திரைப்பார்வை: The Middle of the World

மீபத்தில் ஒரு ப்ரேசிலியன் சினிமா பார்த்தேன். படத்தின் பெயர் தி மிடில் ஆஃப் தி வேர்ல்ட். The Middle of the World – “O Caminho das Nuvens” (original title). 2003ல் வெளிவந்த படம். சீக்கிரமே தமிழில் மிஷ்கின், அமீர் போன்ற ஒரிஜினல் சினிமா எடுப்பவர்கள் காப்பியடிக்கக் கூடும். இந்தப் படத்திலும் ஒரு இந்தியப் பெயர் வந்தது. ஒரு டீன் ஏஜ் பையனின் பெயர் ரவி ரமோசாம். சின் நோம்ப்ரேயில் ஒரு தமயந்தி போல இதில் ஒரு ரவி.

இது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான். இந்தியாவில் கிராமங்களில் இருந்து கிளம்பி டெல்லிக்கோ, மும்பைக்கோ, பெங்களூருக்கோ வேலை தேடி செல்பவர்கள் போல இல்லாமல் இதில் ஒட்டு மொத்த குடும்பமே வேலை தேடி ரியோவுக்கு சைக்கிளிலேயே தொலை தூரம் பயணிக்கிறது. இருக்கும் விடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அந்தக் குடும்பத் தலைவன் தன்னையும் தன் குடும்பத்தையும் அலைக்கழிக்கிறான்.

அந்த ரியோ வோ 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் பெரு நகரம். போகும் வழியில் கிடைக்கும் வேலைகளையெல்லம் உதறி விட்டு தன் கனவு வேலையான ஆயிரம் ரூபாய் சம்பள வேலையை நோக்கி தன் குடும்பம் முழுவதையும் பசியிலும், வெயிலிலும், மழையிலும் சைக்கிளை மிதிக்க வைத்து 2000 மைல்கள் தாண்டிப் போவதுதான் கதை.

போகும் வழியில் ப்ரேசில் நாட்டின் நிலப் பகுதி, மக்கள், கலாச்சாரம், நம்பிக்கைகள், மனித உறவுகள் அனைத்தும் காண்பிக்கப் படுகின்றன. ப்ரேசிலை புரிந்து கொள்ள உதவும் ஒரு சினிமா இது. இந்த சினிமா அந்த வறுமையான குடும்பத்தின் பயணத்தை மட்டுமே காட்டுகிறது முடிவை அல்ல.

2006_CJWRAP_testகுழந்தைகளில் டீன் ஏஜ் பையனில் ஆரம்பித்து கைக் குழந்தை வரை இருக்கின்றனர். குடும்பம் பாட்டுப் பாடியும் பிச்சை எடுத்தும் சம்பாதிக்கும் அரைக் காசில் வாழும் சோம்பேறியான குடும்பத் தலைவன் தன் குறையை மறைக்க ரியோடி ஜெனிரா போய் சேர்ந்து விட்டால் வாழ்க்கை சுபமாகி விடும் என்று அவர்களிடம் சொல்லி அவர்களைக் கட்டாயப் படுத்தி சைக்கிளை ஓட்ட வைத்து ரியோவைச் சென்று அடைந்தும் விடுகிறான். அங்கு அந்த கை விரித்த கிறிஸ்து சிலை உள்ள மலை உச்சியில் நிற்கும் பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது இங்கு வந்தாலும் தான் வேலைக்குப் போய்தான் உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற உண்மை. அருகில் இருப்பவரை மீண்டும் தன் ஊருக்குப் போகும் வழியைக் கேட்க்க ஆரம்பிக்கிறான்.

பிரச்சினை அவனிடம் தான் இருக்கிறது. அடிப்படையில் வேலைக்குச் செல்ல விரும்பாமல் உழைத்து வாழ விரும்பாமல் கனவுலகில் ரொமண்டிசைஸ் செய்து கொண்டு வாழும் ஒரு நாடோடி அவன். அவனுக்கு உலகின் எந்த நகரிலும் வேலையும் திருப்தியும் கிடைத்திருக்க வழியில்லை. பிரச்சினை அவனது மனதில் உள்ளதே அன்றி அவன் தேடும் வேலையில் அல்ல. அதை அவன் உணர 2000 மைல்கள் நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டி வருகிறது. நாம் வாழ்க்கையின் ஒரு சில தருணங்களை உணர மேற்கொள்ளும் வாழ்க்கைப் பயணத்தை பூடகமாகக் குறிப்பது அவனது முற்றாத பயணம்.

ப்ரேசிலின் பல பகுதிகளும் கிட்டத்தட்ட இந்தியா போலவே கடும் வறட்சியிலும் வறுமையிலும் உள்ளன. இந்தியாவில் இப்படி ஒரு குடும்பம் கன்யாகுமரியில் இருந்து கிளம்பி மும்பைக்கோ, டெல்லிக்கோ சைக்கிளிலேயே அதிலும் கைக்குழந்தையுடன் சென்றிருக்குமேயானால் செல்லும் வழியில் நிச்சயம் சோறு கிடைத்திருக்கும். ப்ரேசிலில் அதற்கும் வழியில்லை. செல்லும் வழியில் நம் நாட்டில் ஏராளமான கோவில்களும் மண்டபங்களும் சத்திரங்களும் நிறைந்திருக்கும்.

இங்கும் செல்லும் வழியில் எல்லாம் கிறிஸ்துவ பாதிரிகளின் சிலைகளும், மேரியின் கோவில்களும் உள்ளன ஆனால் சாப்பாட்டுக்குத்தான் எந்த வழியும் இல்லை. வழி முழுவதுமான நிலப்பகுதி வறண்டும் புழுதியுடனும் அழுக்குடனும் சாலையோர மணல்களுடனும் குறும் புதர்களுடனும் எந்த வித சுவாரசியமின்றி நம் அருப்புக் கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி வழியாகப் பயணம் போனது போல இருக்கிறது. அவர்களுக்கு என்று எந்த விதமான பழமையான கலாச்சாரங்களோ, கலைச் சின்னங்களோ, பாரம்பரிய கட்டிடங்களோ,நம்பிக்கைகளோ,வழிபாடுகளோ, பண்பாட்டின் எச்சங்களோ எதுவும் மீதமில்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் போதை மருந்தும் மேற்கத்திய பாணி கலைகளும் உடைகளும் அவற்றின் ஆபாசங்களும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. அதன் வழியாக அந்தக் குடும்பம் ரியோடி ஜெனிரா என்ற நாட்டின் மிகப் பெரிய நகரத்தில் கிடைக்கப் போகும் வேலையினை நம்பிப் பயணிக்கின்றது.

இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை இந்த தென்னமரிக்க நாட்டினர் முற்றிலுமாக இழந்து விட்டனர் என்று தோன்றுகிறது. வெறுமை மட்டுமே மீதம் இருக்கின்றது.

இந்தப் படம் ப்ரேசில் பற்றி ஒரு அறிதலைத் தருகிறது. நகர்ப்புற வாழ்க்கையை நேற்று சொன்ன செக்கோஸ்ட்ரா எக்ஸ்ப்ரஸ், எலைட் ஸ்குவாட் போன்ற படங்களும் உள்புற ப்ரேசில் நாட்டு வாழ்க்கையை இந்தப் படமும் அளிக்கின்றன. மிஷநரிகளின் அருட்கொடையால் மாற்றப் பட்ட கோவாவையும், வடகிழக்குகளையும் போல ஒட்டு மொத்த இந்தியாவும் மாற்றப் பட்டிருக்குமானால் அந்த இந்தியா இந்தத் தென்னமெரிக்கப் படங்களில் நாமும் காணும் பரிதாபங்களைக் கொண்டதாகவே இன்று இருந்திருக்கும். இந்தப் படங்களைக் காணும் பொழுது அந்த நினைவு தொடர்ந்து வயிற்றுக்குள் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. பாவப் பட்ட தேசங்கள். பாவப் பட்ட மக்கள்.

6 Replies to “திரைப்பார்வை: The Middle of the World”

  1. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்பட்டிருந்தாலும் பாரதம் தன்னை இழக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக நமது ஆன்மீக கலாசாரத்தை பேணிக் காத்துவரும் நமது முன்னோர்களுக்கு நன்றி செலுத்துவோமாக. இஸ்லாமிய கிறித்துவ ஆட்சியாளர்களும் இனம்,மொழி,மத உணர்வு அரசியல் செய்த நாத்தீகர்களும் இந்த விஷயத்தில் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள்.

  2. டாஸ்மாக் கடைகளும் , இப்போதைய கல்வி கட்டமைப்பும் , மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிமையலும் நமது பாரத தேசத்தில் இப்படி பல பேர் இருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தின் பெருமைகளையும் , வேதங்கள் , இதிகாசங்கள், உபநிடங்கள், நீதி நூல்கள், யாவற்றையும் நாம் கற்றொமானல் , நெஞ்சுறிதிகொண்ட , தன்னம்பிக்கை கொண்ட , வீரமிக்க, உறுதிகொண்ட, பாரத தேசத்தை மீட்டெடுக்க நாட்கள் மிக அருகில்…

  3. Interesting article. I have been to Brazil and felt sorry for the blacks and the natives. Portuguese brought slave labor to Brazil and converted en mass the populace to Christianity. Most of the blacks in Rio live in shanty towns called Favela. Crimes and drugs dominate Favelas. Funny thing is, these converted Blacks are more Christian than the Whites. Stockholm syndrome? The fact of the matter is, Christianity had destroyed the natives and their culture in entire South America. The Spaniards, Portuguese and the English were as savage as the Islamists.

  4. இப்போதேல்லாம் வரிசையாய் தமிழ் படங்கள் இந்து மதத்தையும், இந்து அடையாளங்களையும் கேலி செய்வதை பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு ‘தமிழ் இந்துவில்’ தேவை…!! இந்துக்கள் எப்பவும் போல் உறங்கி கொண்டே இருக்கிறார்கள்..!!

    சில உதாரணங்கள்:
    1. ‘உ’ படம். பிள்ளையார் சுழியை பகிரங்கமாக அவமதிகின்ற ஒரு படம். இயக்குனர் ஒரு இசுலாமியர் என்பது குறிப்பிட தக்கது.
    2.’திருமணம் எனும் நிக்க்ஹா’ படத்தில் இரு இந்துக்கள் இசுலமியராய் மதம் மாரி திருமணம் செய்து கொள்வதாக கதை அம்சம். அதாவது இசுலாம் காதலர்களை காபற்றுகிரதாம்.!! இதை இயக்கியவரும் இசுலாமியரே..!!
    3. பல படங்களில் கோயிலின் புனித தன்மையை அவமதிக்கும் விதத்தில் ‘காமெடி’ அல்லது ‘காதல்’ காட்சிகள்.
    4. பல படங்களில் கோயிலின் விட்டதில் சகிக்க முடியாத நடனமோ, பாடல் வரியோ கொண்ட பாடல்களின் காட்சிகள் படமாக்க படுகிறது..!!

    இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால், இந்த படங்களின் தயாரிப்பாளர்கள், இசுலாமிய, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பணம் வெளி நாடுகளில் இருந்து வருவதும் இப்போது தெரிந்ததே..!!

    ஏக இறைவனின் பிள்ளைகள் இப்போது திரை துறை மூலமாகவும் நம் மதத்தை புண் படுத்தியும் தங்கள் மதங்களை உன்னத மதங்களாக காண்பிக்கவும் தொடங்கி விட்டார்கள். இனி விசுலடிக்க மட்டும் வாய் திறக்கும் இந்துக்கள் எவ்வளவு காலம் இந்துக்களாய் இருப்பார்கள் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்..!!

    வேதனையுடன்,
    அகிலன்.

  5. Censor Board ல் இருப்பவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். மானம் ஈனம் வெட்கம் என்று எல்லாவற்றையும் விட்டவர்கள்தான் அங்கே இருக்கிறார்கள். பணம் வாங்கி கொண்டு கேவலமான காட்சிகளை அனுமதிக்கிறார்கள். காதலை இஸ்லாம் காபாற்றுகிறது என்றால் ஒரு மசூதியில் காதலர்கள் கட்டி புரளும் காட்சியை ஒரு இமாம் முன்பு காட்ட வேண்டியதுதானே! ஆனால் அதை கோவிலில் காட்டுவனுங்க.நல்ல காட்சிகளை மட்டும் மசூதியிலும் சர்ச்சிலும் காட்டுவனுங்க. எதையும் கண்டுக்காம இளிச்சவாய இந்துக்கள் கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்வான். இந்து தலைவர்களோ ஒன்று தூங்கி கொண்டிருப்பார்கள் அல்லது பழைய பக்தி புராணங்களை பாடி கொண்டிருப்பார்கள். இன்றைய இந்துக்களின் நிலை என்ன என்று சிந்திக்காமல் ஏனோதானோ என்றிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *