இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடரின் 17-வது பாகம்.
  முந்தைய பகுதிகள்

சென்ற கட்டுரையில் டெல்லியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களை பற்றி பார்தோம். இக் கட்டுரையிலும் இன்னும் சில சம்பவங்களின் தொடர்பான விஷயங்களை அலசுவோம்.

இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு (13.2.2012)

டெல்லியில் அதிக பாதுகாப்பு வீரர்கள் ரோந்து புரியும் இடத்தில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. 13.2.2012ந் தேதி இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு அதிகாரியின் மனைவி (Israeli Defence Attache) பள்ளியிருந்து தனது குழந்தைகளை கூட்டி வரும் போது காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அதிக அளவில் காயமடைந்தது தூதரக பாதுகாப்பு அதிகாரியின் மனைவி, இவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெடித்து சிதறும் பொருட்களை கொண்டு தயாரித்த குண்டு வெடித்த போது வெளியேறிய துகல்கள் அதிக அளவில் உடலில் பதிந்துள்ளது என தெரிவித்தார்கள். இந்திய பிரதமரின் இல்லமும் அமைந்துள்ள பகுதியில் தான் இந்த குண்டு வெடித்துள்ளது. பொதுவாகவே இஸ்ரேலிய தூதரகம், மற்றும் பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் அதிக அளவில் உள்ளதும், 24 மணி நேர ரோந்து பகுதியாகும். இப்படிப்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு அதிகாரியின் கார் வந்த போது வெகு விரைவில் காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம மனிதன் சக்தி வாய்ந்த IED எனப்படும் வெடிகுண்டை ஒட்டவைத்து தப்பித்து விட்டான். ஒட்ட வைத்த வெடிகுண்டு டைமர் அல்லது செல் போன் மூலம் . கனப்பொழுதில் குண்டு வெடிக்கும் படி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். வழக்கம் போல் இந்திய உளவுத் துறையினர் வெடிகுண்டு சம்பவத்தில் எந்த நாடு, எந்த அமைப்புக்கு, தொடர்பு இருக்கிறது என்பதற்கு எவ்வித ஆதராமும் கிடைக்கவில்லை என்றும், இஸ்ரேல் பிரதமர் கூறிய குற்றச்சாட்டிற்கு மறுப்போ அல்லது ஆதரவோ தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 14ந் தேதி பாங்காக்கில் குண்டு வெடிக்கச் செய்த இரு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டார்கள். பாங்காக் குண்டு வெடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்களும், புது டெல்லியில் இஸ்ரேல் தூதராகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். இந்த தாக்குதல் திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தூதரை கொல்ல நடந்த குண்டு வெடிப்பு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தேதி முக்கியமானதாகும். ர்ணைடிழடயா வின் தலைவர் டெமாஸ்கஸ் நகரில் கொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு தினமாகும், மேலும் டெகரானில் இரண்டு இராணிய அனு சோதனை விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட முதலாம் ஆண்டு நினவு தினமாகும். இரண்டு சம்பவத்திலும் இஸ்ரேலின் பங்கு உண்டு என ஈரான் நினைத்ததால் நடந்த குண்டு வெடிப்பு என்று காரணம் கூறும் அரசியல் விமர்சகர்கள் உள்ளனர்.

ஆகவே இந்த குண்டு வெடிப்பின் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் இந்திய அரசுக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. மேலும் மும்பையில் நவம்பர் 26ந் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலின் கலாச்சார மையம் தாக்கப்பட்டது என்பதையும் நினைத்து பார்த்தால் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் லஷ்கர் அமைப்பினரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் எழுகிறது.

டெல்லியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள்

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும்.

டெல்லியில் ராணுவ தலைமையிடத்திற்கு அருகில் 9.5.2001ந் தேதி ஒரு குண்டு வெடித்தது, குண்டு வெடித்த 10 நிமிட இடைவெளியில் மீன்டும் ஒரு குண்டு வெடித்தது. இந்த இரண்டு குண்டுகளும் அதிக பாதுகாப்பு உள்ள பகுதியான பிரதம மந்திரியின் இல்லத்திற்கு அருகிலும், பிரதம மந்திரி அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், ராணுவ அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் மட்டுமே படு காயமடைந்தார், ஆனால் பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதிகளிலே குண்டு வைக்கப்படுகிறது என்றால் மற்ற பகுதிகளில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது நன்கு தெரியும். 20.5.2001ந் தேதி எல்லை பாதுகாப்பு படையின் தலைமையிடத்திற்கு அருகிலும் தெற்கு டெல்லியில் அமைந்துள்ள மததிய அரசின் பல்வேறு துறை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலும் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் எவரும் காயமடையவில்லை, என்றாலும் இந்த தாக்குதலில் பயன்படுத்திய வெடி குண்டு AK47-launched grenade என்பதாகும். தலைநகரில் முதன் முதலில் AK47-launched grenade வெடி குண்டு தாக்குதல் நடந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தார்கள்.

வேறு மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுவது டெல்லியில் என்பது வெட்ட வெளிச்சமாகும். 5.7.2001ந் தேதி டெல்லி காவல் துறையினர் இரண்டு தீவிரவாதிகளை இன்டர் ஸ்டேட் பஸ் டெர்மினல் எனுமிடத்தில் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இருவரும் ஹர்கத் -உல்-ஜிகாதி-இ-இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தவர்கள். இவர்களை கைது செய்த போது இவர்களிடமிருந்து 1.9 கிலோ எடைகொண்டு ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தும். ஒரு பென்சில் டைமர், ஒரு டெட்டனேட்டர், கைப்பற்றப்பட்டன. இருவரிடமும் நடத்திய விசாரனையில் பூஞ்ச் மாவட்டத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர்கள் என்றும், டெல்லியில் வெடி குண்டு தாக்குதல் நடத்துவதற்கு என கூறி எங்களை அனுப்பியவர் இலியாஸ் காஷ்மீரி (Illiyas Kashmiri)என்பவர் என்றார்கள். இவர்கள் இருவரும் ஜீன் மாதம் 23ந் தேதி சியால்கோட் பகுதியிலிருந்து டெல்லிக்கு ஜீன் மாதம் 26ந் தேதிக்கு வந்தார்கள் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. 29.9.2003ந் தேதி ஹர்கத் உல் ஜிகாதி இ இஸ்லாமி அமைப்பைச் சார்ந்த முகமது மஜீத் மற்றும் முகமது அம்ரன் கைது செய்யப்பட்டார்கள். இவர்களின் கைதுக்கான காரணம், குடியரசு தலைவராக இருந்த மரியாதைக்குறிய அப்துல்கலாம் அவர்களையும், கிரிகெட் வீரர்கள் சச்சின் டென்டுல்கர், கங்குலி இருவரையும் கொல்வதற்கு திட்டம் தீட்டியதாகவும், ட்ராம்பேவில் உள்ள பாபா அனு ஆய்வு மையத்தை வெடி குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டியதாகவும் கைது செய்யப்பட்டார்கள்.

1993ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்து கொண்டிருந்த பயங்கரவாதியான குசைனயரள Firdaus Ahmed Bhatt என்பவன் 19.1.2005ந் தேதி புது டெல்லியில் உள்ள பாபா கார்க் சிங் மார்க்கில் கைது செய்யப்பட்டான். இவன் ஹ_ஜி அமைப்பைச் சார்ந்த, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஷோரா எனுமிடத்தை சார்ந்தவன். இவனை போலவே 5.3.2005ந் தேதி தென் மேற்கு டெல்லியில் உள்ள முயமசழடய ஆழச எனுமிடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று லஷ்கர் அமைப்பினர் கொல்லப்பட்டார்கள். இவர்களிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களும், ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் மூன்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இதே தேதியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த துப்பாக்கி சூட்டில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியான ஹமீது மற்றும் ஷாரிக் என்பவர்களிடம் 10.5. கிலோ எடை கொண்டு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந் தேதி காலையில் டெல்லி காவல் துறையினர் மூன்று பேர்களை கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட Zia-ur-Rehman, Shakir Nisar, Mohammad Shakil மூவரும் இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினர் என்பது பின்னர் விசாரனையில் தெரியவந்தது. இவர்களின் திட்டம் தலைநகர் டெல்லியில் குறைந்த பட்சம் 20 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்க செய்வதுதான் என்பது விசாரனையின் போது தெரிவித்தார்கள். ஜீன் மாதம் 4ந்தேதி 2009ம் ஆண்டு டெல்லி குதுப்பினர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒருவனை கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவன் Mohammad Omar Madini லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பொறுப்பாளர், இவன் கடந்த பல வருடங்களாக இந்தியாவிலும், நேபாளத்திலும் லஷ்கர் அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டவன். இவனை காவல் துறையினர் கைது செய்த போது சுமார் 8,000 அமெரிக்க டாலர் மற்றும் நேபள கரன்சியும் கைவசம் வைத்திருந்தான். அவனிடம் கைப்பற்றபட்ட டைரியில், இவனுடைய தொடர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் இருந்தன. இந்தியாவில் உள்ள பல நகரங்களிலும் உள்ள லஷ்கர் அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்தவன், பல முக்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவன் என்பது தெரியவந்தது.

மொகல்ஸ்தான்

பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளைச் சார்ந்த முக்கிய இஸ்லாமிய தலைவர்களின் நோக்கம் வேறுமாதிரியாக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தொடர்ந்து செயல்படுத்துவதின் நோக்கம் மெல்ல வெளியே கசிய தொடங்கியது. நாடு பிளவு படுவதற்கு முன் துவக்கப்பட்ட முஸ்லீம் லீக் அதாவது ஜின்னாவின் உள்நோக்கம் “விரிவான அகன்ட இஸ்லாமிய நாடு உருவாக்கப்பட வேண்டும்” என்பதே. இந்த கண்ணேட்டத்துடன் பங்களா தேஷ் நாட்டில் ஜஹாங்கீர் நகரில் அமைந்துள்ள மொகல்ஸ்தான் ஆய்வு மையத்தின் மூலம் ஒரு திட்டம் வெளி வந்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், நாட்டில் எல்லைப் பகுதயில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து அகன்ட இஸ்லாமிய நாடு உருவாக்குவதும், அதற்கு மொகலஸ்தான் என்றும், இந்த நோக்கத்தை அடைய வழிகளை காண வேண்டும் என்று நினைப்பதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மொகல்ஸ்தான் என்ற நோக்கத்திற்கு முழு ஆதரவு கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததது ஒசாம பின்லேடன் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்துக்களிடமிருந்து இஸ்லாமியர்களை மீட்டு மிகப் பெரிய பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதாக தனது நோக்கத்தை தெரிவித்துள்ளார். ஆகவே இந்த நோக்கத்திற்காகவே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, பாங்களாதேஷ் டைரக்டர் ஜெனரல் ஆப் போர்ஸ் இன்டலிஸன்ஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பர், Jaish-e-Mohammad, ஹிஸ்புல் முஜாஹ_தின், ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், இந்தியாவில் இந்த திட்டத்திற்கு முழு உதவியை ஒன்றன்பின் ஒன்றாக சிமி மற்றும் இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார்கள்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் லஷ்கர்-இ-தொய்பாவினர் துவக்கத்திலே கொடுத்த அறிவிப்பு “ ஹிந்துக்கள் இஸ்லாமியர்களின் முதல் எதிரி, இந்து மதம் இஸ்லாத்திற்கு எதிரான இயக்கம் . ஒன்று இந்துக்கள் மதம் மாற வேண்டும், அல்லது அனைத்து ஹிந்துக்களும் கொல்லப்பட வேண்டும் “ . இந்த செய்தியை அனைத்து ஊடகங்களுக்கும், லஷ்கர் ;அமைப்பினரின் வைப்சைட்டிலும் வெளியிட்டிருந்தார்கள். இந்த செய்தியின் அடிச்சுவட்டிலே; Jaish-e-Mohammad வும் தனது பங்குக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீட்பது மட்டும் கடமையல்ல, டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும் என்பது தான் தங்களின் முதன்மையான நோக்கமாகும் என்றார்கள்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் தங்களின் கருத்துக்களை பட்டவர்த்தணமாக தெரிவித்த பின் இந்தியாவிலேயே துவங்கிய சிமியும் தனது பங்கிற்கு “ இஸ்லாத்தின் மூலம் இந்தியாவை விடுவிக்க வேண்டும். கிலாபத் ஆட்சியை உயிர்பிக்க வேண்டி, முஸ்லீம் உம்மாக்கள் மேற்படி நோக்கத்திற்காகவே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு முரணான மதசார்பின்மை, ஜனநாயகம், தேசீயம் போன்ற கொள்கைகளை அடியோடு அழித்திட இஸ்லாமியர்கள் புனித போர் துவங்க தங்களை அர்பணித்துக் கொள்ள வேண்டும்”. சிமி இயக்கத்தை போலவே இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினரும், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இந்தியாவில் லக்னே, வாரணாசி, பைசாபாத், பெங்களுர், ஜெய்பூர், அகமதாபாத், டெல்லி போன்ற இடங்களில் வெடி குண்டு தாக்குதல் நடத்திய போது ஊடகங்களுக்கு அனுப்பிய இ.மெயிலில் தங்களது நோக்கங்களை தெளிவாக தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு அனுப்பப்பட்ட இ.மெயிலில், இந்தியாவின் மீது படையெடுத்து கொள்ளையடித்த இஸ்லாமிய மன்னர்களான முகமது பின் காசிம், கோரி முகமது, கஜினி முகமது போன்றவர்கள் தங்களது ஆதர்ஷ புருஷர்கள் என்றார்கள். இஸ்லாமியர்களின் ஆட்சியில் இந்துக்கள் கொத்தடிமைகளாகவும், அவமான வாழ்க்கையும் நடத்தியதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதரணமாக இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினர் அனுப்பிய இ.மெயில் வாசகம் Accept Islam and save yourselves “ and or else face a horrible fate Hindus/ O disbelieving faithless Indians ! Haven’t you still realized that the falsehood of you 33 core dirty mud idols and blasphemy of your deaf, dumb, mute and naked idols of ram, Krishna, and hanuman are not at all going to save your necks, Insha-Allah, from being slaughtered by our (Muslim) hands”

பின்புலம் (Background)

இந்திய பிரிவினை என்பது தற்போது இந்தியர்களுக்கு தற்காலிக ஓய்வு கிடைத்துள்ளது, தவிர்க்க முடியாத இச் சூழ்நிலையில் மீன்டும் ஒரு பிரிவினை நடக்க இருக்கிறது. இந்தியா பிரிவினைக்கு அடுத்து 1971ல் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர் அதிகம் வாழ்ந்த பகுதிகளான சிந்து, மேற்கு பஞ்சாப், கந்தஹார், கிழக்கு வங்காளம் போன்ற பகுதிகளில் தற்போது இவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டார்கள். கடந்த 25 ஆண்டுகளாமாக மேற்கூறிய பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களை தவிர்த்து மற்றவர்களை மத மாற்றம், படுகொலை, அதிக நெருக்குதல், தனிமை படுத்துதல் போன்ற செயல்பாடுகளினால் மதம் மாற்றப்பட்டுள்ளார்கள். இந்த பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்களின் நெருக்குதல் காரணமாக அதாவது பயங்கரவாத செயல்பாடுகளை தொடர்ந்து நடத்துவதாலும், கள்ள நோட்டு புழகத்தில் விடுவதால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களினாலும், இந்தியாவில் உள்ள காஷ்மீர் பள்ளத் தாக்கு, மேற்கு வங்களாத்தில் உள்ள பல மாவட்டங்களும், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடி இருப்பதும் மொகல்ஸ்தான் கோரிக்கை எழு பினபலம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இஸ்லாமிய பகுதிகளின் இணைப்புக்கு ஏதுவாக தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் மூலமாக மொகல்ஸ்தான் உருவாக்க அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களை முன்நிறுத்தி போராடுகிறார்கள். இவர்கள் வகுத்துள்ள எல்லைப் பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே சில சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டார்கள். ஒன்று இந்தியாவில் எந்த முறையான ஆவணங்கள் இல்லாமல் ஊடுருவியது, முறையான ஆவணங்கள் மூலம் இந்தியா வந்துள்ளவர்களில் 30 சதவீதத்தினர் மீன்டும் தனது தாய் நாடு திரும்பாதது, இதன் அடிப்படையில் மேற்கு வங்காளம், பிகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஆண்டுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கையின் கூடுதல் தெள்ளத் தெளிவாக இதை எடுத்துக் காட்டுகிறது.

எல்லைகள்

பாரதத்தின் வடக்கு பகுதி, கிழக்கு பகுதி , பாகிஸ்தான் பங்களாதேஷ் இருநாடுகளை இணைக்கும் கோடுகளில் உள்ள காரிடர் அதாவது இந்திய பகுதிகள் என குறிக்கப்பட்டுள்ளது. 1947க்கு பின் இந்த திட்டத்தின் அடிப்படையில் மொகல்ஸ்தான் என்ற அமைப்பின் எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் பல காரியங்கள் நடந்துள்ளன. தற்போது இவர்களின் இணைய தளங்களில் காட்டுப்படும் எல்லைகள் பாகிஸ்தான் பங்களாதேஷ் இணைப்பில் உள்ள ஜம்மு, மேவாட்( ஆநறயவ) உத்திரபிரதேசம், பிகார், மேற்கு வங்களாம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். எனவே இந்த நோக்கத்தை நோக்கி மேற் கூறிய மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் ஊடுருவியுள்ளார்கள். உதரணமாக காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்துக்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்குறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

முன்பு கூறியது போல் அஸ்ஸாம் மாநிலத்தில் Dhubri, Goalpara, Hailakandi, Karimganji, Cachar ஆகிய மாவட்டங்களில் பங்களா தேஷ் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் முதல் 32 வீதம் வரை ஊடுருவியுள்ளார்கள். பிகார் மாநிலத்தில் கிஷான் கஞ்ச், யுசயசயைஇ Pரசநெயஇ முயவாihயச ஆகிய மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கணா , வடக்கு 24 பர்காணா, நாடியா, மூர்ஷிதாபாத், மால்டா, கொல்கத்தா வடக்கு, தெற்கு தீனேஷ்பூர், ஜல்பைகுரி, கூச்பிகார் ஆகிய மாவட்டங்களில் ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களால் அந்த பகுதிகளில் பெருவாரியான இஸ்லாமியர்கள் மக்கள் வசிக்கிறார்கள். இம்மாதிரி ஊடுருவியவர்கள் உள்ளுர் அரசியல்வாதிகள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, போன்றவற்றை பெற்றுள்ளார்கள். ஆகவே மொகல்ஸ்தான் உருவாக்க முதல் படியை அடைவதற்கு அனைத்து வழிகளிலும் பல்வேறு காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய கட்டுரையை எழுத முற்படும் போது இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தும் அனைத்து விதமான தாக்குதல்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதில் குறியாக செயல்படுகிறார்கள். இவர்களின் செயல்பாட்டிற்கு வைத்துள்ள பெயர் மொகல்ஸ்தான் என்பதாகும்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா (Harkat-ul-jihad-al-islami) (HuJI)

டெல்லியில் நடந்த பல்வேறு பயங்கரவாத வெடி குண்டு தாக்குதல் செயலுக்கு முக்கிய காரணமாக இருந்த அமைப்பு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா என்பது காவல் துறையின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகும். எப்போது துவக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், சோவியத் ஆப்கான் யுத்தத்தின் போது 1980ம் ஆண்டு வாக்கில் ஹ_ஜி அமைப்பு துவக்கப்பட்டது. Qari Saifullah Akhtar என்பவன் தன்னுடன் மௌhன இரஷ்த் அகமது(Maulana Irshad Ahmed), மௌhன அப்துஸ் சமத் சயீல்(Maulana Irshad Ahmed) என இரண்டு நபர்களை இணைத்துக் கொண்டு துவக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் (Seminary) படித்தவர்கள்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் நோக்கம் னுநழடியனெ பள்ளியின் நோக்கமே, அதாவது “ தீவிரவாத இஸ்லாத்தை உருவாக்குவதற்காகவே னுநழடியனெ பள்ளியில் போதனைகள் போதிக்கப்படுகிறது, ஒவ்வொரு இஸ்லாமியனும் ராணுவ வீரானக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும், ஏன் என்றால் உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க போர் புரிய வேண்டும்.” ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் ஆதாஸ்;ஷமாக ஒசாமா பின்லேடன் மற்றும் தாலீபான்களை முன்னிலை படுத்தியே தங்களது செயல்பாடுகளை செய்கிறார்கள். இவர்கள் தங்களின் நோக்கத்தை கோஷமாக வைத்திருக்கிறார்கள் “ இஸ்லாமியர்கள் அனைவரும் தாலீபான்களாக மாற வேண்டும், பங்களா தேஷ் ஆப்கானிஸ்தானமாக மாற்ற வேண்டும் என்பதாகும்.(Amra Sobai Hobo Taliban. Bangla Hobe Afghanistan) இந்த நோக்கத்திற்காகவே பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் இந்திய பொறுப்பாளர் பஷிர் அகமது மீர் () என்பவன். 25.1.2008ந் தேதி காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பஷீர் அகமது மீர் கொல்லப்பட்டான். இவன் கொல்லப்படுவதற்கு முன் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல-இஸ்லாமியா அமைப்பின் பொறுப்பாளராகவும், பாகிஸ்தானில் Hijazi என்ற புனைப் பெயருடன் பயங்கரவாத பயிற்சி பெற்றவன். 2007ம் ஆண்டு இந்தியாவில் குறிப்பாக லக்னே நீதி மன்ற வளாகத்தில் நடந்து குண்டு வெடிப்பும், ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் தர்க்காவில் நடந்த குண்டு வெடிப்பிலும் இவனது பங்கு முக்கியமானது. 1992ல் தனது முந்தைய பயங்கரவாத இயக்கமான ஹர்கத் உல் அன்சார் இயக்கத்திலிருந்து Jaish-e-Mohammad இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். 1994 மற்றும் 1995 என இரண்டு ஆண்டுகள் பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்றவன். 2004லிருந்து இந்தியாவில் ஹ_ஜி அமைப்பின் கமான்டர் இன் சீப்பாகவும் பணியாற்றியவன். 1995ல் பயிற்சி பெற்ற பின் ஹ_ஜி அமைப்பிற்கு ஆள் திரட்டும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான் .

2001ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானின் North west Frontier Province ல் தங்க துவங்கினார்கள். இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியானவன் ஷாகீத் பிலால் () என்பவன். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆந்திராவின் ஹைதராபாத் நகரை சார்ந்தவன், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் இந்திய பொறுப்பாளார். 2002லேயே ஹைதாரபாத்திலிருந்து கள்ளத்தனமாக காராச்சிக்கு தப்பியோடியவன், பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்ற பின் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா ல் தன்னை இணைத்துக் கொண்டு, இந்த அமைப்பிற்கு ஹைதாராபாத் நகரிலிருந்து வேலையில்லாத இஸ்லாமியர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்தவன். இப்படிப்பட்ட இவன் 30.8.2007ந் தேதி காராச்சியில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ந் தேதி தி இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் , 2002,2003ஆகிய இரு ஆண்டுகள் சௌதி அரேபியாவில் முழு பயங்கரவாத தாக்குதல் பயிற்சி பெற்ற ஷாகித் பிலால், ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவன் என்ற செய்தி வெளியாகியது. மேலும் தனது தாய் மாமனும், Jaish-e-Mohammed அமைப்பின் பொறுப்பாளருமான Farhatullah Ghori என்பவனின் மேற்பார்வையில் பயிற்சி பெற்றவன். இவனுக்கும் குஜராத் உள்துறை அமைச்சர் ஹிரேன் பான்டியாவை கொலை செய்த ரசூல் என்பவனுக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஷாகித் பிலால் கொலைக்கு பின் இந்தியாவில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் பொறுப்பாளராக முகமது அம்ஜித் (Mohammed Amjad)என்பவன் நியமிக்கப்பட்டான்.

இந்தியாவில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பினர் பங்களா தேஷ் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் இணைந்து நடத்திய தாக்குதல்கள்.

22.1.2002ந் தேதி மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கா சென்டர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பின் மற்றெரு அங்கமான Asif Reza Commando Force என்ற அமைப்பு நடத்தியது. இந்த வெடி குண்டு தாக்குதலை நடத்தியது தாங்கள் என ஒப்புக் கொண்டது. இந்த அமைப்பில் பங்களா தேஷ்லிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களை அதிக அளவில் கொண்ட இயக்கமாகும். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐயின் மேற்பார்வையில் பயிற்சி பெற்றவர்கள். 12.10.2005ந் தேதி ஹைதராபாத்தில் சிறப்பு அதிரடி படையினரின் மீது தாக்குதல் நடத்தியதும், ஆந்திராவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்த அமைப்பினர் என்று ஆந்திர காவல் துறையினர் தெரிவித்தார்கள். 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த Samjhauta Express ரயிலில் குண்டு வைத்தவர்கள், ஹைதராபாத்தில் உள்ள லும்பினி கலையரங்கத்திலும், இதன் அருகில் உள்ள கோகுல் சாட் பந்தர் (Gokul Chat Bhandar) உணவு விடுதியிலும் குண்டு வெடிப்பு செய்தவர்கள் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பினர்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பினருக்கு இந்தியாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் Jaish-e-Mohammad அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்களுடன் இந்தியாவில் துவக்கிய சிமி அமைப்பினர் முழு பாதுகாப்பு கொடுப்பதிலும், திட்டங்கள் வகுக்கும் போது தேவையான உதவிகளை செய்தவர்கள். இந்த மூன்று பயங்கரவாத அமைப்பினருடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பினர் கூட்டாக சேர்ந்து நடத்திய தாக்குதல்கள் அதிக அளவில் இருந்தது. 13.5.2007ல் ஜெய்பூரில் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள், 23.11.2007ந் தேதி உத்திரபிரதேசத்தில் வாரணாசி, பைசாபாத், லக்னே ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாகத்தில் வெடித்த குண்டு வெடிப்பு சம்பவம் சான்றாகும்.

அடுத்த கட்டுரையில் ஹர்கத்-உல்-அன்சார் என்கின்ற பயங்கரவாத அமைப்பைப் பற்றியும், உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை பற்றியும் அலசுவோம்.

(தொடர்கிறது..)

12 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17”

  1. பாசீர்

    ஆரம்பிச்சாச்சா உங்க தாக்கியாவை (Taquia)? இப்ப வட கிழக்காளுங்கள குறிவெச்சு நீங்க செய்யற மிரட்டல்ல இந்தியாவே கதி கலங்கி இருக்கே. என்னே ஒரு அன்பு மார்கம்.

    சிந்திக்க மாட்டீர்களா பசீர்.

  2. பங்களா தேசத்திலிருந்து வந்த வந்தேறிகளை உடனே அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும். இதனை காங்கிரஸ் அரசு செய்ய தவறினால், வரும் தேர்தலில் காங்கிரசுக்கு சாவுமணி அடிப்போம்.

  3. சாவுமனிக்கு முன்னாடி காந்திமணிவச்சு தேர்தலில் ஜெயச்சுருவான் ,முதலில் தேர்தலை பத்திமட்டுமே நாம பேசக்கூடாது,ஹிந்துக்களை எப்படி விழிப்புணர்வுக்கு கொண்டுவரமுடியும் என்று நாம் சிந்திக்கவேண்டும்.அயோத்யவை மையமாக வைத்து எப்படி ஒரு விழிப்புணர்வு வந்து, அதை நாம் தக்கவைக்க முடியவில்லை என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.நிச்சியமாக ஒரு மாபெரும் சக்தியை உருவாக்கியே தீரவேண்டும்,இல்லைஎன்றால் பாரதம் ஹிந்து நாடக இருக்காது.பத்ரிநாத் படத்தில் வரும் வசனம்போல் வரைபடத்தில்மட்டும் பாரதம் இருக்கும்.

  4. இன்றைய (28-08-2012) தமிழ் நாளிதழ் தினமலர் வலைத்தளத்தில் வந்துள்ள செய்தி கீழே உள்ளவாறு:

    பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2012,00:27 IST

    பாலக்காடு: “கேரளாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்க தேசத்தவர்கள் அதிகளவு ஊடுருவி வருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

    கேரளாவில், 13 லட்சம், வெளி மாநிலத் தொழிலாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்கதேசத்தினர் ஊடுருவுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரள உளவுத்துறை சேகரித்த தகவலில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. ஆலப்புழை மாவட்டம், ராமங்கரியில் கடந்த வாரம் பிடிப்பட்ட, வங்கதேசத்தைச் சேர்ந்த கும்பல், நாங்கு ஆண்டுகளுக்கு முன் கேரளா வந்துள்ளது; நன்றாக மலையாளம் பேசும் அவர்களிடம், எவ்வித ஆவணங்களோ; அடையாள அட்டையோ இல்லை. அவர்கள் வைத்திருந்த மொபைல் போனில் ஐ.எம்.இ.ஐ., எண் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தியில், 10 பேர் கொண்ட வங்கதேச கும்பலை, உளவுத் துறை கண்டுபிடித்தது. பாகிஸ்தானுக்கு அடிக்கடி மொபைல் போனில் பேசியதை வைத்து, போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம், சாந்திரா மாவட்டம், சுனால் கிராமம் வழியாக வங்கதேசத்தவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரளாவில் அதிகரித்து வரும் வங்கதேசத்தினரை, கட்டுப்படுத்த உதவுமாறு, மத்திய அரசுக்கு, கேரள உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “”பிழைப்புக்காக கேரளா வரும் பிற மாநிலத்தவர்களை வரவேற்கிறோம். ஆனால், வெளிநாட்டவர் சட்ட விரோதமாக தங்குவதை அனுமதிக்க முடியாது. வங்கதேசத்தவர்கள், சட்டவிரோதமாக கேரளாவில் வந்து தங்குவது அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது. இவர்களின் வருகையை கட்டுப்படுத்த, எல்லையில் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்,” என்றார்.

    மத்திய அரசு திருந்துமா? என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?

  5. தினமலர் ரிப்போர்ட் எல்லாம் உண்மை சொல்லவரங்க!!!! ஆல் தி பெஸ்ட்

  6. On 8th August ‘2012 in the parliament “ I warned the Central Government, I warned the honorable members here … if proper rehabilitation (of bangaldesh muslims) does not take place, you be ready for a third wave of radicalization amoung muslim youth. This was said not by a mulla but by MP Mr.Asadduin Owaisi.

    இந்தளவு ஒரு பிரிவினையை தூண்டும் வெறி பேச்சு அதுவும் பாராளுமன்ற அவையிலேயே பேசும் அளவிற்கு சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது சரிதானா ? இதன் எதிரொலியாக 11 ஆம் தேதி ஆகஸ்ட் அன்று ராசா அகாடமியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஊர்வலத்தில் 1857 ஆண்டு நடந்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தை சின்னாபின்னம் படுத்தியுள்ளார்கள். அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார்கள். நடந்த கலவரத்தில் 58 போலீஸார் காயம் அடைந்துள்ளனர். சில பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டுள்ளனர் . செய்தி ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளது. ஏன் இந்த வெறி ஆட்டம் என்று விளங்கவில்லை. மயன்மாரில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதற்கும் அஸ்சாமில் அத்துமீறி குடிபுகுந்த இஸ்லாமியர்கும் ஆதரவாக இங்கே உள்ள இஸ்லாமியர்கள் ஏன் போராடவேண்டும். ஆனால் இதே முஸ்லீம்கள் மற்ற இஸ்லாமிய (மலேசியா சைளதி ஈரான் பாகிஸதான் ஆப்கானிஸதான் போன்ற) நாடுகளில் முஸ்லீம்கள் தாக்கப்படும் போது மௌனம் சாதிப்பது ஏன் ? பங்களாவிலிருந்து இந்தியாவை தவிற பல இஸ்லாமிய நாடுகளுக்கு அனுமதியின்றி பல முஸ்லீம்கள் குடியேறினார்கள். ஆனால் அந்த நாடுகள் அவர்களை வலுகட்டாயமாக திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இங்கே உள்ள தேசதுரோக முஸ்லீம்களை என்ன செய்வது ????

  7. தாஜுதீன் …….

    // தினமலர் ரிப்போர்ட் எல்லாம் உண்மை சொல்லவரங்க!!!! //

    தினமலரில் வந்துள்ளது செய்தி……மத்திய அரசுக்கு மாநில அமைச்சர் அனுப்பிய அறிக்கை…..இதையெல்லாம் ஜாகிர் நாயக் போல திரிக்க முடியாது……

  8. NOW PAKISTHANIS CAN INVEST IN INDIA AND THEY CAN BUY HOUSE ALSO. INDIAN MARKET WILL BE UNDER THE CLUTCHES OF PAKISTHAN. SO MANY OTHER COUNTERIS ALSO CAN INVADE UNDER PAKISTHAN NAME. GOOD IMPROVEMENT BY INDIAN GOVT.
    I NEVER SAW ANY TV CHANNELS DEBATING ON THIS ISSUE. THEY SPEND ONE WEEK ON UTKUM CHAND MATTER. BUT THEY WILL NOT WILL NOT THESE THINGS IN NEWS ITEM ALSO.

  9. ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்று கேட்கும் நாம், என்று நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களையப் போகின்றோம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *