உடையும் வீரமணி – பாகம் 2

டையும் இந்தியா? புத்தகம் குறித்து திராவிடர் கழகம் நடத்திய வசையரங்கில் இரண்டாம் நாள் (ஜனவரி 9).

தமிழ்ஹிந்து இணையதளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி. தமிழ் என்று இருப்பதால் அது பிரிவினைவாதம் ஆகிவிடாதா என்கிறார் வீரமணி. தேச ஒற்றுமையின் மீது மிகவும் அக்கறை வந்திருக்கிறது வீரமணிக்கு! அந்த அளவு மாற்றத்தை இந்த நூல் கொண்டு வந்துள்ளது சந்தோசம். ‘உடையும் இந்தியா’ நூலுக்கு மட்டுமல்ல, தமிழ்ஹிந்து இணைய தளத்துக்கும் வீரமணி செய்யும் விளம்பரம் நகைச்சுவை கலந்தும் முட்டாள்தனமாகவும் இருந்தாலும்…. சரி அதை சகித்து கொள்ளலாம்.

ஆனால் அதோடு நிறுத்தியிருக்கலாம். நேற்றைய தமிழ்ஹிந்து பதிவுக்கு உடனடி எதிர்வினை செய்ய வேண்டும் என்ற தவிப்பு போல. “சிராஜ் உத் தவுலாவுக்கு துரோகம் செய்தவர்களில் அமீர்சந்த் ஒரு பார்ப்பனர்” என்று முழங்கினார். பாவம், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால், அது அணிந்திருப்பது முப்புரில் நூல் என்று சொல்லி தன் மூக்கை தானே உடைத்திருக்க வேண்டாம். ஆங்கில அதிகாரியான தாமஸ் மெக்காலே தனது பதிவுகளில் அமீர்சந்த் ஒரு வங்காளி என்று சொன்னதாலே அவர் ஒரு பார்ப்பனராக கருதப்பட்டார். ஆனால் உண்மை என்ன?

கி.வீரமணி பாணியில் சொன்னால், (அடித்தொண்டையில் வாசிக்கவும்) “இங்க பாருங்க … இந்த புத்தகம் இருக்கு பாருங்க இது முக்கியமான விசயம்…(பக்கத்தை தேடி எடுக்கிற வரை இப்படி சொல்லிகிட்டே இருக்கணும், இது திராவிடர் கழக மேடையின் எழுதப்படாத விதி) … இந்த புத்தகத்தை நாங்க எழுதலை. ஆர்.எஸ்.எஸ்.காரன் எழுதலை. இதை எழுதினவர் சயீத் அப்பாஸ் ரிஸ்வி. இந்த புத்தகத்துக்கு பெயரு “Landmarks of South Asian civilizations: from prehistory to the independence of the subcontinent” இதுல (ஆங் ஆம்புட்டுட்டுது) பக்கம் 196 ஆல சொல்றாரு பாருங்க: “Clive silenced Omi Chand (Amir Chand) the Sikh merchant who was the intermediary and who demanded a huge share in the spoils as the price for his silence…” அவரு மட்டும் இல்லீங்க… இந்த என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (வால்யூம் 16) என்ன சொல்லுது பாருங்க.. “His real name was Amir Chand; and he was not a Bengali, as stated by Thomas Macaulay, but a Sikh from the Punjab….

ஆனால் வீரமணிதான் தெய்வநாயகத்துக்கு நண்பராயிற்றே. தெய்வநாயகம் செத்துப் போனவர்களையும் கிறிஸ்தவர்களாக்குவார். வீரமணி செத்துப் போனவர்களுக்கும் பூணூல் போடுகிறார். வாழ்க! புரோகித தொழிலை வீரமணி முழுவீச்சில்தான் ஆரம்பித்திருக்கிறார். வாழ்க்கை மேலும் வளம்பெற வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் ஈவெரா வன்முறையை போதிக்கவில்லை என்றார் வீரமணி. சரி பொதுவாழ்வில் வன்முறையை போதிக்காத ஈவெரா என்ன சொன்னார் தெரியுமா? மார்ச் 5, 1957 இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லும் செய்தி இது: ராஜாஜியை ‘கத்தியை பயன்படுத்தும் நேரடி நடவடிக்கையை’ கூறி மிரட்டியதால் அவர் ராஜினாமா செய்தார் என பெருமையடித்துக் கொண்டார்.

ஆக, வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர்தான் ஈவெரா. அப்போது திராவிட கழக அடிப்பொடிகள் எப்படிப்பட்ட மிரட்டல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என ஊகித்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து ஒரு திக வெறியன் ஈவெராவின் மிரட்டலை நடைமுறைப்படுத்த முனைந்த போதுதான் ஈவெராவுக்கு உறைத்தது. வன்முறையை தாம் ஏற்பதில்லை என கூற வைத்தது. (லிங்க் பத்திரிகை, ஏப்ரல் 24, 1960)

சரி. ‘உடையும் இந்தியா’ இதை எந்த இடத்தில், எந்த கான்டெக்ஸ்டில் சொல்கிறது என்பதையும் காணலாம். ‘இனவாத கோட்பாட்டினை அரசியலாக்கும் எந்த இயக்கமும் வன்முறையை பரவவிட தயங்காது, அதில் வன்முறை உள்ளுறையாக அமைந்துள்ளது’ என்பதை சுட்டவே இந்தத் தன்மை வெளிக் காட்டப் பட்டது. அதற்கு முன்னால் இருந்த இரு ஈவெரா மேற்கோள்கள் எதனுடன் இணைத் தன்மை கொண்டது? ருவாண்டா இனப் படுகொலைகளுக்கு முன்னால் சமூகநீதி என்கிற பெயரில் செய்யப்பட்ட இனவெறுப்பு பிரச்சாரங்களுக்கும் இதற்கு உள்ள ஒற்றுமையை காட்டவே.

எனவே வீரமணி எதை மறுத்திருக்க வேண்டும்? ருவாண்டா இனவாத பிரச்சாரத்துக்கும் திராவிட இனவாத பிரச்சாரத்துக்கும் இணைத்தன்மை இல்லை என சுட்டிக் காட்டியிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். அப்படிக் காட்ட முடியாது என்பது வேறு விசயம். ஆனால் அதை முயற்சி செய்யவாவது முனைந்திருக்கலாம். ஆனால் அறிவார்ந்த வாதம் என்பதை வீரமணியிடம் எதிர்பார்ப்பது பகுத்தறிவற்ற மூடநம்பிக்கை மட்டுமே.

மறைமலை இலக்குவனார் மார்மோன்களை பாராட்டியதால் ‘உடையும் இந்தியா’ அவரை தாக்கிற்றாம். பாவம்… இங்கும் வீரமணிக்கு புரிதலில் பிரச்சனை இருக்கிறது. ‘உடையும் இந்தியா’ என்ன சொல்கிறது என பார்ப்போம்:

இந்தப் பேராசிரியர் ‘மார்மன் மதம் குறித்தும் பின்னாளைய புனிதர்களின் சபை குறித்தும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டதில்’ பெருமகிழ்ச்சி அடைந்தாராம். மார்மன்களின் நூல் அவருக்கு ‘தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிக இலக்கியமான திருவாசகத்தை நினைவூட்டியதாம்.’

மார்மன்கள் மதம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் அதனுடன் திருவாசகம் போன்ற ஒரு நூலை ஒப்பிடுவது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது புரியும். இலக்குவனாருக்கு மார்மன்கள் பிடித்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் திருவாசகத்தை இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம் என்பதுதான் உண்மை. மார்மன்கள் குறித்து இங்கே படிக்கவும். இதை படித்தால் ஏன் அந்த அபத்தமான ஒப்பீடு அங்கே குறிப்பிடப் பட்டுள்ளது என்பது புரியும்.

அடுத்ததாக குருஜி கோல்வல்கர் ஆரியர்கள் குறித்து கூறியதாக 1939 இல் அவர் எழுதிய நூலிலிருந்து சிலதை எடுத்து வீரமணி வாசித்தார்.

அதில் துருவ பிரதேசம் நகர்வதாக அப்போது சில அறிவியல் ஊகங்கள் கூறியதன் அடிப்படையில், ஆரியர்கள் என்பது ஒரு இனமல்ல என்றும், இந்துக்கள் அனைவரும் ஆரியர் என்றும், துருவப் பிரதேசத்திலிருந்து ஆரியர்கள் வந்ததாக திலகர் கூறுவதை சிறிது மாற்றி துருவமே புலம் பெயர்ந்தது என்றும் குருஜி கோல்வல்கர் கூறுகிறார்.
1939 இல் எழுதப்பட்டது அந்த நூல் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறு என்று இன்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இங்குதான் ஆரிய இனவாத / புலப்பெயர்வு கோட்பாடுகளை கட்டி அழும் ‘பகுத்தறிவு’ போலிகளுக்கும், ஹிந்துத்துவர்களுக்குமான வேறுபாட்டை கவனிக்க வேண்டும். குருஜி என அழைக்கப்படும் கோல்வல்கரே கூறியதாக இருந்தாலும் அவர் கூறியது தவறு என்றால், அதைத் தவறு என சொல்ல நாங்கள் தயங்கவில்லை. ஆனால் பகுத்தறிவு ஆசான் என நீங்கள் கூறும் ஈரோடு ராமசாமி எப்போதோ பகுத்தறிவில்லாமல் நம்பிக்கொண்டு ஆரியன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வந்தான் என்று சொன்னதை விட்டுவிட்டு ஒரு சமூகநீதிக் கோட்பாட்டை உருவாக்கக் கூட ஈவெராவாதிகளுக்கு திராணியில்லை.

அப்படியே வழக்கம் போல, கர்மவீரர் காமராஜரை கொல்ல முயற்சி செய்தார்கள் இந்துத்துவர்கள் என பழைய பொய்க்கதை ஒன்றை எடுத்துவிட்டார் வீரமணி. ஆதாரமாக ஈவெரா எழுதிய நூலை சொன்னார். ஆனால் ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை பெருந்தலைவர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால் வீரமணி கும்பல் சொல்லும் புளுகின் தராதரம் புரிந்துவிடும்.

1957 தேர்தலின் போது ஈ.வெ. ராமசாமியின் திராவிடர் கழகம் பெருந்தலைவர் காமராஜரை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது. தனிப்பட்ட முறையில் கழகத்தவர்கள் தன்னை ஆதரித்தால் தான் அதை மறுக்க முடியாது என்றும், ஆனால் தன்னுடைய காங்கிரஸ் கட்சி ஈ.வெ.ராமசாமியின் வகுப்புவாத நிலைபாடுகளை ஏற்கவில்லை என்றும், தான் தனிப்பட்ட அளவிலும் ஈ.வெ. ராமசாமியின் நிலைபாடுகளை ஏற்கவில்லை என்றும் பெருந்தலைவர் காமராஜர் தெள்ளத் தெளிவாக கூறினார். ஈ.வெ. ராமசாமி தானாக முன்வந்து அளித்த ஆதரவுக்கு காமராஜர் செய்த எதிர்வினை இது. (என்னதான் வெளியே சமூகநீதி என்றெல்லாம் சொன்னாலும், காமராஜருக்கு ஈ.வெ.ரா ஆதரவு அளித்ததன் முக்கிய காரணம் ஈ.வெ.ராமசாமியின் இரண்டாம் கலியாணத்தால் பிரிந்து போன திமுக மீது அவருக்கு இருந்த வன்மம் தான். மற்றபடி ஈரோடு ராமசாமிக்கு கொள்கையாவது மண்ணாவது… வெங்காயம்.)

அதே பெருந்தலைவர் காமராஜர் 1975 இல் காங்கிரஸ் (ஓ) – ஜனசங்க கூட்டணியை ஏற்படுத்தினார். இந்திரா காங்கிரஸின் பாசிச எமர்ஜென்ஸியை எதிர்த்து! இதுவும் வரலாறு. அப்போது தன்னை ஆதரித்த ஈ.வெ.ராமசாமியை ‘ஓரமாய் இரும் பிள்ளாய்’ என ஒதுக்கிய கர்ம வீரர் காமராஜர், தன்னை கொல்ல முயன்றதாக இவர்கள் புளுகும் ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்தார் என்றால், இந்த திராவிட கும்பலை எப்படிப்பட்ட தீமையாக அவர் கருதியிருக்க வேண்டும்! இருந்தாலும் வெட்கம் கெட்டுப் போய் இவர்கள் கர்மவீரரின் திருப்பெயரை தங்கள் மேடைகளில் நாணமில்லாமல் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம் போல நல்ல ஊழியக் காரராக கிறிஸ்தவ எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டவும் வீரமணி மறக்கவில்லை. ஸ்டெயின்ஸ் பாதிரியாரை பஜ்ரங்தள் காரர்கள் உயிரோடு எரித்துக் கொன்றார்களாம். அந்த கொடுஞ்செயலை நிகழ்த்தியவனுக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என நீதியரசர் வாத்வா கமிஷன் அறிக்கை கூறுவதை ஏனோ வீரமணியார் மறைத்துவிட்டார். ஒருவேளை வசதியான மறதியும் காரணமாக இருக்கலாம். மறக்காமல் ஒரிசாவில் ஒரு கன்னியாஸ்திரி காரில் கடத்தி செல்லப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக கூறினார் வீரமணி, அந்த கொடுஞ் செயலுக்காக திராவிடர் கழகம்தான் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்ததாம். பிப்ரவரி 3 1999 இல் நடந்ததாக பெரிய அளவில் இந்த ஒரிசா கன்யாஸ்திரி வன்கொடுமை நிகழ்ச்சி ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் நடந்த நீதிவிசாரணையின் போது அந்த வன்புணர்ச்சி சம்பவம் ஒரு முழுப் பொய் என்று நிரூபிக்கப் பட்டது. இதுவும் வாத்வா கமிஷன் அறிக்கையில் தெள்ளத் தெளிவாக உள்ளது.

இருந்தாலும் வீரமணியின் மனிதநேயத்தை (அது கூலிப்படை ஆர்ப்பாட்டமல்ல, மனித நேயம் என்றே ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம்) பாராட்டுவோம். இதோ, நமது தமிழ்நாட்டில், கிறிஸ்தவர்கள் நடத்தும் குழந்தைகள் இல்லங்களில் கடுமையான வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு மேல் நடத்தப்படுவதும், அந்த இல்லங்கள் சட்ட விரோதமாக இயங்குவதும் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளனவே! ஒரு தேவநாதனை வைத்து அனைத்து அர்ச்சகர்களையும் கேவலப்படுத்தும் வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?

சரி. 1999 இல் நடந்ததாகச் சொல்லப் பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக தாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பத்தாண்டுகளுக்கு மேல் இப்போது விசுவாச ஊழியனாக நினைவு படுத்தும் வீரமணி, 2006 இல் ஓமலூர் சுகன்யா எனும் 17 வயது மாணவியின் கொலை நடந்தததே, அந்தக் கொலை தொடர்பாக ஏதாவது ஆர்ப்பாட்டத்தை செய்திருக்கிறாரா? கட்டாயம் செய்திருப்பார். ஏனென்றால் அவருக்குத்தான் மதம் கிடையாதே, மனித நேயம் மட்டும்தானே உண்டு. எனவே நடத்தியிருப்பார். அதை அவர் தெரிவிக்க வேண்டும். அப்போது உண்மையிலேயே அவர் கிறிஸ்தவ அமைப்புகளின் ஊழியராக செயல்படவில்லை என்பது தெளிவாகிவிடும்.

பிறகு வழக்கம் போல IDRF (India Development and Relief Fund) அமைப்பு குறித்த பிஜு மாத்யூ என்பவரின் அறிக்கையை வைத்து ராகம் இழுத்தார் வீரமணியார். அதாவது இந்து அமைப்புகளுக்கும் வெளிநாட்டு பணம் வருகிறதாம். முதலில் அந்த பிஜு மாத்யூ அறிக்கை அமெரிக்க, பிரிட்டிஷ் அரசு அமைப்புகளால் விரிவான ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, IDRF மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தவறானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது. இன்றும் வெளிப்படையாக அந்த அமைப்பு இயங்கி வருகிறது. அது மட்டுமல்ல IDRF அமைப்பு இந்து சேவை நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், மதச்சார்பற்ற அமைப்புகளுக்கும், இதர சிறுபான்மையினரான ஜைனர்கள் போன்றோரின் அமைப்புகளுக்கும், தலித் மேம்பாட்டு அமைப்புகளுக்கும் கூட உதவி செய்து வருகிறது. இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக இந்த சுட்டியில் காணலாம் (https://www.letindiadevelop.org/thereport/) மேலும் இந்த அமைப்பு இந்தியாவுக்கு அனுப்பும் பணம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உழைத்து சம்பாதித்த பணம்.

ஆனால் வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது? காலனியம் மூலமும் ஆயுத விற்பனை மூலமும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய லாபத்தின் உபரியில் இருந்து வரும் பணம். அது இந்தியா போன்ற நாடுகளில் மேலும் மதச் சண்டைகளையும் பிளவுகளையும் உருவாக்க மூலதனமாக களமிறக்கப்படுகிறது. IDRF பல பத்தாண்டுகள் முனைந்தாலும் திரட்டமுடியாத அளவு பணம் இந்த பன்னாட்டு அமைப்புகளால் ஒரு ஆண்டில் இந்தியாவில் களமிறக்கப்படுகிறது. அதைத்தான் உடையும் இந்தியா? நூல் வெளிப்படுத்தியுள்ளது.

வீரமணியின் எஜமான விசுவாசம் நன்றாகவே இந்த கூட்டத்தில் வெளிப்பட்டது. ஆனால் ‘உடையும் இந்தியா’ போன்ற நூலை உடைக்க அவரால் இயலாது. ஏனெனில் அதற்கான அறிவு அவரிடமும் இல்லை. அவர் துதிபாடிக் கூட்டத்திடமும் இல்லை. எனவே வழக்கம் போல சாதி துவேச வசை பாடல்களுடனேயே இதைப் போன்ற அரங்குகள் முடிவது அவற்றின் தவிர்க்க முடியாத விதி.

39 Replies to “உடையும் வீரமணி – பாகம் 2”

  1. ///பெருந்தலைவர் காமராஜர் 1975 இல் காங்கிரஸ் (ஓ) – ஜனசங்க கூட்டணியை ஏற்படுத்தினார். இந்திரா காங்கிரஸின் பாசிச எமர்ஜென்ஸியை எதிர்த்து! இதுவும் வரலாறு. அப்போது தன்னை ஆதரித்த ஈ.வெ.ராமசாமியை ‘ஓரமாய் இரும் பிள்ளாய்’ என ஒதுக்கிய கர்ம வீரர் காமராஜர்…///
    EVR reached the lotus feet of the lord (?!) on 24-12-1973. How can he ally with Kamaraj in 1975? Is there something wrong here? Or have I not understood something? Kindly make it clear…

  2. Good one. But fools seldom change.
    Off topic – In the book fair, in one of the islamic publication stall, I saw a board, that said, Mohummad has mentioned about Krishna and Hindu scriptures talk about Muhammad.
    I dont know the full context. Any one have any idea about this stupidity?

  3. நூல் என்ற பெயரில் வெளி வந்திருக்கும் புரட்டுக்கு….அருமையான விளக்கங்கள் பெரியார் திடலில் கிடைத்தது. வீரமணியின் உரைக்கு மறுப்பு கொடுக்க எந்த பார்ப்பானாலும் முடியாது…….கையில் ஆதாரத்துடன் செய்திகளை திரட்டி…ஆரியத்தை அடித்து நொறுக்கும் பண்பு திராவிடர் கழகத்துக்கு உண்டு……இந்த கட்டுரை கூட பதில் கூறுகிறேன் என்று, “எழுதப்படாத விதி”…”திராவிட கழக” என்று தவறு தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது………..பாவம் கஷ்டப்பட்டு எழுதிய புரட்டு (பூ) னூலை….சின்ன குண்டூசி அளவுக்கு முயற்சித்து உடைத்து விட்டோம் என்கிற பொருமல் அதிகம் வெளிப்படுகிறது உங்கள் கட்டுரையில்.

    ஆரியத்தின் கொட்டம் அடக்கப்படும்…..ஆரிய சிந்தனை அழியும் வரை ஆசிரியர் வழியில் கருப்பு மெழுகுவர்த்திகள் தயாராக உள்ளோம்……..

  4. சொன்னாலும் ஏற்கமாட்டேன் சுயமாகவும் சிந்திக்க மாட்டேன் நான் இதுநாள் வரை இது இப்படித்தான் என்ற மாறா விலங்கு (விளங்காத விலக்காத) கொள்கைகளை பகுத்தறிவு சிந்தனையுடன் உடும்பு பிடியாய் கடைபிடித்து வருகிறோம். எங்களுக்கு ஞானஸ்தானம் செய்ய யோக்கிதையுடையவர்கள் கிருஸ்துவர்கள் மட்டுமே. நீங்கள் என்னதான் உண்மையான ஆதாரங்களுடன் கிருஸ்துவம் காலணி ஆட்சி தொடங்கி இன்றையவரை உலக நாடுகளில் எவ்வாறெல்லாம் சூஷ்சிகள் செய்து இனபகை என்ற தீயைமூட்டி ஒரு குடும்போல் இருந்த சமூகங்களை பிரித்து உள்நாட்டு கலகங்களை உற்பத்தி செய்து இன படுகொலைகளுக்கு தீனீ போட்டார்கள் என்பதையெல்லாம் நாங்கள் நம்பமாட்டோம். அவர்கள் தமிழர்களின் காலாசாரத்தை, சரித்திரத்தை, இலக்கியங்களை, கலைகளங்சியங்களை எல்லாம் உருதெரியாமல் இவை எல்லாம் வேசிதேசத்தவர் மூலம் பெற்றெடுத்த தத்து பொக்க்ஷியங்கள் என்று அவதூறுகள் பரப்பினாலும் அவற்றை நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம்.

    சமீபத்தில் எப்படி கிருஸ்துவர்களாக மாற்றப்பட்ட தமிழர் சிக்களர் இடையே இனபகையை மூட்டி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தார்கள் என்பதை எல்லாம் மரகட்டையாக வேடிக்கை பார்த்த கும்பல்களுக்கு தெளியவைப்பது மிகவும் கடினம். கிருஸ்துவர்கள் எவ்வளவு ஆப்பு வைத்தாலும் நாங்கள் அதை தாங்கிக்கொள்வோம் திரும்பி நிற்போம் ஆனால் பார்பனர்களையும் ஹிந்து மதத்தையும் உயிர் உள்ளவரை எதிர்போம். எங்களுக்கு ஆப்பு வைத்தாலும் கூடவே இலங்கை அப்பாவி தமிழர்கள் செத்தது போல் நீங்களும் எங்களுடன் சேர்ந்து இனபகை தீயில் சாகவேண்டும் என்று நாங்கள் தினமும் கிருஸ்து ஸ்தோதிரம் ஜபிப்போம் !! ஆமென்

  5. @ Paraneetharan, என்னத்த உடைத்தார்கள். கடைசி வரை புத்தக்த்தின் மைய பகுதிக்கே வரவில்லையே 🙂

    அது என்ன குமரி கண்டம்… இதற்கு சாட்டிலைட் போட்டோ இருக்கிறதாம். இதையா நீங்கல் சொல்கிறீர்கள்.. உங்களிடன் இருந்தால் எனக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அந்த சேட்டிலைட் மேப் மட்டும் நீங்கள் காட்டிவிட்டால் தமிழ் ஹிந்திவில் எழுதுவதையே நான் நிறுத்தி விடுகிறேன்… சவாலா?

    புத்தகத்தின் நோக்கம் ஆரியம் என்ற வார்த்தையும் ஆரியம் என்ற வார்த்தையும் இனத்தை குறிக்கும் சொல் அல்ல.. இது இனவாதாமாக கிறித்துவ மிஷியனரிகள் தான் செய்தார்கள் என்று சொல்லியுள்ளது… இதை விட வேறு என்ன வேண்டி இருக்கிறது. திராவிடம் என்பது இனத்தை குறிப்பது அல்ல. அது இடத்தை குறிக்கும் சொல்,,,

    இந்த இலட்சணத்தில் அவர்களின் கழக அரசியல் மேடை பேச்சை ஒரு ஆய்வு புத்தகத்தை கிழித்துவிட்டதாக மார்தட்டி கொள்கிறீர்கள்..ஹிஹி…

    வேண்டும் என்றால் அந்த புத்தகத்தை வாங்கி படித்து விட்டு எழுதுங்கள். அடுத்தவன் சொல்வதை அப்படியே நம்புவது தான் பகுத்தறிவா?

    புத்தகத்தை படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்….

    \\ஆரிய சிந்தனை அழியும் \\ இதை தானே நாங்களும் சொல்கிறோம்… ஆரிய திராவிட இனவாத கோட்பாடு அழியட்டும் என்று 🙂

    இது கூட தெரியாமல் ஒரு மாநாடு அதை கேட்க சில ஆட்டு மந்தைகள்…..

    ஒரு முக்கியாமான் கேள்வி….\\Paraneetharan…..இது ஆரிய பெயரா திராவிட பெயரா?

    கிறித்துவத்தின் அடையாளமான…. மெழுகுவர்த்திகளாக இருந்து எரிந்து அழிவதை விட ஹிந்து மதத்தின் விளக்காக இருந்து நீங்களும் பிரகாசித்து அடுத்தவர்களுக்கும் ஒளி கொடுங்கள்

  6. பெரியாருக்கு பிறகு திடல் நல்ல கார்பரேட் நிறுவனமா மாறிபோச்சு சார். பெரிய ப்ராப்பர்ட்டி, கல்லூரி முதல் கடலெண்ணெய் வரை பல வியாபாரங்களில் பிஸியா இருக்காங்க. வியாபாரம் அமோகமா நடக்குது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வீரமணியார் SAFE.

    போன வருஷம் அதிக பணத்த வெச்சுகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம எண்பது கோடிக்கு அமிஞ்சிக்கரைல ஒரு பிராப்பர்டி வாங்கிபோட்டாங்க.

    பார்ப்பன விரோதம் எல்லாம் சும்மா மக்களையும் உண்மையான பெரியர்வாதிகளையும் ஏமாத்தத்தான். சில வருடங்களுக்கு முன்னால் எதோ ஒரு ஐ-டி நிறுவனத்திற்கு இடத்தை வாடகைக்கு விட்டாங்க. அவங்க வந்து கணபதி ஹோமம் எல்லாம் பண்ணினாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க? கேட்டா அதுகொரு நியாயம் சொல்லுவாங்க.

    இப்போ வீரமணி மகன் தான் சிம்மாசனத்துல இருக்காரு. திடல் குடும்ப சொத்தா மாறி ரொம்ப நாள் ஆகுது.

    freeyaa விடுங்க.

  7. //EVR reached the lotus feet of the lord (?!) on 24-12-1973. How can he ally with Kamaraj in 1975? Is there something wrong here? Or have I not understood something? Kindly make it clear…
    thirumulanathan //
    பிரதமராக இருந்த இந்திரா காந்தி மக்களவையைக் கலைத்துவிட்டு1971-ல் மறு தேர்தல் நடக்க வழி செய்தபோது காமராஜர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் ஜன சங்கத்தையும் தம்முடன் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தார். அதே சமயம் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும் சட்டசபையைக் கலைத்துவிட்டு மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் தயரானார். மக்களவையில் தனது கட்சிக்கு போதிய பலம் கிடைத்தால் போதும் என்று இந்திரா தமிழ் நாட்டைக் கை கழுவிவிட்டு மக்களவைக்கு பத்தே இடங்கள் கொடுத்தால் போதும் என்று கருணாநிதியிடம் கெஞ்சி வாங்கிக் கொண்டு தனது இந்திரா காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு இடம் கூட இல்லாமல் செய்தார்! சுயநலனுக்காக தேசியத்தை விட்டுக்கொடுத்த துரோகிதான் இந்திரா காந்தி!
    காமராஜர் ஜனசங்கத்தை இணைத்துக்கொண்ட போதிலும் ஜனசங்கம் வெற்றி பெறும் வாய்ப்பிருந்த மத்திய சென்னை பூங்கா நகர், கும்பகோணம், மதுரை முதலான சில தொகுதிகளில் ஒன்றைக்கூட ஜனசங்கத்துக்கு விட்டுக் கொடுக்காத சுயநலமியாக விளங்கினார். எனினும் ஜனசங்கத் தொண்டர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தேர்தல் களத்தில் முழு மூச்சுடன் ஸ்தாபன காங்கிரஸ்-சுதந்திரா சார்பில் பாடுபட்டனர். மோதிலால்ஜி நிச்சயம் வெற்றி பெறக் கூடிய பூங்காநகர் சட்டமன்றத் தொகுதியை ஜனசங்கத்திற்குத் தர வேண்டும் என நான் காமராஜரிடம் போராடினேன். அது சுதந்திரா கட்சி ஹண்டே வெற்றி பெற்ற இடம் அதனால் அவருக்கேதான் கொடுக்க முடியும் என்று காமராஜர் பிடிவாதமாகக் கூறினார். அப்படியும் மோதிலால்ஜியும் ஜனசங்கத் தொண்டர்களும் சுதந்திரா கட்சி ஹண்டேவுக்காக மனப் பூர்வமாகப் பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர். பதவி ஆசை பிடித்து அலையும் அரசியல் கட்சிகளிடையே தேச நலனையே கருத்தில் கொண்டு விளங்கிய ஆதர்ச அரசியல் இயக்கம் ஜன சங்கம். அதன் தொண்டர்கள் ஆர், எஸ்.எஸ் பேரியக்கத்திலிருந்து வந்த புடம்போட்டு எடுத்த தங்கங்கள்.
    2. இக்கட்டுரையில் வீரமணி எஜமான விசுவாசத்துடன் இருந்ததாக ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் வீரமணிக்கு ஈ.வே ராவின் சொத்துகளின் மீதுதான் விசுவாசம். வீரமணிக்குத் தெரிந்த ஒரே சாமர்த்தியம் அண்டப் புளுகை உண்மைபோல் நாடகமாடி அரை வேக்காட்டு தொண்டர்களை நம்ப வைப்பது மட்டுமே.
    -மலர்மன்னன்

  8. நாஸ்தீகம் என்ற வார்த்தையிலே அவர்களால் நாஸ்தியே ஏற்படும் என்பதை உணரலாம் …… அவனின்றி ஓர் அனுவும் அசையாது !!!

  9. Paraneetharan K…. இந்து, இந்துத்துவா, ஆரியர் என்று ஒருவர் பேசிவிட்டால் உடனே அவர் ஒரு பார்ப்பனர். ஆரியர். கிறுக்கு தனமா இருக்கே….
    …உங்கள் ஆசிரியர்கள் உளறுவதை போல தான் உங்கள் மறுமொழியும் உள்ளது.
    …இதற்காக நான் ஒன்றும் பார்ப்பான் கிடையாது.
    திக கொட்டம் அடக்கப்படும்…..முட்டாள் சிந்தனை அழியும் வரை ஆசான்(குருஜி) வழியில் காவி எரிமலைகள் தயாராக உள்ளோம்……..
    …

  10. @ பரணீதரன்,

    அய்யா ஆரியன் திராவிடன் பிரித்தாளும் ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சியின் ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட மனிதன் என்பது உங்களக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.அப்படி இருந்தும் ஏன் இந்த வக்காலத்து???விட்டால் சிவனை நோக்கி கூறப்பட்ட “பாலிக்கும் ஆரியனே ” என்ற வசனத்தையும் பிடித்து கொண்டு சிவன் ஆரிய தெய்வம் கும்பிட கூடாதுன்னு சொல்வீங்க போல ???(ஏற்கனவே விக்கினம் தீர்க்கும் விநாயகன் ஆரிய கடவுள் என கதை கட்டி விட்டுட்டாங்க)…வட-தென் மாநிலத்தவர் இடையே நிற வேற்றுமை இருப்பதை கொண்டும் இரு வேறு இனங்கள் என கூற முடியாது.ஏன் எனில் உலகின் ஆதி குடிகள் என தம்பட்டம் அடித்து 1970 கலீல் தனி நாடும் பெற்று கொண்ட இஸ்ரவேல் இனமாகிய யூதர்களை பார்த்தல் அங்கு வெள்ளை மற்றும் கறுப்பினத்தவர்கள் கலந்தே இருக்கின்றனர்…அரசியல் சுய லாபங்கலக்காக இவ்வாறு உள்-நாடு பூசலை கிளப்பி விடும் திராவிட கட்சிகளின் சேவையை என்னவென்று சொல்வது???

    //.கையில் ஆதாரத்துடன் செய்திகளை திரட்டி…ஆரியத்தை அடித்து நொறுக்கும் பண்பு திராவிடர் கழகத்துக்கு உண்டு…//
    ஐயோ comedya பாருங்களேன்,யாரு அந்த மஞ்ச துண்டு போடவரும் திராவிட கட்சி தானே??? “இஸ்லாமிய அறிவியல்!!!”,”ஜிஹாத்”,2001 இல் இத்தாலிகாரியால் தொடங்க பட்ட “Project Joshua” போன்ற இந்திய பண்பாட்டை அளிக்கும் சக்திகளக்கு எதிராக வாய் திறக்க துப்பில்லாத திராவிட கட்சிகள் ஆரியான பத்தி பேசுகிறார்களாம்,ஆதாரத்துடன்????? ஆரிய திராவிடம் பொய் என நடுநிலை ஆரய்ச்சியாளர்கள் DNA மூலம் கூறி இருக்கிறார்களே..கலக கண்ணுமணி குஞ்சுமனிகள் என்ன சொல்ல போறாங்க??? மு.கருணாநிதியின் பகுத்தறிவுவாதம் இராமர் பால பிரச்சனையில் இவ்வாறு வந்தது,
    “ராமர் என்ன அவ்வளவு பெரிய பொறியியலாரா??” என்று..

    இதையே கிறிஸ்தவ,இஸ்லாமியரகளிடமும் சொல்லலாமே?
    நோவா என்ன அவ்ளோ பெரிய மரின் என்ஜினியரா??கப்பல் கட்ட…
    மோசேஸ் எப்படி கடலை இரண்டா பிளக்க வச்சாரு??அவரு அவ்ளோ பெரிய ———டக்கரா???”
    கலைஞ்சர் டிவியில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி போடும் போதும்,குல்லா போடு நோன்பு கஞ்சி குடிக்கும் போதும் …பகுத்தறிவு,நாத்திக வாதம்,பெரியார் எல்லாம் மறந்துடுமே???ஒரு வேலை ஒரு துண்டு கேக்உம,மட்டன் பிரியாணிக்கும் ஆசை பட்டுடாரோ???
    உங்களக்கே வெளிச்சம் !!!!!!!
    போய்ட்டு வாறன்…
    விஜய்

  11. //பெரியாருக்கு பிறகு திடல் நல்ல கார்பரேட் நிறுவனமா மாறிபோச்சு சார். பெரிய ப்ராப்பர்ட்டி, கல்லூரி முதல் கடலெண்ணெய் வரை பல வியாபாரங்களில் பிஸியா இருக்காங்க. வியாபாரம் அமோகமா நடக்குது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வீரமணியார் SAFE. -asareeri//

    ஈ.வே.ரா.வே தி.க.வை ஒரு கார்ப்பரேட்டாக நடத்தியவர்தானே. ஆட்சிக்கு யார் வந்தாலும் தனிப்பட்ட முறையில் அனுசரித்துப் போய் சொத்துகளைக் காபந்து செய்துகொள்வார். அதனால் தந்தை வழியில் தனயனாக வீரமணி நடந்துகொள்வதில் வியப்பில்லை. தி.க. என்கிற சொத்துக்குத் தன் மூலமே வாரிசு வேணும் என்றுதான் ஈ.வே.ரா. மணியம்மையை சட்டப்படிச் செல்லுபடியாகும் பதிவுத் திருமணம் செய்தார் (மற்றவர்களுக்குச் செல்லுபடியாகாத சீர்திருத்தத் திருமணம் செய்து வைப்பார்!). அதே வாரிசு வழி முறையை வீரமணியும் தொடர்கிறார்! ஆனால் ஒரு வித்தியாசம். வீரமணி தன் தந்தை (?) ஈ.வே.ரா.விடம் நடந்து கொண்டதுபோல வீரமணியிடம் அவர் மகன் நடந்து கொள்ளவில்லை. ஈ.வே.ரா.வின் அந்திம காலம் அனுதாபத்திற்குரியது.
    -மலர்மன்னன்

  12. காது கேளாதோர் மத்தியிலே ஊமையன் சண்டப் பிரசண்டன் என்று ஒரு சொலவடை உண்டு. இதையே திராவிட இயக்கத்தார் இடையிலே வீரமணி மகா புத்திசாலி என்று சொல்லலாம்.
    -மலர்மன்னன்

  13. திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    மல்கோத்ராவுடன் நீங்கள் இணைந்து எழுதிய “Breaking India” நூலை வாங்கிப் படித்து சென்ற ஆண்டின் தொடக்கத்திலேயே சில மடலாடற்குழுக்களில் இதன் வழு நிறைந்த போக்கைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தேன்.
    சூன் 2011 வரை தமிழகத்தில் பல அறிஞர்களுக்கு இந் நூல் பற்றித் தெரியாது.இந் நூலில் என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு குறித்தும் கூறியுள்ள கருத்துகளையும் மின்னஞ்சல் வழிப் பகிர்ந்திருந்தேன்.எனினும் தாங்கள் கூறியுள்ள தவறான கருத்துகளை மறுத்துத் தங்களுக்கே எழுதவேண்டும் என அப்போது கருதவில்லை.அதற்குக் காரணம்,நீங்கள் கூறிய தவறான கருத்துகளை மறுத்து கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் எழுதிவிட்டமையும் எழுத்தாளர் செயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் திரு.குமார் குமரப்பன் உண்மைகளைத் தெளிவுபடுத்தியமையுமே ஆகும்.
    ஆனால் இருவரின் மறுப்புகளையும் பொருட்படுத்தாது மீண்டும் பழைய பொய்களையே தமிழ்ப்பதிப்பிலும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பது வருந்தத்தக்கது.
    ஒரு பொய்யையே ஒன்பது முறை திருப்பிக் கூறினால் உண்மை என மக்களை நம்பவைத்துவிடலாம் எனும் கோயபல்சு வழியைப் பின்பற்றிய இட்லர்நெறியையே உங்கள் நெறியாகக் கொண்டுள்ளீர்கள்.

  14. என்னைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் அதற்கான என் மறுப்பையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.என்னிடம் ஆங்கில மூலம் கணினியில் உள்ளதால் அதனையே இங்குக் காட்டுகிறேன்.

    In 1996, the University of California at Berkeley launched a Tamil Chair, calling it ‘the first of its kind – – in an American University’. The person hired for the Chair was not a native Tamil speaker, but Professor George L. Hart, whose pro-Dravidian politics were mentioned above. One of the major campaigners and fund raisers for the Berkeley Chair was the Federation of Tamil Sangams of North America (FeTNA), whose links with Tamil nationalist movements are explained later in this Chapter. The first visiting Professor invited to Berkeley as part of the work done by the Chair was Professor Ilakkuvanar Maraimalai from Chennai. Ilakkuvanar had previously visited the U.S.A. in 1987 to attend a linguistic conference. At that conference, he expressed his delight to have learned ‘many things about the Mormon religion and the Church of the Latter Day Saints’. The Mormon Bible reminded him ‘of a prominent religious literature in Tamil, TIRUVACHAGAM’. Like a true Dravidianist, Ilakkunavar believes that the Government of India discriminates against its Tamil citizens and that ‘India remains North’, and that present-day India is a ‘torture camp for religious minorities’. His writings feature topics like ‘sexual assault on Christian nuns’ in India, and, ‘I love America’. He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkunavar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India. Hart used the Berkeley Tamil Studies Chair to boost those scholars who emphasise the separateness of Tamil from Indian traditions. He accomplishes this by organizing forums where such scholars come together to reinforce Dravidian separatist identity politics in India. For instance, he organized a meeting of Western Tamil educators featuring Thomas Malten, whose Tamil Studies department at Cologne University was closely associated with Germany’s Lutheran Church (whose activities in India are discussed in Chapter 17 and also Appendix H). Another guest was Norman Cutler of the University of Chicago, who studied Tamil under an American National Defence Foreign Language fellowship and whose work is considered to have opened up for U.S. policymakers ‘an India that does not speak Hindi and looks back to nearly 2,000 years of tradition outside of Sanskrit’. Tamil conferences organized by the Berkeley Tamil Chair often feature papers that deconstruct traditional Tamil images of devotion, in the same manner as is found in modern Dravidian politics. For example, a paper by Hart interprets RAMAYANA as ‘a strange work’ filled with contradictions between ‘Brahminical thought’ and ‘martial valour’. He sees RAMAYANA primarily and yet ‘subtly’ as a way to oppress the Dravidians. Hart claims that this was later reflected in the way that the ‘great military and imperial power of the Cholas was leavened by the Brahminical system that they supported’. This nuanced anti-Brahminism is camouflaged in academic language. Hart stresses that his interpretation ‘brings to mind some modern political themes’. In this manner, India’s classics are DECONSTRUCTED as a method to tease out the oppression inherent in Indian civilization.
    அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் பற்றியும் என்னைப் பற்றியும் நீங்கள் கூறியுள்ள “குற்றச்சாட்டுகளின்”மையப் பகுதி என இதனைக் கருதலாம்.உங்கள் ஆங்கில நூலின் பத்தாவது இயலில் (பக்.167-169) இப் பகுதி இடம் பெற்றுள்ளது.

  15. 1997-1998 கல்வி ஆண்டில் நான் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினேன்.ஆனால் என்னைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நீங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள தரவுகள் 2008-இலும் அதன்பின்னும் வலைப்பூக்களில் அமைந்த என் பதிவுகளேயாகும்.
    பிரிகாம்யங் பல்கலைக் கழக மாநாட்டில் மார்மன் சமயம் பற்றி நான் பேசியதாக உங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படையிலேயே இந்தக் கருத்து பிழையானது.நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள என் வலைப்பதிவில் தெளிவாக
    “My paper” Government Administrative terms -A Morphological study” got approved by the conference committee.”
    என்று கூறியுள்ளமையைக் கவனிக்காமல் நான் ஏதோ சமயப்பரப்புரை நிகழ்த்தியதாக எழுதியுள்ளீர்கள்.
    Deseret Language and Linguistic society, எனும் ஆராய்ச்சிநிறுவனம் பிரிகாம்யங் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய மொழியியல் மாநாட்டில் கலந்துகொண்ட போது என் பயண அனுபவங்களை 14/6/2008-இல் நான் பதிவு செய்துள்ளேன்.அந்தப் பதிவில் ஊட்டா மாநிலத்தில் பெண்கள் முழங்கால் தெரிய உடையணியக் கூடாது எனவும் மதுவகைகள்,காப்பி,தேநீர் போன்றவை அங்குப் பருகப்படுவதில்லை எனவும் நிலவிய சூழல் கண்டு வியந்து அதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் மார்மன் சமயமே எனவும் அறிந்தேன்.அவர்கள் பெண்மையைப் போற்றும் திறத்தினைப் பாராட்டியதுடன் மார்மன் விவிலியத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதால் காதலாகிக் கசியும் நம் நெறியை அந்த மறையில் காணநேரிட்டதையும் மாணிக்கவாசகர் நெஞ்சை முன்னிலைப்படுத்திப் பாடிய திருவாசகப் பாடல்களில் இறைவன் ‘தேன்’என உருவகப்படுத்தப்பட்டுள்ளமை போல் மார்மன் திருமறையிலும் குறிப்பிடப்பட்டுள்ள தற்செயலான் ஒப்புமைகள் குறித்தும் என் பதிவை வலைப்பூவில் (14/6/2008) பதிந்திருந்தேன்.இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என்
    கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்.நீங்கள் மாநாட்டில் அவ்வாறு நான் பேசியதாக உங்கள் நூலில் பதிவுசெய்துள்ளமை அடிப்படைப் பிழை.
    என் கருத்து ’ஒப்பீடு’ என்னும்வகையில் பதிவுசெய்வத்ற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது.நீங்கள் குறிப்பிடும் ‘சாமி’கள் பற்றி எனக்குத் தெரியாது.ஒப்பீடு வேறு;ஒப்பாய்வு வேறு.இப்போதும் என் கருத்தில் -ஒப்பீட்டில்- எப் பிழை இருபதாகவும் கருதவில்லை.மார்மன் சமய வரலாறு கூறி அச் சமயத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளீர்கள்.
    அப்பரும் சம்பந்தரும் இயற்றிய பாட்லகளை மேற்கோள் காட்டுகிறோம்;அப்போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறிய ஓலக்குரலை யாராவ்து பொருட்படுத்துகிறோமா?இதனைச் சொல்லப்போனால் உடனே உங்களுக்குச் சீற்றம் பிறக்கலாம்.எந்தச் சமயவரலாறும் குருதிக்கறை தோய்ந்ததாக் உள்ளமையே உலகவரலாறு.இதில் மார்மன் சமயம் பற்றிய பழிப்புரை எதற்கு?அதனைச் சொல்லி என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்களையும் ப்ழிக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை.
    அப்படிப் பழிப்புரை கூறுவதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமேயாயின் நாங்கள் இருவருமே அதற்குக் குறுக்கே நிற்கப்போவதில்லை.
    இந்தியா என்றாலே சமற்கிருதம் மட்டுமே வழங்கும் மொழி என்னும் எண்ணம் பிழையானது என்பதை அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நான் குறியதாக என் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளமையே உங்கள் சீற்றத்திற்குக் காரணம்.

  16. என் வலைப்பதிவுக்கு வழங்கப்பட்ட கருத்துரைகளில்
    Thank you for this showing of your love for my country. I have been to most of the places you mention, and they are truly beautiful. I’d like to someday visit all the beautiful places of your country. By the way, I have a Master’s degree in linguistics, and while I haven’t studied the languages of India, I am well aware that there are more than Sanskrit, and that Sanskrit is not used in everyday speech! i’m glad you could educate some American students; I hope they will pass your teachings on. I’m not a believer in the Mormon faith either, but I do applaud their emphasis on family ties. Thanks again for this wonderful piece; I’m looking forward to the next part!
    என்னும் கருத்து உங்களுக்குக் கசப்பாக இருந்திருகலாம்.ஆனால் இந்தக் கருத்தாடல் அனைத்தும் நான் கலிபோர்னியாவிலிருந்து வந்ததன்பின் -பதினோராண்டுகளின் பின்-இணையத்தில் நிகழ்ந்தவை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
    “The Rape of a Christian Nun-A National Shame“
    என்னும் என் கவிதை வலைப்பதிவில் வெளிவந்துள்ளமை உங்களுக்கு ஆறாச் சினததை அளித்துள்ளது.
    A Horrible crime,
    A dastardly act,
    About which
    The whole of India is ashamed;
    எனத் தொடங்கும் என் கவிதை சமயவெறியினால் நிகழ்ந்த வன்கொலை குறித்த என் மனத்துய்ரைப் பதிவுசெய்யும் முயற்சியே.அக்தோபர் 7,2008-இல் வெளிவந்த இந்த வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு பார்த்திருக்க வாய்ப்பில்லை.அங்குப் பணியாற்றிவிட்டு வந்து பதினோராண்டுகளின் பின் நான் அவரை மகிழ்விப்பதற்காக இப்படி எழுதியதாக நீங்கள் கருதுவது பொருந்துமா?
    இப் பதிவுக்கு அமெரிக்க இளைஞர்கள் அளித்துள்ள கருத்தீடுகள் தங்களையே தாக்குவதாகக் கருதிவிட்டீர்களா?
    “This is so typical of fanatical religious terrorists, and it won’t stop unless all decent Indians stand up in protest against the violence, the religious intolerance, and the passiveness of the government. The people of India are in my prayers.”
    என்னும் Lisa Renee அவர்களின் கருத்தும். (10/8/2008 நாளிட்டது)
    “don’t know if one should leave this ‘change’ and ‘weeding out’ to the next generation…although hopefully they are as appalled as are you and i…so much evil done in the name of religion is really done out of greed and a thirst for power…sometimes merely xenophobic meanness!
    i hadn’t heard of this before your piece…thanks for spreading the word.”
    என்னும் Oonah merriwether அவர்களின் கருத்தும் (10/8/2008 நாளிட்டது) உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் கசப்பாகத் தான் உள்ளது.காரணங்கள்தான் வெவ்வேறு.

  17. தாங்கள் அமெரிக்கமண்ணில் பரப்பவிரும்பும் கருத்துகளுக்கு நேரெதிராக என் வலைப்பதிவுகள் பணியாற்றியமை தங்களுக்கு வெறுப்பை வழங்கியுள்ளதில் வியப்பில்லை.
    ஆனால் 2008-இல் நிகழ்ந்த இந்தக் கருத்தாடலுக்கும் 1997-இல் நிகழ்ந்த என் பணிநியமனத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவதுதான் உங்கள் வாதத்தின் பொய்ம்மையையும் பொருந்தாமையையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
    He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkuvanar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India.
    என நீங்கள் எழுதியுள்ளமை முற்றிலும் பிழையான கூற்று.
    19/6/2008-இல் ”George L.Hart III- a Pride of the Nation” என வலைப்பதிவு வெளிவரப் போகிறது என எதிர்பார்த்தா ஏப்ரல் 11-2000 அன்று தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய தம் வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு வெளியிட்டிருப்பார் எனக் கருதுகிறீர்கள்?
    ஏறக்குறைய இரண்டு கோடிப்பேர் உலகெங்கும் இந்த வலைப்பதிவைப் படித்துத் தமிழின் செம்மொழித் தகுதிப்பேற்றை அறிந்துகொண்டதும் இந்திய அரசுஅறிஞர் சார்சு கார்ட்டு அவர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு வழங்கியமையும் தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளமை புலனாகின்றது. சமற்கிருதத்திற்குப் போட்டியாகத் தமிழையும்-நீச பாசையாகிய தமிழையும்-செம்மொழி என்றால் பாவம் உங்களால் தாங்கிக் கொள்ள இயலாதுதான்.
    தமிழ் செம்மொழித் தகுதிப்பேற்றை அடைந்தமைக்கு சார்சு ஆற்றிய பணியும் பங்களிப்பும் அவரைப் பழிதூற்றவும் “திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு” உறுதுணை பெரிந்ததாகக் குற்றம் சாட்டவும் உங்களைத் தூண்டியுள்ளது.இதற்காக இன்னும் மால்டன்,நார்மன் கட்லர் ஆகியோரையும் காரணமின்றிக் குறைகூறியுள்ளீர்கள்.
    ஆய்வுத்திறமும் கல்விப்பெருமிதமும் வாய்ந்த அறிஞர்களை உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப முத்திரை குத்துவது எவ்வகையில் முறையானது?
    இந்துசமயத்தைக் காப்பதாகக் காட்டிக்கொண்டு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும்பொருள் திரட்டிவரும் உங்கள் முயற்சிக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.ஆதாரமின்றியும் காரணமின்றியும் அவதூறுகளை அள்ளிவீசினால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படலாம்.

  18. \\சமற்கிருதத்திற்குப் போட்டியாகத் தமிழையும்-நீச பாசையாகிய தமிழையும்-செம்மொழி என்றால் பாவம் உங்களால் தாங்கிக் கொள்ள இயலாதுதான்\\

    சமற்கிருதம்.. ஹிஹிஹி… அப்படி ஒரு மொழி இருக்கிறதா… கட்டுரைக்கும் எழுத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? அது சரி யார் சொன்னார்கள் தமிழ் நிஷ பாஷை என்று. அரவிந்த் சொன்னாரா. இல்லை இந்து முன்னணி யாராவது சொன்னார்களா? தமிழ் உதவாக்கரை மொழி என்று ஒரு அரசியல் புரோக்கர் சொன்னார். அவர் பெயரை நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறன் 🙂

    \\இந்துசமயத்தைக் காப்பதாகக் காட்டிக்கொண்டு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும்பொருள் திரட்டிவரும் உங்கள் முயற்சிக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.\\

    ஆமாம் அதற்காக தான் ஒரு புத்தகத்தை 450 ரூபாய்க்கு விற்கிறார். இது போன்று பிழைப்பு யாருக்கு இருக்கிறது என்பது ஆட்சி மாறும் பொழுது குரங்கு மாதிரி தாவும் கருப்பு குரங்குகளுக்கு தான் பொருந்தும்.

    அது சரி ஆநி செய்வது அமெரிக்க ஹிந்துக்களிடம் பணம் வாங்க செய்கிறார்கள் என்றால் நீங்கள் யாரிடம் பணம் வாங்க இது போன்ற எட்டப்பன் வேலையை செய்கிறீர்கள்.

    உங்கள் செம்மொழி நாடகம் தான் ஊர் அறிந்ததே…. என்ன எதுவும் தெரியாமல் மறைக்க இது என்ன 20 ஆம் நூற்றாண்டு என்று நினைத்து விட்டீர்களா என்ன?
    தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி தருகிறேன் பேர்வழி என்று 1000 வருடமாக குறைத்து ஒரு போலி ஆவணத்தை இத்தாலி காரியிடம் வாங்கி கொடுத்து விட்டு பேச்சை பாரு…

    \\ஆனால் 2008-இல் நிகழ்ந்த இந்தக் கருத்தாடலுக்கும் 1997-இல் நிகழ்ந்த என் பணிநியமனத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவதுதான் உங்கள் வாதத்தின் பொய்ம்மையையும் பொருந்தாமையையும் படம்பிடித்துக்காட்டுகிறது\\

    ஹ்ம்ம்… இதில் முடிச்சு போடா என்ன வேண்டி இருக்கிறது. உண்மை தானே எழுதியுள்ளார்.

    இவர்கள் மட்டும் இல்லாததை எல்லாம் எழுதுவார்களாம். நாம் இவர்களை பற்றிய உண்மையை கூட சொல்லகூடாதாம்

  19. உங்க புத்தகம் விலை கொஞ்சம் அதிகமா இருக்கு.

    புத்தக கண்காட்சியிலே வாங்கலாம்-நு நினைச்சா 425 ரூபாய் அதிகமா பட்டுது. நெறைய மக்களுக்கு உங்க கருத்து பொய் சேரணும்னா நீங்க ஏன் “திராவிட கழக” பதிப்பு மாதிரி ஒவ்வொரு அத்தியாயத்தையும் இல்ல சுருக்கத்தையோ மலிவு விலைக்கு தரலாமே.

    பொதுவா நம்ம மக்கள் பெருசா ஆதாரத்தை எல்லாம் எதிர் பாக்கற மாதிரி தெரியலே.
    திராவிட கழக பதிப்புகள படிச்சா எதை எடுத்தாலும் பார்ப்பனன் – பார்ப்பனீயம் -நு அங்க அங்க சொல்லிட்டா போதும்நு நெனைக்கிறாங்க. அதை மாதிரி நீங்களும் அங்க அங்க கிருத்துவ பாதிரியின் சதி – கிருத்துவ சதி அப்படி-நு போட்டுக்கலாம்.

  20. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    அந்த மாநாட்டுக்கு நீங்கள் சென்ற போதுதான் மார்மான்களை குறித்து அறிந்தீர்கள் என நீங்களே கூறியுள்ளீர்கள். “The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.” (” அடுத்த மூன்று நாட்களும் மாநாட்டில் நல்ல முறையில் கழிந்தது. நான் மார்மான் மதம் குறித்தும் பின்னாளைய புனிதர்கள் சபை குறித்தும் தெரிந்து கொண்டேன்”) இதற்கு பொருள் என்ன? மாநாட்டில் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்பதுதானே… இதனைத்தான் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

    சரி //இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என் கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்// என சொல்கிறீர்கள்.

    ஆனால் நீங்கள் எழுதியிருப்பது அவ்வாறல்ல, //The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it. Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. The Mormon religion and its ways attracted me very much.The motto”Family for ever” and the respect given to the Lady of the Family i.e.wife are wonderful.The priest in Mormon church told:God felt that he should accompany us all the times and hence he created the relation called Wife. .//

    ஆக இந்த எண்ணங்கள் அங்கே எழுந்ததாகவும் இவ்விசயங்களை அங்கே மார்மான் பாதிரியாரிடம் பேசி கேட்டறிந்ததாகவுமே கூறியுள்ளீர்கள். ஆனால் இப்போது அதற்கான அமைப்புகள் அங்கு இல்லை என கூறியுள்ளீர்கள். இந்த முரணை சற்று ஆராய்ந்த போது மற்றொரு விசயம் தெரிந்தது.

    உங்கள் கட்டுரையில் //Brigham Young university is one of the prominent univertsities in US// என்று சொல்லியுள்ளீர்கள் இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பிரசித்தமான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று மட்டும் சொல்லியுள்ள நீங்கள் அது ஒரு மத சார்பு -பிரச்சார கல்வி நிறுவனம் என்பதை ஏனோ சொல்லவில்லை.

    ஆனால் அந்த பல்கலைக்கழகம் அதன் ‘மிஷன் ஸ்டேட்மென்டில்’ தெளிவாகவே சொல்கிறது: “, the goal of Brigham Young University has been to offer “a new kind of education” for Zion, one based on precepts “revealed by the Lord,” as Karl G. Maeser once remarked. Today, BYU is widely recognized for its deep commitments to inspired religious values and rigorous intellectual learning” (https://aims.byu.edu/)

    ஆக இந்த மதச்சார்புடைய பல்கலைக்கழகம் உருவாக்கிய அமைப்பில் நீங்கள் பேசினீர்கள். உங்கள் குறிப்பிட்ட ஆய்வுத்தாள் மதச்சார்பற்ற விசயமாக இருந்தது என்பது உண்மைதான். அது ஒரு மொழியியல் கருத்தரங்கு என்பதை நாங்களும் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் போன இடத்தில் உங்கள் பார்வை எப்படி இருந்தது என்பதையே கூறியுள்ளோம்.

    அடுத்தது: 2008 இல் நீங்கள் எழுதப் போவதை நினைத்தா 2000 இல் ஜியார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என வினவியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் எழுதியுள்ளதை பாருங்கள் :

    //George Hart suggested my name for the nomination as the First Visiting Professor there. I found no words to describe the nobility and greatness of George Hart in remembering me and recommending me for a great job which is certainly a golden opportunity for any Professor in India. I determined to work to the fullest satisfaction of George Hart, Kausalya Hart, the University authorities and the Tamil community there at California// ஜார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) என்னை முதல் வருகை பேராசிரியராக முன்வைத்தார். சியார்ச்சு கார்ட் என்னை நினைவில் வைத்து என்னை இந்த பெரிய வேலைக்கு பரிந்துரை செய்த -அது நிச்சயமாக ஒரு இந்திய பேராசியருக்கு பொன்னான வாய்ப்பேதான் -சியார்ச்சு கார்ட்டின் அந்த பெருமையையும் பிரபுத்தன்மையையும் – கூற வார்த்தைகளே எனக்கு இல்லை.//

    இதை நீங்கள் கடந்த காலமாக அதாவது 1997 இல் அவர் உங்கள் பெயரை சிபாரிசு செய்த போது அவரது பிரபுத்துவத்தையும் மாட்சியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லாத அளவுக்கு உணர்ந்து அதன் காரணமாக சியார்ச்சு கார்ட்டுக்கும் கவுசலியா கார்ட்டுக்கும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் கலிபோர்னிய தமிழ் மக்களுக்கும் திருப்தி அளிக்கும் படி வேலை செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளீர்கள். இந்த 1997 செயலுக்கு பிரதியுபகாரமாக சியார்ச்சு கார்ட்டு இக்கடிதத்தை எழுதியதாக நாங்கள் கூறியுள்ளோம். உங்கள் வார்த்தைகளை அப்படியே போட்டால் அது தாங்கள் ஏதோ அவரது பரிந்துரைக்காக புளகாங்கிதம் அடைந்து அவரை பாரட்டுவதாக காட்டும் என கருதியே தங்கள் அவ்வாசகங்கள் மேலே சொன்ன விதத்தில் சுருக்கப்பட்டன. அடுத்த பதிப்பில் மேலே உள்ள தங்கள் மேற்கோளை -அதாவது 1997 இல் நீங்கள் அடைந்த உணர்வை – அப்படியே உங்கள் வார்த்தைகளிலேயே போட்டுவிடுகிறோம். சுட்டியமைக்கு நன்றி.

    அப்படியே நீங்கள் அமெரிக்காவில் உரையாற்றியது ஒரு மதச்சார்பற்ற கல்வி அளிக்கும் பல்கலைக்கழகத்தில் அல்ல, மாறாக மதச்சார்புடைய மார்மான் கல்வி அமைப்பு ஒன்றில் என்பதையும் மறக்காமல் சேர்த்துவிடுகிறோம். தாங்கள் சிரமமெடுத்து இவற்றை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

    இத்தரவுகள் விட்டுப் போனதால் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமெனில் அதற்கு மன்னிப்பும் கோரிக் கொள்கிறேன்.

  21. ஈ.வெ.ராமசாமி நாயக்கர்- தி.க. பெரியாரின் திருக்குறள் தமிழ் பற்றிய பொன்மொழிகள்
    தொல்காப்பியன் மாபெரும் துரோகி
    தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

    திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்

    வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்

    மேலும் பல
    https://devapriyaji.wordpress.com/2012/01/12/evr-golden-words/
    https://newindian.activeboard.com/t44595205/topic-44595205/
    இந்த ஈ.வெ.ராவின் விவிலிய வார்த்தைகளைப் பற்றி முதலில் இவர்கள் விளக்கிட வேண்டும்

  22. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    திருவாசகத்தைத் தமது கிறித்துவ மதமாற்ற முயற்சிகளுக்குக் கிறித்துவப் பாதிரியார்கள் பயன்படுத்த முயன்று வந்தது வரலாறு. அதன் தொடர்ச்சியாகவே நீங்கள் இந்த Brigham Young university நடத்திய மாநாட்டில் பங்கேற்று வந்திருக்கிறீர்கள் என்றும், அதன் தொடர்ச்சியாகவே பின்னாளில் தங்களை முதல் வருகை பேராசிரியராக ஜார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) முன்வைத்தார் என்றும் தற்போது ஐயம் கொள்ளத் தகுந்த முகாந்திரங்களை இங்கே நீங்களாகவே பதிவு செய்திருக்கிறீர்கள். அவ்வாறு கிறித்துவ மதமாற்றத்துக்கு ஒரு கருவியாக நீங்கள் மறைமுகமாகச் செயல்பட முன்வரவில்லை என்று நிறுவும் கடமை உங்களுக்கு இருக்கிறது.

    உங்களை இதே தளத்தின் கீழ்க்காணும் கட்டுரையைகளையும் படித்துப் பார்க்குமாறு கோருகிறேன். நீங்கள் பயணிக்கும் பாதை ஜி.யு.போப் அவர்கள் வகுத்தது என்பதை உணர்வீர்கள்.

    https://tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

    https://tamilhindu.com/2009/10/lament-of-christ-a-hindu-view/

  23. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    தெய்வத் தமிழ் என்றென்றும் செம்மொழியே. அரசியலாரோ அல்லது அரசுகளோ அறிவிப்பதனால் னொரு மொழி செம்மொழி ஆவதில்லை.

    செம்மை என்பது சிவபெருமானைக் குறிக்கும் சொல். செம்மை எனபது தொன்மை, அழகு உள்ளிட்ட பொருள்களையும் குறிக்கும். சிவனின் மொழியான தமிழ் என்றென்றும் செம்மை + மொழி செம்மொழியே. இதனை எந்த மனிதப் பிறவியும் செம்மொழியாக ஆக்கமுடியாது, ஆக்கவும் தேவையில்லை.

    தமிழையும் சமஸ்கிருதத்தையும் பிரித்துப் பேசும் சதிவலையை எந்தனை நாள்தான் நம்புவீர்களோ ?

    உங்களை இதே தளத்தின் கீழ்க்காணும் கட்டுரைகளைப் படிக்கக் கோருகிறேன்.

    https://tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-1/
    https://tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-2/
    https://tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-3/
    https://tamilhindu.com/2009/07/veda-tamil-shaivam-4/

  24. ஐயா இலக்குவனார் அவர்களுக்கு வணக்கம்! நான் ஒன்றும்ம் அறிவு கொழுந்து இல்லை, தத்தக்க பித்தக்க என்று தமிழ் பேசும் அளவுக்கு, தமிழ் வலைத்தளம் பார்த்து படிக்கும் அளவுக்கு உண்டான கல்வி திறமையே உண்டு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தும் ஆங்கிலம் வரவில்லை, ஆதலால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்றே புரிந்து கொள்ள முடிய வில்லை, ஆனால் நீர் சொல்லியுள்ள “ஆதாரமின்றியும் காரணமின்றியும் அவதூறுகளை அள்ளிவீசினால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படலாம்” இந்த வரிகள் புரிகிறது, அது மிரட்டல் தொனியில் உள்ளது. அதிலும் “தேவையில்லாத சிக்கல்கள்” இது வன்முறையை, பழி வாங்கலை பொதிந்து வரும் வார்த்தைகள் அல்லவா?

    கடுந்தமிழ் பிரயோகிக்கறேன் என்று எழுதி ரொம்ப சிரம படுத்துகிறீர், நீர் பேசும்போது இப்படித்தான் பேசுகிறீரா? கன்னியாஸ்திரி கற்பழிப்பு என்று தான் கண்ட கனவை சொன்னான், அதை கேட்டு கவிதையும் வடித்தீர், அது உண்மையில்லை என்று முடிவான பின்பு அந்த பொய்யர்களின் முகத்திரையை கிழித்து உலகுக்கு உண்மையை காட்டினீரா? இந்த உலகில் அன்பை போதிக்கும் மதம் என்று சொல்லியே சிலுவை போர் மூலம் அதிக எண்ணிக்கையில் படுகொலை நடத்தினார்களே! அதை கண்டித்து ஏதாவது எழுதினீரா? எங்காவது பேசினீரா? அதுமாதிரி இந்து மதத்தின் பெயரிலோ வர்ணாசிரம பெயரிலோ இந்தியாவிலோ, இந்துக்களின் பெயரில் வெளிநாடுகளிலோ வன்முறைகள் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதா?

    ஜாதி முறையை சில பிழைப்பு வாதிகள் பயன்படுத்தினால் அதற்கு வர்ண முறை என்ன செய்யும்? ஓய்! பத்து வருடத்திற்கு முன் ஒரு வீட்டில் போய் பொங்கலுக்கு புது பானை வாங்கி வந்தீர், இப்போது இந்தியா வந்ததால் பொங்கல் வைக்க பானை வேண்டி வந்ததால் அந்த நபருடைய நேர்மை, அன்பு, திறமை முதலியவற்றில் நம்பிக்கை வைத்த நீர் அதே வீட்டிற்கு பானை வாங்க போவீரா? இல்லையா? போன இடத்தில் அவர் நெடு நாளைக்கு முன்பே தவறி விட்டார், அவர் மகன் அல்லது மகள் மருத்துவ பணி செய்கிறார், அல்லது அந்த தொழிலை சரியாக அல்லது சிறப்பாக செய்ய தெரியாததால் வேறு தொழில் செய்கிறார்கள், அதகாக நீர் வருத்தபடுவீரா? வர்ணாசிரம முறை இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்றோ, சரியாக தெரியாவிட்டாலும் பாரம்பரிய தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்றோ சொல்லியிருக்கிறதா?

    மார்மன் மதம் மட்டும்தான் உடுக்க சொல்கிறதோ? இந்து மதம் அவிழ்த்து இட்டு கொண்டு திரியவா சொல்கிறது? உம் வீட்டில் ஒரு பிரச்சினை, உமது மகன் அல்லது மகள் உம்மை மதிக்க வில்லை, அல்லது சரியாக உடுக்க வில்லை, பேச்சு நாகரீகம் இல்லை, அப்போது என்ன செய்வீர்? சரிப்படுத்த முயல்வீரா? இல்லை வீட்டை துறந்து ஓடுவீரா? ஓய்! குடும்ப விசயத்தில் சரிப்படுத்த முயலும் நீர் தேசம் அல்லது மதம் என்று வரும் போது மட்டும் அடுத்த நாட்டு சின்காரிகளை எதற்கு அழைத்து ஆதரவு காட்டுகிறீர் என்பதோடு மட்டுமில்லாமல், நம் கூட உள்ளவர்களின் மன வலிமையை கூட நம் நாட்டில், மதத்தில் ஒன்றுமில்லை, மனித வெறுப்புதான் நம் மதத்தில் உள்ளது என்பது போல் பேசி அவர்களையும் அந்நிய மதத்துக்கு மாறும் அடித்தழ வேலைகளை எதற்காக செய்து திரிகிறீர்? உம் பிள்ளைகள் சரி இல்லை என்றால் அடுத்த நாட்டுக்காரனுக்கு உம் வீட்டை எழுதி வைப்பீரா? நம்மிடம் தவறு உண்டு, அதை களைய அடுத்த நாட்டு காரனின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை.

    தயானந்த சரஸ்வதி, ராம கிருஷ்ணர், காந்தி, முத்துக்குட்டி சாமியார், நாராயண குரு, ராஜாராம் மோகன் ராய்,…….. இவர்கள் எல்லோரும் நாம்மிடம் இருந்த குறைகளை கழைய போராடி ஜெயிக்க வில்லையா? அதுபோல் ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்ய ஆர்வம் கொள்ளும் ஓய்! மாறாக தேசத்தை கூறு போடும் வேலையை செய்யாதும். இந்து தர்மத்தையும், இந்துமக்களையும், எப்படி காப்பது, நம் குறைகளை எப்படி கழைவது என்று யோசித்து அதற்கான வழிமுறைகளை கண்டு பிடித்து மக்களிடம் ஆன்மீக அன்பு மனித விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்! மாறாக ஜாதி துவேசம், இந்து எதிர்ப்பு என்ற பிரச்சனைகளை வளர்க்காதேயும்! நம் நாடாவது கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு போகட்டும் ஓய்! உமக்கு புண்ணியமாக போகும், இந்த நாட்டு அமைதியை குலைக்க விரும்பும் முல்லா கூட்டத்துக்கும் போப் கூட்டத்துக்கும் உதவாது இருந்தால்,……. அந்த அம்மை அப்பன் உமக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்.

    (Edited and published)

  25. இந்த இலக்குவனாரின் எழுத்தைப் படிக்கும்போது இணையத்தில் நான் எழுத வந்த நாள் முதலாய்க் காணும் தமிழறியா கனிவறியா வெற்றுவேட்டு அறிஞர்களின் நினைவலைகள் மீளெழுகின்றன. இவர் போன்றோர் சொற்களே இவர் இதயத்தைக் காட்டவல்லன. நூறாண்டுகளாய்க் கிறுத்துவப்புரட்டர் திறம்பட நிகழ்த்திவரும் பிரிவினைவாத மூளைச்சலவைக்கு இவர்தம் எழுத்தே சிறந்த சான்று.

  26. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என வாதிட்டால் அதற்கு மாற்றுவாதம் கிடையாது.2008-இல் என் பயண நினைவுகளைக் குறித்திருந்தேன்.அதனை அந்த மொழியியல் மாநாட்டில் நான் பேசியதாகத் திரித்துக் கூறிய தாங்கள் அந்த வாதத்தை மீண்டும் நிறுவ முயல்வது எப்படிப் பொருந்தும்?நீங்கள் இப்படித்தான் பழிப்புரைகளை அடுக்கிக் கூறுவது என முடிவு செய்துவிட்டு அதற்குரிய தரவுகளைக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோத்தளிப்பது உங்களுக்கு உவப்பாக இருக்கலாம்.ஆனால் கால ஓட்டத்தில் உண்மை நிற்கும்.

  27. கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
    மொட்டைத் தலைக்கும் முழங்காலுகும் முடிச்சுப் போடுவது போல் என் பயணக்குறிப்புகளுக்கும் தரவுகளுக்கும் இணைப்பு கற்பித்துள்ளீர்கள்.
    அமெரிக்கா முழுமையும் பயணம் செய்யும் வாய்ப்பையும் வார விடுமுறை நாள்களில் பொழிவாற்றும் வாய்ப்பையும் பெற்ற நான் எங்குமே திராவிட இயக்கச் சார்பைக் காட்டும் வகையில் பேசியதில்லை.தொல்காப்பியம் முதல் பாரதியார்,பாரதிதாசன் வரை தமிழின் அனைத்து இலக்கியங்களையும் பற்றியே என் பொழிவுகளை அமைத்துக்கொண்டேன்.திருவாசகம்,திவ்வியப்ப்பிரபந்தம்,திருமுருகாற்றுப்படை குறித்த என் பொழிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  28. நடுநிலை பிறழா ஒரு பேராசிரியனைத் தவறாகச் சித்திரிப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன?

  29. உங்கள் நூல் முழுமைக்கும் விரிவான விடையைப் பின்னர் வழங்குவேன்.தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நோக்கம் இல்லையெனின் கூறிவிடுங்கள்.நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

  30. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    ///கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?///

    உங்கள் உளம் அறிய நீங்கள் கிறிஸ்தவ மத ஆதரவாளராகவோ, ஹிந்து மத எதிர்ப்பாளராகவோ இல்லை என்றால் எமக்கு மன நிறைவே.

    ஆனால், திருவாசகத்தை ஜி.யு. போப் தனது மத மாற்ற முயற்சிகளுக்குப் பயன் படுத்தியது போல நாச்சியார் திருமொழியும் திருமுருகாற்றுப் படையும் பயன்படுத்தப் பட உதவும் வகையில் (மறைமுகமாகக் கூட ) மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒப்பீடுகள் இருக்குமே ஆனால் அது குறித்துச் சுட்டிக் காட்டுவது ஏனைய ஹிந்துக்களின் கடமை ஆகிறது.

    இந்த நோக்கில்தான் உங்கள் திருவாசக- மோர்மன் விவிலிய ஒப்பீடும் கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு உதவும் வண்ணம் அமையுமா இல்லையா என்பதனை, நான் சுட்டிய கட்டுரைகளைப் படித்து நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.

    நீங்கள் உள்பட யார் மனைத்தையும் நோகடிப்பதில் எனக்கு விருப்பம் ஏதும் இல்லை.

    பிரித்தாளும் சதிசெய்த ஐரோப்பியர்கள் நமது தெய்வத் தமிழ் இறை நூல்களையும் (சம்ஸ்கிருத) வேதம் உள்ளிட்ட இறைநூலகளையும் திரித்தாளும் சூழ்ச்சிகளை இப்போது வலுப்படுத்தி வருகிறார்கள் என்பதனைத் தாங்களே ஆய்வு செய்து கண்டு கொள்ளலாம்.

  31. மதசார்பற்ற பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் பாரத நாட்ட்டின் வேரைப் பிடுங்கி எறியவே அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் பணி செய்கின்றன- ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறையில் எதற்காக உலகின் தொன்மையான வேதங்கள் மொழி பெயர்த்தேன் என்பதை மேக்ஸ்முல்லர் கடிதங்களில் காணலாம்.
    1. Max Müller was a British agent, especially employed (in 1847) to write the translations of the Vedas in such a demeaning way so that the Hindus should lose faith in them. His personal letter to his wife dated December 9, 1867 reveals this fact.

    2. He was highly paid for this job. According to the statistical information given on page 214 of the “English Education, 1798-1902” by John William Adamson, printed by Cambridge University Press in 1930, the revised scale of a male teacher was £90 per year and for a woman, £60 in 1853. The present salary of a teacher in London is £14,000 to £36,000 per year, which averages a minimum of at least 200 times increase in the last 146 years. Max Müller was paid £4 per sheet of his writing which comes to £800 of today (1999). This is an incredibly high price for only one sheet of writing. But it’s the general law of business, that the price of a commodity increases with its demand. The British were in such an imperative need to get someone to do this job and Max Müller was the right person, so they paid whatever Max Müller asked for. His enthusiastic letter to his mother dated April 15, 1847 reveals this fact.

    3. Max Müller’s letters dated August 25, 1856 and December 16, 1868 reveal the fact that he was desperate to bring Christianity into India so that the religion of the Hindus should be doomed.

    His letters also reveal that:

    4. He lived in poverty before he was employed by the British, (5) his duplicity in translation was praised by his superiors, and (6) in London, where he lived, there were a lot of orientalists working for the British.

    Letters of Max Müller.
    “The Life and Letters of Friedrich Max Müller.” First published in 1902 (London and N.Y.). Reprint in 1976 (USA).

    1. TO HIS WIFE, OXFORD, December 9, 1867.

    “…I feel convinced, though I shall not live to see it, that this edition of mine and the translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what that root is, I feel sure, the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.”

    2. TO HIS MOTHER, 5 NEWMAN’S ROW, LINCOLN’S INN FIELDS, April 15, 1847.

    “I can yet hardly believe that I have at last got what I have struggled for so long… I am to hand over to the Company, ready for press, fifty sheets each year; for this I have asked £200 a year, £4 a sheet. They have been considering the matter since December, and it was only yesterday that it was officially settled.”

    “…In fact, I spent a delightful time, and when I reached London yesterday I found all settled, and I could say and feel, Thank God! Now I must at once send my thanks, and set to work to earn the first £100.”

    3. TO CHEVALIER BUNSEN. 55 ST. JOHN STREET, OXFORD, August 25, 1856.

    “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

    TO THE DUKE OF ARGYLL. OXFORD, December 16, 1868.

    “India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.”

    “The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

    4. (a) FROM THE DIARY OF MAX MÜLLER. PARIS. April 10, 1845.

    “I get up early, have breakfast, i.e. bread and butter, no coffee. I stay at home and work till seven, go out and have dinner, come back in an hour and stay at home and work till I go to bed. I must live most economically and avoid every expense not actually necessary. The free lodging is an immense help, for unless one lives in a perfect hole… I have not been to any theatre, except one evening, when I had to pay 2 francs for a cup of chocolate, I thought ‘Never again’.”

    (b) TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

    “…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

  32. //கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
    திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
    திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
    இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
    //

    பிரான்சிஸ் க்ளூனி என்றொரு அமெரிக்கர்

    தான் வைணவத்தில் பெரிதும் ஈர்கப்பட்டடாகவும் சொக்கிப்போனடாகவும் சொன்னார். திருவாய்மொழி பற்றி ஸ்லாகித்து ஸ்லாகித்து புத்தகம் எழுதினார். நம்மூர் வைணவவ சிகாமநிகளுக்கேல்லாம் ஒரே சந்தோசம். அடிக்கடி இந்தியா வந்து இவர்களுடன் கலந்துரையாடி வைணவத்தில் உள்ள பிரபத்தி மார்கத்தை ஸ்லாகித்து ஸ்லாகித்து மயிர் கூச கூச கற்றுத் தெளிந்தார். மறுபடியும் நம்மூர் வைணவர்கள் அடைந்த சந்தோசத்தை சொல்லவா வேண்டும். கடைசியில் இவர்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய நாமத்தை போட்டார் . பிரபத்தி கான்சப்ட்டை சுட்டு இது முழுக்க முழுக்க விவில்ய வேதாகம கூறு. இது ஏசுவின் வழி. இயேசு பரமபிதாவை இப்படித்தான் ச்லாகித்தார் என்றெல்லாம் சொல்லி ப்ரப்பத்தி என்பதை வைணவர்கள் இயேசு காஸ்மீர் வந்து ஊழியம் செய்த போது திருடிக்கொண்டது போல ஒரு சித்திரம் ஏற்படுத்தி விட்டார் 🙂 . கஜேந்திர மோக்ஷத்தையும், இயேசுவின் சிலுவை ஏற்றத்தின் முன் வரும் புலம்பல்களையும் சமன்வயம் செய்யவில்லை அவ்வளவு தான். அதுவும் அடுத்த பத்திப்பில் செய்யலாம்

    நீங்கள் நல்லவராகவே உங்களது பார்வையில் இருந்து விட்டுப் போங்கள். ஹிந்துக்கள் இன்றைக்கு இருக்கும் நிலைமையில் முதலில் எல்லோரையும் சந்தேகப்பட்டு நன்கு தெளிந்த பிறகு நம்புவதே நன்று

  33. தமிழ் பேராசிரியர் மறைமலை அவர்களுக்கு,
    வணக்கம். நீங்கள் கிறித்தவ மத ஆதரவாளர் இல்லை என்று கூறியிருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. தமிழை ஆழ்ந்த புலமை உடையவர்கள் யாரும் கிறித்தவ ஆதரவாளராக இருக்க இயலாது. அடியேனின் கல்லுரி தமிழ் பேராசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர். நூலகத்தில் திராவிட சமயம் என்ற இதழை பார்த்துவிட்டு அய்யாவிடம் சென்று பேராசிரியர் தெய்வநாயகம் பற்றிக்கேட்டேன். திருட்டுபயல் நம்பாதே என்று சொன்னார். அந்தப் பேராசிரியர் நடத்திய சைவசித்தாந்தம் இன்றும் எண் நினைவில் நிற்கிறது. அவருக்கும் உங்களைப்போல கால்டுவெல்லின் தாக்கத்தால் ஏற்பட்ட சமஸ்கிருத காழ்ப்பு இருந்தது என்றாலும் அவர் ஒருநாளும் கிறித்தவ மிஷநரிகளை ஏற்றுக்கொண்டதில்லை.
    ஆனால் ஒரு அமெரிக்காவில் ஒரு கிறித்தவப்பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்துகொண்டே சைவ வைணவ சமய இலக்கியங்களை காக்க இயலும் என்பதை ஏற்பது கடினமாகவே இருக்கிறது.
    விபூதிபூஷன்

  34. இலக்குவனார் கூட நிஜமோ பொய்யோ தன தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார் .ஆனால்,வீரமணி தரப்பு அதற்க்கு கூட தயாரில்லை .பாவம் .அவர்கள் என்ன செய்வார்கள் .ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள் அல்லவா அவர்கள் ….

  35. //தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நோக்கம் இல்லையெனின் கூறிவிடுங்கள்.நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை//
    மேற்படி வரிகள் இக்கட்டுரையாசிரியரால் திருவாளர் மறைமலை லக்ஷ்மணனாருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டியவை. காலத்தின் கோலத்தால் இவ்வரிகள் எதிர்த்திசையிலிருந்து வந்திருக்கின்றன. இனி இவருக்கு பதில் மொழி கூறுவதை நம் அன்பர்கள் நிறுத்திக்கொள்ளலாம்.

  36. மதிப்பிற்குரிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார்,

    வணக்கம். உங்களை கிறிஸ்தவ மதச்சார்புடையவர் என நூல் கூறவில்லை. ஆனால் திராவிடவாத சிந்தனையோட்டமும் கருத்தாக்கமும் ஆபிரகாமிய சார்புடையதாக அமைகிறது. அதனை காட்டவே எவ்விதத்திலும் அனுபவ ரீதியிலோ கருத்து ரீதியிலோ இணைக்கவே முடியாத மார்மான் விவிலியத்துடன் திருவாசகத்தை முடிச்சு போடும் மனவோட்டம் காட்டப்படுகிறது. ஒரிஸா கன்னியாஸ்திரிக்காக கவிதை சமைக்கும் தங்களை அதே பாதிரிகள் நடத்தும் கல்விசாலையில் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணித்த தலித் சிறுமியின் மரணம் ஒரு செய்தியாக கூட தொடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் அந்த கன்னியாஸ்திரியின் புகார் கேள்விக்குரியதாகவே உள்ளது என்பது வேறு விசயம். ஐயா ஜார்ஜ் ஹார்ட் தமிழை செம்மொழியாக்க பரிந்துரை செய்தமையையோ அல்லது தாங்கள் பெர்க்லி தமிழிருக்கை பேராசிரியராக நியமிக்கப்பட்டதையோ தவறு என்றோ தாங்கள் செய்த எதுவுமே தவறு என்றோ நூல் கூறவில்லை. எது குறித்து கவிதை சமைக்கிறீர்கள் என்பது தங்கள் சுதந்திரம். பாடு பொருள் தங்கள் சுதந்திரம். இந்தியா சிறுபான்மையினரின் சித்திரவதை கூடமென்றோ அல்லது இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்றோ கூறுவது தங்கள் சுதந்திரம். அதை தவறு என்று நூல் சொல்லவில்லை. ஆனால் பெர்க்லே தமிழிருக்கையில் நியமிக்கப்பட்ட பேராசிரியரின் எண்ண்வோட்டங்கள் இத்தகையவை என்பதுதான் இந்நூல் சொல்ல வரும் கருத்து. ஒரு சில கருத்தியல் கொண்டவர்களின் வலைப்பின்னலே இங்கு உருவாகிறது என்பதே இந்நூல் சொல்லும் கருத்து. அந்த வலைப்பின்னலை உருவாக்க கட்டமைக்க தங்களுக்கு உரிமை உள்ளது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அப்படி கட்டமைக்கப் படுவதை சுட்டிக்காட்ட எமக்கும் உரிமை உள்ளது. அதில் தனிமனித வசைப்பாடல்கள் எதுவும் இல்லை. இதனை புரிந்து கொள்ளும் நுண்ணறிதல் பேராசிரியராக தங்களுக்கு உண்டு என்றே கருதுகிறேன்.

    அன்புடன்
    அரவிந்தன் நீலகண்டன்

  37. ஈ.வே.ரா.வின் அந்திம காலம் அனுதாபத்திற்குரியது

    Malarmannan,

    Can U pls elaborate?

  38. வீரமணி தன் தந்தை (?) ஈ.வே.ரா.விடம் நடந்து கொண்டதுபோல வீரமணியிடம் அவர் மகன் நடந்து கொள்ளவில்லை. ஈ.வே.ரா.வின் அந்திம காலம் அனுதாபத்திற்குரியது

    Malarmannan,

    Can you pls elaborate?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *