தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு

சேலத்தில் நேற்று ஆடிட்டரும் பாஜக தலைவருமான திரு.ரமேஷ் அவர்கள் அவரது வீட்டருகிலேயே ‘அடையாளம் தெரியாத’ நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 52. சங்கத்திலும் முதன்மை பொறுப்புகளில் இருந்து இந்து சமுதாயத்துக்காக உழைத்தவர். நம் தேசத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு நடத்திய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். தன் வாழ்க்கையை பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்த அவருக்கு நம் வீர வணக்கங்கள். rameshதமிழ் நாட்டில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது மாதாந்திர நிகழ்வாக இருந்து இப்போது வாராந்திர நிகழ்வாக மாறி வருகிறது. சில பயங்கரவாத இயக்கங்கள் சினிமா துறையினரை மிரட்டி அரசின் மென்மை போக்கையும் கண்டும் காணாத நிலைப்பாட்டையும் பயன்படுத்தி தம்மை நன்றாக வளர்த்துக் கொண்டுள்ளன. திருப்பூர் ஆர் எஸ் எஸ் தலைவர் மீதான கொலை வெறி தாக்குதல்கள், திரு.எம்.ஆர்.காந்தி அவர்கள் தாக்கப்பட்ட கோழைத்தனமான ஜிகாதி வெறித்தனம், வேலூரில் பாஜக மருத்துவ அணி தலைவர் கொல்லப்பட்ட கொடும் செயல், வெள்ளையப்பன் அவர்களின் கொடூர கொலை – இவற்றுக்கெல்லாம் தொடர் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிவோம். jaihindகொலையாளிகள் குற்றம் சாட்டப்படுவார்கள். பணபலத்தாலும் தேசநலனில் அக்கறையற்ற ஓட்டுவங்கி அரசியல் சக்திகளாலும் வழக்குகள் நீர்த்து போக வைக்கப்படும். பின்னர் குற்றவாளிகள் ‘அப்பாவி இளைஞர்களாக’ சித்தரிக்கப்பட்டு வெளியே வருவார்கள். இதற்கான வலிமையான கட்டமைப்பை கோலிவுட்டை மிரட்டி பணவலிமையுடன் உருவாக்க ஜிகாதி அமைப்புகளின் வெளித்தரகர்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள். இது போக ரியல் எஸ்டேட் விசயங்களிலும் ஜிகாதி ஆக்கிரமிப்பு சக்திகளின் கொடுங்கரங்கள் நீள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்து அமைப்பினருக்கு எந்த போலி மதச்சார்பற்ற அரசியல் தலைமையையும் பாதுகாப்பு அளிக்கப் போவதில்லை. இந்து அமைப்புகள் ஜனநாயக ரீதியாக இந்துக்களை ஒருங்கிணைத்து வலுவான சக்தியாக மாற்றி இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுத்து அதை வேரும் வேரடி மண்ணுமற அகற்ற வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. 20.7.2013 அன்று பாஜக கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது. நாம் அதற்கு ஒத்துழைப்போம்.இந்துக்கள் சமுதாய ரீதியில் அரசியல் ரீதியில் பிரிந்து கிடந்தால் அதற்கு கிடைக்கும் இந்த விலை விரைவில் ஒவ்வொரு இந்து குடும்பமும் கொடுக்க வேண்டி இருக்கும். ramesh3சில வன்முறை மத சித்தாந்தங்களை ஏற்ற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிலுவை போர் வெறியன், ஒரு ஜிகாதி, ஒரு ஸ்டாலின் ஒளிந்து கிடக்கிறான். இந்த மனநோய் சித்தாந்தங்களை எதிர்த்தும் ஹிந்து ஒற்றுமையை ஏற்படுத்தவும் நாம் ஒவ்வொருவரும் ஒரு வெள்ளையப்பனாக ஒரு ரமேஷாக களமிறங்கி போராடுவோம். நாம் சிந்தும் ஒவ்வொரு ரத்த துளியும் ஆயிரக்கணக்கான வீரர்களை உத்வேகத்துடன் உருவாக்கட்டும். அன்னிய வன்முறை மார்க்கங்களின் உள்ளூர் அடிமைகளின் மனநோய் மார்க்கங்கள் மாய்ந்திட ரமேஷ் அவர்களின் வீரமரணமும் வெள்ளையப்பன் அவர்களின் பலிதானமும் நமக்கு மன் உறுதியை அளிக்கட்டும்.

தேச பக்தரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இழப்பின் வலியை அனுபவிக்கும் ஒவ்வொரு இந்து சமூக சகோதர சகோதரிக்கும் அவர்களில் வருத்தத்தில் வேதனையில் தமிழ்ஹிந்து பங்கு கொள்கிறது என கூறுகிறோம். ஓட்டு வங்கி ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக மத வன்வெறி அடிப்படைவாத மிருகங்களை வளர்த்து விடும், அத்தகைய சக்திகளிடம் தொடர்ந்து பணிந்து போகும், தமிழக அரசை மிகக் கடுமையாக கண்டிக்கிறோம்.

37 Replies to “தொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு”

  1. நிறந்தரமாக, அஞ்சலி செய்தியை, கண்டன போஸ்டர்களை அச்சடித்து ஸ்டாக் வைத்துக்கொள்ளும் நிலைக்குப் போய்விடுவோம் போலிருக்கிறது.

  2. தொடரும் இந்தப் படுகொலைகளைப் பார்த்து ஏதும் செய்யாமல் இருக்கும் தமிழக அரசே முதல் கண்டனத்துக்கு உரியதாகிறது. இந்த அரசு இந்தக் கொலைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் பாட்டுக்கு இருந்துகொண்டிஇருந்தால் இந்து சக்திகள் அனைத்தும் அரசுக்கு எதிராக எழுச்சி பெற வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

  3. மிகவும் வேதனை அளிக்கும் செய்தி. தனக்காகதான் இது போன்ற பலி தானங்கள் என ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயம் உணருவது எப்போது ?

  4. தொடரும் இந்தப் படுகொலைகளைப் பார்த்து ஏதும் செய்யாமல் இருக்கும் தமிழக அரசே முதல் கண்டனத்துக்கு உரியதாகிறது. இந்த அரசு இந்தக் கொலைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் பாட்டுக்கு இருந்துகொண்டிஇருந்தால் இந்து சக்திகள் அனைத்தும் எழுச்சி பெற வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

  5. இந்த கொலைபாதகர்களுக்கு எதிராக என்னால் ஒன்றும் செய்ய இயல முடிய வில்லையே! என் சகோதரர்களை தொடர்ந்து பலிதானம் கொடுத்து கொண்டிருக்கின்றேனே! என் சிவனே! கொடுமைக்கு எதிராக போராடும் வல்லமையை, என் மனமே துஷ்டர்களின் பிடியிலிருந்து என் சமுதாயத்தை தேசத்தை மீட்கும் வல்லமையை கொடும், போராடும் துணிச்சலை கொடு, ஏ! பகவானே! தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் தன்னை அர்ப்பணித்து கொண்டு, வீட்டு நலனை துச்சமென்று நினைத்து பணியாற்றும் என் சகோதரர்களை பாதுகாப்பாயாக! இனி மேலும் பலிதானம் வேண்டாம், ஏ! பகவானே! நீயே! என் சகோதரர்களுக்கு அரண், ஏ! இந்து சமுதாயமே! என் சகோதரர்களுக்காக நீ உறக்கம் கலைக்க மாட்டாயா? ஏ! தூங்கு மூஞ்சி அரசே! எவரை வளர்க்க எங்களை பலி கொடுக்கிறாய்? எங்கள் உயிரை விட உன் நாற்காலி மோகம் பெரிதா? என் பகவானே! உன் சேவை புரியும் என் சகோதரர்களை காப்பாற்று.

  6. பலமுறை நமது தளத்தில் இதே கருத்தை பதிவு செய்துவந்திருக்கிறேன்……

    ஒட்டு பொறுக்குவதில் கருணாநிதிக்கு எந்த வகையிலும் சளைக்காதவர் ஜெயலலிதா…..இருவருமே ஹிந்து விரோதிகள்தான்……கருணாநிதி ஹிந்து மதத்தின் மீது கொண்ட துவேஷத்தின் காரணமாக தனது வெறுப்பை வெளிப்படையாக காட்டிவிடுவார்……ஜெ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் செய்வார்….அவ்வளவுதான் வித்தியாசம்……

    இனியும் இவர்களை நம்பிக்கொண்டிராமல் ஹிந்து இயக்கத்தலைவர்கள் தங்கள உயிரை தாங்களே பாதுகாத்துக்கொள்ள முயலவேண்டும்….

    அல்லது இந்த நன்றிகெட்ட ஹிந்துக்களின் நலனுக்காகபோராடும் விளங்காத வேலையை விட்டுவிட்டு அவரவர் பிழைப்பை பார்க்கட்டும்…..குறைந்தபட்சம் உயிராவது மிஞ்சும்…..

  7. ஆருயிர்க் குடும்ப நண்பர். உடன் சங்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்.

    பாஜகவில் பொறுப்புக்களை ஏற்குமுன்னர் சேலத்துக்கருகாமையிலுள்ள அனைத்து சிற்றூர்களிலும் ஹிந்து இயக்க வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர். சேலம் மரவனேரியில் உள்ள தேசீய சேவா சமிதி என்ற ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க கார்யாலயம் உள்ள நிலத்தைக் கையகப்படுத்த நிகழ்ந்த போராட்டங்கள், ராமஜன்மபூமி போராட்டங்கள் என பல போராட்டங்களில் முனைந்து பங்கேற்றவர். தேசீய சேவா சமிதி கட்டட விஸ்தரிப்புக் குழுவில் முக்கிய பங்காற்றி வந்த பெருந்தகை.

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் விவித க்ஷேத்ரங்களான பாஜக போன்ற சங்க பரிவார இயக்கங்களில் அயராது பாடு பட்ட பெருந்தகை. மானனீய ரமேஷ் ஜீ அவர்கள் தனது இல்லத்தின் வாசலிலேயே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நேற்றிரவில் தெரிய வந்தது. தோளொடு தோள் கொடுத்து உடன் பணியாற்றிய குடும்ப நண்பர், சங்கத்தின் சக பொறுப்பாளர் தன் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டமை சொல்லொணா மனத்துயரத்தையும் அயர்ச்சியையும் அளிக்கிறது.

    எமது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பழனிப் பதிவாழ் பாலகுமாரன் மனவலிமையைக் கொடுக்க இறைஞ்சுகிறேன்.

    \\இந்துக்கள் சமுதாய ரீதியில் அரசியல் ரீதியில் பிரிந்து கிடந்தால் அதற்கு கிடைக்கும் இந்த விலை விரைவில் ஒவ்வொரு இந்து குடும்பமும் கொடுக்க வேண்டி இருக்கும்.\\

    இதை நினைவில் கொண்டு ஒவ்வொரு ஹிந்துவும் மானனீய ஸ்ரீ ரமேஷ் ஜி அவர்கள் பங்கெடுத்த ஹிந்து இயக்கப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தேசத்தையும் நம் அடுத்த தலைமுறையையும் மதவெறி வன்முறைக் கும்பல்களில் இருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் தொடரும் வன்முறைகள், ஹிந்து இயக்கப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களும் தங்கள் பாதுகாப்பு பற்றியும் விரிவாக விவாதங்கள் செய்ய வேண்டும் என்பதனையும் சுட்டுகின்றன. தேசத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள ஹிந்து இயக்கப்பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக கட்சியின் தலைமைப்பொறுப்பில் உள்ள பெருந்தகைகள் போன்ற பலரின் பாதுகாப்பு பற்றி இயக்க ரீதியாக முறையான விவாதம் நிகழ்த்தப்பட வேண்டும்.

    தமிழக சர்க்கார் மற்றும் பாரத சர்க்காரை மட்டிலும் நம்பியிராது சுயபாதுகாப்பு முறைமைகளை சங்க இயக்கங்களில் அறிமுகப்படுத்தி அமலுக்கு மிக விரைவாகக் கொணர்தல் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வழிவகுக்கும்.

    வெற்றி வேல் வீர வேல்

  8. திருப்பூர் புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பல்லடம் சாலையில் , எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி அருகில் அமையவுள்ளது…..ஒரு சென்ட் சுமார் ஐந்து லட்சம்முதல் இருபதுலட்சம் ரூபாய் வரை விற்கும் அந்த இடத்தில் , ஹிந்து அறநிலையத்துறைக்கு [ விச்வேச்வரசுவாமி – வீரராகவப்பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான ] சொந்தமான முப்பது ஏக்கர் நிலம் [இன்றைய மதிப்பில் கணக்கிட்டுப்பாருங்கள் ] கையகப்படுத்தப்பட்டு வேலை நடக்கிறது…….

    நல்லூர் – காசிபாளையம் சாலையில் திருப்பூர் மாவட்ட சிறை அமைப்பதற்காக ஹிந்து அறநிலையத்துறை வசம் இருந்த [ நல்லூர் விச்வேச்வரச்வாமி கோயிலுக்கு சொந்தமான ] நாற்பது ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது ……

    இவையெல்லாம் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ் . எம் ஆனந்தன் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த காரியங்கள்……

    மேலும் நல்லூர் சிவன்கோயிலுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன ……

    ஆனால் மாவட்டத்திலேயே அதிக வருமானம் தரும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ராஜ கோபுர நடைக்கதவு திருப்பூர் பனியன் நிறுவன அதிபர் ஒருவர் செய்து தர வேண்டியிருக்கிறது……………

    திருப்பூர் விச்வேச்வரசுவாமி மற்றும் வீரராகவபெருமாள் கோயில்களில் திருப்பணிகள் நடக்கின்றன…..அனைத்தும் பக்தர்கள் உபயம்……..பாதி வேலை முடித்த புகைப்படங்களை பிளக்ஸ் பேனர் வைத்து , மீதி வேலையை முடிப்பதற்காக பகதர்களின் கையைப்பிடித்து இழுக்காத குறையாக பிச்சை எடுக்கின்றனர்……இத்தனைக்கும் , திருப்பூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலகம் பெருமாள் கோயிலில்தான் அமைந்துள்ளது……

    ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமையான ,நல்லூர் சிவன் கோயிலுக்கு மடப்பள்ளி ஆள் கிடையாது……[ மாதம் தொள்ளாயிரம் ரூபாய் சம்பளம் என்றால் ஆள் எங்கே கிடைக்கும் ?] அன்றாட நைவேத்தியங்களுக்கு கோயில் அர்ச்சகர்களே சமைத்துக்கொள்கின்றனர்…….பிரதோஷ தினத்தன்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க , பக்தர்களே ஆள்போட்டு சமைத்துக்கொள்கின்றனர்…….

    ஹிந்து இயக்கங்கள் ஓரளவு வலுவாக [ இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஹிந்து இயக்கங்கள் போரடி மீட்டன ] இருக்கும் திருப்பூரிலேயே இதுதான் நிலைமை என்றால் , மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கோயில்களின் நிலை என்ன?

    ஆண்டவனின் சொத்துக்கே பாதுகாப்பு இலாத மாநிலத்தில் , ஹிந்து இயக்கத்தலைவர்களை யார் காப்பாற்றப்போகிறார்கள்?அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?

    யாருக்காக போராடுகிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே உணராதபோது போராடி என்ன பயன்?

    தனது மதத்தை , தனது மக்களை , தன் அடியார்களை ., தன் சொத்துக்களை காப்பற்றிக்கொள்ளும் பலம் நமது தெய்வங்களுக்கு இருந்தால் காப்பாற்றிக்கொள்ளட்டும்…… ……இல்லை ….வலிவுள்ளது வாழட்டும்……..நீங்கள் போய் உங்கள் பிழைப்பை , உங்கள குடும்பத்தை காப்பாற்றுங்கள்……பின்பு இறைவன் விட்ட வழி……..

  9. மிகவும் வேதனை அளிக்கும் செய்தி. தனக்காகதான் இது போன்ற பலி தானங்கள் என ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயம் உணருவது எப்போது ?

  10. இந்துக்கள் இப்படி குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தால் “வாராந்திர” அல்ல “தினந்தோறும்” என்று மாறி பின் “மணி” கணக்கில் படு கொலைகள் நடக்கபோகிறது. திரு கண்ணன் சொன்னது போல இருக்கிற எல்லா இந்து தலைவர்களுக்கும் போடோவுடன் (தேதிக்கு மட்டும் இடம் விட்டு — அதை கையில் sketch pen ல் எழுதி கொள்ளலாம்) போஸ்டர் பிரிண்ட் செய்து ஸ்டாக் ரெடியாக வைத்துகொள்ளலாம் ஏன் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் செய்ய கஷ்டப்படவேண்டும்? திரு ஓகை நடராஜன் ” இந்து சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு எழுச்சி பெறும்” என்று தமாஷ் பண்ணுகிறார். சூடு சொரணை இல்லாத இந்துக்கள் எழுச்சி பெறுவார்களாம்! யாரை நம்பி இதை சொல்கிறார்?
    இப்படி இந்துக்கள் தினம் தினம் கொலை செய்யபட்டால் எந்த ஒரு இந்துவின் மனைவியும் இந்து இயக்கங்களில் சேர அனுமதிக்கவே ஒப்பு கொள்ள மாட்டார்கள்.திரு சான்றோன் சொல்வது போல அவரவர் குடும்பத்தை கவனிக்க வேண்டியதுதான். அப்புறம் யார் வந்து இந்த “இந்து பேக்குகளை” காப்பாற்றுவார்கள்? பதவி வெறி பிடித்த “முன்னாள் நடிகை” இந்துக்களை காப்பாற்றுவாள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்களா? அந்த பொம்பளையினை திமுக வை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண் மனித வெடிகுண்டாக மாறி “காலி” செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். அப்படி சொன்னபடி காலி செய்யாவிட்டாலும் அப்படி ஒன்று நடந்து அதில் ஜெயா minor காயத்துடன் தப்பினால்தான் விழித்து எழுந்துகொள்ளும் அந்த பொம்பளை. அதுவரை அது தூங்கி கொண்டுதான் இருக்கும். அம்மாவாம் அம்மா! ஈவு இரக்கம் இல்லாத ***.. நமது இந்து தலைவர்களும் இது போல தொடர்ந்து நடக்றதே அதனால் நாம் மிக ஜாக்கிரதியாக பாதுகாப்போடு வெளியே செல்லவேண்டும். என்ற எண்ணம் ஏன் தோன்ற மாட்டேன்கிறது? தமிழக பிஜேபி ஒரு மனுவுடன் சென்று “அம்மாவை” தரிசனம் செய்து விட்டு அந்த செய்தியினை newspaper ல் படத்துடன் வெளியிட்டு கொவார்கள். அவ்வளவுதான் முடிந்தது கதை. பிறகு டிவி சேனல்களில் விவாதம் செய்ய போய்விடுவார்கள். இப்படி செய்வதன் மூலமே கட்சி படு ஜோராக வளர்ந்துவிடும் பிறகு ஜார்ஜ் கோட்டையினை பிடித்துவிடுவோம் என்று மனகோட்டையினை கட்டிகொண்டிருக்கிரார்கள் எனவே இந்துக்களும் ஒன்று படமாட்டார்கள். பிஜேபி கட்சியும் உருப்படியான வேலைகளை செய்துவளராது. சமீபத்தில் நடந்த கொலைகளை பத்திரிகைகள் எதோ ஒரு மூலையில் வெளியிடும். நமது இந்து ஜனங்கள் அதை படிக்கமாட்டார்கள். கூத்தாடிகள் நடித்த படம் பற்றிய செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்து பார்த்து படிப்பார்கள்.
    நடிகைகளுக்கு கோவில் கட்டுவனுங்க. அவனுங்க கட் அவுட் க்கு பால் அபிஷேகம் செய்வானுங்க ரசிகர் மன்றம் நடத்தி ஊர்வலம் போவானுங்க. இப்படிப்பட்டவன் எல்லாம் வெள்ளையப்பன் கொலை செய்ய பட்டால் வருந்துவானா? வெள்ளை தோல் நடிகை படம் வந்தால் ஆட்டம் ஆடுவான் பாட்டு பாடுவான் அட கேடுகெட்ட இந்து அற்ப பிறவிகளே! நீங்கள் சத்தியமாய் உருப்பட மாடீர்கள்..இது இந்து மதத்திற்கு அழிவு காலம் போலும்!

  11. மனிதர்களுக்கு மனித மொழியில் சொல்லலாம்
    நாய்களுக்கு நாய் மொழியில் சொல்லலாம்
    பயங்கிரவாதிகளுக்கு ஆயுத மொழியில் தான் சொல்லணும்

  12. மிக வேதனை தரும் செய்தி. தமிழ் நாட்டில் பல பேய்கள் உள்ளன என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா?
    நாம் இதை போராடி மக்களுக்கு அறம் எது அறமல்லது எது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். கூறுவதை மழுப்பக் கூடாது. உண்மைகள் வெளிப்படை ஆக வேண்டும்
    இதை அன்னிய மத பயங்கரவாத இயக்கத்தினர் தான் செய்திருக்க வேண்டும் அரசுக்குத் தெரியும் என்றே நம்புகின்றேன். அரசியலுக்காக விஷப் பாம்புடன் விளையாடுகிறார்கள்
    இவர் குடும்பத்தை காப்பாற்றுமாறு இறைவனை இறைஞ்சுகின்றேன்

  13. ஒரு தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டு ஒரு நாள் ஆகப் போகிறது. மாநிலத்தில் உள்ள எந்தக் கட்சித் தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. என்ன அரசியலோ 🙁

  14. இந்து தலைவர்கள் ஆயுதம் ஏந்தாமல் ஆள் பலம் இல்லாமல் இனி வெளியே செல்லக்கூடாது. இந்த படுகொலைகள் உடனடியாக நிற்க வேண்டும், இதற்கு இதுவே ஒரே வழி, இந்த ஹிந்து விரோத அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது, அதை நம்பி பிரயோஜனம் இல்லை. ப ஜ க மற்றும் இந்து உரிமையை கோரும் அணைத்து தலைவர்களும் தொண்டர்களும் தற்காப்பை உரிமையாக நினைக்க வேண்டும். இனி வரும் இந்து விரோத கொலைகாரர்களும் ரவுடிகளும் தாக்க வந்த இடத்திலேயே அழிக்கப்பட வேண்டும்.

  15. அந்த உத்தம ஹிந்துவுக்கு அஞ்சலி .நினைத்தாலே துக்கமும் ,கோபமும் ஒருசேரப் பொங்குகின்றன . அரசு தூங்கவில்லை ;தூங்குவது போல் நடிக்கிறது . தன் கட்சிக்கு
    ஆபத்தில்லாத வரை ஜெயலலிதா ஏன் கவலைப் படப் போகிறார்?

    என்னதான் இத்தனை பதவி மோகமோ? மீதி இருக்கும் தேசத்தையும் ஜிஹாதிக்களுக்குத் தாரை வார்த்து விட்டுத்தான், அப்பாவி ஹிந்து மக்களை நாய்களுக்கும் பேய்களுக்கும் தீனியாக விட்டு விட்டுத்தான் இந்த ஹிந்துத் தலைவர்கள் தொலைந்து போவார்களா ?அன்று நேரு, காந்தி. இன்று ஜயலலிதா, கருணாநிதி , முலாயம் , மம்தா.. ஐயோ!

  16. தாக்கப்படும் நிலையை துறந்து ,தாக்கும் நிலைக்கு என்று நாம் வருகிறோமோ அன்றுதான் இந்த அவலம் நீங்கும்.யூத இனத்தை பார்த்தாவது நாம் இதை கற்றுகொள்வோம்.ரமேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்:-(

  17. தமிழ் நாட்டில் தொடர்ந்து இந்து இயக்கத் தலைவர்களும் தொண்டர்களும் கொல்லப் பட்டு வருகிறார்கள். மாதத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில் இவர்கள் கொல்லப் பட்டு வருகிறார்கள். கொலையாளிகள் மீது ஜெயலலிதாவின் கேடு கெட்ட அரசு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதாகத் தெரியவில்லை. முஸ்லீம் ஜிஹாதிகளைக் கைது செய்தால் தனக்கு முஸ்லீம் ஓட்டு விழாது என்ற அச்சத்தில் இந்தக் கொலைகளை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். இது கடுமையாக கண்டிக்கப் பட வேண்டிய ஒரு செயல். அவர் அனைத்து தரப்பாருக்கும் முதல்வர் என்பதை உணர வேண்டும். சட்டம் ஒழுங்கை நிர்வாகிக்கத் துப்பில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு விலக வேண்டும். முஸ்லீம்களின் ஓட்டுக்களுக்காக இந்துக்களைப் காவு கொடுத்து வரும் போக்கு நிற்பதாகத் தெரியவில்லை. பா ஜ க தலைவர்கள் அறிக்கைகள் கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். மோடி கூட ஒரு கண்டன அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். அனைவரும் ஜெயலலிதாவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக பிச்சைக்காரர்கள் போலக் காத்திருக்கிறார்கள். தங்கள் கட்சியின் தொண்டர்கள் கொல்லப் படுவது குறித்து எந்தவிதமான அக்கறையும் அவர்களுக்கு இல்லை அப்படி ஏதேனும் இருந்திருந்தால் பிரதமர் வேட்பாளரான மோடி இந்நேரம் சேலத்துக்கு வந்திருந்திருக்க வேண்டும். ஒரு முக்கியமான தருணத்தில் தன் தொண்டர்களை கை விட்டு விட்டார் மோடி. இவர் எப்படி நாளைக்கு இந்துக்களை ஜிஹாதிகளின் கோரக் கொலைகளில் இருந்து காக்கப் போகிறார். இனி பா ஜ க தொண்டர்களும் இந்துக்களும் தங்களைக் காத்துக் கொள்ள ஒரே ஒரு வழி மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்துக்கள் கோழைகள் திருப்பி அடிக்க வக்கில்லாதவர்கள். வன்முறைக்குச் செல்ல முடியாதவர்கள். அவர்கள் அறவழியில் செய்யக் கூடியது எல்லாம் ஒரே ஒரு வழி முறை மட்டுமே. இந்த ஜிஹாதி கொலைகளை முஸ்லீம் மசூதிகளும் தலைவர்களும் பிரமுகர்களும் நினைத்தால் நிறுத்த முடியும். அவர்களைச் செய்ய நிர்ப்பந்திக்க இருக்கும் ஒரே வழி அவர்கள் நிறுவனங்களையும் வியாபரங்களையும் வர்த்தகங்களையும் தமிழ் நாட்டின் இந்துக்கள் முற்றிலும் புறக்கணிப்பது மட்டுமே. தங்கள் பிழைப்பில் மண் விழுந்தால் மட்டுமே அவர்கள் இந்தக் கொலைகளை நிறுத்துவார்கள். அதுவரை இது தொடரவே செய்யும். ஆகவே உங்கள் நெருங்கிய நண்பர்களின் கடைகளாக இருந்தாலும் கூட இனிமேல் முஸ்லீம்களின் கடைகளை வியாபாரங்களை கூடுமானவரை பகிஷ்கரிப்புச் செய்யுங்கள், அவர்கள் கொலை செய்வதை நிறுத்தும் வரை அவர்கள் நிறுவனங்களை வணிகங்களை முற்றிலுமாக தவிருங்கள். இதைத் தவிர நம் பாதுகாப்புக்கு நம் முன் வேறு வழியே இல்லை. அனைத்து விதமான முஸ்லீம் கடைகளையும் முற்றிலும் ப்றக்கணியுங்கள். இதை உறுதியாகச் செய்யுங்கள். நம் உயிர்களுக்காகவும் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காகவும் இதை கட்டாயம் செய்யுங்கள். இது மதவெறி கிடையாது நம் பாதுகாப்புக்காக நாம் விடுக்கும் அறவழியிலான ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் போன்ற தியாகிகளின் ஆன்மா சாந்தி அடைய இதை உடனடியாக்ச் செய்யுங்கள்

  18. ரமேஷ் ஜி யின் இழப்பு மனதை பிசைந்தாலும், மானம் கெட்ட ஜெயலலிதா அரசிடம் நாம் கெஞ்சக்கூடாது. மாவீரர்கள் விதைக்கப்படுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் வெள்ளையப்பனும், ரமேசும் முளைத்து வருவார்கள். தன் கடன் தீர்ப்பார்கள்.

    வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழக பா.ஜ.க. ‘சில்லரை’ ஓட்டுக்களை நம்பும் இந்த சில்லரை கட்சிகளுடன் எக்காரணதிற்காகவும் கூட்டணி வைக்கக்கூடாது. கூட்டணி தேவையென்றால் அண்மையுள்ள அரசியல்வாதியான மருத்துவர் ராமதாசுடன் கூட்டணி வைக்க வேண்டும். இது எனது கருத்து…

  19. பா ஜ க தலைவர்களின் இது போன்ற கோழைத்தனமான மூடத்தனமான அறிக்கைகளினால் எவ்விதப் பயனுமில்லை. இவ்வளவு கொலைகள் நடந்த பின்னரும் பா ஜ க தலைவர்கள் டெல்லியில் எதைப் புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்? இந்நேரம் மோடி, அத்வானி தொடங்கி சுஷ்மா ஸ்வராஜ் வரையிலும் அனைவரும் சேலத்தில் கூடி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்க வேண்டமா? ஒவ்வொரு தொண்டன் கொல்லப் பட்ட பிறகும் ஒரு வருடம் கழித்து வந்து போலி அனுதாபம் தெரிவித்து விட்டுத் தங்கள் கடனை முடித்துக் கொள்கிறார்கள். மோடியும் வழக்கம் போலவே அனுதாபம் தெரிவித்து விட்டு தன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இது அழகல்ல. இந்நேரம் அவர் சேலத்தில் வந்து இறங்கியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் தொடரும் பா ஜ க தொண்டர்களின் கொலைகளுக்கு தமிழ் நாட்டு முதல்வரைப் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்க் வைத்திருக்க வேண்டும். மாறாக நாளைக்கு ஜெயலலிதா வீசும் எலும்புத் துண்டுகளான ஒரு சில சீட்டுக்களும் கிடைக்காமல் போய் விடுமோ என்று பம்முகிறார்கள் கேடு கெட்ட கேவலமான பா ஜ க தலைவர்கள். இப்படியாகப் பட்ட ஒரு கேடு கெட்ட கட்சிக்காக இத்தனை பேர்கள் தங்கள் உயிரை வீணாக இழந்திருக்கிறார்கள். பா ஜ க தலைவர்கள் அனைவரும் உடனடியாக சேலத்துக்கு நாளைக்கே வர வேண்டும். இனிமேலும் கொலைகள் நடக்கா வண்ணம் தடுக்க அனைத்து போராட்டங்களையும் நடத்த வேண்டும். அப்படிச் செய்யத் துப்பில்லா விட்டால் கட்சியை தமிழ் நாட்டில் கலைத்து விட வேண்டும். இனிமேலும் அக்கட்சியின் தொண்டர்கள் வீணாக உயிர் விடுவதில் அர்த்தமேயில்லை. உடனடியாக பா ஜ க செய்ய வேண்டியது:

    1. மோடி முதல் அனைத்து தலைவர்களும் தமிழ் நாட்டில் கூடி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசை டிஸ்மிஸ் செய்ய போராட வேண்டும்

    2. அனைத்து தொண்டர்களுக்கும் துப்பாக்கி லைசன்ஸ் பெற்றுத் தந்து துப்பாக்கியும் வாங்கித் தர வேண்டும்

    3. முஸ்லீம் அமைப்புகளுடன் பேசி இந்தக் கொலைகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை விட வேண்டும். அவர்கள் நிறுத்தாத பட்சத்தில் கடும் எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை எச்சரிக்க வேண்டும்

    4. தமிழ் நாட்டின் மானம் கெட்ட இந்துக்கள் அனைவரையும் இந்தக் கொலைகள் நிறுத்தப் படும் வரை இஸ்லாமிய நிறுவனங்கள் அனைத்தையும் புறக்கணிக்கக் கோரி வேண்ட வேண்டும்

    5. கொல்லப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு கோடி ரூபாய்களாவது நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்

    6. அனைத்து தலைவர்களுக்கும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை உறுதி செய்ய வேண்டும். இனியும் தாலிபானிய ஜெயலலிதா அரசை நம்பி பிரயோஜனம் கிடையாது. அதற்கு ஜிகாதிகளிடமே நேரடியாக பேசி விடலாம். ஜெயலலிதா அரசின் போலீஸுக்கும் ஜிஹாதிகளுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூடக் கிடையாது இரண்டும் ஒன்றே

    7. தமிழ் நாட்டு பா ஜ க தலைவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை இறந்த தியாகிகளுக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஜெ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதத்தை முடிக்கக் கூடாது. செய்வாரா? பொன் ராதாகிருஷ்ணன்?

    8. மேற்கண்ட நடவடிக்கைகளை பா ஜ க மத்திய மாநில தலைவர்கள் எடுக்காத பட்சத்தில் பா ஜ க உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலகி தங்கள் உயிரையும் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நன்றி கெட்ட தமிழ் நாட்டு இந்துக்களின் பாதுகாப்புக்காக இனியும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் முஸ்லீம்களாக மாறக் கூடச் செய்வார்கள் சுயநலத்திற்காக மனைவி குழந்தைகளைக் கூட விற்கத் தயங்காத மானம் கெட்ட தமிழ் நாட்டு இந்துக்களுக்காக பி ஜே பி தொண்டர்கள் தங்கள் உயிரை இனியும் இழக்க வேண்டிய அவசியம் கிடையாது

    9. மோடி உண்மையான தலைவராக இருப்பாராயின் தன் கட்சித் தொண்டர்களின் உயிர்களின் மீது அக்கறை கொண்டவர் என்றால் அவர் இந்நேரம் சேலத்திற்கு வந்திருக்க வேண்டும். வெறும் அறிக்கை மட்டும் விட்டிருப்பது அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழக்கச் செய்து விட்டது. மற்றொரு போலித் தலைவர் என்று நிரூபித்து விட்டார். தன் தொண்டர்களைக் கூட காப்பாற்ற வக்கில்லாத இவர் இந்தியாவின் இந்துக்களை எப்படி பாதுகாக்கப் போகிறார்?

    10. இதைச் செய்ய வக்கில்லை என்றால் தமிழ் நாட்டு பா ஜ க வை இழுத்து மூடி விட்டுப் போகட்டும். இனியாவது தொண்டர்கள் உயிர் பிழைத்துப் போகட்டும்.

  20. கொலை செயும் அளவுக்கு இவர்கள் செய்த தவறு தான் என்ன ?

    இதை தமிழக அரசு விசாரணை செய்து உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் .

    மதவாதம் இரு புறமும் கூராக உள்ள கத்தி போன்றது ,,,,,,,,

    என்பதை அறிந்து செயல்பட வேண்டும் .

    இல்லா விட்டால் மதம் இருக்கும் …………

    மக்கள் இருக்கமாட்டார்கள் .

  21. தொடரும் இந்தப் படுகொலைகளைப் பார்த்து ஏதும் செய்யாமல் இருக்கும் நாமும் ஒரு வகையில் பொறுப்பு கூறவேண்டியவகளே.
    இந்து செயற்பாட்டாளர் என்ற காரணத்திற்காக ஒருவர் அழிக்கப்படும்பொழுது பத்து இமாம்கள்,முல்லாக்களும் ஐந்து பாதிரிகளும் பிரதர்களேனும் பழிவாங்கப் பட்டால்தான் எம்மை நாம் காப்பற்றிக்கொள்ளமுடியும்.சட்டமும் அரசுகளும் அவர்களுக்கு பயந்துகொன்ன்டே( ஓட்டுக்கோ வன்முறைக்கோ) செயல்படுகின்றன. இது கோபத்தின் உணர்ச்சி மேலீடால் எழுதவதாக இருந்தாலும் முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்.குடும்பத்தினருக்கும் இயக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  22. மாண்புமிகு. முதலமைச்சர் என்ன குட்டி கரணம் போட்டாலும் இந்த முறை பாரதிய ஜனதா தொண்டர்கள், அனுதாபிகள் மற்றும் ஹிந்து மக்களின் ஓட்டு அதிமுகவுக்கு கிடையாது..இதுவரை ஏமாந்தது போதும்..இனிமேலும் ஏமாற தயாரில்லை..ஹிந்து மக்கள் நாங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நேசத்துடன் ஆறுதல் வார்த்தை கூறிய திரு.ராமதாஸ் மற்றும் திரு.நெடுமாறன் அவர்களின் பொற் பாதங்களுக்கு எங்களது நன்றியே சமர்பிக்கிறோம்..இனி ஒரு போதும் போலி திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக நட்பு கிடையாது.. ஜெய்ஹிந்த்.

  23. தமிழ் நாட்டின் மானம் கெட்ட இந்துக்கள் அனைவரையும் இந்தக் கொலைகள் நிறுத்தப் படும் வரை இஸ்லாமிய நிறுவனங்கள் அனைத்தையும் புறக்கணிக்கக் கோரி வேண்ட வேண்டும்

    5. கொல்லப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு கோடி ரூபாய்களாவது நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்

  24. 1. இந்து தலைவர்கள் வெளியே செல்லும்போது தனியாக செல்லக்கூடாது. நாலைந்து பேர் சேர்ந்துதான் போகவேண்டும் அப்போதுதான் அந்த 5 பேரில் ஒருவர் பிழைத்தாலும் யார் கொலைக்கு காரணம் என்று அறியமுடியும்.
    2. இந்து தலைவர்கள் அனைவரும் gun licence பெற வேண்டும் உடனடியாக.
    3. இறக்கும் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதோடு நம் கட்சி பண உதவி செய்யவேண்டும்.
    4. மோடி மீது எனக்கு மரியாதை உண்டு. மோடி அவர்களே உங்களுக்கு ஒரு கேள்வி. உம்மை PM ஆக்கி பார்க்க ஆசைப்பட்டு அயராது உழைக்கும் ஒரு தொண்டன் கொலை செய்யபட்டால் வெறும் அறிக்கை மட்டும் போதுமா? இதுதான் அந்த தொண்டனுக்கும் அவரது கண்ணீர் விடும் குடும்பத்துக்கும் நீர் காட்டும் அனுதாபமா? உடனடியாக சேலம் வா. நமக்கு கஷ்டம் வரும்போது ஆறுதல் சொல்ல ஒரு உன்னத தலைவன் இருக்கிறான் என்று நினைக்கும்போது பட்ட கஷ்டம்கூட கதிரவன் பட்ட பனி போல் மறையும். இதை அவர் உடனடியாக செய்வாரா? செய்யவேண்டும். இல்லை என்றால் அவர் தலைவரே இல்லை. நீ pM ஆக ஆகவே வேண்டாம்.
    4. தமிழக பிஜேபி க்கு:- எல்லா தலைவரளையும் கொலையில் தொலைத்து விட்டு யாரை வைத்து நீ ஆட்சி பிடிக்க போகிறாய்? இங்கே உள்ள பிஜேபி ஆனது cadre களை மதிக்காத leader கள் நிறைந்த கட்சி ஆகும். நான் அந்த கட்சிக்கு பிஜேபி கட்சி வளர பல யோசனைகளைதபால் மூலம் இ மெயில் மூலம் சொன்னேன். அவற்றை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதை acknowledge பண்ண கூட அக்கறை இல்லை.வெறுத்து போய்விட்டேன். இப்படி தொண்டர்களை மதிக்காத கட்சியால் என்ன பயன்?
    5. திரு திருமலை சொன்னது போல இந்துக்கள் செய்தால் நல்லதுதான். ஆனால் அதை எந்த ஒரு மானங் கெட்ட இந்துவும் காது கொடுத்து கேட்கமாட்டானே! “பாய் பாய்” என்று அவனிடம்தான் போவான். அவனுடைய பொருள்தான் இவனுக்கு எப்போதும் இனிக்கும். “பாய் பிரியாணி” என்றால் நாய் போல நாக்கை தொங்கபோட்டு அலைவான். இப்படி பட்டவர்கள் உயிர் வாழ்வதை விட சாவதே நல்ல புண்ணியம் தரும்.
    6. வாடிகனில் புது போப் பதவி ஏற்றால் இங்கே “செகிலரிஸ்ட” கருணாநிதி வாழ்த்து சொல்லுகிறான் (எனக்கு வருகின்ற ஆத்திரத்தில் அப்படிதான் அவன் இவன் என்று சொல்வேன் “தமிழ் இந்து” என் மறுமொழியினை வெளியிட மறுத்தாலும் எனக்கு கவலை இல்லை)ஆனால் தொடர்ந்து இந்து தலைவர்கள் கொலை செய்யபடுகிறார்கள் அது பற்றி கண்டும் காணாமலும் இருக்கும் இவன் ஒரு மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவனா? ஒரு முஸ்லிம் கொலை செயபட்டால் இப்படி தான் அமைதியாக இருப்பானா? முரசொலியில் இரங்கல் கவிதை எழுதுவான் அறிக்கை விடுவான். Human . chain நடத்துவான். இந்த தள்ளாத வயதிலும் இறந்தவன் குடும்பத்தை போய் பார்ப்பான். பண உதவி செய்வான். ஆனால் சேலம் ஆடிடர் ரமேஷ் என்பவரும் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு மனிதன்தானே! அவர் செய்த பாவம்தான் என்ன? ஓட்டுக்காக நாய் போல அலையும் கருணாநிதி ஒரு இதயம் உள்ள மனிதன் தானா? இதுதான் நெஞ்சுக்கு நீதியா?
    7. திருவிளையாடல் நாகேஷ் மாதிரி இந்த website ல் நான் அழுது புலம்பவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? இந்த வெப்சைட் ஐ மிஞ்சி மிஞ்சி போனால் 1000 பேர் பார்ப்பார்களா? மீதமுள்ள இந்துகளுக்கு ரமேஷ் கொல்லப்பட்டது தெர்யுமா? அப்படியே தெரிந்தாலும் தெருவில் எதோ ஒரு ஜந்து இறந்தால் என்ன உணர்வு இருக்குமோ அந்த உணர்வுதான் இந்த இந்துக்வுக்கு இருக்கும்.அதனால்தான் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து விலாவரியாக செய்திகளை போட்டு இந்து மக்களை துயிலெழுப்ப வேண்டும். ஆனால் என் யோசனை fell on deaf ears
    7. பிஜேபி கட்சி ஒவ்வொரு ஊரிலும் மீட்டிங் போட்டு கண்டனம் தெரிவிக்காது. அந்த மாதிரியான பழக்கமே அவர்களுக்கு கிடையாது. அப்படி என்னதான் கட்சி ஆபீசில் உட்கார்ந்து பண்ணுகிறார்களோ? மீட்டிங் போட்டு சொன்னால்தானே இந்துகளுக்கு நேரும் கொடுமை பற்றி மக்களுக்கு தெரியும்.
    8. திராவிட் கழக வீரமணி இந்த கொலைகளை கண்டிக்கமாட்டான். ஆனால் ஆத்திரம் வந்து இந்துக்கள் ஏதாவது அசம்பாவிதம் நடத்திவிட்டால் ஊருக்குமுன்னாடி வந்து விடுவான் அதை கண்டிக்க. பெரியார் பிறந்த மண்ணில் மதவாதம் தலை தூக்க விடமாட்டோம் என்று கூறுவான். பக்கத்தில் “கடா மீசை” சுப வீர பாண்டியன் ஜால்ரா தட்டுவான். வாரம் ஒரு கொலை நடக்கும்போது மட்டும் எந்த மதவாதம் பற்றியும் பேச மாட்டான். அவன் வாயில் வாழைபழமா இருந்தது அப்போது? கடைசியாக ஒன்று மட்டும் கூறுகிறேன், “ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது போல இந்துக்கள் பிரிந்து நின்றால் எல்லா அரசியல் கம்னேட்டிகளுக்கும் கொண்டாட்டம்.தான்.

  25. இன்றைய தமிழ்கத்தின் நிலைப்படி –

    இந்து இயக்கங்கள் இந்துக்களிடமே கூட பரவலாக அறியப்படவிலை.

    பிஜேபி இரண்டாம் நிலையில் உள்ள கட்சி. தே மு க அளவு கூட அதற்கு வாக்கு வங்கி இல்லை. தனித்து நின்றால், ஓரினண்டு தொகுதிகளைத்தவிர மற்றெல்லாவிடங்களிலும் நான்காமிடத்தில் தள்ளப்பட்டு வைப்புத்தொகையை இழப்பர். தமிழகத்தில் பிஜேபி தலைவர்களுக்கு மாஸ் அப்பீலே கிடையாது.

    இந்தச்சூழ்நிலையில், பெரிய கட்சிகள், அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டுமே இந்துத்தலைவர்கள் கொலைசெய்யப்படுவதைத் தடுக்க வழிகளைச் செய்ய முடியும்.

    இப்படி விசுவநாதனைப்போல அவர்களை அவன் அவள் என்று திட்டிவிட்டால் அதுவும் கூட நடக்காது.

    எதார்த்தங்களை எதிர்நோக்கப் பழகிக்கொள்ளுங்கள் நண்பர்களே. ஜெவிடம் மனுப்போடுங்கள். அதற்குப் பணிவு அவசியம்.

  26. திரு ரமேஸின் மரணம் பத்திரிக்கைகளில் தலைப்புச்செய்தியாக வரவில்லை. சில பத்திரிக்கைகள் உள்ளே போட்டன. சில முன்பக்கத்தில் போட்டாலும் சிறிதாகப் போட்டன.

    நேற்றுதான் அவை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து போட்டன. ஏன் தெரியுமா? ஜெ யின் அறிக்கை. வைகோவின் கண்டனம்.

  27. அரசு தூங்கவில்லை. தூங்குவது போல நடிக்கிறது.

    கருநாநிதி ஏதாவது சொன்னால்தான் செய்தால் ஜெ திருப்பிச் செய்வார் சொல்வார். அவருக்கு ஆதாயம் உண்டா என்று இவர் பார்க்க இவருக்கு உண்டா என்று அவர் பார்க்க – எல்லாமே பரபரப்பாக ஆகி விடும். ஊடகங்கள் உட்புகுந்து தங்களை நிலைநாட்டிக்கொள்ளும். மக்களும் அடடே என்று பேசத்தொடங்குவார்கள். இளவரசன் – திவ்யா கதை உப்புக்குச் சப்பைக்கேசு. ஆனால் என்ன சக்கை போடுபோட்டது. இல்லையா?

    திரு சுரேசின் கொலைபற்றிய அறிக்கையையோ விசாரணையோ இருவரும் ஆதாயம் பார்த்தால்தால் பரபரப்பாகும்.

    தில்லி பிஜேபி தலைவர்கள் கண்டனக்குரல்கள் எழுப்பியதால்தான் ஜெ புலன் விசாரணைக்கு ஆணையிட்டார். அவ்வளவுதான். அதோடு நிறுத்திக்கொண்டார்.

    விசுவநாதன், கருநாநிதி உதவவேண்டும்; வீரமணி உதவ வேண்டுமென்று உணர்ச்சிவசப்படுகிறார். அப்படியெல்லாமுணர்ச்சிவசப்பட்டுவிட்டு, தானாகவே ஒப்புக்கொள்கிறார்: என் உணர்ச்சிகள் எதற்கும் உதவாதென்று. அதுவரை பாராட்டுக்கள் விசுவநாதன்.

    ஜெதான் உதவ வேண்டும். ஜெ இல்லாமல் எந்த அணுவும் அசையாது. போய்க் கேளுங்கள். அல்லது உங்கள் தலைவர்களை அனுப்பிக் கேளுங்கள்.

    Madam is the only hope for you. Take care.

    தமிழ் இந்து.காம் ஜெ-யைப்பற்றி எந்த அவதூறுச்சொற்களும் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

  28. //தாக்கப்படும் நிலையை துறந்து ,தாக்கும் நிலைக்கு என்று நாம் வருகிறோமோ அன்றுதான் இந்த அவலம் நீங்கும்.யூத இனத்தை பார்த்தாவது நாம் இதை கற்றுகொள்வோம்.ரமேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்:-(//

    திரு.சோமசுந்தரம் போன்று இதுபோல கொந்தளிக்கும் எனது இந்து சகோதர/சகோதரிகளுக்கு:- இதைப்போலப் பேசவேண்டாம். உடனே ‘மதவாத சக்தி’ என்று முத்திரை குத்திவிடுவார்கள். குறைந்தபட்சம் நரேந்திர மோடியின் கையாள் என்று பிரகடனப் படுத்திவிடுவார்கள். ஒட்டு வங்கி அரசியல் இருக்கலாம், ஆனால் “இஸ்லாமியர்களுக்குப் போனால் உயிர், இந்துக்களுக்குப் போனால் மயிர்” என்ற எண்ணம் எப்படித்தான் போகுமோ? இந்த நூற்றாண்டின் சத்திரபதி சிவாஜி ராஜா எங்கு, எப்போது பிறப்பாரோ??

    – கலங்கும் இந்து.

  29. //எனக்கு வருகின்ற ஆத்திரத்தில் அப்படிதான் அவன் இவன் என்று சொல்வேன் “தமிழ் இந்து” என் மறுமொழியினை வெளியிட மறுத்தாலும் எனக்கு கவலை இல்லை)ஆனால் தொடர்ந்து இந்து தலைவர்கள் கொலை செய்யபடுகிறார்கள் அது பற்றி கண்டும் காணாமலும் இருக்கும் இவன் ஒரு மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவனா?//

    விசுவநாதன் கீழே உள்ள செய்தியைப்படிக்கவும்.

    //கடந்த 19ம் தேதி சேலத்தில், தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் தொடர்கதையாகி வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் தொடர்கின்றன என்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கொலைகள் நின்ற பாடில்லையே? என்ற கேள்விக்கு அவர் தெரிவித்துள்ள பதிலாவது…. ஆழ்ந்த இரங்கல்: அதுவும் ஒரு சாதனைதான் என்பார்கள்! சேலத்தில் தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் வி. ரமேஷ் என்பவர் 19.7.2013 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் படுகொலையை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, மறைந்த ரமேஷ் அவர்களின் குடும் பத்தினருக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//.

    Read more at: https://tamil.oneindia.in/news/2013/07/22/tamilnadu-karunanidhi-condemned-auditor-ramesh-murder-179586.html

  30. Only these comments from Muka will make Jeya move fast to prove that she is better than him in taking action in the matter. If the investigation started by her is slow, Muka will point out that and she will move faster and bring the investigation to an end i.e. arresting the murderers. Neeeyaa Naanaa – esp, in the year of election i.e. 2014 May 🙂

    That is why I said, it is these two leaders who can help you.

  31. இந்துக்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிப்பது ஒருப்பக்கம். முதுகெலும்பு இல்லாத தமிழக ஊடகங்களின், பத்திரிக்கைகைகளின் மனசாட்சியற்ற விஷமத்தனத்தை பாருங்கள்.

    1. மாலைமலர் என்ற மின்-நாளிதழ் பா ஜ க, இந்து முன்னணி, மோடி மற்றும் இந்துக்கட்சியினர் படுகொலைகளை குறித்து செய்திகள் வெளியிடுவார்கள். அதன் கீழ் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க பின்னூட்டம் அனுப்பவம் தங்கள் இணையத்தில் மென்பொருள் வடிவமைத்துள்ளனர். இதில் பல இஸ்லாமியர்கள் வன்முறைக்கு ஆதரவாகவும், இந்துத் தலைவர்களையும் இந்து மதத்தையும் படுக்கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஏசுவார்கள். பகிரங்கமாக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிப்பார்கள். அப்படிதாண்டா செய்வோம் என்று அறைக்கூவல் விடுப்பார்கள். அதற்கும் மேலே பாரத மாதாவையே கேவலமாக சித்தரித்து பின்னூட்டங்கள் அனுப்புவார்கள். அத்தனை கருத்துக்களையும் மாலைமலர் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்துக்கள் பதிலடி கொடுத்தாலோ தீவிரவாதத்திற்கு எதிராக யாராவது பின்னூட்டங்கள் அனுப்பினாலோ பத்து நிமிடங்களில் இந்துக்கள் கூறிய கருத்துக்களை உடனடியாக நீக்கிவிடுகிறது. கெட்ட வார்த்தைகளைக் கூறி இந்துக்களை திட்டுவார்கள் இஸ்லாமியர்கள். இந்தக் கருத்து அப்படியே வெளியாகும். இந்துக்களின் பதில் கருத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும். சில இஸ்லாமியர்கள் இந்துப்புனை பெயர்களில் “இந்து மதம் இந்தியாவை விட்டு ஓடவேண்டும்” என்றும் எழுதுகிறார்கள். “இந்து மத தர்மமே மிகச்சிறந்த மதம்” என்று பின்னூட்டம் அனுப்பினால் சில நிமிடங்களில் இந்து மத ஆதரவுக்கருத்துக்கள் காணமல் போவது உறுதி. ஒருவேளை மாலைமலர் தணிக்கை பிரிவில் இருப்பவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும்.

    மாலைமலர் மின் நாளிதழை படிப்பவருக்கு இந்த செய்தி புதிது அல்ல

    2. சன் நியுஸ் தொலைக்காட்சியில் நேற்று இரவு விவாதமேடை நிகழ்ச்சியில் இந்து மதத்லைவர்கள் படுகொலைகளைக் குறித்து விவாதம் நிகழ்ந்தது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “கொலைகளுக்கு காரணம் இஸ்லாமிய ஜிகாதிகளே” என்று ஆணித்தரமாக கூறுகிறார். ஆனால் சன் நியுஸ் நிருபரோ அவரைப் பேசவிடாமல் செய்து “கொலை நடந்தவுடனே நீங்கள் ஏன் மதச்சாயம் பூசுகிறீர்கள்?” என்று ஏதோ அறிவாளியை போல கேட்கிறார். அர்ஜுன் சம்பத் கூறிய எந்த வாதத்தையும் அவர் கடுகளவுக்கூட கேட்கவில்லை. மாறாக “நீங்கள் ஏன் இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சாற்றுகிறீர்? என்று அதேக்கேள்வியை கேட்கிறார். “தமிழகத்தில் தமிழர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அன்னிய மதத்தினர் அதிகம் வளர்கின்றனர்” என்கிறார் அர்ஜுன். “அதுக்குறித்து பேசாதீர்கள்” என்கிறார் நிருபர். முஸ்லிம் அமைப்பின் தலைவரோ “பாபர் மசூதியை இடித்தீர்களே” என்று தீவிரவாதத்தை ஆதரிக்கும் நோக்கில் பேசுகிறார். நிருபர் அவரைப் பேச விட்டு வேடிக்கைப்பார்க்கிறார்

    அர்ஜுன் சம்பத் மிகத்தெளிவாக ஒரு கருத்தைக்கூறினார் “காவல்துறை உண்மையானக் குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். ஏதோ ஒரு அப்பாவி இஸ்லாமியனைக் கைது செய்து சிறையில் அடைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்துவோ இஸ்லாமியனோ யாராக இருந்தாலும் சரி உண்மையான குற்றவாளி தப்பக்கூடாது.” என்று. இதை மட்டுமே அங்குள்ளவர்கள் ஏற்றுக்கொண்டனர். “குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு மத அடையாளங்களை இஸ்லாமிய அமைப்புகள் பூசக்கூடாது.” என்கிறார் அர்ஜுன் சம்பத். அதுக்குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவரிடம் கேள்விகேட்க வேண்டிய நிருபரோ “இடைவேளைக்கு பின் பேசுவோம்” என்று விளம்பரத்தை ஓட விடுகிறார்

    அர்ஜுன் சம்பத்தையும் தமிழிசைசௌந்திர ராஜனையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    அதே விவாத மேடை நிகழ்ச்சியில் அருணன் என்றொரு எழுத்தாளராம் (அந்தாள் யார் என்றே தெரியவில்லை) அந்த அறிவாளி கூறுகிறார் “இந்துத் தலைவர்கள் படுகொலைகள் நடந்தால் இஸ்லாமிய அமைப்பினரை சந்தேகப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    “முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் என்பது ஏதோப் பெரிய அறிவாளித்தனமான வாதமா?”

    “காவல்துறை தேடப்படும் மூன்று இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகைப்படங்களை இந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டது பெரும் தவறு. ஊடகங்கள் காவிச்சாயம் பூசிகொண்டுள்ளன. இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே கிடையாது என்றக் கருத்தை நான் ஆதரிக்கிறேன்”

    இன்னொருபுறம் இருந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவரோ விஷமத்தனமாக சிரிக்கிறார். அவரது சிரிப்பின் அர்த்தங்கள் ஆயிரமல்ல ஒன்றேதான்.

    தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் இருக்கக்கூடாது. புலிகள் அமைப்பும் இருக்கக் கூடாது. அவ்வளவுதான். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாராளமாக தமிழ்நாட்டில் வசிக்கலாம், படுகொலைகளை செய்யலாம். அதன் மூலம் தமிழ்நாடு சுடுகாடு ஆனாலும் ஒன்றும் தவறில்லை.

    இப்பொழுது சிந்தியுங்கள். தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் எப்படி தைரியமாக உலா வருகின்றனர் என்று. இதிலிருந்து மீள்வது எப்படி என்பது புரியவில்லை.

  32. ஹிந்துக்கள் ஒற்றுமை! எப்படி வரும்? தலித்கள் மற்றும் பிற வகுப்பினர் பற்றிய அளவு கடந்த அலசல்களே இந்த வகுப்பு வாரி பிரிவினைக்கு முழு முதல் காரணமாக இருக்கின்றது. நல்லவர்கள் அனைத்து பிரிவிலும் இருக்கிறார்கள். என் நண்பர்களில் முக்காலே மூணு வீசம் பேர் நான் இருக்கும் வகுப்பைச் சாராதவர்கள் தாம். அவரவர் பழகும் விதம் மற்றும், ஒருவருக்கொருவர் உண்டான பிடித்தலின் மற்றும் புரிதலின் ஆழத்தைப் பொறுத்தே நட்பின் ஆழமும் அமைகிறது. இதற்கு சாதியோ, மதமோ தடையாக நிற்பது இல்லை. நான் சார்ந்துள்ள வகுப்பிலும் ஏகப்பட்ட சில்லறை பொறம்போக்குகள் இருக்கத் தான் செய்கின்றனர். அவர்களையெல்லாம் எத்தனை ராமானுஜர் வந்தாலும், ஆதிசங்கரர் வந்தாலும், விவேகானந்தர் வந்தாலும், திருத்த முடியாது.

    லாயிட்ஸ் ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் வி.சி கட்சி தொண்டர் ஒருவர் பேசினார். “ராமாயணம் நம்மளுக்கு எல்லாம் நல்லா தெரியும். அதுல சீதை அவங்களா விரும்பித் தான் ராவணன் கிட்ட போனாங்க. இது நமக்கு நல்லா தெரியும். அது புடிக்காத அனுமார்ங்க்ர குரங்கு இலங்கைய எரிச்சுது. அதே போல இப்ப மனசார காதலிக்கிற இளைஞர்களை குறி வெச்சு ஒரு கூட்டம் தமிழ்நாட்டை எரிக்குது” இப்படி பேசினார். கூட்டத்தில் இருந்த பொட்டு பொடிசுகள், விடலைகள், வாலிபர்கள் எல்லாம் கரகோஷிக்க, சிறிதே முதிர்ந்த நடுத்தர வயதான பார்வையாளர்கள் எல்லாம் எப்படி ரியாக்ட் செய்வது என்று குழம்ப ஆரம்பித்தனர். நல்ல கிழங்கள் எல்லாம் கூட்டத்தை விட்டுக் கிளம்பலாமா? என்று சுற்றுமுற்றும் பார்க்கத் துவங்கி விட்டனர்.

    ராமாயணமே மணிரத்தினம் எடுத்தது தான் என்ற அளவில் தான் அந்தப் பேச்சாளருக்கு தெரிந்து இருக்கிறது போலும். அதையே மற்றவர்களுக்கும் அவர் பரப்ப ஆரம்பித்தால் நிலைமை என்ன? தலித்துக்கள் மத்தியில் ஹிந்து மதம் வேர் பிடித்து நின்றால் மட்டுமே இந்த புண்ய மார்கத்தின் நல்ல ஆன்மீக கருத்துக்களும், விஷயங்களும் அடுத்த தலைமுறைக்கும் சரியான முறையில் போய் சேரும். அந்நிய மத ஆக்கிரமிப்பைத் தடுக்க நாம் தலித்துக்களிடையே நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். இதை பாஜக செய்யுமா? அதுவரையில் யார் கொல்லப்பட்டாலும், வெட்டி வீசப்பட்டாலும் எவருக்கும் கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. மருத்துவர் ராமதாசின் கண்டனங்களைப் பற்றி ஒருவர் சொன்னார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோதாவது ஹிந்து ஆதரவு இருந்ததா? வெறும் வன்னியர்கள் பிரச்சனை தானே இது என்று மத்தவனெல்லாம் குறட்டை விடப் போய் விட்டான். சும்மா நடுரோட்டில், டீக்கடையில், ஷாப்பிங் மாலில், பார்க்கிங்லாட்டில் என்று எங்கு இதைப் பற்றிப் பேசினாலும் பக்கத்தில் யாராவது கேட்கிறார்களா என்று ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டு ரகசியம் பேசுவது போல் பேசுகிறார்கள் மொக்கை மெஜாரிட்டி மக்கள். “இது நம்ம நாடு. நாம இங்க பேசாம எங்க பேச முடியும்?” என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மாக்கள். இந்த சொரணை கெட்ட வெத்துப் பசங்களுக்காக, சொத்தை சொம்பனுங்களை நம்பி உயிரை ஏன் விடனும் என்று அப்போதே தோன்றி விட்டது.

    ராமாயணத்தில் வரும் ராமன் தான் இயேசுவின் சீடர் என்று இவர்கள் ஒருநாள் புத்தகம் போடுவார்கள். இதற்கு அதாரம் கிங் ஜேம்ஸ் எழுதிய ஆதி நூல் தான் என்று புளுகும் நாள் ஒன்று வரும். அப்போது கலைஞர் பார்பனர்கள் தான் ராமாயணத்தை மாற்றி எழுதி விட்டார்கள் என்று கோபமாக திட்டுவார். ஜெயலலிதா ஸ்ரீரங்கத்து யானைக்கு வெல்லத்தை ஊட்டி விட்டுவிட்டு கொடநாடு போய் ஓய்வெடுப்பார். எங்கேயாவது 2 பேர் விவேகானந்தரைப் படித்தவன் ஜிகாதிகளின் கையால் வெட்டு வாங்கி பரிதாபமாக உயிரிழப்பான். நாசமாய்ப் போங்கடா!

  33. //தலித்துக்கள் மத்தியில் ஹிந்து மதம் வேர் பிடித்து நின்றால் மட்டுமே இந்த புண்ய மார்கத்தின் நல்ல ஆன்மீக கருத்துக்களும், விஷயங்களும் அடுத்த தலைமுறைக்கும் சரியான முறையில் போய் சேரும். அந்நிய மத ஆக்கிரமிப்பைத் தடுக்க நாம் தலித்துக்களிடையே நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.//

    100 சதவிதம் உண்மை. தமிழகத்தின் கடற்கரை கிராமங்கள், மற்றும் ஏறக்குறைய முக்கால்வாசி மீனவ மக்கள் கிருஸ்துவ மதத்தின் பிடியில் சிக்கியதுதான் இந்து மதத்தின் முதல் வீழ்ச்சி. தமிழக இந்துக்கள் ஒன்று சேர முடியாதபடி சாதியை பயன்படுத்துகின்றனர்.

    தொட்டதில் எல்லாம் சாதியைப் பார்க்காமல் இருந்தாலே பாதிப்பேர்களாவது தாய்மதம் வந்துவிடுவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதையைதான்.

    மீண்டும் இந்து மதம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் எனில், இந்தியாவில் ஜிகாதிகளுக்கு முடிவுரை எழுத வேண்டுமெனில் கீழ்த்தட்டு இந்து மக்கள் நினைத்தால் முடியும்.

  34. //தலித்துக்கள் மத்தியில் ஹிந்து மதம் வேர் பிடித்து நின்றால் மட்டுமே இந்த புண்ய மார்கத்தின் நல்ல ஆன்மீக கருத்துக்களும், விஷயங்களும் அடுத்த தலைமுறைக்கும் சரியான முறையில் போய் சேரும். அந்நிய மத ஆக்கிரமிப்பைத் தடுக்க நாம் தலித்துக்களிடையே நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.//

    100 சதவிதம் உண்மை. தமிழகத்தின் கடற்கரை கிராமங்கள், மற்றும் ஏறக்குறைய முக்கால்வாசி மீனவ மக்கள் கிருஸ்துவ மதத்தின் பிடியில் சிக்கியதுதான் இந்து மதத்தின் முதல் வீழ்ச்சி. தமிழக இந்துக்கள் ஒன்று சேர முடியாதபடி சாதியை பயன்படுத்துகின்றனர்.

    மீண்டும் இந்து மதம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் எனில், இந்தியாவில் ஜிகாதிகளுக்கு முடிவுரை எழுத வேண்டுமெனில் கீழ்த்தட்டு இந்து மக்கள் நினைத்தால் முடியும்.
    மேலே பிரச்சன்னசுந்தர், தமிழ்க்குமரன் கூறியது மிகவும் தீர்கதரிசனமான கருத்து.
    இன்று ஜிகாதிகளாக இருப்பவர்களும் பாவமன்னிப்புக்காக அலைபவர்களும் ஒருகாலத்தில் கீள்தட்டு இந்துக்களாக இருந்தவர்களே (முன்னைய தலைமுறையினர்). இவர்களை மீண்டும் தாய்மதத்திற்கு கொண்டுவருவது கடினம் அனால் இருக்கும் நாம் அனைவரம், ஒவ்வொருவரும் தீவிர இந்துக்களாக செயல்படவேண்டும். தலித்துக்களிடையே இருக்கும் தாழ்ந்த மனப்பான்மையை போக்கி அவர்களை தமிழ் இந்து என்ற சமநிலையில் இருப்பதை உணர்த்தவேண்டும்.
    சர்வம் சிவமயம்.
    சுப்ரமணியம் லோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *