கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் நமக்கு அனுப்பிய அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ் ஹிந்து தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நல்ல தமிழ் இலக்கிய ஆளுமைகளை உரிய நேரத்தில் கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பிற்கு நமது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*****

விஷ்ணுபுரம் இலககிய வட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது (2011) மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப் பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி கோவையில் நடக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவின் போது ஜெயமோகன் எழுதிய “பூக்கும் கருவேலம்” (பூமணி படைப்புகள் குறித்த விமர்சன நூல்) நூல் வெளியீடும் நடைபெறும். அழைப்பிதழ் கீழே. அனைவரும் வருக!

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *