இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-13

முந்தைய பகுதிகள் :

பூனா நகரத்தை குறி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

பொருளாதார வளர்ச்சியில் மும்பை நகரத்திற்கு அடுத்த வளர்ச்சியுள்ள நகரம் பூனாவாகும். பொருளாதர வளர்ச்சிக்குறிய தொழில் வளங்கள் நிறைந்த பகுதியாகும். குறிப்பாக ஐ.டி தொழில் மிகப் பெரிய அளவில் வளரும் பகுதி, பல பெரிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் துவங்க உகந்த இடமாக தேர்வு செய்ததது பூனாவாகும். 2005-2006ல் மட்டும் 110 புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவங்கியுள்ளது. 1990ல் வெறும் ஆண்டு வருமானம் ரூ9 கோடியாக இருந்த பூனா நகரின் இன்றைய ஆண்டு வருமானம் ரூ9,000 கோடியாகும். இவ்வாறு அதிக அளவில் வருமானம் கொடுக்கும் சாபட்வேர் தொழில் கொடி கட்டி பறக்கும் பகுதியாகும். ஊலகின் முன்னணி நிறுவனமான Infosys, Wipro, IBM , Hewlett Packard, TATA Consultancy Services, Cognizant உட்பட தனியார் நிறுவனங்கள் உள்ள நான்கு ஐ.டி பார்க்குகளும், அரசின் சார்பில் உள்ள ஐ.டி. பார்க்குகள் மூன்றும் செயல்படுகின்றன.

இவ்வளவு விஷயங்களை கூற வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவுடன் நடத்தி இரண்டு யுத்தங்களின் விளைவாக. இனி இந்தியாவுடன் ராணுவ ரீதியாக யுத்தம் புரிந்தால் வெல்ல இயலாது என்ற முடிவிற்கு வந்தது. பாகிஸ்தான் அதிபாராக இருந்த ஜியா உல் ஹக் வேறு திட்டத்தை அறிவித்தார். ஆபரேஷன் டோபக் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் பாகிஸ்தானின் எண்ணம் நிறைவேறும் என்ற கருத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மும்பைக்கு அடுத்ததாக பூனாவிலும் தங்களது பயங்கரவாத தாக்குதலை நடத்த முடிவு செய்தார்கள்.

எனவே மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த லஷ்கர்-இ-தொய்பாவின் மேற்கத்திய கமாண்டர் Faisal Seikh நியமிக்கப்பட்டான். 27.7.2006ந் தேதி Faisal Seikh கைது செய்து விசாரணை நடத்திய போது பாகிஸ்தானின் திட்டம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வந்தது. முழு விசாரணையின் முடிவில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், பீட்() மலோகன், மற்றும் கோல்கபூர் போன்ற நகரங்களிலிருந்து பயங்கரவாத தாக்குதலுக்கான ஆட்கள் தேர்வு செய்ப்பட்டார்கள். இந்த நகரங்களில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இஸ்லாமியர்களிடம் ஆசை வார்த்தை கூறி 200 க்கு மேற்பட்ட இளைஞர்கள் இந்த ஜிகாதிற்கு சேர்க்கப்பட்டார்கள். இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகவே Faisal Seikh 2004,2005 ஆகிய ஆண்டுகளில் ஆயுத பயிற்சி பெறுவும், பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களுக்கு பயிற்சி கொடுக்க பயிற்சியும் பெற்றான். இந்த பயிற்சியின் போது லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய பயிற்சியாளரும் ஐ.எஸ்.ஐயின் பொருப்பாளருமான Azam Chima என்பவன் நட்பு கிடைத்து. இந்த நட்பின் காரணமாக தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐயின் முழு உதவியும் பெறப்பட்டது.

தொடரும் கதறல்கள்!

பூனா நகரில் நடந்த பல்வேறு மதக் கலவரங்களில் முக்கிய குற்றவாளியான Sajid Sundke என்பவன் கைது செய்யப்பட்டான். இவனுடன் இவனது கூட்டாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இவன் பூனா நகர் சிமி இயக்கத்தின் தலைவராவான். பூனா நகரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு முழு உதவி புரிந்தவன் என்பது விசாரனையில் தெரிய வந்தது.

பூனா நகரத்தின் மீது இஸ்லாமியர்களின் தாக்குதல் நடக்க இருக்கிறது என்கின்ற செய்தியே, 2006ம் ஆண்டு ஜீலை மாதம் 11ந் தேதி மும்பை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட Sohail Shaikh என்வன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தது. இவனை முழுவதும் விசாரித்த போது பூனா நகருக்கு அருகில் Bhimpura என்ற பகுதியில் சிமி இயக்கத்தின் பயிற்சி முகாம் இருந்ததாகவும், இந்த பயிற்சி முகாம் 2003லிருந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தான். இவனைப் போலவே 1993ல் Mulund குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலமும், லஷ்கர்-இ-தொய்வாவின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் பூனாவில் தங்கியிருந்ததாகவும், இவர்கள் சிமி பயிற்சி முகாமில் பயிற்சி கொடுத்தார்கள் என்ற தகவல்களையும் கொடுத்தார்கள். ஆகவே இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதில் பாகிஸ்தானின் ஈடுபாடு தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஜலகான் (Jalgaon)

மகாராஷ்ட்ர மாநிலத்தில் அவுரங்காபாத், மும்பை, பூனா, மலோகான், போன்ற பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் இடமாகவும், இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செல்கள் இயங்கும் இடமாகவும் விளங்குவது போல் ஜலகான் மாவட்டமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், பயங்கரவாதிகளை உருவாக்கும் இடமாகவும் உள்ளது. 2000ம் ஆண்டில் தனது நன்பர்களுடன் உல்லாச பயனம் சென்ற ஜலகான் பகுதியை சார்ந்த ஷேக் அசீப் சுப்டு (Sheikh Asif Supdu) என்பவன் மர்மமான முறையில் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்து, அவனது உடல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பின் மீடியாக்களில் ஜலகான் மாவட்டம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செல் இருப்பதாக விசாரனையில் தெரியவந்தது.

.
குலுங்கியது கோவை! ஃபிப்ரவரி 14ம் தேதி 1998! மறக்க முடியுமா?

2001ம் ஆண்டு மே மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவகத்திலும், அருகில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அலுவலகத்திலும் குண்டு வைத்த செயலுக்காக ஜலகான் மாவட்டத்தை சார்ந்த 9பேர்களை மகாராஷ்ட்ர காவல் துறையின் 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட நான்கு பேர்கள் ஷேக் அசீப் என்பவனுடன் சேர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினரின் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள். மேலும் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக ஜலகான் மாவட்டத்தைச் சார்ந்த மேலும் 14 பேர்களை காவல் துறையினர் கைது செய்தார்கள். இவர்கள் கான்பூர், புது டெல்லி, ஹைதராபாத், போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டார்கள். புது டெல்லியில் உள்ள ராணுவ தலைமையிடத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள்தான் என்பது கைதுக்கு காரணமாகும்.

2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புது டெல்லியில் நடந்த சிமியின் மாநாட்டில் (biennial ijtema) நடந்த நிகழ்சிகளிலிருந்து ஹிஸ்புல் முஜாஹ_தீன் அமைப்பினர் சற்றே ஒதுங்கியிருந்தார்கள் இவ்வாறு ஒதுங்கியதற்கு முக்கிய காரணமாக காஷ்மீர் மாநிலத்தை தவிர இந்திய நாட்டின் வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் அவலங்களை பற்றி கவலை கொள்வதில்லை என்பதை சுட்டிக் காட்டி ஒதுங்கியிருந்தார்கள். இந்த மாநாட்டில் சிமியின் தலைவராக சப்தார் நகோரி நியமிக்கப்பட்டார். ஜலகான் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியரும், சிமியின் பொறுப்பாளருமான ஷகீல் ஹன்னன் (Shakeel Hannan) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே ஜிகாதிகள் தங்களது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்தியா இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு நாட்டின் பிற பகுதிகளிலும் ஜிகாதிகள் தங்களது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வேண்டும், அதற்காக பல்வேறு மாநிலங்களில் ஜிகாதி அமைப்புகளை துவங்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கான்பூர் மற்றும் ஹைதராபாத் சிமி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்தார்கள்.

ஹன்னானின் அறைகூவலுக்கு செவிசாய்கும் விதமாக சிமியின் பொறுப்பாளர்களான கலீத் ஆஸாத் கான் (Khalid Asad Khan) ஷேக் ரிஸ்வான் (Sheikh Rizwan) என இருவரும் மற்ற மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான ஆட்களை நியமிக்கவும், அவர்களுக்கு முழு பயிற்சி கொடுக்கவும் முன்வந்தார்கள். இந்த பயங்கரவாத தாக்குதல் பயிற்சி ஜலகான் மாவட்டத்திலிருந்து அதிக அளவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தோடா பகுதியில் குண்டுகள் தயாரிப்பு பயிற்சி, வெடி குண்டுகளை கையாளுவது சம்பந்தமான பயிற்சி, ஆயுதங்களை இயக்குவது, தற்காப்பு பயிற்சி போன்ற பயிற்சிகளை பெறுவதற்கு மும்பை, பாட்னா வழியாக தோடா பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

.
தன் உயிரைக் குடிக்க வந்த குண்டுகள் அப்பவிகள் உயிரைக் குடித்ததால் மனமுடைந்த அத்வானி!

இவ்வாறு பயங்கரவாத பயிற்சி பெறுவதற்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் நான்கு பேர்கள் தகுதியின்மையின் காரணமாக ஜலகானுக்கே திருப்பி அனுப்பபட்டார்கள் ஆனால் பயிற்சிக்கு சென்ற பலர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக செய்தி ஜலகான் மாவட்டத்திற்கு கிடைத்தால், பயிற்சிக்கு அனுப்பிய இஸ்லாமியர்களின் பெற்றோர்கள் தங்கள் மகனை கண்டு பிடித்து தருமாறு ஜலகான் மாவட்ட நீதி மன்றத்தில் முறையிட்டார்கள். இவ்வாறு இவர்கள் நீதி மன்றத்தில் முறையிட செல்வார்கள் என தெரிந்தவுடன் பயங்கரவாத அமைப்பினரிடமிருந்து இவர்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை வலியுறுத்தினார்கள். அதாவது ஜலகான் மாவட்ட சிமி இயக்கத்தின் செயலாளரான வக்கூர்-உல்-ஹசன்(Waqar-ul-Hassan) என்பவர் எக்காரணத்தை கொண்டும் காவல் நிலையத்தில் மட்டும் எவ்வித புகாரும் கொடுக்க கூடாது என எங்களை மிரட்டியதாக தெரிவித்தார்கள்.

கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு. 58 பேர் பலி, 200க்கும் மேல் காயம். காரணகர்த்தா என கைது செய்யப்பட்டு பின்னர் சிறுபான்மை ஓட்டு வங்கிக்காகவே தமிழக அரசியல் வாதிகளால் வழியனுப்பி வைக்கப்பட்ட அப்துல் நாசர் மதானி!

ஆனாலும் கூட கலீத் ஆஸாத் கான் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயிற்சி கொடுக்க புதியவர்களை ஜலகான் மாவட்டத்தில் கண்டுபிடித்து ஆட்கள் சேர்க்கும் பணியை செய்து கொண்டு இருந்தான். ஆகவே வெளியிலிருந்து பயிற்சி பெற்றவர்கள் மூலம் வெடி குண்டு தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக ஜலகான் மாவட்டத்தை சார்ந்தவர்களை கொண்டு Improvised Explosive Devices (IED) குண்டு தயாரிக்க முற்பட்டார்கள். இதற்காகவே சிமி இயக்கத்தைச் சார்ந்தவர்களின் பெற்றோர்கள் எவராவது லேத் வைத்திருந்தால் அவர்களை கண்டு பிடித்து அவர்கள் மூலமாக வெடி குண்டுகள் தயாரிக்க துவங்கினார்கள். இந்த ஒர்க் ஷப்பிலிருந்து கலீத் ஆஸாத் கான் (Khalid Asad Khan ஷேக் ரிஸ்வான் (Sheikh Rizwan) ஐ.இ.டி தயாரிக்க முழு அளவில் உதவி புரிந்தார்கள். இவ்வாறு தயாரித்த Improvised Explosive Devices (IED) குண்டுகளை கொண்டு 2001ம் ஆண்டு மே மாதம் 20ந் தேதி இவர்களுடன் Irban Abdul Rauf என்பவனும் கூட்டு சேர்ந்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் குண்டு வைத்தார்கள். ஆனால் குண்டு வைக்கும் முன்னரே தகவல்கள் தெரிந்ததால் வைக்கப்பட்ட குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. மீண்டும் அதே இடத்தில் ஜூன் மாதம் 9ந் தேதி குண்டுகள் வைக்கப்பட்டன, இம்முறை வைத்த குண்டுகள் வேலை செய்யவில்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

2001ம் ஆண்டு ஜீலை மாதம் 31ந் தேதி ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பைச் சார்ந்த குல்சார் அகமது வானி (Gulzar Ahmed Wani) என்பவன் கைது செய்யப்பட்டான். காவல்துறையினரின் விசாரனையில் பெருவாரியான பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஜலகான் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி கொடுக்கும் இஸ்லாமிய பயங்கரவாத செல் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் ஈடுபட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு இந்த தாக்குதல் காரணமாக ஏற்படும் பாதிப்பு பற்றி எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தான். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் டெல்லியிலும் இருப்பதாகவும் தெரிவித்தவன், 2000 ம் ஆண்டிலிருந்து ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பிற்கு சிமியிலிருந்தும் பயங்கரவாத பயிற்சி பெறுவதற்கு தொடர்ச்சியாக ஆட்கள் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தான். இந்த பணிக்கு துணையாக காஷ்மீரில் குடியிருக்கும் குலாம் மொய்தீன் ஷா நேரடியாக இவருக்கு துணை புரிந்தான். இவனை போலவே கான்பூரில் உள்ள மும்தாஜ் அகமதுவும் உறுதுணையாக இருந்தான்.

கலமஸரி (கொச்சிக்குத் தொலைவில்) என்ற இடத்தில் தமிழக பேருந்து எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் சிறையில் மதானி துன்புறுத்தப்பட்டதாக, தமிழகத்தைப் பழிவாங்க இவ்வாறு செய்யப்பட்டது. இதற்கு அவனுடைய மனைவியே காரணம் என்று சொல்லப்பட்டது. அவர் தான் இந்த சூஃபியா!

சிமி இயக்கம் 2001ல் தடை செய்யப்பட்ட பின் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சிமி இயக்கத்தினர் பெண்கள் மூலமாக ஜிகாதி பயிற்சி கொடுக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள் . இஸ்லாமிய பெண்கள் மூலமாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஜிகாதி பாடம் புகட்டுகின்ற காரியங்களை செய்தார்கள். இதற்காகவே சிமி பெண்கள் ஸ்லீப்பர் செல் இரண்டு புதிய அமைப்புகளை உருவாக்கினார்கள், அதாவது Shaheen Force என்கின்ற அமைப்பு குழந்தைகளுக்காவும் Tehreek Tulbae-Arabiya என்கின்ற அமைப்பு மாணவர்களுக்காவும் துவங்கப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் சிமியின் வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டது. எனவே இந்த நோக்கத்தை நிறைவேற்ற மதரஸாக்கள் அதிக அளவில் உதவின, மேலும் பல கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள முஸ்லீம் ஆசிரியர்கள் இதற்கு முழு உதவிகளை செய்தார்கள். இஸ்லாமிய மாணவர்களுக்கு ஜிகாத் சம்பந்தமான கட்டுரைகள், இலக்கியங்கள், பல பயங்கரவாதிகள் ஆற்றிய உரைகள் போன்றவற்றை கொடுத்து ஜிகாதிகாள மாற்றினார்கள்.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியதற்கு ஏ.ஆர்.அந்துலே முக்கிய காரணமாகும். மாநிலத்தின் முதல்வராக இருந்த போது தாவூத் இப்ரஹிம் தனது கடத்தல் தொழிலை வெற்றிகரமாக நடத்த முழு அளவில் உதவி செய்தவர் அந்துலே என்றால் அது மிகையாகாது. பலமுறை ஜிகாதிகளுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்தவர். (the progenitor of the under world mafia in Mumbai).

மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மை

மும்பையின் குற்றச் சூழலே பயங்கரவாதிகள் இயங்க இடம் தருகிறது. 1993ல் நடந்த குண்டு வெடிப்பிற்கு முன்பே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ஆளெடுக்கும் மையமாக மும்பை மாறியது. தினசரி மும்பை முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் புழங்குவதால் அடையாளம் தெரியாமல் இயங்க பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கத்திற்கும் மும்பை பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது. ஆகவே பயங்கரவாதிகளை நசுக்கவும், பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கவும் மத்திய மாநில அரசுகளிடம் பொறுப்புணர்வு கிடையாது. இந்த சமயத்தில் மணிப்பூர் ஜார்கண்ட், மிஜோராம் முன்னாள் ஆளுநர் திரு. வேத் மார்வா கூறியதை சற்றே நினைத்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு உதவி புரியும் களப்பணியாளர்களின் ஆதரவு தேவை. அவர்களை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர்களை நாம் வேவு பார்க்க முடியவில்லை என்ற கூற்று முற்றிலும் சரியானதாகும்.

பயங்கரவாதத்தை தடுப்பதற்காக பல திட்டங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குண்டு வெடிப்பு நடக்கும் போது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சில அறிவிப்புகளை செய்கிறார்கள். அறிவித்த திட்டங்களை செயல்படுத்த கூட இந்த அரசால் முடியவில்லை, முதலில் அறிவிக்கின்ற திட்டங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்பதல் கூட கிடைப்பதில்லை.

தூங்கும் அரசுகள்!

Image Source: hindujagruti

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி நடந்த தாக்குதலுக்கு பின் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதாக மிகப் பெரிய அறிவிப்புகளை செய்தார்கள். வுpளம்பரப்படுத்திய அளவிற்கு அதன் பணிகள் நிறைவு பெறவில்லை. மும்பை மாநகரத்திலுள்ள 480 முக்கிய டிராஃபிக் சந்திப்புகளில் என்ன நடக்கிறத என்பதை அறிய, 5000 சி.சி.டி.விகளின் வலைப்பின்னலை அமைப்பது, நகாவுமானிகள், இரவுப்பார்வை வசதிகள், வெப்ப படிம கருவிகள், வாகன எண் பதிவுக் கருவிகள், ஆகியவற்றை அமைப்பது என ரூ157 கோடியில் திட்டங்கள் தீட்டப்பட்டன. வருடங்கள் மூன்று முடிந்த பின்னும் அமைச்சரவையில் இந்தத் திட்டத்திற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் கூட கிடைக்கவில்லை என்பது வேதனைக்குறிய செய்தியாகும்.

இரண்டாவது மகாராஷ்ட்ர மாநிலத்தில் 40,000 போலீஸ் பதவிகள் காலியாக இருக்கின்றன. சுமார் 900 பேரை வேலைக்கு எடுக்க ஏற்பு இருந்தும் , மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 300 பேரைத்தான் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். மேலும் பயங்கரவாத செயல்களை செய்கிற பயங்கரவாதிகள் மனதில் அச்சம் ஏற்படுத்தும் விதமாக மாநில காவல் துறையினர் தொடர் செயல்களை எதுவும் செய்யவில்லை. குறிப்பாக கூற வேண்டுமானால் காவல் துறையினரின் செயல்பாடு பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவே இருக்கிறது.

(அரசுகள் உறங்கும் வரை… தொடரும்)

33 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-13”

  1. https://www.shariah4hind.com/ இந்த அட்டூழியத் தளத்தில் அவர்கள் எவ்வளவு நேர்மையற்றவர்கள் என்பது விளங்கும். ஜைன முனி கபில் சிபல் இவர்களை எதிர்கொள்வாரா அல்லது தார்மீக அடிப்படையில் கொல்லப்படுவாரா? இதில் காட்டியுள்ள தொலைபேசி எண்கள் அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் போதிலும், எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தால், இந்திய நாட்டுப் பண்பாட்டுக்கு துரோகம் இழைப்பதைத் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்?

  2. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

    பதில்:
    இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

    1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்

    இஸ்லாம் என்ற வார்த்தை “ஸலாம்” என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. “ஸலாம்” என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

    2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

    3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( னுந டுயஉல ழு’டுநயசல) யின் கருத்து.

    இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ’லியரி ( னுந டுயஉல ழு’டுநயசல) எழுதிய “இஸ்லாம் கடந்து வந்த பாதை” (ஐளடயஅ யுவ வுhந ஊசழளள சுழயன) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.”

    4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

    ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

    5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (ஊழிவiஉ ஊhசளைவயைளெ).

    கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (ஊழிவiஉ ஊhசளைவயைளெ). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

    6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.

    இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் – முஸ்லிம் அல்லாதோர்களை – தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே – இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

    7. இந்தோனேஷியாவும் – மலேசியாவும்.

    இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் – மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் – மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

    8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்

    அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

    9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

    எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் – இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

    (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் – 256வது வசனம்)

    10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:

    அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் – உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.
    “(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.”

    11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான “அல்மனாக்” பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை “தி ப்ளெய்ன் டிரத்” என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

    12. அமெரிக்காவிலும் – ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:

    இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

    13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்

    “ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.” என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

  3. முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.

    பதில்
    உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் – இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் “மத்திய கிழக்கு நாடுகளின்” கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

    அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; “அடிப்படைவாதம்” பற்றியும் – “தீவிரவாதம்” பற்றியும் நாம் ஆராய்வோம்.

    1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
    தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து – அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து – அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து – அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

    2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

    எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் ப+சக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும். கொள்ளையடிக்கும் – சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.

    3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.:

    இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் – நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து – அறிந்த விதிகளை பின்பற்றி – அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் – இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் – இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் – மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் – மொத்த மனித சமுதாயத்திற்கும் – முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

    4. “அடிப்படைவாதத்திற்கு” டிக்ஷ்னரி தரும் விளக்கம்:

    அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் “பாதுகாக்கும் கொள்கையை” (Pசழவநளவயnளைஅ) அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான – நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது – வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். “கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்” என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

    அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் “மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது – குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்” என்பதாகும்.

    இன்றைக்கு ஒரு மனிதன் “அடிப்படைவாதம்” என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் – ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.

    5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் – ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும். சமுதாயக் குற்றவாளிகள் – ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு – அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு – மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் – அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

    6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு – “பயங்கரவாதிகள்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.

    வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் – இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் – சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் – அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் “பயங்கரவாதிகள்” என்று ஒரு தரப்பினராலும் – “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று அழைத்தனர்.

    எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் – அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு – விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு – அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.

    7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
    “இஸ்லாம்” என்ற வார்த்தை “ஸலாம்” என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் – இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.

    இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் – நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி – ஒவ்வொரு இஸ்லாமியனும் – சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

  4. ///2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.///

    அப்படி அமைதிய நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதற்கு இப்படி குண்டு வைத்து கொன்று விடலாம் என்று அர்த்தம் போலும்! அதைத்தான் செய்கிறார்கள். அதற்கு ஞாயம் கற்பிக்க ஒரு வெட்கம் கெட்ட பேச்சு வேறும்.

  5. தாங்கள் எழுதியவற்றை மெக்கா-வில் கல்வெட்டாக பொறித்து பக்கத்தில் அமர்ந்து போதனை செய்யுங்கள்! வருகின்ற தலைமுறையாவது அன்பு, அமைதி என்றால் புரிந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்!!

    1. https://www.aurangzeb.info/
    2. https://portrait-of-covert-genocide.blogspot.in/
    3. https://refugees-in-their-own-country.blogspot.in/

  6. // காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர்//

    ஐயா சீக்கு மன்சூரு, அதுக்குத்தான் காவல் துறை இருக்குல்ல, இஸ்லாமியன் அத்தனை பேரும் பயங்கரவாதியா எதுக்கு இருக்கனும்! நீங்க இப்படி கேவலமா பயங்கரத்தை போதித்ததை வீரியமாகவும் விபரீதமாகவும் புரிந்து கொண்ட முஸ்லீம் சிறுவன் தான் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டான். அந்த உண்மையை மீடியாக்கள் மறைக்கின்றன. இது போன்ற தவறான போதனைகள் அடுத்த கட்ட முஸ்லீம் பிள்ளைகளின் வாழ்க்கையில் வன்முறையை விதைக்கின்றன. ஆசிரியையை கொலை செய்த பள்ளிச் சிறுவன் தன் ஆசிரியைக்கும் பயங்கரவாதியாக இருக்க் நினைத்திருக்கிறான். அவனது இந்த நிலைக்கு உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் காரணம்

  7. ram on February 14, 2012 at 11:52 pm

    ////அப்படி அமைதிய நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதற்கு இப்படி குண்டு வைத்து கொன்று விடலாம் என்று அர்த்தம் போலும்! அதைத்தான் செய்கிறார்கள். அதற்கு ஞாயம் கற்பிக்க ஒரு வெட்கம் கெட்ட பேச்சு வேறும்./////

    சகோதரரே உங்கள் புரிதல் தவறு

    “உயிரை கொலை” பற்றி இஸ்லாம்

    “அழிவை உண்டாக்கும் ஏழு விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவைகள் யாவை? எனக் கேட்கப்பட்டது. (அதற்கு)

    “அல்லாஹ்விற்கு இணை வைப்பது, சூனியம் வைப்பது, அல்லாஹ் எந்த உயிரை கொலை செய்வதை விலக்கியுள்ளானோ அத்தகைய உயிரை உரிமையின்றி கொலை செய்தல், வட்டியை உண்ணுதல், அனாதைகளின் சொத்தை விழுங்குதல், போர் மூண்டு நிற்கும் நாளில் (புற முதுகு காட்டி) திரும்பி விடுதல், விசுவாசிகளான ( கெட்டவைகளை விட்டும் மறந்து விலகி இருக்கும்) பத்தினிப் பெண்களை அவதூறு பேசுதல் ஆகியவைகளாகும் ” எனக் கூறினார்கள்.

  8. ////neovasant on February 14, 2012 at 11:55 pm
    தாங்கள் எழுதியவற்றை மெக்கா-வில் கல்வெட்டாக பொறித்து பக்கத்தில் அமர்ந்து போதனை செய்யுங்கள்! வருகின்ற தலைமுறையாவது அன்பு, அமைதி என்றால் புரிந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்!!/////

    அதற்கு அவசியம் இல்லை, உலகம் அழியும் வரை குர் ஆன்

    மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

    உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

    குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே பல இடங்களில் தெளிவாக விளக்கி கூறுகிறான். குர்ஆனில் 38 அத்தியாயத்தில் 41 தடவை குர்ஆனைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறான் இறைவன்.

    மக்கள் அறிவு எழுச்சி பெறாத காலத்திலேயே பல அறிய தகவல்களை எளிய முறையிலும், புரியும் வகையிலும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருகின்றன என்றால், குர்ஆன் இறைவேதம் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆராய்ந்து பார்த்தாலே போதுமானது அதன் உன்மை நிலை புரியும். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நபர்கள் குர்ஆனின் உன்மை நிலையை அறிவதற்காகவே. திருமறையாம் அல்குர்ஆன் பல மொழிகளில் வெளிவந்துள்ளது அனைத்து சகோதர மக்களும், அவரவர்களுக்கு ஏற்ற மொழியில் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வேதமும் அனைத்து மொழிகளிலும் இதுவரை வெளிவந்ததே இல்லை, ஆனால் குர்ஆன் அந்த சிறப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    குர்ஆன் இறைவேதம் தான் என்பதை பல வகைகளில் தெளிவாக்களாம். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் அன்றி வேறில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதை இவ்வளவு தெளிவாகவும், அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற வகையிலும் நயமாக யாருடைய மனதையும் புன்படுத்தாமல் தொகுக்க முடியாது, அதை தொகுக்க உலகைப்படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை.

    முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் 23 ஆண்டுகாலமாக குர்ஆன் சிறிது சிறிதாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதுமட்டுமல்லாது இறைவன் சில இடங்களில் நபியையே எச்சரிக்கை செய்திருக்கிறான். உதாரணத்திற்கு நபியே குர்ஆனை இயற்றிருந்தால் இது மாதிரியான எச்சரிக்கை அவசியமில்லாத ஒன்றாகிவிடுமே! பலரின் உள்ளங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் குர்ஆனை இயற்றியுள்ளார்கள் என்ற என்னமிருந்தால் அதை அடியோடு அழித்துவிட கீழே உள்ள குர்ஆன் வசனம் ஏதுவாக அமையும்.

    இறைவனே தனது அருள்மறையில் பின்வருமாறு கூறுகிறான்.

    இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)

    (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும். (6:19)

    குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் முன்னுக்கு முரனாக திரித்து கூறவில்லை, அது எப்பொழுது அருளப்பெற்றதோ! அன்றுமுதல் இன்றுவரை மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருப்பதை வைத்தே குர்ஆன் இறைவேதம் தான் என்பது புலனாகிறது. குர்ஆன் எந்த ஒரு முரன்பாடுக்கும் உட்படவில்லை என்பதை இறைவனே திருமறையில் விளக்கி கூறி இருக்கிறான்.

    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

    நாம் எதை முன்னிருத்தி குர்ஆனில் தேடினாலும் அதற்கு ஏற்ற பதிலை நமக்கு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாக இறைமறை விளங்குகிறது. எந்த ஒரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஏராளம், அதை அனுபவிக்கும் மனமிருந்தால் குர்ஆன் தகவல்களை வெளிபடுத்தும் தாராளம்.

    குர்ஆன் எல்லாவற்றிலோடும் ஒத்து போகக்கூடிய ஒன்றாகும். 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் பல அறிவியல் உன்மைகளை இவ்வுலகிற்கு இலை மறைக்காய் போல எடுத்து கூறியிருக்கின்றது. அப்பொழுதே அது கூறியதை, விஞ்ஞானிகள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துவிட்டு என்னவோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி மார்தட்டிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ………..

    சமீப காலத்தில் விஞ்ஞானிகள் இரு கடல்களுக்கும் மத்தியில் தடுப்பு சுவர் இருப்பதாகவும், ஒரு கடல் நீர் மற்ற நீருடன் கலக்கவில்லை என்றும், ஒரு கடலின் நீர் இனிப்பாகவும், மற்றென்றின் நீன் உப்பாகவும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் இறைவனோ அருள் மறையாம் திருகுர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்னரே இச்செய்தியை விளக்கியுள்ளான்.

    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

    இது போல பல அறிய கருத்துக்களை குர்ஆன் தன்னுள் தாங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது உலகம் அழியும் வரை நடக்கும் பல அறிய செய்திகளை முன்கூட்டியே முன்னறிவிப்பாக குர்ஆன் கூறியிருக்கிறது. இறைவன் அருளால் நம் உயிருக்கு அவகாசம் இருந்தால் அப்படிப்பட்ட அரிய செயல்களை கான நம்மால் முடியும்.

    எவர் ஒருவர் (முஸ்லீமாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் சரி) முழு மனதுடனும், ஓர்மையுடனும் குர்ஆனை அனுகினால் அவர்களுக்கு குர்ஆன் நல்வழியைக்காட்டி சிறப்பான வழியில் வாழ்வை செலுத்த வழிவகை செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே உள்ள இறைவசனம் இவற்றை தெளிவுப்படுத்துகிறது.

    இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)

  9. ram on February 14, 2012 at 11:59 pm
    // காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர்//

    ஐயா சீக்கு மன்சூரு, அதுக்குத்தான் காவல் துறை இருக்குல்ல, இஸ்லாமியன் அத்தனை பேரும் பயங்கரவாதியா எதுக்கு இருக்கனும்! நீங்க இப்படி கேவலமா பயங்கரத்தை போதித்ததை வீரியமாகவும் விபரீதமாகவும் புரிந்து கொண்ட முஸ்லீம் சிறுவன் தான் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டான். அந்த உண்மையை மீடியாக்கள் மறைக்கின்றன. இது போன்ற தவறான போதனைகள் அடுத்த கட்ட முஸ்லீம் பிள்ளைகளின் வாழ்க்கையில் வன்முறையை விதைக்கின்றன. ஆசிரியையை கொலை செய்த பள்ளிச் சிறுவன் தன் ஆசிரியைக்கும் பயங்கரவாதியாக இருக்க் நினைத்திருக்கிறான். அவனது இந்த நிலைக்கு உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் காரணம்/////

    ram on February 14, 2012 at 11:52 pm

    ////அப்படி அமைதிய நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதற்கு இப்படி குண்டு வைத்து கொன்று விடலாம் என்று அர்த்தம் போலும்! அதைத்தான் செய்கிறார்கள். அதற்கு ஞாயம் கற்பிக்க ஒரு வெட்கம் கெட்ட பேச்சு வேறும்./////

    சகோதரரே உங்கள் புரிதல் தவறு

    இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!

    “எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
    “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

    ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.
    சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள். இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் காரணமாகவே கொள்கை வுறுபாடுகள் பல இருந்தாலும் அனைத்து கட்சிகளும், அனைத்து மதத்தினரும் இத்தகைய செயல்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றனர். அது மிகச் சரியான கண்டனமே என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
    ஆனால் இது மாதிரி சமயங்களில் ஒரு சில அறிவிலிகளின் அல்லது எவ்வித கொள்கை கோட்பாடற்ற இயக்கங்களின் செயல்பாடுகளினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது ஒரு சாராருக்கு மட்டும் அது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் யார் எனில் உலகின் பல்வேறு திசைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் தான். உலகின் எங்காவது ஒரு மூலையில் ஒரு குண்டு வெடித்து விட்டால் உடனே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” குண்டு வைத்ததில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலி! இதை அவர்கள் தங்கள் கைவசம் உள்ள சக்தி வாய்ந்த ஊடகங்களின் வாயிலாக பிரபலப்படுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பெருமைப்படுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிபோனதைப் பற்றியும், அதற்கு உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை.

    அதே சமயத்தில்,
    இலங்கையில் குண்டு வெடிப்பின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு குண்டு வைத்தவர்களின் மதத்தைக் கூறி அவர்களை “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
    அல்லது
    ஆந்திரா, அஸ்ஸாம், நேபால் போன்ற இடங்களில் தீவிரவாத செயல்களின் மூலம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது அவ்வாறு கொன்றவர்களை அவர்களின் மதத்தை முன்னுறுத்தி அவர்களையும் “இந்து தீவிரவாதிகள்” என்றோ,
    அல்லது
    அயர்லாந்து, ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் வன்முறைகளினால் மக்கள் கொல்லப்படும் போது அவர்கள் சார்ந்த மதத்தைக் குறித்து அவர்களைக் “கிறிஸ்தவ தீவிரவாதிகள்” என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.
    பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் அத்தகைய தீவிரவாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் “இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். இது தான் முறையானது என்பதே நமது கருத்துமாகும்.

    ஆனால் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், ஒரு சில அறிவிலிகளின் செயலுக்கு அவர்கள் சார்ந்திருக்கின்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தையே தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்தி அதன் மூலம் சத்திய ஜோதியாகிய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அவர்களின் கொள்கையைச் சார்ந்தவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த திட்டம் என்றுமே பலிக்காது. எனெனில் திட்டமிடுபவர்களுக்கெல்லாம் மேலான திட்டமிடுபவனாகிய அல்லாஹ் தன்னுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்:

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)

    பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

    ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். (உதாரணம்: <சமீபத்தில் தென்காசியில் கைதானவர்கள் மற்றும் <மஹாராஸ்திரா மாநிலத்தில் கைதானவர்கள் ). இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர்.

    “இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே “அமைதி” மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இதை நாம் கூறவில்லை! மனித குலம் முழுவதையும் படைத்து பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வே தன்னுடைய திருவேதத்திலே கூறுகிறான்: –

    அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றவன் மனிதர்கள் யாவரையும் கொலைச் செய்தவன் போலாவான்: –
    இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

    போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை!

    நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர் ஒன்றில் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெண்களையும், சிறுவர்களையும் கொல்ல தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், இப்னு மாஜா, அஹ்மத், அல்முஅத்தா.

    கொலை செய்யப்பட்டவரின் வாரிசுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது!
    (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்-குர்ஆன் 17:33)

    அநியாயமாக கொலை செய்பவனுக்கு கடுமையான தண்டணை இருக்கிறது!
    அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (அல்-குர்ஆன் 25:68)

    இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: –
    அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)

    நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)

    குண்டு வைப்பவர்கள் சாதி, மத பேதம் பார்த்து குண்டு வைப்பதில்லை! குண்டு வெடிப்பில் அனைத்து மதத்தினருமே கொல்லப்படுகின்றனர்: –
    எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அல்-குர்ஆன் 4:93)

    நியாயத் தீர்ப்பு நாளில் மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது கொலையைப் பற்றித்தான்!
    (மறுமையில்) மனிதர்களிடையே தீர்ப்பு கூறப்படுபவற்றில் முதன்மையானது (கொலை செய்து ஓட்டிய) இரத்தம் பற்றித் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்.
    மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கடுமையாக சாடுவதோடல்லாமல் அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நாம் அறிய முடிகிறது.
    எனவே ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவன் இத்தகைய காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டான். அப்படி அவன் இஸ்லாமிய விதிகளை மீறிச் அப்பாவி மக்களைக் கொல்வானாகில் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கேற்ப அந்த செயல் கடுமையான தண்டணைக்குரியது
    .
    ஆனால் இவைகளை நன்றாக அறிந்திருந்தும் மத துவேசிகள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் கண்டத்திற்குரியது மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் இருக்கிறது. நடுநிலையான பெரும்பாண்மை மக்கள் இத்தகைய மத துவேசிகளின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிவார்கள்.

    அல்லாஹ் கூறுகிறான்: –

    (நபியே!) இன்னும், ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)
    தொடர்பான கட்டுரைகளின் இணைப்புகள் – நன்றி: சத்தியமார்க்கம்.காம்

  10. 1. https://www.aurangzeb.info/
    2. https://portrait-of-covert-genocide.blogspot.in/ – bangladesh
    3. https://refugees-in-their-own-country.blogspot.in/ – kashmir
    4. https://thecandideye.wordpress.com/tag/melvisharam/ – மேல்விஷாரம், vellore

    கண்முன்னே ஆதாரம் இருந்தாலும் கண்களை இறுக மூடிக்கொண்டு காலாவதியான கட்டுக்கதைகளை உளறி கொண்டிருக்கிறிர்கள்!

    கண்ம்மூடிதனமாக வறண்ட பாலைவன கலாசாரத்தை, செழுமையான கலாச்சாரத்தின் மீது திணிக்காதிர்கள்!!

    சிறிது நேரமேனும் கண்களை திறந்து, அறிவை வளர்த்து உங்கள் முட்டாள் தனத்தை களைய முயற்சி செய்யுங்கள்!!

  11. ///“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
    “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”

    ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! ////

    ஐயா, வாசகங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

    ////சமீப காலத்தில் பெங்களூர் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலரின் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோயின. ஈவிரக்கமின்றி ஒன்றுமறியா பொது மக்களை எவ்வித காரணமுமின்றி கொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேற்கூறப்பட்ட வாசங்களுக்கேற்ப மனித சமுதாயத்தையே கொலை செய்தவர்கள் போன்றவர்களாவார்கள்.////

    என்று சொல்லிச் சொல்லி என்ன பயன், என்று வெற்றாகச் சொல்லிச் சொல்லி என்னய்யா பலன்! நீங்கள் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறீர்கள், ஆனால் கோவையில் குண்டு வைத்து பல உயிர்களை பலிவாங்கிய அப்துல் நாசர் மதானியை ராஜ மரியாதையோடு வீட்டுக்கணுப்பி வைத்த அரசியல் வாதிகளுக்கெதிராக உங்களைப்போன்ற முஸ்லீமகள் குரல் கொடுத்தீர்களா?

    கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான அப்துல் நாசர் மதானியையோ, அல்லது பாஷாவையோ தூக்கில் போட வேண்டுமென வெளிப்படையாக ஏதாவது ஆர்பாட்டங்கள் வலியுறுத்தல்கள் செய்துள்ளீர்களா?

    அந்த பயங்கர வாதிகளை மதரீதியாக உள்ளே ஆதரித்து விட்டு வெளியே இஸ்லாம் அமைதி மார்க்கம், இஸ்லாம் அமைதியை போதிக்கிறது, ஒருவரைக் கொன்றாலும் மனிதரைக் கொன்றவராவர் என்றெல்லாம் வசனம் பேசினால் என்ன பயன்?

    இந்தியாவின் அத்தனை மக்களும் வயிற்றெரிச்சலோடு அடிக்கடி சொல்வது, காசாபையும், அப்சலையும் தூக்கிலிடுங்கள் என்று! ஆனால் திவிரவாதிகளை தூக்கிலிட்டால் முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்காது என காங்கிரஸ் அதைச் செய்ய தயங்குகிறது. அப்படியென்றால் முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று காங்கிரஸே சொல்வது போலத்தானே! அதனை எத்தனை முஸ்லீம்கள் எதிர்த்தீர்கள்?

    கோவையில் குண்டு வெடித்த பிப்ரவரி 14 ல் முஸ்லீம் அமைப்புக்கள் ஏதோ ஒரு ஊரிலே வாழ் உரிமைப் போராட்டம் நடத்தியது, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்த அட்டூழியங்களை மறைக்கவே இவ்வாழ்வுரிமைப் போராட்டத்தை முஸ்லீம்களாகிய நீங்கள் நடத்துகிறீர்கள்!

    பிப்ரவரி 14 ல் கோயம்புத்தூரில் பல அப்பாவித் தமிழர்களின் வாழ்வுரிமையை பயங்கரவாதத்தால் பறித்து விட்டு, பின்னர் நெஞ்சு நிமிர்த்தி சுதந்திரமாகவும் நடக்கும் அளவு சுதந்திரம் பெற்று வாழும் இந்த நாட்டில் ஏதோ முஸ்லீமகளுக்கு வாழவே முடியாதது போல வாழ்வுரிமை மாநாடு நடத்தி ஊரை ஏமாற்றுகிறீர்கள்!

    //// இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் செயலோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது அல்லது தாங்களே தங்களின் கூலிகளின் மூலம் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அவற்றை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் செய்ததாக விளம்பரப்படுத்துவது/////

    சரி ஐயா, நீங்களும் உங்கள் சக முஸ்லீம்களும் மகாயோக்கியர் என்றே வைத்துக்கொள்வோம்! கீழ்கண்டவற்றை நீங்கள் செய்யுங்கள் பார்க்கலாம்!

    எந்த முஸ்லீமாவது சக முஸ்லீம் பயங்கரவாதியால் இறந்து போன கோவைத் தமிழருக்கு நினைவஞ்சலி செலுத்தியதுண்டா?

    பயங்கரவாதத்தை தவறு என்று கூறவரும் நீங்கள் அப்படி மனிதாபிமானத்தோடு ‘எங்கள் சக முஸ்லீமால் இறந்து போன சக தமிழ்சகோதரர்களுக்கு இந்த நாளில் நினைவஞ்சலி செலுத்துவோம்” என்று கூறி வெளிப்படையாக ஒரு குண்டு வெடிப்பு எதிர்ப்பு நாளை நடத்துங்கள் பார்க்கலாம்!

    தீவிரவாதத்தை எதிர்க்கும் முஸ்லீம் எல்லாரும் ஒன்று கூடி அப்சல் குரு மற்றும் அப்துல் கசாப் ஆகியோரது உருவ பொம்மையை கொளுத்தி அவர்களை தூக்கிலிட வேண்டு போராட்டம் நடத்துங்கள் பார்க்கலாம்!

    கோவை குண்டு வெடிப்பிற்கு காரணமாகக் கூறப்படும் அப்துல் நாசர் மதானியை கைது செய்து தூக்கிலிட்டு சாகடியுங்கள் என்று உரத்த குரலில் மவுண்ட் ரோடு மசூதிக்கு முன்பாக நின்று அனைத்து முஸ்லீம்களும் திரண்டு போராடுங்கள் பார்க்கலாம்!

    இவற்றில் எதையும் மனமுவந்து செய்யமாட்டீர்கள், மாறாக குரானை படித்து விட்டு இங்கே வந்து கக்கிவைப்பீர்கள்!

    வெளியே பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று பேசிவிட்டு உள்ளே மதத்தின் பெயரால் அவர்களை வளர்த்துவிடும் போலிகள் நீங்கள்!

    தீவிரவாதிகளை தூக்கில் போட்டால் முஸ்லீம்களுக்கு கோபம் வரும் என்று வெளிப்படையாகவே என்கிற கண்ணோட்டத்தை வெளிப்படையாக தெரியுமாறே நடந்து காட்டி முஸ்லீம்கள் தீவிரவாதிகள் மீது பாசம் வைத்திருப்பவர்கள் தான் என்று ஊருக்கு ஊர்ஜிதம் செய்துவரும் சோனியாவை எதிர்த்து தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கச் சொல்லி குரல் கொடுக்க லாயக்கில்லாத நீங்களெல்லாம் திவிர வாதத்தை ஆதரிக்கவில்லை என்று வெளியே சொல்லாதீர்கள்! வெட்கக்கேடு!

  12. ///அல்லாஹ் கூறுகிறான்: –

    (நபியே!) இன்னும், ‘சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்’ என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 17:81)//

    ஐயா, வசனத்தை யாருவேன்னாலும் பேசலாம்யா! ஆனா ஒரு உயிர சாகடிக்கும் போது நெஞ்சு பொறுக்காமல் அத்தகைய கயவர்களை அடியோடு அழிக்க அந்த மதத்திலிருந்தே ஒரு நல்லவன் பொங்கியெழுந்து வரவில்லையென்றால் அந்த மதமும் வேஸ்ட்டு, அந்த மதத்திற்கு வசனங்கள் எழுதிய வசனகர்த்தாவும் வேஸ்ட்டு! இந்தப்படம் ரொம்ப நாள் ஓடாது! உங்கள் அமைதிமார்க்க முகத்திரை கொழிந்து தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது. அதனை வசனங்களால் ஒட்ட வைக்க சிரமப்படாதீர்கள்! புத்தகத்தை விசிரி கடாசிவிட்டு வெளியே வந்து தீவிரவாதிகளை வெளிப்படையாக எதிர்த்து நில்லுங்கள்! அப்போதான் நீங்கள் உண்மையான இஸ்லாமியர்!

  13. ஐயா ஷேக்கு மன்சூரு,

    உங்கள் அமைதி மார்கத்தவன் அகமதியாக்காரனை எப்படி ரத்தக்களரியா கொல்றான்னு நீங்களே சொல்லுங்க! அமைதி மார்க்கமாம் அமைதி மார்க்கம்!

    https://hayyram.blogspot.in/2011/02/blog-post_20.html

  14. ஐயா ஹிந்து முதாதையர்களின் வழி வந்த இன்றைய அமைதிமார்க இஸ்லாமியர்களே கொலை வெறிக்கு இஸ்லாத்தில் மயான அமைதி என்று பொருள்போலும். மந்திரம் ஓதி ஆட்டை கொன்றால் பாவம் இல்லை என்பதுபோலவே காபீர்களை கொல்லுவதால் பாவம் இல்லை உயிர் பிரிந்த நிலையில் செயல் அற்ற பூரண அமைதிகிட்டுவிடுகிறது அதைதான் அமைதி மார்கம் என்கிறீர்களா ? கிழே உள்ள சமீபத்திய செய்தியை சற்று சிந்தித்து படிக்கவும். இது தவறு என்று எந்த முல்லாவாவது அல்லது டெல்லி புஹாரி யோ அல்லது ஆற்காட்டு நாவாபோ பட்டுவா எழுப்புவாரா ? தயவு செய்து சுத்தி செய்து கொண்டு தாய் மதம் திரும்புங்கள். அது தான் உங்களுக்கும் இந்த நாட்டிற்கும் நல்லது.
    British Islamist Anjem Choudary Launches ‘Shariah for India,’ Vows to Demolish Hindu Temples and Bollywood; Muslims Urged to Join In New Delhi March Next Month Marking 88th Anniversary of the End of Islamic Caliphate
    By: Tufail Ahmad*
    https://www.memri.org/report/en/0/0/0/0/0/0/6071.htm
    https://www.memri.org/
    “The Hindus or Sikhs or Other Non-Muslims… Must Not Build Any New Temples Nor Start to Sell Them and Buy New Ones, as Islam Forbids Us to Cooperate in the Bad Deeds; They Will Not Do Any Public Gathering of Their False Religion – Like Celebrating Christmas or Halloween or Diwali”
    “In return, the Hindus or Sikhs or other non-Muslims will have certain duties, in summary:
    “1. They must pay the Jizya depending on what the Khalifah adopts as the amount, for example a minimum of 1 Dinar a year or a maximum of 4 Dinar if rich.
    “2. They must receive Muslims as guests if they are travelling. This applies to Muslims and non-Muslims if Muslims pass by.
    “3. They must not build any new Temples nor start to sell them and buy new ones, as Islam forbids us to cooperate on the bad deeds.
    “4. They must not show their symbols publicly or what is in their religion, like the pigs or alcohol or crosses or idols.
    “5. They will not do any public gathering of their false religion – like celebrating Christmas or Halloween or Diwali or Guy Faulks night etc…
    “6. Moreover they must be distinguished by their clothes so that we know who they are.
    “7. They cannot raise their houses above ours.
    “8. They must not harm Muslims in any way, not to insult Allah and his messenger or insult the book of Allah
    “9. They will have the same liability in relation to the society i.e. the public law like in relation to adultery and stealing etc…”

  15. சிக் மன்சூர் !

    அல்லாஹ்- வை நான் நம்பத் தயாராய் இல்லை! அல்லாஹ் என்பதே பொய்! அல்லாஹ் என்று ஒன்று இல்லை! அதனை கற்பித்தவன் மிக மோசமான கயவாளி ! இப்படி எல்லாம் நான் சொல்வதால் என்னை நீங்கள் வெறுத்தால்,உங்களை விட என்னை தாழ்வானவனாக நினைத்தால், எனக்கு உங்கள் மீது ரொம்ப கோவம் வரும் . ஏன் என்றால் நான் சொன்னதெல்லாம் பொய் என்று நிருபிக்க உங்களிடம் எந்த எவிடன்சும் இல்லை.

    முஹம்மது திறமையான அரசியல்வாதி! ஒரு சில சட்ட திட்டங்களை ஏற்றி அது இறைவன் தந்தான் என்று பொய் சொல்லி இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த கால மக்களுக்கு இது போல சொன்னது அறியாமையால் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இறுதி தீர்ப்பு என்று ஒன்று இருக்க போவது இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    அப்படி இருந்தால் பிறந்த உடன் இறந்து போகும் குழந்தைக்கு நீங்கள் நம்பும் அல்லா என்ன கேள்விகள் கேட்டு என்ன தீர்ப்பு தருவார்?

    இந்த பொய்கள் எல்லாம் அந்த கால அரபுகளை ஏமாற்றி அரசியல் நடத்த முஹம்மது சொன்னது என்று உறுதியாக நம்புகிறேன். அது மட்டும் இல்லாமல் நான் தமிழன்! நான் ஏன் எங்கோ ஒரு காட்டு மிராண்டி கூட்டத்தில் பிறந்த ஒருவர் சொன்னதை குறித்து சிந்திக்க வேண்டும். இங்கேயே பல நல்ல நூல்கள் உள்ளது. அதை படித்தே நான் நல்லவனாக வாழ்ந்துவிட போகிறேன். நான் ஏன் மெக்காவை உயர்வாக எண்ண வேண்டும்.குர்ரான்,நபிய் மொழி என்று எனக்கு அவசியம் இல்லாததை எல்லாம் நான் படிக்க வேண்டும்.

    அறிவுச்செல்வன்

  16. //அல்லாஹ்- வை நான் நம்பத் தயாராய் இல்லை! அல்லாஹ் என்பதே பொய்! அல்லாஹ் என்று ஒன்று இல்லை! அதனை கற்பித்தவன் மிக மோசமான கயவாளி ! //

    ஆதாரம் தேவை

  17. ஷேய்க் மன்சூர்

    அல்லா நிச்சயமாக கடவுள் இல்லை என்று சொல்லிவிடலாம். [..]களுக்கு மாமா என்று சொல்லலாம்.

    எழுதவே கேவலமான விஷயங்கள். நீங்களும் விளங்கிக் கொள்ளவேண்டும் என்றே எழுதுகிறேன்

    [..]கள் ஜைனபை அடைய ஆசை படுகிறார். உடனே அல்ல அதற்க்கு ஏற்பாடு செய்து ஒரு வஹியை இறக்குகிறார்.
    [..]கள் மரியாவுடன் செய்த காரியத்தால் மாட்டிக் கொள்ள அவரை காப்பாற்ற அல்லா ஒரு வஹியை இறக்குகிறார்.
    [..]களுடன் போருக்கு வருபவர்கள் காய்ந்து கிடக்க (ஒரு வாரம் மட்டுமே) அதை சரி கட்ட அல்லா ஒரு வஹியை இறக்குகிறார்.

    குர்ஆனில் எக்க சக்க எழுத்து மற்றும் இலக்கண பிழைகள் உள்ளன ஆனால் குரான் தான் மிகவும் உன்னதமான தவறே இல்லாத நூல் என்கிறார் அல்லா

    அல்ல குர்ஆனில் திடீரென அந்த சூரியனின் சாட்சியாக சொல்கிறேன் என்கிறார். சூரியனை படைத்த அல்லாவே சூரியனின் சாட்சியாக என்றால் என்ன அர்த்தம்.

    அல்லா உலகம் தட்டை என்கிறார்.
    சூரியன் தினமும் அஸ்தமன சமயத்தில் அல்லாவின் அரசுக்கு சென்று அல்லாவுக்கு சல்யூட் வைக்கிறது என்கிறார் அல்லா

    பூமியிலிருந்து அல்லா வானத்தை பிரித்தெடுத்தார் என்கிறார் அல்லா. உண்மையில் வானமும் பூமியும் இன்றளவும் சேர்ந்தே இருக்கின்றன.
    வண்டுகள் பழத்தை சாப்பிடுகின்றன என்கிறார் உண்மையில் தேனை தானே அவை உண்கின்றன.

    சம் சம் நீர் தான் சுத்தமான நீர் என்கிறார் உண்மையில் அதில் ஆர்சீனிக் அளவு மிக அதிகமாக உள்ளது.

    காலையில் தொழாதவன் காதுகளில் சாத்தான் உச்சா போய் விடுகிறான் என்கிறார்.

    தான் சொல்லாத ஒன்றை சொன்னாதாக சொல்கிறார். எவன் ஒருவன் ஒரு ஆத்மாவை கொள்கிறானோ அவன் ஒரு லட்சம் கொல்பவனாகிறான் என்பது கையின் ஏய்பல் கதை. இந்த சுராவை [..] அவர்கள் குர்ஆனில் அல்லா சொன்னதாக சேர்த்துள்ளார். இது பழய ஏற்பாட்டில் உள்ளதாக நினைத்து சேர்த்துள்ளார். உண்மையில் இது டால்முட்டில் உள்ளது. தாளமுத் என்பது மனிதர்களால் எழுதப்பட்ட நூல். பழய ஏற்பாடு அல்லா.

    இப்படி அல்லாவால் சொல்லப்படாத ஒன்று குர்ஆனில் உள்ளதென்றால் அது [..]களின் சரக்காக தானே இருக்க முடியும். அப்பொழுது அல்லா என்பவர் [..]யின் கற்பனை தானே.

  18. ஷேய்க் மன்சூர்!

    இல்லாததற்கு எதற்கு ஆதாரம்,ஷேய்க்? நீங்கள் தான் அல்லா என்ற அரபு மொழி தெய்வம் இருக்கிறது. அது தான் முஹம்மது என்ற அரபிக்கு வாக்குகளை அருளி அவர் அதனை தெய்வ வாக்குகளாக சொன்னார் என்றெல்லாம் வெறும் நம்பிக்கையின் பெயரால் நம்பி,மற்றவர்களின் நம்பிக்கையெல்லாம் பொய் என்று சொல்லுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலையும் அந்த அரேபியன் முஹம்மது காலம் தொட்டு செய்து வருகிறீர்கள்.

    கடவுள் என்னும் பொய்யான உண்மையை எங்கள் பாரத முன்னோர்கள் சிறப்பாகவே சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஷேய்க் மன்சூர் என்ற அந்நிய நாட்டு அரபு பெயரை வைத்திருக்கும் நண்பருக்கு இந்த இனிய தருணத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அதோடு, அந்த அரபு முஹம்மதுவின் அல்லா கதை, எங்களின் கடவுள் குறித்த கதைகளில் பாலர் கதையில் மட்டுமே இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நியாபகபடுத்துகிறேன் ..

  19. நண்பர் ஷேய்க்,

    //பிறந்த உடன் இறந்து போகும் குழந்தைக்கு நீங்கள் நம்பும் அல்லா என்ன கேள்விகள் கேட்டு என்ன தீர்ப்பு தருவார்?//

    உண்மையிலேயே நான் இதை பத்தி குர்ரான்லே என்ன சொல்லி இருக்குதுன்னு தெரிஞ்சிக்க விரும்புறேன்.. தயவு செய்து எதாவுது சொல்லுங்களேன்!!

  20. //பிறந்த உடன் இறந்து போகும் குழந்தைக்கு நீங்கள் நம்பும் அல்லா என்ன கேள்விகள் கேட்டு என்ன தீர்ப்பு தருவார்?//
    உண்மையிலேயே நான் இதை பத்தி குர்ரான்லே என்ன சொல்லி இருக்குதுன்னு தெரிஞ்சிக்க விரும்புறேன்.. தயவு செய்து எதாவுது சொல்லுங்களேன்!!

    பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை; ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டால் அவன் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்காக அவனுக்குக் கூலி வழங்கப்படும். இது தான் இஸ்லாமிய அடிப்படையாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.

    1. தூங்குபவர் விழிக்கின்ற வரை.
    2. சிறுவன் பெரியவராகும் வரை.
    3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
    நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

    //கடவுள் என்னும் பொய்யான உண்மையை எங்கள் பாரத முன்னோர்கள் சிறப்பாகவே சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஷேய்க் மன்சூர் என்ற அந்நிய நாட்டு அரபு பெயரை வைத்திருக்கும் நண்பருக்கு இந்த இனிய தருணத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.//

    14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

    மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள்நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோஅம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

    எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயேஅனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான்.அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)

    ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும்வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில்தான் அருளப்பட்டது.

    அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழிதான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

    அரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லாமொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாதுஎன்பதும் இஸ்லாத்தின் கொள்கை. இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிபேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒருவழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில்அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
    யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ்மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல்இருக்க மாட்டார்கள்.

    எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம்கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

    நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தைவங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக்கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம்குறைந்தவை என்றோ ஆகாது.
    நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போதுஉலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும்மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாகஉலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

    ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள்நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழிதான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

    அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம்செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)

  21. சகோதரர் sarang அவர்களே

    நீங்கள் 10000…………கேள்வி கேளுங்கள் இறைவன் நாடினால் அதற்கு பதில் தர முயற்சி செய்கிறேன்.

    ஆனால் சில நிபந்தனைகள்

    1) உங்களது கேள்விகள் பொதுவான வலைத்தளத்தில் முன்வைக்கப் படவேண்டும், காரணம் எனது அணைத்து பதில்களும் இங்கு பதியப்படவில்லை.

    2) ஒவ்வரு கேள்விகள் கேட்கப்பட வேண்டும், நான் பதில்தர முடியாது என்று சொன்னால் தவிர வேர கேள்விக்கு அல்லது தலைப்புக்கு செல்லக்கூடாது.

    3) கேள்விகள் தெளிவாக இருக்க வேண்டும்.

    4) அவர் இப்படி செய்கிறார் இவர் இப்படி செய்கிறார் என்று தனிமனிதனையோ/சமுதாயத்தையோ பற்றி இருக்ககூடாது.

    5) இஸ்லாத்தை பற்றி குர் ஆணை பற்றி கேளுங்கள் வரவேற்கிறேன் பதிலும் தருகிறேன்.

  22. //பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை; ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டால் அவன் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்காக அவனுக்குக் கூலி வழங்கப்படும். இது தான் இஸ்லாமிய அடிப்படையாகும்//

    இந்த அடிப்படை தான் சுத்த ஹம்பக் என்று சொல்கிறேன்.பருவ வயதை ஏன் உங்கள் முகமதுவின் நாவலில் வரும் அல்லா என்ற அரபுத் தெய்வம் பிறக்கும் அனைவருக்கும் தருவதில்லை? அது என்ன பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டும் கூலி தரும் அல்லாவின் நியாயம்? பருவ வயதை அடையாமல் இறந்து போகும் மனிதக்குலந்தைகளுக்கு எந்த கூலியும் இல்லையா? அப்படி என்றால் அவர்களின் படைப்பு அல்லாவின் அர்த்தமற்ற படைப்புகளா!!

    எத்தனையோ கஷ்டங்கள் பட்டு வளர்ந்து பின்னர் மூளையையும் உடல் உழைப்பையும் கொண்டு உழைத்து பின்னர் இறந்து போகும் கோடானுகோடி நபர்கள், 1400 ஆண்டுகளுக்கு முன்னால், இன்று இருக்கும் எந்த வசதியும் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த முகமது என்ற வியாபாரி, நாற்பது வயதில் திடீர் என்று தன்னை தானே இறை தூதர் என்று அறிவித்து கொண்டு சொன்ன சில சட்ட திட்டங்களை அன்றைய சில அடிவருடிகளும் ஏற்று அதனை ஆமாம் சாமி போட அதனை இன்று ஏற்காத காரணத்தால் அந்த கோடானு கோடி பேரும் நரக குழியில் தள்ளப்படுவார்கள் என்று நீங்கள் பிதற்றுவது எந்த வகையில் நியாயம்?

    நன்மைகளும் தீமைகளும் யாருக்கும் உங்கள் இறைத்தூதர் அவருடைய நாற்பது வயதுக்குள் செய்யவில்லை என்று உங்கள் மனதை தொட்டு சொல்லி விட முடியுமா? அப்படியே நீங்கள் சொன்னால் தான் எங்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விட முடியுமா? அப்படி ஏற்று கொள்ளாதவர்கள் எல்லோரும் பாவம் செய்கிறார்கள் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? அந்த உரிமையை உங்களுக்கு நேரில் வந்து அல்லா சொன்னானா?! அப்படி சொல்லி இருந்தால் அவன் எனக்கும் நேரில் வந்து சொல்லட்டும். குறைந்த பட்சம் தேவதைகளை அனுப்பியாவது சொல்லட்டும். பின்னர் பார்க்கலாம் முகமதுவின் உண்மைகளை.

    வெறும் நம்பிக்கையை வைத்துகொண்டு சும்மா வெறும் வாயை மெல்லாதிர்கள்!!

    இதுக்கு பதில் சொல்லு,ஏன் உங்கள் அல்லா நன்மைகள் தீமைகள் செய்யும் மனித இனத்தை படைத்தார்? அதனை படைத்து அதற்க்கு தண்டனைகளும் பரிசுகளும் ஏன் தரவேண்டும்? மனித இனத்தை படைத்து இப்படி அதனை இங்கேயும் அல்லல் பின்னர் எங்கேயோ அல்லல் படுத்துவதால் அதற்க்கு என்ன லாபம்?

    //14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.//

    நீங்கள் அரபு சமுகமா? அரேபியரா?

    //ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள்நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது//

    நீங்க அந்த வியாபாரியை உலக தலைவாராக ஏற்று கொண்டிர்கள் என்பதற்காக நாங்களும் ஏற்க வேண்டும் என்பது ஏன்? அப்படி என்ன உங்களுக்கு உயருவு மனப்பான்மை என்று கேட்கிறேன்?

    மறுபடியும் சொல்கிறேன்.’அல்லாஹ்- வை நான் நம்பத் தயாராய் இல்லை! அல்லாஹ் என்பதே பொய்! அல்லாஹ் என்று ஒன்று இல்லை! அதனை கற்பித்தவன் மிக மோசமான கயவாளி !”

  23. ////பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை////
    பருவ வயது என்பது எது? ஒரு டீச்சரை கொலை செய்தானே ஒரு 14 வயது சிறுவன் அப்பாவம் பதியப்படுமா?இல்லையா?
    ////அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம்செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)//////
    அரபு மொழி பெயர்கள் மட்டும் உயர்ந்தவையா?ஏன் எல்லா முஸ்லிம்களுக்கும் அரபு பெயர்களே வைக்கிறார்கள்.தம்பல பயலுவோ வைக்கிற மாதிரி ஏன் முஸ்லிம் வீட்டு புள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை?
    /////நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போதுஉலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும்மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாகஉலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்/////

    பின்னர் எதற்காக வேதங்கள் மட்டும் சமஸ்கிருதத்தில் இருப்பதை மட்டும் ஒரு மொழி பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள்? நாங்கள் தமிழை ஒதுக்கிவைத்து சமஸ்கிருதத்தை மட்டும் உபயோகிக்கவில்லை, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலும்தான் வழிபடுகிறோம்.

    குர்ஆனில் anfal பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
    அதன்படி இங்குள்ள காபீர்களையும் முஸ்ரிக்குகளையும் கொன்று குவித்து அவரின் உடமைகளை கைப்பற்றி ஹலாலான அவற்றை பங்கு வைத்து கொள்வது சரியானதா?

  24. அட மெத்த படிச்ச மேதாவிங்களா…..ஒருவன் செய்யும் தவறுக்கு காரணம்…அவன் சார்ந்த மதம் அவனுக்கு அவ்வாறு போதிகின்றது என்று கூறுகின்றிர்கள்…சரி…
    தினசரி நாளிதல்களை பாருங்கள்…எந்த மதம் சார்ந்தவர்கள் அதிக அளவில் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று… பின் சொல்லுங்கள்…உங்களுடைய கருத்தை…
    மக்கள் தொகையில் வேறுபாடு என்று தப்பிக்க முடியாது…சதவீத அடிபடையிலேயே பாருஙகள் உங்கள் கூற்றை……..
    தவறு செய்யும் அனைவருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்…அது உலக வாழ்வில் தப்பினாலும்..பின் நரகத்தில் …அவன் எந்த மததை பின்பற்றினாலும்….
    அட இந்த தளத்திலேயே பாருங்கள்… தனிமனிதனை தாக்கும் எண்ணத்தை….பெயரை… வேறு மாதிரி திரித்து எழுதி….

    நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்தில் அல்லாஹ் என்று ஒன்று இல்லை… என்று..சொல்கிறீர்கள்….அவர்கள்..கடவுளை மறுப்பவர்களா இல்லை அர்த்தம் புரியாமலா…
    தமிழ் மொழியில் இறைவன், கடவுள் போல அரபி மொழியில் அல்லாஹ்…
    எப்படி ஆங்கிலத்தில்.. என்பது போலத்தான்……..

  25. First of all, I wish all Hindus to read Bhagvat Geeta. There is no hindu in the world who memorised it. secondly, they are not at al ready to discuss about their Geeta on the stage with Muslim Scholars. First of all there is no religion by the name Hindu. it is geographical name given by the Arabs. So you are all Sanadhans only.

  26. அன்பு நெஞ்சமே என் மார்க சகோவே துபாய் தமிழனே.

    பத்து வயது நிரம்பாத பல ஆயிரம் பாலகர்கள் பகவத் கீதையை பார்க்காமல் சொல்லுவார்கள். வருஷா வருஷம் காம்படீஷன் வச்சு இந்த பில்லைகளுகேல்லாம் பரிசு கூட கொடுக்குறாங்க.

    பகவத் கீதையை பற்றி ஒரு ஈமாந்தாரி முஸ்லீமோட(ஜாகிர் நாயக் தானே 🙂 ) எதுக்கு ஒரே மேடையில பேசணும். குரானுக்கு இணை வைத்து பேசனும்ன கலிங்கத்துப் போர் பற்றியும், அலேசாண்டர் பற்றியும், செங்கிஸ் கான் வரலாற்றையும் ஸ்டார் வார்ஸ் பற்றியும், டோரிமான் பற்றியும் பேசலாம். பகவத் கீதாவுக்கும் குரானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

    ஒன்று இறை பற்றி ஆழ விளக்கும் நூல் மற்றது எல்லோரையும் நன்றாக விலக்கி மனித இறைச்சி ததும்ப ததும்ப வாடியாடிக்கும் நூல்.

    தமிழா உனக்கு அரபிக் தெரியுமா ? தெரியவில்லை என்றால் பீஜெவின் மொழி பெயர்ப்பை நம்பிதானே நீ வாழ்ந்து கொன்றிருக்கிறாய்.

  27. S.Jainul ஒப்தீன் மார்க்க சகோவே

    பிரச்சனையை அதுவல்ல. நபி வழி கண்டால் நோஜானும் கொள்ளை காரனாவான். கொள்ளை அடிப்பது எப்படி, கற்பழிப்பது எப்படி, மற்றவரை கொடுமை செய்வது எப்படி என்றெல்லாம் முதலில் புக்கு போட்ட ஒரே மதம் இஸ்லாம் தான். இதையே மதமாக கொண்டவர்கள் நல்லவனாக வாழ நினைத்தாலும் முடியாது, அல்லாஹு விடமாட்டார். குர்ஆனில் சொல்லப்பட்ட அல்லாஹு நிச்சயமா கிடையவே கிடையாது. குரான் சொல்கிற படி பார்த்தல் அவர் ஆயிம்பதாயிரம் ஒலி வடுடங்களுக்கு அப்பால் தான் இருக்கிறார். அது நம்ம காலக்ஸியில் தான் உள்ளது, சீக்கிரமே கண்டுபிடிச்சிரலாம். ஏழு பெட்டு வானத்தில் இல்லை என்று ஏற்கனவே கண்டு பிடித்து விட்டார்கள். அண்டம் என்பது தட்டை அல்லாதால் ஏழு தளங்கள் இருக்க வாய்ப்பில்லை. அழு தளங்கள் இல்லாத பொது அதன் மேல் அல்லாஹு எப்படி இருப்பார். அங்கே அர்ஷ் எப்படி இருக்கும்.

    அல்லாவை நம்பாட்டி என்னை சட்டியில் போட்டு வார்ருவாரம். அல்லாவை நம்பினால் சொர்கமாம். ஆனா பாருங்க நம்ம சூரியன் இல்லா நிதமும் சாயன்காலாம் அல்லாவுக்கு சுஜுது செய்ய அரசுக்கு போவுதாம் (சூரிய அஸ்தமனத்தை தான் நபிகள் இப்பாடி அடிச்சுவிட்டு விளக்குகிறார்). சூரியனை விடவா என்னை சட்டி சூடா இருக்கும். அல்ல கிட்ட நின்னுகிட்டு சூரியனால எரிஞ்சு வேகரத விட நரகமே பெட்டெர் இல்ல.

    புள்ளி விவரப்படி பார்த்தல் இந்தியாவில் [இஸ்லாமியர்] வந்த பிறகே அதிகமாக அட்டூழியங்கள் ஆரம்பித்தன என்கின்றன. இன்றும் கூட உலகிலேயே அதிக அளவில் அட்டூழியங்களை கட்டவிழுத்து விடும் நாடுகளில் இஸ்லாமிய நாடுகளே பிரதானம்.

    [Edited and Published]

  28. ////அட மெத்த படிச்ச மேதாவிங்களா…..ஒருவன் செய்யும் தவறுக்கு காரணம்…அவன் சார்ந்த மதம் அவனுக்கு அவ்வாறு போதிகின்றது என்று கூறுகின்றிர்கள்…சரி…
    தினசரி நாளிதல்களை பாருங்கள்…எந்த மதம் சார்ந்தவர்கள் அதிக அளவில் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று… பின் சொல்லுங்கள்…உங்களுடைய கருத்தை//////
    நான் கேட்ட கேள்வி ஒரு சிறுவன் கொலை செய்தால் பாவமா இல்லையா? மதத்தினால் அவன் கொலை செய்தான் என்று அல்ல இது புரியாமல் நீங்கள் மேதாவித்தனமாக பதிலளிக்க வேண்டாம்.
    மேலும் புனிதபோர்கள் எந்த எந்த மதத்தின் பெயரால் மத நூலின் தூண்டுதலால் நடைபெறுகின்றது என்று எல்லோருக்கும் தெரியும்.
    தனி மனிதன் மத சாயத்தை பூசி செய்யும் தவறுகளுக்கு இந்துக்கள் ஆதாரிப்பதில்லை,
    நாசர், மதானியை கசாப் மற்றும் அப்சல் குருவை இன்னும் ஆதரிப்பது யார்?
    இந்து மதம் இந்து கடவுளரை வணங்காதவர்களை கொள்ள சொல்ல வில்லை. அவர்களை கீழ்படிந்து வரி கட்டும் வரை போரிட்டு அழிக்க சொல்லவில்லை.

  29. தமிழ் நாட்டில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். வட நாட்டை போல ஹிந்து வெறியை வளர்க்க பார்கிறீர்கள். பெரியாரின் எழுச்சி இதுவரை உங்களை அனுமதிக்க வில்லை. பெரியாரின் வீரியம் அவரது சீடர்களிடம் இப்போது இல்லை என்பதால் உங்கள் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது. ஹிந்துக்கள் நல்லவர்கள் ஆனால் ஹிந்து தீவிரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து.

  30. ஜஸ்டிஸ் ஜம்பு என்ற பெயரில் எழுதியுள்ள நண்பருக்கு,

    இஸ்லாமிய பெருமக்கள் நல்லவர்களே. ஆனால் சிமி போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து.மேலும் வஹாபி தீவிரவாதிகள் கோடிக்கணக்கான கொலைகளை செய்து மத வெறியை பரப்புகின்றனர். இந்து தீவிரவாதம் என்று ஒன்றும் எங்கும் கிடையாது. ஏனெனில், அஹிம்சா பரம தர்மம் என்பதே இந்துமதம். ஆனால் உங்கள் இஸ்லாமோ, காபிர்களை கொல் என்று சொல்கிறது. எனவே, வீண் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள். பெரியாரை பற்றி புரியாமல் பேசவோ, எழுதவோ வேண்டாம். எழுபதாம் ஆண்டுகளில் நான் திருச்சியில் பாலக்கரையில் பிரபாத் திரை அரங்குக்கு சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் , பெரியாரிடம் யாரோ ஒரு பார்வையாளர் ஓர் துண்டு சீட்டு கொடுத்து அனுப்பினார். அதில் ” ஐயா தாங்கள் ஏன் இந்துக்களை மட்டும் விமரிசிக்கிறீர்கள்? பிற மதத்தினரிடம் இந்துக்களை விட அதிக அளவில் மூடத்தனமும், பெண்ணடிமையும் காணப்படுகிறதே என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு தந்தை பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? நம் நாட்டில் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதால் , இந்துக்களை அதிகம் விமரிசிக்கிறேன். நான் மேற்கத்திய நாடுகளில் பிறந்திருந்தால் , அந்த நாடுகளில் என்ன மதம் இருக்கிறதோ , அந்த மதங்களில் உள்ள மூடத்தனத்தை கிண்டல் செய்தும் , தாக்கியும் பேசியிருப்பேன். மேலும், குதிரை சாணத்தில் முதலில் வந்து விழுவதும் சாணம் தான், இரண்டு நிமிட இடைவெளிக்கு பிறகு வந்து விழுவதும் சாணம் தான். முதலில் வந்து விழுந்த பகுதி சாணம் இந்து மதம், இரண்டாவது பகுதி சாணம் கிறித்தவம், மூன்றாவது பகுதி சாணம் இஸ்லாம் என்று சொன்னார்.இதனை நான் நேரில் கேட்டுள்ளேன். எனவே, பெரியாரின் கருத்தில் எல்லா மதங்களும் மனிதனுக்கு தேவை இல்லாதவை ஆகும். எனவே, தயவு செய்து உண்மை புரியாமல் உளறவேண்டாம். கடவுள் நம்பிக்கை கூடாது, அதனால் மனித இனத்துக்கு கேடுதான் வரும் என்றும் அவர் தன் நூல்களில் தெளிவாக எழுதியுள்ளார். பேசாமல் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி , திகவில் சேருங்கள். உங்களுக்கு சிறிது பகுத்தறிவாவது வரும்.

  31. @Justice Jambu,

    //ஹிந்துக்கள் நல்லவர்கள் ஆனால் ஹிந்து தீவிரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து.//
    இதைப்பற்றி பரு முமின் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. பெரியார் என்ன பெரிய வெங்காயம்…

  32. தனி மனிதர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் நல்லவரே. ஆனால் மதம் என்ற பெயரில் ஒரு பொறுக்கித்தனமான அமைப்பாக மாறி, தங்கள் விருப்பத்தை பிறர் மீது திணிப்பதும், ஏற்க மறுப்பவரை கொலை செய்வதும், அவர்கள் வழிபாட்டு தளங்களை இடிப்பதும், கொளுத்துவதும் , இஸ்லாம் ஆரம்பித்து வைத்த வன்முறைதான். நபிகள் தன் முன்னோரான குறைஷிகளால் வழிபடப்பட்ட பல உருவச்சிளைகளையும் இடித்து, காபாவாக மாற்றினார். . இஸ்லாமிய வன்முறைகளை ஏற்காத நல்ல இஸ்லாமியர்களும் உண்டு. ஆனால் அவர்களால் மதக்கும்பலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் வாய்மூடி மௌனியாக தான் இருக்க முடியும். எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.

    மாமானாரால் கற்பழிக்கப்பட்ட மருமகளின் வழக்கை விசாரித்த வட இந்திய ஷரியத் நீதிமன்றம் ஒன்று, அந்த மருமகள் அந்த மாமனாரையே மணந்து கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. பெண்களை எவ்வளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறது ஷரியத் என்பதற்கு இது ஒன்றே எடுத்துக்காட்டு. வன்முறையை பரப்பும் மதங்கள் ஒழிந்தால் உலகு உருப்படும் .

    கடவுள் நியாயம் வழங்குவார் என்ற நம்பிக்கை இல்லாதவன் தான் , கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு , இவற்றையும் , இன்னபிற ஆயுதங்களையும் தூக்கி கொண்டு, பிறரை கொல்ல அலைவான். மத தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் இப்படி அலைவதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்களின் கடவுள் நியாயம் வழங்கமாட்டார் என்று அவர்கள் கருதுவதால் தான் , இவர்கள் வன்முறையாளர்களாக மாறி , மனித வாழ்வை நரகமாக்குகிறார்கள். வன்முறையையும், தீவிர வாதத்தையும், எல்லோரும் எதிர்ப்போம். வன்முறையை போதிக்கும் மதங்களை விட்டு அனைவரும் விலகுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *