாவில் வனவாசி மாவட்டமான கந்தமாலிலும் வனவாசிகளுடனேயே தங்கி அவ்ர்களின் உபசரிப்பிலேயே வாழ்ந்தேன் பாணோ என்ற தழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையினரைக் கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றிவிட்ட போதிலும் அவர்களுடனும் மிகவும் சுமுகமாகவே பழகினேன். வனவாசிகளுடன் உங்களை மிஷ்னரிகள் மோதவிடுகிறார்கள், மிஷனரிகள் உங்களைச் சுரண்டுகிறார்கள், நாம் அனைவரும் ஒரே சமூகம் என்று அவர்களிடம் பேசுவேன். இங்குள்ள மறுமொழிகளைப் படிக்கும்போது மனம் மிகவும் வேதனைப் படுகிறது. ஆதாலால் பழைய நினைவுகளைப் பதிவு செய்யத் தோன்றியது. அவ்வளவே.
    அனைவரும் நமக்குள் இருக்கிற மனக் குறைகளை மறந்து ஒன்று பட வேண்டிய நேரம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ ராம கோபாலன் அவர்களிடம் நாம் ஈ.வே.ரா. அவர்களையும் ஒரு சீர்த்ருத்தக்காரராக அங்கீகரிப்பது நல்லது என்று சொல்லியிருக்கிறேன். அவர் அதை மறந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
    -மலர்மன்னன்

  78. அன்புள்ள சுடலை,

    என்னால் பிராமண வெறுப்பு அதிகமாகிறது என்கிறீர்கள். அதற்கு நீங்கள் பெருமைப்படவேண்டும். நிறைய உங்களிடமிருக்கும் ஒன்று இன்னும் அதிகமாகிறது. அவ்வளவே. அதற்கு நான் மாத்திரம் இல்லை, நீங்கள் வெறுப்பது என்று முன் தீர்மானம் கொண்ட யாருமே உதவுவார்கள். உங்கள் வெறுப்பிலேயே நீங்கள் திளைத்து மகிழ்ந்து ஆரவாரித்து வாழ்வீர்கள்.

    உங்கள் சிறு வயது பிராமண நண்பன் உங்களுக்கு பெயர் சூட்டியதாகச் சொன்னீர்கள். உங்கள் வெறுப்பு மேலிடும்போதெல்லாம் இதை நீங்கள் உங்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவீர்கள். படுத்துகிறீர்கள். மற்றபடி அந்த பிராமணப் பையனின் சாதி மீறிய அன்புக்கு நீங்கள் பாத்திரமில்லை. சாதியைப் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. பிராமண வெறுப்புக்கு உங்களுக்கு வெளிப்பாட்டுப் பொருள் ஏதும் வேண்டும்.

    அன்புள்ள என்று தொடங்கினேன் உங்கள் எழுத்து முழுதிலும் அன்பு என்ற சமாசாரமே இல்லை. ஆனாலும் சம்பிரதாயம் அன்புள்ள என்று தொடங்கினேன்.

    சாதி தமிழ் நாடு முழுதும் விஷமாகப் பரவியிருக்கிறது. அதிலேயே நீங்கள் திளைத்து வாழ்கிறீர்கள். அது ஒரு வேளை போய்விட்டால் உங்கள் நிம்மதியும் பெருமிதப்பும் என்ன ஆகும்.?

    உங்கள் உளறலுக்கும் வெறுப்புக்கும் இங்கு இவ்வளவு இடம் இருக்கிறதே, வீரமணியின் விடுதலையில், கலைஞர் பெருமானின் முரசொலியில் இந்த இடம் ஜடாயுக்குக் கிடைக்குமா? நீங்கள் இங்கு உமிழ்ந்திருக்கும் உளறல்களை, வெட்டுப் புலி எழுதிய தமிழ் மகனிடமே எடுத்துச் சென்று பாருங்கள்.

  79. அன்பின் அஞ்சன்குமார்,

    விவாதத்தின் வேகத்தில் வந்த சுடுசொற்களுக்கு மன்னிக்கவும். உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை.

    // நீங்களும், நீலகண்டனும், பனித்துளியும் இதே தளத்தில் எழுதிய கட்டுரைத் தொடரைப் படிக்கச் சொல்லியிருந்தீர்கள். அவற்றில் கீழ வெண்மணியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 42 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளும் அவர்களது குடும்பத்தாரும் உயிரோடு கொள்ளப்பட்டது குறித்த கட்டுரை ஏதும் இல்லையே, அது ஏன் விடுபட்டது ? //

    வேண்டுமென்றே அதை விடவில்லை. அந்தத் தொடர் கேள்வி பதில் வடிவில் உள்ளதைப் பார்த்திருப்பீர்கள். எனவே தொடர்புள்ள சில விஷயங்கள் மட்டுமே கோடிட்டுக் காட்டப் பட்டன. மேலும், கீழவெண்மணி சம்பவம் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப் பட்டிருந்தது.

    // அப்படித்தான், வேதமே ஆயினும் தவறான கருத்திருந்தால் தள்ளப் படவேண்டும் என்கிறேன். //

    ஆம். தீ சுடாது என்று சுருதி நூறுமுறை கூறுமானாலும் அது பிரத்யட்ச அறிவுக்கு விரோதமானால் சுருதி வாக்கியத்தை நிராகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய ஆதி சங்கரரின் வேதாந்த ஒளியில் திளைத்த இந்துத்துவம் நம்முடையது.

    ஆனால் எதையும் கொள்ளுவதற்கு, தள்ளுவதற்கு முன்பு கருத்தை முழுதாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதைத் தான் நானும் செய்கிறேன், உங்களையும் செய்யச் சொல்கீறேன்.

    // பெரியாரே ஆனாலும் அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்த சேவையைப் போற்றுபவன் . அவர் கடவுளை மறுக்கலாம். அவரது கற்பு குறித்த தமிழ் மொழி குறித்த கோட்பாடுகளில் நான் மாறுபடலாம். ஆனால் அவரது சேவையை நான் மதிக்க வேண்டும். ஏனெனில் உண்மை மிகப் பெரியது. உயரியது. //

    ஐயா, ஈவெரா பற்றிய இந்த விமர்சனத்தை நான் மட்டுமே கூறவில்லை. இந்தத் தளத்திலேயே அன்பு சகோதரர் ம.வெங்கடேசன் இரண்டு தொடர்கள் எழுதியிருக்கிறார் – ஈவெ.ராவின் மறுபக்கம் & நீதிக்கட்சியின் மறுபக்கம். தமிழக தலித் இயக்க சிந்தனையாளர்கள் திராவிட இயக்கம் தலித் எழுச்சியை தமிழ்நாட்டில் அமுக்கி அழித்து விட்டது என்று அதனை ஒரு கோட்பாடாவே முன்வைக்கீறார்கள். ஜெயமோகன் கூட சமீபத்தில் அவரது வலைத்தளத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

    இவர்கள் யாருக்கும் கண்ணில் படாமல், அவர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு செய்த சேவைகள் பற்றிய உண்மைகள் ஏதோ உங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த உண்மைகளைத் தான் எடுத்து வையுங்களேன், பார்க்கலாம்.

  80. ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,

    //
    பண்பாட்டுக்குறைவாக ஏசப்படுவது கருத்து தானே தவிர கருத்து தெரிவிக்கும் நபர் அல்ல என்ற வாதம் தவறானது. கருத்து ஒன்றும் ஏதோ ஆகாசவாணியினது அல்லவே. ரத்தமும் தோலும் சதையும் கொண்ட உயிருள்ள ஒரு மனிதரது. நீ முட்டாள் என்பதிலும் உன் கருத்து முட்டாள்தனமானது என்பதிலும் பெரிய வித்யாசமில்லை. கருத்து தெரிவிப்பவர் தன் கருத்து சரி, ஞாயம் எனப்படுவதால் தான் அக்கருத்தை தெரிவிக்கிறார். கருத்து ஏன் சரியானது அல்ல என்பதை தெரிவித்தாலேயே கருத்துப்பரிவர்த்தனம் ஆரோக்யமானதாக செல்ல முடியும்.
    //

    உங்கள் கருத்தை ஒரு வகையில் நானும் ஒப்புக் கொள்கிறேன். ஒரு விமர்சனத்தை எந்த அணுகுமுறையில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அது நாகரீகமாகவும் இருக்கலாம், நாகரீகம் குறைந்ததாகவும் கண்ணுக்கும் காதுக்கும் படலாம். ஆகையால் உங்கள் மதிப்பீட்டில் தவறில்லை.

    அதே சமயம் ஆபத்தான போய்ப் பிரச்சாரத்தையும் முளையிலேயே வெட்டி எறிவதும் அத்தியாவசியமானது. அப்பொழுதெல்லாம் we have to call a spade a spade. இதை நாம் பிற மதங்களை விமர்சிக்கும்போழுது செய்து தான் வருகிறோம்.

    கருத்தைத் தான் சொன்னேன். பிழை இருந்தால் பொறுத்தருளவும்.

  81. //அதே சமயம் ஆபத்தான போய்ப் பிரச்சாரத்தையும்… //

    என் முந்தைய மருமொழியிலுள்ள மேற்கண்ட வரியை ‘அதே சமயம் ஆபத்தான பொய்ப் பிரச்சாரத்தையும்… ‘ என்று திருத்திக்கொள்ளவும்.

  82. VS’s response to Anjana Kr is surprising.

    VS is a veteran, a senor citizen and A seasoned writer who can look at life dispassioantely and justly, whereas AK seems to be a young man yet to see life in all its intricacies. He is on his way to more and more realisations. From what he has seen, he is correct and has the right to say them aloud here. If they are not palatable to VS, tit for tat is not the way to respond.

    A harsh response from VS is unbecoming of his stature. He could have tackled AK compassionately and considerately. Why this short fuse VS?

    What a pity !

  83. எங்கே பிராமிணன் ? இல்லாத ஒருவனை பற்றி என்ன விவாதம்? விவேகானந்தர் எல்லோரையும் பிராமிணன் போல் மாற்றுங்கள் என்றார் ஆனால் இந்த திராவிட வியாதிகளால் பிராமிணன் கெட்டது தான் மிச்சம். ஒரு காலத்தில் பத்திரிகைகளிலும் ,அரசியலிலும், அரசாங்கத்திலும் நீதிமன்றங்களிலும் இவர்களது பங்களிப்பு இருந்தபோது நாட்டின் நிலை என்ன ? இவர்களை படி படியாக இந்த இடங்களிலிருந்து துரத்திவிட்டு இன்று நாடு இருக்கும் நிலை என்ன? இப்படி துரத்தி துரத்தி விரட்டியும் இன்று இந்து ஒற்றுமைபற்றி தூக்கிபிடிப்பதிலும் ஊழல் அரசியல் பேர்வழிகளை நாடறிய அம்பலபடுத்துவதிலும் இவர்கள்தான் பங்கு அளிக்கிறார்கள். மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லியே தன் குடும்ப மக்களுக்காக தமிழ்நாட்டையே சூரையாடிவிட்ட கருணா தான் தோற்றது பிராமிணர்களால் தான் என்று பொறாமையால் ஆத்திரத்தால் சாடினார்

  84. ஈவேராவுக்கும் தாழ்த்தப்படோருக்கும் என்ன தொடர்பு; இவர்கள் நின்ற இடத்தில் அவர் நிற்பத்தில்லை; அப்படியிருக்க அவர் என்ன சேவை செய்திருக்க முடியும். மிகுந்த கற்பனைத்திறன் வேண்டும் அப்படியொன்றைக் காண.

    தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் மூன்று தளங்களுக்குள் அடங்கி விடுகிறார்கள்; ஒன்று காங்கிரஸ், இரண்டாவது கம்யூனிஸ்ட், மூன்றாவது எம்.ஜி.ஆர்; இவர்களைத்தாண்டித்தான் தி.மு.க.(ஈவேராவின் நேரடி அரசியல் தளமாக தம்மை முன் நிறுத்திக் கொள்வோர் இவர்கள்தான்) இன்ன பிற கட்சிகள்.

    தாழ்த்தப்பட்டோரில் எவேராவின் தொண்டர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமக்குத் தொண்டு செய்தவர்களை அவர்கள் கைவிட்டுவிட்டார்களா என்ன!

  85. \\\\\\அதே சமயம் ஆபத்தான போய்ப் பிரச்சாரத்தையும் முளையிலேயே வெட்டி எறிவதும் அத்தியாவசியமானது. அப்பொழுதெல்லாம் we have to call a spade a spade. இதை நாம் பிற மதங்களை விமர்சிக்கும்போழுது செய்து தான் வருகிறோம்.
    கருத்தைத் தான் சொன்னேன். பிழை இருந்தால் பொறுத்தருளவும்\ம்\\\\\
    அன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன், இது என்ன பேச்சு. அரைகுறையான என் அதிகப்ரசங்கத்தை ஒரு பொருட்டாக எடுத்து நீங்கள் பதிலிறுத்ததே பெரிது.
    பின்னும் வைஷ்ணவரும் வித்வானும் ஆகிய தங்கள் கருத்துக்களை மிகவும் மதிப்பவன் நான். சைவம் பற்றியும் வைஷ்ணவம் பற்றியும் தேட்டையாய் பேசுவோரிடம் எனக்கு மிக ப்ரியமே.தங்களிடம் ஸ்வச்சந்தமாக நான் சம்பாஷணம் செய்ய முடியும் என்பது என் நம்பிக்கை.
    தாங்கள் அறியாதது அல்ல. ஸுபாஷிதம் நினைவூட்டுகிறேன்.
    “ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்”
    உண்மை பேசு. உண்மையை நல்வாசகங்களால் பேசு. கடுமையான வசனங்களால் உண்மையை பேசாதே.
    முழுக்குரளும் நினைவில்லை. “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என தமிழ் மறையும் சொல்கிறதே. தவறான ப்ரசாரத்தை நிர்தாக்ஷண்யமாக முளையில் கிள்ளி எறிய வேண்டும் என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை தான். என் கருத்து ஸுபாஷிதத்திலும் தமிழ் மறையிலும் சொன்னபடி அப்ரியமான வார்த்தைகளால் ஸத்யத்தைச்சொல்லாது பண்பான வார்த்தைகளால் சொல்லலாமே என்பது தான். அப்ரியமான வார்த்தையில் சொல்லப்படும் ஸத்யத்தில் ஸத்யம் மறைந்து போய் அப்ரியமான வார்த்தைகள் மட்டும் நிற்கும். ஆனால் ப்ரியமான வார்த்தைகளால் சொல்லப்படும் ஸத்யமான ஹித பாஷணம் பசுமரத்தாணி போன்று மனதில் நிலைத்து நிற்கும். தங்களைப்போன்ற வித்வானிடம் அதிகப்ரசங்கம் செய்வதாக தயவு செய்து எண்ணாதீர்கள். மனதில் பட்டதை சொன்னேன். அவ்வளவே. தவறு இருப்பின் தயங்காது சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
    ஸ்ரீ ஏகநாதர் வ்ருத்தாந்தம் என் மன அழுக்கை நீக்கிக் கொள்வதற்கே. மேலும்,
    வ்ருத்ரன் இந்த்ரனால் வதம் செய்வதற்கு முன் செய்யும் ஸ்துதியில்
    “அஜாத பக்ஷா இவ மாதரம் ககா:
    ஸ்தன்யம் யதா வத்ஸதரா: க்ஷுதார்த்தா:
    ப்ரியம் ப்ரியேவ வ்யுஷிதம் விஷண்ணா
    மனோரவிந்தாக்ஷ தித்ருக்ஷதே த்வாம்”
    ஹே, அரவிந்த நயன, கண்ணா, எப்படி இறக்கை கூட முளைக்காத இளம் குஞ்சுப்பறவைகள் தன் தாயார் எப்போது வந்து ஊட்டுவாள் என தன் தாயைப்பற்றியே ஒருமுகமாகவே நினைந்திருக்குமோ எப்படி தாம்பினால் பிணைக்கபப்பட்டிருக்கும் கன்றுகுட்டி எப்போது அவிழ்த்து விடுவார்கள் தாயிடம் பால் குடிக்கலாம் என தாயையே ஒருமுகமாக நினைந்திருக்குமோ எப்படி கணவனைப் பிரிந்த மனைவி எப்போது என் மணாளனைக் காண்பேன் என மணாளனையே ஒருமுகமாக நினைப்பாளோ அது போல ஒருமுகமாக உனக்கு சேவை செய்யும் பாக்யம் எனக்கு கொடுப்பாயா என இறைஞ்சுகிறான்.
    அது போன்று இறைஞ்சுவதற்கு ஆத்ம குணங்களால் நிரம்பியுள்ளவனாய் இருத்தல் அவசியம். இதை அவ்வப்போது நினைத்தல் நம்மை பரிசுத்தம் செய்ய வழி வகுக்கும் என சான்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    “த்ருணாதபி ஸுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா
    அமானினா மானதேன கீர்த்தனீய ஸதா ஹரி:”
    புல்லை விடத்தாழ்ந்தவனாகவும் வ்ருக்ஷங்களை விட பொறுமை வாய்ந்தவனாகவும் ஸ்வாபிமானம் விடுத்து அடுத்தவர்க்கு மரியாதை அளிப்பவனாகவும் இருந்த படி ஹரியை கீர்த்தனம் பண்ண வேண்டும் என சைதன்ய மஹாப்ரபு கூறுகிறார்.
    ஹரி என்ற இரண்டெழுத்து சொல்ல எனக்கு பண்பிருக்கிறதா என்று அவ்வப்போது கேட்டுக்கொள்வேன்.
    அழுக்கு மிகுந்த என் மனது அப்பண்பு குறைவாக இருக்கிறது என சொல்கிறது.
    அப்பண்பு யாரிடம் இருந்தாலும் ஸ்லாகிக்கவும் பின்பற்றவும் தூண்டுகிறது. அவ்வளவே.

  86. @அஞ்சன்குமார் : Quote
    “தவறை உணரவேண்டும்,
    உணர்ந்த பின்னால் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்,
    அப்போதுதான் திருந்த முடியும்.
    இங்கோ சப்பைக் கட்டு கட்டுவதில்தான் அத்தனை பெரும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதற்கு எல்லாப் புத்தகத்தையும் புரட்டி ஆராய்ச்சி வேறு.”
    Mr Agneya
    Please see the above quote. Mr Anjankumar wants the present day Brahmins to repent for the faults of forefathers. My response was to this particular statement. I can be only responsible for my actions. I cannot be responsible for my forefather’s evil deeds. Neither can I be responsible for present day imbecile Brahmins who still discriminate against other casts.
    Your quote
    “You are not even allowing people here to point out the past for fear that it will amount to holding you responsible for the past. It is not as you assume. You need not own up to all the past acts; but recognise them that they did happen and should not have happened. The purpose of history is to learn from the past. Otherwise, you will go on repeating the wrong past.
    Other castes will take care of themselves and will respond to when they are told about their actions at their places. ” Unquote My response: see above
    Mr Agneya, you are making wild allegations about me not allowing people to have their say. (As if I have such power in the first place.) It will be a waste of my time to argue with some one such as you. You and Mr Anjankumar are happy to let other casts off the hook but as a BORN ONLY Brahmin, it really gets irritating when us Brahmins are solely picked for the Dalits atrocious past. You come out with this lame excuse that the other Jatis will answer their forefather’s evil past in due time when the occasion arises. But even now, you are happy to blame THE ENTIRE PRESENT DAY BRAHMIN COMMUNITY FOR THE IRRESPONSIBLE BIGOTRY ACTS OF FEW . Wake up, give yourself a reality check.
    If you are not a Dalit, why don’t you start repent and apologize for the way your ancestors treated the Dalits? Start the ball rolling.Start the movement rather than patronizing us, thank you.
    If you are a Dalit, I understand that your ancestors suffered under the ENTIRE community of Hindus of various hues and shades AND PLEASE ACCEPT MY SINCERE SYMPATHIES. After all, you are all nothing more than my brothers and sisters. I share your pains.

  87. என்கருத்துக்களைச் சொல்லிவிட்டேன் இனி எழுதுவதில்லை என்று சொன்னபின்னால் எழுதவேண்டாம் என்றிருந்தேன். பெரியவர் வெ .சாவின் கருத்தில் இருந்த வெறுப்பு குறித்து எழுதவேண்டியதாகிவிட்டது, இருந்தும் இனியாவது எழுதவேண்டாம் என்று இருந்தேன். அன்பான கிருஷ்ணகுமாருக்கு என் மரியாதை செயாவிட்டால் முறையில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

    மகாசயர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    உங்கள் அன்பு என்னை சிலிர்க்க வைத்தது. உங்கள் தமிழும் வடமொழியும் கலந்த (தமிஸ்கிருதம் என்போமா ? அல்லது தங்கிருதம் என்போமா? ) நடை பல சமயம் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அதிலிருந்த அன்பும் கருணையும் மொழிகளைக் கடந்து நிற்கின்றன. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் பலமுறை இந்த மகாசயர் என்ற சொல்லை மரியாதையாகப் பயன்படுத்துவதைக் கண்டுள்ளேன். எனக்கு பொருள் தெரியாவிட்டாலும் உங்களுக்கு இந்த சொல் மிகவும் பொருத்தமானது என்றே பட்டது. தவறிருந்தால் மன்னிக்கவுiம்.

    உங்களைப் போல ‘அகந்தை அழிந்தவர்கள்’ அரிது. உங்கள் அகந்தையற்ற நிலையை நானும் அடைய வாழ்த்த வேண்டுகிறேன்.

  88. அன்புள்ள ஜடாயு

    நன்றி. எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவாகவோ கூட இல்லை. நான் காரணத்தை வெளிப்படையாக முன்வைத்தேன் அவ்வளவுதான்.

    கீழவெண்மணி குறித்து எத்தனையோ எழுதினாலும் எழுதியவர் எவரும் நாயுடுக்களின் பங்கை எழுதவே இல்லை என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். இதுவே ராமாவுக்கும் எனது பதில். ராமா இதை ஏனோ கவனிக்க மறுக்கிறார்.

    இங்கே நான் முன்வைத்த கருத்து,
    “தவறு இருக்கும் பகுதிகளைத் தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்துவது, திருந்திக் கொள்வது”
    பற்றியது.
    இதிலிருந்து விலகி பெரியாரின் சேவை உண்டா இல்லையா, உண்டென்றால் அது என்ன என்பது குறித்து இங்கு விவாதிப்பது எனது முக்கியக் கருத்திலிருந்து விளக்குவதாகும், எனவே அதில் புக மறுக்கிறேன். இதுவே ராமாவுக்கும் பதில்.

  89. பெரியவர் மலர்மன்னன் அவர்களுக்கு
    என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கட்டுரை எழுதிச் சேவை செய்வோர் மலிந்த இந்த உலகில் களப்பணி செய்து சேவை செய்த உங்களைப் போன்ற பெரியவர்கள் நிச்சயம் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை அறிந்தவர்கள் என்ற உண்மையை என்னளவில் மீண்டும் ஒருமுறை நிறுவி இருக்கிறீர்கள்.
    நானும் கூட வீரத்துறவி ராமகோபாலன் அவர்களை விழுந்து வணங்கி ஆசி பெற்றிருக்கிறேன். எப்போது கண்டாலும் விழுந்து வணங்குவேன். அவர்கள் கிராமங்களுக்கு வந்து நேரில் சாதி வித்தியாசம் பார்க்காமல் மனிதர்களை மனிதர்களைப் பார்த்து பழகுபவர். ஒருமுறை மேலப்பாளையத்தில் வெட்டப்பட்டு அடிபட்ட தனது தலையை என் கையை எடுத்துத் தடவிப் பார்க்கச் சொன்னார். அந்த அளவு சிறிதும் தயங்காதவர்.

  90. அன்புள்ள ஆக்னேய

    தங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

  91. அன்புள்ள பெரியவர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு,

    மகாசயர் கிருஷ்ணகுமார் மிக அழகாக அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    எனக்கு நான் படித்த கிருத்துவப் பள்ளியில் moral instruction தேர்வில் முதல் நிலை அடைந்தமைக்கு சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதை ஆங்கில உரை நூல் ஒன்று தந்தார்கள்; அதனை அவ்வப்போது படிப்பேன். குறிப்பாக மன வருத்தம் தோன்றும்போது திறந்த உடன் வரும் சுலோகத்தின் உரையைப் படிப்பேன். மனம் அமைதி பெறும். நான் மீண்டும் ஒருமுறை அந்தப் புத்தகத்தில் ஒரு பகுதியைப்
    படிக்க வைத்தமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  92. உண்மை சுடும் என்பர்.
    சுட்டது சுடலையா? உண்மையா? நானறியேன்.
    எதுவும் எவரும் வெல்ல நான் வரலேன்.

    இங்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் தளத்தைப் படித்து வந்த நான் – இந்தத் தளம் பிராமண எதிப்புக்குப் பதில் சொல்வதை முன்னுரிமை தருவதாக நான் கருதியதால் சில உண்மைகளை வெளிப்படையாக வைத்தேன்.

    ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.
    இங்கேதான் இருப்பேன், அமைதியாக.

  93. சிரம் சாய்ப்பது, சித்பவானந்தர் பகவத் கீதையைப் படித்து அமைதி காப்பது எல்லாம் இங்கு சொல்லாமலே, உங்கள் கருத்து வெளிப்பாட்டில் தெரியவேண்டும். வெறுப்பை எரிமலையாய் உமிழ்ந்து விட்டு, சாதி சாதி என்று ஒரு சாதியை மாத்திரம் காய்பதே வாழ்வாகக் கொண்டு சிரம் சாய்க்கிறேன், [பகவத் கீதை படிக்கிறேன் என்றால், அது கருணாநிதி அடிக்கடி சொல்லும், அண்ணாவிடம், பெரியாரிடம் கற்ற பண்பும் நாகரீகமும் மாதிரி தான். சொல்லும் வார்த்தைகளுக்கு ஒருவரின் சிந்தனையிலும் நடப்பிலும் அர்த்தம் காண இருக்க வேண்டும்.

    இதைப் படித்த பிறகு மறுபடியும் ஒரு தடவை பகவத் கீதை உரைப் புத்தகத்தை எடுக்கவேண்டியிருக்கும் உங்களுக்கு.

  94. அன்பார்ந்த சஹோதரர், ஸ்ரீ அஞ்சன்குமார்,

    \\\இங்கேதான் இருப்பேன்\\\\ நன்று.

    \\\அமைதியாக.\\\தேவையில்லை. கருத்துப்பரிமாற்றங்களை தங்களது பண்பான வாசகங்களால் தொடருங்கள்.

    \\\\\குறிப்பாக மன வருத்தம் தோன்றும்போது திறந்த உடன் வரும் சுலோகத்தின் உரையைப் படிப்பேன். மனம் அமைதி பெறும். நான் மீண்டும் ஒருமுறை அந்தப் புத்தகத்தில் ஒரு பகுதியைப்
    படிக்க வைத்தமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\\\\

    இன்று ஏகாதசி நன்னாள். கீதை படித்தது பாக்யமே. அமைதியான மனம் இறைவன் உறையும் ஆலயம்.

    கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணனே

    \\\உங்கள் அன்பு என்னை சிலிர்க்க வைத்தது. உங்கள் தமிழும் வடமொழியும் கலந்த (தமிஸ்கிருதம் என்போமா ? அல்லது தங்கிருதம் என்போமா? ) \\\\அன்பரே, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் கலந்த மொழிநடையின் பெயர் மணிப்ரவாளம்.

    வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையாய் வாழ்வோம்.

  95. //Please see the above quote. Mr Anjankumar wants the present day Brahmins to repent for the faults of forefathers. My response was to this particular statement. I can be only responsible for my actions. I cannot be responsible for my forefather’s evil deeds. Neither can I be responsible for present day imbecile Brahmins who still discriminate against other casts.//

    Rama !

    No one asks you to bear any responsibility for the past. So, no personal element is involved in all the arguments here. Everything is to be taken as abstract in the sense we are not ‘they’. We are just discussants here. Hopefully, none of you are practising any kind of untouchability 

    Imbecile Brahmins exist in society inasmuch as imbecile non Brahmins do; and ppl, who come into contact with them, tend to get prejudiced against the whole community. Remember, in the four districts of TN, the Pallars live in great animosity and anger with Thevars.
    Like it or not! In the ongoing issue of capital punishment to the trio, the whole community of Brahmins are looked at suspiciously for being in cahoots with S.Swamy, Cho Ramaswamy, N.Ram. We can argue that it is wrong to say the aforesaid men are representatives of the community. But in the heat of the events, who is listening to you?

    It is common human nature to take the whole community to task if a member of that community has misbehaved. If one Thevar boy teases one dalit girl in a village there, both communities come into clashes. Kodiyankulam massacre of dalits had roots in eve teasing. Applying your logic, why couldn’t they let off saying ‘It is just one boy; and rest of all community is good” Nope. We can’t pass the buck to DK/DMKs for brainwashing all such ppl who have personal experiences as seeds.

    DK/DMKists come into picture only where certain caste Hindus (mostly Pillais and Naidus) who were JEALOUS of the Brahmins as those Brahmins, by using their early English education advantage, had had a good life under the British. Among Non Brahmins, only Christians got into bureaucracy and professions as they also received English education imparted by the missionary schools. But they were a few. Periyar and his followers took advantage of such jealousy.

    Therefore, we are here to distinguish between two ppl:
    1. The Caste Hindus who fell into Anti brahminism with the objective to remove Brahimins from social hegemony and Periyaar came in handy
    2. Individuals who had bitter experiences of casteism at the hands of Brahmins.

    //You are happy to let other castes off the hook .//

    They are not writing here. Censoring them is like shadow boxing. Where is the enemy?

    //It really gets irritating when us Brahmins are solely picked for the Dalits atrocious past. You come out with this lame excuse that the other Jatis will answer their forefather’s evil past in due time when the occasion arises. But even now, you are happy to blame THE ENTIRE PRESENT DAY BRAHMIN COMMUNITY FOR THE IRRESPONSIBLE BIGOTRY ACTS OF FEW. Wake up, give yourself a reality check.//

    Why should one get irritated? That something had happened in the past about which we speak? Isn’t it all historical? One must be paranoid to get irritated at the mention of history.
    //If you are not a Dalit, why don’t you start repent and apologize for the way your ancestors treated the Dalits? Start the ball rolling. Start the movement rather than patronizing us, thank you.

    //If you are a Dalit, I understand that your ancestors suffered under the ENTIRE community of Hindus of various hues and shades AND PLEASE ACCEPT MY SINCERE SYMPATHIES. After all, you are all nothing more than my brothers and sisters. I share your pains.//

    We see events. We talk about them in such forum as this. We can’t ourselves go and change society. Perhaps an Anna Hazare can. To write about all these, one does not need to belong to a caste.

    Castes will continue. Casteism will continue in pockets; boast of heraldry and pomp of power will continue. Arrogant Brahmins will conintue to exist quoting Smritis. Everything will continue. For your part, you can turn your face away from them,as sarang has suggested.

    It is only Time that can stop/nullify / or divert such enabling social habits by rendering enabling social circumstances disabled.

  96. என் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய் நீண்ட நாள் நண்பர் ஸ்ரீ வெ.சா. அவர்கள் ஸ்ரீ அஞ்சன குமாரனுக்கு அளித்து வரும் மறுமொழிகளைப் படித்து அதிர்ச்சியும் மனம் வேதனையும் அடைகிறேன். ஸ்ரீ அஞ்சன குமாரன் நம் கண்மணியே அல்லவா? ஹிந்து சமூகத்தில் பிராமணர் உள்ளிட்ட சகல ஜாதியாரையும் கடுமையாக விமர்சிக்க அவருக்கு நியாயமும் உரிமையும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டாமா? அஞ்சன் குமாரன் தனக்கு விழிப்புணர்வு அளித்தவர்களில் ஒருவராக ஈ.வே.ரா. அவர்களைக் கருதுவாரேயானால் அதைச் சொல்ல அவருக்கு உரிமையுள்ளது. கூறு கெட்ட குரான் வாசகங்களும் அபத்தமான விவிலிய வாசகங்களும் இங்கு மறுமொழிகள் என்ற சாக்கில் இடம் பெறும்போது அஞ்சன குமாரன் தன் மீது ஈ.வே.ரா. ஏற்படுத்திய தாக்கத்தை இங்கு தாராளமாகப் பதிவு செய்யலாம் அல்லவா? வெ.சா. வின் எழுத்தால் தமக்கு பிராமணர் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்று ஸ்ரீ அஞ்சன குமாரன் எழுதியது பிசகுதான் என்று எனக்குத் தோன்றினாலும் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று அமைதியான் முறையில் அவரிடம் விளக்கம் கேட்கவே விரும்புவே.ன் ஒருவேளை அவர் ஈ.வே.ரா. அவர்கள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபட்டவர் என்ற கருத்தில் இருந்தால் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்த்தோம் என்பதையும் ராஜ் கவுதமனின் சுய சரிதை, அயோத்திதாசர் ஆய்வு, சோ. தருமனின் கூகை நாவல் எனப் பல ஆதாரங்களைக் காட்டி அவரது அபிப்ராயத்தை மென்மையான முறையில் மாற்ற முடியுமே! ஆயிரந்தான் ஆனாலும் அஞ்சன குமாரன் நம் பாசத்திற்குரிய குழந்தையே அல்லவா? அந்தக் குழந்தையின் மனம் நோகச் செய்யலாமா? காலங் காலமாகப் பலவாறு நோகடிக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரிவைச் சேர்ந்த குழந்தை ஏதோ கோபத்தில் ஏதும் பேசியிருந்தால்கூட அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்கலாமே!
    ஈ.வே.ரா. அவர்கள் தாழ்த்தப் பட்டோர் நலனில் எவ்வித நாட்ட்டமும் இல்லாதவர், அவரது கவனம் முழுவதும் பிராமணர்களைப் பிற ஹிந்து சமூக சாதியினரிடமிருந்து தனிமைப் ப்டுத்துவதில்தான் இருந்தது என்பதை வெகு எளிதில் நிரூபணம் செய்துவிட முடியுமே! அதில் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதையும் மறுக்க முடியாதே! அவர் உண்டு பண்ணிய இந்தப் பிளவை அகற்றுவதற்குத்தானே அரும்பாடு பட்டு வருகிறோம்! எனினும் தேவையின்றி எதுவும் தோன்றுவதில்லை. ஒரு கட்டத்தில் ஹிந்து சமூகத்திற்கு ஈ.வே.ரா.வும் அவசியப்படவே செய்தார். அது மிகையாகிப் போனது அவ்வளவே. குழம்பில் உப்பு கூடுதலாகிப் போனால், அதைச் சரி செய்ய முடியாமலும் ஆகிவிட்டால் கொண்டுபோய்க் கொட்டத்தான் வேண்டிவரும் என்பதைப் போல் ஈ.வே.ரா. ஆகிவிட்டார் அவ்வளவுதான். மற்றபடி சாம்பாருக்கு உப்பு போல அவர் ஹிந்து சமூக நலனுக்குப் பங்காற்றவே செய்தார். ஒருமுறை தி. க. கூட்டத்தில் நாகை பாட்சா என்ற தி.க. பேச்சாளர் ஹிந்து சமயப் புராணங்களை விமர்சிக்கத் தொடங்கிய போது ஈ.வே.ரா. அவர்கள் தரையைக் கைத்தடியால் பலமாகத் தட்டி, அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ உன் மதத்தில் உள்ள கோளறுகளைத்தான் பேச வேண்டும் என்றார். அந்தச் சமயத்தில் அவர் எனக்கு ஹிந்து சமய ஆதரவாளராகவே தெரிந்தார். காந்தி இறந்த போது ஹிந்து மதத்திற்கு காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து மிகவும் அபத்தமானதுதான் என்றாலும் அவ்வாறு அவரைக் கூறத் தூண்டியது அவ்ருக்குள் உள்ளூர இருந்த ஹிந்து உணர்வுதான் என்றே கருதுகிறேன்.
    – மலர்மன்னன்

  97. திரு அஞ்சன் குமார்

    அம்பேத்கர் சிறுவனாக இருந்தபோது அவரின் சாதி தெரியாமல் வெட்டிய நாவிதன் பின் தெரிந்து கொண்டவுன், இந்த கத்தியை எந்த புனித நீரில் கழுவுவேன் என்று புலம்பியதாகவும் அவருக்கு நாவிதர்கள் முடி வெட்ட மறுத்ததாகவும் அவர் வரலாறு சொல்கிறது.
    இங்கே நீங்கள் நாவித சிறுவன் பிராமண குடும்பம் வைத்துக் கூறிய சம்பவத்தோடு இதையும் ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

    அதற்கும் மூல காரணம் பிராமணர்கள் என்று சொல்ல முயன்றால் பதில் உங்களிடமே இருக்கிறது 2% மக்கள் சொல்வதை மொத்த மக்களும் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு அவரவர்க்குரிய லாபங்கள் இருக்க வேண்டும். அல்லது பிராமணர்கள் மீது சுலபமாக பழி போட முடிவது காரணமாக இருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் அவரவர்க்கு சுய அறிவு இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும்.
    இங்கே வெ.சா குறிப்பிட்டது போல் உங்களுக்கு பெயர் கொடுத்த பிராமண இளைஞனைத் தாண்டி நீங்கள் சமூகத்து சாதிய பிரச்சனைகளுக்கு பிராமணன் காரணம் என்று பொதுப்படை காரணங்களில் சுழல முயலுகிறீர்கள். அது தான் இந்த நாவலின் அடிநாதம். அதைத் தான் வெ.சா சுட்டிக் காட்டுகிறார்.
    இங்கேயே ஒரு கிருஷ்ணகுமாரையும் ஒரு மலர்மன்னனையும் ஒரு இராம. கோபாலனையும் நீங்கள் பாராட்டிக் கொண்டே சமூகத்தின் பிரச்சனைக்கு ஒரு சாதியை பொறுப்பேற்க சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
    உங்கள் விவாதங்கள் அதை நிரூபிக்கிறது. இது நாவலின் வெற்றி. வெ.சா வின் வெற்றி.

  98. இங்கே ஆலந்தூர் மள்ளன் எழுதிய சாத்தியம் குறித்த சிறுகதையில் நான் இட்ட பின்னூட்டம். உங்கள் விவாதங்கள் அதை ஞாபகப்படுத்துகிறது

    ஒருவன் தான் உயர்ந்தவன்
    நீ எனக்குக் கீழ் என
    இரண்டாம் இடம் கிடைத்தவன்
    அவனுக்குக் கீழ் ஒருவன்
    இருக்கிறான் என்றவுடன் வழிமொழிய
    எனக்கும் கீழ் ஒருவன்
    என அவனும் வழிமொழிய
    எல்லாருக்கும் கீழ் என்று
    ஒருவன் வைக்கப்பட

    அவரவர் படியில் நின்று
    ஒரு படியாயினும் மேல் நிற்கும்
    மமதை கொண்டு கீழ் நிற்பவனை
    ஏய்க்க,

    அழுத்தம் தங்காமல்
    எல்லாருக்கும் கீழ் நிற்பவன் சிலிர்க்க
    இந்தச் சிலிர்ப்பு ஒவ்வொரு படியாக
    எதிரொலிக்க,

    மேல் நிற்கும் எல்லா படிகளிலும்
    சில நல்ல உள்ளங்கள்
    புரிந்து கொண்டு கை நீட்ட
    சிலர் வழி விட
    சிலர் வளைந்து கொடுக்க
    சிலர் போராட்டங்களுக்கு பணிந்து போக

    படிகளில் நிற்பவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான்
    அடிவாரத்தில் நிற்பவனை விட்டு விட்டு
    அவன் அறியாமையை பயன்படுத்தி
    அவனுக்குக் கொடுக்கப் பட்ட
    சலுகையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு,

    உயரத்தில் நிற்பவனை காரண கர்த்தா வாக்கிவிட்டு

  99. திரு அஞ்சன் குமார் ,

    தாங்கள் கூறிய சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட பொதுவாக பிராமன தலித் பேச்சுக்கள் மிகுந்த அநாகரிகமான வார்த்தைகளை கொண்டே இருக்கும் … அனால் தாங்கள் விவாதம் நடத்திய முறை பல இடங்களில் என்னை கவர்ந்தது.. தங்களுக்கு நேர்ந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் ஒரு சில கசப்பான சொற்களை உங்களை உதிர்க்க வெய்திருக்கலாம். விவாதம் முடிவுக்கு வந்ததாகவே மேலே உள்ள பின்னூட்டங்களை வெய்து உணர்கிறேன்.. இதை மீண்டும் இழுக்க விரும்பவில்லை.

    அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாய் தெரிய வில்லை. இந்த தளத்தில் முழு கருத்து சுதந்திரம் இருப்பதை மற்ற பின்னூட்டங்களில் இருந்து தாங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்..

  100. எனக்குத் தெரிந்தவரை இந்த வேத வாக்கியம் பிராமண என்று தனி நபரையே குறிப்பிடுகிறது. ஆனால் அது வேத காலத்து பிராமணனைக் குறிப்பிடுவதாகும்.. இக்கால பிராமணர் எவரும் அதற்கு உரிமை கோர முடியாது. ஏனெனில் இக்கால பிராமணர் பிறப்பால் பிராமண ஜாதியில் வந்திருப்போர். வேதம் சொல்லும் பிராமணன் வர்ணத்தின் பிரகாரம் பிராமணனாக அடையாளம் காணப்பட்டவன். ஆகையால் பிராமண குணாம்சம் முழுமையாகப் பெற்றவனது தரப்பு சரியாகவே இருக்கும் என்பது குறிப்பு.
    இந்த வாக்கியத்தை வைத்துக் கொண்டு இன்றைய சாதி முறையில் பிறந்துள்ள பிராமணரும் பிராமணர் அல்லாதாரும் தர்க்கித்துக் கொள்வதில் பொருள் இல்லை.

    -மலர்மன்னன்.

  101. Mr Agneya: Quote
    “Hopefully, none of you are practising any kind of untouchability ”
    It will be very silly of me to answer to this sort of assumption!!! It will be waste of my time to debate against someone with this sort of smug attitude.
    I just want to share the general attitude of people in India. When we go shopping in Chennai, a very pleasant driver of my sister’s family takes us around. He will never join us for lunch in restaurants in spite of repeated requests, He will sit alone in another table, making us feel bad about ourselves. My grown up children,all born and brought up overseas could never understand this dhimi attitude.
    I feel our society has a long way to go to shed their inferiority complexes.The reservations and quotas for non Brahmins and Dalits are the signs of immaturity of this society.
    By all means, offer economic help to all poor people, irrespective of caste and creeds..Do not suppress just one section in the name of Jati.
    When are we going to grow up?

  102. அதிர்ச்சிதரும் பதில் வெசாவிடமிருந்து. வெறுப்பை எதிர்க்கிறேன் எனச் சொல்லிக்கொண்டே வெறுப்பை உமிழும் பதிலிது.

    அரசியல் கட்சியில் தலைவர்கள் நாலந்தரமாகப்பேச மாட்டார்கள். திமுகவில் வெற்றிகொண்டான், அதிமுகவில் தீப்பொறி ஆறுமுகம், பாம‌கவில் காடுவெட்டி குரு, மதிமுவில் நாஞ்சில் சம்பத், இப்படி பேச்சாளர்கள் இருக்கிறார்கள் கட்சிகள் அவர்களுக்கு செய்யவேண்டியதை நன்றாகச்செய்யும்.

    இதைப்போலவே, வெ.சா போன்றவர்கள் ஜாதிக்காவலர்களாக மாறவே கூடாது. இன்னொரு பெரிய இடைஞ்சல் என்னவென்றால், ஒரு எழுத்தாளர் ஜாதிக்காவலராக மாறிவிட்டால் அவர் எழுத்துக்கள் அனைத்திற்கும் சாதிச்சாயம் பூசப்படும்.

  103. //“Hopefully, none of you are practising any kind of untouchability ”
    It will be very silly of me to answer to this sort of assumption!!! It will be waste of my time to debate against someone with this sort of smug attitude.//

    Have some sense of humor. My sentence was written in jest..

    //I just want to share the general attitude of people in India. When we go shopping in Chennai, a very pleasant driver of my sister’s family takes us around. He will never join us for lunch in restaurants in spite of repeated requests, He will sit alone in another table, making us feel bad about ourselves. I feel our society has a long way to go to shed their inferiority complexes.The reservations and quotas for non Brahmins and Dalits are the signs of immaturity of this society. By all means, offer economic help to all poor people, irrespective of caste and creeds..Do not suppress just one section in the name of Jati.
    When are we going to grow up? //

    The issue of reservations is not under discussions here.

  104. அனைவருக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்.

    Shri VS mahasay, in all honesty I had openly admitted that my knowledge of tamizh lit is very limited.

    If I remember correctly, in a blog I read sort of a stuff which explained that writings of my favourite Tamizh Author swargiya Sh.Sujatha does not fit into the definition of literature. Since I am not aware of the nuances of what qualify as Tamizh lit and what not, I was just perplexed.

    Since my exposure to Tamizh lit is very limited, I was not aware of a doyen, an octogenarian person like you. It should be about more than 30 years back I would have read a Tamizh novel or anything related to Tamizh lit. My current, uniterrupted and continued readings in Tamizh are very much limited to Thiruppugazh and vyakyanas on Shankara’s prakarana granthas and Shankara Bhashya. since my participation in Tamizhhindu, I have been reading enthusiastically your articles on varied topics. After a very long time, very much impressed by your presentation, I wish to purchase this book and read it.

    True, I have love and sympathies for this gentleman Sh.Anjankumar may be due to my training and upbringing in RSS. I was trying to understand the views of a person of an affected society. That said, I am aware of even physical assaults on brahmins against which nothing had been done in Tamizhnadu. I can equally understand anguish at your end as an octogenarian Sr citizen capable of guiding us. In my replies of sympathies, sure there was not a single word that was said about you or against you. But even if you feel like indirectly having been hurt by my writings, I am extremely sorry for that. Cause, since my participation in Tamizh Hindu, this is for the first time I have been reading harsh replies from your end. I am very particular that lemme be not a part of same. For, the purpose of my exchanges here are sort of updating myself sharing my thoughts and it would be unbecoming of me to either directly or indirectly hurt anyone.

    grateful to read fantastic pieces of articles penned by you sir.

  105. ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய, ஸ்ரீ அஞ்சன்குமாருக்கான தங்களது உத்தரம் எனக்கு ஒரு பெரிய நிம்மதிப்பெருமூச்சளித்தது என்றால் மிகையாகாது. மூத்தோரின் ஹிதபாஷணம் நன்றே. ஸ்ரீ அஞ்சன் குமார் தன் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்வது என் பாஷா ப்ரயோகத்தால் நான் சாதிக்க முடியாததை தங்கள் ஹித பாஷணம் சாதிக்கும் என நம்புகிறேன்.

    அன்பார்ந்த ஸ்ரீ அஞ்சன்குமார், எனது மதிப்பிற்குறிய மற்றும் அன்பார்ந்த ஸ்ரீ கோபால்ஜி அவர்களின் ஆசி பெற்ற நீங்கள் உறுதிப்பாட்டில் குறையலாமோ. தங்கள் கருத்துப் பரிவர்த்தனைகளை தாங்கள் தொடர வேண்டும் என்பது என் அவா. ஒரு கூடப்பிறவா அண்ணனின் அன்புக் கட்டளை என்று வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

    அன்பார்ந்த என் சஹோதரர், ப்ராம்ஹண சமூஹத்தைச் சேர்ந்தவர்களும் ப்ராம்ஹண த்வேஷத்தால் எப்படி அல்லலுற்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டி ஓரிரு வரிகளில் சில சம்பவங்கள் சொல்ல விழைகிறேன்.

    சேலத்தருகே மேட்டூரில் லக்ஷ்மி விலாஸ் உணவகம் பலர் அறிந்த உணவகம் (இப்போது அவர்கள் சேலம் வந்து விட்டனர்). முப்பது வருஷம் முன்னர் அதன் அதிபரான ஸ்ரீ ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் திருப்புகழ் பஜனைகள் ஏற்பாடு செய்து அதில் ஜாதி வித்யாசமின்றி அனைவரையும் அழைத்து சத்சங்கம் நிகழ்த்துவார். மிகப்பல ஜனங்கள் அதில் ஈடுபட்டு வள்ளி மணாளன் திருவருளுக்கும் அவர் ஏற்பாடு செய்யும் சுவையான ப்ரசாதமும் சாப்பிட்டு மகிழ்வர்.

    இந்த சமூஹ ஒற்றுமை சிலருக்கு பொருக்கவில்லை.

    வைபவங்களெல்லாம் முடிந்த பின் வீட்டு வாசலில் காற்றாட கட்டிலில் படுப்பார். அப்போது அறுபத்தைந்து வயது இருக்கும் அவருக்கு. பெருத்த சரீரம். தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது பாப்பான் ஒழிக என்று சொல்லி கொதிக்கும் எண்ணையை அவர் மீது கொட்டி விடு ஓடிவிட்டனர் சில சமூஹ விரோதிகள். அனைத்து ஜனங்களும் மிகுந்த மன வேதனை அடைந்தனர். அதற்குப் பின்னரும் தன் திருப்புகழ்ப்பணியை அவர் தொடர்ந்தார் என்பது வேறு.

    சமீபத்தில் இணைய தளங்களில் வாசிக்க நேர்ந்தது ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமசாமிப் பெரியாரின் சிலையை சில விஷமிகள் அவமரியாதை செய்தனர் என்பதற்காக மதராஸில் அயோத்யா மண்டபமருகே நாலணாவுக்கு பூணல் வ்யாபாரம் செய்து கஷ்ட ஜீவனம் செய்யும் ஒரு அப்பாவிப்ராம்ஹணரைச் சில சமூஹ விரோதிகள் தாக்கியிருக்கிறார்கள். அதே காரணத்திற்காக சேலம் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் புகுந்து வேதபாடசாலையிலிருப்பவர்களையும் ஸ்ரீமடத்தையும் தாக்கியிருக்கிறார்கள்.

    இந்த சம்பவங்களெல்லாம் விசாரணைக்காகவாவது உட்பட்டதா என்பது கடவுளுக்கே வெளிச்சம். இந்த ரணமெல்லாம் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ப்ராம்ஹணரிடையே உண்டு. மேலும் இது போன்றவை சில உதாரணங்களே. நான் இவற்றைச் சொல்வது இன்னொரு பாதிக்கப்பட்ட சமூஹத்தினரின் ரணங்களைக் குறைத்து மதிப்பிட அல்ல அன்பரே. இன்றைய ப்ராம்ஹணரின் மனது ரணங்கள் கேழ்ப்பாரற்றவை என்று தெரிவிப்பதற்கும் அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே.

    இவையெல்லாம் ஒருபுறமே. சங்கத்தில் அதே கால கட்டத்தில் நான் ஈடுபட்ட போது ஜாதி என்ற விஷயத்தை உணர்ந்ததே கிடையாது. சங்கத்தில் ஒரே பேச்சு ஒரே மூச்சு ஹிந்து. ஹிந்து ஹிதம் மட்டும் தான்.

    உத்தர பாரதத்தில் மிகப்பல தலித் சமூஹத்தினர் எனக்கு மித்ரர்கள். குறிப்பாக வால்மீகியினர் எனப்படும் பிரிவினர். ஸ்ரீ ராமாயணத்தில் அவர்களில் சிலர் தேட்டையான ஆர்வம் உடையவர்கள் என்பது ஒரு காரணம். அவர்கள் அன்பு மற்றும் அவர்கள் தொடர்பின் மூலம் அவர்கள் சமூஹத்தில் பட்ட பாடுகளை என்னால் அறிய முடிந்தது. அதனால் தான் என்னால் தாங்கள் எழுதிய (ஓரிரு வாசகங்கள் தவிர்த்து ) வாசகங்களில் உள்ள வலிகளைப் புரிய முடிந்தது. கருத்துக்களில் பிழையும் தவறும் விதிவிலக்கின்றி இங்கு உள்ள மூத்தோர் இளையோர் அனைவரிலும் உள்ளது. அதையெல்லாம் புறந்தள்ளி நான் தங்கள் கருத்தில் உள்ள பிழைகளை மட்டும் சுட்டுகிறேன் என தயவு செய்து நினையாதீர் அன்பரே.

    அடுத்த தலைமுறையாவது ஒற்றுமையுடன் வாழ நாம் நம் பணிகள் செய்ய முடியும் என்பது என் நம்பிக்கை. வாருங்கள் ஹிந்து என்ற ப்ரம்மாண்டமான மிக புராதனமான ரதத்தை நாம் சேர்ந்து வலிந்து ஹிந்து ஐக்யதை என்ற ரதோத்ஸவம் கொண்டாடுவோம்.

  106. About a year back, in vijayvaani, I interacted with one Shri.Rama. A very heated article against HDAS and world forum and there were heated discussions. I remember that against heated discussions, Shri.Rama used to present fantastic meaningful lengthy, and most important, courteous replies to Smt.Radha Rajan. There was some point of difference between me and Shri.Rama on Sri Sri RaviShankar regarding Inter Religious Discourse and I referred the Dr.Zakir Naik Vs SriSri discourse to Sh.Rama. I hope you are the same Shri. Rama. Shri.Rama, although I am putting forth my views as far as possible politely, I should say Shri.Rama, courteous presentation of views was sort of reinforced in me on observing your courteous and patient replies to Smt.Radha Rajan. I have been following your spirited discourses with Sh.Anjankumar and Sh.Agneya. good efforts. kudos. But would I be wrong if I say, the style is a bit different now?

  107. நான் க்ரிஷ்ணகுமாரைப் பற்றியும் அக்னேயா பற்றியும் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. நான் பதில் எழுதியது அஞசன் குமாருக்கு மாத்திரமே. நான் எப்படி ஜாதிக்கவலரானேன், வெறுப்பை உமிழ்கிறேன் என்று தெரியவில்லை. கிருஷ்ணகுமாரும் அக்னேயாவும் எனக்கு தெளிவு படுத்தினால் நல்லது.

    அது போக, பாப்பானைத் திட்டுவதே சமநீதியாகிவிடும், ஜாதி உணர்வை துறந்து புனித ஆத்மாக்கிவிடும் என்று நினைத்து தன் ஜாதி வெறியை, பாதுகாப்பாக வைத்துக்கொள்பவர்களை நீதி போதனைகளைக் கேட்கும் போது எனக்கு வெறுப்புத் தான் வரும். அதை நான் ஏதும் செய்ய முடியாது.

    என்னைத் திட்டுவதற்கு ஒருவருக்கு தகுதி வேண்டும். அந்தத் தகுதியை ஈ.வே.ரா. விலிருந்து அஞ்சன் குமார் வரை யாரிடமும் நான் பார்க்கவில்லை.

  108. //That said, I am aware of even physical assaults on brahmins against which nothing had been done in Tamizhnadu. I can equally understand anguish at your end as an octogenarian Sr citizen capable of guiding us. In my replies of sympathies//

    அப்படிப்பட்ட வன்முறைத்தாக்குதலுக்குள்ளானோர் வெகுவெகு சிலரே. விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை. பட்டப்பகலில் வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு வெட்டிக் கொல்லப்படவில்லை. எந்தப் பார்ப்ப்னப் பெண்ணும் மானபங்கப்படுத்தப்படவில்லை. நடந்தவைகள் செய்தவர்கள் ஒரு சிறிய தி.கவினர் கூட்டமே. அவ‌ர்க‌ளுக்கும் பொது ஜ‌ன‌த்தின் ஆத‌ர‌வில்லை.

    அதே வேளையில் தமிழ்த் தலித்துகள் நிலையென்ன ? ஊருக்குள்ளேயே தாக்கப்படுகிறார்கள். தலித்தை மணந்தததால் பட்டப்பகலில் வீட்டிக்குள்ளிருந்து வெளியே இழுத்துப்போட்டு துடிக்கத்துடிக்கத் தன்மகளை வெட்டிப்போடுகிறான் திருச்சியில். தலித்துப் பெண்ணைக் கிண்டலடிக்கிறாயே என்றால் ஊரையே கொழுத்துகிறான். போலீசோ பயங்கர வன்முறையில் இறங்க கொடியங்குளப்பள்ளர்கள் ஊரையேக் காலிபண்ணி ஓடுகிறார்கள். தேவர்கள் தலித்துகளை வெட்டுகிறார்கள்; வன்னியர்கள் குடிசைகளைக்கொழுத்துகிறார்கள். பிள்ளைகள் சுவரை எழுப்புகிறார்கள் ஏன் என்றால் அப்படித்தான் செய்வோம் என்கிறார்கள். உத்தபுரத்தில் மட்டுமல்ல. கோவையிலும் சுவர். ஊருக்குள்ளே மாரியம்மன் கோயிலுக்கு நுழையவிடக்கூடாதென்று பிள்ளைகள் சொல்கிறார்கள். ப‌ஸ்ஸில் ஏறினால் நீ சீட்டில் உட்கார‌க்கூடாதென்கிறார் ச‌வுத் ஆப்பிரிக்காவில் முடின்த‌து. இங்கு இன்னும் விடிய‌வில்லை.

    கீழ் வெண்மணியில் நாயுடுக்கள் கூலி கூட்டிக்கேட்டதற்கு, “பறையனும் பள்ளனும் சொல்றதைக்கேட்ட வேண்டிய நாய்கள்; எங்களை எதிர்ப்பதா?” என்று கூண்டோடு 50 தலித்துகளை – பெண்களையும் குழந்தைகளையும் – எரித்துக்கொல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் தலித்தை மலம் தின்ன வைக்கிறான். தலித்து பேண்டு சட்டையும் போட்டால் உனக்கெல்லாம் ஏனடா என்று அடிக்கவருகிறான். You cant get rented house if you say you are a dalit. You should conceal your caste and say: you are from other caste.

    ப‌ன்னி மேய்ப்ப‌வ‌னெல்லாம் ப‌டித்து வேலைக்கு வ‌ன்துவிட்ட‌தால் நாடே கெட்டுவிட்ட‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் வ‌க்க‌னையாக‌ வ‌ச‌ன‌ம் பேசுகிறார்க‌ள். தேவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌. ஊரே த‌லித்துக‌ளைக்க‌ண்டு உமிழ்கிற‌து.

    எத்தனை சட்டம் போட்டு என்ன லாபம் ? நாங்கள் எவருக்கும் பயப்படமாட்டோம் எனச் சொல்கிறார்கள். தலித்து இன்னும் அப்படியே வன்கொடுமைக்கு ஆளாகிறான். அவர்களில் பெண்களுக்கு மானததைக்காக்க வழியேயில்லை. பாலியல் வன்புணர்ச்சி, உயிர்க்கொலை என்றெல்லாம் சாகிறார்கள்.

    இப்படிப்பட்ட வாழ்க்கையா தமிழ்ப்பார்ப்பனருக்கு ? எத்தனை பேரை எத்தனை பேர் அடித்துக்கொன்றார்கள்? எததனை அகரஹாரங்கள் தீ வைக்கப்பட்டன? எத்தனைப் பார்ப்பனப் பெண்களை கிண்டலடிக்கப்படுகிறார்கள்?

    பார்ப்ப‌ன‌ர்க‌ள் என்றாலே பாசிட்டிவ் இமேஜ்: பர‌த‌ நாட்டிய‌ம்; இசை; க‌லை; க‌ல்வி என்றெல்லாம். த‌லித்துக‌ள் என்றால், த‌டிய‌ன், தாதாக்க‌ளின் அடியாட்க‌ள். குடிகார‌ர்க‌ள், ஒவ்வொருவ‌னுக்கு ஒரு பெண்டாட்டி ப‌த்தாது. அவ‌ர்க‌ள் பெண்க‌ளோ ப‌ல‌ப‌ட்ட‌றைக‌ள் என்றெல்லாம் நெக‌ட்டிவ் இமேஜ். என்ன‌வெல்லாம் செய்தால் அவ‌ர்க‌ளால் எழுன்திருக்க‌ முடியாதோ அதையெல்லாம் செய்கிற‌து இன்த‌த்த‌மிழ்ச்ச‌மூக‌ம். பார்ப்பனர்களுக்கு வெண்சாம‌ர‌ம். த‌லித்துக்கு அடி, வெட்டு, குத்து.

    ஆனால் வெசா போன்றோரின் க‌ண்ணீர் அவர் ஜாதிகாரர்களுக்காக‌ வெள்ள‌மாக‌ப் பாய்கிற‌து ! யாருக்கு அது பாய‌ வேண்டுமோ அவ‌ருக்கு அது பாய‌ ம‌றுக்கிற‌து.

    சின்ன வயதுக்காரர் எழுதினால், இள ரத்தம் அப்படித்தான் எனப் போய் விடலாம். ஆனால் ஒரு முதியவர் எழுதும்போது வருத்தப்படவேண்டியதாகத்தான் இருக்கிறது.

  109. ஒரு நெடிய விவாதம் ஓய்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது. திரு ஜடாயு வர்ண -சாதி ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு வேதத்தில் ஆதாரம் இல்லை அது ஸ்ம்ரிதி தொடர்பானது என்பதை நிறுவியுள்ளார்கள். இதை சப்பை கட்டு என்று திரு அஞ்சனக்குமார் கூறுவது சரியல்ல. ஸ்ரீ நாராயணகுரு சாமிகளிடம் அண்ணல் காந்தி அடிகள் கேட்ட கேள்விக்கும் அவர் கொடுத்த பதிலும் இதுதான். சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு பிராமணர்களைக் காரணமாக சொல்லிவிட்டு இதரப் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்கலுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போன்றது திரு ஈ வெ ரா நாயக்கரின் சித்தாந்தம். தாழ்த்தப்பட்டவர்கள் பட்ட துன்பத்திற்கு இன்னும் படும் அவதிக்கு அவர்களுக்கு மேல் உள்ளதாக கூறப்படும் அனைவரும் பொறுப்பு. என்பதே நியாயம். பொருளாதார ரீதில்யில் அரசியல் வகையில் அதிகாரமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டதே உண்மை. வர்ணக் கொழ்கை இதற்க்கு திரித்துப் பொருள் கற்பிக்கப்பட்டது அவ்வளவுதான்.
    உண்மையில் வர்ணம் வேறு சாதி வேறு. இரண்டுக்கும் கற்பிக்கப்பட்ட தொடர்பு கற்பிதம். நான்கு வர்ணங்கள் இல்லாம் நாலாயிரம் சாதிகள் இருப்பது ஏன். நான்கு வர்ணங்களில் முதல் மூன்று பிராமண, க்ஷத்ரிய, வைசிய, ஆகியன த்விஜர் அல்லது இருபிறப்பாளர் எனப்படுகிறது. தென்னாட்டில் யார் யார் த்விஜர் என்று தெளிவு படுத்தமுடியுமா. இந்த இரண்டாவது பிறப்பு உபநயனம் தென்னகத்தில் பிராமனரைத்தவிர யாருக்கும் இல்லையே. இதில் இன்னொன்றும் உண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் வர்ணத்திற்கு உள்ளேயே இல்லை என்பது. நான்கு வர்ணங்களே தெளிவாக இல்லாதபோது அதற்கு வெளியே எப்படி இருக்க முடியும். இன்று உள்ள ஜாதிகள் எல்லாம் பழங்குடிகள்

    திரு அஞ்சனக்குமார் கோபத்தில் நியாயம் உள்ளது.
    வர்ணமுறையில் அனுலோமா(ஏற்கப்பட்டவை) பிரதிலோமா(மறுக்கப்பட்டவை) என்னும் இருவகை திருமணங்கள்
    பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அனுலோமா முறைப்படி உயர் வர்ணத்து ஆண்மகன் தாழ்ந்த வர்ணத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதன் படி பிராமணன் பிராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர பெண்களை மணக்கலாம். க்ஷத்ரியன், க்ஷத்ரிய,வைசிய, சூத்திரப் பெண்களை மணக்கலாம். ஆனால்
    சூத்திர ஆண்மகன் வைசியப் பெண்ணைகூட மணக்கக்கூடாது . அது பிரதிலோமம் எனப்படும். அப்படிப்பட்ட மனத்தின் மூலம் பிறந்தவர் சண்டாளர் எனப்படுவர். என்று சொல்லப்பட்டது. இந்த முறைகள் பெரும் பாலும் நடைமுறையில் இல்லை. அகமணம் மட்டுமே ஒவ்வொரு சாதியிலும் உள்ளது கண்கூடு. அவரவர் சாதியில் திருமணம் நடைபெறுகிறது. ஒரே வர்ணத்தை சேர்ந்த பிராமணர்க்குள்ளே ஆயிரம் சாதிகள் அகமணம் நடைபெறது. ஒரே தொழிலை செய்யும் இருவேறு சாதியினர் கூட திருமணம் செய்வது இன்றும் அரிது. இந்த அகமணம் பழங்குடியினரிடம் உலகெங்கும் இன்றும் காணலாம். ஆக பிரதிலோமா என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்கத்திற்கு காரணம் என்பது சரியல்ல.
    சாதி கருதி மனிதனை ப்பபாகுபடுத்தும் பழக்கத்தை விட்டொழிக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை சமமாக மதிக்க மற்றவர்கள் அனைவருக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்தம் சிக்கல்களை அவர்தம் கண்கொண்டு அவர்தம் நிலை நின்று புரிந்து உணர வேண்டும். அவர்தம் பொருளாதார முன்னேற்றதிற்கு வழி செய்யும் அரசு த்திட்டங்கள் சட்டங்கள் ஆகியவற்றை வலியுறுத்தவேண்டும். ஆதரிக்கவேண்டும்.
    சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  110. பல கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் பொழுது மௌனம் சாதிப்பது எனக்குச் சரியென்று படவில்லை. அதுவும் பிராம்மண வெறுப்பை எதிர்த்து எழுதியிருக்கும்போழுது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அஞ்சன்குமார் போன்ற நண்பர்கள் சிலர் மனம் புண்பட்ட வேளையில் சும்மா நின்று வேடிக்கை பார்ப்பது பெரும் பாவம்.

    திரு அஞ்சன்குமார், உங்களுக்கு எதிரான வசவுகளை ஒருபொழுதும் நான் ஆதரிக்கவில்லை.

    அனுபவத்தில் பெரியவராகிய வெ.சா. அவர்கள் இம்மாதிரியெல்லாம் மறுமொழி எழுத வேண்டாம் என்று வயதில் மிகச் சிறிய நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    திரு அஞ்சன்குமார்,

    “வேதத்தில் குற்றமிருக்கிறது. அதை ஒத்துக் கொள்ளுங்கள்” போன்ற வாதங்கள் சனாதன தர்மத்தின் அடிமரத்தையே வெட்டுவதற்குச் சமம். இப்படி நான் கூறுவதற்குப் பல ஆழமான காரணங்கள் உண்டு – படித்துத் தெரிந்துக் கொள்ளலாம். சமஸ்கிருதம் தெரியாது என்று கூறி இந்தப் பரிந்துரையை மறுத்துவிட வேண்டாம். எனக்கு வேதத்திலும் சமஸ்கிருதத்திலும் பயிற்சி இல்லை. ஓரிரு வருடங்களுக்கு முன்பு தான் புத்தகங்களைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். ஆர்வமிருந்தால் தானாகவே வாய்ப்புகள் வரும்.

    தற்போதைய சமூக நிலையை மனதில் கொண்டு வேதத்திலும் மகான்களின் வாக்குகளிலும் குற்றம் பார்ப்பதும் சரி அல்ல. ஒரு சித்தாந்தத்தை முழுமையான, முடிவான அளவில் அறிந்து கொள்ளாமல் (without having a holistic view of the particular philosophy – in this case the Vedas) ஆங்காங்கு வேதத்திலிருந்தும் ஸ்மிருதிகளிளிருந்தும் வரும் வசனங்களை உருவி எடுத்து “இது தான் தற்போதைய நிலைக்குக் காரணம்” என்று கூறுவது இன்றைக்கு ரொம்ப பேஷன் ஆகிவிட்டது. கண்டிப்பாக ஒத்துக் கொள்வேன் – இந்நிலை வந்ததற்கு அனைவரும் பொறுப்பு – சாதீயத்தை வளர்த்த பிராம்மணர்கள் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள் வரை.

    ஆனால் இப்படி வசனங்களை உருவி எடுப்பது நடுநிலையான விமர்சனமா? அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியா (well-informed analysis taking all factors into consideration)? அல்லது கோபமும் ஆத்திரமும் கலந்த ஒரு knee-jerk reaction ஆ? இதை எல்லாம் சற்று பொறுமையுடன் யோசித்துப் பாருங்கள்.

    இராமானுஜர் எத்தனையோ சமூக சீர்திருத்தங்களை நிகழ்த்தினார் — அதே சமயம் வேதத்திலும் வேதாந்தத்திலும் அவருக்கு இருந்த பற்றும் பக்தியும் ஒப்பில்லாதது. அனுஷ்டானத்திலும் குறையாதவர். இதை எல்லாம் நீங்கள் ஆலோசித்துப் பார்க்கலாமே? அப்பொழுது புரியுமே வேதம் என்ன கூறுகிறது என்று.

    இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு தான் என்று நீங்கள் மறுபடி கூறினால் இதற்கு மேல் இத்திரியில் எனக்குக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

  111. அஞ்சன் குமார் எழுதியவை தனிப்பட்ட நபரின் கருத்தல்ல. 25 கோடி தலித்துகளில் உள்ளுறை அறச்சீற்றமே. அது மிகையாக இருக்கலாம்; குறைவாக இருக்கலாம். ஆனால் இருக்கிறது.

    அவர்களின் அறச்சீற்றம்தானே என ஒதுங்கி நிறகவில்லை இராமானுஜர், பாரதியார், வைத்திய்நாதையர் போன்றோர். தம்மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு அச்சீற்றத்தின் காரணமென்ன? அதைப்போக்க‌ என்னென்ன உபாயங்கள் ? எனவாராய்ந்து அச்சீற்றத்துக்குக் காரணாமாயிருந்தோரைக் கடிந்து, அல்லது திருத்தி தலித்துமக்களின் பேராதரவை, பெருநம்பிக்கையை, மரியாதைக்குரிய் பணிவான வணக்கத்தினைப் பெற்றவர்கள் அவர்கள்.

    அவ்வறச்சீற்றம் இங்கும் ஒலிக்கப்படுமாயின்” இதோ ஒலிக்கிறது; பாருங்கள்” என எவரும்சுட்டிக்காட்டலாம் வெ சா அவர்களே. அதைச்செய்ய ஒருவன் தலித்தாக இருக்க்வேண்டியதில்லை. பாரதியாராகவும் இருக்கலாம்..

    எங்களைத் திட்ட ஒரு தகுதி உமக்கு வேண்டுமெனவும் அவர்களிடமும் சொன்னார்கள். .

    “சிறியோர் சிந்திய கடலையாயினும் பெரியாயினும் பொறுக்குதல் கடனே”

  112. “அதிர்ச்சிதரும் பதில் வெசாவிடமிருந்து. வெறுப்பை எதிர்க்கிறேன் எனச் சொல்லிக்கொண்டே வெறுப்பை உமிழும் பதிலிது.

    அரசியல் கட்சியில் தலைவர்கள் நாலந்தரமாகப்பேச மாட்டார்கள். திமுகவில் வெற்றிகொண்டான், அதிமுகவில் தீப்பொறி ஆறுமுகம், பாம‌கவில் காடுவெட்டி குரு, மதிமுவில் நாஞ்சில் சம்பத், இப்படி பேச்சாளர்கள் இருக்கிறார்கள் கட்சிகள் அவர்களுக்கு செய்யவேண்டியதை நன்றாகச்செய்யும்.

    இதைப்போலவே, வெ.சா போன்றவர்கள் ஜாதிக்காவலர்களாக மாறவே கூடாது.”

    இது மிகவும் அநியாயமான குற்றச்சாட்டு; அச்சு அசலாக திக மனோ நிலையிலேயே இன்னும் ஹிந்து சமூகத்தையும் வேதங்களையும் அணுகும் அஞ்சனகுமாருக்கு எப்படி பதில் சொல்ல முடியும்; தர்க்க ரீதியாக, ஆதார பூர்வமான பதில்களையெல்லாம் ‘சப்பைக்கட்டு’ என்று புறங்கையால் தள்ளுகிறார்; கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தின் பகுத்தறிவு நிலை இதுதான்.

  113. agneya

    //அப்படிப்பட்ட வன்முறைத்தாக்குதலுக்குள்ளானோர் வெகுவெகு சிலரே. விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் எவரும் உயிரிழக்கவில்லை. பட்டப்பகலில் வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு வெட்டிக் கொல்லப்படவில்லை. எந்தப் பார்ப்ப்னப் பெண்ணும் மானபங்கப்படுத்தப்படவில்லை. நடந்தவைகள் செய்தவர்கள் ஒரு சிறிய தி.கவினர் கூட்டமே. அவ‌ர்க‌ளுக்கும் பொது ஜ‌ன‌த்தின் ஆத‌ர‌வில்லை.
    //

    நியாமாக பார்த்தால் உங்களது வெறுப்பு இப்படிப்பட்ட காரியத்தை செய்தவர்கள் மீதல்லவா இருக்க வேண்டும் – இந்த காரியங்களை பிராமணர்களா செய்தார்கள்?

    இதை தானே வெசா சுட்டிக்காட்டி உள்ளார் – மூச்சுக்கு மூணு முறை – இதை கேட்டு என் பிராமண வெறுப்பு இன்னும் அதிகமாகிறது இன்னும் அதிகமாகிறது என்றால் என்ன அர்த்தம்

    வெருபுள்ள மனம் வெறுப்பாய் தானே இருக்கும். இப்படி தன்னுள்ளே வெறுப்பை வைத்துக் கொண்டு அது நியாயமானதா இல்லையா என்று கூட தெரியாமல் – தொ பார் இன்னும் பேசினே வெருத்துடுவேன் வெருத்துடுவேன் என்று எவ்வளவு நாளைக்கு தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். நாம் ஒரு ஜாதியை வெறுப்புடன் பார்த்தல் ஜாதி வெறி எப்படி ஒழியும் – நாம் exploitation க்கு உள்ளாவோம் அவ்வளவு தான் மிஞ்சும்.

    நீங்கள் சொல்லும் லாஜிக் படி பார்த்தால் வேத வியாசர் சண்டாளன் தான் – அவருடைய நிலை அப்படியா சித்தரிக்கப்படுகிறது.

    ராமானுஜர் சைதன்யர் போன்ற பிராமணர்கள் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மூலம் எவ்வளவு ஹரி ஜன மக்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் – இது போன்ற positive விஷயங்கள் உங்கள் கண்ணில் பட வில்லையே. அன்று நடந்த சீர்திருத்தங்களின் பொது வெறுப்பை விட்டவர்கள் தான் இன்று முன்னேறி உள்ளார்கள்.

    ஹரி ஜனங்களை அடிமைகள் ஆக்கியது மிராசுதாரர்களும் ஆங்கிலேயர்களும் தானே – நியாமாக அஞ்சன் குமாரின் கோபம் வெறுப்பு எல்லாம் இவர்களின் மேலே தானே இருக்க வேண்டும்.

    பிராமணர்கள் கிண்டலடிக்கபடவில்லை என்கிறீர்கள் – இந்த சமூகம் பெரும் கஷ்டத்தை சந்தித்து உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தது இவர்களே – ஸ்ரீரங்கத்தில் மட்டும் பதினேழாயிரம் பேர். கச்மீரிளுந்து விரட்டப்பட்ட பல லட்சம் பண்டிதர்கள் நாதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். பிராமண பெண்களை ரோட்டில் கொஞ்ச நஞ்சமா கிண்டலடிக்கிறார்கள்.

    இன்று பிராமணர்கள் செய்த ஒரே தப்பு படித்ததுதான்? உசுரக் கொடுத்து படித்ததுதான் – எதோ தோட்டம் தொறவு இருந்து ஜாலியா படித்து வரவில்லை. – எனது மற்றும் எனது தந்தையின் காலங்களில் தெரு விளக்கில் படித்து தான் பலர் முன்னேறி உள்ளனர். இன்று இருக்கும் கோட்டா சட்டத்தில் எந்த பிராமனாவது படித்து முன்னேறிவிட முடியுமா ?
    என்னுடன் படித்து என்னை விட கம்மி மார்க் வாங்கினவனுக்கு மருத்துவ கல்லூரி சீட்டு. எனக்கு ஒரு ஒரு டுபாகூர் கல்லூரியில் சீட்டு.

    எனது காலத்தில் எல்லாம் படிச்சா தான் சோறு என்று ஒரு வெறியுடனே தான் படித்தார்கள் பிராமணர்கள். இதற்காக பிராமணர்கள் யாராவது மற்றவர் மேல் வெறுப்பு காட்டுவதுண்டா.

    இந்த வெக்கம் கேட்ட அரசாங்கம் OBC கோட்டா கொண்டு வந்தது – உண்மையில் இந்தியாவில் மிக பலமான ஒரு சமுதாயம் இவர்களே. இவர்கள் தான் இந்தியாவையே ஆண்டு வருகிறார்கள். இவர்களுள்ளே கூட பலர் இந்த கோட்டா தேவையா என்று தான் கேட்டார்கள். அல்ப ஓட்டுக்காக கோட்டா கொண்டுவந்தார் அர்ஜுன் சிங்கு – இந்த சட்டத்தால் பெரும் அவதிக்குல்லாவ போவது ஹரி ஜனங்கள் தான். இது பிராமணர்களுக்கு கஷ்டம் என்றாலும் அவர்களிடம் வெறுப்பு இல்லாததால் எப்படியாவது முன்னேறி விடுவார்கள். கொடாவினால் என்ன ஆகிறது நன்றாக படிக்கும் திறன் கொண்ட ஹரி ஜன மாணவனும் கோட்டா இருக்கிறது கோட்டா இருக்கிறது என்று சரியாக படிப்பதில்லை கடைசியில் பலர் பெயிலாகிரார்கள். பாசானால் தானே கோட்டவும் கூட செல்லுபடியாகும். இலக்கை குறைத்து வைத்து ஒரு விதத்தில் கெடுகிறது அரசாங்கம். ஹரி ஜனங்களின் பிரச்சனை IIM IIT அளவில் இல்லை. அடிப்படை படிப்பு ஒழுங்காக கிடைக்க வேண்டும் – நமது கோவத்தை இந்த பக்கம் திசை திருப்பினால் நமக்கு முன்னேற்றம் கிடைக்கும். பிராமர்களை திட்டி அதன் மூலம் ஆத்மா திருப்தி அடைவதால் என்ன லாபம்.

    ஹரி ஜனங்களின் வீட்டில் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது சொல்லுங்கள்? எனது வீட்டில் எல்லாம் படிக்காவிட்டால் தினமும் அர்ச்சனை நடக்கும், கிண்டலும் கேலியும் எஞ்சும்.

    சில வருடங்களுக்கு முன்னாள் சினிமாகாரர் ராஜீவ் மேனன் கர்நாடக் இசை பற்றி ஒரு பேட்டி கொடுத்தார். அவருக்கு கர்நாடக இசை பிடிக்கும் தெரியும் என்றார். கடைசியில் தீக புத்தியை காட்டினார். அதாவது கர்நாடக் இசையை பிராமர்கள் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்களாம் – இது ஒரு கேடாம். இப்படி இருக்கு நமது வெறுப்பு.

    பிராமணர்கள் வீட்டில் மூணு வயதிலிருந்தே பாட்டு கிளாஸ் போ பாட்டு கிளாஸ் போ என்று பாடாய் படுத்துகிறார்கள். குழந்தைகளும் உசிரை கொடுத்து பாட்டு கற்று கொள்கிறார்கள் இதனாலேயே நிறைய கர்நாடக சங்கீத பாடகர்கள் பிராமணர்களாக உள்ளனர் .

    கவனிக்க – ஜேசுதாஸ் , உன்னி கிருஷ்ணன், ஷேக் மௌலான ஜான் ஹிக்கின்ஸ் இவர்கேல்லாம் பிராமர்கள் இல்லை – பிராமர்களிடமிருந்து பாட்டு கற்று கொண்டு பிரபலமானவர்கள்.

    ஹிந்துஸ்தானி பக்கம் போனால் அங்கு எல்லாரும் இஸ்லாமிய சமுதாயித்தனர் தான் – இதற்காக அவர்கள் தான் control செய்கிறார்கள் என்றால் அது வெட்டிப் பேச்சு அவர்களே அதிகமாக உழைக்கிறார்கள்

    அதலால் வெ சா சொல்வதை போல வெறுப்பை விடுங்கள் எத்தன மேலாவது விருப்பை வளர்த்துக் கொண்டால் தானாக முன்னேற்றம் வரும்

    இல்லை என்றால் அரசாங்க டி வீ வாங்கிக் கொண்டு ஒரு ஒட்டு போடும் என்திரமாகவோ அல்லது மிசநரிகளிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு கணக்கில் வரும் விசயமாகவோ தான் நாம் என்றைக்கும் இருப்போம்.

    ஹரி ஜனங்களுக்கு முன்னேற்றம் தர எவ்வளவோ இயக்கங்கள் இருக்கின்றன – சங்கத்திலேயே பல பல இயக்கங்கள் உள்ளன. நான் சார்ந்துள்ள இயக்கத்தில் ஒரு மலை ஜாதி பெண் சமஸ்க்ரிதம் படித்து விட்டு இன்று பிராமணர்கள் உட்பட பலருக்கு சமஸ்க்ரிதம் சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறார் . தமிழ் நாட்டில் சமஸ்க்ரிதம் பேச தெரிந்தவர்களில் பிராமணர்களை விட பிராமணர் அல்லாதவரே அதிகம் – இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆயிற்று?

    நாம் கண்ணை மூடிக்கொண்டு பாப்பான் ஒழிக பாப்பான் ஒழிகா என்று கோஷம் போட்டுக் கொண்டே இருந்தால் அவன் பாப்பான் என்பதால் நன்றாக பார்த்து பிழைத்துக் கொள்கிறான் நாம் கண்ணை மூடிக் கொண்டதால் நமக்கு எஞ்சியது நமது கழத்தில் சிலுவை கையில் கருப்பு புஸ்தகம் வீட்டில் கலர் டீ வீ.

  114. திரு.ஆக்னேயா அவர்களே…….

    /// அவர்களின் அறச்சீற்றம்தானே என ஒதுங்கி நிறகவில்லை இராமானுஜர், பாரதியார், வைத்திய்நாதையர் போன்றோர். தம்மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு அச்சீற்றத்தின் காரணமென்ன? அதைப்போக்க‌ என்னென்ன உபாயங்கள் ? எனவாராய்ந்து அச்சீற்றத்துக்குக் காரணாமாயிருந்தோரைக் கடிந்து, அல்லது திருத்தி தலித்துமக்களின் பேராதரவை, பெருநம்பிக்கையை, மரியாதைக்குரிய் பணிவான வணக்கத்தினைப் பெற்றவர்கள் அவர்கள்.//

    இன்று தலித் மக்களின் தலைவர்கள் [ என்று அழைக்கப்படுபவர்கள் ] மேற்குறிப்பிட்ட மூவரை எங்காவது முன் நிறுத்துகிறார்களா ? குறைந்த பட்சம் தங்கள் பேச்சில் குறிப்பிடவாவது செய்கிறார்களா? எத்தனை பதாகைகள் வைக்கிறார்கள்…..இந்த மூவரின் படத்தை நீங்கள் எதிலாவது பார்த்ததுண்டா?

    கிறித்தவ மதமாற்ற சக்திகளின் கைத்தடியாக செயல்பட்ட இம்மானுவேல் ராஜசேகரன் போன்றோர் தானே இன்று ஆதர்சமாக முன் நிறுத்தப்படுகிறார்கள் ?

    சாதியை கற்பித்தவர்கள் பிராமணர்களாகவே இருக்கட்டும்…இன்றும் அதையே பிடித்துக்கொண்டு தலித்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள் பிராமணர் அல்லாத ஜாதி ஹிந்துக்கள் தானே?

    ஆங்கிலவழி கல்வியை கற்கும் உயர் சாதியினர் முன்னேறுவதை கண்கூடாக பார்த்துக்கொண்டே இந்த so called தலித் தலைவர்கள் திராவிட இயக்கங்கள் பாணியில் ,தமிழ், தமிழன் என்று ஜல்லியடிப்பது என்? தலித்துகள் முன்னேறாமல் இப்படியே இருந்தால் தான் தம் பிழைப்பு நடக்கும் என்பதால் தானே?

    கல்வியில், வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி தலித்களை முன்னேற்ற பாடுபடும் ஒரே ஒரு தலித் தலைவரை காட்டுங்கள் பார்ப்போம்..?

    உடனே கழகங்களின் பாணியில் எனக்கு பூணூல் மாட்ட வேண்டாம்…..நான் பிராமணன் அல்ல…….

  115. நான் ஹரே கிருஷ்ணா இயக்க பஜனைகளுக்கு போய் இருக்கிறேன் .. அங்கு ஒருவர் கூட என் ஜாதியை கேட்டது இல்லை …. இது தவிர ஆர்யா சமாஜ் , ராமகிருஷ்ண தபோவனம் போன்ற அச்ரமங்களில் அனைவருக்கு வேதம் சொல்லி தருகிறார்கள் என்று கேள்வி pattirukkiraen ..

    அனால் இதை எல்லாம் விட்டு விட்டு ஒரு சிலர் துக்ளக் இல் ஒரு விளம்பரம் வந்தது – வேதம் கற்று தருவதாக பிராமணர்களுக்கு மட்டும் .. என்று ஒருவர் குறை பட்டு கொண்டார்..

    சாரங் முன்பு ஒரு மறுமொழியில் எழுதி இருந்ததை போல் , இது போன்றவர்கள் தங்களுக்குள்ளேயே அழுகி கிடக்கட்டும் . .நாம் ஏன் அவர்களை பற்றி கவலை பட வேண்டும் ..

    இன்றைய சமுதாயத்தில் நமக்கு கெளரவம் அளிக்க கூடிய எத்தனையோ நிறுவங்கள் இஸ்க்கான் , ராமகிருஷ்ண மடம், samskritha bharathi போன்றவை உள்ளன .. அவை தான் ஹிந்து மதத்தின் எதிர்காலம் .. துக்ளக் இல் வந்த சில பேர் தெரியாத மடங்கள் அல்ல ..

    ஆகையால் யாரையும் வெறுக்காமல் வாழ்வது இன்றைய நிலையில் சாத்தியமே .. ஞானம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது இன்று எளிதாக கிடைக்கிறது ..ஆண்டவன் கருணையால் ..

  116. @க்ருஷ்ணகுமார்
    I am the same Rama. Maybe bitterness is creeping in my views, thanks to repeated unwanted propaganda against my community..Keep writing in your style sir. I really enjoy your Tamil.
    .Mr Agneya
    If you think that quota system is not related to this topic, then I have nothing further to add to your comments. By the way, your comments about me, written in zest were so funny that I nearly died laughing.
    Mr Sarang, HATS OFF TO YOU SIR. I wish I could write so incisively .Enjoyed reading your response, as always.

  117. சகோதரர்களே
    எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன்.ஒரு பெண்ணின் கோணத்தை எழுதுவது தான் சரியென்று தோன்றியதால் எழுதுகிறேன்.
    இத்தனை மறுமொழிகளுக்குப்பிறகு இது பதிப்பிக்கபடாமலும் போகலாம்.
    நான் ஒரு பிராமண பெண். இதை பெருமையாகவோ, சிறுமையாகவோ சொல்லவில்லை. காரணமாகத்தான் சொல்கிறேன்.
    பிராமண பெண்கள் இழிவு படுத்த படுவது ஜாதி ரீதியாக-திரைப்படங்களில் மட்டுமல்ல -தெருவிலும் உண்டு. காரணம் பெரியார் வளர்த்த த்வேஷ எண்ணம்.
    அநியாயத்திற்கு அநியாயம் மாற்றா?
    நான் கல்லூரிக்கு பஸ்ஸில் சென்று வந்த காலத்தில் ஒரு சக மாணவர் ஒரு பாபுலர் பாடலை சற்றே மாற்றி பிராமண பெண்களை அசிங்கபடுதும் விதமாக பாடுவார். அவர் தந்தை DMK வைச் சேர்ந்தவர்.அதிகம் பாட பெறும்
    பாடலாம் இது.
    மனதை கல்லாகிகொண்டு வரிகளை எங்கே எழுதலாம். இந்த தளத்தின் மேல் உள்ள மரியாதை என்னை தடுக்கிறது.
    கூனிக்குறுகி போவேன். இந்த கொடுமை தினமும் யாரும் தட்டி கேட்காமல் தொடர்ந்தது.
    விபூதி குங்குமம் வைத்த, ஆனால் மனசாட்சியையும் அடகு வைத்து விட்ட மற்ற மாணவர்கள் , அவங்க ஜாதி தானே , போனா போகிறது என்று அமைதியாக இதை ரசித்தார்கள்
    முகம் சுளித்த சிலரோ தட்டி கேட்க துணியவில்லை.
    ஓரிரு வருடங்கள் நரக வேதனைக்கு பின் பின் யாரோ கட்டிக்கொண்ட புண்ணியத்தால் பாடலும் ஆவர்கள் நண்பர்கள் இரைச்சலும் நின்றன.
    ஆனால் இன்றளவும் நினைச்சாலே ஆவேசம் எல்லாம் இல்லை.
    அது ஒரு மோசமான சூழலில் வளர்ந்த பையனின் தவறு.
    இன்று எனக்கு திருமணம் ஆகி வீட்டில் ஒரு சிறுவன் வளர்கிறான்.
    அந்த மாணவரும் ஒரு பெண்ணை காதலித்து அவளைக்கைவிடாமல் மணந்து ஒரு தந்தை ஆகி என் மதிப்பில் உயர்ந்து விட்டார்.
    அவர் என்னை நேரடியாக துன்புறுத்த எண்ணி செய்தாலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நான் நினைத்ததில்லை.
    மன்னிப்பு கேட்பது , கட்டுப்படுத்தி கேட்க வைப்பது எல்லாம் நம் வழக்கங்கள் அல்ல. [ நம் என்றால் இந்திய ]
    மன்னிப்பு வேண்டுபவர் முதலில் அதை செய்கையில் காட்டுவதே நம் பழக்கம். வார்த்தை என்ன பெரிய வார்த்தை? உள்ளுக்குள் கோபம் இருக்குமானால் பழி-பழிக்கு பழி தானே தொடர்கதை? மன்னிப்பு நாடகங்கள் எல்லாம் நாடுகள் நடத்துபவை.
    அவர் அச்செய்கையை நிறுத்தியதன் மூலம் மன்னிப்பை பெற்று விட்டார்.
    மீறியும் நான் மன்னிப்பு என்று அலைந்திருந்தால் வெறுப்பு தொடராகி இருக்கும்.எதற்கு சொல்கிறேன் என்பது உங்களுக்கே புரியும்.

    பணி இடத்திலும் ஜாடை மாடையாக ஏதேனும் பேசுபவர்கள் உண்டு.
    ” நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்றானே எங்கள் முப்பாட்டன்
    [ ஜாதி என்று அலற வேண்டாம். அந்த உண்மையான சீர் திருத்த வாதி , அந்த மீசைக்கார ரோஷக்காரன் எல்லா தமிழ், ஏன் இந்திய பெண்களுக்கும் முப்பாட்டன்.அவன் கொடுத்த நன்மொழிகளில் பெரியாரிய ஜாதி வெறுப்பு பெண்ணை போகப்பொருளாக்கி அடிமைப்படுத்தும் மேற்கத்திய எண்ணம் அப்படியே அடி பட்டு போகிறது.] அவனை தியானித்து கோபத்தை அடக்கி பொறுமையாக அந்த நண்பருடன் பேசினேன். தான் செய்தது தவறென்று அவரும் ஒப்புக்கொண்டார். அவர் அடிப்படையில் நியாமான மனிதர் ஆனதால். எல்லோரிடமும் இது பலிக்காது என்று எனக்கும் தெரியும்.

    சகோதரர்கள் அஞ்சன்குமார் மற்றும் ஆக்னேய போன்றோர் யோசிக்க வேண்டும். -யாருடையதும், காரணமற்ற ஆவேசம், குறி தப்பி வசதியான இலக்கை குத்த எண்ணும் ஆவேசம், தனக்கும் , சமூகத்திற்கும் ஆகவே ஆகாது.

    பெண்களுக்கு ஆவேசம் வரும். சக பெண்ணை துகில் உரிந்தார்கள், மானபங்கம் செய்தார்கள் என்று கேள்விப்படும் போது.
    உணர்ச்சிவசப்படும் ஜென்மமாக அந்த ஆண்டவன் எங்களைப்படைத்து விட்டதால் உடனே கண்ணீரும் வரும்.உடனே அழுதும் விடுவோம்.
    இதற்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஒரே விதமான தொல்லைகளை வேதனைகளை அனுபவிக்கும் சாராரின் அற ஆவேசம் இது. குற்றத்தை செய்தவன் மீது மட்டும்-கவனிக்க -மட்டும் வரும் ஆவேசம் அது.
    ” பாத்தாலே அடி” என்று சொன்ன ரேசிசம், வேறு. அற ஆவேசம் வேறு.
    எது நம் தேவை உணருங்கள்.
    மேலும் திரு வேசா கோபமாக பேசியிருக்கலாம். ஆனால் அவர் ஜாதி ரீஎதியாக பேசவில்லை என் பின் புத்திக்கு புரிந்த வரை.தனி மனிதனாக தான் பேசுகிறார்.
    நம்மை தப்பா பேசுவார்கள் என்று தவித்த பல பிரபல பிராமணர்கள் தாங்களும் சேர்ந்து ” தர்ம அடி” யில் இறங்கியது உண்டு. திரைப்படங்களில் அசிங்கப்படுத்தியதும் உண்டு. அதற்க்கு அவார்டெல்லாம் கூட கொடுக்கிறார்கள்.
    சகோதரர்களே, மதம் கூட வேண்டாம் என்னும் லிபரல் ஆகக் கூட நீங்கள் இருக்கலாம். மனிதம் என்கிறார்களே அதுவுமா வேண்டாம்?
    ஏன் இந்த புத்தகத்திலேயே பாப்பான் என்ற வார்த்தை உள்ளது. உள்ள நிலையை அது புரிய வைக்கிறது. வேறொரு சக்தி மிக்க ஜாதியினரை குறிப்பிடும் வார்த்தை இருந்திருந்தால்?

    நம் சகோதர சகோதரிகள்,யாராக இருந்தாலும் . பிராமணர், வேளாளர், ஆதி திராவிடர் என அவர்களை இழிவு படுத்துவது, ஜாதி பெயரை சொல்லி திட்டுவது நம் அரசியல் சட்டதிர்ற்கு எதிர் -சரிதானே?
    மனிதர்களாய், இந்தியர்களாய் நாம் அதை ஒரே மாதிரி எதிர்க்காவிட்டால் நாம் என்ன மனிதர்கள்?
    நாம் என்ன நாட்டை முன்னேற்றி விடபோகிறோம்?

    அலர்மேல்மங்கை

  118. மேலே உள்ள மறுமொழியில் கடைசிப்பத்தியில் நான் சொல்வதெல்லாம் ஜாதிப்பெயரை கொண்டு கழக வெறுப்பில் திட்டுபவர்களைதான் . ஆனால் இப்புத்தகம் அந்த வெறுப்பை analyse செய்கிறது -இது நல்ல முயற்சி -இந்த புத்தகம் பார்ப்பான் என்ற வார்த்தை உபயோகித்து சொல்லும் செய்தி இன்று நமக்கு மிக தேவையான ஒன்று.அதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
    எந்த ஜாதிப்பெயர் கொண்ட வெறுப்பு வார்த்தையும் கொண்டு நம் காது பட யாரும் யாரையும் திட்ட முடியாது , அசிங்கப்படுத்த முடியாது என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.அன்றே நாம் உண்மையில் ஒரு சமூகமாக முடியும்.
    அலர்மேல்மங்கை

  119. \\\\\\\\நான் எப்படி ஜாதிக்கவலரானேன், வெறுப்பை உமிழ்கிறேன் என்று தெரியவில்லை. கிருஷ்ணகுமாரும் அக்னேயாவும் எனக்கு தெளிவு படுத்தினால் நல்லது. \\\\\\\\

    Sir, pardon me to reply in English..

    In my reply dated 9/9/11, Sir, Surprisingly, I found your replies harsh. It would be unbecoming of me to sort of pointing out things to a pitha samana vyakthi. What I write below is my understanding which you may accept or disregard If I am wrong.

    About wrong ideas and information. In bhashya, an informed wrong idea is termed as “Purva paksha”. The bhashya explains the “purvapaksha”, analyses it logically and establish the truth finally called as “Sidhantha”. My point here is clearing a wrong idea is giving more shine to the truth. The truth towering tall bereft of all misnomers.

    In my earlier replies, I was simply trying to request our friends to accommodate descent whether it is informed or uninformed – correct or incorrect – unabusively. For, it gives an opportunity to understand the point of views of another human being and on analysis either you convince or get convinced.

    My only observation regarding your reply is the tone and tenor. Sir, the painful aspect is that when truth is presented in a harsh manner, the truth gets buried under the carpet and what remains above is just the tone and tenor.

    That was my concern expressed in my latter reply also.

    with all humility
    krishnakumar

  120. Shrimathi அலர்மேல்மங்கை
    Pranams. well said. Please keep writing. It so wonderful to read response such as yours.So much maturity and so much clarity. How refreshing to read such views.
    Thank you

  121. திரு ராமா அவர்களுக்கு
    நன்றி.மிகவும் யோசித்த பின் தான் எழுதினேன். இது போல் சொல்ல மறந்த கதைகள் நிறைய இருக்கலாம். Us and them என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தீவிரமாக ஊடுருவயுள்ளது.அரக்கர்கள் இன்று வெளியில் இல்லை.
    ஆனால் இதை வெறும் மருந்து மற்றும் சரியான உணவு கொடுத்து சரி செய்ய முடியும். சுதந்திரத்திற்குபிறகு இது நடந்திருக்க முடியும். ஏன் நடக்கவில்லை என்றால், சரியாகி போகும் அறிகுறிகள் காட்டிய வியாதியை குணபபடுத்துவதாய் சொல்லிக்கொண்டு நோயாளியை ஒரே போடாக போட்டு கோமாவில் தள்ளி விட்டார்கள் ஆட்சி செய்த சிலர். அடுத்த தலைமுறையாவது நல்லபடி வளர வேண்டும்.
    அலர்மேல்மங்கை.

  122. //Maybe bitterness is creeping in my views, thanks to repeated unwanted propaganda against my community//

    Rama

    The bitterness may lead to many vices – v c it happening in Paramakkkudi nowadays. Ur bitterness s depriving u of having sense of humour – essential for a wholesome life. Not only here; but everywhere in this forum, ur comments r bitter. U become passionate at the very mention of ur community negatively.

    Only the players in the tragedy in Paramakkudi and elsewhere r different. But the reasons and feelings r the same cooking up bitterness finely.

    Just stop saying and feeling ‘my community’, you will find a big change coming over u. The bitterness s gone and the mind opens up to new vistas !

    ‘We’ and ‘They’ – r anti-social words found mostly in the community u have come to defend here so passionately. So far as others r concerned, found only among the Pallars and Thevars of Ramnad district – the dramatis personae in the tragedy being enacted there for more than a half a century ! As far as I can see, it s not the religion (Hinduism) that s the pivot of anti-brahminism. Coz, most Tamilians cutting across castes and communities, love and practise vedic hinduism in their own way. Rather, it s the dismal marks that ur community scored in integration index historically. A point that was flogged to success by Periyar and his followers. It s naive to believe he was against Hinuduism per se. A boy who was born to a very orthodox Vaishnavas cd not have come to hate the religion. The hatred was self-imposed ploy he used in later years. The root cause was picked up gradually from the style of ur living that antagonised many. Hatred of brahmins led to hatred of Hinduism in Periyaar.

    Dont try to pass the buck. Accept it so that it can be demonetized right now ! Lets demonetize the currency.

    In Paramakkudi, integration has become impossible because they have the same feeling as u espouse here:

    WE and THEY.

  123. The main point of criticism in my mges against VeSaa s not even his harsh words but the age disparity between him and his adversary.

    He s an octogenarian – an age for which Hindu religion has prescribed the last stage of no ill feelings or rancor against anyone, let alone young ppl; Malice to none and charity to all. He shd have given up all attachemnts, inclduing ‘my communtiy’ The attachments bring bitterness.

    Grand parents shd not pick up quarrles with grand children.

  124. The entire mge written by AM shd be dismissed in limine.

    All things that happened in college days between boys and girls belong to non-serious world, no matter whether a boy has been brainwashed with this or that agenda.

    Boys will b boys; and girls shd b girls (meaning they shd not take these things seriously When exams r round the corner, all of us will have little time but to pass the exam somehow; otherwise our parents will deprive us of our daily food. College hostels become morgues – eerlie silence for a few months ! )

    Of course, there s a limit; but using caste habits to tease a particular caste girl s not one of them at all !

    Every girl, whichever caste, region or religion she comes from gets teased. For boys, anything s useful if it can make her look up and notice. He gets ‘noticed’ by the princess :-)))

    In Delhi, hav seen northern state boys teasing southern state girls referring to the food habits of South Indians; in Chennai, have seen boys teasing marwari girls using their peculiar lingo. Mallu girls getf teased in broken malayalam and malayali food habits. Boys learn a few sentences in Malayalam for this.

    These r memories that can give a pleasant recall in our old age. Cherish them.

    AM cd share it as a joke with her husband. If I were a woman, I wd.

  125. Agneya
    Thanks for your unsolicited advise. Really, I need it like a hole in the head, specifically from someone who follows EVR.
    This will be my last response to you. I do not want to waste my time responding to immature posts.
    You really do not get it.It is PEOPLE LIKE YOU, are the cause of my rising bitterness. I am sorry to say this.You are the one who is going on about Brahmins(my community if you please!!!) and their evil deeds.Even this sense of “my community ” would not have come, if not for head in the sand , wallowing in the past people like you. I have maintained that I am only a Brahmin by birth. Varna side, I think I am part ” Vanniga and part Sudra”. See, I clean my own toilets and sweep the foot path around my house!!
    Suffice to say that my family and myself are doing/ supporting quite a few charity (rural) organizations in India, mainly for the Hindu cause. This is not meant as a boast, but get it across to people like you who keep harping on about what our forefather did to Dalits.
    My advise to you, unsolicited of course. Get rid of that hatred. Open your eyes.See, we are not the real horrible monsters. We have grown out of our past and have matured.
    It is time for you to do the same.

  126. Agneya,

    // In Delhi, hav seen northern state boys teasing southern state girls referring to the food habits of South Indians; in Chennai, have seen boys teasing marwari girls using their peculiar lingo. Mallu girls getf teased in broken malayalam and malayali food habits. Boys learn a few sentences in Malayalam for this.

    These r memories that can give a pleasant recall in our old age. Cherish them. //

    Shows how mentally sick you are. Boys teasing women in public and making gestures to them deserve to be taught a lesson or two.

    Plus the stereotyping of Brahmin girls in Tamil movies is nothing minor. In Tamil Nadu, if a Brahmin girl/boy gets made fun of their peculiar Tamil (Paribhashai), it is okay. Do the same thing teasing MBCs/OBCs and then there will be arival vettu kuththu.

  127. ஆசிரியர் குழுவினரே

    ஆக்னேய அலர்மேல்மங்கை பற்றி அசிங்கமாக எழுதிய பதிலை தயவு செய்து நீக்கிவிடுங்கள் – அதை cut paste செய்து எழுதிய பதில்களையும் நீக்கி விடுங்கள்.

  128. //Shows how mentally sick you are. Boys teasing women in public and making gestures to them deserve to be taught a lesson or two. Plus the stereotyping of Brahmin girls in Tamil movies is nothing minor. In Tamil Nadu, if a Brahmin girl/boy gets made fun of their peculiar Tamil (Paribhashai), it is okay. Do the same thing teasing MBCs/OBCs and then there will be arival vettu kuththu.//

    The second para s irrelevant here as we r not discussing the Tamil cinema and depiction of women there.

    Of the first para, it s ur perception that anyone who writes as I hav, is sick mentally. Better to hav a friendly chat with a psychologist dealing with young ppl and, he will, more or less,.endorse me. Mathrubootham s not alive; but Reddy s with us. The first full blooded secretion of harmones play a lot of mischief.

    Ur second sentence in the first para, mentions ‘boys teasing women in public”. U r twisting here. Am talking abt boys and girls. Not boys and women.

    It s a pity that when we grow up to middle and advanced age, we pretend that v had had no adolescence and young age. I don’t pretend like that. Boys shd tease girls; and girls shd enjoy getting teased provided it s all fun. It was a happy world. Nevertheless, if a particular girl s ‘spoilt’ at home to entertain the thought that all boys, who teases, come necessarily with an ‘agenda’ or has malicious intention to lower the dignity of the female sex, such a girl shd be left unnoticed and let her live in her own misconceived world. She s an old woman in an young age. Progeria.

    AM has done a mistake in this forum. She shd avoid such recall in public fora like this, as touchy Ramas derive unwanted inferences from reading such recall and will suffer, what s called, ‘siege complex’, meaning ‘everyone is against us’

    What happened with just one college boy who did it all as fun and it may be a bout of youthful indiscretion, may be mistaken as an insult to brahmins and caste, by sensitive souls like Rama. His hatred of other communities will only aggravate. Already he has a big load.

    Please avoid such recall of college experiences in public forums. Try to remember abt some one who was in your best books during that time and happened to b not from ur community.

    TPM and UVesa. Kamaraj and RV. and Thirukachinambikal and Ramanujar. (all first mentioned r mentors)

    why cdn’t b AM and ….?

  129. தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு…..

    வர வர இது தமிழ் தளமா அல்லது ஆங்கில தளமா என்று சந்தேகம் வருகிறது.

    மறுமொழிக்கான பெட்டியில் தமிழ் – ஆங்கிலம் toggling வசதி தரப்பட்டும் என் இத்தனை ஆங்கில மறுமொழிகள்?

    கணிப்பொறியை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு இந்த வசதியை உபயோகப்படுத்தி தமிழில் எழுத தெரியாதா?

    இதில் குறிப்பாக திராவிட இயக்க ஆதரவாளர்கள் தான் அதிகம் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்…..இதுதான் இவர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம் போலும்…..

    வெள்ளையன் போய் எழுபது வருடங்களுக்கு மேல் ஆகிறது…..இன்னும் ஆங்கிலத்தில் பேசினால்,எழுதினால் தான் மரியாதை என்ற அல்பத்தனம் தொடர்கிறது……

    ஒன்று அவசியமற்ற ஆங்கில மறுமொழிகளை தடை செய்யுங்கள்….அல்லது இந்த தளத்தை ENGLISH HINDU ஆக மாற்றி விடுங்கள்…..

    மெல்ல தமிழ் இனி சாகும்?

  130. நியாயமான வாதம் செய்வது அல்ல- முடிந்தவரை சிறுமைப்படுத்துவது தான் நோக்கம் என்பது திரு ஆக்னேயா புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி.
    .
    .தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள், தமிழ்ப்படங்கள் பார்த்தவர்கள், திக கூட்டங்களில் பேசுவதை குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் தெருவைக்கடக்கையில் கேட்க நேர்ந்தவர்கள் எல்லார்க்கும் நான் மொழி நடை பற்றி பேசவில்லை …தி. க. ரக ஆபாச மொழி ரேசிசம் , சொல்லில் வடிக்க முடியாத ஆபாசம் பற்றி பேசுகிறேன் என்று நன்றாகவே புரியும்.அது வேறு -“இளவரசன்”. ” இளவரசியை கவனிக்க செய்வது வேறு என்பது புரியும்.

    தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான் -என்று சொல்வதெல்லாம் வழக்கம் போல் அடுத்தவர்க்கு மட்டுமான அறிவுரை.

    நான் எழுதியதையே நம் ஒரு தலித் சகோதரி எழுதியிருந்தால் தி .. க மனநிலைக்கு ஏற்றாற்போல் அதற்கும் பிராமணர்கள் தான் காரணம் என்பதை ஆங்கிலத்தில் ஒரு பாராவில் எழுதியிருப்பார்.இரண்டும் இரண்டும் பத்து என்று தமிழில் , ஆங்கிலத்தில், சுவாஹிலியில் எப்படி சொனாலும் தவறு தான். நம்ப விரும்புபவர்கள் நம்பலாம்.

    நான் என்பதால் ” சிப்பு சிப்பா வருது “ரக மறுமொழி.

    தூங்குவது போல் நடிப்பவர்கள் தானாக எழுந்து வந்தால் தான் உண்டு.

    தங்கள் teenage மகள்/சகோதரி விஷயத்திலும் இப்படிதான் ஞான நிலையிலிருந்து பேசுவீர்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.
    எதிர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ” இதெல்லாம் ரசிம்மா- இது தான் வயசு ” என்று ஒரு தகப்பன் சொல்ல முடியுமா?

    ஏன் வேறெந்த ஜாதி பெண்களைப்பார்த்து தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஆபாசப்பாடல் பாடினாலும் கலவரம் வெடிக்கும்.அதற்கும் பழி போட ஒரு குழுவினர் உள்ளார்களே வசதியாக.

    இந்த ரக பாடல்கள் தொண்டர்களை பொதுக்கூட்டங்களில் குஷிப்படுத்தவே பாடப்படுகின்றன. நல்ல கட்சி பண்- பாடு தான்.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த வயதான பெண்மணிகளையும் தமிழ் சினிமா ஆபாசமாகவே சித்தரிக்கிறது . கடந்த ஆட்சியில் வலிய திணித்த காட்சிகள் ” ” வித்யாசமான” படங்களிலும். வயதான பெண்மணிகள் இந்த வக்கிரங்களை பார்த்து ரசிக்க வேண்டும் போலும்.

    ” us and them ” ” we and they” [ எல்லாம ஒன்று தான்] எல்லாம் “lets divide them and conquer them” நோக்கம் தான்.இந்த புத்தகம் சொல்வது போல் அன்று ஆரம்பித்தது திராவிட மாயை வியாதி இன்றைய ” எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்” என்ற ஆங்கில மறுமொழி வரை இதே கதை தான்.

    இது ஆரம்பத்திலேயே புரிந்ததால் தான் சிலர் கோபபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தொநூறு அல்லது நூறு வருடங்களாக இந்த மனநிலை எப்படி எல்லாம் உருமாறி உள்ளது என்பதை இந்த vettupuli புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் இந்த கட்டுரையின் ஆசிரியர் தெளிவு படுத்துகிறார்கள்.
    அதையே மேலும் உறுதிப்படுத்தும் மறுமொழிகள் -சற்றே நிறம் மாறி, வேறு சட்டையில் … அவ்வளவுதான்.
    ” அடச்சே, இது எல்லாம் ஒரு விஷயமா, ,” என்பது போல் ஒரு வேதனை தரும் விஷயத்தை பற்றி patronising , கிண்டல், ஏளன பேச்சு வேறு சில தளங்களில் இருந்து பெண்களை விரட்ட பயன்படலாம்.
    மேலும் இத்தகைய எள்ளல் நகை மொழிகளுக்கு பதில் சொல்ல எனக்கு பொழுது இல்லை. எழுதியவரின் நோக்கம், இப்போது தான் [ நான் கொஞ்சம் tubelight ஆனதால்] தெரிகிறது, அது இந்த கட்டுரையின் வெற்றி.

    ஆங்கிலப் பெரியவர்கள் ஒன்று சொல்வார்கள்.சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரை பல நாள் ஏமாற்றலாம். எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

    அலர்மேல்மங்கை

  131. பல விடயங்களை விரவி எழுதினால் பதில் சொல்வது கடினம்

    தி.க + தலித் vs பிராமணன் + மற்ற கட்சிகள்

    என்ற ஒரு சமன்பாடு வெளிப்படுகிறது. இது உங்க ஜாதியை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறது. it is potentially dangerous. In the ultimate, it will prove bad for your community. Do u want to b against dalits ? The qn will arise. Sofar as Tamil daltis r concerned, they view Tamil brahmins far better than they do the caste hindus. That was why, out of the 5 or six candidates nomianted for TN assembly elections, 3 were brahmins. In UP, too, Brahmins have joined BSP and have become Minsiters there.

    This camraderies and brotherhood will b shattered by people like you if you write in public forma like this creating the aforesaid diabolical equaltion.

    ஏற்கனவே உங்கள் ஜாதியால் இந்துமதத்தின் சமன்பாடு தவறாகாப்பார்க்கப்படுகிறது. “இந்துமதமென்றால் பார்ப்பனருக்கே”. அதை முறியடிக்கபெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது.
    அதே வேலையை இங்கும் செய்கிறீர்கள். தெரிந்தே செய்யவில்லை என்றெல்லாம் டபாய்க்கமுடியாது.

    தலித்துகள் தனிமனிதர்கள் என்று இன்றில்லை. அவர்களிடமிருந்து உங்களைப் பிரிக்காதீர்கள்.

    பிராமணப்பெண் என்ற நினைபே அசிங்கம். பெண் என்ற நினைப்பே போதும்.

    ராமநாதபுரத்தில் ஒரு தலித்துப்பெண் ஒரு மறவர் பெண்ணை, அக்கா என்று கூப்பிடமுடியாது. ‘ஏண்டி…நான் உனக்கு அக்காவா ?’ என்ற கோபமான பேச்சுவரும்.

    பெண் என்ற உணர்வு இல்லாமல் நான் ஜாதி என்ற உணர்வே பெண்களுக்கிடையேயும் வரும் பரிதாபம் அங்கே.

    As a woman, join fellow woman whichever caste they come from.

    ஜாதி என்பது ஆண்களால் ஜோடிக்கப்பட்டவை. பெண்களுக்கென்று கிடையா. அப்படியே தான் ஒரு ஜாதி என்று சொல்லவேண்டியக்கட்டாயம் வரின் அவள் கணவனின் ஜாதியே அவள் ஜாதி. ஆண்கள் ஏன் ஜாதிகள் என்றலைகிறார்கள் தெரியுமா ? அவைகளை வைத்து பவர் கோட்டைகளை உருவாக்கலாம். ஆயுதங்களாக வைத்து நலிந்தொரையும் எளியோரையும் வதைக்கலாம். ஆணுக்கு வேண்டியது பவர். அவன் 90 வய்துக்கிழவனாலும் அவன் தேடுவது அதே.

    ஒரு பச்சைக்குழந்தை தனியாக நின்று அழும்போது பச்சாபித‌ப்பட்டுத் தூக்கும் தாயுள்ளம் பெண்ணுக்கு. if not, she is a devil. அது தலித்து குழந்தையா என நோண்டும் மறவரும், அது பூணுல் போட்டிருக்கிறதா எனச்சுரண்டிப்பார்க்கும் பார்ப்பனக்கிழவன்களும் I refer to the old men here coz they r overpowerwing the minds of the new generations. Let them go to graves soon taking along with them the noxious casteism.

    ஆண் வர்க்கம். ஏன்? ஆண் அப்படித்தான். இன்று ஜாதிக‌ள் வேண்டாமென்றால் எதிர்க்க‌வ‌ரும்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளே. பெண்க‌ள் வில‌கி நின்று நெட்டை ம‌ர‌ங்க‌ளென‌ நின்று புல‌ம்ப‌த்தான் வேண்டும்.

    17லிருன்து 19 வ‌ரைதான் க‌ல்லூரி இள‌ங்க‌லைப்ப‌ருவ‌ம். இக்கால‌த்தில் ஒரு பைய‌ன் செய்த‌வ‌ற்றை கால், க‌ண் வைத்து “அவ‌ன் என்னைக்கிண்டல் ப‌ண்ணினாலும் ப‌ர‌வாயில்லை; என் ஜாதியை அல்ல‌வா ப‌ண்ணிவிட்டான்?” என்று பொது ம‌ன்ற‌ன்க‌ளில் எழுதி ஏற்க‌ன‌வே ஜாதித் தீயில் வென்து நொன்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளை மேலும் வெறிய‌ர்க‌ளாக்க‌ வேண்டுமா ?

    Please introspect.

  132. The brahmin hatred of anjan kumar & his ilk is not surprising.

    EVR went to every nook & corner of tamilnadu & posioned the minds of people into believing that brahmins are responsible for all the evils in society.

    In his meetings he used to say ” Marry a brahmin woman. Have XXXXX with her & once the job is done, throw her out”. The crowad used to enjoy that.

    To think that the title “periyar” was given to him by women.

    Shameful.

  133. திரு. ஆக்னேயா அவர்களே…..

    பத்தாம் தேதி நான் கேட்ட சில கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லையே ஏன் ?

    பிராமணர்கள் soft targets……அவர்களை தாக்குவதுதான் பாதுகாப்பு…..இல்லையா?

    பதில் சொல்ல முடியாத கேள்விகளை choice ல் விட்டுவிடுவது தான் புத்திசாலித்தனம் …..இல்லையா?

  134. ஆக்னேய

    //
    Agneya
    13 September 2011 at 12:34 pm
    பல விடயங்களை விரவி எழுதினால் பதில் சொல்வது கடினம்

    தி.க + தலித் vs பிராமணன் + மற்ற கட்சிகள்

    //

    நீங்கள் எழுதிய இந்த பதில் அனாவசியமானது – நீங்கள் நன்றாக குழம்பி உள்ளீர்கள் என்று தெரிகிறது.

    அலர்மேல் மங்கை ஒன்றும் நான் பிராமணப் பெண் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. பிராமணர்கள் என்பதனால் எவ்வளவு கிண்டலுக்குaiththui உள்ளாகிறார்கள் என்பதை சொல்லவே அவர் எழுதினார்.

    பிராமணப் பெண் என்ற identity வேண்டாம் பெண் என்ற identity போதும் என்றால் தலித் என்ற identity மட்டும் என் வைத்துக் கொள்கிறீர்கள். பிராமண வெறுப்பு என்ற ஒரு concept ஏன் வைத்துக் கொள்கிறீர்கள்.

    ராமனத்தபுரத்தில் நடப்பதற்கு பிராமணர்கள் காரணம் அல்லவே – இதை தானே மீண்டும் மீண்டும் இங்கு எடுத்துரைக்கப் படுகிறது. பிறகு ஏன் replay button ஐ அழுத்திக் கொண்டே இருக்கீர்கள்.

    சரி பிராமணர்களை வெறுத்து தான் தீருவேன் என்றால் தாரளமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேறுத்துவிட்டுப் போங்கள்.

  135. அன்புள்ள சரவணன்,

    ஓர் அளவு அடிப்படையில் நாகரீகமும், பண்பாடும், நேர்மையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற முனைப்பும் இல்லாது, பேட்டை ரௌடி மாதிரி வம்படி பண்ணுகிறவர்களோடு என்ன சம்வாதம் சாத்தியம்? அலர்மேல் மங்கைக்கு இவர்க்ள் அளித்த பதில்களிலிருந்து இப்படிப்பட்ட ஜீவன்களுமா இங்கு என்று வெறுப்பு ஏற்படவில்லையா?

    தொடர்ந்து இவர்களுடன் பேசி என்ன ஆகப் போகிறது? இந்த ஜீவன்கள் வேறு ஏதாகவும் மாற்ப்போவதில்லை.

  136. “தி.க + தலித்”

    திகவுக்கும் தலித்களுக்கும் என்ன தொடர்பு; எப்போது தொடர்பு; இந்த ‘க’ அந்த ‘த’ வுக்கு என்ன செய்தது; ஏதாவது செய்திருந்தால் பரமக்குடியில் ஏன் இந்த நிலை?

  137. நான் அறிந்தவரை ஹிந்து சமுதாயத்தில் பிராமணர், தாழ்த்தப்பட்டோர் இருவருமே soft targets ஆகத்தான் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் militant ஆகி வருகிறார்கள். பிராமணரும் ஆக முயற்சிப்பது நல்லது.

    தாழ்த்தப்பட்டோருக்கு சமூக அந்தஸ்து அளிப்பதிலும் மற்ற உதவிகள் செய்வதிலும் பல பிராமணர்கள் மனப் பூர்வமாகப் பாடுபட்டு ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படும் அளவுக்கு எதிர்ப்புகளை சந்த்தித்ததுண்டு. ஆலயப் பிரவேசத்தின்போது தாக்கப்பட்ட பிராமணர்கள் பலர். மேலும் தாழ்த்தப்பட்டோர் சம்பந்தப்பட்ட விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கப்படுகையில் ஒரு பிராமண நீதிபதியையே நியமிக்க வேண்டும், அப்போதுதான் தங்களுக்கு நடு நிலையான நியாயம் கிட்டும் என்று தாழ்த்தப் பட்டோர் சார்பில் கடந்த காலங்களில் கோரிக்கைகள் வைக்கப்பட்டதுண்டு. பழங் காலத்திலும் தாழ்த்தப் பட்டோர் மீது பிராமணர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது. கோபால கிருஷ்ண பாரதியார் ஒரு பிராமணர். அவரை யாரேனும் ஒரு நாயனாரின் சரிதத்தை இசை நாடகமாக எழுதுமாறு நாகப் பட்டினத்து நகரத்தார் பெருமக்கள் வேண்டுகோள் விடுத்தபோது அதற்கு இணங்க கோபால கிருஷ்ண பாரதியார் தேர்வு செய்தது திரு நாளைப் போவார் என்கிற பக்திமான் கதையைத்தான். நகரத்தாரும் மிக்க மகிழ்ச்சியுடன், மனமார்ந்த ஒருமை உணர்வுடன் அதை வரவேற்றனர். காரைக்கால் அம்மையின் கதை சொல்லலாமே என்று சுயாபிமானம் கொள்ளவில்லை.
    பிராமணர்-தாழ்த்தப்பட்டோர் இணைந்து செயல் படுவது ஹிந்து சமுதாயம் ஒன்றுபட ஒரு முன்னோடியாக இருக்கும். இவ்விருவரையும் இணைக்கும் வேலையில் இறங்குங்கள் என்று மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லவேண்டியவர்களிடம் சொல்லி வந்துள்ளேன். அப்போதைக்குத் தலையாட்டுவார்களே தவிர காரியத்தில் எதுவும் நடப்பதில்லை. நானும் சலித்துப் போனேன். மாயாவதி முந்திக் கொண்டார்! நீ எங்களுக்குச் சொன்னதை மனு வாதிகள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த மாயாவதி செயல் படுத்தி வெற்றியும் பெற்றுவிட்டார் என்று ஒரு தலைவர் பிற்பாடு சொல்லி வருத்தப்பட்டார்!
    -மலர்மன்னன்

  138. 1. தி.க + தலித்”
    திகவுக்கும் தலித்களுக்கும் என்ன தொடர்பு; எப்போது தொடர்பு; இந்த ‘க’ அந்த ‘த’ வுக்கு என்ன செய்தது; ஏதாவது செய்திருந்தால் பரமக்குடியில் ஏன் இந்த நிலை?//

    Thiru Kannan

    தலித்துகளுக்கு ஒன்றென்றால் தி.கவினர் விடுவார்களா என்று அ.ம கேட்கிறார். அவரின் எழுத்துக்கள் அப்படிப்பட்ட சமன்பாடு இருப்பதாகச் சொல்கிறது. அந்தச் சமன்பாடு குறும்புத்தனமானது. அக்குறும்பு அவரின் எழுத்துக்களில் தெரிகிறது என்று நான் சாடுகிறேன்

    உங்கள் கேள்வி அ.மாவைப் பார்த்தே கேட்கப்படவேண்டும். அ.ம பதில் சொல்வார் என நம்புகிறேன்.

  139. //நீங்கள் எழுதிய இந்த பதில் அனாவசியமானது – நீங்கள் நன்றாக குழம்பி உள்ளீர்கள் என்று தெரிகிறது. அலர்மேல் மங்கை ஒன்றும் நான் பிராமணப் பெண் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. பிராமணர்கள் என்பதனால் எவ்வளவு கிண்டலுக்குaiththui உள்ளாகிறார்கள் என்பதை சொல்லவே அவர் எழுதினார்.
    பிராமணப் பெண் என்ற identity வேண்டாம் பெண் என்ற identity போதும் என்றால் தலித் என்ற identity மட்டும் என் வைத்துக் கொள்கிறீர்கள். பிராமண வெறுப்பு என்ற ஒரு concept ஏன் வைத்துக் கொள்கிறீர்கள். ராமனத்தபுரத்தில் நடப்பதற்கு பிராமணர்கள் காரணம் அல்லவே – இதை தானே மீண்டும் மீண்டும் இங்கு எடுத்துரைக்கப் படுகிறது. பிறகு ஏன் replay button ஐ அழுத்திக் கொண்டே இருக்கீர்கள்.
    சரி பிராமணர்களை வெறுத்து தான் தீருவேன் என்றால் தாரளமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேறுத்துவிட்டுப் போங்கள்.//

    திரு சாரங்கன்!

    அ.ம, 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு 18 வயதுப் பையனின் வயசுக்கோளாறில் செய்த குறும்பை வைத்து, தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாதோர் மீது வெறுப்பைப் பன்மடங்காக ஆக்கும் ‘தெய்வீகப்’ பணியில் ஈடுபட்டிருக்கிறார் . 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்செயல் நினைவுகூறல் எதற்காகப் பின்னே ? இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரும் தன் நினைவு கூறலைப் பயன்படுத்தி பகை வளர்க்கலாமே? 70 ஆண்டுப்பகை நடைபெறுகிறதே பரமக்குடியில் நம் கண்முன்?

    என் ஜாதி என்கிறார் ராமா என்பவர். என் ஜாதி என்கிறார் பெரும் எழுத்தாளர் வெசா. என் ஜாதி என்கிறார் அ.ம.

    இவர்களுக்கும் ‘என் ஜாதி’ என்னும் பரமக்குடி முக்குலத்தோருக்கும் என்ன வித்தியாசம் ? அவர்கள் கொல்கிறார்கள். நீங்கள் சொல்கிறீர்கள் ? அவ்வளவுதானே?

    மேலும், செய்தவன் சின்னப்பையன். 18 அல்லது 19 வயது கல்லூரி மாணவன். 50 வயதுக்காரர்கள்- அதுவும் எம்.எல்.ஏக்கள் – சட்டசபையில், ஜெயலலிதாவைப் ‘பாப்பாத்தி’ என்கிறார்கள். பரிதி இளம்வழுதியை ‘பறப்பயலே வாயை மூடென்கிறார்கள். தமிழகம் பார்த்தது.;கேட்டது; பத்திரிக்கைகள் எழுதின.
    இவர்கள் செய்வதுதான் ஜாதித் துவேசம். ஜாதிவெறி. இவர்களில் எவரையேனும் ஆதரித்தால் மட்டுமே ஒரு சாதியின் மேல் வெறுப்பெனலாம்.

    பிராமணச்சாதியின் மீது வெறுப்பு என்ற போர்வையைப் போட்டு அ.ம செயவது சரியென்று சொல்ல முடியாது. அப்பையன் தி,.க வின் மூளைச்சலவை செய்யப்பட்டானாம். சட்டசபையின் பரிதி இளம்வழுதியை கேட்டவர்கள் அ.திமுகவினர். ‘எஸ்.வி.சேகரை ‘அவாள்’ என்று கிண்டலடித்தவர் ஒ.பி. – நம்பர் 2 அ.தி.மு.க

    வெறுப்பை அகல என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யாமல் விட்டுவிட்டு, பலவாண்டுகளுக்கு முன் நடந்த தனிநபர் செயல்களை வசதியாகப் பேசி, பகை மூட்டலாமா?

    தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதோரால்தானே நீங்கள் வளர்ந்தீர்கள்? தனியாகவா ? கோயிலை வைத்துத்தான் பிராமணன். பிராமணனைமட்டும் வைத்து கோயில் வராது. அதற்கு அ-பிராமணர்கள்தான் வேண்டும். அ.பிராமணர்கள் வேண்டாமென்றால் இந்து மதம் தமிழ்நாட்டில் அழிந்தது. அதோடு பிராமணனும் அம்போ.

    ஜாதி சொல்வதே தவறு. அதை எவர் செய்தால் என்ன ? இன்று தலித்துகள் எல்லாவற்றையும் உங்களைப்போல் அடைந்தார்கள் என்றால், அவர்கள் அடையாளம் காலாவதியாகும். அமெரிக்காவுக்குப் போன தலித்துகள் என்ன அடையாளம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ? தலித்துகள் என்றா ? ஒடுக்கப்பட்டவர்கள் என்றா? கிடையாது. எப்படி சாத்தியமாயிற்று ? மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் செட்டிலான 100 வருடங்களுக்கு முன் – வன்னியர்கள் தங்களை ஓ.பி.சிக்கள் என்றா சொல்கிறார்கள் ?

    அடையாளங்கள் இருவகை:

    ஒன்று நாமே நம்மீது சுமத்தி பீற்றீக்கொள்வது. நீங்கள் செய்வது.

    இன்னொன்று: திணிக்கப்படுவது.

    தலித்துகள் மீது திணிக்கப்பட்டு அவர்களை அடையாளங்கண்டு ஒடுக்க. அடிமைகளுக்குத் தரப்பட்ட அடையாளம். அந்த அடையாளம் என்று போகிறதோ அன்று தலித்துகளுக்கு விடுதலை. அந்த அடையாளத்தை வைத்து தம்மீது காட்டப்படும் தீண்டாமை, அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டமே பரமக்குடி.

    அவ்வடையாளத்தை ஏற்றுக்கொண்டு கம்மென்று இருந்தால்,தமிழகம் அமைதிப்பூங்காதான்.

  140. //தாழ்த்தப்பட்டோர் militant ஆகி வருகிறார்கள். பிராமணரும் ஆக முயற்சிப்பது நல்லது// – மலர்மன்னன்.

    ஒத்துக்கொள்ள முடியா ஆசை தமிழகத்தைப்பொறுத்தவரை.

    காரணங்கள்:

    தென்மாவட்டங்களில் பல கிராமங்களிலும், பரமக்குடி, வாசுதேவநல்லூர், போன்ற சிற்றூர்களிலும் பள்ளர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். எனவே ஒரு கூட்டமாகச்சேர்ந்து வன்முறைக்குப்பதிலாக வன்முறையைப்ப யன்படுத்த முடியும். தேவர்களைப் பள்ளர்களால் மட்டுமே எதிர்க்கமுடியும். அருந்ததியாராலோ பறையர்களாலோ முடியவே முடியாது. அவர்கள் கிராமப்புறங்களில் ஒரு சிலரே. நகரங்களில் மட்டுமே காலனிகளில் கூட்டமாக வசிக்கிறார்கள். அவர்கள் தொழில் எல்லாருக்கும் தெரியுமாதலால் அவர்களே அத்தொழிலை விரும்புவதும் இல்லையாதலால் அவர்களுக்கு தன்மரியாதை இருக்கமுடியாது. பிறர் தூண்டிவிட்டாலும் எதிர்க்கமுடியாது. அவமானங்களை ஏற்று வாழப்பழகிக்கொண்டார்கள். பறையர்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களும் ஓரிடத்தில் கணிசமாக இல்லாமல் பரவலாக வாழ்கிறார்கள். சிலவூர்களில் கணிசமாக. விழுப்புரம் ஒரு எ.கா. திருமாவளவன் வி.சி ஆரம்பிக்குமுன் பலவாண்டுகளுக்கு முன் விழுப்புரத்தில் சாதிக்கல்வரம் 79ல் வந்தது. மற்றபடி, இப்போதுதான் வி.சியால் வன்முறை. அதற்கும் கூட அவர்கள் ஒரு ஜாதியாக ஒன்றுசேர்ந்து எதிர்க்கவில்லை. வி.சி இளைஞர்கள் மட்டுமே. பறையர், பள்ளர், சக்கிலியர் என்றெல்லாம் எடுத்தால், பள்ளர் மட்டுமே மிலிடன்ட். அதற்குக் காரணம் தேவர்கள் பண்ணும் பச்சையான ஜாதித்துவேசமே. மதுரை மாவட்டத்தைத்தவிர மற்ற மாவட்டங்களில் பச்சையான ஜாதித்துவேசம் இப்போது இல்லை.

    மலர்மன்னன் சொன்ன மேல்ஜாதியார் வடமானிலங்களில் வன்முறையில் இறங்கி வெற்றிகண்டு வருகிறார்கள். ரன்வீர் சேனா பீகாரில். இல்லையா ?

    தமிழகத்தில் பிராமணர்கள் வன்முறையில் இறங்கினால், அவர்கள் பெயர் மட்டுமல்ல, குணமும் மாறிவிடும். அச்சாதி பலபல தியாகங்களைச்செய்ய வேண்டிய கட்டாயம் வரும். பூணுலெல்லாம் போட முடியாது. குணத்துக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடு வரும். வைதீக இந்து என்பதெல்லாம் கப்பலேறிவிடும். முரண்பாடுகள் பெருகப்பெருக, தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ், வடமொழி பனுவலகள் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வங்காள விரிகுடாவிலோ, காவிரியிலோ, வைகையிலோ தாமிரபரணியிலோ எறிந்துவிடவேண்டியதுதான். அதன் பின் பிராமணன் என்ற ஜாதி அழிந்து விடும். வேறு பெயரக்கண்டு பிடிக்கவேண்டியதுதான்.

    அப்படிப்பட்ட வன்முறைகொண்டு வாழும் சாதி ‘என் ஜாதி’ என்று கொக்கரிப்போருக்குதான் சுவர்க்கம். ஆனால், அவர்கள், அந்தணர், பார்ப்ப்னர், மறையோர், பிராமணர் என்ற எந்தப்பெயரையும் வைத்துக்கொள்ளமுடியாது. அப்படியே சொல்லிக்கொண்டாலும் கைகொட்டிச் சிரிப்பார்கள் மற்றவர்கள். ‘இங்க பாருடா இவனை, அருவாளோடு அலைகிறான். இவன் பேரு பிராமணனாம் ?” என்பார்கள்.

    நூல் படிப்பதுதான் நும் வேலை. அதைச்செய்து கொண்டு இருக்கிற மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டு, அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வழியைப்பாருங்கள்.

    சேராதயிடந்தனில் சேரவேண்டாம் என்று அவ்வையார் சொன்னதாக நினைவு..

  141. //.. ஒத்துக்கொள்ள முடியா ஆசை தமிழகத்தைப்பொறுத்தவரை….//

    ஜோ. அமலன்,

    உங்களுக்கு யோசிக்கத் தெரிந்திருக்கிறது. பாராட்டுகிறேன்.

    வழமையாகவே மலர் மன்னன் சொல்லுகிற எந்தச் செயல் முறையும் நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும், செயல் சாத்தியம் இல்லாததால் வெற்று ஆர்ப்பாட்டமாகவும்தான் இருக்கும். அதற்கான எடுத்துக்காட்டுக்களில் இந்த அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    இந்து மதத்தை மற்றொரு ஆபிரகாமிய மதமாக மாற்றி, வன்முறையும், ஆக்கிரமிப்புக் குணமும் கொண்டதாக ஆக்க வேண்டும் என்பது அவர் ஆசை.

    அதனால்தான், 2%கூட இல்லாத சாதிக் கூட்டத்தார், அரிவாளைக் கையில் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும் என்கிறார். மற்ற சாதிக்காரர்களைக் கொன்று, பயமுறுத்தி, இந்த சாதிக் கூட்டத்தாரும் ஆக்கிரமிப்பு சாதியாக வேண்டும் என்கிறார்.

    இப்படி எல்லாம் செயல்பட்டால் இந்து மத ஒற்றுமை உருவாக முடியாது. ஆனால், அதை எல்லாம் யோசிக்கும் பக்குவம் அவருக்கு இல்லை.

    உங்களுடைய அவ்வையார் பழமொழி மிகவும் பொருத்தமானது.
    .

  142. வர்ணப் பிரகார க்ஷத்ரியனுக்கு அஸ்திர, சஸ்திர வித்தைகள் பயிற்றுவித்தவன் வர்ணப் பிரகார பிராமணன்.
    இன்றைய ஜாதிப் பிரகார பிராமணன் என்ன செய்யலாம்?

    அதிகாலையில் எழு. தூய காற்றுவெளியில் பிராணாயாமம் செய்.
    பின் சூரிய நமஸ்காரம் செய். அதிலேயே சகல உடல் உறுப்புகளுக்கும் வலிமை ஏறும்.
    தற்காப்புக் கலை பழகு.
    ப்தினைந்து நிமிடங்களாவது தியானம் செய்.
    அது போதும்.
    உடல் உரம் பெற்றால் நெஞ்சுரம் தானே வரும்.
    -மலர்மன்னன்

  143. I think malarmannan did not really mean that brahmins must become militant.

    Of course only he can clarify.

    I think brahmins are docile & take the insults mutely. That makes it easier for other community people to take potshots at them.

    Also, most of the brahmins these days are not really “brahmins” in the true sense of the word. They drink, smoke & eat non vegetarian & do all sorts of nonsense.

    Drinking, smoking & eating non vegetarian are the 3 visible traits which non brahmins usually do not associate with brahmins (generally).

    I am only talking at a superficial level here.

    When I talk to my non brahmin friends (& I have many), I can still feel that many of them hold a high opinion of brahmins.

    In fact, I have read that when a poll was conducted amongst IAS officers in TN (unofficial maybe) as to which caste they would have liked to have been born, most of them said that they would like to be born a brahmin.

    Let me clarify that I am not trying to wedge between brahmins & other communities here.

    The intention is that if a brahmin conducts himself as one , then many of these unfortunate incidents will not happen.

    Also, as Bhagwad Ramanuja said ” If you see a person bleeding on the road & U get the feeling that it is you & immediately help him, then U are a true vaishnavaite”.

    The underlaying message is empathy & not your caste/sect here.
    .
    So, everyone must try & be a vaishnavaite (in this sense).

    Then the world would be a peaceful place to live.

  144. ஆக்னேய

    //
    திரு சாரங்கன்!

    அ.ம, 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு 18 வயதுப் பையனின் வயசுக்கோளாறில் செய்த குறும்பை வைத்து, தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாதோர் மீது வெறுப்பைப் பன்மடங்காக ஆக்கும் ‘தெய்வீகப்’ பணியில் ஈடுபட்டிருக்கிறார் . 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்செயல் நினைவுகூறல் எதற்காகப் பின்னே ?
    //

    same to you 🙂 இதை தானே இவ்வளவு நாலா சொல்லி வந்தோம் – முழுச்சுகிட்டீன்களா.

    நினைவு கூர்வது மட்டுமல்லாமல் அஞ்சன் குமார் அவர்கள் வேருப்பாயிடுவேன்னு மிரட்டினார்

    அப்புறம் இங்கு ஜோ ஜோ பாடும் ஒரு குழந்தை எழுதிள்ள பதிலுக்கு தயவு செய்து யாரும் சிரமம் எடுத்துக் கொண்டு பதில் எழுத வேண்டாம்.

  145. //…இன்றைய ஜாதிப் பிரகார பிராமணன் என்ன செய்யலாம்?..//

    Mr. மலர்மன்னன்,

    “ஈரமான நெருப்பு” என்பது போல, ”ஜாதிப்பிரகார பிராமணன்” என்பதும் தப்பு.

    சாதி அடிப்படையில் வர்ணம் என்று வரையறுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    அரிவாள் எடுத்து வன்முறை பரப்ப வேண்டும், “militant” ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டுப் பிறகுக் கண்டித்த பின்னால் சூரிய நமஸ்காரம் என்று மழுப்புவதும் சந்தேகத்தையே வலிமைப் படுத்துகிறது.

    .

  146. //..I think malarmannan did not really mean that brahmins must become militant…//

    நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கலாம். அவர் சொல்வதும், அவர் சொல்ல விரும்புவதும் வேறு வேறாகவேதான் எப்போதும் இருக்கிறது.

    .

  147. பெருந்தகை திரு வெ.சாமிநாதன் அவர்கள் அஞ்சன் குமார் என்கிற இளைஞருக்குக் கூறுவது ஏன் அறிவுறையாக எடுத்துக் கொள்ளக்கூடாது? வீட்டிலேயே பெரியவர்கள் இளைஞர்களுக்கு நல்வார்த்தைகள் சொல்வதில்லையா? தமிழ் நாட்டில் மட்டும் தான் ‘தமிழன்’ என்று அங்கீகரிக்கப்படாத தமிழ் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழ் பிராமண வகுப்பு மக்களை (‘கன்னட’ பெரியார் பக்தர்கள் குறிப்பிடும் ‘பார்ப்பனர்கள்) காழ்ப்புடன், பொறாமையுடன், கேலி செய்து, இழிவு செய்து பின்னடைவு செய்யும் அவல நிலை நிலவுகிறது. என்ன கொடுமை செய்துவிட்டான் உங்களுக்கு இந்த பார்ப்பனன் என்று கேவலப்படுத்தப்பட்டு நொந்து நோகும் தமிழ் பிராமணன்? அலர்மேல் மங்கை என்ற பிராமணப் பெண்ணுக்கு ஏற்பட்ட புண்பட்ட அனுபவங்கள் உதாரணம். இதுதான் சம நீதியா? பண்பாடா? ‘பிராமணப் பெண்’ என்று சொல்லாமல் ‘பெண்’ என்று சொன்னால் போதும் என்கிறார்கள். இந்நிலை வேறு மதப் பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தால், என்ன விளைவுகளை கேலி செய்தவர்கள் சந்தித்திருப்பார்கள்? அரசியல் செய்பவர்களுக்கு ஆதாயம் சேர்ப்பதற்கு ‘ஜாலரா’ க்கள் தான் தேவை. அரசியலில் வெற்றி பெற அவர்கள் நாடியது ‘ஆச்சாரியார்’ என்று ஏளனப்படுத்தி, பின்பு ‘மூதறிஞர்’ என்று அவர்களே போற்றியவர்தான். அவர்கள் சொல்வதே வேதமாக நம்பி பின் செல்பவர்களை, சாத்தான் சொல் கேட்டு அழிவை நோக்கி பின் செல்பவர்களாகத் தான் கருத வேண்டும். அன்பு செலுத்தி அரவணைத்துச் செல்ல முயலுங்கள். ஆதாயம், நலம், வளம் பெருகும். உணர்வீர்கள். வாழ்க நலமுடன். அன்புடன்…

  148. அப்புறம் இங்கு ஜோ ஜோ பாடும் ஒரு குழந்தை எழுதிள்ள பதிலுக்கு…….

    thats a timely reminder. the last one was a reminder to the reply of mariammal.

    nice to receive such timely reminders.

  149. எழுதிய பெண்மணி நினைவு கூர்ந்தது வெறுக்க அல்ல.நாம் தெரிந்து கொண்டு பின் அந்த மாதிரி தவறுகளை நம் சமூகத்திலிருந்து களைய . அவர் மறுமொழியை சாதாரணமாகப்படித்தாலே தெரிகிறது.

    என் வரையில் ஜாதி ரீதியாக யாரையும் மோசமாக பேசும் நபர்களை தட்டிக்கேட்டிருக்கிறேன். கழக கண்மணிகள் ஜாதி வெறியர்கள் என்பதும் எல்லார்க்கும் தெரியும். அவர்கள் மட்டும் எதிர்த்துக்கேட்டால் டென்ஷன் ஆவார்கள். தனி மனித தாக்குதல் நடத்துவார்கள். தமிழ் வேறு பூந்து வெளையாடும். காதில் டெட்டோல் ஊற்ற வேண்டியிருக்கும் படி பயன்கரமாகப்பேசுவர்கள்.

    பெரியார் எனப்பட்டவரின் பிரச்சாரம் மற்றும் கழகக் கை ஓங்கிய பொது தமிழகம் போதுக்கூட்டமேடைகள் கண்ட கலாசார சீரழிவின் அவலம் -இதுவே சட்டசபையில் எதிரொலித்தது. அறுபதுகளின் நடுவில் இதெல்லாம் நன்றாகவே நிலைபெற்றதாக என் பெற்றோர் சொல்லக்கேள்வி.
    துக்ளக் இதழ் இது போல் இயக்க பேச்சாளர்கள் வாய்வரிசையை வெளியிடும். வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பயம். பூந்து அடிப்பார்களே?
    சரவணன்

  150. அன்பர்களுக்கு,

    இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சச்சரவுக்கு வழி இருக்குமாயின் எல்லோரும் நிறைய கூட்டம் கூடுவார்கள். அந்தக் கூட்டத்தில் சில ரௌடிகளும் வருவார்கள். கல்லெறிவார்கள். அந்தச் சிலரின் கல்லெறி தான் கடைசியில் எல்லாரையும் பின் தள்ளி கவனத்தை ஈர்க்கும். சமூகத்தில் இது இயற்கை. தலித் இலக்கிய பற்றி இந்திய செவ்விய நடனங்களின் தேக்கம் பற்றி எழுதினேன். அவை பேசப்படாத விஷ்யங்கள். இருப்பினும் ஒரு காக்கா குருவி எட்டிப் பார்த்த்தாக இல்லை. ஆனால் இதற்குப் பாருங்கள் 150 எதிர்வினைகள். ஆனால் சிலர் என்ன கூப்பாடு போட்டாலும், வயிறு எரிந்தாலும், திராவிட இயக்கம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த ஒருவரே 100 வருடங்களுக்குப் பிறகாவது முதல் தடவையாக இலக்கிய கவனம் பெறத் தகுந்த ஒரு எழுத்தைத் தந்தது, ஒரு சமூக போராட்டத்தின், கருத்தோட்டத்தின் இரு தரப்புகளையும் அவர் பார்வையில் தந்துள்ளது, எனக்கு மகிழ்ச்சியான விஷ்யம். இது வரை நிகழ்ந்துள்ளது அவர்கள் பக்க கூப்பாட்டு இரைச்சலைத் தான். இங்கு இருவர் தமக்குத் தெரிந்த மொழியில், மாதிரிக் கூப்பாடுகளைத் தந்துள்ளனர்.

    இங்கு கூப்பாடு போட்டவர்கள், அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்களுக்கு ப்ழக்கப்பட்டதைச் செய்தார்கள். சம்வாதங்கள் ஒரு புறம். பதிலாக கூப்பாடு எதிர்ப் புறம், தொனி மாறாது வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.

    சரி, கடைசியாக, (இது நாள் வரை சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன்) இன்னொரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர், இந்த நாவலை எழுதியவர் என்ன சொல்கிறார் என்பதையும் உங்கள் முன்னால் வைக்கலாம் என்று தோன்றுகிறது. இதோ:

    அன்புடையீர்,
    தங்கள் விமர்சனம் இதுவரை இந்த நாவலைப் பற்றி வெளிவந்த பல்வேறு விமர்சனங்களில் இருந்து வேறுபட்டிருந்தது. யாரும் இதுவரை வெளிவந்த திராவிட இலக்கியங்களை ஒப்பிட்டுப் பேசவில்லை. கடந்த நூற்றாண்டிலும் இப்போதும் பிராமணர்கள் குறித்து எப்படிப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்தன என்பதை நான் ரத்தமும் சதையுமாக பதிவு செய்வதில் வெற்றி பெற்றுவிட்டேன் என்பது உங்கள் பார்வையில் இருந்து அறியமுடிகிறது.
    இத்தனைக்கும் நான் திராவிடச் சூழலில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன்தான். ஆனாலும் இலக்கியத்தில் என் பங்களிப்பாக அப்போதிருந்த சாதீய சலனங்கள் அனைத்தையும் பதிவு செய்ய முயற்சி செய்தேன். பெரும்பாலான விவாதங்கள் திராவிடக் குடும்பச் சூழல்களில் இருந்தாலும் அதை கலாபூர்வமான, நேர்மையான பதிவாக்கமாக செய்ய முனைந்தேன்.
    திராவிட இயக்கத்துக்கான ஒரு தேவை இருந்தது என்பதையும் அது திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த நாவலில் கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
    உடல்நிலை, சோர்வு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நாவலை நுணுக்கமாக ஆய்ந்து தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றி. திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு என்று குறிப்பிட்டிருப்பது பெருமையாக இருக்கிறது. மிகவும் நன்றி. சென்னை வந்தால் தெரிவிக்கவும். பெங்களூர் வந்து உங்களை நேரில் சந்திக்கவும் விரும்புகிறேன்.
    அக்டோபர் மாதத்தில் என்னுடைய அடுத்த நாவல் வெளியீட்டு விழா இருக்கிறது. தாங்கள் கலந்து கொள்ள முடியுமா? தெரிவிக்கவும்.

    தமிழ்மகன்

    http://www.tamilmagan.in

    தமிழ் மகனுடைய ப்ளாக் விவரமும் தந்திருக்கி?றேன். அதிலும் இந்த கட்டுரையை தமிழ் மகன் பிரசுரம் செய்திருக்கிறார்.

    ஆச்சரியம், அதில் ஒரு மறுவினையைக் கூடக் காணோம். ஏன் இப்படி.?தமிழ் மகனின் திராவிட இயக்கத் தோழர்கள் கூட ஏன் எதிர்வினையாக்கவில்லை?

    யாராவது, சமூகவியல் அறிஞர்கள் இதை எப்படி புரிந்து கொள்வது என்று சொல்லமுடியுமா? அவர்களுக்குப் பட்டதைச் சொன்னால் மகிழ்ச்சியடைவேன்.

    வெ.சா.

  151. //The Trolls are back//

    Rama

    When I saw Malarmanna’s call to Tamil brahmins to become ‘militant’ (although he has clarified that the militancy he desires for Tamil brahmins is for self defence – but all militants initially say that ! and the degeneration of that principle is a distinct possibility as we see in real life. In Paramakkudi, both parties insist that all that they do, is for self defence only ! ), you came to my mind instantly. Impatient persons of your community like you are found in real and online world. There is a likelihood that such persons might take Malarmannan’s advice seriously; or mistakenly as a call to arms. That was why I wrote that.

    Troll, I don’t know what it means, but whatever it means, it is good to write as I have, here. Its aim is to forewarn.

  152. ஒரு நூறு நூற்றைன்பது வருடங்களுக்கு முன் ஒரு பெரும் சமுதாய, அரசியல் மறுமலர்ச்சியை நாடு எதிர்நோக்கியிருந்தது.
    பிளவு சக்தியான காலனி அரசாங்கம் இந்தியாவின் ஆன்மீக முதுகெலும்பை மெக்காலேயின் ஆசியுடன் உடைக்க வழி தேடியது. அகப்பட்டார்கள் சில useful idiots . பிரிவினைதீயை இன்றளவும் மூட்டி வளர்க்க முனைகிறார்கள்.
    தலித்துகளையும் பிராமணர்களையும் முறையாக, மறைமுகமாகவும் , நேரிடையாகவும் எதிர்த்து ஜாதி அரசியல் செய்வது திராவிட இயக்கத்தினரின் அடிப்படை திட்டம்-மிச்சமிருந்த கிட்டத்தட்ட் எண்பது% OBC பிரிவினரையாவது ஒற்றுமையாக வழ விட்டார்களா அன்றால் அதுவும் இல்லை. பிளப்பது எங்கள் உரிமை என்கிறார்கள்.
    சுதந்திரமே வேண்டாம் என்றவரின், மற்றும் அவரது சீடர்களின் எண்ணம் பலிக்காது.
    ” எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
    நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்றவனின் தெய்வ வாக்கே
    பலிக்கும்.
    கலவரங்கள் இல்லாத ,முன்னேற்றப்பாதையில் நடக்கும் தமிழகத்தையும் நம் வாழ்நாளில் நாம் எல்லாரும் காணத்தான் போகிறோம்.
    நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையுடன்
    சரவணன்

  153. I cant help commenting upon sanjay’s.

    Ramanujar said that.correct. But it is one of the five character traits he listed. (But am not sure whether he or Desikan who had the list) The rest i.e the other four may be got from the Vaishnavas-in- residence here.

    If the five are found in a person, he becomes a Vaishnava naturally. In that sense, pardon me for saying this, a Muslim or a Christian can be a Vaishnava if he has the five and live by them every inch. Once I heard an erudite lecture in Tamil delivered by Prof Aravamudan – a Prof of Sanskrit in Sanskrit Vishwavidyalaya, a central edu instn in New Delhi – he devoted a full 10 minutes of the lecture, before entering into it proper, to explain who is a Vaishnava. It was he who said what I have said.

    The question who is a modern day brahmin is not really linked to who is a Vaishnava. Because, the Vaishnavite traits of personality are impossible to realise in this day and age. for e.g the vaadiya payirai kandapoothellaam vaadineen type pointed out by sanjay.

    As such, we will have to scale down the evaluation values to find out who is a brahmin. Let him have the enjoyments that modern life affords, or he can afford; let him have pleasures in his daily life. But no profligacy; no extra greed, no alarming vices like womanising (smoking is just a health hazard, not a vice); no double dealing with fellow humans. Let him avowedly accept and propagate the brahminism which does not mean casteism but will have the aforesaid five virtues. But still, only acceptance in principle. Reason is the same: in today world, brahminism is a far cry. Impossible to realise.

    Applying old world principles will scare away young people. In a word, don’t expect cent percent perfection. A moderate score is ok.

    There is also a very interesting social feature here. As sanjay has remarked, having a vaulted scale of values and expecting it from the person called brahmin, the society is sorely disappointed to find a different person with a glass if whisky and a cigar like Shivaji Ganesan in Kauram feature film. This disappointment degenerates into hatred. At front side, he calls himself a brahmin and makes the society, willy nilly, believe that myth, and on the back side, he is nothing but a bohemian. Dr Jekyll and Mr Hyde. Society is unable to stomach the strange case of Dr Jekyl and Mr Hyde in this person.

    The fact is that all of us have the mixture of Dr Jekyll and Mr Hyde. That is the mge R L Stevenson gives us in the novel. Then, why should one expect the person called brahmin to be only Dr Jekyll (which means a do-gooder). We should allow him as we have allowed all others to be good as well as bad i.e to have a moderate blend of the + and -, Then, no expectations, no disappointments. O yes! no anti brahminism, too.

    Anti brahminism arose from the disappointment. The belief that a brahmin is a social cheat thus. He disappoints. So, he is to be hated. It comes to somewhat Malarmannan’s advocacy for militancy in life style. But it is possible to nullify his advocacy with the principle of moderation.

    I dont advocate non vegan etc. But if someone is a non vegan, and still says a brahmin, it is ok, provided the society has alreaby been made to believe that a neo brahmin should be allowed non veganism. Yes, neo brahmins. As brahmins are an extinct species.

    What about Hinduism ? It is possible to carry it on, while remaining a true person – no hypocrisy. Have all in moderation and carry on.

  154. வனவாசத்திலிருக்கும் போது தாகம் தீர்க்க விழைந்த பஞ்ச பாண்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாயப்பொய்கையின் நீரருந்தி ப்ரக்ஞையிழந்து வீழ்ந்த பின் அனைவருக்கும் மூத்தவரான யுதிஷ்டிரர் ஆங்கு வந்த போது மறைமுகமாயிருந்து கேழ்விகள் எழுப்பிய யக்ஷனுக்கு பொறுமையாய் பதிலிறுத்த காதை யக்ஷப்ரசனம் என்ற படிக்கு மஹாபாரதத்தில் உள்ளது. கேழ்விகள் அனைத்திற்கும் யுதிஷ்டிரர் சரியாக பதிலிறுத்த பின் மடிந்தவரில் ஒரு பாண்டவரை மட்டும் உயிரோடு தர முடியும் என்று சொல்லிய யக்ஷனுக்கு சாக்ஷாத் தர்மராஜனின் அவதாரமான யுதிஷ்டிரர் கொடுத்த உத்தரம் கீழே. ஆங்க்ல பாஷையில் இருக்கும் பதவுரையை வார்த்தை மாறாது கொடுக்க வேண்டி ஆங்க்லத்திலேயே பதிவு செய்துள்ளேன்.

    கசடறக் கற்றறிந்த சான்றோர் தர்ம ஸூக்ஷ்மங்களை இங்கு வைத்த போது யுதிஷ்டிரரின் கருத்தாழம் மிக்க இந்த உத்தரம் பதிவு செய்ய நினைத்தேன். காலதாமதமாயினும், யுதிஷ்டிரரின் வாக்கு :

    Yudhishtira Said :
    If virtue is sacrificed, he that sacrificeth it, is himself lost. So virtue also cherisheth the cherisher. Therefore, taking care that virtue by being sacrificed may not sacrifice us, I never forsake virtue. Abstention from injury is the highest virtue, and is, I ween, even higher than the highest object of attainment. I endeavour to practice that virtue. Therefore, let Nakula, O Yaksha revive. Let men know that the king is always virtuous. I will never depart from my duty. Let Nakula, therefore revive. My father had two wives, Kunti and Madri. Let both of them have children. This is what I wish. As Kunti is to me, so also is Madri. There is no difference between them in my eye. I desire to act equally towards my mothers. Therefore, let Nakula live.

  155. //ஆச்சரியம் அதில் ஒரு மறுவினையக்கூட கானோம்// – வெ.சா

    தமிழ்மகன் தன் பதிவில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை அனுமதிப்பதில்லை. எனவேதான் மறுவினைகளை அங்கே காணோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *