விதியே விதியே… [நாடகம்] – 7

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

புஷ்பக விமானம் குழந்தைகளை, சிதிலமடைந்து கொண்டிருக்கும் பிரமாண்ட கட்டடத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. அதன் உச்சியில் காவி நிறக் கொடி பதறியபடியே பறந்து கொண்டிருக்கிறது. அதற்குக் கீழே உள்ள சிலையில் இருக்கும் சிங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கின்றன.

குழந்தைகள் வந்ததை ஒருவரும் பொருட்படுத்தாமல் தங்கள் வேலைகளிலேயே குறியாக இருக்கிறார்கள். குழந்தைகள் நேராக அந்த மாளிகையின் உள்ளே செல்கிறார்கள்.

ரத்தம் தோய்ந்த தொட்டில் முதலில் உள்ளே நுழைகிறது. அதன் பின்னால் குழந்தைகள் ஒவ்வொருவராக வருகிறார்கள். ஒரு தூணருகே நின்று கொண்டிருந்தவர் தொட்டிலையும் குழந்தைகளையும் பார்த்ததும் வேதனையுடன் பதறியபடியே விரைந்து வருகிறார்.

காவி உடை அணிந்தவர், “என்ன’ என்பதுபோல் தலையை அசைத்து விறைப்பாகக் கேட்கிறார்.

குழந்தை : நாங்கள் ஒரு போரில் கொல்லப்பட்டுவிட்டோம்.

காவி (எந்தவித சலனமும் இல்லாமல்): போரில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

குழந்தை : எங்கள் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வந்திருக்கிறோம்.

காவி  : அது ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

குழந்தை : என்னது, எல்லாருக்கும் தெரியுமா..? தெரிந்துமா அவர்களை யாரும் எதிர்க்காமல் இருக்கிறார்கள்.

காவி : ஆமாம். அவர்கள்தான் தங்கள் எதிரிகள் அனைவரையும் தமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும்படி திசை திருப்பிவிடுவதில் கெட்டிக்காரர்களாயிற்றே.

குழந்தை : நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியாமல் எதிரி யார் என்று தெரியும் என்று சொல்கிறீர்களே அது எப்படி..?

காவி : ஆமாம். இந்த உலகத்துக்கே எதிரி ஒரே ஒரு பிரிவினர்தான். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் எதிரியும் அவர்கள்தான்.

குழந்தைகள் : நாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

காவி: அதுதான் முதலிலேயே சொன்னேனே… உங்கள் எதிரியும் அவர்கள்தான்.

குழந்தை : யாரைச் சொல்கிறீர்கள்…

காவி: வேறு யாராக இருக்க முடியும். உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான்.

குழந்தை : இலங்கையில் நடக்கும் சண்டை சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்தானே நடக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

காவி: குழந்தையல்லவா..? குழந்தைத்தனமாகவே கேட்கிறாய். இலங்கையில் நடக்கும் பிரச்னையின் மூல வேர் எங்கு இருக்கிறது தெரியுமா… கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் சிங்கள கடற்கரையில் தங்கள் கூடாரத்துக்காக என்றைக்குக் குழி தோண்ட ஆரம்பித்ததோ அன்றே இலங்கையின் அழிவுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுவிட்டது. 1500களில் வந்திறங்கிய அந்த கிறிஸ்தவக் கூட்டம் “இலங்கை என்பது ஒரு தீவு… இரண்டு தேசங்கள்’ என்று பிரிவினையின் விதைகளை சரித்திரத்தின் சதுப்பு நிலத்தில் ஆழமாக ஊன்றினார்கள். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் அந்தச் செடியின் வேருக்கு நீர் ஊற்றி வளர்த்தார்கள்.

அந்த கிறிஸ்தவர்கள் இலங்கையில் அன்று ஊன்றிய பிரிவினை விதைதான் இன்று மரமாக வளர்ந்து கிளைகளில் எல்லாம் மண்டையோடுகள் தொங்க இலைகளில் இருந்தெல்லாம் ரத்தத்துளிகள் சொட்ட இலங்கை முழுவதுக்குமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. “டிவைட் அண்ட் ரூல்’ என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் சிறுபான்மையாக இருந்த தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள்.

காலனி நாடுகளை விட்டுச் சென்ற பிறகு “டிவைட் அண்ட் டெஸ்ட்ராய்’ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதற்குத் தோதாக நாட்டை விட்டுச் செல்லும்போது அழகாக ஆட்சியை சிங்களக் கிறிஸ்தவர்களின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்றாக இருந்த இந்தியாவைப் பிரித்து ரத்தக் களறி ஆக்கினார்கள். இந்திய பிரிவினையில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் பேர் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சயனைட் போல் உடனடி விளைவு. இலங்கைக்கு மென் விஷம். 30 வருடங்களில் லட்சக் கணக்கானோர் அகதிகளாக அலைகின்றனர். ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.

குழந்தை : கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னாலும் அங்கு தமிழர்  சிங்களர் சண்டை நடந்துதானே வந்திருக்கிறது. அல்லது அவர்கள் போன பிறகாவது அதைத் தொடராமல் இருந்திருக்கலாமே..?

காவி: நியாயமான கேள்விதான். இந்த உலகில் மனித இனம் பழங்குடிகளாக, நாடோடிகளாக இருந்த காலத்தில் எல்லா இடங்களிலுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துதான் வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படையில், தேசத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபோதும் தமக்குள் சண்டையிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் இன்னொன்றுடன் சண்டையிட்டு வந்திருக்கிறது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே கூடச் சண்டை நடந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் என தமிழகத்துக்குள்ளேயே கூடச் சண்டைகள் நடந்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட ரோமன் கத்தோலிக்கர்கள் பிராட்ட்டஸ்டண்ட்கள் என்று வெட்டு குத்துகள் சரமாரியாக நடந்துதான் வந்திருக்கிறது. ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என எல்லா தேசங்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தன. ஆனால், இன்று அந்த நாடுகளில் எல்லாம் அமைதி திரும்பி சுபிட்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் மட்டும் கடந்தகாலச் சண்டைகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இது ஏன் என்று ஒருவர் சிறிது யோசித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்.

குழந்தை : பிற மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் அடிப்படையில் சண்டையை விரும்புபவர்கள்.

bazooka_jesus_christianity_inquisitionகாவி: அதுதான் இல்லை. கடந்த காலக் காயங்களை மறந்துவிட்டு வாழத்தான் எல்லாருமே விரும்புகிறார்கள். ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதியில் இருக்கும் இடைவெளிகளைப் பெரிதாக்கி, காயங்களை ஆறவிடாமல் கிறிஸ்தவர்கள் கீறிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்காவில் அதை மற்ற மதத்தினர் செய்வதில்லை. தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்த ஓநாய்கள் ஒன்று கூடிவிட்டன. உலகில் இருக்கும் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் என சாது மிருகங்கள் அனைத்தையும் வேட்டையாடக் கிளம்பிவிட்டன. இன்று உலகின் எந்தவொரு நாட்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா..? அங்கு அமைதி நிலவுகிறதா..? அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். அவர்களுடைய அஜெண்டா மிகவும் எளிமையானது. உலகில் இருக்கும் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றி ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோக வைக்கவேண்டும். இல்லையென்றால் தமக்குள் அடித்துக்கொண்டு மடிந்துபோகும்படிச் செய்வார்கள். சிறுபான்மையினரிடம் சுய உரிமைப் போராட்டத்தை நடத்தச் சொல்லி தூண்டிவிடுவார்கள். பெரும்பான்மையிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும்படி அறிவுருத்துவார்கள். இரு தரப்புக்கும் அதி நவீன ஆயுதங்களை அணி அணியாக அனுப்பி வைப்பார்கள். இதுதான்  அவர்களுடைய அயலுறவுக் கொள்கை. உலகின் எந்த வளம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைச் சுரண்டுவது… தான் தயாரிக்கும் ஆயுதங்களுக்கான சந்தையைப் பலப்படுத்த உள்நாட்டுக் கலவரங்களையும் அண்டைநாடுகளுடன் சண்டைகளையும் தூண்டுவது, தீவிரவாத பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வது, கிறிஸ்தவத்தைத் தவிர பிற மதங்களைப் பூண்டோடு அழிப்பது என்ற தன் செயல் திட்டத்தை வெகு சாமர்த்தியமாக  நிறைவேற்றிக் கொண்டுவருகிறார்கள்.

குழந்தை : ஆனால், இலங்கையில்  சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாகப் புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே.

காவி: அங்குதான் குழந்தாய் நீ மட்டுமல்ல. உலகமே ஏமாந்துவிடுகிறது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான். தப்பு தப்பு… இந்த உவமையை நான் சொல்லியிருக்கவே கூடாது. கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான் இது. சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதங்கள் யாரிடம் இருந்து கிடைத்தன. இதே கிறிஸ்தவ தேசங்களிடமிருந்துதானே. அதை வாங்குவதற்கான பணம் யாரால் தரப்பட்டது. சிங்கள அரசுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு, தீவிரவாதத்தை ஒடுக்க என்ற பெயரிலும் விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர்ந்த அகதிகள் மூலமாகவும் பணம் தரப்பட்டது. ஆக, அகதிகளுக்கு உதவுகிறோம்; வளரும் நாடுகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நல்ல பெயரையும் சம்பாதித்தாயிற்று. தங்கள் ஆயுத விற்பனைக்கான சந்தையையும் உறுதிப்படுத்தியாயிற்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற மதங்களை அழிக்கவும் செய்தாயிற்று. கிறிஸ்தவத்தை வேரூன்றவும் வழி செய்தாயிற்று.

வரலாற்றைத் திரிப்பதன் மூலம் இரு பிரிவினரிடையே வேற்றுமையை வளர்த்து அவர்களை எதிரிகளாக்குவது. இருவருக்குமே ஆயுதங்களை வழங்குவது. இருவரையுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைப்பது. மிகவும் அருமையான திரைக்கதை. இலங்கையில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா  குறிவைக்கப்பட்டிருக்கிறது.

கடைசிக் கட்டப் போர் குறித்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும். அந்த அறிக்கையில் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்தது எல்லாமே கிறிஸ்தவ தேவாலயங்கள்தான்.  பிற மதக் கோயில்கள் மசூதிகளில் மக்கள் தங்கியிருந்தால் அது பொதுவாக வழிபாட்டுத்தலம் என்று மொட்டையாகக் குறிப்பிடப்படும்.  தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்தால் அது மட்டும் தெளிவாகக் குறிப்பிடப்படும். இதற்குப் பின்னாலும் தெளிவான மிரட்டல் ஒளிந்திருக்கிறது. நீங்கள் கோவில்களில் தஞ்சம் புகுந்தால் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும். மசூதிக்குள் ஒளிந்தால் மசூதி தகர்க்கப்படும். தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். கடைசி கட்டத்தில் அங்கிருந்து உதவியவர்கள் எல்லாமே பாதிரியார்கள்தான். பாதிரியார்களிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே ரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா போரை நடத்தியது யார் என்பது..?

குழந்தை : ஆனால், சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் நடத்தியது அவர்கள் இல்லையே. போரை நேரடியாக முன்னெடுத்தது இவர்கள்தானே.

காவி: அது முழு உண்மையில்லை. இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, ஜுனியஸ் ரிச்சர்ட்  ஜெயவர்த்தனே, சாலமன் பண்டாரநாயகா என இன்றைய ராஜபக்சே வரை யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். அவர்கள் அனைவருமே என்ன சொன்னார்கள், அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தப் போரை நடத்துகிறோம் என்றார்கள். உலகில் பொதுவாக போரை நிறுத்தினால்தான் அமைதி திரும்பும். ஆனால், இங்கோ போர் நடத்தினால்தான் அமைதி திரும்புமாம். வேதாகமத்தில் எந்த புனித தூதர் இதைச் சொல்லியிருக்கிறாரோ..?

விடுதலைப் புலிகள் மட்டும் விதிவிலக்கா என்ன… அவர்களுடைய ஆஸ்தான ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர். அவர் என்ன செய்தார்? அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தார். இவ்வளவு ஏன்…?  பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்..? தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்… சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன.

பிரபாகரனை ஆரம்பத்திலிருந்தே மூளைச் சலவை செய்தது  கிறிஸ்தவ திருச்சபைதான். 1970களில் அவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்த போதிலிருந்தே அவருடைய காட்ஃபாதராக இருந்தது கிறிஸ்தவ பாதிரிகள்தான். தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால், அவரைப் பின்னால் இருந்து இயக்கிய கிறிஸ்தவ சக்திகளுக்கு வேறு கணக்குகள் இருந்தன. பிரபாகரன் பாவம் வெறும் அம்புதான். வில்லும் வில்லைப் பிடித்திருக்கும் கைகளும் வேறு குழந்தைகளே…

குழந்தை : இந்தப் போரில் பல கிறிஸ்தவ பாதிரிகளும் பத்திரிகையளர்களும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்களே… பிரபாகரன் முதன் முதலில் கொன்றது கூட ஆல்ஃபிரெட் துரையப்பா என்ற கிறிஸ்தவரைத்தானே…

காவி : ஏன் கொன்றார்கள்?

குழந்தை : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பழிவாங்க அவரைக் கொன்றார்கள்.

காவி : மிக மிகத் தவறு. இலங்கையில் நடந்த ஒரு மாநாட்டுக்கு இலங்கை அதிபரை அழைக்காதது, மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்தியது, அனுமதி பெற்ற தேதியையும் தாண்டி மாநாட்டை நடத்தியது, அனுமதி மறுக்கப்பட்டவர்களை பேச அரங்குக்கு அழைத்து வந்தது, மின் கம்பம் சரிந்தது என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா நூற்றில் ஒரு சதவிகிதம்கூடக் காரணம் இல்லை. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் என்ன தெரியுமா..? ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் ஞாயிறு தோறும் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுதான். ஆல்ஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா..? வரதராஜ பெருமாள் கோவிலின் வாசலில் வைத்து கொன்றார் பிரபாகரன். பின்னால் பொங்கிப் பெருகி வழிந்த ரத்த அருவியின் முதல் துளி அது.

பிரபாகரன் தன் மகனுக்கு சூட்டிய அழகுப் பெயர் என்ன தெரியுமா..? சார்லஸ்..!

குழந்தை : அது விடுதலைப் போரில் உயிர் துறந்த ஒரு மாவீரனின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அல்லவா..?

காவி: அப்படித்தான் சொல்வார்கள். வீர மரணம் எத்தனையோ பேர் அடையத்தான் செய்தனர். ஆனால், பிரபாகரனுக்கு சார்லஸ் மட்டுமே நினைவுக்கு வந்திருக்கிறார். கிறிஸ்தவ எஜமானர்களுக்கு விசுவாசம் காட்ட வேண்டாமா..? உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களை அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம்! வேலை முடிந்துவிட்டது. கழட்டி விட்டுவிட்டார்கள்.

குழந்தை : பிரபாகரன் சிங்களப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு அல்லவா உயிரிழந்தார். இதில் கிறிஸ்தவ சதி எங்கிருந்து வருகிறது?

காவி :  கிறிஸ்தவ சதியின் வல்லமையே அதுதான். எந்தவொரு செயலுக்கும் மேலே வெண்ணிறத்தில் சாம்பல் படிந்தது போல் சாதுவாக ஒரு காரணம் இருக்கும். உள்ளுக்குள் ஒரு கிறிஸ்தவக் காரணம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். அருகில் சென்று தொட்டுப் பார்ப்பவர்களுக்கே அந்த அழிவின் வெப்பம் தெரியும். பிரபாகரன் மரணத்திலும் அப்படித்தான். நான் உங்களை ஒன்று கேட்கிறேன்… பிரபாகரனுடைய மரணத்தை இந்த உலகில் பெரும் ஆர்வத்துடன் யார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் தெரியுமா..?

குழந்தை : சிங்கள அரசியல்வாதிகள்தான்.

காவி : அதுதான் இல்லை. அவர்கள் அவரது இருப்பை உள்ளூர விரும்பினார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களுடைய அராஜகங்களைத் தொடர முடியும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

குழந்தை : விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர் அல்லது தமிழர் யாராவது..?

காவி : அதுவும் இல்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்.

குழந்தை (சிறிது யோசித்தபடியே) : புலிகளால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது… (சட்டென்று பேச்சு மூச்சற்று குழந்தை உறைந்துபோகிறது)

காவி : மிகவும் சரியாக யூகித்துவிட்டாய்.

இன்னொரு குழந்தை : ஆனால், அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை கூடக் கொடுக்க வேண்டாம் என்று கருணையோடு மன்னிப்பு அல்லவா வழங்கினார்.

காவி (அலட்சியமாக) : கருணையா… ராஜீவ் கொலைக்கு எவரொருவருக்காவது சட்டபூர்வமாக தண்டனைகொடுக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றால், யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்க அவர் சம்மதம் தந்தார் என்றால் அந்த தூக்குக் கயிறு நேராக அவரது கழுத்தைச் சுற்றி வளைக்கும் என்ற பயம்.

குழந்தை : நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லையே. இதற்கான ஆதாரம்..?

காவி : சில சதிகளை ஒருபோதும் நிரூபிக்க முடியாதம்மா.  சதிகாரர்களின் சாமர்த்தியம் அது.

குழந்தை : பின் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்.

rajiv-kolai-book-coverகாவி : நிரூபிக்கத்தான் முடியாது என்றேன். உண்மையாக இருக்காது என்றோ யூகிக்க முடியாதென்றோ சொல்லவில்லையே.  குற்றவியல் ஆராய்ச்சியின் பால பாடம் என்ன தெரியுமா? ஒரு குற்றம் நடக்கிறதென்றால், அதனால் அதிக லாபம் பெறுபவர் எவரோ அவரே அதை செய்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.  இதன் அடிப்படையில் நூல் பிடித்துக் கொண்டு சென்றால், நான் சொல்வது உண்மை என்பது தெரியவரும். லண்டனில் ராஜீவ் படித்த கல்லூரியில் மிகவும் தற்செயலாக ஒரு மாணவி சேர்ந்தார். உலகின் மிகவும் தற்செயலாக நடந்ததாகச் சொலப்படும் அந்த நிகவுழ்தான் மிகவும் அதி நுட்பத்துடன் திட்டமிடப்பட்ட சதி. அவர்கள் இருவரும் சந்தித்தபோதே ராஜீவின் மரணக் கடிகாரத்தின் மணல் துகள்கள்  உதிர ஆரம்பித்துவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புல்வெளியில் ராஜீவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டது காதல் கரங்கள் அல்ல. சஞ்சய் காந்தியின் விமான விபத்து… இந்திரா காந்தியின் படுகொலை… என  தடைகள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டன. ராஜீவின் மரணம் கடைசி தகர்ப்பு. அது பிரபாகரனின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

குழந்தை : புலிகள் ஏன் அதைச் செய்ய முன் வந்தார்கள்? ராஜீவ் காந்தி செய்த சில விஷயங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காகக் கொல்லும் அளவுக்குப் போவார்களா..? அதனால் அவர்களுடைய இயக்கத்துக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு அல்லவா ஏற்படும். அது தெரியாதவர்களா அவர்கள்.

காவி : அவர்கள் அதைச் செய்ய முன் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. மேலோட்டமாகத் தெரிவது புலிகளுக்குப் பிடிக்காத வகையில் ராஜீவ் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். ஆனால், அதற்காக கொல்லும் அளவுக்குப் போக அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லைதான். ஆனால், அதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். ராஜீவ் இருக்கும்வரை ஈழத்தில் மாநில ஆட்சிக்கு மேலாக வேறு எதுவும் கிடைக்காது. அவரைக் கொன்றால் அதற்கடுத்து இந்திய ஆட்சி என் கைக்கு வரும். நான் இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ஈழம் மலர நிச்சயம் உதவுவேன் என்று உத்தரவாதம் தரப்பட்டது. பிரபாகரன் அதை நம்பினார்.

சர்வதேச அளவில் தங்கள் இயக்கத்தின் பெயருக்கு ஏற்படும் களங்கம் ஏற்படுமே என்று அவர் கலங்கியபோது, ரிச்சர்ட் ஜெயவர்த்தனா மூலம் சிங்களக் கைக்கூலியை வைத்து ஒரு பொய்யான தாக்குதல் முயற்சியை அரங்கேற்றப்பட்டது.  இஸ்ரேலிய மொஸாட் மூலமாகவும் சில திரை மறைவு சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாமே கிறிஸ்தவ சதியம்மா.

குழந்தை : பாலஸ்தீன அதிபர் கூட ராஜீவிடம் படுகொலைக்கு சில நாட்கள் முன்னதாக எச்சரிக்கை கொடுத்தாரே.

காவி : ஆமாம். அதுவும் அந்த சதியின் ஓர் அங்கமே. அது போன்ற சம்பவங்கள் தந்த தைரியத்தினால்தான் பிரபாகரன் இதற்கு உடன்பட்டார். அதோடு, என்னதான் ஆனாலும் வழக்கை இந்திய அதிகாரிகள்தானே செய்வார்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்று உறுதி தரப்பட்டது. இது போதாதென்று இந்திரா காந்தி இறந்தபோது பெருமரங்கள் விழும்போது பூமியில் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்று சீக்கிய கொலைகளை நியாயப்படுத்தினார். எனவே சீக்கியர்களுக்கும் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. பழியை இவர்கள் யார் மேலாவது போட்டுத் தப்பிவிடலாம் என்று பிரபாகரனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் புலிகள் அத்தனை பெரிய செயலைச் செய்ய முன் வந்தனர்.

ஆனால், மற்றவர்களைவிட தங்களை நம்பும் குணம் அவர்களுக்கு உண்டு. யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல் செய்து முடிக்கத்தான் அவர்கள் திட்டம் தீட்டினார்கள்.

குழந்தை : ஆனால், கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது அல்லவா..?

காவி : அதுவேறொரு சதியின் அங்கம். அந்தப் பெரும் விபத்தில் புகைப்படக்காரர் இறந்துவிட்டார். ஆனால், அவர் பயன்படுத்திய கேமரா மட்டும் சேதமடையாமல் எப்படி தப்பியது..? கிறிஸ்தவ லாபியின் டபுள் கேம் அது. புலிகளை ஒரு கட்டுக்குள் வைக்க செய்யப்பட்ட சதி அது. அவர்கள்தான் செய்தது என்பது தெரியாமல் போனால் செய்யச் சொன்னவர்களுக்கு இன்னும் அபாயம் அல்லவா. அதனால் அந்த கேமரா அங்கு போடப்பட்டது.

அது தேர்தல் காலம். ராஜீவுக்குப் பிரதமராக வாய்ப்புகள் மங்கலாக இருந்த நேரம்.

குழந்தை : ஆனால், ராஜீவ் ஆட்சிக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால்தானே புலிகள் அந்தக் கொலையைச் செய்ததார்கள்.

காவி : இல்லை. அது உண்மை இல்லை. ராஜீவ் மத்திய ஆட்சியை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்த நேரம். போபார்ஸ் கேஸ் மூலம் 1989 தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அவருடைய நிலைமை எந்த வகையிலும் சீரடைந்திருக்கவில்லை. போபார்ஸ் கேஸை துரிதப்படுத்தினார்கள் என்பதற்காக வி.பி.சிங்கின் ஆட்சியைக் கலைத்திருந்தார். கைப்பொம்மையாக நியமித்த சந்திர சேகர் ஆட்சியையும் அல்ப காரணம் சொல்லிக் கவிழ்த்திருந்தார். எனவே, அப்போதைய தேர்தலில்  ராஜீவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. அனுதாப அலை மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; நாமே ஒரு சிறிய விபத்தை ஏற்பாடு செய்து, அதில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து தேர்தலைச் சந்திப்போம். எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருக்குத் தலையணை மந்திரம் ஓதப்பட்டது. அப்பாவி ராஜீவ் அதை நம்பினார்.

சதித்திட்டம் அவருக்கு விளக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உரையாற்றப் போகும்போது நேராக மேடைக்குச் செல்ல வேண்டாம். மேடைப் படிகளுக்கு அருகில் குண்டு வெடிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் அந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தில் நமது கட்சியினருக்கு அருகில் சந்தனமாலையுடன் ஒருவர் காத்திருப்பார். அந்த இடத்துக்குப் போய் நின்றுகொள்ளுங்கள். சுற்றிலும் நமது பாதுகாப்பு வீரர்கள்தான் இருப்பார்கள். மேடைக்கு அருகில் குண்டு வெடித்துச் சிதறும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆணி போன்றவை மேல் நோக்கித்தான் சிதறும். நீங்கள் குனிந்து இருந்தால் உடம்புக்கு மேலாக அது தெறித்துப் போய்விடும். நீங்கள் குனிவதற்குத் தோதாக கையில் சந்தன மாலையுடன் ஒருவர் அங்கு காத்திருப்பார். அவர் மாலையை அணிவித்துவிட்டு உங்கள் காலில் விழுவார். நீங்கள் அவரைத் தூக்கிவிடும் சாக்கில் குனிந்து கொள்ளுங்கள். மேடையின் படியில் வெடிக்கும் குண்டு வெடித்துச் சிதறி உங்களுடைய உடம்பில் லேசான சிராய்ப்பை மட்டுமே ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள் என்று திட்டம் அவருக்குச் சொல்லப்பட்டது. அதை ராஜீவ் நம்பினார். விடுதலைப் புலிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டை படியில் பொருத்தாமல் சந்தனமாலையைக் கையில் வைத்திருப்பவரின் மடியில் பொருத்தினார்கள். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் இருக்க குனியச் சொன்னார்கள். அந்தோ… அதுதான் அவருக்கு உலையும் வைத்தது. ஒருவேளை காலில் விழுந்தவரைத் தூக்க முயற்சி எய்யாமல் இருந்திருந்தால் குண்டு வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் சாய்ந்து தப்பியிருக்கக் கூடும். என்ன செய்ய. பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடத்துக் கீழ் தான் படுகுழி வெட்டப்பட்டிருந்தது.

ஈழத் தமிழர்களுக்கு மாநில அதிகாரம் பெற்றுத்தரப் பாடுபட்ட மிஸ்டர் கிளீன் ஸ்ரீ பெரும்புதூரில் முன் இரவில் வந்து சேர்ந்தார். மேடையைப் பார்த்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். படியருகே சிலர் நின்றிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறார்களே என்று அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தார். பெரு மரங்கள் சாயும்போது சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவராயிற்றே. ஒரு மாபெரும் யாகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சில உயிர்களை பலியிடுவதில் தவறில்லை என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார். ஆனால், பாவம் அன்றைய யாகத்தின் பலி ஆடு அவரே என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  மேடைக்குப் போக வேண்டியவர் நேராகக் கூட்டத்துக்குள் கண்களை ஓட்டினார். சற்று தொலைவில் மங்கலான விளக்கொளியில் சந்தனமாலை பளபளத்தது. ராஜீவ்  அதை நோக்கி நடந்தார். மாலை கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அப்படியே காலில் விழுந்து கும்பிட்டார் மாலையை அணிவித்தவர். விழுந்தவரைத் தூக்கிவிடக் குனிந்தார் ராஜீவ். குனிந்தவர் நிமிரவில்லை.

இதைச் செய்து முடித்த பிரபாகரன் உயிருடன் இருப்பது திட்டத்தை வகுத்துத் தந்தவருக்கு எப்போதுமே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவந்தது.

தீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தியாவில் 2009 தேர்தல் வந்தது. இதனிடையில் ராஜபக்சே புலிகளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்திருந்தார். பிரபாகரன் மேலிடத்துக்குச் செய்தி அனுப்பினார். நினைவிருக்கிறதா..? பிரியங்காநளினி சந்திப்பு… வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தவர் உண்மையில் சந்தித்தது மத்திய சிறையில் இருந்த நளினியைத்தான். ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள்முடியப் போகிறது… ஈழம் இன்னும் மலரவில்லையே… சிங்கள அரசு வேறு பாசக் கயிறை வீச ஆரம்பித்திருக்கிறது என்று பிரபாகரன் செய்தி அனுப்பினார்.

பதில் செய்தி பகரப்பட்டது. அரசியல் தளத்தில் மக்கள் இயக்கமாக வளராமல் ராணுவ வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்று வந்ததாலும் ராஜீவ் கொலையினாலும் சர்வதேச அரங்கில்  புலிகளின் பெயர் பெரிதும் களங்கப்பட்டுக் கிடக்கிறது. இந்தநிலையில் ஈழத்துக்கு ஆதரவாக நேரடியாக எதுவும் பேச முடியாது. எனவே, முதலில் சர்வதேச அரங்கில் புலிகள் பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு அவர்கள் கொரில்லா தாக்குதலை நிறுத்தவேண்டும். சிங்கள ராணுவத்தைத் தவறுகள் செய்ய வைக்க வேண்டும். அதை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்யவேண்டும். புலிகள் மீதான தீவிரவாத முத்திரை மறக்கடிக்கப்பட்டு அவர்களுடைய ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு கொடூர நியாயம் கற்பிக்கப்பட வேண்டும்.  எனவே தடுப்பாட்டம் ஆடுங்கள்.

சிங்கள ராணுவம் எவ்வளவுதான் சுற்றி வளைத்தாலும் கடைசி நேரத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வந்து பிரபாகரனைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லும். அதற்குத் தோதாக புலிகள் கப்பல்கள் எளிதில் வந்து போக முடியும்படியான முள்ளி வாய்காலுக்கு ஒதுங்க வேண்டும். இதுதான் பிரபாகரனைச் சென்றடைந்த செய்தி. ராஜீவ் காந்தியப் போலவே பாவம் பிரபாகரனும் அதை நம்பினார்.

கடைசி யுத்தத்தில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். சோனியாவின் இந்தியா எப்படியும் கைவிடாது என்று கடைசிவரை நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். செய்த உதவிக்கு நன்றிகாட்டப்படுமென்று நம்பினார். அவர் முதலும் கடைசியுமாகச் செய்த ஒரே தவறு அதுதான். சிங்கள ராணுவம் சுற்றி வளைத்தது. சொல்லிவைத்தது போலவே தமிழக ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை “அப்பாவி ஈழத் தமிழர்’களின் வேதனையை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இணைய நதிகளில் ஈழ ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பிரபாகரன் இந்தப் புதிய வியூகம் குறித்து சிரித்துக் கொண்டார். எல்லாம் திட்டமிட்டதுபோல் நடப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆனால், விதி அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியது. அது அவருக்குத் தெரிய வந்தபோது பாவம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்திய பொம்மை அரசு, ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு பதிலாக சிங்களர்களுக்கு சாதகமாக சாய ஆரம்பித்தது. ஐநா சபையில் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. பிரபாகரனுக்குத் தான் ஏமாற்றப்படுவது தெரியவந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் பி.ஜே.பி. பக்கம் நகர்வதுபோல் காயை நகர்த்தினார். அது எப்படியும் சம்பந்தப்பட்டவர்களைக் கலங்கடிக்கும் என்று நினைத்திருப்பார். ஆனால், காலம் கடந்துவிட்டிருந்தது.

பிரபாகரனுக்கு அருகிலேயே ஒரு உளவாளியை விதைத்திருந்தது கிறிஸ்தவ லாபி. முள்ளி வாய்க்கால் பக்கம் ஒதுங்கிய பிரபாகரன் தன்னிடம் சொல்லப்பட்ட திட்டத்தின்படியே இந்தியா அனுப்பிய கப்பலில் நம்பி ஏறினார். ஆனால், அது எலிக்கு வைக்கப்பட்ட பொறி. 1970 களில் ஆரம்பித்த வங்கிக் கொள்ளையில் இருந்து தனக்கு வழிகாட்டியாக இருந்த கிறிஸ்தவ சக்திகளின் கைப்பாவையாக இருந்த பிரபாகரன் கடைசியில் அந்த சதிகாரர்களாலேயே கொல்லப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் தூக்குக் கயிற்றில் இருந்து மீட்டார் என்று பாராட்டப்படும் அதே நபர்தான் பிரபாகரனையும் கொன்றார். ஒட்டு மொத்த இனத்தையும் கதறக் கதறக் கொன்றார்.

குழந்தை : நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே…

காவி : உண்மை எப்போதும் கற்பனையைவிட அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். சதிகாரர்களை நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தினால் உண்மை புலப்பட்டுவிடும். ஓநாய்க்கு யார் கட்டுவது மணி..?

தெற்காசிய அரசியல் தலைவர்களின் அகால மரணம் என்பது ஏதோ அங்கு நடக்கும் உள் நாட்டு பிரச்னைகளின் விளைவால் நடக்கும் ஒன்று அல்ல. கிறிஸ்தவ ஓநாய்கள் நீ அந்த பசுவைக் கொல்லு… நான் இந்த ஆடைக் கொல்றேன் என்று திட்டமிட்டு நடத்தும் ரத்த வேட்டை. பாகிஸ்தானில் ஜுல் ஃபிகர் அலி பூட்டோ, ஜியா உல் ஹக், பெனசீர் பூட்டோ. இந்தியாவில் சஞ்சய், இந்திரா, ராஜீவ்…  பங்களாதேஷில் முஜிபூர் ரஹ்மான், ஜியாஉர் ரஹ்மான். இலங்கையோ பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை : அமெரிக்காவில் கூட கென்னடி, லிங்கன் என படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

காவி : அது என்னமோ உண்மைதான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டின் எந்தவொரு நிகழ்வும் கிறிஸ்தவத் தூண்டுதல் இல்லாமல் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

குழந்தை : ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் உதவிக்கு வந்த பெரும்பாலானவர்கள் அந்த கிறிஸ்தவர்கள்தானே. நான் இறப்பதற்கு முன் எனக்கு மருந்துபோட்டு சில நாட்கள் பார்த்துக் கொண்டது கூட ஒரு கன்யாஸ்திரீதான். அகதிகளாக அலைய நேரும் மக்களுக்கு ஆதரவு தருவது கிறிஸ்தவ தேசங்கள்தானே.

christians-in-action-12காவி: அதை அப்படித்தான் செய்யவும் செய்வார்கள். அகதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்தால்தானே அதன் மூலம் பணப்பட்டுவாடா செய்து போராளிகளை ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க வைக்க முடியும். பாலூட்ட வருவதுபோல்தான் வருவார்கள். மார்புக் காம்பில் நஞ்சு தோய்த்திருப்பது குடித்த பிறகுதானே தெரியவரும். இது இன்று நேற்று செய்வதா என்ன..? ஆதி காலந்தொட்டே அதுதானே வழக்கமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு நாட்டுக்குள் நுழைவதற்கும் அவர்கள் அந்த தந்திரத்தைத்தானே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மருத்துவ வசதி செய்கிறேன், கல்வி தருகிறேன் என்று ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைந்து அங்கிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் சிறு சிறு இடைவெளிகளை ஊதிப் பெரிதாக்குவார்கள். கிறிஸ்தவ வர்த்தகத்துக்கு வழி அமைத்துக் கொடுப்பார்கள்… அவர்கள் கிறிஸ்தவ அரசுக்கு வழி வகுத்துக் கொடுப்பார்கள்… கிறிஸ்தவ பார்ப்பனர்களும் கிறிஸ்தவ ஷத்ரியர்களும் கிறிஸ்தவ வைசியர்களும் உலக சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அழித்து ஒழிப்பார்கள். இதுதானே காலனி நாடுகளில் கிறிஸ்தவம் செய்துவந்த திருவிளையாடல்கள்.

யோசித்துப் பார்… காலனி நாடுகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள். கடைசியில் சுதந்திரம் கொடுத்துவிட்டுப் போகும்போது அவர்களில் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவருடைய நகத்தில் ஒரு கீறல்… உடம்பில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டதா..? இந்தியாவில் ரத்தால் வரையப்பட்ட பிரிவினைக் கோடின் கதை உனக்குத் தெரியுமா..? கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிட்டோம் என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால், கிறிஸ்தவன்  தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில்  பிரிவினையின் விஷத்தைக் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறான். சமத்துவ நெல்வயல்களில் வெறுப்பின் தீயை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். சகோதரத்துவ பூமியெங்கும் சந்தேகத்தின் கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். நேரடி ஆதிக்கத்தை கைவிட்டு விட்டு ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தமக்கான சிதையின் விறகுகளைத் தாங்களே எடுத்து வைக்கும்படி செய்து வருகிறான். நந்த வம்சம் கடலோரத்தில் முளைத்த நாணல்களைக் கொண்டு தமக்குள் தாக்கி மடிந்ததுபோல் பிற மதத்தினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாகிறார்கள்.

செப் 11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நேரடி தாக்குதல் இலக்காக கிறிஸ்தவ பூமி இருக்கக்கூடாது என்று இந்தியாவை கேடயமாகப் பிடிக்கும் தந்திரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இனி, தாலிபான்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைக் குறி வைப்பார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து இந்தியர்கள் மீது மேலும் வெறுப்பைக் கக்க வேதங்கள் ஓதியாயிற்று.

இரான் இராக்கில் இனி மேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறீட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃகானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது.

அதே நேரம் கிறிஸ்தவ தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். கிழக்கு தைமூரின் கதை தெரியுமா உங்களுக்கு… இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் கேட்டுப் போராடியது. ஐ.நா சபையும் இன்னபிற கிறிஸ்தவ தேசங்களும் ஓடி வந்து கேட்டதை வாங்கிக் கொடுத்தன. அதற்குக் காரணமென்ன… கிழக்கு தைமூரில் 97 சதவிகிதத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா..?

இதில் ஒரு கொடூரம் என்னவென்றால், எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கும்படி கிறிஸ்தவ தேசங்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்போய் அனைவரும் கையேந்துகிறார்கள். கத்தியால் குத்தியவனிடமே போய் கருணை மனு கொடுத்தால் என்ன ஆகும்..? இந்துவும் முஸ்லீமும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் அமைதி திரும்பும். சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் இலங்கையில் அமைதி திரும்பும். அண்டை வீட்டுக்காரன் அல்ல பின்னின்று ஆட்டுவிக்கும் அந்நிய தேசத்து கிறிஸ்தவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீரும். அதைவிட்டு மத்யஸ்தம் செய்ய கிறிஸ்தவ தேசங்களை நாடினால் என்ன நியாயம் கிடைக்கும். ஆடுகளின் பிரச்னையை ஓநாயிடம் முறையிட்டா தீர்த்துக்கொள்ள முடியும்?

குழந்தை : அப்படியானால் எங்கள் மரணத்துக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறீர்களா..?

காவி: நிச்சயமாக அவர்களேதான் காரணம். நதியின் கரையெங்கும் முளைக்கும் மரங்களுக்கு ஊற்றருகே ஊன்றப்படும் விதைதானே காரணமாக இருக்க முடியும். போதாத குறைக்கு பறவைகளின் எச்சத்தால் முளைக்கும் பிற மரங்களையெல்லாம் இவர்கள் வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள். கனிகளை வைத்து அல்லவா தீர்மானிக்க வேண்டும் எந்த மரங்களை வளரவிட வேண்டும் என்று… மேலும் உங்களுடைய நிலைமைக்கு இன்னொரு முக்கிய பிரிவினரும் காரணம்.

குழந்தைகள் : யார் அவர்கள்?

காவி (குல்லா அணிந்த சிறுவனைப் பார்த்து) : நீ கொஞ்சம் வெளியில் நிற்கிறயா..? (சிறுவன் என்னவென்று புரியாமல் முழிக்கிறான்).

கால் ஊனமான குழந்தை : இல்லை அவனும் இருக்கட்டும். எதுவானாலும் சொல்லுங்கள்.

காவி (சிறிது தயங்கியபடியே): இலங்கைப் பிரச்னை இவ்வளவு மோசமாக இன்னொரு முக்கியமான காரணம் இதுதான் (குழந்தையின் தலையில் இருக்கும் குல்லாவைத் தொட்டுக் காட்டிச் சொல்கிறார்.)

முஸ்லிம் குழந்தை (சந்தேகத்துடன்) : நாங்கள் காரணமா..?

காவி: ஆமாம். கிறிஸ்தவர்கள் முதல் காரணம் என்றால் நீங்கள் முக்கியமான காரணம். இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், நீங்கள் உங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டீர்கள். உங்கள் இனத்தின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை நீங்கள் நேசிக்க மாட்டீர்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் உங்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பீர்கள். இலங்கையிலும் அதையே செய்தீர்கள்.  அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?

குழந்தை : அப்படியானால் இஸ்லாமியர்கள்தான் இந்தப் பிரச்னைக்கெல்லாம் காரணமா..?

காவி: அப்படி ஒரேயடியாகச் சொல்லமுடியாதுதான். ஆனால், அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம். அந்தவகையில் அவர்களூம் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.

குழந்தைகள் அவரிடம் விடைபெற்று தொட்டிலைத் தள்ளியபடியே சோகமாக வெளியேறுகிறார்கள்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

14 Replies to “விதியே விதியே… [நாடகம்] – 7”

  1. // உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான் //
    // கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் //
    // “டிவைட் அண்ட் ரூல்’ பிறகு டிவைட் அண்ட் டெஸ்ட்ராய்’ என்ற மந்திரத்தை //
    // ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.//
    // ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா..? அங்கு அமைதி நிலவுகிறதா..? அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். //
    // இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாகப் புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே. // // குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான். தப்பு தப்பு… கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான் இது. //
    // இரான் இராக்கில் இனி மேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறீட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃகானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது. //
    // ஆனால், நீங்கள் உங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டீர்கள். உங்கள் இனத்தின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை நீங்கள் நேசிக்க மாட்டீர்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் உங்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பீர்கள். இலங்கையிலும் அதையே செய்தீர்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. //

    உண்மையிலேயே மாஹாதேவன் ஒரு குழந்தைக்கு எப்படி சொல்லி புரியவைக்க வேண்டுமோ அப்படி அருமையாக விளக்கி சொல்லியுள்ளார். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இந்த மதம் மாறிய மடையர்கள்தான்.

  2. புத்தகயாவில் குண்டு வெடித்தது கண்டிக்க பட வேண்டியது. ஆனால் நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்டனவே. இலங்கை பௌத்த தேரைகள் புத்தகயா சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவா சங்கர மேனனை நாடு திரும்புமாறு தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இந்து ஆலயங்கள் அழிக்கபட்டதுக்கும் பல்லாயிரக்கணக்கான இந்து தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் மத்திய அரசாங்கம் எந்த விதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லையே. இதில் இருந்து என்ன தெரிகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டு இந்து நாடாக வேண்டும். இலங்கையில் பௌத்த பேரின வாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் வடகிழக்கு மாகாணங்கள் தனி இந்து மாநிலமாக அல்லது இந்து ஈழமாக ஆக்கப்படவேண்டும். இதனை ஈழத்தமிழர்கள் உணர்ந்து நாஸ்திக வாதத்தின் பின் அணி திரள்வதை நிறுத்த வேண்டும். மதம் மாறாது இந்துப்பாரம்பரியத்தை பேணி வருவதோடு தம் பிள்ளைகளுக்கும் இந்து உணர்வினை புகுத்தி தாம் இந்து என்று பெருமைப்பட வைக்க வேண்டும். தமிழ் பற்றை ஊட்ட வேண்டும். மதத்தையும் மொழியையும் சேர்த்து போராடினால் தான் ஈழத்தமிழருக்குபௌத்த பேரினவாதத்தில் இருந்து உண்மையான விடுதலை கிடைக்கும். நன்றி.

  3. அன்பார்ந்த ஸ்ரீ கணேசசர்மா,

    ஈழத்திலென்ன, ஹிந்துஸ்தானத்திலேயே ஹிந்து ஆலயங்கள் இடித்து நொறுக்கப்படுகையில் வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்து கைகட்டி ஆப்ரஹாமிய சக்திகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையில் இருப்பவை தான் ஹிந்துஸ்தானத்தின் மதசார்பற்ற (என்று சொல்லிக்கொள்ளும்) அரசியல் சக்திகள். இந்த தேச த்ரோஹ சக்திகளிடம் ஈழத்திலென்ன அல்லது ஹிந்துஸ்தானத்திலென்ன உலகில் எங்கு ஹிந்துக்களுக்கு ஹானி நேர்ந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் போக்கை எதிர்பார்க்கவியலாது.

    எதிர்க்கப்பட வேண்டியது சிங்கள பேரின வாதம். பௌத்த பேரின வாதம். எக்காரணம் கொண்டும் பௌத்தம் அல்ல. பௌத்தம் ஹிந்துமதத்தின் ஒரு அங்கமே. அவ்வாறு தான் சங்கத்தில் எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

    ஆதரிக்கப்பட வேண்டியது ஐக்ய ஸ்ரீ லங்காவில் முழு ஸ்வதந்த்ரத்துடன் நிலைபெறத்தக்க ஈழத்தின் வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணம். அங்கு மட்டுமின்றி ஸ்ரீலங்காவின் ஏனைய மாகாணங்களிலும் உள்ள ஹிந்து ஆலயங்களும் முறையாகப்பாதுகாக்கப்பட வேண்டும். ஸ்ரீலங்காவில் ஆலயங்கள் பௌத்தப் பேரின வாதிகளால் மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய மதவெறியர்களாலும் சிதைக்கப்பட்டன என்றே இத்தளத்தில் ஈழத்து அன்பர் ஒருவர் சமர்ப்பித்த வ்யாசம் மூலம் அறிகிறேன்.சைவ வைஷ்ணவ மற்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாகாணத்தில் அவர்களது பெருந்தன்மையான போக்கால் க்றைஸ்தவ, முஸல்மாணிய சஹோதரர்களும் ஹிந்து மதத்தின் பௌத்த சமயத்தை பேணுபவரும் இணக்கமான சூழலில் வாழ இயலும்.

    ஐக்ய ஸ்ரீலங்காவினை உடைத்து உருவாக்கப்படும் ஈழம் என்ற கருத்தாக்கத்தை என்னால் ஏற்க இயலாது. அது ஹிந்துஸ்தானத்திற்கோ ஸ்ரீலங்கவிற்கோ ஹிந்துக்களுக்கோ ஹிந்து மதத்தின் அங்கமான பௌத்தர்களுக்கோ நன்மை பயக்காது. உலகத்தை க்றைஸ்தவ மயமாக்க அல்லது இஸ்லாமிய மயமாக்க முனையும் ஆப்ரஹாமிய சக்திகளுக்கு இறையாகவே அக்கருத்தாக்கம் அமையும்.

    சைவ வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றும் தமிழ் மக்களுடன் இணக்கமாக வாழ முனையும் பௌத்த சிங்கள மொழி பேசும் சக்திகளும் ஐக்ய ஸ்ரீலங்காவில் இருக்கும் என்ற நப்பாசை எனக்கு உண்டு. ஐக்ய ஸ்ரீலங்கா மற்றும் ஹிந்துஸ்தானத்தின் நலம் விழைபவர்கள் போற்றி விவாதிக்கபட வேண்டியது இப்படிப்பட்ட சக்திகளின் செயல்பாடுகளை.

    ஈழத்திலிருந்து தமிழ், சம்ஸ்க்ருத பாஷைகளில் வித்பன்னர்களான ஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயர் போன்ற அன்பர்கள் மற்றும் தேவார திவ்யப்ரந்தங்களில் பயிற்சி பெற்ற வித்பன்னர்களான ஓதுவார்மூர்த்திகள் போன்ற அன்பர்கள் மற்றும் சம்ஸ்க்ருத, பாளி (ப்ராக்ருத) பாஷைகளில் வித்பன்னர்களான பௌத்தசாதுக்களை ஹிந்துஸ்தானத்தில் அழைத்து அவர்களுடைய உபன்யாசம் / ப்ரசங்கம் முதலியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்து அவர்களை பஹுமானிக்க வேண்டும். அதே போன்று ஹிந்துஸ்தானத்திலிருந்தும் வேத, தேவார,திவ்யப்ரபந்தங்களில் பயிற்சி பெற்ற அன்பர்கள் திருப்புகழ் அன்பர்கள் மற்றும் பௌராணிகர்களையும் பௌத்த சாஸ்த்ரங்களில் தேர்ச்சிபெற்ற அன்பர்களையும் ஸ்ரீலங்காவிற்குச் சென்று அங்கு சத்சங்கம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். இது போன்றே இலக்கியம், கவிதை, விளையாட்டு போன்ற துறைகளிலும் கலாசார பரிவர்த்தனை நிகழ வேண்டும். ஹிந்துஸ்தானத்திற்கும் அதைப் பிளந்து மேற்கிலும் கிழக்கிலும் உருவான தேசங்களுடன் இது சாத்யமென்றால் ஸ்ரீலங்காவுடன் ஏன் இவை சாத்யமாகக் கூடாது.

    இந்த விஷயத்தில் தமிழர்களில் ஒரு சாராரின் அன்பிற்கு பாத்ரராகி அவர்களின் தலைவரான கலைஞர் ஸ்ரீ கருணாநிதி அவர்களின் ஐக்ய ஸ்ரீலங்காவைப் பிரிக்கும் படிக்கான தனித் தமிழ் ஈழக்கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அவர் மருமகப்பிள்ளைகள் விளையாட்டுத்துறையில் ஸ்ரீலங்கா மட்டையாளர்களை தன் அணிக்கு தேர்வு செய்தது ச்லாகிக்கத் தகுந்ததே.

    இவையெல்லாம் ஐக்ய ஸ்ரீலங்கா மற்றும் ஹிந்துஸ்தானத்தின் சைவ வைஷ்ணவ மற்றும் பௌத்த (தேராவாத, மத்யமக, வஜ்ரயான……இத்யாதி) சமயங்கள் தழைத்து நிலைக்க வேண்டும் என்பதில் நாட்டமுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம்.

    ஆப்ரஹாமிய சக்திகளின் சிலுவை அறுவடையில் நாட்டமுள்ளவர்கள் தொடர்ந்து சைவ வைஷ்ணவம் மற்றும் நாட்டார் வழிபாடு சார்ந்த தமிழ் பேசும் சமயத்தோர் மற்றும் பௌத்த சமயத்தைப் பேணுவோரிடையே பெரும் விரிசலை உருவாக்கப் பெரும் ப்ரயத்னம் கண்டிப்பாகச் செய்வர். அதற்கு இறையாகாது முன்னகர கதிர்காமக் கந்தனும் ஆர்ய அவலோகிதேஸ்வரரும் அருள்வார்களாக.

  4. Dear vedamgopal,
    Land should be protected to save a culture.Sri Lanka clearly denied concept of Tamil Homeland and it is accelerating colonization.SL Government is never ever going to give federal solution. Their concept of Sinhala Buddhist Sri Lanka started 2000 years before.Could you please explain how independence of Eelam will be beneficial to Christians?

  5. திரு.பாலன்
    நீங்கள் முதலில் துக்ளக்கில் வந்த 7 வார தொடர்கட்டுரையை படித்தால் உண்மை நிலவரம் புரியும். எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் முதலில் வருவது தாய் நாட்டு அடையாளம் பின்புதான் மதம் மொழி பிற அடையாளங்கள். புத்த ஜைன மதங்கள் ஹிந்து மதத்தின் ஒரு அங்கமே. சமீபத்தில் இலங்கையில் சீதாதேவியிற்கு ஒரு பெரிய கோயில் எழுப்ப முயற்ச்சி மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஹிந்து கலாசாரம் அழிந்துவிடும் என்பதெல்லாம் பொய். யுத்தம் முடிந்து தமிழர்கள் தங்கள் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறார்கள். தற்போதுள்ள கிருஸ்துவசார்பு அரசாங்கத்தை மத்தியில் மாற்றினால்தான் நாம் மேலும் இலங்கையுடன் சுமுக உறவை வளர்த்து தமிழர்களுக்கு முழு உரிமைகளை பெற்றுதரமுடியும்.
    கிருஸ்துவம் அல்லாத வளர்ந்து வரும் ஒரு நாட்டின் ஜனத்தொகையில் பாதிக்குமேல் கிருஸ்துவர்களாக மதம் மாற்றிவிட்டால்
    1. மறைமுக காலணி ஆதிக்கம் செய்வது எளிதாகிவிடுகிறது.
    2. இதனால் அந்த நாட்டின் செல்வ வளங்களை சுரண்டுவதும் எளிதாகிவிடுகிறது. அந்த நாட்டில் ஒரு பொம்மலாட்ட அரசை நிறுவமுடிகிறது (மதம் மாறிய அடிமைகளை கொண்டு) இன்று இந்தியாவில் ஒரு கிருஸ்துவ பெண்ணின் மறைமுக ஆதிக்கத்தால் நாட்டில் ஊழல்கள் பெறுக்கெடுத்து செல்வ வளங்கள் சுரண்டப்பட்டு கொள்ளை பங்குகள் கிருஸ்துவ நாடுகளில் முதலீடுசெய்யப்படுகிறது.
    3. நேச நாடுகளை பகை நாடாக மாற்றமுடிகிறது. அதனால் ஆயுதவியாபாரம் நடத்த ஏதுவாக இருக்கிறது.
    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதும் குரங்கு ஆப்பத்தை பங்கிட்ட கதையும் கிருஸ்துவத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த வேலையை தமிழர்களையும் சிங்களவர்களையும் மதம் மாற்றி பகைமூட்டி ஆதாயம் அடைந்து வந்தார்கள். ஆனால் சிங்களவர்கள் கிருஸ்துவ சூழ்சியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். மத மாற்ற தடை சட்டம்கூட கொண்டுவந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் காரணமாக கைவிட்டார்கள். தற்போது இலங்கை அமெரிக்க எதிர்பார்பை மிகவும் குறைத்து கொண்டுள்ளது. சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் சுமுக உறவை வளர்த்து வருகிறது. நாமும் அமெரிக்க கிருஸ்துவ லாபிகளின் ஆதிக்கத்தை குறைத்து கொண்டு இலங்கை போன்ற ஆசியநாடுகளுடன் நேசத்தை வளர்துக் கொள்ளவதுதான் இந்திய இறையாண்மையிற்கு உகந்தது. .

  6. சீமான் செபாஸ்டியன் என்ற மதம் மாறிய அல்லது மாற்றப்பட்ட கிறிஸ்த்தவர் ஒருவர் தமிழகத்தில் இப்போது பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு கிளம்பி இருக்கிறார். மிகுந்த உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவது, ஆக்ரோஷமாக, ஆங்காரமாக பேசுவது, கனிவுடன் என் அன்புச் சொந்தங்களே என்று கொஞ்சுவது இவரின் மேடைப் பேச்சின் பலமாக அமைந்துள்ளது. இந்துத்துவ சிந்தனைகளை அசிங்கப்படுத்திப் பேசுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். லிங்கத்தின் பொருள்தனை சரியான ஆண்மகனாக இருக்கும் எந்த தலைவனாவது மேடை போட்டு விளக்க முடியுமா என்று மார் தட்டிக் கேட்கிறார். எம்மிடம் சரியான பொருள் பொதிந்த பதில் உண்டு. சொன்னால் கேட்கத்தான் ஆள் இல்லை. கேட்கும்படி சொல்லவும் எமது பிரதிநிதிகளாக காண்பித்துக் கொள்ளும் தலைவர்களுக்கு தோன்றவில்லை. எமது பிரதிநிதித்துவ தலைவர்களாக இருக்கும் மனிதருள் மாணிக்கங்கள் களத்தில் இறங்கி சாமானியனுக்குப் புரியும் வகையில் எப்படி நல்ல சிந்தனைகள் திரிக்கப் படுகின்றன? ஆபாசமாகப்படுகின்றன என்பவற்றை மேடை ஏறி அனைத்து மக்கள் மனத்திலும் பதிய வைத்தாலன்றி சீமான் போன்ற சில்லறைகள் வருங்காலத்தில் பேரறிஞர்களாகவும், பகுத்தறிவுப் பகலவர்களாகவும், சிந்தனைச் சிற்பிகளாகவும் மாற்றப்படும் வரலாற்றுத் தவறு மற்றுமொருமுறை நிகழாமல் தடுத்திடலாம். இத்தனை மனக்காயங்களுக்கும் மருந்து போல், தங்கள் கட்டுரை எந்த ஒரு சாமானியனுக்கும் புரியும் வகையில் உண்மையை அழகாக எடுத்தியம்புகிறது. மனம் கனிந்த அன்பு நன்றிகள்.

    வெற்றி வேல்!! வீரவேல்!!

  7. Dear vedamgopal,Evidents for my arguments are following,
    A))1) As Eelam Tamil I can clearly say that Thuglak gives wrong information and Thuglak has even refused the fact of accelerated Sinhala colonization in Eelam. Hence it is clear that Thuglak gives false information.Whoever does not wish to accept the self determination of Eelam Tamils spread false information about liberation struggle.2)Any one can build temples even in western countries that does not mean Hinduism will survive. Sinhala government does not want Tamil identity and heritage in Eelam to become strengthen by its shaivisa heritage.We are least bothered about building a Ram or Setha temple in Lanka.We are bothered about our ancient temples such as kathirkama, Thirukoneswara temples.
    B))கிழக்கில் இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றது என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
    சுவாமி விபுலாந்தர் தின நிகழ்வு நல்லூர் துர்க்கை அம்மன் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற போது நிகழ்விலேயே உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

    அவர் மேலும் உரையாற்றுகையில்,

    ஒரு நாட்டில் மொழி சுதந்திரம், மதச்சுதந்திரம், மனிதநேயம் போன்றவற்றில் மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இவை மூன்றும் இல்லாத நாட்டில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். மதங்களுக்கு இந்நாட்டில் தற்போது துன்பகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

    இங்கு ஆன்மீகத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் பேசுவதில்லை நான் இங்கு அரசியல் பேசவில்லை. ஆனால் ஆத்மாக்களின் உரிமையைப் பற்றியே பேசுகின்றேன். இதற்கு தற்பொது ஏற்பட்டிருக்கின்றங நிலைமைகளே காரணமாகும்.

    எங்களது நாட்டில் மிகத்துன்பமான நிலை இப்பபோது ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவது வீக்கிரகங்கள் களவாடப்படுவது, அசிங்கப்படுத்துவது போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இதற்கு பின்னால் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே இருக்கின்றது. இதனால் இவை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இதிலும் கிழக்கிலே இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது ஆலயங்கள் இடிக்கப்படுவதும், இந்த இடத்தில் கொண்டு வந்துவேறு ஒரு மதச்சின்னத்தினை வைப்பதும் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது இத்தகைய நடவடிக்கையஜனால் சைவசயம் பாதுகாப்பின்றி காணப்படுகின்றது.

    இந்து அமைப்புக்களும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிரான நடவக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

    இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் துணையுடனேயே நடைபெற்று வருகின்றது எங்கள் பிரச்சனையில் எங்கள் நலனின் அக்கறையுடன் செயற்படும் நாடு இந்தியா. இந்திய துணைத்தூதுவர் இங்கு வந்திருக்கின்றார்

    இவ்வாறான பிரச்சனைகளில் இந்திய தலையிட்டு மதங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கையில் மத ரீதியில் ஏற்படுகின்ற எதிர்ப்புக்களைத் தடுப்பதற்கும் மதங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியா உதவ வேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றம் யாழ். இந்தியத் துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
    C)January 25, 2013 (Sunthanthiran): The International Policy Digest has authentically published a shocking news item, that 367 Hindu temples have been demolished in Sri Lanka, in areas, predominantly populated by Hindu Tamils. This document released in March 2012, has come out in the media now, and has created panic amongst the Tamils. The Rajapakse government in Sri Lanka, according to this report, is all out to destroy the Tamil monuments in predominant Tamil areas, to prove that no such areas existed, while settling rural Sinhalese folks in those areas, and silently destroying Hindu temples. The Tamil enthusiastics have vehemently protested that by destroying Hindu temples, the Sri Lankan government is determined to wipe-out the cultural heritage of the Hindu temples. It has been specifically mentioned that in Jaffna alone, 208 temples have been destroyed. In the Trincomalee district in Eastern province, where most of the Tamils live, 17 Hindu temples in villages such as Upparavu, Lankapatnam, Saambal theevu, have been destroyed. Eleven temples built for Lord Ganesha, Lord Murugan, Bairavar and Kannagi Amman, in Ninthavoor, Attapalam, Paalamunai are totalled in the Amparai district. Six temples in Inthupuram, Manikkapuram, Union Kulam in Kilinochchi district, and in Mullaitheevu area of Mankulam, Periyakulam, Oddusuddan and some small villages too, many have been destroyed, with no trace of them being there originally. In the Manaar district, prominent temples for Siththi Vinayagar, Thurgai Amman, Valividu Vinayagar, Muthumariamman, have been demolished in the villages of Vettaimurappu, Kurinjan Kulam, Parunthu Kadanthaan and Pillayar Patti. In Vavuniya district, a total of 12 temples have been demolished, burnt and destroyed.

  8. திரு.வேடம்கோபால் அவர்களே,
    சரியான புரிதல்கள்.

  9. The Jaffna library which housed some of the rare tamil manuscripts was burned down.

    Systematic destruction of temples is happening in sri lanka.

    But does anyone bother?

    They do not even get a mention in our press & media.

    In a few years, the tamil race in sri lanka will be wiped out.

  10. ஹிந்து ஆலயங்கள் இலங்கையில் அழிக்கபடுகின்றன என்ற கிருஸ்துவ ஆதிக்ககவாதிகளுக்காக செயல்படுவோரின் பரப்புரைகளை பற்றிய உண்மை நிலையை இங்கு பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.
    https://www.nalluran.com/2013/04/14/nallur-2013-tamil-newyear/
    https://www.thinakaran.lk/2013/07/15/?fn=r1307151
    10 வருடங்களுக்கு முன்பு Jaffna library புலி பயங்கரவாதிகளின் தடையையும் மீறி புதுப்பிக்கபட்டது. இந்தியா பால நூல்களை அன்பளிப்பு செய்தது. இதுபற்றி ஹிந்து பத்திரிக்கையில் வந்த செய்தி.
    https://hindu.com/2003/03/25/stories/2003032503331200.htm

  11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் என்னவோ நீங்கள் கூறியவாறு அரசியல்வாதிகளின் சுயநலம் தான். இந்த கேடுகெட்ட சுயநல வரலாறு செல்வநாயகத்துடன் ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்னர் சார். பொன்னம்பலம் சார் அருணாச்சலம் என்னும் இருவரில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த இரு இந்து வேளாளர்களும் இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப் படும் போது அந்த அரசியல் யாப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்தே இருக்க விரும்புகிறார்கள் என்று இரவோடு இரவாக கையொப்பம் இட்டார்கள். காரியம் ஆகும் வரைக்கும் அவர்களைத் தூக்கி வைத்திருந்த சிங்களவர் அதன் பின்னர் இவர்கள் எதிர்பார்த்த பதவி மரியாதைகளை கொடுக்க மறுத்தனர். அதன் பின்னர் இவர்கள் வந்து ஆரம்பத்திலேயே இரு இனமும் சேர்ந்து வாழ்வதை எதிர்த்த குழுவுடன் சேர்ந்து கொண்டனர். சிங்கள அரசு பல சட்டங்களை அமுல் படுத்திய்டது. சிங்களம் கட்டாய மொழி ஆக்கப் படவில்லை. பதிலாக சிங்களம் மட்டுமே அரச மொழி ஆக்கப் பட்டது. அங்கு இருந்து தான் ஆரம்பித்தது தமிழ் அரசியல் வாதிகளான அமிர்தலிங்கம் போன்றோரின் 50 க்கு 50 போராட்டங்கள். அதன் மூலம் 1958 இல் ஒரு கலவரத்துக்கு வித்திட்டார்கள்.ஏனெனில் அவர்களுக்கு பதவி வேண்டும்.ஆனால் அவர்களின் சுயநலம் உச்சக் கட்டத்துக்கு போனது உயர்தரக் கல்வியில் கொண்டுவரப்பட்ட தரப் படுத்தல் தான். அதாவது உங்கள் ஊரில் ஜாதிக்கு கொட்ட இருப்பது போல, எங்கள் ஊரில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இக்குறிப்பிட்ட தொகையினைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாக வேண்டும் என்பதே. இதனால் மிகவும் பாதிப்படைந்த மாவட்டங்கள் கல்வியில் முன்னேற்றமடைந்த யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்றவை. ஏனெனில் இத் தரப் படுத்தலுக்கு முதல் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பல்கலைக் கழகத்துக்கு சென்றார்கள். தரப்படுத்தளுக்குப் பின்னர் மற்றைய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த தரப் படுத்தலினால் அமிர்தலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தன் உட்பட தமிழ், யாழ் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் பாதிக்கப் பட்டார்கள். அதே நேரம் பின் தங்கிய மாவட்டம் என அறிவித்து பல்கலைக்கலகத்துக்கான ஆகக் குறைந்த மதிப்பெண் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், தமிழீழம் என அறிவிக்கப் பட்ட தமிழ்ப் பிரதேசங்களின் யாழ்ப்பாணம் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களும் அடங்கும். இந்த அரசியல் வாதிகள் இந்த உண்மையை மறைத்து கல்வியில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதாக கூக்குரல் இட்டார்கள். கல்வியை மட்டுமே வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து தற்போது இந்த தரப் படுத்தலால் பாதிக்கப் பட்டு மன விரக்தியடைந்த யாழ் இலைங்கர்கலைத் தூண்டி விட்டார்கள். மன விரக்தி அடைந்த இந்த இளைஞர் கள் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி சிவகுமாரன் தலைமையில் திரண்டார்கள். இளம் கன்று பயம் அறியாது. வன்முறைக்கு ஆரம்பம் சிவகுமாரனால் விதைக்கப் பட்டது.
    16 , 18 வயது இலைங்கர் களுக்கு பெரியவர்கள் சொல்வதே வேதவாக்காக இருந்தது. புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பு உருவானது. இதிலும் அமிர்தலிங்கம் போன்ற அரசியல் வாதிகள் விளையாடினார்கள். சிவகுமாரன் தலைமையில் அவருக்கு பின்னால் பிரபாகரன் என்று ஒரு இயக்கம் உருவாவதைப் பார்த்தார்கள். உடனே குறைந்த பட்சம் அதை வளர்த்து விட்டிருக்கலாம், இல்லை எனில் ஆயுதப் போராட்டம் தேவை இல்லை என்று அறிவுறுத்தி இருக்கலாம். அதை விடுத்து அமிர்தலிங்கம் தன மகனுக்கு தலைமைப் பதவி வேண்டும் என்று சித்தார்த்தனை கொண்டு அடுத்த இயக்கம் ஆர்டம்பிக்க ஆதரவு கொடுத்தார். இப்படியே பல இயக்கம் உருவாகியது. இந்தியா இவர்களுக்கு கொடுத்தது நீச்சல் பயிற்சி அல்ல. கரையோரத்தை சேர்ந்த இந்த வாலிபர்கள் வாழ்நாளில் பாதியைக் கடலில் கழிப்பவர்கள். இந்திய போதுமான ஆயுதப் பயிட்சியும் ஆயுதங்களும் வழங்கியது. பதவிக்காக ஆரம்பித்த இயக்கங்கள் நாளைடைவில் ஒடுங்கின- ஒடுக்கப் பட்டன. அன்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர் தான். ஆனால் அவர் தான் விடுதலைப் புலிகளை கொள்கையில் உறுதியாக்கினார் .அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழினமும் அலிந்திருக்காது, புலிகளும் அழிந்திருக்க மாட்டார்கள். இந்த இடத்தில் நீங்கள் சொல்வது சரி. அன்டன் பாலசிங்கள் ப்ரிடிஷ்காரர்கலால் லாவகமாக கொள்ளப் பட்டார். கடைசி நேரம் வரைக்கும் அவருக்கு புற்று நோய் இருததைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.
    யுத்தத்தை வளர்த்ததும் ஆயுத்தங்கலைக் கொடுத்ததும் முடிவில் அழித்ததும் கிறிஸ்தவ நாடுகளே. ஆனாலும் விடுதலைப் புலிகள் கொள்கையுடனேயே போராடினார்கள். அவர்கள் எண்களின் உறவுகள். அவர்களும் தப்பு செய்திருக்கிறார்கள். கடைசிப் போரின் நிலைமை கொள்கையையே கேள்விக் குறியாக்கி விட்டது உண்மைதான். ஆனால் முற்றிலும் அழிந்து போகும் மனிதன் எப்படி வேண்டுமானாலும் மார்வான் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆனாலும் அவர்களின் கொள்கைகளும் தியாகங்களும் அளப்பரியன என்பது அவர்களுடன் வாழ்ந்த எங்களுக்கு மட்டுமே தெரியும். துக்ளக் சோ மிகுந்த அறிவு உள்ளவர். ஆனால் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் கண்ணோட்டம் வேறு. இப்படியானவர்களால் தான் ஒட்டுமொத்த பிராமணர் களும் எதிர்க்கப் படுகிறார்கள். விளைவு – சீமான் போன்றவர்கள் வந்து குட்டையைக் குழப்புகிறார்கள். சீமான் உனர்ச்சிகரமாக சொல்லும் அவர் அண்ணன் பிரபாகரன் ஒன்றும் அவர் சொல்வது போல் நாத்திக வாதி அல்ல. அவர் தலைசிறந்த முருக பக்தர். இந்த உண்மைகள் இவர்களால் தங்கள் தேவைகேட்ப மறைக்கப் படுகிறது.

    உண்மையில் இந்துமத விழிப்புணர்ச்சி தமிழகத்தை விடஈழத் தமிழர்களுக்கே அவசிய தேவையாக உள்ளது/ புலம் பெயர் நாட்டில் மன விரக்திக்கு ஆளாகி மாறுபவர்கள் ஒருபுறம் ஈழத்தில் யுத்தத்தால் அநாதை ஆக்கப் பட்ட சிறுவர்கள் கிறிஸ்தவ மிஷன்கலால் தத்தெடுக்கப் படுவது இன்னொரு புறம் என மதமாற்றம் களை கட்டுகிறது. இவற்றுக்காக ஈழத் தமிழர்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் உங்கள் பணியைத் தொடர வேண்டும். தயவுசெய்து ஈழப் போராட்டம் குறித்த அரசியல் சார்ந்த விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவதை விடுத்து தங்கள் பணியில் முன்னேறுங்கள்.
    தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சுயநல அரசியல் வாதிகளால் அப்பாவி இலங்கர்கலிடம் திணிக்கப்பட்டு பின்னர் கொள்கையும் அர்ப்பநிப்புமாக எழுந்து மீண்டும் சுயநலவாதிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேதனை வரலாறு. இப்போது நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மதமாற்றத்துக்கான விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமே,

  12. ராஜீவ் கொலையில் சோனியாவின் பங்கு பற்றி ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் அவர்களின் வாக்குமூலம் கீழ்கண்ட. யூடியுப் வீடியோவில் காணலாம்.

    https://youtu.be/BzPMiWH6Fl4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *